Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

8th Social Science Guide மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) துணைக் குடியரசுத் தலைவர்
இ) பிரதம மந்திரி
ஈ) முதலமைச்சர்
விடை:
அ) குடியரசுத் தலைவர்

Question 2.
மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) சபாநாயகர்
ஈ) உள்துறை அமைச்சர்
விடை:
ஆ) முதலமைச்சர்

Question 3.
மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்
அ) உள்துறை அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) சபாநாயகர்
ஈ) ஆளுநர்
விடை:
ஈ) ஆளுநர்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 4.
உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி
ஈ) குடியரசுத் தலைவர்
விடை:
ஆ) முதலமைச்சர்

Question 5.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
அ) 62
ஆ) 64
இ) 65
ஈ) 58
விடை:
ஆ) 62

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை ____________ ஆகும்.
விடை:
29

Question 2.
ஆளுநரின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள் ஆகும்.
விடை:
5

Question 3.
மாவட்ட நீதிபதிகள் ____________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.
விடை:
ஆளுநர்

Question 4.
ஆளுநர் ஒரு மாநிலத்தின் ____________ ஆவார்.
விடை:
நிர்வாகத் தலைவர்

Question 5.
ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக ____________ வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
விடை:
25 வயது

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 2.
ஆளுநர் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.
விடை:
தவறு

Question 3.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை .
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்
i) குடியரசுத் தலைவர்
ii) துணை குடியரசுத் தலைவர்
iii) ராஜ்ய சபை உறுப்பினர்கள்
iv) சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்

அ) i, ii & iii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) i, ii, iii மற்றும் iv சரி
விடை:
இ) i, iii மற்றும் iv சரி

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக
விடை:

  • இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும்
  • சட்டமன்ற மேலவை, சட்டமன்ற கீழவை முதலியன இரு அவைகளாகும்.

Question 2.
மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினராவதற்கு உள்ள தகுதிகள் யாவை?
விடை:

  • சட்டமன்ற பேரவை உறுப்பினராக ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது.

Question 3.
முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
விடை:

  • ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார்.
  • முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  • இவர் பதவியேற்கும் போது உறுப்பினராக இல்லாவிட்டால் மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.

Question 4.
மாநில அமைச்சரவை குழு எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
விடை:
முதலமைச்சர், அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.

முதல்வர் மற்றும் அவரது தலைமையிலான பல்வேறு துறை அமைச்சர்களும் கொண்ட அமைப்பு மாநில அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. இதுவே அமைச்சரவை குழுவாகும்.

VII. விரிவான விடையளி

Question 1.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:

  • மாநிலத்தின் தலைமை நிர்வாகி முதலமைச்சர் ஆவார். மாநில அரசின் பல முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.
  • அமைச்சரவையை உருவாக்குவதில் ‘முதலமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார். இவரது ஆலோசனையின் பெயரில் அமைச்சர்களை ஆளுனர் நியமிக்கிறார்.
  • பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்கி, அவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
  • முதலமைச்சர் மாநில அரசின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும் மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி செய்கிறார்.
  • மாநில அரசின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியானது ஆகும்.
  • இவர் மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
  • முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படியே ஆளுனர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்.

Question 2.
மாநில சட்ட மன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:
சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும். மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்டமன்றத்தின் முக்கிய பணி ஆகும்.

சட்டமன்றம் மாநிலப்பட்டியல் மற்றும் மத்தியப்பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டத்தை இயற்றலாம். எனினும் நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலாது.

மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுப்பாட்டினை செலுத்துகிறது.

மாநில அமைச்சரவை சட்டமன்றத்திற்கு பொறுப்புள்ளதாகவும் மற்றும் பதில் அளிக்கவும் கடமைப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயல்பாடுகளில் திருப்தி ஏற்படாவிட்டால் மாநில சட்டமன்றத்தில் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இயற்றி அமைச்சரவையை நீக்கம் செய்திடலாம்.

மாநில சட்டமன்றம் ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுபடுத்துகிறது. நிதி மசோதாவை சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டு வர இயலும்.

சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசு வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலக்கிக் கொள்ளவோ இயலாது.

சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கு கொள்கின்றனர்.

குறிப்பாக அரசியலமைப்பைத் திருத்தும் சில நேர்வுகளில் சட்டமன்றம் பங்கு வகிக்கிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 3.
உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களையும், பணிகளையும் எழுது?
விடை:
உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அடிப்படை உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர்நீதிமன்றம் பல வித நீதிப் பேராணைகளைப் பிறப்பிக்கின்றன.

குறிப்பாக ஆட்கொணர்வு, தகுதி முறை வினவும், தடை உறுத்தும், கட்டளையிடும் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதிப் பேராணை ஆகியவற்றைப் பிறப்பிக்கின்றன.

ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்கலாக அனைத்து சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.

சார்நிலை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கில் அதில் சட்ட முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்றம் திருப்தியுறும் போது இவ்வழக்கினை எடுத்து தானே முடிவு செய்யலாம்.

இது மாநிலத்திலுள்ள அனைத்து சார் நிலை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.

உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தைப் போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின் ஆதாரச் சான்றாக உள்ள பதிவுரு நீதிமன்றமாக விளங்குகிறது.

குறிப்பாக அரசியலமைப்பின் பாதுகாப்பு என்பது நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதன் மூ லமே உறுதி செய்யப்படுகிறது.

VIII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களின் ஆளுநர், முதலமைச்சர் பெயர்களைப் பட்டியலிடுக.

Question 2.
தமிழ்நாட்டின் அமைச்சர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறைகளையும் பட்டியலிடுக.

8th Social Science Guide மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தமிழக சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை
அ) 500
ஆ) 545
இ) 234
ஈ) 118
விடை:
இ) 234

Question 2.
மாநிலத்தின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர்
அ) மாநில முதலமைச்சர்
ஆ) கல்வி அமைச்சர்
இ) மாநில ஆளுநர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) மாநில ஆளுநர்

Question 3.
மாநில அரசின் சட்டங்கள் யாரால் இயற்றப்படுகின்றன
அ) மாநில ஆளுநர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) சட்டமன்ற உறுப்பினர்கள்
விடை:
ஈ) சட்டமன்ற உறுப்பினர்கள்

Question 4.
சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
அ) 5 ஆண்டுகள் தா
ஆ) 6 ஆண்டுகள்
இ) 2 ஆண்டுகள்
ஈ) 4 ஆண்டுகள்
விடை:
ஆ) 6 ஆண்டுகள்

Question 5.
மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) அமைச்சர் குழு
ஈ) குடியரசுத்தலைவர்
விடை:
ஆ) முதலமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பதவியேற்ற முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால் ______________ காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்
விடை:
ஆறு மாத

Question 2.
சட்டமன்ற _____________ உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
விடை:
மேலவை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 3.
சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது ______________ அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கிறார்
விடை:
ஆளுநர்

Question 4.
____________ ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுப்படுத்துகிறது
விடை:
மாநில சட்டமன்றம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 2

IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
மாநில அரசாங்கம் ஆளுநரை பதவியிலிருந்து நீக்கலாம்.
விடை:
தவறு

Question 2.
மேலவையில் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை:
தவறு

Question 3.
அனைத்து சார்நிலை நீதிமன்றங்களும் உயர்நீதி மன்றங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
விடை:
சரி

V. சரியா கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
சட்டமன்ற பேரவைக்கான நடைமுறைகள்
i) சட்டமன்ற கூட்டத்திற்கு அவைத்தலைவர் தலைமை ஏற்கிறார்.
ii) இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
iii) சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
iv) இது மேலவையைக் காட்டிலும் அதிக அதிகாரமுடையது

அ) 1 மற்றும் ii சரி
ஆ) i, iii மற்றும் iv சரி
இ) ii, iii மற்றும் iv சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
இ) ii, iii மற்றும் iv சரி

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
சட்டமன்ற மேலவை பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையானது நாற்பது உறுப்பினர்களுக்குக் குறையாமலும், அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.

சட்டமன்ற மேலவை ஒரு நிலையான அவையாகும். இதன் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Question 2.
ஆளுநரின் நிலைப்பாடுகள் பற்றி நீவிர் அறிவன யாவை?
விடை:

  • மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தில் பெயரளவு நிர்வாகத் தலைவராக உள்ளார்.
  • இவர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள உறவுகளைப் பராமரிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்தவர் ஆவார்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 3.
உயர்நீதி மன்ற நீதிபதிகளின் தகுதிகள் யாவை?
விடை:

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • இந்தியாவில் 10 ஆண்டுகள் நீதித்துறை அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதி மன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
சட்டமன்ற பேரவைக்கான தேர்தல் பற்றி விரிவாக எழுது
விடை:
சட்டமன்ற பேரவைக்கான தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் தமது வேட்பாளர்களை நியமிக்கின்றன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு கோருகிறார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம்.

எந்த கட்சியையும் சாராத ஒருவரும் தேர்தலில் போட்டியிடலாம். அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர் சுயேச்சை வேட்பாளர் என அழைக்கப்படுகிறார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஒரு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 18 வயது நிரம்பிய அனைவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம்.

அரசியலமைப்பின்படி ஒரு மாநில சட்டமன்றத்தில் 500 உறுப்பினர்களுக்கு மேலாகவும் 60 உறுப்பினர்களுக்கு குறைவாகவும் இருத்தல் கூடாது.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் மாநில ஆளுநர், சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அதனை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த அழைப்பு விடுக்கலாம்.

சபாநாயகர் இல்லாத நேர்வுகளில் துணை சபாநாயகர் சட்டமன்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார்.

Question 2.
ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:
ஆளுநர் ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக செயல்களும் ஆளுநரின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆளுநர் முதலமைச்சரையும் அவரது ஆலோசனையில் பேரில் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கிறார்.

மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதோடு சில இதர நியமனங்களையும் மேற்கொள்கிறார்.

ஆளுநரின் அறிக்கையின் படி குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்.

மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார்.

மாநில சட்டமன்ற கூட்டத்ததைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் மற்றும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் அதிகாரம் கொண்டுள்ளார். > ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே பண மசோதாவைச் சட்டமன்றத்தில் கொண்டு வர முடியும்.

மாநில சட்ட மேலவைக்கு அறிவியல், இலக்கியம், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றிய அறிஞர்களில், ஆறில் ஒரு பங்கு அளவிற்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கிறார்.

மாநில அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமன்றத்திற்குள் சமர்பிக்கப்படுகிறது.

சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது ஆளுநர் அவசரச் சட்டத்தை பிறப்பிக்கிறார்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 3

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

8th Social Science Guide புவிப்படங்களைக் கற்றறிதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும் பாடப்பிரிவு ……………. ஆகும்.
அ) மக்களியல்
ஆ) புவிப்படவியல்
இ) இயற்கையமைப்பு
ஈ) இடவியல்
விடை:
ஆ) புவிப்படவியல்

Question 2.
ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம் ……………
அ) நிலக்கானி படங்கள்
ஆ) நிலத்தோற்ற புவிப்படம்
இ) கால நிலையியல் புவிப்படம்
ஈ) மூலாதார புவிப்படம்
விடை:
ஆ) நிலத்தோற்ற புவிப்படம்

Question 3.
ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகள் ………………. வண்ண ம் மூலம் குறிப்பிடப்படுகிறது.
அ) மஞ்சள்
ஆ) பழுப்பு
இ) வெளிர் நீலம்
ஈ) அடர் நீலம்
விடை:
இ) வெளிர் நீலம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 4.
பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் ……………… ஆகும்.
அ) நிலக்கானி புவிப்படங்கள்
ஆ) தலப்படங்கள்
இ) சம அளவுக்கோட்டுப் படங்கள்
ஈ) போக்குவரத்துப் படங்கள்
விடை:
அ) நிலக்கானி புவிப்படங்கள்

Question 5.
மக்கட்தொகை பரவலை ………………. மூலம் காண்பிக்கலாம்.
அ) கோடுகள்
ஆ) வண்ண ங்கள்
இ) புள்ளிகள்
ஈ) சமஅளவுக்கோடுகள்
விடை:
இ) புள்ளிகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
புவிக் கோள மாதிரி என்பது ……………….. ன் உண்மையான உருவ மாதிரியாக்கமாகும்.
விடை:
புவி

Question 2.
புவியின் கோள வடிவத்தை ஒரு சமதளப்பரப்பில் வரையப்படும் முறை …………. எனப்ப டும்.
விடை:
வரைபடக் கோட்டுச் சட்டம்

Question 3.
சம அளவு உயரமுள்ள இடங்களை இணைக்கும் கோடு ………………..
விடை:
சம அளவுக் கோடு (சம உயரக்கோடு)

Question 4.
காணிப்படங்கள் பொதுவாக …………………….. ஆல் பராமரிக்கப்படுகின்றன.
விடை:
அரசாங்கம்

Question 5.
………………… புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
விடை:
கருத்துப் படங்கள்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 1
அ) 3, 5, 1, 4, 2
ஆ) 4, 1, 2, 5, 3
இ) 2, 5, 1, 3, 4
ஈ) 5, 2, 4, 1, 3
விடை:
ஆ) 4, 1, 2, 5, 3

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : சிறிய அளவைப் புவிப்படங்களில் பிரதான தோற்றங்களை மட்டுமே காண்பிக்கப்படுகின்றன.
காரணம் : குறைந்த அளவு இடமே உள்ளதால், பெரிய பரப்பிலான கண்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றை மட்டுமே காண்பிக்க இயலும்.

அ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 2.
கூற்று : மரபுக் குறியீடுகளும், சின்னங்களும் வரைபடத்தின் திறவுகோல் ஆகும்.
காரணம் : இவை குறைந்த அளவிலான படத்தில் அதிக விவரங்களைத் தருகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

V. சுருக்கமாக விடையளி

Question 1.
“புவிப்பட அளவை” – வரையறு.
விடை:
புவிப்பட அளவை என்பது புவிப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் புவிப்படப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் இடையிலான விகிதத்தைக் குறிப்பதாகும்.

Question 2.
இயற்கையமைப்புப் புவிப்படம் என்றால் என்ன?
விடை:
ஒரு பகுதியின் பல்வேறு இயற்கை அம்சங்களைக் காண்பிப்பதற்கு வரையப்படும் படங்கள் இயற்கையமைப்புப் படங்கள் எனப்படுகின்றன.

Question 3.
வரைபடக் கோட்டுச் சட்டம் பற்றி சிறுகுறிப்பு வரைக
விடை:
கோள வடிவமான புவியை ஒரு சமதளப் பரப்பில் வரைவதற்கு பின்பற்றப்படும் ஒரு நுணுக்க முறையே வரைபடக் கோட்டுச் சட்டமாகும்.

வளைவான மேற்பரப்புடைய புவியை புவிப்படத்தில் சரியான முறையில் வரைவது கடினம். புவிப்படங்களில் ஏற்படும் இவ்வகை தவறுகளை குறைக்க வரைபட வல்லுநர்கள் புவியின் மேற்பரப்பை படத்தில் குறிப்பதற்கு புவிப்படக் கோட்டுச் சட்டங்கள் பயன்படுத்துகின்றனர்.

Question 4.
இடைநிலைத் திசைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • வடகிழக்கு
  • வடமேற்கு
  • தென்கிழக்கு
  • தென்மேற்கு

Question 5.
காணிப் புவிப்படங்களின் பயன்கள் யாவை?
விடை:

  • ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களைக் காண்பிக்க காணிப் புவிப்படங்கள் பயன்படுகின்றன.
  • இப்படங்கள் உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, வரிவிதிப்பு, பெரும் பண்ணை பராமரிப்பு, சட்ட ஆவணங்களில் சொத்து விவரங்களைக் குறிப்பிடுதல் போன்றவற்றிற்கு பயன்படுகின்றன.

VI. வேறுபடுத்துக

Question 1.
நிலத்தோற்றப் படங்கள் மற்றும் கருத்துப்படங்கள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 2

Question 2.
பெரிய அளவை மற்றும் சிறிய அளவை புவிப்படங்கள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 3

Question 3.
புவிக்கோள மாதிரி மற்றும் புவிப்படம்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 4

VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடையளி

Question 1.
பல்வேறு புவிப்பட அளவைகளை விரிவாக விளக்குக
விடை:
புவிப்படங்களின் அளவைகள் மூன்று வகைகளில் குறிப்பிடப்படுகின்றன. அவை

  1. வாக்கிய முறை அல்லது சொல்லளவை
  2. பிரதிபின்ன முறை அல்லது விகிதாச்சார முறை
  3. வரைகலை அளவை அல்லது நேரியல் அளவை

வாக்கிய முறை அல்லது சொல்லளவை:
இம்முறையில் அளவுத்திட்டமானது சொற்களால் விவரிக்கப்படுகிறது. 1 செ.மீ என்பது 1 கி.மீ. அதாவது வரைபடத்தில் 1 செ.மீ என்பது நிலப்பகுதியில் 1 கி.மீ. தூரத்தைக் குறிக்கின்றது. ஆகையால் வரைபடத்தில் 1 செ.மீ : 1 கி.மீ., 1 அங்குலம் : 1 மைல் எனக் குறிக்கப்பட்டிருக்கும்.

பிரதிபின்ன முறை (அ) எண்சார் பின்ன முறை (அ) விகிதாச்சார முறை:

  • இம்முறையில் புவிப்படப்பரப்பில் உள்ள தொலைவும் புவிப்பரப்பில் உள்ள தொலைவும் ஒரே அளவில் குறிப்பிடப்படுகிறது.
  • உதாரணமாக 1 : 50,000 என்பது புவிப்படத்தில் 1 அலகு என்பது புவியில் 50,000 அலகுகளைக் குறிக்கின்றது. அதாவது வரைபடத்தில் 1 செ.மீ அல்லது 1 அங்குலம் என்பது புவியில் 50,000 செ.மீ அல்லது 50,000 அங்குலம் என்பதைக் குறிக்கின்றது.
  • பிரதிபின்ன முறையில் அளவையானது 1/50,000 அல்லது 1: 50,000 எனக் குறிப்பிடப்படுகிறது.

வரைகலை அளவை அல்லது நேரியல் அளவை:
இந்த அளவை ஒரு சிறிய வரைக்கோல் போன்று வரைபடத்தின் அடிப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். இக்கோடு மேலும் சிறிய அளவிலான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்

இதன் ஒவ்வொரு சிறு பகுதியும் நிலப்பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட தூரத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. ஒரு சிறு துண்டு நூல் அல்லது பிரிப்பான்களின் உதவியோடு புவிப்படத்தில் குறிப்பிடப்பட்ட அளவையைக் கொண்டு நேரடியாக நிலப்பகுதியில் உள்ள சரியான தூரத்தை அளவிட முடியும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 2.
காணிப் புவிப்படங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை விவரி.
விடை:

  • ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களைக் காண்பிக்கப் பயன்படும் படங்கள் காணிப்புவிப்படங்கள் எனப்படுகின்றன.
  • இவ்வகைப்படங்கள் திட்ட புவிப்படங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • இவை பெரிய அளவையைக் கொண்டுள்ளதால் குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் கட்டடங்களின் முழு விவரங்களையும் அளிக்கின்றன.
  • இவை நகராட்சி வரிவிதிப்பு, பெரும் பண்ணை பராமரிப்பு, சட்ட ஆவணங்களில் சொத்து விவரங்களைக் குறிப்பிடுதல் போன்றவற்றிற்குப் பயன்படுகின்றன.
  • இவை அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

காணிப்புவிப்படத்தின் முக்கியத்துவம்:
காணிப்புவிப்படங்கள், ஒரு நிலத்தின் நில உடமை, எல்லைகள், மாதிரிப் படங்கள், கட்டடத்திட்டப் படங்கள், விளக்கப் படங்கள் ஆகியவை மூலம் ஆவணங்களாக பதிவு செய்கின்றன.

தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் மதிப்பினை அறிந்துகொள்ளவும், வரிவிதிப்பிற்கும் இவ்வகைப் புவிப்படங்கள் பயன்ப்படுத்தப்பட்டன

Question 3.
மரபுக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக
விடை:
புவிப்படத்தில் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பிடப்படுவதற்கு புவிப்படக் குறியீடு மற்றும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  • இச்சின்னங்கள் புவிப்பட திறவு விசை பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.
  • ஒரு சிறிய பகுதியில் அதிக தகவல்களை இக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் அளிக்கின்றன.
  • இதன் மூலம் புவிப்படங்களை எளிதாக உருவாக்கலாம். இவற்றின் மூலம் புவிப்படக் கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
  • சில குறியீடுகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்த சர்வதேச ஒப்பந்தம் அல்லது நடைமுறை பின்பற்றப்படுகிறது. இவை மரபுக் குறியீடுகள் மற்றும் சின்னங்கள் எனப்படுகின்றன.
  • சில மரபுக் குறியீடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 5

VIII. மாணாக்கர்கள் செயல்பாடுகள்

அ) புவிப்படத்தின் தலைப்பினைக் கோடிட்டுக் காட்டுக.
ஆ) படத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் குறியிட்டுக் காட்டுக.
இ) இருப்புப்பாதை தென்மேற்கிலிருந்து …………. திசையை நோக்கிச் செல்கிறது.
ஈ) பூங்காவானது இருப்புப்பாதைக்கு எத்திசையில் அமைந்துள்ளது?
உ) பள்ளிக்கு சிவப்பு வண்ண ம் தீட்டுக.
ஊ) பல்பொருள் அங்காடிக்கு பழுப்பு நிற வண்ண ம் தருக.
எ) உணவகத்தை அடையாளம் கண்டு மஞ்சள் வண்ணம் தருக.
ஏ) இருப்புப்பாதைக்குக் கிழக்கிலுள்ள வீட்டிற்கு ஆரஞ்சு வண்ணம் தருக.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 6

8th Social Science Guide புவிப்படங்களைக் கற்றறிதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புவிப்படங்கள் புவியை …………………… சித்தரிக்கின்றன.
அ) இரு பரிமாணத்தில்
ஆ) முப்பரிமாணத்தில்
இ) ஒரு பரிமாணத்தில்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
அ) இரு பரிமாணத்தில்

Question 2.
பெரிய அளவிலான நிலப்பகுதிகளைக் காண்பிக்க …………… புவிப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அ) பெரிய அளவை
ஆ) சிறிய அளவை
இ) நடுத்தர அளவை
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) சிறிய அளவை

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
அ) பிரதிபின்ன முறை
ஆ) எண்சார் பின்ன முறை
இ) விகிதாச்சார முறை
ஈ) வாக்கிய முறை
விடை:
ஈ) வாக்கிய முறை

Question 4.
வரைகலை அளவை ஒரு சிறிய ……………….. போன்று குறிக்கப்பட்டிருக்கும்.
அ) முக்கோணம்
ஆ) நூல்
இ) வரைக்கோல்
ஈ) கடிகாரம்
விடை:
இ) வரைக்கோல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 5.
‘ஐசோ’ என்ற கிரேக்க மொழிச் சொல்லின் பொருள் …………………
அ) இணைப்பு
ஆ) நேர்மறை
இ) சமம்
ஈ) ஒரே மாதிரியான
விடை:
இ) சமம்

II. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 7
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 8

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : காணிப் புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமை பற்றிய விவரங்களை தெரிவிப்பதில்லை.
காரணம் : இவை சிறிய அளவைகளைக் கொண்டு வரையப்பட்டுள்ளன.

அ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

IV. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
புவிப்படம் என்றால் என்ன?
விடை:
புவிப்படம் என்பது முழுப்புவியையோ அல்லது புவியின் ஒரு பகுதியையோ ஒரு சமதளப் பரப்பில் அளவையுடன் பதிலீட்டுக் காட்டும் ஒரு முறையாகும்.

Question 2.
சம அளவுக்கோடுகள் என்பன யாவை?
விடை:
சம மதிப்புள்ள இடங்களை இணைக்கும் கோட்டிற்கு சம அளவுக் கோடுகள் என்று பெயர். சம வெப்பக் கோடுகள் மற்றும் சம அழுத்தக் கோடுகள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Question 3.
புவிப்படத்தைக் கற்றறிதல் என்றால் என்ன?
விடை:
புவிப்படத்தைக் கற்றறிதல் என்பது புவிப்படத்தில் உள்ள விவரங்களைப் புரிந்து கொள்ளுதல் அல்லது புவியியல் சார்ந்த விவரங்களை விவரணம் செய்தல் ஆகும்.

