Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

7th Social  Science Guide டெல்லி சுல்தானியம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
_______________ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
அ) முகமதுகோரி
ஆ) ஜலாலுதீன்
இ) குத்புதீன் ஐபக்
ஈ) இல்துமிஷ்
விடை:
இ) குத்புதீன் ஐபக்

Question 2.
குத்புதீன் தனது தலைநகரை ___________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
அ) லாகூர்
ஆ) புனே
இ) தௌலதாபாத்
ஈ) ஆக்ரா
விடை:
அ) லாகூர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 3.
______________ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
அ) ரஸ்ஸியா
ஆ) குத்புதீன் ஐபக்
இ) இல்துமிஷ்
த ஈ) பால்பன்
விடை:
இ) இல்துமிஷ்

Question 4.
டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.
அ) முகமது பின் துக்ளக்
ஆ) பிரோஷ் ஷா துக்ளக்
இ) ஜலாலுதீன்
ஈ) கியாசுதீன்
விடை:
ஈ) கியாசுதீன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் ___________ ஆவார்
விடை:
கியாசுதீன் துக்ளக்

Question 2.
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார்.
விடை:
தேவகிரி

Question 3.
புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை __________ ஆதரித்தார்.
விடை:
பால்பன்

Question 4.
டெல்லியிலுள்ள குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார்.
விடை:
குத்புதீன் ஐபக்

Question 5.
இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் _____________ ஆட்சியின் போது ஏற்பட்டது.
விடை:
இல்துமிஷ்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 2

IV. சரியா, தவறா?

Question 1.
குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்
விடை:
தவறு (குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்தார்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 2.
ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.
விடை:
சரி

Question 3.
ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.
விடை:
தவறு (இல்துமிஷ் ஐபக்கின் மருமகன்)

Question 4.
தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ்ஷா மறுத்துவிட்டார்.
விடை:
சரி

V. சரியான விடையை (✓) டிக் செய்யவும். கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக.

அ) கூற்று : மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம் : செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணமும் கூற்றும் தவறானவை.
ஈ) கூற்று தவறு; காரணம் சரி.
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.

ஆ) சரியான இணையைத் தேர்வு செய்க.
1. ஹொய்சாளர் – தேவகிரி
2. யாதவர் – துவாரசமுத்திரம்
3. காகதியர் – வாராங்கல்
4. பல்லவர் – மதுரை
விடை:
3) காகதியர் – வாராங்கல்

இ) தவறான கூற்றினை கண்டறியவும். தம்

  1. 1206 இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்.
  2. ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்.
  3. மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார்.
  4. இப்ராகிம் லோடி 1526 இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார்.

விடை:
2) ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்.

VI. கீழ்க்காண்பனவற்றிற்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
முறையான ஊதியத்திற்கு மாற்றாக ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயரென்ன?
விடை:
ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயர் இக்தா’

Question 2.
ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
விடை:
ஆக்ரா நகரத்தை சிக்கந்தர் லோடி நிர்மாணித்தார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 3.
கி.பி (பொ. ஆ) 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியர் யார்?
விடை:
முகமது கோரி 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவினார்.

Question 4.
‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர் கொள்வதற்காக இல்துமிஷ் – துருக்கியப் பிரபுக்கள் நாற்பது பேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழு சகல்கானி அல்லது நான்பதின்மர் எனப்பட்டது.

Question 5.
அலாவுதீன் கில்ஜி எவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்?
விடை:
அலாவுதீன் கில்ஜி வடக்கே பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை தன் வசமாக்கினார்.

அவரது படைத் தளபதியான மாலிக் கபூர் மூலம் தெற்கே தேவகிரியை ஆண்ட யாதவர்கள், துவார சமுத்திரத்தின் ஹொய்சாலர்கள், வாராங்கல்லின் காகதீயர்கள் மற்றும் மதுரைப் பாண்டியர்கள் ஆகியோர் அவரது ஆதிக்கத்தின் கீழ் வந்தனர். இவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்.

Question 6.
பிரோஷ்ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக.
விடை:

  • பிரோஷ்ஷா துக்ளக் கல்லூரிகள், மசூதிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கட்டினார்.
  • பல மனிதாபிமான நடவடிக்கைகளையும் அவர் மேற் கொண்டார்.
  • மனிதாபிமானமற்ற கொடூரமான தண்டனைகளை ஒழித்தார்.
  • அநேக வரிகளை ரத்து செய்தார்.
  • விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தார்.
  • பல நீர்ப்பாசனக் கால்வாய்களை வெட்டினார்.
  • 1200 புதிய தோட்டங்களை உருவாக்கினார்.

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்.

Question 1.
1398 ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
விடை:

  • தைமூர் சாமர்கண்ட் பகுதியை ஆட்சி செய்தார்.
  • இவர் வட இந்தியாவுக்கு மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
  • 1938 ல் இந்தியாவிற்குள் படையெடுத்து நுழைந்தார்.
  • டெல்லி மற்றும் பஞ்சாப் பகுதிகளைக் கொள்ளையடித்தார்.
  • தங்கம், வெள்ளி, நகைகள் எனப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்து எடுத்துச் சென்றார்.
  • திரும்பிச் செல்லும் போது தச்சு வேலை செய்வோர் மற்றும் கட்டடக் கலைஞர்கள் போன்ற இந்தியக் கலைஞர்களை சாமர்க்கண்டிற்கு அழைத்துச் சென்றார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
முகமது பின் துக்ளக்கை டெல்லியின் சுல்தானாக நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
விடை:

  • முகமது பின் துக்ளக் மிகவும் கற்றறிந்த மனிதர். ஆனாலும் அவர் குரூரம் நிறைந்தவராய் இருந்தார்.
  • இந்தியா முழுவதையும் தனது நாடாக்க வேண்டும் என கனவு கண்டார்.
  • தலைநகரை மாற்றிய அவரது திட்டம் தோல்வி கண்டது.
  • துக்ளக் நிலவரியை உயர்த்தியதோடு, வரியை பணமாகவே செலுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார். இதுவும் மக்களுக்கு பெரும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியது.
  • முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய திட்டங்கள் அனைத்துமே சிறந்தவைகளாகும். ஆனால் சூழ்நிலையை அறிந்து அவைகள் நடைமுறைப் படுத்தப் படவில்லை. எனவே அவரது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன,
  • அவரது அவசர கொள்கை முடிவுகளும், சில நடைமுறைப்படுத்த இயலாத திட்டங்களும் துக்ளக் மரபின் வீழ்ச்சிக்குக் காரணமாயின.

IX. வரைபட வினா

Question 1.
இந்திய ஆறுகள் வரைபடத்தில் துக்ளக் வம்சத்தின் ஆட்சி எல்லையையும் கீழ்க்காணும் பகுதிகளையும் குறிப்பிடுக.
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

  1. டெல்லி
  2. தேவகிரி
  3. லாகூர்
  4. மதுரை

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பொருத்துக
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 4

Question 2.
டெல்லி சுல்தானியத்தின் இஸ்லாமிய கலை, கட்டடக் கலை தொடர்பான படங்களைக் கொண்டு செருகேடு (ஆல்பம் ) ஒன்றைத் தயார் செய்யவும்.

7th Social  Science Guide டெல்லி சுல்தானியம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

Question 1.
மம்லுக் என்ற அராபிய வார்த்தையின் பொருள்
அ) எஜமான்
ஆ) அடிமை
இ) சக்தி
ஈ) வெற்றி
விடை:
ஆ) அடிமை

Question 2.
இபன் பதூதா _______________ நாட்டுப் பயணி
அ) சீனா
ஆ) கிரீஸ்
இ) மொராக்கோ
ஈ) போர்ச்சுகல்
விடை:
இ) மொராக்கோ

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 3.
தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு
அ) 1398
ஆ) 1368
இ) 1389
ஈ) 1498
விடை:
அ) 1398

Question 4.
சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர்
அ) ஆலம்ஷா
ஆ) முகமது ஷா
இ) முபாரக் ஷா
ஈ) கிசிர்கான்
விடை:
ஈ) கிசிர்கான்

Question 5.
முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1556
ஆ) 1526
இ) 1625
ஈ) 1562
விடை:
ஆ) 1526

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் ____________
விடை:
குத்புதீன் ஐபக்

Question 2.
குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் ____________
விடை:
குத்புதீன் ஐபக்

Question 3.
கில்ஜி வம்சத்தின் முதல் அரசர் __________
விடை:
ஜலாலுதீன் கில்ஜி

Question 4.
முகமது பின் துக்ளக் தேவகிரியின் பெயரை __________ என மாற்றினார்.
விடை:
தௌலதாபாத்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 5.
இப்ராகிம் லோடி ___________ என்பவரின் மகன் ஆவார்.
விடை:
சிக்கந்தர் லோடி

III. பொருத்துக வாதம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 5

IV. சரியா, தவறா?

Question 1.
பால்பன் பாரசீகக் கவிஞரான அமிர்குஸ்ரு என்பவரை ஆதிரித்தார்.
விடை:
சரி

Question 2.
முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் ஜானாகான்.
விடை:
சரி

Question 3.
முகமது பின் துக்ளக் கல்வி அறிவற்றவர்
விடை:
தவறு (கற்றிந்தவர்)

Question 4.
பிரோஷ் ஷா துக்ளக்கின் இறுதி நாட்கள் மகிழ்ச்சி நிறைந்தவையாக இல்லை.
விடை:
சரி

Question 5.
தைமூர் டெல்லியைக் கொள்ளையடித்த போதிலும், அவர் அம்மக்களை துன்புறுத்தவில்லை
விடை:
தவறு (மக்களைக் கொன்றார்)

V. அ) கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக. சரியான விடையைக் (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று 1 : துருக்கிய பிரபுக்கள் ரஸ்ஸியாவுக்கு எதிராகக் கலகம் செய்து அவரைக் கொலை செய்தனர்.
கூற்று 2 : ரஸ்ஸியா ஒரு எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப் பெரிதும் நம்பினார்.

அ) கூற்றும் காரணமும் தவறு.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
ஈ) கூற்று சரி. காரணம் தவறு.
விடை:
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

ஆ) தவறான கூற்றினைக் கண்டறியவும்.

1. முகமது கோரிக்கு மகன்கள் இல்லை
2. குவ்வத் – உல் – இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதி இந்தியாவிலுள்ள மிகப்பழமையான மசூதி எனக்கருதப்படுகிறது.
3. அலாவுதீன் கில்ஜி ஜலாலுதீன் கில்ஜியின் மகன் ஆவார்.
4. சிக்கந்தர் லோடியின் தலைநகர் ஆக்ரா ஆகும்.
5. பாபர் டெல்லி சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
விடை:
3) அலாவுதீன் கில்ஜி ஜலாலுதீன் கில்ஜியின் மகன் ஆவார்

VI. தவறான இணையைக் கண்டு பிடிக்கவும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 6
விடை:
3) பகலூல் லோடி

VII. பொருந்தாததைக் கண்டுபிடி

Question 1.
பிரோஷாபாத், ஜான்பூர், காரா, ஹிசார்.
விடை:
காரா

Question 2.
குத்புதீன் ஐபக், இல்துமிஷ், பால்பன், அமிர்குஸ்ரு
விடை:
அமிர்குஸ்ரு

VIII. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
இல்துமிஷ் எவ்வாறு தன் நாட்டை மங்கோலியப் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தார்?
விடை:
ஏற்கனவே செங்கிங்கானால் தோற்கடிக்கப்பட்டு, விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலு தீன் என்பவர் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை இல்துமிஷ் மறுத்துவிட்டார். இதனால் மங்கோலியர் இல்துமிஷ் மீது படையெடுக்கவில்லை.

Question 2.
ஜவ்ஹர் பற்றி சிறுகுறிப்பு வரைக..
விடை:

  • ஜவ்ஹர் என்பது ராஜபுத்திரர்களிடையே நிலவிய ஒரு சடங்கு ஆகும்.
  • இதன்படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாளவர். பெண்கள் அதன் தீப்புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்.

Question 3.
அலாவுதீனின் வரிவசூல் முறை பற்றி கூறு.
விடை:

  • அலாவுதீன் வரிகளை வசூல் செய்யும் பணியை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
  • அவர் கட்டாய உணவு தானியக் கொள் முதல் முறையை அறிமுகம் செய்தார்.
  • கொள்முதல் விலை சுல்தானால் நிர்ணயம் செய்யப்பட்டது. வரியாக வசூலிக்கப்பட்ட தானியம் அரசாங்க பண்டக சாலையில் சேர்த்து வைக்கப்பட்டது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 4.
சையது வம்சத்தின் தோற்றம் பற்றி எழுதுக.
விடை:
தைமூர் டெல்லியை விட்டுச் செல்வதற்கு முன்பாக, தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு (டெல்லி, மீரட், பஞ்சாப்) கிசிர்கான் என்ற தனது பிரதிநிதியை ஆளுநராக நியமித்துச் சென்றார். அவர் தோற்றுவித்த அரசே சையது அரசவம்சம் ஆகும்.

Question 5.
முதல் பானிபட் போர் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • முதல் பானிபட் போர் 1526 ஆம் ஆண்டு பாபருக்கும் இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்றது.
  • இப்போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்தார்.
  • இதனால் லோடி அரச வம்சத்திற்கும், டெல்லி சுல்தானியத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
  • பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார்.

IX. விடையளிக்கவும்

Question 1.
இஸ்லாமியக் கலை மற்றும் கட்டக்கலையை விவரி.
விடை:

  • முஸ்லீம் பிரபுக்களும் அதிகாரிகளும் நகரங்களிலும், கிராமங்களிலும் தங்கள் குடியிருப்புகளைக் கட்டிக் கொண்டனர்.
  • பின் அவற்றைச் சுற்றி அழகு மிக்க மசூதிகளைக் கட்டினர்.
  • மசூதிகள் மற்றும் மதரசாக்களின் சுவர்களிலும் கதவுகளிலும் குரானிலுள்ள வரிகளைச் செதுக்கியிருந்தனர்.
  • கட்டடங்களின் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும், அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்திருந்தன. எனவே அப்பாணி இந்தோ – சாராசானிக் கலை வடிவம் என அழைக்கப்பட்டது.
  • குதுப்மினார், அலெய் தாவாசா, மோத்தி மசூதி, இல்துமிஸ் மற்றும் பால்பன் ஆகியோரின் கோட்டைகள் ஆகியவை அப்பாணியில் அமைக்கப்பட்டவையாகும்.

Question 2.
பால்பனின் பெருமைகளை வெளிக் கொணர்.
விடை:

  • பால்பன் ஒரு மிகச் சிறந்த அரசர்.
  • நாற்பதின்பர் என்று அழைக்கப்பட்ட துருக்கியப்பிரபுக்கள் குழு அவரோடு பகைமை பாராட்டியதால் அவ்வமைப்பை அவர் ஒழித்தார்.
  • தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரையும், இடையூராய் இருப்போரையும் கண்டறிய ஒரு ஒற்றர் துறையை நிறுவினார்.
  • அரசு அதிகாரத்திற்குக் கீழ்ப்படியாமை, எதிர்த்தல் போன்றவற்றைக் கண்டித்தார்.
  • வங்காள ஆளுநராக இருந்த துக்ரில்கான பால்பனுக்கு எதிராகக் கலகம் செய்ததால் அவர் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
  • அவர் தனது எதிரிகளிடம் கருணையில்லாமல் நடந்து கொண்டார்.
  • மங்கோலியரிடம் இணக்கமான உறவு கொண்டிருந்தார்.
  • அமிர்குஸ்ரு என்ற பாரசீகக் கவிஞரை ஆதிரித்தார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 3.
முகமது பின் துக்ளக்கின் நாணயச் சீர்திருத்தத்தை விவாதி.
விடை:

  • முகமது பின் துக்ளக் நிலவரி பணமாக வசூலிக்கப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இது மக்களை அதிகமாகப் பாதித்தது.
  • போதுமான அளவுக்கு நாணயங்களோ, புதிய நாணயங்களை வெளியிடும் அளவுக்கு வெள்ளியோ கைவசம் இல்லை. இதை உணர்ந்த துக்ளக் செப்பு நாணயங்களை வெளியிட்டார்.
  • இதனால் கள்ள நாணயங்கள் பெருகிவிட்டன. ஒட்டு மொத்த வருவாய் நிர்வாக முறை சீர்குலைந்தது.
  • இதனால் வணிகம் பாதிக்கப்பட்டது.
  • எனவே செப்பு நாணயங்களைப் பெற்றுக் கொண்டு அதற்கு மாறாக தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களைக் கொடுத்தார். இதனால் அரசு திவாலானது.
  • இதனால் மீண்டும் நிலவரியை உயர்த்தினார். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு நாட்டில் அடிக்கடி பஞ்சம் ஏற்பட்டது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 7

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

6th Science Guide நமது சுற்றுச்சூழல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.
அ) குளம்
ஆ) ஏரி
இ) நதி
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 2.
உற்பத்தியாளர்கள் எனப்படுவை.
அ) விலங்குகள்
ஆ) பறவைகள்
இ) தாவரங்கள்
ஈ) பாம்புகள்
விடை:
இ) தாரவங்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 3.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு
அ) நெகிழி
ஆ) சமையலறைக் கழிவுகள்
இ) கண்ணாடி
ஈ) அலுமினியம்
விடை:
ஆ) சமையலறைக் கழிவுகள்

Question 4.
காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.
அ) மறு சுழற்சி
ஆ) மீண்டும் பயன்படுத்துதல்
இ) மாசுபாடு
ஈ) பயன்பாட்டைக் குறைத்தல்
விடை:
இ) மாசுபாடு

Question 5.
களைக்கொல்லிகளின் பயன்பாடு _____ மாசுபாட்டை உருவாக்கும்.
அ) நில மாசுபாடு
ஆ) நீர் மாசுபாடு
இ) இரைச்சல் மாசுபாடு
ஈ) அ மற்றும் ஆ
விடை:
ஈ) அ மற்றும் ஆ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
தாவரங்களை உண்பவை ———- நிலை நுகர்வோர்கள் ஆகும்.
விடை:
முதல்

Question 2.
சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _____ காரணிகள் ஆகும்.
விடை:
காலநிலைக்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 3.
______ என்ற நிகழ்வின் மூலம் கழிவுப் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.
விடை:
மறு சுழற்சி

Question 4.
நீர் மாசுபாடு மனிதனுக்கு _____ நோயை உருவாக்குகிறது.
Answer;
தீங்கு விளைவித்து

Question 5.
3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல் _____ மற்றும் மறுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.
விடை:
மீண்டும் பயன்படுத்துதல்

III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசிபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை;
சரி.

Question 2.
பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
சரி.

Question 3.
மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.
விடை.
தவறு – மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும் உயிரினச் சிதைவுக்கு உள்ளாகும் கழிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Question 4.
அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.
விடை:
தவறு – அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால், நீர் நில மாசுபாடு உருவாகும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 5.
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
விடை.
தவறு – திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும்.

IV. பொருத்துக .

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் 85

V. சரியான வரிசையில் எழுதி, உணவுச் சங்கிலியை உருவாக்கு.

Question 1.
முயல் → கேரட் → கழுகு → பாம்பு
விடை:
கேரட் → முயல் → பாம்பு → கழுகு

Question 2.
மனிதன் → பூச்சி → ஆல்கா → மீன்
விடை:
ஆல்கா → பூச்சி → மீன் → மனிதன்

VI. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
சூழ்நிலை மண்டலம் வரையறு.
விடை:
உயிருள்ளவையும், உயிரற்றவையும் ஒன்று சேர்ந்த ஒரு கட்டமைப்பே சூழ்நிலை மண்டலமாகும்.

Question 2.
சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?
விடை:

  1. இயற்கை சூழ்நிலை மண்டலம்
  2. செயற்கை சூழ்நிலை மண்டலம்

Question 3.
மறுசுழற்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
விடை:

  1. பழைய துணிகள் – காகிதத் தயாரிப்பில் பயன்படுத்துதல்.
  2. சில வகை நெகிழிகள் – உருக்கி நடைபாதை விரிப்புகள், நெகிழி அட்டைகள், நீர் பாய்ச்சு குழாய்கள் தயாரித்தல்.

Question 4.
மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:
மாசுபாடுகள் நான்கு முக்கிய வகைகளாக உள்ளன.

  1. காற்று மாசுபாடு
  2. நீர் மாசுபாடு
  3. நில மாசுபாடு
  4. ஒலி மாசுபாடு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 5.
நீர் வாழ் உணவுச்சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை:
நீர் வாழ் உணவுச் சங்கிலி:
நீர் வாழ் தாவரம் → நீர் வாழ்ப்பூச்சி → லார்வா → மீன்

Question 6.
மாசுபடுத்திகள் என்றால் என்ன?
விடை:

  1. மனிதனின் செயல்பாடுகளாள் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
  2. எந்தப் பொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை உருவாக்குகின்றனவோ அவை மாசுபடுத்திகள் எனப்படுகின்றன.
    (எ.கா) புகை, சாக்கடைக்கழிவுகள், களைக் கொல்லிகள்.

Question 7.
பின்வருவன உருவாக்கும் மாசுபாடுகளை எழுதுக.
அ. ஒலி பெருக்கி
ஆ. நெகிழி
விடை:
அ. ஒலி பெருக்கி – ஒலி மாசுபாடு.
ஆ. நெகிழி – நில மாசுபாடு.

VII. குறுகிய விடையளி:

Question 1.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன?
விடை:
1. பாக்டீரியா, பூஞ்சை ஆகிய நுண்ணுயிரிகள், தாவர, விலங்கின கழிவுகளை நீர், ஆக்ஸிஜன், வெப்பம், சூரிய புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றின் உதவியால் சிதைத்து மண்ணோடு மண்ணாக மட்கச் செய்கிறது. இதற்கு உயிரினச் சிதைவு என்று பெயர்.

2. இவ்வாறு நுண்ணுயிரினங்களால் சிதைவுறக்கூடிய இயற்கைக் கழிவுகளை உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்கிறோம்.
எ.கா. – காய்கறி மற்றும் பழக்கழிவுகள், உணவுக்கழிவுகள், காய்ந்த புல், இலை, தழை, கிளை போன்ற தாவர கழிவுகள், விலங்கின மனிதக் கழிவுகள், இறந்த உடல்கள் போன்ற கழிவுகள்.

Question 2.
நீர் மாசுபாட்டை நாம் எவ்வாறு குறைக்கலாம்?
விடை:

  1. மீதமுள்ள எண்ணெய், பழைய மருந்து மற்றும் மருத்துவ கழிவுகள், வேதிக் கழிவுகள் நீருடன் கலத்தலைத் தவிர்க்க வேண்டும்.
  2. வயலில் பயிர்கள் வளர்வதற்காகப் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மற்றும் உரங்களின் அளவைக் குறைக்க வேண்டும்.
  3. வீட்டின் கழிவு நீரை வீட்டுத் தோட்டம் அமைத்துப் பயன்படுத்தலாம்.
  4. குளங்கள், ஏரிகள், ஆறுகளில் குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகளைக் கலக்காமல் அவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  5. எப்பொழுதும் குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்ட வேண்டும்.
  6. தொழிற்சாலைக் கழிவுகளை நேரடியாக நீர் கலக்காமல், அவற்றை சுத்திகரிப்பு செய்து பின்னரே நீர் நிலைகளில் கொட்ட அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

Question 3.
உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:

  1. ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்களுக்கிடையே உள்ள உணவு உண்ணும் உறவு முறையும், அந்த உயிரினங்கள் எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையும் உணவுச் சங்கிலி விளக்குகிறது.
  2. சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் எவ்வாறு ஓர் உயிரினத்திடமிருந்து மற்றொரு உயிரினத்திற்கு சுழற்சியாகக் கடத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
  3. சூழ்நிலை மண்டலத்தின் மாசுபாட்டினால் உணவுச் சங்கிலியில் உள்ள ஓர் உறுப்பினரின் நச்சுப் பொருள்கள் மற்ற உயிரினங்களுக்குத் தொடர்ச்சியாக எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ள உணவுச் சங்கிலி உதவுகிறது.

VIII.விரிவான விடையளி

Question 1.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் 90

Question 2.
ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
விடை:
வரையறை:
85 dB (டெஸிபல்) அளவுக்கு அதிகமாக மனிதர்கள், தொழிற்சாலை இயந்திரங்கள், இசை, வாகனங்கள், ஒலிபெருக்கி இவற்றால் உருவாக்கப்படும் எந்த ஒலியும், ஒலி மாசுபாடு (அ) இரைச்சல் மாசுபாடு எனப்படும்.
பாதிப்புகள்:
அதிகபட்ச இரைச்சலில் அதிக நேரம் இருப்பது உளவியல் மற்றும் உடல் ரீதியான பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

  • அமைதியான தூக்கம் கெடுகிறது.
  • அமைதியாகப் படிப்பதை, வேலை செய்வதைப் பாதிக்கிறது.
  • அதிக இரைச்சல் செவிப்பறையைத் தாக்கி, கேட்கும் திறனைப் பாதிக்கிறது.
  • உயர் இரத்த அழுத்தம், உயர் மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
  • நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள், பறவைகள், வீட்டுப் பிராணிகள், நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது.
  • கப்பலில் ஏற்படும் இரைச்சலினால் ஆழ்கடல் திமிங்கலங்கள் தங்கள் பாதையிலிருந்து திசை மாறுகின்றன.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

Question 1.
உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
விடை:

  1. புல்வெளியில் காணப்படும் ஒரு உணவுச் சங்கிலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  2. தாவரங்கள் – மான் – புலி
  3. காடுகளில் மான்கள் புற்களை உணவாக எடுத்துக் கொள்கின்றன.
  4. புலிகள் மான்களை வேட்டையாடி உண்கின்றன.
  5. இயற்கையாகவோ அல்லது மனித செயல்களால் மான்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டால் அதன் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
  6. இதனால் புலிகளுக்கு தேவையான உணவுத்தட்டுப்பாடு ஏற்படுகிறது.
  7. இதனால் புலிகள் எண்ணிக்கை குறையலாம்.
  8. மேலும் உணவுக்காக மனிதனையும் தாக்க நேரிடலாம்.

