Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 3 மனித உரிமைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 3 மனித உரிமைகள்

9th Social Science Guide மனித உரிமைகள் Text Book Back Questions and Answers

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின்பற்றிய நாடு
அ) தென் சூடான்
ஆ) தென் ஆப்பிரிக்கா
இ நைஜீரியா
ஈ) எகிப்த்
விடை:
ஆ) தென் ஆப்பிரிக்கா

Question 2.
ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது _____ உரிமைகள்
அ) சமூகம்
ஆ) பொருளாதாரம்
இ) அரசியல்
ஈ) பண்பாட்டு
விடை:
இ) அரசியல்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 3.
ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் – எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்?
அ) சமத்துவ உரிமை
ஆ) சுதந்திர உரிமை
இ) குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை
ஈ) சமய சுதந்திர உரிமை
விடை:
இ) குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை

Question 4.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு _____
அ) 20 நாட்கள்
ஆ) 25 நாட்கள்
இ) 30 நாட்கள்
ஈ) 35 நாட்கள்
விடை:
இ) 30 நாட்கள்

Question 5.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) மாநில மனித உரிமை ஆணையம் 1993ல் நிறுவப்பட்டது.
ii) இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
iii) இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்.
iv) இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம்.
அ) 1 மற்றும் ii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, ii மற்றும் iii சரி
ஈ) i, ii மற்றும் iv சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iv சரி

Question 6.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A) : உரிமைகளும் கடமைகளும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.
காரணம் (R) : நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
இ) (A) சரி, ஆனால் (R) தவறு.
ஈ) (A) தவறு, ஆனால் (R) சரி
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) க்கு சரியான விளக்கம்.

Question 7.
ஐ.நா. சபையின் படி ____ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.
அ) 12
ஆ) 14
இ) 16
ஈ) 18
விடை:
ஈ) 18

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 8.
___ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.
அ) இலக்கியம்
ஆ) அமைதி
இ) இயற்பியல்
ஈ) பொருளாதாரம்
விடை:
ஆ) அமைதி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உலகளாவிய மனித உரிமை பிரகடனம் _____ பிரிவுகளைக் கொண்டுள்ளது.
விடை:
30

Question 2.
அடிப்படைக் கடமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ____ சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது.
விடை:
1976 ஆம் ஆண்டு 42 வது

Question 3.
தேசிய மனித உரிமை ஆணையம் _____ ஆண்டு அமைக்கப்பட்டது.
விடை:
அக்டோபர் 12, 1993

Question 4.
பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989 இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம் ____
விடை:
தமிழ்நாடு

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள் 40

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
மனித உரிமை என்றால் என்ன?
விடை:
“இன், பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே” மனித உரிமை ஆகும்.

Question 2.
அடிப்படை உரிமைகள் யாவை?
விடை:
அடிப்படை உரிமைகள்.

  • சமத்துவ உரிமை
  • சுதந்திர உரிமை
  • சுரண்டலுக்கு எதிரான உரிமை
  • சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
  • சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்.
  • அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 3.
குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளவை யாவை?
விடை:
குழந்தைகளுக்கான உரிமைகள் :

  • வாழ்வதற்கான உரிமை.
  • குடும்பச் சூழலுக்கான உரிமை
  • கல்விக்கான உரிமை
  • சமூக பாதுகாப்பு உரிமை
  • பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
  • விற்பது மற்றும் கடத்தலுக்கு எதிரான உரிமை
  • குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற
    சுரண்டல்களுக்கு எதிரான உரிமை.

Question 4.
அரசியலமைப்புத்தீர்வு வழிகளுக்கான உரிமையைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற தீர்வழிகளுக்கான உரிமைகளின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.
  • நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது இது நீதிப் பேராணை என்று அழைக்கப் படுகிறது.
  • ஒரு செயல் அரசமைப்புச் சட்டத்தின் படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அரசமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன.

Question 5.
போக்சா (POCSO) – வரையறு.
விடை:

  • போக்சா சட்டம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகும்.
    சிறப்பு அம்சங்கள் :
  • இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது. குழந்தைகளின் உடல், மன, அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது.
  • பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்க்குத் தகுந்த தண்டனை வழங்குகிறது.
  • குழந்தையின் வாக்குமூலம் அவ்வாறே பதிவு செய்ய வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 6.
குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?
விடை:
குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் தேவை. ஏனெனில்
குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக விற்பனை அல்லது கடத்தல் செய்யப்படுகின்றனர்.

Question 7.
தொழிலாளர் நலனுக்காக பி.ஆர். அம்பேத்காரின் பங்களிப்பு யாவை?
விடை:
பெண் தொழிலாளர்கள் நலனுக்காக டாக்டர். பி.ஆர். அம்பேத்கார் பங்களிப்பு :

  • சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம்
  • பெண் தொழிலாளர் நலநிதி
  • பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்
  • பெண் தொழிலாளர்களுக்கான பேறுகால நன்மைகள் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.

Question 8.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. நியாயப்படுத்துக.
விடை:

  • சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆயினும் வேலை வாய்ப்புகளில் பாலினப் பாகுபாடு காணப்படுகின்றது.
  • பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே திருமணம் செய்யப்படுவதனால் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகள், கல்வியறிவு, ஆரோக்கியமான வாழ்வை இழந்து விடுகின்றனர்.
  • எனவே பெண்களுக்கான தனிச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

Question 9.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி ஏதேனும் இரண்டு கூறு.
விடை:

  • தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு.
  • தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.
  • தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் (E.S.I.)
  • தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 10.
வேறுபடுத்துக – மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள்.
விடை:
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் :
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள் 65

V. விரிவான விடையளி

Question 1.
உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.
விடை:
உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (UDHR) : –

  • வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கலந்து கொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (Universal Declaration of Human Rights) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.
  • 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா.பொது சபையில் நிறைவேற்றப்பட்ட பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும்.
  • மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன. அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது.

சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் :-

  • ஒரு சமூகத்தில் முழுமையாகப் பங்காற்றத் தேவைப்படும் உரிமைகளே சமூக உரிமைகள்
  • ஒவ்வொரு மனிதனும் தனது தேவைகளை நிறைவேற்றக்கூடிய பொருளாதார நிலைக்கு உறுதி அளிப்பவை பொருளாதார உரிமைகள். ஒரு நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட பொருளாதார சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியன இதனால் பாதுகாக்கப்படுகின்றன.
  • ஒவ்வொருவரும் தமது பண்பாட்டைக் கடைப்பிடிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்துபவை பண்பாட்டு உரிமைகள்.

குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் :-

  • அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிடமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பவையே இவ்வுரிமைகள்.
  • ஒருவர் சமூகத்தின் குடிமை மற்றும் அரசியல் வாழ்வில் பங்கேற்கும் திறமையை உறுதி செய்கின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 2.
அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்?
விடை:
அடிப்படைக் கடமைகள் :

  • அடிப்படை கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விதத்தில் அமைந்துள்ளன.
  • 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கவில்லை.
  • 1976ம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் மூலம் அவை இணைக்கப்பட்டன. அரசமைப்பு 11 அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகின்றது.

செயல்படுத்தும் விதம் :

  • சின்னங்களை மதித்தல்
  • இயக்கங்களில் இணைதல், செயல்படுதல்
  • சூழல், பொருட்கள் பாதுகாத்தல்
  • அனைவரும் கற்க வழி செய்தல்
  • ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு செயல்படுத்த முடியும்.

Question 3.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நம் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறது?
விடை:
தேசிய மனித உரிமைகள் ஆணையம் :- (இந்திய மனித உரிமைகள் ஆணையம்)
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். ஒரு இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள தனி மனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் :-

  • மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்திடுதல்.
  • மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்.
  • மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.
  • சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.
  • மனித உரிமைத் துறையில் பணியாற்றும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்.

Question 4.
தொழிலாளர் சட்டத்தின் மூலம் தொழிலாளர் பெறும் நன்மைகள் யாவை?
விடை:
தொழிலாளர் உரிமைகள் :
சமத்துவத்திற்கான உரிமை, பொது வேலைவாய்ப்பில் சமத்துவம், அமைப்புகள் மற்றும் சங்கம் தொடங்குவதற்கான உரிமை, வாழ்வாதார உரிமை, கடத்தலைத் தடுத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உரிமைகளை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. பிரிவு 39பி, இருபாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது.

தொழிலாளர்களுக்கான சட்டங்கள் :-

  • தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு.
  • தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.
  • இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்.
  • தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் (ESI).
  • தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்.
  • நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 5.
அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?
விடை:
அடிப்படை உரிமைகளை கீழ்க்கண்டவாறு என்(நம்) வாழ்க்கையில் அனுபவிக்கின்றேன்
(அனுபவிக்கின்றோம்)
ஒரு மனிதனின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குத் தேவையான உரிமைகள் அடிப்படை உரிமைகள் ஆகும்.

அடிப்படை உரிமைகள் :-

  • சமத்துவ உரிமை
  • சுதந்திர உரிமை
  • சுரண்டலுக்கு எதிரான உரிமை
  • சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
  • சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
  • அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை

சமத்துவ உரிமை :-
சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பதே இவ்வுரிமை ஆகும்.

சுதந்திர உரிமை :-
சுதந்திரமாகப் பேச, ஆயுதமின்றிக் கூட, சங்கங்கள் அமைக்க, இந்தியாவில் எந்த பகுதியிலும் வகிக்க, இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாட, எந்த தொழிலையும் வணிகத்தையும் செய்ய உரிமை வழங்கப்பட்டுள்ளது.

சுரண்டலுக்கெதிரான உரிமை :
14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள், அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

சமயச் சுதந்திரம் மற்றும் பகுத்தறிவுக்கான உரிமை :-
குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது.

பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் :-
அரசமைப்பு சட்டம் கல்விக்கூடங்களை அமைக்கவும். நமது பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் உரிமை வழங்கியுள்ளது.

அரசமைப்பு தீர்வழிக்களுக்கான உரிமை :-
ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற அரசமைப்பு தீர்வழிகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது. இது நீதிப்பேராணை என்று அழைக்கப்படுகிறது.

VI. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. பாலியியல் ரீதியான துன்புறுத்தல், சுரண்டல் மற்றும் கடத்தல்களில் இருந்து நீ எவ்வாறு உன்னைப் பாதுகாத்துக் கொள்வாய்.
2. “என் நாடு என் உரிமைகள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.

9th Social Science Guide மனித உரிமைகள் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
_____ இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடினார்.
விடை:
நெல்சன் மண்டேலா

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 2.
மனிதனது தேவைகளை நிறைவேற்றக் கூடிய பொருளாதார நிலைக்கு உறுதி அளிப்பவை _____
விடை:
பொருளாதார உரிமைகள்

Question 3.
ஒவ்வொருவரும் தமது பண்பாட்டைக் கடை- பிடிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்துபவை ______
விடை:
பண்பாட்டு உரிமைகள்

Question 4.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் …………. அன்று நிறுவப்பட்டது.
விடை:
1993 அக்டோபர் 12

Question 5.
அரசமைப்பின் பிரிவு_ல் உள்ளபடி 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க சட்டம் _____ இயற்றியது.
விடை:
பிரிவு 21A

II. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
____ ல் ஐ.நா சபை தொடங்கப்பட்டது.
அ) 1945
ஆ) 1947
இ) 1941
ஈ) 1949
விடை:
அ) 1945

Question 2.
பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் ____ ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்டது.
அ) 2005
ஆ) 2006
இ) 2007
ஈ) 2008
விடை:
இ) 2007

Question 3.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ____ ல் இயற்றப்பட்டது.
அ) 2007
ஆ) 2008
இ) 2009
ஈ) 2010
விடை:
இ) 2009

Question 4.
ஆபத்து காலத்தில் உதவிட காவலன் ____ செயலி உதவுகிறது.
அ) SAC
ஆ) SOC
இ) SOS
ஈ) SOD
விடை:
இ) SOS

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 5.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் _____ ஆண்டு இயற்றப் பட்டது.
அ) 2008
ஆ) 2010
இ) 2012
ஈ) 2014
விடை:
இ) 2012

III. குறுகிய விடையளி

Question 1.
குடிமை உரிமைகள் என்றால் என்ன?
விடை:
குடிமை உரிமைகள் என்பன ஒவ்வொரு மனிதனுக்கும், இன, தேசிய, நிற, பால், வயது, சமய போன்ற பாகுபாடுகளின்றி அரசின் சட்டத்தால் தரப்படும் உரிமைகளைக் குறிக்கின்றது.

Question 2.
மனித உரிமை குறித்து ஜான் எஃப் கென்னடியின் கூற்று யாது?
விடை:
“ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும் போது ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது” என்றார் ஜான் எஃப் கென்னடி.

Question 3.
இந்திய அரசமைப்பின் குழந்தைகள் உரிமைச் சட்டப் பிரிவுகள் குறித்து எழுது.
விடை:
இந்திய அரசமைப்பில் குழந்தைகள் உரிமை :

  • பிரிவு 24 – பதினான்கு வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது.
  • பிரிவு 45 – பதினான்கு வயது, நிறைவடையும் வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி, அனைத்து குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

IV. விரிவான விடையளி

Question 1.
குழந்தைகளுக்கான உரிமைகள் யாவை? ஏதேனும் நான்கினை விவரி.
விடை:
குழந்தைகளுக்கான உரிமைகள் :-

  • வாழ்வதற்கான உரிமை
  • குடும்பச் சூழல்களுக்கான உரிமை
  • கல்விக்கான உரிமை
  • சமூகப்பாதுகாப்பு உரிமை
  • பாலியல் தொல்லைக்கு எதிரான உரிமை
  • விற்பது அல்லது கடத்துலுக்கெதிரான உரிமை
  • குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கெதிரான உரிமை.

வாழ்வதற்கான உரிமை :-
வாழ்வதற்கான உரிமை என்பது பிறப்புரிமை. அடிப்படைத்தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மற்றும் கண்ணியமான வாழ்வு வாழும் உரிமை ஆகியனவற்றை உள்ளடக்கியது.

குடும்பச் சூழலுக்கான உரிமை :
ஒருகுழந்தைக்கு ஒரு நல்ல குடும்பச்சூழல், இயல்பான குழந்தைப் பருவத்தினைக் கழிக்க உரிமையுண்டு. ஆதரவற்ற, கைவிடப்பட்ட அல்லது அனாதை குழந்தைகளும் வாழ தகுதியுடையவர்கள். இது போன்ற குழந்தைகள், அக்கறையுள்ள குடும்பங்களுக்குத் தத்துக் கொடுக்கப்படலாம்.

சமூகப் பாதுகாப்பு உரிமை :-
உடல் நலமின்மை , இயலாமை அல்லது வயது முதிர்வு காரணமாகப் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களால், குழந்தைகளுக்குத் அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.

கல்விக்கான உரிமை :-
6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க 2009ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள் 91

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

10th Social Science Guide மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
GNPயின் சமம் …………………
அ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP
ஆ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP
இ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
ஈ) NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
விடை:
இ GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

Question 2.
நாட்டு வருமானம் அளவிடுவது …………………..
அ) பணத்தின் மொத்த மதிப்பு
ஆ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு
இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
விடை:
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

Question 3.
முதன்மை துறை இதனை உள்ளடக்கியது ……………..
அ) வேளாண்மை
ஆ) தானியங்கிகள்
இ) வர்த்த கம்
ஈ) வங்கி
விடை:
அ) வேளாண்மை

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 4.
………………… முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.
அ) செலவு முறை
ஆ) மதிப்பு கூட்டு முறை
இ) வருமான முறை
ஈ) நாட்டு வருமானம்
விடை:
ஆ) மதிப்பு கூட்டு முறை

Question 5.
GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?
அ) வேளாண் துறை
ஆ) தொழில் துறை
இ) பணிகள் துறை
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
இ பணிகள் துறை

Question 6.
பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 இல் ………………….. லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அ) 91.06
ஆ) 92.26
இ) 80.07
ஈ) 98.29
விடை:
ஆ) 92.26

Question 7.
வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ……………… அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.
அ) 1 வது
ஆ) 3 வது
இ) 4 வது
ஈ) 2 வது
விடை:
ஈ) 2 வது

Question 8.
இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் …………….. ஆண்டுகள் ஆகும்.
அ) 65
ஆ) 60
இ) 70
ஈ) 55
விடை:
அ) 65

Question 9.
கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை?
அ) நீர்பாசன கொள்கை
ஆ) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
இ) நில சீர்திருத்தக் கொள்கை
ஈ) கூலிக் கொள்கை
விடை:
ஆ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை

Question 10.
இந்தியப் பொருளாதாரம் என்பது ……………………..
அ) வளர்ந்து வரும் பொருளாதாரம்
ஆ) தோன்றும் பொருளாதாரம்
இ) இணை பொருளாதாரம்
ஈ) அனைத்தும் சரி
விடை:
ஈ) அனைத்தும் சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் ………………. துறை முதன்மை துறையாகும்.
விடை:
பணிகள்

Question 2.
…………….. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
விடை:
பொருளாதாரம்

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 3.
இரண்டாம் துறையை வேறுவிதமான …………….. துறை என அழைக்கலாம்.
விடை:
தொழில்

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 2

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
நாட்டு வருமானம் – வரையறு.
விடை:

  • நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
  • பொதுவாக நாட்டு வருமானம் மொத்த நாட்டு உற்பத்தி (GNP) அல்லது நாட்டு வருமான ஈவு எனப்படுகிறது.

Question 2.
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?
விடை:
ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்)களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

Question 3.
GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:

  • பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுகிறது.
  • பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.
  • உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.
  • வாங்கும் திறனை மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.
  • பொதுத் துறை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள பயன்படுகின்றது.
  • பொருளாதார திட்டமிட வழிக்காட்டியாகவும் பயன்படுகிறது.

Question 4.
தனிநபர் வருமானம் என்றால் என்ன?
விடை:

  • தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
  • நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.
  • Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 3

Question 5.
மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு.
விடை:

  • ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால், இறுதிப்பண்டத்தின் சந்தை மதிப்பை அளவிடலாம்.
  • உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும் பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.

மதிப்புக் கூட்டு முறை:

  • டீத்துாள் + பால் + சர்க்கரை (இடைநிலைப் பண்டங்கள்) = தேனீர் (இறுதிப்பண்டம்)
  • இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு.

Question 6.
இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.
விடை:

  • வேளாண் கொள்கை
  • தொழில்துறை கொள்கை
  • புதிய பொருளாதாரக் கொள்கை
  • வணிகக் கொள்கை
  • ஊதியக் கொள்கை
  • மக்கள் தொகைக் கொள்கை

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 7.
சிறு குறிப்பு வரைக.
1) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)
2) மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)
விடை:
மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)

  • ஐக்கிய நாடுகள் சபை “வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு – மகிழ்ச்சி” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • உறுப்பு நாடுகள் பூடானை ஒரு எடுத்துக்காட்டாக பின்பற்றி மகிழ்ச்சியையும் நல்வழியையும் மகிழ்ச்சி என அழைத்தனர். (அடிப்படை மனித குறிக்கோள்).

GNHயின் 4 தூண்க ள் :

  1. நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி
  2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  3. கலாச்சாரத்தை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்
  4. நல்ல ஆட்சித் திறன்

மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

  • மனித மேம்பாட்டுக் குறியீடு என்பது 1990ம் ஆண்டு பாகிஸ்தானின் முகஹப்-உல் ஹக் என்ற பொருளியல் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு, வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத் தரம், GDP யின் மடக்கை செயல்பாடு என கணக்கிடப்பட்டு வாங்கும் சக்தி சமநிலைக்கு (PPP) சரி செய்யப்படுகிறது.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி.
விடை:
மொத்த நாட்டு உற்பத்தி (GNP):
மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.
GNP = C + I + G + (X-M) +NFIA
C – நுகர்வோர்
I – முதலீட்டாளர்
G – அரசு செலவுகள்
X-M – ஏற்றுமதி – இறக்குமதி
NFIA – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP):
ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்)களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

நிகர நாட்டு உற்பத்தி (NNP):

  • மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.
  • நிகர நாட்டு உற்பத்தி (NNP) = மொத்த நாட்டு உற்பத்தி (GNP) – தேய்மானம்.

நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP):

  • நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தைக் (தேய்மான செலவின் அளவு) கழித்து பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
  • நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) – தேய்மானம்.

தலா வருமானம் அல்லது தனி நபர் வருமானம் (PCI):

  • தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
  • நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.
  • Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 4

தனிப்பட்ட வருமானம் (PI):
நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.

