Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

4th Social Science Guide ஐவகை நில அமைப்பு Text Book Back Questions and Answers

அ. பட்டியலிடு.

Question 1.
உங்கள் மாவட்டத்தில் உள்ள மலைகளையும் அவை அமைந்துள்ள ஊர்களையும் எழுதுக.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு 1

Question 2.
உங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள மரங்களின் பெயர்களை எழுதுக. வ.எண்.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு 2

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பரந்த சமமான நிலப்பரப்பு ____________ எனப்படுகிறது.
விடை:
சமவெளி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

Question 2.
உலகின் மிகப்பழைமையான நான்காவது பெரிய நீர்ப்பாசனவசதி கொண்ட நீர்த்தேக்கம் ____________
விடை:
கல்லணை

Question 3.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள காடுகள் ______________
விடை:
காப்புக் காடுகள்

Question 4.
வயலும் வயல் சார்ந்த இடமும் ____________ ஆகும்.
விடை:
மருதம்

Question 5.
_____________ இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடு ஆகும்.
விடை:
சுந்தரவனக் காடுகள்

Question 6.
மெரினா கடற்கரை ____________ பகுதியில் அமைந்துள்ளது
விடை:
சென்னை , வங்காள விரிகுடா

இ. பொருத்துக.

i)
1. முருகன் – முல்லை
2. திருமால் – பாலை
3. இந்திரன் – குறிஞ்சி
4. வருணன் – மருதம்
5. கொற்றவை – நெய்தல்
விடை:
1. முருகன் – குறிஞ்சி
2. திருமால் – முல்லை
3. இந்திரன் – மருதம்
4. வருணன் – நெய்தல்
5. கொற்றவை – பாலை

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

ii)
1. கடவுள் – கிழங்கு அகழ்தல்
2. மலர் – குறவர், குறத்தியர்
3. மக்கள் – குறிஞ்சி மலர்
4. தொழில் – முருகன்
விடை:
1. கடவுள் – முருகன்
2. மலர் – குறிஞ்சி மலர்
3. மக்கள் – குறவர், குறத்தியர்
4. தொழில் – கிழங்கு அகழ்தல்

ஈ.. குறுகிய விடையளிக்க.

Question 1.
ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் பெயர்களை எழுதுக.
விடை:
1. குறிஞ்சி – குறவர், குறத்தியர்
2. முல்லை – இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
3. மருதம் – உழவர், உழத்தியர்
4. நெய்தல் – பரதவர்
5. பாலை – மறவர், மறத்தியர், எயினர், எயிற்றியர்

Question 2.
முல்லை நிலத்தின் நான்கு கருப்பொருட்களைப் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு 3

Question 3.
செம்புலம் பற்றி நீ அறிவது யாது?
விடை:
அடர்ந்த மரங்களைக் கொண்ட பெரும் நிலப்பகுதிகள் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

காடுகள் நிறைந்த பகுதியை முல்லை நிலம்’ என் அழைப்பர். இப்பகுதி செம்மண்ணைக் கொண்டிருப்பதால் செம்புலம்’ , எனவும் அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு

Question 4.
பாலை நிலம் எவ்வாறு உருவானது?
விடை:
குறைவான மழை அல்லது மழை எதனையும் காணாத நிலப்பகுதி வறண்ட நிலம்’ எனப்படுகிறது.

வறட்சியை நோக்கிச் செல்லும் மணற்பாங்கான நிலம் பாலை நிலம்’ எனப்படும். குறிஞ்சியும் முல்லையும் வறண்டு விடும்போது பாலையாக மாறுகிறது.

Question 5.
பாலை நிலத்தின் கருப்பொருள் யாது?
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 2 ஐவகை நில அமைப்பு 4

Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 ஆற்றங்கரை அரசுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 1 Chapter 1 ஆற்றங்கரை அரசுகள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 1 Chapter 1 ஆற்றங்கரை அரசுகள்

4th Social Science Guide ஆற்றங்கரை அரசுகள் Text Book Back Questions and Answers

அ. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
சேர, சோழ, பாண்டியர்கள் __________ என அழைக்கப்பட்டனர்.
அ) நாயன்மார்கள்
ஆ) மூவேந்தர்கள்
இ) குறுநில மன்னர்கள்
விடை:
ஆ) மூவேந்தர்கள்

Question 2.
சேரர்களில் புகழ் பெற்ற அரசராகக் கருதப்படுபவர் ___________
அ) கரிகாலன்
ஆ) வல்வில் ஓரி
இ) சேரன் செங்குட்டுவன்
விடை:
இ) சேரன் செங்குட்டுவன்

Question 3.
சோழர்களின் துறைமுகம் ____________
அ) காவிரிப்பூம்பட்டினம்
ஆ) சென்னை
இ) தொண்டி
விடை:
அ) காவிரிப்பூம்பட்டினம்

Question 4.
பாண்டியர்களின் கொடியில் இடம்பெற்றுள்ள சின்னம் ___________ ஆகும்.
அ) மயில்
ஆ) மீன்
இ) புலி
விடை:
ஆ) மீன்

Question 5.
முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் ___________ ஆவார்.
அ) பாரி
ஆ) பேகன்
இ) அதியமான்
விடை:
அ) பாரி

ஆ. பொருத்துக.

1. சேரர்கள் – வைகை
2. சோழர்கள் – பாலாறு
3. பாண்டியர்கள் – பொய்கை
4. பல்லவர்கள் – காவிரி
விடை:
1. சேரர்கள் – பொய்கை
2. சோழர்கள் – காவிரி
3. பாண்டியர்கள் – வைகை
4. பல்லவர்கள் – பாலாறு

இ) குறுகிய விடையளி.

Question 1.
சேரர்களில் புகழ் பெற்ற அரசர்கள் யாவர்?
விடை:
இமயவர்மன், நெடுஞ்சேரவாதன், சேரன் செங்குட்டுவன்

Question 2.
‘கடையேழு வள்ளல்கள்’ என்போர் யாவர்?
விடை:
பேகன், பாரி, நெடுமுடிக்காரி, ஆய், அதியமான், நல்லி, வல்வில் ஓரி.

Question 3.
கரிகாலனின் சாதனைகளைக் குறிப்பிடுக.
விடை:
கரிகாலன் இலங்கையின் மீது படையெடுத்துச் சென்று, அங்கு சிறைப் பிடிக்கப்பட்ட போர்க்கைதிகளைக் கொண்டு காவிரியின் மீது கல்லணையைக் கட்டினார். 2000 ஆண்டுகள் ஆகியும், கல்லணை இன்றும் கரிகாலனின் புகழ்பாடும் வண்ணம் மிகக் கம்பீரமாகக் காவிரி ஆற்றின் குறுக்கே காட்சியளிக்கின்றது.

Question 4.
பல்லவர்களின் தலை நகரத்தையும் கடற்கரை நகரத்தையும் குறிப்பிடுக.
விடை:
காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரம் ஆகும். மகாபலிபுரம் பல்லவர்களின் கடற்கரை நகரம் ஆகும்.

ஈ.. யாருடைய கூற்று?

Question 1.
“யானோ அரசன், யானே கள்வன்”.
விடை:
பாண்டியன் நெடுஞ்செழியன்.

4th Social Science Guide ஆற்றங்கரை அரசுகள் InText Questions and Answers

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 127

Question 1.
முற்கால சேரர்களில் புகழ் பெற்ற அரசர்கள் யாவர்?
விடை:
இமயவர்மன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன்.

Question 2.
இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட காப்பியத்தின் பெயர் என்ன?
விடை:
சிலப்பதிகாரம்.

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 128

Question 1.
பண்டைய சோழ அரசர்களுள் புகழ் பெற்ற அரசர் -யார்?
விடை:
கரிகால் பெருவளத்தான்’ என அழைக்கப்பட்ட கரிகாலச் சோழர்.

Question 2.
சோழர்களின் தலைநகரம் மற்றும் துறைமுகங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:
உறையூர் சோழர்களின் தலைநகரமாகும். காவிரிப் பூம்பட்டினம் சோழர்களின் துறைமுகம் ஆகும்.

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 129

Question 1.
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்ன ன் யார்?
விடை:
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகும்.

Question 2.
மதுரைக் காஞ்சி என்னும் நூலை இயற்றியவர் யார்?
விடை:
மதுரைக் காஞ்சி என்னும் நூலை இயற்றியவர் மாங்குடி மருதன்.

Question 3.
பாண்டியர்களின் கொடியில் குறிக்கப்பட்டுள்ள சின்னம் எது?
விடை:
பாண்டியர்களின் கொடியில் மீன் சின்னம் குறிக்கப்பட்டுள்ளது.

செயல்பாடு 1 பக்கம் 130

பண்டைய தமிழ் பேரரசுகள் (மூவேந்தர்கள்)
கோடிட்ட இடத்தை நிரப்புக
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 1 Chapter 1 ஆற்றங்கரை அரசுகள் 1

செயல்பாடு 2 பக்கம் 130

மூவேந்தர்கள் ஆட்சிக்குட்பட்ட தற்போதைய தமிழக மாவட்டங்களைப் பட்டியலிடுக.
விடை:
சேரர்கள் : ஈரோட்டின் மேற்கு மாவட்டம், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி.

சோழர்கள் : திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர்

பாண்டியர்கள் : மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டம்.

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 131

Question 1.
பல்லவர்களின் தலைநகரம் எது?
விடை:
காஞ்சிபுரம்

Question 2.
தமிழ்நாட்டில் தொண்டை மண்டலம்’ எந்த திசையில் அமைந்துள்ளது?
விடை:
தொண்டை மண்டலம் தமிழ்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

விடையளிக்க முயற்சி செய் பக்கம் 132

Question 1.
ஔவையாருக்கு நெல்லிக்கனியை வழங்கியவர் யார்?
விடை:
ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனியை வழங்கினார்.

Question 2.
மயிலுக்குத் தமது போர்வையை தந்தவர் யார்?
விடை:
பேகன் மயிலுக்குத் தமது போர்வையைத் தந்தார்.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

8th Social Science Guide பொது மற்றும் தனியார் துறைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்குக் காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின் தீர்மானம் ……… ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது
அ) 1957
ஆ) 1958
இ) 1966
ஈ) 1956
விடை:
ஈ) 1956

Question 2.
கலப்புப் பொருளாதார நன்மைகளின் கலவை என்பது
அ) முதலாளித்துவம்
ஆ) சமதர்மம்
இ) அ மற்றும் ஆ சரி
ஈ) அ மற்றும் ஆ தவறு
விடை:
இ) அ மற்றும் ஆ சரி

Question 3.
………………… நிறுவனச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்.
அ) தனியார் துறை
ஆ) கூட்டு துறை
இ) பொதுத்துறை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) கூட்டு துறை

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

Question 4.
பொதுத்துறை ……………….. உடையது.
அ) இலாப நோக்கம்
ஆ) சேவை நோக்கம்
இ) ஊக வணிக நோக்கம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) சேவை நோக்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………….. மற்றும் ………….. ஆகியவை சமூகத்தின் அனைத்து பிரிவினரின் பொருளாதார நலனை மேம்படுத்துவதில் அந்தந்த பணிகளை மேற்கொள்வதில் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விடை:
தனியார் துறை, பொதுத் துறை

Question 2.
தனியார் துறை ………….. நோக்கத்தில் செயல்படுகிறது.
விடை:
லாட

Question 3.
…………… என்பது ஒரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் செயல்முறையாகும்.
விடை:
சமூக பொருளாதார மேம்பாடு

Question 4.
தனியார் துறையின் முக்கிய செயல்பாடுகளைத் தோற்றுவிப்பது ………………… மற்றும் ………….. ஆகும்.
விடை:
புதுமை, நவீனமயமாதல்

Question 5.
குடிமக்கள் மத்தியில் ………………….. மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
விடை:
சமூக பொருளாதார மேம்பாடு

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் 1

IV. பொருத்தமற்றதைக் கூறுக

Question 1.
சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அளவிட பின்வருவனவற்றில் எந்த குறியீடு பயன்படுத்தப்படுவதில்லை?
அ) கருப்புப்பணம்
ஆ) ஆயுட்காலம்
இ) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
ஈ) வேலைவாய்ப்பு
விடை:
அ) கருப்புப்பணம்

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

V. பின்வருவனவற்றுள் எது சரியான விடை?

Question 1.
i) அரசுக்கு மட்டுமே சொந்தமானதொழில்கள் அட்டவணை- A என குறிப்பிடப்படுகின்றன.
ii) தனியார் துறையானது மாநில துறையின் முயற்சிகளுக்குத் துணை புரியக் கூடிய தொழில்கள் புதிய அலகுகளைத் தொடங்குவதற்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்வது அட்டவணை – B என குறிப்பிடப்படுகின்றன.
iii) தனியார் துறையில் இருந்த மீதமுள்ள தொழில்கள் அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை .

அ) அனைத்தும் சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i மற்றும் ii சரி
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை:
இ) i மற்றும் ii சரி

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
பொதுத் துறைகள் குறித்து சிறு குறிப்பு எழுதுக.
விடை:
அரசு, பொது மக்களுக்கு பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துறை பொதுத்துறை ஆகும்.

நிறுவனங்கள், முகவர் நிலையங்கள் மற்றும் அமைப்புகள் என அனைத்தும் மத்திய அல்லது மாநில அரசாங்கத்துக்குச் சொந்தமானதாக இருக்கும். அரசாங்கமே அதை நடத்தும். கட்டுப்படுத்தும்.

Question 2.
சமுதாய தேவை என்றால் என்ன?
விடை:

  • அஞ்சல் சேவைகள்
  • இரயில்வே சேவைகள்
  • பாதுகாப்பு
  • கல்வி
  • சுகாதார வசதி
  • வேலை வாய்ப்பு

Question 3.
பொதுத்துறையின் நோக்கங்களை எழுதுக.
விடை:

  • உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் விரிவாக்கம் செய்வதன் மூலம் விரைவான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.
  • வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை உருவாக்குதல்.
  • வருமானம் மற்றும் செல்வங்களை மறுபகிர்வு செய்வதை ஊக்குவித்தல்.
  • வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
  • சமச்சீர் வட்டார வளர்ச்சியை ஊக்குவித்தல்.
  • சிறிய அளவிலான மற்றும் துணைத் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
  • ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் இறக்குமதிக்கு மாற்றீடை துரிதப்படுத்துதல்.

Question 4.
பொதுத் துறைகளின் மூன்று உறுப்புகள் யாவை?
விடை:

  • அரசுத் துறையால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள்
  • கூட்டுத்துறை நிறுவனங்கள்
  • பொதுக்கழகம்

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

Question 5.
சமூக-பொருளாதார மேம்பாட்டை அளவிடும் சில குறியீடுகளின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • மொத்த உள்நாட்டு உற்பத்தி
  • ஆயுட்காலம்
  • கல்வியறிவு
  • வேலைவாய்ப்பின் அளவு

Question 6.
தனியார் துறை குறித்துச் சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  • தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்படும் தேசிய பொருளாதாரத்தின் ஒரு பிரிவு தனியார் துறை என்று அழைக்கப்படுகிறது.
  • தனியார் துறை என்பது நாட்டின் பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாகும்.
  • தனியார் துறையின் பங்களிப்பு பொதுத் துறையின் பங்களிப்பை விட அதிகமாக உள்ளது.

Question 7.
தனியார் துறை நிறுவனங்களில் ஏதேனும் மூன்றினை கூறுக.
விடை:

  • இன்போசிஸ் நிறுவனம்
  • ஆதித்யா பிர்லா நிறுவனம்
  • டாட்டா குழும நிறுவனங்கள்

VII. விரிவான விடை தருக.

Question 1.
பொதுத்துறையின் உறுப்புகள் பற்றி விளக்குக.
விடை:
அரசுத்துறைகளால் நிர்வாகம் செய்யப்படும் நிறுவனங்கள்:

  • ஒரு அரசாங்க துறையின் நிர்வாகம் என்பது பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் பொதுவானதாகும்.
  • எடுத்துக்காட்டு: தபால் மற்றும் தந்தி, இரயில்வே, துறைமுக அறக்கட்டளை, இந்தியாவிலுள்ள நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்றவை.

கூட்டுத் துறை நிறுவனங்கள்:

  • இது ஒரு நிறுவன சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் அரசாங்கம் ஒரு பிரதான பங்குதாரராக இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
  • எடுத்துக்காட்டு: இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் தனியார் நிறுவனம், இந்தியன் ஆயில் ஸ்கை டேங்கிங் நிறுவனம், ரத்னகிரி கேஸ் அண்ட் பவர் தனியார் நிறுவனம், இந்தியன் செயற்கை ரப்பர் நிறுவனம்.

பொதுக் கழகம்:

  • பொதுக் கழக அமைப்பானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தினால் பொதுக்கழகத்தினை நிறுவுவதே ஆகும்.
  • எடுத்துக்காட்டு: ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC), ஏர் இந்தியா, இந்திய ரிசர்வ் வங்கி, மின்சார வாரியம்.

Question 2.
பொதுத்துறையின் வரலாற்றை சுருக்கமாக விளக்குக.
விடை:
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அது பலவீனமான தொழில்துறை தளத்தைக் கொண்ட வேளாண்மை நாடாகும்.

தொழில் வளர்ச்சி இல்லை.

தேசிய ஒருமித்த கருத்து பொருளாதாரத்தின் விரைவான தொழில்மயமாதலுக்கு ஆதரவாக இருந்தது.

1948இல் முதல் தொழில் துறைக் கொள்கை கொண்டுவரப்பட்டது.

1950இல் திட்டக்குழு அமைக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு தொழில்துறைச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் நோக்கம் தொழிற்துறை வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதே ஆகும்.

பிரதமர் நேரு கலப்புப் பொருளாதாரம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையைக் கொண்டுவந்தார்.

அவர் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு, அடிப்படை கனரக தொழிற்சாலைகளை நிறுவுவது என நம்பினார்.

அதன்படி இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நேருவின் பார்வையை முன்னெடுத்துச் சென்றார்.

இந்திய புள்ளிவிவர நிபுணர் பேரா. பி.சி. மஹலானோபிஸ் அதன் உருவாக்கத்திற்குக் கருவியாக இருந்தார்.

1991ஆம் ஆண்டின் தொழில்துறைக் கொள்கை தனியார் துறைக்கு அதிக சுதந்திரம் அளித்தது.

இந்தியாவுக்கு வெளியே உள்ள வணிக நிறுவனங்களிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனால் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தில் நுழைந்தன.

இவ்வாறு, இந்தியப் பொருளாதாரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

Question 3.
சமூக – பொருளாதார மேம்பாட்டினை அளவிடும் குறியீடுகள் ஏதேனும் ஐந்தினை பற்றி விளக்குக.
விடை:
மொத்த உள்நாட்டு உற்பத்தி:

  • மொத்த உள்நாட்டு உற்பத்தி சமூக
  • பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் துணைபுரிகிறது.
  • பொதுத்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.
  • அது அரசின் நிதியையும் பொதுச் செலவுகளையும் அதிகரிக்கிறது.

ஆயுட்காலம்:
பல்வேறு திட்டங்கள் மூலம் அரசாங்கம் அதிக அளவு சுகாதார நடவடிக்கைகளை வழங்குகிறது. இதனால் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.

கல்வியறிவு:

  • சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி திறன் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) இந்திய அரசின் திட்டமாகும். இது குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.
  • கல்வியின் தரத்தின் அளவை அதிகப்படுத்த இடைநிலைக் கல்வித்திட்டம் (RMSA), திறன் வகுப்பு (Smart Class) மற்றும் மின்ன ணு-கற்றல் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்பு:

  • அதிக எண்ணிக்கையில் மக்கள் வேலை தேடி நகர்புறங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இதனால் நகரங்களில் மக்கள் தொகை அதிகரிக்கிறது.
  • இதனால் அரசு “திறன் நகரம்” (Smart City) திட்டத்தைத் தொடங்கியது.
  • வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக மின்சார வரிச்சலுகை போன்ற பல சலுகைகள் மூ லமாக தனியார் துறைகளை தொழில்களைத் தொடங்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் வழங்குதல்:

  • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீடு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்படுகிறது. இதனால் நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நீக்கப்படுகிறது.
  • இது போன்ற வசதிகளை வழங்குவதால், மக்களின் வாழ்க்கை சுழற்சி அதிகரிக்கிறது.

Question 4.
பொதுத் துறையின் முக்கியத்துவம் யாது?
விடை:
பொதுத்துறை மற்றும் மூலதன உருவாக்கம்:
திட்டமிடல் காலத்தில் சேமித்து, முதலீடு செய்வதில் பொதுத்துறையின் பங்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது.

பொருளாதார மேம்பாடு:
பொருளாதார வளர்ச்சி தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்தது. சிறு தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்க இரும்பு மற்றும் எஃகு, கப்பல் போக்குவரத்து, சுரங்கம் போன்ற கனரக மற்றும் அடிப்படை தொழில்கள் தேவைப்படுகின்றன.

சமச்சீரான வட்டார வளர்ச்சி:
பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் அமைத்துள்ளன. இந்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமலிருந்தது. இந்த வசதிகளை வளர்ச்சியடையச் செய்வதன் மூலம் இப்பகுதிகளிலுள்ள மக்களின் சமூக-பொருளாதார வாழ்க்கையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

வேலைவாய்ப்பு உருவாக்கம்:
பொதுத்துறை நிறுவனங்கள் இலட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளது. இதனால் மக்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் அந்நிய செலாவணி வருவாய்:
சில பொது நிறுவனங்கள் ஏற்றுமதியை மேம்படுத்த அதிக பங்களிப்பு செய்துள்ளன. மாநில வர்த்தக நிறுவனம் (STC), தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக நிறுவனம் (MMTC) போன்றவை ஏற்றுமதி மேம்பாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

நலிவடைந்த தொழில்களுக்கு பாதுகாப்பு:
நலிவடைந்த பிரிவு மூடப்படுவதைத் தடுக்கவும், பலர் வேலையில்லாமல் இருப்பதைத் தடுப்பதற்காகவும் நலிவடைந்த தொழிற்சாலைகளின் பொறுப்பை பொதுத்துறை ஏற்றுக்கொண்டு அத்தொழிற்சாலைகள் மூடப்படுவதைத் தடுக்கிறது.

இறக்குமதி மாற்று:
சில பொதுத்துறை நிறுவனங்கள் முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்காகவும், அந்நியச் செலாவணியை சேமிப்பதற்காகவும் தொடங்கப்பட்டன.

Question 5.
பொதுத் துறைக்கும் தனியார் துறைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் 2
Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் 3

Question 6.
தனியார் துறையின் பணிகளைப் பற்றி எழுதுக.
விடை:
தனியார் துறையின் முக்கிய செயல்பாடு புதுமை மற்றும் நவீனமயமாதலை உருவாக்குவதாகும். இலாப நோக்கத்திற்காக உற்பத்தியில் புதிய நுட்பங்களைக் கண்டுபிடிப்பதற்கும், உற்பத்தி நடவடிக்கைகளை விஞ்ஞான முறையில் நிர்வகிப்பதற்கும் அவர்களைத் தூண்டுகிறது.

உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.

இருக்கின்ற வணிகங்களை ஊக்குவித்தல் மற்றும் விரிவுபடுத்துதல்.

மனித மூலதன வளர்ச்சியை ஊக்குவித்தல், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு குறிப்பாக தொழிலாளர் சந்தையில் பங்கேற்க உதவுதல். சமூக வணிக மற்றும் கூட்டுறவு, உள்ளூர் பரிமாற்ற அமைப்புகள் மற்றும் முறைசாரா கடன் போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் சமூக வளர்ச்சியை ஊக்குவித்தல்.

சிறு, நுண் மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMME) வழங்குவதன் மூலம் அளிப்பு மற்றும் தேவை சம்மந்தப்பட்ட நடவடிக்கைகளைக் கோருதல் மற்றும் நகரத்தில் முதலீட்டை ஈர்த்தல்.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

VIII. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
வாழ்நாள் ஆயுட்காலம் – நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கான திறன்.
Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் 4
வகைப்படுத்தியதற்கான காரணங்களை விளக்குக.

IX. வாழ்க்கைத் திறன்கள் (மாணவர்களுக்கானது)

Question 1.
ஆசிரியரும் மாணவர்களும் சமூக – பொருளாதார மேம்பாடு மற்றும் அந்த வட்டாரத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.

