Samacheer Kalvi Guru 6th Maths Guide Book Back Answers Solutions

Samacheer Kalvi Guru 6th Maths Guide Book Back Answers Solutions

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 6th Maths Book Answers and Solutions Guide Pdf Free Download of Term 1, 2, 3 in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 6th Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 6th Std Maths Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas.

Students can also read Samacheer Kalvi 6th Science Book Solutions.

Samacheer Kalvi 6th Maths Book Solutions Answers Guide

Samacheer Kalvi 6th Maths Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 6th Maths Book Answers Solutions Guide Term 1, 2, 3

Samacheer Kalvi 6th Maths Book Solutions Term 1

Samacheer Kalvi 6th Maths Book Answers Chapter 1 Numbers

Samacheer Kalvi 6th Maths Book Solutions Chapter 2 Introduction to Algebra

Samacheer Kalvi 6th Maths Guide Free Download Chapter 3 Ratio and Proportion

Samacheer Kalvi 6th Maths Guide Pdf Chapter 4 Geometry

Samacheer Kalvi 6th Maths Book English Medium Chapter 5 Statistics

Samacheer Kalvi 6th Maths Solutions Term 1 Chapter 6 Information Processing

Samacheer Kalvi 6th Maths Book Solutions Term 2

6th Std Maths Book Samacheer Kalvi Chapter 1 Numbers

Samacheer Kalvi 6th Maths Book Free Download Chapter 2 Measurements

Samacheer Kalvi 6th Std Maths Guide Chapter 3 Bill, Profit and Loss

6th Standard Maths Book in Tamil Samacheer Kalvi Chapter 4 Geometry

Samacheer Kalvi 6th Maths Solutions Term 2 Chapter 5 Information Processing

Samacheer Kalvi 6th Maths Book Solutions Term 3

6th Standard Samacheer Kalvi Maths Book Chapter 1 Fractions

Tamilnadu Board Class 6 Maths Chapter 2 Integers

Tamil Nadu State Board 6th Std Maths Chapter 3 Perimeter and Area

TN Samacheer Kalvi 6th Std Maths Chapter 4 Symmetry

Samacheer Kalvi 6th Maths Solutions Term 3 Chapter 5 Information Processing

Samacheer Kalvi 6th Standard Maths Guide Tamil Medium Pdf

6th Maths Guide Term 1 பருவம் – I

Samacheer Kalvi 6th Maths Guide Chapter 1 எண்கள்

Samacheer Kalvi 6th Std Maths Guide Pdf Chapter 2 இயற்கணிதம் – ஓர் அறிமுகம்

6th Std Maths Guide Pdf Download Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம்

Samacheer Kalvi 6th Maths Book Solutions Chapter 4 வடிவியல்

6th Maths Book Back Questions And Answers Chapter 5 புள்ளியியல்

6th Samacheer Maths Guide Chapter 6 தகவல் செயலாக்கம்

6th Standard 2nd Term Maths Guide பருவம் – II

Maths 6th Guide Chapter 1 எண்கள்

Samacheer Kalvi Guru 6th Maths Chapter 2 அளவைகள்

Maths Guide For Class 6 Samacheer Kalvi Chapter 3 பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்

6th Standard Maths Book Answers Chapter 4 வடிவியல்

6th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம்

6th Standard 3rd Term Maths Guide பருவம் – III

6th Standard 3rd Term Maths Guide Chapter 1 பின்னங்கள்

Samacheer Kalvi 6th Maths Book Back Answers Chapter 2 முழுக்கள்

6th Standard Maths Guide Pdf State Board Chapter 3 சுற்றளவு மற்றும் பரப்பளவு

Samacheer 6th Maths Guide Chapter 4 சமச்சீர்த்தன்மை

6th Standard Maths Guide Pdf Download Chapter 5 தகவல் செயலாக்கம்

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 6th Maths Book Solutions and Answers Pdf Free Download in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 6th Standard Maths Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு

6th Social Science Guide சாலை பாதுகாப்பு Text Book Back Questions and Answers

I. கீழ்க்கண்டவைகளுக்கு விடையளி.

Question 1.
சாலை பாதுகாப்பு குறித்த முழக்கங்களை எழுதவும்.
விடை:

  • விழிப்புடன் பயணம் விபத்தில்லா பயணம்.
  • வாழ்க்கையில் முந்துங்கள் வாகனத்தில் அல்ல.
  • வேகத்தை கூட்டாதே ஆயுளை குறைக்காதே.
  • நடக்க பாரு இடப்பக்கம் கடக்க பாரு இருபக்கம்.
  • வாகனம் ஓட்டுவதற்கு மட்டும் பறப்பதற்கு அல்ல.
  • வேகம் சோகத்தை தரும் நிதானம் நிம்மதியை தரும்.

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை அடையாளம் காண்க.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு 10
விடை:
அ) திருப்பம் கிடையாது
ஆ) செல்லக் கூடாது
இ) குறுக்கு சாலை
ஈ) மருத்துவமனை,

Question 3.
2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்துக்கள் குறித்த தகவல்களைக் கொண்டு
விடை:
கலந்துரையாடல் நடத்தவும்.

  • சாலை விபத்துக்கள் 2017ல் 3 சதவிகிதம் குறைந்துள்ளது.
  • பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் பெருமளவு விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.
  • பீகார், உபி, ஒடிசா மற்றும் மபி மாநிலங்களில் சாலை விபத்துக்களில் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
  • 2016 ம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது பெருமளவு சாலை விபத்துக்கள் தவிர்க்கப்பட்ட மாநிலங்களில்
    முதலாவதாகத் தமிழ்நாடு திகழ்கின்றது என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
  • சதவிகிதத்தின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் 15.7 சதவீதம் சாலை விபத்துக்கள் படு வீழ்ச்சி அடைந்துள்ளது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு

Question 4.
விவாதம் – தலைக் கவசம் அணிதல் அவசியமானதா அல்லது அவசியமற்றதா?
விடை:
தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் :

  • 88% வரை தலைக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்கலாம்.
  • பார்க்கும் திறனை அதிகரிக்கும்

தீமைகள் :

  • அதன் வடிவமைப்பு
  • பின்னால் வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

முடிவு :

  • தலைக்கவசம் அணிவதில் சில தீமைகள் இருந்தாலும், நாம் தலைக்கவசம் அணியும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்
  • நம்முடைய உயிர் நாம் இந்த பூமியில் வாழ முக்கியமானதாக கருதப்படுகிறது.
  • எனவே நாம் இந்த விழிப்புணர்வை அனைவரும் அறிந்து கொள்ள செய்வோம். நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்.

Question 5.
சாலை பாதுகாப்பு குறித்த சுவரொட்டிகள் தயாரிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு 90

6th Social Science Guide சாலை பாதுகாப்பு Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வாகனங்களை எப்படி, எப்போது, ஏன் இயக்கம் அனுமதிக்கப் படுகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களே ….. ஆகும்.
விடை:
சாலைவிதிகள்

Question 2.
…… மற்றும் … வீடுகள் மற்றும் பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.
விடை:
பெற்றோர் மற்றும்
ஆசிரியர்கள்

Question 3.
எச்சரிக்கைக் குறியீடுகள் …… வடிவத்தில் காணப்படுகின்றன.
விடை:
முக்கோண

Question 4.
… வட்டங்கள் சாலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகின்றன.
விடை:
நீலநிற

Question 5.
…….. விளக்கு ஒளிரும் வரை காத்திருக்கவும்.
விடை:
பச்சை நிற.

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
……… வட்டங்கள் சாலையில் நாம் என்ன செய்யக் கூடாது என்பதை வழங்குகின்றன.
அ) ஆரஞ்சு
ஆ) சிவப்பு
இ) பச்சை
விடை:
ஆ) சிவப்பு

Question 2.
…… அம்புக் குறி அது காட்டும் திசையை நோக்கிப் பயனிக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
அ) பச்சை
ஆ) சிவப்பு
இ) நீலம்
விடை:
அ) பச்சை

Question 3.
பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி 1934 ஆம் ஆண்டு …………….. அமைக்கப்பட்டது.
அ) பிரான்ஸ்
ஆ) ரசியா
இ) பிரிட்டன்
விடை:
இ) பிரிட்டன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு

Question 4.
கட்டாயக் குறியீடுகள் … வடிவில் காணப்படுகின்றன.
அ) முக்கோண
ஆ) செவ்வக
இ) வட்ட
விடை:
இ) வட்ட

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
மூன்று வகையான போக்குவரத்து சமிக்ஞைகள் யாவை?
விடை:
கட்டாயக் குறியீடுகள், எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் அறிவுறுத்தும் குறியீடுகள்.

Question 2.
கட்டாயக் குறியீடுகள் என்றால் என்ன?
விடை:
நாம் சாலைகளில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவைகள் பற்றிய விதிகளாகும். இவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை. இச்சமிக்கைஞகள் வட்ட வடிவில் காணப்படுகின்றன.

Question 3.
எச்சரிக்கை குறியீடுகள் என்றால் என்ன?
விடை:
சாலைகளின் சூழ்நிலைகள் குறித்த எச்சரிக்கைகளைச் சாலை பயன்பாட்டாளர்ககளுக்கு அறிவிப்பவை எச்சரிக்கைக் குறியீடுகள் ஆகும். இவை பொதுவாக முக்கோண வடிவத்தில் காணப்படுகின்றன.

Question 4.
அறிவுறுத்தும் குறியீடுகள் என்றால் என்ன?
விடை:
திசைகள் மற்றும் சேர வேண்டிய இடங்கள் குறித்த தகவல்களை அறிவுறுத்துவதாக அமைகின்றன. இவை பொதுவாக செவ்வக வடிவத்தில் காணப்படுகின்றன.

Question 5.
சாலை பாதுகாப்பு விளக்குகளில் இருக்கும் சிவப்பு, மஞ்சள், மற்றும் பச்சை எவற்றை குறிக்கின்றன?
விடை:
சிவப்பு – நில், மஞ்சள் – கவனி, பச்சை – செல்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு

IV. விரிவான விடையளி.

Question 1.
பாத சாரிகள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை யாவை?
விடை:
செய்யக் கூடியவை :

  • நடைபாதை இருக்கும் இடங்களில் சாலைகளின் இரு பக்கங்களிலும் நடக்கலாம்.
  • நடைபாதைகள் இல்லாத சாலைகளில் எதிர் வரும் வாகனங்களை நோக்கி வலப்பக்க ஓரத்தில் நடக்க வேண்டும்.
  • 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் துணையோடு சாலைகளைக் கடக்க வேண்டும்.
  • பாதுகாப்பான தூரத்தில் வாகனங்கள் வரும்போது சாலையைக் கடக்க வேண்டும்.
  • இரவு நேரங்களில் வெளிர் நிற ஆடையை அணிய வேண்டும்.

செய்யக் கூடியவை :

  • சாலைகளில் ஓடி கடக்கக் கூடாது.
  • நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு முன்புறத்திலோ அல்லது வாகனங்களுக்கு இடையிலோ சாலையைக் கடக்கக் கூடாது.
  • வாகன ஓட்டுநருக்குத் தெளிவாக தெரியாத மூலைகளிலிருந்தும் வளைவுகளில் இருந்தும் சாலையைக் கடக்கக் கூடாது.
  • சாலை தடுப்புகளைத் தாண்டிக் குதித்துச் சாலையை கடக்கக் கூடாது.

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலை பாதுகாப்பு 95

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

6th Social Science Guide உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ….. அமைக்கப்படுகிறது.
அ) ஊராட்சி ஒன்றியம்
ஆ) மாவட்ட ஊராட்சி
இ) வட்டம் ஈ) வருவாய் கிராமம்
விடை:
அ) ஊராட்சி ஒன்றியம்

Question 2.
தேசிய ஊராட்சி தினம் ……. ஆகும்.
அ) ஜனவரி 24
ஆ) ஜீலை 24
இ) நவம்பர் 24
ஈ) ஏப்ரல் 24
விடை:
ஈ) ஏப்ரல் 24

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 3.
இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் …
அ) டெல்லி
ஆ) சென்னை
இ) கொல்கத்தா
ஈ) மும்பாய்
விடை:
ஆ) சென்னை

Question 4.
அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் ……….
அ) வேலூர்
ஆ) திருவள்ளூர்
இ) விழுப்புரம்
ஈ) காஞ்சிபுரம்
விடை:
இ) விழுப்புரம்

Question 5.
மாநகராட்சியின் தலைவர் …… என அழைக்கப்படுகிறார்
அ) மேயர்
ஆ) கமிஷ்னர்
இ) பெருந்தலைவர்
ஈ) தலைவர்
விடை:
அ) மேயர்

II. நிரப்புக

Question 1.
இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் …….. ஆகும்.
விடை:
தமிழ்நாடு

Question 2.
பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு …………..
விடை:
1992

Question 3.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் …………. ஆண்டுகள்.
விடை:
5

Question 4.
தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ……. ஆகும்.
விடை:
வாலாஜாபேட்டை நகராட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் 80
விடை:
1. நிரந்தர அமைப்பு
2. வட்டார வளர்ச்சி அலுவலர்
3. செயல் அலுவலர்
4. மாநிலத் தேர்தல் ஆணையம்

IV. விடையளிக்கவும்.

Question 1.
உன் மாவட்டத்தில் மாநகராட்சி இருப்பின், அதன் பெயரைக் எழுதவும்?
விடை:
ஆம். திருநெல்வேலி மாநகராட்சி

Question 2.
உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யாது?
விடை:
உள்ளாட்சி அமைப்புகள் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் உள்ளூர் அமைப்புகளின் திறமையான செயல்பாட்டிற்கும் மக்களை நேரடியாக ஈடுபடுவதற்கு அவசியமாகும்.

Question 3.
ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:
ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 4.
நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி.

Question 5.
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் யாவர்?
விடை:
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்

  • ஊராட்சி மன்றத் தலைவர்.
  • பகுதி உறுப்பினர்கள்
  • ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)
  • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்.

Question 6.
மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைப் பட்டியலிடுக.
விடை:

  • குடிநீர் வசதி
  • தெரு விளக்கு அமைத்தல்
  • தூய்மைப் பணி
  • மருத்துவச் சேவை
  • மாநகராட்சிப் பள்ளிகள்
  • பிறப்பு, இறப்பு பதிவு இன்னும் பிற

Question 7.
கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக.
விடை:
வீட்டு வரி, தொழில் வரி, கடைகள் மீதான வரி, குடிநீர் இணைப்புக்கான கட்டணம், நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு, மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு இன்னும் பிற

Question 8.
கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாள்கள் யாவை? அந்நாள்களின் சிறப்புகள் யாவை?
விடை:

  • கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2, ஆகிய நாட்களில் நடைபெறும்.
  • தேசிய விழா தினமாக இந்த நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

Question 9.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:
கிராம சபை அமைத்தல், மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு, இட ஒதுக்கீடு, தேர்தல், பதவிக்காலம், நிதி க்குழு, கணக்கு மற்றும் தணிக்கை, இன்னும் பிற

Question 10.
கிராம சபையின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • கிராமத்து பஞ்சாயத்துகளின் திறமையான செயல்பாட்டுக்கு கிராமப்புற சபா மிகவும் அவசியமானதாகும்.
  • இது சமூக நலனுக்கான திட்டங்களை தீட்டுதல் மற்றும் செயல்படுத்துவதில் பொது மக்கள் பங்கேற்பைப் மேம்படுத்துகிறது.

V. உயர் சிந்தனை வினா

Question 1.
கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?
விடை:

  • இந்திய நாடு ஒரு அகன்ற நாடாகும். ஒரே ஒரு அரசாங்கத்தால், நாட்டின் முழு நிர்வாகத்தையும், கவனிக்க இயலாது.
  • நமது இந்திய அரசமைப்புச்சட்டம் மூன்று நிலைகளில் நிர்வாகத்தை பிரித்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்.
  • உள்ளாட்சி அமைப்புகள் கிராமம் மற்றும் நகரங்களின் உள்ளூர் நிர்வாகத்தை கவனித்துக்
    கொள்ளும்.
  • உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணிகள் :
    • தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்,
    • சாலைகள் மற்றும் பள்ளிகள் கட்டுதல்,
    • குடிநீர் மற்றும் மின்வசதி அமைத்தல்

VI. செயல்பாடுகள்

Question 1.
உள்ளாட்சி பிரதிநிதியை நேர்காணல் செய்வதற்காக வினா நிரல் தயாரிக்கவும்.
விடை:

  • நம் பகுதியில் சிறந்த வடிகால் அமைப்பதற்கு தங்களின் திட்டம் என்ன?
  • மகாராஜ நகர், மற்றும் தியாகராஜ நகரை இணைக்கும் பாலக் கட்டுமானம் எப்போது நிறைவடையும்?
  • நம் பகுதியில் தெரு விளக்கு அமைக்கும் பணி எத்தனை மாதங்களில் முடிவடையும்?

