Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

8th Social Science Guide சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சிவப்பு விளக்கு ஒளிரும் போது
அ) பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லலாம்.
ஆ) நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.
இ) உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்
ஈ) செல்லிடப்பேசியில் உரையாடலாம்
விடை:
ஆ) நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.

Question 2.
பாதசாரிகள் சாலையைக் கடக்குமிடம்
அ) எங்குவேண்டுமானாலும்
ஆ) சமிக்ஞைகளுக்கு அருகில்
இ) வரிகோட்டு பாதையில்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) வரிகோட்டு பாதையில்

Question 3.
சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்
அ) டிசம்பர்
ஆ) ஜனவரி
இ) மார்ச்
ஈ) மே
விடை:
ஆ) ஜனவரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 4.
அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்
அ) 108
ஆ) 100
இ) 106
ஈ) 101
விடை:
அ) 108

Question 5.
சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?
அ) அதிவேகம்
ஆ) குடிபோதையில் ஓட்டுதல்
இ) ஓட்டுநர்கள் கவனச்சிதறல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும் .

Question 6.
போக்குவரத்துக் குறியீடுகளின் முதல் வகை
அ) கட்டாய குறியீடுகள்
ஆ) எச்சரிக்கை குறியீடுகள்
இ) தகவல் குறியீடுகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) கட்டாய குறியீடுகள்

Question 7.
சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
அ) 2014
ஆ) 2015
இ) 2016
ஈ) 2017
விடை:
இ) 2016

Question 8.
ABS என்பதனை விரிவாக்கம் செய்க.
அ) எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)
ஆ) வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)
இ) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti – lock Braking System)
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti – lock Braking System)

Question 9.
வளைவில் முந்துவது
அ) அனுமதிக்கப்படுகிறது
ஆ) அனுமதியில்லை
இ) கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
ஈ) நமது விருப்பம்
விடை:
ஆ) அனுமதியில்லை

Question 10.
அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது
அ) முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்கவேண்டும்.
ஆ) முன்னுரிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை.
இ) நம் வாகனத்தினைச் சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.
ஈ) அவசர சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்.
விடை:
இ) நம் வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் ……………… புறம் செல்லவும்
விடை:
இடது

Question 2.
கட்டாய குறியீடுகள் ………… வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
விடை:
வட்ட

Question 3.
………………. வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றது
விடை:
வேகக் கட்டுப்பாட்டுக் கருவி

Question 4.
அதிக வேகம் : ………………. ஆபத்து
விடை:
அதிக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 5.
நான்கு சக்கர வாகனத்தில் ………….. அணிவதும் இரு சக்கர வாகனத்தில் …………… அணிவதும் கட்டாயம் எனச் சட்டம் உள்ளது.
விடை:
இருக்கை வார்பட்டை, தலைக்கவசம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
சாலை விபத்துக்கள் தொடர்பான பிரச்சனை சாலையில் மட்டுமே உள்ளது.
விடை:
தவறு

Question 2.
பாதை தடத்தை மாற்றும் முன்பு கண்ணாடியினைப் பார்க்க வேண்டும்.
விடை:
சரி

Question 3.
ஒளிரும் மஞ்சள் விளக்கு, வேகத்தினை குறைத்தும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
விடை:
சரி

Question 4.
இருசக்கர வண்டியில் ஒருவர் மட்டுமே பின் இருக்கையில் அமர அனுமதிக்கப்படுகிறார்கள்.
விடை:
சரி

Question 5.
சாலைகள் மனிதனின் மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று.
விடை:
தவறு

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வரும் கூற்று(களில்) சரியல்லாதது எது?
i) முன்புற வாகனத்திலிருந்து சரியான இடைவெளியில் தொடரவும்.
ii) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடிக்க வேண்டும். ஒருபோதும் வேகத்திற்கான எல்லையினைத் தாண்டக்கூடாது.
iii) வாகனம் ஓட்டும்பொழுது இருக்கை வார்பட்டை அணியத் தேவையில்லை.
iv) வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகத்தினைக் குறைக்க வேண்டாம்.

