Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

9th Social Science Guide மனிதனும் சுற்றுச் சூழலும் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ____ என்கிறோம்.
அ) சுற்றுச்சூழல்
ஆ) சூழலமைப்பு
இ) உயிர்க் காரணிகள்
ஈ) உயிரற்றக் காரணிகள்
விடை:
அ) சுற்றுச்சூழல்

Question 2.
ஒவ்வொர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் ____ ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அ) ஆகஸ்டு 11
ஆ) செப்டம்பர் 11
இ) ஜுலை 11
இ) ஜனவரி 11
விடை:
இ) ஜுலை 11

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 3.
மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____ ஆகும்.
அ) மக்கள்தொகையியல்
ஆ) புறவடிவமைப்பியல்
இ) சொல்பிறப்பியல்
ஈ) நிலநடுக்கவரைவியல்
விடை:
அ) மக்கள் தொகையியல்

Question 4.
விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது
____ ஆகும்.
அ) மீன்பிடித்தல்
ஆ) மரம் வெட்டுதல்
இ) சுரங்கவியல்
ஈ) விவசாயம்
விடை:
இ) சுரங்கவியல்

Question 5.
பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன _____
அ) பாதி முடிக்கப்பட்ட பொருள்கள்
ஆ) முடிக்கப்பட்ட பொருள்கள்
இ) பொருளாதார பொருள்கள்
ஈ) மூலப்பொருள்கள்
விடை:
ஆ) முடிக்கப்பட்ட பொருள்கள்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 60

III. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளைக்கருத்தில்கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கூற்று (A) : படுக்கை அடுக்கில் உள்ள ஒசோன் படலத்தை பாதுகாப்பு கேடயம் என்கிறோம்.
காரணம் (R) : புற ஊதாக்கதிர் வீச்சு புவியை அடையாமல் தடுக்கிறது.
அ) A வும் R ம் சரி மற்றும் A என்பது R ன் சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் A வானது R- ன் சரியான விளக்கமல்ல.
இ) A தவறு ஆனால் R சரி
ஈ) A மற்றும் R இரண்டும் தவறு
விடை:
அ) A-வும் R- ம் சரி மற்றும் A-என்பது R-ன் சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 2.
கூற்று (A) : மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது.
காரணம் (R) : மூன்றாம் நிலைத்தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.
அ) A மற்றும் R இரண்டும் தவறு.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால், A வானது R க்கு விளக்கம் தரவில்லை.
இ) A சரி, ஆனால், R தவறு.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி. A வானது R க்கு சரியான விளக்கம் தருகிறது.
விடை:
இ) A சரி ஆனால் R தவறானது.

IV. சுருக்கமான விடையளி

Question 1.
மக்கள் அடர்த்தி என்றால் என்ன?
விடை:

  • ஒரு சதுர கி.மீ நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை மக்களடர்த்தி என்கிறோம்.
  • மிகப்பரந்த நிலப்பரப்பில், குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருந்தால், அதை குறைந்த மக்களடர்த்தி என்றும் குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அதிக மக்களடர்த்தி என்றும் அழைக்கிறோம்.
  • Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 65

Question 2.
கொள்ளை நோய் என்றால் என்ன?
விடை:

  • 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் “பிளேக்” என்ற கொள்ளை நோயினால் 30 – 60 சதவீதம் மக்கள் இறந்தனர்.
  • பெரிய எண்ணிக்கையிலான மக்கள் ஒரு நோயினால் இறந்தால் அது கொள்ளை நோய் எனப்படும்

Question 3.
வரையறு
அ) மக்கள் தொகை வளர்ச்சி
விடை:

  • மக்கள் தொகை வளர்ச்சி என்பது பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு
    “மக்கள் தொகை வளர்ச்சி” ஆகும்.
  • மக்கள் தொகை வளர்ச்சி = (பிறப்பு விகிதம் + குடியிறக்கம்) – (இறப்பு விகிதம் + குடியேற்றம்)

ஆ) மக்கள் தொகை கணக்கெடுப்பு
விடை:
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசாங்கம் மக்களின் வயது, பாலினம், கல்வியறிவு விகிதம் மற்றும்
தொழில் போன்ற விவரங்களைப் பதிவு செய்து, மக்கள் தொகை பற்றிக் கணக்கெடுப்பு நடத்தி தகவல்களைச் சேகரிக்கிறது.

இ) வளம் குன்றா வளர்ச்சி
விடை:
எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளுக்கான வள இருப்பை உறுதி செய்வதோடு நிகழ்காலத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதாகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

V. காரணம் கூறுக.

Question 1.
காடுகளை மீட்டெடுத்தல் உலகம் முழுவதும் ஊக்கப்படுத்தப்படுகிறது.
விடை:

  • மீள் காடாக்குதல் என்பது மரங்கள் வெட்டப்பட்ட அதே இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டுவளர்ப்பதன்
    மூலம்காடுகளை அழிவிலிருந்து பாதுகாத்துவனவளம்குறையாமல்பாதுகாக்கலாம். சிலசமயங்களில் காடுகளே தங்கள் வளத்தை மீட்டெடுத்துக் கொள்கின்றன.
  • காடுகளில் எந்த வகை மரம் வெட்டப்பட்டதோ அதே வகை மரத்தை அதன் எண்ணிக்கை குறையாத வகையில் நட்டு வளர்த்து இருக்கின்ற காட்டு வளத்தைப் பாதுகாக்க மீள் காடாக்குதல் ஊக்கப்படுத்தப்படுகிறது.

Question 2.
அமில மழை சுற்றுச்சூழலை அழிக்கிறது.
விடை:

  • அமிலமழை நீர்த்த கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் அடங்கியது.
  • அமில மழைக்குக் காரணமான வாயுக்கள் கந்தகடை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் படிம எரிபொருள் எரிக்கப்படுவதால் ஏற்படுகிறது.
  • எரிக்கப்பட்ட மாசுப்பொருள்கள் நீராவியோடு சேர்ந்து சூரிய ஒளி மற்றும் உயிர்வளித் துணையோடு அமிலமாக மாறி, நிலம், நீர் மற்றும் காற்றை மாசுபடுத்துகிறது.

Question 3.
நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கை ஓர் அறிவுசார் பொருளாதாரம்.
விடை:

  • ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகிய அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கை,
  • இதில் ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் வங்கி சேவைகள் அடங்கும்.

Question 4.
மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவேண்டும்.
விடை:
மக்கள் தொகை வளர்ச்சி வேலை வாய்ப்பின்மை மாசு, குறைந்த மருத்துவ வசதி, குறைந்த அடிப்படைக் கட்டமைப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 5.
வளம் குன்றா வளர்ச்சியின் இலக்குகள் புவியைப் பாதுகாப்பதாக இருக்கிறதா?
விடை:

  • வளங்களைப் பாதுகாத்துதல் மற்றும் அது சார்ந்த விழிப்புணர்வு, புவியில் வாழும் உயிர்களைப் பாதுகாக்க அவசியமானது.
  • வளம் குன்றா வளர்ச்சி எதிர்காலச் சந்ததியினருக்கு வள இருப்பை உறுதி செய்கிறது. நிகழ் காலத் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

VI. வேறுபடுத்துக.

Question 1.
முதல்நிலைத் தொழில் மற்றும் இரண்டாம் நிலைத்தொழில்.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 68

VII. விரிவான விடையளி

Question 1.
மக்கள் தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
விடை:

  • புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள் தொகை பரவல் ஆகும்.
  • உலகில் எல்லா இடங்களிலும் மக்கள் தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை.

அ. இயற்கை காரணிகள் :
வெப்பநிலை, மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள், கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு உள்ளிட்டவை மக்கள் தொகை பரவலுக்கான இயற்கை காரணிகள் ஆகும்.

ஆ.வரலாற்றுக் காரணிகள் :
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியவை மக்கள் தொகை பரவலுக்கான வரலாற்றுக் காரணிகள் ஆகும்.

இ. பொருளாதாரக காரணிகள் :
கல்விக்கூடங்கள் வேலைவாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள், வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவுதலுக்கான பொருளாதாரக் காரணிகள் ஆகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 2.
கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.
விடை:
அ. கிராமக் குடியிருப்புகள் :
முதன்மை தொழில்களான வேளாண்மை வனத்தொழில், கனிமத்தொழில் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றை
மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகின்றன.

கிராமக்குடியிருப்பு வகைகள் :
செவ்வக வடிவக் குடியிருப்புகள் :
சமவெளிப் பகுதிகளிலும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகளாகும். இங்குச் சாலைகள் செவ்வக வடிவில் காணப்படுவதோடு ஒன்றையொன்று செங்கோணங்களில் வெட்டிச் செல்லும்.

நேர்க்கோட்டுக் குடியிருப்புகள்
இவ்வகையான குடியிருப்புகள் சாலை, தொடர்வண்டிப் பாதை, ஆற்றுங்கரை மற்றும் அணைகட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.

வட்டவடிவக் குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் ஏரிகள், குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி வட்டமாகவோ அல்லது அரைவட்டமாகவோ காணப்படுகின்றன.

நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் :
நட்சத்திர வடிவ குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது காப்பிடப்படாத சாலை சந்திப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன. இவை நட்சத்திர வடிவத்தில் எல்லாத் திசைகளிலும் பரவிக் காணப்படும்.

முக்கோண வடிவக் குடியிருப்புகள் :
ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகளாகும்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
உனது பகுதியைப் பற்றி நீ பார்த்தறிந்த குடியிப்பு வகைகளை பற்றி எழுதுக.
(மாணவர்களுக்கானது)

9th Social Science Guide மனிதனும் சுற்றுச் சூழலும் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
Environ என்பதன் பொருள் …. என்பதாகும்
விடை:
சுற்றுப்புறம்

Question 2.
பாப்புலஸ் என்பதன் பொருள் …….
விடை:
மக்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 3.
கிரேக்கத்தில் ‘Demos’ என்றால் ……. என்று பொருள்
விடை:
மக்கள்

Question 4.
நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதல் நடத்தியநாடு ……
விடை:
டென்மார்க்

Question 5.
……… உலகிலேயே மிகப்பெரிய நகரமாகும்.
விடை:
டோக்கியோ

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 80
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 81

III. குறுகிய விடையளி.

Question 1.
சுற்றுச் சுழல் என்பதன் பொருள் யாது?
விடை:
சுற்றுச்சூழல் (Environment) என்ற சொல் என்வீரான் (Environ) என்ற பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும். Environ என்பதன் பொருள் சுற்றுப்புறம் என்பதாகும். சுற்றுச்சூழல் என்பது உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியதாகும்.

Question 2.
மக்கள் தொகை என்றால் என்ன?
விடை:

  • மக்கள் என்ற சொல், இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். பாப்புலஸ் என்றால் மக்கள் என்ற பொருளாகும்.
  • ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கையை மக்கள் தொகை என்கிறோம்.

Question 3.
காடுகளை அழித்தல் என்றால் என்ன?
விடை:
காடுகளை அழித்தல் என்பது மக்கள் தங்களின் பிற பயன்பாடுகளுக்காகக் காடுகளில் உள்ள மரங்களை நிரந்தரமாக வெட்டியெடுத்து நிலத்தைப் பதப்படுத்திப் பயன்படுத்துவதாகும்.

Question 4.
மின்னணுக் கழிவுகள் குறிப்பு வரைக.
விடை:
மின்னணுக் கழிவுகள் (e-waste) என்பவை பயன்படுத்த இயலாத எல்லா மின்னணுக்கருவிகளாகும். (எ.கா) கணினிகள், தொலைகாட்சிப் பெட்டிகள், கைப்பேசிகள் மற்றும் மின்னஞ்சல் கருவிகள்

Question 5.
அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.
விடை:

  • அதிக மக்களடர்த்திப் பகுதிகள் : (50 பேர் /1 ச.மீ)
    கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, வடமேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி.
  • குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள் : (10 பேருக்கு குறைவு /1 ச.மீ)
    மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியா, வடக்கு ரஷ்யா மற்றும் கனடா.

Question 6.
பாக் வளைகுடாவை உள்ளூர் மக்களும், அரசாங்கமும் மீட்டெடுத்த வழிமுறைகளில் இரண்டை எழுதுக.
விடை:

  • பாக் வளைகுடா பகுதிகளில் வளரும் தாவர இனங்களின் நாற்றுகளை நட்டு கவனமாக வளர்க்கப்படுகின்றன.
  • மன்னார் வளைகுடா பல்லுயிர்த் தொகுதியிலிருந்து முருகைப் பாறைகளைக் கொண்டு வந்து பாக் வளைகுடாவில் வளர்த்து இங்கு எஞ்சியிருக்கும் மாங்குரோவ் காடுகளை வரைபடமாக்குவதோடு அதைச் சுற்றிய நிலப்பகுதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது கற்றறியப்படுகிறது.
  • மாங்குரோவ் காடுகளைப் பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பதில் உள்ளூர் அமைப்புகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். இக்காடுகளைப் பற்றிய விழிப்புணர்வும் கல்வியறிவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

IV. வேறுபடுத்துக.

Question 1.
பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 85

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 2.
கிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 86

V. விரிவான விடையளி

Question 1.
நகரக் குடியிருப்புகளின் வகைப்பாடுகளை விவரி.
விடை:
நகரப்பகுதிகள், அதன்பரப்பு, கிடைக்கும் சேவைகள் மற்றும் நடைபெறும்செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில்
நகரம், பெருநகரம், மாநகரம், மீப்பெருநகரம் நகரங்களின் தொகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நகரம் (Town) : நகரம் பொதுவாகக் கிராமத்தைவிடப் பெரியதாகவும் பெருநகரத்தைவிடச் சிறியதாகவும் இருக்கும். ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் (எ.கா) சென்னைக்கு அருகில் உள்ள அரக்கோணம்.

பெருநகரம் (City) : பெருநகரங்கள் நகரங்களை விடப் பெரியதாகவம் மிக அதிகப் பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்டதாகவும் இருக்கும். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் (எ.கா) கோயம்புத்தூர்.

மாதகரம் (Metropolitan City) : மாநகரம் பத்து லட்சத்திலிருந்து ஐம்பது இலட்சம் வரையிலான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (எ.கா.) மதுரை மாநகரம்

மீப்பெருநகரம் (Mega City) : மீப்பெருநகரம் ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (எ.கா) சென்னைப் பெருநகரம் (Greater Chennai)

நகரங்களின் தொகுதி (Conurbation) : நகரங்களின் தொகுதி (Conurbation) நகரங்களின் தொகுதி பல நகரங்களையும் பெருநகரங்களையும் பிற நகர்புறப் பகுதிகளையும் கொண்டிருக்கும் (எ.கா) டெல்லி நகரத் தொகுதி.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 90

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 2.
காடுகளைப் பாதுகாத்தல் குறித்து விவரி?
விடை:
(i) மரம் வெட்டுதலை முறைப்படுத்துவதன் மூலம் காடுகளைப் பாதுகாக்க முடியும்.
(ii) தொடர் கண்காணிப்பு மூலமும் மனித நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் காட்டுத் தீ ஏற்படுவதைத் தவிர்த்து காடுகளைப் பாதுகாக்கலாம்.
(iii) காடு வளர்ப்பு மற்றும் மீட்டுருவாக்கம் : மீள் காடாக்குதல் என்பது மரங்கள் வெட்டப்பட்ட அதே இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதன்மூலம் காடுகளை அழிவிலிருந்து பாதுகாத்து வனவளம் குறையாமல் பாதுகாக்கலாம். சில சமயங்களில் காடுகளே தங்கள் வளத்தை மீட்டெடுத்துக் கொள்கின்றன. பொதுவாகக் காடுகள் மீட்டுருவாக்கம் என்பது புதிய மரக்கன்றுகளை நடுதல் அல்லது தரிசு நிலங்களில் விதைகளை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் காடுகள் வளர்க்கப்படுவதாகும்.
(iv) வனவளங்களின் பயன்பாடு : நாம் உயிர்வாழ்வதற்குப் தேவையான காற்று முதல் பயன்படுத்தும் மரக் கட்டைகள் வரை அனைத்திற்கும் காடுகளைச் சார்ந்திருக்கின்றோம். இவை தவிர விலங்குகளின் வாழ்விடமாகவும் மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் காடுகள் உள்ளன. காடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்கள் நம் அன்றாட வாழ்விற்கு அவசியமாகும். இதனால் வன வளத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

மனவரைபடம்
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 95

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 5 உயிர்க்கோளம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 5 உயிர்க்கோளம்

9th Social Science Guide உயிர்க்கோளம் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி ______
அ) தூந்திரா
ஆ) டைகா
இ) பாலைவனம்
ஈ) பெருங்கடல்கள்
விடை:
அ) தூந்திரா

Question 2.
உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு.
அ) சூழ்நிலை மண்டலம்
ஆ) பல்லுயிர்த் தொகுதி
இ) சுற்றுச்சூழல்
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை:
அ) சூழ்நிலை மண்டலம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 3.
வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்.
அ) உற்பத்தியாளர்கள்
ஆ) சிதைப்போர்கள்
இ) நுகர்வோர்கள்
ஈ) இவர்களில் யாரும் இல்லை
விடை:
ஆ) சிதைப்போர்கள்

Question 4.
பாலைவனத் தாவரங்கள் வளரும் சூழல்.
அ) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
ஆ) குறைந்த அளவு ஈரப்பசை
இ) குளிர் வெப்பநிலை
ஈ) ஈரப்பதம்
விடை:
அ) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி

Question 5.
மழைக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்.
அ) மிக அதிகப்படியான ஈரப்பதம்
ஆ) மிக அதிகமான வெப்பநிலை
இ) மிக மெல்லிய மண்ணடுக்கு
ஈ) வளமற்ற மண்
விடை:
ஈ) வளமற்ற மண்

II. கூற்று (A) காரணம் (R)கண்ட றிக

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ. கூற்று சரி, காரணம் தவறு
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

Question 1.
கூற்று : பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளாது.
காரணம் : ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 2.
கூற்று : குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பலவகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையம் ஆகும்.
காரணம் : இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை அடையாளங் காண்பர்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் ____ எனப்படும்.
விடை:
சூழ்நிலை மண்டலம்

Question 2.
பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுபவை _____
விடை:
நுகர்வோர்கள்

Question 3.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை _____ என அழைக்கின்றோம்.
விடை:
உணவு வலை

Question 4.
மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை _____ என்கிறோம்.
விடை:
பல்லுயிர்த்தொகுதி

Question 5.
பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் _____ எனப்படும்
விடை:
பாலைவனத்தாவரங்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 6.
____ நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.
விடை:
கடல்

IV. சுருக்கமான விடையளி.

Question 1.
உயிர்க்கோளம் என்றால் என்ன?
விடை:

  • உயிர்க்கோளம், பாறைக் கோளம், நீர்க் கோளம், வளிக்கோளத்தை உள்ளடக்கிய புவியின் நான்காவது கோளமாகும்.
  • கடல் மட்டத்திலிருந்து வளிமண்டல கீழடுக்கில் சுமார் 20 கி.மீ. உயரம் வரை பரவியுள்ள இக்கோளம் தாவர இனங்களும், விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.

Question 2.
சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?
விடை:

  • பல்வேறு உயிரினங்களின் தொகுதி ‘சூழ்நிலை மண்டலம்’ ஆகும். இம்மண்டலத்தில் வாழ்கின்ற, உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, உயிரற்ற சுற்றுச் சூழல் காரணிகளோடும் தொடர்பு கொள்கின்றன.
  • சூழ்நிலை மண்டலம் மிகச் சிறிய அலகிலிருந்து (எ.கா. மரப்பட்டை) உலகளாவிய சூழ்நிலை மண்டலம் (அல்லது) சூழல் கோளம் வரை (எ.கா. விவசாய நிலம், வனச்சூழல் அமைப்பு) வேறுபட்டுக் காணப்படுகிறது.

Question 3.
உயிரினப் பன்மை என்றால் என்ன?
விடை:
ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பது ‘உயிரினப் பன்மை’ ஆகும். எ.கா. தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற நுண்ணியிரிகள்.

Question 4.
“உயிரினப் பன்மை இழப்பு” என்பதன் பொருள் கூறுக?
விடை:
மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு ‘உயிரினப் பன்மையின் இழப்பு’ எனப்படும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 5.
பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைக் குறிப்பிடுக.
விடை:
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகள்.

  • வெப்ப மண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதி.
  • வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி
  • பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி
  • மித வெப்பமண்டலப் பல்லுயிர்த் தொகுதி.
  • தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி.

V. காரணம் கூறுக

Question 1.
உற்பத்தியாளர்கள், தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
ஏனெனில்,
உற்பத்தியாளர்கள் சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் ஆகும். இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன. (எ.கா.) தாவரங்கள், பாசி, பாக்டீரியா.

Question 2.
உயிர்க்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது.
விடை:
ஏனெனில்,
உயிர்க்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலம் மற்றும் பல்லுயிர்த் தொகுதி அமைப்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது. உலக சூழ்நிலை மண்டலம் விவசாய நிலம், குளச் சூழ்நிலை மண்டலம், வனச் சூழல் அமைப்பு மற்றும் பிற சூழ்நிலை மண்டலங்கள் என வேறுபட்டுக் காணப்படுகிறது. அனாலும் இங்க உயிரினங்கள் நிலையாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் காணப்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

VI. வேறுபடுத்துக.

Question 1.
உற்பத்தியாளர் – சிதைப்பவர்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 60

Question 2.
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி – நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 61

Question 3.
வெப்பமண்டலத் தாவரங்கள் – பாலைவனத் தாவரங்கள்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 62
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 62.1

Question 4.
சவானா – தூந்திரா
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 68.1

VII. விரிவான விடையளி

Question 1.
சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.
விடை:
சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள்.

  • உயிரற்ற கூறுகள்
  • உயிருள்ள கூறுகள்
  • ஆற்றல் கூறுகள் என மூவகைப்படும்

உயிரற்ற கூறுகள்..
சுற்றுச் சூழலில் உள்ள உயிரற்ற, கரிம, இயற்பியல் மற்றும் இரசாயன காரணிகளை உள்ளடக்கியதாகும்.
(எ.கா.) நிலம், காற்று, நீர், சுண்ணாம்பு, இரும்பு போன்றவை.

உயிருள்ள கூறுகள் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியவை.

  • உற்பத்தியாளர்கள்
    இவை தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய உயிரினங்கள்.
  • முதல் நிலை நுகர்வோர் – தாவர உண்ணிகள்
  • இரண்டாம் நிலை நுகர்வோர் – ஊன் உண்ணிகள்
  • சிதைப்போர்கள் – சாறுண்ணிகள் எனப்படும். இவை இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்சுடியவை.

ஆற்றல் கூறுகள் (Energy Components)
உயிர்க்கோளம் முழுமைக்கும் ஆற்றலை வழங்கக்கூடியது சூரியன் ஆகும்.
அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும் ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் சூரிய ஆற்றல் பயன்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 2.
சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகளை எழுதுக.
விடை:
சூழ்நிலை மண்ட லத்தின் செயல்பாடுகள் (Functions of an ecosystem)
சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகள் ஆற்றல் ஓட்டத்தின் அமைப்பைச் சார்ந்துள்ளன.
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 68
அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு

  • ஆற்றல் மட்டம்
  • உணவுச் சங்கிலி
  • உணவு வலை ஆகியவற்றை உருவாக்குகின்றன.

ஆற்றல் மட்டம்.
ஆற்றல் ஓட்டம் பெரும்பாலும் சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்கு முறையில் நடைபெறுகிறது. இந்நிலைகள் ஆற்றல் மட்டம் எனப்படுகிறது.
உணவுச் சங்கிலி.
உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம் பல்வேறு ஆற்றல் மட்டத்தின் வழியாகத் தொடர்ச்சியாக நடைபெறுவதை உணவுச் சங்கிலி என்று அழைக்கிறோம்.