Question 4.
புவிப்படத்தின் கூறுகள் யாவை?
விடை:

  • தலைப்பு
  • புவிப்பட விளக்கம் அல்லது திறவு விசை
  • புவிப்படமூலம்
  • மரபுக் குறியீடுகள்
  • புவிப்பட அளவை
  • திசைகள்
  • புவிப்பட கோட்டுச் சட்டம் மற்றும் அமைவிட குறிப்பு
  • சின்னங்கள்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 5.
ஒரு எளிமையான வாக்கிய அளவுத்திட்டத்தின் குணாதிசயங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அளவையின் தொகுதி சென்டி மீட்டரிலிருந்தால் அதன் விகுதி மீட்டரிலோ அல்லது கிலோ மீட்டரிலோ இருக்கும்.
  • தொகுதி அங்குலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதன் விகுதி மைல்களில் இருக்கும்

Question 6.
நிழற்பட்டைப் படம் என்றால் என்ன?
விடை:

  • நிழற்பட்டைப் படம் என்பது ஒரு கருத்துப் படமாகும். இவற்றில் மக்களடர்த்தி, தனிநபர் வருமானம் போன்றவற்றைக் காண்பிக்கலாம்.
  • மேலும் பிரதேச வேறுபாடுகளையும் நிழற்பட்டைகள் மூலம் காண்பிக்கலாம்.

V. விரிவான விடை தருக

Question 1.
புவிப்படங்களின் பயன்களை வெளிக் கொணர்.
விடை:

  • பொருட்கள் மற்றும் இடங்களின் அமைவிடத்தைக் கண்டறியப் பயன்படுகிறது.
  • போக்குவரத்து வழித்தடங்களைக் காணப்பயன்படுகிறது.
  • இராணுவத்தினருக்கு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் காணப் பயன்படுகிறது.
  • சுற்றுலா வழிகாட்டியாக பயன்படுகிறது.
  • உலகளாவிய பல்வேறு நிகழ்வுகளின் பரவல்களைக் காணப்பயன்படுகிறது.
  • வானிலை நிகழ்வுகளை அறிவிக்கிறது.
  • புவியியலை கற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
  • உலகை ஒரு சிறிய அளவில் சரியான வடிவில் காண்பிக்கின்றது.

VI. மனவரைபடம்

புவிப்படங்களைக் கற்றறிதல்
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 9
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 10

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

9th Science Guide ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) புரோட்டீன்
இ) வைட்டமின்
ஈ) கொழுப்பு
விடை:
இ) வைட்டமின்

Question 2.
சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘ஸகர்வி’ நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்.
அ) ஜேம்ஸ் லிண்ட்
ஆ) லூயிஸ் பாஸ்டர்
இ) சார்லஸ் டார்வின்
ஈ) ஐசக் நீயூட்டன்
விடை:
அ) ஜேம்ஸ் லிண்ட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 3.
வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை
அ) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
ஆ) கதிர் வீச்சு முறை
இ) உப்பினைச்சேர்த்தல்
ஈ) கலன்களில் அடைத்தல்
விடை:
ஆ) கதிர்வீச்சு முறை

Question 4.
மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1964
ஆ) 1954
இ) 1950
ஈ) 1963
விடை:
ஆ) 1954

Question 5.
உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது
அ) மெழுகுப் பூச்சு
ஆ) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்
இ) உணவின் ஈரத்தன்மை
ஈ) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்
விடை:
இ) உணவின் ஈரத்தன்மை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உணவில் _____ எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்.
விடை:
சரிவிகித உணவு

Question 2.
உணவுப் பொருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கலப்படம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 3.
சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு _____ வைட்டமின் என்று பெயர்.
விடை:
சூரிய ஒளி

Question 4.
நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ____ நீக்குவதாகும்.
விடை:
நீர்

Question 5.
உணவுப் பொருள்களை அவற்றின் _____ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.
விடை:
காலாவதி

Question 6.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ____ மற்றும் ____ பொருட்களுக்கு விவசாயம், அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.
விடை:
கால்நடை உற்பத்திப்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது.
விடை:
தவறு

Question 2.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றது.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் சிறிய அளவில் தேவைப்படுகின்றது
விடை:
தவறு

Question 3.
வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 4.
உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.
விடை:
சரி

Question 5.
வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விடை:
தவறு

IV. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 30
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 31

V. பொருத்தமான ஒன்றைக் கொண்டு நிரப்புக.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 35
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 36

VI. விரிவாக்கம் தருக

1. ISI,
2. FPO
3. AGMARK
4. FCI
5. FSSAI
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 38

VII. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள். சரியான ஒன்றைத் தேர்ந்தெடு

Question 1.
கூற்று : ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.
காரணம் : இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
கூற்று : அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்.
காரணம் : ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

VIII. காரணம் கூறுக

அ) உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது. ஏனெனில் ______
விடை:
உணவிலுள்ள ஈரப்பதத்தை நீக்க

ஆ) காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. ஏனெனில் ______
விடை:
உணவின் தரம் இழக்கப்படுகிறது.

இ) கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் _____
விடை:
கால்சியம் எலும்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

IX. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
வேறுபடுத்துக
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்
விடை:
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 69

ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள் மேக்ரோ தனிமங்கள்
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 70

Question 2.
உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு பயன்படுத்தப்படுவது ஏன்?
விடை:

  • உணவின் ஈரப்பதம் – சவ்வூடுபரவல் மூலம் நீக்கப்படுகிறது
  • பாக்டீரியாக்களின் வளர்ச்சி – தடுக்கப்படுகிறது
  • நுண்ணுயிரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைக்கப்படுகிறது

Question 3.
கலப்படம் என்றால் என்ன?
விடை:
உணவில் வேறு பொருட்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 4.
உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருட்கள் இரண்டினைக் கூறுக.
விடை:

  • ஆப்பிள் விதைகள் – புரூசிக் அமிலம் காணப்படுகிறது
  • மீன்கள் – கடலினை மாசுபடுத்திய ‘மெர்க்குரி போன்ற நச்சுகள்’ காணப்படுகிறது

Question 5.
உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின் 1-D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?
விடை:

  1. கால்சியம்,
  2. வைட்டமின் D
  3. காலை நேர சூரிய ஒளி

Question 6.
கீழ்க்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக.
அ) கால்சியம்
ஆ) சோடியம்
இ) இரும்பு
ஈ) அயோடின்
விடை:
அ) கால்சியம் – எலும்புகளின் வளர்ச்சி
ஆ) சோடியம் – நரம்பு உணர்த்திறன் கடத்தல்,
இ) இரும்பு – ஹீமோகுளோபினின் முக்கியக் கூறாகச் செயல்படுதல்
ஈ) அயோடின் – தைராய்டு ஹார்மோன் உருவாக்குதல்

Question 7.
ஏதேனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.
விடை:
உப்பினைச் சேர்த்தல் :

  1. உணவில் உள்ள ஈரப்பதம் சவ்வூடு பரவல் மூலம் நீக்கப்படுதல்.
  2. இதன்மூலம் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடைபடுகிறது.
  3. நுண்ணுயரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைதல்.

புகையிடுதல் :
இறைச்சி மற்றும் மீனை புகைத்தலுக்கு உட்படும்போது புகையின் உலர் செயல் உணவை பாதுகாக்கிறது.

Question 8.
கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:

  1. வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வாயுக்கோளாறுகள்
  2. நோய் எதிர்ப்புத்திறன் குறைதல்.
  3. கல்லீரல், சிறுநீரகம் பாதிப்படைதல்
  4. மலக்குடல் புற்றுநோய்
  5. குறைபாடுகளுடைய குழந்தை பிறத்தல்

X. விரிவாக விடையளி

Question 1.
நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகின்றன? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறைபாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.
விடை:
வைட்டமின்களின் பயன்பாடுகள் :

  1. வைட்டமின்களின் மிக முக்கய ஊட்டச்சத்தாகும்.
  2. இவை மிகச்சிறிய அளவில் தேவைப்படுகிறது.
  3. இவை குறிப்பிட்ட உடற் செயலியல் மற்றும் உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 80
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 81

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.
விடை:

  1. நாடு முழுவதும் தானியங்களை விநியோகம் செய்தல்.
  2. சந்தையில் விலையை ஒழுங்குபடுத்துதல்.
  3. விவசாயம் பொருள்களுக்கு சரியான விலை கொடுத்தல்
  4. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான தானியங்களைக் கொடுத்தல்.

உணவு தரகட்டுப்பாட்டு நிறுவனங்களின் பங்குகள்.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 85

XI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
படத்தைப் பார்த்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி
விடை:
அ) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நடைபெறும் செயல்முறையின்
பெயரென்ன?
விடை:
பாலை பாஸ்டர் பதனம் செய்யும்முறை (Pasteurisation)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 86
ஆ) மேற்கண்ட செயல்முறையின் மூலம் பாதுகாக்கப்படும் உணவுப்பொருள் எது?
விடை:
பால்

இ) மேற்கண்ட செயல்முறையானது எந்த வெப்பநிலையில் நடைபெறுகிறது?
விடை:
63°C ல் 30 நிமிடங்கள் கொதிக்க வைத்தல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியிடம் இலை வகைக் காய்கறிகள் மற்றும் பேரீச்சம் பழத்தை
அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர் ஒருவர் அறிவுறுத்துகிறார். அவ்வாறு அவர் சொல்வதற்குக் காரணம் என்ன?
விடை:

  1. இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது.
  2. இலை வகைக் காற்கறிகள் மற்றம் பேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது.
  3. ஆதலால் இரும்புக் குறைபாடு நீங்குவதால் இரத்தச் சோகை குணமாகிறது.

Question 3.
சஞ்சனா ஒரு மளிகைக் கடையில் ஜாம் பாட்டில் வாங்க விரும்புகிறாள். அதை வாங்குவதற்கு முன் அந்தப் பாட்டிலில் உள்ள அட்டை குறிப்பானில் (label) எதைக் குறிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும்?
விடை:

  1. உணவின் பெயர்
  2. காலாவதி நாள்
  3. ISI; AGMARK அல்லது FPO பேன்ற முத்திரைகளை கவனித்து வாங்க வேண்டும்.

9th Science Guide ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
கார்போஹைட்ரேட்டுகள் …………. அளிக்கக் கூடியவை.
விடை:
ஆற்றல்

Question 2.
கிளைகோஜன் ………. மற்றும் ………. சேமித்தல் வைக்கப்படுகிறது.
விடை:
கல்லீரல், தசைகளில்

Question 3.
உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு பயன்படுபவை …………
விடை:
தாவரங்களின்

Question 4.
செல்சுவர் ………… ஆல் ஆனது.
விடை:
செல்லுலோஸ்

Question 5.
புரதங்கள் அமினோ அமிலங்களால் இணைக்கப்பட்ட ……. தொடர் ஆகும்
விடை:
பாலிபெப்டைட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 6.
EAA என்பதன் விரிவாக்கம் ……….
விடை:
Essential Amino acid’s

Question 7.
மனித உடலுக்கு சிறிய அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து ……….
விடை:
வைட்டமின்கள்

Question 8.
வைட்டமின் A (ரெட்டினால்) குறைபாடு நோய் …………. மற்றும் …………
விடை:
சீரோப்தால்மியா, நிக்டலோபியா

Question 9.
வைட்டமின் D (கால்கிஃபெரால்) குறைபாடு நோய் ……….
விடை:
ரிக்கெட்ஸ்

Question 10.
மலட்டுத்தன்மை ………… குறைபாட்டு நோய்
விடை:
வைட்டமின் E டோகோ ஃபெரால்

Question 11.
இரத்தப்போக்கு ………… குறைபாட்டு நோய்.
விடை:
வைட்டமின் K

Question 12.
வைட்டமின் B1, (தயமின்) குறைப்பாட்டால் வரும் நோய்
விடை:
பெரி பெரி

Question 13.
வைட்டமின் B, (ரிபோஃபிளேவின்) குறைப்பாட்டால் வரும் நோய் …..
விடை:
எரிபோ பிளாவினோஸிஸ்

Question 14.
பெலாக்ரா நோய் ………… வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின் B3, (நியோசின்)

Question 15.
வைட்டமின் B, (பைரிடாக்ஸின்) குறைப்பாட்டால் ஏற்படும் நோய் ………….
விடை:
டெர்மாடிட்ஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 16.
உயிரைப்போக்கும் இரத்தச்சோகை ………….. குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின் B12

Question 17.
ஸ்கர்வி ………….. குறைபாட்டு நோய்
விடை:
வைட்டமின் C

Question 18.
…………. என்பவரால் வைட்டமின் என்றவார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
டாக்டர் ஃபன்க்

Question 19.
முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் ………….
விடை:
வைட்டமின் A

Question 20.
எலும்பிற்கு பலத்தை அளிக்கும் வைட்டமின் …………
விடை:
வைட்டமின் D

Question 21.
மனித தோலினால் உருவாக்கப்படும் வைட்டமின்
விடை:
வைட்டமின் D

Question 22.
தாது உப்பு என்பது ………… தனிமம்.
விடை:
வேதியத்

Question 23.
நீர் ஒரு …………..
விடை:
கரைப்பான்

Question 24.
உலக அயோடின் குறைபாட்டு தினம் ………….
விடை:
அக்டோபர் 21

Question 25.
காய்டர் எனப்படுவது …………..
விடை:
முன் கழுத்துக் கழலை

Question 26.
முன் கழுத்துக் கழலை ………….. குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
அயோடின்

Question 27.
வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் ……..
விடை:
வைட்டமினோசிஸ்

Question 28.
வழக்கத்தை விட அதிகப்படியான வைட்டமின்களின் அளவு இருப்பது ………….. எனப்படும்.
விடை:
ஹைப்பர் வைட்டமின்னோசிஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 29.
ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் காணப்படும் உணவு ………… எனப்படும்.
விடை:
சரிவிகித உணவு

Question 30.
பற்களில் காணப்படும் கடின பகுதி ……
விடை:
எனாமல்

Question 31.
எலும்புக் குறைப்பாட்டு நோய்கள் ஏற்படக் காரணம் …………..
விடை:
கால்சியம்

Question 32.
தசைப்பிடிப்பு, நரம்புத் தூண்டல்கள் கடத்த இயலாமை தோன்றக் காரணம் ………
விடை:
சோடியம்

Question 33.
பொட்டாசியம் குறைப்பாட்டு நோய் ………..
விடை:
தசைச்சோர்வு

Question 34.
இரும்புச்சத்து குறைப்பாட்டால் உண்டாகும் நோய் ….
விடை:
இரத்தசோகை

Question 35.
உறைய வைத்தலில் உணவானது …………… வெப்பநிலைக்குக் கீழே சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
0°C

Question 36.
………….. முறை பால் கெட்டுப் போதலை தவிர்ப்பதற்கு பயன்படுகிறது.
விடை:
பாஸ்டர் பதனம்

Question 37.
நுண்ணுயிரியியலை தோற்றுவித்தவர் ……..
விடை:
லூயிஸ் பாஸ்டர்

Question 38.
வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை உருவாக்கியவர் …….
விடை:
லூயிஸ் பாஸ்டர்

Question 39.
வெண்மைப் புரட்சி குறிப்பது ……………
விடை:
பால் உற்பத்தி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 40.
வெண்மைப் புரட்சியின் தந்தை …………
விடை:
வர்கிஸ் குரியன்

Question 41.
உலக உணவு தினம் ………….
விடை:
அக்டோபர் 16

Question 42.
உணவில் வேறு ஏதேனும் பொருள்களை சேர்ப்பதோ அல்லது உணவிலிருந்து நீக்குவதோ …………. எனப்படும்.
விடை:
உணவுக் கலப்படம்

Question 43.
மாம்பழங்கள் மற்றும் வாழைப் பழங்களை பழுக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் …………
விடை:
கால்சியம் கார்பைடு

Question 44.
பச்சைக் காய்கறிகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் …………
விடை:
உலோகக் காரீயம்

Question 45.
ஆப்பிள், பேரிக்காய் போன்ற கனிகளில் பளபளப்பிற்காக பூசப்படும் செல்லாக் (அல்லது) செயற்கை மெழுகு …………..
விடை:
கார்னோபா மெழுகு

Question 46.
உப்பில் சேர்க்கப்படும் கலப்பட பொருள்
விடை:
சுண்ணாம்பு

Question 47.
தேயிலைத் தூளில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் …………
விடை:
நிலக்கரி தார்

Question 48.
ஜஸ்கிரீமில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் ……..
விடை:
சலவைத்தூள்

Question 49.
பாலித் தூய்மையைக் கண்டறிய ………….. கரைசல் சேர்க்கப்படுகிறது.
விடை:
அயோடின்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 50

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 56

III. வலியுறுத்தல் மற்றும் காரண வகை

Question 1.
வலியுறுத்தல் : 13 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
காரணம் : வளரிளம் பருவத்தினர் குறிப்பாக ஆண்கள் வளர்ச்சிக்கு அதிக இரும்புச் சத்து தேவைப்படுகிறது.
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியாக இருந்தது. அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்தது. அதில் அந்தக் காரணம்
வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
இ) வலியுறுத்தல் சரியாக இருந்தது காரணம் மட்டும் தவறு.
ஈ) வலியுறுத்தல் மட்டும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) வலியுறுத்தல் சரியாக இருந்தது காரணம் மட்டும் தவறு.

Question 2.
வலியுறுத்தல் : நீரை வெளியேற்றல் (dehydration) என்பது உணவிலிருந்து நீரை/ ஈரப்பதத்தை வெளியேற்றுதலாகும்.
காரணம் : நம் உடலில் ஏற்படும் நீர் இழப்பை அதிகத் தண்ணீ ரை அருந்துதல் மூலம் சரி செய்யலாம்.
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
இ) வலியுறுத்தல் சரியாக இருந்து காரணம் மட்டும் தவறு.
ஈ) வலியுறுத்தல் மட்டும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்.

Question 1.
உலர்த்துவதால் எவ்வாறு நுண்ணுயிரி களின் வளர்ச்சியைத் தடை செய்ய இயலும்?
விடை:

  • உலர்த்துவதால், உணவுப் பொருளின் ஈரப்பதம் குறைகிறது. பாக்டீரியா, ஈஸ்டு, மற்றும் பூஞ்சைகள் வளர்வதில்லை.
  • அவை வளர்வதற்கு, இனப்பெருக்கம் செய்வதற்கும் ஈரப்பதம் இல்லை.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
சரி விகித உணவு என்றால் என்ன?
விடை:

  • அத்யாவசியமான ஊட்டப் பொருட்கள்’ உணவில் சரியான அளவில் காணப்படுவதற்கு ‘சரி விகித உணவு’ என்று பெயர்.
  • இது இயல்பான உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.
  • இது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

Question 3.
புரதம் நமது உடலைக் கட்டமைக்கிறது – என்று சொல்வது குறித்த உன் கருத்தைப் பதிவு செய்
விடை:

  • புரதம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து
  • உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு தேவையான அடிப்படைப் பொருள்
  • இது அமினோ அமிலங்களின் தொடர் பெப்டைடு இணைப்பால் உருவாகிறது.
  • இதன் குறைபாட்டினால் மராஸ்மஸ், மற்றும் குவாசியாக்கர் போன்ற உடல் வளர்ச்சிக் குறைபாட்டு நோய்கள் உருவாகிறது.

Question 4.
வைட்டமின் A குறைபாட்டின் ஏற்படும் நோய்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 60

Question 5.
கலன்களில் அடைத்தல் (canning) என்றால் என்ன?
விடை:

  • சில உடனடியாக உண்ணும் உணவுகள் பதப்படுத்தப் பட்டுப் பின்னர் தூய்மையான நீராவி செலுத்தப்பட்டு காற்று புகாத கலன்களில் குறிப்பிட்ட அழுத்தத்தில் அடைக்கப்படுகிறது
  • பின்னர் கலன்கள் அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தப்பட்டு குளிருட்டப்படுவதால் நுண்ணுயிரிகள் முழுவதும் அழிக்கப்படுகிறது.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
நமது வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எவ்வாறு கலப்படம் உள்ளது என்பதைக் கண்டறிவது?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 65

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 6 தொழிலகங்கள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 6 தொழிலகங்கள்

8th Social Science Guide தொழிலகங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் ………………….. பிரிவுகளின் கீழ் வருகின்றன.
அ) சிறிய அளவிலான தொழிலகம்
ஆ) பெரிய அளவிலான தொழிலகம்
இ) கடல்வளம் சார்ந்த தொழிலகம்
ஈ) மூலதனம் சார்ந்த தொழிலகம்
விடை:
அ) சிறிய அளவிலான தொழிலகம்

Question 2.
உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் …………. வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
விடை:
இ) 4

Question 3.
ஆனந்த் பால் பண்ணைத் தொழிலகம் (அமுல்) ……………… துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அ) தனியார் துறை
ஆ) பொதுத்துறை
இ) கூட்டுறவுத்துறை
ஈ) கூட்டுத்துறை
விடை:
இ) கூட்டுறவுத்துறை

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள்

Question 4.
இரும்பு எஃகு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள் ………… தொழிலகங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அ) வேளாண் சார்ந்த
ஆ) கனிம வளம் சார்ந்த
இ) வனப் பொருட்கள் சார்ந்த
ஈ) கடல் வளம் சார்ந்த
விடை:
ஆ) கனிம வளம் சார்ந்த

Question 5.
சார்புத் துறை …………….. வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அ) 4
ஆ) 3
இ) 2
ஈ) 5
விடை:
இ) 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வங்கித் துறை என்பது ……………… பொருளாதார நடவடிக்கையாகும்
விடை:
மூன்றாம் நிலை / சார்பு நிலை

Question 2.
மூன்றாம் நிலை தொழில்கள் …………. மற்றும் ………… ஆக வகைப்படுத்தப்படுகிறது.
விடை:
நான்காம் நிலை, ஐந்தாம் நிலை

Question 3.
அரசாங்க முடிவு எடுக்கும் செயல்முறைகள் ……….. துறையின் மூன்றாம் நிலை செயல்பாடாகும்.
விடை:
ஐந்தாம் நிலை கீழ்வரும் பொருளாதார செயல்பாடுகள்

Question 4.
மூலப்பொருட்கள் அடிப்படையில் பருத்தி நெசவாலை ஒரு ……………….. தொழிலாகும்.
விடை:
வேளாண் சார்ந்த .

Question 5.
பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்குத் தேவையான ரூபாய் மூலதனம் …………………. ஆகும்.
விடை:
ஒரு கோடிக்கு மேல்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 1

IV. வேறுபடுத்துக

Question 1.
இரண்டாம் நிலை பொருளாதார செயல்பாடு மற்றும் மூன்றாம் நிலை பொருளாதார செயல்பாடு.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 2

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள்

Question 2.
வேளாண் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் கடல் வளம் சார்ந்த தொழிலகங்கள்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 3

Question 3.
பெரிய அளவிலான தொழிலகங்கள் மற்றும் சிறிய அளவிலான தொழிலகங்கள்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 4

V. சுருக்கமாக விடையளி

Question 1.
தொழிற்சாலை-வரையறு.
விடை:
மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்தக் கூடிய பொருட்களாக மாற்றப்படும் இடமே தொழிற்சாலை எனப்படும்.

Question 2.
பொருளாதார நடவடிக்கை என்றால் என்ன?
விடை:
உற்பத்தி, விநியோகம், நுகர்வு அல்லது பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலுமே பொருளாதார நடவடிக்கை ஆகும்,

Question 3.
முக்கிய பொருளாதார நடவடிக்கைகளின் பெயர்களை எழுதுக.
விடை:
1. முதன்மை பொருளாதார நடவடிக்கைகள்:
எடுத்துக்காட்டு: கச்சா பருத்தி உற்பத்தி

2. இரண்டாம் பொருளாதார நடவடிக்கைகள்:
எடுத்துக்காட்டு: நூற்பாலைகள்

3. சார்பு நிலை பொருளாதார நடவடிக்கைகள்:
எடுத்துக்காட்டு: வங்கித்துறை

4. நான்காம் பொருளாதார நடவடிக்கைகள்:
எடுத்துக்காட்டு: தகவல் தொழில்நுட்பம்

5. ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள்:
எடுத்துக்காட்டு: உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் அதிகாரிகள்

Question 4.
ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் தெளிவாக்குக.
விடை:
தொழிற்சாலைகள், வணிகம், கல்வி மற்றும் அரசாங்கங்களின் உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் நிர்வாகிகள் ஐந்தாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், உயர்மட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் அடங்குவர்.

எடுத்துக்காட்டு: மாநிலத்தின் அமைச்சரவைக் குழுவினர் மாநிலத்தின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பற்றிய முடிவுகளை எடுக்கின்றனர்.

Question 5.
தொழிலக அமைவிடத்திற்கு காரணமான காரணிகளைக் குறிப்பிடுக.
விடை:
I. புவியியல் காரணிகள்:

  • மூலப்பொருட்கள்
  • ஆற்றல் வளம்
  • மனித சக்தி
  • போக்குவரத்து
  • சேமிப்பு மற்றும் கிடங்கு
  • நிலத்தோற்றம்
  • காலநிலை
  • நீர்வளம்

II. புவியியல் அல்லாத காரணிகள்:

  • மூலதனம்
  • கடன் வசதி
  • அரசாங்கக் கொள்கைகள் / விதிமுறைகள்

Question 6.
பின்வருவனவற்றிற்குச் சிறு குறிப்பு தருக.
அ. பெரிய அளவிலான தொழிலகங்கள்
ஆ. சிறிய அளவிலான தொழிலகங்கள்
விடை:
அ). பெரிய அளவிலான தொழிலகங்கள்:
ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் மூலதனம் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் என்று அழைக்கப்படுகின்றன.

