Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

6th Social Science Guide பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் Text Book Back Questions and Answers

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு ______
விடை:
பெருவெடிப்பு

Question 2.
இரு வான்பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு _____ ஆகும்.
விடை:
ஒளியாண்டு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 3.
சூரியக் குடும்பத்தின் மையம் _____
விடை:
சூரியன்

Question 4.
கோள் என்ற வார்த்தையின் பொருள் _____
விடை:
சுற்றி வருபவர்

Question 5.
அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் _____
விடை:
வியாழன்

Question 6.
நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் _____
விடை:
சந்திராயன் – 1

Question 7.
புவியின் சாய்வுக் கோணம் _____
விடை:
23\(\frac{1}{2}\)°

Question 8.
நிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாட்கள் ____ மற்றும் _____
விடை:
மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23

Question 9.
சூரிய அண்மை நிகழ்வின் போது புவி சூரியனுக்கு _____ ல் காணப்படும்.
விடை:
மிக அருகில்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 10.
புவியின் மேற்பரப்பின் மீது ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு – என்றுபெயர்.
விடை:
ஒளிர்வு வட்டம்

ஆ. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்.
அ) சுற்றுதல்
ஆ) பருவகாலங்கள்
இ) சுழல்தல்
ஈ) ஓட்டம்
விடை:
இ) சுழல்தல்

Question 2.
மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்.
அ) மார்ச் 21
ஆ) ஜூன் 21
இ) செப்டம்பர் 23
ஈ) டிசம்பர் 22
விடை:
ஈ) டிசம்பர் 22

Question 3.
சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்.
அ) ஆண்டிரோமெடா
ஆ) மெகலனிக்கிளவுட்
இ) பால்வெளி
ஈ) ஸ்டார்பர்ஸ்ட்
விடை:
இ) பால்வெளி

Question 4.
மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
அ) செவ்வாய்
ஆ) சந்திரன்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) சந்திரன்

Question 5.
எந்த கோளால் தண்ணீ ரில் மிதக்க இயலும்?
அ) வியாழன்
ஆ) சனி
இ) யுரேனஸ்
ஈ) நெப்டியூன்
விடை:
ஆ) சனி

இ. பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
வெள்ளி வியாழன், நெப்டியூன், சனி
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 80

Question 2.
சிரியஸ் ஆண்டிரோமெடா, பால்வெளி, மெகலனிக்கிளவுட்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 81

Question 3.
புளூட்டோ , ஏரிஸ், செரஸ், அயோ
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 82

Question 4.
வால்விண்மீன், சிறுகோள், விண்வீழ்கல், குறுளைக் கோள்கள்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 83

Question 5.
தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானுர்தி விண்கலம்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 84

ஈ. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 85

உ. (i). கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது.
2. ஜுன் 21 ம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்.
3. செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு.

மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 1, 2 மற்றும் 3
ஈ) 2 மட்டும்
விடை:
அ) 1 மற்றும் 2

ii. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க

கூற்று 1: புவி, நீர்க்கோளம் என அழைக்கப்படுகிறது.
கூற்று 2: புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன. சரியான கூற்றினை தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, கூற்று 2 தவறு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

ஊ. பெயரிடுக.

Question 1.
விண்மீன்களின் தொகுப்பு ______
விடை:
விண்மீன் திரள்

Question 2.
சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன் திரள் மண்டலம் _______
விடை:
பால்வெளி விண்மீன் திரள் மண்டலம்

Question 3.
பிரகாசமான கோள் _____
விடை:
வெள்ளி

Question 4.
உயிரினங்களை உள்ளடக்கிய கோளம் _______
விடை:
உயிர்க்கோளம்

Question 5.
366 நாட்களை உடைய ஆண்டு ______
விடை:
லீப் ஆண்டு

எ. இரு வார்த்தைகளுக்கு மிகாமல் விடை தருக.

Question 1.
உட்புறக்கோள்களைப் பெயரிடுக.
விடை:

  1. புதன்
  2. வெள்ளி
  3. புவி
  4. செவ்வாய்

Question 2.
புளூட்டோ ஒரு கோளாக தற்சமயம் கருதப்படவில்லை. காரணம் தருக.
விடை:
புளூட்டோ கிரகத்தின் பாதை நெப்டியூன் கிரகத்தின் வளையத்திற்குள் வருவதால், புளூட்டோவை தனி கிரகமாக கருத முடியாது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 3.
சூரிய அண்மை என்றால் என்ன?
விடை:
சூரிய அண்மை ‘ என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும்.

Question 4.
ஒருவர் 20° வடக்கு அட்சரேகையில் நின்றால், ஓர் ஆண்டில் சூரியன் அவரின் தலை உச்சிக்கு மேல் எத்தனை முறை வரும்?
விடை:
இரண்டு முறை

Question 5.
எந்த விண்பொருள் தன் சுற்றுப்பாதையை பிறவிண்பொருட்களுடன் பகிர்ந்து கொள்கிறது? உதாரணம் தருக.
விடை:
குறுங்கோள்கள் தன்
சுற்றுப்பாதையை பிறவிண் பொருட்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
உதாரணம் : புளூட்டோ, செரஸ், மேக்மேக் மற்றும் ஹௌமிய

ஏ. காரணம் கூறுக.

Question 1.
யுரேனஸ் ஏன் உருளும் கோள் என அழைக்கப்படுகிறது?
விடை:

  • வெள்ளிக் கோளைப் போன்றே இக்கோளும் தன் அச்சில் கடிகாரச் சுற்றில் சுற்றுகிறது.
  • இதன் அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் தன் சுற்றுப்பாதையில் உருண்டோடுவது போன்று சூரியனைச் சுற்றி வருகிறது.

Question 2.
நிலவின் மேற்பரப்பில் தரைக்குழிப் பள்ளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. காரணம் தருக
விடை:

  • நிலவிற்கு வளிமண்டலம் கிடையாது.
  • இதன் காரணமாக விண்கற்களின் தாக்கத்தால் இதன் மேற்பகுதியில் அதிகளவில் தரைக்குழிப் பள்ளங்கள் காணப்படுகின்றன.

Question 3.
புவியின் சுழலும் வேகம் துருவப் பகுதிகளில் சுழியமாக உள்ளது.
விடை:
புவி கோள வடிவமாக இருப்பதால் சுழலும் வேகம் துருவப்பகுதிகளில் சுழியாக உள்ளது.

ஐ. விரிவான விடை தருக.

Question 1.
உட்புற மற்றும் வெளிப்புறக் கோள்கள் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 95

Question 2.
புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:
சுழலுதல் :

  1. புவி தன் அச்சில் தன்னைத் தானே சுற்றுவது சுழலுதல் எனப்படும்.
  2. புவி சுழலுவதன் காரணமாக இரவு பகல் ஏற்படுகிறது.
  3. புவி கோள வடிவமாக இருப்பதால் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டும் படும் அப்பகுதி பகல் பொழுது எனப்படும்.
  4. புவி ஒளிபடாத பகுதி இரவாகவும் இருக்கும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

சுற்றுதல் :

  1. புவி தன் நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றிவரும் நகர்வு சுற்றுதல் எனப்படும்.
  2. புவி சூரியனை சுற்றி வருவதால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.
  3. புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருவதால் சூரியன் நிலநடுக்கோட்டிற்கு வடக்காகவும், தெற்காகவும் நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
  4. இதனால் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய நாள்கள் நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும்.
  5. இதன் காரணமாக புவியின் அனைத்துப் பகுதிகளிலும் பகல் மற்றும் இரவுப்பொழுது சமமாகக் காணப்படும்.
  6. டிசம்பர் 22ம் தேதி மகரரேகையின் மீது சூரியனின் செங்குத்துக்கதிர்கள் விழுவதால் தென் அரைக்கோளத்தில் பகல்பொழுது அதிகமாகவும் வட அரைக்கோளம் நீண்ட இரவையும் கொண்டிருக்கும்.

Question 3.
புவிக் கோளங்களின் தன்மைகள் பற்றி விவரி.
விடை:

  1. உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும்.
  2. புவியின் மூன்று தொகுதிகள் உள்ளன. அவைபாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகும்.
  3. உயிரினங்கள் வாழக்கூடிய குறுகிய மண்டலம் ‘உயிர்க்கோளம்’ ஆகும்.

பாறைக் கோளம்:

  1. புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்குகள் பாறைக் கோளம் எனப்படும்.
  2. இந்த நிலப்பரப்பில் உயிரினங்கள் காணப்படுகின்றன.

நீர்க் கோளம்:

1. “‘ஹைட்ரோ” என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் ஆகும். இதற்கு நீர்க்கோளம் என்று பெயர். 2. கடல்கள், ஆறுகள், ஏரிகள், மலையுச்சிகளில் காணப்படும் பனியுறைகள், வளிமண்டலத்தில் காணப்படும் நீராவி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.

வளி மண்டலம்:

  1. புவியைச் சுற்றி காணப்படும் பல்வேறு காற்றுத் தொகுதி வளிமண்டலம் எனப்படும்.
  2. வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களில் நைட்ரஜன் (78%) மற்றும் ஆக்ஸிஜன் (21%) முதன்மையான வாயுக்களாகும்.
  3. கார்பன் – டை – ஆக்ஸைடு, ஆர்கான், ஹைட்ரஜன், ஹீலியம், ஓசோன் வாயுக்கள் குறைந்த அளவில் காணப்படுகின்றன.

உயிர்க் கோளம்:

  1. பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய உயிரினங்கள் வாழக்கூடிய ஒரு பகுதி உயிர்க்கோளம்’ எனப்படும்.
  2. உயிர்க்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  3. ஒவ்வொரு மண்டலமும் ஒப்பற்ற காலநிலை, தாவரங்கள், விலங்கினங்களைக் கொண்ட பகுதியாக உள்ளது.

ஓ.. அ) கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து விடையளிக்கவும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 96
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 96.2

Question 1.
சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
விடை:
புதன்

Question 2.
பெரிதான கோள் எது?
விடை:
வியாழன்

Question 3.
சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
விடை:
நெப்டியூன்

Question 4.
செந்நிறக் கோள் எது?
விடை:
செவ்வாய்

ஆ. படத்தைப் பார்த்து பதிலளி

Question 1.
படத்தில் உள்ள கோளின் பெயர் என்ன?
விடை:
யுரேனஸ்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 97

Question 2.
கோளின் நிறம் என்ன?
விடை:
பச்சை

Question 3.
இந்நிறத்திற்கான காரணம் என்ன?
விடை:
மீத்தேன் வாயு இக்கோளில் உள்ளதால் பச்சை நிறமாகத் தோன்றுகிறது.

இ. குறுக்கெழுத்து புதிர் இடமிருந்து வலம்

Question 1.
இரவும் பகலும் சமமாக காணப்படும்
விடை:
சமப்பகலிரவு

Question 5.
குருளைக் கோள்
விடை:
புளூட்டோ

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 7.
சூரியனிடமிருந்து மிகத் தொலைவில் உள்ள கோள்
விடை:
நெப்டியூன்

Question 8.
சூரியனில் உள்ள வாயு
விடை:
ஹைட்ரஜன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 99.8
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 99.9

மேலிருந்து கீழ்

Question 4.
நான் காலையில் தென்படுவேன்
விடை:
விடிவெள்ளி

Question 2.
நிலவை ஆராய இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம்
விடை:
சந்திராயன்

Question 3.
நான் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றுவேன்
விடை:
ஹேலி

Question 6.
பூமியின் நடுவில் செல்லும் ஓர் கற்பனைக் கோடு
விடை:
அச்சு

Question 7.
எனக்கு இரண்டு துணைக் கோள்கள் உண்டு
விடை:
செவ்வாய் பகுதி

6th Social Science Guide பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அண்டத்தைப் பற்றிய படிப்பிற்கு ____ என்று பெயர்.
விடை.:
அண்டவியல்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 2.
நட்சத்திரங்களின் தொகுப்பு ____ என்றழைக்கப்படுகிறது.
விடை:
விண்மீன் திரள் மண்டலம்

Question 3.
Sol என்ற இலத்தீன் வார்த்தைக்கு ____ என்று பொருள்
விடை:
சூரியக் கடவுள்

Question 4.
சூரியக் குடும்பத்தின் மையத்தில் _____ அமைந்துள்ளது.
விடை:
சூரியன்

Question 5.
கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் பாதை _____ எனப்படுகிறது.
விடை:
சுற்றுப்பாதை

Question 6.
மிக வெப்பமான கோள்
விடை:
வெள்ளி

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்.
அ) புதன்
ஆ) வெள்ளி
இ) யுரேனஸ்
ஈ) சனி
விடை:
அ) புதன்

Question 2.
உருளும் கோள்.
அ) வெள்ளி
ஆ) செவ்வாய்
இ) நெப்டியூன்
ஈ) யுரேனஸ்
விடை:
ஈ) யுரேனஸ்

Question 3.
வளையங்களைக் கொண்ட கோள்.
அ) புதன்
ஆ) வெள்ளி
இ) சனி
ஈ) புதன்
விடை:
இ) சனி

Question 4.
ஹேலி விண்மீன் இனி தோன்றும் ஆண்டு.
அ) 2051
ஆ) 2041
இ) 2061
ஈ) 2031
விடை:
இ) 2061

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

Question 5.
கடகரேகையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
அ) மார்ச் 21
ஆ) ஜுன் 21
ஆ) செப்டம்பர் 23
ஈ) டிசம்பர் 22
விடை:
ஈ) டிசம்பர் 22

III. i) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. சூரியன் குடும்பத்தின் மூன்றாவது கோள் புவி.
2. சூரியன் ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்களால் ஆனது.

Question 3.
புதன் கோளுக்கு துணைக் கோள்கள் எதுவுமில்லை. சரியான கூற்றினைக் கண்டறிக.
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) மற்றும் 3
ஈ) 2 மட்டும்
விடை:
இ) 1 மற்றும் 3

ii) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. சூரியன் புவியைச் சுற்றி வருகிறது.
2. ரோமானிய போர்க் கடவுள் பெயரால் செவ்வாய் கோள் அழைக்கப்படுகிறது.
3. யுரேனஸ் பச்சை நிறமாகக் காணப்படுகிறது.
சரியான கூற்றினைக் கண்டறிக.
அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 1 மற்றும் 3
ஈ) 3 மட்டும்
விடை:
ஆ) 2 மற்றும்

iii) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.
கூற்று 1 – சூரியக் குடும்பத்தில் வேகமாகச் சுழழும் கோள் வியாழன்
கூற்று 2 – நெப்டியூன் மிகக் குளிர்ந்த கோள் ஆகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
இ) இரண்டு கூற்றுகளும் சரி

iv) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.
கூற்று 1 – புவி தன் அச்சில் 32 1/2° சாய்ந்து கொண்டு சுற்றுகிறது.
கூற்று 2 – சனிக்கோளின் ஈர்ப்புத்திறன் நீரை விட அதிகமானது சரியான கூற்றினைக் கண்டறிக.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
ஈ) இரண்டு கூற்றுகளும் சரி

IV. குறுகிய விடையளி :

Question 1.
ஒளியாண்டு என்றால் என்ன?
விடை:

  1. ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும்.
  2. ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 300000 கி.மீ ஆகும்.

Question 2.
பேரண்டத்தின் படிநிலைகள் யாவை?
விடை:

  1. பேரண்டம்
  2. விண்மீன்திரள் மண்டலம்.
  3. சூரியக் குடும்பம்.
  4. கோள்கள்
  5. துணைக்கோள்கள்.

Question 3.
சூரியக் குடும்பத்தில் எத்தனை கோள்கள் உள்ளன. அவை யாவை?
விடை:
சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. அவை

  1. புதன்
  2. வெள்ளி
  3. புவி
  4. செவ்வாய்
  5. வியாழன்
  6. சனி
  7. யுரேனஸ்
  8. நெப்டியூன் பருவம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 1 பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

6th Social Science Guide தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடு

Question 1.
6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்
அ) ஈராக்
ஆ) சிந்துவெளி
இ) தமிழகம்
ஈ) தொண்டைமண்டலம்
விடை:
அ) ஈராக்

Question 2.
இவற்றுள் எது தமிழக நகரம்?
அ) ஈராக்
ஆ) ஹரப்பா
இ) மொகஞ்சதாரோ
ஈ) காஞ்சிபுரம்
விடை:
ஈ) காஞ்சிபுரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 3.
வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
அ) பூம்புகார்
ஆ) மதுரை
இ) கொற்கை
ஈ) காஞ்சிபுரம்
விடை:
ஆ) மதுரை

Question 4.
தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது
அ) கல்லணை
ஆ) காஞ்சிபுர ஏரிகள்
இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
ஈ) காவிரிஆறு
இவற்றில் அ) அ மட்டும் சரி
ஆ) ஆ மட்டும் சரி
இ) இ மட்டும் சரி
ஈ) அ மற்றும் ஆ சரி
விடை:
ஈ) அ மற்றும் ஆசரி

Question 5.
பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?
அ) மதுரை
ஆ) காஞ்சிபுரம்
இ) பூம்புகார்
ஈ) சென்னை
விடை:
ஈ) சென்னை

Question 6.
கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்
அ) மதுரை
ஆ) காஞ்சிபுரம்
இ) பூம்புகார்
ஈ) ஹரப்பா
விடை:
அ) மதுரை

II. கூற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும்
நடைபெற்றது. காரணம் : வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.
அ) கூற்று சரி: காரணம் தவறு
ஆ) கூற்று சரி: கூற்றுக்கான காரணமும் சரி.
இ) கூற்று தவறு: காரணம் சரி.
ஈ) கூற்று தவறு: காரணம் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி: கூற்றுக்கான காரணமும் சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 2.
அ) ‘திருநாவுக்கரசர், “கல்வியில் கரையில்” எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.
ஆ) இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்.
இ) “நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம்” என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.
அ) அ மட்டும் சரி
ஆ) ஆ மட்டும் சரி
இ) இ மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
ஈ) அனைத்தும் சரி

Question 3.
சரியான தொடரைக் கண்டறிக
அ) நாளங்காடி என்பது இரவு நேர கடை.
ஆ) அல்லங்காடி என்பது பகல் நேர கடை.
இ) ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்.
ஈ) கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
விடை:
ஈ) கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது

Question 4.
தவறான தொடரைக் கண்டறிக.
அ) மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆ) யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.
இ) கோவலனும், கண்ண கியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.
ஈ) ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடை:
இ) கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்

Question 5.
சரியான இணையைக் கண்டறிக.
அ) கூடல் நகர் – பூம்புகார்
ஆ) தூங்கா நகரம் – ஹரப்பா
இ) கல்வி நகரம் – மதுரை
ஈ) கோயில் நகரம் – காஞ்சிபுரம்
விடை:
ஈ) கோயில் நகரம்- காஞ்சிபுரம்

Question 6.
தவறான இணையைக் கண்டறிக.
அ) வட மலை – தங்கம்
ஆ) மேற்கு மலை – சந்தனம்
இ) தென்கடல் – முத்து
ஈ) கீழ்கடல் – அகில்
விடை:
ஈ) கீழ்கடல் – அகில்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் _______
விடை:
ராஜசிம்மன்

Question 2.
கோயில் நகரம் என அழைக்கப்படுவது _____
விடை:
காஞ்சி

Question 3.
மாசாத்துவன் எனும் பெயர் தரும் பொருள் ______
விடை:
பெருவணிகன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

IV. சரியா? தவறா?

1. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது.
2. மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.
3. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன.
4. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.
விடை:
1. சரி
2. சரி
3. சரி
4. சரி

V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
ஏற்றுமதி என்றால் என்ன?
விடை:
ஒரு நாடு தன்னிடம் உள்ள உபரிப் பொருள்களை வேறொரு நாட்டிற்கு விற்பனை செய்வது ஏற்றுமதியாகும்.

Question 2.
இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பியம் மற்றும் சங்கப் பாட நூலைக் கூறு
விடை:
காப்பியம்: சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
சங்கப்பாடநூல்: பட்டினப்பாலை

Question 3.
தொண்டைநாட்டின் தொன்மையான நகரம் எது?
விடை:
காஞ்சி

Question 4.
கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள ஏதேனும் ஒரு வேறுபாட்டைக் கூறு.
விடை:
கிராமத்தை விட நகரத்தில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்.

Question 5.
லோத்தல் நகரத்துடன் தொடர்புடைய நாகரிகம் எது?
விடை:
சிந்து வெளி நாகரிகம்

Question 6.
உலகின் தொன்மையான நாகரிகம் எது?
விடை:
மெசபடோமிய நாகரிகம்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி

Question 1.
இந்தியாவின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.
விடை:
இந்தியாவில் பண்டைய நகரங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
ஜான்சி:

  • ஜான்சி நகரம் உத்திரப் பிரதேசத்தில் உள்ளது
  • இது ஜான்சி மாவட்டத்தின் தலைநகர் ஆகும்
  • இது உத்திரப் பிரதேசத்தின் அனைத்து நகரங்களோடும் சாலை மற்றும் இருப்புப்பாதை மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.
  • இந்நகரம் இந்திய அரசாங்கத்தினால் சிறந்த நகரங்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்நகரம் ஜான்சிராணி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஜான்சி கோட்டை, அரசு .அருங்காட்சியகம், ராணிமஹால் ஆகியவை இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும்.