அ) i, iii மட்டும்
ஆ) ii, iv மட்டும்
இ) i, ii மட்டும்
ஈ) iii, iv மட்டும்
விடை:
ஈ) iii, iv மட்டும்

Question 2.
கூற்று : மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்களை ஏற்படுத்துகின்றது.
காரணம் : மயக்கம் காரணமாக பார்வை பாதிக்கப்படுகின்றது.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

Question 3.
கூற்று : சாலை குறியீடுகள் எளிதில் புரிந்துகொள்ள கூடிய ஒன்று.
காரணம் : அவைகள் பெரும்பாலும் படங்களாக இருக்கின்றன.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 4.
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி (சாலை பாதுகாப்பு விதிகள்)
அ) வளைவுகளில் மெதுவாக செல்
ஆ) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடி
இ) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து
ஈ) சாலைகளில் நடப்பதைத் தவிர்க்கவும்
விடை:
இ) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து

Question 5.
பின்வரும் குறியீடுகள் எதைக் குறிப்பிடுகின்றன.
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 3
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 2

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
சாலை பாதுகாப்பினை நீவிர் எவ்வாறு உறுதி செய்வாய்?
விடை:
சாலைப் பாதுகாப்பினை உறுதி செய்தல்:

  • நான் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் குறியீடுகளை கண்டிப்பாக பின்பற்றுவேன்.
  • சாலை விபத்துக்கள் யூகிக்கக்கூடியவை அதனால் அவை நிகழாமல் தடுக்க வேண்டும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 2.
சாலை பாதுகாப்பு நமக்கு ஏன் முக்கியமானது?
விடை:
சாலை பாதுகாப்பு முக்கியமானது:
ஏனெனில்

  • சாலையில் ஏற்படும் விபத்துகள் மற்றும் நிகழும் அசம்பாவிதங்கள் வருந்தத்தக்க நிகழ்வுகள் ஆகும். இவை படுகாயங்களுக்கும் இறப்பிற்கும் வழி வகுக்கின்றன.
  • இந்த இறப்புகள் மற்றும் படுகாயங்கள் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன.

Question 3.
சாலை விபத்துக்களின் நேரடி விளைவுகள் என்ன?
விடை:
சாலை விபத்துக்களின் நேரடி விளைவுகள்:

  • உயிரிழப்பு
  • படுகாயம்
  • உடமைகளுக்கு சேதம்

Question 4.
போக்குவரத்து சமிக்ஞைகளின் விளக்குகளின் படம் வரைந்து அதன் பொருளைக் குறிப்பிடு.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 4

Question 5.
சாலை பாதுகாப்புக் குறித்த பிரேசிலியா அறிவிப்பைப் பற்றிக் குறிப்பு எழுதுக.
விடை:
சாலை பாதுகாப்புக் குறித்த பிரேசிலியா அறிவிப்பு:
ஐ.நா உலக சுகாதார அமைப்பு இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பிற்கான இரண்டாவது உலகளாவிய மாநாடு. இந்தியா பிரேசிலியா பிரகடனத்தில் 2015ல் கையெழுத்திட்டது.

பங்குபெற்ற அனைவரும் இப்பதிற்றாண்டுக்குள் சாலை பாதுகாப்பினை மேம்படுத்தவும் போக்குவரத்தினால் ஏற்படும் இறப்புகளை குறைக்கும் வழிகளை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ளனர்.

Question 6.
சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கம் யாது?
விடை:
சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிப்பதன் நோக்கம்:
சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிப்பதன் நோக்கம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதும் ஆகும்.

சாலையினை உபயோகிப்பவர்களுக்கு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.