செலவிடத் தகுதியான வருமானம் (DI):

  • தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்படுகின்ற வருமானத்தை செலவிடத் தகுதியான வருமானம் எனப்படுகிறது.
  • இதனை இவ்வாறு அழைக்கலாம்.
    DPI = தனிப்பட்ட வருமானம் – நேர்முகவரி
    நுகர்வு முறையில் DI = நுகர்வுச் செலவு + சேமிப்பு)

Question 2.
GDPஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.
விடை:
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகள் :
செலவின முறை :

  • இந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதிப்பண்ட பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத் தொகையேயாகும்.
  • Y = C + I + G + (X – M)

வருமான முறை:

  • பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது.
  • வருமான முறையில் GDPஐ கணக்கிடும்போது
  • வருமானம் = கூலி + வாரம் + வட்டி + லாபம்.

மதிப்பு கூட்டு முறை:

  • “இறுதிப்பண்டம்” என்பது ஹோட்டலில் ஒரு கோப்பை தேனீர் (Tea) நமக்கு வழங்கப்படுவதாகும். அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் டீதூள், பால் மற்றும் சர்க்கரை “இடைநிலை பண்டங்கள்” ஆகும்.
  • ஒரு கோப்பை தேனீர் இறுதிப் பண்டமாக மாறுவதற்கு இவைகள் ஒரு பகுதியாக அமைகிறது.
  • ஒரு கோப்பை தேனீர் தயாரிக்க பயன்படுத்திய ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால், தேனீரின் சந்தை மதிப்பை அளவிடலாம்.
  • உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.

மதிப்புக் கூட்டு முறை:

  • டீத்துாள் + பால் + சர்க்கரை (இடைநிலைப் பண்டங்கள்) = தேனீர் (இறுதிப்பண்டம்)
  • இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 3.
இந்தியாவில் GDPயில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி.
விடை:
GDPயின் துறை வாரியான பங்களிப்பு (2018-2019):

  • வேளாண்மைத் துறை – 15.87%,
  • விவசாயம், காடுகள் மற்றும் மீன்பிடித்தல் – 15.87%
  • தொழில்துறை – 29.73%
  • சுரங்கம் மற்றும் குவாரி – 2.7%
  • உற்பத்தி – 16.83%
  • மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல், பிற பயன்பாட்டு சேவைகள் – 2.67%
  • கட்டுமானம் – 7.54%
  • பணிகள் துறை – 54.4%
  • வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் – 18.62%
  • நிதி, ரியல் எஸ்டேட் தொழில்முறை சேவைகள் – 20.96%
  • பொது நிர்வாகம், பாதுகாப்பு பிறபணிகள் – 14.82%
  • இந்திய பொருளாதாரத்தில் விவசாய துறையின் பங்களிப்பு, உலக சராசரி 6.4% விட அதிகமாக உள்ளது.
  • ஆனால், தொழில்துறை மற்றும் பணிகள் துறைகளின் பங்களிப்பு, உலக சராசரியை விட 30% தொழில்துறையிலும் மற்றும் 63% பணிகள் துறையிலும் குறைவாகவுள்ளன.

Question 4.
பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளைக் கூறுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 5
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 6

Question 5.
கீழ்க்காணும் பொருளாதார கொள்கைகளை விவரி.
1. வேளாண் கொள்கை
2. தொழிற்கொள்கை
3. புதிய பொருளாதார கொள்கை
விடை:
வேளாண் கொள்கை:
உள்நாட்டு வேளாண்மை மற்றும் வெளிநாட்டு வேளாண்மை இறக்குமதி பொருள்கள் பற்றிய அரசின் முடிவுகளையும், நடவடிக்கைகளையும் பற்றியது வேளாண் கொள்கையாகும்.

சில பரவலான கருப்பொருள்கள், இடர் மேலாண்மை மற்றும் சரிசெய்தல், பொருளாதார நிலைத் தன்மை, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத் தன்மையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டு பொருள்களுக்கான சந்தை அணுகல் ஆகியவை வேளாண் கொள்கையில் அடங்கும்.

சில வேளாண் கொள்கைகள் : விலைக் கொள்கை நில சீர்திருத்த கொள்கை, பசுமைப் புரட்சி, பாசனக் கொள்கை, உணவுக் கொள்கை, விவசாய தொழிலாளர் கொள்கை மற்றும் கூட்டுறவு கொள்கை போன்றவைகளாகும்.

தொழில்துறை கொள்கை:
தொழில்துறை முன்னேற்றம் எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் முக்கியமான அம்சமாகும்.

இது வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நவீனமயமாக்கலுக்கு வழிவகுக்கப்பட்டு இறுதியில் பொருளாதாரம் தன்னிறைவு அடைகிறது.

உண்மையில், தொழில் துறை வளர்ச்சி, விவசாயத்துறை (புதிய பண்ணை தொழில் நுட்பம்) மற்றும் பணிகள் துறை போன்ற துறைகளை ஊக்குவிக்கின்றன.

இது பொருளாதார வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

1948லிருந்து பல தொழில் துறை கொள்கைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது.

எடுத்துக்காட்டாக, சில தொழில் கொள்கைகள்: ஜவுளித் தொழில் கொள்கை சர்க்கரை தொழில் கொள்கை, தொழில்துறை வளர்ச்சி விலைக் கொள்கை, சிறுதொழில் தொழிற்கொள்கை மற்றும் தொழில்துறை தொழிலாளர் கொள்கை போன்றவைகளாகும்.

புதிய பொருளாதாரக் கொள்கை:

  • 1990களின் ஆரம்பத்தில் இந்தியாவின் பொருளாதாரம் கணிசமான கொள்கை மாற்றங்களுக்கு உட்பட்டது.
  • இந்த பொருளாதார சீர்திருத்தம், LPG அல்லது தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என அழைக்கப்படுகிறது.
  • இந்த பொருளாதார சீர்திருத்தங்கள், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றமடையச் செய்தது.

10th Social Science Guide மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது ………………. ஒரு பகுதியாகும்.
அ) மொத்த நாட்டு உற்பத்தி
ஆ) நாட்டு வருமானம்
இ) மொத்த உள்நாட்டு உற்பத்தி
ஈ) நிகர நாட்டு உற்பத்தி
விடை:
இ மொத்த உள்நாட்டு உற்பத்தி

Question 2.
GDPயின் நவீன கருத்து ……………… உருவாக்கப்பட்டது.
அ) 1934
ஆ) 1943
இ) 1955
ஈ) 1933
விடை:
அ) 1934

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 3.
…………… என்பது கூலி + வாரம் + வட்டி + லாபம்.
அ) மதிப்பு கூட்டு முறை
ஆ) அ) (ம) ஆ)
இ) செலவின முறை
ஈ) வருமான முறை
விடை:
ஈ) வருமான முறை

Question 4.
…………………..யை முதன்மைத் துறை என்பர்.
அ) பணிகள் துறை
ஆ) வேளாண் துறை
இ) தொழில் துறை
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) வேளாண் துறை

Question 5.
தொழில் துறைக்கு எடுத்துக்காட்டு ……………..
அ) மீன்பிடித்தல்
ஆ) காடு உருவாக்கம்
இ) பெட்ரோலியம்
ஈ) கால்நடை வளர்ப்பு
விடை:
இ பெட்ரோலியம்

Question 6.
…………….யை மூன்றாம் (ம) நான்காம் தொழிலிருந்து வேறுபடுத்திட முடியும்.
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் துறை
இ) பணிகள் துறை
ஈ) அ) (ம) ஆ)
விடை:
இ) பணிகள் துறை

Question 7.
2019இல் பணிகள் துறையில் …………….. லட்சம் கோடி நடப்பு விலையில் மொத்த மதிப்பு உள்ளது.
அ) 28.62
ஆ) 98.26
இ) 92.26
ஈ) 94.26
விடை:
இ 92.26

Question 8.
பொருளாதார முன்னேற்றம் என்பது ……………. யைக் குறிக்கும்.
அ) அளவின்
ஆ) தரம்
இ) அ) (ம) ஆ)
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தரம்

Question 9.
……………… என்பது பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதாகும்.
அ) நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல்
ஆ) நிகர நாட்டு உற்பத்தி
இ) நிகர உள்நாட்டு உற்பத்தி
ஈ) மனித மேம்பாட்டுக் குறியீடு
விடை:
ஈ) மனித மேம்பாட்டுக் குறியீடு

Question 10.
ஐந்தாண்டுத் திட்டத்தில் ……………… உருவாக்கப்பட்டது.
அ) பொருளாதார வளர்ச்சி
இ) வேலை வாய்ப்பு
ஈ) வறுமை
விடை:
இ வேலை வாய்ப்பு

Question 11.
…………….. பொருளாதார வளர்ச்சியின் பொருந்தும் தன்மை ஆகும்.
அ) வளர்ந்த
ஆ) வளர்ந்து வரும்
இ) வளர்ச்சியடைந்த
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) வளர்ந்த

Question 12.
நிகழ்வெண் அதிர்வெண் பொருளாதார முன்னேற்றத்தில் ………………. செயல்முறை ஆகும்.
அ) படிப்படியாக
ஆ) இலக்க
இ) தொடர்ச்சியான
ஈ) ஆ) (ம) இ)
விடை:
இ தொடர்ச்சியான

Question 13.
பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு ……………. கருத்தாகும்.
அ) குறுகிய
ஆ) அகலமான
இ) பரந்த
ஈ) ஆழமான
விடை:
இ பரந்த

Question 14.
தலா வருமானம் ………………. ஆண்டுகளில் 2 மடங்காய் உயர்ந்துள்ளது.
அ) 21
ஆ) 25
இ) 22
ஈ) 12
விடை:
ஈ) 12

Question 15.
மொத்த தேசிய மகிழ்ச்சி உருவாக்கப்பட்ட ஆண்டு ………….. ஆகும்.
அ) 1927
ஆ) 1972
இ) 1955
ஈ) 1966
விடை:
ஆ) 1972

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இருப்பு (அ) செயல்பாட்டில் நிச்சயமற்ற (அ) ஆபத்தான நிலை தொடர்ந்தால் …………… ஏற்படும்.
விடை:
தடுமாற்றம்

Question 2.
……………. என்ற வார்த்தை பிரிட்டிஷ் பத்திரிக்கையால் உருவாக்கப்பட்டது.
விடை:
GNH

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 3.
இந்திய பொருளாதாரம் ……………… துறைகளைக் கொண்டது.
விடை:
3

Question 4.
உலகளாவிய மென்பொருள் வணிகங்களின் மையம் ………………வில் உள்ளது.
விடை:
பெங்களூரு

Question 5.
UNDP என்பது ……………..
விடை:
ஐ.நா. வளர்ச்சித் திட்டம்

Question 6.
பொருளாதார வளர்ச்சி ………………. உயர்த்தும்.
விடை:
நாட்டு வருமானத்தை

Question 7.
இந்தியாவில் ………….. வேகமாக வளரும் மக்கள் உள்ள னர்.
விடை:
உழைக்கும் வயதில்

Question 8.
வெளி உலகத்துடனான ……………… குறைவாகவே இருந்தது.
விடை:
வர்த்தகம் (ம) தொடர்பு

Question 9.
பொருளாதார அளவைக் கண்டறிய ……………… உதவுகிறது.
விடை:
GDP & GNP

Question 10.
……………… ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாகும்.
விடை:
பொருளாதார வளர்ச்சி

Question 11.
உலகின் மொத்த விவசாயப் பொருட்களின் வெளியீட்டில் …………………… இந்தியாவினால் வெளியிடப்படுகிறது.
விடை:
7.39%

Question 12.
GDP அளவை மட்டும் அளவிடுகிறது …………. அல்ல.
விடை:
தரத்தை

Question 13.
வாங்கும் திறனை மதிப்பீடு செய்ய உதவுவது …………….
விடை:
மொத்த உள்நாட்டு உற்பத்தி

Question 14.
தாதாபாய் நௌரோஜி ……………… பற்றிய கருத்தை வெளியிட்டார்.
விடை:
தனிநபர் விருமானத்தைப்

Question 15.
அங்காடியில் விற்கும் பண்டங்கள் (ம) பணிகளின் மதிப்பு …………..
விடை:
அங்காடி மதிப்பு

Question 16.
இடைநிலைப் பண்ட மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்தால் அது ……………….. எனப்படும்.
விடை:
“இருமுறை கணக்கிடுதல்”

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 17.
………….. குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உயர்வு பணமதிப்பால் அளவிடும் அளவுகோல் ஆகும்.
விடை:
பொருளாதார வளர்ச்சி

Question 18.
வறுமை ஒழிப்பு (ம) ……………. ஆகியவை இந்திய வளர்ச்சிப் பாதையின் பகுதியாகும்.
விடை:
கிராமப்புற வளர்ச்சி

Question 19.
இந்தியா ………………. சட்ட முறையைக் கொண்டுள்ளது.
விடை:
கடுமையான

Question 20.
பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு …………………………. மூலம் மேற்கொள்ளப்படும்.
விடை:
மனித மேம்பாட்டுக்குறியீடு

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 7
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 8

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறைபாடுகள் யாவை?
விடை:

  • GDPயில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்ல.ை
  • GDP அளவை மட்டும் அளவிடுகிறது; தரத்தை அல்ல.
  • GDPயில் நாட்டு வருமான பகிர்ந்தளிப்பு பற்றி கூறவில்லை .
  • GDP மக்கள் வாழும் வாழ்க்கை முறையைப் பற்றி கூறவில்லை.

Question 2.
மொத்த நாட்டு உற்பத்தி (GNP) வரையறு.
விடை:

  • மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும்.
  • வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.
    GNP = C+I+G + (X-M) + NFIA
    C – நுகர்வோர்
    I – முதலீட்டாளர்
    G – அரசு செலவுகள்
    X – M – ஏற்றுமதி – இறக்குமதி
    NFIA – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்

Question 3.
மொத்த மதிப்பு கூடுதல் – வரையறு.
விடை:

  • பொருளாதாரத்தில் ஒரு பகுதி, தொழில் அல்லது துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பே மொத்த மதிப்பு கூடுதல் (GVA) ஆகும்.
  • GVA = GDP + மானியம் – வரிகள் (நேர்முக வரி, விற்பனை வரி).

Question 4.
தனிப்பட்ட வருமானம் (P) வரையறு.
விடை:
நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 5.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரையறு.
விடை:
பண்டங்கள் என்பது தொடக் கூடிய பொருளும், பணிகள் என்பது தொட்டு உணர முடியாததுமான நடவடிக்கைகள் ஆகும்.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறைபாடுகளை விவரி.
விடை:
1. GDPயில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்லை :

  • சந்தையில் விற்கப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்கும்.
  • சுத்தமான காற்று, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமானது.
  • இதற்கு சந்தை மதிப்பு இல்லை. ஆகவே, இவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரம்புக்கு வருவதில்லை .

2. GDP அளவை மட்டும் அளவிடுகிறது; தரத்தை அல்ல:

  • 1970களில் பள்ளிகள் மற்றும் வங்கிகளில் பந்துமுனை பேனாக்கள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை .
  • ஏனென்றால், இந்தியாவில் கிடைக்கக்கூடிய மிக தரமற்ற பொருளாக இருந்தது.
  • பண்டத்தினுடைய தரம் எனபது மிக முக்கியமானதாகும். ஆனால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பின்பற்றப்படுவதில்லை.

3. GDPயில் நாட்டு வருமான பகிர்ந்தளிப்பு பற்றி கூறவில்லை :

  • ஒரு நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரைவாக வளரலாம். ஆனால் வருமானம் சமனற்ற நிலையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
  • இதனால் ஒரு சிறிய சதவீத மக்களே பயன் அடைகிறார்கள்.

4. GDP மக்கள் வாழும் வாழ்க்கை முறையைப் பற்றி கூறவில்லை :
GDP, மிகவும் குறைந்த சுகாதார நிலை, மக்கள் ஜனநாயகமற்ற அரசியல் அமைப்பு, தற்கொலை விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்மட்ட தனிநபர் வருமானத்துடன் கைகோர்த்து செல்கிறது.

Question 2.
பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றி விவரிக்க.
விடை:
பொருளாதார வளர்ச்சி:
ஐக்கிய நாடுகளின் பார்வையில், பொருளாதார வளர்ச்சி என்பது வாழ்க்கை தரம் உயர்தல் அல்லது ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துதலாகும்.

ஒரு பொருளாதாரத்தில் அல்லது நாட்டின் உற்பத்தியில் அதன் குறிப்பிட்ட காலப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி உயர்வு பணமதிப்பினால் அளவிடப்பட்ட அளவு கோல் ஆகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மொத்த தேசிய உற்பத்தி (GNP) ஆகிய இரண்டும் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முக்கிய அளவுகோல்.

பொருளாதார முன்னேற்றம்:
உற்பத்தி நிலையை அல்லது பொருளாதாரத்தின் வெளியீட்டை அதிகப்படுத்துவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.

இது உற்பத்தி அளவு அதிகரிப்பதை மட்டுமில்லாமல், சமூக பொருளாதார காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

தொழில் நுட்ப மேம்பாடு, தொழிலாளர் சீர்திருத்தம், வாழ்க்கைத் தரத்தை அதிகப்படுத்துவது, பொருளாதார அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகிய தரமான அளவுகளை அளப்பதே பொருளாதார முன்னேற்றமாகும்.

ஒரு பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதற்கு மனிதவள மேம்பாடு குறியீடு (HDI) சரியானதாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

10th Social Science Guide இந்தியாவின் சர்வதேச உறவுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லை ஆகும்?
அ) பர்மா – இந்தியா
ஆ) இந்தியா – நேபாளம்
இ) இந்தியா – சீனா
ஈ) இந்தியா – பூடான்
விடை:
இ) இந்தியா – சீனா

Question 2.
இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?
1) ஜி 20
2) ஏசியான் (ASEAN)
3) சார்க் (SAARC)
4) பிரிக்ஸ் (BRICS)

அ) 2 மட்டும்
ஆ) 2 மற்றும் 4
இ) 2, 4 மற்றும் 1
ஈ) 1, 2 மற்றும் 3
விடை:
அ) 2 மட்டும்

Question 3.
ஒபெக் (OPEC) என்பது ……………….
அ) சர்வதேச காப்பீட்டு நிறுவனம்
ஆ) ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்
இ) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு
ஈ) ஒரு சர்வதேச நிறுவனம்
விடை:
இ எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?
அ) வங்காளதேசம்
ஆ) மியான்மர்
இ) ஆப்கானிஸ்தான்
ஈ) சீனா
விடை:
அ) வங்காளதேசம்

Question 5.
பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
i) சல்மா அணை – 1. வங்காளதேசம்
ii) பராக்கா ஒப்பந்தம் – 2. நேபாளம்
iii) சுக்கா நீர்மின்சக்தி திட்டம் – 3. ஆப்கானிஸ்தான்
iv) சாரதா கூட்டு மின்சக்தித் திட்டம் – 4. பூடான்

அ) 3 1 4 2
ஆ) 3 1 2 4
இ) 3 4 1 2
ஈ) 4 3 2 1
விடை:
அ) 3 1 4 2

Question 6.
எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 8
விடை:
இ 7

Question 7.
எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?
அ) இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்
ஆ) மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்
இ) மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு
ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு
விடை:
ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு

Question 8.
எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?
அ) அருணாச்சலப்பிரதேசம்
ஆ) மேகாலயா
இ) மிசோரம்
ஈ) சிக்கிம்
விடை:
ஈ) சிக்கிம்

Question 9.
எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
விடை:
அ) ஐந்து

Question 10.
சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்
அ) மவுண்ட்பேட்டன் பிரபு
ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்
இ) கிளிமன்ட் அட்லி
ஈ) மேற்கூறிய ஒருவருமில்லை
விடை:
ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு ……….. ஆகும்.
விடை:
பூட்டான்

Question 2.
இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக ……….. இருக்கிறது.
விடை:
மியான்மர்

Question 3.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு ………………. ஆகும்.
விடை:
நேபாளம்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
இந்தியாவிற்குச் சொந்தமான …. ……… என்ற பகுதி மேற்கு வங்காளம் – வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது.
விடை:
டீன்பிகா

Question 5.
இடிமின்ன ல் நிலம் என்று அறியப்படும் நாடு ………………. ஆகும்.
விடை:
பூட்டான்

Question 6.
இந்தியாவும் இலங்கையும் ………………ஆல் பிரிக்கப்படுகின்றன.
விடை:
பாக் ஜலசந்தி

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இந்தியா மற்றும் மியான்மரின் கலடன் போக்குவரத்துத் திட்டம் பின் வரும் போக்குவரத்து முறையில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது?
1) சாலை
2) ரயில் வழி
3) கப்பல்
4) உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
அ) 1, 2 மற்றும் 3
ஆ) 1, 3 மற்றும் 4
இ) 2, 3 மற்றும் 4
ஈ) 1, 2, 3 மற்றும் 4
விடை:
ஆ) 1, 3 மற்றும் 4

Question 2.
கூற்று : இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International – Solar Alliance) தொடங்கியுள்ள ன.
காரணம் : இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 3.
பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை?
1. இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு, டாக்கா பல்கலைக்கழகத்தில் ‘தாகூர் இருக்கை’ ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது.
2. மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயில் மியான்மர் ஆகும்.
3. நேபாளம், பூடான் ஆகியவை நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடுகளாகும்.
4. இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பங்குதாரர் நாடு இலங்கையாகும்.

