Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை ?
அ) நாவடிச் சுரப்பி
ஆ) லாக்ரிமால்
இ) கீழ்தாடைச் சுரப்பி
ஈ) மேலண்ண ச் சுரப்பி
விடை:
ஆ) லாக்ரிமால்

Question 2.
மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ____ ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்கள்
ஆ) புரதங்க ள்
இ) கொழுப்பு
ஈ) சுக்ரோஸ்
விடை:
ஆ) புரதங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _____ ஆகும்.
அ) குரல்வளை மூடி
ஆ) குரல்வளை முனை
இ) கடின அண்ண ம்
ஈ) மிருதுவான அண்ண ம்
விடை:
அ) குரல்வளை மூடிகள்

Question 4.
பித்த நீர் ____ செரிக்க உதவுகிறது.
அ) புரதங்கள்
ஆ) சர்க்கரை
இ) கொழுப்புகள்
ஈ) கார்போஹைட்ரேட்டுகள்
விடை:
இ) கொழுப்புகள்

Question 5.
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு _____ ஆகும்.
அ) குடலுறுஞ்சிகள்
ஆ) கல்லீரல்
இ) நெஃப்ரான்
ஈ) சிறுநீரகக்குழாய்
விடை:
இ) நெஃப்ரான்

Question 6.
கீழ்க்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
அ) யூரியா
ஆ) புரதம்
இ) நீர்
ஈ) உப்பு
விடை:
ஆ) புரதம்

Question 7.
ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ஆகும்.
அ) சிறுநீரகக்குழாய்
ஆ) சிறுநீர்ப்புறவழி
இ விந்துக்குழாய்
ஈ) விதைப்பை
விடை:
ஆ) சிறுநீர்ப்புறவழி

Question 8.
கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
அ) அண்டம்
ஆ) கருப்பை
இ) விந்தகம்
ஈ) அண்டக்குழாய்
விடை:
இ) விந்தகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி ____ ஆகும்.
விடை:
பைலோரஸ்

Question 2.
உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ___ ஆகும்.
விடை:
நாக்கு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ____ ல் சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
பித்தப்பை

Question 4.
உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ____ ஆகும்.
விடை:
சிறுகுடல்

Question 5.
மனித உடலானது ____ வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.
விடை:
37°C

Question 6.
பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ____ ஆகும்.
விடை:
கருமுட்டை

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
விடை:
தவறு
இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.

Question 2.
செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.
விடை:
சரி

Question 3.
கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள். உப்புகள். குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 35
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 36

V. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக

அ) கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்
ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்
இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்
ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை
உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

அ) கழிவு நீக்கம் மற்றும் சுரத்தல்:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 40

ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 42

இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல் உட்கொள்ளுதல்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 43

ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை இரட்டைப் பல்வரிசை
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 44

உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள் வெட்டுப் பற்கள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 45

VI. சுருக்கமான விடையளி

Question 1.
செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?
விடை:

  1. பின்சிறுகுடலில் மிகச்சிறிய விரல் போன்ற குடல் உறிஞ்சிகள் உள்ளன.
  2. இவை ஒவ்வொன்றும் 1மி.மீ. நீளமுடைய குடல் உறிஞ்சிகள் என அழைக்கப்படும்.
  3. இவற்றில் தான் உணவு உறிஞ்சப்படுகிறது.
  4. இதன் உட்பகுதியில் மெல்லிய இரத்தக் குழாய்களும் நிணநீர் கொண்ட குடற்பால் குழல்களும் உள்ளன.

Question 2.
நமக்கு ஏன் வியர்க்கிறது?
விடை:

  1. மனித உடல் இயங்க 37°C வெப்பநிலை தேவை.
  2. வெப்பம் அதிகரிக்கும் பொழுது வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை சுரக்கிறது. இதனால் நமக்கு வியர்க்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. மனித உடலில் நீரையும், மின்பகு பொருட்களையும் சமநிலைப்படுத்த உதவுகிறது.
  2. இரத்தத்தில் அமில-கார சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

Question 4.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எவ்வாறு நடைபெறுகிறது?
விடை:

  1. சிறுநீர்ப்பை சுருக்குத் தசை சுருங்கி மூடிக்கொள்ளும்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
  2. சுருக்குத் தசை சுருங்கி விரியும்போது சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.

Question 5.
முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 55

Question 6.
நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
விடை:

  1. ஒவ்வொரு நெஃப்ரானிலும் சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் உள்ளன.
  2. சிறுநீரக கார்ப்பசலில் கிண்ண வடிவில் வெளிசெல் பௌமானின் கிண்ணம் அமைந்துள்ளது.
  3. இரத்தமானது நுண் நாளத் தொகுப்பினுள் உட்செல் நுண் தமனி வழியாக உட்சென்று, வெளிச் செல் நுண் தமனி வழியாக வெளியேறுகிறது.
  4. பௌமானின் கிண்ணம் சிறுநீரக நுண் குழலாக தொடர்கிறது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன.
  5. இச்சுருள் நுண் குழல் சேகரிப்பு நாளத்தில் திறக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 56

VII. விரிவாக விடையளி

Question 1.
மனிதனின் உணவுப் பாதையை விவரி.
விடை:
1. வாய்:

  • வாய் உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும்.
  • இது வாய்க்குழிக்குள் திறக்கிறது.
  • இது இரு மென்மையான அசையும் மேல் முன் சிறு குடல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப் பட்டுள்ளது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 57

உமிழ் நீர் சுரப்பிகள்:
வாய்க் குழிக்குள் மேலண்ணச் சுரப்பிகள், நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி என்ற இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன.
இவை உமிழ்நீரை சுரக்கின்றன.

நாக்கு:

  • நாக்கு ஒரு தசையாலான உணர்ச்சி உறுப்பு ஆகும்.
  • இது உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது.

2. தொண்டை :
தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும்.

3. உணவுக்குழல்:

  • இது 22செ.மீ நீளமுடைய தசைப்படலக்குழலாகும்.
  • இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் அலை போன்ற இயக்கம் மூலமாக கடத்துகிறது.

4. இரைப்பை :

  • இது உணவுக்குழலுக்கும், சிறுகுடலுக்கும் இடையே ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
  • இரைப்பையின் உள் அடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது.

5. சிறுகுடல்:

  • இது உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான 5-7 மீ நீளமுள்ள சுருண்ட குழலாகும் மூன்று பகுதிகளை உடையது.
  • டியோடினம் என்பது சிறுகுடலின் மேல் பகுதியாகும். ‘C’ வடிவத்தில் காணப்படுகிறது.
  • பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து டியோடினத்தில் திறக்கின்றது.
  • நடு சிறுகுடல் (அ) ஜூஜிணம் சிறுகுடலின் சிறிய நடுப்பகுதி ஆகும்.
  • பின்சிறுகுடல் (அ) இலியம் சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இது பெருங்குடலில் திறக்கிறது.
    இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.

6. கல்லீ ரல்:

  • உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி ஆகும்.
  • நாளமுள்ள சுரப்பியின் பகுதியாயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி லிப்பேஸ், டிரிப்சின், அமைலேஸ் நொதிகளைக் கொண்டுள்ள கணைய நீரைச் சுரக்கின்றது.

