Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

7th Science Guide அன்றாட வாழ்வில் விலங்குகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக

Question 1.
…………………….. தினசரி, கால்நடைகளிலிருந்து நமக்குக்கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.
அ) முட்டை
ஆ) பால்
இ) இவை இரண்டும்
ஈ) இவை எதுவும் அல்ல
விடை:
ஆ) பால்

Question 2.
முட்டையில் ………………………. அதிகம் உள்ளது.
அ) புரதம்
ஆ) கார்போ ஹைட்ரேட்
இ) கொழுப்பு
ஈ) அமிலம்
விடை:
அ) புரதம்

Question 3.
வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் எந்த பாகம் ………………….. ஆடைகள் தயாரிக்க உதவுகிறது?
அ) கால்
ஆ) கை
இ) உரோமம்
ஈ) தலை
விடை:
இ) உரோமம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 4.
பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதும், பட்டு இழைகளை உருவாக்குவதும் இவ்வாறு அழைக்கப்படுகிறது …………………
அ) ஹார்ட்டிகல்சர்
ஆ) ஃபுளோரிகல்சர்
இ) அக்ரிகல்சர்
ஈ) செரிகல்சர்
விடை:
ஈ) செரிகல்சர்

Question 5.
பிரித்தெடுப்பவரின் நோய் என்றழைக்கப்படுவது ………………………
அ) ஆஸ்துமா
ஆ) ஆந்தராக்ஸ்
இ) டைஃபாய்டு
ஈ) காலரா
விடை:
ஆ) ஆந்தராக்ஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
புரதம் மற்றும் ……….. பாலில் அதிகம் உள்ளது.
விடை:
கால்சியம்

Question 2.
தேன் கூட்டிலிருந்து …………….. எடுக்கப்படுகிறது.
விடை:
தேன்

Question 3.
ஆந்தராக்ஸ் நோயை உண்டாக்குவது. …………..
விடை:
பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்

Question 4.
இயற்கை இழைகளிலேயே வலிமையான இழை …………………
விடை:
பட்டு

Question 5.
அமைதிப்பட்டு ………….. ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
விடை:
1992

III. சரியா, தவறா? தவறெனில் சரியானதை எழுதவும்

Question 1.
இயற்கையின் மிகப் பெரிய கொடை
விடை:
சரி

Question 2.
குதிரையின் உரோமம் ஓவியம் தீட்டும் தூரிகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
சரி

Question 3.
பட்டுப்பூச்சி கம்பளி இழைகளைத் தருகிறது.
சரியான ஆடு கம்பளி இழைகளைத் தருகிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 4.
அஹிம்சைப் பட்டின் மறுபெயர் மல்பெரி பட்டு
சரியான விடை : அஹிம்சைப் பட்டின் மறுபெயர் அமைதிப்பட்டு.
விடை:
தவறு

Question 5.
ஆந்த்ராக்ஸைக் குணப்படுத்தும் சிறந்த மருந்து பெனிசிலின்
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் 2

V. ஒப்புமை

Question 1.
நீர் : குழாய் :: மின்சாரம் : ………………..
விடை:
மின்கம்பி

Question 2.
தாமிரம் : கடத்தி :: கட்டை : ……………..
விடை:
மின்கடத்தாப்பொருள்

Question 3.
நீளம் : மீட்டர் அளவு :: மின்சாரம்:
விடை:
அம்மீட்டர்

Question 4.
மில்லி அம்பியர் : மைக்ரோ அம்பியர் :: 10-3A :
விடை:
10-6A

VI. மிகக் குறுகிய விடை தருக

Question 1.
பாலிலிருந்து கிடைக்கும் பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
விடை:
1) தயிர்
2) நெய்

Question 2.
விலங்குகளிடமிருந்து கிடைக்கும் இரு வகையான இழைகள் யாவை?
விடை:
1) கம்பளி இழைகள் 2) பட்டு

Question 3.
கத்தரித்தல் என்றால் என்ன?
விடை:

  • ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன.
  • உடலின் சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இது கத்தரித்தல் எனப்படும்.

Question 4.
ஆந்தராக்ஸ் நோயின் அறிகுறிகளை எழுதுக..
விடை:

  • காய்ச்சல்
  • இருமல்
  • மூச்சுவிடுதலில் சிரமம்
  • சில சமயம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு

Question 5.
செரிகல்சர் – வரையறுக்க
விடை:
பட்டுப்பூச்சிகளை வளர்த்து, அதிலிருந்து பட்டு தயாரிக்கப்படுவது, பட்டுப்பூச்சி வளர்ப்பு அல்லது செரிகல்சர் எனப்படும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 6.
நாம் விலங்குகளை எப்படி நடத்த வேண்டும்?
விடை:

  • நாம் விலங்குகளின் மீது அக்கறை, அன்பு கொண்டு அவற்றை பாதுகாக்க வேண்டும்.
  • விலங்குகளை நம் குடும்பத்திலுள்ள ஓர் உறுப்பினர் போல் பேணிகாக்க வேண்டும்.

Question 7.
அஹிம்சைப் பட்டைக் கண்டறிந்தவர் யார்?
விடை:
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர் 1992 ஆம் ஆண்டு அஹிம்சைப் பட்டினை கண்டறிந்தார்.

VII. குறுகிய விடை தருக.

Question 1.
கம்பளியின் சிறப்பம்சங்கள் மூன்றினை எழுதுக.
விடை:
கம்பளியின் சிறப்பம்சங்கள் :

  1. வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது மற்றும் இவை கிழிவதில்லை
  2. ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது
  3. கம்பளி, குளிருக்கு எதிராகச் செயல்படுகின்றது. எனவே கம்பளி சிறந்த வெப்பக் கடத்தியாகக் கருதப்படுகிறது.
  4. இது எளிதில் சுருங்காது

Question 2.
பட்டின் ஏதேனும் மூன்று பயன்பாட்டை எழுதுக.
விடை:

  1. பட்டு இயற்கை அழகுடையது, கோடை காலத்தில் இது இதமானதாகவும், குளிர் காலத்தில் வெப்பத்தைத் தரக் கூடியதாகவும் உள்ளது.
  2. நாகரிகமான, நவீன உடைகளை அழகாகத் தயாரிக்கவும், சிறப்பு வாய்ந்த அழகிய பட்டாடைகளை வடிவமைக்கவும் முக்கியமாக சேலைகள் தயாரிக்க இது பயன்படுகிறது.
  3. பட்டு இழையானது, மருத்துவத் துறையில், அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.

Question 3.
கோழிப்பண்ணையில் காணப்படும் பொதுவான நோய்கள் யாவை?
விடை:

  1. சால்மோனெல் லோசிஸ் (வயிற்றுப்போக்கு)
  2. ரானிக் கெட் நோய் (அம்மை நோய்)
  3. ஆஸ்பர்ஜில்லஸ் நோய் (பலவீனம், நலிந்து போதல்)

VIII. விரிவான விடை தருக.

Question 1.
அஹிம்சை பட்டு பற்றி விவரிக்க?
விடை:
அஹிம்சைப் பட்டு :
இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர், 1992 ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களை அழிக்காமல் அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.

கூட்டுப்புழுக்கள், கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும் போது அவற்றைக் கொல்லாமல் அவை உண்டாக்கும் பட்டு இழைகளை எடுக்கலாம் என்றார்.

இந்தப் பட்டு மனித நேயத்தின் அடிப்படையில் பாரம்பரிய முறைகளைத் தாண்டி உருவாக்கப்பட்டதாகும்.

எனவே இது அகிம்சைப்பட்டு அல்லது அமைதிப்பட்டு என்று அழைக்கப்படுகின்றது.

Question 2.
பட்டாலைகளில் ஏற்படும் அபாயங்கள் யாவை?
விடை:

  • பொதுவாகப் பட்டாலைகளில் பணிபரிபவர்கள் நின்று கொண்டே பட்டுநூலை நூற்பதால் அவர்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள்.
  • மேலும் இவர்கள் முதுகு வலியினாலும், பார்வைக் கோளாறுகள் மற்றும் தோல் காயங்களாலும் துன்புறுகிறார்கள்.
  • குறைந்த காற்றோட்டமுள்ள பகுதிகளில் இவர்கள் பணிபுரிவதால் சில சமயம், சுவாச சம்பந்தமான நோய்களான ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் அவதிப்படுகிறார்கள்.
  • கம்பளி ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வெவ்வேறு வேதிப்பொருள்கள் மற்றும் சலவைத்தூள்களையும் பயன்படுத்துவதால் ஒவ்வொமை மற்றும் தோல் நோயால் துன்புறுகிறார்கள்.
  • இறந்த விலங்குகளைக் கையாளுவதால் கம்பளி ஆலை பணியாளர்கள் ஆந்தராக்ஸ் பாக்டீரியா தொற்றால் அவதிப்படுகிறார்கள்.
  • இது போன்ற பாதிப்பு ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படுகிறது. இது பிரித்தெடுப்போர்கள் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
  • விலங்குகளின் உரோமம் மற்றும் அங்கு வாழும் விலங்குகளைக் கையாளுவோர்க்கும் ஆந்தராக்ஸ் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

IX. பின்வரும் வினாக்களுக்குப் பதில் தருக.

கம்பளி ஆலை படம்
Question 1.
கம்பளி ஆலையில், கம்பளி தயாரிக்கப்படும் நிலைகளை எழுதுக.
விடை:
கம்பளியை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவை பின்வருமாறு.

  1. கத்தரித்தல்
  2. தரம் பிரித்தல்
  3. கழுவுதல்
  4. சிக்கெடுத்தல்
  5. நூற்றல்

1. கத்தரித்தல் :
ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன. உடலின் சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இது கத்தரித்தல் எனப்படும்.

2. தரம் பிரித்தல் :
ஒரேஆட்டின்வெவ்வேறுபாகங்களிலிருந்தும் எடுக்கப்படும் உரோமங்கள்வெவ்வேறானவை. இவை பின்னர் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்படும் இது தரம் பிரித்தல் எனப்படும்.

3. கழுவுதல் :
தோலில் இருந்து கத்தரித்த தோலின் உரோமங்கள் உள்ள தூசி, அழுக்கு மற்றும் எண்ணெய் பிசின் போன்றவற்றை நீக்க, அதைச் சலவைத்தூள் கொண்டு நன்கு கழுவ வேண்டும்.

4. சிக்கெடுத்தல் :
காய வைத்த கம்பளி இழைகளைக் கவனத்துடன் பிரிக்க வேண்டும். இதை, ஆலைகளில் உள்ள உருளைகளில் செலுத்தி, பின்னர் மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்ற வேண்டும். இப்படிக் கம்பளியைத் தட்டையான தாளாக மாற்றுவது வலை எனப்படும்.

5. நூற்றல் :
இந்த வலையைக் குறுகிய தனித்த இழையாக மாற்ற, அவற்றை நூற்பு இயந்திரங்களில் அனுப்ப வேண்டும். இந்த நூல், பின் பந்துபோல் உருண்டையாக மாறும் இந்த நூல் பந்து, பின் பின்னல்களாக மாற்றப்பட்டு, ஆடைகள் நெய்ய உதவும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 2.
கம்பளியின் பயன்களை எழுதுக.
விடை:
கம்பளியின் பயன்கள்:

  1. கம்பளி என்பது, பல்வேறு வகையான பொருள்கள் செய்ய உதவும் இழையாகும்.
  2. இந்த இழைகளின்விட்டம் ஆடைகள், வீட்டிற்குத் தேவையான பொருள்கள் செய்ய உதவுகின்றன.
  3. மூன்றில் இரண்டு பங்கு கம்பளி இழைகள், ஸ்வெட்டர், ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன.
  4. கம்பளி இழை மற்றும் இயற்கை அல்லது செயற்கை இழைகளோடு சேரும்போது அவை மடிப்புக்கு எதிர்ப்புத் தன்மை உடைய போர்வைகள் மற்றும் இரைச்சலை உறிஞ்சும் விரிப்புகள் தயாரிக்க உதவுகின்றன.

X. உயர் சிந்தனை வினா

Question 1.
பாராசூட் தயாரிக்க பட்டு இழைகள் உதவுகின்றன ஏன்?
விடை:

  • பட்டு ஓர் வலிமையான இயற்கை இழையாகும்.
  • இவை மெல்லிய எடைகுறைந்த மற்றும் எளிதில் தீப்பிடிக்காத தன்மை கொண்டதினால் இவை அதிகம் பாராசூட் தயாரிப்பில் உதவுகின்றன.

Question 2.
தேன் எல்லாருக்கும் சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது ஏன்? காரணம் தருக.
விடை:

  • தேன் மிகுந்த மருத்துவகுணம் கொண்ட மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகும்.
  • நோய்க்கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மைக் கொண்டது.
  • இது ஒரு இரத்தச் சுத்திகரிப்பானாக செயல்படுகிறது.
  • இது ஒரு ஆண்டி – ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன.

XI. கூற்றும், காரணமும்

Question 1.
கூற்று : விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.
காரணம் : ஆடு, யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றும் முயல் கம்பளி இழைகளைத் தருகின்றன.

அ) கூற்றும், காரணமும் சரி .
ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்றும், காரணமும் தவறு
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி

Question 2.
கூற்று : பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின்
காரணம் : இந்த மருந்துகள் பசு அம்மையைக் குணமாக்கும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் தவறு, காரணமும் தவறு
ஈ) கூற்றும் சரி, காரணமும் சரி
விடை:
அ) கூற்று சரி, காரணம் தவறு பகுதி

7th Science Guide அன்றாட வாழ்வில் விலங்குகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கீழ்கண்ட எந்த ஒன்று சிறந்த மருத்துவ குணம் மற்றும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது.
அ) பால்
ஆ) முட்டை
இ) தேன்
ஈ) இறைச்சி
விடை:
இ) தேன்

Question 2.
கம்பளி என்ற இழை பொதுவாக எந்த குடும்பவிலங்குகளின் மென்முடி கற்றைகளிலிருந்து பெறப்படுகிறது?
அ) லெப்ரோய்டே
ஆ) கேப்ரினே
இ) கேனிடே
ஈ) ஈகுய்டே
விடை:
ஆ) கேப்ரினே

Question 3.
தோலில் இருந்து கத்தரித்த தோலின் உரோமங்கள் அவற்றிலுள்ள நீ அழுக்குகளை எம்முறை மூலம் நீக்கப்படுகிறது?
அ) சிக்கெடுத்தல்
ஆ) நூற்றல்
இ) கத்தரித்தல்
ஈ) கழுவுதல்
விடை:
ஈ) கழுவுதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 4.
ஒரு முதிர்ந்த பட்டுப்பூச்சி சுமார் எத்தனை முட்டைகளை ஒரே தடவையில் இடும்.
அ) 300
ஆ) 150 ம்
இ) 500
ஈ) 1000
விடை:
இ) 500

Question 5.
இளம் தேனீக்களுக்கு எந்த தேனீ உணவூட்டம் அளிக்கிறது?
அ) இராணித் தேனீ
ஆ) ஆண் தேனீ
இ) வேலைக்காரத் தேனீ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) வேலைக்காரத் தேனீ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஆறு கிராம் எடையுள்ள …………………….. உயர்த்தரகப் புதத்தைக் கொண்டுள்ளது
விடை:
முட்டை

Question 2.
இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழியினங்கள்………….. என்று அழைக்கப்படுகிறது
விடை:
பிராய்லர்

Question 3.
………………… ஐ கொதிநீரில் இட்டால், அதிலிருந்து பட்டு இழைகளை மிக எளிதாகச் சிக்கலின்றி பிரித்துவிடலாம்
விடை:
கூட்டுப்புழுக்கள்

Question 4.
பட்டுப்பூச்சிகள் ………………. நாட்கள் மல்பெரி இலைகளை உண்டு வாழும்.
விடை:
35

Question 5.
இந்தியா பட்டு உற்பத்தியில், உலகிலேயே …………………… இடத்தைப் பெறுகிறது.
விடை:
இரண்டாவது

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் 3

IV. சரியா? தவறா? தவறெனில் சரியானதை எழுதவும்

Question 1.
பட்டாலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் பாதிக்கப்படுகின்றனர்.
விடை:
சரி

Question 2.
பட்டுப்புழுக்கள் இரண்டு வருட காலம் மட்டுமே உயிர்வாழும்.
சரியான விடை : பட்டுப்புழுக்கள் இரண்டு மாதம் மட்டுமே உயிர்வாழும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 3.
பட்டிலைகளை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவையாவன கத்தரித்தல்,
சரியான விடை : கம்பளியை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவையாவன கத்தரித்தல், தரம் பிரித்தல், கழுவுதல், சிக்கெடுத்தல், நூற்றல் போன்றவையாகும்.
விடை:
தவறு
தரம் பிரித்தல், கழுவுதல், சிக்கெடுத்தல், நூற்றல் போன்றவையாகும்.

Question 4.
பட்டு இழையானது மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
சரி

Question 5.
எந்த வயதினரும் தினமும் முட்டையை உண்பது நல்லது
விடை:
சரி

V. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாக வரிசைப்படுத்துக.

Question 1.
1. சிக்கெடுத்தல்
2. கழுவுதல்
3. கத்தரித்தல்
4. தரம் பிரித்தல்
5. நூற்றல்
விடை:
1. கத்தரித்தல்
2. தரம்பிரித்தல்
3. கழுவுதல்
4. சிக்கெடுத்தல்
5. நூற்றல்

Question 2.
1. கூட்டுப்புழு
2. லார்வா
3. வளர்ச்சியடைந்த பட்டுப்பூச்சி,
4. வளர்ந்து வரும் பட்டுப்பூச்சி
5. முட்டை
விடை:
1. முட்டை
2. லார்வா
3. கூட்டுப்புழு
4. வளர்ச்சியடைந்த பட்டுப் பூச்சி
5. வளர்ந்து வரும் பட்டுப்பூச்சி

VI. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று : பட்டிழைகள் வலிமைவாய்ந்த செயற்கை இழைகளாகும்.
காரணம் : ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் 500 முட்டைகளை இடம்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

Question 2.
கூற்று : காலையில் புரதம் மிக்க உணவு, அன்றைய தினம் முழுவதும் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
காரணம் : முட்டையானது குறைந்த ஊட்டச்சத்தினையும் அதிக கொழுப்பினையும் கொண்ட உணவாகும்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று சரி காரணம் தவறு

VII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
கோழி வளர்ப்பின் இரண்டு வகைகள் யாவை?
விடை:

  1. முட்டையிடுபவை
  2. பிராய்லர்

Question 2.
ஆட்டினைத்தவிர மற்ற எந்தெந்த பாலூட்டிகளிலிருந்து கம்பளி இழைகள் பெறப்படுகின்றன?
விடை:

  • முயல்
  • யாக்
  • அல்பாகா
  • ஒட்டகம்
  • காட்டெருமை

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 3.
தமிழ்நாட்டில் பட்டு உற்பத்தியில் புகழ்பெற்ற நகரங்கள் எது?
விடை:

  • காஞ்சிபுரம்
  • திருப்புவனம்
  • ஆரணி

Question 4.
எவ்வாறு கோழியிணங்களை அவற்றை தாக்கும் பொதுவான தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்?
விடை:

  • கோழிகள் வாழுமிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • கோழிகளுக்குத் தடுப்பு போட வேண்டும்.

Question 5.
பால் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உயிரினங்கள் சிலவற்றை பட்டியலிடுக.
விடை:

  • பசுமாடுகள்
  • எருமை மாடுகள்
  • ஆடுகள்
  • ஒட்டகம்

VIII. குறுகிய விடையளி

Question 1.
கோழிப் பண்ணை அமைத்தலுக்கு தேவைப்படும் பல்வேறு அடிப்படை காரணிகள் யாவை?
விடை:

  • போதுமான மற்றும் பாதுகாப்பான இடம்
  • தேவையான அளவு தண்ணீர் வசதி
  • காற்றோட்டமான பகுதி
  • தேவையான அளவு உணவு

Question 2.
சிக்கெடுத்தல் என்றால் என்ன?
விடை:

  1. காய வைத்த கம்பளி இழைகளைக் கவனத்துடன் பிரிக்க வேண்டும்.
  2. இதை ஆலைகளில் உள்ள உருளைகளில் செலுத்தி பின்னர் மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்ற வேண்டும்.
  3. இவ்வாறு கம்பளியைத் தட்டையான தாளாக மாற்றுவது வலை எனப்படும்.

Question 3.
பட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் ஆந்தராக்ஸ் நோயின் நோய்க்காரணி பரவுதல் மற்றும் அறிகுறிகளை எழுதுக.
விடை:

  • ஆந்தராக்ஸ் நோய் பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டிரியாவினால் ஏற்படுகிறது.
  • விலங்குகளின் உரோமம் மற்றும் அங்கு வாழும் விலங்குகளைக் கையாளுவோர்க்கும் ஏற்படுகிறது.
  • காய்ச்சல், இருமல், மூச்சுவிடுதலில் சிரமம், வாந்தி எடுத்தல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றன.

Question 4.
பால் நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
விடை:
பாலானது தேநீர், காஃபி, ஐஸ்கிரீம், சாக்கலேட் இனிப்பு மற்றும் இவை போன்ற பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

புரதம் மற்றும் கால்சியம் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலாடைக்கட்டி, பாலேடு, வெண்ணெய், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க உதவுகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 5.
வேலைக்காரத் தேனீயின் பணிகள் யாவை?
விடை:

  • மலர்களில் உள்ள தேனைச் சேகரிப்பது
  • இளந்தேனீக்களை வளர்ப்பது.
  • தேன் கூடு சேதம் அடைந்தால் அதைச் சரி செய்வது.
  • தேன் கூட்டினை பாதுகாப்பது போன்றவையாகும்.

Question 6.
எந்த அமைச்சகம் விலங்குகளைத்துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்க 1960 ஆம் ஆண்டு நான்கு புதிய சட்டங்களைக் கொண்டுள்ளது. இது யாருக்காக உருவாக்கப்பட்டது?
விடை:

  • நமது சுற்றுச்சூழல், காடு மற்றும் தட்ப வெப்பநிலை மற்றும் மாற்ற சார்ந்த அமைச்சகம்.
  • இது வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், விலங்குகளை சந்தையில் விற்பவர்கள், செல்லப் பிராணிகள் மற்றும் மீன் வளர்ப்பவர்கள் போன்றவர்களுக்காக உருவாக்கியது.

IX. விரிவாக விடையளி

Question 1.
பால் மற்றும் இறைச்சி எவ்வாறு மனிதர்களால் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
பால் :

  • நாம் பயன்படுத்தப்படும் பாலானது பசு, எருமை மாடுகள் மற்றும் ஆடுகளிலிருந்து கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.
  • நம் அன்றாட உணவில் பாலானது தேநீர், காஃபி, ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்பு மற்றும் இவை போன்ற பால் சம்பந்தமான பொருள்களைத் தயாரிக்க உதவுகிறது.
  • புரதம் மற்றும் கால்சியம் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலாடைக்கட்டி, பாலேடு, வெண்ணெய், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க பால் உதவுகிறது.

இறைச்சி :

  • விலங்குகளின் இறைச்சி சிலருக்கு உணவாகப் பயன்படுகிறது.
  • இறைச்சியில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் அது முக்கிய உணவாகப் பயன்படுகிறது.

Question 2.
பட்டின் சிறப்பம்சங்களை வரிசைப்படுத்துக.
விடை:

  • கவர்ச்சியாகவும் மிகவும் மென்மையாக அணிவதற்கு வசதியானது. பல துறைகளில் பயன்படுகிறது.
  • இதை எளிதில் சாயமேற்றலாம்
  • இயற்கை இழைகளிலேயே பட்டு இழை தான் வலிமையான இழையாகும்.
  • இது சூரிய ஒளியை எளிதில் கடத்தும்.

Question 4.
கம்பளி தொழிளாலர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை (அ) தடுக்கும் முறைகளைப் பற்றி எழுதுக.
விடை:

  1. பெனிசிலின் மற்றும் சிங்ரோஃப்ளோக்சாசின் போன்ற சிறந்த மருந்துகள் ஆந்த்ராக்ஸ் நோயைக் குணமாக்க உதவுகின்றன.
  2. விலங்குகளுக்கு அந்தராக்ஸ் தடுப்பூசி போட வேண்டும் மற்றும் ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்த விலங்குகளை இழ்தழி தோண்டி அதில் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்
  3. முதலாளிகள் தங்களின் பணியாளர்களுக்குச் சுத்தமான சுற்றுச்சூழலும் நல்ல காற்றோட்டம் மற்றும் பாதுகாப்பாக்க வேண்டியது அவர்களின் கடமையாகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள்

Question 4.
தேனில் உள்ள கலப்படத்தை எவ்வாறு அறிவாய்? சோதனையுடன் விளக்குக.
விடை:
தேவையான பொருட்கள் : நீர் மற்றும் தேன்
செய்முறை :
ஒரு குவளையில் நீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு துளி தேனை ஊற்றவும் பின் அதைக் கவனித்துப் பாருங்கள்.

அறிவன :
நீரில் இடப்பட்ட ஒரு துளித் தேன் கரையாமல் பாத்திரத்தின் அடிப்பகுதி வரை சென்றால் அது சுத்தமான தேன் பாத்திரத்தின் அடிப்பகுதியை அடையும் முன்னரே அது கரைந்தால் அது சுத்தமான தேன் இல்லை.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் விலங்குகள் 4

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

7th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நிமோனியா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து. …………………
அ) ஸ்ட்ரெப்டோமைசின்
ஆ) குளோரோம்பெனிகால்
இ) பென்சிலின்
ஈ) சல்பாகுனிடின்
விடை:
இ) பென்சிலின்

Question 2.
ஆஸ்பிரின் ஒரு ………………………
அ) ஆண்டிபயாடிக்
ஆ) ஆண்டிபைரடிக்
இ) மயக்க மருந்து
ஈ) சைக்கீடெலிக்
விடை:
ஆ) ஆண்டிபைரடிக்

Question 3.
…………………. என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது.
அ) அமிலநீக்கி
ஆ) ஆண்டிபைரடிக்
இ) வலிநிவாரணி
ஈ) ஆண்டிஹிஸ்டமின்
விடை:
அ) அமிலநீக்கி

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 4.
ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் ……………………. என அழைக்கப்படுகிறது.
அ) கொதிநிலை
ஆ) உருகுநிலை
இ) சிக்கலான வெப்பநிலை
ஈ) எரிவெப்பநிலை
விடை:
ஈ) எரிவெப்பநிலை

Question 5.
மெழுகுவத்தியின் சுடரில் வெப்பமான பகுதி எது ……………
அ) நீலம்
ஆ) மஞ்சள்
இ) கருப்பு
ஈ) உள் பகுதி
விடை:
அ) நீலம்

II. வெற்றிடங்களை நிரப்பவும்

Question 1.
பென்சிலின் முதன் முதலில் கண்டுபிடித்தவர்………………….
விடை:
Dr. அலெக்சாண்டர் பிளெமிங்

Question 2.
உலக ORS தினம் ………………..
விடை:
29 ஜூலை

Question 3.
எரிதல் என்பது ஒரு வேதிவினை, இதில் பொருள் …………………. உடன் வினைபுரிகிறது.
விடை:
ஆக்சிஜன்

Question 4.
நீரில் நனைந்த காகிதத்தின் எரிவெப்பநிலை ………….
விடை:
அதிகம்

Question 5.
எண்ணெய்யால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை ………………ஆல்கட்டுப்படுத்த முடியாது
விடை:
நீர்

III. சரியா அல்லது தவறா? தவறு என்றால் சரியான பதிலைக் கொடுக்கவும் 

Question 1.
சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் மருந்துகள் வேலை செய்யும்
சரியான விடை : சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் வேலை செய்யாது
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
வலி நிவாரணி என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்
சரியான விடை : ஆண்டிபைரடிக்குகள் என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்
விடை:
தவறு

Question 3.
அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குகின்றன
சரியான விடை : அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குவதில்லை
விடை:
தவறு

Question 4.
எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியம்
விடை:
சரி

Question 5.
மரம் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் காற்றுமாசுபடுகிறது.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 2

V. ஒப்புமை

Question 1.
சுடரின் உள்மண்ட லம் …………….. சுடரின்
வெளிமண்ட லம் ………………
விடை:
குறைந்த வெப்ப பகுதி, வெப்பமான பகுதி

Question 2.
டிஞ்சர் ……………….
ஹிஸ்டமைன் …………..
விடை:
அன்டிசெப்டிக் ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து

VI. ஓரிரு சொற்களில்

Question 1.
மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ்நோய் …………… (மஞ்சள்காய்ச்சல் / டெங்குகாய்ச்சல்)
விடை:
மஞ்சள் காய்ச்சல்

Question 2.
ORS – ன் விரிவாக்கம் …………………….
விடை:
Oral Re-hydration Solution (வாய்வழி நீரேற்று கரைசல்)

Question 3.
கிருமி நாசினியாகவும் ஆண்டிசெப்டிக் ஆகவும் பயன்படக்கூடிய ஒரு மருந்தின் பெயரைக் குறிப்பிடுக?
விடை:
ஃபீனால்

Question 4.
டெட்டாலின் முக்கிய கூறுகள் யாவை?
விடை:
குளோரோசைலினால் மற்றும் ஆல்பா டெர்பீனியால்

Question 5.
எரிபொருளின் கலோரிஃபிக் மதிப்பின் அலகு என்ன?
விடை:
கிலோ ஜூல்/கிலோகிராம்

Question 6.
எத்தனை வகையான எரிதல் உள்ளது?
விடை:
மூன்று வகையான எரிதல் உள்ளது i) வேகமாக எரிதல் ii) தன்னிச்சையான எரிதல் iii) மெதுவாக எரிதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 7.
நெருப்பை உற்பத்தி செய்வதற்கான அத்தியாவசிய தேவைகள் யாவை?
விடை:
நெருப்பை உற்பத்தி செய்ய தேவையானவை i) எரிபொருள் ii) காற்று (ஆக்சிஜனை வழங்க) iii) வெப்பம் (வெப்பநிலையை உயர்த்த) iv) எரிதல் வெப்பநிலை

VII. குறுகிய விடையளி

Question 1.
மருத்துவர்களைக் கலந்தாலோசிக்காமல் ஏன் மருந்துகள் எடுக்கக்கூடாது?
விடை:

  • குறிப்பிட்ட நோய்க்கான மருந்து எது என்பது நமக்குத் தெரியாது.
  • எடுக்க வேண்டிய மருந்தின் அளவு நமக்குத் தெரியாது.
  • குறிப்பிட்ட மருந்து நமக்கு தீங்கு விளைவிக்குமா என்பது தெரியாது
  • எனவே மருத்துவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் மருந்துகள் எடுக்கக்கூடாது.