8th Social Science Guide பொது மற்றும் தனியார் துறைகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு
அ) 1946
ஆ) 1947
இ) 1948
ஈ) 1950
விடை:
ஆ) 1947

Question 2.
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
அ) 1947
ஆ) 1948
இ) 1950
ஈ) 1952
விடை:
இ) 1950

Question 3.
கலப்புப் பொருளாதாரம் என்ற பொருளாதார நடவடிக்கை தோன்றக் காரணமானவர்
அ) காந்தி
ஆ) இந்திரா காந்தி
இ) நேரு
ஈ) V. கிருஷ்ணமூர்த்தி
விடை:
இ) நேரு

Question 4.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலம்.
அ) 1954-58
ஆ) 1955-59
இ) 1956-60
ஈ) 1957-61
விடை:
இ) 1956-60

Question 5.
அதிக அளவில் பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம்
அ) இந்திய இரயில்வே
ஆ) தபால்-தந்தி
இ) துறைமுகங்கள்
ஈ) ஏர்லைன்ஸ்
விடை:
அ) இந்திய இரயில்வே

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
பொதுத்துறை ………….. உரிமையின் கீழ் உள்ளது.
விடை:
அரசாங்கத்தின்

Question 2.
முதல் தொழில்துறைக் கொள்கை கொண்டுவரப்பட்ட ஆண்டு ………………
விடை:
1948

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

Question 3.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் …………………..
விடை:
டாக்டர். வி.கிருஷ்ணமூர்த்தி

Question 4.
இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய அரசின் ……………… தீர்மானத்தின் வாயிலாக அதன் தோற்றத்தைக் கண்டன.
விடை:
1956 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை

Question 5.
நகரங்களின் அனைத்து வசதிகளையும் அளிப்பதற்காக ………………. திட்டம் தொடங்கப்பட்டது:
விடை:
திறன்நகரம்

Question 6.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு ……. ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு …………….. ஆண்டுகள் ஆகும்.
விடை:
65.80, 68.33

Question 7.
இந்தியாவில் 2017 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை ………. மகாரத்னா தொழில்கள் உள்ளன.
விடை:
8

Question 8.
நவரத்னா என்ற சொல் ……….. விலைமதிப்பற்ற ரத்தினங்களைக் குறிக்கிறது.
விடை:
ஒன்பது

Question 9.
முகலாயப் பேரரசர் …………… தனது அவையிலுள்ள ஒன்பது அறிஞர்களைக் குறிக்க நவரத்னா என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
விடை:
அக்பர்

Question 10.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை ………….. ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
1991

III. பின்வருவனவற்றை பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் 5

IV. பொருத்தமற்றதைக் கூறு

Question 1.
பொதுத்துறை அல்லாத நிறுவனம் எது?
அ) இரயில்வே
ஆ) தபால்-தந்தி
இ) ஐசிஐசிஐ வங்கி நிறுவனம்
ஈ) இந்திய இரும்பு ஆலை ஆணையம்
விடை:
இ) ஐசிஐசிஐ வங்கி நிறுவனம்

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

V. பின்வருவனவற்றுள் எது சரியான விடை?

Question 1.
i) பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமானவை.
ii) 65 ஆண்டுகள் பழமையான திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.
iii) இந்திய ரிசர்வ் வங்கியானது பொதுக்கழக அமைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

அ) அனைத்தும் சரி
ஆ) i மற்றும் ii சரி
இ) ii மற்றும் iii சரி
ஈ) iii மட்டும் சரி
விடை:
இ) ii மற்றும் iii சரி

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது அதன் பொருளாதார நிலை எவ்வாறு இருந்தது?
விடை:

  • இந்தியா சுதந்திரம் அடைந்த போது அடிப்படையில் ஒரு வேளாண்மை பொருளாதார நாடாக இருந்தது.
  • நாட்டில் அதிக அளவில் வறுமை, கல்வியறிவின்மை மற்றும் வேலையின்மை நிலவியது.
  • இந்தியா மிகவும் மோசமான பொருளாதார மற்றும் சமுதாய பிரச்சனைகளை எதிர் கொண்டிருந்தது.

Question 2.
மகாரத்னா தொழில்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:

  • இந்திய இரும்பு ஆலை ஆணையம் (SAIL)
  • பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)
  • இந்திய எண்ணெய் நிறுவனம் (IOCL)
  • இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL)
  • கெயில் (இந்தியா) நிறுவனம் (GAIL)
  • பாரத பெட்ரோலிய நிறுவனம் (BPCL)

Question 3.
சில முக்கிய தனியார் நிறுவனங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • இன்போசிஸ் நிறுவனம்
  • ஆதித்யா பிர்லா நிறுவனம்
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் நிறுவனங்கள்
  • டாட்டா குழும நிறுவனங்கள்
  • விப்ரோ நிறுவனம்
  • இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்
  • ஐசிஐசிஐ வங்கி நிறுவனம்

Question 4.
மகாரத்னா தொழில்கள் ஏதேனும் மூன்றினைக் கூறுக.
விடை:

  • இந்திய இரும்பு ஆலை ஆணையம்
  • இந்திய எண்ணெய் நிறுவனம்
  • இந்திய நிலக்கரி நிறுவனம்

VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

Question 1.
பொதுத்துறை நிறுவனங்களை வகைப்படுத்தி அவற்றை விவரிக்கவும்.
விடை:
பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்பது வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு.
1. பொதுத்துறை நிறுவனங்கள், பொருளாதார மேம்பாட்டுக்கு அத்தியாவசிய உள்கட்டமைப்பை வழங்க வேண்டும். இவைகள் முதன்மை பொதுப் பயன்பாடுகள் என அழைக்கப்படுகின்றன. அவை விமான நிறுவனங்கள், கப்பல் போக்குவரத்து, இரயில்வே, மின் உற்பத்தி, தொலைத்தொடர்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள்

2. பொதுத்துறை நிறுவனங்கள் “கட்டளைப் பொருளாதாரத்தின் அதிகாரங்களை” தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பாதுகாப்பு, வங்கிகள், நிலக்கரி சுரங்கங்கள், எண்ணெய், எஃகு போன்றவைகளாகும்.

3. பொதுத்துறை ஒரு தொழில்முனைவோர் பங்கினை வகிக்க வேண்டும். இதனை மூலதன தீவிர தொழில்கள் என்றும் அழைக்கலாம். எ.கா: இரும்புத்தாது, பெட்ரோ – வேதிபொருள், உரம், சுரங்கம், கப்பல் – கட்டுமானம், கனரக பொறியியல் போன்றவை.

4. அரசின் முற்றுரிமையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் இதில் அடங்கும்: தொலைத்தொடர்பு உபகரணங்கள், பாதுகாப்பு உற்பத்தி, இரயில்வே, ரோலிங் ஸ்டாக் போன்றவை.

5. உயர் தொழில்நுட்ப தொழில்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள். எ.கா: அணுசக்தி.

6. நுகர்வோர் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள். எடுத்துக்காட்டு: மருந்து, காகிதம், உணவகம் போன்றவை.

7. நலிவடைந்த தனியார் நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள். எ.கா: ஜவுளி, பொறியியல் போன்றவை.

8. வர்த்தகக் கழகமாக அமைக்கப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள்: எ.கா: இந்திய உணவுக்கழகம் (FCI), சி.சி.ஐ (CCI) முதலியன.

9. ஆலோசனை மற்றும் பொறியியல் சேவையை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்கள். எ.கா: மெக்கான் நிறுவனம் (MECON).

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 2 பொது மற்றும் தனியார் துறைகள் 6

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

8th Social Science Guide பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Question 2.
இந்திய ரூபாய் குறியீட்டினை (₹) வடிவமைத்தவர்
அ) உதயகுமார்
ஆ) அமாத்தியா சென்
இ) அபிஜித் பானர்ஜி
ஈ) இவற்றில் எவரும் இல்லை
விடை:
அ) உதயகுமார்

Question 3.
பணத்தின் மதிப்பு
அ) அக பணமதிப்பு
ஆ) புற பண மதிப்பு
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை
விடை:
இ) அ மற்றம் ஆ

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 4.
வங்கி பணம் என்பது எது?
அ) காசோலை
ஆ) வரைவு
இ) கடன் மற்றும் பற்று அட்டைகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Question 5.
தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். முதலீட்டுக் கருவி போன்றவைகள்
அ) பங்கு வர்த்தகம்
ஆ) பத்திரங்கள்
இ) பரஸ்பர நிதி
ஈ) வரி செலுத்துவது
விடை:
ஈ) வரிசெலுத்துவது

Question 6.
பின்வருவனவற்றில் கருப்புப் பணம் குவிப்பதற்கு காரணமானவர்கள்
அ) வரி ஏய்ப்ப வர்கள்
ஆ) பதுக்குபவர்கள்
இ) கடத்தல்காரர்கள்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
நிகழ்நிலை வங்கியை __________ என்று அழைக்கலாம்.
விடை:
இணைய வங்கி

Question 2.
பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே __________
விடை:
பணம்

Question 3.
மின்னணு வங்கியை _____________ என்றும் அழைக்கலாம்
விடை:
தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT)

Question 4.
கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் _____________ பணமாகும்
விடை:
நெகிழிப்

Question 5.
இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ___________
விடை:
1935

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் 1

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
‘பணம்’ என்ற வார்த்தை எதன் மூலம் பெறப்பட்டது?
விடை:
பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான ‘மொனேட்டா ஜீனோ’ என்பதில் இருந்து பெறப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 2.
இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடுவது யார்?
விடை:
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடுகிறது.

V. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பண்டமாற்று முறையில் பல குறைபாடுகளாவன.
i) இருமுகத்தேவை பொருத்தமின்மை
ii) செல்வத்தை சேமிக்க சிரமமில்லை
iii) பொதுவான மதிப்பின் அளவுகோல்
iv) பொருட்களின் பகுப்படாமை

அ) i மற்றும் ii சரி
ஆ) 1 மற்றும் iv சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
இ) i, iii மற்றும் iv சரி

VI. தவறான ஒன்றினை கண்டுபிடிக்க

Question 1.
பரிமாற்றத்திற்கு பணத்தின் சமீபத்திய வடிவங்கள்.
அ) பற்று அட்டை
ஆ) பண்டமாற்று முறை
இ) கடன் அட்டை
ஈ) நிகழ் நிலை வங்கி
விடை:
ஆ) பண்ட மாற்று முறை

Question 2.
பொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்.
அ) இரட்டை பொருளாதாரம்
ஆ) சமத்துவம் வலுவிழத்தல்
இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை
ஈ) ஆடம்பர நுகர்வுச் செலவு
விடை:
இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை

VII. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி

Question 1.
பண்டமாற்று முறை என்றால் என்ன?
விடை:

  • பண்டைய காலத்தில் பணம் பயன்படுத்தப்படாமல் பண்டத்திற்கு பண்டம் பரிமாற்றம் நடைபெற்றதை பண்டமாற்று முறை என்பர்.
  • பணம் கண்டுபிடிப்பதற்கு முன்பாக இம்முறை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டது.

Question 2.
அண்மை கால பணத்தின் வடிவங்கள் யாவை?
விடை:

  • பண்டப்பணம்
  • உலோகப் பணம்
  • காகித பணம்
  • கடன் பணம்
  • நிகர் பணம் போன்றவைகள்
  • அண்மைகால பணத்தின் வடிவங்கள் ஆகும்.

Question 3.
மின்-வங்கி மற்றும் மின்-பணம் சிறு குறிப்பு வரைக.
விடை:
மின்-வங்கி:
காசோலை அல்லது ரொக்கத்தை விட ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்கு மின்னனு வழிமுறை பயன்படுகிறது. இதனை தேசிய மின்னனு நிதி பரிமாற்றம் என்றும் அழைக்கலாம்.

மின்-பணம்:
வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னனு முறையின் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்க்கொள்ளப்படுவதே மின்-பணம் ஆகும்.

Question 4.
பணத்தின் மதிப்பு என்றால் என்ன?
விடை:

  • பணத்தால் ஒரு நாட்டிலுள்ள பண்டம் மற்றும் பணிகளை வாங்கும் சக்தியே பணத்தின் மதிப்பு ஆகும்.
  • பண்டம் மற்றும் பணிகளின் விலையானது அதன் அளவைச் சார்ந்திருக்கும்.
  • பணத்தின் மதிப்பும் விலையின் அளவும் எதிர்மறை தொடர்புடையது.

Question 5.
சேமிப்பு மற்றும் முதலீடு என்றால் என்ன?
விடை:
சேமிப்பு:

  • வருவாயில் நடப்பு நுகர்வுக்கு பயன்படாத ஒரு பகுதி சேமிப்பு ஆகும்.
  • தற்போதைய நுகர்வுக்காக பயன்படுத்தப்படாமல் எதிர்கால பயன்பாட்டிற்கு ஒதுக்கி வைக்கப்படும் பணம் சேமிப்பாகும்.
  • நம்முடைய பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே சேமிப்பு.

முதலீடு:

  • பல்வேறு துறைகளில் முதலீடு செய்யும் முறைக்கு முதலீடுகள் என்பர்.
  • பணம், நேரம், முயற்சிகள் அல்லது பிற மூலங்களில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்தி முதலீடு செய்து அதற்கு மாற்றாக எதிர்காலத்தில் வருமானமாக திரும்பப்பெறுவது ஆகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 6.
கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
விடை:

  • கருப்பு பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்தவொரு பணத்தையும் குறிக்கும்.
  • நாட்டின் ஒழுங்கு கட்டுப்படுத்துகையில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம் அனைத்தும் கருப்பு பணமாகும்.

Question 7.
பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் யாவை?
விடை:

  1. இரட்டைப் பொருளாதாரம்
  2. உண்மை அளவை குறைத்து மதிப்பீடு செய்வது
  3. வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு
  4. சமத்துவம் வலுவிழத்தல்
  5. பணக்காரர் மற்றும் ஏழைகளிடையே இடைவெளி அதிகரித்தல்
  6. ஆடம்பர நுகர்வு செலவு

VIII. விரிவான விடையளி

Question 1.
பண்டமாற்று முறையிலுள்ள தீமைகள் யாவை?
விடை:
பண்டமாற்று முறை:

  • பண்டத்திற்கு பண்டம் பரிமாற்றம் நடைபெற்றதை பண்டமாற்று முறை எனப்படும்
  • பணம் கண்டறிவதற்கு முன்பு இம்முறையே பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

தீமைகள்:

  • இருமுகத் தேவை பொருத்தமின்மை
  • பொதுவான மதிப்பின் அளவுகோல்
  • பொருட்களின் பகுப்படாமை
  • செல்வத்தை சேமிப்பதற்கான சிரமங்கள்.

Question 2.
பணத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி எழுதுக.
விடை:

  • பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான ‘மொனேட்டா ஜீனோ’ விலிருந்து பெறப்பட்டது.
  • ரோமின் பெண் கடவுள் மற்றும் ரோம் பேரரசின் குடியரசு பணம் ஆகும்.
  • இந்தியாவின் ‘ரூபாய்’ என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘ரூபியா’ என்பது வெள்ளி நாணயம் ஆகும்.
  • இன்று நாம் காகித பணமாகவும், நாணயங்களாகவும் பயன்படுத்துகிறோம். இந்த பரிணாம வளர்ச்சியானது ஒரே இரவில் நடைபெறவில்லை .
  • பரிணாம வளர்ச்சி நிலையை அடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளானது.
  • பணத்தின் பரிணாமம் பல நிலைகளைக் கடந்துள்ளது. அதன் ஆரம்ப மற்றும் பழங்கால நிலைதான் பண்டமாற்று முறை ஆகும்.
  • பண்டப் பணம், உலோக பணம், காகித பணம், கடன் பணம், நிகர் பணம் போன்றவை பணத்தின் பல நிலை வடிவங்களாகும்.
  • மேலும் நெகிழிப் பணம், மின்னனு பணம், நிகழ்நிலை வங்கி, மின் வங்கி முதலியவை பணத்தின் சமீபத்திய வடிவங்களாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 3.
பணத்தின் பணிகள் யாவை?
விடை:
அவற்றை விளக்குக. பணத்தின் பணிகள்:

  1. முதன்மை அல்லது முக்கிய பணிகள்
  2. இரண்டாம் நிலை பணிகள் மற்றும்
  3. வரையறுக்கப்பட்ட பணிகள்

I. முதன்மை அல்லது முக்கிய பணிகள்:
பணத்தின் முக்கிய பணிகள் பொருளாதாரத்தில் செயல்பட்டு அவை பிரதான பணிகளின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது

  1. பரிமாற்ற கருவி அல்லது பண செலுத்துகை:
    பணம், பண்ட மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது.
  2.  மதிப்பின் அளவுகோல் :
    அனைத்து மதிப்பையும் பணத்தால் அளவிடலாம். பல வகையான பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு இடையில் பரிமாற்ற விகிதத்தை தீர்மானிப்பது எளிது.

II. இரண்டாம் நிலை பணிகள்:

  1. எதிர்கால செலுத்துகைக்கான நிலை மதிப்பு:
    எதிர்கால செலுத்துகைக்கு பணம் ஒரு கருவியாக பயன்படுகிறது. இன்று ஒரு கடனாளி கடன் வாங்குகிறார். குறிப்பிட்ட தொகையை கூறியபடி குறிப்பிட்ட காலத்தில் செலுத்துவது கடமையாகும்.
  2. மதிப்பின் நிலை கலன்:
    சில பண்டங்கள் அழிந்து போவதால் பண்டமாற்று முறையில் சேமிப்பை ஊக்குவிப்பதில்லை. பணத்தின் அறிமுகத்திற்கு பிறகு எதிர்காலத்திற்காகப் பணத்தை சேமித்தார்கள். அது அழிய கூடியதில்லை .
  3. மாற்று மதிப்பு அல்லது மாற்று வாங்கும் சக்தி:
    பணத்தால் உலகின் எப்பகுதிக்கும் பண்டங்களை பரிமாற்ற முடியும். எனவே வாங்கும் சக்தியை
    ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு அவசியம் என உணரப்பட்டது.

III. வரையறுக்கப்பட்ட பணிகள்:

  1. கடன் அடிப்படையில் இயக்கப்படுகிறது.
  2. மூலதனத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பு.
  3. நாட்டு வருவாயின் அளவீடு மற்றும் விநியோகம்.

Question 4.
வங்கி வைப்புகளின் வகைகளை விவரி.
விடை:
வங்கி வைப்புகளின் வகைகள்:
1. மாணவர் சேமிப்பு கணக்கு
2. சேமிப்பு வைப்பு
3. நடப்பு கணக்கு வைப்பு
4. நிரந்தர வைப்பு

  1. 1. மாணவர் சேமிப்பு கணக்கு:
    • சில வங்கிகள் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான சேமிப்பு கணக்குகள் துவக்கியுள்ளனர்.
    • இந்த சேமிப்பு கணக்கு நெகிழ்வான விதிமுறைகளுடன் பூஜ்ஜிய இருப்புத் தொகையில் கொண்டது இதன் முக்கிய அம்சமாகும்.
  2. சேமிப்பு வைப்பு:
    • வாடிக்கையாளர் தன்னுடைய நடப்பு வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க ஆரம்பிக்கும் கணக்கிற்கு சேமிப்பு கணக்கு என்பர்.
    • நுகர்வோர் பணம் தேவைப்படும் போது அவர்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். அந்த வைப்பு தொகைக்கு வங்கி பெயரளவு வட்டி அளிக்கிறது.
  3. நடப்பு கணக்கு வைப்பு:
    நடப்பு கணக்குகள் பொதுவாக வர்த்தக நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது அதிகாரிகளால் ஆரம்பிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள நடப்பு கணக்கு உதவுகின்றது.
  4. நிரந்தர வைப்பு:
    நிரந்தர வைப்பு கணக்கு என்பது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு பாதுகாப்பும், நிலையான வருவாயும் விரும்புவார்கள். நிரந்தர வைப்பை, காலவைப்பு எனவும் அழைக்கலாம்.

Question 5.
சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் 2

Question 6.
பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் யாவை?
விடை:
கருப்பு பணம் :
கருப்பு பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்தவொரு பணத்தையும் குறிக்கும். நாட்டின் ஒழுங்கு கட்டுப்படுத்துகையில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம் அனைத்தும் கருப்பு பணமாகும்.
விளைவுகள் :

  1. இரட்டைப் பொருளாதாரம்
  2. உண்மை அளவை குறைத்து மதிப்பீடு செய்வது
  3. வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு
  4. சமத்துவம் வலுவிழத்தல்
  5. பணக்காரர் மற்றும் ஏழைகளிடையே இடைவெளி அதிகரித்தல்
  6. ஆடம்பர நுகர்வு செலவு
  7. உற்பத்தி முறையில் விலகல்
  8. பற்றாக்குறை பணத்தை விநியோகித்தல்
  9. சமுதாயத்தில் பொது ஒழுக்க நிலைகளின் வீழ்ச்சிகள்
  10. உற்பத்தி மீதான விளைவுகள்

IX. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்கள் இந்தியா மற்றும் மற்ற நாடுகளின் புதிய மற்றும் பழைய நாணயங்களின் மாதிரிகளைக் கொண்ட அட்டவணையை தயாரிக்க கூறுதல்.

Question 2.
உங்கள் அருகாமையிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று இந்தியாவில் நடைமுறையிலுள்ள சேமிப்பு திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள், மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேமிப்பு திட்டத்தைப் பற்றி கலந்துரையாடல்,

X. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

Question 1.
பணத்தின் மதிப்பை அறிந்து கொள்ள மாணவர்கள் தங்கள் வகுப்பறையை கடை அல்லது அங்காடி போன்று அமைத்தல்.

Question 2.
மாணவர்களை கடையிலிருந்து சில பொருட்களை வாங்குமாறு கூறுதல் சந்தை செயல்களை மேற்கொள்ளுதல்.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 3.
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பணத்தின் மதிப்பைப்பற்றிக் கலந்துரையாடல்.

8th Social Science Guide பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ரூபியா என்பது ____________ நாணயம் என்று பொருளாகும்.
அ) தங்க ம்
ஆ) வெள்ளி
இ) செம்பு
ஈ) வெண்கலம்
விடை:
ஆ) வெள்ளி

Question 2.
பொற்கொல்லர்களின் ரசீது _____________ ஆக மாறியது
அ) கடன் பணம்
ஆ) நெகிழிப் பணம்
இ) காகித பணம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) காகித பணம்

Question 3.
பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பெரும்பகுதியில் _____________ பணம் முக்கிய பங்கு வகித்தது.
அ) உலோக பணம்
ஆ) பண்ட பணம்
இ) காகித பணம்
ஈ) நிகர் பணம்
விடை:
அ) உலோக பணம்

Question 4.
‘எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம்’ என வரையறுத்து கூறியவர்
அ) ஸ்டோவ்ஸ்கி
ஆ) சர்ஜான் ஹிக்ஸ்
இ) வாக்கர்
ஈ) இராபர்ட்ச ன்
விடை:
இ) வாக்கர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
உண்டியல், பத்திரங்கள் போன்றவற்றின் பயன்பாடுகள் _____________ இறுதி நிலையாகும்.
விடை:
பண பரிணாம வளர்ச்சியின்

Question 2.
காகிதப்பணத்தை கட்டுப்படுத்துவதும், ஒழுங்குப்படுத்துவதும் அந்நாட்டின் ___________ ஆகும்.
விடை:
மைய வங்கி

Question 3.
நிரந்தர வைப்பை _____________ என அழைப்பர்.
விடை:
கால வைப்பு

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 4.
____________ என்பது விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிக்கும்.
விடை:
பணவாட்டம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் 3

IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
வங்கியில் பல வகையான கணக்குகளின் மூலம் பணத்தை சேமிக்கலாம்
i) நெகிழ்வான விதிமுறைகளுடன் பூஜ்ஜிய இருப்புத் தொகையை கொண்டது மாணவர் சேமிப்பு கணக்கு.
ii) நடப்பு கணக்கு வைப்பை கால வைப்பு என்பர்.
iii) குறிப்பிட்ட காலத்திற்கு நிரந்தரமாக வங்கியில் பணம் இருப்பதே நிரந்தர வைப்பு என்பர்.
iv) தேவைக்கேற்ப வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள நடப்பு கணக்கு உதவுகின்றது.

அ) i மற்றும் ii சரி
ஆ) i, ii மற்றும் iv சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) ii மற்றும் iv சரி
விடை:
இ) i, iii மற்றும் iv சரி

V. தவறான ஒன்றினை கண்டுபிடிக்க

Question 1.
ஆங்கில நாணயங்களின் பெயர்கள்
அ) செம்பு நாணயமான கப்ரூன்
ஆ) வெண்கல நாணயமான டின்னி
இ) தாமிர நாணயமான கரோலினா
ஈ) வெள்ளி நாணயமான ஏஞ்ஜேலினா
விடை:
இ) தாமிர நாணயமான கரோலினா

Question 2.
நம் வருமானத்தில் நுகர்வுக்கு பயன்படுத்தப்படாத ஒரு பகுதியான சேமிப்பு பல நன்மைகளை கொண்டுள்ளது
அ) அவசர தேவை நிறைவேற்றம்
ஆ) நிதி ரீதியாக விரைவில் தனித்து இருத்தல்
இ) அதிக இடர்பாடுகள்
ஈ) பணி ஒய்வில் வசதியாக இருத்தல்
விடை:
இ) அதிக இடர்பாடுகள்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
இந்தியாவில் முதன் முதலாக நாணயங்கள் எப்போது அச்சடிக்கப்பட்டன?
விடை:
இந்தியாவில் கி.மு. 6ம் நூற்றாண்டில் முதன் முறையாக மஹாஜனபதங்கள் ஆட்சியில் பூரணாஸ், கர்ஷ பணம், பனாஸ் போன்ற நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.

