Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

7th Science Guide தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
அ) பிரையோபில்லம்
ஆ) பூஞ்சை
இ) வைரஸ்
ஈ) பாக்டீரியா
விடை:
அ) பிரையோபில்லம்

Question 2.
ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
அ) ஸ்போர்கள்
ஆ) துண்டாதல்
இ) மகரந்தச் சேர்க்கை
ஈ) மொட்டு விடுதல்
விடை:
ஈ) மொட்டு விடுதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 3.
ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலை
ஈ) மலர்
விடை:
ஈ) மலர்

Question 4.
மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை
அ) காற்று
ஆ) நீர்
இ) பூச்சிகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Question 5.
பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
அ) வெற்றிலை
ஆ) மிளகு
இ) இவை இரண்டும்
ஈ) இவை இரண்டும் அன்று
விடை:
இ) இவை இரண்டும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு ………………
விடை:
மகரந்தத்தாள்

Question 2.
…………….. என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்
விடை:
சூற்பை

Question 3.
கருவுறுதலுக்குப் பின் சூல் …………….. ஆக மாறுகிறது.
விடை:
விதை

Question 4.
சுவாச வேர்கள் ……………….. தாவரத்தில் காணப்படுகின்றன.
விடை:
அவிசினியா

Question 5.
வெங்காயம் மற்றும் பூண்டு ……………. வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
விடை:
தரைகீழ்த்தண்டு குமிழம்

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக

Question 1.
முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 2.
அல்லி இதழ், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்
விடை:
தவறு – மகரந்தத்தூள் சூலக முடியை அடைவது மகரந்தச் சேர்க்கை

Question 3.
கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட்
விடை:
சரி

Question 4.
இஞ்சி என்பது தரைகீழ் வேராகும்
விடை:
தவறு – இஞ்சி – தரைகீழ் தண்டு

Question 5.
சோற்றுக்கற்றாழையின் இலைகள், நீரைச் சேமிப்பதால் சதைப் பற்றுள்ளதாக உள்ளன.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 2

V. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
தாவரத்தில் காணப்படும் இருவகையான இனப் பெருக்க முறைகளை எழுது.
விடை:
a) பாலினப் பெருக்கம்
b) பாலில்லா இனப்பெருக்கம்

Question 2.
மலரின் இரு முக்கியமான பாகங்கள் யாவை?
விடை:

  1. மகரந்தத்தாள்
  2. சூலகத்தாள்

Question 3.
மகரந்தச் சேர்க்கை – வரையறு.
விடை:
ஒரு மலரில், மகரந்தத்தூள் சூலக முடியை அடையும் நிகழ்ச்சியே மகரந்தச்சேர்க்கை

Question 4.
மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணிகள் யாவை?
விடை:

  • காற்று
  • பூச்சிகள்
  • பறவைகள்
  • நீர்

Question 5.
கந்தம் மற்றும் கிழங்கு ஆகியவற்றிற்க்கு எடுத்துக்காட்டு தருக.
விடை:
கந்தம் – சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு
கிழங்கு – உருளைக்கிழங்கு

Question 6.
பற்றுக் கம்பிகள் என்றால் என்ன?
விடை:

  • ஏறுகொடிகளில் இலையும், இலையின் பாகங்களும் நீண்ட பற்றுக்கம்பிகளாக மாறியுள்ளன.
  • இவை ஏறுகொடிகளைத் தாங்கிகளில் பற்றி எனப்படும்.
    ஏற உதவுகின்றன.
  • எ.கா. பைசம் சட்டைவம் – நுனிச்சிற்றிலை பற்றுக்கம்பியாக மாறியுள்ளது.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 7.
முட்கள் என்றால் என்ன?
விடை:
இலைகள் முட்களாக மாறியதால் தண்டு பசுமையாகி ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயாரிக்கிறது. எ.கா. கள்ளி

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
இருபால் மலரை, ஒருபால் மலரிலிருந்து வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 3

Question 2.
அயல் மகரந்தச் சேரக்கை என்றால் என்ன?
விடை:
ஒரு தாவரத்தின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் சூலக முடியை அடையும் நிகழ்ச்சி அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

Question 3.
இலைத் தொழில் இலைக்காம்பு பற்றி எழுது.
விடை:
அகேஷியா ஆரி குலி பார்மிஸ் தாவரத்தில் இலைக்காம்பு அகன்று, இலைபோல் மாறி இலை செய்யவேண்டிய ஒளிச்சேர்க்கை வேலையை இலைக்காம்பு மேற்கொள்கிறது. அதே

VII. விரிவாக விடையளி

Question 1.
மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.
விடை:
மலரில் மகரந்த தூள் சூலக முடியை அடையும் நிகழ்ச்சியே மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 4
சேர்க்கை செயற்கை மகரந்தச் சேர்க்கை :
நாம் ஆண்மலரில் உள்ள மகரந்தத் தூளை பெண்மலரில் உள்ள சூலக முடியில் சேர்த்தால் அது செயற்கை மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

இயற்கை மகரந்தச் சேர்க்கை :
இயற்கையாகவே பல்வேறு வழிமுறைகளில் (நீர், காற்று, தேனி, பூச்சிகள், பறவைகள் மூலம்) மலரின் கலக முடியை மகரந்தத்தாள் சென்றடைவது இயற்கை மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

  • புற்கள், லேசான மகரந்தத்தூளை உருவாக்கும்.
  • கரந்தப்பை, மகரந்தத்தூளை உதிர்க்கும் போது காற்று அதை எடுத்துச் சென்று அருகில் உள்ள மலரில் சேர்க்கும்.
  • பூச்சிகள் மற்றும் பறவைகளும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும்.
  • தேனீ, வண்ணத்துப்பூச்சிகள் மலர்களைச் சுற்றி வட்டமிடும்.
  • இவை ஒரு மலரிலிருந்து மற்றொரு மலருக்குச் செல்லும் போது அதன் கால்கள், இறக்கைகள் மற்றும் வயிற்றில் மகரந்தத்தூள்கள் ஒட்டிக் கொள்ளும் இதன் மூலம் நடக்கும் மகரந்தச் சேர்க்கை அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
  • இதே போல் காற்று மலரை அசைக்கும் போது மகரந்தத்தூள் உதிர்ந்து அதே மலரின் சூலக முடியை அடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும். இது பெரும்பாலும் இருபால் மலரில் நடக்கிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 2.
தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக.
விடை:

  • பொதுவாகத் தண்டுகள் தரைக்கு மேலே வளரும். ஆனால் சில தண்டுகள் தரைக்கு கீழ் வளர்ந்து உணவைச் சேமிக்கிறது.
  • இத்தகைய தரைகீழ்த் தண்டுகள் பருத்தும், தடித்தும் காணப்படும்.
    தரைகீழ்த் தண்டு நான்கு வகைப்படும்

    1. மட்ட நிலத்தண்டு
    2. கந்தம்
    3. கிழங்கு
    4. குமிழம்

மட்ட நிலத்தண்டு :

  • தண்டு தரைக்குக் கீழ் இருக்கும்.
  • இது கணு மற்றும் கணுவிடைகளோடு தடித்து காணப்படும்.
  • கணுவில் செதில் இலைகள் தோன்றம்
  • இது தரைக்குக் கீழ் கிடைமட்டமாகவும் குறிப்பிட்ட வடிவமின்றியும் இருக்கும்.
  • இதன் தண்டில் உள்ள மொட்டுகள் முளைத்து புதிய தண்டு மற்றும் இலைகளை உருவாக்கும். எ.டு. இஞ்சி, மஞ்சள்

கந்தம் :

  • இத்தரைக்கீழ் தண்டு வட்ட வடிவில் இருக்கும்
  • மேற்பகுதியும், அடிப்பகுதியும் தட்டையாக இருக்கும்.
  • இதன் செதில் இலைகளின் கோணத்திலிருந்து ஒன்று அல்லது பல மொட்டுகள் உருவாகும்.
  • ஒவ்வொரு மொட்டும் வளர்ந்து சேய்த் தாவரங்களை உருவாக்கும். எ.டு. சேனை, சேப்பங்கிழங்கு

கிழங்கு :

  • இது கோள வடிவில் உணவைச் சேமிக்கும் தரைகீழ்த் தண்டாகும்.
  • இதன் தண்டில் வளர்வடங்கிய மொட்டுகள் காணப்படும் (கண்கள்)
  • இக்கிழங்கின் ஒரு பகுதியை அதன் மொட்டோடு வெட்டி நடுவதன் மூலம் அவை முளைத்து புதிய தாவரத்தைத் தரும் எ.டு. உருளைக்கிழங்கு.

குமிழம் :

  • இதன் தண்டு மிகவும் குறுகியது. தட்டு போன்றது.
  • இதன் சதைப்பற்றான இலைகள் உணவைச் சேமிக்கும்.
  • இதில் இரண்டு வகை இலைகள் உள்ளன.
    1. சதைப்பற்றுள்ள இலை
    2. செதில் இலை
  • குமிழத்தின் உள்ளே உள்ள இலைகள் உணவைச் சேமிக்கும். எ.கா. பூண்டு, வெங்காயம்

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
இஞ்சி என்பது தண்டு. அது வேர் அல்ல ஏன்?
விடை:

  • ஆம் இஞ்சி என்பது தண்டின் மாற்றுருவாகும்.
  • இது தரைக்குக் கீழ் கிடைமட்டமாகவும், குறிப்பிட்ட வடிவமின்றியும் இருக்கும்.
  • இந்த தரைகீழ்தண்டு உணவைச் சேமிக்கும்.
  • இது கணு மற்றும் கணுவிடைகளோடு இருக்கும்.

Question 2.
ரோஜா மலரின் மகரந்தத் தூள், லில்லி மலரின் சூலக முடியில் விழுந்தால் என்ன – நடைபெறும்? அதில் மகரந்தத் தூள் வளர்ச்சியடையுமா? ஏன்?
விடை:

  • ரோஜா மலரின் மகரந்த்தூள் லில்லி மலரின் சூலக முடியில் விழுந்தால் அது வளர்ச்சி அடையாது.
  • மேலும் லில்லி மலரின் சூலக முடியானது அதன் இனத்தின் மகரந்தத் தாளினை மட்டும் இனங்கண்டு மகரந்தச் சேர்க்கை நடந்து கருவுறுதல் நிகழும். ரோஜா மலரின் மகரந்தத்தை ஏற்றுக் கொள்ளாது.

IX. பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி

Question 1.
கூற்று : பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல், கனிகளையும், விதைகளையும் உருவாக்குகின்றன.
காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது விதையாக மாறுகிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 2.
கூற்று : கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட் ஆகும்.
காரணம் : இது வேற்றிட வேரின் மாறுபாடாகும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி
விடை:
இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு

X. படம் சார்ந்த கேள்விகள்

Question 1.
பின்வரும் படங்களைப் பார்த்து, அதன் பாகங்களைக் குறிக்கவும்.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 12
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 5
சூலகமுடி சூலகம் மகரந்தக்கம்பி சூல் புல்லி மகரந்தத்தாள் அல்லி சூலகத்தண்டு மகரந்தத்தாள் சூற்பை

ii. அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு தாவரங்களை அடையாளம் காண்க.
பின்வரும் தாவரங்களின் மாற்றுருக்களை எழுதுக.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 13
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 6

7th Science Guide தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
மலரில் பெரியதாகத் தெரியும் பாகம் …………………….
அ) அல்லி
ஆ) புல்லி
இ) மகரந்தத்தாள்
ஈ) சூலகம்
விடை:
அ) அல்லி

Question 2.
மலரில் மகரந்தத்தாள்கள் அமைந்து சூலகவட்டம் இல்லாதிருந்தால் அதை …………………… என அழைக்கலாம்
அ) ஆண் மலர்
ஆ) பெண்ம லர்
இ) ஒருபால் மலர்
ஈ) இருபால் மலர்
விடை:
அ) ஆண்ம லர்

Question 3.
தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் எனப்படுபவை …………………… விதைகள் ஆகும்
அ) கத்தரி
ஆ) வெண்டை
இ) ஆர்க்கிட்
ஈ) சீத்தாப்பழம்
விடை:
இ) ஆர்க்கிட்

Question 4.
சூற்பை கருவுறுதலுக்குப் பின் ……………. ஆக மாறும்
அ) விதை
ஆ) கனி
இ) மலர்
ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
விடை:
ஆ) கனி

Question 5.
………………… ல் துண்டாதல் எனும் பாலில்லா இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
அ) ஸ்பைரோகைரா
ஆ) கரும்பு
இ) ஈஸ்ட்
ஈ) காளான்
விடை:
அ) ஸ்பைரோகைரா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சாதகமற்ற சூழ்நிலையில் பூவாத் தாவரங்களான பாசிகள் மற்றும் டெரிடோஃபைட்டுகள் ………. உருவாக்கும்
விடை:
ஸ்போர்களை

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 2.
…………………. வேர்கள் ஆலமரத்தின் கிடைமட்டக் கிளைகளில் இருந்து தோன்றி, பூமியை நோக்கி வளர்ந்து, தூண்போல் மாறி மரத்தை தாங்குகிறது.
விடை:
தூண்

Question 3.
……………… தாவரம் தொற்றுத் தாவரமாக மரங்களில்
விடை:
வளரும்

Question 4.
………….. ஓடு தண்டு எனும் தரையொட்டிய தண்டின் மாற்றுருக்கு வல்லாரை எடுத்துக்காட்டாகும்
விடை:
வாண்டா

Question 5.
………………. தாவரத்தின் இலையின் நுனி பற்றுக் கம்பியாக மாறியுள்ளது.
விடை:
(குளோரியோசா சூப்பர்பா

III. சரியா, தவறா? தவறெனில் சரியானதை எழுதுக

Question 1.
சூற்பைக்கு மேலே காணப்படும் மெல்லிய குழல் போன்ற பகுதிக்கு சூலகத்தண்டு என்று பெயர்.
விடை:
சரி

Question 2.
மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் அனைத்துக் காரணிகளும் மகரந்தச் சேர்க்கையாளர்கள் எனப்படும்.
விடை:
சரி

Question 3.
உறிஞ்சு வேர்கள் கஸ்குட்டா எனும் ஒட்டுண்ணித் தாவரத்தில் காணப்படுகிறது.
விட:
சரி

Question 4.
காட்டு ஸ்ட்ரா பெர்ரியில் காணப்படும் மாற்றுரு ஓடு தண்டாகும்.
விடை:
தவறு – ஸ்டோலன் என்பதே சரியான விடை

Question 5.
கொல்லிகளுக்கு அகேஷியா என்னும் தாவரம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
விடை:
தவறு – நெப்பன்தஸ் என்னும் தாவரமே சிறந்த எடுத்துக்காட்டாகும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 7
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 8

V. சரியான விடையை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்துக

Question 1.
(புல்லி , மகரந்தத்தாள், மகரந்தச் சேர்க்கையாளர், கருவுறுதல், மகரந்தச்சேர்க்கை )
1. ஒரு மலரில் மகரந்தத்தூள் சூலகமுடியை அடைவது
2. இலை போன்ற பசுமை நிறமுடைய அமைப்பு மற்றும் மொட்டினை முழுமையாக மூடுவது.
3. ஒரு மலரின் ஆண் இனப்பெருக்க வட்டம்
4. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் காரணிகள்
5. ஆண் கேமீட் மற்றும் பெண் கேமீட் இணையும் நிகழ்ச்சி
விடை:
1. மகரந்தச் சேர்க்கை
2. புல்லி
3. மகரந்தத்தாள்
4. மகரந்தச் சேர்க்கையாளர்
5. கருவுறுதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 2.
(ஆலமரம், முள்ளங்கி, மிளகு, இஞ்சி, பூண்டு)
1. தண்டு மிகவும் குறுகியது. தட்டு போன்றது.
2. கிடைமட்டக் கிளைகளில் இருந்து தோன்றும் வேர்கள் தூண் போல் தாவரத்தைத் தாங்குகிறது.
3. இது ஒரு தரைகீழ் மட்ட நிலத்தண்டு
4. பற்று வேர்கள் இக்கொடியில் உள்ளது.
5. கதிர்வடிவ ஆணிவேர் காணப்படுகிறது.
விடை:
1. பூண்டு
2. ஆலமரம்
3. இஞ்சி
4. மிளகு
5. முள்ளங்கி

VI. பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி.

Question 1.
கூற்று : நெப்பன்தஸ் தாவரத்தில் இலைகள் குடுவைகளாக மாறிப் பூச்சிகளை கவர்ந்து இழுக்கின்றன.
காரணம் : இலையின் உட்பகுதியில் சுரக்கப்படும் நொதிகளால் பூச்சிகளை உட்கொண்டு அவற்றிடமிருந்து நைட்ரஜனைப் பெறுகின்றன.

அ. கூற்றும் காரணம் தவறு ,
ஆ) கூற்றும் காரணமும் சரி
இ) கூற்று சரி ; காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ; காரணம் சரி
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி

Question 2.
கூற்று : விதைகள் இல்லாமல் மற்ற வழிகளில் நடைபெறும் இனப்பெருக்கத்தை நாம் பாலில்லா இனப்பெருக்கம் என்கிறோம்.
காரணம் : ஈஸ்ட் மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்வது பாலினப்பெருக்கம் ஆகும்.

அ. கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு; காரணம் சரி
இ) கூற்றும், காரணமும் சரி
ஈ) கூற்றும், காரணமும் தவறு
விடை:
அ . கூற்று சரி , காரணம் தவறு

VII. சரியான இணையை கண்டுபிடி

Question 1.
பற்று வேர்கள் : வெற்றிலை ; முட்டுவேர்கள் ………………
விடை:
கரும்பு

Question 2.
ஈஸ்ட் : மொட்டுவிடுதல் ; ஸ்பைரோகைரா ………………
விடை:
துண்டாதல்

VIII. மிகக் குறுகிய விடை தருக

Question 1.
உடல் இனப்பெருக்கம் என்றால் என்ன?
விடை:
தாவரத்தின் உடல் உறுப்புகளான வேர், தண்டு மற்றும் இலைகள் தாவரத்தின் இனப்பெருக்கத்திற்கு உதவுவதை உடல் இனப்பெருக்கம் என்கிறோம்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 2.
வறண்ட சூழ்நிலையிலுள்ள தாவரத்தின் நீராவிப்போக்கினைகுறைக்க உதவும் தகவமைப்பு என்ன?
விடை:

  • கள்ளித் தாவரங்களின் கடினமான தண்டு ஒளிச்சேர்க்கையைச் செய்யும்
  • அதன் இலைகள் முட்களாக மாறியுள்ளன.
  • இதனால் மேற்பரப்பு குறைவதால் நீராவிப்போக்கு தவிர்க்கப்படும்

Question 3.
வாண்டா தாவரத்தைப் பற்றி நீவிர் அறிவது யாது?
விடை:
வாண்டா தாவரம் தொற்றுத் தாவரமாக மரங்களில் வளரும். இதன் தொற்றுவேர்களில் உள்ள வெலமன் திசு காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி ஒளிச்சேர்க்கைக்கு உதவும்.

IX. குறுகிய விடை தருக தன் மகரந்தச்சேர்க்கை.

Question 1.
அயல் மகரந்தச் சேர்க்கை வேறுபடுத்துக. தன் மகரந்தச்சேர்க்கை
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 9

Question 2.
இரட்டைத் தேங்காயின் சிறப்பு என்ன?
விடை:

  • உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை இரட்டைத் தேங்காய் ஆகும்.
  • இதன் விதை இரண்டு தேங்காய் ஒன்றோடொன்று இணைந்து உருவானது போல் இருக்கும்.
  • இவ்விதை சேசில்லிஸ் என்ற இடத்தில் உள்ள இரண்டு தீவுகளில் மட்டுமே முளைக்கும்.
  • ஒருவிதையின் நீளம் 12 அங்குலம், அகலம் 3 அடி எடை 18 கிலோ உள்ளதாக இருக்கும்.

Question 3.
தாவரத்தின் வாழ்க்கைச் சுழற்சியை படம் வரைந்து பாகங்களைக் குறி.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 10

Question 4.
ஹாஸ்டோரியாவின் முக்கிய பணி என்ன?
விடை:
கஸ்குட்டா என்ற ஒட்டுண்ணித் தாவரம் பிற மரங்களிலும், மற்ற தாவரங்களிலும் படர்ந்து தனது உறிஞ்சு வேர் (அல்லது) ஹாஸ்டோரியா மூலம் தாவரத் திசுக்களைத் துளைத்து அதிலுள்ள ஊட்டச் சத்தை உறிஞ்சுகின்றன.

இவ்வகை வேர்கள் பொதுவாக ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படுகிறது.

Question 5.
நிமட்டோஃபோர்கள் என்றால் என்ன?
விடை:

  • அவிசீனியா என்ற மரத்தின் வேர்கள் வாயு பரிமாற்றத்திற்காகத்தரைக்கு மேலே வளர்கின்றன.
  • இவை சுவாசிக்கும் வேர்கள் அல்லது நிமட்டோபோர்கள் எனப்படுகின்றன.
  • குச்சி போன்ற இந்த வேர்களில் உள்ள எண்ணற்ற துளைகள் மூலம் வாயு பரிமாற்றம் நடைபெறுகிறது.

X. விரிவான விடை தருக

Question 6.
ஒரு மலரில் கருவுறுதலுக்குப்பின் நடைபெறும் மாற்றங்களை பட்டியலிடுக.
விடை:
அ) சில கனிகளில் புல்லி வட்டம் கனியோடு ஒட்டி நிலைத்திருக்கும்.
ஆ) அல்லிகள் கீழே உதிரும்
இ) மகரந்தத்தாள் வட்டமும் உதிரும்
ஈ) சூற்பை கனியாக மாறும்
உ) சூலகத்தண்டும், சூற்பையும் உதிரும்.
ஊ) சூலகம் பருத்து உணவைச் சேமித்துக் கனியாக உருவாகிறது
எ) சூற்பையில் உள்ள சூல்கள் விதைகளாக மாறும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

Question 7.
உடல் இனப்பெருக்கம் என்றால் என்ன? அதன் வெவ்வேறு வகைகளை விவரி.
விடை:
தாவரத்தின் உடல் உறுப்புகளான வேர், தண்டு மற்றும் இலைகள் தாவரத்தின் இனப்பெருக்கத்திற்கு உதவுதலை உடல் இனப்பெருக்கம் என்கிறோம். அதன் பிறவகைகள் பின்வருமாறு

மொட்டு விடுதல் :

  • ஈஸ்ட் என்ற ஒரு செல் உயிரிதான் சமமற்ற பகுப்படைந்து ஒரு சிறிய மொட்டினைத் தோற்றுவிக்கும்.
  • இது படிப்படியாக வளர்ந்து தாய் செல்லிலிருந்து விடுபட்டுப் புதிய ஈஸ்ட் செல்லாக மாறும்.