Question 2.
கழிவுகளுக்கும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.
விடை:

  1. ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் டெங்கு காய்ச்சலையும், பெண் அன்பிலிஸ் வகை கொசுக்கள் மலேரியா நோயையும் பரப்புகின்றன.
  2. இவை மனிதனால் உண்டான நீர் தொட்டிகள், மேல் நிலை தொட்டிகள், குளிர்விப்பான் அடியில் உள்ள நீர்தட்டு போன்றவற்றில் பெருகுகின்றன.
  3. மேலும் தூக்கி வீசப்பட்ட தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கிண்ணங்கள், டயர்கள் போன்றவற்றிலும் மழை நீர் தேங்கி இருந்தால் இனப் பெருக்கம் செய்து அதிகளவு பெருக்கமடைகின்றன.
  4. எனவே திறந்த வெளியில் கொட்டப்பட்ட கழிவுகள் கொசுக்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவுவதாலும் தீமை விளைவிக்கும் வைரஸ், பர்கடீரியாக்களை உருவாக்குவதாலும், பரப்புவதாலும் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டக் கூடாது.
  5. இன்றைய கால கட்டத்தில் கழிவுகள் மிக அதிகமாகி ஆபத்தான டெங்கு, பன்றிக்காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற நோய்கள் அதிகம் பரவி தீங்கு விளைவிப்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

X. படத்தைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் 95

Question 1.
இப்படத்திலிருந்து நீ அறியும் நிகழ்வு எது? விளக்குக.
விடை:

  1. மேற்காட்டிய படத்தில் பல வகையான கழிவுகள் ஒன்றாக திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளது.
  2. திறந்த வெளிக் குப்பையில் தீப்பற்றி எரிகிறது.
  3. இதனால் நெகிழிப்பைகள், பைப்புகள், காலணிகள் போன்றவை எரிந்து ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய புகை மற்றும் நச்சுப் பொருள்களைச் சூழ்நிலை மண்டலத்தில் சேர்த்து அதை மாசுப்படுத்தும்.
  4. வேதிப் பொருட்கள் கலந்த இக்காற்றை உயிரினங்கள் சுவாசிக்கின்றன.
  5. குப்பைகள் எரிவதால் உருவாகும் சாம்பல் துகள்கள் நிலத்தை மாசுப்படுத்துகின்றன.
  6. மழை பெய்யும் போது சில அபாயகரமான நச்சுக்கள் நீருடன் கலந்து நிலத்திற்குள் செல்லுகின்றன. நிலத்தடி நீருடனும் கலக்கின்றன.
  7. நெகிழிப்பைகள் மழை நீரை நிலத்திற்கடியில் செல்ல விடாமல் தடுக்கின்றன.
  8. இதனால் சிறிய குட்டைகளில் உள்ள நீரில் நெகிழிக் கிண்ண ங்கள், டயர்கள் போன்றவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா நோய்களைப் பரப்புகின்றன.
  9. இவ்வாறு திறந்த வெளியில் குப்பை பல்வேறு விதங்களில் சூழ்நிலைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Question 2.
குப்பைக் குழிகளில் நிகழும் மாசுபாடுகள் யாவை?
விடை:
1 காற்றுச் சீர்கேடு
2 நில சீர்கேடு
3. நீர் சீர்கேடு

6th Science Guide நமது சுற்றுச்சூழல் Additional Important Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.
மனிதர்களுடைய தலையீடுகளின்றி உருவான சூழ்நிலை மண்டலம்
அ) இயற்கை சூழ்நிலை மண்டலம்
ஆ) செயற்கை சூழ்நிலை மண்டலம்
இ) நீர்வாழ் காட்சியகம்
ஈ) நிலவ வாழ்
விடை:
அ) இயற்கை சூழ்நிலை மண்டலம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 2.
நிலவாழ் சூழ்நிலையைக் கண்டுபிடித்து எழுதுக.
அ) ஏரி
ஆ) மலைப்பகுதிகள்
இ) பாலைனங்கள்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
ஈ) ஆ மற்றும் இ மலைப்பகுதிகள், பாலைவனங்கள்

Question 3.
மனிதர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் சூழ்நிலை மண்டலம் ______
அ) ஏரி
ஆ) ஆறுகள்
இ) செயற்கை சூழ்நிலை மண்டலம்
ஈ) இயற்கை சூழ்நிலை மண்டலம்
விடை:
இ) செயற்கை சூழ்நிலை மண்டலம்

Question 4.
அடிப்படையாக ஆற்றல் உற்பத்தியானது எவற்றில் நிகழ்கிறது?
அ) நீர் வாழ்ப்பூச்சி
ஆ) முயல்
இ) தாவரம்
ஈ) மான்
விடை:
இ) தாவரம்

Question 5.
இறந்த தாவரங்கள், விலங்குகளில் உள்ள கரிமப் பொருட்களை சிதைத்து உயிர் வாழ்பவை.
அ) நுகர்வோர்கள்
ஆ) சிதைப்பவைகள்
இ) அனைத்துண்ணிகள்
ஈ) உற்பத்தியாளர்கள்
விடை:
ஆ) சிதைப்பவைகள்

III. பின்வரும் கூற்று சரியா தவறா எனக்காண்.

Question 1.
சூரியன், காற்று, நீர், தாதுப்பொருள்கள் மற்றும் மண் போன்ற காரணிகளுக்கு உயிரற்ற காரணிகள் என்று பெயர்.
விடை:
சரி

Question 2.
மிருகக் காட்சி சாலை ஒரு இயற்கை சூழ்நிலை மண்டலம்.
விடை:
தவறு. மிருக்காட்சி சாலை ஒரு செயற்கை நில சூழ்நிலை மண்டலம்.

Question 3.
ஒரு சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறுப்பட்ட உயிரினங்களுக் கிடையேயான, பல்வேறு வகையான உணவூட்டத் தொடர்புகளைப் புரிந்து கொள்ள நமக்கு உணவு வலை உதவுகிறது.
விடை:
சரி

Question 4.
இந்தியா ஒவ்வொரு நாளும் 532 மில்லியன் கிலோ திடக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது.
விடை:
சரி

Question 5.
தொழிற்சாலையில் உருவாகும் சில நச்சு வாயுக்கள் மழை நீருடன் இணைந்து அதிக அமிலத் தன்மையுடையதாக மாற்றுகிறது.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் 96

V. சரியான வரிசையில் எழுதி உணவுச் சங்கிலியை உருவாக்கு.

Question 1.
வெட்டுக்கிளி → தவளை → புற்கள் → காகம்
விடை:
புற்கள் → வெட்டுக்கிளி → தவளை → காகம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 2.
மயில் → எலி → தானியம் → பாம்பு
விடை:
தானியம் → எலி → பாம்பு → மயில்

VI. மிகக்குறுகிய விடையளி

Question 1.
செயற்கை நில சூழ்நிலை மண்டலத்திற்கு இரு எ.கா. தருக.
விடை:

  1. நெல் வயல்
  2. தோட்டம்

Question 2.
உற்பத்தியாளர்கள் என்றால் என்ன?
விடை:
தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்து கொள்ளக் கூடிய உயிரினங்களை நாம் உற்பத்தியாளர்கள் என்கிறோம்.

Question 3.
தாவரங்கள் ஒளிச் சேர்க்கை செய்ய என்னென்ன தேவைப்படுகிறது?
விடை:

  1. பச்சையம்
  2. நீர்
  3. கார்பன்டை – ஆக்ஸைடு
  4. சூரிய ஒளி

Question 4.
இரண்டு வகையான திடக்கழிவுகளைக் கூறுக.
விடை:

  1. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள்.
  2. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள்.

Question 5.
இறந்த உயிரினங்கள் எவ்வாறு மாற்றமடைகின்றன?
விடை:

  1. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் இறந்த உயிரினங்களையும், கழிவுகளையும் சிதைத்து எளிய மூலக்கூறுகளாக மண்ணில் சேர்க்கின்றன.
  2. இவை தாவரங்கள் வளர உதவுகின்றன.

VII. விரிவான விடையளி

Question 1.
ஒலி மாசுபாட்டை எவ்வாறு குறைக்கலாம்?
விடை:

  1. மின் கருவிகள் பயன்படாத நிலையில் அணைத்து விடவும்.
  2. தொலைக்காட்சி, மின்னணுக் கருவிகளின் ஒலி அளவைக் குறைத்து வைத்துக் கேட்கலாம்.
  3. வாகனங்களின் ஒலிப்பான்களைத் தேவை ஏற்படும் போது மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும்.
  4. பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம்.
  5. பேசலாம் ஆனால் அதிக சத்தம் போட வேண்டாம்.

Question 2.
நிலத்தில் நிரப்புதல் பற்றி சிறு குறிப்பு தருக.
விடை:

  1. நிலத்தில் காணப்படும் இயற்கைக் குழிகள் அல்லது தோண்டப்பட்ட பள்ளங்களில் கழிவுகளை நிரப்பி அதற்கு மேலாக மண்ணைப் பரப்பும் முறைக்கு நிலத்தில் நிரப்புதல் என்று பெயர்.
  2. இதிலுள்ள மட்கும் கழிவுகள் சில நாட்களுக்கப் பின் மெதுவாகச் சிதைவுற்று உரமாக மாறி விடுகின்றன.
  3. இவ்வகை நிலங்கள் மீது பூங்காக்கள் தோட்டங்களை போன்றவற்றை உருவாக்கலாம்.
  4. பொதுவாக கழிவுகளின் பயன்பாட்டைக் குறைத்தல் நல்லது.
  5. கழிவுகளைப் பிரித்து வைத்து மறு சுழற்சி செய்வதாலும் சுற்றுப்புறம் சுத்தமாகும்.

VIII. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

Question 1.
விலங்குகளின் எலும்புகள் உயிரினச் சிதைவுறுபவையா?
விடை:

  1. பொதுவாக எலும்புகள் மற்ற திசுக்களை விட மெதுவாகவே சிதைக்கப்படுகிறது.
  2. மித வெப்பமான, ஈரமான சூழ்நிலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் எலும்புப் புரதம் சிதைவடைய 10 முதல் 40 ஆண்டு வரை ஆகலாம்.
  3. ஆனால் வறட்சியான சூழ்நிலையில் எலும்பு சிதைவடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 2.
எல்லா வகையான துணிகளும் உயிரினச் சிதைவுறுபவையா?
விடை:

  1. எல்லா வகை துணிகளும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகக் கூடியவை என்று கூற முடியாது.
  2. பலவகை ஆடைகள், செயற்கை பாலியெஸ்டர் போன்ற இழைகளால் உருவாக்கப்பட்டவை.
  3. அடிப்படையாக நெகிழிப் பொருள் தன்மை உடைய இந்த பாலிமர், பருத்தி, சணல், பட்டு போன்ற தாவர, விலங்குப் பொருள்களாலான இயற்கை இழைகள் போல எளிதில் சிதைவுறாது.
  4. மேலும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வேதிச்சாயங்கள் மற்றும் வேதிப்பொருட்களால் சிதைத்தல் தடைபடுகிறது.
  5. பாலியெஸ்டர் 1951 ஆம் ஆண்டு அமெரிக்கன் வேதிக் கம்பென டூ பான்ட் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் 98

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 6 காட்சித் தொடர்பியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter 6 காட்சித் தொடர்பியல் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 3 Chapter 6 காட்சித் தொடர்பியல்

7th Science Guide காட்சித் தொடர்பியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க………… விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.
அ) Ctrl + c
ஆ) Ctrl + V
இ) Ctrl + x
ஈ) Ctrl + A
விடை:
அ) Ctrl + c

Question 2.
தேர்ந்தெடுத்த உரையை வெட்ட …………. விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.
அ) Ctrl + c
ஆ) Ctrl + v
இ) Ctrl + x
ஈ) Ctrl + A
விடை:
இ) Ctrl + x

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 6 காட்சித் தொடர்பியல்

Question 3.
லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்ளன?
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ) 4
விடை:
ஆ) 2

Question 4.
திரையில் ரூலர் தெரியாவிட்டால் ……………… கிளிக் செய்ய வேண்டும்.
அ) View-> Ruler
ஆ) View-> Task
இ) File-> Save
ஈ) Edit-> Paste
விடை:
அ) View-> Ruler

Question 5.
ஆவணத்தைச் சேமிக்க மெனு பயன்படுகிறது.
அ) File-> Open
ஆ) File-> Print
இ) File-> Save
ஈ) File-> Close
விடை:
இ) File -> Save

II. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

Question 1.
உரை ஆவண மென்பொருளின் பயன்கள் யாவை?
விடை:
எழுத்தாற்றல், புத்தகங்கள், அறிக்கைகள், செய்திமடல்கள், கையேடுகள், மற்றும் பிற ஆவணங்களைத் தோற்றுவிப்பதற்கு உரை ஆவணம் (Word செயலி) பயன்படுகிறது.

Question 2.
உரையை தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன?
விடை:

  • உரையை தேர்ந்தெடுக்க சுட்டி அல்லது விசைப்பலகையை பயன்படுத்தலாம்.
  • உரைகளை தேர்ந்தெடுத்த பின்னால் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
  • உரையை நகர்த்தவும், நகல் எடுக்கவும், தடிப்பாக்கவும் முடியும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 6 காட்சித் தொடர்பியல்

Question 3.
ஒரு ஆவணத்தை மூடலாம்?
விடை:
ஒரு ஆவணத்தில் வேலை முடிந்தவுடன் அந்த கோப்பினை மூட விட File – close என்ற கட்டளையை பயன்படுத்தலாம்.

Question 4.
வலது இசைவு என்பது என்ன?
விடை:
Word இல் பத்திகளை வலதுபக்கம் ஒழுங்குபடுத்தலாம், அதனால் வலது பக்கம் சமச்சீராக இருக்கும். இது வலது இசைவு (Right Alignment) எனப்படுகிறது.

Question 5.
ஏற்கனவே உள்ள ஒரு ஆவணத்தை திறப்பது எப்படி?
விடை:
சேமிக்கப்பட்டு மூடப்பட்ட ஒரு ஆவணத்தை திறக்க, பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை செய்யலாம்.

  • மெனு பட்டியில் உள்ள திறந்த கோப்பு (Open) பொத்தானை அழுத்தவும்.
  • File – Open என்ற கட்டளையை பயன்படுத்தவும்
  •  விசைப்பலகையில் Ctrl + O விசைகளை அழுத்தவும்.
    திறந்த உரையாடல் பெட்டி தோன்றும். கோப்பை தேர்ந்தெடுத்து திறக்க (open) பொத்தானை அழுத்தவும்.

7th Science Guide காட்சித் தொடர்பியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உறவுசார் தரவுத்தளத்தை நிர்வகிப்பது என்பது மற்ற பிரபலமான …………. பயன்பாடுகளைப் போன்றதாகும்.
அ) நிகழ்த்துதல்
ஆ) சமன்பாடு
இ) தரவுதளம்
ஈ) அட்டவணைச் செயலி
விடை:
இ) தரவுதளம்

Question 2.
ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க, ………….. விசைகளை பயன்படுத்த வேண்டும்.
அ) Ctrl + O
ஆ) Ctrl + N
இ) Ctrl + C
ஈ) Ctrl + D
விடை:
ஆ) Ctrl + N

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 6 காட்சித் தொடர்பியல்

Question 3.
…………… வசதியைப் பயன்படுத்தி ஓரத்தின் அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்
அ) Format
ஆ) Ruler
இ) Task
ஈ) Edit
விடை:
ஆ) Ruler

Question 4.
எத்தனை வகையான ஒழுங்குபடுத்தல்கள் லிப்ரெ ஆபிஸில் உள்ளன?
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ) 4
விடை:
ஈ) 4

II. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
புதிய ஆவணத்தை உருவாக்கும் முறையைக் கூறுக.
விடை:

  • ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க, பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
  • மெனு பட்டியில் உள்ள புதிய ஆவண பொத்தானை அழுத்தவும்.
  • File – New – Text Document கட்டளையை பயன்படுத்தி ஒரு புதிய ஆவணத்தை திறக்கவும்.
  • விசைப்பலகையில் Ctrl + N விசைகளை அழுத்தவும்.

Question 2.
அச்சு முன்னோட்டம் என்றால் என்ன?
விடை:

  • அச்சு முன்னோட்டம் என்பது ஆவணம் அச்சிடப்படும் போது எவ்வாறு இருக்கும் எனப் பார்ப்பதற்கு ஒரு வழியை வழங்குகிறது.
  • ஒரே நேரத்தில் பல பக்கங்களைப் பார்க்கவும் மற்றும் திரையினைப் பெரிதுபடுத்தவும் முடியும்.
  • கோப்பு (File) மெனுவில் அச்சு முன்னோட்டம் (Print preview) கிளிக் செய்யவும் அல்லது Ctrl + Shift + 0 விசைகளை அழுத்தவும்.

Question 3.
நகர்த்துதல் மற்றும் நகலெடுத்தல் – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 6 காட்சித் தொடர்பியல் 1

Question 4.
சமன்பாடு என்றால் என்ன?
விடை:

  • லிப்ரஆபிஸ் ஃபார்முலா அல்லது சமன்பாடு எட்டரை பயன்படுத்தி சிக்கலான சமன்பாடுகளை உருவாக்க முடியும்.
  • இதில் நிலையான எழுத்துரு தொகுப்பில் இல்லாத குறியீடுகளைக் கூட பயன்படுத்தி சூத்திரங்களை உருவாக்கலாம்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 6 காட்சித் தொடர்பியல்

Question 5.
விசைப்பலகையின் மூலம் உரையை தேர்ந்தெடுக்கும் வழிமுறையை கூறு.
விடை:

  • செருகும் இடத்தை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
  • shift பொத்தானை அழுத்தியவாறு நகர்வு பொத்தான்களை பயன்படுத்தி தேவையான உரையை உயர்த்திக் காட்ட வேண்டும்.
  • தேவையான உரை தேர்வு செய்யப்பட்டபின் shift பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 6 காட்சித் தொடர்பியல் 2

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

7th Science Guide அன்றாட வாழ்வில் விலங்குகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக

Question 1.
…………………….. தினசரி, கால்நடைகளிலிருந்து நமக்குக்கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.
அ) முட்டை
ஆ) பால்
இ) இவை இரண்டும்
ஈ) இவை எதுவும் அல்ல
விடை:
ஆ) பால்

Question 2.
முட்டையில் ………………………. அதிகம் உள்ளது.
அ) புரதம்
ஆ) கார்போ ஹைட்ரேட்
இ) கொழுப்பு
ஈ) அமிலம்
விடை:
அ) புரதம்

Question 3.
வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் எந்த பாகம் ………………….. ஆடைகள் தயாரிக்க உதவுகிறது?
அ) கால்
ஆ) கை
இ) உரோமம்
ஈ) தலை
விடை:
இ) உரோமம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 4.
பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும், பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது …………………
அ) ஹார்ட்டிகல்சர்
ஆ) ஃபுளோரிகல்சர்
இ) அக்ரிகல்சர்
ஈ) செரிகல்சர்
விடை:
ஈ) செரிகல்சர்

Question 5.
பிரித்தெடுப்பவரின் நோய் என்றழைக்கப்படுவது ………………………
அ) ஆஸ்துமா
ஆ) ஆந்தராக்ஸ்
இ) டைஃபாய்டு
ஈ) காலரா
விடை:
ஆ) ஆந்தராக்ஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
புரதம் மற்றும் ……….. பாலில் அதிகம் உள்ளது.
விடை:
கால்சியம்

Question 2.
தேன் கூட்டிலிருந்து …………….. எடுக்கப்படுகிறது.
விடை:
தேன்

Question 3.
ஆந்தராக்ஸ் நோயை உண்டாக்குவது. …………..
விடை:
பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்

Question 4.
இயற்கை இழைகளிலேயே வலிமையான இழை …………………
விடை:
பட்டு

Question 5.
அமைதிப்பட்டு ………….. ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
விடை:
1992

III. சரியா, தவறா? தவறெனில் சரியானதை எழுதவும்

Question 1.
இயற்கையின் மிகப் பெரிய கொடை
விடை:
சரி

Question 2.
குதிரையின் உரோமம் ஓவியம் தீட்டும் தூரிகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
சரி

Question 3.
பட்டுப்பூச்சி கம்பளி இழைகளைத் தருகிறது.
சரியான ஆடு கம்பளி இழைகளைத் தருகிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 4.
அஹிம்சைப் பட்டின் மறுபெயர் மல்பெரி பட்டு
சரியான விடை : அஹிம்சைப் பட்டின் மறுபெயர் அமைதிப்பட்டு.
விடை:
தவறு

Question 5.
ஆந்த்ராக்ஸைக் குணப்படுத்தும் சிறந்த மருந்து பெனிசிலின்
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் 2

V. ஒப்புமை

Question 1.
நீர் : குழாய் :: மின்சாரம் : ………………..
விடை:
மின்கம்பி

Question 2.
தாமிரம் : கடத்தி :: கட்டை : ……………..
விடை:
மின்கடத்தாப்பொருள்

Question 3.
நீளம் : மீட்டர் அளவு :: மின்சாரம்:
விடை:
அம்மீட்டர்

Question 4.
மில்லி அம்பியர் : மைக்ரோ அம்பியர் :: 10-3A :
விடை:
10-6A

VI. மிகக் குறுகிய விடை தருக

Question 1.
பாலிலிருந்து கிடைக்கும் பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
விடை:
1) தயிர்
2) நெய்

Question 2.
விலங்குகளிடமிருந்து கிடைக்கும் இரு வகையான இழைகள் யாவை?
விடை:
1) கம்பளி இழைகள் 2) பட்டு

Question 3.
கத்தரித்தல் என்றால் என்ன?
விடை:

  • ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன.
  • உடலின் சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இது கத்தரித்தல் எனப்படும்.

Question 4.
ஆந்தராக்ஸ் நோயின் அறிகுறிகளை எழுதுக..
விடை:

  • காய்ச்சல்
  • இருமல்
  • மூச்சுவிடுதலில் சிரமம்
  • சில சமயம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு

Question 5.
செரிகல்சர் – வரையறுக்க
விடை:
பட்டுப்பூச்சிகளை வளர்த்து, அதிலிருந்து பட்டு தயாரிக்கப்படுவது, பட்டுப்பூச்சி வளர்ப்பு அல்லது செரிகல்சர் எனப்படும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 6.
நாம் விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்?
விடை:

  • நாம் விலங்குகளின் மீது அக்கறை, அன்பு கொண்டு அவற்றை பாதுகாக்க வேண்டும்.
  • விலங்குகளை நம் குடும்பத்திலுள்ள ஓர் உறுப்பினர் போல் பேணிகாக்க வேண்டும்.

Question 7.
அஹிம்சைப் பட்டைக் கண்டறிந்தவர் யார்?
விடை:
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர் 1992 ஆம் ஆண்டு அஹிம்சைப் பட்டினை கண்டறிந்தார்.

VII. குறுகிய விடை தருக.

Question 1.
கம்பளியின் சிறப்பம்சங்கள் மூன்றினை எழுதுக.
விடை:
கம்பளியின் சிறப்பம்சங்கள் :

  1. வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது மற்றும் இவை கிழிவதில்லை
  2. ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது
  3. கம்பளி, குளிருக்கு எதிராகச் செயல்படுகின்றது. எனவே கம்பளி சிறந்த வெப்பக் கடத்தியாகக் கருதப்படுகிறது.
  4. இது எளிதில் சுருங்காது

Question 2.
பட்டின் ஏதேனும் மூன்று பயன்பாட்டை எழுதுக.
விடை:

  1. பட்டு இயற்கை அழகுடையது, கோடை காலத்தில் இது இதமானதாகவும், குளிர் காலத்தில் வெப்பத்தைத் தரக் கூடியதாகவும் உள்ளது.
  2. நாகரிகமான, நவீன உடைகளை அழகாகத் தயாரிக்கவும், சிறப்பு வாய்ந்த அழகிய பட்டாடைகளை வடிவமைக்கவும் முக்கியமாக சேலைகள் தயாரிக்க இது பயன்படுகிறது.
  3. பட்டு இழையானது, மருத்துவத் துறையில், அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.

Question 3.
கோழிப்பண்ணையில் காணப்படும் பொதுவான நோய்கள் யாவை?
விடை:

  1. சால்மோனெல் லோசிஸ் (வயிற்றுப்போக்கு)
  2. ரானிக் கெட் நோய் (அம்மை நோய்)
  3. ஆஸ்பர்ஜில்லஸ் நோய் (பலவீனம், நலிந்து போதல்)

VIII. விரிவான விடை தருக.

Question 1.
அஹிம்சை பட்டு பற்றி விவரிக்க?
விடை:
அஹிம்சைப் பட்டு :
இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர், 1992 ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களை அழிக்காமல் அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.

கூட்டுப்புழுக்கள், கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும் போது அவற்றைக் கொல்லாமல் அவை உண்டாக்கும் பட்டு இழைகளை எடுக்கலாம் என்றார்.

இந்தப் பட்டு மனித நேயத்தின் அடிப்படையில் பாரம்பரிய முறைகளைத் தாண்டி உருவாக்கப்பட்டதாகும்.

எனவே இது அகிம்சைப்பட்டு அல்லது அமைதிப்பட்டு என்று அழைக்கப்படுகின்றது.

Question 2.
பட்டாலைகளில் ஏற்படும் அபாயங்கள் யாவை?
விடை:

  • பொதுவாகப் பட்டாலைகளில் பணிபரிபவர்கள் நின்று கொண்டே பட்டுநூலை நூற்பதால் அவர்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள்.
  • மேலும் இவர்கள் முதுகு வலியினாலும், பார்வைக் கோளாறுகள் மற்றும் தோல் காயங்களாலும் துன்புறுகிறார்கள்.
  • குறைந்த காற்றோட்டமுள்ள பகுதிகளில் இவர்கள் பணிபுரிவதால் சில சமயம், சுவாச சம்பந்தமான நோய்களான ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் அவதிப்படுகிறார்கள்.
  • கம்பளி ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வெவ்வேறு வேதிப்பொருள்கள் மற்றும் சலவைத்தூள்களையும் பயன்படுத்துவதால் ஒவ்வொமை மற்றும் தோல் நோயால் துன்புறுகிறார்கள்.
  • இறந்த விலங்குகளைக் கையாளுவதால் கம்பளி ஆலை பணியாளர்கள் ஆந்தராக்ஸ் பாக்டீரியா தொற்றால் அவதிப்படுகிறார்கள்.
  • இது போன்ற பாதிப்பு ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படுகிறது. இது பிரித்தெடுப்போர்கள் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
  • விலங்குகளின் உரோமம் மற்றும் அங்கு வாழும் விலங்குகளைக் கையாளுவோர்க்கும் ஆந்தராக்ஸ் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

IX. பின்வரும் வினாக்களுக்குப் பதில் தருக.

கம்பளி ஆலை படம்
Question 1.
கம்பளி ஆலையில், கம்பளி தயாரிக்கப்படும் நிலைகளை எழுதுக.
விடை:
கம்பளியை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவை பின்வருமாறு.