Question 2.
கிருமிநாசினிகள் ஆண்டி செப்டிக்லிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 3

Question 3.
எரிதல் வெப்பநிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் எரிவதற்குத் தேவையான குறைந்தபட்ச வெப்பநிலை அதன் எரிதல் வெப்பநிலை எனப்படும்.

Question 4.
4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 180000kg என அளவிடப்படுகிறது என்றால், கலோரிஃபிக் மதிப்பு என்ன?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 4

VIII. விரிவாக விடையளி

Question 1.
ஆண்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி பற்றிச் சுருக்கமாக விளக்குங்கள்?
விடை:
ஆண்டிபயாடிக்குகள் :
சில தாவரங்களும், நுண்ணியிரிகளும் மற்ற உயிரினங்களை அழிக்க உதவும் நச்சுதன்மையுள்ள பொருள்களை உற்பத்தி செய்கின்றன. அவை ஆன்டிபயாடிக்குகள் எனப்படுகின்றன.
(எ.கா) பெனிசிலின், குளோரம்பினிகால், டெட்ராசைக்களின்

வலி நிவாரணிகள் :

  • வலி நிவாரணிகள் என்பன நமது உடலிலிருந்து வெளியாகும் வலி குறைக்கும் வேதிப் பொருளாகும்.
  • அவை வெளியேறி வலி என்ற உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.
  • மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பட்டோ அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் அதிக மாற்றம் இல்லாத நிலையில் குறிப்பாக இவ்வகை வலி நீக்கிகள் செயல்படுகிறது.
  • அவை இருவகைப்படும் :
    1. போதைத்தன்மையற்ற வலி நீக்கிகள். (எ.கா) ஆஸ்பிரின்
    2. போதைத்தன்மை வாய்ந்த வலி நீக்கிகள். (எ.கா) கோடீன்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
மெழுகுவத்தி சுடரின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 5

IX. படம் சார்ந்த கேள்வி

Question 1.
அருளும், ஆகாஷும் ஒரு பரிசோதனையைச் செய்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பீக்கரில் தண்ணீரை சூடாக்க வேண்டும். அருள் பீக்கரை மெழுகுவத்திச் சுடரின் மஞ்சள் பகுதியில் திரியின் அருகே வைத்திருந்தார். ஆகாஷ் பீக்கரை வெளிப்புறத்தில் உள்ள சுடரில் வைத்திருந்தார். குறுகிய நேரத்தில் யாருடைய நீர் சூடாகும்?
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 6
விடை:

  • குறுகிய நேரத்தில் ஆகாஷ் வைத்த நீர் சூடாகும்
  • ஏனெனில் வெளிப்புற நீல நிறச்சுடர் அதிக வெப்பமான பகுதி
  • எனவே வெளிப்புறச் சுடரில் வைக்கப்பட்ட நீர் குறுகிய நேரத்தில் சூடாகும்.

7th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ORS கரைசலில் உள்ளது
அ) சோடியம் குளோரைடு
ஆ) குளுக்கோஸ்
இ) பொட்டாசியம் குளோரைடு
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Question 2.
நமது குடலில் சரியான அளவு சோடியம் உள்ள போது ………………….. நிகழ்வின் மூலம் குடல் நீரை உறிஞ்சுகிறது.
அ) நீர் உறிஞ்சுதல்
ஆ) நீர்ப்போக்கு
இ) சவ்வூடு பரவல்
ஈ) எதிர் சவ்வூடு பரவல்
விடை:
இ) சவ்வூடு பரவல்

Question 3.
இரைப்பை நீரில் உள்ளது.
அ) அசிட்டிக் அமிலம்
ஆ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
இ) நைட்ரிக் அமிலம்
ஈ) சல்பியூரிக் அமிலம்
விடை:
ஆ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்

Question 4.
சுடரின் ஒளிராத பகுதியின் நிறம்
அ) சிவப்பு
ஆ) மஞ்சள்
இ) நீலம்
ஈ) கருமை
விடை:
இ) நீலம்

Question 5.
பின்வருவனவற்றுள் எது தீயணைப்பானாக பயன்படுகிறது?
அ) H2
ஆ) O2
இ) CO2
ஈ) CH4
விடை:
இ) CO2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ORS என்பதன் பொருள் …………………..
விடை:
வாய்வழி நீரேற்று கரைசல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
பெனிசிலின் …………………. என்ற பூஞ்சையிலிருந்து கண்டறியப்பட்டது
விடை:
பென்சிலியம் நொடெட்டம்

Question 3.
பாரசிட்டமால் ஒரு. …………………
விடை:
ஆண்டிபைரடிக் அல்லது உடல் வெப்பம் தனிப்பி

Question 4.
அனைத்து எரிதல் வினைகளும் …………………. வினைகளாகும்
விடை:
வெப்ப உமிழ்

Question 5.
எல்.பி.ஜி எரிதல் ………………… க்கு எடுத்துக்காட்டு
விடை:
வேகமாக எரிதல்

III. சரியா? தவறா? (தவறெனில் சரியான கூற்றைத் தருக)

Question 1.
தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேற்புறம் பயன்படுத்தப்படும் மருந்து ஆன்டிசெப்டிக் எனப்படும்
விடை:
சரி

Question 2.
செயற்கையான உப்புநீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையும், சோடியம் உப்பையும் உறிஞ்சுகிறது.
விடை:
தவறு – செயற்கையான உப்புநீர்க்கரைசலை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, நமது உடலானது நீரையோ, சோடியம் உப்பையோ உறிஞ்ச முடியாது

Question 3.
பாரசிட்டாமால் புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை அதிகரித்து வலி மற்றும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது.
விடை:
தவறு – பாரசிட்டாமால் புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை குறைத்து வலி மற்றும் உடல் வெப்பநிலையை குறைக்கிறது.

Question 4.
ஒரு பொருள் ஆக்சிஜனுடன் வினைபுரியும் எந்த நிகழ்வும் ஆக்சிஜனேற்ற வினை எனப்படும்.
விடை:
சரி

Question 5.
எரிபொருளின் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதி சுடரின் நடுப்பகுதியாகும்.
விடை:
தவறு – எரிபொருளின் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதி சுடரின் உட்புறப்பகுதியாகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 7

V. சரியான வாக்கியத்தில் எழுதுக

Question 1.
அனைத்து ஆன்டிசெப்டிக்குகளும் கிருமி நாசினிகள் அல்ல.
விடை:
அனைத்து கிருமிநாசினிகளும் ஆன்டிசெப்டிக்குகள் அல்ல.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
ஒரு தீயணைப்பான் எரிபொருள் விநியோகத்தை துண்டித்து காற்றின் வெப்பநிலையைக் குறைத்து தீ எரிதலை கட்டுப்படுத்துகிறது.
விடை:
ஒரு தீயணைப்பான் காற்று விநியோகத்தை துண்டித்து, எரிபொருளின் வெப்பநிலையைக் குறைத்து தீ எரிதலை கட்டுப்படுத்துகிறது.

VI. ஒப்புமை தருக.

Question 1.
வயிற்றுப் போக்கு : ORS
…………………. : ஆண்டிபைரடிக்
விடை:
காய்ச்சல்

Question 2.
LPG : திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு
CNG:…………………..
விடை:
அழுத்தப்பட்ட இயற்கை வாயு

VII. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று (A) : அனைத்து எரிதல் வினைகளும் வெப்பம் உறிஞ்சும் வினைகள்
காரணம் (R) : அனைத்து எரிதல் வினைகளிலும் வெப்பம் வெளிப்படுகிறது.

அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் அல்ல.
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
விடை:
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
சரியான கூற்று (A) : அனைத்து எரிதல் வினைகளும் வெப்ப உமிழ் வினைகள்

Question 2.
கூற்று (A) : வயிற்றுப்போக்கு மூலம் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை ORS மீட்டெடுத்து நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றது.
காரணம் (R) : வயிற்றுப் போக்கின் போது, நம் உடலானது நீரை உறிஞ்சுவதைக் காட்டிலும் அதிக நீரை வெளியேற்றுவதால் உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது.

அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் அல்ல.
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்

VIII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
ORS என்றால் என்ன?
விடை:
வாய்வழி நீரேற்றுக் கரைசல் (ORS) என்பது உப்பு, சர்க்கரை மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையாகும்.

Question 2.
அமிலநீக்கிகளுக்கு இரு உதாரணங்கள் தருக.
விடை:
சோடியம் பைகார்பனேட், கால்சியம் கார்பனேட்

Question 3.
ஆண்டிபைரடிக்குகள் என்றால் என்ன?
விடை:
ஆண்டிபைரடிக்குகள் என்பது காய்ச்சலை குறைக்கும் வேதிப் பொருட்களாகும்.

Question 4.
எரியக்கூடிய பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
பெட்ரோல், ஆல்கஹால், எல்.பி.ஜி, சி.என்.ஜி

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 5.
சுடர் என்றால் என்ன?
விடை:
சுடர் என்பது ஒரு வேதி வினை மற்றும் வாயுக்களின் கலவையாகும்.

IX. குறுகிய விடையளி

Question 1.
ORS கரைசலின் பகுதிப் பொருள்கள் யாவை?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 8

Question 2.
அமில நீக்கிகள் என்றால் என்ன? அவற்றின் வினையை எழுது.
விடை:
நமது வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்கும் காரப்பொருட்களே அமிலநீக்கிகள் எனப்படும்.

அமில நீக்கிகள் அமிலத்தன்மையினால் உண்டாகும் வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை குணமடையச் செய்கிறது.
(எ.கா) மெக்னிசியம் ஹைட்ராக்சைடு, அலுமினியம் ஹைட்ராக்சைடு
Mg(OH)2(s) + 2HCl(aq) → MgCl2(aq) + 2H2O(l)

Question 3.
ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.
விடை:
நமது நோய் எதிர்ப்பு மண்டலம் தீங்கான பொருள்களுக்கு எதிராக உருவாக்கும் ஒவ்வாமை பாதிப்பினை நீக்க பயன்படும் வேதிப்பொருள் ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து எனப்படும்.

(எ.கா) டைபீன்ஹைட்ரமின், குளோர்பீனரமைன்

Question 4.
எரிதல் என்றால் என்ன?
விடை:

  • எரிதல் என்பது, ஓர் எரிபொருள் ஆச்சிஜனேற்ற காரணியின் முன்னிலை நிகழ்த்தும் வேதி வினையாகும்.
  • இதில் வெப்பம், ஆற்றல் மற்றும் ஒளி வெளியிடப்படும்.
    (எ.கா) CH4 + 2O2 → CO2 + 2H2O + வெப்ப ஆற்றல்

Question 5.
எரியக்கூடிய பொருள்கள் என்றால் என்ன?
விடை:
மிகக் குறைந்த எரி வெப்பநிலையைக் கொண்ட பொருள்கள் எளிதில் தீபற்றக்கூடியவை. இவை எரியக்கூடிய பொருள்கள் எனப்படும்.
(எ.கா) பெட்ரோல், ஆல்க ஹால், எல்.பி.ஜி, சி.என்.ஜி

Question 6.
மெழுகுவர்த்தியின் சுடர் எப்பொழுதும் மேல்நோக்கி இருக்கின்றது ஏன்?
விடை:

  • மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது.
  • சுடரின்மேல் எரியக்கூடிய காற்றின் அடர்த்தியானது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடர்த்தியை விட குறைவாக உள்ளது.
  • எனவே வெப்ப சலனக் கொள்கையின்படி சுடரானது எப்பொழுதும் மேல்நோக்கி இருக்கின்றது.

Question 7.
மெதுவாக எரிதல் என்றால் என்ன?
விடை:
பொருளானது குறைந்த வேகத்தில் எரிதலுக்கு மெதுவாக எரிதல் என்று பெயர் – (எ.கா) சுவாசித்தல்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 8.
ஒரு நல்ல எரிபொருளின் பண்புகள் யாவை?
விடை:

  • எளிதாக கிடைக்க வேண்டும்.
  • குறைந்த விலை கொண்டதாக இருக்க வேண்டும்.
  • எளிதாக எடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும்.
  • மிதமான வேகத்தில் எரிதல் வேண்டும்.
  • அதிகமான வெப்ப ஆற்றலை வழங்க வேண்டும்.
  • விரும்பத்தகாத பொருளை வெளியிடக் கூடாது.
  • சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடாது.

Question 9.
தீயணைப்பானின் பொதுவான வகைகள் எவை?
விடை:

  • காற்று அழுத்த நீர் அணைப்பான்கள்
  • கார்பன்டை ஆக்சைடு அணைப்பான்
  • உலர் ரசாயன தூள் அணைப்பான்கள்

X. விரிவான விடையளி

Question 1.
வாய்வழி நீரேற்று கரைசலின் (ORS) முக்கியத்துவத்தை விளக்கு
விடை:

  • வாய்வழி நீரேற்று கரைசல் என்பது உப்பு, சர்க்கரை மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையாகும்.
  • வயிற்றுப் போக்கின் போது ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை மீட்டெடுத்து, உடலின் நீர்ச்சமநிலையை பாதுகாக்கின்றது.
  • வயிற்றுப் போக்கின்போது நீர்ச்சமநிலை பாதிக்கப்படுவதோடு, சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாது உப்புகளையும் நமது உடல் இழக்கின்றது.
  • இதனை நீர்ப்போக்கு என்கிறோம்.
  • வயிற்றுப்போக்கினால் அல்ல, அதிக நீர்ப்போக்கினால்தான் இறப்பு ஏற்படுகிறது.
  • நமது குடலில் சரியான அளவு சோடியம் இருந்தால்தான் நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் குடலால் உறிஞ்சப்படும்.
  • செயற்கையான உப்பு நீர்க்கரைசலை நமது உடலில் செலுத்தும் போது தண்ணீர் மற்றும் சோடியம் ஆகியவை நேரடியாக இரத்த ஓட்டத்திற்கு மாற்றப்படுகின்றன.
  • இழந்த நீரை நமது உடல் அடைந்து சமநிலை பெறுகிறது.

Question 2.
ஆண்டிபைரடிக்குகள் பற்றி விவரி.
விடை:

  • சாதாரணமாக மனித உடலின் வெப்பநிலை 98.4 முதல் 98.6 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.
  • வெப்பநிலையானது இந்த நிலைக்கு மேலே சென்றால் அது காய்ச்சல் எனப்படும்.
  • காய்ச்சல் வருவதற்கு பொதுவான காரணம் நோய் தொற்றாகும்.
  • நோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வளரமுடியாது.
  • எனவே படையெடுக்கும் நோய் கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்றது.
  • நோய் தொற்று ஏற்பட்டவுடன் எதிர்ப்பு அமைப்பானது பைரோஜன் என்ற வேதிப்பொருளை வெளியிடுகிறது.
  • இரத்த ஓட்டத்தின் மூலம் இந்த பைரோஜன்கள் மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் ஹைப்போதலாமஸை சென்றடைகின்றன.
  • உடன் ஹைப்போதலாமஸ் புரோஸ்டாகிளான்டின் என்ற வேதிப்பொருளை வெளியிட்டு நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்றது.
  • பொதுவாக குறைந்த அளவு காய்ச்சல் நமக்கு நல்லது, ஏனெனில் இவை நோய்க்கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கிறது.
  • இருப்பினும் உடல் வெப்பநிலை 105°F விட அதிகரிக்கும் போது புரதம் மற்றும் மூளையை தாக்கி நடுக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • நீண்ட நாள் காய்ச்சலானது சில நேரங்களில் மரணத்தைக் கூட உண்டாக்கும்.
  • ஆன்டிபைரடிக்குகள் என்பவை புரோஸ்டாகிளான்டின் உற்பத்தியை ஒடுக்கி காய்ச்சலை குறைக்கும் வேதிப்பொருட்கள் ஆகும். (எ.கா) பாராசிட்டமால்

Question 3.
மெழுகு சுடரின் அமைப்பினை விவரி.
விடை:
மெழுகு சுடரின் அமைப்பு :
ஒரு மெழுகுவர்த்திச் சுடர் மூன்று முக்கிய மண்டலங்களைக் கொண்டுள்ளது.

  1. சுடரின் வெளிப்புறப் பகுதி :
    • எரிபொருளின் முழுமையான எரிதல் நடைபெறும் பகுதி
    • நீல நிற முடையது
    • அதிக வெப்பமான பகுதியாகும்.
    • சுடரின் ஒளிராத பகுதியாகும்.
  2. சுடரின் நடுப்பகுதி
    • எரிபொருளின் குறைவான எரிதல் நடைபெறும் பகுதி
    • மஞ்சள் நிறமுடையது
    • மீதமான வெப்ப பகுதியாகும்.
    • சுடரின் ஒளிரும் பகுதியாகும்.
  3. சுடரின் உட்புற பகுதி
    • எரி பொருளின் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதி 1
    • கருமை நிறமுடையது – மிகக்குறைந்த வெப்பப்பகுதியாகும்.
      Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 5

Question 4. எரிதலின் வகைகளை விளக்குக.
விடை:

  1. வேகமாக எரிதல் :
    வெளிப்புற வெப்பத்தின் உதவியுடன் பொருளானது வேகமாக எரிந்து வெப்ப ஆற்றலையும், ஒளியையும் உருவாக்குகிறது. (எ.கா) எல்.பி.ஜி எரிதல்
  2. தன்னிச்சையான எரிப்பு :
    வெளிப்புற வெப்பத்தின் உதவியின்றி பொருளானது தன்னிச்சையாக எரிந்து வெப்ப ஆற்றலையும், ஒளியையும் உருவாக்குகிறது. (எ.கா) பாஸ்பரஸ் அறை வெப்பநிலையில் தன்னிச்சையாக எரிதல்
  3. மெதுவாக எரிதல் :
    பொருளானது குறைந்த வேகத்தில் எரிதலுக்கு மெதுவாக எரிதல் என்று பெயர்.
    (எ.கா) சுவாசித்தல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 5.
தீயணைப்பான் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்புரிகிறது?
விடை:

  • காற்று அல்லது எரிபொருளின் வெப்பநிலையை குறைப்பதோடு அல்லாமல் அவற்றின் விநியோகத்தை துண்டித்து தீயை அணைக்கும் கருவி தீயணைப்பான் எனப்படும்.
  • தீயணைப்பான் எரியும் எரிபொருளை குளிர்விக்கின்றது.
  • ஆக்சிஜனை வினைபுரியாமல் தடுத்தல் அல்லது அகற்றுதல் மற்றும் வேதிவினை நிகழாமல் தடுத்தல் போன்ற விளைவுகளைச் செய்கிறது.
  • இதனால் தொடர்ந்து எரியமுடியாமல் தீ தடுக்கப்படுகிறது.
  • தீயணைப்பானின் கைப்பிடி அழுத்தப்படும் போது, அது திறந்து உள்ளறையில் இருந்து உயர் அழுத்த வாயுக்கள் பிரதான சிலிண்டரிலிருந்து ஒரு சிப்பான் குழாய் வழியாக வெளியேறி தீயை கட்டுப்படுத்துகிறது.
  • ஒரு தீயணைப்பான் மருந்து தெளிப்பான் கருவி போல செயல்படுகிறது.

Question 6.
ஐந்து வகையான நெருப்பு வகுப்புகளை விளக்குக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 9

மன வரைபடம் :

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 4 அன்றாட வாழ்வில் வேதியியல் 10

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 1 காந்தவியல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 1 காந்தவியல்

6th Science Guide காந்தவியல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்
அ) மரக்கட்டை
ஆ) ஊசி
இ) அழிப்பான்
ஈ) காகிதத் துண்டு
விடை:
ஆ) ஊசி

Question 2.
மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் _____
அ) இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) சீனர்கள்
ஈ) எகிப்தியர்கள்
விடை:
இ) சீனர்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 3.
தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _____ திசையில்தான் நிற்கும்.
அ) வடக்கு – கிழக்கு
ஆ) தெற்கு – மேற்கு
இ) கிழக்கு – மேற்கு
ஈ) வடக்கு – தெற்கு
விடை:
ஈ) வடக்கு – தெற்கு

Question 4.
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்
அ) பயன்படுத்தப்படுவதால்
ஆ) பதுகாப்பாக வைத்திருப்பதால்
இ) சுத்தியால் தட்டுவதால்
ஈ) சுத்தப்படுத்துவதால்
விடை:
இ) சுத்தியால் தட்டுவதால்

Question 5.
காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி _____ அறிந்து கொள்ளமுடியும்.
அ) வேகத்தை
ஆ) கடந்த தொலைவை
இ) திசையை
ஈ) இயக்கத்தை
விடை:
இ) திசையை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
செயற்கைக்காந்தங்கள் ____, ____, ______ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
விடை:
நீள்கோளம், வட்டம்,
உருளை

Question 2.
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _____ எனப்படுகின்றன.
விடை:
காந்தப்பொருள்கள்

Question 3.
காகிதம் _____ பொருளல்ல.
விடை:
காந்த தன்மை உள்ள

Question 4.
பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய _____ கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.
விடை:
காந்தக்கல்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 5.
ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் _____ துருவங்கள் இருக்கும்.
விடை:
இரு

III. சரியா? தவறா? தவறெனில் சரிசெய்து எழுதுக.

Question 1.
உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு.
விடை:
தவறு.
உருளைவடிவ காந்தத்திற்கு இரு துருவங்கள் உண்டு.

Question 2.
காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.
விடை:
சரி.

Question 3.
காந்தத்தினை இரும்புத்துகள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.
விடை:
தவறு – துருவப்பகுதிகளில் ஒட்டிக் கொள்ளும்.

Question 4.
காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.
விடை:
தவறு – காந்த ஊசியைப் பயன்படுத்தி வடக்கு – தெற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

Question 5.
இரப்பர் ஒரு காந்தப்பொருள்.
விடை:
தவறு – இரப்பர் ஒரு காந்தப் பொருள் அல்ல.

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 80

V. பொருத்தமில்லாததை வட்டமிட்டுக் காரணம் கூறுக.

Question 1.
இரும்பு ஆணி, குண்டூசி, (இரப்பர் குழாய்) , ஊசி.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 81
காரணம் : இரப்பர் குழாய் காந்தப்பொருள் அல்ல.

Question 2.
மின்தூக்கி, தானியங்கிப் படிக்கட்டு, மின்காந்த இரயில், மின்பல்பு
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 82
காரணம் : மின்பல்பில் காந்தம் பயன்படவில்லை.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 3.
கவர்தல், விலக்குதல், திசைகாட்டுதல், ஒளியூட்டுதல்
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 83
காரணம் : ஒளியூட்டுதல் காந்தத்தின் பண்பு அல்ல.

VI. பின்வரும் படங்களில் இரு சட்டக்காந்தங்கள் அருகருகே காட்டப்பட்டுள்ளன. பின்வரும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் என்ன நிகழும் எனக்கூறு. (ஈர்க்கும், விலக்கும், திரும்பி ஓட்டிக் கொள்ளும்)

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 85
விடை :
(a) ஈர்க்கும்
(b) விலக்கும்
(c) ஈர்க்கும்
(d) திரும்பி ஒட்டிக் கொள்ளும்
(e) விலக்கும்
(f) திரும்பி ஒட்டிக் கொள்ளும்

VII. நிரப்புக.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 85.1
விடை :
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 86

VIII. சிறு வினாக்கள் :

Question 1.
காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.
விடை:

  • காந்தத்தின் ஒத்த துருவங்கள் (N – N), (S – S) ஒன்றை ஒன்று விலக்கும்.
  • எதிரெதிர் துருவங்கள் (N – S), (S – N) ஒன்றை ஒன்று ஈர்க்கும்.

Question 2.
பள்ளி ஆய்வுக்கூடத்தில் உள்ள சில காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்திருப்பதாக அவற்றைப் பரிசோதிக்கும் போது தெரியவருகிறது. எந்த காரணங்களால் அவை தமது காந்தத்தன்மையை இழந்திருக்கக்கூடும். மூன்று காரணங்களைக் கூறு.
விடை:
காந்தங்கள் காந்தத் தன்மையை இழக்கக் காரணங்கள்

  1. வெப்பப்படுத்துதல்
  2. உயரத்திலிருந்து கீழே போடுதல்
  3. சுத்தியலால் தட்டுதல்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

IX. நெடுவினா :

Question 1.
உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?
விடை:

  • ஒரு சட்டகாந்தத்தை எடுத்து அதன் ஒரு முனையை இரும்பு ஊசியின் ஒரு முனை யிலிருந்து மறுமுனை வரை தேய்க்க வேண்டும்.
  • தேய்க்கும் போது திசையையோ, காந்த முனையையோ மாற்றாமல் தேய்க்க வேண்டும்.
  • 30 அல்லது 40 முறை இதே போல் தேய்க்க வேண்டும்.
  • பின் இரும்பு ஊசியின் அருகே இரும்புத்துகள்களை கொண்டு சென்றால் அது ஈர்க்கும் இவ்வாறு இரும்பு ஊசி காந்தமாக மாறும்.
  • இல்லையெனில் இதே முறையை பின்பற்றி மீண்டும் செய்ய வேண்டும்.

