Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

7th Social  Science Guide பெண்கள் மேம்பாடு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல?
அ) மோசமான பேறுகால ஆரோக்கியம்
ஆ) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை
இ) எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவுதல்
ஈ) பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்
விடை:
ஆ) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை

Question 2.
பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை
அ) பெண் குழந்தைகள்; பெண்களின் பிரச்சனை
ஆ) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்
இ) மூன்றாம் உலக நாடுகள் மட்டும்
ஈ) வளர்ந்த நாடுகள் மட்டும்
விடை:
ஆ) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 3.
பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?
அ) பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
ஆ) பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்
இ) மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை
ஈ) மேலே உள்ள அனைத்தும்
விடை:
ஈ) மேலே உள்ள அனைத்தும்

Question 4.
வளரும் நாடுகளில் சிறுவர்களை விட பெண் குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவறவிடுவது ஏன்?
அ) பள்ளிக் கல்வி கட்டணம் உயர்வு காரணமாக, சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்
ஆ) பெண் குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது
இ) குழந்தைத் திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது
ஈ) மேலே உள்ள அனைத்தும்
விடை:
ஈ) மேலே உள்ள அனைத்தும்

II . கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இந்தியாவில் பெண்கள் கல்வியை செயல்வடிவாக்கிய ஜோதிராவ் புலே நினைவில் வைக்கப்படுகிறார் அவர், தனது மனைவியுடன் ………………….. 1848 இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்
விடை:
சாவித்ரிபாய் புலே

Question 2.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண்
விடை:
சுஷ்மா ஸ்வராஜ்

Question 3.
முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) ……….. ஆவார்.
விடை:
காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 4.
புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் ……………
விடை:
அருந்ததி ராய்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 2

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க

Question 1.
பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க
கூற்று (கூ) : இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள்.
காரணம் (கா) : சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று (கூ) : பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது.
காரணம் (கா) : வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண் சிசுக் கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும் .
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பல்வேறு பாத்திரங்களை பற்றி விவாதிக்கவும்.
விடை:

  • சமுதாயத்தில் பெண்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து பல்வேறு உறவுமுறைகளில் தன்னையே ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
  • பெண்கள் தங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை மகளாக, சகோதரியாக மனைவியாக, தாயாக இன்னும் பலவாறாக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
  • எவ்வாறாயினும் அவர்கள் முக்கிய பங்கு வகிப்பது மனைவி மற்றும் தாய் என்பதாகும்.

Question 2.
பாலின சமத்துவம் என்றால் என்ன?
விடை:
பாலின சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரது நடத்தைகளும், தேவைகளும் வேறுபட்டு காணப்பட்டாலும் அவர்கள் சமத்துவமிக்கவர்களாகவே கருதப்படுகின்றனர். அதாவது ஆண், பெண் இருவரும் சமம் என்பதல்ல. ஆனால் அவர்களின் உரிமைகள் பொறுப்புகள், வாய்ப்புகள் இவை அனைத்தும் அவர்கள் ஆண், பெண் என்பதைப் பொறுத்து அமைவதில்லை.

Question 3.
பெண்கள் உரிமையை விளக்குக.
விடை:
பெண்கள் உரிமைகள் அரசியலமைப்பு சட்டத்தின்படி முக்கியமாக சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா பெண்களுக்கு என்று பல உரிமைகளை வகுத்துள்ளது. ஆண், பெண் இருவருக்கும் இடையில் காணப்படும் மணவிலக்கு, சொத்துரிமை, வேலைவாய்ப்பு மற்றும் பல செயல்களில் சட்ட உறுதி வழங்கியுள்ளது.

Question 4.
பெண்களின் மேம்பாட்டிற்கான அத்தியாவசிய காரணிகளை பட்டியலிடுக
விடை:
கல்வி :
ஒருவருக்கு அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் தனித்தன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.

பாலினப்பாகுபாடு:
பாலினப்பாகுபாடு பார்க்கும் சமூகம் எக்காலத்திலும் முன்னுேறுவதற்கான வாய்ப்பு அரிது. சாதி, இன, சமய பாகுபாடுகளை அடிப்படையாக கொண்ட சமூகம், முன்னேற்றம் அடையாது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 5.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதுக.
விடை:

  • 40 ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் அனைவருக்கும் கல்வி என்ற உரிமையை வலியுறுத்தி உள்ளது.
  • கல்வி பெறும் பெண் குழந்தை தாயான பின்பு பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் அரவணைப்பை வழங்குவதன் மூலம் சமுதாயத்திற்குச் சிறப்புச் சேர்க்கிறார்.
  • பெண் குழந்தைகளின் அவசியத் தேவையான கல்வி அறிவினைப் பெறவும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் அதனால் சமூகத்தில் அவர்களின் தகுதிநலை உயரவும், அவர்களின் சுயமுன்னேற்றத்திற்கும் உறுதுணையாய் இருக்கின்றது.

VI. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த ஏதேனும் பத்து பெண்மணிகளைப் பற்றிய படத்தொகுப்பை தயார் செய்க.
விடை:

7th Social  Science Guide பெண்கள் மேம்பாடு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைய காரணமாக அமையாதது எது?
அ) பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை
ஆ) பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை குறைவு
இ) பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது
ஈ) காலம் தாழ்த்திய திருமணம்
விடை:
ஈ) காலம் தாழ்த்திய திருமணம்

Question 2.
இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் …………………….
அ) திருமதி. நிர்மலா சீத்தாராமன்
ஆ) கிரண் பேடி
இ) அருந்ததி ராய்
ஈ) சுஷ்மா சுவராஜ்
விடை:
அ) திருமதி. நிர்மலா சீத்தாராமன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………………. என்பது பெண்களை வலிமையாக்குவது மட்டும் அன்று.
விடை:
பெண்ணியம்

Question 2.
…………………. பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது.
விடை:
கல்வி

Question 3.
………………… பாரம்பரியத்தை உடைத்த முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர்
விடை:
சாவித்ரிபாய் புலே

Question 4.
நீடித்த நிலையான வளர்ச்சிக்கு …………………. மற்றும் …………………… ஆகியன அவசியக் காரணிகள் ஆகும்.
விடை:
பெண்கள் மேம்பாடு பாலின சமத்துவம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 5.
உலகின் மொத்த மக்கள் தொகையில் ………………….. பெண்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விடை:
50%

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 3

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க

Question 1.
பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க
கூற்று (கூ) : உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பெண்களுக்கு அதிகாரமளித்தல் இலக்கை அடைய உண்மையிலேயே செயல்படுகின்றன.
காரணம் (கா) : உலகில் பெண்களை மேம்பாடு அடையச் செய்யாமல் உலக அமைதியையும், செழிப்பையும் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைய காரணம் என்ன?
விடை:
1. பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை 2. சமூகப்பாகுபாடு மற்றும் பொருளாதார சீரழிவு 3. பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது 4. பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை குறைவு 5. பள்ளிகளில் குறைந்த தக்கவைப்பு வீதம் மற்றும் அதிக இடைநிற்றல் விகிதம்

Question 2.
பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு என்ன?
விடை:

  • பெண்களின் பொருளாதார வளர்ச்சி அல்லது முன்னேற்றம் சமூகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று.
  • மனித உரிமைகளை முன்னெடுக்கும் போதும் அதன் வளர்ச்சியின் போதும் பெண்கள் மேம்பாடு அவசியமான நடைமுறைகளில் ஒன்றாகும்.
  • நீடித்த நிலையான வளர்ச்சிக்கு பெண்கள் முன்னேற்றம், மேம்பாடு மற்றும் பாலின சமத்துவம் அடைவது ஆகியன அவசியக்காரணிகள் ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 3.
பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை:

  1. பெண்களின் பொருளாதார மேம்பாடானது, பெண்கள் பாலியல் சமத்துவம் பெறுவதற்கும் உரிமைகளை அடைவதற்கும் வழிவகுக்கிறது.
  2. பெண்களைப் பொருளாதார முன்னேற்றமடைய செய்வதும், உலகில் பாலின இடைவெளிகளை குறைப்பதும் நிலைத்த நீடித்த இலக்கை அடைய உதவுகிறது.
  3. பொருளாதாரம் மேம்பாடு அடைகின்றது.

VI. விரிவான விடையளி

Question 1.
பெண் கல்வியின் இணையற்ற முக்கியத்துவங்கள் யாவை? ஏதேனும் இரண்டை விளக்குக.
விடை:

  1. அதிகரித்த கல்வியறிவு
  2. ஆள் கடத்தல்
  3. அரசியல் பிரதிநிதித்துவம்
  4. வளரும் குழந்தைகள்
  5. காலம் தாழ்த்திய திருமணம்
  6. வருமான சாத்தியம்
  7. மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல்
  8. வறுமை குறைப்பு

கல்வியறிவு:

  • உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோரில் கிட்டத்தட்ட 63 சதவிகிதம் பேர் பெண்கள்.
  • எனவே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும்.
  • அப்போதுதான் பின்தங்கிய நாடுகளும் முன்னேற்றம் அடையும்.

வருமான சாத்தியம்:
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் கூற்றுப்படி கல்வி ஒரு பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது.

ஒரு பெண் ஆரம்பக் கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகின்றது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

7th Social  Science Guide இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பொருட்சேதம், உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு இயற்கைக் காரணி ………………….
அ) இடர்
ஆ) பேரிடர்
இ) மீட்பு
ஈ) மட்டுப்படுத்தல்
விடை:
ஆ) பேரிடர்

Question 2.
பேரிடரின் விளைவைக் குறைக்கும் செயல்பாடுகள்.
அ) தயார் நிலை
ஆ) பதில்
இ) மட்டுப்படுத்தல்
ஈ) மீட்பு நிலை
விடை:
இ) மட்டுப்படுத்தல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 3.
ஒரு திடீர் நகர்வு அல்லது புவிமேலோட்டின் திடீர் நடுக்கம் …………………… என அழைக்கப்படுகிறது.
அ) சுனாமி
ஆ) புவி அதிர்ச்சி
இ) நெருப்பு
ஈ) சூறாவளி
விடை:
ஆ) புவி அதிர்ச்சி

Question 4.
கனமழையினால் திடீரென அதிக நீர் வெளியேறுதல் …………………….. என அழைக்கப்படுகிறது.
அ) வெள்ளம்
ஆ) சூறாவளி
இ) வறட்சி
ஈ) பருவ காலங்கள் 15
விடை:
அ) வெள்ளம்

Question 5.
…………………… வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினைத் தவிர்க்கலாம்.
அ) ரேஷன் அட்டை
ஆ) ஓட்டுநர் உரிமம்
இ) அனுமதி
ஈ) ஆவணங்கள்
விடை:
ஆ) ஓட்டுநர் உரிமம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மனிதனுக்கும், அவனுடைய உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு ……………
விடை:
பேரழிவுகள்

Question 2.
பேரிடரின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் …………… என அழைக்கப்படுகிறது.
விடை:
பேரிடர் மேலாண்மை

Question 3.
மிகப்பெரிய அழிவு ஏற்படுத்தும் அலைகளை ஏற்படுத்தும் நீரின் இடப்பெயர்வு ………….. எனப்படும்.
விடை:
சுனாமி

Question 4.
தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண் …………..
விடை:
101

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 5.
இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கக்கூடிய பேரிடரின் போது மனித வாழ்க்கை மற்றும் உடைமைகளை ………….. பேரிடர் மேலாண்மை எனப்படுகிறது.
விடை:
பாதுகாப்பது

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 2

IV. பின்வரும் வாக்கியங்களை கருத்திற்கொண்டு சரியான விடையை செய்க

Question 1.
கூற்று (A) : நவீன உலகத்தில் அனுதினமும் மகிழ்ச்சியாக வாழ முடியாது
காரணம் (R) : மாசடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் காரணமாக இயற்கை இடர் மற்றும் பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை

Question 2.
கூற்று (A) : திடீர் நுகர்வு அல்லது பூமியின் மேலேட்டில் ஏற்படும் நடுக்கம் புவி அதிர்ச்சி ஆகும்.
காரணம் (R) : டெக்டானிக் தட்டுகளின் நகர்வு, ஜனநெருக்கடி, பிளவு போன்றவை புவி அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன

அ) கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.

V. சுருக்கமாக விடையளிக்க

Question 1.
இடர் வரையறு.
விடை:
பொதுவாக இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு, மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும் நிலை, காயம், பொருட்சேதம், சொத்துக்கள் சேதமடைதல், வேலையிழப்பு, சுகாதார பாதிப்புகள், வாழ்வாதார இழப்பு, சமூக, பொருளாதார இடையூறு மற்றும் சுற்றுச்சூழல் சேதம் போன்றவையாகும்.

Question 2.
பேரிடர் என்றால் என்ன?
விடை:
ஒரு பேரிடர் என்பது பொதுவாக “சமூகத்தில் ஒரு கடுமையான இடையூறு, பரவலான பொருள், பொருளாதார, சமூக அல்லது சுற்றுச்சூழல் இழப்புகளை ஏற்படுத்துகிறது. இது பாதிக்கப்பட்ட சமூகத்தின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி சமாளிக்கும் திறனை மீறுகிறது”.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 3.
பேரிடர் மேலாண்மை சுழற்சியின் ஆறு நிலைகள் யவை?
விடை:

  • தயார் நிலை
  • மட்டுப்படுத்துதல்
  • கட்டுப்படுத்துதல்
  • துலங்கல்
  • மீட்டல்
  • முன்னேற்றம்

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள எச்சரிக்கை அமைப்பு சார்ந்த இரண்டு நிறுவனங்கள் எவை?
விடை:

  • தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை (SDRF)
  • மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA)

Question 5.
வெள்ளத்தினால் ஏற்படும் மூன்று விளைவுகள் பற்றி எழுதுக.
விடை:

  1. சொத்து மற்றும் உயிரிழப்பு
  2. மக்கள் இடப்பெயர்வு
  3. காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதல்.

Question 6.
இரயில் நிலையத்தில் பின்பற்றப்படவேண்டிய நான்கு நடவடிக்கைகள் குறித்து எழுதுக.
விடை:

  • இரயில் பாதுகாப்பு ஆலோசனைகளை தெரிந்து கொண்டு அதன்படி பின்பற்ற வேண்டும். இரயில் எந்த நேரமும், எந்த திசையிலும் வரக்கூடும்.
  • இரயில் நிலைய மேடையின் ஓரங்களில் அமரக்கூடாது.
  • தண்டவாளங்களைக் கடந்து செல்லக்கூடாது.
  • நடைமேடையை பயன்படுத்த வேண்டும்.

Question 7.
தொழிற்சாலை விபத்து அடிக்கடி நிகழக்கூடிய நான்கு வேறுபட்ட தொழிற்சாலைகளைப் பட்டியலிடுக.
விடை:

  • சுரங்கத் தொழிற்சாலை
  • வேதியியல் தொழிற்சாலை
  • அணுமின் தொழிற்சாலை
  • சிமெண்ட் தொழிற்சாலை

VI. வேறுபடுத்துக

Question 1.
புவி அதிர்ச்சி மற்றும் ஆழி பேரலை (சுனாமி).
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 3

Question 2.
வெள்ளம் மற்றும் சூறாவளி.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 4

Question 3.
இடர் மற்றும் பேரிடர்.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 5

VII. விரிவான விடையளி

Question 1.
பேரிடர் மேலாண்மை சுழற்சி பற்றி விளக்குக.
விடை:
பேரிடர் மேலாண்மை நிலைகள் ஆறு படிநிலைகளாகக் கொண்டு பேரிடர் சுழற்சியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பேரிடருக்கு முந்தைய நிலை :
கட்டுப்படுத்துதல் மற்றும் மட்டுப்படுத்துதல் :
எதிர்கால பேரழிவு அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தலின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். பேரழிவைக் குறைத்தல் என்பது தாக்கத்தின் அளவைக் குறைப்பதாகும். மட்டுப்படுத்துதல் என்பது ஆபத்தைக் குறைப்பது மற்றும் பாதிக்கக் கூடிய நிலைமைகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகும்.

தயார்நிலை:
இந்த படிநிலையானது அரசாங்கம், சமூகங்கள் மற்றும் தனி ஒரு மனிதன் பேரிடர் சூழ்நிலைகளை திறம்பட சமாளிக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் உள்ளடக்கியதாகும். உதாரணமாக, அரசின் அவசரநிலை திட்டங்கள், எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துதல், சரக்குகளின் பராமரிப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு, கல்வி மற்றும் தனிநபர் பயிற்சி போன்றவை அடங்கும்.

ஆரம்பகால எச்சரிக்கை :
பேரிடர் ஆரம்பிக்கும் நிலையில் பாதிக்கப்படக் கூடியதாக உள்ள பகுதிகளைப் பார்வை இடுவது மற்றும் பேரிடர் தொடங்க உள்ளது என்ற செய்தியினை மக்களுக்கு பாதிப்பில்லாத வழியில் தெரிவிப்பது போன்றவை ஆரம்ப கால எச்சரிக்கையாகும். பயனுள்ளதாக அமைய, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அளிக்கப்படும் எச்சரிக்கை நிகழ்வுகள் மக்கள் கல்வி மற்றும் பயிற்சியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

பேரிடரின் தாக்கம் :
பேரிடரின் தாக்கம் என்பது பேரிடர் நிகழும் கால அளவு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் குறிக்கும். பேரிடர் நிகழும் கால அளவு என்பது அச்சுறுத்தலின் வகையைப் பொறுத்து அமையும். புவி அதிர்ச்சியின்போது நில நடுக்கமானது சில நொடிகள் நிகழும். அதுவே, ஆழிப்பேரலை ஏற்பட காரணமாகிறது.

பேரிடரின் போது:
துலங்கல்:
கட்டுப்பாட்டு அறைகளை அமைத்தல், தற்செயல் திட்டத்தை செயல்படுத்துதல், எச்சரிக்கை விடுதல், வெளியேற்றுவதற்கான நடவடிக்கை, மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது, தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குதல். ஒரே நேரத்தில் நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட எந்தவொரு பேரிடருக்கும் இது முதல் கட்ட பதிலைக் குறிக்கிறது.

பேரிடருக்குப் பின் மீட்பு நிலை:
மீட்புநிலை என்பது அவசரகால நிவாரணம் வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு போன்ற 3 நிலைகளை உள்ளடக்கியது.

வளர்ச்சி:
வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் என்பது தற்போதைய செயல்பாடு ஆகும். நீண்ட காலத் தடுப்பு மற்றும் பேரிடரைக் குறைத்தல் என்பது வெள்ளப்பெருக்கினைத் தடுக்கும் வகையில் ஏரிக்கரை கட்டுதல், வறட்சியை ஈடுகட்ட நீர்ப்பாசன வசதிகள் செய்தல், நிலச்சரிவினைச் சரிசெய்ய மரம் நடுதல், சூறாவளி காற்று மற்றும் நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் வீடுகள் கட்டுதல் ஆகியவை அடங்கும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 2.
வெள்ளம் மற்றும் அதன் விளைவுகளையும் அதனை மட்டுப்படுத்துதல் பற்றியும் விளக்குக.
விடை:
வெள்ளப்பெருக்கு:
கனமழை, புயல், பனி உருகுதல், ஆழிப்பேரலை (சுனாமி) அல்லது அணைக்கட்டு உடைதல் போன்றவற்றால் திடீரென ஏற்படும் அதிக அளவிலான நீர் வெளியேறுதலே வெள்ளப்பெருக்கு என்கிறோம்.

பாதிப்புகள்:

  1. சொத்து மற்றும் உயிரிழப்பு
  2. மக்கள் இடப்பெயர்வு
  3. காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதல்.

மட்டுப்படுத்துதல் :

  • வெள்ளநீர் வடிய ஏற்பாடு செய்தல், வெள்ளப்பெருக்கினை தடுக்கும் வகையில் ஏரிக்கரை கட்டுதல்.
  • மக்களையும் அவர்கள் உடைமைகளையும் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்புதல்

Question 3.
ஏதேனும் 5 பொதுவான வாழும் நுட்பங்கள் பற்றி எழுதுக.
விடை:
புவி அதிர்ச்சியின் போது மேஜையின் கீழ் செல். தரையில் மண்டியிடு மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உறுதியான சுவற்றின் அருகில் செல், தரையில் அமர் மற்றும் தரையை இறுகப் பிடித்துக்கொள் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். டார்ச் விளக்கினை மட்டும் பயன்படுத்தவும்.

தீ விபத்து எனில் அவசர சேவைக்கு 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஒருவருக்கு ஆடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், அவரை ஓடாமல் தரையில் படுத்து உருள செய்ய வேண்டும்.

சாலை விபத்தினைத் தவிர்க்க வேண்டுமெனில், ஓட்டுநர் உரிமம் பெற்றவரை மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போதும், வாகனத்தை இயக்கும் போதும் பின்பற்றபட வேண்டிய சாலைவிதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இரயில் நிலைய மேடையின் ஓரங்களில் அமரக்கூடாது.

Question 4.
புவி அதிர்ச்சி, அதன் பாதிப்புகள் மற்றும் மட்டுப்படுத்துதல் படிநிலைகள் பற்றி எழுதுக.
விடை:
புவி அதிர்ச்சி:
ஒரு திடீர் நகர்வு (அல்லது) புவி மேலோட்டில் ஏற்படும் நடுக்கத்தை நிலநடுக்கம் என அழைக்கின்றோம். புவித்தட்டுகளின் நகர்வு, நிலச்சரிவு, மற்றும் மேற்பரப்பு பிளவு போன்றவை நிலநடுக்கத்திற்கு காரணமாகின்றன.

பாதிப்புகள்:
அதிகப்படியான நில நடுக்கத்தால் கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் அணைக்கட்டுகள் இடிந்து சேதமடைகிறது. நிலநடுக்கத்தால், வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு, தீ, மின்சாரம் துண்டிக்கப்படுதல் மற்றும் நீர் குழாய்கள் உடைதல் போன்றவை நிகழ்கின்றன. இது ஆற்றின் பாதையைக்கூட மாற்றியமைக்கிறது.

பேரிடருக்கு முந்தைய நிலை:

  • அவசரநிலை திட்டங்கள்
  • எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துதல்
  • சரக்குகளின் பராமரிப்பு
  • பொது மக்கள் விழிப்புணர்வு

பேரிடரின் போது:

  • செயல்படுத்துதல், எச்சரிக்கைவிடுதல், வெளியேற்றுவதற்கான நடவடிக்கை
  • பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது

பேரிடருக்குப்பின் மீட்பு நிலை:
மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு

VIII. உயர்சிந்தனை வினாக்கள்

Question 1.
நான் ஏன் இயற்கை பேரிடர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?
விடை:
பேரிடருக்குப்பின் மீட்டெடுத்தல் என்பதை விட இயற்கைப் பேரிடரை மட்டுப்படுத்துதல் என்பது குறைந்த செலவுடையதாகும். இடரை மட்டுப்படுத்துதல் என்பது எதிர்கால பேரிடர் விளைவுகளைக் குறைப்பதற்கான செயல்திட்டம் ஆகும்.

நிறுவன மற்றும் செயல்பாட்டு திறன்கள் வளர்த்தல், சமாளிக்கும் திறனை அதிகப்படுத்துதல் போன்றவை பேரிடர் மேலாண்மை எனப்படும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 2.
இந்தியாவில் நிலச்சரிவு அடிக்கடி நிகழும் 4 இடங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • மேற்கு கடற்கரைப் பகுதி மற்றும் கொங்கண மலைப்பகுதி
  • கிழக்கு கடற்கரைப் பகுதி
  • வடகிழக்கு மலைப்பகுதிகள்
  • வடமேற்கு மலைப்பகுதிகள்

7th Social  Science Guide இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Additional important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
2004 சுனாமிக்குப் பிறகு, தமிழகத்தைத் தாக்கிய மிக மோசமான புயல் ………………..
அ) கஜா
ஆ) தானே
இ) மகா
ஈ) ஒக்கி
விடை:
அ) கஜா

Question 2.
…………………… மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைக்கு பொறுப்பு ஆகும்.
அ) தமிழ் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்
ஆ) மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்
இ) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஈ) விண்வெளித்துறை
விடை:
ஆ) மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்

Question 3.
………………….. என்பது மக்கள் கூட்டத்தில் திடீரென ஏற்படும் பாதிப்பை குறிக்கும்.
அ) சுனாமி
ஆ) வெள்ளப்பெருக்கு
இ) சூறாவளி
ஈ) நெரிசல்
விடை:
ஈ) நெரிசல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
……….. ஓரங்களில் அமரக்கூடாது.
விடை:
இரயில் நிலைய மேடையின்

Question 2.
சுனாமி என்ற சொல் …………………… சொல்லிலிருந்து பெறப்பட்டது.
விடை:
ஜப்பானிய

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 3.
………… மற்றும் ……….. இரண்டுமே பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
விடை:
இடர், பேரிடர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 6

IV. பின்வரும் வாக்கியங்களை கருத்திற்கொண்டு சரியான விடையை செய்க

Question 1.
கூற்று (A) : இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும்.
காரணம் (R) : ஹரிக்கேன் என்பது ஒரு இயற்கை இடர். இந்த சூறாவளி நிலத்தை அடையும் பொழுது கட்டடங்களையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்துகிறது.

அ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.