Question 2.
பள்ளியின் மேம்பாட்டிற்கு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு இருப்பின் கலந்துரையாடுக.
விடை:

  • உள்ளாட்சி பிரதிநிதிகள் எங்கள் பள்ளியின் மேம்பாட்டிற்காக அபரிமிதமான உதவிகள் செய்துள்ளனர்.
  • பள்ளியின் வளர்ச்சிக்காக அவர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மற்றும் பள்ளியின் பழைய மாணவர்களை நாடி உதவி பெற்றனர்.
  • அவர்கள் திரட்டிய நிதியில் இருந்து பள்ளிக்கு தேவையான கணினி, ஆய்வக உபகரணங்கள் மற்றும் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கினர்.

Question 3.
நான் உள்ளாட்சி பிரதிநிதியானால்…?
விடை:

  • சிறந்த வடிகால் திட்டம் அமைக்கப் பாடுபடுவேன்.
  • டெங்கு போன்ற தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வழிகளை ஆராய்ந்து செயல் படுத்துவேன்.
  • நன்கு திட்டமிட்ட சாலை வசதிகளையும், நன்கு ஒளியூட்டும் விளக்குகளையும் ஏற்பாடு செய்து மக்கள் நலமுடன் வாழ வழி வகுப்பேன்.

Question 4.
உன் மாவட்டத்தில் உள்ள பல வகையான உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையைக் கேட்டறிந்து பதிவிடவும்.
விடை:
மாவட்டத்தின் பெயர் : திருநெல்வேலி
கிராம ஊராட்சி : இராஜகோபாலபுரம்
ஊராட்சி ஒன்றியம் : முத்தூர்
மாவட்ட ஊராட்சி பேரூராட்சி : குலவணிகர்புரம்
நகராட்சி மாநகராட்சி : திருநெல்வேலி மாநகராட்சி

6th Social Science Guide உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தமிழ்நாட்டில் ………. மாநகராட்சிகள் இருக்கின்றன.
விடை:
12

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 2.
சென்னை மாநகராட்சி ……….. உருவாக்கப்பட்டது.
விடை:
1688

Question 3.
நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் ……….. மாவட்டம்
விடை:
காஞ்சிபுரம்

Question 4.
நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடைப்பட்ட ஊர் ………….
விடை:
பேரூராட்சி

Question 5.
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ………. ஊராட்சி ஆகும்.
விடை:
கிராமம்

Question 6.
……. மற்றும் …….. மாவட்டங்களில் மிக குறைந்த அளவு ஊராட்சி ஒன்றியங்களே உள்ளன.
விடை:
நிலகீரி மற்றும் பெரம்பலூர்

Question 7.
தொகுதிகள் …….. எனவும் அழைக்கப்படுகின்றன.
விடை:
பகுதிகள்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவின் அரசியல் அமைப்பின் அடித்தளமாக பஞ்சாயத்து ராஜை பரிந்துரைத்தவர் ….
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) மகாத்மா காந்தி
இ) இராஜேந்திர பிரசாத்
விடை:
ஆ) மகாத்மா காந்தி

Question 2.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில் …. இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அ) 30%
ஆ) 25%
இ) 33%
விடை:
இ) 33%

Question 3.
2011ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் … இடங்களில் வெற்றி பெற்றனர்.
அ) 38%
ஆ) 28%
இ) 48%
விடை:
அ) 38%

Question 4.
தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு பெண்களுக்கு உள்ளாட்சியில் ………… இட ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது.
அ) 40%
ஆ) 50%
இ) 60%
விடை:
ஆ) 50%

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 5.
தமிழகத்தின் தேர்தல் ஆணையம் … மாவட்டத்தில் உள்ளது.
அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருச்சி
விடை:
அ) சென்னை

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
மாநகராட்சியின் அதிகாரிகள் குறிப்பு வரைக.
விடை:

  • மாநகராட்சிக்கு இந்திய ஆட்சிப்பணி (இ.ஆ.ப) அதிகாரி ஒருவர் ஆணையராக இருப்பார்.
  • நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள்.
  • பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் செயல் அலுவலர் ஆவார்.

Question 2.
ஊராட்சி ஒன்றியம் பற்றி விளக்குக.
விடை:

  • பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
  • கவுன்சிலர்கள் தங்களில் ஒருவரை ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர்.
  • துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • வட்டார வளர்ச்சி அலுவலர் இதன் நிர்வாக அலுவலர் ஆவார்.
  • ஊராட்சி ஒன்றிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

IV. விரிவான விடையளி.

Question 1.
மாவட்ட ஊராட்சி குறிப்பு வரைக.
விடை:

  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது.
  • 50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது.
  • பகுதி உறுப்பினர்களாக கிராம ஊராட்சி மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் தங்களின் ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் செய்கின்றனர்.

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 1 மக்களாட்சி Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

6th Social Science Guide மக்களாட்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆதிமனிதன் …….. பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.
(அ) சமவெளி
(ஆ) ஆற்றோரம்
(இ) மலை
(ஈ) குன்று
விடை:
(ஆ) ஆற்றோரம்

Question 2.
மக்களாட்சியின் பிறப்பிடம் ……….
(அ) சீனா
(ஆ) அமெரிக்கா
(இ) கிரேக்கம்
(ஈ) ரோம்
விடை:
(இ) கிரேக்கம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 3.
உலக மக்களாட்சி தினம் ………. ஆகும்.
(அ) செப்டம்பர் 15
(ஆ) அக்டோபர் 15
(இ) நவம்பர் 15
(ஈ) டிசம்பர் 15
விடை:
(அ) செப்டம்பர் 15

Question 4.
நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ……
(அ) ஆண்கள்
(ஆ) பெண்கள்
(இ) பிரதிநிதிகள்
(ஈ) வாக்காளர்கள்
விடை:
(ஈ) வாக்காளர்கள்

II. நிரப்புக.

Question 1.
நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு ……………
விடை:
சுவிட்சர்லாந்து

Question 2.
மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் …….
விடை:
ஆப்ரகாம் லிங்கன்

Question 3.
மக்கள் …………… அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
விடை:
வாக்கு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 4.
நம் நாட்டில் …… மக்களாட்சி செயல்படுகிறது.
விடை:
நாடாளுமன்ற

III. விடையளிக்கவும்

Question 1.
மக்களாட்சி என்றால் என்ன?
விடை:
“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி”

Question 2.
மக்களாட்சியின் வகைகள் யாவை?
விடை:
நேரடி மக்களாட்சி மற்றும் பிரதிநிதித்துவ மக்களாட்சி

Question 3.
நேரடி மக்களாட்சி – வரையறு.
விடை:
“நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை உருவாக்குகின்றனர். அனைத்து சட்டத் திருத்தங்களையும் மக்கள் தான் அங்கீகரிப்பர். அரசியல் வாதிகள் நாடாளுமன்ற செயல் முறைகளின்படி ஆட்சி செய்வர்”.

Question 4.
பிரதிநிதித்துவ மக்களாட்சி – வரையறு.
விடை:
“சுதந்திரமான தேர்தல் முறைப்படி உயர் அதிகாரம் பெற்ற மக்கள் தெரிந்தெடுக்கும் அரசாங்கம். இதில் மக்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் ஆட்சியதிகாரம் பெற்றிருப்பார்கள்.

Question 5.
நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை?
விடை:
நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகள்

  • அரசியல் கொள்கைகளை வரையறுத்துள்ளது.
  • அரசு நிறுவனங்களின் வடிவமைப்பு. அவை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
  • அரசு நிறுவனங்களின் அதிகாரம் மற்றும் கடமைகளையும் விளக்குகிறது.
  • குடிமக்களுக்கான உரிமைகள், கடமைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் நிர்ணயம் செய்துள்ளது.

IV. உயர்சிந்தனை வினா

Question 1.
நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி 80

V. செயல்பாடுகள்

Question 1.
உங்கள் தொகுதி பிரதிநிதிகளின் பெயர்களைக் கேட்டறிந்து எழுதவும்.
விடை:
(அ) நாடளுமன்ற உறுப்பினர் – K.R.P. பிரபாகரன்
(ஆ) சட்டமன்ற உறுப்பினர் – TP. மொஹிதின்கான்
(இ) உள்ளாட்சி உறுப்பினர் – A. ராதாகிருஷ்ணன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 2.
மக்களாட்சி முறையின் நிறை, குறைகளை விவாதிக்கவும்.
விடை:
நிறைகள் :

  • மக்களாட்சி முறை மக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை பெற்று தருகின்ற ஒரு சிறந்த அரசாட்சியாகும்.
  • இவ்வாட்சி ஜனநாயக ரீதியாக முடிவெடிக்கும் தன்மையை செம்மைப்படுத்துகிறது.
  • குடிமக்களின் சுயமரியாதையை பாதுகாக்கிறது.
  • மக்களாட்சி மக்களின் தவறுகளை திருத்தி கொள்ள வழி வகை செய்கிறது.

குறைகள் :

  • மக்களாட்சியில் தலைமை மாறிக் கொண்டே இருப்பதால் நிலையற்ற தன்மை உருவாகிறது.
  • நன்னடைத்தைக்கு வாய்ப்பு குறைகிறது
  • முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
  • ஊழலுக்கு வழி வகை செய்கிறது.

6th Social Science Guide பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஐ.நா.சபை செப்டம்பர் 15ம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்த ஆண்டு ……….
விடை:
2004

Question 2.
……… அரசமைப்புச் சட்டம் தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலே மிகப் பெரியது
விடை:
இந்திய

Question 3.
அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு …………. தலைமையில் உருவானது.
விடை:
டாக்டர் பி.ஆர்.
அம்பேத்கார்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 4.
இந்தியாவில் ………. வயது நிரம்பிய எந்த ஒருகுடிமகனும் வாக்களிக்கலாம்
விடை:
18

Question 5.
உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தைக் கொண்டது ……..
விடை:
ஐஸ்லாந்து

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
…….. நமது அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்”
(அ) டாக்டர் இராஜேந்திரபிரசாத்
(ஆ) பி.ஆர். அம்பேத்கர்
(இ) டாக்டர் S. ராதாகிருஷ்ணன்
விடை:
(ஆ) பி.ஆர்.அம்பேத்கர்

Question 2.
பழமையான அரசியலைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது.
(அ) கிரேக்கம்
(ஆ) சன்மரினோஸ்
(இ) ரோமானியப்பேரரசு
விடை:
(ஆ) சன்மரினோஸ்

Question 3.
அதிபர் மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாடு(கள்)
(அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(ஆ) கனடா
(இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றம் கனடா
விடை:
(இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றம் கனடா

Question 4.
நேரடி மக்களாட்சி முறையில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பவர்கள் ……….
(அ) ஜனாதிபதி
ஆ) பிரதமர்
இ) மக்கள்
விடை:
(இ) மக்கள்

Question 5.
இந்திய அரசமைப்புச் சட்டம் தன் மக்களுக்கு ……… அடிப்படை உரிமைகளை வழங்கி உள்ளது.
அ) 6
ஆ) 9
இ) 8
விடை:
அ) 6

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி 80

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
அரசு என்றால் என்ன?
விடை:
மக்களை ஆளும் அரசு என்பது நிதி – நிர்வாகம், சட்டம் ஒழுங்கு என்று எப்போதும் மாறாமல் நிரந்தரமாய் தேங்கிவிட்ட உறுப்புகளை கொண்டது.

Question 2.
தேர்தல் என்றால் என்ன ?
விடை:
மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் முறையே தேர்தல் எனப்படும்.

Question 3.
“ஜனநாயக ரீதியாக முடிவெடிப்பது என்றால் என்ன?
விடை:

  • மக்களாட்சி அவ்வதிகாரம் ஒரு குழுவிடம் தான் இருக்கும்.
  • மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்காது.
  • மாறாக அவ்வதிகாரம் ஒரு குழுவிடம் தான் இருக்கும்.
  • அக்குழு, தொடர்புடையோர் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான உரையாடல்களை முன்னெடுக்கும்.
  • பின்னர் அவர்களிடையே ஒருமித்த கருத்தொருமை ஏற்பட்டதும் இறுதி முடிவினை எடுக்கும்.
  • இதை தான் ஜனநாயக ரீதியாக முடிவெடித்தல் என்கிறோம்.

V. விரிவான விடையளி

Question 1.
மக்களாட்சியின் நோக்கங்களை – விளக்கு
விடை:

  • மக்களின் சுயமரியாதை மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், உயர்த்தவும்.
  • சமூக நீதி மற்றும் சமுதாய வளர்ச்சியை அடையவும்
  • சட்டத்தின் விதி முறைகளை செயல்படுத்தவும்
  • மக்கள் தங்கள் பிரதிநிதிகளை’ – தாங்களே தேர்ந்தெடுக்கவும்.
  • நாட்டின் உயர்வுக்கு மக்களின் பங்களிப்புடன் பாடுபடுவதே மக்களாட்சியின் நோக்கமாகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

6th Social Science Guide பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடைளி.

Question 1.
பேரிடர் – விளக்குக.
விடை:
ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது.

Question 2.
பேரிடரின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.
விடை:
இயற்கை பேரிடர் மற்றும் மனிதனால் உண்டாகும் பேரிடர்கள் என இருபெரும் பிரிவுகளாகப் பேரிடரைப் பிரிக்கலாம். எ.கா.
இயற்கை பேரிடர் :

  • நிலநடுக்கம்
  • எரிமலை
  • சுனாமி
  • சுறாவளி

மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்

  • நெருப்பு
  • கட்டிடங்கள் இடிந்துபோதல்
  • தீவிரவாதம்
  • கூட்ட நெரிசல்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Question 3.
இடி மின்னல் – குறிப்பு வரைக.
விடை:

  • வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும்.
  • இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒலி அலைகளும் ஏற்படுகிறது.
  • இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிறது.

Question 4.
சென்னை , கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப் படுகின்றன. காரணம் கூறு.
விடை:

  • சென்னை , கடலூர் மற்றும் காவிரி வடி நிலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவக் காற்று மற்றும் வெப்பமண்டல புயல் கடுமையான சூறாவளி மழையை எற்படுத்துகிறது.
  • இந்த மிக கனமழையால் சென்னை , கடலூர் மற்றும் காவிரி வடிநிலப்பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.

Question 5.
நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுப்படுத்துக.
விடை:
நிலச்சரிவு :
பாறைகள், பாறைச் சிதைவுகள், மண் போன்ற பொருட்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது.
பனிச் சரிவு :
பெரும் அளவிலான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு ஆகும்.

II. ஒரு பத்தியில் விடயளி

Question 1.
வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை? செய்யக்கூடாதவை எவை?
விடை:
அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம்.
மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினைத் துண்டிக்க வேண்டும். – கழிப்பிடத்துளை மீதும், கழிவு நீர் வெளியேறும் துளை

  • மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் உடனடியாக வெளியேற வேண்டும்.
  • குடிநீரைக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும்.
  • பிளிச்சிங் பவுடர் கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • வயிற்றுப்போக்கு இருந்தால் அதிக அளவில் உணவு உண்ணக் கூடாது.
  • வெள்ளத்தில் மிதந்து வரும் எந்த பொருளையும் எடுப்பதை தவிர்க்கவும்.

III. செயல்பாடு

ஒரு காகிதத்தில் உனது கிராமம்/ நகரம் படம் வரைந்து அதில் உனது பள்ளி, வீடு, விளையாட்டுத்திடல் ஆகியவற்றைக் குறி. பிறகு ஆறுகள் /ஓடைகள்/ஏரி/சாலை போன்றவற்றைக் குறி. இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி.

Question 1.
எந்த இடம் மற்றும் சாலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
விடை:
பள்ளி மற்றும் விளையாட்டு மைதானம்

Question 2.
உன்னால் மீட்பு வழியைக் காணமுடியுமா?
விடை:
முடியும்

Question 3.
நீங்கள் வெள்ளப்பாதிப்பு பகுதியில் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
விடை:

  1. குடியிருப்புப் பகுதி வெள்ளப் பாதிப்பிற்கு உட்படும் தன்மையானதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
  2. முதலுதவிப் பெட்டி, மற்றும் பொருட்களைக் கட்டுவதற்குத் திடமான கயிறு ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Question 4.
நெருக்கடியான காலங்களில் அவசியமான பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பைகளில் உன்னிடம் ஒரு பை உள்ளது என்றால் அதில் என்னென்ன பொருள்கள் எடுத்துச் செல்வாய்?
விடை:
அடையாள அட்டை, பணம், குடிநீர், முதலுதவிப் பெட்டி, துணிகள், மின்னுட்டி

Question 5.
முக்கியமான அவசரக்காலத் தொடர்பு எண்களைக் பட்டியலிடுக.
விடை:

  1. காவல் – 100
  2. மருத்துவ ஊர்தி – 108
  3. தீ – 101
  4. அவசரநிலை – 112

6th Social Science Guide பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உலகில் அதிகமாகப் பேரிடர்கள் நிகழக் கூடிய நாடுகளில் …… ஒன்று
விடை:
இந்தியாவும்

Question 2.
எந்தப் புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ இப்புள்ளி நிலநடுக்கம் …… மையம்
விடை:
எனப்படுகிறது.