Question 2.
‘பணம்’ என்பதை வரையறுக
விடை:

  • பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது.
  • எவை பணமாக பயன்படுத்தப்படுமோ அவையெல்லாம் பணமாகும்.
  • பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே பணமாகும்.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு குறுகிய விடையளி

Question 1.
உலோக பணம் என்றால் என்ன?
விடை:
மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தில் பண்ட பணம். உலோக பணமாக மாறியது. தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களை எளிமையாக கையாளப்பட்டதால் அவற்றின் அளவு எளிதாக அறிந்து கொள்ளப்பட்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பெரும் பகுதியில் இவ்வகையான பணம் முக்கிய பங்கு வகித்தது.

Question 2.
கருப்பு பணத்திற்கு எதிராக சில சட்டரீதியான கூட்டமைப்பு பற்றி எழுதுக :
விடை:

  • பணமோசடி நடவடிக்கை தடுப்பு சட்டம் 2002.
  • லோக்பால் மற்றும் லோகாயுக்டா சட்டம்.
  • ஊழல் தடுப்புச் சட்டம் 1988.
  • வெளிக்கொணரப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா 2015.
  • பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டம் 1988, 2016ல் திருத்தப்பட்டது.

Question 3.
முதலீடு செய்ய வழிவகுக்கும் சில முதலீட்டுக் கருவிகளை கூறுக?
விடை:

  • பங்கு வர்த்தகம்
  • பத்திரங்கள்
  • பரஸ்பர நிதி
  • காப்பீடு
  • வைப்பு கணக்கு

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 4.
உங்கள் வாழ்க்கையில் பணத்தின் அத்தியாவசியங்கள் யாவை?
விடை:

  • அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பணம் ஒரு அத்தியாவசிய கருவியாகும்.
  • பணம், பண்ட மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது.
  • பணத்தை சேமித்து எதிர்கால தேவையை பூர்த்தி செய்து கொள்ள பணம் அத்தியாவசியமாகும்.
  • தொலைதூர இடங்களுக்கும், அயல்நாட்டிற்கும் பண்டங்களை பரிமாற்றம் செய்ய பணம் திறம்பட உதவுகிறது.

Question 5.
வணிக வங்கி என்றால் என்ன? மற்றும் வைப்புகளின் வகைகள் யாவை?
விடை:
வணிக வங்கி:

  • வாடிக்கையாளர் ஒருவருக்கு காசோலை வரைவதன் மூலம் தனது வைப்புகளை மீளப்பெறும் உரிமையினை வழங்கும் நிறுவனம் வணிக வங்கி ஆகும்.
  • இவற்றின் நடவடிக்கைகள் நாடுகளின் சட்டத்தினாலும் மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப்படும்.
    வைப்புகளின் வகைகள்:

    1. மாணவர்களின் சேமிப்புக் கணக்கு
    2. சேமிப்பு வைப்பு
    3. நடப்பு கணக்கு வைப்பு
    4. நிரந்தர வைப்பு

VIII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
பணத்தின் சமீபத்திய வடிவங்கள் பற்றி விவரி?
விடை:
நெகிழிப் பணம்:
கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் சமீபத்திய நெகிழிப் பணமாகும். பணமில்லா பரிவர்த்தனை இதன் நோக்கமாகும்.

மின்னனு பணம்:
மின்னனுப் பணம் என்பது வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னனு முறையின் லம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாகும்.

நிகழ்நிலை வங்கி:
(இணைய வங்கி) நிகழ்நிலை வங்கி அல்லது இணைய வங்கி என்பது வாடிக்கையாளர் அல்லது பிற நிதி நிறுவனங்கள் வலைதளத்தின் மூலம் ஒரு பரந்த நிதிப் பரிவர்த்தனைகளை நடத்தும் ஒரு மின்னனு முறையாகும்.

மின் வங்கி:
மின்னணு வங்கியை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் என்றும் அழைக்கலாம். காசோலை அல்லது ரொக்கத்தை விட ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்கு மின்னணு வழிமுறை பயன்படுகிறது.

IX. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் 4

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 24 சூழ்நிலை அறிவியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 24 சூழ்நிலை அறிவியல்

9th Science Guide சூழ்நிலை அறிவியல் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் ____ என அழைக்கப்படுகின்றன.
(அ) உயிரியல் காரணங்கள்
(ஆ) உயிரற்ற காரணிகள்
(இ) உயிர்க் காரணிகள்
(ஈ) இயற் காரணிகள்
விடை:
(ஆ) உயிரற்ற காரணிகள்

Question 2.
வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _____
எனப்படும்
(அ) ஆவியாதல்
(ஆ) குளிர்வித்தல்
(இ) பதங்கமாதல்
(ஈ) உட்செலுத்துதல்
விடை:
(இ) பதங்கமாதல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 3.
வளிமண்டல கார்பன்டைஆக்ஸைடு (CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு _____ எனப்படும்.
(அ) ஒளிச்சேர்க்கை
(ஆ) உட்கிரகித்தல்
(இ) சுவாசித்தல்
(ஈ) சிதைத்தல்
விடை:
(அ) ஒளிச்சேர்க்கை

Question 4.
_____ ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.
(அ) கார்பன் மோனாக்சைடு
(ஆ) கந்தக டைஆக்ஸைடு
(இ) நைட்ரஜன் டை ஆக்ஸைடு
(ஈ) கரியமில வாயு
விடை:
(ஈ) கரியமில வாயு

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 55

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
நைட்ரஜன் ஒரு பசுமை வாயு ஆகும்.
விடை:
தவறு
கார்பன்டை – ஆக்ஸைடு ஒரு பசுமை வாயு ஆகும்.

Question 2.
நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு இடைநிலைத்தாவரங்களில்
விடை:
தவறு
காணப்படுகின்றது. நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு நீர்த் தாவரங்களில் காணப்படுகின்றது.

Question 3.
பாலுட்டிகளில் வௌவால்கள் மட்டுமே பறக்கும்.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 4.
மண்புழுக்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.
விடை:
தவறு
வௌவால்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.

Question 5.
கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.
விடை:
தவறு
குளிர்கால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
உயர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள் யாவை?
விடை:
உயிர்க் கோளத்தில் காணப்படும் இரு காரணிகள்.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 60

Question 2.
நைட்ரஜன் சுழற்சியை மனிதனின் செயல்கள் எவ்வாறு பாதிக்கின்றன?
விடை:

  • புதை வடிவ எரிபொருள்களை எரிப்பதன் மூலமும். நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் பல செயல்களாலும் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அதிகரிக்கின்றது.
  • விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் ஆறுகளுக்குச் சென்று அங்கிருந்து கடல் சூழ்நிலையை அடைகிறது.
  • இதனால் உணவு வலையின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
  • வாழிடங்கள் அழிகின்றன.
  • மேலும் உயிரினங்களின் பல்வகைத் தன்மையும் மாற்றி அமைக்கப்படுகின்றன.

Question 3.
தகவமைப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதின் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப் போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம். எ.கா. : பறவைகள் மற்றும் வௌவால்களின் இறக்கைகள்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 4.
நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?
விடை:

  1. தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்
  2. நீரோட்டம் தாவரத்தினை சேதப்படுத்துதல்
  3. நீரின் அளவு தொடர்ந்து மாறிக் கொண்டிருத்தல்
  4. நீரில் மிதக்கும் தன்மையைப் பராமரித்தல்

Question 5.
நீர் சேமித்தலின் முக்கியத்துவம் என்ன?
விடை:

  1. நீர் மாசுபடுதலைக் குறைக்கிறது.
  2. நீர் வளங்களை திறமையாகப் பயன்படுத்த உதவுகிறது.
  3. நீரின் தட்டுப்பாடு குறைகிறது
  4. ஆற்றல் சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு இது உதவி புரிகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 6.
உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக்கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.
விடை:
வீடுகளில் நீர்ப் பாதுகாப்பு :

  1. குளிப்பான்களில் (showers) குளிப்பதை விட, நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
  2. குறைவாக நீர் வரக் கூடிய குடிநீர்க் குழாய்களைப் (taps) பயன்படுத்துதல்.
  3. மறு சுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
  4. குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரி செய்தல்.
  5. முடிந்த வரை நீரை மறுசுழற்சி செய்தல் அல்லது மீண்டும் பயன்படுத்துதல்.

பள்ளிகளில் நீர் பாதுகாப்பு :

  1. குடிநீர்க்குழாய்களை பயன்படுத்தாத நேரங்களில் மூடிவிடுதல்.
  2. குடிநீர்க்குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை உடனடியாக சரி செய்தல்.
  3. தேவையில்லாமல் கழிவறை கலத்தினுள் நீரை பாய்ச்சுதலை தவிர்த்தல்.
  4. நீரை சேமிக்கக்கூடிய சிறப்பான நவீன கைப்பிடிகளைக் கொண்ட குடிநீர்க் குழாய்களைப் பயன்படுத்துதல்.

Question 7.
மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?
விடை:

  1. விவசாயம் செய்தல்
  2. இயற்கை அழகு மிக்க நிலங்களை உருவாக்குதல்
  3. பொதுப் பூங்காக்கள் உருவாக்குதல்
  4. குழிப்பந்தாட்ட விளையாட்டுத் திடல் உருவாக்குதல்.
  5. கழிவறைகளைச் சுத்தம் செய்தல்
  6. தூசிகளைக் கட்டுப்படுத்துதல்
  7. கட்டுமானச் செயல் மேற்கொள்ளுதல்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 8.
ஐ.யூ.சி.என் என்றால் என்ன? அதன் தொலைநோக்குப் பார்வைகள் யாவை?
விடை:

  • ஐ.யூ.சி என் என்ற பன்னாட்டு அமைப்பானது இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை வளம் குன்றாமல் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றி வருகிறது.
  • “இயற்கையை மதிக்கவும், பாதுகாக்கவும் கூடிய நேர்மையான உலகம்” என்பதே இதன் நோக்கமாகும்.

ஐ.யூ.சி என் அமைப்பின் தொலை நோக்குப் பார்வைகள் :

  1. இயற்கையிலுள்ள வேற்றுமை மற்றும் ஒற்றுமையை பாதுகாத்தல்
  2. எந்தவொரு இயற்கை வளத்தைப் பயன்படுத்தினாலும் அது நியாயமானதாகவும் சூழ்நிலையைப் பாதிக்காத வண்ணம் உள்ளதா என்பதை வலியுறுத்துதல்.
  3. மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சிற்றினங்களின் “சிவப்புப் பட்டியலைத்” தயார் செய்து, தொகுத்து வெளியிடுதல்.
  4. இது உலக அளவில் உள்ள சிற்றினங்களின் பாதுகாப்பு நிலையை அளவிடப் பயன்படுதல்.

V. விரிவாக விடையளி

Question 1.
நீர்ச்சுழற்சியில் உள்ள செயல்பாடுகளை விவரி.
விடை:
நீர்ச்சுழற்சியில் உள்ள செயல்பாடுகள்:

  1. நீராவியாதல்: பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகிய நீர் நிலைகளில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
  2. பதங்கமாதல்: வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன.
  3. நீராவிப்போக்கு: தாவரங்களின் இலை மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் நீரை நீராவியாக மாற்றி வளிமண்டலத்திற்கு செல்கிறது.
  4. குளிர்வித்தல்: உயரமான இடங்களில் வெப்பமானது குறைவாகக் காணப்படுவதால் அங்குள்ள நீராவியானது குளிர்விக்கப்பட்டு சிறிய நீர்த்திவலைகளாக மாறுகிறது, இந்த நீர்த்திவலைகள் மேகங்களையும் பனிமூட்டங்களையும் உருவாக்குகின்றன.
  5. மழைப்பொழிவு: காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்று சேர்ந்து மழையாகப் பொழிகின்றன.
  6. தரைமேல் வழிந்தோடும் நீர்:
    பூமியின் மீது விழுந்த நீரானது தரையின் மேற்பரப்பில் ஓடி வழிந்தோடும் நீராகின்றது. இந்த நீர் ஒன்றாக இணைந்து கால்வாய்கள். ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஊருணிகள் ஆகியவற்றினை உருவாக்கி, கடைசியில் ஆறுகளின் கழிமுகத் துவாரங்களை அடைந்து கடல் மற்றும் பெருங்கடல்களில் முடிவடைகிறது.

Question 2.
வரைப்படம் மூலம், கார்பன் சுழற்சியை விவரி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 76

  1. எரிமலைச் செயல்கள், படிம எரிபொருள்களை எரித்தல் இறந்து போன கரிமப்பொருள்களை சிதைத்தல் மூலமும் CO2 வளிமண்டலத்தை வந்தடைகின்றன.
  2. தாவரம் மற்றும் விலங்குகளின் சுவாசித்தலின் போது கார்பனை கார்பன்-டை-ஆக்ஸைடாக வெளியிட்டு வளிமண்டலம் சென்றடைகிறது.
  3. வளி மண்டலத்திலுள்ள CO2 ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களுக்குள் சென்று மாவுப் பொருளாக மாற்றமடைகிறது.
  4. இப்பொருள் தாவரங்களிலிருந்து தாவர உண்ணிகள் மற்றும் விலங்குண்ணிகளுக்குக் கடத்தப்படுகின்றது.
  5. அனைத்து உயிரினங்களும் புரதங்கள் மற்றும் கார்பன் கலந்த மூலக்கூறுகளால் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

Question 3.
வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.
விடை:
வறண்ட நிலத் தாவரங்களின் தகவமைப்புகள் :

  1. நன்கு வளர்ச்சி அடைந்தவேர்கள், ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன. எ.கா. எருக்கலை.
  2. சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன.
    எ.கா. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக் கற்றாழை.
  3. மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும். எ.கா. கருவேல மரம்
  4. சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளன. எ.கா. சப்பாத்திக் கள்ளி
  5. ஒரு சில வறண்ட நில தாவரங்கள், போதிய அளவு ஈரப்பதம் இருக்கும் போதே, குறுகிய கால இடை வெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 4.
வாழிடத்திற்கு ஏற்றாற்போல், வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?
விடை:
1. வாழிடம்:

  • வௌவால்கள் பெரும்பாலும் குகைகளில் வாழ்கின்றன.
  • குகைகள் அவைகளை பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பதோடு மற்ற பிற விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்கிறது,
  • இவை மரங்களிலும். பொந்துடைய பழைய மரக்கட்டைகளிலும். பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றன.

2. ஒளி:

  • வௌவால்கள் இரவு நேரங்களில் அதிக செயல்திறன்மிக்கவைகளாக உள்ளன,
  • ஏனெனில், பகல் நேரங்களில் வௌவாலின் மெல்லிய கருத்த இறக்கைச் சவ்வானது அதிக வெப்பத்தினை உறிஞ்சுவதால் அவை பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது.
  • இதனால், அவைகளின் உடலில் அதிகளவு நீர் இழப்பு ஏற்படலாம்.

3. வெப்பநிலை:

  • குளிர்காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைவுபடுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து, செயலற்ற
    நிலையில் இருக்கும் நிகழ்வு குளிர்கால உறக்கம் எனப்படும்,
  • அவை ஓய்வு நேரத்தில் அவைகளின் உள் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்கின்றன.
  • இந்நிலையில் தங்களது செயல்திறன்களைக் குறைத்து சக்தியைப் பாதுகாத்துக்கொள்கிறது.

Question 5.
நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவுநீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?
விடை:
மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன்தரக் கூடிய நோக்கங்களுக்காக மீண்டும் பயன்படுத்துதல்,

கழிவு நீர் சுத்திகரிப்பு மூன்று படி நிலைகளை கொண்டது.
1. முதல் நிலை சுத்திகரிப்பு
2. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு
3. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு

1. முதல் நிலை சுத்திகரிப்பு :

  1. கழிவு நீரை தற்காலிகமாக தொட்டிகளில் சேர்த்து வைக்கப்படுவதால். இதனால் கனமான திண்மங்கள் நீரின் அடியிலும் எண்ணெய் உயர்வுப் பொருள்கள் போன்ற மிதக்கும் பொருள்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கி விடுகின்றன.
  2. கீழே தங்கிய மற்றும் மேலே மிதக்கும் பொருட்கள் தனித் தனியே பிரித்தல்.

2. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு :
உயிர்வழி வாயுவின் முன்னிலையில் காற்று நுண்ணுயிரிகளால் நீரில் கரைந்திருக்கும் மக்கும் கரிமப் பொருட்கள் (சிதைவுறும்) நீக்கப்படுகின்றன.

3. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு :

  1. நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதல்.
  2. கழிவு நீரிலுள்ள நுண்ணிய கூழ்மத் துகள்களை வேதியியல் முறையில் படிகாரம் அல்லது இரும்பு சல்பேட் ஆகியவற்றைச் சேர்த்து வீழ்படிவாக்கப்பட்டு சுத்திகரித்தல்.

IV. காரணம் தருக.

Question 1.
வேர்கள் அதிக ஆழமாக வளர்ந்து நீர் உள்ள பூமியின் அடுக்குகள் வரை செல்கின்றன. இவ்வகையான தகவமைப்புகளை எவ்வகைத் தாவரங்கள் மேற்கொள்கின்றன? ஏன்?
விடை:
வறண்ட நிலத் தாவரங்கள்.
காரணங்கள் :

  1. வறண்ட நில தாவரங்கள் குறைந்த அளவு நீர் உடைய, வறண்ட அல்லது பாலைவனங்களில் வாழ்கின்றன.
  2. இதனால் இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன.
  3. இவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளை சென்றடைகின்றன. எ.கா.எருக்கலை.

Question 2.
நீண்ட படகு போன்ற உடலமைப்பு மற்றும் நீட்சிகள் காணப்படுவது மண்புழுவின் தகவமைப்பாகக் கருதப்படுகின்றது. ஏன்?
விடை:

  1. ஒழுங்கமைக்கப்பட்ட உடல் : மண்ணின் அடியிலுள்ள குறுகிய வளைகளுக்குள் எளிதாக ஊடுருவிச் செல்ல உதவுகின்றன.
  2. நீட்சிகள் அல்லது மயிர்க்கால்கள் மயிர்க்கால்கள் இடப்பெயர்ச்சிக்கும் மண்ணை , இறுகப் பிடித்து வளையின் உள்ளே செல்வதற்கும் உதவுகின்றன.

Question 3.
எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது, வௌவால்களின் தகவமைப்பாக உள்ளது. இந்த வாக்கியம் நியாயமானதா?
விடை:

  • எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது வௌவாலின் சிறந்த தகவமைப்பாகும்.
  • வௌவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல.
  • ஆனாலும் இரவு நேரங்களில் பறந்து தங்களை சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட மீயொலி அலைகள் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.
  • இவ்வமைப்புக்கு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர்.
  • இந்த மீயொலி அலைகள் இரையின் மீது பட்டு எதிரொலித்து மீண்டும் அவற்றின் காதினை வந்தடைவதால் இரையின் இடத்தினை கண்டறிய முடிகிறது.
  • இதன் மூலம் முன்னால் உள்ள பொருள்களின் அமைவிடத்தையும் கண்டறிய முடிகிறது.

9th Science Guide சூழ்நிலை அறிவியல் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
உயிர்கள் காணப்படக் கூடிய பூமியின் ஒரு பகுதி _______
விடை:
உயிர்க்கோளம்

Question 2.
நீராவிப்போக்கு என்பது ____ ஒரு வகையாகும்.
விடை:
ஆவியாதலின்

Question 3.
நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்வது ______
விடை:
ஊடுருவல்

Question 4.
உயிர்வாழத் தேவையான முக்கியத்துவம் வாய்ந்த முதல் நிலை ஊட்டச்சத்து _____
விடை:
நைட்ரஜன்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 5.
அதிக அளவு நைட்ரஜனைக் கொண்ட பெரிய மூலமாக திகழ்வது _____
விடை:
வளி மண்டலம்

Question 6.
வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனின் அளவு _____
விடை:
78%

Question 7.
லெகுமினஸ் தாவரங்கள் ரைசோபியம் பாக்டீரியாவுடன் கொண்டுள்ள தொடர்பு _______
விடை:
கூட்டுயிரி வாழ்க்கை

Question 8.
தாவர உண்ணிகள் அவற்றிலுள்ள புரதங்களை ______ ஆக மாற்றிக் கொள்கின்றன.
விடை:
விலங்குப் புரதங்கள்

Question 9.
உட்கொள்ளும் உணவிலிருந்து ______ புரதங்களை உற்பத்தி செய்து
விடை:
விலங்குண்ணிகள்

Question 10.
கொள்கின்றன. கரி, வைரம், கிராபைட் போன்றவை கார்பனின் _____ ஆகும்.
விடை:
எளிய வடிவங்கள்

Question 11.
கார்பன்-டை ஆக்ஸைடு ஒரு ____ ஆகும்.
விடை:
பசுமை இல்ல வாயு

Question 12.
நீர்த்தாவரங்கள் _______ தன்மையை பராமரிக்கும் சவால்களை எதிர்கொள்ளுகின்றன.
விடை:
நீரில் மிதக்கும்

Question 13.
உல் பியாவில் எது இல்லை ?
விடை:
வேர்கள்

Question 14.
இந்த தாவரத்தின் உடலம் பெரிதும் குறைக்கப்பட்டிருக்கும்.
விடை:
லெம்னா

Question 15.
தாவர உலகின் சின்ட்ரெல்லா என அழைக்கப்படுவது _____
விடை:
ஆகாயத் தாமரை

Question 16.
மெழுகுப்பூச்சுடன்கூடிய சிறிய இலைகள் காணப்படும் தாவரம் ______
விடை:
கருவேலமரம்

Question 17.
இடைப்பட்ட நீரளவைக் கொண்ட இடங்களில் வளரும் தாவரங்கள் ______
விடை:
இடைநிலை

Question 18.
இடைநிலை தாவர வேர்களில் காணப்படும் அமைப்பு _____
விடை:
வேர் மூடி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 19.
வௌவால் பகல் நேரங்களில் பறப்பதற்கு அதிக ______ தேவைப்படுகிறது
விடை:
ஆற்றல்

Question 20.
மண்புழுக்கள் சுவாசம் செய்யும் பகுதி _____
விடை:
தோல்

Question 21.
மண்புழுக்களுக்கு ஏற்ற சரியான வெப்பநிலை என்பது ______
விடை:
60°-80°

Question 22.
உலக நீர் தினம் 2018ன் முக்கிய கருத்து _____
விடை:
“இயற்கை நீருக்கே”

Question 23.
மண் அரிப்பை தடுக்க அமைப்பது ______
விடை:
பண்ணைக் குட்டைகள்

Question 24.
இரண்டாம் நிலை சுத்திகரிப்பில் நுண்ணுயிர்களை நீக்கம் செய்யும் முறை _______
விடை:
வீழ்ப்படி வாதல்

Question 25.
கனமான திண்மங்கள். மிதக்கும் பொருள்கள் எந்த நிலையில் நீக்கப்படுகிறது?
விடை:
முதல்நிலை சுத்திகரிப்பு

Question 26.
இந்தியா ஐ.யூ.சி என் இல் உறுப்பினராக சேர்ந்த ஆண்டு ______
விடை:
1969

Question 27.
ஒரு நிலையான இடைவினை _____, _____ காரணிகளுக்கும் இடையே நடைபெறுகிறது.
விடை:
உயிருள்ள, உயிரற்ற

Question 28.
துருவங்களில் காணப்படும் பனிமலைகள், பனிப்பாறைகள் நேரடியாக _____ மாறுகின்றன.
விடை:
நீராவி

Question 29.
தாவரங்களில் இலை, தண்டுகளில் காணப்படும் _____ வழியாக நீர், நீராவியாக மாறி வெளிப்படுகிறது
விடை:
சிறிய துளைகள்

Question 30.
நீரானது பூமிக்குள் செல்லும் இரு வேறு முறைகள் ______, _____
விடை:
ஊடுருவல், உள்
வழிந்தோடல்

Question 31.
எவைகளில் நைட்ரஜன் அவசியமான பதிதப் பொருளாக உள்ளது-
விடை:
பச்சையம்,
மரபுப்பொருள் மற்றும்
புரதம்

Question 32.
செயல்படா வளிமண்டல நைட்ரஜனை உயிரினங்கள் பயன்படுத்தும் வகையில் _____ ஆக மாறுகிறது
விடை:
கூட்டுப்பொருள்கள்
செயல்படும்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 33.
புரதங்கள், நியூக்ளிக் அமிலங்களை உருவாக்குவதற்கு தாவரங்கள் மண்ணிலிருந்து உறிஞ்சுவது ______
விடை:
நைட்ரேட் அயனிகள்

Question 34.
பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், விலங்குப்புரதங்கள் மற்றும் இறந்த தாவர விலங்குகளை _____ ஆக மாற்றுகின்றன.
விடை:
அம்மோனியச்
சேர்மங்கள்

