Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

Students can Download Tamil Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

மதிப்பீடு

Question 1.
நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால், சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?
Answer:
நான் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால், சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு இவ்வாறு விளக்கி கூறுவேன்.

தஞ்சை சரசுவதி மகால் நூலகம் :

  • இதுதான் தஞ்சை சரசுவதி மகால் நூலகம்.
  • இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று.
  • கி.பி. 1122 முதல் இயங்கி வருகிறது என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
  • இங்குத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன.
  • தலை சிறந்த ஓவியங்களும் தொன்மையான இசைக்கருவிகளும் இடம்பெற்றுள்ளன.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் :

  • இப்பல்கலைக்கழகம் கி.பி. 1981 இல் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது.
  • இதன் பரப்பளவு ஆயிரம் ஏக்கர்.
  • வானத்தில் இருந்து பார்த்தால், தமிழ்நாடு’ என்ற எழுத்துகள் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது.
  • இந்திய நாகரித்தின் பண்பாட்டுக் கூறுகளை ஆராய்வதே இதன் நோக்கம்.
  • இங்குக் கலை, சுவடி, வளர்தமிழ், மொழி, அறிவியல் என ஐந்து புலங்களும் இருபத்தைந்து துறைகளும் உள்ளன.
  • இங்குச் சித்த மருத்துவத்துறை மூலம் மருத்துவத் தொண்டு செய்யப்படுகிறது.
  • இந்திய ஆட்சிப் பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கிறது.
  • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

உ.வே.சா. நூலகம் – சென்னை :

  • இந்நூலகம் கி.பி. 1942 இல் தொடங்கப்பட்டது.
  • தமிழ், தெலுங்கு , வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன.
  • 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.

கீழ்த்திசை நூலகம் – சென்னை

  • இந்நூலகம் கி.பி. 1869ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இங்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன.
  • கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்களும் உள்ளன.
  • தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகிறது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

கன்னிமாரா நூலகம் – சென்னை :

  • இது கி.பி. 1896இல் தொடங்கப்பட்டது.
  • தமிழ்நாட்டின் மைய நூலகம்.
  • இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்று.
  • ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
  • இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி இங்குப் பாதுகாக்கப்படுகிறது.
  • மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டு வருகின்றது.

வள்ளுவர் கோட்டம் – சென்னை :

  • இது திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்கிறது.
  • இதன் கட்டுமானப் பணிகள் கி.பி. 1973 இல் தொடங்கி 1976 இல் முடிக்கப்பட்டன.
  • இதன் வடிவம் திருவாரூர் தேர் போன்று இருக்கும்.
  • இரண்டு யானைகள் இழுத்துச் செல்வது போன்று கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதன் அடிப்பகுதி இருபத்தைந்து அடி அகலமும் இருபத்தைந்து அடி நீளமும் உடையது.
  • தேரின் மொத்த உயரம் 128 அடி.
  • நான்கு சக்கரங்கள் தனிக் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன.
  • கடைக்கோடி இரண்டு சக்கரங்கள் பெரியனவாகவும் நடுவில் இரண்டு சக்கரங்கள் சிறியனவாகவும் உள்ளன.
  •  தேரின் மையத்தில் உள்ள எண்கோண வடிவக் கருவறையில் திருவள்ளுவரின் சிலை கவினுற உள்ளது. இங்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்கம் ஒன்றும் உள்ளது.
  • 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன.
  • கருநிறப் பளிங்குக் கல்லில் அறத்துப்பால், வெண்ணிறப் பளிங்குக் கல்லில் பொருட்பால், செந்நிறப் பளிங்குக் கல்லில் இன்பத்துப்பால் எனப் பொறிக்கப்பட்டுள்ளன.
  • இங்குள்ள ஓவியங்கள் திருக்குறள் கருத்துகளை விளக்குகின்றன.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

திருவள்ளுவர் சிலை – கன்னியாகுமரி :

  • இதுதான் திருவள்ளுவரின் சிலை.
  • விவேகானந்தர் பாறைக்கு அருகில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து முப்பது அடி உயரப் பாறை மீது இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • இப்பணி 1990 ஆம் ஆண்டு தொடங்கியது. பொதுமக்கள் பார்வைக்காக 2000ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் அன்று திறந்து வைக்கப்பட்டது.
  • பாறையிலிருந்து சிலையின் உயரம் மொத்தம் 133 அடி. இது திருக்குறளின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கிறது.
  • இச்சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள 3,681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • தமிழின் பெருமைமிகு அடையாளமாக இச்சிலை உயர்ந்து நிற்கிறது.

உலகத் தமிழ்ச் சங்கம் – மதுரை :

  • இதுதான் உலகத் தமிழ்ச் சங்கம்.
  • இது சுமார் எண்பத்தேழு ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மனத்தைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
  • இதனுள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கக் கூடங்கள், ஆய்வரங்கங்கள், நூலகம், பார்வையாளர் அரங்கம் ஆகியன கவினுற அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறச் சுற்றுச் சுவர்களில் 1330 குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன.
  • இதன் சுற்றுச் சுவர்களில் சங்க இலக்கியக் காட்சிகள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

சிற்பக் கலைக்கூடம் – பூம்புகார் :

  • இதுதான் பூம்புகார் சிற்பக் கலைக்கூடம்.
  • கி.பி.(பொ.ஆ) 1973 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
  • இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது. கண்ணகியின் வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மாதவிக்கு ஒரு நெடிய சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.

கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல் மன்றம் ஆகியன அமைந்துள்ளன. இலஞ்சி மன்றத்திலும் பாவைமன்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதைச் சுற்றி எட்டுச் சிறிய கற்றூண்களும் எட்டு மனித உருவங்களும் தற்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாய் நிற்கின்றன.

கற்பவை கற்றபின்

Question 1.
உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதி வருக.
Answer:
எங்கள் மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம். இம்மாவட்டம் கிழக்கு இந்தியா கம்பெனியால் 1790இல் உருவாக்கப்பட்டதாகும். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

இம்மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்கள் :

  • குற்றாலம்
  • அகத்தியர் அருவி
  • முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம்
  • கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
  • மணிமுத்தாறு அணை
  • நெல்லையப்பர் கோயில்
  • சங்கரன் கோயில்
  • காசி விஸ்வநாதர் கோயில்

குற்றாலம் :
குளிப்பதற்கு ஓர் ஊர் குற்றாலம்’ என்று சொல்வதற்கேற்ப குற்றாலத்தில் நாள் 6 முழுவதும் குளிக்கலாம். எப்பொழுதும் குளுமையாக இருக்கும் இடம் குற்றாலம். வானம் சிறு மழையைத் தூவிக் கொண்டே இருக்கும். குற்றாலச் சாரலை அனுபவிக்க ஜூன், ஜூலை மாதங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இங்கு மலைகள், அருவிகள் என இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. மூலிகைச் செடிகள் நிறைய உள்ளன. இம்மலையில் உள்ள பலவகையான அரிய மலர்களும் அழகைச் சேர்க்கின்றன.

இம்மலையில் மா, பலா, வாழை, கொய்யா எனப் பலவகையான பழங்களும், நெல்லிக்காய், தேங்காய் போன்றவைகளும் கிடைக்கின்றன. பாக்கு, தேன், கிழங்குகள் கிடைக்கின்றன. தேக்கு, கோங்கு , சந்தனம் ஆகிய மரங்களும் உள்ளன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடமாய்க் குற்றாலநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

அகத்தியர் அருவி :
அகத்தியர் அருவி மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு அகத்தியருக்குக் கோயில் உள்ளது. சிவனும் பார்வதியும் அகத்தியருக்கு நேரில் காட்சி தந்த இடம் என்றும் கூறப்படுகிறது.

நெல்லையப்பர் கோயில் :
திருநெல்வேலியின் சிறப்பைப் பறை சாற்றுவதே நெல்லையப்பர் – காந்திமதி கோயில் தான். தேவாரப் பாடல் பாடப் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இக்கோயிலில் ‘ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்’ உள்ளன. இக்கோயிலில் உள்ள தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.