உணவு வலை.
உணவுச் சங்கிலிகள் (Food Chain) ஒன்றினையொன்று சார்ந்து, பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை (Food web) எனப்படுகிறது. (ஆற்றல் மட்டம் → உணவுச் சங்கிலி → உணவு வலை)

Question 3.
புவியில் உள்ள நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியை விவரி.
விடை:
நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி

  • இங்கு காணப்படும் உயிரினங்கள் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டு அவை வாழுகின்ற சூழலுக்கும் சக்தி மூலங்களுக்கும், இடத்திற்கும் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன
  • நீர்வாழ் உயிரினங்களின் மீதும் உயிரற்ற காரணகளின் தாக்கம் காணப்படுகிறது.
  • நன்னீர்வாழ் பல்லுயிர்தொகுதி மற்றும் கடல்நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி என இரண்டு வகை உண்டு.

நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி

  • இத்தொகுதியானது ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இத் தொகுதி உயிரினங்கள் – தாவரங்கள்
    • அல்லி
    • தாமரை
    • பாசியினத் தாவரங்கள் – விலங்குகள்
    • ஆமை
    • முதலை
    • மீன் இனங்கள்.

கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
கடல் நீரில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விட ஆதாரமாக உள்ள இத்தொகுதி புவியில் காணப்படும் மிகப்பெரிய பல்லுயிர்த்தொகுதியாகும். இரண்டாம் வகை கடல்நீர்வாழ் உயிரினங்களான பவளப்பாறைகள் (coral reefs) உள்ளன. மனிதர்கள் இத்தொகுதியை நீர், உணவு, பொழுதுபோக்கு அம்சங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இத்தொகுதியில் காணப்படும் பிரச்சனைகள் அதிக அளவில் மீன்பிடத்தல், சுற்றுச்சூழல் மாசுபடுதல், கடல் மட்டம் உயர்தல்.

VIII. கீழ்க்கண்டவற்றின் தினங்களைக் கண்டுபிடி

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 75

IX. நில வரைபடப் பயிற்சி (மாணவர்களுக்கானது)

உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்

1. பிரெய்ரி
2. டௌன்ஸ்
3. தூந்திர பல்லுயிர்த் தொகுதி
4. வெப்பமண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

X. படத்தைப் பார்த்து விடையளி

Question 1.
ஆர்டிக் தூந்திர உணவு வலை பற்றி உனது சொந்த கருத்தை வரையறு. (மாணவர்களுக்கானது)
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 80

9th Social Science Guide உயிர்க்கோளம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_____ புவியின் நான்காவது கோளமாகும்.
விடை:
உயிர்க்கோளம்

Question 2.
_____ என்பது பல்வேறு உயிரினங்களின் தொகுதி ஆகும்.
விடை:
சூழ்நிலை மண்டலம்

Question 3.
சூழ்நிலை மண்டலத்தைப்பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ____ ஆகும்.
விடை:
சூழலியல்

Question 4.
சூழலியல் பற்றிப் படிப்பவர் ____ எனப்படுகிறார்.
விடை:
சூழலியலாளர்

Question 5.
______ தற்சார்பு ஊட்ட உயிரி என அழைக்கப்படுகின்றன
விடை:
உற்பத்தியாளர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 6.
தூந்திரப் பகுதி மக்கள் குளிர்காலங்களில் _____ என்ற வீடுகளில் வாழ்கிறார்கள்.
விடை:
இக்ளு

II. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
உயிர்கோளம் முழுமைக்கும் _____ ஆற்றலை வழங்குகிறது.
அ) பூமி
ஆ) சூரியன்
இ) வெள்ளி
ஈ) செவ்வாய்
விடை:
ஆ) சூரியன்

Question 2.
பாலைவனப் பகுதியில் ஆண்டுச் சராசரி மழை _____ குறைவாக உள்ளது
அ) 15 செ.மீட்டருக்கு
ஆ) 50 செ.மீட்டருக்கு
இ) 35 செ.மீட்டருக்கு
ஈ) 25 செ.மீட்டருக்கு
விடை:
ஈ) 25 செ.மீட்டருக்கு

Question 3.
புவியின் மொத்த நீர்ப்பரப்பு ____ ஆகும்.
அ) 71%
ஆ) 73%
இ 75%
ஈ) 79%
விடை:
ஈ) 79%

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 4.
புவியின் மொத்த நிலப்பரப்பு ___ ஆகும்.
அ) 21%
ஆ) 25%
இ 27%
ஈ) 29%
விடை:
ஈ) 29%

Question 5.
இந்தியாவில் ____ உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
அ) 15
ஆ) 18
இ) 19
ஈ) 36
விடை:
ஆ) 18

III. குறுகிய விடையளி.

Question 1.
வாழ்விடம் என்றால் என்ன?
விடை:
விலங்கு, தாவரம் மற்றும் நுண்ணுயிரிகள் எந்த இடத்தில் வாழ்கின்றதோ அவ்விடம், அவற்றின் வாழ்விடம் எனப்படுகிறது.

Question 2.
நுகர்வோர் என்றால் என்ன?
விடை:

  • நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களைச் சார்ந்திருக்கும் உயிரினங்கள் நுகர்வோர் எனப்படும்.
  • இவை பிற சார்பு ஊட்ட உயிரி என்று அழைக்கப்படுகின்றன.

Question 3.
சாறுண்ணிகள் என்றால் என்ன?
விடை:
இறந்த அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்கூடியவை சாறுண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. எ.கா. பூஞ்சைகள், காளான்கள்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 4.
உணவு வலை என்றால் என்ன?
விடை:
உணவுச் சங்கலிகள் ஒன்றினையொன்று சார்ந்து, பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை எனப்படுகிறது.

Question 5.
பாலைவனச் சோலை என்றால் என்ன?
விடை:

  • பாலைவனச்சோலை என்பது பாலை வனங்கள் மற்றும் அரை வறண்டப் பாலைவனப் பிரதேசங்களில் காணப்படும் வளமான நன்னீர் பகுதியாகும்.
  • பாலைவனச் சோலைகள் நீரூற்றிலிருந்து நீரைப் பெறுகின்றன பேரீட்சை, அத்தி, சிட்ரஸ் பழங்கள் மக்காச்சோளம் போன்றவை பாலைவனச் சோலைக்கு அருகில் விளைவிக்கப்படுகின்றன.

IV. விரிவான விடையளி.

Question 1.
நீர்வாழ் உயிரிகளின் சூழ்நிலை அமைப்பை நிலவாழ் உயிரிகளின் சூழ்நிலை அமைப்பிலிருந்து வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 91

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 92
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 93

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 4 மக்களின் புரட்சி Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 4 மக்களின் புரட்சி

8th Social Science Guide மக்களின் புரட்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1519
ஆ) 1520
இ) 1529
ஈ) 1530
விடை:
இ) 1529

Question 2.
பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
அ) பூலித்தேவன்
ஆ) யூசுப்கான்
இ) கட்டபொம்மன்
ஈ) மருது சகோதரர்கள்
விடை:
அ) பூலித்தேவன்

Question 3.
காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ) இராமநாதபுரம்
ஈ) தூத்துக்குடி
விடை:
இ) இராமநாதபுரம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 4.
வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?
அ) பாஞ்சாலங்குறிச்சி
ஆ) சிவகங்கை
இ) திருப்பத்தூர்
ஈ) கயத்தாறு
விடை:
ஈ) கயத்தாறு

Question 5.
வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
அ) நாகலாபுரம்
ஆ) சிவகிரி
இ) சிவகங்கை
ஈ) விருப்பாச்சி
விடை:
இ) சிவகங்கை

Question 6.
‘திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது?
அ) மருது பாண்டியர்கள்
ஆ) கிருஷ்ணப்ப நாயக்கர்
இ) வேலு நாச்சியார்
ஈ) தீரன் சின்னமலை
விடை:
அ) மருது பாண்டியர்கள்

Question 7.
கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
அ) திண்டுக்கல்
ஆ) நாகலாபுரம்
இ) புதுக்கோட்டை
ஈ) ஓடாநிலை
விடை:
ஈ) ஓடாநிலை

Question 8.
ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
அ) மத்திய இந்தியா
ஆ) டெல்லி
இ) கான்பூர்
ஈ) பரெய்லி
விடை:
அ) மத்திய இந்தியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கிழக்குப்பகுதி பாளையங்கள் ___________ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது
விடை:
கட்டபொம்மன்

Question 2.
விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் ___________ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்
விடை:
அரியநாதர்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 3.
கட்டபொம்மனின் முன்னோர்கள் _____________ பகுதியைச் சார்ந்தவர்கள்
விடை:
ஆந்திரப்

Question 4.
____________ தமிழர்களால் ‘வீர மங்கை’ எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்
விடை:
வேலு நாச்சியார்

Question 5.
____________ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்
விடை:
சின்ன மருது

Question 6.
1857 ஆம் ஆண்டு புரட்சியை ___________ என்பவர் முதல் இந்திய சுதந்திரப் போர்’ என விவரிக்கிறார்.
விடை:
வி.டி. சவார்க்கர்

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி 1

IV. சரியா /தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்
விடை:
சரி

Question 2.
சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்
விடை:
தவறு

Question 3.
1799 அக்டோபர் 17ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்
விடை:
சரி

Question 4.
திப்பு சுல்தானின் மூத்த மகன் பதேக் ஹைதர் ஆவார்
விடை:
சரி

V. அ) பின்வரும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும்

I. வேலூர் புரட்சி 1801ம் ஆண்டு ஏற்பட்டது.
II. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்
III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தார்
IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.

அ) I & II சரி
ஆ) II & IV சரி
இ) II & III சரி
ஈ) I, II, & IV சரி
விடை:
இ) II & III சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

ஆ) தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.
1. மருது பாண்டியர் – எட்டயபுரம்
2. கோபால நாயக்கர் – திண்டுக்கல்
3. கேரளவர்மன் – மலபார்
4. துண்டாஜி – மைசூர்
விடை:
1. மருது பாண்டியர் – எட்டயபுரம்

இ) மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
கட்டப்பொம்மன், ஊமைத்துரை, செவத்தையா, திப்பு சுல்தான்.
விடை:
திப்பு சுல்தான்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
பாளையக்காரர்கள் என்பவர் யார்? சிலரின் பெயரைக் கூறுக.
விடை:

  • பாளையக்காரர்கள் என்பவர் ஒரு பிரதேசம் அல்லது பாளையத்தின் உரிமையாளர்கள் ஆவர்.
  • பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார்.

Question 2.
பாளையக்கார புரட்சியில் வேலு நாச்சியாரின் பங்கு என்ன?
விடை:

  • சிவகங்கையின் இராணியான வேலு நாச்சியார் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை மருது சகோதரர்கள் உதவியுடன் எதிர்த்து சிவகங்கையை கைப்பற்றினர்.
  • காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் இந்திய பெண்ணரசி ஆவார்.

Question 3.
தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?
விடை:
மருது சகோதரர்கள், கோபாலநாயக்கர், கேரளவர்மன் கிருஷ்ணப்பநாயக்கர் மற்றும் துண்டாஜி ஆவர்.

Question 4.
‘திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • ஜீன் 1801ல் மருது சகோதரர்கள் வெளியிட்ட பிரகடனம் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பு ஆகும்.
  • இந்த அறிவிப்பின் நகல் திருச்சி கோட்டை சுவரிலும் ஸ்ரீரங்கம் வைஷ்ணவகோவில் சுவரிலும் ஒட்டப்பட்டது.

Question 5.
வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக?
விடை:

  • புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
  • திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.
  • வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கப்பட்டார்.

Question 6.
1857ஆம் ஆண்டு புரட்சிக்கான உடனடிக் காரணம் என்ன?
விடை:

  • இராணுவத்தில் என்பீல்டு ரகதுப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பன்றியின் கொழுப்பும், பசுவின் கொழுப்பும் தடவப்பட்ட துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த இந்து, முஸ்லீம் வீரர்கள் மறுப்பு தெரிவித்தது புரட்சிக்கு உடனடி காரணமாயிற்று.

VII. விரிவான விடையளி.

Question 1.
புலித்தேவரைப் பற்றி நீவிர் அறிந்ததை எழுதுக?
விடை:

  • இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்த பூலித்தேவர் நெற்கட்டும் செவல் பாளையக்காரர்.
  • ஆற்காடு நவாப் முகமது அலிக்கும் ஆங்கிலேயருக்கும் கப்பம் கட்ட மறுத்த பூலித்தேவரை எதிர்த்து படையெடுத்த கூட்டுப்படையை தோற்கடித்தார்.
  • ஆங்கிலேயருடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய மன்னர் பூலித்தேவர் ஆவார்.
  • 1759ல் யூசுப்கான் தலைமையிலான நவாப் படைகளால் தோற்கடிக்கப்பட்டார்.
  • 1764ல் நெற்கட்டும் செவ்வலை பூலித்தேவர் கைப்பற்றினார்.
  • 1767ல் கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டு தலை மறைவாக வாழ்ந்து இறந்து போனார்.
  • துணிச்சலான அவரது போராட்டம் தென்னிந்திய வரலாற்றில் நிலைத்து நின்றது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 2.
தீரன் சின்னமலைக்கும் ஆங்கிலேயருக்கும் இடையேயான போராட்டாத்திற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளை விவரி?
விடை:

  • பிரெஞ்சு இராணுவத்தின் நவீன போர்முறை பயிற்சிப் பெற்ற தீரன் சின்னமலை திப்பு சுல்தானுடனிருந்து ஆங்கிலேயரை வென்றார்.
  • திப்பு சுல்தான் இறப்பிற்கு பின் 1800ல் ஆங்கிலேயரைக்தாக்க மராத்தியர் மற்றும் மருது சகோதரர்கள் உதவியை நாடினார்.
  • ஆங்கிலப் படைகள் அக்கூட்டுப்படைகளை தடுத்ததால் தீரன் சின்னமலை தோற்கடிக்கப்பட்டார்.
  • தொடர்ந்து நடைபெற்ற காவேரி, ஓடாநிலை, மற்றும் அரச்சலூர் போர்களில் கொரில்லா போர் முறையில் ஆங்கிலேயரைத் தோற்கடித்தார்.
  • சின்னமலையின் சமையற்காரர் நல்லப்பன் என்பவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு 1805ல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

Question 3.
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களை எழுதுக?
விடை:

  • ஆங்கிலேயரின் பொருளாதார சுரண்டல் புரட்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
  • வாரிசு இழப்புக் கொள்கை, துணைப்படைத்திட்டம் மூலம் முறையற்ற வகையில் அயோத்தியை இணைத்து ஆகியன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
  • மதமாற்ற நடவடிக்கைகள் சமய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய சமய அறிஞர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
  • சதி ஒழிப்பு, பெண்சிசுக் கொலை ஒழிப்பு விதவை மறுமணம் மற்றும் பெண் கல்வி ஆதரவு ஆகிய ஆங்கிலேயர் நடவடிக்கைகள் இந்திய கலாச்சாரத்தில் தலையிடுவதாக கருதினர்.
  • இந்திய சிப்பாய்கள் ஆங்கில அதிகாரிகளால் தாழ்வாக கருதப்பட்டதோடு குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டது. உயர் பதவிகள் ஆங்கில வீரர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது.

Question 4.
1857 ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணங்களை எழுதுக.
விடை:

  • சரியான ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு பொதுவான திட்டம், மையப்படுத்தப்பட்ட தலைமை, நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவை புரட்சியாளர்களிடையே இல்லை.
  • இராணி லட்சுமிபாய், நானாசாகிப் மற்றும் தாந்தியா தோபே தைரியமானவர்கள் ஆனால் சிறந்த தளபதிகளாகவோ, ஆங்கிலேயர்களுக்கு இணையானவர்களோ இல்லை.
  • வங்காளம், பம்பாய், சென்னை மேற்கு பஞ்சாப் மற்றும் இராஜபுதனம் புரட்சியில் பங்கு கொள்ளவில்லை.
  • நவீன கல்வி கற்ற இந்தியர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை .
  • சீக்கியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் கூர்க்கப்படைப்பிரிவினர் ஆங்கிலேயருக்கு ஆதரவு அளித்தனர்.
  • ஆயுதங்கள், தளபதிகள், ஒருங்கிணைப்பை ஆங்கிலேயர் பெற்றிருந்தனர்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
1857ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒருபொதுவான குறிக்கோள் இல்லை – நிரூபி.
விடை:
1857 ஆம் ஆண்டு பெரும்புரட்சியின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், புரட்சியில் ஈடுபட்ட தலைவர்களிடையே பொதுவான ஒரே நோக்கமும் குறிக்கோளும் இல்லை என்பது வெளிப்படையான உண்மை.

ஆங்கிலேயரை எதிர்ப்பது என்பதைத் தவிர வேறு பொதுவான குறிக்கோள் ஒன்றும் இல்லை.

பொதுவாக ஒரு இடத்தைக் கைப்பற்றியதும், அடுத்து என்ன செய்வது என்பதை அறியாமல் கொள்ளையடிப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தலைவர்களிடையே ஒருமித்த குறிக்கோள் இல்லை. உதாரணமாக இஸ்லாமியர்கள் முகலாய அரசை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் இந்துக்கள் மராத்திய செல்வாக்கை மீண்டும் நிறுவ முயற்சித்தனர்.

சில இந்தியத் தலைவர்கள் புரட்சியில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர்.

இவ்வாறு தலைவர்களிடையே ஒரே நோக்கமும் குறிக்கோளும் இல்லாதது புரட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமாயிற்று.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பாளையக்காரர்கள் படங்களை சேகரித்து ஒரு செருகேட்டினை (Album) தயார் செய்க.

8th Social Science Guide மக்களின் புரட்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1764
ஆ) 1765
இ) 1757
ஈ) 1759
விடை:
இ) 1757

Question 2.
கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்
அ) பூலித்தேவர்
ஆ) கட்டபொம்மன்
இ) வேலுநாச்சியார்
ஈ) தீரன் சின்னமலை
விடை:
அ) பூலித்தேவர்

Question 3.
1792ல் ஏற்பட்ட உடன்படிக்கை
அ) மைசூர் உடன்படிக்கை
ஆ) மலபார் உடன்படிக்கை
இ) மதராஸ் உடன்படிக்கை
ஈ) கர்நாடக உடன்படிக்கை
விடை:
ஈ) கர்நாடக உடன்படிக்கை

Question 4.
தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு கோட்டை
அ) கயத்தாறு
ஆ) வேலூர்
இ) சங்ககிரி
ஈ) திருச்சி
விடை:
ஆ) வேலூர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
மலாயாவின் பினாங் பின்னர் ___________ என அழைக்கப்பட்டது
விடை:
இளவரசர் தீவு

Question 2.
திப்புவின் கொடியில் ____________ உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது
விடை:
புலி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 3.
1857 புரட்சியின் போது ____________ கவர்னர் ஜெனரலாக இருந்தார்
விடை:
கானிங்பிரபு

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி 2

IV. சரியா? தவறா?

Question 1.
மருது சகோதரர்கள் மூக்கையா பழனியப்பன் மற்றும் பொன்னாத்தாள் இவர்களின் மகன்கள்
விடை:
சரி

Question 2.
வேலூர் கோட்டையானது பெரும்பாலான ஆங்கிலேயர்களைக் கொண்டிருந்தது
விடை:
தவறு

V. கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையை (✓) செய்யவும்

அ) I. ஆங்கிலேயர்களின் ஆட்சியை பெரும்பாலானோர் ஏற்கவில்லை.
II. பொருளாதார சுரண்டல் மற்றும் நிர்வாக புதுமைகள் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தின.
III. அயோத்தியை முறையாக இணைத்துக் கொண்டனர்.
IV. இந்திய சிப்பாய்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டது.

அ) I & III சரி
ஆ) I & II சரி
இ) III & IV சரி
ஈ) IV, & II சரி |
விடை:
ஆ) I & II சரி

ஆ) மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி. ‘கொங்கு நாடு – சேலம், கோம்புத்தூர், வேலூர், கரூர், மற்றும் திண்டுக்கல்
விடை:
வேலூர்

VI. குறுகிய விடையளி.

Question 1.
வேலூர் கலகத்தின் உடனடிக் காரணம் என்ன?
விடை:

  • ஜூன் 1806 ல் தளபதி அக்னியூ சிலுவை சின்னத்துடன் கூடிய புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார்.
  • இந்து, முஸ்லீம் வீரர்கள் எதிர்த்ததால் தண்டிக்கப்பட்டனர். இதுவே உடனடிக் காரணமாயிற்று.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 2.
மங்கள்பாண்டே குறிப்பு வரைக.
விடை:

  • 1857 புரட்சியில் பாரக்பூரில் வங்காள படைப்பிரிவைச் சேர்ந்த இளம் இராணுவ வீரர் மங்கள் பாண்டே ஆவார்.
  • கொழுப்பு தடவிய தோட்டாவை தொட மறுத்து உயர் அதிகாரியை சுட்டு கொன்றதால் தூக்கிலிடப்பட்டார்.

Question 3.
1857 ம் ஆண்டு புரட்சி மிக வேகமாக பரவிய இடங்கள் யாவை?
விடை:
புரட்சி மிக வேகமாக பரவியது லக்னோ கான்பூர், ஜான்சி, பரெய்லி, பீகார், பைசாபாத், மற்றும் வட இந்தியா ஆகும்.

VII. விரிவான விடையளி.

Question 1.
வேலு நாச்சியார் பற்றி ஒரு பத்தியில் விடையளி.
விடை:

  • சிவகங்கையின் இராணி வேலு நாச்சியார் 16 வயதில் முத்து வடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
  • ஆங்கிலப்படை 1772ல் முத்துவடுக நாதரை காளையார் கோயில் போரில் கொன்றதால் வேலு நாச்சியார் தன் மகளுடன் கோபாலநாயக்கர் பாதுகாப்பில் வாழ்ந்தார்.
  • இக்காலகட்டத்தில் ஒரு படையை அமைத்து சகோதரர்கள் உதவியுடன் ஆங்கிலேயரை தோற்கடித்து சிவகங்கை இராணியானார்.
  • பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் இந்தியப் பெண்ணரசி ஆவார்.
  • இவர் தமிழர்களால் வீரமங்கை தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அழைக்கப்படுகிறார்.

Question 2.
1857 ம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை?
விடை:

  • 1857 ம் ஆண்டு புரட்சி இந்திய வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
  • இதனால் நிர்வாக மற்றும் அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.
  • 1858 ல் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை மூலம் இந்திய நிர்வாகம் கம்பெனியிடமிருந்து ஆங்கில அரசுக்கு மாற்றப்பட்டது.
  • இயக்குநர் குழு, கட்டுப்பாட்டு குழு கலைக்கப்பட்டு 15 உறுப்பினர்கள் கொண்ட ஒரு சபை ஏற்படுத்தப்பட்டது.)
  • இராணுவம் மாற்றியமைக்கப்பட்டு அதிகப்படியான ஆங்கிலேயர்கள் பணியிலமர்த்தப்பட்டனர்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி 3

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 4 நீர்க்கோளம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 4 நீர்க்கோளம்

9th Social Science Guide நீர்க்கோளம் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல ______
அ) அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ) ஒரே அளவாக இருக்கும்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) குறையும்

Question 2.
கடல் நீரோட்டங்கள் உருவாகக் காரணம்
அ) புவியின் சுழற்சி
ஆ) வெப்பநிலை வேறுபாடு
இ) உவர்ப்பிய வேறுபாடு
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
இ) மேற்கண்ட அனைத்தும்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம்

Question 3.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
விடை:
1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகின்றன.
2. மித வெப்ப மண்டலப்பகுதிகளில் மீன்பிடித் தொழில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும், குளிர் நீரோட்டமும் இணைவதே காரணமாகும்.
4. இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்.
அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 1 மற்றும் 3 சரி
இ) 2, 3 மற்றும் 4 சரி
இ) 1, 2 மற்றும் 3 சரி
விடை:
ஆ) 1 மற்றும் 3 சரி

Question 4.
கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.
அ) புவித்தட்டுகள் இணைதல்
ஆ) புவித்தட்டுகள் விலகுதல்
இ) புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) புவித்தட்டுகள் விலகுதல்

Question 5.
கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கரமாக உள்ளவை எவை?
அ) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி, சமவெளி, கடல் அகழி
ஆ) கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடலடிச் சமவெளி, கடல் அகழி
இ) கடலடி சமவெளி, கண்டச்சரிவு, கண்டத் திட்டு, கடல் அகழி
ஈ) கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கண்டத் திட்டு, கடல் அகழி
விடை:
அ) கண்டத்திட்டு, கண்டச் சரிவு, கடலடி, சமவெளி, கடல் அகழி

Question 6.
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்துவது எது?
அ) வளைகுடா நீரோட்டம் – பசிபிக் பெருங்கடல்
ஆ) லேப்ரடார் கடல் நீரோட்டம் – வட அட்லாண்டிக் பெருங்கடல்
இ) கேனரி கடல் நீரோட்டம் – மத்திய தரைக்கடல்
ஈ) மொசாம்பிக் கடல் நீரோட்டம் – இந்தியப் பெருங்கடல்
விடை:
அ) வளைகுடா நீரோட்டம்-பசிபிக் பெருங்கடல்

II. கூற்று (A) காரணம் (R) கண்ட றிக

அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’விற்கான சரியான விளக்கம்
ஆ) A மற்றும் R சரி, ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
இ) A சரி, ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி

Question 1.
கூற்று (A):- வரைபடங்களில் கடல்கள் எப்பொழுதும் நீல நிறத்தால் கொடுக்கப்படும்.
காரணம் (R):- இது கடல்களின் இயற்கையான நிறத்தைக் காட்டுகிறது
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம்

Question 2.
கூற்று (A):- ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகின்றன.
காரணம் (R):- அனைத்து கயாட்டுகளும் எரிமலை செயல்பாடுகளால் உருவானவை.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்

Question 3.
கூற்று (A):- கடலடித்தளத்தில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடிப் பள்ளத்தாக்குகள் ஆகும்.
காரணம் (R):- இவைகள் கண்டத்திட்டு, சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்

Question 4.
கூற்று (A):- வட்டப் பவளத்திட்டு (Atolls) அட்லாண்டிக் பெருங்கடலில் பரவலாகக் காணப்படுகின்றன.
காரணம் (R):- ஆழமான பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் குறைவாக உள்ளன.
விடை:
இ) கூற்று A சரி, காணம் R தவறு

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம் 25

IV. சுருக்கமான விடையளி.

Question 1.
‘நீர்க்கோளம்’ பொருள் கூறுக.
விடை:
புவியின் நீர்சூழ் பகுதி நீர்க்கோளம். இது புவியில் காணப்படும் அனைத்து நிலையிலும் உள்ள திண்ட, நீர்ம, வாய) நீரை உள்ளடக்கியது.