V. சுருக்கமாக விடையளி

Question 1.
நெரிசல் – வரையறு.
விடை:
நெரிசல் என்பது மக்கள் கூட்டத்தில் திடீரென ஏற்படும் பாதிப்பை குறிக்கும். காயங்கள், மூச்சுத்திணறல் மற்றும் மிதித்தலினால் ஏற்படும் காயம், போன்றவை இதன் விளைவாக அமையும். பெரிய அளவிலான மக்கள் நெரிசலினால் ஏற்படும் பேரிடர் எளிமையான கூட்ட மேலாண்மை உத்திகளால் தடுக்க முடியுமென நம்பப்படுகிறது.

Question 2.
தீ விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?
விடை:
தீ என்பது ஒரு பேரிடர். அது குறுகிய மின்சுற்று, வேதியியல் தொழிற்சாலை. தீப்பெட்டி மற்றும் வெடி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தினைக் குறிக்கும்.

Question 3.
தீயின் மூன்று அம்சங்கள் யாவை?
விடை:

  • கண்டறிதல்
  • தடுத்தல்
  • அணைத்தல்

Question 4.
தொழிற்சாலை பேரிடர் என்றால் என்ன?
விடை:
தொழிற்சாலையானது அதன் உற்பத்தி, மற்றும் எஞ்சிய கழிவுகளை அகற்றுதல், அணுமின் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களால் பல ஆபத்துக்களை எதிர் கொள்கின்றன. உதாரணம்: போபால் விஷவாயு கசிவு.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 5.
இடரை மட்டுப்படுத்துதல் முக்கியமானது ஏன்?
விடை:
பேரிடருக்குப்பின் மீட்டெடுத்தல் என்பதை விட இயற்கைப் பேரிடரை மட்டுப்படுத்துதல் என்பது குறைந்த செலவுடையதாகும். இடரை மட்டுப்படுத்துதல் என்பது எதிர்கால பேரிடர் விளைவுகளைக் குறைப்பதற்கான செயல்திட்டம் ஆகும்.

VI. விரிவான விடையளி

Question 1.
புயல் என்றால் என்ன? அதன் பாதிப்புகள் யாவை?
விடை:
புயல் :
உயர் அழுத்தத்தால் சூழப்பட்ட குறைவழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று “புயல்” என அழைக்கப்படுகிறது.

பாதிப்புகள்:
வெப்ப மண்டல சூறாவளியால் உருவாகும் முக்கிய பாதிப்புகளில் கனமழை, பலத்த காற்று, கரையின் அருகில் பெரிய புயல் மற்றும் சுழல்காற்று உள்ளடங்கும்.

Question 2.
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அண்மையில் ஏற்பட்ட இடர்கள் பற்றி எழுதுக.
விடை:
2018மே2மற்றும் 3 தேதியில் அதிகதிசைவேகத்துடன்வீசிய புழுதிப்புயல் வட இந்தியாவின் ஒரு பகுதியைத் தாக்கியது. அதில் உத்திரபிரதேசத்தில் 43 பேர், இராஜஸ்தானில் 35 பேர் மற்றும் பிற மாநிலத்திலும் பலர் இறந்தனர். 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த காற்றானது 8000 மின்கம்பங்களை கீழே சாய்த்தது. நூற்றாண்டுகளாக வாழ்ந்த மரங்களையே வேரோடு சாய்த்தது.

2004 சுனாமிக்குப் பிறகு, தமிழகத்தைத் தாக்கிய மிக மோசமான புயல் கஜா. இது கடலோர மாவட்டங்களில் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியது, குறிப்பாக வேளாண்மையை சீர்குலைத்தது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 7

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

7th Social  Science Guide நிலவரைபடத்தை கற்றறிதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நிலவரைபடம் உருவாக்குதலின் அறிவியல் பிரிவு என அழைக்கப்படுகிறது …………………….
அ) புவியியல் (ஜியோகிராஃபி)
ஆ) கார்டோகிராஃப்ட்
இ) பிஸியோகிராபி
ஈ) பௌதீக புவியியல்
விடை:
ஆ) கார்டோகிராஃப்ட்

Question 2.
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கும் …………………. திசைகள் ஆகும்.
அ) முக்கியமான
ஆ) புவியியல்
இ) அட்சரேகை
ஈ) கோணங்கள்
விடை:
அ) முக்கியமான

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 3.
கலாச்சார நிலவரை படங்கள் என்பன ……………………. அமைப்புகளைக் காட்டுகின்றன.
அ) இயற்கையான
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட
இ) செயற்கையான
ஈ) சுற்றுச்சூழல்
விடை:
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக …………………. அமைகிறது.
விடை:
நிலவரைபடம்

Question 2.
முதன்மை திசைகளுக்கு இடையே உள்ள திசைகள் இடைநிலை ………………… எனப்படும்.
விடை:
திசைகள்

Question 3.
நிலவரைபடத்தில் உள்ள …………………. வரைபடத்தில்பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் மற்றும் சின்னங்களை விளக்குகிறது.
விடை:
குறிப்பு

Question 4.
காடாஸ்ட்ரல் நிலவரைபடங்கள் …………………… என அழைக்கப்படுகின்றன
விடை:
கிராமம் (அல்லது) நகர்ப்புற நிலவரைபடம்

Question 5.
சிறிய அளவை நிலவரைபடங்கள் ……… மற்றும் ………. போன்ற அதிக பரப்பளவு இடங்களைக் காட்ட உதவுகின்றன.
விடை:
கண்டங்கள், நாடுகள்

III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக

Question 1.
வடகிழக்கு, அளவை, வடமேற்கு மற்றும் கிழக்கு.
விடை:
அளவை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 2.
வெண்மை , பனி, உயர்நிலம் மற்றும் சமவெளி.
விடை:
வெண்மை

Question 3.
நில அமைப்பு நிலவரைபடம், மண் நிலவரைபடம், இயற்கை அமைப்பு நிலவரைபடம் மற்றும் நிலவரைபட நூல்.
விடை:
நிலவரைபட நூல்

Question 4.
வானிலை முன்னறிவிப்பு, காலநிலை, மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை.
விடை:
காலநிலை

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 2

V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க

Question 1.
i. நிலவரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நிலவரைபடங்கள் கட்டமைக்கப்பட்ட நகர் தொகுதி ஆகும்.
ii. நிலவரைபட நூலின் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன.
iii. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

அ) 1 மற்றும் iii சரி
ஆ) ii மற்றும் iii சரி
இ) i மற்றும் ii சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iii சரி

Question 2.
கூற்று 1 : உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமாண மாதிரி.
கூற்று 2 : இதனை இது கையாள்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும் எளிது. சுருட்டியோ அல்லது மடித்தோ கையில் எடுத்துச் செல்வதற்கும் எளிது.

அ) கூற்று 1 சரி, 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று 1 சரி, 2 தவறு

VI. பின்வருவனவற்றிற்கு பெயரிடுக

Question 1.
தட்டையான பரப்பில் பூமியைக் குறிப்பது.
விடை:
நிலவரைபடம்

Question 2.
நிலவரைபடத்தில் உள்ள தூரத்திற்கும் நிலத்தில் உள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம்.
விடை:
அளவை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 3.
தரைவழி மற்றும் சாலைவழி போக்குவரத்தினைக் காட்ட உதவும் குறியீடு.
விடை:
போக்குவரத்து நிலவரைபடம்

Question 4.
வேறுபட்ட நிலவரைபடங்களை உள்ளடங்கிய புத்தகம்.
விடை:
நிலவரைபட நூல்

Question 5.
நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலவரைப்படம்.
விடை:
அரசியல் நிலவரைபடம்

VII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க

Question 1.
நிலவரைப்படம் என்றால் என்ன?
விடை:
நிலவரைபடம் :
நிலவரைபடம் என்பது புவியின் முழு பகுதி அல்லது ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவையில் வரையப்படுவதாகும்.

நிலவரைபடமானது கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள், மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் விவரங்களைக் காட்டுவதாக வரையப்படுகிறது.

Question 2.
கார்டோகிராஃபி என்றால் என்ன?
விடை:
கார்டோகிராஃபி:
நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல் என்பது கார்டோகிராஃபி என – அழைக்கப்படுகிறது. (கார்டே – நிலவரைபடம் ; கிராபிக் – வரைதல்)

Question 3.
முதன்மை திசைகள் யாவை?
விடை:
முதன்மை திசைகள்: –

  • வடக்கு
  • கிழக்கு
  • மேற்கு
  • தெற்கு

Question 4.
நிலவரைபட நூல் என்பது என்ன?
விடை:
நிலவரைபட நூல்:

  1. நிலவரைபட நூல் என்பது பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம் ஆகும்.
  2. நிலவரைபட நூல் படங்கள் அதிக பரப்பளவிலான கண்டங்கள் மற்றும் நாடுகளைக் காட்டும் சிறிய அளவை வரைபடங்களைக் கொண்டது.

Question 5.
நிலவரைபட நூலின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:
நிலவரைபட நூலின் வகைகள்:

  • பள்ளி நிலவரைபட நூல்
  • மேம்படுத்தப்பட்ட நிலவரைபட நூல்
  • பிராந்திய நிலவரைபட நூல்
  • தேசிய நிலவரைபட நூல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 6.
நிலவரைபடத்தின் பயன்கள் யாவை?
விடை:
நிலவரைபடத்தின் பயன்கள்:

  • ஓர் இடத்தினை நேரில் சென்று பார்க்காமல் நிலத்தோற்றம் மற்றும் நில அமைப்புகளின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.
  • நிலவரைபடங்கள் இராணுவத்தின் திட்டமிடல் பணியில் மகத்தான செயல்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
  • விமானங்கள் குறிப்பிட்ட இடத்தை சேரவும், கப்பல் கடலில் பாதுகாப்பாக செல்லவும் உதவுகின்றது.
  • நிலவரைபடங்கள் வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.

VIII. விரிவான விடையளிக்க

Question 1.
நில வரைபடத்தின் முக்கிய கூறுகள் யாவை? அவற்றைப் பற்றி எழுதுக?
விடை:
நில வரைபடத்தின் முக்கிய கூறுகள்:

  • தலைப்பு
  • திசை
  • அளவை
  • குறிப்பு (அல்லது) சின்னங்களின் விளக்கங்கள் போன்றவை நிலவரைபடத்தின் அடிப்படைக்கூறுகள் ஆகும்.

தலைப்பு:

  • ஒவ்வொரு நிலவரைபடமும் அப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விவரிக்கும் தலைப்பினை கொண்டிருக்கும்.
  • இந்திய நதிகள் என்ற தலைப்பு கொண்ட நிலவரைபடம் இந்திய நதிகளைப் பற்றி விளக்குவதாகும்.

திசைகள் :
வரைபடங்கள் பொதுவாக வடக்கு நோக்கிய நிலையில் வரையப்படுகிறது. வடக்கு என்பது ‘எனும் எழுத்தால் அம்புக்குறியீட்டுடன் குறிக்கப்படுகிறது. அது நிலவரைபடத்தில் மற்ற திசைகளை (கிழக்கு, மேற்கு, தெற்கு) கண்டறிய உதவுகிறது.

அட்சரேகைகள் மற்றும் தீர்க்கரேகைகள் விளிம்புகளில் வரையப்படுகிறது.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 3

அளவை:

  • நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரத்திற்கும் நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையேயுள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம் நிலவரைபடத்தின் அளவை எனப்படும்.
  • 1 செ.மீ. = 10 கி.மீ நிலவரைபடத்தில் 1 செ.மீ. = நிலத்தில் 10 கி.மீ.)

குறிப்பு:

  • நிலவரைபடத்தில் வேறுபட்ட இயற்கை மற்றும் கலாச்சார அம்சங்களைக் காட்ட பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் மற்றும் குறியீடுகளைக் குறித்து விளக்குவது.
  • தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சின்னம் மற்றும் குறியீடுகள் மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன.

Question 2.
நில வரைபடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வழிகள் யாவை?
விடை:
நில வரைபடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வழிகள் :

  • நிலவரைப்படம் என்பது புவியின் முழு பகுதி (அல்லது) ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவையில் வரையப்படுவதாகும்.
  • அவை கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள், மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் உட்பட சில குறிப்பிட்ட விவரங்களைக் காட்டுவதாக வரையப்படுகிறது.
  • நிலவரைபடங்கள் அமைப்புகள் குறித்து புரிந்து கொள்ள வழி வகுக்கின்றது.
  • இயற்கை அமைப்புகள் (மலைகள், பீடபூமிகள், சமவெளிகள்)
  • நீர்நிலை அமைப்புகள் (ஆறு, ஏரி, கடல்)
  • கலாச்சார அமைப்புகள் (சாலைகள், குடியிருப்புகள்)

Question 3.
கருத்தின் அடிப்படையில் வரைபடத்தை வகைப்படுத்தவும்?
விடை:

  • நிலவரைபடம் புவியின் முழு பகுதி (அல்லது) ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் வரையப்பட்டதாகும்.
  • ஒவ்வொரு நிலவரைபடமும் அதன் வடிவமைப்பு, பொருளடக்கம் மற்றும் கட்டமைப்பில் தனித்துவமுடையது.
  • பொதுவான சில அமைப்புகளின் அடிப்படையில் நிலவரைபடங்கள் பலவகைப்படும். (அளவை, கருத்து)

கருத்தின் அடிப்படையிலான நிலவரைபடங்கள் :

  • நிலத்தோற்ற வரைபடம்
  • புவியியல் வரைபடம்
  • காலநிலை வரைபடம்
  • மண் நிலவரைபடம்
  • கலாச்சார நிலவரைபடம்
  • அரசியல் நிலவரைபடம்
  • மக்கள் தொகை நிலவரைபடம்
  • பொருளாதார நிலவரைபடம்
  • போக்குவரத்து நிலவரைபடம்
  • கருத்து நிலவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 4.
நில வரைபடம் மற்றும் புவி மாதிரிகளை வேறுபடுத்தி எழுதுக?
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 4

Question 5.
அளவையின் அடிப்படையில் நில வரைப்படத்தின் வகைகளை விரிவாக எழுது?
விடை:
நிலவரைபடத்தின் அளவை = நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரம் : நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரம்.

அளவையின் அடிப்படையில் நிலவரைபடங்கள் :

  • பெரிய அளவை நிலவரைபடம்
  • நிலஅளவைப் படங்கள்
  • தலவரைபடம்
  • சிறிய அளவை வரைபடங்கள்
  • சுவர் வரைபடங்கள்
  • நிலவரைபட நூல்

பெரிய அளவை நில வரைபடம் :

  • குறைந்த பரப்பு இடங்கள் குறித்த அதிக விவரங்கள்.
  • ஒப்பீட்டளவில் பெரிய பகுதிகளில் வரையப்படுகிறது.

நிலஅளவைப் படங்கள் :
கிராமம் மற்றும் நகர்ப்புற நிலம் மற்றும் வீடு இருப்பிடம் குறித்து விளக்கம்.

தல வரைபடம்:
சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்கள் தருவன. இந்திய நில ஆய்வு மையத்தால் (சர்வே ஆப் இந்தியா) தயாரிக்கப்படுகிறது. (அமைப்புகள் – குன்றுகள், பள்ளத்தாக்குகள், கட்டடங்கள், சாலைகள், கால்வாய்கள்).

சிறிய அளவை வரைபடங்கள்:

  • பெரிய அளவிலான பகுதிகள் (கண்டங்கள் அல்லது நாடுகள்)
  • அளவை : 1 செ.மீ = 1000 கி.மீ.

சுவர் வரைப்படங்கள் :
வகுப்பறைகளிலும், அலுவலகங்களிலும் பயன்படுகிறது. குறைந்த அளவு விவரங்களுடன் அதிக பரப்பளவு இடங்கள்.

நிலவரைபட நூல்:
பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம்.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
பயணிகளின் முதன்மை கருவி நிலவரைபடம் ஏன்?
விடை:
பயணிகள் முதன்மை கருவி நிலவரைபடம்
ஏனெனில்
நிலவரைபடத்தினை வாசித்தல் என்பது புவியியல் ரீதியான இருப்பிடம், இயற்கை அமைப்புகள், நீர்நிலை அமைப்புகள் மற்றும் கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள வழிவகுக்கின்றது. வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை காட்டுகின்றன.

நிலவரைபடம் கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள் மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் பற்றிய விவரங்களைக் காட்டுகிறது.

போக்குவரத்து நிலவரைபடங்கள் சாலைகள், இருப்புப்பாதை, இரயில்வே நிலையம், விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றைக் காட்டுகின்றன.

மின்னணு வரைபடங்கள் உலகம் முழுவதும் அமைந்துள்ள புவியியல் பகுதிகள் மற்றும் தலங்களைக் குறித்து அதிகப்படியான தகவல்களை வழங்குகிறது.

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
இந்திய நிலவரைபடத்தில் பின்வரும் அமைப்புகளை உரிய சின்னங்கள் மற்றும் வண்ணங்களைக் கொண்டு குறித்துக் காட்டுக.
அ) ஏதேனும் இரண்டு மாவட்டத் தலைநகரங்களைக் குறித்துக்காட்டுக.
ஆ) ஏதேனும் ஒரு ஆற்று வழிப்பாதையை வரைந்திடுக.
இ) ஏதேனும் ஒரு மலையைக் குறித்துக்காட்டு. – (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 2.
கொடுக்கப்பட்டவற்றிற்கு மரபுச் சின்னங்கள் மற்றும் குறியீடுகளை வரைந்திடுக.
அ) பாலம்
ஆ) கால்வாய்
இ) அணைக்கட்டு
ஈ) கோவில்
உ) காடு
ஊ) இரயில்வே நிலையம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 5

7th Social  Science Guide நிலவரைபடத்தை கற்றறிதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நிலவரைபடம் ……………….. ஒரு முக்கிய கருவியாக அமைகிறது.
அ) புவியியலாளர்
ஆ) மண்ணியலாளர்
இ) சுற்றுலா பயணி
ஈ) பயணி
விடை:
அ) புவியியலாளர்

Question 2.
நிலவரைபடத்தை வரைந்து உருவாக்குபவர் ……………………
அ) கார்டோகிராஃபர்
ஆ) கார்டியாலஜிஸ்ட்
இ) ஆர்க்கிடெக்ட்
ஈ) ஆர்ட்டிஸ்ட்
விடை:
அ) கார்டோகிராஃபர்

Question 3.
நிலவரைபடத்தின் தேவையான அடிப்படைக்கூறு …………………
அ) திசை
ஆ) வண்ண ம்
இ) குறியீடு
ஈ) எழுத்துக்கள்
விடை:
அ) திசை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஒவ்வொரு நிலவரைபடமும் அதன் வடிவமைப்பு, பொருளடக்கம் மற்றும் கட்டமைப்பில் …………………….
விடை:
தனித்துவமுடையது

Question 2.
மின்ன ணு வரைபடங்கள் என்பது …………………… சேவைப்பகுதி .
விடை:
வலைதள

Question 3.
…………………… என்பது புவியின் முப்பரிமாண அமைப்பு.
விடை:
புவிமாதிரி

Question 4.
……………………. நிலவரைபடத்தில் பயன்படுத்த வேண்டிய முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளின் தொகுப்பினைத் தயாரித்துள்ளது.
விடை:
இந்திய நிலஅளவைத்துறை .

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 5.
…………………… என்பது புவியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் வரைவதாகும்.
விடை:
நிலவரைபடம்

III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக

Question 1.
விலங்குகளின் தோல், மின்னணு, ஈரநிலம், களிமண் பலகைகள்.
விடை:
மின்னணு

Question 2.
பள்ளத்தாக்குகள், சமவெளிகள், பீடபூமிகள், தொழிற்சாலைகள்.
விடை:
தொழிற்சாலைகள்

Question 3.
ஆறு, ஏரி, கடல், மலை .
விடை:
மலை

Question 4.
கட்டடங்கள், பயிர் வகைகள், சாலைகள், கால்வாய்கள்.
விடை:
பயிர்வகைகள்

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 6

V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க

Question 1.
i) நிலவரைபடங்கள் நமக்கு அதிக விவரங்களைக் கொடுக்கக்கூடியது.
ii) ஒவ்வொரு நிலவரைபடத்திற்கும் குறிப்பு உண்டு.
iii) நிலவரைபடங்கள் வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.

அ) i மற்றும் iii சரி
ஆ) ii மற்றும் iii சரி
இ) i மற்றும் ii சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iii சரி

Question 2.
கூற்று 1: நிலவரைபடங்கள் வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை படங்களாகக் காட்டுகின்றன.
கூற்று 2 : நிலவரைபடங்கள் இராணுவத்தினருக்கு முக்கியமல்ல

அ) கூற்று 1 சரி, 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று 1 சரி, 2 தவறு

VI. பின்வருவனவற்றிற்கு பெயரிடுக

Question 1.
நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல்.
விடை:
கார்டோகிராஃபி

Question 2.
1 செ.மீ = 1000 கி.மீ. வகை வரைபடம்.
விடை:
சிறிய அளவை வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 3.
தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான சின்னம் மற்றும் குறியீடுகள்.
விடை:
மரபுக்குறியீடுகளின் சின்னங்கள்

Question 4.
நிலம் மற்றும் வீட்டின் இருப்பிடம் குறித்து விளக்கும் நிலவரைபடம்.
விடை:
நிலஅளவைப் படங்கள்

Question 5.
வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படும் நிலவரைபடங்கள்
விடை:
சுவர் வரைபடங்கள்

VII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க

Question 1.
ஆரம்பகாலங்களில் நிலவரைபடம் தயாரிக்க பயன்பட்ட பொருட்கள் யாவை?
விடை:
நிலவரைபடம் தயாரிக்க பயன்பட்ட பொருட்கள் :

  • காகிதத்தோல் – விலங்குகளின் தோல்
  • பாப்பிரஸ் துணிகள்
  • ஈரநிலம்
  • களிமண் பலகைகள்

Question 2.
இயற்கையமைப்பு நிலவரைபடங்களில் காணப்படும் இயற்கைக் கூறுகள் யாவை?
விடை:
இயற்கையமைப்பு நிலவரைபடங்களில் காணப்படும் இயற்கைக் கூறுகள்:

  • நிலத்தோற்றம் (மலை)
  • பாறையியல்
  • மண்
  • மண்
  • வடிகால்
  • வானிலை கூறுகள்
  • தாவரங்கள்

Question 3.
தலவரைபடம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
தலவரைபடம்:
தலவரைபடம் சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்களைத் தருவன. இவை இந்தியாவின் நில ஆய்வு மையத்தால் (சர்வே ஆப் இந்தியா) தயாரிக்கப்படுகிறது.

இவை பெரிய அளவை நிலவரைபடங்கள். இவை இயற்கை அமைப்புகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றை விளக்குகின்றன.

Question 4.
நிலவரைபடத்திற்குத் தேவையான அடிப்படைக் கூறுகள் யாவை?
விடை:
தேவையான அடிப்படைக் கூறுகள்:

  • தலைப்பு
  • திசைகள்
  • அளவை
  • குறிப்பு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 5.
நிலவரைபடத்தில் உண்மையான வடிவத்தைக் காண்பிப்பது ஏன் கடினம்?
விடை:
நிலவரைபடத்தில் உண்மையான வடிவத்தைக் காண்பிப்பது கடினம், ஏனெனில்
உண்மையான அளவில் அவற்றை வரைய போதுமான இடமில்லை.

உண்மை வடிவங்கள்:

  • குடியிருப்புகள்
  • பாலங்கள்
  • தபால் நிலையங்கள்
  • இரயில்வே பாதைகள்
  • காடுகள்

Question 6.
நிலவரைபடத்தில் பயன்படும் ஏதேனும் நான்கு நிறங்களையும் அவை குறிக்கும் அமைப்புகளையும் எழுது?
விடை:
நிறங்கள் – அமைப்புகள்

  • வெள்ளை – பனி
  • பச்சை – காடுகள்
  • நீலம் – நீர்நிலைகள்
  • பழுப்பு – மலை, குன்று

VIII. விரிவான விடையளி

Question 1.
மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் (அல்லது) முறைக்குறிகளும் குறியீடுகளும் – விளக்குக.
விடை:
மரபுக்குறியீடுகளின் சின்னங்கள்:
தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான சின்னம் மற்றும் குறியீடுகள் மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

நிலவரைபடத்தின் புவிக்கூறுகள், முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளாக காட்டப்படுகின்றன. இவை கோட்டுக்குறியீடுகள் (அல்லது) நிறங்கள் போன்றவற்றால் காட்டப்படுகின்றன.
வெள்ளை → பனி
மஞ்சள் → விவசாயம்
பச்சை → காடுகள்
நீலம் → நீர்நிலைகள்
பழுப்பு → மலை, குன்று
சிவப்பு → குடியிருப்பு, சாலை
கருப்பு → இரயில்பாதை

இந்திய நில அளவைத் துறையானது (சர்வே ஆப் இந்தியா) நிலவரைபடத்தில் பயன்படுத்த வேண்டிய முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளின் தொகுப்பினைத் தயாரித்துள்ளது.
எ.கா:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 7

Question 2.
சிறு குறிப்பு வரைக.
அ) காலநிலை வரைபடங்கள்
ஆ) அரசியல் நிலவரைபடங்கள்
இ) பொருளாதார நிலவரைபடங்கள்
விடை:
அ) காலநிலை வரைபடங்கள்:
வெப்பநிலை பரவல், மழையளவு, மேகமூட்டம், ஒப்பு ஈரப்பதம், காற்று வீசும் திசை, வேகம் மற்றும் சில வானிலை கூறுகளைக் குறித்து காட்டுகின்றன.