பாடலிபுத்திரம்:

  • தற்போதைய பாட்னா நகரத்தை ஒட்டியுள்ளது.
  • மௌரியப் போரசு, நந்த போரசு போன்றவற்றின் தலைநகராக இந்நகரம் இருந்தது

தட்சசீலம்:

  • இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாக இருந்தது.
  • தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது.
  • இது ஒரு கல்வி நகரம் ஆகும்.
  • உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று இங்கு இருந்தது.

லோத்தல்:

  • குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றின் கிளை நதியின் கரையில் இந்நகரம் அமைந்துள்ளது.
  • இது பழங்கால இந்தியாவின் ஒரு முக்கிய வணிகமையம் ஆகும்.
  • இங்கு கப்பல் கட்டும் தளம் ஒன்று இருந்துள்ளது.
  • இது சிந்து வெளி மக்களின் கடல் கடந்த வணிகம் பற்றி எடுத்துக் காட்டுகிறது.

ஹரப்பா :

  • இந்நகரம் 1921 ஆம் ஆண்டு தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஹரப்பா என்றால் இறந்தோர் மேடு என்று பொருள்.
  • சிந்துவெளி நாகரிகத்தின் அழிவுச்சின்னங்கள் இங்கு காணப்பட்டன.
  • இது ஒரு திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் ஆகும்.
  • இது தற்போது பாகிஸ்தானில் உள்ளது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 2.
தமிழகத்தின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • பூம்புகார்
  • மதுரை
  • காஞ்சி
  • வஞ்சி
  • தொண்டி
  • உறையூர்
  • கரவூர்
  • மாமல்லபுரம்
  • தகடூர்
  • காயல்

Question 3.
தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் யாவை?
விடை:

  • சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பட்டினப்பாலை ஆகியவை பூம்புகாரைப் பற்றி அறிய உதவுகிறது.
  • கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிசின் குறிப்பு மற்றும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றில் மதுரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
  • காளிதாசர், திருநாவுக்கரசர் ஆகியோர் தங்களது பாடல்களில் காஞ்சியைக் குறிப்பிட்டுள்ளனர்.
  • மணிமேகலையிலும் காஞ்சியின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

Question 4.
மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றி குறிப்பிடுக.
விடை:

  • மதுரையை பாண்டியர்களும், சோழர்களும், களப்பிரர்களும் ஆட்சி செய்தனர்.
  • இடைக்காலத்தில் பிற்காலச் சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும், அவர்களுக்குப் பின் நாயக்கர்களும் ஆட்சி செய்தனர்.

Question 5.
மதுரைக்கு வழங்கப்படும் வேறு சில பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தூங்கா நகரம்
  • சங்கம் வளர்த்த நகரம்
  • கூடல் நகர்

Question 6.
நாளங்காடி, அல்லங்காடி-வேறுபடுத்துக.
விடை:

  • நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடி
  • அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடியாகும்.

Question 7.
காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் யார்? யார்?
விடை:

  • தர்மபாலர்
  • ஜோதிபாலர்
  • சுமதி
  • போதி தர்மர்

Question 8.
ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:

  • காஞ்சிபுரம் ஏரிகள் மாவட்டம் எனப்படுகிறது.
  • காஞ்சி நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர்தேக்கி வைக்கப்பட்டிருந்தன. எனவே காஞ்சிபுரம் ஏரிகளின் மாவட்டம் எனப்படுகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

VII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
ஈராக் – குறிப்பு தருக.
விடை:
தற்போதைய ஈராக் பழங்காலத்தில் மெசபடோமியா என்றழைக்கப்பட்டது. இப்பகுதிதான் சுமேரிய நாகரிகத்தின் பிறப்பிடம் ஆகும். இது யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் என்ற இரு நதிகளால் வளப்படுத்தப்படுகிறது. இது ஒரு முக்கிய வணிக மையமாகும். ஈராக்கிற்கும் பிற நாடுகளுக்குமிடையேயிருந்த வர்த்தகத் தொடர்பு பற்றி பட்டினப் பாலையில் கூறப்பட்டுள்ளது.

Question 2.
பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.
விடை:

  • பூம்புகார் ஒரு துறைமுக நகரம்
  • பெருவணிகர்களும், பெருங்கடல் வணிகர்களும் நிறைந்த பகுதியாக பூம்புகார் விளங்கியது.
  • இங்கு வணிகம் செய்ய கிரேக்கம், ரோம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் இங்கு வந்தவண்ணம் இருந்தனர்.
  • வணிகத்தின் காரணமாக பலர் இந்நகரிலேயே தங்கியதால் இங்கு வெளிநாட்டவர் குடியிருப்புகள் தோன்றின.

Question 3.
காஞ்சியில் பிறந்த சான்றோர்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • கவிஞர் காளிதாசர் “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்று கூறுகிறார்.
  • திருநாவுக்கரசர், “கல்வியில் கரையிலாத காஞ்சி” என்று கூறுகிறார்.
  • சீன வரலாற்றாசிரியரான யுவான்சுவாங் புத்தகயா, காஞ்சி போன்ற ஏழு இந்தியப் புனிதத் தலங்களுள் காஞ்சியும் ஒன்று என்று கூறுகிறார்.

Question 4.
கோயில் நகரம் – குறிப்பு தருக.
விடை:

  • காஞ்சியிலுள்ள கைலாச நாதர் கோயில் புகழ் பெற்றது.
  • பல்லவர்கள் காலத்தில் ஏராளமான குடைவரைக் கோயில்களும் காஞ்சியில் கட்டப்பட்டுள்ளன. எனவே காஞ்சி கோயில் நகரம் எனப்படுகிறது.

Question 5.
காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதென்பதை நிரூபி.
விடை:

  • காஞ்சியில் ஏராளமான பள்ளிகளும், புத்த விகாரங்களும் இருந்தன.
  • சீன வரலாற்று ஆசிரியரான யுவான் சுவாங் காஞ்சியிலுள்ள கடிகைக்கு கல்வி கற்பதற்காக வந்தார்.
  • திருநாவுக்கரசர் காஞ்சியை கல்வியில் கரையில்லாத காஞ்சி என்று புகழ்ந்துள்ளார்.

VIII . மாணவர் செயல்பாடுகள்

1. கீழடி அகழாய்வுகள் குறித்த ஆல்பம் தயாரிக்கவும்.
2. பண்டைய தமிழகத்தின் வணிக சிறப்புமிக்க நகரம் பூம்புகார்….. கலந்துரையாடு.
3. பல்லவர்கள் காலக்கோயில்கள் பற்றிய புகைப்படங்களை சேகரி.
4. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற ஏரிகள் பற்றி ஒரு சிறு நூலினைத் தயாரிக்கவும்.
5. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நகரங்கள் குறித்து ஒரு சிறு நூலைத் தயாரிக்கவும்.
6. நூலகத்திற்குச் சென்று, உன் மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களைக் கண்டுபிடி.

IX. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் 95
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் 95.2

X. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)
நீ வாழும் பகுதியின் முக்கியத்துவத்தைக் காட்டும் கையேடு ஒன்றினைத் தயாரி.

6th Social Science Guide தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்
அ) எகிப்திய நாகரிகம்
ஆ) சீன நாகரிகம்
இ) சிந்து வெளி நாகரிகம்
ஈ) மெசபடோமியா நாகரிகம்
விடை:
ஈ) மெசபடோமியா நாகரிகம்

Question 2.
பட்டினப்பாலையின் ஆசிரியர்
அ) உருத்திரங்கண்ண னார்
ஆ) சேக்கிழார்
இ) நக்கீரர்
ஈ) ஜெயங் கொண்டார்
விடை:
அ) உருத்திரங்கண்ணனார்

Question 3.
கைலாச நாதர் கோயிலைக்கட்டியவர்
அ) மகேந்திரவர்மன்
ஆ) நரசிம்மவர்மன்
இ) ராஜ சிம்மன்
ஈ) அபராஜிதர்
விடை:
இ) ராஜ சிம்மன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 4.
பின் வருவனவற்றுள் எது ஒரு கல்வி நகரம்?
அ) பூம்புகார்
ஆ) மதுரை
இ) காஞ்சி
ஈ) தஞ்சாவூர்
விடை:
இ) காஞ்சி

Question 5.
புகார் இவர்களின் துறைமுகம்
அ) சேர அரசு
ஆ) சோழ அரசு
இ) பாண்டிய அரசு
ஈ) களப்பிரர்கள்
விடை:
ஆ) சோழ அரசு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பெருங்கடல் வணிகர் ______ என்று அழைக்கப்பட்டனர்.
விடை:
மாநாய்கன்

Question 2.
சாணக்கியர் என்பவர் சந்திர குப்தரின் _____ ஆவார்
விடை:
அமைச்சர்

Question 3.
பௌத்தத் துறவியான மணிமேகலை தனது இறுதிக் காலத்தை _____ யில் கழித்தார்.
விடை:
காஞ்சி

III. சரியா, தவறா?

Question 1.
சிலப்பதிகாரத்தின் நாயகி மணிமேகலை ஆவார்.
விடை:
தவறு

Question 2.
தற்போதைய தஞ்சாவூர் முற்காலத்தில் சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
விடை:
தவறு

Question 3.
பூம்புகார் சோழ அரசின் துறைமுகம்.
விடை:
சரி

Question 4.
சிலப்பதிகாரம் பூம்புகாரின் சிறப்பைக் கூறுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

Question 5.
பல்லவர்கள் காலத்தில் பல குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன.
விடை:
சரி

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பூம்புகார் நகர் மற்ற நகரங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருந்தது?
விடை:

  • பூம்புகாரில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி குடியிருப்பு இருந்தது.
  • நீண்ட, நேரான தெருக்களைக் கொண்டிருந்தது.
  • இங்கு கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் இருந்தது.

Question 2.
ஏரிகளின் மாவட்டம் எது? ஏன்?
விடை:
காஞ்சிபுரம் ஏரிகளின் மாவட்டம் எனப்படுகிறது. ஏனெனில் காஞ்சி நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்த ஏரிகள் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டிருந்தன.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

6th Social Science Guide சிந்து வெளி நாகரிகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடு

Question 1.
சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?
1. செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
2. செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
3. செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி.
4. செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
விடை:
1. செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

Question 2.
சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது?
1. பழைய கற்காலம்
2. இடைக்கற்காலம்
3. புதிய கற்காலம்
4. உலோக காலம்
விடை:
4. உலோக காலம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Question 3.
ஆற்றங்கரைகள் நாகரிகத்தொட்டில்கள்’ என அழைக்கப்படக் காரணம்
1. மண் மிகவும் வளமானதால்
2. சீரான கால நிலை நிலவுவதால்
3. போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்
4. பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
விடை:
4. பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

II. கூற்றைக்காரணத்தோடு பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று – ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம். காரணம் – திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு
1. கூற்றும் காரணமும் சரி.
2. கூற்று தவறு, காரணம் சரி.
3. கூற்று சரி, காரணம் தவறு.
4. கூற்றும் காரணமும் தவறு.
விடை:
1. கூற்றும் காரணமும் சரி

Question 2.
கூற்று – ஹரப்பா நாகரிகம் வெண்கல காலத்தைச் சார்ந்தது: காரணம் – ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
1. கூற்றும் காரணமும் சரி.
2. கூற்று தவறானது, காரணம் சரி.
3. கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது.
4. கூற்று மற்றும் காரணம் தவறானவை.
விடை:
1. கூற்றும் காரணமும் சரி

Question 3.
கூற்று – ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிடத்தக்கது
காரணம் – கடலின் அலைகள், ஓதங்கள் நீரோட்டத்தைக் கணித்த பின் கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது.
1. கூற்றும் காரணமும் சரி.
2. கூற்று தவறானது, காரணம் சரியானது.
3. கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது.
4. கூற்று மற்றும் காரணம் தவறானவை.
விடை:
1. கூற்றும் காரணமும் சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Question 4.
கீழே கூறப்பட்டுள்ள மொஹஞ்ச-தாரோவைப் பற்றிய கூற்றுகளில் எவை சரியானவை?
1. தங்க ஆபரணங்கள் பற்றித் தெரியவில்லை
2. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.
3. கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன.
4. பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.
விடை:
2 மற்றும் 4. வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன. பெருங்குளம் நீர் கசியாமல் இருப்பதற்காக பல அடுக்குகளால் இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன.

Question 5.
கீழ்க்காணும் கூற்றை ஆராய்க.
1. நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றில் சீரான – தன்மை.
2. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.
3. தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது.
4. மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது / எவை சரியானவை? 1. 1 &2 2. 1&3 .3.2 &3 4. அனைத்தும் சரி
விடை:
4. அனைத்தும் சரி

Question 6.
பொருந்தாததை வட்டமிடு.
காளைகள், ஆடுகள், எருதுகள், பன்றிகள், குதிரைகள்)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் 50
விடை:
குதிரைகள்

Question 7.
தவறான இணையைத் தேர்ந்தெடு
1. ASI – ஜான் மார்ஷல்
2. கோட்டை – தானியக் களஞ்சியம்
3. லோத்தல் – கப்பல் கட்டும் தளம்
4. ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு
விடை:
4. ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு

III. கோடிட்ட இடத்தை நிரப்புக:

Question 1.
______ மிகப் பழமையான நாகரிகம்.
விடை:
மெசபடோமியா நாகரிகம்

Question 2.
இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ______ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.
விடை:
அலெக்ஸாண்டர் கன்னிங்காம்

Question 3.
______ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.
விடை:
தானியக்களஞ்சியம்

Question 4.
மக்கள் குழுக்களாகச் சேர்ந்து _____ யை உருவாக்குகிறார்கள்.
விடை:
சமுதாயத்தை

IV. சரியா? தவறா?

Question 1.
மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Question 2.
இந்தியாவின் தொல்பொருள் ஆய்வியல் துறை தொல்பொருள் ஆராய்ச்சிக்கும், நாட்டின் கலாச்சார நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பிற்கும் பொறுப்பானது.
விடை:
சரி

Question 3.
தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
விடை:
சரி

Question 4.
முதல் எழுத்து வடிவம் சீனர்களால் உருவாக்கப்பட்டது.
விடை:
தவறு

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் 85

VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
உலோகங்களின் பயன்களைக் கூறு.
விடை:

  • தங்கம், வெள்ளி ஆகியவை ஆபரணங்கள் செய்ய பயன்பட்டன
  • செம்பு, வெண்கலத்தால் ஆயுதங்கள் மற்றும் பாத்திரங்கள் செய்யப்பட்டன.
  • சிலைகள் செய்வதற்கு வெண்கலம் பயன்பட்டது. (உ-ம்) வெண்கலத்தால் ஆன நடன மாது சிலை

Question 2.
நாம் உண்ணும் உணவில் வேக வைத்த உணவு, பச்சையான உணவு என ஒரு பட்டியலை உருவாக்கு.
விடை:
வேகவைத்த உணவு: அரிசி, கோதுமை, காய்கள், கீரைவகைகள், கிழங்குகள், இறைச்சி ஆகியவை
பச்சையான உணவு: பழங்கள், காய்கள் மற்றும் கொட்டைகள்

Question 3.
மிருகங்களையும் மரங்களையும் வழிபடும் பழக்கம் நம்மிடையே உள்ளதா?
விடை:
ஆம். சில மதத்தினர் மிருகங்களையும் மரங்களையும் வழிபடுகின்றனர்.

Question 4.
ஆற்றங்கரைகள் நாகரிகத் தொட்டில்கள். ஏன்?
விடை:

  • ஆற்றங்கரைகளில் வளமானமண் அமைந்திருந்தது
  • ஆறுகளில் பாயும் நன்னீர் குடிப்பதற்கும், கால்நடைகளின் தேவைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் பயன்பட்டது.
  • ஆறுகள் போக்குவரத்துக்கு ஏற்ற வழிகளாக இருந்தன. எனவே மக்கள் ஆற்றங்கரைகளில் குடியேறினர். அப்பகுதிகளில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. ஆகவே ஆற்றங்கரைகள் நாகரிகத் தொட்டில்கள் எனப்பட்டன.

Question 5.
ஒரு பொம்மை நகர்வதாலேயே அதை நவீன கால பொம்மைகள் என்று பொருள் கொள்ள முடியாது. சிந்து வெளி மக்கள் பொம்மைகளில் பேட்டரிக்கு (மின் கலம்) மாற்றாக எதைப் பயன்படுத்தினர்?
விடை:
அவர்கள் சக்கரத்தைப் பயன்படுத்தினர்.

Question 6.
நீ ஒரு தொல் பொருள் ஆய்வாளர் எனில் என்ன செய்வாய்?
விடை:
எனது மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூருக்குச் சென்று, அங்கு தொல்பொருள் ஆராய்ச்சி செய்வேன்.

Question 7.
இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த இரு பகுதிகளைக் கூறு.
விடை:
கலிபங்கன், லோத்தல்

Question 8.
சிந்து வெளி நாகரிகத்தின் கூறுகளில் உன்னைக் கவர்ந்தது எது? ஏன்
விடை:

  • சிந்துவெளி நாகரிகத்தின் கூறுகளில் கழிவு நீர் அமைப்பு என்னைக் கவர்ந்தது.
  • மூடப்பட்ட கழிவுநீர்வடிகால் அமைப்பு. அது செங்கலாலும், கல்தட்டைகளாலும் மூடப் பட்டிருந்தது. அன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இன்றும் சில நவீன நகரங்களில் மூடப்பட்டவடிகால் அமைப்பு இல்லை.
  • கழிவு நீர்ப் பொருட்களை அப்புறப்படுத்த துளைகள் அமைக்கப்பட்டிருந்தன.
  • திடக்கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன. அவை திடக் கழிவுகளைத் தேக்கி, கழிவு நீரை மட்டும் வெளியேற்றின.

Question 9.
தற்காலத்தில் பொருட்களின் நிறையை அளக்க என்ன கருவி பயன்படுத்தப்படுகிறது?
விடை:
மின் எடைத் தராசு.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
புதைந்த கட்டிடங்களைக் கண்டுபிடிக்க தற்போது எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது?
விடை:

  • அகழ்வாராய்ச்சியாளர்கள் செங்கற்கற்கள், கற்கள், உடைந்த பானை ஓடுகள் போன்றவற்றை ஆராய்ந்து அவை பயன்படுத்தப்பட்ட காலத்தை அறிந்து கொள்கிறார்கள்.
  • பண்டைய இலக்கிய ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
  • வான் வழி புகைப்படங்கள் மூலம் புதையுண்ட நகரங்கள் மற்றும் இடங்களின் மேற்பரப்பைக் கண்டறிந்து கொள்கிறார்கள்.
  • நிலத்தடியை ஆய்வு செய்ய காந்தப்புல வருடியை (Magnetic scanner) பயன்படுத்துகின்றனர்.
  • எஞ்சிய தொல்பொருட்கள் புதையுண்டு இருக்கின்றனவா இல்லையா என்பதை ரேடார் கருவி மூலம் தொலை நுண்ணுணர்வு முறை மூலம் கண்டறிகின்றனர்.

Question 2.
சிந்து வெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?
விடை:
மக்கள் வெண்கலத்திலான பொருட்களைப் பயன்படுத்தினர். எனவே இது வெண்கல கால நாகரிகம் எனப்படுகிறது.

Question 3.
சிந்து வெளிநாகரிகம் ஒரு நகர நாகரிகம் காரணம் கூறுக.
விடை:

  • சிறப்பான நகரத்திட்டமிடல்
  • சிறப்பான கட்டடக் கலை வேலைப்பாடு
  • தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை.
  • தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள்
  • விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கான திடமான அடித்தளம்.

Question 4.
கழிவு நீர் வடிகால் அமைப்பின் சிறப்பைக் கூறு.
விடை:

  • மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு. இது செங்கலாலும் கல் தட்டைகளாலும் மூடப் பட்டிருந்தது
  • வடிகால் மென்சரிவைக் கொண்டிருந்தது.
  • கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக சரியான இடைவெளியில் துளைகள் இருந்தன.
  • ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன. அவை திடக்கழிவுகளைத் தேக்கி, கழிவுநீரை மட்டும் வெளியேற்றின.

Question 5.
பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறுக.
விடை:

  • பெருங்குளம் நன்கு அகன்று செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும்.
  • இது நீர் கசியாத கட்டுமானத்திற்கான மிகப்பழமையான சான்று ஆகும்.
  • குளத்தின் சுவர்கள் செங்கலால் கட்டப்பட்டு, நீர் கசியாமல் இருப்பதற்காக இயற்கைத்தார் பூசப்பட்டிருந்தது.
  • குளத்தின் இருபுறத்திலும் படிக்கட்டுகள் அமைந்திருந்தன.
  • குளத்தின் பக்கவாட்டில் மூன்று புறமும் அறைகள் இருந்தன.
  • உபயோகப்படுத்தப்பட்ட நீர் வெளியேற வகை செய்யப்பட்டிருந்தது.