Question 3.
நிலநடுக்க மையத்திலிருந்து செங்குத்தாகப் புவிப்பரப்பில் காணப்படும் பகுதி …….. ஆகும்
விடை:
மையப்புள்ளி

Question 4.
….சாலை விதிகளை மீறுவதாலும் கவனக்குறைவாலும் ஏற்படுகின்றன.
விடை:
சாலை விபத்து

Question 5.
…….. நிகழ்ந்த சுனாமி உலகம் இதுவரை கண்டறியாத சுனாமியாக அமைந்தது.
விடை:
சுமித்தரா
தீவுக்:கருகில்

II. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
நிலநடுக்கம் என்றால் என்ன?
விடை:
சிறிய கால அளவில் திடீரென்று பூமியில் ஏற்படக்கூடிய அதிர்வு நிலநடுக்கம் ஆகும்.

Question 2.
சுனாமி என்றால் என்ன?
விடை:
நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் கடலடி நிலச்சரிவுகளால் தோற்றுவிக்கப்படும் பேரலையே சுனாமி.

Question 3.
சூறாவளி எவ்வாறு உருவாகிறது.
விடை:
அதிக அழுத்தம் உள்ள காற்றால் சூழப்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதியில் இருந்து சூறாவளி உருவாகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Question 4.
காட்டுத் தீ எவ்வாறு ஏற்படுகிறது?
விடை:
மனிதர்களின் கவனக்குறைவாலும், மின்னல் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தாலும் மேலும் பிற நடைமுறை காரணிகளாலும் காட்டுத் தீ உண்டாகிறது.

Question 5.
கூட்ட நெரிசல் என்றால் என்ன?
விடை:
ஓரிடத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால் ஏற்படும் நெரிசலை கூட்ட நெரிசல் என்கிறோம். இதனால் ஏற்படும் மிதிபடுதல் மற்றம் மூச்சுத்திணறல் காரணமாக காயமடைதலும் மரணமும் ஏற்படுகிறன்றது

III. ஒரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் அல்லது புள்ளியில் மதிப்பீடுகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட எதிர்காலத்தில் நடக்கப்போகும் பேரிடர்களைப் பற்றி கூறுவதாகும்.
விடை:
முன்னறிவிப்பு

Question 2.
நீர் கேரிப்பது குறிப்பாக தேசிய அளவில் மழைநீர் சேகரிக்கப்படும் பகுதி
விடை:
நீர்பிடிப்பு

Question 3.
நேரிடையான அல்லது மறைமுகமான தொடர்பால் ஏற்படும் நோய்
விடை:
தொற்று

Question 4.
பேரிடரின் போது ஏற்படும் இடர்களையும் அவற்றின் அளவையும் குறைத்தல் (அ) தணித்தல் என்பதாகும்
விடை:
தணித்தல்

Question 5.
புவி அதிர்வின் போது அளக்கப்படும் அளவு
விடை:
புவி அதிர்வு
அளவு

V. விரிவான விடையளி

Question 1.
சுனாமியின்போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை விவரி.
விடை:

  • உனது தெரு கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதை அறிய வேண்டும்.
  • மீட்பு வழிகளைத் திட்டமிடுதல் மற்றம் மீட்பு முறைகளைப் பயிற்சி செய்து பார்த்தல்
  • கடல்நீர் உங்களை நோக்கி முன்னேறி வரும்போது உடனடியாகக் கடற்கரை பகுதியிலிருந்து வெளியேறி உயரமான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
  • சுனாமியை வேடிக்கை பார்க்கவோ அல்லது உலாவுவதற்கோ கடலோரப் பகுதிகளுக்குச் செல்லச் கூடாது.
  • சுனாமி பற்றிய உண்மைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் 20

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 2 புவி மாதிரி Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

6th Social Science Guide புவி மாதிரி Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பெருவட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு ………..
விடை:
நிலநடுக்கோடு

Question 2.
புவியின் மீது கிழக்கு மேற்காக, கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கோடுகள் ………..
விடை:
அட்சக்கோடு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

Question 3.
புவியில் 90° அட்சங்கள் ……. என அழைக்கப்படுகின்றன.
விடை:
துருவம்

Question 4.
முதன்மை தீர்க்கக்கோடு ………. என அழைக்கப்படுகிறது.
விடை:
கிரீன்விச் தீர்க்கக்கோடு

Question 5.
உலகின் நேர மண்டலங்களின் எண்ணிக்கை ……….
விடை:
24

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புவியின் வடிவம்
அ) சதுரம்
ஆ) செவ்வகம்
இ) ஜியாய்டு
ஈ) வட்டம்
விடை:
இ) ஜியாய்டு

Question 2.
வடதுருவம் என்பது
அ) 90° வ அட்சக்கோடு
ஆ) 90° தெ அட்சக்கோடு
இ) 90° மே தீர்க்கக்கோடு
ஈ) 90° கி தீர்க்கக்கோடு
விடை:
அ) 90° வ அட்சக்கோடு

Question 3.
0° முதல் 180 கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பகுதி இவ்வாறு அழைக்கப் படுகிறது.
அ) தெற்கு அரைக்கோளம்
ஆ) மேற்கு அரைக்கோளம்
இ) வடக்கு அரைக்கோளம்
ஈ) கிழக்கு அரைக்கோளம்
விடை:
ஈ) கிழக்கு அரைக்கோளம்

Question 4.
231/2° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது
அ) மகரரேகை
ஆ) கடகரேகை
இ) ஆர்க்டிக் வட்டம்
ஈ) அண்டார்டிக் வட்டம்
விடை:
ஆ) கடகரேகை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

Question 5.
180 தீர்க்கக்கோடு என்பது
அ) நிலநடுக்கோடு
ஆ) பன்னாட்டு தேதிக்கோடு
இ) முதன்மை தீர்க்கக்கோடு
ஈ) வடதுருவம்
விடை:
ஆ) பன்னாட்டு தேதிக்கோடு

Question 6.
கிரீன்விச்முதன்மைதீர்க்கக்கோட்டிற்குநேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்
அ) நள்ளிரவு 12 மணி
ஆ) நண்பகல் 12 மணி
இ) பிற்பகல் 1 மணி
ஈ) முற்பகல் 11 மணி
விடை:
ஆ) நண்பகல் 12 மணி

Question 7.
ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?
அ) 1240 நிமிடங்கள்
ஆ) 1340 நிமிடங்கள்
இ) 1440 நிமிடங்கள்
ஈ) 1140 நிமிடங்கள்
விடை:
இ) 1440 நிமிடங்கள்

Question 8.
கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது?
அ) 82 1/2° கிழக்கு
ஆ) 82 1/2° மேற்கு
இ) 81 1/2° கிழக்கு
ஈ) 81 1/2° மேற்கு
விடை:
அ) 82 1/2° கிழக்கு

Question 9.
அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை
அ) 171
ஆ) 161
இ) 181
ஈ) 191
விடை:
இ) 181

Question 10.
தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை
அ) 370
ஆ) 380
இ) 360
ஈ) 390
விடை:
இ) 360

III. பொருந்தாததை வட்டமிடுக

Question 1.
வடதுருவம், தென்துருவம், நிலநடுக்கோடு, பன்னாட்டு தேதிக்கோடு
விடை:
பன்னாட்டு தேதிக்கோடு

Question 2.
மகரரேகை, கடகரேகை, நிலநடுக்கோடு, முதன்மை தீர்க்கக்கோடு
விடை:
முதன்மை தீர்க்கக்கோடு

Question 3.
வெப்பமண்டலம், (நேரமண்டலம்), மிதவெப்ப மண்டலம், குளிர் மண்டலம்
விடை:
நேர மண்டலம்

Question 4.
இராயல் வானியல் ஆய்வுமையம்), முதன்மை தீர்க்கக்கோடு, கிரீன்விச், பன்னாட்டு தேதிக்கோடு
விடை:
இராயல் வானியல் ஆய்வுமையம்

Question 5.
10° வடக்கு, 20° தெற்கு, 30° வடக்கு, 40° மேற்கு
விடை:
40° மேற்கு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 60
விடை:
1. நிலநடுக்கோடு
2. கிரீன்விச்
3. பன்னாட்டு தேதிக்கோடு
4. துருவம்

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க

1. புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.
2. புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.
3. புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.
மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.
அ) 1 மற்றும் 3 சரி
ஆ) 2 மற்றும் 3 சரி
இ) 1 மற்றும் 2 சரி
ஈ) 1.2 மற்றும் 3 சரி
விடை:
இ) 1 மற்றும் 2 சரி

VI. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க

கூற்று 1 : புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
கூற்று 2 : புவியில், தீர்க்கக்கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.

சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
அ) சுற்று சரி, சுற்று 2 தவறு

VII. பெயரிடுக

Question 1.
புவியில் கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்.
விடை:
அட்சக்கோடு

Question 2.
புவியில் செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்
விடை:
தீர்க்கக்கோடு

Question 3.
புவியின் முப்பரிமாண மாதிரி
விடை:
புவி மாதிரி

Question 4.
தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் இந்தியா அமைந்துள்ள அரைக்கோளம்
விடை:
தென் அரைக்கோளம்

Question 5.
தீர்க்கக்கோடுகள் மற்றும் அட்சக்கோடுகளின் வலை அமைப்பு
விடை:
புவி வலைப்பின்னல்

VIII. சுருக்கமாக விடையளி

Question 1.
ஜியாய்டு என்பது என்ன?
விடை:

  • புவியின் வடிவமானது தனித்தன்மை வாய்ந்தது.
  • புவியின் வடிவத்தை எந்த வடிவியல் உருவத்துடனும் ஒப்பிட முடியாது.
  • எனவே, இதன் வடிவம் புவிவடிவம் (Geoid) என்று அழைக்கப்படுகிறது.

Question 2.
தல நேரம் என்பது என்ன?
விடை:
ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இடங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.

Question 3.
ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர் உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?
விடை:
ஒரு நாளில் ஒரு முறை தான் சூரியன் நேர் உச்சிக்கு வரும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

Question 4.
அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?
விடை:

  • புவியின் மீது கிழக்கிலிருந்து மேற்காக கிடைமட்டமாக வரையப் பட்டுள்ள கற்பனைக் கோடுகள், அட்சக்கோடுகள் எனப்படும்.
  • புவியின் மீது வடக்கு தெற்காக, செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடுகள் தீர்க்கக் கோடுகள் அல்லது மெரிடியன்கள் எனப்படும்.

Question 5.
புவியில் காணப்படும் நான்கு அரைக்கோளங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:

  • வட அரைக்கோளம்
  • தென் அரைக்கோளம்
  • கிழக்கு அரைக்கோளம்
  • மேற்கு அரைக்கோளம்

IX. காரணம் கூறுக

Question 1.
0° தீர்க்கக்கோடு, கிரீன்விச் தீர்க்கக்கோடு என்று அழைக்கப்படுகிறது.
விடை:
0° தீர்க்கக்கோடு கீரின்விச் வழியே செல்வதால் கிரீன்விச் தீர்க்கக் கோடு என்று அழைக்கப் படுகிறது.

Question 2.
புவியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில், 66 1/2° அட்சக்கோடு முதல் 90° துருவம் வரை உள் ள பகுதிகள் குளிர் மண்டலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
சூரியக் கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகவும் சாய்ந்த நிலையில் விழுவதால், இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது எனவே இப்பகுதி குளிர்மண்டலம் என அழைக்கப்படுகிறது.

Question 3.
பன்னாட்டுத் தேதிக்கோடு வளைந்து செல்கிறது.
விடை:
பன்னாட்டு தேதிக்கோடு நேராகச் சென்றால், ஒரே நாட்டிற்குள் இரண்டு தேதிகள் அமையும், இந்த குழப்பத்தினைத் தவிர்ப்பதற்காகவே இக்கோடு வளைந்து வரையப்பட்டுள்ளது.

X. விரிவான விடை தருக

Question 1.
புவி மாதிரியின் பயன்கள் யாவை?
விடை:

  • முழு பூமியையும் படிப்பதற்கான ஒரே துல்லியமான வழி புவி மாதிரி.
  • இது பூமியின் மேற்பரப்பில் நிலம் மற்றும் நீர் விநியோகத்தை காட்டுகிறது.
  • சரியான வடிவ அளவு மற்றும் கண்டங்கள் மற்றும் கடல்களின் இடம் காட்டப்பட்டுள்ளது.
  • கடல்வழிபாதை, காற்று பாதை, ஆறுகள், நகரங்கள் முதலியவற்றின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உதவுகிறது.

Question 2.
அட்ச, தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் புவி எவ்வாறு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைப் படத்துடன் விவரி.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 81
0° நிலநடுக்கோட்டிலிருந்து 90° தென் வடதுருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி வட அரைக்கோளம் (Northern Hemisphere) எனப்படும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 82
0° நிலநடுக்கோட்டிலிருந்து 90° தென் துருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி தென் அரைக்கோளம் (Southern Hemisphere) எனப்படும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 83
0° தீர்க்கக்கோட்டிலிருந்து 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி கிழக்கு அரைக் கோளம் (Eastern Hemisphere) என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 84
0° தீர்க்கக்கோட்டிலிருந்து 180° மேற்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி மேற்கு அரைக்கோளம் (Western Hemisphere) என அழைக்கப்படுகிறது.

Question 3.
முக்கிய அட்சக்கோடுகள் யவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?
விடை:
முக்கிய அட்சக்கோடுகள்:

  • நிலநடுக்கோடு 0°
  • கடகரேகை 23 1/2° வ
  • மகரரேகை 23 1/2° தெ
  • ஆர்க்டிக் வட்டம் 66 1/2°
  • அண்டார்டிக் வட்டம் 66 1/2° தெ
  • வடதுருவம் 90°வ
  • தென்துருவம் 90° தெ
    புவி சூரியனிடமிருந்து பெறுகின்ற வெப்பத்தின் அடிப்படையில் பல காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்படுகிறது.

வெப்ப மண்ட லம் (Torrid Zone)
நிலநடுக்கோட்டின் இருபக்கங்களிலும் கடகரேகை மற்றும் மகர ரேகை இடையே அமைந்துள் ள பகுதியே வெப்பமண்டலம் என அழைக்கப்படுகிறது. சூரிய கதிர்கள் செங்குத்தாக விழுவதால் இப்பகு தி அதிக வெப்பமடைகிறது. எனவே காலநிலை வெப்பம் மற்றும் ஈரப்பதமாக இருக்கும்.

மித வெப்ப மண்ட லம் (Temperate Zone)
இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது. இது இரண்டு அரைக்கோளங்களிலும் வெப்ப மண்டலத்திற்கும், குளிர் மண்டலத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.

குளிர் மண்ட லம் (Frigid Zone)
ஆர்க்டிக் வட்டம் மற்றும் வட துருவத்திற்கும் அண்டார்டிக் மற்றும் தென் துருவத்திற்கும் இடையிலான பகுதி குளிர்மண்டலம் என அழைக்கப்படுகிறது. சூரிய கதிர்கள் ஆண்டு முழுவதும் மிக வும் சாய்ந்த நிலையில் விழுவதால் இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது.