  1. கத்தரித்தல்
  2. தரம் பிரித்தல்
  3. கழுவுதல்
  4. சிக்கெடுத்தல்
  5. நூற்றல்

1. கத்தரித்தல் :
ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன. உடலின் சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இது கத்தரித்தல் எனப்படும்.

2. தரம் பிரித்தல் :
ஒரேஆட்டின்வெவ்வேறுபாகங்களிலிருந்தும் எடுக்கப்படும் உரோமங்கள்வெவ்வேறானவை. இவை பின்னர் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்படும் இது தரம் பிரித்தல் எனப்படும்.

3. கழுவுதல் :
தோலில் இருந்து கத்தரித்த தோலின் உரோமங்கள் உள்ள தூசி, அழுக்கு மற்றும் எண்ணெய் பிசின் போன்றவற்றை நீக்க, அதைச் சலவைத்தூள் கொண்டு நன்கு கழுவ வேண்டும்.

4. சிக்கெடுத்தல் :
காய வைத்த கம்பளி இழைகளைக் கவனத்துடன் பிரிக்க வேண்டும். இதை, ஆலைகளில் உள்ள உருளைகளில் செலுத்தி, பின்னர் மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்ற வேண்டும். இப்படிக் கம்பளியைத் தட்டையான தாளாக மாற்றுவது வலை எனப்படும்.

5. நூற்றல் :
இந்த வலையைக் குறுகிய தனித்த இழையாக மாற்ற, அவற்றை நூற்பு இயந்திரங்களில் அனுப்ப வேண்டும். இந்த நூல், பின் பந்துபோல் உருண்டையாக மாறும் இந்த நூல் பந்து, பின் பின்னல்களாக மாற்றப்பட்டு, ஆடைகள் நெய்ய உதவும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 2.
கம்பளியின் பயன்களை எழுதுக.
விடை:
கம்பளியின் பயன்கள்:

  1. கம்பளி என்பது, பல்வேறு வகையான பொருள்கள் செய்ய உதவும் இழையாகும்.
  2. இந்த இழைகளின்விட்டம் ஆடைகள், வீட்டிற்குத் தேவையான பொருள்கள் செய்ய உதவுகின்றன.
  3. மூன்றில் இரண்டு பங்கு கம்பளி இழைகள், ஸ்வெட்டர், ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன.
  4. கம்பளி இழை மற்றும் இயற்கை அல்லது செயற்கை இழைகளோடு சேரும்போது அவை மடிப்புக்கு எதிர்ப்புத் தன்மை உடைய போர்வைகள் மற்றும் இரைச்சலை உறிஞ்சும் விரிப்புகள் தயாரிக்க உதவுகின்றன.

X. உயர் சிந்தனை வினா

Question 1.
பாராசூட் தயாரிக்க பட்டு இழைகள் உதவுகின்றன ஏன்?
விடை:

  • பட்டு ஓர் வலிமையான இயற்கை இழையாகும்.
  • இவை மெல்லிய எடைகுறைந்த மற்றும் எளிதில் தீப்பிடிக்காத தன்மை கொண்டதினால் இவை அதிகம் பாராசூட் தயாரிப்பில் உதவுகின்றன.

Question 2.
தேன் எல்லாருக்கும் சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது ஏன்? காரணம் தருக.
விடை:

  • தேன் மிகுந்த மருத்துவகுணம் கொண்ட மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகும்.
  • நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மைக் கொண்டது.
  • இது ஒரு இரத்தச் சுத்திகரிப்பானாக செயல்படுகிறது.
  • இது ஒரு ஆண்டி – ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன.

XI. கூற்றும், காரணமும்

Question 1.
கூற்று : விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.
காரணம் : ஆடு, யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றும் முயல் கம்பளி இழைகளைத் தருகின்றன.

அ) கூற்றும், காரணமும் சரி .
ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்றும், காரணமும் தவறு
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி

Question 2.
கூற்று : பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின்
காரணம் : இந்த மருந்துகள் பசு அம்மையைக் குணமாக்கும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் தவறு, காரணமும் தவறு
ஈ) கூற்றும் சரி, காரணமும் சரி
விடை:
அ) கூற்று சரி, காரணம் தவறு பகுதி

7th Science Guide அன்றாட வாழ்வில் விலங்குகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கீழ்கண்ட எந்த ஒன்று சிறந்த மருத்துவ குணம் மற்றும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது.
அ) பால்
ஆ) முட்டை
இ) தேன்
ஈ) இறைச்சி
விடை:
இ) தேன்

Question 2.
கம்பளி என்ற இழை பொதுவாக எந்த குடும்பவிலங்குகளின் மென்முடி கற்றைகளிலிருந்து பெறப்படுகிறது?
அ) லெப்ரோய்டே
ஆ) கேப்ரினே
இ) கேனிடே
ஈ) ஈகுய்டே
விடை:
ஆ) கேப்ரினே

Question 3.
தோலில் இருந்து கத்தரித்த தோலின் உரோமங்கள் அவற்றிலுள்ள நீ அழுக்குகளை எம்முறை மூலம் நீக்கப்படுகிறது?
அ) சிக்கெடுத்தல்
ஆ) நூற்றல்
இ) கத்தரித்தல்
ஈ) கழுவுதல்
விடை:
ஈ) கழுவுதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 4.
ஒரு முதிர்ந்த பட்டுப்பூச்சி சுமார் எத்தனை முட்டைகளை ஒரே தடவையில் இடும்.
அ) 300
ஆ) 150 ம்
இ) 500
ஈ) 1000
விடை:
இ) 500

Question 5.
இளம் தேனீக்களுக்கு எந்த தேனீ உணவூட்டம் அளிக்கிறது?
அ) இராணித் தேனீ
ஆ) ஆண் தேனீ
இ) வேலைக்காரத் தேனீ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) வேலைக்காரத் தேனீ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஆறு கிராம் எடையுள்ள …………………….. உயர்த்தரகப் புதத்தைக் கொண்டுள்ளது
விடை:
முட்டை

Question 2.
இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழியினங்கள்………….. என்று அழைக்கப்படுகிறது
விடை:
பிராய்லர்

Question 3.
………………… ஐ கொதிநீரில் இட்டால், அதிலிருந்து பட்டு இழைகளை மிக எளிதாகச் சிக்கலின்றி பிரித்துவிடலாம்
விடை:
கூட்டுப்புழுக்கள்

Question 4.
பட்டுப்பூச்சிகள் ………………. நாட்கள் மல்பெரி இலைகளை உண்டு வாழும்.
விடை:
35

Question 5.
இந்தியா பட்டு உற்பத்தியில், உலகிலேயே …………………… இடத்தைப் பெறுகிறது.
விடை:
இரண்டாவது

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் 3

IV. சரியா? தவறா? தவறெனில் சரியானதை எழுதவும்

Question 1.
பட்டாலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் பாதிக்கப்படுகின்றனர்.
விடை:
சரி

Question 2.
பட்டுப்புழுக்கள் இரண்டு வருட காலம் மட்டுமே உயிர்வாழும்.
சரியான விடை : பட்டுப்புழுக்கள் இரண்டு மாதம் மட்டுமே உயிர்வாழும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 3.
பட்டிலைகளை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவையாவன கத்தரித்தல்,
சரியான விடை : கம்பளியை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவையாவன கத்தரித்தல், தரம் பிரித்தல், கழுவுதல், சிக்கெடுத்தல், நூற்றல் போன்றவையாகும்.
விடை:
தவறு
தரம் பிரித்தல், கழுவுதல், சிக்கெடுத்தல், நூற்றல் போன்றவையாகும்.

Question 4.
பட்டு இழையானது மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
சரி

Question 5.
எந்த வயதினரும் தினமும் முட்டையை உண்பது நல்லது
விடை:
சரி

V. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாக வரிசைப்படுத்துக.

Question 1.
1. சிக்கெடுத்தல்
2. கழுவுதல்
3. கத்தரித்தல்
4. தரம் பிரித்தல்
5. நூற்றல்
விடை:
1. கத்தரித்தல்
2. தரம்பிரித்தல்
3. கழுவுதல்
4. சிக்கெடுத்தல்
5. நூற்றல்

Question 2.
1. கூட்டுப்புழு
2. லார்வா
3. வளர்ச்சியடைந்த பட்டுப்பூச்சி,
4. வளர்ந்து வரும் பட்டுப்பூச்சி
5. முட்டை
விடை:
1. முட்டை
2. லார்வா
3. கூட்டுப்புழு
4. வளர்ச்சியடைந்த பட்டுப் பூச்சி
5. வளர்ந்து வரும் பட்டுப்பூச்சி

VI. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று : பட்டிழைகள் வலிமைவாய்ந்த செயற்கை இழைகளாகும்.
காரணம் : ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் 500 முட்டைகளை இடம்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

Question 2.
கூற்று : காலையில் புரதம் மிக்க உணவு, அன்றைய தினம் முழுவதும் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
காரணம் : முட்டையானது குறைந்த ஊட்டச்சத்தினையும் அதிக கொழுப்பினையும் கொண்ட உணவாகும்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று சரி காரணம் தவறு

VII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
கோழி வளர்ப்பின் இரண்டு வகைகள் யாவை?
விடை:

  1. முட்டையிடுபவை
  2. பிராய்லர்

Question 2.
ஆட்டினைத்தவிர மற்ற எந்தெந்த பாலூட்டிகளிலிருந்து கம்பளி இழைகள் பெறப்படுகின்றன?
விடை:

  • முயல்
  • யாக்
  • அல்பாகா
  • ஒட்டகம்
  • காட்டெருமை

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 3.
தமிழ்நாட்டில் பட்டு உற்பத்தியில் புகழ்பெற்ற நகரங்கள் எது?
விடை:

  • காஞ்சிபுரம்
  • திருப்புவனம்
  • ஆரணி

Question 4.
எவ்வாறு கோழியிணங்களை அவற்றை தாக்கும் பொதுவான தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்?
விடை:

  • கோழிகள் வாழுமிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • கோழிகளுக்குத் தடுப்பு போட வேண்டும்.

Question 5.
பால் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உயிரினங்கள் சிலவற்றை பட்டியலிடுக.
விடை:

  • பசுமாடுகள்
  • எருமை மாடுகள்
  • ஆடுகள்
  • ஒட்டகம்

VIII. குறுகிய விடையளி

Question 1.
கோழிப் பண்ணை அமைத்தலுக்கு தேவைப்படும் பல்வேறு அடிப்படை காரணிகள் யாவை?
விடை:

  • போதுமான மற்றும் பாதுகாப்பான இடம்
  • தேவையான அளவு தண்ணீர் வசதி
  • காற்றோட்டமான பகுதி
  • தேவையான அளவு உணவு

Question 2.
சிக்கெடுத்தல் என்றால் என்ன?
விடை:

  1. காய வைத்த கம்பளி இழைகளைக் கவனத்துடன் பிரிக்க வேண்டும்.
  2. இதை ஆலைகளில் உள்ள உருளைகளில் செலுத்தி பின்னர் மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்ற வேண்டும்.
  3. இவ்வாறு கம்பளியைத் தட்டையான தாளாக மாற்றுவது வலை எனப்படும்.

Question 3.
பட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் ஆந்தராக்ஸ் நோயின் நோய்க்காரணி பரவுதல் மற்றும் அறிகுறிகளை எழுதுக.
விடை:

  • ஆந்தராக்ஸ் நோய் பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டிரியாவினால் ஏற்படுகிறது.
  • விலங்குகளின் உரோமம் மற்றும் அங்கு வாழும் விலங்குகளைக் கையாளுவோர்க்கும் ஏற்படுகிறது.
  • காய்ச்சல், இருமல், மூச்சுவிடுதலில் சிரமம், வாந்தி எடுத்தல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றன.

Question 4.
பால் நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
விடை:
பாலானது தேநீர், காஃபி, ஐஸ்கிரீம், சாக்கலேட் இனிப்பு மற்றும் இவை போன்ற பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

புரதம் மற்றும் கால்சியம் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலாடைக்கட்டி, பாலேடு, வெண்ணெய், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க உதவுகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 5.
வேலைக்காரத் தேனீயின் பணிகள் யாவை?
விடை:

  • மலர்களில் உள்ள தேனைச் சேகரிப்பது
  • இளந்தேனீக்களை வளர்ப்பது.
  • தேன் கூடு சேதம் அடைந்தால் அதைச் சரி செய்வது.
  • தேன் கூட்டினை பாதுகாப்பது போன்றவையாகும்.

Question 6.
எந்த அமைச்சகம் விலங்குகளைத்துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்க 1960 ஆம் ஆண்டு நான்கு புதிய சட்டங்களைக் கொண்டுள்ளது. இது யாருக்காக உருவாக்கப்பட்டது?
விடை:

  • நமது சுற்றுச்சூழல், காடு மற்றும் தட்ப வெப்பநிலை மற்றும் மாற்ற சார்ந்த அமைச்சகம்.
  • இது வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், விலங்குகளை சந்தையில் விற்பவர்கள், செல்லப் பிராணிகள் மற்றும் மீன் வளர்ப்பவர்கள் போன்றவர்களுக்காக உருவாக்கியது.

IX. விரிவாக விடையளி

Question 1.
பால் மற்றும் இறைச்சி எவ்வாறு மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
பால் :

  • நாம் பயன்படுத்தப்படும் பாலானது பசு, எருமை மாடுகள் மற்றும் ஆடுகளிலிருந்து கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.
  • நம் அன்றாட உணவில் பாலானது தேநீர், காஃபி, ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்பு மற்றும் இவை போன்ற பால் சம்பந்தமான பொருள்களைத் தயாரிக்க உதவுகிறது.
  • புரதம் மற்றும் கால்சியம் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலாடைக்கட்டி, பாலேடு, வெண்ணெய், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க பால் உதவுகிறது.

இறைச்சி :

  • விலங்குகளின் இறைச்சி சிலருக்கு உணவாகப் பயன்படுகிறது.
  • இறைச்சியில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் அது முக்கிய உணவாகப் பயன்படுகிறது.

Question 2.
பட்டின் சிறப்பம்சங்களை வரிசைப்படுத்துக.
விடை:

  • கவர்ச்சியாகவும் மிகவும் மென்மையாக அணிவதற்கு வசதியானது. பல துறைகளில் பயன்படுகிறது.
  • இதை எளிதில் சாயமேற்றலாம்
  • இயற்கை இழைகளிலேயே பட்டு இழை தான் வலிமையான இழையாகும்.
  • இது சூரிய ஒளியை எளிதில் கடத்தும்.

Question 4.
கம்பளி தொழிளாலர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை (அ) தடுக்கும் முறைகளைப் பற்றி எழுதுக.
விடை:

  1. பெனிசிலின் மற்றும் சிங்ரோஃப்ளோக்சாசின் போன்ற சிறந்த மருந்துகள் ஆந்த்ராக்ஸ் நோயைக் குணமாக்க உதவுகின்றன.
  2. விலங்குகளுக்கு அந்தராக்ஸ் தடுப்பூசி போட வேண்டும் மற்றும் ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்த விலங்குகளை இழ்தழி தோண்டி அதில் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்
  3. முதலாளிகள் தங்களின் பணியாளர்களுக்குச் சுத்தமான சுற்றுச்சூழலும் நல்ல காற்றோட்டம் மற்றும் பாதுகாப்பாக்க வேண்டியது அவர்களின் கடமையாகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 4.
தேனில் உள்ள கலப்படத்தை எவ்வாறு அறிவாய்? சோதனையுடன் விளக்குக.
விடை:
தேவையான பொருட்கள் : நீர் மற்றும் தேன்
செய்முறை :
ஒரு குவளையில் நீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு துளி தேனை ஊற்றவும் பின் அதைக் கவனித்துப் பாருங்கள்.

அறிவன :
நீரில் இடப்பட்ட ஒரு துளித் தேன் கரையாமல் பாத்திரத்தின் அடிப்பகுதி வரை சென்றால் அது சுத்தமான தேன் பாத்திரத்தின் அடிப்பகுதியை அடையும் முன்னரே அது கரைந்தால் அது சுத்தமான தேன் இல்லை.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் 4

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

7th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நிமோனியா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து. …………………
அ) ஸ்ட்ரெப்டோமைசின்
ஆ) குளோரோம்பெனிகால்
இ) பென்சிலின்
ஈ) சல்பாகுனிடின்
விடை:
இ) பென்சிலின்

Question 2.
ஆஸ்பிரின் ஒரு ………………………
அ) ஆண்டிபயாடிக்
ஆ) ஆண்டிபைரடிக்
இ) மயக்க மருந்து
ஈ) சைக்கீடெலிக்
விடை:
ஆ) ஆண்டிபைரடிக்

Question 3.
…………………. என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது.
அ) அமிலநீக்கி
ஆ) ஆண்டிபைரடிக்
இ) வலிநிவாரணி
ஈ) ஆண்டிஹிஸ்டமின்
விடை:
அ) அமிலநீக்கி

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 4.
ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் ……………………. என அழைக்கப்படுகிறது.
அ) கொதிநிலை
ஆ) உருகுநிலை
இ) சிக்கலான வெப்பநிலை
ஈ) எரிவெப்பநிலை
விடை:
ஈ) எரிவெப்பநிலை

Question 5.
மெழுகுவத்தியின் சுடரில் வெப்பமான பகுதி எது ……………
அ) நீலம்
ஆ) மஞ்சள்
இ) கருப்பு
ஈ) உள் பகுதி
விடை:
அ) நீலம்

II. வெற்றிடங்களை நிரப்பவும்

Question 1.
பென்சிலின் முதன் முதலில் கண்டுபிடித்தவர்………………….
விடை:
Dr. அலெக்சாண்டர் பிளெமிங்

Question 2.
உலக ORS தினம் ………………..
விடை:
29 ஜூலை

Question 3.
எரிதல் என்பது ஒரு வேதிவினை, இதில் பொருள் …………………. உடன் வினைபுரிகிறது.
விடை:
ஆக்சிஜன்

Question 4.
நீரில் நனைந்த காகிதத்தின் எரிவெப்பநிலை ………….
விடை:
அதிகம்

Question 5.
எண்ணெய்யால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை ………………ஆல்கட்டுப்படுத்த முடியாது
விடை:
நீர்

III. சரியா அல்லது தவறா? தவறு என்றால் சரியான பதிலைக் கொடுக்கவும் 

Question 1.
சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் மருந்துகள் வேலை செய்யும்
சரியான விடை : சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் வேலை செய்யாது
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
வலி நிவாரணி என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்
சரியான விடை : ஆண்டிபைரடிக்குகள் என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்
விடை:
தவறு

Question 3.
அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குகின்றன
சரியான விடை : அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குவதில்லை
விடை:
தவறு

Question 4.
எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியம்
விடை:
சரி

Question 5.
மரம் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் காற்றுமாசுபடுகிறது.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 2

V. ஒப்புமை

Question 1.
சுடரின் உள்மண்ட லம் …………….. சுடரின்
வெளிமண்ட லம் ………………
விடை:
குறைந்த வெப்ப பகுதி, வெப்பமான பகுதி

Question 2.
டிஞ்சர் ……………….
ஹிஸ்டமைன் …………..
விடை:
அன்டிசெப்டிக் ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து

VI. ஓரிரு சொற்களில்

Question 1.
மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ்நோய் …………… (மஞ்சள்காய்ச்சல் / டெங்குகாய்ச்சல்)
விடை:
மஞ்சள் காய்ச்சல்

Question 2.
ORS – ன் விரிவாக்கம் …………………….
விடை:
Oral Re-hydration Solution (வாய்வழி நீரேற்று கரைசல்)

Question 3.
கிருமி நாசினியாகவும் ஆண்டிசெப்டிக் ஆகவும் பயன்படக்கூடிய ஒரு மருந்தின் பெயரைக் குறிப்பிடுக?
விடை:
ஃபீனால்

Question 4.
டெட்டாலின் முக்கிய கூறுகள் யாவை?
விடை:
குளோரோசைலினால் மற்றும் ஆல்பா டெர்பீனியால்

Question 5.
எரிபொருளின் கலோரிஃபிக் மதிப்பின் அலகு என்ன?
விடை:
கிலோ ஜூல்/கிலோகிராம்

Question 6.
எத்தனை வகையான எரிதல் உள்ளது?
விடை:
மூன்று வகையான எரிதல் உள்ளது i) வேகமாக எரிதல் ii) தன்னிச்சையான எரிதல் iii) மெதுவாக எரிதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 7.
நெருப்பை உற்பத்தி செய்வதற்கான அத்தியாவசிய தேவைகள் யாவை?
விடை:
நெருப்பை உற்பத்தி செய்ய தேவையானவை i) எரிபொருள் ii) காற்று (ஆக்சிஜனை வழங்க) iii) வெப்பம் (வெப்பநிலையை உயர்த்த) iv) எரிதல் வெப்பநிலை

VII. குறுகிய விடையளி

Question 1.
மருத்துவர்களைக் கலந்தாலோசிக்காமல் ஏன் மருந்துகள் எடுக்கக்கூடாது?
விடை:

  • குறிப்பிட்ட நோய்க்கான மருந்து எது என்பது நமக்குத் தெரியாது.
  • எடுக்க வேண்டிய மருந்தின் அளவு நமக்குத் தெரியாது.
  • குறிப்பிட்ட மருந்து நமக்கு தீங்கு விளைவிக்குமா என்பது தெரியாது
  • எனவே மருத்துவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் மருந்துகள் எடுக்கக்கூடாது.

Question 2.
கிருமிநாசினிகள் ஆண்டி செப்டிக்லிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 3

Question 3.
எரிதல் வெப்பநிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலை அதன் எரிதல் வெப்பநிலை எனப்படும்.

Question 4.
4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 180000kg என அளவிடப்படுகிறது என்றால், கலோரிஃபிக் மதிப்பு என்ன?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 4

VIII. விரிவாக விடையளி

Question 1.
ஆண்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி பற்றிச் சுருக்கமாக விளக்குங்கள்?
விடை:
ஆண்டிபயாடிக்குகள் :
சில தாவரங்களும், நுண்ணியிரிகளும் மற்ற உயிரினங்களை அழிக்க உதவும் நச்சுதன்மையுள்ள பொருள்களை உற்பத்தி செய்கின்றன. அவை ஆன்டிபயாடிக்குகள் எனப்படுகின்றன.
(எ.கா) பெனிசிலின், குளோரம்பினிகால், டெட்ராசைக்களின்

வலி நிவாரணிகள் :

  • வலி நிவாரணிகள் என்பன நமது உடலிலிருந்து வெளியாகும் வலி குறைக்கும் வேதிப் பொருளாகும்.
  • அவை வெளியேறி வலி என்ற உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.
  • மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டோ அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் அதிக மாற்றம் இல்லாத நிலையில் குறிப்பாக இவ்வகை வலி நீக்கிகள் செயல்படுகிறது.
  • அவை இருவகைப்படும் :
    1. போதைத்தன்மையற்ற வலி நீக்கிகள். (எ.கா) ஆஸ்பிரின்
    2. போதைத்தன்மை வாய்ந்த வலி நீக்கிகள். (எ.கா) கோடீன்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
மெழுகுவத்தி சுடரின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 5

IX. படம் சார்ந்த கேள்வி

Question 1.
அருளும், ஆகாஷும் ஒரு பரிசோதனையைச் செய்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பீக்கரில் தண்ணீரை சூடாக்க வேண்டும். அருள் பீக்கரை மெழுகுவத்திச் சுடரின் மஞ்சள் பகுதியில் திரியின் அருகே வைத்திருந்தார். ஆகாஷ் பீக்கரை வெளிப்புறத்தில் உள்ள சுடரில் வைத்திருந்தார். குறுகிய நேரத்தில் யாருடைய நீர் சூடாகும்?
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 6
விடை:

  • குறுகிய நேரத்தில் ஆகாஷ் வைத்த நீர் சூடாகும்
  • ஏனெனில் வெளிப்புற நீல நிறச்சுடர் அதிக வெப்பமான பகுதி
  • எனவே வெளிப்புறச் சுடரில் வைக்கப்பட்ட நீர் குறுகிய நேரத்தில் சூடாகும்.