Question 6.
சிந்து வெளி மக்கள் வெளிநாட்டினருடன் வணிகத்தில் ஈடுபட்டனர் என்பதை நீ எவ்வாறு அறிந்து கொள்கிறாய்?
விடை:

  • மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்ற முத்திரைகள் சிந்து வெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டன. இது இரு பகுதிகளுக்கிடையே நடந்த வணிகத்தைக் காட்டுகிறது.
  • சுமேரியாவின் அக்கடியப் பேரரசின் அரசன் நாராம்-சின் சிந்து வெளிப்பகுதியிலிருந்து அணிகலன்கள் வாங்கியதாக எழுதியுள்ளார்.
  • குஜராத்திலுள்ள லோத்தலில் கப்பல்கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது அவர்களின் கடல் வணிகத்தை உறுதிப் படுத்துகிறது.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கீழே கொடுக்கப்படுள்ளவற்றை சிந்து வெளியின் சிறப்பம்சங்களைக் கவனித்து தற்காலத்துடன் ஒப்பிடு
1. விளக்குக் கம்பங்கள்
2. சுட்ட செங்கற்கள்
3. நிலத்தடி வடிகால் அமைப்பு
4. எடைகள் மற்றும் அளவீடு
5. கப்பல் கட்டும் தளம்
விடை:
1. விளக்குக் கம்பங்கள்:
சிந்து வெளிப்பகுதியின் விளக்குக் கம்பங்கள் ஒரு சிறப்பம்சம் ஆகும். அக்காலத்தில் கல்லாலான விளக்குக் கம்பங்கள் இருந்தன. தற்போது இரும்பு மற்றும் சிமிண்டு விளக்குத் தூண்கள் உள்ளன.

2. சுட்ட செங்கல்கள்:

  • சிந்து வெளிப் பகுதியில் வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன. ஏனெனில் சுட்ட செங்கற்கள் வலுவானவை, கடினமானவை, நிலைத்து நிற்கக் கூடியவை, நெருப்பைக் கூட தாங்குபவை. மேலும் அவை நீரில் கரைவதில்லை
  • தற்காலத்திலும் கட்டடங்கள் சுட்ட செங்கலால் கட்டப்படுகின்றன.

3. நிலத்தடி வடிகால் அமைப்பு:

  • சிந்துவெளிப்பகுதியில் மூடப்பட்ட நிலத்தடி வடிகால் அமைப்பு இருந்தது. அது செங்கற்கலாலும் கல்தட்டைகளாலும் மூடப்பட்டிருந்தது. கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக சரியான இடைவெளியில் துளைகள் இருந்தன.
  • தற்காலத்தில் கூட சில நகரங்களில் மூடப்பட்ட நிலத்தடி வடிகால் அமைப்பு இல்லை . தற்போதுதான் சில நகரங்களில் இம்முறை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாநகராட்சிகளிலும் இம்முறை பயன்பாட்டில் உள்ளது.

4. எடைகள் மற்றும் அளவீடு:

  • சிந்து வெளிநாகரிக மக்கள் தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகளைப் ‘ பயன்படுத்தினர். அளவு கோல்களையும் பயன்படுத்தினர்
  • தற்காலத்தில் நாம் பல்வேறு விதமான மின் அளவீடுகளைப் பயன்படுத்துகிறோம்

5. கப்பல் கட்டும் தளம்:

  • குஜராத்திலுள்ள லோத்தல் என்ற இடத்தில் ஒரு கப்பல்கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் கடல் வணிகத்தை உறுதிப்படுத்துகிறது.
  • தற்போது அநேகமாக அனைத்து பெரிய துறைமுகங்களிலும் கப்பல் கட்டும் மற்றும் பழுது நீக்கும் வசதிகள் உள்ளன.
    எ.கா: மும்பையிலுள்ள மேசகவான் கப்பல்கட்டும்தளம்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Question 2.
வேளாண்மை சிந்துவெளி மக்களின் தொழில்களுள் ஒன்று – எவ்வாறு நிரூபிப்பாய்?
(கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை வைத்து)
விடை:

  • சிந்து வெளி மக்களின் தொழில்களில் ஒன்று வேளாண்மை. அவர்கள் கோதுமை, பார்லி, திணைவகைகள், எள் மற்றும் பயறு வகைகளைப் பயிரிட்டனர்.
  • தானியங்களை சேகரிக்க தானியக்களஞ்சியங்கள் கட்டப்பட்டன.
  • எடுத்துக்காட்டாக ஹரியானா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தானியக் களஞ்சியத்தைக் கூறலாம்.
  • மேலும் கலப்பைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • எனவே சிந்து வெளி மக்கள் வேளாண்மைத் தொழில் செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

Question 3.
மட்பாண்டங்களும் அதன் உடைந்த துண்டுகளும் சிந்துவெளிப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து நீ அறிவது என்ன?
விடை:

  • அவர்கள் மட்பாண்டங்கள் செய்யக் கற்றிருந்தனர் என்பது தெரிகிறது.
  • உடைந்த பானைத்துண்டுகளிலிருந்த விலங்குகளின் உருவங்கள், அவர்கள் விலங்குகளை வளர்த்தனர் என்பதைக் காட்டுகிறது.
  • பானைத் துண்டுகளிலுள்ள சித்திரங்கள் அவர்களது ஓவியம் மற்றும் வண்ண வேலைப் பாடுகளிலிருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது
  • அவர்கள் உணவுகளை சமைத்து உண்டனர் என்பதும் தெளிவாகிறது.

Question 4.
லோத்தல் ஒரு கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீ அறிவது என்ன ?
விடை:
லோத்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் அவர்கள் கடல் வணிகத்தை மேற்கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது.

Question 5.
ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்குக் காரணம் என்ன?
விடை:
ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்குக் காரணங்கள் பின்வருமாறு.

  • அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு
  • சுற்றுச்சூழல் மாற்றம்
  • படையெடுப்பு
  • இயற்கைச் சீற்றங்கள்
  • காலநிலை மாற்றம்
  • காடுகள் அழிதல்
  • தொற்று நோய்த் தாக்குதல்

IX. மாணவர் செயல்பாடு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் 96
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் 96.1

1. ஒரு குறிப்புப் புத்தகம் தயாரி. (மொஹஞ்ச- தாரோ மற்றும் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களைப் பற்றிய செய்திகள்)
2. சிந்துவெளி நாகரிகம் ஒரு பகுதியாக விளங்கிய இடத்தில் ஒரு தொல்லியல் ஆராய்ச்சியாளராக உன்னை நினைத்துக் கொள். நீ எதையெல்லாம் சேகரிப்பாய்?
3. தகவல் அட்டை தயாரி. (சதுர அட்டைகளை எடுத்துக் கொள். அதில் சில அட்டைகளில் படங்களை ஒட்டு. சில அட்டைகளில் அதற்கான தகவல்களை எழுது. மாணவர்களிடம் இந்த அட்டைகளைக் கொடுத்துப் பொருத்தச் செய்).
4. கற்பனையாக ஒரு மாதிரி நகர அமைப்பை வரைந்து பார்.
5. சிந்துவெளி நாகரிகத்தின் ஏதாவது ஓர் அமைப்பை களிமண், வளையல் துண்டுகள், தீக்குச்சிகள், கம்பளி நூல் மற்றும் ஐஸ்கிரிம் குச்சிகள் கொண்டு வடிவமைத்தல்.
6. விளையாட்டு பொம்மைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு மாறியுள்ளன என்று உன்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
களிமண் → கல் → மரம் → உலோகம் → பிளாஸ்டிக் → பர் (fur) → விலங்குகளின்
உரோமம் → மின்சாரம் → மின்னணு???

7. குறுக்கெழுத்து

இடமிருந்து வலம்
(4) ஒவ்வொரு வீட்டிலும் _____ இருந்தது.
(5) இது _____ கால நாகரிகம்.
(10) தானியங்களை சேகரித்து வைக்கப் பயன்பட்டது.

வலமிருந்து இடம்
(2) மொஹஞ்ச-தாரோவைவிட பழமையானது
(6) இது நீர் கசியாமல் இருக்கப் பூசப்பட்டது.
(7) இது தான் தொல்பொருள் ஆய்விற்கு பொறுப்பு வகிக்கிறது.

மேலிருந்து கீழ்
(1) கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்.
(3) இந்தியத் தொல்பொருள் ஆய்வியல் துறையின் இயக்குநராக இருந்தவர்.

கீழிருந்து மேல்
(8) சிந்துவெளி மக்களுக்கு இதன் பயன் தெரியாது.

வினாடி – வினா

Question 1.
சிந்துவெளி மக்கள் ஆடை தயாரிக்க எதைப் பயன்படுத்தினார்கள்?
விடை:
பருத்தி

Question 2.
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரிக நகரம் எது?
விடை:
ஹரப்பா

Question 3.
சிந்துவெளி நாகரிகம் எங்கு இருந்தது?
விடை:
சிந்து நதிச் சமவெளியில்

Question 4.
எந்த விலங்கு வண்டி இழுக்கப் பயன்பட்டது?
விடை:
எருது

Question 5.
சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகம் தெரியாது?
விடை:
இரும்பு

Question 6.
பானை செய்வதற்கு எதைப் பயன்படுத்தினர்?
விடை:
சக்கரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Question 7.
உலகின் நான்கு பழம்பெரும் நாகரிகங்களில் மிகப் பழமையானது எது?
விடை:
மெசபடோமியா நாகரிகம்

X. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)

1. களிமண்ணைக் கொண்டு ஒரு விலங்கு அல்லது பானை செய்யுங்கள்.
2. நகரும் கைகால்களைக் கொண்ட களிமண் பொம்மைகளைச் செய்யுங்கள்.
3. பானையில் ஓவியம் தீட்டு (வடிவியல் படங்களுடன் கூடிய முறையில்)
4. தகவல் சுவரொட்டிகள் மற்றும் காட்சிப் பதாகைகள் செய்தல்.

XII. கட்டத்தில் பதிலளி:-

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் 98

6th Social Science Guide சிந்து வெளி நாகரிகம் Additional Important Questions and Answers

I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்

Question 1.
இந்தியத் தொல்லியல் துறையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்.
அ) சென்னை
ஆ) மும்பை
இ) கொல்கத்தா
ஈ) புது டெல்லி
விடை:
ஈ) புது டெல்லி

Question 2.
கூட்ட அரங்கு அமைந்துள்ள இடம்
அ) ஹரப்பா
ஆ) மொஹஞ்ச தாரோ
ஈ) லோத்தல்
ஈ) கலிபங்கன்
விடை:
ஆ) மொஹஞ்ச தாரோ

Question 3.
நாகரிகம் என்ற இலத்தீன் மொழி வார்த்தையான சிவிஸ்’ என்பதன் பொருள்
அ) நகரம்
ஆ) கிராமம்
இ) மக்கள்
ஈ) ஆட்சி செய்
விடை:
அ) நகரம்

Question 4.
மனிதர்களால் முதன்முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் உயோகப்படுத்தப்பட்ட உலோகம்.
அ) இரும்பு
ஆ) செம்பு
இ) வெண்கலம்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) செம்பு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

II. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக்க.

Question 1.
கீழ்க்காணும் கூற்றுக்களில் எது சரியானது?
அ) மனிதர்களால் உபயோகப்படுத்தப்பட்ட முதல் உலோகம் செம்பு.
ஆ) சிந்து வெளிமக்கள் வண்டிகளை இழுக்க குதிரைகளைப் பயன்படுத்தினார்கள்
இ) மொஹஞ்சதாரோ ஹரப்பாவை விட பழமையானது.
ஈ) ஹரப்பா நாகரிகம் ஒரு கிராம நாகரிகம்.
விடை:
அ) மனிதர்களால் உபயோகப்படுத்தப்பட்ட முதல் உலோகம் செம்பு.

Question 2.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
1. சிந்து வெளி தெருக்கள் சட்டக வடிவமைப்பைக் கொண்டிருந்தன
2. அங்கு அரண்மனைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
3. அங்கு வழிபாட்டுத்தலங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை
அ) 1 & 2
ஆ) 1 & 3
இ) 2 & 3
ஈ) அனைத்தும் சரி
விடை:
அ) 1 & 2

Question 3.
பொருந்தாததை வட்டமிடுக. ஹரப்பா, மொஹஞ்சதாரோ, லோத்தல், கலிபங்கன், லாகூர்
விடை:
(லாசர்)

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
1924 இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநராக இருந்தவர் _____
விடை:
ஜான் மார்ஷல்

Question 2.
இந்தியத் தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு ______
விடை:
1861

Question 3.
முதல் எழுத்து வடிவத்தை உருவாக்கியவர்கள் _____
விடை:
சுமேரியர்கள்

Question 4.
கிசே பிரமிடைக் கட்டிய மன்னர் _____
விடை:
குஃபு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம்

Question 5.
தானியக் களஞ்சியம் _____ சேகரித்து வைப்பதற்காகப் பயன்பட்டது.
விடை:
தானியங்களை

IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
மக்கள் ஏன் நதிக்கரைகளில் குடியேறினர்?
விடை:

  • மக்கள் நதிக்கரைகளில் குடியேறக் காரணங்கள் பின் வருமாறு
  • வளமான மண்
  • ஆறுகளில் பாயும் நன்னீர் குடிப்பதற்கும், கால்நடைகளின் தேவைகளுக்கும் நீர்ப்பாசனத்திற்கும் பயன்பட்டது.
  • ஆறுகள் போக்குவரத்துக்கு ஏற்ற வழிகளாக இருந்தன.

Question 2.
கட்டடங்கள் கட்டுவதற்கு ஏன் சுட்ட செங்கற்கள் பயன்படுத்தபட்டன?
விடை:

  • ஏனென்றால் அவை வலுவானவை, கடினமானவை, நிலைத்து நிற்கக் கூடியவை.
  • நெருப்பைக் கூடத் தாங்கக் கூடியவை.
  • மேலும் அவை நீரில் கரைவதில்லை.

Question 3.
சிந்து வெளி மக்களின் தொழில்கள் பற்றி எழுது.
விடை:

  • வேளாண்மை, கை வினைப் பொருட்கள் செய்தல் போன்ற தொழில்களை செய்தனர்.
  • அங்கு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்களும் இருந்தனர்.
  • கால்நடைகளை வளர்த்தனர்.

Question 4.
பானை வனைதல் பற்றி சிலவரிகள் எழுதுக.
விடை:

  • பானைகள் செய்ய சக்கரத்தைப் பயன்படுத்தினர்.
  • அவை தீயிலிட்டு சுடப்பட்டன
  • அவற்றிற்கு வர்ணங்கள் தீட்டினர்.
  • அவற்றில் விலங்குகளின் உருவங்களை வரைந்தனர்.

மனவரை படம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 3 சிந்து வெளி நாகரிகம் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

6th Social Science Guide மனிதர்களின் பரிணாம வளர்ச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடு

Question 1.
பரிணாமத்தின் வழிமுறை _____
அ) நேரடியானது
ஆ) மறைமுகமானது
இ) படிப்படியானது
ஈ) விரைவானது
விடை:
இ) படிப்படியானது

Question 2.
தான்சானியா ____ கண்டத்தில் உள்ளது.
அ) ஆசியா
ஆ) ஆப்பிரிக்கா
இ) அமெரிக்கா
ஈ) ஐரோப்பா
விடை:
ஆ) ஆப்பிரிக்கா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

II. கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே
அ) கூற்று சரி.
ஆ) கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.
இ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஆ) கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது

III. சரியான இணையைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 80
விடை:
இ) ஹோமோ எரக்டஸ் – சிந்திக்கும் மனிதன்

IV. கோடிட்ட இடங்களை நிரப்பவும்.

Question 1.
தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _____ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள். விடை:
மானுடவியல் ஆய்வாளர்கள்

Question 2.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் _____ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
விடை:
நாடோடி

Question 3.
பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _____ மற்றும் _____ ஆகும்.
விடை:
வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்

Question 4.
_______ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
விடை:
கலப்பை

Question 5.
பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _____ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.
விடை:
கரிக்கையூர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

V. சரியா, தவறா?

Question 1.
நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.
விடை:
தவறு

Question 2.
ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
விடை:
சரி

Question 3.
மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.
விடை:
சரி

Question 4.
மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.
விடை:
தவறு

VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

Question 1.
அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?
விடை:
கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வு முறை

Question 2.
தொடக்க கால மனிதர்கள் எதை அணிந்தார்கள் ?
விடை:
அவர்கள் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல்கள், மரங்களின் கிளைகள், இலைகள் ஆகியவற்றை அணிந்தார்கள்.

Question 3.
தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?
விடை:
அவர்கள் மரம், குகை மற்றும் மலையடிவாரத்தில் வாழ்ந்தார்கள்.

Question 4.
நிலத்தை உழுவதற்கு எந்த விலங்கு பயன்படுத்தப்பட்டது?
விடை:
எருது

Question 5.
மனிதர்கள் எப்போது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்?
விடை:

  • விவசாயம் செயல்பாட்டுக்கு வந்த பின் மக்கள் விலங்குகளைப் பழக்கி, அவற்றையும் விவசாயத்தில் ஈடுபடுத்தினர்.
  • வேட்டையாடி வாழ்க்கை நடத்தியதை விட இந்த வாழ்க்கை எளிதாக இருந்தது. விவசாயம் அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடியேறும்படிச் செய்தது.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பரிணாமம் என்றால் என்ன?
விடை:
மனித இனம் மாற்றங்களை அடைந்து, ஒரு மேம்பட்ட நிலையை நோக்கி வளர்ச்சி பெறும் வழிமுறையைப் பரிணாமம் என்கிறோம்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Question 2.
ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் இரு பண்புகளை எழுதுக.
விடை:

  • அவர்கள் சுயமாக சிந்திக்கும் தன்மை பெற்றிருந்தனர்.
  • மனிதனைப் போன்ற தோற்றம் உடையவர்கள்
  • கரடு முரடான கருவிகளைப் பயன்படுத்தினர்
  • வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிக்கும் சமூகமாக வாழ்ந்தனர்.

Question 3.
மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்?
விடை:

  • அவர்கள் உணவு தேடி இடம் விட்டு இடம் நகர்ந்தனர்.
  • நிலத்தில் விவசாயம் செய்து வந்த அவர்கள், அந்த நிலத்தின் மண்வளம் குன்றி விட்டால் வேறொரு பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள்.

Question 4.
பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.
விடை:

  • வேட்டையாடுதல் பழங்கால மக்களின் முக்கியத் தொழிலாகும்.
  • கல்லாலும், எலும்பாலும் செய்த கருவிகளைப் பயன்படுத்தினார்கள்
  • கூர்மையான கருவிகளைப் பயன் படுத்தினார்கள்
  • பன்றி, மான், காட்டெருமை, காண்டாமிருகம், யானை, கரடி போன்ற விலங்குகளை வேட்டையாடினர்.

Question 5.
கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?
விடை:
மரம் வெட்டவும், மரக்கிளைகளை நீக்கவும், குழிதோண்டவும், விலங்குகளின் தோலை உரிக்கவும் கோடரிகள் உருவாக்கப்பட்டன.

Question 6.
தொல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய்?
விடை:
வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றிப் படிப்பது தொல்லியல் ஆகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Question 7.
மானுடவியல் பற்றி நீ அறிந்துள்ளது என்ன ?
விடை:

  • மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றிப் படிப்பது மானுடவியல் ஆகும்.
  • மானுடவியல் (anthropology) என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தை களிலிருந்து பெறப்பட்டது. anthrops என்பதன் பொருள் மனிதன். Logos என்பதன் பொருள் எண்ண ங்கள் அல்லது காரணம்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்.

Question 1.
பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.
விடை:

  • சக்கர உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல் தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
  • மலைகளிலிருந்து கற்கள் உருண்டு வருவதைப் பார்த்தபோது, சக்கரத்தை உருவாக்குவதற்கான சிந்தனையை பழங்கால மக்கள் பெற்றிருக்கலாம்.
  • சக்கரத்தின் உதவியால் பானை செய்யக் கற்றுக் கொண்டனர்.
  • சக்கரத்தின் உதவியினால் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எளிதாக எடுத்துச் சென்றனர்.
  • நவீன இயந்திரங்களில் சக்கரம் இல்லாத இயந்திரங்களே இல்லை எனலாம்.
  • இவ்வாறு சக்கரம் தொழிற்சாலை மற்றும் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.

IX. மாணவர் செயல்பாடு

1. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மனிதர்களின் படங்கள் அடங்கிய ஒரு படத்தொகுப்பைத் தயார் செய்.