அ) 1, 2 மற்றும் 3
ஆ) 2, 3 மற்றும் 4
இ) 1, 3 மற்றும் 4
ஈ) 1, 2 மற்றும் 4
விடை:
இ 1, 3 மற்றும் 4

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
கூற்று : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒபெக் (OPEC) ஆர்வம் காட்டியுள்ளது.
காரணம் : தேவையான எண்ணெய் வளங்கள் இல்லாததால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
இ கூற்று காரணம் இரண்டும் சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், வங்காளதேசம், மியான்மர், இலங்கை, மற்றும் மாலத்தீவு.

Question 2.
போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) பற்றிய சிறு குறிப்பு வரைக.
விடை:
இந்தியா, ஆப்கானிஸ்தான் உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (Strategic Partnership Agreement) மூலம் வலிமை பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறுசீரமைக்கவும், நிறுவனங்கள், வேளாண்மை, நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய சந்தையை எளிதாக அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை நல்கவும் வழிகோலுகிறது.

Question 3.
பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா.

Question 4.
கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன ?
விடை:

  • கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணைப்பதற்காக சாலை – நதி – துறைமுகம் – சரக்கு போக்குவரத்து திட்டமான கலடன் பன்முக மாதிரி போக்குவரத்து திட்டத்தினை இந்தியா உருவாக்கி வருகிறது.
  • கொல்கத்தா நகரை ஹோசிமின் உடன் இணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு திட்ம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதார மண்டலத்தை உருவாக்க மியான்மர், கம்போடியா, வியட்நாம் வழியே பணிகள் நடைபெறுகிறது.

Question 5.
சபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.
விடை:

  • சபஹார் ஒப்பந்தம் என்பது முக்கூட்டு ஒப்பந்தம் ஆகும்.
  • இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன்படி சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து வழிதடங்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Question 6.
இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகளாவிய குழுக்களைப் பட்டியலிடுக.
விடை:

  • ஐ.பி.எஸ்.ஏ. (IBSA)
  • பிம்ஸ்டெக் (BIMSTEC)
  • பி.சி.ஐ.எம் (BCIM)
  • ஆர்.சி.இ.பி (RCEP)
  • எம்.ஜி.சி. (MGC)
  • ஈ.எ.எஸ் (EAS)

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 7.
ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?
விடை:

  • உற்பத்தித் துறையில் உற்பத்தி மற்றும் திறன் இந்தியா திட்டங்களில் பங்களிக்கிறது.
  • 30,000 இந்திய மக்களுக்குப் பயிற்சி வழங்க ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் குறித்தும் இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் மூன்று உலகளாவிய குழுக்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்தும் எழுதுக.
விடை:

  • பல்வேறு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினராக இந்தியா செயல்படுவதோடு அவற்றில் சிலவற்றின் நிறுவன உறுப்பினராகவும் இருந்து வருகிறது.
  • இந்தியா முறைப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளான ஐ.நா.சபை அணிசேரா இயக்கம், சார்க்க ஜி-20 மற்றும் காமன்வெல்த் போன்றவைகளில் உறுப்பினராக உள்ளது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 3

Question 2.
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.
விடை:
பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாவதற்கான காரணம்:
உறுப்பு நாடுகளிடையே பெருளாதார வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவும், சொந்த மற்றும் சுயமாக நிரூபிக்கும் விதமாக இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

பிரிக்ஸின் நோக்கங்கள் :

  • பிராந்திய வளர்ச்சியை அடைவது.
  • வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே பாலமாக செயல்படுவது.
  • மனித மேம்பாட்டிற்கு மிகப் பரந்த அளவில் பங்களிப்பு செய்தல்.
  • அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்.
  • வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே உள்நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் நடப்பு சர்வதேச சிக்கல்களை எதிர்கொள்ளுதல்.
  • உறுப்பு நாடுகளிடையே தகவல் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதை ஊக்குவித்தல், உறுப்பு நாடுகளில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு பொருளாதார மாற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.

Question 3.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) திட்டம் குறித்தும் அவ்வமைப்பு எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்கின்றன என்பது குறித்தும் குறிப்பிடுக.
விடை:
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு:
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்) ஈராக்கில் பாக்தாத் நகரில் நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகும்.

இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ளது.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் திட்டம்:

  • அதன் உறுப்பு நாடுகளுக்குள் எண்ணெய் கொள்கைகளை ஒருங்கிணைத்தல்.
  • எண்ணெய் சந்தையை நிலைநிறுத்த உதவுதல்.
  • எண்ணெய் நுகர்வு செய்யும் நாடுகளுக்குத் திறமையான, சிக்கனமான, வழக்கமான, விநியோகத்தை அளித்தல்.
  • பெட்ரோலியத் தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு மூலதனத்திற்கு நியாயமான வருவாய் கிடைக்கச் செய்தல்.
  • ஒபெக் எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்தல்
  • பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச மேம்பாட்டு நிதி (OPID) என்பது குறைந்த வட்டி வீதத்தில் கடன் அளிக்கும் நிதி நிறுவனம் ஆகும். – இது சமூக மற்றும் மனிதாபிமானத் திட்டங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.
  • புத்தகங்கள், அறிக்கைகள், வரைபடங்கள், பெட்ரோலிய எரிசக்தி மற்றும் எண்ணெய் சந்தை தொடர்பான மாநாட்டு நடவடிக்கைகள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ஒபெக் கொண்டுள்ளது.
  • மையம் பொது மக்களாலும் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

10th Social Science Guide இந்தியாவின் சர்வதேச உறவுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் மூலம் வலிமை பெற்றது.
அ) இந்தோ பசிபிக்
ஆ) இந்தியா ஆப்கானிஸ்தான்
இ) இந்தியா ஆசியா
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இந்தியா ஆப்கானிஸ்தான்

Question 2.
இந்தியாவும் வங்காளதேசமும் …… நீளம் கொண்ட நிலப்பரப்பை எல்லையாக கொண்டுள்ளன.
அ) 4906.5 கி.மீ
ஆ) 4509.7 கி.மீ
இ) 4096.7 கி.மீ
ஈ) 4976.2 கி.மீ
விடை:
இ 4096.7 கி.மீ

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 3.
…………….. நீரைப் பகிர்ந்து கொள்ள 1977இல் கையெழுத்தான பராக்கா ஒரு வரலாற்று ஒப்பந்தம்.
அ) கங்கை
ஆ) காவிரி
இ) யமுனா
ஈ) அ மற்றும் ஆ
விடை:
அ) கங்கை

Question 4.
இந்திய-வங்காள தேசத்திற்கு பொதுவான 54 நதிகளிலிருந்து அதிகபட்ச நலனைப் பெறுவதற்காக ……………… நாட்டுக் கூட்டு நதி ஆணையம் செயல்படுகிறது.
அ) இரு
ஆ) மூன்று
இ) பல
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) இரு

Question 5.
……………. இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு எனப்படும் ‘இடி மின்னல் நிலம்’ ஆகும்.
அ) மியான்மர்
ஆ) சீனா
இ) பூடான்
ஈ) இந்தோனேசியா
விடை:
இ பூடான்

Question 6.
…………….. பாரத் முதல் பூடான் வரை என்று அறியப்படும் இருதரப்பு வணிக உறவினை அளித்தது.
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) இந்தியா
ஈ) அ மற்றும் ஆ
விடை:
இ இந்தியா

Question 7.
குரு பத்மசம்பவா எனும் ……………. இந்தியாவிலிருந்து பூடானுக்குச் சென்றார்.
அ) சமண துறவி
ஆ) புத்த துறவி
இ) சீக்கிய துறவி
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) புத்த துறவி

Question 8.
இந்தியாவுடன் ஒப்பிடுவதற்கு தகுதி வாய்ந்த நாடு …………… ஆகும்.
அ) பூடான்
ஆ) அசாம்
இ) திரிபுரா
ஈ) சீனா
விடை:
ஈ) சீனா

Question 9.
………………ஆம் ஆண்டு மக்மகான் எல்லைக் கோடு தீர்மானிக்கப்பட்டடது.
அ) 1925
ஆ) 1918
இ) 1914
ஈ) 1941
விடை:
இ) 1914

Question 10.
……………… இந்தியப் பெருங்கடலில் லட்சத்தீவுகளுக்குத் தெற்கில் அமைந்துள்ளது.
அ) மியான்மர்
ஆ) மாலத்தீவு
இ) நேபாள்
ஈ) சீனா
விடை:
ஆ) மாலத்தீவு

Question 11.
எரிபொருள் தேவைகளான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றில் நமது பங்குதாரராக ………………. உள்ள து.
அ) பூடான்
ஆ) நேபாளம்
இ) சீனா
ஈ) மியான்மர்
விடை:
ஈ) மியான்மர்

Question 12.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இயற்கையாக அமைந்த இடைப்படுநாடு …………… ஆகும்.
அ) வங்காள தேசம்
ஆ) கொல்கத்தா
இ) நேபாளம்
ஈ) பூடான்
விடை:
இ நேபாளம்

Question 13.
நேபாளத்தின் பெரிய முதலீட்டாளராக ……………… திகழ்கிறது.
அ) சீனா
ஆ) இந்தியா
இ) நேபாளம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இந்தியா

Question 14.
………………..ம் ஆண்டு கட்டுப்பாடுக் கோடு தீர்மானிக்கப்பட்டது.
அ) 1947
ஆ) 1949
இ) 1972
ஈ) 1994
விடை:
ஆ) 1949

Question 15.
………….. படி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு வழிவகை செய்கிறது.
அ) COMCASA
ஆ) ISRO
இ) AUSINDEX
ஈ) JIM
விடை:
அ) COMCASA

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவிற்குச் சொந்தமான ………………. என்ற பகுதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையிலேயான எல்லையில் உள்ளது.
விடை:
டீன்பிகா

Question 2.
இந்தியா மற்றும் பூடான் இடையே இரு தரப்பு ஒத்துழைப்பிற்கு …………… ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
விடை:
நீர்மின்சக்தி துறை

Question 3.
இருதரப்பு வணிகம் ……………..யைக் கொண்டுள்ளது.
விடை:
மகத்தான வளர்ச்சி

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் ……………… மனப்பான்மையுடனே இருந்து வருகிறது.
விடை:
விரோத

Question 5.
1972ஆம் ஆண்டின் ……………… ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லையாகும்.
விடை:
சிம்லா

Question 6.
……………… ஜப்பானிய ஒத்துழைப்பில் உருவான வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.
விடை:
டெல்லி மெட்ரோ ரயில்

Question 7.
சபஹார் ஒப்பந்தம் எனப்படும் ………………. ஒப்பந்தம் ஆகும்.
விடை:
முக்கூட்டு

Question 8.
உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக ……………… வரை அமைக்கப்பட்டிருந்தது.
விடை:
மெலுக்கா

Question 9.
பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் ……………… நகரில் அமைந்துள்ளது.
விடை:
சீனாவின் ஷாங்காய்

Question 10.
பிரிக்ஸ் என்ற சொல் ……….. என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது.
விடை:
ஜிம் ஓ நீல்

Question 11.
………………… என்பது பல துறை வளர்ச்சி வங்கி.
விடை:
புதிய மேம்பாட்டு வங்கி

Question 12.
CRA என்பதன் விரிவாக்கம் ……………. ஆகும்.
விடை:
அவரச ஒதுக்கீடு ஏற்பாடு

Question 13.
கச்சா எண்ணெய் அதிக அளவில் நுகர்வு செய்யும் நாடுகளில் ……………… ஒன்று.
விடை:
இந்தியாவும்

Question 14.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ………….. கொண்டுள்ளது.
விடை:
ஓபெக்

Question 15.
…………… 1969ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சர்வதேச வடிவமைப்பு போட்டியின் சின்னமாகும்.
விடை:
OPEC இலச்சினை

Question 16.
இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தில் …………….. ஒரு பங்குதாரர் ஆகும்..
விடை:
இலங்கை

Question 17.
தென்கடலில் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்காக கொல்கத்தா நகரை ………….. உடன் இணைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
விடை:
ஹோசிமின்

Question 18.
இந்தியாவையும் காத்மண்டுவையும் இணைப்பதற்கான ……………… நீளமுள்ள மகேந்திர ராஜ் மார்க் இணைப்பை இந்தியா கட்டியுள்ளது.
விடை:
204 கி.மீ

Question 19.
இந்திய அரசாங்கம் ……………… நீர்மீன்சக்தி திட்டங்களை பூடானில் அமைந்துள்ளது.
விடை:
மூன்று

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 20.
அண்டை நாடுகளின் உறவை பொருத்தவரை இந்தியா ……………… நிலையை கொண்டுள்ளது.
விடை:
உன்னத

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) இந்தியாவும் பூடானும் இணக்கதன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ii) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பாதுகாப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பெறுவதற்கு வழிவகை செய்கிறது.
iii) இரு நாடுகளின் இராணுவங்களுக்கிடையே நிகழ்நேரத் தகவல் பகிர்வுக்கு அனுமதியளிக்கிறது.

அ) i), iii) சரி
ஆ) ii), iii) தவறு
இ) i) தவறு
ஈ) எல்லாம் சரி
விடை:
i) தவறு

Question 2.
கூற்று (A) : இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவு நட்பு ரீதியாக உள்ளது.
காரணம் (R) : தமிழ் இனப்பிரச்சினை தொடர்பான காலகட்டத்தில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.

அ) A சரி R ஆனது A-யை விளக்குகிறது.
ஆ) A தவறு R சரி
இ) இரண்டுமே சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
A சரி R ஆனது A-யை விளக்குகிறது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 5

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
கட்டுப்பாடுக் கோடு – வரையறு.
விடை:

  • 1949ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடு 1972ஆம் ஆண்டிற்குப் பின்னர் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு என அழைக்கப்பட்டது.
  • இது 1972ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லையாகும்.

Question 2.
பிரிக்ஸ் குறிப்பு வரைக.
விடை:

  • பிரிக்ஸ் என்ற சொல் ஜிம் ஓ’ நீல் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது.
  • பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 2050ஆம் ஆண்டில் ஆறு தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளைவிட டாலர் மதிப்பில் பெரிய நாடுகளாக உருவாகும் என்றும் கடந்த 300 ஆண்டுகளின் அதிகாரப் போக்கு முற்றிலும் மாறுபடும் என்றும் அவர் கணித்தார்.

Question 3.
குரு பத்மசம்பவா பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • குரு பத்மசம்பவா எனும் புத்த துறவி இந்தியாவிலிருந்து பூடானுக்குச் சென்றார்.
  • அங்கு தனது செல்வாக்கை ஏற்படுத்தி புத்த சமயத்தைப் பரப்பியதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே பாரம்பரியத்தை உறுதிப்படுத்தினார்.

Question 4.
மெலுக்கா – வரையறு.
விடை:
உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக மெலுக்கா என்று அழைக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகம் வரை அமைக்கப்பட்டிருந்தது.

Question 5.
ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவை எழுதுக.
விடை:

  • இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நம்பிக்கைக்குரிய திட்டங்களைப் பல ஆண்டுகளாக மெதுவாகவும் படிப்படியாகவும் ஏற்படுத்தி வருகின்றன.
  • ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து இந்திய ஆஸ்திரேலிய கடற்படை பயிற்சி ஒத்திகையின் மூலம் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளன.

Question 6.
டீன்பிகா பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • இந்தியாவிற்குச் சொந்தமான டீன்பிகா என்ற பகுதி மேற்கு வங்களாம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான எல்லையில் உள்ளது.
  • குறுகலான இப்பாதை 2011ஆம் ஆண்டு வங்களாதேசத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 7.
மக்மகான் எல்லைக் கோடு – வரையறு.
விடை:

  • இந்தியா, சீனா மற்றும் பூடானின் கிழக்குப் பகுதி ஆகிய பகுதிகளுக்கு இடையேயான எல்லைக்கோடு ஆகும்.
  • இது 1914ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா, திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் சார்பில் இந்தியாவிற்கான செயலாளர் ஆர்தர் ஹென்றி மக்மகான் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
பிரிக்ஸ் நிதி கட்டமைப்பு பற்றி விவரிக்க.
விடை:

  • புதிய மேம்பாட்டு வங்கி என்பது பல துறை வளர்ச்சி வங்கி ஆகும்.
  • அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்குக் கடன் வழங்குவதே இதன் முதன்மைச் செயலாகும்.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இது முன்னுரிமை வழங்குகிறது.
  • அவசரகால நிதி ஒதுக்கீடு ஏற்பாடு நாணய விவகாரங்கள் உள்ளிட்ட உலக அளவிலான பண நெருக்கடியில் இருந்து பாதுகாத்திட அடிப்படைத் திட்டம் வழங்க வகை செய்கிறது.

பிரிக்ஸ் பணம் செலுத்தும் திட்டம்:

  • 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் பணம் செலுத்தும் முறை தொடர்பான ஆலோசனைகளைத் தொடங்கினர்.
  • இது உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி, செய்திப் பரிமாற்ற அமைப்பிற்கு மாற்றாக இருக்கும்.

Question 2.
இந்தியாவும் மாலத்தீவும் பற்றி குறிப்பு வரைக.
விடை:
மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுகளுக்குத் தெற்கில் அமைந்துள்ளது.

இதன் அமைவிட முக்கியத்துவத்தினாலும் அருகாமையில் அமைந்திருப்பதாலும் மாலத்தீவினுடனான உறவு இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்தியாவும் மாலத்தீவும் இனம், மொழி, பண்பாடு, சமயம் மற்றும் வணிகத் தொடர்பு ஆகிய பல பரிமாணத் தொடர்புகளைப் பழங்காலத்திலிருந்தே சுமூகமாகப் பேணி வருகின்றன.

இரு நாடுகளுக்கிடையே வணிகம் மற்றும் சுற்றுலா மேம்பட்டு இருக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் வான்வழி கண்காணிப்புத் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை நல்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

10th Social Science Guide இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?
அ) பாதுகாப்பு அமைச்சர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) வெளிவிவகாரங்கள் அமைச்சர்
ஈ) உள்துறை அமைச்சர்
விடை:
இ வெளிவிவகாரங்கள் அமைச்சர்

Question 2.
எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?
அ) இந்தியா மற்றும் நேபாளம்
ஆ) இந்தியா மற்றும் பாகிஸ்தான்
இ) இந்தியா மற்றும் சீனா
ஈ) இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
விடை:
இ இந்தியா மற்றும் சீனா

Question 3.
இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
அ) சட்டப்பிரிவு 50
ஆ) சட்டப்பிரிவு 51
இ) சட்டப்பிரிவு 52
ஈ) சட்டப்பிரிவு 53
விடை:
ஆ) சட்டப்பிரிவு 51

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 4.
இன ஒதுக்கல் கொள்கை என்பது
அ) ஒரு சர்வதேச சங்கம்
ஆ) இராஜதந்திரம்
இ) ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை
ஈ) மேற்கூறியவைகளில் எதுவுமில்லை
விடை:
இ ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை

Question 5.
1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.
அ) வியாபாரம் மற்றும் வணிகம்
ஆ) சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது
இ) கலாச்சார பரிமாற்றங்கள்
ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்
விடை:
ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

Question 6.
நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?
அ) உலக ஒத்துழைப்பு
ஆ) உலக அமைதி
இ) இனச் சமத்துவம்
ஈ) காலனித்துவம்
விடை:
ஈ) காலனித்துவம்

Question 7.
கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?
அ) யூகோஸ்லோவியா
ஆ) இந்தோனேசியா
இ) எகிப்து
ஈ) பாகிஸ்தான்
விடை:
ஈ) பாகிஸ்தான்

Question 8.
பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி.
அ) சமூக நலம்
ஆ) சுகாதாரம்
இ) ராஜதந்திரம்
ஈ) உள்நாட்டு விவகாரங்கள்
விடை:
இ ராஜதந்திரம்

Question 9.
அணிசேராமை என்பதன் பொருள்…………
அ) நடுநிலைமை வகிப்பது
ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்
இ) இராணுவமயமின்மை
ஈ) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை
விடை:
ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்

Question 10.
இராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது ……………
அ) ஆற்றல் பாதுகாப்பு
ஆ) நீர் பாதுகாப்பு
இ) தொற்றுநோய்கள்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் ………….
விடை:
பொக்ரான்

Question 2.
தற்போது நமது வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ……………… உருவாக்குவதற்கான வழிமுறையாக செயல்படுகிறது.
விடை:
உள் முதலீட்டை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 3.
…………. என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
விடை:
இராஜதந்திரம்

Question 4.
இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை ………..
விடை:
அணி சேராக் கொள்கை

Question 5.
நமது மரபு மற்றும் தேசிய நெறிமுறைகள் …………….. நடைமுறைப்படுத்துவதாகும்.
விடை:
படைவலிமைக் குறைப்பை

III. பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். i) பஞ்சசீலம்
ii) சீனாவின் அணுவெடிப்புச் சோதனை
iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்
iv) இந்தியாவின் முதல் அணுவெடிப்புச் சோதனை

அ) (i), (iii), (iv), (ii)
ஆ) (i), (ii), (iii), (iv)
இ) (i), (ii), (iv), (iii)
ஈ) (i), (iii), (ii), (iv)
விடை:
அ) (i), (iii), (iv), (ii)

Question 2.
பின்வருவனவற்றில் அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?
i) அணிசேரா இயக்கம் என்ற சொல் வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
ii) இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும்.
iii) தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
v) இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது.

