Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் Questions and Answers, Notes.
TN Board 8th Social Science Solutions Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
8th Social Science Guide சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
சமயச்சார்பின்மை என்பது
அ) அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது
ஆ) அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.
இ) எந்தசமயத்தைச்சார்ந்தகுடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாகவாழ்தல்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணைக்கமாக வாழ்தல்
Question 2.
இந்தியா ஒரு ………….. கொண்ட நாடாகும்.
அ) பல்வேறு சமயநம்பிக்கை
ஆ) பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை
இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
Question 3.
இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு
அ) 1951
ஆ) 1976
இ) 1974
ஈ) 1967
விடை:
ஆ) 1976
Question 4.
பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?
அ) அடிப்படை உரிமைகள்
ஆ) அடிப்படை கடமைகள்
இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
ஈ) அரசியலமைப்பின் முகவுரை
விடை:
ஈ) அரசியலமைப்பின் முகவுரை
Question 5.
சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது
அ) நீதித்துறை
ஆ) பாராளுமன்றம்
இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை
ஈ) அடிப்படை உரிமைகள்
விடை:
ஈ) அடிப்படை உரிமைகள்
Question 6.
அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது?
அ) சமய போதனைகள்
ஆ) நீதி நெறிக்கல்வி
இ) உடற்கல்வி
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
Question 7.
ஒரு நாடு சமயச்சார்ப்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது
அ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்
ஆ) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளைத் தடை செய்தால்
இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
ஈ) எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்
விடை:
இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
சமயம் நமக்கு ……………….. போதிக்கவில்லை .
விடை:
பகைமையை
Question 2.
சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது ………………… அளிக்கிறது.
விடை:
சமஉரிமை
Question 3.
…………….. என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.
விடை:
ஆத்திகம்
Question 4.
நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் ……………. மற்றும் …………. ஊக்குவிப்பதாகும்.
விடை:
தேசிய ஒற்றுமைமையயும், ஒருமைப்பாட்டையும்
Question 5.
பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் ………………….. காட்டுவதைத் தடை செய்கிறது.
விடை:
பாகுபாடு
III. பொருத்துக
IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.
Question 1.
இந்திய நாட்டிற்கென ஒரு சமயம் உள்ளது.
விடை:
தவறு
Question 2.
சமயச்சார்பின்மை என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது.
விடை:
தவறு
Question 3.
மொகலாய பேரரசர் அக்பர் சமயச் சகிப்புத்தன்மைக் கொள்கையை பின்பற்றினார்.
விடை:
சரி
Question 4.
சமண சமயம் சீனாவில் தோன்றியது.
விடை:
தவறு
Question 5.
இந்திய அரசாங்கம் அனைத்து சமய விழாக்களுக்கும் விடுமுறையை அறிவிக்கிறது.
விடை:
சரி
V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
Question 1.
i) இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை விலைமதிப்பற்ற ஒன்றாகும்.
ii) சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை .
iii) அரசியலமைப்பு பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.
iv) அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.
அ) i, ii மட்டும்
ஆ) ii, iii மட்டும்
இ) iv மட்டும்
ஈ) i, ii, iv மட்டும்
விடை:
ஈ) i, ii, iv மட்டும்
Question 2.
கூற்று : ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்.
காரணம் : அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு.
i) கூற்று சரி காரணம் தவறு
ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
iii) கூற்று தவறு, காரணம் சரி
iv) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை:
ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
Question 3.
கூற்று : இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்.
காரணம் : இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட நாடாகும்.
i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
ii) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை .
iii) கூற்று தவறு, காரணம் சரி
iv) இரண்டும் தவறு
விடை:
i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது
Question 4.
தவறான இணையைத் தேர்க.
i) தீன் இலாகி – ஒரு புத்தகம்
ii) கஜுராஹோ – இந்து கோவில்
iii) அசோகர் – பாறைக் கல்வெட்டு
iv) இக்பால் – கவிஞர்
விடை:
i) தீன் இலாகி – ஒரு புத்தகம்
VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி
Question 1.
சமயச்சார்பின்மையைப் பரப்பிட பங்களித்த சில இந்தியர்களது பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
சமயச்சார்பின்மைப் பரவலில் பங்களித்த இந்தியர்கள் :
- இராஜாராம் மோகன்ராய்
- சர் சையது அகமதுகான்
- இரவீந்திரநாத் தாகூர்
- மகாத்மா காந்தி
- B.R அம்பேத்கர்
Question 2.