Question 2.
நீரியல் சுழற்சி என்றால் என்ன?
விடை:
புவியின் நீரானது நிலைத்த தன்மையற்ற, நகரும் தன்மையுடையது. புவியில் உள்ள நீர் தனது நிலைகளை (பனிக்கட்டி, நீர், நீராவி) தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பது நீரியல் சுழற்சி ஆகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம்

Question 3.
கடலடி நிலத்தோற்றங்கள் யாவை?
விடை:

  • கண்டத்திட்டு
  • கண்டச்சரிவு
  • கண்ட உயர்ச்சி
  • கடலடி சமவெளிகள்

(அ) அபிசல் சமவெளி
கடல் பள்ளம்

(அ) அகழிகள்

கடலடி மலைத் தொடர்கள்.

Question 4.
கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?
விடை:

  • புவியின் சுழற்சி
  • வீசும் காற்று
  • கடல் நீரின் வெப்பம்
  • உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாடு

Question 5.
கடல் அலைகளைப் பற்றிச் சுருக்கமாக விடையளி.
விடை:

  • கடல் நீர் இயக்கங்களில் மிகவும் வலிமை வாய்ந்தவை அலைகளே. காற்று கடலின் மேற்பரப்பில் வீசும்போது சிற்றலைகள் உருவாகின்றன. காற்றின் வேகம், நீடிக்கம் காலம், திசை ஆகியவற்றைப் பொறுத்து அலைகளின் உயரம் அமையும்.
  • ஆழ்கடலில் ஏற்படும் நில அதிர்வுகளினால் ஏற்படும் அலைகள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் ஆழிப் பேரலைகள்.

V. காரணம் அறிக

Question 1.
வட அரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம், நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
விடை:
ஏனெனில்,

  • கண்டங்கள் மற்றும் கடல்கள் வட மற்றும் தென் அரைக்கோளங்களில் ஒரே சீராகப் பரவியிருக்கவில்லை
  • நிலம் மற்றும் நீர்ப்பரவலின் அடிப்படையில் வட அரைக்கோளம் (61% நிலப்பரப்பு) நில அரைக்கோளம் என்றும், தென் அரைக்கோளம் (81% நிலப்பரப்பு) நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம்

Question 2.
கண்டத்திட்டுகள் சிறந்த மீன்பிடித்தளங்களாகும்.
விடை:
கண்டத்திட்டு ஆழமற்ற, சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்லும் பகுதியாக இருப்பதால் கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. எ.கா. கிராண்ட் பாங்க் (நியூ பவுண்ட்லாந்து)

VI. வேறுபடுத்துக.

Question 1.
உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம் 60

Question 2.
கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம் 61
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம் 62

VII. விரிவான விடையளி

Question 1.
கண்டத்திட்டு மற்றும் கண்டச் சரிவு பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
கண்டத்திட்டு:

  • நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் மூழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படுகிறது.
  • கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கின்றது. இது கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. இதனால் கண்டத்திட்டுகள் உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்களுள் உள்ளன.
    (எ.கா.) ‘கிராண்ட் பாங்க்’ (The Grand Bank) – நியூ பவுண்ட்லாந்து.

கண்டச்சரிவு:

  • கண்ட மேலோட்டிற்கும், கடலடி மேலோட்டிற்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகின்ற, கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து வன் சரிவுடன் ஆழ்கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதியே கண்டச்சரிவாகும்.
  • வன்சரிவினைக் கொண்டிருப்பதால் படிவுகள் எதுவும் இங்குக் காணப்படுவதில்லை. கடலடிப் பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுகின்றன.
  • சூரிய ஒளி மிகக் குறைந்த அளவு ஊடுருவுகிறது. வெப்பநிலை மிகக்குறைவாக உள்ளதால் இப்பகுதி கடல்வாழ் உயிரினங்களில் வளர்சிதை மாற்றம் மெதுவாகவே நடைபெறுகிறது.

Question 2.
கடல் நீரோட்டங்கள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
விடை:
கடல் நீராட்டங்கள்:
பெருங்கடல்களின் மேற்பரப்பிலும், அடி ஆழத்திலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீரினை நீரோட்டம் என்று அழைக்கின்றோம்.

கடல் நீரோட்டங்களின் வகைகள்:

  • வெப்பத்தின் அடிப்படையில்
  • வெப்ப நீரோட்டம்
  • குளிர் நீரோட்டம் என வகைப்படும்.

வெப்ப நீரோட்டம்:
தாழ் அட்சப் பகுதிகளிலிருந்து, உயர் அட்சப் பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள் வெப்ப நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. (எ.கா.) வளைகுடா நீரோட்டம் (அட்லாண்டிக் பெருங்கடல்), வட புவியிடைக் கோட்டு நீரோட்டம் (பசிபிக் பெருங்கடல்).

குளிர் நீரோட்டம்:
உயர் அட்சப் பகுதிகளிலிருந்து, தாழ் அட்சப்பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள் குளிர் நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
(எ.கா) லாப் ரடார் நீரோட்டம் (அட்லாண்டிக் பெருங்கடல்), பெருவியன் நீரோட்டம் (பசிபிக் பொருங்கடல்).
(தாழ் அட்சம் → வெப்ப மண்டம்
உயர் அட்சம் → மிதவெப்பமண்டலம், துருவமண்டலம்)

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம்

Question 3.
கடல்வளங்கள் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் யாவை?
விடை:
கடல்வளங்களின் தாக்கம்:

  • கடல் நீர் மற்றும் கடலில் அடிப்பகுதியில் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள் கடல்வளங்கள் எனப்படும்.
    Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம் 40
  • சமுகத்தின் நீடித்த தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடல்வளங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
  • பலதரப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் உணவு, மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தொழில்துறைகளில் பயன்படுகின்றன.
  • ஆற்றல் கனிமவளம் மற்றும் நீர் ஆகியவற்றின் உலகத்தேவைகள் உயிரற்ற கடல்வளங்களையே சார்ந்துள்ளன.
    சுற்றுலா, மீன்பிடி தொழில், மரபுசாரா எரிசக்தி, போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.

9th Social Science Guide நீர்க்கோளம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
புவியின் மேற்பரப்பில் ____ சதவிகித நீரானது கடல்களுக்கு உட்பட்டது.
அ) 95
ஆ) 97
இ) 99
ஈ) 93
விடை:
ஆ) 97

Question 2.
‘ஆயிரம் ஏரிகளின் நிலம்’ என்று _____ அழைக்கப்படுகிறது.
அ) பின்லாந்து
ஆ) இங்கிலாந்து
இ) அயர்லாந்து
ஈ) நெதர்லாந்து
விடை:
அ) பின்லாந்து

Question 3.
வட அரைக்கோளம் _____ சதவிகிதம் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
அ) 51
ஆ) 61
இ) 71
ஈ) 81
விடை : ஆ) 61

Question 4.
தென் அரைக்கோளம் _____ சதவிகிதம் நீர்ப்பரப்பைக் கொண்டுள்ளது.
அ) 61
ஆ) 91
இ) 71
ஈ) 81
விடை:
ஈ) 81%

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம்

Question 5.
மொத்தக்கடல் பரப்பில் அகழி சதவிகிதத்திற்கு மேல் காணப்படுகிறது.
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 9
விடை:
இ) 7

Question 6.
நில நடுக்கோட்டுப் பகுதியில் ஆண்டுச் சராசரி வெப்பநிலை ____ ஆக இருக்கும்.
அ) 15°செ
ஆ) 17°செ
இ) 21°செ
ஈ) 23° செ
விடை:
இ) 21° செ

Question 7.
‘சுந்தா அகழி’ காணப்படும் பெருங்கடல் _____ எனப்படும்.
அ) அட்லாண்டிக் பெருங்கடல்
ஆ) பசிபிக் பெருங்கடல்
இ) இந்தியப் பெருங்கடல்
ஈ) அண்டார்டிக் பெருங்கடல்
விடை:
இ) இந்தியப் பெருங்கடல்

Question 8.
கடலில் காணப்படும் பிளாங்டனின்’ அளவைத் தீர்மானிக்கும் காரணி
1. நீரின் ஆழம்
2. கடல் நீரோட்டம்
3. வெப்பநிலை மற்றும் உவர்ப்பியம்
4. பகல் மற்றும் இரவின் நீளம்
அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 1, 2 மற்றும் 3 சரி
இ) 1, 3 மற்றும் 4 சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
ஆ) 1, 2 மற்றும் 3 சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கோளத்தின் கதாநாயகன் என்று _____ அழைக்கப்படுகிறார்.
விடை:
சில்வியா ஏர்ல்

Question 2.
‘Hypso’ என்ற கிரேக்கச் சொலில்ன் பொருள் _____
விடை:
உயரம்

Question 3.
தென் சீனக் கடலின் கண் எனப்படுவது ______
விடை:
டிராகன் துளை

Question 4.
காஸ்பியன் கடல் உவர்ப்பியத்தின் அளவு _____
விடை:
14% – 17%

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம்

Question 5.
இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிரினம் ______
விடை:
கங்கைவாழ் டால்பின்

III. குறுகிய விடையளி.

Question 1.
நிலத்தடி நீர்மட்டம் என்றால் என்ன?
விடை:
நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல்மட்ட நிலையே நிலத்தடி நீர் மட்டம் ஆகும். (Water Table)

Question 2.
நீர் கொள் படுகை என்றால் என்ன?
விடை:
நீர்க்கொள்பாறைகளின் வழியாக ஊடுருவிச் சென்று, நீர் உட்புகாப் பாறையின் மேல்பகுதியில் தேங்கி நிற்கும் நீரை நீர்க்கொள்படுகை (Aquifers) என்கிறோம்.

Question 3.
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கடல்கள் யாவை?
விடை:
பால்டிக் கடல், கருங்கடல், கரீபியன் கடல், வட கடல், மத்திய தரைக்கடல், நார்வீஜியன் கடல்.

Question 4.
இந்தியப் பெருங்கடலில் உள்ள கடல்கள் யாவை?
விடை:
செங்கடல், பாரசீக வளைகுடா, அரபிக்கடல், அந்தமான் கடல், வங்காள விரிகுடா.

Question 5.
இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகள் யாவை?
விடை:
அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லட்சத் தீவுகள், இலங்கை, பாம்பன் தீவுகள்.

IV. விரிவான விடையளி.

Question 1.
அகழிகள், கடலடி மலைத் தொடர்கள் பற்றி விவரி?
விடை:
கடலடிப் பள்ளம் / அகழிகள்

  • பெருங்கடலின் மிக ஆழமான பகுதி அகழி ஆகும். இது மொத்தக்கடலடிப் பரப்பில் 7 சதவீதத்திற்கு மேல் காணப்படுகின்றது. அகழியில் நீரின் வெப்பநிலை உறைநிலையை விட சற்று அதிகமாக இருக்கும்.
  • படிவுகள் ஏதும் இல்லாததினால், பெரும்பாலான அகழிகள் வன்சரிவுடன் ‘v’ வடிவத்தில் காணப் படுகின்றன.
  • பெரும்பாலும் வலிமையான நில அதிர்வுகளின், நிலநடுக்க மேல்மையப்புள்ளி (Epicentre) இங்கு காணப்படுகின்றது.

கடலடி மலைத்தொடர்கள்

  • கடலடியில் காணப்படும் தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கடலடி மலைத் தொடர்கள் எனப்படுகின்றன. இவை இரண்டு நிலத்தட்டுகள் விலகிச் செல்வதினால் உருவாகின்றன.
  • இவை இளம் பசால்ட் பாறைகளால் ஆவை. புவி நிலத்தோற்றங்களில் இம்மலைத் தொடர் மிக விரிந்தும் தனித்தும் காணப்படும் நிலத்தோற்றமாகும்.
  • மத்திய அட்லாண்டிக் மலைத் தொடரும், கிழக்கு பசிபிக் மலைத் தொடரும் கடலடி மலைத் தொடர்களுள் நன்கு அறியப்பட்டவைகளாகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம்

Question 2.
ஓதங்களை விவரி.
விடை:
ஓதங்க ள் (Tides)

  • சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல்நீர் உயர்ந்து தாழ்வது
    Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம் 55
  • இவை உயர் ஓதங்கள் (Spring tides) மற்றும் தாழ் ஓதங்கள் (Neap tides) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உயர் ஓதம் :

  • புவி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்பொழுது, சூரியன் மற்றும் சந்திரனின் கூட்டு ஈர்ப்பு விசையானது கடலின் மேற்பரப்பு அலைகளை வலுவடையச் செய்து உயர் அலைகளை உருவாக்குகின்றன.
  • இவ்வுயரமான அலைகள் உயர் ஓதங்கள் எனப்படுகின்றன. இவை அமாவாசை மற்றும் முழு நிலவு தினங்களில் ஏற்படுகின்றன.

தாழ் ஓதம் :

  • புவி, சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்துக் கோணத்தில் வரும்போது இவற்றின் ஈர்ப்பு விசையானது ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதினால் உயரம் குறைவான அலைகள் உருவாகின்றன.
  • இவ்வுயரம் குறைவான அலைகள்,தாழ் ஓதங்கள் எனப்படுகின்றன.
  • இரண்டு உயர் ஓதங்களுக்கு இடையே தாழ் ஓதங்கள் ஏற்படுகின்றன. சந்திரனின் முதல் மற்றும் இறுதி கால் பகுதியில் அதாவது மாதத்தில் இரண்டு முறை இவ்வோதங்கள் ஏற்படுகின்றன.

Question 3.
பெருங்கடலின் தோற்றம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக?
விடை:
பொருங்கடலின் தோற்றம்:

  • மிகப்பரந்த உவர்நீரைத் கொண்ட பெருங்கடல்கள் சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக புவியின் மீது உருவாகி இருக்கலாம் எனப் புவி அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
  • தொடக்க காலத்தில் நீர் இல்லாத கோளாக இருந்த புவி, காலப்போக்கில் குளிரத் தொடங்கி, புவியில் உட்பகுதியில் இருந்த நீராவி வெளியேறி வளிமண்டலத்தை அடைந்து மேகங்களாக உருவாகி இடைவிடாத மழையைப் பொழிந்தன. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெய்த இந்த மழை பள்ளங்களை நிரப்பி நாளடைவில் பெருங்கடலை உருவாக்கின.
  • வட அரைக்கோளம் 61% நீலப்பரப்பையும் தென் அரைக்கோளம் 81% நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது. நிலம் மற்றும் நீர் பரவலின் அடிப்படையில் வட அரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும், தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • பெருங்கடல்கள் மற்றும் கடல்கள் அதிக அளவிலான உணவு மற்றும் கனிம வளங்களைக் கொண்டிருப்பதால் புவிக்கோளத்தின் வளக்கிண்ணமாக கருதப்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 4 நீர்க்கோளம் 91

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

8th Social Science Guide காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
…………………….. சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
அ) மனித
ஆ) விலங்கு
இ) காடு
ஈ) இயற்கை
விடை:
அ) மனித

Question 2.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
அ) தர்மாம்பாள்
ஆ) முத்துலட்சுமி அம்மையார்
இ) மூவலூர் ராமாமிர்தம்
ஈ) பண்டித ரமாபாய்
விடை:
ஆ) முத்துலட்சுமி அம்மையார்

Question 3.
சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு.
அ) 1827
ஆ) 1828
இ) 1829
ஈ) 1830
விடை:
இ) 1829

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Question 4.
B.M. மலபாரி என்பவர் ஒரு
அ) ஆசிரியர்
ஆ) மருத்துவர்
இ) வழக்கறிஞர்
ஈ) பத்திரிகையாளர்
விடை:
ஈ) பத்திரிகையாளர்

Question 5.
பின்வருவனவற்றில் எவை/எது சீர்திருத்த இயக்கம்(ங்கள்)?
அ) பிரம்ம சமாஜம்
ஆ) பிரார்த்தனை சமாஜம்
இ) ஆரிய சமாஜம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Question 6.
பெதுன் பள்ளி ……………….. இல் J.E.D. பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது
அ) 1848
ஆ) 1849
இ) 1850
ஈ) 1851
விடை:
ஆ) 1849

Question 7.
1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?
அ) வுட்ஸ்
ஆ) வெல்பி
இ) ஹண்டர்
ஈ) முட்டிமன்
விடை:
இ) ஹண்டர்

Question 8.
சாரதா குழந்தைத் திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை ………… என நிர்ண யித்தது.
அ) 11
ஆ) 12
இ) 13
ஈ) 14
விடை:
ஈ) 14

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………… 1819இல் கிறித்தவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது.
விடை:
பெண் சிறார் சங்கம்

Question 2.
சிவகங்கையை சேர்ந்த ……………. என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாகப் போராடினார்.
விடை:
வேலு நாச்சியார

Question 3.
இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர் ………………..
விடை:
கோபால கிருஷ்ண கோகலே

Question 4.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர் ……………… ஆவார்.
விடை:
ஈ.வெ.ரா. பெரியார்

Question 5.
கந்துகூரி வீரேசலிங்கம் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் …………….. ஆகும்.
விடை:
விவேகவர்தினி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
ரிக் வேத காலத்தில் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Question 2.
தேவதாசி முறை ஒரு சமூக தீமை.
விடை:
சரி

Question 3.
இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம்மோகன்ராய்.
விடை:
சரி

Question 4.
பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.
விடை:
தவறு

Question 5.
1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது.
விடை:
தவறு

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
சரியான இணையை கண்டுபிடி.
அ மகளிர் பல்கலைக்கழகம் – பேராசிரியர் D.K. கார்வே
ஆ நீதிபதி ரானடே – ஆரிய சமாஜம்
இ விதவை மறுமணச் சட்டம் – 1855
ஈ ராணி லட்சுமிபாய் – டெல்லி
விடை:
அ) மகளிர் பல்கலைக்கழகம் – பேராசிரியர் D.K. கார்வே

Question 2.
மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.
அ) குழந்தை திருமணம்
ஆ) சதி
இ) தேவதாசி முறை
ஈ) விதவை மறுமணம்
விடை:
ஈ) விதவை மறுமணம்

Question 3.
பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்.
i) பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமிபாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
ii) தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த வேலுநாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாக போராடினார்.

மேலே கொடுக்கப்பட்ட எந்த வாக்கியம்(ங்கள்) சரியானவை?
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) 1 மற்றும் ii
ஈ) இரண்டுமில்லை
விடை:
இ) (i) மற்றும் (ii)

Question 4.
கூற்று : ராஜா ராம்மோகன் ராய் அனைத்து இந்தியர்களாலும் மிகவும் நினைவு கூறப்படுகிறார்.
காரணம் : இந்திய சமுதாயத்தில் இருந்த சதி என்ற தீயபழக்கத்தை ஒழித்தார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை
ஆ) கூற்று சரியானது. காரணம் தவறு.
இ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை:
இ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களின் பெயரினைக் குறிப்பிடுக.
விடை:

  • ராஜா ராம் மோகன்ராய்
  • தயானந்த சரஸ்வதி
  • கேசவ சந்திரசென்
  • ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  • பண்டித ரமாபாய்
  • டாக்டர் முத்துலட்சுமி
  • ஜோதிராவ் பூலே
  • பெரியார் ஈ.வெ.ரா.
  •  டாக்டர் தர்மாம்பாள்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Question 2.
சமூக தீமைகளில் சிலவற்றைப் பட்டியலிடுக.
விடை:

  • பெண் சிசுக் கொலை
  • பெண் சிசு கருக்கொலை
  • குழந்தைத் திருமணம்
  • சதி
  • தேவதாசி முறை

Question 3.
இடைக்கால இந்தியாவில் குறிப்பிடத்தக்க பெண்கள் யாவர்?
விடை:

  • ரசியா சுல்தானா
  • ராணி துர்காவதி
  • சாந்த் பீவி
  • நூர்ஜஹான்
  • ஜஹனாரா
  • ஜீஜா பாய்
  • மீராபாய்

Question 4.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான பெண்களைக் குறிப்பிடுக.
விடை:

  • வேலு நாச்சியார்
  • பேகம் ஹஸ்ரத் மஹால்
  • ஜான்சிராணி லட்சுமி பாய்

Question 5.
‘சதி’ பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:

  • இந்திய சமூகத்தில் நிலவிய சமூக தீமைகளில் ஒன்று சதி என்பதாகும்.
  • குறிப்பாக இப்பழக்கம் ராஜபுத்திரர்களிடையே காணப்பட்டது.
  • இதன் பொருள் ‘கணவனின் சிதையில் தானாக முன்வந்து விதவைகள் எரித்துக் கொள்ளுதல் ஆகும்.
  • ஆரம்ப காலத்தில் தாமாகவே முன்வந்து செய்து கொண்டனர். ஆனால் பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலால் சிதையில் அமர்ந்தனர்.

VII. விரிவான விடையளி

Question 1.
சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கினைக் கண்டறியவும்.
விடை:

  • இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் முக்கியப் பங்கினை வகித்தனர்.
  • தொடக்ககால காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பல்வேறு வகைகளில் முக்கியப் பங்காற்றினர்.
  • சிவகங்கையின் வேலு நாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிராக வீர தீரமாகப் போரிட்டு சிவகங்கையில் தனது ஆட்சியை மீட்டெடுத்தார்.
  • 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் பேகம் ஹஸ்ரத் மஹால், ஜான்சி ராணி, லட்சுமி பாய் போன்றோர் ஆயுதமேந்திப் போராடினர்.
  • விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அயல் நாட்டு பொருட்களைப் புறக்கணித்தனர்.
  • ஊர்வலங்களில் கலந்து கொள்வது, சட்டங்களை மீறுதல் மூலம் தடியடி பெற்று சிறைக்குச் சென்றனர்.
  • விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

Question 2.
சமூக தீமைகளை ஒழிப்பதில் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பை விளக்குக.
விடை:

  • ராஜாராம் மோகன்ராய்:ராஜாராம் மோகன்ராய் சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ஆவார்.
  • இவர் சாதிகளுக்கு அப்பால் சதி எதிர்ப்புப் போராளியானார்.
  • அவருடைய கடுமையான முயற்சியின் காரணமாக 1829இல் சதி எனும் உடன் கட்டை ஏறுதல் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.
  • இவர் குழந்தைத் திருமணம் மற்றும் பெண்சிசுக்கொலை ஆகியவற்றை எதிர்த்தார்.
  • விதவைகள் மறுமணம், பெண் கல்வி மற்றும் பெண்களின் சொத்துரிமை ஆகியவற்றை ஆதரித்தார்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் :
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெண்கல்வி, விதவை மறுமணம் ஆகியவற்றை ஒழிக்கவும், விதவைகள் மறுமணத்தை ஆதரிக்கவும் பலதார மணத்தை ஒழிப்பதற்காகவும் வங்காளத்தில் ஒரு இயக்கத்தை மேற்கொண்டார்.