ஆ) அரசியல் நிலவரைபடங்கள்:

  • ஒரு நாட்டின், மாநிலத்தின் அல்லது மாவட்டத்தின் நிர்வாக பிரிவுகளைக் காட்டுவதாகும்.
  • தொடர்புடைய நிர்வாகப் பிரிவுகளில் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தை எளிதாக்க இந்த வரைபடம் உதவுகிறது.

இ) பொருளாதார நிலவரைபடங்கள் :

  • வெவ்வேறு வகைப்பட்ட பயிர்வகைகள்
  • தாதுக்கள்
  • தொழிற்சாலை அமைவிடங்கள்
  • வாணிப வழிகள்
  • பொருள்களை எடுத்துச் செல்லும் வழிகள் குறித்து விளக்கும் படங்கள்

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 8

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

7th Social  Science Guide கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வட அமெரிக்காவையும் ஆசியாவையும் ………………. பிரிக்கிறது.
அ) பேரிங் நீர் சந்தி
ஆ) பாக் நீர் சந்தி
இ) மலாக்கா நீர் சந்தி
ஈ) ஜிப்ரால்டர் நீர் சந்தி
விடை:
அ) பேரிங் நீர் சந்தி

Question 2.
…………………… உலகின் சர்க்கரைக் கிண்ண ம் என அழைக்கப்படுகிறது.
அ) மெக்ஸிகோ
ஆ) அமெரிக்கா
இ) கனடா
ஈ) கியூபா
விடை:
ஈ) கியூபா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 3.
………………….. வட அமெரிக்காவின் நீளமான ஆறுகள் ஆகும்.
அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி
ஆ) மெக்கென்ஸி ஆறு
இ) புனித லாரன்சு ஆறு
ஈ) கொலரடோ ஆறு
விடை:
அ) மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி

Question 4.
உலகின் மிக நீண்ட மலைத்தொடர் ……………
அ) ஆன்டிஸ்
ஆ) ராக்கி
இ) இமயமலை
ஈ) ஆல்ப்ஸ்
விடை:
அ) ஆன்டிஸ்

Question 5.
பூமத்திய ரேகை பகுதியில் இருப்பதால் ………………… வடிநிலப்படுகை தினந்தோரும் மழை பெறுகிறது.
அ) மெக்கென்ஸி
ஆ) ஒரினாகோ
இ) அமேசான்
ஈ) பரானா
விடை:
இ) அமேசான்

II . கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வட அமெரிக்காவின் தாழ்வான பகுதியான ………………. கடல் மட்டத்திலிருந்து 86 மீட்டர் ஆழத்தில் உள்ளது.
விடை:
மரண பள்ளத்தாக்கு

Question 2.
உலகின் தலை சிறந்த மீன்பிடித் தளமாக ……………….. விளங்குகிறது.
விடை:
கிராண்ட் பேங்க்

Question 3.
சிலி அர்ஜென்டினா எல்லையில் அமைந்துள்ள …………………. ஆண்டிஸ் மலைத்தொடரின் உயரமான சிகரமாகும்.
விடை:
அகான்காகுவா சிகரம்

Question 4.
பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் ……………………. உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.
விடை:
அமேசான் காடுகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 5.
………………. ற்கு உலகின் காப்பி பானை என்ற பெயரும் உண்டு.
விடை:
பிரேசிலி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 2

IV. காரணம் கூறுக

Question 1.
வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் குறிப்பாக அமெரிக்கா மிதமான காலநிலையை அனுபவிக்கிறது.
விடை:
வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் குறிப்பாக அமெரிக்கா மிதமான காலநிலையை அனுபவிக்கிறது.
ஏனெனில்
தெற்குப் பகுதியில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையே நிலவி வருகிறது. மிஸிஸிப்பி மிஸ்சௌரி ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகளும் கோடைகாலங்களில் வீசும் வடகிழக்கு பருவக்காற்றினால் கோடை மழையைப் பெறுகின்றன.

சூடான ஈரப்பதம் மிகுந்த தென்மேற்குப் பருவக்காற்றுகள் வட அமெரிக்காவின்வடமேற்குப் பகுதிகளுக்கு மழைப்பொழிவை தருவதோடு அல்லாமல் அப்பகுதி வெப்பமாக இருக்கவும் உதவுகிறது.

Question 2.
அமெரிக்கா “உருகும் பானை” என அழைக்கப்படுகிறது.
விடை:
அமெரிக்கா “உருகும் பானை என அழைக்கப்படுகிறது.
ஏனெனில்
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான பல கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, கலந்து புதிய கலாச்சாரத்தை உருவாக்குகின்றன.

Question 3.
கியுடோ மற்றும் அமேசான் படுகை ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கியுடோ நிரந்தரமான வசந்த காலத்தை அனுபவிக்கிறது.
விடை:
கியுடோ மற்றும் அமேசான் படுகை ஒரே அட்சரேகையில் அமைந்திருந்தாலும் கியுடோ நிரந்தரமான வசந்த காலத்தை அனுபவிக்கிறது.
ஏனெனில்

  • அமேசான் வடிநிலப் பகுதியில் பூமத்தியரேகை செல்கிறது. இங்கு வெப்ப காலநிலை காணப்படுகிறது.
  • அதே அட்சரேகையில் ஆன்டஸ் மலைகளின் மேல் அமைந்திருக்கும் கியுடோ 9350 அடி கடல் மட்டத்திற்கு மேல் அமைந்து மிதமான காலநிலையை கொண்டுள்ளது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 4.
வெப்பமண்டல மீன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு பெரு.
விடை:
வெப்பமண்டல மீன்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு பெரு.
ஏனெனில்

  • ஹம்போல்ட் (பெரு) குளிர் நீரோட்டம் பிளாங்டன்களை (மீன்களின் முக்கிய உணவு) பெரு நாட்டிற்கு அருகில் கொண்டு சேர்க்கிறது.
  • ஆழ்கடல் மீன் தொழில் பெரு கடற்கரையில் 3000 கி.மீ. வரை கடலுக்குள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
  • 50க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் பிடிக்கப்படுகின்றன.
  • பெருவின் கடற்கரையில் 40க்கும் மேற்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன.

V. வேறுபடுத்துக

Question 1.
ராக்கி மலைகள் மற்றும் அப்பலேஷியன் மலைகள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 3

Question 2.
பிரெய்ரி மற்றும் பாம்பாஸ் புல்வெளிகள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 4

Question 3.
துந்திர பகுதி மற்றும் டைகா பகுதி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 5

VI. கீழ்கண்ட வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று (A) : வட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருத்தி நன்றாக வளருகிறது.
காரணம் (R) : மழையுடன் கூடிய வெப்பமான கோடைகாலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விளைவதற்கான ஏற்ற சூழல்களாக உள்ளன.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) காரணம் தவறு. கூற்று சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி.

Question 2.
கூற்று (A) : தென் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன.
காரணம் (R) : தொழில்மயமாவதற்கான அடிப்படை வசதிகள் குறிப்பாக போக்குவரத்து வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) கூற்று தவறு. காரணம் சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
இ) கூற்று தவறு. காரணம் சரி.

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
வட அமெரிக்காவின் எல்லைகளை கூறுக.
விடை:
வட அமெரிக்காவின் எல்லைகள்:

  • வடக்கு – ஆர்க்டிக் பெருங்கடல்
  • கிழக்கு – அட்லாண்டிக் பெருங்கடல்
  • மேற்கு – பசிபிக் பெருங்கடல்
  • தெற்கு – தென் அமெரிக்கா

Question 2.
மெக்கன்சி ஆறு பற்றி குறிப்பு வரைக.
விடை:
மெக்கன்சி ஆறு :

  • மெக்கன்சி ஆறு வட அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய ஆற்றுப்படுகையாக இருக்கிறது.
  • இது கிரேட் ஸ்லேவ் ஏரியில் ஆரம்பித்து ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கிறது.

Question 3.
வட அமெரிக்காவில் விளையும் பழங்களின் வகைகள் யாவை? அவற்றில் சில பழங்களைப் பட்டியலிடுக.
விடை:
சிட்ரஸ் வகை பழங்கள் விளைவிக்கப்படுகின்றன.
பழங்களின் பட்டியல் :

  • கிரான்பெரீஸ்
  • ப்ளூபெர்ரி
  • கான்கார்ட் திராட்சைகள்
  • ஸ்ட்ராபெர்ரி
  • நெல்லிக்கனி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 4.
எஸ்கிமோவின் வாழ்க்கை முறை பற்றி குறிப்பு வரைக.
விடை:
எஸ்கிமோவின் வாழ்க்கை முறை:

  1. எஸ்கிமோக்கள் கடும் குளிர் மற்றும் வாழ்வதற்கு கடினமான பகுதிகளில் வாழ்கிறார்கள் (மீன்கள் அதிகம் கிடைக்குமிடங்கள்).
  2. விலங்குகளின் மென்மையான முடிகளால் ஆன உடைகளை உடுத்துகிறார்கள். இஃலூக்களில் வாழ்கிறார்கள்.
  3. இவர்களால் சுற்றுச்சூழலை பெரிதும் மாற்றி அமைக்க இயலாத நிலை. எளிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

Question 5.
வட அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் யாவை?
விடை:
வட அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகள்:

  • வட அமெரிக்காவின் கிழக்குப்பகுதி
  • கிரேட் ஏரி பகுதி
  • மெக்ஸிகோ
  • மத்திய அமெரிக்கா

Question 6.
தென் அமெரிக்காவின் இயற்கை பிரிவுகளை எழுதுக.
விடை:
தென் அமெரிக்காவின் இயற்கை பிரிவுகள்:

  • ஆன்டஸ் மலைத்தொடர்
  • ஆற்றுப்படுகை (அல்லது) மத்திய சமவெளிகள்
  • கிழக்கு உயர்நிலங்கள்

Question 7.
4 மணி ‘கடிகார மழை’ என்றால் என்ன?
விடை:
4 மணி ‘கடிகார மழை’:

  1. பூமத்திய ரேகை பகுதிகளில் வெப்பச்சலன மழை கிட்டத்தட்ட தினமும் பிற்பகலில் நிகழ்கிறது.
  2. இந்நிகழ்வு பொதுவாக மாலை 4 மணிக்கு நிகழ்கிறது. எனவே இது 4 மணி ‘கடிகார மழை’ என்று அழைக்கப்படுகிறது.

Question 8.
தென் அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டலக் காடுகளில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை பட்டியலிடுக.
விடை:
தென் அமெரிக்க வெப்ப மண்டலக் காடுகள் பூமத்திய ரேகை காடுகள்):
தாவரங்கள்:

  • ரப்பர்
  • சீமைத்தேக்கு
  • கருங்காலி
  • லாக்வுட்
  • சிபா
  • பிரேசில் கொட்டை

விலங்குகள்:

  • அனகோண்டா
  • ஆர்மாடில்லோஸ்
  • பிரன்ஹா
  • குரங்கு
  • பாம்பு
  • முதலை
  • கிளிகள்

Question 9.
எஸ்டான்சியாஸ் என்றால் என்ன ?
விடை:
எஸ்டான்சியாஸ்:
கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் எஸ்டான்சியாஸ் என அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 10.
தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிகளை கூறுக.
விடை:
தென் அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்:

  • சர்க்கரை
  • காபி
  • கொக்கோ
  • புகையிலை
  • மாட்டிறைச்சி
  • சோளம்
  • கோதுமை
  • பெட்ரோலியம்
  • ஆளி விதை
  • இயற்கை எரிவாயு
  • பருத்தி
  • இரும்புத்தாது
  • தாமிரம்

VIII. பத்தியளவில் விடையளி

Question 1.
வட அமெரிக்காவின் கால நிலை பற்றி விளக்குக.
விடை:
வட அமெரிக்காவின் காலநிலை:
அட்சக்கோடுகளின் அடிப்படையில் வெப்பமண்டல பகுதி முதல் தந்திர பகுதி வரை வட அமெரிக்கக் கண்டம் பரவியுள்ளது. வட அமெரிக்கக் கண்டத்தில் ஆசியாவை போலவே பலதரப்பட்ட காலநிலைகள் காணப்படுகின்றன.

ராக்கி மலைத்தொடர் வடக்கு தெற்காக அமைந்திருப்பதால், ஆர்டிக் பகுதியில் இருந்து வீசும் கடுங்குளிர் காற்றினை தடுக்கும் அரணாக செயல்படவில்லை . மத்திய சமவெளிகளில் ஊடுருவும் குளிர் காற்றினால் நீண்ட கடுங்குளிரும் குறுகிய வெப்ப கோடையும் காணப்படுகிறது.

சூறாவளி புயல்களால் மழைப்பொழிவு உண்டாகிறது. மத்திய சமவெளிகளில் உறைபனியோடு கூடிய குளிர்காலமும் வெப்ப மண்டலம் போன்ற அதிக வெப்பமுடைய கோடை காலமும் காணப்படுகின்றது.

தெற்குப்பகுதியில் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையே நிலவி வருகிறது. மிஸிஸிப்பி மிஸ்சௌரி முகத்துவார பகுதிகள் மற்றும் வளைகுடா கடற்கரை பகுதிகளும் வடகிழக்குப் பருவக்காற்றினால் கோடை மழையைப் பெறுகின்றன.

அலாஸ்கா வெப்ப நீரோட்டம் வடமேற்கு கடற்கரை பகுதியில் பனி உறையாமல் இருப்பதற்கு காரணமாகிறது. மத்திய தரைக்கடல் காலநிலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காணப்படுகிறது.

Question 2.
வட அமெரிக்காவின் கனரக பொறியியல் தொழிற்சாலை பற்றி எழுதுக.
விடை:
வட அமெரிக்காவின் கனரக பொறியியல் தொழிற்சாலை:

  • கனரக பொறியியல் தொழிற்சாலைகள் என்பவை
    • கனமான மற்றும் பருமனான மூலப்பொருட்கள்
    • பெருமளவிலான எரிபொருள்
    • பெருமளவிலான மூலதனம்
    • பெருமளவிலான போக்குவரத்து செலவினங்கள் பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள்.
  • இவை இரும்பு எஃகு தொழிற்சாலைகளை சார்ந்துள்ளன.
  • ஆட்டோமொபைல் தொழிற்சாலை. வான்ஊர்தி தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை, இரயில்பெட்டி தொழிற்சாலை, விவசாய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முக்கிய கனரக தொழிற்சாலைகள் ஆகும்.
  • ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆட்டோமொபைல் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக விளங்குகிறது.
  • முக்கிய கனரக தொழில் மையங்கள்: டெட்ராய்ட், சிக்காகோ, பஃபலோ, இண்டியானாபோலிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், செயின்ட் லூயிஸ், பிலடெல்பியா, நியூயார்க், பால்டிமோர் மற்றும் அட்லாண்டா மற்றும் கனடாவின் வின்ஸர்.

Question 3.
தென் அமெரிக்காவின் ஆறுகள் பற்றி விவரிக்கவும்.
விடை:
தென் அமெரிக்காவின் ஆறுகள்:

  • இக்கண்டத்தின் முக்கிய ஆறுகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றன.
  • குறுகிய மற்றும் விரைவான ஆறுகள் பசிபிக் பெருங்கடலில் கலக்கின்றன. பெரு கடற்கரையோர ஆறுகள் சில நீர் பாசனத்திற்கும். நீர் மின்சார தயாரிப்பிற்கும் பயன்படுகின்றன.
  • அமேசான் தென் அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு மற்றும் உலகின் மிகப்பெரிய நதியமைப்பு ஆகும்.
  • ஆயிரக்கணக்கான கிளை நதிகள் > ரியோ, நீக்ரோ, மதீரா மற்றும் தாபாஜோஸ் முக்கியமானவை.
  • கிளை நதிகள் கடலில் கலக்கும் இடம் விரிவானது; வேகமானது (80 கி.மீ. தூரம் நன்னீர் )
  • ஒரினாகோ ஆறு கயானா உயர் நிலங்களில் தொடங்குகிறது. வடக்கு நோக்கி பாய்ந்து கரீபியன் கடலில் கலக்கிறது.
  • பராகுவே ஆறு இரு முக்கிய கிளை நதிகளைக் கொண்டது (பரானா மற்றும் உருகுவே). இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஆற்றுப்படுகை என அழைக்கப்படுகிறது.
  • அனைத்து ஆறுகளும் முகத்துவாரத்திலிருந்து உள்நோக்கி குறிப்பிட்ட தூரம் வரை போக்குவரத்திற்கு பயன்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 4.
தென் அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய இனங்கள் பற்றி எழுதுக.
விடை:
தென் அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய இனங்கள்:
தென் அமெரிக்கா உலகின் பலதரப்பட்ட கலவையான மக்கள்தொகையை கொண்டது. பெரும்பாலானோர் ஐரோப்பிய (ஸ்பானியர் மற்றும் போர்ச்சுக்கீசியர்) மற்றும் ஆப்பிரிக்க அடிமைகளாக கொண்டு வந்த ஆப்பிரிக்க வம்சாவளியினரும் ஆவர்.

பூர்வகுடி மக்கள் மலைகளிலும், மழைக்காடுகளிலும் தங்களது சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர் என மூன்று முக்கிய இனங்கள் காணப்படுகின்றன.

பூர்வ குடிமக்கள் மற்றும் ஐரோப்பியர்களின் கலப்பினம் ”மெஸ்டிஜோ” என அழைக்கப்படுகின்றது.

ஐரோப்பியர்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் முலாடோ என அழைக்கப்படுகிறது.

பூர்வ குடிமக்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் ஸாம்போ என அழைக்கப்படுகின்றது.

முக்கிய இனங்கள்: அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள், கருப்பர்கள். கலப்பினங்கள்: மெஸ்டிஜோ, முலாடோ, ஸாம்போ)

IX. வரைபட திறன்

Question 1.
பாடப்புத்தகம் மற்றும் நிலவரை படம் உதவிக்கொண்டு வட அமெரிக்காவை சுற்றியுள்ள கடல்கள், வளைகுடாக்கள் மற்றும் விரிகுடாகளை பெயரிடுக.
விடை:
கடல்கள் : (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

  • பசிபிக் பெருங்கடல்
  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • ஆர்க்டிக் பெருங்கடல்
  • கரீபியன் பெருங்கடல்
  • பியுபோர்ட் கடல்
  • லாப்ரடார் கடல்
  • சலிக்கும் கடல்

விரிகுடாக்கள் :

  • பேஃபின் விரிகுடா
  • ஹட்சன் விரிகுடா
  • உங்காங் விரிகுடா
  • ஃபன்டி விரிகுடா
  • சீஸ்பெக் விரிகுடா

வளைகுடாக்கள்:

  • பனாமா வளைகுடா
  • கலிபோர்னியா வளைகுடா
  • அலாஸ்கா வளைகுடா
  • மெக்சிகோ வளைகுடா

Question 2.
கொடுக்கப்பட்டுள்ள தென் அமெரிக்க வரைபடத்தில் அமேசான், ஒரினாகோ, நீக்ரோ, பராகுவே, உருகுவே ஆறுகளை குறிக்கவும். (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
சில முக்கிய நகரங்களும் சில தொழிற்சாலைகளும் அடைப்பு குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
அ) பிட்ஸ்பர்க் (ஜவுளி, இரும்பு எஃகு, கப்பல் கட்டும் தொழில்)
விடை:
இரும்பு எஃகு

ஆ) சிகாகோ (வாகனங்கள், காகிதம், சிமெண்ட்)
விடை:
காகதம்

இ) சிலி (எண்ணை சுத்திகரிப்பு, சர்க்கரை, பருத்தி ஆடை)
விடை:
எண்ணை சுத்திகரிப்பு

ஈ) உருகுவே (தோல் பதனிடுதல், தாமிரம் உருக்குதல், பால் பொருட்கள்)
விடை:
பால் பொருட்கள்

Question 2.
வினாக்களுக்கான விடைகளை கொடுக்கப்பட்டுள்ள பெட்டிகளுக்குள் எழுதவும்.

அ) தென் அமெரிக்காவின் உயரமான சிகரம்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 7

ஆ)
தென் அமெரிக்காவிலுள்ள இயங்கும் எரிமலை.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 8

இ) பரானா மற்றும் பராகுவே ஆறுகள் இணைந்து அழைக்கப்படுவது.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 9

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

ஈ) உலகின் உயரமான நீர்வீழ்ச்சி.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 10

உ) உலகின் மிகப்பெரிய நதி.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 6
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 11

Question 3.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் விலங்குகள் மற்றும் பறவைகளின் படங்களை ஒட்டி ஒரு தொகுப்பை உருவாக்கவும்.

7th Social  Science Guide கண்டங்களை ஆராய்தல் – வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வட அமெரிக்கா ………………….. பெரிய கண்டமாகத் திகழ்கிறது.
அ) இரண்டாவது
ஆ) மூன்றாவது
இ) நான்காவது
ஈ) ஐந்தாவது
விடை:
ஆ) மூன்றாவது

Question 2.
வட அமெரிக்கக் கண்டத்தின் மிக ஆழமான பகுதி …………………….
அ) மரண பள்ளத்தாக்கு
ஆ) சியார் நிவாரா
இ) சியாரர் மாட்ரே
ஈ) கலிபோர்னியா பள்ளத்தாக்கு
விடை:
அ) மரண பள்ளத்தாக்கு

Question 3.
புனித லாரன்ஸ் ஆறு ……………….. ஏரியில் தன் பயணத்தை துவங்குகிறது.
அ) சுப்பீரியர்
ஆ) வின்னிபெக்
இ) அதபாஸ்கா
ஈ) ஒன்டேரியோ
விடை:
ஈ) ஒன்டேரியோ

Question 4.
கீரிப்பிள்ளை , முயல்கள் …………………….. காடுகளில் காணப்படுகின்றன.
அ) குளிர்ந்த மிதவெப்ப இலையுதிர்
ஆ) வெப்ப மண்டல மழை
இ) தூந்திர
ஈ) டைகா
விடை:
அ) குளிர்ந்த மிதவெப்ப இலையுதிர்

Question 5.
உலகின் முக்கிய இறைச்சி ஏற்றுமதியாளராகத் திகழும் நாடு ……………….
அ) பிரேசில்
ஆ) சிலி
இ) பெரு
ஈ) அர்ஜென்டினா
விடை:
ஈ) அர்ஜென்டினா

Question 6.
தென் அமெரிக்காவின் பெரும்பான்மையான ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள் …………………. மூலமே கொண்டு செல்லப்படுகின்றன.
அ) கப்பல்கள்
ஆ) சாலைகள்
இ) இருப்புப்பாதைகள்
ஈ) வான்வழி
விடை:
அ) கப்பல்கள்

Question 7.
ஆப்பிரிக்கர்களை …………………… அடிமைகளாகக் கொண்டு வந்ததன் மூலம் ஆப்பிரிக்க வம்சாவழியினர் தென் அமெரிக்காவில் உருவாயினர்.
அ) பூர்வகுடி இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) கருப்பர்கள்
ஈ) லத்தீன் அமெரிக்கர்கள்
விடை:
ஆ) ஐரோப்பியர்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 8.
உலகில் இரண்டாவதாக அதிகப்படியான இரும்புத்தாது இருப்பைக் கொண்டுள்ள நாடு …………………
அ) இந்தியா
ஆ) ரஷ்யா
இ) பிரேசில்
ஈ) அர்ஜென்டினா
விடை:
இ) பிரேசில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………… மற்றும் …….. விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
விடை:
பார்லி, ஓட்ஸ்

Question 2.
……………….. தொழிலில் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முன்னிலை வகிக்கிறது.
விடை:
இரும்பு எஃகு

Question 3.
மெக்ஸிகோவின் மக்கள் அடர்த்தி ……………………..
விடை:
51 நபர்கள்

Question 4.
உலகின் மிகப்பெரிய இரயில்வே முனையம் ………………….. ல் உள்ளது.
விடை:
சிகாகோ

Question 5.
அமேசான் நதியில் காணப்படும் பிரன்ஹா எனும் வகை மீன் கடுமையான ………………… ஆகும்.
விடை:
மாமிசஉண்ணி

Question 6.
உரத்தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளான ………………….. படிவுகள் கிடைக்கும் ஒரே இடம் தென் அமெரிக்கா.
விடை:
சோடியம் நைட்ரேட்

Question 7.
சோளம் என்பது ………………… எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
மக்காச்சோளம்

Question 8.
……………….. நெடுஞ்சாலை அமைப்போடு இணைந்து சாலைகளின் மிகப்பெரிய வலைப்பின்னலை பிரேசில் கொண்டுள்ளது.
விடை:
பான் அமெரிக்கன்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 12

IV. காரணம் கூறுக

Question 1.
மிஸிஸிப்பி ஆறு “பெரிய சேற்று ஆறு” என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது.
விடை:
மிஸிஸிப்பி ஆறு ” பெரிய சேற்று ஆறு” என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது.
ஏனெனில்
மிஸிஸிப்பி ஆறு மலைகளின் கீழே பாய்ந்து வரும்போது மண்ணையும் சேற்றையும் தன்னோடு இழுத்து வருகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 2.
“கிராண்ட் பேங்க்” உலகின் மிகச் சிறந்த மீன்பிடி தளமாகும்.
விடை:
“கிராண்ட் பேங்க்” உலகின் மிகச் சிறந்த மீன்பிடி தளமாகும்.
ஏனெனில்

  • கிராண்ட் பேங்க் பகுதியில் கல்ப் வெப்ப நீரோட்டமும் லாபரடார் குளிர் நீரோட்டமும் சந்தித்து கொள்வதால் மீன்கள் வளர்வதற்கான ஏற்ற சூழலை உருவாக்குகிறது.
  • லாபரடார் நீரோட்டம் மீன்களுக்கு உணவாகும் பிளாங்டன்கள் எனப்படும் கடல்பாசிகளை அதிக அளவில் எடுத்து வருகிறது.