இரும்பு மற்றும் எஃகு ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் நெசவாலைகள் போன்றவை பெரிய அளவிலான தொழிலகங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

ஆ) சிறிய அளவிலான தொழிலகங்கள்:
ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான மூலதனத்தைக் கொண்டு நிறுவப்படும் தொழிற்சாலைகள் சிறிய அளவிலான தொழிற்சாலைகள் எனப்படுகின்றன,

பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் சிறிய அளவிளான தொழிலகங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

VI. விரிவான விடையளி

Question 1.
மூலப்பொருட்களின் அடிப்படையில் தொழிலகங்களை வகைப்படுத்தி விளக்குக.
விடை:
வேளாண் சார்ந்த தொழிலகங்கள்:

  • இவ்வகைத் தொழிலகங்களில் வேளாண் மற்றும் விலங்கு சார்ந்த பொருட்கள் மூலப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • எடுத்துக்காட்டு: உணவுப் பதப்படுத்துதல், தாவர எண்ணெய் உற்பத்தி, பருத்தி நெசவாலைகள், பால் உற்பத்திப் பொருட்கள் போன்றவை.

கனிமவளம் சார்ந்த தொழிற்சாலைகள்:

  • இவ்வகைத் தொழிலகங்கள் கனிமத் தாதுக்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துகின்றன.
  • எடுத்துக்காட்டு: இரும்பு எஃகுத் தொழிலகங்கள், சிமெண்ட் தொழிற்சாலை, இயந்திரக் கருவிகள் உற்பத்தி போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

கடல்வளம் சார்ந்த தொழிலகங்கள்:

  • இவ்வகைத் தொழிலகங்களுக்கு கடல் மற்றும் பெருங்கடலில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன.
  • எடுத்துக்காட்டு: பதப்படுத்தப்பட்ட கடல்சார் உணவு, மீன் எண்ணெய் உற்பத்தி அலகுகள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

வனம் சார்ந்த தொழிலகங்கள்:

  • இவ்வகைத் தொழிற்சாலைகளுக்கு வனப்பொருட்கள் மூலப்பொருட்களாகப் பயன்படுகின்றன.
  • எடுத்துக்காட்டு: மரக்கூழ் மற்றும் காகித உற்பத்தி, மரத்தளவாடங்கள் மற்றும் சில மருந்து உற்பத்தி தொழிலகங்கள்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள்

Question 2.
தொழில் அமைவிடத்தை நிர்ணயிக்கும் புவியியல் காரணிகளை விளக்குக.
விடை:
மூலப்பொருட்கள்:

  • அதிக அளவு மூலப்பொருட்கள் மற்றும் எடை இழக்கும் பொருட்களை நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்ல முடியாது.
  • எனவே இரும்பு, எஃகு மற்றும் சர்க்கரை தொழிலகங்கள் முறையே இரும்புத்தாது மற்றும் கரும்பு கிடைக்கும் இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன.

ஆற்றல் வளம்:

  • தொழிலகங்களை இயக்குவதற்கு எரிசக்தி அடிப்படை மற்றும் அவசியமானதாகும்.
  • எனவே மின் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு ஏதேனும் ஒரு ஆற்றல் வளம் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன.

மனிதசக்தி:
தொழிலாளர் சார்ந்த தொழில்களுக்கு மலிவான மற்றும் திறமையான தொழிலாளர்கள் அவசியமாகும். எடுத்துக்காட்டு: தேயிலைத் தொழிற்சாலை

போக்குவரத்து:

  • மூலப்பொருட்களை தொழிலகங்களுக்குக் கொண்டு வருவதற்கும், முடிக்கப்பட்ட பொருட்களை மீண்டும் சந்தைக்கு அனுப்பவும் போக்குவரத்து தேவைப்படுகிறது.
  •  எனவே எப்பொழுதும் எளிதான போக்குவரத்து தொழிலகங்களின் அமைவிடத்தைத் தீர்மானிக்கிறது.

சேமிப்பு மற்றும் கிடங்கு:
முடிவுற்ற பொருள்கள் சந்தைக்கு எடுத்து செல்லப்பட வேண்டும். அவ்வாறு சந்தைக்கு எடுத்துச் செல்லும் வரை பொருத்தமான கிடங்குகளில் சேமித்து வைக்க வேண்டும்.

நிலத்தோற்றம்:
ஒரு தொழிற்சாலையை அமைப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் இடம் சமமானதாக இருக்க வேண்டும். இது பல்வேறு போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

கால நிலை:
ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட காலநிலை தேவைப்படுகிறது. எனவே தொழிற்சாலை வளர்ச்சிக்கு அங்கு நிலவும் காலநிலை ஒரு முக்கியக்காரணியாக விளங்குகிறது, எடுத்துக்காட்டாக பருத்தி நெசவுத் தொழிலுக்கு ஈரப்பத காலநிலை தேவைப்படுகிறது.

நீர்வளம்:
தொழிற்சாலைகளின் அமைவிடத்தை நிர்ணயிப்பதில் நீர்வளம் முக்கியக்காரணியாக உள்ளது, எனவே பல தொழிலகங்கள் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளுக்கு அருகிலேயே நிறுவப்பட்டுள்ளன.

Question 3.
தொழிலகங்களின் வகைப்பாட்டை விளக்கப் படம் மூலம் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 5

8th Social Science Guide தொழிலகங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்று.
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் நிலைத்துறை
இ) சேவைத்துறை
ஈ) நான்காம் நிலைத்துறை
விடை:
இ) சேவைத்துறை

Question 2.
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது.
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் நிலைத்துறை
இ) சேவைத்துறை
ஈ) ஐந்தாம் நிலைத்துறை
விடை:
இ) சேவைத்துறை

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
அ) கல்வி
ஆ) மருத்துவம்
இ) சுரங்கத் தொழில்
ஈ) வீட்டுவசதி
விடை:
இ) சுரங்கத் தொழில்

Question 4.
பின்வருவனவற்றுள் எது முதல் நிலைப் பொருளாதார நடவடிக்கை அல்ல?
அ) கால்நடை மேய்த்தல்
ஆ) வேட்டையாடுதல்
இ) மீன் பிடித்தல்
ஈ) தச்சு வேலை
விடை:
ஈ) தச்சு வேலை

Question 5.
இந்தியாவின் டெட்ராய்ட் எனப்படுவது
அ) சென்னை
ஆ) மும்பை
இ) கொல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
அ) சென்னை

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
தொலைக்காட்சி நிலையங்களிலிருந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது ………………… நிலை பொருளாதார செயல்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
நான்காம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள்

Question 2.
மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கை ……………….. துறை என்றும் அழைக்கப்படுகிறது.
விடை:
சேவைகள்

Question 3.
ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியின் பணி ………………… நிலை பொருளாதார செயல்பாட்டினைச் சேர்ந்தது.
விடை:
ஐந்தாம்

Question 4.
உடைமையாளர்கள் அடிப்படையில் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) ………………… தொழிலகமாகும்.
விடை:
பொதுத்துறை

Question 5.
நமது நாட்டின் வாகனத் தொழில் ஏற்றுமதியில் சென்னை ……………… சதவீத பங்கினை வகிக்கிறது.
விடை:
60

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 6

IV. வேறுபடுத்துக

Question 1.
முதல் நிலை பொருளாதார நடவடிக்கை மற்றும் இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 7

Question 2.
வேளாண் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் கனிம வளம் சார்ந்த தொழிலகங்கள்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 8

Question 3.
வேளாண் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் வன வளம் சார்ந்த தொழிலகங்கள்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 9

V. பின்வரும் வினாக்களுக்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
விடை:
மூலப்பொருட்கள், மூலதனம், நிலம், நீர்வளம், மனிதவளம், ஆற்றல் வளம், போக்குவரத்து மற்றும் சந்தை ஆகியவை தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள் ஆகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள்

Question 2.
இந்தியாவின் டெட்ராய்ட் என சென்னை அழைக்கப்படக் காரணம் என்ன?
விடை:
அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள டெட்ராய்ட் நகரம் உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படுகிறது. இதே போல் இந்தியாவில் சென்னை நகரில் உலகப் புகழ் பெற்ற வாகன தொழிலகங்களான ஜி.எம், போர்டு, மஹேந்திரா, ஹூண்டாய் போன்ற தொழிலகங்கள் அமைந்துள்ளன. மேலும் சென்னை இந்தியாவின் வாகன ஏற்றுமதியில் 60% பங்கினைக் கொண்டுள்ளது. எனவே இது இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது.

VI. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

Question 1.
தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் புவியியல் அல்லாத காரணிகளை விவரிக்க.
விடை:
மூலதனம்:
தொழிலகங்கள் நிறுவுவதற்கு மூலதனம் அல்லது அதிக முதலீடு தேவைப்படுகிறது. மூலதனம் இல்லாமல் எந்த ஒரு தொழிற்சாலையையும் நிறுவ முடியாது.

கடன் வசதி:
பெரும்பாலும் தொழில் முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்க போதுமான நிதி இருக்க வாய்ப்பில்லை. எனவே தொழில் தொடங்கும் பொருட்டு கடன் வசதியை நாடுவர். எனவே கடன் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் சேவை தேவைப்படுகிறது.

அரசாங்கக் கொள்கைகள் / விதிமுறைகள்:
பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், அதிகமான மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கும், பெருநகரங்களில் மிகுதியான தொழிலகங்களைத் தவிர்ப்பதற்கும், தொழிற்சாலையை நிறுவுவதற்கும், நிலம் ஒதுக்கீடு செய்வதில் சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதிக்கிறது. எனவே அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் தொழிலகங்களின் அமைவிடத்தைத் தீர்மானிக்கின்றன.

Question 2.
உடைமையாளர்கள் அடிப்படையில் தொழிலகங்களை வகைப்படுத்தவும்.
விடை:
தனியார் துறை தொழிலகங்கள்:
இவ்வகைத் தொழிலகங்கள் தனிநபர்கள் மற்றும் தனித்த குழுக்களால் நிறுவப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டு: பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் போன்றவை.

பொதுத்துறை தொழிலகங்கள்:
இவ்வகைத் தொழிலகங்கள் அரசுக்கு சொந்தமானவை மற்றும் அரசால் இயக்கப்படுபவை. எடுத்துக்காட்டு: பாரத மிகுமின் நிறுவனம் (BHEL). ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் (HAL) மற்றும் இந்திய இரும்பு எஃகு ஆணையம் (SAIL).

கூட்டுத்துறை தொழிலகங்கள்:
இவ்வகைத் தொழிலகங்கள் அரசுத்துறையும் மற்றும் தனிநபர்கள் அல்லது தனி குழுவாகவோ கூட்டாக இணைந்து இயக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: இந்தியன் ஆயில் ஸ்கை டேங்கிங் நிறுவனம், இந்தியன் சிந்தட்டிக் இரப்பர் நிறுவனம்.

கூட்டுறவுத்துறை தொழிலகங்கள்:
இவ்வகைத் தொழிலகங்கள் மூலப்பொருட்களின் உற்பத்தியாளர்கள் / விநியோகிப்பவர்கள் அல்லது தொழிலாளர்கள் அல்லது இவை இரண்டையும் அளிப்பவர்களால் நிறுவப்பட்டு இயக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஆனந்த் பால் ஒன்றிய நிறுவனம் (அமுல்).

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 10
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 6 தொழிலகங்கள் 11

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை ?
அ) நாவடிச் சுரப்பி
ஆ) லாக்ரிமால்
இ) கீழ்தாடைச் சுரப்பி
ஈ) மேலண்ண ச் சுரப்பி
விடை:
ஆ) லாக்ரிமால்

Question 2.
மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ____ ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்கள்
ஆ) புரதங்க ள்
இ) கொழுப்பு
ஈ) சுக்ரோஸ்
விடை:
ஆ) புரதங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _____ ஆகும்.
அ) குரல்வளை மூடி
ஆ) குரல்வளை முனை
இ) கடின அண்ண ம்
ஈ) மிருதுவான அண்ண ம்
விடை:
அ) குரல்வளை மூடிகள்

Question 4.
பித்த நீர் ____ செரிக்க உதவுகிறது.
அ) புரதங்கள்
ஆ) சர்க்கரை
இ) கொழுப்புகள்
ஈ) கார்போஹைட்ரேட்டுகள்
விடை:
இ) கொழுப்புகள்

Question 5.
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு _____ ஆகும்.
அ) குடலுறுஞ்சிகள்
ஆ) கல்லீரல்
இ) நெஃப்ரான்
ஈ) சிறுநீரகக்குழாய்
விடை:
இ) நெஃப்ரான்

Question 6.
கீழ்க்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
அ) யூரியா
ஆ) புரதம்
இ) நீர்
ஈ) உப்பு
விடை:
ஆ) புரதம்

Question 7.
ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ஆகும்.
அ) சிறுநீரகக்குழாய்
ஆ) சிறுநீர்ப்புறவழி
இ விந்துக்குழாய்
ஈ) விதைப்பை
விடை:
ஆ) சிறுநீர்ப்புறவழி

Question 8.
கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
அ) அண்டம்
ஆ) கருப்பை
இ) விந்தகம்
ஈ) அண்டக்குழாய்
விடை:
இ) விந்தகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி ____ ஆகும்.
விடை:
பைலோரஸ்

Question 2.
உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ___ ஆகும்.
விடை:
நாக்கு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ____ ல் சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
பித்தப்பை

Question 4.
உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ____ ஆகும்.
விடை:
சிறுகுடல்

Question 5.
மனித உடலானது ____ வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.
விடை:
37°C

Question 6.
பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ____ ஆகும்.
விடை:
கருமுட்டை

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
விடை:
தவறு
இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.

Question 2.
செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.
விடை:
சரி

Question 3.
கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள். உப்புகள். குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 35
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 36

V. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக

அ) கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்
ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்
இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்
ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை
உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

அ) கழிவு நீக்கம் மற்றும் சுரத்தல்:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 40

ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 42

இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல் உட்கொள்ளுதல்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 43

ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை இரட்டைப் பல்வரிசை
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 44

உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள் வெட்டுப் பற்கள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 45

VI. சுருக்கமான விடையளி

Question 1.
செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?
விடை:

  1. பின்சிறுகுடலில் மிகச்சிறிய விரல் போன்ற குடல் உறிஞ்சிகள் உள்ளன.
  2. இவை ஒவ்வொன்றும் 1மி.மீ. நீளமுடைய குடல் உறிஞ்சிகள் என அழைக்கப்படும்.
  3. இவற்றில் தான் உணவு உறிஞ்சப்படுகிறது.
  4. இதன் உட்பகுதியில் மெல்லிய இரத்தக் குழாய்களும் நிணநீர் கொண்ட குடற்பால் குழல்களும் உள்ளன.

Question 2.
நமக்கு ஏன் வியர்க்கிறது?
விடை:

  1. மனித உடல் இயங்க 37°C வெப்பநிலை தேவை.
  2. வெப்பம் அதிகரிக்கும் பொழுது வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை சுரக்கிறது. இதனால் நமக்கு வியர்க்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. மனித உடலில் நீரையும், மின்பகு பொருட்களையும் சமநிலைப்படுத்த உதவுகிறது.
  2. இரத்தத்தில் அமில-கார சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

Question 4.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எவ்வாறு நடைபெறுகிறது?
விடை:

  1. சிறுநீர்ப்பை சுருக்குத் தசை சுருங்கி மூடிக்கொள்ளும்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
  2. சுருக்குத் தசை சுருங்கி விரியும்போது சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.

Question 5.
முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 55

Question 6.
நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
விடை:

  1. ஒவ்வொரு நெஃப்ரானிலும் சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் உள்ளன.
  2. சிறுநீரக கார்ப்பசலில் கிண்ண வடிவில் வெளிசெல் பௌமானின் கிண்ணம் அமைந்துள்ளது.
  3. இரத்தமானது நுண் நாளத் தொகுப்பினுள் உட்செல் நுண் தமனி வழியாக உட்சென்று, வெளிச் செல் நுண் தமனி வழியாக வெளியேறுகிறது.
  4. பௌமானின் கிண்ணம் சிறுநீரக நுண் குழலாக தொடர்கிறது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன.
  5. இச்சுருள் நுண் குழல் சேகரிப்பு நாளத்தில் திறக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 56

VII. விரிவாக விடையளி

Question 1.
மனிதனின் உணவுப் பாதையை விவரி.
விடை:
1. வாய்:

  • வாய் உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும்.
  • இது வாய்க்குழிக்குள் திறக்கிறது.
  • இது இரு மென்மையான அசையும் மேல் முன் சிறு குடல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப் பட்டுள்ளது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 57

உமிழ் நீர் சுரப்பிகள்:
வாய்க் குழிக்குள் மேலண்ணச் சுரப்பிகள், நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி என்ற இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன.
இவை உமிழ்நீரை சுரக்கின்றன.

நாக்கு:

  • நாக்கு ஒரு தசையாலான உணர்ச்சி உறுப்பு ஆகும்.
  • இது உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது.

2. தொண்டை :
தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும்.

3. உணவுக்குழல்:

  • இது 22செ.மீ நீளமுடைய தசைப்படலக்குழலாகும்.
  • இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் அலை போன்ற இயக்கம் மூலமாக கடத்துகிறது.

4. இரைப்பை :

  • இது உணவுக்குழலுக்கும், சிறுகுடலுக்கும் இடையே ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
  • இரைப்பையின் உள் அடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது.

5. சிறுகுடல்:

  • இது உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான 5-7 மீ நீளமுள்ள சுருண்ட குழலாகும் மூன்று பகுதிகளை உடையது.
  • டியோடினம் என்பது சிறுகுடலின் மேல் பகுதியாகும். ‘C’ வடிவத்தில் காணப்படுகிறது.
  • பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து டியோடினத்தில் திறக்கின்றது.
  • நடு சிறுகுடல் (அ) ஜூஜிணம் சிறுகுடலின் சிறிய நடுப்பகுதி ஆகும்.
  • பின்சிறுகுடல் (அ) இலியம் சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இது பெருங்குடலில் திறக்கிறது.
    இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.

6. கல்லீ ரல்:

  • உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி ஆகும்.
  • நாளமுள்ள சுரப்பியின் பகுதியாயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி லிப்பேஸ், டிரிப்சின், அமைலேஸ் நொதிகளைக் கொண்டுள்ள கணைய நீரைச் சுரக்கின்றது.

7. பெருங்குடல்:

  • இது பின்சிறு குடலிலிருந்து மலவாய் வரை பரவியுள்ளது.
  • இதனுடைய நீளம் சுமார் 1.5மீட்டர் ஆகும்.
  • இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை
    (i) முன் பெருங்குடல் (அ) சீக்கம்
    (ii) பெருங்குடல் (அ) கோலன்
    (iii) மலக்குடல் (அ) ரெக்டம்.
  • சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் உள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு சீக்கம் ஆகும்.
  • சீக்கம் மனிதனில் பயனற்ற, பணி ஏதுமற்ற எச்ச உறுப்பாகும்.

8. மலக்குடல்:
இது இறுதியாக மலவாயில் திறக்கிறது.

9. மலவாய்:

  • மலவாயில் வளையங்கள் போன்ற மூடிய நிலையிலிருக்கும் மலச்சுருள் தசை உள்ளது.
  • மலவாய் வழியாக செரிக்காத, தன்மயமாகாத உணவு கழிவாக வெளியேற்றப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 2.
சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.
விடை:
சிறுநீரகத்தின் வெளி அமைப்பு:

  • இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் அடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு
    ஒட்டிக் காணப்படுகிறது.
  • ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ. நீளம்,
  • சிறுநீரக தூண்க ள் 5 செ.மீ. அகலமும் மற்றும் 3 செ.மீ. பருமனும் கொண்டதாயிருக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 76
    சிறுநீரகத்தினுள் கார்டெக்ஸ் என்ற வெளிப் பகுதியும் மெடுல்லா என்ற உட்பகுதியும் உள்ளன.
  • இவ்விரண்டு பகுதிகளிலும் சிறுநீரக நுண்குழல்கள் உள்ளன. இவை சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகுகள் ஆகும்.
  • மெடுல்லா பகுதியில் கூம்பு வடிவில் சிறுநீரக பிரமிடுகள் உள்ளன.
  • ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப் பகுதி ஹைலம் எனப்படும். இவ்வழியே இரத்த நாளங்களும் மற்றும் நரம்புகளும் உள்ளே நுழைகிறது.

சிறுநீர் உருவாகும் முறை:
மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது.
1. கிளாமருலார் வடிகட்டுதல்
2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்
3. குழல்களில் சுரத்தல்

1. கிளாமருலார் வடிகட்டுதல்:

  • கிளாமருலஸ் மற்றும் பௌமானின் கிண்ணம் அகியவற்றின் எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக இரத்தம் வடிகட்டப்படுகிறது.
  • இவ்வாறாக வடிகட்டப்பட்ட திரவத்திற்கு கிளாமரூலார் வடி திரவம் என்றுபெயர்.

2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்:

  1. அண்மை சுருள் நுண் குழலில் வடிதிரவத்தில் உள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.

VIII. கூற்று மற்றும் காரணம் கீழ்காணும்

ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு கூற்றும் அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.

அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை .
இ) கூற்றும் சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

1. கூற்று: சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது. காரணம்: யூரியா ஒரு நச்சுத்தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.
விடை:
அ). கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
கூற்று: இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன. காரணம்: பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

IX. சிந்திக்க

Question 1.
இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் எச்செயலானது பாதிக்கப்படும்?
அ)ஸ்டார்ச்சிலிருந்து சர்க்கரையாக மாறும் செரிமான மாற்றம்.
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்
இ) நியூக்ளிக் அமிலங்களின் செரிமானம்
ஈ)கொழுப்புகள் கிளிசராலாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் உடைதல்.
விடை:
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்

Question 2.
மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் மற்றும் மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளங்களைப் பெயரிடுக.
விடை:

  1. மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் இரத்தக்குழாய் – உட்செல் நுண்தமனி.
  2. மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளம் – வெளிச்செல் நுண் தமனி

Question 3.
மருத்துவ நோயறிதலில் சிறுநீர் பகுப்பாய்வானது மிக முக்கியமான பகுதியாக இருப்பதாக ஏன் கருதுகிறாய்?
விடை:

  • இது ஒரு நோயாளியில் பொதுவான உடல் ஆரோக்கியம், பற்றி வருடாந்திர ஆய்வு அல்லது அறுவை சிகிச்சைக்கு முன் உடல் நலம் பற்றி அறிதல் அல்லது கருத்தரித்தல் பற்றி ஆராய்தல் போன்றவற்றிற்கு இது உதவுகிறது.
  • சிறுநீரகத்தின் செயல்பாடு, சிறுநீர்பாதை அல்லது சிறுநீர் தொற்று பற்றி அறிய உதவுகிறது.
  • உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற குறைபாடுகளான நீரழிவு நோய் மற்றும் மஞ்சட்காமாலை பற்றி அறிய முடிகிறது.
  • ஒரு நோயாளியின் நோய் நிலை பற்றியும் சிகிச்சையின் விளைவு எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 4.
உனது மருத்துவர் ஏன் அதிக நீர் குடிக்க அறிவுறுத்துகிறார்?
விடை:
காரணங்கள்

  • தீவிர உடற்பயிற்சியின் போதும் அல்லது வெப்பம் அதிகரிக்கும் போதும் உடல் செயல் பாதிக்கப்படாமல் அதிகப்படுத்துவதற்கு நீர் உதவுகிறது.
  • நீர் சத்து நம் உடலில் ஆற்றல் நிலையையும் மூளையின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அதிக நீர் எடுத்துக் கொள்ளாவிட்டால் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.
  • மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
  • சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

Question 5.
நமது உள்ளங்கைகளிலும், பாதங்களின் உள்ளங்காலிலும் ஏன் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன என்று உன்னால் யூகிக்கமுடிகிறதா?
விடை:
ஆம், யூகிக்க முடிகிறது.
காரணங்கள்:

  • வியர்த்தல் மூலம் உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிறது.
  • வியர்த்தல் நிகழ்ச்சி பரிவு நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • உள்ளங்கை மற்றும் பாதங்களில் வியர்ப்பதால் உடலின் வெப்பநிலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
  • பதட்டம் பயம் போன்ற நேரங்களில் இவற்றின் சுரப்பு அதிகரிப்பால் வியர்த்தல் தூண்டப்பட்டு உள்ளங்கால்களிலும், உள்ளங்கைகளிலும் அதிகம் வியர்க்கிறது.