இவரது தீவிர முயற்சியின் விளைவாக 1856இல் இந்து விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது.

கந்து கூரி வீரேசலிங்கம் :-

  • கந்து கூரி வீரேசலிங்கம் மகளிர் விடுதலைக்காகப் போராடிய போராளி ஆவார்.
  • அவர் 1874இல் தனது முதல் பெண்கள் பள்ளியைத் திறந்தார்.
  • விதவைகள் மறுமணம் மற்றும் பெண் கல்வி ஆகியவற்றிற்காகப் போராடினார்.

எம்.ஜி. ரானடே :

  • எம்.ஜி. ரானடே விதவை மறுமண சங்கத்தில் சேர்ந்து, விதவை மறுமணம் மற்றும் பெண்கல்வி ஆகியவற்றை ஊக்குவித்தார்.
  • இவர் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.
  • இவர் தொடங்கிய இந்திய தேசிய சமூக மாநாடு சமூக சீர்திருத்தத்தின் சிறந்த நிறுவனமாக உருவானது.

பி.எம். மலபாரி :

  • பி.எம். மலபாரி குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதற்காக ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்.
  • துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

கோபால கிருஷ்ண கோகலே :

  • இவர் இந்திய ஊழியர் சங்கத்தைத் தொடங்கினார்.
  • அது தொடக்கக்கல்வி, பெண் கல்வி மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மேம்பாடு ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.

பெரியார். ஈ.வெ.ரா. :

  • பெரியார் பெண்கல்வி, விதவை மறுமணம் மற்றும் கலப்புத் திருமணம் ஆகியவற்றை ஆதரித்தார்.
  • குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.

பெண் சீர்திருத்தவாதிகள் :
பண்டித ரமாபாய், ருக்மா பாய், தாராபாய் ஷிண்டே, அன்னி பெசன்ட், தர்மாம்பாள், முத்துலட்சுமி அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிற்காகப் பெருந் தொண்டாற்றிய பெண்மணிகளாவர்.

Question 3.
சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் குறித்து விரிவாக விடையளிக்கவும்.
விடை:

  • பெண்கள் விடுதலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
  • இது மக்களிடையே தேசிய விழிப்புணர்வை உருவாக்கியது.
  • தியாகம், சேவை மற்றும் பகுதிதறிவு உணர்வு ஆகியவற்றை உருவாக்கியது.
  • சதி மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவை சட்ட விரோதமாக்கப்பட்டது.
  • விதவைகள் மறுமணம் செய்ய அனுமதிக்கப் பட்டனர்.
  • திருமணம், தத்து எடுத்தல், வாரிசு நியமனம் போன்றவற்றில் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன கல்வி, அரசியல், மருத்துவம், கலாச்சாரம், சேவைத் துறைகள், அறிவியில் மற்றும் தொழில் நுட்பம் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பங்கேற்கின்றனர்.
  • பெண் விடுதலை மற்றும் பெண் மேலாண்மை ஆகியவை நடைமுறை சாத்தியமாகியுள்ளது.

VIII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு

Question 1.
பெண்களின் வளர்ச்சியில் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பு குறித்து தகவல் தொகுப்பைத் தயாரிக்கவும். (ஏதேனும் ஒரு சீர்திருத்தவாதியைத் தேர்வு செய்து அவ தொடர்பான தகவல்களைச் சேகரிக்கவும்).

Question 2.
குழு விவாதம்: விடுதலை இயக்கத்தில் பெண்களின் பங்கேற்பு.

8th Social Science Guide காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
1854ஆம் ஆண்டின் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது
அ) முதியோர் கல்வி
ஆ) ஆரம்பக் கல்வி
இ) பெண் கல்வி
ஈ) மேனாட்டுக் கல்வி
விடை:
இ) பெண் கல்வி

Question 2.
இந்தியப் பெண்கள் …………… களில் பல்கலைக் கழகங்களில் நுழையத் தொடங்கினர்.
அ) 1880
ஆ) 1870
இ) 1890
ஈ) 1860
விடை:
அ) 1880

Question 3.
1916இல் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட இடம் ……………..
அ) சென்னை
ஆ) மும்பை
இ) கொல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
ஈ) டெல்லி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Question 4.
அக்பர் ஆண்க ளுக்கான திருமண வயது ……………….. என நிர்ணயித்தார்.
அ) 16
ஆ) 17
இ) 18
ஈ) 21
விடை:
அ) 16

Question 5.
1872இல் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு திருமணச் சட்டம் பெண்களின் திருமண வயது ………….. என நிர்ண யித்தது.
அ) 12
ஆ) 14
இ) 15
ஈ) 16
விடை:
ஆ) 14

Question 6.
1890களில் D.K. கார்வே என்பவர் ஏராளமான பெண் பள்ளிகளை நிறுவிய இடம் ……………………
அ) டெல்லி
ஆ) பனாரஸ்
இ) பூனா
ஈ) ஹைதராபாத்
விடை:
இ) பூனா

Question 7.
மதராஸ் தேவதாசி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1947
ஆ) 1948
இ) 1949
ஈ) 1950
விடை:
அ) 1947

Question 8.
சாரதா சதன் என்பது ……………… ஆகும்.
அ) கைவிடப்பட்டவர்களின் இல்லம்
ஆ) நோயாளிகளின் இல்லம்
இ) அனாதைகள் இல்லம்
ஈ) கற்றல் இல்லம்
விடை:
ஈ) கற்றல் இல்லம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தமிழக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட ஆண்டு ………….
விடை:
1929

Question 2.
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு மசோதாவை சென்னை 1930 சட்டமன்றத்தில் ………………. ஆண்டு முன்மொழிந்தார்.
விடை:
1930

Question 3.
இந்திய சமுதாயத்தில் ‘சதி’ எனும் பழக்கம் குறிப்பாக ……………. களிடையே நிலவியது.
விடை:
ராஜபுத்திரர்

Question 4.
வீரேசலிங்கம் தனது முதல் பெண்கள் பள்ளியை ……………….. இல் திறந்தார்.
விடை:
1874

Question 5.
இந்திய அரசியலமைப்புப் பிரிவு ………………. சம வேலைக்கு சம ஊதியம் என உத்திரவாதம் அளிக்கிறது.
விடை:
14

Question 6.
தேவதாசி முறை சட்டத்தின் மூலம் ஒழிக்கப்பட்ட ஆண்டு ……………….
விடை:
1947

III. சரியா / தவறா என்று குறிப்பிடுக

Question 1.
அக்பர் சதிமுறையை ஒழிக்க முயன்றார்.
விடை:
சரி

Question 2.
அக்பர் குழந்தைத் திருமணத்தைத் தடுத்தார்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Question 3.
ஜெகன் மோகன் ராய் என்பவர் ராஜாராம் மோகன்ராயின் மைத்துனர் ஆவார்.
விடை:
தவறு

Question 4.
ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சகோதரர் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டார்.
விடை:
தவறு

Question 5.
டாக்டர் தர்மாம்பாள் ராஜாராம் மோகன்ராயின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டார்.
விடை:
தவறு

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
சரியான இணையைக் கண்டுபிடி.
அ) சாரதா சதன் – கற்றல் இல்லம்
ஆ) வீரேசலிங்கம் – கிருபா சதன்
இ) வேலுநாச்சியார் – காளையார் கோவில்
ஈ) இராஜா ராம் மோகன்ராய் – ஆரிய சமாஜம்
விடை:
அ) சாரதா சதன் – கற்றல் இல்லம் வரலாறு

Question 2.
மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.
அ) ராஜாராம் மோகன்ராய்
ஆ) எம்.ஜி. ரானடே
இ) பாலகங்காதர திலகர்
ஈ) டாக்டர் முத்துலட்சுமி
விடை:
இ) பாலகங்காதர திலகர்

Question 3.
பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்.
i) வங்காள ஒழங்கு முறைச் சட்டம் XXI, 1804 பெண் சிசுக் கொலை சட்ட விரோதமானது என்று அறிவித்தது.
ii) விதி முறை XVII, 1829 சதி எனும் பழக்கம் சட்ட விரோதமானது என அறிவித்தது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்த வாக்கியம்(ங்கள்) சரியானவை?
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) i மற்றும் ii
ஈ) இரண்டுமில்லை
விடை:
இ) (i) மற்றும் (ii)

Question 4.
கூற்று : இந்திய சமுதாயத்தில் ‘சதி’ எனும் பழக்கம் குறிப்பாக இராஜ புத்திரர்களிடையே நிலவியது.
காரணம் : முக்கியமாக இது மக்கள் தொகையைக் குறைப்பதற்காக செயல்படுத்தப்பட்டது.

அ) கூற்று மற்றும் காரணம் சரியானவை. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
ஆ) கூற்றும் காரணமும் தவறு.
இ) கூற்று சரி, காரணம் தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை. காரணம் கூற்றுக்கு பொருத்தமானதாகும்
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறானது

Question 5.
கூற்று : டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் 1927ஆம் ஆண்டு சென்னை சட்டப் பேரவைக்கு (Assembly) நியமிக்கப்பட்டார்.
காரணம் : தேவதாசி முறைக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்.

அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாகும்
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் பொருத்தமானதன்று.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
விடை:
ஈ) கூற்று தவறு. காரணம் சரி

V. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
ஜவ்ஹார் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
போரில் தோற்கடிக்கப்பட்ட இராஜபுத்திர போர் வீரர்களின் மனைவிகள் மற்றும் மகள்கள் அந்நியர்களால் தாங்கள் கைப்பற்றப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் தவிர்ப்பதற்காக கூட்டு தன்னார்வ தற்கொலை செய்து கொண்டனர். இதுவே ஜவ்ஹார் என அழைக்கப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Question 2.
தேவதாசி முறை பற்றி உமக்கு யாது தெரியும்?
விடை:

  • தேவதாசி என்ற வார்த்தையிைன் பொருள் கடவுளின் சேவகர் என்பதாகும்.
  • இவர்கள் பெற்றோரால் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படும் பெண் குழந்தைகளாவர்.
  • இவர்கள் கோவிலைக் கவனித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பரத நாட்டியம் மற்றும் பிற பாரம்பரிய இந்தியக் கலைகளையும் கற்றுக் கொண்டனர்.
  • சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த அவர்கள், பிற் காலங்களில் மோசமாக நடத்தப்பட்டு அவமானப் படுத்தப்பட்டனர்.
  • மேலும் தேவதாசிகள் தங்கள் கண்ணியம், பெருமை உணர்வு, சுய மரியாதை மற்றும் கௌரவம் ஆகியவற்றை இழந்தனர்.
  • டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி முறையை ஒழிக்க அரும்பாடுபட்டு வெற்றியும் பெற்றார்.

இராஜா ராம் மோகன்ராயின் சேவைகளை வெளிக் கொணர்.
இராஜா ராம் மோகன்ராய் சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் பழக்கத்திற்கு எதிராகப் போராடினார். குழந்தைத் திருமணம் மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவற்றை எதிர்த்தார். விதவை மறுமணம், பெண் கல்வி, பெண்களின் சொத்துரிமை ஆகியவற்றை ஆதரித்தார்.

சுதந்திர இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி கூறு.
பெண்கள் தற்போது கல்வி, அரசியல், மருத்துவம், கலாச்சாரம், சேவைத்துறைகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் உட்பட அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கின்றனர். சம வாய்ப்பு மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் என உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு 33 சதவீத இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களின் நிலையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்

Question 1.
பண்டைய காலம் மற்றும் இடைக்காலத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது?
விடை:
பண்டைய காலம்:
சிந்துவெளி மக்கள் தாய் கடவுளை வணங்கினர். பெண்கள் நன்கு மதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.

ரிக் வேத காலத்தில் மனைவியின் நிலை போற்றுவதற்குரியதாக இருந்தது. பெண்கள் நன்கு மதிக்கப்பட்டனர்.

வேத காலத்தில் பெண்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டன.
அவர்களில் சமூக மற்றும் சமய சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது.
சதி எனும் உடன் கட்டை ஏறும் பழக்கம் நிலவியது.
தந்தைவழி முறை கடுமையானதாக மாறியது.
பெண்கள் வேதாகமங்களைப் படிக்க அனுமதிக்கப்படவில்லை.

இடைக்காலம்:
இடைக்காலத்தில் பெண்களின் நிலை மேலும் மோசமடைந்தது.
சதி, குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை, பர்தா முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற தீமைகள் பரவி இருந்தன.
விதவை திருமணம் அரிதாகக் காணப்பட்டது.
தேவதாசி முறை பழக்கத்தில் இருந்தது.
முஸ்லீம்கள் பர்தா அணியும் பழக்கம் இருந்தது.
பெண் கல்விக்கு சிறிதளவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
பெண்களுக்கென தனியாக கல்வி நிறுவனங்கள் இல்லை.
பொதுவாக பெண்களின் நிலை மோசமானதாகவே இருந்தது.
செல்வந்தர்கள் தங்கள் மகள்களுக்கு வீட்டிலேயே பாடம் கற்பிக்க ஆசிரியர்களை நியமித்தனர்.

Question 2.
ஆங்கிலேயர் காலத்தில் பெண்கள் நிலை எவ்வாறு இருந்தது?
விடை:
தேசிய விழிப்புணர்வின் காரணமாக சமூக தீமைகள் மற்றும் காலாவதியான பழக்க வழக்கங்களுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது.
ஏராளமான தனி நபர்கள், சீர்திருத்த சங்கங்கள் மற்றும் சமய அமைப்புகள் பெண் கல்வியைப் பரப்ப கடுமையாக உழைத்தன.

விதவை மறுமணத்தை ஊக்குவித்தல், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல், பெண்களை பர்தா அணியும் முறையிலிருந்து வெளியே கொண்டு வருதல், ஒருதார மணத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்கள் தொழில்கள் அல்லது வேலை வாய்ப்பை மேற்கொள்ள உதவுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

ஆரம்பத்தில் ஆண் கல்வியை விட பெண்கள் கல்வியறிவு குறைவாகவே இருந்தது.

1819ஆம் ஆண்டு கிறித்துவ அமைப்புகள் கல்கத்தாவில் முதன் முதலில் பெண் சிறார் சங்கத்தை அமைத்தன.

1849இல் பெதுன் பள்ளி நிறுவப்பட்டது.

சார்லஸ் வுட் கல்வி அறிக்கை பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.

இந்திய கல்விக்குழு (ஹண்டர் குழு) சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளிகளையும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க பரிந்துரைத்தது.

1880களில் இந்தியப் பெண்கள் பல்கலைக்கழகங்களில் நுழையத் தொடங்கினர்.

பெண்கள் ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் பயிற்சி பெற்றனர்.

அவர்கள் புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும் எழுதத் தொடங்கினர்.

பெண்களுக்கென பல பள்ளிகள் தொடங்கப்பட்டன.

1916ல் D.K. கார்வே என்பவரால் இந்திய மகளிர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இது பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

டெல்லியில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.

இவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெண்களின் நிலை சிறப்பாக அமைந்திருந்தது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை 2

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

8th Social Science Guide ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பழங்கால நகரங்கள் எனப்படுவது.
அ) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ
ஆ) டெல்லி மற்றும் ஹைதராபாத்
இ) பம்பாய் மற்றும் கல்கத்தா
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
அ) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ

Question 2.
ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் / நகரங்கள்.
அ) சூரத்
ஆ) கோவா
இ) பம்பாய்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Question 3.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை
அ) சூயஸ் கால்வாய் திறப்பு
ஆ) நீராவிப் போக்குவரத்து அறிமுகம்
இ) ரயில்வே கட்டுமானம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 4.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது.
அ) வர்த்தகத்திற்காக
ஆ) தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காக
இ) பணி புரிவதற்காக
ஈ) ஆட்சி செய்வதற்காக
விடை:
அ) வர்த்தகத்திற்காக

Question 5.
புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்.
அ) பம்பாய்
ஆ) கடலூர்
இ) மதராஸ்
ஈ) கல்கத்தா
விடை:
இ) மதராஸ்

Question 6.
1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?
அ) புனித வில்லியம் கோட்டை
ஆ) புனித டேவிட் கோட்டை
இ) புனித ஜார்ஜ் கோட்டை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) புனித ஜார்ஜ் கோட்டை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இந்தியாவில் இருப்புப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ……………….
விடை:
1853

Question 2.
இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் ……………
விடை:
ரிப்பன்

Question 3.
1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் …………. அறிமுகப்படுத்தியது.
விடை:
இரட்டை ஆட்சி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 4.
நகராட்சி உருவாவதற்குப் பொறுப்பாக இருந்தவர் …………………
விடை:
ஜோசியா சைல்டு

Question 5.
……………………. இல் பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரூகோகன் ஆகியோர் மதராசபட்டினத்தில் 1639 ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர்.
விடை:
1639

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன.
விடை:
சரி

Question 2.
பிளாசிப் போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர்,
விடை:
சரி

Question 3.
புனித வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது. .
விடை:
தவறு

Question 4.
குடியிருப்புகளில் இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர்.
விடை:
சரி

Question 5.
மதராஸ் 1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.
விடை:
தவறு

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.
காரணம் : பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகக் கொள்கை மற்றும் தொழில்துறை புரட்சி இந்திய உள்நாட்டு தொழில்களை அழித்தன.

அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி,
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை:
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 2.
பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை?
i) ஸ்ரீரங்க ராயலு ஆங்கிலேயர்களுக்கு மதராசபட்டணத்தை மானியமாக வழங்கினார்.
ii) டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பானவர்கள்.
iii) 1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

அ) i மட்டும்
ஆ) 1 மற்றும் ii
இ) ii மற்றும் iii
ஈ) iii மட்டும்
விடை:
அ) (i) மட்டும்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 3.
கூற்று : ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்
காரணம் : அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி.
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை:
இ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
நகர்ப்புற பகுதி என்றால் என்ன?
விடை:
ஒரு நகர்ப்புற பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தியில்லாத தொழில்களில் ஈடுபடுவதும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வதும் ஆகும்.

Question 2.
மலைப்பிரதேசங்கள் காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சியில் தனித்துவமான அம்சமாக இருந்தன. ஏன்?
விடை:

  • குளிர்ந்த கால நிலையிலிருந்து வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கோடை காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.
  • அவர்களுக்கு இந்திய மலைகளின் குளிர்ந்த காலநிலை பாதுகாப்பானதாக மற்றும் நன்மை அளிப்பதாக இருந்தது.
  • இது வெப்பமான வானிலையிலிருந்தும் தொற்று நோயிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தது. எனவே அவர்கள் மலைப்பிரதேசங்களில் குடியேற ஆரம்பித்தனர்.

Question 3.
மாகாண நகரங்கள் மூன்றின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • மதராஸ்
  • பம்பாய் , கல்கத்தா

Question 4.
19ஆம் நூற்றாண்டில் நகரமயமாக்கலின் புதிய போக்குக்கு ஏதேனும் நான்கு காரணங்களைக் கூறுக.
விடை:

  • சூயஸ் கால்வாய் திறப்பு
  • நீராவிப் போக்குவரத்து அறிமுகம்
  • ரயில்வே சாலைகள் அமைத்தல்
  • தொழிற்சாலைகள் வளர்ச்சி

Question 5.
இராணுவக் குடியிருப்பு நகரங்கள் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  • ஆங்கிலேயர்கள் இராணுவக்குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.
  • இராணுவக்குடியிருப்புகள் முற்றிலும் புதிய நகர்ப்புற மையங்களாக இருந்தன.
  • இந்த பகுதிகளில் இராணுவ வீரர்கள் வசித்தனர்.
  • மேலும் இப்பகுதிகள் படிப்படியாக நகரங்களாக வளர்ந்தன.
    எடுத்துக்காட்டு: கான்பூர், லாகூர்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 6.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது மதராஸ் மாகாணம் உள்ளடக்கிய பகுதிகள் யாவை?
விடை:
சென்னை மாகாணம் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் பெரிய நிலப்பகுதிகளை உள்ளடக்கி தற்போதைய தமிழ்நாடு, லட்சத்தீவு, வடக்கு கேரளா, ராயலசீமா, கடலோர ஆந்திரா, கர்நாடக மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஒரிசாவின் பல்வேறு மாவட்டங்களைக் கொண்டிருந்தது.

VII. விரிவான விடையளி

Question 1.
காலனித்துவ நகர்ப்புற வளர்ச்சியைப் பற்றி விளக்குக.
விடை:
கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரப் பகுதிகளிலுள்ள கல்கத்தா, மதராஸ் மற்றும் பம்பாய் போன்ற இடங்களில் பிரிட்டிஷ் புதிய வர்த்தக மையங்களை உருவாக்கியது.

இந்நகரங்களை வலுப்படுத்தினர்.

இவை அனைத்தும் முன்னர் மீன்பிடித்தல் மற்றும் நெசவுத் தொழில் செய்யும் கிராமங்களாகும்.

இங்கு ஆங்கிலேயர்கள் வீடுகள், கடைகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டினர். மேலும் வணிக மற்றும் நிர்வாகத் தலைமையகத்தையும் அமைத்தனர்.

1757ஆம் ஆண்டு பிளாசிப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் படிப்படியாக அரசியல் ஆதிக்கம் பெற்றனர். ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் வர்த்தகம் விரிவடைந்தது.

பின்னர் கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாகாண நகரங்களாக முக்கியத்துவம் பெற்றன.

சூயஸ் கால்வாய் திறப்பு, நீராவிப் போக்குவரத்து அறிமுகம், ரயில்வே சாலைகள் அமைத்தல், கால்வாய்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள் வளர்ச்சி, நிலக்கரிச் சுரங்கம், தேயிலைத் தோட்டம், வங்கிப் பணி, கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீடு வளர்ச்சியினால் நகரமாக்கலில் புதிய போக்கு தொடங்கியது.

வர்த்தக பிணைப்புகளில் ஏற்பட்ட மாற்றம் நகர்ப்புற மையங்களின் வளர்ச்சியில் பிரதிபலித்தது.

இவ்வாறுதோன்றிய நகர்ப்புறமையங்கள் துறைமுக நகரங்கள், இராணுவக்குடியிருப்பு நகரங்கள், மலைவாழிடங்கள், இரயில்வே நகரங்கள் என நான்கு வகையாக வகைப்படுத்தப்பட்டன.

எடுத்துக்காட்டுகள் :
துறைமுக நகரங்கள் : சென்னை , கல்கத்தா மற்றும் பம்பாய்.
இராணுவக் குடியிருப்பு நகரங்கள் : கான்பூர் மற்றும் லாகூர்
மலைவாழிடங்கள் : டார்ஜிலிங், டேராடூன், சிம்லா, கொடைக்கானல் மற்றும் உதக மண்டலம்.
இரயில்வே நகரங்கள் : சென்னை , பம்பாய், கல்கத்தா.