Question 7.
ஏதேனும் நான்கு சாலை விதிகளை எழுதுக.
விடை:
சாலை விதிகள் :

  • 1988 ல் இந்தியப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், 1989ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
  • ஒருவழி சாலையில் ஓட்டுநர் தனது வலதுபுறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். எதிர்புறமாக ஒரு போதும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
  • இருவழிச் சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்
  • ஓட்டுநர்கள் தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம் அருகில் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.
  • மருத்துவ ஊர்தி, தீயணைப்பு வாகனங்கள், இராணுவபாதுகாப்பு வாகனங்கள் போன்றவற்றிற்கு வழிவிடுவது நமது பொறுப்பாகும்.

Question 8.
மது அருந்துதல் வாகன ஓட்டுதலை எவ்வாறு பாதிக்கின்றது?
விடை:
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்.

  • மது அருந்துவது கவனத்தைக் குறைக்கும் அதன் காரணமாக வரும் மயக்கத்தினால் பார்வை தடைபடுகின்றது.
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

VII. விரிவான விடையளி

Question 1.
சாலை விபத்துக்களுக்கான காரணங்களை விவரி.
விடை:
சாலை விபத்துக்களுக்கான காரணங்கள்:

  1. அதிகவேகம் :
    • பெரும்பாலான உயிரிழப்பு விபத்துக்கள் அதிக வேகத்தினால்தான் ஏற்படுகின்றன. அதிக வேகம், அதிக ஆபத்து.
    • வேக அதிகரிப்பு, விபத்து மற்றும் விபத்து காயத்தின் தீவிரத்தினை அதிகரிக்கிறது. பின்னால் மிக நெருக்கமாக பின்தொடர்தல் (Tailgating) சட்டவிரோதம் மற்றும் ஆபத்தானது.
  2. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் :
    • மது அருந்துவது கவனத்தைக் குறைக்கும். அதன் காரணமாக வரும் மயக்கத்தினால் பார்வை தடைபடுகிறது.
    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துகள் ஏற்படுகின்றன.
  3. வாகன ஓட்டிகளின் கவனச் சிதறல் :
    • இந்நாட்களில் வாகனம் ஓட்டும்போது செல்லிடப் பேசியில் பேசுவது பெரிய கவனச் சிதறலாக உள்ளது.
    • கவனக் குறைவு, பகல் கனவு, வாகனம் ஓட்டும்போது கண்ணாடியைச் சரிசெய்தல், வாகனத்தில் உள்ள ஒலி சாதனம், சாலையில் விலங்குகள் நடமாட்டம் பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அகியவையும் கவனச் சிதறல்களுக்கான காரணங்கள்.
  4. சிவப்பு விளக்கில் நில்லாமை :
    • நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பதே சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்வதன் முக்கிய நோக்கம்.
    • போக்குவரத்து சைகைகளை முறையாகச் கடைப்பிடிக்கும்போது நேரம் சேமிக்கப்படுகிறது. சேர வேண்டிய இடத்தை உரிய நேரத்தில் பாதுகாப்புடன் சென்றடைய முடிகிறது.
  5. பாதுகாப்பு கருவிகளை தவிர்த்தல் :
    • விபத்துக்களின் போது ஏற்படும் காயங்களின் தீவிரத்தை நான்கு சக்கர வாகனங்களில் இருக்கைப் பட்டை அணிவதும், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதும் குறைக்கின்றன.
      பிறகாரணிகள் :

      • ஓட்டுநர்கள்
      • பாதசாரிகள்
      • பயணிகள்
      • வாகனங்கள்
      • சாலைகளின் தரம்
      • வானிலை ஆகும்.