Question 4.
இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக.
விடை:

  • இந்தியாவின் தீர்க்கக் கோடுகளின் பரவல் 68°7′ கிழக்கு முதல் 97°25′ கிழக்கு வரை உள்ளது.
  • சுமார் 29 தீர்க்கக்கோடுகள் இந்தியாவின் வழியே செல்கின்றன.
  • இந்தியாவிற்கு 29 திட்டநேரங்கள் கணக்கிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே இந்தியாவின் மையத்தில் செல்லும் 82 1/2° கிழக்கு தீர்க்கக் கோட்டினை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் ISI (Indian Standard time) கணக்கிடப்படுகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

செயல்பாடு

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள வலைப்பின்னலில் (Grid) ஐந்து இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் உற்று நோக்கி கொடுக்கப்பட்டுள்ள கோடிட்ட இடங்களில் அவற்றின் அட்சதீர்க்க அளவைகளைக் குறிக்கவும்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 90
புவிவலைப்பின்னல்
1. A அட்ச தீர்க்கப்பரவல் 40° வ 30° மே
2. B தீர்க்க ப்பரவல் 20° வ 10° A
3. C தீர்க்க ப்பரவல் 10° வ 20° கி
4. D தீர்க்கப்பரவல் 40° தெ 50° A
5. E தீர்க்கப்பரவல் 20° தெ 20 மே

6th Social Science Guide புவி மாதிரி Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
புவி ………. மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.
விடை:
510.1

Question 2.
……… என்பவர் முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவராவார்.
விடை:
தாலமி

Question 3.
………. என்னுமிடத்தில் ‘இராயல் வானியல் ஆய்வுமையம்’ அமைந்துள்ளது.
விடை:
கிரீன்விச்

Question 4.
புவியில் திசைகளைக் சுட்டிக் காண்பிக்கும் பொழுது …… திசையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
விடை:
வடக்கு

Question 5.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கும் …… திசைகளாகும்.
விடை:
அடிப்படை

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
23 1/2° வடக்கு முதல் 66 1/2% வடக்கு வரையிலும், 23 1/2° தெற்கு முதல் 66 1/2° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ….. அழைக்கப்படுகின்றன.
அ) தாழ் அட்சக்கோடுகள்
ஆ) மத்திய அட்சக்கோடுகள்
இ) உயர் அட்சக்கோடுகள்
விடை:
ஆ) மத்திய அட்சக்கோடுகள்

Question 2.
சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி
அ) குளிர்மண்டலம்
ஆ) மித வெப்பமண்டலம்
இ) வெப்பமண்டலம்
விடை:
இ) வெப்பமண்டலம்

Question 3.
23 1/2° வட அட்சக்கோடு …… என்றும் அழைக்கப்படுகிறது.
அ) கடகவரை
ஆ) நிலநடுவரை
இ) மகரவரை
விடை:
அ) கடகவரை

Question 4.
அட்சக்கோடுகள் ……. என்றும் அறியப்படுகிறது.
அ) நிலவாங்கு
ஆ) அகலாங்கு
இ) நெட்டாங்கு
விடை:
ஆ) அகலாங்கு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி

Question 5.
1884 ஆம் ஆண்டு பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்பட்ட நாடு
அ) கனடா
ஆ) மெக்ஸிகோ
இ) வாஷிங்டன்
விடை:
இ) வாஷிங்டன்

III. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
இது யார் கூற்று?
”விண்மீன்கள் வானில் மேற்குப் புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது.”
விடை:
ஆரியபட்டர் – இந்திய வானியல் அறிஞர்

Question 2.
‘Geographia’ என்னும் நூலை எழுதியவர் யார்?
விடை:
தாலமி (கிரேக்க ரோமானிய கணித வல்லுநர், வான் ஆய்வாளர் மற்றும் புவியியல் ஆய்வாளர்)

Question 3.
எந்த நாட்டில் 7 நேர மண்டலங்கள் உள்ளன?
விடை:
ரஷ்யா

IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
மெரிடியன் – வரையறு
விடை:
மெரிடியன் (Meridian) என்ற சொல் மெரிடியானஸ் (Meridianies) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிருந்து வந்ததாகும்:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 9
என்பது சூரியன் ஓர் இடத்தின் நேர் மேலே உச்சியில் உள்ளதைக் குறிக்கிறது.

Question 2.
அச்சு என்றால் என்ன?
விடை:

  • கோளம் சுற்றி வருவதாக கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை செங்கோடு
  • புவி தனது அச்சில் வட துருவத்திற்கும், தென் துருவத்திற்கும் இடையே சுற்றுகின்றது.

Question 3.
அரைக்கோளம் என்றால் என்ன?
விடை:
பூமியின் நடுவில் வரையப்பட்டுள்ள நில நடுக்கோட்டு பூமியை வடபகுதி, தென்பகுதி என இரு பகுதி களாக பிரித்திருப்பதே அரைக்கோளமாகும். (அல்லது) துருவத்தில் இருந்து மேல் கீழாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடு பிரித்து இருக்கும் பகுதிகளை அரைக்கோளம் என்பர்.

V. விரிவான விடையளி

Question 1.
காலநிலை மண்டலங்களை வரைக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 95

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 2 புவி மாதிரி 100

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

6th Social Science Guide ஆசியா மற்றும் ஐரோப்பா Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?
அ) கருங்கடல்
ஆ) மத்திய தரைக்கடல்
இ) செங்கடல்
ஈ) அரபிக்கடல்
விடை:
ஈ) அரபிக்கடல்

Question 2.
எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடையில் அமைந்துள்ள மலையிடைப் பீடபூமி
அ) தீபெத்
ஆ) ஈரான்
இ) தக்காணம்
ஈ) யுனான்
விடை:
ஆ) ஈரான்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 3.
நிலநடுக்கோட்டுக் காலநிலை என்பது –
i) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்
ii) சராசரி மழையளவு 200 மி.மீ ஆகும்.
iii) சராசரி வெப்பநிலை10°C ஆகும். மேற்கண்ட கூற்றுகளில்
அ) i மட்டும் சரி
ஆ) ii மட்டும் iii சரி
இ) i மற்றும் iii சரி
ஈ) மற்றும் ii சரி
விடை:
அ) 1 மட்டும் சரி

Question 4.
பட்டியல் I ஐ பட்டியல் | உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 1
விடை:
அ) 2, 3, 4, 1

Question 5.
இந்தியா ……. உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.
அ) துத்தநாகம்
ஆ) மைக்கா
இ) மாங்கனீசு
ஈ) நிலக்கரி
விடை:
ஆ) மைக்கா

Question 6.
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடையில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை
அ) ஆல்ப்ஸ்
ஆ) பைரனீஸ்
இ) கார்பேதியன்
ஈ) காகஸஸ்
விடை:
ஆ) பைரனீஸ்

Question 7.
‘ஐரோப்பாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது. சரியான தெரிவினைத் தேர்வு செய்க.
அ) இந்தப் பகுதிகள் நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.
ஆ) இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன.
இ) இப்பகுதிகளைச் சுற்றி மலைகள் காணப்படுகின்றன.
ஈ) மேற்கண்ட அனைத்தும் சரி
விடை:
ஆ) இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

Question 8.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
அ) ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.
ஆ) ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன.
இ) ஐரோப்பாவின் பெரும்பாலான ஆறுகள் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.
ஈ) ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்.
விடை:
ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன.

Question 9.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) மெஸ்டா – ஸ்பெயின்
ஆ) ஜூரா – பிரான்ஸ்
இ) பென்னின்ஸ் – இத்தாலி
ஈ) கருங்காடுகள் – ஜெர்மனி
விடை:
இ) பென்னின்ஸ் – இத்தாலி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 10.
ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?
அ) ஐஸ்லாந்து
ஆ) நெதர்லாந்து
இ) போலந்து
ஈ) சுவிட்சர்லாந்து
விடை:
அ) ஐஸ்லாந்து

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தாரஸ் மற்றும் போன்டைன் மலைத்தொடர்கள் ……… முடிச்சிலிருந்து பிரிகின்றது.
விடை:
ஆர்மினியன்

Question 2.
உலகின் மிக ஈரப்பதமான இடம் ……….
விடை:
மௌசின்ராம்

Question 3.
உலகிலேயே ………… உற்பத்தியில் ஈரான் முன்னிலையில் உள்ளது.
விடை:
பேரீச்சம் பழங்கள்

Question 4.
ஐரோப்பாவையும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் கடல்வழி …..
விடை:
சூயஸ் கால்வாய்

Question 5.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய நடனம் ……..
விடை:
டினிக்லிங்

Question 6.
ஐரோப்பாவின் இரண்டாம் இரண்டாவது உயரமான சிகரம் ……..
விடை:
மாண்ட் பிளாங்

Question 7.
ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் நிலவும் காலநிலை ………
விடை:
கண்ட காலநிலை

Question 8.
வட கடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம் ………..
விடை:
டாகர் பாங்க்ஸ் (Dogger Banks)

Question 9.
ஐரோப்பாவின் மக்களடர்த்தி …….
விடை:
சதுர கிலோமீட்டருக்கு 34 நபர்கள்

Question 10.
…………. ஆறு ஐரோப்பாவில் உள்ள ஒன்பது நாடுகளைக் கடந்து செல்கின்றது.
விடை:
டான்யூப்

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 80
விடை:
1. யூப்ரடீஸ் சடைக்ரிஸ்
2. அதிக மழை
3. தாய்லாந்து
4. நார்வே
5. ஸ்பெயின்

IV. மேலும் கற்கலாம்

Question 1.
கூற்று (A) : இத்தாலி, வறண்ட கோடை காலத்தையும், குளிர்கால மழையையும் பெற்றுள்ளது.
காரணம் (R) : இது மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது.
அ. (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் ஆகும்.
ஆ. (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
இ. (A) சரி. ஆனால் (R) தவறு.
ஈ. (A) தவறு. ஆனால் (R) சரி
விடை:
ஈ. (A) தவறு. ஆனால் (R) சரி

Question 2.
கொடுக்கப்பட்ட ஆசியா வரைபடத்தில் குறி குறியீடுகள் : க்கப்பட்டுள்ள 1, 2, 3 மற்றும் 4 என்பன கீழ் கண்ட சமவெளிகளைக் குறிக்கின்றன.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 85
A. சிந்து – கங்கை சமவெளி
B. மஞ்சூரியன் சமவெளி
C. மெசபடோமியா சமவெளி
D. சீனச் சமவெளி

வரைபடத்தில் உள்ள எண்ணுடன் சமவெளிகளைப் பொருத்தி, பின் கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 86
விடை :
ஆ) 2 1 3 4

Question 3.
கொடுக்கப்பட்டுள்ள ஆசியா வரைபடத்தில் நிழலிடப்பட்ட பகுதியில் விளையும் பயிர்வகை
அ) கரும்பு
ஆ) பேரிச்சம்பழம்
இ) ரப்பர்
ஈ) சணல்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 87
விடை:
ஆ) பேரிச்சம்பழம்

V. சுருக்கமான விடையளி

Question 1.
ஆசியாவில் உள்ள முக்கிய மலையிடைப் பீடபூமிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அனடோலிய பீடபூமி
  • ஈரான் பீடபூமி
  • திபெத்திய பீடபூமி

Question 2.
‘மான்சூன் காலநிலை பற்றி சுருக்கமாக எழுதுக.
விடை:

  • தெற்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப்பகுதிகள் பருவக்காற்றுகளின் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும்.
  • கோடை காலம் அதிக வெப்பமும் ஈரப்பதத்துடனும், குளிர்காலம் வறண்டும் காணப்படும்.
  • கோடை காலப் பருவமழைக் காற்றுகள் இந்தியா, வங்காள தேசம், இந்தோ – சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீனா ஆகிய இடங்களுக்கு அதிக மழைப்பொழிவைத் தருகின்றன..

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 3.
நிலத்தோற்றங்கள் ஆசியாவின் மக்கள் தொகை பரவலை எவ்வாறு பாதிக்கின்றது?
விடை:

  • உலக மக்கள் தொகையில் பத்தில் ஆறுபங்கு ஆசியாவில் காணப்படுகிறது. பல்வேறுபட்ட – இயற்கைக் கூறுகளினால் ஆசியாவின் மக்கட்பரவல் சீரற்றுக் காணப்படுகிறது.
  • ஆற்றுச் சமவெளிகள் மற்றும் தொழிற்பகுதிகள் அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. உட்பகுதிகளில் மக்கள் அடர்த்தி மிகக் குறைந்து காணப்படுகிறது. (சதுர கிலோமிட்டருக்கு 143நபர்கள்)

Question 4.
ஆசியாவில் காணப்படும் முக்கிய துறைமுகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • டோக்கியோ
  • ஷங்காய்
  • சிங்கப்பூர்
  • ஹாங்காங்
  • சென்னை
  • மும்பை
  • கராச்சி
  • துபாய்

Question 5.
‘வேறுபாடுகளின் நிலம்’ ஆசியா நிரூபி.
விடை:
உலகின் மிகப்பெரிய கண்டமான ஆசியா வேற்றுமையின் இருப்பிடம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில்

  • ஆசியா பல்வேறுபட்ட நிலத்தோற்றங்களைக் கொண்டது (மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், விரிகுடாக்கள், தீவுகள்)
  • அது பல்வேறு காலநிலைகளைக் கொண்டது (நிலநடுக்கோட்டிலிருந்து துருவப்பகுதி வரை)
  • பல இனங்கள், மொழிகள், சமயங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆசிய மக்களால் பின்பற்றப் படுகின்றன.

Question 6.
ஆல்பைன் மலைத்தொடரில் உள்ள முக்கிய மலைகள் யாவை?
விடை:

  • சியாரா நெவேடா பைரினீஸ்
  • ஆல்ப்ஸ்
  • அப்னின்ஸ்
  • டினாரிக் ஆல்ப்ஸ்
  • காகசஸ்
  • கார்பேதியன்

Question 7.
ஐரோப்பாவின் முக்கிய ஆறுகள் யாவை?
விடை:

  • வோல்கா
  • டான்யூப்
  • நீப்பர் ரைன்
  • ரோன்
  • போ
  • தேம்ஸ்

Question 8.
ஐரோப்பாவில் மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்ட நாடுகளின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.
விடை:

  • பிரான்ஸ்
  • ஸ்பெயின்
  • இத்தாலி
  • சிசிலி

Question 9.
ஐரோப்பாவின் மக்கள் தொகையைப் பற்றிச் சிறு குறிப்புத் தருக.
விடை:

  • ஐரோப்பா கண்டம் ஆசியா, ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டது.
  • 2018ல் ஐரோப்பாவின் மக்கள்தொகை 742 மில்லியன் (உலக மக்கள் தொகையில் 9.73 சதவீதம்) ஐரோப்பிய மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 34 நபர்கள்

Question 10.
ஐரோப்பாவில் கொண்டாடப்படும் விழாக்கள் சிலவற்றின் பெயர்களைக் குறிப்பிடு.
விடை:

  • கிறிஸ்துமஸ்
  • ஈஸ்டர்
  • புனித வெள்ளி
  • புனிதர்கள் நாள்
  • ரெடன்டோர்
  • டோமாட்டினா
  • கார்னிவல்

VI. வேறுபடுத்துக்

Question 1.
மலையிடைப் பீடபூமி மற்றும் தென்பீடபூமி
விடை:
மலையிடைப் பீடபூமி

  • அனடோலிய பீடபூமி
    (போன்டைனிலிருந்து டாரஸ்மலை வரை)
  • ஈரான் பீடபூமி
    (எல்பர்ஸிருந்து ஜாக்ரோஸ் வரை)
  • திபெத்திய பீடபூமி
    (குன்லுனிலிருந்து இமயமலை வரை)

தெற்கு பீடபூமிகள்

  • அரேபிய பீடபூமி (சௌதி அரேபியா)
  • தக்காண பீடபூமி (இந்தியா)
  • ஷான் பீடபூமி (மியான்மர்)
  • யுனான் பீடபூமி (சீனா)
    இப்பீடபூமிகள் வடக்கு பீடபூமிகளைக்
    காட்டிலும் உயரம் குறைந்து காணப்படுகின்றன.

Question 2.
வெப்பப் பாலைவனம் மற்றும் குளிர்பாலைவனம்
விடை:
வெப்பப் பாலைவனம்

  • அரேபிய பாலைவனம் (சௌதி அரேபியா)
  • தார் பாலைவனம்
    (இந்தியா மற்றும் பாகிஸ்தான்)

குளிர்பாலைவனம்

  • கோபி பாலைவனம்
  • தக்லாமக்கன் பாலைவனம்
    ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம்
    அரேபிய பாலைவனமாகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 3.
தூந்திரா மற்றும் டைகா
விடை:
தூந்திரப்பிரதேசம்

  • ஆர்டிக் மற்றும் வட ஸ்காண்டினேவிய உயர்நிலங்கள் தூந்திர வகை இயற்கைத் தாவரங்களைக் கொண்டுள்ளன.
  • இங்கு லிச்சன்ஸ் மற்றும் பாசி வகைகள் காணப்படுகின்றன.
    டைகா (ஊசியிலைக்காடுகள்)
  • தூந்திரப்பிரதேசத்தின் தெற்கில் அமைந்துள்ள நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் டைகா (ஊசியிலை) காடுகள் காணப்படுகின்றன.
  • இக்காடுகளில் பைன், ஃபிர், ஸ்புரூஸ் மற்றும் லார்ச் போன்ற முக்கிய மரவகைகள் காணப் படுகின்றன.

