Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

9th Social Science Guide நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் …………….. என்று அழைக்கப்படுகிறது.
அ) வானிலைச் சிதைவு
ஆ) அரித்தல்
இ) கடத்துதல்
ஈ) படியவைத்தல்
விடை:
அ) வானிலைச் சிதைவு

Question 2.
இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை ………. என்று அழைக்கின்றோம்.
அ) படிவுகளால் நிரப்பப்படுதல்
ஆ) அரிப்பினால் சமப்படுத்துதல்
இ) நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
ஈ) ஏதுமில்லை
விடை:
இ) நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 3.
……………………… ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.
அ) துள்ளல்
ஆ) வண்டல் விசிறி
இ) டெல்டா
ஈ) மலை இடுக்கு
விடை:
இ டெல்டா

Question 4.
சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம் ……..
அ) பனியாறு
ஆ) காற்று
இ) கடல் அலைகள்
ஈ) நிலத்தடி நீர்
விடை:
ஈ) நிலத்தடி நீர்

Question 5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப் படவில்லை.
அ) சர்க்
ஆ) மொரைன்
இ) டிரம்லின்
ஈ) எஸ்கர்
விடை:
அ) சர்க்

Question 6.
காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் ……………… ஆகும்.
அ) காற்றடி வண்டல்
ஆ) பர்கான்
இ) ஹமாடா
ஈ) மணல் சிற்றலைகள்
விடை:
அ) காற்றடி வண்டல்

Question 7.
கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ………
அ) கடல் அலை அரித்தல்
ஆ) ஆற்று நீர் அரித்தல்
இ) பனியாறு அரித்தல்
ஈ) காற்றின் படியவைத்தல்
விடை:
அ) கடல் அலை அரித்தல்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 8.
…………. ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன.
அ) காற்று
ஆ) பனியாறு
இ) ஆறு
ஈ) நிலத்தடி நீர்
விடை:
ஆ) பனியாறு

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 50

III. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை வாசித்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
1. “I” வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
2. “U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
3. “V” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
அ) 1, 2 மற்றும் 3ம் சரி
ஆ) 1, 2 சரி
இ) 1 மற்றும் 3ம் சரி
ஈ) 2 மட்டும் சரி
விடை:
ஆ) 1, 2 சரி

Question 2.
கூற்று I: ஆறுகள் சமன்படுத்துதலின் முக்கிய காரணியாகும்.
கூற்று II :ஆறுகள் ஒடும் சரிவுகளை பொருத்து அதன் செயல்பாடு இருக்கும்.
அ) வாக்கியம் I தவறு II சரி
ஆ) வாக்கியம் I மற்றும் II தவறு
இ) வாக்கியம் I சரி வாக்கியம் II தவறு
ஈ) வாக்கியம் I மற்றும் II சரி
விடை:
ஈ) வாக்கியம் I மற்றும் II சரி

Question 3.
கூற்று : சுண்ணாம்பு பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.
காரணம் : நீர் சுண்ணாம்பு பாறையில் உட்புகாது.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி
விடை:
அ) கூற்று சரி காரணம் தவறு

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
வானிலைச்சிதைவு – வரையறு.
விடை:

  • புவியின் மேற்பரப்பு நேரடியாக வளிமண்டல நிகழ்வுகளோடு தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன.
  • இச்செயல்பாடுகளையே வானிலைச் சிதைவு என அழைக்கின்றோம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 2.
உயிரினச்சிதைவு என்றால் என்ன?
விடை:
மனித மற்றும் தாவர, விலங்கினச் செயல்பாடுகளினால் பாறைகள் சிதைவுறுதலே உயிரினச் சிதைவு எனப்படும்.
(எ.கா) (i) தாவரங்களின் வேர்கள் பாறைகளின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது.

Question 3.
ஆற்றின் மூன்று நிலைகள் யாது? அதனோடு தொடர்புடைய இரண்டு நிலத்தோற்றங்களைக் கூறுக.
விடை:

  • இளநிலை – V வடிவப்பள்ளத் தாக்குகள், குறுகிய பள்ளத்தாக்குகள்
  • முதிர் நிலை – வண்டல் விசிறிகள், குருட்டு ஆறுகள்
  • மூப்பு நிலை – டெல்டாக்கள், ஓத பொங்கு முகங்கள்

Question 4.
குருட்டு ஆறு என்றால் என்ன?
விடை:

  • ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது.
  • இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படும்.

Question 5.
கடற்குகை எவ்வாறு கடல் வளைவிலிருந்து வேறுபடுகிறது?
விடை:

  • கடல் அலைகள் தொடர்ந்து கடல் ஓங்கல்களின் மீது மோதுவதால் அடிப்பகுதி அரிக்கப்பட்டு துவாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவையே கடல் குகைகள் எனப்படுகின்றன. அருகருகே உள்ள இரண்டு கடற்குகைகளின் நீட்டு நிலங்கள்
  • அரிக்கப்படுவதால் இணைந்து ஒரு வளைவு போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவையே கடல் வளைவுகள் எனப்படும். (எ.கா) நீல் தீவு, (அந்தமான் நிக்கோபார்)

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 6.
இந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக.
விடை:

  • குப்ததாம் குகைகள் – மேற்கு பீஹார்
  • ராபர்ட் குகை – உத்தரகாண்ட்
  • பாண்டவர் குகைகள் – மத்தியபிரதேசம்
  • போரா குகைகள் – ஆந்திரப்பிரதேசம்

Question 7.
தொங்கும் பள்ளத்தாக்கு என்றால் என்ன?
விடை:
முதன்மை பனியாற்றினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணைப் பனியாற்றின் பள்ளத்தாக்கு தொங்கும் பள்ளத்தாக்கு ஆகும்.

Question 8.
வரையறு,
அ) மொரைன்
ஆ) டிரம்லின்
இ) எஸ்கர்
விடை:
அ) மொரைன்
பள்ளத்தாக்கு அல்லது கண்டப் பனியாறுகளால் படிய வைக்கப்பட்டு உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் மொரைன்கள் எனப்படும்.

ஆ) டிரம்லின்
கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைன்கள் டிரம்ளின்கள் எனப்படுகின்றன.

இ) எஸ்கர்
பனியாறுகள் உருகுவதால் அவை கொண்டு வரும் கூழாங்கற்கள், சரளைக்கற்கள் மற்றும் மணல் ஒரு நீண்ட குறுகிய தொடர் குன்று போன்று பனியாற்றுக்கு இணையாகப் படிய வைக்கப்படுகிறது. இதுவே எஸ்கர்கள் ஆகும்.

Question 9.
காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களைப் பட்டியலிடு.
விடை:

  • காளான் பாறை
  • இன்சல் பர்க்
  • யார்டங்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 10.
கடல் அலை அரிமேடை என்றால் என்ன?
விடை:

  • ஓங்கல்களின் மீது அலைகள் மோதுவதால் சற்று உயரத்தில் அரித்தல் ஏற்பட்டு தோன்றுவது அலை அரிமேடை ஆகும்.
  • இது பென்ச், திட்டு, திடல், சமவெளி எனவும் அழைக்கப்படுகிறது.

V. காரணம் கூறு

Question 1.
வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த மண்டலங்களில் வேதியியல் சிதைவு அதிகமாக ஏற்படுகிறது.
விடை:
ஏனெனில்
இரசாயனச் சிதைவுகளான ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைசல், நீர்கொள்ளல் ஆகியவை நீர், வெப்பம் இன்றி நிகழாது.

Question 2.
ஒதப்பொங்கு முகங்களில் மென்மையான வண்டல் படிவுகள் குறைவாக படிய வைக்கப்படுகிறது.
விடை:
ஏனெனில்,
ஓதப்பொங்கு முகங்களில் நிலத்தோற்றங்களில் படியவைத்தல் செயல் கிடையாது.

Question 3.
பாறைகளை அனைத்து திசைகளிலும் அரிக்கும் தன்மை காற்றுக்கு உண்டு.
விடை:
ஏனெனில்,
பூமியின் மேற்பரப்பில் அனைத்து திசைகளிலும் கிடைமட்டமாக நகரக்கூடிய வாயு காற்று ஆகும். பாறை அடுக்குகளின் அடிப்பகுதி மென்பாறைகள் தொடர்ந்து அரிக்கப்படுகின்றன.

IV. வேறுபடுத்துக.

Question 1.
இயற் சிதைவு மற்றும் வேதியியல் சிதைவு.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 65

Question 2.
டெல்டா மற்றும் ஒதபொங்கு முகம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 66

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 3.
கல்விழுது மற்றும் கல்முளை.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 70

Question 4.
நீண்ட மணற்குன்று மற்றும் குறுக்கு மணற்குன்று நீண்ட மணற்குன்று
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 75

Question 5.
இன்சல்பர்க் மற்றும் யார்டங்
விடை:
இன்சல்பர்க்
வறண்ட பிரதேசங்களில் காணப்படும் தீப்பாறைகள் (கடினப்பாறை) காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும். இவையே இன்சல்பர்க்குகள் ஆகும்.

யார்டங்
வறண்ட பிரதேசங்களில் செங்குத்தாக அமைந்திருக்கும் சிலபாறைகள் கடின மற்றும் மென்பாறை என மாறி மாறி அமைந்து இருக்கும். இந்த வரிசையில் மென்பாறைகள் காற்றினால் எளிதில் அரிக்கப்பட்டுவிடும். காற்றினால் அரிக்கப்படாத கடினப்பாறைகள் ஒழுங்கற்ற முகடுகள் போலக் காணப்படும். இவையே நிலத் தோற்றம் யார்டங்குகள் எனப்படுகின்றன.

Question 6.
நீண்ட மணல்திட்டு மற்றும் மணல்திட்டு
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 80

VII. விரிவான விடையளி

Question 1.
வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக.
விடை:
வானிலைச் சிதைவு:

  • வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன செயல்பாடுகளையே ‘வானிலைச் சிதைவு’ எனப்படும். வகைகள்
    • இயற்பியல் சிதைவு
    • இரசாயனச் சிதைவு
    • உயிரினச் சிதைவு

இயற்பியல் சிதைவு:
இயற்பியல் சக்திகளால் பாறைகள் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுதல் ‘இயற்பியல் சிதைவு’ ஆகும். பாறை உரிதல், பாறை பிரிந்துடைதல், சிறு துகள்களாக சிதைவுறுதல் இயற்பியல் சிதைவின் வகைகள்.

இரசாயனச் சிதைவு:
பாறைகளில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் உடைந்து சிதைவுறும் நிகழ்வு ‘இரசாயனச் சிதைவு’ எனப்படும். ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைதல், நீர்க்கொள்ளல் ஆடிகியன இரசாயனச் சிதைவின் வகைகள்.

உயிரினச் சிதைவு

  • தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களால் பாறைகள் சிதைவுறுதல் ‘உயிரினச் சிதைவு’ எனப்படும்.
  • தாவர வேர்கள் பாறைகளின் இடைவெளி வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்தல்,

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 2.
நிலத்தடி நீரின் அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி.
விடை:
நிலத்தடி நீர் சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் நிலவாட்டம் அமைக்கும் செயல்களினால் பலவித நிலத்தோற்றங்களை ஏற்படுத்தகின்றன.

டெர்ரா ரோஸா:
சுண்ணாம்பு நிலப்பகுதிகளில் சுண்ணாம்பு கரைந்து சிதைவுற்ற பின்னர் எஞ்சிய செம்மண் படிவு உருவாக்கும் நிலத்தோற்றம். (சிகப்புக்கு காரணம் இரும்பு ஆக்சைடு).

பேப்பீஸ்:
கரடு முரடான சுண்ணாம்புப் பாறைகளிடையே நிலத்தடி நீர் தெளிந்து ஓடும்போது ஏற்படும் நீண்ட அரிப்புக் குடைவுகள் ‘பேப்பீஸ்கள்’ ஆகும்.

உறிஞ்சு துளைகள்:
சுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளங்கள் ‘உறிஞ்சு துளைகள்’ ஆகும்.

குகைகள் மற்றும் அடிநிலக் குகைகள்:
கரியமில அமிலம் சுண்ணாம்பு பாறைகளில் வினைபுரிவதால் ஏற்படும் வெற்றிடம் குகை’ எனப்படும்.

அடிநிலக் குகைகள்:
உருவத்திலும் அளவிலும் வேறுபட்டு தரைப்பகுதி சமமற்றுக் காணப்படும் குகைகள் அடிக்கல் குகைகள் எனப்படும்.

Question 3.
பனியாறு என்றால் என்ன?
விடை:
பனியாறு:
பனிக்குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே ‘பனியாறு எனப்படும். பனியாறுகள் அவை உற்பத்தியாகும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு

  • கண்டப்பனியாறு
  • பள்ளத்தாக்குப் பனியாறு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டப் பனியாறு:
கண்டங்களில் அடர்ந்த பனிபோல் மூடப்பட்டிருக்கும் பரந்த நிலப்பரப்பு ‘கண்டப்பனியாறு’ எனப்டும்.

பள்ளத்தாகுப் பனியாறு:
பனி மூடிய மலைத்தொடர்களில் இருந்து உற்பத்தியாகும் பனியாறு பள்ளத்தாக்குப் பனியாறு’ எனப்படும்.

Question 4.
காற்று படியவைத்தல் செயலினை விவரி.
விடை:

  • காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்த தடைகள் (புதர்கள், காடுகள், பாறைகள்) காற்றின் வேகத்தை தடுப்பதால், காற்றினால் கடத்தப்பட்ட படிவுகள் காற்று வீசும் பக்கத்திலும் அதன் மறுபக்கத்திலும் படியவைக்கப்படுகின்றன.
    – காற்றின் படியவைத்தலால் எற்படும் நிலத்தோற்றங்கள்

    • மணல் குன்று
    • பர்கான்
    • காற்றடி வண்டல்

மணல் மேடு

  • பாலைவனங்களில் வீசும் மணல் புயல் மிக மிக அதிகமாக மணலைக் கடத்துகின்றன. புயலின் வேகம் குறையும் போது கடத்தப்பட்ட மணல் அதிக அளவில் படியவைக்கப்படுகின்றன. இவ்வாறு குன்று அல்லது மேடாகக் காட்சியளிக்கும் மணல் படிவு ‘மணல் மேடு’ எனப்படும்.
    – மணல் மேடுகள்

    • பர்கான்
    • குறுக்கு மணல்மேடு
    • நீண்ட மணல் மேடு என பலவகைப்படும்.

காற்றடி வண்டல்:
பரந்த பிரதேசத்தில் படிய வைக்கப்படும் மென்மையான, நுண்ணியப்படிவுகளே ‘காற்றடி வண்டல்’ எனப்படும்.

பர்கான்:
பிறை வடிவத்தில் தனித்துக் காணப்படும் மணல் மேடுகள் பர்கான்கள் எனப்படும். (காற்று வீசும் திசை – மென் சரிவு, எதிர்பக்கம் வன் சரிவு).

VIII. நில வரைபடப் பயிற்சி

கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கவும். (நில வரைபடப் புத்தக உதவியுடன்)

1. ஏதேனும் இரண்டு டெல்டாக்கள்.
2. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுண்ணாம்புப் பிரதேச பகுதி.
3. உலகில் காணப்படும் ஏதேனும் இரண்டு வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்களைக் குறிக்கவும்.

IX. உயர் சிந்தனை வினா.

Question 1.
பாலைவனங்களில் சமன்படுத்துதலின் ஒரே காரணி காற்றாகும்.
விடை:
பாலைவனங்களில் புதர்கள், காடுகள், மலைகள் அதிகம் மணல் பரப்பே அதிகம். வெப்பக்காற்று அதிகம் வீசும். தங்கு தடையின்றி வீசும் இவ்வெப்பக்காற்று காற்று வீசும் பக்கத்திலும், மறுபக்கமும் படிய வைக்கிறது. எனவே பாலைவனப் பகுதியை சமன் செய்கிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 2.
சுண்ணாம்புப் பாறைப்பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?
விடை:
சுண்ணாம்புப் பாறைப் பகுதியில் நீர் எளிதில் உறிஞ்சுதுளை வழியாக கீழே சென்று விடும். அதனால் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம்.

Question 3.
மூப்புநிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.
விடை:

  • இளநிலை ஆறு ஆரம்ப நிலையில் செங்குத்தான மலைச் சரிவுகளில் உருண்டோடுகின்றன. பாய்ந்தோடும்போது பள்ளத்தாக்கை அகலமாகவும், ஆழமாகவும் அரித்துச் செல்கின்றன.
  • மூப்பு நிலையில் அரித்துக் கடத்தி வரப்பட்ட பொருட்கள் தாழ் நிலப்பகுதியில் மெதுவாகச் சென்று நிலத்தை சமன் செய்து அகன்று காணப்படும்.

X. புவியியல் பதங்கள் எழுதுக (மாணவர்களுக்கானது)

அ) சுண்ணாம்பு நிலத்தில் உள்ள கால்சியம் கார்பனேட் பாறைகளில் ஏற்படும் வேதியல் மாற்றம்
ஆ) ஓங்கலுக்கு அருகில் காணப்படும் தட்டையான நிலப்பரப்பு
இ) அரித்தல்+கடத்துதல் = படியவைத்தல்
ஈ) பனிவயலின் எல்லைக்கோடு

9th Social Science Guide நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இரும்புத்தாது ஆக்ஸிஜனுடன் இணைந்து ……….. ஆக மாறுகிறது.
விடை:
இரும்பு ஆக்ஸைடு

Question 2.
ஆறு கடலுடன் கலக்குமிடம் …………… ஆகும்.
விடை:
முளகத்துவாரம்

Question 3.
ஆழம் குறைவான பகுதிகளில் வேகமாக செல்லும் ஆற்று நீர் …………… எனப்படுகிறது.
விடை:
துள்ளல்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 4.
உலகிலேயே மிக உயரமான நீர் வீழ்ச்சி …….
விடை:
ஏஞ்சல் நீர் வீழ்ச்சி

Question 5.
ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் குருட்டு ஆறு …………
விடை:
பீஹாரிலுள்ள கன்வர் ஏரி

Question 6.
உலகின் மிகப் பெரிய டெல்டா ………..
விடை:
கங்கை பிரம்மபுத்திரா டெல்டா

Question 7.
உலகின் மிக ஆழமான உறிஞ்சு துளை …….
விடை:
சீனாவின் சைனோசை ஜியான் காங்

II. பொருத்துக I

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 85

III. சுருக்கமான விடையளி

Question 1.
ஆற்றின் முதன்மைச் செயல்கள் யாவை?
விடை:
அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல்.

Question 2.
காளான் பாறைகள் என்றால் என்ன?
விடை:

  • மென் மற்றும் கடினப் பறைகளைக் கொண்ட பாறை அடுக்குகளின் அடிப்பகுதியில் காணப்படும் மென்பாறைகள் காற்றினால் தொடர்ந்து அரிக்கப்படும் போது அப்பாறைகள் காளான் போன்ற வடிவத்தைப் பெறுகின்றன.
  • இவ்வாறு அரிக்கப்பட்டு உருவான பாறைகள் காளான் பாறைகள் அல்லது பீடப்பாறைகள் எனப்படுகின்றன.
  • இவ்வகையானப் பாறைகள் இராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் காணப்படுகின்றன.

Question 3.
இன்சல் பர்க்குகள் என்றால் என்ன?
விடை:

  • இன்சல்பர்க் என்பது ஒரு ஜெர்மானிய வார்த்தை ஆகும். அதன் பொருள் தீவுமலை. வறண்ட பிரதேசங்களில் காணப்படும்.
  • தீப்பாறைகள் (கடினப்பாறை) காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றமே இன்சல்பர்க்குகள் ஆகும்.
  • (உதாரணம்) ஆஸ்திரேலியாவில் உள்ள உலுரு அல்லது எய்ர்ஸ் பாறை.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 4.
ஸ்பீலியோதெம்ஸ் என்றால் என்ன?
விடை:

  • குகைகளிலும், அடி நிலக்குகைகளிலும் படிய வைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஸ்பீலியோதெம்ஸ் என அழைக்கப்படுகின்றன.
  • ட்ரேவர்டைன், டூஃபோ மற்றும் சொட்டுப்படிவுகள் ஸ்பீலியோதெம்ஸில் அடங்கும்.