7th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ORS கரைசலில் உள்ளது
அ) சோடியம் குளோரைடு
ஆ) குளுக்கோஸ்
இ) பொட்டாசியம் குளோரைடு
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Question 2.
நமது குடலில் சரியான அளவு சோடியம் உள்ள போது ………………….. நிகழ்வின் மூலம் குடல் நீரை உறிஞ்சுகிறது.
அ) நீர் உறிஞ்சுதல்
ஆ) நீர்ப்போக்கு
இ) சவ்வூடு பரவல்
ஈ) எதிர் சவ்வூடு பரவல்
விடை:
இ) சவ்வூடு பரவல்

Question 3.
இரைப்பை நீரில் உள்ளது.
அ) அசிட்டிக் அமிலம்
ஆ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
இ) நைட்ரிக் அமிலம்
ஈ) சல்பியூரிக் அமிலம்
விடை:
ஆ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

Question 4.
சுடரின் ஒளிராத பகுதியின் நிறம்
அ) சிவப்பு
ஆ) மஞ்சள்
இ) நீலம்
ஈ) கருமை
விடை:
இ) நீலம்

Question 5.
பின்வருவனவற்றுள் எது தீயணைப்பானாக பயன்படுகிறது?
அ) H2
ஆ) O2
இ) CO2
ஈ) CH4
விடை:
இ) CO2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ORS என்பதன் பொருள் …………………..
விடை:
வாய்வழி நீரேற்று கரைசல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
பெனிசிலின் …………………. என்ற பூஞ்சையிலிருந்து கண்டறியப்பட்டது
விடை:
பென்சிலியம் நொடெட்டம்

Question 3.
பாரசிட்டமால் ஒரு. …………………
விடை:
ஆண்டிபைரடிக் அல்லது உடல் வெப்பம் தனிப்பி

Question 4.
அனைத்து எரிதல் வினைகளும் …………………. வினைகளாகும்
விடை:
வெப்ப உமிழ்

Question 5.
எல்.பி.ஜி எரிதல் ………………… க்கு எடுத்துக்காட்டு
விடை:
வேகமாக எரிதல்

III. சரியா? தவறா? (தவறெனில் சரியான கூற்றைத் தருக)

Question 1.
தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேற்புறம் பயன்படுத்தப்படும் மருந்து ஆன்டிசெப்டிக் எனப்படும்
விடை:
சரி

Question 2.
செயற்கையான உப்புநீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையும், சோடியம் உப்பையும் உறிஞ்சுகிறது.
விடை:
தவறு – செயற்கையான உப்புநீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையோ, சோடியம் உப்பையோ உறிஞ்ச முடியாது

Question 3.
பாரசிட்டாமால் புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை அதிகரித்து வலி மற்றும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது.
விடை:
தவறு – பாரசிட்டாமால் புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை குறைத்து வலி மற்றும் உடல் வெப்பநிலையை குறைக்கிறது.

Question 4.
ஒரு பொருள் ஆக்சிஜனுடன் வினைபுரியும் எந்த நிகழ்வும் ஆக்சிஜனேற்ற வினை எனப்படும்.
விடை:
சரி

Question 5.
எரிபொருளின் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதி சுடரின் நடுப்பகுதியாகும்.
விடை:
தவறு – எரிபொருளின் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதி சுடரின் உட்புறப்பகுதியாகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 7

V. சரியான வாக்கியத்தில் எழுதுக

Question 1.
அனைத்து ஆன்டிசெப்டிக்குகளும் கிருமி நாசினிகள் அல்ல.
விடை:
அனைத்து கிருமிநாசினிகளும் ஆன்டிசெப்டிக்குகள் அல்ல.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
ஒரு தீயணைப்பான் எரிபொருள் விநியோகத்தை துண்டித்து காற்றின் வெப்பநிலையைக் குறைத்து தீ எரிதலை கட்டுப்படுத்துகிறது.
விடை:
ஒரு தீயணைப்பான் காற்று விநியோகத்தை துண்டித்து, எரிபொருளின் வெப்பநிலையைக் குறைத்து தீ எரிதலை கட்டுப்படுத்துகிறது.

VI. ஒப்புமை தருக.

Question 1.
வயிற்றுப் போக்கு : ORS
…………………. : ஆண்டிபைரடிக்
விடை:
காய்ச்சல்

Question 2.
LPG : திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு
CNG:…………………..
விடை:
அழுத்தப்பட்ட இயற்கை வாயு

VII. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று (A) : அனைத்து எரிதல் வினைகளும் வெப்பம் உறிஞ்சும் வினைகள்
காரணம் (R) : அனைத்து எரிதல் வினைகளிலும் வெப்பம் வெளிப்படுகிறது.

அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் அல்ல.
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
விடை:
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
சரியான கூற்று (A) : அனைத்து எரிதல் வினைகளும் வெப்ப உமிழ் வினைகள்

Question 2.
கூற்று (A) : வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை ORS மீட்டெடுத்து நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றது.
காரணம் (R) : வயிற்றுப் போக்கின் போது, நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரை வெளியேற்றுவதால் உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.

அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் அல்ல.
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்

VIII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
ORS என்றால் என்ன?
விடை:
வாய்வழி நீரேற்றுக் கரைசல் (ORS) என்பது உப்பு, சர்க்கரை மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையாகும்.

Question 2.
அமிலநீக்கிகளுக்கு இரு உதாரணங்கள் தருக.
விடை:
சோடியம் பைகார்பனேட், கால்சியம் கார்பனேட்

Question 3.
ஆண்டிபைரடிக்குகள் என்றால் என்ன?
விடை:
ஆண்டிபைரடிக்குகள் என்பது காய்ச்சலை குறைக்கும் வேதிப் பொருட்களாகும்.

Question 4.
எரியக்கூடிய பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
பெட்ரோல், ஆல்கஹால், எல்.பி.ஜி, சி.என்.ஜி

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 5.
சுடர் என்றால் என்ன?
விடை:
சுடர் என்பது ஒரு வேதி வினை மற்றும் வாயுக்களின் கலவையாகும்.

IX. குறுகிய விடையளி

Question 1.
ORS கரைசலின் பகுதிப் பொருள்கள் யாவை?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 8

Question 2.
அமில நீக்கிகள் என்றால் என்ன? அவற்றின் வினையை எழுது.
விடை:
நமது வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்கும் காரப்பொருட்களே அமிலநீக்கிகள் எனப்படும்.

அமில நீக்கிகள் அமிலத்தன்மையினால் உண்டாகும் வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை குணமடையச் செய்கிறது.
(எ.கா) மெக்னிசியம் ஹைட்ராக்சைடு, அலுமினியம் ஹைட்ராக்சைடு
Mg(OH)2(s) + 2HCl(aq) → MgCl2(aq) + 2H2O(l)

Question 3.
ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.
விடை:
நமது நோய் எதிர்ப்பு மண்டலம் தீங்கான பொருள்களுக்கு எதிராக உருவாக்கும் ஒவ்வாமை பாதிப்பினை நீக்க பயன்படும் வேதிப்பொருள் ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து எனப்படும்.

(எ.கா) டைபீன்ஹைட்ரமின், குளோர்பீனரமைன்

Question 4.
எரிதல் என்றால் என்ன?
விடை:

  • எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆச்சிஜனேற்ற காரணியின் முன்னிலை நிகழ்த்தும் வேதி வினையாகும்.
  • இதில் வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளி வெளியிடப்படும்.
    (எ.கா) CH4 + 2O2 → CO2 + 2H2O + வெப்ப ஆற்றல்

Question 5.
எரியக்கூடிய பொருள்கள் என்றால் என்ன?
விடை:
மிகக் குறைந்த எரி வெப்பநிலையைக் கொண்ட பொருள்கள் எளிதில் தீபற்றக்கூடியவை. இவை எரியக்கூடிய பொருள்கள் எனப்படும்.
(எ.கா) பெட்ரோல், ஆல்க ஹால், எல்.பி.ஜி, சி.என்.ஜி

Question 6.
மெழுகுவர்த்தியின் சுடர் எப்பொழுதும் மேல்நோக்கி இருக்கின்றது ஏன்?
விடை:

  • மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது.
  • சுடரின்மேல் எரியக்கூடிய காற்றின் அடர்த்தியானது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடர்த்தியை விட குறைவாக உள்ளது.
  • எனவே வெப்ப சலனக் கொள்கையின்படி சுடரானது எப்பொழுதும் மேல்நோக்கி இருக்கின்றது.

Question 7.
மெதுவாக எரிதல் என்றால் என்ன?
விடை:
பொருளானது குறைந்த வேகத்தில் எரிதலுக்கு மெதுவாக எரிதல் என்று பெயர் – (எ.கா) சுவாசித்தல்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 8.
ஒரு நல்ல எரிபொருளின் பண்புகள் யாவை?
விடை:

  • எளிதாக கிடைக்க வேண்டும்.
  • குறைந்த விலை கொண்டதாக இருக்க வேண்டும்.
  • எளிதாக எடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும்.
  • மிதமான வேகத்தில் எரிதல் வேண்டும்.
  • அதிகமான வெப்ப ஆற்றலை வழங்க வேண்டும்.
  • விரும்பத்தகாத பொருளை வெளியிடக் கூடாது.
  • சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடாது.

Question 9.
தீயணைப்பானின் பொதுவான வகைகள் எவை?
விடை:

  • காற்று அழுத்த நீர் அணைப்பான்கள்
  • கார்பன்டை ஆக்சைடு அணைப்பான்
  • உலர் ரசாயன தூள் அணைப்பான்கள்

X. விரிவான விடையளி

Question 1.
வாய்வழி நீரேற்று கரைசலின் (ORS) முக்கியத்துவத்தை விளக்கு
விடை:

  • வாய்வழி நீரேற்று கரைசல் என்பது உப்பு, சர்க்கரை மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையாகும்.
  • வயிற்றுப் போக்கின் போது ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை மீட்டெடுத்து, உடலின் நீர்ச்சமநிலையை பாதுகாக்கின்றது.
  • வயிற்றுப் போக்கின்போது நீர்ச்சமநிலை பாதிக்கப்படுவதோடு, சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாது உப்புகளையும் நமது உடல் இழக்கின்றது.
  • இதனை நீர்ப்போக்கு என்கிறோம்.
  • வயிற்றுப்போக்கினால் அல்ல, அதிக நீர்ப்போக்கினால்தான் இறப்பு ஏற்படுகிறது.
  • நமது குடலில் சரியான அளவு சோடியம் இருந்தால்தான் நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் குடலால் உறிஞ்சப்படும்.
  • செயற்கையான உப்பு நீர்க்கரைசலை நமது உடலில் செலுத்தும் போது தண்ணீர் மற்றும் சோடியம் ஆகியவை நேரடியாக இரத்த ஓட்டத்திற்கு மாற்றப்படுகின்றன.
  • இழந்த நீரை நமது உடல் அடைந்து சமநிலை பெறுகிறது.

Question 2.
ஆண்டிபைரடிக்குகள் பற்றி விவரி.
விடை:

  • சாதாரணமாக மனித உடலின் வெப்பநிலை 98.4 முதல் 98.6 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.
  • வெப்பநிலையானது இந்த நிலைக்கு மேலே சென்றால் அது காய்ச்சல் எனப்படும்.
  • காய்ச்சல் வருவதற்கு பொதுவான காரணம் நோய் தொற்றாகும்.
  • நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வளரமுடியாது.
  • எனவே படையெடுக்கும் நோய் கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்றது.
  • நோய் தொற்று ஏற்பட்டவுடன் எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது.
  • இரத்த ஓட்டத்தின் மூலம் இந்த பைரோஜன்கள் மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் ஹைப்போதலாமஸை சென்றடைகின்றன.
  • உடன் ஹைப்போதலாமஸ் புரோஸ்டாகிளான்டின் என்ற வேதிப்பொருளை வெளியிட்டு நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்றது.
  • பொதுவாக குறைந்த அளவு காய்ச்சல் நமக்கு நல்லது, ஏனெனில் இவை நோய்க்கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கிறது.
  • இருப்பினும் உடல் வெப்பநிலை 105°F விட அதிகரிக்கும் போது புரதம் மற்றும் மூளையை தாக்கி நடுக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • நீண்ட நாள் காய்ச்சலானது சில நேரங்களில் மரணத்தைக் கூட உண்டாக்கும்.
  • ஆன்டிபைரடிக்குகள் என்பவை புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை ஒடுக்கி காய்ச்சலை குறைக்கும் வேதிப்பொருட்கள் ஆகும். (எ.கா) பாராசிட்டமால்

Question 3.
மெழுகு சுடரின் அமைப்பினை விவரி.
விடை:
மெழுகு சுடரின் அமைப்பு :
ஒரு மெழுகுவர்த்திச் சுடர் மூன்று முக்கிய மண்டலங்களைக் கொண்டுள்ளது.

  1. சுடரின் வெளிப்புறப் பகுதி :
    • எரிபொருளின் முழுமையான எரிதல் நடைபெறும் பகுதி
    • நீல நிற முடையது
    • அதிக வெப்பமான பகுதியாகும்.
    • சுடரின் ஒளிராத பகுதியாகும்.
  2. சுடரின் நடுப்பகுதி
    • எரிபொருளின் குறைவான எரிதல் நடைபெறும் பகுதி
    • மஞ்சள் நிறமுடையது
    • மீதமான வெப்ப பகுதியாகும்.
    • சுடரின் ஒளிரும் பகுதியாகும்.
  3. சுடரின் உட்புற பகுதி
    • எரி பொருளின் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதி 1
    • கருமை நிறமுடையது – மிகக்குறைந்த வெப்பப்பகுதியாகும்.
      Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 5

Question 4. எரிதலின் வகைகளை விளக்குக.
விடை:

  1. வேகமாக எரிதல் :
    வெளிப்புற வெப்பத்தின் உதவியுடன் பொருளானது வேகமாக எரிந்து வெப்ப ஆற்றலையும், ஒளியையும் உருவாக்குகிறது. (எ.கா) எல்.பி.ஜி எரிதல்
  2. தன்னிச்சையான எரிப்பு :
    வெளிப்புற வெப்பத்தின் உதவியின்றி பொருளானது தன்னிச்சையாக எரிந்து வெப்ப ஆற்றலையும், ஒளியையும் உருவாக்குகிறது. (எ.கா) பாஸ்பரஸ் அறை வெப்பநிலையில் தன்னிச்சையாக எரிதல்
  3. மெதுவாக எரிதல் :
    பொருளானது குறைந்த வேகத்தில் எரிதலுக்கு மெதுவாக எரிதல் என்று பெயர்.
    (எ.கா) சுவாசித்தல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 5.
தீயணைப்பான் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்புரிகிறது?
விடை:

  • காற்று அல்லது எரிபொருளின் வெப்பநிலையை குறைப்பதோடு அல்லாமல் அவற்றின் விநியோகத்தை துண்டித்து தீயை அணைக்கும் கருவி தீயணைப்பான் எனப்படும்.
  • தீயணைப்பான் எரியும் எரிபொருளை குளிர்விக்கின்றது.
  • ஆக்சிஜனை வினைபுரியாமல் தடுத்தல் அல்லது அகற்றுதல் மற்றும் வேதிவினை நிகழாமல் தடுத்தல் போன்ற விளைவுகளைச் செய்கிறது.
  • இதனால் தொடர்ந்து எரியமுடியாமல் தீ தடுக்கப்படுகிறது.
  • தீயணைப்பானின் கைப்பிடி அழுத்தப்படும் போது, அது திறந்து உள்ளறையில் இருந்து உயர் அழுத்த வாயுக்கள் பிரதான சிலிண்டரிலிருந்து ஒரு சிப்பான் குழாய் வழியாக வெளியேறி தீயை கட்டுப்படுத்துகிறது.
  • ஒரு தீயணைப்பான் மருந்து தெளிப்பான் கருவி போல செயல்படுகிறது.

Question 6.
ஐந்து வகையான நெருப்பு வகுப்புகளை விளக்குக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 9

மன வரைபடம் :

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 10

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 1 காந்தவியல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 1 காந்தவியல்

6th Science Guide காந்தவியல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்
அ) மரக்கட்டை
ஆ) ஊசி
இ) அழிப்பான்
ஈ) காகிதத் துண்டு
விடை:
ஆ) ஊசி

Question 2.
மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் _____
அ) இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) சீனர்கள்
ஈ) எகிப்தியர்கள்
விடை:
இ) சீனர்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 3.
தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _____ திசையில்தான் நிற்கும்.
அ) வடக்கு – கிழக்கு
ஆ) தெற்கு – மேற்கு
இ) கிழக்கு – மேற்கு
ஈ) வடக்கு – தெற்கு
விடை:
ஈ) வடக்கு – தெற்கு

Question 4.
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்
அ) பயன்படுத்தப்படுவதால்
ஆ) பதுகாப்பாக வைத்திருப்பதால்
இ) சுத்தியால் தட்டுவதால்
ஈ) சுத்தப்படுத்துவதால்
விடை:
இ) சுத்தியால் தட்டுவதால்

Question 5.
காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி _____ அறிந்து கொள்ளமுடியும்.
அ) வேகத்தை
ஆ) கடந்த தொலைவை
இ) திசையை
ஈ) இயக்கத்தை
விடை:
இ) திசையை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
செயற்கைக்காந்தங்கள் ____, ____, ______ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
விடை:
நீள்கோளம், வட்டம்,
உருளை

Question 2.
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _____ எனப்படுகின்றன.
விடை:
காந்தப்பொருள்கள்

Question 3.
காகிதம் _____ பொருளல்ல.
விடை:
காந்த தன்மை உள்ள

Question 4.
பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய _____ கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.
விடை:
காந்தக்கல்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 5.
ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் _____ துருவங்கள் இருக்கும்.
விடை:
இரு

III. சரியா? தவறா? தவறெனில் சரிசெய்து எழுதுக.

Question 1.
உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு.
விடை:
தவறு.
உருளைவடிவ காந்தத்திற்கு இரு துருவங்கள் உண்டு.

Question 2.
காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.
விடை:
சரி.

Question 3.
காந்தத்தினை இரும்புத்துகள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.
விடை:
தவறு – துருவப்பகுதிகளில் ஒட்டிக் கொள்ளும்.

Question 4.
காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.
விடை:
தவறு – காந்த ஊசியைப் பயன்படுத்தி வடக்கு – தெற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

Question 5.
இரப்பர் ஒரு காந்தப்பொருள்.
விடை:
தவறு – இரப்பர் ஒரு காந்தப் பொருள் அல்ல.

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 80

V. பொருத்தமில்லாததை வட்டமிட்டுக் காரணம் கூறுக.

Question 1.
இரும்பு ஆணி, குண்டூசி, (இரப்பர் குழாய்) , ஊசி.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 81
காரணம் : இரப்பர் குழாய் காந்தப்பொருள் அல்ல.

Question 2.
மின்தூக்கி, தானியங்கிப் படிக்கட்டு, மின்காந்த இரயில், மின்பல்பு
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 82
காரணம் : மின்பல்பில் காந்தம் பயன்படவில்லை.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 3.
கவர்தல், விலக்குதல், திசைகாட்டுதல், ஒளியூட்டுதல்
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 83
காரணம் : ஒளியூட்டுதல் காந்தத்தின் பண்பு அல்ல.

VI. பின்வரும் படங்களில் இரு சட்டக்காந்தங்கள் அருகருகே காட்டப்பட்டுள்ளன. பின்வரும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் என்ன நிகழும் எனக்கூறு. (ஈர்க்கும், விலக்கும், திரும்பி ஓட்டிக் கொள்ளும்)

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 85
விடை :
(a) ஈர்க்கும்
(b) விலக்கும்
(c) ஈர்க்கும்
(d) திரும்பி ஒட்டிக் கொள்ளும்
(e) விலக்கும்
(f) திரும்பி ஒட்டிக் கொள்ளும்

VII. நிரப்புக.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 85.1
விடை :
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 86

VIII. சிறு வினாக்கள் :

Question 1.
காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.
விடை:

  • காந்தத்தின் ஒத்த துருவங்கள் (N – N), (S – S) ஒன்றை ஒன்று விலக்கும்.
  • எதிரெதிர் துருவங்கள் (N – S), (S – N) ஒன்றை ஒன்று ஈர்க்கும்.

Question 2.
பள்ளி ஆய்வுக்கூடத்தில் உள்ள சில காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்திருப்பதாக அவற்றைப் பரிசோதிக்கும் போது தெரியவருகிறது. எந்த காரணங்களால் அவை தமது காந்தத்தன்மையை இழந்திருக்கக்கூடும். மூன்று காரணங்களைக் கூறு.
விடை:
காந்தங்கள் காந்தத் தன்மையை இழக்கக் காரணங்கள்

  1. வெப்பப்படுத்துதல்
  2. உயரத்திலிருந்து கீழே போடுதல்
  3. சுத்தியலால் தட்டுதல்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

IX. நெடுவினா :

Question 1.
உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?
விடை:

  • ஒரு சட்டகாந்தத்தை எடுத்து அதன் ஒரு முனையை இரும்பு ஊசியின் ஒரு முனை யிலிருந்து மறுமுனை வரை தேய்க்க வேண்டும்.
  • தேய்க்கும் போது திசையையோ, காந்த முனையையோ மாற்றாமல் தேய்க்க வேண்டும்.
  • 30 அல்லது 40 முறை இதே போல் தேய்க்க வேண்டும்.
  • பின் இரும்பு ஊசியின் அருகே இரும்புத்துகள்களை கொண்டு சென்றால் அது ஈர்க்கும் இவ்வாறு இரும்பு ஊசி காந்தமாக மாறும்.
  • இல்லையெனில் இதே முறையை பின்பற்றி மீண்டும் செய்ய வேண்டும்.

Question 2.
மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?
விடை:

  • மின்காந்தத் தொடர்வண்டியில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன. மின்சாரம் பாயும் போது மட்டும் இவை காந்தத் தன்மை பெறும்.
  • மின்சாரத்தின் திசைமாறும் போது துருவங்கள் மாறும்.
  • தண்டவாளத்திலும், தொடர்வண்டி அடியிலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்குவதால் வண்டி தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில் நிற்கும்.
  • தண்டவாளத்திலும், தொடர்வண்டி அடியிலுமுள்ள காந்தங்களில் காந்த ஈர்ப்பு விசையும், விலக்கு விசையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டு தொடர்வண்டி முன்னோக்கி செலுத்தப்படுகிறது.
  • மின்னோட்டத்தின் மூலம் இக்காந்தங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • மின்காந்தத் தொடர்வண்டியில் சக்கரமில்லை. எனவே உராய்வு இல்லை. மணிக்கு 300 கி.மீ வேகத்திற்கு மேல் எளிதாக செல்லலாம்.

X. உயர்சிந்தனை வினாக்களுக்கு பதிலளிக்கவும்.

Question 1.
உன்னிடம் துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புத்தூளும் தரப்படுகிறது. இதனைக் கொண்டு
அ. காந்தத்தின் துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்?
ஆ. காந்தத்தின் எந்தப் பகுதியில் அதிக அளவு இரும்புத் தூள்கள் ஒட்டிக் கொள்கின்றன? ஏன்?
விடை:
அ. இரும்புத்தூள்களை காகிகத்தில் எடுத்துக் கொண்டு சட்ட காந்தத்தை அதன் மேல் கிடையாக வைத்து சிறிது நேரம் இரும்புத்தூள்களை புரட்டினால் காந்தத்தின் எந்தப் பகுதிகளில் இரும்புத்துகள்கள் அதிகம் ஒட்டியுள்ளனவோ அப்பகுதி துருவங்கள் ஆகும்.
ஆ. துருவப்பகுதிகளில் அதிக அளவு இரும்புத்தூள்கள் ஒட்டிக்கொள்ளும். காரணம் துருவப்பகுதிகளில் காந்த வலிமை அதிகம்.

Question 2.
படம் – ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகியவை இரு சட்டக்காந்தங்களைக் குறிக்கின்றன. அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனில், சட்டகாந்தம் ‘ஆ’. வின் துருவங்களைக் கண்டறிந்து குறிக்கவும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 90
காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். எனவே படம் ‘ஆ’ வின் துருவங்கள் (S – N)
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 91

Question 3.
ஒரு கண்ணாடி குவளை / முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள் கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?
விடை:
கண்ணாடி முகவையில் நீருக்கு மேல் ஒரு வலிமையான காந்தத்தை வைத்தால் நீருக்குள் உள்ள குண்டூசிகள் எல்லாம் காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும்.

6th Science Guide காந்தவியல் Additional Important Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.
காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்
அ) இரும்பு
ஆ) கோபால்ட்
இ) நிக்கல்
ஈ) இரப்பர்
விடை:
ஈ) இரப்பர்

Question 2.
திசை காட்டும் கருவியை கண்டுபிடித்தவர்கள் யார்?
அ) இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்
இ) சீனர்கள்
ஈ) அமெரிக்கர்கள்
விடை:
இ) சீனர்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 3.
காந்தங்கள் காந்தத்தன்மையை இழக்கக் காரணம்
அ) வெப்பப்படுத்துதல்
ஆ) கீழே போடுதல்
இ) சுத்தியால் தட்டுதல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும் பருவம்

Question 4.
ஒரு சட்டக்காந்தத்தின் N முனையை கட்டி தொங்கவிடப்பட்ட காந்தத்தின் வடமுனைக்கு அருகில் கொண்டு சென்றால் என்ன நிகழும்?
அ) ஈர்க்கும்
ஆ) விலக்கும்
இ) சுழலும்
ஈ) ஏதும் நடக்காது
விடை:
ஆ) விலக்கும்

Question 5.
மின்சார தொடர்வண்டிகளின் அதிகபட்ச வேகம்
அ) 380 கிமீ / மணி
ஆ) 600 கிமீ / மணி
இ) 480 கிமீ / மணி
ஈ) 690 கிமீ / மணி
விடை:
ஆ) 600 கிமீ/மணி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
காந்தங்கள் திசையை அறியப் பயன்படுவதால் ____ என அழைக்கப்படுகின்றன.
விடை:
வழிகாட்டும் கற்கள்

Question 2.
காந்தத்தன்மை உடைய தாது _____
விடை:
மேக்னடைட்

Question 3.
எவர்சில்வர் கரண்டி ஒரு _____ பொருள்.
விடை:
காந்தத் தன்மை அற்ற

Question 4.
குப்பைகளில் இருந்து இரும்பை பிரித்தெடுக்க _____ காந்தங்கள் பயன்படுகின்றன.
விடை:
மின்

Question 5.
காந்தங்களில் ஈர்ப்பு விசை அதிகமுள்ள பகுதி _____ ஆகும்.
விடை:
துருவங்கள்

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 92

IV. சிறுவினாக்கள்

Question 1.
செயற்கை காந்தம் என்றால் என்ன?
விடை:
மனிதனால் தயாரிக்கப்படும் காந்தங்கள் செயற்கை காந்தங்கள் எனப்படும்.
(எ.கா.) சட்டகாந்தம், லாடகாந்தம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 2.
செயற்கை காந்தங்களில் பல வித வடிவங்கள் யாவை?
விடை:

  • சட்டகாந்தம், லாடகாந்தம், வளையகாந்தம், காந்தஊசி ஆகியவை பொதுவாக பயன்படுத்தப்படும் செயற்கை காந்தங்கள் ஆகும்.
  • நீள்கோள வடிவம், வட்டவடிவம் மற்றும். உருளை வடிவிலும் காந்தங்கள் கிடைக்கின்றன.

