Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 18 திசுக்களின் அமைப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 18 திசுக்களின் அமைப்பு

9th Science Guide திசுக்களின் அமைப்பு Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
உயிருள்ள மெல்லிய சுவருடைய பல கோண வடிவ செல்களைக் கொண்டுள்ள திசு.
அ) பாரன்கைமா
ஆ) கோலன்கைமா
இ) ஸ்கிளிரன்கைமா
ஈ) மேலே கூறிய எதுவும் இல்லை
விடை:
அ) பாரன்கைமா

Question 2.
நார்கள் கொண்டுள்ளது
அ) பாரன்கைமா
ஆ) ஸ்கிளிரன்கைமா
இ) கோலன்கைமா
ஈ) ஏதும் இல்லை
விடை:
ஆ) ஸ்கிளிரன்கைமா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 3.
துணை செல்கள் ____ வுடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.
அ) சல்லடைக் கூறுகள்
ஆ) பாத்திரக் கூறுகள்
இ) ட்ரைக்கோம்கள்
ஈ) துணை செல்கள்
விடை:
அ) சல்லடைக் கூறுகள்

Question 4.
கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?
அ) பாரன்கைமா
ஆ) கோலன்கைமா
இ) சைலம்
ஈ) ஸ்கீளிரன்கைமா
விடை:
இ) சைலம்

Question 5.
ஏரேன்கைமா எதில் கண்டறியப்படுகிறது?
அ) தொற்று தாவரம்
ஆ) நீர்வாழ் தாவரம்
இ) சதுப்பு நில தாவரம்
ஈ) வறண்ட தாவரம்
விடை:
ஆ) நீர்வாழ் தாவரம்

Question 6.
மிருதுவான தசை காணப்படுவது
அ) கர்ப்பப்பை
ஆ) தமனி
இ) சிரை
ஈ) அவை அனைத்திலும்
விடை:
ஈ) அவை அனைத்திலும்

Question 7.
நரம்பு செல்கள் பெற்றிறாதது.
அ) ஆக்சான்
ஆ) நரம்பு நுனி
இ) தசைநாண்கள்
ஈ) டென்ட்ரைட்
விடை:
இ) தசை நாண்கள்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 1

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
உள்ளுறுப்புகளுக்கு _____ திசுக்கள் உறுதியை அளிக்கின்றன.
விடை:
கோலன்கைமா

Question 2.
பாரன்கைமா, குளோரன்கைமா கோலன்கைமா, ஸ்கிளிரன்கைமா எளிய ஆகியவை _____ வகை திசுக்களாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 3.
_____ மற்றும் ____ ஆகியவை கூட்டுத்திசுக்களாகும்.
விடை:
சைலம், புளோயம்

Question 4.
குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் _____ பகுதியில் உள்ளன.
விடை:
சுவாச குழாய்

Question 5.
சிறுகுடலின் புறணி ____ ஆல் ஆனது.
விடை:
தூண் எபிதீலியம்

Question 6.
மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுறும் உண்டு ஒத்திசைவான குரோமோசோம் போது, ____ குரோமோசோம்கள்
விடை:
ஒன்றின் பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும்.

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
எபிதீலிய திசு விலங்கு உடலின் பாதுகாப்பு திசுவாகும்.
விடை:
சரி

Question 2.
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை சிற்றிடை இணைப்பு திசுவின் இருவகையாகும்.
விடை:
தவறு
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை ஆதார இணைப்புத் திசுவின் இரு வகையாகும்.

Question 3.
பாரன்கைமா ஒரு எளிய திசு
விடை:
சரி

Question 4.
ஃபுளோயம் டிரக்கிடுகளால் ஆனது.
ஃபுளோயம் சல்லடைக் குழாயினால் ஆனது.
விடை:
தவறு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 5.
கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுகின்றன.
சைலத்தில் நாளங்கள் காணப்படுகின்றன
விடை:
தவறு

V. சுருக்கமாக விடையளி

Question 1.
இடை ஆக்குத்திசுக்கள் என்பவை யாவை? எவ்வாறு அவை மற்ற ஆக்குத் திசுக்களிலிருந்து வேறுபடுகின்றன.
விடை:
விளக்கம் :

  • முதல் நிலை ஆக்குத் திசுவின் ஒரு பகுதி பிரிந்து நிலையான திசுப்பகுதிகளுக்கிடையே இவை காணப்படுகின்றன.
  • இடையில் காணப்படுவதால் இடை ஆக்குத்திசு எனப்படுகிறது. இருப்பிடம் :
    1.  இலையடி – (எ.கா) பைனஸ் தாவரம்
    2.  கணுவிடைப் பகுதியின் அடி (எ.கா) புற்கள்

Question 2.
கூட்டுத்திசு என்றால் என்ன? பல்வேறு வகையான கூட்டுதிசுவின் பெயர்களை எழுது.
விடை:
வரையறை :
ஒன்றுக்கும் மேற்பட்ட பலவகை செல்கள் – ஒன்றாக தொகுப்பாக ஒரு பணியைச் செய்கின்றன.
வகைகள் : இருவகைப்படும்
1) சைலம் – (நீரைக் கடத்தும் திசு)
2) புளோயம் – (உணவைக் கடத்தும் திசு)

1) சைலம் கூறுகள் : –

  1. சைலம் டிரக்கீடுகள்
  2. சைலம் நார்கள்
  3. சைலம் குழாய்கள்
  4. சைலம் பாரன்கைமா

2) புளோயம் கூறுகள் :

  1. சல்லடைக்குழாய்
  2. துணைசெல்கள்
  3. புளோயம் பாரன்கைமா
  4. புளோயம் நார்கள்

Question 3.
அதிக அளவு நமது உடலில் காணப்படும் தசை திசுக்களை குறிப்பிடுக. அவற்றின் செயல்பாட்டினை வகுத்துரை.
விடை:
1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை),
2. மென்தசை (வரியற்ற தசை)

1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை)

  • நம் உடலில் அதிகம் காணப்படுகிறது.
  • இவை எலும்புடன் ஒட்டி உடலின் அசைவிற்குக் காரணமாக உள்ளதால் எலும்புச் சட்டகத்தசை எனப்படுகிறது.
  • இவை நம் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால். இவை இயக்க (தன்னிச்சை) தசைகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • இவைகளில் இருண்ட மற்றும் இருளற்ற பட்டைகள் மாறி மாறி காணப்படுவதால் இவை வரித்தசை-கள் எனப்படுகிறது.
    எ.கா. கை, கால்களில் காணப்படும் மூட்டுத் தசைகள்

2. மென்தசை (வரியற்ற தசை)

  • இத்தசைகள் கதிர் வடிவில் உள்ளது. மையப்பகுதி அகன்றும் முனைப் பகுதி சுருங்கியும் உள்ளது.
  • இத்தசைகளில் கோடுகள் மற்றும் வரிகள் கிடையாது.
  • இவை நம் இச்சைகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை. எனவே இவை இயங்கு தசைகள் என அழைக்கப்படுகிறது.
    எ.கா. இரத்த நாளம், இரப்பை, சுரப்பிகள், சிறுநீர்ப்பை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 4.
எலும்பு இணைப்புத்திசு என்றால் என்ன? எப்படி அவை நமது உடல் செயல்பட உதவுகின்றன?
விடை:
எலும்புத் திசு :
இது திடமான விறைத்த மற்றும் உறுதியான இளக்கமற்ற எலும்பு சட்டக இணைப்புத் திசு.

செயல்பாடுகள் :

  • உடலுக்கு வடிவத்தையும், கட்டமைப்பையும் கொடுக்கிறது.
  • மென்மையான திசுக்களுக்கும், உள் உறுப்புகளுக்கும் ஆதாரத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது.

Question 5.
பாலினப் பெருக்கத்தின் போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?
விடை:

  • பாலினப் பெருக்கம் செய்யும் உயிரினங்களில் இருமய நிலை டிப்ளாய்டு) செல்கள் காணப்படுகிறது.
  • கேமீட்டுகள் உருவாக்கம் மைட்டாசிஸ் முறையில் நடைபெற்றால், குரோமோசோம் எண்ணிக்கை இரட்டிப்படையும் – அப்போது அந்த உயிரினம் அசாதாரணமானதாகக் காணப்பட வாய்ப்புள்ளது.

குன்றல்பகுப்பு (மியாசிஸ்) முக்கியத்துவம் :

  • குன்றல் பகுப்பின் (மியாசிஸ்) போது குரோமோசோம் எண் சரி பாதியாக குறைக்கப்படுகிறது. (n)
  • கருவுறும் போது, ஆண் மற்றும் பெண் கேமீட்டுகள் இணைந்து டிப்ளாய்டு (2n) (இருமைய) நிலையைப் பெறுகிறது.
  • இவ்வாறு குரோமோசோம் எண்ணிக்கையை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Question 6.
மைட்டாசிஸின் எந்த நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையப்பகுதியில் அமைகின்றன?
எப்படி?
விடை:

  • மெட்டா நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையத்தில் உள்ளது.
  • குரோமோசோமில் உள்ள சென்டிரோமியர்கள் ஸ்பிண்டில் இழைகளால் இணைக்கப்பட்டிருப்பதால், குரோமோசோம் செல்லின் மையத்தில் உள்ளது.

VI. விரிவாக விடையளி

Question 1.
நிலைத்த திசுக்கள் யாவை? வெவ்வேறு வகையான எளிய நிலைத்த திசுக்களை விவரிக்க.
விடை:
வரையறை :

நிலைத்த திசுக்கள், பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ (ஆ) தற்காலிகமாகவோ இழந்த திசுக்கள்.
இவை இருவகைப்படும்
1. எளியத்திசு,
2. கூட்டுத்திசு

1. எளியத்திசு
ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆன திசு, இவை மூன்று வகைப்படும்.
அ) பாரன்கைமா,
ஆ) கோலன்கைமா,
இ) ஸ்கிளீரன்கைமா

அ) பாரன்கைமா
சம அளவுடைய, மெல்லிய சுவருடைய முட்டை
(அ) பலகோண அமைப்புடைய செல் இடைவெளிகளுடன் கூடிய திசுவாகும்.
(i) ஏரன்கைமா,
(ii) குளோரன்கைமா
(i) ஏரன்கைமா
நீர்வாழ் தாவரங்களில் பாரன்கைமா காற்றிடைப் பகுதிகளைக் கொண்டுள்ளதால் – ஏரன்கைமா எனப்படும்.

(ii) குளோரன்கைமா
பாரன்கைமா திசு மீது ஒளிபடும் போது – பசுங்கணிகங்களை உற்பத்தி செய்து – குளோரன்கைமாவாக மாறும்.

பணி :

  1. நீரை, உணவைச் சேமித்தல்
  2. உறிஞ்சுதல், சுரத்தல்
  3. மிதத்தல் etc,.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 65

ஆ) கோலன்கைமா

  • நீண்ட சதுர அல்லது சிறுத்த முனையுடைய உயிருள்ள செல்கள்.
  • சீரற்ற தடித்த லிக்னின் இல்லாத செல்சுவர் கொண்டது.

பணி : புறத்தோலுக்கடியில் காணப்படுகிறது. தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது.
இ) ஸ்கிளீரன்கைமா

  • லிக்னினால் ஆன தடித்த செல்சுவரை கொண்டது.
  • முதிர்ந்த நிலையில் புரோட்டோபிளாசம் அற்று காணப்படுகிறது. இருவகைப்படும்.
    1. நார்கள்,
    2. ஸ்கீளிரைடுகள்

1) நார்கள்

  • நீண்ட ஸ்கிளீரன்கைமா செல்களால் ஆனது. செல்சுவர் லிக்னின் பொருளால் ஆனது.
  • 1-3 mm சில தாவரங்களில் 20 மிமீ முதல் 550 மிமீ வரை நீளமுடையவை.
  • கன்னாபினஸ் சட்டைவா (சணல்)
  • கார்கோரஸ் காப்சுலரிஸ் (ஜீட் வகை) சணல்
  • லின்னம் யுசிட்டாஸ்ஸிமம் (ஆளி)
    பணி – வலுதரும் திசு – எ.கா. சைலம் நார்கள்

2) ஸ்கிளீரைடுகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 66

  • இது அகன்று ஒற்றையாகவோ (அ) தொகுப்பாகக் காணப்படும்.
  • இதன் செல்சுவர் லிக்னின் என்னும் பொருளால் ஆனது
  • குழிகள் நிலைத்த தோற்றத்துடன் காணப்படுகின்றது.

பணி – பழங்கள் மற்றும் விதைகளின்
உறைகளில் காணப்படுகிறது.
வலுதரும் திசுவாகும். எ.கா. – பட்டாணி விதையுறை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 2.
சைலக்கூறுகளைப் பற்றி எழுதுக.
விடை:
சைலம் : நீரைக் கடத்தும் திசு – தாவர உடலுக்கு இயந்திர உதவியை அளிக்கிறது.
கூறுகள்
இவற்றின் கூறுகள் :
1). சைலம் டிரக்கீடுகள்,
2). சைலம் வெஸல்கள் (குழாய்கள்),
3). சைலம் நார்கள்,
4). சைலம் பாரன்கைமா

சைலம் டிரக்கீடுகள்

  • நீண்ட அல்லது குழாய் போன்றவை.
  • தடித்த மற்றும் லிக்னின் சுவரைக் கொண்ட இறந்த செல்களாகும்.
  • செல்களின் முனைப்பகுதி – மழுங்கியது. சிறுத்த (அ) உளி போன்ற அமைப்புடையது.
  • பலவகை இரண்டாம் நிலைத் தடிப்புகளைக் கொண்டுள்ளது.

சைலம் நார்கள்

  • நீண்ட செல்கள் – முனைகள் கூரானவை.
  • நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.

சைலக்குழாய்கள்

  • நீண்ட குழாய் வடிவம் – அகன்றது நீள் அச்சுக்கு இணையானது
  • செல்சுவர் – லிக்னின் காணப்படும் – அகன்ற மையக் குழிகளைக் கொண்டுள்ளது – இறந்தவை
  • நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.

சைலம் – பாரன்கைமா

  • செல்கள் மெல்லிய சுவரை உடையவை – உயிருள்ளவை
  • பணி – கடத்துதலில் உதவுவதோடு, ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளைச் சேகரிக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 70

Question 3.
மைட்டாஸிஸ் மற்றும் மியாசிஸ்க்கு இடையேயுள்ள வேறுபாட்டினை பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 78

VII. மதிப்பு அடிப்படை கேள்விகள்

Question 1.
இரத்தத்திலிருந்து அனைத்து இரத்தத்தட்டுகளையும் நீக்கும் போது என்ன விளைவு ஏற்படும்?
விடை:

  • இரத்த தட்டுகளின் முக்கிய பணி காயம்பட்ட இடத்தில் இரத்த உறைவு ஏற்படுத்தி இரத்த இழப்பை தடுத்தல்.
  • இரத்தத்திலிருந்து இரத்தத் தட்டுகளை நீக்கிவிட்டால் காயம்பட்ட இடத்தில் இரத்த உறைவு நிகழாது. மாறாக, இரத்த இழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடும்.

Question 2.
இரத்தத்தில் எவை உண்மையான செல்கள் இல்லை? ஏன்?
விடை:

  • இரத்தத்தில் RBC, WBC, இரத்த தட்டுகள் காணப்பட்டாலும், RBC, மற்றும் இரத்தத்தட்டுகள் இவற்றில் உட்கருக்கள் இல்லை எனவே இவை உண்மையான செல்களாகக் கருதப்படவில்லை.
  • WBC மட்டுமே இரத்தத்தில் காணப்படும் உண்மையான செல்கள் ஆகும்.

9th Science Guide திசுக்களின் அமைப்பு Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண்வினாக்கள்.

Question 1.
லிக்னின் காணப்படும் எளிய வலிமை தரும் திசு _______
விடை:
கோலன்கைமா

Question 2.
ஒரு தாவரத்தில் பொதுவாகக் காணப்படும் எளியத்திசு ______
விடை:
பாரன்கைமா

Question 3.
திசுக்களைப் பற்றி அறிகிற அறிவியல் பிரிவு _____
விடை:
ஹிஸ்டாலஜி (Histology)

Question 4.
தென்னையின் மட்டையில் காணப்படும் திசு _____
விடை:
ஸ்கிளிரன்கைமா

Question 5.
எந்தத்திசு தாவரத்தின் நீள் வளர்ச்சிக்காக காரணமாக உள்ளது?
விடை:
நுனி ஆக்குத்திசு

Question 6.
____ முதிர்ந்த பின்பும் தன் உட்கருவை இழக்காமலுள்ளது?
விடை:
துணை செல்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 7.
புளோயம் திசுவில் காணப்படும் உயிரற்ற கூறு ______
விடை:
புளோயம் நார்கள்

Question 8.
வயலிலுள்ள ஒரு கரும்பு, தாவரத்தின் நுனிப்பகுதி நீக்கப்பட்டாலும் அது தொடர்ந்து நீளமாக வளர்வதற்குக் காரணம் ______
விடை:
இடை ஆக்கு திசு

Question 9.
லிக்னினை தனது இரண்டாம் செல்சுவரில் கொண்டுள்ள திசு _______
விடை:
ஸ்கிளிரன்கைமா

Question 10.
ஜீட் என்பது ______
விடை:
இரண்டாம் பாஸ்ட் நார்கள்

Question 11.
இரத்தம் உறைதலுக்கு காரணமான வைட்டமின் _______
விடை:
வைட்டமின் K

Question 12.
தசை நாரின் சைட்டோபிளாசம் _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
சார்கோஃபிளாசம்

Question 13.
எந்த விலங்கில் கொழுப்புத்திசு அதிக அளவில் காணப்படுகிறது?
விடை:
திமிங்கலம்

Question 14.
இரத்தம் மற்றும் எலும்பு _____ திசுவிலிருந்து தோன்றுகிறது?
விடை:
மீசோடெர்ம்

Question 15.
நமது உடலில் 60% கரிம பொருட்கள் காணப்படும் உறுப்பு ______
விடை:
எலும்பு

Question 16.
இரத்தக் குழாய்களின் உள் அடுக்கு ______ திசுவினால் ஆனது?
விடை:
எபிதீலிய திசு

Question 17.
இரத்தத்திற்கும் உடல் திரவங்களுக்கு மிடையே இணைப்பாக செயல்படுவது _______
விடை:
நிணநீர்

Question 18.
சுருங்கும் புரதம் காணப்படுவது _______
விடை:
எலும்பின் மஜ்ஜை

Question 19.
சுருங்கும் புரதம் காணப்படுவது ______
விடை:
தசை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 20.
எலும்பு மேட்ரிக்ஸில் அதிகம் காணப்படுவது ______
விடை:
கால்சியம் மற்றும்
பாஸ்பரஸ்

Question 21.
இரு நியூரான்களை இணைப்பது ______
விடை:
சினாப்ஸ்

Question 22.
தண்டின் குறுக்களவு அதிகரிக்கக் காரணம் ______
விடை:
பக்க ஆக்குத் திசு

Question 23.
இரத்தக் குழாய்களின் உள்பூச்சாகக் காணப்படுவது ____ ஆகும்
விடை:
தட்டு எபிதீலியம்

Question 24.
சிறுகுடலில் உள் பூச்சாகக் காணப்படும் திசு _____ ஆகும்.
விடை:
எளிய தூண் எபிதீலியத்திசு

Question 25.
சிறுநீரக நுண்குழலின் உள்பூச்சாகக் காணப்படுவது _____ ஆகும்
விடை:
கனசதுர எபிதீலியத்திசு

Question 26.
பெலோபியன் நுண்குழலின் உள்பூச்சாகக் காணப்படுவது ______
விடை:
குறுயிழை எபிதீலியத்திசு

Question 27.
மனித உடலில் அதிகபட்சமாகக் காணப்படும் திசு _____ ஆகும்.
விடை:
இணைப்புத் திசு

Question 28.
குரோமோசோம்கள் பூங்கொத்து போன்ற அமைப்பு நிலையைப் பெற்று லெப்டோடீன் காணப்படும் நிலை _____ ஆகும்.
விடை:
லொயோலா

Question 29.
கயாஸ்மா உருவாக்கம் மற்றம் குறுக்கெதிர் மாற்றம் நடைபெறும் புரோநிலையின் துணை நிலை _____ ஆகும்.
விடை:
பேக்கிடீன்

Question 30.
வெள்ளை நாரால் ஆன தசையையும் எலும்பையும் இணைக்கும் திசுவிற்கு _____ என்று பெயர்.
விடை:
தசை நாண்

Question 31.
சல்லடை செல்களில் _____ காணப்படுவதில்லை.
விடை:
துணை செல்கள்

Question 32.
உடலின் வெப்பநிலையை சீராக வைப்பது _____ திசுவாகும்
விடை:
கொழுப்புத்திசு

Question 33.
மைட்டாசிஸை முதன் முதலில் கண்டறிந்தவர் _______
விடை:
ஃப்ளம்மிங்

Question 34.
ஆளி தாவரவியல் பெயர் ______ ஆகும்
விடை:
லின்னம் யுசிட்டாஸ்ஸிமம்
(ஆளி)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 35.
தோலை தசையுடன் இணைக்கும் திசு ______
விடை:
சிற்றடைவிழையம்

Question 36.
சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுவது _____
விடை:
கொழுப்புத்திசு

Question 37.
செல்பிரிதலின் உட்கரு பிரிதலுக்கு _____ என்று பெயர்
விடை:
கேரியோகைனசிஸ்

Question 38.
வெள்ளையணுக்களில் சைட்டோபிளாசத்தில் துகள்கள் அற்றவை _____ எனப்படும்
விடை:
ஏகிராணுலோசைட்ஸ்

Question 39.
இலை உருவாக்கத்திற்குக் காரணமான ஆக்குதிசு ____ எனப்படும்
விடை:
தட்டு ஆக்குத்திசு

Question 40.
உருளைக் கிழங்கின் பாரன்கைமாவின் வெற்றிடத்தில் காணப்படும் பொருள் _____ எனப்படும்.
விடை:
ஸ்டார்ச்

Question 41.
சைலம் குழாய்கள் காணப்படும் இம்னோஸ்பெர்ம் ____ ஆகும்
விடை:
நீட்டம்

Question 42.
டெரிடோபைட்டாவிலும் ஜிம்னோஸ்பெர்ம்களிலும் மட்டும் காணப்படும் புளோயம் கூறு ____ ஆகும்
விடை:
சல்லடை செல்

Question 43.
கொலாஜன் நார்கள், மீள்நார்கள் மற்றும் ஃபைரோப்ளாஸ்ட் செல்களாலான முறையான இணைப்புத்திசு ____ ஆகும்
விடை:
சிற்றிடைவிழையம்

Question 44.
மனித உடலின் மிகவும் நீளமான செல் _____ ஆகும்.
விடை:
நியூரான்

Question 45.
_____ செல் சுவரில் துளைகள் காணப்படுவதில்லை
விடை:
துணை செல்கள்

Question 46.
ஆப்பிளில் பாரன்கைமா ______ சேமித்து வைத்துள்ளது
விடை:
சர்க்கரையை

Question 47.
_____ தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது
விடை:
கோலன்கைமா

Question 48.
_____ ஒரு கடத்தும் திசுவாகும்
விடை:
சைலம்

Question 49.
ஃபுளோயத்தின் கடத்தும் கூறுகள் ______ கூறுகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
சல்லடைக்குழாய்

Question 50.
_____ கழிவுப் பொருள்களை நீக்கும் பணியில் ஈடுபடுகின்றன
விடை:
எபிதீலியத் திசுக்கள்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 60

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 61

III. கூற்று மற்றும் காரண வகை

உறுதிபடுத்துதல் : A காரணம் : R
விவரிப்பு :
பின்வரும் கேள்விகளில் ஒரு கூற்று (A) தரப்பட்டுள்ளது. அதற்குரிய காரணம் (R) அதன் கீழ் தரப்பட்டுள்ளது. இவற்றிற்குக் கீழாகத் தரப்பட்டுள்ளவற்றிலிருந்து கேள்விக்கான சரியான விடையைத் தெரிவு செய்க.
a) A மற்றும் R சரி. R – A ஐச் சரியாக விளக்குகிறது.
b) A மற்றும் R சரி. R – A ஐச் சரியாக விளக்கவில்லை.
c) A சரி R தவறானது
d) A மற்றும் R இரண்டும் தவறானது

Question 1.
உறுதிபடுத்துதல் (A) : காது மடல்கள் மென்மையான வளையும் தன்மையுடையவை
காரணம் (R) : காது மடல்களில் ஹையலின் எனப்படும் குருத்தெலும்புத்திசு காணப்படுகிறது.
விடை:
c) A சரி R தவறானது

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 2.
உறுதிபடுத்துதல் (A): ஆதார இணைப்புத் திசுவில் அதிக அளவு உயிரற்ற செல்லிடைவெளி செல்லிற்கு புறம்பான மேட்ரிக்ஸ் காணப்படுகிறது.
காரணம் (R) : செல்லிடை வெளிகளில் புரத நார்கள் காணப்படுகிறது.
விடை:
b) A மற்றும் R சரி. R-A ஐச் சரியாக விளக்கவில்லை.

Question 3.
உறுதிபடுத்துதல் (A) : இரத்த வெள்ளையணுக்கள் தெளிவான உட்கரு கொண்டவை. அமீபா போன்று நகரும் தன்மை கொண்டவை. காரணம் (R) : இதில் கிராணுலோசைட்ஸ் ஏகிராணுலோசைட்ஸ் எனும் இருவகைகள் உள்ளன.
விடை:
b) A மற்றும் R சரி. R-A ஐச் சரியாக விளக்கவில்லை.