Question 5.
கல் விழுது – வருவி.
விடை:
குகைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் நீராவியாகும் போது கால்சைட் விழுதுகள் போன்று காட்சியளிக்கும். இது கல் விழுது என்று அழைக்கப்படுகிறது.

Question 6.
துள்ளல் என்றால் என்ன?
விடை:
ஆழம் குறைவான பகுதிகளில் வேகமாக செல்லும் ஆற்று நீர் துள்ளல் (Rapid) எனப்படுகிறது.

IV. விரிவான விடையளி

Question 1.
ஆற்றின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள் யாவை?
விடை:
‘V’ வடிவ பள்ளத்தாக்கு
ஆற்றின் செங்குத்தான அரித்தல் செய்கையால் மலைகளில் உருவாக்கப்படும் ஆழமான மற்றும் அகலமான நிலத்தோற்றமே ‘V’ வடிவபள்ளத்தாக்கு ஆகும்.

குடக்குடைவு:

  • ஆற்றின் படுகையில் செங்குத்தாக குடையப்பட்ட உருளை வடிவப்பள்ளங்களே குடக்குடைவு எனப்படுகிறது.
  • இவற்றின் விட்டமும், ஆழமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படும்.

ஆற்று வளைவுகள்:
ஆறுகளில் படிவுகள் அதிகரிப்பதால் அதன் வேகம் குறைகிறது. இதனால் ஆறுகள் வளைந்து செல்கின்றன. இவ்வளைவுகளே ஆற்று வளைவுகள் எனப்படுகின்றன.

குருட்டு ஆறு அல்லது குதிரை குளம்பு ஏரி:
ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது. இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 2.
பனியாறு அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் யாவை?
விடை:
பனியாறுகள் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் :
பனியாறுகள் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் சர்க்கு, அரெட்டு, மேட்டர்ஹார்ன், ‘U’ வடிவப் பள்ளத்தாக்கு, தொங்குப்பள்ளத்தாக்கு, பனியாறுகுடா போன்றவையாகும்.

சர்க்கு :
பனியாறுகள் மலைகளில் செங்குத்தான பக்கச்சுவர்களை அரிப்பதால் பள்ளங்கள் தோன்றுகின்றன. நாற்காலி போன்ற வடிவமுடைய இப்பள்ளங்கள் சர்க்குகள் எனப்படுகின்றன.

அரெட்டு:
இருசர்க்குகள் எதிர் பக்கங்களில் அமையும் போது அதன் பின் மற்றும் பக்கச்சுவர்கள் அரிக்கப்படுகின்றன. அரிக்கப்பட்ட சர்க்குகள் கத்திமுனை போன்ற கூரிய வடிவத்துடன் காட்சியளிக்கும்.

மேட்டர்ஹார்ன்:
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் இணையும் போது கூரிய பக்கங்களை உடைய சிகரம் போன்ற பிரமிடு வடிவத்தைப் பெறுகிறது. இது மேட்டர்ஹார்ன் எனப்படும்.

‘U’ வடிவப் பள்ளத்தாக்கு:
ஆற்றுப்பள்ளத்தாக்குகளின் வழியே பனியாறுகள் நகரும் போது அப்பள்ளத்தாக்குகள் மேலும் ஆழமாகவும், அகலமாகவும் அரிக்கப்படுவதால் ‘U’ வடிவப் பள்ளத்தாக்குகள் உருவாக்கப்படுகின்றன.

மனவரைபடம்

நிலக்கோளம் – II. புவி புறச்செயல்பாடுகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 91

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

8th Social Science Guide ஐரோப்பியர்களின் வருகை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
அ) வாஸ்கோடகாமா
ஆ) பார்த்தலோமியோ டயஸ்
இ) அல்போன்சோ – டி – அல்புகர்க்
ஈ) அல்மெய்டா
விடை:
இ) அல்போன்சோ – டி – அல்புகர்க்

Question 2.
பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
அ) நெதர்லாந்து (டச்சு)
ஆ) போர்ச்சுகல்
இ) பிரான்ஸ்
ஈ) பிரிட்டன்
விடை:
ஆ) போர்ச்சுகல்

Question 3.
1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
அ) பிரான்ஸ்
ஆ) துருக்கி
இ) நெதர்லாந்து (டச்சு)
ஈ) பிரிட்டன்
விடை:
ஆ) துருக்கி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 4.
சர் வில்லியம் ஹாக்கின்ஸ் ……………………. நாட்டைச் சேர்ந்தவர்.
அ) போர்ச்சுக்கல்
ஆ) ஸ்பெயின்
இ) இங்கிலாந்து
ஈ) பிரான்ஸ்
விடை:
இ) இங்கிலாந்து

Question 5.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
அ) வில்லியம் கோட்டை
ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை
இ) ஆக்ரா கோட்டை
ஈ) டேவிட் கோட்டை
விடை:
ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

Question 6.
பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
அ) ஆங்கிலேயர்கள்
ஆ) பிரெஞ்சுக்காரர்கள்
இ) டேனியர்கள்
ஈ) போர்ச்சுக்கீசியர்கள்
விடை:
ஆ) பிரெஞ்சுக்காரர்கள்

Question 7.
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி …………………….. வர்த்தக மையமாக இருந்தது.
அ) போர்ச்சுக்கீசியர்கள்
ஆ) ஆங்கிலேயர்கள்
இ) பிரெஞ்சுக்காரர்கள்
ஈ) டேனியர்கள்
விடை:
ஈ) டேனியர்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
விடைகள் இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) _______ ல் அமைந்துள்ளது.
விடை:
புதுடெல்லி

Question 2.
போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் _____________ என்பவரால்
விடை:
மன்ன ர் ஆதரிக்கப்பட்டார். இரண்டாம் ஜான்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 3.
இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் _____________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது
விடை:
போர்ச்சுகீசிய அரசால்

Question 4.
முகலாயப் பேரரசர் _________________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.
விடை:
ஜஹாங்கீர்

Question 5.
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ____________ என்பவரால் நிறுவப்பட்டது.
விடை:
கால்பர்ட்

Question 6.
_______________ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
விடை:
நான்காம் கிரிஸ்டியன்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக,

Question 1.
சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.
விடை:
சரி

Question 2.
நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.
விடை:
சரி

Question 3.
.ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 4.
வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக்காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.
விடை:
சரி

V. 1) பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க.

Question 1.
1. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.
3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.
4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 2 மற்றும் 4 சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) 1, 2 மற்றும் 4 சரி
விடை:
ஈ) 1, 2 மற்றும் 4 சரி

V. 2) தவறான இணையைக் கண்டறிக.

Question 1.
அ) பிரான்சிஸ் டே – டென்மார்க்
ஆ) பெட்ரோ காப்ரல் – போர்ச்சுகல்
இ) கேப்டன் ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து
ஈ) கால்பர்ட் – பிரான்ஸ்
விடை:
அ) பிரான்சிஸ் டே – டென்மார்க்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறுகுறிப்பு தருக
விடை:

  • வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.
  • இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) புதுதில்லியில் அமைந்துள்ளது.
  • இது இந்திய அரசின் ஆவணங்களைப் பாதுகாக்கும் முதன்மைக் காப்பகமாகும்.
  • கடந்த காலம் குறித்த பல்வேறு தகவல்களுடன் தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக இது விளங்குகிறது.

Question 2.
நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
விடை:

  • நாணயங்கள், நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாக திகழ்கின்றன
  • நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி.1862 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் வெளியிடப்பட்டது.

Question 3.
இளவரசர் ஹென்றி ‘மாலுமி ஹென்றி’ என ஏன் அழைக்கப்படுகிறார்?
விடை:

  • போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி, உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
  • கடற்பயணம் மேற்கொள்வது குறித்து ஒரு தனிப் பயிற்சி பள்ளியையும் நிறுவினார்.
  • எனவே இளவரசர் ஹென்றி பொதுவாக மாலுமி ஹென்றி’ என அழைக்கப்படுகிறார்.

Question 4.
இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.
விடை:
இந்தியாவில் பழவேற்காடு, சூரத், சின்சுரா, காசிம்பஜார், பாட்னா, நாகப்பட்டினம், பாலசோர் மற்றும் கொச்சின் முதலிய பகுதிகளே டச்சுக்காரர்களின் முக்கிய வர்த்தக மையங்களாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 5.
இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.
விடை:
சூரத், ஆக்ரா, அகமதாபாத், புரோச். சென்னை . பம்பாய், கல்கத்தா, மசூலிப்பட்டினம் மற்றும் சால்செட்

VII. விரிவான விடையளி

Question 1.
நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிப்பிடுக.
விடை:
நவீன இந்திய ஆதாரங்கள்:

  • நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக – பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை பற்றி அறிய உதவுகின்றன.
  • ஆரம்பம் முதலே போர்ச்சுகீசியர். ஆங்கிலேயர் உள்ளிட்ட பல ஐரோப்பியர்களால் திறம்பட பதிவு செய்த அரசாங்க பதிவேடுகள் மதிப்பு மிக்க ஆதாரங்களாக உள்ளன.
  • லிஸ்பன், கோவா, பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஆவணக் காப்பகங்கள் விலை மதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகமாகும்.

எழுதப்பட்ட ஆதாரங்கள்:

  • இலக்கியங்கள், பயணக் குறிப்புகள், நாட்குறிப்புகள், சுயசரிதை, துண்டு பிரசுரங்கள், அரசாங்க ஆவணங்கள் மற்றும் கையெழுத்து பிரதிகள் முதலியவை எழுதப்பட்ட ஆதாரங்களாகும்.
  • அச்சு இயந்திரம் மூலம் பல மொழிகளில் எண்ணற்ற புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
  • குறிப்பாக ஆனந்தரங்கம் என்பவரின் நாட்குறிப்புகள் அரசியல் தீர்வுகளை வெளிப்படையாக விளக்கும் வரலாற்று ஆதாரமாகும்.
  • எழுதப்பட்ட ஆதாரங்கள் மூலம் கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி மக்கள் எளிதாக அறிய முடிகிறது.

பயன்பாட்டு பொருள் ஆதாரங்கள்:

  • ஓவியங்கள், சிலைகள், வரலாற்றுபுகழ்மிக்ககட்டிடங்கள், நாணயங்கள் மற்றும் அருங்காட்சியகத்தில் உள்ள கலை, தொல்பொருட்கள் போன்றவை பயன்பாட்டு பொருள் ஆதாரங்களாகும்.
  • குறிப்பாக ஓவியங்கள், சிலைகள் நவீன இந்திய வரலாற்றின் முதன்மை ஆதாரங்களாக உள்ளன.
  • நாணயங்களும் நம் நிர்வாக வரலாற்றை அறிய உதவும் ஒரு நல்ல ஆதாரமாகும்.

Question 2.
போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
விடை:
போர்ச்சுக்கல்:

  • ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், போர்ச்சுக்கல் மட்டும் இந்தியாவிற்கு புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது.
  • கி.பி. 1498-ல் வாஸ்கோடகாமா முதன் முதலாக தென்னிந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார். மன்னர் சாமரின் அவரை வரவேற்றார்.
  • இவர் 1501-ல் இரண்டாவது முறையாக இந்தியா வந்தபொழுது கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார்.
  • இதன் பிறகு கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையங்களை அவர் நிறுவினார்.
  • இதனால் கோபங்கொண்ட மன்னர் சாமரின் போர்ச்சுக்கீசியரைத் தாக்கினார். ஆனால் அவர் போர்ச்சுக்கீசியரால் தோற்கடிக்கப்பட்டார்.
  •  கி.பி. 1505-ல் பிரான்சிஸ்கோ -டி-அல்மெய்டா இந்திய போர்ச்சுக்கீசிய பகுதிகளின் முதல் கவர்னரானார்.
  • இவர் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்தும் நோக்கில் ‘நீலநீர்க் கொள்கை’யை பின்பற்றினார்.
  • டையூவில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா முஸ்லீம் கூட்டுப்படைகளைத் தோற்கடித்தார்.
  • கி.பி. 1509-ல் கவர்னரான அல்போன்சோ -டி-அல்புகர்க் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவினார்.
  • இவர் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கி.பி. 1510-ல் கோவாவைக் கைப்பற்றினார். மேலும் விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டார்.
  • கி.பி. 1529-ல் மூன்றாம் கவர்னரான நினோ-டி-குன்ஹா டையூ, டாமன் போன்ற பகுதிகளை கைப்பற்றினார்.
  • இவ்வாறு போர்ச்சுக்கீசியர் 16ஆம் நூற்றாண்டில் கோவா, டையூ, டாமன், பசீன், சால்செட், பாம்பே மட்டுமின்றி பிற இந்திய கடற்கரை பகுதிகளையும் கைப்பற்றிவணிக ஆதாயத்திற்கு பயன்படுத்தினர்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 3.
ஆங்கிலேயர்கள், எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
விடை:
கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தக நிறுவனத்திற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் 1600 டிசம்பர் 31 அன்று அனுமதி வழங்கினார்.

கி.பி 1608 ஆம் ஆண்டு வணிகத் தலம் அமைக்க ஜஹாங்கீர் அவைக்கு வந்த மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ், போர்ச்சுகீசிய தலையீடுகளினால் அனுமதி கிடைக்காமல் இங்கிலாந்து திரும்பினார்.

சூரத் அருகே ஆங்கிலத் தளபதி தாமஸ் பெஸ்ட், போர்ச்சகீசிய கடற்படையை தோற்கடித்தார்.

இந்நிகழ்வில் மகிழ்ச்சியடைந்த ஜஹாங்கீர், 1613ல் சூரத்தில் ஆங்கில வணிக மையம் அமைக்க அனுமதித்தார்.

1614ல் கேப்டன் நிக்கோலஸ், போர்ச்சுகீசியரை வென்றதால் முகலாயர் அவையில் ஆங்கிலேயரின் கௌரவம் மேலும் அதிகரித்தன.

1615ம் ஆண்டு ஜஹாங்கீர் அவைக்கு வந்த சர்தாமஸ் ரோ மூன்று ஆண்டுகள் ஆக்ராவில் தங்கி, இறுதியில் ஜஹாங்கீர் அனுமதியுடன் ஆக்ரா, அகமதாபாத். புரோச் முதலிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினார்.

குறிப்பாக ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிபட்டினத்தில் 1611ல் நிறுவினர்.

1639ல் பிரான்சிஸ்டே என்ற ஆங்கில வணிகர், சந்திரகிரி மன்னர் சென்னப்ப நாயக்கரிடமிருந்து மெட்ராசை குத்தகைக்கு பெற்றார். அங்கு தான் ஆங்கில கம்பெனி புனித ஜார்ஜ் கோட்டை என்ற புகழ்பெற்ற வணிக மையத்தை நிறுவியது.

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ், போர்ச்சுகீசிய இளவரசியை மணந்து சீதனமாக பம்பாய் தீவை பெற்றார். பின்னர் இத்தீவை ஆங்கில கம்பெனி 10 பவுண்டுகள் கொடுத்து வாங்கியது

கி.பி.1690 ஆம் ஆண்டு சதாநுதி என்ற இடத்தில் ஜாப் சார்னாக் என்ற ஆங்கிலேயர் ஓர் வணிக மையத்தை நிறுவினார். இங்கு தான் வலுவான வில்லியம் கோட்டை கட்டப்பட்டது.

பின்னாளில் கல்கத்தா நகரமாக வளர்ச்சியடைந்த சுதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர் உள்ளிட்ட மூன்று கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை ஆங்கில கம்பெனி பெற்றது.

பிளாசி மற்றும் பக்சார் போர்களுக்கு பிறகு ஆங்கில கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது.

இந்தியா 1858 வரை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?
விடை:
உலக வரலாற்றில் கான்ஸ்டாண்டி நோபிளின் வீழ்ச்சி ஒரு முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

வாணிபத்தைப் பொருத்தவரையில் கான்ஸ்டாண்டி நோபிள் ஒரு சாதகமான இடத்தில் அமைந்திருந்தது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கிடையே நடந்த வாணிபத் தொடர்பு இதன் வழியாக நடைபெற்றது.

1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிளைத் துருக்கியர் கைப்பற்றினர். அவர்கள் கிழக்கு மத்திய தரைக் கடல் வழியாக கீழநாடுகளோடு நடந்த வாணிபத்தைத் தடை செய்தனர்.

கான்ஸ்டாண்டி நோபிள் வழியாகச் சென்ற பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்தனர்.

மேலும் அவர்கள் ஐரோப்பிய வணிகர்களைத் துன்புறுத்தவும் தொடங்கினர். இதனால் பழைய வழித்தடங்கள் அடைபட்டுப் போயின. – இதன் விளைவாக கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குப் பொருட்கள் வருவது தடைபட்டது.

ஆனால் ஐரோப்பியர்கள் பொன் கொழிக்கும் கிழக்கு நாடுகளோடு (Golden East) நடைபெற்ற வாணிபத்தை இழக்க விரும்பவில்லை. ஏனெனில் தாங்கள் மிகவும் விரும்பிய நறுமணப் பொருட்களை இப்போது பெற முடியவில்லை. எனவே ஐரோப்பியர் புதிய. கடல் வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
நவீன இந்திய ஆதாரங்களை தொகுத்து ஒரு அட்டவணை தயார் செய்க.

8th Social Science Guide ஐரோப்பியர்களின் வருகை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
‘சென்னை நாட்குறிப்பு பதிவுகள்’ எப்போது வெளியிடப்பட்டது?
அ) 1916
ஆ) 1917
இ) 1949
ஈ) 1935
விடை:
ஆ) 1917

Question 2.
இந்தியாவின் முதல் நாணயம் ______________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.
அ) பிரெஞ்சுக்காரர்கள்
ஆ) போர்ச்சுகீசியர்
இ) ஆங்கிலேயர்
ஈ) டேனியர்
விடை:
இ) ஆங்கிலேயர்

Question 3.
இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?
அ) நினோ-டி-குன்கா
ஆ) வாஸ்கோடகாமா
இ) அல்மெய்டா
ஈ) அல்போன்சோ -டி-அல்புகர்க்
விடை:
ஈ) அல்போன்சோ-டி-அல்புகர்க்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 4.
ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை ____________ பகுதியில் நிறுவினர்.
அ) ஆக்ரா
ஆ) சூரத்
இ) மெட்ராஸ்
ஈ) மசூலிப்பட்டினம்
விடை:
ஈ) மசூலிப்பட்டினம்

Question 5.
_____________ இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாகும்.
அ) சூரத்
ஆ) மசூலிப்பட்டினம்
இ) பாண்டிச்சேரி
ஈ) மாஹி
விடை:
இ) பாண்டிச்சேரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை நிறுவியவர் ___________
விடை:
கரோன்

Question 2.
_____________ ஆம் ஆண்டு டேனியர்கள் தங்களது அனைத்து குடியேற்றங்களையும் ஆங்கில அரசுக்கு விற்றனர்.
விடை:
1845

Question 3.
1690 ஆம் ஆண்டு ____________ பகுதியில் ஆங்கிலேய வர்த்தக மையம் நிறுவப்பட்டது
விடை:
சுதாநுதி .

Question 4.
___________ பகுதியில் டச்சுக்காரர்கள் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்.
விடை:
பழவேற்காடு

Question 5.
வாஸ்கோடகாமாவின் கடல் வழியை பின்பற்றி இந்தியாவிற்கு வருகை புரிந்தவர்
விடை:
பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை 2

IV. சரியா, தவறா?

Question 1.
இந்தியாவில் தேசிய அருங்காட்சியகம் 1949 ல் நிறுவப்பட்டது.
விடை:
சரி

Question 2.
17ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய அதிகாரம் ஆங்கிலேயரிடம் வீழ்ச்சியடைந்தது.
விடை:
தவறு

Question 3.
1700 ல் சுதாநுதியில் ஒரு கோட்டை கட்டப்பட்டது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 4.
அக்காலத்தில் பழவேற்காட்டிலிருந்து வைரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
விடை:
சரி

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க

Question 1.
1. பிரான்சிஸ்கோ அல்மெய்டா என்பவர் இந்திய போர்ச்சுகீசிய பகுதிகளின் முதல் கவர்னர்
2. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் போர்ச்சுகீசிய இளவரசியை மணந்து மெட்ராசை சீதனமாக பெற்றார்.
3. ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டையே புனித ஜார்ஜ் கோட்டை ஆகும்.
4. செராம்பூர் டச்சுக்காரர்களின் இந்தியத் தலைமையிடமாக இருந்தது.