Question 35.
சூடோமோனாஸ் சிற்றினங்கள் _____ ஐ ஒடுக்கமடையச் செய்து, ____ மாறி வளிமண்டலத்தை அடைகிறது
விடை:
நைட்ரேட் அயனிகள்,
வாயு நிலைக்கு

Question 36.
இதை பயன்படுத்துவதன் மூலம் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அடிப்படையாக
விடை:
நைட்ரஜனை
அதிகரிக்கின்றது.
கொண்ட உரங்கள்

Question 37.
கார்பனின் கூட்டுப் பொருள்கள் _____, _____
விடை:
கார்பன் மோனாக்ஸைடு,
கார்பன்டை ஆக்ஸைடு

Question 38.
கார்பன்டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் அதிகரிப்பதால் ____ பசுமை _____ ஏற்படுகின்றன.
விடை:
பசுமை இல்ல
விளைவும், புவி
வெப்பமயமாதலும்

Question 39.
_____ அல்லது _____ அருகில் வாழக்கூடிய தாவரங்கள் நீருக்குள், ஹைடிரோபைட்ஸ் எனப்படும்.
விடை:
நீருக்குள்,
நீர்நிலைகளின்

Question 40.
ஆகாயத் தாமரை போன்ற தாவரங்களில் உறுதித்தன்மையையும், மிதப்புத் தன்மையையும் தருகிறது
விடை:
காற்றறைப் பைகள்

Question 41.
மிதக்கும் இலைகள் ____ உடன் நீரின் அளவிற்கேற்ப மேலும் கீழும் இயங்கும் வகையில் உள்ளது.
விடை:
(தாமரையின்) நீளமான
இலைக் காம்பு

Question 42.
ஆகாயத்தாமரையில் இலைக் காம்பின் தன்மை ______
விடை:
காற்றறைப்பைகளுடன்
பஞ்சு போன்று வீங்கிய

Question 43.
கோடை காலங்களில் ஆகாயத் தாமரை உள்ள நீரானது ______ அதிகமாக வற்றிப் போகிறது
விடை:
ஒன்பது மடங்கு

Question 44.
சோற்றுக் கற்றாழை நீரை சேமித்து வைக்கும் திசுக்கள்
விடை:
சதைப்பற்று மிக்க
பாரன்கைமா

Question 45.
இலையின்மேல் கியூட்டிகிள் மெழுகுப்பூச்சி இருப்பதால் _____ தடுத்து _____ குறைக்கின்றது.
விடை:
ஈரப்பதத்தை , நீர்
இழப்பைக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 46.
______ மண்ணிற்கு காற்றோட்டம் வழங்கியும், நீர்தேக்குத்திறனை, அதிகரித்தும், கரிமப்பொருள் வழங்கியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விடை:
மண்புழுக்கள்

Question 47.
எங்கு உலர் குளிர்ச்சி அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
தொழிற்சாலைகளில்

Question 48.
உலக நீர் தினமாகக் பின்பற்றப்படும் நாள் ______
விடை:
மார்ச் 22ம் தேதி

Question 49.
இயற்கை வளங்களைப் பாதுகாத்து, வளங்குன்றாமல் பயன்படுத்த, பெரும் ங்காற்றிவரும் பன்னாட்டு அமைப்பு _____
விடை:
ஐ.யூ.சி.என்

Question 50.
ஐ.யூ.சி. – ன் அக்டோபர் 5, 1948-ம் ஆம் ஆண்டு ____ நாட்டில் கிலான்ட் என்ற இடத்தில் தோற்றுவிக்கப்பட்டது
விடை:
சுவிட்சர்லாந்து

II. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 68

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 69

III. கூற்று மற்றும் காரண வகை

கீழ்க்கண்டவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
1. கூற்று சரி. காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
2. கூற்று சரி. காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
3. கூற்று தவறு. காரணம் சரி
4. கூற்று சரி. காரணம் தவறு.

Question 1.
கூற்று : பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள், ஏரிகள் குளங்கள் ஆகியவற்றில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
காரணம் : நீர் சுழற்சி என்பது பூமியின் மீது நீரின் தொடர்ச்சியான இயக்கத்தை குறிக்கிறது.
விடை:
(1) கூற்று சரி. காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 2.
கூற்று : அம்மோனிய சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்ற செயல்முறை மூலம் நைட்ரேட் உப்புகளாக மாற்றப்படுகின்றன.
காரணம் : நைட்ரேட் உப்புகள் உருவாகும் முறைக்கு நைட்ரேட் வெளியேற்றம் எனப்படும்.
விடை:
(4) கூற்று சரி. காரணம் தவறு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 3.
கூற்று : மண்புழுக்கள் கோடை காலத்தில் வளைகளிலிருந்து வெளியேறுகின்றன.
காரணம் : மண்புழுக்கள் ஒளிக்கு எதிராகச் செயல்படுகின்றன.
விடை:
(3) கூற்று தவறு. காரணம் சரி

IV. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக

Question 1.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 80
விடை:
நைட்ரேட்டாக்கும் பாக்டீரியாக்கள்

Question 2.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 81
விடை:
ஒளி உணர் செல்கள்

Question 3.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 82
விடை:
ஹைட்ரோ பைட்ஸ் (அ) நீர்த் தாவரங்கள்

Question 4.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 83
விடை:
நீர் மறு சுழற்சி

V. சூழ்நிலைக்கேற்ற விடையளி

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திலுள்ள தாவரம் எது? அதில் காணப்படும் ஏதேனும் இரு தகவமைப்புகளை எழுது.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 84
விடை:
சப்பாத்திக் கள்ளி.
தகவமைப்புகள் :

  1. சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன.
  2. இவற்றின் இலைகள் முட்களாக மாறி உள்ளன. இதனால் நீர் வெளியேறுதலை குறைக்கிறது.

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விலங்குகள் யாவை? அதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 85
விடை:
CR – இமால்ய பழுப்பு / சிவப்பு கரடி
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 86
விடை:
EN – சிவப்பு பாண்டா கரடி

1. இந்த விலங்குகள் ஐ.யூ.சி என் அமைப்பின் சிவப்பு வரிசை பதிப்பில் உள்ளன.
2. CR மற்றும் EN இவை கடுமையாக குறைந்து வரும் இனம்.
3. ஐ.யூ.சி என் அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான சிவப்புப் பட்டியலைத்தயார் செய்து வெளியிடுவதன் மூலம் சிற்றினங்களின் பாதுகாப்பு நிலையை அளவிடவும், அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கவும் பயன்படுகிறது.

VI. குறுகிய விடையளி

Question 1.
சுழ்நிலை அறிவியல் வரையறு?
விடை:
சூழ்நிலை அறிவியல் என்பது இயற்கை உலகின் அமைப்பு மற்றும் நிகழ்வுகளையும் சூழ்நிலை மீது மனிதனால் ஏற்படும் மாற்றங்களையும் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ஆகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 2.
உயிர்ப்புவி வேதிச் சுழற்சி வரையறு முக்கியமான சில உயிர்ப்புவி வேதி சுழற்சிகளை கூறு.
விடை:
உயிருள்ள காரணிகளுக்கும், உயிரற்ற காரணிகளுக்கும் இடையே ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் சுழற்சியில் உள்ளன. இச் சுழற்சி உயிர்ப்புவி வேதிச் சுழற்சி என அழைக்கப்படுகிறது.
மூன்று வகைகள்:

  1. நீர்ச் சுழற்சி
  2. நைட்ரஜன் சுழற்சி
  3. கார்பன் சுழற்சி

Question 3.
மனிதர்களுக்கு வௌவால் எவ்வாறு உதவுகிறது?
விடை:

  1. பூச்சிகளை உண்டு அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன.
  2. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.

Question 4.
குளிர்கால உறக்கத்தை கோடை கால உறக்கத்தினின்று வேறுபடுத்து?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 89

Question 5.
வௌவால்களில் காணப்படும் பறத்தலின் தகவமைப்பு பற்றி கூறு?
விடை:

  1. இவற்றின் முன் கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன.
  2. இறக்கைகளில் உள்ள எலும்புகள் நீண்ட விரலின் சவ்வுகளோடு இணைக்கப்பட்டு காணப்படும் அமைப்பு விரலிடைச் சவ்வு எனப்படும்.
  3. பறக்கும் போது இயக்கத்தினைக் கட்டுப்படுத்த வால் உதவுகின்றது.
  4. சிறகுகளில் உள்ள தசைகள் சிறகடித்துப் பறக்க உதவும் வகையில் நன்றாக வளர்ந்தும், அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன.
  5. ஓய்வு நேரத்தில் தலை கீழாக தொங்கும் போது இறுகப் பிடித்துக் கொள்ளும் தன்மையை அவற்றின் பின்னங்கால்களின் தசை நார்கள் அவற்றிற்கு அளிக்கின்றன.

Question 6.
மண்புழுக்கள் “உழவனின் நன்பன்” என்று அழைக்கப்படுகின்றன ஏன்?
விடை:

  • மண்புழுக்கள் கரிமப் பொருள்களை செரிமானம் செய்த பின் இவை நைட்ரஜன் சத்து நிறைந்த “புழு விலக்கிய மண்” எனப்படும் கழிவை வெளியேற்றுகின்றன.
  • இதில் அதிகளவு நைட்ரஜன் கூட்டுப்பொருள் இருப்பதனால் இது மண்ணின் வளத் தன்மையைக் கூட்டுகின்றது.
  • இதனால் பயிர்ப் பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் “ உழவனின் நண்பன்” எனப்படுகிறது.

Question 7.
இரவில் நடமாடும் தன்மை மண்புழுவின் வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படுகிறது?
விடை:

  • மண்புழுக்கள் ஒளியை அதிக அளவு உணரும் திறன் கொண்டவை. ஆனால் கண்கள் கிடையாது.
  • இவற்றின் உடலிலுள்ள சில செல்கள் ஒளியை உணரக் கூடிய திறனையும், அவற்றின் செறிவைக் குறைக்கும் திறனையும் அளிக்கின்றன.
  • ஒளியைத் தவிர்ப்பதற்காகவே பகல் நேரங்களில் வளைகளிலேயே தங்கி விடுகின்றன.
  • எனவே இவை ஒளியை எதிர்க்கக் கூடியவை.

VII. விரிவான விடையளி

Question 1.
நீர் பாதுகாப்பு வரையறு? பல்வேறு நீர் பாதுகாப்பு வழி முறைகளைப் பற்றி விவரி.
விடை:

  • நீர் ஆதாரங்களை சரியான முறையில் சேமித்து, கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் முறையே நீர் பாதுகாப்பு எனப்படும்.
  • நீர் பாதுகாப்பு வழி முறைகள் மூன்று முறைகளாக செயல்படுத்தலாம்
    1. தொழிற்சாலைகளில் நீர் பாதுகாப்பு
    2. விவசாயத்தில் நீர் பாதுகாப்பு
    3. வீடுகளில் நீர் பாதுகாப்பு.

1. தொழிற்சாலைகளில் நீர் பாதுகாப்பு :

  1. உலர் குளிர்ச்சி அமைப்புகளைப் பயன்படுத்துதல்.
  2. குளிர்விக்கும் அமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து விவசாயம் மற்றும் பிற
    தேவைகளுக்கு மீண்டும் பயன்படுத்துதல்.

2. விவசாயத்தில் நீர் பாதுகாப்பு :

  1. மூடப்பட்ட அல்லது நீளமான வாய்க்கால்களைப் பயன்படுத்துவாதல் ஆவியாதலையும், நீர் இழப்பையும் குறைக்கலாம்.
  2. நீர்த் தெளிப்பு சொட்டு நீர்ப் பாசனம் போன்ற மேம்படுத்தப்பட்ட யுத்திகளைப் பயன்படுத்துதல்.
  3. வறட்சியைத் தாங்கும் மற்றும் குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தி வளரும் பயிர்களை உற்பத்தி செய்யலாம்.
  4. காய்கறி உற்பத்தி மற்றும் தோட்டக்கலையில் தழை உரங்களை மண்ணிற்குப் பயன்படுத்தலாம்.

3. வீடுகளில் நீர்ப் பாதுகாப்பு :

  1. வாறல் குளிப்பான்களில் (showers) குளிப்பதை விட நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
  2. குறைவாக நீர் வரக் கூடிய குடிநீர்க் குழாய்களை பயன்படுத்த வேண்டும்.
  3. மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
  4. குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரி செய்தல்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 2.
வறண்ட நிலத் தாவரங்கள் பெற்றுள்ள தகவமைப்புகளைக் கூறு?
விடை:
குறைந்த அளவு நீர் உடைய, வறண்ட பாலைவனம் போன்ற வாழிடங்களில் காணப்படும் தாவரங்கள் வறண்ட நிலத்தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தாவரங்கள் கீழ்க்கண்ட சூழ்நிலைகளைச் சந்திப்பதற்கான, சிறப்பான அமைப்பியல் மற்றும் உடலியல் பண்புகளை உருவாக்கிக்கொள்கின்றன.
1) சுற்றுப்புறத்திலிருந்து தேவையான அளவு நீரை உறுஞ்சிக்கொள்ளல்.
2) பெறப்பட்ட நீரை அவைகளின் உறுப்புகளில் தேக்கி வைத்தல்
3) நீராவிப்போக்கின் வேகத்தைக் குறைத்தல்
4) குறைந்த அளவு நீரைப் பயன்படுத்துதல்.

வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகள் :

  1. இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன. அவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன. எ.கா. எருக்கலை
  2. சதைப்பற்று மிக்க பாரன்மைகா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன, எ.கா. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக்கற்றாழை.
  3. மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும். எ.கா. கருவேலமரம். சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளளன. எ.கா. சப்பாத்திக்கள்ளி
  4. ஒருசிலவறண்டநிலத்தாவரங்கள் போதிய அளவு ஈரப்பதம் இருக்கும்போதே, குறுகியகால இடைவெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக்கொள்கின்றன.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 7 நீதித்துறை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 7 நீதித்துறை

8th Social Science Guide நீதித்துறை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை ………………….
அ) குடியரசுத் தலைவர்
ஆ) நாடாளுமன்றம்
இ) உச்ச நீதிமன்றம்
ஈ) பிரதம அமைச்சர்
விடை:
இ) உச்ச நீதிமன்றம்

Question 2.
………………… க்கு இடையே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு செயல்முறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.
அ) குடிமக்கள்
ஆ) குடிமக்கள் மற்றும் அரசாங்கம்
இ) இரண்டு மாநில அரசாங்கங்கள்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Question 3.
கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தீர்க்க வழிவகை செய்கிறது?
அ) முதன்மை அதிகார வரம்பு
ஆ) மேல்முறையீட்டு அதிகார வரம்பு
இ) ஆலோசனை அதிகார வரம்பு
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
அ) முதன்மை அதிகார வரம்பு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Question 4.
பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?
அ) பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர்
ஆ) அஸ்ஸாம் மற்றும் வங்காளம்
இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்
ஈ) உத்தரபிரதேசம் மற்றும் பீகார்
விடை:
இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்

Question 5.
பொதுநல வழக்கு முறை இந்தியாவில் …………………. ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அ) உச்சநீதிமன்றம்
ஆ) நாடாளுமன்றம்
இ) அரசியல் கட்சிகள்
ஈ) அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள்
விடை:
அ) உச்ச நீதிமன்றம்

Question 6.
இந்தியாவில் உச்ச நிலையில் உள்ள நீதிமன்றங்கள் எத்தனை?
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
விடை:
அ) ஒன்று

Question 7.
உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம் ………….
அ) சண்டிகர்
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) புதுதில்லி
விடை:
ஈ) புதுதில்லி

Question 8.
FIR என்பது
அ) முதல் தகவல் அறிக்கை
ஆ) முதல் தகவல் முடிவு
இ) முதல் நிகழ்வு அறிக்கை
ஈ) மேற்கூறிய எவையுமில்லை
விடை:
அ) முதல் தகவல் அறிக்கை

Question 9.
குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் …………. என அழைக்கப்படுகின்றன.
அ) மாவட்ட நீதிமன்றங்கள்
ஆ) அமர்வு நீதிமன்றம்
இ) குடும்ப நீதிமன்றங்கள்
ஈ) வருவாய் நீதிமன்றங்கள்
விடை:
ஆ) அமர்வு நீதிமன்றம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………. நீதிமன்றம் இந்தியாவின் பழமையான நீதிமன்றம் ஆகும்.
விடை:
கல்கத்தா

Question 2.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ………….. மற்றும் உடன் இந்திய நீதித்துறையை நிறுவினர்.
விடை:
சுதந்திரம், நடுநிலைத்தன்மை

Question 3.
புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானியான ………… “ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்தார்.
விடை:
மாண்டெஸ்கியூ

Question 4.
…………… பணம், சொத்து, சமூகம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது.
விடை:
உரிமையியல் சட்டங்கள்

Question 5.
பழங்காலத்தில் பெரும்பாலான அரசர்களின் நீதிமன்றங்கள் …………. ன்படி நீதியை வழங்கின.
விடை:
தர்மத்தின்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
1951ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்டது.
விடை:
தவறு

Question 2.
துக்ளக் ஆட்சிக்காலத்தில் சட்ட நடைமுறைகள் அரபுமொழியில் எழுதப்பட்டன.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Question 3.
1773ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டம் உச்சநீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது.
விடை:
சரி

Question 4.
சதர் திவானி அதாலத் ஒரு குற்றவியல் நீதிமன்றமாகும்.
விடை:
தவறு

Question 5.
இந்தியாவில் மிகப்பெரிய நீதிமன்றம் அலகாபாத் நீதிமன்றம் ஆகும்.
விடை:
சரி

Question 6.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கான நீதியைப் பாதுகாக்கிறது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வரும் கூற்றை ஆராய்க.
i) மெக்காலே பிரபுவால் ஒரு சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது.
ii) இது இந்தியச் சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது.

மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) i மற்றும் ii
ஈ) இரண்டும் இல்லை
விடை:
இ) i மற்றும் ii

Question 2.
பின்வரும் கூற்றை ஆராய்க
i) இந்திய தண்டனைச் சட்டம் 1860இல் உருவாக்கப்பட்டது.
ii) கல்கத்தா உயர்நீதிமன்றம் 1862இல் நிறுவப்பட்டது.
iii) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது.

மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை
அ) i மட்டும்
ஆ) ii மற்றும் iii மட்டும்
இ) i, iii மட்டும்
ஈ) அனைத்தும்
விடை:
ஈ) அனைத்தும்

Question 3.
இந்திய உச்சநீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்றுச் சரியானது அல்ல.
i) இந்தியாவின் உச்சநீதிமன்றம் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.
ii) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் கீழ் பகுதி V-இன்படி நிறுவப்பட்டது.
iii) ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தால்
மாற்ற முடியாது.
iv) இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.

அ) i)
ஆ) ii
இ) iii
ஈ) iv
விடை:
இ) iii

Question 4.
கூற்று : உச்சநீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாகும்.
காரணம் : இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளைப் பராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
விடை:
இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

Question 5.
ஆம் / இல்லை எனக் கூறுக.
அ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.
விடை:
ஆம்

ஆ) பணக்காரர் மற்றும் சக்தி படைத்த மக்கள் நீதித்துறை அமைப்பை கட்டுப்படுத்துகின்றனர்.
விடை:
இல்லை

இ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நீதிமன்றங்களின் மூலம் நீதியைப் பெற உரிமை உடையவராவர்.
விடை:
ஆம்

ஈ) அரசியல்வாதிகள் நீதிபதிகளைக் கட்டுப்படுத்த முடியாது.
விடை:
ஆம்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
நீதித்துறை அமைப்பு நமக்கு ஏன் தேவைப்படுகிறது?
விடை:

  • நீதித்துறை அரசின் மூன்றாவது அங்கமாகும்.
  • இது மக்களின் உரிமைகளையும். சுதந்தரத்தையும் பாதுகாக்கிறது.
  • இது நீதியை நிர்வகித்தல், தகராறுகளைத் தீர்த்தல், சட்டங்களுக்கு விளக்கம் அளித்தல், அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது. எனவே நமக்கு நீதித்துறை தேவைப்படுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Question 2.
இந்திய நீதிமன்றங்களின் பல்வேறு படிநிலைகள் யாவை?
விடை:

  • உச்ச நீதிமன்றம்
  • உயர் நீதிமன்றம்
  • மாவட்ட நீதிமன்றம்
  • துணை நீதிமன்றம்

Question 3.
சட்டம், நீதித்துறை – வேறுபடுத்துக.
விடை:
சட்டம்:
இது மக்களை ஆள்வதற்கு ஓர் அரசாங்கத்தாலோ அல்லது நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும்.

நீதித்துறை:
சட்டப்படி, ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு நீதித்துறை எனப்படுகிறது.

Question 4.
மக்கள் நீதிமன்றம் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:

  • விரைவான நீதியை வழங்க லோக் அதாலக் என்ற மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.
  • இது மக்கள் முன்னிலையில் மக்கள் பேசும் மொழியிலேயே பிரச்சனையை விசாரித்து தீர்வு காண்கிறது.
  • ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி. ஒரு சமூக பணியாளர். ஒரு வழக்கறிஞர் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட அமர்வு இதற்குத் தலைமை வகிக்கும்.
  • வழக்குரைஞர் இல்லாமல் வழக்குகள் முன் வைக்கப்படுகின்றன.
  • இந்த வழக்குகள் பரஸ்பர ஒப்புதல் மூலம் தீர்த்து வைக்கப்படுகின்றன.

Question 5.
நடமாடும் நீதிமன்றங்களின் நன்மைகள் யாவை?
விடை:

  • நடமாடும் நீதிமன்றங்கள் கிராமப்புற மக்களின் இடர்களைத் தீர்க்கும் ஒன்றாக இருக்கும்.
  • இது கிராமப்புற மக்களிடையே நீதி அமைப்பு பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கி, அவர்களது செலவைக் குறைத்து அவர்களின் வாழிடங்களிலேயே நீதியை வழங்க வழி செய்கிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
நீதித்துறையின் பங்கு பற்றி எழுதுக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை 2

Question 2.
உரிமையியல் சட்டம், குற்றவியல் சட்டம் – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை 3

Question 3.
உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை விவரி.
விடை:
அ) முதன்மை அதிகார வரம்பு:
உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே முதன்முறையாக தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம்பெற்றுள்ளது. மத்திய அரசிற்கும் ஒருமாநிலம் அல்லது அதற்குமேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகள் ஆகியன முதன்மை அதிகார வரம்புக்குள் அடங்கும்.

ஆ) மேல் முறையீட்டு அதிகார வரம்பு:
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது. அவ்வாறான வழக்குகள் மேல்முறையீட்டுக்குத் தகுதியுள்ளது என உயர்நீதிமன்றத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இ) ஆலோசனை அதிகார வரம்பு:
குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்படும் பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி குறித்து ஆலோசனை வழங்கும் அதிகாரத்தினை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.

ஈ) நீதிப் பேராணை அதிகார வரம்பு:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 32ன் படி உச்ச நீதிமன்றமும் சட்டப்பிரிவு 226ன் படி உயர்நீதிமன்றமும் நீதிப் பேராணைகளை வழங்குகின்றன.

உ) ஆவண நீதிமன்றம்:
இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளை பராமரிக்கிறது. மற்றும் அதன் முடிவுகள் கீழ்நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.

ஊ) சிறப்பு அதிகாரங்கள்:
இது கீழ் நீதிமன்றங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

VIII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு

Question 1.
விவாதி: ஒரு சுதந்திரமான நீதித்துறை என்பது அவசியமா? இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.

Question 2.
மாதிரி நீதிமன்ற அறை அமர்வுக்காக உங்கள் வகுப்பறையை ஒழுங்கமைக்கவும் (ஆசிரியரின் உதவியுடன் ஒரு வழக்கை எடுத்து விவாதிக்கலாம்).