Question 2.
மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?
விடை:

  • மின்காந்தத் தொடர்வண்டியில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன. மின்சாரம் பாயும் போது மட்டும் இவை காந்தத் தன்மை பெறும்.
  • மின்சாரத்தின் திசைமாறும் போது துருவங்கள் மாறும்.
  • தண்டவாளத்திலும், தொடர்வண்டி அடியிலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்குவதால் வண்டி தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில் நிற்கும்.
  • தண்டவாளத்திலும், தொடர்வண்டி அடியிலுமுள்ள காந்தங்களில் காந்த ஈர்ப்பு விசையும், விலக்கு விசையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டு தொடர்வண்டி முன்னோக்கி செலுத்தப்படுகிறது.
  • மின்னோட்டத்தின் மூலம் இக்காந்தங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • மின்காந்தத் தொடர்வண்டியில் சக்கரமில்லை. எனவே உராய்வு இல்லை. மணிக்கு 300 கி.மீ வேகத்திற்கு மேல் எளிதாக செல்லலாம்.

X. உயர்சிந்தனை வினாக்களுக்கு பதிலளிக்கவும்.

Question 1.
உன்னிடம் துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புத்தூளும் தரப்படுகிறது. இதனைக் கொண்டு
அ. காந்தத்தின் துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்?
ஆ. காந்தத்தின் எந்தப் பகுதியில் அதிக அளவு இரும்புத் தூள்கள் ஒட்டிக் கொள்கின்றன? ஏன்?
விடை:
அ. இரும்புத்தூள்களை காகிகத்தில் எடுத்துக் கொண்டு சட்ட காந்தத்தை அதன் மேல் கிடையாக வைத்து சிறிது நேரம் இரும்புத்தூள்களை புரட்டினால் காந்தத்தின் எந்தப் பகுதிகளில் இரும்புத்துகள்கள் அதிகம் ஒட்டியுள்ளனவோ அப்பகுதி துருவங்கள் ஆகும்.
ஆ. துருவப்பகுதிகளில் அதிக அளவு இரும்புத்தூள்கள் ஒட்டிக்கொள்ளும். காரணம் துருவப்பகுதிகளில் காந்த வலிமை அதிகம்.

Question 2.
படம் – ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகியவை இரு சட்டக்காந்தங்களைக் குறிக்கின்றன. அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனில், சட்டகாந்தம் ‘ஆ’. வின் துருவங்களைக் கண்டறிந்து குறிக்கவும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 90
காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். எனவே படம் ‘ஆ’ வின் துருவங்கள் (S – N)
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 91

Question 3.
ஒரு கண்ணாடி குவளை / முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள் கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?
விடை:
கண்ணாடி முகவையில் நீருக்கு மேல் ஒரு வலிமையான காந்தத்தை வைத்தால் நீருக்குள் உள்ள குண்டூசிகள் எல்லாம் காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும்.

6th Science Guide காந்தவியல் Additional Important Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.
காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்
அ) இரும்பு
ஆ) கோபால்ட்
இ) நிக்கல்
ஈ) இரப்பர்
விடை:
ஈ) இரப்பர்

Question 2.
திசை காட்டும் கருவியை கண்டுபிடித்தவர்கள் யார்?
அ) இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்
இ) சீனர்கள்
ஈ) அமெரிக்கர்கள்
விடை:
இ) சீனர்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 3.
காந்தங்கள் காந்தத்தன்மையை இழக்கக் காரணம்
அ) வெப்பப்படுத்துதல்
ஆ) கீழே போடுதல்
இ) சுத்தியால் தட்டுதல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும் பருவம்

Question 4.
ஒரு சட்டக்காந்தத்தின் N முனையை கட்டி தொங்கவிடப்பட்ட காந்தத்தின் வடமுனைக்கு அருகில் கொண்டு சென்றால் என்ன நிகழும்?
அ) ஈர்க்கும்
ஆ) விலக்கும்
இ) சுழலும்
ஈ) ஏதும் நடக்காது
விடை:
ஆ) விலக்கும்

Question 5.
மின்சார தொடர்வண்டிகளின் அதிகபட்ச வேகம்
அ) 380 கிமீ / மணி
ஆ) 600 கிமீ / மணி
இ) 480 கிமீ / மணி
ஈ) 690 கிமீ / மணி
விடை:
ஆ) 600 கிமீ/மணி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
காந்தங்கள் திசையை அறியப் பயன்படுவதால் ____ என அழைக்கப்படுகின்றன.
விடை:
வழிகாட்டும் கற்கள்

Question 2.
காந்தத்தன்மை உடைய தாது _____
விடை:
மேக்னடைட்

Question 3.
எவர்சில்வர் கரண்டி ஒரு _____ பொருள்.
விடை:
காந்தத் தன்மை அற்ற

Question 4.
குப்பைகளில் இருந்து இரும்பை பிரித்தெடுக்க _____ காந்தங்கள் பயன்படுகின்றன.
விடை:
மின்

Question 5.
காந்தங்களில் ஈர்ப்பு விசை அதிகமுள்ள பகுதி _____ ஆகும்.
விடை:
துருவங்கள்

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 92

IV. சிறுவினாக்கள்

Question 1.
செயற்கை காந்தம் என்றால் என்ன?
விடை:
மனிதனால் தயாரிக்கப்படும் காந்தங்கள் செயற்கை காந்தங்கள் எனப்படும்.
(எ.கா.) சட்டகாந்தம், லாடகாந்தம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 2.
செயற்கை காந்தங்களில் பல வித வடிவங்கள் யாவை?
விடை:

  • சட்டகாந்தம், லாடகாந்தம், வளையகாந்தம், காந்தஊசி ஆகியவை பொதுவாக பயன்படுத்தப்படும் செயற்கை காந்தங்கள் ஆகும்.
  • நீள்கோள வடிவம், வட்டவடிவம் மற்றும். உருளை வடிவிலும் காந்தங்கள் கிடைக்கின்றன.

Question 3.
காந்தத் தன்மை உள்ள பொருள் என்றால் என்ன? எ.கா. தருக.
விடை:
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருட்கள் காந்தத்தன்மை உள்ள பொருட்கள் எனப்படும்.
(எ.கா.) இரும்பு, கோபால்ட், நிக்கல் போன்றவை.

Question 4.
காந்தத்தன்மை அற்ற பொருள் என்றால் என்ன? எ.கா. தருக.
விடை:
காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருட்கள் காந்தத்தன்மை அற்ற பொருட்கள் எனப்படும்.
(எ.கா.) காகிதம், நெகிழி, கண்ணாடி, இரப்பர் முதலியன.

Question 5.
காந்தத்தின் பயன்பாடுகள் யாவை?
விடை:

  • நம் நடைமுறை வாழ்வில் காந்தங்கள் அடங்கிய பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.
  • ஒலிப்பான்கள், சில மின்மோட்டார்கள், சிலவகை தாழ்ப்பாள், பைகள், காந்த திசைகாட்டிகள், பென்சில் பெட்டிகள், அலைபேசி உறைகள், குண்டூசித்தாங்கிகள், காந்தத் தூக்கிகள் ஆகியவற்றில் பயன்படுத்துகிறோம்.

V. நெடுவினாக்கள்

Question 1.
காந்தங்களை பாதுகாக்கும் முறைகளை விளக்குக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 95

  • காந்தங்களை சரியாக பராமரிக்காவிட்டால் அவை காந்தத் தன்மையை இழந்து விடுகின்றன,
  • சட்டகாந்தங்களை பாதுகாக்க, இரு சட்ட காந்தங்களின் எதிரெதிர் முனைகள் ஒன்றையொன்று பார்ப்பது போல் இணையாக வைத்து அவற்றிற்கிடையே மரக்கட்டையை வைக்க வேண்டும்.
  • இரு தேனிரும்பு துண்டுகளை காந்தங்களின் முனைகளுக்கு குறுக்கே வைத்து பாதுகாக்க வேண்டும்.
  • குதிரை லாட வடிவ காந்தத்தின் முனைகளுக்கு குறுக்கே ஒரு தேனிரும்பு துண்டை வைத்து பாதுகாக்க வேண்டும்.

Question 2.
ஒரு சட்ட காந்தத்தைக் கொண்டு எவ்வாறு திசையைக் கண்டறிவாய்?
விடை:

  • சட்டகாந்தத்தின் நடுவில் ஒரு நூலைக் கட்டி அதைத் தொங்க விட வேண்டும்.
  • காந்தம் எந்த திசையில் ஓய்வுநிலைக்கு வருகிறது என பார்க்க வேண்டும்.
    Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 96
  • சட்டகாந்தம் ஓய்வு நிலைக்கு வரும் திசைக்கு இணையாக ஒரு / கோட்டினை வரைய வேண்டும்.
  • எத்தனை முறை சுழற்றினாலும் தொங்கவிடப்பட்ட காந்தம் எப்போதும் வடக்கு தெற்கு திசையிலே ஓய்வுக்கு வரும்.
  • வடக்கே நோக்கும் முனை காந்தத்தின் வடதுருவம் ஆகும். தெற்கே நோக்கும் முனை காந்தத்தின் தென்துருவம் ஆகும்.

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
ஓர் இரும்பு ஆணியின் மீது காந்தத்தை தேய்ப்பதால் அது காந்தத்தன்மையைப் பெறுகிறது. ஆனால் அதே போல் ரப்பர் துண்டின் மீது காந்தத்தை தேய்த்தால் இரப்பர் காந்தமாவதில்லை ஏன்?
விடை:
இரப்பர் காந்தத் தன்மை அற்ற பொருள்.

Question 2.
டிவி, கணினி போன்ற மின்சாதனங்களுக்கு அருகில் காந்தங்களைக் கொண்டு சென்றால் என்ன நிகழும்?
விடை:

  • மின்சாதனங்கள் பாதிக்கப்படும்.
  • காந்தம் காந்தத் தன்மையை இழக்கும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 99

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter 3 பலபடி வேதியியல் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 3 Chapter 3 பலபடி வேதியியல்

7th Science Guide பலபடி வேதியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இழை ………….. ஆகும்.
அ) நைலான்
ஆ) பாலியஸ்டர்
இ) ரேயான்
ஈ) பஞ்சு
விடை:
அ) நைலான்

Question 2.
வலுவான இழை ……………………… ஆகும்.
அ) ரேயான்
ஆ) நைலான்
இ) அக்ரிலிக்
ஈ) பாலியஸ்டர்
விடை:
ஆ) நைலான்

Question 3.
ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை ……………….
அ) உருகும்
ஆ) எரிதல்
இ) ஒன்றும் ஏற்படுவதில்லை
ஈ) வெடித்தல்
விடை:
ஆ) எரிதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 4.
கம்பளியைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை இழை ……………. ஆகும்.
அ) நைலான்
ஆ) பாலியெஸ்டர்
இ) அக்ரிலிக்
ஈ) PVC
விடை:
இ) அக்ரிலிக்

Question 5.
நெகிழியின் சிறந்த பயன்பாடென்பது ………………….. என்ற பயன்பாட்டில் அறியலாம்.
அ) இரத்தப்பைகள்
ஆ) நெகிழிக் கருவிகள்
இ) நெகிழி உறிஞ்சுக் குழாய்கள்
ஈ) நெகிழி கேரி பைகள்
விடை:
அ) இரத்தப்பைகள்

Question 6.
……………….. என்பது மட்கும் தன்மையற்ற ஒரு பொருள்
அ) காகிதம் .
ஆ) நெகிழி புட்டி
இ) பருத்தி துணி
ஈ) கம்பளி
விடை:
ஆ) நெகிழி புட்டி

Question 7.
PET என்பது …………………….. இன் சுருக்கெழுத்தாகும்.
அ) பாலியெஸ்டர்
ஆ) பாலியெஸ்டர் மற்றும் டெரிலின்
இ) பாலி எத்திலின்டெரிப்தாலேட்
ஈ) பாலித்தின்டெரிலின்
விடை:
இ) பாலி எத்திலின்டெரிப்தாலேட்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………………….. என்பது பாலியெஸ்டர் துணிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
PET

Question 2.
பல்வகை நெகிழிகளை இனம்காண ………… பயன்படுகின்றன.
விடை:
ரெசின் குறியீடு

Question 3.
சிறிய அலகுகளான பல ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் …………… ஆகும்.
விடை:
பலபடி

Question 4.
முழுமையான இயற்கை இழையின் எடுத்துக்காட்டு ……………… ஆகும்.
விடை:
பருத்தி

Question 5.
கக்கூன்களைக் கொதிக்க வைத்துப் பெறும் இயற்கை இழை …………………… என்று பெயர்.
விடை:
பட்டு

III. சரியா தவறா

Question 1.
அதிக அளவிலான நெகிழிகள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 2.
மறுத்தல் (தவிர்த்தல்) என்பது நெகிழியைக் கையாளும் சிறந்த முறையாகும்.
விடை:
சரி

Question 3.
செயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையலறையில் வேலை செய்வது சிறந்ததே.
சரியான விடை : இயற்கை இழைகளான ஆடைகளை அணிந்து சமையலறையில் வேலை செய்வது சிறந்தது.
விடை:
தவறு

Question 4.
வீரியம் குறைந்த நெகிழிகள் சிதைந்து மைக்ரோநெகிழிகள் என்ற சிறிய துகள்களாகும்
விடை:
சரி

Question 5.
பருத்தி என்பது ஓர் இயற்கையான பாலிமர் ஆகும்
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 2

V. சரியான வரிசையில் எழுதுக

1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.
2. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணி நேரம் குளிரவைக்கவும்.
3. ஒரு குவனை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.
4. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.
5. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்துவிடலாம். .
6. அந்த ஜெல்லினை அலுமனியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.
விடை:
1. நீர், மாவு, வினிகர் மற்றும் கிளிசரினைக் கொண்ட ஒரு சமைக்கும் கலனைக் கலக்கவும்.
2. அந்தத் திரவம் தெளிவடையும் வரை மிதமான சூட்டில் தொடர்ந்து கலக்கவும்.
3. அந்தத் திரவமானது கொதிக்கத் தொடங்கும் பொழுது அதனை அடுப்பில் இருந்து எடுத்து விடலாம்.
4. அந்த ஜெல்லினை அலுமினியத் தட்டின் மேல் பரப்பி விடவும்.
5. ஒரு குவளை போன்றோ ஒரு கிண்ணம் போன்றோ வடிவமாக்கவும்.
6. இப்பொருளை நாம் பயன்படுத்தும் முன் 24 மணிநேரம் குளிர வைக்கவும்.

VI. ஒப்புமை தருக.

Question 1.
பருத்தி : இயற்கை : பாலியெஸ்டர் : ………………………
விடை:
செயற்கை

Question 2.
PLA கரண்டி : மட்கும் தன்மை :: நெகிழி ஸ்பூன் : ……………………
விடை:
மட்காத் தன்மை

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 3.
நைலான் : வெப்பத்தால் உருகும் : பட்டு : …………………..
விடை:
எரியும்

VII. வாக்கியம் மற்றும் காரணம்

Question 1.
வாக்கியம் : மண்ணில் புதைக்கப்பட்ட காய்கறித் தோல்கள் இரு வாரங்களில் மறைந்து போகின்றன.
காரணம் : காய்கறித் தோல்கள் மட்கும் தன்மை கொண்டவை
விடை:
வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.

Question 2.
வாக்கியம் : நைலான் ஆடைகள் சிதைந்து மைக்ரோ இழைகளாக மாற அதிக காலமாகும். ஆனால் பருத்தி ஆடைகள் சிதைவடைய ஆறு மாதகாலம் போதுமானது.
காரணம் : நைலான் பெட்ரோலிய வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் மட்கும் தன்மை பெற்றிருப்பதில்லை. பருத்தித் துணி மட்கும் தன்மை கொண்டது.
விடை:
வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.

Question 3.
வாக்கியம் : நெகிழி பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.
காரணம் : நெகிழிகள் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.
விடை:
வாக்கியம் (A) மற்றும் காரணம் (R) சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.

VIII. குறுக்கெழுத்து

இடமிருந்து வலம்
1. செயற்கை கம்பளியாகப் பயன்படும் இழை
2. நீர் பாட்டில்கள் உருவாக்கத் தேவைப்படும் நெகிழி

கீழிருந்து மேல்
3. குறை – செயற்கை இழையான இதற்கு செயற்கைப்பட்டு என்ற பெயரும் உண்டு
4. சிறிய ஒற்றைப்படிகளின் தொடர்ச்சியான சேர்க்கை உருவாக்கும் நீண்ட சங்கிலிப் பொருள்

மேலிருந்து கீழ்
5. கூட்டிலிருந்து பெறப்படும் ஒரு வகையான இயற்கை இழை.
6. பாலியெஸ்டர் என வகைப்படுத்தப்படும் ஓர் செயற்கை இழை
7. கயிறு தயாரிப்பில் பயன்படும் பலபடி
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 3
விடை:
1. அக்ரிலிக்
2. பாலி எத்திலின் டெரிப்தாலேட் (PET)
3. பாலிமர்
4. ரேயான்
5. பட்டு
6. அக்ரிலிக்
7. நைலான்

IX. மிகக் குறுகிய விடை தருக.

Question 1.
பருத்தியை உருவாக்கும் பலபடிகளின் இரசாயனப் பெயர் என்ன?
விடை:
செல்லுலோஸ்

Question 2.
நெகிழிபொருள்கள் வெவ்வேறு பண்புகளையும்குணங்களையும் எங்ஙனம் பெறுகின்றன
விடை:

  • குறைந்த எடை
  • அதிக வலிமை
  • சிக்கலான பல வடிவங்களை எடுக்கும் தன்மை
  • இளகும் தன்மை நீரினை உட்புகவிடாத தன்மை
  • புற ஊதாக் கதிர்களை உட்புக விடாத தன்மை

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 3.
நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பது நல்லதல்ல, ஏன்?
விடை:

  • நெகிழிகளையும், செயற்கை இழைகளையும் எரிப்பதால் நச்சுத்தன்மையுள்ள வாயுக்களும் வேதிப் பொருட்களும் உருவாகின்றன.
  • இவை புற்றுநோய் மற்றும் தீங்கு விளைவிக்கும் பல நோய்களை உருவாக்கும்.

Question 4.
நெகிழியினால் செய்த வாளியானது துருப்பிடிப்பதில்லை. ஆனால் இரும்பு வான துருப்பிடித்து விடுகிறது ஏன்?
விடை:

  • இரும்பு வாளி காற்றுடன் வினைபுரிவதால் துருப்பிடிக்கிறது.
  • ஆனால் நெகிழியினால் செய்த வாளியானது காற்றுடன் வினைபுரிவதில்லை, எனவே அது துருப்பிடிப்பதில்லை .

Question 5.
நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது எவ்வாறு சிறந்த முறையாகும்?
விடை:

  • ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய நெகிழிகள் நமது சுற்றுப்புறத்திற்கும் விலங்குகளுக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் தீவிர தாக்கங்களையே ஏற்படுத்த வருகின்றன.
  • நெகிழி சிதைவடைவதும் இல்லை, மண்ணில் மட்குவதும் இல்லை.
  • ‘நெகிழி குப்பைகள் பல காலம் மறையாமல் இருப்பதால், எல்லா இடங்களிலும் நிறைந்து குவிந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன.
  • விலங்குகள் நெகிழிப்பைகளில் உள்ள உணவுடன் சேர்த்து நெகிழிப்பைகளையும் தவறுதலாக உண்பதால் அவற்றிற்கு கேடு விளைகிறது.
  • கடல் நீரில் குவியும் நெகிழிகள் சிறிய துண்டுகளாக மைக்ரோ நெகிழிகளாக உடைந்து கடலை மாசுபடுத்துகின்றன.
  • எனவே நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது சிறந்த முறையாகும்.

Question 6.
வெப்பத்தால் இறுகும் நெகிழிப் பொருள்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:

  • பேக்கலைட்
  • மெல்மின்

Question 7.
5R கொள்கை என்பது என்ன?
விடை:

  1. 5R கொள்கை என்பது
  2. Refuse (தவிர்) – Reduce (குறை)
  3. Reuse (மீண்டும் பயன்படுத்து)
  4. Recycle (மறுசுழற்சி செய்)
  5. Recover (மீட்டெடு)

X. சிறுவினா

Question 1.
‘மட்கும் தன்மை வாய்ந்தவை’ என்ற சொல்லின் பொருள் என்ன?
விடை:
இயற்கை செயல்முறைகளாலும், பாக்டீரியாக்களினாலும் சிதைவடையும் பொருள்கள் மட்கும் தன்மை வாய்ந்தவை எனப்படும்.

Question 2.
கோடைக் காலங்களில் விளையாடும் பொழுது அணிய ஏதுவான ஆடைவகை யாது? ஏன்?
விடை:

  1. கோடைக் காலங்களில் விளையாடும் பொழுது இயற்கை இழைகளாலான ஆடைவகைகளை அணிய வேண்டும்.
  2. ஏனெனில் இயற்கை இழைகள் அதிக அளவு நீரை உறிஞ்சுகின்றன.
  3. அதிக அளவு காற்றோட்டம் உள்ளதால் உடலை குளிர்ச்சியாகவும், சிரமமின்றியும் வைத்துக்கொள்ள இயற்கை இழைகள் உதவுகின்றன.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 3.
விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் நெகிழியின் தாக்கம் என்ன?
விடை:
நெகிழிப் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை உண்ணும்போது விலங்குகள் தவறுதலாக நெகிழி பைகளையும் சேர்த்தே உண்கின்றன. இது விலங்குகளுக்கு கேடு விளைவிக்கின்றன.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியக்கூடிய பாலித்தீன் பைகள் சுற்றுப்புறத்தை குப்பை கூடமாக்கி, வடிகால்களை அடைத்து மாசுபடுத்துகின்றன.

வடிகால்களில் அடைப்பு ஏற்படுவதால் நீர் தேங்கி நிற்கின்றது.

இது கொசுக்களின் இனப் பெருக்கத்திற்கு காரணமாகி மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற வியாதிகளை பரப்பி, வெள்ளம் ஏற்படவும் காரணமாகிறது.

XI. நெடுவினா

Question 1.
செயற்கை இழைகளின் பயன்களையும், வரம்புகளையும் பட்டியலிடுக.
விடை:
செயற்கை இழைகளின் சிறப்புகள் :

  • நிறம் மங்குவது இல்லை . ‘
  • சுருங்குவது இல்லை
  • அதிக வருடங்களுக்கு அதே பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
  • அதிக வலிமை உடையது.
  • அதிக நீட்சித்தன்மை கொண்டது.

செயற்கை இழைகளான் குறைபாடுகள் :

  • வெப்பத்தைத் தாங்கும் திறனற்றவை.
  • எளிதில் தீப்பற்றக் கூடியவை.
  • குறைந்த அளவே நீரை உறிஞ்சுகின்றன.
  • போதுமான காற்றோட்டத்தைத் தருவதில்லை. எனவே இவற்றை அணியும்போது வெப்பமாகவும், சிரமமாகவும் உணர்கிறோம்.

Question 2.
நெகிழிப்பொருள்களை அகற்றும் பாதுகாப்பான முறைகள் சிலவற்றினை பரிந்துரைக்கவும்.
விடை:

  1. நெகிழிப் பொருள்களை அகற்றும் போது மட்கும் தன்மை கொண்டவை, மட்கும் தன் தன்மையற்றவை என பிரித்த பிறகு அப்புறப்படுத்துவது சிறந்தது.
  2. நெகிழிக் குப்பைகளை அகற்ற 5R – கொள்கையை முயற்சிக்க வேண்டும்.
  3. Refuse (தவிர்த்த ல்)
    கடைகளுக்குச் செல்லும்போது பருத்தியினாலான பை அல்லது சணல் பைகளை கொண்டு சென்று கடைக்காரர் தரும் நெகிழிப் பைகளை தவிர்க்கலாம்.
  4. Reduce (குறைத்தல்)
    பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். நெகிழிப் பொருளை வாங்குமுன் அதற்கு பதிலிப் பொருள் உள்ளதா என சரிபார்த்தபின் வாங்கலாம்.
  5. Reuse (மீண்டும் பயன்படுத்துதல்)
    நெகிழியினால் செய்யப்பட்ட பொருள்களை தூக்கியெறியாமல் முடிந்த அளவு மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
  6. Recycle (மறுசுழற்சி செய்தல்)
    பயனற்ற பொருள்களில் இருந்து பயனுள்ள புதிய பொருள்களை உற்பத்தி செய்யும் பொருட்டு, ரெசின் குறியீடுகளின் அடிப்படையில் நெகிழிக் கழிவுகளை பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யலாம்.
  7. Recover (மீட்டெடுத்தல், மட்குதல் மற்றும் எரித்துச் சாம்பலாக்குதல்)
    நெகிழிப் பொருள்களை சாம்பலாக்கிகளில் இட்டு உயர் வெப்பநிலையில் எரித்து வெளியாகும் வாயுக்களைக் கவனமாக சேகரித்தும், மீதமான நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பலை கவனமாகப் பிரித்தும் மின்சார சக்தி பெறலாம்.
  8. அதிக இது பெரும்பாலும் நெகிழிக் கழிவுகளைக் கையாள்வதற்கு சாதகமான வழியாகக் கருதப்படுகிறது.

XII. உயர் சிந்தனைத் திறன் வினாக்கள்

Question 1.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தித் தூக்கியெறிப்படும் நெகிழிகளைத் தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. அரசின் இந்தச் செயல்பாடு எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
விடை:

  • இதனால் சுற்றுச்சூழல், விலங்குகள், நமது ஆரோக்கியத்தின் மீது நெகிழிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
  • நெகிழிகுப்பைகள் சேர்ந்து சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதும், நீர்நிலைகளில் அடைப்பு ஏற்படுவதும் குறைகிறது.
  • இதனால் கொசுக்களால் ஏற்படும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 2.
நெகிழிப் பைகள் சிதைவடைய ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஆகும் என நாம் அறிவோம். ஒரு தலைமுறை மாற 30 ஆண்டுகள் ஆகும். எனில், அந்த நெகிழிப்பை மட்குவதற்கு எத்தனை தலைமுறைகள் தேவைப்படும்.
விடை:
அந்த நெகிழிப்பை மட்குவதற்கு 16 தலைமுறைகள் தேவைப்படும்.

XIII. பதில் எழுதுக.

Question 1.
நாம் பயன்படுத்தும் பொருள்கள் எது?
விடை:
நெகிழி பாட்டில்கள், தட்டுகள், டம்ளர்கள், கொள்கலன்கள், உடுத்தும் ஆடைகள்

Question 2.
இன்று காலை உங்கள் கைகளில் பட்ட முதல் நெகிழிப் பொருள் என்ன?
விடை:
பல் துலக்கும் பிரஷ்

Question 3.
உங்கள் வகுப்பறையை பார்வையிட்டு அதில் காணப்படும் நெகிழியால் ஆன பொருள்களைப் பட்டியலிடுக..
விடை:
நாற்காலி, பேனா, பென்சில் டப்பா, ஸ்கேல்

Question 4.
உங்கள் மதிய உணவை எடுத்துச் செல்வதற்கும், தண்ணீரை எடுத்துச் செல்வதற்கும் நீங்கள் பயன்படுத்தும் பொருள்களின் வகைகள் யாவை?
விடை:

  • மதிய உணவுக்கலன் – பாலி கார்பனேட் (PC)
  • தண்ணீரை எடுத்துச்செல்லும் பாட்டில் – பாலி கார்பனேட் (PC), PET.