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 2 மற்றும் 3 சரி
இ) 1 மற்றும் 3 சரி
ஈ) 1, 2 மற்றும் 4 சரி
விடை:
இ) 1 மற்றும் 3 சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கான காரணம் கூறுக.
விடை:
இந்தியாவின் ஏராளமான செல்வத்தைப் பற்றி மார்க்கோபோலோ மற்றும் சில வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளிலிருந்து ஐரோப்பியர்கள் அறிந்து கொண்டனர். இக்குறிப்புகள் ஐரோப்பியர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தது.

இதுவே ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கான காரணம் ஆகும்.

Question 2.
ஆனந்த ரங்கம் பற்றி குறிப்பு வரைக
விடை:
தமிழ் வரலாற்றுக் குறிப்பு ஆவணங்களில் முக்கிய பங்காற்றியவர் ஆனந்தரங்கம். இவர் பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார்.

1736 லிருந்து 1760 வரை அவர் எழுதிய பிரெஞ்சு இந்திய உறவு முறை பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகள் அரசியல் தீர்வுகளை வெளிப்படையாக விளக்கும் வரலாற்றாதாரமாக உள்ளன.

Question 3.
தமிழ்நாடு ஆவணக்காப்பகம் பற்றி குறிப்பு வரைக?
விடை:

  • தற்போது தமிழ்நாடு ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படும் சென்னை பதிப்பாசனம் சென்னையில் அமைந்துள்ளது.
  • இது தென்னிந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்றாகும்.
  • அங்குள்ள பெரும்பாலான ஆவணங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. மேலும் அங்கு டச்சு, டேனிஷ், பாரசீக, மராத்திய நிர்வாக பதிவுகளின் தொகுப்புகள் பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய, தமிழ், உருது போன்ற மொழிகளில் உள்ளன.

VII. விரிவான விடையளி

Question 1.
பிரெஞ்சுக்காரர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
விடை:
வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும்.

பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம், மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் 1664 ல் உருவாக்கப்பட்டது.

கி.பி 1667 ல் பிரான்காய்ஸ் கரோன் தலைமையின் கீழ் ஒரு குழு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது

இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை கரோன், சூரத் நகரில் நிறுவினார்.

கி.பி 1669 ல் மார்காரா கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்.

கி.பி 1673 ல் பிஜப்பூர் ஆட்சியாளர் ஷெர்கான் லோடிக்கு வழங்கப்பட்ட மானியத்தின் கீழ், மார்ட்டின் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவினார்.

பாண்டிச்சேரி இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமானது. பாண்டிச்சேரியில் செயிண்ட் லூயிஸ் எனப்படும் கோட்டையை பிரான்காய்ஸ் மாட்டின் என்பவர் காட்டினார்.

வங்காளத்தின் முகலாய ஆளுநரான செயிஸ்டகானின் அனுமதி பெற்று 1673 ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவுக்கு அருகே சந்திரநாகூர் என்ற நகரை நிர்மாணித்தது.

பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வர்த்தக மையங்களை நிறுவியது. குறிப்பாக கடலோரப் பகுதிகளான மாஹி, காரைக்கால், பாலசோர் மற்றும் காசிம் பசார் போன்றவை முக்கியமான பிரெஞ்சு வர்த்தக மையங்கள் ஆகும்.

கி.பி. 1742 ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அவரது நியமனத்தின் மூலம் பிரெஞ்சு அதிகாரம் மேலும் பலப்படுத்தப்பட்டது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை 3
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை 4

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

9th Social Science Guide நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் Text Book Back Questions and Answers

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
புவியின் திடமான தன்மை கொண்ட மேல்புற அடுக்கை ………….. என்று அழைக்கின்றோம்.
அ) கருவம்
ஆ) கவசம்
இ) புவி மேலோடு
ஈ) உட்கரு
விடை:
இ) புவி மேலோடு

Question 2.
புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை ………………. என்று அழைக்கின்றோம்.
அ) கருவம்
ஆ) வெளிக்கரு
இ) கவசம்
ஈ) மேலோடு
விடை:
ஆ) வெளிக்கரு

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Question 3.
பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு …..
அ) புவிமேலோடு
ஆ) கவசம்
இ) கருவம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) கவசம்

Question 4.
புவித்தட்டுகளின் நகர்வு ……. ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
அ) நீர் ஆற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) அலையாற்றல்
ஈ) ஓத ஆற்றல்
விடை:
ஆ) வெப்ப ஆற்றல்

Question 5.
ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி …………………. நோக்கி நகர்ந்தது.
அ) வடக்கு
ஆ) தெற்கு
இ) கிழக்கு
ஈ) மேற்கு
விடை:
அ) வடக்கு

Question 6.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா ………………. கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
அ) கோண்டுவானா
ஆ) லொரேசியா
இ) பாந்தலாசா
ஈ) பாஞ்சியா
விடை:
அ) கோண்டுவானா

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Question 7.
புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் ………. எனப்படும்.
அ) மடிப்பு
ஆ) பிளவு
இ) மலை
ஈ) புவி அதிர்வு
விடை:
ஆ) பிளவு

Question 8.
எரிமலை மேல்பகுதியில் கிண்ண அழைக்கின்றோம் ………………….. என்று
அ) எரிமலை வாய்
ஆ) துவாரம்
இ பாறைக்குழம்புத் தேக்கம்
ஈ) எரிமலைக் கூம்பு
விடை:
அ) எரிமலை வாய்

Question 9.
புவி அதிர்வு உருவாகும் புள்ளி …… என்று அழைக்கப்படுகிறது.
அ) மேல்மையம்
ஆ) கீழ்மையம்
இ) புவி அதிர்வு அலைகள்
ஈ) புவி அதிர்வின் தீவிரம்
விடை:
ஆ) கீழ்மையம்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 10

III. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களை ஆராய்ந்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
i. ஃபியூஜி மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்
ii. கிளிமஞ்சாரோ மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்.
iii. தான்சானியா ஒரு உறங்கும் எரிமலையாகும்
அ) (i) உண்மையானது
ஆ) (ii) உண்மையானது
இ) (iii) உண்மையானது
ஈ) (i), (ii) மற்றும் (iii) உண்மையானது
விடை:
அ) (i) உண்மையானது

Question 2.
கூற்று : பாறைக்குழம்பு துவாரம் வழியாக வெளியேறும்.
காரணம் : புவியின் உட்பகுதி அழுத்தப்பட்ட பாறைக் குழம்பினைக் கொண்டிருக்கும்.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Question 3.
கூற்று I : புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் மலைத் தொடர்கள் தோற்றுவிக்கப் படுகின்றன.
கூற்று II :கவசத்தின் வெப்பத்தின் காரணமாக புவித்தட்டுகள் நகருகின்றன.
அ) கூற்று I தவறு II சரி.
ஆ) கூற்று I மற்றும் II தவறு.
இ) கூற்று I சரி II தவறு.
ஈ) கூற்று I மற்றும் II சரி.
விடை:
ஈ) கூற்று I மற்றும் II சரி

IV. சுருக்கமான விடையளி

Question 1.
புவியின் நான்கு கோளங்களைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
விடை:
புவியின் நான்கு கோளங்கள் :

  • புவியில் பாறையாலான திடமான மேற்பரப்பு பாறைக் கோளம் ஆகும்.
  • புவியில் நீரினால் சூழப்பட்ட பெருங்கடல்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீராவி சூழ்ந்த நீர்ப்பகுதி நீர்க்கோளம் ஆகும்.
  • புவியைச் சூழ்ந்த காற்றால் ஆன அடுக்கு வாயுக்கோளம் ஆகும்.
  • உயிரினங்கள் வாழும் அடுக்கு உயிர்க்கோளம் ஆகும்.

Question 2.
புவியின் உள் அடுக்குகள் யாவை?
விடை:
புவியின் உள் அடுக்குகள் :

  • மேலோடு
  • கவசம்
  • கருவம்

Question 3.
புவித்தட்டுகள் – வரையறு
விடை:
புவித்தட்டுகள்

  • பாறைக்கோளத்தின் புவித்தட்டுகள் முதன்மை புவித்தட்டுகள் மற்றும் சிறிய புவித்தட்டுகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.
  • கவசத்தில் காணப்படும் வெப்ப சக்தி புவித்தட்டுகள் நகர்வதற்கு காரணம். புவித்தட்டுகள் மோதுவதால்
    மலைத்தொடர்கள் மற்றும் ஒழங்கற்ற நிலத்தோற்றங்கள் உருவாகின்றன.

Question 4.
ஆழிப்பேரலைகள் (Tsunami) என்றால் என்ன?
விடை:

  • கடலடியில் தோன்றும் புவி அதிர்ச்சி, எரிமலைச் செயல்பாடு, கடலோர நிலச் சரிவுகள் காரணமாக கடலில் பெரிய அலைகள் உருவாகின்றன. இப்பேரலைகள் ஆழிப்பேரலைகள் அல்லது கடற்கோள் எனப்படுகின்றன. (சுனாமி என்பது இவ்வலைகளைக் குறிக்கும் ஜப்பானிய சொல்)
  • ஆழிப்பேரலைகளின் சராசரி வேகம் மணிக்கு 500 கி.மீ. நீளம் 600 கி.மீ., உயரம் 15 மீட்டர்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Question 5.
எரிமலை என்றால் என்ன? அவற்றின் கூறுகள் யாவை?
விடை:
எரிமலை :

  • புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலே எரிமலை வெடிப்பு எனப்படும்.
  • மேற்பரப்பில் வெளியேற்றப்பட்ட பாறைக்குழம்பு லாவா எனப்படும்.

எரிமலைக் கூறுகள் :-

  • பாறைக்குழம்பு தேக்கம்
  • துவாரங்கள்
  • எரிமலைக்கூம்புகள்
  • எரிமலை வாய்

Question 6.
புவி அதிர்ச்சி என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?
விடை:
புவி அதிர்ச்சி :

  • புவி அதிர்ச்சி என்பது புவி ஓட்டில் திடீரென ஏற்படும் அதிர்வைக் குறிக்கின்றது.
  • புவிக்குள் புவி அதிர்வு உருவாகும் புள்ளி புவி அதிர்ச்சி கீழ் மையம்’ எனப்படும்.
  • புவி அதிர்ச்சி கீழ்மையத்தின் நேர்உயரே புவி மேற்பரப்பில் புவி அதிர்ச்சி மேல் மையம்’ அமைந்துள்ளது.
  • புவி அதிர்ச்சி கீழ்மையத்திலிருந்து அதன் தாக்கம் புவியின் மேல் மையத்தில் தான் அதிகமாகக் காணப்படும்.

Question 7.
புவி அதிர்வலைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?
விடை:
புவி அதிர்வலைகள் :புவி அதிர்ச்சி உருவாக்கும் அதிர்வலைகள் புவி அதிர்வலைகள்’ எனப்படும். ஊடுருவிச்செல்லும் பாதையைப் பொறுத்து இவ்வதிர்வலைகளின் தன்மை, விசை மற்றும் வேகம் மாறுபடும்.

வகைகள்

  • முதன்மை அலைகள் (அ) ‘P’ அலைகள்
  • இரண்டாம் நிலை அலைகள் (அ) ‘S’அலைகள்
  • மேற்பரப்பு அலைகள் (அ) ‘L’அலைகள்

Question 8.
பசிபிக் நெருப்பு வளையம் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:

  • பசிபிக் நெருப்பு வளையம் என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ஒரு வில் ஆகும். அங்கு பல எரிமலைகள் மற்றும் பூகம்பங்கள் உருவாகின்றன.
  • இப்பகுதி பசிபிக் ரிம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பசிபிக் சுற்றியுள்ள நாடுகளின் கடலோர பகுதிகளை குறிக்கிறது.
  • உலகின் செயலற்ற எரிமலைகள் மற்றும் செயலில் எரிமலைகளில் முக்கால்வாசி இங்கு உள்ளன.

V. பின்வரும் வினாக்களுக்கு காரணம் கண்டறிக

Question 1.
தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்றும் ஏன் அழைக்கப்படுகின்றன? தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில்
விடை:
படிவுப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகள் உருவாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தீப்பாறைகள் காரணமாகின்றது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

VI. வேறுபடுத்துக.

Question 1.
கருவம் மற்றும் மேலோடு மேலோடு
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 60

Question 2.
மேல்மையம் மற்றும் கீழ்மையம் மேல்மையம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 65

Question 3.
விலகும் எல்லை மற்றும் இணையும் எல்லை விலகும் எல்லை
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 70

Question 4.
முதன்மை அலைகள் மற்றும் இரண்டாம் நிலை அலைகள் முதன்மை அலைகள்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 75

Question 5.
கவச எரிமலை மற்றும் கும்மட்ட எரிமலை கவச எரிமலை
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 80

VII. விரிவான விடையளி.

Question 1.
புவி அமைப்பை விவரி.
விடை:
புவியின் உள்ளமைப்பு

  • மேலோடு
  • கவசம்
  • கருவம்

என மூன்று பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 100

மேலோடு: (5 கி.மீ. முதல் 30 கி.மீ. தடிமன்)

  • புவியின் மேலடுக்கு புவிமேலோடு ஆகும். திடமாகவும், இறுக்கமாகவும் உள்ளது. இதில் சிலிகா (Si) மற்றும் அலுமினியம் (Ai) அதிகம் காணப்படுவதால் சியால் (SIAL) என அழைக்கப்படுகிறது.
  • புவி மேலோடு, கண்டமேலோடு, கடலடி மேலோடு என இருவகைப்படும். (கடலடியை விட கண்டமேலோடு அதிக தடிமன் கொண்டது)
    கவசம்: (2900 கி.மீ. தடிமன்)
  • புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம் எனப்படும். இதில் சிலிகா (Si) மற்றும் மக்னீசியம் (Mg) அதிகம் காணப்படுவதால், ‘சிமா’ (SIMA) என அழைக்கப்படுகிறது.
  • மேற்பகுதியில் பாறைகள் திடமாகவும், கீழ்ப்பகுதியில் உருகிய நிலையிலும் காணப்படுகின்றன. (உருகிய நிலை பாறைக்குழம்பு ‘மாக்மா).
    கருவம்: (3480 கி.மீ. தடிமன்)
  • கவசத்திற்குக் கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படும். மிகவும் வெப்பமானது. இதில் நிக்கலும் (Ni), இரும்பும் (Fe) அதிகமாகக் காணப்படுவதால், நைஃப் (NIFE) என அழைக்கப்படுகிறது.
  • உட்கருவம் திடநிலையிலும், வெளிக்கருவம் திரவ நிலையிலும் உள்ளது. புவியீர்ப்பு விசை, காந்தப்புலம் உருவாகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Question 2.
புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக.
விடை:
புவி அகச்செயல் முறைகள்

  • புவியின் உட் பகுதியிலிருந்து புவியின் மேற்பரப்பை நோக்கிச் செயல்படும் விசைகள் அகச் செயல் முறைகள் எனப்படும். இவ்விசைகள் புவி நிலப்பரப்பில் பல்வேறு நிலத்தோற்றங்களை உருவாக்குகின்றன.
  • புவியின் வெகு ஆழத்தில் உருவாகும் வெப்பத்தினால் புவி மேலோட்டின் கீழ் காணப்படும் பொருட்கள் வெளித்தள்ளப்படுகின்றன. புவித்தட்டுகள் நகர்வு, புவி அதிர்வு (நிலநடுக்கம்), எரிமலை வெடிப்பு ஆகியவை அகச்செயல் முறைகள் ஆகும்.

புவிபுறச்செயல் முறைகள்

  • புவியில் உள்ள பொருட்களின் மீது ஆழத்தையும், மறு உருவாக்கத்தையும் ஏற்படுத்தி புவிமேற்பரப்பில் உள்ள பொருட்கள் மீது மாற்றத்தை உண்டாக்கும் செயல்முறைகள் புவி புறச் செயல்முறைகள்’ எனப்படும்.
  • ஆறுகள், பனியாறுகள், காற்று, கடலலைகள் போன்ற விசைகள் புவிபுறச் செயல் காரணிகளாகும். புறச் செயல் காரணிகள் அரித்தல், கடத்தல், படியவைத்தல் ஆகிய செயல்களைச் செய்கின்றன.

Question 3.
எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன் வகைகளை விவரி.
விடை:
எரிமலைகள்:
புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலே ‘எரிமலை வெடிப்பு’ எனப்படும். செயல்படும் காலத்தின் அடிப்படையில்
i. செயல்படும் எரிமலை
ii. உறங்கும் எரிமலை
iii. தணிந்த எரிமலை என மூவகைப்படும்.

i. செயல்படும் எரிமலை
நிரந்தரமாக தொடர்ந்து எரிமலைக் குழம்புகளையும், துகள்களையும், வாயுக்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும் எரிமலைகள் ‘செயல்படும் எரிமலைகள்’ எனப்படுகின்றன. எ.கா. செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை – அமெரிக்க ஐக்கிய நாடுகள்.

ii. உறங்கும் எரிமலை
நீண்டகாலமாக எரிமலைச் செயல்பாடுகள் ஏதும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் உறங்கும் எரிமலை எனப்படும். (திடீரென்று வெடிக்கும், உயிர்ச்சேதம், பெருட்சேதம் ஏற்படலாம்) எ.கா. ஃபியூஜி எரிமலை – ஜப்பான்

iii. தணிந்த எரிமலை
எந்த வித எரிமலைச் செயல்பாடுகளும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் ‘தணிந்த எரிமலைகள்’ ஆகும்.
எ.கா. கிளிமஞ்சாரோ எரிமலை – தான்சானியா

Question 4.
எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?
விடை:
எரிமலையின் விளைவுகள்
நன்மைகள்

  • எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருட்கள் கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுகிறது. மண்ணை வளமுள்ளதாக்கி வேளாண் தொழிலை மேம்படுகிறது.
  • எரிமலைப் பகுதிகள் புவி வெப்ப சக்தியை பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.
  • உறங்கும் மற்றும் செயல்படும் எரிமலைகள் உலகின் சிறந்த சுற்றுலாத் தலங்களாக உள்ளன.

தீமைகள்

  • எரிமலை வெடிப்பினால் புவி அதிர்ச்சி, திடீர் வெள்ளம், சேறு வழிதல் மற்றும் பாறை சரிதல் போன்றவை நிகழ்கின்றன. பாறைக் குழம்பு பாதையிலுள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதம் உண்டாக்குகிறது.
  • வெளிப்படும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும் மூச்சுத் திணறலையும் உண்டாக்குகிறது.
  • சுற்றுப்புறப் பகுதிகளின் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்து இடையூறையும் உண்டாக்குகிறது.

VIII. நில வரைபடப் பயிற்சி.

உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
அ) பசிபிக் நெருப்பு வளையம்
ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் ஏதேனும் இரண்டு
இ செயல்படும் எரிமலைகள் இரண்டு
ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்.
உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

IX. வாழ்க்கைத் திறன்கள்

உன் பகுதியில் புவி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கற்பனை செய்து கொள். இடர்பாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் உன் பங்கு என்ன? புவி அதிர்ச்சி ஏற்படும் போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவைகளை பட்டியலிடுக.
விடை:
என் பங்கு :

  • முயன்ற அளவு அதிகமான மக்களை உதவிக்கு அழைத்து மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும்.
  • காயப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும்

செய்ய வேண்டியவை :

  • வீட்டை விட்டு வெளியேற வேண்டும்
  • கண்ணாடி சன்னல், கதவில் இருந்து விலகி நிற்க வேண்டும்.
  • பதற்றம் அடையக்கூடாது
  • மேசையின் கீழ் அமர்ந்து தப்பிக்கலாம்.
  • சமையல் எரிவாயு, மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.