X. வாழ்க்கைத் திறன்

1. களிமண் பானைகள் மற்றும் கருவிகளைச் செய்துபார்.
2. விதவிதமான பொம்மை வண்டிகளைச் சேகரி. அவற்றில் செவ்வகம், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களில் சக்கரத்தைப் பொருத்தி, வண்டிகள் எப்படி நகர்கின்றன என்று சோதனை செய்து பார்.

XI. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 91

6th Social Science Guide மனிதர்களின் பரிணாம வளர்ச்சி Additional Important Questions and Answers

I. கூற்று: க்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று: தொடக்ககால மனிதர்கள் வேட்டையாட துப்பாக்கியைப் பயன்படுத்தினார்கள்.
காரணம்: ஒரு குச்சி அல்லது கல்லால் பெரிய விலங்கினைக் கொல்வது கடினமாக இருந்தது.
அ) கூற்றும் காரணமும் சரி
ஆ) கூற்றும் காரணமும் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று சரி, காரணம் தவறு
விடை:
இ) கூற்று தவறு, காரணம் சரி

II. சரியான இணையைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 96
விடை:
ஈ) குரோ மக்னான்ஸ் – சீனா

III. சரியா, தவறா?

Question 1.
நியாண்டர்தால் மனிதர்கள் இறந்தவர்களைப் புதைத்தனர்.
விடை:
சரி

Question 2.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வண்டிகளை இழுக்க மக்கள் குதிரைகளைப் பயன் படுத்தினர்.
விடை:
தவறு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

Question 3.
ஹோமோ சேபியன்ஸ் சுயமாக சிந்திக்கும் மனிதர்கள்.
விடை:
சரி

Question 4.
சிக்கிமுக்கிக் கல் அவர்களுக்கு எளிதாகக் கிடைத்தது.
விடை:
தவறு

Question 5.
வரலாற்றுக்கு முந்தைய மக்கள் இரும்பிலான நாணயங்களைப் பயன்படுத்தினர்
விடை:
தவறு

IV. சுருக்கமான விடை தருக.

Question 1.
1850 ஆம் ஆண்டில் மக்களின் போக்குவரத்து முறை எவ்வாறு இருந்தது?
விடை:

  • பேருந்துகளோ, மிதிவண்டிகளோ காணப்படவில்லை
  • மாடுகள் அல்லது கோவேறி கழுதைகள் பூட்டப்பட்ட வண்டிகளைப் பயன்படுத்தினர்.
  • குதிரை வண்டிகள் அரிதாகவே காணப்பட்டன.

Question 2.
பண்ட மாற்று முறை என்றால் என்ன?
விடை:
பழங்கால மக்கள் தேவைக்கு அதிகமாக தங்களிடம் இருந்த தானியங்களை, பிற குழுக்களிடம் பரிமாற்றம் செய்து தங்களுக்குத் தேவையானவற்றைப்பெற்றுக் கொண்டார்கள். இது பண்டமாற்று முறை எனப்பட்டது.

Question 4.
பழங்கால மனிதர்களின் வாழ்வில் நெருப்பு இன்றியமையாத இடத்தைப் பிடித்தது எவ்வாறு?
விடை:
நெருப்பு இவர்களைக் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும், சமைக்கவும், இரவில் ஒளியை உருவாக்கவும் பயன்பட்டது. இவ்வாறு அவர்களின் வாழ்வில் நெருப்பு இன்றியமையாத இடத்தைப் பிடித்தது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 History Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி 97

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

6th Social Science Guide நிலப்பரப்பும், பெருங்கடல்களும் Text Book Back Questions and Answers

I. புத்தக வினாக்கள்

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
மிகச் சிறிய பெருங்கடல்
அ) பசிபிக் பெருங்கடல்
ஆ) இந்தியப் பெருங்கடல்
இ) அட்லாண்டிக் பெருங்கடல்
ஈ) ஆர்க்டிக் பெருங்கடல்
விடை:
ஈ) ஆர்க்டிக் பெருங்கடல்

Question 2.
மலாக்கா நீர்ச்சந்தியை இணைப்பது
அ) பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
ஆ) பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்
இ) பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
ஈ) பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
விடை:
இ) பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

Question 3.
அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்
அ) பசிபிக் பெருங்கடல்
ஆ) அட்லாண்டிக் பெருங்கடல்
இ) இந்தியப் பெருங்கடல்
ஈ) ஆர்க்டிக்பெருங்கடல்
விடை:
ஆ) அட்லாண்டிக் பெருங்கடல்

Question 4.
உறைந்த கண்டம்
அ) வட அமெரிக்கா
ஆ) ஆஸ்திரேலியா
இ) அண்டார்டிகா
ஈ) ஆசியா
விடை:
இ) அண்டார்டிகா

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
உலகின் மிகப் பெரிய கண்டம் _____
விடை:
ஆசியா

Question 2.
இந்தியாவில் கனிம வளம் நிறைந்த பீடபூமி _______
விடை:
சோட்டா நாகபுரி

Question 3.
பெருங்கடல்களில் மிகப்பெரியது _______
விடை:
பசிபிக் பெருங்கடல்

Question 4.
டெல்டா ______ நிலை நிலத்தோற்றம்
விடை:
மூன்றாம் நிலை

Question 5.
தீவுக் கண்டம் என அழைக்கப்படுவது ______
விடை:
ஆஸ்திரேலியா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

இ. பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, (இலங்கை)
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 20

Question 2.
ஆர்க்டிக்பெருங்கடல், மத்திய தரைக்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 21

Question 3.
பீடபூமி, பள்ளத்தாக்கு, சமவெளி, மலை
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 22

Question 4.
வங்காள விரிகுடா , பேரிங் கடல், சீனாக் கடல், தாஸ்மானியா கடல்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 23

Question 5.
ஆண்டிஸ், ராக்கி, எவரெஸ்ட், இமயமலை
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 24

ஈ. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 25

உ. (i) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. சமவெளிகள் ஆறுகளால் தோற்றுவிக்கப்படுகின்றன.
2. இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதி சான்ட்விச் அகழி.
3. பீடபூமிகள் வன்சரிவைக் கொண்டிருக்கும்.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
அ) 1 மற்றும் 3
ஆ) 2 மற்றும் 3
இ) 1, 2, மற்றும் 3
ஈ) 2 மட்டும்
விடை:
அ) 1 மற்றும் 3

உ. ii. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

கூற்று 1: மலைகள் இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
கூற்று 2: மிகவும் ஆழமான அகழி மரியானா அகழி
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு.
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி.
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.
விடை:
இ) இரண்டு கூற்றுகளும் சரி

ஊ. ஒரு வார்த்தையில் விடையளி.

Question 1.
உலகின் உயரமான பீடபூமி எது?
விடை:
திபெத்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

Question 2.
இரண்டாம் நிலை நிலத்தோற்றம் எவை?
விடை:
மலைகள், பீடபூமிகள், சமவெளிகள்.

Question 3.
ஒரு நாட்டின் பெயரைக் கொண்டுள்ள பெருங்கடல் எது?
விடை:
இந்தியப் பெருங்கடல்.

Question 4.
அரபிக் கடலில் உள்ள தீவுகள் யாவை?
விடை:
மாலத்தீவு, மினிகாய் தீவு.

Question 5.
கடலிலுள்ள ஆழமான பகுதி யாது?
விடை:
அகழி

எ. சுருக்கமான விடையளி:

Question 1.
கண்டம் என்றால் என்ன?
விடை:

  • மிகப்பெரும் நிலப்பரப்பினை கண்டங்கள் என அழைக்கிறோம்
  • உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன.
  • எடுத்துக்காட்டு: ஆசியா, ஐரோப்பா

Question 2.
அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளாக உள்ள கண்டங்கள் யாவை?
விடை:
அட்லாண்டிக் பெருங்கடலின் கிழக்கே ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும் மேற்கே வட அமெரிக்காவும், தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன.

Question 3.
பெருங்கடல் என்றால் என்ன?
விடை:

  • மிகப்பரந்த நீர்ப்பரப்பினை பெருங்கடல்கள் என அழைக்கிறோம்
  • புவியில் ஐந்து பெருங்கடல்கள் காணப்படுகின்றன. அவை, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல் ஆகும்.

Question 4.
பரப்பளவின் அடிப்படையில் கண்டங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி எழுது?
விடை:

  1. ஆசியா
  2. ஆப்பிரிக்கா
  3. வட அமெரிக்கா
  4. தென் அமெரிக்கா
  5. அண்டார்டிகா
  6. ஐரோப்பா
  7. ஆஸ்திரேலியா.

Question 5.
வட, தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?
விடை:
பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

ஏ. வேறுபாடறிக

Question 1.
மலை – பீடபூமி மலை .
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 50

Question 2.
பெருங்கடல் – கடல்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 51

ஐ. விரிவான விடையளி

Question 1.
நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக
விடை:
பல்வேறு வகையான நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன. இந்நிலத் தோற்றங்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். > முதல் நிலை நிலத்தோற்றங்கள்

  • இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள்
  • மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் முதல் நிலை நிலத்தோற்றங்கள்
  • கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்

முதல் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.

  • மிகப்பெரும் நிலப்பரப்பு கண்டங்கள் எனவும், பரந்த நீர்ப்பரப்பு பெருங்கடல்கள் எனவும் அழைக்கப்படும். உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன. அவை ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா,ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா.
  • ஐந்து பெருங்கடல்கள் காணப்படுகின்றன. அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள்

  • மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
  • சுற்றுப்புற நிலப்பகுதியை விட 600 மீ.க்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகள் ஆகும்.
  • சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீட பூமி ஆகும். இவை மலைகளைப் போன்று சரிவுகளைக் கொண்டது.
    எடுத்துக்காட்டு: திபெத் பீடபூமி, சோட்டா நாகபுரி பீடபூமி
  • சமவெளி சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றமாகும். இது 200மீ.க்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம்.
  • எடுத்துக்காட்டு: கங்கைச் சமவெளி

மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள்

  • ஆறுகள், பனியாறுகள், காற்று, கடல் அலைகள் போன்றவற்றின் அரித்தல் மற்றும் படியவைத்தல் செயல்களால் மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
  • எடுத்துக்காட்டு: கடற்கரை, மணல் குன்று.

Question 2.
பீடபூமி பற்றிக் குறிப்பு வரைக
விடை:

  • சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும்.
  • இவை மலைகளைப் போன்று வன்சரிவுகள் கொண்டவை.
  • பீடபூமிகள் நூறு மீட்டரிலிருந்து பல்லாயிரம் மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகின்றன.
  • உலகிலேயே உயர்ந்த பீடபூமி திபெத் பீடபூமியாகும்.
  • பீடபூமிகளில் கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தியாவில் சோட்டா நாகபுரி பீடபூமி கனிமங்கள் நிறைந்த பகுதியாகும்.
    தென்னிந்தியாவிலுள்ள தக்காண பீடபூமி எரிமலைப் பாறைகளால் ஆனது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

Question 3.
சமவெளி மக்கள் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. காரணம் கூறு.
விடை:

  • சமவெளி சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றமாகும்.
  • சமவெளிகள் ஆறுகள், துணை ஆறுகள் மற்றும் அதன் கிளை ஆறுகளால் உருவாக்கப் படுகின்றன.
  • இங்கு வளமான மண்ணும், நீர்ப்பாசனமும் காணப்படுகிறது.
  • இதனால் வேளாண்மை தழைத்தோங்குகிறது.
  • எனவே மக்கள் வாழ்வதற்கு சமவெளி ஏற்றதாய் அமைகிறது. இதனால் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களாக சமவெளிகள் விளங்குகின்றன.

Question 4.
பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.
விடை:

  • புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும்.
  • புவியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது.
  • பசிபிக் பெருங்கடலின் மேற்கில் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவும் கிழக்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவும் எல்லைகளாக உள்ளன.
  • இப்பெருங்கடல் முக்கோண வடிவத்தில் காணப்படுகிறது.
  • முக்கோண வடிவத்தின் மேற்பகுதி பெரிங் நீர்ச்சந்தியில் காணப்படுகிறது.
  • புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
  • பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் “நெருப்பு வளையம்” என அழைக்கப்படுகிறது.

Question 5.
பெருங்கடல்களின் முக்கியத்துவத்தை விளக்குக.
விடை:

  • பெருங்கடல்கள் முதல் நிலை நிலத்தோற்றமாகும்.
  • புவியில் மேற்பரப்பில் 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது.
  • பெருங்கடல்கள் மனித வாழ்வில் கால நிலையிலிருந்து அவன் உண்ணும் உணவு வரை தீர்மானிக்கின்றன.
  • பேராழிகள் வளமான புரதச் சத்து மிகுந்த மீன் உணவினைக் கொண்டுள்ளது.
  • பேராழிகள் உப்பு, மதிப்பு மிக்க உலோகங்கள், பெட்ரோலியம், முத்து, வைரம் போன்ற உலோகங்களைக் கொண்டுள்ளன.
  • கடல் நீரோட்டங்கள் அண்மைப் பகுதிகளின் காலநிலையைப் பாதிக்கின்றன.
  • கடல் வணிகம் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • கடல் நீரோட்டங்களை மின்னாற்றலாக மாற்ற இயலும்

ஒ. கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து விடையளி :

Question 1.
இந்த நிலத்தோற்றத்தின் பெயரைக் கூறுக.
விடை:
மணல் குன்று

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 100

Question 2.
இது எவ்வகை நிலத்தோற்றம்?
விடை:
மூன்றாம் நிலத்தோற்றம்

Question 3.
இந்த நிலத்தோற்றம் ஆற்றின் எவ்வகைச் செயலால் தோற்றுவிக்கப்படுகிறது?
விடை:
படிய வைத்தல்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

ஓ. i) செயல்பாடு (மாணவர்களுக்கானது)

அ) அருகில் உள்ள குறிப்பிடத்தக்க ஏதேனும் ஒரு நிலத்தோற்றத்திற்குக் களப் பயணம் மேற்கொள்க.
ஆ) நிலத்தோற்றம் மற்றும் பெருங்கடல்கள் பற்றி வினாடி வினா நடத்துதல்.

ஓ. ii. செயல்பாடு

Question 1.
நிலவரைபடப் புத்தகத்தைப் பயன்படுத்தி கோடிட்ட இடங்களை நிரப்பவும்
விடை:
அ) விரிகுடா – வங்காள விரிகுடா, ஹட்சன் விரிகுடா, ஜமைக்கா விரிகுடா
ஆ) வளைகுடா – பாரசீக வளைகுடா, மெக்ஸிகோ வளைகுடா, மன்னார் வளைகுடா
இ) தீவு – ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, லட்சத்தீவு.
ஈ) நீர்ச்சந்தி – பாக் நீர்ச்சந்தி, பேரிங் நீர்ச்சந்தி, ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி

Question 2.
கீழ்க்கண்டவற்றை நிலவரைப்பட புத்தக உதவியுடன் கண்டுபிடிக்கவும்
அ) இந்தியாவின் கிழக்கில் உள்ள கடல்
விடை:
வங்காள விரிகுடா

ஆ) அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்கில் உள்ள கண்டங்கள்
விடை:
வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா

இ) ஆர்க்டிக் பெருங்கடலின் தெற்கில் உள்ள கண்டங்கள்
விடை:
ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா

ஈ) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள நீர்ச்சந்தி
விடை:
பாக் நீர்ச்சந்தி

உ) ஆஸ்திரேலியாவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள்
விடை:
இந்தியப்பெருங்கடல், பசிபிக்பெருங்கடல்

ஊ) நிலச்சந்திகளை கண்டுபிடிக்கவும்
விடை:
பனாமா நிலச்சந்தி, அவலான் நிலச்சந்தி, லாடியூன் நிலச்சந்தி

6th Social Science Guide நிலப்பரப்பும், பெருங்கடல்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சர்வதேச மலைகள் தினம்
அ) ஜுன் 15
ஆ) ஏப்ரல் 11
இ) நவம்பர் 11
ஈ) டிசம்பர் 11
விடை:
ஈ) டிசம்பர் 11

Question 2.
எவரெஸ்ட்சிகரம் இங்கு அமைந்துள்ளது
அ) இந்தியா
ஆ) நேபாளம்
இ) பூடான்
ஈ) பாகிஸ்தான்
விடை:
ஆ) நேபாளம்

Question 3.
உலகிலேயே உயரமான பீடபூமி
அ) லடாக் பீடபூமி
ஆ) திபெத் பீடபூமி
இ) தக்காண பீடபூமி
ஈ) சோட்டா நாகபுரி பீடபூமி
விடை:
ஆ) திபெத் பீடபூமி

Question 4.
பின்வருவனவற்றுள் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம் அல்ல
அ) சமவெளிகள்
ஆ) பீடபூமிகள்
இ) பள்ளத்தாக்குகள்
ஈ) மலைகள்
விடை:
இ)பள்ளத்தாக்குகள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும்

Question 5.
பசிபிக் பெருங்கடலையும் ஆர்டிக் பெருங்கடலையும் இணைப்பது
அ) பேரிங் நீர்ச்சந்தி
ஆ) மெகல்லன் நீர்ச்சந்தி
இ) ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
ஈ) பாக் நீர்ச்சந்தி
விடை:
அ) பேரிங் நீர்ச்சந்தி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பாஞ்சியாவைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பு _____.
விடை:
பான்தலாசர்

Question 2.
கண்டங்களில் மிகச்சிறியது ______
விடை:
ஆஸ்திரேலியா

Question 3.
பெருங்கடல்களில் மிகச்சிறியது ______
விடை:
ஆர்டிக் பெருங்கடல்

Question 4.
உலகத்தின் கூரை எனப்படுவது ______
விடை:
திபெத் பீடபூமி

Question 5.
இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதி ______
விடை:
ஜாவா அகழி

Question 6.
உலகின் மிக உயரமான சிகரம் _____
விடை:
எவரெஸ்ட்

III. சுருக்கமான விடை தருக:

Question 1.
நிலச்சந்தி என்றால் என்ன?
விடை:
இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக்கூடியதும் இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்கக் கூடியதுமான மிகக் குறுகிய நிலப்பகுதி நீர்ச்சந்தி ஆகும்.

Question 2.
தமிழ் நாட்டிலுள்ள கோடைவாழிடங்கள் சிலவற்றைக் கூறு?
விடை:

  1. உதகமண்ட லம்
  2. கொடைக்கானல்
  3. கொல்லி மலை
  4. ஏற்காடு
  5. ஏலகிரி

Question 3.
மலைகளின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்
விடை:

  • மலைகள் ஆறுகள் உற்பத்தியாகும் இடமாகத் திகழ்கின்றன.
  • நீராவி நிரம்பிய காற்றினைத்தடுத்து மழைப் பொழிவைத் தருகின்றன.
  • தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகத் திகழ்கின்றன.
  • மலைகளில் சுற்றுலாத்தலங்களும், கோடை வாழிடங்களும் அமைந்துள்ளன.

Question 4.
மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • ஆறுகள், பனியாறுகள், காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கியச் செயல் அரித்தல் மற்றும் படியவைத்தல் ஆகும்.
  • இச்செயல்களால் மலைகள், பீடபூமி மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலைத்தோற்றங்கள் ஆகும்.

Question 5.
இந்தியப் பெருங்கடல் பற்றி சில வரிகள் எழுதுக.
விடை:

  • புவியின் மூன்றாவது பெரிய பெருங்கடல் இந்தியப் பெருங்கடல் ஆகும்.
  • இந்தியாவுக்கு அருகாமையில் இருப்பதால் இக்கடல் இப்பெயரைப் பெற்றுள்ளது.
  • இது முக்கோண வடிவமானது.
  • இப்பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவுகள், மாலத் தீவுகள், இலங்கை மொரிஷியஸ் போன்ற பல தீவுகள் உள்ளன.
  • இப்பெருங்கடலின் ஆழமான பகுதி ஜாவா அகழியாகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலப்பரப்பும், பெருங்கடல்களும் 90

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

6th Science Guide நமது சுற்றுச்சூழல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.
அ) குளம்
ஆ) ஏரி
இ) நதி
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 2.
உற்பத்தியாளர்கள் எனப்படுவை.
அ) விலங்குகள்
ஆ) பறவைகள்
இ) தாவரங்கள்
ஈ) பாம்புகள்
விடை:
இ) தாரவங்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 3.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு
அ) நெகிழி
ஆ) சமையலறைக் கழிவுகள்
இ) கண்ணாடி
ஈ) அலுமினியம்
விடை:
ஆ) சமையலறைக் கழிவுகள்

Question 4.
காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.
அ) மறு சுழற்சி
ஆ) மீண்டும் பயன்படுத்துதல்
இ) மாசுபாடு
ஈ) பயன்பாட்டைக் குறைத்தல்
விடை:
இ) மாசுபாடு

Question 5.
களைக்கொல்லிகளின் பயன்பாடு _____ மாசுபாட்டை உருவாக்கும்.
அ) நில மாசுபாடு
ஆ) நீர் மாசுபாடு
இ) இரைச்சல் மாசுபாடு
ஈ) அ மற்றும் ஆ
விடை:
ஈ) அ மற்றும் ஆ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
தாவரங்களை உண்பவை ———- நிலை நுகர்வோர்கள் ஆகும்.
விடை:
முதல்

Question 2.
சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _____ காரணிகள் ஆகும்.
விடை:
காலநிலைக்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 3.
______ என்ற நிகழ்வின் மூலம் கழிவுப் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.
விடை:
மறு சுழற்சி

Question 4.
நீர் மாசுபாடு மனிதனுக்கு _____ நோயை உருவாக்குகிறது.
Answer;
தீங்கு விளைவித்து

Question 5.
3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல் _____ மற்றும் மறுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.
விடை:
மீண்டும் பயன்படுத்துதல்

III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசிபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை;
சரி.