Question 5.
உங்களிடம் உள்ள துணிகளின் வகைகளைப் பட்டியலிடுக.
விடை:
நைலான், பாலியெஸ்டர், பருத்தி, பட்டு

XIV. கோடிட்ட இடங்களை நிரப்புக.

i)
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 4
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 5

ii) கொடுக்கப்பட்டுள்ள படத்தினை உற்றுநோக்கி என்ன நடக்கிறது என்பதை விளக்குங்கள்.
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 6
விடை:

  • ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியினாலான பாட்டில்கள், கேன்கள் வடிகாலை அடைத்து நீரை வடியவிடாமல் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றது.
  • தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் பெருகி மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன.
  • கழிவு நீர் தேங்குவதால் மழைக்காலங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்குகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

iii) கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் படித்து, அவற்றை வரைபடத்தில் குறிக்கவும், நாடுகளையும் அவை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் அளவையும் ஒப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 7

7th Science Guide பலபடி வேதியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
PVC – ன் ஒற்றைப்படி மூலக்கூறு.
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 8
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 9

Question 2.
புரதங்கள் எவற்றின் பலபடிகள்?
அ) ஆல்கஹால்கள்
ஆ) அமினோ அமிலங்கள்
இ) கார்போஹைட்ரேட்கள்
ஈ) நொதிகள்
விடை:
ஆ) அமினோ

Question 3.
அமிலங்கள் பின்வருவனவற்றுள் எது இயற்கை இழை?
அ) நைலான்
ஆ) ரேயான்
இ) பருத்தி
ஈ) அக்ரிலிக்
விடை:
இ) பருத்தி

Question 4.
பாதுகாப்பான நெகிழிகளுள் ஒன்றாகக் கருதப்படுவது
அ) PET
ஆ) HDPE
இ) PVC
ஈ) PS
விடை:
ஆ) HDPE

Question 5.
கால்பந்து ஆடுகளம் அமைக்கப் பயன்படுவது
அ) LDPE
ஆ) HDPE
இ) PVC
ஈ) PET
விடை:
அ) LDPE

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பல எண்ணிக்கையிலான …………………… சக பிணைப்புகளால் இணைந்து உருவாக்கும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பு பலபடி எனப்படும்.
விடை:
ஒற்றைப்படிகள்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 2.
செல்லுலோஸ் ஒரு ……………………… பலபடியாகும்.
விடை:
கார்போஹைட்ரேட்

Question 3.
அக்ரிலிக் ஒரு ……………… இழையாகும்.
விடை:
செயற்கை

Question 4.
PET என்பது. ………………… சுருக்கம்
விடை:
பாலி எத்திலீன் டெரிதாலேட்

Question 5.
பாலித்தீன் ஒரு ……………… பிளாஸ்டிக்
விடை:
வெப்பத்தால் இளகும்

III. சரியா? தவறா? (தவறெனில் சரியான கூற்றைத் தருக)

Question 1.
டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, ஹீமோகுளோபின், நொதிகள் மற்றும் ஹார்மோன்கள் ஆகியன நமது உடலில் காணப்படும் பலபடிகள் ஆகும்.
விடை:
சரி

Question 2.
நண்டுகள் மற்றும் சிலந்திகள் போன்ற பூச்சிகளின் புற எலும்புக்கூடுகளிலும், காளான்கள் போன்ற பூஞ்சைகளின் செல் சுவர்களிலும் காணப்படுவது செல்லுலோஸ் ஆகும்.
விடை:
தவறு – நண்டுகள் மற்றும் சிலந்திகள் போன்ற பூச்சிகளின் புற எலும்புக்கூடுகளிலும், காளான்கள் போன்ற பூஞ்சைகளின் செல் சுவர்களிலும் காணப்படுவது கைட்டின் ஆகும்.

Question 3.
கம்பளி மற்றும் பட்டு ஆகியன செயற்கை இழைகளாகும்.
விடை:
தவறு – கம்பளி மற்றும் பட்டு ஆகியன இயற்கை இழைகளாகும்.

Question 4.
பாலியெஸ்டரை மிக மெல்லிய இழைகளாக இழுத்து, மற்ற நூல்களை நெய்வது போல் நெய்ய முடியும்.
விடை:
சரி

Question 5.
வெப்பத்தால் இறுகும் நெகிழிகள் வெப்பப்படுத்தும்போது வளைகின்றன.
விடை:
தவறு – வெப்பத்தால் இறுகும் நெகிழிகள் வெப்பப்படுத்தும் போது வளைவதில்லை.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 10
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 11

V. சரியான வரிசையில் எழுதவும்

Question 1.
சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் டை சல்பைடு போன்ற வேதிப்பொருட்களுடன் விஸ்கோஸ் கரைந்து செல்லுலோஸ் என்ற திரவத்தினை உருவாக்குகிறது.
விடை:
சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் டை சல்பைடு போன்ற வேதிப் பொருட்களுடன் செல்லுலோஸ் கரைந்து விஸ்கோஸ் என்ற திரவத்தினை உருவாக்குகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 2.
கோடைக் காலங்களில், இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதைவிட செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதே பொருத்தமாக இருக்கும்.
விடை:
கோடைக்காலங்களில், செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதைவிட இயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவதே பொருத்தமாக இருக்கும்.

VI. ஒப்புமை தருக.

Question 1.
மட்கும் தன்மையற்ற நெகிழி : PVC
மட்கும் தன்மை கொண்ட நெகிழி ………………..
விடை:
PLA

Question 2.
பாலி கார்பனேட் : PU
……………… . PC
விடை:
பாலியூரித்தேன்

VII. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று (A): அக்ரிலிக் மற்றும் நைலான் ஆகியன செயற்கை இழைகளாகும்.
காரணம் (R): அவை பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட மூலப்பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் அல்ல.
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்.

Question 2.
கூற்று (A): பாலிபுரோபைலீன் உறிஞ்சு குழாய்களை நோய்தொற்று நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
காரணம் (R): அவை உயர்தரமான சுகாதாரத்தை வழங்குவதோடு நோய்கள் பரவும் அபாயத்தையும் முற்றிலும் அகற்றுகின்றன.

அ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R) ஆனது (A) யின் சரியான விளக்கம்
ஆ) (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) ஆனது (A) யின் சரியான விளக்கம் அல்ல.
இ) (A) சரி ஆனால் (R) தவறு
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
விடை:
ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
சரியான கூற்று (A): பாலிபுரோபைலீன் உறிஞ்சு குழாய்களை நோய் தொற்று நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தத் தேவையில்லை.

VIII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
பலபடியாக்கல் என்றால் என்ன?
விடை:
பல எண்ணிக்கையிலான ஒற்றைப்படிகள் சகப்பிணைப்புகளால் இணைந்து பலபடி எனப்படும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பை உருவாக்கும் முறை பலபடியாக்கல் எனப்படும்.

Question 2.
செயற்கை பலபடிகள் என்றால் என்ன?
விடை:

  • மனிதனால் உருவாக்கப்பட்ட பலபடிகள் செயற்கை பலபடிகள் எனப்படும்.
  • அவை பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 3.
ரேயான் என்றால் என்ன?
விடை:

  • ரேயான் ஒரு பகுதியான செயற்கை இழை ஆகும்.
  • மரக்கூழில் இருந்து பெறப்பட்ட செல்லுலோசினால் ரேயான் தயாரிக்கப்படுகிறது.

Question 4.
நைலானின் ஒற்றைப்படி மூலக்கூறுகள் யாவை?
விடை:
ஹெக்சா மெத்திலீன் டை அமீன் மற்றும் அடிப்பிக் அமிலம்.

Question 5.
ரெசின் குறியீடு என்றால் என்ன?
விடை:
ஒன்றையொன்று துரத்தும் அம்புக்குறியினாலான முக்கோணத்தின் நடுவில் ஓர் எண்ணும், அதற்குகீழ் அந்த எண்ணிற்குரிய நெகிழியின் பெயரின் சுருக்கெழுத்தும் சேர்ந்து காணப்படுவது ரெசின் குறியீடு எனப்படும்.

IX. குறுகிய விடையளி

Question 1.
இழைகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
விடை:

  • நீண்ட மூலக்கூறுகள் பின்னிப் பிணைந்து நீளமான, சரம் போன்று உருவாக்கப்படும் அமைப்பு இழைகள் எனப்படும்.
  • இயற்கை இழைகள் :
    இவை தாவரங்கள் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்படுகின்றன. (எ.கா) கம்பளி, பட்டு, பருத்தி
  • பகுதியான செயற்கை இழைகள் :
    இயற்கையில் கிடைக்கும் மரக்கூழில் இருந்து மனிதனால் செயற்கையாக பெறப்படுபவை. (எ.கா) ரேயான்.
  • செயற்கை இழைகள் :
    பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு மனிதனால் உருவாக்கப்படுபவை. (எ.கா) நைலான்.

Question 2.
பாலியெஸ்டர் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • பாலியெஸ்டர் ஒரு செயற்கை இழையாகும்.
  • இதனை மிக மெல்லிய இழைகளாக இழுத்து, மற்ற நூல்களை நெய்வது போல், நெய்யவும் முடியும்.
  • இது பாலிகாட், பாலிவுல், டெரிகாட் போன்ற பல பெயர்களால் விற்பனை செய்யப்படுகிறது.
  • பாலிகாட் என்பது பாலியெஸ்டர் மற்றும் பருத்தியின் கலவை.
  • பாலிவுல் என்பது பாலியெஸ்டர் மற்றும் கம்பளியின் கலவை.
  • பாலி எத்திலீன் டெரிதாலேட் (PET) ஒரு பிரபலமான பாலியெஸ்டர் வகையாகும்.
  • PET நீர் மற்றும் சோடா பாட்டில்கள், கலன்கள், படங்கள், இழைகள் தயாரிக்க பயன்படுகிறது.
  • பாலியெஸ்டர் துணிகள் எளிதில் சுருங்குவதில்லை.
  • பாலியெஸ்டர் துணிகளை தோய்ப்பது எளிது.
  • எனவே பலவகையான ஆடைகள் தயாரிப்பில் பாலியெஸ்டர் இழைகள் பயன்படுகின்றன.

Question 3.
அக்ரிலிக் பற்றி எழுதுக.
விடை:

  • நாம் பயன்படுத்தும் ஸ்வெட்டர்கள், சால்வைகள் மற்றும் போர்வைகள் கம்பளியைப் போல் தோற்றமளித்தாலும், அவை இயற்கை கம்பளி இழைகளால் செய்யப்பட்டவை அல்ல.
  • இவை அக்ரிலிக் எனும் செயற்கை இழையால் செய்யப்பட்டவை.
  • இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படும் கம்பளி ஆடைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
  • நெகிழி தயாரிப்பின் போது கிடைக்கும் துணைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் அக்ரிலிக் ஆடைகள் விலை மலிவானவை.
  • நீடித்து உழைக்கும் தன்மை, பல வண்ணங்கள் மற்றும் மலிவான விலை அக்ரிலிக்கின் பரவலான பயன்பாட்டிற்கு பங்களிக்கின்றன.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 4.
வெப்பத்தால் இளகும் நெகிழிகள் மற்றும் இறுகும் நெகிழிகள் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 12

Question 5.
மைக்ரோ நெகிழிகள் என்றால் என்ன? சுற்றுப்புறத்தின் மீது அவை ஏற்படுத்தும் பாதிப்பு யாது?
விடை:
கடலில் குவியும் நெகிழிகள் கடல்நீர், சூரிய ஒளி மற்றும் அலையசைவுகளுக்கு உட்பட்டு, சிறிய துண்டுகளான மைக்ரோ நெகிழிகளாக (நுண்ணிய நெகிழிகள்) உடைகின்றன.

வீட்டில் பயன்படுத்தப்படும் பற்பசை, முகம்கழுவும் கரைசல், உடலைத் தூய்மைப்படுத்தும் தேய்ப்பான்கள் ஆகியவற்றில் காணப்படும் மைக்ரோ நெகிழிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளை மாசுபடுத்துகின்றன.

நிலத்தில் தங்கும் மைக்ரோ நெகிழிகள் மற்றும் காற்றில் பரவும் மைக்ரோ நெகிழிகள் ஆகியனவும் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகின்றன.

Question 6.
மட்கும் தன்மை கொண்ட நெகிழி பற்றி எழுது.
விடை:
மட்கும் தன்மை கொண்ட நெகிழியை சோளம், கரும்பு மற்றும் இனிப்புச் சுவை கொண்ட கிழங்குகளின் கூழ்களில் இருந்து பெறமுடியும். (எ.கா) பாலி லாக்டிக் அமிலம் (PLA) அல்லது பாலிலாக்டைடு என்பது உரமாகும் தன்மை கொண்ட உயிர்ப்புத்திறன் கொண்ட வெப்பத்தால் இளகும் நெகிழி ஆகும்.

இதை பயன்படுத்தி உணவுப் பொட்டலக்கலன்கள், குப்பைப்பைகள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சமையல் மற்றும் உணவு மேசை கருவிகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

X. விரிவான விடையளிக்க

Question 1.
நைலான் பற்றி விளக்குக.
விடை:

  • முதன் முதலில் முழுமையாகப் பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை நைலான் ஆகும்.
  • இரண்டாம் உலகப் போரின் போது பாராசூட்டுகள் மற்றும் கயிறு போன்ற பொருள்களை தயாரிக்க நைலான் பயன்படுத்தப்பட்டது.
  • இன்று நாம் பயன்படுத்தும் செயற்கை இழைகளுள் அதிகம் பயன்படும் இழையாக நைலான் விளங்குகிறது.
  • நைலான் இழை வலுவாகவும், நீட்சித்தன்மை கொண்டதாகவும், எடை குறைவாகவும் உள்ளது.
  • பளபளக்கும் தன்மை கொண்டதாகவும், தோய்ப்பதற்கு எளிதானதாகவும் இருப்பதால் ஆடை தொழிற்சாலைகளில் பரவலாக பயன்படுகிறது.
  • காலுறைகள், கயிறுகள், கூடாரங்கள், பல் துலக்கிகள், கார் இருக்கைகளின் பட்டைகள், தலையணை போன்ற பைகள், திரைச்சீலைகள் போன்றவை நைலானால் ஆனவை.
  • ஓர் இரும்புக் கம்பியைக் காட்டிலும் ஒரு நைலான் இழையானது வலிமையானது.
  • ஹெச்சா மெத்திலீன் டை அமீன் மற்றும் அடிப்பிக் அமிலம் ஆகிய ஒற்றைப் படிகளில் இருந்து நைலான் பெறப்படுகிறது.

Question 2.
ரேயான் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயன் யாது?
விடை:

  • ரேயான் ஒரு பகுதியான செயற்கை இழை
  • மரக்கூழில் இருந்து பெறப்பட்ட செல்லுலோசில் இருந்து ரேயான் தயாரிக்கப்படுகிறது.
  • மரம் அல்லது மூங்கிலின் கூழில் இருந்து பெறப்பட்ட செல்லுலோசை பல வேதிப்பொருள்களைச் சேர்த்து திடப்படுத்தினர்.
  • கூழுடன் சோடியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்பட்டு பின் கார்பன்-டை-சல்பைடு சேர்க்கப்படுகிறது.
  • சேர்க்கப்பட்ட வேதிப் பொருட்களுடன் செல்லுலோஸ் கரைந்து விஸ்கோஸ் என்ற திரவத்தினை உருவாக்குகிறது.
  • திரவ விஸ்கோஸினை ஓர் ஸ்பின்னரட்டின் வழியே செலுத்தி, நீர்த்த கந்தக அமிலத்தினுள் செலுத்தும்போது பட்டு போன்ற இழைகள் கிடைக்கின்றன.
  • அந்த இழைகளை சோப்பினால் சுத்தம் செய்து உலர வைத்துப் பெறப்படும் புதிய – இழைகளுக்கு ரேயான் என்று பெயர்.
  • போர்வையாக, தரை விரிப்பாக, டயபர்களாக, காயங்களுக்கு மருந்திடும் வலைத் துணிகளாக, பேண்டேஜ் துணிகளாக ரேயான் பயன்படுகிறது.

Question 3.
கண்ணாடி பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • சிலிக்கான் டை ஆக்சைடுடன் சோடியம் கார்பனேட் சேர்த்து 1700°C உருக்கி கண்ணாடி தயாரிக்கப்படுகிறது.
  • சிலிக்கான் டை ஆக்சைடை உருக்கியதும் சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் அணுக்கள் தமது படிக அமைப்பிலிருந்து சிதையும்.
  • அவற்றை மெதுவாகக் குளிர்விக்கும் போது அணுக்கள் வரிசையாக மீண்டும் தனது படிக அமைப்புக்குத் திரும்பும்.
  • ஆனால் திரவத்தை உடனடியாகக் குளிர்விக்கும்போது சிலிக்காவின் அணுக்கள், தமது இடங்களில் வரிசைப்படுத்தி பழையபடி படிக அமைப்பை பெற இயலாது.
  • எனவே, பழைய அமைப்பில் இல்லாமல் வேறு ஒரு அமைப்பில் அணுக்கள் அமையப் பெறும்.
  • இது போன்ற பொருள்களை உருவமற்றவை என்கிறோம்.
  • கண்ணாடி நீள் வரிசை அமைப்பில் அமைந்தும், கனிமத்தின் பண்பில் இருந்து, கண்ணாடியின் அமைப்பினை ஒத்த உருவத்திலும் இருக்கும்.
  • அந்நிலையில் அது பலபடிகள் எனக் கருதப்படுகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல்u

Question 4.
பலவகை கண்ணாடியினை எவ்வாறு தயாரிக்கலாம்?
விடை:
வர்த்தக அளவில் கண்ணாடித் தயாரிக்கும் போது, மணலுடன், வீணாகிப்போன கண்ணாடி (மறுசுழற்சிக்காக சேகரிக்கப்பட்டது), சோடா சாம்பல் (சோடியம் கார்பனேட்) மற்றும் சுண்ணாம்புக்கல் (கால்சியம் கார்பனேட்) கலந்து உலையில் இட்டு வெப்பப்படுத்த வேண்டும்.

மணலின் உருகு நிலையை குறைக்க சோடா சாம்பல் உதவுகிறது.

இவ்வாறு தயாரான கண்ணாடி நீரில் கரையும். நீரில் கரைவதைத் தடுக்க சுண்ணாம்புக்கல் சேர்க்கப்படுகிறது.

இவ்வாறு பெறப்பட்ட கண்ணாடி சோடா-லைம்-சிலிக்கா கண்ணாடி எனப்படும். இதுவே நாம் பயன்படுத்தும் சாதாரணக் கண்ணாடி.

இரும்பு மற்றும் குரோமியம் சார்ந்த வேதிப்பொருள்களை சேர்ப்பதால் பச்சை நிறக் கண்ணாடி உருவாகிறது.

பைரக்ஸ் என்ற முத்திரையுடன் விற்கப்படும் கண்ணாடி வகை, சூளையில் சிதையாத போரோ சிலிக்கேட் கண்ணாடி வகையாகும். உருகிய நிலையிலுள்ள கண்ணாடியுடன் போரான் ஆக்சைடை சேர்ப்பதன் மூலம் இது பெறப்படுகிறது.

உருகு நிலை கண்ணாடியுடன் ஈய ஆக்சைடை சேர்ப்பதால் எளிதில் வெட்டக்கூடிய கண்ணாடி கிடைக்கிறது.

கண்ணாடி மற்றும் நெகிழியினை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குவதால் குண்டு துளைக்காத கண்ணாடி கிடைக்கிறது.

உருகிய கண்ணாடியை மிக விரைவாக குளிர வைக்கும் போது காரில் உள்ள காற்றுக்கவசங்களாக பயன்படும் கடினக் கண்ணாடி தயாரிக்கப்படுகிறது.

உருகிய கண்ணாடியுடன் வெள்ளி அயோடைடைச் சேர்க்கும்போது பெறப்படும் கண்ணாடி சூரிய அல்லது பிற ஒளி படும்போது கருமைநிறக் கண்ணாடியாக மாறுகிறது. இவை லென்சுகள் மற்றும் கண்கவசக் கண்ணாடிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 13
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 3 பலபடி வேதியியல் 14

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 2 நீர் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 2 நீர்

6th Science Guide நீர் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.
உலகில் உள்ள மொத்த நீரில் 97% ____ ஆகும்.
அ) நன்னீ ர்
ஆ) தூயநீர்
இ) உப்புநீர்
ஈ) மாசடைந்த நீர்
விடை:
இ) உப்புநீர்

Question 2.
பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?
அ) ஆவியாதல்
ஆ) ஆவி சுருங்குதல்
இ) மழை பொழிதல்
ஈ) காய்ச்சி வடித்தல்
விடை:
ஈ) காய்ச்சி வடித்தல்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 3.
பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
i) நீராவிப்போக்கு
ii) மழைபொழிதல்
iii) ஆவி சுருங்குதல்
iv) ஆவியாதல்
அ) ii) மற்றும் iii)
ஆ) ii) மற்றும் iv)
இ) i) மற்றும் iv)
ஈ) i) மற்றும் ii)
விடை:
இ) i) மற்றும் iv)

Question 4.
நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?
அ) பனி ஆறுகள்
ஆ) நிலத்தடிநீர்
இ) மற்ற நீர் ஆதாரங்கள்
ஈ) மேற்பரப்பு நீர்
விடை:
ஆ) நிலத்தடிநீர்

Question 5.
வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்
அ) வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.
ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்
இ) வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.
ஈ) அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
விடை:
ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ______ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.
விடை:
3%

Question 2.
நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ____ என்று பெயர்.
விடை:
ஆவியாதல்

Question 3.
நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _____ கட்டப்படுகிறது.
விடை:
அணை

Question 4.
ஆறுகளில் பாயும் நீரின் அளவு ____ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்
விடை:
மழை

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 5.
நீர் சுழற்சியினை _____ என்றும் அழைக்கலாம்.
விடை:
ஹைட்ராலிஜிக்கல்
சுழற்சி

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.
விடை:
தவறு – ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக உள்ளன.

Question 2.
நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.
விடை:
தவறு – கடல் நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் முகத்துவாரம் எனப்படும்.

Question 3.
சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.
விடை:
தவறு – அனைத்து வெப்ப மூலங்களாலும் ஆவியாதல் நிகழும்.

Question 4.
குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.
விடை:
சரி – உறைதலால் புற்களின் மீது பனி உருவாகும்.

Question 5.
கடல்நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.
விடை:
தவறு – கடல்நீரை நேரடியாகப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 80

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.
  2. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.
  3. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.
  4. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது..
  5. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.
  6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.
  7. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.
  8. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

விடை:

  1. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.
  2. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.
  3. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த்திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாகும்.
  4. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிற
  5. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.
  6. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.
  7. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.
  8. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

VI. ஒப்புமை தருக.

Question 1.
மக்கள் தொகைப் பெருக்கம் : நீர் பற்றாக்குறை :: மறு சுழற்சி : _____
விடை:
நீர் மேலாண்மை

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 2.
நிலத்தடிநீர் : ____ : மேற்பரப்பு நீர் : ஏரிகள்
விடை:
கிணறு

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.
விடை:
கடல், ஆறு, ஏரி, குளம், கிணறு, பனிப்பாறை, பனியாறு

Question 2.
நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது?
விடை:
கிணறுகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள், குளங்கள், ஆறுகள், நீர்த்தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவைகளிலிருந்து நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் நீரை பெறுகின்றனர்.

Question 3.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?
விடை:
குளிர்சாதனப் பெட்டியில் குளிரூட்டப்பட்ட முகவை நீரானது அதனைச் சுற்றியுள்ள காற்றை குளிரச் செய்கிறது. அதன்மூலம் காற்றிலுள்ள நீராவி சுருங்கி குவளையின் வெளிப்பகுதியில் நீர்த்திவளைகளை உருவாக்கும். எனவே பாட்டிலைச் சுற்றி குளம் போல் அந்த நீர் தேங்கியிருக்கும்.

Question 4.
அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை. ஏன்?
விடை:

  • மழை பொழிவு நிகழ குளிர்ச்சியான காற்று தேவை.
  • மேகங்களை சுற்றியுள்ள காற்று குளர்ச்சியடையும் போது மட்டுமே மழை பொழிவு நிகழும்.

Question 5.
நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?
விடை:
துருவங்களிலுள்ள பனிப்படிவுகள், பனியாறுகள், பனிப் பாறைகளில் நீர் பனிக்கட்டியாகக் காணப்படுகின்றன.

Question 6.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதியில் உள்ள நீர்வாழ் விலங்குகள் எவ்வாறு உயிர் வாழ்கின்றன?
விடை:

  • ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளில் நீரின் மேற்பரப்பு திண்மநிலையில் பனிப்படலங்களாக உள்ளன.
  • இந்த மிதக்கும் பனிப்படலங்கள் ஒரு பாதுகாப்பு படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம் வெளியேறுவதை தடுக்கிறது.
  • இது நீர்வாழ் உயிர்களுக்கு சாதகமாக அமைந்து அவை உயிர்வாழ உதவுகின்றது.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 7.
மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?
விடை:

  1. மழைநீர் எங்கு பொழிகிறதோ அவ்விடத்திலேயே சேகரித்தல்.
  2. ஓடும் மழை நீரினை சேகரித்தல்.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 85

Question 2.
“நீர் சேமிப்பு ” என்ற தலைப்பில் சில வாசகங்களை உமது நடையில் எழுதவும்.
விடை:
”நீரின்றி அமையாது உலகு”
“மரம் நடுவோம் ! மழை பெறுவோம்!!”
“மழைநீர் சேமிக்க ஊக்கம் பெறு”
“மழைநீரில் உயிர் ஓட்டம் உண்டு”
”மனிதா நீ வாழ உயிர்நீர் ஒன்று”

Question 3.
புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீ ர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.
விடை:

  • புவிப்பரப்பில் 71% தண்ணீ ர் இருந்தாலும் நன்னீரின் அளவு 3% மட்டுமே.
  • உயிரினங்கள் நன்னீரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • நன்னீரை பயன்படுத்தும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
  • எனவே நீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமே.

Question 4.
கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்தாமல் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிற்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.
விடை:

  • கழிவுநீரை சமன்படுத்தாமல் ஆறுகளிலோ, கடலிலோ வெளி யேற்றக்கூடாது.
  • ஏனெனில் அவை ஆறு, கடல் ஆகிய நீர் ஆதாரங்களை மாசு படுத்தும்.
  • எனவே அதில் உயிரினங்கள் வாழ முடியாது. மேலும் அந்நீரை பயன்படுத்த முடியாது.

Question 5.
இந்தியாவில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களை தெளிவுப்படுத்தவும்.
விடை:

  1. மக்கள் தொகை பெருக்கம்
  2. சீரான மழை பொழிவின்மை
  3. நிலத்தடி நீர்மட்டம் குறைதல்
  4. நீர் மாசுபடுதல்
  5. நீரை கவனக்குறைவாக கையாளுதல்

IX. விரிவான விடையளி

Question 1.
குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும்.
விடை:
குடிநீர் என்பது குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் தேவைப்படும் சுத்தமான பாதுகாப்பான நீராகும்.
பண்புகள் :

  • அமில, காரப்பண்பு pH மதிப்பு சரியாக இருக்க வேண்டும்.
  • பாக்டீரியா முதலிய தொற்று இருக்கக்கூடாது.
  • குடிநீர் சுத்தமானதாக, ஒளி ஊடுருவக்கூடியதாகவும், நிறமற்றதாகவும் இருக்க வேண்டும்.
  • குடிநீரில் இயற்கையான கனிமங்கள், மினரல்ஸ் இருக்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 2.
இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.
விடை:

  • இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திர சிங் ஆவார்.
  • இவர் மழைநீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் 350 கிராமங்களில் 4500 தடுப்பணைகளையும், தண்ணீர் சேமிப்பு குளங்களையும் கட்டினார்.
  • நீர்வளத்தை இழந்து மடிந்து கொண்டிருந்த ஆறுகள் இவர் முயற்சியால் புத்துயிர் பெற்றன.
  • இவர் பெற்ற விருதுகள்
  • ராமன் மகசேசே விருது
  • ஜம்னலால் பஜாஜ் விருது
  • தண்ணீருக்கான நோபல் பரிசான ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது முதலியன.
  • இவர் இந்தியாவின் “ஜல் புருஷ்’ (தண்ணீ ர் மனிதர்) என்று அழைக்கப்படுகிறார்.