Question 2.
மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைக்கவும்.
விடை:

  • ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி. 1600இல் தொடங்கப்பட்டது.
  • பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்குக் கடற்கரையில் சூரத்தில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
  • ஆங்கிலேயர்கள் கிழக்குக் கடற்கரையிலும் தங்களுக்கு ஒரு துறைமுகம் வேண்டும் என விரும்பினர்.
  • சில முயற்சிகளுக்குப் பிறகு ‘ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டினத்தில் ஒரு தொழிற்சாலையைக் கட்டும் உரிமையைப் பெற்றனர். இது பருவாக்காற்று பாதிப்பிலிருந்து நன்கு பாதுகாக்கப்பட்டது.
  • ஆனால் மசூலிப்பட்டினம் பஞ்சத்தின் பிடியில் சிக்கியதால், அவ்விடத்தில் ஆங்கிலேயரின் வர்த்தகம் செழிக்க வில்லை.
  • பின்னர் ஆங்கில வணிகர்கள் புதிய தளத்தைத் தேடினர்.
  • இறுதியில் மதராசப்பட்டிணத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
  • அந்த இடம் தொழிற்சாலை அமைப்பதற்கு ஏற்ற இடம் என்பதை பிரான்சிஸ் டே கண்டறிந்தார்.
  • சந்திரகிரி அரசரின் பிரதிநிதியான தமர்லா வெங்கடபதி அவர்களால் அதிகார பூர்வமான மானியமாக நிலம் வழங்கப்பட்டது.
  • அந்த இடம் கூவம் நதிக்கும் எழும்பூருக்கும் இடையில் அமைந்திருந்தது.
  • 1939ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரான்சிஸ் டே என்பவரால் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி மதராசபட்டிணத்தில் ஒரு கோட்டையை அமைப்பதற்கும், வணிகத்தளத்துடன் கூடிய தொழிற்சாலை அமைப்பதற்கும் அனுமதி கிடைத்தது.
  • இக்கோட்டைக் குடியிருப்பு புனித ஜார்ஜ் குடியிருப்பு எனப் பெயர்பெற்றது. இது வெள்ளைநகரம் என அழைக்கப்பட்டது.
  • இதன் அருகில் உள்ள கிராமங்களில் மக்கள் வசித்த பகுதி கருப்பு நகரம் என அழைக்கப்பட்டது.
  • வெள்ளை நகரம் மற்றும் கருப்பு நகரம் ஆகியவை இணைந்து மதராஸ் என அழைக்கப்பட்டன.

Question 3.
இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது. எப்படி?
விடை:

  • ஆங்கிலேயர்கள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் நகரமயமாக்கலுக்கு எதிரானதாக இருந்தது.
  • பின்னர் அவர்களின் கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை விரைவாக ஒரு காலனித்துவப் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் நகரங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தன.
  • பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகத்தின் விளைவாக இந்திய உற்பத்தித் தொழில்கள் அழிக்கப்பட்டன.
  • உற்பத்தித் தொழில்களின் மொத்த அழிவின் விளைவாக லட்சக்கணக்கான கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் நசித்துப்போயினர்.
  • இந்தியாவின் நகர்ப்புற கைவினைத் தொழில்களில் திடீர் சரிவு ஏற்பட்டது.
  • இந்தியப் பொருட்களுக்கான சந்தைகள் குறைந்தன.
  • பழைய உற்பத்தி நகரங்களான டாக்கா, மூர்ஷிதாபாத், சூரத் மற்றும் லக்னோ போன்றவை தங்களது முக்கியத்துவத்தை இழந்தன.
  • இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் கடுமையான போட்டியினால் இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிற்துறையும் செயலிழந்து போனது.
  • அதிகப்படியான இறக்குமதிவரி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பிற கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தியப் பொருட்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் இறக்குமதி செய்யப்படுவது குறையலாயிற்று. இவ்வாறு இந்தியா பிரிட்டனின் வேளாண்மைக் குடியேற்றமாக மாறியது.

VIII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள்

Question 1.
ஒரு புகைப்படத்தொகுப்பை உருவாக்கவும் சென்னை உருவாகுதல்’ (தொடக்க காலத்திலிருந்து தற்போது வரை).

8th Social Science Guide ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பின்வருவனவற்றுள் உற்பத்தி நகரமல்லாதது எது?
அ) டாக்கா
ஆ) சூரத்
இ) கல்கத்தா
ஈ) மூர்ஷிதாபாத்
விடை:
இ) கல்கத்தா

Question 2.
பொருந்தாததைக் கண்டுபிடி
அ) கல்கத்தா
ஆ) பம்பாய்
இ) மதராஸ்
‘ஈ) லக்னோ
விடை:
ஈ) லக்னோ

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 3.
கல்கத்தாவில் ஆங்கிலக் குடியேற்றம் நிறுவப்பட்ட ஆண்டு.
அ) 1693
ஆ) 1661
இ) 1690
ஈ) 1702
விடை:
இ) 1690

Question 4.
வில்லியம் கோட்டை நிறுவப்பட்ட இடம்.
அ) கல்கத்தா
ஆ) மதராஸ்
இ) டெல்லி
ஈ) பம்பாய்
விடை:
அ) கல்கத்தா

Question 5.
1935ஆம் ஆண்டு இந்திய அரசுச்சட்டம்
அ) மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது
ஆ) மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தியது
இ) மாகாண சுயாட்சியை ஒழித்தது
ஈ) கல்வி மீதான வரியை நீக்கியது
விடை:
ஆ) மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தியது

Question 6.
பின்வருவனவற்றில் எந்த துறைமுகம் கிழக்குக் கடற்கரையில் இல்லை ?
அ) சூரத்
ஆ) மசூலிப்பட்டினம்
இ) கல்கத்தா
ஈ) சென்னை
விடை:
அ) சூரத்

Question 7.
பின்வருவனவற்றில் எந்ததுறைமுகம்பருவக்காற்றுபாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தது?
அ) சென்னை
ஆ) மசூலிப்பட்டினம்
இ) மும்பை
ஈ) சூரத்
விடை:
ஆ) மசூலிப்பட்டினம்

Question 8.
டல்ஹௌசி சதுக்கம் எங்குள்ளது?
அ) சென்னை
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
இ) கல்கத்தா

Question 9.
ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து ……………….. மாற்றியது.
அ) சென்னைக்கு
ஆ) பம்பாய்க்கு
இ) கல்கத்தாவுக்கு
ஈ) டெல்லிக்கு
விடை:
ஆ) பம்பாய்க்கு

Question 10.
இந்தியாவில் ஆங்கிலேயரின் முதல் தொழிற்கூடம் அமைக்கப்பட்ட இடம்.
அ) சென்னை
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) சூரத்
விடை:
ஈ) சூரத்

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு …………….
விடை:
1757

Question 2.
இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு …………………
விடை:
1947

Question 3.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்ட ஆண்டு ………………..
விடை:
1600

Question 4.
தற்போது புனித …………… கோட்டை தமிழக அரசின் அதிகார மையமாக விளங்குகிறது.
விடை:
ஜார்ஜ்

Question 5.
வெள்ளை நகரம் மற்றும் கறுப்பு நகரம் இணைந்து ……….. என்றழைக்கப்பட்டது.
விடை:
மதராஸ்

Question 6.
டார்ஜிலிங் பகுதியானது …………….. ஆட்சியாளர்களிடமிருந்து 1835இல் கைப்பற்றப்பட்டது.
விடை:
சிக்கிம்

Question 7.
உள்ளாட்சி பற்றிய ரிப்பன் பிரபுவின் தீர்மானம் …………………. என கருதப்படுகிறது.
விடை:
உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்

Question 8.
1690ஆம் ஆண்டு ஆங்கில வணிகர்கள் குடியேற்றத்தை நிறுவிய இடம் ……………
விடை:
சுதநூதி

Question 9.
மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறு பெயரிடப்பட்ட ஆண்டு …………………
விடை:
1969

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 10.
மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்ட நாள் …………….
விடை:
ஜீலை 17, 1996

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 2

IV. சரியா / தவறா என்று குறிப்பிடுக

Question 1.
டெல்லிக்கு மாற்றுத்தலைநகராக டார்ஜிலிங் செயல்பட்டது
விடை:
தவறு

Question 2.
இராணுவத்தினர் இராணுவக்குடியிருப்பு நகரங்களில் வசித்தனர்.
விடை:
சரி

Question 3.
ஆரம்பத்தில் மதராஸ், பம்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களில் மீன்பிடிக்கும் தொழில் நடைபெற்றது.
விடை:
சரி

Question 4.
மலைப்பிரதேசங்கள் சுகாதார மையமாக வளர்ச்சி பெற்றன.
விடை:
சரி

Question 5.
இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டதால், கிராமங்களிலுள்ள பாரம்பரிய தொழில்கள் அடியோடு நசிந்தன.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய உற்பத்தித் தொழில்கள் நன்கு வளர்ச்சியடைந்தன.
காரணம் : அத்தொழில்களுக்கு ஆங்கிலேயரின் ஆதரவு இருந்தது.

அ) கூற்று சரி மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றினை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை .
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை

Question 2.
கூற்று : 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகரமயமாக்கலில் புதிய போக்கு தொடங்கியது.
காரணம் : சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது மற்றும் நீராவிப் போக்குவரத்து அறிமுகம் செய்யப்பட்டது.
அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறானவை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை.
விடை:
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை

Question 3.
பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை?
i) பழங்காலத்தில் சென்னை கிராமங்களின் தொகுப்பாக இருந்தது
ii) பழங்காலத்தில் மன்னர்களின் அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகரங்கள் தோன்றின.
iii) இரயில்வே நகரங்கள் 1835இல் அறிமுகப்படுத்தப்பட்டன.

அ) i மட்டும்
ஆ) 1 மற்றும் ii
இ) ii மற்றும் iii
ஈ) iii மட்டும்
விடை:
ஈ) (iii) மட்டும்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
பண்டைய கால நகரங்கள் சிலவற்றினைக் குறிப்பிடுக.
விடை:

  • ஹரப்பா
  • மெகாஞ்சதாரோ
  • வாரணாசி
  • அலகாபாத்
  • மதுரை

Question 2.
இடைக்கால நகரங்கள் சிலவற்றினைக் குறிப்பிடுக.
விடை:

  • டெல்லி
  • ஹைதராபாத்
  • ஜெய்ப்பூர்
  • லக்னோ
  • ஆக்ரா
  • நாக்பூர்

Question 3.
வட இந்திய மற்றும் தென்னிந்திய மலை வாழிடங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
விடை:
வட இந்தியா: டார்ஜிலிங், ஸ்ரீநகர், சிம்லா மற்றும் நைனிடால்
தென் இந்தியா: உதக மண்டலம், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு.

Question 4.
இரயில்வேயின் அறிமுகம் எவ்வாறு இந்தியாவில் பாரம்பரிய தொழில்களைப் பாதித்தது?
விடை:
இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக வர்த்தகப் பாதைகள் திசை திருப்பப்பட்டு ஒவ்வொரு இரயில் நிலையமும் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமாக மாறியது.

பிரிட்டிஷ் உற்பத்தியாளர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்றடைய இரயில்வே வழிவகுத்ததால் நாட்டின் கிராமங்களிலுள்ள பாரம்பரிய தொழில்கள் அடியோடு நசிந்தன.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்

Question 5.
மாகாண நகரங்களின் நிர்வாகம் பற்றி சிறு குறிப்பு தருக.
விடை:

  • தலைமை ஆளுநர் மாகாண நகரங்களில் நீதிபதிகளை நியமித்தனர்.
  • மூன்று மாகாண நகரங்களில் அரசாங்க அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • அது பெரிய மாநகராட்சிகள் போல தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், சுதந்திரமான வலிமை பெற்ற நிர்வாக அமைப்பு, கணக்குகளை சரிபார்க்கப் போதுமான ஏற்பாடுகள், பாதுகாப்பு போன்ற அம்சங்களைக் கொண்டிருந்தது.

Question 6.
பம்பாய் எவ்வாறு ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிடைத்தது?
விடை:

  • பம்பாய் 1534ல் இருந்து போர்ச்சுக்கீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
  • இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் போர்ச்சுக்கீசிய மன்னரின் சதோதரியை திருமணம் செய்து கொண்டதற்கு பம்பாய் பகுதியை 1661இல் சீதனமாகப் பெற்றார்.
  • மன்னர் அப்பகுதியை கிழக்கிந்திய வணிகக்குழுவிற்கு குத்தகைக்கு அளித்தார்.
  • கிழக்கிந்தியக் கம்பெனி மேற்கிந்தியாவில் பம்பாயை அதன் முக்கியத்துறைமுகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. இதனால் பம்பாய் நகரம் வளரத் தொடங்கியது.
  • 1687ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து பம்பாய்க்கு மாற்றியது.

VII. பின்வரும் கேள்விகளுக்கு விரிவான விடை தருக.

Question 1.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சி பற்றி விவரிக்க.
விடை:
இந்தியாவில் உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சியினை மூன்று வெவ்வேறு நிலைகளில் அறியலாம். முதல் கட்டம் (1688 – 1882) இந்தியாவில் 1688இல் மதராஸ் மாநகராட்சி உருவானது. ஒரு மேயரும் நியமிக்கப்பட்டார். மதராஸ் மாநகராட்சி உருவானதற்கு கம்பெனி இயக்குனர்களில் ஒருவரான சர் ஜோசியா சைல்டு காரணமாயிருந்தார்.

1793ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் மூன்று மாகாண நகரங்களில் மாநகராட்சிகள் ஏற்படக் காரணமாயிற்று. வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள், அயோத்தி மற்றும் பம்பாயில் 1850 ஆண்டு சட்டத்தின் படி நகராட்சிகள் அமைக்கப்பட்டது.

மேயோ பிரபுவின் 1870ஆம் ஆண்டு தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கியது.

இரண்டாம் கட்டம் (1882 – 1920)

  • உள்ளாட்சி அரசாங்கம் தொடர்பான ரிப்பன் பிரபுவின் தீர்மானம் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கியது.
  • எனவே ரிப்பன் பிரபு இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை என அழைக்கப்பட்டார்.
  • அவரது தீர்மானம் ‘உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்’ எனவும் கருதப்படுகிறது.

மூன்றாம் கட்டம் (1920 – 19250)

  • 1919ஆம் ஆண்டு இந்திய அரசுச்சட்டம் மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
  • 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச்சட்டம் மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தியது.
  • 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் சுதந்திர இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்ளாட்சி அரசாங்கத்தை உருவாக்கி வடிவமைப்பதற்கான சிறப்பான வாய்ப்பை இந்தியா பெற்றது.
  • Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 5

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 7 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

6th Social Science Guide பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
குப்த வம்சத்தை நிறுவியவர் … ஆவார்.
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) ஸ்ரீகுப்தர்
இ) விஷ்ணு கோபர்
ஈ) விஷ்ணுகுப்தர்
விடை:
ஆ) ஸ்ரீ குப்தர்

Question 2.
பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் … ஆவார்.
அ) காளிதாசர்
ஆ) அமரசிம்மர்
இ) ஹரிசேனர்
ஈ) தன்வந்திரி
விடை:
இ) ஹரிசேனர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 3.
சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் … என்ற இடத்தில் உள்ளது.
அ) மெக்ராலி
ஆ) பிதாரி
இ) கத்வா
ஈ) மதுரா
விடை:
அ) மெக்ராலி

Question 4.
அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் …..
அ) சரகர்
ஆ) சுஸ்ருதர்
இ) தன்வந்திரி
ஈ) அக்னிவாசர்
விடை:
ஆ) சுஸ்ருதர்

Question 5.
வங்காளத்தின் கௌட அரசர் ………
அ) சசாங்கர்
ஆ) மைத்திரகர்
இ) ராஜ வர்த்தனர்
ஈ) இரண்டாம் புலிகேசி
விடை:
அ) சசாங்கர்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

Question 1.
கூற்று : வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.
காரணம் : முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்.
அ. காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ. காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
விடை:
அ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

Question 2.
கூற்று 1 : தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.
கூற்று 2 : குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்.
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி.
ஆ) இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி.
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி.

Question 3.
கீழ்க்கான்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?
அ) ஸ்ரீ குப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர்
ஆ) முதலாம் சந்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்
இ) ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – முதலாம் சந்திரகுப்தர்
ஈ) விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திர குப்தர் – முதலாம் சந்திரகுப்தர்
விடை:
அ) ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிமாதித்யர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 4.
கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது/எவை சரியானது சரியானவை
விடை:
என்பதைக் கண்டறியவும்.
1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி
ஈ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு
விடை:
அ) 1 மட்டும் சரி

Question 5.
பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
காளிதாசர், ஹரிசேனர், சமுத்திரகுப்தர் சரகர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 65
விடை:
சமுத்திரகுப்தர்

Question 2.
ரத்னாவளி, ஹர்சரிதா நாகநந்தா, பிரியதர்சிகா
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 66
விடை:
ஹர்சரிதா

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இலங்கை அரசர்………… சமுத்திரகுப்தரின், சமகாலத்தவர் ஆவார்.
விடை:
ஸ்ரீமேகவர்மன்

Question 2.
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின் போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி ………… இந்தியாவிற்கு வந்தார்.
விடை:
பாகியான்

Question 3.
……….. படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
விடை:
ஹூணர்கள்

Question 4.
………. அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.
விடை:
நிலவரி

Question 5.
குப்தர்களின் அலுவலக மொழி…………..
விடை:
சமஸ்கிருதம்

Question 6.
பல்லவ அரசர் ………… சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை:
விஷ்ணுகோபன்

Question 7.
வர்த்த ன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ……… ஆவார்.
விடை:
ஹர்ஷவர்த்தனர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 8.
ஹர்ஷர் தலைநகரை ………. லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
விடை:
தானேஷ்வரி

IV. சரியா/தவறா என எழுதுக

Question 1.
தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்.
விடை:
சரி

Question 2.
குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ – ஆரிய பாணியை ஒத்துள்ளன.
விடை:
தவறு

Question 3.
குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.
விடை:
தவறு

Question 4.
ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்
விடை:
தவறு

Question 5.
ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்.
விடை:
தவறு

V. பொருத்துக

அ)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 90
விடை:
ஆ) 2, 4, 1, 3, 5

ஆ)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 91
விடை:
இ) 3, 5, 1, 2, 4

VI. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
‘கவிராஜா’ என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? ஏன்?
விடை:

  • ‘கவிராஜா’ என்ற பட்டம் சமுத்திர குப்தருக்கு வழங்கப்பட்டது.
  • ஏனெனில் அவர் கவிதைப் பிரியரும் இசைப்பிரியருமாவார்.

Question 2.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத்தரப்பட்ட பாடப்பிரிவுகள் யாவை?
விடை:

  • பௌத்த தத்துவம்
  • யோகா
  • வேத இலக்கியங்கள்
  • மருத்துவம்

Question 3.
அரசர்களின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை விளக்குக.
விடை:

  • குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப் படுத்தினர்.
  • அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 4.
உலோகவியலில் குப்தர்களின் சாதனைகளை எடுத்துக் கூறுக.
விடை:

  • உலோகவியலில் குப்தர்களின் சாதனை எனப்படுவது மெக்ராலி இரும்புத்தூணாகும். இது டெல்லி யில் சந்திரகுப்தரால் நிறுவப் பட்டதாகும்.
  • இத்தூண் இன்றளவும் துருப்பிடிக்காமல் உள்ளது.

Question 5.
ஹூணர்கள் என்போர் யார்?
விடை:

  • ஹூணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினர்.
  • இவர்கள் ரோமாபுரியையும் கான்ஸ்டாண்டி நோபிளையும் பேரச்சத்திற்கு உள்ளாக்கினர்.

Question 6.
ஹர்ஷர் காலத்தில் வசூலிக்கப்பட்ட மூன்று வகையான வரிகளைக் குறிப்பிடுக.
விடை:

  • பாகா
  • ஹிரண்யா
  • பாலி

Question 7.
ஹர்ஷர் எழுதிய நூற்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ரத்னாவளி
  • நாகநந்தா
  • பிரியதர்சிகா

VII. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
பிரசஸ்தி (மெய்க்கீர்த்தி) :

  • பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் புகழ்வது.
  • அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்து பாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர்.
  • இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காக தூண்களில் பொறிக்கப்பட்டன.

Question 2.
சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.
விடை:

  • சமுத்திர குப்தர் மகத்தான போர்த்தளபதி. அவர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார்.
  • அவர் பல்லவ அரசர் விஷ்ணு கோபனை தோற்கடித்தார்.
  • அவர் வட இந்தியாவில் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார்.
  • அவர் தென்னிந்தியாவில் 12 அரசர்களை சிற்றரசர்களாக்கி கப்பம் கட்டச் செய்தார்.
  • அவரின் மேலாதிக்கத்தை கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி ஆகியவற்றின் அரசர்களும் ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் ஏற்றுக் கொண்டனர்.

Question 3.
குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?
விடை:
குப்தர் காலத்தில் நிலங்களை வகைப்படுத்துதல்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 95

Question 4.
சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.
விடை:
சிரெஸ்தி :
சிரெஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்.
கார்த்தவாகா :
சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.

Question 5.
கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.
விடை:

  • முன்பிருந்த மரபான பாறைக் குடைவரைக் கோவில்களிலிருந்து கட்டுமானக் கோவில்களை முதன் முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே.
  • இக்கோவில்கள் கோபுரங்களோடும், விரிவான செதுக்கு வேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் கட்டப்பட்டன.
  • மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா, பாக், உதயகிரி, ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
  • இக்காலக்கட்டத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் திராவிடப் பாணியை ஒத்திருக்கின்றன.

Question 6.
காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள் சாகுந்தலம், மாளவிகாக்கனிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும்.
  • அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகு வம்சம், குமார சம்பவம், ரிது சம்காரம் ஆகும்.

Question 7.
ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.
விடை:

  • ஹர்ஷரே ஒரு கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்.
  • சிறந்த கவிஞர்களும் கலைஞர்களும் அவரைச் சூழ்ந்து இருந்தனர்.
  • ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா ஆகியவை அவருடைய புகழ்பெற்ற நூல்கள்.
  • அவரின் அவையை பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகியோர் அலங்கரித்தனர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது.
அ) நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை
ஆ) தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை
இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை
ஈ) மன்னர்களின் ஆடம்பர இயல்பை
விடை:
இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை

Question 2.
பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?
அ) குகைச் சுவர்களில்
ஆ) கோவில்களின் விதானங்களில்
இ) பாறைகளில்
ஈ) பாப்பிரஸ் இலைகளில்
விடை:
அ) குகைச் சுவர்களில்

Question 3.
குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?
அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
ஆ) தென்னிந்தியப் படையெழுச்சி தயப் படையெழுச்சு
இ) ஹூணர்களின் படையெடுப்பு
ஈ) மத சகிப்புத் தன்மை
விடை:
அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

Question 4.
குப்தர்கள் காலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?
விடை:

  • நவீன உலகிற்கு விட்டுச் சென்ற பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும், அதன் பரிணாம வளர்ச்சியான தசம எண் முறையும்.
  • ஆரியப்பட்டர் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார். அவர்தான் பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர்.

IX. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. காளிதாசரின் நாடகம் ஒன்றினை வகுப்பறையில் மேடையேற்றவும்.
2. மௌரியர் காலச் சமுதாயத்திற்கும் குப்தர்கள் கால சமுதாயத்திற்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பீடு செய்க.

வாழ்க்கைத் திறன்கள் (மாணவர்களுக்கானது)

1. வானியல் துறைக்கு ஆரியப்பட்டர், வராகமிகிரர், பிரம்மகுப்தர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பினைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கவும்.
2. செயற்கைக்கோள் ஏவுவதைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள அருகேயுள்ள இஸ்ரோ மையத்திற்குச் சென்று வரவும்.

XI. கட்டக வினா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 40
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 41

6th Social Science Guide பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஸ்ரீகுப்தருக்குப் பின் அரசப் பதவியேற்றவர்.
அ) முதலாம் குமாரகுப்தர்
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) கடோத்கஜர்
விடை:
ஈ) கடோத்கஜர்

Question 2.
நிதி சாரம் என்னும் நூலில் முக்கியத்துவம் பெறுவது
அ) வணிகம்
ஆ) இராணுவம்
இ) வேளாண்மை
ஈ) கருவூலம்
விடை:
ஈ) கருவூலம்

Question 3.
தனக்குத்தானே அரசராக முடி சூட்டிக் கொண்ட ஹுண தலைவர்
அ) யசோதர்மன்
ஆ) அட்டில்லா
இ) மிகிரகுலர்
ஈ) தோரமானர்
விடை:
ஈ) தோரமானர்

Question 4.
தினாரா என்பது குப்தர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட ……. நாணயங்கள்
அ) செப்பு
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) பொன்
விடை:
ஈ) பொன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 5.
ஹர்ஷர் கலந்து கொண்ட கும்பமேளா விழா நடைபெற்ற இடம்
அ) அலகாபாத்
ஆ) காசி
இ) அயோத்தி
ஈ) பிரயாகை
விடை:
ஈ) பிரயாகை

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப்பார்த்து சரியான விடையைக் கண்டுபிழக்கவம்.