துண்டாதல்

  • ஸ்பைரோகைரா முதிர்ச்சியடையும் போது பல துண்டுகளாக உடையும்
  • பின் ஒவ்வொரு துண்டும் வளர்ந்து புதிய இழையை உருவாக்கும். இதுவே துண்டாதல் எனப்படும்

ஸ்போர் உருவாதல் :

  • சாதமற்ற சூழலில் (தண்ணீர் இல்லாமை, உயர் வெப்பநிலை, ஊட்டச்சத்து குறைபாடு) பூவாத் தாவரமான பாசிகள் மற்றும் டெரிடோஃபைட் தாவரங்கள் ஸ்போர்களை உருவாக்கும்.
  • இவை சாதகமான சூழ்நிலையில் முளைத்து புதிய தாவரத்தை உருவாக்கும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் 11

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

7th Science Guide நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை _____________ ஆக வகைப்படுத்தலாம்
அ) இயற்பியல் மாற்றம்
ஆ)வேதியியல் மாற்றம்
இ) வெப்பம் கொள் மாற்றம்
ஈ) வெப்ப உமிழ் மாற்றம்
விடை:
அ) இயற்பியல் மாற்றம்

Question 2.
பின்வருவனவற்றுள் _____________ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.
அ) குளிர்வடைதல் மற்றும் உருகுதல்
ஆ) குளிர்வடைதல் மற்றும் உறைதல்
இ) ஆவியாதல் மற்றும் உருகுதல்
ஈ) ஆவியாதல் மற்றும் உறைதல்
விடை:
இ) ஆவியாதல் மற்றம் உருகுதல்

Question 3.
கீழ்காண்பவற்றில் _____________ வேதியியல் மாற்றமாகும்.
அ) நீர் மேகங்களாவது
ஆ) ஒரு மரத்தின் வளர்ச்சி
இ) பசுஞ்சாணம் உயிர் எரிவாயுவாவது
ஈ) பனிக்கூழ் கரைந்த நிலை பனிக்கூழாவது
விடை:
இ) பசுஞ்சாணம் உயிர் எரிவாயுவாவது

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 4.
_____________ என்பது கால – ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
அ) பூகம்பம்
ஆ) வானில் வானவில் தோன்றுவது
இ) கடலில் அலைகள் தோன்றுவது
ஈ) மழை பொழிவு
விடை:
இ) கடலில் அலைகள் தோன்றுவது

Question 5.
________________ வேதிமாற்றம் அல்ல.
அ) அம்மோனியா நீரில் கரைவது
ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு நீரில் கரைவது
இ) உலர் பனிக்கட்டி நீரில் கரைவது
ஈ) துருவப் பனிக்குழிழ்கள் உருகுவது
விடை:
ஈ) துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஒரு பலூனினுள் வெப்பக் காற்றினை அடைப்பது _____________ மாற்றமாகும்.
விடை:
இயற்பியல்

Question 2.
தங்க நாணயத்தினை ஒரு மோதிரமாக மாற்றுவது ______________ மாற்றமாகும்
விடை:
இயற்பியல்

Question 3.
ஒரு காஸ் சிலிண்டரின் திருகினை திருப்புவதன் மூலம் _____________ எரிபொருள் ______________ எரிபொருளாக மாறும். இது மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
விடை:
திரவ, வாயு, இயற்பியல்

Question 4.
உணவு கெட்டுப்போதல் என்பது ______________ மாற்றமாகும்.
விடை:
வேதியியல்

Question 5.
சுவாசம் என்பது _____________ மாற்றமாகும்.
விடை:
வேதியியல்

III. சரியா? தவறா? தவறெனில், சரியான விடையினைக் கூறவும்

Question 1.
ஒரு துணியினை வெட்டுதல் என்பது கால ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
விடை:
தவறு – ஒரு துணியினை வெட்டுதல் என்பது கால ஒழுங்கற்ற மாற்றதிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

Question 2.
ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
விடை:
தவறு – ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 3.
ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக மாறுவது ஒரு இயற்பியல் மற்றும் கால ஒழுங்கற்ற மாற்றமாகும்.
விடை:
தவறு – ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக
மாறுவது ஒரு வேதியியல் மற்றும் கால ஒழுங்கு மாற்றமாகும்.

Question 4.
ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால், அது கால ஒழுங்கு மாற்றமாகும்.
விடை:
தவறு – ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால், அது இயற்பியல் மாற்றமாகும்.

Question 5.
வெள்ளி நகையின் நிறம் மங்குதல் என்ற நிகழ்வு வெப்பம் கொள் மாற்றமாகும்.
விடை:
தவறு – வெள்ளி நகையின் நிறம் மங்குதல் என்ற நிகழ்வு வெப்பம் உமிழ் மாற்றமாகும்.

IV. கீழ்காண்பவற்றை பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 2

V. பின்வரும் மாற்றங்களை இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களாக வகைப்படுத்துக

சொரப்பான மரக்கட்டையினை மணலிட்டு தேய்த்து வழுவழுப்பாக்குவது, இரும்பு ஆணி துருப்பிடித்தல் இரும்பு கதவில் பெயிண்ட் பூசுவது, ஒரு காகித கிளிப்பினை வளைப்பது, வெள்ளியை தட்டாக மாற்றுவது, சப்பாத்தி மாவை உருட்டி மெலிதாக்குவது, இரவு-பகல் மாற்றம், எரிமலை வெடிப்பது, தீக்குச்சி எரிவது, மாவிலிருந்து தோசை தயாரிப்பது, கண் இமை சிமிட்டுதல், இடி முழக்கம் தோன்றுவது, புவியின் சுழற்சி, கிரகணங்கள் தோன்றுதல்.
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 3
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 4

VI. ஒப்புமை தருக

Question 1.
இயற்பியல் மாற்றம் : கொதித்தல் :: வேதியியல் மாற்றம் : …………..
விடை:
துருப்பிடித்தல்

Question 2.
மரக்கட்டையிலிருந்து மரத்தூள் : …………………….. மரக்கட்டையிலிருந்து சாம்பல் : வேதியியல் மாற்றம்.
விடை:
இயற்பியல் மாற்றம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 3.
காட்டுத்தீ …………… மாற்றம் :: ஒரு பள்ளியில் பாட வேளை மாறுபாடு : கால ஒழுங்கு மாற்றம்.
விடை:
கால ஒழுங்கற்ற மாற்றம்

VII. மிகக் குறுகிய வகை வினா

Question 1.
கால ஒழுங்கு மாற்றங்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:

  1. பூமியின் சுழற்சி மற்றும் சுற்றுதல்
  2. இதயத்துடிப்பு

Question 2.
இரு வெப்ப உமிழ் வினைகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. மெக்னீசியம் நாடா எரிதல்
  2. சுண்ணாம்புடன் நீர் சேர்த்தல்

Question 3.
குளிர்ந்த பாலினை வெப்பப்படுத்தினால் அது சூடாகிறது இது எந்த வகையான மாற்றம்?
விடை:

  • குளிர்ந்த பாலினை வெப்பப்படுத்துதல் ஒரு இயற்பியல் மாற்றம்.
  • ஏனெனில் புதிய பொருள் உருவாகவில்லை
  • பாலின் இயைபு மாறாமல் உள்ளது.

Question 4.
செயற்கை முறையில் பழத்தினை பழுக்க வைத்தல் எந்த வகை மாற்றமாகும்?
விடை:
செயற்கை முறையில் பழத்தினை பழுக்க வைத்தல் வேதிப் பொருட்களால் நடைபெறும் வேதியியல் மாற்றமாகும்.

Question 5.
ஒரு காகிதத்தை வண்ணமடித்தல் எவ்வகை மாற்றமாகும்?
விடை:

  • ஒரு காகிதத்தை வண்ணமடித்தல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்
  •  ஏனெனில் காகிதத்தின் இயைபு மாறவில்லை .

Question 6.
இதயத்துடிப்பு கால ஒழுங்கு மாற்றமாகும் ஏன்?
விடை:

  • சீரான கால இடைவெளியில் இதயம் துடிக்கின்றது.
  • எனவே இதயத்துடிப்பு கால ஒழுங்கு மாற்றமாகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 7.
ஒரு பனிக்கட்டி உருகும் பொழுது எந்த மாதிரியான ஆற்றல் மாற்றங்கள் நிகழ்கின்றன?
விடை:

  • ஒரு பனிக்கட்டி உருகும் பொழுது காற்றிலிருந்து வெப்பம் உறிஞ்சப்டுகிறது.
  • எனவே அது ஒரு வெப்ப ஏற்பு மாற்றமாகும்.

VIII. குறுகிய விடையளி / சிறுவினா

Question 1.
இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 5

Question 2.
ஒரு பொருளில் மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது?
விடை:

  • ஒரு பொருளில் ஏற்படும் மாற்றம் என்பது அதன் இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றம் அல்லது வேதி இயைபில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
  • இயற்பியல் பண்புகளில் மட்டும் மாற்றம் நிகழ்ந்தால் அது இயற்பியல் மாற்றம் ஆகும்.
  • வேதி இயைபில் மாற்றம் நிகழ்ந்தால் அது வேதியியல் மாற்றம் ஆகும்.
  • ஒரு பொருள் இயற்பியல் மாற்றம் அல்லது வேதியியல் மாற்றத்திற்கு உட்படலாம்.
  • பனிக்கட்டி நீராக உருகும்போது திண்மநிலையிலிருந்து, திரவ நிலைக்கு மாறுவதால், இது இயற்பியல் மாற்றமாகும்.
  • இரும்பு ஈரக் காற்றில் பழுப்பு நிற துரு எனப்படும் புதிய பொருளை உருவாக்குவதால், துருப்பிடித்தல் ஒரு வேதியியல் மாற்றமாகும்.

Question 3.
கடல் நீரில் இருந்து நீரைப் பெறும் முறை ஒன்றினை உம்மால் கூற முடியுமா?
விடை:

  • கடல் நீரினை கொதிக்க வைக்கும் போது தூய நீர் ஆவியாகிறது. உப்பு கொதிகலனில் படிகிறது. (ஆவியாதல்)
  • இந் நீராவியை குளிர்விக்கும்போது தூய நீர் கிடைக்கிறது. (ஆவி சுருங்குதல்)
  • இம் முறையில் கடல் நீரிலிருந்து தூய நீரைப் பெறமுடியும்.

Question 4.
சூரியக் கிரகணம் கால ஒழுங்கு மாற்றமா? காரணம் தருக.
விடை:

  • இல்லை , சூரியக் கிரகணம் கால ஒழுங்கற்ற மாற்றமாகும்
  • ஏனெனில் சீரான கால இடைவெளியில் சூரியக் கிரகணம் நடை பெறுவதில்லை.

Question 5.
சர்க்கரைக் கரைதல் மற்றும் சர்க்கரை எரிதல் – இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 6

IX. நெடுவினா

Question 1.
உணவு செரித்தல் ஒரு வேதியியல் மாற்றம் இவ்வாக்கியத்தினை விளக்கவும்.
விடை:

  • உணவு செரித்தல் – என்பது சிக்கலான உணவு பொருட்கள் நொதிகள் மூலம் எளிய பொருட்களாக மாற்றப்படும் நிகழ்வாகும்.
  • உணவு செரித்தலின் போது புதிய எளிய வேதிப் பொருட்கள் உருவாகின்றன.
  • உருவாகும் புதிய எளிய வேதிப் பொருட்களின் இயைபு உணவு பொருட்களிலிருந்து வேறுபடுகின்றன.
  • எனவே உணவு செரித்தல் ஒரு வேதியியல் மாற்றம் ஆகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 2.
மண் வெட்ட பயன்படும் உபகரணங்களில் இரும்புப் பகுதியுடன் மரக்கைப்பிடி எவ்வாறு பொருத்தப்படுகிறது?
விடை:
மண் வெட்ட பயன்படும் உபகரணங்களின் இரும்புப் பகுதி சூடேற்றப்பட்டு மரக்கைப்பிடியுடன் பொருத்தப்படுகிறது.

X. உயர் சிந்தனைத் திறன் வினாக்கள்

Question 1.
உரித்த வாழைப்பழமும் , உரிக்காத வாழைப்பழமும் பார்ப்பதற்கு வேறு வேறாகத் தெரிகிறது. இதிலிருந்து வாழைப்பழம் உரிப்பது வேதியியல் மாற்றம் என்று கூற இயலுமா?
விடை:

  1. கூற இயலாது. வாழைப்பழம் உரிப்பது வேதியியல் மாற்றமல்ல
  2. து ஒரு இயற்பியல் மாற்றம்
  3. ஏனெனில் இம்மாற்றத்தில் புதிய பொருள் உருவாகவில்லை. வாழைப்பழத்தின் இயைபு மாறாமல் உள்ளது.

Question 2.
மிகச் சூடான கண்ணாடி ஒன்று குளிர்ந்த நீரில் போட்டவுடன் விரிசல் அடைகிறது. இம்மாற்றம் எதை உணர்த்துகிறது?
விடை:

  • இது ஒரு இயற்பியல் மாற்றம்
  • மிகக் சூடான கண்ணாடி குளிர்ந்த நீரில் போட்டவுடன் விரிசல் அடைகிறது.
  • இதில் கண்ணாடியின் உருவம் மாற்றமடைகிறது. இயைபில் எவ்வித மாற்றமுமில்லை.
  • எனவே இது ஒரு இயற்பியல் மாற்றம் ஆகும்.

Question 3.
நீர் கொதித்தல் ஒரு இயற்பியல் மாற்றம், முட்டை வேகவைத்தல் ஒரு வேதியியல் மாற்றம். ஏன்?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 7

XI. வலியுறுத்தல் – காரணம் வகை வினா

Question 1.
வாக்கியம் : பட்டாசு வெடித்தல் ஒரு இயற்பியல் மாற்றம்.
காரணம் : இயற்பியல் மாற்றம் ஒரு மீள் மாற்றமாகும்.

அ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும்.
ஆ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் வாக்கியம் காரணத்திற்கு சரியான விளக்கம் அல்ல
இ) வாக்கியம் சரி, ஆனால் காரணம் தவறு
ஈ) வாக்கியம் தவறு, ஆனால் காரணம் சரி.
விடை:
ஈ) வாக்கியம் தவறு, ஆனால் காரணம் சரி
சரியான வாக்கியம் : பட்டாசு வெடித்தல் ஒரு வேதியியல் மாற்றம்.

Question 2.
வாக்கியம் : திரவ நிலை நீர் வெப்பப்படுத்துவதால் அதன் வாயு நிலைக்கு மாறுவது கொதித்தல் எனப்படும்.
காரணம் : நீராவி குளிர்வடைந்து நீராக மாறுவது குளிர்வித்தல் எனப்படும்.

அ) வாக்கியம் மற்றம் காரணம் சரி, மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும்.
ஆ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கம் அல்ல.
இ) வாக்கியம் சரி, ஆனால் காரணம் தவறு .
ஈ) வாக்கியம் தவறு, ஆனால் காரணம் சரி.
விடை:
ஆ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கம் அல்ல.

சரியான காரணம் : ஒரு திரவத்தினை வெப்பப்படுத்தும் போது அதன் துகள்கள் அதிக ஆற்றலைப் பெற்று வேகமாக அதிர்வடைகிறது. போதிய ஆற்றலைப் பெற்றவுடன் துகள்கள் தன்னிடையே உள்ள ஈர்ப்பு விசையினை எதிர்கொண்டு ஒன்றையொன்று விலக்கி தனித்தனியே ஒழுங்கற்றதாக இடம் பெயர்கிறது.

Question 3.
வாக்கியம் : மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்.
காரணம் : ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியும்.

அ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும்.
ஆ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கம் அல்ல.
இ) வாக்கியம் சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) வாக்கியம் தவறு, ஆனால் காரணம் சரி.
விடை:
வாக்கியம் மற்றும் காரணம் இரண்டுமே தவறு.

சரியான வாக்கியம் : மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு வேதியில் மாற்றமாகும்.
சரியான காரணம் : ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைப்பொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியாது.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 4.
வாக்கியம் : இரும்பிலிருந்து இரும்பு ஆக்ஸைடு உருவாவது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
காரணம் : இரும்பிலிருந்து துரு உருவாக, அது காற்று மற்றும் நீருடன் வினை பட வேண்டும்.

அ) வாக்கியம் மற்றும் காரணம் சரி. மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும்.
ஆ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கம் அல்ல.
இ) வாக்கியம் சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) வாக்கியம் தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) வாக்கியம் மற்றும் காரணம் சரி. மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும்.

Question 5.
வாக்கியம் : ஒரு துளி பெட்ரோலினை விரலால் தொட்டால் குளிர்ச்சியான உணர்வு ஏற்படுகிறது.
காரணம் : மேற்கூறிய நிகழ்வு வெப்பம் கொள் மாற்றமாகும்.

அ) வாக்கியம் மற்றும் காரணம் சரி மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும்.
ஆ) வாக்கியம் மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கம் அல்ல.
இ) வாக்கியம் சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) வாக்கியம் தவறு, ஆனால் காரணம் சரி.
விடை:
அ) வாக்கியம் மற்றும் காரணம் சரி. மேலும் காரணம் வாக்கியத்திற்கு சரியான விளக்கமாகும்.

XII. படம் சார்ந்த வினா

Question 1.
படத்தினை உற்றுநோக்கி இதனுடன் தொடர்புடைய மாற்றங்களைப் பட்டியலிடவும்.
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 8
விடை:
அ) வேதியியல் மாற்றம்
ஆ) வெப்ப உமிழ் மாற்றம்
இ) கால ஒழுங்கற்ற மாற்றம்

Question 2.
படத்தில் காணும் கெட்டிலில் உப்பு நீர் இருப்பதாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 9
அ) கெட்டிலில் நடைபெறும் நிகழ்வின் பெயர் என்ன?
விடை:
கொதித்தல்

ஆ) கெட்டிலில் உள்ள திரவம் என்னவாகும்.
விடை:
ஆவியாகும்

இ) உலோகத் தட்டின் குளிர்ந்த பகுதியில் நிகழக்கூடிய மாற்றம் என்ன?
விடை:
ஆவி சுருங்குதல்

ஈ) முகவையில் சேகரிக்கப்படும் நீரின் தரம் பற்றி நீவிர் அறிவது என்ன?
விடை:
தூய நீராகும்

7th Science Guide நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது, அதன் நிறை.
அ) அதிகரிக்கிறது
ஆ) குறைகிறது
இ) மாறாமல் உள்ளது
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
இ) மாறாமல் உள்ளது

Question 2.
ஒரு திடப்பொருளை நேரடியாக வாயுவாக மாற்றும் செயல்முறை.
அ) உருகுதல்
ஆ) ஆவியாதல்
இ) ஆவி சுருங்குதல்
ஈ) பதங்கமாதல்
விடை:
ஈ) பதங்கமாதல்

Question 3.
கடல் நீரில் உள்ள உப்பினை பிரித்தெடுக்கும் செயல்முறை.
அ) கொதித்தல்
ஆ) ஆவியாதல்
இ) ஆவி சுருங்குதல்
ஈ) உறைதல்
விடை:
ஆ) ஆவியாதல்

Question 4.
நறுக்கிய ஆப்பிள் துண்டு காற்றில் பழுப்பு நிறமாக மாறுவது.
அ) இயற்பியல் மாற்றம்
ஆ) வேதியியல் மாற்றம்
இ) கால ஒழுங்கு மாற்றம்
ஈ) கால ஒழுங்கற்ற மாற்றம்
விடை:
ஆ) வேதியியல் மாந்து

Question 5.
குளுக்கோஸ் நீரில் கரைவது
அ) கால ஒழுங்கு மாற்றம்
ஆ) கால ஒழுங்கற்ற மாற்றம்
இ) வெப்ப உமிழ் மாற்றம்
ஈ) வெப்ப ஏற்பு மாற்றம்
விடை:
ஈ) வெப்ப ஏற்பு மார்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பனிப்பொழிவு என்பது ……………… செயல்முறை
விடை:
ஆவி சுருங்குதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 2.
நீரை பனிக்கட்டியாக மாற்றுவது …………… செயல்முறை
விடை:
உறைதல்

Question 3.
தீக்குச்சி எரிவது …………… மாற்றம்.
விடை:
வேதியியல்

Question 4.
சர்க்கரை கரைசலை ஆல்கஹால் மற்றும் கார்பன்டை ஆக்சைடாக மாற்றும் செயல்முறை …………………..
விடை:
நொதித்தல்

Question 5.
வேதிமாற்றத்தின் வேகத்தினை துரிதப்படுத்தும் பொருள் ………………. எனப்படும்.
விடை:
வினையூக்கி

III. சரியா? தவறா? தவறெனில், சரியான விடையினைக் கூறவும்

Question 1.
ஒரு திரவத்தினை வெப்பப்படுத்தும் போது அதன் துகள்கள் ஆற்றலை இழந்து மெது அதிர்வடைகிறது.
விடை:
தவறு – ஒரு திரவத்தினை வெப்பப்படுத்தும் போது அதன் துகள்கள் அதிக ஆற்ற:
பெற்று வேகமாக அதிர்வடைகிறது.

Question 2.
தங்கம் உருக்கப்படும் போது அதன் வேதி இயைபு மாற்றமடைகிறது.
விடை:
தவறு – தங்கம் உருக்கப்படும் போது அதன் வேதி இயைபு மாற்றமடைவதில்லை

Question 3.
உறைதல் மற்றும் ஆவி சுருங்குதலில் வெப்பம் நீக்கப்படுவதால், அவை வெப்ப உமிழ் நிகழ்வுகளாகும்.
விடை:
தவறு

Question 4.
ஈரமான துணிகள் உலர்தல் ஒரு வேதியியல் மாற்றமாகும்.
விடை:
தவறு – ஈரமான துணிகள் உலர்தல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்.

Question 5.
படிகமாக்குதல் என்பது ஒரு பிரித்தெடுக்கும் முறையாகவும் தூய்மையாக்கும் முறையாக திகழ்கிறது.
விடை:
தவறு

IV. கீழ்காண்பவற்றை பொருத்துக

Question 1.
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 10
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 11

Question 2.
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 12
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 13

V. சரியான வரிசையில் எழுதுக.

Question 1.
கார்பன்டை ஆக்சைடு மற்றும் எலுமிச்சைச் சாறை கலக்கும் போது சமையல் சோடா உருவாகிறது.
விடை:
சமையல் சோடா மற்றும் எலுமிச்சைச் சாறை கலக்கும் போது கார்பன்டை ஆக்சைடு உருவாகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 2.
திரவம், ஆவியாக மாறும் செயல்முறை ஆவி சுருங்குதல் எனப்படும்.
விடை:
ஆவி, திரவமாக மாறும் செயல்முறை ஆவி சுருங்குதல் எனப்படும்.

VI. ஒப்புமை தருக.

Question 1.
கடிகாரம் மணிக்கொருமுறை ஒலிப்பது : கால ஒழுங்கு மாற்றம் இடியுடன் கூடிய மழைப் பொழிவு : _____________
விடை:
கால ஒழுங்கற்ற மாற்றம்

Question 2.
காகிதத் துண்டை எரித்தல் : வேதியியல் மாற்றம் காகிதத் துண்டை வெட்டுதல் : ____________
விடை:
இயற்பியல் மாற்றம் (அ) கால ஒழுங்கற்ற மாற்றம்

VII. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று (A) : நீண்ட நேரம் சூரிய ஒளி நேரடியாக படுமாறு வைக்கப்பட்ட குவளையில் உள்ள நீரின் மட்டம் குறைகிறது.
காரணம் (R) : வெப்பநிலை அதிகரிக்கும் போது அதிகமான மூலக்கூறுகள் நீர்பரப்பிலிருந்து எளிதாக வெளியேறுகிறது.

அ) A மற்றும் R சரி, R.ஆனது A யின் சரியான விளக்கம்
ஆ) A மற்றும் R சரி, R ஆனது A யின் சரியான விளக்கமல்ல
இ) A சரி ஆனால் R தவறு.
.ஈ) A தவறு ஆனால் R சரி .
விடை:
அ) A மற்றும் R சரி R ஆனது A யின் சரியான விளக்கம்

Question 2.
கூற்று (A) : இரும்பு துருப்பிடித்தல் ஒரு வேதியியல் மாற்றம்.
காரணம் (R) : இரும்பு துருப்பிடித்தலை நாக முலாம் பூசுதல் தடுக்கிறது.

அ) A மற்றும் R சரி, R ஆனது A யின் சரியான விளக்கம்
ஆ) A மற்றும் R சரி, R ஆனது A யின் சரியான விளக்கமல்ல
இ) A சரி ஆனால் R தவறு.
ஈ) A தவறு ஆனால் R சரி .
விடை:
ஆ) A மற்றும் R சரி, R ஆனது A யின் சரியான விளக்கமல்ல

VIII. மிகக் குறுகிய வகை வினா

Question 1.
நறுக்கிய ஆப்பிள் துண்டு பழுப்பு நிறமாக மாறும்போது எவ்வகையான வேதியியல் மாற்றம் நடைபெறுகிறது?
விடை:
ஆக்சிஜனேற்ற வினை நடைபெறுகிறது

Question 2.
இரும்பு துருப்பிடித்தலின் போது எவ்வகையான வேதியியல் மாற்றம் நடைபெறுகிறது?
விடை:
ஆக்சிஜனேற்ற வினை நடைபெறுகிறது

Question 3.
இரும்பின் மீது குரோமியம் அல்லது துத்தநாக படலத்தை பூசும் செயல்முறையின் பெயர் என்ன ?
விடை:
நாக முலாம் பூசுதல்

Question 4.
சமையல் சோடாவுடன் எலுமிச்சைச் சாறை சேர்க்கும் போது வெளிப்படும் வாயு எது?
விடை:
கார்பன் டை ஆக்சைடு

Question 5.
சர்க்கரையின் நொதித்தல் வினையில் பயன்படும் வினையூக்கி எது?
விடை:
ஈஸ்ட்

IX. குறுகிய விடையளி / சிறு வினா

Question 1.
இயற்பியல் மாற்றங்கள் என்றால் என்ன?
விடை:

  • பொருளின் இயற்பியல் பண்புகளில் மட்டுமே மாற்றங்கள் ஏற்பட்டால் அவை இயற்பியல் மாற்றங்கள் எனப்படும்.
  • வேதி இயைபில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை
  • புதிய பொருள் எதுவும் உண்டாவதில்லை

Question 2.
இயற்பியல் பண்புகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
பளபளப்பு, தகடாகும் தன்மை, நீளுமை, அடர்த்தி, பாகுத்தன்மை , கரைதிறன், நிறை, பருமன்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 3.
வேதியியல் மாற்றங்கள் என்றால் என்ன?
விடை:

  • பொருளின் வேதியியல் பண்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவை வேதியியல் மாற்றங்கள் எனப்படும்.
  • வேதி இயைபில் மாற்றங்கள் ஏற்படுகின்றன
  • வெப்பமோ, ஒளியோ வெளிப்படுகிறது.
  • புதிய பொருள்கள் உருவாகின்றன.