சங்கரன் கோயில் :
சிவனும் பெருமாளும் ஒருவராய் இணைந்திருக்கும் கோயில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள மூலவர் சங்கர நாராயணனார் என்றழைக்கப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிலையின் திருவடிகளைக் கதிரவன் தழுவுவதாகக் கூறப்படுகிறது.

முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் :
இச்சரணாலயத்தின் பரப்பளவு 567 ச.மீட்டர். இங்கு புலி, சிங்கவால் குரங்கு, கரடி, காளை, ஆடு, ஓநாய், யானை மற்றும் பலவகையான மான்கள் பாதுகாக்கப்படுகின்றன.

காசி விஸ்வநாதர் கோயில் :
வட நாட்டுக்கு ஒரு காசி இருப்பது போல் தென்னாட்டில் உள்ளது தென்காசி. இங்கு உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோயிலின் பிரம்மாண்டமான  கோபுரத்தை 180 அடியில் 1456 ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டிய மன்னன் கட்டியுள்ளார். 1924 ஆம் ஆண்டு பேரிடியினால் அக்கோபுரம் தகர்ந்து விழுந்தது. தற்போது 168 அடி உயரத்தில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிலில் 1927ஆம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரநாதரால் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் கழகம் இன்றும் சிறப்பாகத் தமிழ்ப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

மணிமுத்தாறு அணை :
இது மணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளுள் ஒன்று. இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. இந்த அணை முன்னாள் தமிழக முதல்வர் காமராசரால் கட்டப்பட்டது.

கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் :
இக்காப்பகம் திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குநேரி வட்டத்தில் உள்ளது. கூந்தன் குளம் கிராம மக்களின் அரவணைப்பில் பறவைகள் யாவும், மனிதர் பயம் இன்றி அனைத்து வீடுகளின் மரங்களிலும் கூடுகள் அமைத்து முட்டையிட்டு, குஞ்சுகளைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் வந்து செல்லும். ஆண்டுதோறும் அதிகபட்சமாக ஒரு லட்சம் பறவைகள் வருவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எங்கள் திருநெல்வேலி மாவட்டம் சிறியவர், பெரியவர் என அனைவருக்கும் ஏற்றபடி மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாய் அமைந்துள்ளது என்பதைப் பெருமிதத்துடன் கூறலாம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

Question 2.
நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.
Answer:
குற்றாலம் :
குற்றாலத்தில் எப்போதும் சாரல் மழை இருந்து கொண்டே இருக்கும். அதனால் எப்பொழுதும் குளுமையாக இருக்கும். குற்றாலச் சாரல் என்பது, இயற்கை இந்த ஊருக்கு அளித்த மிகப்பெரிய கொடையாகும். ஒவ்வோர் ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் இச்சாரல் மழையை அனுபவிக்க மக்கள் கூட்டம் அலை மோதும்.

இங்கு மலைகள், அருவிகள் எனப்பல இயற்கை வளங்கள் உள்ளன. காட்டுப் பகுதியும் உள்ளது. அக்காட்டுப் பகுதியில் மூலிகைச் செடிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி, சிற்றருவி, ஐந்தருவி, புலி அருவி, பேரருவி ஆகிய ஏழு அருவிகள் குற்றாலத்தில் உள்ள மலைகளில் இருந்து நிலம் நோக்கி விழும் அருவிகள் ஆகும். இவை காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாகும்.

அருவிகளின் அணைப்பிலே உள்ள குற்றாலநாதர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இது சங்கு வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோயில் ஆகும்.

அகத்திய முனிவர் இம்மலைக்கு வந்திருந்து, தமிழை வளர்த்தார் என்றும் கூறுவர். குற்றால நாதரைப் பாட்டுடைத் தலைவராக்கித் திரிகூட ராசப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சி என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியுள்ளார்.

சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களிலும் உள்ள சிவாலயங்களில் நடராஜர் தன் நடனத்தால் சிறப்பித்த சபைகள் உள்ளன.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.4 தமிழ் ஒளிர் இடங்கள்

சிதம்பரத்தில் உள்ளது பொற்சபை, மதுரையில் உள்ளது வெள்ளி சபை, திருவாலங்காட்டில் உள்ளது ரத்தின சபை, திருநெல்வேலியில் உள்ளது தாமிர சபை, குற்றாலத்தில் உள்ளது சித்திர சபை ஆகும்.
இவ்வளவு சிறப்புகளையும் தனித்தன்மைகளையும் கொண்டது நான் கண்டுகளித்த குற்றாலம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.4 ஆழ்கடலின் அடியில்

Students can Download Tamil Chapter 1.4 ஆழ்கடலின் அடியில் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.4 ஆழ்கடலின் அடியில்

மதிப்பீடு

Question 1.
ஆழ்கடலில் அடியில்’ கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
1886 ஆம் ஆண்டு கடலில் செல்லும் பெரிய கப்பல்களை, உலோகத்தால் ஆன உடலைக் கொண்ட ஒரு விந்தையான விலங்கு தாக்குவதாகச் செய்தி வெளியானது. அதனைக் கண்டறிய நியூயார்க் நகரிலிருந்து போர்க்கப்பல் ஒன்று புறப்பட்டது. அதில் விலங்கியல் பேராசிரியரான பியரி , அக்கப்பலின் தலைவர் ஃபராகட், திமிங்கலங்களை வேட்டையாடும் நெட் என்ற வீரர் மற்றும் பியரியின் உதவியாளர் கான்சீல் ஆகியோர் சென்றனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.4 ஆழ்கடலின் அடியில்

மூன்று மாதங்கள் அவர்கள், அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் உள்ள பெருங்கடல் பரப்பில் தேடினார்கள். அவ்விலங்கு கண்ணில் படவில்லை. அதனால் அவர்கள் தங்கள் நகரத்திற்குத் திரும்ப எண்ணினர். அப்போது பளபளப்பான உடலைக் கொண்ட விலங்கு கப்பலை நோக்கி வந்தது. நெட் வலிமை வாய்ந்த ஈட்டிகளை எய்தார். அவ்விலங்கு வேகமாக மோதியதில் அவர்கள் கப்பலில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். மயக்கமடைந்த பியரி கண் விழித்த போது, பியரி, நெட், கான்சீல் ஆகியோர் அவ்விலங்கின் மீது அமர்ந்திருந்தனர். நெட், “இது விலங்கு இல்லை ; ஒரு நீர்மூழ்கிக்கப்பல்” என்று கூறினார்.

மூவரும் அக்கப்பலின் உள்ளிருப்பவர்களை உதவிக்கு அழைத்தனர். கதவு திறக்கப்பட்டது. கப்பலின் உள்ளிருந்து வந்தவர்கள் மூவரையும் சிறைப்பிடித்தனர். நெமோ என்று ஒருவர் இம்மூவரிடம் பேசினார். “நாட்டிலஸ் என்னும் இந்த நீர்மூழ்கிக் கப்பலை ஒரு விந்தையான விலங்கு என்று நம்ப வைத்திருக்கிறோம். இவ்வுண்மை தெரிந்த உங்களை விடமாட்டேன்” என்று கூறினார்.

கப்பலினுள் எல்லா இடங்களுக்கும் சென்றனர். அதில் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் ஆகிய அரிய அறிவுக் கருவூலங்கள் யாருக்கும் பயன்படாமல் இருந்தன. கப்பலின் இயங்குமுறைகளைப் பற்றி நெமோவிடம் கேட்டறிந்தனர். கப்பலில் உள்ளோர் மூச்சு விடுவதற்கான காற்று எவ்வாறு கிடைக்கிறது என்பது பற்றியெல்லாம் கூறினார் நெமோ. ஒருநாள் கப்பல் கடலுக்குள் இருக்கும் மணல் திட்டில் சிக்கிக் கொண்டது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.4 ஆழ்கடலின் அடியில்

நாட்டிலஸின் மேல்தளத்தில் நின்றபோது பக்கத்தில் ஒரு தீவு தெரிந்தது. இம்மூவரும் நெமோவிடம் அனுமதி பெற்று படகில் சென்று அத்தீவில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு படகில் ஏற்றினர். அத்தீவைச் சார்ந்த, மனிதர்களைக் கொன்று தின்னும் வழக்கமுடையவர்கள் துரத்தினார்கள். மூவரும் தப்பித்துக் கப்பலுக்குள் வந்துவிட்டனர். ஆனால் அம்மனிதர்கள் பல படகுகளில் வந்து கப்பலைச் சூழ்ந்து கொண்டனர். ஏழு நாட்களுக்குப் பிறகு மேல் மூடியைத் திறந்தார். அந்த மனிதர்கள் ஏணியில் ஏற முயன்றனர். நெமோ அதில் மின்சாரத்தைப் பாய்ச்சி இருந்ததால் ஓடிவிட்டனர்.