7. பெருங்குடல்:

  • இது பின்சிறு குடலிலிருந்து மலவாய் வரை பரவியுள்ளது.
  • இதனுடைய நீளம் சுமார் 1.5மீட்டர் ஆகும்.
  • இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை
    (i) முன் பெருங்குடல் (அ) சீக்கம்
    (ii) பெருங்குடல் (அ) கோலன்
    (iii) மலக்குடல் (அ) ரெக்டம்.
  • சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் உள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு சீக்கம் ஆகும்.
  • சீக்கம் மனிதனில் பயனற்ற, பணி ஏதுமற்ற எச்ச உறுப்பாகும்.

8. மலக்குடல்:
இது இறுதியாக மலவாயில் திறக்கிறது.

9. மலவாய்:

  • மலவாயில் வளையங்கள் போன்ற மூடிய நிலையிலிருக்கும் மலச்சுருள் தசை உள்ளது.
  • மலவாய் வழியாக செரிக்காத, தன்மயமாகாத உணவு கழிவாக வெளியேற்றப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 2.
சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.
விடை:
சிறுநீரகத்தின் வெளி அமைப்பு:

  • இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் அடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு
    ஒட்டிக் காணப்படுகிறது.
  • ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ. நீளம்,
  • சிறுநீரக தூண்க ள் 5 செ.மீ. அகலமும் மற்றும் 3 செ.மீ. பருமனும் கொண்டதாயிருக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 76
    சிறுநீரகத்தினுள் கார்டெக்ஸ் என்ற வெளிப் பகுதியும் மெடுல்லா என்ற உட்பகுதியும் உள்ளன.
  • இவ்விரண்டு பகுதிகளிலும் சிறுநீரக நுண்குழல்கள் உள்ளன. இவை சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகுகள் ஆகும்.
  • மெடுல்லா பகுதியில் கூம்பு வடிவில் சிறுநீரக பிரமிடுகள் உள்ளன.
  • ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப் பகுதி ஹைலம் எனப்படும். இவ்வழியே இரத்த நாளங்களும் மற்றும் நரம்புகளும் உள்ளே நுழைகிறது.

சிறுநீர் உருவாகும் முறை:
மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது.
1. கிளாமருலார் வடிகட்டுதல்
2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்
3. குழல்களில் சுரத்தல்

1. கிளாமருலார் வடிகட்டுதல்:

  • கிளாமருலஸ் மற்றும் பௌமானின் கிண்ணம் அகியவற்றின் எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக இரத்தம் வடிகட்டப்படுகிறது.
  • இவ்வாறாக வடிகட்டப்பட்ட திரவத்திற்கு கிளாமரூலார் வடி திரவம் என்றுபெயர்.

2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்:

  1. அண்மை சுருள் நுண் குழலில் வடிதிரவத்தில் உள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.

VIII. கூற்று மற்றும் காரணம் கீழ்காணும்

ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு கூற்றும் அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.

அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை .
இ) கூற்றும் சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

1. கூற்று: சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது. காரணம்: யூரியா ஒரு நச்சுத்தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.
விடை:
அ). கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
கூற்று: இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன. காரணம்: பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

IX. சிந்திக்க

Question 1.
இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் எச்செயலானது பாதிக்கப்படும்?
அ)ஸ்டார்ச்சிலிருந்து சர்க்கரையாக மாறும் செரிமான மாற்றம்.
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்
இ) நியூக்ளிக் அமிலங்களின் செரிமானம்
ஈ)கொழுப்புகள் கிளிசராலாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் உடைதல்.
விடை:
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்

Question 2.
மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் மற்றும் மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளங்களைப் பெயரிடுக.
விடை:

  1. மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் இரத்தக்குழாய் – உட்செல் நுண்தமனி.
  2. மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளம் – வெளிச்செல் நுண் தமனி

Question 3.
மருத்துவ நோயறிதலில் சிறுநீர் பகுப்பாய்வானது மிக முக்கியமான பகுதியாக இருப்பதாக ஏன் கருதுகிறாய்?
விடை:

  • இது ஒரு நோயாளியில் பொதுவான உடல் ஆரோக்கியம், பற்றி வருடாந்திர ஆய்வு அல்லது அறுவை சிகிச்சைக்கு முன் உடல் நலம் பற்றி அறிதல் அல்லது கருத்தரித்தல் பற்றி ஆராய்தல் போன்றவற்றிற்கு இது உதவுகிறது.
  • சிறுநீரகத்தின் செயல்பாடு, சிறுநீர்பாதை அல்லது சிறுநீர் தொற்று பற்றி அறிய உதவுகிறது.
  • உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற குறைபாடுகளான நீரழிவு நோய் மற்றும் மஞ்சட்காமாலை பற்றி அறிய முடிகிறது.
  • ஒரு நோயாளியின் நோய் நிலை பற்றியும் சிகிச்சையின் விளைவு எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 4.
உனது மருத்துவர் ஏன் அதிக நீர் குடிக்க அறிவுறுத்துகிறார்?
விடை:
காரணங்கள்

  • தீவிர உடற்பயிற்சியின் போதும் அல்லது வெப்பம் அதிகரிக்கும் போதும் உடல் செயல் பாதிக்கப்படாமல் அதிகப்படுத்துவதற்கு நீர் உதவுகிறது.
  • நீர் சத்து நம் உடலில் ஆற்றல் நிலையையும் மூளையின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அதிக நீர் எடுத்துக் கொள்ளாவிட்டால் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.
  • மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
  • சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

Question 5.
நமது உள்ளங்கைகளிலும், பாதங்களின் உள்ளங்காலிலும் ஏன் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன என்று உன்னால் யூகிக்கமுடிகிறதா?
விடை:
ஆம், யூகிக்க முடிகிறது.
காரணங்கள்:

  • வியர்த்தல் மூலம் உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிறது.
  • வியர்த்தல் நிகழ்ச்சி பரிவு நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • உள்ளங்கை மற்றும் பாதங்களில் வியர்ப்பதால் உடலின் வெப்பநிலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
  • பதட்டம் பயம் போன்ற நேரங்களில் இவற்றின் சுரப்பு அதிகரிப்பால் வியர்த்தல் தூண்டப்பட்டு உள்ளங்கால்களிலும், உள்ளங்கைகளிலும் அதிகம் வியர்க்கிறது.

X. கீழ்கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத் தேர்விலிருந்து எடுத்து பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 65
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 66
விடை:
ஈ) 1. கருப்பை நாளம்
2. அண்டகம்
3. செர்விக்ஸ்
4. கர்ப்பப்பை
5. யோனி

9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
அனைத்து உறுப்பு மண்டலங்களின் செயல்களையும் ஒருங்கிணைக்கும் மண்டலம் ______
விடை:
நாளமில்லா சுரப்பி
மண்டலம்

Question 2.
மனிதனில் உள்ள பின்கடைவாய்ப் பற்களின் எண்ணிக்கை _____
விடை:
12

Question 3.
தொண்டை வழியாக விழுங்கப்படும் உணவு _____ எனப்படும்.
விடை:
உணவுக் கவளம்

Question 4.
“இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை” என போற்றப்படுபவர் _____
விடை:
வில்லியம் பியூமாண்ட்

Question 5.
உணவுக் கால்வாயில் உள்ள மிகவும் நீளமான பகுதி ______ நீளமுடையது.
விடை:
5-7 மீட்டர்