Question 1.
கூற்று : குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசரான முதலாம் நரசிம்ம குப்தர் மிகிரகுலருக்கு கப்பம் கட்டி வந்தார்.
காரணம் : மிகிர குப்தர் பௌத்தத்தைப் பகைமையோடு பார்த்ததால் மன வேதனை அடைந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினார்.
அ) காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) காரணமும் சுற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

Question 2.
கூற்று 1 : குப்தர்கள் காலத்தைக் காட்டிலும் ஹர்ஷர் காலத்தில் குற்றவியல் சட்டங்கள் கடுமையாக இல்லை.
கூற்று II : சட்டங்களை மீறுவோர்க்கும் அரசருக்கு எதிராக சதி செய்வோர்க்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி
ஆ) இரண்டாம் கூற்று தவறு. ஆனால் முதல் கூற்று சரி.
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…….. பேரவையில் ஹர்ஷர் தனது செல்வங்களை கொடையாக விநியோகித்தார்.
விடை:
பிரயாகை

Question 2.
சீனர்களின் தலைநகரான …… மாபெரும் கலை, கல்விக்கான மையம்
விடை:
சியான்

Question 3.
முதலாம் சந்திரகுப்தரின் மனைவி ………
விடை:
குமாரதேவி

Question 4.
அரசர்களின் படையெடுப்பு நடவடிக்ககைகளில் வருவாயின் …….. முதலீடு செய்யப்பட்டது.
விடை:
உபரியே

Question 5.
விவசாயிகள் பல்வேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் ……….. நிலைக்கு தள்ளப்பட்டனர்.
விடை:
கொத்தடிமை

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 96
விடை:
ஆ) 4, 5, 2, 1, 3

V. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
லிச்சாவி குறித்து குறிப்பு வரைக.
விடை:

  • கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்ட ஆட்சி பகுதி கொண்ட லிச்சாவி பழமையான கன சங்கங்களில் ஒன்று.
  • முதலாம் சந்திரகுப்தர் புகழ்பெற்ற, வலிமைவாய்ந்த அந்த அரச குடும்பத்தில் குமாரதேவியை மணந்தார்.

Question 2.
கவிராஜா குறித்து நீ அறிவதென்ன?
விடை:

  • சமுத்திர குப்தர் வெளியிட்ட தங்க நாணயங்களில் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
  • அவர் ஒரு சிறந்த கவிதைப் பிரியரும் இசைப்பிரியருமாவார். அதனால் கவிராஜா எனும் பட்டம் பெற்றார்.

Question 3.
பாஹியானின் பயணக் குறிப்புகள் மகதத்து மக்களின் வாழ்க்கை பற்றி என்ன கூறுகிறது?
விடை:

  • பாஹியான் கூற்றுப்படி மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.
  • கயா பாழடைந்திருந்தது. கபில வஸ்து காடாகியிருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள்’ செல்வத்தோடும் செழிப்போடும் வாழந்தனர்.

VII. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
குப்த அரசர்களால் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் யார்?
விடை:

  • உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தண்ட நாயகர் மற்றும் மகாதண்ட நாயகர் என அழைக்கப்பட்டனர்.
  • தேசம் அல்லது புக்தி எனப்படும் பிராந்திய அதிகாரிகள் ‘உபாரிகா’ எனும் ஆளுநர்கள் விஷ்யா எனப்படும் மாவட்டங்களில் அதிகாரிகள் விஷ்யாபதிகள், கிராம அளவில் கிராமிகா, கிராமிதியாகஷா எனும் அதிகாரிகள் செயல்பட்டனர்.
  • இராணுவப் பதவிகளின் பெயர்கள் : பாலாதிகிரிதா (காலாட்படை தளபதி) மஹா பாலாதிகிரிதா
    (குதிரைப்படை தளபதி) ‘தூதகா’ எனும் ஒற்றர்கள்.

Question 2.
குப்தர் கால சமூகம் பற்றி நீ அறிவதென்ன?
விடை:

  • குப்தர் காலச் சமூகம் நான்கு வர்ணங்களைக் கொண்ட தந்தை வழிச் சமூகம்.
  • மனுவின் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
  • பெண்கள் தந்தையின், கணவனின் அல்லது மூத்த மகனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.
  • பலதார மணம் பரவலாக நடைமுறையில் இருந்தது. அரசர்களும் நிலப்பிரபுக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைப் பெற்றிருந்தனர்.
  • உடன்கட்டை ஏறும் (சதி முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றப்பட்டது.

Question 3.
நாளந்தா பல்கலைக்கழகம் பற்றி எழுதுக.
விடை:

  • குப்தர்கள் ஆதரவில் 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் நாளந்தா பல்கலைக்கழகம் தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசி அரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது.
  • முக்கிய பாடம் பௌத்தத் தத்துவம், மருத்துவம், வேத இலக்கியம், யோகா கற்பிக்கப்பட்டன.
  • யுவான் சுவாங் பௌத்தத் தத்துவத்தைப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.
  • நாளந்தாவில் 8 மகாபாட சாலைகளும் 3 மிகப் பெரிய நூலகங்களும் இருந்தன.
  • பக்தியார் கில்ஜி தலைமையில் வந்த மம்லுக்குகளால் அழித்து தரைமட்டமாக்கப்பட்டது.
  • நாளந்தா யுனேஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னம்.

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 99

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

8th Social Science Guide கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?
அ) மகல்வாரி முறை
ஆ) இரயத்துவாரி முறை
இ) ஜமீன்தாரி முறை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஈ) இவற்றில் எதுவுமில்லை

Question 2.
எந்த கவர்னர் – ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆ) காரன்வாலிஸ் பிரபு
இ) வெல்லெஸ்லி பிரபு
ஈ) மிண்டோ பிரபு
விடை:
ஆ) காரன்வாலிஸ் பிரபு

Question 3.
மகல்வாரி முறையில் ‘மகல்’ என்றால் என்ன?
அ) வீடு
ஆ) நிலம்
இ) கிராமம்
ஈ) அரண்மனை
விடை:
இ) கிராமம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 4.
மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?
அ) மகாராஷ்டிரா
ஆ) மதராஸ்
இ) வங்காளம்
ஈ) பஞ்சாப்
விடை:
ஈ) பஞ்சாப்

Question 5.
கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆ) காரன்வாலிஸ் பிரபு
இ) வெல்லெஸ்லி பிரபு
‘ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு
விடை:
ஈ) வில்லியம் பெண்டிங் பிரபு

Question 6.
ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
அ) பம்பாய்
ஆ) மதராஸ்
இ) வங்காளம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) வங்காளம்

Question 7.
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
அ) மகாத்மா காந்தி
ஆ) கேசப் சந்திர ராய்
இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
ஈ) சர்தார் வல்லபாய் பட்டேல்
விடை:
இ) திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்

Question 8.
பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
அ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஆ) மகாத்மா காந்தி
இ) திகம்பர் பிஸ்வாஸ்
ஈ) கேசப் சந்திர ராய்
விடை:
அ) சர்தார் வல்லபாய் பட்டேல்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
__________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.
விடை:
மகல்வாரி

Question 2.
மகல்வாரி முறை __________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்.
விடை:
ஹோல்ட் மெகன்சி

Question 3.
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சில் __________ ல்நடைபெற்றது.
விடை:
செப்டம்பர் 1859

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 4.
மாப்ளா கலகம் ___________ ல் நடைபெற்றது.
விடை:
ஆகஸ்ட் 1921

Question 5.
‘சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு _________
விடை:
மே – 1918

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 1

IV. சரியா /தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண்டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
விடை:
சரி

Question 2.
இரயத்துவாரி முறை, தாமன் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
சரி

Question 3.
குஜராத்தின் யூ சுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது
விடை:
தவறு

Question 4.
‘பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் 1918ல் நிறைவேற்றப்பட்டது
விடை:
தவறு

V. கீழ்க்காணும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஜமீன்தாரி முறைப் பற்றிய தவறான கூற்றாகும்.
அ) இந்த முறை 1793 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆ) ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர் ஆவர்.
இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட வருவாய் நிலையாக கிடைத்தது.
ஈ) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 19% நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
விடை:
இ) விவசாயிகளுக்கு இந்த முறையில் ஒரு குறிப்பிட்டவருவாய் நிலையாக கிடைத்தது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற விவசாய புரட்சி பற்றிய சரியான கூற்று எது?
அ) சந்தால் கலகம் வங்காளத்தில் நடைபெற்றது.
ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.
இ) தக்காண கலகம் 1873ல் பூனாவில் உள்ள கிராமம் ஒன்றில் துவங்கியது.
ஈ) மாப்ளா கலகம் தமிழகத்தில் நடைபெற்றது.
விடை:
ஆ) நீல் தர்பன் என்ற நாடகம் தீன பந்து மித்ராவால் எழுதப்பட்டது.

VI. பின்வரும் வினாக்களுக்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
நிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.
விடை:

  • ஆங்கில கம்பெனிக்கு வரி செலுத்தும் வரை ஜமீன்தார்கள் நில உடைமையாளர்களானார்கள்.
  • வரி வசூல் செய்யும் அரசின் முகவர்களாக செயல்பட்டனர்.

Question 2.
இரயத்துவாரி முறையின் சிறப்புக் கூறுகள் யாவை?
விடை:

  • விவசாயிகளுடன் வருவாய் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
  • நில அளவு மற்றும் விளைச்சலின் மதிப்பீடு கணக்கிடப்பட்டது.
  • விளைச்சலில் 45 லிருந்து 50% வரை வரி நிர்ணயிக்கப்பட்டது.

Question 3.
மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறுக.
விடை:

  • கிராமத் தலைவர் சலுகைகளை தவறாக பயன்படுத்தினார்.
  • விவசாயிகளுக்கு இலாபம் இல்லை .
  • இது ஜமீன்தாரி முறையின் திருத்தியமைக்கப்பட்ட வடிவம், மேலும் கிராம உயர் வகுப்பினருக்கு இலாபமாக அமைந்தது.

Question 4.
1859 – 60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன?
விடை:

  • இண்டிகோ (அவுரி) வளர்க்க குத்தகை விவசாயிகளை கட்டாயப்படுத்தியது.
  • ஆள்கடத்தல், கொள்ளையடித்தல், கசையடி கொடுத்தல் எரித்தல் ஆகியவையும் 1859 – 60 ல் நடைபெற்ற இண்டிகோ கலகத்திற்கு காரணம் ஆகும்.

Question 5.
சம்பரான் சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் பங்கினை குறிப்பிடுக?
விடை:

  • மகாத்மா காந்தி சம்பரான் விவசாயிகளுக்கு உதவ முன்வந்தார்.
  • அரசு விசாரணைக்குழுவில் மகாத்மா காந்தியை உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.
  • (மே – 1918ல் சம்பரான் விவசாயத் சட்டம் நிறைவேற்றப்பட்டது)

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 6.
பர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.
விடை:

  • 1928 ல் 30% அரசு நிலவருவாயை உயர்த்தியது.
  • பர்தோலி (குஜராத்) விவசாயிகள் உயர்த்தப்பட்ட நிலவரியை செலுத்த மறுப்பு தெரிவித்து சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் வரிகொடா இயக்கத்தில் ஈடுபட்டனர்.
  • (பெண்களும் இதில் கலந்து கொண்டனர்)

VII. விரிவான விடையளி

Question 1.
நிலையான நிலவரி திட்டத்தின் நிறை, குறைகளை விவாதிக்க.
விடை:
நிலையான நிலவரி திட்டத்தின் நிறைகள் :

  • தரிசு நிலங்கள், காடுகள் விவசாய நிலமாக்கப்பட்டது.
  • ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர்களாயினர்.
  • ஜமீன்தார்கள் நீதி வழங்குவதிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
  • ஆங்கில அரசுக்கு நம்பிக்கைக்குரியவர்களாயினர்.
  •  ஆங்கில அரசுக்கு நிலையான வருவாய் கிடைக்கச் செய்தது.

குறைகள் :

  • அரசுக்கும், விவசாயிகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லை.
  • விவசாயிகள் உரிகைள் மறுக்கப்பட்டு ஜமீன்தார் பொறுப்பில் விடப்பட்டனர்.
  • விவசாயிகள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
  • ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும், ஆடம்பர பிரியர்களாகவும் மாறினர்.
  • வங்காள கிராமங்களில் ஜமீன்தார்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது.

Question 2.
ஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன ?
விடை:
விவசாயிகளின் மீது ஆங்கில நிலவருவாய் முறையின் தாக்கங்கள் :

  • அனைத்து வரிகளும் அதிகபட்ச வருமானம் பெறுவதாக இருந்தது. இது நில விற்பனை, விவசாய அழிவிற்கு வழிவகுத்தது.
  • விவசாயிகள் அதிக வரிச்சுமை, பஞ்சம், வறுமை கடன்சுமையால் பாதிக்கப்பட்டனர். எனவே இவர்கள் நிலம், வாங்குவோர், வட்டிக்கு பணம் தருபவர்களை தேடிச் சென்றனர். நிலத்தை வாங்கியவர்கள் செல்வந்தாராயினர்.
  • ஜமீன்தார்கள், வட்டிக்காரர்கள், வழக்கறிஞர்களால் விவசாயிகள் சுரண்டப்பட்டனர்.
  • கிராமங்களுக்கான நிலைப்புத்தன்மை அசைக்கப்பட்டன.
  • ஆங்கில பொருட்களால் இந்திய குடிசைத்தொழில்கள் மறைந்தன.
  • புதிய சட்ட அமைப்பு, பழமையான பழக்கங்களை மாற்றியது.
  • விவசாயிகளின் உழைப்பின் பலன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் நன்மையளிப்பதாக இருந்தது.

Question 3.
மாப்ளா கிளர்ச்சி பற்றி ஒரு பத்தியில் எழுதுக.
விடை:
மாப்ளா கிளர்ச்சி : 1921

  • மாப்ளா விவசாயிகள் (கேரளா) இந்து ஜமீன்தார்கள் (ஜென்மிஸ்) ஆங்கில அரசால் அடக்கப்பட்டு சுரண்டப்பட்டனர்.
  • ஏப் – 1920 ல் நடைபெற்ற மலபார் மாநாடு புரட்சிக்கு உத்வேகம் அளித்தது.
  • இம்மாநாடு நிலக்கிழார் – குத்தகைகாரர் இடையிலுள்ள உறவை ஒழுங்குப்படுத்த சட்டம் இயற்ற கோரியது.
  • 1921 ல் கிளர்ச்சியின் ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்கள் காவல் நிலையங்கள், பொது அலுவலகங்கள், செய்தி தொடர்பு சாதனங்கள் நிலக்கிழார், வட்டிக்கடைக்காரர்களை தாக்கினர்.
  • பின்னர் அரசு தலையீட்டின் மூலம் 2337 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 1650 பேர் காயமடைந்தனர். 45,000 க்கும் மேற்பட்டோர் சிறை பிடிக்கப்பட்டு 1921 டிசம்பரில் கிளர்ச்சி அடக்கப்பட்டது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.
விடை:

  • ஆங்கிலேயர்கள் இந்தியப் பொருளாதாரத்தைச் சுரண்டும் கொள்கையைப் பின்பற்றினர்.
  • அவர்கள் அறிமுகப்படுத்திய வாரிசு இழக்கும் கொள்கை இந்தியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
  • கிறிஸ்தவப் பாதரியார்கள் கிருஸ்தவ மதத்தைப் பரப்பினர்.
  • ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் சமூக பழக்கவழக்கங்களில் தலையிட்டனர்.
  • இந்திய சிப்பாய்கள் இழிவாக நடத்தப்பட்டனர்.
  • நாட்டின் பொருளாதாரச் சுரண்டலில் ஏராளமான செல்வம் வெளியேற்றப்பட்டது. இயந்திரத்தினால் செய்யப்பட்ட ஆங்கிலப் பொருட்கள் இந்தியத் தொழிற்சாலைகளைப் பெரிதும் பாதித்தது. எனவே வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டது.
  • இந்தியர்களுக்கு அரசியலிலும், இராணுவத்திலும் உயர் பதவிகள் மறுக்கப்பட்டன.
  • பாரசீக மொழிக்குப் பதிலாக ஆங்கில மொழி புகுத்தப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

IX. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
காந்தியின் அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தை வடிவமைப்பதில் செல்வாக்கு பெற்றது எது என்பது குறித்து எழுதுக.

Question 2.
உனது பள்ளியில் கடந்த கால மற்றும் தற்கால விவசாயிகளுக்கிடையே காணப்படும் ஒருமித்த சிறப்புகளை விளக்கும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்க.

8th Social Science Guide கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
1765 ல் இராபர்ட் கிளைவ் வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற பகுதி எது?
அ) வங்காளம், பீகார், ஒரிசா
ஆ) பீகார், பஞ்சாப்
இ) வங்காளம், ஒரிசா, பாட்னா
ஈ) வங்காளம், பூனா, கேரளா
விடை:
அ) வங்காளம், பீகார், ஒரிசா

Question 2.
விவசாயிகளிடமிருந்து வரியை வசூலிக்கும் முகவர்களாக செயல்பட்டவர்கள்
அ) அரசர்கள்
ஆ) பிரபுக்கள்
இ) ஜமீன்தார்கள்
ஈ) நிலக்கிழார்கள்
விடை:
இ) ஜமீன்தார்கள்

Question 3.
ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச் சென்றது எது?
அ) இண்டிகோ கலகம்
ஆ) சந்தால் கலகம்
இ) தக்காண கலகம்
ஈ) பாப்னா கலகம்
விடை:
ஆ) சந்தால் கலகம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
_________ என்ற செய்தித்தாள் அவுரி சாகுபடியாளர்கள் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது
விடை:
இந்து தேசபக்தன்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 2.
1937_________ ஆட்சிக்கு வந்தபோது விவசாயிகள் நிலம் திருப்பி தரப்பட்டது
விடை:
காங்கிரஸ்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 2

IV. சரியா? தவறா?

Question 1.
காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது நெசவுத்தொழிலை கொண்டிருந்தது.
விடை:
தவறு

Question 2.
பீகாரில் உள்ள ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகில் சந்தால் மக்கள் வேளாண்மை செய்து வந்தனர்.
விடை:
சரி

V. கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையை (✓) செய்யவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சம்பரான் சத்தியாகிரகம் பற்றிய தவறான கூற்றாகும்.
அ) பீகார் மாநிலத்தில் சட்டத்திற்கு புறம்பான அவுரி சாகுபடி செய்தனர்.
ஆ) மொத்த நிலத்தில் 20ல் 10 பங்கில் அவுரியை சாகுபடி செய்தனர்.
இ) ஐரோப்பிய தோட்டக்காரர்கள் சம்பரான் தீன்கதியா என்ற நடைமுறையின் கீழ் பிணைக்கப்பட்டிருந்தனர்.
ஈ) அரசு மகாத்மா காந்தியை விசாரணைக் குழு உறுப்பினராக சேர்த்துக் கொண்டது.
விடை:
ஆ) மொத்த நிலத்தில் 20ல் 10 பங்கில் அவுரியை சாகுபடி செய்தனர்.

VI. குறுகிய விடையளி.

Question 1.
நிலையான நிலவரி திட்டத்தின் பிற பெயர்கள் யாவை?
விடை:

  • ஜமீன்தாரி
  • ஜாகீர்தாரி
  • மல்குஜாரி
  • பிஸ்வேதாரி

Question 2.
இரயத்துவாரி முறை யாரால் எந்தப்பகுதிகளில் கொண்டு வரப்பட்டது?
விடை:

  • இரயத்துவாரி முறை 1820ல் தாமஸ்மன்றோ மற்றும் கேப்டன் ரீட் என்பவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மதராஸ். பம்பாய், அசாம்பகுதிகள் மற்றும் கூர்க் ஆகிய இந்திய மாகாணங்களில் கொண்டுவரப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

Question 3.
கேடா சத்யாகிரகம் சிறு குறிப்பு வரைக.
விடை:

  • 1918ல் குஜராத்தின் கேடா மாவட்டத்தில் பஞ்சத்தால் விவசாயம் பொய்த்தது.
  • அரசு வரி செலுத்த அறிவுறுத்தியதால் உள்ளூர் விவசாயிகள் காந்தியடிகள் தலைமையில் வரிகொடா இயக்கம் தொடங்கினர்.

VII. விரிவான விடையளி.

Question 1.
விவசாயிகளின் புரட்சிகள் ஏற்பட காரணங்களை விவரி?
விடை:

  • ஆங்கில ஆட்சி இந்திய வேளாண்மையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது.
  • ஜமீன்தார்கள் நில உரிமையாளர்களாக மாறினர்.
  • விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்பட்டு, அவர்கள் வாழ்க்கை துயரமானது.
  • எனவே 19,20ம் நூற்றாண்டுகளில் ஜமீன்தார்களையும் ஆங்கிலேயர்களையும் எதிர்த்து புரட்சியில் ஈடுபட்டனர்.

Question 2.
பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் பற்றி விவரி?
விடை:

  • நகர்ப்புற வட்டிக்காரர்களிடமிருந்து பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலவில்லை.
  • வட்டிக்கடைக்காரர்களின் ஒடுக்கு முறையை தடுக்க புரட்சியில் ஈடுபட்டனர்.
  • ஆங்கில அரசு புரட்சியை விரும்பவில்லை. ஏனென்றால் இராணுவ வீரர்கள் அப்பகுதியில் தேர்வு செய்யப்பட்டனர்.
  • 1900ல்பஞ்சாப்நில உரிமைமாற்று சட்டம் நிறைவேற்றப்பட்டுமற்றபகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டது.
  • இச்சட்டப்படி மக்கள் விவசாயிகள், வட்டிக்கடைக்காரர்கள், இதர மக்கள் என பிரிக்கப்பட்டனர்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 3
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 4

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 3 வளிமண்டலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 3 வளிமண்டலம்

9th Social Science Guide வளிமண்டலம் Text Book Back Questions and Answers

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
………. உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.
அ) ஹீலியம்
ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு
இ) ஆக்ஸிஜன்
ஈ) மீத்தேன்
விடை:
இ) ஆக்ஸிஜன்

Question 2.
வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு ………… ஆகும்.
அ) கீழடுக்கு
ஆ) மீள் அடுக்கு
இ) வெளியடுக்கு
ஈ) இடையடுக்கு
விடை:
அ) கீழடுக்கு

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 3.
…………. வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.
அ) வெளியடுக்கு
ஆ) அயன அடுக்கு
இ) இடையடுக்கு
ஈ) மீள் அடுக்கு
விடை:
இ) இடையடுக்கு

Question 4.
வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை ……………. என்று அழைக்கிறோம்.
அ) பொழிவு
ஆ) ஆவியாதல்
இ) நீராவிப்போக்கு
ஈ) சுருங்குதல்
விடை:
ஈ) சுருங்குதல்

Question 5.
…………. புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.
அ) சூரியன்
ஆ) சந்திரன்இ
இ) நட்சத்திரங்கள்
ஈ) மேகங்கள்
விடை:
அ) சூரியன்

Question 6.
அனைத்து வகை மேகங்களும் …………… ல் காணப்படுகிறது.
அ) கீழடுக்கு
ஆ) அயன அடுக்கு
இ) இடையடுக்கு
ஈ) மேலடுக்கு
விடை:
அ) கீழடுக்கு

Question 7.
………… செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.
அ) இடைப்பட்ட திரள் மேகங்கள்
ஆ) இடைப்பட்ட படை மேகங்கள்
இ) கார்படை மேகங்கள்
ஈ) கீற்றுப்படை மேகங்கள்
விடை:
அ) இடைப்பட்ட திரள் மேகங்கள்

Question 8.
பருவக்காற்று என்பது ……..
அ) நிலவும் காற்று
ஆ) காலமுறைக் காற்றுகள்
இ) தலக்காற்று
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) காலமுறைக் காற்றுகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 9.
பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் ……….. என்று அழைக்கின்றோம்.
அ) உறைபனி
ஆ) மூடுபனி
இ) பனி
ஈ) ஆலங்கட்டி
விடை:
அ) உறை பனி

Question 10.
……. புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.
அ) அழுத்தம்
ஆ) காற்று
இ) சூறாவளி
ஈ) பனி
விடை:
இ) சூறாவளி

Question 11.
காற்றின் செங்குத்து அசைவினை ………….. என்று அழைக்கின்றோம்.
அ) காற்று
ஆ) புயல்
இ) காற்றோட்டம்
ஈ) நகர்வு
விடை:
இ) காற்றோட்டம்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 1

III. சுருக்கமான விடையளி

Question 1.
வளிமண்ட லம் – வரையறு.
விடை:
புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்றுப் படலம் வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

Question 2.
காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
விடை:
காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்

  • நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்
  • கடல் மட்டத்திலிருந்து உயரம்
  • கடலிலிருந்து தூரம்
  • வீசும் காற்றின் தன்மை
  • மலைகளின் இடையூறு
  • மேகமூட்டம்
  • கடல் நீரோட்டங்கள்
  • இயற்கைத் தாவரங்கள்

Question 3.
வெப்பத்தலைகீழ் மாற்றம் – சிறு குறிப்பு வரைக.
விடை:
ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் 1°C வெப்பநிலை குறையும். இதனை வெப்பத்தலைகீழ் மாற்றம் என்கிறோம்.