IV. பின்வரும் வரைபடம் என்னவென்று காண் அதன் பாகங்களைக் கண்டறி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 75

Question 2.
3 வகையான தசைத்திசுக்கள் யாவை? அவற்றின் படம் வரைக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 79

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
கோலன்கைமா திசு – சைலம் மற்றும் புளோயத்தில் காணப்படுவது இல்லை. ஏன்?.
விடை:

  • கோலன்கைமா உயிருள்ள வலு தரும் திசு.
  • ஆனால் சைலத்திலும், புளோயத்திலும் நிறைய உயிரற்ற செல்களே காணப்படுகின்றன.
  • ஸ்கிளிரன்கைமா நார்களில் லிக்னின் படிந்து காணப்படுவதால் அது வலு தருகிறது.
  • எனவே சைலம், புளோயம் திசுக்களில் கோலன்கைமா திசுக்கள் காணப்படுவதில்லை.

Question 2.
கோலன்கைமா மற்றம் ஸ்கிளீரன்கைமா வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 80

Question 3.
கூட்டு எபிதீலியம் (அ) அடுக்கு எபிதீலியம் குறிப்பு வரைக.
விடை:
அமைப்பு :

  • பல அடுக்குகளாக செல்கள் காணப்படுகிறது.
  • எனவே பல் அடுக்கு எபிதீலியம் என்று அழைக்கப்படுகிறது.
  • சுரத்தல் மற்றும் உறிஞ்சுதலில் குறைந்த அளவே பங்கு வகிக்கின்றன.
  • இது அடித்தளத் திசுக்களுக்கு இயந்திர மற்றும் இரசாயன அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும்.

Question 4.
நமது உடலின் நீர் பாதுகாப்பு உறையாகச் செயல்படுவது எது?
விடை:
நமது தோலில் அமைந்துள்ள எபிதீலியத் திசுக்களே, நீர் பாதுகாப்பு உறையாகச் செயல்பட்டு நீர் உட்புகாமல் உடலை பாதுகாக்கிறது.

Question 5.
மைக்ரோகிலியா என்றால் என்ன?
விடை:

  • வேறுபாடடைந்த நரம்பு செல்கள் மைக்ரோகிலியா எனப்படும்.
  • இவை விழுங்கு தன்மை கொண்டவை.
  • இவை ஆஸ்ட்ரோகிலியா, ஆலிகோடென்ரோகிலியா என்று அழைக்கப்படுகின்றன.

Question 6.
ஏமைட்டாசிஸ் செல் பகுப்பு நடைபெறும் உயிரினங்களின் பெயர் தருக.
விடை:

  • ஏமைட்டாசிஸ் ஒரு பாலிலா இனப்பெருக்க முறையாகும்.
  • இது பாக்டீரியா, புரோட்டோசோவா, ஈஸ்ட் (மொட்டிடுதல்), நோயுற்ற செல்கள், வயதான செல்கள், பாலூட்டிகளில் குருத்தெலும்பு செல்கள் மற்றும் கரு உறைகளில் நடைபெறுகிறது.

Question 7.
கொழுப்புத் திசுவின் பணிகள் யாவை?
விடை:

  • உடல் உறுப்புகளை அதனதன் இடத்தில் நிலை நிறுத்துகிறது.
  • சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியில் இருந்து பாதுகாக்கும் அதிர்ச்சி உறிஞ்சியாக உள்ளது.
  • பாதுகாப்பு உறையாகச் செயல்பட்டு உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்கிறது.

Question 8.
சைலம் வெஸல்கள் மற்றும் டிரக்கீடுகளில் காணப்படும் தடிப்புகள் யாவை?
விடை:

  • ஆம், சைலம் வெஸல்கள் மற்றும் டிரக்கீடுகளில் இரண்டாம் செல்சுவரில் தடிப்புகள் காணப்படுகின்றன.
  • அவையாவன, ஏணி வடிவ, வலைப்பின்னல் தடிப்பு, ஏணி வடிவ சுருள் தடிப்பு, குழி தடிப்பு மற்றும் வளையத் தடிப்பு ஆகும்.

Question 9.
மைட்டாசிஸ் அனாநிலை, மியாசிஸ் அனாநிலை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 86

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
சல்லடை செல் மற்றும் சல்லடை குழாய் வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 87
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 88

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 2.
பல்வேறு வகை எபிதீலியத் திசுக்களின் அட்டவணை தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 89
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 90

Question 3.
மைட்டாசிஸ் – மியாசிஸ் முக்கியத்துவம் தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 93

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 1 பாறை மற்றும் மண் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 1 பாறை மற்றும் மண்

8th Social Science Guide பாறை மற்றும் மண் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது?
அ) வளிமண்டலம்
ஆ) உயிர்க்கோளம்
இ) நிலக்கோளம்
ஈ) நீர்க்கோளம்
விடை:
இ) நிலக்கோளம்

Question 2.
உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்
அ) ஆகஸ்ட் 15)
ஆ) ஜனவரி 12
இ) அக்டோபர் 15
ஈ) டிசம்பர் 5
விடை:
ஈ) டிசம்பர் 5

Question 3.
உயிரினப் படிமங்கள் ______________ பாறைகளில் காணப்படுகின்றன.
அ) படிவுப் பாறைகள்
ஆ) தீப்பாறைகள்
இ) உருமாறியப் பாறைகள்
ஈ) அடியாழப் பாறைகள்
விடை:
அ) படிவுப் பாறைகள்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 4.
மண்ணின் மேல் நிலை அடுக்கு
அ) கரிம மண் அடுக்கு
ஆ) அடி மண் அடுக்கு
இ)அடி மண்
ஈ) அடித்தள பாறை
விடை:
அ) கரிம மண் அடுக்கு

Question 5.
பருத்தி வளர ஏற்ற மண்
அ) செம்மண்
ஆ) கரிசல் மண்
இ) வண்டல் மண்
ஈ) மலை மண்
விடை:
ஆ) கரிசல் மண்

Question 6.
மண்ணின் முக்கிய கூறு
அ) பாறைகள்
ஆ) கனிமங்கள்
இ) நீர்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) கனிமங்கள்

Question 7.
கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?
அ) வண்டல் மண்
ஆ) கரிசல் மண்
இ) செம்மண்
ஈ) மலை மண்
விடை:
அ) வண்டல் மண்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு …………………..
விடை:
பாறையியல் (petrology)

Question 2.
___________ மண் தினைப் பயிர்கள் விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.
விடை:
செம்மண்

Question 3.
‘புவியின் தோல்’ என்று ______________ அழைக்கப்படுகிறது.
விடை:
மண்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 4.
உருமாறிய பாறைகளின் ஒரு வகையான ___________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது
விடை:
வெள்ளை பளிங்கு

Question 5.
__________ பாறை முதன்மை பாறை’ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
தீப்

III. சரியா / தவறா என்க குறிப்படுக.

Question 1.
தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
விடை:
சரி

Question 2.
களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது.
விடை:
தவறு

Question 3.
செம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில் உருவாகிறது.
விடை:
தவறு

Question 4.
இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு “செயற்கை மணல்” (M – Sand) பயன்படுகிறது.
விடை:
சரி

Question 5.
படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன.
விடை:
தவறு

IV. பொருத்துக

Question 1.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 1
அ) 2 1 4 3
ஆ) 2 1 3 4
இ) 4 3 2 1
ஈ) 3 4 2 1
விடை:
அ) 2 1 4 3

Question 2.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 2
அ) 2 4 1 3
ஆ) 2 4 1 3
இ) 3 1 2 4
ஈ) 3 1 4 2
விடை:
அ) 2 4 1 3

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க

Question 1.
அ) தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
ஆ) பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உருமாறுகிறது.
இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.
ஈ) தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை
விடை:
இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை – தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 2.
அ) மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது
ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.
இ) மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம்.
ஈ) இலைமக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்.
விடை:
ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உவாகிறது – தவறு

VI. கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைக் கண்டுபிடித்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
கூற்று 1 – படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை.
கூற்று 2 – படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.

அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு.
ஈ) கூற்று 2 சரி ஆனால் கூற்று 1 தவறு.
விடை:
அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1க்கு சரியான விளக்கம்

VII. காரணம் கூறுக

Question 1.
நீர்த்தேக்கப் படுகைகளில் இரசாயன படிவுப் பாறைகள் காணப்படுகின்றன.
விடை:
இரசாயன படிவுப் பாறைகள், பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து, இரசாயன கலவையாக மாறுகிறது. இவை ஆவியாதல் மூலம் உருவாகின்றன. இப்பாறைகள் உப்பு படர் பாறைகள் என்றும் அழைக்கப்படுகிறது.

Question 2.
தீப்பாறைகள் எரிமலை பகுதிகளில் காணப்படுகிறது.
விடை:
தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவானதாகும். மேலும் இப்பாறைகள் எரிமலை செயல்பாடுகளோடு தொடர்புடையவை.

VIII. வேறுபடுத்துக

Question 1.
உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 3

Question 2.
மண் வள பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 4
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 5

IX. சுருக்கமாக விடையளி

Question 1.
தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?
விடை:

  • தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக்குழம்பு உறைந்து உருவாகின்றன.
  • இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உருவாவதால் இவற்றை முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்று அழைக்கிறோம்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 2.
பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி?
விடை:

  • மண்ணின் கூட்டுப் பொருள்களான கனிமங்கள், கரிமப் பொருள்கள், நீர் மற்றும் காற்று ஆகும்.
  • கனிமங்கள் – 45%
    கரிமப் பொருள்கள் – 5%
    நீர் – 25%
    காற்று – 25% கொண்டுள்ளது.

Question 3.
‘பாறைகள்’ வரையறு.
விடை:

  • பாறைகள் என்பது திட கனிம பொருட்களால் புவியின் மேற்பரப்பில் மற்ற கோள்களில் உள்ளது போல் உருவானதாகும்.
  • புவியின் மேலோடு பாறைகளால் உருவானது. இது ஒரு திட நிலையில் உள்ள ஒரு முக்கியமான இயற்கை வளம் ஆகும்.
  • பாறைகள் இயற்கையிலே கடின மற்றும் மென்தன்மை கொண்டதாகும்.

Question 4.
மண்ணின் வகைகளைக் கூறுக.
விடை:

  • வண்டல் மண்
  • கரிசல் மண்
  • செம்மண்
  • சரளை மண்
  • மலை மண்
  • பாலை மண்

Question 5.
மண்வளப் பாதுகாப்பு என்றால் என்ன?
விடை:
மண் வளப் பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல் முறையாகும்.

X. விரிவான விடையளி

Question 1.
மண் உருவாக்கச் செயல்முறைகள் பற்றி விவரி.
விடை:

  • மண் என்பது பல்வகை கரிமப் பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப் பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவையாகும்.
  • மண்ணில் உள்ள கனிமங்கள் மண்ணை உருவாக்கும் ஒரு அடிப்படை காரணியாகும்.
  • பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல் முறைகளுக்கு உட்படுத்தப்படும் பொழுது மண்ணாக உருவாகிறது.
  • நீர், காற்று, வெப்ப நிலைமாறுபாடு, புவி ஈர்ப்பு விசை, வேதிபரிமாற்றம், உயிரினங்கள் மற்றும் அழுத்த வேறுபாடுகளால் தாய்ப்பாறைகள் உடைபட்டு மிருதுவான துகள்களாக மாறுகின்றன.

Question 2.
பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்.
விடை:
பாறைகள் தோன்றும் முறைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  • தீப்பாறைகள்,
  • படிவுப் பாறைகள்
  • உருமாறியப் பாறைகள் (அ) மாற்றுருப் பாறைகள்.

தீப்பாறைகள்: தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவானதாகும். இதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் அவை.
I. வெளிப்புறத் தீப்பாறைகள்,
II. ஊடுருவிய தீப்பாறைகள்

I. வெளிப்புறத் தீப்பாறைகள்: புவியின் உட்பகுதியிலிருந்து அதன் மேல் பகுதிக்கு வரும் செந்நிற, உருகிய பாறைக் குழம்பு ‘லாவா’ புவியின் மேற்பரப்பிற்கு வந்து குளிர்ந்த பாறைகளாக மாறுகிறது. இவ்வாறு உருவாகும் பாறைகள் ‘வெளிப்புறத்தீப்பாறைகள்’ என்றழைக்கப்படுகிறது.

II. ஊடுருவிய தீப்பாறைகள்: பாறைக்குழம்பு புவிபரப்பிற்கு கீழே பாறை விரிசல்களிலும், பாறைகளிலும் ஊடுருவில் சென்று உறைந்து உருவாகும் பாறைகள் ஊடுருவிய தீப்பாறைகள் எனப்படும். இவை இரண்டு வகைப்படும். அவை

  • அடியாழப் பாறைகள் (அ) பாதாளப் பாறைகள்
  • இடையாழப் பாறைகள்

படிவுப் பாறைகள்: படிவுப்பாறைகள் அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன. படிவுப் பாறைகளின் படிய வைக்கும் செயல்முறைகள் மற்றும் படிவுகளின் தன்மையை பொருத்து படிவுப் பாறைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  • உயிரினப் படிவுப் பாறைகள்
  • பௌதீக படிவுப் பாறைகள்
  • இரசாயன படிவுப் பாறைகள்

உருமாறிய பாறைகள்: அதிக வெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும், படிவுப்பாறைகளும் மாற்ற மடைந்து உருமாறிய பாறைகளாக மாறுகிறது. இப்பாறைகள் இரண்டு வகைப்படும் அவை

  • வெப்ப உருமாற்றம்
  • இயக்க உருமாற்றம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 3.
மண்ண டுக்குகள் பற்றி விவரிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 6
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 7

Question 4.
மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்.
விடை:
மண்ணின் வகைபாடு: மண் உருவாகும் விதத்தில் அவற்றின் நிறம் பௌதீக மற்றும் இரசாயன பண்புகளின் அடிப்படையில் ஆறு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன அவை.

  • வண்டல் மண்
  • கரிசல் மண்
  • செம்மண்
  • சரளை மண்
  • மலை மண்
  • பாலை மண்

வண்டல் மண்: வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள் மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது. இது மற்ற மண் வகைகளைக் காட்டிலும் வளம் மிக்கது. இது நெல், கரும்பு, கோதுமை, சணல் மற்றும் மற்ற உணவுப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

கரிசல் மண்: கரிசல் மண், தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன. கரிசல் மண்ணில் பருத்திப் பயிர் நன்கு வளரும்.

செம்மண்: செம்மண், உருமாறியப் பாறைகள் மற்றும் படிகப்பாறைகள் ஆகியவைசிதைவடைவதால் உருவாகிறது. இது வளம் குறைந்த மண்ணாக இருப்பதால் தினைப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

சரளை மண்: சரளை மண் அயன மண்டல பிரதேச காலநிலையில் உருவாகிறது. இம்மண் வளம் குறைந்து காணப்படுவதால் தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

மலை மண் : மலை மண், மலைச் சரிவுகளில் காணப்படுகிறது. இப்பகுதிகளில் கார தன்மையுடன் குறைந்த பருமன் கொண்ட அடுக்காக உள்ளது.

பாலை மண்: பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது. வளம் குறைந்த இம்மண்ணில் வேளாண்மையை மேற்கொள்ள இயலாது.

XI. செயல்பாடுகள்

Question 1.
இணையதள உதவியுடன் கீழ்க்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 8
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 9

Question 2.
வரைபடப் பயிற்சி (வரைபட பயிற்சி புத்தகத்தில் காண்க)
விடை:
இந்திய புறவெளி நிலவரைபடத்தில் கரிசல் மண் காணப்படும் பகுதிகளைக் குறிக்கவும்.

Question 3.
கண்காட்சி (மாணவர்களுக்கானது)
விடை:
பல்வேறு வகையான மண் மாதிரிகளைச் சேகரித்து உன் வகுப்பறையில் காட்சிப்படுத்தவும்.

Question 4.
குழுக் கலந்துரையாடல்
விடை:
இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமானப் பணிகளுக்கு “செயற்கை மணல்” (M-Sand) பயன்படுத்த காரணம்.

  1.  தரம்
  2. நன்மைகள்
  3. தீமைகள் தரம்:
  • M-Sand (Manufactured Sand) உருவாக்கப்படக்கூடிய மணல்
  • M-Sand
    நன்மைகள்:
  • ஆறுகளிலிருந்து மணல் எடுப்பது தவிர்க்கப்படுவதுடன் ஆறுகள் பாதுகாக்கப்படுகிறது.
  • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
  • செயற்கை மணல் பயன்படுத்துவதால் கட்டுமானம் உறுதியாக இருக்கும்.
  • கட்டுமானச் செலவு குறைகிறது.
  • இயற்கை மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.
    தீமைகள்:
  • (M-Sand) செயற்கை மணலில் ஈரப்பதம் குறைவு.
  • கட்டுமானப் பணிகளுக்கு அதிக நீரும், சிமெண்ட்டும் தேவை.

8th Social Science Guide பாறை மற்றும் மண் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
வேளாண்மையை மேற்கொள்ள இயலாத மண் __________
அ) பாலை மண்
ஆ) செம்மண்
இ) கரிசல் மண்
ஈ) சரளை மண்
விடை:
அ) பாலை மண்

Question 2.
நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ ___________ வருடங்கள் ஆகும்.
அ) 200
ஆ) 2000
இ) 3000
ஈ) 400
விடை:
இ) 3000

Question 3.
கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு.
அ) இலை மக்கு அடுக்கு
ஆ) மேல்மட்ட அடுக்கு
இ) உயர் மட்ட அடுக்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) மேல்மட்ட அடுக்கு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 4.
உலகின் மிகப்பழமையான படிவுப்பாறைகள் ______________ ல் கண்டுபிடிக்கப்பட்டன.
அ) இந்தியா
ஆ) அயர்லாந்து
இ) கிரீன்லாந்து
ஈ) பின்லாந்து
விடை:
இ) கிரீன்லாந்து

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
‘இக்னியஸ்’ என்றால் ____________ என்று பொருள்படும்.
விடை:
தீ

Question 2.
‘செடிமெண்டரி’ என்பதன் பொருள்
விடை:
படிய வைத்தல்

Question 3.
எரிமலையிலிருந்து வெடித்து வெளியேறும் பாறைக் குழம்பு ___________
விடை:
லாவா

III. சரியா, தவறா?

Question 1.
புவியின் ஆழப்பகுதியில் உருகிய பாறைக்குழம்பு லாவா எனப்படும்.
விடை:
தவறு

Question 2.
மலை மண் அயன மண்டல பிரதேச கால நிலையில் உருவாகிறது.
விடை:
தவறு

Question 3.
பாறைகள் மற்றும் மண் வகைகள் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்கள் ஆகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 4.
செம்மண்ணில் உள்ள இரும்பு ஆக்ஸைடு அளவைப் பொருத்து மண்ணின் நிறமானது பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரை வேறுபடுகிறது.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 10

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க

Question 1.
1. மண் இயற்கை முறையில் நீரை வடிக்கட்ட பயன்படுகிறது.
2. காலநிலையைப் பொருத்து மண் உருவாகிறது.
3. கரிசல் மண் உவர்தன்மை மற்றும் நுண்துளைகளைக் கொண்டது.
4. மண்ணின் குறுக்கமைப்பு என்பது புவி மேற்பரப்பிலிருந்து தாய் பாறை வரை உள்ள மண் அடுக்குகளின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகும்.
விடை:
3) தவறு. கரிசல் மண் உவர்தன்மை மற்றும் நுண்துளைகளைக் கொண்டது.

VI. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றினை கண்டுபிடித்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுது

கூற்று 1: மண்ணின் கூட்டுப் பொருள்களான கனிமங்கள், கரிமப் பொருள்கள், நீர் மற்றும் காற்று ஆகும்.
கூற்று 2: மண்ணின் கலவையானது இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறுபடுகிறது.

அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு.
ஈ) கூற்று 2 சரி ஆனால் கூற்று 1 தவறு.
விடை:
ஆ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம் அல்ல

VII. வேறுபடுத்துக

Question 1.
இயற்கை மணல், செயற்கை மணல்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 11

VIII. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
மண்ணின் குறுக்கமைப்பு என்றால் என்ன?
விடை:
மண்ணின் குறுக்கமைப்பு என்பது புவி மேற்பரப்பிலிருந்து தாய் பாறை வரை உள்ள மண் அடுக்குகளின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகும்.

Question 2.
மண்ணின் பயன்களின் ஏதேனும் இரண்டினைக் கூறு.
விடை:

  • மண்ணின் உள்ள கனிமங்கள், பயிர்கள் மற்றும் தாவரங்களை ஊட்டமாக வளரச் செய்கின்றன.
  • மண் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கும், தாவரங்கள் வளர்வதற்கும் அடிப்படையாக உள்ளது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 3.
‘பாறையியல்’ சிறு குறிப்பு வரைக.
விடை:

  • பாறையியல் என்பது புவி மண்ணியலின்’ ஒரு பரிவு ஆகும்.
  • இது பாறைகள் ஆய்வுடன் தொடர்புடையது
  • பாறையியல் (petrology) என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது. “பெட்ரஸ்” (petrus) என்பது பாறைகளையும் (Logos) “லோகோஸ்” என்பது அதைப் பற்றிய படிப்பு ஆகும்.

IX. விரிவான விடையளிக்கவும்

Question 1.
பாறைகளின் பயன்களை கூறு :
விடை:

  • சிமெண்ட் தயாரித்தல்
  • சுண்ண எழுதுகோல்
  • கட்டடப் பொருள்கள்
  • குளியல் தொட்டி
  • நடைபாதையில் பதிக்கப்படும் கல்
  • அணிகலன்கள்
  • கூரைப் பொருள்கள்
  • அலங்காரப் பொருள்கள்
  • தங்கம், வைரம் மற்றும் நவரத்தினங்கள் போன்ற மதிப்புமிக்க பொருள்கள் தயாரிக்க பயன்படுகிறது.

X. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 12
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 13

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

8th Social Science Guide கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை ……………….
அ) கேப்பிளாங்கா
ஆ) அகுல்காஸ் முனை
இ) நன்னம்பிக்கை முனை
ஈ) கேப்டவுன்
விடை:
இ) நன்னம்பிக்கை முனை

Question 2.
எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் ……………..
அ) பனாமா கால்வாய்
ஆ) அஸ்வான் கால்வாய்
இ) சூயஸ் கால்வாய்
ஈ) ஆல்பர்ட் கால்வாய்
விடை:
இ) சூயஸ் கால்வாய்

Question 3.
மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க.
(i) சராசரி மழையளவு 15 சென்டிமீட்டர்.
(ii) கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும்.
(iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.
(iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன.

அ) i சரியானது
ஆ) ii மற்றும் iv சரியானவை
இ) iii மற்றும் iv சரியானவை
ஈ) அனைத்தும் சரியானவை
விடை:
ஆ) ii மற்றும் iv

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 4.
சரியானவை ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர் ………………
அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்
ஆ) இமய மலைத்தொடர்
இ) பிளிண்டர்கள் மலைத்தொடர்
ஈ) மெக்டோனெல் மலைத்தொடர்
விடை:
அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்

Question 5.
கல்கூர்லி சுரங்கம் ………………… கனிமத்திற்குப் புகழ்பெற்றது.
அ) வைரம்
ஆ) பிளாட்டினம்
இ) வெள்ளி
ஈ) தங்கம்
விடை:
ஈ) தங்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
அட்லஸ் மலை ………………… கண்டத்தில் அமைந்துள்ளது.
விடை:
ஆப்பிரிக்கா

Question 2.
ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ………………….. ஆகும்.
விடை:
கிளிமஞ்சாரோ

Question 3.
ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் மரம் ……………….
விடை:
யூக்கலிப்டஸ்

Question 4.
ஆஸ்திரேலியாவில் உள்ள மிதவெப்ப மண்டல புல்வெளிகள் …………………… என அழைக்கப்படுகின்றன.
விடை:
டவுன்ஸ்

Question 5.
அண்டார்டிகாவில் நிறுவப்பட்ட முதல் இந்திய ஆய்வு நிலையம் ……………………
விடை:
தட்சின் கங்கோத்ரி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 1

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : அரோரா என்பது வானத்தில் தோன்றும் வண்ண ஒளிகள் ஆகும்.
காரணம் : அவை வளிமண்டலத்தின் மேலடுக்குக் காந்த புயலால் ஏற்படுகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் உண்மை . கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் உண்மை . கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் உண்மை ஆனால் கூற்று தவறு.
விடை:
இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 2.
கூற்று : ஆப்பிரிக்காவின் நிலவியல் தோற்றங்களில் ஒரு முக்கிய அம்சம் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு ஆகும்.
காரணம் : புவியின் உள்விசை காரணமாக புவியின் மேற்பரப்பில் உண்டான பிளவு.

அ) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுகான காரணம் சரியான விளக்கம்.
ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் கூற்றுகான காரணம் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுகான காரணம் சரியான விளக்கம்

V. சுருக்கமாக விளையளி

Question 1.
ஆப்பிரிக்கா ‘தாய் கண்டம்’ என அழைக்கப்படுவது ஏன்?
விடை:
புவியில் மனித இனங்கள் வாழ்ந்த பழமையான கண்டம் என்பதால் ஆப்பிரிக்கா ‘தாய் கண்டம்’ என அழைக்கப்பட்டது.