அ) (1) மற்றும் (ii)
ஆ) (iii) மற்றும் (iv)
இ) (ii) மட்டும்
ஈ) (iv) மட்டும்
விடை:
இ (ii) மட்டும்

Question 3.
கீழ்க்காணும் ஒவ்வொரு கூற்றுக்கும் எதிராக சரியா தவறா என எழுதுக.
அ) பனிப்போரின் போது சர்வதேச விவகாரங்களில் இந்தியா மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்தது.
ஆ) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது.
இ) இந்தியாவின் அணுசக்தி சோதனை பூமிக்கடியிலான அணு சோதனை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.
விடை:
அ) சரி, ஆ) தவறு, இ சரி

Question 4.
கூற்று : 1971இல் இந்தோ – சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சோவியத்யூனியனுடன் இணைந்தது.
காரணம் : இது 1962இன் பேரழிவுகரமான சீன போருக்கு பின் தொடங்கியது.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ கூற்று சரி, காரணம் தவறு.

Question 5.
கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ளது.
காரணம் : உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 6.
இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் இராணுவ முகாம்களில் இணைவதைத் தவிர்ப்பது அவசியமாக இருந்தது ஏனெனில், இந்தியா இதனை / இவைகளை மீட்க வேண்டி இருந்தது.
அ) கடுமையான வறுமை
ஆ) எழுத்தறிவின்மை
இ) குழப்பமான சமூக பொருளாதார நிலைமைகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?
விடை:
வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும்.

Question 2.
இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி.
விடை:
இந்தியாவின் அணுக்கொள்கையின் இரண்டு மையக் கருத்துக்கள் :

  • முதலில் பயன்படுத்துவதில்லை .
  • குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத்திறன்.
  • அணு ஆயுதத்தை போர்த்தாக்குதலுக்கு பயன்படுத்துவது இல்லை என்பதோடு அணு ஆயுதமற்ற எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்துவதுமில்லை என இந்தியா தீர்மானித்துள்ளது.

Question 3.
வேறுபடுத்துக:
விடை:
உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக் கொள்கை.
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 3

Question 4.
பஞ்சசீல கொள்கைகளில் நான்கினைப் பட்டியலிடுக.
விடை:
பஞ்சசீலம் :

  • ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையும் பரஸ்பரம் மதித்தல்.
  • பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை .
  • பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.
  • பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.
  • அமைதியாக சேர்ந்திருத்தல்.

Question 5.
இந்தியா அணிசேரா கொள்கையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?
விடை:
நாட்டின் முதல் பிரதமரான நேரு, அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார்.

எனவே பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்தார்.

Question 6.
சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.
விடை:
சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் :
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை .

Question 7.
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?
விடை:
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் :
இந்தியாவின் ஜவகர்லால் நேரு, யூகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 8.
வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • உடன்படிக்கைகள் மற்றும் நிர்வாக ஒப்பந்தங்கள்
  • தூதுவர்களை நியமித்தல்
  • வெளிநாட்டு உதவி
  • சர்வதேச வணிகம் மற்றும்
  • ஆயுதப்படைகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.
விடை:
அணிசேரா இயக்கம் (The Non Aligned Movement) 1961:

  • அணி சேரா இயக்கம் என்ற சொல் 1953இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • இதன் நோக்கம் இராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலாகும்.
  • அணிசேரா இயக்கமானது 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இது ஒரு அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் கொண்டுள்ளது.
  • பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்தார்.

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் :
ஜவஹர்லால் நேரு – இந்தியா
டிட்டோ – யூகோஸ்லோவியா
நாசர் – எகிப்து
சுகர்னோ – இந்தோனேசியா
குலாமே நிக்ரூமா – கானா

Question 2.
வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் எவை?
விடை:
வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் :

  • நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும் பரப்பளவு.
  • நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தத்துவம் அடிப்படையிலானவை.
  • இயற்கை வளங்கள்
  • பொருளாதார வளர்ச்சியின் அவசியம்
  • அரசியில் நிலைத்தன்மை மற்றும் அரசாங்க அமைப்பு
  • அமைதிக்கான அவசியம், ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதப் பெருக்கத்தடை
  • இராணுவ வலிமை
  • சர்வதேச சூழ்நிலை
  • தேசிய நலனைப் பேணுதல்
  • உலக அமைதியை எய்துதல்
  • ஆயுதக் குறைப்பு
  • பிறநாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்
  • அமைதியான வழிகளில் பிரச்சனைகளைத் தீர்த்தல்
  • அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்

Question 3.
அண்டை நாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவு கொள்கையின் ஏதேனும் இரு கொள்கைகளை விவரி.
விடை:
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துகள் :

  • தேசிய நலனைப் பேணுதல்.
  • உலக அமைதியை எய்துதல்.
  • ஆயுதக் குறைப்பு.
  • பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்.
  • அமைதியான வழிகளில் பிரச்சினைகளைத் தீர்த்தல்.
  • அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு.
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்.
  • காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு.

10th Social Science Guide இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… ஆம் ஆண்டு இந்திய வெளிநாட்டுச் சேவை பயிற்சி நிறுவனம் நிறுவப்பட்டது.
அ) 1953
ஆ) 1986
இ) 1954
ஈ) 1964
விடை:
ஆ) 1986

Question 2.
………………. இந்தோனேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அ) வெளியுறவு கொள்கை
ஆ) பஞ்சசீலக் கொள்கை
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவும் இல்லை
விடை:
ஆ) பஞ்சசீலக் கொள்கை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 3.
………………. அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகளை எதிர்த்தார்.
அ) V. கிருஷ்ண மேனன்
ஆ) நாகா
இ) ஜவகர்லால் நேரு
ஈ) சுகர்னோ
விடை:
இ ஜவகர்லால் நேரு

Question 4.
அணிசேரா இயக்கமானது ……………… உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
அ) 120
ஆ) 105
இ) 98
ஈ) 110
விடை:
அ) 120

Question 5.
சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் ………….. இல் அமைக்கப்பட்டுள்ளது.
அ) புதுடெல்லி
ஆ) மஹாராஷ்டிரா
இ) ராஜஸ்தான்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) புதுடெல்லி

Question 6.
……… ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ண மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
அ) அணிசேரா இயக்கம்
ஆ) உள்நாட்டு கொள்கை
இ) வெளியுறவு கொள்கை
ஈ) சார்க் இயக்கம்
விடை:
அ) அணிசேரா இயக்கம்

Question 7.
இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் ……………… பாலமாக உள்ள து.
அ) ஸ்ரீலங்கா
ஆ) மாலத்தீவு
இ) மியான்மர்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ மியான்மர்

Question 8.
………………. அணுசக்தி ஒப்பந்தம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
அ) இந்தியா – பசிபிக்
ஆ) இந்திய – அமெரிக்க
இ) அ) மற்றும் ஆ) இரண்டும்
ஈ) ஆசியா
விடை:
ஆ) இந்திய – அமெரிக்க

Question 9.
ஆப்பிரிக்க ஆசிய மாநாடு நடைபெற்ற ஆண்டு ……………..
அ) 1965
ஆ) 1975
இ) 1955
ஈ) 1995
விடை:
இ 1955

Question 10.
…………… உலகளவில் முடிவெடுக்கும் மற்றும் நிர்வாகத்தில் ஒரு முக்கிய குரலாக உள்ளது.
ஆ) இலங்கை
ஆ) நேபாள்
இ) பூடான்
ஈ) இந்தியா
விடை:
இந்தியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க முயல்கிறது.
விடை:
வெளியுறவுக் கொள்கை

Question 2.
……………… என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
விடை:
அணிசேராமை

Question 3.
அணிசேராமை இயக்கமானது …………….. பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
விடை:
120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளையும்

Question 4.
……………… என்பது நடுநிலையாக இருப்பது என்பது பொருள் அல்ல.
விடை:
அணிசேராமை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 5.
இரண்டாவது அணு சோதனை ……………… உள்ள பொக்ரான் என்னும் இடத்தில் நடைபெற்றது.
விடை:
ராஜஸ்தானில்

Question 6.
சார்க் நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ………….. நாடுகளுக்கு கூட்டுத்தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகும்.
விடை:
தெற்காசிய

Question 7.
சார்க் செயற்கைக்கோளை ……………… மற்றும் …………….. செலுத்தியது.
விடை:
செய்தித் தொடர்பு, வானிலை ஆய்விற்காக

Question 8.
வரலாறு மற்றும் கலாச்சார ஒற்றுமைத் தன்மைகளை கொண்ட ………………. என்ற கருத்து இந்தியாவின் வெளியுறவு கொள்கையாக இருக்கிறது.
விடை:
அண்டைநாடு

Question 9.
…………….. என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
விடை:
இராஜதந்திரம்

Question 10.
…………….. என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒரு நாட்டால் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவை ஆகும்.
விடை:
வெளியுறவுக் கொள்கை

Question 11.
……………… வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
விடை:
இந்தியா

Question 12.
ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளிகளைக் கொண்டது ………………. ஆகும்.
விடை:
பன்மைகோட்பாடு

Question 13.
………………….. காரணமாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகிறது.
விடை:
பொருளாதார முன்னேற்றம்

Question 14.
………………. நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது.
விடை:
ஐ.நா சபையின் பாதுகாப்பு சபையில்

Question 15.
……………… எதிரான நமது பொதுவான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்க பலமாகும்.
விடை:
தீவிரவாதத்திற்கு

III. பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 1950 – 1960களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறிக்கோளாக இருந்தது.
ii) இது V. கிருஷ்ண மேனன் வழிகாட்டுதலின்படி அமைந்திருந்தது.
iii) அணிசேராமை இயக்கம் 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகள் மற்றும் 10 சர்வதேச நிறுவனங்களை கொண்டுள்ளது.
iv) நேரு ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார்.

அ) i), ii) சரி
ஆ) i), iv) சரி
இ) iii), iv) சரி
ஈ) எல்லாம் சரி
விடை:
இ iii), iv) சரி

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 5

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
சார்க் குறிப்பு வரைக.
விடை:
சார்க் என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள எட்டு நாடுகளின் ஒரு பொருளாதார மற்றும் புவி அரசியல் அமைப்பாகும்.

சார்க் நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், தெற்காசிய நாடுகளிடையே கூட்டுத் தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகியனவாகும்.

Question 2.
இராஜதந்திரம் – வரையறு.
விடை:
ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் சூழலுக்குத் தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.

Question 3.
உலகப் பாதுகாப்பு இந்தியாவில் எவற்றில் பிரதிப்பலிக்கிறது?
விடை:

  • இராணுவ நவீனமயமாக்கல்
  • கடல்சார் பாதுகாப்பு
  • அணுசக்தி

Question 4.
வெளியுறவு அமைச்சகம் என்றால் என்ன?
விடை:
வெளியுறவு அமைச்சகம் எனப்படும் இந்திய வெளிவிவகார அமைச்சரவை இந்திய அரசின் ஒரு அங்கமாக இருந்து நாட்டின் வெளியுறவுகளைப் பொறுப்பேற்று நடத்துகிறது.

1986ஆம் ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டுப் சேவை பயிற்சி நிறுவனம் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.

Question 5.
அணிசேரா இயக்கம் பற்றி ஜவகர்லால் நேரு கூறியது யாது?
விடை:
“பரந்த அளிவில் அணிசேராமை என்பது இராணுவக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளாதது அல்ல.

அதாவது பிரச்சனைகளை முடிந்தவரை இராணுவக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அது சில நேரங்களில் மட்டும் ஏற்பட்டாலும் சுதந்திரமாக மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியிலான உறவைப் பராமரித்தல்”.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 6.
உள்நாட்டுக் கொள்கை வரையறு.
விடை:
உள்நாட்டுக் கொள்கை :
உள்நாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கையாகும்.

இது உள்விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
பஞ்சசீலம் – விவரி.
விடை:
(சமஸ்கிருதச் சொற்களான பாஞ்ச் = ஐந்து, சீலம் = நற்பண்புகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது)
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 6

  • இந்தியா (பிரதமர் – ஜவகர்லால் நேரு) மற்றும் சீனா (பிரதமர் – சூ-யென்-லாய்) ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியுடன் இணங்கியிருத்தலுக்கான 5 கொள்கைகள் (பஞ்சசீலம்), 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் கையெழுத்தானது.
  • இரு அரசாங்கங்களும் பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.
  • இந்தக் கொள்கைகள் இந்தோனேசியாவில் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க – ஆசிய மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

Question 2.
தற்கால சூழலில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வழிகாட்டும் சக்தியாக இந்தியா எவ்வாறு மாற்றமடைந்துள்ளது?
விடை:
பொருளாதார வளர்ச்சி :

  • தற்போது இந்தியாவின் அரசியல் நகர்வுகளில் தவிர்க்கவியலாத பொருளாதாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.
  • பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகின்றன.
  • விரைவான, சமமான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் முதன்மைக் குறிக்கோளாக உள்ளது.
  • நாடு சர்வதேச பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
  • இதனை அடைவதற்குத் தேவையானவை பொருளாதார வளர்ச்சி, சந்தை, மூலதனம், தொழில்நுட்பம், மரபுப்பிணைப்பு, பணியாளர்திறன், நியாயமான உலகளாவிய நிர்வாகம் மற்றும் ஒரு நிலையான நியாயமான வளர்ச்சிக்கு உகந்த சூழல் ஆகியனவாகும்.

வழிகாட்டும் சக்தியாக இந்தியா:

  • ஜி-20 நாடுகள், கிழக்காசிய உச்சிமாநாடு, பிரிக்ஸ் ஆகியவற்றால் உறுப்புநாடாக இந்தியா இருப்பதும் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு நாடாக இருப்பதும் அதன் நிலைக்கு ஒரு சான்றாகும்.
  • ஐ.நா சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது.
  • இந்தியா தற்போது தனது அதிகரித்துவரும் நலனை உலகின் பல பகுதிகளில் ஆழப்பதித்து வருகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

9th Social Science Guide தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Text Book Back Questions and Answers

நினைவில் கொள்க

1. இந்திய தேர்தல் முறை இங்கிலாந்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2. இந்தியத் தேர்தல் ஆணையம் நியாயமான பாரபட்சமற்ற தேர்தலை நடத்துகிறது.
3. இந்தியத் தேர்தல் ஆணையம் புது டெல்லியில் அமைந்துள்ளது.
4. மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் தலைமைத் தேர்தல் அதிகாரி.
5. வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுவது ஜனவரி, 25

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) இங்கிலாந்து
இ) கனடா
ஈ) ரஷ்யா
விடை:
ஆ) இங்கிலாந்து

Question 2.
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு
அ) சுதந்திரமான அமைப்பு
ஆ) சட்டபூர்வ அமைப்பு
இ) தனியார் அமைப்பு
ஈ) பொது நிறுவனம்
விடை:
அ) சுதந்திரமான அமைப்பு

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 3.
இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு
அ) பிரிவு 280
ஆ) பிரிவு 315
இ) பிரிவு 324
ஈ) பிரிவு 325
விடை:
இ) பிரிவு 324

Question 4.
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?
அ) பகுதி III
ஆ) பகுதி XV
இ) பகுதி XX
ஈ) பகுதி XXII
விடை:
ஆ) பகுதி XV

Question 5.
பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர் /அங்கீகரிப்பது.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) தேர்தல் ஆணையம்
இ) நாடாளுமன்றம்
ஈ) தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர்
விடை:
ஆ) தேர்தல் ஆணையம்

Question 6.
கூற்று (A) : இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது.
காரணம் (R) : இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 7.
நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 2012
ஆ) 2013
இ) 2014
ஈ) 2015
விடை:
இ) 2014

Question 8.
அழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) இங்கிலாந்து
இ) முன்னாள் சோவியத் யூனியன்
ஈ) இந்தியா
விடை:
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Question 9.
கூற்று (A) : இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன. காரணம் (R) : அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்திய தேர்தல் ஆணையம் …………….. உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.
விடை:
மூன்று

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 2.
தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் ……….
விடை:
ஜனவரி 25

Question 3.
இந்தியாவில் ……………… கட்சி முறை பின்பற்றப்படுகிறது.
விடை:
பல

Question 4.
2017ல் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை …..
விடை:
7

Question 5.
நர்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு …….
விடை:
அழுத்தக்குழு

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 58

IV. பின்வரும் வினாக்களுக்கு குறுகிய விடையளி

Question 1.
இந்தியாவிலுள்ள தேர்தல் முறைப் பற்றி விவரி.
விடை:

  • நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையமானது ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியுள்ளது.
  • பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்ற அனைத்து விவகாரங்களைப் பெறுவதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம்.
  • மாநில சட்டசபைத் தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்றவற்றை அரசியலமைப்பிற்குட்பட்டு தேவையான மாற்றங்களை மாநில சட்ட சபை சட்டங்களை இயற்றலாம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 2.
அரசியல் கட்சி என்பதன் பொருளை விளக்குக.
விடை:
ஓர் அரசியல் கட்சி என்பது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்காகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிகழ்ச்சி நிரல்களையும், குறிப்பிட்ட கொள்கைகளையும் கொண்ட, மக்கள் குழுவின் அமைப்பாகக் காணப்படும்.

Question 3.
இரு கட்சி ஆட்சிமுறை மற்றும் பல கட்சி ஆட்சிமுறையினை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 66

Question 4.
அழுத்தக் குழுக்கள் என்றால் என்ன?
விடை:
பொது நலன்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் தீவிரமாக செயல்படும் குழு அழுத்தக்குழு என்று அழைக்கப்படுகிறது.

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
நேரடித் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி
விடை:
நிறைகள் :

  • வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதால், நேரடித் தேர்தல் முறையானது வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது.
  • அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வும், தகுதியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது. மேலும் மக்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஊக்கமளிக்கிறது

குறைகள் :

  • நேரடித் தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது.
  • எழுத்தறிவற்ற வாக்காளர்கள், சாதி, மதம் மற்றும் பிற பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் பிரச்சாரங்கள் மற்றும் பொய்யானப் பரப்புரைகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
  • சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்கள் மீது பணம், பொருள் (அ) பணிகள் மூலமாக தங்களது செல்வாக்கைச் செலுத்துவது என்பது மற்றொரு சவாலாகும்.
  • தேர்தல் பரப்புரைகளின் போது சில நேரங்களில் வன்முறைகள், பதற்றங்கள், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 2.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. கட்சிகள் தங்களைத் தேர்ந்தெடுக்க அவர்களது கொள்கைகளையும், திட்டங்களையும் தேர்தல் தொகுதிகளில் முன்னிறுத்துகின்றனர்.
  • நாட்டில் சட்டங்கள் இயற்றுவதில் அரசியல் கட்சிகள் முக்கிய பங்களிப்புச்செய்கின்றன. நாடாளுமன்றங்களிலும்,
    சட்டமன்றங்களிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.
  • அரசியல் கட்சிகள் அரசாங்கத்தினை அமைத்து, அவற்றை வழிநடத்துகின்றன.
  • தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் எதிர்கட்சியாக அரசின் குறைகள் மற்றும் தவறான கொள்கைகளை எதிர்த்து பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைக்கின்றன, விமர்சனம் செய்கின்றன. மக்கள் கருத்திற்கு அரசியல் கட்சிகள் வடிவம் கொடுக்கின்றன. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன.

Question 3.
இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள் யாவை?
Answer:
பிரதிநிதித்துவப்படுத்துதல், அரசியல் பங்கேற்பு, கல்வி, கொள்கை உருவாக்கம் மற்றும் கொள்கை அமலாக்கம் போன்ற பல செயல்பாடுகளை அழுத்தக் குழுக்கள் மேற்கொள்கின்றன.

அரசியல் பங்கேற்பு :
மனுக்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற அரசியல் செயல்பாடுகள் மூலம் மக்கள் ஆதரவைத்
திரட்டி தங்கள் செல்வாக்கினை அழுத்தக் குழுக்கள் விரிவுபடுத்துகின்றன.