8th Social Science Guide நீதித்துறை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஒழுங்கு முறைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
அ) 1737
ஆ) 1773
இ) 1776
ஈ) 1784|
விடை:
ஆ) 1773

Question 2.
வில்லியம் கோட்டை நிறுவப்பட்டுள்ள இடம்
அ) சென்னை
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
இ) கல்கத்தா

Question 3.
இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட இடம்
அ) சென்னை
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
இ) கல்கத்தா

Question 4.
யாருடைய காலத்தில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன?
அ) மாண்டெஸ்கியூ
ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) காரன் வாலிஸ்
விடை:
ஈ) காரன் வாலிஸ்

Question 5.
விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு
அ) 1992
ஆ) 1994
இ) 1982
ஈ) 2000
விடை:
ஈ) 2000

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பண்டைய காலத்தில் …………. நீதியின் மூலாதாரமாக விளங்கினார்.
விடை:
அரசர்

Question 2.
1801 மற்றும் 1824 ஆம் ஆண்டுகளில் …………….. மற்றும் …………………. ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
விடை:
மதராஸ், பம்பாய்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Question 3.
முதல் லோக் அதலாத் 1982 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ……………….. என்னுமிடத்தில் நடைபெற்றது. ……………….. என்னுமிடத்தில் நடைபெற்றது.
விடை:
ஜுனாகத்

Question 4.
தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் அமைக்கப்பட்ட ஆண்டு …………..
விடை:
1987

Question 5.
ஒரு திறன்மிக்க நீதித்துறை ……………., …………… இருக்க வேண்டும்.
விடை:
சுதந்திரமாகவும், பொறுப்பு உணர்வுடனும்

Question 6.
இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்ட நாள் ……………
விடை:
ஜனவரி 28, 1950

III. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
பண்டைய காலத்தில் நீதி என்ற கருத்து சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தது.
விடை:
சரி

Question 2.
எலிஜா இம்ஃபே என்பவர் சென்னை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
விடை:
தவறு

Question 3.
1862 ஆம் ஆண்டு சென்னை . பம்பாய். கல்கத்தா நகரங்களில் செயல்பட்ட உச்ச நீதிமன்றங்கள் உயர் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டன.
விடை:
சரி

Question 4.
வில்லியம் பெண்டிங் காலத்தில் நான்கு மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
விடை:
தவறு

Question 5.
மாண்டெஸ்கியூ அதிகாரப் பகிர்வு கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
விடை:
சரி

IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வரும் கூற்றை ஆராய்க.
i) நீதித்துறை அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்பாளராக உள்ளது.
ii) நாடாளுமன்றம் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராக உள்ளது.

மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை?
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) i மற்றும் ii
ஈ) இரண்டும் இல்லை
விடை:
அ) i மட்டும்

Question 2.
உயர் நீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?
i) உயர் நீதிமன்றம் மாநிலங்களின் மிக உயர்ந்த நீதிமன்றமாகும்.
ii) இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர் நீதிமன்றம் உள்ளது.
iii) இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் தங்களுக்கென ஒரு பொதுவான நீதிமன்றத்தைக் கொண்டிருக்கலாம்.
iv) தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் ஒரு பொதுவான நீதிமன்றத்தைக் கொண்டுள்ளன.

அ) i
ஆ) ii
இ) iii
ஈ) iv
விடை:
ஈ) iv

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Question 3.
கூற்று : நீதிப்பேராணைகள் வழங்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. உயர் நீதிமன்றங்களுக்குக் கிடையாது.
காரணம் : அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை .

அ) கூற்று சரியானது, காரணம் தவறானது
ஆ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
இ) கூற்று சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றினை விளக்கவில்லை
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் தவறானவை

V. பின்வருவனவற்றிக்கு ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி

Question 1.
மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் அமர்வு நீதிமன்றங்களுக்கிடையேயான வேறுபாடு என்ன?
விடை:

  • மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • மாவட்ட அளவில் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அமர்வு நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 2.
சுதந்திரமான நீதித்துறை ஏன் அவசியம்?
விடை:

  • நியாயமான நீதி கிடைப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் முக்கியமானதாகும்.
  • இந்தியா போன்ற மக்களாட்சி நாடுகளில் நீதித்துறை குடிமக்களின் உரிமைகளின் பாதுகாவலனாக உள்ளது. எனவே சுதந்திரமான நீதித்துறை அவசியமானதாகும்.

VI. பின்வருவனவற்றிற்க்கு விரிவான விடையளி

Question 1.
இந்தியாவில் நீதிமன்றங்களின் அமைப்பினை விவாதி.
விடை:
உச்ச நீதிமன்றம்:

  • உச்ச நீதிமன்றம் இந்தியாவின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.
  • இது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ஆகும்.
  • இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
  • இது ஒரு ஆவண நீதிமன்றமாக செயல்படுகிறது.
  • இது உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யலாம்.
  • இதுவே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.

உயர் நீதிமன்றம் :

  • உயர் நீதிமன்றம் மாநிலங்களின் உயர்ந்த நீதிமன்றமாகும்.
  • இது கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல் முறையீடுகளை விசாரிக்கிறது.
  • அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக நீதிப்பேராணைகள் வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
  • இது கீழ் நீதிமன்றங்களைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றுள்ளது.

மாவட்ட நீதிமன்றங்கள்:
மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகிறது.

அமர்வு நீதிமன்றங்கள்:
குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அமர்வு நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகிறது.

பஞ்சாயத்து நீதிமன்றங்கள்:
கிராம அளவில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பஞ்சாயத்து நீதிமன்றங்கள் கையாளுகிறது.

வருவாய் நீதிமன்றங்கள்:
வருவாய் நீதிமன்றங்கள் சில ஆவணங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறது. இது நில வருவாயை நிர்ணயம் செய்து நில உரிமையாளர்களிடமிருந்து அதனை வசூலிக்கிறது.

லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்):
விரைவான நீதியை வழங்க லோக் அதலாத் அமைக்கப்பட்டது. இது மக்கள் முன்னிலையில் மக்கள் பேசும் மொழியிலேயே பிரச்சனையை விசாரித்து தீர்வு காண்கிறது.

விரைவு நீதிமன்றங்கள்:
இந்நீதிமன்றங்கள் 2000 ஆம் ஆண்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கீழ் நீதிமன்ற வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்டன.

தொலைதூர சட்ட முன்னெடுப்பு:
கிராமப்புற மக்களுக்காக சட்ட உதவி மற்றும் சேவைகள் வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டது. இதில் காணொளிக் கலந்துரையாடல் மூலம் வழக்குரைஞர்களிடமிருந்து மக்கள் சட் ஆலோசனைகளைப் பெறலாம்.

குடும்ப நீதிமன்றங்கள்:
குடும்பம் தொடர்பான சட்ட விவகாரங்களை குடும்ப நீதிமன்றம் கையாளுகிறது. இவைக உரிமையியல் நீதிமன்றங்கள் ஆகும். குழந்தையின் பாதுகாப்பு, மணமுறிவு, தத்தெடுப்ப சிறார் பிரச்சனைகள் ஆகிய குடும்பம் தொடர்பான பல்வேறு உரிமைகள், கோரிக்கைகளுக்கா இந்நீதிமன்றங்கள் பயன்படுகின்றன.

நடமாடும் நீதிமன்றங்கள்:
நடமாடும் நீதிமன்றங்கள் கிராமப்புற மக்களுக்கு இடர்களைத் தீர்க்கும் ஒன்றாய் இருக்கும். இது கிராமப்புற மக்களிடையே நீதி அமைப்பு பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கி. அவர்களது செலவைக் குறைத்து. அவர்களின் வாழிடங்களிலேயே நீதியை வழங்க வகை செய்கிறது.

இ-நீதிமன்றங்கள்:
இத்திட்டத்தின்படி அனைத்து நீதிமன்றங்களும் கணினிமயமாக்கப்படும். நீதித்துறை சேலை மையம் இ-நீதிமன்றத்தின் ஒரு பகுதியாகும். பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் நேரடியா வழக்கு நிலை மற்றும் அடுத்த விசாரணை தேதிகளை கட்டணமின்றி கேட்டறியலாம்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Question 2.
இந்திய நீதித்துறையின் பரிமாண வளர்ச்சியை ஆராய்க.
விடை:
பண்டைய காலத்தில் நீதித்துறை:

  • பண்டைய காலத்தில் நீதி என்ற கருத்து சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தது.
  • அரசர் நீதியின் மூலாதாரமாக விளங்கினார்.
  • தர்மத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டது.

இடைக்கால இந்தியாவில் நீதித்துறை:

  • துக்ளக் ஆட்சிகாலத்தில் உரிமையியல் நடைமுறைச் சட்டங்கள் தொகுக்கப்பட்டன. இது ஃபைகா இ-பெரோஸ்-ஷாகி என அழைக்கப்பட்டது.
  •  ஔரங்கசீப் காலத்தில் இது ஃபட்வா-இ-ஆலம்கிர் என்ற சட்டத் தொகுப்பின்படி மாற்ற அமைக்கப்பட்டது.

நவீன இந்தியாவில் நீதித்துறை:

  • 1727 ஆம் ஆண்டு மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் மேயர் நீதிமன்றங்க அமைக்கப்பட்டன.
  • 1773 ஒழுங்கு முறைச் சட்டத்தின் படி கல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
  • 1801 மற்றும் 1824ஆம் ஆண்டுகளில் மதராஸ் மற்றும் பம்பாய் ஆகிய இடங்களில் உச் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
  • 1862 ஆம் ஆண்டு இம்மூன்று இடங்களிலும் இருந்த உச்ச நீதிமன்றங்களுக்குப் பதிலா உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
  • பின்னர் சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
  • காரன்வாலிஸ் காலத்தில் கல்கத்தா, டாக்கா. மூர்ஷிதாபாத் மற்றும் பாட்னா ஆகிய இடங்களி மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
  • பெண்டிங் பிரபு காலத்தில் இந்த நான்கு மேல்முறையீட்டு நீதிமன்றங்களும் நீக்கப்பட்டன.
  • அலகாபாத்தில் சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
  • மெக்காலே என்பவரால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் இந்திய சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது.
  • இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டன.
  • 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றங்களை உருவாக்கியது.
  • 1950 ஜனவரி 28ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை 4

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

8th Social Science Guide பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி …………..
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) ஆளுநர்
ஈ) முதலமைச்சர்
விடை:
அ) குடியரசுத் தலைவர்

Question 2.
இந்திய இராணுவப் படையின் முதன்மை நோக்கமானது
அ) தேசிய பாதுகாப்பு
ஆ) தேசிய ஒற்றுமை
இ) அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Question 3.
இராணுவ தினம் அனுசரிக்கப்படும் நாள்
அ) ஜனவரி 15
ஆ) பிப்ரவரி 1
இ) மார்ச் 10
ஈ) அக்டோபர் 7
விடை:
அ) ஜனவரி 15

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 4.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் எதன் கீழ் செயல்படுகிறது?
அ) பாதுகாப்பு அமைச்சகம்
ஆ) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இ) திட்ட மேலாண்மை நிறுவனம்
ஈ) உள்துறை அமைச்சகம்
விடை:
ஈ) உள்துறை அமைச்சகம்

Question 5.
இந்தியக் கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு
அ) 1976
ஆ) 1977
இ) 1978
ஈ) 1979
விடை:
இ) 1978

Question 6.
இந்திய வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளுள் ஒன்று
அ) சத்தியமேவ ஜெயதே
ஆ) பஞ்சசீலம்
இ) மேற்கூறிய இரண்டும்
ஈ) மேற்கூறிய எவையுமில்லை
விடை:
ஆ) பஞ்சசீலம்

Question 7.
பின்வருவனவற்றுள் எந்த தீவுகள் இந்தியாவிற்கு சொந்தமானவை?
அ) அந்தமான் மற்றும் மாலத்தீவு
ஆ) அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்
இ) இலங்கை மற்றும் மாலத்தீவு
ஈ) மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்
விடை:
ஆ) அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவின் மையம் அமைந்துள்ள இடம் ……………….
விடை:
வெல்லிங்டன்

Question 2.
இந்திய கடற்படையின் தலைமை தளபதி ………….. ஆவார்.
விடை:
அட்மிரல்

Question 3.
இந்திய விமானப்படையிலிருந்து ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி …………………. ஆவார்.
விடை:
அர்ஜுன் சிங்

Question 4.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினை வடிவமைத்த முதன்மைச் சிற்பி ……………..
விடை:
ஜவஹர்லால் நேரு

Question 5.
அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர் ………………..
விடை:
வி.கே. கிருஷ்ணமேனன்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
விடை:
தவறு

Question 2.
மெட்ராஸ் ரெஜிமென்ட் பழமையான காலாட்படைப் பிரிவுகளில் ஒன்று.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 3.
விரைவு அதிரடிப் படையானது, மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) ஒரு சிறப்பு பிரிவு ஆகும்.
விடை:
சரி

Question 4.
NCC மாணவர்களுக்கு அடிப்படை இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விடை:
சரி

Question 5.
வங்காளதேசம் இந்தியாவின் ஒரு பகுதி ஆகும்.
விடை:
தவறு

Question 6.
இந்தியாவிற்கும், ASEAN என்ற கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் மியான்மர் ஒரு நிலப்பாலமாக செயல்படுகிறது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
ஆயுதப்படைகள் தொடர்பான பின்வரும் கூற்றினை ஆராய்க.
I. இந்திய இராணுவப் படை ஆயுதப்படைகளின் நிலஅடிப்படையிலான பிரிவு ஆகும்.
II. இந்திய இராணுவப் படையின் நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் மனித மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.

அ) மட்டும் சரி
ஆ) II மட்டும் சரி
இ) 1 மற்றும் II சரி
ஈ) | மற்றும் II தவறு
விடை:
இ) 1 மற்றும் II சரி

Question 2.
கூற்று : குடியரசுத் தலைவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி ஆவார்.
காரணம் : குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் மிக உயர்ந்த பதவி நிலையையும் வகிக்கிறார்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 3.
கூற்று : பன்னாட்டு கூட்டுறவை இந்தியா ஆதரிக்கிறது.
காரணம் : நட்பு – கூட்டுறவு மூலம் நாடுகளுக்கிடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல –
விடை:
இ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 4.
இனவெறிக்கொள்கை பற்றி பின்வரும் எந்த கூற்று சரியானவை அல்ல?
I. நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம்.
II. இது மனிதாபிமானத்திற்கு எதிரானது.
III. இனப்பாகுபாட்டுக் கொள்கை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

அ) 1 மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) II மட்டும்
ஈ) III மட்டும்
விடை:
ஈ) III மட்டும்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 5.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) மாலத்தீவு
ஆ) இலங்கை
இ) மியான்மர்
ஈ) லட்சத்தீவுகள்
விடை:
இ) மியான்மர்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
தேசிய பாதுகாப்பு மிக அவசியமானது ஏன்?
விடை:

  • ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் தேசிய பாதுகாப்பு மிகவும் அவசியமானது ஆகும்.
  • நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

Question 2.
பின்வருவனவற்றிற்கு விரிவாக்கம் தருக.
அ) SFF
ஆ) ICG
இ) BSF
ஈ) NCC
விடை:
அ) SFF – சிறப்பு எல்லைப்புறப் படை
ஆ) ICG – இந்தியக் கடலோரக் காவல்படை
இ) BSF – எல்லை பாதுகாப்புப் படை
ஈ) NCC – தேசிய மாணவர் படை

Question 3.
மத்திய ரிசர்வ் காவல் படை பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:
அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும். தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பதற்கும். சமூக நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு உதவுவதே மத்திய ரிசர்வ் காவல்படையின் நோக்கமாகும்.

மேலும். சட்டம். ஒழுங்கு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பினை பராமரிப்பதற்கும் இது உதவுகிறது.

மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு சிறப்பு பிரிவு விரைவு அதிரடிப்படை ஆகும். இது கலவரம். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல். மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அமைதியற்ற சூழ்நிலைகள் ஆகியவற்றை திறம்பட எதிர்கொள்கிறது.

Question 4.
அணிசேரா இயக்க நிறுவனத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • இந்தியாவின் ஜவஹர்லால் நேரு
  • யூகோஸ்லாவியாவின் டிட்டோ
  • எகிப்தின் நாசர்
  • இந்தோனேசியாவின் சுகர்ணோ
  • கானாவின் குவாமே நிக்ரூமா

Question 5.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகளை எழுதுக.
விடை:

  • தேசிய நலனைப் பாதுகாத்தல்
  • உலக அமைதியினை அடைதல்
  • ஆயுதக்குறைப்பு
  • காலனித்துவம். இனவெறி மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றை நீக்குதல்
  • நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
  • பொருளாதார வளர்ச்சி

Question 6.
சார்க் உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • இந்தியா
  • வங்காளதேசம்
  • பாகிஸ்தான்
  • நேபாளம்
  • பூடான்
  • இலங்கை
  • மாலத்தீவு
  • ஆப்கானிஸ்தான்

VII. விரிவான விடையளி

Question 1.
இந்திய இராணுவப் படையின் அமைப்பு மற்றும் நிர்வாகத்தினை விவரி.
விடை:
அமைப்பு:

  • இந்திய இராணுவப் படை என்பது நில அடிப்படையிலான ஒரு பிரிவு ஆகும்.
  • இது உலக அளவில் மிகப்பெரிய தன்னார்வப் படைப் பிரிவு ஆகும்.
  • இது ஜெனரல் எனப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட இராணுவப் படைத் தளபதியால் வழி நடத்தப்படுகிறது.
  • இந்திய இராணுவம் “ரெஜிமென்ட்” என்ற ஒரு அமைப்பு முறையைக் கொண்டது.
  • இது செயல்பாட்டு ரீதியாகவும். புவியியல் அடிப்படையிலும் ஏழு படைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்:

  • தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமையைப் பேணுகிறது.
  • அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைப் பாதுகாத்தல். உள்நாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டின் எல்லைக்குள் அமைதியையும். பாதுகாப்பையும் பேணுதல் ஆகியவை இதன் பணிகளாகும்.
  • மேலும் இயற்கைப் பேரழிவு மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளையும் செய்கிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 2.
துணை இராணுவப் படை பற்றி எழுதுக.
விடை:

  • உள்நாட்டு பாதுகாப்பைப் பராமரிக்கவும், கடலோரப் பகுதியைப் பாதுகாக்கவும், இராணுவத்திற்கு உதவும் படைகள் துணை இராணுவப் படைகள் என்றழைக்கப்படுகின்றன.
  • இவை இரயில் நிலையங்கள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் ஆகிய முக்கியமான பகுதிகளைப் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன.
  • இயற்கை மற்றும் மனித பேரழிவுகளிலிருந்து மக்களை மீட்கும் பணிகளையும் செய்கின்றன.
  • அமைதி காலங்களில் இத்துணை இராணுவப் படைகள் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்கும் பணியையும் செய்கின்றன.

அஸ்ஸாம் ரைபிள்ஸ்:

  • இது 1835ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இது அஸ்ஸாம் பகுதியில் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது.
  • இது இராணுவ பயிற்சி பெற்ற மக்கள் படை ஆகும்.
  • இதில் தற்போது 46 படைப் பிரிவுகள் உள்ளன.
  • இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

சிறப்பு எல்லைப்புறப் படை:

  • இது ஒரு துணை இராணுவ சிறப்புப் படை ஆகும்.
  • இது 1962இல் உருவாக்கப்பட்டது.
  • இது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

Question 3.
பஞ்சசீலத்தின் ஐந்து கொள்கைகளை எழுதுக.
விடை:

  • ஒவ்வொரு நாட்டின் எல்லையையும், இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்
  • பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை
  • பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
  • பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்
    அமைதியாக இணைந்திருத்தல்

Question 4.
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. எப்படி?
விடை:

  • அண்டை நாடுகளுடன் இந்தியாவின் நிலைப்பாடு தனித்துவமானது.
  • இந்தியா சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது,
  • ஏனெனில் ஒத்துழைப்பு மூலமே நாடுகளிடையேயான பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.
  • இந்தியா தன் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துகிறது.
  • வள ஆதாரங்கள், கருவிகள் மற்றும் பயிற்சி ஆகிய வடிவில் அண்டை நாடுகளுக்குத் தேவையான ஆதரவினை இந்தியா அளித்து வருகிறது.
  • பொருட்கள். மக்கள் ஆற்றல். மூலதனம் மற்றும் தகவல்கள் ஆகியவற்றின் தடையில்லா பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக அதிக இணைப்பும் ஒருங்கிணைப்பும் அளிக்கப்படுகிறது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
பாதுகாப்பு படைப்பிரிவுகளில் பணிசெய்வது நாட்டின் மிக மதிப்பு மிக்க மற்றும் மரியாதைக்குரிய நிலையை உறுதிப்படுத்துகிறது. அதன் முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக.

IX. செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள்

Question 1.
நமது பாதுகாப்பு அமைப்புப் பற்றி ஒரு படத்தொகுப்பு தயார் செய்க.

Question 2.
இந்திய இராணுவத்தில் வழங்கப்படும் விருதுகள் குறித்த தகவல்களைச் சேகரி. (உ.ம். பரம்வீர் சக்ரா )

Question 3.
வகுப்பில் உள்ள மாணவர்களை எட்டு குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவும் ஒரு சார்க் நாட்டின் பிரதிநிதியாகும். ஒவ்வொரு குழுவும் அந்த நாட்டின் பெயர் மற்றும் தேசியக்கொடியினைக் காட்சிப்படுத்தவும். பின்வரும் தலைப்புகளில் குழு கலந்துரையாடல் அல்லது வினாடி வினா நடத்தவும்.
i) நிலம் மற்றும் மக்கள்
ii) அரசாங்கத்தின் அமைப்பு
iii) மூலதனம்
iv) நாணயம்
v) இந்தியாவுடனான உடன்பாட்டு அம்சங்கள்

8th Social Science Guide பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்திய ஆயுதப் படைகள் எதன் கீழ் செயல்படுகின்றன?
அ) பாதுகாப்பு அமைச்சகம்
ஆ) வெளியுறவுத் துறை அமைச்சகம்
இ) உள்துறை அமைச்சகம்
ஈ) தேசிய பாதுகாப்பு அமைச்சகம்
விடை:
அ) பாதுகாப்பு அமைச்சகம்

Question 2.
சீன-இந்தியப் போர் நடைபெற்ற ஆண்டு,
அ) 1963
ஆ) 1962
இ) 1965
ஈ) 1959
விடை:
ஆ) 1962

Question 3.
இந்திய கடலோர காவல் படை எதன் கீழ் செயல்படுகிறது?
அ) பாதுகாப்பு அமைச்சகம்
ஆ) வெளியுறவுத் துறை அமைச்சகம்
இ) உள்துறை அமைச்சகம்
ஈ) கடற்படைத் தளபதி
விடை:
அ) பாதுகாப்பு அமைச்சகம்

Question 4.
இனவெறிக் கொள்கை பின்பற்றப்பட்ட நாடு.
அ) தென் அமெரிக்கா
ஆ) தென் ஆப்பிரிக்கா
இ) ஸ்ரீலங்கா
ஈ) இந்தியா
விடை:
ஆ) தென் ஆப்பிரிக்கா

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 5.
இந்தியா எந்த நாட்டோடு பொதுவான நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை?
அ) நேபாளம்
ஆ) பர்மா
இ) ஆப்கானிஸ்தான்
ஈ) ஸ்ரீலங்கா
விடை:
ஈ) ஸ்ரீலங்கா

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
உலக அளவில் மிகப்பெரிய தன்னார்வப் படைப்பிரிவு ………… ஆகும்.
விடை:
இந்திய இராணுவப்படை

Question 2.
இந்தியக் கடற்படை …………. பிரிவுகளைக் கொண்டது.
விடை:
மூன்று

Question 3.
இந்திய இராணுவத்தின் மிக உயர்ந்த பதவி …………. ஆகும்.
விடை:
பீல்டு மார்ஷல்

Question 4.
இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் ………….. ஆவார்.
விடை:
சாம் மானக்ஷா

Question 5.
இந்தியாவின் இரண்டாவது பீல்டு மார்ஷல் ………….. ஆவார்.
விடை:
கே.எம். கரியப்பா

Question 6.
இனவெறிக் கொள்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆண்டு
விடை:
1990

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை 2

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
சிறப்பு எல்லைப்புறப் படை இந்திய கடற்படையின் ஒரு பிரிவு ஆகும்.
விடை:
தவறு

Question 2.
விரைவு அதிரடிப் படை இயற்கை பேரழிவு மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளைச் செய்கிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 3.
முதலாம் இராஜேந்திரன் இலங்கையின் மீது கடற்படையெடுப்பை நிகழ்த்தினார்.
விடை:
தவறு

Question 4.
இந்தியா பி.பி.ஐ.என். என்ற கூட்டமைப்பில் ஒரு உறுப்பு நாடாகும்.
விடை:
சரி

Question 5.
அணிசேராமை என்பது நடுநிலைமையும் அல்ல. ஈடுபாடின்மையும் அல்ல.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் தொடர்பான பின்வரும் கூற்றினை ஆராய்க.
I. அஸ்ஸாம் ரைபிள்ஸ் 1835 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
II. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

அ) 1 மட்டும் சரி
ஆ) II மட்டும் சரி
இ) 1 மற்றும் II சரி
ஈ) மற்றும் II தவறு
விடை:
அ) மட்டும் சரி

Question 2.
கூற்று : தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிகச்சிறந்த வெற்றியாகும்.
காரணம் : இந்தியா அனைத்து வகையான இனப்பாகுபாட்டிற்கும் எதிராகப் போராடியது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 3.
ஊர்க்காவல் படை பற்றிய பின்வரும் எந்த கூற்று / கூற்றுகள் சரியானது அல்ல?
I. இந்திய ஊர்க்காவல் படை இந்திய இராணுவத்திற்குத் துணையான ஒரு தன்னார்வப் படை ஆகும்.
II. 20 முதல் 35 வயதுடைய இந்தியக் குடிமக்கள் ஊர்க்காவல் படையில் சேரலாம்.
III. ஊர்க்காவல் படையில் சேரும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.