செய்யக் கூடாதவை :

  • மின்தூக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது.
  • வண்டிகளை இயக்கக்கூடாது.
  • பாலங்கள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி மரங்கள் அருகில் நிற்கக்கூடாது.

9th Social Science Guide நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் Additional Important Questions and Answers

I. நிரப்புக

Question 1.
கவசம் …………… என அழைக்கப்படுகிறது.
விடை:
சிமா

Question 2.
‘இக்னிஸ்’ என்ற இலத்தீன் சொல்லிற்கு ………… என்பது பொருளாகும்.
விடை:
நெருப்பு

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

Question 3.
“செடிமென்ட்” என்ற இலத்தீன் சொல்லிற்கு ………… என்பது பொருளாகும்.
விடை:
படிதல்

Question 4.
‘மெட்டாமார்பிக்’ என்பதன் பொருள் …………… என்பதாகும்.
விடை:
உருமாறுதல்

Question 5.
‘நில அதிர்வு’ பற்றிய படிப்பிற்கு ……….. என்று பெயர்.
விடை:
நில அதிர்வியல்

Question 6.
‘வல்கனோ ‘ என்பது ……. பெயராகும்.
விடை:
ரோமானிய நெருப்புக் கடவுளின்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 85

III. சுருக்கமாக விடையளி

Question 1.
சியால், சிமா, நைஃப் – வருவி.
விடை:
சியால் : புவி மேலோட்டில் சிலிகா (Si) மற்றும் அலுமினியம் (AI) அதிகம் காணப்படுவதால் இவ்வடுக்கு சியால் (SIAL) எனப்படும்.
சிமா : கவசத்தில் சிலிகா (Si) மற்றும் வெமக்னீசியம் (Mg) அதிகமாகக் காணப்படுவதால் இவ்வடுக்கு சிமா (SIMA) எனப்படும். நைஃப் : கருவத்தில் நிக்கலும் (Ni) இரும்பும் (Fe) அதிகமாகக் காணப்படுவதால் இவ்வடுக்கு நைஃப் (NIFE) எனப்படும்.

Question 2.
பாறைகளின் பயன்களை உதாரணத்துடன் கூறுக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 88

Question 3.
பாறைச்சுழற்சி என்றால் என்ன?
விடை:
தீப்பாறையானது படிவுப்பாறை மற்றும் உருமாறிய பாறைகள் என ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்பாக உருமாற்றம் அடைகின்றது. இதுவே பாறைச்சுழற்சி எனப்படும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்

IV. விரிவான விடையளி

Question 1.
பாறைகள் என்றால் என்ன? பாறைகளின் வகைகள் யாவை?
விடை:
பாறைகள்

  • புவிமேலோட்டில் உள்ள தாதுக்களின் கலவையே ‘பாறை’ எனப்படும் (திடமாகவோ, மென்மையாகவோ, துகள்களாகவோ காணப்படுகின்றன.
    – உருவாக்கத்தின் அடிப்படையில்

    • தீப்பாறைகள்
    • படிவுப் பாறைகள்
    • உருமாறிய பாறைகள் என பாறைகள் மூவகைப்படும்.

தீப்பாறைகள்: (இக்னிஸ் – நெருப்பு)

  • புவியின் உள் ஆழத்தில் உருகிய நிலையில் உள்ள பாறைக்குழம்பு, புவி மேலோட்டில் ‘லாவா வாக வெளிப்பட்டு, வெப்பம் தணிந்து குளிர்ந்து பாறையாகிறது. இப்பாறைகள் ‘தீப்பாறைகள்’ எனப்படும். எ.கா. பசால்ட், கருங்கல்.
  • தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள்’ என்றும் தாய்ப் பாறைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

படிவுப்பாறைகள்: (செடிமென்ட் – படிதல்)

  • பாறைகள் சிதைவுற்று துகள்களாகி ஆறுகள், பனியாறுகள், காற்று போன்றவற்றால் கடத்தப்பட்ட படிவுகள்
    அடுக்கடுக்காகப் படியவைக்கப்படுகின்றன. படிவுகள் காலப்போக்கில் “படிவுப்பாறைகளாக” உருமாறுகின்றன. எ.கா. மணற்பாறை, சுண்ணாம்புப்பாறை, சுண்ணாம்பு, ஜிப்சம், நிலக்கரி மற்றும் கூட்டுப்பாறைகள்
  • படிவுகளில் தாவரங்கள், விலங்கினங்கள் படிந்து தொல்லுயிர் எச்சப்படிவங்களாக (Fossils) மாறுகின்றன.

உருமாறிய (அல்லது) மாற்றுருவப் பாறைகள்: (மெட்டமார்பி – உருமாறுதல்)

  • அதிக வெப்பம், அழுத்தம் ஆகியவற்றுக்கு தீப்பாறைகளும், படிவுப்பாறைகளும் உட்படும்பொழுது அமைப்பும், குணாதிசயங்களும் மாற்றம் அடைந்து உருமாறியப் பாறைகள் உருவாகின்றன.
  • கிரானைட் → நீஸ், பசால்ட் → சிஸ்ட், சுண்ணாம்புப் பாறை → சலவைக் கல், மணற்பாறை → குவார்ட்சைட் என உருமாறுகின்றன.

Question 2.
புவி அதிர்வலைகள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
விடை:

  • புவி அதிர்ச்சி உருவாக்கும் அதிர்வலைகள் புவி அதிர்வலைகள் எனப்படும். அதிர்வலைகளின் தன்மைக்கேற்ப
    • முதன்மை அலைகள்.
    • இரண்டாம் நிலை அலைகள்.
    • மேற்பரப்பு அலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • முதன் அலைகள்: (P’அலைகள்)
  • முதன்மை அலைகள் மற்ற அலைகளை விட மிகவும் வேகமாகப் பயணிக்கக்கூடியவை. புவியோட்டை முதலில் வந்தடையக் கூடியவை.
  • திட, திரவ, வாயுப் பொருட்கள் வழியாகப் பயணிக்கும் சராசரி வேகம் 5.6 கி.மீ. / வினாடி – 10.6 கி.மீ. / வினாடி.

இரண்டாம் நிலை அலைகள்: (S’அலைகள்)

  • இரண்டாம் நிலை அலைகள் குறுக்கலைகள். பயணிக்கும் திசைக்கு செங்குத்தாகப் புவியில் அசைவை ஏற்படுத்துகின்றன.
  • திடப்பொருள் வழியாக மட்டுமே பயணிக்கும். சராசரி வேகம் 1 கி.மீ. / வினாடி – 8 கி.மீ. / வினாடி.

மேற்பரப்பு அலைகள்: (L’அலைகள்)

  • மேற்பரப்பு அலைகள் மற்ற அலைகளைவிட வேகம் குறைவானவை. முதன்மை அலைகளைப் போன்று காணப்பட்டாலும் புவி மேற்பரப்பில் நீண்ட தூரம் பயணம் செய்பவை.
  • அதிக அளவில் அழிவை ஏற்படுத்தக்கூடியவை. சராசரி வேகம் 1 கி.மீ. / வினாடி – 5 கி.மீ. / வினாடி..

மனவரைபடம்

நிலக்கோளம் – I. புவி அகச்செயல்பாடுகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 1 நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள் 91

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 6 சாலை பாதுகாப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

9th Social Science Guide சாலை பாதுகாப்பு Text Book Back Questions and Answers

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சுருக்கமான விடையளி

Question 1.
இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை:

  • இருக்கை பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிவதால் 51% இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுக்க முடியும்.
  • தலைக்கவசம் அணிவதால் தலையில் காயம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

Question 2.
சாலை விபத்துக்கான காரணிகளை குறிப்பிடுக.
விடை:

  • ஓட்டுநருக்கு ஏற்படும் கவனச்சிதைவு.
  • சிவப்பு விளக்கு எரியும்போது சாலையைக் கடப்பது.
  • தவறான முறையில் பிற வாகனங்களை முந்திச் செல்வது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

Question 3.
சாலை சமிக்ஞையில் (road signal) எந்த நிறம் ‘நில்’ என்பதை உணர்த்துகிறது?
விடை:

  • சாலை பாதுகாப்பு விளக்குகளில் இருக்கும் சிவப்பு நிறம் நில்’ என்பதை உணர்த்துகிறது.
  • கவனி – கேள்!
  • வளைவில் சாலையைக் கடக்காதீர்.

Question 4.
சாலை பாதுகாப்பு விதி ஏதேனும் மூன்றினை கூறுக.
விடை:

  • நில்! கவனி!
  • செல் கவனி – கேள்!
  • வளைவில் சாலையைக் கடக்காதீர்.

II. விரிவான விடையளி

Question 1.
சாலை விபத்துக்கான காரணிகளை விவரி.
விடை:
ஒட்டுநர் :
அதிவேகம், கண்மூடித்தனமாக வாகனத்தை இயக்குவது, சாலைவிதிகளை மீறல், போக்குவரத்துக் குறியீடுகளைப் புரிந்து கொள்ளத் தவறுதல், களைப்பு மற்றும் மது அருந்துவது.

பாதசாரிகள் :
கவனக்குறைவு, கல்வியறிவின்மை , தவறான இடங்களில் சாலையைக் கடப்பது. பயணிகள் : கரம், சிரம், புறம் நீட்டுவது, ஓட்டுநரிடம் பேசுவது, தவறான வழியில் வாகனத்தில் ஏறுவது, இறங்குவது, படியில் பயணம் செய்வது, ஓடுகிறவண்டியில் ஏறுவது.

வாகனங்கள்:
வாகனம் கட்டுப்பாட்டை இழப்பது, டயர் வெடிப்து, குறைவான வெளிச்சம், அதிக சுமை ஏற்றுவது.

சாலையின் நிலை :
குழிகள், தேசமடைந்த சாலை, ஊரக சாலையும் நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் உள்ள அரிக்கப்பட்ட சாலை, சட்டத்துக்குப் புறம்பான வேகத்தடைகள்.

வானிலை:
மூடுபனி, பனி, கனமழை, புயல், ஆலங்கட்டி மழை.

Question 2.
சாலை பாதுகாப்பு விதிகளைப் பற்றி விவரி.
விடை:
சாலை பாதுகாப்பு விதிமுறைகள் :

  • நில்! கவனி! செல்
  • வாகனத்தின் வெளியே கையை நீட்டாதீர்!
  • வளைவில் சாலையைக் கடக்காதீர்!
  • கவனி – கேள்!
  • அவசரப்படாதீர்!
  • சாலையில் ஓடாதீர்!
  • இடதுபுறம் செல்லவும்
  • எப்போதும் சாலையோரத்தைப் பயன்படுத்துவீர்!
  • பாதசாரிகள் கடக்கும் இடத்தில் சாலையை கடக்கவும்.

9th Social Science Guide சாலை பாதுகாப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சாலை விபத்துக்களில் முதலிடம் வகிக்கும் நகரம்.
அ) சென்னை
ஆ) டெல்லி
இ) மும்பை
ஈ) கொல்கத்தா
விடை:
அ) சென்னை

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

Question 2.
சாலை விபத்துக்களில் மிக அதிகமாக இறப்போர் செல்லும் வாகனம்.
அ) பேருந்துகள்
ஆ) இருசக்கரவாகனம்
இ மிதிவண்டி
ஈ) நடந்து செல்பவர்கள்
விடை:
ஆ) இரு சக்கர வாகனம்

Question 3.
சாலை விபத்துக்களில் மிக அதிகமாக இறப்போர் வயது.
அ) 15 – 29
ஆ) 30 – 44
இ 45 – 59
ஈ) 60 +
விடை:
அ) 15 — 29

II. சுருக்கமான விடை தருக.

Question 1.
சாலை விபத்து – வரையறு.
விடை:
சாலை விபத்து என்பது திறந்த வெளி சாலையில் ஒரு வாகன விபத்தில் குறைந்த பட்சம் ஒரு நபர் காயமடைவதையோ அல்லது இறப்பதையோ குறிக்கும்.

Question 2.
சாலை விபத்துக்கான முக்கிய காரணங்கள் யாவை?
விடை:

  • கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது
  • அதிவேகம்
  • முறையற்ற ஓட்டுனர் பயிற்சி
  • நிறுத்தமில்லா தொலைதூரம் வாகனம் ஓட்டுவது
  • பிறவாகனங்களைப் பார்ப்பது.
  • வாகன எண்ணிக்கை அதிகரிப்பு
  • சட்டத்தை முறைப்படுத்துவதில் மெத்தனம்
  • தலைக்கவசம் மற்றும் இருக்கைப் பட்டையைக் குறைவாக பயன்படுத்துவது.
  • ஓட்டுனருக்கு ஏற்படும் கவனச்சிதைவு
  • சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடப்பது.
  • தவறான முறையில் பிற வாகனங்களை முந்திச் செல்வது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

Question 3.
சாலை விபத்துக்களின் நேரடியான விளைவுகள் யாவை?
விடை:
மரணம்

  • காயம்
  • பொருட்
  • சேரம்

Question 4.
சாலை விபத்தைத் தடுக்கும் முறைகளைக் குறிப்பிடுக.
விடை:
சாலை விபத்தைப் பற்றிய கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு.
சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துதல்.
தொழில்நுட்பம் : வாகன வடிவமைப்பு மற்றும் சாலைகட்டமைப்பு.

Question 5.
எந்த வயதுக் குழுவைச் சார்ந்தோர் உலகளவில் சாலை விபத்தில் இருப்போரில் அணையை உள்ள னர்?
விடை:
15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் சாலை விபத்தில் அதிகளவில் இறக்கின்றனர்.

அதற்குக் காரணங்கள் :

  • சரியான பயிற்சி இன்றி வாகம் ஓட்டுதல்
  • ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல்
  • சாலை விதிகளைப் பற்றிய அறிவின்மை
  • மிக வேகம்
  • அதிக திறன் கொண்ட வாகனங்கள்
  • கவனக்குறைவு
  • வயதின் காரணமாக பயமின்மை
  • இந்த வயது இளைஞர்களில் சிலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவர்

Question 6.
சாலை விபத்தில் இறப்போரின் எண்ணிக்கையில் இருபாலகிடையே காணப்படும் விகம் இடைவெளிக்குச் சில காரணங்கள் தருக.
விடை:
சாலை விபத்துக்களில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இறக்கின்றனர். அதற்குக் காரணங்கள்
பின்வருமாறு.

  • ஆண்களை விட பெண்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையினரே வாகனங்கள் ஓட்டுகின்றனர்.
  • பெண்கள் வாகனங்களை மெதுவாக ஓட்டுகின்றனர்.
  • அவர்கள் பெரும்பாலும் குறைந்த திறன் கொண்ட வாகனங்களையே ஓட்டுகின்றனர்.
  • பொதுவாக பெண்கள் சாலை விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டுவர்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 6 சாலை பாதுகாப்பு 90

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

10th Social Science Guide தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ……………………..
அ) தூத்துக்குடி
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) மதுரை
விடை:
இ) சென்னை

Question 2.
குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது ………………
அ) சேலம்
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) தருமபுரி
விடை:
ஆ) கோயம்புத்தூர்

Question 3.
……………….. என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.
அ) வேளாண்மை
ஆ) தொழில்
இ) இரயில்வே
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) தொழில்

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 4.
திருப்பூர் ………………. தொழிலுக்கு பெயர்பெற்றது.
அ) தோல் பதனிடுதல்
ஆ) பூட்டு தயாரித்தல்
இ) பின்னலாடை தயாரித்தல்
ஈ) வேளாண் பதப்படுத்துதல்
விடை:
இ பின்னலாடை தயாரித்தல்

Question 5.
…………….. இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.
அ) ஓசூர்
ஆ) திண்டுக்கல்
இ) கோவில்பட்டி
ஈ) திருநெல்வேலி
விடை:
அ) ஓசூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் …………………. மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளது.
விடை:
வேலூர்

Question 2.
சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் ……………ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
ஏப்ரல் 2000

Question 3.
………. என்பவர் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகளின் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
விடை:
தொழில் முனைவோர்

III. தவறான ஒன்றினை தேர்வு செய்க.

Question 1.
பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?
அ) ராணிப்பேட்டை
ஆ) தர்மபுரி
இ) ஆம்பூர்
ஈ) வாணியம்பாடி
விடை:
ஆ) தர்மபுரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 2.
பின்வருவனவற்றில் எது தொழில் துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?
அ) TIDCO
ஆ) SIDCO
இ) MEPG
ஈ) SIPCOT
விடை:
இ MEPG

IV. பின்வருவனவற்றைப் பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் 2

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
விடை:

  • நிலத்தின் உற்பத்தித்திறன் குறைந்து வருவதால் விவசாயத் துறையில் தொழிலாளர் ஊதியம் குறைவாக உள்ளது.
  • நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் விவசாயத் துறையில் நில உற்பத்தித்திறன் அதிகரிக்க முடியாது.

Question 2.
தொழில் துறை தொகுப்பு என்றால் என்ன?
விடை:
தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.

Question 3.
தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?
விடை:

  • தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.
  • ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
  • கைத்தறி நெசவுத்தொழில் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.
விடை:
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT)
தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)
சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.

தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – வரையறுக்கப்பட்டது (TANSI)
சிறுநிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 5.
தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?
விடை:

  • வேதிப்பொருள்கள், நெசவுத் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தை கெடுக்கிறது.
  • இந்த திரவக் கழிவுகள் சேரும் நீர் நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது.
  • உலகளாவிய அளவில் போட்டிப் போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலை வாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது. பணியாளர்களின் தரமானது, இன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவதால் குறைகிறது.

Question 6.
தொழில்முனைவோர் என்பவர் யாவர்?
விடை:

  • ஒரு “தொழில் முனைவோர்” என்பவர் புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
  • இவர்களிடம் சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகளும் மற்றும் தலைமைக்குத் தேவையான பண்புகளும் இருக்கும்.

Question 7.
தொழில்முனைவு என்றால் என்ன?
விடை:

  • தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே தொழில் qமுனைவு எனப்படும்.
  • இவை ஒன்றை உருவாக்குவதற்கும் மேலும் பெரிதுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?
விடை:
வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்புகள் பின்வருமாறு:

  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல்.
  • துறை சார்ந்த சிறப்பு கவனம்.
  • நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல்.
  • புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி.
  • நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம்.
  • பல்வேறு திறமையான தொழிலாளர்கள்.
  • சுய உதவி குழுக்கள் செயல்படுதல்.
  • வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு.

Question 2.
தமிழ்நாட்டின் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக.
விடை:
இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது.

காலனித்துவ காலத்திலிருந்து பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது.

நமது நாட்டின் மிகப் பெரிய பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் தமிழகம் பெரும்பங்கு வகிக்கிறது.

ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத்தறித் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.

திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும்.

இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது.

இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது.

மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது.

வாகனக் கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருள்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது.

பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.

நவீன தொகுப்புகளைத் தவிர பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன.

Question 3.
தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
கல்வி:

  • திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது.
  • நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

உள்கட்டமைப்பு:

  • மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது.
  • மின்சார விநியோகம் மட்டுமல்லாது தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும்.
  • குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது.

தொழில்துறை ஊக்குவிப்பு:
சிறந்த தொழிற்பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்த பகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 4.
தொழில்முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக.
விடை:
தொழில் முனைவோரின் பங்கு:

  • நாட்டில் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு மிக முக்கியமானதாகும்.
  • தொழில் முனைவோர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுவதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிறார்கள்.
  • இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு (GDP) உற்பத்தி மற்றும் தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள்.
  • குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தை செயல்பட வைக்கிறார்கள்.
  • தொழில்முனைவோர் கைவினைஞர்கள், தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். இலாபத்தினை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.
  • தொழில் முனைவோர், குறைந்த விலையில் சிறந்த தரமான பொருட்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர். இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.