Question 3.
கார்டில்லெராஸ் பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
விடை:
கார்டில்லெராஸ் பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
ஏனெனில்
இப்பகுதி பல இயங்கும் எரிமலைகளைக் கொண்டுள்ளது. மேலும் நில அதிர்வுகளையும் பார் அடிக்கடி எதிர்கொள்கிறது.

Question 4.
தென் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி அடைந்தன.
விடை:
தென் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி அடைந்தன.
ஏனெனில்
தொழில்மயமாதலுக்கு முக்கிய காரணியான உள்கட்டமைப்பு (குறிப்பாக போக்குவரத்து) போதிய அளவு வளர்ச்சி அடையவில்லை. தொழில்மயமாதலுக்கு போக்குவரத்து அத்தியாவசியமான தேவை.

கரடுமுரடான நிலப்பரப்பின் காரணமாக தென் அமெரிக்காவில் ரயில் போக்குவரத்தும் சாலை போக்குவரத்தும் போதிய அளவிற்கு வளர்ச்சி அடையவில்லை.

V. வேறுபடுத்துக

Question 1.
நிலச்சந்தி மற்றும் நீர்ச்சந்தி.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 13

Question 2.
வட அமெரிக்காவின் மத்திய தரைக்கடல் தாவர வகைகள் மற்றும் பாலைவனக்காடுகள்.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 14

Question 3.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வடிகால் அமைப்பு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 15

VI. கீழ்கண்ட வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று (A) : வட அமெரிக்கா 1492 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸால் கண்டுபிடிக்கப்பட்டது.
காரணம் (R) : 1507 ஆம் ஆண்டு இத்தாலிய ஆய்வுப்பணி அமெரிக்கோ வெஸ்புகி இந்நிலப்பகுதிக்கு வந்ததை அடுத்து “அமெரிக்கா” எனப் பெயரிடப்பட்டது.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) காரணம் தவறு. கூற்று சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 2.
கூற்று (A) : மத்திய அமெரிக்காவுடன் இணைந்து, தென் அமெரிக்கா லத்தீன் அமெரிக்கா என அழைக்கப்படுகிறது.
காரணம் (R) : குறிப்பாக ஸ்பானியர்கள் மற்றும் போர்த்துக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு (லத்தீன்மொழி பேசுபவர்கள்) அவர்களின் காலனியாக ஆட்சிசெய்யப்பட்டது.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ) காரணம் தவறு. கூற்று சரி.
ஈ) காரணம் மற்றும் கூற்று தவறு.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி.

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
மத்திய அமெரிக்காவின் ஏழு சிறிய நாடுகளின் பெயர்களைக் கூறு.
விடை:
மத்திய அமெரிக்க நாடுகள் :

  • நிகாராகுவா
  • ஹாண்டுராஸ்
  • குவாதமாலா
  • பனாமா
  • கோஸ்டாரிக்கா
  • எல்சால்வடார்
  • பெலிஸ்

Question 2.
வட அமெரிக்காவின் இயற்கையமைப்பு பிரிவுகளைக் குறிப்பிடு.
விடை:
வட அமெரிக்க இயற்கையமைப்பு பிரிவுகள் :

  • ராக்கி மலைகள்
  • பெரும் சமவெளிகள்
  • அப்பலேஷியன் உயர்நிலம்
  • கடற்கரை சமவெளிகள்

Question 3.
வட அமெரிக்காவில் பனி உறைந்த பகுதியில் பல ஏரிகள் காணப்படுகின்றனவா? விளக்குக.
விடை:

  1. ஆம். வட அமெரிக்காவில் பனி உறைந்த பகுதியில் பல ஏரிகள் காணப்படுகின்றன.
  2. குறிப்பாக மின்னசொட்டா பகுதியில் காணப்படுகின்றன. இவை மிகச்சிறியதாக இருப்பதால் பொழுதுபோக்கு அம்சங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
  3. ஐந்து முக்கிய ஏரிகளைக் கொண்ட முக்கிய தொகுப்பு கிரேட் ஏரிகள். மிகப்பெரியது சுப்பீரியர் ஏரி. இது உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி.
  4. கனடாவில் காணப்படும் ஏரிகள் வின்னிபெக் ஏரி, கிரேட் பேர் ஏரி மற்றும் அதபாஸ்கா ஏரி

Question 4.
பனாமா கால்வாய் – சிறு குறிப்பு வரைக.
விடை:
பனாமா கால்வாய்:

  1. 80 கி.மீ. நீளமுள்ள பனாமா கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது. பனாமா நிலச்சந்தியின் குறுக்கே இது 1914ல் வெட்டப்பட்டது.
  2. இக்கால்வாய் ஐரோப்பா மற்றும் வட, தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைக்கு இடையிலான தூரத்தை வெகுவாகக் குறைக்கின்றது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 5.
வட அமெரிக்காவின் வான்வழி போக்குவரத்து குறித்து எழுதுக.
விடை:
வட அமெரிக்காவின் வான்வழி போக்குவரத்து:-

  1. வட அமெரிக்காவில் உள்ள அனைத்து நகரங்களும், தொழில்துறை மையங்களும் விமான வழிகளால் இணைக்கப்பட்டுள்ளன.
  2. நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, டொராண்டோ, மாண்ட்ரீல் மற்றும் மெக்ஸிகோ நகரம் ஆகியவை சர்வதேச விமான நிலையங்கள் ஆகும்.

Question 6.
சவானா புல்வெளி நிலம் குறித்து நீவிர் அறிவது என்ன?
விடை:
சவானா புல்வெளி நிலம்:

  • காலநிலை- வெப்பமான ஈரப்பதம் நிறைந்த கோடைகாலம். குளிர்ந்த ஈரப்பதமான குளிர்காலம்
  • பகுதி – கயானா உயர்நிலங்கள், பிரேசிலியன் உயர்நிலம், வட அர்ஜென்டினா மற்றும் பராகுவே
  • தாவரங்கள்- உயரமான ஒழுங்கற்ற புற்கள் மற்றும் கருவேல மரங்கள் –
  • விலங்குகள்- கேபிபாரா, மார்ஷிமான், வெள்ளை வயிறு மற்றும் சிலந்தி குரங்கு

Question 7.
எஸ்டான்சியாஸ் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
எஸ்டான்சியாஸ்:

  • எஸ்டான்சியாஸ் என்பவை கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி பரப்புகள் ஆகும். இவை சிறிய புல்வெளி தளங்களாக பிரிக்கப்படுகின்றன.
  • இச்சிறிய புல்வெளி தளங்கள் மேலும் பராமரிப்பு தளங்களாக பிரிக்கப்பட்டு கால்நடைகள் தரம் பிரித்து முத்திரை இடப்படுகின்றன.
  • எஸ்டான்சியாரே என்பவர் எஸ்டான்சியாவின் பராமரிப்பாளர். அவரின் கீழ் கவ்சோ எனப்படும் வேலையாட்கள் வேலை செய்கின்றனர்.

Question 8.
தென் அமெரிக்காவின் முக்கிய இயற்கை தாவர பகுதிகள் யாவை?
விடை:
முக்கிய இயற்கை தாவர பகுதிகள்:
தென் அமெரிக்கா நான்கு முக்கிய இயற்கை தாவர பகுதிகளைக் கொண்டது. அவைகள்

  • அமேசான் படுகை
  • கிழக்கு உயர் நிலங்கள்
  • கிராண்ட் சாக்கோ
  • ஆன்டஸ் மலைச்சரிவுகள்

Question 9.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தென் அமெரிக்காவின் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துகளை பெயரிடு.
விடை:
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துகள்:

  1. இரண்டு நீர்வழிப்போக்குவரத்துகள் உள்ளன. அவை
  2. பராகுவே – உருகுவே வடிநிலப்பகுதி (நான்கு நாடுகளை உள்ளடக்கியது)
  3. அமேசான் வடிநிலப்பகுதி (ஆறு நாடுகளை உள்ளடக்கியது) (ஒவ்வொன்றும் பல ஆயிரம் மைல்கள் பயணிக்கும் நீர்வழியை கொண்டுள்ளன).

Question 10.
தென் அமெரிக்காவின் பல்வேறு இசைகள் குறித்து எழுதுக.
விடை:
தென் அமெரிக்க இசைகள்: தென் அமெரிக்க நாடுகளில் பல்வேறு வகையான இசைகள் உள்ளன. மிகவும் பிரபலமான இசை வகைகள்.

  1. பிரேசிலிருந்து சம்பா
  2. அர்ஜென்டினாவிலிருந்து டேங்கோ
  3. உருகுவே மற்றும் கொலம்பியாவிலிருந்து கும்பியா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 11.
தென் அமெரிக்காவில் ஆடு வளர்ப்பு – சிறு குறிப்பு தருக.
விடை:
ஆடு வளர்ப்பு:

  1. தென் அமெரிக்காவின் வறண்ட பகுதிகளில் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
  2. டைரா டெல் பியுகோ மற்றும் ஃபாக்லாந்து தீவுகளின் மிதவெப்ப மண்டல புல்வெளிகள் ஆடுகள் வளர்க்க ஏற்றவை.
  3. முக்கிய ஆடு வளர்ப்பு நாடுகள்: அர்ஜென்டினா மற்றும் உருகுவே

Question 12.
வட அமெரிக்காவின் பண்ணை பராமரிப்பு குறித்து உனக்கு என்ன தெரியும்?
விடை:
பண்ணை பராமரிப்பு:

  • பால் உற்பத்திக்காக கால்நடைகளை வளர்ப்பது, பண்ணை பராமரிப்பு என அழைக்கப்படுகிறது. இது அமெரிக்கா மற்றும் கனடாவின் முக்கிய தொழிலாகும்.
  • குளிர்ந்த மற்றும் ஈரப்பதம் மிகுந்த பிரெய்ரி, பெரும் ஏரிகள் மற்றும் அட்லாண்டிக் கடற்கரையின் வடகிழக்குப் பகுதிகளில் இத்தொழில் அதிகமாக உள்ளது. (உலகின் மொத்த பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் 25%)

VIII. பத்தியளவில் விடையளி

Question 1.
வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றின் மக்கள் தொகைப் பரவலை விவரி.
விடை:
மக்கள்தொகைப் பரவல்:
வட அமெரிக்கா:
வட அமெரிக்காவின் மக்கள் தொகை 364,446,736 (2018 ஆம் ஆண்டு ). இது உலக மக்கள் தொகையில் 4.77 சதவீதம். மக்கள் தொகை அடர்த்தி 20 நபர் / ச.கி.மீ.

அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள்:
வட அமெரிக்கா (கிழக்கு), கிரேட் ஏரி பகுதி, மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா

மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள்:
வட அமெரிக்கா (மத்திய பகுதி), மத்திய உயர் நிலங்கள், மெக்ஸிகோ உயர் நிலங்கள், கனடா (மத்திய மற்றும் மேற்கு பகுதிகள்)

குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள்:
கனடா (வடக்கு), அலாஸ்கா, ராக்கி மலைகள் மற்றும் பாலைவனப் பகுதிகள்

தென் அமெரிக்கா:
தென் அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை 429,115,060. இது உலக மக்கள் தொகையில் ஐந்தாம் இடம். மக்கள் தொகை அடர்த்தி 21 நபர் / ச.கி.மீ.

அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள்:
கயானா, வெனிசுலா, சுரினாம், கொலம்பியா, பிரேசில் மற்றும் பெரு

மிதமான மக்கள் அடர்த்தி பகுதிகள்:
பராகுவே, சிலி, உருகுவே

குறைந்த மக்கள் அடர்த்தி பகுதிகள்:
அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் அமேசான் வடிநிலம்

Question 2.
வட மற்றும் தென் அமெரிக்க பகுதிகளின் மொழி மற்றும் சமயம் குறித்து எழுதுக.
விடை:
மொழி மற்றும் சமயம்:
வட அமெரிக்கா:
மொழிகள்: ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச்

சமயங்கள்:

  • பல்வேறு சமய நம்பிக்கைகள் கலாச்சாரம், தத்துவம் மற்றும் சட்டம் ஆகியவற்றில் தாக்கம் உண்டாக்குதல்.
  • 80% கிறிஸ்தவத்தைப் பின்பற்றுதல்.
  • ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருகும் பானை என அழைக்கப்படுதல்
    (நூற்றுக்கணக்கான கலாச்சாரங்கள் ஒன்றிணைந்து புதிய கலாச்சாரம் உருவாதல்)

தென் அமெரிக்கா:
மொழிகள்:

  • போர்ச்சுகீஸ் மற்றும் ஸ்பானிஷ் (பிரதான மொழிகள்)
  • டச்சு, பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் ஹிந்தி (பயன்படுத்தும் பிற மொழிகள்)

சமயங்கள்:

  • கிறிஸ்தவம் (பிரதான சமயம்) தக்கது
  • இஸ்லாம் மற்றும் இந்து (பின்பற்றப்படும் பிற மதங்கள்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா

Question 3.
அட்டவணைப்படுத்துக: வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களின்
அ) முக்கிய நாடுகள்
ஆ) சுற்றியுள்ள கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்
இ) முக்கிய பாலைவனங்கள்
ஈ) முக்கிய ஆறுகள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 16

Question 4.
தென் அமெரிக்காவின் வேளாண்மை குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
தென் அமெரிக்காவின் வேளாண்மை:

  • தென் அமெரிக்காவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேளாண்மை தொழில் செய்து வருகிறார்கள். இங்கு தன்னிறைவு வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
  • பெரும்பான்மையான பகுதி அமேசான் காடுகளைப் போன்ற காடுகளால் மூடப்பட்டுள்ளது.
  • அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில் ஆகிய நாடுகள் மட்டுமே முன்னேறிய வேளாண்மை முறைகளை கொண்டுள்ளன. தென் அமெரிக்கக் கண்டத்தில் அர்ஜென்டினா, வேளாண் தொழிலில் முன்னேறிய நாடு ஆகும்.
  • ஈரப்பதம் நிறைந்த பாம்பாஸ் பகுதியில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதியின் இயற்கை மற்றும் காலநிலை அமைப்பு வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கிறது.
  • கோதுமை அர்ஜென்டினாவின் பாம்பாஸ் பகுதிகளில் மிக அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றது.
  • ஆன்டிஸ் மலைத்தொடரின் ஆறுகள் பாயும் பியட்மான் பள்ளத்தாக்குகளில் விவசாயிகள் திராட்சைத் தோட்டங்களையும் சிட்ரஸ் பழங்களையும் விளைவிக்கின்றனர்.
  • காபி, கொக்கோ, கரும்பு, வாழை, பருத்தி போன்ற பணப்பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.

மனவரைபடம்

Question 1.
கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 17

Question 2.
கண்டங்களை ஆராய்தல் – தென் அமெரிக்கா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 1 கண்டங்களை ஆராய்தல் - வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா 18

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

7th Social  Science Guide தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் Text Book Back Questions and Answers

I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?
அ) பாடலிபுத்திரம்
ஆ) வல்ல பி
இ) மதுரா
ஈ) காஞ்சிபுரம்
விடை:
அ) பாடலிபுத்திரம்

Question 2.
ஆகம சூத்திரங்கள் எம்மொழியில் எழுதப்பட்டன?
அ) அர்த்த – மகதி பிராகிருதம்
ஆ) இந்தி
இ) சமஸ்கிருதம்
ஈ) பாலி
விடை:
அ) அர்த்த – மகதி பிராகிருதம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 3.
கீழ்க்கண்டவற்றுள் எது களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது?
அ) புத்தமதம்
ஆ) சமணமதம்
இ) ஆசீவகம்
ஈ) இந்து மதம்
விடை:
ஆ) சமணமதம்

Question 4.
தலையணைப்பகுதி செதுக்கப்படாமல உள்ள கற்படுக்கைகளை எங்கு காணலாம்?
அ) வேலூர்
ஆ) காஞ்சிபுரம்
இ) சித்தன்னவாசல்
ஈ) மதுரை
விடை:
அ) வேலூர்

Question 5.
கழுகுமலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது?
அ) மகேந்திரவர்மன்
ஆ) பராந்தக நெடுஞ்சடையான்
இ) பராந்தக வீரநாராயண பாண்டியன்
ஈ) இரண்டாம் ஹரிஹரர்
விடை:
ஆ) பராந்தக நெடுஞ்சடையான்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை ………………..
விடை:
நேமிநாதர்

Question 2.
புத்த சரிதத்தை எழுதியவர் …………………… ஆவார்.
விடை:
அஸ்வகோஷர்

Question 3.
………………. நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார்.
விடை:
7ஆம்

Question 4.
பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என …………….. எடுத்துரைக்கிறார்.
விடை:
மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகாசனம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 5.
மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ஆதரித்தனர்.
விடை:
ஆசீவகர்களை

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 2

IV. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளி

Question 1.
பொருந்தாததைக் காண்க. திருப்பருத்திக்குன்றம், கீழக்குயில்குடி, கழுகுமலை, நாகப்பட்டினம், சித்தன்னவாசல்
விடை:
நாகப்பட்டினம்

Question 2.
கூற்று : பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.
காரணம் : துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்தி அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

Question 3.
சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்க
i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன.
ii) ‘பள்ளி’ என்பது புத்த மதத்தாரின் கல்வி மையமாகும்.
iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பலவிகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.
iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து செயல்பட்டது.

அ) (i) மற்றும் (iii) சரி
ஆ) (i, ii) மற்றும் (iv) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (ii, iii) மற்றும் (iv) சரி
விடை:
அ) (i) மற்றும் (iii) சரி

Question 4.
தவறான இணையைக் காண்க
1. பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்
2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு
3. விசுத்திமக்கா – புத்தகோசா
4. புத்தர் – எண்வகை வழிகள்
விடை:
1. பார்சவநாதர் – 22 வது தீர்த்தங்கரர்,
2. மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு

V. சரியா? தவறா?

Question 1.
12வது ஆகமசூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது.
விடை:
சரி

Question 2.
வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்க முறையைச் சந்திக்க நேர்ந்தது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 3.
சமண நிறுவனங்களில் சமூக, சமய வேறுபாடுகளின்றி அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டது.
விடை:
சரி

Question 4.
நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த புனிதத்தலங்களாயின.
விடை:
தவறு

Question 5.
சோழர்காலம் முதலாகவே பௌத்தம் சைவ, வைணவ சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது.
விடை:
தவறு

VI. கீழ்க்காண்பனவற்றுக்கு விடையளி

Question 1.
சமணத்தின் ஐம்பெரும் உறுதி மொழிகளைப் பட்டியலிடுக.
விடை:
சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகள் :

  1. எந்த உயிரையும் துன்புறுத்தாமலிருத்தல் – அகிம்சை
  2. உண்மை – சத்யா
  3. திருடாமை – அசௌர்யா
  4. திருமணம் செய்து கொள்ளாமை – பிரம்மச்சரியா
  5. பணம், பொருள், சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை – அபரிக்கிரகா

Question 2.
புத்தரின் நான்கு பேருண்மைகளைக் கூறுக?
விடை:
புத்தரின் நான்கு பேருண்மைகள்:

  1. வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், இறுதியில் மரணம் ஆகியவற்றை ப உள்ளடக்கியதாகும்.
  2. துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.
  3. ஆசையைத் துறந்துவிட்டால் துயரங்களை வென்று மகிழ்ச்சியை அடையலாம்.
  4. ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் கைவரப் பெறலாம்.

Question 4.
திரிபிடகாவின் மூன்று பிரிவுகளை விளக்குக.
விடை:
திரிபிடகாவின் மூன்று பிரிவுகள்:

  • வினய பிடகா – பௌத்தத் துறவிகளுக்கான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. தூய்மையான நடத்தையைப் பெற இவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
  • சுத்த பிடகா – விவாதங்களைச் சான்றுகளாகக் கொண்டு பௌத்தத்தின் மூலக் கோட்பாடுகளைக் கூறுகின்றது.
  • அபிதம்ம பிடகா – நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு குறித்து விளக்குவதாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 4.
சித்தன்னவாசலின் முக்கியத்துவத்தை வெளிக் கொணர்க.
விடை:
சித்தன்னவாசலின் முக்கியத்துவம் :

  • சித்தன்னவாசல் குகை நிலத்திலிருந்து 70 மீட்டர் உயரமுடைய பெரும்பாறையொன்றில் அமைந்துள்ளது.
  • ஒரு முனையில் ஏழடிப்பட்டம் எனப்படும் இயற்கையான குகையும், மற்றொரு முனையில் குடைவரைக் கோவிலும் உள்ளன.
  • தரையில் 17 சமணப்படுக்கைகள் அமைந்துள்ளன. இந்த கல்துயிலிடங்கள் சமணர்களின் தங்குமிடங்கள் என நம்பப்படுகிறது.
  • கற்படுக்கைகளில் அளவில் பெரிதாக இருக்கும் ஒன்றில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ளது.
  • அறிவர் கோவில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்டது. இக்குகைக்கோவிலில் காணப்படும் சுவரோவியங்கள் புகழ்பெற்ற அஜந்தா சுவரோவியங்களுடன் ஒப்புமை கொண்டுள்ளன.

VII. விரிவான விடையளி

Question 1.
சமணம், பௌத்தம் பற்றி அறிய உதவும் சான்றுகளை வரிசைப்படுத்துக.
விடை:
சமணம், பௌத்தம் பற்றி அறிய உதவும் சான்றுகள்: சமணம் :
மகாவீரரின் அறவுரைகள் ஓராயிரம் ஆண்டுகளாக அவருடைய சீடர்களால் வாய்மொழி மூலமாகவே மக்களுக்குச் சொல்லப்பட்டு வந்தன.

மகாவீரர் இயற்கை எய்திய 200 ஆண்டுகளுக்குப் பின்னர் சமண அறிஞர்கள் ஒரு பேரவையைக் கூட்டி தங்கள் சமயம் சார்ந்த போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டனர் (முதல் சமண பேரவைக் கூட்டம் – பாடலிபுத்திரம்).

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வல்லபியில் கூட்டப்பட்ட இரண்டாம் பேரவை கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் வெற்றிபெற்றது. காலப்போக்கில் கற்றறிந்த பல சமணத் துறவிகள் (அதிக வயதும் ஆழமான ஞானமும் கொண்டவர்கள்) சமயம் சார்ந்த பல்வேறு தலைப்புகளிலான உரைகளைத் தொகுத்தனர்.

ஏறத்தாழ கி.பி. 500இல் சமண ஆச்சாரியார்கள் தாங்கள் அறிந்த சமண இலக்கியங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த முடிவு செய்தனர். ஏனெனில் சமண இலக்கியங்களை மனனம் செய்வது மிகச் சிரமமானது என உணர்ந்தனர்.

சமண இலக்கியங்கள் பொதுவாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1) ஆகம சூத்திரங்கள் 2) ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் (12 நூல்கள், 84 நூல்கள்).

பௌத்தம் :

  • புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்கு ஆசிரியர்களின் நினைவாற்றல் வழியாக சீடர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது.
  • ஏறத்தாழ கி.மு. 80ல் அவை பாலி மொழியில் எழுதப்பட்டன.
  • திரிபிடகா பௌத்த பொது விதிகள். அது மூன்று கூடைகள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • ‘வினய பிடகா, சுத்த பிடகா, அபிதம்ம பிடகா ஆகியவை மூன்று பிரிவுகளாகும்.
  • ஜாதகங்கள் மற்றும் புத்த வம்சா ஆகியவை பொது விதிகளைப் பற்றிக் கூறுபவை. பாலி மொழியில் எழுதப்பட்ட பொது விதிகள் அல்லாத நூல்கள் நீண்ட வரிசை கொண்டதாக உள்ளது (மிலிந்த பன்கா, மகா வம்சம், தீபவம்சம், விசுத்திமக்கா (புத்தகோசா)).

Question 2.
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட சமணம், பௌத்தம், சார்ந்த ஆதார எச்சங்களை விளக்கமாய் பட்டியலிடுக
விடை:
சமணம் சார்ந்தது:
சமணர்கள் கர்நாடகாவிலிருந்து கொங்குப் பகுதிக்கும், காவேரி கழிமுகப்பகுதிக்கும், புதுக்கோட்டைப் பகுதிக்கும், இறுதியில் பாண்டிய நாட்டுக்குள்ளும் இடம் பெயர்ந்தனர் என்பதற்குத் தெளிவான சான்று உள்ளது.

சித்தன்னவாசல் குகைக்கோவில் (நிலத்திலிருந்து 70 மீ உயரம், 17 சமணப்படுக்கைகள், தமிழ்-பிராமிக் கல்வெட்டு, சுவரோவியங்கள்).

காஞ்சிபுரம் – திரிலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் (திருப்பருத்திக்குன்றம்), சந்திரபிரபா கோவில். (பல்லவர் கால கட்டடக் கலைப்பாணி, சுவரோவியங்கள், பல கிராமங்களில் சமணம் குறித்த தடயங்கள்)

கழுகுமலை சமண குடைவரைக் கோவில் (எட்டாம் நூற்றாண்டு, பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையன். பஞ்சவர் படுக்கை).