Question 6.
கல்லீரல் செல்கள் _____ சுரக்கிறது.
விடை:
பித்த நீரை

Question 7.
1.5மீ நீளமுடைய தடித்த குழாயான உணவுப் பாதையின் பகுதி ______
விடை:
பெருங்குடல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 8.
மலவாயிலுள்ள வளையங்கள் போன்ற மூடிய நிலையில் இருக்கும் தசை _______ எனப்படும்.
விடை:
மலச்சுருள் தசை

Question 9.
கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, புரதம் செரித்தல் முழுமை அடையும் பகுதி ______
விடை:
சிறுகுடல்

Question 10.
தோலின் மூலம் வளர்சிதை கழிவுகள் வெளியேற்றுதல் ____ எனப்படும்.
விடை:
வியர்த்தல்

Question 11.
நெப்ரான்கள் _____ லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.
விடை:
1700-1800

Question 12.
பெண்களில் விந்துக்களைப் பெறும் பகுதியாகவும், பிறப்புக் கால்வாயாகவும் செயல்படுவது
விடை:
யோனிக்குழாய்

Question 13.
கிராஃபியன் பாலிக்கிள் சுரக்கும் ஹார்மோன் _____
விடை:
ஈஸ்ட்ரோஜென்

Question 14.
புரத செரித்தல் தொடங்கும் பகுதி _____
விடை:
இரைப்பை

Question 15.
உமிழ் நீரில் உள்ள நொதி _____
விடை:
டையலின்

Question 16.
ஒரு நாளில் சுரக்கப்படும் உமிழ் நீரின் அளவு யாது?
விடை:
1.5லிட்டர்

Question 17.
எந்த உறுப்பு மருந்தும் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குகிறது?
விடை:
கல்லீரல்

Question 18.
சக்கஸ் என்ட்ரிக்ஸ் சுரப்பில் உள்ள நொதிகள் எந்த ஊடகத்தில் நன்றாக செயல்படுகின்றன?
விடை:
காரத்தன்மையில்

Question 19.
சிறுகுடலின் ______ பகுதியில் செரிக்கப்பட்ட உணவு உறிஞ்சப்படுகிறது.
விடை:
பின்சிறுகுடல் (அ)
இலியம்

Question 20.
உடலினை சீர்ச்சமநிலையில் (ஹோமியோஸ்பேஸிஸ்) வைக்க உதவும் நிகழ்ச்சி _____
விடை:
கழிவு நீக்கம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 21.
மிகப்பெரிய, மிகச்சிறிய, உமிழ்நீர்ச் சுரப்பிகள் _____, ______
விடை:
நாவடிச் சுரப்பி,
மேலண்ண சுரப்பி

Question 22.
குடல் உறிஞ்சிகள் ஒவ்வொன்றும் _____ நீளமுடையது.
விடை:
1 மி.மீட்டர்

Question 23.
விந்தணுவிற்கு ஆற்றலை அளிக்கும் ஆதாரமாக _____ இருக்கிறது.
விடை:
பிரக்டோஸ்

Question 24.
வெட்டுப்பற்களின் எண்ணிக்கை _____
விடை:
8

Question 25.
உமிழ்நீர்ச்சுரப்பியின் நொதி ______
விடை:
டையலின்

Question 26.
சிறு குடலின் நடுப்பகுதி _____ ஆகும்.
விடை:
நடுசிறு குடல் (அ) ஜிஜீனம்

Question 27.
சிறுகுடல் நீரைச் சுரக்கும் சுரப்பிகள் அமைந்துள்ள பகுதி _____.
விடை:
நடுசிறு குடல் (அ) ஜிஜீனம்

Question 28.
சிறுகுடல் நீரில் உள்ள நொதிகள் _____, _____, ______ மற்றும் ____
விடை:
சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ், லிப்பேஸ்

Question 29.
குடலுறிஞ்சியில் காணப்படும் அமைப்புகள் _____ மற்றும் _____
விடை:
மெல்லிய இரத்தக்
குழாய்கள்,
குடற்பால் குழல்கள்

Question 30.
கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நீர் திவளைகளை வெளியேற்றும் நுரையீரலின் செயல் _____
விடை:
மூச்சு வெளிவிடுதல்

Question 31.
____ சிறுநீரகம் சற்று கீழே காணப்படுகிறது –
விடை:
வலது புறமுள்ள

Question 32.
நம்முடைய புறச்சட்டக மண்டலம் செய்யும் பணி _____ மற்றும் _____
விடை:
பாதுகாத்தல்,
கழிவுநீக்கம்

Question 33.
சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்திலுள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு _____
விடை:
சீக்கம்

Question 34.
முதலில் தோன்றும் தற்காலிக இணைப் பற்களின் எண்ணிக்கை ___ ஆகும்.
விடை:
இருபது

Question 35.
நாக்கு அடியில் ____ என்ற சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளது
விடை:
ஃப்ருனுலம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 36.
தோல் ஓர் முதிர்ச்சியடைந்த மனிதனின் உடல் எடையில் ____ சதவீ-தத்தைக் கொண்டுள்ளது
விடை:
15%

Question 37.
மனிதனின் சிறுநீர் _____ தன்மையுடைய திரவமாக இருக்கிறது.
விடை:
உயர் உப்படர்வு

Question 38.
முதல் சிறுநீரக மாற்றத்தை செய்தவர்
விடை:
ஜோசப் இ. முர்ரே

Question 39.
பெண் இன ஹார்மோன்கள் ____ மற்றும் ____ ஆகும்.
விடை:
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான்

Question 40.
குழந்தை பிறப்பின்போது பிறப்புக் கால்வாயாக செயல் ஆற்றுபவை _____
விடை:
யோனி

Question 41.
இரத்தம் உறிஞ்சும் பொருட்கள் _____, ____, ______
விடை:
எளியபொருட்கள், நீர், தாது உப்புகள்

Question 42.
செரிமான மண்டலத்தின் இரண்டு தொகுப்பு உறுப்புகள் ____, _____
விடை:
உணவுப்பாதை, செரிமானச் சுரப்பிகள்

Question 43.
புரதச் செரிமானம் _____ ல் ஆரம்பிக்கிறது
விடை:
வாய்க்குழியில்

Question 44.
_____ ஒரு செரிமான ஊக்கியாகும்
விடை:
ரென்னின்

Question 45.
_____ சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்
விடை:
இலியம்

Question 46.
உடலில் காணப்படும் மிகப்பெரிய செரிமானச் சுரப்பி _____ ஆகும்.
விடை:
கல்லீரல்

Question 47.
______ இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையே அமைந்துள்ளது
விடை:
கணையம்

Question 48.
இரத்தத்தில் அமில – காரச்சமநிலையை ஒழுங்குபடுத்துவது_ ____ ஆகும்.
விடை:
சிறு நீரகம்

Question 49.
பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து ____ திறக்கின்றது.
விடை:
டியோடினத்தில்

Question 50.
_____ செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகிய இரண்டு செயல்களையும் செய்கிறது
விடை:
சிறுகுடல்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 68
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 69

III. கூற்று மற்றும் காரண வகை

கீழ்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு வழிகாட்டி கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
இ) கூற்று சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 1.
கூற்று: பித்த உப்புகள் பால்மமாக்கல் என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.
காரணம்: கல்லீரல் வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
விடை: ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

Question 2.
கூற்று: கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. காரணம்: இது கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டையைப் பதிய வைத்தல், நஞ்சுக் கொடி உருவாதல் மற்றும் கர்ப்பத்தினைப் பராமரித்தல் போன்ற வேலைகளைச் செய்கிறது.
விடை:
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.