10th Social Science Guide தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
தொழில்துறைத் தொகுப்பு ……………. வளர்ந்தது.
அ) 1915
ஆ) 1930
இ) 1920
ஈ) 1945
விடை:
இ 1920

Question 2.
…………….. தொழில் தொகுப்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
அ) டெக்ஸ்டைல்ஸ்
ஆ) பில்டிங்
இ) கைத்தறி நெசவுத் தொழில்
ஈ) ஏதுமில்லை
விடை:
இ) கைத்தறி நெசவுத் தொழில்

Question 3.
தோல் உற்பத்தி நடைபெறுமிடம் …………… ஆகும்.
அ) கோயம்புத்தூர்
ஆ) வேலூர்
இ) திருச்சி
ஈ) நாமக்கல்
விடை:
ஆ) வேலூர்

Question 4.
திருச்சிராப்பள்ளியில் உள்ள BHEL நிறுவனம் ………….. தயாரிக்கிறது.
அ) தொட்டிகள்
ஆ) கொதிகலன்கள் (ம) விசையாழிகள்
இ) ரயில் பெட்டிகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) கொதிகலன்கள் (ம) விசையாழிகள்

Question 5.
…………………. சேலம் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது.
அ) 1920
ஆ) 1973
இ) 1937
ஈ) 1945
விடை:
ஆ) 1973

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 6.
1990ல் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ………….. தொழில்மயமாதலின் இறுதி கட்டம்.
அ) முன் காலகட்டம்
ஆ) பிந்தைய காலகட்டம்
இ) நவீன காலகட்டம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) பிந்தைய காலகட்டம்

Question 7.
தொழிற்சாலைகளை அதிகளவு கொண்ட மாநிலம் ……………….. ஆகும்.
அ) கேரளா
ஆ) கர்நாடகா
இ) தமிழ்நாடு
ஈ) ஆந்திரப் பிரதேசம்
விடை:
இ தமிழ்நாடு

Question 8.
ஈரோடு (ம) சேலம் பகுதியில் அதிகளவு மின்தறி அலகுகள் இருப்பதால் ……………… பரவலாக உள்ளது.
அ) தீப்பெட்டி
ஆ) கட்டுமானம்
இ) மின்விசைத்தறித்தொழில்
ஈ) நெசவுத் தொழில்
விடை:
இ மின்விசைத் தறித்தொழில்

Question 9.
பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்திட்ட பங்கினை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினை ……………. கொண்டுள்ளது.
அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருப்பூர்
ஈ) தஞ்சை
விடை:
இ திருப்பூர்

Question 10.
……………… அரைக்கோளத்திலுள்ள நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகள் எனப்படுகின்றது.
அ) கிழக்கு
ஆ) மேற்கு
இ) வடக்கு
ஈ) தெற்கு
விடை:
ஈ) தெற்கு

Question 11.
வீட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையம் …………….. ஆகும்.
அ) ஈரோடு
ஆ) சேலம்
இ) கரூர்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ கரூர்

Question 12.
வேலூர் ……………… ஏற்றுமதியின் சிறந்து விளங்குகிறது.
அ) வீட்டுப்பொருள்
ஆ) விசைத்தறி
இ) தோல்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ தோல்

Question 13.
……………. போக்குவரத்திற்கு சிறந்தது.
அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) அ) (ம) ஆ)
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) தமிழ்நாடு

Question 14.
TIDCO ………………. தொடங்கப்பட்டது.
அ) 1949
ஆ) 1971
இ) 1965
ஈ) 1956
விடை:
இ 1965

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………….. என்பது புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைக்கும் புத்தாக்கம் புனைபைவர் ஆவார்.
விடை:
தொழில் முனைவோர்

Question 2.
……………… ஒன்றை உருவாக்குவதற்கும் பெரிதுபடுத்துவதற்கான திறனாகும்.
விடை:
தொழில் முனைவு

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 3.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் ……………. தொடங்கப்பட்டது.
விடை:
ஜனவரி 16, 2016

Question 4.
…………….. என்பது சென்னையில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.
விடை:
MEPZ

Question 5.
MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த ……………. GST சாலையில் அமைந்துள்ளது.
விடை:
தாம்பரம்

Question 6.
திறமை வாய்ந்த மனிதவளங்கள் ………… தேவைப்படுகின்றன.
விடை:
தொழிற்சாலைக்கு

Question 7.
…………….. தொழிற்சாலையும், வேலைவாய்ப்பையும் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
தோல் உற்பத்தி

Question 8.
50க்கும் மேற்பட்ட அலகுகளைக் கொண்டு ………………. முக்கிய மையமாகத் திகழ்கிறது.
விடை:
கரூர்

Question 9.
மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையும் நிறைவேற்றுமிடம் ……………… எனப்படும்.
விடை:
தொழிற்சாலை

Question 10.
வருமானம் அதிகரிப்பு ………….. தேவைக்கு வழி வகுக்கிறது.
விடை:
பண்டங்கள் (ம) பணிகளின்

III. தவறான ஒன்றினை தேர்வு செய்க.

Question 1.
…………… தீப்பெட்டி தொழிற்சாலைக்கு பெயர் பெற்ற இடமாகும்.
அ) ராணிப்பேட்டை
ஆ) தர்மபுரி
இ) சிவகாசி
ஈ) திருப்பூர்
விடை:
இ சிவகாசி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 2.
…………. உள்நாட்டுப் போக்குவரத்துக்கு சிறந்த மாநிலமாகும்.
அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரப்பிரதேசம்
இ) கேரளா
ஈ) கர்நாடகா
விடை:
அ) தமிழ்நாடு

IV. பின்வருவனவற்றை பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் 4

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் – வரையறு.
விடை:

  • மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும்.
  • மத்திய அரசு அமைத்த நாட்டின் ஏழு ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • இது அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த தாம்பரம் GST சாலையில் அமைந்துள்ளது.

Question 2.
தொழிற்சாலை வரையறு.
விடை:
பொதுவாக மூலப்பொருள்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் “தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது.

Question 3.
தொழிற்சாலைகளின் வகைகள் யாவை?
விடை:

  • பயனர்கள்
  • பயன்Question படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை
  • நிறுவன உரிமையாளர்கள்
  • அளவு

Question 4.
தொழில்மயமாதல் வரையறு.
விடை:
நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருள்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது தொழில்மயமாதல் எனப்படும்.

Question 5.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் வரையறு.
விடை:

  • ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும்.
  • இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
தமிழகத்தில் தொழில் விரிவாக்கத்திற்கு திறவுகோலாக செயல்படும் முகமைகளை விவரி.
விடை:
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்:
1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்:
1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்:
நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – வரையறுக்கப்பட்டது:
புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது.

தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – வரையறுக்கப்பட்டது:
சிறுநிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 2.
தமிழ்நாட்டின் முக்கிய தானியங்கி தொகுப்புகள் பற்றி விவரிக்க.
விடை:

  • சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுகிறது.
  • சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது.
  • சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன.
  • பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹூன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட்
  • நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன.
  • எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது.
  • பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
  • கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

10th Social Science Guide அரசாங்கமும் வரிகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள் ………………………….
அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி
ஆ) மைய, மாநில மற்றும் கிராம
இ) மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து
ஈ) ஏதுமில்லை
விடை:
அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி

Question 2.
இந்தியாவில் உள்ள வரிகள் ………………… .
அ) நேர்முக வரிகள்
ஆ) மறைமுக வரிகள்
இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ)
ஈ) ஏதுமில்லை
விடை:
இ இரண்டும் (அ) மற்றும் (ஆ)

Question 3.
வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?
அ) பாதுகாப்பு
ஆ) வெளிநாட்டுக் கொள்கை
இ) பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி ………………..
அ) சேவை வரி
ஆ) கலால் வரி
இ) விற்பனை வரி
ஈ) மத்திய விற்பனை வரி
விடை:
இ விற்பனை வரி

Question 5.
ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?
அ) மதிப்புக் கூட்டு வரி (VAT)
ஆ) வருமான வரி
இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
ஈ) விற்பனை வரி
விடை:
இ பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

Question 6.
இந்தியாவில் வருமானவரிச்சட்டம் முதன் முதலில் …..ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அ) 1860
ஆ) 1870
இ) 1880
ஈ) 1850
விடை:
அ) 1860

Question 7.
சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு ……………. வரி விதிக்கப்படுகிறது.
அ) வருமான வரி
ஆ) சொத்து வரி
இ) நிறுவன வரி
ஈ) கலால் வரி
விடை:
ஆ) சொத்து வரி

Question 8.
கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை?
அ) பண்டங்களின் பற்றாக்குறை
ஆ) அதிக வரி விகிதம்
இ) கடத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………….. மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது.
விடை:
வரி

Question 2.
“வரி” என்ற வார்த்தை ……………. சொல்லிலிருந்து பெறப்பட்டது.
விடை:
வரிவிதிப்பு

Question 3.
……………… வரியில் வரியின் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது.
விடை:
நேர்முக

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி …………………… ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
விடை:
1 ஜூலை 2017

Question 5.
வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் ………………. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கருப்பு பணம்

III. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
GST பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
i) GST ‘ஒரு முனைவரி’
ii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
iii) இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
iv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.

அ) (1) மற்றும் (ii) சரி
ஆ) (ii), (iii) மற்றும் (iv) சரி
இ) (ii), (iii) மற்றும் (iv) சரி
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரியானவை.
விடை:
இ (ii), (iii) மற்றும் (iv) சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 2

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
வரி வரையறுக்க.
விடை:

  • வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும்.
  • அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாகச் செலுத்த வேண்டியதே வரி.

Question 2.
அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?
விடை:

  • நாட்டின் நிதி நிர்வாகத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நாம் வரி செலுத்த வேண்டும்.
  • வரிவிதிப்பு மூலம் வழங்கப்படுகின்ற பணத்தை பல செயல்பாடுகளைச் செய்ய மாநிலங்கள் பயன்படுத்துகின்றன.

Question 3.
வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
விடை:
வரிகளின் வகைகள் :
நேர்முக வரிகள் மற்றும் மறைமுக வரிகள்.

நேர்முக வரிகள் :

  • வருமான வரி
  • நிறுவன வரி
  • சொத்து வரி (அ) செல்வ வரி

மறைமுக வரிகள்:

  • முத்திரைத்தாள் வரி
  • பொழுபோக்கு வரி
  • கலால் வரி (அ) சுங்கத்தீர்வை
  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி – சிறு குறிப்பு வரைக.
விடை:

  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.
  • இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
  • மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி ஒரு வரி” என்பதாகும்.
  • இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

Question 5.
வளர்வீத வரி என்றால் என்ன?
விடை:

  • வளர்வீத வரி விதிப்பு முறையில் வரியின் அடிப்படைத்தளம் அதிகரிக்கும் போது (பெருக்கப்படும்) வரி விகிதமும் (பெருகி) அதிகரிக்கிறது.
  • அதாவது வருமானம் அதிகரிக்கும் போது, வரி விகிதமும் அதிகரிக்கும்.

Question 6.
கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
விடை:

  • கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
  • வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.

Question 7.
வரி ஏய்ப்பு என்றால் என்ன?
விடை:

  • தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும்.
  • வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை
    1. வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்
    2. விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது.
    3. மறைக்கப்பட்ட பணம்.
    4. கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்.

Question 8.
வரிக்கும் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஏதேனும் இரண்டை பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 3

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.
விடை:
வரிகளின் வகைகள்: அ) நேர்முக வரிகள் ஆ) மறைமுக வரிகள்
அ) நேர்முக வரிகள் :
நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும். சில நேர்முக வரிகள்: வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.

வருமான வரி :

  • வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும்.
  • இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது.

நிறுவன வரி:

  • இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது.
  • இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.

சொத்து வரி (அ) செல்வ வரி:

  • சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும்.
  • இந்த வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.

ஆ) மறைமுக வரிகள்:

  • ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது “மறைமுகவரி” எனப்படும்.
  • சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்.

முத்திரைத்தாள் வரி:
முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்களான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.

பொழுதுபோக்கு வரி :

  • எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.
  • உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

சுங்கத் தீர்வை (அ) கலால் வரி:
சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும்.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி: (GST)
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.

  • இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
  • மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி – ஒரு வரி” என்பதாகும்.
  • இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 2.
GST யின் அமைப்பை எழுதுக.
விடை:
பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு (GST)
மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): (மாநிலத்திற்குள்):
மதிப்புக் கூட்டு வரி (VAT) / விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி, மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): (மாநிலத்திற்குள்):
மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை, கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம், (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி).

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST): (மாநிலங்களுக்கு இடையே)
நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. (5%, 12%, 18% மற்றும் 28%) காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

Question 3.
கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக.
விடை:
கருப்பு பணம் (Black Money) என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு பணத்திற்கான காரணங்கள்:
கருப்பு பணத்திற்கு பல காரணங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அவை

  1. பண்டங்கள் பற்றாக்குறை
  2. உரிமம் பெறும் முறை
  3. தொழில் துறையின் பங்கு
  4. கடத்தல்
  5. வரியின் அமைப்பு

10th Social Science Guide அரசாங்கமும் வரிகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… வளர்வீத வரி விதிப்பு முறைக்கு நேர் எதிர் மாறானதாகும்.
அ) விகித வரி விதிப்பு வரி
ஆ) தேய்வுவீத வரி விதிப்பு முறை
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தேய்வுவீத வரி விதிப்பு முறை

Question 2.
ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித …………………. .
அ) வளர்வீத வரி விதிப்பு முறை
ஆ) தேய்வுவீத வரி விதிப்பு முறை
இ) கலால் வரி
ஈ) (ஆ) மற்றும் (அ)
விடை:
இ கலால் வரி

Question 3.
வருமானம் அதிகரிக்கும் போது வரி விகிதமும் ……………………
அ) குறைகிறது
ஆ) அதிகரிக்கிறது
இ) சற்று அதிகரிக்கிறது
ஈ) சற்று குறைகிறது
விடை:
ஆ) அதிகரிக்கிறது

Question 4.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ………………ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
அ) மார்ச் 10, 2019
ஆ) மார்ச் 29, 2018
இ) மார்ச் 29, 2017
ஈ) மார்ச் 20, 2017
விடை:
இ) மார்ச் 29, 2017

Question 5.
………………. பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.
அ) முத்திரைத்தாள் வரி
ஆ) சுங்கத் தீர்வை
இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
ஈ) பொழுதுபோக்கு வரி
விடை:
ஆ) சுங்கத் தீர்வை

Question 6.
திரைப்பட கட்டணம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை பார்ப்பதற்காக விதிக்க ப்படுகிற வரி …………………
அ) சுங்கத்தீர்வை
ஆ) பொழுதுபோக்கு வரி
இ) முத்திரைத்தாள் வரி
ஈ) வருமான வரி
விடை:
ஆ) பொழுதுபோக்கு வரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 7.
சொத்துத் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவை மீது விதிக்கப்படும் வரி ………………….
அ) சொத்து வரி
ஆ) வருமான வரி
இ முத்திரைத்தாள் வரி
ஈ) கலால் வரி
விடை:
இ முத்திரைத்தாள் வரி

Question 8.
சொத்துக்களுக்கான வரி ………………. அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகிறது.
அ) ஒன்றியம்
ஆ) உள்ளூர்
இ) பஞ்சாயத்து
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
ஆ) உள்ளூர்

Question 9.
இந்தியாவில் அரசாங்கத்தினால் …………… வரி வசூலிக்கப்படுகிறது.
அ) இரண்டு அடுக்கு
ஆ) நான்கு அடுக்கு
இ) மூன்று அடுக்கு
ஈ) ஆறு அடுக்கு
விடை:
இ) மூன்று அடுக்கு

Question 10.
தனிநபர் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரி …………….. ஆகும்.
அ) வருமான வரி
ஆ) நிறுவன வரி
இ) செல்வ வரி
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
இ செல்வ வரி

Question 11.
தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஈவு தொகைக்கானக் கட்டணம் போன்றவை வசூலிக்கப்படும் வரி ………………….
அ) செல்வ வரி
ஆ) நிறுவன வரி
இ) முத்திரைத்தாள் வரி
ஈ) சுங்கத்தீர்வை
விடை:
ஆ) நிறுவன வரி

Question 12.
நேர்முக வரிகளுள் …………….. ஒன்று.
அ) GST
ஆ) சுங்கத்தீர்வை
இ) பொழுதுபோக்கு
ஈ) செல்வ வரி
விடை:
ஈ) செல்வ வரி

Question 13.
அரசாங்கம் மக்களின் நலனிற்கும் ……………… வரிகளைப் பயன்படுத்தலாம்.
அ) தனியார் சேவை
ஆ) பொது சேவை
இ) நிறுவன சேவை
ஈ) அ) மற்றும் ஆ) இரண்டும்
விடை:
ஆ) பொது சேவை

Question 14.
வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வரி ………..
அ) உறுதி விதி
ஆ) சமத்துவ விதி
இ) உற்பத்தி திறன்
ஈ) நெகிழ்ச்சி வரி
விடை:
ஈ) நெகிழ்ச்சி வரி

Question 15.
……………. சேவையை மத்திய அரசாங்கம் வழங்குகிறது.
அ) பாதுகாப்பு
ஆ) அயல்நாட்டு கொள்கை
இ) சட்டம் மற்றும் ஒழுங்கு
ஈ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
விடை:
ஆ) அயல்நாட்டு கொள்கை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது ……………… அத்தியாவசியப் பணியாக உள்ளது.
விடை:
ராணுவத்தின்

Question 2.
………………. அரசாங்கத்தில் துடிப்பான நீதித்துறை உள்ளது.
விடை:
மத்திய

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 3.
வரிவிதிப்பு முறை ……………. என்ற கருத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
விடை:
நல அரசு

Question 4.
……………. என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணம்.
விடை:
வரிகள்

Question 5.
வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறன் ………… என கூறப்படுகிறது.
விடை:
நிதித்துறை

Question 6.
தற்கால இந்திய வரி முறையானது ………………. முறையை அடிப்படையாக கொண்டது.
விடை:
பண்டைய கால வரி

Question 7.
இந்தியாவில் முதன் முதலாக வருமானவரி ………………. என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
சர் ஜேம்ஸ் வில்சன்

Question 8.
………………. இந்தியாவில் உள்ள சிறப்பு உரிமைகளில், மூலதன சொத்துகளில் விற்பனையில் இருந்து வரும் வட்டி லாபங்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது.
விடை:
நிறுவன வரி

Question 9.
…………….. சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படும் வரி.
விடை:
செல்வ வரி

Question 10.
இந்தியாவின் சில முக்கிய மறைமுக வரி, சுங்க வரி மற்றும் ……………………. ஆகும்.
விடை:
பண்டங்கள் பணிகள் வரி

Question 11.
………………. அரசாங்க ஆவணத்திற்கு விதிக்கப்படுவதாகும்.
விடை:
முத்திரைத்தாள் வரி

Question 12.
……………… உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரி ஆகும்.
விடை:
சுங்கத்தீர்வை

Question 13.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ……………… முதல் செயல்பட்டு வருகிறது.
விடை:
ஜூலை 1, 2017

Question 14.
……………. என்பது செலுத்தப்படாத வரி பணமாகும்.
விடை:
கருப்பு பணம்

Question 15.
……………… அபாரதங்களில் 5 ஆண்டுகள் சிறை தண்டணையும் அதிக அபராதமும் அடங்கும்.
விடை:
வரி விதிப்பு

Question 16.
…………….. கருப்பு பணத்திற்கான காரணங்களில் ஒன்று.
விடை:
கடத்தல்

Question 17.
வரி விதிப்பு ……………… உருவாக்குகிறது.
விடை:
சமூக நலனை

Question 18.
………………. வரி விதிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
விடை:
வட்டார வளர்ச்சியில்

Question 19.
…………… என்பது பணவீகிதத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக பயன்படுகிறது.
விடை:
வரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 20.
……………… என்பது பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்துவதாகும்.
விடை:
கட்டணம்

III. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) கருப்பு பணம் என்பது செலுத்தப்படும் வரிப் பணமாகும்.
ii) வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட பணம் ஆகும்.
iii) வரி அமைப்பு கருப்பு பணத்திற்கான காரணங்களுள் ஒன்று.