Question 2.
ஆப்பிரிக்காவின் முக்கியமான ஆறுகள் யாவை?
விடை:

  • நைல் நதி
  • காங்கோ நதி
  • நைஜர் நதி
  • ஜாம்பசி நதி
  • லிம்போபோ நதி
  • ஆரஞ்சு நதி

Question 3.
ஆஸ்திரேலியாவின் நிலத்தோற்ற பிரிவுகள் யாவை?
விடை:

  • மேற்கு ஆஸ்திரேலிய பெரிய பீடபூமி
  • மத்திய தாழ் நிலங்கள்
  • கிழக்கு உயர் நிலங்கள்

Question 4.
அண்டார்டிகா கண்டத்தின் தன்மை குறித்து எழுதவும்.
விடை:

  • அண்டார்டிகா கண்டம் ஒரு தனித்துவம் வாய்ந்த கண்டமாகும். இது பூர்வீக மக்களைக் கொண்டிருக்கவில்லை.
  • அண்டார்டிகாவில் எந்த ஒரு நாடும் இல்லை.
  • இது துருவப் பகுதியில் அமைந்துள்ளதால், நிரந்தர பனியுடன் மிகக் குளிர்ந்த பிரதேசமாக உள்ளது.
  • இது மலைத்தொடர்கள், சிகரங்கள், பள்ளத்தாக்குகள், பனியாறுகள், பீடபூமிகள் மற்றும் எரிமலைகளை உள்ளடக்கியதாகும்.

Question 5.
ஆஸ்திரேலியாவின் பொருளாதார நடவடிக்கைகள் ஏதெனும் நான்கினைக் குறிப்பிடுக.
விடை:
வேளாண்மை , வளம் சார்ந்த தொழில்கள், மீன்பிடித்தல், உற்பத்தித் தொழில்கள், வணிகம் மற்றும் சேவைப்பிரிவு ஆகியவை ஆஸ்திரேலியாவின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.

VI. வேறுபடுத்துக

Question 1.
சாஹேல் மற்றும் சகாரா
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 2

Question 2.
மேற்கு அண்டார்டிகா மற்றும் கிழக்கு அண்டார்டிகா
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 3

Question 3.
பெரிய பவளத் திட்டு மற்றும் ஆர்டீசியன் வடிநிலம்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 4
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 5

VII. காரணம் கூறு

Question 1.
எகிப்து நைல் நதியின் நன்கொடை என அழைக்கப்படுகிறது ஏன்?
விடை:
நைல் நதி எகிப்தின் வாழ்வாதாரமாக விளங்குகிறது, நைல் நதி எகிப்தில் இல்லையென்றால் இந்நாடு பாலைவனமாக இருந்திருக்கும். இதனால் எகிப்து நைல் நதியின் நன்கொடை எனப்படுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 2.
வெப்ப பாலைவனங்கள் கண்டங்களின் மேற்கு விளிம்புகளில் அமைந்துள்ளன.
விடை:
மேற்கு விளிம்புகள் மணல் மற்றும் பாறைகளால் ஆன பகுதியாக உள்ளது. எனவே இப்பகுதி வறண்ட வெப்ப பாலைவனமாக உள்ளது.

Question 3.
அண்டார்டிகா ஆராய்ச்சியாளர்களின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
விடை:
உலகின் எந்த ஒரு நாட்டின் மக்களும் அண்டார்டிகாவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், தரவுகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே இக்கண்டம் ‘ஆராய்ச்சியாளர்களின் கண்டம் என அழைக்கப்படுகிறது.

VIII. விரிவான விடையளி

Question 1.
ஆஸ்திரேலியாவின் கனிம வளங்கள் குறித்து விரிவாக எழுதவும்.
விடை:

  • ஆஸ்திரேலியா பாக்சைட், லைமோனைட், ரூட்டில் மற்றும் சிர்கான் உற்பத்தியில் முன்னணி நாடாக உள்ளது.
  • தங்கம், ஈயம், லித்தியம், மாங்கனீசு தாது மற்றும் துத்தநாகம் உற்பத்தியில் இது இரண்டாவது இடம் வகிக்கிறது.
  • இரும்புத்தாது மற்றும் யுரேனிய உற்பத்தியில் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது.
  • நிலக்கரி உற்பத்தியில் நான்காவது இடம் வகிக்கிறது.
  • மேற்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் நிலக்கரி வயல்கள் உள்ளன.
  • மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் இரும்புத் தாது கிடைக்கிறது.
  • கார்பென்டேரியா வளைகுடா, பெர்த் மற்றும் டாஸ்மேனியாவை சுற்றியுள்ள பகுதிகளில் பாக்சைட் கிடைக்கிறது.
  • பாஸ் நீர்ச்சந்தி மற்றும் மேற்கு பிரிஸ்பேன் பகுதிகளில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கிடைக்கிறது.
  • வட யூனியன் பிரதேசம் மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் யுரேனியம் கிடைக்கிறது.
  • கால் வாலி மற்றும் க..ல் கார்லி பகுதிகளில் தங்கம் கிடைக்கிறது.
  • காரியம், துத்தநாகம், வெள்ளி, டங்ஸ்டன், நிக்கல் மற்றும் செம்பு ஆகியவை ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கிடைக்கின்றன.

Question 2.
அண்டார்டிகா கண்டத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றி விவரி.
விடை:
தாவரங்கள்:

  • அண்டார்டிகாவில் வெப்பநிலையானது ஆண்டு முழுவதும் உறை நிலைக்குக் கீழே இருப்பதால் புவியியல் பெரிய தாவரங்கள் எதுவும் காணப்படவில்லை.
  • சிறுவகை தாவரங்களான பாசிகள், படர்பாசிச் செடிகள், நுரைப்பாசிகள். மரப்பாசிகள், நுண்ணிய பூஞ்சைகள் போன்றவை பனியை தாங்கி வளர்கின்றன.
  • பிளாங்டன். பாசிகள் மற்றும் மரப்பாசிகள் நன்னீர் மற்றும் உவர் நீர் ஏரிகளில் காணப்படுகின்றன.

விலங்கினங்கள்:

  • சிறிய வகை செம்மீன்களான கிரில்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.
  • நீலத்திமிங்கலம், கடற்பசு மற்றும் கடல்பறவைகளான பென்குவின், அல்பட்ராஸ். போலார் ஸ்குவா மற்றும் ஸ்டவுட் ஆகியவையும் காணப்படுகின்றன.
  • இங்குள்ள பறவைகள் மற்றும் விலங்கினங்கள் குளிர்கால நிலையை எதிர்கொள்ள தங்கள் உடலில் புளூபர் எனப்படும் அடர்த்தியான கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன.
  • பென்குயின் பறவைகள் இறக்கைகளுக்குப் பதிலாக நீந்துவதற்குப் பயன்படும் பிலிப்பர் மற்றும் அகலமான பாதங்களைப் பெற்றுள்ளன. இப்பறவைகளால் பறக்க இயலாது.
  • சிறிய முதுகெலும்பற்ற உயிரினங்கள் இங்குள்ள நிலவாழ் விலங்கினங்களாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 3.
ஆப்பிரிக்காவின் இயற்கைப் பிரிவுகளை எழுதி அவற்றில் ஏதேனும் ஒன்றினை விளக்கவும்.
விடை:
ஆப்பிரிக்காவின் இயற்கைப் பிரிவுகள்:

  • சஹாரா
  • சாஹேல்
  • சவானா
  • பெரிய பள்ளத்தாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பெரிய ஏரிகள்
  • கிழக்கு ஆப்பிரிக்க உயர் நிலங்கள்
  • சுவாலி கடற்கரை
  • காங்கோ வடிநிலம் / ஜையர் வடிநிலம்
  • தென் ஆப்பிரிக்கா

சஹாரா:

  • ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உலகப் புகழ்ப்பெற்ற சகாரா பாலைவனம் அமைந்துள்ளது.
  • இது உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல பாலைவனமாகும்.
  • சகாராவின் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், கிழக்கில் செங்கடலும், வடக்கில் மத்திய தரைக்கடலும் தெற்கில் சாஹேல் ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
  • இது 11 நாடுகளில் பரவியுள்ளது.
  • சகாரா பாலைவனம் மலைகள், பீடபூமிகள், எர்க்ஸ், பாலைவனச் சோலை, மணல், உப்பு ஏரி, ஆற்றுக் கொப்பரைகள் மற்றும் ஊதுபள்ளங்கள் போன்ற பல்வேறு நிலத்தோற்றங்களை உள்ளடக்கியது.
  • மௌண்ட் கௌசி எனப்பட்ட செயலிழந்த எரிமலை சஹாரா பாலைவனத்தின் மிக உயரமான பகுதியாகும்,

X. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

Question 1.
கீழ்க்கண்ட நாடுகளில் டிசம்பர் மாத பருவநிலை மற்றும் அது எந்த கோளத்தில் அமைந்துள்ளது என்பதனைக் கண்டறியவும்.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 6

Question 2.
ஆஸ்திரேலிய அரசியல் புவிவரைபடத்தில் உள்ள மாநிலங்களின் பெயர்களை எழுதவும்.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 7

8th Social Science Guide கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கடகரேகை, புவி நடுக்கோடு மற்றும் மகரரேகை போன்ற மூன்று முக்கிய அட்ச ரேகைகளும் கடந்து செல்லும் கண்டம்.
அ) தென் அமெரிக்கா
ஆ) ஆப்பிரிக்கா
இ) ஆஸ்திரேலியா
ஈ) அண்டார்டிகா
விடை:
ஆ) ஆப்பிரிக்கா

Question 2.
ஆப்பிரிக்காவின் முக்கியத் தீவு
அ) டாஸ்மேனியா
ஆ) நியூசிலாந்து
இ) மடகாஸ்கர்
ஈ) சார்டினியா
விடை:
இ) மடகாஸ்கர்

Question 3.
உலகின் ஆழமான மற்றும் அதிக நீளம் கொண்ட நன்னீர் ஏரி
அ) விக்டோரியா ஏரி
ஆ) சுப்பீரியர் ஏரி
இ) ஒண்டேரியோ ஏரி
ஈ) டாங்கனிக்கா ஏரி
விடை:
ஈ) டாங்கனிக்கா ஏரி

Question 4.
உலகின் மிக நீளமான நதி
அ) நைல்
ஆ) சிந்து
இ) அமேசான்
ஈ) வோல்கா
விடை:
அ) நைல்

Question 5.
நைல் நதி கலக்கும் கடல்
அ) இந்திய பெருங்கடல்
ஆ) பசிபிக் பெருங்கடல்
இ) மத்திய தரைக்கடல்
ஈ) செங்கடல்
விடை:
இ) மத்திய தரைக்கடல்

Question 6.
உலகப்புகழ் பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி உருவாகியுள்ள ஆறு
அ) நைல்
ஆ) காங்கோ
இ) ஜாம்பசி
ஈ) நைஜர்
விடை:
இ) ஜாம்பசி புவியியல்

Question 7.
உலகின் மிகப்பெரிய தீவு
அ) கிரீன்லாந்து
ஆ) ஆஸ்திரேலியா
இ) மடகாஸ்கர்
ஈ) இந்தோனேஷியா
விடை:
ஆ) ஆஸ்திரேலியா

Question 8.
ஆஸ்திரேலியா கண்டத்தைக் கண்டுபிடித்தவர்
அ) லிவிங்ஸ்டோன்
ஆ) ஸ்டான்லி
இ) ஜேம்ஸ் குக்
ஈ) டார்வின்
விடை:
இ) ஜேம்ஸ் குக்

Question 9.
வெள்ளைக் கண்டம் என அழைக்கப்படுவது
அ) ஆஸ்திரேலியா
ஆ) அண்டார்டிகா
இ) தென் அமெரிக்கா
ஈ) வட அமெரிக்கா
விடை:
ஆ) அண்டார்டிகா

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 10.
ஆஸ்திரேலியா கண்டத்தை இரு சம பாகங்களாகப் பிரிப்பது
அ) புவிநடுக்கோடு
ஆ) கடகரேகை
இ) மகரரேகை
ஈ) ஆர்டிக் வட்டம்
விடை:
இ) மகரரேகை

Question 11.
ஆப்பிரிக்காவின் ………….. உலகின் பெரும் மருந்தகம் என்று அழைக்கப்படுகின்றன.
அ) வெப்ப மண்டல மழைக்காடுகள்
ஆ) சஹாரா
இ) பாபோ மரம்
ஈ) சாஹேல்
விடை:
அ) வெப்ப மண்டல மழைக்காடுகள்

Question 12.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி
அ) ஆல்பர்ட் ஏரி
ஆ) எட்வர்ட் ஏரி
இ) கிவ் ஏரி
ஈ) விக்டோரியா ஏரி
விடை:
ஈ) விக்டோரியா ஏரி

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
உலகின் இரண்டாவது பெரிய கண்டம் …………………………
விடை:
ஆப்பிரிக்கா

Question 2.
மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலை சகாரா பாலைவனத்திலிருந்து பிரிப்பது …………………..
விடை:
அட்லஸ் மலை

Question 3.
உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ……………… ஏரி ஆகும்.
விடை:
சுப்பீரியர்

Question 4.
தென் ஆப்பிரிக்காவின் அரை வறண்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் செம்மறி ஆடு வளர்ப்பு …………… என்று அழைக்கப்படுகிறது.
விடை:
காரூஸ்

Question 5.
ஆப்பிரிக்க ஆறுகளின் தந்தை என அழைக்கப்படுவது ……………..
விடை:
நைல் நதி

Question 6.
தென் ஆப்பிரிக்காவின் வாழ்வாதார நதி எனப்படுவது ……………
விடை:
ஜாம்பசி நதி கண்ட

Question 7.
ங்களில் மிகச்சிறியது …………………
விடை:
ஆஸ்திரேலியா

Question 8.
ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மலைக்காடுகள் …………… என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
புவியின் அணிகலன்

Question 9.
உலகில் இரண்டாவது மக்கள் தொகையைக் கொண்ட கண்டம் …………….
விடை:
ஆப்பிரிக்கா

Question 10.
ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு – ………………….
விடை:
நைஜீரியா

Question 11.
ஆஸ்திரேலியாவின் தலைநகர் ………………….
விடை:
கான்பெரா

Question 12.
உலகின் மிகப்பெரிய ஒற்றை சிற்ப பாறை ………………….
விடை:
அயர்ஸ் பாறை (அ) உலுரு பாறை

Question 13.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாலைவனம் …………………..
விடை:
பெரிய விக்டோரியா பாலைவனம்

Question 14.
ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நதி ……………….
விடை:
முர்ரே நதி

Question 15.
ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு …………………
விடை:
கங்காரு

Question 16.
ஆப்பிள் தீவு எனப்படுவது ………………
விடை:
டாஸ்மேனியா

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 17.
ஆஸ்திரேலியாவின் பணப்பயிர் எனப்படுவது ………………….
விடை:
ஆட்டு உரோமம்

Question 18.
அண்டார்டிகாவிலுள்ள ……………. பனியாறு உலகின் மிகப்பெரிய பனியாறாகும்.
விடை:
லாம்பர்ட்

Question 19.
கடல் வாழ் உயிரினங்களில் மிகப்பெரியது ………………
விடை:
நீலத்திமிங்கலம்

Question 20.
ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் ……………………
விடை:
கனிமங்கள்

Question 21.
சாஹேல் என்றால் ……………. அல்லது ………………. என்று பொருள்படும்.
விடை:
எல்லை, விளிம்பு

Question 22.
இருண்ட கண்டம் எனப்படுவது ………………..
விடை:
ஆப்பிரிக்கா

Question 23.
நைல் நதியின் நன்கொடை எனப்படுவது ……………..
விடை:
எகிப்து

Question 24.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் மிகப்பெரிய பனித் தொகுப்பு ………………
விடை:
அண்டார்டிகா

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 8

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : ஆஸ்திரேலியாவின் கிழக்கு உயர் நிலங்கள் பெரும்பரப்பு மலைத்தொடர் என்றும் அழைக்கப்படுகிறது.
காரணம் : இவை ஆஸ்திரேலியாவை வடக்கு தெற்காகப் பிரிக்கின்றன.

அ) கூற்றும், காரணமும் தவறு
ஆ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றினை விளக்குகிறது.
இ) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை .
ஈ) கூற்று சரி, காரணம் தவறு.
விடை:
ஈ) கூற்று சரி, காரணம் தவறு.

Question 2.
கூற்று : ஆஸ்திரேலியாவின் ஆறுகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
காரணம் : ஆஸ்திரேலியாவின் அனைத்து பகுதிகளும் ஆண்டு முழுவதும் கனமழை பெறுகிறது.

அ) கூற்றும், காரணமும் தவறு
ஆ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றினை விளக்குகிறது.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
அ) கூற்றும், காரணமும் தவறு

V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
ஆப்பிரிக்கா இருண்ட கண்டம் எனப்படுவதேன்?
விடை:
ஆப்பிரிக்காவின் உட்பகுதியின் பெரும்பகுதியின் தன்மை குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. எனவே ஆப்பிரிக்கா ஒரு இருண்ட கண்டம்’ என்றழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 2.
ஆப்பிரிக்க நாடுகளை புவியியல் அமைவிட அடிப்படையில் வகைப்படுத்துக.
விடை:

  • மேற்கு ஆப்பிரிக்கா
  • வட ஆப்பிரிக்கா
  • மத்திய ஆப்பிரிக்கா
  • கிழக்கு ஆப்பிரிக்கா
  • தென் ஆப்பிரிக்கா

Question 3.
நைல் நதி பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • உலகின் மிக நீளமான நதி நைல் ஆகும்.
  • நைல் நதி எகிப்தில் இல்லையெனில் இந்நாடு பாலைவனமாக இருந்திருக்கும்.
  • வெள்ளை நைல் மற்றும் நீல நைல் ஆகியவை நைல் நதியின் துணை ஆறுகளாகும்.
  • இவ்விரண்டும் சூடானிலுள்ள கார்ட்டும் என்ற இடத்தில் இணைந்து நைல் நதியைத் தோற்றுவிக்கின்றன.
  • நைல் நதி மத்தியத்தரைக்கடலில் கலக்கிறது.
  • இது ஆப்பிரிக்க ஆறுகளின் தந்தை எனப்படுகிறது.

Question 4.
புவி நடுக்கோட்டுக் காலநிலை பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • காங்கோ வடிநிலம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க உயர்நிலங்களில் புவி நடுக்கோட்டுக் காலநிலை நிலவுகிறது.
  • இங்கு ஆண்டு முழுவதும் வெப்பம் மற்றும் மழைப்பொழிவு இரண்டும் மிகுந்து காணப்படும்.

Question 5.
ஆப்பிரிக்காவின் கனிம வளம் பற்றி ஒரு விளக்கம் தருக.
விடை:

  • ஆப்பிரிக்கா, சில கனிம வளங்களை அதிகம் கொண்டுள்ளது.
  • தென் ஆப்பிரிக்கா, காங்கோ, போஸ்ட்வானா, சியராலியோன் மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளில் வைரச் சுரங்கங்கள் காணப்படுகின்றன.
  • கிம்பர்லி ஒரு முக்கியமான வைர உற்பத்தி மையமாகும்.
  • அங்கோலா, நைஜீரியா, காபன் மற்றும் காங்கோ நாடுகளில் அதிக எண்ணெய் வளங்கள் காணப்படுகின்றன.
  • தென் ஆப்பிரிக்கா, நமீபியா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் கானா ஆகிய நாடுகளில் தங்கம் காணப்படுகிறது.
  • குரோமியம், கோபால்ட், தாமிரம், இரும்பு தாது, மக்னீசியம், துத்தநாகம் மற்றும் நிக்கல் ஆகியவையும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்படுகின்றன.

Question 6.
ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து அமைப்புகள் பற்றி கூறு.
விடை:

  • ஆஸ்திரேலியாவில் பல வகையான போக்குவரத்து அமைப்புகள் காணப்படுகின்றன.
  • இந்நாடு சாலைப்போக்குவரத்தை பெரிதும் நம்பியுள்ளது.
  • இந்நாட்டில் 30க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன.
  • இந்நாட்டின் நகரங்களில் பயணிகள் இரயில் போக்குவரத்து நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.

Question 7.
அண்டார்டிகாவின் தாதுவளம் பற்றி உமக்கு என்ன தெரியும்?
விடை:
அண்டார்டிகா கண்டத்தில் தங்கம், பிளாட்டினம், நிக்கல், தாமிரம் மற்றும் பெட்ரோலியம் நிறைந்து இருக்கலாம் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குரோமியம், ஈயம், மாலிப்டினம், தகரம், யுரேனியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை இருப்பதற்கான தடயங்கள் காணப்படுகின்றன.

மேலும் வெள்ளி, பிளாட்டினம், இரும்புத்தாது, கோபால்ட், மாங்கனீசு, டைட்டானியம் ஆகியவை இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 8.
நீர்ச்சந்தி என்றால் என்ன?
விடை:
இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய நீர்ப்பகுதி, நீர்ச்சந்தி எனப்படுகிறது.

Question 9.
நிலச்சந்தி என்றால் என்ன?
விடை:
இரு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய பகுதி மற்றும் இருநீர்ப் பகுதியைப் பிரிப்பது நிலச்சந்தி எனப்படுகிறது.

Question 10.
வளைகுடா என்றால் என்ன?
விடை:
வளைகுடா என்பது நிலப்பரப்பை ஊடுருவி நீண்டு காணப்படும் கடல் நீர்ப்பரப்பு ஆகும்.

VI. வேறுபடுத்துக

Question 1.
வெப்பமண்டல பருவக்காற்றுக் காலநிலை மற்றும் மித வெப்ப மண்டலக் காலநிலை.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 9

Question 2.
புவி நடுக்கோட்டுக் காலநிலை மற்றும் மத்திய தரைக்கடல் காலநிலை.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 10

VII. காரணம் கூறு

Question 1.
கிழக்கு ஆப்பிரிக்க உயர் நிலங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது.
விடை:
இப்பகுதி வளமான புல்வெளிகள், காடுகள், நீரோடைகள் மற்றும் நீர் வீழ்ச்சிகள் போன்ற இயற்கை காட்சிகளைக் கொண்டுள்ளது. இம்மலைப் பகுதிகளில் காணப்படும் பனி சூழ்ந்த காலைப்பொழுதும், மலைத்தென்றலும் மிகவும் இனிமையானவை. இவை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்கின்றன.

Question 2.
அண்டார்டிகாவில் உறைநிலைக் காலநிலை நிலவுகிறது.
விடை:
அண்டார்டிகா புவிநடுக்கோட்டிற்கு வெகு தொலைவில் அமைந்துள்ளது. இதனால் உறைநிலைக் காலநிலை நிலவுகிறது.

Question 3.
அண்டார்டிகா கண்டத்தில் பெரிய தாவரங்கள் எதுவும் காணப்படவில்லை.
விடை:
அண்டார்டிகா கண்டத்தில் வெப்பநிலையானது ஆண்டு முழுவதும் உறைநிலைக்குக் கீழே இருப்பதால் தாவரங்கள் காணப்படவில்லை .

VIII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

Question 1.
ஆப்பிரிக்காவின் போக்குவரத்து அமைப்பினை விவாதி.
விடை:
ஒரு பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து முக்கிய பங்கினை வகிக்கிறது. பாதகமான இயற்கை நிலத்தோற்ற அமைப்பும், மந்த பொருளாதார வளர்ச்சியும் ஆப்பிரிக்க நாடுகளின் போக்குவரத்து வளர்ச்சியைப் பாதிப்படையச் செய்கின்றன.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

நிலவழிப் போக்குவரத்து:
பாலைவனம் மற்றும் அடர்ந்த காடுகள் மிகுந்துள்ளதால் சாலைகள் மற்றும் இருப்புப் பாதைகளை அமைப்பது மிகவும் கடினம். இது பெரிய தடையாக உள்ளது.

தென் ஆப்பிரிக்கா, கென்யா, எகிப்து, லிபியா, மொராக்கோ, மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் ஓரளவிற்கு சாலை மற்றும் இருப்புப்பாதை போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளன.

நீர்வழிப் போக்குவரத்து:
ஆப்பிரிக்காவின் கடல் போக்குவரத்துப் பாதைகள் ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றோடு இணைந்துள்ளன.

டர்பன், தர்-இ-சலாம், மொஹாபு, அலெக்சாந்திரியா, கேப்டவுன், அல்ஜியஸ் மற்றும் அபிட்ஜன் ஆகியவை முக்கிய துறைமுகங்களாகும்.

வான்வழிப் போக்குவரத்து:
வான்வழிப் போக்குவரத்து ஆப்பிரிக்காவின் முக்கிய தலைநகரங்களையும் உலகின் பிற பகுதிகளையும் இணைக்கிறது. கெய்ரோ, ஜோகன்னஸ்பர்க், நைரோபி, டாக்கா, அடிஸ் அபாபா, காஸாபிளாங்கா, டர்பன் ஆகியவை முக்கிய பன்னாட்டு விமான நிலையங்களாகும்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 11

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

8th Social Science Guide இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?
அ) கல்லிருந்து சிலையைச் செதுக்குதல்
ஆ) கண்ணாடி வளையல் உருவாக்குதல்
இ) பட்டு சேலை நெய்தல்
ஈ) இரும்பை உருக்குதல்
விடை:
ஈ) இரும்பை உருக்குதல்

Question 2.
____________ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.
அ) நெசவு
ஆ) எஃகு
இ) மின்சக்தி
ஈ) உரங்கள்
விடை:
அ) நெசவு

Question 3.
கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் __________
அ) பம்பாய்
ஆ) அகமதாபாத்
இ) கான்பூர்
ஈ) டாக்கா
விடை:
இ) கான்பூர்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 4.
இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன ?
அ) மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
ஆ) எழுத்தறிவின்மையைக் குறைத்தல்
இ) வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்
ஈ) பெண்களுக்கு அதிகாரமளித்தல்
விடை:
இ) வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்

Question 5.
இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது?
அ) ஆட்சியாளர்களின் ஆதரவின்மை
ஆ) இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
இ) இந்தியாவின் தொழிற்துறை கொள்கை
ஈ) பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை
விடை:
இ) இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
……………………… இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
விடை:
கைவினைப் பொருட்கள்

Question 2.
தொழிற்புரட்சி நடைபெற்ற இடம் ………………..
விடை:
இங்கிலாந்து

Question 3.
அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …………………
விடை:
1839

Question 4.
கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் …………….. இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.
விடை:
ரிஷ்ரா

Question 5.
……………….. ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது.
விடை:
சூயஸ் கால்வாய்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
இந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது.
விடை:
சரி

Question 2.
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 3.
நவீன முறையில் முதன்முதலாக இரும்புஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது.
விடை:
தவறு

Question 4.
1948 ஆம் ஆண்டு தொழிலக கொள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது.
விடை:
தவறு

Question 5.
பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்குச் சான்றாக உள்ளது.
விடை:
தவறு

V. சரியான கூற்றை கண்டுபிடி.

Question 1.
பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்துக் குறியிடவும் :
i) எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து’.
ii) இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது.
iii) சௌராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது.
iv) சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவானது.