பல நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அருகில் நாட்டிலஸ் சென்று கொண்டிருந்தது. முத்துச் சிப்பிகளைச் சேகரிக்க நெமோவும் பியரியும் கடலுக்குள் சென்றனர். அப்போது முத்துக் குளிப்பதற்காக ஓர் இந்தியர் கடலுக்குள் இறங்கியதைப் பார்த்தனர். அவரைச் சுறாமீனிடமிருந்து காப்பாற்றினர்.

வழியில் போரின்போது கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலைப் பார்த்தனர். அதில் 5 இருந்த தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றை எடுத்துக் கொண்டனர். கடலினுள் உள்ள எரிமலை, கடலுக்குள் மூழ்கிய அட்லாண்டிஸ் நகர இடிபாடுகளைக் கண்டனர். பூமியின் தென் துருவத்தில் பென்குவின், கடல் சிங்கம் போன்ற அரிய பறவைகளையும் விலங்குகளையும் கண்டனர். ஆக்டோபஸ் ஒன்றைக் கொன்றனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.4 ஆழ்கடலின் அடியில்

மூவரும் தப்பிக்க முயன்றனர். அதனால் கப்பலுடன் இணைக்கப்பட்ட படகில் ஏறினர். அப்போது நாட்டிலஸ் கடல் சுழலுக்குள் சிக்கிக் கொண்டது. இம்மூவரும் கடலுக்குள் வீசப்பட்டனர். மயக்கம் தெளிந்த போது நார்வே நாட்டில் ஒரு மீனவரின் குடிசையில் இருந்தனர். நெமோ பற்றியும் நாட்டிலஸ் பற்றியும் யாருக்கும் எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை

கற்பவை கற்றபின்

Question 1.
ஆழ்கடல் காட்சியொன்றைக் கற்பனையாகப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.4 ஆழ்கடலின் அடியில்

Question 2.
நீர்மூழ்கிக் கப்பல் இயங்கும் முறை பற்றிய செய்திகளைத் திரட்டித் தொகுத்து எழுதுக.
Answer:
கடலுக்குள்ளே செல்லும் நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். உள்ளே சென்று பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் பயன் என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? கடலில் நடைபெறும் போர்களில் ஒற்றர்களைப் போல செயல்படுபவையே நீர்மூழ்கிக் கப்பல்கள். கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர் நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார். சில வருடங்களுக்கு முன்னால் சிறிய அளவில் செய்யப்பட்டன. தற்போது 400 அடி நீளம் வரை உள்ளன. நீர்மூழ்கிக் கப்பலில் இரண்டு என்ஜின்கள் உள்ளன. நீர்மட்டத்திற்கு மேலே ஒரு என்ஜின் உள்ளது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.4 ஆழ்கடலின் அடியில்

இது கப்பல் செல்லும் போது நீராவியால் இயக்கப்படும். இன்னொன்று கப்பல் நீரில் மூழ்கிச் செல்லும்போது மின்சாரத்தால் இயக்கப்படும். தற்போதுள்ள புதிய கப்பல்கள் 12,000 மைல் தூரம் வரை நிற்காமல் செல்லக்கூடியவை. 60 மணிநேரம் மின்சார ஆற்றலும் செயல்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. காற்று வாங்க மேடை ஒன்று இருக்கும். மேலே பீரங்கி இருக்கும். கடலின் உள்ளே செல்லும்போது பீரங்கியை உள்ளே இழுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.

மேடையின் மீது ஒரு சிறிய கோபுரம் அமைந்திருக்கும். கோபுர உச்சியில் பெரிஸ்கோப் இரட்டைக் கண்ணாடி 2 அல்லது 3 பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று சரியாகத் தெரியாவிட்டாலும் திருப்பிப் பார்க்கும் வசதியும் உள்ளது. எனவே, நீரினுள் இருக்கும் போது கண்ணாடியின் உதவியால் மாலுமி மேலே நடைபெறும் செயல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பெரிஸ்கோப் செயல்படவில்லையெனில் கப்பலுக்கு வழி தெரியாது. எனவே, நீர்மூழ்கிக் கப்பலின் கண்கள் என்றே இதனை அழைக்கலாம்.’

கப்பலின் ஓரங்களில் வெடிகுண்டு வைக்கும் அறை இருக்கும். நீரினுள் மூழ்கும் முன்பு அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டு கோபுர வாசலும் மூடப்படும். பின்னர் நீர்த்தொட்டி திறக்கப்படும். கடல் நீர் தொட்டிகளுக்குள் வந்து நிறைந்ததும் கப்பலின் எடை மிகுந்து கீழே செல்லும். இதற்குச் சிறகுகளும் உறுதுணையாகச் செயல்படும். கப்பல் கடலுக்குள் மூழ்கும் போது, முன்புறம் தாழ்ந்தும் பின்புறம் உயர்ந்தும் மீன் போல நீந்திச் செல்வதுபோல் இருக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.4 ஆழ்கடலின் அடியில்

எவ்வளவு ஆழம் செல்ல வேண்டுமோ அதற்கேற்ப தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட வேண்டும். கப்பல் மேலே வரும்போது, காற்றுக் குழாய்கள் திறக்கப்படும். காற்றானது நீர்த்தொட்டிகளுக்குள் சென்று அங்கிருக்கும் நீரை வெளியேற்றும். இதனால் கப்பலின் எடை குறைந்து மேலே நீர்மட்டத்திற்கு வரும். கப்பலின் உள்ளே எடை ஒரே அளவில் இருக்க வேண்டும். கொஞ்சம் கவனிக்கத் தவறினாலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கப்பலின் எடை குறையும் போதெல்லாம் அந்த அளவுக்குச் சரியான நீரைத் தொட்டிகளில் நிரப்ப வேண்டும். கப்பலின் இருமுனைகளிலும் உள்ள எடை தராசுத் தட்டுகள் போல் சமமாக இருக்க வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.4 ஆழ்கடலின் அடியில்

நீராவிக் கருவிகள் கப்பலை நீர்மட்டத்திற்கு இழுத்துச் செல்வதுடன், வேண்டும் போது காற்றுக்குழாய்களை நிரப்பவும் மின்னாற்றலைப் புதுப்பிக்கவும் உதவுகின்றன. திடீரென ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பிக்க காற்று உடைகள் இருக்கும். இவை மூச்சுவிடவும், கரைசேரவும் உறுதுணை செய்யும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

Students can Download Tamil Chapter 3.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
………….. தீமை உண்டாகும்.
அ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்
ஆ) செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்
Answer:
இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

Question 2.
தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ………. இருக்கக் கூடாது.
அ) சோம்பல்
ஆ) சுறுசுறுப்பு
இ) ஏழ்மை
ஈ) செல்வம்
Answer:
அ) சோம்பல்

Question 3.
‘எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) எழுத்து + தென்ப
ஆ) எழுத்து + என்ப
இ) எழுத்து + இன்ப
ஈ) எழுத் + தென்
Answer:
ஆ) எழுத்து + என்ப

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

Question 4.
‘கரைந்துண்ணும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …
அ) கரைந்து + இன்னும்
ஆ) கரை – துண்ணும்
இ) கரைந்து + உண்ணும்
ஈ) கரை + உண்ணும்
Answer:
இ) கரைந்து + உண்ணும்)

Question 5.
கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) கற்றனைத்தூறும்
ஆ) கற்றனைதூறும்
இ) கற்றனைத்தீறும்
ஈ) கற்றனைத் தோறும்
Answer:
அ) கற்றனைத்தூறும்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

பொருத்துக

1. கற்கும் முறை – செயல்
2. உயிர்க்குக் கண்கள் – காகம்
3. விழுச்செல்வம் – பிழையில்லாமல் கற்றல்
4. எண்ணித் துணிக – எண்ணும் எழுத்தும்
5. கரவா கரைந்துண்ணும் – கல்வி
Answer:
1. கற்கும் முறை – பிழையில்லாமல் கற்றல்
உயிர்க்குக் கண்கள் – எண்ணும் எழுத்தும்
3. விழுச் செல்வம் – கல்வி
4. எண்ணித்துணிக – செயல்
5. கரவா கரைந்துண்ணும் – காகம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

குறுவினா

Question 1.
நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும் எப்போது?
Answer:
நாம் ஒருவருடைய பண்பை அறிந்து நன்மை செய்ய வேண்டும் இல்லையென்றால்
நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும்.