சமயச்சார்பின்மை என்பது எதனைக் குறிக்கிறது?
விடை:
சமயச்சார்பின்மை
“பிற மதங்களின் மீது சகிப்புத்தன்மையான அணுகு முறை மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்த குடிமக்களுடன் அமைதியாக இணங்கி வாழும் ஒரு மனப்பாங்கு” சமயச்சார்பின்மை ஆகும்.
Question 3.
சமயச்சார்பின்மையின் நோக்கங்களைக் கூறுக.
விடை:
சமயச் சார்பின்மையின் நோக்கங்கள் :
ஒரு சமயம் சார்ந்த குழு மற்றொரு சமயக்குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது.
ஒரு சமயத்தைச் சார்ந்த சில உறுப்பினர்கள் அதே சமயத்தைச் சார்ந்த மற்ற உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது. – அரசானது எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் பின்பற்ற வலியுறுத்தாமல் இருப்பது அல்லது தனிநபர்களின் சமய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது.
Question 4.
அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
விடை:
அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் சமயச்
சார்பின்மை என்பது அரசையும் மதத்தையும் தனித்தனியாக பிரிக்கும் கோட்பாடு ஆகும். பரந்த அளவில் கூறுவதென்றால் அரசானது சமய விவகாரங்களிலோ அல்லது சமயமானது அரசின் நடவடிக்கைகளிலோ தலையிடாது இருத்தல் ஆகும்.
ஒவ்வொரு குடிமகனும் தனது மனச்சாட்சியின்படி சுதந்திரமாக அவரது நம்பிக்கையை பரப்புதல், பின்பற்றுதல் மற்றும் சமயத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை வெளியிடுதல், மாற்றிக் கொள்ளுதல் அல்லது இல்லாமல் இருத்தல்.
Question 5.
சமயச்சார்பற்ற நாட்டின் சிறப்புப் பண்புக் கூறுகள் யாவை?
விடை:
சமயச் சார்பற்ற நாட்டின் பண்புகள் :
- சுதந்திரக் கோட்பாடு – (எந்தச் சமயத்தையும் பின்பற்ற அரசின் அனுமதி)
- சமத்துவக் கோட்பாடு – (எந்த ஒரு சமயத்திற்கும் அரசு மற்றவற்றிற்கு மேலாக முன்னுரிமை அளிக்காமை)
- நடுநிலைக் கோட்பாடு – (சமய விவகாரங்களில் அரசின் நடுநிலைமை)
Question 6.
சமயச்சார்பின்மை தொடர்பான இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
விடை:
சமயச்சார்பின்மை தொடர்பான இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள் :
- பிரிவு 15 – சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்தல்.
- பிரிவு 27 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்
- பிரிவு 27 – எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்தவொரு குடிமகனையும் வரி செலுத்துமாறு வற்புறுத்தாமை.
VII. விரிவான விடையளி
Question 1.
சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?
விடை:
சமயச்சார்பற்ற கல்வி நமக்கு தேவை.
ஏனெனில்
- குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கும், சக்திவாய்ந்த ஆற்றல் மற்றும் அறிவான நோக்கத்தினை உருவாக்குவதற்கும்.
- தார்மீக மற்றும் மனிதநேய பார்வையை உருவாக்குவதற்கும்.
- இளைஞர்களை நல்ல குடிமக்களாக்க பயிற்சியளிப்பதற்கும்
- சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டுறவு வாழ்க்கை போன்ற மக்களாட்சியின் மதிப்புகளை பலப்படுத்துவதற்கும்
- வாழ்க்கை குறித்த பரந்த பார்வையை அளிப்பதற்கும்
- பிறரை பாராட்டுதல் மற்றவர் நிலையிலிருந்து புரிந்து கொள்ளும் மன்பான்மையை வளர்ப்பதற்கும்.
- அன்பு, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் இரக்க உணர்வை வளர்ப்பதற்கும்.
- பொருள் முதல்வாத கொள்கை மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கிணைக்கவும் தேவைப்படுகிறது.
Question 2.
இந்தியா போன்ற நாட்டிற்குச் சமயச்சார்பின்மை அவசியம் – நிரூபிக்கவும்.