IV. படம் வரைந்து பாகங்களைக் குறித்துக் காட்டவும்.

Question 1.
கீழ்கண்ட படத்தில் (A) சிஸ்டிக் நாளம், (B) பித்தப்பை, (C) முன் சிறு குடல், (D) கணையம் ஆகிய பாகங்களைக் குறி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 80

Question 2.
சிறுநீரகத்தில் கீழ்கண்ட பாகங்களைக் குறி.
(A) பெருந்தமணி,
(B) சிறுநீர்பை,
(C) சிறுநீர்குழாய்,
(D) சிறு நீரக தமனி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 88

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
இரத்த ஓட்ட மண்டலம் செய்யும் பணிகள் யாவை?
விடை:
இந்த மண்டலம் சுவாச வாயுக்கள், ஊட்டச் சத்துப் பொருட்கள், கழிவுப் பொருட்கள் போன்ற வற்றைக் கடத்துகிறது.

Question 2.
உமிழ் நீரில் உள்ள நொதிகளின் பெயர்களைக் குறிப்பிடு?
விடை:

  1. டையலின்
  2. லைசோசைம்

Question 3.
பித்த உப்புக்களின் பெயர்களைக் குறிப்பிடு?
விடை:

  1. சோடியம் கிளைக்கோலேட்
  2. சோடியம் டாரோ கிளைக்கோலேட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 4.
அதிகப்படியான கொழுப்பு உடலில் என்ன மாற்றம் அடைகிறது?
விடை:
அதிகப்படியான கொழுப்புகள் கொழுப்புத் திசுக்களில் அடுக்காக சேமித்து வைக்கப்படுகின்றன.

Question 5.
சிறுநீரகத்தை சுற்றியுள்ள உறைகளை வரிசைப்படுத்தி கூறு.
விடை:

  1. தசை நார் இணைப்புத் திசுக்கள்
  2. சிறுநீரக கேப்சியூல்கள்
  3. கொழுப்பு கேப்சியூல்கள்
  4. இழைகளாலான சவ்வு

Question 6.
சிறுநீரக பழுதடைவு ஏன் ஏற்படுகிறது?
விடை:
சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக்கழிவுகள் உடலில் குவிகின்றன. இந்த நிலை சிறுநீரக பழுதடைவு எனப்படுகிறது.

Question 7.
மனிதனின் ஆண் பெண்களில் பால் முதிர்ச்சி அடையும் வயதினைக் குறிப்பிடு?
விடை:

  1. ஆண்க ளில் பால் முதிர்ச்சி 13-14 வயதில் ஏற்படுகிறது.
  2. பெண்க ளில் 11-13 வயதில் ஏற்படுகிறது.
  3. இந்த வயது பருவமடையும் வயது எனப்படுகிறது.

Question 8.
எந்த செல்கள் ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன?
விடை:
விந்தகத்திலுள்ள லேடிக் செல்கள் டெஸ்டோஸ்டீரான் என்ற ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன.

Question 9.
மாதவிடாய் சுழற்சி வரையறு.
விடை:
ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையானது முதிர்ச்சியடைந்து ஏதாவது ஒரு அண்டகத்திலிருந்து ஒவ்வொரு 28 நாட்கள் இடைவெளியில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு பெண் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் சுழற்சி மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சி எனப்படும்.

Question 10.
டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனின் பணிகளை பட்டியலிடு.
விடை:

  1. விந்தணு உருவாதலைத் தூண்டுகிறது.
  2. ஆண் தன்மையின் பண்புகளாகிய தாடி, மீசை, உடலிலுள்ள முடி மற்றும் குரலில் ஏற்படும் மாற்றத்தினையும் (கனத்த குரல்) உருவாக்குகிறது.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
உணவு செரித்தலில் இரைப்பையின் பங்கினை விவரி.
விடை:

  1. இரைப்பையானது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே அமைந்துள்ளது. ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
  2. இரைப்பை நீரில் Hcl, பெப்சின் மற்றும் ரெனின் உள்ளது.
  3. ஹைட்ரோ குளோரிக் அமிலம், செயலற்ற பெப்சினோஜனை செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றுகிறது.
  4. Hcl உணவோடு விழுங்கப்பட்ட பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது.
  5. ரெனின் பால் புரதமாகிய கேசின்னை உறைய வைக்கிறது. இரைப்பையில் உள்ள இரைப்பை நீர் மற்றும் செரிக்கப்பட்ட உணவுக்கு இரைப்பை பாகு என்று பெயர்.
  6. இந்த இரைப்பைப் பாகு குடலுக்குள் மெதுவாக குடல்வாய் (அ) பைலோரஸ் வழியாக நகர்கிறது.

Question 2.
கூழ்மப் பிரிப்பு அல்லது செயற்கை சிறுநீரகம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  1. சிறுநீரகமானது நைட்ரஜன் கழிவுப் பொருட்களை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
  2. சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக் கழிவுகள் உடலில் சேர்கிறது. இந்த நிலைக்கு சிறுநீரக பழுதடைவு என்று பெயர்.
  3. இதற்காக நோயாளியின் இரத்தத்தை வடிகட்ட ஒரு செயற்கை சிறுநீரகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கூழ்மப் பிரிப்பு (dialysis) என்று பெயர்.
  4. இம்முறையில் செயற்கை சிறுநீரகத்தை பயன்படுத்தி இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. இதற்கு ஹீமோடையலிஸிஸ் என்று பெயர்.
  5. பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மருந்துகளாலோ அல்லது கூழ்மப் பிரிப்பினாலோ சிகிச்சையளிக்கப்பட முடியாத போது நோயாளிகள் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Question 3.
கல்லீரலின் பணிகளை பட்டியலிடு?
விடை:

  1. இரத்த சர்க்கரை மற்றும் அமினோ அமில அளவைப் கட்டுப்படுத்துதல்.
  2. கருவில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குதல்.
  3. இரத்தம் உறைதலுக்குப் பயன்படும் பைபிரினோஜென் மற்றும் புரோத்ராம்பின் ஆகியவற்றை உருவாக்குதல்.
  4. சிவப்பு இரத்த அணுக்களை அழித்தல்.
  5. இரும்பு, தாமிரம், வைட்டமின்கள் A மற்றும் D ஆகியவற்றை சேமித்து வைத்தல்.
  6. ஹெப்பாரின் தயாரித்தல் (இரத்தம் உறைதலை தடுப்பான்)
  7. நச்சுகள் மற்றும் உலோக நஞ்சினை வெளியேற்றல்.
  8. மருந்துப் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குதல்.

கல்லீரல் சுரக்கும் பித்த நீரிலுள்ள பித்த உப்புக்கள் பால்மமாக்கல் முறையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.