Question 2.
தீமை உண்டாக்கும் இரண்டு செயல்களை எழுதுக.
Answer:
தீமை உண்டாக்கும் இரண்டு செயல்கள் செய்யத்தகாத செயல்களைச் செய்தல்
செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுதல்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள்

Question 3.
துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்குபவர் யார்?
Answer:
துன்பம் வரும் போது வருந்திக் கலங்காதவர். அந்தத் துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்குபவர் ஆவர்.

பாடப்பகுதியிலிருந்து படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள் - 1
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள் - 2
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.6 திருக்குறள் - 3

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

Students can Download Tamil Chapter 2.2 அறம் என்னும் கதிர் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காந்தியடிகள் எப்போதும் ……………………..ப் பேசினார்.
அ) வன்சொற்களை
ஆ) அரசியலை
இ) கதைகளை
ஈ) வாய்மையை
Answer:
ஈ) வாய்மையை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

Question 2.
இன்சொல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) இனிய + சொல்
ஆ) இன்மை + சொல்
இ) இனிமை + சொல்
ஈ) இன் + சொல்
Answer:
இ) இனிமை + சொல்

Question 3.
அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …….
அ) அற கதிர்
ஆ) அறுகதிர்
இ) அறக்கதிர்
ஈ) அறம்கதிர்
Answer:
இ) அறக்கதிர்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

Question 4.
‘இளமை’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ……..
அ) முதுமை
ஆ) புதுமை
இ) தனிமை
ஈ) இனிமை
Answer:
அ) முதுமை

பொருத்துக
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர் - 3
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர் - 1

குறுவினா

Question 1.
அறக்கதிர் விளைய எதனை எருவாக இட வேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?
Answer:
அறக்கதிர் விளைய எருவாக இடவேண்டியது உண்மை பேசுதல் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

Question 2.
நீக்கவேண்டிய களை என்று அறநெறிச்சாரம் எதனைக் குறிப்பிடுகிறது?
Answer:
கடுஞ்சொற்களை நீக்கவேண்டிய களை என்று அறநெறிச்சாரம் குறிப்பிடுகிறது.

சிறுவினா

இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியார் கூறுவன யாவை?
Answer:
இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்கள் :

  • இனிய சொல்லையே விளைநிலமாக கொள்ள வேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும்.
  • வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இட வேண்டும்.
  • அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாக பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்.

சிந்தனை வினா

இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?
Answer:
இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் :
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர் - 2

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

கற்பவை கற்றபின்

Question 1.
பிறருடன் பேசும்போது நீங்கள் பயன்படுத்தும் இன்சொற்களைத் தொகுத்துக் கூறுக.
Answer:
பிறருடன் பேசும்போது நாங்கள் பயன்படுத்தும் இன்சொற்கள் :
இன்சொல் என்பது உதட்டளவில் தோன்றி வருவதல்ல. உள்ளத்திலிருந்து அன்புடன் தோன்றும். அச்சொல் மகிழ்ச்சியளிக்கும். இன்சொல் பேசுவது ஈகையைவிடச் சாலச் சிறந்தது. அறம் வளர்ந்த உள்ளத்திலே இனிய சொற்கள் பிறக்கும்.

நம்மைவிட வயதில் மூத்தவர்களிடம் பேசும்போது மிக்க மரியாதையுடன் பேசுவேன். இது ஒரு கடமை மட்டுமல்ல, அது ஒரு நல்லொழுக்கம் ஆகும். எவரையும் நீ, வா, போ என்று ஒருமையில் அழைப்பதைத் தவிர்ப்பேன். நீங்கள், வாருங்கள் என்று மரியாதைப் பன்மையுடன் தான் பேசுவேன். பிறரை மதிப்பதால் நான் எப்பொழுதும் தாழ்ந்து போக மாட்டேன் என்பதை நான் உணர்வேன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

யாரையும் இகழ்ந்து பேசமாட்டேன். பேச்சில் வன்முறையைப் பயன்படுத்தமாட்டேன். எவரைப் பற்றியும் புறங்கூறமாட்டேன். பிறரை ஏளனப்படுத்திப் பேச மாட்டேன். அகந்தையுடன் பேசமாட்டேன். பிறருடைய மனம் புண்படாத வகையில் பேசுவேன்.
இவைபோன்ற சொற்களை நாங்கள் பயன்படுத்துவோம்.

Question 2.
உன் அன்னை பயன்படுத்திய இன்சொல்லால் நீ மகிழ்ந்த நிகழ்வு ஒன்றைக் கூறுக.
Answer:
என் அன்னை பயன்படுத்திய இன்சொல்லால் நான் மகிழ்ந்த நிகழ்வு :
என் அன்னை எப்போதும் இன்சொற்களையேத் தான் பயன்படுத்துவார். இதுவரை என் அம்மா யாரிடமும் கோபப்பட்டு பேசியதில்லை. ஒருமுறை என் வீட்டிற்கு என் உறவினருடைய குழந்தை வந்தது. அக்குழந்தையுடன் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். அக்குழந்தை என் புத்தகத்தைக் கிழித்துவிட்டது. அதனால் கோபம் வந்து அக்குழந்தையை அடித்துவிட்டேன். குழந்தை அழுதது. என் அம்மா பதற்றத்துடன் “என்னவாயிற்று” என்று கேட்டபடியே வேகமாக ஓடி வந்தார். நடந்ததைக் கேட்டறிந்தார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

என்னை அடிப்பார்கள், திட்டுவார்கள் என்று பயந்தேன். ஆனால் முதலில் குழந்தையைச் சமாதானப்படுத்தினார்கள்.

பிறகு என்னிடம் வந்து “நீ யாரிடமும் கோபப்படக்கூடாது. குழந்தைக்குப் படிக்கும் புத்தகம் என்பது தெரியுமா? குழந்தை இருக்கும் போது நீதான் உன் புத்தகத்தைக் குழந்தையின் கைக்கெட்டாமல் வைத்திருக்க வேண்டும். நம்மைவிட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டிக்கக்கூடாது. நாம் கூறுவதைப் புரிந்து கொள்ளும் 5 வயதாக இருந்தால் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இல்லையெனில் தவறு நிகழாமல் இருக்க வழி செய்ய வேண்டும். எந்தப் பொருளை எங்கு வைக்க வேண்டும் என்று அறிந்து அந்தந்த இடத்தில் வைக்க வேண்டும். எல்லோரிடமும் அன்போடு பழகு. நம்மைவிடச் சிறியவர்களுடன் விட்டுக்கொடுத்து வாழ்ந்திடு, மற்றவர்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்” என்று இன்சொற்களாலேயே அறிவுரை கூறினார். அவ்வுறிவுரையை நான் என்றும் மறவேன்.

அன்றிருந்து நான் அனைவரிடமும் அன்போடு பழகுகிறேன். அந்நாளை என்னால் மறக்கவியலாது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

கூடுதல் வினாக்கள்

நீரப்புக.