Question 3.
மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.
விடை:

  • மழைநீரை நேரடியாக சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல் மழைநீர் சேகரிப்பு எனப்படும்.
    வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகள்

    1. மழை பொழிகிற இடத்தில் சேகரித்தல் :
      (எ.கா.) கட்டிடங்களின் மேல்தளத்திலிருந்து வரும் மழைநீரை சேகரித்தல்.
    2. ஓடும் மழை நீரை சேகரித்தல் :
      (எ. கா.) மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்தல்.

X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

Question 1.
ஒரு நிலப்பகுதியில் ஏரியோ, குளமோ காணப்படவில்லை. அப்பகுதியில் மேகங்கள் உருவாதல் நிகழுமா?
விடை:
மேகங்கள் உருவாகும். ஏனெனில் மரங்கள் இருந்தால் கூட நீராவிப்போக்கு மூலம் நீராவி மேலே சென்று மேகமாக மாறும்.

Question 2.
புவியில் 3% மட்டுமே நன்னீர் உள்ளது. அதனை அதிகப்படுத்த முடியாது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் நன்னீரினை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம்?
விடை:

  • நீரினை கவனமாகவும், குறைந்த அளவும் பயன்படுத்த வேண்டும்.
  • நீர் நிலைகளில் கழிவு நீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டும்.
  • மழைநீரை சேமித்து நிலத்தடிநீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும்.

XI. குறுக்கெழுத்து.

மேலிருந்து கீழ் :

Question 1.
நீரைச் சேமிக்கும் ஒரு முறை.
விடை:
மறுசுழற்சி

Question 2.
கடல்நீரில் இருந்து நீரைப் பெறும் முறை
விடை:
ஆவியாதல்

Question 6.
அணைகளில் தேங்கியுள்ள நீர் _____ தயாரிக்கப் பயன்படுகிறது.
விடை:
மின்சாரம்
இடமிருந்து வலம் :

Question 3.
இயற்கையில் கிடைக்கும் மிகப்பெரிய அளவிலான உவர்ப்பு நீர் _____ ஆகும்.
விடை:
கடல்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 4.
வெயில் காலங்களில் உடலிலிருந்து அதிகளவில் நீர் ____ ஆக வெளியேறும்.
விடை:
வியர்வை

Question 5.
தாவரங்களில் _____ நடைபெற்று, நீர் சுழற்சியில் பங்குபெறுகிறது.
விடை:
நீராவிபோக்கு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 90
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 91

XII.
1) வரைபடத்தினை உற்றுநோக்கி பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ) மீனில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ?
ஆ) எந்த உணவுப்பொருள் தன்னகத்தே அதிகளவு நீரினைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடவும்.
இ) எந்த உணவுப் பொருள் தன்னகத்தே குறைந்த அளவு நீரினைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடவும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 92
ஈ) மனித உடலில் சதவீத அளவு நீர் உள்ளது.
உ) நீர்ப்போக்கு ஏற்பட்ட காலங்களில் ஒருவர் வரைபடத்தில் காணப்படும் எந்த உணவுப் பொருளை எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடவும்.
விடை:
அ. 70 %
ஆ. தர்பூசணி
இ. மீன்
ஈ. 60 %
உ. தர்பூசணி

Question 2.
பின்வரும் தமிழ்நாடு வரைபடத்தில் ஆண்டு சராசரி மழைபொழிவு குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை உற்றுநோக்கி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ) தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் ஆண்டு மழைபொழிவு குறைவான அளவு உள்ளது எனக் கண்டறிந்து எழுதவும்?
ஆ) தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் ஆண்டு மழைபொழிவு மிதமான அளவு உள்ளது எனக் கண்டறிந்து எழுதவும்.
இ) தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில் அதிகளவு ஆண்டு மழைபொழிவினைப் பெறும் மாவட்டங்கள் எவை?
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 95
விடை:
அ. தமிழ்நாட்டின் ஆண்டு மழைப்பொழிவு குறைவான மண்டலம் கொங்கு மண்டலம் – குறைந்த கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி மிதமான குறைந்த
ஆ. தமிழ்நாட்டில் மிதமான அளவு ஆண்டு மழைப்பொழிவு பெறும் மாவட்டங்கள் – மதுரை, திண்டுக்கல், விருதுநகர், அதிகம் சிவகங்கை , சேலம், தேனி, வேலூர்
இ. தமிழ்நாட்டில் அதிகளவு ஆண்டு மழைப்பொழிவினைப் பெறும் மாவட்டங்கள் மழைப்பொழிவு விவரம் – கன்னியாகுமரி, கடலூர், திருவாரூர், நாகை,

6th Science Guide நீர் Additional Important Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :

Question 1.
புவியில் காணப்படும் நீரின் அளவினை 100% எனக் கொண்டால் நமக்கு கிடைக்கும் நன்னீரின் அளவு.
அ) 97%
ஆ) 93%
இ) 3%
ஈ) 0.3%
விடை:
இ) 3%

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 2.
வளிமண்டல அழுத்தத்தில் நீர் பனிக்கட்டியாகும் உறைநிலை வெப்பநிலை ____
அ) 100° C
ஆ) 0°C
இ) 0.10° C
ஈ) 10° C
விடை:
ஆ) 0° C

Question 3.
கீழ்க்கண்டவற்றுள் எது நிலத்தடி நீர் ஆதாரம் அல்ல?
அ) அடிகுழாய்
ஆ) நீருற்று
இ) சதுப்பு நில நீர்
ஈ) கிணறு
விடை:
இ) சதுப்பு நில நீர்

Question 4.
நாள் ஒன்றிற்கு மனிதன் குடிக்க வேண்டிய குடிநீரின் அளவு லிட்டர்
அ) 2 – 3 லி
ஆ) 3 – 4 லி
இ) 4 – 5 லி
ஈ) 1 – 2 லி
விடை:
அ) 2 – 3 லி

Question 5.
நீர்நிலைகள் கடலை சந்திக்கும் இடம் _____
அ) சதுப்பு நிலம்
ஆ) முகத்துவாரம்
இ) ஏரி
ஈ) பனிப்பாறைகள்
விடை:
ஆ) முகத்துவாரம்

II. சரியா ? தவறா ? எனக் கூறுக.

Question 1.
மொத்த மேற்பரப்பு நன்னீரில் அதிகம் காணப்படுவது ஏரிகள்.
விடை:
சரி

Question 2.
கடல்நீரில் உப்பு அதிகமாக இருக்கக் காரணம் எரிமலைகள் கடலுக்கடியில் கடல்நீருடன் உப்பை சேர்ப்பது.
விடை:
சரி

Question 3.
நீர் ஒளிபுகும் தன்மை அற்ற வேதிப்பொருள்.
விடை:
தவறு

Question 4.
ஆறு, ஏரிகளில் நீராவிப்போக்கு நடைபெறுகிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 5.
குடிநீரில் தொற்று நீக்க நைட்ரஜன் பயன்படுகிறது.
விடை:
தவறு

III. பொருத்துக.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 96

IV. ஒப்புமை தருக.

Question 1.
மழைப்பொழிவின்மை : நீர் பற்றாக்குறை :: காடுகளை பாதுகாத்தல் : ____
விடை:
நீர் மேலாண்மை

Question 2.
உறைந்த நீர் : பனியாறு :: மேற்பரப்பு நீர் : _____
விடை:
ஆறு

Question 3.
ஆவியாதல் : கடல் :: ____ : தாவரங்கள்
விடை:
நீராவிப்போக்கு

Question 4.
நீர் வடிகட்டுதல் : மணல் :: _____ : அம்மோனியா
விடை:
தொற்று நீக்குதல்

Question 5.
திண்மநிலை : ____ :: வாயுநிலை : நீராவி
விடை:
பனிக்கட்டி

V. மிகக்குறுகிய விடையளி

Question 1.
நீரின் இயைபு யாது?
விடை:
நீர் என்பது ஒளிபுகும் தன்மை கொண்ட சுவையற்ற, மணமற்ற மற்றும் நிறமற்ற ஒரு வேதிப்பொருளாகும்.

Question 2.
நீர் மூலக்கூறு எவ்வாறு உருவாகிறது? நீரின் மூலக்கூறு வாய்பாடு என்ன?
விடை:
இரு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் இணைந்து நீர் மூலக்கூறு உருவாகிறது.
நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு H2O

Question 3.
உப்புநீர் என்றால் என்ன?
விடை:
அதிக அளவு கரைபொருள் கலந்துள்ள நீர் உப்பு நீர் எனப்படும். இந்த நீரை நாம் பயன்படுத்தவோ அல்லது பருகவோ இயலாது.

Question 4.
நீர் சுழற்சியின் மூன்று நிலைகள் யாவை?
விடை:
ஆவியாதல், சுருங்குதல் மற்றும் மழை பொழிதல்

Question 5.
நீராவிப்போக்கு என்றால் என்ன?
விடை:
தாவரங்களின் இலைத்துளைகளின் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவது நீராவிப்போக்கு எனப்படும்.

VI. விரிவான விடையளி

Question 1.
நீர் சுழற்சி என்றால் என்ன? அதன் நிலைகளை விவரி.
விடை:

  • சூரிய வெப்பத்தினால் நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்கு சென்று மேகமாக மாறுகிறது.
  • மேகங்களில் உள்ள நீர் குளிர்ந்து புவிக்கு மீண்டும் மழை அல்லது பனி வடிவில் தூய்மையாக வருகிறது.
  • இதுவே நீர் சுழற்சி எனப்படும். இது ஹைட்ராலீஜிக்கல் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. –
    1. ஆவியாதல் :
      கடல், குளம், ஆறுகளில் காணப்படும் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகின்றது.
    2. ஆவி சுருங்குதல் :
      நீராவி காற்றில் மேலே செல்ல செல்ல குளிர்ச்சியடைந்து நுண்ணிய நீர்த்திவலைகளாக மாறி மேகங்களை உருவாக்குகின்றன.
    3. மழை பொழிதல் :
      நுண்ணிய நீர்த்திவலைகள் மோதி பெரிய நீர்த்திவலையாக மாறுகிறது. மேகங்களை சுற்றியுள்ள காற்று குளிர்ச்சியடையும் போது மழை (அ) பனியாக புவியை வந்தடைகிறது.

Question 2.
நீரைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை விளக்குக.
விடை:
1. நீர் மேலாண்மை :
நீர் மேலாண்மை பின்வரும் காரணிகளைக் கொண்டுள்ளது.

  1. மக்களிடையே கழிவு நீரை நீர்நிலைகளில் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி வழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  2. நீரை மறுசுழற்சி செய்தல்
  3. உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைத்து நீர் மாசுபாட்டை குறைத்தல்
  4. நவீன நீர்ப்பாசன முறைகளான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன முறைகளை பயன்படுத்தி நீரை சிக்கனமாக பயன்படுத்துதல்

2. மழைநீர் சேமிப்பு :
மழைநீரை நேரடியாக சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல் மழைநீர் சேமிப்பு எனப்படும்.

  1. மழை பொழியுமிடத்தில் சேகரித்தல் : கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து வரும் மழை நீரை சேகரித்தல்
  2. ஓடும் மழைநீரை சேகரித்தல் :
    மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்தல்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 98

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter2 அண்டம் மற்றும் விண்வெளி Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

7th Science Guide அண்டம் மற்றும் விண்வெளி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர ………….. நாட்களாகும்.
அ) 25
ஆ) 26
இ) 27
ஈ) 28
விடை:
இ) 27

Question 2.
இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்தித்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழிந்து நிலவானது ……….. நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்.
அ) பரணி
ஆ) கார்த்திகை
இ) ரோஹிணி
ஈ) அஸ்வினி
விடை:
ஈ) அஸ்வினி

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 3.
…………….. தொலை நோக்கியைக் கண்டறிந்தார்.
அ) ஹான் லிப்பெர்ஷே
ஆ) கலிலியோ
இ) நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ்
ஈ) தாலமி
விடை:
அ) ஹான் லிப்பெர்ஷே

Question 4.
அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு………………… என்று பெயர்.
அ) நீள்வட்ட விண்மீன் திரள்
ஆ) ஒழுங்கற்ற விண்மீன் திரள்
இ) குழுக்கள்
ஈ) சுருள் விண்மீன் திரள்
விடை:
ஈ) சுருள் விண்மீன் திரள்

Question 5.
………….. துணைக்கோளை நிறுவியவுடன் ISRO4 டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது.
அ) GSAT-13
ஆ) GSAT- 14
இ) GSAT-17
ஈ ) GSAT- 19
விடை:
ஈ) GSAT- 19

II. கோடிட்ட இடத்தை நிரப்பவும்

Question 1.
வளர்பிறை என்பது ……………………
விடை:
வளர்தல் அல்லது வெளிச்சத்தில் விரிவடைதல்

Question 2.
சூரியமையக் கொள்கையை முன் மொழிந்தவர் …………………..
விடை:
நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ்

Question 3.
அண்டத்தின் ஆதியைக் குறித்துக் கூறும் மாதிரி ……… ஆகும்.
விடை:
பெரு வெடிப்பு கோட்பாடு

Question 4.
ஆகாயத்தின் பெரும் பகுதியை அடக்கியுள்ள விண்மீன் மண்டலம் ………………… ஆகும்
விடை:
உர்சா மேஜர்

Question 5.
இந்தியா ஏவிய முதல் ஏவுகணை …………… ஆகும்.
விடை:
ஆர்யபட்டா

III. சரியா – தவறா. தவறெனில் காரணம் கூறவும்

Question 1.
முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு மேற்கில் தோன்றும்
சரியான விடை: முழு நிலவு நாளில் சூரியன் மேற்கில் மறையும் அதே நேரத்தில் நிலவு கிழக்கில் உதிக்கிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
நிலவானது பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலைக்கு பிறை நிலவு என்று பெயர்.
விடை:
சரி

Question 3.
கலிலியோ புவி மையக் கொள்கையை வழி மொழிந்தார்.
சரியான விடை : சூரிய மையக் கோட்பாட்டிற்கு ஆதரவாக கலிலியோ வெள்ளிக்கோளை உற்று நோக்கி கண்டறிந்த ஆதாரங்களை அளித்தார்.
விடை:
தவறு

Question 4.
நமது பால்வெளித் திரளானது நீள்வட்ட விண்மீன் திரள் ஆகும்.
சரியான விடை : நமது பால்வெளித் திரளானது சுருள் விண்மீன் திரள் ஆகும்.
விடை:
தவறு

Question 5.
நமது சூரியக் குடும்பத்திலுள்ள வெள்ளிக் கோளுக்கு நிலவு கிடையது.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 2

V. ஒப்புமை

Question 1.
பழைய நட்சத்திரங்கள் : நீள்வட்ட விண்மீன் திரள் : புது நட்சத்திரங்கள் : …………………
விடை:
சுருள் விண்மீன் திரள்கள்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
அருகிலுள்ள விண்மீன் திரள் : ஆண்ட்ரமெடா :: அருகிலுள்ள நட்சத்திரம் ………….
விடை:
ஆல்ஃபா சென்டாரி

VI. மிகக் குறுகிய விடையளிக்கவும்

Question 1.
………………. என்ற வார்த்தை நிலவானது நிலவு பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலை ஆகும். (பிறை நிலவு/ கூனல் நிலவு) .
விடை:
பிறை நிலவு

Question 2.
………. மற்றும் ……….. கோள்கள் நடு இரவில் தோன்றாது.
விடை:
புதன் மற்றும் வெள்ளி

Question 3.
சூரியனைச் சுற்றி வர செவ்வாய் எடுத்துக் கொள்ளும் காலம்
விடை:
687 நாட்கள்

Question 4.
வெள்ளியின் அளவு எந்த கட்டத்தில் மிகச் சிறியதாக இருக்கும்?
விடை:
பிறை நிலவு

Question 5.
பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கான ஒரேயொரு சான்று
விடை:
காஸ்மிக் நுண்ணலை பின்ன ணி (CMB)

Question 6.
அதிக அளவு வாயு மற்றும் துகள்களைக் கொண்ட விண்மீன் திரள் ………………….
விடை:
சுருள் விண்மீன் திரள்கள்

Question 7.
உலகின் முதல் ஏவு வாகனத்தை ஏவிய நாடு எது?
விடை:
ரஷ்யா (ஸ்புட்னிக் -1)

VII. குறுகிய விடையளி

Question 1.
நீள்வட்ட மாதிரி என்றால் என்ன?
விடை:
பல குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது நீள்வட்ட மாதிரி’ என அழைக்கப்படுகிறது.

Question 2.
நான்கு வகையான விண்மீன் திரள்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • சுருள் விண்மீன்திரள்கள்
  • நீள்வட்ட விண்மீன்திரள்கள்
  • ஒழுங்கற்ற விண்மீன்திரள்கள்
  • கோடிட்ட சுருள் விண்மீன்திரள்கள்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 3.
விண்மீன் மண்டலம் என்றால் என்ன?
விடை:
பூமியில் இருந்து பார்க்கும்போது, இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற நட்சத்திரங்களின் அமைப்பு விண்மீன் மண்டலம்’ என அழைக்கப்படுகிறது.

Question 4.
PSLV மற்றும் GSLV யின் விரிவாக்கம் தருக.
விடை:
PSLV – துருவ செயற்கைக்கோள் வெளியீட்டு வாகனம்
GSLV – ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம்.

VIII. விரிவான விடையளி

Question 1.
வெள்ளியின் வளர் மற்றும் தேய் கட்டங்களைக் குறித்து விளக்குக.
விடை:

  • நிலவைப்போலவே வெள்ளியும் பல கட்டங்களைக்கொண்டுள்ளது. பிறை வடிவத்திலிருந்து கிப்பஸ் வடிவத்திற்கு அதன் வடிவமானது மாறியது. கிரகத்தின் அளவும் வேறுபட்டது.
    1. கிரகமானது கிப்பஸ் கட்டத்தில் இருந்தபோது அதன் அளவு சிறியதாக இருந்தது.
    2. மெல்லிய பிறைபோல் இருந்தபோது அதன் அளவு பலமடங்கு அதிகமானது.
  • வெள்ளி நீள் வட்டத்தில் சுற்றி வருகிறது. சில நேரங்களில் கிரகம் அருகில் இருக்கும் போது அதன் அளவு பெரியதாக இருக்கும். சில நேரங்களில் அது தொலைவில் உள்ளபோது அதனளவு சிறியதாக இருக்கும்.
    Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 3
  • வெள்ளியானது சூரியனைச் சுற்றி சென்றுக்கொண்டிருந்தாலும், நள்ளிரவு வானத்தில் அதனைக் காண முடியாது.
  • வெள்ளி பூமிக்கு அருகில் வரும்போது அது சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்ததனைவிடப் பெயரியதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும்.
  • வெள்ளி பூமியைச் சுற்றி வந்தால் நம்மால் வெள்ளியின் குமிழ் பிறையைக் காண இயலாது, வெள்ளி சூரியனைச் சுற்றி வந்தால் மட்டுமே காண இயலும்.

Question 2.
விண்மீன் மண்டலத்தைக் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
பூமியில் இருந்து பார்க்கும்போது இரவு வானத்தில் காணப்படும் பிரித்தறிய முடிகின்ற * நட்சத்திரங்களின் அமைப்பு விண்மீன் மண்டலம் என அழைக்கப்படுகிறது.

சர்வதேச வானியல் சங்கம் 88 விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது.

உர்சாமேஜர் (சப்தரிஷிமண்டலம்) பெரியவிண்மீன் மண்டலம் ஆகும். அதுவானத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியது. இம்மண்டலத்தின் சிறப்பு ஏழு பிரகாசமான நட்சத்திரங்களின் பெரிய குவளை (இந்திய வானியலில் ஏழு துறவிகள்) என அழைக்கப்படும் ஒரு குழுவாகும்.

வட வானத்திலுள்ள உர்சா மைனர் இலத்தீன் மொழியில் ‘சிறிய கரம்’ என பொருள்படும். துருவ நட்சத்திரம் (போலாரிஸ்) சிறிய டிப்பர் (ஏழு நட்சத்திரம் கொண்ட குழு) போன்றவை இம்மண்டலத்தில் உள்ளது

ஒரியன் விண்மீன் மண்டலம் 81 விண்மீன்களை உள்ளடக்கியது. இதில் 10 தவிர மற்றவற்றை வெறும் கண்களால் காண இயலாது.

பல்வேறு விண்மீன்கள் ஆண்டு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் வானத்தில் காணப்படுகின்றன. சூரியனைச் சுற்றி பூமியின் சுழற்சி காரணமாக இங்ஙனம் நிகழ்கிறது.

விண்மீன் திரள்களில் நட்சத்திரங்கள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டு ஓர் அமைப்பாக – உள்ளன. ஆனால் விண்மீன் மண்டலங்கள் வெறும் ஒளியியல் தோற்றமே.

IX. உயரிய சிந்தனைக் கேள்வி

Question 1.
நீலனும் மாலாவும் நமது அண்டத்தினைக் குறித்த ஒரு உரையாடலில் உள்ளனர். நமது பூமி மட்டும் தான் உயிர் வாழத்தகுந்த ஒரே கோள் என நீலன் கூறுகிறான். ஆனால் சில விளக்கங்களைக் கூறி மாலா அவனது கருத்தினை எதிர்க்கிறாள். மாலா என்ன விவாதம் செய்திருப்பாள். நீ மாலாவை ஆதரிக்கிறாயா? உனது நிலையை நியாயப்படுத்து.
விடை:
நீலன் : ‘நமது பூமி மட்டும்தான் உயிர் வாழத்தகுந்த ஒரே கோள்.
மாலா :
தற்போது வேறு நட்சத்திரங்களைச் சுற்றியும் வெளிக்கோள்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இதிலிருந்து சூரியனை சுற்றி மட்டுமல்லாமல், பிரபஞ்சம் முழுவதும் இந்தக்கிரக அமைப்புகள் இருப்பது நிரூபணம் ஆகிறது.

யாருக்குத் தெரியும்? அந்த கிரகங்களில் எதிலாவது வாழ்க்கை இருக்கலாம், அதிலும் சிலவற்றில் மனிதனைப் போன்ற பகுத்தறிவுள்ள உயிர் வாழ்வதாக இருக்கலாம்.

நாம் பிரபஞ்சத்தைப் பார்த்து வியப்புற்று, ஆராய்ச்சி செய்வது போல் அவர்களும் ஆராய்ச்சி செய்யலாம்.

எதிர்காலத்தில் நாம் அவர்களைச் சந்திக்கும் பொழுது அந்தக் கணம் எவ்வளவு அற்புதமானதாகவும், உற்சாகமானதாகவும் இருக்கும்!

குறிப்பு :
மாலாவின் கூற்றுப்படி, ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் விஞ்ஞானிகளின் தற்போதைய கண்டுபிடிப்பில் பூமி மட்டுமே உயிரிகள் வாழ ஏதுவான கோளாக உள்ளது.

சூரியன் :
பூமியின் இருப்பிடம், தட்ப வெப்ப நிலை, புறஊதாக்கதிர்களின் பாதுகாப்பு, புவியீர்ப்பு முடுக்கம் போன்ற பல காரணங்களால் பூமி கோள் மட்டுமே தற்போது உயிர் வாழத் தகுந்த ஒரே கோள் ஆகும்.

7th Science Guide அண்டம் மற்றும் விண்வெளி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தேய்பிறை என்பதன் விளக்கம் ……………
அ) வளர்தல்
ஆ) விரிவடைதல்
இ) குறைதல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
இ) குறைதல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
தேய்பிறைக் காலத்தின் போது அரை நிலவு ………… என அழைக்கப்படுகிறது.
அ) முதல் கால் பகுதி
ஆ) இரண்டாவது கால் பகுதி
இ) மூன்றாவது கால் பகுதி
ஈ) நான்காவது கால் பகுதி
விடை:
அ) முதல் கால் பகுதி

Question 3.
……………. எப்போதும் சூரியனுக்கு மிக அருகில் உள்ளன. எனவே நள்ளிரவில் வானத்தில் தெரிவதில்லை .
அ) செவ்வாய்
ஆ) வியாழன்
இ) சனி
ஈ) வெள்ளி & புதன்
விடை:
ஈ) வெள்ளி & புதன்

Question 4.
………………. நிலவின் மலைகளையும் வெற்றுக் கண்ணுக்குப் புலப்படாத சிறிய மங்கலான நட்சத்திரங்களையும், சூரியன் முகத்தில் சூரியம் புள்ளிகளையும் கண்டறிந்தார்.
அ) ஹான்ஸ் லிப்பர்ஷே
ஆ) டைக்கோ ப்ராஹே
இ) கலிலியோ
ஈ) கிரிக்கோ ரோமன்
விடை:
இ) கலிலியோ

Question 5.
பிரபஞ்சம் உருவான கட்டத்தில் அது ………. வாயுக்களால் ஆன கூட்டமாகவே இருந்தது.
அ) நைட்ரஜன் – ஹிலியம்
ஆ) கார்பன் – ஹிலியம்
இ) ஹைட்ரஜன் – ஹிலியம்
ஈ) இவற்றில் ஒன்றுமில்லை
விடை:
இ) ஹைட்ரஜன் – ஹிலியம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நடுவிலிருந்து முனைவரை சுருண்ட சக்கரம் போன்ற அமைப்பு கொண்டதால் இவை …………. எனப் பெயரிடப்பட்டுள்ளன.
விடை:
சுருள் விண்மீன்

Question 2.
திரள்கள் ஒரு …………… என்பது விண்மீன்களாலான குறுக்குக் கோடு கொண்ட சுருள் விண்மீன் திரள் ஆகும்.
விடை:
கோடிட்ட சுருள் விண்மீன் திரள்கள்

Question 3.
அதிக எண்ணிக்கையிலான கோள் கொத்துகளால் ………… சூழப்பட்டுள்ளன.
விடை:
நீள்வட்ட விண்மீன்

Question 4.
…………. மிகத் தொலைவில் அமைந்துள்ளதால் அவை சிறிய ஒளிப்புள்ளிகளாகத் தோன்றுகின்றன.
விடை:
நட்சத்திரங்கள்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 5.
………………… விண்மீன் பரிணாம வளர்ச்சியின் கணித ரீதியான செயல்பாடுகள் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளைகளின் பரிணாமப் படிகளின் கோட்பாட்டு மாதிரிகள் பலவற்றை அளித்தார்.
விடை:
சுப்ரமணியன் சந்திரசேகர்

III. சரியா தவறா (தவறாக இருப்பின் சரியான வார்த்தையை எழுதுக)

Question 1.
இந்தப் பிரபன்சத்தில் விண்மீன் திரள்கள், கிரகங்கள் நட்சத்திரங்கள், விண்கற்கள், செயற்கைக் கோள்கள் மற்றும் அனைத்து வகையான பொருள்களும் ஆற்றலும் உள்ளன.
விடை:
சரி

Question 2.
சந்திரன் ஒளியானது அதனை நோக்கிருக்கின்ற பூமியின் கோளகப்பரப்பில் விழுகிறது.
விடை:
தவறு
விளக்கம் : சூரிய ஒளியானது அதனை நோக்கிருக்கின்ற பூமியின் கோளகப்பரப்பில் விழுகிறது.