Question 4.
அ) நெஃப்ரானின் படம் வரைந்து பாகங்களைக் குறி.
ஆ) முக்கிய பாகங்களின் பணியைக் கூறு.
விடை:
அ) நெஃப்ரானின் படம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 90

ஆ) பணிகள்:

  1. பௌமானின் கிண்ண ம் : இரத்தமானது வடிகட்டப்படுகிறது.
  2. அண்மை சுருள் நுண்குழல் : வடி திரவத்திலுள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீள உறிஞ்சுகிறது.
  3. சேய்மை சுருள் நுண் குழல் :
    1. ஹைட்ரஜன் அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருள்கள் நுண் நாளங்களுக்குள் சுரக்கின்றன.
    2. பொட்டாசியம், பெனிசிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள் நுண்குழல்களில் வடிதிரவமாக கடக்கின்றன. இதுவே இறுதியாக சிறுநீர் எனப்படுகிறது.
  4. சேகரிப்பு நாளம் :
    இறுதியாக சேகரிப்பு நாளத்தில் சிறுநீரானது சேர்ந்து பெல்விஸ் பகுதிக்குச் சென்று சிறுநீர்க் குழாய்கள் வழியாக சிறுநீர்பையை அடைந்து பெரிஸ்டால்சிஸ் இயக்கத்தின் மூலம் வெளியேறுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 5 இடர்கள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 5 இடர்கள்

8th Social Science Guide இடர்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ___________
அ) 78.09%
ஆ) 74.08%
இ) 80.07%
ஈ) 76.63%
விடை:
அ) 78.09%

Question 2.
இந்தியப் பெருங்கடலில் சுனாமி ______________ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
அ) 1990
ஆ) 2004
இ) 2005
ஈ) 2008
விடை:
ஆ) 2004

Question 3.
சுனாமி என்ற சொல் ____________ மொழியிலிருந்து பெறப்பட்டது.
அ) ஹிந்தி
ஆ) பிரெஞ்சு
இ) ஜப்பானிய
ஈ) ஜெர்மன்
விடை:
இ) ஜப்பானிய

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 4.
புவி மேற்பரப்பு நீருக்கு ____________ எடுத்துக்காட்டாகும்.
அ) ஆர்டீசியன் கிணறு
ஆ) நிலத்தடி நீர்
இ) அடி பரப்பு நீர்
ஈ) ஏரிகள்
விடை:
ஈ) ஏரிகள்

Question 5.
பருவமழை பொய்ப்பின் காரணமாக ____________ ஏற்படுகிறது.
அ) ஆவி சுருங்குதல்
ஆ) வறட்சி
இ) ஆவியாதல்
ஈ) மழைப்பொழிவு
விடை:
ஆ) வறட்சி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இடர்கள் __________ க்கு வழிவகுக்கிறது.
விடை:
பேரழிவு

Question 2.
நிலச்சரிவு _________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை:
இயற்கை

Question 3.
இடர்கள் தோன்றுவதன் அடிப்படையில் இடர்களை _________ வகைகளாகப் பிரிக்கலாம்.
விடை:
எட்டு

Question 4.
தீவிரவாதம் __________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை:
மனிதனால் தூண்டப்பட்ட

Question 5.
நைட்ரஜன் ஆக்சைடுகள் மனிதர்களைப் பாதிக்கும் ____________ மாசுபடுத்திகளாகும்.
விடை:
முதல்நிலை

Question 6.
செர்னோபில் அணு விபத்து ___________ ஆண்டில் நடைபெற்றது.
விடை:
1986

III. பொருத்துக பட்டியல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 1

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
‘இடர்’ – வரையறு.
விடை:
இடர்:
ஒரு பொருளோ, நபரோ, நிகழ்வோ அல்லது காரணியோ அல்லது கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார வளங்களுக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தால் அது இடர் (Hazard) எனப்படும்.

இவை மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவோ அல்லது இயற்கையான நிகழ்வாகவோ இருக்கலாம்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 2.
இடரின் முக்கிய வகைகள் யாவை?
விடை:
இடரின் முக்கிய வகைகள் (இந்தியா):

  • நில அதிர்வு
  • வெள்ளப்பெருக்கு
  • சூறாவளிப் புயல்கள்
  • வறட்சிகள்
  • நிலச்சரிவுகள்
  • அபாயகர கழிவுகள்
  • காற்று மாசு
  • நீர் மாசு (அல்லது)
  • இயற்கை இடர்கள்
  • மனிதனால் உருவாக்கும் இடர்கள்
  • சமூக – இயற்கை இடர்கள்

Question 3.
அபாயகரக் கழிவுகள் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
அபாயகரக் கழிவுகள்:
சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு பெருத்த சுகாதார தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய நச்சுக்கழிவுகள் அபாயகரக் கழிவுகள் எனப்படும்.

முக்கிய அபாயகரக் கழிவுகள்:

  • கதிரியக்க பொருட்கள்
  • இரசாயனங்கள்
  • மருத்துவ கழிவுகள்
  • வெடிப் பொருட்கள்
  • குடிசார் அபாயகர கழிவுகள்
  • எளிதில் தீப்பற்றக்கூடிய கழிவுகள்

Question 4.
நமது நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
விடை:
நமது நாட்டில் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் முக்கிய பகுதிகள்:

  • வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உத்திரப்பிரதேசம், வட பீகார், மேற்கு வங்காளத்தை உள்ளடக்கிய கங்கைச் சமவெளி மற்றும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு.
  • கடலோர ஆந்திரம், ஒடிசா, குஜராத் போன்றவை இதர பகுதிகள்

Question 5.
வறட்சியின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:
வறட்சியின் வகைகள்:

  • வானிலையியல் வறட்சி
  • நீரியியல் வறட்சி
  • வேளாண் வறட்சி

Question 6.
மலை அடிவாரப் பகுதிகளில் நாம் ஏன் குடியிருப்புகளை அமைக்க கூடாது?
விடை:
மலை அடிவாரப் பகுதிகளில் நாம் குடியிருப்புகளை அமைக்க கூடாது.
ஏனெனில்

பொதுவாக நிலச்சரவுகள் மலை அடிவாரப் பகுதிகளில் திடீரென்று ஏற்படும் அரிதான நிகழ்வாகும். செங்குத்துச் சரிவு மற்றும் கனமழை நிலச்சரிவுகள் ஏற்பட முக்கிய காரணங்களாகும்.

இமயமலைச் சரிவுகள், மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகள், கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகள் நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

V. வேறுபடுத்துக

Question 1.
இடர் மற்றும் பேரிடர் இடர்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 2

Question 2.
இயற்கை மற்றும் செயற்கை இடர்கள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 3

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 3.
வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 4
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 5

Question 4.
நில அதிர்வு மற்றும் சுனாமி
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 6

VI. விரிவான விடையளி

Question 1.
காற்று மாசுபடுதலைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
விடை:
காற்று மாசுபடுதல்:
உட்புற அல்லது வெளிப்புக் காற்றானது சில வாயுக்கள் மற்றும் திடப்பொருட்களின் சேர்க்கையால் அதன் இயற்கை பண்புகள் மற்றும் காற்றின் சதவீதங்கள் மாறுபடுவதை காற்று மாசுபடுதல் என்கிறோம்.

முதன்மை மாசுபடுத்திகள் என்பது ஒரு மூலத்தில் இருந்து நேரடியாக வெளியேற்றப்படும் மாசுவாகும்.
முதன்மை மாசுபடுத்திகள்:

  • சல்பர் டை ஆக்சைடு
  • நைட்ரஜன் ஆக்சைடு
  • கார்பன் டை ஆக்சைடு
  • துகள்ம பொருட்கள்
  • பிற முதன்மை மாசுபடுத்திகள்

இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் நேரடியாக வெளியேற்றப்படுவதில்லை. ஆனால் மற்ற முதன்மை மாசுக்கள் வளிமண்டலத்தில் வினை புரிவதால் உருவாகுபவை ஆகும்.
இரண்டாம் நிலை மாசுபடுத்திகள்:

  • தரைமட்ட ஓசோன்
  • பனிப்புகை

Question 2.
நில அதிர்வை வரையறுத்து அதன் விளைவுகளைப் பட்டியலிடுக.
விடை:
நில அதிர்வு:
நில அதிர்வு என்பது புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும் கடும் அதிர்வாகும். இவ்வதிர்வு தோன்றும் மையத்திலிருந்து அனைத்து திசைகளிலும் தொடர்ச்சியான அதிர்வு அலைகளை ஏற்படுத்துகிறது.