Question 2.
பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
சரி.

Question 3.
மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.
விடை.
தவறு – மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும் உயிரினச் சிதைவுக்கு உள்ளாகும் கழிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Question 4.
அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.
விடை:
தவறு – அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால், நீர் நில மாசுபாடு உருவாகும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 5.
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
விடை.
தவறு – திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும்.

IV. பொருத்துக .

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் 85

V. சரியான வரிசையில் எழுதி, உணவுச் சங்கிலியை உருவாக்கு.

Question 1.
முயல் → கேரட் → கழுகு → பாம்பு
விடை:
கேரட் → முயல் → பாம்பு → கழுகு

Question 2.
மனிதன் → பூச்சி → ஆல்கா → மீன்
விடை:
ஆல்கா → பூச்சி → மீன் → மனிதன்

VI. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
சூழ்நிலை மண்டலம் வரையறு.
விடை:
உயிருள்ளவையும், உயிரற்றவையும் ஒன்று சேர்ந்த ஒரு கட்டமைப்பே சூழ்நிலை மண்டலமாகும்.

Question 2.
சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?
விடை:

  1. இயற்கை சூழ்நிலை மண்டலம்
  2. செயற்கை சூழ்நிலை மண்டலம்

Question 3.
மறுசுழற்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
விடை:

  1. பழைய துணிகள் – காகிதத் தயாரிப்பில் பயன்படுத்துதல்.
  2. சில வகை நெகிழிகள் – உருக்கி நடைபாதை விரிப்புகள், நெகிழி அட்டைகள், நீர் பாய்ச்சு குழாய்கள் தயாரித்தல்.

Question 4.
மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:
மாசுபாடுகள் நான்கு முக்கிய வகைகளாக உள்ளன.

  1. காற்று மாசுபாடு
  2. நீர் மாசுபாடு
  3. நில மாசுபாடு
  4. ஒலி மாசுபாடு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 5.
நீர் வாழ் உணவுச்சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை:
நீர் வாழ் உணவுச் சங்கிலி:
நீர் வாழ் தாவரம் → நீர் வாழ்ப்பூச்சி → லார்வா → மீன்

Question 6.
மாசுபடுத்திகள் என்றால் என்ன?
விடை:

  1. மனிதனின் செயல்பாடுகளாள் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
  2. எந்தப் பொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை உருவாக்குகின்றனவோ அவை மாசுபடுத்திகள் எனப்படுகின்றன.
    (எ.கா) புகை, சாக்கடைக்கழிவுகள், களைக் கொல்லிகள்.

Question 7.
பின்வருவன உருவாக்கும் மாசுபாடுகளை எழுதுக.
அ. ஒலி பெருக்கி
ஆ. நெகிழி
விடை:
அ. ஒலி பெருக்கி – ஒலி மாசுபாடு.
ஆ. நெகிழி – நில மாசுபாடு.

VII. குறுகிய விடையளி:

Question 1.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன?
விடை:
1. பாக்டீரியா, பூஞ்சை ஆகிய நுண்ணுயிரிகள், தாவர, விலங்கின கழிவுகளை நீர், ஆக்ஸிஜன், வெப்பம், சூரிய புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றின் உதவியால் சிதைத்து மண்ணோடு மண்ணாக மட்கச் செய்கிறது. இதற்கு உயிரினச் சிதைவு என்று பெயர்.

2. இவ்வாறு நுண்ணுயிரினங்களால் சிதைவுறக்கூடிய இயற்கைக் கழிவுகளை உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்கிறோம்.
எ.கா. – காய்கறி மற்றும் பழக்கழிவுகள், உணவுக்கழிவுகள், காய்ந்த புல், இலை, தழை, கிளை போன்ற தாவர கழிவுகள், விலங்கின மனிதக் கழிவுகள், இறந்த உடல்கள் போன்ற கழிவுகள்.

Question 2.
நீர் மாசுபாட்டை நாம் எவ்வாறு குறைக்கலாம்?
விடை:

  1. மீதமுள்ள எண்ணெய், பழைய மருந்து மற்றும் மருத்துவ கழிவுகள், வேதிக் கழிவுகள் நீருடன் கலத்தலைத் தவிர்க்க வேண்டும்.
  2. வயலில் பயிர்கள் வளர்வதற்காகப் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மற்றும் உரங்களின் அளவைக் குறைக்க வேண்டும்.
  3. வீட்டின் கழிவு நீரை வீட்டுத் தோட்டம் அமைத்துப் பயன்படுத்தலாம்.
  4. குளங்கள், ஏரிகள், ஆறுகளில் குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகளைக் கலக்காமல் அவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  5. எப்பொழுதும் குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்ட வேண்டும்.
  6. தொழிற்சாலைக் கழிவுகளை நேரடியாக நீர் கலக்காமல், அவற்றை சுத்திகரிப்பு செய்து பின்னரே நீர் நிலைகளில் கொட்ட அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

Question 3.
உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:

  1. ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்களுக்கிடையே உள்ள உணவு உண்ணும் உறவு முறையும், அந்த உயிரினங்கள் எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையும் உணவுச் சங்கிலி விளக்குகிறது.
  2. சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் எவ்வாறு ஓர் உயிரினத்திடமிருந்து மற்றொரு உயிரினத்திற்கு சுழற்சியாகக் கடத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
  3. சூழ்நிலை மண்டலத்தின் மாசுபாட்டினால் உணவுச் சங்கிலியில் உள்ள ஓர் உறுப்பினரின் நச்சுப் பொருள்கள் மற்ற உயிரினங்களுக்குத் தொடர்ச்சியாக எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ள உணவுச் சங்கிலி உதவுகிறது.

VIII.விரிவான விடையளி

Question 1.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் 90

Question 2.
ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
விடை:
வரையறை:
85 dB (டெஸிபல்) அளவுக்கு அதிகமாக மனிதர்கள், தொழிற்சாலை இயந்திரங்கள், இசை, வாகனங்கள், ஒலிபெருக்கி இவற்றால் உருவாக்கப்படும் எந்த ஒலியும், ஒலி மாசுபாடு (அ) இரைச்சல் மாசுபாடு எனப்படும்.
பாதிப்புகள்:
அதிகபட்ச இரைச்சலில் அதிக நேரம் இருப்பது உளவியல் மற்றும் உடல் ரீதியான பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

  • அமைதியான தூக்கம் கெடுகிறது.
  • அமைதியாகப் படிப்பதை, வேலை செய்வதைப் பாதிக்கிறது.
  • அதிக இரைச்சல் செவிப்பறையைத் தாக்கி, கேட்கும் திறனைப் பாதிக்கிறது.
  • உயர் இரத்த அழுத்தம், உயர் மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
  • நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள், பறவைகள், வீட்டுப் பிராணிகள், நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது.
  • கப்பலில் ஏற்படும் இரைச்சலினால் ஆழ்கடல் திமிங்கலங்கள் தங்கள் பாதையிலிருந்து திசை மாறுகின்றன.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

Question 1.
உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
விடை:

  1. புல்வெளியில் காணப்படும் ஒரு உணவுச் சங்கிலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  2. தாவரங்கள் – மான் – புலி
  3. காடுகளில் மான்கள் புற்களை உணவாக எடுத்துக் கொள்கின்றன.
  4. புலிகள் மான்களை வேட்டையாடி உண்கின்றன.
  5. இயற்கையாகவோ அல்லது மனித செயல்களால் மான்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டால் அதன் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
  6. இதனால் புலிகளுக்கு தேவையான உணவுத்தட்டுப்பாடு ஏற்படுகிறது.
  7. இதனால் புலிகள் எண்ணிக்கை குறையலாம்.
  8. மேலும் உணவுக்காக மனிதனையும் தாக்க நேரிடலாம்.

Question 2.
கழிவுகளுக்கும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.
விடை:

  1. ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் டெங்கு காய்ச்சலையும், பெண் அன்பிலிஸ் வகை கொசுக்கள் மலேரியா நோயையும் பரப்புகின்றன.
  2. இவை மனிதனால் உண்டான நீர் தொட்டிகள், மேல் நிலை தொட்டிகள், குளிர்விப்பான் அடியில் உள்ள நீர்தட்டு போன்றவற்றில் பெருகுகின்றன.
  3. மேலும் தூக்கி வீசப்பட்ட தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கிண்ணங்கள், டயர்கள் போன்றவற்றிலும் மழை நீர் தேங்கி இருந்தால் இனப் பெருக்கம் செய்து அதிகளவு பெருக்கமடைகின்றன.
  4. எனவே திறந்த வெளியில் கொட்டப்பட்ட கழிவுகள் கொசுக்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவுவதாலும் தீமை விளைவிக்கும் வைரஸ், பர்கடீரியாக்களை உருவாக்குவதாலும், பரப்புவதாலும் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டக் கூடாது.
  5. இன்றைய கால கட்டத்தில் கழிவுகள் மிக அதிகமாகி ஆபத்தான டெங்கு, பன்றிக்காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற நோய்கள் அதிகம் பரவி தீங்கு விளைவிப்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

X. படத்தைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் 95

Question 1.
இப்படத்திலிருந்து நீ அறியும் நிகழ்வு எது? விளக்குக.
விடை:

  1. மேற்காட்டிய படத்தில் பல வகையான கழிவுகள் ஒன்றாக திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளது.
  2. திறந்த வெளிக் குப்பையில் தீப்பற்றி எரிகிறது.
  3. இதனால் நெகிழிப்பைகள், பைப்புகள், காலணிகள் போன்றவை எரிந்து ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய புகை மற்றும் நச்சுப் பொருள்களைச் சூழ்நிலை மண்டலத்தில் சேர்த்து அதை மாசுப்படுத்தும்.
  4. வேதிப் பொருட்கள் கலந்த இக்காற்றை உயிரினங்கள் சுவாசிக்கின்றன.
  5. குப்பைகள் எரிவதால் உருவாகும் சாம்பல் துகள்கள் நிலத்தை மாசுப்படுத்துகின்றன.
  6. மழை பெய்யும் போது சில அபாயகரமான நச்சுக்கள் நீருடன் கலந்து நிலத்திற்குள் செல்லுகின்றன. நிலத்தடி நீருடனும் கலக்கின்றன.
  7. நெகிழிப்பைகள் மழை நீரை நிலத்திற்கடியில் செல்ல விடாமல் தடுக்கின்றன.
  8. இதனால் சிறிய குட்டைகளில் உள்ள நீரில் நெகிழிக் கிண்ண ங்கள், டயர்கள் போன்றவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா நோய்களைப் பரப்புகின்றன.
  9. இவ்வாறு திறந்த வெளியில் குப்பை பல்வேறு விதங்களில் சூழ்நிலைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Question 2.
குப்பைக் குழிகளில் நிகழும் மாசுபாடுகள் யாவை?
விடை:
1 காற்றுச் சீர்கேடு
2 நில சீர்கேடு
3. நீர் சீர்கேடு

6th Science Guide நமது சுற்றுச்சூழல் Additional Important Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.
மனிதர்களுடைய தலையீடுகளின்றி உருவான சூழ்நிலை மண்டலம்
அ) இயற்கை சூழ்நிலை மண்டலம்
ஆ) செயற்கை சூழ்நிலை மண்டலம்
இ) நீர்வாழ் காட்சியகம்
ஈ) நிலவ வாழ்
விடை:
அ) இயற்கை சூழ்நிலை மண்டலம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 2.
நிலவாழ் சூழ்நிலையைக் கண்டுபிடித்து எழுதுக.
அ) ஏரி
ஆ) மலைப்பகுதிகள்
இ) பாலைனங்கள்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
ஈ) ஆ மற்றும் இ மலைப்பகுதிகள், பாலைவனங்கள்

Question 3.
மனிதர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் சூழ்நிலை மண்டலம் ______
அ) ஏரி
ஆ) ஆறுகள்
இ) செயற்கை சூழ்நிலை மண்டலம்
ஈ) இயற்கை சூழ்நிலை மண்டலம்
விடை:
இ) செயற்கை சூழ்நிலை மண்டலம்

Question 4.
அடிப்படையாக ஆற்றல் உற்பத்தியானது எவற்றில் நிகழ்கிறது?
அ) நீர் வாழ்ப்பூச்சி
ஆ) முயல்
இ) தாவரம்
ஈ) மான்
விடை:
இ) தாவரம்

Question 5.
இறந்த தாவரங்கள், விலங்குகளில் உள்ள கரிமப் பொருட்களை சிதைத்து உயிர் வாழ்பவை.
அ) நுகர்வோர்கள்
ஆ) சிதைப்பவைகள்
இ) அனைத்துண்ணிகள்
ஈ) உற்பத்தியாளர்கள்
விடை:
ஆ) சிதைப்பவைகள்

III. பின்வரும் கூற்று சரியா தவறா எனக்காண்.

Question 1.
சூரியன், காற்று, நீர், தாதுப்பொருள்கள் மற்றும் மண் போன்ற காரணிகளுக்கு உயிரற்ற காரணிகள் என்று பெயர்.
விடை:
சரி

Question 2.
மிருகக் காட்சி சாலை ஒரு இயற்கை சூழ்நிலை மண்டலம்.
விடை:
தவறு. மிருக்காட்சி சாலை ஒரு செயற்கை நில சூழ்நிலை மண்டலம்.

Question 3.
ஒரு சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறுப்பட்ட உயிரினங்களுக் கிடையேயான, பல்வேறு வகையான உணவூட்டத் தொடர்புகளைப் புரிந்து கொள்ள நமக்கு உணவு வலை உதவுகிறது.
விடை:
சரி

Question 4.
இந்தியா ஒவ்வொரு நாளும் 532 மில்லியன் கிலோ திடக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது.
விடை:
சரி

Question 5.
தொழிற்சாலையில் உருவாகும் சில நச்சு வாயுக்கள் மழை நீருடன் இணைந்து அதிக அமிலத் தன்மையுடையதாக மாற்றுகிறது.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் 96

V. சரியான வரிசையில் எழுதி உணவுச் சங்கிலியை உருவாக்கு.

Question 1.
வெட்டுக்கிளி → தவளை → புற்கள் → காகம்
விடை:
புற்கள் → வெட்டுக்கிளி → தவளை → காகம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 2.
மயில் → எலி → தானியம் → பாம்பு
விடை:
தானியம் → எலி → பாம்பு → மயில்

VI. மிகக்குறுகிய விடையளி

Question 1.
செயற்கை நில சூழ்நிலை மண்டலத்திற்கு இரு எ.கா. தருக.
விடை:

  1. நெல் வயல்
  2. தோட்டம்

Question 2.
உற்பத்தியாளர்கள் என்றால் என்ன?
விடை:
தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்து கொள்ளக் கூடிய உயிரினங்களை நாம் உற்பத்தியாளர்கள் என்கிறோம்.

Question 3.
தாவரங்கள் ஒளிச் சேர்க்கை செய்ய என்னென்ன தேவைப்படுகிறது?
விடை:

  1. பச்சையம்
  2. நீர்
  3. கார்பன்டை – ஆக்ஸைடு
  4. சூரிய ஒளி

Question 4.
இரண்டு வகையான திடக்கழிவுகளைக் கூறுக.
விடை:

  1. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள்.
  2. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள்.

Question 5.
இறந்த உயிரினங்கள் எவ்வாறு மாற்றமடைகின்றன?
விடை:

  1. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் இறந்த உயிரினங்களையும், கழிவுகளையும் சிதைத்து எளிய மூலக்கூறுகளாக மண்ணில் சேர்க்கின்றன.
  2. இவை தாவரங்கள் வளர உதவுகின்றன.

VII. விரிவான விடையளி

Question 1.
ஒலி மாசுபாட்டை எவ்வாறு குறைக்கலாம்?
விடை:

  1. மின் கருவிகள் பயன்படாத நிலையில் அணைத்து விடவும்.
  2. தொலைக்காட்சி, மின்னணுக் கருவிகளின் ஒலி அளவைக் குறைத்து வைத்துக் கேட்கலாம்.
  3. வாகனங்களின் ஒலிப்பான்களைத் தேவை ஏற்படும் போது மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும்.
  4. பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம்.
  5. பேசலாம் ஆனால் அதிக சத்தம் போட வேண்டாம்.

Question 2.
நிலத்தில் நிரப்புதல் பற்றி சிறு குறிப்பு தருக.
விடை:

  1. நிலத்தில் காணப்படும் இயற்கைக் குழிகள் அல்லது தோண்டப்பட்ட பள்ளங்களில் கழிவுகளை நிரப்பி அதற்கு மேலாக மண்ணைப் பரப்பும் முறைக்கு நிலத்தில் நிரப்புதல் என்று பெயர்.
  2. இதிலுள்ள மட்கும் கழிவுகள் சில நாட்களுக்கப் பின் மெதுவாகச் சிதைவுற்று உரமாக மாறி விடுகின்றன.
  3. இவ்வகை நிலங்கள் மீது பூங்காக்கள் தோட்டங்களை போன்றவற்றை உருவாக்கலாம்.
  4. பொதுவாக கழிவுகளின் பயன்பாட்டைக் குறைத்தல் நல்லது.
  5. கழிவுகளைப் பிரித்து வைத்து மறு சுழற்சி செய்வதாலும் சுற்றுப்புறம் சுத்தமாகும்.

VIII. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

Question 1.
விலங்குகளின் எலும்புகள் உயிரினச் சிதைவுறுபவையா?
விடை:

  1. பொதுவாக எலும்புகள் மற்ற திசுக்களை விட மெதுவாகவே சிதைக்கப்படுகிறது.
  2. மித வெப்பமான, ஈரமான சூழ்நிலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் எலும்புப் புரதம் சிதைவடைய 10 முதல் 40 ஆண்டு வரை ஆகலாம்.
  3. ஆனால் வறட்சியான சூழ்நிலையில் எலும்பு சிதைவடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்

Question 2.
எல்லா வகையான துணிகளும் உயிரினச் சிதைவுறுபவையா?
விடை:

  1. எல்லா வகை துணிகளும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகக் கூடியவை என்று கூற முடியாது.
  2. பலவகை ஆடைகள், செயற்கை பாலியெஸ்டர் போன்ற இழைகளால் உருவாக்கப்பட்டவை.
  3. அடிப்படையாக நெகிழிப் பொருள் தன்மை உடைய இந்த பாலிமர், பருத்தி, சணல், பட்டு போன்ற தாவர, விலங்குப் பொருள்களாலான இயற்கை இழைகள் போல எளிதில் சிதைவுறாது.
  4. மேலும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வேதிச்சாயங்கள் மற்றும் வேதிப்பொருட்களால் சிதைத்தல் தடைபடுகிறது.
  5. பாலியெஸ்டர் 1951 ஆம் ஆண்டு அமெரிக்கன் வேதிக் கம்பென டூ பான்ட் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் 98

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 1 காந்தவியல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 1 காந்தவியல்

6th Science Guide காந்தவியல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்
அ) மரக்கட்டை
ஆ) ஊசி
இ) அழிப்பான்
ஈ) காகிதத் துண்டு
விடை:
ஆ) ஊசி

Question 2.
மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் _____
அ) இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) சீனர்கள்
ஈ) எகிப்தியர்கள்
விடை:
இ) சீனர்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 3.
தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _____ திசையில்தான் நிற்கும்.
அ) வடக்கு – கிழக்கு
ஆ) தெற்கு – மேற்கு
இ) கிழக்கு – மேற்கு
ஈ) வடக்கு – தெற்கு
விடை:
ஈ) வடக்கு – தெற்கு

Question 4.
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்
அ) பயன்படுத்தப்படுவதால்
ஆ) பதுகாப்பாக வைத்திருப்பதால்
இ) சுத்தியால் தட்டுவதால்
ஈ) சுத்தப்படுத்துவதால்
விடை:
இ) சுத்தியால் தட்டுவதால்

Question 5.
காந்த ஊசிப்பெட்டியைப் பயன்படுத்தி _____ அறிந்து கொள்ளமுடியும்.
அ) வேகத்தை
ஆ) கடந்த தொலைவை
இ) திசையை
ஈ) இயக்கத்தை
விடை:
இ) திசையை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
செயற்கைக்காந்தங்கள் ____, ____, ______ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
விடை:
நீள்கோளம், வட்டம்,
உருளை

Question 2.
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _____ எனப்படுகின்றன.
விடை:
காந்தப்பொருள்கள்

Question 3.
காகிதம் _____ பொருளல்ல.
விடை:
காந்த தன்மை உள்ள

Question 4.
பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய _____ கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.
விடை:
காந்தக்கல்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 5.
ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் _____ துருவங்கள் இருக்கும்.
விடை:
இரு

III. சரியா? தவறா? தவறெனில் சரிசெய்து எழுதுக.

Question 1.
உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு.
விடை:
தவறு.
உருளைவடிவ காந்தத்திற்கு இரு துருவங்கள் உண்டு.