Question 3.
காந்தத் தன்மை உள்ள பொருள் என்றால் என்ன? எ.கா. தருக.
விடை:
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருட்கள் காந்தத்தன்மை உள்ள பொருட்கள் எனப்படும்.
(எ.கா.) இரும்பு, கோபால்ட், நிக்கல் போன்றவை.

Question 4.
காந்தத்தன்மை அற்ற பொருள் என்றால் என்ன? எ.கா. தருக.
விடை:
காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருட்கள் காந்தத்தன்மை அற்ற பொருட்கள் எனப்படும்.
(எ.கா.) காகிதம், நெகிழி, கண்ணாடி, இரப்பர் முதலியன.

Question 5.
காந்தத்தின் பயன்பாடுகள் யாவை?
விடை:

  • நம் நடைமுறை வாழ்வில் காந்தங்கள் அடங்கிய பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.
  • ஒலிப்பான்கள், சில மின்மோட்டார்கள், சிலவகை தாழ்ப்பாள், பைகள், காந்த திசைகாட்டிகள், பென்சில் பெட்டிகள், அலைபேசி உறைகள், குண்டூசித்தாங்கிகள், காந்தத் தூக்கிகள் ஆகியவற்றில் பயன்படுத்துகிறோம்.

V. நெடுவினாக்கள்

Question 1.
காந்தங்களை பாதுகாக்கும் முறைகளை விளக்குக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 95

  • காந்தங்களை சரியாக பராமரிக்காவிட்டால் அவை காந்தத் தன்மையை இழந்து விடுகின்றன,
  • சட்டகாந்தங்களை பாதுகாக்க, இரு சட்ட காந்தங்களின் எதிரெதிர் முனைகள் ஒன்றையொன்று பார்ப்பது போல் இணையாக வைத்து அவற்றிற்கிடையே மரக்கட்டையை வைக்க வேண்டும்.
  • இரு தேனிரும்பு துண்டுகளை காந்தங்களின் முனைகளுக்கு குறுக்கே வைத்து பாதுகாக்க வேண்டும்.
  • குதிரை லாட வடிவ காந்தத்தின் முனைகளுக்கு குறுக்கே ஒரு தேனிரும்பு துண்டை வைத்து பாதுகாக்க வேண்டும்.

Question 2.
ஒரு சட்ட காந்தத்தைக் கொண்டு எவ்வாறு திசையைக் கண்டறிவாய்?
விடை:

  • சட்டகாந்தத்தின் நடுவில் ஒரு நூலைக் கட்டி அதைத் தொங்க விட வேண்டும்.
  • காந்தம் எந்த திசையில் ஓய்வுநிலைக்கு வருகிறது என பார்க்க வேண்டும்.
    Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 96
  • சட்டகாந்தம் ஓய்வு நிலைக்கு வரும் திசைக்கு இணையாக ஒரு / கோட்டினை வரைய வேண்டும்.
  • எத்தனை முறை சுழற்றினாலும் தொங்கவிடப்பட்ட காந்தம் எப்போதும் வடக்கு தெற்கு திசையிலே ஓய்வுக்கு வரும்.
  • வடக்கே நோக்கும் முனை காந்தத்தின் வடதுருவம் ஆகும். தெற்கே நோக்கும் முனை காந்தத்தின் தென்துருவம் ஆகும்.

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
ஓர் இரும்பு ஆணியின் மீது காந்தத்தை தேய்ப்பதால் அது காந்தத்தன்மையைப் பெறுகிறது. ஆனால் அதே போல் ரப்பர் துண்டின் மீது காந்தத்தை தேய்த்தால் இரப்பர் காந்தமாவதில்லை ஏன்?
விடை:
இரப்பர் காந்தத் தன்மை அற்ற பொருள்.

Question 2.
டிவி, கணினி போன்ற மின்சாதனங்களுக்கு அருகில் காந்தங்களைக் கொண்டு சென்றால் என்ன நிகழும்?
விடை:

  • மின்சாதனங்கள் பாதிக்கப்படும்.
  • காந்தம் காந்தத் தன்மையை இழக்கும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 99

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter 3 பலபடி வேதியியல் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 3 Chapter 3 பலபடி வேதியியல்

7th Science Guide பலபடி வேதியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை ………….. ஆகும்.
அ) நைலான்
ஆ) பாலியஸ்டர்
இ) ரேயான்
ஈ) பஞ்சு
விடை:
அ) நைலான்

Question 2.
வலுவான இழை ……………………… ஆகும்.
அ) ரேயான்
ஆ) நைலான்
இ) அக்ரிலிக்
ஈ) பாலியஸ்டர்
விடை:
ஆ) நைலான்

Question 3.
ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை ……………….
அ) உருகும்
ஆ) எரிதல்
இ) ஒன்றும் ஏற்படுவதில்லை
ஈ) வெடித்தல்
விடை:
ஆ) எரிதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 4.
கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை ……………. ஆகும்.
அ) நைலான்
ஆ) பாலியெஸ்டர்
இ) அக்ரிலிக்
ஈ) PVC
விடை:
இ) அக்ரிலிக்

Question 5.
நெகிழியின் சிறந்த பயன்பாடென்பது ………………….. என்ற பயன்பாட்டில் அறியலாம்.
அ) இரத்தப்பைகள்
ஆ) நெகிழிக் கருவிகள்
இ) நெகிழி உறிஞ்சுக் குழாய்கள்
ஈ) நெகிழி கேரி பைகள்
விடை:
அ) இரத்தப்பைகள்

Question 6.
……………….. என்பது மட்கும் தன்மையற்ற ஒரு பொருள்
அ) காகிதம் .
ஆ) நெகிழி புட்டி
இ) பருத்தி துணி
ஈ) கம்பளி
விடை:
ஆ) நெகிழி புட்டி

Question 7.
PET என்பது …………………….. இன் சுருக்கெழுத்தாகும்.
அ) பாலியெஸ்டர்
ஆ) பாலியெஸ்டர் மற்றும் டெரிலின்
இ) பாலி எத்திலின்டெரிப்தாலேட்
ஈ) பாலித்தின்டெரிலின்
விடை:
இ) பாலி எத்திலின்டெரிப்தாலேட்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………………….. என்பது பாலியெஸ்டர் துணிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
PET

Question 2.
பல்வகை நெகிழிகளை இனம்காண ………… பயன்படுகின்றன.
விடை:
ரெசின் குறியீடு

Question 3.
சிறிய அலகுகளான பல ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் …………… ஆகும்.
விடை:
பலபடி

Question 4.
முழுமையான இயற்கை இழையின் எடுத்துக்காட்டு ……………… ஆகும்.
விடை:
பருத்தி

Question 5.
கக்கூன்களைக் கொதிக்க வைத்துப் பெறும் இயற்கை இழை …………………… என்று பெயர்.
விடை:
பட்டு

III. சரியா தவறா

Question 1.
அதிக அளவிலான நெகிழிகள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 2.
மறுத்தல் (தவிர்த்தல்) என்பது நெகிழியைக் கையாளும் சிறந்த முறையாகும்.
விடை:
சரி

Question 3.
செயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையலறையில் வேலை செய்வது சிறந்ததே.
சரியான விடை : இயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையலறையில் வேலை செய்வது சிறந்தது.
விடை:
தவறு

Question 4.
வீரியம் குறைந்த நெகிழிகள் சிதைந்து மைக்ரோநெகிழிகள் என்ற சிறிய துகள்களாகும்
விடை:
சரி

Question 5.
பருத்தி என்பது ஓர் இயற்கையான பாலிமர் ஆகும்
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 2

V. சரியான வரிசையில் எழுதுக

1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.
2. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணி நேரம் குளிரவைக்கவும்.
3. ஒரு குவனை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.
4. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.
5. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம். .
6. அந்த ஜெல்லினை அலுமனியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.
விடை:
1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.
2. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.
3. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்து விடலாம்.
4. அந்த ஜெல்லினை அலுமினியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.
5. ஒரு குவளை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.
6. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணிநேரம் குளிர வைக்கவும்.

VI. ஒப்புமை தருக.

Question 1.
பருத்தி : இயற்கை : பாலியெஸ்டர் : ………………………
விடை:
செயற்கை

Question 2.
PLA கரண்டி : மட்கும் தன்மை :: நெகிழி ஸ்பூன் : ……………………
விடை:
மட்காத் தன்மை

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 3.
நைலான் : வெப்பத்தால் உருகும் : பட்டு : …………………..
விடை:
எரியும்

VII. வாக்கியம் மற்றும் காரணம்

Question 1.
வாக்கியம் : மண்ணில் புதைக்கப்பட்ட காய்கறித் தோல்கள் இரு வாரங்களில் மறைந்து போகின்றன.
காரணம் : காய்கறித் தோல்கள் மட்கும் தன்மை கொண்டவை
விடை:
வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.

Question 2.
வாக்கியம் : நைலான் ஆடைகள் சிதைந்து மைக்ரோ இழைகளாக மாற அதிக காலமாகும். ஆனால் பருத்தி ஆடைகள் சிதைவடைய ஆறு மாதகாலம் போதுமானது.
காரணம் : நைலான் பெட்ரோலிய வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் மட்கும் தன்மை பெற்றிருப்பதில்லை. பருத்தித் துணி மட்கும் தன்மை கொண்டது.
விடை:
வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.

Question 3.
வாக்கியம் : நெகிழி பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
காரணம் : நெகிழிகள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.
விடை:
வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.

VIII. குறுக்கெழுத்து

இடமிருந்து வலம்
1. செயற்கை கம்பளியாகப் பயன்படும் இழை
2. நீர் பாட்டில்கள் உருவாக்கத் தேவைப்படும் நெகிழி

கீழிருந்து மேல்
3. குறை – செயற்கை இழையான இதற்கு செயற்கைப்பட்டு என்ற பெயரும் உண்டு
4. சிறிய ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சேர்க்கை உருவாக்கும் நீண்ட சங்கிலிப் பொருள்

மேலிருந்து கீழ்
5. கூட்டிலிருந்து பெறப்படும் ஒரு வகையான இயற்கை இழை.
6. பாலியெஸ்டர் என வகைப்படுத்தப்படும் ஓர் செயற்கை இழை
7. கயிறு தயாரிப்பில் பயன்படும் பலபடி
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 3
விடை:
1. அக்ரிலிக்
2. பாலி எத்திலின் டெரிப்தாலேட் (PET)
3. பாலிமர்
4. ரேயான்
5. பட்டு
6. அக்ரிலிக்
7. நைலான்

IX. மிகக் குறுகிய விடை தருக.

Question 1.
பருத்தியை உருவாக்கும் பலபடிகளின் இரசாயனப் பெயர் என்ன?
விடை:
செல்லுலோஸ்

Question 2.
நெகிழிபொருள்கள் வெவ்வேறு பண்புகளையும்குணங்களையும் எங்ஙனம் பெறுகின்றன
விடை:

  • குறைந்த எடை
  • அதிக வலிமை
  • சிக்கலான பல வடிவங்களை எடுக்கும் தன்மை
  • இளகும் தன்மை நீரினை உட்புகவிடாத தன்மை
  • புற ஊதாக் கதிர்களை உட்புக விடாத தன்மை

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 3.
நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பது நல்லதல்ல, ஏன்?
விடை:

  • நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பதால் நச்சுத்தன்மையுள்ள வாயுக்களும் வேதிப் பொருட்களும் உருவாகின்றன.
  • இவை புற்றுநோய் மற்றும் தீங்கு விளைவிக்கும் பல நோய்களை உருவாக்கும்.

Question 4.
நெகிழியினால் செய்த வாளியானது துருப்பிடிப்பதில்லை. ஆனால் இரும்பு வான துருப்பிடித்து விடுகிறது ஏன்?
விடை:

  • இரும்பு வாளி காற்றுடன் வினைபுரிவதால் துருப்பிடிக்கிறது.
  • ஆனால் நெகிழியினால் செய்த வாளியானது காற்றுடன் வினைபுரிவதில்லை, எனவே அது துருப்பிடிப்பதில்லை .

Question 5.
நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது எவ்வாறு சிறந்த முறையாகும்?
விடை:

  • ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய நெகிழிகள் நமது சுற்றுப்புறத்திற்கும் விலங்குகளுக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் தீவிர தாக்கங்களையே ஏற்படுத்த வருகின்றன.
  • நெகிழி சிதைவடைவதும் இல்லை, மண்ணில் மட்குவதும் இல்லை.
  • ‘நெகிழி குப்பைகள் பல காலம் மறையாமல் இருப்பதால், எல்லா இடங்களிலும் நிறைந்து குவிந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.
  • விலங்குகள் நெகிழிப்பைகளில் உள்ள உணவுடன் சேர்த்து நெகிழிப்பைகளையும் தவறுதலாக உண்பதால் அவற்றிற்கு கேடு விளைகிறது.
  • கடல் நீரில் குவியும் நெகிழிகள் சிறிய துண்டுகளாக மைக்ரோ நெகிழிகளாக உடைந்து கடலை மாசுபடுத்துகின்றன.
  • எனவே நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது சிறந்த முறையாகும்.

Question 6.
வெப்பத்தால் இறுகும் நெகிழிப் பொருள்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:

  • பேக்கலைட்
  • மெல்மின்

Question 7.
5R கொள்கை என்பது என்ன?
விடை:

  1. 5R கொள்கை என்பது
  2. Refuse (தவிர்) – Reduce (குறை)
  3. Reuse (மீண்டும் பயன்படுத்து)
  4. Recycle (மறுசுழற்சி செய்)
  5. Recover (மீட்டெடு)

X. சிறுவினா

Question 1.
‘மட்கும் தன்மை வாய்ந்தவை’ என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை:
இயற்கை செயல்முறைகளாலும், பாக்டீரியாக்களினாலும் சிதைவடையும் பொருள்கள் மட்கும் தன்மை வாய்ந்தவை எனப்படும்.

Question 2.
கோடைக் காலங்களில் விளையாடும் பொழுது அணிய ஏதுவான ஆடைவகை யாது? ஏன்?
விடை:

  1. கோடைக் காலங்களில் விளையாடும் பொழுது இயற்கை இழைகளாலான ஆடைவகைகளை அணிய வேண்டும்.
  2. ஏனெனில் இயற்கை இழைகள் அதிக அளவு நீரை உறிஞ்சுகின்றன.
  3. அதிக அளவு காற்றோட்டம் உள்ளதால் உடலை குளிர்ச்சியாகவும், சிரமமின்றியும் வைத்துக்கொள்ள இயற்கை இழைகள் உதவுகின்றன.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 3.
விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் நெகிழியின் தாக்கம் என்ன?
விடை:
நெகிழிப் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை உண்ணும்போது விலங்குகள் தவறுதலாக நெகிழி பைகளையும் சேர்த்தே உண்கின்றன. இது விலங்குகளுக்கு கேடு விளைவிக்கின்றன.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய பாலித்தீன் பைகள் சுற்றுப்புறத்தை குப்பை கூடமாக்கி, வடிகால்களை அடைத்து மாசுபடுத்துகின்றன.

வடிகால்களில் அடைப்பு ஏற்படுவதால் நீர் தேங்கி நிற்கின்றது.

இது கொசுக்களின் இனப் பெருக்கத்திற்கு காரணமாகி மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற வியாதிகளை பரப்பி, வெள்ளம் ஏற்படவும் காரணமாகிறது.

XI. நெடுவினா

Question 1.
செயற்கை இழைகளின் பயன்களையும், வரம்புகளையும் பட்டியலிடுக.
விடை:
செயற்கை இழைகளின் சிறப்புகள் :

  • நிறம் மங்குவது இல்லை . ‘
  • சுருங்குவது இல்லை
  • அதிக வருடங்களுக்கு அதே பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
  • அதிக வலிமை உடையது.
  • அதிக நீட்சித்தன்மை கொண்டது.

செயற்கை இழைகளான் குறைபாடுகள் :

  • வெப்பத்தைத் தாங்கும் திறனற்றவை.
  • எளிதில் தீப்பற்றக் கூடியவை.
  • குறைந்த அளவே நீரை உறிஞ்சுகின்றன.
  • போதுமான காற்றோட்டத்தைத் தருவதில்லை. எனவே இவற்றை அணியும்போது வெப்பமாகவும், சிரமமாகவும் உணர்கிறோம்.

Question 2.
நெகிழிப்பொருள்களை அகற்றும் பாதுகாப்பான முறைகள் சிலவற்றினை பரிந்துரைக்கவும்.
விடை:

  1. நெகிழிப் பொருள்களை அகற்றும் போது மட்கும் தன்மை கொண்டவை, மட்கும் தன் தன்மையற்றவை என பிரித்த பிறகு அப்புறப்படுத்துவது சிறந்தது.
  2. நெகிழிக் குப்பைகளை அகற்ற 5R – கொள்கையை முயற்சிக்க வேண்டும்.
  3. Refuse (தவிர்த்த ல்)
    கடைகளுக்குச் செல்லும்போது பருத்தியினாலான பை அல்லது சணல் பைகளை கொண்டு சென்று கடைக்காரர் தரும் நெகிழிப் பைகளை தவிர்க்கலாம்.
  4. Reduce (குறைத்தல்)
    பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். நெகிழிப் பொருளை வாங்குமுன் அதற்கு பதிலிப் பொருள் உள்ளதா என சரிபார்த்தபின் வாங்கலாம்.
  5. Reuse (மீண்டும் பயன்படுத்துதல்)
    நெகிழியினால் செய்யப்பட்ட பொருள்களை தூக்கியெறியாமல் முடிந்த அளவு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
  6. Recycle (மறுசுழற்சி செய்தல்)
    பயனற்ற பொருள்களில் இருந்து பயனுள்ள புதிய பொருள்களை உற்பத்தி செய்யும் பொருட்டு, ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் நெகிழிக் கழிவுகளை பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யலாம்.
  7. Recover (மீட்டெடுத்தல், மட்குதல் மற்றும் எரித்துச் சாம்பலாக்குதல்)
    நெகிழிப் பொருள்களை சாம்பலாக்கிகளில் இட்டு உயர் வெப்பநிலையில் எரித்து வெளியாகும் வாயுக்களைக் கவனமாக சேகரித்தும், மீதமான நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பலை கவனமாகப் பிரித்தும் மின்சார சக்தி பெறலாம்.
  8. அதிக இது பெரும்பாலும் நெகிழிக் கழிவுகளைக் கையாள்வதற்கு சாதகமான வழியாகக் கருதப்படுகிறது.

XII. உயர் சிந்தனைத் திறன் வினாக்கள்

Question 1.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கியெறிப்படும் நெகிழிகளைத் தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. அரசின் இந்தச் செயல்பாடு எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
விடை:

  • இதனால் சுற்றுச்சூழல், விலங்குகள், நமது ஆரோக்கியத்தின் மீது நெகிழிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
  • நெகிழிகுப்பைகள் சேர்ந்து சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதும், நீர்நிலைகளில் அடைப்பு ஏற்படுவதும் குறைகிறது.
  • இதனால் கொசுக்களால் ஏற்படும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 2.
நெகிழிப் பைகள் சிதைவடைய ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஆகும் என நாம் அறிவோம். ஒரு தலைமுறை மாற 30 ஆண்டுகள் ஆகும். எனில், அந்த நெகிழிப்பை மட்குவதற்கு எத்தனை தலைமுறைகள் தேவைப்படும்.
விடை:
அந்த நெகிழிப்பை மட்குவதற்கு 16 தலைமுறைகள் தேவைப்படும்.

XIII. பதில் எழுதுக.

Question 1.
நாம் பயன்படுத்தும் பொருள்கள் எது?
விடை:
நெகிழி பாட்டில்கள், தட்டுகள், டம்ளர்கள், கொள்கலன்கள், உடுத்தும் ஆடைகள்

Question 2.
இன்று காலை உங்கள் கைகளில் பட்ட முதல் நெகிழிப் பொருள் என்ன?
விடை:
பல் துலக்கும் பிரஷ்

Question 3.
உங்கள் வகுப்பறையை பார்வையிட்டு அதில் காணப்படும் நெகிழியால் ஆன பொருள்களைப் பட்டியலிடுக..
விடை:
நாற்காலி, பேனா, பென்சில் டப்பா, ஸ்கேல்

Question 4.
உங்கள் மதிய உணவை எடுத்துச் செல்வதற்கும், தண்ணீரை எடுத்துச் செல்வதற்கும் நீங்கள் பயன்படுத்தும் பொருள்களின் வகைகள் யாவை?
விடை:

  • மதிய உணவுக்கலன் – பாலி கார்பனேட் (PC)
  • தண்ணீரை எடுத்துச்செல்லும் பாட்டில் – பாலி கார்பனேட் (PC), PET.

Question 5.
உங்களிடம் உள்ள துணிகளின் வகைகளைப் பட்டியலிடுக.
விடை:
நைலான், பாலியெஸ்டர், பருத்தி, பட்டு

XIV. கோடிட்ட இடங்களை நிரப்புக.

i)
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 4
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 5

ii) கொடுக்கப்பட்டுள்ள படத்தினை உற்றுநோக்கி என்ன நடக்கிறது என்பதை விளக்குங்கள்.
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 6
விடை:

  • ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியினாலான பாட்டில்கள், கேன்கள் வடிகாலை அடைத்து நீரை வடியவிடாமல் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது.
  • தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் பெருகி மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன.
  • கழிவு நீர் தேங்குவதால் மழைக்காலங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்குகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

iii) கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் படித்து, அவற்றை வரைபடத்தில் குறிக்கவும், நாடுகளையும் அவை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் அளவையும் ஒப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 7

7th Science Guide பலபடி வேதியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
PVC – ன் ஒற்றைப்படி மூலக்கூறு.
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 8
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 9

Question 2.
புரதங்கள் எவற்றின் பலபடிகள்?
அ) ஆல்கஹால்கள்
ஆ) அமினோ அமிலங்கள்
இ) கார்போஹைட்ரேட்கள்
ஈ) நொதிகள்
விடை:
ஆ) அமினோ

Question 3.
அமிலங்கள் பின்வருவனவற்றுள் எது இயற்கை இழை?
அ) நைலான்
ஆ) ரேயான்
இ) பருத்தி
ஈ) அக்ரிலிக்
விடை:
இ) பருத்தி

Question 4.
பாதுகாப்பான நெகிழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவது
அ) PET
ஆ) HDPE
இ) PVC
ஈ) PS
விடை:
ஆ) HDPE

Question 5.
கால்பந்து ஆடுகளம் அமைக்கப் பயன்படுவது
அ) LDPE
ஆ) HDPE
இ) PVC
ஈ) PET
விடை:
அ) LDPE

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பல எண்ணிக்கையிலான …………………… சக பிணைப்புகளால் இணைந்து உருவாக்கும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பு பலபடி எனப்படும்.
விடை:
ஒற்றைப்படிகள்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 2.
செல்லுலோஸ் ஒரு ……………………… பலபடியாகும்.
விடை:
கார்போஹைட்ரேட்

Question 3.
அக்ரிலிக் ஒரு ……………… இழையாகும்.
விடை:
செயற்கை

Question 4.
PET என்பது. ………………… சுருக்கம்
விடை:
பாலி எத்திலீன் டெரிதாலேட்

Question 5.
பாலித்தீன் ஒரு ……………… பிளாஸ்டிக்
விடை:
வெப்பத்தால் இளகும்

III. சரியா? தவறா? (தவறெனில் சரியான கூற்றைத் தருக)

Question 1.
டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, ஹீமோகுளோபின், நொதிகள் மற்றும் ஹார்மோன்கள் ஆகியன நமது உடலில் காணப்படும் பலபடிகள் ஆகும்.
விடை:
சரி

Question 2.
நண்டுகள் மற்றும் சிலந்திகள் போன்ற பூச்சிகளின் புற எலும்புக்கூடுகளிலும், காளான்கள் போன்ற பூஞ்சைகளின் செல் சுவர்களிலும் காணப்படுவது செல்லுலோஸ் ஆகும்.
விடை:
தவறு – நண்டுகள் மற்றும் சிலந்திகள் போன்ற பூச்சிகளின் புற எலும்புக்கூடுகளிலும், காளான்கள் போன்ற பூஞ்சைகளின் செல் சுவர்களிலும் காணப்படுவது கைட்டின் ஆகும்.

Question 3.
கம்பளி மற்றும் பட்டு ஆகியன செயற்கை இழைகளாகும்.
விடை:
தவறு – கம்பளி மற்றும் பட்டு ஆகியன இயற்கை இழைகளாகும்.

Question 4.
பாலியெஸ்டரை மிக மெல்லிய இழைகளாக இழுத்து, மற்ற நூல்களை நெய்வது போல் நெய்ய முடியும்.
விடை:
சரி

Question 5.
வெப்பத்தால் இறுகும் நெகிழிகள் வெப்பப்படுத்தும்போது வளைகின்றன.
விடை:
தவறு – வெப்பத்தால் இறுகும் நெகிழிகள் வெப்பப்படுத்தும் போது வளைவதில்லை.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 10
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 11

V. சரியான வரிசையில் எழுதவும்

Question 1.
சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் டை சல்பைடு போன்ற வேதிப்பொருட்களுடன் விஸ்கோஸ் கரைந்து செல்லுலோஸ் என்ற திரவத்தினை உருவாக்குகிறது.
விடை:
சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் டை சல்பைடு போன்ற வேதிப் பொருட்களுடன் செல்லுலோஸ் கரைந்து விஸ்கோஸ் என்ற திரவத்தினை உருவாக்குகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 2.
கோடைக் காலங்களில், இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதைவிட செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதே பொருத்தமாக இருக்கும்.
விடை:
கோடைக்காலங்களில், செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதைவிட இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதே பொருத்தமாக இருக்கும்.

VI. ஒப்புமை தருக.

Question 1.
மட்கும் தன்மையற்ற நெகிழி : PVC
மட்கும் தன்மை கொண்ட நெகிழி ………………..
விடை:
PLA

Question 2.
பாலி கார்பனேட் : PU
……………… . PC
விடை:
பாலியூரித்தேன்

VII. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று (A): அக்ரிலிக் மற்றும் நைலான் ஆகியன செயற்கை இழைகளாகும்.
காரணம் (R): அவை பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட மூலப்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் அல்ல.
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.