Question 2.
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை விளக்குக.
விடை:
சாலைவிபத்துக்கள் தடுக்க இந்திய அரசாங்கத்தின் முயற்சிகள் :
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், சாலை விபத்துக்களையும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒரு பன்முக ஏற்புடைய வியூகம் :
ஆங்கில எழுத்து நான்கு’E’ அடிப்படையில் சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட பன்முகயுக்தியாகும். பொறியியல், செயலாக்கம், கல்வி, அவரசம் (Engineering, Enforcement, Education, Emergency)

வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துதல் :

  • சரக்கு வாகனங்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் கம்பிகளை ஏற்றிச் செல்ல தடை. கனரக வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு கட்டாயம்.
  • இரு சக்கர வாகனங்களில் ABS / CBS நிறுத்தக் கருவி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருசக்கர வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்புவிளக்கு ஒளிர்விப்பான் (AHO) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பணமில்லா பரிவர்த்தனை மூலம் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம்:

  • தேசிய நெடுஞ்சாலை எண் 8 மற்றும் 33 ஆகியவற்றில் இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • தற்பொழுது தங்க நாற்கர சாலைகளிலும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு, மேற்கு இணைப்புச் சாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உடனடி விரைவு அவசர சிகிச்சை ஊர்திகள் :

  • தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவிலும் ஓர் அவசர சிகிச்சை ஊர்தி NHAI ஆல் நிறுத்தப்பட்டுள்ளது.
  • அவசர ஊர்திக்கான அழைப்புகளை ஏற்க 24 × 7 செயல்படும் அமைப்பும் தன்னார்வ தொண்டர்களுக்கு முதலுதவி பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் :
தொடர்ச்சியான உணர்கருவிகள் மூலம் வேகம் கண்டறியப்பட்டு தானாகவே வேகத்தினை குறைப்பதுடன், முன்னர் தீர்மானிக்கப்பட்ட வேகத்தினை மீறி வாகனம் செல்வதையும் தடுக்கிறன்றது

பல்வேறு செய்திக் குறியீடுகள் :
பயணிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டிய முக்கியத் தகவல்களை தெரிவிக்கும் ஒளி உமிழும் முனைய பலகைகள் (LED Boards)

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 3.
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
விடை:
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :

  • எப்பொழுதும் இடதுபுறமாகவே செல்லுதல்
  • வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகம் குறைத்தல்
  • தலைக்கவசம் அணிதல்
  • வேகவரம்பை ஒருபோதும் மீறாதிருத்தல்
  • சரியான இடைவெளி விட்டு பின் தொடர்தல்
  • நெடுஞ்சாலைகளில் வாகனம் நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்துதல்.
  • சாலை குறியீடுகளைப் பின்பற்றுதல்
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல்
  • வாகனம் ஓட்டும்பொழுது செல்லிடப்பேசியை பயன்படுத்துதலையும், அதிக சப்தம் நிறைந்த இசை கேட்பதையும் தவிர்த்தல்.
  • பாதை தடத்தை மாற்றுவதற்கு முன் கண்ணாடி வழியே வாகன வருகையை உறுதி செய்தல், வாகனம் ஓட்டும்போது அமைதியாக இருப்துடன் இருக்கை வார்பட்டையை அணிதல்.
  • பாதசாரிகள் சாலையைக் கடக்க வரிக்கோடு பாதையை மட்டும் பயன்படுத்துதல்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
இருசக்கர வாகனம் இரவில் ஓட்டும்போது தேவைப்படுவன என்ன?
விடை:
இருசக்கர வாகனம் இரவில் ஓட்டும்போது தேவைப்படுவன :

  • உங்கள் வாகனவிளக்குகளை சரியான நிலையில் வைத்திருக்கவும்.
  • சாலைகளில் நீங்கள் தெளிவாக தெரியும்படி பார்வை விசாலப்படுத்தப்பட வேண்டும்.
  • உங்கள் பார்வை தெளிவாக இருப்பதை உறுதி செய்யவும்.
  • பிறவாகனங்களின் விளக்குகளையும் சமமாகப் பாவியுங்கள்.
  • பாதுகாப்பாகவும் மெதுவாகவும் வாகனங்களை ஓட்டவும்.
  • உங்கள் வேகத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
  • சாலைகளில் காணப்படும் உயிருள்ளவற்றின் மீது உங்கள் கவனம் இருத்தல் அவசியம்.
  • சரியான அளவிலான தகுந்த உடைகளை அணியுங்கள்.
  • போதுமான ஓய்வு தேவை.
  • சரியான பயண் திட்டமிடுதல் அவசியம்.