நில அதிர்வின் விளைவுகள்:

  • புவிப்பரப்பில் ஏற்படும் அதிர்ச்சிகள்
  • தரைப்பரப்பு சேதம்
  • நிலச்சரிவுகள் – சுனாமி
  • நிலம் அமிழ்தல்

Question 3.
நிலச்சரிவிற்கான காரணங்கள் குறித்து விரிவான விளக்கம் தருக.
விடை:
நிலச்சரிவுக்கான காரணங்கள்:
நிலச்சரிவு என்பது புவியீர்ப்பு விசையினால் பாறைகள், மண் மற்றும் தாவரங்கள் கீழ்நோக்கி வேகமாகச் செல்லும் நகர்வைக் குறிப்பதாகும்.

செங்குத்துச் சரிவு மற்றும் கனமழை நிலச்சரிவுகள் ஏற்பட முக்கியக் காரணங்களாகும்.

பலவீனமான தளர்ந்த நில அமைப்பு, காடழிப்பு, நில அதிர்வு, எரிமலை வெடிப்பு, சுரங்கம் தோண்டுதல், மலைப் பிரதேசங்களில் சாலைகள் மற்றும் இருப்புப் பாதைகளின் கட்டுமானம் ஆகியவை நிலச்சரிவுக்கான பிற காரணங்களாகும்.

சுமார் 15% நிலப்பரப்பு இந்தியாவில் நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகும் பகுதிகள்.

இமயமலைச் சரிவுகள், மேற்கு தொடர்ச்சி மலைச் சரிவுகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் நிலச்சரிவுகள் அதிகம் காணப்படுகின்றன. கொடைக்கானல் மற்றும் உதகமண்டலம் தமிழ்நாட்டில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

Question 4.
நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக விவாதிக்க.
விடை:
நீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள்:

  • நீர்மாசு என்பது நீரின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
  • நீர்மாசு மனித மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றது.
  • மாசு நிறைந்த நீரை பயன்படுத்துவதால் அல்லது பருகுவதால் மனிதருக்கு பல நோய்கள் உண்டாகின்றன. நீர்மாசு டைபாய்டு, காலரா, மஞ்சட்காமாலை போன்ற பல நோய்களை உண்டாக்குகிறது.
  • நீர்மாசு அகற்றப்படாவிட்டால் அது முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை நிலைகுலையச் செய்துவிடும்.
  • நீர்நிலைகளில் உள்ள வேதிப்பொருட்கள் ஆல்காக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இவை ஏரி அல்லது குளங்களின் மேற்பரப்புகளில் அடுக்குகளாக படிந்து விடுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும் பாக்டீரியாக்கள் நீர்நிலைகளில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கின்றன. இது நீர்நிலை உயிரிகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன.
  • நீரிலுள்ள மாசுபடுத்திகளை உணவாக நீர்வாழ் உயிரினங்கள் (மீன், ஷெல் மீன்கள்) பயன்படுத்தும் போதும், நீர்வாழ் உயிரினங்களை மனிதன் பயன்படுத்தும் போதும் உணவுச் சங்கலி பாதிக்கப்படுகிறது.

VII. செயல்பாடுகள்

Question 1.
நீங்கள் அடையாளம் கண்டுள்ள இடர்களின் பெயர்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 7
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 8

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 2.
உங்கள் பகுதியில் அடிக்கடி மற்றும் எப்போதாவது ஏற்படும் இடர்களைப் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 9

8th Social Science Guide இடர்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ஆற்றல் ____________
அ) 7.1
ஆ) 8.1
இ) 9.1
ஈ) 10.1
விடை:
இ) 9.1

Question 2.
கீழ்க்கண்டவற்றில் மருத்துவக் கழிவு எது?
அ) ஊசிகள்
ஆ) கட்டுத்துணிகள்
இ) மருந்துப்பொருட்கள்
ஈ) இவையனைத்தும்
விடை:
ஈ) இவையனைத்தும்

Question 3.
செர்னோபில் அணுக்கதிர் வீச்சு ஹீரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டை விட ___________ மடங்கு அதிகம்.
அ) 100
ஆ) 200
இ) 300
ஈ) 400
விடை:
ஈ) 400

Question 4.
ஹசார்டு (Hazard) என்ற சொல் ஹாசர்ட் (Hasart) என்ற ____________ சொல்லிலிருந்து தோன்றியது.
அ) பிரெஞ்சு
ஆ) அரபு
இ) ஸ்பானிய
ஈ) ஜப்பானிய
விடை:
அ) பிரெஞ்சு

Question 5.
சூறாவளி மற்றும் பனிச்சரிவு ஆகியவை ____________ இடர்கள்.
அ) வளிமண்டல
ஆ) நீரியல்
இ) தொழில்நுட்ப
ஈ) உயிரியல்
விடை:
அ) வளிமண்டல

Question 6.
நில அதிர்வு மண்டலம் 4ல் அபாயத்தன்மை ____________
அ) மிக அதிகம்
ஆ) அதிகம்
இ) மிதமானது
ஈ) குறைவு
விடை:
ஆ) அதிகம்

Question 7.
காடழிப்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட ஒரு ___________ காரணி
அ) வானியல்
ஆ) இயற்பியல்
இ) மனித
ஈ) எதுவுமில்லை
விடை:
இ) மனித

Question 8.
ஊட்டி ____________ மாவட்டத்தில் உள்ளது.
அ) திண்டுக்கல்
ஆ) மதுரை
இ) தேனி
ஈ) நீலகரி
விடை:
ஈ) நீலகரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சுனாமி பேரலைகள் பொதுவாக கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு சுமார் __________ கி.மீ. முதல் ___________ கி.மீ வரை பயணிக்கிறது.
விடை:
640, 960

Question 2.
காற்று பல வாயுக்களின் ____________.
விடை:
கலவை

Question 3.
நில அதிர்வு என்பது புவியின் மேலோட்டில் திடீரென ஏற்படும் ____________
விடை:
கடும் அதிர்வு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 4.
வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல் நீர் எழுச்சி ___________ எனப்படும்.
விடை:
புயல் அலை

Question 5.
இந்தியாவில் ___________ வறட்சி ஏற்படுகிறது.
விடை:
பருவமழை பொய்ப்பதால்

Question 6.
உட்புற மற்றும் வெளிப்புறக் காற்று தன் இயற்கைப் பண்புகளை இழப்பது ___________ எனப்படும்.
விடை:
காற்று மாசுபடுதல்

III. பொருத்துக

Question 1.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 10

Question 2.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 11

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
பேரழிவு என்றால் என்ன?
விடை:
பேரழிவு என்பது மிகப்பெரிய இழப்பினையும், அதிக செலவினத்தையும் உண்டாக்கும் பேரிடர். இதிலிருந்து மீள நீண்டகாலம் தேவைப்படும்.

Question 2.
அதிக வறட்சிக்கு உள்ளாகும் முக்கியப் பகுதிகள் யாவை?
விடை:
அதிக வறட்சிக்கு உள்ளாகும் முக்கிய பகுதிகள்: அகமதாபாத் முதுல் கான்பூர் வரை உள்ள வறண்ட மற்றும் அரை – வறண்ட பகுதிகள் ஒரு புறம். மற்றொரு புறம் கான்பூர் முதல் ஜலந்தர் வரை உள்ள பகுதிகள்.