Question 2.
கூற்று (A): பாலிபுரோபைலீன் உறிஞ்சு குழாய்களை நோய்தொற்று நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
காரணம் (R): அவை உயர்தரமான சுகாதாரத்தை வழங்குவதோடு நோய்கள் பரவும் அபாயத்தையும் முற்றிலும் அகற்றுகின்றன.

அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் அல்ல.
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
விடை:
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
சரியான கூற்று (A): பாலிபுரோபைலீன் உறிஞ்சு குழாய்களை நோய் தொற்று நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தத் தேவையில்லை.

VIII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
பலபடியாக்கல் என்றால் என்ன?
விடை:
பல எண்ணிக்கையிலான ஒற்றைப்படிகள் சகப்பிணைப்புகளால் இணைந்து பலபடி எனப்படும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பை உருவாக்கும் முறை பலபடியாக்கல் எனப்படும்.

Question 2.
செயற்கை பலபடிகள் என்றால் என்ன?
விடை:

  • மனிதனால் உருவாக்கப்பட்ட பலபடிகள் செயற்கை பலபடிகள் எனப்படும்.
  • அவை பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 3.
ரேயான் என்றால் என்ன?
விடை:

  • ரேயான் ஒரு பகுதியான செயற்கை இழை ஆகும்.
  • மரக்கூழில் இருந்து பெறப்பட்ட செல்லுலோசினால் ரேயான் தயாரிக்கப்படுகிறது.

Question 4.
நைலானின் ஒற்றைப்படி மூலக்கூறுகள் யாவை?
விடை:
ஹெக்சா மெத்திலீன் டை அமீன் மற்றும் அடிப்பிக் அமிலம்.

Question 5.
ரெசின் குறியீடு என்றால் என்ன?
விடை:
ஒன்றையொன்று துரத்தும் அம்புக்குறியினாலான முக்கோணத்தின் நடுவில் ஓர் எண்ணும், அதற்குகீழ் அந்த எண்ணிற்குரிய நெகிழியின் பெயரின் சுருக்கெழுத்தும் சேர்ந்து காணப்படுவது ரெசின் குறியீடு எனப்படும்.

IX. குறுகிய விடையளி

Question 1.
இழைகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
விடை:

  • நீண்ட மூலக்கூறுகள் பின்னிப் பிணைந்து நீளமான, சரம் போன்று உருவாக்கப்படும் அமைப்பு இழைகள் எனப்படும்.
  • இயற்கை இழைகள் :
    இவை தாவரங்கள் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்படுகின்றன. (எ.கா) கம்பளி, பட்டு, பருத்தி
  • பகுதியான செயற்கை இழைகள் :
    இயற்கையில் கிடைக்கும் மரக்கூழில் இருந்து மனிதனால் செயற்கையாக பெறப்படுபவை. (எ.கா) ரேயான்.
  • செயற்கை இழைகள் :
    பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு மனிதனால் உருவாக்கப்படுபவை. (எ.கா) நைலான்.

Question 2.
பாலியெஸ்டர் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • பாலியெஸ்டர் ஒரு செயற்கை இழையாகும்.
  • இதனை மிக மெல்லிய இழைகளாக இழுத்து, மற்ற நூல்களை நெய்வது போல், நெய்யவும் முடியும்.
  • இது பாலிகாட், பாலிவுல், டெரிகாட் போன்ற பல பெயர்களால் விற்பனை செய்யப்படுகிறது.
  • பாலிகாட் என்பது பாலியெஸ்டர் மற்றும் பருத்தியின் கலவை.
  • பாலிவுல் என்பது பாலியெஸ்டர் மற்றும் கம்பளியின் கலவை.
  • பாலி எத்திலீன் டெரிதாலேட் (PET) ஒரு பிரபலமான பாலியெஸ்டர் வகையாகும்.
  • PET நீர் மற்றும் சோடா பாட்டில்கள், கலன்கள், படங்கள், இழைகள் தயாரிக்க பயன்படுகிறது.
  • பாலியெஸ்டர் துணிகள் எளிதில் சுருங்குவதில்லை.
  • பாலியெஸ்டர் துணிகளை தோய்ப்பது எளிது.
  • எனவே பலவகையான ஆடைகள் தயாரிப்பில் பாலியெஸ்டர் இழைகள் பயன்படுகின்றன.

Question 3.
அக்ரிலிக் பற்றி எழுதுக.
விடை:

  • நாம் பயன்படுத்தும் ஸ்வெட்டர்கள், சால்வைகள் மற்றும் போர்வைகள் கம்பளியைப் போல் தோற்றமளித்தாலும், அவை இயற்கை கம்பளி இழைகளால் செய்யப்பட்டவை அல்ல.
  • இவை அக்ரிலிக் எனும் செயற்கை இழையால் செய்யப்பட்டவை.
  • இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படும் கம்பளி ஆடைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
  • நெகிழி தயாரிப்பின் போது கிடைக்கும் துணைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் அக்ரிலிக் ஆடைகள் விலை மலிவானவை.
  • நீடித்து உழைக்கும் தன்மை, பல வண்ணங்கள் மற்றும் மலிவான விலை அக்ரிலிக்கின் பரவலான பயன்பாட்டிற்கு பங்களிக்கின்றன.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 4.
வெப்பத்தால் இளகும் நெகிழிகள் மற்றும் இறுகும் நெகிழிகள் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 12

Question 5.
மைக்ரோ நெகிழிகள் என்றால் என்ன? சுற்றுப்புறத்தின் மீது அவை ஏற்படுத்தும் பாதிப்பு யாது?
விடை:
கடலில் குவியும் நெகிழிகள் கடல்நீர், சூரிய ஒளி மற்றும் அலையசைவுகளுக்கு உட்பட்டு, சிறிய துண்டுகளான மைக்ரோ நெகிழிகளாக (நுண்ணிய நெகிழிகள்) உடைகின்றன.

வீட்டில் பயன்படுத்தப்படும் பற்பசை, முகம்கழுவும் கரைசல், உடலைத் தூய்மைப்படுத்தும் தேய்ப்பான்கள் ஆகியவற்றில் காணப்படும் மைக்ரோ நெகிழிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன.

நிலத்தில் தங்கும் மைக்ரோ நெகிழிகள் மற்றும் காற்றில் பரவும் மைக்ரோ நெகிழிகள் ஆகியனவும் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகின்றன.

Question 6.
மட்கும் தன்மை கொண்ட நெகிழி பற்றி எழுது.
விடை:
மட்கும் தன்மை கொண்ட நெகிழியை சோளம், கரும்பு மற்றும் இனிப்புச் சுவை கொண்ட கிழங்குகளின் கூழ்களில் இருந்து பெறமுடியும். (எ.கா) பாலி லாக்டிக் அமிலம் (PLA) அல்லது பாலிலாக்டைடு என்பது உரமாகும் தன்மை கொண்ட உயிர்ப்புத்திறன் கொண்ட வெப்பத்தால் இளகும் நெகிழி ஆகும்.

இதை பயன்படுத்தி உணவுப் பொட்டலக்கலன்கள், குப்பைப்பைகள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சமையல் மற்றும் உணவு மேசை கருவிகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

X. விரிவான விடையளிக்க

Question 1.
நைலான் பற்றி விளக்குக.
விடை:

  • முதன் முதலில் முழுமையாகப் பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை நைலான் ஆகும்.
  • இரண்டாம் உலகப் போரின் போது பாராசூட்டுகள் மற்றும் கயிறு போன்ற பொருள்களை தயாரிக்க நைலான் பயன்படுத்தப்பட்டது.
  • இன்று நாம் பயன்படுத்தும் செயற்கை இழைகளுள் அதிகம் பயன்படும் இழையாக நைலான் விளங்குகிறது.
  • நைலான் இழை வலுவாகவும், நீட்சித்தன்மை கொண்டதாகவும், எடை குறைவாகவும் உள்ளது.
  • பளபளக்கும் தன்மை கொண்டதாகவும், தோய்ப்பதற்கு எளிதானதாகவும் இருப்பதால் ஆடை தொழிற்சாலைகளில் பரவலாக பயன்படுகிறது.
  • காலுறைகள், கயிறுகள், கூடாரங்கள், பல் துலக்கிகள், கார் இருக்கைகளின் பட்டைகள், தலையணை போன்ற பைகள், திரைச்சீலைகள் போன்றவை நைலானால் ஆனவை.
  • ஓர் இரும்புக் கம்பியைக் காட்டிலும் ஒரு நைலான் இழையானது வலிமையானது.
  • ஹெச்சா மெத்திலீன் டை அமீன் மற்றும் அடிப்பிக் அமிலம் ஆகிய ஒற்றைப் படிகளில் இருந்து நைலான் பெறப்படுகிறது.

Question 2.
ரேயான் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயன் யாது?
விடை:

  • ரேயான் ஒரு பகுதியான செயற்கை இழை
  • மரக்கூழில் இருந்து பெறப்பட்ட செல்லுலோசில் இருந்து ரேயான் தயாரிக்கப்படுகிறது.
  • மரம் அல்லது மூங்கிலின் கூழில் இருந்து பெறப்பட்ட செல்லுலோசை பல வேதிப்பொருள்களைச் சேர்த்து திடப்படுத்தினர்.
  • கூழுடன் சோடியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்பட்டு பின் கார்பன்-டை-சல்பைடு சேர்க்கப்படுகிறது.
  • சேர்க்கப்பட்ட வேதிப் பொருட்களுடன் செல்லுலோஸ் கரைந்து விஸ்கோஸ் என்ற திரவத்தினை உருவாக்குகிறது.
  • திரவ விஸ்கோஸினை ஓர் ஸ்பின்னரட்டின் வழியே செலுத்தி, நீர்த்த கந்தக அமிலத்தினுள் செலுத்தும்போது பட்டு போன்ற இழைகள் கிடைக்கின்றன.
  • அந்த இழைகளை சோப்பினால் சுத்தம் செய்து உலர வைத்துப் பெறப்படும் புதிய – இழைகளுக்கு ரேயான் என்று பெயர்.
  • போர்வையாக, தரை விரிப்பாக, டயபர்களாக, காயங்களுக்கு மருந்திடும் வலைத் துணிகளாக, பேண்டேஜ் துணிகளாக ரேயான் பயன்படுகிறது.

Question 3.
கண்ணாடி பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • சிலிக்கான் டை ஆக்சைடுடன் சோடியம் கார்பனேட் சேர்த்து 1700°C உருக்கி கண்ணாடி தயாரிக்கப்படுகிறது.
  • சிலிக்கான் டை ஆக்சைடை உருக்கியதும் சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் அணுக்கள் தமது படிக அமைப்பிலிருந்து சிதையும்.
  • அவற்றை மெதுவாகக் குளிர்விக்கும் போது அணுக்கள் வரிசையாக மீண்டும் தனது படிக அமைப்புக்குத் திரும்பும்.
  • ஆனால் திரவத்தை உடனடியாகக் குளிர்விக்கும்போது சிலிக்காவின் அணுக்கள், தமது இடங்களில் வரிசைப்படுத்தி பழையபடி படிக அமைப்பை பெற இயலாது.
  • எனவே, பழைய அமைப்பில் இல்லாமல் வேறு ஒரு அமைப்பில் அணுக்கள் அமையப் பெறும்.
  • இது போன்ற பொருள்களை உருவமற்றவை என்கிறோம்.
  • கண்ணாடி நீள் வரிசை அமைப்பில் அமைந்தும், கனிமத்தின் பண்பில் இருந்து, கண்ணாடியின் அமைப்பினை ஒத்த உருவத்திலும் இருக்கும்.
  • அந்நிலையில் அது பலபடிகள் எனக் கருதப்படுகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 4.
பலவகை கண்ணாடியினை எவ்வாறு தயாரிக்கலாம்?
விடை:
வர்த்தக அளவில் கண்ணாடித் தயாரிக்கும் போது, மணலுடன், வீணாகிப்போன கண்ணாடி (மறுசுழற்சிக்காக சேகரிக்கப்பட்டது), சோடா சாம்பல் (சோடியம் கார்பனேட்) மற்றும் சுண்ணாம்புக்கல் (கால்சியம் கார்பனேட்) கலந்து உலையில் இட்டு வெப்பப்படுத்த வேண்டும்.

மணலின் உருகு நிலையை குறைக்க சோடா சாம்பல் உதவுகிறது.

இவ்வாறு தயாரான கண்ணாடி நீரில் கரையும். நீரில் கரைவதைத் தடுக்க சுண்ணாம்புக்கல் சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு பெறப்பட்ட கண்ணாடி சோடா-லைம்-சிலிக்கா கண்ணாடி எனப்படும். இதுவே நாம் பயன்படுத்தும் சாதாரணக் கண்ணாடி.

இரும்பு மற்றும் குரோமியம் சார்ந்த வேதிப்பொருள்களை சேர்ப்பதால் பச்சை நிறக் கண்ணாடி உருவாகிறது.

பைரக்ஸ் என்ற முத்திரையுடன் விற்கப்படும் கண்ணாடி வகை, சூளையில் சிதையாத போரோ சிலிக்கேட் கண்ணாடி வகையாகும். உருகிய நிலையிலுள்ள கண்ணாடியுடன் போரான் ஆக்சைடை சேர்ப்பதன் மூலம் இது பெறப்படுகிறது.

உருகு நிலை கண்ணாடியுடன் ஈய ஆக்சைடை சேர்ப்பதால் எளிதில் வெட்டக்கூடிய கண்ணாடி கிடைக்கிறது.

கண்ணாடி மற்றும் நெகிழியினை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குவதால் குண்டு துளைக்காத கண்ணாடி கிடைக்கிறது.

உருகிய கண்ணாடியை மிக விரைவாக குளிர வைக்கும் போது காரில் உள்ள காற்றுக்கவசங்களாக பயன்படும் கடினக் கண்ணாடி தயாரிக்கப்படுகிறது.

உருகிய கண்ணாடியுடன் வெள்ளி அயோடைடைச் சேர்க்கும்போது பெறப்படும் கண்ணாடி சூரிய அல்லது பிற ஒளி படும்போது கருமைநிறக் கண்ணாடியாக மாறுகிறது. இவை லென்சுகள் மற்றும் கண்கவசக் கண்ணாடிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 13
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 14

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 2 நீர் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 2 நீர்

6th Science Guide நீர் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.
உலகில் உள்ள மொத்த நீரில் 97% ____ ஆகும்.
அ) நன்னீ ர்
ஆ) தூயநீர்
இ) உப்புநீர்
ஈ) மாசடைந்த நீர்
விடை:
இ) உப்புநீர்

Question 2.
பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?
அ) ஆவியாதல்
ஆ) ஆவி சுருங்குதல்
இ) மழை பொழிதல்
ஈ) காய்ச்சி வடித்தல்
விடை:
ஈ) காய்ச்சி வடித்தல்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 3.
பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
i) நீராவிப்போக்கு
ii) மழைபொழிதல்
iii) ஆவி சுருங்குதல்
iv) ஆவியாதல்
அ) ii) மற்றும் iii)
ஆ) ii) மற்றும் iv)
இ) i) மற்றும் iv)
ஈ) i) மற்றும் ii)
விடை:
இ) i) மற்றும் iv)

Question 4.
நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?
அ) பனி ஆறுகள்
ஆ) நிலத்தடிநீர்
இ) மற்ற நீர் ஆதாரங்கள்
ஈ) மேற்பரப்பு நீர்
விடை:
ஆ) நிலத்தடிநீர்

Question 5.
வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்
அ) வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.
ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்
இ) வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.
ஈ) அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
விடை:
ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ______ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.
விடை:
3%

Question 2.
நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ____ என்று பெயர்.
விடை:
ஆவியாதல்

Question 3.
நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _____ கட்டப்படுகிறது.
விடை:
அணை

Question 4.
ஆறுகளில் பாயும் நீரின் அளவு ____ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்
விடை:
மழை

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 5.
நீர் சுழற்சியினை _____ என்றும் அழைக்கலாம்.
விடை:
ஹைட்ராலிஜிக்கல்
சுழற்சி

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.
விடை:
தவறு – ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக உள்ளன.

Question 2.
நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.
விடை:
தவறு – கடல் நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் முகத்துவாரம் எனப்படும்.

Question 3.
சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.
விடை:
தவறு – அனைத்து வெப்ப மூலங்களாலும் ஆவியாதல் நிகழும்.

Question 4.
குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.
விடை:
சரி – உறைதலால் புற்களின் மீது பனி உருவாகும்.

Question 5.
கடல்நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.
விடை:
தவறு – கடல்நீரை நேரடியாகப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 80

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.
  2. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.
  3. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.
  4. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது..
  5. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.
  6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.
  7. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.
  8. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

விடை:

  1. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.
  2. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.
  3. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த்திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாகும்.
  4. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிற
  5. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.
  6. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.
  7. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.
  8. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

VI. ஒப்புமை தருக.

Question 1.
மக்கள் தொகைப் பெருக்கம் : நீர் பற்றாக்குறை :: மறு சுழற்சி : _____
விடை:
நீர் மேலாண்மை

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 2.
நிலத்தடிநீர் : ____ : மேற்பரப்பு நீர் : ஏரிகள்
விடை:
கிணறு

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.
விடை:
கடல், ஆறு, ஏரி, குளம், கிணறு, பனிப்பாறை, பனியாறு

Question 2.
நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது?
விடை:
கிணறுகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள், குளங்கள், ஆறுகள், நீர்த்தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவைகளிலிருந்து நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் நீரை பெறுகின்றனர்.

Question 3.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?
விடை:
குளிர்சாதனப் பெட்டியில் குளிரூட்டப்பட்ட முகவை நீரானது அதனைச் சுற்றியுள்ள காற்றை குளிரச் செய்கிறது. அதன்மூலம் காற்றிலுள்ள நீராவி சுருங்கி குவளையின் வெளிப்பகுதியில் நீர்த்திவளைகளை உருவாக்கும். எனவே பாட்டிலைச் சுற்றி குளம் போல் அந்த நீர் தேங்கியிருக்கும்.

Question 4.
அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை. ஏன்?
விடை:

  • மழை பொழிவு நிகழ குளிர்ச்சியான காற்று தேவை.
  • மேகங்களை சுற்றியுள்ள காற்று குளர்ச்சியடையும் போது மட்டுமே மழை பொழிவு நிகழும்.

Question 5.
நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?
விடை:
துருவங்களிலுள்ள பனிப்படிவுகள், பனியாறுகள், பனிப் பாறைகளில் நீர் பனிக்கட்டியாகக் காணப்படுகின்றன.

Question 6.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதியில் உள்ள நீர்வாழ் விலங்குகள் எவ்வாறு உயிர் வாழ்கின்றன?
விடை:

  • ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளில் நீரின் மேற்பரப்பு திண்மநிலையில் பனிப்படலங்களாக உள்ளன.
  • இந்த மிதக்கும் பனிப்படலங்கள் ஒரு பாதுகாப்பு படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம் வெளியேறுவதை தடுக்கிறது.
  • இது நீர்வாழ் உயிர்களுக்கு சாதகமாக அமைந்து அவை உயிர்வாழ உதவுகின்றது.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 7.
மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?
விடை:

  1. மழைநீர் எங்கு பொழிகிறதோ அவ்விடத்திலேயே சேகரித்தல்.
  2. ஓடும் மழை நீரினை சேகரித்தல்.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 85

Question 2.
“நீர் சேமிப்பு ” என்ற தலைப்பில் சில வாசகங்களை உமது நடையில் எழுதவும்.
விடை:
”நீரின்றி அமையாது உலகு”
“மரம் நடுவோம் ! மழை பெறுவோம்!!”
“மழைநீர் சேமிக்க ஊக்கம் பெறு”
“மழைநீரில் உயிர் ஓட்டம் உண்டு”
”மனிதா நீ வாழ உயிர்நீர் ஒன்று”

Question 3.
புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீ ர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.
விடை:

  • புவிப்பரப்பில் 71% தண்ணீ ர் இருந்தாலும் நன்னீரின் அளவு 3% மட்டுமே.
  • உயிரினங்கள் நன்னீரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • நன்னீரை பயன்படுத்தும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
  • எனவே நீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமே.

Question 4.
கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்தாமல் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிற்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.
விடை:

  • கழிவுநீரை சமன்படுத்தாமல் ஆறுகளிலோ, கடலிலோ வெளி யேற்றக்கூடாது.
  • ஏனெனில் அவை ஆறு, கடல் ஆகிய நீர் ஆதாரங்களை மாசு படுத்தும்.
  • எனவே அதில் உயிரினங்கள் வாழ முடியாது. மேலும் அந்நீரை பயன்படுத்த முடியாது.

Question 5.
இந்தியாவில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களை தெளிவுப்படுத்தவும்.
விடை:

  1. மக்கள் தொகை பெருக்கம்
  2. சீரான மழை பொழிவின்மை
  3. நிலத்தடி நீர்மட்டம் குறைதல்
  4. நீர் மாசுபடுதல்
  5. நீரை கவனக்குறைவாக கையாளுதல்

IX. விரிவான விடையளி

Question 1.
குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும்.
விடை:
குடிநீர் என்பது குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் தேவைப்படும் சுத்தமான பாதுகாப்பான நீராகும்.
பண்புகள் :

  • அமில, காரப்பண்பு pH மதிப்பு சரியாக இருக்க வேண்டும்.
  • பாக்டீரியா முதலிய தொற்று இருக்கக்கூடாது.
  • குடிநீர் சுத்தமானதாக, ஒளி ஊடுருவக்கூடியதாகவும், நிறமற்றதாகவும் இருக்க வேண்டும்.
  • குடிநீரில் இயற்கையான கனிமங்கள், மினரல்ஸ் இருக்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 2.
இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.
விடை:

  • இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திர சிங் ஆவார்.
  • இவர் மழைநீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் 350 கிராமங்களில் 4500 தடுப்பணைகளையும், தண்ணீர் சேமிப்பு குளங்களையும் கட்டினார்.
  • நீர்வளத்தை இழந்து மடிந்து கொண்டிருந்த ஆறுகள் இவர் முயற்சியால் புத்துயிர் பெற்றன.
  • இவர் பெற்ற விருதுகள்
  • ராமன் மகசேசே விருது
  • ஜம்னலால் பஜாஜ் விருது
  • தண்ணீருக்கான நோபல் பரிசான ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது முதலியன.
  • இவர் இந்தியாவின் “ஜல் புருஷ்’ (தண்ணீ ர் மனிதர்) என்று அழைக்கப்படுகிறார்.

Question 3.
மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.
விடை:

  • மழைநீரை நேரடியாக சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல் மழைநீர் சேகரிப்பு எனப்படும்.
    வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகள்

    1. மழை பொழிகிற இடத்தில் சேகரித்தல் :
      (எ.கா.) கட்டிடங்களின் மேல்தளத்திலிருந்து வரும் மழைநீரை சேகரித்தல்.
    2. ஓடும் மழை நீரை சேகரித்தல் :
      (எ. கா.) மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்தல்.

X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

Question 1.
ஒரு நிலப்பகுதியில் ஏரியோ, குளமோ காணப்படவில்லை. அப்பகுதியில் மேகங்கள் உருவாதல் நிகழுமா?
விடை:
மேகங்கள் உருவாகும். ஏனெனில் மரங்கள் இருந்தால் கூட நீராவிப்போக்கு மூலம் நீராவி மேலே சென்று மேகமாக மாறும்.

Question 2.
புவியில் 3% மட்டுமே நன்னீர் உள்ளது. அதனை அதிகப்படுத்த முடியாது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் நன்னீரினை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம்?
விடை:

  • நீரினை கவனமாகவும், குறைந்த அளவும் பயன்படுத்த வேண்டும்.
  • நீர் நிலைகளில் கழிவு நீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டும்.
  • மழைநீரை சேமித்து நிலத்தடிநீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும்.