Question 2.
ஓட்டுநர்களின் களைப்பு மற்றும் சோர்வினைக் குறைக்கும் சில வழிகளைப் பட்டியலிடுக.
விடை:
ஓட்டுநர்களின் களைப்பு மற்றும் சோர்வினைக் குறைக்கும் சிவ வழிகள் :

  • நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளுமுன் குறைந்தபட்சம் முந்தைய இரவில் 6 மணி தூக்கம் அவசியம்
  • சாதாரணமாக விழித்திருக்கும் போது கால இடைவெளிகளில் பயணம் மேற்கொள்க.
  • ஒவ்வொரு இரண்டு மணி நேர பயணத்திற்குப் பின் அல்லது ஒவ்வொரு 120 கி.மீ பயணத்திற்குப் பின் சிறிய இடைவெளி தேவை.
  • முன்னிருக்கையில் விழித்திருக்கும் பயணியுடன் பயணம் செய்க.
  • கண்களில் சோர்வு தென்பட்டால் வாகனம் ஓட்டுவதை நிறுத்துக.
  • ஓரு நாளைக்கு 8/10 மணி நேரத்திற்கு மேல் பயணிக்க வேண்டாம்.
  • வாய்ப்பு இருந்தால் வண்டி ஓட்டுவதை பார்த்து கொள்க.
  • மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்த வேண்டாம்.
  • கலைப்பால் உணர்ந்தால் 15 நிமிடங்கள் மனதை இதமாக்குக.
  • இசையை விட வானொலி பேச்சைக் கேட்க.
  • வாகனத்தின் வெப்பநிலையை இதமாக வைத்துக் கொள்க.
  • வாகன இருக்கையை புதிய நிலையில் வைத்துக்கொள்க.
  • சத்தான நொறுக்குத் தீனிகளை உண்க. சர்க்கரை தவிர்க்கவும். குடிமையியல்
  • கார் கதவு சன்னலை திறக்கவும்.
  • மிதமான அளவில் காபி அருந்துக.
  • நிறுத்துக, உடலை நிமிர்த்துக. சரிப்படுத்துக.

IX. செயல் திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
குழந்தைகளுக்கான சில அடிப்படை சாலை பாதுகாப்பு விதிகளைப் பட்டியலிடுக.

Question 2.
சாலை பாதுகாப்பு முறைகளைச் செய்து காட்டுக.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 3.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினைத் தயாரித்துப் பள்ளியில் சுற்றுக்கு அனுப்புக.

8th Social Science Guide சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தேசிய நெடுஞ்சலைகளில் ஒவ்வொரு ………………… கி.மீ தொலைவிலும் ஓர் அவசர சிகிச்சை ஊர்தி நிறுத்தப்பட்டிருக்கின்றது.
அ) 50
ஆ) 100
இ) 150
ஈ) 200
விடை:
அ) 50

Question 2.
இருசக்கர வண்டியின் பின் இருக்கையில் ……………. நபர் மட்டுமே அமர அனுமதி உண்டு .
அ) இல்லை
ஆ) ஒரு
இ) இரண்டு
ஈ) இரண்டுக்குமேல்
விடை:
ஆ) ஒரு

Question 3.
சிவப்பு வண்ண இலக்கத்தகடு ……………. வாகனத்தில் பயன்படுத்தப்படுகிறது.
அ) அயல்நாட்டு தூதர்கள்
ஆ) சாதாரண குடிமகன்
இ) மாவட்ட ஆட்சியர்
ஈ) இந்தியக் குடியரசுத் தலைவர்
விடை:
ஈ) இந்தியக் குடியரசுத் தலைவர்