அ) i) மற்றும் ii) சரி
ஆ) ii) மற்றும் iii) சரி
இ) i) மற்றும் iii) சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
ii) மற்றும் iii) சரி

Question 2.
i) வருமான வரி 1866ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
ii) இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
iii) இது ஒரு நேர்முக வரி ஆகும்.
iv) வருமான வரி வளர்வீத வரியின் எடுத்துக்காட்டாகும்.

அ) i) மற்றும் ii) சரி
ஆ) ii) iii) iv) சரி
இ) i), iii), iv) சரி
ஈ) எல்லாம் சரி
விடை:
ஆ) ii), iii), iv) சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 5

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
வரி ஏய்ப்பின் அபராதங்களைப் பற்றி எழுதுக.
விடை:

  • ஒரு நபர் வரி ஏய்ப்பு செயலை முழுமையாகச் செய்தால், அவர் மோசமான குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும். வரி ஏய்ப்பு அபராதங்களில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிக அளவு அபராதமும் அடங்கும்.
  • பிரதிவாதிகள், வழக்கு விசாரணைக்கான செலவுகளைச் செலுத்த உத்தரவிடப்படலாம்.
  • வரி ஏய்ப்பிற்கான அபராதம், குற்றத்தின் தன்மை, மற்றும் அதன் தீவிரத்தினைப் பொறுத்து கடுமையானதாக இருக்கும்.

Question 2.
பொழுதுபோக்கு வரி வரையறு.
விடை:
எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.

உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

Question 3.
பாதுகாப்பு (அ) இராணுவம் வரையறு.
விடை:

  • எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது இராணுவத்தின் அத்தியாவசியப் பணியாகக் கருதப்படுகிறது.
  • பாதுகாப்புப் படைகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் மத்திய அரசாங்கமே பொறுப்பாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
விகித வரி விதிப்பு முறை வரையறு.
விடை:

  • ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித வரி விதிப்பு முறை எனப்படுகிறது.
  • அனைத்து வரி செலுத்துவோரும், தங்கள் வருமானத்தில் அதே விகிதத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
வரி அமைப்பு பற்றி விவரி.
விடை:

  • ஒவ்வொரு வகையான வரியும் சில நன்மைகள் மற்றும் தீமைகளைப் பெற்றுள்ளன.
  • நாம் கொண்டுள்ள வரி அமைப்பு, பல்வேறு வகையான வரிகளின் தொகுப்பாகும்.
  • ஆடம் ஸ்மித் முதல் பல பொருளாதார வல்லுநர்கள் வரி விதிப்புக் கொள்கைகளைக் கொடுத்துள்ளனர்.
  • அவைகளில் பொதுவான வகைகளை இங்கு நினைவு கூறுவது முக்கியமானதாகும்.
  1. சமத்து விதி :
    • வரி ஒரு கட்டாயக் கட்டணம் என்பதால், வரி முறையை வடிவமைப்பதில் சமத்துவம் என்பது முதன்மை என்பதை அனைத்து பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
    • பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்தவேண்டும், ஏனென்றால் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது.
  2. உறுதி விதி:
    ஒவ்வொரு வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரி முறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.
  3. சிக்கன மற்றும் வசதி விதி:
    • வரி எளிமையானதாக இருந்தால், வரி வசூலிப்பதற்கான செலவு (வரி செலுத்துவோர் செலவு + வரி வசூலிப்போர் செலவு) மிகக் குறைவாக இருக்கும்.
    • மேலும், ஒரு நபருக்கு வரி செலுத்தப் போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட வேண்டும்.
    • இது வசதிக்கான வரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வசதியான வரி, வரி வசூலிக்கும்
      செலவை குறைக்கிறது.
  4. உற்பத்தித் திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி:
    • அரசாங்கம் போதுமான வரி வருவாயைப் பெறக்கூடிய வரிகளை தேர்வு செய்ய வேண்டும்.
    • நிறைய வரிகளுக்குப் பதிலாக அதிக வரி வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
    • இது உற்பத்தித் திறன் வரியாகும். > மக்கள் தங்கள் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்கள்.
    • எனவே, மக்கள் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும்.
    • இது நெகிழ்ச்சி வரி எனப்படுகிறது.

Question 2.
பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வரிவிதிப்பின் பங்கினை விவரி.
விடை:
பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வரி விதிப்பின் பங்கு பின்வருமாறு.

  1. வளங்களைத் திரட்டுதல்:
    • வரிவிதிப்பு அரசாங்கத்திற்கு கணிசமான அளவிற்கு வருவாய் திரட்டுவதற்கு உதவுகிறது.
    • குறிப்பாக நேர்முக வரிகளான தனிநபர் வருமானவரி, நிறுவனவரி மற்றும் மறைமுக வரிகளான ஆயத்தீர்வை, சுங்கவரி ஆகியவற்றின் மூலமாக வரி வருவாய் திரட்டப்படுகிறது.
  2. வருமான ஏற்றதாழ்வுகளை குறைத்தல்:
    • வரியின் மூலம் சமத்துவமுறையை உருவாக்கலாம்.
    • குறிப்பாக, நேர்முக வரியில் வளர்வீத வரி முறை பின்பற்றப்படுகிறது.
    • அதேபோல சில மறைமுக வரியான ஆடம்பரப் பண்டங்களின் மீது விதிக்கப்படும் வரி வளர்வீத வரியின் தன்டையுடையதாகும்.
  3.  சமூக நலன் :
    • வரி விதிப்பு சமூக நலனை உருவாக்குகிறது.
    • சில விரும்பத்தகாத பொருட்களான மதுபானங்கள் போன்ற பொருட்களின் மீது அதிகமாக வரி விதிப்பதன் மூலம் சமூக நலன் பாதுகாக்கப்படுகிறது.
  4. அந்நியச் செலாவணி:
    • வரிவிதிப்பு ஏற்றுமதியை ஊக்குவிப்பதுடன் இறக்குமதியைத் தடுக்கிறது. பொதுவாக, வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளும் ஏற்றுமதி பொருட்களுக்கு வரிகளை விதிப்பதில்லை.
  5. வட்டார முன்னேற்றம்:
    • வட்டார வளர்ச்சியில் வரி விதிப்பு முக்கியப் பங்கினை வகிக்கிறது.
    • பின் தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்காக வரிச் சலுகையையும், வரி விலக்குகளையும் அளிப்பதன் மூலம், அப்பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு வணிக நிறுவனங்களைத் தூண்டுகிறது.
  6. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் :
    • வரி என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.
    • அரசாங்கம் பண்டங்கள் மீதான வரி விகிதத்தை குறைப்பதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

9th Social Science Guide உள்ளாட்சி அமைப்புகள் Text Book Back Questions and Answers

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
அ) பல்வந்ராய் மேத்தா குழு
ஆ) அசோக் மேத்தா குழு
இ) GVK ராவ் மேத்தா குழு
ஈ) LM சிங்வி மேத்தா குழு
விடை:
இ) GVK ராவ் மேத்தா குழு

Question 2.
_____ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பாண்டியர்
ஈ) பல்ல வர்
விடை:
அ) சோழர்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 3.
73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.
அ) 1992
ஆ) 1995
இ) 1997
ஈ) 1990
விடை:
அ) 1992

Question 4.
ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் ____ ஆவார்.
அ) ஆணையர்
ஆ) மாவட்ட ஆட்சியர்
இ) பகுதி உறுப்பினர்
ஈ) மாநகரத் தலைவர்
விடை:
ஆ) மாவட்ட ஆட்சியர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
‘உள்ளாட்சி அமைப்புகளின்’ தந்தை என அழைக்கப்படுபவர் _____
விடை:
ரிப்பன் பிரபு

Question 2.
நமது விடுதலைப் போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது ____ ஆக விளங்கியது.
விடை:
நம்பிக்கை

Question 3.
சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை ____ என்றழைக்கப்பட்டது.
விடை:
குடவோலை முறை

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 4.
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ____ ஆகும்.
விடை:
கிராம ஊராட்சி

Question 5.
பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர் ____ ஆவார்.
விடை:
செயல் அலுவலர்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள் 55

IV. தவறுகளைக் கண்டறிந்து பிழை திருத்தி எழுதவும்.

1. ஊராட்சி ஒன்றியம் பல மாவட்டங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
2. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
3. நகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப்பணிகள் அலுவலர் ஆவார்.
4. ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை:
1. ஊராட்சி ஒன்றியம் பல ஊராட்சிகள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
2. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைந்துள்ளது.
3. தவறு இல்லை.
4. உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தலைவர் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

V. சுருக்கமான விடையளி

Question 1.
கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?
விடை:

  • சொத்து வரி
  • நில வரி
  • வீட்டு வரி
  • தொழில் வரி
  • குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
  • கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 2.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:

  • மூன்று அடுக்கு அமைப்பு
  • கிராம சபை
  • தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்.
  • நிதி ஆணையத்தினை நிறுவுதல்.
  • மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு.
  • பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கீடு.
  • மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.

Question 3.
கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?
விடை:

  • குடிநீர் வழங்குதல்
  • வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்
  • சாலைகளைப் பராமரித்தல்
  • தொகுப்பு வீடுகளைக் கட்டுதல்
  • சிறிய பாலங்களைப் பராமரித்தல்
  • இடுகாடுகளைப் பராமரித்தல்
  • வடிகால் அமைப்புக்களைப் பராமரித்தல்
  • தெருக்களைச் சுத்தம் செய்தல்
  • பொதுக்கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல்
  • தெருவிளக்குகளைப் பராமரித்தல்
  • கிராம நூலகங்களைப் பராமரித்தல்

Question 4.
உள்ளாட்சி அமைப்புகளின் விருப்பப்பணிகள் யாவை?
விடை:

  • கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளைப் பராமரித்தல்.
  • சந்தைகளையும் திருவிழாக்களையும் நடத்துதல்
  • மரங்களை நடுதல்.
  • விளையாட்டு மைதானங்களைப் பராமரித்தல்
  • வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள், இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடைகளின் கொட்டகை ஆகியவற்றைப் பராமரித்தல்.
  • பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களைக் கட்டுப்படுத்துதல்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 5.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:

  • பேரூராட்சி
  • நகராட்சி
  • மாநகராட்சி

VI. ஒரு பத்தியில் விடையளி.

Question 1.
1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:

  • ஊராட்சி மற்றும் நகராட்சியின் ‘உள்ளாட்சி அமைப்பு’ நிறுவனங்களாகச் செயல்படும்.
  • குடியரசு அமைப்பின் அடிப்படை அலகுகள்: வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் (கிராமங்கள்) மற்றும் பகுதி குழுக்கள் (நகராட்சிகள்) ஆகியன.
  • கிராமங்கள் இடையில் காணப்படும் வட்டாரம் / வட்டம் / மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன.
  • நேரடித் தேர்தல் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன.
  • அனைத்து நிலைகளிலும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
  • பெண்களுக்கு 1/3 பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
  • தலைவர் பதவிக்கும் 1/3 பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துதல், ஆட்சிகலைக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Question 2.
உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் யாவை?
விடை:

  • உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறை யின்மை.
  • நிதி ஒதுக்கீடு மற்றும் தேவைகளின் மதிப்பீடு ஒத்துப்போவதில்லை.
  • உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதி, வகுப்பு மற்றும் சமயம் ஆகிய மூன்றும் முக்கிய பங்காற்றுகின்றன. > மக்களாட்சியின் அடிப்படை நிலையிலுள்ள அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்பற்ற நிலை.

VII. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. உன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியைச் சந்தித்து உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்ற விவரங்களை சேகரி.

9th Social Science Guide உள்ளாட்சி அமைப்புகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள்
அ) பல்லவர்கள்
ஆ) ஆங்கிலேயர்
இ) குப்தர்கள்
ஈ) சோழர்கள்
விடை:
ஈ) சோழர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 2.
மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்தியது
அ) 1909 மிண்டோ – மார்லி சீர்திருத்தச்சட்டம்
ஆ)1919 மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம்
இ) 1773 ஒழுங்குபடுத்தும் சட்டம்
ஈ) 1935 இந்திய அரசுச்சட்டம்
விடை:
ஈ) 1935 இந்திய அரசுச்சட்டம்

Question 3.
இந்திய நிர்வாகம் பிராந்திய மொழியிலேயே நடைபெற வேண்டும் என விரும்பியவர்
அ) டல்ஹௌசி
ஆ) வெல்லெஸ்லி
இ) மன்றோ
ஈ) ரிப்பன்
விடை:
இ) மன்றோ

Question 4.
இந்தியாவில் வாக்களிக்கத் தேவையான குறைந்தபட்ச வயது
அ) 18
ஆ) 21
இ) 25
ஈ) 16
விடை:
அ) 18

Question 5.
மேயரின் பதவிக்காலம்
அ) 3 ஆண்டுகள்
ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
ஈ) 6 ஆண்டுகள்
விடை:
இ) 5 ஆண்டுகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கிராம ஊராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் ____ ஆண்டுகள்.
விடை:
ஐந்து

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 2.
தமிழ்நாட்டில் இருந்த உள்ளாட்சி அமைப்புகள் பற்றி தெரிவிப்பது ____ கல்வெட்டுக்கள் ஆகும்.
விடை:
உத்திரமேரூர்

Question 3.
கிராம ஊராட்சிக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர்
விடை:
ஊராட்சி மன்ற தலைவர்

Question 4.
பெரியார் ____ நகராட்சியின் பெருந்தலைவராகப் பணியாற்றினார்.
விடை:
ஈரோடு

Question 5.
மாநில அளவில் தேர்தல்களை நடத்துவது _____
விடை:
மாநிலத் தேர்தல் ஆணையம்

III. சுருக்கமாக விடையளி

Question 1.
ஊராட்சி ஒன்றியத்தின் பணிகள் யாவை?
விடை:

  • குடிநீர் வழங்கல்
  • கிராம சுகாதார நிலையங்கள் பராமரிப்பு
  • சாலைகள் பராமரிப்பு
  • மகப்பேறு விடுதிகளை நிறுவுதல்
  • பொதுக் கண்காட்சிகள் நடத்துதல்
  • கால்நடை மருத்துவமனைகளை நிறுவுதல்
  • சமூகக் காடுகளை பராமரித்தல்
  • துவக்கப்பள்ளி கட்டடங்களை சீர் செய்தல்

Question 2.
பிற நகர்புற பஞ்சாயத்துக்கள் யாவை?
விடை:

  • அறிவிக்கப்பட்ட பகுதி குழுக்கள்
  • நகர் பகுதி குழுக்கள்
  • இராணுவ குடியிருப்பு வாரியம்
  • குடியிருப்புகள்
  • துறைமுகப் பொறுப்பு கழகம்
  • சிறப்பு நோக்க நிறுவனம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 3.
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளின் பெயர்களை எழுதுக.
விடை:

  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • திருச்சி
  • திருநெல்வேலி
  • சேலம்
  • ஈரோடு
  • வேலூர்
  • தூத்துக்குடி
  • திருப்பூர்
  • தஞ்சாவூர்
  • திண்டுக்கல்

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?
விடை:

  • சொத்து வரி
  • தொழில் வரி
  • வீட்டு வரி
  • குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
  • நில வரி
  • கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்

Question 2.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:

  • மூன்று அடுக்கு அமைப்பு
  • கிராம சபை
  • தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்.
  • நிதி ஆணையத்தினை நிறுவுதல்.
  • மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு.
  • பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கீடு.
  • மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள் 90

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

10th Social Science Guide உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
…………….. என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும்.
அ) உணவு கிடைத்தல்
ஆ) உணவுக்கான அணுகல்
இ) உணவின் முழு ஈடுபாடு
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
அ) உணவு கிடைத்தல்

Question 2.
தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை …………….. மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
அ) FCI
ஆ) நுகர்வோர் கூட்டுறவு
இ) ICICI
ஈ) IFCI
விடை:
அ) FCI

Question 3.
எது சரியானது?
i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்
ii) MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை
iii) PDS – பொது விநியோக முறை
iv) FCI – இந்திய உணவுக் கழகம்

அ) i மற்றும் ii சரியானவை
ஆ) iii மற்றும் iv சரியானவை
இ) ii மற்றும் iii சரியானவை
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 4.
நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480ஐ கொண்டு வந்த நாடு …………
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சிங்கப்பூர்
ஈ) இங்கிலாந்து
விடை:
அ) அமெரிக்கா

Question 5.
…………….. இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
அ) நீலப் புரட்சி
ஆ) வெள்ளைப் புரட்சி
இ) பசுமைப் புரட்சி
ஈ) சாம்பல் புரட்சி
விடை:
இ பசுமைப் புரட்சி

Question 6.
உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் …………
அ) கேரளா
ஆ) ஆந்திரபிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) கர்நாடகா
விடை:
இ தமிழ்நாடு

Question 7.
………………. என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.
அ) ஆரோக்கியம்
ஆ) ஊட்டச்சத்து
இ) சுகாதாரம்
ஈ) பாதுகாப்பு
விடை:
ஆ) ஊட்டச்சத்து

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………… ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.
விடை:
எடை குறைவாக இருப்பது

Question 2.
………………ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
விடை:
2013

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 3.
பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருள்களை வழங்குவதில் ……………… முக்கியப் பங்கு வகிக்கிறது.
விடை:
நுகர்வோர் கூட்டுறவு

III. பின்வருவனவற்றைப் பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 2

IV. சரியான கூற்றை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
காரணம் : பொருள்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

அ) கூற்று சரியானது, காரணம் தவறானது
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது
இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்
விடை:
ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்

V. குறுகிய விடையளிக்கவும்.

Question 1.
FAO வின்படி உணவு பாதுகாப்பை வரையறு.
விடை:
“எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவுப் பாதுகாப்பு இருக்கிறது.”

Question 2.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை?
விடை:
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள்: கிடைத்தல், அணுகல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.

Question 3.
பசுமைப் புரட்சியில் இந்திய உணவுக் கழகத்தின் (FCI)யின் பங்கு என்ன?
விடை:

  • விவசாயிகளின் பயிர்களுக்கு விதைப்புப் பருவத்திற்கு முன்பே குறைந்தபட்ச விலை F(Minimum Support Price) யை ஊக்கத்தொகையாக வழங்குகிறது.
  • உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை FCI வாங்குகிறது.
  • கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்கள் களஞ்சியங்களில் சேமிக்கப்படுகின்றன.

Question 4.
பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
விடை:

  • உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரித்தல்.
  • உணவு தானியங்களை இறக்குமதி செய்வதில் குறைப்பு.
  • அதிக மகசூல் தரக்கூடிய கோதுமை மற்றும் அரிசி கணிசமாக வளர்ந்தன.
  • இது ஏராளமான வேலைகளை உருவாக்கியது.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 5.
தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
விடை:

  • புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம்.
  • ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்.
  • பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்.
  • பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்.
  • தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்.
  • மதிய உணவுத் திட்டம்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.
விடை:
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா ஒரு திட்டமிட்ட வளர்ச்சியினை பின்பற்ற முடிவு செய்தது.

விவசாயத்தில் ஆரம்பத்தில் கவனம் செலுத்திய பின்னர், தொழில்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்தியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான வறட்சி, உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது.

இருப்பினும், அப்பொழுது இருந்த அற்றிய செலாவணி இருப்பானது, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கவில்.ை

பணக்கார நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் இந்தியா கோர வேண்டியிருந்தது.

1960களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (P.L.480) திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்து வரும் ஒரு நாடு புரட்சிக்கு சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது.

எனவே அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள் உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான திட்டத்தை வகுத்து அறிமுகப்படுத்தியது,

இந்தத் திட்டம் நீர்ப்பாசனம் இருக்கும் இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

திட்டங்களின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால் அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.

இவ்வாறு, பசுமைப் புரட்சியானது நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது.