வேலூர், திருமலை மற்றும் மதுரை ஆகிய இடங்களிலும் சமணக் கோவில்கள் காணப்படுகின்றன.

பௌத்தம் சார்ந்தது:

  • தமிழகத்தில் பௌத்தம் பரவியதற்குச் சான்றாக பாண்டிய நாட்டில் சில நினைவுச் சின்னங்கள் உள்ளன.
  • குகைகளில் காணப்படும் 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சின்னங்கள் பஞ்ச பாண்டவ மலை என அழைக்கப்படுகிறது.
  • வீரசோழியம் (11 ஆம் நூற்றாண்டு இலக்கண நூல்), புத்தரின் செப்புச் சிலைகள் (13 ஆம் நூற்றாண்டு, நாகப்பட்டினம்) ஆகியவை பின்வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்தமையை உறுதி செய்கின்றன.
  • தியாகனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் புத்தரின் சிற்பங்கள் (சேலம் மாவட்டம் ) இக்கருத்துக்கு வலுவூட்டுகின்றன. சூடாமணி விகாரை நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டது.
  • மணிமேகமலை (சீத்தலை சாத்தனார்), மத்தவிலாச பிரகாசனம் (மகேந்திர வர்மன்) ஆகியவை ஆவணங்களாகும்.
  • பௌத்த விகாரை (காவிரிப்பூம்பட்டின அகழ்வாய்வு), 1.03 மீட்டர் உயர புத்தர் சிலை (பத்மாசனகோலம், திருநாட்டியட்டாங்குடி, திருவாரூர் மாவட்டம்) ஆகியவையும் பௌத்தம் சார்ந்த ஆதார எச்சங்கள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 3.
ஆசீவகத்தத்துவத்தின் சாரம் மற்றும் அது தமிழ்நாட்டில் தோன்றிய விதம் குறித்து விவாதிக்க. ஆசீவகத் தத்துவம் மற்றும் அது தமிழ்நாட்டில் தோன்றிய விதம்
விடை:
ஆசீவகத் தத்துவம்:

  • ஆசீவகர்கள் வினைப்பயன், மறுபிறவி. முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • ஆசீவகர்கள் மிகக் கடுமையான துறவறத்தைக் கடைப்பிடித்தனர்.
  • அவர்களுடைய தத்துவம் வேதப்பாடல்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் பண்டைய சமஸ்கிருதத் தொகுப்புகள், சமண பௌத்த சமயங்களுக்கு முந்தைய கால ஆய்வுகள் முதலியவற்றில் காணக்கிடைக்கின்றது.

தமிழகத்தில் ஆசீவகம் தோன்றுதல்:

  • மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வடஇந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது. தென்னிந்தியாவில் பரவியிருந்தது.
  • தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்பட்டது.
  • பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆட்சிக்கால கிராம சமூகத்தினர் ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர்.
  • இதுபோன்ற இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும் பாலாற்றின் பகுதிகளில் (கர்நாடகா மற்றும் தமிழ்நாடு – வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்) 14ஆம் நூற்றாண்டு வரை ஆசீவகம் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
அவைதீக மதங்களுக்கும் வேதமதத்திற்கும் உள்ள பொதுவான அம்சங்களையும் வேறுபாடுகளையும் அலசி ஆராய்க.
விடை:
அவைதீக மதங்கள் மற்றும் வேதமதம்:
அவைதீக மதங்களின் நிறுவனர்களான மகாவீரரும் புத்தரும் தங்கள் அறபோதனைகளை வேத மதத்தின் பலிகொடுக்கும் வழிபாட்டு முறைகளுக்கு எதிராக வைத்தனர்.

அவர்களின் போதனைகள் பாதுகாக்கப்பட்டு, பல்வேறு சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளின் மூலமாகப் பின்வந்த சந்ததிகளிடம் கையளிக்கப்பட்டன.

பெண்கள் பணியாளர்களாக (யக்சிகள்) அனுமதிக்கப்பட்டனர். அவைதீக மதமான சமணத்தில் பெண்களும் துறவறம் பூண அனுமதி கொடுக்கப்பட்டது. பெண்களிடையே கல்வியைக் கொண்டு செல்வதற்கு ஊக்கமளித்தது.

அரச வாழ்வு, துறவு வாழ்வு ஆகிய இரண்டுமே தவறு என பௌத்தம் கூறியது. புத்தர் இடைப்பட்ட வழியை (எண்வகை வழிகள்) கண்டறிந்தார். மகாவீரர் ஐம்பெரும் உறுதி மொழிகளைக் கண்டறிந்தார். இப்படிப்பட்டவழிகள் வேதமதத்தில் கண்டறியப்படவில்லை.

Question 2.
ஏன் இத்தகைய அவைதீக மதங்கள் இந்தியாவின் முக்கிய மதங்களாய் உருவெடுக்க முடியவில்லை ?
விடை:
அவைதீக மதங்கள் இந்தியாவின் முக்கிய மதங்களாய் உருவெடுக்க முடியவில்லை ஏனெனில்.

  • பக்தி இயக்க காலம் முதல் பக்தி இயக்கப் பெரியோர்கள் அவைதீக மதங்களை எதிர்த்தனர். அவை அரசர்கள் அளித்து வந்த ஆதரவை இழக்கத் தொடங்கின.
  • முக்கிய மதங்கள் சாமானிய மக்களின் மொழிகளுக்கு தங்களை மாற்றிக் கொண்டன.
  • பல்லவர் காலம் முதலாகவே அவைதீக மதமான பௌத்தம் சைவ. வைணவச் சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது.
  • கோசலா மகாவீரருடன் ஆறாண்டுகள் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர்.
  • மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவைதீக மதமான ஆசீவகம் சரிவைச் சந்தித்தது. பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆகியோர் ஆட்சிக் கால கிராம சமூகத்தினர் சிறப்பு வரிகளை ஆசீவகர் மீது விதித்தனர்.

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்கள் மாவட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்று எங்கெல்லாம் பௌத்தம், சமணம் சார்ந்த எச்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவோ அவற்றைப் பார்வையிட்டு வரலாம்

7th Social  Science Guide தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
………………….. எனப்படும் நூலின்படி இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட 62 தத்துவ, சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்ததாகக் கூறுகின்றது.
அ) பிகநிதயா
ஆ) தீபவம்சம்
இ) ஜாதகங்கள்
ஈ) மிலிந்தபன்கா
விடை:
அ) பிகநிதயா

Question 2.
யுவான் சுவாங் கி.பி. …………………. நூற்றாண்டில் தென்னிந்தியா வந்தார்.
அ) ஐந்தாம்
ஆ) ஏழாம்
இ) எட்டாம்
ஈ) ஒன்பதாம்
விடை:
ஆ) ஏழாம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 3.
…………………… நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பௌத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அ) பர்மா மற்றும் ஜப்பான்
ஆ) சீனா மற்றும் இலங்கை
இ) ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா
ஈ) திபெத் மற்றும் சீனா
விடை:
ஈ) திபெத் மற்றும் சீனா

Question 4.
பர்சவநாதர் …………………… தீர்த்த ங்கரர் ஆவார்.
அ) முதல்
ஆ) கடைசி
இ) 24வது
ஈ) 10வது
விடை:
அ) முதல்

Question 5.
………………… ஆறாண்டுகள் மகாவீரருடன் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார்.
அ) பாஞ்சாலா
ஆ) அவந்தி
இ) கலிங்கா
ஈ) கோசலா
விடை:
ஈ) கோசலா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பல்லவர், சோழர் மற்றும் …………… ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர்.
விடை:
ஹொய்சாளர்

Question 2.
…………………. கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்டது.
விடை:
மணிமேகலை

Question 3.
ஆகம சூத்திரங்கள் ……………….. மொழியில் எழுதப்பட்டுள்ளன.
விடை:
அர்த்த – மகதி பிராகிருத

Question 4.
குகைகளில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் ……………….. என அழைக்கப்படுகிறது.
விடை:
பஞ்ச பாண்டவ மலை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 5.
………………….. பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வட இந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது.
விடை:
மௌரியப்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 3

IV. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளி

Question 1.
பொருந்தாததைக் காண்க.
ரிஷபநாதர், மகாவீரர், பர்சவநாதர், பாகுபலி, நாகசேனர், நேமிநாதர்
விடை:
நாகசேனர்

Question 2.
கூற்று : பக்தி இயக்கப் பெரியோர்கள் பௌத்தத்தை எதிர்த்தனர். பௌத்தம் அரசர்கள் அளித்து வந்த ஆதரவை இழக்கத் தொடங்கியது.
காரணம் : அது பக்தி இயக்க காலம்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

Question 3.
சரியான கூற்றினைக் / கூற்றுகளைக் காண்க
i) பெரும்பாலான பல்லவ அரசர்கள் சமணர்களாவர்.
ii) விகாரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு வாழ்விடம்’ அல்லது ‘இல்லம்’ என்று பொருள்.
iii) அழகுமிக்க சுவரோவியங்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் வரையப்படவில்லை.
iv) ஆசீவகர்கள் வினைப்பயன். மறுபிறவி, முன் தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

அ) (i) மற்றும் (iii) சரி சான்
ஆ) (i), (ப்) மற்றும் (iv) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (ii), (iii) மற்றும் (iv) சரி
விடை:
ஆ) (i), (ii) மற்றும் (iv) சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 4.
தவறான இணையைக் காண்க
1. கழுகுமலை – தூத்துக்குடி
2. திருப்பருத்திக்குன்றம் – காஞ்சிபுரம்
3. லத்தேரி – வேலூர்
4. கீழக்குயில்குடி – இராமநாதபுரம்
விடை:
4. கீழக்குயில்குடி – இராமநாதபுரம்

V. சரியா? தவறா?

Question 1.
இருகப்பா, புஷ்பசேனா எனும் சமண முனிவரின் சீடராவார்.
விடை:
சரி

Question 2.
இரண்டாம் சமணப் பேரவைக் கூட்டம் பாடலிபுத்திரத்தில் கூட்டப்பட்டது.
விடை:
தவறு

Question 3.
மகாவம்சம், தீபவம்சம் ஆகியன இலங்கையின் வரலாற்றுத் தொகுப்புகள்.
விடை:
சரி

Question 4.
தமிழில் எழுதப்பட்ட அறிவுசார் நூலான நாலடியார் சமணத்துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும்.
விடை:
சரி

Question 5.
ஆசீவகப் பிரிவின் தலைவர் கோசலா மன்காலி புத்தா ஆவார்.
விடை:
சரி

VI. கீழ்க்காண்பனவற்றுக்கு விடையளி

Question 1.
சமணத்தில் ஏற்பட்ட பெரும் பிளவு – விளக்குக.
விடை:
சமணத்தில் ஏற்பட்ட பெரும் பிளவு:

  • கி.பி முதலாம் நூற்றாண்டில் சமணத்தில் பெரும்பிளவு ஏற்பட்டது. (திகம்பரர் மற்றும் சுவேதாம்பரர்)
  • திகம்பரர், சுவேதாம்பரர் ஆகிய இரு பிரிவினருமே ஆகம சூத்திரங்களைத் தங்களின் அடிப்படை நூல்களாக ஏற்றுக் கொண்டனர்.
  • அவற்றின் உள்ளடக்கம் கொடுக்கப்படும் விளக்கம் ஆகியவற்றில் வேறுபட்டனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 2.
சுவரோவியங்கள் குறித்து குறிப்பு வரைக.
விடை:
சுவரோவியங்கள்:

  • விஜயநகர அரசர் இரண்டாம் ஹரிஹரராயரின் காலத்தில் அழகுமிக்க சுவரோவியங்கள் வரையப்பட்டன.
  • கோவில்களிலுள்ள சுவரோவியங்கள் தீர்த்தங்கரர்களின் வாழ்க்கையில் நடந்த சில காட்சிகளைச் சித்தரிக்கின்றன.
  • திரிலோக்கியநாத கோவிலின் ஓவியங்களின் மீது புதுப்பித்தல் பணியின் போது வர்ணங்கள் பூசப்பட்டுவிட்டதால் பாழாகிவிட்டன.
  • திரிகூட பஸ்தி எனும் இரண்டாவது கருவறையில் ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

Question 3.
விகாரைகள் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
விகாரைகள் :

  • விகாரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு வாழ்விடம் அல்லது இல்லம் என்று பொருள்படும். சுற்றித்திரியும் துறவிகள் இவற்றை மழைக்காலங்களில் விகாரைகளை தங்குமிடங்களாகப் பயன்படுத்தினர்.
  • பின்னர் இவை கல்வி மையங்களாக மாற்றம் பெற்றன. நாளந்தாவைப் போன்றே பல விகாரைகள் உலகப்புகழ் பெற்றவையாகும்.

Question 4.
பௌத்த கல்விப்புலம் குறித்து எழுதுக.
விடை:
பெளத்த கல்விப்புலம்:

  • பௌத்த சங்கங்களும் விகாரைகளும் கல்விக்கான இல்லங்களாகத் தொண்டு செய்தன.
  • உலகின் பல பகுதிகளிலிருந்தும் கல்வி கற்பதற்காக மாணவர்கள் இங்கு வந்தனர்.
  • நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த கல்வி மையங்கள் எனப் பெயர்பெற்றன.
  • திபெத், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பௌத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் பௌத்தத்தைப் பரப்ப முயற்சிகள் மேற்கொண்டனர்.

VII. விரிவான விடையளி

Question 1.
பௌத்த இலக்கியம் குறித்து எழுதுக.
விடை:
பௌத்த இலக்கியம் :
புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்குப்பின் கி.மு.80ல் எழுதப்பட்டன. அவை பாலி மொழியில் எழுதப்பட்டன.

பொது விதிகளைப் பற்றி கூறுபவை:
திரிபிடகா (மூன்று கூடைகள்):

  • வினய பிடகா (பௌத்தத் துறவிகளுக்கான பொது விதிகள்)
  • சுத்த பிடகா (பௌத்த மூலக் கோட்பாடுகள்)
  • அபிதம்ம பிடகா (நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு குறித்து விளக்குவது).

ஜாதகங்கள்:
பௌத்த இலக்கியங்களில் காணப்படும் புத்தருடைய வாழ்க்கை தொடர்பான பல்வேறு கதைகளைக் கூறுவது.

புத்தவம்சா:
கௌதமருக்கு முன்பாக வாழ்ந்ததாக நம்பப்படும் 24 புத்தர்களின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் எடுத்துரைப்பது.

பொதுவிதிகள் அல்லாதவை :
மிலிந்த பன்கா:
‘மிலிந்தாவின் கேள்விகள். மிலிந்தாவுக்கும் (பாக்டீரியன் அரசன்) பிட்சுவான நாகசேனர் இடையே நடந்த உரையாடல்.

மகாவம்சம் மற்றும் தீபவம்சம்:
இலங்கையின் வரலாற்றுத் தொகுப்புகள். முந்தையது (இந்தியத் துணைக்கண்டத்தின் அரச குலங்கள் பற்றியது). பிந்தையது (புத்தர் போதனைகளையும் இலங்கையில் அவற்றைப் பரப்பியோரையும் பற்றியது)

விசுத்திமக்கா:
புத்தகோசாவால் எழுதப்பட்டது (முதல் பௌத்த உரையாசிரியர்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

Question 2.
சமணர்களின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களை விளக்குக.
விடை:
சமணர்களின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்:
ஆகமங்கள் மேல் எழுதப்பட்ட உரைகள், விளக்கங்கள் தனிநபர்களால் எழுதப்பட்டு துறவிகளாலும் அறிஞர்களாலும் தொகுக்கப்பட்டன.

ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள்:

  • அவை பிராகிருதம், சமஸ்கிருதம், பண்டைய மராத்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, இந்தி, கன்னடம், தமிழ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
  • 84 நூல்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. (41 சூத்திரங்கள், 12 உரைகள், ஒரு மாபெரும் உரை), 41 சூத்திரங்கள் (11 அங்கங்கள், 12 உப அங்கங்கள், 5 மூலங்கள், 5 சேடாக்கள், 8 பல வகைப்பட்ட நூல்கள்).
  • பிராந்திய மொழிகளில் (இந்தி, தமிழ், கன்னடம்) எழுதப்பட்ட சில சமண நூல்களையும் நாம் பெற்றுள்ளோம்.
  • சீவக சிந்தாமணி (தமிழ் காப்பியம், சங்க இலக்கியம்) திருத்தக்கத்தேவர் என்பவர் இயற்றியது.
  • நாலடியார் சமணத்துறவி ஒருவரால் இயற்றப்பட்டதாகும். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் ஒரு சமணர் என நம்பப்படுகிறது.

Question 3.
தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சமணக் கோவில்கள் பற்றி எழுதுக.
விடை:
தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள சமணக் கோவில்கள் :
சித்தன்னவாசல், திருப்பருத்திக்குன்றம், கழுகுமலை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் சமணக்கோவில்கள் காணப்படுகின்றன. அவை வேலூர், திருமலை மற்றும் மதுரை.

வேலூர்:

  • குன்றின் உச்சியில் அமைந்துள்ள குகைகளின் உள்ளே (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) சமணத் துறவிகளின் கற்படுக்கைகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • அவை வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா லத்தேரியில் காணப்படுகின்றன.
    • இரண்டில் மட்டுமே கற்படுக்கைகள் உள்ளன (மூன்றில்).
    • ஒன்றில் நான்கு படுக்கைகள் மற்றொன்றில் ஒரு படுக்கை.
    • தலையணைப் பகுதி இல்லை.

திருமலை:
இச்சமணக் கோவில் ஆரணி நகரின் அருகே அமைந்துள்ளது. (திருவண்ணாமலை – கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)

  • மூன்று சமணக் குகைகள், இரண்டு சமணக் கோவில்கள்
  • 16 மீட்டர் உயரமுள்ள நேமிநாதருடைய சிலை. உயரமான சமணச்சிலை.

மதுரை:

  • கீழக்குயில்குடி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
  • மதுரை – தேனி நெடுஞ்சாலையில் மதுரைக்கு மேற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
    • பராந்தக வீரநாராயண பாண்டியன் காலம் (கி.பி. 860 முதல் 900 வரை)
    • 8 சிற்பங்கள், ஆதிநாதர், மகாவீரர், பார்சவநாதர், பாகுபலி சிற்பங்கள் உள்ளன.
    • மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் 26 குகைகள், 200 சமண கற்படுக்கைகள், 60 கல்வெட்டுகள், 100 சிலைகள்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

7th Social  Science Guide தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது?
அ) கடற்கரைக் கோவில்
ஆ) மண்டகப்பட்டு
இ) கைலாசநாதர் கோவில்
ஈ) வைகுந்தபெருமாள் கோவில்
விடை:
அ) கடற்கரைக் கோவில்

Question 2.
மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால். எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
அ) 1964
ஆ) 1994
இ) 1974
ஈ) 1984
விடை:
ஈ) 1984

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 3.
முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது?
அ) புடைப்புச் சிற்பங்கள்
ஆ) விமானங்கள்
இ) பிரகாரங்கள்
ஈ) கோபுரங்கள்
விடை:
ஆ) விமானங்கள்

Question 4.
அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?
அ) திருக்குறுங்குடி
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) திருவில்லிபுத்தூர்
விடை:
அ) திருக்குறுங்குடி

Question 5.
வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார்?
அ) மகேந்திரவர்மன்
ஆ) நந்திவர்மன்
இ) ராஜசிம்மன்
ஈ) இரண்டாம் ராஜராஜன்
விடை:
ஆ) நந்திவர்மன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ………………… என்ற இடத்தில் உள்ளது.
விடை:
மண்டகப்பட்டு

Question 2.
முற்கால சோழர் கட்டடக்கலை ……………………. பாணியைப் பின்பற்றியது.
விடை:
செம்பியன் மகாதேவி

Question 3.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் …………………. ஆகும்.
விடை:
1000- கால் மண்டபம்

Question 4.
பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க ……………………. பெயர்பெற்றது.
விடை:
கோபுரங்கள்

Question 5.
விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் ………………… ஆகும்.
விடை:
மண்டபம்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 2

IV. தவறான இணையைக் காண்க

Question 1.
1. கிருஷ்ணாபுரம் கோவில் – திருநெல்வேலி
2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
3. சேதுபதிகள் – மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள்
4. ஜலகண்டேஸ்வரர் கோவில் – வேலூர்
விடை:
2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 2.
கூற்று : இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
காரணம் : உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.

அ) காரணம், கூற்றை விளக்கவில்லை
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி
திருவில்லிபுத்தூர் அழகர்கோவில், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை
விடை:
பொருந்தாதது எதுவுமில்லை (ஐந்து கோவில்களிலும் விஜயநகர நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன)

Question 4.
பின்வரும் காலத்திற்குப் பெயரிடுக.
அ) கி.பி. 600-850
ஆ) கி.பி. 850-1100
இ) கி.பி. 1100-1350
ஈ) கி.பி. 1350-1600
விடைகள் :
அ) கி.பி. 600-850 : பல்லவர் காலம்
ஆ) கி.பி. 850-1100 : முற்காலச் சோழர் காலம்
இ) கி.பி. 1100-1350 : பிற்காலச் சோழர் காலம்
ஈ) கி.பி. 1350-1600 : விஜயநகர / நாயக்கர் காலம்

Question 5.
சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி
1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
2. பல்லவர் காலகட்டடக்கலைப்பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
3. பின்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.
4. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
விடை:
1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
3. பிள்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.

V. சரியா? தவறா?

Question 1.
இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்.
விடை:
சரி

Question 2.
முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின் சமகாலத்தவர் ஆவர்.
விடை:
தவறு

Question 3.
பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாய் திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள் ஆகும்.
விடை:
சரி

Question 4.
பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.
விடை:
சரி

Question 5.
தாதாபுரம் கோவிலில் விஜயநகர மற்றும் நாயக்கர் கால ஓவியங்களைக் காணமுடியும்.
விடை:
தவறு

VI. குறுகிய விடையளி

Question 1.
பஞ்சபாண்டவ இரதம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
பஞ்சபாண்டவ இரதம்:

  • தமிழ் திராவிட கோவில் கட்டடக் கலை மரபிற்கு ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவ இரதங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன (மகாபலிபுரம்).
  • அவை திரௌபதி இரதம், தர்ம ராஜா இரதம், பீமரதம், அர்ச்சுன இரதம், நகுல சகாதேவ இரதம் ஆகியவை.
  • அவை மாடக்குழிகளாலும், பூவணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
  • பிரமாண்டமான கலைப்படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி புடைப்புச் சிற்பம் ஏறத்தாழ 100 அடி நீளமும் 45 அடி உயரமும் கொண்ட கருங்கல் பாறையாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 2.
சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றிக் கூறுக
விடை:
சித்தன்னவாசல் ஓவியங்கள்:

  1. சித்தன்னவாசல் சமணத்துறவிகள் வாழ்ந்த குகையாகும். அவர்கள் குகைச் சுவர்களில் சாந்துபூசி, ஈரம் காய்வதற்கு முன்னரே ஓவியங்களைத் தீட்டியுள்ளனர்.
  2. இன்றைக்கு இருப்பனவற்றுள் தாமரைத் தடாக ஓவியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  3. மிகச் சிறந்த வர்ணங்களின் பயன்பாட்டிற்கும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ள நேர்த்திக்கும் – புகழ்பெற்றதாகும். தாமரை மலர்கள், குளமெங்கும் நீரில் பரவிக்கிடக்கும் இலைகள், யானை. எருமை, அன்னப்பறவை. பூக்களைப் பறிக்கும் மனிதன் ஆகிய ஓவியக்காட்சி மனங்களைக் கொள்ளை கொள்கின்றது.

Question 3.
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடுக.
விடை:
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்கள்:

  • தஞ்சாவூர் பெரிய கோவில் ஒரு பெரிய கோவில் வளாகமாக இருந்தது.
  • அதன் விமானம் 216 அடிகள் உயரம் கொண்டதாகும். உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் ஒன்று. அதன் சிகரம் தட்சிண மேரு என்றழைக்கப்படுகிறது.
  • இங்குள்ள மிகப்பெரும் நந்தியின் சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும் (16 அடி நீளம் 13 அடி உயரம்).

Question 4.
இராமேஸ்வரம் கோவில் நம் கவனத்தை ஈர்க்கும் விதத்தைக் கூறுக.
விடை:
நம் கவனத்தை ஈர்க்கும் இராமேஸ்வரம் கோவில்:

  1. இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன. உலகிலேயே மிகவும் நீளமான பிரகாரங்கள் இவையே எனச் சொல்லப்படுகிறது.
  2. இது மூன்று பிரகாரச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது.
  3. வெளிப்பிரகாரம் (7 மீட்டர் உயரம், 120 மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு மேற்குப் பிரகாரங்கள்)
    • வடக்கு தெற்கு பிரகாரங்கள் (195 மீட்டர் நீளமுடையவை)
    • உட்புறப் பிரகாரங்கள் (மிகப்பழமையானவை)
  4. 1200க்கும் மேற்பட்ட தூண்கள் வெளிப்பிரகாரத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.