அ) 1 மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) II மட்டும்
ஈ) III மட்டும்
விடை:
அ) 1 மற்றும் II

Question 4.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) மத்திய ரிசர்வ் காவல் படை
ஆ) இந்தோ -திபெத்திய எல்லைக் காவல்
இ) எல்லை பாதுகாப்புப் படை
ஈ) சிறப்பு எல்லைப் புற படை
விடை:
ஈ) சிறப்பு எல்லைப் புற படை

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
இந்திய கடற்படை பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  • இந்திய கடற்படையின் முதன்மை நோக்கம் நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதாகும்.
  • இது நாட்டின் பிற ஆயுதப்படைகளுடன் இணைந்து செயல்படுகிறது.
  • இந்திய நிலப்பகுதி. மக்கள். கடல்சார் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அல்லது தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுகிறது.
  • இது அட்மிரல் என்றழைக்கப்படும் கடற்படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது.
  • இது மூன்று கடற்படைப் பிரிவுகளைக் கொண்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 2.
எல்லை பாதுகாப்புப் படையின் பணிகளைக் கூறு.
விடை:
எல்லை பாதுகாப்புப் படை இந்திய நில எல்லைப் பகுதிகளைக் காப்பது மற்றும் நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.

Question 3.
ஊர்க்காவல் படை பற்றி உமக்கு யாது தெரியும்?
விடை:

  • ஊர்க்காவல் படை ஒரு தன்னார்வப் படை ஆகும்.
  • இது இந்தியக் காவல்துறைக்கு துணையாக பணியாற்றுகிறது.
  • இப்படையின் உறுப்பினர்கள் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளான தொழில்சார் வல்லுநர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாய மற்றும் தொழில்துறை பணியாளர்கள் ஆகியோர்களிடமிருந்து நியமிக்கப்படுகிறார்கள்.
  • 15 முதல் 50 வயதுடைய அனைவரும் உறுப்பினராகலாம்.
  • உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.

Question 4.
இந்தியாவுடன் பொது எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் யாவை?
விடை:

  • பாகிஸ்தான்
  • ஆப்கானிஸ்தான்
  • நேபாளம்
  • சீனா
  • பூடான்
  • வங்காளதேசம்
  • மியான்மர்

Question 5.
இந்தியாவின் அண்டை நாடுகள் யாவை?
விடை:

  • வடமேற்கில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
  • வடக்கில் சீனா, நேபாளம், பூடான்
  • கிழக்கில் வங்காளதேசம்
  • தூரகிழக்கில் மியான்மர்
  • தென்கிழக்கில் இலங்கை
  • தென்கிழக்கில் மாலத்தீவு

VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

Question 1.
அணிசேராமை பற்றி விவரிக்க.
விடை:
அணிசேராமை என்ற சொல் வி.கே. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

அறிவியல் அணிசேராமை என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தலைமையிலான இராணுவக் கூட்டில் இணையாமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலே அணி சேராதிருத்தலின் நோக்கமாகும். அணிசேராமை என்பது நடுநிலைமையும் அல்ல, ஈடுபாடின்மையும் அல்ல.

அணிசேராமை என்பது எந்தக் கூட்டணியிலும் சேராமல் சர்வதேச பிரச்சனைகளில் சுதந்திரமாக தீர்மானிக்கும் நிலைபாட்டைக் குறிக்கும்.

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்:
இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, யுகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை 3

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

8th Social Science Guide சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சிவப்பு விளக்கு ஒளிரும் போது
அ) பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லலாம்.
ஆ) நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.
இ) உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்
ஈ) செல்லிடப்பேசியில் உரையாடலாம்
விடை:
ஆ) நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.

Question 2.
பாதசாரிகள் சாலையைக் கடக்குமிடம்
அ) எங்குவேண்டுமானாலும்
ஆ) சமிக்ஞைகளுக்கு அருகில்
இ) வரிகோட்டு பாதையில்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) வரிகோட்டு பாதையில்

Question 3.
சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்
அ) டிசம்பர்
ஆ) ஜனவரி
இ) மார்ச்
ஈ) மே
விடை:
ஆ) ஜனவரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 4.
அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்
அ) 108
ஆ) 100
இ) 106
ஈ) 101
விடை:
அ) 108

Question 5.
சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?
அ) அதிவேகம்
ஆ) குடிபோதையில் ஓட்டுதல்
இ) ஓட்டுநர்கள் கவனச்சிதறல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும் .

Question 6.
போக்குவரத்துக் குறியீடுகளின் முதல் வகை
அ) கட்டாய குறியீடுகள்
ஆ) எச்சரிக்கை குறியீடுகள்
இ) தகவல் குறியீடுகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) கட்டாய குறியீடுகள்

Question 7.
சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
அ) 2014
ஆ) 2015
இ) 2016
ஈ) 2017
விடை:
இ) 2016

Question 8.
ABS என்பதனை விரிவாக்கம் செய்க.
அ) எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)
ஆ) வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)
இ) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti – lock Braking System)
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti – lock Braking System)

Question 9.
வளைவில் முந்துவது
அ) அனுமதிக்கப்படுகிறது
ஆ) அனுமதியில்லை
இ) கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
ஈ) நமது விருப்பம்
விடை:
ஆ) அனுமதியில்லை

Question 10.
அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது
அ) முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்கவேண்டும்.
ஆ) முன்னுரிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை.
இ) நம் வாகனத்தினைச் சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.
ஈ) அவசர சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்.
விடை:
இ) நம் வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் ……………… புறம் செல்லவும்
விடை:
இடது

Question 2.
கட்டாய குறியீடுகள் ………… வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
விடை:
வட்ட

Question 3.
………………. வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றது
விடை:
வேகக் கட்டுப்பாட்டுக் கருவி

Question 4.
அதிக வேகம் : ………………. ஆபத்து
விடை:
அதிக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 5.
நான்கு சக்கர வாகனத்தில் ………….. அணிவதும் இரு சக்கர வாகனத்தில் …………… அணிவதும் கட்டாயம் எனச் சட்டம் உள்ளது.
விடை:
இருக்கை வார்பட்டை, தலைக்கவசம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
சாலை விபத்துக்கள் தொடர்பான பிரச்சனை சாலையில் மட்டுமே உள்ளது.
விடை:
தவறு

Question 2.
பாதை தடத்தை மாற்றும் முன்பு கண்ணாடியினைப் பார்க்க வேண்டும்.
விடை:
சரி

Question 3.
ஒளிரும் மஞ்சள் விளக்கு, வேகத்தினை குறைத்தும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
விடை:
சரி

Question 4.
இருசக்கர வண்டியில் ஒருவர் மட்டுமே பின் இருக்கையில் அமர அனுமதிக்கப்படுகிறார்கள்.
விடை:
சரி

Question 5.
சாலைகள் மனிதனின் மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று.
விடை:
தவறு

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வரும் கூற்று(களில்) சரியல்லாதது எது?
i) முன்புற வாகனத்திலிருந்து சரியான இடைவெளியில் தொடரவும்.
ii) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடிக்க வேண்டும். ஒருபோதும் வேகத்திற்கான எல்லையினைத் தாண்டக்கூடாது.
iii) வாகனம் ஓட்டும்பொழுது இருக்கை வார்பட்டை அணியத் தேவையில்லை.
iv) வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகத்தினைக் குறைக்க வேண்டாம்.

அ) i, iii மட்டும்
ஆ) ii, iv மட்டும்
இ) i, ii மட்டும்
ஈ) iii, iv மட்டும்
விடை:
ஈ) iii, iv மட்டும்

Question 2.
கூற்று : மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்களை ஏற்படுத்துகின்றது.
காரணம் : மயக்கம் காரணமாக பார்வை பாதிக்கப்படுகின்றது.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

Question 3.
கூற்று : சாலை குறியீடுகள் எளிதில் புரிந்துகொள்ள கூடிய ஒன்று.
காரணம் : அவைகள் பெரும்பாலும் படங்களாக இருக்கின்றன.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 4.
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி (சாலை பாதுகாப்பு விதிகள்)
அ) வளைவுகளில் மெதுவாக செல்
ஆ) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடி
இ) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து
ஈ) சாலைகளில் நடப்பதைத் தவிர்க்கவும்
விடை:
இ) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து

Question 5.
பின்வரும் குறியீடுகள் எதைக் குறிப்பிடுகின்றன.
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 3
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 2

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
சாலை பாதுகாப்பினை நீவிர் எவ்வாறு உறுதி செய்வாய்?
விடை:
சாலைப் பாதுகாப்பினை உறுதி செய்தல்:

  • நான் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் குறியீடுகளை கண்டிப்பாக பின்பற்றுவேன்.
  • சாலை விபத்துக்கள் யூகிக்கக்கூடியவை அதனால் அவை நிகழாமல் தடுக்க வேண்டும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 2.
சாலை பாதுகாப்பு நமக்கு ஏன் முக்கியமானது?
விடை:
சாலை பாதுகாப்பு முக்கியமானது:
ஏனெனில்

  • சாலையில் ஏற்படும் விபத்துகள் மற்றும் நிகழும் அசம்பாவிதங்கள் வருந்தத்தக்க நிகழ்வுகள் ஆகும். இவை படுகாயங்களுக்கும் இறப்பிற்கும் வழி வகுக்கின்றன.
  • இந்த இறப்புகள் மற்றும் படுகாயங்கள் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன.

Question 3.
சாலை விபத்துக்களின் நேரடி விளைவுகள் என்ன?
விடை:
சாலை விபத்துக்களின் நேரடி விளைவுகள்:

  • உயிரிழப்பு
  • படுகாயம்
  • உடமைகளுக்கு சேதம்

Question 4.
போக்குவரத்து சமிக்ஞைகளின் விளக்குகளின் படம் வரைந்து அதன் பொருளைக் குறிப்பிடு.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 4

Question 5.
சாலை பாதுகாப்புக் குறித்த பிரேசிலியா அறிவிப்பைப் பற்றிக் குறிப்பு எழுதுக.
விடை:
சாலை பாதுகாப்புக் குறித்த பிரேசிலியா அறிவிப்பு:
ஐ.நா உலக சுகாதார அமைப்பு இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பிற்கான இரண்டாவது உலகளாவிய மாநாடு. இந்தியா பிரேசிலியா பிரகடனத்தில் 2015ல் கையெழுத்திட்டது.

பங்குபெற்ற அனைவரும் இப்பதிற்றாண்டுக்குள் சாலை பாதுகாப்பினை மேம்படுத்தவும் போக்குவரத்தினால் ஏற்படும் இறப்புகளை குறைக்கும் வழிகளை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ளனர்.

Question 6.
சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கம் யாது?
விடை:
சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிப்பதன் நோக்கம்:
சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிப்பதன் நோக்கம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதும் ஆகும்.

சாலையினை உபயோகிப்பவர்களுக்கு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.

Question 7.
ஏதேனும் நான்கு சாலை விதிகளை எழுதுக.
விடை:
சாலை விதிகள் :

  • 1988 ல் இந்தியப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், 1989ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
  • ஒருவழி சாலையில் ஓட்டுநர் தனது வலதுபுறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். எதிர்புறமாக ஒரு போதும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
  • இருவழிச் சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்
  • ஓட்டுநர்கள் தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம் அருகில் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.
  • மருத்துவ ஊர்தி, தீயணைப்பு வாகனங்கள், இராணுவபாதுகாப்பு வாகனங்கள் போன்றவற்றிற்கு வழிவிடுவது நமது பொறுப்பாகும்.

Question 8.
மது அருந்துதல் வாகன ஓட்டுதலை எவ்வாறு பாதிக்கின்றது?
விடை:
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்.

  • மது அருந்துவது கவனத்தைக் குறைக்கும் அதன் காரணமாக வரும் மயக்கத்தினால் பார்வை தடைபடுகின்றது.
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

VII. விரிவான விடையளி

Question 1.
சாலை விபத்துக்களுக்கான காரணங்களை விவரி.
விடை:
சாலை விபத்துக்களுக்கான காரணங்கள்:

  1. அதிகவேகம் :
    • பெரும்பாலான உயிரிழப்பு விபத்துக்கள் அதிக வேகத்தினால்தான் ஏற்படுகின்றன. அதிக வேகம், அதிக ஆபத்து.
    • வேக அதிகரிப்பு, விபத்து மற்றும் விபத்து காயத்தின் தீவிரத்தினை அதிகரிக்கிறது. பின்னால் மிக நெருக்கமாக பின்தொடர்தல் (Tailgating) சட்டவிரோதம் மற்றும் ஆபத்தானது.
  2. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் :
    • மது அருந்துவது கவனத்தைக் குறைக்கும். அதன் காரணமாக வரும் மயக்கத்தினால் பார்வை தடைபடுகிறது.
    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துகள் ஏற்படுகின்றன.
  3. வாகன ஓட்டிகளின் கவனச் சிதறல் :
    • இந்நாட்களில் வாகனம் ஓட்டும்போது செல்லிடப் பேசியில் பேசுவது பெரிய கவனச் சிதறலாக உள்ளது.
    • கவனக் குறைவு, பகல் கனவு, வாகனம் ஓட்டும்போது கண்ணாடியைச் சரிசெய்தல், வாகனத்தில் உள்ள ஒலி சாதனம், சாலையில் விலங்குகள் நடமாட்டம் பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அகியவையும் கவனச் சிதறல்களுக்கான காரணங்கள்.
  4. சிவப்பு விளக்கில் நில்லாமை :
    • நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பதே சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்வதன் முக்கிய நோக்கம்.
    • போக்குவரத்து சைகைகளை முறையாகச் கடைப்பிடிக்கும்போது நேரம் சேமிக்கப்படுகிறது. சேர வேண்டிய இடத்தை உரிய நேரத்தில் பாதுகாப்புடன் சென்றடைய முடிகிறது.
  5. பாதுகாப்பு கருவிகளை தவிர்த்தல் :
    • விபத்துக்களின் போது ஏற்படும் காயங்களின் தீவிரத்தை நான்கு சக்கர வாகனங்களில் இருக்கைப் பட்டை அணிவதும், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதும் குறைக்கின்றன.
      பிறகாரணிகள் :

      • ஓட்டுநர்கள்
      • பாதசாரிகள்
      • பயணிகள்
      • வாகனங்கள்
      • சாலைகளின் தரம்
      • வானிலை ஆகும்.

Question 2.
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை விளக்குக.
விடை:
சாலைவிபத்துக்கள் தடுக்க இந்திய அரசாங்கத்தின் முயற்சிகள் :
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், சாலை விபத்துக்களையும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒரு பன்முக ஏற்புடைய வியூகம் :
ஆங்கில எழுத்து நான்கு’E’ அடிப்படையில் சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட பன்முகயுக்தியாகும். பொறியியல், செயலாக்கம், கல்வி, அவரசம் (Engineering, Enforcement, Education, Emergency)

வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துதல் :

  • சரக்கு வாகனங்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் கம்பிகளை ஏற்றிச் செல்ல தடை. கனரக வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு கட்டாயம்.
  • இரு சக்கர வாகனங்களில் ABS / CBS நிறுத்தக் கருவி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருசக்கர வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்புவிளக்கு ஒளிர்விப்பான் (AHO) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பணமில்லா பரிவர்த்தனை மூலம் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம்:

  • தேசிய நெடுஞ்சாலை எண் 8 மற்றும் 33 ஆகியவற்றில் இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • தற்பொழுது தங்க நாற்கர சாலைகளிலும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு, மேற்கு இணைப்புச் சாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உடனடி விரைவு அவசர சிகிச்சை ஊர்திகள் :

  • தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவிலும் ஓர் அவசர சிகிச்சை ஊர்தி NHAI ஆல் நிறுத்தப்பட்டுள்ளது.
  • அவசர ஊர்திக்கான அழைப்புகளை ஏற்க 24 × 7 செயல்படும் அமைப்பும் தன்னார்வ தொண்டர்களுக்கு முதலுதவி பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் :
தொடர்ச்சியான உணர்கருவிகள் மூலம் வேகம் கண்டறியப்பட்டு தானாகவே வேகத்தினை குறைப்பதுடன், முன்னர் தீர்மானிக்கப்பட்ட வேகத்தினை மீறி வாகனம் செல்வதையும் தடுக்கிறன்றது

பல்வேறு செய்திக் குறியீடுகள் :
பயணிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டிய முக்கியத் தகவல்களை தெரிவிக்கும் ஒளி உமிழும் முனைய பலகைகள் (LED Boards)

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 3.
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
விடை:
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :

  • எப்பொழுதும் இடதுபுறமாகவே செல்லுதல்
  • வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகம் குறைத்தல்
  • தலைக்கவசம் அணிதல்
  • வேகவரம்பை ஒருபோதும் மீறாதிருத்தல்
  • சரியான இடைவெளி விட்டு பின் தொடர்தல்
  • நெடுஞ்சாலைகளில் வாகனம் நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்துதல்.
  • சாலை குறியீடுகளைப் பின்பற்றுதல்
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல்
  • வாகனம் ஓட்டும்பொழுது செல்லிடப்பேசியை பயன்படுத்துதலையும், அதிக சப்தம் நிறைந்த இசை கேட்பதையும் தவிர்த்தல்.
  • பாதை தடத்தை மாற்றுவதற்கு முன் கண்ணாடி வழியே வாகன வருகையை உறுதி செய்தல், வாகனம் ஓட்டும்போது அமைதியாக இருப்துடன் இருக்கை வார்பட்டையை அணிதல்.
  • பாதசாரிகள் சாலையைக் கடக்க வரிக்கோடு பாதையை மட்டும் பயன்படுத்துதல்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
இருசக்கர வாகனம் இரவில் ஓட்டும்போது தேவைப்படுவன என்ன?
விடை:
இருசக்கர வாகனம் இரவில் ஓட்டும்போது தேவைப்படுவன :

  • உங்கள் வாகனவிளக்குகளை சரியான நிலையில் வைத்திருக்கவும்.
  • சாலைகளில் நீங்கள் தெளிவாக தெரியும்படி பார்வை விசாலப்படுத்தப்பட வேண்டும்.
  • உங்கள் பார்வை தெளிவாக இருப்பதை உறுதி செய்யவும்.
  • பிறவாகனங்களின் விளக்குகளையும் சமமாகப் பாவியுங்கள்.
  • பாதுகாப்பாகவும் மெதுவாகவும் வாகனங்களை ஓட்டவும்.
  • உங்கள் வேகத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
  • சாலைகளில் காணப்படும் உயிருள்ளவற்றின் மீது உங்கள் கவனம் இருத்தல் அவசியம்.
  • சரியான அளவிலான தகுந்த உடைகளை அணியுங்கள்.
  • போதுமான ஓய்வு தேவை.
  • சரியான பயண் திட்டமிடுதல் அவசியம்.

Question 2.
ஓட்டுநர்களின் களைப்பு மற்றும் சோர்வினைக் குறைக்கும் சில வழிகளைப் பட்டியலிடுக.
விடை:
ஓட்டுநர்களின் களைப்பு மற்றும் சோர்வினைக் குறைக்கும் சிவ வழிகள் :

  • நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளுமுன் குறைந்தபட்சம் முந்தைய இரவில் 6 மணி தூக்கம் அவசியம்
  • சாதாரணமாக விழித்திருக்கும் போது கால இடைவெளிகளில் பயணம் மேற்கொள்க.
  • ஒவ்வொரு இரண்டு மணி நேர பயணத்திற்குப் பின் அல்லது ஒவ்வொரு 120 கி.மீ பயணத்திற்குப் பின் சிறிய இடைவெளி தேவை.
  • முன்னிருக்கையில் விழித்திருக்கும் பயணியுடன் பயணம் செய்க.
  • கண்களில் சோர்வு தென்பட்டால் வாகனம் ஓட்டுவதை நிறுத்துக.
  • ஓரு நாளைக்கு 8/10 மணி நேரத்திற்கு மேல் பயணிக்க வேண்டாம்.
  • வாய்ப்பு இருந்தால் வண்டி ஓட்டுவதை பார்த்து கொள்க.
  • மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்த வேண்டாம்.
  • கலைப்பால் உணர்ந்தால் 15 நிமிடங்கள் மனதை இதமாக்குக.
  • இசையை விட வானொலி பேச்சைக் கேட்க.
  • வாகனத்தின் வெப்பநிலையை இதமாக வைத்துக் கொள்க.
  • வாகன இருக்கையை புதிய நிலையில் வைத்துக்கொள்க.
  • சத்தான நொறுக்குத் தீனிகளை உண்க. சர்க்கரை தவிர்க்கவும். குடிமையியல்
  • கார் கதவு சன்னலை திறக்கவும்.
  • மிதமான அளவில் காபி அருந்துக.
  • நிறுத்துக, உடலை நிமிர்த்துக. சரிப்படுத்துக.

IX. செயல் திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
குழந்தைகளுக்கான சில அடிப்படை சாலை பாதுகாப்பு விதிகளைப் பட்டியலிடுக.

Question 2.
சாலை பாதுகாப்பு முறைகளைச் செய்து காட்டுக.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 3.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினைத் தயாரித்துப் பள்ளியில் சுற்றுக்கு அனுப்புக.

8th Social Science Guide சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தேசிய நெடுஞ்சலைகளில் ஒவ்வொரு ………………… கி.மீ தொலைவிலும் ஓர் அவசர சிகிச்சை ஊர்தி நிறுத்தப்பட்டிருக்கின்றது.
அ) 50
ஆ) 100
இ) 150
ஈ) 200
விடை:
அ) 50

Question 2.
இருசக்கர வண்டியின் பின் இருக்கையில் ……………. நபர் மட்டுமே அமர அனுமதி உண்டு .
அ) இல்லை
ஆ) ஒரு
இ) இரண்டு
ஈ) இரண்டுக்குமேல்
விடை:
ஆ) ஒரு

Question 3.
சிவப்பு வண்ண இலக்கத்தகடு ……………. வாகனத்தில் பயன்படுத்தப்படுகிறது.
அ) அயல்நாட்டு தூதர்கள்
ஆ) சாதாரண குடிமகன்
இ) மாவட்ட ஆட்சியர்
ஈ) இந்தியக் குடியரசுத் தலைவர்
விடை:
ஈ) இந்தியக் குடியரசுத் தலைவர்

Question 4.
சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டு ………..
அ) 1991 – 2000
ஆ) 2001 – 2010
இ) 2011 – 2020
ஈ) 2021 – 2030
விடை:
இ) 2011 – 2020

Question 5.
விபத்துகளின் நேரடி விளைவுகள் …………….
அ) உயிரிழப்பு
ஆ) படுகாயம்
இ) உடமைகளுக்கு சேதம்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 6.
விபத்துக்களின் போது ஏற்படும் காயங்களின் தீவிரத்தை குறைப்பவை ………………
அ) இருக்கைவார்பட்டை மற்றும் தலைக்கவசம்
ஆ) போதைப் பொருட்கள் மற்றும் மருந்துகள்
இ) பகல்கனவு மற்றும் இசை
ஈ) போதை பொருட்கள் மற்றும் அதிவேகம்
விடை:
அ) இருக்கைவார்பட்டை மற்றும் தலைக்கவசம்

Question 7.
சாலை விபத்துக்கான காரணம்
அ) தடுத்து நிறுத்தும் கருவி பழுது
ஆ) டயர் வெடித்தல் இ) அதிகப்படியான சுமை
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும் கை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பெரும்பாலான உயிரிழப்பு விபத்துக்கள் …………. காரணமாக ஏற்படுகின்றது.
விடை:
அதிக வேகம்

Question 2.
மது அருந்தியதை கண்டறிய …………. செய்யப்படுகிறது
விடை:
சீரற்ற சுவாச பரிசோதனை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 3.
சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்வதன் முக்கிய நோக்கம் ………. ஆகும்.
விடை:
நேரத்தை மிச்சப்படுத்தல்

Question 4.
இரு சக்கர வண்டியில் ஏறுவதற்கு முன் …………. பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
விடை:
தலைக்கவசம் அணிவதை

Question 5.
மோட்டார் வாகனச் சட்டம் ……………. ல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ………….. ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குவந்தது
விடை:
1988, 1989

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 5

IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தினை குறைக்கும் பொழுது தனது வலது கையினை மேல் உயர்த்தி நிதானமாக மேலும் கீழம் அசைக்க வேண்டும்.
விடை:
சரி

Question 2.
தீயணைப்பு வண்டி, அவசர சிகிச்சை ஊர்தி, காவல்துறை வாகனங்கள் ஆகியன மீட்பு வாகனங்கள்
விடை:
சரி

Question 3.
தகவல் குறியீடுகள் பொதுவாக செவ்வக வடிவில் இருக்கும்
விடை:
சரி

Question 4.
இரவில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும் போது சைகைவிளக்குகளை காவலர்கள் அணைத்துவிடலாம்
விடை:
சரி

Question 5.
வாகனம் ஓட்டும்போது எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

Question 1.
பின்வரும் கூற்று / கூற்றுகளில் சரியில்லாதது எது / எவை?
i) இந்தியா, பிரேசிலியா பிரகடனத்தில் 2015 ஆம் அண்டு கையெழுத்திட்டது.
ii) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இரு சித்திரபுத்தகங்களை வெளியிட்டுள்ளது.
iii) சாலை பாதுகாப்பு வாரம் இந்தியாவில் பொதுப்பணித்துறை அமைச்சகத்தால் துவங்கப்பட்டது.
iv) பிரேசிலியா பிரகடனம் முதலாவது உலகளாவிய உயர்மட்ட மாநாடு

அ) i, iii மட்டும்
ஆ) ii, iv மட்டும்
இ) i, ii மட்டும்
ஈ) iii, iv மட்டும்
விடை:
ஈ) iii, iv மட்டும்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 2.
கூற்று : மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துகள் ஏற்படுகிறது.
காரணம் : மது அருந்துவது கவனத்தைக் குறைத்து பார்வையை தடைபடுத்துகின்றது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்றுசரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

Question 3.
கூற்று : ஒளிரும் சிவப்பு மற்றும் மஞ்சள் சமிக்ஞைகளில் கடக்க வேண்டும்.
காரணம் : வரிக்கோடு பாதையில் ஒருபோதும் கடக்கக் கூடாது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை:
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

Question 4.
பொருந்தாத ஒன்றை கண்டுபிடி
அ) இருக்கை வார்பட்டை அணியவேண்டும்.
ஆ) இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிய வேண்டும்
இ) வாகனம் ஓட்டும்பொழுது செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது
ஈ) நெடுஞ்சாலை விதிகளை மதிக்க வேண்டாம்
விடை:
ஈ) நெடுஞ்சாலை விதிகளை மதிக்க வேண்டாம்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
சாலைவிபத்து படுகாயங்களுக்கும் இறப்பிற்கும் காரணம் என்ன?
விடை:

  • பிரச்சனை சாலைகளால் அல்ல நம் கவனக்குறைவால்தான். இது போன்ற விபரீதங்கள் ஏற்படுகின்றன.
  • மெதுவாக நகரும் வாகனங்கள் மற்றும் அதிவேக வாகனங்களைக் கொண்ட பலவகைப்பட்ட சிக்கலான போக்குவரத்தும் காரணம்.