Question 4.
உருகுதல் என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளை கதல் மூலம் திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாற்றுவது உருகுதல் எப்படும்.

Question 5.
உறைதல் என்றால் என்ன?
விடை:
திரவநிதை பொருள் குளிர்விப்பதன் மூலம் திண்ம நிலைக்கு மாறும் நிகழ்வு உறைதல் எனப்படும்.

Question 6.
ஆவியாதல் என்றால் என்ன?
விடை:
ஒரு திரவத்தினை வெப்பப்படுத்தி வாயு நிலைக்கு மாற்றும் முறைக்கு ஆவியாதல் என்று பெயர்.

Question 7.
ஆவி சுருங்குதல் என்றால் என்ன?
விடை:
வாயு நிலையில் உள்ள பொருள் குளிர்வித்தல் மூலம் நீர்மநிலைக்கு மாறும் நிகழ்வு ஆவி சுருங்குதல் எனப்படும்.

Question 8.
கால ஒழுங்கு மாற்றங்கள் என்றால் என்ன?
விடை:
குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றங்களானது மீண்டும் நிகழ்ந்தால், அவை கால ஒழுங்கு மாற்றங்கள் எனப்படும்.

Question 9.
கால ஒழுங்கற்ற மாற்றங்கள் என்றால் என்ன?
விடை:
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் நிகழாத மாற்றங்களும், சீரற்ற கால இடைவெளியில் நிகழும் மாற்றங்களும் கால ஒழுங்கற்ற மாற்றங்கள் எனப்படும்.

Question 10.
சமையல் சோடா மற்றும் எலுமிச்சைச் சாற்றிற்கு இடையே நிகழும் வேதிவினையின் வார்த்தைச் சமன்பாட்டை எழுதுக.
விடை:
சோடியம்பைகார்பனேட் + சிட்ரிக் அமிலம் → சோடியம் சிட்ரேட் + கார்பன்டை ஆக்சைடு + நீர்

Question 11.
வினையூக்கிகள் என்றால் என்ன?
விடை:

  • வேதி மாற்றத்தின் வேகத்தினை மட்டும் துரிதப்படுத்தும் பொருட்கள் வினையூக்கிகள் எனப்படும்.
  • வினையூக்கிகள் வேதி வினையில் எந்த வேதிமாற்றத்திற்கும் உட்படாது.

Question 12.
வெப்ப உமிழ் வேதிமாற்றங்கள் என்றால் என்ன?
விடை:
வெப்பத்தை வெளியிடும் வேதிமாற்றங்கள் வெப்ப உமிழ் வேதிமாற்றங்கள் எனப்படும்.

Question 13.
வெப்ப ஏற்பு வேதிமாற்றங்கள் என்றால் என்ன?
விடை:
வெப்பத்தை உறிஞ்சும் வேதிமாற்றங்கள் வெப்ப ஏற்பு வேதிமாற்றங்கள் எனப்படும்.

Question 14.
கால ஒழுங்கு மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
பூமியின் சுழற்சி மற்றும் சுற்றுதல், இதயத்துடிப்பு, மணிக்கொரு முறை கடிகாரம் அடிக்கும் – நிகழ்வு. குளிர்காலம், கோடை காலம்.

Question 15.
கால ஒழுங்கற்ற மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
எரிமலை வெடித்தல், நில நடுக்கம் ஏற்படுதல், இடியுடன் கூடிய மழைப்பொழிவின்போது தோன்றும் மின்னல், விக்கெட்டுகளுக்கிடையே ஆட்டக்காரரின் ஓட்டம், நடனம் ஆடுபவரின் கால்களின் இயக்கம்.

Question 16.
பதங்கமாதல் என்றால் என்ன?
விடை:
வெப்பப்படுத்தும் போது திண்மநிலையிலிருந்து நேரடியாக வாயு நிலைக்கு பொருள்கள் மாறும் நிகழ்விற்கு பதங்கமாதல் என்று பெயர்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 17.
ஈரத்துணிகளை உலர்த்துவதற்கு அவற்றை விரித்து போடுவது ஏன்?
விடை:

  • ஈரத்துணிகளை விரித்துப் போடும்போது, அவற்றின் புறப்பரப்பு அதிகமாகிறது.
  • புறப்பரப்பு அதிகமாகும் போது ஆவியாதலின் வேகம் அதிகரிக்கிறது.
  • எனவே விரித்து போடப்பட்ட ஈரத்துணிகள் விரைவாக உலர்கின்றன.

X. நெடுவினா

Question 1.
வேதியியல் மாற்றங்களின் முக்கியத்துவங்கள் சிலவற்றை கூறுக.
விடை:

  1. இயற்கையில் காணப்படும் தாதுக்களில் இருந்து வேதியியல் மாற்றங்கள் மூலம் உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
  2. தொடர்ச்சியான பல வேதியியல் மாற்றங்களால் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
  3. ப்ளாஸ்டிக்குகள், சோப்புகள், சலவைக் கட்டிகள், வாசனைத் திரவியங்கள், அமிலங்கள், காரங்கள், உப்புகள், இன்ன பிற பொருட்கள் வேதியியல் மாற்றங்களால் தயாரிக்கப்படுகின்றன.
  4. பல்வேறு வகையான வேதியியல் மாற்றங்களை ஆராய்ச்சி செய்வதன்மூலம் ஒவ்வொரு புதிய பொருளும் கண்டுபிடிக்கப்படுகிறது.

Question 2.
ஒரு வேதியியல் மாற்றத்தின் பொழுது ஏற்படும் நிகழ்வுகள் யாது?
விடை:

  1. புதிய பொருள்கள் உருவாகின்றன.
  2. வெப்பம், ஒளி அல்லது கதிர்வீச்சு வெளிப்படலாம்
  3. ஒலி உண்டாகலாம்
  4. மணத்தில் மாற்றமோ அல்லது புதிய மணமோ உருவாகலாம்
  5. நிறமாற்றம் ஏற்படலாம்
  6. ஏதேனும் வாயு உருவாகலாம்

Question 3.
ஒரு வேதியியல் மாற்றம் நிகழத் தகுந்த காரணங்கள் யாவை?
விடை:
வேதியியல் மாற்றம் நிகழத் தகுந்த காரணங்கள் :

  • தகுந்த அழுத்தம் தருதல்
  • இரு பொருள்கள் இணைதல்
  • வெப்பப்படுத்துதல்
  • வினையூக்கியை பயன்படுத்துதல்
  • மின்சாரத்தை செலுத்துதல்
  • ஒளி

Question 4.
ஒரு வேதியியல் மாற்றம் நிகழ்ந்ததை சுட்டும் குறியீடுகள் யாவை?
விடை:
பின்வருவனவற்றில் இருந்து ஒரு வேதியியல் மாற்றம் நிகழ்ந்துள்ளதை அறியலாம்.

  • வாயுக் குமிழ்கள் வெளியேறுதல்
  • வெப்பம் வெளிப்படுதல்
  • மணம் மாறுதல்
  • நிறம் மாறுதல்
  • வீழ்படிவு உருவாதல்

Question 5.
i) நொதித்தல்
ii) பால் திரிதல் – குறிப்பு வரைக.
விடை:

  1. நொதித்தல் :
    • ஈஸ்ட் மற்றும் சில வகை பாக்டீரியாக்களினால் சர்க்கரை கரைசலினை ஆல்கஹால் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாற்றும் நிகழ்வு நொதித்தல் எனப்படும்.
    • இரு ஒரு மீளாத்தன்மையுடைய வேதியியல் மாற்றமாகும்.
  2. பால் திரிதல்
    • சூடான பாலில் சிறிதளவு தயிரினை சேர்க்கும் போது பால் திரிதல் அடைந்து சிறு, சிறு திண்ம நிலை கூழ்மங்களாக உருவாகும்.
    • சூடான பாலில் சிறிதளவு எலுமிச்சைச் சாறை ஊற்றியும் பாலினைத் திரிய வைக்கலாம்

Question 6.
இரும்பு துருப்பிடித்தல் என்றால் என்ன? அதை எவ்வாறு தடுக்கலாம்?
விடை:
இரும்பு துருப்பிடித்தல் ஒரு வேதியியல் மாற்றமாகும்.

ஆச்சிஜன் மற்றும் நீர் முன்னிலையில் இரும்பு, பழுப்பு நிறமுடைய இரும்பு ஆக்சைடாக ஆக்சிஜனேற்றமடையும் வினை இரும்பு துருப்பிடித்தல் எனப்படும் இரும்பு + ஆக்சிஜன் + நீர் – இரும்பு துரு (இரும்பு ஆக்சைடு)

இரும்பு பொருட்களின் மீது மெல்லிய பெயிண்ட் அல்லது கிரீஸ் படலத்தை பூசுவதல் மூலம் துருப் பிடித்தலை தடுக்கலாம்.

இரும்பின் மீது குரோமியம் அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்களை ஒருபடலமாக பூசுவதன் மூலம் துருப்பிடித்தலை தடுக்கலாம், இதற்கு நாக முலாம் பூசுதல் என்று பெயர்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 14
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 15

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 2 Chapter 2 மின்னோட்டவியல் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 2 Chapter 2 மின்னோட்டவியல்

7th Science Guide மின்னோட்டவியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், ‘X’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன ?
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 1
அ) 10 ஆம்பியர்
ஆ) 1ஆம்பியர்
இ) 10 வோல்ட்
ஈ) 1 வோல்ட்
விடை:
அ) 10 ஆம்பியர்

Question 2.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும் ?
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 2
அ) சாவி ட மட்டும்
ஆ) சாவி M மட்டும்
இ) சாவிகள் M மற்றும் N மட்டும்
ஈ) சாவி ட அல்லது M மற்றும் N
விடை:
ஈ) சாவி ட அல்லது M மற்றும் N

Question 3.
சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
அ) 2.5 mA
ஆ) 25 mA
இ) 250 mA
ஈ ) 2500 mA
விடை:
இ) 250 mA

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல்

Question 4.
கீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது?
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 3
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 4

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு ……….. ல் அமையும்
விடை:
எதிர் முனையில்

Question 2.
ஓரலகு கூலும் மின்னூட்டமானது ஏறக்குறைய …………………… புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.
விடை:
6.242 × 1018

Question 3.
மின்னோட்டத்தை அளக்க ……………………. என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
விடை:
அம்மீட்டர்

Question 4.
மின்கடத்துப்பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு………………… பிணைக்கப்பட்டிருக்கும்.
விடை:
தளர்வாக

Question 5.
மின்கடத்துத்திறனின் S.I. அலகு …………………. ஆகும்.
விடை:
சீமென்ஸ்/மீட்டர் (S/m)

III. சரியா – தவறா எனக் குறிப்பிடு. தவறு எனில் சரியான விடையை எழுதுக.

Question 1.
எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் திசையிலேயே அமைகிறது.
விடை:
தவறு – எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் எதிர் திசையிலேயே அமைகிறது

Question 2.
வீடுகளில் உள்ள மின் இணைப்பில், அதிக மின் பளு இருந்தால், மின் உருகு இழை உருகாது.
விடை:
தவறு – வீடுகளில் உள்ள மின் இணைப்பில், அதிக மின் பளு இருந்தால், மின் உருகு இழை உருகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல்

Question 3.
பக்க இணைப்பில், மின் சாதனங்கள் கிளைகளாக பிரிக்கப்படுகின்றன.
விடை:
சரி

Question 4.
மின்னோட்டத்தினை ‘A’ என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறோம்.
விடை:
தவறு – மின்னோட்டத்தினை 1 என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறோம்.

Question 5.
குறை கடத்தியின் மின் கடத்துத்திறன், கடத்தி மற்றும் கடத்தாப்பொருளின் மின்கடத்து திறனின் மதிப்புகளுக்கு இடையே அமையும்.
விடை:
சரி

IV. பொருத்துக :

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 5
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 6

V. ஒப்புமை படுத்துக

Question 1.
‘நீர் : குழாய் : மின்னோட்டம் ………………….
விடை:
மின் கம்பி

Question 2.
தாமிரம் : கடத்தி : மரக்கட்டை ………………….
விடை:
மின் அரிதிற் கடத்திகள்

Question 3.
நீளம் : மீட்டர் அளவு கோல் : மின்னோட்டம் : ……………………..
விடை:
அம்மீட்டர்

Question 4.
மில்லி ஆம்பியர் : 10-3 : மைக்ரோ ஆம்பியர் ……………..
விடை:
10-6A

VI. கூற்று – காரணம்

Question 1.
கூற்று (A) : தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது.
காரணம் (R): தாமிரம் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது.
தெரிவு :

அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை.
இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல்

Question 2.
கூற்று (A): அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை .
காரணம் (R) : அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை.
தெரிவு :

அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்

VII. குறு வினாக்கள்

Question 1.
மின்னோட்டத்தின் வேகம் என்ன?
விடை:

  • ஓரலகு காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு மின்னோட்டம் பாயும் வீதமே மின்னோட்ட வேகம் எனப்படும்.
  • இது நீரோட்டம் இயங்கும் வீதத்திற்கு சமமாகும்.

Question 2.
மின்கடத்துத்திறனின் S.I. அலகு என்ன?
விடை:
மின் கடத்துத்திறனின் S.I. அலகு சிமென்ஸ் / மீட்டர் (S/m) ஆகும்.

Question 3.
மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனத்தின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.
விடை:

  1. ஜெனரெட்டர்
  2. சூரிய ஆற்றல்
  3. புவி வெப்ப ஆற்றல்
  4. நைட்ரஜன் ஆற்றல்
  5. காற்று ஆற்றல்

Question 4.
மின் உருகி என்பது என்ன?
விடை:
பாதுகாப்பு நிலைக்கு மேல் பாயும் மின்னோட்டத்தை உருகி துண்டிக்கும் கம்பித் துண்டை கொண்ட ஓர் தடையாக்கும் சாதனமே உருகு இழை ஆகும்.

Question 5.
மின்னோட்டத்தின் வெப்பவிளைவின் மூலம் இயங்கும் சாதனங்களைக் கூறுக.
விடை:

  • அறை வெப்பம் வழங்கி
  • காபி தயாரிப்பு சாதனம்
  • அயன் பாக்ஸ்
  • முடி உலர்த்துதல்
  • உணவு தயாரிப்பு சாதனம்
  • மின் அடுப்பு
  • வெந்நீர் கொதிகலன்
  • முழகும் நீர் கொதிகலன்

Question 6.
அரிதிற்கடத்திகள் சிலவற்றைக் கூறுக.
விடை:

  • கண்ணாடி
  • இரப்பர்
  • காற்று
  • பிளாஸ்டிக்
  • மரக்கட்டை

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல்

Question 7.
மின்கலம் என்பது என்ன?
விடை:
மின்கலம் என்பது வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றும் ஓர் எளிய மின் வேதிக்கலனே ஓர் மின்கலன் ஆகும்.

VIII. சிறு வினாக்கள்

Question 1.
மின்னோட்டம் வரையறு
விடை:

  • மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும்.
  • ஓரலகு நேரத்தில் பொருளின் குறுக்குப் பரப்பு வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவே மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது.

Question 2.
பக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்பு வேறுபடுத்துக்.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 7

Question 3.
மின் கடத்துத்திறனை வரையறு.
விடை:

  • கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு அக்கடத்தியின் மின் கடத்து திறன் அல்லது தன் மின் கடத்து திறன் எனப்படும்.
  • பொதுவாக (சிக்மா) என்ற கிரேக்க எழுத்தால் குறிப்பிடப்படுகிறது
  • மின் கடத்துத்திறனின் SI அலகு சீமென்ஸ்/மீட்டர் (S/m) ஆகும்.

IX. நெடு வினா

Question 1.
தொலைபேசி ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 8

  • தொலைபேசிகளில் மாறும் காந்த விளைவானது ஒரு மெல்லிய ஒளிர்வதைஉலோகத் தாளை (டையபார்ம்) அதிர்வுக்கு உட்படுத்துகிறது.
  • டையபார்ம்களானது காந்தங்களால் ஈர்க்கக்கூடிய ஒரு உலோகத்தால் செய்யப்படுகின்றன.
  • தொலைபேசியின் கேட்பானில் பொருத்தப்பட்டுள்ள கம்பிச் சுருளுடன் டையபார்ம் இணைக்கப்பட்டிருக்கும்.
  • கம்பிகள் வழியே மின்னோட்டம் பாயும் போது மென்மையான இரும்புப் பட்டையானது ஓர் மின்காந்தமாக மாற்றம் அடைகிறது.
  • டையபார்மானது மின் காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது.
  • மறு முனையில் உள்ள நபர் பேசும்போது பேசுபவரின் குரலானது மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மாற்றமுறச் செல்கின்றது.
  • இந்த மாற்றம் பேட்பானில் உள்ள டையபார்மை அதிர்வுறச் செய்து ஒலியை உண்டாக்குகிறது.

Question 2.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவைப் பற்றி விளக்குக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 9

  • ஓர் கம்பியின் வழியே மின்னோட்டம் பாயும் போது மின்னாற்றலானது வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
  • வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது அதிக உருகுநிலை கொண்டவை ஆகும்.
  • நிக்ரோம் அவ்வகையானப் பொருளுக்கு எடுத்துக்காட்டாகும், (நிக்கல் இரும்பு மற்றும் வட்ட வடிவத்திலான குரோமியம் சேர்ந்த கலவை.
  • மின்னோட்டத்தின் வெப்ப விளைவானது பல்வேறு செய்முறைப் பயன்பாடுகளை கொண்டதாகும்.
  • மின் விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர் கொதிகலன். இவ்வகையான விளைவினை அடிப்படையாக கொண்டது.
  • இச்சாதனங்களில் அதிக மின் தடை கொண்ட வெப்பமூட்டும் கம்பிச் சுருள் இணைக்கப்பட்டிருக்கும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல்

Question 3.
உலர் மின்கலம் ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக.
விடை:

  • உலர் மின்கலன்கள் எடுத்துச் செல்லத்தக்க வடிவிலான லெக்லாஞ்சி மின்கலத்தின் ஓர் எளிய வடிவம்.
  • இது எதிர் மின்வாய் அல்லது ஆனோடாகச் செயல்படும் துத்தநாக மின் தகட்டை உள்ளடக்கியது.
  • அம்மோனியம் குளோரைடு மின் பகுதியாகச் செயல்படுகிறது.
  • துத்தநாக குளோரைடானது அதிக அளவு நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதால் பசையின் ஈரப்பதத்தை பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • கலனின் நடுவில் ஒரு வெண்கல மூடி கொண்டு மூடப்பட்டிருக்கும் கார்பன் தண்டானது வைக்கப்பட்டுள்ளது. இத்தண்டு நேர் மின்வாய் அல்லது கேதோடாக செயல்படுகிறது.
  • இது ஒரு மெல்லிய பையில் மிக நெருக்கமாக மரக்கரி மற்றும் மாங்கனிசு டை ஆக்ஸைடு (Mnoz) நிரம்பிய கலவையால் சூழ்ந்து இருக்கும் இங்கே ஆடிேண Mnoz ஆனது மின் முனைவாக்கியமாகச் செயல்படுகிறது.
  • துத்தநாகப் பாண்டமானது மேலே மூடப்பட்ட நிலையில் மூடப்பட்டிருக்கும்.
  • வேதிவினையின் விளைவாக உருவாகும் வாயுக்களை வெளியேற்ற எதுவாக அதில் ஓர் சிறியத்துளை உள்ளது.
  • கலத்திற்குள்ளான வேதிவினையானது லெக்லாஞ்சி மின்கலம் போன்றே நடைபெறும்.

X. உயர் சிந்தனை வினா

Question 1.
மாணவர் ஒருவர், ஒரு மின்கலம், ஒரு சாவி, ஒரு டார்ச் பல்பு (கை மின் விளக்கு பிடிப்பானுடன்) மற்றும் தாமிர இணைப்புக் கம்பிகளைக் கொண்டு ஒரு மின்சுற்றை உருவாக்குகிறார். அவர், சாவியைக் கொண்டு சுற்றை மூடிய போது, மின் விளக்கு ஒளிரவில்லை. அவர், மின்சுற்றை சோதிக்கும் போது, அனைத்து இணைப்புகளும் சரியாக இருக்கிறது. எனில், அனைத்து இணைப்புகளும் சரியாக இருந்த போதிலும், மின் விளக்கு ஒளிராமல் இருக்க என்னென்ன காரணங்கள் இருக்கலாம்?
விடை:

  1. சிலநேரங்களில்மின்விளக்கை ஒருமின்கலத்துடன்கம்பிகளால் இணைக்கப்பட்டிருந்தாலும் அந்த மின் சுற்று ஓளிராது.
  2. விளக்கை இணைத்திருந்தால் இது போன்று நிகழலாம்.
  3. மின் விளக்கின் மின்இழை (மின்கம்பி) உடைந்திருந்தால் (மின் விளக்கானது இணைக்கப்படாமல்) சற்று பூர்த்தியாகாமல் இருக்கும் எனவே மின்சாரம் அதன் (மின்கம்பி) வழியாக பரவாமல் மின் விளக்கு ஒளிர்வதில்லை .

XI. படம் அடிப்படையிலான வினாக்கள்

Question 1.
படத்தில் காட்டியுள்ளபடி, மூன்று மின் கடத்திகள் இணைக்கப்பட்டுள்ளது. கடத்தி RS வழியே 10 ஆம்பியர் மின்னோட்டமும், கடத்தி QR வழியே 6 ஆம்பியர் மின்னோட்டமும் செல்கிறது எனில், கடத்தி PR வழியே செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?
விடை:
அ) 4 ஆம்பியர்
ஆ) 6 ஆம்பியர்.
இ) 10 ஆம்பியர்
ஈ) 15 ஆம்பியர்
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 10
விடை:
அ) 4 ஆம்பியர்

Question 2.
பின்வரும் தொடர்மின் இணைப்பிற்கான ஒரு மின்சுற்றை வரைக.
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 9
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 11

Question 3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றைக் கவனி. சுற்றில் இரு மின்விளக்குகள் மட்டும் ஒளிர வேண்டும் எனில், பின்வரும் எந்தெந்த சாவிகள் மூடப்பட வேண்டும்.
அ) S1, S2 மற்றும் S4 மட்டும்
ஆ) S1, S3 மற்றும் S5 மட்டும்
இ) S2, S3 மற்றும் S4 மட்டும்
ஈ) S2, S3 மற்றும் S5 மட்டும்
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 12
விடை:
இ) S2, S3 மற்றும் S4 மட்டும்

Question 4.
கீழ்க்காணும் மூன்று மின்சுற்றுக்களைக் கவனி, ஒவ்வொன்றும் ஒரு கண்ணாடித்தண்டு (G), ஒருஸ்டீல் தண்டு (S) மற்றும் ஒரு மரக்கட்டைத் தண்டு (W) ஆகியவற்றைக் கொண்டுள்ளது எனில், பின்வரும் எந்த மின்சுற்றுக்களின் மின்விளக்குகள் ஒளிராது.
அ) A மட்டும்
ஆ) C மட்டும்
இ) A மற்றும் B மட்டும்
ஈ) A,B மற்றும் C
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 13
விடை:
இ) A மற்றும் B மட்டும்

7th Science Guide மின்னோட்டவியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஒரு கம்பியின் வழியே 30 கூலூம் மின்னோட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது?
அ) 25A
ஆ) 0.025A
இ) 0.0025A
ஈ) 0.25A
விடை:
ஈ) 0.25A

Question 2.
பின்வருவனவற்றிள் எனது மாறுபட்டது என்று கண்டுபிடி
அ) அமில மின்கலன்
ஆ) பொத்தான் மின்கலன்
இ) உலர் மின்கலன்
ஈ) மோட்டார் வாகன மின்கல அடுக்கு
விடை:
இ) உலர் மின்கலன்

Question 3.
மின் சாதனங்களை இணைக்கும் மற்றும் இரப்பரினால் காப்பிடப்பட்டிருப்பது.
அ) மின்கலன்
ஆ) மின்பல்பு
இ) மின் கடத்துச் சாவி
ஈ) சாவி
விடை:
இ) மின் கடத்துச் சாவி

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல்

Question 4.
வீட்டு மின் சுற்றுகளில் பயன்படுத்தப்படும் மின் கடத்துச் சாவி எதனால் ஆனது
அ) இரும்பு
ஆ) தாமிரம்
இ) அலுமினியம்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) தாமிரம்

Question 5.
மின்னூட்டம் …………… என்ற அலகினால் அளவிடப்படுகிறது.
அ) கூலூம்
ஆ) வோல்ட்
இ) ஆம்பியர்
ஈ) மீட்டர்
விடை:
அ) கூலூம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மின்த டையின் SI அலகு ……………….. ஆகும்
விடை:
ஓம்

Question 2.
……………………… பயன்படும் உலர் மின்கலன் முதன்மை மின்கலனிற்கு ஓர் சிறந்த உதாரணம் ஆகும்.
விடை:
டார்ச் விளக்கு

Question 3.
மின்சாதனங்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் இயங்கச் செய்யவும் நிறுத்தவும் ………………….. உதவுகிறது.
விடை:
மின்சாவி

Question 4.
பெரும்பாலான ………….. மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கிறது. அதே சமயம்
பெரும்பாலான ……………. மின்னோட்டம் தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை .
விடை:
உலோகங்கள் / அலோகங்கள்

Question 5.
மின்சார மணி, பளு தூக்கி மற்றும் தொலைபேசி போன்ற பல்வேறு சாதனங்களில் ………………… பயன்படுகின்றன
விடை:
மின்காந்தங்கள்

III. சரியா? தவறா? என கண்டுபிடி

Question 1.
ஒரு சுற்றில் அம்மீட்டரானது பக்க இணைப்பில் மட்டும் இணைக்கப்பட்டு இருக்கும்.
விடை:
தவறு
காரணம் : ஒரு சுற்றில் அம்மீட்டரானது தொடர் இணைப்பில் மட்டும் இணைக்கப்பட்டு இருக்கும்.