கல்வி :
பல அழுத்தக் குழுக்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது, இணையத்தளம் பராமரிப்பு, அரசுக் கொள்கைகள் மீது கருத்துகள் வெளியிடுவது மற்றும் உயர்நிலைக் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் மட்டுமல்லாமல் முக்கிய பிரபலங்களிடமிருந்தும் கருத்துகளைத் திரட்டி வல்லுநர்களின் ஆதரவினைப் பெறுவது ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன.

கொள்கை உருவாக்கம் :
அரசுக்குத் தகவல் அளிப்பதிலும், ஆலோசனைகளை வழங்குவதிலும் இந்த அழுத்தக் குழுவினர் வலுவான பங்களிப்புச் செய்து வருகின்றனர். கொள்கை உருவாக்கச் செயல்முறைகளில் அவர்கள் தொடர்ந்து ஆலோசனை தருகின்றனர்.

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. தேசியக் கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சாதனைகளை ஒப்பிடுக.

VII. சிந்தனை வினா

Question 1.
தேர்தல்கள் பிரதிநிதித்துவ மக்களாட்சியில் முக்கியத்துவமாகக் கருதப்படுகின்றது.ஏன்?
விடை:

  • மக்களாட்சி என்பதற்கு ‘நாட்டு மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் உள்ளது’ என்பது பொருளாகும்.
  • மக்களாட்சி முறையில் மக்கள் தங்களை ஆட்சி செய்பவர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
  • தேர்தல் என்பது ஆட்சியிலிருப்பவர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை ஆகும். இதில் மக்களே அதிகாரம் படைத்தவர்களாக
  • இருக்கின்றனர். மக்கள் நேரடித் தேர்தல் மூலமாகவோ அல்லது மறைமுகத் தேர்தல் மூலமாகவோ தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • மக்களாட்சியின் வெற்றி என்பது ஒரு நாட்டில் குறிப்பிட்ட இடைவேளைக்குப் பிறகு நடத்தப்படும் தேர்தலைப் பொறுத்து அமைந்துள்ளது.
  • தேர்தல் மூலமாகவே அரசின் செயல்பாடுகள் பற்றிய தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். எனவே மக்களாட்சியில் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 2.
வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் முக்கியத்துவம் என்ன?
விடை:

  • ஜனநாயக நாடுகளில் வயது வந்தோர் வாக்குரிமை முறை நடைமுறையில் உள்ளது.
  • இந்தியாவில் பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.
  • சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்விதப் பாரபட்சமும் இன்றி சமமான வாக்குரிமையைப் பெற்றுள்ளனர்.
  • குடிமக்கள் அனைவருக்கும் நிர்வாகத்தில் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே வயது
    வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

Question 3.
மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி.
விடை:
நிறைகள் :

  • பொறுப்பும், பதிலளிக்கும் கடமையும் கொண்ட அரசாங்கங்கள்.
  • சமத்துவம் சகோதரத்துவம்.
  • மக்களிடையே பொறுப்புணர்ச்சி.
  • தலசுய ஆட்சி.
  • அனைவருக்கும் வளர்ச்சியும் வளமும்.
  • மக்கள் இறையாண்மை.
  • சகோதர மனப்பான்மை மற்றும் கூட்டுறவு.

குறைகள் :

  • மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி.
  • வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை.
  • குறைந்த வாக்குப்பதிவு.
  • சில சமயங்களில் நிலையற்ற அரசாங்கத்திற்கு வழி வகுக்கிறது.
  • மக்களாட்சியில் கையூட்டுகளையும் அதிகாரிகளின் சட்ட மீறல்களையும் தடுக்க முடிவதில்லை.
  • முடிவெடுக்கும் முறையில் காலதாமதம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 4.
பல கட்சி ஆட்சி முறையினை விவாதி.
விடை:

  • இரண்டிற்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறுவது பலகட்சி முறை ஆகும். இந்தியா, இலங்கை, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பல கட்சி முறை உள்ளது.
  • இந்தியா போன்ற பெரியநாடுகளில் பல இன, மத, மொழி மக்கள் இருப்பதனால் பல கட்சிகள் தோன்ற வழி வகுக்கிறது.
  • பல கட்சிகள் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் ஆட்சியைப் பிடிக்கும் ஆர்வத்தில் நல்ல திட்டங்களை சிந்தித்து செயல்படுத்த முடியும்.
  • இரண்டு கட்சிகளில் உள்ள தலைவர்களை மட்டுமே நம்பியிராமல், புதிய கருத்துக்களையும், புதிய கோணத்தில் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தியுள்ள புதிய தலைவர்களையும் தேர்வு செய்ய முடியும். ஆயினும் பல கட்சி முறையில் ஊழல், பிராந்திய உணர்வு
  • ஆகியவை ஊக்கப்படுத்தப்படும். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுகின்ற கட்சித்தாவல் மூலம் அரசின் நிலைத்தன்மைக்கு ஊறு ஏற்படும்.

VIII. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

1. உங்களுடைய வகுப்பறையில் மாதிரி வாக்குப் பதிவை நடத்துக.

9th Social Science Guide தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எதிர் கட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள தகுதி
அ) ஆளுநர்
ஆ) கேபினட் அமைச்சர்
இ சபா நாயகர்
ஈ) தலைமை நீதிபதி
விடை:
ஆ) கேபினட் அமைச்சர்

Question 2.
தமிழ்நாட்டில் குட வோலை முறை …………. காலத்தில் இருந்தது.
அ) சேரர்கள்
ஆ) சோழர்கள்
இ) பாண்டியர்கள்
ஈ) களப்பிரர்கள்
விடை:
ஆ) சோழர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 3.
தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர்
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ குடியரசு துணைத் தலைவர்
ஈ) சபா நாயகர்
விடை:
அ) பிரதமர்

Question 4.
பின்வருவனவற்றுள் எந்த நாட்டில் பல கட்சி ஆட்சிமுறை நடைபெற வில்லை
அ) இந்தியா
ஆ) இலங்கை
இ இத்தாலி
ஈ) சீனா
விடை:
சீனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பிரதமர் ……….. உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
விடை:
லோக்சபா

Question 2.
VVPTA முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ………
விடை:
2014

Question 3.
அழுத்தக் குழுக்கள் ………. என்றும் அழைக்கப்படுகின்றன.
விடை:
நலக்குழுக்கள்

Question 4.
மாநிலக் கட்சிகள் …………. எனவும் குறிப்பிடப்படுகின்றன.
விடை:
பிராந்தியக் கட்சிகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 5.
அரசியலின் மற்றொரு முகம் என்று கருதப்படுபவை ………
விடை:
அழுத்தக்குழுக்கள்

Question 6.
அதிக அளவிலான அழுத்தக் குழுக்கள் உள்ள நாடு ……..
விடை:
இந்தியா

III. குறுகிய விடை தருக

Question 1.
தேர்தல் என்றால் என்ன?
விடை:
தேர்தல் என்பது தமக்கான பொது சேவகர் ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையாகும்.

Question 2.
மறைமுகத் தேர்தல் என்றால் என்ன?
விடை:

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் வாக்களித்துத் தேர்வு செய்யும் முறையே மறைமுகத் தேர்தல் ஆகும்.
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் இத்தகைய முறையானது கடைபிடிக்கப்படுகிறது.

Question 3.
அரசியல் கட்சிகளின் மூன்று அங்கங்கள் யாவை?
விடை:
தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எனும் மூன்று அங்கங்களை ஓர் அரசியல் கட்சி பெற்றுள்ளது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Question 4.
இந்திய பிரதமர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
விடை:
இந்தியப் பிரதமர் பாராளுமன்றத்தின் கீழவையான மக்களவை (லோக்சபா) உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

IV. விரிவான விடை தருக

Question 1.
மறைமுகத் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளைப் பட்டியலிடுக.
விடை:
நிறைகள் :-

  • மறைமுகத் தேர்தல்கள் நடத்த செலவு குறைவானதாகும்.
  • மறைமுக தேர்தல் முறையானது பெரிய நாடுகளுக்கு உகந்தது.

குறைகள் :-

  • வாக்காளர் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதால் ஊழல், கையூட்டு, குதிரை பேரம் ஆகியவற்றிற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படும்.
  • மக்கள் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நேரடியாக பங்கு பெறாமல், மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளே இம்முறையில் பங்குபெறுவதால், மக்கள் பிரதிநிதித்துவம் குறைந்த மக்களாட்சி முறையாக காணப்படுகிறது. மக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்காமல் இருக்க நேரிடுகிறது.

Question 2.
இந்தியாவில் செயல்படும் அழுத்தக்குழுக்களை வகைப்படுத்துக.
விடை:

  • வணிகக்குழுக்கள்
  • தொழிற்சங்கங்கள்
  • மாணவர் அமைப்புகள்
  • பழங்குடி அமைப்புகள்
  • கோட்பாட்டு அடிப்படைக் குழுக்கள்
  • விவசாயக் குழுக்கள்
  • தொழில் முறைக் குழுக்கள்.
  • மத அமைப்புகள்
  • மொழிக் குழுக்கள்
  • சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள்

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 2 தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் 91

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 3 மாநில அரசு Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 3 மாநில அரசு

10th Social Science Guide மாநில அரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
மாநில ஆளுநரை நியமிப்பவர் ……………..
அ) பிரதமர்
ஆ) முதலமைச்சர்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) தலைமை நீதிபதி
விடை:
இ குடியரசுத் தலைவர்

Question 2.
மாநில சபாநாயகர் ஒரு ……………..
அ) மாநிலத் தலைவர்
ஆ) அரசின் தலைவர்
இ) குடியரசுத் தலைவரின் முகவர்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

Question 3.
கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல ……………….
அ) சட்டமன்றம்
ஆ) நிர்வாகம்
இ) நீதித்துறை ஈ) தூதரகம்
விடை:
ஈ) தூதரகம்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 4.
ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) ஆளுநர்
இ) முதலமைச்சர்
ஈ) சட்டமன்ற சபாநாயகர்
விடை:
ஆ) ஆளுநர்

Question 5.
ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை …………………
அ) முதலமைச்சர்
ஆ) அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்
இ) மாநில தலைமை வழக்குரைஞர்
ஈ) உயர்நீதிமன்ற நீதிபதிகள்
விடை:
ஈ) உயர்நீதிமன்ற நீதிபதிகள்

Question 6.
அமைச்சரவையின் தலைவர் ………………..
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) சபாநாயகர்
ஈ) பிரதம அமைச்சர்
விடை:
அ) முதலமைச்சர்

Question 7.
மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது ………………..
அ) 25 வயது
ஆ) 21 வயது
இ) 30 வயது
ஈ) 35 வயது
விடை:
இ 30 வயது

Question 8.
கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை.
அ) ஆந்திரப் பிரதேசம்
ஆ) தெலுங்கானா
இ) தமிழ்நாடு
ஈ) உத்திரப் பிரதேசம்
விடை:
இ) தமிழ்நாடு

Question 9.
இந்தியாவில் முதன் முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
அ) கொல்கத்தா, மும்பை, சென்னை
ஆ) டெல்லி மற்றும் கொல்கத்தா
இ) டெல்லி, கொல்கத்தா, சென்னை
ஈ) கொல்கத்தா, சென்னை, டெல்லி
விடை:
அ) கொல்கத்தா, மும்பை, சென்னை

Question 10.
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
அ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
ஆ) கேரளா மற்றும் தெலுங்கானா
இ) பஞ்சாப் மற்றும் ஹரியானா
ஈ) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
விடை:
இ பஞ்சாப் மற்றும் ஹரியானா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ………………. இடம் கொடுக்கிறார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 2.
சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ……………… ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை:
மக்களால்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 3.
………………. மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.
விடை:
ஆளுநர்

Question 4.
அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ……………..ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.
விடை:
குடியரசுத் தலைவர்

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 2

IV. சரியான கூற்றினை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு.
காரணம் : குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
விடை:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

V. சுருக்கமான விடையளி.

Question 1.
மாநில ஆளுநரின் முக்கியத்துவம் என்ன?
விடை:

  • மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் ஆளுநர் ஆவார்.
  • மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது.
  • ஆளுநர், மாநில நிர்வாகத்தின் தலைவராக செயல்படுவது மட்டுமல்லாமல் ஏராளமான அதிகாரங்கள் பெற்றவராகவும் திகழ்கிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 2.
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?
விடை:

  • அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவர் இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

Question 3.
உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை?
விடை:
சென்னை, மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.

மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.

Question 4.
உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டதென்ன?
விடை:
உயர்நீதி மன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.

நாட்டின், இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை.

VI. விரிவான விடையளி.

Question 1.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
விடை:
1. அமைச்சரவை தொடர்பானவை:

  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
  • அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். – தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
  • அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
  • அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

2. ஆளுநர் தொடர்பானவை:

  • கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
  • மாநில அரசு வழக்குரைஞர்
  • மாநில தேர்தல் ஆணையர்
  • அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

3. சட்டமன்றம் தொடர்பானவை:

  • சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
  • சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
  • சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
  • எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.

Question 2.
ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி.
விடை:
சட்டமன்ற அதிகாரங்கள் :

  • ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார்.
  • ஆனால் அவர் சட்டமன்றத்தின் உறுப்பினராக இல்லை.
  • ஆளுநர் பின்வரும் சட்டமன்ற அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.
  • ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும் ஒத்திவைக்கவும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.
  • தேர்தல் முடிந்து சட்டசபை அமைந்த முதல் கூட்டத்தொடரிலும் மற்றும் ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டத்திலும் உரையாற்றுகின்றனர்.
  • நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.
  • சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும் பொழுது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.
  • ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.
  • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும்.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213இன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 3.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.
விடை:
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்:

  • மாநில அரசின் கொள்கைகளை உருவாக்கி அவற்றை உறுதியாக நடைமுறைப்படுத்துகிறது.
  • சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து எல்லா முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
  • நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்காக வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
  • முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
  • மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.
  • மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
  • ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.
  • அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
  • ஆண்டு வரவு- செலவு திட்டம் அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.

10th Social Science Guide மாநில அரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் …………….. ஆவார்.
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) குடியரசு தலைவர்
ஈ) பிரதமர்
விடை:
ஆ) ஆளுநர்

Question 2.
மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறும் ……………. ஆகும்.
அ) சட்டப்பிரிவு 157
ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 154
ஈ) சட்டப்பிரிவு 158
விடை:
இ சட்டப்பிரிவு 154

Question 3.
ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் ………………. மரபுகள் பின்பற்றப்படுகிறது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
விடை:
அ) இரண்டு

Question 4.
……………… மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) பிரதமர்
விடை:
அ) முதலமைச்சர்

Question 5.
ஆண்டு வரவு செலவு திட்டம் ……………… ஆல் இறுதி செய்யப்படுகிறது.
அ) சட்டமேலவை
ஆ) சட்டமன்ற பேரவை
இ) அமைச்சரவை
ஈ) எதுவும் இல்லை
விடை:
இ அமைச்சரவை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 6.
……………இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை மசோதா மூலம் சட்டமேலவை நீக்கப்பட்டது.
அ) 1956
ஆ) 1986
இ) 1862
ஈ) 1950
விடை:
ஆ) 1986

Question 7.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகம் உலகிலேயே ………………க்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகமாகும்.
அ) பாம்பே
ஆ) கொல்கத்தா
இ) சண்டிகர்
ஈ) லண்டன்
விடை:
ஈ) லண்டன்

Question 8.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை ……………… தீர்மானிக்கப்படுகிறது.
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) ஆளுநா
விடை:
ஆ) குடியரசுத் தலைவர்

Question 9.
……………… ஒரு மாநிலமாக இல்லாத போதும் தனக்கென்று சொந்தமாக ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.
அ) சென்னை
ஆ) ஹைதராபாத்
இ) டெல்லி
ஈ) கொல்கத்தா
விடை:
இ டெல்லி

Question 10.
1862இல் ……………. கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டன.
அ) உயர் நீதிமன்றங்கள்
ஆ) உச்ச நீதிமன்றங்கள்
இ) மாவட்ட நீதிமன்றங்கள்
ஈ) எதுவும் இல்லை
விடை:
அ) உயர் நீதிமன்றங்கள்

Question 11.
சட்டமேலவை தேர்தலில் …… ……….. பங்கு உறுப்பினர்கள் பட்டதாரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
அ) 1/3
ஆ) 1/12
இ) 1/6
ஈ) 1/10
விடை:
1/12

Question 12.
சட்டமேலவை உறுப்பினர்களின் பதவி காலம் ……………. ஆகும்.
அ) 5 ஆண்டுகள்
ஆ) 6 ஆண்டுகள்
இ) 4 ஆண்டுகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) 6 ஆண்டுகள்

Question 13.
சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ……………. பங்கிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அ) 1/3
ஆ) 2/3
இ) 1/4
ஈ) 2/4
விடை:
அ) 1/3

Question 14.
அமைச்சரவையானது ……………… க்கு பொறுப்பானது.
அ) சட்டமேலவை
ஆ) நிர்வாகத்துறை
இ) சட்டமன்றம்
ஈ) இரண்டும் (ஆ) மற்றும் (இ)
விடை:
இ சட்டமன்றம்

Question 15.
…………….. ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதை கூறுகிறது.
அ) சட்டப்பிரிவு 164 (1A)
ஆ) சட்டப்பிரிவு 164 (1)
இ) சட்டப்பிரிவு 163
ஈ) சட்டப்பிரிவு 361
விடை:
ஆ) சட்டப்பிரிவு 1640

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்திய அரசியலமைப்பு ……………… அரசாங்கத்தை வழங்குகிறது.
விடை:
கூட்டாச்சி

Question 2.
…………… மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார்.
விடை:
ஆளுநர்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 3.
ஆளுநரின் முன் அனுமதியுடன்தான் ………………. சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.
விடை:
பண மசோதாவை

Question 4.
மாநில அரசின் …………… நீதித்துறை அதிகாரங்கள் மூலம் ஆளுநர் நியமனம் செய்கிறார்.
விடை:
தலைமை வழக்குரைஞரை

Question 5.
ஆளுநர் மாநிலத்தின் …………… ஆவார்.
விடை:
பெயரளவு நிர்வாகி

Question 6.
அரசியலமைப்பு ………………. ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்கிறது.
விடை:
சட்டப்பிரிவு 163

Question 7.
……………… என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும்.
விடை:
அமைச்சரவை

Question 8.
சட்டமன்ற உறுப்பினர்களிடையே ……………… மற்றும் ………………. தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
விடை:
சபாநாயகர், துணை சபாநாயகர்

Question 9.
……………… இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது.
விடை:
சட்டமேலவை

Question 10.
முதலமைச்சர் …………….. ஆவார்.
விடை:
உண்மையான நிர்வாகி

Question 11.
சட்ட மேலவை ………………. கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறார்.
விடை:
சட்டப்பிரிவு 169

Question 12.
முதலமைச்சர் என்பவர் ……………… ஆவார்.
விடை:
அரசாங்கத்தின் தலைவர்

Question 13.
பொதுப்பட்டியலிலும் ……………… சட்டம் இயற்றலாம்.
விடை:
சட்டமன்றம்

Question 14.
சட்டமன்றம் மாநிலத்தின் …………….. கட்டுப்படுத்துகிறது.
விடை:
நிதி நிலையைக்

Question 15.
………….ஆம் ஆண்டு ஏழாவது திருத்தச் சட்டம் அங்கிகரிக்கப்பட்டது.
விடை:
1956

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 4

IV. சரியான கூற்றினை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : மாநில சட்டமன்றம் பிரபலமான ஓர் அவை ஆகும்.
காரணம் : சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 500 இருக்க வேண்டும்.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
விடை:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 2.
கூற்று : இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி அரசாங்கத்தை வழங்குகிறது.
காரணம் : கூட்டாச்சியில் தேசியத் தலைநகரான டெல்லியுடன் 9 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்கள் உள்ளன.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

V. சுருக்கமான விடையளி.

Question 1.
சட்ட மேலவை குறிப்பு வரைக.
விடை:

  • சட்டமன்ற மேலவை சட்டமேலவை என்றும் அழைக்கப்படுகிறது.
  • சட்டமேலவை (விதான் பரிஷத்) இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது. இந்தியாவின் 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் சட்டமேலவை உள்ளது.
  • 1986இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் 1986 நவம்பர் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.

Question 2.
அமைச்சரவை மற்றும் அமைச்சரவை குழுக்கள் என்றால் என்ன?
விடை:

  • அமைச்சரவை என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும்.
  • இது காபினெட் அமைச்சர்களை மட்டும் உள்ளடக்கியது.
  • இதுவே மாநில அரசின் உண்மையான அதிகார மையமாக விளங்குகிறது.
  • அமைச்சரவை குழுக்கள் எனப்படும் வெவ்வேறு குழுக்கள் மூலம் காபினெட் செயலாற்றுகிறது. அவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அவை: ஒன்று நிரந்தரமானது மற்றொன்று தற்காலிகமானது ஆகும்.