Question 4.
வடமேற்கு மேட்டு நிலம் மற்றும் ஆல்பைன் மலைத்தொடர்
விடை:
வடமேற்கு உயர்நிலங்கள்

  • இப்பிரதேசம், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மலைகள் ற்றும் பீடபூமிகளை உள்ளடக்கியது.
  • இது பிளவுபட்ட கடற்கரையினைக் கொண்டது. இக்கடற்கரைகள் பனியாறுகளால் உருவானவை.
  • இங்குள்ள அதிகமான ஏரிகள் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களாக செயல்படுகின்றன.
  • ஆல்பைன் மலைத்தொடர் ஆல்பைன் மலைத்தொடர் தெற்கு ஐரோப்பிய பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான இளம் மடிப்பு மலைகள் ஆகும்.
  • சியாரா நெவேடா, பைரினீஸ், ஆல்ப்ஸ், அப்னின்ஸ், டினாரிக் ஆல்ப்ஸ், காகசஸ் மற்றும் கார்பேதியன் ஆகியவை முக்கிய மலைத்தொடர்கள்.
  • பைரனீஸ் மலைகள் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் இயற்கை எல்லையாக விளங்குகின்றன.

VII. காரணம் தருக

Question 1.
ஆசியா, அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
விடை:
ஆசியா அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது ஏனெனில்

  • ஆசியாவின் முக்கிய உணவுப் பயிர்களில் நெல் (அரிசி) ஒன்றாகும். உலகிலேயே மிக அதிகமாக நெல் உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் இந்தியா
  • மியான்மர், ஜப்பான், வங்காளதேசம், தாய்லாந்து ஆகியவை பிற நெல்விளைவிக்கும் நாடுகள்.
  • அதிக மழைப்பொழிவு, செழுமை வாய்ந்த சமவெளிகள் மற்றும் மனிதவளம் அகியவற்றை
    பெற்றிருப்பதால் பருவமழை பெய்யும் ஆசியப்பகுதிகள் நெல்விளைய ஏற்ற பகுதிகளாகத் திகழ்கின்றன.
  • தென்கிழக்கு ஆசியாவின் ‘அரிசிக்கிண்ணம்’ என தாய்லாந்து அழைக்கப்படுகிறது.

Question 2.
ஆசியா உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். ஆசியா உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். ஏனெனில்
விடை:

  • வட அரைக்கோளத்தில் பரவியுள்ள ஆசியாவின் பெரும்பாலான நிலப்பரப்பு பல வகையான நிலத்தோற்றம் மற்றும் கலாச்சாரக் கூறுகளைக் கொண்டுள்ளது.
  • உயர்ந்த மலைகள், பீடபூமிகள், பரந்த சமவெளிகள், தீவுகள் மற்றும் தீபகற்பங்கள் ஆகியவை – மக்கிய இயற்கை நிலத் தோற்றங்களாகும்.
  • வற்றாத ஆறுகள் பல்வேறு நிலப்பரப்புகளில் பாய்கின்றன. இந்த ஆற்றுப் பள்ளத்தாக்குகள் பழமையான நாகரிகங்களின் தொட்டிலாகும்.
  • ஆற்றுச் சமவெளிகள் மற்றும் தொழிற்பகுதிகள் அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. உட்பகுதிகளில் மக்கள் அடர்த்தி குறைந்து காணப்படுகிறது. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 143 நபர்கள்.
  • ஆசியா உலகின் பரப்பளவில் 30 சதவீதத்தையும் மக்கள் தொகையில் 60 சதவீதத்தையும், உள்ளடக்கியது.

Question 3.
ஐரோப்பா மிகப்பெரிய தீபகற்பம் என அழைக்கப்படுகின்றது.
விடை:
ஐரோப்பா மிகப்பெரிய தீபகற்பம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில்

  • ஐரோப்பா வட அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.
  • அது 10.5 மில்லியன் ச.கிமீ பரப்பளவைக் கொண்டது.
  • அது வடக்கே ஆர்டிக் பெருங்கடல், தெற்கே கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் கிழக்கே யூரல் மலைகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

Question 4.
மேற்கு ஐரோப்பாவானது உயர் அட்சப் பகுதியில் அமைந்திருந்தாலும் மிதமான கால நிலையைப் பெற்றுள்ளது.
விடை:
மேற்கு ஐரோப்பா உயர் அட்சப் பகுதியில் அமைந்திருந்தாலும் மிதமான காலநிலையைப் பெற்றுள்ளது ஏனெனில்

  • வட அட்லாண்டிக் நீரோட்டத்தினால் மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிகள் பொதுவாக லேசான ஈரப்பதமான காலநிலையைக் கொண்டிருக்கும்.
  • வட அட்லாண்டிக் வெப்பக்கடல் நீரோட்டம் ஐரோப்பாவின் மேற்கு பகுதிக்கு மிதமான வெப்பத்தை அளிக்கிறது.

VIII. ஒரு பத்தியில் விடையளி

Question 1.
ஆசியாவின் வடிகால் அமைப்பைப் பற்றி விவரி?
விடை:

  • ஆசியாவின் பெரும்பான்மையான ஆறுகள் மத்திய உயர் நிலங்களில் தோன்றுகின்றன.
  • ஓப், எனிசி, லேனா ஆகிய முக்கிய ஆறுகள் வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. இவை குளிர்காலத்தில் உறைந்துவிடுகின்றன.
  • வற்றாத ஆறுகளான பிரம்மபுத்திரா, சிந்து, கங்கை, ஐராவதி போன்றவை உயர்ந்த மலைகளில் தோன்றுகின்றன. இவை குளிர் காலத்தில் உறைவதில்லை.
  • யூப்ரடிஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் மேற்கு ஆசியாவில் பாய்கின்றன.
  • அமூர், ஹோவாங்கோ, யாங்சி மற்றும் மீகாங் போன்றவை தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் பாய்கின்றன. யாங்சி ஆசியாவின் மிக நீளமான ஆறு.

Question 2.
ஆசியாவில் காணப்படும் முக்கிய தாதுக்களைப் பற்றி விவரி?
விடை:
ஆசியாவில் காணப்படும் முக்கிய தாதுக்கள்:
இரும்புத்தாது : ஆசியா உலகிலேயே மிக அதிகமான இரும்புத்தாது வளத்தைக் கொண்டுள்ளது. சீனா, இந்தியா, துருக்கி, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இரும்புத்தாது இருப்புள்ள நாடுகளாகும்.

நிலக்கரி : நிலக்கரி படிம எரிபொருள். உலகிலேயே அதிக நிலக்கரி இருப்பு ஆசியாவில்தான் உள்ளது. ஆசியாவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் இந்தியா.

பெட்ரோலியம் : பெட்ரோலியம் கனிம எண்ணெய் வளம். பெட்ரோலிய இருப்புகள் தென் மேற்கு ஆசியாவில்தான் அதிகமாக காணப்படுகின்றன. சௌதி அரேபியா, குவைத், ஈரான், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரேபிய குடியரசு ஆகியன பெட்ரோலிய உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள். தெற்கு சீனா, மலேசியா, புரூனே, இந்தோனேசியா, இந்தியா, ரஷ்யா போன்றவை பெட்ரோலிய உற்பத்தி செய்யும் பிற நாடுகள்.

  • பாக்ஸைட் இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் காணப்படுகிறது.
  • மைக்கா அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு இந்தியா.
  • தகரம் மியான்மர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

Question 3.
பிளவுபட்ட கடற்கரை என்றால் என்ன? துறைமுகங்களை எவ்வாறு அது மோசமான காலநிலையில் இருந்து பாதுகாக்கின்றது?
விடை:

  • செங்குத்தான பாறைகளுக்கிடையே உள்ள குறுகிய, ஆழமான கடற்கரை பிளவுபட்ட கடற்கரை ஆகும்.
  • இவை காற்று எத்திசையிலிருந்து வீசினாலும் அதன் வேகத்தைக் குறைக்கின்றன.
  • கடல் அலைகளின் வேகத்தையும் இவை கட்டுக்குள் வைக்கின்றன.
  • கடந்த காலங்களில் நடைபெற்ற பனியாறுகளினால் உருவானவை பிளவுபட்ட கடற்கரைகள்
  • பிளவுபட்ட கடற்கரையானது இயற்கை துறைமுகங்கள் அமைவதற்கு ஏற்றதாக உள்ளது. எ.கா. நார்வே.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 4.
ஐரோப்பாவின் காலநிலைப் பிரிவுகளைப் பற்றி விவரி?
விடை:

  • ஐரோப்பிய காலநிலை மித வெப்ப மண்டல காலநிலை முதல் துருவ காலநிலை வரை வேறுபட்டுக் காணப்படுகிறது…
  • தென்பகுதியில் காணப்படும் மத்திய தரைக்கடல் பகுதி காலநிலை மிதமான கோடைகாலமும் குளிர்கால மழையும் கொண்டது.
  • மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் வட அட்லாண்டிக் நீரோட்டத்தினால் பொதுவாக லேசான. ஈரப்பதம் வாய்ந்த காலநிலையைக் கொண்டிருக்கும்.
  • மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் காலநிலை ஈரப்பதம் வாய்ந்த கண்ட காலநிலை
  • வடகிழக்கில் துணை துருவ மற்றும் தூந்திரக் காலநிலை காணப்படுகிறது.
  • ஐரோப்பா முழுவதும் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து வீசுகின்ற மேற்கத்திய காற்றுகளின் மிதமான தாக்கத்திற்கு உட்படுகின்றது.

X. செயல்பாடு

Question 1.
கீழ்க்கண்டவற்றைப் பூர்த்தி செய்க.
என்னுடைய மாவட்டம் ……… என் மாவட்டம் 1………. 2 ……… 3 ……….. க்குப் புகழ் பெற்றது. என் மாவட்டத்தின் எல்லைகள், வடக்கே … … கிழக்கே ……….. தெற்கு ……… மற்றும் மேற்கே ……. ஆகும். இது ……. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது …… வட்டங்களையும், …………. கிராமங்களையும் கொண்டுள்ளது……………………… ஆகியன முக்கிய மலைகள் / சமவெளிகள் /பீடபூமிகள் ஆகும். (அனைத்தும் இருந்தாலும் எழுதவும்) ………… ஆறுகள் என் மாவட்டத்தில் பாய்கின்றன. ……….. . ஆகிய மரங்களும் ………………….. ஆகிய வனவிலங்குகளும் உள்ள ன…………. …………… போன்ற முக்கிய தனிமங்கள் இங்குக் கிடைக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு ……………… தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன. இங்கு விளையும் முக்கிய பயிர்கள் …
………… ஆகும். (கடலோர மாவட்டம் என்றால் மீன் வகைகள்) மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை …………. நாங்கள் ……….. விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.
விடை:
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், குற்றாலம், அல்வா, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலை, 16 வட்டங்கள், 559 கிராமங்கள், பொதிகை மலை, தாமிரபரணி சமவெளி, தக்காணப் பீடபூமி விளிம்பு, தாமிரபரணி, சிற்றாறு, மணிமுத்தாறு, பனை, வேம்பு, தென்னை , குரங்குகள், புலிகள், யானைகள், கருங்கல், சுண்ணாம்புக்கல், தோரியம், சிமெண்ட், பருத்தி ஆலை, பாத்திரங்கள், நெல், பருத்தி, கரும்பு, 3322644, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ்,

2. ஐரோப்பாவை இருப்பிடமாகக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நீ எந்த நாட்டை தேர்வு செய்வாய்? காரணங்களைப் பட்டியலிடுக.

3. ஆசியாவின் ஏதாவது ஒரு பிரதேசத்தைத் தேர்வு செய்க. ஆசியா வரைபடத்தில் இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரவலைக் குறிக்கவும். அது தொடர்பான படங்களை ஒட்டி வரவும்.

6th Social Science Guide ஆசியா மற்றும் ஐரோப்பா Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆசியாவை ஆப்பிரிக்காவிடம் இருந்து பிரிப்பது
அ) சூயஸ் கால்வாய்
ஆ) பேரிங் நீர்ச்சந்தி
இ) மத்திய தரைக்கடல்
ஈ) பாக் நீர்ச்சந்தி
விடை:
அ) சூயஸ் கால்வாய்

Question 2.
உலகின் தாழ்வான பகுதி
அ) கருங்கடல்
ஆ) செங்கடல்
இ) சாக்கடல்
ஈ) மஞ்சள் கடல்
விடை:
இ) சாக்கடல்

Question 3.
தெற்காசியாவில் பாயும் ஆறுகள்
i) குளிர்காலத்தில் உறையும்
ii) வடக்கு நோக்கிப் பாயும்
iii) வற்றாத ஆறுகள்
அ) i மட்டும் சரி
ஆ) iii மட்டும் சரி
இ) மூன்றும் சரி
ஈ) மூன்றும் தவறு
விடை:
ஆ) iii மட்டும் சரி

Question 4.
ஆசிய மொத்தப்பரப்பில் வேளாண்மைக்கு ஏற்ற நிலப்பரப்பு
அ) 18%
ஆ) 28%
இ) 40%
ஈ) 48%
விடை:
அ) 18%

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 5.
யாங்சி ஆறு பாயும் நாடு
அ) இந்தியா
ஆ) ஜப்பான்
இ) மியான்மர்
ஈ) சீனா
விடை:
ஈ) சீனா

Question 6.
வங்காளவிரிகுடாவில் அமைந்துள்ள தீவு
அ) மாலத்தீவு
ஆ) பஹ்ரைன்
இ) இலங்கை
ஈ) ஜப்பான்
விடை:
இ) இலங்கை

Question 7.
பொருந்தாத இணையைக் கண்டறி
அ) சைபீரிய சமவெளி – ஓப், எனிசி
ஆ) மஞ்சூரியன் சமவெளி – அமூர்
இ) சீன பெருஞ்சமவெளி – யாங்சி, சிகியாங்
ஈ) மெசபடோமிய சமவெளி – ஐராவதி
விடை:
ஈ) மெசபடோமிய சமவெளி – ஐராவதி

II. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 90
விடை:
1. கால்வாய்
2. நீர்ச்சந்தி
3. முடிச்சு
4. கணவாய்
5. பாலைவனம்

III. சரியா தவறா

Question 1.
ஆசியாவில் இரு மலை முடிச்சுகள் காணப்படுகின்றன.
விடை:
சரி

Question 2.
ஓப், எனிசி, லேனா ஆகியவை குளிர்காலத்தில் உறைந்து விடுகின்றன.
விடை:
சரி

Question 3.
தேக்கு, சந்தனம் ஊசியிலைக்காட்டு மரங்கள்
விடை:
தவறு

Question 4.
பிளவுபட்ட கடற்கரைப் பகுதியில் ஏரிகள் அதிகமாக உள்ளன.
விடை:
சரி

Question 5.
ஐரோப்பா முழுவதும் காணப்படும் முதன்மையான பயிர் கோதுமை
விடை:
சரி

IV. சுருக்கமான விடையளி

Question 1.
நாகரிகங்களின் தொட்டில் எது? ஏன்?
விடை:

  • ஆற்றுப் பள்ளத்தாக்குகள் நாகரிகங்களின் தொட்டிலாகும்.
  • ஏனெனில் பழமையான மெசபடோமியா நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் மற்றும் சீன நாகரிகம் ஆகி யன ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் தோன்றின.

Question 2.
தீவுக்கூட்டம் பற்றி நீ அறிந்ததென்ன?
விடை:

  • ஒன்றிணைக்கப்பட்ட பல தீவுகள், தீவுக்கூட்டம் என அழைக்கப் படுகிறது.
  • இந்தோனேசியா மிகப்பெரிய தீவுக்கூட்டம்

Question 3.
ஆசியாவில் காணப்படும் அரியவகை விலங்கினங்கள் எவை?
விடை:

  • உராங்குடான்
  • கோமோடோ டிராகன்
  • பெரிய பாண்டாக் கரடி

Question 4.
மத்திய தரைக்கடல் பகுதி மரங்கள் யாவை?
விடை:

  • சைப்ரஸ்
  • கார்க்
  • ஓக்
  • ஆலிவ்
  • செடார்

Question 5.
மீன் பிடித்தல் மிகப்பெரிய தொழிலாக நடைபெறும் நாடுகள் யாவை?
விடை:

  • நார்வே
  • ஐஸ்லாந்து
  • ரஷ்யா
  • டென்மார்க்
  • ஐக்கிய பேரரசு
  • நெதர்லாந்து

V. காரணம் கூறுக

Question 1.
ஐரோப்பா புதுமை வாய்ந்த பொருளாதார முன்னேற்றமடைந்த கண்டம்
விடை:
ஐரோப்பா புதுமை வாய்ந்த பொருளாதார முன்னேற்றமடைந்த கண்டம்
ஏனெனில்
கிடைக்கப்பெறும் வளங்கள், ஆற்றலுடைய படித்த வேலையாட்கள், ஆராயும் தன்மை, மற்ற நாடுகளுடனான தொடர்பு, புதுமையை நாடுதல் ஆகிய காரணிகள் அவ்வாறு மாற்றியுள்ளது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 2.
ஐரோப்பாவில் பல்வேறு வகையான வேளாண்முறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
விடை:
ஐரோப்பாவில் பல்வேறு வகையான வேளாண் முறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
ஏனெனில்

  • ஐரோப்பா தொழில் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஐரோப்பா நில அமைப்பு, காலநிலை, மண் ஆகியவற்றில் வேறுபட்டு காணப்படுகிறது.
  • இவை ஒன்றுடன் ஒன்று இடைவினை ஆற்றுவதால் பல்வேறு வேளாண் முறைகள் பயன் பாட்டில் இருக்கின்றன.
    (பயன்பாட்டில் உள்ள வேளாண் முறைகள் : மத்திய தரைப்பகுதி வேளாண்மை, பால் பண்ணை , கலப்புக் கால்நடை வளர்ப்பு, பயிர் வளர்ப்பு)

Question 3.
நிலநடுக்கோட்டுப் பகுதியில் குளிர்காலம் இல்லை.
விடை:
நிலநடுக்கோட்டுப் பகுதியில் குளிர்காலம் இல்லை.
ஏனெனில்
நிலநடுக்கோட்டிலும் அதனைச் சுற்றிலும் காணப்படுகின்ற ஆசியப் பகுதியிலும் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான காலநிலை உள்ளது. குளிர்காலம் இல்லை . சராசரி வெப்பம் 27°C. சராசரி மழைப்பொழிவு 1270மி.மீ.