Question 2.
‘108 அவசரகால சேவை’ – குறிப்பு வரைக.
விடை:
அவரசகால சேவை (108) :

  • இது ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம் (மருத்துவ ஊர்தி), காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள் ஆகியவற்றை அளிக்கும் ஒரு அவசரகால சேவையாகும்.
  • சாலையில் யாரேனும் பாதிக்கப்பட்டதைக் கண்டால் பதற்றப்படாமல் உதவிக்கு 108 என்ற எண்ணையும் சாலை விபத்துகளுக்கு 103 என்ற எண்ணையும் அழைக்கவும்.

Question 3.
இந்திய தண்டனைச் சட்டம் 304 A பிரிவு கூறுவதென்ன?
விடை:
இந்திய தண்டனைச் சட்டம் 304 A பிரிவு:
இந்தப்பிரிவின் கீழ் ஓட்டுநர் மீது கிரிமினல் குற்றவழக்கு பதிவு செய்ய நேரிடும். கண்மூடித்தனமாக ஓட்டுவதாலும் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பு தொடர்பான குற்றங்கள் தொடர்புடையது இப் பிரிவ.

Question 4.
ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
விடை:கட்டாய ஆவணங்கள் :

  • ஓட்டுநர் உரிமம்
  • வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்
  • வரிச் சான்றிதழ்
  • காப்பீட்டுச் சான்றிதழ்
  • வாகன உறுதித்தன்மை மற்றும் அனுமதிச் சான்றிதழ்

Question 5.
விளக்குக : “பல்வேறு வண்ண இலக்கத்தகடுகள்”
விடை:

  • சிவப்பு வண்ணத் தகடு – குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் வாகனங்களில்
  • நீல வண்ண த் தகடு – அயல்நாட்டுத் தூதர்கள் / பிரதிநிதிகள் பயன்படுத்தும் வாகனங்களில்
  • வெள்ளை வண்ணத்தகடு – சாதாரணமான குடிமகனுக்குச் சொந்தமான வாகனத்தில்
  • மஞ்சள் வண்ணத் தகடு – வணிக ரீதியான வாகனத்தில்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 6.
‘சேது பாரதம்’ என்றால் என்ன?
விடை:
சேது பாரதம் :

  • தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்களை கட்டுவதற்கான திட்டம் சேது பாரதம். இது 2016ல் தொடங்கப்பட்டது.
  • 2019ம் ஆண்டுக்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் இருப்புப் பாதை குறுக்கீடு இல்லாமல் உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

Question 7.
“வாழ்வை காப்பாற்று நிறுவனம் (Save LIFE foundation)” – சிறு குறிப்பு தருக.
விடை:
வாழ்வை காப்பாற்று நிறுவனம் :

  • இது ஒரு சுதந்திரமான, இலாபநோக்கில்லாத, அரசு சாரா, பொதுத் தொண்டு அறக்கட்டளையாகும்.
  • இந்நிறுவனம் இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ வசதியினை மேம்படுத்துவதற்காக பணியாற்றி வருகின்றது.

Question 8.
“சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டு 2011 – 2020” குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டு 2011 – 2020 :

  • ஐக்கியநாடுகள் பொதுச்சபையினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பதிற்றாண்டில் (2011 – 2020) இலட்சக்கணக்கான உயிர்களை
  • சாலைகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல்
  • சாலை உபயோகிப்பவர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
  • அவசரகால சேவையினை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் காக்க முற்படுகின்றது.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ள சாலைப்பாதுகாப்பு குறிப்புகள் யாவை?
விடை:
பரிந்துரைக்கப்பட்டுள்ள குறிப்புகள் :
ஒவ்வொருவரும் கைக்கொள்ள வேண்டியன.

  • இருக்கை வார் பட்டையை பயன்படுத்துதல்
  • இருசக்கரவண்டியில் தலைக்கவசம் அணிதல்
  • நிலைமைக்கு ஏற்றாற்போல் பாதுகாப்பான வேகத்திலும் பாதுகாப்பான இடைவெளி விட்டும் வாகனம் ஓட்டுதல்
  • மதுபோதையில் வாகனம் ஓட்டாதிருத்தல் குடிமையியல்
  • வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியை பயன்படுத்தாதிருத்தல்
  • பாதசாரிகள் அல்லது மிதிவண்டி ஓட்டுபவர் போல பார்க்கக்கூடிய அளவில் இருத்தல்.
  • நெடுஞ்சாலை விதிகளை அறிந்து மதித்தல்
  • வாகனத்தை நல்ல நிலையில் பராமரித்தல்
  • ஓட்டும் வாகனத்திற்கு பயிற்சியும் ஓட்டுநர் உரிமமும் பெறுதல்
  • விபத்து நடந்தால் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை அறிந்து கொள்ளுதல்.

Question 2.
சாலை விபத்துக்கான ‘பல்வேறு காரணிகளை’ விளக்குக.
விடை:
விபத்துக்கான பல்வேறு காரணிகள் :
ஓட்டுநர்கள் – அதிக வேகத்தில் செலுத்துதல், கண்மூடித்தனமாக ஓட்டுதல், விதிகளை மீறுதல், குறியீடுகளை புரிந்துகொள்ள தவறுதல், களைப்பு மற்றும் மது அருந்துதல்.

பாதசாரிகள் – கவனமின்மை, கல்வியறிவின்மை, தவறான இடங்களில் சாலையைக் கடப்பது, சாலையில் நடப்பது, போக்குவரத்து விதிகளை கவனிக்காமல் சாலையில் குறுக்காக செல்பவர்.

பயணிகள் – வாகனத்திற்கு வெளியே உடலின் பகுதிகளை நீட்டுதல், ஓட்டுநர்களுடன் பேசுதல், படிக்கட்டுகளில் பயணம் செய்தல், ஓடும் பேருந்தில் ஏறுதல்.

வாகனங்கள் – தடுத்து நிறுத்தும் கருவி மற்றும் வாகனத் திசை திருப்பி பழுதடைதல், சக்கரத்தில் உள்ள டயர் வெடித்தல், போதுமான வெளிச்சம் தராத முகப்பு விளக்குகள், அதிகப்படியான மற்றும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்படி சுமை ஏற்றுதல்

சாலைகளின் தரம் – பழுதடைந்த சாலைகள், குழிகளான சாலைகள், நெடுஞ்சாலைகளை இணைக்கும் அரிக்கப்பட்ட ஊரக சாலைகள், சட்டத்திற்கு புறம்பான வேகத்தடைகள் மற்றும் திருப்பங்கள்.

வானிலை – மூடுபனி, பனி, கனமழை, காற்று, புயல் மற்றும் ஆலங்கட்டி மழை.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 6

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

8th Social Science Guide மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் …………………… மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அ) ஐ.நா.சபை
ஆ) உச்ச நீதிமன்றம்
இ) சர்வதேச நீதிமன்றம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) ஐ.நா.சபை

Question 2.
1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் …………… இல் கூடினர்.
அ) பெய்ஜிங்
ஆ) நியூயார்க்
இ) டெல்லி
ஈ) இவைகளில் எதுவுமில்லை
விடை:
அ) பெய்ஜிங்

Question 3.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
அ) 1990
ஆ) 1993
இ) 1978
ஈ) 1979
விடை:
ஆ) 1993

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 4.
ஐ.நா. சபை 1979 ஆம் ஆண்டை ……………………… சர்வதேச ஆண்டாக அறிவித்தது.
அ) பெண்குழந்தைகள்
ஆ) குழந்தைகள்
இ) பெண்கள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) குழந்தைகள்

Question 5.
உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
அ) டிசம்பர் 9
ஆ) டிசம்பர் 10
இ) டிசம்பர் 11
ஈ) டிசம்பர் 12
விடை:
ஆ) டிசம்பர் 10

Question 6.
மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?
அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)
இ) மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)
ஈ) சர்வதேசப் பெண்கள் ஆண்டு
விடை:
அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHR)

Question 7.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?
அ) ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
இ) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவர்
ஈ) ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி
விடை:
ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Question 8.
உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?
ஆ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 50
விடை:
ஆ) 30

Question 9.
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?
அ) 5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை
ஆ) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
இ) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
விடை:
ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

Question 10.
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
அ) புது டெல்லி
ஆ) மும்பை
இ) அகமதாபாத்
ஈ) கொல்கத்தா
விடை:
அ) புது டெல்லி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ ………………. உண்டு .
விடை:
உரிமை

Question 2.
மனித உரிமைகள் என்பது ……………. உரிமைகள்.
விடை:
இயல்பான அடிப்படை

Question 3.
மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு …………………
விடை:
1997

Question 4.
இந்திய அரசியலமைப்பின் 24 வது சட்டப்பிரிவு ……………. ஐ தடைசெய்கிறது.
விடை:
குழந்தைத் தொழிலாளர் முறை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 5.
ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு ……………..
விடை:
1945

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகள் ஒரே மாதிரியானவை.
விடை:
தவறு

Question 2.
மனித மற்றும் குடிமகனின் உரிமைகள் அறிவிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டது.
விடை:
தவறு

Question 3.
1993ஆம் ஆண்டு மனித உரிமைச் சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக வழிவகுத்தது.
விடை:
சரி

Question 4.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.
விடை:
தவறு

Question 5.
மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய, மாநில அளவிலான மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
தவறான கூற்றை கண்டறியவும்
அ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.
ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.
இ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.
ஈ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டதாகும்.
விடை:
ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்

Question 2.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.
அ) இது 1993 இல் நிறுவப்பட்டது.
ஆ) மனித உரிமை மீறல் வழக்குகளில் குற்றவாளியைத் தண்டிக்க ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை .
இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
ஈ) இந்த ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்புகிறது.
விடை:
இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்

Question 3.
கூற்று : டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
காரணம் : இது எலினார் ரூஸ்வெல்டின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்று காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 4.
பின்வரும் கூற்றை ஆராய்க.
1) மாநில மனித உரிமைகள் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு ஆகும்.
2) மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக்

கொண்டதாகும். மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1,2
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) 1 மட்டும்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
மனித உரிமைகள் என்றால் என்ன?
விடை:
மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக் குழுக்களின் தன்மை, மொழி மற்றம் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும்.

Question 2.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் (UDHR) முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் (UDHR) முக்கியத்தும் :

  • உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா பொதுச்சபையால் 1948ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இந்த அறிவிப்பு பாரிஸ் நகரில் (பிரான்ஸ்) 1948ம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. (பொதுச்சபை தீர்மானம் 217 A)
  • இது மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என்று அழைக்கப்படுகிறது.
  • இதன் கொள்கைகள் 185க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. உலக மனித உரிமைகள் அறிவிப்பு 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Question 3.
இந்திய அரசியலமைப்பின் 45 வது சட்டப்பிரிவு எதனை அறிவுறுத்துகிறது?
விடை:
இந்திய அரசியலமைப்பின் 45வது சட்டப்பிரிவு :
பிரிவு 45 ஆறு (6) வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசு முயல்கிறது.

Question 4.
கல்வி உரிமைச் சட்டம் பற்றி எழுதுக.
விடை:
கல்வி உரிமைச் சட்டம் :
சட்டப்பிரிவு 21A அரசாங்கம் 6 முதல் 14வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.

Question 5.
பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களைக் குறிப்பிடுக.
விடை:
பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் :

  • இந்து விதவை மறுமணச் சட்டம் 1856 (விதவைகள் மறுமணத்தை சட்ட பூர்வமாக்கியது)
  • வரதட்சணைத் தடைச் சட்டம் 1961
    (வரதட்சணை என்ற பெயரில் மோசமாக நடத்துவதற்கு கடுமையான தண்டனை வழங்குகிறது.
  • வன்கொடுமை தடுப்பு சட்டம் 2005 (கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் துன்புறுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது)

Question 6.
அரசியல் உரிமைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
விடை:
அரசியல் உரிமைகள் :

  • கருத்துச் சுதந்திரம்
  • அமைதியாக கூட்டம் நடத்துதல்
  • தன் நாட்டின் அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் உரிமை
  • வாக்களிக்கும் உரிமை
  • பேச்சுரிமை
  • ந தகவல்களைப் பெறும் உரிமை

Question 7.
மனித உரிமைகளின் ஐந்து முதன்மைப் பிரிவுகளை குறிப்பிடுக.
விடை:
மனித உரிமைகளின் முதன்மைப் பிரிவுகள் :

  1. வாழ்வியல் உரிமைகள்
  2. அரசியல் உரிமைகள்
  3. சமூக உரிமைகள்
  4. பொருளாதார உரிமைகள் 5.கலாச்சார உரிமைகள்

VII. விரிவான விடையளி

Question 1.
மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகளை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 2
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 3

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 2.
மனித உரிமைகளின் ஏதேனும் ஐந்து அடிப்படைப் பண்புகளை விவரி.
விடை:
மனித உரிமைகளின் அடிப்படைப்பண்புகள் :
இயல்பானவை : மனித உரிமை எந்த ஒரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை.

அடிப்படையானவை : மனிதனின் வாழ்க்கையும் கண்ணியமும் இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் அர்த்தமற்றதாகிவிடும்.

மாற்றமுடியாதவை : மனித உரிமைகள் தனிநபரிடம் இருந்து பறிக்கமுடியாதவை

பிரிக்க முடியாதவை : பிற உரிமைகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்தாலும் இந்த அடிப்படை மனித உரிமைகளை மறுக்க முடியாது.

உலகளாவியவை: ஒருவரின் தோற்றம் (அல்லது) நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் இந்த உரிமைகள் அமல்படுத்தப்படுகின்றன.

உலகளாவியவை : ஒருவரின் தோற்றம் (அல்லது) நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் இந்த உரிமைகள் அமல்படுத்தப்படுகின்றன.

சார்புடையவை : ஒரு உரிமையைப் பயன்படுத்தும் போது மற்றொன்றை உணராமல் இருக்க முடியாது. இவை ஒன்றுக்கொன்று சார்புடையவை

Question 3.
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் யாவை?
விடை:
குழந்தைகள் பாதுகாப்புக்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் :
இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

கல்வி உரிமைச் சட்டம் :
சட்டப்பிரிவு 21A அரசாங்கம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.

குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்புச் சட்டம் 1986)
15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது.

சிறார் நீதிச் சட்டம் 2000 (குழந்தைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்)
பொதுவான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.

போக்சோ (POSCO) சட்டம் 2012
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம். குழந்தைகளின் நலனே மிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டிய அம்சம் எனக் கருதுகிறது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
உலகளாவிய மனித உரிமைகள் அறிவிப்பு யாருக்கு பொருந்தும்? இது உங்களுக்கு ஏன் மக்கியமாக இருக்கிறது?
விடை:
உலகளாவிய மனித உரிமைகள் அறிவிப்பு அனைவருக்கும் பொருந்தும்.
குற்றவாளிகள், நாட்டுத் தலைவர்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள், ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், அகதிகள், நாடற்றோர், வேலையற்றோர், வேலையிலுள்ளோர், வங்கியாளர்கள், தீவிரவாதிகள், ஆசிரியர்கள், நடனக்கலைஞர்கள் விண்வெளிவீரர்கள் …..

IX. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு

Question 1.
நீங்கள் அனுபவிக்கும் பத்து உரிமைகள் மற்றும் உங்களுக்கான பொறுப்புகளைப் பட்டியலிடுக.
விடை:
நான் அனுபவிக்கும் உரிமைகள் :

  • வாழ்வுக்கான உரிமை
  • கல்விக்கான உரிமை
  • தனிநபர் சுதந்திர உரிமை
  • சமயச் சுதந்திர உரிமை
  • கருத்துச் சுதந்திர உரிமை
  • இயங்குவதற்கான உரிமை
  • சமத்துவ உரிமை
  • நீதிபெறும் உரிமை கழக அமைப்புகள் நிறுவுவதற்கான உரிமை காலச்சார சுதந்திர உரிமை

எனக்கான பொறுப்புகள் :

  • அரசியலமைப்பை ஆதரிக்க, பாதுகாக்க வேண்டிய கடமை.
  • ஜனநாயக முறைகளில் பங்கேற்றல்
  • மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி சட்டங்களை மதித்தல் மற்றும் கீழ்ப்படிதல்
  • மற்றவர்களின் உரிமைகள், நம்பிக்கைகள், கருத்துக்களை மதித்தல்.
  • தல சமூகத்தில் பங்கேற்றல்
  • மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புக்களுக்கான வருமானவரி மற்றும் பிறவரிகளை நேர்மையுடன் குறிப்பிட்ட காலவரையரையில் செலுத்துதல்.
  • தேவை ஏற்பட்டால் நாட்டைப் பாதுகாத்தல்
  • சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சனைகளை அறிந்து கொள்ளுதல்.

8th Social Science Guide மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் Additinal Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஹேபியஸ் கார்பஸ் சட்டம் (இங்கிலாந்து) ____________
அ) 1628
ஆ) 1679
இ) 1689
ஈ) 1789
விடை:
ஆ) 1679

Question 2.
மனித உரிமைகள் பற்றிய சிந்தனை வலுவாக எழுச்சி பெறக் காரணம் ____________.
அ) பிரெஞ்சுப் புரட்சி
ஆ) முதல் உலகப்போர்
இ) அமெரிக்க விடுதலைப் போர்
ஈ) இரண்டாம் உலகப் போர்
விடை:
ஈ) இரண்டாம் உலகப் போர்

Question 3.
மனித உரிமைகள் பிரகடனத்தில் __________ சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.
அ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 50
விடை:
ஆ) 30

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 4.
சமயச் சுதந்திரம் ஒரு __________
அ) வாழ்வியல் உரிமை
ஆ) சமூக உரிமை
இ) கலாச்சார உரிமை
ஈ) அரசியல் உரிமை
விடை:
இ) கலாச்சார உரிமை

Question 5.
____________ ஒரு வாழ்வியல் உரிமையாகும்.
அ) வாழ்வதற்கான உரிமை
ஆ) வாக்களிக்கும் உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி உரிமை
விடை:
அ) வாழ்வதற்கான உரிமை 6

Question 6.
மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவற்றின் கீழுள்ள துறைகள் இந்திய அரசியலமைப்பின் ___________ அட்டவணையில் உள்ளது.
அ) ஐந்தாவது
ஆ) ஆறாவது
இ) ஏழாவது
ஈ) எட்டாவது
விடை:
இ) ஏழாவது

Question 7.
சர்வதேச பெண்கள் ஆண்டு ________
அ) 1975
ஆ) 1976
இ) 1977
ஈ) 1978
விடை:
ஈ) 1978

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
முக்கியமான தேசியச் சொத்தாகக் கருதப்படுவது ___________
விடை:
குழந்தை

Question 2.
முதுமை காலத்தில் ___________ மனித உரிமைகளாக கருதப்படுகின்றன.
விடை:
பாதுகாப்பும் ஆதரவும்

Question 3.
__________ பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சமமான உரிமைகளை உறுதி செய்கிறது.
விடை:
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம்

Question 4.
___________ 1997 பெண்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
விடை:
பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம்

Question 5.
அனைத்து வகையான __________ மற்றும் தவறான பயன்பாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது சமூகத்தின் முக்கிய நோக்கம்.
விடை:
சுரண்டல்கள்

Question 6.
சிவில் உரிமைகள் ____________ உருவாக்கப்படுகின்றன.
விடை:
சமூகத்தினால்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 4

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
ஒரு தனிநபர் சமுதாயத்தில் முழுமையாக பங்கேற்பது அவசியமானது அல்ல.
விடை:
தவறு

Question 2.
எந்த ஒரு தேசமும் தனிநபருக்கான மனித உரிமைகளை பறிக்க இயலும்.
விடை:
தவறு

Question 3.
குழந்தைத் தொழிலாளர் சட்டம் 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த வழி செய்கிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 4.
ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் ஒரு அரசு சார்பு நிறுவனம்.
விடை:
தவறு

Question 5.
அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் தொகுப்பானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வேரூன்றியிருந்தது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
தவறான கூற்றைக் கண்டறியவும்
அ) பிரிவு 39 (F) ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகை செய்கிறது.
ஆ) பிரிவு 45 – 18 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க முயல்கிறது.
இ) சட்டப்பிரிவு 21A கல்வி உரிமைச் சட்டம்.
ஈ) போக்சோ சட்டம் – பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்.
விடை:
ஆ) பிரிவு 45 – 18 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க முயல்கிறது.

Question 2.
‘குழந்தைகள் உரிமை’ குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.
அ) பதினான்கு வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர்.
ஆ) குழந்தைகளின் உரிமைகள் ஐ.நா. சபையால் வெளியிடப்பட்டது.
இ) குழந்தை ஒரு முக்கியமான தேசிய சொத்து.
ஈ) தேசத்தின் எதிர்காலம் அந்நாட்டின் குழந்தைகள் எவ்வாறு வளர்ந்து முதிர்ச்சியடைகிறார்கள் என்பதை பொறுத்தது.
விடை:
அ) பதினான்கு வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர்.

Question 3.
கூற்று: UDHR உலகில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட ஆவணம் ஆகும்.
காரணம்: உலக மனித உரிமைகள் அறிவிப்பு (UDHR) 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று சரி காரணம் தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது

Question 4.
பின்வரும் கூற்றை ஆராய்க
1) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) பல உறுப்பினர்களைக் கொண்ட ஆணையம்.
2) NHRC ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது.

மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
அ) ஐந்தாவது
ஆ) ஆறாவது
இ) 1 மற்றும் 2
ஈ) எதுவுமில்லை
விடை:
இ) 1 மற்றும் 2

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
“மனித உரிமைகளுக்கான உலகளாகவி அறிவிப்பு (UDHR)” கூறுவது என்ன?
விடை:
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHR) முகவுரை :
“மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் அறிவாற்றலையும் மனசாட்சியையும் இயற்பண்பாகச் கொண்டவர்களாகவும் எல்லா மக்களிடையேயும் பொதுவான சகோதரத்துவத்தின் உணர்வை வளர்க்க கடமைப்பட்டவர்களும் ஆவர்.