Question 2.
மின்னழுத்த வேறுபாடு இருந்தால் மட்டுமே கடத்தியின் வழியே மின்னோட்டமானது செல்லும்
விடை:
சரி

Question 3.
முதன்மை மின்கலன் மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னியற்றிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
விடை:
தவறு – காரணம் : துணை மின்கலன்கள் மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னியற்றிகளில் பயன்படுத்தபடுகின்றன

Question 4.
அனைத்து மின்கல அடுக்குகளும் மூன்று அடிப்படைப் பாகங்களைக் கொண்டது ஆனோடு, கேதோடு மற்றும் ஒரு வகையான மின் பகு திரவம்
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல்

Question 5.
ஓர் நற்கடத்தியானது மிக அதிக மின் கடத்துத்திறன் கொண்டவைகளாக இருக்கும்.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 14

V. ஒப்புமை படுத்துக

Question 1.
ஒளி மூலம் ; மின்பல்பு; ஆற்றல் மூலம் ; ………………..
விடை:
மின்கலம்

Question 2.
தாமிரம்; நற்கடத்திகள்;: காற்று : ………………….
விடை:
அரிதிகடத்திகள்

Question 3.
வெப்ப விளைவு ; இஸ்திரி பெட்டி ; மின்காந்த விளைவு …………
விடை:
தொலைபேசி

Question 4.
முதன்மை மின்கலன் ; உலர் மின்கலன் துணை மின்கலன் ; …………………
விடை:
பொத்தான் மின்கலன்

Question 5.
σ; v;: p : ………….
விடை:
Ωm

VI. கூற்று – காரணம்

Question 1.
கூற்று (A) : மின்னோட்டம் பொதுவாக”)” என்ற எழுத்தால் குறிக்கப்படும்
காரணம் (R) : மின்னோட்டத்தின் குறியிடு ‘T’ ஆகும்.
தெரிவு:

அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி.
விடை:
இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு

Question 2.
கூற்று (A) : இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை அம்மீட்டர் என்ற கருவியைக் கொண்டு அளவிடலாம்.
காரணம் (R): மின்னோட்டமானது நீரோட்டம் போல் அதிக மின்னழுத்த மட்டத்தில் இருந்து குறைந்த மின்னழுத்த மட்டத்தை நோக்கி பாயும்.
தெரிவு :

அ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
இ) A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி.
விடை:
ஈ) A என்பது தவறு, ஆனால் R என்பது சரி.

VII. குறுகிய வினாக்கள்

Question 1.
ஆம்பியர் – வரையறு?
விடை:

  • ஓரு வினாடி நேரத்தில் ஒரு கூலூம் மின்னோட்டம் பாய்ந்தால் அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்.
  • q/t

Question 2.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பாதிக்கும் காரணிகள் யாவை?
விடை:

  • பாயும் மின்னோட்டத்தின் அளவு
  • மின் தடை
  • மின்னோட்டம் செலுத்தப்படும் நேரம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல்

Question 3.
மின்னோட்டத்தின் மூன்று மிக முக்கிய விளைவுகளை எழுதுக.
விடை:

  • வெப்ப விளைவு
  • மின் காந்த விளைவு
  • வேதி விளைவு

Question 4.
குறைக்கடத்திகள் என்றால் என்ன? உதாரணம் தருக?
விடை:

  • ‘சிம் கார்டுகள், கணிணிகள் மற்றும் ATM கார்டுகளை குறைக்கடத்திகளால் ஆக்கப்பட்டுள்ளன
  • சிலிகான் மற்றும் ஜெர்மேனியம்

Question 5.
தற்கால மின்கலம் கண்டுபிடித்தவர் யார்?
விடை:
நவீன மின்கலன் கண்டுபிடிப்பிற்கு அலெஸாண்ட்ரோ வோல்ட்டா அவர்களே பெரிதும் காரணமானவர்.

VIII. சிறு வினாக்கள்

Question 1.
மின்தடை என்றால் என்ன?
விடை:
பொருள் ஒன்று தன் வழியே மின்னோட்டம் பாய்வதை எவ்வளவு வலிமையாக எதிர்க்கும் என அளவிட்டுக் கூறும் பொருளின் அடிப்படை பண்பே அப்பொருளின் மின் தடை எண்’p’ எனப்படும்

மின்தடை SI அலகு – ஓம் – மீட்டர் (Ωm)

Question 2.
மின்பகுளிகள் என்பது?
விடை:

  1. கரைசல்களால் அயனிகளாக மாறும் தன்மை கொண்ட பொருட்கள் மின் பகுளிகளாகும்.
  2. இவை மின்னோட்டத்தை கடத்தக் கூடிய திறனைப் பெற்றிருக்கும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல்

Question 3.
சில மின்சாவிகளின் பெயர்களை எழுதுக.
விடை:

  1. தட்டுச்சாவி
  2. ப்ளக் சாவி
  3. மாற்றுச் சாவி
  4. ராக்கர் சாவி
  5. ஒளிரும் சாவி
  6. தள்ளு சாவி

Question 4.
குறுக்கு சுற்று என்பது?
விடை:
ஓர். மின்சுற்றில் மின் சுற்றின் ஒரு பகுதியானது. அதே மின்சுற்றின் ஒரு பகுதியானது அதே மின் சுற்றின் மற்றொரு பகுதியுடன் தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட பாதையில் செல்லும் மின்னோட்டத்தின் திசையை மாற்றுமாயின் அச்சுற்று குறுக்கும் சுற்று எனப்படும்

Question 5.
வோல்ட் மீட்டர் என்றால் என்ன?
விடை:

  • மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு வோல்ட் ஆகும்.
  • இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாடுகளை அளவிட உதவும் கருவிக்கு வோல்ட் மீட்டர் என்று பெயர்.

IX. நெடு வினாக்கள்

Question 1.
முதன்மை மின்கலன்களுக்கும் துணை மின்கலன்களுக்குமான வேறுபாடு
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 15

Question 2.
மின்சாரத்தில் காந்த விளைவு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை ஒரு சோதனை முறை கொண்டு நிருப்பியாய்?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 16

  • இரும்பு ஆணி
  • மின்கல அடுக்கு, மின் அவிழ்பான் மற்றும் மின்கம்பி
  • சுமார் 75 செ.மீ நீளமான ஓர் காப்பிடப்பட்ட நெகிழும் தன்மை கொண்ட ஓர் கம்பியும் 8 முதல் 10 செ.மீ நீளம் கொண்ட ஓர் இரும்பு ஆணியையும் எடுத்துக்கொள்.
  • ஆணியைச் சுற்றி கம்பிச் சுருள் போல் கம்பியை மிகவும் கம்பிச்சுருள் நெருக்கமாக சுற்றிக் கொள்.
  • படத்தில் காட்டியுள்ளபடி மின்கலத்துடன் கம்பியின் திறந்த – முனைகளை இணை’
  • ஆணியின் முனைக்கருகில் சில குண்டுசீகளை வை
  • தற்போது பாயும் மின்னோட்டத்தை செலுத்தும் நிறுத்தும் போது என்ன நிகழ்கிறது என்று கவனி
  • மின் சாவியானது மூடிய நிலையில் உள்ள போது ஆணியின் முனைகளில் குண்டுசிகள் ஓட்டிக் கொள்ள ஆரம்பிக்கும்.
  • மின் சாவியானது திறந்த நிலையில் மின்னோட்டம் பாய்வது நிறுத்தப்பட்டவுடன் கம்பிச் சுருள் தனது காந்த தன்மை இழந்துவிடுகிறது.
  • மின்னோட்டம் பாயும் திசையைப் பொறுத்து கம்பிச் சுருளின் இருமுனைகளிலும் மின் முனைவுகள் மாற்றமடையும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 2 மின்னோட்டவியல் 17

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 2 மின்னியல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 2 மின்னியல்

6th Science Guide மின்னியல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்
அ) மின் விசிறி
ஆ) சூரிய மின்கலன்
இ) மின்கலன்
ஈ) தொலைக்காட்சி
விடை:
இ) மின்கலன்

Question 2.
மின்சாரம் தயாரிக்கப்படும் இடம் _____
அ) மின்மாற்றி
ஆ) மின்உற்பத்தி நிலையம்
இ) மின்சாரக்கம்பி
ஈ) தொலைக்காட்சி
விடை:
ஆ) மின்உற்பத்தி நிலையம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 3.
மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 20
விடை:
அ) Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 21

Question 4.
கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 12
விடை:
ஈ) Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 13

Question 5.
கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
அ) வெள்ளி
ஆ) மரம்
இ) அழிப்பான்
ஈ) நெகிழி
விடை:
அ) வெள்ளி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
____ பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.
விடை:
மின்கடத்தி

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 2.
ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம் ____ எனப்படும்.
விடை:
மின்னோட்டம்

Question 3.
_____ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.
விடை:
தாவி

Question 4.
மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு _____ முனையைக் குறிக்கும் _____
விடை:
நேர்

Question 5.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு ஆகும் _____
விடை:
மின்கல அடுக்கு

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
பக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்டப் பாதைகள் உண்டு.
விடை:
சரி.

Question 2.
இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.
விடை:
தவறு. – இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் நேர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.

Question 3.
சாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது மூடப் பயன்படும் மின்சாதனம் ஆகும்.
விடை:
சரி.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 4.
தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.
விடை:
தவறு – தூய நீர் என்பது ஒரு மின்கடத்தாப்பொருள் ஆகும்.

Question 5.
துணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
விடை:
தவறு – துணை மின்கலன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.

IV. பொருத்துக. 

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 50
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 51

V. பின்வரும் சொற்களைக் கொண்டு ஒரு முழுமையான வாக்கியத்தை உருவாக்குக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 55
விடை:
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் மின்கலன் ஆகும்.

VI. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 56
விடை:
மின்விளக்கு A மட்டும் ஒளிர K1 மற்றும் K2 சாவிகள் மட்டும் இணைக்கப்பட வேண்டும்.

Question 2.
கூற்று (A) : நமது உடலானது மின் அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.
காரணம் (R) : மனித உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
ஆ) A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) A-தவறு ஆனால் R சரி.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.

Question 3.
எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா?
விடை:
முடியும். எலுமிச்சம் பழத்தை மின்பகுளியாகவும் தாமிரக்கம்பி மற்றும் குண்டூசியை எலுமிச்சை பழத்திற்குள் செலுத்தி நேர் மற்றும் எதிர்மின்வாய்களாகக் கொண்டு மின்னோட்டத்தை உருவாக்க முடியும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக. இரும்புச் சங்கிலி ஒரு மின்கடத்தி ஆகும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 25

Question 5.
டார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது?
விடை:
டார்ச் விளக்கில் எளிய மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.

Question 6.
பொருந்தாததை வட்டமிடுக. அதற்கான காரணம் தருக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 40
மின்னியற்றி மின் மூலமாகும். மற்றவை மின்சுற்றின் பாகங்களாகும்.

VII. குறுகிய விடையளி :

Question 1.
தொடரிணைப்பு ஒன்றிற்கு மின்சுற்றுப் படம் வரையவும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 44

Question 2.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.
விடை:
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படாது. ஏனெனில் கடிகார மின்கலனின் மின்னழுத்தம் மிக மிகக் குறைவு. (1.5V)

Question 3.
வெள்ளி உலோகம் மிகச் சிறந்த மின் கடத்தியாகும். ஆனால் அது மின் கம்பி உருவாக்கப் பயன்படுத்தப்படுவதில்லை ? ஏன்?
விடை:
வெள்ளி விலை உயர்ந்த உலோகம். எனவே பொருளாதார ரீதியாக மின்கம்பி உருவாக்க பயன்படுத்துவதில்லை.

VIII. விரிவான விடையளி:

Question 1.
மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.
விடை:
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின்மூலங்கள் எனப்படும். அனல் மின் நிலையங்கள் :

  1. அனல் மின்நிலையங்களில் நிலக்கரி, டீசல் (அ) வாயுக்களை எரித்து உருவாக்கப்படும் நீராவியால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
  2. இங்கு வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
    நீர் மின் நிலையங்கள் ;

    1. அணைக்கட்டில் பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
    2. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

அறிவியல் அணுமின் நிலையம் :

  1. அணுக்கரு ஆற்றலைக் கொண்டு நீர் கொதிக்க வைக்கப்பட்டு டர்பைன் இயக்கப்படுகிறது.
  2. இங்கு அணுக்கரு ஆற்றல் இயக்க ஆற்றலாக பின் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. காற்றாலை :
    1. காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
    2. இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 2.
மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 50.2

Question 3.
மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
மின்கடத்திகள் :

  1. மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருட்கள் மின்கடத்திகள் எனப்படும்.
  2. (எ.கா.) உலோகங்கள் (தாமிரம், இரும்பு) மாசுப்பட்ட நீர் மற்றும் புவி

போன்றவை. அரிதிற் கடத்திகள் (மின்கடத்தாப் பொருள்கள்):

  1. மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்காத பொருட்கள் அரிதிற்கடத்திகள் (அ) மின்கடத்தாப் பொருட்கள் எனப்படும்.
  2. (எ.கா.) பிளாஸ்டிக், கண்ணாடி, மரம், ரப்பர், பீங்கான், எபோனைட் போன்றவை.

IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

Question 1.
ராகுல் ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, இரு இணைப்புக் கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ , மின்கல அடுக்கோ இல்லை. எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எலுமிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மின்கல அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது. அந்த மின்விளக்கு ஒளிருமா?
விடை:

  1. மின்விளக்கு ஒளிரும்.
  2. எலுமிச்சம் பழத்தின் ஒரு புறத்தில் தாமிரக் கம்பியையும் மற்றொரு புறம் குண்டூசியை செருக வேண்டும்.
  3. இரண்டையும் இணைப்புக்கம்பியுடன் இணைத்து மின் விளக் கோடு இணைத்தால் மின்சாரம் உருவாகி மின்விளக்கு எரியும்.
  4. எலுமிச்சை – மின்பகுளியாகவும், தாமிரம் – நேர்மின்வாயாகவும், குண்டூசி – எதிர்மின்வாயாகவும் செயல்பட்டு மின்சாரம் உருவாகி மின்விளக்கு எரியும்.
    Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 55.2

X. கீழ்க்காணும் கட்டத்திலிருந்து மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகளை கண்டறிந்து அட்டவணையில் நிரப்புக.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 56.2
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 56.3

6th Science Guide மின்னியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
இங்கு வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
அ) நீர்மின் நிலையம்
ஆ) அணுமின்நிலையம்
இ) அனல்மின் நிலையம்
ஈ) காற்றாலை
விடை:
இ) அனல்மின்நிலையம்

Question 2.
மின்காந்தங்களுக்கிடையே கம்பிச்சுருள் சுழல்வதால் ஏற்படுகிறது.
அ) வெப்பம்
ஆ) மின்காந்தத் தூண்டல்
இ) இயக்க ஆற்றல்
ஈ) ஏதுமில்லை
விடை:
ஆ) மின்காந்தத்தூண்டல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 3.
கீழ்க்கண்டவைகளில் எதில் துணை மின்கலன்கள் பயன்படுகிறது?
அ) கைக்கடிகாரம்
ஆ) ரோபோ பொம்மை
இ) மடிக்கணினி
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
இ) மடிக்கணினி

Question 4.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்று முறை ____
அ) பக்க இணைப்பு
ஆ) தொடரிணைப்பு
இ) எளிய மின்சுற்று
ஈ) ஏதுமில்லை
விடை:
அ) பக்க இணைப்பு

Question 5.
மின்சாரத்தை உருவாக்கும் மீன் வகை _____
அ) கெண்டை
ஆ) ஈல்
இ) கட்லா
ஈ) சாலமன் மீன்
விடை:
ஆ) ஈல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் _______ எனப்படும்
விடை:
மின்மூலங்கள்

Question 2.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை அதிகமுள்ள இடம் _____ ஆகும்.
விடை:
ஆரல்வாய்மொழி

Question 3.
மின்நிலையங்களில் அதிகக்காலம் இயங்கக்கூடிய மற்றும் சிக்கனமானவை _____
விடை:
நீர்மின் நிலையங்கள்

Question 4.
நேர் மற்றும் எதிர் அயனிகளைத் தரக்கூடிய வேதிக்கரைசல் ____ ஆகும்.
விடை:
மின்பகுளி

Question 5.
மின்விளக்கைக் கண்டுபிடித்தவர் ______
விடை:
தாமஸ் ஆல்வா எடிசன்

III. கூற்றும் காரணமும்.

Question 1.
கூற்று (A) : மின்சாரம் தொடர்பான சோதனைகளை டார்ச் விளக்கு (அ) வானொலியில் பயன்படும் மின்கலன்களைக் கொண்டே செய்ய வேண்டும்.
காரணம்(R): வீட்டில் (அ) பள்ளியில் உள்ள மின்சாரத்தில் மின்னழுத்தம் அதிகம் மற்றும் ஆபத்தானது
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
ஆ) A சரி ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) A தவறு ஆனால் R சரி.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.

Question 2.
கூற்று (A) : முதன்மை மின்கலன்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது. காரணம்(R): வாகனங்களில் உள்ள மின்கலன் முதன்மை மின்கலன் ஆகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான உதாரணம்.
ஆ) A சரி ஆனால் R தவறு.
இ) A மற்றும் R சரி, ஆனால் R என்பது A க்கு உதாரணம் அல்ல.
ஈ) A தவறு ஆனால் R சரி.
விடை:
ஆ) A சரி ஆனால் R தவறு

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

IV. மிகக்குறுகிய விடையளி.

Question 1.
ஒரு மின்கல அடுக்கை உருவாக்க எத்தனை மின்கலன்கள் தேவை?
விடை:

  1. மின்கலன் உருவாக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்கள் தேவை.
  2. மின்கல அடுக்கு பல மின்கலன்களின் தொகுப்பாகும்.

Question 2.
ஒரு மின்சுற்றை உருவாக்க தேவையானவை யாவை?
விடை:
ஒரு சாவி, இணைப்புக்கம்பி, மின்கலன் மற்றும் மின்விளக்கு ஆகியவை தேவை.

Question 3.
ஒரு டார்ச் விளக்கினுள் மின்கலன்களை எவ்வாறு இணைத்தால் மின்விளக்கு எரியும்?
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 60
ஒரு மின்கலனின் நேர்முனை மற்றதன் எதிர்முனையில் படுமாறு இணைக்க வேண்டும். அப்போது தான் மின்விளக்கு எரியும்.

Question 4.
மின்சுற்றின் மூன்று வகைகளை எழுதுக.
விடை:

  1. எளிய மின்சுற்று
  2. தொடரிணைப்பு
  3. பக்க இணைப்பு

Question 5.
மின்னோட்டம் என்றால் என்ன?
விடை:
கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் எனப்படும்.

V. விரிவான விடையளி.

Question 1.
மின்கலன் என்றால் என்ன? மின்கலனின் வகைகள் யாவை?
விடை:

  1. மின்கலன் என்பது வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் ஆகும்.
  2. மின்கலன் இருவகைப்படும் அவை முதன்மை மின்கலன்கள் மற்றும் துணை மின்கலன்கள் ஆகும்.

முதன்மை மின்கலன்கள் :

  1. இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது.
  2. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
  3. சிறிய உருவளவில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
  4. எ.கா. கைக்கடிகாரம், சுவர்க்கடிகாரம், ரோபோ பொம்மைகளில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள்

துணை மின்கலன்கள் :

  1. இவற்றை பல முறை மின்னேற்றம் செய்து மீண்டும் மீண்டும்பயன்படுத்தலாம்.
  2. இதன் உருவளவு பயன்பாட்டை பொருத்து சிறிதாக (அ) பெரிதாக இருக்கும்.
  3. எ.கா. கைப்பேசி, மடிக்கணினி, அவசர கால விளக்கு மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள்.

Question 2.
ஒருவருக்கு மின் அதிர்ச்சி ஏற்பட்டால் அவரைக் காப்பாற்ற செய்ய வேண்டியவை யாவை?
விடை:

  1. மின்னதிர்வு ஏற்படக் காரணமான மின்இணைப்பை அணைக்கவேண்டும்.
  2. சாவியிலிருந்து இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
  3. மின்கடத்தாப் பொருளைக் கொண்டு மின்கம்பியின் தொடர்பில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்.
  4. முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 90

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 1 வெப்பம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 1 வெப்பம்

6th Science Guide வெப்பம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்
அ) வேகமாக நகரத் தொடங்கும்
ஆ) ஆற்றலை இழக்கும்
இ) கடினமாக மாறும்
ஈ) லேசாக மாறும்
விடை:
அ) வேகமாக நகரத் தொடங்கும்

Question 2.
வெப்பத்தின் அலகு …………
அ) நியூட்டன்
ஆ) ஜில்
இ) வோல்ட்
ஈ) செல்சியஸ்
விடை:
ஆ) ஜூல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 3.
30° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை.
அ) 80° C
ஆ) 50° Cக்கு மேல் 80Cக்குள்
இ) 20° C
ஈ) ஏறக்குறைய 40° C
விடை:
ஈ) ஏறக்குறைய 40°

Question 4.
50° C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 50° C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும் பொழுது, வெப்பமானது.
அ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
இ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்
ஈ) இரண்டின் வெப்பநிலையும் உயரும்
விடை:
ஆ). இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
வெப்பம் பொருளிலிருந்து ……. பொருளுக்கு பரவும்.
விடை:
வெப்பநிலை
அதிகமான, குறைவான

Question 2.
பொருளின் சூடான நிலையானது ……… கொண்டு கணக்கிடப்படுகிறது.
விடை:
வெப்பநிலை

Question 3.
வெப்பநிலையின் SI அலகு ………..
விடை:
கெல்வின்

Question 4.
வெப்பப்படுத்தும் பொழுது திடப்பொருள் ………… மற்றும் குளிர்விக்கும் பொழுது ………..
விடை:
விரிவடையும், சுருங்கும்

Question 5.
இரண்டு பொருட்களுக்குக்கிடையே வெப்பப்பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ………. நிலையில் உள்ளன.
விடை:
வெப்பச் சமநிலையில்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல். இது வெப்பநிலை அதிகமான பொருளிலிருந்து வெப்பநிலை குறைவான பொருளிற்கு பரவும்.
விடை:
சரி.

Question 2.
நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது, நீராவி உருவாகும். தவறு.
சரியான விடை : வெப்பம் உட்கவரும் போது நீராவி உருவாகும்.
விடை:
தவறு.

Question 3.
வெப்பவிரிவு என்பது. பொதுவாக தீங்கானது.
சரியான விடை : வெப்ப விரிவு என்பது பொதுவாக தீங்கானது அல்ல.
விடை:
தவறு.

Question 4.
போரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும்பொழுது அதிகம் விரிவடையாது.
விடை:
சரி.