Question 4.
வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல் முறைகளை விளக்குக.
விடை:

  • கதிர்வீச்சு
  • வெப்பக்கடத்தல்
  • வெப்பச்சலனம்
  • வெப்பக்கிடை அசைவு

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 5.
கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக.
விடை:
வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்று எனப்படும். இவை ‘நிலவும் காற்று’ என்றும் அழைக்கப்படுகிறது.

Question 6.
சிறுகுறிப்பு வரைக.
விடை:
அ. வியாபாரக் காற்றுகள்:
வட மற்றும் தென் அரைக்கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி, ஆண்டு முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசம் காற்றுகள் ‘வியாபாரக்காற்று’ ஆகும். இவை வியாபாரிகளின் கடல் பயணத்திற்கு உதவியாக இருக்கின்றன.

ஆ.கர்ஜிக்கும் நாற்பதுகள்:
வட மற்றும் தென் அரைக்கோளங்களின் வெப்பமண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி மிகவும் வேகமாக வீசக்கூடிய காற்றுகள் ‘மேலைக்காற்று’ ஆகும். இவை 40° அட்சங்களில் வீசும் பொழுது கர்ஜிக்கும் நாற்பதுகள் என அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 7.
மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?
விடை:

  • நீராவியிலிருந்து பெறப்பட்ட உப்புத்துகள்கள் புகை போன்றவற்றின் மீது குளிர்ந்த ஈரப்பதமான காற்று படிவதன் மூலம் மேகங்கள் உருவாகின்றன.
  • சில நேரங்களில் வெப்பக்காற்றும், ஈரப்பதம் நிறைந்தக் காற்றும் ஒன்றிணையும் போது மேகங்கள்
    உருவாக்கப்படுகின்றன.

Question 8.
மழைப் பொழிவின் வகைகள் யாவை?
விடை:

  • வெப்பச்சலன மழைப்பொழிவு
  • சூறாவளி மழைப்பொழிவு (வளிமுக மழைப்பொழிவு)
  • மலைத்தடுப்பு மழைப்பொழிவு

Question 9.
சிறுகுறிப்பு வரைக:
அ. சாரல்
ஆ) மழை
இ) பனி
ஈ) ஆலங்கட்டி
உ) வெப்பமாதல்
விடை:
அ. சாரல்:
0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும் பொழுது அதனை சாரல் என்றழைக்கிறோம்.

ஆ. மழை :

  • உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழை பொழிகிறது.
  • காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மழைப்பொழிவு ஏற்படும்.

இ. பனி:

  • உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும் போது பனிப்பொழிவு ஏற்படுகிறது.
  • பகுதியாகவோ முழுமையாகவோ ஒளிபுகாத் தன்மையுடன் காணப்படும் பனித்துகள் படிகங்களை பனி என்று அழைக்கின்றோம்.

ஈ. ஆலங்கட்டி:
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பனி உருண்டையுடன் கூடிய மழைப்பொழிவே ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது.

உ. வெப்பமாதல்:
ஒரு பொருளைச் சூடாக்கும் ஆற்றலே வெப்ப ஆற்றல் எனப்படுகிறது. வெப்பநிலை என்பது ஒரு பொருளின் வெப்பத்தின் அளவு ஆகும்.

IV. காரணம் கூறுக

Question 1.
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம் ஒரு அமைதிப் பகுதி.
விடை:

  • நிலநடுக்கோட்டு பகுதிகளில் சூரியனின் செங்குத்தான கதிர்கள் அப்பகுதியை வெப்பமடையச் செய்கிறது. இதனால் காற்று விரிவடைந்து மேல்நோக்கிச் செல்வதால் தாழ்வழுத்தம் உருவாகிறது.
  • இதனால் இம்மண்டலம் அமைதி மண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது.

Question 2.
மேகமூட்டத்துடன் இருக்கும் நாள்களை விட மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது.
விடை:

  • மேகமூட்டத்துடன் இருக்கும் நான்கனைவிட மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது. ஏனெனில்,
  • மேகம் என்பது வளிமண்டலத்தில் கண்களுக்குப் புலப்படும் படியாக மிதந்து கொண்டிருக்கும் நீர்த்திவலைகளே மேகங்களாகும். நீர்த்திவலைகள் அதிகம் உள்ள நாளில் மேகமூட்டம் இருப்பதால் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகம் தெரிவதில்லை.

Question 3.
மூடுபனி போக்குவரத்துக்கு ஆபத்தாக உள்ளது.
விடை:
மூடுபனி போக்குவரத்துக்கு ஆபத்தாக உள்ளது ஏனெனில், மூடுபனி வழியே வெளிச்சம் ஊடுருவிச் செல்லாது இதனால்

Question 4.
வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது.
விடை:
வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், புவி நிலநடுக்கோட்டுப் பகுதியில் மாலை வேளையில் 4 மணி அளவில் வெப்பச்சலன மழை அடிக்கடி நிகழ்கிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 5.
துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகின்றன.
விடை:
துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகின்றன. ஏனெனில், துருவ கீழைக் காற்றுகள் துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகிறது.

V. வேறுபடுத்துக

Question 1.
வானிலை மற்றும் காலநிலை வானிலை
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 60

Question 2.
நிலக்காற்று மற்றும் கடற்காற்று
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 65

Question 3.
காற்று மோதும் பக்கம் மற்றும் காற்று மோதாப்பக்கம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 70

Question 4.
வெப்பச்சூறாவளி மற்றும் மிதவெப்பச் சூறாவளி
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 75

VI. விரிவான விடையளி

Question 1.
வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக.
விடை:
வளிமண்டல அடுக்குகள்:
வளிமண்டலம் கீழடுக்கு, மீள் அடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு, வெளியடுக்கு என ஐந்து அடுக்குகளைக் கொண்டது.

கீழடுக்கு: (உயரம் : துருவம் 8 கி.மீ, நிலநடுக்கோடு 18 கி.மீ.)
உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும். அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

மீள் அடுக்கு : (உயரம் : 18 கி.மீ. – 50 கி.மீ.)
ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளன. உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரிப்பு. ஜெட் விமானங்கள் பறக்க ஏதுவாக உள்ளது.

இடையடுக்கு : (உயரம் : 50 கி.மீ. – 80 கி.மீ.)
உயரே செல்லச் செல்ல வெப்பம் கூடும். வானொலி ஒலிபரப்புக்கு உதவுகிறது. புவியை நோக்கிவரும் விண்கற்கள் எரிக்கப்படுகின்றன.

வெப்ப அடுக்கு : (உயரம்: 80 கி.மீ. – 600 கி.மீ.)
கீழ்ப்பகுதியில் வாயுக்களின் அளவு சீராகச் காணப்படுகிறது. மேல்பகுதியில் சீரற்று காணப்படுகிறது. உயரம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமும் அதிகரிக்கிறது. இங்குள்ள அயனி அடுக்கில் அயனிகளும் மின்னணுக்களும் காணப்படுகின்றன.

வெளியடுக்கு: (உயரம் : 600 கி.மீ-க்கு அப்பால்)
வளிமண்டல அடுக்குகளின் மேல் அடுக்கு வாயுக்கள் மிகவும் குறைவு. மேல்பகுதி படிப்படியாக, அண்டவெளியோடு கலந்துவிடுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 2.
நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக.
விடை:
புவியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுக்களே ‘காற்று’ ஆகும். காற்று

  • கோள் காற்றுகள்
  • கால முறைக் காற்றுகள்.
  • மாறுதலுக்குட்பட்ட காற்றுகள்
  • தலக்காற்றுகள் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கோள் காற்றுகள்:

  • ஆண்டு முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள். இவை ‘நிலவும் காற்று’ எனவும் அழைக்கப்படுகிறது. ‘வியாபாரக் காற்றுகள்’ ‘மேலைக்காற்றுகள்’ மற்றும் ‘துருவ கீழைக்காற்றுகள்’ ஆகியவையும் கோள் காற்றுகளே.
  • வட அரைக் கோளத்தில் தென் மேற்கிலிருந்தும், தென் அரைக் கோளத்தில் வட மேற்கிலிருந்தும் வேகமாக வீசுவதால் இவை ‘மேலைக்காற்றுகள்’ எனப்படுகின்றன.
  • வட அரைக் கோளத்தில் வட கிழக்கிலிருந்தும், தென் அரைக் கோளத்தில் தென் கிழக்கிலிருந்தும் வீசுகின்ற காற்றுகள் ‘துருவ கீழைக்காற்றுகள்’ எனப்படுகின்றன.

கால முறைக் காற்றுகள்:
நிலமும் கடலும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால் காற்று பருவத்திற்கேற்ப தன் திசையை மாற்றிக் கொள்கிறது. எனவே, இக்காற்றுகள் பருவக்காற்றுகள் (மான்சூன்) என அழைக்கப்படுகின்றன. எ.கா. தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்று.

மாறுதலுக்குட்பட்ட காற்றுகள்:
உள்ளூர் வானிலை திடீர் மாற்றம், இடையூறுகள் காரணமாக அப்பகுதி நிலையான காற்றில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. மாறுதலுக்குட்பட்ட இக்காற்றுகள் சூறாவளி, எதிர் சூறாவறி மற்றும் பெரும்புயலாக மாறுகின்றன.
அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்கு சுழல் வடிவில் குவியும் காற்று ‘சூறாவளி எனப்படும்.

தலக்காற்றுகள்:
ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்று ‘தலக்காற்று ஆகும்.

Question 3.
மேகங்களின் வகைகளை விவரி.
விடை:
மேல்மட்ட மேகங்கள்: (6-20 கி.மீ. உயரம் வரை)

  • கீற்று மேகங்கள் (8000 முதல் 12000 மீட்டர் வரை) இவை ஈரப்பதம் இல்லாதவை. மழை தருவதில்லை. (வெண்ணிற இழை).
  • கீற்றுத்திரள் மேகங்கள் – பனிப்படிகங்களால் உண்டானவை. (வெண்ணிற திட்டு, விரிப்பு)
  • கீற்றுப்படை மேகங்கள் – பால் போன்ற வெள்ளை நிறக் கண்ணாடி போன்றது மிகச் சிறிய பனித்துகள்கள் கொண்டது.

இடைமட்ட மேகங்கள்: (2.5 – 6 கி.மீ. உயரம் வரை)

  • இடைப்பட்ட படை மேகங்கள் – சாம்பல் அல்லது நீல நிறத்தில் மெல்லிய விரிப்பு போன்று காணப்படும். உறைந்த நீர்த்திவலைகள் கொண்டது.
  • இடைப்பட்ட திரள் மேகங்கள் – அலைத் திரள் அல்லது இணைக் கற்றைகள் போன்று காட்சியளிக்கும். இவை செம்றியாட்டு மேகங்கள் அல்லது கம்பளிக்கற்றை மேகங்கள் எனப்படும்.
  • கார்படை மேகங்கள் – புவி மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள் கடுமையான மேகங்கள். மழை, பனி, ஆலங்கட்டி மழை தரக்கூடியது.

கீழ்மட்ட மேகங்கள்: (புவி மேற்பரப்பு 25 கி.மீ. வரை)

  • படைத்திரள் மேகங்கள் – (2500 மீட்டர் முதல் 3000 மீட்டர் வரை) சாம்பல் மற்றும் வெண்மை நிற வட்டத்திட்டுகளாக காணப்படும். தாழ்மேகங்கள் – தெளிவான வானிலை காணப்படும்.
  • படைமேகங்கள் – அடர்த்தியான பனி மூட்டம் போன்று காணப்படும் கீழ்மட்ட மேகங்கள். மழை அல்லது பனிப்பொழிவை தரும்.
  • திரள் மேகங்கள் – தட்டையான அடிபாகம், குவிமாடம் போன்ற மேல் தோற்றம் கொண்ட ‘காலிபிளவர்’ போன்ற வடிவம். தெளிவான வானிலையுடன் தொடர்புடைய மேகம்.
  • கார்திரள் மேகங்கள் – இடியுடன் கூடிய மழை தரும் மேகங்கள். மிகவும் அடர்த்தியான கனத்த தோற்றத்துடன் காணப்படும். (கனமழை, அதிக பனிப்பொழிவு தரும். சிலவேளை கல்மாரி, சுழற்காற்றுடன் மழை தரும்),

Question 4.
சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி.
விடை:
அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து காற்று குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்கு சுழல் வடிவத்தில் குவியும் காற்று சூறாவளி எனப்படும்.

வெப்பச் சூறாவளிகள்:
நிலமும் நீரும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால், வெப்பமண்டலங்களுக்கு இடையேயான காற்றை ஒருமுகப்படுத்தும் பகுதிகளில் ‘வெப்பச் சூறாவளிகள் உண்டாகின்றன. உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுத்துகின்றன.

மிதவெப்பச் சூறாவளிகள்:
35° முதல் 65° வட மற்றும் தென் அட்சங்களில் வெப்பம் மற்றும் குளிர் காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உண்டாகின்றன. இவை நிலத்தை அடைந்தவுடன் வலுவிழப்பதில்லை.
வட அட்லாண்டிக் பெருங்கடல், வடமேற்கு ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் சூறாவளி ரஷ்யா மற்றும் இந்தியா வரை வீசுகின்றன. இந்தியாவை அடையும் போது ‘மேற்கத்திய இடையூறு காற்று’ எனப்படும்.

வெப்பச் சூறாவளிகள்:

  • 30° முதல் 60° வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப்பகுதிகளில் வீசுகின்றன. உயர் அட்ச வெப்ப மாற்றங்களிலிருந்து ஆற்றலை பெறுகின்றன. ‘மைய அட்ச சூறாவளிகள்’ எனவும் அழைக்கப்டுகின்றன.
  • இச் சூறாவளிகள் லேசான சாரல் மழை, பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிவு, இடியுடன் கூடிய மழைப்பொழிவு, பனிப்பொழிவு, சுழல் காற்று ஆகியவற்றை அளிக்கின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 5.
பொழிவின் வகைகளை விவரி.
விடை:
சுருங்கிய நீராவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகின்ற நிகழ்வே ‘பொழிவு’ எனப்படும்.

  • சாரல்
  • மழை
  • பனிப்பொழிவு
  • பனிப்படிவு
  • ஆலங்கட்டி மழை ஆகியவை பொழிவின் பல்வேறு வகைகள் ஆகும்.

சாரல்: 0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடைதல் ‘சாரல்’ எனப்படும்.

மழை: உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் பொழுது மழை பொழிகிறது. காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருக்க வேண்டும். (மழைத்துளி விட்டம் 5 மி.லி-க்கு மேல்).

பனிப்பொழிவு: உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது.

பனிப்படிவு: பகுதியாகவோ, முழுமையாகவோ ஒளிபுகா தன்மையுடன் காணப்படும் பனித்துகள் படிகங்கள் பனி என அழைக்கப்படுகின்றது.

ஆலங்கட்டி மழை: முழுமையாகவோ அல்லது பகுதியாகவே ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச் சிறிய பனி உருண்டையுடன் கூடிய மழைப்பொழிவே ‘ஆலங்கட்டி மழை’ எனப்படும்.

VII. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. வளிமண்டல அடுக்குகளில் காணப்படும் மேகங்களைப் படம் வரைக.
2. மேகங்கள் மற்றும் மழைக்குத் தொடர்புடைய பழமொழிகளைச் சேகரிக்கவும்.
3. “மேகங்கள்” மற்றும் “மழை” பற்றி கவிதை எழுதுக.
4. தங்கள் பகுதியில் ஒரு வார காலத்திற்கு வானத்தில் உள்ள மேகங்களின் வடிவம் மற்றும் வண்ணங்களை
உற்று நோக்கி அறிக்கை தயார் செய்க
5. மழை மானி, காற்று திசை மானி இயங்கும் மாதிரிகளை உருவாக்குக.
6. பட்டை விளக்கப்படம் வரைக.
அ) கன்னியாகுமரி, புதுடெல்லி, அலகாபாத் மற்றும் இட்டாநகர் இடங்களின் ஒரு நாள் வெப்ப அளவை சேகரிக்கவும்.
ஆ) ஜெய்சல்மர் (இராஜஸ்தான்), மௌசின்ராம் (மேகாலயா), நாகப்பட்டினம், கோயம்புத்தூர் ஆகியவற்றின் ஒரு நாள் மழை அளவின் தரவுகளைச் சேகரிக்கவும்.
7. அரும்பும் வானவியலாளராக ஆகுக. தங்கள் பகுதியின் ஒரு வார காலத்தில் நிகழும் வானிலை நிகழ்வுகளை பதிவு செய்க.
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 85
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 86

9th Social Science Guide வளிமண்டலம் Additional Important Questions and Answers

Question 1.
கோடிட்ட இடத்தை நிரப்புக வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் உள்ளதைக் கண்டறிந்தவர் ………….
விடை:
டேனியல் ரூதர்ஃபோர்டு)

Question 2.
‘ட்ரோபோஸ்’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு …………. என்று பொருள்.
விடை:
மாறுதல்

Question 3.
மீள் அடுக்கின் மேல் எல்லை …………… எனப்படும்.
விடை:
ஸ்ரேடோபாஸ்

Question 4.
ஒவ்வொரு ………… மீட்டர் உயரத்திற்கும் 1°C வெப்பநிலை குறையும்.
விடை:
165 மீ

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 5.
எவரெஸ்ட் சிகர உயரம் …………….. மீ
விடை:
8848 மீட்டர்

Question 6.
காற்றினை அளக்கப் பயன்படும் அலகு ……..
விடை:
கிலோ மீட்டர் / மணி (அ) கடல் மைல்

II. பொருத்துக

i)
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 90

ii)
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 91

III. சுருக்கமான விடையளி

Question 1.
‘அல்பிடோ’ என்றால் என்ன?
விடை:
சூரியக்கதிர் வீச்சு புவியை வெப்பமடையச் செய்யாமல் உடனே திரும்ப பிரதிபலிக்கப்பட்டால் ‘அல்பிடோ’ என்றும் எதிரொளித்திறன் என்றும் அழைக்கப்படுகிறது.

Question 2.
காற்று மோதும் பக்கம், காற்று மோதாப்பக்கம் விவரி.
விடை:

  • காற்று வீசும் திசையை நோக்கி உள்ள மலைச்சரிவு ‘காற்று மோதும் பக்கம் எனப்படுகிறது.
  • காற்று வீசும் திசைக்கு மறுபக்கம் உள்ள மலைச்சரிவு ‘காற்று மோதாப் பக்கம்’ எனப்படுகிறது.

Question 3.
ஈரப்பதம், முழுமையான ஈரப்பதம், ஒப்பு ஈரப்பதம் விவரி.
விடை:

  • வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவே “ஈரப்பதம்” ஆகும்.
  • வளிமண்டலத்தில் உள்ள மொத்த நீராவியின் அளவு முழுமையான ஈரப்பதம்’ எனப்படும்.
  • வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் அளவிற்கும் அதன் மொத்தக் கொள்ளளவிற்கும் உள்ள விகிதாச்சாரமே ‘ஒப்பு ஈரப்பதம்’ எனப்படும்.

Question 4.
சம அழுத்தக் கோடுகள் என்றால் என்ன?
விடை:
நில வரைபடத்தில் சமகாற்றழுத்தம் கொண்ட இடங்களை இணைக்கும் கற்பனைக் கோடுகளே ‘சமஅழுத்தக்கோடுகள்’.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம்

Question 5.
ஹோமோஸ்பியர், ஹெட்ரோஸ்பியர், அயனோஸ்பியர் – வருவி.
விடை:

  • வெப்ப அடுக்கின் கீழ் பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் இது ஹோமோஸ்பியர் என அழைக்கப்படுகிறது.
  • வெப்ப அடுக்கின் மேல் பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் அப்பகுதி ‘ஹெட்ரோஸ்பியர்’ என்று அழைக்கப்படுகிறது.
  • வெப்ப அடுக்கின் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெப்ப அடுக்குப் பகுதியில் அயனோஸ்பியர் அமைந்திருக்கிறது.

Question 6.
வளிமண்டல அடுக்குகள் யாவை?
விடை:
வளிமண்டல அடுக்குகள்

  • கீழ் அடுக்கு (ட்ரோபோஸ்பியர்)
  • மீள் அடுக்கு (ஸ்ட்ரேட்டோஸ்பியரி
  • இடை அடுக்கு (மீசோஸ்பியர்)
  • வெப்ப அடுக்கு தெர்மோஸ்பியர்)
  • வெளி அடுக்கு (எக்சோஸ்பியர்)

Question 7.
பொழிவு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
விடை:

  • சுருங்கிய நீராவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகின்ற நிகழ்வே பொழிவு எனப்படுகிறது. பொழிவின் வகைகள்
  • சாரல், மழை, பனிப்பொழிவு, பனிப்படிவு, ஆலங்கட்டி மழை, வெப்பம்.

Question 8.
சூறாவளிகளை வகைப்படுத்து.
விடை:

  • வெப்பச் சூறாவளிகள்
  • மிதவெப்பச் சூறாவளிகள்
  • கூடுதல் வெப்பச்சூறாவளிகள்

IV. விரிவான விடையளி

Question 1.
வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை? ஏதேனும் மூன்றை விவரி
விடை:
வானிலை மற்றும் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்

  • நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்
  • கடல் மட்டத்திலிருந்து உயரம்
  • கடலிலிருந்து தூரம்
  • வீசும் காற்றின் தன்மை
  • மலைகளின் இடையூறு
  • மேக மூட்டம்
  • கடல் நீரோட்டங்கள்
  • இயற்கைத் தாவரங்கள்

நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்:

  • புவி கோள வடிவில் உள்ளதால், நிலநடுக்கோட்டுப் பிரதேசங்களில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் வெப்ப நிலை அதிகமாக காணப்படும்.
  • நிலநடுக்கோட்டு பகுதியிலிருந்து தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலும், துருவப் பகுதிகளிலும் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுவதால் வெப்பநிலை குறைவாகக் காணப்படுகின்றது.

கடல் மட்டத்திலிருந்து உயரம்:
ஓர் இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் 1°C வெப்பநிலை குறையும். இதனால் உயரமானப் பகுதிகளில் வெப்பநிலை குறைவாக உள்ளது.

வீசும் காற்றின் தன்மை :

  • ஓர் இடத்தின் காலநிலை காற்று உருவாகி வீசும் இடத்தினை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
  • வெப்பமான இடத்திலிருந்து வீசும் காற்றுகள் ஓர் இடத்தை வெப்பமாகவும், குளிர்ச்சியான இடத்திலிருந்து வீசும் காற்றுகள் ஓர் இடத்தைக் குளிர்ச்சியாகவும் வைக்கிறது. கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்றுகள் மழைப் பொழிவைத் தருகின்றன. நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்றுகள் வறட்சியான வானிலையை உருவாக்குகிறது.

Question 2.
மழைப்பொழிவின் வகைகளை விவரி.
விடை:
மழைப்பொழிவு வகைகள்:

  • வெப்பச்சலன மழைப்பொழிவு
    • சூறாவளி மழைப்பொழிவு
    • மலைத்தடுப்பு மழைப்பொழிவு

வெப்பசலன மழைப்பொழிவு:

  • நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் பகல் பொழுதின் போது சூரியக் கதிர்வீச்சினால் புவியின் மேற்பகுதி அதிகமாக
    வெப்பப்படுத்தப்படுகிறது. புவி மேற்பரப்பில் உள்ள காற்று வெப்பமடைவதால் விரிவடைந்து மேலெழும்புகிறது.
  • அங்கே வெப்பசலனக் காற்றோட்டம் உருவாகிறது. மேலே சென்ற காற்று குளிர்ச்சியடைந்து, சுருங்கி மேகங்களாக உருவெடுத்து மழையாக பொழிகிறது. இது வெப்பச்சலன மழை எனப்படுகிறது.