X. கீழ்கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத் தேர்விலிருந்து எடுத்து பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 65
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 66
விடை:
ஈ) 1. கருப்பை நாளம்
2. அண்டகம்
3. செர்விக்ஸ்
4. கர்ப்பப்பை
5. யோனி

9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
அனைத்து உறுப்பு மண்டலங்களின் செயல்களையும் ஒருங்கிணைக்கும் மண்டலம் ______
விடை:
நாளமில்லா சுரப்பி
மண்டலம்

Question 2.
மனிதனில் உள்ள பின்கடைவாய்ப் பற்களின் எண்ணிக்கை _____
விடை:
12

Question 3.
தொண்டை வழியாக விழுங்கப்படும் உணவு _____ எனப்படும்.
விடை:
உணவுக் கவளம்

Question 4.
“இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை” என போற்றப்படுபவர் _____
விடை:
வில்லியம் பியூமாண்ட்

Question 5.
உணவுக் கால்வாயில் உள்ள மிகவும் நீளமான பகுதி ______ நீளமுடையது.
விடை:
5-7 மீட்டர்

Question 6.
கல்லீரல் செல்கள் _____ சுரக்கிறது.
விடை:
பித்த நீரை

Question 7.
1.5மீ நீளமுடைய தடித்த குழாயான உணவுப் பாதையின் பகுதி ______
விடை:
பெருங்குடல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 8.
மலவாயிலுள்ள வளையங்கள் போன்ற மூடிய நிலையில் இருக்கும் தசை _______ எனப்படும்.
விடை:
மலச்சுருள் தசை

Question 9.
கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, புரதம் செரித்தல் முழுமை அடையும் பகுதி ______
விடை:
சிறுகுடல்

Question 10.
தோலின் மூலம் வளர்சிதை கழிவுகள் வெளியேற்றுதல் ____ எனப்படும்.
விடை:
வியர்த்தல்

Question 11.
நெப்ரான்கள் _____ லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.
விடை:
1700-1800

Question 12.
பெண்களில் விந்துக்களைப் பெறும் பகுதியாகவும், பிறப்புக் கால்வாயாகவும் செயல்படுவது
விடை:
யோனிக்குழாய்

Question 13.
கிராஃபியன் பாலிக்கிள் சுரக்கும் ஹார்மோன் _____
விடை:
ஈஸ்ட்ரோஜென்

Question 14.
புரத செரித்தல் தொடங்கும் பகுதி _____
விடை:
இரைப்பை

Question 15.
உமிழ் நீரில் உள்ள நொதி _____
விடை:
டையலின்

Question 16.
ஒரு நாளில் சுரக்கப்படும் உமிழ் நீரின் அளவு யாது?
விடை:
1.5லிட்டர்

Question 17.
எந்த உறுப்பு மருந்தும் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குகிறது?
விடை:
கல்லீரல்

Question 18.
சக்கஸ் என்ட்ரிக்ஸ் சுரப்பில் உள்ள நொதிகள் எந்த ஊடகத்தில் நன்றாக செயல்படுகின்றன?
விடை:
காரத்தன்மையில்

Question 19.
சிறுகுடலின் ______ பகுதியில் செரிக்கப்பட்ட உணவு உறிஞ்சப்படுகிறது.
விடை:
பின்சிறுகுடல் (அ)
இலியம்

Question 20.
உடலினை சீர்ச்சமநிலையில் (ஹோமியோஸ்பேஸிஸ்) வைக்க உதவும் நிகழ்ச்சி _____
விடை:
கழிவு நீக்கம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 21.
மிகப்பெரிய, மிகச்சிறிய, உமிழ்நீர்ச் சுரப்பிகள் _____, ______
விடை:
நாவடிச் சுரப்பி,
மேலண்ண சுரப்பி

Question 22.
குடல் உறிஞ்சிகள் ஒவ்வொன்றும் _____ நீளமுடையது.
விடை:
1 மி.மீட்டர்

Question 23.
விந்தணுவிற்கு ஆற்றலை அளிக்கும் ஆதாரமாக _____ இருக்கிறது.
விடை:
பிரக்டோஸ்

Question 24.
வெட்டுப்பற்களின் எண்ணிக்கை _____
விடை:
8

Question 25.
உமிழ்நீர்ச்சுரப்பியின் நொதி ______
விடை:
டையலின்

Question 26.
சிறு குடலின் நடுப்பகுதி _____ ஆகும்.
விடை:
நடுசிறு குடல் (அ) ஜிஜீனம்

Question 27.
சிறுகுடல் நீரைச் சுரக்கும் சுரப்பிகள் அமைந்துள்ள பகுதி _____.
விடை:
நடுசிறு குடல் (அ) ஜிஜீனம்

Question 28.
சிறுகுடல் நீரில் உள்ள நொதிகள் _____, _____, ______ மற்றும் ____
விடை:
சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ், லிப்பேஸ்

Question 29.
குடலுறிஞ்சியில் காணப்படும் அமைப்புகள் _____ மற்றும் _____
விடை:
மெல்லிய இரத்தக்
குழாய்கள்,
குடற்பால் குழல்கள்

Question 30.
கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நீர் திவளைகளை வெளியேற்றும் நுரையீரலின் செயல் _____
விடை:
மூச்சு வெளிவிடுதல்

Question 31.
____ சிறுநீரகம் சற்று கீழே காணப்படுகிறது –
விடை:
வலது புறமுள்ள

Question 32.
நம்முடைய புறச்சட்டக மண்டலம் செய்யும் பணி _____ மற்றும் _____
விடை:
பாதுகாத்தல்,
கழிவுநீக்கம்

Question 33.
சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்திலுள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு _____
விடை:
சீக்கம்

Question 34.
முதலில் தோன்றும் தற்காலிக இணைப் பற்களின் எண்ணிக்கை ___ ஆகும்.
விடை:
இருபது

Question 35.
நாக்கு அடியில் ____ என்ற சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளது
விடை:
ஃப்ருனுலம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 36.
தோல் ஓர் முதிர்ச்சியடைந்த மனிதனின் உடல் எடையில் ____ சதவீ-தத்தைக் கொண்டுள்ளது
விடை:
15%

Question 37.
மனிதனின் சிறுநீர் _____ தன்மையுடைய திரவமாக இருக்கிறது.
விடை:
உயர் உப்படர்வு

Question 38.
முதல் சிறுநீரக மாற்றத்தை செய்தவர்
விடை:
ஜோசப் இ. முர்ரே

Question 39.
பெண் இன ஹார்மோன்கள் ____ மற்றும் ____ ஆகும்.
விடை:
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான்

Question 40.
குழந்தை பிறப்பின்போது பிறப்புக் கால்வாயாக செயல் ஆற்றுபவை _____
விடை:
யோனி

Question 41.
இரத்தம் உறிஞ்சும் பொருட்கள் _____, ____, ______
விடை:
எளியபொருட்கள், நீர், தாது உப்புகள்

Question 42.
செரிமான மண்டலத்தின் இரண்டு தொகுப்பு உறுப்புகள் ____, _____
விடை:
உணவுப்பாதை, செரிமானச் சுரப்பிகள்

Question 43.
புரதச் செரிமானம் _____ ல் ஆரம்பிக்கிறது
விடை:
வாய்க்குழியில்

Question 44.
_____ ஒரு செரிமான ஊக்கியாகும்
விடை:
ரென்னின்

Question 45.
_____ சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்
விடை:
இலியம்

Question 46.
உடலில் காணப்படும் மிகப்பெரிய செரிமானச் சுரப்பி _____ ஆகும்.
விடை:
கல்லீரல்

Question 47.
______ இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையே அமைந்துள்ளது
விடை:
கணையம்

Question 48.
இரத்தத்தில் அமில – காரச்சமநிலையை ஒழுங்குபடுத்துவது_ ____ ஆகும்.
விடை:
சிறு நீரகம்

Question 49.
பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து ____ திறக்கின்றது.
விடை:
டியோடினத்தில்

Question 50.
_____ செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகிய இரண்டு செயல்களையும் செய்கிறது
விடை:
சிறுகுடல்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 68
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 69

III. கூற்று மற்றும் காரண வகை

கீழ்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு வழிகாட்டி கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
இ) கூற்று சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 1.
கூற்று: பித்த உப்புகள் பால்மமாக்கல் என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.
காரணம்: கல்லீரல் வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
விடை: ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

Question 2.
கூற்று: கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. காரணம்: இது கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டையைப் பதிய வைத்தல், நஞ்சுக் கொடி உருவாதல் மற்றும் கர்ப்பத்தினைப் பராமரித்தல் போன்ற வேலைகளைச் செய்கிறது.
விடை:
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.

IV. படம் வரைந்து பாகங்களைக் குறித்துக் காட்டவும்.

Question 1.
கீழ்கண்ட படத்தில் (A) சிஸ்டிக் நாளம், (B) பித்தப்பை, (C) முன் சிறு குடல், (D) கணையம் ஆகிய பாகங்களைக் குறி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 80

Question 2.
சிறுநீரகத்தில் கீழ்கண்ட பாகங்களைக் குறி.
(A) பெருந்தமணி,
(B) சிறுநீர்பை,
(C) சிறுநீர்குழாய்,
(D) சிறு நீரக தமனி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 88

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
இரத்த ஓட்ட மண்டலம் செய்யும் பணிகள் யாவை?
விடை:
இந்த மண்டலம் சுவாச வாயுக்கள், ஊட்டச் சத்துப் பொருட்கள், கழிவுப் பொருட்கள் போன்ற வற்றைக் கடத்துகிறது.

Question 2.
உமிழ் நீரில் உள்ள நொதிகளின் பெயர்களைக் குறிப்பிடு?
விடை:

  1. டையலின்
  2. லைசோசைம்

Question 3.
பித்த உப்புக்களின் பெயர்களைக் குறிப்பிடு?
விடை:

  1. சோடியம் கிளைக்கோலேட்
  2. சோடியம் டாரோ கிளைக்கோலேட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 4.
அதிகப்படியான கொழுப்பு உடலில் என்ன மாற்றம் அடைகிறது?
விடை:
அதிகப்படியான கொழுப்புகள் கொழுப்புத் திசுக்களில் அடுக்காக சேமித்து வைக்கப்படுகின்றன.

Question 5.
சிறுநீரகத்தை சுற்றியுள்ள உறைகளை வரிசைப்படுத்தி கூறு.
விடை:

  1. தசை நார் இணைப்புத் திசுக்கள்
  2. சிறுநீரக கேப்சியூல்கள்
  3. கொழுப்பு கேப்சியூல்கள்
  4. இழைகளாலான சவ்வு

Question 6.
சிறுநீரக பழுதடைவு ஏன் ஏற்படுகிறது?
விடை:
சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக்கழிவுகள் உடலில் குவிகின்றன. இந்த நிலை சிறுநீரக பழுதடைவு எனப்படுகிறது.

Question 7.
மனிதனின் ஆண் பெண்களில் பால் முதிர்ச்சி அடையும் வயதினைக் குறிப்பிடு?
விடை:

  1. ஆண்க ளில் பால் முதிர்ச்சி 13-14 வயதில் ஏற்படுகிறது.
  2. பெண்க ளில் 11-13 வயதில் ஏற்படுகிறது.
  3. இந்த வயது பருவமடையும் வயது எனப்படுகிறது.

Question 8.
எந்த செல்கள் ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன?
விடை:
விந்தகத்திலுள்ள லேடிக் செல்கள் டெஸ்டோஸ்டீரான் என்ற ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன.

Question 9.
மாதவிடாய் சுழற்சி வரையறு.
விடை:
ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையானது முதிர்ச்சியடைந்து ஏதாவது ஒரு அண்டகத்திலிருந்து ஒவ்வொரு 28 நாட்கள் இடைவெளியில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு பெண் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் சுழற்சி மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சி எனப்படும்.

Question 10.
டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனின் பணிகளை பட்டியலிடு.
விடை:

  1. விந்தணு உருவாதலைத் தூண்டுகிறது.
  2. ஆண் தன்மையின் பண்புகளாகிய தாடி, மீசை, உடலிலுள்ள முடி மற்றும் குரலில் ஏற்படும் மாற்றத்தினையும் (கனத்த குரல்) உருவாக்குகிறது.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
உணவு செரித்தலில் இரைப்பையின் பங்கினை விவரி.
விடை:

  1. இரைப்பையானது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே அமைந்துள்ளது. ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
  2. இரைப்பை நீரில் Hcl, பெப்சின் மற்றும் ரெனின் உள்ளது.
  3. ஹைட்ரோ குளோரிக் அமிலம், செயலற்ற பெப்சினோஜனை செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றுகிறது.
  4. Hcl உணவோடு விழுங்கப்பட்ட பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது.
  5. ரெனின் பால் புரதமாகிய கேசின்னை உறைய வைக்கிறது. இரைப்பையில் உள்ள இரைப்பை நீர் மற்றும் செரிக்கப்பட்ட உணவுக்கு இரைப்பை பாகு என்று பெயர்.
  6. இந்த இரைப்பைப் பாகு குடலுக்குள் மெதுவாக குடல்வாய் (அ) பைலோரஸ் வழியாக நகர்கிறது.

Question 2.
கூழ்மப் பிரிப்பு அல்லது செயற்கை சிறுநீரகம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  1. சிறுநீரகமானது நைட்ரஜன் கழிவுப் பொருட்களை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
  2. சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக் கழிவுகள் உடலில் சேர்கிறது. இந்த நிலைக்கு சிறுநீரக பழுதடைவு என்று பெயர்.
  3. இதற்காக நோயாளியின் இரத்தத்தை வடிகட்ட ஒரு செயற்கை சிறுநீரகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கூழ்மப் பிரிப்பு (dialysis) என்று பெயர்.
  4. இம்முறையில் செயற்கை சிறுநீரகத்தை பயன்படுத்தி இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. இதற்கு ஹீமோடையலிஸிஸ் என்று பெயர்.
  5. பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மருந்துகளாலோ அல்லது கூழ்மப் பிரிப்பினாலோ சிகிச்சையளிக்கப்பட முடியாத போது நோயாளிகள் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Question 3.
கல்லீரலின் பணிகளை பட்டியலிடு?
விடை:

  1. இரத்த சர்க்கரை மற்றும் அமினோ அமில அளவைப் கட்டுப்படுத்துதல்.
  2. கருவில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குதல்.
  3. இரத்தம் உறைதலுக்குப் பயன்படும் பைபிரினோஜென் மற்றும் புரோத்ராம்பின் ஆகியவற்றை உருவாக்குதல்.
  4. சிவப்பு இரத்த அணுக்களை அழித்தல்.
  5. இரும்பு, தாமிரம், வைட்டமின்கள் A மற்றும் D ஆகியவற்றை சேமித்து வைத்தல்.
  6. ஹெப்பாரின் தயாரித்தல் (இரத்தம் உறைதலை தடுப்பான்)
  7. நச்சுகள் மற்றும் உலோக நஞ்சினை வெளியேற்றல்.
  8. மருந்துப் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குதல்.

கல்லீரல் சுரக்கும் பித்த நீரிலுள்ள பித்த உப்புக்கள் பால்மமாக்கல் முறையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.

Question 4.
அ) நெஃப்ரானின் படம் வரைந்து பாகங்களைக் குறி.
ஆ) முக்கிய பாகங்களின் பணியைக் கூறு.
விடை:
அ) நெஃப்ரானின் படம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 90

ஆ) பணிகள்:

  1. பௌமானின் கிண்ண ம் : இரத்தமானது வடிகட்டப்படுகிறது.
  2. அண்மை சுருள் நுண்குழல் : வடி திரவத்திலுள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீள உறிஞ்சுகிறது.
  3. சேய்மை சுருள் நுண் குழல் :
    1. ஹைட்ரஜன் அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருள்கள் நுண் நாளங்களுக்குள் சுரக்கின்றன.
    2. பொட்டாசியம், பெனிசிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள் நுண்குழல்களில் வடிதிரவமாக கடக்கின்றன. இதுவே இறுதியாக சிறுநீர் எனப்படுகிறது.
  4. சேகரிப்பு நாளம் :
    இறுதியாக சேகரிப்பு நாளத்தில் சிறுநீரானது சேர்ந்து பெல்விஸ் பகுதிக்குச் சென்று சிறுநீர்க் குழாய்கள் வழியாக சிறுநீர்பையை அடைந்து பெரிஸ்டால்சிஸ் இயக்கத்தின் மூலம் வெளியேறுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 5 இடர்கள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 5 இடர்கள்

8th Social Science Guide இடர்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ___________
அ) 78.09%
ஆ) 74.08%
இ) 80.07%
ஈ) 76.63%
விடை:
அ) 78.09%

Question 2.
இந்தியப் பெருங்கடலில் சுனாமி ______________ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
அ) 1990
ஆ) 2004
இ) 2005
ஈ) 2008
விடை:
ஆ) 2004

Question 3.
சுனாமி என்ற சொல் ____________ மொழியிலிருந்து பெறப்பட்டது.
அ) ஹிந்தி
ஆ) பிரெஞ்சு
இ) ஜப்பானிய
ஈ) ஜெர்மன்
விடை:
இ) ஜப்பானிய

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 4.
புவி மேற்பரப்பு நீருக்கு ____________ எடுத்துக்காட்டாகும்.
அ) ஆர்டீசியன் கிணறு
ஆ) நிலத்தடி நீர்
இ) அடி பரப்பு நீர்
ஈ) ஏரிகள்
விடை:
ஈ) ஏரிகள்

Question 5.
பருவமழை பொய்ப்பின் காரணமாக ____________ ஏற்படுகிறது.
அ) ஆவி சுருங்குதல்
ஆ) வறட்சி
இ) ஆவியாதல்
ஈ) மழைப்பொழிவு
விடை:
ஆ) வறட்சி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இடர்கள் __________ க்கு வழிவகுக்கிறது.
விடை:
பேரழிவு

Question 2.
நிலச்சரிவு _________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை:
இயற்கை

Question 3.
இடர்கள் தோன்றுவதன் அடிப்படையில் இடர்களை _________ வகைகளாகப் பிரிக்கலாம்.
விடை:
எட்டு

Question 4.
தீவிரவாதம் __________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை:
மனிதனால் தூண்டப்பட்ட

Question 5.
நைட்ரஜன் ஆக்சைடுகள் மனிதர்களைப் பாதிக்கும் ____________ மாசுபடுத்திகளாகும்.
விடை:
முதல்நிலை

Question 6.
செர்னோபில் அணு விபத்து ___________ ஆண்டில் நடைபெற்றது.
விடை:
1986

III. பொருத்துக பட்டியல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 1

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
‘இடர்’ – வரையறு.
விடை:
இடர்:
ஒரு பொருளோ, நபரோ, நிகழ்வோ அல்லது காரணியோ அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது இடர் (Hazard) எனப்படும்.

இவை மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவோ அல்லது இயற்கையான நிகழ்வாகவோ இருக்கலாம்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 2.
இடரின் முக்கிய வகைகள் யாவை?
விடை:
இடரின் முக்கிய வகைகள் (இந்தியா):

  • நில அதிர்வு
  • வெள்ளப்பெருக்கு
  • சூறாவளிப் புயல்கள்
  • வறட்சிகள்
  • நிலச்சரிவுகள்
  • அபாயகர கழிவுகள்
  • காற்று மாசு
  • நீர் மாசு (அல்லது)
  • இயற்கை இடர்கள்
  • மனிதனால் உருவாக்கும் இடர்கள்
  • சமூக – இயற்கை இடர்கள்

Question 3.
அபாயகரக் கழிவுகள் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
அபாயகரக் கழிவுகள்:
சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு பெருத்த சுகாதார தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்கழிவுகள் அபாயகரக் கழிவுகள் எனப்படும்.

முக்கிய அபாயகரக் கழிவுகள்:

  • கதிரியக்க பொருட்கள்
  • இரசாயனங்கள்
  • மருத்துவ கழிவுகள்
  • வெடிப் பொருட்கள்
  • குடிசார் அபாயகர கழிவுகள்
  • எளிதில் தீப்பற்றக்கூடிய கழிவுகள்

Question 4.
நமது நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
விடை:
நமது நாட்டில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் முக்கிய பகுதிகள்:

  • வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உத்திரப்பிரதேசம், வட பீகார், மேற்கு வங்காளத்தை உள்ளடக்கிய கங்கைச் சமவெளி மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு.
  • கடலோர ஆந்திரம், ஒடிசா, குஜராத் போன்றவை இதர பகுதிகள்

Question 5.
வறட்சியின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:
வறட்சியின் வகைகள்:

  • வானிலையியல் வறட்சி
  • நீரியியல் வறட்சி
  • வேளாண் வறட்சி

Question 6.
மலை அடிவாரப் பகுதிகளில் நாம் ஏன் குடியிருப்புகளை அமைக்க கூடாது?
விடை:
மலை அடிவாரப் பகுதிகளில் நாம் குடியிருப்புகளை அமைக்க கூடாது.
ஏனெனில்

பொதுவாக நிலச்சரவுகள் மலை அடிவாரப் பகுதிகளில் திடீரென்று ஏற்படும் அரிதான நிகழ்வாகும். செங்குத்துச் சரிவு மற்றும் கனமழை நிலச்சரிவுகள் ஏற்பட முக்கிய காரணங்களாகும்.

இமயமலைச் சரிவுகள், மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகள், கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகள் நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

V. வேறுபடுத்துக

Question 1.
இடர் மற்றும் பேரிடர் இடர்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 2

Question 2.
இயற்கை மற்றும் செயற்கை இடர்கள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 3

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 3.
வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 4
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 5

Question 4.
நில அதிர்வு மற்றும் சுனாமி
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 6

VI. விரிவான விடையளி

Question 1.
காற்று மாசுபடுதலைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
விடை:
காற்று மாசுபடுதல்:
உட்புற அல்லது வெளிப்புக் காற்றானது சில வாயுக்கள் மற்றும் திடப்பொருட்களின் சேர்க்கையால் அதன் இயற்கை பண்புகள் மற்றும் காற்றின் சதவீதங்கள் மாறுபடுவதை காற்று மாசுபடுதல் என்கிறோம்.

முதன்மை மாசுபடுத்திகள் என்பது ஒரு மூலத்தில் இருந்து நேரடியாக வெளியேற்றப்படும் மாசுவாகும்.
முதன்மை மாசுபடுத்திகள்:

  • சல்பர் டை ஆக்சைடு
  • நைட்ரஜன் ஆக்சைடு
  • கார்பன் டை ஆக்சைடு
  • துகள்ம பொருட்கள்
  • பிற முதன்மை மாசுபடுத்திகள்

இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் நேரடியாக வெளியேற்றப்படுவதில்லை. ஆனால் மற்ற முதன்மை மாசுக்கள் வளிமண்டலத்தில் வினை புரிவதால் உருவாகுபவை ஆகும்.
இரண்டாம் நிலை மாசுபடுத்திகள்:

  • தரைமட்ட ஓசோன்
  • பனிப்புகை

Question 2.
நில அதிர்வை வரையறுத்து அதன் விளைவுகளைப் பட்டியலிடுக.
விடை:
நில அதிர்வு:
நில அதிர்வு என்பது புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும் கடும் அதிர்வாகும். இவ்வதிர்வு தோன்றும் மையத்திலிருந்து அனைத்து திசைகளிலும் தொடர்ச்சியான அதிர்வு அலைகளை ஏற்படுத்துகிறது.

நில அதிர்வின் விளைவுகள்:

  • புவிப்பரப்பில் ஏற்படும் அதிர்ச்சிகள்
  • தரைப்பரப்பு சேதம்
  • நிலச்சரிவுகள் – சுனாமி
  • நிலம் அமிழ்தல்

Question 3.
நிலச்சரிவிற்கான காரணங்கள் குறித்து விரிவான விளக்கம் தருக.
விடை:
நிலச்சரிவுக்கான காரணங்கள்:
நிலச்சரிவு என்பது புவியீர்ப்பு விசையினால் பாறைகள், மண் மற்றும் தாவரங்கள் கீழ்நோக்கி வேகமாகச் செல்லும் நகர்வைக் குறிப்பதாகும்.

செங்குத்துச் சரிவு மற்றும் கனமழை நிலச்சரிவுகள் ஏற்பட முக்கியக் காரணங்களாகும்.

பலவீனமான தளர்ந்த நில அமைப்பு, காடழிப்பு, நில அதிர்வு, எரிமலை வெடிப்பு, சுரங்கம் தோண்டுதல், மலைப் பிரதேசங்களில் சாலைகள் மற்றும் இருப்புப் பாதைகளின் கட்டுமானம் ஆகியவை நிலச்சரிவுக்கான பிற காரணங்களாகும்.

சுமார் 15% நிலப்பரப்பு இந்தியாவில் நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகும் பகுதிகள்.