Question 5.
வெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்டும் ஒரே அலகினைப் பெற்றுள்ளன.
சரியான விடை : இரண்டும் வெவ்வேறு அலகினைப் பெற்றுள்ளன.
விடை:
தவறு.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

IV. கீழ்க்கண்டவற்றிற்கு காரணம் தருக.

Question 1.
கொதிக்கவைத்த நீரை சாதாரண கண்ணாடி முகவையில் ஊற்றும் பொழுது, விரிசல் ஏற்படுகிறது. ஆனால் போரோசில் கண்ணாடி முகவையில் ஊற்றும் பொழுது விரிசல் ஏற்படுவதில்லை.
விடை:
போரோசில் கண்ணாடி வெப்பத்திற்கு மிகக் குறைவாகவே விரிவடையும். எனவே விரிசல் ஏற்படுவதில்லை.

Question 2.
மின்கம்பங்களில் உள்ள மின்சாரக்கம்பியானது கோடைக்காலங்களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும்.
விடை:
உலோகங்கள் (மின்சாரக்கம்பி) கோடைக்காலத்தில் வெப்பத்தால் விரிவடையும் எனவே தொய்வாகவும், குளிர்காலத்தில் சுருங்குகின்றன எனவே நேராகவும் இருக்கும்.

Question 3.
இரு உலோகத் தகடுகளைப் பிணைப்பதற்காக அறையப்படும் முன் கடையாணி வெப்பப்படுத்தப்படுகிறது.
விடை:

  • கடையாணி வெப்பப்படுத்தப்படுவதால் விரிவடைகிறது.
  • ஆணியின் அடிப்பக்கத்தை வெப்பமாக உள்ள போது சுத்தியலால் அடித்து மறுபுறமும் புதிய தலைப்பகுதி உருவாக்கப்படும்.
  • குளிரும் போது சுருங்குவதால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும்.

V. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 30

VI. ஒப்புமை தருக.

Question 1.
வெப்பம் : ஜில் :: வெப்பநிலை : ______
விடை:
கெல்வின்

Question 2.
பனிக்கட்டி : 0° C :: கொதி நீர் : _____
விடை:
100° C

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 3.
மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல் : வெப்பம் :: சராசரி இயக்க ஆற்றல் : _____
விடை:
வெப்பநிலை

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.
விடை:

  1. மின் இஸ்திரிப் பெட்டி
  2. மின் வெப்பக்கலன்
  3. மின் நீர் சூடேற்றி

Question 2.
வெப்ப நிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் எவ்வளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை அளவிடும் அளவு வெப்பநிலை எனப்படும்.

Question 3.
வெப்பவிரிவு என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது விரிவடைவது அப்பொருளின் வெப்பவிரிவு எனப்படும்.

Question 4.
வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்ததைக் கூறுக.
விடை:

  1. வெப்பத் தொடர்பில் உள்ள இரு பொருள்களின் வெப்பநிலை சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன எனலாம்.
  2. வெப்பச்சமநிலையில் ஒன்றின் வெப்பநிலை மற்றொன்றை பாதிப்பதில்லை.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.
விடை:

  1. வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் இடைவெளி அதிகரிக்கிறது.
  2. மூலக்கூறுகளின் அதிர்வும் இயக்கமும் அதிகரிக்கின்றன.
  3. வெப்பநிலை அதிகரிக்கும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 2.
வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 85

IX. விரிவான விடையளி:

Question 1.
வெப்பவிரிவைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
விடை:
ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படும் போது அது விரிவடைகிறது. இது வெப்ப விரிவு எனப்படும்.
உதாரணங்கள் :

  1. இரயில் தண்டவாளம் அமைக்கும் போது அதன் இரு இரும்புப் பாளங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. காரணம் வெயில் காலத்தில் அது விரிவடையும்.
  2. மேம்பாலங்களில் கற்காரைப் பாளங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. ஏனெனில் கோடைக்காலத்தில் வெப்பத்தால் அவை விரிவடையும்.
  3. மின்கம்பங்களுக்கிடையே மின்சாரக்கம்பி கோடைக்காலங் களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும். காரணம் வெப்பம் அதிகம் உள்ள போது உலோகங்கள் விரிவடைகின்றன. குளிர்காலங்களில் சுருங்குகின்றன.
  4. இரு உலோகத் தகடுகளை இணைக்க சூடான கடையாணியை துளைகளில் பொருத்தி சுத்தியலால் அடித்து புதிய தலைப்பகுதி உருவாக்கப்படும். கடையாணி குளிரும் போது சுருங்குவதால் தகடுகளை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறது.

X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

Question 1.
குளிர்கால இரவில் நீ உனது படுக்கை அறையில் படுத்துள்ளாய். அப்போது அறையின் ஜன்னல் கதவு தற்செயலாக திறந்துவிட்டால் குளிரினால் நீ உறக்கம் கலைந்து சிரமமாக உணர்கிறாய். இதற்கு என்ன காரணம்? அறையில் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால் அல்லது வெளியே உள்ள குளிர்ச்சி அறைக் குள்ளே கடத்தப்படுவதால் இரண்டில் உனது விடைக்கான காரணத்தினைத் தருக.
விடை:

  1. அறையினுள் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால் குளிராக உணர்வேன்.
  2. குளிர்கால இரவில் வெளியே காற்றின் வெப்பநிலை குறைவு. அறையினுள் அதிகம்.
  3. ஜன்னல் திறக்கும் போது வெப்பமானது அதிக வெப்ப நிலையுள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு கடத்தப்படும்.
  4. அறையினுள் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படும். எனவே அறையினுள் வெப்பநிலை குறைந்து நமக்கு குளிர் ஏற்படும்.

Question 2.
ஒருவேளை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்ப நிலையை விடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச்சூழலை முன்பிருந்ததை விட எவ்வாறு உணரும்?
விடை:

  1. நமது உடல் சுற்றுச்சூழலை முன்பிருந்ததை விட வெப்பமாக உணரும்.
  2. ஏனெனில் வெப்பமானது அதிக வெப்பநிலை உள்ள சுற்றுச் சூழலிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள நம் உடலுக்குச் செல்லும். ஆகவே நாம் வெப்பமாக உணர்வோம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 3.
துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும் பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பார்க்கிறாய்? வெப்பத்தின் விளைவால் துகள்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.
விடை:
தகடானது வெப்பத்தால் விரிவடையும். எனவே தகட்டின் துளையின் விட்டம் அதிகரிக்கும்.

6th Science Guide வெப்பம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியே பாயும் போது ________ ஆற்றல் உருவாகிறது.
அ) மின்னாற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) வேதி ஆற்றல்
ஈ) இயக்க ஆற்றல்
விடை:
ஆ) வெப்ப ஆற்றல்

Question 2.
வெப்பநிலையின் SI அலகு.
அ) கலோரி
ஆ) ஜில்
இ) செல்சியஸ்
ஈ) கெல்வின்
விடை:
ஈ) கெல்வின்

Question 3.
நீர் கொதித்து ஆவியாக மாறும் வெப்பநிலை ______ °C
அ) 0°C
ஆ) 32°C
இ) 100°C
ஈ) 110°C
விடை:
இ) 100°C

Question 4.
A, B என்ற இரு டம்ளர்களில் 50°C வெப்பநிலையில் நீர் உள்ளன. அவை இரண்டையும் C என்ற டம்ளரில் ஊற்றினால் C ல் உள்ள நீரின் வெப்பநிலை _____ °C
அ) 100°C
ஆ) 0°C
இ) 50°C
ஈ) 0° க்கும் 100°C க்கும் இடையே
விடை:
இ) 50°C

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 5.
திரவத்தை குளிர்விக்கும் போது – ஆக மாறுகிறது.
அ) வாயு
ஆ) திண்மம்
இ) நீராவி
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
ஆ) திண்மம்

II. பின்வரும் கூற்று சரியா தவறா எனக்காண்.

Question 1.
வெப்பம் செல்சியஸ் (அ) சென்டிகிரேடில் அளக்கப்படுகின்றது.
விடை:
தவறு

Question 2.
வெப்பநிலை என்பது ஒருவகை ஆற்றல்.
விடை:
தவறு

Question 3.
நமது உடலின் சராசரி வெப்பநிலை 37°C.
விடை:
சரி

Question 4.
இரண்டு பொருட்களும் ஒரே வெப்பநிலைக்கு வரும் வரை வெப்பம் தொடர்ந்து பரிமாற்றம் நடைபெறும்.
விடை:
சரி

Question 5.
அதிர்வுகள் ஒரு மூலக்கூறிலிருந்து அடுத்த மூலக்கூறிற்கு பாய்வதால் வெப்பம் பரவுகிறது.
விடை:
சரி

III. பொருத்துக.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 85.1

IV. ஒப்புமை தருக.

Question 1.
வெயில் காலம் : விரிவடைதல் :: குளிர்காலம்: _____
விடை:
சுருங்குதல்

Question 2.
ஆவியாதல் : 100° C :: உறைதல் : _____
விடை:
0° C

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

V. காரணம் கூறுக.

1. மேம்பாலங்களில் கற்காரைப் பாலங்களுக்கிடையே சிறு இடைவெளி விடப்படுகிறது
கோடைக்காலத்தில் வெப்பத்தால் விரிவடையும்.
2. 80°C வெப்பநிலையிலுள்ள இரும்பு குண்டினை 80°C வெப்பநிலை உள்ள நீரில் போடும் போது அது சுருங்குவதில்லை.
ஏனெனில் இரண்டும் வெப்பச் சமநிலையில் உள்ளன.

VI. மிகக்குறுகிய விடையளி

Question 1.
வெப்ப மூலங்கள் யாவை?
விடை:

  1. முதன்மை வெப்ப ஆற்றல் மூலம் சூரியன் ஆகும்.
  2. எரிதல், உராய்வு மற்றும் மின்சாரம் மூலமும் வெப்ப ஆற்றலை பெறலாம்.

Question 2.
வெப்பம் என்றால் என்ன? அலகு யாது?
விடை:

  1. ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் வெப்பம் எனப்படும்.
  2. SI அலகு ஜூல். மேலும் கலோரி என்ற அலகும் பயன்படுத்தப் படுகிறது.

Question 3.
இரு பொருட்கள் வெப்பச் சமநிலையிலுள்ளன என எவ்வாறு அறியலாம்?
விடை:
வெப்பத் தொடர்பில் உள்ள இருபொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன என அறியலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 4.
ஒரு கலோரி வரையறு.
விடை:
ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்த தேவைப்படும் வெப்ப அளவு ஒரு கலோரி எனப்படும்.

Question 5.
இரு பொருட்களுக்கிடையே வெப்ப ஆற்றல் பாயும் திசையை தீர்மானிப்பது எது?
விடை:
பொருட்களின் வெப்பநிலையே வெப்ப ஆற்றல் பாயும் திசையை தீர்மானிக்கின்றன.

VII. விரிவான விடையளி

Question 1.
வெப்பத்தால் பொருளின் நீளத்தில் விரிவடைகிறது என்பதை ஓர் ஆய்வின் மூலம் விளக்குக.
விடை:

  1. வெப்பத்தால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு வெப்ப நீள்விரிவு எனப்படும்.
  2. ஒரு சைக்கிள் கம்பியின் ஒரு முனையை இணைப்புக் கம்பியோடும் தொடர்ந்து மின்கலன் மற்றும் மின்விளக்கோடும் இணைக்க வேண்டும்.
  3. விளக்கின் மறுமுனையை வேறு இணைப்புக்கம்பியோடு இணைத்து இணைப்புக்கம்பியை ஒரு நாணயத்தில் இணைத்து வைக்க வேண்டும்.
  4. நாணயத்தை சைக்கிள் கம்பியில் மோதாதவாறு சிறு இடைவெளியில் மரக்கட்டை மீது வைக்க வேண்டும்.
  5. இப்போது மின்சுற்று திறந்த சுற்றாக உள்ளது மின்விளக்கு எரியாது.
  6. சைக்கிள் கம்பியை வெப்பப்படுத்தினால் நீளம் அதிகரிக்கும் எனவே நாணயத்தில் மோதி மின்சுற்று மூடிய மின்சுற்றாகி விடும்.
  7. எனவே மின்விளக்கு எரியும்.
  8. இந்த ஆய்வின் மூலம் வெப்பத்தால் நீளம் விரிவடைவதை அறியலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 90

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 91

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

7th Science Guide வெப்பம் மற்றும் வெப்பநிலை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
வெப்பநிலையினை அளப்பதற்கான S.I அலகுமுறை ……………..
அ) கெல்வின்
ஆ) பாரன்ஹீட்
இ) செல்சியஸ்
ஈ) ஜூல்
விடை:
அ) கெல்வின்

Question 2.
வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்
அ) விரிவடைகிறது
ஆ) சுருங்குகிறது
இ) அதே நிலையில் உள்ளது
ஈ) மேற்கூறிய ஏதுமில்லை
விடை:
அ) விரிவடைகிறது

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 3.
மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை
அ) 0°C
ஆ) 37°C
இ) 98°C
ஈ) 100°C
விடை:
ஆ) 37°C

Question 4.
ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது ……………………
அ) பாதுகாப்பான திரவம்
ஆ) தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது
இ) ஒரே சீராக விரிவடையக்கூடியது
ஈ) விலை மலிவானது
விடை:
இ) ஒரே சீராக விரிவடையக்கூடியது

Question 5.
கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K (கெல்வின்) = °C (செல்சியஸ்) + 273.15
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 1
விடை:
இ ) +127 + 400.15

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மருத்துவர்கள் ………………….. வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி மனிதனின் உடல் ‘ வெப்பநிலையினை அளவிடுகின்றனர்.
விடை:
மருத்துவ

Question 2.
அறைவெப்ப நிலையில் பாதரசம் …………………… நிலையில் காணப்படுகிறது.
விடை:
திரவ

Question 3.
வெப்ப ஆற்றலானது ……………………. பொருளில் இருந்து …………………… பொருளுக்கு மாறுகிறது.
விடை:
உயர் வெப்பநிலையில் உள்ள, குறைந்த வெப்பநிலையிலுள்ள

Question 4.
-7°C வெப்பநிலையானது 0°C வெப்பநிலையினை விட …………………..
விடை:
குறைவு

Question 5.
பொதுவாக பயன்படுத்தப்படும் ஆய்வக வெப்பநிலைமானி …………… வெப்பநிலைமானி ஆகும்.
விடை:
திரவ கண்ணாடி (அ) பைமெட்டாலிக் துண்டு

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 2
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 3

IV. மிகக் குறுகிய விடையளி

Question 1.
ஸ்ரீநகரின் (ஜம்மு&காஷ்மீர்) வெப்பநிலை -4°Cமேலும் கொடைக்கானலின் வெப்பநிலை 3’C இவற்றில் எப்பகுதியின் வெப்பநிலை அதிகமாகும். அப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு எவ்வளவு?
விடை:

  • கொடைக்கானலின் வெப்பநிலை அதிகம் ஆகும்
  • இருப்பகுதிகளுக்கும் இடையேக் காணப்படும் வெப்பநிலை வேறுபாடு
    7°C (3°C – (-4°C) = 3 + 4) ஆகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 2.
ஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி அளக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இச்செயல் சரியானதா அல்லது தவறானதா? ஏன்?
விடை:

  • தவறு
  • ஏனெனில் மருத்துவ வெப்பநிலைமானியைக் கொண்டு உடலின் வெப்பநிலையை மட்டுமே அளவிட முடியும்.
  • ஆய்வக வெப்பநிலைமானியை பயன்படுத்தி சூடான நீரின் வெப்பநிலையினைக் கண்டறியலாம்.

Question 3.
நம்மால் ஏன் மருத்துவ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி காற்றின் வெப்பநிலையினை அளக்க இயலாது?
விடை:
மருத்துவ வெப்பநிலைமானியைக் கொண்டு ஒருவரின் உடல் வெப்பநிலையை மட்டுமே அளவிட முடியும். எனவே காற்றின் வெப்பநிலையினை அளக்க முடியாது.

மருத்துவ வெப்பநிலைமானியை காற்றில் வைக்கும் போது அதனுடைய வெப்பநிலையானது உயரவோ அல்லது குறையவோ கூடும். மேலும் அப்படியே பயன்படுத்தும் போது நோயாளியின் உடல் வெப்பநிலையினை தவறாகக் காட்ட நேரிடும்.

பாதரசத்தின் அதிகமான விரிவினால் உருவாகும் அழுத்தத்தின் காரணமாக வெப்பநிலைமானியானது உடைந்துவிடக்கூடும்.

Question 4.
மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?
விடை:

  • குறுகிய வளைவானது வெப்பநிலைமானியை நோயாளியின் வாயிலிருந்து எடுத்தவுடன் பாதரசமானது மீண்டும் குமிழுக்குள் செல்வதைத் தடுக்கிறது.
  • இதனால் நோயாளியின் வெப்பநிலையை சரியாக குறித்துக்கொள்ள இயலும்.

Question 5.
மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும் முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?
விடை:

  • வெப்பநிலைமானியை உதறும்போது அதிலுள்ள பாதரசமானது கீழ்மட்டத்திற்கு இறங்கும்.
  • பாதரச மட்டமானது 35°C[95°F] கீழ் உள்ளதா என உறுதி செய்தபின் வெப்பநிலையினைக் கண்டறியவும்.

V. குறுகிய விடையளி

Question 1.
வெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம்? பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலுமா? அவ்வாறு பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
விடை:

  • அறை வெப்ப நிலையில் திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம் பாதரசமாகும்.
  • மேலும் வெப்பதால் எளிதில் விரிவடையக்கூடியது.
  • பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலாது.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 2.
சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள். நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்.
விடை:
ரமணியின் கூற்று சரியானது ஆகும்.

ஆய்வக வெப்பநிலைமானியில், கீழ்ப்பகுதியில் கிங்க் எனப்படும் வளைவான பகுதி எனவே சுவாதி ஆய்வக வெப்பநிலை மானியை சூடான நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் வெப்பநிலைமானியின் அளவீடானது கீழே சென்று குறைய நேரிடும்.

எனவே ஆய்வக வெப்பநிலைமானியை பயன்படுத்தும் போது சூடான நீரின் உள்ளே வைத்து அளவினை குறிக்க வேண்டும் கண்டிப்பாக வெப்பநிலைமானியை வெளியே எடுக்கக் கூடாது.

Question 3.
இராமுவின் உடல் வெப்பநிலை 99°F. அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? ஏன்?
விடை:

  1. 99°F என்பதை காய்ச்சலாக கருத முடியாது என்பதால் இராமு காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை.
  2. பொதுவாக மனிதரில் காணப்படும் சாதாரண உடல் வெப்பநிலையானது 97°F முதல் 949°F ஆகும்.
  3. மேலும் குழந்தைக்கு சற்று கூடுதலாக வெப்பநிலையானது 97°.9°F முதல் 100.4°F வரை இருக்கும்.

VI. விரிவான விடையளி

Question 1.
மருத்துவ வெப்பநிலைமானியின் படம் வரைந்து அதன் பாகங்களை குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 4

Question 2.
ஆய்வக வெப்பநிலைமானிக்கும், மருத்துவ வெப்பநிலைமானிக்கும் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 5

VII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
செல்சியஸ் மதிப்பினை போன்று இரு மடங்கு மதிப்பு கொண்ட பாரன்ஹீட் வெப்பநிலையின் மதிப்பு யாது?
விடை:
வெப்பநிலை என்பது 320°
தீர்வு:
பாரன்ஹீ ட் F= 2C ———- (1)
செல்சியஸ் C = C ————(2)
F = \(\frac{9}{5}\)C + 32
2C = \(\frac{9}{5}\) C + 32
2C – \(\frac{9}{5}\) C = 32
\(\frac{10 \mathrm{c}-9 \mathrm{c}}{5}\) = 32
C = 160°
F = 2C = 2 × 160 = 320°

Question 2.
கால்நடை மருத்துவரை சந்தித்து வீட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் சராசரி உடல் வெப்பநிலையினை கண்டறியவும்.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 6

7th Science Guide வெப்பம் மற்றும் வெப்பநிலை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
சிறிய அளவில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகள் அத்திரவங்களின் ……………………. மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
அ) நீளம் மட்டும்
ஆ) அகலம்
இ) பரப்பளவு
ஈ) கன அளவு
விடை:
ஈ) கன அளவு

Question 2.
நீரின் கொதிநிலை எவ்வளவு ………………….
அ) 273.15k
ஆ) 373.15k
இ) 473.15k
ஈ) 573.15k
விடை:
ஆ) 373.15k

Question 3.
பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துபவர்களுக்கு தனிச் சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் ………………… என்ற வாய்ப்பாட்டினை பயன்படுத்தி ரான்கீன் முறைக்கு மதிப்பினை மாற்றிக் கொள்ளலாம்.
அ) F + 495.67
ஆ) F + 594.67
இ) F + 945.67
ஈ) F+ 459.67
விடை:
ஈ) F + 459.67

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 4.
45°C என்ற வெப்பநிலையை பாரன்ஹீட்டாக மாற்றினால் ஏற்படும் வெப்பநிலை.
அ) 93°F
ஆ) 73°F
இ) 113°F
ஈ) 133°F
விடை:
ஈ) 133°F

Question 5.
வெப்பநிலையை கண்டறியும் செல்சியஸ் அளவீட்டு முறையை கண்டறிந்தவர்.
அ) வில்லியம் லார்டு
ஆ) டேனியல் கேப்ரியல்
இ) ஆண்ட்ரஸ் செல்சியஸ்
ஈ) ரான்கீன்
விடை:
இ) ஆண்ட்ரஸ் செல்சியஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு …………… என அழைக்கப்படுகிறது.
விடை:
வெப்பநிலை

Question 2.
வெப்பநிலையினை அளக்க பொதுவாக பயன்படுத்தப்படும் கருவி …………………. ஆகும்.
விடை:
வெப்பநிலைமானி

Question 3.
ஆய்வக வெப்பநிலைமானியானது ………………. வரையிலான செல்சியஸ் அளவுகோலினைக் கொண்டுள்ளது.
விடை:
-10°C முதல் 110°C

Question 4.
மெர்குரி இல்லாமல் தற்போது பயன்படுத்தப்படும் வெப்பநிலைமனி………………….
விடை:
டிஜிட்டல் வெப்பநிலை மானி

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 5.
கெல்வின் அளவீட்டு முறையை கண்டறிந்தவர் ……………….
விடை:
வில்லியம்லார்டு கெல்வின்

III. சரியா? தவறா? தவறெனில், சரியான விடையினைக் கூறவும்

Question 1.
ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் அதன் வெப்பநிலையாகும்.
விடை:
சரி

Question 2.
பெரும்பாலும் பாசரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலை மானிகளில் பயன்படுத்தவில்லை .
விடை:
தவறு – காரணம் : பெரும்பாலும் பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலை மானிகளில் பயன்படுகின்றன.

Question 3.
ஆல்கஹால் – 100°C க்கும் குறைவான உறைநிலையை கொண்டுள்ளது.
விடை:
சரி

Question 4.
ஆய்வக வெப்பநிலைமானியானது உடல் வெப்பநிலை அளக்க பயன்படுகிறது
விடை:
தவறு
காரணம் .: ஆய்வக வெப்பநிலைமானியானது அறிவியல் ஆய்வுகளுக்கான வெப்பநிலை அளக்க பயன்படுகிறது.

Question 5.
டிஜிட்டல் வெப்பநிலைமானி முக்கியமாக உடலின் வெப்பநிலை அளக்க பயன்படுகிறது
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 7

V. ஒப்புமை தருக

Question 1.
ஆற்றல் : ஜீல்; வெப்பநிலை; ……………….
விடை:
கெல்வின்

Question 2.
மருத்துவ வெப்பநிலைமனி : 35° C to 42° C : ஆய்வக வெப்பநிலைமனி : …………..
விடை:
-10° C to 110° C

Question 3.
வெப்பத்தின் போது திரவம் ; விரிவடையும் : குளிர்ச்சியின் போது திரவம் …………..
விடை:
சுருங்கும்

VI. கூற்றும் காரணமும்

Question 1.
கூற்று (A) : பாதரசம் ஒரு நச்சும் பொருள் மற்றும் ஒரு வெப்பமணி உடைந்தால் அப்புறப்படுத்துவது மிகவும் கடினம்.
காரணம் (R) : டிஜிட்டல் வெப்பநிலைமனியில் மெர்குரி பயன்படுத்தவில்லை.
விடை:
A மற்றும் R இரண்டும் சரி ஆனால் A என்பது R சரியான விளக்கம் இல்லை.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 2.
கூற்று (A) : பாரன்ஹீட் அளவீட்டு முறையினை தனிச்சுழி (கெல்வின்) அளவீட்டு முறைக்கு மாற்றுவது எளிமையானது.
காரணம் (R) : ரான்கீன் தனிச்சுழி அளவீட்டு முறையை கண்டபிடிக்கவில்லை.
விடை:
A மற்றும் R இரண்டும் தவறு.