அ) i மற்றும் ii சரி
ஆ) ii மற்றும் iv சரி
இ) iii மற்றும் iv சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஆ) ii மற்றும் iv சரி

Question 2.
கூற்று : இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர்.
காரணம் : பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்
ஆ) கூற்று சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்றும் காரணமும் சரி ,
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்

Question 3.
பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாதது ஒன்று எது?
அ) பெர்னியர் – ஷாஜகான்
ஆ) பருத்தி ஆலை – அகமதாபாத்
இ) TISCO – ஜாம்ஜெட்பூர்
ஈ) பொருளாதார தாரளமயமாக்கல் – 1980
விடை:
ஈ) பொருளாதார தாராளமயமாக்கல் – 1980

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
இந்தியாவின் பாரம்பரிய கைவினை பொருட்களின் தொழிற்சாலைகள் யாவை?
விடை:
இந்தியாவின் பாரம்பரிய கைவினை பொருட்கள் தொழிற்சாலைகள் :

  • நெசவு
  • மரவேலை
  • தந்தவேலை
  • மதிப்புமிக்க கற்களை வெட்டுதல்
  • தோல்
  • வாசனை மரங்களில் வேலைபாடுகள் செய்தல்
  • உலோக வேலை
  • நகைகள் செய்தல்

Question 2.
செல்வச் சுரண்டல் கோட்பாடு பற்றி எழுதுக.
விடை:
செல்வச் சுரண்டல் கோட்பாடு :
தாதாபாய் நௌரோஜி. “ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 3.
பெரிய அளவில் நெசவு உற்பத்திக்கு பயன்படுத்திய கண்டுபிடிப்புகளின் பெயர்களை எழுது.
விடை:
பெரிய அளவில் நெசவு உற்பத்திக்கு பயன்படுத்திய கண்டுபிடிப்புகள் :

  • காட்டன் ஜின்
  • பறக்கும் எறிநாடா
  • நூற்கும் ஜென்னி
  • நீராவி

Question 4.
இயந்திரம் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) :
இந்தியாவில் உள்ள ஒரு வணிக சங்கம். CII ஓர் அரசு சாரா, இலாப நோக்கமற்ற, தொழிற்துறை வழி நடத்துதல் மற்றும் தொழிற்துறையை நிர்வாகிக்கும் அமைப்பு.

1985ல் நிறுவப்பட்டது. தனியார் மற்றும் பொதுத்துறைகளை உள்ளடக்கிய SME மற்றும் MNC (சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள்) ஆகியவற்றிலிருந்து சுமார் 9000 உறுப்பினர்கள் உள்ளனர்.

Question 5.
தொழில்மயம் அழிதல் என்றால் என்ன?
விடை:
தொழில்மயம் அழிதல் :

  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியத் தொழிற்துறையானது வீழ்ச்சியின் காலத்தைச் சந்தித்தது.
  • பாரம்பரிய இந்திய கைவினைத் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் வருமானத்தின் வீழ்ச்சி ஆகியன தொழில்மயமழிதல் எனப்படுகிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
இந்தியத் தொழில்மயம் அழிதலுக்கு பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை எவ்வாறு காரணமானது?
விடை:
இந்திய தொழில்மயம் அழிதலுக்கு காரணமான பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை :
இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அனைத்து கொள்கைகளும் இந்திய உள்நாட்டு தொழில்களின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

கிழக்கிந்தியக் கம்பெனியால் பின்பற்றப்பட்ட தடையில்லா வாணிபக் கொள்கை, இந்திய வர்த்தகர்கள் தங்கள் கொருட்களை சந்தை விலைக்கு குறைவாக விற்க கட்டாயப்படுத்தியது. பல கைவினைஞர்கள் தங்கள் மூதாதையர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட கைவினைத் திறமைகளை கைவிடவும் கட்டாயப்படுத்தியது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் மலிவான விலையில் இந்திய தயாரிப்பு பொருட்களை பெருமளவுக்கு வாங்கி மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் லாபத்திற்கு விற்க வேண்டும் என்பதாகும். இது இந்திய பாரம்பரிய தொழில்களை வெகுவாக பாதித்தது.

இந்தியாவின் வர்த்தக நலன்களுக்கெதிரான பாதுகாப்பு கட்டணங்களின் கொள்கையை ஆங்கிலேயர்கள் பின்பற்றினர். பிரிட்டனில் இந்தியப் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்பட்டன. இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட ஆங்கிலப் பொருட்களுக்கு பெயரளவில் வரி விதிக்கப்பட்டன.

Question 2.
தோட்டத் தொழில்கள் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
தோட்டத் தொழில்கள் :
தோட்டத் தொழில் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டது. தோட்டத் தொழில் முதன் முதலில் ஐரோப்பியர்களை ஈர்த்தது. பெரிய அளவில் வேலைகளை வழங்க முடிந்தது. பிரிட்டிஷ் சமுதாயத்தால் அதிகரித்து வரும் தேநீர், காபி மற்றும் கருநீலச் சாயம் (இண்டிகோ) ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.

அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் 1839 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதே நேரத்தில் காபி தோட்டமும் தொடங்கப்பட்டது. தேயிலைத் தோட்டம் கிழக்கிந்தியப் பகுதிகளில் மிக முக்கியமான தொழிலாக இருந்தது போல காபி தோட்டமும் தென்னிந்தியாவின் நடவடிக்கைகளிள் மையமாக மாறியது.

மூன்றாவது முக்கிய தோட்டத் தொழிலான சணல் பல தொழிற்சாலைகள் உருவாக வழிவகுத்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஊழியர்கள் பலரால் இந்தத் தொழில்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன.

Question 3.
1991 ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு தொழிற்துறையின் வளர்ச்சியை விளக்குக.
விடை:
1991 சீர்திருத்தங்களுக்குப் பிறகு தொழிற்துறையின் வளர்ச்சி :

  • 1991 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. தொழிற் துறையின் செயல்திறனை மேம்படுத்த இந்தியா ஒரு முக்கியமான முடிவை எடுத்தது.
  • 10வது மற்றும் 11வது ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.
  • தொழிற்துறை உரிமத்தை ஒழித்தல், விலைக்கட்டுப்பாடுகளை நீக்குதல், சிறு தொழில்களுக்கான கொள்கைகளை நீர்த்து போகச் செய்தல் மற்றும் ஏகபோக சட்டத்தின் மாயயை ஒழித்தல் ஆகியவை இந்தியத் தொழிற்துறை செழிக்க உதவியது.
  • புதிய பொருளாதார கொள்கை வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறது.

VIII. உயர் சிந்தனை வினா

எவ்வாறு கைவினைப்பொருட்களும், இயந்திர தயாரிப்புப் பொருட்களும் வேறுபடுகின்றன.
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 2

X. செயல் திட்டம் மற்றும் செயல்பாடுகள்

Question 1.
உனது மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் பெயர்களை எழுதி வேளாண்மை தொழிற்சாலை மற்றும் வனப்பொருட்கள் தொழிற்சாலை ஆகியவைகளை வகைப்படுத்தவும்.
விடை:
தமிழக தொழிலகங்கள்
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 3

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 2.
தொழிலக முன்னேற்றத்தால் காற்று, நீர், நிலம் ஆகியவை எவ்வாறு மாசுபடுகிறது என்பதை திட்ட செயல்முறை மூலம் தயாரிக்கவும். (மாணவர்களுக்கானது)

Question 3.
விளக்க காட்சியின் மூலம் இந்தியாவில் தொழிலக வளர்ச்சியினால் ஏற்படும் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தவும். (மாணவர்களுக்கானது)

8th Social Science Guide இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
……………….. களின் காலகட்டத்தை தொழிற்துறையின் மீட்பு காலமாகக் கருதலாம்.
அ) 1960
ஆ) 1970
இ) 1980
ஈ) 1990
விடை:
இ) 1980

Question 2.
……………….. ஆம் ஆண்டில் ரயில்வேயின் நீளம் 2573 கி.மீ
அ) 1861
ஆ) 1886
இ) 1907
ஈ) 1914
விடை:
அ) 1861

Question 3.
………………. காரணமாக பருத்தி ஆலைகள் அதிகரித்தன.
அ) உப்பு சத்தியாக்கிரகம்
ஆ) அஹிம்சை இயக்கம்
இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஈ) சுதேசி இயக்கம்
விடை:
ஈ) சுதேசி இயக்கம்

Question 4.
முதல் முறையாக நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்ட இடம் …………….
அ) ஜாம்ஷெட்பூர்
ஆ) குல்டி
இ) பிலாய்
ஈ) டாடாநகர்
விடை:
ஆ) குல்டி

Question 5.
………………………. ஆலைகள் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு சொந்தமானவையாக இருந்தன.
அ) சணல்
ஆ) பருத்தி
இ) நெசவு
ஈ) அரிசி
விடை:
அ) சணல்

Question 6.
……………………… நடுப்பகுதியில் இந்தியாவில் தொழில்மயமாக்கலின் செயல்பாடு தொடங்கியது.
அ) 18ம் நூற்றாண்டின்
ஆ) 17ம் நூற்றாண்டின்
இ) 19ம் நூற்றாண்டின்
ஈ) 16ம் நூற்றாண்டின்
விடை:
இ) 19ம் நூற்றாண்டின்

Question 7.
…………………….. ஆட்சி இந்தியாவை தங்கள் தயாரிப்பு பொருட்களுக்கான சந்தையாக மாற்றியது
அ) பிரிட்டிஷ்
ஆ) பிரெஞ்சு
இ) ஜப்பானிய
ஈ) சீன
விடை:
அ) பிரிட்டிஷ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மணி தயாரிக்கப்படும் உலோகமான …………. சௌராஷ்டிரா பெயர் பெற்றது
விடை:
வெண்கலம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 2.
இந்தியாவின் பழமையான தொழில் ………………….. தொழிலாகும்
விடை:
நெசவு

Question 3.
கிழக்கிந்தியக் கம்பெனியால் பின்பற்றப்பட்ட கொள்கை ………. கொள்கை
விடை:
தடையில்லா வாணிபக்

Question 4.
இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ஆங்கிலேய பொருட்களுக்கு ………………. மட்டுமே வரி விதிக்கப்பட்டன.
விடை:
பெயரளவில்

Question 5.
19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியத் தொழிற்துறையானது ……………… ச் சந்தித்தது.
விடை:
வீழ்ச்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 4

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
மூன்றாவது முக்கிய தோட்டத் தொழிலான சணல் பல தொழிற்சாலைகள் உருவாக வழிவகுத்தது.
விடை:
சரி

Question 2.
பருத்தி ஆலைகள் பம்பாய் மற்றும் அகமதாபாத்தில் ஏற்படுத்தப்பட்டன.
விடை:
சரி

Question 3.
சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இங்கிலாந்துக்குமான தூரத்தைக் குறைத்தது
விடை:
தவறு

Question 4.
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு ஓர் அரசு சார்பு சங்கம்
விடை:
தவறு

Question 5.
2001 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
விடை:
தவறு

V. சரியான கூற்றை கண்டுபிடி.

Question 1.
பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்து குறியிடவும் :
i) இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஒரு சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளன.
ii) கைவினைப் பொருட்கள் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்தன.
iii) இந்தியக் கிராமங்களில் கைவினைத் தொழில் முதல் பெரிய வேலைவாய்ப்பாக இருந்தது.
iv) மஸ்லின் ஆடைகளுக்கு டாக்கா புகழ்பெற்றது.

அ) i மற்றும் ii சரி
ஆ) ii மற்றும் iii சரி
இ) i, ii மற்றும் iv சரி
ஈ) i, iii மற்றும் iv சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iv சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 2.
கூற்று : தோட்டத் தொழில் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டது.
காரணம் : தோட்டத் தொழில் பெரிய அளவில் வேலைகளை வழங்க முடிந்தது மேலும் அதிகரித்து வரும் தேநீர், காபி ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்.
ஆ) கூற்று சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்றும் காரணமும் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்

Question 3.
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?
அ) பெர்னியர் – ஷாஜஹான்
ஆ) டவேர்னியர் – பிரெஞ்சு நாட்டு பயணி
இ) பாலிகன்ஜ் – முதல் காகித ஆலை
ஈ) நௌரோஜி – இரும்பு மற்றும் எஃகு
விடை:
ஈ) நௌரோஜி – இரும்பு மற்றும் எஃகு

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
உலகப் புகழ் பெற்ற “டாக்கா மஸ்லின்” குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
டாக்கா மஸ்லின் :

  • கி.மு. 2000 ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் மிகச் சிறந்த தரம் வாய்ந்த இந்திய மஸ்லின் ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • 50 மீட்டர் அளவு கொண்ட மெல்லிய இந்த மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடாலம்.

Question 2.
தொழிலகங்களை வகைப்படுத்துக.
விடை:
தொழிலக வகைப்பாடு :

  • மூலப்பொருட்களின் அடிப்படை – வேளாண் அடிப்படை – கனிம அடிப்படை
  • பங்களிப்பின் அடிப்படை – அடிப்படை தொழில்கள் – முக்கிய தொழில்கள்
  • தொழில் உரிமத்தின் அடிப்படை – பொதுத்துறை – தனியார் துறை – கூட்டுறவுத் துறை

Question 3.
‘நாம் தற்சார்பை அடைந்துள்ளோம்’ – நிறுவுக.
விடை:
தற்சார்புடைமை :

  • தற்சார்பு இலக்கை அடைந்திருப்பது தொழிற்துறை வளர்ச்சியின் மற்றொரு சாதகமான அம்சமாகும்.
  • இயந்திரங்கள், ஆலைகள் மற்றும் இதர தளவாடங்கள் உற்பத்தியில் நாம் தற்சார்பினை அடைந்துள்ளோம். தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான தளவாடங்களின் பெரும்பகுதி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

Question 4.
1950 – 1965 காலகட்டத்தில் இந்தியாவின் தொழில் வளர்ச்சி குறித்து எழுதுக.
விடை:
தொழில்துறை வளர்ச்சி (1950 – 1965) :
இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான நுகர்வோர் பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டன. தொழிற்துறை பலவீனமான உள்கட்டமைப்புடன் வளர்ச்சியடையாமல் இருந்தது.

மலதனம் பொருட்களின் வளர்ச்சியில் இக்காலகட்டம் கவனம் செலுத்தியது. இதன் விளைவாக உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஒரு துரிதமான வளர்ச்சியைக் கண்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 5.
நவீன தொழிலகங்களின் தொடக்கம் குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
நவீன தொழிலகங்களின் தொடக்கம் :

  • நவீன தொழிலகங்களின் தொடக்கம் முக்கியமாக சணல், பருத்தி, எஃகு தொழில்களின் வளர்ச்சியுடன் தொடர்புடையது.
  • நிலக்கரி சுரங்கத் தொழில் வளர்ச்சி குறிப்பிட்ட அளவில்தான் இருந்தது.
  • ரயில்வே மற்றும் சாலைகளின் வளர்ச்சி வேகப்படுத்தப்பட்ட பின் தொழில் மயமாக்கல் தொடங்கியது.
  • உலகப்போர்களுக்குப்பின் இரசாயனம், இரும்பு மற்றும் எஃகு சர்க்கரை, சிமெண்ட், கண்ணாடி மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற தொழில்கள் உத்வேகம் பெற்றன.

VII. பின்வருவனவற்றிற்கு விரிவான விடையளி

Question 1.
இந்தியாவில் பிரிட்டிஷாரின் வெற்றியானது எவ்வாறு சுயச்சார்புடன் இருந்த இந்திய பொருளாதாரத்தை காலனித்துவ பொருளாதாரமாக மாற்றியது?
விடை:
இந்தியப் பொருளாதாரம் (சுயச்சார்பு) காலனித்துவ பொருளாதாரமாக மாறுதல் :

பூர்வீக ஆட்சியாளர்கள், உயர் குடியினர் மற்றும் நிலக்கிழார்கள் இந்திய நிலப்பகுதிகளை பிரிட்டிஷார் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றி கொண்டதால் தங்கள் அதிகாரத்தையும் செல்வ வளத்தையும் இழந்தனர்.

அரசவையில் நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்ட பொருட்களை காட்சிப்படுத்துவதும் பிற சடங்கு சம்பிரதாயங்களும் மறைந்தன. இதனால் பூர்வீக ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்ட கைவினைஞர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்து ஏழைகளாயினர்.

பல தலைமுறைகளாக தங்கள் கைவினைத் தொழிலை மட்டுமே மேற்கொண்ட இந்திய கைவினைஞர்கள் மற்ற தொழில்களுக்கான திறமைகளை கொண்டிருக்கவில்லை. எனவே அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வயல்வெளிகளில் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.

விவசாயத்தின் மீது இம்மாற்றம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது. தகுதிக்கேற்ற வேலையின்மை அதிக அளவில் விவசாயத் தொழிலில் ஏற்பட்டது.

விவசாயமும் வணிகப் பயிர்களுக்கு மாறியதால் இந்திய வேளாண்சார்ந்த தொழிலகங்கள் அழிவை நோக்கிச் சென்றன.

பல்வேறு பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் செல்வாக்கு பரவியதால் உள்நாட்டு கைத்தொழில்களின் சிறப்பான காலம் முடிவுக்கு வந்தது. ‘நவீன தொழிலகங்களின் வளர்ச்சி குறித்து எழுதுக.

Question 2.
நவீன தொழிலகங்களின் வளர்ச்சி :
விடை:
2573 கி.மீ ஆக 1861 ல் இருந்த ரயில்வேயின் நீளம் 55,773 கி.மீ ஆக 1914ல் அதிகரித்தது.

சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தை சுமார் 4830 கி.மீ தூ ரமாக குறைத்தது. இது இந்தியாவின் தொழில்மயமாக்கலுக்கு மேலும் உதவியது.

சுதேசி இயக்கத்தின் விளைவாக பருத்தி ஆலைகள் 194 லிருந்து 273 ஆகவும் சணல் ஆலைகள் 36லிருந்து 64 ஆகவும் அதிகரித்தன.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் அதிகாரத்தைப் பலப்படுத்தி ஏராளமான தொழில் முனைவோர்களையும் வெளிநாட்டு மூலதனத்தையும் (குறிப்பாக இங்கிலாந்து) ஈர்த்தனர். அதிக லாபம் ஈட்டும் இந்திய தொழிற்துறைகள் அந்நிய முதலாளிகளை கவர்ந்திழுத்தது.

வேலையாட்களும் மூலப்பொருட்களும் மிகவும் மலிவு. இந்தியாவும் அண்டை நாடுகளும் சந்தையை வழங்க தயாராக இருந்தன.

Question 3.
1956 ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தின்படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?
விடை:
தொழிற்துறை வகைகள் : 1956 தொழில்துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழிற்துறை மூன்று பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அட்டவணை – 1

  • அரசாங்கம் மட்டுமே இவ்வகையான தொழிற்துறைகளை நிர்வகிக்கும்.
  • அணுசக்தி, மின்னணு, இரும்பு மற்றும் எஃகு ஆகியன அவற்றுள் சில.

அட்டவணை – 2
சாலைகள் மற்றும் கடல்போக்குவரத்து, இயந்திரக் கருவிகள், அலுமினியம், நெகி ழி மற்றும் உரங்கள் உள்ளிட்ட ரசாயனங்கள், இரும்பு கலவை மற்றும் குறிப்பிட்ட வகையான சுரங்கங்கள் ஆகியவை அடங்கும்.

அட்டவணை – 3
மீதமுள்ள தொழில்கள் மற்றும் தனியாருக்கு விடப்பட்ட துறைகள் ஆகியன இவ்வகையின் கீழ் அடங்கும்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 5

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

8th Social Science Guide இந்தியாவில் கல்வி வளர்ச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
வேதம் என்ற சொல் ____________ லிருந்து வந்தது.
அ) சமஸ்கிருதம்
ஆ) இலத்தீன்
இ) பிராகிருதம்
ஈ) பாலி
விடை:
அ) சமஸ்கிருதம்

Question 2.
பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?
அ) குருகுலம்
ஆ) விகாரங்கள்
இ) பள்ளிகள்
ஈ) இவையனைத்தும்
விடை:
ஈ) இவையனைத்தும்

Question 3.
இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
அ) உத்திரப்பிரதேசம்
ஆ) மகாராஷ்டிரம்
இ) பீகார்
ஈ) பஞ்சாப்
விடை:
இ) பீகார்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 4.
தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?
அ) 1970
ஆ) 1975
இ) 1980
ஈ) 1985
விடை:
இ) 1980

Question 5.
இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?
அ) இங்கிலாந்து
ஆ) டென்மார்க்
இ) பீகார்
ஈ) போர்ச்சுக்கல்
விடை:
ஈ) போர்ச்சுக்கல்

Question 6.
இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினைச் செய்த பட்டய சட்டம் எது?
அ) 1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம்
ஆ) 1833 ஆம் ஆண்டு பட்டய சட்டம்
இ) 1853 ஆம் ஆண்டு பட்டய சட்டம்
ஈ) 1858 ஆம் ஆண்டுச் சட்டம்
விடை:
அ) 1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

Question 7.
பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?
அ) சார்ஜண்ட் அறிக்கை , 1944
ஆ) இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948
இ) கோத்தாரி கல்விக்குழு, 1964
ஈ) தேசியக் கல்விக் கொள்கை, 1968
விடை:
ஆ) இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

Question 8.
இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
அ) 1992
ஆ) 2009
இ) 1986
ஈ) 1968
விடை:
இ) 1986

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வேதம் என்ற சொல்லின் பொருள் ……………..
விடை:
அறிவு

Question 2.
தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர் ………….
விடை:
அலெக்சாண்டர் கன்னிங்காம்

Question 3.
டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் ………… ஆவார்,
விடை:
(இல்துத்மிஷ்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 4.
புதிய கல்விக் கொள்கை திருத்தப்பட்ட ஆண்டு ……………
விடை:
1992

Question 5.
2009ஆம் ஆண்டு இலவசக் கட்டாய கல்வி சட்டத்தின் விதிகளை அமல்படுத்துகின்ற முதன்மையான அமைப்பு ………….. ஆகும்.
விடை:
அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)

Question 6.
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு …………
விடை:
1956

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் குறிப்புகள் மருத்துவத்தைக் கற்றுக்கொள்ள ஆதாரங்களாக இருந்தன.
விடை:
சரி

Question 2.
கோயில்கள் கற்றல் மையங்களாக திகழ்ந்ததோடு அறிவைப் பெருக்கிகொள்ளும் இடமாகவும் இருந்தது.
விடை:
சரி

Question 3.
கல்வியை ஊக்குவிப்பதில் அரசர்களும், சமூகமும் தீவிர அக்கறை காட்டியதாக ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன.
விடை:
சரி

Question 4.
இடைக்கால இந்தியாவில் பெண் கல்வி நடைமுறையில் இல்லை.
விடை:
தவறு

Question 5.
RMSA திட்டமானது பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது.
விடை:
தவறு

V. பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.

Question 1.
i) நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி. (பொ.ஆ) ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.
ii) பண்டைய இந்தியாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் பாடத்திட்டத்தினை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்கள் முழுமையான சுயாட்சி கொண்டிருந்தனர்.
iii) பண்டைய காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.
iv) சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கல்லூரியாக காந்தளூர் சாலை இருந்தது.

அ) 1 மற்றும் ii சரி
ஆ) ii மற்றும் iv சரி
இ) iii மற்றும் iv சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iii சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 2.
சரியான இணையைக் கண்டுபிடி.
அ) மக்தப்கள் – இடைநிலைப் பள்ளி
ஆ) 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக் கல்வி
இ) கரும்பலகைத் திட்டம் – இடைநிலைக் கல்வி குழு
ஈ) சாலபோகம் – கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்
விடை:
ஆ) 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக் கல்வி

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
குருகுலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.
விடை:
குருகுலத்தின் முக்கியத்துவம் :

  • குருகுலங்களில் கற்பித்தல் வாய் வழியாகவே இருந்தது. கற்பிக்கப்பட்டவைகளை மாணவர்கள் நினைவிலும் ஆழ்சிந்தனையிலும் வைத்திருந்தனர்.
  • பல குருகுலங்கள் முனிவர்களின் பெயரர்லேயே அழைக்கப்பட்டன.
  • நூற்றுக்கணக்கான மாணவர்கள் காட்டில் அமைதியான சூழலில் அமைந்த குருகுலங்களில், ஒன்றாகத் தங்கி கற்றுக் கொண்டனர்.
  • குருவின் குடும்பமானது வீட்டுப்பள்ளி (அல்லது) ஆசிரமமாக செயல்பட்டது. தன்னைச் சுற்றி இருந்த மாணவர்களுக்கு குருவால் கல்வி வழங்கப்பட்டது. மாணவர்கள் குடும்ப உறுப்பினர் போல் வந்து தங்கி கல்வி பயின்றனர்.