Question 4.
சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டு ………..
அ) 1991 – 2000
ஆ) 2001 – 2010
இ) 2011 – 2020
ஈ) 2021 – 2030
விடை:
இ) 2011 – 2020

Question 5.
விபத்துகளின் நேரடி விளைவுகள் …………….
அ) உயிரிழப்பு
ஆ) படுகாயம்
இ) உடமைகளுக்கு சேதம்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 6.
விபத்துக்களின் போது ஏற்படும் காயங்களின் தீவிரத்தை குறைப்பவை ………………
அ) இருக்கைவார்பட்டை மற்றும் தலைக்கவசம்
ஆ) போதைப் பொருட்கள் மற்றும் மருந்துகள்
இ) பகல்கனவு மற்றும் இசை
ஈ) போதை பொருட்கள் மற்றும் அதிவேகம்
விடை:
அ) இருக்கைவார்பட்டை மற்றும் தலைக்கவசம்

Question 7.
சாலை விபத்துக்கான காரணம்
அ) தடுத்து நிறுத்தும் கருவி பழுது
ஆ) டயர் வெடித்தல் இ) அதிகப்படியான சுமை
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும் கை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பெரும்பாலான உயிரிழப்பு விபத்துக்கள் …………. காரணமாக ஏற்படுகின்றது.
விடை:
அதிக வேகம்

Question 2.
மது அருந்தியதை கண்டறிய …………. செய்யப்படுகிறது
விடை:
சீரற்ற சுவாச பரிசோதனை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 3.
சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்வதன் முக்கிய நோக்கம் ………. ஆகும்.
விடை:
நேரத்தை மிச்சப்படுத்தல்

Question 4.
இரு சக்கர வண்டியில் ஏறுவதற்கு முன் …………. பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
விடை:
தலைக்கவசம் அணிவதை

Question 5.
மோட்டார் வாகனச் சட்டம் ……………. ல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ………….. ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குவந்தது
விடை:
1988, 1989

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 5

IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தினை குறைக்கும் பொழுது தனது வலது கையினை மேல் உயர்த்தி நிதானமாக மேலும் கீழம் அசைக்க வேண்டும்.
விடை:
சரி

Question 2.
தீயணைப்பு வண்டி, அவசர சிகிச்சை ஊர்தி, காவல்துறை வாகனங்கள் ஆகியன மீட்பு வாகனங்கள்
விடை:
சரி

Question 3.
தகவல் குறியீடுகள் பொதுவாக செவ்வக வடிவில் இருக்கும்
விடை:
சரி

Question 4.
இரவில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும் போது சைகைவிளக்குகளை காவலர்கள் அணைத்துவிடலாம்
விடை:
சரி

Question 5.
வாகனம் ஓட்டும்போது எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

Question 1.
பின்வரும் கூற்று / கூற்றுகளில் சரியில்லாதது எது / எவை?
i) இந்தியா, பிரேசிலியா பிரகடனத்தில் 2015 ஆம் அண்டு கையெழுத்திட்டது.
ii) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இரு சித்திரபுத்தகங்களை வெளியிட்டுள்ளது.
iii) சாலை பாதுகாப்பு வாரம் இந்தியாவில் பொதுப்பணித்துறை அமைச்சகத்தால் துவங்கப்பட்டது.
iv) பிரேசிலியா பிரகடனம் முதலாவது உலகளாவிய உயர்மட்ட மாநாடு

அ) i, iii மட்டும்
ஆ) ii, iv மட்டும்
இ) i, ii மட்டும்
ஈ) iii, iv மட்டும்
விடை:
ஈ) iii, iv மட்டும்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 2.
கூற்று : மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துகள் ஏற்படுகிறது.
காரணம் : மது அருந்துவது கவனத்தைக் குறைத்து பார்வையை தடைபடுத்துகின்றது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்றுசரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

Question 3.
கூற்று : ஒளிரும் சிவப்பு மற்றும் மஞ்சள் சமிக்ஞைகளில் கடக்க வேண்டும்.
காரணம் : வரிக்கோடு பாதையில் ஒருபோதும் கடக்கக் கூடாது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை:
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