VII. ஓரிரு வரிகளில் விடையளி

Question 1.
பொதுவாக பயன்படுத்தப்படும் வெப்பநிலை மானிகளை எழுதுக.
விடை:

  • மருத்துவ வெப்பநிலைமானி
  • ஆய்வக வெப்பநிலைமானி

Question 2.
வெப்பநிலையை அளக்க பயன்படும் அலகுகளின் பெயர் எழுதுக.
விடை:

  • செல்சியஸ் (உதா) 20° C
  • பாரன்ஹீட் (உதா) 25° F
  • கெல்வின் (உதா) 100 k

Question 3.
பாரன்ஹீட், கெல்வின் மற்றும் செல்சியஸ் அளவீடுகளுக்கு இடையே உள்ள தொடர்பு எழுதுக.
விடை:
\(\frac{(\mathrm{F}-32)}{9}=\frac{\mathrm{C}}{5}\)
K = 273.15 + C

VIII . குறுகிய விடையளி

Question 1.
ஆய்வக வெப்பநிலைமானியினை பயன் படுத்தும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எழுதுக.
விடை:

  • வெப்பநிலையினை அளவீடும் போது வெப்பநிலை மானியினை சாய்க்காமல் நேராக வைக்க வேண்டும்.
  • எப்பொருளின் வெப்பநிலையினை அளக்க வேண்டுமோ அப்பொருளானது முழுவதும் வெப்பநிலைமானியின் குமிழினை அனைத்து பக்கங்களில் சூழ்ந்து உள்ள போது மட்டுமே அளவீட்டினை எடுக்க வேண்டும்.’

Question 2.
மருத்துவ வெப்பநிலைமானியை வெளிச்சத்தில் படும்படி அல்லது எரியும் பொருள்களுக்கு அருகிலே வைக்க கூடாது ஏன்?
விடை:

  • மருத்துவ வெப்பநிலைமானி குறைந்த அளவு வெப்பநிலை எற்க கூடியது.
  • பாதரசத்தின் அதிகமான விரிவினால் உருவாகும் அழுத்தத்தின் காரணமாக வெப்பநிலைமானியானது உடைந்துவிடக் கூடும்.

Question 3.
பெரும, சிறும வெப்பநிலைமானி என்றால் என்ன?
விடை:
ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப் பயன்படும் வெப்பநிலை மானியானது பெரும், சிறும வெப்பநிலைமானி என அழைக்கப்படுகிறது.

Question 4.
வெப்பநிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு வெப்பநிலை என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை

Question 5.
பாதரசம் அல்லது ஆல்கஹால் வெப்பநிலைமானிகளில் ஏன் பயன்படுத்தப்படுகின்றன?
விடை:

  • பெரும்பாலும் பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஏனெனில் அவற்றின் வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அவை திரவ நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகின்றன.

IX. விரிவான விடையளி

Question 1.
பாதரசம் மற்றும் ஆல்கஹால் பண்புகளை பற்றி எழுதுக.
விடை:
பாதரசத்தின் பண்புகள் :

  • பாதரசம் சீராக விரிவடைகிறது.
  • இது ஒளி ஊடுருவாதது மற்றும் பளபளப்பானது.
  • இது கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டாது.
  • இது வெப்பத்தினை நன்கு கடத்தக்கூடியது.
  • இது அதிக கொதிநிலையும் (357°C) குறைந்த உறைநிலையும் (-39°C) கொண்டது.
  • திக நெடுக்கத்தினாலான வெப்பநிலைகளை அளக்க பாதரசம் பயன்படுகிறது.

ஆல்கஹாலின் பண்புகள் :

  • ஆல்கஹால் -100°C க்கும் குறைவான உறைநிலை கொண்டுள்ளது.
  • எனவே மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்க பயன்படுகிறது.
  • ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்விற்கு இதன் விரிவடையும் தன்மை அதிகமாகும்.
  • அதிக அளவிற்கு வண்ண மூட்ட முடியும்.
  • ஆதலால் கண்ணாடி குழாய்க்குள் இத்திரவத்தினை தெளிவாக காண இயலும்.

Question 2.
மருத்துவ வெப்பநிலை மானியினை பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எழுதுக.
விடை:

  • வெப்பநிலைமானியினால் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் கிருமி நாசினி திரவத்தினால் நன்கு கழுவ வேண்டும்.
  • பாதரச மட்டத்தினை கீழே கொண்டு வருவதற்காக வெப்பநிலைமானியை ஒரு சில முறை உதற வேண்டும்.
  • அளவிடத் தொடங்கும் முன் பாதரச மட்டமானது 35°C அல்லது 94°F கீழ் இருக்க வேண்டும்.
  • வெப்பநிலைமானியின் குமிழ் பகுதியில் வெப்பநிலைமானியை பிடிக்கக் கூடாது.
  • உங்கள் கண்ணிற்கு நேராக பாதரச மட்டத்தினை வைத்து பிறகு அளவீட்டினை எடுக்க வேண்டும்.
  • வெப்பநிலைமானியினைக் கவனமாக கையாள வேண்டும்.
  • கடினமான பரப்பில் வெப்பநிலைமானி மோதினால் அது உடைந்து விடக்கூடும்.
  • வெப்பநிலைமானியினை எரியக்கூடிய பொருள்களுக்கு அருகிலோ அல்லது நேரடியாக சூரிய ஒளியின் கீழோ வைக்கக் கூடாது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை 8

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு

7th Science Guide காட்சித் தொடர்பு Text Book Back Questions and Answers

I. சரியானதை தேர்வு செய்

Question 1.
அசைவூட்டம் எதற்கு உதாரணம்?
அ) ஒலித் தொடர்பு
ஆ) காட்சித் தொடர்பு
இ) வெக்டர் தொடர்பு
ஈ) ராஸ்டர் தொடர்பு
விடை:
ஆ) காட்சித் தொடர்பு

Question 2.
போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன்படுத்துபவர்கள் யார்?
அ) ஆசிரியர்கள்
ஆ) மருத்துவர்கள்
இ) வண்ணம் அடிப்பவர்கள்
ஈ) புகைப்படக் கலைஞர்கள்
விடை:
ஈ) புகைப்படக் கலைஞர்கள்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு

Question 3.
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களைப் பதிவேற்ற பயன்படுத்தப்படும் தெரிவு எது?
அ) BEGIN A STORY
ஆ) IMPORT PICTURES
இ) SETTINGS
ஈ) VIEW YOUR STORY
விடை:
ஆ) IMPORT PICTURES

Question 4.
கீழ்க்காண்பவற்றுள் கணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது எது?
அ) இங்க்ஸ்கேப்
ஆ) போட்டோ ஸ்டோரி
இ) மெய்நிகர் தொழில்நுட்பம்
ஈ) அடோபி இல்லுஸ்ட்ரேட்டர்
விடை:
இ) மெய்நிகர் தொழில்நுட்பம்

Question 5.
படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை எவை?
அ) ராஸ்டர்
ஆ) வெக்டர்
இ) இரண்டும்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) வெக்டர்

Question 6.
சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?
அ) போட்டோஷாப்
ஆ) இல்லுஸ்ட்ரேட்டர்
இ) வெக்டார் வரைகலை
ஈ) போட்டோ ஸ்டோரி
விடை:
இ) வெக்டார் வரைகலை

II. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு 2
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு 3

III. சுருக்கமாக விடையளி

Question 1.
ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?
விடை:

  • ஒரு ராஸ்டர் ஒரு காட்சி இடத்தில் ஒரு X மற்றும் Y ஒருங்கிணைப்பின் ஒரு கட்டம் ஆகும்.
  • ராஸ்டர் படக்கோப்பு வகைகளின் எடுத்துக்காட்டுகள்: BMP, TIFF,GIFமற்றும் JPEGகோப்புகள்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு

Question 2.
இருபரிமாண மற்றும் முப்பரிமாணப் படங்கள் பற்றி எழுதுக.
விடை:

  • இரு பரிமாண 2D படங்கள் நீளம் மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணங்களை மட்டும் கொண்டிருக்கும்.
  • ஆனால் முப்பரிமாணப் படங்கள் நீளம், அகலம் மற்றும் உயரத்தையும் கொண்டிருக்கும். இரு பரிமாண படங்களை விட முப்பரிமாணப் படங்கள் நம் கண்முன்னே நம் நிகழ் உலகில் தோன்றுவது போல் இருக்கும்.

Question 3.
ராஸ்டர் மற்றும் வெக்டர் வரைகலை படங்களை வேறுப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு 4

Question 4.
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி மூலம் படக்கதை காணொளி ஒன்றை எவ்வாறு உருவாக்குவாய்?
விடை:
படி 1 : மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி செயல்பாட்டைத் திறந்து அதில் BEGIN A NEW STORY என்பதைத் தேர்வு செய்து NEXT என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2 : அடுத்ததாகத் தோன்றும் திரையில் IMPORT PICTURE என்பதைக் கிளிக் செய்தால் நம் கணினியில் உள்ள கோப்புகள் தோன்றும். அதில் ஏற்கனவே காணொளிக்காகச் சேமித்த புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கவும். படங்களில் திருத்தங்களைச் செய்யவும் அதில் வசதிகள் உண்டு. தேவையெனில் திருத்தங்களை மேற்கொண்டு NEXT என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3 : இப்பொது ஒவ்வொரு படத்திற்கும், பொருத்தமான சிறு சிறு உரைகளை உள்ளிடலாம். பின்னர் NEXT என்பதைக் கிளிக் செய்து, திரையில் உள்ள படங்களுக்கு அசைவூட்டம் கொடுக்கவும். கதையினை ஒளிப்பதிவு செய்யவும் வசதி உள்ளது. அதனை முடித்தபின் NEXT என்பதை கிளிக் செய்யவும்.

படி 4 : கதைக்குப் பின்னணி இசையை இணைக்க SELECT MUSIC மூலம் இசைக் கோப்பைத் தேர்ந்தெடுத்த பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யவும்.

படி 5 : அடுத்தபடியாக நமது கதைக்கான பெயரையும், அது சேமிக்கப்பட வேண்டிய இடத்தையும் தேர்வு செய்து, பின்னர் SETTINGS மூலம் காணொளியின் தரத்தினை மாற்றிக் கொள்ளலாம்.

படி 6: இதோ நமது காணொளி தயாராகிவிட்டது. தோன்றும் திரையில் VIEW YOUR STORY என்பதைக் கிளிக் செய்தால் நமது காணொளியைக் காணலாம்

7th Science Guide உடல் நலமும், சுகாதாரமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கணினியை நாம் நாடுவதற்கான காரணம்
அ) வேகம்
ஆ) சேமிப்புத்திறன்
இ) அ மற்றும் ஆ
விடை:
இ) அ மற்றும் ஆ

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு

Question 2.
கோப்புத் தொகுப்பு என்பது ____________ உள்ளடக்கியது
அ) அளவான கோப்புகள்
ஆ) பல கோப்புகளை
இ) Word Document
விடை:
ஆ) பல கோப்புகளை

Question 3.
இவற்றுள் எது ராஸ்டர் கோப்பு வகை
அ) .ai
ஆ) .pdf
இ).png
விடை:
இ) .pne

Question 4.
இவற்றுள் எது வெக்டர் கோப்பு வகை
அ) .png
ஆ) .jpg
இ) .pdf
விடை:
இ) .pdf

Question 5.
மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி எதற்கு பயன்படுகிறது.
அ) காணொளி உருவாக்க
ஆ) கோப்புகளை உருவாக்க
இ) அசைவூட்டம் உருவாக்க
விடை:
அ) காணொளி உருவாக்க

II. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு 5

III. விடையளிக்க .

Question 1.
கோப்புத் தொகுப்பு என்றால் என்ன?
விடை:
கோப்புத் தொகுப்பு என்பது பல கோப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் போன்றது ஆகும்.

Question 2.
கோப்புகளை உருவாக்குவது எப்படி?
விடை:
உதாரணத்திற்கு விண்டோஸ் இயங்குதளம் உள்ள கணினிகளில் நம் குறிப்புகளைச் சேகரித்து வைக்க Notepad செயலியையும், படங்கள் வரைய Paint என்னும் செயலியையும் பயன்படுத்தலாம்.

Question 3.
மெய் நிகர் (Virtual Reality) என்றால் என்ன ?
விடை:
முப்பரிமாணத்தின் அடுத்தக்கட்டமாக மெய்நிகர் என்னும் தொழில் நுட்பம் வந்துள்ளது, மெய்நிகர் என்பது கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல காட்டுவதாகும். இதன் மூலம் விளையாடப்படும் விளையாட்டுகள், உண்மையாக நாம் மைதானத்தில் விளையாடுவது போல தோன்றும். தற்போது திறன்பேசிகளிலும் மெய்நிகர் செயலிகள் வந்து விட்டன.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு

Question 4.
வெக்டர் கோப்பின் வகைகள் யாவை?
விடை:

  • .eps
  • .ai
  • .pdf
  • .svg
  • .sketch

Question 5.
வெக்டர் வரைகலைப் படங்கள் எதற்கு பயன்படுகிறது?
விடை:
படங்கள் வரைவதற்கும், சின்னங்கள் உருவாக்கவும் இதுவே சிறந்தது. மேலும் ராஸ்டர் படங்களை விட அளவில் மிகக் குறைந்தது வெக்டர் படங்கள்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 7 காட்சித் தொடர்பு 6

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

7th Science Guide உடல் நலமும், சுகாதாரமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான். இது எதைக் குறிக்கிறது.
அ) சுகாதாரம்
ஆ) உடல்நலம்
இ) சுத்தம்
ஈ) செல்வம்
விடை:
ஆ) உடல்நலம்

Question 2.
தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் சிறந்தது.
அ) மகிழ்ச்சி
ஆ) ஓய்வு
இ) மனம்
ஈ) சுற்றுச்சூழல
விடை:
இ) மனம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 3.
நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்
அ) திறந்த
ஆ) மூடியது
இ) சுத்தமான
ஈ) அசுத்தமான
விடை:
இ)சுத்தமான

Question 4.
புகையிலையை மெல்லுவதால் ஏற்படுவது
அ) இரத்த சோகை
ஆ) பற்குழிகள்
இ) காசநோய்
ஈ) நிமோனியா
விடை:
ஆ) பற்குழிகள்

Question 5.
முதலுதவி என்பதன் நோக்கம்
அ) பணத்தைச் சேமித்தல்
ஆ) வடுக்களைத் தடுத்தல்
இ) மருத்துவப் பராமரிப்பு தடுத்தல்
ஈ) வலி நிவாரணம்
விடை:
ஈ) வலி நிவாரணம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை ______________ என அழைக்கிறோம்.
விடை:
சமூகம்

Question 2.
நான் பச்சை நிறத்தில் குப்பைகளோடு இருக்கக்கூடிய பெட்டி நான் _____________.
விடை:
குப்பைத் தொட்டி

Question 3.
கண்கள் உலகிலனக் காணப் பயன்படும் ____________ கருதப்படுகின்றன
விடை:
சாளரங்களாக

Question 4.
முடியை மென்மையாக வைத்திருக்க மயிர்க்கால்கள் ____________ உற்பத்தி செய்கின்றன.
விடை:
எண்ணெயை

Question 5.
காசநோய் என்பது ______________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது
விடை:
மைக்கோபாக்டீரியம் டியூப்ரகுலே

III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறெனில் சரிசெய்து எழுதுக

Question 1.
அனைத்து உணவுகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
சின்னம்மை லுகோடெர்மா என்றும் அழைக்கப்டுகிறது.
விடை:
தவறு – வாரி செல்லா என்றும் அழைக்கப்படுகிறது.

Question 3.
வயிற்றுப்புண் ஒரு தொற்றாநோய்.
விடை:
சரி

Question 4.
ரேபிஸ் நோய் இறப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாயகரமான நோயாகும்.
விடை:
சரி

Question 5.
முதல்நிலை தீக்காயத்தில் முழுத்தோல் பகுதியும் சேதமடைகிறது.
விடை:
தவறு – மேல் புறத்தோல் சேதமடைகிறது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 2

V. ஒப்புமை தருக

Question 1.
முதல்நிலைத் தீக்காயம் : மேற்புறத்தோல் ::
இரண்டாம் நிலைத் தீக்காயம் : ____________
விடை:
மேல் புறத்தோல் மற்றும் டெர்மிஸ்

Question 2.
டைபாய்டு : பாக்டீரியா :: ஹெபடைடிஸ் : ____________
விடை:
வைரஸ்

Question 3.
காசநோய் : காற்று :: காலரா : _____________
விடை:
மாசுபட்ட உணவு மற்றும் நீர்

VI. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க

Question 1.
கூற்று : வாய்ச் சுகாதாரம் நல்லது.
காரணம் : நல்ல பற்கள் ஆரோக்கியமான திசுக்களைக் கொண்ட ஈறுகளால் சூழப்பட்டுள்ளன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி. ஆனால். காரணம் தவறு. .
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
கூற்று : சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
காரணம் : உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல் மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி. ஆனால். காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

VII. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
சுகாதாரம் என்றால் என்ன?
விடை:
சுகாதாரம் என்பது நோய்களைத் தடுக்கவும், நல்ல ஆரோக்கியத்தைக் தக்க வைத்துக் கொள்ளவும். குறிப்பாகத் தூய்மை பாதுகாப்பான குடிநீர் உட்கொள்ளல் மற்றும் சரியான முறையில் கழிவு அகற்றுதல் போன்ற நல்ல செயல்களைக் குறிப்பதாகும்.

Question 2.
கண்களைப் பாதுகாக்கும் முறைகள் பற்றி எழுது.
விடை:

  • கண்களைக் தசக்குதல் கூடாது.
  • நீண்ட நேரமாகத் தொலைக்காட்சி பார்த்தல் மற்றும் கணினி பயன்பாட்டை குறைத்தல் வேண்டும்.

Question 3.
உனது முடியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணுவது எவ்வாறு?
விடை:

  • உச்சந்தலையை நன்றாகத் தேய்த்துக் குளிக்கும் போது இறந்த சருமச் செல்கள், அதிக எண்ணெய் மற்றும் தூசி ஆகியவற்றை அகற்றலாம்.
  • சுத்தமான தண்ணீரில் குளித்தல், நல்ல தரமான சீப்புகளைப் பயன்படுத்துதல் முடி பராமரிப்புக்கு மிக அவசியமாகக் கருதப்படுகிறது.

Question 4.
தனது கைபேசியில் சோபி அடிக்கடி விளையாடுகிறார். கண் எரிச்சலிலிருந்து அவரது கண்களைப் பாதுகாக்க உனது பரிந்துரை என்ன?
விடை:

  • கண்களை அவ்வப்போது திறந்து மூடுதல் வேண்டும்.
  • கைபேசியில் உள்ள தொடுதிரையின் பிரகாசம் மிக அதிகமாகவோ, மிக குறைவாகவோ இருக்கக் கூடாது.
  • தொடுதிரை சுத்தமாக இருக்க வேண்டும்.
  • கையேசியை கண்களுக்கு மிக அருகில் வைத்து பயன்படுத்தத் கூடாது.

Question 5.
மழைக்காலத்தில் உங்கள் பகுதியில் பரவும் இரண்டு தொற்று நோய்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • காலரா
  • டைபாய்டு காய்ச்சல்

Question 6.
காயங்களுக்கு என்ன முதலுதவி வழங்க வேண்டும்?
விடை:

  • பாதிக்கப்பட்ட பகுதியைச் சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவிய பின் ஒரு கிருமி நாசினித் திரவத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • பிறகு கிருமி நாசினிக் களிம்பு இடவேண்டும்.
  • தொற்று நோயைத் தடுக்கும் வண்ணம் காயம்பட்ட இடத்தைச் சுற்றிக் கட்டுத் துணியால் கட்டப்பட வேண்டும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 7.
கங்காவிற்குச் சிறிய தீக்காயம் ஏற்பட்டதால், நான் தண்ணீரால் புண்ணைக் கழுவினேன்” என்று ரவி கூறினான். அவனது கூற்றினை ஏற்றுக் கொள்கிறாயா, இல்லையா? ஏன் என்பதை விவரி?
விடை:

  • அவருடைய கூற்று ஏற்றுக் கொள்ளப்படதக்கது.
  • ஏனெனில் சிறிய தீக்காயத்திற்கு, பாதிப்படைந்த பகுதியை குளிர்ந்த நீரால் கழுவி பின் கிருமி நாசினி களிம்பை அந்த இடத்தில் இட வேண்டும்.

VIII. சுருக்கமாக விடையளி

Question 1.
முதலுதவியின் அவசியம் என்ன?
விடை:

  • உயிரைப் பாதுகாக்க. > நோயாளியின் இரத்தக் கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த > வலி நிவாரணம் அளிக்க
  • ஆரம்ப நிலைக்கான ஒரு அவசர மருத்துவச் சேவை.

Question 2.
இந்தப்படம் எதை விளக்குகிறது?
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 3
விடை:

  • குப்பையை கண்ட இடத்தில் போடக்கூடாது.
  • பொது இடத்தை தூய்மையாக வைப்பது நமது கடமை.

Question 3.
தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்களை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 4

Question 4.
உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?
விடை:

  • ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல் மூலம் பற்களிலும், ஈறுகளில் பற்கரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கிறது.
  • ஃப்ளோசிங் செய்யும் போது உணவுத் துகள்கள், பற்கரை மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன.

Question 5.
தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன?
விடை:
அசுத்தமான காற்று. நீர் உணவு அல்லது வெக்டார்கள் என்று அழைக்கப்படும். நோய் கடத்திகளான பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் மூலமாகவும் தொற்று நோய்கள் பரவுகின்றன.

Question 6.
மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் போன்ற குறைபாட்டை குறைக்க கூறும் ஆலோசனை யாது?
விடை:

  • மெல்லிய, சிதறிய முடி மற்றும் முடி உதிர்தல் ஆகியவை முடியின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறிக்கின்றன.
  • பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • புரதச் சத்து மிகுந்த உணவினையும் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

IX. விரிவாக விடையளி

Question 1.
ஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
காசநோய்
காசநோய் மைக்ரோபாக்ரியம் டியூபர்குலேயெ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பரவும்முறை
நோயாளியிடமிருந்து வரும் சளி, எச்சில் மற்றும் உடமைகள் மூலம் பரவுகின்றன.

அறிகுறிகள்
எடை இழப்பு, காய்ச்சல், தொடர்ந்து இருமல், சளியுடன் இரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

தடுப்பு மற்றும் சிகிச்சை

  • BCG தடுப்பூசி போடுதல்
  • நோயாளிக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்
  • DOT போன்ற தொடர்ச்சியாக அளிக்கப்படும் மருந்துகளைப் பயன்படுத்துதல்

காலரா
விப்ரயோ காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பரவும்முறை
அசுத்தமான உணவு, அல்லது நீர் மூலம் பரவக்கூடியது.

அறிகுறிகள்
வயிற்றுப் போக்கு, தலைவலி மற்றும் வாந்தி

தடுப்பு மற்றும் சிகிச்சை

  • சாப்பிடும் முன் கைகளை கழுவுதல்
  • தெருக்களில் விற்கப்படும் திறந்த வெளி உணவுகளை தவிர்த்தல்
  • காலராவிற்கு எதிராக தடுப்பூசி போடுதல்.

டைப்பாய்டு
சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பரவும்முறை
அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் பரவுகிறது.

அறிகுறிகள்
பசியின்மை , தீவிரத் தலைவலி, அடி வயிற்றில் புண், அல்லது தடிப்புகள் மற்றும் தீவிரக் காய்ச்சல் (104°F) வரை காய்ச்ச ல்

தடுப்பு மற்றும் சிகிச்சை

  • கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரை உட்கொள்ளுதல்,
  • முறையாக கழிவுநீர் அகற்றுதல்
  • தடுப்பூசி போடுதல்

Question 2.
ஒரு நபருக்குத் தோலில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வாய்? முதலுதவிக்கான — பல்வேறு சூழ்நிலைகளையும் கூறுக.
விடை:

  • சிறிய தீக்காயங்களைக் குளிர்ந்த நீரில் கழுவி கிருமிநாசினிக் களிம்பு இடவேண்டும்.
  • கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு கொப்புளங்கள் இருந்தால் நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • காயம்பட்ட இடத்தைச் சுற்றி சுத்தமான ஒட்டக் கூடிய தன்மையற்ற துணி அல்லது கட்டுத் துணிகளால் சுற்ற வேண்டும்.
  • பெரிய தீக்காயங்களுக்கு மருத்துவரின் சிகிச்சையை நாட வேண்டும்.