Question 2.
“சைரஸ் சிலிண்டர் கி.மு. 539” குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
சைரஸ் சிலிண்டர் கி.மு. 539 :

  • பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னரான மகா சைரஸ் அடிமைகளை விடுவித்தார். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தார். இன சமத்துவத்தை நிலை நாட்டினார்.
  • ஆணைகள் அக்காடியன் மொழியில், கியூனி பார்ஃம் எழுத்துக்களில் சுட்ட களிமண் சிலிண்டரில் பதிவு செய்யப்பட்டன.
  • ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல்மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Question 3.
மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள் யாவை?
விடை:
மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள்:

  • கண்ணியம் (வாழ்வதற்கான மற்றும் ஒருமைப்பாட்டிற்கான உரிமை)
  • நீதி (நேர்மையான விசாரணைக்கான உரிமை)
  • சமத்துவம் (சட்டத்தின் முன் அனைவரும் சமம், பாகுபாடின்மை )

Question 4.
“மனித உரிமைகள் தினம்” எப்பொழுது கொண்டாடப்படுகிறது? ஏன்?
விடை:

  • மனித உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா. பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.

Question 5.
“மனித உரிமைகள் ஆணையம்” குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க ஐ.நா. சபையின் முக்கிய அங்கமான பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC) அதிகாரம் பெற்றது.

மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக தேசிய மற்றும் மாநில அளவிலான மனித உரிமை ஆணையங்கள் நிறுவப்பட்டன.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 6.
மனித உரிமை நிறுவனங்கள் – விளக்குக.
விடை:
மனித உரிமை நிறுவனங்கள் :
அரசு சாரா நிறுவனங்கள் அரசாங்கங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன் மனித உரிமைக் கொள்கைகளின்படி செயல்படுமாறு வலியுறுத்துகின்றன.

ஆன்ஸ்டி இண்டர்நேஷனல், குழந்தைகள் பாதுகாப்பு நிதியம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவை சில அரசு சாரா நிறுவனங்களாகும்.

Question 7.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் என்றால் என்ன ?
விடை:
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் :

  • இச்சட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாரிசுதாரர்களின் சட்ட பூர்வ கடமையாகிறது.
  • முதுமை காலத்தில் பாதுகாப்பும் ஆதரவும் மனித உரிமைகளாக கருதப்படுகின்றன.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
“எழுதப்பட்ட ஆவணங்களின் முன்னோடி” எனக் கருதப்படுபவை யாவை?
விடை:
எழுதப்பட்ட ஆவணங்களின் முன்னோடி:

  • மகாசாசனம் 1215 (இங்கிலாந்து)
  • உரிமை மனு 1628 (இங்கிலாந்து)
  • ஹேபியஸ் கார்பஸ் சட்டம் 1679 (இங்கிலாந்து)
  • ஆங்கில உரிமைகள் மசோதா 1689
  • மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு 1789
  • அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா 1791

Question 2.
“தேசிய மனித உரிமைகள் ஆணையம்” குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
தேசிய மனித உரிமைகள் ஆணையம்:

  • இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) 1993 அக்டோபர் 12 அன்று நிறுவப்பட்டது.
  • இது சுதந்திரமான, சட்டபூர்வமான, அரசியலமைப்பு சாராத ஓர் அமைப்பாகும்.
  • பல உறுப்பினர்கள் கொண்ட இது ஒரு தலைவரையும் பிற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
  • குடியரசுத் தலைவர் ஆணைய தலைவரையும் பிற உறுப்பினர்களையும் நியமிக்கிறார். அவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை. இதில் எது முன்னதாக வருகிறதோ அது வரை பதவியில் நீடிப்பர்.
  • ஆணையம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை சட்டம், புலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் திட்டம், பயிற்சி அளித்தல், நிர்வாகம்.
  • இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Question 3.
பெண்கள் உரிமைகளை விவரி.
விடை:
பெண்கள் உரிமைகள் :
பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளும் மனித உரிமைகளாகும். பெண்களுக்கு தங்களது உரிமைகளை முழுமையாகவும், சமமாகவும் அனுபவிக்கவும், அனைத்து பாகுபாடுகளிலிருந்தும் விடுபடவும் உரிமை உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சமமான உரிமைகளை உறுதி செய்கிறது.

1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மசோதாவை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்றுக் கொண்டது. இது பெண்களுக்கான சர்வதேச உரிமைகள் மசோதா என அழைக்கப்படுகிறது.

1995 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நான்காவது உலக மகளிர் மாநாடு, பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும், உலகளவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு தளத்தை உருவாக்கியது.

யுனிபெம் (UNIFEM) என்றழைக்கப்படும் பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு 1995 முதல் செயல்பட்டு வருகிறது. இது பெய்ஜிங் மாநாட்டின் முடிவுகளை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்டது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 5

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

8th Social Science Guide சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சமயச்சார்பின்மை என்பது
அ) அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது
ஆ) அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.
இ) எந்தசமயத்தைச்சார்ந்தகுடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாகவாழ்தல்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணைக்கமாக வாழ்தல்

Question 2.
இந்தியா ஒரு ………….. கொண்ட நாடாகும்.
அ) பல்வேறு சமயநம்பிக்கை
ஆ) பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை
இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்

Question 3.
இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு
அ) 1951
ஆ) 1976
இ) 1974
ஈ) 1967
விடை:
ஆ) 1976

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 4.
பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?
அ) அடிப்படை உரிமைகள்
ஆ) அடிப்படை கடமைகள்
இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
ஈ) அரசியலமைப்பின் முகவுரை
விடை:
ஈ) அரசியலமைப்பின் முகவுரை

Question 5.
சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது
அ) நீதித்துறை
ஆ) பாராளுமன்றம்
இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை
ஈ) அடிப்படை உரிமைகள்
விடை:
ஈ) அடிப்படை உரிமைகள்

Question 6.
அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது?
அ) சமய போதனைகள்
ஆ) நீதி நெறிக்கல்வி
இ) உடற்கல்வி
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
ஈ) இவற்றுள் எதுவுமில்லை

Question 7.
ஒரு நாடு சமயச்சார்ப்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது
அ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்
ஆ) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளைத் தடை செய்தால்
இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
ஈ) எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்
விடை:
இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சமயம் நமக்கு ……………….. போதிக்கவில்லை .
விடை:
பகைமையை

Question 2.
சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது ………………… அளிக்கிறது.
விடை:
சமஉரிமை

Question 3.
…………….. என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.
விடை:
ஆத்திகம்

Question 4.
நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் ……………. மற்றும் …………. ஊக்குவிப்பதாகும்.
விடை:
தேசிய ஒற்றுமைமையயும், ஒருமைப்பாட்டையும்

Question 5.
பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் ………………….. காட்டுவதைத் தடை செய்கிறது.
விடை:
பாகுபாடு

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
இந்திய நாட்டிற்கென ஒரு சமயம் உள்ளது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 2.
சமயச்சார்பின்மை என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது.
விடை:
தவறு

Question 3.
மொகலாய பேரரசர் அக்பர் சமயச் சகிப்புத்தன்மைக் கொள்கையை பின்பற்றினார்.
விடை:
சரி

Question 4.
சமண சமயம் சீனாவில் தோன்றியது.
விடை:
தவறு

Question 5.
இந்திய அரசாங்கம் அனைத்து சமய விழாக்களுக்கும் விடுமுறையை அறிவிக்கிறது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
i) இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை விலைமதிப்பற்ற ஒன்றாகும்.
ii) சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை .
iii) அரசியலமைப்பு பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.
iv) அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.

அ) i, ii மட்டும்
ஆ) ii, iii மட்டும்
இ) iv மட்டும்
ஈ) i, ii, iv மட்டும்
விடை:
ஈ) i, ii, iv மட்டும்

Question 2.
கூற்று : ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்.
காரணம் : அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு.

i) கூற்று சரி காரணம் தவறு
ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
iii) கூற்று தவறு, காரணம் சரி
iv) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை:
ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 3.
கூற்று : இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்.
காரணம் : இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட நாடாகும்.

i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
ii) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை .
iii) கூற்று தவறு, காரணம் சரி
iv) இரண்டும் தவறு
விடை:
i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது

Question 4.
தவறான இணையைத் தேர்க.
i) தீன் இலாகி – ஒரு புத்தகம்
ii) கஜுராஹோ – இந்து கோவில்
iii) அசோகர் – பாறைக் கல்வெட்டு
iv) இக்பால் – கவிஞர்
விடை:
i) தீன் இலாகி – ஒரு புத்தகம்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
சமயச்சார்பின்மையைப் பரப்பிட பங்களித்த சில இந்தியர்களது பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
சமயச்சார்பின்மைப் பரவலில் பங்களித்த இந்தியர்கள் :

  • இராஜாராம் மோகன்ராய்
  • சர் சையது அகமதுகான்
  • இரவீந்திரநாத் தாகூர்
  • மகாத்மா காந்தி
  • B.R அம்பேத்கர்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 2.
சமயச்சார்பின்மை என்பது எதனைக் குறிக்கிறது?
விடை:
சமயச்சார்பின்மை
“பிற மதங்களின் மீது சகிப்புத்தன்மையான அணுகு முறை மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்த குடிமக்களுடன் அமைதியாக இணங்கி வாழும் ஒரு மனப்பாங்கு” சமயச்சார்பின்மை ஆகும்.

Question 3.
சமயச்சார்பின்மையின் நோக்கங்களைக் கூறுக.
விடை:
சமயச் சார்பின்மையின் நோக்கங்கள் :
ஒரு சமயம் சார்ந்த குழு மற்றொரு சமயக்குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது.

ஒரு சமயத்தைச் சார்ந்த சில உறுப்பினர்கள் அதே சமயத்தைச் சார்ந்த மற்ற உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது. – அரசானது எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் பின்பற்ற வலியுறுத்தாமல் இருப்பது அல்லது தனிநபர்களின் சமய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது.

Question 4.
அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
விடை:
அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் சமயச்

சார்பின்மை என்பது அரசையும் மதத்தையும் தனித்தனியாக பிரிக்கும் கோட்பாடு ஆகும். பரந்த அளவில் கூறுவதென்றால் அரசானது சமய விவகாரங்களிலோ அல்லது சமயமானது அரசின் நடவடிக்கைகளிலோ தலையிடாது இருத்தல் ஆகும்.

ஒவ்வொரு குடிமகனும் தனது மனச்சாட்சியின்படி சுதந்திரமாக அவரது நம்பிக்கையை பரப்புதல், பின்பற்றுதல் மற்றும் சமயத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை வெளியிடுதல், மாற்றிக் கொள்ளுதல் அல்லது இல்லாமல் இருத்தல்.

Question 5.
சமயச்சார்பற்ற நாட்டின் சிறப்புப் பண்புக் கூறுகள் யாவை?
விடை:
சமயச் சார்பற்ற நாட்டின் பண்புகள் :

  • சுதந்திரக் கோட்பாடு – (எந்தச் சமயத்தையும் பின்பற்ற அரசின் அனுமதி)
  • சமத்துவக் கோட்பாடு – (எந்த ஒரு சமயத்திற்கும் அரசு மற்றவற்றிற்கு மேலாக முன்னுரிமை அளிக்காமை)
  • நடுநிலைக் கோட்பாடு – (சமய விவகாரங்களில் அரசின் நடுநிலைமை)

Question 6.
சமயச்சார்பின்மை தொடர்பான இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
விடை:
சமயச்சார்பின்மை தொடர்பான இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள் :

  • பிரிவு 15 – சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்தல்.
  • பிரிவு 27 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்
  • பிரிவு 27 – எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்தவொரு குடிமகனையும் வரி செலுத்துமாறு வற்புறுத்தாமை.

VII. விரிவான விடையளி

Question 1.
சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?
விடை:
சமயச்சார்பற்ற கல்வி நமக்கு தேவை.
ஏனெனில்

  • குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கும், சக்திவாய்ந்த ஆற்றல் மற்றும் அறிவான நோக்கத்தினை உருவாக்குவதற்கும்.
  • தார்மீக மற்றும் மனிதநேய பார்வையை உருவாக்குவதற்கும்.
  • இளைஞர்களை நல்ல குடிமக்களாக்க பயிற்சியளிப்பதற்கும்
  • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டுறவு வாழ்க்கை போன்ற மக்களாட்சியின் மதிப்புகளை பலப்படுத்துவதற்கும்
  • வாழ்க்கை குறித்த பரந்த பார்வையை அளிப்பதற்கும்
  • பிறரை பாராட்டுதல் மற்றவர் நிலையிலிருந்து புரிந்து கொள்ளும் மன்பான்மையை வளர்ப்பதற்கும்.
  • அன்பு, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் இரக்க உணர்வை வளர்ப்பதற்கும்.
  • பொருள் முதல்வாத கொள்கை மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கிணைக்கவும் தேவைப்படுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 2.
இந்தியா போன்ற நாட்டிற்குச் சமயச்சார்பின்மை அவசியம் – நிரூபிக்கவும்.
விடை:
இந்தியா போன்ற நாட்டிற்குச் சமயச் சார்பின்மை அவசியம்.
ஏனெனில்

  • இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்பது மட்டுமின்றி சமய மேலாதிக்கத்தைக் தடுக்க பல்வேறு வழிகளில் செயலாற்றுகிறது.
  • ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையின் மிகச் சிறந்த பேறான சுதந்திரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க சமயச்சார்பின்மை உதவுகிறது.
  • சமயச்சார்பற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை உரிமைகளுக்கு இந்திய அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது.
  • சமயச் சார்பின்மை நாகரிகப்பண்புகள் வாழ அனுமதிக்கிறது.
  • மக்கள் பிற சமயத்தை மதிக்க வலியுறுத்துகிறது
  • சமயச் சார்பின்மை சமய நம்பிக்கையைப் பொறுத்தவரை சம உரிமையை வழங்குகிறது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
சில சமயக் குழுக்கள் தங்களது சமயம் நரபலியை அனுமதிக்கிறது என்று கூறினால் அரசாங்கம் அவர்கள் கொள்கையில் தலையிடுமா?
விடை:
ஆம். சில சமயக் குழுக்கள் தங்களது சமயம் நரபலியை அனுமதிக்கிறது என்று கூறினால் அரசாங்கம் அவர்கள் கொள்கையில் தலையிடும்.

எந்த சமயமும், உயிருள்ள எந்தப் பொருளையும் கொல்ல போதிக்கவில்லை, இரக்கம் (கருணை) காட்டுதல் அனைத்து சமயங்களின் அடிப்படைப்பண்பு. நமது நாட்டின் சட்டம் கூட உயிர்களைக் கொல்லுதல் சட்டவிரோதம் என அறிக்கையிடுகிறது. மேலும் நரபலி மனித உரிமைகளுக்கு எதிரானது.

IX. செயல் திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
உனது பள்ளி நாட்காட்டியில் உள்ள விடுமுறை நாட்களைக் கவனி. அவற்றில் வெவ்வேறு சமயங்களுடன் தொடர்புடையவை எவை? அவற்றைச் சமயங்களின் அடிப்படையில் பட்டியலிடுக. அது எதனைக் குறிக்கிறது.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் 2
(பொதுவாக பொங்கல் திருவிழா, உழவர் திருநாள்)

Question 2.
நீ எவ்வாறு சமயச் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வாய்?
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் 3

8th Social Science Guide சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சமயச் சார்பின்மை இந்தியா போன்ற சமூகத்திற்கு ……………… ஒன்றாகும்.
அ) மதிப்புமிக்க
ஆ) மதிப்பற்ற
இ) பொருளற்ற
ஈ) அர்த்தமற்ற
விடை:
அ) மதிப்புமிக்க

Question 2.
ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக் ஓர் …………….. பத்திரிக்கை எழுத்தாளர்.
அ) அமெரிக்க
ஆ) பிரெஞ்சு
இ) இத்தாலிய
ஈ) ஆங்கிலேய
விடை:
ஈ) ஆங்கிலேய

Question 3.
சமயச்சார்பின்மை என்பது பிற மதங்களின் மீதான ……………………..
அ) பகைமை
ஆ) சகிப்புத்தன்மை
இ) அன்பு
ஈ) பொறுமை
விடை:
ஆ) சகிப்புத்தன்மை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 4.
தீன் – இலாஹி என்பது ……………. பின்பற்றிய மதசகிப்பு தன்மை கொள்கை.
அ) அசோகர்
ஆ) ஷாஜஹான்
இ) அக்பர்
ஈ) அலெக்ஸாண்டர்
விடை:
இ) அக்பர்

Question 5.
இந்தியாவில் அரசாங்க மதம் …………..
அ) இந்து
ஆ) புத்தகம்
இ) கிறித்தவம்
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
ஈ) இவை ஏதுமில்லை

Question 6.
சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்தரம் வழங்கும் அரசியலமைப்பு ………….
அ) பிரிவு 16
ஆ) பிரிவு 26
இ) பிரிவு 28
ஈ) பரிவு 29 (2)
விடை:
ஆ) பிரிவு 26

Question 7.
அக்பரின் கல்லறை உள்ள இடம் ………………….
அ) சிக்கந்தரா
ஆ) புதுடெல்லி
இ) அவுரங்காபாத்
ஈ) செகந்திராபாத்
விடை:
அ) சிக்கந்தரா

Question 8.
………………. வது சட்டத்திருத்தத்தின் மூலம் முகவுரையில் சமயச்சார்பற்ற என்ற சொல் சேர்க்கப்பட்டது.
அ) 370
ஆ) 356
இ) 42
ஈ) 35
விடை:
இ) 42

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சமயச் சார்பின்மை நம்மை ……………… பண்புடன் வாழ அனுமதிக்கிறது
விடை:
நாகரிகப்

Question 2.
இந்திய அரசியலமைப்பில் 42வது சட்டத்திருத்தம் ………………. ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
விடை:
1976

Question 3.
சமயச்சார்பற்ற நாட்டில் எவருக்கும் தனிப்பட்டமுறையில் ……………….. அளிப்பதில்லை.
விடை:
சலுகை

Question 4.
நவீன தேசிய நாடுகள் அனைத்தும் …………….. கொண்டிருக்கின்றன
விடை:
பல சமயங்களை

Question 5.
இந்தியா பல்வேறு சமய …………. கொண்ட சமூகம்.
விடை:
பன்முகத்தன்மை

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் 4

IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
சமயச் சார்பின்மை சமய நம்பிக்கையை சுதந்திரமாக வெளிப்படுத்த, பின்பற்ற மற்றும் பரப்பு உரிமை வழங்குகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 2.
இந்தியாவில் முதலில் சமய சகிப்புத் தன்மையை கடைப்பிடித்த பேரரசர் அக்பர் ஆவார்.
விடை:
தவறு

Question 3.
சமயச் சார்பின்மை இந்தியாவில் மக்களாட்சி வளாச்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
விடை:
தவறு

Question 4.
சமய நம்பிக்கைகள் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுகிறது.
விடை:
தவறு

Question 5.
நமது அரசியலமைப்பு 1947ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடை:
தவறு

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
தவறான கூற்றை கண்டறியவும்
i) சமயச் சார்பற்ற இந்திய நாடானது அனைத்து சமய விழாக்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கிறது.
ii) நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் தேசிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஊக்குவிப்பது அல்ல.
iii) சமயச் சார்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
iv) குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கு சமயச் சார்பற்ற கல்வி தேவை.

அ) i, ii மட்டும்
ஆ) ii, iii மட்டும்
இ) i, iv மட்டும்
ஈ) i, ii மட்டும்
விடை:
இ) i, iv மட்டும்

Question 2.
கூற்று : சமயச்சார்பற்ற கல்வி தேவை.
காரணம் : பொருள் முதல் வாத கொள்கை மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கிணைக்க தேவைப்படுகிறது.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை:
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 3.
கூற்று : நவீன தேசிய நாடுகள் அனைத்தும் பல சமயங்களைக் கொண்டிருக்கின்றன.
காரணம் : அனைத்து சமயங்களையும் சகித்துக் கொள்ளும் தன்மை அவசியமானதாகும்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

Question 4.
தவறான இணையைத் தேர்க.
அ) புத்தகம் – ஸ்ரீலங்கா
ஆ) தெய்வீக நம்பிக்கை – தீன் – இலாஹி
இ) கல்லறை – சிக்கந்தர
ஈ) பம்பாய் மாநிலம் & ரத்திலால் – 1954
விடை:
அ) புத்தகம் – ஸ்ரீலங்கா குடிமையியல்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரும் சமயங்களின் பெயர்களைக் கூறு.
விடை:

  • இந்து
  • சமணம்
  • புத்தம்
  • சீக்கியம்

Question 2.
ஆத்திகத்திற்கும் சமயச் சார்பின்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
விடை:
ஆத்திகம் மற்றும் சமயச் சார்பின்மை :

  • ஆத்திகம் – கடவுள் அல்லது கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருத்தல்
  • சமயச்சார்பின்மை – அரசோ, சமயமோ ஒன்று மற்றொன்றின் விவகாரங்களில் தலையிடாதிருத்தல்

Question 3.
சமயச் சார்பின்மை குறித்து கவிஞர் இக்பாலின் கருத்து என்ன?
விடை:
சமயச் சார்பின்மை குறித்து கவிஞர் இக்பால் :
‘சமயம் நமக்குப் பகைமையைப் போதிக்கவில்லை நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்தியா நமது வீடு”

Question 4.
“அசோகரின் 12வது பாறை அரசானை” – சிறு குறிப்பு வரைக.
விடை:
அசோகரின் 12வது பாறை அரசானை :
கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே “அரசானது எந்த ஒரு மதத்தைச் சார்ந்த பிரிவினருக்கும் எதிராக குற்றம் காட்டாது” என்று அறிவித்த முதல் பேரரசர் அசோகர் ஆவார்..

தனது 12வது பாறை அரசானையில் “அனைத்து மதப்பிரிவினருடன் சகிப்புத் தன்மையோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது மிகுந்த மரியாதைக்குரிய மன நிலையை வளர்த்துக் கொள்ளவும்” தம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 5.
“கஜீராஹோ இந்துக் கோவில் (19ம் நூற்றாண்டு)” – சிறு குறிப்பு வரைக
விடை:
கஜீராஹோ கோவில் வழக்கமான சிகரத்திற்குப் பதில் இந்து பாணியிலான கோபுரம், சமண விதானம், புத்த ஸ்தூபி மற்றும் இஸ்லாமிய பாணியிலான குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

Question 6.
இந்தியா குறித்து நமது அரசியலமைப்பு சட்ட முகவுரை கூறுவது என்ன?
விடை:
நமது அரசியலமைப்புச் சட்ட முகவுரையின்படி :
“இந்தியா ஓர் இறையாண்மை வாய்ந்த சமதர்ம, சமயச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு.”

Question 7.
சமயச் சார்பின்மை ஏன் மக்களாட்சி வளர்ச்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது?
விடை:
சமயச் சார்பின்மை மக்களாட்சி வளர்ச்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏனெனில், நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அனைத்து மக்களும் அவர்களது சமயத்தை பின்பற்ற சுதந்திரம் பெற்றிருந்தால் மட்டுமே வலிமையான மற்றும் ஒற்றுமையான நாட்டை உருவாக்க இயலும் என்பதை உணர்த்திருந்தனர்.

Question 8.
அக்பர் தன்னுடைய கல்லறை குறித்து வலியுறுத்தியது என்ன?
விடை:
தன்னுடைய கல்லறை குறித்து அக்பரின் வலியுறுத்தல் :

  • கல்லறையில் இஸ்லாம், இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களைச் சார்ந்த கூறுகள் இடம் பெறவேண்டும்.
  • அக்பரின் கல்லறையை நாம் ஆக்ரா அருகில் உள்ள சிக்கந்தராவில் காணலாம்.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
சமயச் சார்பின்மை குறித்து இந்திய அரசியலமைப்பு கொண்டுள்ள சிறப்புக் கூறுகளை விவரி.
விடை:
சிறப்புக் கூறுகள் :

  • அரசானது எந்த ஒரு சமயத்தாலும் தன்னை அடையாளம் காணாது. சமயத்தால் கட்டுப்படுத்தப்படாததாகவும் இருக்கும்.
  • ஒவ்வொருவரும் அவரது விருப்பத்திற்கேற்ப எந்த ஒரு சமயத்தையும் பின்பற்றும் உரிமையை அரசு உறுதி செய்கிறது.
  • எந்த சமயத்திற்கும் அரசு முன்னுரிமை, சலுகை அளிப்பதில்லை.
  • எந்த ஒரு நபருக்கும் அவரது சமய நம்பிக்கையின் காரணமாக அரசு எவ்வித பாகுபாடும் காட்டாது.
  • இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தை உருவாக்குவதோடு தனிமனித மாண்பிற்கும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கிறது.

Question 2.
அரசியலமைப்பு பிரிவுகளின் அடித்தளம் – விவரி
விடை:

  • பிரிவு 15 – சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பிப்பதை தடை செய்கிறது.
  • பிரிவு 16 – பொது வேலை வாய்ப்பில் சமமான வாய்ப்பளித்தல்
  • பிரிவு 25(1) – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை வழங்குகிறது.
  • பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்ணயிக்க சுதந்திரம்
  • பிரிவு 27 – எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்தவொரு குடிமகனையும் வரி செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது.
  • பிரிவு 28 – சில கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்து நடைபெறும் சமய போதனைகள் அல்லது சமய வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் உரிமை.
  • பிரிவு 29 (2) – அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் 5