VII. விரிவான விடையளி

Question 1.
பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது விளக்குக. குடைவரைக் கோவில்களிலிருந்து கட்டுமானக் கோவில்களுக்கான மாற்றம் (பல்லவர் காலம்):
விடை:

  • பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது.
  • குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும் போது பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி செதுக்கப்படும். பின்னர் அப்பாறையே குடையப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்படும்.
  • பல்லவ அரசர் மகேந்திரவர்மன் குடைவரைக் கட்டடக் கலைக்கு முன்னோடியாவார். மண்டகப்பட்டு, முதல் குடைவரைக் கோவிலாகும்.
  • குடைவரைக் கோவிலின் முன்புறம் அமைந்துள்ள இரண்டு தூண்கள் அக்கோவிலைத் தாங்கி நிற்கும்.
  • கி.பி.700 க்குப் பின் குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது. சிற்பிகள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டானது. கடற்கரைக் கோவில் தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கோவில்.
  • ஒரே பாறையில் கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் – கோவில்கள் பாறைப் பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன.
  • காஞ்சி கைலாசநாதர் கோவில் (ராஜசிம்மன்), வைகுண்டப்பெருமாள் கோவில் (இரண்டாம் நந்திவர்மன்) ஆகியவை எடுத்துக்காட்டுகள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 2.
விஜயநகர , நாயக்கர் கால கட்டடக்கலையானது பல்லவர் மற்றும் பிற்கால சோழர் கட்டடக்கலையிலிருந்து எவ்விதம் வேறுபடுகிறது என விவாதிக்கவும்.
விடை:
விஜயநகர / நாயக்கர் கால கட்டடக்கலை:
விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஒரு புதிய வடிவிலான கட்டடக்கலைப் பாணி ‘மண்டபங்கள்’ உருவானது.

15 முதல் 17ம் நூற்றாண்டு வரையிலான விஜயநகர, நாயக்க கட்டடக்கலையின் முக்கியக் கூறுகள் அழகூட்டப்பட்ட மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவ அளவிலான சிலைகள், கோபுரங்கள், பிரகாரங்கள், இசைத் தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள் ஆகும்.

கோவில்களோடு சேர்ந்து தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன. கோவில்களுக்கான நுழைவாயில்கள் நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் கட்டப்பட்டன. சிற்பங்களோடு கூடிய மாடக்குழிகளை அமைக்கும் பழக்கம் நாயக்கர் காலத்திலும் தொடர்ந்தது.

பல்லவர்கள் மற்றும் பிற்காலச் சோழர்கள் காலக் கட்டடக்கலை :
பல்லவர் ஆட்சிக்காலத்தில் குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும் போது பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி செதுக்கப்பட்டு பின்னர் அப்பாறையே குடையப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்படும்.

குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை கி.பி. 700க்குப் பின்னர் மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது.

ஒரே பாறையில் ஒரு கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் கோவில்கள் பாறைப்பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன. இரதங்களின் வெளிப்பக்கச் சுவர்கள் மாடக்குழிகளாலும் பூவணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பிற்காலச் சோழர்கள் காலத்தில் தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் அமைந்துள்ள இரண்டு உன்னதமான கோவில்கள் சோழர்களின் கட்டடக்கலை முதிர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன.

தஞ்சாவூர் பெரிய கோவில் (கி.பி.1009) ராஜராஜன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

பிற்காலச் சோழர்கள் காலம் பொலிவுமிக்க கோபுரங்களுக்காகப் புகழ்பெற்றது.

VIII. உயர்சிந்தனை வினா

Question 1.
திராவிடக் கட்டடக்கலை உள்நாட்டில் தோன்றியதை விளக்குக.
விடை:
உள் நாட்டில் தோன்றிய திராவிடக் கட்டடக்கலை :

  • திராவிடக் கட்டடக்கலை நம்மண்ணில் பிறந்ததாகும். காலப்போக்கில் பரிணாமச் செயல்பாட்டின் வழியாய் அக்கலை மேம்பாடு அடைந்தது.
  • மகாபலிபுரத்திலுள்ள ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலத்தில் முந்திய குடைவரைக் கோவில்களே (குகைக்கோவில்கள்) தமிழ் திராவிடக் கட்டடக்கலையின் எடுத்துக்காட்டுகளாகும்.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய கோவில்கள் மரத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அவை இயற்கை சக்திகளால் அழிவுக்கு உள்ளாகி இருக்கலாம்.
  • தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்து கட்டங்களாக நடைபெற்றுள்ளது.
    • பல்லவர் காலம் (கி.பி 600 – 850)
    • முற்காலச் சோழர்கள் காலம் (கி.பி 850 – 1100)
    • பிற்காலச் சோழர்கள் காலம் (கி.பி. 1100 – 1350)
    • விஜயநகர / நாயக்கர் காலம் (கி.பி. 1350 – 1600)
    • நவீன காலம் (கி.பி. 1600க்கு பின்ன ர்)

Question 2.
கோயில் கலை வளர்ச்சியானது நாயக்கர் காலத்தில் சிறந்தோங்கியது என்பதை தெளிவுபடுத்துக.
விடை:
நாயக்கர் காலத்தில் சிறந்தோங்கிய கோயில் கலை வளர்ச்சி:

  • நாயக்கர்கள் காலத்தில் (விஜயநகர காலம்) மண்டபங்களிலுள்ள ஒற்றைக்கல் தூண்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன.
  • தூண்களில் குதிரைகள், சிங்கங்கள் மற்றும் கடவுளர்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இம்மண்டபங்களுள் மிகவும் புகழ்பெற்றது மதுரை கோவிலில் அமைந்துள்ள புதுமண்டபம்.
  • 15 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கட்டடக் கலையின் முக்கியக் கூறுகள் அழகூட்டப்பட்ட மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவ அளவிலான சிலைகள், கோபுரங்கள், பிரகாரங்கள், இசைத் தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள் ஆகும்.
  • தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன. நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் நுழைவாயில்கள் கட்டப்பட்டன.
  • பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களை அமைக்கும் முறை அதிகரித்தது. இவற்றை நாம் அழகியநம்பி கோவில், கோபாலகிருஷ்ண கோவில், ஆதிநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில் ஆகியவற்றில் காணலாம்.
  • மண்டபக் கட்டடக்கலைக்கு 1000-கால் மண்டபம், ரதிமண்டபம் (திருக்குறுங்குடி, நாங்குநேரி) ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.
  • நாயக்கர் கால ஓவியங்கள் வரதராஜ பெருமாள் கோவில், கூடலழகர் கோவில் மற்றும் திருவில்லிபுத்தூர், அழகர் கோவில், திருவண்ணாமலை மற்றும் திருவரங்கம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களில் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் நாயக்க ஆட்சியாளர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட கோவில்களுக்குச் சென்று கட்டுமானத்திலும் சிற்பங்களிலும் அவை ஒன்றோடொன்று எவ்விதம் வேறுபடுகின்றன என்பதைக் கண்டறியவும்.

7th Social  Science Guide தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
……………………. கோவில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது.
அ) காஞ்சி கைலாசநாதர்
ஆ) நெல்லையப்பர்
இ) மீனாட்சியம்மன்
ஈ) வைகுண்டப் பெருமாள்
விடை:
ஈ) வைகுண்டப் பெருமாள்

Question 2.
முற்கால ………………….. பல்லவர்களின் சமகாலத்தவராவர்.
அ) சேரர்கள்
ஆ) சோழர்கள்
இ) பாண்டியர்கள்
ஈ) நாயக்கர்கள்
விடை:
இ) பாண்டியர்கள்

Question 3.
…………………….. சமணத்துறவிகள் வாழ்ந்த குகையாகும்.
அ) சித்தன்னவாசல்
ஆ) திருமலாபுரம்
இ) மதுரை
ஈ) கழுகுமலை
விடை:
அ) சித்தன்னவாசல்

Question 4.
முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலை ……………………. பாணியைப் பின்பற்றி அமைந்ததாகும்.
அ) விஜயாலயன்
ஆ) செம்பியன் மகாதேவி
இ) இராஜராஜன்
ஈ) இராஜேந்திரன்
விடை:
ஆ) செம்பியன் மகாதேவி

Question 5.
தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவில் …………………… ல் கட்டி முடிக்கப்பட்டது.
அ) 1009
ஆ) 1019
இ) 1029
ஈ) 1039
விடை:
அ) 1009

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………………………. கட்டடக்கலை நம் மண்ணில் பிறந்ததாகும்.
விடை:
திராவிட

Question 2.
பாண்டியர் காலத்துச் சிவன் கோவில்களின் ……………. தாய்ப் பாறையிலிருந்து செதுக்கப்பட்டவையாகும்.
விடை:
லிங்கங்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 3.
கி.பி. 850ல் …………………. காலத்தில் சோழர்கள் முக்கியத்துவம் பெறத் துவங்கினார்கள்.
விடை:
விஜயாலய சோழன்

Question 4.
மதுரைநாயக்க அரசர்களின் சிற்றரசர்களான ………………….. இராமநாதபுரத்தை ஆண்ட னர்.
விடை:
சேதுபதிகள்

Question 5.
விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் பெரும்பாலும் …………………… கதைக் காட்சிகளைக் கொண்டுள்ளன.
விடை:
ராமாயணக்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 3

IV. தவறான இணையைக் காண்க

Question 1.
1. மகேந்திரவர்மன் – முற்காலச் சோழர்கள் காலம்
2. இராஜசிம்மன் – பல்லவர்கள் காலம்
3. இராஜராஜன் II – பிற்காலச் சோழர்கள் காலம்
4. விஜயாலயன் – பாண்டியர்கள் காலம்
விடை:
1. மகேந்திரவர்மன் – முற்காலச் சோழர்கள் காலம், 4. விஜயாலயன் – பாண்டியர்கள் காலம்

Question 2.
கூற்று : கி.பி. 1009ல் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
காரணம் : இது ராஜேந்திர சோழன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

அ) காரணம், கூற்றை விளக்கவில்லை
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி
இராஜராஜன், இராஜேந்திரன், இராஜராஜன் II, செம்பியன் மகாதேவி, இராஜசிம்மன். விஜயாலயன்
விடை:
இராஜசிம்மன்

Question 4.
பின்வரும் காலத்தின் சிறப்புக்கூறுகளைப் பெயரிடுக.
அ) பல்லவர்கள் காலம்
ஆ) முற்காலச் சோழர்கள் காலம்
இ) பிற்காலச் சோழர்கள் காலம்
ஈ) விஜயநகர / நாயக்கர் காலம்
விடைகள்:
அ) பல்லவர்கள் காலம் : பாறைச் சிற்பங்கள்
ஆ) முற்காலச் சோழர்கள் காலம் : விமானங்கள்
இ) பிற்காலச் சோழர்கள் காலம் : கோபுரங்கள்
ஈ) விஜயநகர நாயக்கர் காலம் : மண்டபங்கள்

Question 5.
சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி
1. பாண்டியர் காலச் சிலைகள் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
2. தாராசுரம் கோவிலை இராஜேந்திர சோழன் கட்டுவித்தார்.
3. கட்டுமானக் கோவில்கள் சிற்பிகள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்த அதிக வாய்ப்பினைக் கொடுக்கவில்லை.
4. சித்தன்னவாசல் சமணத்துறவிகள் வாழ்ந்த குகையல்ல.
விடை:
1. பாண்டியர் காலச் சிலைகள் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

V. சரியா? தவறா?

Question 1.
வைகுண்டப் பெருமாள் கோவிலிலுள்ள கருவறைகளில் ஒன்று சிவபெருமானுக்கும் மற்றொன்று விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளது.
விடை:
சரி

Question 2.
தாதாபுரம் கோவில் திண்டிவனத்துக்கு அருகேயுள்ளது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 3.
சித்தன்னவாசல் பௌத்த துறவிகள் வாழ்ந்த குகையாகும்.
விடை:
தவறு

Question 4.
இந்திரனின் யானை வழிபட்ட கடவுள் ஐராவதீஸ்வரர்.
விடை:
சரி

Question 5.
வெளிப்புறத்தில் கட்டப்பட்ட தூண்களுடன் கூடிய மண்டபங்கள் பொது நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்டவை.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
பல்லவர் காலத்துப் பாண்டியர் சிற்பங்களை விவரி.
விடை:
பல்லவர் காலத்துப் பாண்டியர் சிற்பங்கள்:

  • பாறை குடைவரைக் கோவில்களில் குகைகளின் சுவர்கள் கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
  • கட்டுமானக் கோவில்களைப் பொருத்தமட்டிலும் கருவறையின் சுவர்களில் அலங்கார வேலைப்பாடுகள் காணப்படவில்லை. மாறாகக் கட்டுமானங்களிலும் தூண்களிலும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இச்சிற்பங்கள் கம்பீரமாகவும், அகன்ற தோள்களோடும் ஒடிசலான உடல்வாகுடனும் அழகான ஆபரணங்களோடும் உயரமான கிரீடங்களோடும் காட்சியளிக்கின்றன.

Question 2.
பிள்ளையார்பட்டி கோவில் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
பிள்ளையார்பட்டி கோவில்:

  • பிற்காலப் பாண்டியர்களின் பங்களிப்புக்கு சான்றாக 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிள்ளையார்பட்டியிலுள்ள (காரைக்குடிக்கு அருகில்) குடைவரைக் கோவில் அமைந்துள்ளது.
  • சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றுக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • நுழைவாயிலைப் பார்த்தவண்ணம் அழகான கணேசனின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.
  • தேசிவிநாயகம் என குகைக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கைகளைக் கொண்டுள்ள கணபதியின் தும்பிக்கை வலது புறமாகத் திரும்பியுள்ளது.

Question 3.
முற்கால சோழர்கள் கட்டடக்கலை பற்றி குறிப்பு வரைக.
விடை:
முற்கால சோழர்கள் கட்டடக்கலை:

  1. இக்கால கோவில் கட்டடக்கலை செம்பியன் மகாதேவி பாணியைப் பின்பற்றி அமைந்தது.
  2. கோவில்களில் அதிக எண்ணிக்கையில் தேவகோஷ்டங்கள் என்ற மாடக்குழிகள் இருந்தால் அதை செம்பியன் மகாதேவி பாணி என வகைப்படுத்தலாம்.
  3. எ.கா: திருப்புறம்பியம் (செம்பியன் மகாதேவியால் மறுவடிவாக்கம் செய்யப்பட்டது) கோவில்.

Question 4.
விஜயநகர / நாயக்கர் கால சிறப்பித்துக் சொல்ல வேண்டிய மிகப்பெரும் கலைப் படைப்புகள் யாவை?
விடை:
சிறப்பான மாபெரும் கலைப் படைப்புகள்:

  1. ஜலகண்டேஸ்வரர் கோவில் (வேலூர்)
  2. தாடிக் கொம்பில் உள்ள கோவில் (திண்டுக்கல்)
  3. கிருஷ்ணாபுரத்தில் உள்ள கோவில் (திருநெல்வேலி)
  4. பெரிய கோவிலுக்குள் அமைந்த சுப்பிரமணியசுவாமி கோவில் (தஞ்சாவூர்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 5.
கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்களைப் பெயரிடுக.
விடை:
கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்கள்:

  • சிவன்
  • விஷ்ணு
  • பிரம்மன்
  • பார்வதி
  • கணபதி
  • சுப்பிரமணியன்
  • தட்சிணாமூர்த்தி

VII. விரிவான விடையளி

Question 1.
பல்லவர் காலத்துப் பாண்டியர் கோவில்கள் – விவாதிக்க.
விடை:
பல்லவர் காலத்துப் பாண்டியர் கோவில்கள்:
முற்காலப் பாண்டியர்கள் பல்லவர்களின் சமகாலத்தவராவர்.

பாண்டியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குகைக்கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவைகளில் முக்கியமானவை மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி (சிவன், விஷ்ணு, பிரம்மாவுக்குப் படைத்தளிக்கப்பட்டவை).

சிவலிங்கம் கருவறையின் மையத்தில் நிறுவப்பட்டுள்ளது. நீர் வெளியே செல்ல கால்வாயும் உள்ளது.

தூண்கள் வெவ்வேறு அளவுகளைக் கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அலங்கார வேலைப்பாடுகள் ஒரே மாதிரியாக இல்லை. புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

பாறைகுடைவரைக் கோவில்களும் கட்டுமானக் கோவில்களும் சிறப்புமிக்க அம்சங்களாகும். கழுகுமலை வெட்டுவான் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பாண்டியர் கட்டடக்கலை பாணியை பறைசாற்றுகின்றன.

சிற்பங்கள் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றன. சித்தன்னவாசல் (புதுக்கோட்டை) மற்றும் திருமலாபுரம் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் உன்னதமான ஒவியங்கள் உள்ளன. ஓவியக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

Question 2.
தென்னிந்தியாவில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி பற்றி உனக்குத் தெரிந்ததை எழுது.
விடை:
கோவில் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சி:
தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்து கட்டங்களாக நடைபெற்றுள்ளது. அவை பின்வருமாறு.

  • முதல் கட்டம் – பல்லவர் காலம் கி.பி. 600 – 850
  • இரண்டாம் கட்டம் – முற்காலச் சோழர்கள் காலம் கி.பி. 850 – 1100
  • மூன்றாம் கட்டம் – பிற்காலச் சோழர்கள் காலம் கி.பி. 1100 – 1350
  • நான்காம் கட்டம் – விஜயநகர நாயக்கர் காலம் கி.பி. 1350 – 1600
  • ஐந்தாம் கட்டம் – நவீன காலம் கி.பி. 1600க்குப் பின் திராவிடக் கட்டடக்கலை நம் மண்ணில் பிறந்ததாகும். காலப்போக்கில் பரிணாமச் செயல்பாட்டின் வழியாய் அக்கலை மேம்பாடு அடைந்தது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

7th Social  Science Guide புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனில் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?
அ) பொய்கை ஆழ்வார்
ஆ) பெரியாழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆண்டாள்
விடை:
ஆ) பெரியாழ்வார்

Question 2.
அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?
அ) இராமானுஜர்
ஆ) இராமாநந்தர்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆதி சங்கரர்
விடை:
ஈ) ஆதி சங்கார்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 3.
பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?
அ) வல்லபாச்சாரியார்
ஆ) இராமானுஜர்
இ) இராமாநந்தர்
ஈ) சூர்தாஸ்
விடை:
இ) இராமாநந்தர்

Question 4.
சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?
அ) மொய்னுதீன் சிஸ்டி
ஆ) சுரவார்டி
இ) அமீர் குஸ்ரு ஸ்ரு
ஈ) நிஜாமுதின் அவுலியா
விடை:
அ) மொய்னுதீன் சிஸ்டி

Question 5.
சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?
அ) லேனா
ஆ) குரு அமீர் சிங்
இ) குரு நானக்
ஈ) குரு கோவிந் சிங்
விடை:
இ) குரு நாதால்,

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் …………………
விடை:
விஷ்ணு சித்தர்

Question 2.
சீக்கியர்களின் புனித நூல் ……………… ஆகும்.
விடை:
குரு கிரந்சாகிப்

Question 3.
மீராபாய் ………………. என்பாரின் சீடராவார்
விடை:
ரவிதாஸ்

Question 4.
……………….. என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது.
விடை:
இராமானுஜர்

Question 5.
தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் ……………… என்ற இடத்தில் அமைந்துள்ளது.
விடை:
கர்தார்பூர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 2

IV. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
துக்காராம் – வங்காளம்
சைதன்யதேவா – மகாராஷ்டிரா
பிரம்ம சூத்திரம் – வல்லபாச்சாரியார்
குருத்வாராக்கள் – சீக்கியர்கள்
விடை:
1. ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
5. குருத்வாராக்கள் – சீக்கியர்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 2.
கூற்று : குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது.
காரணம் : குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங்.

அ) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.
ஆ) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று. காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு.

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார்.
விடை:
ஆண்டாள்

V. சரியா? தவறா?

Question 1.
இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிஸம் காரணமாயிற்று.
விடை:
சரி

Question 2.
இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார்.
விடை:
சரி

Question 3.
குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.
விடை:
சரி

Question 4.
கடவுளை உய்த்துணர உணர்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர்.
விடை:
சரி

Question 5.
அடிப்படை தமிழ் சைவப் புனித நூல்கள் 12 ஆகும்.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
திருமுறை பற்றி நீவிர் அறிவது என்ன?
விடை:
திருமுறை:

  • திருமுறை சைவப் புனித நூல்களின் அடிப்படை.
  • 63 நாயன்மார்களில் ஒருவரான நம்பி ஆண்டார் நம்பி (கி.பி.1000) திருமுறையைத் தொகுத்தார் (நாயன்மார்களின் பாடல்கள் தொகுப்பு).
  • திருமுறை 12 நூல்களைக் கொண்டுள்ளது (11 நூல்கள் நம்பி ஆண்டார் நம்பி, 12வது நூல் சேக்கிழார் – பெரிய புராணம்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 2.
நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களில் முக்கியமானோர் யாவர்?
விடை:
நாயன்மார்கள்:

  • நாயன்மார்கள் 63 பேராவர் (சைவ அடியார்கள்)
  • ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் (மும்மூர்த்திகள்) முக்கியமானவர்கள்

Question 3.
சீக்கிய மதத்தைத் தோற்றுவிக்க குருநானக் எவ்விதம் உதவினார்?
விடை:
சீக்கிய மதம்:

  • குருநானக்கின் போதனைகளே புதிதாக நிறுவப்பட்ட சீக்கிய மதத்தின் மூலக்கோட்பாடாக அமைந்தது.
  • 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் நிறுவினார்.
  • நானக் வேதச் சடங்குகள், சாதிப்பாகுபாடுகள் ஆகியவை மீது வெறுப்புக் கொண்டிருந்தார்.

Question 4.
பண்டரிபுரம் விதோபா கோவிலுக்கு, துக்காரம் எவ்விதம் பணியாற்றினார்?
விடை:
துக்காராமும் விதோபா கோவிலும்:

  • துக்காராம் (கவிஞர், திருத்தொண்டர் – மகாராஷ்டிரா) அவர் இயற்றிய ஆன்மீகப் பாடல்களுக்காகவே நன்கு அறியப்பட்டிருந்தார்.
  • அவருடைய பாடல்களான அபங்கா (அல்லது) கீர்த்தனைகள் விதோபா குறித்து இயற்றப்பட்டது (விஷ்ணுவின் அவதாரம்),
  • விதோபா கோவில் பந்தர்பூரில் உள்ளது. (சோலாப்பூர் மாவட்டம், மகாராஷ்டிரா)

Question 5.
கபீரின் சமயக்கருத்துக்கள் கீழ்நிலை சாதிகளைச் சார்ந்தோருக்கு ஏற்புடையதாயிற்று என்பதை முன்னிலைப்படுத்து.
விடை:
கபீரின் சமயக்கருத்துக்கள்:
பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தன. ஆனால் கபீர் கடவுள் ஒருவரே என்றும், வடிவமற்றவர் என்றும் நம்பினார்.

கபீர் சமயம், சாதி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளை அவர் கண்டனம் செய்தார். பொருளற்ற சடங்கு முறைகளையும் அவர் கண்டனம் செய்தார்.

VII. விரிவான விடையளி

Question 1.
தென்னிந்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளில் பக்தி இயக்கத்திற்கு சான்றோர் பலரது பங்களிப்பினைப் பற்றிக் கூறு.
விடை:
பக்தி இயக்கத்திற்கு சான்றோர் பலரின் பங்களிப்பு:
கடவுளின் மீதான முழுமையான பக்தியே மனிதனை வாழ்வின் இடர்ப்பாடுகளிலிருந்து காத்து முக்தியை அருளுமென பக்தி இயக்கங்களை நிறுவிய சான்றோர்கள் கருதினர்.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் அல்லது வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி தென்னிந்தியாவில் தொடங்கிற்று. ஆண், பெண் கடவுளர்களின் பெயர்களைத் தொடர்ந்து ஓதுதல். கடவுளர்களைப் புகழ்ந்து பாடுதல், மதச் சின்னங்களைச் சுமந்து செல்லுதல், கடவுளுடன் தொடர்புடைய புனிதத்தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவை உள்ளடங்கும்.

தனக்குச் சொந்தமான கடவுளை வழிபடும் பக்தனுக்கும் அக்கடவுளுக்கும் இடையிலான பரஸ்பர உணர்வு ரீதியிலான பற்றுதலுக்கும் அன்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது. சூபி தத்துவமும் இதே போன்ற கருத்தையே போதித்தது.

ஆழ்வார்கள் (வைணவ பக்தி அடியார்கள்), நாயன்மார்கள் (சிவனை வழிபடும் சைவ அடியார்கள்), ஆதிசங்கரர் (அத்வைதம்), இராமானுஜர் (விசிஷ்டாத்வைதம்) ஆகியோர் தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தைப் பரப்பிய சான்றோர் ஆவர்.

இராமாநந்தர், வல்லபாச்சாரியார், சூர்தாஸ், மீராபாய், சைதன்யதேவா, துளசிதாசர் மற்றும் துக்காராம் ஆகியோர் வடஇந்தியாவில் பக்தி இயக்கம் பரவக் காரணமான சான்றோர்கள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 2.
சூபியிஸம் என்றால் என்ன? அது இந்தியாவில் எவ்விதம் தடம் பதித்தது?
விடை:
சூபியிஸம் மற்றும் இந்தியாவில் அதன் தடம் பதிப்பு:
சூபியிஸம்:

  • சூபி எனும் சொல் சுப்’ என்பதிலிருந்து தோன்றியதாகும். அதன் பொருள் கம்பளி ஆகும். சூபிக்கள் சொர சொரப்பான முரட்டுக் கம்பளியாலான உடைகளை அணிந்ததால் சூபிக்கள் என அழைக்கப்பட்டனர்.
  • சூபியிஸம் அடிப்படையில் இஸ்லாமியத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அது இந்து, பௌத்த சமயக் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தது.