முதலுதவிக்கான பல்வேறு சூழ்நிலைகள் :

  • உயிரைப் பாதுகாக்க
  • நோயாளியின் இரத்தக்கசிவைத் தடுக்க மற்றும் நிலையை உறுதிப்படுத்த
  • வலி நிவாரணம் அளிக்க
  • ஆரம்ப நிலைக்கான ஒரு அவசர சிகிச்சை.

Question 3.
ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எவ்வாறு நோய் பரவுகிறது?
விடை:

  • மாசுபட்ட காற்று, அசுத்தமான உணவு மற்றும் நீர் வெக்டார்கள் எனப்படும் நோய்க் கடத்திகளாலும் நோய் பரவுகிறது.
  • சளி மற்றும் காய்ச்சல் பொதுவான தொற்று நோய்கள்
  • இது பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் பரவுகிறது.
  • நாசியிலிருந்து வெளியேறும் சளியில் பாக்டீரியா அல்லது வைரஸ் காணப்படலாம்.
  • அப்போது நோயாளி நாசியைத் தொட்டபின் வேறு பொருளையோ அல்லது வேறு நபரையோ தொடும் போது வைரஸ் இடம் பெயர்கிறது.
  • நோயாளியின் தும்மல் மற்றும் இரும்மலின் போது வெளியேறும் துளிகளில் வைரஸ் இருந்தால், அது காற்றில் பரவும்.
  • எனவே சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் கைக்குட்டையைப் பயன்படுத்தி நாசியைச் சிந்துவதும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற செயல்களால் வைரஸை பரவாமல் செய்ய முடியும்.

X. உயர் சிந்தனை வினா

Question 1.
ஒரு நபர் அலுவலகத்தில் அல்லது வகுப்பறையில் பகல் நேரத்தில் தூங்குவது ஏன்? இத்தகைய சூழ்நிலையை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? விவரி.
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 5
விடை:

  • இரவு நேரப் பணி அல்லது அதிக நேரம் கண் விழித்து படித்தல்.
  • ஒரு மனிதனுக்கு சராசரியாக 7-8 மணி நேரத் தூக்கம் மிக அவசியம்.
  • இந்த தூக்க நேரத்தில் குறைவு ஏற்பட்டால் அது பல உடல் பிரச்சனைகளை உருவாக்கும்.
  • சில நேரங்களில் சுவாசக் கோளாறு காரணமாக சரியான தூக்கம் இல்லையென்றாலும் பகல் நேரத்தில் தூக்கம் வரும்.
  • கவனக்குறைவு, ஒருமுகப்படுத்தி படித்தலில் குறைபாடு, ஞாபக மறதி போன்ற காரணங்களாலும் படிக்கும் குழந்தைகள் வகுப்பறையில் தூங்குகின்றனர்.

7th Science Guide உடல் நலமும், சுகாதாரமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறி ________________
அ) ஈறுகளில் இரத்தக் கசிவு
ஆ) பற்சிதைவு
இ) இரத்தத் தட்டகளின் எண்ணிக்கை குறைவு
ஈ) எடை இழப்பு
விடை:
இ) இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைவு

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் நோய் ______________
அ) வண்ணக்குருடு
ஆ) இரவு குருட்டுத் தன்மை
இ) இளம் சிவப்புக் கண் நோய்
ஈ) பெலாக்ரா
விடை:
இ) இளம் சிவப்புக் கண் நோய்

Question 3.
தீவிர இரத்த சோகையினால் இளம் குழந்தைகளுக்கு _____________ தொற்று நாள்பட்ட வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.
அ) பாக்டீரியா
ஆ) வைரஸ்
இ) புரோட்டோசோவா
ஈ) கொக்கிப் புழு
விடை:
ஆ) கொக்கிப் புழு

Question 4.
______________ ஆம் ஆண்டு உலகிலேமே முதன்முதலில் பென்சிலின் கண்டறியப்பட்டது.
அ) 1928
ஆ) 1938
இ) 1948
ஈ) 1926
விடை:
அ) 1928

Question 5.
சத்தை ஊசியாக எடுக்காமல் மாத்திரைகளாக வாய் வழியாக உட்கொள்ளலாம்.
அ) கால்சியம்
ஆ) மெக்னீசியம்
இ) இரும்பு
ஈ) சோடியம்
விடை:
இ) இரும்பு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மருந்துகளின் இராணி என அழைக்கப்படுவது ___________
விடை:
பென்சிலின்

Question 2.
__________ தோலில் சில பகுதி அல்லது மொத்தப் பகுதியில் நிறமி இழப்புகளால் ஏற்படும் ஒரு தொற்றா நோயாகும்.
விடை:
லுகோடெர்மா

Question 3.
தட்டம்மையின் முக்கிய அறிகுறி ____________ ஆகும்.
விடை:
அம்மை கொப்புளங்கள்

Question 4.
பசியின்மையை _____________ என்றும் அழைக்கலாம்
விடை:
அனோரெக்ஸியா

Question 5.
______________ உடல் அமைப்பு ஒரு மகத்தான அதிசயம்
விடை:
மனித

III. சரியா? தவறா (தவறெனில் தவறை சரி செய்)

Question 1.
பற்கள் உணவை அரைக்கும் போது ஊக்குவிக்கப்பட்ட உமிழ்நீர் மற்றும் செரிமானச் சுரப்புகள் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
மஞ்சள் காமாலை ஒரு உயிர்க் கொல்லி நோய்.
விடை:
சரி

Question 3.
முதல்நிலை தீக்காயம் என்பது மேல்புறத் தோல் மற்றும் உட்தோல் தீயால் பாதிக்கப்படுவது
விடை:
தவறு. சரியான விடை : முதல் நிலை தீக்காயம் மேல்புறத் தோலை மட்டும் பாதிக்கிறது.

Question 4.
டைபாய்டு, சால்மோனெல்லா டைபி எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
விடை:
சரி

Question 5.
வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை காலராவின் அறிகுறிகளாகும்.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 6

V. வாக்கியத்திற்கேற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

(இளம் சிவப்புக் கண்நோய், கழுத்துக் கழலை, இரவு குருட்டுத் தன்மை, ஏடிஸ் எஜிப்டி )
Question 1.
மிகவும் தொற்று, இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிறது.
விடை:
இளம் சிவப்புக்கண் நோய்

Question 2.
ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுவது.
விடை:
கழுத்துக் கழலை

Question 3.
இது இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.
விடை:
ஏடிஸ் எஜிப்டி

Question 4.
இது விழித்திரை செல்களின் குறைபாடு
விடை:
இரவு குருட்டுத் தன்மை

(லுகோடெர்மா, HIV,MMR,ஆஸ்துமா)
Question 1.
தீங்கு விளைவிக்கக் கூடிய வெளிப்புறக் காரணிகள் உடலில் ஏற்படுத்தும் சிக்கல்.
விடை:
ஆஸ்துமா

Question 2.
நோய் எதிர்ப்பு சக்தி முழுவதுமாக குறைவது.
விடை:
HIV

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 3.
சிகிச்சை இல்லா ஒரு நோய் இது தொடுதல் மூலம் பரவாது.
விடை:
லுகோடெர்மா

Question 4.
குழந்தைப் பருவத்திலேயே கொடுக்கப்பட்ட வேண்டிய தடுப்பூசி
விடை:
MMR

VI. ஒப்புமை வினா

Question 1.
பற்சிதைவு: பாக்டீரியா: மஞ்சள் காமாலை: ___________
விடை:
வைரஸ்

Question 2.
ரேபிஸ்: வெறிநாய்கடி; தட்டம்மை : ___________
விடை:
வாரி செல்லா

VII. கூற்றும் காரணமும்

Question 1.
உறுதிப்படுத்துதல் :
கூற்று A : அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் மாஸ்டிகேசன்’ என்று அழைக்கப்படுகிறது.
காரணம் R : உணவை அரைக்கும் போது உமிழ்நீர் மற்றும் செரிமானச் சுரப்புகள் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

அ) A மற்றும் R இரண்டும் சரி
ஆ) A மற்றும் R இரண்டும் தவறு
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
விடை:
அ) Aமற்றும் R இரண்டும் சரி

Question 2.
உறுதிப்படுத்துதல் :
கூற்று A : மண் சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பொதுவாக இரத்தச் சோகை இருக்கும்.
காரணம் R : அன்றாட உணவில் புரதச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படுகிறது.

அ) A மற்றும் R இரண்டும் சரி
ஆ) A மற்றும் R இரண்டும் தவறு
இ ) A. சரி ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
விடை:
அ) A சரி ஆனால் R தவறு

VIII. மிகக் குறுகிய விடை தருக

Question 1.
சிறிய தீக்காயங்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி யாது?
விடை:
சிறிய தீக்காயப் பகுதிகளை குளிர்ந்த நீரில் கழுவி கிருமி நாசினிக் களிம்பு இட வேண்டும்.

Question 2.
பாக்டீரியாவினால் ஏற்படச் கூடிய நோய்கள் எழுதுக.
விடை:
காசநோய், காலரா, டைபாய்டு என்

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 3.
அடிப்படை சமூக சுகாதாரத்தை எவ்வாறு பராமரிக்கலாம்?
விடை:

  • நாம் வாழும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல்.
  • வடிகால் சரியான முறையில் மூடப்பட்டிருத்தல்.
  • வீட்டுக் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுதல்.

IX. குறுகிய விடை தருக

Question 1.
மஞ்சள் காமாலை நோயின் அறிகுறிகள் யாவை?
விடை:
த பசியின்மை , வாந்தி, மஞ்சள் நிறமுடைய சிறுநீர் கண்களில் மஞ்சள் நிறம்.

Question 2.
பற்களைப் பராமரிக்கும் இரண்டு வழிகளைக் கூறுக.
விடை:

  • ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல் மூலம் பற்களிலும், ஈறுகளில் பற்காரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கிறது.
  • ஃப்ளோசிங் செய்யும் போது உணவுத் துகள்கள், பற்காரை மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்டுகின்றன.

Question 3.
ஒரு நபர்க்கு நோய் ஏற்படுவதற்கான காரணங்களை எழுது.
விடை:

  • நுண் கிருமிகளின் தொற்று
  • சமச்சீர் உணவு உட்கொள்ளாதது.
  • தவறான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள்
  • ஒன்று அல்லது பல உடல்பாகங்கள் அல்லது உறுப்புகளின் செயலிழப்பு

Question 4.
வெறி நாய்கடியின் தடுப்பு மற்றும் சிகிச்சை முறையை எழுதுக
விடை:

  • விலங்கு கடித்தவுடன் முதலுதவி செய்ய வேண்டும்.
  • பின் மருத்துவரை அணுகுதல் நலம்.
  • இரண்டு முதல் 12 வாரங்கள் அல்லது இரண்டு வருடங்கள் கழிந்த பின் கூட நோயின் அறிகுறிகள் தென்படலாம்.
  • அறிகுறிகள் ஏற்படும் முன் தடுப்பூசி போடுவது அவசியம்.

Question 5.
தடுப்பூசி போடுவதன் நோக்கமென்ன?
விடை:
ஒரு குறிப்பிட்ட வியாதிக்கெதிராக நோய்த் தடுப்பாற்றலை உருவாக்கி அந்நோய்க்கெதிராகப் போராட நம் உடலை தயார் செய்தலே தடுப்பூசி போடுவதன் நோக்கமாகும்.

X. விரிவான விடை தருக

Question 1.
தீக்காயம் என்றால் என்ன? அதன் மூன்று வகைகளை விவரி.
விடை:
வெப்பம், வேதிப்பொருட்கள், மின்சாரம், சூரிய ஒளி அல்லது அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் திசுச் சேதங்கள் தீக்காயங்கள் எனப்படும்.

முதல் நிலை தீக்காயங்கள்
இது தோல் வெளிப்புற அடுக்கு மட்டும் பாதிப்படைவதாகும்.

இரண்டாம் நிலை தீக்காயங்கள்
மேல்புறத் தோல் மற்றும் அதற்குக் கீழ் உள்ள உட்தோலும் தீயால் பாதிக்கப்படுவது இரண்டாம் நிலை தீக்காயமாகும்.

மூன்றாம் நிலை தீக்காயங்கள்

  1. இங்கு தோலின் முழு ஆழத்திற்குத் தோலினை அழித்தும் மற்றும் அடிப்படைத்திசுக்களையும் சிதைக்கும் நிலை ஆகும்.
  2. இத்தகைய தீக்கதிர்களால் பாதிக்கப்பட்டோருக்கு பெரும்பாலும் தோல் ஒட்டுதல் தேவைப்படுகிறது.
  3. சேதமடைந்த இரத்தக் குழாய்களிலிருந்து திரவ இழப்பு ஏற்படுவதால், தீப்பட்ட இடத்தில் வீக்கம் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும்

Question 2.
பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகள் அதன் தடுப்பு மற்றும் சிகிச்சை முறையினை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 7

மனவரைபடம்
Samacheer Kalvi 7th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும், சுகாதாரமும் 8

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

10th Science Guide இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
அ) போத்துத் தேர்வு முறை
ஆ) கூட்டுத் தேர்வு முறை
இ) தூய வரிசைத் தேர்வு முறை
ஈ) கலப்பினமாக்கம்
விடை:
ஆ) கூட்டுத் தேர்வு முறை

Question 2.
பூசா கோமல் என்பது ____________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
அ) கரும்பு
ஆ) நெல்
இ) தட்டைப்பயிறு
ஈ) மக்காச் சோளம்
விடை:
இ) தட்டைப்பயிறு

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 3.
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது _____________ இன் ரகமாகும்.
அ) மிளகாய்
ஆ) மக்காச்சோளம்
இ) கரும்பு
ஈ) கோதுமை
விடை:
ஈ) கோதுமை

Question 4.
தன்னுடைய 50வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ____________ ஆகும்.
அ) TR 8
ஆ) IR 24
இ) அட்டாமிட்டா 2
ஈ) பொன்னி
விடை:
அ) IR8

Question 5.
உயிர்த்தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
அ) உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி
ஆ) வாழும் உயிரினங்கள்
இ) வைட்டமின்கள்
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
ஈ) (அ) மற்றும் (ஆ)

Question 6.
DNA வை வெட்டப் பயன்படும் நொதி [PTA-2, Sep.20]
அ) கத்திரிக்கோல்
ஆ) ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்
இ கத்தி
ஈ) RNA நொதிகள்
விடை:
ஆ) ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்)

Question 7.
rDNA என்பது ____________
அ) ஊர்தி DNA
ஆ) வட்ட வடிவ DNA
இ) ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNA-வின் சேர்க்கை .
ஈ) சாட்டிலைட் DNA
விடை:
இ) ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNA-வின் சேர்க்கை

Question 8.
DNA விரல்ரேகை தொழில்நுட்பம் _______ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
அ) ஓரிழை
ஆ) திடீர்மாற்றமுற்ற
இ) பல்லுருத்தோற்ற
ஈ) மீண்டும் மீண்டும் வரும் தொடர்
விடை:
ஈ) மீண்டும் மீண்டும் வரும் தொடர்

Question 9.
மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ____________ என அழைக்கப்படுகின்றன.
அ) அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
ஆ) மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை
இ) திடீர் மாற்றம் அடைந்தவை
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
ஈ) (அ) மற்றும் (ஆ)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 10.
ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n=6x=42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே ஆகும்.
அ) n = 7 மற்றும் x = 27
ஆ) n = 21 மற்றும் x = 21
இ) n = 7 மற்றும் x = 7
ஈ) n = 21 மற்றும் x = 7
விடை:
ஈ) n = 21 மற்றும் x = 7

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
______________ என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.
விடை:
தாவர பயிர்ப் பெருக்கம்

Question 2.
புரதம் செறிந்த கோதுமை ரகம் _____________ ஆகும்.
விடை:
அட்லஸ் 66

Question 3.
______________ என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆகும்.
விடை:
கால்ச்சிசின்

Question 4.
விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை _____________ எனப்படும்.
விடை:
உயிரூட்டச் சத்தேற்றம்

Question 5.
நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட ___________ என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
விடை:
அட்டாமிட்டா 2

Question 6.
______________ தொழில் நுட்பம் மரபியல் ரீதியாக உயிரினங்களை உற்பத்தி செய்ய வழிவகை செய்துள்ளது.
விடை:
ஜீன் குளோனிங்

Question 7.
ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியானது DNA மூலக்கூறை _____________ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் துண்டாக்குகிறது.
விடை:
கார வரிசை (பேலின்ட்ரோம் வரிசை)

Question 8.
ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ____________ இடையே காணப்படும்.
விடை:
ஒற்றைக் கரு இரட்டையர்கள்

Question 9.
வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு _____________ ஆகும்.
விடை:
குருத்தணுக்கள்

Question 10.
ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, _________ உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.
விடை:
பிளாஸ்மிட் .

III. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின் சரியான கூற்றை எழுதுக.

Question 1.
கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும்.
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 2.
இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை சடுதிமாற்றம் எனப்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை பன்மய பயிர்ப்பெருக்கம் எனப்படும்.

Question 3.
உடல் இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே தூய வரிசை எனப்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: உடல் இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன்கள் எனப்படும்.

Question 4.
இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம் பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம் பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் இரும்புச் சத்தின் தரத்தை தீர்மானிக்கிறது.

Question 5.
கோல்டன் ரைஸ் ஒரு கலப்புயிரி.
விடை:
தவறு.
சரியான கூற்று: கோல்டன் ரைஸ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி.

Question 6.
பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக் கூடியது.
விடை:
சரி.

Question 7.
செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்குள் நடைபெறும் கருவுறுதலாகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: செயற்கை கருவுறுதல் என்பது உடலுக்கு வெளியே (ஆய்வுக்கூடத்தில் நடைபெறும் கருவுறுதலாகும்.

Question 8.
DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பவரால் உருவாக்கப்பட்டது.
விடை:
சரி.

Question 9.
மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது DNA லைகேஸைக் குறிக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது ரெஸ்ட்ரிக்சன் நொதிகளைக் குறிக்கும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 1
விடை:
1 – இ
2 – உ
3 – ஆ
4 – அ
5 – ஈ
6 – ஏ
7 – ஊ
8 – எ

V. கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள்.

பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 1.
கூற்று: கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும்.
காரணம்: கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 2.
கூற்று: கால்ச்சிசின் குரோமோசோம் எண்ணிக்கையைக் குறைக்கிறது. [PTA-2]
காரணம்: சகோதரி குரோமோட்டிடுகள் எதிரெதிர்த் துருவங்களை நோக்கி நகர்வதை அது ஊக்குவிக்கிறது.
விடை:
ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 3.
கூற்று: rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது. [PTA-4]
காரணம்: இலக்கு உயிரினத்தில் விரும்பத்தகாத ஜீன்களை நுழைக்காமல் விரும்பத்தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப்படுகின்றன.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.

VI. ஒரே வாக்கியத்தில் விடையளி.

Question 1.
அதிக நார்ச்சத்தும் புரதமும் நிறைந்த கோதுமை ரகத்தின் பெயரை எழுதுக.
விடை:
டிரிட்டிக் கேல் (6n).

Question 2.
நெல்லில் அரைக் குள்ள வகைகள் அறிமுகம் செய்யப்படுள்ளன. இது நெல்லில் காணப்படும் குள்ள மரபணுவால் (ஜீனால்) சாத்தியமானது. இந்த குள்ள மரபணுவின் (ஜீன்) பெயரை எழுதுக.
விடை:
டீ-ஜியோ -வூ-ஜென் (DGWG) என்ற குள்ள நெல் வகையின் ஜீன், sd1(semi-dwarf).

Question 3.
மரபுப் பொறியியல் – வரையறு.
விடை:
ஜீன்களை நாம் விரும்பியபடி கையாள்வதும் புதிய உயிர்களை உருவாக்க ஜீன்களை ஒரு உயிரியிலிருந்து மற்றொரு உயிருக்கு இடம் மாற்றுதலும் மரபுப் பொறியியல் எனப்படும்.

Question 4.
குருத்தணுக்களின் வகைகளை எழுதுக. [PTA-2]
விடை:

  1. கருநிலைக் குருத்தணுக்கள்,
  2. முதிர் குருத்தணுக்கள் (அ) உடலக் குருத்தணுக்கள்.

Question 5.
அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் என்றால் என்ன? [PTA-6]
விடை:
மரபுப் பண்பு மாற்றம் என்பது rDNA தொழில்நுட்பம் மூலம் உயிரினங்களில் விரும்பிய பண்புகளை ஏற்படுத்த ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துவது, அல்லது ஜீன்களை விரும்பியபடி கையாள்வது ஆகும். புதிதாக உள் நுழைக்கப்படும் ஜீன் ‘அயல் ஜீன்’ எனப்படும்.

இம்முறையில் மாற்றப்பட்ட ஜீன் அல்லது புதிய ஜீனைப் பெற்ற தாவர, விலங்குகள் மரபுப் பண்பு மாற்றப்பட்ட உயிரிகள் எனப்படும்.

VII. சுருக்கமாக விடையளி :

Question 1.
நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் பற்றி விவரி. [PTA-6]
விடை:

  1. வைரஸ்கள், பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகள் போன்ற நோய் உயிரிகளால் தாவரங்களில் நோய்கள் ஏற்படுகின்றன.
  2. இது பயிர்களின் மகசூலைப் பாதிக்கிறது. எனவே பூஞ்சைக் கொல்லிகள், பாக்டீரியக் கொல்லிகளைக் குறைவாக பயன்படுத்தி, மகசூலை அதிகமாக்கி அதே வேளையில் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற பயிர் வகைகளை உற்பத்திச் செய்வது அவசியமாகிறது.
  3. பயிர்ப்பெருக்கத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற சில ரகங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 2

Question 2.
இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவிய கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த பண்புகளை எழுதுக. [PTA-4]
விடை:

  1. ஹிம்கிரி: இலை மற்றும் பட்டைத்துரு நோய், ஹில்பண்ட் நோய்களுக்கெதிரான எதிர்ப்புத் தன்மை பெற்றது.
  2. அட்லஸ் 66: புரதம் செறிந்த கோதுமை ரகம்.
  3. சோனாலிகா மற்றும் கல்யாண் சோனா: அதிக மகசூல் தருகிற மற்றும் அரைக் குள்ள உயரமுடைய ரகம்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 3.
லைசின் அமினோ அமிலம் செறிந்த இரண்டு மக்காச்சோள கலப்புயிரி வகைகளின் பெயரை எழுதுக. [GMQP-2019]
விடை:
லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச் சோள ரகங்கள்:

  1. புரோட்டினா
  2. சக்தி மற்றும்
  3. ரத்னா .

Question 4.
வேறுபடுத்துக. [PTA-1]
அ) உடல செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை
ஆ) மாறுபாடு அடையாத செல்கள் மற்றும் மாறுபட்ட செல்கள்
விடை:
அ)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 3

ஆ)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 4

Question 5.
DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக. [PTA-3; Sep.20]
விடை:
டி.என்.ஏ. விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாடுகள் :

  • டி.என்.ஏ. விரல் ரேகைத் தொழில்நுட்பமானது தடயவியல் பயன்பாடுகளில் குற்றவாளிகளை அடையாளம் காணப் பயன்படுகிறது.
  • இது ஒரு குழந்தையின் தந்தையை அடையாளம் காண்பதில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணவும் பயன்படுகிறது.
  • இது உயிரினத் தொகையின் மரபியல் வேறுபாடுகள் பரிணாமம் மற்றும் இனமாதல் ஆகியவற்றை அறிய உதவுகிறது.

Question 6.
குருத்தணுக்கள் எவ்வாறு புதுப்பித்தல் செயல்பாட்டிற்கு பயன்படுகின்றன?
விடை:

  1. சில நேரங்களில் நமது உடலின் செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஜீன் கோளாறுகளினாலோ, நோய்களாலோ அல்லது விபத்தினாலோ நிரந்தரமான சேதமடையலாம்.
  2. இந்த சூழ்நிலைகளில் மேற்கண்ட குறைபாடுகளை சரிசெய்ய குருத்தணு சிகிச்சை பயன்படும்.
  3. பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சீமர் நோய் போன்ற நரம்புச் சிதைவு குறைபாடுகளை குணப்படுத்த நரம்புக் குருத்தணுக்கள் பயன்படுத்தப்பட்டு சிதைவடைந்த அல்லது இழந்த நியூரான்களுக்கு பதிலாக பதிலீடு செய்யப்படுகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 7.
உட்கலப்பு மற்றும் வெளிக் கலப்பு – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 5

VIII. விரிவாக விடையளி

Question 1.
விலங்குகளில் கலப்பின வீரியத்தின் விளைவுகள் யாவை? [PTA-1 & 5]
விடை:
கலப்பின சேர்க்கை மூலம் உயர்தரப் பண்புகளை உடைய கலப்பினங்களை உற்பத்தி செய்வது ஹெட்டிரோசிஸ் அல்லது கலப்பின வீரியம் எனப்படும்.