1. முனைப்பாடியார் சமண சமயத்தைச் சார்ந்தவர்.
2. முனைப்பாடியார் வாழ்ந்த காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.
3. அறநெறிச்சாரம் அறநெறிகளைத் தொகுத்துக் கூறுகிறது.

விடையளி :

Question 1.
முனைப்பாடியார் குறிப்பு எழுதுக
Answer:

  • முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப் புலவர்.
  • இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.
  • இவர் 225 பாடல்களைக் கொண்ட அறநெறிச்சாரம் என்ற நூலை இயற்றியுள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.2 அறம் என்னும் கதிர்

Question 2.
முனைப்பாடியார் விளைநிலம் என்றும் வித்து என்றும் எவற்றைக் கூறுகிறார்?
Answer:
இனிய சொல்லை விளைநிலமாகவும், ஈகை என்னும் பண்பை விதையாகவும் முனைப்பாடியார் கூறுகிறார்.

பாடலின் பொருள்

இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ள வேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இட வேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

Students can Download Tamil Chapter 2.1 புதுமை விளக்கு Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
“இடர் ஆழி நீங்குகவே – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ………………….
அ) துன்பம்
ஆ) மகிழ்ச்சி
இ) ஆர்வம்
ஈ) இன்பம்
Answer:
அ) துன்பம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

Question 2.
ஞானச்சுடர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) ஞான + சுடர்
ஆ) ஞானச் + சுடர்
இ) ஞானம் + சுடர்
ஈ) ஞானி + சுடர்
Answer:
இ) ஞானம் + சுடர்

Question 3.
இன்பு உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) இன்பு உருகு
ஆ) இன்பும் உருகு
இ) இன்புருகு
ஈ) இன்பருகு
Answer:
இ) இன்புருகு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

பொருத்துக

அன்பு – நெய்
ஆர்வம் – தகனி
சிந்தை – விளக்கு
ஞானம் – இடுதிரி
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு - 1

குறுவினா

Question 1.
பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக உருவகப்படுத்துகின்றனர்?
Answer:
பொய்கையாழ்வார் பூமியை அகல்விளக்காக உருவகப்படுத்துகின்றார். பூதத்தாழ்வார் அன்பை அகல்விளக்காக உருவகப்படுத்துகின்றார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

Question 2.
பொய்கை ஆழ்வார் தற்காகப் பாமாலை சூட்டுகிறார் ?
Answer:
பொய்கையாழ்வார் தம்முடைய கடல் போன்ற துன்பம் நீங்குவதற்காகத் திருமாலுக்குப் பாமாலை சூட்டுகிறார்.

சிறுவினா

பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
Answer:
பூதத்தாழ்வார் ஞான விளக்கேற்றும் முறை:
(i) விளக்கேற்றுவதற்கு அகல்விளக்கு, நெய், திரி ஆகியவை தேவை
(ii) இங்கு , பூதத்தாழ்வார் தம் உள்ளத்தில் எழுகின்ற அன்பை அகல்விளக்காவும்,
ஆர்வத்தை நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு ஞான ஒளியாகிய சுடர்விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

சிந்தனை வினா

பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நீங்கள் எவற்றை எல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீர்கள்
Answer:
பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நான் ஒழுக்கம், அன்பு ஆகியவற்றை விளக்காக உருவகப்படுத்துவேன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

கற்பவை கற்றபின்

Question 1.
பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைத் திரட்டுக.
Answer:

  1. பொய்கை ஆழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசை ஆழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. திருமங்கையாழ்வார்
  7. தொண்டரடிப் பொடி ஆழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஸ்ரீ ஆண்டாள்
  10. குலசேகர ஆழ்வார்
  11. மதுரகவி ஆழ்வார்
  12. திருப்பாணாழ்வார்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

தெரிந்து தெளிவோம்

(i) ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர். (அந்தம் – முடிவு, ஆதி – முதல்). இவ்வாறு அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

(ii) திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார். பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

கூடுதல் வினாக்கள்

நிரப்புக

  1. உள்ளத் தூய்மையோடு நன்னெறியில் நடப்பதே சான்றோரின் இயல்பு.
  2. பொய்கையாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருவெஃகா.
  3. பொய்கையாழ்வார் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியைப் பாடியுள்ளார்.
  4. பூதத்தாழ்வார் பிறந்த ஊர் மாமல்லபுரம்.
  5. நாலாயிரத்திவ்வியப் பிரபந்ததில் இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர் பூதத்தாழ்வார்.
  6. முதலாழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
  7. திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.
  8. ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்.
  9. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம்.
  10. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி.
  11. பொய்கையாழ்வார் கடலை நெய்யாகவும், பூதத்தாழ்வார் ஆர்வத்தை நெய்யாகவும் பாடியுள்ளார்.
  12. அன்பை அகல்விளக்காகப் பாடியவர் பூதத்தாழ்வார்.
  13. பூமியை அகல்விளக்காகப் பாடியவர் பொய்கையாழ்வார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

விடையளி :

Question 1.
அந்தாதி – குறிப்பு எழுதுக
Answer:

  • ஒரு பாடலின் இறுதி எழுத்தோ , அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர்.
  • இவ்வாறு அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

Question 2.
பொய்கையாழ்வார் குறிப்பு எழுதுக.
Answer:

  • பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.
  • நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியைப் பாடியவர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

Question 3.
பூதத்தாழ்வார் குறிப்பு வரைக.
Answer:

  • பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர்.
  • இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர்.

பாடலின் பொருள்

ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

Students can Download Tamil Chapter 2.5 அணி இலக்கணம் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

மதிப்பீடு

குறுவினா

Question 1.
உருவக அணியை விளக்குக.
Answer:
உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி ஆகும்.
எ.கா.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று

விளக்கம் : இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும், கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணிக்குச் சான்றாயிற்று.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

Question 2.
உருவக அணிக்கும் ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம் - 1

கற்பவை கற்றபின்

உவமைத் தொடர்களை எழுதி அவற்றை உருவகங்களாக மாற்றுக.
Answer:
(எ.கா.) மலர் போன்ற முகம் – முகமலர்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம் - 2

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. உவமைவேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படிக் கூறுவது உருவக அணி ஆகும்.
2. கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

குறுவினா :

Question 1.
உருவக அணி என்றால் என்ன?
Answer:
உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படிக் கூறுவது உருவக அணி ஆகும். எ.கா. தமிழ்த்தேன், துன்பக்கடல்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

Question 2.
ஏகதேச உருவக அணி என்றால் என்ன?
Answer:
கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
எ.கா. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

மொழியை ஆள்வோம்

கேட்க. நீதிக்கதைகளைக் கேட்டு மகிழ்க.
மாணவர்கள் தாங்களாகவே நீதிக்கதைகளைக் கேட்டு மகிழ வேண்டும்.

பேசுக. நீதிக்கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.
மாணவர்கள் தாங்களாகவே நீதிக்கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூற வேண்டும்.

சொல்லக் கேட்டு எழுதுக

1. பொய்கையாழ்வார் திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தார்.
2. இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ள வேண்டும்.
3. வாழ்க்கை குறிக்கோள் உடையது.
4. செல்வத்துப் பயன் ஒப்புரவு வாழ்க்கை
5. உவமையும் உவமேயமும் ஒன்றாக அமைவது உருவக அணி.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

அறிந்து பயன்படுத்துவோம்

ஏதேனும் ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவப்படுவது வினாவாகும். வினா கேட்கப் பயன்படுத்தும் சொற்கள் வினாச்சொற்கள் எனப்படும்.
‘எது, என், எங்கு, எப்படி, எத்தனை, எப்பொழுது, எவற்றை , எதற்கு, ஏன், யார், யாது, யாவை’ போன்றன வினாச்சொற்கள் ஆகும்.

சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக.