Question 4.
பொருந்தாத ஒன்றை கண்டுபிடி
அ) இருக்கை வார்பட்டை அணியவேண்டும்.
ஆ) இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிய வேண்டும்
இ) வாகனம் ஓட்டும்பொழுது செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது
ஈ) நெடுஞ்சாலை விதிகளை மதிக்க வேண்டாம்
விடை:
ஈ) நெடுஞ்சாலை விதிகளை மதிக்க வேண்டாம்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
சாலைவிபத்து படுகாயங்களுக்கும் இறப்பிற்கும் காரணம் என்ன?
விடை:

  • பிரச்சனை சாலைகளால் அல்ல நம் கவனக்குறைவால்தான். இது போன்ற விபரீதங்கள் ஏற்படுகின்றன.
  • மெதுவாக நகரும் வாகனங்கள் மற்றும் அதிவேக வாகனங்களைக் கொண்ட பலவகைப்பட்ட சிக்கலான போக்குவரத்தும் காரணம்.

Question 2.
‘108 அவசரகால சேவை’ – குறிப்பு வரைக.
விடை:
அவரசகால சேவை (108) :

  • இது ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம் (மருத்துவ ஊர்தி), காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள் ஆகியவற்றை அளிக்கும் ஒரு அவசரகால சேவையாகும்.
  • சாலையில் யாரேனும் பாதிக்கப்பட்டதைக் கண்டால் பதற்றப்படாமல் உதவிக்கு 108 என்ற எண்ணையும் சாலை விபத்துகளுக்கு 103 என்ற எண்ணையும் அழைக்கவும்.

Question 3.
இந்திய தண்டனைச் சட்டம் 304 A பிரிவு கூறுவதென்ன?
விடை:
இந்திய தண்டனைச் சட்டம் 304 A பிரிவு:
இந்தப்பிரிவின் கீழ் ஓட்டுநர் மீது கிரிமினல் குற்றவழக்கு பதிவு செய்ய நேரிடும். கண்மூடித்தனமாக ஓட்டுவதாலும் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பு தொடர்பான குற்றங்கள் தொடர்புடையது இப் பிரிவ.

Question 4.
ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
விடை:கட்டாய ஆவணங்கள் :

  • ஓட்டுநர் உரிமம்
  • வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்
  • வரிச் சான்றிதழ்
  • காப்பீட்டுச் சான்றிதழ்
  • வாகன உறுதித்தன்மை மற்றும் அனுமதிச் சான்றிதழ்

Question 5.
விளக்குக : “பல்வேறு வண்ண இலக்கத்தகடுகள்”
விடை:

  • சிவப்பு வண்ணத் தகடு – குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் வாகனங்களில்
  • நீல வண்ண த் தகடு – அயல்நாட்டுத் தூதர்கள் / பிரதிநிதிகள் பயன்படுத்தும் வாகனங்களில்
  • வெள்ளை வண்ணத்தகடு – சாதாரணமான குடிமகனுக்குச் சொந்தமான வாகனத்தில்
  • மஞ்சள் வண்ணத் தகடு – வணிக ரீதியான வாகனத்தில்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 6.
‘சேது பாரதம்’ என்றால் என்ன?
விடை:
சேது பாரதம் :

  • தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்களை கட்டுவதற்கான திட்டம் சேது பாரதம். இது 2016ல் தொடங்கப்பட்டது.
  • 2019ம் ஆண்டுக்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் இருப்புப் பாதை குறுக்கீடு இல்லாமல் உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

Question 7.
“வாழ்வை காப்பாற்று நிறுவனம் (Save LIFE foundation)” – சிறு குறிப்பு தருக.
விடை:
வாழ்வை காப்பாற்று நிறுவனம் :

  • இது ஒரு சுதந்திரமான, இலாபநோக்கில்லாத, அரசு சாரா, பொதுத் தொண்டு அறக்கட்டளையாகும்.
  • இந்நிறுவனம் இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ வசதியினை மேம்படுத்துவதற்காக பணியாற்றி வருகின்றது.