Question 3.
கிரகங்கள் பூமிலிருந்து எல்லா நேரங்களிலும் ஒரே தூரத்தில் இருப்பதாக நாம் கருதினால் ஒளி மாறுபாடு மற்றும் பிற்போக்கு இயக்கம் போன்றவை சாத்தியமற்றதாக இருக்கும்.
விடை:
சரி

Question 4.
கண்ணுக்குத் தெரியாத பிரபஞ்சத்தினைத் தொலை நோக்கியால் பார்க்க முடியும்.
விடை:
சரி

Question 5.
நட்சத்திரங்களின் சிறிய திரளானது விரைவில் முதல் விண்மீன் திரள் ஆக மாறியது.
விடை:
தவறு
விளக்கம் : நட்சத்திரங்களின் பெரிய திரளானது விரைவில் முதல் விண்மீன் திரள் ஆக மாறியது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 4

V. ஒப்புமை தருக.

Question 1.
சுழல் விண்மீன் திரள் : தட்டையான சுழலும் வட்டு நட்சத்திரங்களை கொண்டுள்ளது.
நீள்வட்ட விண்மீ ன்திரள் ……………………
விடை:
அமைப்பு இல்லாத முப்பரிமாண வடிவம்

Question 2.
சூரிய மையக் கோட்பாடு : சூரியன் மையத்தில் உள்ளது.
புவி மையக் கோட்பாடு ………………….
விடை:
பூமி மையத்தில் உள்ளது

Question 3.
உர்சா மைனர் என்பதன் பொருள் …………………
தேய்பிறை என்பதன் பொருள் : வெளிச்சம் குறைதல்
விடை:
சிறிய கரடி

VI. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று : வளர்பிறைக் காலத்தில் நிலவானது மூன்றாவது கால் பகுதி’ என அழைக்கப்படுகிறது.
காரணம் : கிப்பஸ் என்பது சந்திரன் அரை வட்டத்திற்கு கீழ் குறைவாக ஒளிரும் கட்டங்களைக் குறிக்கிறது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல
இ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறானது
விடை:
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
கூற்று : பெரும்பாலான விண்மீன் திரள்களின் விட்டம் ஆயிரம் முதல் விண்ணியல் ஆரம் வரை உள்ளன.
காரணம் : ஒழுங்கற்ற விண்மீன் திரள்கள் ஏராளமான வாயு மற்றும் தூசி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல
இ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறானது
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்

VII. இதில் ஒன்று பொருந்தாததை கண்டுபிடி

Question 1.
மேஷம், சிம்மம், விருட்சிகம், கேப்ரிகோன்
விடை:
கேப்ரிகோன்
காரணம் : இவை ஆங்கிலப் பெயர் விண்மீன் மண்டலம்.

Question 2.
ரோகினி -1, அக்னி, பிருத்வி, சந்திரயான்-1
விடை:
சந்திரயான் -1
மற்ற மூன்றும் : APJ அப்துல்கலாம் அவர்களால் உருவாக்கப்பட்டது.

VIII. ஓரிரு வரிகளில் விடையளி

Question 1.
பிற்போக்கு இயக்கம் என்பது யாது?
விடை:
கோள்கள் தங்களது பாதையை திருப்பிக் கொள்ளும் நிகழ்வு பிற்போக்கு இயக்கம் எனப்படும்.

Question 2.
பிரபஞ்சத்தில் காணப்படும் விண்மீன் திரள்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • கிரகங்கள்
  • நட்சத்திரங்கள்
  • விண்கற்கள்
  • செயற்கைக் கோள்கள்
  • அனைத்து வகையான பொருள்களும் ஆற்றல் உள்ளன.

Question 3.
துணைக்கோள் என்றால் என்ன? அதன் வகைகள்.
விடை:

  • ஒரு கோளைச் சுற்றி நிலையான வட்டப் பாதையில் சுற்றும் பொருள் ஒரு துணைக்கோள் என்று அழைக்கப்படுகிறது.
  • இயற்கை துணைக்கோள், செயற்கை துணைன்கோள்.

Question 4.
சூரியன், பூமி மற்றும் நிலவு 90° கோணத்தில் உள்ள போது பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒரு மனிதரின் கண்களுக்கு நிலவு எவ்வாறு தெரியும்?
விடை:

  • பூமியை நோக்கி இருக்கின்ற நிலவினைக் கண்ணால் நோக்கினால் அதன் அரைப்பகுதி ஒளிர்ந்தும் மற்றோர் அரைப்பகுதி இருளிலும் இருப்பதனை காண்போம்.
  • இதனால் நிலவு அரை நிலவாகத் தோன்றும்.

Question 5.
பெரு வெடிப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து அங்கிருந்து விரிவடையத் தொடங்கிய நிகழ்வு ஒரு வெடிப்பு என அழைக்கப்படுகிறது.

IX. சுருக்கமாக விடையளி

Question 1.
நீள்வட்ட மாதிரி என்று எதை அழைக்கின்றன?
விடை:
கிரகங்கள் பூமியிலிருந்து எல்லா நேரங்களிலும் ஒரே தூரத்தில் இருப்பதாக நாம் கருதினால் ஒளி மாறுபாடு மற்றும் பிற்போக்கு இயக்கம் போன்றவை சாத்தியமற்றதாக இருக்கும்.

இத்தகைய குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது நீள்வட்ட மாதிரி என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
விண்ணியல் ஆரம் என்றால் என்ன?
விடை:

  • ஒரு விண்ணியல் ஆரம் என்பது வானியல் அலகானது ஒரு ஆர வினாடியில் ஏற்படுத்தும் கோணத்தின் தொலைவு என வரையறுக்கப்படுகிறது.
  • இது ‘PC’ எனக் குறிக்கப்படுகிறது. –
  • 1 PC = 3.2615 ஒ.ஆ = 3.09 × 1013Km

Question 3.
முதல் கால்பகுதி மற்றும் மூன்றாம் கால் பகுதி இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு எழுதுக?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 5

Question 4.
வானியல் அலகு என்பது யாது?
விடை:

  • பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம் வானியல் அலகு என்று அழைக்கப்படுகிறது.
  • இது வானியல் அலகு என்றும் அலகால் குறிக்கப்படுகிறது.
  • 1 வானியல் அலகு = 1.496 × 108கி.மீ

Question 3.
துணைக்கோள் என்றால் என்ன? அதன் வகைகள்.
விடை:

  • ஒரு கோளைச் சுற்றி நிலையான வட்டப் பாதையில் சுற்றும் பொருள் ஒரு துணைக்கோள் என்று அழைக்கப்படுகிறது.
  • இயற்கை துணைக்கோள், செயற்கை துணைன் கோள்.

Question 4.
சூரியன், பூமி மற்றும் நிலவு 90° கோணத்தில் உள்ள போது பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒரு மனிதரின் கண்களுக்கு நிலவு எவ்வாறு தெரியும்?
விடை:
பூமியை நோக்கி இருக்கின்ற நிலவினைக் கண்ணால் நோக்கினால் அதன் அரைப்பகுதி ஒளிர்ந்தும் மற்றோர் அரைப்பகுதி இருளிலும் இருப்பதனை காண்போம்.

இதனால் நிலவு அரை நிலவாகத் தோன்றும்.

Question 5.
பெரு வெடிப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து அங்கிருந்து விரிவடையத் தொடங்கிய நிகழ்வு ஒரு வெடிப்பு என அழைக்கப்படுகிறது.

IX. சுருக்கமாக விடையளி.

Question 1.
நீள்வட்ட மாதிரி என்று எதை அழைக்கின்றன?
விடை:
கிரகங்கள் பூமியிலிருந்து எல்லா நேரங்களிலும் ஒரே தூரத்தில் இருப்பதாக நாம் கருதினால் ஒளி மாறுபாடு மற்றும் பிற்போக்கு இயக்கம் போன்றவை சாத்தியமற்றதாக இருக்கும்.

இத்தகைய குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது நீள்வட்ட மாதிரி என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
விண்ணியல் ஆரம் என்றால் என்ன?
விடை:

  • ஒரு விண்ணியல் ஆரம் என்பது வானியல் அலகானது ஒரு ஆர வினாடியில் ஏற்படுத்தும் கோணத்தின் தொலைவு என வரையறுக்கப்படுகிறது.
  • இது ‘PC’ எனக் குறிக்கப்படுகிறது.
  • 1 PC = 3.2615 ஓ.ஆ = 3.09 × 1013Km

Question 3.
முதல் கால் பகுதி மற்றும் மூன்றாம் கால் பகுதி இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு எழுதுக?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 6

Question 4.
வானியல் அலகு என்பது யாது?
விடை:

  • பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம் வானியல் அலகு என்று அழைக்கப்படுகிறது.
  • இது வானியல் அலகு என்றும் அலகால் குறிக்கப்படுகிறது.
  • 1 வானியல் அலகு = 1.496 × 108கி.மீ

Question 5.
APJ அப்துல் கலாம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள் பற்றி எழுதுக?
விடை:
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எஸ்.எல்.வி 3 என்ற செயற்கைக்கோள் செலுத்தியினைப் பயன்படுத்தி ரோகினி -1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினார்.

இந்திய இராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி. நாக் மற்றும் ஆகாஷ் ஆகிய ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்ட போது அதன் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டார்.

X. விரிவான விடையளி

Question 1.
இயற்கையான செயற்கைக் கோள்கள் பற்றி விரிவாக எழுதுக?
விடை:

  • ஒரு கோளைச் சுற்றிச் சுழலும் அனைத்து இயற்கைப் பொருள்களும் இயற்கை செயற்கைக் கோள்கள் ஆகும்.
  • அவை நிலவுகள் என அழைக்கப்படுகின்றன.
  • பெரும்பாலான நிலவுகள் கோள வடிவுடையவையாக உள்ளன.
  • இவை பொதுவாக கோள்களின் வலுவான ஈர்ப்பு விசைகளால் ஈர்க்கப்படும் விண்கற்களோ எரி கற்களோ அல்ல.
  • நமது சூரியக் குடும்பத்தில் புதன் மற்றும் வெள்ளி தவிர மற்ற எல்லா கோள்களும் நிலவுகளைக் கொண்டிருக்கும்.
  • பூமிக்கு ஒரே ஒரு நிலவு இருக்கிறது.
  • அதே சமயம் வியாழன் மற்றும் சனி போன்ற கிரகங்கள் 60 க்கும் மேற்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ளன.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி

Question 2.
சுப்ரமணியன் சந்திரசேகர் விண்வெளி இயற்பியலாளர் பற்றி எழுதுக?
விடை:

  • சுப்பிரமணியன் சந்திர சேகர் இந்திய அமெரிக்க விண்வெளி இயற்பியலாளர் ஆவார்.
  • 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் வில்லியம் ஏஃபவ்லர் என்பவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.
  • இவரது விண்மீன் பரிணாம வளர்ச்சியின் கணித நீதியான செயல்பாடுகள் நட்சத்திரங்கள் மற்றும் கருத்துளைகளின் பரிணாமப்படிகளின் கோட்பாட்டு மாதிரிகள் பலவற்றை அளித்தது.
  • சந்திரசேகர் தமது வாழ்நாளில் பல்வேறுவகையான இயற்பியல்ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டார்.

Question 3.
நீள்வட்ட விண்மீன் திரள்கள் பற்றி விரிவாக எழுதுக?
விடை:

  1. ஒரு நீள்வட்ட விண்மீன் திறள் என்பது ஏறத்தாழ நீள்வட்ட வடிவம் மற்றும் ஒரு மென்மையான உருவம் உடைய ஒரு வகை விண்மீன் திரள் ஆகும்.
  2. சுழல் விண்மீன் திரள்கள் போல் அல்லாமல் நீள்வட்ட விண்மீன் திரள்கள் மூன்று பரிமாணங்களை கொண்ட, கட்டமைப்பற்ற மையத்தில் சீரற்ற சுற்றுப்பாதையில் உள்ள விண்மீன்களைக் கொண்டுள்ளன.
  3. இவை சுழல் விண்மீன் திரள்களில் காணப்படுவதை விட அதிக வயதுடைய விண்மீன்களை உள்ளடக்கியவையாகும்.
  4. அதிக எண்ணிக்கையிலான கோள் கொத்துகளால் நீள்வட்ட விண்மீன்கள் சூழப்பட்டுள்ளன.

Question 4.
சூரிய மைய மாதிரி பற்றி விளக்குக?
விடை:

  • சிக்கலான புவிமைய நீள்வட்ட மாதிரியை ஏற்றுக்கொள்ளாத, நிகோலஸ் கோப்பர் நிக்கஸ். சூரியனை மையமாகக் கொண்டு பூமியை மற்றும் அனைத்துக் கிரகங்களும் சுற்றி வருவதாகக் கூறினார்.
  • சூரியனின் இரு பக்கத்திலும் பூமி மற்றும் செவ்வாய் இருப்பதாகக் கொண்டால் செவ்வாயானது அவை அருகில் இருப்பதனை விட மங்கலாகத் தெரியும்.
  • பூமி 365 நாள்களில் சூரியனைச் சுற்றி வருகிறது.
  • ஆனால் செவ்வாய் 687 நாள்களில் சுற்றுகிறது.
  • பூமி, செவ்வாய் கிரகத்தை நெருங்கும் போதும், அதனை முந்திச் செல்லும் போதும் செவ்வாய் பிற்போக்கு இயக்கத்தினை மேற்கொள்கிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 2 அண்டம் மற்றும் விண்வெளி 7

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

6th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
சோப்புகளின் முதன்மை மூலம் _____ ஆகும்.
அ) புரதங்கள்
ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
இ) மண்
ஈ) நுரை உருவாக்கி
விடை:
ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

Question 2.
வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு கரைசல் பயன்படுகிறது.
அ) பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு
ஆ) சோடியும் ஹைட்ராக்ஸைடு
இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
ஈ) சோடியம் குளோரைடு
விடை:
ஆ) சோடியம் ஹைட்ராக்ஸைடு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _____ ஆகும்.
அ) விரைவாக கெட்டித்தன்மையடைய
ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
இ) கடினமாக்க
ஈ) கலவையை உருவாக்க
விடை:
ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்தி

Question 4.
பீனால் என்பது ______
அ) கார்பாலிக் அமிலம்
ஆ) அசிட்டிக் அமிலம்
இ) பென்சோயிக் அமிலம்
ஈ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
விடை:
அ) கார்பாலிக் அமிலம்

Question 5.
இயற்கை ஒட்டும் பொருள் ______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.
அ) புரதங்க ளில்
ஆ) கொழுப்புகளில்
இ) ஸ்டார்ச்சில்
ஈ) வைட்டமின்களில்
விடை:
இ) ஸ்டார்ச்சில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வெங்காயம் நறுக்கும் போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமான வாயு ______ ஆகும்.
விடை:
ஆக்சைடு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் ______ தேவைப்படுகின்றது.
விடை:
NaOH

Question 3.
உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது ______ ஆகும்
விடை:
மண்புழு

Question 4.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _____ உரங்கள் ஆகும்.
விடை:
இயற்கை

Question 5.
இயற்கை பசைக்கு உதாரணம் _____ ஆகும்.
விடை:
ஸ்டார்ச்

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.
விடை
தவறு
குறைந்த அடர்வுடைய பீனால் கிருமி நாசினியாக பயன்படுகின்றது.

Question 2.
ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றன.
விடை:
தவறு எப்சம் மருத்துவத்துறையில் அதிகளவு பயன்படுகின்றது.

Question 3.
ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 4.
ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று பிரிக்க பயன்படுகின்றது.
விடை:
தவறு – ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று ஒட்டுவதற்கு பயன்படுகின்றது.

Question 5.
NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 80

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
  2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
  3. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  4. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.
  5. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.
  6. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.

விடை:

  1. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
  2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
  3. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.
  4. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  5. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
  6. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.

VI. ஒப்புமை தருக.

Question 1.
யூரியா : கனிம உரம் :: மண்புழு உரம் : _____
விடை:
இயற்கை உரம்

Question 2.
______ : இயற்கை ஓட்டும் பொருள் :: செயற்கை ஒட்டும் பொருள் : செலோடேப்
விடை:
ஸ்டார்ச்

VII. மிகக் குறுகிய விடையளி :

Question 1.
சோப்பில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?
விடை:

  • நீர்
  • சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH)
  • தேங்காய் எண்ணெய் (தாவர எண்ணெய் (அல்லது) விலங்கு கொழுப்பு)

Question 2.
சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?
விடை:

  1. நீர் விரும்பும் மூலக்கூறுகள்
  2. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள்

Question 3.
கனிம உரங்களுக்கு உதாரணம் தருக.
விடை:

  • யூரியா
  • சூப்பர் பாஸ்பேட்
  • அம்மோனியம் சல்பேட்
  • பொட்டாசியம் நைட்ரேட்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 4.
பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.
விடை:

  1. வீரியம் குறைந்த அமிலம்
  2. எளிதில் ஆவியாகும் தன்மையுடையது.
  3. வெண்ணிற படிகத் திண்மம்.

Question 5.
பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.
விடை:

  • கரும்பலகையில் எழுதும் பொருள் தயாரிக்க பயன்படுகிறது.
  • அறுவைச் சிகிச்சையில் எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது.
  • சிலைகள் வார்ப்பதற்கு பயன்படுகிறது.
  • கட்டுமானத்துறையில் பயன்படுகிறது.

Question 6.
சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?
விடை:

  • சுண்ணாம்புக்கல்
  • களிமண் – ஜிப்சம்

Question 7.
சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?
விடை:
ஜிப்சமானது சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குகின்றது. இதனால் சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுகின்றது.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
மண்புழு ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகின்றது?
விடை:

மண்புழுக்கள் உயிரி கழிவுகள் அனைத்தையும் உணவாக உண்டு, செரித்து வெளியேற்றுகிறது.

  • இத்தகைய மண், செழிப்பான தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • மண்புழு விவசாயத்திற்குப் பல்வேறு வகைகளில் உதவுவதால் “உழவனின் நண்பன்” என்று மண்புழுவை அழைக்கின்றோம்.

Question 2.
சிமெண்ட் தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.
விடை:
இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண், ஜிப்சம் ஆகிய தாது உப்புகளைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

Question 3.
ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.
விடை:

  • உரமாகப் பயன்படுகிறது.
  • சிமெண்ட் மற்றும் பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படுகிறது.

IX. விரிவான விடையளி:

Question 1.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) மற்றும் அதன் பயன் பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
விடை:
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) :

  • இரும்புக் கம்பிகள் மற்றும் எஃகு வலைகளைத் கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) ஆகும்.
  • இது வலுவானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும்.
    பயன்க ள் :
  • அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல்தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது.
  • குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவு நீர் வடிகால்கள் அமைக்கப் பயன்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது ?
விடை:
தேவையான பொருட்கள்:

  • 35 மிலி நீர்
  • 10 மிலி NaOH
  • 60 மிலி தேங்காய் எண்ணெய்

செய்முறை :

  • சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
  • கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பவும்.
  • அதனுடன் 10 மிலி NaOHயைச் சேர்த்து குளிர வைக்கவும்.
  • பின் அதனுடன் 60 மிலி தேங்காய் எண்ணெயை சிறிது, சிறிதாக சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  • பின் இதனை சிறிய காலித் தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

X. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி.

Question 1.
ரவி ஒரு விவசாயி. அவருடைய பண்ணையில் அதிக கால்நடைகளை அவர் வளர்க்கின்றார். இதனால் அதிகளவில் உயிரிக்கழிவுகள் கிடைக்கின்றன. இக்கழிவுகளை மண்புழு உரமாக மாற்றுவதற்கு தகுந்த ஆலோசனையை ரவிக்கு வழங்கவும். மண்புழு உரத்தின் நன்மைகளைப் பற்றி எடுத்துக் கூறவும்.
விடை:

  • 30 செ.மீ ஆழத்தில் குழி ஒன்றைத் தோண்டவும் அல்லது மரப்பெட்டி ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
  • குழியின் அல்லது பெட்டியின் அடிப்பகுதியில் மெல்லிய வலை ஒன்றை விரித்து 1-2 செ.மீ உயரத்திற்கு மண்ணால் நிரப்பவும்.
  • அதன்மீது தாவரக் கழிவுகளை (உலர்ந்த இலை, பூ) மற்றும் பிற சிதைவுறும் கழிவுகளைப் பரப்பிச் சிறிது நீரை தெளிக்கவும்.
  • சில மண்புழுக்களைக் குழியில் உள்ள பொருள்களோடு சேர்த்து பழைய துணி அல்லது ஓலையால் மூடவும்.
  • நான்கு வாரங்களுக்குப் பிறகு ‘மண்புழு உரம்’ உருவாகி யிருப்பதைக் காணலாம்.
  • உருவாக்கப்பட்ட மண்புழு உரத்தைத் தாவரங்களுக்குப் பயன்படுத்தி மண்வளம் காக்க வழி செய்யலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 100

மண்புழு உரத்தின் நன்மைகள் :

  • மண்புழு உரம் வேளாண்மைக்குப் பயன்படும் மிகச்சிறந்த இயற்கை கரிம உரமாகும்.
  • மண்புழு உரமானது தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெரும் அளவில் கொண்டுள்ளது.
  • மண்ணின் இயல்புத்தன்மை, காற்றோட்டம், நீரைத்தேக்கி வைக்கும் பண்பு ஆகியவற்றை மேம்படுத்தி மண் அரிப்பைத் தடுக்கிறது.
  • அதிக ஊட்டச்சத்து கொண்ட சூழல் நட்புமுறை சீர்த்திருத்தத்தை மண்ணுக்கு அளிக்கும் பொருளாக மண்புழு உரம் உள்ளது. மாடித்தோட்டம் அமைப்பதற்கும் உதவுகிறது.
  • விதை முளைத்தலைத் தூண்டி தாவர வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.
  • மண்புழு உரங்களை எளிமையாகத் தயாரித்துப் பயன்படுத்த முடியும்.

XI. செயல்திட்டம் (மாணவர்களுக்கானது).

  • ஒரு கண்ணாடி முகவையில் 100மி.லி சூடான நீரை எடுத்துக்கொள்.
  • 50 கிராம் மைதா மாவினை எடுத்து வெந்நீரில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • உருவாகும் பசை போன்ற பொருளை எடுத்து தொட்டுப்பார் ஒட்டுகிறதா? கிழிந்த உனது புத்தகத்தை பசையை பயன்படுத்தி ஒட்டவும்.
  • சிறிதளவு மயில்துத்தம் (தாமிர சல்பேட்) சேர்க்கும் போது பசைகெடாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

6th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
அதிகளவு கறைகளையுடைய துணிகளை வெளுப்பதற்கு _____ பயன்படுத்துகிறோம்.
அ) சலவை சோப்பு
ஆ) குளியல் சோப்பு
இ) சலவைத் தூள்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ) சலவைத் தூள்

Question 2.
யூரியாவிலுள்ள நைட்ரஜனின் சதவீத அளவு
அ) 23%
ஆ) 13%
இ) 21%
ஈ) 46%
விடை:
ஈ) 46%

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
50 கி.கி. சூப்பர் பாஸ்பேட் உரமிட்டால், எவ்வளவு பாஸ்பரஸ் மண்ணில் சேர்க்கப்படும்.
அ) 4 – 4.5 கி.கி
ஆ) 8 – 9 கி.கி
இ) 12 – 13 கி.கி
ஈ) 16 – 18 கி.கி
விடை:
அ) 4 – 4.5 கி.கி.

Question 4.
சிமெண்டை கண்டுபிடித்தவர் ____ ஆவார்.
அ) எடிசன்
ஆ) ஜோசப் ஆஸ்பிடின்
இ) இராபட் ஹீக்
ஈ) இராபட் ப்ரௌன்
விடை:
ஆ) ஜோசப் ஆஸ்பிடின்

Question 5.
பாரிஸ் சாந்தின் மூலக்கூறு வாய்ப்பாடு
அ) CaSO4. 1/2H2O
ஆ) CaSO4. H2O
இ) CaSO4.2H2O
ஈ) CaSO4.3H2O
விடை:
அ) CaSO4. 1/2H2O

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
______ ஓர் இயற்கை நிறங்காட்டி
விடை:
மஞ்சள்

Question 2.
______ மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பொருளை நோக்கி செல்கின்றன.
விடை:
நீர் வெறுக்கும் மூலக்கூறுகள்

Question 3.
உரங்கள் _____ வளர்ச்சிக்கு உதவுகின்றன.
விடை:
தாவர

Question 4.
எலும்பு முறிவினைச் சரிசெய்யப் ____ பயன்படுகிறது.
விடை:
பாரிஸ் சாந்து

Question 5.
எப்சம் _____ எனும் உப்பாகும்
விடை:
மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட்

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 82

IV. ஒப்புமை தருக.

Question 1.
கரும்பலகை எழுதும் பொருள் : ______ :: தாவரங்களின் வளர்ச்சி : எப்சம்
விடை:
பாரிஸ் சாந்து

Question 2.
______ : கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட் :: பாரிஸ் சந்து : கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்
விடை:
ஜிப்சம்

Question 3.
_____ : காரை :: பாலங்கள் கட்டுவது : கற்காரை
விடை:
வீட்டு சுவர்கள் கட்டுவது

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. ஒன்று நீர் விரும்பும் பகுதி; மற்றொன்று நீர் வெறுக்கும் பகுதி.
  2. துணி துவைக்கும் போது ஏராளமான மூலக்கூறுகள் அழுக்குப் பகுதியை சுற்றி வட்டமிட்டு அழுக்கை நீக்குகின்றன.
  3. இறுதியில் அழுக்கு மூலக்கூறுகள் நீரில் மிதந்து அடித்துச் செல்லப்படுகிறது.
  4. துணி வெளுக்கப்படுகிறது.
  5. சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு முனைகள் உண்டு.
  6. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கியும், நீர் விரும்பி மூலக்கூறுகள் நீரை நோக்கியும் செல்கின்றன.

விடை:

  1. சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு முனைகள் உண்டு.
  2. ஒன்று நீர் விரும்பும் பகுதி; மற்றொன்று நீர் வெறுக்கும் பகுதி.
  3. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கியும், நீர் விரும்பி மூலக்கூறுகள் நீரை நோக்கியும் செல்கின்றன.
  4. துணி துவைக்கும் போது ஏராளமான மூலக்கூறுகள் அழுக்குப் பகுதியை சுற்றி வட்டமிட்டு அழுக்கை நீக்குகின்றன.
  5. இறுதியில் அழுக்கு மூலக்கூறுகள் நீரில் மிதந்து அடித்துச் செல்லப்படுகிறது.
  6. துணி வெளுக்கப்படுகிறது.

VI. மிகக்குறுகிய விடையளி

Question 1.
முதன்மை ஊட்டச்சத்துக்கள் யாவை ?
விடை:
முதன்மை ஊட்டச்சத்துக்கள் என்பது NPK

  1. நைட்ரஜன் (N)
  2. பாஸ்பரஸ் (P)
  3. பொட்டாசியம் (K)

Question 2.
உரங்கள் என்றால் என்ன ?
விடை:
பயிர்களுக்குத் தேவையான ஒன்று (அ) அதற்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கு மண்ணில் சேர்க்கப்படும் கரிம மற்றும் கனிமப் பொருள்களை உரங்கள் என்கிறோம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
கரிம உரங்களுக்கு இரண்டு உதாரணம் தருக.
விடை:

  1. மண்புழு உரம்
  2. தொழு உரம்

Question 4.
கனிம உரங்கள் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை:
மண்ணில் இயற்கையாகக் கிடைக்கும் கனிமப் பொருள்களைக் கொண்டு, தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்கு உட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் கனிம உரங்கள் என அழைக்கப் படுகின்றன.

Question 5.
போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று ஏன் அழைக்கப்படுகின்றன?
விடை:
இங்கிலாந்து நாட்டில் உள்ள போர்ட்லேண்ட் என்னும் இடத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லின் தன்மையை சிமெண்ட் ஒத்திருந்ததால், போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று – அழைக்கப்படுகிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
எப்சம் என்பது யாது? அதன் பயன்கள் யாவை?
விடை:
எப்சம்’ :

  • எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும்.
  • இதன் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4. 7H2O

பயன்கள் :

  • மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்தி.
  • மனிதத்தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குகின்றது.
  • தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்பு.
  • தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Question 2.
பீனால் பற்றி எழுதுக. அதன் பயன்கள் யாவை?
விடை:
பீனால் :

  • பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலமாகும்.
  • இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C6H5OH
  • இது ஆவியாகும் தன்மையுள்ள வெண்மை நிற படிகத் திண்மமாகும்.
  • இது நிறமற்றதாக இருப்பினும், மாசு கலந்தவுடன் இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.
  • மனிதத் தோலில்பட்டால் எரிச்சலூட்டும் தன்மை கொண்டது.