Question 1.
நெல்லையப்பர் கோவில்…………….. உள்ளது?
Answer:
எங்கு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

Question 2.
முதல் ஆழ்வார்கள் ……………. பேர்?
Answer:
எத்தனை

Question 3.
…….. சொற்களைப் பேச வேண்டும்?
Answer:
எந்தச்

Question 4.
அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர்………….?
Answer:
யார்

Question 5.
அறநெறிச்சாரம் என்பதன் பொருள் …………..?
Answer:
யாது

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

பின்வரும் தொடரைப் படித்து வினாக்கள் எழுதுக.

பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள்.
(எ.கா) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?
1. ……………………………………………………………………………………………………………
2. ……………………………………………………………………………………………………………
3. ……………………………………………………………………………………………………………

Answer:

1. பூங்கொடி யாருடன் பள்ளிக்குச் சென்றாள்?
2. பூங்கொடி எப்போது பள்ளிக்குச் சென்றாள்?
3. பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் எங்குச் சென்றாள்?

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

தலைப்புச் செய்திகளை முழு சொற்றொடர்களாக எழுதுக.

(எ.கா) தலைப்புச் செய்தி : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் – வானிலை மையம் அறிவிப்பு.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Question 1.
சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் – மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
Answer:
சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

Question 2.
தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – மக்கள் ஆர்வத்துடன் வருகை
Answer:
தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடங்கியதால் மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்.

Question 3.
தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி – தமிழக அணி வெற்றி
Answer:
தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

Question 4.
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி – ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம்.
Answer:
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பெற்றாள்.

Question 5.
மாநில அளவிலான பேச்சுப்போட்டி – சென்னையில் இன்று தொடக்கம்
Answer:
மாநில அளவிலான பேச்சுப்போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

கட்டுரை எழுதுக.

ஒற்றுமையே உயர்வு

முன்னுரை :

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே’ என்று பாரதியார் பாடியுள்ளார். அப்படிப்பட்ட ஒற்றுமையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வள்ளுவர் கூறும் ஒற்றுமை :
ஒற்றுமையின் பலத்தை அறிந்த வள்ளுவர் ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தின் மூலம் அதனை விளக்கியுள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

“புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற”

என்ற குறளின் பொருள் ஒற்றுமையைப் போல் வேறொன்றைத் தேவருலகம் சென்றாலும் 6 பெற இயலாது என்பதாகும்.

இயற்கை காட்டும் ஒற்றுமை :
பல மரங்களும் செடிகளும் இணைந்தால்தான் இயற்கை உயிர்பெறுகிறது. மரங்களின் ஒற்றுமையால் சுற்றுச்சூழல் தூய்மை பெறும். கொஞ்சம் கொஞ்சமாக வரும் மழையினால் நீர்நிலை நிரம்புகிறது. பல மரங்களின் வேர்களின் ஒற்றுமை மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துகின்றது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

முடிவுரை :
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை – பலர் ஒன்று கூடி வாழ்ந்தால் நிறைய நன்மைகள் உண்டு. மகாகவி பாரதியார் வந்தே மாதரம்’ என்ற தம் கவிதையில், ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார்போல் ஒற்றுமையுடன் நாம் வாழ்ந்தால்தான் நம் நாடும் நாமும் முன்னேறலாம்.

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் படங்கள் சார்ந்த சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம் - 7
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம் - 3

கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தித் தொடர்கள் உருவாக்குக. (விதை, கட்டு, படி, நிலவு, நாடு, ஆடு)

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம் - 8
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம் - 4

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்

1. எந்தச் சூழ்நிலையிலும் இனிய சொற்களையே பேசுவேன்.
2. அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வேன்.
3. என் வாழ்வில் எளிமையைக் கடைப்பிடிப்பேன்.
4. திருக்குறள் கூறும் ஒப்புரவு நெறியைப் பின்பற்றி நடப்பேன்.

கலைச்சொல் அறிவோம்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம் - 5

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம்

இணையத்தில் காண்க

அறக்கருத்துகளைக் கூறும் நூல்களின் பெயர்களை இணையத்தில் தேடித் தொகுக்க.
அறக்கருத்துகளைக் கூறும் நூல்களின் பெயர்கள் :
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம் - 6

Further Read:

HDFCLIFE Pivot Point Calculator

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 7.1 படை வேழம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Question 1.
உங்களுக்குத் தெரிந்த சிற்றிலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • பரணி
  • கலம்பகம்
  • அந்தாதி
  • பள்ளு
  • கோவை
  • பிள்ளைத்தமிழ்
  • சதகம்
  • குறவஞ்சி
  • தூது

Question 2.
போர்க் கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம் 1

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சிங்கம் …………………….. யில் வாழும்.
அ) மாயை
ஆ) ஊழி
இ) முழை
ஈ) அலை
Answer:
இ) முழை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Question 2.
கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு ………………………
அ) வீரம்
ஆ) அச்சம்
இ) நாணம்
ஈ) மகிழ்ச்சி
Answer:
ஆ) அச்சம்

Question 3.
‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
அ) வெம் + கரி
ஆ) வெம்மை + கரி
இ) வெண் + கரி
ஈ) வெங் + கரி
Answer:
ஆ) வெம்மை + கரி

Question 4.
‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) என் + இருள்
ஆ) எட்டு + இருள்
இ) என்ற + இருள்
ஈ) என்று + இருள்
Answer:
ஈ) என்று + இருள்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Question 5.
‘போல் + உடன்றன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) போன்றன
ஆ) போலன்றன
இ) போலுடன்றன
ஈ) போல்உடன்றன
Answer:
இ) போலுடன்றன

குறுவினா

Question 1.
சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்?
Answer:
தங்கள் உயிரைப் பறிக்க வந்த எமனோ என்று சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் நடுங்கினர்.

Question 2.
கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?
Answer:
கலிங்க வீரர்கள் தம்மை அழிக்க வந்த தீயோ என்று அஞ்சி ஓடினர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Question 3.
சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை?
Answer:

  • படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர்.
  • கடலில் தாவிக் குதித்துத் தப்பினர்.
  • யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர்.
  • எந்தத் திசையில் செல்வது என்று தெரியாமல் மலைக் குகை மற்றும் புதருக்குள் தப்பி ஒளிந்து கொண்டனர்.

சிறுவினா

Question 1.
சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப் படைவீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?
Answer:

  • கலிங்க வீரர்கள் “இது என்ன மாய வித்தையா” என்று வியந்தனர். தம்மை அழிக்க வந்த தீயோ? உயிரைப் பறிக்க வந்த எமனோ? என்று அஞ்சினர்.
  • படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். யானைகள் பின்னே மறைந்து கொண்டனர்.
  • எந்தத் திசையில் செல்வது எனத் தெரியாமல், மலைக் குகை மற்றும் புதர்களில் ஓடி ஒளிந்தனர்.
  • ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தன்னுடைய நிழலைக் கூட எதிரிகள் துரத்தி வருவதாக எண்ணிப் பயந்தனர்.
  • யானை பிளிறியதைக்கேட்டு பயந்த வீரர்கள் குகைக்குள் சென்று மறைந்தனர். புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

சிந்தனை வினா

Question 1.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை எவை எனக் கருதுகிறீர்கள்?
Answer:

  • ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இயற்கையாக அமைந்த அரண்களும்,
  • நான்கு திசைகளின் எல்லைகளில் பாதுகாப்புப் படை வீரர்களும்,
  • வேறுபட்ட சிந்தனை கொண்ட படைத் தலைவர்களும்,
  • திறமையான படை வீரர்களும் தேவை எனக் கருதுகிறேன்.