இந்தியாவில் தடம் பதித்தல்:

  • பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் டெல்லி சுல்தானிய ஆட்சியின்போது சூபியிஸம் முக்கியத்துவம் பெற்றது.
  • இந்தியக் கருத்தாக்கங்களான யோகப்பயிற்சி, தோற்ற அமைவுகள், இந்திய இசை, நடனம் ஆகியவற்றை கைக்கொண்டது.
  • மொய்னுதீன் சிஸ்டி, சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கினார். நிஜாமுதீன் அவுலியா டெல்லியின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த எண்ணற்ற நபர்களால் பின்பற்றப்பட்டார்.
  • பிர்தௌசி அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் பீகாரில் மட்டுமே காணப்பட்டன. அது சுரவார்டியின் ஒரு கிளைப் பிரிவாகும். (சுரவார்டி அமைப்பு தோற்றுவித்தவர் அப்துல்-வகித் அபு நஜிப் எனும் ஈரானிய சூபி).

Question 3.
இந்திய சமூகத்தில் பக்தி இயக்கம் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தியது?
விடை:
இந்திய சமூகத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்:

  • இந்து சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டப்பட்டது. அதனால் அது இஸ்லாமின் தாக்குதல்களிலிருந்து காக்கப்பட்டது.
  • பக்தி இயக்கச் சான்றோர்களால் இஸ்லாமியத் தத்துவக்கூறுகள் வலியுறுத்தப்பட்டு அமைதியும், இணக்கமும் வளர்ந்தன (தத்துவக் கூறுகள் கடவுள் ஒருமைப்பாடு மற்றும் உலக சகோதரத்துவம்).
  • சாமானிய மக்களின் மொழியைப் பயன்படுத்தி பக்தி இயக்கம் சாமானிய மக்களின் இயக்கமானது.
  • இந்திய மொழிகள் வளர்வதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பிராந்திய மொழிகளின் இலக்கியச் செயல்பாடுகளுக்கு உந்து சக்தியாய் அமைந்தது.
  • இந்து அரசுகளின் அரசர்கள் சரிவைச் சந்தித்த சமஸ்கிருத மொழிக்கு ஆதரவு நல்கினார்.
  • தமிழ் மட்டுமே பக்தி இயக்கக் காலப் பகுதியில் உயிர்த்துடிப்புடன் விளங்கிய ஒரே பழமையான மொழி. பக்தி இயக்கக் கோட்பாடுகளால் அன்றாட வாழ்க்கையைச் சித்தரித்த தமிழ் இலக்கியம், சமயங்களுக்கும், சமய இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது.
  • சாதி முறையும் சமூக ஏற்றதாழ்வுகளும் விமர்சனங்களுக்கு உள்ளாயின.

VIII. உயர்சிந்தனை வினா

Question 1.
இஸ்லாத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி வேத இந்து மதத்தை பக்தி இயக்கம் பாதுகாத்தது என்பதை ஆராய்க.
விடை:
வேத இந்து மதத்தை பக்தி இயக்கம் பாதுகாத்தல் :
இந்து. இஸ்லாம் ஆகிய இரு சமயங்களிலும் அறிவுநிலை கடந்த சமய இயக்கங்கள் செயல்பட்டன. தங்களுடைய போதனைகளில் வெவ்வேறு சமயங்கள் சார்ந்த கூறுகளையும் சேர்த்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை .

ஹரிதாசரின் கூற்று “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே”.

பிற சமய கடுந்தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புலவர்களாகவும் ஞானிகளாகவும் இருந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகநிலைகளைச் சாடியதோடு, ஆண், பெண் சமத்துவத்தையும் முன்னிறுத்தினர்.

ஆதி சங்கரர் பக்தி இயக்கத்தின் மீது கவனம் கொள்ளாது வேத மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டார்.

சமூக, சமத்துவக் கருத்துகளைப் பரப்பிய இராமானுஜர் கோவில்களில் நுழைவதற்கான சாதியக் கட்டுபாடுகளை கண்டனம் செய்தார்.

கபீர், குருநானக் (புதிய சமயப்பிரிவுகள்) மற்றும் வங்காளத்தில் சைதன்ய தேவா ஆகியோர் சிறப்பாய் செயல்பட்டனர்.

இராமாநந்தர், வல்லபாச்சாரியார் (தெலுங்கு), சூர்தாஸ் (ஆக்ரா), மீராபாய் (மேவார்), துளசிதாசர், துக்காராம் ஆகியோரும் பக்தி இயக்கத்தைப் பரப்பியதன் மூலம் வேத இந்து மதத்தைப் பாதுகாத்தனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழகத்தின் பக்தி இயக்கப் பெரியோர் வாழ்ந்த பகுதிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய பகுதிகளுக்கு நேரில் செல்க.

7th Social  Science Guide புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பகவத் கீதையில் ……………… சிறந்தது எனக் கூறப்பட்டுள்ளது.
அ) பக்திமார்க்கம்
ஆ) ஞானமார்க்கம்
இ) கர்மா மார்க்கம்
ஈ) நிர்வாணம்
விடை:
அ) பக்திமார்க்கம்

Question 2.
அத்வைதத்தைப் போதித்தவர் ……………
அ) ஆதி சங்கரர்
ஆ) இராமானுஜர்
இ) இராமாநந்தர்
ஈ) சைதன்யர்
விடை:
அ) ஆதி சங்கரர்

Question 3.
17 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த கவிஞரான திருத்தொண்டர் ………………..
அ) சூர்தாசர்
ஆ) துளசிதாசர்
இ) துக்காராம்
ஈ) ரவிதாஸ்
விடை:
இ) துக்காராம்

Question 4.
சிஸ்டி …………………… இயற்கை எய்தினார்.
அ) கர்தார்பூர்
ஆ) குர்தாஸ்பூர்
இ) லாகூர்
ஈ) ஆஜ்மீ ர்
விடை:
ஈ) ஆஜ்மீர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 5.
குருநானக் ……………….. என்ற தனது சீடரைத் தனக்குப் பின்னரான குருவாக நியமித்தார்.
அ) ஆதிக்கிரந்தம்
ஆ) லேனா
இ) குரு கோவிந் சிங்
ஈ) குரு அர்ஜுன் சிங்
விடை:
ஆ) லேனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கபீரின் பாடல்கள் ………………. மொழியில் எழுதப்பட்டவை.
விடை:
போஜ்புரி

Question 2.
2019 குருநானக்கின் ……………….. வது பிறந்தநாளைச் சிறப்பிக்கிறது.
விடை:
550

Question 3.
சூபியிஸம் ………………. கடுமையான ஒழுக்க விதிகளை மறுத்தது.
விடை:
உலேமாக்களின்

Question 4.
வங்காளத்தில் பக்தி இயக்கம் ………………… உடன் தொடர்புடையது.
விடை:
சைதன்ய தேவா

Question 5.
பெரியாழ்வார் ஆண்டாளை கோவில் ………………….. கண்டெடுத்தார்.
விடை:
துளசித் தோட்டத்தில்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 3

IV. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆதி சங்கரர் – சங்கராச்சாரியார்
இராமானுஜர் – அத்வைதம்
திவ்விய பிரபந்தம் – நாயன்மார்கள்
கபீர் – சீக்கியர்
கிர்பான் – குறுவாள்
விடை:
1. ஆதி சங்கரர் – சங்கராச்சாரியார்
5. கிர்பான் – குறுவாள்

Question 2.
கூற்று : கபீர் வாரணாசியை இருப்பிடமாகக் கொண்ட இராமாநந்தரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார்.
காரணம் : அவர் கடவுள்களையும், பெண் கடவுள்களையும் நம்பினார். –

அ) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.
ஆ) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
சிஸ்டி, பிர்தௌசி, சுரவார்டி, கால்சா
விடை:
கால்சா

V. சரியா? தவறா?

Question 1.
சிஸ்டி அமைப்பை பின்பற்றியவர்களுள் கவிஞர் அமீர் குஸ்ருவும் ஒருவர்.
விடை:
சரி

Question 2.
தர்மசாலைகள் குருத்வாராக்கள் ஆயின.
விடை:
சரி

Question 3.
உயிர் துடிப்புடன் விளங்கிய ஒரே பழமையான மொழி சமஸ்கிருதம் மட்டுமே.
விடை:
தவறு

Question 4.
மீராபாய் அவருடைய கீர்த்தனைகள் மூலம் பிரபலமானார்.
விடை:
தவறு

Question 5.
ஆதிசங்கரர் பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவினார்.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
வைணவத்தின் இரு பிரிவுகள் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
வைணவத்தின் இரு பிரிவுகள் வடகலை வைணவம் மற்றும் தென்கலை வைணவம்.

வடகலை வைணவம்:
காஞ்சிபுரத்தில் வடகலை வைணம் செழித்தோங்கியது. அது புகழ்பெற்ற சமஸ்கிருதக் கல்வி மையம். வடகலையின் முக்கியத்துவம் சமஸ்கிருத வேத நூல்கள்.

தென்கலை வைணவம்:
திருவரங்கத்தை தென்கலை வைணவம் மையமாகக் கொண்டிருந்தது. தென்கலையின் முக்கியத்துவம் தமிழ்மொழியில் எழுதப்பட்ட (12 ஆழ்வார்கள்) திவ்விய பிரபந்தம்.

Question 2.
வல்லபாச்சாரியார் குறித்து ஒரு சிறுகுறிப்பு வரைக.
விடை:
வல்லபாச்சாரியார்:
பார் வல்லபாச்சாரியார் ஒரு தெலுங்கு தத்துவஞானி. அவர் மதுராவுக்கு அருகே கோவர்த்தன் குன்றுகளில் கிருஷ்ண பகவானுக்கு ஒரு கோவிலை அமைத்தார்.

Question 3.
கால்சாவின் உறுப்பினர் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய ஐந்து தனித்தன்மைகள் யாவை?
விடை:
கால்சா உறுப்பினரின் ஐந்து தனித்தன்மைகள்:

  • கேஷ் – (வெட்டப்படாத முடி)
  • கன்கா – (சிகைக்கோல்)
  • கிர்பான் – (குறுவாள்)
  • கடா – (இரும்புக் காப்பு)
  • கச்சேரா – (கீழ்ப்பகுதி உள்ளாடை)

Question 4.
ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தொடங்கிய வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி எவற்றை உள்ளடக்கியதாக அமைந்தது.
விடை:
தமிழகத்தில் தொடங்கிய வழிபாட்டு முறைகள் (ஏழாம் நூற்றாண்டு):

  • ஆண், பெண் கடவுளர்களின் பெயர்களைத் தொடர்ந்து ஓதுதல்.
  • கடவுளர்களைப் புகழ்ந்து பாடுதல்.
  • மதச் சின்னங்களை அணிந்து கொள்தல் (அல்லது) அடையாளச் சின்னங்களைச் சுமந்து செல்தல்.
  • கடவுளுடன் தொடர்புடைய புனிதத்தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்தல்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 5.
சமய இயக்கங்களில் பிற சமயங்கள் சார்ந்த கூறுகளைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டப்பட்டதா?
விடை:
இல்லை . எவ்விதத் தயக்கமும் காட்டப்படவில்லை .
இந்து, இஸ்லாம் இரு சமயங்களிலும் அறிவுநிலை கடந்த சமய இயக்கங்கள் செயல்பட்டன. தங்களுடைய போதனைகளில் வெவ்வேறு சமயங்கள் சார்ந்த கூறுகளையும் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டவில்லை.

எடுத்துக்காட்டு: “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே” என்பது ஹரிதாசர் கூற்று.

VII. விரிவான விடையளி

Question 1.
“ஆதி சங்கரரின் தத்துவமும் அவரின் பணிகளும்” – விவரி.
விடை:

  • ஆதிசங்கரர் (சங்கராச்சாரியார்) அத்வைதம் எனும் தத்துவத்தைப் போதித்தார்.
  • “ஞானத்தைப் பெறுவதன் வழியாக ஜீவாத்மா பரமாத்மாவுடன் (பிரம்மா) இணையும்” என்பதே அத்வைதத்தின் சாரமாகும்.
  • சங்கரர் பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவினார். அவை கற்றுக் கொள்ளுதல் மற்றும் வழிபாட்டு மையங்களாகத் திகழ்ந்தன.
  • பக்தி இயக்கத்தின் மீது கவனம் கொள்ளாத அவர் வேத மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டார்.
  • பிரம்ம சூத்திரம் (வேதாந்தப் பள்ளியின் அடிப்படை நூல்) நூலுக்கு அவர் எழுதிய உரையே அவர் பணிகளில் சாலச் சிறந்தது. அவர் உபநிடதங்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

Question 2.
“குருநானக்” வரலாற்றைச் சுருக்கமாக எழுது
விடை:
குருநானக்:

  • குருநானக் 1469ல் லாகூருக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்தார்.
  • செய்வதில் ஆர்வம் காட்டினார்.
  • இயல்பான உலக வாழ்க்கையில் அவரை அவருடைய பெற்றோர்கள் ஈடுபடுத்துவதில் அக்கறை கொண்ட போதிலும், அவர் ஆன்மீகத்தில் மனச்சாய்வு கொண்டிருந்தார்.
  • நானக் பல புனிதத் தலங்களுக்குச் சென்று வந்த பின் இறுதியில் லாகூருக்கு அருகிலுள்ள கர்தார்பூரில் குடியேறினார். 1539 அங்கே இயற்கை எய்தினார்.
  • இந்திய அரசால் நானக் கோவிலையும் (குர்தாஸ்பூர்) குருத்வாரா தர்பார் சாகிப்பையும் (பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர்) இணைக்கும் நடைபாதை ஒன்றை 2019ல் அவருடைய

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 3.
பக்தி இயக்கத்திற்கு கபீரின் பங்களிப்பு – விளக்குக.
விடை:
கபீர் மற்றும் பக்தி இயக்கம் :
கபீர் ஓர் இஸ்லாமியராக இருந்தபோதிலும், இராமாநந்தரின் (வாரணாசியை இருப்பிடமாகக் கொண்ட அடியார்) செல்வாக்கிற்கு ஆட்பட்டார்.

சில இந்து சமயக் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அவர் இந்து இஸ்லாம் சமயங்களிடையே ஒத்திசைவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார்.

அவரின் கருத்துக்கள் இந்து சமூகத்தில் குறிப்பாக கீழ்நிலை சாதிகளைச் சார்ந்தோர்க்கு ஏற்புடையதாய் அமைந்தன. கபீர் சமயம், சாதி, செல்வம் அடிப்படையிலான பாகுபாடுகளை கண்டனம் செய்தார்.

அவர் கடவுள் ஒருவரே, அவர் வடிவமற்றவர் என்று நம்பினார். பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தன. கபீர் பொருளற்ற சடங்கு முறைகளையும் எதிர்த்தார்.

அவருடைய பாடல்கள் போஜ்புரி மொழியோடு உருது கலந்து எழுதப்பட்டவை. (கிரந்தவளி மற்றும் பைஜக் அவருடைய கவிதைத் தொகுப்புகள்)

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

7th Social  Science Guide ஊடகமும் ஜனநாயகமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?
அ) வானொலி
ஆ) தொலைக்காட்சி
இ) செய்தித்தாள்
ஈ) இணையதளம்
விடை:
இ) செய்தித்தாள்

Question 2.
கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது ___________
அ) இதழ்க ள்
ஆ) அறிக்கைகள்
இ) நாளிதழ்கள்
ஈ) வானொலி
விடை:
ஈ) வானொலி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 3.
உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம் _____________.
அ) தட்டச்சு
ஆ) தொலைக்காட்சி
இ) தொலைப்பேசி
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை:
ஆ) தொலைக்காட்சி

Question 4.
வெகுஜன ஊடகம் என்பது ___________
அ) தட்டச்சு
ஆ) தொலைக்காட்சி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) அ மற்றும் ஆ

Question 5.
ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
அ) நிறைய பணம் ஈட்ட
ஆ) நிறுவனத்தை ஊக்கப்படுத்த
இ) நடுநிலையான தகவலை தருவதற்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) நடுநிலையான தகவலை தருவதற்கு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது __________.
விடை:
ஊடகம்

Question 2.
ஒவ்வொரு தனிமனிதனும் ___________ ஆகும்
விடை:
ஊடகத்தின் வெளிப்பாடு

Question 3.
அச்சு இயந்திரம் __________ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
விடை:
ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்

Question 4.
நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு ____________ ஆகும்.
விடை:
நெறிமுறை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 5.
இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் ___________.
விடை:
ஆகாசவானி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 2

IV. கீழ்க்காணும் வாக்கிங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.
காரணம் : பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
தவறான ஒன்றை கண்டுபிடிக்க
அ) செய்தித்தாள்கள்
ஆ) நாளிதழ்கள்
இ) அறிக்கைகள்
ஈ) கீச்சகம்
உ) சுவராட்டிகள்
விடை:
ஈ) கீச்சகம்

Question 3.
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்
அ) ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனம் ஆகும்
ஆ) ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும்
இ) ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது
ஈ) ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது

i) அ, ஆ மற்றும் இ சரி
ii) அ, ஆ மற்றும் ஈ சரி
iii) ஆ, இ மற்றும் சரி
iv) அ, ஆ மற்றும் ஈ சரி
விடை:
i) அ, ஆ மற்றும் இ சரி

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
ஊடகம் என்றால் என்ன?
விடை:

  • ஊடகம் என்பது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக் கூடிய சாதனமாகும்.
  • ஊடகம் என்பது அச்சு , ஒலி, ஒளி என அனைத்துவகை பரப்பு சாதனங்களையும் உள்ளடக்கியதே ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 2.
சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?
விடை:

  1. சட்டமன்றத்தில் பேச்சுவார்த்தை முடிந்த பின் பத்திரிக்கையாளர்கள் அமைச்சர்களால் வரவழைக்கப்பட்டு தேவையான தகவல்களை வெளியிடுவர்.
  2. பத்திரிக்கையாளர்களும், ஊடகமும், கூட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வர்.
  3. இறுதியாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் தகவல்கள் வெளியிடப்படும்.

Question 3.
உள்ளூர் ஊடகத்தின் முக்கியத்துவம் யாவை?
விடை:
உள்ளூர் ஊடகம் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மக்களின் நலனுக்காக செயல்படுவதாகும்.

Question 4.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் நிரூபிக்கவும்.
விடை:

  • ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.
  • நாட்டின் தொலை தூர பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது.
  • ஊடகம் தகவல்கள் மற்றும் அறிவை வழங்கும் மிக முக்கிய சாதனமாக செயல்படுகிறது.

Question 5.
ஊடகத்தின் ஏதாவது இரண்டு பொறுப்புகளைக் கூறுக.
விடை:

  • அரசு சிறப்பாக செயல்படுவதற்கு விழிப்பான மற்றும் சுதந்திரமான ஊடகம் மிகவும் அவசியமாகும்.
  • நம்பகத்தன்மையான தகவல்களை மக்களிடம் வழங்குவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும்

Question 1.
ஊடகத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:

  1. குறுகிய தொடர்பு ஊடகம் – கேபிள் தொலைக்காட்சி, நேரடி அஞ்சல், கருத்தரங்கு
  2. தொலைத் தொடர்பு ஊடகம் – திரைப்படங்கள் தொலைக்காட்சி, வானொலி
  3. அச்சு ஊடகம் – செய்தித்தாள்கள், இதழ்கள், பத்திரிக்கைகள், புத்தகங்கள். சுவரொட்டிகள், அறிக்கைகள்
  4. இணைய ஊடகம் – கூகுள் இணைய தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள்
  5. சமூக ஊடகம் – ட்விட்டர், முகநூல், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 2.
ஜனநாயகத்தில் ஊடகம் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது?
விடை:

  • ஊடகமானது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும்.
  • ஜனநாயக சமுதாயத்தில் பொதுமக்களின் கருத்துக்களை செயல்படுத்தும் சக்தியாகும்.
  • ஜனநாயக மதிப்புகளை பலப்படுத்துவதோடு மக்களுக்கு அறிவையும், வலிமையும் அளிக்கிறது.
  • வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • அரசின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலம் அரசைப் பற்றி மக்கள் அறிந்துகொள்கிறார்கள்.
  • நடப்பு செய்தி பற்றிய விவாதத்தை ஏற்படுத்துவதனால் ஒரே பிரச்சினைகளுக்குப் பல்வேறு கருத்துக்களை பெற முடிகிறது.
  • அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை நினைவூட்டுகிறது.
  • ஊடகம் அரசிற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது.
  • ஊடகம் இல்லாத ஜனநாயகம் என்பது சக்கரம் இல்லாத வாகனத்திற்கு ஒப்பாகும்.

Question 3.
ஊடகத்தினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை:

  • ஊடகம் தகவல் மற்றும் தொழில்நுட்ப உலகில் வெகுஜன மக்களுக்கு தகவல்களை அளிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
  • ஜனநாயகத்தில் ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தொழில்நுட்ப மாற்றத்தினால் மக்கள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.
  • ஊடகம் இந்த உலகை சிறியதாகவும் மக்களுக்கு மிக நெருக்கமாகவும் மாற்றியுள்ளது.

VII. உயர் சிந்தனை வினா

Question 1.
ஊடகம் அவசியமா? ஏன்?
விடை:

  • ஆம், ஊடகம் நமக்கு அவசியமானது.
  • ஊடகம் உள்ளூர் அளவிலும், உலக அளவிலும் தகவல்களை பகிர்ந்து கொள்ள, உருவாக்க, பரப்புவதற்கான மிகச் சிறந்த தகவல் தொடர்பு சாதனமாகும்.
  • மக்கள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்பு கொள்ளவும், கோடிக்கணக்கான மக்களுக்கு தகவல்கள் சென்றடையவும் தேவைப்படுகிறது.

Question 2.
பத்திரிக்கையாளர் சந்திப்பை பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
விடை:

  • பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என்பது தகவல்கள் ஊடகங்களை சென்றடைவதற்கு உதவுகிறது.
  • பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு செய்திகள் மக்களை சென்றடைவதற்கு முக்கிய சேவை ஆற்றி வருகிறது.
  • பத்திரிக்கையாளர்கள் அவர்களுடைய பங்களிப்பை சிறந்த முறையில் செயலாற்ற உதவுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 3.
ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
விடை:

  • ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்று.
  • இணையதளங்களும், தொலைக்காட்சியும் நமது கண் பார்வையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணமாய் அமைகிறது.
  • அதிகமான நேரங்களை சினிமா படங்களை பார்ப்பதற்கும், நாடகங்களை பார்ப்பதற்கும் செலவிடுவதன் மூலம் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

VIII. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
ஒரு குறிப்பிட்ட செய்தியை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய தகவல்கள் பல்வேறு ஊடகங்களில் எவ்வாறு வந்துள்ளன என்பதை ஒப்பீடு செய்க. மற்றும் அந்த செய்திகளின் ஒற்றுமை மற்றும் வேற்றுமையை எழுதுக.

Question 2.
ஊடகத்தின் வளர்ச்சியைப் பற்றி படத்தொகுப்பு தயாரிக்கவும் (ஆரம்பம் முதல் தற்போது வரை)

Question 3.
மாதிரி செய்தித்தாளினை தயார்செய்து, அதனை வகுப்பறையில் அனைவரும் அறியும்படி காட்சிப்படுத்துக.