Question 2.
காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.
விடை:
சரி.

Question 3.
காந்தத்தினை இரும்புத்துகள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.
விடை:
தவறு – துருவப்பகுதிகளில் ஒட்டிக் கொள்ளும்.

Question 4.
காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.
விடை:
தவறு – காந்த ஊசியைப் பயன்படுத்தி வடக்கு – தெற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

Question 5.
இரப்பர் ஒரு காந்தப்பொருள்.
விடை:
தவறு – இரப்பர் ஒரு காந்தப் பொருள் அல்ல.

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 80

V. பொருத்தமில்லாததை வட்டமிட்டுக் காரணம் கூறுக.

Question 1.
இரும்பு ஆணி, குண்டூசி, (இரப்பர் குழாய்) , ஊசி.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 81
காரணம் : இரப்பர் குழாய் காந்தப்பொருள் அல்ல.

Question 2.
மின்தூக்கி, தானியங்கிப் படிக்கட்டு, மின்காந்த இரயில், மின்பல்பு
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 82
காரணம் : மின்பல்பில் காந்தம் பயன்படவில்லை.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 3.
கவர்தல், விலக்குதல், திசைகாட்டுதல், ஒளியூட்டுதல்
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 83
காரணம் : ஒளியூட்டுதல் காந்தத்தின் பண்பு அல்ல.

VI. பின்வரும் படங்களில் இரு சட்டக்காந்தங்கள் அருகருகே காட்டப்பட்டுள்ளன. பின்வரும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் என்ன நிகழும் எனக்கூறு. (ஈர்க்கும், விலக்கும், திரும்பி ஓட்டிக் கொள்ளும்)

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 85
விடை :
(a) ஈர்க்கும்
(b) விலக்கும்
(c) ஈர்க்கும்
(d) திரும்பி ஒட்டிக் கொள்ளும்
(e) விலக்கும்
(f) திரும்பி ஒட்டிக் கொள்ளும்

VII. நிரப்புக.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 85.1
விடை :
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 86

VIII. சிறு வினாக்கள் :

Question 1.
காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.
விடை:

  • காந்தத்தின் ஒத்த துருவங்கள் (N – N), (S – S) ஒன்றை ஒன்று விலக்கும்.
  • எதிரெதிர் துருவங்கள் (N – S), (S – N) ஒன்றை ஒன்று ஈர்க்கும்.

Question 2.
பள்ளி ஆய்வுக்கூடத்தில் உள்ள சில காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்திருப்பதாக அவற்றைப் பரிசோதிக்கும் போது தெரியவருகிறது. எந்த காரணங்களால் அவை தமது காந்தத்தன்மையை இழந்திருக்கக்கூடும். மூன்று காரணங்களைக் கூறு.
விடை:
காந்தங்கள் காந்தத் தன்மையை இழக்கக் காரணங்கள்

  1. வெப்பப்படுத்துதல்
  2. உயரத்திலிருந்து கீழே போடுதல்
  3. சுத்தியலால் தட்டுதல்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

IX. நெடுவினா :

Question 1.
உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?
விடை:

  • ஒரு சட்டகாந்தத்தை எடுத்து அதன் ஒரு முனையை இரும்பு ஊசியின் ஒரு முனை யிலிருந்து மறுமுனை வரை தேய்க்க வேண்டும்.
  • தேய்க்கும் போது திசையையோ, காந்த முனையையோ மாற்றாமல் தேய்க்க வேண்டும்.
  • 30 அல்லது 40 முறை இதே போல் தேய்க்க வேண்டும்.
  • பின் இரும்பு ஊசியின் அருகே இரும்புத்துகள்களை கொண்டு சென்றால் அது ஈர்க்கும் இவ்வாறு இரும்பு ஊசி காந்தமாக மாறும்.
  • இல்லையெனில் இதே முறையை பின்பற்றி மீண்டும் செய்ய வேண்டும்.

Question 2.
மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?
விடை:

  • மின்காந்தத் தொடர்வண்டியில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன. மின்சாரம் பாயும் போது மட்டும் இவை காந்தத் தன்மை பெறும்.
  • மின்சாரத்தின் திசைமாறும் போது துருவங்கள் மாறும்.
  • தண்டவாளத்திலும், தொடர்வண்டி அடியிலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்குவதால் வண்டி தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில் நிற்கும்.
  • தண்டவாளத்திலும், தொடர்வண்டி அடியிலுமுள்ள காந்தங்களில் காந்த ஈர்ப்பு விசையும், விலக்கு விசையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டு தொடர்வண்டி முன்னோக்கி செலுத்தப்படுகிறது.
  • மின்னோட்டத்தின் மூலம் இக்காந்தங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
  • மின்காந்தத் தொடர்வண்டியில் சக்கரமில்லை. எனவே உராய்வு இல்லை. மணிக்கு 300 கி.மீ வேகத்திற்கு மேல் எளிதாக செல்லலாம்.

X. உயர்சிந்தனை வினாக்களுக்கு பதிலளிக்கவும்.

Question 1.
உன்னிடம் துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புத்தூளும் தரப்படுகிறது. இதனைக் கொண்டு
அ. காந்தத்தின் துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்?
ஆ. காந்தத்தின் எந்தப் பகுதியில் அதிக அளவு இரும்புத் தூள்கள் ஒட்டிக் கொள்கின்றன? ஏன்?
விடை:
அ. இரும்புத்தூள்களை காகிகத்தில் எடுத்துக் கொண்டு சட்ட காந்தத்தை அதன் மேல் கிடையாக வைத்து சிறிது நேரம் இரும்புத்தூள்களை புரட்டினால் காந்தத்தின் எந்தப் பகுதிகளில் இரும்புத்துகள்கள் அதிகம் ஒட்டியுள்ளனவோ அப்பகுதி துருவங்கள் ஆகும்.
ஆ. துருவப்பகுதிகளில் அதிக அளவு இரும்புத்தூள்கள் ஒட்டிக்கொள்ளும். காரணம் துருவப்பகுதிகளில் காந்த வலிமை அதிகம்.

Question 2.
படம் – ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகியவை இரு சட்டக்காந்தங்களைக் குறிக்கின்றன. அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனில், சட்டகாந்தம் ‘ஆ’. வின் துருவங்களைக் கண்டறிந்து குறிக்கவும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 90
காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். எனவே படம் ‘ஆ’ வின் துருவங்கள் (S – N)
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 91

Question 3.
ஒரு கண்ணாடி குவளை / முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள் கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?
விடை:
கண்ணாடி முகவையில் நீருக்கு மேல் ஒரு வலிமையான காந்தத்தை வைத்தால் நீருக்குள் உள்ள குண்டூசிகள் எல்லாம் காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும்.

6th Science Guide காந்தவியல் Additional Important Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.
காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்
அ) இரும்பு
ஆ) கோபால்ட்
இ) நிக்கல்
ஈ) இரப்பர்
விடை:
ஈ) இரப்பர்

Question 2.
திசை காட்டும் கருவியை கண்டுபிடித்தவர்கள் யார்?
அ) இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்
இ) சீனர்கள்
ஈ) அமெரிக்கர்கள்
விடை:
இ) சீனர்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 3.
காந்தங்கள் காந்தத்தன்மையை இழக்கக் காரணம்
அ) வெப்பப்படுத்துதல்
ஆ) கீழே போடுதல்
இ) சுத்தியால் தட்டுதல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும் பருவம்

Question 4.
ஒரு சட்டக்காந்தத்தின் N முனையை கட்டி தொங்கவிடப்பட்ட காந்தத்தின் வடமுனைக்கு அருகில் கொண்டு சென்றால் என்ன நிகழும்?
அ) ஈர்க்கும்
ஆ) விலக்கும்
இ) சுழலும்
ஈ) ஏதும் நடக்காது
விடை:
ஆ) விலக்கும்

Question 5.
மின்சார தொடர்வண்டிகளின் அதிகபட்ச வேகம்
அ) 380 கிமீ / மணி
ஆ) 600 கிமீ / மணி
இ) 480 கிமீ / மணி
ஈ) 690 கிமீ / மணி
விடை:
ஆ) 600 கிமீ/மணி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
காந்தங்கள் திசையை அறியப் பயன்படுவதால் ____ என அழைக்கப்படுகின்றன.
விடை:
வழிகாட்டும் கற்கள்

Question 2.
காந்தத்தன்மை உடைய தாது _____
விடை:
மேக்னடைட்

Question 3.
எவர்சில்வர் கரண்டி ஒரு _____ பொருள்.
விடை:
காந்தத் தன்மை அற்ற

Question 4.
குப்பைகளில் இருந்து இரும்பை பிரித்தெடுக்க _____ காந்தங்கள் பயன்படுகின்றன.
விடை:
மின்

Question 5.
காந்தங்களில் ஈர்ப்பு விசை அதிகமுள்ள பகுதி _____ ஆகும்.
விடை:
துருவங்கள்

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 92

IV. சிறுவினாக்கள்

Question 1.
செயற்கை காந்தம் என்றால் என்ன?
விடை:
மனிதனால் தயாரிக்கப்படும் காந்தங்கள் செயற்கை காந்தங்கள் எனப்படும்.
(எ.கா.) சட்டகாந்தம், லாடகாந்தம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல்

Question 2.
செயற்கை காந்தங்களில் பல வித வடிவங்கள் யாவை?
விடை:

  • சட்டகாந்தம், லாடகாந்தம், வளையகாந்தம், காந்தஊசி ஆகியவை பொதுவாக பயன்படுத்தப்படும் செயற்கை காந்தங்கள் ஆகும்.
  • நீள்கோள வடிவம், வட்டவடிவம் மற்றும். உருளை வடிவிலும் காந்தங்கள் கிடைக்கின்றன.

Question 3.
காந்தத் தன்மை உள்ள பொருள் என்றால் என்ன? எ.கா. தருக.
விடை:
காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருட்கள் காந்தத்தன்மை உள்ள பொருட்கள் எனப்படும்.
(எ.கா.) இரும்பு, கோபால்ட், நிக்கல் போன்றவை.

Question 4.
காந்தத்தன்மை அற்ற பொருள் என்றால் என்ன? எ.கா. தருக.
விடை:
காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருட்கள் காந்தத்தன்மை அற்ற பொருட்கள் எனப்படும்.
(எ.கா.) காகிதம், நெகிழி, கண்ணாடி, இரப்பர் முதலியன.

Question 5.
காந்தத்தின் பயன்பாடுகள் யாவை?
விடை:

  • நம் நடைமுறை வாழ்வில் காந்தங்கள் அடங்கிய பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.
  • ஒலிப்பான்கள், சில மின்மோட்டார்கள், சிலவகை தாழ்ப்பாள், பைகள், காந்த திசைகாட்டிகள், பென்சில் பெட்டிகள், அலைபேசி உறைகள், குண்டூசித்தாங்கிகள், காந்தத் தூக்கிகள் ஆகியவற்றில் பயன்படுத்துகிறோம்.

V. நெடுவினாக்கள்

Question 1.
காந்தங்களை பாதுகாக்கும் முறைகளை விளக்குக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 95

  • காந்தங்களை சரியாக பராமரிக்காவிட்டால் அவை காந்தத் தன்மையை இழந்து விடுகின்றன,
  • சட்டகாந்தங்களை பாதுகாக்க, இரு சட்ட காந்தங்களின் எதிரெதிர் முனைகள் ஒன்றையொன்று பார்ப்பது போல் இணையாக வைத்து அவற்றிற்கிடையே மரக்கட்டையை வைக்க வேண்டும்.
  • இரு தேனிரும்பு துண்டுகளை காந்தங்களின் முனைகளுக்கு குறுக்கே வைத்து பாதுகாக்க வேண்டும்.
  • குதிரை லாட வடிவ காந்தத்தின் முனைகளுக்கு குறுக்கே ஒரு தேனிரும்பு துண்டை வைத்து பாதுகாக்க வேண்டும்.

Question 2.
ஒரு சட்ட காந்தத்தைக் கொண்டு எவ்வாறு திசையைக் கண்டறிவாய்?
விடை:

  • சட்டகாந்தத்தின் நடுவில் ஒரு நூலைக் கட்டி அதைத் தொங்க விட வேண்டும்.
  • காந்தம் எந்த திசையில் ஓய்வுநிலைக்கு வருகிறது என பார்க்க வேண்டும்.
    Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 96
  • சட்டகாந்தம் ஓய்வு நிலைக்கு வரும் திசைக்கு இணையாக ஒரு / கோட்டினை வரைய வேண்டும்.
  • எத்தனை முறை சுழற்றினாலும் தொங்கவிடப்பட்ட காந்தம் எப்போதும் வடக்கு தெற்கு திசையிலே ஓய்வுக்கு வரும்.
  • வடக்கே நோக்கும் முனை காந்தத்தின் வடதுருவம் ஆகும். தெற்கே நோக்கும் முனை காந்தத்தின் தென்துருவம் ஆகும்.

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
ஓர் இரும்பு ஆணியின் மீது காந்தத்தை தேய்ப்பதால் அது காந்தத்தன்மையைப் பெறுகிறது. ஆனால் அதே போல் ரப்பர் துண்டின் மீது காந்தத்தை தேய்த்தால் இரப்பர் காந்தமாவதில்லை ஏன்?
விடை:
இரப்பர் காந்தத் தன்மை அற்ற பொருள்.

Question 2.
டிவி, கணினி போன்ற மின்சாதனங்களுக்கு அருகில் காந்தங்களைக் கொண்டு சென்றால் என்ன நிகழும்?
விடை:

  • மின்சாதனங்கள் பாதிக்கப்படும்.
  • காந்தம் காந்தத் தன்மையை இழக்கும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 1 காந்தவியல் 99

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 2 நீர் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 2 நீர்

6th Science Guide நீர் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Question 1.
உலகில் உள்ள மொத்த நீரில் 97% ____ ஆகும்.
அ) நன்னீ ர்
ஆ) தூயநீர்
இ) உப்புநீர்
ஈ) மாசடைந்த நீர்
விடை:
இ) உப்புநீர்

Question 2.
பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?
அ) ஆவியாதல்
ஆ) ஆவி சுருங்குதல்
இ) மழை பொழிதல்
ஈ) காய்ச்சி வடித்தல்
விடை:
ஈ) காய்ச்சி வடித்தல்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 3.
பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
i) நீராவிப்போக்கு
ii) மழைபொழிதல்
iii) ஆவி சுருங்குதல்
iv) ஆவியாதல்
அ) ii) மற்றும் iii)
ஆ) ii) மற்றும் iv)
இ) i) மற்றும் iv)
ஈ) i) மற்றும் ii)
விடை:
இ) i) மற்றும் iv)

Question 4.
நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?
அ) பனி ஆறுகள்
ஆ) நிலத்தடிநீர்
இ) மற்ற நீர் ஆதாரங்கள்
ஈ) மேற்பரப்பு நீர்
விடை:
ஆ) நிலத்தடிநீர்

Question 5.
வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில்
அ) வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.
ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்
இ) வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.
ஈ) அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
விடை:
ஆ) அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ______ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.
விடை:
3%

Question 2.
நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ____ என்று பெயர்.
விடை:
ஆவியாதல்

Question 3.
நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _____ கட்டப்படுகிறது.
விடை:
அணை

Question 4.
ஆறுகளில் பாயும் நீரின் அளவு ____ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்
விடை:
மழை

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 5.
நீர் சுழற்சியினை _____ என்றும் அழைக்கலாம்.
விடை:
ஹைட்ராலிஜிக்கல்
சுழற்சி

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை.
விடை:
தவறு – ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படும் நீர் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக உள்ளன.

Question 2.
நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.
விடை:
தவறு – கடல் நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் முகத்துவாரம் எனப்படும்.

Question 3.
சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்.
விடை:
தவறு – அனைத்து வெப்ப மூலங்களாலும் ஆவியாதல் நிகழும்.

Question 4.
குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.
விடை:
சரி – உறைதலால் புற்களின் மீது பனி உருவாகும்.

Question 5.
கடல்நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்.
விடை:
தவறு – கடல்நீரை நேரடியாகப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 80

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.
  2. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.
  3. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.
  4. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது..
  5. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.
  6. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிறது.
  7. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.
  8. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த் திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாக்கும்.

விடை:

  1. சூரியனின் வெப்பமானது புவி மீதும், பெருங்கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகளின் மீதும் செயல்பட்டு நீராவியாகிறது.
  2. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நீராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்கிறது.
  3. தூசுப் பொருட்களுடன் இணைந்து மிதக்கும் இந்த நீர்த்திவலைகள் இணைந்து மேகங்களாக உருவாகும்.
  4. மேகங்களைச் சுமந்த வெப்பக் காற்று மேலே போகிற
  5. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காற்று குளிர்வாக இருக்கும்.
  6. இந்த ஆவியானது குளிர்வடைந்து சிறு நீர்த்துளிகளாக ஆகிறது.
  7. நீர்த் துளிகள் ஒன்றாக இணைந்து பெரிய நீர்த்துளிகள் ஆகிறது.
  8. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

VI. ஒப்புமை தருக.

Question 1.
மக்கள் தொகைப் பெருக்கம் : நீர் பற்றாக்குறை :: மறு சுழற்சி : _____
விடை:
நீர் மேலாண்மை

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 2.
நிலத்தடிநீர் : ____ : மேற்பரப்பு நீர் : ஏரிகள்
விடை:
கிணறு

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.
விடை:
கடல், ஆறு, ஏரி, குளம், கிணறு, பனிப்பாறை, பனியாறு

Question 2.
நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது?
விடை:
கிணறுகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள், குளங்கள், ஆறுகள், நீர்த்தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள் போன்றவைகளிலிருந்து நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் நீரை பெறுகின்றனர்.

Question 3.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?
விடை:
குளிர்சாதனப் பெட்டியில் குளிரூட்டப்பட்ட முகவை நீரானது அதனைச் சுற்றியுள்ள காற்றை குளிரச் செய்கிறது. அதன்மூலம் காற்றிலுள்ள நீராவி சுருங்கி குவளையின் வெளிப்பகுதியில் நீர்த்திவளைகளை உருவாக்கும். எனவே பாட்டிலைச் சுற்றி குளம் போல் அந்த நீர் தேங்கியிருக்கும்.

Question 4.
அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை. ஏன்?
விடை:

  • மழை பொழிவு நிகழ குளிர்ச்சியான காற்று தேவை.
  • மேகங்களை சுற்றியுள்ள காற்று குளர்ச்சியடையும் போது மட்டுமே மழை பொழிவு நிகழும்.

Question 5.
நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?
விடை:
துருவங்களிலுள்ள பனிப்படிவுகள், பனியாறுகள், பனிப் பாறைகளில் நீர் பனிக்கட்டியாகக் காணப்படுகின்றன.

Question 6.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதியில் உள்ள நீர்வாழ் விலங்குகள் எவ்வாறு உயிர் வாழ்கின்றன?
விடை:

  • ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளில் நீரின் மேற்பரப்பு திண்மநிலையில் பனிப்படலங்களாக உள்ளன.
  • இந்த மிதக்கும் பனிப்படலங்கள் ஒரு பாதுகாப்பு படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம் வெளியேறுவதை தடுக்கிறது.
  • இது நீர்வாழ் உயிர்களுக்கு சாதகமாக அமைந்து அவை உயிர்வாழ உதவுகின்றது.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 7.
மழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை?
விடை:

  1. மழைநீர் எங்கு பொழிகிறதோ அவ்விடத்திலேயே சேகரித்தல்.
  2. ஓடும் மழை நீரினை சேகரித்தல்.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 85

Question 2.
“நீர் சேமிப்பு ” என்ற தலைப்பில் சில வாசகங்களை உமது நடையில் எழுதவும்.
விடை:
”நீரின்றி அமையாது உலகு”
“மரம் நடுவோம் ! மழை பெறுவோம்!!”
“மழைநீர் சேமிக்க ஊக்கம் பெறு”
“மழைநீரில் உயிர் ஓட்டம் உண்டு”
”மனிதா நீ வாழ உயிர்நீர் ஒன்று”

Question 3.
புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீ ர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.
விடை:

  • புவிப்பரப்பில் 71% தண்ணீ ர் இருந்தாலும் நன்னீரின் அளவு 3% மட்டுமே.
  • உயிரினங்கள் நன்னீரை மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • நன்னீரை பயன்படுத்தும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
  • எனவே நீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமே.