இமயமலைச் சரிவுகள், மேற்கு தொடர்ச்சி மலைச் சரிவுகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலச்சரிவுகள் அதிகம் காணப்படுகின்றன. கொடைக்கானல் மற்றும் உதகமண்டலம் தமிழ்நாட்டில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

Question 4.
நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்க.
விடை:
நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள்:

  • நீர்மாசு என்பது நீரின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
  • நீர்மாசு மனித மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றது.
  • மாசு நிறைந்த நீரை பயன்படுத்துவதால் அல்லது பருகுவதால் மனிதருக்கு பல நோய்கள் உண்டாகின்றன. நீர்மாசு டைபாய்டு, காலரா, மஞ்சட்காமாலை போன்ற பல நோய்களை உண்டாக்குகிறது.
  • நீர்மாசு அகற்றப்படாவிட்டால் அது முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை நிலைகுலையச் செய்துவிடும்.
  • நீர்நிலைகளில் உள்ள வேதிப்பொருட்கள் ஆல்காக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இவை ஏரி அல்லது குளங்களின் மேற்பரப்புகளில் அடுக்குகளாக படிந்து விடுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும் பாக்டீரியாக்கள் நீர்நிலைகளில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கின்றன. இது நீர்நிலை உயிரிகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன.
  • நீரிலுள்ள மாசுபடுத்திகளை உணவாக நீர்வாழ் உயிரினங்கள் (மீன், ஷெல் மீன்கள்) பயன்படுத்தும் போதும், நீர்வாழ் உயிரினங்களை மனிதன் பயன்படுத்தும் போதும் உணவுச் சங்கலி பாதிக்கப்படுகிறது.

VII. செயல்பாடுகள்

Question 1.
நீங்கள் அடையாளம் கண்டுள்ள இடர்களின் பெயர்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 7
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 8

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 2.
உங்கள் பகுதியில் அடிக்கடி மற்றும் எப்போதாவது ஏற்படும் இடர்களைப் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 9

8th Social Science Guide இடர்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ஆற்றல் ____________
அ) 7.1
ஆ) 8.1
இ) 9.1
ஈ) 10.1
விடை:
இ) 9.1

Question 2.
கீழ்க்கண்டவற்றில் மருத்துவக் கழிவு எது?
அ) ஊசிகள்
ஆ) கட்டுத்துணிகள்
இ) மருந்துப்பொருட்கள்
ஈ) இவையனைத்தும்
விடை:
ஈ) இவையனைத்தும்

Question 3.
செர்னோபில் அணுக்கதிர் வீச்சு ஹீரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டை விட ___________ மடங்கு அதிகம்.
அ) 100
ஆ) 200
இ) 300
ஈ) 400
விடை:
ஈ) 400

Question 4.
ஹசார்டு (Hazard) என்ற சொல் ஹாசர்ட் (Hasart) என்ற ____________ சொல்லிலிருந்து தோன்றியது.
அ) பிரெஞ்சு
ஆ) அரபு
இ) ஸ்பானிய
ஈ) ஜப்பானிய
விடை:
அ) பிரெஞ்சு

Question 5.
சூறாவளி மற்றும் பனிச்சரிவு ஆகியவை ____________ இடர்கள்.
அ) வளிமண்டல
ஆ) நீரியல்
இ) தொழில்நுட்ப
ஈ) உயிரியல்
விடை:
அ) வளிமண்டல

Question 6.
நில அதிர்வு மண்டலம் 4ல் அபாயத்தன்மை ____________
அ) மிக அதிகம்
ஆ) அதிகம்
இ) மிதமானது
ஈ) குறைவு
விடை:
ஆ) அதிகம்

Question 7.
காடழிப்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட ஒரு ___________ காரணி
அ) வானியல்
ஆ) இயற்பியல்
இ) மனித
ஈ) எதுவுமில்லை
விடை:
இ) மனித

Question 8.
ஊட்டி ____________ மாவட்டத்தில் உள்ளது.
அ) திண்டுக்கல்
ஆ) மதுரை
இ) தேனி
ஈ) நீலகரி
விடை:
ஈ) நீலகரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சுனாமி பேரலைகள் பொதுவாக கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு சுமார் __________ கி.மீ. முதல் ___________ கி.மீ வரை பயணிக்கிறது.
விடை:
640, 960

Question 2.
காற்று பல வாயுக்களின் ____________.
விடை:
கலவை

Question 3.
நில அதிர்வு என்பது புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும் ____________
விடை:
கடும் அதிர்வு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 4.
வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல் நீர் எழுச்சி ___________ எனப்படும்.
விடை:
புயல் அலை

Question 5.
இந்தியாவில் ___________ வறட்சி ஏற்படுகிறது.
விடை:
பருவமழை பொய்ப்பதால்

Question 6.
உட்புற மற்றும் வெளிப்புறக் காற்று தன் இயற்கைப் பண்புகளை இழப்பது ___________ எனப்படும்.
விடை:
காற்று மாசுபடுதல்

III. பொருத்துக

Question 1.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 10

Question 2.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 11

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
பேரழிவு என்றால் என்ன?
விடை:
பேரழிவு என்பது மிகப்பெரிய இழப்பினையும், அதிக செலவினத்தையும் உண்டாக்கும் பேரிடர். இதிலிருந்து மீள நீண்டகாலம் தேவைப்படும்.

Question 2.
அதிக வறட்சிக்கு உள்ளாகும் முக்கியப் பகுதிகள் யாவை?
விடை:
அதிக வறட்சிக்கு உள்ளாகும் முக்கிய பகுதிகள்: அகமதாபாத் முதுல் கான்பூர் வரை உள்ள வறண்ட மற்றும் அரை – வறண்ட பகுதிகள் ஒரு புறம். மற்றொரு புறம் கான்பூர் முதல் ஜலந்தர் வரை உள்ள பகுதிகள்.

மேற்கு தொடர்ச்சி மலையின் காற்று மறைவு பகுதிகளில் அமைந்துள்ள வறண்ட பகுதிகள்.

Question 3.
சிறு குறிப்பு வரைக: இந்தியப் பெருங்கடல் சுனாமி (2004)
விடை:
இந்தியப் பெருங்கடல் சுனாமி (2004):
2004ல் இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் (9.1 ரிக்டர் அளவுகோல் ஆற்றல்) டிசம்பர் 24 காலை 7.59 (உள்ளூர் நேரம்) மணிக்கு ஏற்பட்டது. இது இந்தோனேஷியாவின் சுமத்ரா கடற்கரையைத் தாக்கியது.

இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமி 12 நாடுகளைத் தாக்கி (இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, சோமாலியா, மாலத்தீவு) 2,25,000 உயிர்களை பலிவாங்கியதுடன் பெருத்த பொருட்சேதத்தையும் விளைவித்தது.

Question 4.
இந்தியாவில் நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்கள் யாவை?
விடை:
நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்கள்:

  •  நகரமயமாக்கல்
  • தொழிற்சாலை கழிவுகள்
  • கழிவுநீர்
  • வேளாண் நீர் வழிந்தோடல் மற்றும் முறையற்ற வேளாண்
  • நடைமுறைகள்
  • கடல்நீர் உட்புகுதல்
  • திண்மக்கழிவுகள்

Question 5.
செர்னோபில் அணு பேரழிவு இடம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது எவ்வாறு உள்ளது?
விடை:
செர்னோபில் (2019ல்):
செர்னோபில் அணு உலை விபத்து ஏப்ரல் 26, 1986 அன்று நிகழ்ந்தது. விபத்து நடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு (தற்போது உக்ரைன் மற்றும் பெலாரசைக் கொண்ட பகுதி) ஏராளமான விலங்குகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசிக்கின்றன.

அரசாங்கத்தால் 2016 ஆம் ஆண்டு உக்ரைன் நாடு “கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோளப் பெட்டகம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 6.
இந்தியாவில் ஏன் வறட்சி ஏற்படுகிறது?
விடை:
இந்தியாவில் வறட்சி ஏற்படுகிறது : ஏனெனில்
இந்தியாவில் பருவமழை தவறுகிறது. பொதுவாக இந்தியாவில் பருவமழை சமச்சீரற்ற நிலையில் பொழிகிறது. சில பகுதிகள் அதிக மழைப் பொழிவையும் மற்ற பகுதிகள் மிதமானது முதல் குறைவான மழைப் பொழிவையும் பெறுகின்றன.

குறைவான மழை மற்றும் மிகக்குறைவான மழை பெறும் பகுதிகள் வறட்சியினால் பாதிக்கப்படுகின்றன.

V. வேறுபடுத்துக

Question 1.
வானிலையியல் வறட்சி மற்றும் நீரியியல் வறட்சி
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 12

Question 2.
காற்று மாசு மற்றும் நீர் மாசு
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 13

Question 3.
முதன்மை மாசுபடுத்திகள் மற்றும் இரண்டாம் நிலை மாசுபடுத்திகள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 14

VI. விரிவான விடையளி

Question 1.
தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் எட்டுவகையான இடர்களை எடுத்துக்காட்டுகளுடன் கூறு.
விடை:
தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் இடர்கள் :

  • வளிமண்டலம் – இடியுடன் கூடிய புயல், மின்னல், காட்டுத்தீ
  • நிலவியல் – நில அதிர்வு, சுனாமி, நிலச்சரிவு
  • நீரியல் – வெள்ளப்பெருக்கு, வறட்சி, கடற்கரை அரிப்பு
  • எரிமலை — எரிமலை வெடிப்பு, லாவா வழிதல்
  • சுற்றுச்சூழல் – புவிவெப்பமடைதல், காடழிப்பு, மாசடைதல்
  • உயிரியல் – பெரியம்மை, விஷ தேனீக்கள், எய்ட்ஸ்
  • தொழில்நுட்பம் – அபாயகரமான கழிவுகள், தீவிபத்து, கட்டமைப்பு குறைபாடு
  • மனித தூண்டுதல் – போர், தீவிரவாதம், போக்குவரத்து விபத்துகள்

Question 2.
புயல் அலை என்பது என்ன? பயுல் அலைகளால் பாதிப்பு ஏற்படும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் எவை?
விடை:
புயல் அலை:
வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல்நீர் எழுச்சியை “புயல் அலை” என்கிறோம். (புயல் அலைகள் ஆழமற்ற கடலோரப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது)

புயல் அலை பாதிப்புக்குள்ளாகும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள்:

  • ஒடிசாவின் வடபகுதி மற்றும் மேற்கு வங்காள கடற்கரை
  • ஆந்திரக் கடற்கரை (ஓங்கோல் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே)
  • தமிழகக் கடற்கரை (13 கடலோர மாவட்டங்கள், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்)

புயல் அலை பாதிப்புக்குள்ளாகும் மேற்கு கடற்கரைப் பகுதிகள்:

  • மகாராஷ்டிரா கடற்கரை, வட ஹர்னாயர், தென் குஜராத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதி மற்றும் காம்பே வளைகுடாவைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள்.
  • கட்ச் வளைகுடாவை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 3.
சிறுகுறிப்பு வரைக. –
i) பேரழிவை உருவாக்கக்கூடிய புதிய ஆயுதமாக இயற்கை வளர்ந்து வருகிறது.
ii) இடர் தடுப்பு நடவடிக்கைகளின் அவசியம்.
விடை:
i) பேரழிவை உருவாக்கக்கூடிய புதிய ஆயுதமாக இயற்கை வளர்ந்து வருகிறது.

  • இந்தியாவில் 2017 வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் 22,000 பேர் பெரும் சுற்றுச்சூழல் காரணமாக இறந்துள்ளனர்.
  • கடந்த 20 ஆண்டுகளில் (1998 – 2017) உலகில் சுமார் 5,00,000 மேற்பட்ட மக்கள் மோசமான வானிலை நிகழ்வுகளால் இறந்துள்ளனர்

ii) இடர்தடுப்பு நடவடிக்கைகளின் அவசியம்:

  • மனிதர்கள் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளுக்கு இயற்கை மற்றும் செயற்கை இடர்களால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்க எழுப்பப்படும் நடவடிக்கைகள் தடுப்பு நடவடிக்கைகள் ஆகும்.
  • தடுப்பு திட்டமிடல் :
    • இடரைக் கண்டறிதல்
    • பாதிப்பை மதிப்பீடு செய்தல்
  • தாமதமான தடுப்பு நடவடிக்கைகள் பொருளாதார இழப்பை அதிகரிக்கக் கூடும் என்பதால் முன் திட்டமிடல் அவசியம்.
  • இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இடர் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் சவாலானதாக உள்ளது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 15

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

8th Social Science Guide இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
மக்கள் __________ லிருந்து ____________ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்.
அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
ஆ) நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு
இ) மலையிலிருந்து சமவெளிக்கு
ஈ) சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு
விடை:
அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு

Question 2.
ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் ________ எனப்படுகிறது.
அ) குடிபுகுபவர்
ஆ) அகதி
இ) குடியேறுபவர்
ஈ) புகலிடம் தேடுபவர்
விடை:
இ) குடியேறுபவர்

Question 3.
வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது. ___________
அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
ஆ) கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
இ) நகரத்தில் இருந்து கிராமத்திற்கு
ஈ) நகரத்தில் இருந்து நகரத்திற்கு
விடை:
அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 4.
போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு ___________ ஐ சார்ந்தது.
அ) மக்களியல்
ஆ) சமூக மற்றும் கலாச்சாரம்
இ) அரசியல்
ஈ) பொருளாதாரம்
விடை:
இ) அரசியல்

Question 5.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ____________
அ) மிகையான உணவு தானிய உற்பத்தி
ஆ) கால்நடை வளர்ப்பு
இ) மீன் பிடித்தல்
ஈ) வேட்டையாடுதல்
விடை:
அ) மிகையான உணவு தானிய உற்பத்தி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
நகரமயமாதல் …………………… எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன
விடை:
மூன்று

Question 2.
…………………… என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்
விடை:
வேலையின்மை .

Question 3.
இந்தியாவின் …………… மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.
விடை:
புதுதில்லி

Question 4.
ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ………….. இடம்பெயர்வு எனப்படும்.
விடை:
தன்னார்வ

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 5.
நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி ……………….. வளர்ச்சியால் அதிகரிக்கிறது.
விடை:
தொழில்புரட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
குடிசைப்பகுதிகள் பொதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.
விடை:
சரி

Question 2.
நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை .
விடை:
சரி

Question 3.
நகரமயமாக்கம் குறுகியக் கால வரலாறுடையது.
விடை:
தவறு

Question 4.
பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.
விடை:
சரி

Question 5.
மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
சரி

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.

கூற்று : நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.
காரணம் : கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடை:
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
‘இடம் பெயர்தல்’ – வரையறு.
விடை:
“ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல்” எனப்படும்.

ஐ.நா. அமைப்பின் வரையறை : “இடம்பெயர்வு என்பது இரு புவியியல் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் ஒரு வகையான மக்கள்தொகை நகர்வாகும். இது பொதுவாக இருப்பிடத்தில் ஒரு வகையான நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துகிறது”.

Question 2.
கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை?
விடை:
கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள்:

  • வேலைவாய்ப்பு
  • கல்வி
  • பொழுதுபோக்கு வசதிகள்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 3.
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுக.
விடை:
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்கள் :

  • எரிமலை வெடிப்பு
  • நில அதிர்வு
  • வெள்ளம்
  • வறட்சி

Question 4.
இடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
விடை:
இடம்பெயர்வுக்கான இழுகாரணிகள்:

  • பொருளாதாரக் காரணிகள்
  • வேலைவாய்ப்பிற்கேற்ற சூழல்கள்
  • மக்கள்தொகை காரணிகள்
  • குறைவான மக்கள்தொகை

Question 5.
நகரமயமாக்கம் என்றால் என்ன?
விடை:
நகரமயமாதல்:
“நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை நகரமயமாதல் என்கிறோம்.”

Question 6.
உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக.
விடை:
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்கள்:

  • டோக்கியோ (ஜப்பான்) – 37 மில்லியன்
  •  புதுதில்லி (இந்தியா) – 29 மில்லியன்
  • சாங்காய் (சீனா) – 26 மில்லியன்
  • மெக்சிகோ நகரம் (மெக்சிகோ) – 22 மில்லியன்
  • சா பாலோ (பிரேசில்) – 22 மில்லியன்

VII. விரிவான விடையளி

Question 1.
இடம் பெயர்தலின் பல்வேறு வகைகள் யாவை? அவைகளை விளக்குக.
விடை:
I. நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்வுகள் :
உள்நாட்டு இடம்பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைக்குள் நிகழும் மக்களின் இடம்பெயர்வு உள்நாட்டு இடம் பெயர்வு என அழைக்கப்படும்.

  • ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தல்.
  • நகர்ப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தல்.
  • ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல்.
  • நகர்ப்புறத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல்.
  • சர்வதேச இடம்பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்து நடக்கும் இடம்பெயர்தல் சர்வதேச இடம் பெயர்தல் என அழைக்கப்படும்.

II. இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்தல் :

  • தன்னார்வ இடம்பெயர்வு (தனிநபரின் விருப்பம், முயற்சி மற்றும் முன்னெடுத்தல்)
  • தன்னர்வமில்லா / கட்டாய இடம்பெயர்வு (இடம் பெயர்பவரின் விருப்பத்திற்கு மாறாக)

III. இடம்பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம்பெயர்தல் :

  • குறுகிய கால இடம்பெயர்வு (இடம்பெயர்பவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் சில நாட்கள் முதல் சில மாதங்கள் மட்டுமே தங்குவர்)
  • நீண்டகால இடம்பெயர்வு (இடம் பெயர்பவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் சில வருடங்களாவது தங்குவர்)
  • பருவகால இடம்பெயர்வு (இடம் பெயர்பவர்கள் குறிப்பிட்ட பருவகாலத்தின் போது குடிபெயர்ந்து அப்பருவத்தின் முடிவில் மீண்டும் திரும்பி விடுவர்) – கோடைகாலத்தில் மலைவாழ் இடங்களுக்கு குடியேறுதல், வேளாண் தொழிலாளர்கள் விதைக்கும் பருவங்களில்
    இடம்பெயர்தல் மற்றும் ‘மந்தை இடமாற்றம்’ (Transhumance) ஆகியவை பருவகால இடம்பெயர்வுகளாகும்.

Question 2.
இடம் பெயர்தலுக்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்குக.
விடை:

  1. சூழியல் (அல்லது) இயற்கை காரணங்கள் :
    • சூழியல் இடம்பெயர்வுக்கு எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை முக்கிய காரணிகளாகும்.
    • இக்காரணிகள் மக்களை தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி புதிய பகுதிகளில் குடியேற உந்துகின்றன. (நீர்வளம், பிரச்சனைகளற்ற நிலப்பகுதிகள், மாசற்ற நிலைகள் இடம்பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகள்)
  2. பொருளாதார காரணங்கள் :
    • வளமான வேளாண் நிலம், வேலைவாய்ப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற பொருளாதார காரணிகள் புலம் பெயர்வோரை ஈர்க்கின்றன.
    • பெருந்திரள் ஏழ்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவை மக்களை பூர்வீக இடத்திலிருந்து சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களுக்கு வெளியேற வைக்கின்றன.
  3. சமூக – பண்பாட்டுக் காரணங்கள் :
    • பெண்களின் திருமணத்திற்கு பின் இடம்பெயர்வு, புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம்பெயர்தல் ஆகியவை சமூக பண்பாட்டுப் பழக்கத்தினை அடிப்படையாகக் கொண்டவை.
  4. மக்கள்தொகை சார்ந்த காரணங்கள் :
    • மக்கள் தொகையின் உட்கூறு பண்புகளான வயது, பாலினம், அதிக மற்றும் குறைந்த மக்கள் தொகை போன்றவை இடம்பெயர்வுக்கான முக்கிய காரணங்களாகும்.
    • பிற பிரிவினரை விட இளையோர் இடம்பெயர்வு அதிகம். திருமணத்திற்கு பின் பெண்கள் புலம் பெயர்கிறார்கள். அதிக மக்கள் தொகை ஓர் உந்து காரணி. குறைவான மக்கள்தொகை ஓர் இழுகாரணி.
  5. அரசியல் காரணங்கள் :
    • காலங்காலமாக காலனி ஆதிக்கம், போர்கள், அரசாங்கக் கொள்கைகள் போன்றவை இடம்பெயர்தலில் முக்கிய பங்குவகிக்கின்றன. பழங்காலத்திலிருந்தேபோர்கள் இடம்பெயர்வுக்கான குறிப்பிடத்தக்க காரணமாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 3.
நகரமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை ஆராய்க.
விடை:
குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதிகள் :
நகர்ப்புற மக்கள்தொகை அதிகரிப்பால் குடியிருப்பு இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. தரமற்ற குடியிருப்புகள் உருவாகின்றன. விரைவான நகரமயமாக்கலால் குடிசைப்பகுதிகள் உருவாகின்றன.

மக்கள் நெரிசல் :
அதிக மக்கள் நெரிசல் சுகாதாரமற்ற சுற்றுப்புறச் சூழலுக்கு வழிவகுக்கிறது. மக்கள் நெரிசல் பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்கு காரணமாகிறது.

தண்ணீ ர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம் :
எந்த ஒரு நகரத்திலும் நாள் முழுவதும் நீர் விநியோகம் இல்லை. வடிகாலமைப்பு மோசமாக உள்ளது. குப்பைகளை அகற்றுதல் கடினமான பணியாக உள்ளது.

போக்குவரத்து மற்றும் நெரிசல் :
இருசக்கர வாகனங்கள் மற்றும் மகிழுந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. போதுமான திட்டங்களும், கட்டமைப்புகளும் இல்லை .

மாசடைதல் :
பல நகரங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர், தொழிலகங்களிலிருந்து வெளியேற்றப்படும் சுத்தகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியன அருகில் உள்ள நீர்நிலைகளில் கலக்கின்றன. நகர்ப்புற மையங்களைச் சுற்றியுள்ள தொழிலகங்கள் புகை மற்றும் நச்சு வாயுக்களை வெளியிட்டு வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன.

IX. செயல்பாடுகள்

Question 1.
உனது பகுதியில் உள்ள மக்கள் இடம் பெயர்தலுக்கான காரணங்களை ஆராய்ந்து பட்டியலிடுக.
விடை:
எனது பகுதியில் மக்கள் தங்கள் பூர்வீக இடங்களிலிருந்து வளர்ந்து வரும் நகரம் மற்றும் மாநகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். பல ஆண்டுகள் தொடர்ந்து பருவமழை பொய்த்துப் போவதால் வேலை தேடியும் குழந்தைகளின் கல்விக்காகவும் புலம் பெயர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு – ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு)

எனது பகுதி வறட்சி பாதித்த பகுதி என்பதால் மக்கள் செழிப்பான பகுதியை நோக்கி நல்ல ஊதியம், நல்ல வேலைவாய்ப்பு தேடி நகர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு – ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு)

திருமணத்தின் காரணமாக, மக்கள்தொகை காரணி அடிப்படையில், பெண்கள் திருமணத்திற்குப்பின் இடம் பெயர்கிறார்கள்.(உள்நாட்டு இடம்பெயர்வு – ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்துக்கு மற்றும் ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு)

பருவகால இடம்பெயர்வு, முதுமை, பணி நிறைவு, பணி ஓய்வு காரணமாக மக்கள் பூர்வீக இடங்களுக்கு அமைதியான வாழ்க்கை வாழவும், நகர்ப்புற பிரச்சனைகளிலிருந்து மீளவும் இடம்பெயர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு – நகர்ப்புறத்திலிருந்து ஊரகத்திற்கு)

Question 2.
நகரமயமாக்கலின் விளைவுகள் சார்பான தகவல்கள் மற்றும் படங்களைச் சேகரித்து தொகுப்பு படம் (Album) ஒன்றைத் தயார் செய்க. (மாணவர்களுக்கானது)

8th Social Science Guide இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நகரமயமாக்கலின் உலக சராசரி சதவீதம் …………
அ) 55
ஆ) 60
இ) 65
ஈ) 70
விடை:
அ) 55

Question 2.
…………………. ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள் தொகை ஊரக மக்கள் தொகையைவிட அதிகமானது.
அ) 2005
ஆ) 2007
இ) 2009
ஈ) 2011
விடை:
ஆ) 2007

Question 3.
வரலாற்றுக்கு முந்தைய நகரங்களான உர் மற்றும் பாபிலோன் அமைந்த பகுதி …………..
அ) இந்தியா
ஆ) கிரீஸ்
இ) எகிப்து
ஈ) மெசபடோமியா
விடை:
ஈ) மெசபடோமியா

Question 4.
2017 ஆம் ஆண்டில் ………….. புலம் பெயர்வில் இந்தியா மிகப்பெரிய நாடு.
அ) உள்நாட்டு
ஆ) பருவகால
இ) சர்வதேச
ஈ) கட்டாய
விடை:
இ) சர்வதேச

Question 5.
உலக மக்கள் தொகையில் அதிக சதவீதம் மற்றும் சர்வதேச புலம் பெயர்ந்தோர் அதிக சதவீதம் கொண்ட மண்டலம்
அ) ஆப்பிரிக்கா
ஆ) ஆசியா
இ) ஐரோப்பா
ஈ) லத்தீன் அமெரிக்கா
விடை:
ஆ) ஆசியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பின்தங்கிய நாடுகளைச் சார்ந்த தொழிற்திறன் கொண்ட மக்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடி வளர்ந்த நாடுகளுக்குச் செல்லுதல் ………….. எனப்படும்.
விடை:
அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 2.
அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் காரணமாக பூர்வீக பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைதல் ……….. என அழைக்கப்படுகிறது.
விடை:
அறிவுசார் வெளியேற்ற விளைவு

Question 3.
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நகரங்கள் …………… அருகில் காணப்பட்டன
விடை:
ஏஜியன் கடல்

Question 4.
பாரிஸ், லண்டன், வெனிஸ் ……………. ல் காணப்படும் நகரங்கள்
விடை:
ஜரோப்பா

Question 5.
பொதுவாக அதிகம் நடைபெறக்கூடிய இடம் பெயர்வு ……………….. ஆகும்
விடை:
ஊரகப்பகுதியிலிருந்து நகர்ப்புறம் நோக்கி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 2

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
குடிபெயர்பவர் என்பவர் சர்வதேச எல்லைக்கு வெளியிலிருந்து ஒரு புதிய நாட்டில் குடி புகுபவர்கள் ஆகும்
விடை:
சரி

Question 2.
குடியேறுபவர் என்பவர் தன்னுடைய நாட்டிலிருந்து வோறாடு நாட்டிற்கு குடியேறுபவர் ஆவர்
விடை:
சரி

Question 3.
மக்கள் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல காரணமாக அமையும் காரணிகள் உந்துகாரணிகள் எனப்படும்
விடை:
சரி

Question 4.
பிறபகுதிகளில் இருந்து ஓர் இடத்தைநோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் இழ காரணிகள் எனப்படும்.
விடை:
சரி

Question 5.
கால்நடையுடன் இடம் பெயர்வு பருவகால இடம் பெயர்வு அல்ல
விடை:
தவறு

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.