Question 2.
பண்டைய இந்தியாவில் உருவான மிகவும் குறிப்பிடத்தக்க பல்கலைக்கழகங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
பண்டைய இந்தியாவில் உருவான புகழ்மிகு பல்கலைக் கழகங்கள் :

  • தட்சசீலம்
  • நாளந்தா வல்லபி
  • விக்கிரம சீலா
  • ஓடண்டாபுரி
  • ஜகத்தாலா

Question 3.
தட்சசீலம் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
விடை:
தட்சசீலம் :

  • தட்சசீலம் பண்டைய இந்திய நகரமாக இருந்தது. தற்போது இது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது.
  • உலக பாரம்பரியத் தளமாக 1980 ல் யுனெஸ்கோ அறிவித்த இப்பகுதி ஒரு முக்கியமான தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதி.
  • சாணக்கியர் இப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து தனது அர்த்தசாஸ்திரத்தை தொகுத்தார்.
  • அலெக்சாண்டர் கன்னிங்காம் (தொல்பொருள் ஆராய்ச்சியாளர்) 19ம் நூற்றாண்டின் மத்தியில் பல்கலைக்கழக இடிபாடுகளை கண்டுபிடித்தார்.

Question 4.
சோழர் காலத்தில் தழைத்தோங்கிய கல்வி நிலையங்களை குறிப்பிடுக.
விடை:
சோழர் காலத்தில் தழைத்தோங்கிய கல்வி நிலையங்கள் :

  • இராஜராஜன் சதுர்வேதி மங்கலம் புகழ்பெற்ற வேதக் கல்லூரியின் இருப்பிடம் (எண்ணாயிரம் – முந்தைய தென்னாற்காடு மாவட்டம்).
  • திருபுவனையில் செழித்தோங்கிய வேதக்கல்லூரி (பாண்டிச்சேரி).
  • திருவிடைக்காளை கல்வெட்டு குறிப்பிடும் நூலகம்.
  • திருவாடுதுறைக் கல்வெட்டு குறிப்பிடும் (வீரராஜேந்திரன்) மருத்துவப் பள்ளி.

Question 5.
SSA மற்றும் RMSA விரிவாக்கம் தருக.
விடை:
SSA மற்றும் RMSA விரிவாக்கம் :

  • SSA – அனைவருக்கும் கல்வி இயக்கம்.
  • RMSA -அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம். வரலாறு –

Question 6.
கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) பற்றி நீவிர் அறிவதென்ன?
விடை:
கல்வி பெறும் உரிமைச் சட்டம் (RTE) :
கல்வி உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் குழந்தைகளின் உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE – 2009) சட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக தற்போது செயல்படுகிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
பண்டையகால இந்தியாவின் கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் யாவை?
விடை:
பண்டையகால இந்தியக்கல்வி பற்றி அறிய உதவும் ஆதாரங்கள்.

  • நமது பண்டைய கல்வி முறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவானது.
  • பாணினி, ஆர்யபட்டா, காத்யாயனா, பதாஞ்சலி ஆகியோரின் எழுத்துக்களும் சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் மருத்துவ குறிப்புகளும் கற்றலுக்கான ஆதாரங்களாக இருந்தன.
  • வரலாறு, தர்க்கம், பொருள் விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம், வர்த்தகம், வணிகம், கால்நடை வளர்ப்பு, வில்வித்தை போன்ற பல்வேறு துறைகள் கற்பிக்கப்பட்டன.
  • ஒரு முக்கியமான பாடத்திட்டமாக உடற்கல்வியும் இருந்தது. மாணவர்கள் குழு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்களில் பங்கேற்றனர்.
  • குருவும் அவரது மாணவர்களும் கற்றலின் அனைத்து அம்சங்களிலும் வல்லுநராவதற்கு இணைந்து பணியாற்றினர்.
  • மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்கு இலக்கிய விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கற்றலில் மேம்பட்ட நிலையில் உள்ள மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 2.
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கல்வி பற்றி ஒரு பத்தி எழுதுக.
விடை:
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கல்வி :
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் கல்வியை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம்.

ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கம் முதல் 1813 வரையிலான காலம் :

  • ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி கல்வியில் அலட்சியம் மற்றும் குறுக்கீடு இன்மை என்ற கொள்கையைப் பின்பற்றியது.
  • கம்பெனியின் 1813 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக் குறைந்த அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது.
  • சமயப்பரப்புக் குழு அல்லாதவர்களான இராஜா ராம்மோகன்ராய் (வங்காளம்), பச்சையப்பர் (மதராஸ்), பிரேசர் (டெல்லி) போன்றோர் கல்விக்காக தங்கள் பங்களிப்பைச் செய்தனர்.

1813 முதல் 1853 வரையிலான.
கல்விக் கொள்கை, பயிற்றுமொழி, கல்வியைப் பரப்பும் முறை ஆகியன கருத்து வேறுபாடுகள் கொண்ட பிரச்சனைகள்.

கீழ்த்திசை வாதிகள் கீழ்த்திசை மொழிகளைப் பாதுகாக்கவும், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளை பயிற்று மொழியாக்கவும் விரும்பினர். ஆங்கிலச் சார்பு கோட்பாட்டு வாதிகள் கீழ்த்திசை வாதிகள் கொள்கைகளை எதிர்த்து ஆங்கில மொழி மூலம் மேற்கத்திய அறிவை பரப்புவதை ஆதரித்தனர். மூன்றாவது பிரிவினர் பயிற்று மொழியாக இந்திய மொழிகளை பயன்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர்கள்.

1835 ன் மெக்காலே – வின் குறிப்பினால் இந்த கருத்து வேறுபாடுகள் ஓய்ந்தன.

1854 முதல் 1920 வரையிலான காலம் :

  • ஆங்கிலேயரின் செல்வாக்கு மிக்க கல்வியின், அகில இந்தியக் கல்விக் கொள்கையின் காலம் என இக்காலம் அழைக்கப்படுகிறது.
  • இது 1854 ம் ஆண்டு சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கையுடன் தொடங்குகிறது. (ஆங்கிலக் கல்வியின் மகா சாசனம்)

1921 முதல் 1947 வரையிலான காலம் :

  • இக்காலக்கட்டம் மாகாணங்களின் சுயாட்சிக் காலமாகும்.
  • நாடு முழுவதும் கல்வியின் முன்னேற்றத்திற்கான புதிய சகாப்தத்தை 1935ம் ஆண்டு சட்டம் உருவாக்கியது. இது மாகாணங்களின் அமைச்சர்களின் நிலையை வலுப்படுத்தியது.
  • இரண்டாம் உலகப்போருக்குப் பின் சார்ஜண்ட் அறிக்கை (1944) தயாரிக்கப்பட்டது. இது சமகால கல்வியின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Question 3.
தேசியக் கல்விக் கொள்கை பற்றி விவரி.
விடை:
விடுதலைக்குப் பின், 1968ம் ஆண்டின் முதல் தேசியக் கல்விக் கொள்கையானது இந்தியக் கல்வி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இது தேச முன்னேற்றத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டது.

இந்திய அரசு 1986ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையினை அறிமுகப்படுத்தியது. இதன் நோக்கம் ஒரு நிலையான சமுதாயத்தை மேம்பாட்டுடன் கூடிய துடிப்பான சமுதாயமாக மாற்றுவதாகும்.

இப்புதிய கல்விக் கொள்கை நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்கான சம வாய்ப்புகள் மற்றும் உதவித் தொகைகள், வயது வந்தோர் கல்வி, திறந்த நிலைப் பல்கலைக் கழகங்கள் மூலம் இந்தியாவில் ஏற்றத் தாழ்வுகளை நீக்குதலை வலியுறுத்தியது.

தொடக்கக் கல்வியில் குழந்தைகளை மையமாகக் கொண்ட அணுகு முறைக்கு அழைப்பு விடுத்ததுடன், கரும்பலகைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.

1992ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையானது மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. இடைநிலைக் கல்வி நிலையில் மதிப்பீட்டு முறைகளை ஒழுங்குப்படுத்துதல், தேசியக் கலைத்திட்டத்தை வடிவமைத்தல், பணியிடைக் கல்வி, வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தியது.

Question 4.
சோழர் காலத்தில் கல்வியின் நிலையைப் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
சோழர்களின் காலத்தில் தமிழ் வழிக் கல்வியானது கோயில் மற்றும் சமயத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. மக்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது.

கலைத்திட்டமும் பாடத்திட்டமும் தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டிருந்தது.

சோழர்கால கல்வெட்டுக்களிலிருந்து ஆசிரியர்களின் தகுதிகள், கற்பித்தல் முறைகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் பள்ளிகளுக்கு அளித்த நிலங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது..

இராஜராஜன் சதுர்வேதி மங்கலம் புகழ்பெற்ற வேதக் கல்லூரியின் இருப்பிடம் (எண்ணாயிரம்

முந்தைய தென்னாற்காடு மாவட்டம்) – திருபுவனையில் செழித்தோங்கிய வேதக்கல்லூரி (பாண்டிச்சேரி) – திருவிடைக்காளை கல்வெட்டு குறிப்பிடும் நூலகம். – திருவாடுதுறைக் கல்வெட்டு குறிப்பிடும் (வீரராஜேந்திரன்) மருத்துவப் பள்ளி.

VIII. உயர் சிந்தனை வினா

பொது தொடக்கக் கல்வியில் முதன்மைத் திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்கம் எவ்வாறு இலக்கை அடைந்துள்ளது?
விடை:
பொது தொடக்கக் கல்வியில் முதன்மைத் திட்டமான அனைவருக்கும் கல்வி இயக்கம் அடைந்தள்ள இலக்கு :

அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வியைப் பெறுவதற்காக 2000 – 01 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும்.

குழந்தைகளின் உரிமையான இலவச மற்றும் கட்டாய கல்வி (RTE – 2009) சட்ட விதிகளை அமுல்படுத்துவதற்கான முதன்மை அமைப்பாக இது தற்போது செயல்பட்டு வருகிறது.

கல்வி உரிமைச் சட்டமானது (RTE) 6 முதல் 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்க வழி செய்கிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) பள்ளிகள் தொடர்பான பல்வேறு வகையான புதுமைகளையும், செயல்பாடுகளையும் துவக்கி வைத்துள்ளது.

மதிய உணவு வழங்குதல், மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல், பள்ளி மேலாண்மைக் குழு அமைத்தல், வகுப்பறைக்கான கற்றல் – கற்பித்தல் உபகரணங்களை வழங்குதல் ஆகியன சில முக்கிய செயல்பாடுகளாகும்.

X. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பண்டைக்காலக் கல்வி மையங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு ஒன்றினை தயார் செய்க.

Question 2.
நாளந்தா, தட்சசீலம் ஆகிய இடங்களின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கண்டுபிடித்து அதற்கு விளக்கக் காட்சி (Powerpoint) தயார் செய்க.

8th Social Science Guide இந்தியாவில் கல்வி வளர்ச்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
காந்தியடிகளின் அடிப்படைக் கல்வித் திட்டத்தின் அச்சாணி __________
அ) இந்தியக் கருத்தியல்
ஆ) கலாச்சாரம்
இ) அகிம்சை
ஈ) மேற்கத்திய அறிவு
விடை:
இ) அகிம்சை

Question 2.
__________ ல் இந்திய அரசு கோத்தாரி கல்விக் குழுவை நியமித்தது.
அ) 1964
ஆ) 1968
இ) 1972
ஈ) 1974
விடை:
அ) 1964

Question 3.
1976 ஆம் ஆண்டு டிசம்பர் வரை கல்வித்துறை ___________ பட்டியலில் இருந்தது.
அ) பொது
ஆ) மாநில
இ) மத்திய
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) மாநில

Question 4.
கல்வி உரிமைச் சட்டம் ___________ அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வியை வழங்க வழி செய்கிறது.
அ) 2005
ஆ) 2006
இ) 2008
ஈ) 2009
விடை:
ஈ) 2009

Question 5.
_________ பல்கலைக்கழகம் ஆங்கில ஆட்சியின் போது தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகம்.
அ) பாரதியார்
ஆ) அண்ணாமலை
இ) சென்னை
ஈ) மதுரை காமராஜர்
விடை:
இ) சென்னை

Question 6. 1964-65ல் இடைநிலைக் கல்வி அளவில் ___________ அறிமுகப்படுத்தப்பட்டது.
அ) இலவசக்கல்வி
ஆ) மேற்கத்திய கல்வி
இ) மதச்சார்பு கல்வி
ஈ) சமஸ்கிருதகல்வி
விடை:
அ) இலவசக்கல்வி

Question 7.
_____________ ல் தொடங்கப்பட்ட கல்லூரியில் முதலில் பட்டங்கள் வழங்கப்பட்டன.
அ) பம்பாய்
ஆ) கொச்சி
இ) கல்கத்தா
ஈ) கோவா
விடை:
ஈ) கோவா

Question 8.
____________ இந்தியாவில் பெண்கல்வி பரவலாகக் காணப்பட்டது.
அ) பண்டைய கால
ஆ) இடைக்கால
இ) ஆங்கிலேயர்
ஈ) நவீன கால
விடை:
ஆ) இடைக்கால

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பண்டைய இந்தியாவில் …………. மற்றும் ……………… கல்வி இரண்டுமே இருந்தன.
விடை:
முறைசாரா, முறையான

Question 2.
குருவின் குடும்பமானது வீட்டுப்பள்ளி அல்லது ……………. செயல்பட்டது.
விடை:
ஆசிரமமாக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 3.
ஜாதகக் கதைகள் தந்த அறிஞர்கள் ……………….. மற்றும் …………………
விடை:
யுவான்சுவாங், இட்சிங்

Question 4.
இடைக்கால இந்தியாவில் கல்விமுறையானது …………. கட்டுப்பாட்டில் இருந்தது.
விடை:
உலேமா

Question 5.
…………………. கொச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார்.
விடை:
பிரான்சிஸ் சேவியர்

Question 6.
1813 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் இந்தியாவில் கல்வியை மேம்படுத்த ஆண்டு தோறும் ……………… தொகையை வழங்க ஏற்பாடு செய்தது.
விடை:
ஒரு இலட்சம் ரூபாய்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி 2

IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
பண்டைய இந்தியாவில் முறையான மற்றும் முறைசாரா கல்வி இரண்டுமே இருந்தன.
விடை:
சரி

Question 2.
பண்டைய இந்திய நகரமான தட்சசீலம் தற்போது பங்களாதேஷில் உள்ளது.
விடை:
தவறு

Question 3.
இந்தியத் துணைக்கண்டத்தில் இஸ்லாமிய கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம் இடைக்காலம் ஒரு மாற்றத்தைக் கண்டது.
விடை:
சரி

Question 4.
இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர் ஆங்கிலேயர்களாவர்.
விடை:
தவறு

Question 5.
1929ல் உலகளாவிய பெருமந்தம் ஏற்பட்டது
விடை:
சரி

Question 6.
சமக்ர சிக்ஷாவானது SSA மற்றும் RMSA ஆகிய திட்டங்களை உள்ளடக்கியது.
விடை:
சரி

V. பின்வருவனவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடு.

Question 1.
i) கம்பெனியின் 1813 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது.
ii) கீழ்த்திசை வாதிகள் ஆங்கிலசார்பு கோட்பாட்டு வாதிகளால் எதிர்க்கப்பட்டனர்.
iii) மெக்காலேவின் குறிப்பினால் ஒவ்வொரு மாகாணமும் அதற்கேற்ற கல்விக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிக்கப்படவில்லை .
iv) 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மாகாண கல்வி அமைச்சர்களின் நிலையை பலவீனப்படுத்தியது.

அ) 1 மற்றும் ii சரி
ஆ) ii மற்றும் iv சரி
இ) iii மற்றும் iv சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
அ) i மற்றும் ii சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 2.
தவறான இணையை கண்டுபிடி.
அ) பட்டயச் சட்டம் – 1831
ஆ) மெக்காலேவின் குறிப்பு – 1835
இ) உடல்கல்வி அறிக்கை – 1854
ஈ) சார்ஜண்ட் அறிக்கை – 1944
விடை:
அ) பட்டயச் சட்டம் – 1831

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
கல்வி என்றால் என்ன?
விடை:
கல்வி :
கல்வி என்பது அறிவு, திறன்கள் மற்றும் மதிப்புகளைப் பெறுதலும், பகிர்தலுமான ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.

கல்வி ஒரு முற்போக்கான சமுதாயத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.

Question 2.
பண்டைய நமது கல்வி முறை வலியுறுத்திய மதிப்பீடுகள் யாவை?
விடை:
வலியுறுத்தப்பட்ட மதிப்பீடுகள் :

  • பணிவு உண்மை
  • ஒழுக்கம்
  • சுயச்சார்பு
  • அனைத்து படைப்புகளின் மீதும் மரியாதை

Question 3.
இந்தியாவில் உயர்கல்வி கற்றுக் கொள்வதற்காக மடாலயங்களுக்கும் விகாரங்களுக்கும் எந்தெந்த நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்தனர்?
விடை:
உயர்கல்வி பெற வந்த வெளிநாட்டு மாணவர்கள் :

  • சீனா
  • கொரியா
  • திபெத்
  • பர்மா
  • சிலோன்
  • ஜாவா
  • நேபாளம்

Question 4.
பண்டையக் கல்வி முறையில் ஆசிரியரின் பங்கு என்ன?
விடை:
பண்டையக் கல்வி முறையில் ஆசிரியரின் பங்கு :

  • அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. (மாணவர் தேர்வு முதல் பாடத்திட்ட வடிவமைப்பு வரை)
  • மாணவர் திறனில் ஆசிரியர் திருப்தியடையும் போது மாணவர் கல்வி நிறைவடைந்ததாக கருதப்பட்டது.
  • விவாதங்கள் மற்றும் கலந்தாலோசித்தல் ஆகியன கற்பித்தலின் அடிப்படை வழிமுறைகள்.
  • மாணவர் கற்றல் ஆர்வத்திற்கேற்ப போதித்தார். அவர் விருப்பத்திற்கேற்ப மாணவர்களைச் சேர்த்துக் கொண்டார்.

Question 5.
இந்திய இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கிடையே சிறந்த தொடர்பு இருந்ததால் மேம்பாடு அடைந்த துறைகளைப் பெயரிடு.
விடை:
மேம்பாடடைந்த துறைகள் :

  • இறையியல் சமயம்
  • தத்துவம், நுண்கலை
  • ஓவியம்
  • கட்டடக்கலை
  • கணிதம், மருத்துவம்
  • வானியல்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 6.
“மெக்காலே – வின் குறிப்பு ” குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
மெக்காலே குறிப்புகள் :

  • ஆங்கிலக் கல்வியின் இரண்டாம் கட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவை 1935 ஆம் ஆண்டின் மெக்காலே குறிப்பினால் ஓரளவு ஓய்ந்தது.
  • உயர்கல்வியில் ஆங்கிலக் கல்வியானது உயர்வகுப்பினருக்காக ஊக்கப்படுத்தப்பட்டது.
  • ஒவ்வொரு மாகாணமும் அதற்கேற்ற கல்விக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டன.
  • 1854ல் சர் சார்லஸ் வுட் அறிக்கை தொடங்கும் வரை இந்த கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
பண்டைய இந்தியாவின் கற்றலுக்கான ஆதாரங்களை விவரி.
விடை:
பண்டைய இந்தியாவின் கற்றலுக்கான ஆதாரங்கள் :

  • பாணினி ஆர்யபட்டா, காத்யாயனா, பதாஞ்சலி ஆகியோரின் எழுத்துக்களும் சரகர், சுஸ்ருதர் ஆகியோரின் மருத்துவ குறிப்புகளும் கற்றலுக்கான ஆதாரங்கள்.
  • வரலாறு, தர்க்கம், பொருள் விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம், வர்த்தகம், வணிகம், கால்நடை வளர்ப்பு மற்றும் வில்வித்தை போன்ற பல்வேறு துறைகள் கற்பிக்கப்பட்டன.
  • உடற்கல்வியும் ஒரு முக்கியமான பாடத்திட்டமாக இருந்தது. மாணவர்கள் குழு விளையாட்டு மற்றும் பொழுது போக்கு செயல்பாடுகளில் பங்கேற்றனர்.
  • மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்காக இலக்கிய விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கற்றலில் மேம்பட்ட மாணவர் இளைய மாணவர்களுக்கு வழிகாட்டினர்.
  • கற்றலின் அனைத்து அம்சங்களிலும் வல்லுநராவதற்கு குருக்களும் அவரது மாணவர்களும் இணைந்து பணியாற்றினர்.

Question 2.
நவீன கல்வி முறையில் கிறித்துவ சமயப் பரப்புக் குழுவின் பங்கு குறித்து எழுதுக.
விடை:
நவீன கல்வி முறை – கிறித்துவ சமயப் பரப்புக் குழுவின் பங்கு :

  • ஐரோப்பியர்கள் நிலங்களைப் பெற்று கோட்டைகளைக்கட்டிய பின்னர் தங்கள் கலாச்சாரத்தையும், சமயத்தையும் இந்திய மக்களிடையே பரப்ப விரும்பினர்.
  • மக்களுக்கேற்றவாறு கல்வி நிலையங்களைத் தொடங்கி கல்வி வழங்கினால் தான் நிர்வாகத்தையும் சமய கருத்துக்களையும் நன்கு புரிந்து கொள்வார்கள் என்று கருதினார்கள்.
  • போர்ச்சுகீசியர்கள் :
    • இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர்.
    • பிரான்சிஸ் சேவியர் (இயேசு சங்கம்) கொச்சியில் ஒரு பல்கலைக் கழகத்தை தொடங்கினார்.
    • பட்டங்கள் வழங்கிய முதல் கல்லூரி கோவாவில் உள்ளது (1575)
    • ஜான் கிர்ளாண்டர் கிறித்தவர் அல்லாத குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்திய முன்னோடி.
    • தரங்கம்பாடியில், 1812ல் டாக்டர் C.S.ஜான் 20 இலவச பள்ளிகளை நிறுவினார்.
  • பிரெஞ்சுக்காரர்கள் :
    • இந்திய ஆசிரியர்களைக் கொண்டு வட்டார மொழியில் கல்வி கற்பிக்க இந்தியர்களுக்கான கல்வி நிறுவனங்களை துவங்கினர்.
    • பிரெஞ்சு மொழிகள் கற்பிக்க மேல்நிலைப்பள்ளிகள் துவங்கப்பட்டன.
    • சீகன் பால்கு மற்றும் புளுட்சோ (ஜெர்மன் பிஷப்புகள்) திருவிதாங்கூரில் பள்ளிகள் மற்றும் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி தொடங்கினர்.
  • ஆங்கிலேயர்கள் :
    • ஆங்கிலக்கல்வி வழங்குவதற்காக (கி.பி. 1600 ஆங்கில கிழக்கிந்திய வருகைக்குப்பின்) கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.
    • சமஸ்கிருத கல்லூரிகள் மதராஸ் மற்றும் பனாரஸ் ஆகிய இடங்களில் துவங்கப்பட்டன.
    • டாக்டர் மிடில்டன் (கல்கத்தா முதல் பேராயர்) மிஷனரி கல்லூரியை தொடங்கினார். இது பின்னர் பிஷப் கல்லூரி என அழைக்கப்பட்டது.
    • பம்பாயில், மவுண்ட் ஸ்டுவர்ட் எல்பின்ஸ்ட ன் என்பவரின் ஆதரவாளர்கள் அவர் 1827ல் ஓய்வு பெற்ற பின் எல்பின்ஸ்டன் கல்லூரியை நிறுவினர்.
    • சமயபரப்புக் குழுவினரின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட பல கல்வி நிறுவனங்கள் மேற்கத்திய கல்வியையும் இந்தியக் கல்வியையும் வழங்கின.

Question 3.
சுதந்திர இந்தியாவின் கல்வி வளர்ச்சி குறித்து சுருக்கமாக எழுதுக.
விடை:
சுதந்திர இந்தியாவின் கல்வி வளர்ச்சி :
ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கிய சுதந்திர இந்தியக் கல்வி வரலாறு இந்தியர்களுக்கான ஒரு புதிய நம்பிக்கை, ஒரு புதிய பார்வை, ஒரு புதிய எதிர்காலத்தை கொண்டு வந்தது.