விலங்குப் பெருக்கத்தில் கலப்பின வீரியத்தின் விளைவுகள் :

  1. கால்நடைகளில் பால் உற்பத்தியை அதிகரித்தல்.
  2. கோழிகளில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல்
  3. உயர் தர இறைச்சியை உற்பத்திச் செய்தல்
  4. வீட்டு விலங்குகளின் வளர் வீதத்தை அதிகப்படுத்துதல்.

Question 2.
சடுதிமாற்றத்தை எடுத்துக்காட்டுடன் விவரி.
விடை:
ஒரு உயிரினத்தின் DNA-வின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும். இது மரபியல் வேறுபாடுகளை உண்டாக்குவதன் மூ லமாக, உயிரினங்களில் மாற்றங்கனை ஏற்படுத்தும் செயல் ஆகும். சடுதிமாற்றத்துக்கு உட்படும் உயிரினம் “சடுதிமாற்றமுற்ற உயிரினம்” எனப்படும்.

சடுதிமாற்றத்தைத் தூண்டும் காரணிகள் “மியூடாஜென்கள்” அல்லது “சடுதிமாற்றத் தூண்டிகள்” எனப்படும். சடுதி மாற்றத் தூண்டிகள் இரு வகைப்படும். அவை இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் மற்றும் வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள் ஆகும்.
1. இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள்
சடுதிமாற்றத்தைத் தூண்டும் கதிர் வீச்சுகளான X-கதிர்கள் a, B மற்றும் / கதிர்கள், புறஊதாக் கதிர்கள் மற்றும் வெப்பநிலை போன்றவை இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் எனப்படும்.

2. வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள்
சடுதிமாற்றத்தைத் தூண்டும் வேதிப்பொருட்கள் வேதியியல்
சடுதிமாற்றத் தூண்டிகள் எனப்படும். எ.கா. கடுகு வாயு மற்றும் நைட்ரஸ் அமிலம். பயிர் மேம்பாட்டிற்கு தூண்டப்பட்ட சடுதிமாற்றத்தைப் பயன்படுத்துவதே “சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம்” எனப்படும்.

சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கத்தின் சாதனைகள்

  • ஸொனாரா – 64 என்ற கோதுமை ரகத்தில் இருந்து காமாக்கதிர்களைப் பயன்படுத்தி சர்பதி ஸொனாரா என்ற கோதுமை ரகம் உருவாக்கப்பட்டது.
  • உவர் தன்மையைத் தாங்கும் திறன் மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத் தன்மை பெற்ற அட்டாமிட்டா 2 அரிசி ரகம்.
  • கடினமான கனி உறை கொண்ட நிலக்கடலை ரகம்.

Question 3.
உயிரூட்டச் சத்தேற்றம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
விரும்பத் தக்க ஊட்டச் சத்துக்களான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர் தாவரங்களை உற்பத்திச் செய்யப் பயன்படுத்தப்படும் அறிவியல் முறையே உயிரூட்டச் சத்தேற்றம் எனப்படும். இதன் மூலம் உருவாக்கப்பட்ட சில பயிர் ரகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச்சோள ரகங்களான புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா (இந்தியாவில் உருவாக்கப்பட்டவை).
  2. புரதம் செறிந்த கோதுமை ரகமான அட்லஸ் 66.
  3. இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம்.
  4. வைட்டமின் A செறிந்த கேரட், பூசணி மற்றும் கீரை ரகங்கள்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 4.
ஜீன் குளோனிங் தொழில்நுட்பத்தைப் படத்துடன் விவரி.
விடை:
குளோன் என்பது ஒரு உயிரினத்தின் நகல் ஆகும். குளோனிங் என்பது மரபொத்த உயிரிகளை பிரதிகளாக உற்பத்தி செய்யும் முறையாகும்.

ஜீன் குளோனிங் முறையில், ஒரு ஜீன் அல்லது டி.என்.ஏ துண்டானது பாக்டீரிய செல்லினுள் செலுத்தப்பட்டு, பாக்டீரிய செல் பகுப்படையும் போது அதனுடன், உட்செலுத்தப்பட்ட டி.என்.ஏ துண்டு நகல் பெருக்கம் அடைவதாகும்.

ஜீன் குளோனிங் செயல் நுட்பத்தின் அடிப்படை நிகழ்வுகளாவன.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 6

 

  • ரெஸ்ட்ரிக்ஸன் நொதியைப் பயன்படுத்தி விரும்பிய டி.என்.ஏ துண்டைப் பிரித்தெடுத்தல்.
  • டி.என்.ஏ. துண்டைத் தகுந்த கடத்தியினுள் (பிளாஸ்மிட்) நுழைத்து மறுசேர்க்கை டி.என்.ஏக்களை’ (rDNA) உருவாக்குதல்.
  • விருந்தோம்பி பாக்டீரிய செல்லின் உள்ளே மறுசேர்க்கை டி.என்.ஏ வை உட்புகுத்துதல் உருமாற்றம்).
  • உருமாற்றமடைந்த விரும்தோம்பி செல்களைத் தேர்ந்தெடுத்து மறுசேர்க்கை டி.என்.ஏ (rDNA) வை பாக்டீரிய செல் பெருக்கம் மூலம் நகல் பெருக்கம் செய்தல்.
  • விருந்தோம்பியின் செல்லில் புதிய ஜீன் தனது பண்புகளை வெளிப்படுத்துதல்.

இம்முறையின் மூலம் பல நொதிகள் ஹார்மோன்கள் மற்றும் மருந்துகளை தயாரிக்கலாம்.

Question 5.
மருத்துவ துறையில் உயிர்தொழில்நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
மரபுப் பொறியியல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பு மிக்க புரதங்கள் அல்லது பாலிபெப்டைடுகள் உருவாக்கப்படுகின்றன. இவை பல நோய் தீர்க்கும் மருந்துப் பொருட்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

rDNA தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவப் பொருட்கள்

  1. இரத்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான இன்சுலின்
  2. வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் குறைபாட்டினை நீக்கும் மனித வளர்ச்சி ஹார்மோன்
  3. ஹீமோஃபிலியா என்ற இரத்த உறைதல் குறைபாட்டு நோய்க் கட்டுப்பாட்டிற்கான ‘இரத்த உறைதல் காரணிகள்’.
  4. திசு பிளாஸ்மினோஜன் தூண்டி, (இரத்தம் உறைதலைத் தடுக்கும் காரணி) இரத்தக் கட்டிகளைக் கரைத்து இதய அடைப்பைத் தவிர்க்க உதவுகின்றது.
  5. ஹெப்பாடிடிஸ் B மற்றும் வெளி நாய்க்கடி (ரேபிஸ்) நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள்.

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத் தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.
விடை:
அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை உற்பத்திச் செய்யும் பயிர்ப்பெருக்க முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. புதிய வகைத் தாவரங்களின் அறிமுகம்
  2. தேர்வு செய்தல்
  3. பன்மய பயிர்ப்பெருக்கம்
  4. சடுதிமாற்றப் பயிர்ப்பெருக்கம்
  5. கலப்பினமாக்கம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 2.
‘இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது.’ காரணங்கள் கூறு.
விடை:
வளரும் நாடுகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளிலும் அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் மற்றும் நவீன விவசாய நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் செயல்முறையே பசுமைப்புரட்சி ஆகும்.

மேலும் நோய் எதிர்ப்பு பூச்சிகள் மற்றும் தீங்குயில்லா மேம்பட்ட ஊட்டச்சத்து போன்றவற்றின் மூலம் பசுமைப்புரட்சி செய்து அதிக மகசூல் தரும் தாவரங்களை உருவாக்கினர். இதனால் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அவை

  • சில நிலங்களில் ஒரே வகையான தாவரங்களையே பயிரிடுகின்றனர்.
  • பூச்சிக் கொல்லிகள் வேதியியல் சேர்மங்களால் தயாரிக்கப்பட்ட உரங்களை பயன்படுத்துகின்றனர்.
  • அதிக விவசாயிகளுக்கு பணம் செலவிட முடியவில்லை
  • சில வகையான தாவரங்களை பயிரிடுவதால் மண்ணின் தரம் பாதிக்கப்படுவதாக சூழ்நிலையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது.

  1. இவை பசுந்தாள் உரம், மண்புழு உரம், வீட்டுக் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட உரம், போன்றவற்றை பயன்படுத்துவதால் சூழ்நிலையையும் மண் வளத்தையும் பாதிப்படையச் செய்ய போவதில்லை.
  2. தாவரங்களின் வேறுபட்ட சிற்றினங்களை வளர்ப்பதால் நோய்த் தடுப்பாற்றல் ஏற்படுகிறது.
  3. மேலும் ஊடுபயிர் பயிரிடுதல் போன்றவற்றினால் பல்லுயிர் நன்மை பெறுகிறது. எனவே இயற்கை விவசாயம் சிறந்தது.

Question 3.
பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டது. இக்கூற்றை சரியான காரணத்துடன் விவரி.
விடை:

  1. இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம் பன்மயம் எனப்படும். ஜீன்கள் அதிகமாகின்றன. எனவே காய்கறிகளும் பழங்களும் அளவில் பெரிதாக கிடைக்கிறது.
  2. மேலும் பழங்களும் காய்கறிகளும் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
  3. மேலும் அவற்றில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே பன்மயம் இராட்சச தன்மையை பண்புகளால் கொண்டது எனலாம்.

Question 4.
P என்ற ஜீன் வைட்டமின் A உற்பத்திக்குத் தேவைப்படுகிறது. இது ‘R’ என்ற மரபுப்பண்பு மாற்றப்பட்ட தாவரத்தை உற்பத்திச் செய்ய ‘Q’ வின் ஜீனோமுடன் இணைக்கப்படுகிறது.
அ) P,Q மற்றும் R என்பன யாவை?
ஆ) இந்தியாவில் Rன் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
அ) P என்பது பீட்டா கரோட்டின் ஜீன்
Q என்பது சாதாரண அரிசி
R என்பது ‘கோல்டன் ரைஸ்’

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

ஆ) இந்தியாவில் R-ன் முக்கியத்துவம்:

  • மரபணு மாற்றம் செய்யப்பட்ட ‘கோல்டன் ரைஸ்’ பீட்டா கரோட்டினை உற்பத்திச் செய்யும்.
  • வைட்டமின் A குறைபாட்டைத் தவிர்க்கும்.

அரசு தேர்வு வினா-விடை 
4 மதிப்பெண்கள்

Question 1.
ஜீன் சிகிச்சை முறை பற்றி விளக்குக. [Sep.20]
விடை:
ஜீன் சிகிச்சை முறை :
(i) மனிதனில் குறைபாடுள்ள ஜீன்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட, செயல்படும் ஜீன்களை இடம் மாற்றி மரபு நோய்களையும், குறைபாடுகளையும் சரிசெய்வது ஜீன் சிகிச்சை எனப்படும்.

(ii) குறைபாடு / நோய் உள்ள மனிதரின் ஜீன்கள் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில்நுட்பத்திற்கு உட்படுத்தப்பட்டு திருத்தப்படுகின்றன.

(iii) இம்முறை 1990 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

(iv) உடல் செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் உடல் செல் ஜீன் சிகிச்சை எனப்படும்.

(v) கருநிலை அல்லது இனப்பெருக்க செல்களில் விந்து மற்றும் அண்ட செல்) திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் இன செல் அல்லது கருநிலை செல் ஜீன் சிகிச்சை எனப்படும்.

(vi) இது நாள் வரை இனப்பெருக்க செல்கள் அல்லாத உடல செல்களில் மட்டும் ஜீன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(vii) உடல செல்களில் செய்யப்படும் ஜீன் திருத்தம் அந்த திருத்தம் செய்யப்படும் நோயாளிக்கு மட்டுமே நன்மை பயக்கும். அத்திருத்தம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுவதில்லை.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

6th Science Guide விலங்குகள் வாழும் உலகம் Text Book Back Questions and Answers

I. தகுந்த வார்த்தைகளைக் கொண்டு கீழ்க்கண்டவற்றை நிரப்புக

Question 1.
நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை ……. என்று அழைக்கலாம்.
விடை:
வாழிடம்

Question 2.
செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை மற்றும்……… என வகைப்படுத்தலாம்.
விடை:
ஒரு செல் மற்றும் பல
செல் உயிரினம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு ……… பறக்கும் திசையை உதவுகிறது.
விடை:
கட்டுப்படுத்த

Question 4.
அமீபா உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது,
விடை:
பொய்க்கால்கள்

II. சரியா அல்லது தவறா? தவறாக இருப்பின் சரி செய்து எழுதுக

Question 1.
ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக் கூடிய இடம் வாழிடம் எனப்படும்.
விடை:
சரி

Question 2.
புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
விடை:
தவறு.
புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது.

Question 3.
ஒரு செல் உயிரியான அமீபா, பொய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
விடை:
சரி

Question 4.
பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.
விடை:
சரி

Question 5.
பாரமீசியம் ஒரு பலசெல் உயிரி.
விடை:
தவறு.
பார்மீசியம் ஒரு ஒருசெல் உயிரி .

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
வெப்பமண்டல மழைக் காடுகள். புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை …… என்று அழைக்கிறோம்.
விடை:
வாழிடம்

Question 2.
ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் …….. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
ஒரு செல் உயிரினம்

Question 3.
மீனின் சுவாச உறுப்பு ………… ஆகும்
விடை:
செவுள்கள்

Question 4.
கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ………
விடை:
நடக்கின்றன

Question 5.
ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் ……… சேமிக்கின்றன.
விடை:
கொழுப்பு

IV. குறு வினாக்கள்

Question 1.
பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிழக்கின்றன?
விடை:
பறவைகளின் உணவு பிடிக்கும் விதம் அதன் இனத்தை பொறுத்தது.

  • நீரில் வாழும் பறவைகள் தலைகீழாகப் பாய்ந்து அதன் அலகு மூலம் நீரில் உள்ள மீன்களைப் பிடிக்கிறது.
  • வயல்வெளிகளில் வாழும் பறவைகள், புல் மற்றும் வயல்களில் பறக்கும் சிறிய பூச்சிகளை தன் அலகு மூலம் பிடிக்கிறது.
  • வானத்தில் பறக்கும் பறவைகள் தரையில் உள்ள விலங்குகளை அதனுடைய காலிலுள்ள கூர்மையான நகங்கள் மூலம் பிடிக்கிறது.

Question 2.
இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்
விடை:
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்களைக் காணலாம்
ஒட்டகம் வாழும் இடங்கள்

  • ஜோத்பூர்
  • பஸ்கர்
  • பிக்கானர்
  • ஜாஸ்சால்மர்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?
விடை:
அமீபா இடப்பெயர்ச்சியின் போது விரல் போன்ற போலி கால்களை உருவாக்குகிறது. இக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.

Question 4.
பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?
விடை:
பாம்பின் உடலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். அவை தலை, உடல், வால். தலையில் உள்ள உறுப்புகள் – இருகண்கள், இரு நாசித்துளைகள், வாய்.

Question 5.
பறவைகள் காற்றில் பறக்கும் போது எந்த உடலமைப்பைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் கொள்கின்றன.
விடை:
பறவைகள் பறக்கும் போது அதன் வாலைப் பயன்படுத்தி திசையை மாற்றிக் கொள்கிறது.

V. சிறு வினாக்கள்

Question 1.
ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக்
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 80
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 81

Question 2.
துருவக் கரடிகள் மற்றும் பென்குயின்களில் காணப்படும் தகவமைப்புகளை எழுதுக.
விடை:
துருவக்கரடிகள் :

  1. குட்டையான கால்களைப் பெற்றுள்ளது.
  2. வெப்பத்தை குறைப்பதற்கு குறைந்த உடல் பரப்பை பெற்றுள்ளது.
  3. தடித்த தோலைப் பெற்றுள்ளது.
  4. உடல் முழுவதும் மென்மையான அதிகமான ரோமங்களை பெற்றுள்ளது.
  5. தோலுக்கடியில் தடித்த கொழுப்பு திட்டுகளை பெற்றுள்ளது.
  6. கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவையே உண்ணுகிறது.

பென்குயின் :

  1. படகு போன்ற உடல் அமைப்பை பெற்றுள்ளது.
  2. இதன் இறகுகள் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை கொண்டது.
  3. கடினமான தோலை பெற்றுள்ளது.
  4. இதன் அடித்தோல் அதிக கொழுப்பு திட்டுகளைக் கொண்டது.
  5. இது நீருக்குள் பறப்பதற்கு குட்டையான இறகுகளை (துடுப்புகள்) பெற்றுள்ளது.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
பறவைகளின் எவ்வகையான உடலமைப்பு காற்றில் பறக்க உதவி செய்கிறது?
விடை:

  1. பறவைகளின் படகு போன்ற உடலமைப்பு.
  2. பறவைகளின் முன்னங்கால்கள் இறக்கையாக மாறுபாடு அடைந்திருத்தல்.
  3. உள்ளீடற்ற, வெற்றிடத்தினால் ஆன இலேசான எலும்புகளைப் பெற்றிருத்தல்.
  4. பறவைகளின் உடல் இறகுகளால் மூடப்பட்டிருத்தல்.

Question 4.
முதுகெலும்பற்ற விலங்குகளின் வகைகள் யாவை?
விடை:

  1. புரோட்டோசோவா (ஓரு செல் உயிரிகள்)
  2. பொரிஃபெரா (துளையுடலிகள்)
  3. சீலென்டிரேட்டா (குழியுடலிகள்)
  4. பிளாட்டிஹெல்மின்திஸ் (தட்டைபுழு இனம்)
  5. நிமட்டோடா (உருளைப்புழு இனம்)
  6. ஆர்த்ரோபோடா (கணுக்காலிகள்)
  7. மொலஸ்கா (மெல்லுடலிகள்)
  8. எக்கினோ டெர்மேட்டா (முட்தொலிகள்)

VI. விரிவான விடையளி

Question 1.
பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.
விடை:

  1. பாலைவனத்தில் சூடான மணலிருந்து தனது உடலை பாதுகாக்க நீண்ட கால்களைப் பெற்றுள்ளது.
  2. நீர் கிடைக்கும் போது அதிக நீரை அருந்தி தன் உடலில் நீரை சேர்த்து வைக்கிறது.
  3. தன் உடலில் உள்ள நீர் இழப்பை குறைக்க குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது. மேலும் வியர்வை வெளியேற்றுவதில்லை.
  4. அதன் திமிலில் கொழுப்பை சேமித்து வைக்கிறது. சக்தி தேவைப்படும் போது கொழுப்பை சிதைத்து ஊட்டம் பெறுகிறது.
  5. பாலைவன மிருதுவான மணலில் நடக்க பெரிய தட்டையான திண்டுகால்களைப் பெற்றுள்ளது.
  6. நீண்ட கண் இமைகள் மற்றும் நீண்ட தோல் கண்கள் மற்றும் காதுகளை புழுதிப்புயலிலிருந்து பாதுகாக்கிறது.
  7. நாசி துவாரங்கள் தூசிகள் உள்ளே செல்வதை தடுக்க மூடிய நிலையில் உள்ளது.

6th Science Guide விலங்குகள் வாழும் உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கீழ் உள்ளவையில் எது ஒரு செல் உயிரி
அ. மீன்
ஆ. தவளை
இ. யூக்ளினா
ஈ. பல்லி
விடை:
இ. யூக்ளினா

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 2.
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு
அ. போலிக் கால்கள்
ஆ. சிலியா
இ. கசையிழை
ஈ.ஏதுமில்லை
விடை:
அ. போலிக் கால்கள்

Question 3.
நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரி
அ. தவளை
ஆ. மீன்
இ. புறா
ஈ. ஒட்டகம்
விடை:
அ. தவளை

Question 4.
எப்போதும் நீர் அருந்தாத விலங்கு
அ. எலி
ஆ. பூனை
இ. நாய்
ஈ. பசு
விடை:
அ. எலி

Question 5.
வேடந்தாங்கல் ____ சரணாலயம்
அ. பறவைகள் சரணாலயம்
ஆ. புலிகள் சரணாலயம்
இ. யானை சரணாலயம்
ஈ. மான்கள் சரணாலயம்
விடை:
அ. பறவைகள் சரணாலயம்

II. சரியா அல்லது தவறா ? தவறாக இருப்பின் சரி செய்து எழுதுக

Question 1.
ஒரு செல் உயிரிகளில் செல் பிரிதல் மூலம் வளர்ச்சியடைகிறது.
விடை:
தவறு
ஒரு செல் உயிரிகளில் செல்களின் அளவு அதிகரிப்பின் மூலம் வளர்ச்சி அடைகிறது.

Question 2.
மீனின் படகு போன்ற உடலமைப்பு நீரில் எளிதாக நீந்த உதவுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
மீனின் வால், திசையை திருப்பவும் நீரில் அதன் உடல் சமநிலை பெறவும் உதவுகிறது.
விடை:
சரி

Question 4.
பறவையின் பின்னங்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன.
விடை:
தவறு
பறவையின் முன்னங்கால்கள் இறக்கையாக மாறியுள்ளது.

Question 5.
பறவையின் வால் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
விடை:
சரி

III. படத்தில் பாகம் குறி

Question 1.
கீழ் உள்ள அமீபா படத்தில் A மற்றும் B எதைக் குறிக்கிறது.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 30
விடை:
A போலிக்கால்கள்
B உட்கரு

Question 2.
கீழ் உள்ள பரமேசிய படத்தில் A மற்றும் B பாகங்களைக் குறி
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 31
விடை:
A குறுயிழை
B சுருங்கும் நுண் குமிழ்

Question 3.
கீழ் உள்ள யூக்ளினா ) படத்தில் A மற்றும் B எப்பாகத்தைக் குறிக்கிறது.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 32
விடை:
A- கசையிழை
B உட்கரு

IV. குறுவிடை எழுதுக

Question 1.
ஒரு செல் உயிரிகளின் இடப்பெயர்ச்சி உறுப்புக்களை கூறு
விடை:
அ. புரோட்டோ சோவா – போலிக்கால்கள்
ஆ. பாரமீசியம் – குறு இழைகள்
இ. யூக்ளினா – கசையிழை

Question 2.
வலசை போதல் என்றால் என்ன?
Answer;
ஒரு விலங்கு பருவ மாறுபாட்டின் காரணமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்லுதல்.

Question 3.
கோடை உறக்கம் என்றால் என்ன ?
விடை:
சில விலங்குகள் அதிகப்படியான வெப்பத்தை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி உறக்கத்தில் ஈடுபடும். எ.கா – நத்தை

Question 4.
குளிர்கால உறக்கம் என்றால் என்ன?
விடை:
சில விலங்குகள் அதிகப்படியான குளிரை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி உறக்கத்தில் ஈடுபடும். எ.கா- ஆமை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 5.
இருமைப்பார்வை என்றால் என்ன?
விடை:
பறவைகள் ஒரே சமயத்தில் இரு கண்கள் மூலம் வெவ்வேறு பொருள்களை காண முடியும் இதற்கு இருமைப்பார்வை என்று பெயர்.

Question 6.
பாலைவனக்கப்பல் என எதை ஏன் அழைக்கின்றோம்.
விடை:

  • ஒட்டகம் பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது.
  • ஒட்டகம் பெரிய தட்டையான திண்டு கால்களை பெற்றுள்ளது.
  • இக்கால்களின் உதவியால் பாலைவன மிருதுவான மணலில் நன்றாக நடக்கிறது.

V. விரிவான விடையளி

Question 1.
பறவைகள் பெற்றுள்ள தகவமைப்புகளைக் கூறு
விடை:

  1. பறவைகள் இறகுகளால் மூடப்பட்ட உடலைப் பெற்றுள்ளதால் குறைந்த எடையுடன் பறக்க உதவுகிறது.
  2. பறவைகளின் வாய்கள் அலகுகளாக மாறியுள்ளது.
  3. நுரையீரல் மூலம் சுவாசிக்கிறது.
  4. முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளது
  5. வெற்றிடத்தாலான எலும்புகளைப் பெற்றுள்ளது
  6. பறவைகளின் கால்கள் கூர்மையான நகங்களைப் பெற்றுள்ளதால், நடக்கவும், மரங்களின் கிளைகளை பற்றிக் கொள்ளவும் உதவுகிறது.
  7. பறவையின் வால் பறக்கும் திசையை மாற்ற உதவுகிறது.
  8. பறவையின் கண்கள் ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு பொருள்களை பார்க்க உதவுகிறது.

விலங்குகள் வாழும் உலகம் – மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 90