Question 1.
கூற்று : இடம் பெயர்வு என்பது இருபுவியியல் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் ஒருவகையான மக்கள் தொகை நகர்வாகும்.
காரணம் : ஊரகத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்தல் விளைவு நகரமயமாக்கல் ஆகும்.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மக்கள் எவ்வாறு நிரந்தர குடியிருப்புகளில் வாழத் தொடங்கினர்?
விடை:
நாடோடி மக்கள் காடுகளில் வாழ்வதை தவிர்த்து நாகரிக வாழ்க்கையைப் பின்பற்றத் தொடங்கியபோது வளமான நிலம் மற்றும் வளர்ப்பு விலங்குகளுடன் உறவை மேம்படுத்திக் கொண்டனர்.

இதன் விளைவாக மனிதகுலம் குறிப்பிட்ட அளவு மாற்றமடைந்தது. நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிரந்தர குடியிருப்புகளில் வாழத் தொடங்கினர்.

Question 2.
அரசியல் காரணங்களுக்கான இழுகாரணிகள் மற்றும் உந்து காரணிகள் யாவை?
விடை:
அரசியல் காரணங்களுக்கான இழுகாரணிகள் :

  • அரசியல் பாதுகாப்பு
  • தனித்துவம் மற்றும் சுதந்திரம்
    குறைந்த செலவு மற்றும் எளிதில் கிடைக்கும் சேவைகள்

அரசியல் காரணங்களுக்கான உந்து காரணிகள் :

  • போர், சமூக அமைதியின்மை பாதுகாப்பு சார்ந்தவை
  • குறைவான அல்லது பற்றாக்குறையான சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு

Question 3.
ஆண்களைவிட பெண்கள் அதிகமாக புலம்பெயரும் பகுதிகளைப் பெயரிடு.
விடை:
ஆண்களைவிட பெண்கள் அதிகம் புலம் பெயரும் பகுதிகள் :

  • ஐரோப்பா
  • வட அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா
  • லத்தீன் அமெரிக்கா
  • கரீபியன்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 4.
இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகள் யாவை?
விடை:
இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகள் :

  • மக்கள் தொகை விளைவுகள்
  • சமூக விளைவுகள்
  • பொருளாதார விளைவுகள்
  • சுற்றச் சூழல் விளைவுகள்

Question 5.
நகரமயமாக்கலை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
விடை:
நகரமயமாக்கலின் மூன்று காரணிகள் :
இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி ஊரகத்திலிருந்து நகர்புறங்களுக்கு இடம் பெயர்தல் ஊரகப் பகுதிகளை நகர்புறங்களாக மறுசீரமைப்பு செய்தல்

Question 6.
உலக நகரமயமாக்கலில் முதல் ஐந்து பகுதிகளின் % ஐ பட்டியலிடு.
விடை:
உலக நகரமயமாக்கல் சதவீதம் :

  1. வட அமெரிக்கா (82%)
  2. இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள்(81%)
  3. ஐரோப்பா (74%)
  4. ஓசியானியா (68%)
  5. ஆசியா (50%)

VII. விரிவான விடையளி

Question 1.
நவீனகால துரித நகரமயமாக்கம் எவ்வாறு மக்கள் தொகையை மறுபரவலுக்கு உட்படுத்துகிறது?
விடை:
நவீன காலம் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. இது நகரமயமாக்கலின் மூன்றாம் கட்டமாகும்.

  • 19ஆம் நூற்றாண்டின்தொழிற்புரட்சிநகரங்கள் மற்றும்மாநகரங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்தியது.
  • நகர்புற நாகரிகத்தினால் வட அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனில் அதிக எண்ணிக்கையிலான புதிய நகரங்கள் உருவாயின.
  • நவீன தொலைத்தொடர்பு, போக்குவரத்து, புதிய வணிக கடல் வழித் தடங்களின் வளர்ச்சி வணிகத்தளங்களையும், நகர்புற பகுதிகளையும் வலுப்படுத்தின.
  • ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. 1930க்கு பின் ஐம்பது நகரங்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக்கொண்டுள்ளன.
  • கெய்ரோ, நைரோபி, மும்பசா, புலவையோ, டூலா, அபிடியான், லாகோஸ், அக்ரா, அடிஸ் அப்பா, லிப்போல்டுவில், லவுண்டா, கேப்டவுன், நட்டால், பிரிட்டோரியா போன்றவை ஆப்பிரிக்காவின் முக்கிய நகரங்கள்.
  • நவீனகால துரித நகரமயமாக்கம் உலகம் முழுவதிலும் மக்கள் தொகையை மறு பரவலுக்கு உட்படுத்துகிறது.

Question 2.
உலக நகரமயமாக்கலின் வளர்ச்சி (பண்டையகாலம்) வரலாற்றை சுருக்கமாக எழுது.
விடை:
பண்டைய காலத்தில் நகரமயமாக்கலின் வளாச்சி :
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே நகர மையங்கள் உருவாகத் தொடங்கின (10000 ஆண்டுகளுக்கு முன்) தொடக்க கால மனிதர்கள் நிரந்தரக் குடியிருப்புகளை உருவாக்கத் தொடங்கினர்.

  • எகிப்து, கிரேக்கம் மற்றும் இந்திய ஆற்றுப்பள்ளத்தாக்கு பகுதிகளில் வேளாண் சார்ந்த சமூகங்கள் தோன்றி அவை நகர்புறம் சார்ந்த சமூகம் மற்றும் நகரமையங்களாக உருவாயின.
  • உணவுதானிய மிகை உற்பத்தியே நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம்.
  • உலக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அமைந்த நகரங்கள்.
    உலக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அமைந்த நகரங்கள் :

    • உர் மற்றும் பாபிலோன்(மெசபடோமியா)
    • தீப்ஸ் மற்றும் அலெக்சாந்திரியா (எகிப்து)
    • ஏதென்ஸ் (கிரேக்கம்)
    • ஹரப்பா மற்றும் மொகஞ்சதரோ (இந்தியா)
  • கிரேக்க மற்றும் ரோமானிய காலனியாதிக்க காலங்களில் நகர்ப்புற மையங்களின் அளவு மற்றும் எண்ணிக்கை அதிகரித்தது.
  • 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏஜியன் கடலுக்கு அருகில் பல நகரங்கள் காணப்பட்டன.
  • கிரேக்க காலனியாதிக்க காலங்களில் வர்த்தக விரிவாக்கம் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களை தோற்றுவித்தது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 3.
இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகளை விளக்குக.
விடை:
இடம் பெயர்வானது குடியேற்றம் மற்றும் குடியிறக்கம் ஆகிய இரு பகுதிகளையும் பாதிப்படையச் செய்கிறது.

அ) மக்கள் தொகை விளைவுகள் :
திருமணத்திற்கு பிறகு நடைபெறும் பெண்களின் இடம் பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதியில் பாலின விகிதம் குறையவும் திருமணமாகி செல்லுமிடங்களில் பாலின விகிதம் அதிகரிக்கவும் வழி வகுக்கிறது.

வேலைதேடிச் செல்லும் ஆண் தொழிலாளர்களின் இடம் பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதிகளில் சார்ந்து இருப்போரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகின்றது.

ஆ) சமூக விளைவுகள் : பல்வேறு பகுதிகளிலிருந்து நடைபெறும் இடம் பெயர்வு பன்முக சமுதாயம் உருவாக வழி வகுக்கின்றது. மக்கள் குறுகிய மனப்பான்மையை விட்டு தாராள மனப்பான்மைக்கு மாற ஏற்ற சூழலை உருவாக்குகிறது.

இ) பொருளாதார விளைவுகள் :
அதிக மக்கள் தொகை பகுதிகளிலிருந்து குறைந்த மக்கள் தொகை பகுதிகளை நோக்கி நகரும் இடம் பெயர்வு மக்கள் வள விகிதம் சமநிலையற்றதாகி விட காரணமாகிறது. சில வேளை இருபகுதிகளும் உகந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளாக மாறவும் செய்யலாம்.

அறிவுசார்ந்த மக்கள் வெளியேறுதல் (Brain Drain) நடைபெறுகிறது (பின்தங்கிய நாடுகள் → வளர்ந்த நாடுகள்) பூர்வீக பகுதிகள் பின்தங்குகின்றன. (அறிவுசார் வெளியேற்ற விளைவு)

ஈ) சுற்றுச்சூழல் விளைவுகள் :

  • நகரங்களில் மக்கள் நெரிசல் மற்றும் வளங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • காற்று, நீர், நிலம் மாசு அடைய வழி வகுக்கிறது.
  • குடி நீர் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், மோசமான வடிகால் அமைப்பு மற்றும் போதிய குடியிருப்பின்மை பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • குடிசை வாழ் பகுதிகள் உருவாகின்றன.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 3

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

9th Science Guide தாவர உலகம் – தாவர செயலியல் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் ________
அ) ஒளி சார்பசைவு
ஆ) புவி சார்பசைவு
இ) தொடு சார்பசைவு
ஈ) வேதி சார்பசைவு
விடை:
இ) தொடு சார்பசைவு

Question 2.
ஒளிச்சேர்கையின் போது நடைபெறுவது
அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.
ஆ) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்
இ) நீர் மற்றும் CO2 இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்
ஈ) CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
விடை:
அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 3.
நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது _____ எனப்படும்.
அ) நடுக்கமுறு வளைதல்
ஆ) ஒளிசார்பசைவு
இ) நீர்சார்பசைவு
ஈ) ஒளியுறு வளைதல்
விடை:
இ) நீர்சார்பசைவு

Question 4.
இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?
அ) வேதி சார்பசைவு
ஆ) நடுக்கமுறு வளைதல்
இ) ஒளி சார்பசைவு
ஈ) புவிஈர்ப்பு சார்பசைவு
விடை:
இ) ஒளி சார்பசைவு

Question 5.
தாவரத்தின் வேர் ____ ஆகும்?
I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு
II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு
III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு
அ) 1 மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) III மற்றும் IV
ஈ) 1 மற்றும் IV
விடை:
ஆ) II மற்றும் III

Question 6.
வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது _____ எனப்படும்.
அ) வெப்ப சார்பசைவு
ஆ) வெப்பமுறு வளைதல்
இ) வேதி சார்பசைவு
ஈ) நடுக்கமுறு வளைதல்
விடை:
ஆ) வெப்பமுறு வளைதல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 7.
இலையில் காணப்படும் பச்சையம் ____ க்கு தேவைப்படும்.
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) நீராவிப்போக்கு
இ) சார்பசைவு
ஈ) திசை சாரா தூண்டல் அசைவு
விடை:
அ) ஒளிச்சேர்க்கை

Question 8.
நீராவிப் போக்கு ____ ல் நடைபெறும்.
அ) பழம்
ஆ) விதை
இ) மலர்
ஈ) இலைத்துளை
விடை:
ஈ) இலைத்துளை

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
______ இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.
விடை:
ஒளிச்சார்பசைவு

Question 2.
_____ நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
விடை:
வேர்

Question 3.
தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி _____ எனப்படும்.
விடை:
பச்சையம்

Question 4.
சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ____ எனப்படும்.
விடை:
ஒளியுறு வளைதல்

Question 5.
புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ______ எனப்படும்.
விடை:
புவிசார்பசைவு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 6.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 வை உள்ளிழுத்துக் கொள்கின்றன ஆனால் அவைகளின் உயிர் வாழ்தலுக்கு ______ தேவைப்படும்.
விடை:
ஆக்ஸிஜன்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 30

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் ஒளிச்சார்பசைவு எனப்படும்.
விடை:
தவறு
வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் வேதிசார்பசைவு எனப்படும்.

Question 2.
தண்டுப் பகுதி நேர் ஒளிசார்பசைவு மற்றும் எதிர்புவி சார்பசைவு உடையது.
விடை:
சரி

Question 3.
வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் குறைந்துவிடும்.
விடை:
தவறு
வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளைகள் திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் அதிகரிக்கும்.

Question 4.
ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.
விடை:
தவறு
ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் O2, உற்பத்தியாகும்.

Question 5.
வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 6.
தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும்போது நீர் இழப்பு ஏற்படும்.
விடை:
தவறு
தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் திறந்திருக்கும்போது நீர் இழப்பு ஏற்படும்.

V. மிகச் சுருக்கமாக விடையளி.

Question 1.
திசைச் சாரா தூண்டல் அசைவு என்றால் என்ன?
விடை:
அசைவுகள் திசைத் தூண்டுதலின் ஒரு திசையை சார்ந்து அமையாதிருத்தல்.

Question 2.
பின்வரும் வாக்கியத்தைக் கொண்டு, தாவரப் பாகத்தின் பெயரிடவும்.
விடை:
அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
விடை:
வேர்

ஆ) ஒளி இருக்கும் திசையை நோக்கியும், ஆனால் புவிஈர்ப்பு விசையின் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
விடை:
தண்டு

Question 3.
ஒளிசார்பசைவு (phototroism) ஒளியுறு வளைதல் (photonasty) வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 69

Question 4.
ஒளிச்சேர்க்கையின் போது ஆற்றல் X ஆனது Y ஆற்றலாக மாறுகிறது
அ) X மற்றும் Y என்றால் என்ன?
ஆ) பசுந்தாவரங்கள் தற்சார்பு உணவு ஊட்டமுறையை கொண்டவை? ஏன்?
விடை:
அ) X-சூரிய ஒளி Y-வேதியாற்றல்
ஆ) தனக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொள்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 5.
நீராவிப் போக்கு – வரையறு.
விடை:
நீர் தாவரத்தில் மேல் பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையான தண்டுகளின் வழியாக நீராவியாக வெளியேற்றப்படும் நிகழ்ச்சி.

Question 6.
இலைத்துளையைச் சூழ்ந்துள்ள செல் எது?
விடை:
காப்பு செல்கள் இலைத்துளை மூடித் திறப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுக.
அ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள் ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்
விடை:
அ. திசைசார் அசைவு,
ஆ. திசை சாரா அசைவு

Question 2.
ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.
விடை:

  • எதிர் புவி சார்பசைவு ஆகும்.
  • எதிர்புவி சார்பசைவு உடைய வேர்களை உருவாக்குகின்றன.
  • இவை 180° கோணத்தில் செங்குத்தான சுவாச வேர்களைக் கொண்டவை.

Question 3.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 70
விடை:
6H2O, C6H12O6

Question 4.
பச்சையம் என்றால் என்ன?
விடை:
தாவரங்களில் காணப்படும் ஒளி ஆற்றலை உட்கிரகிக்கக் கூடிய நிறமிகள் – பச்சையம் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 5.
நேர் புவிசார்பசைவு கொண்டிருக்கும் தாவரப் பாகத்தை எழுதுக?
விடை:
வேர் :
வேர்கள் பூமியில் நிலையாக நிற்ப்பதற்காக புவியை நோக்கி வளர்கிறது. எனவே வேர்கள் நேர் புவிசார் பசைவை கொண்டுள்ளது.

Question 6.
தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரம் மற்றும் சூரியகாந்தி தாவரத்தில் ஏற்படும் அசைவுகள் இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 71

Question 7.
ஒரு வேளை ஒரு ரோஜா தாவரத்தை தொட்டியில் வளர்க்கும்போது அதைக் கொண்டு எவ்வாறு நீராவிப்போக்கு நிகழ்வினை நிரூபிப்பீர்கள்
விடை:

  • ஒரு தொட்டி ரோஜா செடியின் மண்பரப்பு மற்றும் கிளை பகுதியை ஒரு பாலித்தின் பையினால் மூடவும்.
  • இந்த அமைப்பை ஒரு மணிநேரம் சூரிய ஒளியில் வைக்கவும்.
  • ஒரு மணி நேரத்திற்குப்பின் பாலித்தின் பையில் நீர் துளிகள் ஒட்டியுள்ளது
  • இந்த நிகழ்வு இலைகள் மூலம் நீராவிப்போக்கு நடப்பதை நிரூபிக்கிறது.

Question 8.
இலைத்துளை மற்றும் பட்டைத்துளை நீராவிப்போக்கினை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 80

Question 9.
தாவர வேர் மற்றும் தண்டு எந்த நேரடித் தூண்டலுக்கு உட்படும்?
விடை:
வேர் – புவியீர்ப்பு விசை
தண்டு – சூரிய ஒளி

VII. விரிவாக விடையளி.

Question 1.
திசை சார்பசைவு மற்றும் திசை சாரா அசைவு வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 81 Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 82

Question 2.
நீராவிப்போக்கின் வகைகளை விவரி.
விடை:

  • இலைத்துளை நீராவிப்போக்கு : – பெருமளவு நீர், இலைத்துளைகள் வழியாக நடைபெறுகிறது. ஏறக்குறைய 90-95% நீர் இழப்பு ஏற்படுகின்றது.
  • கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு : – புறத்தோலின் மேற்புறம் உள்ள கியூடிக்கிள் அடுக்கின் வழியாக நீராவிப்போக்கு நடைபெறுகின்றது.
  • பட்டைத்துளை நீராவிப்போக்கு: இதில் பட்டைத்துளை வழியாக நீர் இழப்பு நடைபெறும். பட்டைத்துளை என்பவை பெரிய மரவகை தாவரங்களின் பட்டைகள், கிளைகள் மற்றும் பிற தாவர உறுப்புகளில் காணப்படும் சிறிய துளைகள் ஆகும்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
A, B மற்றும் C என்று மூன்று தாவரங்கள் உள்ளன. A தாவரத்தில் உள்ள மலரின் இதழ்கள் பகல் நேரத்தில்
பிரகாசமான ஒளியில் திறக்கும். ஆனால் ஒளி மங்கும்போது இருளில் மூடிக்கொள்ளும். தாவரம் B ல் உள்ள மலர்களின் இதழ்கள் இரவு நேரத்தில் திறந்த நிலையில் இருக்கும். ஆனால் பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் மூடிக்கொள்ளும். தாவரம் C யில் உள்ள இலைகளை விரல்களால் தொட்டால் அல்லது திடப் பொருள் ஏதும் அதன் மீது பட்டால் மூடிக்கொள்ளும்.
அ) தாவரம் A மற்றும் B யின் மலர்களில் நிகழும் நிகழ்வினைப் பெயரிடுக.
ஆ) தாவரம் A மற்றும் B யின் மலர்களின் பெயரினை எழுதுக.
இ) தாவரம் C யின் இலைகளில் ஏற்படும் நிகழ்வினைப் பெயரிடுக.
ஈ) தாவரம் C யின் இலைகளில் நிகழும் நடத்தை போன்று வேறு ஒருதாவரத்தின் பெயரினை எழுதுக.
விடை:
அ) தாவரம் A – ஒளியுறு வளைதல்
தாவரம் B – இருளுறு வளைதல் கொண்டுள்ளது
ஆ) A – டான்டலியன்
B – நிலவுமலர்
இ) C – நடுக்கமுறு அசைவு
ஈ) மைமூசா பியூடிகா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 2.
கற்பனை செய்து பாருங்கள் மாணவன் A ஒளிச்சேர்க்கைக்கு தேவையான சில முக்கிய காரணிகளைப் படித்தார். இவர் ஒரு தொட்டித் தாவரத்தினை இருட்டறையில் 24 மணிநேரம் வைத்தார். அடுத்த நாள் அதிகாலையில், அத்தாவரத்தின் ஒரு இலையின் நடுப்பகுதியை கருப்புக் காகிதம் கொண்டு மறைத்தார். பிறகு சில மணி நேரம் அத்தொட்டித் தாவரத்தினை சூரிய ஒளியில் வைத்தார். மற்றும் கருப்புக் காகிதம் கொண்டு மறைக்கப்பட்ட இலையை ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தினார்.
அ) இதனால் ஒளிச்சேர்க்கையில் என்ன அம்சம் நிரூபிக்கப்பட்டது?
ஆ) சோதனைக்கு முன் ஏன் தாவரம் இருட்டறையில் வைக்கப்பட்டது?
இ) இலைகளில் ஸ்டார்ச் உள்ளது என நீ எவ்வாறு நிரூபிப்பாய்?
ஈ) ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் என்ன?
விடை:
அ) ஒளிச்சேர்க்கைக்கு ‘சூரிய ஒளி’ அவசியம் என்பது நிரூபிக்கப்பட்டது.
ஆ) இலையில் உள்ள ஸ்டார்ச்சை நீக்க,
இ) அயோடின் கரைசலைக் கொண்டு ஸ்டார்ச் சோதனை செய்தல்.
ஈ) கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் சூரிய ஒளி, பச்சையம்.