XI. குறுக்கெழுத்து.

மேலிருந்து கீழ் :

Question 1.
நீரைச் சேமிக்கும் ஒரு முறை.
விடை:
மறுசுழற்சி

Question 2.
கடல்நீரில் இருந்து நீரைப் பெறும் முறை
விடை:
ஆவியாதல்

Question 6.
அணைகளில் தேங்கியுள்ள நீர் _____ தயாரிக்கப் பயன்படுகிறது.
விடை:
மின்சாரம்
இடமிருந்து வலம் :

Question 3.
இயற்கையில் கிடைக்கும் மிகப்பெரிய அளவிலான உவர்ப்பு நீர் _____ ஆகும்.
விடை:
கடல்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 4.
வெயில் காலங்களில் உடலிலிருந்து அதிகளவில் நீர் ____ ஆக வெளியேறும்.
விடை:
வியர்வை

Question 5.
தாவரங்களில் _____ நடைபெற்று, நீர் சுழற்சியில் பங்குபெறுகிறது.
விடை:
நீராவிபோக்கு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 90
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 91

XII.
1) வரைபடத்தினை உற்றுநோக்கி பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ) மீனில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ?
ஆ) எந்த உணவுப்பொருள் தன்னகத்தே அதிகளவு நீரினைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடவும்.
இ) எந்த உணவுப் பொருள் தன்னகத்தே குறைந்த அளவு நீரினைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடவும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 92
ஈ) மனித உடலில் சதவீத அளவு நீர் உள்ளது.
உ) நீர்ப்போக்கு ஏற்பட்ட காலங்களில் ஒருவர் வரைபடத்தில் காணப்படும் எந்த உணவுப் பொருளை எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடவும்.
விடை:
அ. 70 %
ஆ. தர்பூசணி
இ. மீன்
ஈ. 60 %
உ. தர்பூசணி

Question 2.
பின்வரும் தமிழ்நாடு வரைபடத்தில் ஆண்டு சராசரி மழைபொழிவு குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை உற்றுநோக்கி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ) தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் ஆண்டு மழைபொழிவு குறைவான அளவு உள்ளது எனக் கண்டறிந்து எழுதவும்?
ஆ) தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் ஆண்டு மழைபொழிவு மிதமான அளவு உள்ளது எனக் கண்டறிந்து எழுதவும்.
இ) தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில் அதிகளவு ஆண்டு மழைபொழிவினைப் பெறும் மாவட்டங்கள் எவை?
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 95
விடை:
அ. தமிழ்நாட்டின் ஆண்டு மழைப்பொழிவு குறைவான மண்டலம் கொங்கு மண்டலம் – குறைந்த கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி மிதமான குறைந்த
ஆ. தமிழ்நாட்டில் மிதமான அளவு ஆண்டு மழைப்பொழிவு பெறும் மாவட்டங்கள் – மதுரை, திண்டுக்கல், விருதுநகர், அதிகம் சிவகங்கை , சேலம், தேனி, வேலூர்
இ. தமிழ்நாட்டில் அதிகளவு ஆண்டு மழைப்பொழிவினைப் பெறும் மாவட்டங்கள் மழைப்பொழிவு விவரம் – கன்னியாகுமரி, கடலூர், திருவாரூர், நாகை,

6th Science Guide நீர் Additional Important Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :

Question 1.
புவியில் காணப்படும் நீரின் அளவினை 100% எனக் கொண்டால் நமக்கு கிடைக்கும் நன்னீரின் அளவு.
அ) 97%
ஆ) 93%
இ) 3%
ஈ) 0.3%
விடை:
இ) 3%

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 2.
வளிமண்டல அழுத்தத்தில் நீர் பனிக்கட்டியாகும் உறைநிலை வெப்பநிலை ____
அ) 100° C
ஆ) 0°C
இ) 0.10° C
ஈ) 10° C
விடை:
ஆ) 0° C

Question 3.
கீழ்க்கண்டவற்றுள் எது நிலத்தடி நீர் ஆதாரம் அல்ல?
அ) அடிகுழாய்
ஆ) நீருற்று
இ) சதுப்பு நில நீர்
ஈ) கிணறு
விடை:
இ) சதுப்பு நில நீர்

Question 4.
நாள் ஒன்றிற்கு மனிதன் குடிக்க வேண்டிய குடிநீரின் அளவு லிட்டர்
அ) 2 – 3 லி
ஆ) 3 – 4 லி
இ) 4 – 5 லி
ஈ) 1 – 2 லி
விடை:
அ) 2 – 3 லி

Question 5.
நீர்நிலைகள் கடலை சந்திக்கும் இடம் _____
அ) சதுப்பு நிலம்
ஆ) முகத்துவாரம்
இ) ஏரி
ஈ) பனிப்பாறைகள்
விடை:
ஆ) முகத்துவாரம்

II. சரியா ? தவறா ? எனக் கூறுக.

Question 1.
மொத்த மேற்பரப்பு நன்னீரில் அதிகம் காணப்படுவது ஏரிகள்.
விடை:
சரி

Question 2.
கடல்நீரில் உப்பு அதிகமாக இருக்கக் காரணம் எரிமலைகள் கடலுக்கடியில் கடல்நீருடன் உப்பை சேர்ப்பது.
விடை:
சரி

Question 3.
நீர் ஒளிபுகும் தன்மை அற்ற வேதிப்பொருள்.
விடை:
தவறு

Question 4.
ஆறு, ஏரிகளில் நீராவிப்போக்கு நடைபெறுகிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 5.
குடிநீரில் தொற்று நீக்க நைட்ரஜன் பயன்படுகிறது.
விடை:
தவறு

III. பொருத்துக.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 96

IV. ஒப்புமை தருக.

Question 1.
மழைப்பொழிவின்மை : நீர் பற்றாக்குறை :: காடுகளை பாதுகாத்தல் : ____
விடை:
நீர் மேலாண்மை

Question 2.
உறைந்த நீர் : பனியாறு :: மேற்பரப்பு நீர் : _____
விடை:
ஆறு

Question 3.
ஆவியாதல் : கடல் :: ____ : தாவரங்கள்
விடை:
நீராவிப்போக்கு

Question 4.
நீர் வடிகட்டுதல் : மணல் :: _____ : அம்மோனியா
விடை:
தொற்று நீக்குதல்

Question 5.
திண்மநிலை : ____ :: வாயுநிலை : நீராவி
விடை:
பனிக்கட்டி

V. மிகக்குறுகிய விடையளி

Question 1.
நீரின் இயைபு யாது?
விடை:
நீர் என்பது ஒளிபுகும் தன்மை கொண்ட சுவையற்ற, மணமற்ற மற்றும் நிறமற்ற ஒரு வேதிப்பொருளாகும்.

Question 2.
நீர் மூலக்கூறு எவ்வாறு உருவாகிறது? நீரின் மூலக்கூறு வாய்பாடு என்ன?
விடை:
இரு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் இணைந்து நீர் மூலக்கூறு உருவாகிறது.
நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு H2O

Question 3.
உப்புநீர் என்றால் என்ன?
விடை:
அதிக அளவு கரைபொருள் கலந்துள்ள நீர் உப்பு நீர் எனப்படும். இந்த நீரை நாம் பயன்படுத்தவோ அல்லது பருகவோ இயலாது.

Question 4.
நீர் சுழற்சியின் மூன்று நிலைகள் யாவை?
விடை:
ஆவியாதல், சுருங்குதல் மற்றும் மழை பொழிதல்

Question 5.
நீராவிப்போக்கு என்றால் என்ன?
விடை:
தாவரங்களின் இலைத்துளைகளின் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவது நீராவிப்போக்கு எனப்படும்.

VI. விரிவான விடையளி

Question 1.
நீர் சுழற்சி என்றால் என்ன? அதன் நிலைகளை விவரி.
விடை:

  • சூரிய வெப்பத்தினால் நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்கு சென்று மேகமாக மாறுகிறது.
  • மேகங்களில் உள்ள நீர் குளிர்ந்து புவிக்கு மீண்டும் மழை அல்லது பனி வடிவில் தூய்மையாக வருகிறது.
  • இதுவே நீர் சுழற்சி எனப்படும். இது ஹைட்ராலீஜிக்கல் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. –
    1. ஆவியாதல் :
      கடல், குளம், ஆறுகளில் காணப்படும் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகின்றது.
    2. ஆவி சுருங்குதல் :
      நீராவி காற்றில் மேலே செல்ல செல்ல குளிர்ச்சியடைந்து நுண்ணிய நீர்த்திவலைகளாக மாறி மேகங்களை உருவாக்குகின்றன.
    3. மழை பொழிதல் :
      நுண்ணிய நீர்த்திவலைகள் மோதி பெரிய நீர்த்திவலையாக மாறுகிறது. மேகங்களை சுற்றியுள்ள காற்று குளிர்ச்சியடையும் போது மழை (அ) பனியாக புவியை வந்தடைகிறது.

Question 2.
நீரைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை விளக்குக.
விடை:
1. நீர் மேலாண்மை :
நீர் மேலாண்மை பின்வரும் காரணிகளைக் கொண்டுள்ளது.

  1. மக்களிடையே கழிவு நீரை நீர்நிலைகளில் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி வழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  2. நீரை மறுசுழற்சி செய்தல்
  3. உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைத்து நீர் மாசுபாட்டை குறைத்தல்
  4. நவீன நீர்ப்பாசன முறைகளான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன முறைகளை பயன்படுத்தி நீரை சிக்கனமாக பயன்படுத்துதல்

2. மழைநீர் சேமிப்பு :
மழைநீரை நேரடியாக சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல் மழைநீர் சேமிப்பு எனப்படும்.

  1. மழை பொழியுமிடத்தில் சேகரித்தல் : கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து வரும் மழை நீரை சேகரித்தல்
  2. ஓடும் மழைநீரை சேகரித்தல் :
    மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்தல்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 98

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter2 அண்டம் மற்றும் விண்வெளி Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

7th Science Guide அண்டம் மற்றும் விண்வெளி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர ………….. நாட்களாகும்.
அ) 25
ஆ) 26
இ) 27
ஈ) 28
விடை:
இ) 27

Question 2.
இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்தித்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழிந்து நிலவானது ……….. நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்.
அ) பரணி
ஆ) கார்த்திகை
இ) ரோஹிணி
ஈ) அஸ்வினி
விடை:
ஈ) அஸ்வினி

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 3.
…………….. தொலை நோக்கியைக் கண்டறிந்தார்.
அ) ஹான் லிப்பெர்ஷே
ஆ) கலிலியோ
இ) நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ்
ஈ) தாலமி
விடை:
அ) ஹான் லிப்பெர்ஷே

Question 4.
அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு………………… என்று பெயர்.
அ) நீள்வட்ட விண்மீன் திரள்
ஆ) ஒழுங்கற்ற விண்மீன் திரள்
இ) குழுக்கள்
ஈ) சுருள் விண்மீன் திரள்
விடை:
ஈ) சுருள் விண்மீன் திரள்

Question 5.
………….. துணைக்கோளை நிறுவியவுடன் ISRO4 டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது.
அ) GSAT-13
ஆ) GSAT- 14
இ) GSAT-17
ஈ ) GSAT- 19
விடை:
ஈ) GSAT- 19

II. கோடிட்ட இடத்தை நிரப்பவும்

Question 1.
வளர்பிறை என்பது ……………………
விடை:
வளர்தல் அல்லது வெளிச்சத்தில் விரிவடைதல்

Question 2.
சூரியமையக் கொள்கையை முன் மொழிந்தவர் …………………..
விடை:
நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ்

Question 3.
அண்டத்தின் ஆதியைக் குறித்துக் கூறும் மாதிரி ……… ஆகும்.
விடை:
பெரு வெடிப்பு கோட்பாடு

Question 4.
ஆகாயத்தின் பெரும் பகுதியை அடக்கியுள்ள விண்மீன் மண்டலம் ………………… ஆகும்
விடை:
உர்சா மேஜர்

Question 5.
இந்தியா ஏவிய முதல் ஏவுகணை …………… ஆகும்.
விடை:
ஆர்யபட்டா

III. சரியா – தவறா. தவறெனில் காரணம் கூறவும்

Question 1.
முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு மேற்கில் தோன்றும்
சரியான விடை: முழு நிலவு நாளில் சூரியன் மேற்கில் மறையும் அதே நேரத்தில் நிலவு கிழக்கில் உதிக்கிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
நிலவானது பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலைக்கு பிறை நிலவு என்று பெயர்.
விடை:
சரி

Question 3.
கலிலியோ புவி மையக் கொள்கையை வழி மொழிந்தார்.
சரியான விடை : சூரிய மையக் கோட்பாட்டிற்கு ஆதரவாக கலிலியோ வெள்ளிக்கோளை உற்று நோக்கி கண்டறிந்த ஆதாரங்களை அளித்தார்.
விடை:
தவறு

Question 4.
நமது பால்வெளித் திரளானது நீள்வட்ட விண்மீன் திரள் ஆகும்.
சரியான விடை : நமது பால்வெளித் திரளானது சுருள் விண்மீன் திரள் ஆகும்.
விடை:
தவறு

Question 5.
நமது சூரியக் குடும்பத்திலுள்ள வெள்ளிக் கோளுக்கு நிலவு கிடையது.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 2

V. ஒப்புமை

Question 1.
பழைய நட்சத்திரங்கள் : நீள்வட்ட விண்மீன் திரள் : புது நட்சத்திரங்கள் : …………………
விடை:
சுருள் விண்மீன் திரள்கள்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
அருகிலுள்ள விண்மீன் திரள் : ஆண்ட்ரமெடா :: அருகிலுள்ள நட்சத்திரம் ………….
விடை:
ஆல்ஃபா சென்டாரி

VI. மிகக் குறுகிய விடையளிக்கவும்

Question 1.
………………. என்ற வார்த்தை நிலவானது நிலவு பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலை ஆகும். (பிறை நிலவு/ கூனல் நிலவு) .
விடை:
பிறை நிலவு

Question 2.
………. மற்றும் ……….. கோள்கள் நடு இரவில் தோன்றாது.
விடை:
புதன் மற்றும் வெள்ளி

Question 3.
சூரியனைச் சுற்றி வர செவ்வாய் எடுத்துக் கொள்ளும் காலம்
விடை:
687 நாட்கள்

Question 4.
வெள்ளியின் அளவு எந்த கட்டத்தில் மிகச் சிறியதாக இருக்கும்?
விடை:
பிறை நிலவு

Question 5.
பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கான ஒரேயொரு சான்று
விடை:
காஸ்மிக் நுண்ணலை பின்ன ணி (CMB)

Question 6.
அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட விண்மீன் திரள் ………………….
விடை:
சுருள் விண்மீன் திரள்கள்

Question 7.
உலகின் முதல் ஏவு வாகனத்தை ஏவிய நாடு எது?
விடை:
ரஷ்யா (ஸ்புட்னிக் -1)

VII. குறுகிய விடையளி

Question 1.
நீள்வட்ட மாதிரி என்றால் என்ன?
விடை:
பல குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது நீள்வட்ட மாதிரி’ என அழைக்கப்படுகிறது.

Question 2.
நான்கு வகையான விண்மீன் திரள்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • சுருள் விண்மீன்திரள்கள்
  • நீள்வட்ட விண்மீன்திரள்கள்
  • ஒழுங்கற்ற விண்மீன்திரள்கள்
  • கோடிட்ட சுருள் விண்மீன்திரள்கள்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 3.
விண்மீன் மண்டலம் என்றால் என்ன?
விடை:
பூமியில் இருந்து பார்க்கும்போது, இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற நட்சத்திரங்களின் அமைப்பு விண்மீன் மண்டலம்’ என அழைக்கப்படுகிறது.

Question 4.
PSLV மற்றும் GSLV யின் விரிவாக்கம் தருக.
விடை:
PSLV – துருவ செயற்கைக்கோள் வெளியீட்டு வாகனம்
GSLV – ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம்.

VIII. விரிவான விடையளி

Question 1.
வெள்ளியின் வளர் மற்றும் தேய் கட்டங்களைக் குறித்து விளக்குக.
விடை:

  • நிலவைப்போலவே வெள்ளியும் பல கட்டங்களைக்கொண்டுள்ளது. பிறை வடிவத்திலிருந்து கிப்பஸ் வடிவத்திற்கு அதன் வடிவமானது மாறியது. கிரகத்தின் அளவும் வேறுபட்டது.
    1. கிரகமானது கிப்பஸ் கட்டத்தில் இருந்தபோது அதன் அளவு சிறியதாக இருந்தது.
    2. மெல்லிய பிறைபோல் இருந்தபோது அதன் அளவு பலமடங்கு அதிகமானது.
  • வெள்ளி நீள் வட்டத்தில் சுற்றி வருகிறது. சில நேரங்களில் கிரகம் அருகில் இருக்கும் போது அதன் அளவு பெரியதாக இருக்கும். சில நேரங்களில் அது தொலைவில் உள்ளபோது அதனளவு சிறியதாக இருக்கும்.
    Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 3
  • வெள்ளியானது சூரியனைச் சுற்றி சென்றுக்கொண்டிருந்தாலும், நள்ளிரவு வானத்தில் அதனைக் காண முடியாது.
  • வெள்ளி பூமிக்கு அருகில் வரும்போது அது சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்ததனைவிடப் பெயரியதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும்.
  • வெள்ளி பூமியைச் சுற்றி வந்தால் நம்மால் வெள்ளியின் குமிழ் பிறையைக் காண இயலாது, வெள்ளி சூரியனைச் சுற்றி வந்தால் மட்டுமே காண இயலும்.

Question 2.
விண்மீன் மண்டலத்தைக் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
பூமியில் இருந்து பார்க்கும்போது இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற * நட்சத்திரங்களின் அமைப்பு விண்மீன் மண்டலம் என அழைக்கப்படுகிறது.

சர்வதேச வானியல் சங்கம் 88 விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது.

உர்சாமேஜர் (சப்தரிஷிமண்டலம்) பெரியவிண்மீன் மண்டலம் ஆகும். அதுவானத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியது. இம்மண்டலத்தின் சிறப்பு ஏழு பிரகாசமான நட்சத்திரங்களின் பெரிய குவளை (இந்திய வானியலில் ஏழு துறவிகள்) என அழைக்கப்படும் ஒரு குழுவாகும்.

வட வானத்திலுள்ள உர்சா மைனர் இலத்தீன் மொழியில் ‘சிறிய கரம்’ என பொருள்படும். துருவ நட்சத்திரம் (போலாரிஸ்) சிறிய டிப்பர் (ஏழு நட்சத்திரம் கொண்ட குழு) போன்றவை இம்மண்டலத்தில் உள்ளது

ஒரியன் விண்மீன் மண்டலம் 81 விண்மீன்களை உள்ளடக்கியது. இதில் 10 தவிர மற்றவற்றை வெறும் கண்களால் காண இயலாது.

பல்வேறு விண்மீன்கள் ஆண்டு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் வானத்தில் காணப்படுகின்றன. சூரியனைச் சுற்றி பூமியின் சுழற்சி காரணமாக இங்ஙனம் நிகழ்கிறது.

விண்மீன் திரள்களில் நட்சத்திரங்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு ஓர் அமைப்பாக – உள்ளன. ஆனால் விண்மீன் மண்டலங்கள் வெறும் ஒளியியல் தோற்றமே.

IX. உயரிய சிந்தனைக் கேள்வி

Question 1.
நீலனும் மாலாவும் நமது அண்டத்தினைக் குறித்த ஒரு உரையாடலில் உள்ளனர். நமது பூமி மட்டும் தான் உயிர் வாழத்தகுந்த ஒரே கோள் என நீலன் கூறுகிறான். ஆனால் சில விளக்கங்களைக் கூறி மாலா அவனது கருத்தினை எதிர்க்கிறாள். மாலா என்ன விவாதம் செய்திருப்பாள். நீ மாலாவை ஆதரிக்கிறாயா? உனது நிலையை நியாயப்படுத்து.
விடை:
நீலன் : ‘நமது பூமி மட்டும்தான் உயிர் வாழத்தகுந்த ஒரே கோள்.
மாலா :
தற்போது வேறு நட்சத்திரங்களைச் சுற்றியும் வெளிக்கோள்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இதிலிருந்து சூரியனை சுற்றி மட்டுமல்லாமல், பிரபஞ்சம் முழுவதும் இந்தக்கிரக அமைப்புகள் இருப்பது நிரூபணம் ஆகிறது.

யாருக்குத் தெரியும்? அந்த கிரகங்களில் எதிலாவது வாழ்க்கை இருக்கலாம், அதிலும் சிலவற்றில் மனிதனைப் போன்ற பகுத்தறிவுள்ள உயிர் வாழ்வதாக இருக்கலாம்.

நாம் பிரபஞ்சத்தைப் பார்த்து வியப்புற்று, ஆராய்ச்சி செய்வது போல் அவர்களும் ஆராய்ச்சி செய்யலாம்.

எதிர்காலத்தில் நாம் அவர்களைச் சந்திக்கும் பொழுது அந்தக் கணம் எவ்வளவு அற்புதமானதாகவும், உற்சாகமானதாகவும் இருக்கும்!

குறிப்பு :
மாலாவின் கூற்றுப்படி, ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் விஞ்ஞானிகளின் தற்போதைய கண்டுபிடிப்பில் பூமி மட்டுமே உயிரிகள் வாழ ஏதுவான கோளாக உள்ளது.

சூரியன் :
பூமியின் இருப்பிடம், தட்ப வெப்ப நிலை, புறஊதாக்கதிர்களின் பாதுகாப்பு, புவியீர்ப்பு முடுக்கம் போன்ற பல காரணங்களால் பூமி கோள் மட்டுமே தற்போது உயிர் வாழத் தகுந்த ஒரே கோள் ஆகும்.

7th Science Guide அண்டம் மற்றும் விண்வெளி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தேய்பிறை என்பதன் விளக்கம் ……………
அ) வளர்தல்
ஆ) விரிவடைதல்
இ) குறைதல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
இ) குறைதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
தேய்பிறைக் காலத்தின் போது அரை நிலவு ………… என அழைக்கப்படுகிறது.
அ) முதல் கால் பகுதி
ஆ) இரண்டாவது கால் பகுதி
இ) மூன்றாவது கால் பகுதி
ஈ) நான்காவது கால் பகுதி
விடை:
அ) முதல் கால் பகுதி

Question 3.
……………. எப்போதும் சூரியனுக்கு மிக அருகில் உள்ளன. எனவே நள்ளிரவில் வானத்தில் தெரிவதில்லை .
அ) செவ்வாய்
ஆ) வியாழன்
இ) சனி
ஈ) வெள்ளி & புதன்
விடை:
ஈ) வெள்ளி & புதன்

Question 4.
………………. நிலவின் மலைகளையும் வெற்றுக் கண்ணுக்குப் புலப்படாத சிறிய மங்கலான நட்சத்திரங்களையும், சூரியன் முகத்தில் சூரியம் புள்ளிகளையும் கண்டறிந்தார்.
அ) ஹான்ஸ் லிப்பர்ஷே
ஆ) டைக்கோ ப்ராஹே
இ) கலிலியோ
ஈ) கிரிக்கோ ரோமன்
விடை:
இ) கலிலியோ

Question 5.
பிரபஞ்சம் உருவான கட்டத்தில் அது ………. வாயுக்களால் ஆன கூட்டமாகவே இருந்தது.
அ) நைட்ரஜன் – ஹிலியம்
ஆ) கார்பன் – ஹிலியம்
இ) ஹைட்ரஜன் – ஹிலியம்
ஈ) இவற்றில் ஒன்றுமில்லை
விடை:
இ) ஹைட்ரஜன் – ஹிலியம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நடுவிலிருந்து முனைவரை சுருண்ட சக்கரம் போன்ற அமைப்பு கொண்டதால் இவை …………. எனப் பெயரிடப்பட்டுள்ளன.
விடை:
சுருள் விண்மீன்

Question 2.
திரள்கள் ஒரு …………… என்பது விண்மீன்களாலான குறுக்குக் கோடு கொண்ட சுருள் விண்மீன் திரள் ஆகும்.
விடை:
கோடிட்ட சுருள் விண்மீன் திரள்கள்

Question 3.
அதிக எண்ணிக்கையிலான கோள் கொத்துகளால் ………… சூழப்பட்டுள்ளன.
விடை:
நீள்வட்ட விண்மீன்

Question 4.
…………. மிகத் தொலைவில் அமைந்துள்ளதால் அவை சிறிய ஒளிப்புள்ளிகளாகத் தோன்றுகின்றன.
விடை:
நட்சத்திரங்கள்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 5.
………………… விண்மீன் பரிணாம வளர்ச்சியின் கணித ரீதியான செயல்பாடுகள் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளைகளின் பரிணாமப் படிகளின் கோட்பாட்டு மாதிரிகள் பலவற்றை அளித்தார்.
விடை:
சுப்ரமணியன் சந்திரசேகர்

III. சரியா தவறா (தவறாக இருப்பின் சரியான வார்த்தையை எழுதுக)

Question 1.
இந்தப் பிரபன்சத்தில் விண்மீன் திரள்கள், கிரகங்கள் நட்சத்திரங்கள், விண்கற்கள், செயற்கைக் கோள்கள் மற்றும் அனைத்து வகையான பொருள்களும் ஆற்றலும் உள்ளன.
விடை:
சரி

Question 2.
சந்திரன் ஒளியானது அதனை நோக்கிருக்கின்ற பூமியின் கோளகப்பரப்பில் விழுகிறது.
விடை:
தவறு
விளக்கம் : சூரிய ஒளியானது அதனை நோக்கிருக்கின்ற பூமியின் கோளகப்பரப்பில் விழுகிறது.

Question 3.
கிரகங்கள் பூமிலிருந்து எல்லா நேரங்களிலும் ஒரே தூரத்தில் இருப்பதாக நாம் கருதினால் ஒளி மாறுபாடு மற்றும் பிற்போக்கு இயக்கம் போன்றவை சாத்தியமற்றதாக இருக்கும்.
விடை:
சரி

Question 4.
கண்ணுக்குத் தெரியாத பிரபஞ்சத்தினைத் தொலை நோக்கியால் பார்க்க முடியும்.
விடை:
சரி

Question 5.
நட்சத்திரங்களின் சிறிய திரளானது விரைவில் முதல் விண்மீன் திரள் ஆக மாறியது.
விடை:
தவறு
விளக்கம் : நட்சத்திரங்களின் பெரிய திரளானது விரைவில் முதல் விண்மீன் திரள் ஆக மாறியது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 4

V. ஒப்புமை தருக.

Question 1.
சுழல் விண்மீன் திரள் : தட்டையான சுழலும் வட்டு நட்சத்திரங்களை கொண்டுள்ளது.
நீள்வட்ட விண்மீ ன்திரள் ……………………
விடை:
அமைப்பு இல்லாத முப்பரிமாண வடிவம்

Question 2.
சூரிய மையக் கோட்பாடு : சூரியன் மையத்தில் உள்ளது.
புவி மையக் கோட்பாடு ………………….
விடை:
பூமி மையத்தில் உள்ளது

Question 3.
உர்சா மைனர் என்பதன் பொருள் …………………
தேய்பிறை என்பதன் பொருள் : வெளிச்சம் குறைதல்
விடை:
சிறிய கரடி

VI. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று : வளர்பிறைக் காலத்தில் நிலவானது மூன்றாவது கால் பகுதி’ என அழைக்கப்படுகிறது.
காரணம் : கிப்பஸ் என்பது சந்திரன் அரை வட்டத்திற்கு கீழ் குறைவாக ஒளிரும் கட்டங்களைக் குறிக்கிறது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல
இ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறானது
விடை:
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
கூற்று : பெரும்பாலான விண்மீன் திரள்களின் விட்டம் ஆயிரம் முதல் விண்ணியல் ஆரம் வரை உள்ளன.
காரணம் : ஒழுங்கற்ற விண்மீன் திரள்கள் ஏராளமான வாயு மற்றும் தூசி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல
இ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறானது
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்

VII. இதில் ஒன்று பொருந்தாததை கண்டுபிடி

Question 1.
மேஷம், சிம்மம், விருட்சிகம், கேப்ரிகோன்
விடை:
கேப்ரிகோன்
காரணம் : இவை ஆங்கிலப் பெயர் விண்மீன் மண்டலம்.

Question 2.
ரோகினி -1, அக்னி, பிருத்வி, சந்திரயான்-1
விடை:
சந்திரயான் -1
மற்ற மூன்றும் : APJ அப்துல்கலாம் அவர்களால் உருவாக்கப்பட்டது.