பயன்கள் :

  • தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.
  • குறைந்த அடர்வுடைய பீனால் கரைசல், வாய் கொப்பளிப் பானாகவும், கிருமி நாசினியாகவும், வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்யவும் பயன்படுகிறது.
  • அறுவை சிகிச்சையில் நுண்ணுயிரிகளைக் கொல்லும் கிருமிநாசினியாக பயன்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 101

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter 1 ஒளியியல் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 3 Chapter 1 ஒளியியல்

7th Science Guide ஒளியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
ஒளியானது எப்பொழுதும் …………… செல்லும். இந்தப்பண்பு ……….. என அழைக்கப்படுகிறது.
அ) வளைகோட்டில், நிழல்கள்
ஆ) நேர்கோட்டில், நிழல்கள்
இ) நேர்கோட்டில், எதிரொளிப்பு
ஈ) வளைந்து பின் நேராக, நிழல்கள்
விடை:
ஆ) நேர்கோட்டில், நிழல்கள்

Question 2.
ஆடியில் படும் ஒளியானது ………………
அ) ஊடுருவிச் செல்கிறது
ஆ) எதிரொளிப்பு அடைகிறது
இ) உட்கவரப்படுகிறது
ஈ) விலகலடைகிறது
விடை:
ஆ) எதிரொளிப்பு அடைகிறது

Question 3.
……………………. பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது.
அ) நீர்
ஆ) குறுந்தகடு
இ) கண்ணாடி
ஈ) கல்
விடை:
இ) கண்ணாடி

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 4.
ஒளி என்பது ஒரு வகை …………………..
அ) பொருள்
ஆ) ஆற்றல்
இ) ஊடகம்
ஈ) துகள்
விடை:
ஆ) ஆற்றல்

Question 5.
நீங்கள், உங்கள் பிம்பத்தைப் பளப்பளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால் மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது, ஏனெனில் ……………..
அ) ஒழுங்கான எதிரொளிப்பு, மர மேஜையில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு பளப்பளப்பான பரப்பில் நடைபெறுகிறது.
ஆ) ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.

அ) இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.
அ) இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறுகிறது.
விடை:
ஆ) ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.

Question 6.
பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?
அ) கண்ணாடி
ஆ) மரம்
இ) நீர்
ஈ) மேகம்
விடை:
ஈ) மேகம்

Question 7.
ஒளியானது ……………. எதிரொளிப்பு நடைபெறுகிறது.
அ) எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது.
ஆ) எதிரொளிக்கும் பரப்பை அணுகும்போது
இ) எதிராளிக்கும் பரப்பின் வழியே செல்லும்போது
ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை .
விடை:
ஈ) மேற்கூறிய எதுவும் இல்
(குறிப்பு: ஒளியானது எதிரொளிக்கும் பரப்பை அடைந்த பின் எதிரொளிப்பு நடைபெறுகிற)

Question 8.
கீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்?
அ) பிளாஸ்டிக் தட்டு
ஆ) சமதள ஆடி
இ) சுவர்
ஈ) காகிதம்
விடை:
ஆ) சமதள

Question 9.
சிவராஜன் ஒரு மீட்டர் அளவுகோலை, காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத் நேர்க்குத்தாக நிற்க வைக்கிறான். நண்பகலில் தோன்றும் அளவுகோலின் நிழலாக, ……………….
அ) தோன்றாது.
ஆ) காலையில் தோன்றிய நிழலைவிட நீளமானது மற்றும் நிழல், சூரியனின் எதிர்த்திசை தோன்றும்.
இ) காலையில் தோன்றிய நிழலைவிடக் குறைவான நீளம் கொண்டது மற்றும் நிழல், சூரிய அதே திசையில் தோன்றும்.
ஈ) காலையில் தோன்றிய நிழலை விடக் குறைவான நீளம் கொண்டது.
விடை:
அ) தோன்ற

Question 10.
ஊசித்துளைக்காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது, ஏனெனில் ………………………….
அ) ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும்
ஆ) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்லும்போது, தலைகீழாகச் செல்கிறது.
இ) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்கிறது.
ஈ) ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன.
விடை:
அ) ஒளியானது நேர்க்கோட்டில் செல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 11.
பின்வரும் எந்தக்கூற்று, நிழல்கள் உருவாக்கத்தை விளக்குகிறது?
அ) ஒளி நேர்கோட்டில் செல்கிறது .
ஆ) ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியைத் தன் வழியே அனுமதிப்பதில்லை .
இ) எதிரொளிப்பு, கண்ணாடி போன்ற பரப்புகளில் நடைபெறுகிறது.
ஈ) இடவலமாற்றம் அடைகிறது.

i) அ மற்றும் ஆ
ii) அ மற்றும் ஈ
iii) அ மற்றும் இ
iv) இ மற்றும் ஆ
விடை:
i) அ மற்றும் ஆ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு சமதள ஆடியானது உருவாக்கும் பிம்பம் …………… ஆகும்
விடை:
நேரான மாய பிம்பு

Question 2.
……………. எதிரொளிப்பு ஆனது பொருள்களைக் காண உதவுகிறது
விடை:
ஒளி

Question 3.
ஒளிக்கதிர்கள் பளபளப்பான பரப்பின் மீது விழும்போது, அவை …………………… அடைகின்றன
விடை:
எதிரொளிப்பு .

Question 4.
சூரிய ஒளியானது…………. வண்ண ங்களின் கலவை ஆகும்
விடை:
பல (VIBGYOR)

Question 5.
ஒரு வெள்ளொளி ஆனது, ஏழு வண்ணங்களாகப் பிரிகையடையும் நிகழ்வு …………… எனப்படும்.
விடை:
நிறப்பிரிகை

Question 6.
சந்திரன், சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்களை ……… செய்கிறது.
விடை:
எதிரொளிக்க

Question 7.
……………….. பயன்படுத்தி, சூரிய ஒளியில் அடங்கியுள்ள வண்ணங்களைப் பிரிக்கலாம்
விடை:
முப்பட்டகம்

Question 8.
சொரசொரப்பான பரப்பின் மேல் …………………. எதிராளிப்ப நடைபெறுகிறது.
விடை:
ஒழுங்கற்ற

III. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா, தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில், சரியான கூற்றை எழுதுக

Question 1.
ஆடியின் முன் நிற்கும் போது, உன் வலக் கையின் பிம்பமும், இடக் கையின் பிம்பமும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கின்றன
விடை:
சரி

Question 2.
சூரிய ஒளியானது, நீர்த்துளிகளின் மூலம் நிறப்பிரிகை அடைந்து வானவில் தோன்றுகிறது
விடை:
சரி

Question 3.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. எனவே பெரிஸ்கோப்பின் மூலம் தோன்றும் பிம்பமும் இடவலமாற்றம் அடைகிறது.
சரியான விடை : சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. ஆனால் பெரிஸ்கோப் ஒன்றின் மூலம் கிடைக்கக்கூடிய கடைசி பிம்பமானது இடவலமாற்றம் இன்றி கிடைக்கிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 4.
சூரிய ஒளியைக் கோள்கள் எதிரொளிப்பதன் காரணமாக அதனைக் காண முடிகிறது.
விடை:
சரி

Question 5.
புத்தகத்தின் மேற்பரப்பு, ஒளியை எதிரொளிப்பதால் புத்தகத்தை நாம் காண முடிகிறது.
விடை:
சரி

Question 6.
ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம் , நேர்மாறு பிம்பம் ஆகும்.
விடை:
சரி

Question 7.
ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவும், பொருளின் அளவும் சமம்
சரியான விடை : ஊசித்துளை காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவு பொருளின் அளவிலிருந்து மாறுபடலாம்.
விடை:
தவறு

Question 8.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் தலைகீழ் மாற்றம் அடைகிறது.
சரியான விடை : சமதள ஆடியில் தோன்றும் பிம்பமானது தலைகீழ் மாற்றம் அடைவதில்லை
விடை:
தவறு

Question 9.
சமதள ஆடி, ஒளி ஊடுருவாத ஒரு பொருள் ஆகும்.
விடை:
சரி

Question 10.
ஒரு பொருளின் நிழல், பொருள் இருக்கும் அதே பக்கத்தில் அமையும்.
சரியான விடை : ஒரு பொருளின் நிழலானது ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்திசையில் உருவாகும்.
விடை:
தவறு

Question 11.
நம்மைச்சுற்றி இருக்கும் பொருள்களை, ஒளியின் ஒழுங்கான எதிரொளிப்பின் மூலமே காண்கிறோம்.
விடை:
சரி

Question 12.
ஒரு வெள்ளொளி ஆனது, முப்பட்டகம் வழியே செல்லும்போது, அது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 2

V. சுருக்கமாக விடையளி

Question 1.
எதிரொளிப்பு விதிகளை, படத்துடன் கூறுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 3

Question 2.
படத்தில் ஒரு பென்சில், ஓர் ஆடியில் மேலே இருக்கும் நிலையைக் காட்டுகிறது? எனில்
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 4

அ) ஆடியில் தோன்றும் பென்சிலின் பிம்பத்தை வரைக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 5

ஆ) பென்சிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் எவ்வாறு ஆடியில் எதிரொளிக்கப்பட்டு, கண்ணிற்கு அதன் பிம்பம் கிடைக்கிறது படம் வரைந்து காட்க.
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 6
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 7

Question 3.
ஒருவர், தன் முன்னால் ஆடியில் ஒரு மரத்தின் பிம்பத்தை 3.5 மீட்டர் தொலைவில் இருந்து பார்கிறார். மரம், அவர் கண்களிலிருந்து 0.5 மீட்டர் தொலைவில் பின்னால் இருக்கிறது, எனில் மரத்திற்கும் அவர் கண்ணிற்கும் இடையே உள்ள தொலைவு என்ன? பொருளைக் காண நமக்கு அவசியமான காரணிகள் யாவை?
விடை:
மனிதனுக்கும், கண்ணாடிக்கும் இடையே உள்ள தொலைவு = 3.5m
மனிதனுக்கும், மரத்திற்கும் இடையே உள்ள தொலைவு = 0.5m
மரத்திற்கும் கண்ணாடிக்கும் இடையே மொத்த தொலைவு = 0.5 + 3.5 = 4m
படுகோணம் ∠i = 4m ∠r = 4m
பொருளுக்கும், கண்ணிற்கும் இடையே உள்ள தெலைவு = கண்ணாடி மற்றும் மனிதனுக்கும் இடையே உள்ள தொலைவு + ∠r
= 3.5m + 4m = 7.5m

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 4.
ஒளிரும் பொருள்கள் என்றால் என்ன?
விடை:

  • தாமாகவே ஒளிரக்கூடிய பொருட்கள் ஒளிரும் பொருள்கள் எனப்படும்.
  • (எ.கா) சூரிய ஒளி, மின்சார பல்பு

Question 5.
நிலா ஓர் ஒளிரும் பொருளா? காரணம் கூறு.
விடை:

  • ஆம். சந்திரன் நன்கு ஒளியைத் தரும் மூலம் ஆகும்.
  • ஆனால் சந்திரன் தாமாகவே ஒளியை உமிழாது.
  • சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று அதனை பூமிக்கு பிரதிபலிக்கிறது.

Question 6.
ஒளியை உட்கவரும் பண்பினைப் பொருத்து, பொருள்களின் மூன்று வகைகள் யாவை?
விடை:

  • ஒளி ஊடுருவும் பொருள்கள் (எ.கா) தூய நீர்
  • பகுதி ஒளி ஊடுருவும் பொருள்கள் (எ.கா) சொரசொரப்பான கண்ணாடி
  • ஒளி ஊடுருவாப் பொருள்கள் (எ.கா) கல்

Question 7.
நிழல்களின் பகுதிகள் யாவை?
விடை:

  1. கரு நிழல்
  2. புற நிழல்

Question 8.
நிழல்களின் பண்புகள் யாவை?
விடை:

  • ஒளி ஊடுருவாப் பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.
  • நிழல்கள் எப்பொழுதும் ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் உருவாகும்.
  • ஒரு பொருளின் நிழலின் மூலம் அதன் தன்மையைக் கண்டறிய முடியாது.
  • பொருளின் நிறம் எதுவானாலும், நிழல் கருமையாகவே இருக்கும்.
  • ஒளி மூலம், ஒளி ஊடுருவாப்பொருள் மற்றும் நிழல் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையும்.
  • நிழலின் அளவானது i) ஒளிமூலம் மற்றும் பொருள் மேலும் ii) பொருள் மற்றும் திரை இவற்றிற்கிடையே உள்ள தொலைவை சார்ந்துள்ளது.

Question 9.
சமதள ஆடி என்றால் என்ன?
விடை:

  • காது – சமதள ஆடி என்பது, எதிரொளிப்பின் மூலம் பிம்பத்தை உருவாக்கும் வழவழப்பான ஒரு சமதள பரப்பு ஆகும்.
  • தன் முன் தோன்றும் பொருளின் பிம்பத்தை உருவாக்கும்.

Question 10.
முப்பட்டகம் என்றால் என்ன?
விடை:
முப்பட்டகம் என்பது இரண்டு சமதளப்பரப்புகளுக்கு இடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருள் ஆகும்.

Question 11.
கண்ணுறு ஒளி என்றால் என்ன?
விடை:
மனிதக் கண்ணால் கண்டறியக்கூடிய மின்காந்த கதிர்வீச்சின் வரம்பே கண்ணுறு ஒளி ஆகும்.

Question 12.
கீழ்க்காணும் பொருள்களை அட்டவணையில் சரியான இடத்தில் நிரப்புக.
விடை:
(நட்சத்திரம், செங்கல் சுவர், தாவரங்கள், கண்ணாடி கோள்கள், மின்பல்பு, எரியும் மெழுகுவத்தி)
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 8

Question 13.
1 மீட்டர் 45 செ.மீ உயரமுடைய ஒரு சிறுவன், நீளமான ஓர் ஆடியிலிருந்து 2 மீட்டர் தொலைவில் நிற்கிறான், எனில் பின்வருவனவற்றை நிரப்புக.
அ) சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு ……
விடை:
4 மீ ஆடியிலிருந்து சிறுவன் நிற்கும் தூரம் 1 = 2மீ(∠i)
∠i = ∠r = 2மீ
எனவே சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் உள்ள தொலைவு = சிறுவனிடமிருந்து கண்ணாடியின் தூரம் + கண்ணாடிக்கும் பிம்பத்திற்கும் உள்ள தூரம்.
= 2மீ + 2மீ = 4 மீ

ஆ) ஆடியில் தோன்றும் சிறுவனுடைய பிம்பத்தின் உயரம் …………………
விடை:
சமதள ஆடி ஏற்படுத்தும் பிம்பம் நேரானது. எனவே ஆடியில் தோன்றும் சிறுவனுடைய பிம்பத்தின் உயரம் 1 மீ 45 செ.மீ ஆகும்.

இ) சிறுவன் 1 மீட்டர் தொலைவு ஆடியை நோக்கிச் சென்றால், ஆடிக்கும், பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு …………..
விடை:
சிறுவன் 1 மீட்டர் தொலைவு ஆடியை நோக்கிச் சென்றால் சிறுவனுக்கும்,
ஆடிக்கும் உள்ள தொலைவு ∠i = 1மீ
∠i = ∠r = 1மீ
எனவே ஆடிக்கும், பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு = 1மீ ஆகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 14.
ஏதேனும் ஒரு பொருள் ஒன்றையும் ஊசித்துளைக் காமிரா ஒன்று உருவாக்கும் அப்பொருளின் பிம்பத்தையும் வரைக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 9

Question 15.
அவசர கால ஊர்திகளில் (AMBULANCE) என்ற வார்த்தை வல, இடமாக மாற்றி எழுதப்பட்டிருப்பதன் காரணம் என்ன?
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 10
விடை:
சமதள ஆடியின் இடவலமாற்றம் என்ற பண்பு இதில் பயன்படுத்தப்படுகிறது.

ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக ‘AMBULANCE’ என நேராகத் தெரியும்.

Question 16.
ஆடியில் தோன்றும் சில பெரிய ஆங்கில எழுத்துகளின், பிம்பங்கள் மாறாமல் இருக்கின்றன. இதர பெரிய ஆங்கில எழுத்துகளின் பிம்பங்கள் மாற்றம் அடைகின்றன. இதற்குக் காரணம் என்ன? விளக்குக.
விடை:
A, H, I, M, O, T, U, V, W, X மற்றும் Y போன்ற 11 எழுத்துகளின் பிம்பங்கள் மாற்றம் அடைகின்றன. இதற்கு ‘சமச்சீர் தன்மையே’ காரணமாகும்.

மற்ற எழுத்துக்களின் (B, C, D, E, F, G, J, K, L, N, P, Q, R, S மற்றும் Z) பிம்பங்க ள் மாறாமல் இருக்கின்றன. இதற்கு இடவல மாற்றம்’ காரணமாகும்.

Question 17.
M1 மற்றும் M2 என்ற இரு ஒன்றுக்கொன்று செங்குத்தான சமதள ஆடிகள் படத்தில் காட்டியுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. AB என்ற கதிர் M) என்ற சமதள ஆடியோடு 45° படுகோணத்தை ஏற்படுத்துகிறது.
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 11
அ. …………….. ………….. ஆகியவை எதிரொளிப்புக் கதிர்கள் ஆகும்.
விடை:
BC, CD

ஆ. ……………………… ஆகியவை படுகதிர்கள் ஆகும்.
விடை:
AB, BC

இ. BC என்ற கதிர் ஏற்படுத்தும் படுகோணம் என்ன?
விடை:
45°

ஈ. CD என்ற கதிர் ஏற்படுத்தும் எதிரொளிப்புக் கோணம் என்ன ?
விடை:
45°

Question 18.
ராஜன், கடிகார பிம்பங்களின் படங்களைக் கொண்டு விளையாடுகிறான். அவன் தன் அறையில் உள்ள கடிகாரத்தைப் பார்க்கிறான். அது 1:40 எனக்காட்டுகிறது. பின்வரும் படங்களில், ராஜன் கடிகார மற்றும் அதன் கண்ணாடிப் பிம்பத்தில் கடிகார முட்களை எவ்வாறு வரைந்திருப்பான்?
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 12
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 13

Question 19.
ஒளியின் எதிரொளிப்பு என்றால் என்ன?
விடை:
எந்தவொரு பொருளின் மேற்பரப்பையும் அடைந்த பிறகு, ஒளி கதிர்கள் மீண்டு வருவது ஒளியின் எதிரொளிப்பு எனப்படும்.

Question 20.
ஓர் ஒளிக்கதிர் 50° கோணத்தில் ஒரு சமதள ஆடியில் விழுகிறது எனில் எதிரொளிப்புக்கோணம் என்ன?
விடை:
படுகோணத்தின் மதிப்பு = 90° – 50° = 40° (∠i)
ஒளி எதிராளிப்பு விதியின்படி, படுகோணமும், எதிராளிப்புக் கோணமும் சமம்.
i = r
∠i = 40° ∠r = 40°
எனவே எதிராளிப்புக்கோணம் = 40° ஆகும்.

Question 21.
சமதள ஆடியில் இடவல மாற்றம் பற்றி நீவிர் அறிவது என்ன?
விடை:
சமதள ஆடியின் இடவல மாற்றப் பண்பின் காரணமாக ஆங்கில எழுத்து ‘b’ ஆனது d’ போன்று தெரியும்.

Question 22.
வெள்ளொளியின் நிறத்தொகுப்பை எவ்வாறு பெறலாம்?
விடை:

  • ஒரு வெள்ளொளியானது முப்பட்டகத்தின் ஒரு சமதளப் பரப்பின் வழியே செல்லும்போது, மற்றொரு சமதளப்பரப்பின் வழியே ஏழு வண்ணங்களாக பிரிகையடையும். இந்நிகழ்வு நிறப்பிரிகை ஆகும்.
  • இதில் பெறப்படும் நிறங்கள் நிறத்தொகுப்பு எனப்படும்.

Question 23.
நியூட்டன் வட்டினை வேகமாகச் சுழற்றும் போது, ஏன் அது வெண்மை நிறத்துடன் தோற்றமளிக்கிறது?
விடை:
நியூட்டன் வட்டினை அதன் மையம் வழியேச் செல்லும் அச்சினைப் பொருத்து வேகமாகச் – சுழற்றும் போது, நம் கண்ணின் ரெட்டினா வெண்மை நிறத்தை உணர்த்துகிறது.

நியூட்டன் வட்டு மூலம், வெண்மை நிறம், ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடிகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 24.
நிழல் என்றால் என்ன? நிழலை உருவாக்க தேவையான பொருள்கள் யாவை?
விடை:

  • ஒளி ஊடுருவாப் பொருளானது, ஒளியை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை. எனவே நிழல் உருவாகிறது.
  • சூரிய ஒளி, ஒளி ஊடுருவாப் பொருள், திரை ஆகியவை நிழலை உருவாக்க தேவையான பொருள்கள் ஆகும்.

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவாக விடையளி.

Question 1.
ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு என்றால் என்ன? படத்துடன் விவரி.
விடை:
ஒழுங்கான எதிரொளிப்பு :

  • எதிரொளிக்கும் பரப்பு வழவழப்பாகவும் சமதளமாகவும் இருப்பின் ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறும்.
  • ஒழுங்கான எதிராளிப்பில் படுகதிர்கள் இணைகதிர்களாகப் பரப்பின் மேல் விழுந்து இணைகதிர்களாகவே எதிரொளிக்கப்படுகின்றன.
    Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 14

ஒழுங்கற்ற எதிரொளிப்பு :

  • பரப்பு சொரசொரப்பாக இருப்பின் ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறும்
  • இந்நிகழ்வில் எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் வெவ்வேறு திசையில் செல்கின்றன.

Question 2.
ஒளிரும் மற்றும் ஒளிராமூலங்கள் இவற்றிற்கிடையான வேறுபாட்டைக்கூறுக. ஒவ்வொன்றிற்கும் ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 15

Question 3.
அன்றாட வாழ்வில் நீ காணும் ஒளியின் நேர்க்கோட்டு பண்பு நிகழ்வுகள் இரண்டினை கூறுக.
விடை:

  1. மரங்களின் கிளைகளின் வழியே சூரிய ஒளி நேராக செல்லுதல்
  2. சிமெண்ட் கிரிலின், சிறு துளைகளின் வழியே சூரிய ஒளி நேராக செல்லுதல்.
  3. லேசர் மற்றும் டார்ச் விளக்கின் ஒளி நேராக செல்லுதல்

Question 4.
எதிரொளிப்பு மற்றும் நிழல் – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 16

Question 5.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் பண்புகளைக் கூறுக.
விடை:

  1. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது.
  2. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம், மெய் பிம்பம் ஆகும்.
  3. சமதள ஆடியில் தோன்றும் பிம்பமும் பொருளும் ஒரே அளவில் இருக்கும்.
  4. சமதள ஆடியிலிருந்து, பொருள் இருக்கும் தொலைவும் பிம்பம் தோன்றும் தொலைவும் சமம்.
  5. சமதள ஆடியின் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் பெறும்.

Question 6.
பின்வரும் படங்களின் மூலம் நீவீர் அறிவது என்ன?
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 17
விடை:

  1. ஒளியானது நேர்கோட்டில் செல்லும்
  2. ஒளியானது தானே வளைந்து செல்லாது
  3. இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படும்
  4. மேற்கண்ட படத்திலிருந்து B படமானது ஒளியின் முக்கியமான இப்பண்பினை விளக்குகிறது.
  5. படம் A-வில் ஒளியானது தானாகவே வளைகிறது. இந்த பண்பு ஒளியில் நடைபெறாத நிகழ்வாகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 7.
பின்வருவனவற்றை வரையறுக்க.
i) படுகதிர்
ii) எதிரொளிப்புக் கதிர்
iii) குத்துக்கோடு
iv) படுகோணம்
விடை:

  1. படுகதிர் :
    எதிரொளிக்கும் பரப்பில் படும் ஒளிக்கதிர் படுகதிர் எனப்படும்.
  2. எதிரொளிப்புக் கதிர் :
    எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டு வரும் கதிர் எதிரொளிப்புக் கதிர் எனப்படும்.
  3. குத்துக்கோடு :
    படுபுள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு குத்துக்கோடு எனப்படும்.
  4. படுகோணம் :
    படுகதிர்க்கும் குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் படுகோணம் எனப்படும்

Question 8.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பங்களை ஊசித்துளைக் காமிரா காமிரா உருவாக்கும் பிம்பங்களோடு ஒப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 18

7th Science Guide ஒளியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கண்ணுறு ஒளியின் அலைநீள நெடுக்கம் ஆனது …………….. வரை மதிப்பு உடையது.
அ) 300 nm முதல் 600 nm வரை
ஆ) 300 nm முதல் 700 nm வரை
இ) 400 nm முதல் 700 nm வரை
ஈ) 400 nm முதல் 600 nm வரை
விடை:
இ) 400 nm முதல் 700 nm வரை

Question 2.
ஓர் அலைநீளம் கொண்ட நிறம், நம் கண்ணின் விழித்திரையை அடையும் போது நம் மூ ளை ……………… உணர்ந்து கொள்கிறது.
அ) பல நிறங்களை
ஆ) குறிப்பிட்ட நிறங்களை
இ) வெள்ளை நிறத்தை
ஈ) இவற்றில் ஒன்றுமில்லை
விடை:
ஆ) குறிப்பிட்ட நிறங்களை

Question 3.
…………………… சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.
அ) சிவப்பு
ஆ) பச்சை
இ) வெள்ளை
ஈ) மெஜந்தா
விடை:
ஈ) மெஜந்தா

Question 4.
…………………….. நிறங்களைச் சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும் போது வெள்ளை நிறம் கிடைக்கிறது.
அ) முதன்மை நிலை
ஆ) இரண்டாம் நிலை
இ) மூன்றாம் நிலை
ஈ) இவை அனைத்தும்
விடை:
அ) முதன்மை நிலை

Question 5.
கண்ணாடித்துண்டின் மேல் விழும் ஒளிக்கதிர் ………… என அழைக்கப்படுகிறது.
அ) எதிரொளிப்புக் கதிர்
ஆ) படுகதிர்
இ) படுபுள்ளி
ஈ) குத்துக்கோடு
விடை:
ஆ) படுகதிர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒளி என்பது ஆற்றலின் ஒரு வடிவம். அது நம் கண்ணின் ………….. தூண்டி பார்வையை ஏற்படுத்துகிறது.
விடை:
விழித்திரையைத்

Question 2.
முப்பட்டகம் என்பது இரண்டு சமதளப்பரப்புகளுக்கு இடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் …………. உருவாக்கப்பட்ட பொருள் ஆகும்.
விடை:
கண்ணாடி அல்லது

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 3.
நிறங்களின் தொகுப்பு என்பது ……………….. தனித்துவமான நிறங்களை ஒரு விகிதத்தில் கலந்து புதிய நிறங்களை உருவாக்குவது ஆகும்.
விடை:
இரண்டு அல்லது மூன்று

Question 4.
………….. என்ற அறிவியல் அறிஞர் ஒளி காட்சி மற்றும் ஒளியியல் தொடர்பான புரிதலுக்கு முக்கிய பங்காற்றியவர்.
விடை:
அல்-ஹசன்-ஹயத்தம்

Question 5.
எதிரொளிப்புக் கதிர்ற்கும், குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் ………… ஆகும்
விடை:
எதிரொளிப்புக் கோணம்

III. சரியா, தவறா என கண்டுபிடி (தவறாக இருப்பின் சரியான வார்த்தையை கண்டுபிடி)

Question 1.
ஒளிக்கதிர் கோடுகளை வரைவதின் மூலம் பொருளின் பிம்பத்தின் நிலையை அறியலாம்.
விடை:
சரி

Question 2.
திரையில் வீழ்த்தப்படும் பிம்பங்கள் மாய பிம்பம் என்று அழைக்கப்படுகிறது.
விளக்கம் : திரையில் வீழ்த்தப்படும் பிம்பங்கள் மெய் பிம்பம் என்று அழைக்கப்படுகிறது.
விடை:
தவறு

Question 3.
கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் நம் கண்ணின் விழித்திரையை அடையும் போது மூளையானது வெண்மையை உணர்கிறது.
விடை:
சரி

Question 4.
ஆரஞ்சு நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது, சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது
விளக்கம் : ஊதா நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது, சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது
விடை:
தவறு

Question 5.
சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று, பின் அதனைப்பூமிக்கும் பிரதிபலிக்கிறது.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 19

V. ஒப்புமை தருக.

Question 1.
முதன்மை நிறம் : ஊதா
இரண்டாம் நிறம் : ………………….
விடை:
மெஜந்தா

Question 2.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருந்தால் : சூரிய கிரகணம்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி இருந்தால் : …………….
விடை:
சந்திரகிரகணம்

Question 3.
வெப்ப ஒளி மூலங்கள் : எரியும் மெழுகுவர்த்தி
வாயுவிறக்க ஒளி மூலங்கள் : ……………………
விடை:
நியான் விளக்கு

Question 4.
ஒளிரும் பொருள் : சூரியன்
உயிரி ஒளிர்தல் : …………………….
விடை:
ஜெல்லி மீன்

VI. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று : தாவரங்கள் சூரிய ஒளி, காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடு மற்றும் புவியில் உள்ள நீர் ஆகியவற்றைப் மற்றும் புவியில் உள்ள நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச் சேர்க்கை என்னும் நிகழ்வு மூலம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.