Question 4.
கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்தாமல் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிற்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.
விடை:

  • கழிவுநீரை சமன்படுத்தாமல் ஆறுகளிலோ, கடலிலோ வெளி யேற்றக்கூடாது.
  • ஏனெனில் அவை ஆறு, கடல் ஆகிய நீர் ஆதாரங்களை மாசு படுத்தும்.
  • எனவே அதில் உயிரினங்கள் வாழ முடியாது. மேலும் அந்நீரை பயன்படுத்த முடியாது.

Question 5.
இந்தியாவில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களை தெளிவுப்படுத்தவும்.
விடை:

  1. மக்கள் தொகை பெருக்கம்
  2. சீரான மழை பொழிவின்மை
  3. நிலத்தடி நீர்மட்டம் குறைதல்
  4. நீர் மாசுபடுதல்
  5. நீரை கவனக்குறைவாக கையாளுதல்

IX. விரிவான விடையளி

Question 1.
குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும்.
விடை:
குடிநீர் என்பது குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் தேவைப்படும் சுத்தமான பாதுகாப்பான நீராகும்.
பண்புகள் :

  • அமில, காரப்பண்பு pH மதிப்பு சரியாக இருக்க வேண்டும்.
  • பாக்டீரியா முதலிய தொற்று இருக்கக்கூடாது.
  • குடிநீர் சுத்தமானதாக, ஒளி ஊடுருவக்கூடியதாகவும், நிறமற்றதாகவும் இருக்க வேண்டும்.
  • குடிநீரில் இயற்கையான கனிமங்கள், மினரல்ஸ் இருக்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 2.
இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.
விடை:

  • இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திர சிங் ஆவார்.
  • இவர் மழைநீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் 350 கிராமங்களில் 4500 தடுப்பணைகளையும், தண்ணீர் சேமிப்பு குளங்களையும் கட்டினார்.
  • நீர்வளத்தை இழந்து மடிந்து கொண்டிருந்த ஆறுகள் இவர் முயற்சியால் புத்துயிர் பெற்றன.
  • இவர் பெற்ற விருதுகள்
  • ராமன் மகசேசே விருது
  • ஜம்னலால் பஜாஜ் விருது
  • தண்ணீருக்கான நோபல் பரிசான ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது முதலியன.
  • இவர் இந்தியாவின் “ஜல் புருஷ்’ (தண்ணீ ர் மனிதர்) என்று அழைக்கப்படுகிறார்.

Question 3.
மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.
விடை:

  • மழைநீரை நேரடியாக சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல் மழைநீர் சேகரிப்பு எனப்படும்.
    வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகள்

    1. மழை பொழிகிற இடத்தில் சேகரித்தல் :
      (எ.கா.) கட்டிடங்களின் மேல்தளத்திலிருந்து வரும் மழைநீரை சேகரித்தல்.
    2. ஓடும் மழை நீரை சேகரித்தல் :
      (எ. கா.) மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்தல்.

X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

Question 1.
ஒரு நிலப்பகுதியில் ஏரியோ, குளமோ காணப்படவில்லை. அப்பகுதியில் மேகங்கள் உருவாதல் நிகழுமா?
விடை:
மேகங்கள் உருவாகும். ஏனெனில் மரங்கள் இருந்தால் கூட நீராவிப்போக்கு மூலம் நீராவி மேலே சென்று மேகமாக மாறும்.

Question 2.
புவியில் 3% மட்டுமே நன்னீர் உள்ளது. அதனை அதிகப்படுத்த முடியாது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் நன்னீரினை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளலாம்?
விடை:

  • நீரினை கவனமாகவும், குறைந்த அளவும் பயன்படுத்த வேண்டும்.
  • நீர் நிலைகளில் கழிவு நீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டும்.
  • மழைநீரை சேமித்து நிலத்தடிநீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும்.

XI. குறுக்கெழுத்து.

மேலிருந்து கீழ் :

Question 1.
நீரைச் சேமிக்கும் ஒரு முறை.
விடை:
மறுசுழற்சி

Question 2.
கடல்நீரில் இருந்து நீரைப் பெறும் முறை
விடை:
ஆவியாதல்

Question 6.
அணைகளில் தேங்கியுள்ள நீர் _____ தயாரிக்கப் பயன்படுகிறது.
விடை:
மின்சாரம்
இடமிருந்து வலம் :

Question 3.
இயற்கையில் கிடைக்கும் மிகப்பெரிய அளவிலான உவர்ப்பு நீர் _____ ஆகும்.
விடை:
கடல்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 4.
வெயில் காலங்களில் உடலிலிருந்து அதிகளவில் நீர் ____ ஆக வெளியேறும்.
விடை:
வியர்வை

Question 5.
தாவரங்களில் _____ நடைபெற்று, நீர் சுழற்சியில் பங்குபெறுகிறது.
விடை:
நீராவிபோக்கு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 90
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 91

XII.
1) வரைபடத்தினை உற்றுநோக்கி பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ) மீனில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ?
ஆ) எந்த உணவுப்பொருள் தன்னகத்தே அதிகளவு நீரினைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடவும்.
இ) எந்த உணவுப் பொருள் தன்னகத்தே குறைந்த அளவு நீரினைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடவும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 92
ஈ) மனித உடலில் சதவீத அளவு நீர் உள்ளது.
உ) நீர்ப்போக்கு ஏற்பட்ட காலங்களில் ஒருவர் வரைபடத்தில் காணப்படும் எந்த உணவுப் பொருளை எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடவும்.
விடை:
அ. 70 %
ஆ. தர்பூசணி
இ. மீன்
ஈ. 60 %
உ. தர்பூசணி

Question 2.
பின்வரும் தமிழ்நாடு வரைபடத்தில் ஆண்டு சராசரி மழைபொழிவு குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை உற்றுநோக்கி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ) தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் ஆண்டு மழைபொழிவு குறைவான அளவு உள்ளது எனக் கண்டறிந்து எழுதவும்?
ஆ) தமிழ்நாட்டின் எந்த மாவட்டங்களில் ஆண்டு மழைபொழிவு மிதமான அளவு உள்ளது எனக் கண்டறிந்து எழுதவும்.
இ) தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களில் அதிகளவு ஆண்டு மழைபொழிவினைப் பெறும் மாவட்டங்கள் எவை?
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 95
விடை:
அ. தமிழ்நாட்டின் ஆண்டு மழைப்பொழிவு குறைவான மண்டலம் கொங்கு மண்டலம் – குறைந்த கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி மிதமான குறைந்த
ஆ. தமிழ்நாட்டில் மிதமான அளவு ஆண்டு மழைப்பொழிவு பெறும் மாவட்டங்கள் – மதுரை, திண்டுக்கல், விருதுநகர், அதிகம் சிவகங்கை , சேலம், தேனி, வேலூர்
இ. தமிழ்நாட்டில் அதிகளவு ஆண்டு மழைப்பொழிவினைப் பெறும் மாவட்டங்கள் மழைப்பொழிவு விவரம் – கன்னியாகுமரி, கடலூர், திருவாரூர், நாகை,

6th Science Guide நீர் Additional Important Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :

Question 1.
புவியில் காணப்படும் நீரின் அளவினை 100% எனக் கொண்டால் நமக்கு கிடைக்கும் நன்னீரின் அளவு.
அ) 97%
ஆ) 93%
இ) 3%
ஈ) 0.3%
விடை:
இ) 3%

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 2.
வளிமண்டல அழுத்தத்தில் நீர் பனிக்கட்டியாகும் உறைநிலை வெப்பநிலை ____
அ) 100° C
ஆ) 0°C
இ) 0.10° C
ஈ) 10° C
விடை:
ஆ) 0° C

Question 3.
கீழ்க்கண்டவற்றுள் எது நிலத்தடி நீர் ஆதாரம் அல்ல?
அ) அடிகுழாய்
ஆ) நீருற்று
இ) சதுப்பு நில நீர்
ஈ) கிணறு
விடை:
இ) சதுப்பு நில நீர்

Question 4.
நாள் ஒன்றிற்கு மனிதன் குடிக்க வேண்டிய குடிநீரின் அளவு லிட்டர்
அ) 2 – 3 லி
ஆ) 3 – 4 லி
இ) 4 – 5 லி
ஈ) 1 – 2 லி
விடை:
அ) 2 – 3 லி

Question 5.
நீர்நிலைகள் கடலை சந்திக்கும் இடம் _____
அ) சதுப்பு நிலம்
ஆ) முகத்துவாரம்
இ) ஏரி
ஈ) பனிப்பாறைகள்
விடை:
ஆ) முகத்துவாரம்

II. சரியா ? தவறா ? எனக் கூறுக.

Question 1.
மொத்த மேற்பரப்பு நன்னீரில் அதிகம் காணப்படுவது ஏரிகள்.
விடை:
சரி

Question 2.
கடல்நீரில் உப்பு அதிகமாக இருக்கக் காரணம் எரிமலைகள் கடலுக்கடியில் கடல்நீருடன் உப்பை சேர்ப்பது.
விடை:
சரி

Question 3.
நீர் ஒளிபுகும் தன்மை அற்ற வேதிப்பொருள்.
விடை:
தவறு

Question 4.
ஆறு, ஏரிகளில் நீராவிப்போக்கு நடைபெறுகிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

Question 5.
குடிநீரில் தொற்று நீக்க நைட்ரஜன் பயன்படுகிறது.
விடை:
தவறு

III. பொருத்துக.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 96

IV. ஒப்புமை தருக.

Question 1.
மழைப்பொழிவின்மை : நீர் பற்றாக்குறை :: காடுகளை பாதுகாத்தல் : ____
விடை:
நீர் மேலாண்மை

Question 2.
உறைந்த நீர் : பனியாறு :: மேற்பரப்பு நீர் : _____
விடை:
ஆறு

Question 3.
ஆவியாதல் : கடல் :: ____ : தாவரங்கள்
விடை:
நீராவிப்போக்கு

Question 4.
நீர் வடிகட்டுதல் : மணல் :: _____ : அம்மோனியா
விடை:
தொற்று நீக்குதல்

Question 5.
திண்மநிலை : ____ :: வாயுநிலை : நீராவி
விடை:
பனிக்கட்டி

V. மிகக்குறுகிய விடையளி

Question 1.
நீரின் இயைபு யாது?
விடை:
நீர் என்பது ஒளிபுகும் தன்மை கொண்ட சுவையற்ற, மணமற்ற மற்றும் நிறமற்ற ஒரு வேதிப்பொருளாகும்.

Question 2.
நீர் மூலக்கூறு எவ்வாறு உருவாகிறது? நீரின் மூலக்கூறு வாய்பாடு என்ன?
விடை:
இரு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் இணைந்து நீர் மூலக்கூறு உருவாகிறது.
நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு H2O

Question 3.
உப்புநீர் என்றால் என்ன?
விடை:
அதிக அளவு கரைபொருள் கலந்துள்ள நீர் உப்பு நீர் எனப்படும். இந்த நீரை நாம் பயன்படுத்தவோ அல்லது பருகவோ இயலாது.

Question 4.
நீர் சுழற்சியின் மூன்று நிலைகள் யாவை?
விடை:
ஆவியாதல், சுருங்குதல் மற்றும் மழை பொழிதல்

Question 5.
நீராவிப்போக்கு என்றால் என்ன?
விடை:
தாவரங்களின் இலைத்துளைகளின் வழியாக நீரானது ஆவியாக வெளியேறுவது நீராவிப்போக்கு எனப்படும்.

VI. விரிவான விடையளி

Question 1.
நீர் சுழற்சி என்றால் என்ன? அதன் நிலைகளை விவரி.
விடை:

  • சூரிய வெப்பத்தினால் நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்கு சென்று மேகமாக மாறுகிறது.
  • மேகங்களில் உள்ள நீர் குளிர்ந்து புவிக்கு மீண்டும் மழை அல்லது பனி வடிவில் தூய்மையாக வருகிறது.
  • இதுவே நீர் சுழற்சி எனப்படும். இது ஹைட்ராலீஜிக்கல் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. –
    1. ஆவியாதல் :
      கடல், குளம், ஆறுகளில் காணப்படும் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகின்றது.
    2. ஆவி சுருங்குதல் :
      நீராவி காற்றில் மேலே செல்ல செல்ல குளிர்ச்சியடைந்து நுண்ணிய நீர்த்திவலைகளாக மாறி மேகங்களை உருவாக்குகின்றன.
    3. மழை பொழிதல் :
      நுண்ணிய நீர்த்திவலைகள் மோதி பெரிய நீர்த்திவலையாக மாறுகிறது. மேகங்களை சுற்றியுள்ள காற்று குளிர்ச்சியடையும் போது மழை (அ) பனியாக புவியை வந்தடைகிறது.

Question 2.
நீரைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை விளக்குக.
விடை:
1. நீர் மேலாண்மை :
நீர் மேலாண்மை பின்வரும் காரணிகளைக் கொண்டுள்ளது.

  1. மக்களிடையே கழிவு நீரை நீர்நிலைகளில் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி வழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  2. நீரை மறுசுழற்சி செய்தல்
  3. உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைத்து நீர் மாசுபாட்டை குறைத்தல்
  4. நவீன நீர்ப்பாசன முறைகளான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன முறைகளை பயன்படுத்தி நீரை சிக்கனமாக பயன்படுத்துதல்

2. மழைநீர் சேமிப்பு :
மழைநீரை நேரடியாக சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல் மழைநீர் சேமிப்பு எனப்படும்.

  1. மழை பொழியுமிடத்தில் சேகரித்தல் : கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து வரும் மழை நீரை சேகரித்தல்
  2. ஓடும் மழைநீரை சேகரித்தல் :
    மழைநீர் அதிகம் பாய்ந்து வரும் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து சேகரித்தல்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 2 நீர் 98

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

6th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
சோப்புகளின் முதன்மை மூலம் _____ ஆகும்.
அ) புரதங்கள்
ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
இ) மண்
ஈ) நுரை உருவாக்கி
விடை:
ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

Question 2.
வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு கரைசல் பயன்படுகிறது.
அ) பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு
ஆ) சோடியும் ஹைட்ராக்ஸைடு
இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
ஈ) சோடியம் குளோரைடு
விடை:
ஆ) சோடியம் ஹைட்ராக்ஸைடு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _____ ஆகும்.
அ) விரைவாக கெட்டித்தன்மையடைய
ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
இ) கடினமாக்க
ஈ) கலவையை உருவாக்க
விடை:
ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்தி

Question 4.
பீனால் என்பது ______
அ) கார்பாலிக் அமிலம்
ஆ) அசிட்டிக் அமிலம்
இ) பென்சோயிக் அமிலம்
ஈ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
விடை:
அ) கார்பாலிக் அமிலம்

Question 5.
இயற்கை ஒட்டும் பொருள் ______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.
அ) புரதங்க ளில்
ஆ) கொழுப்புகளில்
இ) ஸ்டார்ச்சில்
ஈ) வைட்டமின்களில்
விடை:
இ) ஸ்டார்ச்சில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வெங்காயம் நறுக்கும் போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமான வாயு ______ ஆகும்.
விடை:
ஆக்சைடு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் ______ தேவைப்படுகின்றது.
விடை:
NaOH

Question 3.
உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது ______ ஆகும்
விடை:
மண்புழு

Question 4.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _____ உரங்கள் ஆகும்.
விடை:
இயற்கை

Question 5.
இயற்கை பசைக்கு உதாரணம் _____ ஆகும்.
விடை:
ஸ்டார்ச்

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.
விடை
தவறு
குறைந்த அடர்வுடைய பீனால் கிருமி நாசினியாக பயன்படுகின்றது.

Question 2.
ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றன.
விடை:
தவறு எப்சம் மருத்துவத்துறையில் அதிகளவு பயன்படுகின்றது.

Question 3.
ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 4.
ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று பிரிக்க பயன்படுகின்றது.
விடை:
தவறு – ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று ஒட்டுவதற்கு பயன்படுகின்றது.

Question 5.
NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 80

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
  2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
  3. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  4. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.
  5. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.
  6. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.

விடை:

  1. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
  2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
  3. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.
  4. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  5. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
  6. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.

VI. ஒப்புமை தருக.

Question 1.
யூரியா : கனிம உரம் :: மண்புழு உரம் : _____
விடை:
இயற்கை உரம்

Question 2.
______ : இயற்கை ஓட்டும் பொருள் :: செயற்கை ஒட்டும் பொருள் : செலோடேப்
விடை:
ஸ்டார்ச்

VII. மிகக் குறுகிய விடையளி :

Question 1.
சோப்பில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?
விடை:

  • நீர்
  • சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH)
  • தேங்காய் எண்ணெய் (தாவர எண்ணெய் (அல்லது) விலங்கு கொழுப்பு)

Question 2.
சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?
விடை:

  1. நீர் விரும்பும் மூலக்கூறுகள்
  2. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள்

Question 3.
கனிம உரங்களுக்கு உதாரணம் தருக.
விடை:

  • யூரியா
  • சூப்பர் பாஸ்பேட்
  • அம்மோனியம் சல்பேட்
  • பொட்டாசியம் நைட்ரேட்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 4.
பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.
விடை:

  1. வீரியம் குறைந்த அமிலம்
  2. எளிதில் ஆவியாகும் தன்மையுடையது.
  3. வெண்ணிற படிகத் திண்மம்.

Question 5.
பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.
விடை:

  • கரும்பலகையில் எழுதும் பொருள் தயாரிக்க பயன்படுகிறது.
  • அறுவைச் சிகிச்சையில் எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது.
  • சிலைகள் வார்ப்பதற்கு பயன்படுகிறது.
  • கட்டுமானத்துறையில் பயன்படுகிறது.

Question 6.
சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?
விடை:

  • சுண்ணாம்புக்கல்
  • களிமண் – ஜிப்சம்

Question 7.
சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?
விடை:
ஜிப்சமானது சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குகின்றது. இதனால் சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுகின்றது.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
மண்புழு ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகின்றது?
விடை:

மண்புழுக்கள் உயிரி கழிவுகள் அனைத்தையும் உணவாக உண்டு, செரித்து வெளியேற்றுகிறது.

  • இத்தகைய மண், செழிப்பான தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • மண்புழு விவசாயத்திற்குப் பல்வேறு வகைகளில் உதவுவதால் “உழவனின் நண்பன்” என்று மண்புழுவை அழைக்கின்றோம்.

Question 2.
சிமெண்ட் தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.
விடை:
இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண், ஜிப்சம் ஆகிய தாது உப்புகளைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

Question 3.
ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.
விடை:

  • உரமாகப் பயன்படுகிறது.
  • சிமெண்ட் மற்றும் பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படுகிறது.

IX. விரிவான விடையளி:

Question 1.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) மற்றும் அதன் பயன் பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
விடை:
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) :

  • இரும்புக் கம்பிகள் மற்றும் எஃகு வலைகளைத் கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) ஆகும்.
  • இது வலுவானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும்.
    பயன்க ள் :
  • அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல்தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது.
  • குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவு நீர் வடிகால்கள் அமைக்கப் பயன்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது ?
விடை:
தேவையான பொருட்கள்:

  • 35 மிலி நீர்
  • 10 மிலி NaOH
  • 60 மிலி தேங்காய் எண்ணெய்

செய்முறை :

  • சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
  • கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பவும்.
  • அதனுடன் 10 மிலி NaOHயைச் சேர்த்து குளிர வைக்கவும்.
  • பின் அதனுடன் 60 மிலி தேங்காய் எண்ணெயை சிறிது, சிறிதாக சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  • பின் இதனை சிறிய காலித் தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

X. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி.

Question 1.
ரவி ஒரு விவசாயி. அவருடைய பண்ணையில் அதிக கால்நடைகளை அவர் வளர்க்கின்றார். இதனால் அதிகளவில் உயிரிக்கழிவுகள் கிடைக்கின்றன. இக்கழிவுகளை மண்புழு உரமாக மாற்றுவதற்கு தகுந்த ஆலோசனையை ரவிக்கு வழங்கவும். மண்புழு உரத்தின் நன்மைகளைப் பற்றி எடுத்துக் கூறவும்.
விடை:

  • 30 செ.மீ ஆழத்தில் குழி ஒன்றைத் தோண்டவும் அல்லது மரப்பெட்டி ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
  • குழியின் அல்லது பெட்டியின் அடிப்பகுதியில் மெல்லிய வலை ஒன்றை விரித்து 1-2 செ.மீ உயரத்திற்கு மண்ணால் நிரப்பவும்.
  • அதன்மீது தாவரக் கழிவுகளை (உலர்ந்த இலை, பூ) மற்றும் பிற சிதைவுறும் கழிவுகளைப் பரப்பிச் சிறிது நீரை தெளிக்கவும்.
  • சில மண்புழுக்களைக் குழியில் உள்ள பொருள்களோடு சேர்த்து பழைய துணி அல்லது ஓலையால் மூடவும்.
  • நான்கு வாரங்களுக்குப் பிறகு ‘மண்புழு உரம்’ உருவாகி யிருப்பதைக் காணலாம்.
  • உருவாக்கப்பட்ட மண்புழு உரத்தைத் தாவரங்களுக்குப் பயன்படுத்தி மண்வளம் காக்க வழி செய்யலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 100

மண்புழு உரத்தின் நன்மைகள் :

  • மண்புழு உரம் வேளாண்மைக்குப் பயன்படும் மிகச்சிறந்த இயற்கை கரிம உரமாகும்.
  • மண்புழு உரமானது தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெரும் அளவில் கொண்டுள்ளது.
  • மண்ணின் இயல்புத்தன்மை, காற்றோட்டம், நீரைத்தேக்கி வைக்கும் பண்பு ஆகியவற்றை மேம்படுத்தி மண் அரிப்பைத் தடுக்கிறது.
  • அதிக ஊட்டச்சத்து கொண்ட சூழல் நட்புமுறை சீர்த்திருத்தத்தை மண்ணுக்கு அளிக்கும் பொருளாக மண்புழு உரம் உள்ளது. மாடித்தோட்டம் அமைப்பதற்கும் உதவுகிறது.
  • விதை முளைத்தலைத் தூண்டி தாவர வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.
  • மண்புழு உரங்களை எளிமையாகத் தயாரித்துப் பயன்படுத்த முடியும்.