VIII. ஓரிரு வரிகளில் விடையளி

Question 1.
பிற்போக்கு இயக்கம் என்பது யாது?
விடை:
கோள்கள் தங்களது பாதையை திருப்பிக் கொள்ளும் நிகழ்வு பிற்போக்கு இயக்கம் எனப்படும்.

Question 2.
பிரபஞ்சத்தில் காணப்படும் விண்மீன் திரள்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • கிரகங்கள்
  • நட்சத்திரங்கள்
  • விண்கற்கள்
  • செயற்கைக் கோள்கள்
  • அனைத்து வகையான பொருள்களும் ஆற்றல் உள்ளன.

Question 3.
துணைக்கோள் என்றால் என்ன? அதன் வகைகள்.
விடை:

  • ஒரு கோளைச் சுற்றி நிலையான வட்டப் பாதையில் சுற்றும் பொருள் ஒரு துணைக்கோள் என்று அழைக்கப்படுகிறது.
  • இயற்கை துணைக்கோள், செயற்கை துணைன்கோள்.

Question 4.
சூரியன், பூமி மற்றும் நிலவு 90° கோணத்தில் உள்ள போது பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒரு மனிதரின் கண்களுக்கு நிலவு எவ்வாறு தெரியும்?
விடை:

  • பூமியை நோக்கி இருக்கின்ற நிலவினைக் கண்ணால் நோக்கினால் அதன் அரைப்பகுதி ஒளிர்ந்தும் மற்றோர் அரைப்பகுதி இருளிலும் இருப்பதனை காண்போம்.
  • இதனால் நிலவு அரை நிலவாகத் தோன்றும்.

Question 5.
பெரு வெடிப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து அங்கிருந்து விரிவடையத் தொடங்கிய நிகழ்வு ஒரு வெடிப்பு என அழைக்கப்படுகிறது.

IX. சுருக்கமாக விடையளி

Question 1.
நீள்வட்ட மாதிரி என்று எதை அழைக்கின்றன?
விடை:
கிரகங்கள் பூமியிலிருந்து எல்லா நேரங்களிலும் ஒரே தூரத்தில் இருப்பதாக நாம் கருதினால் ஒளி மாறுபாடு மற்றும் பிற்போக்கு இயக்கம் போன்றவை சாத்தியமற்றதாக இருக்கும்.

இத்தகைய குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது நீள்வட்ட மாதிரி என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
விண்ணியல் ஆரம் என்றால் என்ன?
விடை:

  • ஒரு விண்ணியல் ஆரம் என்பது வானியல் அலகானது ஒரு ஆர வினாடியில் ஏற்படுத்தும் கோணத்தின் தொலைவு என வரையறுக்கப்படுகிறது.
  • இது ‘PC’ எனக் குறிக்கப்படுகிறது. –
  • 1 PC = 3.2615 ஒ.ஆ = 3.09 × 1013Km

Question 3.
முதல் கால்பகுதி மற்றும் மூன்றாம் கால் பகுதி இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு எழுதுக?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 5

Question 4.
வானியல் அலகு என்பது யாது?
விடை:

  • பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம் வானியல் அலகு என்று அழைக்கப்படுகிறது.
  • இது வானியல் அலகு என்றும் அலகால் குறிக்கப்படுகிறது.
  • 1 வானியல் அலகு = 1.496 × 108கி.மீ

Question 3.
துணைக்கோள் என்றால் என்ன? அதன் வகைகள்.
விடை:

  • ஒரு கோளைச் சுற்றி நிலையான வட்டப் பாதையில் சுற்றும் பொருள் ஒரு துணைக்கோள் என்று அழைக்கப்படுகிறது.
  • இயற்கை துணைக்கோள், செயற்கை துணைன் கோள்.

Question 4.
சூரியன், பூமி மற்றும் நிலவு 90° கோணத்தில் உள்ள போது பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒரு மனிதரின் கண்களுக்கு நிலவு எவ்வாறு தெரியும்?
விடை:
பூமியை நோக்கி இருக்கின்ற நிலவினைக் கண்ணால் நோக்கினால் அதன் அரைப்பகுதி ஒளிர்ந்தும் மற்றோர் அரைப்பகுதி இருளிலும் இருப்பதனை காண்போம்.

இதனால் நிலவு அரை நிலவாகத் தோன்றும்.

Question 5.
பெரு வெடிப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து அங்கிருந்து விரிவடையத் தொடங்கிய நிகழ்வு ஒரு வெடிப்பு என அழைக்கப்படுகிறது.

IX. சுருக்கமாக விடையளி.

Question 1.
நீள்வட்ட மாதிரி என்று எதை அழைக்கின்றன?
விடை:
கிரகங்கள் பூமியிலிருந்து எல்லா நேரங்களிலும் ஒரே தூரத்தில் இருப்பதாக நாம் கருதினால் ஒளி மாறுபாடு மற்றும் பிற்போக்கு இயக்கம் போன்றவை சாத்தியமற்றதாக இருக்கும்.

இத்தகைய குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது நீள்வட்ட மாதிரி என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
விண்ணியல் ஆரம் என்றால் என்ன?
விடை:

  • ஒரு விண்ணியல் ஆரம் என்பது வானியல் அலகானது ஒரு ஆர வினாடியில் ஏற்படுத்தும் கோணத்தின் தொலைவு என வரையறுக்கப்படுகிறது.
  • இது ‘PC’ எனக் குறிக்கப்படுகிறது.
  • 1 PC = 3.2615 ஓ.ஆ = 3.09 × 1013Km

Question 3.
முதல் கால் பகுதி மற்றும் மூன்றாம் கால் பகுதி இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு எழுதுக?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 6

Question 4.
வானியல் அலகு என்பது யாது?
விடை:

  • பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம் வானியல் அலகு என்று அழைக்கப்படுகிறது.
  • இது வானியல் அலகு என்றும் அலகால் குறிக்கப்படுகிறது.
  • 1 வானியல் அலகு = 1.496 × 108கி.மீ

Question 5.
APJ அப்துல் கலாம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள் பற்றி எழுதுக?
விடை:
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எஸ்.எல்.வி 3 என்ற செயற்கைக்கோள் செலுத்தியினைப் பயன்படுத்தி ரோகினி -1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினார்.

இந்திய இராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி. நாக் மற்றும் ஆகாஷ் ஆகிய ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்ட போது அதன் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டார்.

X. விரிவான விடையளி

Question 1.
இயற்கையான செயற்கைக் கோள்கள் பற்றி விரிவாக எழுதுக?
விடை:

  • ஒரு கோளைச் சுற்றிச் சுழலும் அனைத்து இயற்கைப் பொருள்களும் இயற்கை செயற்கைக் கோள்கள் ஆகும்.
  • அவை நிலவுகள் என அழைக்கப்படுகின்றன.
  • பெரும்பாலான நிலவுகள் கோள வடிவுடையவையாக உள்ளன.
  • இவை பொதுவாக கோள்களின் வலுவான ஈர்ப்பு விசைகளால் ஈர்க்கப்படும் விண்கற்களோ எரி கற்களோ அல்ல.
  • நமது சூரியக் குடும்பத்தில் புதன் மற்றும் வெள்ளி தவிர மற்ற எல்லா கோள்களும் நிலவுகளைக் கொண்டிருக்கும்.
  • பூமிக்கு ஒரே ஒரு நிலவு இருக்கிறது.
  • அதே சமயம் வியாழன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் 60 க்கும் மேற்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ளன.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
சுப்ரமணியன் சந்திரசேகர் விண்வெளி இயற்பியலாளர் பற்றி எழுதுக?
விடை:

  • சுப்பிரமணியன் சந்திர சேகர் இந்திய அமெரிக்க விண்வெளி இயற்பியலாளர் ஆவார்.
  • 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் வில்லியம் ஏஃபவ்லர் என்பவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.
  • இவரது விண்மீன் பரிணாம வளர்ச்சியின் கணித நீதியான செயல்பாடுகள் நட்சத்திரங்கள் மற்றும் கருத்துளைகளின் பரிணாமப்படிகளின் கோட்பாட்டு மாதிரிகள் பலவற்றை அளித்தது.
  • சந்திரசேகர் தமது வாழ்நாளில் பல்வேறுவகையான இயற்பியல்ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டார்.

Question 3.
நீள்வட்ட விண்மீன் திரள்கள் பற்றி விரிவாக எழுதுக?
விடை:

  1. ஒரு நீள்வட்ட விண்மீன் திறள் என்பது ஏறத்தாழ நீள்வட்ட வடிவம் மற்றும் ஒரு மென்மையான உருவம் உடைய ஒரு வகை விண்மீன் திரள் ஆகும்.
  2. சுழல் விண்மீன் திரள்கள் போல் அல்லாமல் நீள்வட்ட விண்மீன் திரள்கள் மூன்று பரிமாணங்களை கொண்ட, கட்டமைப்பற்ற மையத்தில் சீரற்ற சுற்றுப்பாதையில் உள்ள விண்மீன்களைக் கொண்டுள்ளன.
  3. இவை சுழல் விண்மீன் திரள்களில் காணப்படுவதை விட அதிக வயதுடைய விண்மீன்களை உள்ளடக்கியவையாகும்.
  4. அதிக எண்ணிக்கையிலான கோள் கொத்துகளால் நீள்வட்ட விண்மீன்கள் சூழப்பட்டுள்ளன.

Question 4.
சூரிய மைய மாதிரி பற்றி விளக்குக?
விடை:

  • சிக்கலான புவிமைய நீள்வட்ட மாதிரியை ஏற்றுக்கொள்ளாத, நிகோலஸ் கோப்பர் நிக்கஸ். சூரியனை மையமாகக் கொண்டு பூமியை மற்றும் அனைத்துக் கிரகங்களும் சுற்றி வருவதாகக் கூறினார்.
  • சூரியனின் இரு பக்கத்திலும் பூமி மற்றும் செவ்வாய் இருப்பதாகக் கொண்டால் செவ்வாயானது அவை அருகில் இருப்பதனை விட மங்கலாகத் தெரியும்.
  • பூமி 365 நாள்களில் சூரியனைச் சுற்றி வருகிறது.
  • ஆனால் செவ்வாய் 687 நாள்களில் சுற்றுகிறது.
  • பூமி, செவ்வாய் கிரகத்தை நெருங்கும் போதும், அதனை முந்திச் செல்லும் போதும் செவ்வாய் பிற்போக்கு இயக்கத்தினை மேற்கொள்கிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 7

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

6th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
சோப்புகளின் முதன்மை மூலம் _____ ஆகும்.
அ) புரதங்கள்
ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
இ) மண்
ஈ) நுரை உருவாக்கி
விடை:
ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

Question 2.
வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு கரைசல் பயன்படுகிறது.
அ) பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு
ஆ) சோடியும் ஹைட்ராக்ஸைடு
இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
ஈ) சோடியம் குளோரைடு
விடை:
ஆ) சோடியம் ஹைட்ராக்ஸைடு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _____ ஆகும்.
அ) விரைவாக கெட்டித்தன்மையடைய
ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
இ) கடினமாக்க
ஈ) கலவையை உருவாக்க
விடை:
ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்தி

Question 4.
பீனால் என்பது ______
அ) கார்பாலிக் அமிலம்
ஆ) அசிட்டிக் அமிலம்
இ) பென்சோயிக் அமிலம்
ஈ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
விடை:
அ) கார்பாலிக் அமிலம்

Question 5.
இயற்கை ஒட்டும் பொருள் ______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.
அ) புரதங்க ளில்
ஆ) கொழுப்புகளில்
இ) ஸ்டார்ச்சில்
ஈ) வைட்டமின்களில்
விடை:
இ) ஸ்டார்ச்சில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வெங்காயம் நறுக்கும் போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமான வாயு ______ ஆகும்.
விடை:
ஆக்சைடு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் ______ தேவைப்படுகின்றது.
விடை:
NaOH

Question 3.
உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது ______ ஆகும்
விடை:
மண்புழு

Question 4.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _____ உரங்கள் ஆகும்.
விடை:
இயற்கை

Question 5.
இயற்கை பசைக்கு உதாரணம் _____ ஆகும்.
விடை:
ஸ்டார்ச்

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.
விடை
தவறு
குறைந்த அடர்வுடைய பீனால் கிருமி நாசினியாக பயன்படுகின்றது.

Question 2.
ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றன.
விடை:
தவறு எப்சம் மருத்துவத்துறையில் அதிகளவு பயன்படுகின்றது.

Question 3.
ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 4.
ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று பிரிக்க பயன்படுகின்றது.
விடை:
தவறு – ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று ஒட்டுவதற்கு பயன்படுகின்றது.

Question 5.
NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 80

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
  2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
  3. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  4. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.
  5. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.
  6. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.

விடை:

  1. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
  2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
  3. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.
  4. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  5. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
  6. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.

VI. ஒப்புமை தருக.

Question 1.
யூரியா : கனிம உரம் :: மண்புழு உரம் : _____
விடை:
இயற்கை உரம்

Question 2.
______ : இயற்கை ஓட்டும் பொருள் :: செயற்கை ஒட்டும் பொருள் : செலோடேப்
விடை:
ஸ்டார்ச்

VII. மிகக் குறுகிய விடையளி :

Question 1.
சோப்பில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?
விடை:

  • நீர்
  • சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH)
  • தேங்காய் எண்ணெய் (தாவர எண்ணெய் (அல்லது) விலங்கு கொழுப்பு)

Question 2.
சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?
விடை:

  1. நீர் விரும்பும் மூலக்கூறுகள்
  2. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள்

Question 3.
கனிம உரங்களுக்கு உதாரணம் தருக.
விடை:

  • யூரியா
  • சூப்பர் பாஸ்பேட்
  • அம்மோனியம் சல்பேட்
  • பொட்டாசியம் நைட்ரேட்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 4.
பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.
விடை:

  1. வீரியம் குறைந்த அமிலம்
  2. எளிதில் ஆவியாகும் தன்மையுடையது.
  3. வெண்ணிற படிகத் திண்மம்.

Question 5.
பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.
விடை:

  • கரும்பலகையில் எழுதும் பொருள் தயாரிக்க பயன்படுகிறது.
  • அறுவைச் சிகிச்சையில் எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது.
  • சிலைகள் வார்ப்பதற்கு பயன்படுகிறது.
  • கட்டுமானத்துறையில் பயன்படுகிறது.

Question 6.
சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?
விடை:

  • சுண்ணாம்புக்கல்
  • களிமண் – ஜிப்சம்

Question 7.
சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?
விடை:
ஜிப்சமானது சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குகின்றது. இதனால் சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுகின்றது.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
மண்புழு ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகின்றது?
விடை:

மண்புழுக்கள் உயிரி கழிவுகள் அனைத்தையும் உணவாக உண்டு, செரித்து வெளியேற்றுகிறது.

  • இத்தகைய மண், செழிப்பான தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • மண்புழு விவசாயத்திற்குப் பல்வேறு வகைகளில் உதவுவதால் “உழவனின் நண்பன்” என்று மண்புழுவை அழைக்கின்றோம்.

Question 2.
சிமெண்ட் தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.
விடை:
இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண், ஜிப்சம் ஆகிய தாது உப்புகளைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

Question 3.
ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.
விடை:

  • உரமாகப் பயன்படுகிறது.
  • சிமெண்ட் மற்றும் பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படுகிறது.

IX. விரிவான விடையளி:

Question 1.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) மற்றும் அதன் பயன் பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
விடை:
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) :

  • இரும்புக் கம்பிகள் மற்றும் எஃகு வலைகளைத் கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) ஆகும்.
  • இது வலுவானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும்.
    பயன்க ள் :
  • அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல்தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது.
  • குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவு நீர் வடிகால்கள் அமைக்கப் பயன்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது ?
விடை:
தேவையான பொருட்கள்:

  • 35 மிலி நீர்
  • 10 மிலி NaOH
  • 60 மிலி தேங்காய் எண்ணெய்

செய்முறை :

  • சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
  • கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பவும்.
  • அதனுடன் 10 மிலி NaOHயைச் சேர்த்து குளிர வைக்கவும்.
  • பின் அதனுடன் 60 மிலி தேங்காய் எண்ணெயை சிறிது, சிறிதாக சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  • பின் இதனை சிறிய காலித் தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

X. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி.

Question 1.
ரவி ஒரு விவசாயி. அவருடைய பண்ணையில் அதிக கால்நடைகளை அவர் வளர்க்கின்றார். இதனால் அதிகளவில் உயிரிக்கழிவுகள் கிடைக்கின்றன. இக்கழிவுகளை மண்புழு உரமாக மாற்றுவதற்கு தகுந்த ஆலோசனையை ரவிக்கு வழங்கவும். மண்புழு உரத்தின் நன்மைகளைப் பற்றி எடுத்துக் கூறவும்.
விடை:

  • 30 செ.மீ ஆழத்தில் குழி ஒன்றைத் தோண்டவும் அல்லது மரப்பெட்டி ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
  • குழியின் அல்லது பெட்டியின் அடிப்பகுதியில் மெல்லிய வலை ஒன்றை விரித்து 1-2 செ.மீ உயரத்திற்கு மண்ணால் நிரப்பவும்.
  • அதன்மீது தாவரக் கழிவுகளை (உலர்ந்த இலை, பூ) மற்றும் பிற சிதைவுறும் கழிவுகளைப் பரப்பிச் சிறிது நீரை தெளிக்கவும்.
  • சில மண்புழுக்களைக் குழியில் உள்ள பொருள்களோடு சேர்த்து பழைய துணி அல்லது ஓலையால் மூடவும்.
  • நான்கு வாரங்களுக்குப் பிறகு ‘மண்புழு உரம்’ உருவாகி யிருப்பதைக் காணலாம்.
  • உருவாக்கப்பட்ட மண்புழு உரத்தைத் தாவரங்களுக்குப் பயன்படுத்தி மண்வளம் காக்க வழி செய்யலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 100

மண்புழு உரத்தின் நன்மைகள் :

  • மண்புழு உரம் வேளாண்மைக்குப் பயன்படும் மிகச்சிறந்த இயற்கை கரிம உரமாகும்.
  • மண்புழு உரமானது தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெரும் அளவில் கொண்டுள்ளது.
  • மண்ணின் இயல்புத்தன்மை, காற்றோட்டம், நீரைத்தேக்கி வைக்கும் பண்பு ஆகியவற்றை மேம்படுத்தி மண் அரிப்பைத் தடுக்கிறது.
  • அதிக ஊட்டச்சத்து கொண்ட சூழல் நட்புமுறை சீர்த்திருத்தத்தை மண்ணுக்கு அளிக்கும் பொருளாக மண்புழு உரம் உள்ளது. மாடித்தோட்டம் அமைப்பதற்கும் உதவுகிறது.
  • விதை முளைத்தலைத் தூண்டி தாவர வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.
  • மண்புழு உரங்களை எளிமையாகத் தயாரித்துப் பயன்படுத்த முடியும்.

XI. செயல்திட்டம் (மாணவர்களுக்கானது).

  • ஒரு கண்ணாடி முகவையில் 100மி.லி சூடான நீரை எடுத்துக்கொள்.
  • 50 கிராம் மைதா மாவினை எடுத்து வெந்நீரில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • உருவாகும் பசை போன்ற பொருளை எடுத்து தொட்டுப்பார் ஒட்டுகிறதா? கிழிந்த உனது புத்தகத்தை பசையை பயன்படுத்தி ஒட்டவும்.
  • சிறிதளவு மயில்துத்தம் (தாமிர சல்பேட்) சேர்க்கும் போது பசைகெடாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

6th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
அதிகளவு கறைகளையுடைய துணிகளை வெளுப்பதற்கு _____ பயன்படுத்துகிறோம்.
அ) சலவை சோப்பு
ஆ) குளியல் சோப்பு
இ) சலவைத் தூள்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ) சலவைத் தூள்

Question 2.
யூரியாவிலுள்ள நைட்ரஜனின் சதவீத அளவு
அ) 23%
ஆ) 13%
இ) 21%
ஈ) 46%
விடை:
ஈ) 46%

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
50 கி.கி. சூப்பர் பாஸ்பேட் உரமிட்டால், எவ்வளவு பாஸ்பரஸ் மண்ணில் சேர்க்கப்படும்.
அ) 4 – 4.5 கி.கி
ஆ) 8 – 9 கி.கி
இ) 12 – 13 கி.கி
ஈ) 16 – 18 கி.கி
விடை:
அ) 4 – 4.5 கி.கி.

Question 4.
சிமெண்டை கண்டுபிடித்தவர் ____ ஆவார்.
அ) எடிசன்
ஆ) ஜோசப் ஆஸ்பிடின்
இ) இராபட் ஹீக்
ஈ) இராபட் ப்ரௌன்
விடை:
ஆ) ஜோசப் ஆஸ்பிடின்

Question 5.
பாரிஸ் சாந்தின் மூலக்கூறு வாய்ப்பாடு
அ) CaSO4. 1/2H2O
ஆ) CaSO4. H2O
இ) CaSO4.2H2O
ஈ) CaSO4.3H2O
விடை:
அ) CaSO4. 1/2H2O

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
______ ஓர் இயற்கை நிறங்காட்டி
விடை:
மஞ்சள்

Question 2.
______ மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பொருளை நோக்கி செல்கின்றன.
விடை:
நீர் வெறுக்கும் மூலக்கூறுகள்

Question 3.
உரங்கள் _____ வளர்ச்சிக்கு உதவுகின்றன.
விடை:
தாவர

Question 4.
எலும்பு முறிவினைச் சரிசெய்யப் ____ பயன்படுகிறது.
விடை:
பாரிஸ் சாந்து

Question 5.
எப்சம் _____ எனும் உப்பாகும்
விடை:
மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட்

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 82

IV. ஒப்புமை தருக.

Question 1.
கரும்பலகை எழுதும் பொருள் : ______ :: தாவரங்களின் வளர்ச்சி : எப்சம்
விடை:
பாரிஸ் சாந்து

Question 2.
______ : கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட் :: பாரிஸ் சந்து : கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்
விடை:
ஜிப்சம்

Question 3.
_____ : காரை :: பாலங்கள் கட்டுவது : கற்காரை
விடை:
வீட்டு சுவர்கள் கட்டுவது

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. ஒன்று நீர் விரும்பும் பகுதி; மற்றொன்று நீர் வெறுக்கும் பகுதி.
  2. துணி துவைக்கும் போது ஏராளமான மூலக்கூறுகள் அழுக்குப் பகுதியை சுற்றி வட்டமிட்டு அழுக்கை நீக்குகின்றன.
  3. இறுதியில் அழுக்கு மூலக்கூறுகள் நீரில் மிதந்து அடித்துச் செல்லப்படுகிறது.
  4. துணி வெளுக்கப்படுகிறது.
  5. சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு முனைகள் உண்டு.
  6. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கியும், நீர் விரும்பி மூலக்கூறுகள் நீரை நோக்கியும் செல்கின்றன.

விடை:

  1. சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு முனைகள் உண்டு.
  2. ஒன்று நீர் விரும்பும் பகுதி; மற்றொன்று நீர் வெறுக்கும் பகுதி.
  3. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கியும், நீர் விரும்பி மூலக்கூறுகள் நீரை நோக்கியும் செல்கின்றன.
  4. துணி துவைக்கும் போது ஏராளமான மூலக்கூறுகள் அழுக்குப் பகுதியை சுற்றி வட்டமிட்டு அழுக்கை நீக்குகின்றன.
  5. இறுதியில் அழுக்கு மூலக்கூறுகள் நீரில் மிதந்து அடித்துச் செல்லப்படுகிறது.
  6. துணி வெளுக்கப்படுகிறது.

VI. மிகக்குறுகிய விடையளி

Question 1.
முதன்மை ஊட்டச்சத்துக்கள் யாவை ?
விடை:
முதன்மை ஊட்டச்சத்துக்கள் என்பது NPK

  1. நைட்ரஜன் (N)
  2. பாஸ்பரஸ் (P)
  3. பொட்டாசியம் (K)

Question 2.
உரங்கள் என்றால் என்ன ?
விடை:
பயிர்களுக்குத் தேவையான ஒன்று (அ) அதற்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கு மண்ணில் சேர்க்கப்படும் கரிம மற்றும் கனிமப் பொருள்களை உரங்கள் என்கிறோம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
கரிம உரங்களுக்கு இரண்டு உதாரணம் தருக.
விடை:

  1. மண்புழு உரம்
  2. தொழு உரம்

Question 4.
கனிம உரங்கள் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை:
மண்ணில் இயற்கையாகக் கிடைக்கும் கனிமப் பொருள்களைக் கொண்டு, தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்கு உட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் கனிம உரங்கள் என அழைக்கப் படுகின்றன.

Question 5.
போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று ஏன் அழைக்கப்படுகின்றன?
விடை:
இங்கிலாந்து நாட்டில் உள்ள போர்ட்லேண்ட் என்னும் இடத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லின் தன்மையை சிமெண்ட் ஒத்திருந்ததால், போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று – அழைக்கப்படுகிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
எப்சம் என்பது யாது? அதன் பயன்கள் யாவை?
விடை:
எப்சம்’ :

  • எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும்.
  • இதன் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4. 7H2O

பயன்கள் :

  • மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்தி.
  • மனிதத்தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குகின்றது.
  • தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்பு.
  • தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Question 2.
பீனால் பற்றி எழுதுக. அதன் பயன்கள் யாவை?
விடை:
பீனால் :

  • பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலமாகும்.
  • இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C6H5OH
  • இது ஆவியாகும் தன்மையுள்ள வெண்மை நிற படிகத் திண்மமாகும்.
  • இது நிறமற்றதாக இருப்பினும், மாசு கலந்தவுடன் இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.
  • மனிதத் தோலில்பட்டால் எரிச்சலூட்டும் தன்மை கொண்டது.

பயன்கள் :

  • தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.
  • குறைந்த அடர்வுடைய பீனால் கரைசல், வாய் கொப்பளிப் பானாகவும், கிருமி நாசினியாகவும், வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்யவும் பயன்படுகிறது.
  • அறுவை சிகிச்சையில் நுண்ணுயிரிகளைக் கொல்லும் கிருமிநாசினியாக பயன்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 101