9th Science Guide தாவர உலகம் – தாவர செயலியல் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
ஹீலியோடிராபிசம் ஒரு வகை _____ ஆகும்.
விடை:
ஒளி சார்பசைவு

Question 2.
முதல் நிலை தண்டு என்பது _____ ஆகும்.
விடை:
முளைக்குருத்து

Question 3.
தாவரங்கள் மண்ணிலிருந்து பிற பொருட்களை உறிஞ்சி எவ்வளவு ஜான் பாப்டிஸ்ட் வான் எடையானது அதிகரித்தது என்பதைக் கண்டறியும் சோதனையைச் செய்தவர் _____
விடை:
ஹெல்மான்ட்

Question 4.
தாவரம் CO2 ஐ மீண்டும் O2,ஆக மாற்றுவதாகக் கண்டறிந்த அறிஞர்
விடை:
பிரிஸ்டிலி

Question 5.
உலகில் முதன் முதலாக உருவாகிய தாவரங்கள் _______
விடை:
மாஸ்கள் மற்றும் லிவர்
வோர்ட்ஸ்

Question 6.
பூமியில் காணப்படும் மிக உயரமான புல் வகை _____
விடை:
மூங்கில்

Question 7.
25 – 200cm மழையளவு பொதுவாகக் காணப்படுவது ______
விடை:
காடுகள் வாழிடம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 8.
ஆகாய தாமரையின் பருத்த இலைக் காம்பு எதில் உதவுகிறது?
விடை:
மிதத்தல்

Question 9.
பட்டாணி தாவரத்தின் இரு சொல் பெயர் என்ன?
விடை:
பைசம் சாட்டைவம்

Question 10.
எந்த தாவரத்தில் விலங்கு போல் இயக்கம் காணப்படுகிறது?
விடை:
கிளாமைடோமோனாஸ்

Question 11.
டாராக்சம் அஃபிசினேல் தாவரத்தின் வட்டாரப் பெயர் ______
விடை:
சாதாரண டான்டிலியான்

Question 12.
ஒரு தாவரம் 1 லிட்டர் தண்ணீ ரை உறிஞ்சினால், அதில் எவ்வளவு நீராவிப் போக்கினால் வெளியேற்றப்படுகிறது?
விடை:
999 மில்லி லிட்டர்கள்

Question 13.
தாவரத்தில் ஒரு நாளில் சுவாசித்தல், ஒளிச்சேர்க்கை, நீராவிப் போக்கு நடைபெறும் நேரங்கள் மணி சராசரியாக முறையே ______
விடை:
24, 12, 10

Question 14.
______ தாவரத்தின் இலைகளை நாம் தொட்டவுடன் அவ்விலைகள் தொட்டால்
விடை:
சிணுங்கி (அ) மூடிக்கொள்கின்றன.
மைமோசா பியூடிகா

Question 15.
_______ தாவரத்தின் தண்டின் முனையானது சூரியன் திசையை நோக்கி நகர்கின்றன. இரவு நேரங்களில் எதிர்திசையில் நகர்கின்றன
விடை:
ஹீலியாந்தல்

Question 16.
_____ இலைகள் காற்றினால் நடனம் ஆடுவது போன்ற அழகியத் தோற்றத்தை உருவாக்குகின்றன
விடை:
இந்திய தந்தித் தாவரத்தின்

Question 17.
____ தமிழில் தொட்டால் சிணுங்கி என்று அழைக்கப்படுகிறது
விடை:
மைமோசா புடிகா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 18.
ஒளியின் தூண்டலுக்கு ஏற்ப ஒருதிசை சார்ந்த தாவர பாகத்தில் ஏற்படும் அசைவு ____ எனப்படும்.
விடை:
ஒளி சார்பசைவு

Question 19.
புவி ஈர்ப்புத் திசைக்கு ஏற்ப தாவரத்தின் உறுப்புகளில் ஏற்படும் அசைவு _____ எனப்படும்.
விடை:
புவி சார்பசைவு

Question 20.
தொடுதல் தூண்டலுக்கு ஏற்ப தாவர உறுப்புகளில் ஏற்படும் அசைவு _____ எனப்படும்
விடை:
தொடு உணர்வு சார்பசைவு

Question 21.
வேதிப்பொருளின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு அசைதல் _____ எனப்படும்.
விடை:
வேதி சார்பசைவு

Question 22.
______ தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும் மாலை மூடிய நிலையிலும் காணப்படும்.
விடை:
டாராக்சம் அஃபிசினே

Question 24.
ஒளிச்சேர்க்கையின் முடிவில் ______ ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது.
விடை:
குளுக்கோஸ்

Question 25.
ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் _____ வாயுவை உள்ளெடுத்து செல்கிறது.
விடை:
கார்பன்டை ஆக்ஸைடு

Question 26.
தாவரத்தின் சிறுகிளை கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவினை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது என்று கூறியவர் யார்?
விடை:
ப்ரீஸ்ட்லீ

Question 27.
பச்சையம் _____ மூலக்கூறு அமைப்பில் ஒத்திருக்கும் ஆனால் மைய மூலக்கூறு மட்டும் வேறுபட்டிருக்கும்.
விடை:
ஹீமோகுளோபின்

Question 28.
தாவரங்கள் தங்களின் வேர்களின் மூலம் நீரையும், இலைகளில் _____ வழியாக காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு எடுத்துக்கொள்கிறது,
விடை:
இலைத்துளைகள்

Question 29.
_____ என்ற மரகத பச்சை நிறமுடைய கடல் அட்டை ஒன்றை கண்டுபிடித்தனர்
விடை:
எலிசா குளோரோட்டிகா

Question 30.
இலைகளில் காணப்படும் சிறிய துளைகள் _____ எனப்படும்.
விடை:
இலைத்துளைகள்

Question 31.
தாவரப்பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையானத் தண்டுகளின் நீராவிப்போக்கு மூலமாக நீரானது ஆவியாக வெளியேற்றப்படுவது ____ எனப்படும்.
விடை:
நீராவிப்போக்கு

Question 32.
____ நீராவிப்போக்கின் போது பெருமளவு நீர், இலைத்துளை வழியாக நடைபெறுகிறது.
விடை:
இலைத்துளை

Question 33.
புறத்தோலின் மேற்புறம் உள்ள கியூட்டிக்கிள் அடுக்கின் வழியாக நடைபெறும் நீராவிப்போக்கு ____ எனப்படும்.
விடை:
கியூட்டிக்கிள் நீராவி

Question 34.
_____ நீர் இழப்பு பட்டைத்துளை வழியாக நடைபெறும்
விடை:
பட்டைத்துளை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 35.
இலைத்துளைகளில் உள்ள _____ செல்களில் பச்சையம் உள்ளது
விடை:
காப்பு

Question 36.
உலகின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பிற்கு _____ காரணமாகும்.
விடை:
உலக வெப்பமயமாதல்

Question 37.
_____ தாவரம் தனது வாழ்நாளில் 54 கேலன் நீரினை நீராவியாக வெளியேற்றுகிறது
விடை:
மக்காச்சோள

Question 38.
_____ முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
தாவரங்கள்

Question 39.
உயிரினங்கள் உணவிற்காக ஒன்றையொன்று சார்ந்திருப்பது ____ என அழைக்கப்படுகிறது.
விடை:
உணவுச் சங்கிலி

Question 40.
_____ தாவரங்கள் பிரமிடு வடிவங்களில் காணப்படுகிறது
விடை:
ஊசியிலைத்

Question 41.
____ பகுதியானது அதிகளவு பல்லுயிர்த் தன்மையுடைய நில அமேசான் அமைப்பை பெற்ற இடமாகும்.
விடை:
சாந்தோப்டெரின்

Question 42.
வெஸ்பா ஓரியன்டாலிஸ் மேல்தோல் பகுதியில் _____ என்ற மஞ்சள் நுண் ஒளி உணர் நிறமி காணப்படுகிறது.
விடை:
சாந்தோப்டெரின்

Question 43.
நீரின் தூண்டுதலுக்கு எற்ப தாவரப் பாகத்தில் ஏற்படும் அசைவு நீர் சார்பசைவு ____ எனப்படும்
விடை:
நீர் சார்பசைவு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 44.
ஒளியின் தூண்டலால் ஏற்படும் தாவரத்தின் திசை சாரா வளைதல் நிகழ்ச்சி ______ எனப்படும்
விடை:
ஒளியுறு வளைதல்

Question 45.
_____ தமிழில் ‘தொழு கன்னி’ என்றழைக்கப்படுகிறது
விடை:
டெஸ்மோடியம் கைரன்ஸ்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 78

III. கூற்று மற்றும் காரண வகை

பின்வருவனவற்றில் கூற்று A காரணம் R – என்னவென்று கண்டறி.

Question 1.
கூற்று A- ஒளிச்சேர்க்கை பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் நடைபெறவில்லை
R- மெக்ஸிகோ நாட்டின் பசிபிக் பெருங்கடலில் 2400 மீட்டர் ஆழமுள்ள பகுதியில் வெப்ப நீராற்றல் ஏற்படும் சிறு துளையின் அருகில் பசுங்கந்தக பாக்டீரியங்கள் வாழ்கின்றன
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:
b – A தவறானது ஆனால் R சரியானது.

Question 2.
கூற்று A- ஒளிச்சேர்க்கையினால் உருவாக்கப்படும் ஓசோன் பூமியைப் பாதுகாக்கிறது.
விளக்கம் R- பிற பல வாயுக்களோடு சேர்ந்து CFC ஓசோன் இழப்பிற்குக் காரணமாகிறது.
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:
C. A சரியானது R தவறானது

Question 3.
கூற்று A- நீராவிப் போக்கு ஒரு அவசியமான கேடு.
விளக்கம் R- நீராவிப் போக்கினால் அதிக நீர் உறிஞ்சப்பட்டு தொடர்ந்து கனிமங்களை அளிக்க இவை உதவுகிறது.
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:
d. A சரியானது R சரியானது

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
பூச்சியுண்ணும் தாவரம் என்றால் என்ன? எ.கா. தருக.
விடை:
சில தாவரங்கள் சதுப்பு நிலங்களில் வாழும். அவை நைட்ரஜன் சத்து குறைபாட்டை சரி செய்ய சிறு சிறு பூச்சிகளை (சில சமயம் தவளை போன்றவற்றை பிடித்து உணவாகக் கொள்கின்றன. இவை பூச்சியுண்ணும் தாவரம் என்று அழைக்கப்படுகிறது.
எ.கா : வீனஸ் பூச்சி பிடிப்பான் நெபந்தஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 2.
வேதிச்சார்பசைவு – என்றால் என்ன?
விடை:
வேதிப்பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புகள் வளர்தல் அல்லது அசைதல் வேதி நாட்டம் (அ) வேதிச் சார்பசைவு எனப்படுகிறது. (எ.கா) கருவுறுதல் நிகழ்ச்சியில் மகந்தரக்குழல் சூல் தண்டிலுள்ள சர்க்கரைப் பொருட்களை நோக்கி வளர்தல் ஆகும்.

Question 3.
உணவுச் சங்கிலி என்றால் என்ன?
விடை:
ஒரு உயிரினங்களின் தொடர் ஒன்றை ஒன்று உணவுக்கு சார்ந்து வாழ்வதற்கு ‘உணவுச்சங்கிலி’ என்று பெயர்.

Question 4.
ஊசியிலைக் காட்டு மரங்கள் (அ) கோனிஃபெரஸ் தாவரங்கள் முக்கியத்துவம் யாது?
விடை:
கோனிஃபெரஸ் தாவரங்கள் பிரமிடு வடிவத்தில் காணப்படுவதால், எல்லா இலைகளும் முழுமையாக சூரிய ஒளி பெறுவதால் ஒளிச்சேர்க்கையில் ஈடுபட ஏதுவாக உள்ளது.

Question 5.
தாவரங்களை ஏன் முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கிறோம்?
விடை:
தாவரங்கள் சூரிய ஆற்றலைக் கொண்டு தமக்கு வேண்டிய உணவை தயாரித்துக் கொள்கின்றன. மற்ற விலங்குகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்துள்ளதால், அவை முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுகின்றன.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
திசைசாரா அசைவுகள் விவரி.
விடை:
1. தாவரங்களில் காணப்படும் சில அசைவுகள் திசைசாரா அசைவுகள். தூண்டுதலுக்கேற்ப ஒரு திசையில் அவை நடைபெறுவதில்லை. இவை திசைசாரா (Nastic) அசைவுகளாகும்.
வகைகள்:
1. ஒளியுறு வளைதல்
சில தாவர மலர்கள் காலையில் திறந்தும், மாலையில் மூடியும் காணப்படுகிறது. (எ.கா) டான்டிலியான்

2. இருளுறு வளைதல்
சில தாவர மலர்கள் இரவில் திறந்தும், பகலில் மூடியும் காணப்படுகிறது. (எ.கா) நிலவுமலர் -(ஐபோமியா ஆல்பா )

3. நடுக்கமுறு வளைதல்
சில தாவரத்தின் இலைகள் தொட்டவுடன் மூடிக் கொள்ளுதல். (எ.கா) தொட்டாச் சிணுங்கி

4. வெப்பமுறு வளைதல்
தாவரத்தின் ஒரு பகுதி வெப்ப நிலைக்கு ஏற்ப தன் துலங்களை வெளிப்படுத்துவது. (எ.கா) டூலிப் மலர்கள்.

Question 5.
இலைத்துளையின் முக்கியப் பணிகள் யாவை?
விடை:

  • சுவாச மற்றும் ஒளிச்சேர்க்கைக்கான வாயு பரிமாற்றம் இலைத்துளை வழியாக நடைபெறுகிறது
  • ஆக்ஸிஜன் உள் எடுக்கப்பட்டு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்படும் – சுவாசமும்,
  • கார்பன்-டை-ஆக்ஸைடு உள் எடுக்கப்பட்டு, ஆக்ஸிஜன் வெளியேற்றப்படும் ஒளிச்சேர்க்கையும் இதன் வழியாகவே நடைபெறுகிறது.
  • உறிஞ்சப்பட்ட அதிகபட்ச நீரானது நீராவியாகத் தாவரங்களின் மேற்பகுதியான இலை தண்டுகள் மூலமாக வெளியேற்றப்படும். நீராவிப் போக்கு நிகழ்ச்சியும் இதன் வழியாகவே நடைபெறுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 3 நீரியல் சுழற்சி Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 3 நீரியல் சுழற்சி

8th Social Science Guide நீரியல் சுழற்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு ____________ என்று பெயர்.
அ) ஆற்றின் சுழற்சி
ஆ) நீரின் சுழற்சி
இ) பாறைச் சுழற்சி
ஈ) வாழ்க்கைச் சுழற்சி
விடை:
ஆ) நீரின் சுழற்சி

Question 2.
புவியில் உள்ள நன்னீரின் சதவிகிதம் _____________
அ) 71 %
ஆ) 97 %
இ) 2.8%
ஈ) 0.6 %
விடை:
இ) 2.8%

Question 3.
நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு ____________ என்று பெயர்.
அ) ஆவி சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) பதங்கமாதல்
ஈ) மழை
விடை:
ஈ) மழை

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

Question 4.
நீர் மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின் மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்குச் செல்லும் முறைக்கு ______________
அ) ஆவி சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
ஈ) நீர் வழிந்தோடல்
விடை:
ஈ) நீர் வழிந்தோடல்

Question 5.
நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.
அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
ஆ) நீர் சுருங்குதல்
இ) நீராவி சுருங்குதல்
ஈ) பொழிவு
விடை:
அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்

Question 6.
குடிப்பதற்கு உகந்த நீரை ____________ என்று அழைப்பர்.
அ) நிலத்தடி நீர்
ஆ) மேற்பரப்பு நீர்
இ) நன்னீர்
ஈ) ஆர்ட்டீ சியன் நீர்
விடை:
இ) நன்னீர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு __________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
ஈரப்பதம்

Question 2.
நீர்ச் சுழற்சியில் ____________ நிலைகள் உள்ளன.
விடை:
மூன்று

Question 3.
வளிமண்டலத்திலிருந்து புவியை நோக்கி விழும் எல்லா வகையான நீருக்கும் ____________ என்று பெயர்.
விடை:
மழைப்பொழிவு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

Question 4.
மழைத்துளியின் அளவு 0.5 மீ குறைவாக இருந்தால், அம்மழை பொழிவின் பெயர் ___________
விடை:
தூறல்

Question 5.
மூடுபனி __________ ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.
விடை:
அடர் மூடுபனி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி 1

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
நீராவியாதல் என்பது
i) நீராவி நீராக மாறும் செயலாக்கம்.
ii) நீர் நீராவியாக மாறும் செயலாக்கம்.
iii) நீர் 100°C வெப்பநிலையில் கொதிக்கிறது. ஆனால் 0°C வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.
iv) ஆவியாதல் மேகங்கள் உருவாக காரணமாக அமைகிறது.

அ) i, iv சரி
ஆ) ii சரி
இ) ii, iii சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
இ) ii, iii சரி

V. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
212°F வெப்பநிலையில் நீர் கொதிக்கிறது. ஆனால் 32°F வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.
விடை:
சரி

Question 2.
மூடுபனி எனப்படுவது காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகளைப் பெற்றிருப்பதில்லை.
விடை:
தவறு

Question 3.
அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் பொதுவாக இடைநீர் ஓட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது.
விடை:
சரி

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
நீர் கொள் பரப்பு பற்றி குறிப்பு வரைக
விடை:

  • நீர் கொள் பாறையானது நிலத்திற்கு அடியில் உள்ள நீர் புகக்கூடிய மேலும் நீரை தக்க வைத்துக் கொள்ள கூடிய ஒன்றாகும்.
  • இது பாறையின் பிளவுகளாக காணப்படுவதோடு, நிலத்தடி நீரைப் புதுப்பித்துக் கொள்ளவும் உதவுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

Question 2.
நீர் சுழற்சி – வரையறு
விடை:

  • நீரியல் சுழற்சி சூரிய உந்துதல் செயலாக்கத்தால் நடைபெறும் உலகளாவிய நிகழ்வாகும்.
  • நீர் கடலில் இருந்து ஆவியாதல் மூலம் வளி மண்டத்திற்குச் சென்று, பின் அங்கிருந்து மழைப் பொழிவாக நிலத்திற்கும், நிலத்திலிருந்து நீராக கடலுக்கும் சென்றடைவதே நீர் சுழற்சி ஆகும்.
  • புவித் தொடர்புடைய இயக்கங்களில் நீர்ச்சுழற்சி மிக முக்கியமானதாகும்.

Question 3.
பனி உருவாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?
விடை:

  • நீர்த்துளிகள் புவியின் மேற்பரப்பில் குளிர்ந்த பொருள்களின் மீது படும்பொழுது பனி உருவாகிறது.
  • பொருட்களின் வெப்பநிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக் குறைவாக இருக்கும் பொழுது பனி உருவாகிறது.

Question 4.
‘மேல் மட்ட நீர் வழிந்தோடல்’ குறிப்பு வரைக.
விடை:

  • மழைப்பொழிந்தவுடன் மழை நீரின் ஒரு பகுதி நீரோடையோடு கலந்து விடுகிறது.
  • இது மழைப்பொழிவு அதிகமாகவும் நீண்ட காலத்திற்கும் ஊடுருவலை விட அதிகமாக இருக்கும் பொழுதும் ஏற்படுகிறது. இந்நிலையில் அதிக நீரானது நிலப்பரப்பில் செரிவடைகிறது.
  • மேலும் நிலச்சரிவின் காரணமாக மற்றொரு இடத்திற்கு நகர்வதால் நிலநீர் ஓட்டம் எனவும் அறியப்படுகிறது.
  • இந்த நிலநீர் ஒட்டம் ஆறுகள், சிறு ஓடைகள் மற்றும் கடல்களில் இணைவதால் மேல்மட்ட நீர் வழிந்தோடல் என அழைக்கப்படுகிறது.

VII. காரணம் கூறுக

Question 1.
நீர் புகாத இடங்களில் நீரின் ஊடுருவல் குறைவாக உள்ளது
விடை:
நீர் புகாத இடங்களில் நீரின் ஊடுருவல் குறைவாகவே இருக்கும். ஏனெனில் நீர் புகாத இடங்களில் மண்ணடுக்கு மற்றும் நீர் புகா பாறை அடுக்குகள் வாயிலாக நீர் உட்கசிந்து கீழ் நோக்கி சரிவர செல்ல இயலாது. ஆதலால் நீரின் ஊடுருவலும் குறைவாகவே இருக்கும்.

Question 2.
புவியில் நன்னீர் குறைவாக உள்ளது
விடை:
புவியின் மேற்பரப்பில் பெரும்பாலான பகுதிகள் உவர்ப்பு நீராலான பேராழிகளும், கடல்களுமே உள்ளன. புவியின் மொத்த நீரில் 97.2 சதவீதம் உவர்ப்பு நீர் காணப்படுவதால் நன்னீரின் அளவு குறைவாகவே உள்ளது.

Question 3.
துருவப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் பனிப்பொழிவு பொதுவான நிகழ்வாக உள்ளது.
விடை:
துருவப்பகுதிகளிலும், உயரமான மலைப் பகுதிகளிலும் வெப்பம் குறைந்து காணப்படும். இப்பகுதிகளில் மேகத்திலுள்ள வெப்பம் குறைவதின் காரணமாக நீராவிகளும் அடிக்கடி நேரடியாக பனிக்கட்டியாக மாறுகிறது. மேலும் இவை பனியின் நுண் துகள்களைத் திரளாகக் கொண்டு பனிப்பொழிவாக பெய்கிறது.

VIII. விரிவான விடையளி

Question 1.
நீர்ச் சுழற்சியின் பல்வேறு படிநிலைகளைப் படத்துடன் விவரி
விடை:
நீர்மயியல் சுழற்சி என்பது இயற்கையாக மற்றும் தொடர்ச்சியான நீர்ச்சுழற்சியாகும். நீர்மயியல் சுழற்சி மூன்று முக்கிய நிலைகளில் நடைபெறுகிறது. அவை

  • ஆவியீர்ப்பு
  • பொழிவு
  • நீர்வழிந்தோடல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

ஆவியீர்ப்பு:
ஆவியீர்ப்பு என்பது புவியின் மேற்பரப்பு நீர் நிலைகளில் இருந்து ஆவியாதல் வழியாகவும் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் உட்கசிந்து வெளியிடுதல் மூலமாகவும் நிகழும் புவியின் மொத்த நீர் இழப்பாகும்.

விளை நிலப்பகுதிகளில் ஆவியாதல் மற்றும் நீர் உட்கசிந்து வெளியிடுதலைத் தனித்தனியாகக் கணிப்பது கடினம். எனவே இங்கு அனைத்து நிகழ்வுகளும் ஆவியீர்ப்பு என அழைக்கப்படுகிறது.

பொழிவு:

  • மழைப்பொழிவு என்பது மேகங்களிலிருந்து பல்வேறு வடிவங்களில் நீராக புவியின் மேற்பரப்பை வந்தடையும் நிகழ்வு ஆகும்.
  • பனிப்படிகங்கள் மற்றும் மேகத்துளிகள் ஒன்று கூடிப் பெரியதாகும் பொழுது அவை கனமாவதால் வளிமண்டலத்தின் வழியாக மழையாக வீழ்கிறது.
  • பொழிவின் வகைகளை மழை, கல்மழை, உறைபனி மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பனி என வகைப்படுத்தலாம்.

நீர் வழிந்தோடல் :

  • நீர் வழிந்தோடல் என்பது ஓடும் நீர், ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் செல்வதாகும். நீர் வழிந்தோடலால் மேற்பரப்பு நீரும், நிலத்தடி நீரும் புதுப்பிக்கப்படுகின்றன.
  • நீர் ஊடுருவல் மூ லம் நிலத்தடியில் ஊடுருவி நீர்கொள் பாறை அடுக்குகளில் சேமித்து நிலத்தடி நீரைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது.
  • நீர் வழிந்தோடலின் அளவானது மழை வீழ்ச்சியின் அளவு, மண்ணின் நீர் புகும் தன்மை, தாவரமூட்டம் மற்றும் நிலச்சரிவைச் சார்ந்து உள்ளது.
  • நீர் வழிந்தோடல் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    1. மேல்மட்ட மழைநீர் வழிந்தோடல்
    2. அடிப்பரப்பு நீர் வழிந்தோடல்
    3. அடி மட்ட நீர் ஒட்டம்

Question 2.
தாவரங்களின் நீர் உட்கசிந்து வெளியேறுதலுக்கும், ஆவியாதலுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறுக
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி 2
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி 3

Question 3.
மழைப்பொழிவின் பல வகைகளை விவரி
விடை:

  • மழைப்பொழிவு என்பது மேகங்களிலிருந்து பல்வேறு வடிவங்களில் நீராக புவியின் மேற்பரப்பை வந்தடையும் நிகழ்வு ஆகும்.
  • பொழிவின் வடிவம் ஓரிடத்தில் நிலவும் வானிலை அல்லது காலநிலையைச் சார்ந்தே அமைகிறது.
  • பொழிவின் வகைகளை மழை, கல்மழை, உறைபனி மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பனி என வகைப்படுத்தலாம்.

மழை:

  • பொழிவின் பொதுவான வடிவம் மழைப்பொழிவு. இம்மழைப்பொழிவு நீர்த்துளிகளின் வடிவத்தில் உள்ளதால் மழை எனப்படுகிறது.
  • நீர்த்துளிகள் 0.5 மி.மீ விட்டத்திற்கு அதிகமாக இருந்தால் மழைப்பொழிவு எனவும் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருப்பதால் அதை தூறல் எனவும் அழைக்கப்படுகிறது.

கல்மழை:
நீர்த்துளிகளும் 5 மி.மீ விட்டத்திற்கு மேல் உள்ள பனித்துளிகளும் கலந்து காணப்படும் பொழிவிற்கு கல்மழை என்று பெயர்.

உறைபனி மழை:
மழைத்துளிகள், சில நேரங்களில் புவிப்பரப்பிற்கு அருகாமையில் குளிர்ந்த காற்று வழியாக விழும்பொழுது உறைவதில்லை. மாறாக குளிர்ந்த புவிப்பரப்பைத் தொடும் பொழுது அம்மழைத்துளிகள் உறைந்து விடுகின்றன. இவையே உறைபனி எனப்படுகிறது. இம் மழைத்துளியின் விட்டத்தின் அளவு 0.5 மி.மீ விட அதிகமாக இருக்கும்.

ஆலங்கட்டி மழை:
மழைப் பொழிவானது 5 மி.மீ விட்டத்தை விட பெரிய உருண்டையான பனிக்கட்டிகளைக் கொண்டிருந்தால் ஆலங்கட்டி மழை என்று பெயர். இது கார் திரள் மேகங்களிலிருந்து இடியுடன் கூடிய மழையாக உருவாகிறது.

பனி:
மேகத்திலுள்ள வெப்பம் குறைவதின் காரணமாக நீராவி அடிக்கடி நேரடியாக பனிக்கட்டிகளாக மாற்றப்படுகிறது. இது துகள் போன்று பனியின் நுண்துகள்களைத் திரளாகக் கொண்டு காணப்படுகிறது. இந்தப் பனித்திரள்துகள்கள் பொழிவதைப் பனிப்பொழிவு என அழைக்கிறோம்.