  • 1948 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு நியமிக்கப்பட்டது.
  • டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக்குழு அமைக்கப்பட்டது.
  • 1952-53ல் அமைக்கப்பட்ட இடைநிலைக் கல்விக் குழு கல்வித்துறையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வாகும்.
  • இடைநிலைக் கல்விக்குழு கல்வியில் புதிய அமைப்பு முறை, பாடப் புத்தகங்களின் தரம், பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளில் முன்னேற்றங்களை பரிந்துரைத்தது.
  • 1964ல் இந்திய அரசு டாக்டர் D.S.கோத்தாரி தலைமையில் ஒரு கல்விக்குழுவை நியமித்தது.
  • கோத்தாரி கல்விக் குழுவின் முக்கிய பரிந்துரைகள்
  • 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்கக்கல்வி. – நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10+2+3 கல்வி அமைப்பு.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Question 4.
தமிழகத்தின் நவீன கால கல்வி – விவரி.
விடை:
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி – (நவீன காலம்) :

  • பெர்னாண்டஸ் (மதுரை- வீரப்ப நாயக்கர் காலம்) ஒரு தொடக்கப் பள்ளியை நிறுவினார்.
  • மராத்திய ஆட்சியாளர் இரண்டாம் சரபோஜி பண்டைய ஆவணங்களை சேகரித்து தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்தார்.
  • தஞ்சாவூரில் அவர் தேவநாகரி எழுத்து முறையிலான அச்சுக்கூடத்தை அமைத்தார்.
  • பிரதான் நாட்டின் உயர்கல்வியின் முக்கிய மையமாக விளங்கியது.
  • சர் தாமஸ் மன்றோ (மதராஸ் மாகாண ஆளுநர் 1820 – 1827) மேற்கத்திய கல்வியை அறிமுகப்படுத்தினார்.
  • மன்றோவின் கல்விக்குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு முதன்மைப் பள்ளிகளை (மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் பள்ளிகள்) உருவாக்க பரிந்துரைத்தது.
  • வில்லியம் பெண்டிங் பிரபு (1835) மேற்கத்திய கல்வி அறிமுகத்திற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.
  • சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை (1854) மதராஸ் மாகாணத்தில் பொது வழிகாட்டும் துறையை (DPI) ஏற்படுத்தியது.
  • அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி மானியம் வழங்கப்பட்டன.
  • ஆங்கிலேய ஆட்சியின் போது தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் (1857)
  • உள்ளூர் வாரியச் சட்டம் (1882) புதிய பள்ளிகளைத் திறக்கவும் அரசாங்கத்திடமிருந்து மானியங்களைப் பெறவும் அதிகாரம் வழங்கியது.
  • ஆங்கில மொழிப்பாடம் தவிர அனைத்துப் பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்பிக்கப்பட்டன. (1938)
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைக்கப்பட்டது (1929).

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 5 இந்தியாவில் கல்வி வளர்ச்சி 3

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

9th Social Science Guide பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்

Question 1.
கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.
(அ) காவலர்கள்
(ஆ) தீயணைப்புப் படையினர்
(இ) காப்பீட்டு முகவர்கள்
(ஈ) அவசர மருத்துவக் குழு
விடை:
(இ) காப்பீட்டு முகவர்கள்

Question 2.
‘விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்! என்பது எதற்கான ஒத்திகை?
(அ) தீ
(ஆ) நிலநடுக்கம்
(இ) சுனாமி
(ஈ) கலவரம்
விடை:
(ஆ) நிலநடுக்கம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

Question 3.
தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.
(அ) 114
(ஆ) 112
(இ) 115
(ஈ) 118
விடை:
(ஆ) 112

Question 4.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?
(அ) தீ விபத்திலிருந்து தப்பிக்க நில்! விழு! உருள்!
(ஆ) “விழு! மூடிக்கொள்! பிடித்துக்கொள்!” என்பது நிலநடுக்க தயார் நிலை.
(இ) “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது வெள்ளப் பெருக்குக்கான தயார் நிலை.
(ஈ) துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் தரையில் கிடைமட்டமாகப்படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக் கொள்ளவும்.
விடை:
(இ) “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது வெள்ளப் பெருக்குக்கான தயார் நிலை.

Question 5.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர் கொள்வதோடு தொடர்புடையது?
(அ) “காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
(ஆ) “கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் கடலோரத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்துகொள்ளவும்.
(இ) கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
(ஈ) “கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்க வேண்டும்.
விடை:
(இ) கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.

II. சுருக்கமாக விடையளி

Question 1.
பேரிடர் முதன்மை மீட்புக் குழு என்பவர் யாவர்?
விடை:
பேரிடர் முதன்மை மீட்புக் குழு:

  • காவலர்கள்
  • தீயணைப்புத் துறையினர்
  • அவசர மருத்துவக் குழுக்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

Question 2.
ஜப்பானில் மிக அதிக அடர்த்தியில் நிலநடுக்க வலை காணப்பட்டாலும் இந்தோனேசியாவில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஏன்?
விடை:
இந்தோனேசியா அதிக நிலநடுக்கப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஐப்பானை விட அதிக பரப்பளவைக் கொண்டுள்ளதால் இந்தோனேசியாவில்தான் உலகிலேயே அதிக நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன.

Question 3.
இந்தியாவில் ஒவ்வொருநாளும் எத்தனை ஆண்கள் பெண்கள் தீவிபத்தினால் இறக்கின்றனர்?
விடை:
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 42 பெண்களும் 21 ஆண்களும் தீ விபத்தினால் இறக்கின்றனர்.

Question 4.
சுனாமிக்கு பிறகு என்ன செய்ய வேண்டும்?
விடை:

  • ஆழிப்பேரலை தொடர்பான அண்மைச் செய்திகளுக்கு வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காணவும்.
  • காயமடைந்தவர்களுக்கும் ஆழிப்பேரலையில் சிக்கிக்கொண்ட நபர்களுக்கும் உதவிசெய்யவும்.
  • ஆழிப்பேரலையிலிருந்து யாரையாவது மீட்க வேண்டுமென்றால் சரியான உபகரணங்களுடன் கூடிய வல்லுனர்களை உதவிக்கு அழைக்கவும்.

III. விரிவான விடையளி

Question 1.
ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • ஆழிப் பேரலை உயிர்ச் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது. நிலநடுக்கம், கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளே ஆழிப் பேரலையாகும்.
  • ஆழிப் பேரலையானது 10-30 மீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 700 – 800 கிலோமீட்டர் வேகத்தில்
    செல்லக்கூடியது.
  • இது வெள்ளப் பெருக்கை உண்டாக்கும். இது மின்சாரம், தகவல் தொடர்பு, நீர் அளிப்பு போன்றவற்றைப் பாதிக்கின்றது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

Question 2.
நில நடுக்கத்தின்போது கட்டடத்திற்குள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
விடை:

  1. மேசையின் அடியில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து மேசையின் காலை ஒருகையால் பிடித்துக்கொண்டு ஒரு கையால் தலையை மூடிக்கொள்ளவும். அறையில் எந்த மரச்சாமான்களும் இல்லையெனில், அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக்கொள்ளவும்.
  2. அறையின் மூலையில், மேசையின் அடியில் அல்லது கட்டிலுக்கு அடியில் அமர்ந்து கொள்ளவும்.
  3. கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
  4. நிலநடுக்கம் முடியும் வரை உள்ளே பாதுகாப்பாக இருக்கவும், அதன் பிறகு வெளியேறுவது பாதுகாப்பானது.

Question 3.
ஆழிப் பேரலையை எவ்வாறு எதிக்கொள்வாய்?
விடை:
ஆழிப்பேரலையை எதிர் கொள்ளல் :

  1. நீங்கள் இருக்கும் வீடு, பள்ளி, பணிபுரியுமிடம், அடிக்கடி சென்று வருமிடம் போன்றவை கடலோர ஆழிப் பேரலை பாதிப்பிற்குட்பட்ட இடங்களா எனக் கண்டறிந்து திட்டமிடவும்.
  2. ஆழிப் பேரலை தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை அறிந்துகொள்ள உள்ளூர் வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காணவும்.
  3. ஆழிப் பேரலையைப் பற்றி கலந்துரையாடி மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்,.

Question 4.
தீ விபத்தின்போது என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • அமைதியாக இருக்கவும்.
  • அருகில் உள்ள தீ அபாயச்சங்குப் பொத்தானை அழுத்தவும் அல்லது 112 ஐ அழைக்கவும்.
  • கட்டடத்தைவிட்டு உடனடியாக வெளியேறவும்.
  • தீவிபத்தின்போது ஓடாமல் நடந்து வெளியேறும் பகுதிக்குச் செல்லவும்.
  • மின் தூக்கிகளை பயன்படுத்தக்கூடாது.

செயல்பாடுகள்

1. தீ விபத்திற்கான ஒத்திகை பயிற்சி. (மாணவர்களுக்கானது)
2. நில நடுக்கத்திற்கான ஒத்திகை பயிற்சி (மாணவர்களுக்கானது)

9th Social Science Guide பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
நிலநடுக்கம் ____ என்ற கருவியால் பதிவு செய்யப்படுகிறது.
விடை:
சீஸ்மோக்ராப்

Question 2.
நிலநடுக்கம் ____ அளவையில் அளக்கப்படுகிறது.
விடை:
ரிக்டர்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

Question 3.
ஆழிப்பேரலை மணிக்கு ____ வேகத்தில் செல்லக்கூடியது
விடை:
700-800 கிலோ மீட்டர்

Question 4.
ஆழிப்பேரலையானது _____ மீட்டர் உயரத்தில் செல்லக்கூடியது
விடை:
10-30

Question 5.
இந்தியாவில் தீமற்றும் தீசார்ந்த விபத்துகளால் சுமார் ____ பேர் இறக்கின்றனர்.
விடை:
25,000

II. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
பேரிடர் என்றால் என்ன?
விடை:
பேரிடர் என்பது உயிருக்கும் உடைமைகளுக்கும் அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்தும் பேராபத்து.

Question 2.
நிலநடுக்கம் – சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • புவித்தட்டுகளின் நகர்வால் புவியின் ஒருபகுதியில் திடீரென ஏற்படும் நில அதிர்வை நிலநடுக்கம் என்கிறோம்.
  • நிலநடுக்கம் புவித்தட்டுகளின் எல்லைகளில் ஏற்படுகிறது. புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றுமிடத்தை நிலநடுக்க மையம் என்கிறோம்.
  • நிலநடுக்க மையத்திற்குச் செங்குத்தாக புவியின் மேற்பரப்பில் காணப்படும் இடத்திற்கு மையப்புள்ளி எனப் பெயராகும்.
  • நிலநடுக்க பாதிப்புகள் மையப்புள்ளிக்கு அருகில்தான் மிக அதிகம்.

Question 3.
பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?
விடை:
பேரிடர் மேலாண்மை :

  • தடுத்தல்
  • தணித்தல்
  • தயார்நிலை
  • எதிர்கொள்ளல் மற்றும் மீட்டல்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

III. விரிவான விடையளிக்கவும்

Question 1.
தீ விபத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை – யாது? விவரி.
விடை:
தீ விபத்தின் போது செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை :

  • நீங்கள் இருக்கும் கட்டத்தின் வெளியேறும் வழி குறித்தத் திட்டத்தினைத் தெரிந்து கொள்ளவும்.
  • தீ அபாயச் சங்கு எச்சரிக்கை ஒலி கேட்டவுடன் அமைதியாகவும் வேகமாகவும் வெளியேற வேண்டும்.
  • கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்கவேண்டாம்.
  • நீங்கள் வெளியேறும் வழியில் புகையிருந்தால் தரையில் தவழ்ந்து செல்லவும்.
  • கட்டத்திலிருந்து வெளியேறும் பகுதியைத் தெரிந்துகொள்ளவும்.
  • தீ அணைப்பான், தீ அபாயச்சங்கு இருக்குமிடம் மற்றும் வெளியேறும் வழி போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 95

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

9th Social Science Guide நிலவரைபடத் திறன்கள் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது.
அ) தலைப்பு
ஆ) அளவை
இ) திசைகள்
ஈ) நிலவரைப்படக் குறிப்பு
விடை:
ஈ) நிலவரைப்படக் குறிப்பு

Question 2.
நிலவரைப்படத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்.
அ) முறைக்குறியீடுகள்
ஆ) இணைப்பாய புள்ளிகள்
இ) வலைப்பின்னல் அமைப்பு
ஈ) திசைகள்
விடை:
அ) முறைக்குறியீடுகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 3.
உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக் கோள்கள்.
அ) 7
ஆ) 24
இ) 32
ஈ) 64
விடை:
ஆ) 24

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 40

III. கொடுக்கப்பட்டுள்ள கூற்றை ஆராய்ந்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கூற்று (A): செங்குத்துக் கோடுகளும் இடைமட்டக் கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் உருவாக்கும் வலை அமைப்பிற்கு இணைப்பாயங்களின் அமைப்பு.
காரணம் (R): கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் செல்லும் கோடுகள் முறையே வடக்கைக்கோடுகள், கிழக்கைக்கோடுகள் என்று அழைக்கின்றன.
அ) A மற்றும் R இரண்டும் சரி R ஆனது A விற்கு சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி R ஆனால் ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல
இ) A சரி R தவறு
ஈ) A தவறு R சரி
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி R ஆனது A விற்கு சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 2.
கூற்று (A): ஒரு நிலவரைப்படத்தில் உள்ள வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள செய்திகளைப் புரிந்து கொள்ளப் பயன்படாது. காரணம் (R): இது பொதுவாக நிலவரைப்படத்தின் அடிப்பகுதியில் இடது அல்லது வலது புற ஓரத்தில் காணப்படும்.
அ) A தவறு R சரி
ஆ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R ஆனது A விற்கு சரியான விளக்கம்
விடை:
அ) A தவறு R சரி

IV. சுருக்கமான விடையளி

Question 1.
நிலைவரைபடம் என்றால் என்ன?
விடை:
நிலவரைபடம்:

  • நிலவரைபடம் ஒரு புவியிலாளரின் அடிப்படைக் கருவியாகும். இது வரைபடங்கள் வார்த்தைகள் மற்றும் குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத்தெளிவாகவும் திறப்படவும் விளக்குகிறது.
  • புவியியல் கற்பித்தலில் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருப்பிட வழிகாட்டியாகவும் நிலவரைபடங்கள் சொல்லப்படுகின்றன.

Question 2.
நிலவரைப்படத்தின் கூறுகள் யாவை?
விடை:
நிலவரைபடத்தின் கூறுகள்:
தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோடுச்சட்டம் நிலவரைபடக் குறிப்பு, முறைக் குறியீடுகள்.

Question 3.
A மற்றும் B ஆகிய இரு நகரத்துக்கு இடையான தூரம் 5கி.மீ. ஆகும். இது நிலவரைப்படத்தில் 5செ.மீ. இடையாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தூரத்தை கணக்கிட்டு பிரதி பின்ன முறையில் விடை தருக.
விடை:
நிலவரைபடத்தூரம் = 5 செ.மீ.
புவிபரப்பின் தூரம் = 5 கி.மீ.
1cm=1km ஃ 5cm=5km
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 50
ஃஎனவே பிரதி பின்ன முறை = RF = 1:100000

Question 4.
நில அளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக
விடை:
சங்கிலி, பட்டகக் காந்தவட்டை, சமதளமேசை, மட்டமானி, அப்ளே மட்டம், சாய்வுமானி, தியோடலைட் மொத்த ஆய்வு நிலையம், உலகலாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்குமுறை.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 5.
தொலை நுண்ணுணர்வு – வரையறு?
விடை:

  • தொலை நுண்ணுணர்வு என்பது புவியில் உள்ள பொருட்களை நேரிடையாகத் தொடர்பு கொள்ளாமல் தொலைவிலிருந்து உற்று நோக்கி அவற்றின் தகவல்களைச் சேகரிப்பது ஆகும்.
  • தொலை என்பது தூரத்தையும் நுண்ணுணர்தல்’ என்பது தகவல்களைச் சேகரிப்பதையும் குறிக்கும்.

Question 6.
தொலை நுண்ணுணர்வின் கூறுகள் யாவை?
விடை:
தொலை நுண்ணுணர்வின் கூறுகள்

  • ஆற்றல் மூலம்
  • இலக்கு
  • அனுப்பும் வழி
  • உணர்விகள்

V. காரணம் கூறுக

Question 1.
நிலவரைபடம் வரைதலில் செயற்கைக்கோள் பதிமங்கள் துணைபுரிகின்றன.
விடை:
ஏனெனில்,

  • செயற்கைக் கோள் பதிமங்கள் செயற்கைக் கோள்களின் எண்ணிம தோற்றுரு செய்யப்பட்ட படங்களை (digitally transmitted images) குறிப்பிடுகிறது. புவியின் தன்மைகள், விவரங்கள், மாறுதல்கள் பற்றி அறிய வான்வெளி செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்படும் படங்கள்.
  • மிகக்குறுகிய காலத்தில் முழுப்பகுதியில் உள்ள அனைத்து தகவல்களையும் சேகரிக்கலாம். எளிதாக பட மேம்பாட்டிற்கான மென்பொருள்களுடன் ஒருங்கிணைக்கப்படலாம். செயற்கைக்கோள் பதிமங்கள் பயன்பாடு 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் நிலவரைபட உருவாக்கத்தை மேலும் ஊக்குவித்தனர்.

Question 2.
புவியியல் வல்லுநர்களின் அடிப்படைக் கருவி நிலவரைப்படம்.
விடை:
ஏனெனில்,
நிலவரைப்படம் வரைபடங்கள், வார்த்தைகள், குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத் தெளிவாகவும், திறம்படவும் விளக்குகிறது. புவியியல் கற்பித்தல் ஒருங்கிணைந்த பகுதியாகவும், இருப்பிட வழிகாட்டியாகவும் நிலவரைப்படங்கள் அமைகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 3.
நிலவரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட புவி வலைப்பின்னல் அமைப்பு பயன்படுகிறது.
விடை:
ஏனெனில்,

  • நிலபரைப்படத்தில் ஓர் இடத்தின் அமைவிடம் அதன் அட்சக்கோடு மற்றும் தீர்க்கக்கோடு மூலம் வரையறுக்கப்படுகிறது. படத்தில் ஒரு கட்டம் என்பது ஓரிடத்தின் அமைவிடத்தைக் காட்ட உதவும் எண்ணெழுத்துக் குறியீடுகள் கொண்ட வரிசைகளின் அமைப்பாகும்.
  • படத்தில் இடவலமான கிடைமட்டக் கோடுகள் வடக்கைக் கோடுகள் (Northing) என்றும், மேல்கீழ் செங்குத்துக் கோடுகள் கிழக்கைக் கோடுகள் (Easting) என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கோடுகள் வெட்டும் புள்ளிகள் இணைப்பாயப் புள்ளிகள் ஆகும்.
  • வலைப்பின்னல் (Grid) என்பது தல வரைபடத்தில் பல கோடுகள் இணைந்து ஓர் இடத்தின் அமைவிடத்தைத் துல்லியமாகக் காட்டும் நுட்பம் ஆகும்.

VI. வேறுபடுத்துக

Question 1.
புவிமாதிரி மற்றும் நிலவரைபடம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 30

Question 2.
வான் வழி புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் பதிமங்கள் செயற்கைக்கோள் பதிமங்கள்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 80

Question 3.
புவியியல் தகவல் அமைப்பு மற்றும் உலக அமைபிட கண்டறியும் தொகுதி
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 81

VII. விரிவான விடையளிக்கவும்

Question 1.
நிலவரைபடங்களில் அளவை என்பதன் பொருள் என்ன? அதன் வகைகளை விளக்குக.
விடை:
அளவை:
அளவையைக் கொண்டு வரைவதன் மூலம் முழுப் புவியையும் ஒரு காகிதத்தில் காட்ட முடியும். அளவை
என்பது நிலவரைபடத்தில் இரு புள்ளிகளுக்கும் புவிப்பரப்பில் அதே இரு புள்ளிகளுக்கும் இடையிலுள்ள தூரவிகிதம் ஆகும். அளவைகள் மூன்று முறைகளில் நிலவரைபடத்தில் காட்டப்படுகின்றன.

சொல்லளவை முறை:
நிலவரைபடத்திலுள்ள தூரம் மற்றும் புவியின் உண்மையான தூரத்தினை ஒப்பீடு செய்து சொற்களில் குறிப்பிடுவது சொல்லளவை முறையாகும். அதாவது ஒரு சென்டிமீட்டர் பத்து கிலோமீட்டர்க்குச் சமம். இது 1 செ.மீ = 10 கி.மீ என்று குறிக்கப்படுகிறது.

பிரதிபின்ன முறை:
இம்முறையில் நிலவரைபட மற்றும் உண்மையான தூரங்களின் ஒப்பீடு விகிதமாகவோ, பின்னமாகவோ வெளிப்படுத்தப்படும். இது வழக்கமாக R:F என சுருக்கமாகக் கூறப்படுகிறது (R.F. = பிரதிபின்ன முறை).
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 55

கோட்டளவை முறை:
நில வரைபடங்களில் ஒரு நீண்ட கோடு பல சம பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் நிலப்பரப்பில் எவ்வளவு தூரத்தைக் காட்டுகிறது என்பதை அறிவதே கோட்டளவை முறையாகும். இந்த முறையின் மூலம் நிலவரைபடத்திலுள்ள தூரத்தினை நேரடியாக அளக்க உதவுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 2.
திசைகள் – தகுந்த படம் வரைந்து விளக்குக.
விடை:
திசைகள்:

  • பொதுவாக நிலவரைப்படங்கள் வடதிசையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன.
  • ஒரு நிலவரைபடத்தில் வடக்குதிதிசை எப்போதும் புவியின் வட துருவத்தை நோக்கியே உள்ளது.
    Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 56
  • நாம் வட துருவத்தைப் பார்த்து நின்றால், நமது , வலக்கை கிழக்கு திசையையும், இடக்கை மேற்குத் திசையையும் நமது பின்புறம் தெற்கு திசையையும் காட்டும்.
  • இவை அடிப்படை திசைகளாகும். பொதுவாக, நிலவரைபடத்தின் மீது காணப்படும் அம்புமுனை வடக்குத் திசையைக் குறிப்பிடும்.

Question 3.
உலக அமைவிடத் தொகுதியின் (GPS) பயன்களை விவரி.
விடை:
உலக அமைவிட கண்டறியும் தொகதியின் நன்மைகள் (GPS):

  • கைப்பேசிகள், கைக்கடிகாரங்கள், புல்டோசர்கள், கப்பல் கொள்கலன்கள் மற்றும் தானியிங்கி பணப்பரிமாற்ற கருவிகள் (ஏ.டி.எம்) என அனைத்திலும் தொழில் நுட்பம் உதவுகிறது.
  • உலக அமைவிட கண்டறியும் தொகுதியின் முக்கிய நோக்கம் பயண தகவல்களை தூரம், வழி மற்றம் திசை) மிக துல்லியமாக தருவதே ஆகும். இராணுவ போர்த்தேடல்கள் மற்றம் போர்க்கால மீட்பு நடவடிக்கைகளிலும் உறுதுணையாகத் திகழ்கின்றது. நம்பிக்கையான சுற்றுலா வழிக் காட்டியாகவும் உள்ளது.
  • விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நெருக்கடிகாலத் தேவைகளைத் துரிதமாக வழங்குதல் மற்றும் பேரிடல் நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஜி.பி.எஸ் பெரிதும் உதவுகிறது.
  • வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உலக அமைவிட கண்டறியும் தொகுதிகளின் உதவுயுடன் சிறப்பாக செயல்படுகின்றன.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

1. செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை உன்னால் கற்பனை செய்ய இயலுமா? (மாணவர்களுக்கானது)

2. உங்களை நிலவரைபடவியலாளராக (Cartographer) நினைத்துக்கொண்டு உங்கள் பகுதியின் வரைபடத்தை வரைக. (மாணவர்களுக்கானது)

9th Social Science Guide நிலவரைபடத் திறன்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
20ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை
அ) தலப்படங்கள்
ஆ) வானவியல் புகைப்படங்கள்
இ) நிலவரைபடங்கள்
ஈ) செயற்கைக்கோள் பதிமங்கள்
விடை:
ஈ) இயற்கைக்கோள் பதிமங்கள்

Question 2.
மிகப்பறந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம்.
அ) பெரிய அளவை நிலவரைபடம்
ஆ) கருத்துசார் வரைபடம்
இ) இயற்கை வரைபடம்
ஈ) சிறிய அளவை நிலபரைபடம்
விடை:
ஈ) சிறிய அளவை நிலவரைப்படம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நிலவரைபடம் என்பது ஒரு …………..
விடை:
இருப்பிட வழிகாப்பு

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 2.
………….. என்பது உலகிலேயே மிகப்பழைய வரைபடமாகக் கருதப்படுகிறது.
விடை:
பாபிலோனிய நிலவரை
படம்-அமாகோ முண்டி)

Question 3.
தொலை என்பது ………… குறிக்கும்
விடை:
தூரத்தை

Question 4.
நுண்ணுணர்தல் என்பது …………. குறிக்கும்
விடை:
தகவல்களைச்
சேகரிப்பதைக்

Question 5.
GIS என்பது ………
விடை:
புவியியல் தகவல்
அமைப்பு

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 86

IV. குறுகிய விடையளி.

Question 1.
உலக நிலபரைப்படங்களை உருவாக்கியவர் யாவர்?
விடை:

  • ஹெரோடோடஸ்
  • அனாக்ஸிமண்டர் பிதாகோரஸ்
  • எரடோஸ்தெனிஸ்
  • தாலமி
  • அல் இட்ரிஸி

Question 2.
முதல் நில வரைபடவியலாளர் யார்? ஏன்?
விடை:
பண்டைய கிரேக்க நாட்டைச் சேர்ந்த அனாக்ஸிமேன்டர் என்பவர் வரைந்த நிலவரைபடமே உலகின் முதல் நிலவரைபடம் ஆகும். இக்காரணத்தால் அவர் முதல் நிலவரைபடவியலாளராகக் கருதப்படுகிறார்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 3.
புவித் தகவல் தொகுதியின் வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் செயல்பாடுகள் யாவை?
விடை:
புவி தகவல் தொகுதியின் வன்பொருள் மற்றும் மென்பொருளின் செயல்பாடுகள்

  • புள்ளி விவர உள்ளீடு மற்றும் சரிபார்த்தல்
    • தொகுத்தல்
    • சேமித்தல்
    • புதுப்பித்தல் மற்றும் மாற்றியமைத்தல்
    • மேலாண்மை மற்றும் பரிமாற்றம் செய்தல் கையாளுதல்
    • மாற்றியமைத்தல் மற்றம் தகவல் தரல்
    • பகுப்பாய்வு மற்றும் சேர்த்தமைத்தல்

Question 4.
புவியைக் குறித்துக்காட்டுவதற்கான முறைகள் யாவை?
விடை:

  • சொல்லளவை முறை
  • பிரதி பின்ன முறை
  • கோட்டளவை முறை

V. வேறுபடுத்துக

Question 1.
பெரிய அளவை நிலவரைபடம் மற்றும் சிறிய அளவை நிலவரைபடம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 87

VI. விரிவான விடையளி

Question 1.
பின்வரும் நிறக் குறியீடுகள் நிலவரைபங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
விடை:

  • பழுப்பு : நிலம் அல்லது புவி அம்சங்கள் – சம உயரக் கோடுகள், அரிக்கப்பட்ட பகுதிகள், முக்கிய குன்றுப் பகுதிகள், மணல் பகுதிகள் மற்றும் குன்றுகள், இரண்டாம் நிலை அல்லது சரளை சாலைகள்.
  • வெளிர் நீலம் : நீர் நிலைகள் – கால்வாய்கள், கடற்கரைகள், அணைகள், ஏரிகள், சதுப்பு நிலங்கள், வெள்ளக்கரை, குளங்கள், ஆறுகள் நீர்த்தேக்கத் தொட்டிகள்.
  • கருநீலம் : தேசிய நீர் வழிகள்.
  • பச்சை தாவரங்கள் – பயிரிடப்பட்டவயல்கள், கோல்ஃப்மைதானங்கள், இயற்கை மற்றும் வேட்டையாடுதலுக்கு
    ஒதுக்கப்பட்ட எல்லைகள், பழத்தோட்டங்கள் மற்றும் திராட்சை தோட்டங்கள், பொழுதுபோக்கு மைதானங்கள், வனப்பகுதி.
  • கருப்பு : கட்டுமான இடங்கள் – சாலைகள், தடங்கள், இருப்புப் பாதைகள், கட்டடங்கள், பாலங்கள், கல்லறைகள், தகவல் தொடர்பு கோபுரங்கள், அணைச் சுவர்கள், அகழ்வாய்வுகள் மற்றும் சுரங்க இடிபாடுகள், தொலைபேசி இணைப்புகள், மின் இணைப்புகள், காற்றாலைகள், எல்லைகள்.
  • சிவப்பு :கட்டுமான இடங்கள் – தேசிய, கிளை மற்றும் முக்கிய சாலைகள், கலங்கரை விளக்கங்கள் மற்றும்
    கடல் விளக்குகள்.
  • இளஞ்சிப்பு : பன்னாட்டு எல்லைகள்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 2.
புவன் (Bhuvan) அறிவியல் அறிஞர்கள் கொள்கை வகுப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மிக அதிக அளவில் பயன்படுகிறது என்பதை நியாயப்படுத்துக.
விடை:

  • புவன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு புவி’ என்று பொருள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் (ISRO) ஆகஸ்டு 12ம் நாள், 2009ஆம் ஆண்டு, இலவச இணைய தளம் கணினி சார்ந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.
  • செயற்கைக்கோள் படங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ஏழு செயற்கை கோள்களின் மூலம் கார்ட்டோசாட் I மற்றும் கார்டோசாட் II எடுக்கப்பட்ட படங்களும் இதில் உள்ளடக்கியது.
  • உலகின் எந்த ஒரு பகுதி அல்லது ஓர் இடத்தின் பெயர்களையோ அட்ச தீர்க்கப் பரவலைக் கொண்டு ஆராய்ந்து அறியலாம். விஞ்ஞானிகள், அறிஞர்கள், கல்வியாளர்கள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லது பொது மக்கள் ஆகியோருக்கு புவன் மிகுந்த பயனை அளிக்கிறது.