சூறாவளி மழைப்பொழிவு (அ) வளிமுக மழை:
அடர்த்தியான காற்றுத்திரள்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு பின்பு மேல்நோக்கி சென்று வெப்பம் மாறா நிலையினால் குளிர்ச்சியடைந்து பொழியும் மழை சூறாவளி மழைப்பொழிவு எனப்படுகிறது.

மலைத்தடுப்பு மழைப்பொழிவு:
ஈரப்பதம் மிகுந்து வீசும் காற்று மலைச்சரிவால் தடுக்கப்பட்டு மேல்நோக்கி எழுகிறது. இவ்வாறு எழுந்த காற்று பின்னர் குளிர்விக்கப்பட்டு சுருங்கி மழைப்பொழிவைத் தருகின்றது. மழைப்பொழிவு மலைத்தடுப்பு மழைப்பொழிவு என்று அழைக்கப்படுகின்றது.

மனவரைபடம்

வளி மண்டலம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 96
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 3 வளிமண்டலம் 97

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

8th Social Science Guide வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்
அ) சுஜா – உத் – தௌலா
ஆ) சிராஜ் – உத் – தௌலா
இ) மீர்காசிம்
ஈ) திப்பு சுல்தான்
விடை:
ஆ) சிராஜ் – உத் – தௌலா

Question 2.
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1757
ஆ) 1764
இ) 1765
ஈ) 1775
விடை:
அ) 1757

Question 3.
பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
அ) அலகாபாத் உடன்படிக்கை
ஆ) கர்நாடக உடன்படிக்கை
இ) அலிநகர் உடன்படிக்கை
ஈ) பாரிசு உடன்படிக்கை
விடை:
அ) அலகாபாத் உடன்படிக்கை

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 4.
பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி _________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) ஏதுமில்லை
விடை:
ஆ) இரண்டாம்

Question 5.
ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ___________
அ) 1756
ஆ) 1761
இ) 1763
ஈ) 1764
விடை:
ஆ) 1761

Question 6.
மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது.
அ) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
விடை:
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்

Question 7.
மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்
அ) இராபர் கிளைவ்
ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
இ) காரன்வாலிஸ்
ஈ) வெல்லெஸ்லி
விடை:
இ) காரன்வாலிஸ்

Question 8.
ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் __________
அ) இரண்டாம் பாஜிராவ்
ஆ) தௌலத்ராவ் சிந்தியா
இ) ஷாம்பாஜி போன்ஸ்லே
ஈ) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
விடை:
அ) இரண்டாம் பாஜிராவ்

Question 9.
மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா _________
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) இரண்டாம் பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) பாஜிராவ்
விடை:
ஆ) இரண்டாம் பாஜிராவ்

Question 10.
துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?
அ) அயோத்தி
ஆ) ஹைதராபாத்
இ) உதய்பூர்
ஈ) குவாலியர்
விடை:
ஆ) ஹைதராபாத்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு
விடை:
1757 – பிப்ரவரி – 9

Question 2.
சிராஜ் உத் – தௌலாவின் தலைமை படைத் தளபதி ___________
விடை:
மீர்ஜாபர்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 3.
இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் ___________
விடை:
வாரிசுரிமை பிரச்சனை

Question 4.
இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக
விடை:
டல்ஹௌசி பிரபு

Question 5.
திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________
விடை:
ஆர்தர் வெல்லெஸ்லி

Question 6.
திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _________ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.
விடை:
மூன்றாம் கிருஷ்ண ராஜ உடையார்

Question 7.
1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் ____________
விடை:
வெல்லெஸ்லி பிரபு

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ் – உத் – தௌலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.
விடை:
சரி

Question 2.
பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.
விடை:
தவறு

Question 3.
ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.
விடை:
தவறு

Question 4.
வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 5.
காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.
விடை:
சரி

V. கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?

Question 1.
1. அடையாறு போர் – 1748
2. ஆம்பூர்போர் – 1754
3. வந்தவாசிப் போர் – 1760
4. ஆற்காட்டுப் போர் – 1749
விடை:
3. வந்தவாசிப் போர் – 1760

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
இருட்டறை துயரச் சம்பவம் – 1756:

  • சிராஜ் – உத் – தௌலாவின் படைவீரர்கள் 146 ஆங்கிலேயர்களை கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஓர் சிறிய காற்றுபுகாத இருட்டறையில் அடைத்தனர்.
  • மறுநாள் காலை அவர்களுள் 123- பேர் மூச்சு திணறி இறந்திருந்தனர். 23 – பேர் உயிர்பிழைத்தனர்.
  • இது வரலாற்றின் இருட்டறை துயரச் சம்பவம்’ என அழைக்கப்படுகிறது.

Question 2.
பிளாசிப் போருக்குபின் ஆங்கிலேயர்கள் பெற்ற சலுகைகள் யாவை?
விடை:

  • வங்காள கருவூலத்தின் மூலம் கிடைத்த பெரும் செல்வத்தைக் கொண்டு இராணுவத்தை பலப்படுத்தியது.
  • பிளாசிப்போரின் வெற்றி ஆங்கிலேய அரசு அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கி வைத்தது.
  • 2 – நூற்றாண்டுகள் ஆங்கிலேயர் ஆதிக்கம் நீடிக்கச் செய்தது.

Question 3.
பக்சார் போருக்கான காரணங்களை குறிப்பிடுக.
விடை:

  • ஆங்கிலேயர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மீர்ஜாபர் தவறியதால் அவரது மருமகன் மீர்காசிமை வங்காள நவாப் ஆக்கினார்கள்.
  • அவர் வங்காளத்தின் தலைநகரை முர்ஷிதாபாத்திலிருந்து மாங்கீர்க்கு மாற்றினார்.
  • தஸ்தக் என்றழைக்கப்படும் சுங்கவரி விலக்கு ஆணையை தவறாக பயன்படுத்திய ஆங்கிலேயர் மீது மீர்காசிம் கோபமடைந்து கலகத்தில் ஈடுபட்டார்.
  • ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்ட மீர்காசிம் அயோத்தி சென்று சுஜா – உத் – தௌலா, 2 – ம் ஷா ஆலம் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு படையை உருவாக்கினார்.

Question 4.
முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் யாவை?
விடை:
ஹைதர் அலியின் வளர்ச்சியும், பிரெஞ்சுக்காரர்களிடம் அவர் கொண்டிருந்த நட்புறவு ஆகியன கிழக்கிற்றிய கம்பெனியின் எதிர்ப்புக்கு காரணமாயின.

மராத்தியர்கள், ஹைராபாத் நிசாம் ஆங்கிலேயர்கள் இணைந்து ஹைதர் அலிக்கு எதிராக முக்கூட்டணியை ஏற்படுத்தினர் இது முதல் ஆங்கிலேய மைசூர் போருக்கான காரணங்கள் ஆகும்.

Question 5.
மூன்றாம் மராத்திய போரின் விளைவுகள் யாவை?
விடை:

  • போர் முடிவில் மராத்திய கூட்டமைப்பு கலைக்கப்பட்டு, பேஷ்வா பதவி ஒழிக்கப்பட்டது.
  • 2-ம் பாஜிராவின் பகுதிகள் பம்பாயோடு இணைக்கப்பட்டது.
  • தோற்கடிக்கப்பட்ட போன்ஸ்லே , ஹோல்கரின் மராத்திய பகுதிகளான நாக்பூர், இந்தூர் ஆகியவை ஆங்கிலேயர்களால் கையகப்படுத்தப்பட்டன.
  • மராத்திய ஓய்வூதியமாக ரூபாய் 8-லட்சம் வழங்கப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 6.
துணைப்படைத் திட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • ஹைதராபாத் – தஞ்சாவூர்
  • அயோத்தி
  • பேஷ்வா
  • போன்ஸ்லே
  • குவாலியர்
  • இந்தூர்
  • ஜெய்பூர்
  • உதய்பூர் மற்றும் ஜோத்பூர்.

VII. விரிவான விடையளி

Question 1.
இரண்டாம் கர்நாடக போர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.
விடை:
காரணங்கள்: ஐதராபாத்
1748-ல் ஐதராபாத் நிஜாம் காலமானதால் அவர் மகன் நாசிர் ஜங்- க்கும், பேரன் முசாபர் ஜங்கிற்கும் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது.
1) கர்நாடகா:

  • கர்நாடகத்தில் தோஸ்த் அலியின் மருமகனான சந்தாசாகிப் அன்வருதீனுக்கு எதிராக ஆற்காடு அரியணையை அடைய விரும்பினார்.
  • சந்தாசாகிப், முசாபர் ஜங் – பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினர்.
  • அன்வாருதீனும், நாசிஜங்கும் – ஆங்கிலேயர் உதவியை நாடினர்.
  • கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமைப் பிரச்சனையே இப்போருக்கு காரணமாக அமைந்தது.

2) ஆம்பூர் போர் (1749): ஆம்பூர் 1749

  • ஆண்டு 3 -ல் நடைபெற்ற போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே, சந்தா சாகிப் முசாபர்ஜங் ஆகியோரின் கூட்டுப் படையால் கர்நாடக நவாப் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது மகன் திருச்சிக்கு தப்பி ஓடினார்.
  •  சந்தா சாகியை பிரெஞ்சுக்காரர்கள் நவாப் ஆக்கினர். இதற்கு ஈடாக பாண்டிச்சேரியை சுற்றியுள்ள 80 கிராமங்களை வெகுமதியாக வழங்கினார்.
  • தக்காணத்தில் பிரெஞ்சுக்காரர்களால் நாசிர்ஜங் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டதால் முசாபர் ஜங் ஜதராபாத்தின் நிஜாம் ஆனார்.

3) ஆற்காட்டுப் போர் (1751):
டியூப்போ திருச்சி கோட்டையை முற்றுகையிட ஒரு படையை அனுப்பினார். இதனால் சந்தாசாகிப் தன்னை பிரெஞ்சுப் படைகளோடு இணைத்துக் கொண்டு ஆற்காட்டை தாக்க இராபர்ட் கிளைவ் கம்பெனியிடம் அனுமதி கோரினார்.

கவர்னர் சாண்டர்ஸ் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கினார். 200 ஆங்கிலப் படையினர் 300 இந்திய படைவீரர்களுடன் கிளைவ் ஆற்காட்டை தாக்கி கைப்பற்றினார்.

லாரன்ஸ் உதவியுடன் கிளைவ் ஆரணி, காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் பிரெஞ்சுப் படைகளை தோற்கடித்தார். அதே சமயம் சந்தாசாகிப் திருச்சியில் கொலை செய்யப்பட்டார்.

அன்வாருதீனின் மகன் முகமது அலி ஆங்கிலேயரின் உதவியுடன் ஆற்காடு நவாப் ஆனார்.

டியூப்ளேக்கு பின் பிரெஞ்சு ஆளுநராக கோதேயூ ஆங்கிலேயருடன் பாண்டிச்சேரி உடன்படிக்கையை 1755 -ல் செய்து கொண்டார்.

இந்த உடன்படிக்கையின் படி இருநாடுகளும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது போருக்கு முன் இருந்த பகுதிகளை அவரவரிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதன்படி ஆங்கிலேயர்கள் மேலும் வலிமை பெற்றனர்.

Question 2.
நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் பற்றி எழுதுக.
விடை:
நான்காம் ஆங்கிலேய – மைசூர் போர் (1799):
திப்பு சுல்தான் 1792 – ல் ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை மூலம் காரன்வாலிஸ் அவமரியாதை செய்ததை மறக்கவில்லை.

காரணங்கள்:

  • திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு எதிரான வெளிநாட்டு கூட்டணிக்காக அரேபியா, துருக்கி ஆப்கானிஸ்தான் மற்றும் பிரான்சு நாடுகளுக்கு தூதர்களை அனுப்பினார்.
  • எகிப்து மீது படையெடுத்த நெப்போலியனுடன் திப்பு தொடர்பு வைத்திருந்தார்.
  • ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு வருகை புரிந்த பிரெஞ்சு அலுவலர்கள் ஜாக்கோபியின் கழகத்தை நிறுவினர். அங்கு சுதந்திரமரம் ஒன்றும் நடப்பட்டது.

போரின் போக்கு:

  • 1799-ல் வெல்லெஸ்லி திப்புவின் மீது போர் தொடுத்தார்.
  • குறுகிய காலத்தில் நடந்த கடுமையான போராக இருந்தது.
  • மேற்கே பம்பாய் இராணுவம் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையில் திப்பு சுல்தானை தாக்கியது.
  • திப்பு தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு பின் வாங்கினார்.
  • 1799 – மே- 4 – ல் ஸ்ரீரங்கப்பட்டினம் கைப்பற்றப்பட்டது.
  • திப்பு வீரமாக போரிட்டாலும் இறுதியில் கொல்லப்பட்டார்.
  • நான்காம் மைசூர் போர் முடிவில் ஒட்டு மொத்த மைசூரும் ஆங்கிலேயரிடம் சரணடைந்தது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

போருக்கு பின் மைசூர்:

  • கனரா, வயநாடு, கோயமுத்தூர், தாராபுரம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர் இணைத்து கொண்டனர்.
  • இந்து உயர்குடும்பத்தை சேர்ந்த 3 -ம் கிருஷ்ண ராஜா உடையார் மைசூர் அரியணை ஏறினார்.
  • திப்புவின் குடும்பம் வேலூருக்கு அனுப்பப்பட்டது.

Question 3.
பிரிட்டிஷ் ஆட்சியை விரிவுபடுத்த டல்ஹௌசி பிரபு கொண்டு வந்த கொள்கையை பற்றி விவரி.
விடை:
வாரிசு இழப்புக் கொள்கை (1848):

  • டல்ஹௌசி பிரபு இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை உயர்த்துவதில் முதன்மை சிற்பி ஆனார்.
  • ஆங்கிலேய பேரரசை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கை என்ற புதிய கொள்கையை 1848 -ல் கொண்டு வந்தார்.
  • இக்கொள்கையின் படி சுதேச மன்னர்கள் ஆங்கிலேயர் அனுமதியின்றி வாரிசுகளை தத்தெடுக்கும் போது மன்னரின் சொத்துக்கள் தத்தெடுத்த பிள்ளைக்கும் ஆட்சிப்பகுதி ஆங்கில சக்திக்கும் செல்ல நேரிடும் எனப்பட்டது.
  • இந்தியர்கள் இக்கொள்கையை கடுமையாக எதிர்த்தனர்.
  • 1857 – ஆண்டு புரட்சிக்கு இக்கொள்ளை மூலக்காரணமாக அமைந்தது.

Question 4.
வெல்லெஸ்லி பிரபு எவ்வாறு ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தினார்?
விடை:
துணைப்படைத் திட்டம் (1798):
– இந்திய சுதேச அரசுகளை ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் கொண்டுவர வெல்லெஸ்லி பிரபுவால் கொண்டுவரப்பட்ட திட்டம் துணைப் படைத் திட்டம்.

  • ஆங்கில ஆட்சியை விரிவுபடுத்தவும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தவும் இது சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்டது.
  • இது பாதுகாக்கப்பட்ட அரசுக்கள் என்றழைக்கப்பட்டது.
  • அவ்வரசுகள் மீது தலையாய அதிகாரம் செலுத்துபவராக ஆங்கிலேயர் இருந்தனர்.
  • அந்நிய படையெடுப்பிலிருந்து சுதேச அரசுகளை காப்பதும் உள்நாட்டு அமைதியை நிலை நாட்டுவதும் ஆங்கிலேயரின் கடமை. ‘

துணைப்படைத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • இத்திட்டத்தில் இணையும் இந்திய அரசர் தன்னுடைய படையை கலைத்துவிட்டு ஆங்கில படையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • சுதேச அரசின் தலைமையகத்தில் ஆங்கில பிரதிநிதி ஒருவர் இருப்பார்.
  • ஆங்கில படையை பராமரிக்கவும், படைவீரர்களுக்கு ஆண்டு சம்பளம் வழங்கவும் நிரந்தரமாக சில பகுதிகளை ஆங்கில அரசுக்கு கொடுக்க வேண்டும்.
  • ஆங்கிலேயரைத் தவிர மற்ற ஐரோப்பியர்கள் யாரும் அந்நாட்டில் இருக்க கூடாது.
  • அயல்நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள கம்பெனியின் அனுமதி பெற வேண்டும். அந்நிய அரசின் தாக்குதல் மற்றும் உள்நாட்டு கலவரம் நடைபெறும் போது கம்பெனி அந்நாட்டை பாதுகாக்கும்.
  • இவ்வாறு ஆங்கில ஆதிக்கத்தை வெல்லெஸ்லி இந்தியாவில் விரிவுபடுத்தினார்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.
விடை:

  • இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகக் கடும் போட்டியிட்டவர்கள் பிரெஞ்சுக்காரர்களே.
  • ஆயினும் இந்தியாவில் தங்களது மேலாண்மையை நிலை நாட்டுவதில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர்.

இந்தியாவில் ஆங்கிலேயரின் வெற்றிக்கான காரணங்கள் பின்வருமாறு:

  • ஆங்கிலேயரிடம் மிகுந்த பண பலமும், படை வலிமையும் இருந்தது.
  • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் தேவையான எல்லா உதவிகளையும் ஆங்கில அரசு செய்தது.
  • ஆங்கிலேயருக்கு சிறந்த வாணிப வசதிகள் இருந்தன.
  • ஆங்கிலேயரிடம் மிக வலிமையான கப்பற்படை இருந்தது.
  • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் உயர் அதிகாரிகளுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது.
  • நெசவுத் தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றமும் ஒரு முக்கிய காரணமாகும்.
  • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பொருளாதார வளமும், இராஜதந்திரமும் அவர்களின் வெற்றிக்கு காரணமாகும்.
  • ஆனால் இந்திய வணிகர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை.
  • இந்திய மன்னர்களின் ஏற்றத்தாழ்வுகளும், அறியாமையும் ஆங்கிலேயரின் வெற்றிக்குக் காரணமாயிற்று.

X. வாழ்க்கைதிறன் பயிற்சி (மாணவர்களுக்கானது)

Question 1.
ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் புகைப்படங்கள், கதைகள், கவிதைகள் மற்றும் தகவல்களை தொகுத்தல்.

XI. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
ஆங்கிலேயர்களால் இந்திய அரசர்கள் தோற்கடிக்கப்பட்டதற்கான காரணங்களை விவாதம் – செய்க.

8th Social Science Guide வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பக்சார் அமைந்துள்ள நதிக்கரை
அ) கங்கை
ஆ) காவிரி
இ) பிரம்மபுத்திரா
ஈ) ஹிக்ளி
விடை:
அ) கங்கை

Question 2.
அடையாறு போரில் கர்நாடக படைத்தளபதி
அ) யூசுப்கான்
ஆ) மாபூஸ்கான்
இ) அன்வாருதீன்
ஈ) சந்தா சாகிப்
விடை:
ஆ) மாபூஸ்கான்

Question 3.
முகமது அலி தஞ்சம் புகுந்த கோட்டை
அ) வேலூர்
ஆ) வில்லியம் கோட்டை
இ) ஜார்ஜ்
ஈ) திருச்சி
விடை:
ஈ) திருச்சி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 4.
டியூப்ளேவை பாரிசுக்கு திரும்ப அழைக்க வைத்த போர்
அ) அடையாறு
ஆ) மாபூஸ்கான்
இ) ஆற்காடு
ஈ) ஆம்பூர்
விடை:
இ) ஆம்பூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஐரோப்பாவில் வெடித்த __________ போர் இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போருக்கு வழிவகுத்தது.
விடை:
ஏழாண்டுப்

Question 2.
இரண்டாம் ஆங்கில மைசூர் போரில் ஹைதர் அலி தோற்கடிக்கப்பட்ட இடம் ____________
விடை:
போர்ட் நோவா

Question 3.
1863 – ல் ஐ.சி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர் ____________
விடை:
சத்யேந்திரநாத் தாகூர்

Question 4.
போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்பதை ___________ சட்டம் அறிமுகப்படுத்தியது.
விடை:
பட்டயச்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 2

IV. சரியா? தவறா?

Question 1.
வங்காளத்தில் ஜீரி முறையை கொண்டு வந்தவர் வெல்லெஸ்லி பிரபு.
விடை:
தவறு

Question 2.
துணைப்படைத் திட்டம் சுதேச அரசுகளின் வெளியுறவுக் கொள்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 3.
வந்தவாசிப்போர் பாண்டிச்சேரி உடன்படிக்க ைமூலம் முடிவுக்கு வந்தது.
விடை:
சரி

V. கீழ்கண்டவைகளுள் தவறாக பொருத்துயுள்ளது எது?

1. ஹைதர் அலி – மைசூர்
2. டியூப்ளே – ஆங்கில ஆளுநர்
3. வட சர்க்கார் – ஆந்திரா, ஒடிசா
4. இராபர்ட் கிளைவ் – ஆங்கில படைத்தளபதி
விடை:
2. டியூப்ளே – ஆங்கில ஆளுநர்

VI. குறுகிய விடையளி

Question 1.
அய்லா – சப்பேல் உடன்படிக்கை குறித்து எழுதுக?
விடை:

  • ஐரோப்பாவில் நடைபெற்ற் ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் முடிவில் 1748-ல் செய்து கொள்ளப்பட்டது.
  • இதன்படி முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்தது. மதராஸ் ஆங்கிலேயரிடமும், வட அமெரிக்காவில் சில பகுதிகள் பிரான்சிடமும் ஒப்படைக்கப்பட்டது.

Question 2.
மராத்தா கூட்டமைப்பால் சுதந்திரமான மாநிலங்கள் யாவை?
விடை:

  • புனே
  • பரோடா
  • நாக்பூர்
  • இந்தூர்
  • குவாலியர்

Question 3.
வாரிசு இழப்புக் கொள்கையின் மூலம் டல்ஹௌசி இணைத்துக் கொண்ட பகுதிகள் யாவை?
விடை:

  • சதாரா ஜெய்ப்பூர்
  • சம்பல்பூர்
  • பாகத்
  • உதய்பூர்
  • ஜான்சி மற்றும் நாக்பூர்

VII. விரிவான விடையளி

Question 1.
ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் விவரி.
விடை:

  • ஆங்கிலேயர்கள் மிகப்பெரிய கடல் வலிமை பெற்றிருந்தனர்.
  • நெசவுத் தொழில் வளர்ச்சி அடைந்திருந்தது.
  • அறிவியல் ரீதியாக பிரிக்கப்பட்ட தொழிலாளர்கள்.
  • பொருளாதார வளர்ச்சி மற்றும் திறமைமிக்க இராஜதந்திரம்.
  • இந்திய வணிகர்களிடையே நிலவிய பாதுகாப்பின்மை.
  • இந்திய அரசர்களின் சமத்துவமின்மை மற்றும் அறியாமை இவையே ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை

Question 2.
இந்தியாவில் ஆங்கில நிர்வாகத்தில் காணப்பட்ட நீதித்துறை குறித்து விவரி.
விடை:

  • 1772-ல் இரட்டை ஆட்சியை ஒழித்து வரிவசூல் மற்றும் நீதி வழங்கும் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டது.
  • சிவில் நீதிமன்றமான திவானி அதாலத் மற்றும் குற்றவியல் நீதிமன்றமான பௌஜ்தாரி அதாலத் ஏற்படுத்தப்பட்டது.
  • ஒழுங்கு முறை சட்டப்படி கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டு ஒரு முதன்மை நீதிபதியும் மூன்று துணை நீதிபதிகளையும் பிரிட்டிஷார் நியமித்தனர்.
  • இதைப்போன்று 1801-ல் மதராஸிலும் 1823-ல் பம்பாயிலும் உச்ச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
  • சட்டங்களை தொகுக்க சட்ட ஆணையம் அமைக்கப்பட்டு நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • 1861-ம் ஆண்டு கல்கத்தா, பம்பாய், மதராஸ் ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றங்களுக்குப் பதில் 3-ல் உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 3
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 2 வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 4