7th Social  Science Guide ஊடகமும் ஜனநாயகமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
ஆகாசவானி என்பது ___________
அ) வானிலிருந்து வரும் ஒலி
ஆ) நிலவிலிருந்து வரும் ஒலி
இ) பூமியில் இருந்து வரும் ஒலி
ஈ) மனிதனிலிருந்து வரும் ஒலி
விடை:
அ) வானிலிருந்து வரும் ஒலி

Question 2.
அச்சு இயந்திரம் ____________ ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அ) 1453
ஆ) 1463
இ) 1473
ஈ) 1543
விடை:
அ) 1453

Question 3.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ____________
அ) நீதித்துறை
ஆ) நிர்வாகத்துறை
இ) ஊடகம்
ஈ) சட்டமன்றம்
விடை:
இ) ஊடகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தனிமனித தொடர்பு சாதனம் ___________.
விடை:
அலைப்பேசி

Question 2.
ஜனநாயகம் என்பது ___________.
விடை:
மக்களால் ஆட்சி செய்யப்படுதல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 3.
ஜனநாயகம் இரண்டு ___________ சொற்களால் ஆனது.
விடை:
கிரேக்க

Question 4.
டெமோஸ் என்பது _____________ஐ குறிக்கிறது.
விடை:
குடிமக்களை

Question 5.
க்ரோடஸ் என்பதற்கு ____________ என்று பெயர்.
விடை:
அதிகாரம் / ஆட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 3

IV. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : நெறிமுறை என்பது நம் வாழ்க்கையை வாழ தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பாகும்.
காரணம் : இவை முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக அவசியமாகும்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 2.
தவறான ஒன்றை கண்டுபிடிக்க
அ) ட்விட்டர்
ஆ) முகநூல்
இ) வாட்ஸ்ஆ ப்
ஈ) கடிதம்
விடை:
ஈ) கடிதம்

V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
உள்ளூர் ஊடகங்கள் ஒரு சிலவற்றின் பெயர்களை கூறுக.
விடை:
ஏ.எம்.என். தொலைக்காட்சி, தினதந்தி, தின மலர், மாலை முரசு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 2.
லொயோலா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 4

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 5

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

7th Social  Science Guide மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?
அ) தாதாஜி கொண்ட தேவ்
ஆ) கவிகலாஷ்
இ) ஜீஜாபாய்
ஈ) ராம்தாஸ்
விடை:
அ) தாதாஜி கொண்ட தேவ்

Question 2.
மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?
அ) தேஷ்முக்
ஆ) பேஷ்வா
இ) பண்டிட்ராவ்
ஈ) பட்டீல்
விடை:
ஆ) பேஷ்வா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?
அ) ஷாகு
ஆ) அனாஜி தத்தா
இ) தாதாஜி கொண்ட தேவ்
ஈ) கவிகலாஷ்
விடை:
ஈ) கவிகலாஷ்

Question 4.
சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.
அ) பீரங்கிப்படை
ஆ) குதிரைப்படை
இ) காலட்படை
ஈ) யானைப்படை
விடை:
இ) காலட்படை

Question 5.
குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) ஷாகு
விடை:
ஆ) பாஜிராவ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மகாராஷ்டிராவில் பரவிய ………………………….. இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
விடை:
பக்தி

Question 2.
பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர்………………….
விடை:
காமவிஸ்தார்

Question 3.
மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு …………………… இடத்தில் சோகமாய் முடிந்தது.
விடை:
பானிபட்

Question 4.
அஷ்டபிரதானில் இடம் பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ………………..
விடை:
சுமந்த் /துபிர்

Question 5.
சிவாஜியைத் தொடர்ந்து ……………………. வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.
விடை:
அனாஜி தத்தோ

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 2

IV. சரியா? தவறா?

Question 1.
மலை மற்றும் மலைப்பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாத்தது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 2.
பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.
விடை:
தவறு

Question 3.
சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.
விடை:
சரி

Question 4.
தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
விடை:
சரி

Question 5.
அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்து முறை படையெடுத்தார்
விடை:
தவறு

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
காரணம் : மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அ) கூற்றிற்கான காரணம் சரி
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை:
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு

Question 2.
வாக்கியம் -1 : செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.
வாக்கியம் – II : இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்படை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

அ) சரி
ஆ) II சரி
இ) I மற்றும் II சரி
ஈ) I மற்றும் II தவறு
விடை:
அ) சரி

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடிக்க ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே , சிவாஜி, சாம்பாஜி, ஷாகு
விடை:
ரகுஜி, போன்ஸ்லே

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 4.
தவறான இணையைக் கண்டுபிடிக்க.
1. கெய்க்வாட் – பரோடா
2. பேஷ்வா – நாக்பூர்
3. ஹோல்கா – இந்தூர்
4. சிந்தியா – குவாலியர்
விடை:
பேஷ்வா – நாக்பூர்

Question 5.
காலவரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்துக.
I. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
II. பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.
III. சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
IV. பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்.
விடை:
1649 – சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
1656 – சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
1713 – பாலாஜி விஸ்வநாத் பீஷ்வாவாக பொறுப்பேற்றார்
1749 – பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.
விடை:

  • மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
  • மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

Question 2.
சௌத் மற்றும் சர்தேஷ்முகி
விடை:
சௌத் – மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு 1/4 பாதுகாப்பு கட்டணமாக சர்தேஷ்முகி – பத்தில் ஒரு பங்கு 1/10 அரசருக்கான கட்டணமாக

Question 3.
மராத்தியர்களின் வருவாய் நிர்வாகத்தில் காமவிஸ்தரின் பங்கு
விடை:

  • பீஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தாரி எனும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது.
  • அவர் பீஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார்.
  • வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

Question 4.
சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல்.
விடை:
முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது செய்தபோது கவிகலேஷீம் உடனிருந்தார். ஆகவே இருவரும் ஔரங்கசீப்பின் கட்டளையின்படி அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

Question 5.
1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர்.
விடை:
மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761ல் டெல்லிக்கு அருகேயுள்ள பானிபட்டில் முடிந்தது. பஞ்சாபைக் கடந்த தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவடையச் செய்ய மராத்தியர்கள் மேற்கொண்ட முயற்சி ஆப்கானியர்களின் அரசர் அகமது ஷா அப்தலியால் தடுக்கப் பெற்றது.

VII. கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிக்கவும்

Question 1.
மராத்தியர்களின் ஆட்சியில் சிவாஜியின் சிறப்பு அம்சங்களை மதிப்பிடுக.
விடை:

  • சிவாஜியின் அரசியல் முறை மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது.
  • முதல் வட்டத்தில் மக்களின் மீது அக்கறை கொண்ட அவர் எந்த வகையிலும் மக்கள் துண்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை.
  • இரண்டாவது வட்டத்தில் அவர் மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ளவில்லை.
  • கொள்ளையடிக்கப் படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களை காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத், சர்தேஷ்முகி ஆகிய வரிகளை செலுத்த வேண்டும்.
  • மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
  • கிராமங்கள் தேஷ்முக் என்பவர்களால் நிர்வாகிக்கப்பட்டது.
  • ஒவ்வொரு கிராமத்திலும் அதிகாரம் மிக்க ஒரு கிராமத்தலைவர் இருந்தார். அவருக்கு உதவ கணக்கரும், ஆவணக் காப்பாளர் ஒருவரும் பணியாற்றினார்.
  • மைய அரசு இல்லாத நேரத்தில் உள்ளூர் சமுதாய அளவிலான அதிகாரிகள் உண்மையான அரசாய்ச் செயல்பட்டனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.
விடை:
கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத் (மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு (1/4) பாதுகாப்பு கட்டணமாக) சர்தேஷ்முகி (பத்தில் ஒரு பங்கு (1/10) அரசருக்கான கட்டணமாக) ஆகிய வரிகளைச் செலுத்த வேண்டும்.

பீஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தார் என்னும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது. அவர் பீஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார். கப்பமோ, வரியோ வசூலிக்கப்பட வேண்டிய பகுதியில் பாதுகாப்பிற்காக சில வீரர்கள் அடங்கிய படைப்பிரிவை வைத்துக்கொள்ள இவர் அதிகாரம் பெற்றிருந்தார்.

வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஆவணங்களைப் பீஷ்வா அலுவலகம் அங்கொன்று இங்கொன்றாகச் சரி பார்த்தது. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொருமுறை ஏலம் விடப்பட்டன.

‘குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பீஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தில் வெற்றி பெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும், நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதிவரை அவர் முதலில் செலுத்திட வேண்டும். தமது சொந்தப் பணத்திலிருந்து அவர் அதைச் செலுத்தலாம் அல்லது வட்டிக்கு கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்ட வேண்டும்.

IX. வரைபடம்

Question 1.
மராத்தியப் பேரரசின் முக்கிய நகரங்கள் மற்றும் கோட்டைகளைக் குறிப்பிடுக.
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பொருத்துக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 4

Question 2.
குழுச் செயல்பாடு:
தஞ்சாவூர் மராத்தியர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும் குறிப்பாக அவர்கள் கல்வி, கலை மற்றும் கட்டடக் கலைக்கு ஆற்றிய பங்களிப்புகள்

7th Social  Science Guide மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அப்தலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து வருவதற்கு முன் ………………. முறை படையெடுத்துள்ளார்.
அ) 10
ஆ) 8
இ) 6
ஈ) 12
விடை:
ஆ) 8

Question 2.
சாம்பாஜியின் பாதுகாவலராய் இருந்தவர் …………………..
அ) சாகு
ஆ) பாஜிராவ்
இ) கவிகலாஷ்
ஈ) ராஜா ஜெய் சிங்
விடை:
இ) கவிகலாஷ்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சாதாரண வருவாய்த்துறை அலுவலகராகப் பணியைத் தொடங்கிய …………….. 1713ல் பீஷ்வா ஆனார்.
அ) பாஜிராவ்
ஆ) பாலாஜி விஸ்வநாத்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) அகமது ஷா அப்தலி
விடை:
ஆ) பாலாஜி விஸ்வநாத்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
காமவிஸ்தார் ……………………. ஆல் பணியமர்த்தப்பட்டார்
விடை:
பீஷ்வா

Question 2.
கவிகலாஷ் …………….. செய்பவராகவுமிருந்தார்
விடை:
மாந்திரீகம்

Question 3.
சிவாஜியின் பாதுகாவலரான ……………………. இயற்கை எய்தியபின் முழுமையான சுதந்திரம் பெற்றவரானார்.
விடை:
கொண்டதேவ்

Question 4.
மாரத்திய பிரதம அமைச்சர் ………………. என்று அழைக்கப்பட்டார்
விடை:
பீஷ்வா

Question 5.
சிவாஜியின் தந்தை ………….
விடை:
காஜி போன்ஸ்லே

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 5

IV. சரியா? / தவறா?

Question 1.
தொடக்கத்தில் காலட்படையே சிவாஜியின் இராணுவத்தில் முதுகெலும்பாய்த் திகழ்ந்தது
விடை:
சரி

Question 2.
மராத்தியப் பேரரசில் நியாயதிஸ் என்பவர் நவீனகால பிரதமருக்கு இணையானவர்
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சத்ரபதி எனும் சமஸ்கிருத சொல் அரசன் அல்லது பேரரசன் என்பதற்கு இணையானது. இச்சொல்லைமராத்தியர்கள் குறிப்பாகசிவாஜிபயன்படுத்தினார்
விடை:
சரி

V. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
காரணம் : மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

அ) கூற்றிற்கான காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணம் தவறு
இ) கூற்றிற்கான காரணம் சரி
ஈ) கூற்றும் மற்றும் காரணம் தவறு
விடை:
இ) கூற்றிற்கான காரணம் சரி

Question 2.
பொருந்தாததைக் கண்டுபிடிக்க பாலாஜி விஸ்வநாத், பாஜிராவ், பாலாஜி பாஜிராவ், அகமது ஷா அப்தாலி –
விடை:
அகமது ஷா அப்தாலி

Question 3.
தவறான இணையைக் கண்டுபிடிக்க.
அமத்யா – நிதியமைச்சர்
சேனாபதி – தலைமைத் தளபதி
வாக்குய் – நாவிஸ் – உள்துறை அமைச்சர்
துபிர் – தலைமை நீதிபதி
விடை:
துபிர் – தலைமை நீதிபதி

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
மராத்தியர்களுக்கு விசுவாசமாய் இருந்த குடும்பங்களின் பெயர்களை கூறுக.
விடை:
1. கெய்க்வாட் – பரோடா
2. பான்ஸ்லே – நாக்பூர்
3. ஹோல்கார் – இந்தூர்
4. சிந்தி அல்லது சிந்தியா – குவாலியார்
5. பீஷ்வா – புனே

Question 2.
அஷ்டப்பிரதான் என்றால் என்ன?
விடை:

  • அஷ்டப்பிரதான் என்பது மராத்தியப் பேரரசில் இருந்த எட்டு அமைச்சர்கள் ஆவர்
  • இந்த அமைச்சர் குழு 1674 ல் சத்ரபதி சிவாஜியால் அமைக்கப்பட்டது.

VII. விரிவான விடையளி

Question 1.
மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள் யாவை?
விடை:

  • மராத்திய நாட்டின் புவியியல் கூறுகள் மராத்தியர்களிடையே சில தனித்தன்மை வாய்ந்த பண்புகளை வளர்த்திருந்தன. அவை இந்தியாவின் ஏனைய மக்களிடமிருந்து மராத்திய மக்களை வேறுபடுத்திக் காட்டின.
  • பாறைகளும், குன்றுகளும் அடங்கிய நிலப்பகுதி, அந்நிய படையெடுப்பாளரிடமிருந்து மராத்தியருக்கு பாதுகாப்பளித்தது.
  • கொரில்லாப் போர் முறைக்கு உகந்ததாய் விளங்கியது.
  • மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
  • மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 6

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

7th Social  Science Guide முகலாயப் பேரரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஹீமாயூன்
ஆ) பாபர்
இ) ஜஹாங்கீர்
ஈ) அக்பர்
விடை:
ஆ) பாபர்

Question 2.
அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?
அ) பானிபட்
ஆ) சௌசா
இ) ஹால்டிகட்
ஈ) கன்னோசி
விடை:
இ) ஹால்டிகட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 3.
ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?
அ) பாபர்
ஆ) ஹிமாயூன்
இ) இப்ராஹிம் லோடி
ஈ) ஆலம்கான்
விடை:
ஆ) ஹிமாயூன்

Question 4.
மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஷெர்ஷா
ஆ) அக்பர்
இ) ஜஹாங்கீர்
ஈ) ஷாஜஷான்
விடை:
ஆ) அக்பர்

Question 5.
அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
அ) பீர்பால்
ஆ) ராஜா பகவன்தாஸ்
இ) இராஜ தோடர்மால்
ஈ) இராஜா மான்சிங்
விடை:
இ) இராஜ தோடர்மால்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர்…………………. ஆகும்.
விடை:
சேத்தக்

Question 2.
பதேபூர் சிக்ரியிலுள்ள. …………………… அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்.
விடை:
இபாதத் கானா

Question 3.
அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி. ………………
விடை:
சலீம் சிஸ்டி

Question 4.
ஜப்தி என்னும் முறை …………………. ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.
விடை:
ஷாஜகான் .

Question 5.
…………….. வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
விடை:
சுயயுர்கள்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 2

IV. சரியா? தவறா?

Question 1.
பாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
ஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்.
விடை:
தவறு

Question 3.
ஒளரங்கசீப், ராஜபுதனப் பெண்ணைத் திருமணம் செய்தார்.
விடை:
தவறு

Question 4.
தன் மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜூனைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.
விடை:
சரி

Question 5.
ஔரங்கசீப் காலக்கட்டத்தில், முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்றது.
விடை:
தவறு

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்
காரணம் : ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 2.
கூற்று : ஒளரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
காரணம் : ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஆ) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 3.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
I. கம்ரான் ஆப்கானியரின் மகனாவார் ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.
II. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்.
III. ஒளரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்றுவிட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
IV. இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அ) I, II மற்றும் III சரி
ஆ) II, III மற்றும் IV சரி
இ) I, III மற்றும் IV சரி
ஈ) II, III, IV மற்றும் 1 சரி
விடை:
ஆ) II, III மற்றும் IV சரி

Question 4.
காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக.
1. கன்வா போர்
2. சௌசா போர்
3. கன்னோசி போர்
4. சந்தேரி போர்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 3

Question 5.
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக.
i) சர்க்கார்
ii) பர்கானா
iii) சுபா |
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 4

VI. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 5
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 6

VII. குறுகிய வினா

Question 1.
1526 இல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழலை எழுதுக.
விடை:
1524 வரையிலும் பஞ்சாப்பைக் கடந்து பாபர் வேறு எதற்கும் ஆசைப்படவில்லை. அச்சமயத்தில் தௌலத்கான் லோடியின் மகன் தில்வார்கான், டெல்லி சுல்தானின் மாமனார் ஆலம்கான் ஆகிய இருவரும் காபூல் வந்தனர்.

டெல்லி சுல்தான் இப்ராகிம் லோடியைப் பதவியை விட்டு நீக்க பாபரின் உதவி கேட்டு வந்தனர். இதுவே 1526 ல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழல் ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
ஹிமாயூன் 1555 இல் டெல்லியை மீண்டும் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிடுக.
விடை:
ஷெர்ஷாவால் தோற்கடிக்கப்பட்ட ஹிமாயூன் பாரசிக அரசர் சபாவிட் வம்சத்தை சேர்ந்த ஷா-தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555 ல் டெல்லியை மீண்டும் கைப்பற்றினார்.

Question 3.
மன்சப்தாரி முறையைப் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகம் செய்தார். இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக மாற்றப்பட்டது. இப்பணியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மன்சப் (படிநிலை, தகுதி அந்தஸ்து) வழங்கப்பட்டது. அப்படியான தகுதியைப் பெற்றவர் மன்சப்தார் ஆவார்.

VIII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

Question 1.
முகலாயர்களின் நிலவருவாய் முறையைப் பற்றி விவரி
விடை:
அக்பரின் ஆட்சியின்போது நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.

அக்பரின் வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் அறிமுகம் செய்த முறையை பின்பற்றினார். அம்முறையை மேலும் சீர் செய்தார்.

தோடர்மாலின் ஜப்த் முறை வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின்படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றின் இயல்புக்கும் வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன.

பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு வரியாக செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது. ஷாஜகானின் காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பெற்றது.

முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை ஜாகீர் எனப் பெயரிட்டு செயல்படுத்தினார். இந்நிலவுரிமை ஒப்பந்த காமுறை டெல்லி சுல்தான்கள் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதாகும். இம்முறையின் கீழ் குறிப்பிட்ட ஒரு பகுதியின் நிலவரி வசூல் செய்யும் பொறுப்பும் அப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் ராணுவ அல்லது சிவில் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய பெயர் ஜாகீர்தார் ஆகும்.

தங்களது ஊதியத்தை பணமாக பெறாத ஒவ்வொரு மன்சப்தாரும் ஜாகீர்தார் ஆவார்.

ஜாகீர்தார் தம் அதிகாரிகள் மூலம் நிலவரியை வசூல் செய்தார். மாவட்ட அளவிலான அதிகாரி அமில் சூஜார் ஆவார்.

அவருக்கு பொட்டாடார், கனுங்கோ, பட்வாரி, முக்காதம் போன்ற துணைநிலை அதிகாரிகள் உதவி செய்தனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.
விடை:

  • அக்பர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார். அவருடைய சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன.
  • பல்வேறு விதமான நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் கொண்டிருந்த அறிஞர்களை அவர் ஆதரித்தார்.
  • அபுல்பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான் – இ-கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா
    பகவன்தாஸ், ராஜா மான்சிங் ஆகியோர் அப்பரின் அவையில் இடம் பெற்றிருந்தனர்.
  • பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சென், ஒவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
முகலாயர் ஆட்சியில் ஷாஜகானின் காலத்தை மற்ற முகலாய ஆட்சியாளர்களோடு ஒப்பிடுக.
விடை:

  1. முகலாயப் பேரரசும், அதன் புகழும் உன்னதமும் ஷாஜகான் காலத்தில் உச்சத்தை எட்டியது. பேரரசர் அமர்வதற்காக விலையுயர்ந்த நவரத்தினக் கற்கள் பதிக்கப் பெற்ற மயிலாசனம் தயாரிக்கப்பட்டது.
  2. யமுனை நதிக்கரையில் புகழ்பெற்ற தாஜ்மஹால் எழுப்பப்பட்டது.
  3. ஆக்ராவிலுள்ள முத்து மசூதி, டெல்லியிலுள்ள மிகப்பெரிய ஜீம்மா மசூதி ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டவையாகும்.

X. வரைபடம்

Question 1.
முகலாயப் பேரரசில் அக்பர் மற்றும் ஒளரங்கசீப்பின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளைப் குறிக்கவும், முகலாயர்களின் முக்கிய போர்களைக் குறிக்கவும்.
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

XI. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
அக்பரின் அவையில் இருந்த வல்லுநர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுக.

Question 2.
மாதிரி இபாத்கானவை வகுப்பறையில் நடத்திக்காட்டுக

7th Social  Science Guide முகலாயப் பேரரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்நதெடுத்து எழுதுக.

Question 1.
பாபர் தமக்கு பிடித்த தன் மூத்த மகன் ………………… தம் வாரிசாக அறிவித்தார்.
அ) ஹிமாயூன்
ஆ) ஹிண்டல்
இ) கம்ரான்
ஈ) ஜஹாங்கீர்
விடை:
அ) ஹிமாயூன்

Question 2.
முகலாய மாமன்னர்களில் கடைசி அரசர் ……………..
அ) ஷாஜகான்
ஆ) ஷெர்சா
இ) ஒளரங்கசீப்
ஈ) ஜஹாங்கீர்
விடை:
இ) ஔரங்கசீப்

Question 3.
முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமான …………….. ஷாஜகானால் கட்டப்பட்டது.
அ) ஜிம்மா மசூதி
ஆ) மோதி மசூதி
இ) முத்து மசூதி
ஈ) செங்கோட்டை
விடை:
ஈ) செங்கோட்டை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பாபர் முகலாய ஆட்சியை தொடங்கிய ஆண்டு ……………..
விடை:
1526

Question 2.
முதல் பானிபட் போரில் பாபர் ………………… ஜத் தோற்கடித்தார்.
விடை:
இப்ராஹிம் லோடி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 3.
…………………. ல் உள்ள அக்பரின் கல்லறை கட்டப் பணிகளை ஜஹாங்கீர் நிறைய செய்தார்.
விடை:
சிக்கந்தராவில்

Question 4.
செங்கோட்டை ……………….. கட்டப்பட்டுள்ளது.
விடை:
சிவப்பு நிறக் கற்களால்

Question 5.
மன்சப்தார் ………………….. எனும் இருவிடயங்களைச் சார்ந்திருந்தன.
விடை:
சாட், சவார்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 7

IV. சரியா? / தவறா?

Question 1.
நகரங்களும், பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டன
விடை:
சரி

Question 2.
ஜஹாங்கீர் மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தார்.
விடை:
தவறு

Question 3.
சவார் என்பது மன்சப்தார் பராமரிக்க வேண்டிய யானைகள், யானைகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
விடை:
தவறு

Question 4.
முகலாய வம்சத்தின் ஆட்சி பாபர் இந்தியாவிற்கு வந்தவுடன் தொடங்கப்பட்டது
விடை:
சரி

Question 5.
அக்பர்அனைத்து மதங்களைச்சார்ந்தோரையும் சமமாகவும் பெருந்தன்மையோடும் நடத்தினார்
விடை:
சரி

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : சில மராத்திய போர்த் தளபதிகள் குறிப்பாக ஷாஜி பான்ஸ்லே போன்றோர் தக்காண அரசர்களிடம் பணியில் சேர்ந்தனர். இவர்கள் மரத்திய வீரர்களைக் கொண்ட அணிகளுக்குப் பயிற்சியளித்து முகலாயர்களுக்கு எதிராகப் போரிடச் செய்தனர்.
காரணம் : இதனால் தக்காணத்தில் மராத்தியர்களையும் சேர்த்து முகலாயர்களுக்கு எதிராக ஒரு நீண்ட நெடிய எதிர்ப்பு உருவாகியது.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
i) 1556 ல் ஷெர்ஷா இயற்கை எய்திய பின்னர், அரசராக முடிசூட்டப் பெற்றார்.
ii) நல்ல பயணத்தரும் ஒரு நிலவருவாய் முறையினை அறிமுகம் செய்தார்
iii) படையெடுப்பின் மூலமாகவும் நட்புறவின் மூலமாகவும் அக்பர் இந்தியாவின் பெரும் – பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
iv) 1556 ல் டெல்லியில் தமது நூலகத்தின் படிக்கட்டுகளில் இடறி விழுந்த பாபர் மரணத்தைத் தழுவினார்.

அ) i, ii மற்றும் iii சரி
ஆ) ii, iii சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) ii, iii, iv மற்றும் 1 சரி
விடை:
ஆ) ii, iii சரி

Question 3.
காலவரிசைப்படி அரசர்களை வரிசைப்படுத்துக.
விடை:
ஹிமாயூன், பாபர், ஜஹாங்கீர், அக்பர், ஷாஜஹான், ஔரங்கசீப்
பாபர் – 1526 – 1530
ஹிமாயூன் – 1530 – 1540
அக்பர் – 1556 – 1605
ஜஹாங்கீர் – 1605 – 1627
ஷாஜஹான் – 1627 – 1658
ஒளரங்கசீப் – 1658 – 1707

Question 4.
பொருத்துக
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 8

VI. சுருக்கமான விடையளி

Question 1.
முகலாயர்களின் உள்ளாட்சி நிர்வாகம் எப்படி இருந்தது?
விடை:

  • நகரங்களும், பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டன கொத்தவால் சட்டம் ஒழுங்கை பராமரித்தார்.
  • கிராம நிர்வாகம் கிராம பஞ்சாயத்துகளிடம் வழங்கப்பட்டிருந்தது.
  • பஞ்சாயத்து உறுப்பினர்கள் தீர்ப்புகளை வழங்கினார்.

Question 2.
முகலாயர்களின் படைநிர்வாகம் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
முகலாய இராணுவமானது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, பீரங்கிப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தன.

அரசர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, சிறப்பு வாய்ந்த ஆயுதங்களை ஏந்திய எண்ணிக்கையிலும் அதிகமான பாதுகாப்பு வீரர்களையும், அரண்மனைக் காவலர்களாகவும் பராமரித்தார்.

VII. விடையளி

Question 1.
முகலாயர்களின் சமயக்கொள்கை குறித்து எழுதுக?
விடை:

  • முகலாயப் பேரரசர்கள் இஸ்லாமைப் பின்பற்றினர்
  • அக்பர் தம்முடைய சமயக்கொள்கையில் தாராள மனப்பாங்கு கொண்டவராக இருந்தார்
  • அக்பர் அனைத்து மதங்களிலுமுள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து தீன்-இலாகி என்னும் ஒரே சமயத்தை உருவாக்க முயன்றார்
  • அக்பருடைய கொள்கையை ஜஹாங்கீரும் ஷாஜகானும் பின்பற்றினர்.
  • ஒளரங்கசீப்தன்னுடைய முன்னோர்களின் தாராளக் கொள்கையை மறுத்தார். இந்துக்களின் மீது ஜிசியா வரியையும், யாத்ரீகர்களின் மீதான வரியையும் விதித்தார்.
  • ஏனைய மதங்களின் மீதான அவரின் சகிப்புத்தன்மை இன்மை மக்களிடையே அவரை விரும்பத்தகாதவராக ஆக்கியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 9