விடை:
இந்தியா போன்ற நாட்டிற்குச் சமயச் சார்பின்மை அவசியம்.
ஏனெனில்
- இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்பது மட்டுமின்றி சமய மேலாதிக்கத்தைக் தடுக்க பல்வேறு வழிகளில் செயலாற்றுகிறது.
- ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையின் மிகச் சிறந்த பேறான சுதந்திரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க சமயச்சார்பின்மை உதவுகிறது.
- சமயச்சார்பற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை உரிமைகளுக்கு இந்திய அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது.
- சமயச் சார்பின்மை நாகரிகப்பண்புகள் வாழ அனுமதிக்கிறது.
- மக்கள் பிற சமயத்தை மதிக்க வலியுறுத்துகிறது
- சமயச் சார்பின்மை சமய நம்பிக்கையைப் பொறுத்தவரை சம உரிமையை வழங்குகிறது.
VIII. உயர் சிந்தனை வினா
Question 1.
சில சமயக் குழுக்கள் தங்களது சமயம் நரபலியை அனுமதிக்கிறது என்று கூறினால் அரசாங்கம் அவர்கள் கொள்கையில் தலையிடுமா?
விடை:
ஆம். சில சமயக் குழுக்கள் தங்களது சமயம் நரபலியை அனுமதிக்கிறது என்று கூறினால் அரசாங்கம் அவர்கள் கொள்கையில் தலையிடும்.
எந்த சமயமும், உயிருள்ள எந்தப் பொருளையும் கொல்ல போதிக்கவில்லை, இரக்கம் (கருணை) காட்டுதல் அனைத்து சமயங்களின் அடிப்படைப்பண்பு. நமது நாட்டின் சட்டம் கூட உயிர்களைக் கொல்லுதல் சட்டவிரோதம் என அறிக்கையிடுகிறது. மேலும் நரபலி மனித உரிமைகளுக்கு எதிரானது.
IX. செயல் திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)
Question 1.
உனது பள்ளி நாட்காட்டியில் உள்ள விடுமுறை நாட்களைக் கவனி. அவற்றில் வெவ்வேறு சமயங்களுடன் தொடர்புடையவை எவை? அவற்றைச் சமயங்களின் அடிப்படையில் பட்டியலிடுக. அது எதனைக் குறிக்கிறது.
விடை:
(பொதுவாக பொங்கல் திருவிழா, உழவர் திருநாள்)
Question 2.
நீ எவ்வாறு சமயச் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வாய்?
8th Social Science Guide சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
சமயச் சார்பின்மை இந்தியா போன்ற சமூகத்திற்கு ……………… ஒன்றாகும்.
அ) மதிப்புமிக்க
ஆ) மதிப்பற்ற
இ) பொருளற்ற
ஈ) அர்த்தமற்ற
விடை:
அ) மதிப்புமிக்க
Question 2.
ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக் ஓர் …………….. பத்திரிக்கை எழுத்தாளர்.
அ) அமெரிக்க
ஆ) பிரெஞ்சு
இ) இத்தாலிய
ஈ) ஆங்கிலேய
விடை:
ஈ) ஆங்கிலேய
Question 3.
சமயச்சார்பின்மை என்பது பிற மதங்களின் மீதான ……………………..
அ) பகைமை
ஆ) சகிப்புத்தன்மை
இ) அன்பு
ஈ) பொறுமை
விடை:
ஆ) சகிப்புத்தன்மை
Question 4.
தீன் – இலாஹி என்பது ……………. பின்பற்றிய மதசகிப்பு தன்மை கொள்கை.
அ) அசோகர்
ஆ) ஷாஜஹான்
இ) அக்பர்
ஈ) அலெக்ஸாண்டர்
விடை:
இ) அக்பர்
Question 5.
இந்தியாவில் அரசாங்க மதம் …………..
அ) இந்து
ஆ) புத்தகம்
இ) கிறித்தவம்
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
ஈ) இவை ஏதுமில்லை
Question 6.
சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்தரம் வழங்கும் அரசியலமைப்பு ………….
அ) பிரிவு 16
ஆ) பிரிவு 26
இ) பிரிவு 28
ஈ) பரிவு 29 (2)
விடை:
ஆ) பிரிவு 26
Question 7.
அக்பரின் கல்லறை உள்ள இடம் ………………….