காரணம் : தாவரங்களின் ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு சூரிய ஒளி மிகவும் அவசியம் ஆகும்.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 2.
கூற்று : சந்திரன் ஒளியை வெளியிடுகிறது குறிப்பாக இரவில் சந்திரன் ஒளியைத் தருகிறது.
காரணம் : சந்திரன் ஓர் ஒளிரும் பொருள் ஆகும்.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Question 3.
கூற்று : பென்சிலின் நிழல் திரையில் உருவாகவில்லை.
காரணம் : நிழலின் உருவம் மற்றும் அளவு, ஒளி ஊடுருவாப் பொருளின் அளவுக்கு நேர்த்தகவில் அமையும்.
விடை:
ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

VII. பொருந்தாத ஒன்றை கண்டுபிடி

Question 1.
மின்மினிப்பூச்சி, ஜெல்லி மீன், நெருப்பு ஈ, வீட்டு ஈ
விடை:
வீட்டு ஈ
விளக்கம் : வீட்டு ஈ இயற்கையாக ஒளியை வெளியடாது.

Question 2.
எரியும் மெழுகுவர்த்தி, சுடர் ஏரி விளக்கு நியான் விளக்கு, சில ஆழ்கடல் தாவரங்கள்
விடை:
சில ஆழ்கடல் தாவரங்கள்
விளக்கம் : இவை இயற்கையாக ஒளியை வெளியிடுகின்றன.

VIII. சுருக்கமான விடையளி

Question 1.
வெப்ப ஒளி மூலங்கள் மற்றும் வாயுவிறக்க ஒளி மூலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு தருக?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 20

Question 2.
ஒளியின் சில அடிப்படைப் பண்புகள் யாவை?
விடை:

  • ஒளியின் நேர்க்கோட்டு பண்பு
  • ஒளியின் எதிரொளித்தல் பண்பு
  • ஒளியின் வேகம்
  • பொருள்களோடு ஒளியின் செயல்பாடு
  • நிறமாலை

Question 3.
சோலா கிராமி என்றால் என்ன?
விடை:

  • காமிராவின் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையாத காலத்தில், ஊசித்துளை காமிரா, சூரியனின் இயக்கத்தைப் பதிவு செய்ய பயன்பட்டது.
  • இவ்வகையான புகைப்படம் எடுக்கும் முறைக்குச் சோலா கிராமி என்று பெயர்.
  • இவை நிலையான பொருள்களைப் புகைப்படம் எடுப்பதற்கும், சூரிய கிரகணத்தை காண்பதற்கும் பயன்படுகிறது.

Question 4.
குத்துக்கோடு என்றால் என்ன?
விடை:
படுபுள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்கும் செங்குத்தாக வரையப்படும் கோடு குத்துக்கோடு எனப்படும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 5.
ஒளி எதிரொளிப்பு விதிகள் யாவை?
விடை:

  • படுகோணமும் (i), எதிராளிப்புக் கோணமும் (r) சமம் ∠i = ∠r
  • படுகதிர். குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்புக் கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.

Question 6.
ஒளிக்கதிர்களின் தொகுப்பு என்றால் என்ன?
விடை:
பொதவாக ஒளி என்பது ஒரே ஒரு கதிர் அன்று, அது பல ஒளிக்கதிர்களின் தொகுப்பு ஆகும்.

Question 7.
கிரகணம் என்றால் என்ன?
விடை:
ஒளியின் முன்னிலையில் ஏதேனும் ஒரு வானியல் பொருள் பகுதியாகவோ முழுவதுமாக மற்றொரு வானவியல் பொருளால் மறைக்கப்படும் போது கிரகணம் தோன்றுகிறது.

Question 8.
வாகனங்களின் பின்புறம் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன?
விடை:

  • சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் குறைவான அளவில் சிதறடிக்கப்படுகின்றன.
  • சிவப்பு நிறமானது மற்ற நிறங்களைவிட அதிக அலைநீளம் கொண்டது ஆகும்.
  • எனவே சிவப்பு நிறம் காற்றில் அதிக தொலைவு பயணம் செய்யும்.

Question 9.
நிறங்களின் தொகுப்பு என்பது யாது?
விடை:

  • நிறங்களின் தொகுப்பு என்பது இரண்டு அல்லது மூன்று தனித்துவமான நிறங்களை குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் கலந்து புதிய நிறங்களை உருவாக்குவது ஆகும்.
  • அவ்வகையில் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்களும் தனித்துவமான நிறங்கள் ஆகும்
  • இவை முதன்மை நிறங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

Question 10.
VIBGYOR – யின் விளக்கம் தருக?
விடை:
V – ஊதா
I – கருநீலம்
B – நீலம்
G – பச்சை
Y – மஞ்சள்
O – ஆரஞ்சு
R – சிவப்பு

IX. விரிவான விடையளி

Question 1.
கிரணங்களின் வகைகளை பற்றி விளக்குக.
விடை:
சூரிய கிரகணம் :
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 21

  • சூரியனுக்கும் புவிக்கும் இடையே சந்திரன் சுற்றி வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது.
  • சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் ஆனது, புவியின் மேல் விழுகிறது.
  • புவியில் A என்ற பகுதியில் இருப்பவர்களால் சூரியணைக் காண இயலாது.
  • இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
  • அதே போன்று புவியின் B மற்றும் C என்ற பகுதியில் இருப்பவர்களால் சூரியனைப் பகுதியாகக் காண இயலும்.

சந்திர கிரகணம் :
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 22

  • சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவியானது இருக்கும் போது எந்திர கிரகணம் நிகழ்கிறது.
  • சூரியனிடமிருந்து வரும் ஒளியை புவியானது தடுத்து வருகிறது.
  • எனவே புவியின் நிழலானது சந்திரனின் மேல் விழுகிறது.
  • இதனால் புவியிலிருப்பவர்களுக்கும் சந்திரனை முழுவதுமாகவோ பகுதியாகவோ காண இயலாது.
  • இது சந்திரகிரகணம் எனப்படும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 2.
ஒளி இழைகளை பற்றி விரிவாக விளக்குக?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 23

  1. ஒளி இழை என்பது முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் படி செயல்படும் ஒரு சாதனம் ஆகும்.
  2. இச்சாதனம் மூலம் ஒளி சமிக்ஞைகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் குறைவான நேரத்தில் மிகுந்த ஆற்றல் இழப்பு இல்லாமல் அனுப்ப இயலும்.
  3. இதனுள் சமிக்கைகளை அனுப்பும் வகையில் கண்ணாடி உள்ளகம் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வளையும் தன்மை கொண்ட இழைகளும் உள்ளன.
  4. ஒளி இழையினை வளைக்கலாம், மடக்காலம்.
  5. ஒளியிழையின் ஒரு முனையில் ஒளியானது விழும்போது அது கண்ணாடி உள்ளகத்தில் முழு அக எதிரொளிப்பு அடைந்து மறு முனையில் குறைந்த ஆற்றல் இழப்புடன் வெளிவருகிறது.
  6. தரவு அல்லது தகவல் ஒளியியல் துடிப்புகளாக ஒளி இழையின் மூலம் அனுப்பப்படுகிறது.
  7. ஒளி இழைகள் கேபிள் தொலைத்தொடர்பு அகன்ற அலைவரிசை தொடர்புச் சாதனங்கள் போன்ற அதிக வேக தொடர்பு அனுப்புகைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
  8. தொலை தொடர்புக்கு முன்னர் பயன்படுத்திய தாமிரக் கம்பியிலான வடத்திற்கு மாற்றாக இப்பொழுது ஒளியிழைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  9. தாமிரக் கம்பியிலான வடத்தைவிட ஒளியிழை வடத்தின் மூலம் அதிக அளவு தகவல்களை அனுப்ப முடியும்.

Question 3.
ஒளி ஊடுருவும் பொருள்கள் மற்றும் ஒளி ஊடுருவாப் பொருள்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு எழுதுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 24

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 25

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

6th Science Guide அன்றாட வாழ்வில் தாவரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.
அ) வாத்து
ஆ) கிளி
இ) ஓசனிச்சிட்டு
ஈ) புறா
விடை:
இ) ஓசனிச்சிட்டு

Question 2.
இயற்கையான கொசு விரட்டி
அ) ஜாதிக்காய்
ஆ) மூங்கில்
இ) இஞ்சி
ஈ) வேம்பு
விடை:
ஈ) வேம்பு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 3.
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?
அ) உருளைக்கிழக்கு
ஆ) கேரட்
இ) முள்ளங்கி
ஈ) டர்னிப்
விடை:
அ) உருளைக்கி

Question 4.
பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது?
அ) நெல்லி
ஆ) துளசி
இ) மஞ்சள்
ஈ) சோற்று கற்றாழை
விடை:
அ) நெல்லி

Question 5.
இந்தியாவின் தேசிய மரம் எது?
அ) வேப்பமரம்
ஆ) பலா மரம்
இ) ஆலமரம்
ஈ) மாமரம்
விடை:
இ) ஆலமரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _____ ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
விடை:
16

Question 2.
______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.
விடை:
பருத்தி

Question 3.
நான் தமிழ்நாட்டின் மாநில மரம் நான் யார்? _______
விடை:
பனை

Question 4.
______ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.
விடை:
துளசி

Question 5.
அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ண க் கூடிய பருப்புகள் (அ) விதைகள் ______ எனப்படுகின்றன.
விடை:
பயிறு வகைகள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

III. சரியா? தவறா? தவறாக இருந்தால் சரியாக விடையை எழுதுக.

Question 1.
அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
தவறு. அலங்காரத் தாவரங்கள்

Question 2.
பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.
விடை:
சரி

Question 3.
அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.
விடை:
தவறு – உணவு தாவரம்.

Question 4.
கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.
விடை:
தவறு – கோடை காலத்திற்கு பருத்தி உடைகள் தான் ஏற்றவை.

Question 5.
கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது.
விடை:
தவறு – சர்க்கரை தயாரிக்க பயன்படுகிறது.

IV. பின்வருவனவற்றைப் பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 80

V. ஒப்பிடுக.

Question 1. மாம்பழம் : கனி :: மக்காச்சோளம் : _______
விடை:
தானியம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 2.
தென்னை : நார் :: ரோஜா : _____
விடை:
அத்தர்

Question 3.
தேனீக்கள் : மகரந்தச் சேர்க்கையாளர் :: மண்புழு : ______
விடை:
மண்புழு உரம் தயாரிப்பாளர்

VI. மிகக் குறுகிய விடை தருக.

Question 1.
உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை:
மனிதர்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாக விளங்கும் தாவரங்கள் உணவுத் தாவரங்கள் எனப்படுகின்றன.
(எ.கா.) காய்கறிகள் – பீட்ரூட், கேரட்
தானியங்கள் – நெல், கோதுமை
பருப்பு வகைகள் – கொண்டைக் கடலை, பச்சைப்பயிறு.

Question 2.
மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை:
நோய்களைக் குணப்படுத்த பயன்படும் தாவரங்களை மருத்துவத் தாவரங்கள் என அழைக்கிறோம்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 81

Question 3.
வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?
வன்கட்டை:
வணிக ரீதியில் பயன்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை, அடர்த்தி அடிப்படையில் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 100.1

Question 4.
நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?
விடை:
வெப்ப மண்டலத் தாவரங்களிலிருந்து பெறப்படுவதும் உணவிற்கு நறுமணமூட்டப் பயன்படும் தாவரப் பொருட்கள் நறுமணப் பொருட்கள் எனப்படுகின்றன. பெறப்படும் பொருட்கள்:
மரப்பட்டைகள், வேர்கள், இலைகள், மலர்கள் (அ) தண்டுகள் போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. பயன்க ள்:
உணவிற்கு சுவையூட்டவும் – நிறமூட்டியாகவும், உணவைக் கெடாமல் பாதுகாக்கவும் பயன்ப டுகிறது.
(எ.கா) ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருஞ்சீரகம், ஓமம், பிரியாணி இலை, கொத்தமல்லி விதைகள், இஞ்சி, ஜாதிக்காய் மற்றும் இலவங்கப் பட்டை.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 5.
நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 85

Question 6.
மரக்கட்டைகளின் பயன்கள் யாவை?
வன்கட்டை:
உயர்ரக மரச்சாமான்கள், நாற்காலிகள், மேற்கூரைகள் மற்றும் கட்டில், மேஜை, கதவு, நிலைக்கால் ஜன்னல் போன்ற மரக்கட்டுமானங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.
மென்கட்டை:
ஓட்டுப்பலகைகள், மரப்பெட்டிகள், நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் (அ) காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது.

VII. குறுகிய விடை தருக.

Question 1.
அலங்காரத் தாவரங்கள் பற்றி எழுதுக.
விடை:
அழகியல் காரணங்களுக்காக வீட்டுத் தோட்டங்களில், பூங்காக்களில், மாடித் தோட்டங்களில் வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்கார தாவரங்கள் எனப்படும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 96

Question 2.
வேப்ப மரத்தின் பயன்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 97

Question 3.
எவையேனும் ஐந்து தாவரங்களையும், அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 98

VIII. விரிவான விடை தருக.

Question 1.
மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.
விடை:
வணிக ரீதியாக பயன்படும் மரக்கட்டைகள் வலிமை, அடர்த்தி அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99

Question 2.
விலங்கு – தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.
வரையரை:
உணவு, வசிப்பிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு விலங்குகள் தாவரங்களைச் சார்ந்திருக்கின்றன. இந்தத் தொடர்பினால் விலங்குகள் மட்டுமின்றி, தாவரங்களும் பயனடைகின்றன – இவை பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.2

IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

Question 1.
பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது. இதற்கு காரணம் யாது?
விடை:

  1. நிறைய பாலைவனங்களில் 10 அங்குலத்திற்கும் குறைவான மழை அளவே ஒவ்வொரு ஆண்டும் காணப்படுகிறது.
  2. மழை அளவை விட நீராவிப் போக்கின் அளவு அதிகம்.
  3. பாலைவனங்களில் வாழும் தாவர விலங்கினங்களுக்கு மிகச் சிறிய அளவு தான் கிடைக்கிறது.
  4. மேலும் அவை நீரைச் சேமிக்கவும், வறட்சியைத் தாங்கவும் தகவமைப்புப் பெற்றுள்ளது.
    (எ.கா) கள்ளி வகை தாவரங்கள் – ஒட்டகம் போன்ற விலங்குகள்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 2.
“பனைமரம் உயரமான மரம், அதனால் அது வன்கட்டையைத் தருகிறது” என்று கவிதா கூறினார். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? எதுவாயினும் ஏன் என்பதை எழுதுக.
விடை:

  1. பனை மரங்கள் அதி உயரமான உயரமுடைய தாயிருந்தாலும் அவை மென் கட்டைகளையே உருவாக்கின்றன.
  2. வளையக்கூடிய வலுவற்றதாக இருப்பதால் இதன் கட்டைகள் மென்மையான கட்டைகள் எனப்படுகின்றன.
  3. இதன் கட்டை நார்கள் – தொப்பிகள் போன்ற பொருட்கள் செய்ய பயன்படுகிறது.
  4. ‘கஜா’ புயலில் (நவம்பர் 2018) தென்னை மரங்கள் இலட்சக்கணக்கில் வேரோடு வீழ பனை மென்கட்டைகளை உடையதால் புயலால் சேதமடையவில்லை.

Question 3.
படங்களைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

அ. பாக்டீரியாக்கள் எவ்வாறு மண் வளத்தை அதிகரிக்கின்றன?
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.1
விடை:

  1. தாவர விலங்கு கழிவுகளை மண்ணில் சிதைவடையச் செய்து வளமான மட்கிய உரத்தை உருவாக்குகிறது.
  2. வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தி மண் வளத்தை அதிகரிக்க விவசாயத்திற்கு உதவுகிறது.

ஆ. தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேனீக்கள் அவசியம் எவ்வாறு?
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.3
விடை:
தேனீக்கள் பூக்களிலுள்ள தேனை எடுத்து தேன் பெற உதவுவதோடு அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவி, தாவர இனப்பெருக்கம் நடைபெற மிக அவசியமாகிறது.

6th Science Guide அன்றாட வாழ்வில் தாவரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஆற்றல் தருபவை.
அ) தாவரங்கள் மட்டும்
ஆ) தாவரங்கள் மற்றும் விலங்குகள்
இ) விலங்குகள் மட்டும்
ஈ) இவை எதுவுமல்ல
விடை:
அ) தாவரங்கள் மட்டும் பருவம்

Question 2.
ரவை உப்புமா எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அ) நெல்
ஆ) கோதுமை
இ) சிறு தானியம்
ஈ) சோளம்
விடை:
ஆ) கோதுமை

Question 3.
இலை நார்கள் காணப்படுவது
அ) அலோ வீரா
ஆ) அகேவ்
இ) தென்னை
ஈ) பருத்தி
விடை:
ஆ) அகேவ்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 4.
எந்த ஒரு நாட்டின் வளமும் பொதுவாக எதனைச் சார்ந்துள்ளது.
அ) கல்வி வளர்ச்சி
ஆ) விவசாய வளர்ச்சி
இ) தொழில் வளர்ச்சி
ஈ) அரசியல் வளர்ச்சி
விடை:
ஆ) விவசாய வளர்ச்சி

Question 5.
தாவரங்கள் அதன் அழகுணர்ச்சிக்காக வளர்க்கப்படுவது.
அ) நார் தாவரங்கள்
ஆ) மருத்துவத் தாவரங்கள்
இ) உணவு தாவரங்கள்
ஈ) அலங்காரத் தாவரங்கள்
விடை:
ஈ) அலங்காரத் தாவரங்கள்

II. மிகக்குறுகிய விடையளி

Question 1.
பழங்காலத்திலிருந்து மனிதர்கள் அரிசி, கேழ்வரகு, கம்பு போன்றவற்றை உணவாக பயன்படுத்தி வந்ததற்கான சான்றுகள் எங்கிருந்து பெறப்பட்டது?
விடை:

  1. பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிடைக்கப் பெற்ற தானியங்களின் எச்சங்கள் மற்றும் படிவுகள் மூலமும்.
  2. பண்டைய இலக்கியக் குறிப்புகளின் வாயிலாகவும் இதன் பயன்பாட்டினை உறுதி செய்யும் சான்றுகள் பெறப்பட்டன.

Question 2.
கயிறு எதிலிருந்து பெறப்படுகிறது?
விடை:
தென்னை , மர தண்டு, இலை பட்டைகளிலிருந்தும் இன்னும், சணல், ஆழிச் செடி போன்ற பல வகையான தாவரப் பகுதிகளிலிருந்து நார்கள் பிரித்தெடுக்கப்பட்டு கயிறுகள் திரிக்கப்படுகின்றன.

Question 3.
இந்தியாவில் சணல் பயிரிடப்படும் இடங்கள் மாநிலங்களின் பெயர் தருக.
விடை:
மேற்கு வங்காளம், அஸ்ஸாம், பீகார், உத்திரப்பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய ஏழு மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகிறது.
மேற்கு வங்காளம் – மொத்த இந்திய சணல் உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது.

Question 4.
பருத்தி தாவரம் ஏன் பணப்பயிராக பயன்படுகிறது?
விடை:

  1. பருத்தி நெசவு நார்களை தரும் (துணி செய்ய உதவும் நார்கள்) தாவரமாகும்.
  2. எனவே மனித அத்தியாவசிய தேவையான உடைகள் 80% பருத்தி மற்றும் பருத்தி சேர்க்கப்பட்ட செயற்கை இழைகளிலிருந்தே பெறப்படுகிறது.
  3. இது அதிக பயிரிடப்படுவதாலும், பயன்படுத்தப்படுவதாலும் பொருளாதார முக்கியத்துவமுடையதாலும் இது பணப்பயிராகக் கருதப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 5.
மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை:
நோய்கிருமிகளுக்கு எதிரான வேதி கூட்டுப் பொருள்களை உள்ளடக்கிய தாவரங்கள் – மருத்துவத் தாவரங்கள் எனப்படும்.

Question 6.
பின்வரும் படம் என்னவென்று காண். அதன் பயனையும் தருக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.5

  • கொடுக்கப்பட்ட படம் கிராம்பு எனப்படும் வாசனைப் பொருள்.
  • இது மலரின் மொட்டாகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 100

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 2 Chapter 6 கணினி வரைகலை Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 2 Chapter 6 கணினி வரைகலை

7th Science Guide கணினி வரைகலை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?
அ) வண்ண ம் தீட்ட
ஆ) நிரல் அமைக்க
இ) வருட
ஈ) PDF ஆக மாற்ற
விடை:
அ) வண்ண ம் தீட்ட

Question 2.
Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது?
அ) இ..ப்பக்க கருவிப் பட்டை
ஆ) வலப்பக்க கருவிப்பட்டை
இ) நடுப்பகுதி கருவிப்பட்டை
ஈ) அடிப்பகுதி கருவிப்பட்டை
விடை:
அ) இடப்பக்க கருவிப்பட்டை

Question 3.
முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?
அ) Ctrl + Z
ஆ) Ctrl + R
இ) Ctrl + Y
ஈ) Ctrl + N
விடை:
அ) Ctrl + Z

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை

Question 4.
Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?
அ) வண்ண ம் தீட்ட
ஆ) கணிதம் கற்க
இ) நிரல் பற்றி அறிய
ஈ) வரைகலையைக் கற்க
விடை:
ஆ) கணிதம் கற்க

Question 5.
Tux Maths ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?
அ) எளிய கூட்டல்
ஆ) வகுத்தல்
இ) படம் வரைதல்
ஈ) பெருக்கல்
விடை:
அ) எளிய கூட்டல்

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
Tux Paint என்றால் என்ன?
விடை:

  • Tux Paint என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இலவச ஓவியப்பயிற்சி செயலியாகும்.
  • இச்செயலியானது மகிழ்ச்சி தரும் ஒலிகளோடு, எளிமையா பயன்படுத்தும் வகையில். மாணவர்களை வழி நடத்தும், உற்சாக மூட்டும் கேலிச் சித்திரங்களோடு உருவாக்கப்பட்டது.

Question 2.
பனுவல் கருவியின் (Textool) பயன் என்ன ?
விடை:
பனுவல் கருவியைப் (Textool) பயன்படுத்தி ADC எழுத்துக்களைத் தட்டச்சு செய்யலாம்.

Question 3.
சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?
விடை:
சேமிக்கப் பயன்படும் குறுக்கு வழி விசை Ctrl + S.

Question 4.
Tux Math என்றால் என்ன?
விடை:

  • ‘Tux Math’ என்பது கணிதம் கற்பதற்கான காணொளி விளையாட்டாகும்.
  • இது ஒரு மாற்றியமைக்கக் கூடிய இலவச மென்பொருளாகும்.
  • கணக்கைச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கற்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை

Question 5.
ரேஞ்சர் விளையாட்டின் பயன் யாது?
விடை:
ரேஞ்சர் விளையாட்டின் பயன் – 10 வரத்தக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்.

7th Science Guide கணினி வரைகலை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

Question 1.
வெளியேறுதல் (Quit) குறுக்கு வழி விசை எது?
அ) Ctrl + X
ஆ) Ctrl + Y
இ) Esc
ஈ) Ctrl + Z
விடை:
இ) Esc

Question 2.
______________ படம் வரைவதற்குப் பயன்படும் திரையின் பெரும் பகுதியாகும்.
அ) கருவிப்பட்டை
ஆ) படம் வரையும் பகுதி
இ) பலவிதக்கருவிகள்
ஈ) வண்ண ங்கள்
விடை:
ஆ) படம் வரையும் பகுதி

Question 3.
Scout என்பது எதற்கு பயன்படுகிறது?
அ) 10 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்
ஆ) 100 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்
இ) 1000 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்
ஈ) மேற்கூரிய அனைத்தும்
விடை:
அ) 10 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்

Question 4.
செயல் மீட்டல் (Redo) என்பதன் குறுக்கு வழி விசை எது?
அ) Ctrl + x
ஆ) Ctrl + z
இ) Ctrl + y
ஈ) Ctrl +r
விடை:
இ) Ctrl + y

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
_____________ என்பது கணிதம் கற்பதற்கான காணொலி விளையாட்டாகும்.
விடை:
Tux Math

Question 2.
______________ கருவியைக் கொண்டு வரைந்த ஓவியத்தை அச்சு எடுக்கலாம்.
விடை:
அச்சு

Question 3.
_____________ குறுக்குவழி விசைகள் ஏற்கனவே வரைந்த ஓவியத்தினைத் திறக்கலாம்.
விடை:
Ctrl + O

Question 4.
____________ கருவியினை பயன்படுத்தி பலவகையான முத்திரைகளை அல்லது படங்களைப் பதிக்கலாம்.
விடை:
முத்திரைக் கருவி

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை

Question 5.
___________ கருவியில் பல சிறப்புக் கருவிகள் உள்ளன.
விடை:
விந்தைக்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை 1

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
விந்தைக் கருவி என்றால் என்ன?
விடை:

  • விந்தைக் கருவியில் பல சிறப்புக் கருவிகள் உள்ளன.
  • வலது பக்கத்தில் விரும்பும் விந்தை விளைவைத் தேர்ந்தெடுத்து, அதனைப் படத்தின் மீது இழுத்தோ அல்லது சொடுக்கியோ உபயோகிக்கலாம்.

Question 2.
தூரிகை (Paint Brush) என்றால் என்ன?
விடை:

  • இக்கருவியினைப் பயன்படுத்தி விரும்பும் ஓவியம் வரையலாம்.
  • வலது பக்கத்தில் உள்ள விதவிதமான தூரிகைகளைத் தேர்ந்தெடுத்து வண்ணம் தொட்டு வரையலாம்.

Question 3.
Ace விளையாட்டின் பயன் யாது?
விடை:

  • 20 வரத்தக்க வகையில் நான்கு கணிதச் செயல்பாடுகளையும் பயன்படுத்துதல்.
  • இதில் குறை எண்கள் மற்றும் விடுபட்ட எண்கள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.

Question 4.
அழிப்பான் (Eraser) பயன் யாது?
விடை:

  • இக்கருவி வண்ணத்தூரிகையை போலவே இருக்கும்.
  • இதனை இழுத்து அல்லது சொடுக்கி படங்களை அழிக்கலாம்.

Question 5.
முத்திரை கருவி (Stamp tool) பயன் யாது?
விடை:
இக்கருவியினை பயன்படுத்தி பலவகையான முத்திரைகளை அல்லது படங்களைப் பதிக்கலாம்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை 2