புவனின் நன்மைகள்:

  • தனது முப்பரிமாண அமைவு மூலம் புவன் புவி மெய்யாகவே அண்டவெளியில் சுழல்வதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.
  • மாணவர்கள், அறிவியல் மற்றும் பல்வேறு இடங்களின் வரலாறு போன்ற பலவகையான பாடங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
  • இயற்கை வளத் தகவல்களையும் பேரிடர்கள் பற்றிய தகவல்களையும் உரிய நேரத்தில் தெரிவிப்பதில் மிகவும் உறுதுணையாக உள்ளது.
  • ஆட்சியாளர் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உதவுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 91

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

9th Social Science Guide மனிதனும் சுற்றுச் சூழலும் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ____ என்கிறோம்.
அ) சுற்றுச்சூழல்
ஆ) சூழலமைப்பு
இ) உயிர்க் காரணிகள்
ஈ) உயிரற்றக் காரணிகள்
விடை:
அ) சுற்றுச்சூழல்

Question 2.
ஒவ்வொர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் ____ ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அ) ஆகஸ்டு 11
ஆ) செப்டம்பர் 11
இ) ஜுலை 11
இ) ஜனவரி 11
விடை:
இ) ஜுலை 11

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 3.
மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____ ஆகும்.
அ) மக்கள்தொகையியல்
ஆ) புறவடிவமைப்பியல்
இ) சொல்பிறப்பியல்
ஈ) நிலநடுக்கவரைவியல்
விடை:
அ) மக்கள் தொகையியல்

Question 4.
விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது
____ ஆகும்.
அ) மீன்பிடித்தல்
ஆ) மரம் வெட்டுதல்
இ) சுரங்கவியல்
ஈ) விவசாயம்
விடை:
இ) சுரங்கவியல்

Question 5.
பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன _____
அ) பாதி முடிக்கப்பட்ட பொருள்கள்
ஆ) முடிக்கப்பட்ட பொருள்கள்
இ) பொருளாதார பொருள்கள்
ஈ) மூலப்பொருள்கள்
விடை:
ஆ) முடிக்கப்பட்ட பொருள்கள்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 60

III. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளைக்கருத்தில்கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கூற்று (A) : படுக்கை அடுக்கில் உள்ள ஒசோன் படலத்தை பாதுகாப்பு கேடயம் என்கிறோம்.
காரணம் (R) : புற ஊதாக்கதிர் வீச்சு புவியை அடையாமல் தடுக்கிறது.
அ) A வும் R ம் சரி மற்றும் A என்பது R ன் சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் A வானது R- ன் சரியான விளக்கமல்ல.
இ) A தவறு ஆனால் R சரி
ஈ) A மற்றும் R இரண்டும் தவறு
விடை:
அ) A-வும் R- ம் சரி மற்றும் A-என்பது R-ன் சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 2.
கூற்று (A) : மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது.
காரணம் (R) : மூன்றாம் நிலைத்தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.
அ) A மற்றும் R இரண்டும் தவறு.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால், A வானது R க்கு விளக்கம் தரவில்லை.
இ) A சரி, ஆனால், R தவறு.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி. A வானது R க்கு சரியான விளக்கம் தருகிறது.
விடை:
இ) A சரி ஆனால் R தவறானது.

IV. சுருக்கமான விடையளி

Question 1.
மக்கள் அடர்த்தி என்றால் என்ன?
விடை:

  • ஒரு சதுர கி.மீ நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை மக்களடர்த்தி என்கிறோம்.
  • மிகப்பரந்த நிலப்பரப்பில், குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருந்தால், அதை குறைந்த மக்களடர்த்தி என்றும் குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அதிக மக்களடர்த்தி என்றும் அழைக்கிறோம்.
  • Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 65

Question 2.
கொள்ளை நோய் என்றால் என்ன?
விடை:

  • 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் “பிளேக்” என்ற கொள்ளை நோயினால் 30 – 60 சதவீதம் மக்கள் இறந்தனர்.
  • பெரிய எண்ணிக்கையிலான மக்கள் ஒரு நோயினால் இறந்தால் அது கொள்ளை நோய் எனப்படும்

Question 3.
வரையறு
அ) மக்கள் தொகை வளர்ச்சி
விடை:

  • மக்கள் தொகை வளர்ச்சி என்பது பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு
    “மக்கள் தொகை வளர்ச்சி” ஆகும்.
  • மக்கள் தொகை வளர்ச்சி = (பிறப்பு விகிதம் + குடியிறக்கம்) – (இறப்பு விகிதம் + குடியேற்றம்)

ஆ) மக்கள் தொகை கணக்கெடுப்பு
விடை:
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசாங்கம் மக்களின் வயது, பாலினம், கல்வியறிவு விகிதம் மற்றும்
தொழில் போன்ற விவரங்களைப் பதிவு செய்து, மக்கள் தொகை பற்றிக் கணக்கெடுப்பு நடத்தி தகவல்களைச் சேகரிக்கிறது.

இ) வளம் குன்றா வளர்ச்சி
விடை:
எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளுக்கான வள இருப்பை உறுதி செய்வதோடு நிகழ்காலத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதாகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

V. காரணம் கூறுக.

Question 1.
காடுகளை மீட்டெடுத்தல் உலகம் முழுவதும் ஊக்கப்படுத்தப்படுகிறது.
விடை:

  • மீள் காடாக்குதல் என்பது மரங்கள் வெட்டப்பட்ட அதே இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டுவளர்ப்பதன்
    மூலம்காடுகளை அழிவிலிருந்து பாதுகாத்துவனவளம்குறையாமல்பாதுகாக்கலாம். சிலசமயங்களில் காடுகளே தங்கள் வளத்தை மீட்டெடுத்துக் கொள்கின்றன.
  • காடுகளில் எந்த வகை மரம் வெட்டப்பட்டதோ அதே வகை மரத்தை அதன் எண்ணிக்கை குறையாத வகையில் நட்டு வளர்த்து இருக்கின்ற காட்டு வளத்தைப் பாதுகாக்க மீள் காடாக்குதல் ஊக்கப்படுத்தப்படுகிறது.

Question 2.
அமில மழை சுற்றுச்சூழலை அழிக்கிறது.
விடை:

  • அமிலமழை நீர்த்த கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் அடங்கியது.
  • அமில மழைக்குக் காரணமான வாயுக்கள் கந்தகடை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் படிம எரிபொருள் எரிக்கப்படுவதால் ஏற்படுகிறது.
  • எரிக்கப்பட்ட மாசுப்பொருள்கள் நீராவியோடு சேர்ந்து சூரிய ஒளி மற்றும் உயிர்வளித் துணையோடு அமிலமாக மாறி, நிலம், நீர் மற்றும் காற்றை மாசுபடுத்துகிறது.

Question 3.
நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கை ஓர் அறிவுசார் பொருளாதாரம்.
விடை:

  • ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகிய அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கை,
  • இதில் ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் வங்கி சேவைகள் அடங்கும்.

Question 4.
மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவேண்டும்.
விடை:
மக்கள் தொகை வளர்ச்சி வேலை வாய்ப்பின்மை மாசு, குறைந்த மருத்துவ வசதி, குறைந்த அடிப்படைக் கட்டமைப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 5.
வளம் குன்றா வளர்ச்சியின் இலக்குகள் புவியைப் பாதுகாப்பதாக இருக்கிறதா?
விடை:

  • வளங்களைப் பாதுகாத்துதல் மற்றும் அது சார்ந்த விழிப்புணர்வு, புவியில் வாழும் உயிர்களைப் பாதுகாக்க அவசியமானது.
  • வளம் குன்றா வளர்ச்சி எதிர்காலச் சந்ததியினருக்கு வள இருப்பை உறுதி செய்கிறது. நிகழ் காலத் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

VI. வேறுபடுத்துக.

Question 1.
முதல்நிலைத் தொழில் மற்றும் இரண்டாம் நிலைத்தொழில்.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 68

VII. விரிவான விடையளி

Question 1.
மக்கள் தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
விடை:

  • புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள் தொகை பரவல் ஆகும்.
  • உலகில் எல்லா இடங்களிலும் மக்கள் தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை.

அ. இயற்கை காரணிகள் :
வெப்பநிலை, மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள், கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு உள்ளிட்டவை மக்கள் தொகை பரவலுக்கான இயற்கை காரணிகள் ஆகும்.

ஆ.வரலாற்றுக் காரணிகள் :
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியவை மக்கள் தொகை பரவலுக்கான வரலாற்றுக் காரணிகள் ஆகும்.

இ. பொருளாதாரக காரணிகள் :
கல்விக்கூடங்கள் வேலைவாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள், வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவுதலுக்கான பொருளாதாரக் காரணிகள் ஆகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 2.
கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.
விடை:
அ. கிராமக் குடியிருப்புகள் :
முதன்மை தொழில்களான வேளாண்மை வனத்தொழில், கனிமத்தொழில் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றை
மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகின்றன.

கிராமக்குடியிருப்பு வகைகள் :
செவ்வக வடிவக் குடியிருப்புகள் :
சமவெளிப் பகுதிகளிலும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகளாகும். இங்குச் சாலைகள் செவ்வக வடிவில் காணப்படுவதோடு ஒன்றையொன்று செங்கோணங்களில் வெட்டிச் செல்லும்.

நேர்க்கோட்டுக் குடியிருப்புகள்
இவ்வகையான குடியிருப்புகள் சாலை, தொடர்வண்டிப் பாதை, ஆற்றுங்கரை மற்றும் அணைகட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.

வட்டவடிவக் குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் ஏரிகள், குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி வட்டமாகவோ அல்லது அரைவட்டமாகவோ காணப்படுகின்றன.

நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் :
நட்சத்திர வடிவ குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது காப்பிடப்படாத சாலை சந்திப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன. இவை நட்சத்திர வடிவத்தில் எல்லாத் திசைகளிலும் பரவிக் காணப்படும்.

முக்கோண வடிவக் குடியிருப்புகள் :
ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகளாகும்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
உனது பகுதியைப் பற்றி நீ பார்த்தறிந்த குடியிப்பு வகைகளை பற்றி எழுதுக.
(மாணவர்களுக்கானது)

9th Social Science Guide மனிதனும் சுற்றுச் சூழலும் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
Environ என்பதன் பொருள் …. என்பதாகும்
விடை:
சுற்றுப்புறம்

Question 2.
பாப்புலஸ் என்பதன் பொருள் …….
விடை:
மக்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 3.
கிரேக்கத்தில் ‘Demos’ என்றால் ……. என்று பொருள்
விடை:
மக்கள்

Question 4.
நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதல் நடத்தியநாடு ……
விடை:
டென்மார்க்

Question 5.
……… உலகிலேயே மிகப்பெரிய நகரமாகும்.
விடை:
டோக்கியோ

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 80
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 81

III. குறுகிய விடையளி.

Question 1.
சுற்றுச் சுழல் என்பதன் பொருள் யாது?
விடை:
சுற்றுச்சூழல் (Environment) என்ற சொல் என்வீரான் (Environ) என்ற பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும். Environ என்பதன் பொருள் சுற்றுப்புறம் என்பதாகும். சுற்றுச்சூழல் என்பது உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியதாகும்.

Question 2.
மக்கள் தொகை என்றால் என்ன?
விடை:

  • மக்கள் என்ற சொல், இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். பாப்புலஸ் என்றால் மக்கள் என்ற பொருளாகும்.
  • ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கையை மக்கள் தொகை என்கிறோம்.

Question 3.
காடுகளை அழித்தல் என்றால் என்ன?
விடை:
காடுகளை அழித்தல் என்பது மக்கள் தங்களின் பிற பயன்பாடுகளுக்காகக் காடுகளில் உள்ள மரங்களை நிரந்தரமாக வெட்டியெடுத்து நிலத்தைப் பதப்படுத்திப் பயன்படுத்துவதாகும்.

Question 4.
மின்னணுக் கழிவுகள் குறிப்பு வரைக.
விடை:
மின்னணுக் கழிவுகள் (e-waste) என்பவை பயன்படுத்த இயலாத எல்லா மின்னணுக்கருவிகளாகும். (எ.கா) கணினிகள், தொலைகாட்சிப் பெட்டிகள், கைப்பேசிகள் மற்றும் மின்னஞ்சல் கருவிகள்

Question 5.
அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.
விடை:

  • அதிக மக்களடர்த்திப் பகுதிகள் : (50 பேர் /1 ச.மீ)
    கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, வடமேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி.
  • குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள் : (10 பேருக்கு குறைவு /1 ச.மீ)
    மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியா, வடக்கு ரஷ்யா மற்றும் கனடா.

Question 6.
பாக் வளைகுடாவை உள்ளூர் மக்களும், அரசாங்கமும் மீட்டெடுத்த வழிமுறைகளில் இரண்டை எழுதுக.
விடை:

  • பாக் வளைகுடா பகுதிகளில் வளரும் தாவர இனங்களின் நாற்றுகளை நட்டு கவனமாக வளர்க்கப்படுகின்றன.
  • மன்னார் வளைகுடா பல்லுயிர்த் தொகுதியிலிருந்து முருகைப் பாறைகளைக் கொண்டு வந்து பாக் வளைகுடாவில் வளர்த்து இங்கு எஞ்சியிருக்கும் மாங்குரோவ் காடுகளை வரைபடமாக்குவதோடு அதைச் சுற்றிய நிலப்பகுதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது கற்றறியப்படுகிறது.
  • மாங்குரோவ் காடுகளைப் பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பதில் உள்ளூர் அமைப்புகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். இக்காடுகளைப் பற்றிய விழிப்புணர்வும் கல்வியறிவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

IV. வேறுபடுத்துக.

Question 1.
பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 85

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 2.
கிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 86

V. விரிவான விடையளி

Question 1.
நகரக் குடியிருப்புகளின் வகைப்பாடுகளை விவரி.
விடை:
நகரப்பகுதிகள், அதன்பரப்பு, கிடைக்கும் சேவைகள் மற்றும் நடைபெறும்செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில்
நகரம், பெருநகரம், மாநகரம், மீப்பெருநகரம் நகரங்களின் தொகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நகரம் (Town) : நகரம் பொதுவாகக் கிராமத்தைவிடப் பெரியதாகவும் பெருநகரத்தைவிடச் சிறியதாகவும் இருக்கும். ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் (எ.கா) சென்னைக்கு அருகில் உள்ள அரக்கோணம்.

பெருநகரம் (City) : பெருநகரங்கள் நகரங்களை விடப் பெரியதாகவம் மிக அதிகப் பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்டதாகவும் இருக்கும். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் (எ.கா) கோயம்புத்தூர்.

மாதகரம் (Metropolitan City) : மாநகரம் பத்து லட்சத்திலிருந்து ஐம்பது இலட்சம் வரையிலான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (எ.கா.) மதுரை மாநகரம்

மீப்பெருநகரம் (Mega City) : மீப்பெருநகரம் ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (எ.கா) சென்னைப் பெருநகரம் (Greater Chennai)

நகரங்களின் தொகுதி (Conurbation) : நகரங்களின் தொகுதி (Conurbation) நகரங்களின் தொகுதி பல நகரங்களையும் பெருநகரங்களையும் பிற நகர்புறப் பகுதிகளையும் கொண்டிருக்கும் (எ.கா) டெல்லி நகரத் தொகுதி.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 90

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 2.
காடுகளைப் பாதுகாத்தல் குறித்து விவரி?
விடை:
(i) மரம் வெட்டுதலை முறைப்படுத்துவதன் மூலம் காடுகளைப் பாதுகாக்க முடியும்.
(ii) தொடர் கண்காணிப்பு மூலமும் மனித நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் காட்டுத் தீ ஏற்படுவதைத் தவிர்த்து காடுகளைப் பாதுகாக்கலாம்.
(iii) காடு வளர்ப்பு மற்றும் மீட்டுருவாக்கம் : மீள் காடாக்குதல் என்பது மரங்கள் வெட்டப்பட்ட அதே இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதன்மூலம் காடுகளை அழிவிலிருந்து பாதுகாத்து வனவளம் குறையாமல் பாதுகாக்கலாம். சில சமயங்களில் காடுகளே தங்கள் வளத்தை மீட்டெடுத்துக் கொள்கின்றன. பொதுவாகக் காடுகள் மீட்டுருவாக்கம் என்பது புதிய மரக்கன்றுகளை நடுதல் அல்லது தரிசு நிலங்களில் விதைகளை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் காடுகள் வளர்க்கப்படுவதாகும்.
(iv) வனவளங்களின் பயன்பாடு : நாம் உயிர்வாழ்வதற்குப் தேவையான காற்று முதல் பயன்படுத்தும் மரக் கட்டைகள் வரை அனைத்திற்கும் காடுகளைச் சார்ந்திருக்கின்றோம். இவை தவிர விலங்குகளின் வாழ்விடமாகவும் மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் காடுகள் உள்ளன. காடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்கள் நம் அன்றாட வாழ்விற்கு அவசியமாகும். இதனால் வன வளத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

மனவரைபடம்
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 95

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 5 உயிர்க்கோளம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 5 உயிர்க்கோளம்

9th Social Science Guide உயிர்க்கோளம் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி ______
அ) தூந்திரா
ஆ) டைகா
இ) பாலைவனம்
ஈ) பெருங்கடல்கள்
விடை:
அ) தூந்திரா

Question 2.
உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு.
அ) சூழ்நிலை மண்டலம்
ஆ) பல்லுயிர்த் தொகுதி
இ) சுற்றுச்சூழல்
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை:
அ) சூழ்நிலை மண்டலம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 3.
வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்.
அ) உற்பத்தியாளர்கள்
ஆ) சிதைப்போர்கள்
இ) நுகர்வோர்கள்
ஈ) இவர்களில் யாரும் இல்லை
விடை:
ஆ) சிதைப்போர்கள்

Question 4.
பாலைவனத் தாவரங்கள் வளரும் சூழல்.
அ) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
ஆ) குறைந்த அளவு ஈரப்பசை
இ) குளிர் வெப்பநிலை
ஈ) ஈரப்பதம்
விடை:
அ) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி

Question 5.
மழைக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்.
அ) மிக அதிகப்படியான ஈரப்பதம்
ஆ) மிக அதிகமான வெப்பநிலை
இ) மிக மெல்லிய மண்ணடுக்கு
ஈ) வளமற்ற மண்
விடை:
ஈ) வளமற்ற மண்

II. கூற்று (A) காரணம் (R)கண்ட றிக

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ. கூற்று சரி, காரணம் தவறு
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

Question 1.
கூற்று : பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளாது.
காரணம் : ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 2.
கூற்று : குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பலவகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையம் ஆகும்.
காரணம் : இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை அடையாளங் காண்பர்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் ____ எனப்படும்.
விடை:
சூழ்நிலை மண்டலம்

Question 2.
பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுபவை _____
விடை:
நுகர்வோர்கள்

Question 3.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை _____ என அழைக்கின்றோம்.
விடை:
உணவு வலை

Question 4.
மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை _____ என்கிறோம்.
விடை:
பல்லுயிர்த்தொகுதி

Question 5.
பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் _____ எனப்படும்
விடை:
பாலைவனத்தாவரங்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 6.
____ நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.
விடை:
கடல்

IV. சுருக்கமான விடையளி.

Question 1.
உயிர்க்கோளம் என்றால் என்ன?
விடை:

  • உயிர்க்கோளம், பாறைக் கோளம், நீர்க் கோளம், வளிக்கோளத்தை உள்ளடக்கிய புவியின் நான்காவது கோளமாகும்.
  • கடல் மட்டத்திலிருந்து வளிமண்டல கீழடுக்கில் சுமார் 20 கி.மீ. உயரம் வரை பரவியுள்ள இக்கோளம் தாவர இனங்களும், விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.

Question 2.
சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?
விடை:

  • பல்வேறு உயிரினங்களின் தொகுதி ‘சூழ்நிலை மண்டலம்’ ஆகும். இம்மண்டலத்தில் வாழ்கின்ற, உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, உயிரற்ற சுற்றுச் சூழல் காரணிகளோடும் தொடர்பு கொள்கின்றன.
  • சூழ்நிலை மண்டலம் மிகச் சிறிய அலகிலிருந்து (எ.கா. மரப்பட்டை) உலகளாவிய சூழ்நிலை மண்டலம் (அல்லது) சூழல் கோளம் வரை (எ.கா. விவசாய நிலம், வனச்சூழல் அமைப்பு) வேறுபட்டுக் காணப்படுகிறது.

Question 3.
உயிரினப் பன்மை என்றால் என்ன?
விடை:
ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பது ‘உயிரினப் பன்மை’ ஆகும். எ.கா. தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற நுண்ணியிரிகள்.

Question 4.
“உயிரினப் பன்மை இழப்பு” என்பதன் பொருள் கூறுக?
விடை:
மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு ‘உயிரினப் பன்மையின் இழப்பு’ எனப்படும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 5.
பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைக் குறிப்பிடுக.
விடை:
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகள்.

  • வெப்ப மண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதி.
  • வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி
  • பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி
  • மித வெப்பமண்டலப் பல்லுயிர்த் தொகுதி.
  • தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி.

V. காரணம் கூறுக

Question 1.
உற்பத்தியாளர்கள், தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
ஏனெனில்,
உற்பத்தியாளர்கள் சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் ஆகும். இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன. (எ.கா.) தாவரங்கள், பாசி, பாக்டீரியா.

Question 2.
உயிர்க்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது.
விடை:
ஏனெனில்,
உயிர்க்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலம் மற்றும் பல்லுயிர்த் தொகுதி அமைப்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது. உலக சூழ்நிலை மண்டலம் விவசாய நிலம், குளச் சூழ்நிலை மண்டலம், வனச் சூழல் அமைப்பு மற்றும் பிற சூழ்நிலை மண்டலங்கள் என வேறுபட்டுக் காணப்படுகிறது. அனாலும் இங்க உயிரினங்கள் நிலையாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் காணப்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

VI. வேறுபடுத்துக.

Question 1.
உற்பத்தியாளர் – சிதைப்பவர்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 60

Question 2.
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி – நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 61

Question 3.
வெப்பமண்டலத் தாவரங்கள் – பாலைவனத் தாவரங்கள்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 62
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 62.1

Question 4.
சவானா – தூந்திரா
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 68.1

VII. விரிவான விடையளி

Question 1.
சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.
விடை:
சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள்.