Question 8.
“சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டு 2011 – 2020” குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டு 2011 – 2020 :

  • ஐக்கியநாடுகள் பொதுச்சபையினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பதிற்றாண்டில் (2011 – 2020) இலட்சக்கணக்கான உயிர்களை
  • சாலைகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல்
  • சாலை உபயோகிப்பவர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
  • அவசரகால சேவையினை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் காக்க முற்படுகின்றது.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ள சாலைப்பாதுகாப்பு குறிப்புகள் யாவை?
விடை:
பரிந்துரைக்கப்பட்டுள்ள குறிப்புகள் :
ஒவ்வொருவரும் கைக்கொள்ள வேண்டியன.

  • இருக்கை வார் பட்டையை பயன்படுத்துதல்
  • இருசக்கரவண்டியில் தலைக்கவசம் அணிதல்
  • நிலைமைக்கு ஏற்றாற்போல் பாதுகாப்பான வேகத்திலும் பாதுகாப்பான இடைவெளி விட்டும் வாகனம் ஓட்டுதல்
  • மதுபோதையில் வாகனம் ஓட்டாதிருத்தல் குடிமையியல்
  • வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியை பயன்படுத்தாதிருத்தல்
  • பாதசாரிகள் அல்லது மிதிவண்டி ஓட்டுபவர் போல பார்க்கக்கூடிய அளவில் இருத்தல்.
  • நெடுஞ்சாலை விதிகளை அறிந்து மதித்தல்
  • வாகனத்தை நல்ல நிலையில் பராமரித்தல்
  • ஓட்டும் வாகனத்திற்கு பயிற்சியும் ஓட்டுநர் உரிமமும் பெறுதல்
  • விபத்து நடந்தால் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை அறிந்து கொள்ளுதல்.

Question 2.
சாலை விபத்துக்கான ‘பல்வேறு காரணிகளை’ விளக்குக.
விடை:
விபத்துக்கான பல்வேறு காரணிகள் :
ஓட்டுநர்கள் – அதிக வேகத்தில் செலுத்துதல், கண்மூடித்தனமாக ஓட்டுதல், விதிகளை மீறுதல், குறியீடுகளை புரிந்துகொள்ள தவறுதல், களைப்பு மற்றும் மது அருந்துதல்.

பாதசாரிகள் – கவனமின்மை, கல்வியறிவின்மை, தவறான இடங்களில் சாலையைக் கடப்பது, சாலையில் நடப்பது, போக்குவரத்து விதிகளை கவனிக்காமல் சாலையில் குறுக்காக செல்பவர்.

பயணிகள் – வாகனத்திற்கு வெளியே உடலின் பகுதிகளை நீட்டுதல், ஓட்டுநர்களுடன் பேசுதல், படிக்கட்டுகளில் பயணம் செய்தல், ஓடும் பேருந்தில் ஏறுதல்.

வாகனங்கள் – தடுத்து நிறுத்தும் கருவி மற்றும் வாகனத் திசை திருப்பி பழுதடைதல், சக்கரத்தில் உள்ள டயர் வெடித்தல், போதுமான வெளிச்சம் தராத முகப்பு விளக்குகள், அதிகப்படியான மற்றும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்படி சுமை ஏற்றுதல்

சாலைகளின் தரம் – பழுதடைந்த சாலைகள், குழிகளான சாலைகள், நெடுஞ்சாலைகளை இணைக்கும் அரிக்கப்பட்ட ஊரக சாலைகள், சட்டத்திற்கு புறம்பான வேகத்தடைகள் மற்றும் திருப்பங்கள்.

வானிலை – மூடுபனி, பனி, கனமழை, காற்று, புயல் மற்றும் ஆலங்கட்டி மழை.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 6