Question 4.
நீர் வழிந்தோடல் மற்றும் அதன் வகைகளை விவரி.
விடை:

  • நீர் வழிந்தோடல் என்பது ஒடும் நீர், ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் செல்வதாகும்.
  • நீர் வழிந்தோடலால் மேற்பரப்பு நீரும், நிலத்தடி நீரும் புதுப்பிக்கப்படுகின்றன. நீர் ஊடுருவல் மூ லம் நிலத்தடியில் ஊடுருவி நீர் கொள் பாறை அடுக்குகளில் சேமித்து நிலத்தடி நீரைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது.
  • நீர் வழிந்தோடலின் அளவானது மழைவீழ்ச்சியின் அளவு, மண்ணின் நீர் புகும் தன்மை, தாவரமூட்டம் மற்றம் நிலச்சரிவைச் சார்ந்து உள்ளது.
  • மழைப்பொழிவின் கால இடைவெளி மற்றும் நீர் வழிந்தோடல் உருவாக்கத்தின் அடிப்படையில் நீர் வழிந்தோடல் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. i) மேல்மட்ட மழைநீர் வழிந்தோடல் ii) அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் iii) அடி மட்ட நீர் ஒட்டம்

மேல்மட்ட மழைநீர் வழிந்தோடல்:
மழைப் பொழிந்தவுடன் மழை நீரின் ஒரு பகுதி நீரோடையோடு கலந்து விடுகிறது.

இது மழைப்பொழிவு அதிகமாகவும் நீண்ட காலத்திற்கும் ஊடுருவலை விட அதிகமாக இருக்கும் பொழுதும் ஏற்படுகிறது. இந்நிலையில் அதிக நீரானது நிலப்பரப்பில் செரிவடைவதோடு அது நிலச்சரிவின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதால் நிலநீர் ஓட்டம் எனவும் அறியப்படுகிறது.

இந்த நிலநீர் ஓட்டம் ஆறுகள், சிறு ஓடைகள் மற்றும் கடல்களில் இணைவதால் இது மேல்மட்ட நீர் வழிந்தோடல் என அழைக்கப்படுகிறது.

அடிபரப்பு நீர் வழிந்தோடல்:

  • நீரானது அடிமண் அடுக்கினுள் நுழைந்து நிலத்தடி நீரில் கலக்காமல் பக்கவாட்டு திசையில் நகர்ந்து ஓடைகள், ஆறுகள் மற்றும் கடலுடன் கலப்பதால் இதற்கு அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் என்று பெயர்.
  • மேலும் இது இடைநீர் ஓட்டம் எனவும் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது.

அடிமட்ட நீர் ஓட்டம்:

  • செறிவடைந்த நிலத்தடி நீர் மண்டலத்திலிருந்து நீர் பாதை வழியாக நிலத்தடி நீராக ஓடுவதே அடிமட்ட நீர் ஓட்டமாகும்.
  • நிலத்தடி நீர் மட்டத்தை விட நீர் பாதையின் உயரம் குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே இது காணப்படும்.

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
படத்தில் உள்ள விடுபட்ட நீரின் சுழற்சிகளைக் கண்டுபிடித்து அதற்குரிய இடத்தில் எழுதவும்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி 4

8th Social Science Guide நீரியல் சுழற்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
புவியில் உள்ள நன்னீரில் நிலத்தடி நீரின் அளவு
அ) 0.6%
ஆ) 0.1%
இ) 0.04%
ஈ) 2.2%
விடை:
அ) 0.6%

Question 2.
____________ ஆவியாதலின் எதிர்வினைச் செயலாகும்
அ) நீர் உட்கசிதல்
ஆ) நீர் சுருங்குதல்
இ) நீர் ஊடுருவல்
ஈ) நீர் வழிந்தோடல்
விடை:
ஆ) நீர் சுருங்குதல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

Question 3.
பொருட்களின் வெப்பநிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக் குறைவாக இருக்கும் பொழுது ____________ உருவாகிறது
அ) உறைபனி
ஆ) மூடுபனி
இ) அடர்மூடுபனி
ஈ) பனி
விடை:
ஈ) பனி

Question 4.
மழைத்துளியின் விட்டமானது 0.5 மி.மீ அளவினை விட… அதிகமாக இருப்பின், அதனை ____________ மழை என்கிறோம்
அ) உறை பனி
ஆ) கல் மழை
இ) ஆலங்கட்டி மழை
ஈ) பனி மழை
விடை:
அ) உறை பனி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஈரப்பதம் குறையும் பொழுது ஆவியாதல் விகிதம் ___________
விடை:
அதிகரிக்கும்

Question 2.
_____________ மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கிடைக்கச் செய்கிறது.
விடை:
நீர் ஊடுருவல்

Question 3.
துருவப்பகுதிகளிலும், உயர்வான மலைப்பகுதிகளிலும் __________ காணப்படுகிறது.
விடை:
பனிப் பொழிவு

Question 4.
மழைநீரில் ____________ சதவீதம் மட்டுமே கடல் மற்றும் பேராழிகளில் கலக்கிறது.
விடை:
35

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி 5

IV. சரியா கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
மழைப்பொழிவும், அதன் பல வகை வடிவ விபரங்களும்.
i) பொழிவு வானிலை அல்லது காலநிலையைச் சார்ந்திருக்கும்
ii) பனிக்கட்டிகளும், நீர்த்துளிகளும் சேர்ந்து ஆலங்கட்டி மழை உருவாகிறது
iii) மழைத்தூறல் கார்திரள் மேகங்களிலிருந்து உருவாகிறது
iv) ஆலங்கட்டி மழை பெரிய உருண்டையான பனிக்கட்டிகளை கொண்டிருக்கும்

அ) i, iii சரி
ஆ) ii சரி
இ) i, iv சரி
ஈ) ii, iv சரி
விடை:
இ) i, iv சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

V. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
மொத்த நன்னீரில் 0.01 சதவீதம் ஏரிகளாக உள்ளன.
விடை:
சரி

Question 2.
காற்றின் வேகம் அதிகரிக்கும் பொழுது ஆவியாதல் விகிதம் குறையும்.
விடை:
தவறு

Question 3.
நீரின் ஊடுருவல் மண்ணின் மேற்பரப்பின் அருகில் நடைபெறுகிறது.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
நீரியல் சுழற்சியின் முக்கிய கூறுகள் யாவை?
விடை:

  • நீரியல் சுழற்சியில் ஆறு முக்கிய கூறுகள் காணப்படுகின்றன.
  • ஆவியீர்ப்பு, திரவமாய் சுருங்குதல், பொழிவு, நீர் ஊடுருவல், உட்கசிதல், நீர் வழிந்தோடல் போன்றவை அதன் கூறுகளாகும்.

Question 2.
நீர் ஊடுருவல் என்றால் என்ன?
விடை:

  • புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர்ப் புகுவதை நீர் ஊடுருவல் என்பர்.
  • நீர் ஊடுருவல் மூலம் மண் தற்காலிமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கிடைக்க செய்கிறது.

Question 3.
நீர் சுருங்குதல் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • நீராவி, நீராக மாறும் செயல்முறையை நீர் சுருங்குதல் என்று அழைப்பர்.
  • வளி மண்டலத்தில் வெப்பக்காற்று மேலே எழுந்து, குளிர்வடைந்து நீராவியைத் தக்க வைத்து கொள்ளும் திறனை இழக்கும் பொழுது, நீர் சுருங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது.

Question 4.
கல் மழை எவ்வாறு உருவாகிறது?
விடை:

  • சில நேரங்களில் வளி மண்டல வெப்பநிலை 0°C க்கும் குறைவாக இருக்கும் அடுக்குகளில் மழைத்துளி விழும்பொழுது நீர் உறைநிலைக்குச் சென்று விடுகிறது.
  • அது புவியை நோக்கி வரும் பொழுது பனிக்கட்டிகளாக மாறுகிறது.
  • ஆதலால் பனிக்கட்டிகளும், நீர்த்துளிகளும் இணைந்து புவியின் மீது கல்மழையாக பொழிகிறது.

VII. காரணம் கூறுக

Question 1.
நீர் சுருங்குதல் ஆவியாதலின் எதிர்வினைச் செயலாகும்
விடை:
நீர் சுருங்குதலில் நீராவி நீராக மாறுகிறது. ஆனால் ஆவியாதலில் நீர் நீராவியாக மாறுகிறது. எனவே நீர் சுருங்குதல் ஆவியாதலின் எதிர்வினைச் செயலாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

Question 2.
நீர் சுருங்குவதால் மேகங்கள் உருவாகி மழை பொழிகிறது
விடை:
வளி மண்டலத்தில் வெப்பக்காற்று மேலே எழுந்து, குளிர்வடைந்து நீராவியைத் தக்க வைத்து கொள்ளும் திறனை இழக்கும் பொழுது, நீர் சுருங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது. மிகுதியான நீராவி நீர் சுருங்குதலால் மேகத்துளிகளாக மாறி மேகங்களாகவும் உருவாகிறது. இம்மேகங்களே மழைப் பொழிவை உருவாக்குகிறது.

VIII. விரிவான விடையளி

Question 1.
நீர் ஊடுருவல் மற்றும் நீர் உட்கசிதலை விவரி?
விடை:
நீர் ஊடுருவல்:
புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர் புகுவதற்கு நீர் ஊடுருவல் என்று பெயர்.

நீர் ஊடுருவல் மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் கிடைக்கச் செய்கிறது.

மழை நீர் நிலத்திலிருந்து புவிக்கு அடியில் உள்ள பாறைகளின் அடுக்குகளைச் சென்றடைகிறது. இவ்வாறு செல்லும் நீரானது நீரூற்று மற்றும் மலைகளின் தாழ்வான பகுதிகளின் வழியாக புவியின் மேற்பரப்பை வந்தடைகிறது.

ஊடுருவலின் விகிதத்தை மண்ணின் இயற்பியல் தன்மை,மேற்பரப்பில் உள்ள தாவரங்கள், மண்ணின் ஈரத்தன்மை, வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவின் அளவு ஆகியவைத் தீர்மானிக்கின்றன.

நீர் உட்கசிதல் மற்றும் நீர் ஊடுருவல் ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

நீர் உட்கசிதல்:
நீர் உட்கசிவு என்பது மண்ணடுக்கு மற்றும் பாறை அடுக்குகளின் வாயிலாக ஊடுருவிய நீர் கீழ்நோக்கி நிலத்திற்கு அடியில் செல்வதாகும்.

நீர் உட்கசிவு என்பது ஊடுருவிய நீர் மண்ணின் அடுக்கு வழியாக பாறை இடுக்குகளுக்குச் சென்று நிலத்தடி நீராகிறது. பொதுவாக – நீர் உட்கசிதல் என்பது செறிவூட்டப்பட்ட பகுதியிலிருந்து செறிவூட்டப்படாத பகுதிக்குச் செல்லும் நீரோட்டம் ஆகும்.

IX. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி 6

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

8th Social Science Guide வானிலை மற்றும் காலநிலை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புவியின் வளிமண்டலம் ___________ நைட்ரஜன் மற்றும் ___________ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.
அ) 78% மற்றும் 21%
ஆ) 22% மற்றும் 1%
இ) 21% மற்றும் 0.97%
ஈ) 10% மற்றும் 20%
விடை:
அ) 78% மற்றும் 21%

Question 2.
__________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
அ) புவி
ஆ) வளிமண்டலம்
இ) காலநிலை
ஈ) சூரியன்
விடை:
இ) காலநிலை

Question 3.
புவி பெறும் ஆற்றல் ____________
அ) நீரோட்டம்
ஆ) மின்காந்த அலைகள்
இ) அலைகள்
ஈ) வெப்பம்
விடை:
ஈ) வெப்பம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Question 4.
கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.
அ) சமவெப்பக்கோடு
ஆ) சம சூரிய வெளிச்சக் கோடு
இ) சம காற்றழுத்தக் கோடு
ஈ) சம மழையளவுக் கோடு
விடை:
ஈ) சம மழையளவுக் கோடு

Question 5.
______________ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.
அ) காற்றுமானி
ஆ) அழுத்த மானி
இ) ஈரநிலை மானி
ஈ) வெப்ப மானி
விடை:
இ) ஈரநிலை மானி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
__________ என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.
விடை:
வானிலை

Question 2.
வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு ___________
விடை:
வளியியல்

Question 3.
புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் ______________
விடை:
கிரீன்லாந்து மலைத் தொடர் (மரணப் பள்ளத்தாக்கு)

Question 4.
காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் ___________
விடை:
ஒப்பு ஈரப்பதம்

Question 5.
அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _________ மற்றும் __________ ஆகியவை அளக்கப்படுகின்றன.
விடை:
காற்றின் வேகம், காற்றின் திசை

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Question 6.
சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு __________
விடை:
சம வெப்பக் கோடு

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்.
விடை:
சரி

Question 2.
வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்.
விடை:
தவறு

Question 3.
சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர்.
விடை:
சா

Question 4.
ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்தமானி .
விடை:
தவறு

V. சுருக்கமாக விடையளி

Question 1.
காலநிலை – வரையறு.
விடை:

  • காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும்
  • இது வளி மண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டு கூறுவதாகும்.

Question 2.
“வெயிற் காய்வு” என்றால் என்ன?
விடை:
ஒரு இடத்தில் கிடைக்கும் சூரியக் கதிர் வீச்சின் அளவு ‘வெயிற் காய்வு’ எனப்படும்.

Question 3.
“வளிமண்டலக் காற்றழுத்தம்” என்றால் என்ன?
விடை:
புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள காற்றின் எடையே வளிமண்டலக் காற்றழுத்தம் எனப்படும்.

Question 4.
சிறு குறிப்பு வரைக: கோள் காற்று / நிரந்தரக் காற்று
விடை:

  • ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர்.
  •  எ.கா. வியாபாரக்காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Question 5.
சம அளவுக் கோடுகள் – “ஐசோலைன்ஸ்’ என்றால் என்ன?
விடை:

  • நில வரைபடங்களில் வானிலைக் கூறுகளின் பரவலைச் சம அளவுக்கோட்டு வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகிறது.
  • சம அளவுக்கோடு என்பது சம அளவுள்ள இடங்களை இணைப்பதாகும்.
  • இக்கோடுகள் வானிலைக் கூறுகளின் அடிப்படையைக் கொண்டு அளவுக்கோடுகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

VI. வேறுபடுத்துக

Question 1.
காலநிலை மற்றும் வானிலை காலநிலை
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 2

Question 2.
முழுமையான ஈரப்பதம் மற்றும் ஒப்பு ஈரப்பதம்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 3

Question 3.
கோள் காற்று மற்றும் பருவகாலக் காற்றுகள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 4

VII. காரணம் கூறுக

Question 1.
காலநிலையும் வானிலையும் வெவ்வேறு இடங்களில் மாறுபடுகின்றன.
விடை:
புவி கோள வடிவமானது. ஆதலால் புவியின் மேற்பரப்பில் சூரியக்கதிர்கள் ஒரே சீராக விழுவதில்லை . புவியின் துருவப் பகுதிகள் சூரியனுடைய சாய்வான கதிர்களை பெறுகின்றன. அதனால் அங்கு சூரிய வெளிச்சம் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதால் அங்கு மிகக் கடும் குளிர் நிலவுகிறது. பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள்செங்குத்தாக விழுவதால் அங்கு காலநிலையானது மிகவும் வெப்பமுடையதாகவும், குளிர்காலமே இல்லாததாகவும் உள்ளது. எனவே காலநிலையும், வானிலையும் வெவ்வேறு இடங்களில் மாறுபடுகின்றன.

Question 2.
உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.
விடை:
ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கு 1°C வெப்பநிலை குறையும், உயரே செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் குறைவதால் தட்ப வெப்பநிலையும் குறையும். எனவே உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.

Question 3.
மலை ஏறுபவர்கள் உயர்ந்த சிகரங்களுக்குச் செல்லும்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.
விடை:
மிக உயரமான இடங்களில் காற்றில் ஆக்ஸிஜன் அளவும் காற்றின் அழுத்தமும் குறைவதால், மலையேறுபவர்கள் ஆக்ஸிஜனை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர். ஏனெனில் அழுத்தம் அதிகமான இடங்களிலிருந்து அழுத்தம் குறைவான இடங்களுக்குச் செல்லும் பொழுது மூச்சுத்திணறல் ஏற்படும்.

VIII. விரிவான விடையளி

Question 1.
வெப்பநிலை எவ்வாறு அளவிடப்படுகிறது?
விடை:

  • வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட கன அளவு காற்றில் குறிப்பிட்ட நேரத்தில் அளவிடப்படுகிறது.
  • இது செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் அளவுகளால் அளவிடப்படுவதாகும்.
  • வானிலை ஆய்வாளர்கள் வெப்பநிலையை அளக்க வெப்பமானி, ஸ்டீவன்சன் திரை வெப்பமானி மற்றும் குறைந்த பட்ச அதிகபட்ச வெப்பமானி மூலமும் கணக்கிடுகிறார்கள்.
  • சூரிய கதிர்களிலிருந்து புவி பெறுகின்ற வெப்ப ஆற்றலானது வெளியேறுகின்ற புவி கதிர்வீசலால் இழக்கப்படுகிறது.
  • வளிமண்டலம் புவி கதிர்வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் அதிக வெப்பமடைகிறது.
  • ஆகையால் நாள்தோறும் அதிகபட்ச வெப்பநிலை பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் பதிவாகிறது.
  • குறைந்த பட்ச வெப்பநிலை அதிகாலை 4.00 மணி முதல் சூரிய உதயத்திற்கு முன் பதிவாகிறது.

Question 2.
காற்றையும், அதன் வகைகளைப் பற்றியும் விவரி.
விடை:

  • கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு காற்று என்று பெயர். செங்குத்தாக நகரும் வாயுவிற்கு காற்றோட்டம் என்று பெயர்.
  • காற்று எப்பொழுதும் உயர் அழுத்தப்பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்த பகுதியை நோக்கி வீசும்.
  • காற்றின் அமைப்புகள் மூன்று பெரும் வகைகளாகப்
  • பிரிக்கப்பட்டுள்ளன. அவை
    1. கோள் காற்றுகள் (அ) நிரந்தர காற்றுகள்
    2. பருவக்காலக் காற்றுகள் மற்றும்
    3. தலக் காற்றுகள் (அ) பிரதேசக் காற்றுகள்

1. கோள் காற்றுகள்:
ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் (அ) நிலையான காற்று என்று அழைப்பர். எ.கா. வியாபாரக்காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று

2. பருவக்காலக் காற்றுகள்:
பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும். இக்காற்றுகள் கோடைக்காலத்தில் கடலிலிருந்து நிலத்தை நோக்கியும், குளிர்காலத்தில் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்.

3. தலக் காற்றுகள் (அ) பிரதேசக் காற்றுகள்:
ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும். எ.கா. நிலக்காற்று, கடல் காற்று

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Question 3.
வானிலைக் கூறுகளையும் அதை அளக்க உதவும் கருவிகளையும் பட்டியலிடுக. உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் ஏதேனும் 3 ஆலோசனைகளை அளிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 5
உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் ஏதேனும் 3 ஆலோசனைகளை அளிக்கவும்.

  • புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுதல். (எ.கா. நிலக்கரி போன்ற எரிபொருட்கள்)
  • மரங்களை பாதுகாத்தல் மற்றும் வளர்த்தல்
  • மக்கிப்போகாத நெகிழி போன்ற பொருட்களின் கண்மூடித்தமான உபயோகத்தை தவிர்த்தல்

X. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

Question 1.
மழைமானி மற்றும் காற்று திசை காட்டி கருவிகளின் மாதிரிகளை உருவாக்குக.

Question 2.
சிறிய அளவிலான மாதிரி வானிலை மையத்தை உன் பள்ளியில் உருவாக்கு.

Question 3.
தினமும் வானிலை அறிக்கையை படித்து அல்லது தொலைக்காட்சியின் மூலம் அறிந்து கீழே உள்ள கட்டங்களில் நிரப்பு.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 6
தகவல் ஆதாரம்:

8th Social Science Guide வானிலை மற்றும் காலநிலை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
காலநிலையின் அறிவியல் பிரிவு ____________
அ) வளியியல்
ஆ) காலநிலையியல்
இ) உயிரியியல்
ஈ) பறவையியல்
விடை:
ஆ) காலநிலையியல்

Question 2.
கிளைமோ என்றால் தமிழில் ______________ என்று பொருள்
அ) சாய்வுக்கோணம்
ஆ) வெப்பம்
இ) கதிர்வீச்சு
ஈ) கடத்தல்
விடை:
அ) சாய்வுக்கோணம்

Question 3.
உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டவர் __________
அ) அல்-பலாஹி
ஆ) அலாவுதீன்
இ) அல்புக்கக்
ஈ) ஆலன்
விடை:
அ) அல்-பலாஹி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
புவியில் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ள இடம் _____________
விடை:
சோவியத் வோஸ்டக்

Question 2.
உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச காற்றழுத்தம் பதிவாகியுள்ள இடம் ____________
விடை:
அகாட், ரஷ்யா, டிசம்பர் 31, 1968

Question 3.
உலகில் இதுவரை பதிவான மிக குறைந்த பட்ச காற்றழுத்தம் பதிவாகியுள்ள இடம் பசுபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவிற்கு அருகிலுள்ள __________ என்ற கடல் பகுதியில் உருவான டையூனின் கண் பகுதியாகும்.
விடை:
குவாம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Question 4.
கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு __________ ஆகும்
விடை:
1013.25 மில்லியன்

Question 5.
பூமியில் உள்ள எல்லா பகுதிகளிலும் காற்றழுத்தத்தின் அளவு __________ ஆகும்
விடை:
1.03 கிலோ / ச.செ.மீ

Question 6.
சம அளவுள்ள வெப்ப நிலைமை இணைக்கும் கற்பனைக் கோடு ____________
விடை:
சம வெப்பக் கோடு

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 7

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
ஐசோபார் – சம மழையளவுக்கோடு
விடை:
தவறு

Question 2.
ஐசோஹைட்ஸ் – சம மழையளவுக்கோடு
விடை:
சரி

Question 3.
ஐசோதெர்ம் – சமவெப்பக்கோடு
விடை:
சரி

Question 4.
ஐசோகெல் – சமசூரிய வெளிச்சக்கோடு
விடை:
சரி

Question 5.
ஐசோக்ரைம் – சம காற்றழுத்த மாறுபாட்டுக்கோடு
விடை:
தவறு

V. குறுகிய விடையளி

Question 1.
வெப்ப குறைவு வீதம் வரையறு.
விடை:
வெப்பநிலை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் வேறுபடுகிறது. வெப்பம் மாறும் மண்டலத்தில், வெப்பநிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு 6.5°C என்ற அளவில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது. இதனை வெப்ப குறைவு வீதம் என்றழைப்பர்.

Question 2.
புவியின் வெப்பமண்டல பகுதிகள் யாவை?
விடை:

  • வெப்பமண்டலம்
  • மித வெப்பமண்டலம்
  • குளிர் மண்டலம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Question 3.
சுய ஈரப்பதம் என்றால் என்ன?
விடை:
ஒரு குறிப்பிட்ட எடைக்கொண்ட காற்றிலுள்ள நீராவியின் எடை ஈரப்பதம் எனப்படும். பொதுவாக கிராம் நீராவி /கிலோகிராம் காற்று எனக் குறித்துக் காட்டப்படுகிறது.

VI. வேறுபடுத்துக

Question 1.
காற்று திசைக்காட்டி மற்றும் அனிமாமீட்டர்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 8

Question 2.
வெப்பமண்டலம் மற்றும் மித வெப்பமண்டலம்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 9

VII. காரணம் கூறுக

Question 1.
குளிர் மண்டலம் துருவ மண்டலம் என்றழைக்கப்படுகிறது.
விடை:

  • உறைப்பனி மண்டலம் ஆர்ட்டிக் வட்டத்திற்கும், வட துருவப்பகுதிக்கு இடையேயும், அண்டார்டிக் வட்டத்திற்கும் தென்துருவப்பகுதிக்கு இடையேயும் அமைந்துள்ளன.
  • இங்கு ஆண்டு முழுவதும் குறைந்த வெப்பத்தைப் பெறுவதால் இப்பிரதேசம் பனியால் சூழப்பட்டுள்ளது.
  • இப்பகுதி துருவ மண்டலம் என்றழைக்கப்படுகிறது.

VIII. விரிவான விடையளி

Question 1.
குறைந்த மற்றும் அதிகபட்ச ஈரப்பதத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்.
விடை:
குறைந்த ஈரப்பதம்:

  • கண் எரிச்சல், தோல் சம்பந்தமான வியாதிகள், சளித்தொல்லைகள், தொண்டை எரிச்சல் ஆகியவை குளிர்காலத்தில் குறைந்த ஈரப்பதத்தினால் மனிதர்களுக்கு வரக்கூடிய வியாதிகள் ஆகும்.
  • ப்ளூ காய்ச்சல் அனைவருக்கும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
    அதிக ஈரப்பதம்: ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

IX. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 10
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 11