  • உயிரற்ற கூறுகள்
  • உயிருள்ள கூறுகள்
  • ஆற்றல் கூறுகள் என மூவகைப்படும்

உயிரற்ற கூறுகள்..
சுற்றுச் சூழலில் உள்ள உயிரற்ற, கரிம, இயற்பியல் மற்றும் இரசாயன காரணிகளை உள்ளடக்கியதாகும்.
(எ.கா.) நிலம், காற்று, நீர், சுண்ணாம்பு, இரும்பு போன்றவை.

உயிருள்ள கூறுகள் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியவை.

  • உற்பத்தியாளர்கள்
    இவை தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய உயிரினங்கள்.
  • முதல் நிலை நுகர்வோர் – தாவர உண்ணிகள்
  • இரண்டாம் நிலை நுகர்வோர் – ஊன் உண்ணிகள்
  • சிதைப்போர்கள் – சாறுண்ணிகள் எனப்படும். இவை இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்சுடியவை.

ஆற்றல் கூறுகள் (Energy Components)
உயிர்க்கோளம் முழுமைக்கும் ஆற்றலை வழங்கக்கூடியது சூரியன் ஆகும்.
அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும் ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் சூரிய ஆற்றல் பயன்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 2.
சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகளை எழுதுக.
விடை:
சூழ்நிலை மண்ட லத்தின் செயல்பாடுகள் (Functions of an ecosystem)
சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகள் ஆற்றல் ஓட்டத்தின் அமைப்பைச் சார்ந்துள்ளன.
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 68
அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு

  • ஆற்றல் மட்டம்
  • உணவுச் சங்கிலி
  • உணவு வலை ஆகியவற்றை உருவாக்குகின்றன.

ஆற்றல் மட்டம்.
ஆற்றல் ஓட்டம் பெரும்பாலும் சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்கு முறையில் நடைபெறுகிறது. இந்நிலைகள் ஆற்றல் மட்டம் எனப்படுகிறது.
உணவுச் சங்கிலி.
உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம் பல்வேறு ஆற்றல் மட்டத்தின் வழியாகத் தொடர்ச்சியாக நடைபெறுவதை உணவுச் சங்கிலி என்று அழைக்கிறோம்.

உணவு வலை.
உணவுச் சங்கிலிகள் (Food Chain) ஒன்றினையொன்று சார்ந்து, பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை (Food web) எனப்படுகிறது. (ஆற்றல் மட்டம் → உணவுச் சங்கிலி → உணவு வலை)

Question 3.
புவியில் உள்ள நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியை விவரி.
விடை:
நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி

  • இங்கு காணப்படும் உயிரினங்கள் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டு அவை வாழுகின்ற சூழலுக்கும் சக்தி மூலங்களுக்கும், இடத்திற்கும் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன
  • நீர்வாழ் உயிரினங்களின் மீதும் உயிரற்ற காரணகளின் தாக்கம் காணப்படுகிறது.
  • நன்னீர்வாழ் பல்லுயிர்தொகுதி மற்றும் கடல்நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி என இரண்டு வகை உண்டு.

நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி

  • இத்தொகுதியானது ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இத் தொகுதி உயிரினங்கள் – தாவரங்கள்
    • அல்லி
    • தாமரை
    • பாசியினத் தாவரங்கள் – விலங்குகள்
    • ஆமை
    • முதலை
    • மீன் இனங்கள்.

கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
கடல் நீரில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விட ஆதாரமாக உள்ள இத்தொகுதி புவியில் காணப்படும் மிகப்பெரிய பல்லுயிர்த்தொகுதியாகும். இரண்டாம் வகை கடல்நீர்வாழ் உயிரினங்களான பவளப்பாறைகள் (coral reefs) உள்ளன. மனிதர்கள் இத்தொகுதியை நீர், உணவு, பொழுதுபோக்கு அம்சங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இத்தொகுதியில் காணப்படும் பிரச்சனைகள் அதிக அளவில் மீன்பிடத்தல், சுற்றுச்சூழல் மாசுபடுதல், கடல் மட்டம் உயர்தல்.

VIII. கீழ்க்கண்டவற்றின் தினங்களைக் கண்டுபிடி

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 75

IX. நில வரைபடப் பயிற்சி (மாணவர்களுக்கானது)

உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்

1. பிரெய்ரி
2. டௌன்ஸ்
3. தூந்திர பல்லுயிர்த் தொகுதி
4. வெப்பமண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

X. படத்தைப் பார்த்து விடையளி

Question 1.
ஆர்டிக் தூந்திர உணவு வலை பற்றி உனது சொந்த கருத்தை வரையறு. (மாணவர்களுக்கானது)
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 80

9th Social Science Guide உயிர்க்கோளம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_____ புவியின் நான்காவது கோளமாகும்.
விடை:
உயிர்க்கோளம்

Question 2.
_____ என்பது பல்வேறு உயிரினங்களின் தொகுதி ஆகும்.
விடை:
சூழ்நிலை மண்டலம்

Question 3.
சூழ்நிலை மண்டலத்தைப்பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ____ ஆகும்.
விடை:
சூழலியல்

Question 4.
சூழலியல் பற்றிப் படிப்பவர் ____ எனப்படுகிறார்.
விடை:
சூழலியலாளர்

Question 5.
______ தற்சார்பு ஊட்ட உயிரி என அழைக்கப்படுகின்றன
விடை:
உற்பத்தியாளர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 6.
தூந்திரப் பகுதி மக்கள் குளிர்காலங்களில் _____ என்ற வீடுகளில் வாழ்கிறார்கள்.
விடை:
இக்ளு

II. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
உயிர்கோளம் முழுமைக்கும் _____ ஆற்றலை வழங்குகிறது.
அ) பூமி
ஆ) சூரியன்
இ) வெள்ளி
ஈ) செவ்வாய்
விடை:
ஆ) சூரியன்

Question 2.
பாலைவனப் பகுதியில் ஆண்டுச் சராசரி மழை _____ குறைவாக உள்ளது
அ) 15 செ.மீட்டருக்கு
ஆ) 50 செ.மீட்டருக்கு
இ) 35 செ.மீட்டருக்கு
ஈ) 25 செ.மீட்டருக்கு
விடை:
ஈ) 25 செ.மீட்டருக்கு

Question 3.
புவியின் மொத்த நீர்ப்பரப்பு ____ ஆகும்.
அ) 71%
ஆ) 73%
இ 75%
ஈ) 79%
விடை:
ஈ) 79%

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 4.
புவியின் மொத்த நிலப்பரப்பு ___ ஆகும்.
அ) 21%
ஆ) 25%
இ 27%
ஈ) 29%
விடை:
ஈ) 29%

Question 5.
இந்தியாவில் ____ உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
அ) 15
ஆ) 18
இ) 19
ஈ) 36
விடை:
ஆ) 18

III. குறுகிய விடையளி.

Question 1.
வாழ்விடம் என்றால் என்ன?
விடை:
விலங்கு, தாவரம் மற்றும் நுண்ணுயிரிகள் எந்த இடத்தில் வாழ்கின்றதோ அவ்விடம், அவற்றின் வாழ்விடம் எனப்படுகிறது.

Question 2.
நுகர்வோர் என்றால் என்ன?
விடை:

  • நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களைச் சார்ந்திருக்கும் உயிரினங்கள் நுகர்வோர் எனப்படும்.
  • இவை பிற சார்பு ஊட்ட உயிரி என்று அழைக்கப்படுகின்றன.

Question 3.
சாறுண்ணிகள் என்றால் என்ன?
விடை:
இறந்த அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்கூடியவை சாறுண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. எ.கா. பூஞ்சைகள், காளான்கள்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 4.
உணவு வலை என்றால் என்ன?
விடை:
உணவுச் சங்கலிகள் ஒன்றினையொன்று சார்ந்து, பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை எனப்படுகிறது.

Question 5.
பாலைவனச் சோலை என்றால் என்ன?
விடை:

  • பாலைவனச்சோலை என்பது பாலை வனங்கள் மற்றும் அரை வறண்டப் பாலைவனப் பிரதேசங்களில் காணப்படும் வளமான நன்னீர் பகுதியாகும்.
  • பாலைவனச் சோலைகள் நீரூற்றிலிருந்து நீரைப் பெறுகின்றன பேரீட்சை, அத்தி, சிட்ரஸ் பழங்கள் மக்காச்சோளம் போன்றவை பாலைவனச் சோலைக்கு அருகில் விளைவிக்கப்படுகின்றன.

IV. விரிவான விடையளி.

Question 1.
நீர்வாழ் உயிரிகளின் சூழ்நிலை அமைப்பை நிலவாழ் உயிரிகளின் சூழ்நிலை அமைப்பிலிருந்து வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 91

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 92
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 93

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 4 மக்களின் புரட்சி Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 4 மக்களின் புரட்சி

8th Social Science Guide மக்களின் புரட்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1519
ஆ) 1520
இ) 1529
ஈ) 1530
விடை:
இ) 1529

Question 2.
பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
அ) பூலித்தேவன்
ஆ) யூசுப்கான்
இ) கட்டபொம்மன்
ஈ) மருது சகோதரர்கள்
விடை:
அ) பூலித்தேவன்

Question 3.
காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ) இராமநாதபுரம்
ஈ) தூத்துக்குடி
விடை:
இ) இராமநாதபுரம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 4.
வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?
அ) பாஞ்சாலங்குறிச்சி
ஆ) சிவகங்கை
இ) திருப்பத்தூர்
ஈ) கயத்தாறு
விடை:
ஈ) கயத்தாறு

Question 5.
வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?
அ) நாகலாபுரம்
ஆ) சிவகிரி
இ) சிவகங்கை
ஈ) விருப்பாச்சி
விடை:
இ) சிவகங்கை

Question 6.
‘திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது?
அ) மருது பாண்டியர்கள்
ஆ) கிருஷ்ணப்ப நாயக்கர்
இ) வேலு நாச்சியார்
ஈ) தீரன் சின்னமலை
விடை:
அ) மருது பாண்டியர்கள்

Question 7.
கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?
அ) திண்டுக்கல்
ஆ) நாகலாபுரம்
இ) புதுக்கோட்டை
ஈ) ஓடாநிலை
விடை:
ஈ) ஓடாநிலை

Question 8.
ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?
அ) மத்திய இந்தியா
ஆ) டெல்லி
இ) கான்பூர்
ஈ) பரெய்லி
விடை:
அ) மத்திய இந்தியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கிழக்குப்பகுதி பாளையங்கள் ___________ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது
விடை:
கட்டபொம்மன்

Question 2.
விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் ___________ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்
விடை:
அரியநாதர்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 3.
கட்டபொம்மனின் முன்னோர்கள் _____________ பகுதியைச் சார்ந்தவர்கள்
விடை:
ஆந்திரப்

Question 4.
____________ தமிழர்களால் ‘வீர மங்கை’ எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்
விடை:
வேலு நாச்சியார்

Question 5.
____________ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்
விடை:
சின்ன மருது

Question 6.
1857 ஆம் ஆண்டு புரட்சியை ___________ என்பவர் முதல் இந்திய சுதந்திரப் போர்’ என விவரிக்கிறார்.
விடை:
வி.டி. சவார்க்கர்

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி 1

IV. சரியா /தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்
விடை:
சரி

Question 2.
சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்
விடை:
தவறு

Question 3.
1799 அக்டோபர் 17ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்
விடை:
சரி

Question 4.
திப்பு சுல்தானின் மூத்த மகன் பதேக் ஹைதர் ஆவார்
விடை:
சரி

V. அ) பின்வரும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும்

I. வேலூர் புரட்சி 1801ம் ஆண்டு ஏற்பட்டது.
II. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்
III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தார்
IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.

அ) I & II சரி
ஆ) II & IV சரி
இ) II & III சரி
ஈ) I, II, & IV சரி
விடை:
இ) II & III சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

ஆ) தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.
1. மருது பாண்டியர் – எட்டயபுரம்
2. கோபால நாயக்கர் – திண்டுக்கல்
3. கேரளவர்மன் – மலபார்
4. துண்டாஜி – மைசூர்
விடை:
1. மருது பாண்டியர் – எட்டயபுரம்

இ) மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
கட்டப்பொம்மன், ஊமைத்துரை, செவத்தையா, திப்பு சுல்தான்.
விடை:
திப்பு சுல்தான்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
பாளையக்காரர்கள் என்பவர் யார்? சிலரின் பெயரைக் கூறுக.
விடை:

  • பாளையக்காரர்கள் என்பவர் ஒரு பிரதேசம் அல்லது பாளையத்தின் உரிமையாளர்கள் ஆவர்.
  • பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார்.

Question 2.
பாளையக்கார புரட்சியில் வேலு நாச்சியாரின் பங்கு என்ன?
விடை:

  • சிவகங்கையின் இராணியான வேலு நாச்சியார் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை மருது சகோதரர்கள் உதவியுடன் எதிர்த்து சிவகங்கையை கைப்பற்றினர்.
  • காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் இந்திய பெண்ணரசி ஆவார்.

Question 3.
தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?
விடை:
மருது சகோதரர்கள், கோபாலநாயக்கர், கேரளவர்மன் கிருஷ்ணப்பநாயக்கர் மற்றும் துண்டாஜி ஆவர்.

Question 4.
‘திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • ஜீன் 1801ல் மருது சகோதரர்கள் வெளியிட்ட பிரகடனம் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்களை ஒன்று சேர்க்கும் முதல் அழைப்பு ஆகும்.
  • இந்த அறிவிப்பின் நகல் திருச்சி கோட்டை சுவரிலும் ஸ்ரீரங்கம் வைஷ்ணவகோவில் சுவரிலும் ஒட்டப்பட்டது.

Question 5.
வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக?
விடை:

  • புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
  • திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.
  • வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கப்பட்டார்.

Question 6.
1857ஆம் ஆண்டு புரட்சிக்கான உடனடிக் காரணம் என்ன?
விடை:

  • இராணுவத்தில் என்பீல்டு ரகதுப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பன்றியின் கொழுப்பும், பசுவின் கொழுப்பும் தடவப்பட்ட துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த இந்து, முஸ்லீம் வீரர்கள் மறுப்பு தெரிவித்தது புரட்சிக்கு உடனடி காரணமாயிற்று.

VII. விரிவான விடையளி.

Question 1.
புலித்தேவரைப் பற்றி நீவிர் அறிந்ததை எழுதுக?
விடை:

  • இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்த பூலித்தேவர் நெற்கட்டும் செவல் பாளையக்காரர்.
  • ஆற்காடு நவாப் முகமது அலிக்கும் ஆங்கிலேயருக்கும் கப்பம் கட்ட மறுத்த பூலித்தேவரை எதிர்த்து படையெடுத்த கூட்டுப்படையை தோற்கடித்தார்.
  • ஆங்கிலேயருடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய மன்னர் பூலித்தேவர் ஆவார்.
  • 1759ல் யூசுப்கான் தலைமையிலான நவாப் படைகளால் தோற்கடிக்கப்பட்டார்.
  • 1764ல் நெற்கட்டும் செவ்வலை பூலித்தேவர் கைப்பற்றினார்.
  • 1767ல் கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டு தலை மறைவாக வாழ்ந்து இறந்து போனார்.
  • துணிச்சலான அவரது போராட்டம் தென்னிந்திய வரலாற்றில் நிலைத்து நின்றது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 2.
தீரன் சின்னமலைக்கும் ஆங்கிலேயருக்கும் இடையேயான போராட்டாத்திற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளை விவரி?
விடை:

  • பிரெஞ்சு இராணுவத்தின் நவீன போர்முறை பயிற்சிப் பெற்ற தீரன் சின்னமலை திப்பு சுல்தானுடனிருந்து ஆங்கிலேயரை வென்றார்.
  • திப்பு சுல்தான் இறப்பிற்கு பின் 1800ல் ஆங்கிலேயரைக்தாக்க மராத்தியர் மற்றும் மருது சகோதரர்கள் உதவியை நாடினார்.
  • ஆங்கிலப் படைகள் அக்கூட்டுப்படைகளை தடுத்ததால் தீரன் சின்னமலை தோற்கடிக்கப்பட்டார்.
  • தொடர்ந்து நடைபெற்ற காவேரி, ஓடாநிலை, மற்றும் அரச்சலூர் போர்களில் கொரில்லா போர் முறையில் ஆங்கிலேயரைத் தோற்கடித்தார்.
  • சின்னமலையின் சமையற்காரர் நல்லப்பன் என்பவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு 1805ல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

Question 3.
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான காரணங்களை எழுதுக?
விடை:

  • ஆங்கிலேயரின் பொருளாதார சுரண்டல் புரட்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
  • வாரிசு இழப்புக் கொள்கை, துணைப்படைத்திட்டம் மூலம் முறையற்ற வகையில் அயோத்தியை இணைத்து ஆகியன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
  • மதமாற்ற நடவடிக்கைகள் சமய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய சமய அறிஞர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
  • சதி ஒழிப்பு, பெண்சிசுக் கொலை ஒழிப்பு விதவை மறுமணம் மற்றும் பெண் கல்வி ஆதரவு ஆகிய ஆங்கிலேயர் நடவடிக்கைகள் இந்திய கலாச்சாரத்தில் தலையிடுவதாக கருதினர்.
  • இந்திய சிப்பாய்கள் ஆங்கில அதிகாரிகளால் தாழ்வாக கருதப்பட்டதோடு குறைவான ஊதியம் கொடுக்கப்பட்டது. உயர் பதவிகள் ஆங்கில வீரர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது.

Question 4.
1857 ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணங்களை எழுதுக.
விடை:

  • சரியான ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு பொதுவான திட்டம், மையப்படுத்தப்பட்ட தலைமை, நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவை புரட்சியாளர்களிடையே இல்லை.
  • இராணி லட்சுமிபாய், நானாசாகிப் மற்றும் தாந்தியா தோபே தைரியமானவர்கள் ஆனால் சிறந்த தளபதிகளாகவோ, ஆங்கிலேயர்களுக்கு இணையானவர்களோ இல்லை.
  • வங்காளம், பம்பாய், சென்னை மேற்கு பஞ்சாப் மற்றும் இராஜபுதனம் புரட்சியில் பங்கு கொள்ளவில்லை.
  • நவீன கல்வி கற்ற இந்தியர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை .
  • சீக்கியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் கூர்க்கப்படைப்பிரிவினர் ஆங்கிலேயருக்கு ஆதரவு அளித்தனர்.
  • ஆயுதங்கள், தளபதிகள், ஒருங்கிணைப்பை ஆங்கிலேயர் பெற்றிருந்தனர்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
1857ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒருபொதுவான குறிக்கோள் இல்லை – நிரூபி.
விடை:
1857 ஆம் ஆண்டு பெரும்புரட்சியின் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், புரட்சியில் ஈடுபட்ட தலைவர்களிடையே பொதுவான ஒரே நோக்கமும் குறிக்கோளும் இல்லை என்பது வெளிப்படையான உண்மை.

ஆங்கிலேயரை எதிர்ப்பது என்பதைத் தவிர வேறு பொதுவான குறிக்கோள் ஒன்றும் இல்லை.

பொதுவாக ஒரு இடத்தைக் கைப்பற்றியதும், அடுத்து என்ன செய்வது என்பதை அறியாமல் கொள்ளையடிப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தலைவர்களிடையே ஒருமித்த குறிக்கோள் இல்லை. உதாரணமாக இஸ்லாமியர்கள் முகலாய அரசை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் இந்துக்கள் மராத்திய செல்வாக்கை மீண்டும் நிறுவ முயற்சித்தனர்.

சில இந்தியத் தலைவர்கள் புரட்சியில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர்.

இவ்வாறு தலைவர்களிடையே ஒரே நோக்கமும் குறிக்கோளும் இல்லாதது புரட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமாயிற்று.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பாளையக்காரர்கள் படங்களை சேகரித்து ஒரு செருகேட்டினை (Album) தயார் செய்க.

8th Social Science Guide மக்களின் புரட்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1764
ஆ) 1765
இ) 1757
ஈ) 1759
விடை:
இ) 1757

Question 2.
கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டவர்
அ) பூலித்தேவர்
ஆ) கட்டபொம்மன்
இ) வேலுநாச்சியார்
ஈ) தீரன் சின்னமலை
விடை:
அ) பூலித்தேவர்

Question 3.
1792ல் ஏற்பட்ட உடன்படிக்கை
அ) மைசூர் உடன்படிக்கை
ஆ) மலபார் உடன்படிக்கை
இ) மதராஸ் உடன்படிக்கை
ஈ) கர்நாடக உடன்படிக்கை
விடை:
ஈ) கர்நாடக உடன்படிக்கை

Question 4.
தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு கோட்டை
அ) கயத்தாறு
ஆ) வேலூர்
இ) சங்ககிரி
ஈ) திருச்சி
விடை:
ஆ) வேலூர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
மலாயாவின் பினாங் பின்னர் ___________ என அழைக்கப்பட்டது
விடை:
இளவரசர் தீவு

Question 2.
திப்புவின் கொடியில் ____________ உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது
விடை:
புலி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 3.
1857 புரட்சியின் போது ____________ கவர்னர் ஜெனரலாக இருந்தார்
விடை:
கானிங்பிரபு

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி 2

IV. சரியா? தவறா?

Question 1.
மருது சகோதரர்கள் மூக்கையா பழனியப்பன் மற்றும் பொன்னாத்தாள் இவர்களின் மகன்கள்
விடை:
சரி

Question 2.
வேலூர் கோட்டையானது பெரும்பாலான ஆங்கிலேயர்களைக் கொண்டிருந்தது
விடை:
தவறு

V. கீழ்க்காணும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையை (✓) செய்யவும்

அ) I. ஆங்கிலேயர்களின் ஆட்சியை பெரும்பாலானோர் ஏற்கவில்லை.
II. பொருளாதார சுரண்டல் மற்றும் நிர்வாக புதுமைகள் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தின.
III. அயோத்தியை முறையாக இணைத்துக் கொண்டனர்.
IV. இந்திய சிப்பாய்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டது.

அ) I & III சரி
ஆ) I & II சரி
இ) III & IV சரி
ஈ) IV, & II சரி |
விடை:
ஆ) I & II சரி

ஆ) மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி. ‘கொங்கு நாடு – சேலம், கோம்புத்தூர், வேலூர், கரூர், மற்றும் திண்டுக்கல்
விடை:
வேலூர்

VI. குறுகிய விடையளி.

Question 1.
வேலூர் கலகத்தின் உடனடிக் காரணம் என்ன?
விடை:

  • ஜூன் 1806 ல் தளபதி அக்னியூ சிலுவை சின்னத்துடன் கூடிய புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார்.
  • இந்து, முஸ்லீம் வீரர்கள் எதிர்த்ததால் தண்டிக்கப்பட்டனர். இதுவே உடனடிக் காரணமாயிற்று.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி

Question 2.
மங்கள்பாண்டே குறிப்பு வரைக.
விடை:

  • 1857 புரட்சியில் பாரக்பூரில் வங்காள படைப்பிரிவைச் சேர்ந்த இளம் இராணுவ வீரர் மங்கள் பாண்டே ஆவார்.
  • கொழுப்பு தடவிய தோட்டாவை தொட மறுத்து உயர் அதிகாரியை சுட்டு கொன்றதால் தூக்கிலிடப்பட்டார்.

Question 3.
1857 ம் ஆண்டு புரட்சி மிக வேகமாக பரவிய இடங்கள் யாவை?
விடை:
புரட்சி மிக வேகமாக பரவியது லக்னோ கான்பூர், ஜான்சி, பரெய்லி, பீகார், பைசாபாத், மற்றும் வட இந்தியா ஆகும்.

VII. விரிவான விடையளி.

Question 1.
வேலு நாச்சியார் பற்றி ஒரு பத்தியில் விடையளி.
விடை:

  • சிவகங்கையின் இராணி வேலு நாச்சியார் 16 வயதில் முத்து வடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
  • ஆங்கிலப்படை 1772ல் முத்துவடுக நாதரை காளையார் கோயில் போரில் கொன்றதால் வேலு நாச்சியார் தன் மகளுடன் கோபாலநாயக்கர் பாதுகாப்பில் வாழ்ந்தார்.
  • இக்காலகட்டத்தில் ஒரு படையை அமைத்து சகோதரர்கள் உதவியுடன் ஆங்கிலேயரை தோற்கடித்து சிவகங்கை இராணியானார்.
  • பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் இந்தியப் பெண்ணரசி ஆவார்.
  • இவர் தமிழர்களால் வீரமங்கை தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அழைக்கப்படுகிறார்.

Question 2.
1857 ம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை?
விடை:

  • 1857 ம் ஆண்டு புரட்சி இந்திய வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
  • இதனால் நிர்வாக மற்றும் அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.
  • 1858 ல் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை மூலம் இந்திய நிர்வாகம் கம்பெனியிடமிருந்து ஆங்கில அரசுக்கு மாற்றப்பட்டது.
  • இயக்குநர் குழு, கட்டுப்பாட்டு குழு கலைக்கப்பட்டு 15 உறுப்பினர்கள் கொண்ட ஒரு சபை ஏற்படுத்தப்பட்டது.)
  • இராணுவம் மாற்றியமைக்கப்பட்டு அதிகப்படியான ஆங்கிலேயர்கள் பணியிலமர்த்தப்பட்டனர்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 4 மக்களின் புரட்சி 3