Question 3.
முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
விடை:

  • முதலமைச்சர் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.
  • முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எவ்வளவு காலத்திற்கு தொடர்கிறதோ அதுவரை அவர் முதலமைச்சராக நீடிக்கலாம்.
  • சட்டமன்றத்தில் எப்பொழுது அவர் பெரும்பான்மையை இழக்கிறாரோ அப்பொழுது தனது பதவியை இராஜினாமா செய்கிறார்.

Question 4.
சபாநாயகர் குறிப்பு வரைக.
விடை:

  • சட்டமன்ற உறுப்பினர்களிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • சட்டமன்றம் கலைக்கப்படும்பொழுது சபாநாயகர் தமது பதவியை இழக்க மாட்டார்.
  • சபாநாயகர் இல்லாதபோது அவரது பணியைத் துணை சபாநாயகர் மேற்கொள்கிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 5.
ஆவணங்களின் பாதுகாப்புப் பெட்டகம் வரையறு.
விடை:

  • உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு சான்றாதாரமாக பாதுகாக்கப்படுகின்றன.
  • எதிர்காலத்தில் எழும் கேள்விகளுக்கு தீர்வாக கடந்த கால தீர்ப்புகள் உதவுகின்றன.
  • இதனால் உயர் நீதிமன்றம் பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது.

VI. விரிவான விடையளி.

Question 1.
ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள் பற்றி விவரி.
விடை:
நிர்வாக அதிகாரங்கள் :

  • மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமனம் செய்கிறார்.
  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
  • அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
  • மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நியமனம் செய்து, அவரது பணிக்காலம், பணியின் தன்மையைத் தீர்மானிக்கிறார்.
  • ஆளுநர், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதுடன், துணை வேந்தர்களையும் நியமனம் செய்கிறார்.
  • குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, குடியரசுத் தலைவரின் பெயரில் இவரே மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்கிறார்..

Question 2.
சட்டமன்றத்தின் செயல்பாடுகளை விவரி.
விடை:
சட்டமன்ற அதிகாரங்கள்:

  • அரசியலமைப்பின்படி மாநிலப் பட்டியலிலுள்ள அனைத்துத் துறைகள் மீதும் சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றலாம்.
  • பொதுப்பட்டியலிலும் சட்டமன்றம் சட்டம் இயற்றலாம்.
  • ஆனால் அதே சட்டத்தை நடுவண் அரசு இயற்றும்பொழுது மாநில அரசின் சட்டம் செயலற்றதாகி விடும்.
  •  மத்திய நாடாளுமன்ற நடைமுறையைப் போன்றே மாநில சட்டமன்றத்தின் மசோதாவும் சட்டமாக நிறைவேற்றுகிறது.

நிதி அதிகாரங்கள்:

  • சட்டமன்றம் மாநிலத்தின் நிதி நிலையைக் கட்டுப்படுத்துகிறது.
  • சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும் பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
  • பண மசோதா கீழவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.
  • சட்டமன்றக் கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்க முடியாது.

நிர்வாகத் துறையின் மீது கட்டுப்பாடுகள்:

  • அமைச்சரவையானது சட்டமன்றத்திற்குப் பொறுப்பானது.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.
  • அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.

Question 3.
ஆளுநரின் நீதித்துறை மற்றும் விருப்புரிமை அதிகாரங்களை விவரி.
விடை:
நீதித்துறை அதிகாரங்கள்:

  • மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்கிறார்.
  • உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.
  • ஆளுநரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.
  • குற்றவாளிகளின் கருணை மனு அடிப்படையில் குற்றவாளிகளை மன்னிக்கலாம் அல்லது குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். (மரண தண்டனையைப் பெற்ற குற்றவாளியைத் தவிர)

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

விருப்புரிமை அதிகாரங்கள்:

  • குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்க முடியும்.
  • மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மையைப் பெறாத போது, ஆளுநர் எந்தக் கட்சி தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
  • சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அமைச்சரவையை ஆளுநர் கலைக்க முடியும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

9th Social Science Guide அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி Text Book Back Questions and Answers

நினைவில் கொள்க

1. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா
2. இந்தியாவில் வாக்களிக்கத் தகுதியான வயது 18
3. தேர்தலில் போட்டியிடத் தகுதியான வயது 25
4. இந்தியாவில் தேர்தல் ஆணையம் பாரபட்ச மற்ற தேர்தல்களை நடத்துகிறது
5. இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் 1952 ல் நடைபெற்றது.

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை
அ) தனி நபராட்சி
ஆ) முடியாட்சி
இ) மக்களாட்சி
ஈ) குடியரசு
விடை:
ஆ) முடியாட்சி

Question 2.
முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை
அ) சிறுகுழு ஆட்சி
ஆ) மதகுருமார்களின் ஆட்சி
இ) மக்களாட்சி
ஈ) தனிநபராட்சி
விடை:
ஈ) தனிநபராட்சி

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 3.
முன்னாள் சோவியத் யூனியன் …………….. க்கு எடுத்துக்காட்டு
அ) உயர்குடியாட்சி
ஆ) மதகுருமார்களின் ஆட்சி
இ) சிறுகுழு ஆட்சி
ஈ) குடியரசு
விடை:
இ) சிறுகுழு ஆட்சி

Question 4.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
அ) இந்தியா
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்ஸ்
ஈ) வாட்டிகன்
விடை:
ஈ) வாட்டிகன்

Question 5.
ஆபிரகாம் லிங்கன் ………… நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) இங்கிலாந்து
இ) சோவியத் ரஷ்யா
ஈ) இந்தியா
விடை:
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Question 6.
குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
அ) சேரர்கள்
ஆ) பாண்டியர்கள்
இ) சோழர்கள்
ஈ) களப்பிரர்கள்
விடை:
இ) சோழர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 7.
பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி
அ) பண்டைய இந்தியாவின் குடியரசுகள்
ஆ) அமெரிக்கா
இ) பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்
ஈ) பிரிட்டன்
விடை:
இ) பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்

Question 8.
எந்த மொழியிலிருந்து “டெமாகிரஸி” என்ற வார்த்தை பெறப்பட்டது?
அ) கிரேக்கம்
ஆ) லத்தீன்
இ) பாரசீகம்
ஈ) அரபு
விடை:
அ) கிரேக்கம்

Question 9.
மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்
அ) நாடாளுமன்றம்
ஆ) மக்கள்
இ) அமைச்சர் அவை
ஈ) குடியரசு தலைவர்
விடை:
ஆ) மக்கள்

Question 10.
கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?
அ) இந்தியா
ஆ) பிரிட்டன்
இ) கனடா
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
விடை:
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Question 11.
உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு
அ) கனடா
ஆ) இந்தியா
இ) அமெரிக்க ஐக்கிய
ஈ) சீனா
விடை:
ஆ) இந்தியா

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 12.
கூற்று (A) : நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.
காரணம் (R) : மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Question 13.
கூற்று (A) : இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.
காரணம் (R) : இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

Question 14.
வாக்குரிமையின் பொருள் :
அ) தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
ஆ) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
இ) வாக்களிக்கும் உரிமை
ஈ) பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை
விடை:
இ) வாக்களிக்கும் உரிமை

Question 15.
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
அ) சமூகச் சமத்துவம்
ஆ) பொருளாதார சமத்துவம்
இ) அரசியல் சமத்துவம்
ஈ) சட்ட சமத்துவம்
விடை:
அ) சமூகச் சமத்துவம்

Question 16.
பிரதமரை நியமிப்பவர் /நியமிப்பது
அ) மக்களவை
ஆ) மாநிலங்களவை
இ) சபாநாயகர்
ஈ) குடியரசுத் தலைவர்
விடை:
ஈ) குடியரசுத் தலைவர்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 17.
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்
அ) லோக்சபைக்கு 12 உறுப்பினர்கள்
ஆ) ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்
இ) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
ஈ) ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள்
விடை:
இ) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்

Question 18.
இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு
அ) 1948 – 49
ஆ) 1951 – 52
இ) 1957 – 58
ஈ) 1947 – 48
விடை:
ஆ) 1951-52

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு …….
விடை:
1949

Question 2.
இரண்டு வகையான மக்களாட்சி ……… மற்றும் …….. ஆகும்,
விடை:
நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி

Question 3.
நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு ………
விடை:
சுவிட்சர்லாந்து

Question 4.
இந்தியா …….. மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.
விடை:
மறைமுக

Question 5.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ……… ஆவார்.
விடை:
ஜவஹர்லால் நேரு

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 6.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு ………
விடை:
1920

Question 7.
இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் …….. மற்றும்…….. ஆவர்.
விடை:
எட்வின் லுட்டியன்ஸ், ஹெர்பர்ட் பேக்கர்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 55

IV. பின்வரும் வினாக்களுக்கு குறுகிய விடையளி

Question 1.
ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக.
விடை:
“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என ஆப்ரகாம் லிங்கன் கூறியுள்ளார்.

Question 2.
மக்களாட்சி அரசாங்க அமைப்பினைப் பற்றிக் கூறுக.
விடை:

  • மக்களாட்சி அரசாங்க அமைப்பு.
    • நாடாளுமற்ற அரசாங்க அமைப்பு (இந்தியா, இங்கிலாந்து)
    • அதிபர் அரசாங்க அமைப்பு (அமெரிக்கா, பிரான்சு) என இருவகைப்படும்.

Question 3.
நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 60

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை?
விடை:

  • நவீன உலகில் மக்களாட்சி அரசாங்கங்கள் தழைத்தோங்கி, மேலாதிக்கம் செலுத்தும் வடிவமாக உள்ளது. இதுசரை கடுமையான சவாலோ, போட்டியோ எதிர்கொள்ளப்படாத நிலையில் உலகெங்கும் மக்களாட்சி கடந்த நூறு ஆண்டுகளில் வளர்ந்து வருகிறது.
    இந்தியாவில் மக்களாட்சி எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்:

    • கல்வியறிவின்மை
    • வறுமை
    • பாலினப்பாகுபாடு
    • பிராந்திய வாதம் (வட்டாரப் பாகுபாடு)
    • சாதி, வகுப்பு, சமயப்பண்பாடு
    • ஊழல்
    • அரசியல் குற்றமயமாதல்
    • அரசியல் வன்முறை.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 2.
இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிபந்தனைகளை விளக்குக.
விடை:

  • ஏழைகள் மற்றும் எழுத்தறிவற்றோருக்கு மக்களாட்சியின்பலன்களைக் கிடைக்கச்செய்ய அதிகாரம் அளித்தல்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது அதிகாரத்தையும், பொதுச் சொத்துக்களையும் தவறாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.
  • மக்களாட்சி முறையைப் பீடித்திருக்கும் சமூக தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் ஒழித்தல்.
  • மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கப் பாரபட்சமற்ற, திறமைமிக்க ஊடகங்களின் தேவையை உணர்தல்.
  • பொதுமக்களின் கருத்து வலுவாக இருத்தல்.
  • மக்களிடையே சகிப்புத்தன்மையும், மத நல்லிணக்கமும் நிலவுதல்.
  • அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்துதல்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.
  • வலுவான பொறுப்புமிக்க எதிர்க்கட்சி இருத்தல்.

Question 3.
இந்தியாவில் மக்களாட்சி பற்றிய உங்களது கருத்து என்ன?
விடை:

  • இந்தியாவின் மக்களாட்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்ற ஆட்சி முறையாகும்.
  • நாட்டிற்குத் தேவையான கூட்டங்களை உருவாக்குகின்ற இந்திய நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கிய கூறுகள்.
    1. கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்குபெறுதல்,
    2. ஒப்பிதல் அளித்தல்.
  • உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி , குடியரசு ஆகிய 5 முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது.
  • சாதி, சமய, சினம், பால், கல்வித்தகுதி பாகுபாடு இன்று 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் சமமான வாக்குரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை வகுப்பறையில் கலந்துரையாடு.
2. மக்களாட்சி என்பது “சிறுபான்மையினரை மதிக்கும் பெரும்பான்மையினரின் ஆட்சி” – கலந்துரையாடு.
3. உங்கள் வகுப்பறையில் மாதிரி தேர்தலை நடத்துக.
4. இந்தியாவில் மக்களாட்சியின் நிறை, குறைகளைப் பற்றி வகுப்பறையில் குழு விவாதம் செய்க.
5. தற்போதைய தேர்தல் ஆணையர்களின் பெயர் மற்றும் படங்களைச் சேகரி.
6. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் படங்களை கி.பி. 1947 முதல் தற்பொழுது வரை சேகரித்து துணுக்குப் புத்தகம் தயாரிக்க.

VII. சிந்தனை வினா

Question 1.
சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா? அத்தகைய நாட்டில் பொது மக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?
விடை:

  • ஓர் அரசியல் தலைவர் முழு அதிகாரத்தையும் கைக்கொண்டு கடுமையாகப் பயன்படுத்தும் நிலை.
  • இவ்வகை ஆட்சியில் பொதுக்கருத்துக்கு இடமில்லை. கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஒருவர் தன் குரலை எழுப்ப உரிமை, சுதந்திரம் கிடையாது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 2.
குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழி வகுக்கிறது? விளக்குக.
விடை:

  • அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
  • ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் ஆளுமை வளர்ச்சியில் முன்னேற்றம் காண அடிப்படை சுதந்திர உரிமை உண்டு.
  • அனைவரும் சமம் என்ற நிலையில் இணக்கமான வாழ்வுக்கு அடித்தளமாகிறது.
  • அடிப்படை உரிமைகள் இருப்பதால் அமைதியாக வாழ முடியாது.

VIII. வாழ்வியல் திறன்

குறிப்பிட்ட நாடுகளை தேர்வு செய். ஒவ்வொரு நாட்டையும் ஆராய்ந்து அந்நாட்டின் அரசாங்கம் – உயர்குடியாட்சி, முடியாட்சி, தனிநபராட்சி, சிறுகுழு ஆட்சி, மதகுருமார்கள் ஆட்சி, மக்களாட்சி குடியரசு – இவற்றில் எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கூறவும் : பின்னர் அரசாங்க வகைகளைத் தீர்மானிக்க உதவும் பண்புகளை விவரி.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 70

9th Social Science Guide அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
முடியாட்சி நடைபெறும் நாடு
அ) சீனா
ஆ) பிரான்சு
இ) பூடான்
ஈ) ஆஸ்திரேலியா
விடை:
இ) பூடான்

Question 2.
நேரடி மக்களாட்சி நடைபெறும் நாடு
அ) சுவிட்சர்லாந்து
ஆ) இந்தியா
இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஈ) இங்கிலாந்து
விடை:
அ) சுவிட்சர்லாந்து 3

Question 3.
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
அ) 3 ஆண்டுகள்
ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
ஈ) 6 ஆண்டுகள்
விடை:
இ) 5 ஆண்டுகள்

Question 4.
இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான வயது
அ) 18
ஆ) 21
இ) 25
ஈ) 30
விடை:
அ) 18

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 5.
நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்கு ………… உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
அ) 2
ஆ) 7
இ) 12
ஈ) 15
விடை:
இ) 12

II. பொருத்துக
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 75

III. சுருக்கமான விடை தருக

Question 1.
மக்களாட்சி என்பதன் பொருள் என்ன?
விடை:
ஒரு நாட்டின் மக்கள் உயர்ந்த அதிகாரங்களை பெற்று அமைக்கும் ஆட்சி முறையே ‘மக்களாட்சி’. இதன் பொருள் “நாட்டு மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம்” உள்ளது என்பதாகும். (குறிப்பிட்ட காலத்திற்கு பிரதிநிதிகளை சுதந்திரமான, நேர்மையான தேர்தல்கள் மூலம் நேரடியாக அல்லது மறைமுகமாக மக்கள் தேர்ந்தெடுப்பார்).

Question 2.
வயது வந்தோர் வாக்குரிமை என்றால் என்ன?
விடை:
சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்வித பாரபட்சமும் இன்றிபதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு
இந்தியக் குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

Question 3.
நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
விடை:

  • மேலவை உறுப்பினர்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • மேலும் கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாக சேவை புரிந்த 12 பேரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

IV. விரிவான விடையளி

Question 1.
அரசாங்க அமைப்பு முறைகளை விளக்குக.
விடை:
உயர் குடியாட்சி, முடியாட்சி, தனிநபர் ஆட்சி, சிறுகுழு ஆட்சி, மதகுருமார்கள் ஆட்சி, மக்களாட்சி மற்றும் குடியரசு என அரசாங்க அமைப்பு முறைகள் பல வகைப்படும்.

உயர் குடியாட்சி :
உயர் குடியினரால் நடத்தப்பட்டு அமைக்கப்படும் அரசாங்கம் ஆகும். எ.கா இங்கிலாந்து, ஸ்பெயின்.

முடியாட்சி :
ஒரு நபர் (வழக்கமாக அரசர்) – அமைக்கும் அரசாங்கமே முடியாட்சி எனப்படும். (எ.கா.) பூடான், ஓமன், கத்தார்

தனிநபர் ஆட்சி :
முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கமே தனிநபர் ஆட்சி ஆகும். எ.கா. வட கொரியா, சவுதி அரேபியா

சிறு குழு ஆட்சி :
மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டையோ (அ) அமைப்பையோ கட்டுப்படுத்துவதே “சிறு குழு ஆட்சி” எ னப்படும். எ.கா முன்னாள் சோவியத் யூனியன், சீனா, வெனிசுலா

மதகுருமார்களின் ஆட்சி :
மதகுருமார்கள் தம்மை கடவுளாகவோ (அ) கடவுளின் பெயரால், மதகுருமார்களே அமைக்கும் அரசாங்கமே “மதகுருமார்கள் ஆட்சி”. எ.கா. வாட்டிகன்

மக்களாட்சி :
ஒரு நாட்டின் தகுதியுள்ள குடிமக்களால் வாக்களிக்கப்பட்ட தனிநபரோ அல்லது குழுவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கமே “மக்களாட்சி” எனப்படும். எ.கா. இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி

Question 2.
மக்களாட்சியின் சிறப்புக் கூறுகள் யாவை?
விடை:

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இறுதி முடிவை மேற்கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
  • சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள்.
  • வயது வந்த அனைவருக்கும் சம மதிப்புடைய வாக்குரிமை.
  • அடிப்படை உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்.

Question 3.
மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை எழுதுக.
விடை:
நிறைகள் :

  • பொறுப்பும், பதிலளிக்கும் கடமையும் கொண்ட அரசாங்கம்
  • சமத்துவமும் சகோதரத்துவமும்
  • மக்களிடையே பொறுப்புணர்ச்சி
  • தல சுய ஆட்சி
  • அனைவருக்கும் வளர்ச்சியும் வளமும்
  • மக்கள் இறையாண்மை சகோதர மனப்பான்மை மற்றும் கூட்டுறவு

குறைகள் :

  • மறைமுக அல்லது பிரதிநிதித்துவ முறை கொண்ட மக்களாட்சி
  • வாக்காளர்களிடையே போதிய ஆர்வமின்மை மற்றும் குறைந்த வாக்குப்பதிவு
  • சில சமயங்களில் நிலையற்ற அரசாங்கத்திற்கு வழி வகுத்தல்.
  • முடிவெடுக்கும் முறையில் காலதாமதம்.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 1 அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி 9

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 2 நடுவண் அரசு Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 2 நடுவண் அரசு

10th Social Science Guide நடுவண் அரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ……………… ஆவார்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) தலைமை நீதிபதி
இ) பிரதம அமைச்சர்
ஈ) அமைச்சர்கள் குழு
விடை:
அ) குடியரசுத் தலைவர்

Question 2.
ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்
ஈ) லோக் சபாவின் சபாநாயகர்
விடை:
ஈ) லோக் சபாவின் சபாநாயகர்

Question 3.
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) மக்களவை
இ) பிரதம அமைச்சர்
ஈ) மாநிலங்களவை
விடை:
ஆ) மக்களவை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 4.
லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது …………………….
அ) 18 வயது
ஆ) 21 வயது
இ) 25 வயது
ஈ) 30 வயது
விடை:
இ 25 வயது

Question 5.
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு .
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) மாநில அரசாங்கம்
ஈ) நாடாளுமன்றம்
விடை:
ஈ) நாடாளுமன்றம்

Question 6.
கீழ்க்கண்ட எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்.
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 360
இ) சட்டப்பிரிவு 356
ஈ) சட்டப்பிரிவு 365
விடை:
ஆ) சட்டப்பிரிவு 360

Question 7.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) ஆளுநர்
ஈ) பிரதம அமைச்சர்
விடை:
அ) குடியரசுத் தலைவர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
……………………… மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.
விடை:
நிதி

Question 2.
……………… நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியச் செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
விடை:
பிரதம அமைச்சர்

Question 3.
…………….. அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.
விடை:
துணைக் குடியரசுத் தலைவர்

Question 4.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் ……………….
விடை:
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 5.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது …………………
விடை:
65

Question 6.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ………………. ஆகும்.
விடை:
உச்ச நீதிமன்றம்

Question 7.
தற்சமயம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை ……………………
விடை:
28

III. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
(i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
(ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
(iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
(iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i& iv சரியானவை
ஈ) i, ii & iii சரியானவை
விடை:
ஈ) i, ii & iii சரியானவை

Question 2.
(i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
(ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும்.
(iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
(iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i & iv சரியானவை
ஈ) i & ii சரியானவை
விடை:
அ) ii & iv சரியானவை

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 2

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி.