Question 2.
குறைந்த பட்ச ஆதரவு விலையை விளக்குக.
விடை:
குறைந்தபட்ச ஆதரவு நிலை:

  • குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அந்த பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு விலை, நிபுணர் குழுவால் நிர்ணயிக்கப்படுகிறது.
  • குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்த பின்னர், இந்த பயிர்கள் பரவலாக வளர்க்கப்படும் இடங்களில் அரசு கொள்முதல் மையங்களைத் திறக்கும்,
  • அந்த விவசாயிகள் தங்கள் பயிர், விளைப் பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற்றால் திறந்தவெளி சந்தையில் விற்க இயலும்.
  • மறுபுறம், திறந்தவெளி சந்தையில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருந்தால், விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விலையைப் பெறுவார்கள்.

Question 3.
பொது விநியோக முறையை விவரிக்கவும்.
விடை:

  • தமிழ்நாடு “உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்டது.
  • உலகளாவிய பொது வழங்கல் முறையின் கீழ் குடும்ப வழங்கல் அட்டை பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பொது வழங்கல் முறை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது.
  • இலக்கு பொது வழங்கல் முறையில் பயனாளிகள் சில அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு உரிமைகள் வழங்கப்படுகிறது.
  • மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் பொருள்களுக்கு மானியம் அளிக்கின்றன.
  • மானியத்தின் நிலை மற்றும் அளவு மாநிலங்களுக்கு இடையே வேறுபடுகிறது.
  • தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் 2013இல் நிறைவேற்றப்பட்டது.
  • 50% நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்.
  • குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைக் குடும்பங்கள் என அழைக்கப்படுகின்றன.
  • இந்த முன்னுரிமை குடும்பங்களுக்கு தற்பொழுது பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை பெறும் உரிமை உண்டு.
  • தமிழ்நாடு தொடர்ந்து உலகளாவிய பொது வழங்கல் முறையைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசியை வழங்குகிறது.

Question 4.
வாங்கும் திறனை பாதிக்கும் காரணிகள் யாவை? அவற்றை விளக்குக.
விடை:
வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள்:
அதிக மக்கள் தொகை :
இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1000க்கு 1.7 ஆக உள்ளது.

அதிக மக்கள் தொகை அதிக தேவைக்கு வழிவகுக்கிறது. ஆனால் அளிப்பு தேவைக்கு சமமாக இல்லை.எனவே சாதாரண விலை நிலை, அதிகமாக இருக்கும். எனவே, இது குறிப்பாக, கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.

அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்தல் :

  • அத்தியாவசிய பொருட்களின் விலையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
  • விலைகளின் தொடர்ச்சியான உயர்வானது வாங்கும் சக்தியை சுரண்டி, ஏழை மக்களை மோசமாகப் பாதிக்கிறது.

பொருள்களுக்கான தேவை :
பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும் போது, பொருள்களின் விலையும் அதிகரிக்கிறது. அதனால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.

பொருள்களின் விலை நாணய மதிப்பை பாதிக்கிறது:
விலை அதிகரிக்கும் போது, வாங்கும் திறன் குறைந்து இறுதியாக நாணயத்தின் மதிப்பு குறைகிறது.

பொருள்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு:

  • பொருள்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் பொழுது, பொருட்களின் விலை அதிகரிக்கிறது.
  • ஆகையால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

வறுமை மற்றும் சமத்துவமின்மை :

  • இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.
  • இது சமுதாயத்தில் வறுமை நிலையை அதிகரிக்க வழிவகுக்கிறது.
  • வறுமையாலும் மற்றும் செல்வத்தின் சமமற்ற வழங்குதலாலும் பொதுவாக வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 5.
புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய குறிக்கோள்கள் யாவை?
விடை:
இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்கள் பின்வருமாறு:

உள்ளீடுகளின் உற்பத்தித்திறனை உயர்த்துதல் :
இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கிய நோக்கமானது வீரியவித்து விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற உள்ளீடுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாகும்.

ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டவை:
வேளாண் கொள்கையானது பொதுவாக வேளாண்மையின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலமும், குறிப்பாக சிறிய மற்றும் ஓரளவு வைத்திருக்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டதை அதிகரிப்பதாகும்.

ஏழை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல் :
ஏழை விவசாயிகளுக்கு நிறுவன கடன் ஆதரவை விரிவுபடுத்துதல், நில சீர்திருத்தங்கள் செய்தல், இடைத்தரகர்களை ஒழித்தல் போன்றவற்றின் மூலம் ஏழை மற்றம் குறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே விவசாயக் கொள்கையாகும்.

விவசாயத் துறையை நவீனமயமாக்குதல் :
விவசாய நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் உயர் ரக விதைகள் (HYV) விதைகள், உரங்கள் போன்ற மேம்பட்ட விவசாய உள்ளீடுகளைப் பயன்படுத்துல் ஆகியவை அடங்கும்.

சுற்றுச்சூழல் சீரழிவு:
இந்தியாவின் விவசாயக் கொள்கை இந்திய விவசாயத்தின் அடித்தளத்தின் சுற்றுச்சூழல் சீரழிவை சரி செய்யும் மற்றொரு நோக்கத்தையும் கொண்டுள்ளது.

அதிகாரத்துவ தடைகளை நீக்குதல் :

  • விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் பற்றும் சுய உதவி நிறுவனங்கள் மீதான அதிகாரத்துவ தடைகளை நீக்குவதற்கு இந்த கொள்கை மற்றொரு குறிக்கோளை அமைத்துள்ளது.
  • இதனால் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.

10th Social Science Guide உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் ………….. வகைகளாக உள்ள ன.
அ) ஐந்து
ஆ) மூன்று .
இ) நான்கு
ஈ) ஆறு
விடை:
ஆ) மூன்று

Question 2.
பல பரிமாண வறுமை குறியீடு ………………… ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அ) 2018
ஆ) 2010
இ) 2013
ஈ) 2016
விடை:
ஆ) 2010

Question 3.
புதிய விவசாயக் கொள்கை 2018ல் ………………. அரசால் அறிவிக்கப்பட்டது.
அ) மாநில
ஆ) மத்திய
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) மத்திய

Question 4.
வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் ……………. மிகப்பெரிய பொருளாதாரமாக மாறி, அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது.
அ) இந்தியா
ஆ) அமெரிக்கா
இ) சீனா
ஈ) ரஷ்யா
விடை:
இ சீனா

Question 5.
பொருள்களுக்கான தேவை அதிகரிக்க, பொருளின் விலையும் …………………
அ) அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ) மிக அதிகம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) அதிகரிக்கும்

Question 6.
…………….. கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.
அ) வறுமை
ஆ) சமத்துவமின்மை
இ) பொருளின் உற்பத்தி
ஈ) அதிக மக்கள் தொகை
விடை:
ஈ) அதிக மக்கள் தொகை

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 7.
தொடர்ச்சியான உயர்வானது வாங்கும் சக்தியை சுரண்டி ……………….. மக்களை மோசமாகப் பாதிக்கிறது.
அ) கிராமப்புற
ஆ) நகர்புற
இ) ஏழை
ஈ) பணக்கார
விடை:
இ ஏழை

Question 8.
இந்தியாவில் ………………. அமைப்புகளில் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது.
அ) நான்கு அடுக்கு
ஆ) மூன்று அடுக்கு
இ) எட்டு அடுக்கு
ஈ) இரண்டு அடுக்கு
விடை:
ஆ) மூன்று அடுக்கு

Question 9.
இந்திய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ……………….யை நம்பியுள்ளது.
அ) இறக்குமதி
ஆ) ஏற்றுமதி
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) இறக்குமதி

Question 10.
உணவு தானியங்களின் விளைச்சல் ……………. ஆக அதிகரித்துள்ளது.
அ) நான்கு மடங்கு
ஆ) எட்டு மடங்கு
இ) 20 மடங்கு
ஈ) 40 மடங்கு
விடை:
அ) நான்கு மடங்கு

Question 11.
………………. ஈட்டுதலுக்கான திறன் மற்றும் வேலைவாய்ப்புடன் நெருக்கமாக உள்ளது.
அ) உணவை உறிஞ்சுதல்
ஆ) உணவுக்கான அணுகல்
இ) உணவு கிடைத்தல்
ஈ) ஆ) மற்றும் இ)
விடை:
ஆ) உணவுக்கான அணுகல்

Question 12.
மானியத்தின் நிலை மற்றும் அளவு ………………. இடையே வேறுபடுகிறது.
அ) மாவட்டம்
ஆ) நாடு
இ) மாநிலம்
ஈ) அ) மற்றும் இ)
விடை:
இ மாநிலம்

Question 13.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் தமிழ்நாட்டில் ……………… ல் துவங்கப்பட்டது.
அ) நவம்பர் 1, 2016
ஆ) நவம்பர் 20, 2012
இ) அக்டோபர் 1, 2016
ஈ) நவம்பர் 1, 2010.
விடை:
அ) நவம்பர் 1, 2016

Question 14.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் …………… நகர்புற குடும்பங்களை கொண்டுள்ளது.
அ) 90%
ஆ) 40%
இ) 60%
ஈ) 50%
விடை:
ஈ) 50%

Question 15.
முதல் ஐந்து மாவட்டங்களில் …………….. உள்ளது.
அ) தருமபுரி
ஆ) அரியலூர்
இ) கோயம்புத்தூர்
ஈ) பெரம்பலூர்
விடை:
ஈ) கோயம்புத்தூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பிரபல விவசாய விஞ்ஞானி முனைவர் ………………….
விடை:
எம்.எஸ். சுவாமிநாதன்

Question 2.
……………… உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாக பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்.
விடை:
உணவினை உறிஞ்சுதல்

Question 3.
மக்களின் …………………….. ஒரு நாட்டின் மொத்த வளர்ச்சியுடன் தொடர்புடையது.
விடை:
உணவு பாதுகாப்பு

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 4.
……………. உணவு உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது.
விடை:
ஃபோர்டு அறக்கட்டளை

Question 5.
…………….. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்டது.
விடை:
தமிழ்நாடு

Question 6.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் குடும்பங்கள் ……………… என்று அழைக்கப்படுகிறது.
விடை:
முன்னுரிமை குடும்பங்கள்

Question 7.
……………… இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய ஏறத்தாழ்வு உள்ளது.
விடை:
வறுமை மற்றும் சமத்துவமின்மை

Question 8.
………………. என்பது வாங்கும் சக்தி தொடர்பான ஒரு கருத்தாகும்.
விடை:
வாங்கும் சக்தி சமநிலை

Question 9.
……………… வாங்கும் சக்தி சமநிலையில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
விடை:
இந்தியா

Question 10.
இந்தியாவின் விவசாய கொள்கை ………………. சரி செய்யும் மற்றொரு நோக்கமாகும்.
விடை:
சுற்றுச்சீரழிவை

Question 11.
பல பரிமாண வறுமை குறியீடு ஆனது ……………… மற்றும் ……………… ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.
விடை:
UNDP, OPHUI

Question 12.
வறுமைக் குறைப்பில் ……………. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
விடை:
தமிழகம்

Question 13.
ஊட்டச்சத்து குறைபாட்டினால் மற்றொரு குறியீடாக எடை ……………… உள்ளது.
விடை:
குறைவு

Question 14.
……………. நலவாழ்விலும் ஊட்டசத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
மனித ஆரோக்கியத்திலும்

Question 15.
RCHP – ன் விரிவாக்கம் ………………………. ஆகும்.
விடை:
மதிய உணவு குழந்தைகள் சுகாதார திட்டங்கள்

Question 16.
………………. உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்று.
விடை:
ICDS

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 4

IV. சரியான கூற்றை தேர்வு செய்க.

Question 1.
கூற்று (A) : தாங்கியிருப்பு என்பது உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகத்தின் மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது.
காரணம் (R) : உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை திசிமி வாங்குகிறது.

அ) A சரி R தவறு
ஆ) A மற்றும் R இரண்டும் தவறு
இ) A சரி ஆனால் R ஆனது A வை விளக்கவில்லை .
ஈ) A சரி ஆனால் R ஆனது A வை விளக்குகிறது.
விடை:
அ) A சரி R தவறு

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

V. குறுகிய விடையளிக்கவும்.

Question 1.
உணவு கிடைத்தல் வரையறு.
விடை:
உணவு கிடைத்தல் என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்.

Question 2.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் யாவை?
விடை:

  • மதிய உணவுத் திட்டம்
  • குழந்தைகள் சுகாதர திட்டங்கள் (Reproductive and Child Health Programme)
  • தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி (National Rural Health Mission)

Question 3.
வறுமையின் பல பரிமாணத்தின் இயல்புகள் யாவை?
விடை:
உடல், நலம், கல்வி, வாழ்க்கைத் தரம், வருமானம், அதிகாரமளித்தல், பணியின் தரம் மற்றும் வன்முறையினால் அச்சுறுத்தப்படுதல் போன்ற ஏழை மக்களின் அனுபவத்தை இழக்கும் பல காரணிகளால் பல பரிமாண வறுமை உருவாகிறது.

Question 4.
தாங்கியிருப்பு வரையறு.
விடை:
தாங்கியிருப்பு என்பது உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசி, இந்திய உணவுத் கழகத்தின் மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது.

Question 5.
வாங்கும் திறன் வரையறு.
விடை:

  • வாங்கும் திறன் என்பது ஒரு அலகு பணம் மூலம் வாங்கக் கூடிய பொருள்கள் அல்லது சேவைகளின் அளவின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் நாணயத்தின் மதிப்பு ஆகும்.
  • விலை ஏறும் போது வாங்கும் திறன் குறைகிறது.
  • விலை குறையும் போது வாங்கம் திறன் அதிகரிக்கிறது.

Question 6.
உணவினை உறிஞ்சுதல் வரையறு.
விடை:
உணவினை உறிஞ்சுதல் என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
உணவு பாதுகாப்பு பற்றி விவரிக்க.
விடை:
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உணவு பாதுகாப்பினைப் பின்வருமாறு வரையறுக்கிறது.

“எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆராக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது.”

பிரபல விவசாய விஞ்ஞானி முனைவர் எம்.எஸ். சுவாமிநாதனின் கருத்துப்படி, “சரிவிகித உணவு, பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழல், சுகாதாரம், ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரம்பக் கல்வி ஆகியவற்றிற்கான உடல், பொருளாதார மற்றும் சமூக அணுகல்” என்பது ஊட்டச்சத்து பாதுகாப்பாகும்.

உணவின் அடிப்படைக் கூறுகள் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள்:
உணவு கிடைத்தல், உணவு அணுகல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.

1. உணவு கிடைத்தல் :
என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்.

2. உணவுக்கான அணுகல் :
என்பது முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூற்றாகும். எனவே, இது ஈட்டுதலுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. திறன்களும், வாய்ப்புகளும் ஒருவரின் சொத்துக்கள் மற்றும் கல்வியுடன் தொடர்புடையது.

3. உணவினை உறிஞ்சுதல் :
என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும். 2. தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்களை விவரி.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்கள்:

  1.  டாக்டர் முத்துலெட்சமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் கீழ், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.12,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது.
  2.  முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் 2011-12 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைவருக்கும் உடல் நலம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்குவதாகும்.
  3.  தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் இலவசமாக ஆம்புலன்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. (108 அவசர ஆம்புலன்ஸ் சேவை)
  4. பள்ளி சுகாதார திட்டம்’ விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது.
  5. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

10th Social Science Guide உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?
அ) அமைச்சரவை
ஆ) தலைமை இயக்குநர்
இ) துணை தலைமை இயக்குநர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) தலைமை இயக்குநர்

Question 2.
இந்தியாவில் காலனியாதிக்க வருகை……………………….
அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
ஆ) டச்சு, ஆங்கிலேயர் , டேனிஷ், பிரெஞ்சு
இ) போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்
ஈ) டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு
விடை:
அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர்கள், டேனிஷ், பிரெஞ்சு

Question 3.
காட்(GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் ………………………
அ) டோக்கியோ
ஆ) உருகுவே
இ) டார்குவே
ஈ) ஜெனீவா
விடை:
ஈ) ஜெனீவா

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 4.
இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
அ) 1984
ஆ) 1976
இ) 1950
ஈ) 1994
விடை:
ஈ) 1994

Question 5.
1632இல் ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மான்” வழங்கியவர் யார்?
அ) ஜஹாங்கீர்
ஆ) கோல்கொண்டா சுல்தான்
இ) அக்பர்
ஈ) ஒளரங்கசீப்
விடை:
ஆ) கோல்கொண்டா சுல்தான்

Question 6.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு …………
அ) ஜூன் 1991
ஆ) ஜூலை 1991
இ) ஜூலை – ஆகஸ்ட் 1991
ஈ) ஆகஸ்ட் 1991
விடை:
இ) ஜூலை – ஆகஸ்ட் 1991

Question 7.
இந்திய அரசாங்கத்தால் 1991இல் ………………ஐ அறிமுகப்படுத்தப்பட்டது.
அ) உலகமயமாக்கல்
ஆ) உலக வர்த்த அமைப்பு
இ) புதிய பொருளாதார கொள்கை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ புதிய பொருளாதார கொள்கை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
ஒரு நல்ல பொருளாதாரம் …………….. விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.
விடை:
மூலதனச் சந்தையின்

Question 2.
உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் ………………. ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.
விடை:
ஜனவரி 01 1995

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 3.
……………… ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.
விடை:
பேராசிரியர் தியோடோர் லெவிட்

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 2

IV. கீழ்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
உலகமயமாக்கல் என்றால் என்ன?
விடை:

  • உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.
  • அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.

Question 2.
உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக.
விடை:

  • தொன்மையான உலகமயமாக்கல்
  • இடைப்பட்ட உலகமயமாக்கல்
  • நவீன உலகமயமாக்கல்

Question 3.
பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:
பன்னாட்டு நிறுவனம் என்பது நாட்டில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனமாகும்.

Question 4.
உலகமயமாக்கலை சார்ந்த சீர்திருத்தங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
விடை:

  • சில தொழிற்சாலைகளைத் தவிர, தொழில் உரிமம் பெறுவதை நீக்கியது.
  • பொதுத்துறை நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
  • அயல்நாட்டு செலவாணி ஒழுங்குமுறை பொருத்தமாக திருத்தப்பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட சட்ட ரீதியான நீர்மை விகிதம் (SLR) அதிகரிக்கப்பட்டது.

Question 5.
நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?
விடை:
நியாயமான வர்த்தகமானது, சிறிய விவசாயிகளை உலகளாவிய சந்தை இடத்தில் ஒரு சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பதோடு நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும், கொள்முதல் செய்யவும், அவர்களின் மதிப்பை ஆதரிக்கவும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு வழி முறையாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 6.
“நியாயமான வர்த்தக நடைமுறைகளின்” ஏதாவது இரு கோட்பாடுகளை எழுதுக.
விடை:

  • வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு.
  • நியாயமான வர்த்தக / நடைமுறைகள் மற்றும் நியாயமான விலையில் கொடுப்பது.
  •  குழந்தைத் தொழிலாளர் மற்றும் கட்டாயத் தொழிலாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது,

Question 7.
“உலக வர்த்தக அமைப்பின்” முக்கிய நோக்கம் யாது?
விடை:

  • அயல்நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
  • வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சுவார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
  • வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
  • நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைந்து அறிமுகம் செய்தல்.
  • உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
  • முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
  • முழு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.

Question 8.
உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
விடை:

  • ஒரு சிறந்த பொருளாதாரம், மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
  • வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.
  • புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
விடை:
MNCயின் நன்மைகள் :

  • பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருள்களை தரமாகவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்தி செய்கிறது.
  • பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.
  • பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
  • பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் தீமைகள் :

  • பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை (சில தயாரிப்புகளுக்கு) வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
  • பன்னாட்டு நிறுவனங்கள் சுற்று சூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
  • ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
  • பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு, தார்மீக சட்டங்களை அவர்கள் குற்றம் சாட்டி, மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினை திருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.

Question 2.
‘உலக வர்த்தக அமைப்பு’ பற்றி எழுதுக.
விடை:
உலக வர்த்தக அமைப்பு (WTO):

  • 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை (WTO) அமைப்பதற்கு காட் உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றின் போது இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்திட 104 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது.
  • WTO உடன்படிக்கை ஜனவரி 1, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது.