கூடுதல் வினாக்கள்இயல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
செயங்கொண்டார் பிறந்த ஊர் ……………………..
அ) ஆலங்குடி
ஆ) தீபங்குடி
இ) மால்குடி
ஈ) லால்குடி
Answer:
ஆ) தீபங்குடி

Question 2.
கலிங்கத்து பரணி ………………………. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
அ) 96
ஆ) 24
இ) 95
ஈ) 18
Answer:
அ) 96

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Question 3.
தமிழில் முதன் முதலில் தோன்றிய பரணி நூல் ……………………
அ) தக்கயாகப்பரணி
ஆ) கலிங்கத்துப் பரணி
இ) இரணிய வதைப் பரணி
ஈ) பாசவதைப் பரணி
Answer:
ஆ) கலிங்கத்துப் பரணி

Question 4.
‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ – என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் ………………………..
அ) புகழேந்திப் புலவர்
ஆ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்
Answer:
இ) ஒட்டக்கூத்தர்

Question 5.
கலிங்கத்துப் பரணியில் அமைந்துள்ள தாழிசைகளின் எண்ணிக்கை …………………
அ) 599
ஆ) 598
இ) 590
ஈ) 595
Answer:
அ) 599

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

குறுவினா

Question 1.
பரணி இலக்கியம் எதனைப் பற்றியது?
Answer:
போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கண்ட வீரரைப் புகழ்ந்து பாடுவது பரணி இலக்கியமாகும்.

Question 2.
செயங்கொண்டார் – குறிப்பு வரைக.
Answer:

  • முதல் குலோத்துங்கச் சோழனின் அவைக்களப் புலவர்.
  • பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் “பரணிக்கோர் செயங்கொண்டார்” என்று புகழ்ந்துள்ளார்.
  • செயங்கொண்டார் “தீபங்குடி” என்னும் ஊரைச் சார்ந்தவர்.
  • கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் இவர்.

Question 3.
இஃது என்ன மாய வித்தையோ என கலிங்கத்துப் படை வியக்கக் காரணம் யாது?
Answer:
சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்க வீரர்கள் இஃது என்ன மாய வித்தையோ என்று வியந்தனர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Question 4.
சோழப் படையின் யானைகள் எவ்வாறு பிளிறின?
Answer:

  • சோழப் படையின் யானைகள் சினமுற்று இடியைப் போல பிளிறின.
  • இதனைக் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாகக் கலிங்க வீரர்கள் அஞ்சினர்.
  • கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடும்போது தங்களுடைய நிழலையும் மற்றவர் நிழலையும் பார்த்து தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி ஓடினர்.

சிறுவினா

Question 1.
கலிங்கத்துப்பரணி – குறிப்பு வரைக.
Answer:

  • கலிங்கத்துப்பரணி 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.
  • பரணி இலக்கிய வகையைச் சார்ந்தது.
  • தமிழில் பாடப்பட்ட முதல் பரணி நூல் இதுவே ஆகும்.
  • கலிங்கத்துப் போர் வெற்றியை இந்நூல் பேசுகிறது.
  • இந்நூலை இயற்றியவர் செயங்கொண்டார்.
  • கலித்தாழிசையால் பாடப்பட்ட நூல் இது.
  • 599 தாழிசைகள் கொண்டது.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

சொல்லும் பொருளும்

  • மறலி – காலன்
  • கரி – யானை
  • தூறு – புதர்
  • அருவர் – தமிழர்
  • உடன்றன – சினந்து எழுந்தன
  • வழிவர் – நழுவி ஓடுவர்
  • பிலம் – மலைக்குகை
  • மண்டுதல் – நெருங்குதல்
  • இறைஞ்சினர் – வணங்கினர்
  • முழை – மலைக்குகை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 6.4 காலம் உடன் வரும் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும்

Question 1.
காலம் உடன் வரும் – கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக்காட்டுக.
Answer:
மாணவர் செயல்பாடு.

Question 2.
காலம் உடன் வரும் கதையில் இடம்பெற்றுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும் 3 Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும் 4

பாடநூல் வினாக்கள்

Question 1.
‘காலம் உடன் வரும்’ – கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
காலம் உடன் வரும் எனும் சிறுகதையை எழுதியவர் கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் ஆவார். நெசவுத் தொழிலில் ஏற்படும் இன்னல்களையும் நெசவாளர்களின் ஏழ்மை நிலையினையும் காட்டுவதாக இக்கதை அமைகிறது.

சுப்ரமணியத்தின் கவலை :
அனந்திகா நிறுவனத்திற்கு வழக்கமாக வெள்ளக்கோயில் தினேஷ் துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத் துணிகளை அனுப்பி வைப்பார்கள். ஒருநாள் துணி அனுப்புவது தாமதமாகிறது. தறி நெய்ய ஆள் கிடைப்பதில்லை. அதனால் துணி நெய்ய தாமதமாகிறது என்று எவ்வளவு சொல்லியும் அனந்திகா நிறுவனம் நாளைக்குள் கட்டாயம் துணிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்கிறது.

வழக்கமாகப் பாவு இணைக்கும் ரங்கன் ஊருக்குச் சென்று விட்டதால், அங்கு யாரும் இல்லை. மாணிக்கம் – ஓட்டும் ஒரே ஒரு தறியில்தான் பாவு இருக்கிறது. அந்தப் பாவும் சற்று நேரத்தில் தீர்ந்து விடும். என்ன செய்வது என்று தெரியாமல் சுப்ரமணியம் மிகவும் கலங்கிப் போனார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும்

நண்பன் ரகுவின் உதவி :
நண்பர் ரகு துணியகத்தில் கட்டாயமாகப் பாவு இணைப்பவர் யாராவது இருப்பார்கள். அங்கே போய் பார்க்கலாம் என்று ரகுவினுடைய தறிப்பட்டறைக்குச் செல்கிறார். பதற்றத்துடன் வந்த சுப்பிரமணியத்தை ரகு நெருங்கினார். அதற்குள் சுப்பிரமணியன் பாவு இணைக்க ஆள் வேண்டும். உடனடியாக யாரையாவது அனுப்பி உதவுங்கள் என்றார்.

அதற்கு ரகு மாயழகுவின் மனைவி ஒச்சம்மா பாவு இணைக்கும் 5 வேலையை நன்கு செய்வாள். ஆனால் இந்த இரவில் அவன் எப்படி அனுப்புவான் என்கிறார். இரட்டைச் சம்பளம் தருகிறேன் என்றார். ரகு தான் சொன்னதாகச் சொல்லி ஒச்சம்மாவை அழைத்துச் செல் என்கிறார். சுப்பிரமணி மாயழகு வீட்டிற்குச் செல்கிறார்.

மாயழகும் ஒச்சம்மாவும் :
ஒச்சம்மா உசிலம்பட்டி பக்கம் கிருஷ்ணாபுரம் மாயழகு வெள்ளி மலை அடிவாரத்தில் கோம்பைத் தொழுவு. திருமணமான பிறகு நிலையாக ஓரிடத்தில் வாழ வேண்டும் என்பதற்காக வெள்ளகோவில் வந்தனர். தன் குழந்தைகளைப் படிக்க வைக்க,தறி ஓட்டுவதைத் தவிர பிற தறி வேலைகள் அனைத்தையும் கற்றாள்.

பாவு பிணைத்தல் :
ரகு அனுப்பியதாகவும் தன் பிரச்சனையையும் சுப்பிரமணியம் எடுத்துரைக்கிறார். மாயழகு தன் மனைவி ஒச்சம்மாவை அவருடன் அனுப்புகிறார். தூங்கிக்கொண்டு இருக்கும் தன் கைக்குழந்தையுடன் செல்கிறாள். ஒச்சம்மா வர மாணிக்கத்தின் பாவு தீர்ந்து விடுகிறது. அங்கிருந்த பாவினைச் சரிசெய்து இருக்கும் வேளையில் குழந்தை விழித்துக் கொள்கிறது. குழந்தையைத் தூங்க வைத்தபடியே பாவை இணைக்கிறாள். வேலை முடிந்ததும் இரட்டைச் சம்பளத்தோடு சுப்பிரமணியம் அவளின் வீட்டிற்குக் கொண்டுபோய் சேர்க்கிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும்

முடிவுரை :
இரவு பகல் பார்க்காமல் தன் வறுமையின் காரணமாகத் தறி பட்டறையில் வேலை செய்பவர்கள் வேலை செய்கின்றனர் என்பதை கதை மூலம் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

Question 1.
இசைக்கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் 1

Question 2.
இக்கால இசைக்கருவிகள் குறித்து கலைக்களஞ்சிய வடிவில் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
வயலின் :
வில் போட்டு வாசிக்கப்படும் மரத்திலான தந்திக் கருவி ஆகும். இது பழங்காலத்தில் பிடில் எனப்பட்டது. இதுமேலைத் தேயம், கீழைத் தேயம் என இருவகைப் பிராந்திய இசைகளால் இசைக்கப்படும் கருவி. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது.