Question 1.
இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
விடை:

  • குடியரசுத் தலைவர், ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார்.
  • குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
  • அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உடையவர் ஆவார்.

Question 2.
நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
விடை:
நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  1. காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
  2. இராசாங்க அமைச்சர்கள்
  3. இணை அமைச்சர்கள்

Question 3.
உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
விடை:

  • இந்தியக்குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
  • அவர் பத்து ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
  • குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.

Question 4.
நிதி மசோதா குறிப்பு வரைக.
விடை:

  • நிதி மசோதா என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாவை குறிக்கிறது.
  • இது பொதுவாக பணம் பெறுதல், பணம் செலவழித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • எ.டு. வரிச் சட்டங்கள், கறுப்புப் பணம் தடுப்பு போன்றவை.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 5.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக.
விடை:

  • நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்வதற்கும் இவருக்கு உரிமை உண்டு.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்.

VI. விரிவான விடையளி.

Question 1.
இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி.
விடை:
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்: சட்டமன்ற அதிகாரங்கள்:

  • பொதுத்தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார்.
  • மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது.
  • குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டுமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
  • அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலுவையில் இருந்தாலும் அது குறித்து செய்தி அனுப்பலாம்.
  • குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன.
  • நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது.
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத் தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம்.
  • மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.

நீதி அதிகாரங்கள்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

குடியரசு தலைவரின் சிறப்பு அதிகாரங்கள் :
பிரிவு 361(1)ன் படி குடியரசுத் தலைவர் மற்றும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தை செய்யவேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

Question 2.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிவரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக.
விடை:
தனக்கேயுரிய நீதி வரையறை:
உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டவை ஆகும். அவைகள்,

  • இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்.
  • அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன உச்ச நீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும்.
  • அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட நீதிப்பேராணைகளை உச்சநீதிமன்றம் வழங்குகிறது.

மேல்முறையீட்டு நீதிவரையறை:
உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.

மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது.

ஆலோசனை நீதிவரையறை:
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.

இதர நீதிவரையறை:
உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குப்படுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 3.
இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
விடை:

  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
  • தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நாள், நிகழ்ச்சிநிரல் குறித்து முடிவு செய்வார்.
  • காபினெட் அமைச்சரவை கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
  • பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
  • நடுவண் அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார்.
  • பிரதம அமைச்சர் என்பவர் குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
  • பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
  • சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.

Question 4.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க.
விடை:
இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றுதல், நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவு-செலவு திட்டத்தினை நிறைவேற்றுதல், பொதுமக்கள் குறைகளைப் போக்குதல், மேலும் வளர்ச்சித் திட்டங்கள், சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகள் போன்றவைகளை விவாதித்தல் என பல பணிகளைச் செய்கிறது.

நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் ஆகியோரை அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது. > மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உண்டு.

10th Social Science Guide நடுவண் அரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………. நாட்டின் இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றமாகும்.
அ) உயர் நீதிமன்றம்
ஆ) உச்ச நீதிமன்றம்
இ) குடும்ப நீதிமன்றம்
ஈ) குற்றவியல் நீதிமன்றம்
விடை:
ஆ) உச்ச நீதிமன்றம்

Question 2.
இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல்கள் ………………..
அ) ஆலோசனை
ஆ) தனக்கேயுரிய வரையறை
இ) இதர நீதிவரையறை
ஈ) மேல்முறையீட்டு நீதிவரையறை
விடை:
ஆ) தனக்கேயுரிய வரையறை

Question 3.
நடுவண் அரசாங்கத்தின் ………………. அங்கம் நீதித்துறை ஆகும்.
அ) முதலாவது
ஆ) மூன்றாவது
இ) ஐந்தாவது
ஈ) இரண்டாவது
விடை:
ஆ) மூன்றாவது

Question 4.
ஒருங்கிணைந்த நீதித்துறையானது ……………… அதிகாரப் படிநிலையைக் கொண்டுள்ளது.
அ) இரட்டை
ஆ) ஒற்றை
இ) இரண்டும்
ஈ) பல
விடை:
ஆ) ஒற்றை

Question 5.
இந்திய உச்சநீதிமன்றம் ……………..ஆம் நாள் துவங்கப்பட்டது.
அ) ஜீன் 28, 1950
ஆ) ஜனவரி 28, 1950
இ) ஜீன் 20, 1940
ஈ) ஜனவரி 20, 1940
விடை:
ஆ) ஜனவரி 28, 1950

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 6.
உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட ………………. நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
அ) 65
ஆ) 34
இ) 43
ஈ) 25
விடை:
ஆ) 34

Question 7.
உச்சநீதிமன்றத்தின் நிரந்தரத் தலைமையிடம் ………….. ஆகும்.
அ) புதுதில்லி
ஆ சென்னை
இ) ஹைதராபாத்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) புதுதில்லி

Question 8.
இந்திய அரசியலமைப்புச் …………………….. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது.
அ) சட்டப்பிரிவு 25
ஆ) சட்டப்பிரிவு 26
இ) சட்டப்பிரிவு 76
ஈ) சட்டப்பிரிவு 14
விடை:
இ சட்டப்பிரிவு 76

Question 9.
இந்திய நாடாளுமன்றத்தில் . ……. …. பகுதிகள் உள்ளன.
அ) நான்கு
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஐந்து
விடை:
ஆ) மூன்று

Question 10.
மக்களவை இந்திய நாடாளுமன்றத்தின் ………………. ஆகும்.
அ) நிரந்தர அவை
ஆ) புகழ்மிக்க அவை
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) புகழ்மிக்க அவை

Question 11.
நடுவண் அமைச்சர்களில் கடைசி தரநிலையில் ……………… உள்ள னர்.
அ) காபினெட் அமைச்சர்கள்
ஆ) இராசங்க அமைச்சர்கள்
இ) இணை அமைச்சர்கள்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ இணை அமைச்சர்கள்

Question 12.
……………… என்பவர் குடியரசு தலைவருக்கும் அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
அ) பிரதம அமைச்சர்
ஆ) காபினெட் அமைச்சர்
இ) இணை அமைச்சர்
ஈ) கவர்னர்
விடை:
அ) பிரதம அமைச்சர்

Question 13.
………………. நாடாளுமன்ற முறை வெஸ்ட்மினிஸ்டர் முறை என்றழைக்கப்படுகிறது.
அ) புதுதில்லி
ஆ) சீனா
இ) இங்கிலாந்து
ஈ) எதுவுமில்லை
விடை:
இ இங்கிலாந்து

Question 14.
63வது பிரிவின் படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியைத் ……………… வகிக்கிறார்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) கவர்னர்
இ) துணை குடியரசுத் தலைவர்
ஈ) பிரதமர்
விடை:
இ துணை குடியரசுத் தலைவர்

Question 15.
குடியரசுத் தலைவர் ஆண்டிற்கு …………….. முறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
அ) நான்கு
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஒரு
விடை:
இ இரண்டு

Question 16.
நடுவண் ……………… ஆனது நாடாளுமன்றம் என்றழைக்கப்படுகிறது.
அ) சட்டமன்றம்
ஆ) நிர்வாகம்
இ) நீதிமன்றம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) சட்டமன்றம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நடுவண் அரசு தலைமையகம் ……………. உள்ளது.
விடை:
புதுதில்லி

Question 2.
நடுவண் அரசு ………………. அம்சங்களைக் கொண்டது.
விடை:
மூன்று

Question 3.
……………… நிர்வாக அதிகாரம் பெற்றவர் ஆவார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 4.
……………… பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கக் கூடாது.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 5.
புதுதில்லியிலுள்ள ………………. குடியரசுத் தலைவரின் இல்லம் ஆகும்.
விடை:
ராஷ்டிரபதி பவன்

Question 6.
இந்திய அரசியலமைப்பு …………. வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டணை பெற்ற ஒருவரின் தண்டணையை குறைக்கவும் அதிகாரம் வழங்குகிறது.
விடை:
சட்டத்தின 72

Question 7.
……………… அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும் இரகசியகாப்பும் கொடுக்கிறார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 8.
நிர்வாகத்தின் மையக் கரு ………………. ஆகும்.
விடை:
காபினெட்

Question 9.
இந்திய நாடாளுமன்றதில் மேலவை மற்றும் கீழவை கொண்டுள்ளதால் …………… ஆகும்.
விடை:
ஈரவை சட்டமன்றம்

Question 10.
மாநிலங்களவையின் ………………. அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
விடை:
துணைத் தலைவர்

Question 11.
மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ………………. ஆவார்.
விடை:
552

Question 12.
மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட ……………… அதிகாரம் உண்டு .
விடை:
நாடாளுமன்றத்திற்கே

Question 13.
மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் ……………. பின்பற்றப்படுகிறது.
விடை:
வயது வந்தோர் வாக்குரிமை

Question 14.
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர் …………………. ஆவார்.
விடை:
சபாநாயகர்

Question 15.
ஒரு சட்டத்திணை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் ……………. ஆகும்.
விடை:
நீதிப்புனராய்வு

Question 16.
…………….. எதிர்பாரா நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி .
விடை:
எதிர்பாரா செலவு நிதி

III. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
(i) மக்களவையானது நாடாளுமன்றத்தின் நிரந்தர அவை ஆகும்.
(ii) தற்சமயம் மக்களவை 543 உறுப்பினர்களை நியமிக்கப்படுகிறது.
(iii) ஆங்கிலோ – இந்தியன் சமூகத்திலிருந்து 2 உறுப்பினர்களை குடியரசு தலைவர் நியமிக்கிறார்.
(iv) தற்சமயம் மக்களவை 545 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

அ) ii) மற்றும் iv) சரி
ஆ) iii) மற்றும் iv) சரி
இ) i) மற்றும் iv) சரி
ஈ) i), ii) & iii) சரி
விடை:
ஆ) iii) மற்றும் iv) சரி

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 2.
(i) நடுவண் அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அமைதி பெற்ற பின்னரே நடுவண் நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்.
(ii) அவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியும்.
(iii) எதிர்பார்த்த செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு.
(iv) ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்.

அ) ii) மற்றும் iv) சரி
ஆ) iii) மற்றும் iv) சரி
இ) i) மற்றும் iv) சரி
ஈ) i), ii) & iii) சரி
விடை:
இ i) மற்றும் iv) சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 4

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி.

Question 1.
முடிவு வாக்கு என்றால் என்ன?
விடை:
மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100இன் படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம்.

இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிக்கிறது.

அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.

Question 2.
மாநிலங்களவை குறிப்பு எழுதுக.
விடை:
ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவை 250 உறுப்பினர்களை கொண்டது.

இதில் 238 உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

12 உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார். இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு அல்லது செயல்முறை அணுமூலம் கொள்ளலாம்.

Question 3.
தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் யாவை?
விடை:

  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
  • மக்களவை உறுப்பினராவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

Question 4.
இராணுவ அதிகாரங்கள் குறிப்பு வரைக.
விடை:

  • நடுவண் அரசின் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தைச் சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
  • அவர் சட்டத்தின்படி ராணுவத்தை வழிநடத்துகிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 5.
துணைக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • மாநிலங்களவையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறார்.
  • மாநிலங்களவையின் மரபு ஒழுங்கு முறைகளைத் தீர்மானிக்கிறார்.
  • மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்கிறார்.

VI. விரிவான விடையளி.

Question 1.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது.
  • இவர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார்.
  • இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
  • உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தேவையான தகுதிகளை இவரும் கொண்டிருக்க வேண்டும்.
  • எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவரால் அவர் பதவியிலிருந்து அகற்றப்படலாம் அல்லது அவர் குடியரசுத் தலைவருக்குப் பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம்.

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்:

  • இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார்.
  • இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு உண்டு.
  • நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்வதற்கும் இவருக்கு உரிமை உண்டு.
  • நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டத்திலோ அல்லது எந்தவொரு கூட்டுக் குழு கூட்டத்திலோ வாக்கு அளிக்கும் உரிமை இன்றி உறுப்பினராக இவர் இடம் பெறுவார்.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்.

Question 2.
இந்திய குடியரசுத் தலைவரின் நிதி மற்றும் இராஜதந்திர அதிகாரங்களை விவரி.
விடை:

  • நடுவண் அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற பின்னரே நடுவண் நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதியினைக் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளது.
  • இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு.
  • ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்.

இராஜதந்திர அதிகாரங்கள்:
வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார்.

வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Economics Chapter 5 இடம்பெயர்தல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Economics Chapter 5 இடம்பெயர்தல்

9th Social Science Guide இடம்பெயர்தல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை
அ) 121 கோடி
ஆ) 221 கோடி
இ) 102 கோடி
ஈ) 100 கோடி
விடை:
அ) 121 கோடி

Question 2.
வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்
அ) இராமநாதபுரம்
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) வேலூர்
விடை:
இ) சென்னை

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Question 3.
2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்
அ) 7%
ஆ) 75%
இ 23 %
ஈ) 9%
விடை:
அ) 7%

Question 4.
ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது
அ) வாழ்வாதாரத்திற்காக
ஆ) வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள
இ சேவைக்காக
ஈ) அனுபவத்தைப் பெறுவதற்காக
விடை:
அ) வாழ்வாதாரத்திற்காக

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
____ மற்றும் _____ அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.
விடை:
பிறப்பிடம், வாழிடம்

Question 2.
மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் ____ காணப்படுகின்றன.
விடை:
அதிகமாக

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Question 3.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிராமப்புற இந்தியாவில் _____ சதவீத மக்கள் இடம் பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
விடை:
37

Question 4.
பெண்கள் அதிக அளவில் இடம் பெயர்வதற்கான காரணம் _____
விடை:
திருமணம்

Question 5.
இடம்பெயர்வு நகர்வு என்பது _____ உள்நகர்வுகளைக் கொண்டதாகும்.
விடை:
பல்வேறு வகைப்பட்ட

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல் 50

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • வியாபாரம்
  • வணிகம்
  • வேலைவாய்ப்பு
  • கல்வி
  • திருமணம்

Question 2.
இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?
விடை:

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • திருமணம்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Question 3.
மிகக் குறைவான எண்ணிக்கையில் வெளி இடப்பெயர்வைக் கொண்ட தமிழ்நாட்டிலுள்ள நான்கு மாவட்டங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • கடலூர்
  • கரூர்
  • நாமக்கல்
  • சேலம்

Question 4.
ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?
விடை:

  • ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்கின்றனர்.
  • வசதி வாய்ப்புடையவர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இடம் பெயர்கின்றனர்.

Question 5.
தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செல்லும் நான்கு நாடுகள் மற்றும் சதவீதத்தினைப் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல் 65

Question 6.
இடப்பெயர்ந்தோர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழில்களைப் பற்றி ஆய்வுகள் வெளிப்படுத்துவது யாது?
விடை:

  • இடம் பெயர்ந்தோர் மூன்று விதமான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
  • அவை
    • மிகவும் திறமை வாய்ந்த வேலைகள்
    • சாதாரணமாகச் செய்யக் கூடிய வேலைகள்
    • நடுத்தரமான வேலைகள்

V. விரிவான விடையளி

Question 1.
இடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை?
விடை:

  1. இடம் பெயர்தலின் அளவைக் குறைத்தல் :
    • கிராமப் புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினால் கிராமப் புறங்களில் அதிக அளவிலான இடப் பெயர்தல் காணப்படுகிறது.
    • எனவே கிராமப்புறங்களின் மீது தலையீட்டின் கவனம் இருத்தல் வேண்டும்.
    • ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையைக் குறைக்கும் விதமாக அதிக அளவிலான கிராம வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
  2. இடம் பெயர்ந்து நகர்தலைத் திசை திருப்புதல் :
    • பெருநகரங்களை நோக்கி குவியும் இடப் பெயர்தலை திசை மாற்றி அமைக்கும் கொள்கைகள் விரும்பத்தக்கவைகளாகும்.
    • குடிப் பெயர்தலால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு நகர்புறங்களை பரவலாக்கும் வடிவமைப்புகள் பொருத்தமானதாக உத்திகளாக அமைகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Question 2.
இடப்பெயர்வின் முறைகளைப் பற்றி கலந்துரையாடுக.
விடை:
இந்தியாவில் மக்களின் இடம் பெயர்தலின் முறைகள் சிக்கலான பலதரப்பட்ட நகர்வுகளை உள்ளடக்கியதாகும்.

  • கிராமப்புறத்தில் இருந்து கிராமத்திற்கு, கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி, நகர் புறத்திலிருந்து கிராமம் நோக்கி, நகர் புறத்திலிருந்து நகரம் நோக்கிய இடப்பெயர்வுகள்.
  • குறுகிய, நடுத்தரமான மற்றும் நீண்ட தூர இடப்பெயர்தல் நகர்வுகள்.
  • நீண்டகால நிரந்தர இடப்பெயர்வு மற்றும் குறுகிய கால சுழற்சி முறையிலான நகர்வுகள்

ஒவ்வொரு இடப்பெயர்வு நகர்வும் வெவ்வேறு வகையான வகுப்பு சார்ந்த குடியேறுபவர்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடப்பெயர்வுக்கும் சொந்தக் காரணங்கள் இருக்கும். இடப்பெயர்தலின் அளவு மற்றும் தன்மை ஆகியவை கீழ்க்கண்டவற்றைச் சார்ந்துள்ளன.

  • இடப்பெயர்தல் துவங்கும் இடத்தில் மக்கள் அனுபவிக்கும் அழுத்தம் மற்றும் விருப்பங்கள்.
  • இடப்பெயர்தல் துவங்குமிடத்தில் மக்களின் நகர்வு மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள்.
  • சேருமிடத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அவை குறித்த தகவல்கள்.
  • குடியேற்றச் செலவு.

Question 3.
தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக.
விடை:

  • தமிழ்நாட்டின் மொத்த இடப்பெயர்வாளர்களில் 65% பேர் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 35% பேர் நம்நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
  • குடியேற்றப்பதிவில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
  • வெளிநாடுகளில் குடியேறியுள்ளவர்களில் 20%பேர் சிங்கப்பூரிலும், 18%பேர் ஐக்கிய அரபு எமிரேட்டிலும், 16% பேர் சவுதி அரேபியாவிலும், 13% பேர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் குடியேறியுள்ளனர்.
  • மேலும் மலேசியா, குவைத், ஓமன், கத்தார், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் குடியேறியுள்ளனர்.
  • குடியேறுபவர்களில் 15% பெண்கள் மற்றும் 85% பேர் ஆண்களாவர்
  • கல்வித் தகுதியைப் பொருத்த வரையில் 7% பேர் கல்வியறிவு அற்றவர்கள், 30% பேர் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், 10% பேர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், 15% பேர் தொழிற்பயிற்சி பெற்றவர்கள், 11% பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள், 12% தொழிற்கல்வி முடித்தவர்கள் மற்றும் 11% பேர் முதுகலை பட்டதாரிகளும் ஆவார்கள்.

Question 4.
2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்க.
விடை:

  • 7% பேர் கல்வியறிவு அற்றவர்கள்
  • 30% பேர் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள்
  • 10% பேர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள்
  • 15% பேர் தொழிற்பயிற்சி பெற்றவர்கள்
  • 11% பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள்
  • 12% பேர் தொழிற்கல்வி முடித்தவர்கள்
  • 11% பேர் முதுகலை பட்டதாரிகள்

VI. சரியான தொடரை எழுதுக.

1. சமீபகாலமாக வேலையாட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றனர்.
2. தமிழ்நாட்டில் இடப்பெயர்வின் பரவலானது, கிராமப்புறங்களோடு ஒப்பிடும்போது நகர்புறங்களில் அதிகம்.
3. இடம்பெயர்வின் நகர்வானது, ஒரே மாதிரியான உள்நகர்வினைக் கொண்டதாகும்.
4. பத்து நபர்களில் இருநபர்கள் இடம்பெயர்பவர்கள் ஆவர்.
விடை:
1. சமீபகாலமாக வேலையாட்கள் தமிழ்நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றனர்.