அ) சிக்கந்தரா
ஆ) புதுடெல்லி
இ) அவுரங்காபாத்
ஈ) செகந்திராபாத்
விடை:
அ) சிக்கந்தரா
Question 8.
………………. வது சட்டத்திருத்தத்தின் மூலம் முகவுரையில் சமயச்சார்பற்ற என்ற சொல் சேர்க்கப்பட்டது.
அ) 370
ஆ) 356
இ) 42
ஈ) 35
விடை:
இ) 42
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
சமயச் சார்பின்மை நம்மை ……………… பண்புடன் வாழ அனுமதிக்கிறது
விடை:
நாகரிகப்
Question 2.
இந்திய அரசியலமைப்பில் 42வது சட்டத்திருத்தம் ………………. ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
விடை:
1976
Question 3.
சமயச்சார்பற்ற நாட்டில் எவருக்கும் தனிப்பட்டமுறையில் ……………….. அளிப்பதில்லை.
விடை:
சலுகை
Question 4.
நவீன தேசிய நாடுகள் அனைத்தும் …………….. கொண்டிருக்கின்றன
விடை:
பல சமயங்களை
Question 5.
இந்தியா பல்வேறு சமய …………. கொண்ட சமூகம்.
விடை:
பன்முகத்தன்மை
III. பொருத்துக.
IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக.
Question 1.
சமயச் சார்பின்மை சமய நம்பிக்கையை சுதந்திரமாக வெளிப்படுத்த, பின்பற்ற மற்றும் பரப்பு உரிமை வழங்குகிறது.
விடை:
சரி
Question 2.
இந்தியாவில் முதலில் சமய சகிப்புத் தன்மையை கடைப்பிடித்த பேரரசர் அக்பர் ஆவார்.
விடை:
தவறு
Question 3.
சமயச் சார்பின்மை இந்தியாவில் மக்களாட்சி வளாச்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
விடை:
தவறு
Question 4.
சமய நம்பிக்கைகள் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுகிறது.
விடை:
தவறு
Question 5.
நமது அரசியலமைப்பு 1947ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடை:
தவறு
V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
Question 1.
தவறான கூற்றை கண்டறியவும்
i) சமயச் சார்பற்ற இந்திய நாடானது அனைத்து சமய விழாக்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கிறது.
ii) நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் தேசிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஊக்குவிப்பது அல்ல.
iii) சமயச் சார்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
iv) குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கு சமயச் சார்பற்ற கல்வி தேவை.
அ) i, ii மட்டும்
ஆ) ii, iii மட்டும்
இ) i, iv மட்டும்
ஈ) i, ii மட்டும்
விடை:
இ) i, iv மட்டும்
Question 2.
கூற்று : சமயச்சார்பற்ற கல்வி தேவை.
காரணம் : பொருள் முதல் வாத கொள்கை மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கிணைக்க தேவைப்படுகிறது.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை:
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
Question 3.
கூற்று : நவீன தேசிய நாடுகள் அனைத்தும் பல சமயங்களைக் கொண்டிருக்கின்றன.
காரணம் : அனைத்து சமயங்களையும் சகித்துக் கொள்ளும் தன்மை அவசியமானதாகும்.
அ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
Question 4.
தவறான இணையைத் தேர்க.
அ) புத்தகம் – ஸ்ரீலங்கா
ஆ) தெய்வீக நம்பிக்கை – தீன் – இலாஹி
இ) கல்லறை – சிக்கந்தர
ஈ) பம்பாய் மாநிலம் & ரத்திலால் – 1954
விடை:
அ) புத்தகம் – ஸ்ரீலங்கா குடிமையியல்
VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி
Question 1.
இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரும் சமயங்களின் பெயர்களைக் கூறு.
விடை:
- இந்து
- சமணம்
- புத்தம்
- சீக்கியம்
Question 2.
ஆத்திகத்திற்கும் சமயச் சார்பின்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
விடை:
ஆத்திகம் மற்றும் சமயச் சார்பின்மை :
- ஆத்திகம் – கடவுள் அல்லது கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருத்தல்
- சமயச்சார்பின்மை – அரசோ, சமயமோ ஒன்று மற்றொன்றின் விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
Question 3.
சமயச் சார்பின்மை குறித்து கவிஞர் இக்பாலின் கருத்து என்ன?
விடை:
சமயச் சார்பின்மை குறித்து கவிஞர் இக்பால் :
‘சமயம் நமக்குப் பகைமையைப் போதிக்கவில்லை நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்தியா நமது வீடு”
Question 4.