தம்புரா :
கம்பி கட்டப்பட்ட இசைக்கருவி தம்புரா. இது ராகம் இசைக்கும் நேரம் முழுவதும் நிலையான தொனியில் இசைக்கப்படுகின்றது.

நாதசுவரம் :
நாகஸ்வரம், நாகசு, நாயனம் ஆகிய வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. தென்னிந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பெருமளவு இசைக்கப்படும் வாத்தியம் இவை. வட்ட வடிவமாக விரிந்து காணப்படும் உள் நீண்ட மரக்குழலால் ஆன உடல், உடல் மேல் பகுதியில் செப்புத் தகடு பொருத்தப்பட்டு இருக்கும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

தவில் :
நாதஸ்வரத்திற்குத் துணையாக இசைக்கப்படும் கருவி ஆகும். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்பட்டு இருக்கும்.

பாடநூல் வினாக்கள்

Question 1.
காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
மக்களின் மனதிற்கு எழுச்சியைத் தருபவை இசைக்கருவிகள். கருவிகளில் தோல், நரம்பு, காற்று, கஞ்சக் கருவிகள் என பல வகை உள்ளன. அவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம்.

காற்றுக் கருவிகள் :
காற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுபவை காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொம்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும்.

குழல் :
குழல் என்றால் புல்லாங்குழல் ஆகும். காடுகளில் மூங்கில் மரங்களை வண்டுகள் துளை இட்டதால் காற்று வழியாக இசை பிறந்தன. இதனைக் கேட்டும் பார்த்தும் முன்னோர்கள் புல்லாங்குழலை வடிவமைத்தனர்.

மூங்கில், சந்தனம் செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் புல்லாங்குழல் செய்யப்படுகின்றன. கொன்றைக் குழல், முல்லைக் குழல், ஆம்பல் குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. திருவள்ளுவரும், ‘குழல் இனிது’ என்கின்றார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

கொம்பு :
கொம்பு இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே, பின்னால் ‘கொம்பு என்னும் இசைக்கருவி தோன்றக் காரணமாயிற்று. பித்தளை மற்றும் வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்பட்டன. வேட்டையாடும்போது வேடர்கள் இதனை ஊதுவார்கள்.

கள்வர்களை விரட்டவும், விலங்குகளிடமிருந்து எச்சரிக்கை செய்யவும் இக்கொம்பினை ஊதுவார்கள். திருவிழாக் காலங்களில் – கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி ஆகிய கொம்புகள் இக்காலத் திருவிழாக்களில் இசைக்கப்படுகின்றது.

சங்கு :
சங்கு ஓர் இயற்கைக் கருவி. கடலிலிருந்து எடுக்கப்படும் வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை, “வலம்புரிச்சங்கு என்று கூறுவர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்கள் இதனைப் ‘பணிலம்’ என்கிறது. திருவிழாக்களிலும், சடங்குகளிலும் சங்கினை முழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.

முடிவுரை :
அழிந்து வரும் இவ்வகைக் காற்று இசைக்கருவிகளைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் காற்றுக்கருவிகள் ஏதேனும் ஒன்றினைக் கற்று, அதனைப் பயன்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 5.6 திருக்குறள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

பாடநூல் வினாக்கள்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அரசரை அவரது …………………… காப்பாற்றும்.
அ) செங்கோல்
ஆ) வெண்கொற்றக்குடை
இ) குற்றமற்ற ஆட்சி
ஈ) படை வலிமை
Answer:
இ) குற்றமற்ற ஆட்சி

Question 2.
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் …………………………. தகுதி அறிந்து பேசவேண்டும்.
அ) சொல்லின்
ஆ) அவையின்
இ) பொருளின்
ஈ) பாடலின்
Answer:
ஆ) அவையின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Question 3.
‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
அ) கண் + ஓடாது
ஆ) கண் + ணோடாது
இ) க + ஓடாது
இ) கண்ணோ + ஆடாது
Answer:
அ) கண் + ஓடாது

Question 4.
‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) கச + டற
ஆ) கசட + அற
இ) கசடு + உற
ஈ) கசடு + அற
Answer:
ஈ) கசடு + அற

Question 5.
‘என்று + ஆய்ந்து’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
அ) என்றாய்ந்து
ஆ) என்று ஆய்ந்து
இ) என்றய்ந்து
ஈ) என் ஆய்ந்து
Answer:
அ) என்றாய்ந்து

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

குறுவினா

Question 1.
நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?
Answer:
ஒரு செயலை இந்த வகையால், இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து, அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Question 2.
சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?
Answer:
எதையும் நன்கு ஆராய்ந்து, ஒருபக்கம் சாயாது நடுவு நிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சி ஆகும்.

Question 3.
அரசன் தண்டிக்கும் முறை யாது?
Answer:
ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து, அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது, அரசன் தண்டிக்கும் முறையாகும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Question 4.
சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?
Answer:
கேட்பவரைத் தன் வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பு ஆகும்.

பின்வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

பள்ளி ஆண்டு விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைக்குழுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனைப் பரிந்துரைத்தனர். தலைமை ஆசிரியர் – ‘செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான்.

ஆனால், இது கலைக்குழுவிற்கான தலைவர், பதவி, நடனம், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுள்ள ஒருவரே இதற்குத் தகுதியானவர். எனவே என்னுடைய தேர்வு கலையரசன்’ என்று நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள் அனைவரும் ‘சிறந்த தேர்வு’ என்று மகிழ்ந்தனர்.

அ) அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மை யவர்.

ஆ) இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

இ) ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
Answer:
ஆ) இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
……………………… நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.
அ) காலம்
ஆ) நடுவுநிலைமை
இ) முறையாக ஆராய்தல்
ஈ) உயிர்கள் காப்பாற்று
Answer:
ஆ) நடுவுநிலைமை

Question 2.
வையகம் என்பதன் பொருள் ………………….
அ) கடல்
ஆ) அரசன்
இ) நடுவுநிலைமை
ஈ) உலகம்
Answer:
ஈ) உலகம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Question 3.
‘இறை’ என்னும் சொல்லின் பொருள் ………………..
அ) அரசர்
ஆ) குடிமக்கள்
இ) உலகம்
ஈ) விரைந்து
Answer:
அ) அரசர்

குறுவினா

Question 1.
செயலை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்?
Answer:
செயலாற்றும் திறனுடையவரையும், செய்ய வேண்டிய செயலையும், செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து, அச்செயலை நிறைவேற்ற வேண்டும்.

Question 2.
உலகத்து உயிர்களையெல்லாம் காப்பாற்றுபவர் யார்?
Answer:
உலகத்து உயிர்களையெல்லாம் காப்பாற்றுபவர் அரசர் ஆவார்..

Question 3.
அரசரைக் காப்பாற்றுவது எது?
Answer:
குற்றமற்ற ஆட்சியே அரசனைக் காப்பாற்றும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Question 4.
அவையின் தகுதி அறிந்து பேசவேண்டுபவர் யாவர்?
Answer:
சொல் வளமும், நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதியறிந்து பேசுதல் வேண்டும்.

Question 5.
கற்றவரின் கல்வி எப்போது பெருமை அடையும்?
Answer:
சொற்களை ஆராயும் அறிஞர் நிறைந்த அவையில் பேசும்போதுதான் பல நூல்களைக் கற்றவரின் கல்வி பெருமை அடையும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

சொல்லும் பொருளும்

நாடி – நாடுதல்
ஆய்ந்து – ஆராய்ந்து
இறை – அரசர்
வினையாடல் – செயல் செய்தல்
ஒறுப்பது – தண்டிப்பது
கடியன் – கடுமையானவர்
வேந்தன் – அரசன்
கடுகி – விரைந்து