VII. ஒரு பத்தியில் விடையளி

Question 1.
ஐரோப்பாவில் காணப்படும் தொழில்கள் குறித்து விவரி.
விடை:

  • பெருந்தொழில்கள் : எஃகு மற்றும் இரும்புத்தாது உற்பத்தி, கப்பல் கட்டுதல், மோட்டார் வாகனங்கள், விமானம் தயாரித்தல், மருந்து வகைகள்.
  • நிலைத்த தன்மையற்ற பொருட்களைத் தயாரிக்கும் சிறு தொழிலகங்கள் ஐரோப்பா முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.
  • சில நாடுகள் தங்கள் நாட்டுக்கென சிறப்பம்சம் பொருந்திய பொருட்களைத் தயாரிக்கின்றன.
    மிதிவண்டிகள் – இங்கிலாந்து, இத்தாலி, டச்சு
    கண்ணாடிகள் – சுவிடன், பின்லாந்து
    வாசனை திரவியங்கள்
    மற்றும் அழகு சாதனப்
    பொருட்கள் – பாரிஸ்
    துல்லியமான கருவிகள் – சுவிஸ்

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

6th Social Science Guide தென்னிந்திய அரசுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் நந்திவர்மன்
இ) தந்திவர்மன்
ஈ) பரமேஸ்வரவர்மன்
விடை:
ஆ) இரண்டாம் நந்திவர்மன்

Question 2.
கீழ்க்காண்பனவற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?
அ) மத்தவிலாசன்
ஆ) விசித்திரசித்தன்
இ) குணபாரன்
ஈ) இவை மூன்றும்
விடை:
ஈ) இவை மூன்றும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

Question 3.
கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
அ) அய்கோல்
ஆ) சாரநாத்
இ) சாஞ்சி
ஈ) ஜூனாகத்
விடை:
அ) அய்கோல்

II. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்துப் பொருத்தமான விடையை மக் செய்யவும்

Question 1.
கூற்று (i) : பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.
கூற்று (ii) : காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
அ. கூற்று i தவறு
ஆ) கூற்று ii தவறு
இ. இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
விடை:
இ. இரு கூற்றுகளும் சரி

Question 2.
பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுக்களைச் சிந்திக்கவும்
கூற்று (i) : இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்ட தேவாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.
கூற்று (ii) : முதலாம் மகேந்திரவர்மன் மத்த விலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்
அ: கூற்று i மட்டும் சரி
ஆ) கூற்று ii மட்டும் சரி
இ. இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
விடை:
இ. இரு கூற்றுகளும் சரி

Question 3.
ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுக்களைச் சிந்தித்து அவற்றில் எவை சரியா ன கூற்றென்று கண்டறியவும்
விடை:
1. இவ்வம்சத்தை நிறுவியர் தந்திதுர்கா
2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.
3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2,3 சரி
இ) 1,3 சரி
ஈ) மூன்றும் சரி
விடை:
ஈ) மூன்றும் சரி

Question 4.
கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை
அ) எல்லோரா குகைகள் – ராஷ்டிரகூடர்கள்
அ) மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்
இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்
ஈ) பட்டடக்கல் – சாளுக்கியர்கள்
விடை:
இ) எலிபெண்டா குகைகள் – அசோகர்

Question 5.
தவறான இணையைக் கண்டறியவும்
அ) தந்தின் – தசகுமார சரிதம்
அ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா
இ) பாரவி – கிரதார்ஜூனியம்
ஈ) அமோகவர்ஷர் – கவிராஜமார்க்கம்
விடை:
அ) வாத்ஸ்யாயர் – பாரத வெண்பா

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…….. ஹர்ஷவர்த்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.
விடை:
இரண்டாம் புலிகேசி

Question 2.
…….. வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்
விடை:
முதலாம் நரசிம்மவர்மன்

Question 3.
அய்கோல் கல்வெட்டின் ஆசிரியர் ……… ஆவார்
விடை:
ரவி கீர்த்தி

Question 4.
……… முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதியாவார்
விடை:
பரஞ்சோதி (சிறுத்தொண்டர்)

Question 5.
……………. ஆகிய இடங்களில் உள்ள இசைக் கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசையார்வத்தை உணர்த்துகின்றன.
விடை:
குடுமியான்மலை, திருமயம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் 80

V. சரியா /தவறா என எழுதுக

Question 1.
புகழ்பெற்ற இசைக்கலைஞர் ருத்ராச்சாரியார் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்
விடை:
சரி

Question 2.
ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி
விடை:
தவறு

Question 3.
மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும்
விடை:
சரி

Question 4.
தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது’
விடை:
தவறு

Question 5.
விருப்பாஷி கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
விடை:
தவறு

VI. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ஆதிகவி பம்பா
  • ஸ்ரீ பொன்னா
  • ரன்னா

Question 2.
பல்லவர் கட்டடக் கலையை நாம் எவ்வாறு வகைப் படுத்தலாம்?
விடை:

  • பாறை குடைவரைக் கோவில்கள் – மகேந்திரவர்மன் பாணி
  • ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் – மாமல்லன் பாணி
  • கட்டுமானக் கோவில்கள் – ராஜசிம்மன் பாணி மற்றும் நந்திவர்மன் பாணி

Question 3.
கடிகை பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • காஞ்சியிலிருந்த கடிகை பல்லவர் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.
  • அது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்த்தது.
  • அங்கு நியாயபாஷ்யா நூலாசிரியர் ஆசிரியராக இருந்தார்.

Question 4.
பஞ்சபாண்டவர் ரதங்கள் ஒற்றைப் பாறைக்கல் ரதங்கள் ஆகும் – விளக்குக.
விடை:

  • பஞ்சபாண்டவர் ரதங்கள் எனப் பிரபலமாக அழைக்கப்படும் ஐந்து ரதங்கள் ஐந்து வகையான கோவில் கட்டட பாணியை உணர்த்துகின்றன.
  • ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனிக்கல்லிலிருந்து செதுக்கப் பட்டிருக்கின்றன. எனவே அவை ஒற்றைக்கல் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

Question 5.
தக்கோலம் போர் பற்றிக் குறிப்பெழுதுக.
விடை:

  • மூன்றாம் கிருஷ்ணர் ராஷ்டிரகூட வம்சத்தின் திறமை வாய்ந்த கடைசி அரசராவார்.
  • அவர் தக்கோலம் போர்க்களத்தில் சோழர்களைத் தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். (தக்கோலம் தற்போது வேலூர் மாவட்டத்தில் உள்ளது)

VII. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க
விடை:
பல்லவர்காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர்பெற்ற காலம். மாமல்லபுரம் 1984ல் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் அட்டவணையில் சேர்க்கப்பட்டது. பல்லவர் கால கலையின் கலை அழகிற்கு எடுத்துக்காட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில், பிறகோவில்கள், வராகர் குகை.

மகேந்திரவர்மன் பாணி : (பாறை குடைவரைக் கோவில்கள்)

மகேந்திரவர்மன் பாணி குகைக் கோவில்கள் மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.

மாமல்லன் பாணி : (ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும்)

  • மாமல்லன் பாணி ஒற்றைக்கல் ரதங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு மாமல்லபுரத்திலுள்ள பஞ்ச பாண்டவர் ரதங்கள். மகிஷாசுர மர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராகர் மண்டபம் ஆகியவை மாமல்லன் கட்டிய பிரபல மண்டங்கள்.
  • மகாபலிபுர திறந்த வெளிக் கலையரங்கம் மிக முக்கியமானது சிவபெருமான் தலை கங்கை நதி, அர்ச்சுனன் தபசு ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.

ராஜசிம்மன் பாணி : (கட்டுமானக் கோவில்கள்)

ராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்) பாணி கோவிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகும். இக்கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

நந்திவர்மன் பாணி (கட்டுமானக் கோவில்கள்)

நந்திவர்மன் பாணி பல்லவ கோவில் கட்டடக்கலையின் இறுதிக்கட்டம். காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் நந்திவர்மன் பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Question 2.
எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
எலிபெண்டா தீவு :

  • எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இதன் இயற்பெயர் ஸ்ரீபுரி, உள்ளூர் மக்களால் காரபுரி என்று அழைக்கப்படுகிறது.
  • போர்த்துகீசியர்கள் உருவத்தை கண்ணுற்றபின் எலிபெண்டா எனப் பெயரிட்டனர்.
  • திரிமூர்த்தி சிவன் சிலை மற்றும் துவாரபாலகர்களின் சிலைகள் ஆகியவை குகை கோவிலில் காணப்படுகின்றன.

கைலாசநாதர் கோவில் – எல்லோரா :

  • முதலாம் கிருஷ்ணர் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார். இது எல்லோராவில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் ஒன்று.
  • இக்கோவில் 60000 சதுர அடிகள் பரப்பளவையும் விமானம் 90 அடிகள் உயரமும் கொண்டது.
  • திராவிடக் கட்டடக் கூறுகளைக் கொண்டுள்ள இக்கோவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.
விடை:

  • கல்யாணி மேலைச் சாளுக்கியர், கல்யாணியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த வாதாபிச் சாளுக்கியர்களின் வழித் தோன்றல்கள்.
  • கி.பி. 973ல் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பிஜப்பூர் பகுதியை ஆண்டுவந்த இரண்டாம் தைலப்பர், மாளவ அரசர் பராமாரரை தோற்கடித்தார்.
  • இரண்டாம் தைலப்பர் கல்யாணியைக் கைப்பற்றியபின் இவருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின் போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது.
  • முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகோட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார். மேலைச் சாளுக்கியர்களும் சோழர்களும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வளம் நிறைந்த வெங்கியைக் கைப்பற்றுவதற்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டனர்.
  • நர்மதை ஆற்றுக்கும் காவேரி ஆற்றுக்கும் இடைப்பட்ட பெரும்பகுதி ஆறாம் விக்கிரமாதித்யரின் காலத்தில் சாளுக்கியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

IX. வாழ்க்கைத்திறன்கள் (மாணவர்களுக்கானது)

1. பல்லவர், சாளுக்கியர், ராஷ்டிரகூடர் ஆகியோரின் கோவில் கட்டடக் கலை குறித்த படங்களைச் சேகரிக்கவும், ஒவ்வொன்றுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை வேறுபடுத்தவும்.
2. களப்பயணம்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குக் கல்விச் சுற்றுலா சென்றுவரத் திட்டமிடவும்.

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
முதலாம் மகேந்திரவர்மன், இரண்டாம் புலிகேசி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுக.
விடை:

  • அர்ச்சுணன் ஒற்றைக் காலில் தவமிருக்கிறார். மத்தியில் பாம்பு வடிவ மனித உருவம் உள்ளது. தேவகணங்கள் சூழ சிவன் காணப்படுகிறார். வேடர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள் காணப்படுகின்றன.
  • மேலும் யானைக்கூட்டத்தையும் காண முடிகிறது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

Question 2.
படத்தைப் பார்த்து அது குறித்துச் சில வாக்கியங்கள் எழுதவும்.

XI. கட்டக வினா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் 91

6th Social Science Guide தென்னிந்திய அரசுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அவனிசிம்மர் என்றழைக்கப்பட்டவர்
அ) சிம்ம விஷ்ணு
ஆ) இரண்டாம் புலிகேசி
இ) மகேந்திரவர்மன்
ஈ) அபராஜிதன்
விடை:
அ) சிம்ம விஷ்ணு

Question 2.
பல்லவ அரசின் மையப்பகுதி
அ) தொண்டை மண்டலம்
ஆ) கொங்கு மண்டலம்
இ) பாண்டிய மண்டலம்
ஈ) குமரி மண்டலம்
விடை:
அ) தொண்டை மண்டலம்

Question 3.
மங்களேசன் …… வம்சத்தினர்
அ) சாளுக்கிய
ஆ) பல்லவ
இ) ராஷ்டிரகூட
ஈ) குப்த
விடை:
அ) சாளுக்கிய

Question 4.
ராஷ்டிரகூடர்களின் புதிய தலைநகரம்
அ) மான்யக்கேட்டா
ஆ) ஔரங்கபாத்
இ) புரோச்
ஈ) பட்டடக்கல்
விடை:
அ) மான்யக்கேட்டா

II. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து பொருத்தமான விடையை எழுது.

Question 1.
கூற்று I : முதல் சமணத் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் வாழ்க்கையை ஆதிபுராணம் சித்தரிக்கிறது.
கூற்று II : ராஷ்டிரகூடர்கள் சமணத்தைப் பின்பற்றினார்கள்.
அ) கூற்று I தவறு
ஆ) கூற்று II தவறு
இ) இரு கூற்றுகளும் சரி
ஈ) இரு கூற்றுகளும் தவறு
விடை:
ஆ) கூற்று II தவறு

Question 2.
கூற்று I : அப்பரும் மாணிக்கவாசகரும் வைணவ அடியார்கள்
கூற்று II : நம்மாழ்வரும் ஆண்டாளும் சிவன் அடியார்கள்
அ) கூற்று I சரி
ஆ) கூற்று II சரி
இ) இரண்டு கூற்றுகளும் தவறு
ஈ) இரு கூற்றுகளும் சரி
விடை:
இ) இரண்டு கூற்றுகளும் தவறு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கடைசி பல்லவ மன்ன ன் ……..
விடை:
அபராஜிதன்

Question 2.
இரண்டாம் நந்திவர்மன் ஆதரித்த புலவர் ……….
விடை:
பெருந்தேவனார்

Question 3.
ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி ……
விடை:
வாகடகர்

Question 4.
நாட்சை சரியான முறையில் வைத்திருத்த கடைசி ராஷ்டிரகூட அரசர் ……..
விடை:
மூன்றாம் கோவிந்தன்

IV. சரியா/தவறா என எழுதுக

Question 1.
பல்லவர் கால புகழ்பெற்ற இசைக் கலைஞர் ருத்ராச்சாரியார்
விடை:
சரி

Question 2.
சிவனின் அவதாரங்கள் வராகம், நரசிம்மம், வாமனன்
விடை:
தவறு

Question 3.
ராஷ்டிரகூடர்கள் பிறப்பால் தெலுங்கர்கள்
விடை:
தவறு

Question 4.
சாந்து இல்லாமல் கற்களைக் கொண்டு கட்டிடம் கட்டும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தியவர்கள் சாளுக்கியர்கள்
விடை:
சரி

VI. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
சிறுத்தொண்டர் பற்றி எழுதுக.
விடை:

  • முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி வாதாபி படையெடுப்புக்கு தலைமை ஏற்றவர்
  • வாதாபி வெற்றிக்குப்பின்னர் சிவபக்தரான அவர் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறுத் தொண்டர் என அறியப்பட்டார்.