VII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உன் வகுப்பு மற்றும் பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடி எத்தனை மாணவர்களின் பெற்றோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதைப் பற்றி ஒரு புள்ளி விவரத்தரவைத் தயார் செய்க
2. கிராமப்புறத்திலிருந்து கிராமம், கிராமப்புறத்திலிருந்து நகரம் நகரத்திலிருந்து கிராமம் மற்றும் நகரத்திலிருந்து நகரம் போன்ற இடப்பெயர்வு தொடர்பான படங்களைச் சேகரித்து படத்தொகுப்பைத் தயார் செய்க.

VIII. வாழ்வியல் திறன்கள் (மாணவர்களுக்கானது)

1. உன் வகுப்பில் உள்ள மாணவர்கள் பேசும் பல மொழிகள் பற்றிய தரவுகளைச் சேகரித்து வட்ட விளக்கப்படம் தயார் செய்க.

9th Social Science Guide இடம்பெயர்தல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஆண்கள் இடம் பெயர்வதற்கான முக்கியக் காரணம்
அ) கல்வி
ஆ) வேலை
இ திருமணம்
ஈ) வணிகம்
விடை:
ஆ) வேலை

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Question 2.
தமிழ்நாட்டிலிருந்து _____ பேர் நம் நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
அ) 65%
ஆ) 35%
இ) 26%
ஈ) 53 %
விடை:
ஆ) 35 %

Question 3.
பின்வருவனவற்றுள் குறைந்த அளவிலான வெளி குடியேற்ற எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ள மாவட்டம் ______
அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ இராமநாதபுரம்
ஈ) நீலகிரி
விடை:
ஈ) நீலகிரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_____ ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுக்கப்படுகிறது.
விடை:
பத்து

Question 2.
2011 கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் ஐந்து பேரில் _____ பேர் இடம் பெயர்ந்தவராக உள்ள னர்.
விடை:
இரண்டு

Question 3.
உலகிலேயே நீண்ட தூரம் இடம் பெயரும் பறவை ____ ஆகும்.
விடை:
ஆர்டிக் டெர்ன்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல்

Question 4.
தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளில் குடியேறுபவர்களில் மிக அதிகமானோர் தேர்வு செய்யும் நாடு ______
விடை:
சிங்கப்பூர்

III. சரியான கூற்றினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
i) ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெயர்ந்து செல்கின்றனர்.
ii) சர்வதேச குடியேறுபவர்களில் 15% ஆண்களாகவும், 85% பெண்களாகவும் உள்ளனர்.
iii) இந்தியாவில் கடைசியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடை பெற்ற ஆண்டு 2015.
iv) மக்கள் ஒருபோதும் கிராமப் புறங்களுக்கு இடப் பெயர்ச்சி செய்வதில்லை .
விடை:
ii) ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெயர்ந்து செல்கின்றனர்.

IV. சுருக்கமான விடை தருக.

Question 1.
மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படக் காரணங்கள் யாவை?
விடை:

  • பிறப்பு
  • இறப்பு
  • இடப்பெயர்வு

Question 2.
இடப்பெயர்வு எந்த அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது.
விடை:

  • பிறப்பிடம் அடிப்படையில் கணக்கெடுப்பின் போது இருக்கும் இடமும் பிறந்த இடமும் வேறுபட்டிருந்தால் அது வாழ்நாள் இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது.
  • வாழிடம் அடிப்படையில் : கணக் கெடுப்பின்போது இருக்கும் இடமும் கடைசியாக வாழ்ந்த இடமும் வேறுபட்டிருந்தால் இது வாழிட அடிப்படையிலான இடப்பெயர்வு என்று அழைக்கப்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Economics Chapter 5 இடம்பெயர்தல் 90

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

10th Social Science Guide இந்திய அரசியலமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்காணும் வரிசையில் ‘முகவுரை’ பற்றிய சரியான தொடர் எது?
அ) குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம இறையாண்மை .
ஆ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
இ) இறையாண்மை , குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.
ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக , குடியரசு.
விடை:
ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.

Question 2.
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
அ) ஒரு முறை
ஆ) இரு முறை
இ) மூன்று முறை
ஈ) எப்பொழுதும் இல்லை
விடை:
அ) ஒரு முறை

Question 3.
ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும்?
அ) வம்சாவளி
ஆ) பதிவு
இ) இயல்புரிமை
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
இ இயல்புரிமை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 4.
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி?
அ) சமத்துவ உரிமை
ஆ) சுரண்டலுக்கெதிரான உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை
விடை:
இ) சொத்துரிமை

Question 5.
கீழ்கண்டவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
அ) கர்நாடகாவிலிருந்து கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்
ஆ) கிறித்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்.
இ) ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.
விடை:
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.

Question 6.
பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?
அ) சமய உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
ஈ) சொத்துரிமை
விடை:
இ அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

Question 7.
அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
அ) உச்சநீதி மன்றம் விரும்பினால்
ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்
இ) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்.
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
இ தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்

Question 8.
நமது அடிப்படை கடமைகளை ………….. இடமிருந்து பெற்றோம்.
அ) அமெரிக்க அரசியலமைப்பு
ஆ) கனடா அரசியலமைப்பு
இ) ரஷ்யா அரசியலமைப்பு
ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு
விடை:
இ ரஷ்யா அரசியலமைப்பு

Question 9.
எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 360
ஈ) சட்டப்பிரிவு 368
விடை:
இ சட்டப்பிரிவு 360

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 10.
எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய – மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N. வெங்கடாசலையா குழு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

அ) 1, 2 &3
ஆ) 1 & 2
இ) 1 &3
ஈ) 2 & 3
விடை:
ஆ) 1 & 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ……………… தோன்றியது.
விடை:
அமெரிக்க ஐக்கிய நாடுகளில்

Question 2.
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை:
Dr. சச்சிதானந்த சின்கா

Question 3.
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு ……….
விடை:
26 நவம்பர் 1949

Question 4.
………………… பேராணைகள் சட்டப்பிரிவு 32இல் குறிப்பிடப்படுகின்றன.
விடை:
ஐந்து வகையான

Question 5.
இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் …………… பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
விடை:
51A

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 2

IV. கறுதிய விடை தருக

Question 1.
அரசியலமைப்பு என்றால் என்ன?
விடை:

  • ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும்.
  • அது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணி ஆகும்.
  • அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (U.S.A.) தோன்றியது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 2.
குடியுரிமை என்பதன் பொருள் என்ன?
விடை:

  • ‘சிட்டிசன்’ (Citizen) எனும் சொல் ‘சிவிஸ்’ (Civis) எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
  • இதன் பொருள் ஒரு ‘நகர அரசில் வசிப்பவர்’ என்பதாகும். இந்திய அரசியலமைப்பு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
  • இந்திய அரசியலமைப்பின் பகுதி || சட்டப்பிரிவுகள் 5லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.

Question 3.
இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.
விடை:

  • சமத்துவ உரிமை
  • சுதந்திர உரிமை
  • சுரண்டலுக்கெதிரான உரிமை
  • சமயச் சார்பு உரிமை
  • கல்வி, கலாச்சார உரிமை
  • அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

Question 4.
நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?
விடை:

  • நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
  • இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.

Question 5.
இந்தியாவின் செம்மொழிகள் எவை?
விடை:
தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஓடியா.

Question 6.
தேசிய அவசரநிலை என்றால் என்ன?
விடை:
தேசிய அவசரநிலை (பிரிவு 352):

  • போர், அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது.
  • ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும்பொழுது அது ‘உள்நாட்டு அவசரநிலை’ எனப்படுகிறது.

Question 7.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.
விடை:

  • சட்டமன்ற உறவுகள்
  • நிர்வாக உறவுகள்
  • நிதி உறவுகள்

V. விரிவான விடை தருக.

Question 1.
இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
விடை:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்புக் கூறுகள் :

  • உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
  • இதன் பெரும்பாலான கருத்துக்கள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை,
  • இது நெகிழாத் தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
  • கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
  • இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
  • சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
  • உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 2.
அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
விடை:

  • தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
  • இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது.

சமத்துவ உரிமை:

  • பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
  • பிரிவு 17 – தீண்டாமையை ஒழித்தல்.
  • பிரிவு 18 – இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்றப் பட்டங்களை நீக்குதல்.

சுதந்திர உரிமை :

  • பிரிவு 21 – வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்பு பெறும் உரிமை.
  • பிரிவு 21 A – தொடக்கக் கல்வி பெறும் உரிமை.
  • பிரிவு 22 – சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.

சுரண்டலுக்கெதிரான உரிமை:

  • பிரிவு 23 – கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.
  • பிரிவு 24 – தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.

சமய சார்பு உரிமை:

  • பிரிவு 25 – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை.
  • பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
  • பிரிவு 27 – எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.
  • பிரிவு 28 – மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை.

கல்வி கலாச்சார உரிமை:

  • பிரிவு 29 – சிறுபான்மையினரின் எழுத்து, மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.
  • பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.

அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை:
பிரிவு 32 – தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.

Question 3.
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமையைப் பற்றி எழுதுக.
விடை:
அரசியல் சட்ட மேல் முறையீட்டு உரிமைகள் (சட்டப்பிரிவு – 32):

  • நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
  • இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.
  • Dr. B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு-32 இந்திய அரசியலமைப்பின் ‘இதயம் மற்றும் ஆன்மா ‘ ஆகும்.

அ. ஆட்கொணர்வு நீதிப்பேராணை:
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.

ஆ. கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை:
மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறைகளிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இ. தடையுறுத்தும் நீதிப்பேராணை:
ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.

ஈ. ஆவணக் கேட்பு பேராணை:
உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.

உ. தகுதி முறை வினவும் நீதிப்பேராணை:
இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 4.
அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 3

10th Social Science Guide இந்திய அரசியலமைப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
அமைச்சரவை தூதுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு …………….
அ) 1964
ஆ) 1946
இ) 1856
ஈ) 1846
விடை:
ஆ) 1946

Question 2.
……………….. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவரானார்.
அ) Dr. A.P.J. அப்துல் கலாம்
ஆ) Dr. இராஜேந்திர பிரசாத்
இ) Dr. சச்சிதானந்த சின்கா
ஈ) V.T. கிருஷ்ணமாச்சாரி
விடை:
ஆ) Dr. இராஜேந்திர பிரசாத்

Question 3.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு …………………
அ) 15 ஆகஸ்ட் 1947
ஆ) 26 ஆகஸ்ட் 1949
இ) 26 நவம்பர் 1949
ஈ) 26 ஜனவரி 1950
விடை:
ஈ) 26 ஜனவரி 1950

Question 4.
ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி, பொருத்தமான அங்கீகாரத்துடன் ………………………. செய்வதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
அ) வம்சாவளி
ஆ) பிறப்பு
இ) பதிவு
ஈ) இயல்புரிமை
விடை:
இ பதிவு

Question 5.
ஒருவர் தன் குடியுரிமையை ……………. வழிகளில் இழப்பார்.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) இரண்டு
விடை:
அ) மூன்று

Question 6.
உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு உரிய அதிகாரிக்கு அனுப்பச் செய்ய கீழ்மன்றங்களுக்கு இடும் ஆணை ……………………
அ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
ஆ) ஆவணக் கேட்பு பேராணை
இ) தடையுறுத்தும் நீதிப்பேராணை
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) ஆவணக் கேட்பு பேராணை

Question 7.
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதில் இருந்து ………….. பாதுகாக்கிறது.
அ) தடையுறுத்தும் நீதிப்பேராணை
ஆ) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
இ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை
ஈ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
விடை:
இ ஆட்கொணர்வு நீதிப்பேராணை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 8.
மற்ற அடிப்படை உரிமைகளையும் …………. சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம்.
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) ஆளுநர்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) குடியரசுத் தலைவர்

Question 9.
இந்திய அரசியலமைப்பின் ……………… இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுகிறது.
அ) பகுதி IV
ஆ) பகுதி II
இ) பகுதி III
ஈ) (ஆ) மற்றும் (இ) இரண்டும்
விடை:
இ பகுதி

Question 10.
1946 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் சேர்க்கப்பட்ட பொறுப்புகளே குடிமக்க ளின் ……………… ஆகும்.
அ) நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்
ஆ) அடிப்படைக் கடமைகள்
இ) அடிப்படை உரிமைகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) அடிப்படைக் கடமைகள்

Question 11.
அடிப்படைக் கடமைகளின் புதிய பகுதி ………… என்ற ஒரேயொரு பிரிவைக் கொண்டது.
அ) சட்டதிருத்தம் 21 A
ஆ) சட்டதிருத்தம் 45A
இ) சட்டதிருத்தம் 51A
ஈ) சட்டதிருத்தம் 20 A
விடை:
இ சட்டதிருத்தம் 51 A

Question 12.
1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து ……………… துறைகளை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது.
அ) 6
ஆ) 5
இ) 4
ஈ) 3
விடை:
ஆ) 5

Question 13.
ஒரு மாநில அரசின் …………….. அதன் சொந்த மாநிலத்தில் மட்டுமே உள்ளது.
அ) நிர்வாக அதிகாரம்
ஆ) நிதி அதிகாரம்
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) நிர்வாக அதிகாரம்

Question 14.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி சேர்காரிய கமிஷனில் நியமிக்கப்பட்ட ஆண்டு …………………
அ) 1938
ஆ) 1983
இ) 1883
ஈ) 1838
விடை:
ஆ) 1983

Question 15.
அரசியலமைப்பு சட்டப் பகுதி XVII இல் …………….. பற்றி விவரிக்கிறது.
அ) அலுவலக மொழிகள்
ஆ) அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
இ) செம்மொழிகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) அலுவலக மொழிகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நிர்ணய சபையில் ……………… உறுப்பினர்கள் இருந்தனர்.
விடை:
389

Question 2.
………………. இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விடை:
டாக்டர் B.R. அம்பேத்கர்

Question 3.
………………. என்பவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கையெழுத்திடப்பட்டது.
விடை:
பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா

Question 4.
முகவுரை ………………. என குறிப்பிடப்பட்டது.
விடை:
அரசியலமைப்பின் திறவுகோல்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 5.
………………… குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு முகவுரை அமைந்துள்ளது.
விடை:
ஜவகர்லால் நேருவின்

Question 6.
இந்தியா ஒரு …………., …………….., …………….., ………………., ………………… என தமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.
விடை:
இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயசார்ப்பற்ற, ஜனநாயக , குடியரசு

Question 7.
குடிமகன் என்பதன் பொருள் ………………
விடை:
நகர அரசியல் வசிப்பவர்

Question 8.
…………….. நடைமுறைக்கு கொண்டு வந்த ஆண்டு 1955 ஆகும்.
விடை:
குடியுரிமைச் சட்டம்

Question 9.
தற்போது ……………… அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
விடை:
ஆறு

Question 10.
……………….. அரசியலமைப்பின் பாதுகவாலன் என அழைக்கப்படுகிறது.
விடை:
உச்ச நீதிமன்றம்

Question 11.
…………. நீதிமன்ற சட்டத்தால் செயல்படுத்த முடியும்.
விடை:
அடிப்படை உரிமைகள்

Question 12.
…………….. உறவுகளை விவரிக்க இந்திரா காந்தி சர்காரியா கமிஷணாக நியமிக்கப்பட்டார்.
விடை:
மத்திய, மாநில

Question 13.
மிக முக்கியமான உள்மாநில சபை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு …………….
விடை:
1990

Question 14.
உள்நாட்டு அவசர நிலை …………. ஆண்டுகளில் அறிவிக்கப்படுகிறது.
விடை:
மூன்று

Question 15.
அதிகபட்சம் அவசர நிலையின் காலம் ………………. ஆண்டுகள் ஆகும்.
விடை:
3

Question 16.
அரசியலமைப்பு செயல்பாடு ……………… தலைமையில் செயல்படுத்தப்பட்டது.
விடை:
M.N. வெங்கடாசலய்யா

Question 17.
டாக்டர் B.R. அம்பேத்கர் கூற்றுப்படி அரசியலமைப்பு ……………… இதயம் மற்றும் ஆன்மா ஆகும்.
விடை:
சட்டப்பிரிவு 32

Question 18.
இந்திய அரசியலமைப்பு சட்டம் …………. எழுதப்பட்டது.
விடை:
இத்தாலிய பாணியில்

Question 19.
…………….. செம்மொழி தகுதியை பெற்றுள்ளன.
விடை:
6 மொழிகள்

Question 20.
……………… அரசு எல்லா சமயமும் சமம் என பாதுகாக்கிறது.
விடை:
சமயசார்பற்ற அரசு

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 5

IV. குறுகிய விடை தருக.

Question 1.
அரசியலமைப்பின் அவசியம் யாது?
விடை:

  • அனைத்து மக்களாட்சி நாடுகளும் தங்களை நிர்வகித்துக்கொள்ள ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை பெற்றுள்ளன.
  • ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ விரும்பும் வகையில் சில அடிப்படைக் கொள்கைகளை அரசியலமைப்பு வகுத்துக் கொடுக்கிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 2.
குடியுரிமைச் சட்டம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு, 1955ல் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டம், குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகிறது.
  • இச்சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் எட்டு முறை திருத்தப்பட்டுள்ளது.

Question 3.
குடியுரிமைச் சட்டத்தின் படி ஒருவர் எந்தெந்த ஒரு முறையில் குடியுரிமை பெறமுடியும்?
விடை:

  1. பிறப்பின் மூலம்
  2. வம்சாவளி மூலம்
  3. பதிவின் மூலம்
  4. இயல்புரிமை மூலம்
  5. பிரதேச இணைவின் மூலம்

Question 4.
குறிப்பு வரைக. அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
விடை:
அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை:
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.

ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை:
மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

Question 5.
அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல் பற்றி எழுதுக.
விடை:
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத்தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19ன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.

மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத்தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம்.

குடியரசுத்தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

Question 6.
ஏழாவது அட்டவணையின் அதிகாரப் பகிர்வினைப் பற்றி கூறுக.
விடை:

  • மத்திய பட்டியல்
  • மாநில பட்டியல்
  • பொதுப்பட்டியல்
  • என மூன்று பட்டியல்கள் முறையே 97, 66, 47 என்று அதிகாரத்தை வழங்கியுள்ளது.

V. விரிவான விடை தருக.

Question 1.
அவசரகால ஏற்பாட்டின் பிரிவுகள் என்னென்ன? அவற்றை விவரிக்கவும்.
விடை:
தேசிய அவசரநிலை (சட்டப்பிரிவு 352):
போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத்தலைவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.

போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது.

ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘உள்நாட்டு அவசர நிலை’ எனப்படுகிறது.

இந்த வகையான அவசரநிலைகள் 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன.

மாநில அவசரநிலை (சட்டப்பிரிவு 356):
ஒரு மாநிலத்தில், மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் பொழுது அரசியலமைப்பின் விதிகளுக்கேற்ப ஆளுநர் அறிக்கை அளிக்கும் பொழுது, குடியரசுத்தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.

மாநிலமானது, குடியரசுத்தலைவர் சார்பாக ஆளுநரால் ஆளப்படுகிறது.

நிதி சார்ந்த அவசரநிலை (சட்டப்பிரிவு 360):
இந்த வகையான அவசர நிலையில் மத்திய-மாநில அரசு ஊழியர் எந்த வகுப்பினராயினும் அவர்களது ஊதியம், படிகள் மற்றும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைவரது ஊதியமும் குடியரசுத்தலைவரின் ஓர் ஆணையின் மூலம் குறைக்கப்படும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 2.
அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் பற்றி விவரிக்கவும்.
விடை:
‘அமெண்ட்மெண்ட்’ எனும் சொல் மாற்றம், மேம்படுத்துதல், மற்றும் சிறு மாறுதல் என்பதைக் குறிக்கிறது.
அரசியலமைப்பின் சட்டம் பகுதி ல் 368வது சட்டப்பிரிவு, அரசியலமைப்பினை சட்ட திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பற்றி தெரிவிக்கின்றது.

வழிமுறைகள் :
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும், அவையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மற்றும் அவைக்கு வந்து, வாக்களித்தவர்களில் 3ல் 2 பங்குக்கு குறையாமல் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும்.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தபின் மசோதா திருத்தப்பட்டச் சொற்களுடன் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்படும்.

நாடாளுமன்றத்தால் மட்டுமே அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரமுடியும்.

மாநில சட்ட மன்றத்தால் அரசியலமைப்பில் எந்தவொரு சட்டத்திருத்தத்தையும் கொண்டுவர முடியாது.

அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வகைகள்:

  • அரசியலமைப்பின் 368வது சட்டப்பிரிவு மூன்று வகைகளில் அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களைச் செய்ய வழிவகுக்கிறது.
  • நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.
  • நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.