உலக வர்த்த க அமைப்பு (World Trade Organisation):
தலைமையகம் : ஜெனிவா, சுவிட்சர்லாந்து
நோக்கம் : வணிகத்தினை கட்டுப்படுத்தல், அயல்நாட்டு வாணிபம்
உறுப்பினர்கள் : தலைமை இயக்குநர், துணை தலைமை இயக்குநர்-4 மற்றும் 80 உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 அலுவலக ஊழியர்கள்.

உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்கள்:

  • அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
  • வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
  • வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
  • நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்.
  • உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
  • முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
  • முழு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 3.
உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
விடை:
உலகமயமாக்கலின் சவால்கள்:

  • உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
  • வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
  • உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள் தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
  • இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
  • மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

10th Social Science Guide உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
காட்இன் GATT) ஏழாவது சுற்று …………….. இல் நடந்தது.
அ) சுவிட்சர்லாந்து
ஆ) ஜப்பான்
இ) இங்கிலாந்து
ஈ) டோக்கியோ
விடை:
ஈ) டோக்கியோ

Question 2.
உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் ……………..
அ) பராகுவே
ஆ) டோக்கியோ
இ) அன்னிசி
ஈ) ஜெனீவா
விடை:
ஈ) ஜெனீவா

Question 3.
FERA …………….. உருவானது.
அ) 1947
ஆ) 1999
இ) 1974
ஈ) 1954
விடை:
இ 1974

Question 4.
ஹரோ மோட்டோகிராப் …………….. தொழில்சார் நிறுவனம்.
அ) தகவல் தொடர்பு
ஆ) வங்கி
இ) ஆட்டோமொபைல்ஸ்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ ஆட்டோமொபைல்ஸ்

Question 5.
பயனுள்ள விளம்பர (ம) விற்பனை ஊக்குவிப்பு தொழில்நுட்பங்களை ஏற்கிறது, ……………..
அ) சந்தைப்படுத்தும் மேன்மை
ஆ) நல்ல கருவிகள் கண்டுபிடிப்பு
இ) பண்டங்களின் கண்டுபிடிப்பு
ஈ) நிதி மேன்மை
விடை:
அ) சந்தைப்படுத்தும் மேன்மை

Question 6.
……………….. கிழக்கிந்திய நிறுவனம் துவங்கியது.
அ) 13 டிசம்பர் 1600
ஆ) 31 டிசம்பர் 1600
இ) 21 டிசம்பர் 1800
ஈ) 20 டிசம்பர் 1900
விடை:
ஆ) 31 டிசம்பர் 1600

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 7.
…………….. தலைமையகம் பழவேற்காடு ஆகும்.
அ) போர்த்துகீசியர்
ஆ) டேனியர்
இ) ஸ்பானியர்
ஈ) டச்சுக்காரர்கள்
விடை:
ஈ) டச்சுக்காரர்கள்

Question 8.
இந்தியாவில் டேனிஷ் குடியேற்றங்களால் ……………………….. தலைமையிடமாக மாறியது.
அ) டிராங்குபார் (தரங்கம்பாடி)
ஆ) புலிகாட்
இ) மசூலிப்பட்டினம்
ஈ) பிரெஞ்சு
விடை:
அ) டிராங்குபார் (தரங்கம்பாடி)

Question 9.
ஆரம்பத்தில் இந்தியாவில் போர்த்துகீசியரின் தலைநகரமாக ……………. இருந்தது.
அ) கொச்சின்
ஆ) புலிகாட்
இ) பிரெஞ்சு
ஈ) அச்சிவி
விடை:
அ) கொச்சின்

Question 10.
…………… வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டைக்கு வாணிபத்திற்காக வந்தார்.
அ) மே 1948
ஆ) மே 1498
இ) மார்ச் 1498
ஈ) மார்ச் 1948
விடை:
ஆ) மே 1498

Question 11.
……………… நூற்றாண்டிற்கிடையே உலகமயமாக்கல் குறிப்பிட்ட வேறுபாட்டைக் கொண்டிருந்தது.
அ) 15ஆம்
ஆ) 20ஆம்
இ) 12ஆம்
ஈ) 19ஆம்
விடை:
20 ஆம்

Question 12.
நவீன காலகட்டத்துக்கு முந்தைய காலம் …………………… உலகமயமாக்கல் எனப்படும்.
அ) நவீன
ஆ) இடைப்பட்ட
இ) தொன்மையான
ஈ) வெளி
விடை:
இ தொன்மையான

Question 13.
…………….. பேரரசின் எழுச்சியால் கடல்வழி வாணிபம் ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர்.
அ) ஐரோப்பிய
ஆ) அமெரிக்க
இ) ஆசிய
ஈ) ஆப்பிரிக்க
விடை:
அ) ஐரோப்பிய

Question 14.
கிழக்கிந்திய நிறுவனம் ………………. தொடங்கப்பட்டது.
அ) 1948
ஆ) 1602
இ) 1600
ஈ) 1653
விடை:
ஆ) 1602

Question 15.
……………. காலகட்டம் உலகமயமாக்கலில் ஒரு முக்கிய ஆரம்பகட்டமாக இருந்து வந்தது.
அ) ஹெலினிஸ்டிக்
ஆ) இஸ்லாமிய
இ) இந்துத்துவ
ஈ) அ) (ம) இ)
விடை:
ஆ) இஸ்லாமிய

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.
விடை:
உலகமயமாக்கல்

Question 2.
உலகமயமாக்கலின் ஆரம்ப வடிவத்தை ………….. உலகமயமாக்கல் என்பர்.
விடை:
தொன்மையான

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 3.
17ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ……………… மயமானது.
விடை:
தனியார்

Question 4.
19ஆம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் ……………… வடிவத்தைப் பெற்றது.
விடை:
நவீன

Question 5.
வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும், விரிவுபடுத்தவும் வணிகர்கள் உருவாக்கினார்கள்.
விடை:
தென்னிந்திய வர்த்தக குழுவை

Question 6.
……………… புதிய கடல்வழிப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
விடை:
வாஸ்கோடகாமாவால்

Question 7.
வாஸ்கோடகாமாவின் இரண்டாவது பயணம் ………………. தொடங்கியது.
விடை:
1502

Question 8.
……………….. என்பவரால் டச்சு நிறுவனம் தொடங்கப்பட்டது.
விடை:
அட்மிரல் வான் டெர் ஹகேன்

Question 9.
பிரெஞ்சுக்காரர்களின் தலைமையகமாக 1704ல் ………….. விளங்கியது.
விடை:
பாண்டிசேரி

Question 10.
உலகமயமாக்கலின் கொள்கை ………….. கையெழுத்திட்டபோது சரியானது.
விடை:
டங்கல் வரைவில்

Question 11.
SLR என்பது ……………… எனப்படுகிறது.
விடை:
சட்ட ரீதியிலான நீர்மை விகிதம்

Question 12.
15 பன்னாட்டு நிறுவனங்களில் ………………. அமெரிக்காவை சேர்ந்த தாகும்.
விடை:
11

Question 13.
……………….ஆம் ஆண்டுகளுக்கிடையில் மொத்தம் 12,760 வெளிநாட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
விடை:
1948-1988

Question 14.
……………… நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கிறது.
விடை:
நியாயமான வர்த்தகம்

Question 15.
பன்னாட்டு நிறுவனங்கள் ………………. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
பெரு நிறுவனங்கள்

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 4

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
நவீன உலகமயமாக்கல் வரையறு.
விடை:
19ஆம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் நவீன வடிவத்தை நெருங்கியது.

19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே நடைபெற்ற உலகமயமாக்கல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கொண்டிருந்தன.

அவை, அந்த நூற்றாண்டுகளில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக பொருளாதாரத்தில் மூலதனம் மற்றும் முதலீடு செய்யப்பட்டதும், 20ஆம் நூற்றாண்டில் வணிக உற்பத்தியில் அதிக பங்கினை பெற்றிருந்ததுடன், சேவைகள், வர்த்தகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி வணிகத்தில் எழுச்சியுற்றிருந்ததும் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 2.
2018-ல் இந்தியாவின் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் யாவை?
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 5

Question 3.
சுங்க வரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு வரையறு.
விடை:

  • 1947இல் 23 நாடுகள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • காட்டின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.
  • இதன் இயக்குநர் ஜெனரல் ஆர்தர் டங்கல் கொண்டு வந்த இறுதி சட்ட/ஒப்பந்த வரைவு “டங்கல் வரைவு” என்று அழைக்கப்பட்டது.
  • காட்டின் (GATT) முக்கிய நோக்கம், அர்த்தமுள்ள விதிமுறைகளை பின்பற்றி பலவிதமான கட்டணங்களையும் ஒதுக்கீடுகளையும், மானியங்களையும் குறைப்பதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிப்பது ஆகும்.

Question 4.
நியாயமான வர்த்தக அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள் யாவை?
விடை:

  • சிறிய அளவிலான விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வருமானத்தை உயர்த்துவது மற்றும் உறுதிப்படுத்துவது.
  • பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய பொருளாதார இலாபங்கள், வாய்ப்புகள் மற்றும் இடர்பாடுகளை சமமாக்குதல்.
  • உற்பத்தியாளர் குழுக்களின் நிறுவன மற்றும் வர்த்தக திறன்களை அதிகரித்தல்.

Question 5.
பன்னாட்டு நிறுவனத்தின் (MNC) பரிமாண வளர்ச்சி பற்றிக் கூறுக.
விடை:

  • கிழக்கிந்திய நிறுவனம், ஒரு வர்த்தக நிறுவனமாக இந்தியாவிற்கு வந்தது.
  • 1920களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் பிரித்தெடுக்கப்பட்ட தொழில்களில் அல்லது தொழில் நடத்தும் நாடுகளின் மூலப்பொருள்களை கட்டுப்படுத்தி மெதுவாக இந்தியாவினுள் நுழைந்தன.
  • இந்தியாவில் நான்கு பெரிய ஏற்றுமதி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையாக உள்ளது.
  • இவற்றில் அதிகமானது அமெரிக்காவினுடையது ஆகும். இந்தியாவிலுள்ள 15 பெரிய பன்னாட்டு நிறுவனங்களில், 11 அமெரிக்காவை சேர்ந்ததாகும்.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
MNC-யின் வளர்ச்சிக்கான காரணங்கள் பற்றி விவரிக்க.
விடை:
1. சந்தை நிலப்பரப்பின் விரிவாக்கம்:
பெரிய அளவிலான நிறுவனங்கள் விரிவடைந்து வருவதால், அந்த நிறுவனம் உள்ள நாட்டின் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் அதன் செயல்பாடுகளை மேலும் விரிவாக்குகிறது.

2. சந்தைப்படுத்தும் மேன்மை:
ஒரு பன்னாட்டு நிறுவனம், தேசிய நிறுவனங்களின் மீது சந்தைப்படுத்தும் மேன்மையைக் கொண்டுள்ளது. இது சந்தை மதிப்பினைப் பெற்று, அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் குறைவான சிரமங்களை எதிர் கொள்கிறது.
> மேலும் பயனுள்ள விளம்பர மற்றும் விற்பனை ஊக்குவிப்பு தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்கிறது.

3. நிதி மேன்மை :
> இதில் நிதி வளங்களும், உயர்நிதி பயன்பாடுகளும் உள்ளன.
> இதனால் வெளிப்புற மூலதன சந்தைகளை எளிதில் அணுகமுடியும் மற்றும் அதன் சர்வதேச புகழ் காரணமாக வளங்களை அதிகரிக்கவும் முடியும்.

4. தொழில்நுட்ப மேன்மை :
பின்தங்கிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க, ஊக்கமளித்ததற்கான முக்கிய காரணம் இந்த நிறுவனங்கள் தொழில் வளர்ச்சியில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் காணப்படுவதேயாகும்.

5. பண்டங்களின் கண்டுபிடிப்புகள் :
பன்னாட்டு நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை மேம்பட்ட வடிவமைப்புகளாக உருவாக்குவதற்கான பணியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 2.
உலகமயமாக்கலின் எதிமறைத் தாக்கம் பற்றி விவரிக்கவும்.
விடை:

  • நாடுகளுக்கிடையே மிக அதிகமான மூலதனமானது நியாயமற்ற மற்றும் ஒழுக்கமற்ற விநியோகிப்பாளர்களை அறிமுகப்படுத்துகிறது.
  • தேசிய ஒருமைப்பாட்டை இழந்து வருவதோடு, மிக அதிகமான வர்த்தக பரிமாற்றம் இருப்பதால், சுதந்திரமான உள்நாட்டுக் கொள்கைகள் இழக்கப்படுகின்றன என்பது அச்சத்திற்குரியதாகும்.
  • முக்கிய உள்கட்டமைப்பும் மற்றும் வளங்களை பிரித்தெடுத்தலும் ஒரு பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு தேவை என்றாலும், இது எதிர்மறை சுற்றுச்சூழல் மற்றும் சமூக செலவுகளை அதிகரிக்கும்.
  • அந்நிய செலாவணியை பெறுவதற்காக, இயற்கை வளங்கள் மிக அதிகமாக விரைவாக சுரண்டப்படுகிறது.
  • சுற்றுச்சூழல் பற்றிய தரங்களும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

9th Social Science Guide அரசாங்கங்களின் வகைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
___, ____ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
விடை:
இங்கிலாந்து, பிரான்ஸ்

Question 2.
பாராளுமன்ற ஆட்சி முறை _____ என்றும் அழைக்கப்படுகின்றது.
விடை:
அமைச்சரவை அரசாங்கம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 3.
பாராளுமன்ற ஆட்சி முறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் _____ ஆவர்.
விடை:
பிரதமர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 30

III. வேறுபடுத்துக

Question 1.
ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 35

Question 2.
நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் அதிபர் மக்களாட்சி.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 40
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 41

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
ஒற்றையாட்சி முறை.
விடை:

  • ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகவும்.
  • மத்திய அரசு அதிகாரம் மிக்கதாகும். நிர்வாக அமைப்புகள் மத்திய அரசினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே செயல்படுத்தும்.
  • இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இலங்கை ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
  • ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தப்படுகின்றன.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி

Question 1.
அரசியலமைப்பின் வகைகளைப் பட்டியலிடுக.
விடை:

  • எழுதப்பட்ட அரசியலமைப்பு
  • எழுதப்படாத அரசியலமைப்பு
  • நெகிழும் தன்மையுடைய அரசியலமைப்பு
  • நெகிழும் தன்மையற்ற அரசியலமைப்பு

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 2.
கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?
விடை:

  • உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்.
  • மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.
  • மிகப்பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது.
  • அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தடுக்கிறது.
  • மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது.
  • பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.

Question 3.
ஒற்றையாட்சி முறைக்கும் கூட்டாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 45

VI. விரிவான விடையளி

Question 1.
ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.
விடை:

  • சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
  • அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.
  • ஒற்றை ஆட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
  • ஒற்றை ஆட்சி குறைந்த செலவுடையது.
  • அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.
  • ஒற்றுமை, சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.

Question 2.
அதிபர் மக்களாட்சி முறை பற்றிக் குறிப்பு வரைக. மேலும் அதிபர் மக்களாட்சி முறைக்கும் நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.
விடை:

  • அதிபர் மக்களாட்சி முறையில் நிர்வாகத்துறை தன் கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் சட்ட மன்றத்திற்குப் பொறுப்புடையது அல்ல.
  • நிர்வாகத்துறையில் செயல்பாடுகளில் சட்ட மன்றத்தின் தலையீடு இருக்காது.
  • இது அதிகாரப்பகிர்வு கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.
  • இவ்வரசு முறை அமெரிக்கா, பிரேசில், இரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறை யில் உள்ளது.

அதிபர் மக்களாட்சி முறைக்கும், நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் :

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 80

9th Social Science Guide அரசாங்கங்களின் வகைகள் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அரசாங்கம் என்பது ஒரு அரசின் ____ செயல்பாடுகளைக் குறிப்பதாகும்.
விடை:
நிர்வாக

Question 2.
____, ____ ஆகியவை கூட்டாட்சி ஆட்சி முறைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
விடை:
அமெரிக்க ஐக்கிய
நாடுகள், சுவிட்சர்லாந்து

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 3.
அதிபர் மக்களாட்சிமுறை என்பது ____ ஆட்சி முறை எனக் கருதப்படுகிறது.
விடை:
பொறுப்பில்லாத

Question 4.
அமெரிக்க அதிபர் _____ என்ற அமைச்சரவையின் உதவியோடு ஆட்சி செய்கிறார்.
விடை:
கிச்சன் கேபினட்

Question 5.
ஆங்கில முடியாட்சி என்பது _____ முடியாட்சி ஆகும்.
விடை:
அரசியலமைப்புக்கு உட்பட்ட

II. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஐக்கியப் பேரசில் காணப்பட்ட ____ அமைப்பே மிகவும் பழமையான அரசாங்கம் ஆகும்.
அ) மக்களாட்சி
ஆ) முடியாட்சி
இ) சிறுபான்மையினர் ஆட்சி
ஈ) இரட்டை ஆட்சி
விடை:
ஆ) முடியாட்சி

Question 2.
ஒற்றை ஆட்சி அரசுக்கு உதாரணம்
அ) ஆஸ்திரேலியா
ஆ) கனடா
இ) ஜப்பான்
ஈ) இரஷ்யா
விடை:
இ) ஜப்பான்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 3.
கூட்டாட்சி முறை அரசுக்கு உதாரணம்
அ) பிரேசில்
ஆ) ஸ்ரீலங்கா
இ) ஜப்பான்
ஈ) இங்கிலாந்து
விடை:
அ) பிரேசில்

Question 4.
அமெரிக்க அதிபரின் பதவிக்காலம்
அ) 3 ஆண்டுகள்
ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
ஈ) 6 ஆண்டுகள்
விடை:
ஆ) 4 ஆண்டுகள்

III. சுருக்கமாக விடையளி

Question 1.
அரசாங்கத்தின் மூன்று உறுப்புகளைக் குறிப்பிடுக.
விடை:

  • சட்டமன்றம்
  • நிர்வாகத்துறை
  • நீதித்துறை

Question 2.
கூட்டாட்சி முறை ஆட்சி என்றால் என்ன?
விடை:
அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய அரசும் பிராந்திய அரசுகளும் தங்களது அதிகாரங்களைப் பகிர்ந்து அவரவர் எல்லைக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படுவது கூட்டாட்சி முறை ஆட்சியாகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 3.
நல் ஆட்சியின் பண்புகளைப் பட்டியிலிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 75

V. விரிவான விடை தருக.

Question 1.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒற்றை ஆட்சி முறையின் அம்சங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • பலமான மத்திய அரசு
  • மாநில அரசின் மீது மத்திய அரசின் ஆளுமை
  • ஒற்றை அரசமைப்பு
  • அரசியலமைப்பின் நெகிழ்வுத்தன்மை
  • மாநிலங்களின் சமமற்ற பிரதிநிதித்துவம்
  • அவசரகால ஏற்பாடுகள்
  • ஒற்றைக் குடியுரிமை
  • ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை நீதித்துறை
  • அகில இந்தியச் சேவைகள்
  • ஆளுநர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்படுதல்.

Question 2.
நாடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்கள் யாவை? நாடாளுமன்ற ஆட்சியின் நிறைகள் மற்றும் குறைகள் யாவை?
விடை:
நாடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்கள்

  • பெயரளவில் மற்றும் உண்மையான நிர்வாகிகள்
  • பெரும்பான்மை கட்சி ஆட்சி
  • கூட்டுப் பொறுப்புணர்வு
  • இரட்டை உறுப்பினர்
  • பிரதம மந்திரியின் தலைமை

நிறைகள்

  • சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறைக்கு இடையிலான இணக்கம்
  • பொறுப்பான அரசாங்கம்
  • சர்வாதிகாரத்தைத் தடுக்கிறது.
  • பரவலான பிரதிநிதித்துவம்

குறைகள்

  • நிலையற்ற அரசாங்கம்
  • தொடர்ச்சியற்ற கொள்கைகள்
  • அமைச்சரவையின் சர்வாதிகாரம்
  • அதிகாரங்களைப் பிரிப்பதில் உள்ள சிக்கல்கள்.

மனவரைபடம்
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 90