XI. செயல்திட்டம் (மாணவர்களுக்கானது).

  • ஒரு கண்ணாடி முகவையில் 100மி.லி சூடான நீரை எடுத்துக்கொள்.
  • 50 கிராம் மைதா மாவினை எடுத்து வெந்நீரில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • உருவாகும் பசை போன்ற பொருளை எடுத்து தொட்டுப்பார் ஒட்டுகிறதா? கிழிந்த உனது புத்தகத்தை பசையை பயன்படுத்தி ஒட்டவும்.
  • சிறிதளவு மயில்துத்தம் (தாமிர சல்பேட்) சேர்க்கும் போது பசைகெடாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

6th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
அதிகளவு கறைகளையுடைய துணிகளை வெளுப்பதற்கு _____ பயன்படுத்துகிறோம்.
அ) சலவை சோப்பு
ஆ) குளியல் சோப்பு
இ) சலவைத் தூள்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ) சலவைத் தூள்

Question 2.
யூரியாவிலுள்ள நைட்ரஜனின் சதவீத அளவு
அ) 23%
ஆ) 13%
இ) 21%
ஈ) 46%
விடை:
ஈ) 46%

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
50 கி.கி. சூப்பர் பாஸ்பேட் உரமிட்டால், எவ்வளவு பாஸ்பரஸ் மண்ணில் சேர்க்கப்படும்.
அ) 4 – 4.5 கி.கி
ஆ) 8 – 9 கி.கி
இ) 12 – 13 கி.கி
ஈ) 16 – 18 கி.கி
விடை:
அ) 4 – 4.5 கி.கி.

Question 4.
சிமெண்டை கண்டுபிடித்தவர் ____ ஆவார்.
அ) எடிசன்
ஆ) ஜோசப் ஆஸ்பிடின்
இ) இராபட் ஹீக்
ஈ) இராபட் ப்ரௌன்
விடை:
ஆ) ஜோசப் ஆஸ்பிடின்

Question 5.
பாரிஸ் சாந்தின் மூலக்கூறு வாய்ப்பாடு
அ) CaSO4. 1/2H2O
ஆ) CaSO4. H2O
இ) CaSO4.2H2O
ஈ) CaSO4.3H2O
விடை:
அ) CaSO4. 1/2H2O

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
______ ஓர் இயற்கை நிறங்காட்டி
விடை:
மஞ்சள்

Question 2.
______ மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பொருளை நோக்கி செல்கின்றன.
விடை:
நீர் வெறுக்கும் மூலக்கூறுகள்

Question 3.
உரங்கள் _____ வளர்ச்சிக்கு உதவுகின்றன.
விடை:
தாவர

Question 4.
எலும்பு முறிவினைச் சரிசெய்யப் ____ பயன்படுகிறது.
விடை:
பாரிஸ் சாந்து

Question 5.
எப்சம் _____ எனும் உப்பாகும்
விடை:
மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட்

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 82

IV. ஒப்புமை தருக.

Question 1.
கரும்பலகை எழுதும் பொருள் : ______ :: தாவரங்களின் வளர்ச்சி : எப்சம்
விடை:
பாரிஸ் சாந்து

Question 2.
______ : கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட் :: பாரிஸ் சந்து : கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்
விடை:
ஜிப்சம்

Question 3.
_____ : காரை :: பாலங்கள் கட்டுவது : கற்காரை
விடை:
வீட்டு சுவர்கள் கட்டுவது

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. ஒன்று நீர் விரும்பும் பகுதி; மற்றொன்று நீர் வெறுக்கும் பகுதி.
  2. துணி துவைக்கும் போது ஏராளமான மூலக்கூறுகள் அழுக்குப் பகுதியை சுற்றி வட்டமிட்டு அழுக்கை நீக்குகின்றன.
  3. இறுதியில் அழுக்கு மூலக்கூறுகள் நீரில் மிதந்து அடித்துச் செல்லப்படுகிறது.
  4. துணி வெளுக்கப்படுகிறது.
  5. சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு முனைகள் உண்டு.
  6. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கியும், நீர் விரும்பி மூலக்கூறுகள் நீரை நோக்கியும் செல்கின்றன.

விடை:

  1. சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு முனைகள் உண்டு.
  2. ஒன்று நீர் விரும்பும் பகுதி; மற்றொன்று நீர் வெறுக்கும் பகுதி.
  3. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கியும், நீர் விரும்பி மூலக்கூறுகள் நீரை நோக்கியும் செல்கின்றன.
  4. துணி துவைக்கும் போது ஏராளமான மூலக்கூறுகள் அழுக்குப் பகுதியை சுற்றி வட்டமிட்டு அழுக்கை நீக்குகின்றன.
  5. இறுதியில் அழுக்கு மூலக்கூறுகள் நீரில் மிதந்து அடித்துச் செல்லப்படுகிறது.
  6. துணி வெளுக்கப்படுகிறது.

VI. மிகக்குறுகிய விடையளி

Question 1.
முதன்மை ஊட்டச்சத்துக்கள் யாவை ?
விடை:
முதன்மை ஊட்டச்சத்துக்கள் என்பது NPK

  1. நைட்ரஜன் (N)
  2. பாஸ்பரஸ் (P)
  3. பொட்டாசியம் (K)

Question 2.
உரங்கள் என்றால் என்ன ?
விடை:
பயிர்களுக்குத் தேவையான ஒன்று (அ) அதற்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கு மண்ணில் சேர்க்கப்படும் கரிம மற்றும் கனிமப் பொருள்களை உரங்கள் என்கிறோம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
கரிம உரங்களுக்கு இரண்டு உதாரணம் தருக.
விடை:

  1. மண்புழு உரம்
  2. தொழு உரம்

Question 4.
கனிம உரங்கள் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை:
மண்ணில் இயற்கையாகக் கிடைக்கும் கனிமப் பொருள்களைக் கொண்டு, தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்கு உட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் கனிம உரங்கள் என அழைக்கப் படுகின்றன.

Question 5.
போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று ஏன் அழைக்கப்படுகின்றன?
விடை:
இங்கிலாந்து நாட்டில் உள்ள போர்ட்லேண்ட் என்னும் இடத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லின் தன்மையை சிமெண்ட் ஒத்திருந்ததால், போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று – அழைக்கப்படுகிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
எப்சம் என்பது யாது? அதன் பயன்கள் யாவை?
விடை:
எப்சம்’ :

  • எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும்.
  • இதன் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4. 7H2O

பயன்கள் :

  • மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்தி.
  • மனிதத்தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குகின்றது.
  • தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்பு.
  • தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Question 2.
பீனால் பற்றி எழுதுக. அதன் பயன்கள் யாவை?
விடை:
பீனால் :

  • பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலமாகும்.
  • இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C6H5OH
  • இது ஆவியாகும் தன்மையுள்ள வெண்மை நிற படிகத் திண்மமாகும்.
  • இது நிறமற்றதாக இருப்பினும், மாசு கலந்தவுடன் இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.
  • மனிதத் தோலில்பட்டால் எரிச்சலூட்டும் தன்மை கொண்டது.

பயன்கள் :

  • தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.
  • குறைந்த அடர்வுடைய பீனால் கரைசல், வாய் கொப்பளிப் பானாகவும், கிருமி நாசினியாகவும், வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்யவும் பயன்படுகிறது.
  • அறுவை சிகிச்சையில் நுண்ணுயிரிகளைக் கொல்லும் கிருமிநாசினியாக பயன்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 101

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

6th Science Guide அன்றாட வாழ்வில் தாவரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.
அ) வாத்து
ஆ) கிளி
இ) ஓசனிச்சிட்டு
ஈ) புறா
விடை:
இ) ஓசனிச்சிட்டு

Question 2.
இயற்கையான கொசு விரட்டி
அ) ஜாதிக்காய்
ஆ) மூங்கில்
இ) இஞ்சி
ஈ) வேம்பு
விடை:
ஈ) வேம்பு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 3.
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?
அ) உருளைக்கிழக்கு
ஆ) கேரட்
இ) முள்ளங்கி
ஈ) டர்னிப்
விடை:
அ) உருளைக்கி

Question 4.
பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது?
அ) நெல்லி
ஆ) துளசி
இ) மஞ்சள்
ஈ) சோற்று கற்றாழை
விடை:
அ) நெல்லி

Question 5.
இந்தியாவின் தேசிய மரம் எது?
அ) வேப்பமரம்
ஆ) பலா மரம்
இ) ஆலமரம்
ஈ) மாமரம்
விடை:
இ) ஆலமரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _____ ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
விடை:
16

Question 2.
______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.
விடை:
பருத்தி

Question 3.
நான் தமிழ்நாட்டின் மாநில மரம் நான் யார்? _______
விடை:
பனை

Question 4.
______ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.
விடை:
துளசி

Question 5.
அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ண க் கூடிய பருப்புகள் (அ) விதைகள் ______ எனப்படுகின்றன.
விடை:
பயிறு வகைகள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

III. சரியா? தவறா? தவறாக இருந்தால் சரியாக விடையை எழுதுக.

Question 1.
அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
தவறு. அலங்காரத் தாவரங்கள்

Question 2.
பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.
விடை:
சரி

Question 3.
அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.
விடை:
தவறு – உணவு தாவரம்.

Question 4.
கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.
விடை:
தவறு – கோடை காலத்திற்கு பருத்தி உடைகள் தான் ஏற்றவை.

Question 5.
கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது.
விடை:
தவறு – சர்க்கரை தயாரிக்க பயன்படுகிறது.

IV. பின்வருவனவற்றைப் பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 80

V. ஒப்பிடுக.

Question 1. மாம்பழம் : கனி :: மக்காச்சோளம் : _______
விடை:
தானியம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 2.
தென்னை : நார் :: ரோஜா : _____
விடை:
அத்தர்

Question 3.
தேனீக்கள் : மகரந்தச் சேர்க்கையாளர் :: மண்புழு : ______
விடை:
மண்புழு உரம் தயாரிப்பாளர்

VI. மிகக் குறுகிய விடை தருக.

Question 1.
உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை:
மனிதர்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாக விளங்கும் தாவரங்கள் உணவுத் தாவரங்கள் எனப்படுகின்றன.
(எ.கா.) காய்கறிகள் – பீட்ரூட், கேரட்
தானியங்கள் – நெல், கோதுமை
பருப்பு வகைகள் – கொண்டைக் கடலை, பச்சைப்பயிறு.

Question 2.
மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை:
நோய்களைக் குணப்படுத்த பயன்படும் தாவரங்களை மருத்துவத் தாவரங்கள் என அழைக்கிறோம்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 81

Question 3.
வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?
வன்கட்டை:
வணிக ரீதியில் பயன்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை, அடர்த்தி அடிப்படையில் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 100.1

Question 4.
நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?
விடை:
வெப்ப மண்டலத் தாவரங்களிலிருந்து பெறப்படுவதும் உணவிற்கு நறுமணமூட்டப் பயன்படும் தாவரப் பொருட்கள் நறுமணப் பொருட்கள் எனப்படுகின்றன. பெறப்படும் பொருட்கள்:
மரப்பட்டைகள், வேர்கள், இலைகள், மலர்கள் (அ) தண்டுகள் போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. பயன்க ள்:
உணவிற்கு சுவையூட்டவும் – நிறமூட்டியாகவும், உணவைக் கெடாமல் பாதுகாக்கவும் பயன்ப டுகிறது.
(எ.கா) ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருஞ்சீரகம், ஓமம், பிரியாணி இலை, கொத்தமல்லி விதைகள், இஞ்சி, ஜாதிக்காய் மற்றும் இலவங்கப் பட்டை.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 5.
நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 85

Question 6.
மரக்கட்டைகளின் பயன்கள் யாவை?
வன்கட்டை:
உயர்ரக மரச்சாமான்கள், நாற்காலிகள், மேற்கூரைகள் மற்றும் கட்டில், மேஜை, கதவு, நிலைக்கால் ஜன்னல் போன்ற மரக்கட்டுமானங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.
மென்கட்டை:
ஓட்டுப்பலகைகள், மரப்பெட்டிகள், நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் (அ) காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது.

VII. குறுகிய விடை தருக.

Question 1.
அலங்காரத் தாவரங்கள் பற்றி எழுதுக.
விடை:
அழகியல் காரணங்களுக்காக வீட்டுத் தோட்டங்களில், பூங்காக்களில், மாடித் தோட்டங்களில் வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்கார தாவரங்கள் எனப்படும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 96

Question 2.
வேப்ப மரத்தின் பயன்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 97

Question 3.
எவையேனும் ஐந்து தாவரங்களையும், அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 98

VIII. விரிவான விடை தருக.

Question 1.
மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.
விடை:
வணிக ரீதியாக பயன்படும் மரக்கட்டைகள் வலிமை, அடர்த்தி அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99

Question 2.
விலங்கு – தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.
வரையரை:
உணவு, வசிப்பிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு விலங்குகள் தாவரங்களைச் சார்ந்திருக்கின்றன. இந்தத் தொடர்பினால் விலங்குகள் மட்டுமின்றி, தாவரங்களும் பயனடைகின்றன – இவை பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.2

IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

Question 1.
பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது. இதற்கு காரணம் யாது?
விடை:

  1. நிறைய பாலைவனங்களில் 10 அங்குலத்திற்கும் குறைவான மழை அளவே ஒவ்வொரு ஆண்டும் காணப்படுகிறது.
  2. மழை அளவை விட நீராவிப் போக்கின் அளவு அதிகம்.
  3. பாலைவனங்களில் வாழும் தாவர விலங்கினங்களுக்கு மிகச் சிறிய அளவு தான் கிடைக்கிறது.
  4. மேலும் அவை நீரைச் சேமிக்கவும், வறட்சியைத் தாங்கவும் தகவமைப்புப் பெற்றுள்ளது.
    (எ.கா) கள்ளி வகை தாவரங்கள் – ஒட்டகம் போன்ற விலங்குகள்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 2.
“பனைமரம் உயரமான மரம், அதனால் அது வன்கட்டையைத் தருகிறது” என்று கவிதா கூறினார். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? எதுவாயினும் ஏன் என்பதை எழுதுக.
விடை:

  1. பனை மரங்கள் அதி உயரமான உயரமுடைய தாயிருந்தாலும் அவை மென் கட்டைகளையே உருவாக்கின்றன.
  2. வளையக்கூடிய வலுவற்றதாக இருப்பதால் இதன் கட்டைகள் மென்மையான கட்டைகள் எனப்படுகின்றன.
  3. இதன் கட்டை நார்கள் – தொப்பிகள் போன்ற பொருட்கள் செய்ய பயன்படுகிறது.
  4. ‘கஜா’ புயலில் (நவம்பர் 2018) தென்னை மரங்கள் இலட்சக்கணக்கில் வேரோடு வீழ பனை மென்கட்டைகளை உடையதால் புயலால் சேதமடையவில்லை.

Question 3.
படங்களைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

அ. பாக்டீரியாக்கள் எவ்வாறு மண் வளத்தை அதிகரிக்கின்றன?
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.1
விடை:

  1. தாவர விலங்கு கழிவுகளை மண்ணில் சிதைவடையச் செய்து வளமான மட்கிய உரத்தை உருவாக்குகிறது.
  2. வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தி மண் வளத்தை அதிகரிக்க விவசாயத்திற்கு உதவுகிறது.

ஆ. தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேனீக்கள் அவசியம் எவ்வாறு?
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.3
விடை:
தேனீக்கள் பூக்களிலுள்ள தேனை எடுத்து தேன் பெற உதவுவதோடு அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவி, தாவர இனப்பெருக்கம் நடைபெற மிக அவசியமாகிறது.

6th Science Guide அன்றாட வாழ்வில் தாவரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஆற்றல் தருபவை.
அ) தாவரங்கள் மட்டும்
ஆ) தாவரங்கள் மற்றும் விலங்குகள்
இ) விலங்குகள் மட்டும்
ஈ) இவை எதுவுமல்ல
விடை:
அ) தாவரங்கள் மட்டும் பருவம்

Question 2.
ரவை உப்புமா எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அ) நெல்
ஆ) கோதுமை
இ) சிறு தானியம்
ஈ) சோளம்
விடை:
ஆ) கோதுமை

Question 3.
இலை நார்கள் காணப்படுவது
அ) அலோ வீரா
ஆ) அகேவ்
இ) தென்னை
ஈ) பருத்தி
விடை:
ஆ) அகேவ்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 4.
எந்த ஒரு நாட்டின் வளமும் பொதுவாக எதனைச் சார்ந்துள்ளது.
அ) கல்வி வளர்ச்சி
ஆ) விவசாய வளர்ச்சி
இ) தொழில் வளர்ச்சி
ஈ) அரசியல் வளர்ச்சி
விடை:
ஆ) விவசாய வளர்ச்சி

Question 5.
தாவரங்கள் அதன் அழகுணர்ச்சிக்காக வளர்க்கப்படுவது.
அ) நார் தாவரங்கள்
ஆ) மருத்துவத் தாவரங்கள்
இ) உணவு தாவரங்கள்
ஈ) அலங்காரத் தாவரங்கள்
விடை:
ஈ) அலங்காரத் தாவரங்கள்

II. மிகக்குறுகிய விடையளி

Question 1.
பழங்காலத்திலிருந்து மனிதர்கள் அரிசி, கேழ்வரகு, கம்பு போன்றவற்றை உணவாக பயன்படுத்தி வந்ததற்கான சான்றுகள் எங்கிருந்து பெறப்பட்டது?
விடை:

  1. பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிடைக்கப் பெற்ற தானியங்களின் எச்சங்கள் மற்றும் படிவுகள் மூலமும்.
  2. பண்டைய இலக்கியக் குறிப்புகளின் வாயிலாகவும் இதன் பயன்பாட்டினை உறுதி செய்யும் சான்றுகள் பெறப்பட்டன.

Question 2.
கயிறு எதிலிருந்து பெறப்படுகிறது?
விடை:
தென்னை , மர தண்டு, இலை பட்டைகளிலிருந்தும் இன்னும், சணல், ஆழிச் செடி போன்ற பல வகையான தாவரப் பகுதிகளிலிருந்து நார்கள் பிரித்தெடுக்கப்பட்டு கயிறுகள் திரிக்கப்படுகின்றன.

Question 3.
இந்தியாவில் சணல் பயிரிடப்படும் இடங்கள் மாநிலங்களின் பெயர் தருக.
விடை:
மேற்கு வங்காளம், அஸ்ஸாம், பீகார், உத்திரப்பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய ஏழு மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகிறது.
மேற்கு வங்காளம் – மொத்த இந்திய சணல் உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது.

Question 4.
பருத்தி தாவரம் ஏன் பணப்பயிராக பயன்படுகிறது?
விடை:

  1. பருத்தி நெசவு நார்களை தரும் (துணி செய்ய உதவும் நார்கள்) தாவரமாகும்.
  2. எனவே மனித அத்தியாவசிய தேவையான உடைகள் 80% பருத்தி மற்றும் பருத்தி சேர்க்கப்பட்ட செயற்கை இழைகளிலிருந்தே பெறப்படுகிறது.
  3. இது அதிக பயிரிடப்படுவதாலும், பயன்படுத்தப்படுவதாலும் பொருளாதார முக்கியத்துவமுடையதாலும் இது பணப்பயிராகக் கருதப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 5.
மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை:
நோய்கிருமிகளுக்கு எதிரான வேதி கூட்டுப் பொருள்களை உள்ளடக்கிய தாவரங்கள் – மருத்துவத் தாவரங்கள் எனப்படும்.

Question 6.
பின்வரும் படம் என்னவென்று காண். அதன் பயனையும் தருக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.5

  • கொடுக்கப்பட்ட படம் கிராம்பு எனப்படும் வாசனைப் பொருள்.
  • இது மலரின் மொட்டாகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 100