Question 2.
மகேந்திரவர்மன் இலக்கியப்பணி குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • பல்லவமன்னர் மகேந்திரவர்மன் மத்தவிலாசப் பிரகசனம் உட்பட சில நாடகங்களை எழுதியுள்ளார்.
  • சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்நாடகம் பௌத்தத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

Question 3.
சாளுக்கியர்களின் வெவ்வேறு ஆனால் தொடர்புடைய, சார்பற்ற வம்சங்கள் யாவை?
விடை:

  • வாதாபிச் சாளுக்கியர்கள்
  • வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்)
  • கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்)

Question 4.
‘வெசாரா பாணி’ – விளக்குக.
விடை:

  • சாளுக்கியர்கள் காலத்தில் வெசாரா பாணியிலான கோவில் விமானங்களைக் கட்டும் முறை வளர்ச்சி பெற்றது.
  • தென் இந்திய (திராவிட) மற்றும் வட இந்திய (நாகாரா) கட்டடப் பணிகளின் கலப்பு வெசாரா பாணி

VII. கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
பட்டடக்கல் குறித்து விவரி.
விடை:

  • பட்டடக்கல் கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்
  • இங்கு 10 கோவில்கள் உள்ளன. அவற்றில் 4 நாகாரா பாணியிலும் 6 திராவிட பாணியிலும் கட்டப்பட்டுள்ளன.
  • திராவிட பாணி – விருபாக்ஷா கோவில், சங்கமேஸ்வர கோவில் நாகாரா பாணி – பாப்பநாதர் கோவில்
  • பட்டடக்கல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னம்

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 4 தென்னிந்திய அரசுகள் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

6th Social Science Guide பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
குப்த வம்சத்தை நிறுவியவர் … ஆவார்.
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) ஸ்ரீகுப்தர்
இ) விஷ்ணு கோபர்
ஈ) விஷ்ணுகுப்தர்
விடை:
ஆ) ஸ்ரீ குப்தர்

Question 2.
பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் … ஆவார்.
அ) காளிதாசர்
ஆ) அமரசிம்மர்
இ) ஹரிசேனர்
ஈ) தன்வந்திரி
விடை:
இ) ஹரிசேனர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 3.
சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் … என்ற இடத்தில் உள்ளது.
அ) மெக்ராலி
ஆ) பிதாரி
இ) கத்வா
ஈ) மதுரா
விடை:
அ) மெக்ராலி

Question 4.
அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் …..
அ) சரகர்
ஆ) சுஸ்ருதர்
இ) தன்வந்திரி
ஈ) அக்னிவாசர்
விடை:
ஆ) சுஸ்ருதர்

Question 5.
வங்காளத்தின் கௌட அரசர் ………
அ) சசாங்கர்
ஆ) மைத்திரகர்
இ) ராஜ வர்த்தனர்
ஈ) இரண்டாம் புலிகேசி
விடை:
அ) சசாங்கர்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

Question 1.
கூற்று : வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.
காரணம் : முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்.
அ. காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ. காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
விடை:
அ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

Question 2.
கூற்று 1 : தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.
கூற்று 2 : குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்.
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி.
ஆ) இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி.
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி.

Question 3.
கீழ்க்கான்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?
அ) ஸ்ரீ குப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர்
ஆ) முதலாம் சந்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்
இ) ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – முதலாம் சந்திரகுப்தர்
ஈ) விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திர குப்தர் – முதலாம் சந்திரகுப்தர்
விடை:
அ) ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிமாதித்யர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 4.
கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது/எவை சரியானது சரியானவை
விடை:
என்பதைக் கண்டறியவும்.
1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி
ஈ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு
விடை:
அ) 1 மட்டும் சரி

Question 5.
பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
காளிதாசர், ஹரிசேனர், சமுத்திரகுப்தர் சரகர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 65
விடை:
சமுத்திரகுப்தர்

Question 2.
ரத்னாவளி, ஹர்சரிதா நாகநந்தா, பிரியதர்சிகா
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 66
விடை:
ஹர்சரிதா

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இலங்கை அரசர்………… சமுத்திரகுப்தரின், சமகாலத்தவர் ஆவார்.
விடை:
ஸ்ரீமேகவர்மன்

Question 2.
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின் போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி ………… இந்தியாவிற்கு வந்தார்.
விடை:
பாகியான்

Question 3.
……….. படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
விடை:
ஹூணர்கள்

Question 4.
………. அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.
விடை:
நிலவரி

Question 5.
குப்தர்களின் அலுவலக மொழி…………..
விடை:
சமஸ்கிருதம்

Question 6.
பல்லவ அரசர் ………… சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை:
விஷ்ணுகோபன்

Question 7.
வர்த்த ன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ……… ஆவார்.
விடை:
ஹர்ஷவர்த்தனர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 8.
ஹர்ஷர் தலைநகரை ………. லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
விடை:
தானேஷ்வரி

IV. சரியா/தவறா என எழுதுக

Question 1.
தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்.
விடை:
சரி

Question 2.
குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ – ஆரிய பாணியை ஒத்துள்ளன.
விடை:
தவறு

Question 3.
குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.
விடை:
தவறு

Question 4.
ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்
விடை:
தவறு

Question 5.
ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்.
விடை:
தவறு

V. பொருத்துக

அ)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 90
விடை:
ஆ) 2, 4, 1, 3, 5

ஆ)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 91
விடை:
இ) 3, 5, 1, 2, 4

VI. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
‘கவிராஜா’ என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? ஏன்?
விடை:

  • ‘கவிராஜா’ என்ற பட்டம் சமுத்திர குப்தருக்கு வழங்கப்பட்டது.
  • ஏனெனில் அவர் கவிதைப் பிரியரும் இசைப்பிரியருமாவார்.

Question 2.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத்தரப்பட்ட பாடப்பிரிவுகள் யாவை?
விடை:

  • பௌத்த தத்துவம்
  • யோகா
  • வேத இலக்கியங்கள்
  • மருத்துவம்

Question 3.
அரசர்களின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை விளக்குக.
விடை:

  • குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப் படுத்தினர்.
  • அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 4.
உலோகவியலில் குப்தர்களின் சாதனைகளை எடுத்துக் கூறுக.
விடை:

  • உலோகவியலில் குப்தர்களின் சாதனை எனப்படுவது மெக்ராலி இரும்புத்தூணாகும். இது டெல்லி யில் சந்திரகுப்தரால் நிறுவப் பட்டதாகும்.
  • இத்தூண் இன்றளவும் துருப்பிடிக்காமல் உள்ளது.

Question 5.
ஹூணர்கள் என்போர் யார்?
விடை:

  • ஹூணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினர்.
  • இவர்கள் ரோமாபுரியையும் கான்ஸ்டாண்டி நோபிளையும் பேரச்சத்திற்கு உள்ளாக்கினர்.

Question 6.
ஹர்ஷர் காலத்தில் வசூலிக்கப்பட்ட மூன்று வகையான வரிகளைக் குறிப்பிடுக.
விடை:

  • பாகா
  • ஹிரண்யா
  • பாலி

Question 7.
ஹர்ஷர் எழுதிய நூற்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ரத்னாவளி
  • நாகநந்தா
  • பிரியதர்சிகா

VII. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
பிரசஸ்தி (மெய்க்கீர்த்தி) :

  • பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் புகழ்வது.
  • அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்து பாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர்.
  • இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காக தூண்களில் பொறிக்கப்பட்டன.

Question 2.
சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.
விடை:

  • சமுத்திர குப்தர் மகத்தான போர்த்தளபதி. அவர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார்.
  • அவர் பல்லவ அரசர் விஷ்ணு கோபனை தோற்கடித்தார்.
  • அவர் வட இந்தியாவில் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார்.
  • அவர் தென்னிந்தியாவில் 12 அரசர்களை சிற்றரசர்களாக்கி கப்பம் கட்டச் செய்தார்.
  • அவரின் மேலாதிக்கத்தை கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி ஆகியவற்றின் அரசர்களும் ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் ஏற்றுக் கொண்டனர்.

Question 3.
குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?
விடை:
குப்தர் காலத்தில் நிலங்களை வகைப்படுத்துதல்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 95

Question 4.
சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.
விடை:
சிரெஸ்தி :
சிரெஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்.
கார்த்தவாகா :
சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.

Question 5.
கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.
விடை:

  • முன்பிருந்த மரபான பாறைக் குடைவரைக் கோவில்களிலிருந்து கட்டுமானக் கோவில்களை முதன் முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே.
  • இக்கோவில்கள் கோபுரங்களோடும், விரிவான செதுக்கு வேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் கட்டப்பட்டன.
  • மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா, பாக், உதயகிரி, ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
  • இக்காலக்கட்டத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் திராவிடப் பாணியை ஒத்திருக்கின்றன.

Question 6.
காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள் சாகுந்தலம், மாளவிகாக்கனிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும்.
  • அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகு வம்சம், குமார சம்பவம், ரிது சம்காரம் ஆகும்.

Question 7.
ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.
விடை:

  • ஹர்ஷரே ஒரு கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்.
  • சிறந்த கவிஞர்களும் கலைஞர்களும் அவரைச் சூழ்ந்து இருந்தனர்.
  • ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா ஆகியவை அவருடைய புகழ்பெற்ற நூல்கள்.
  • அவரின் அவையை பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகியோர் அலங்கரித்தனர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது.
அ) நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை
ஆ) தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை
இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை
ஈ) மன்னர்களின் ஆடம்பர இயல்பை
விடை:
இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை

Question 2.
பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?
அ) குகைச் சுவர்களில்
ஆ) கோவில்களின் விதானங்களில்
இ) பாறைகளில்
ஈ) பாப்பிரஸ் இலைகளில்
விடை:
அ) குகைச் சுவர்களில்

Question 3.
குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?
அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
ஆ) தென்னிந்தியப் படையெழுச்சி தயப் படையெழுச்சு
இ) ஹூணர்களின் படையெடுப்பு
ஈ) மத சகிப்புத் தன்மை
விடை:
அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

Question 4.
குப்தர்கள் காலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?
விடை:

  • நவீன உலகிற்கு விட்டுச் சென்ற பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும், அதன் பரிணாம வளர்ச்சியான தசம எண் முறையும்.
  • ஆரியப்பட்டர் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார். அவர்தான் பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர்.

IX. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. காளிதாசரின் நாடகம் ஒன்றினை வகுப்பறையில் மேடையேற்றவும்.
2. மௌரியர் காலச் சமுதாயத்திற்கும் குப்தர்கள் கால சமுதாயத்திற்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பீடு செய்க.

வாழ்க்கைத் திறன்கள் (மாணவர்களுக்கானது)

1. வானியல் துறைக்கு ஆரியப்பட்டர், வராகமிகிரர், பிரம்மகுப்தர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பினைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கவும்.
2. செயற்கைக்கோள் ஏவுவதைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள அருகேயுள்ள இஸ்ரோ மையத்திற்குச் சென்று வரவும்.

XI. கட்டக வினா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 40
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 41

6th Social Science Guide பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஸ்ரீகுப்தருக்குப் பின் அரசப் பதவியேற்றவர்.
அ) முதலாம் குமாரகுப்தர்
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) கடோத்கஜர்
விடை:
ஈ) கடோத்கஜர்

Question 2.
நிதி சாரம் என்னும் நூலில் முக்கியத்துவம் பெறுவது
அ) வணிகம்
ஆ) இராணுவம்
இ) வேளாண்மை
ஈ) கருவூலம்
விடை:
ஈ) கருவூலம்

Question 3.
தனக்குத்தானே அரசராக முடி சூட்டிக் கொண்ட ஹுண தலைவர்
அ) யசோதர்மன்
ஆ) அட்டில்லா
இ) மிகிரகுலர்
ஈ) தோரமானர்
விடை:
ஈ) தோரமானர்

Question 4.
தினாரா என்பது குப்தர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட ……. நாணயங்கள்
அ) செப்பு
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) பொன்
விடை:
ஈ) பொன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 5.
ஹர்ஷர் கலந்து கொண்ட கும்பமேளா விழா நடைபெற்ற இடம்
அ) அலகாபாத்
ஆ) காசி
இ) அயோத்தி
ஈ) பிரயாகை
விடை:
ஈ) பிரயாகை

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப்பார்த்து சரியான விடையைக் கண்டுபிழக்கவம்.

Question 1.
கூற்று : குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசரான முதலாம் நரசிம்ம குப்தர் மிகிரகுலருக்கு கப்பம் கட்டி வந்தார்.
காரணம் : மிகிர குப்தர் பௌத்தத்தைப் பகைமையோடு பார்த்ததால் மன வேதனை அடைந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினார்.
அ) காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) காரணமும் சுற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

Question 2.
கூற்று 1 : குப்தர்கள் காலத்தைக் காட்டிலும் ஹர்ஷர் காலத்தில் குற்றவியல் சட்டங்கள் கடுமையாக இல்லை.
கூற்று II : சட்டங்களை மீறுவோர்க்கும் அரசருக்கு எதிராக சதி செய்வோர்க்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி
ஆ) இரண்டாம் கூற்று தவறு. ஆனால் முதல் கூற்று சரி.
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…….. பேரவையில் ஹர்ஷர் தனது செல்வங்களை கொடையாக விநியோகித்தார்.
விடை:
பிரயாகை

Question 2.
சீனர்களின் தலைநகரான …… மாபெரும் கலை, கல்விக்கான மையம்
விடை:
சியான்

Question 3.
முதலாம் சந்திரகுப்தரின் மனைவி ………
விடை:
குமாரதேவி

Question 4.
அரசர்களின் படையெடுப்பு நடவடிக்ககைகளில் வருவாயின் …….. முதலீடு செய்யப்பட்டது.
விடை:
உபரியே

Question 5.
விவசாயிகள் பல்வேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் ……….. நிலைக்கு தள்ளப்பட்டனர்.
விடை:
கொத்தடிமை

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 96
விடை:
ஆ) 4, 5, 2, 1, 3

V. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
லிச்சாவி குறித்து குறிப்பு வரைக.
விடை:

  • கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்ட ஆட்சி பகுதி கொண்ட லிச்சாவி பழமையான கன சங்கங்களில் ஒன்று.
  • முதலாம் சந்திரகுப்தர் புகழ்பெற்ற, வலிமைவாய்ந்த அந்த அரச குடும்பத்தில் குமாரதேவியை மணந்தார்.

Question 2.
கவிராஜா குறித்து நீ அறிவதென்ன?
விடை:

  • சமுத்திர குப்தர் வெளியிட்ட தங்க நாணயங்களில் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
  • அவர் ஒரு சிறந்த கவிதைப் பிரியரும் இசைப்பிரியருமாவார். அதனால் கவிராஜா எனும் பட்டம் பெற்றார்.

Question 3.
பாஹியானின் பயணக் குறிப்புகள் மகதத்து மக்களின் வாழ்க்கை பற்றி என்ன கூறுகிறது?
விடை:

  • பாஹியான் கூற்றுப்படி மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.
  • கயா பாழடைந்திருந்தது. கபில வஸ்து காடாகியிருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள்’ செல்வத்தோடும் செழிப்போடும் வாழந்தனர்.

VII. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
குப்த அரசர்களால் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் யார்?
விடை:

  • உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தண்ட நாயகர் மற்றும் மகாதண்ட நாயகர் என அழைக்கப்பட்டனர்.
  • தேசம் அல்லது புக்தி எனப்படும் பிராந்திய அதிகாரிகள் ‘உபாரிகா’ எனும் ஆளுநர்கள் விஷ்யா எனப்படும் மாவட்டங்களில் அதிகாரிகள் விஷ்யாபதிகள், கிராம அளவில் கிராமிகா, கிராமிதியாகஷா எனும் அதிகாரிகள் செயல்பட்டனர்.
  • இராணுவப் பதவிகளின் பெயர்கள் : பாலாதிகிரிதா (காலாட்படை தளபதி) மஹா பாலாதிகிரிதா
    (குதிரைப்படை தளபதி) ‘தூதகா’ எனும் ஒற்றர்கள்.

Question 2.
குப்தர் கால சமூகம் பற்றி நீ அறிவதென்ன?
விடை:

  • குப்தர் காலச் சமூகம் நான்கு வர்ணங்களைக் கொண்ட தந்தை வழிச் சமூகம்.
  • மனுவின் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
  • பெண்கள் தந்தையின், கணவனின் அல்லது மூத்த மகனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.
  • பலதார மணம் பரவலாக நடைமுறையில் இருந்தது. அரசர்களும் நிலப்பிரபுக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைப் பெற்றிருந்தனர்.
  • உடன்கட்டை ஏறும் (சதி முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றப்பட்டது.

Question 3.
நாளந்தா பல்கலைக்கழகம் பற்றி எழுதுக.
விடை:

  • குப்தர்கள் ஆதரவில் 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் நாளந்தா பல்கலைக்கழகம் தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசி அரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது.
  • முக்கிய பாடம் பௌத்தத் தத்துவம், மருத்துவம், வேத இலக்கியம், யோகா கற்பிக்கப்பட்டன.
  • யுவான் சுவாங் பௌத்தத் தத்துவத்தைப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.
  • நாளந்தாவில் 8 மகாபாட சாலைகளும் 3 மிகப் பெரிய நூலகங்களும் இருந்தன.
  • பக்தியார் கில்ஜி தலைமையில் வந்த மம்லுக்குகளால் அழித்து தரைமட்டமாக்கப்பட்டது.
  • நாளந்தா யுனேஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னம்.