“அசோகரின் 12வது பாறை அரசானை” – சிறு குறிப்பு வரைக.
விடை:
அசோகரின் 12வது பாறை அரசானை :
கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே “அரசானது எந்த ஒரு மதத்தைச் சார்ந்த பிரிவினருக்கும் எதிராக குற்றம் காட்டாது” என்று அறிவித்த முதல் பேரரசர் அசோகர் ஆவார்..
தனது 12வது பாறை அரசானையில் “அனைத்து மதப்பிரிவினருடன் சகிப்புத் தன்மையோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது மிகுந்த மரியாதைக்குரிய மன நிலையை வளர்த்துக் கொள்ளவும்” தம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Question 5.
“கஜீராஹோ இந்துக் கோவில் (19ம் நூற்றாண்டு)” – சிறு குறிப்பு வரைக
விடை:
கஜீராஹோ கோவில் வழக்கமான சிகரத்திற்குப் பதில் இந்து பாணியிலான கோபுரம், சமண விதானம், புத்த ஸ்தூபி மற்றும் இஸ்லாமிய பாணியிலான குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
Question 6.
இந்தியா குறித்து நமது அரசியலமைப்பு சட்ட முகவுரை கூறுவது என்ன?
விடை:
நமது அரசியலமைப்புச் சட்ட முகவுரையின்படி :
“இந்தியா ஓர் இறையாண்மை வாய்ந்த சமதர்ம, சமயச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு.”
Question 7.
சமயச் சார்பின்மை ஏன் மக்களாட்சி வளர்ச்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது?
விடை:
சமயச் சார்பின்மை மக்களாட்சி வளர்ச்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏனெனில், நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அனைத்து மக்களும் அவர்களது சமயத்தை பின்பற்ற சுதந்திரம் பெற்றிருந்தால் மட்டுமே வலிமையான மற்றும் ஒற்றுமையான நாட்டை உருவாக்க இயலும் என்பதை உணர்த்திருந்தனர்.
Question 8.
அக்பர் தன்னுடைய கல்லறை குறித்து வலியுறுத்தியது என்ன?
விடை:
தன்னுடைய கல்லறை குறித்து அக்பரின் வலியுறுத்தல் :
- கல்லறையில் இஸ்லாம், இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களைச் சார்ந்த கூறுகள் இடம் பெறவேண்டும்.
- அக்பரின் கல்லறையை நாம் ஆக்ரா அருகில் உள்ள சிக்கந்தராவில் காணலாம்.
VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி
Question 1.
சமயச் சார்பின்மை குறித்து இந்திய அரசியலமைப்பு கொண்டுள்ள சிறப்புக் கூறுகளை விவரி.
விடை:
சிறப்புக் கூறுகள் :
- அரசானது எந்த ஒரு சமயத்தாலும் தன்னை அடையாளம் காணாது. சமயத்தால் கட்டுப்படுத்தப்படாததாகவும் இருக்கும்.
- ஒவ்வொருவரும் அவரது விருப்பத்திற்கேற்ப எந்த ஒரு சமயத்தையும் பின்பற்றும் உரிமையை அரசு உறுதி செய்கிறது.
- எந்த சமயத்திற்கும் அரசு முன்னுரிமை, சலுகை அளிப்பதில்லை.
- எந்த ஒரு நபருக்கும் அவரது சமய நம்பிக்கையின் காரணமாக அரசு எவ்வித பாகுபாடும் காட்டாது.
- இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தை உருவாக்குவதோடு தனிமனித மாண்பிற்கும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கிறது.
Question 2.
அரசியலமைப்பு பிரிவுகளின் அடித்தளம் – விவரி
விடை:
- பிரிவு 15 – சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பிப்பதை தடை செய்கிறது.
- பிரிவு 16 – பொது வேலை வாய்ப்பில் சமமான வாய்ப்பளித்தல்
- பிரிவு 25(1) – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை வழங்குகிறது.
- பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்ணயிக்க சுதந்திரம்
- பிரிவு 27 – எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்தவொரு குடிமகனையும் வரி செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது.
- பிரிவு 28 – சில கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்து நடைபெறும் சமய போதனைகள் அல்லது சமய வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் உரிமை.
- பிரிவு 29 (2) – அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை
VIII. மனவரைபடம்