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

6th Social Science Guide இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் …..
அ) புஷ்யமித்ரர்
ஆ) அக்னிமித்ரர்
இ) வாசுவேதர்
ஈ) நாராயணர்
விடை:
அ) புஷ்யமித்ரர்

Question 2.
சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர் ……..
அ) சிமுகா
ஆ) சதகர்ணி
இ) கன்கர்
ஈ) சிவாஸ்வதி
விடை:
அ) சிமுகா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 3.
குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ……..
அ) கனிஷ்கர்
ஆ) முதலாம் கட்பிசஸ்
இ) இரண்டாம் கட்பிசஸ்
ஈ) பன் – சியாங்
விடை:
அ) கனிஷ்கர்

Question 4.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் …. பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத் தோங்கியது.
அ) தக்காணம்
ஆ) வடமேற்கு இந்தியா
இ) பஞ்சாப்
ஈ) கங்கை பள்ளத்தாக்கு சமவெளி
விடை:
ஆ) வடமேற்கு இந்தியா

Question 5.
சாகர்கள் ……….. நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
அ) சிர்கப்
ஆ) தட்சசீலம்
இ) மதுரை
ஈ) புருஷபுரம்
விடை:
அ) சிர்கப்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

Question 1.
கூற்று : இந்தோ – கிரேக்கர்களின், இந்தோ – பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன. காரணம் : குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; ஆனால் காரணம் தவறு
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை:
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று 1: இந்தோ – கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
கூற்று 2 : இந்தோ – கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்து வைத்தனர்.
அ) கூற்று 1 தவறு, ஆனால் கூற்று 2 சரி
ஆ) கூற்று 2 தவறு, ஆனால் கூற்று 1 சரி
இ) இரண்டு கூற்றுகளுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு
விடை:
கூற்று 2 தவறு, ஆனால் கூற்று சரி

Question 3.
பொருந்தாததை வட்டமிடுக.
புஷ்யமித்ரர் வாசுதேவர் சிமுகா (கனிஷ்கர்)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 100
விடை:
கனிஷ்கர்

Question 4.
ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்
கடைசி சுங்க அரசர் யார்?
விடை:
தேவபூதி
சாகர்களில் மிக முக்கியமான, புகழ்பெற்ற அரசர் யார்?
விடை:
ருத்ரதாமன்
மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?
விடை:
வாசுதேவர்
கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
விடை:
புனித தாமஸ்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இந்தோ – பார்த்திய அரசை நிறுவியவர் ………
விடை:
அர்சாகஸ்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 2.
தெற்கே……… இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்
விடை:
சுசர்மன்

Question 3.
ஹாலா எழுதிய நூலின் பெயர் ……..
விடை:
சட்டசாய் (சப்தசதி)

Question 4.
………. கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.
விடை:
சுசர்மன்

Question 5.
குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ……… ஆகும்
விடை:
பெஷாவர் (புருஷபுரம்)

IV. சரியா தவறா என எழுதுக

Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்த து.
விடை:
சரி

Question 2.
காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்
விடை:
சரி

Question 3.
குந்தல சதகர்ணி, சாதவாகனவம்சத்தின், பத்தாவது அரசராவார்.
விடை:
தவறு

Question 4.
‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டது.
விடை:
சரி

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 80
விடை:
ஆ) 3, 4, 5, 1, 2

VI. பின்வருவனவற்றில் தவறான கூற்றைக் கண்டறிக

1. குஷாணர் வடமேற்குச் சீனாவில் வாழ்ந்த யூச்-சி பழங்குடி மக்களின் ஒரு பிரிவினரை உருவாக்கினார்.
2. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.
3. சாஞ்சியின் மாபெரும் ஸ்தூபியும் அதன் சுற்றுவேலியும் சுங்கர் காலத்தைச் சேர்ந்தவை.
4. பன்-சியாங் சீனத் தளபதியாவார். இவர் கனிஷ்கரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை:
2. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.

VII. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
கடைசி மௌரிய அரசருக்கு என்ன நேர்ந்தது?
விடை:

  • மௌரிய பேரரசின் கடைசி அரசர் பிரிகத்ரதா.
  • அவர் அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.

Question 2.
காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம்’ குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:

  • அக்னிமித்ரா காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னி மித்ரா நாடகத்தின் கதாநாயகன். (அக்னிமித்ரா புஷ்யமித்ர சுங்கரின் மகன்)
  • இந்நாடகம் மேலும் வசுமித்ரர் கிரேக்கர்களை வெற்றி கொண்டதைக் குறிப்பிடுகின்றது. (வசுமித்ரர் அக்னிமித்ரரின் மகன்)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 3.
கன்வ வம்சத்தின் அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • வாசுதேவர்
  • பூமிமித்ரர்
  • நாராயணர்
  • சுசர்மன்

Question 4.
சாதவாகனர்களின் இலக்கியச் சாதனைகளை எடுத்து கூறுக.
விடை:

  • சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.
  • ஹாலா பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் புகழ் பெற்றிருந்தார்.

Question 5.
சாதவாகனர்களின் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?
விடை:

  • காந்தாரம்
  • மதுரா
  • அமராவதி
  • புத்தகயா
  • சாஞ்சி
  • பாகுத்

Question 6.
முதலாம் கட்செஸ்ஸின் சாதனைகைைளக் குறிப்பிடுக.
விடை:

  • முதலாம் கட்பிசஸ் குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி.
  • இவர் இந்தோ – கிரேக்க, இந்தோ – பார்த்திய அரசர்களை வெற்றி கொண்டார்.
  • இவர் பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார்.
  • இவர் தன்னுடைய ஆதிக்கத்தை காபூல், காந்தாரம் மற்றும் சிந்துவரை பரப்பினார்.

Question 7.
கனிஷ்கரின் அவையை அலங்கரித்த துறவிகள், அறிஞர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அஸ்வகோஷர்
  • வசுமித்ரா
  • நாகார்ஜூனா

VIII. கீழ்க் காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?
விடை:
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் :
வடமேற்கிலிருந்து சாகர்கள், சிந்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ – கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய – கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் படையெடுத்தனர்.

  • தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர்.
  • குப்தப்பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி அமைத்தனர்.
  • சேடிகள் (கலிங்கம்) தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 2.
புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.
விடை:

  • புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார்.
  • அவர் மேற்கு நோக்கி உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கி தனது அரசை விரிவு படுத்தினார்.
  • அவர் பாக்டீரிய அரசனின் படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்தார்.
  • அவர் கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் முறியடித்தார்.
  • மேலும் அவர் விதர்பாவையும் கைப்பற்றினார்.

Question 3.
கௌதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெழுதுக.
விடை:

  • கௌதமிபுத்திர சதகர்ணி சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர்
  • இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தவர் என அவரது அன்னையால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்கீர்த்தியில் கூறப்படுகிறார்.
  • பேரரசு மகாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
  • இவரது கப்பல்வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ஆந்திரர்களின் கடல்சார் திறன்களையும் கப்பல்படை வலிமையையும் உணர்த்துகின்றன.

Question 4.
கோண்டோபரித் அரசு வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • இந்தோ – பார்த்திய அரச அல்லது கோண்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது.
  • இந்தோ – பார்த்தியர் ஆட்சிப் பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • கோண்டோ பெர்னஸ் என்னும் பெயர் கிறித்துவ மறை பரப்பாளர் புனித தாமசுடன் தொடர்புடையதாகும்.
  • கிறிஸ்தவ மரபின்படி புனித தாமஸ் கோண்டோ பெர்னஸின் அரசவைக்கு வந்தார்.
  • புனித தாமஸ் கோண்டோ பெர்னஸை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றினார்.

Question 5.
இந்தோ -கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்
விடை:
மினான்டர் இந்தோ – கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர். ஏனெனில்

  • அவர் நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
  • அவரது நாணயங்கள் பரந்து விரிந்த காபூல் பள்ளத்தாக்கு மற்றும் சிந்துநதி தொடங்கி மேற்கு உத்திரப்பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைத்தன.
  • மிலிந்த பன்கா என்னும் பௌத்த நூல் அரசன் மிலிந்தாவுக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாகும் (மிலிந்தா = மினான்டர்)
  • அவர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றினார்.

Question 6.
சாகர்கள் யார்?
விடை:

  • நாடோடி இனத்தவரான சாகர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர்.
  • அவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்
  • அவர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சிந்தியர்கள்.
  • அவர்கள் சமஸ்கிருத மொழியில் சாகர்கள் என அறியப்பட்டனர்.
  • அவர்களால் இந்தியாவில் இந்தோ- கிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Question 7.
கனிஷ்கருடைய மதக்கொள்கை பற்றி எழுதுக.
விடை:

  • கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தர் ; அவரது பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு.
  • அவர் அஸ்வகோஷர் (பாடலிபுத்திர துறவி) என்பவரின் போதனைகளால் பௌத்தத்தைத் தழுவினார்.
  • அவர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்த போதிலும் அதே அளவு மகாயானத்தை ஆதரிப்பவராகவும் முன்னெடுத்துச் செல்பவராகவும் விளங்கினார்.
  • அரச மதமானதால் அவர் பல ஸ்தூபிகளையும் மடலாயங்களையும் கட்டினார் (மதுரா, தட்சசீலம் மற்றும் பேரரசின் இதர பகுதிகளில்)
  • அவர் புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்கு சமயப் பரப்பாளர்களை அனுப்பினார்.
  • அவர் நான்காவது பௌத்தப் பேரவையை குந்தலவனத்தில் (ஸ்ரீநகருக்கு அருகே) கூட்டினார்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.
விடை:

  • இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக்கலைக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளது.
  • கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்
  • மகாயான பௌத்தர்கள் அவர்களிடமிருந்து குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கற்றனர்.
  • அவர்கள் அதன்மூலம் குடைவரைச் சிற்ப கட்டடக்கலையில் திறன் பெற்றனர்.
  • கனிஷ்கருடைய காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைச் செதுக்குவது கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.

Question 2.
மௌரியருக்குப் பின் வந்த காலத்தில் தென்னிந்தியாவில் வணிக – வர்த்தக நிலை குறித்து எழுதவும்.
விடை:

  • இரண்டாம் கட்பிசஸ் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார்.
  • அவர் அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார்.
  • அவருடைய நாணயங்கள் சிலவற்றில் சிவபெருமானின் உருவங்களும் அரசருடைய பட்டயப் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளன.
  • நாணயங்களில் அவை கரோஷ்தி மொழியில் உள்ளன.

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. சாதவாகனர், குஷானர் ஆகியோர்களின் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் அமைந்து ள்ள இடங்களைப் பற்றி ஒரு ஆல்பம் (செருகேடு) தயார் செய்யவும்.
2. இந்தோ – கிரேக்கர், சாகர், குஷாணர் ஆகியோரின் பண்பாட்டுப் பங்களிப்பு குறித்து வகுப்பறையில் மாணவர்களை விவாதிக்க செய்யவும்.

XI. கட்டக வினா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 91

6th Social Science Guide இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சி-யூ-கி எழுதிய சீன பௌத்த துறவியும் பயணியுமானவர்
அ) பாஹியான்
ஆ) யுவான் சுவாங்
இ) யூச் – சி
ஈ) பன் – சியாங்
விடை:
ஆ) யுவான் சுவாங்

Question 2.
புஷ்யமித்திரர் …… ஐ தனது தலைநகராக்கினார்
அ) பாடலிபுத்திரம்
ஆ) பெஷாவர்
இ) குந்தலவனம்
ஈ) பார்குத்
விடை:
அ) பாடலிபுத்திரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 3.
சுங்கர் காலத்தில் கற்களுக்குப் பதிலாக …….. பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது.
அ) மரம்
ஆ) இரும்பு
இ) தாமிரம்
ஈ) செங்கல்
விடை:
அ) மரம்

Question 4.
உலகப்புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் … பள்ளத்தாக்கில் இருந்தன
அ) பாமியான்
ஆ) கங்கை
இ) காஷ்மீர்
இ) கென்யான்
விடை:
அ) பாமியான்

Question 5.
…. படிப்படியாக ஏறுமுகம் பெற்று அரசவை மொழியானது
அ) சமஸ்கிருதம்
ஆ) கரோஷ்தி
இ) கன்ன டம்
ஈ) பிராகிருதம்
விடை:
அ) சமஸ்கிருதம்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப்பார்த்து சரியான விடையைக் கண்டுபிழக்கவம்.

Question 1.
கூற்று : பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற பகுதிகளை ஆக்கிரமித்தனர். காரணம்:மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று : மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர்
கூற்று II : கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்
அ) கூற்று 1 தவறு. ஆனால் கூற்று 2 சரி
ஆ) கூற்று 2 தவறு ஆனால் கூற்று 1 சரி
இ) இரண்டு கூற்றுகளுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு
விடை:
இ) இரண்டு கூற்றுகளுமே சரி

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சிமுகாவைத் தொடர்ந்து பதவியேற்ற அவருடைய சகோதரர் ……..
விடை:
கிருஷ்ணர்

Question 2.
நின்ற கோலத்திலான புத்தரின் வெண்கலச்சிலை கண்டறியப்பட்ட இடம் …….
விடை:
ஒக்-யோ

Question 3.
இந்தியாவில் இந்தோ – கிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் ………
விடை:
சாகர்கள்

Question 4.
சாக அரசர் மோகாவின் தலைநகர் ………
விடை:
சிர்காப்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 5.
ருத்ரதாமனின் …… கல்வெட்டு தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பாகும்.
விடை:
ஜுனாகத் கிர்னார்

IV. சரியா தவறா

Question 1.
சதகர்னி, சிமுகாவின் சகோதரியின் மகன்
விடை:
சரி

Question 2.
நாக்காள் பதோம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லால் ஆன முத்திரை தாய்லாந்தில் – உள்ளது
விடை:
சரி

Question 3.
மாவோஸின் பெயர் மோரா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடை:
சரி

Question 4.
குஷாணர்கள் சத்ராபிகளை பிராந்திய ஆளுநர்களாக நியமித்தனர்.
விடை:
தவறு

Question 5.
குஷாண ஆட்சியாளர்கள் பௌத்தர்கள்.
விடை:
சரி

V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
கலிங்கத்தில் காரவேல அரசர் குறித்து குறிப்பு வரைக.
விடை:

  • அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர்
  • காரவேலர் பற்றிய செய்திகளை ஹதிகும்பா கல்வெட்டு கூறுகிறது.

Question 2.
சாதவாகனர்களின் ஆட்சிப்பகுதிகளை பெயரிடுக.
விடை:

  • மகாராஷ்டிரா
  • வடக்கு கொங்கன்
  • பெரார்
  • குஜராத்
  • கத்தியவார்
  • மாளவம்

Question 3.
சாகர்கள் எவ்வாறு இந்தியச் சமூகத்தினுள் இரண்டறக் கலந்து வாழ்ந்தனர்?
விடை:

  • சாகர்கள் இந்தியப் பெயர்களைச் சூடிக் கொண்டனர்.
  • அவர்கள் இந்திய மத நம்பிக்கைகளையும் ஏற்கத் தொடங்கினர்.

Question 4.
பௌத்தக் கல்வியும் பண்பாடும் எங்கே சென்றன?
விடை:
பௌத்தக் கல்வியும் பண்பாடும் தட்சசீலத்திலிருந்து சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்றன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

VI. கீழ்க்காண்பதற்கு விடையளிக்கவும்

Question 1.
கனிஷ்கருடைய படையெடுப்புகள் குறித்து எழுது.
விடை:

  • கனிஷ்கர் காஷ்மீரைக் கைப்பற்றி தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.
  • அவர் மகதத்திற்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்றார்.
  • விரிந்து பரந்த தனது பேரரசின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதற்காக பார்த்திய அரசருக்கு எதிராகப் போர்தொடுத்தார்.
  • அவர் சீனத்தளபதி பன் – சியாங் என்பவரைத் தோற்கடித்து சீனர்கள் ஊடுருவலைத் தடுத்தார்.
  • அவரது பேரரசு காஷ்மீரிலிருந்து கீழே வாரணாசி வரையிலும் தெற்கே விந்திய மலைகள் வரையிலும் பரவியிருந்தது.
  • பேரரசில் காஸ்கர், யார்க்கண்ட் மற்றும் பாரசீகம், பார்த்தியா எல்லைகளும் அடங்கும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 99