மேற்கு தொடர்ச்சி மலையின் காற்று மறைவு பகுதிகளில் அமைந்துள்ள வறண்ட பகுதிகள்.

Question 3.
சிறு குறிப்பு வரைக: இந்தியப் பெருங்கடல் சுனாமி (2004)
விடை:
இந்தியப் பெருங்கடல் சுனாமி (2004):
2004ல் இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் (9.1 ரிக்டர் அளவுகோல் ஆற்றல்) டிசம்பர் 24 காலை 7.59 (உள்ளூர் நேரம்) மணிக்கு ஏற்பட்டது. இது இந்தோனேஷியாவின் சுமத்ரா கடற்கரையைத் தாக்கியது.

இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமி 12 நாடுகளைத் தாக்கி (இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, சோமாலியா, மாலத்தீவு) 2,25,000 உயிர்களை பலிவாங்கியதுடன் பெருத்த பொருட்சேதத்தையும் விளைவித்தது.

Question 4.
இந்தியாவில் நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்கள் யாவை?
விடை:
நீர் மாசடைதலுக்கான முக்கிய காரணங்கள்:

  •  நகரமயமாக்கல்
  • தொழிற்சாலை கழிவுகள்
  • கழிவுநீர்
  • வேளாண் நீர் வழிந்தோடல் மற்றும் முறையற்ற வேளாண்
  • நடைமுறைகள்
  • கடல்நீர் உட்புகுதல்
  • திண்மக்கழிவுகள்

Question 5.
செர்னோபில் அணு பேரழிவு இடம் 33 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது எவ்வாறு உள்ளது?
விடை:
செர்னோபில் (2019ல்):
செர்னோபில் அணு உலை விபத்து ஏப்ரல் 26, 1986 அன்று நிகழ்ந்தது. விபத்து நடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு (தற்போது உக்ரைன் மற்றும் பெலாரசைக் கொண்ட பகுதி) ஏராளமான விலங்குகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசிக்கின்றன.

அரசாங்கத்தால் 2016 ஆம் ஆண்டு உக்ரைன் நாடு “கதிர் இயக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோளப் பெட்டகம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 6.
இந்தியாவில் ஏன் வறட்சி ஏற்படுகிறது?
விடை:
இந்தியாவில் வறட்சி ஏற்படுகிறது : ஏனெனில்
இந்தியாவில் பருவமழை தவறுகிறது. பொதுவாக இந்தியாவில் பருவமழை சமச்சீரற்ற நிலையில் பொழிகிறது. சில பகுதிகள் அதிக மழைப் பொழிவையும் மற்ற பகுதிகள் மிதமானது முதல் குறைவான மழைப் பொழிவையும் பெறுகின்றன.

குறைவான மழை மற்றும் மிகக்குறைவான மழை பெறும் பகுதிகள் வறட்சியினால் பாதிக்கப்படுகின்றன.

V. வேறுபடுத்துக

Question 1.
வானிலையியல் வறட்சி மற்றும் நீரியியல் வறட்சி
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 12

Question 2.
காற்று மாசு மற்றும் நீர் மாசு
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 13

Question 3.
முதன்மை மாசுபடுத்திகள் மற்றும் இரண்டாம் நிலை மாசுபடுத்திகள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 14

VI. விரிவான விடையளி

Question 1.
தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் எட்டுவகையான இடர்களை எடுத்துக்காட்டுகளுடன் கூறு.
விடை:
தோற்றத்தின் அடிப்படையில் உருவாகும் இடர்கள் :

  • வளிமண்டலம் – இடியுடன் கூடிய புயல், மின்னல், காட்டுத்தீ
  • நிலவியல் – நில அதிர்வு, சுனாமி, நிலச்சரிவு
  • நீரியல் – வெள்ளப்பெருக்கு, வறட்சி, கடற்கரை அரிப்பு
  • எரிமலை — எரிமலை வெடிப்பு, லாவா வழிதல்
  • சுற்றுச்சூழல் – புவிவெப்பமடைதல், காடழிப்பு, மாசடைதல்
  • உயிரியல் – பெரியம்மை, விஷ தேனீக்கள், எய்ட்ஸ்
  • தொழில்நுட்பம் – அபாயகரமான கழிவுகள், தீவிபத்து, கட்டமைப்பு குறைபாடு
  • மனித தூண்டுதல் – போர், தீவிரவாதம், போக்குவரத்து விபத்துகள்

Question 2.
புயல் அலை என்பது என்ன? பயுல் அலைகளால் பாதிப்பு ஏற்படும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் எவை?
விடை:
புயல் அலை:
வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல்நீர் எழுச்சியை “புயல் அலை” என்கிறோம். (புயல் அலைகள் ஆழமற்ற கடலோரப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது)

புயல் அலை பாதிப்புக்குள்ளாகும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள்:

  • ஒடிசாவின் வடபகுதி மற்றும் மேற்கு வங்காள கடற்கரை
  • ஆந்திரக் கடற்கரை (ஓங்கோல் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே)
  • தமிழகக் கடற்கரை (13 கடலோர மாவட்டங்கள், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்)

புயல் அலை பாதிப்புக்குள்ளாகும் மேற்கு கடற்கரைப் பகுதிகள்:

  • மகாராஷ்டிரா கடற்கரை, வட ஹர்னாயர், தென் குஜராத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதி மற்றும் காம்பே வளைகுடாவைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள்.
  • கட்ச் வளைகுடாவை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள்

Question 3.
சிறுகுறிப்பு வரைக. –
i) பேரழிவை உருவாக்கக்கூடிய புதிய ஆயுதமாக இயற்கை வளர்ந்து வருகிறது.
ii) இடர் தடுப்பு நடவடிக்கைகளின் அவசியம்.
விடை:
i) பேரழிவை உருவாக்கக்கூடிய புதிய ஆயுதமாக இயற்கை வளர்ந்து வருகிறது.

  • இந்தியாவில் 2017 வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் 22,000 பேர் பெரும் சுற்றுச்சூழல் காரணமாக இறந்துள்ளனர்.
  • கடந்த 20 ஆண்டுகளில் (1998 – 2017) உலகில் சுமார் 5,00,000 மேற்பட்ட மக்கள் மோசமான வானிலை நிகழ்வுகளால் இறந்துள்ளனர்

ii) இடர்தடுப்பு நடவடிக்கைகளின் அவசியம்:

  • மனிதர்கள் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளுக்கு இயற்கை மற்றும் செயற்கை இடர்களால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்க எழுப்பப்படும் நடவடிக்கைகள் தடுப்பு நடவடிக்கைகள் ஆகும்.
  • தடுப்பு திட்டமிடல் :
    • இடரைக் கண்டறிதல்
    • பாதிப்பை மதிப்பீடு செய்தல்
  • தாமதமான தடுப்பு நடவடிக்கைகள் பொருளாதார இழப்பை அதிகரிக்கக் கூடும் என்பதால் முன் திட்டமிடல் அவசியம்.
  • இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இடர் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் சவாலானதாக உள்ளது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 5 இடர்கள் 15

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

8th Social Science Guide இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
மக்கள் __________ லிருந்து ____________ க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்.
அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு
ஆ) நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு
இ) மலையிலிருந்து சமவெளிக்கு
ஈ) சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு
விடை:
அ) கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு

Question 2.
ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் ________ எனப்படுகிறது.
அ) குடிபுகுபவர்
ஆ) அகதி
இ) குடியேறுபவர்
ஈ) புகலிடம் தேடுபவர்
விடை:
இ) குடியேறுபவர்

Question 3.
வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது. ___________
அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
ஆ) கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
இ) நகரத்தில் இருந்து கிராமத்திற்கு
ஈ) நகரத்தில் இருந்து நகரத்திற்கு
விடை:
அ) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 4.
போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு ___________ ஐ சார்ந்தது.
அ) மக்களியல்
ஆ) சமூக மற்றும் கலாச்சாரம்
இ) அரசியல்
ஈ) பொருளாதாரம்
விடை:
இ) அரசியல்

Question 5.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ____________
அ) மிகையான உணவு தானிய உற்பத்தி
ஆ) கால்நடை வளர்ப்பு
இ) மீன் பிடித்தல்
ஈ) வேட்டையாடுதல்
விடை:
அ) மிகையான உணவு தானிய உற்பத்தி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
நகரமயமாதல் …………………… எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன
விடை:
மூன்று

Question 2.
…………………… என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்
விடை:
வேலையின்மை .

Question 3.
இந்தியாவின் …………… மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.
விடை:
புதுதில்லி

Question 4.
ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ………….. இடம்பெயர்வு எனப்படும்.
விடை:
தன்னார்வ

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 5.
நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி ……………….. வளர்ச்சியால் அதிகரிக்கிறது.
விடை:
தொழில்புரட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
குடிசைப்பகுதிகள் பொதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.
விடை:
சரி

Question 2.
நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை .
விடை:
சரி

Question 3.
நகரமயமாக்கம் குறுகியக் கால வரலாறுடையது.
விடை:
தவறு

Question 4.
பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.
விடை:
சரி

Question 5.
மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
சரி

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.

கூற்று : நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.
காரணம் : கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடை:
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
‘இடம் பெயர்தல்’ – வரையறு.
விடை:
“ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தம் இருப்பிடத்தை விட்டு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு வசிக்கும் இடத்தை மாற்றுவதே இடம் பெயர்தல்” எனப்படும்.

ஐ.நா. அமைப்பின் வரையறை : “இடம்பெயர்வு என்பது இரு புவியியல் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் ஒரு வகையான மக்கள்தொகை நகர்வாகும். இது பொதுவாக இருப்பிடத்தில் ஒரு வகையான நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துகிறது”.

Question 2.
கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள் யாவை?
விடை:
கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயர்வதற்கான முக்கிய காரணங்கள்:

  • வேலைவாய்ப்பு
  • கல்வி
  • பொழுதுபோக்கு வசதிகள்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 3.
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்களைக் கூறுக.
விடை:
சுற்றுச்சூழல் அல்லது இயற்கையால் இடம் பெயர்வதற்கான காரணங்கள் :

  • எரிமலை வெடிப்பு
  • நில அதிர்வு
  • வெள்ளம்
  • வறட்சி

Question 4.
இடம்பெயர்வுக்கான இழுகாரணிகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
விடை:
இடம்பெயர்வுக்கான இழுகாரணிகள்:

  • பொருளாதாரக் காரணிகள்
  • வேலைவாய்ப்பிற்கேற்ற சூழல்கள்
  • மக்கள்தொகை காரணிகள்
  • குறைவான மக்கள்தொகை

Question 5.
நகரமயமாக்கம் என்றால் என்ன?
விடை:
நகரமயமாதல்:
“நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை நகரமயமாதல் என்கிறோம்.”

Question 6.
உலகில் அதிக மக்கள் தொகைக் கொண்ட நான்கு பெருநகரங்களைப் பட்டியலிடுக.
விடை:
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்கள்:

  • டோக்கியோ (ஜப்பான்) – 37 மில்லியன்
  •  புதுதில்லி (இந்தியா) – 29 மில்லியன்
  • சாங்காய் (சீனா) – 26 மில்லியன்
  • மெக்சிகோ நகரம் (மெக்சிகோ) – 22 மில்லியன்
  • சா பாலோ (பிரேசில்) – 22 மில்லியன்

VII. விரிவான விடையளி

Question 1.
இடம் பெயர்தலின் பல்வேறு வகைகள் யாவை? அவைகளை விளக்குக.
விடை:
I. நிர்வாக எல்லை அடிப்படையில் இடம் பெயர்வுகள் :
உள்நாட்டு இடம்பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைக்குள் நிகழும் மக்களின் இடம்பெயர்வு உள்நாட்டு இடம் பெயர்வு என அழைக்கப்படும்.

  • ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தல்.
  • நகர்ப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு இடம்பெயர்தல்.
  • ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல்.
  • நகர்ப்புறத்திலிருந்து ஊரகத்திற்கு இடம்பெயர்தல்.
  • சர்வதேச இடம்பெயர்வு : ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்து நடக்கும் இடம்பெயர்தல் சர்வதேச இடம் பெயர்தல் என அழைக்கப்படும்.

II. இடம் பெயர்பவரின் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர்தல் :

  • தன்னார்வ இடம்பெயர்வு (தனிநபரின் விருப்பம், முயற்சி மற்றும் முன்னெடுத்தல்)
  • தன்னர்வமில்லா / கட்டாய இடம்பெயர்வு (இடம் பெயர்பவரின் விருப்பத்திற்கு மாறாக)

III. இடம்பெயர்ந்த இடத்தில் தங்கும் கால அளவின் அடிப்படையில் இடம்பெயர்தல் :

  • குறுகிய கால இடம்பெயர்வு (இடம்பெயர்பவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் சில நாட்கள் முதல் சில மாதங்கள் மட்டுமே தங்குவர்)
  • நீண்டகால இடம்பெயர்வு (இடம் பெயர்பவர்கள் குடிபெயர்ந்த இடத்தில் சில வருடங்களாவது தங்குவர்)
  • பருவகால இடம்பெயர்வு (இடம் பெயர்பவர்கள் குறிப்பிட்ட பருவகாலத்தின் போது குடிபெயர்ந்து அப்பருவத்தின் முடிவில் மீண்டும் திரும்பி விடுவர்) – கோடைகாலத்தில் மலைவாழ் இடங்களுக்கு குடியேறுதல், வேளாண் தொழிலாளர்கள் விதைக்கும் பருவங்களில்
    இடம்பெயர்தல் மற்றும் ‘மந்தை இடமாற்றம்’ (Transhumance) ஆகியவை பருவகால இடம்பெயர்வுகளாகும்.

Question 2.
இடம் பெயர்தலுக்கான பல்வேறு காரணங்களை விரிவாக விளக்குக.
விடை:

  1. சூழியல் (அல்லது) இயற்கை காரணங்கள் :
    • சூழியல் இடம்பெயர்வுக்கு எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை முக்கிய காரணிகளாகும்.
    • இக்காரணிகள் மக்களை தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி புதிய பகுதிகளில் குடியேற உந்துகின்றன. (நீர்வளம், பிரச்சனைகளற்ற நிலப்பகுதிகள், மாசற்ற நிலைகள் இடம்பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகள்)
  2. பொருளாதார காரணங்கள் :
    • வளமான வேளாண் நிலம், வேலைவாய்ப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற பொருளாதார காரணிகள் புலம் பெயர்வோரை ஈர்க்கின்றன.
    • பெருந்திரள் ஏழ்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவை மக்களை பூர்வீக இடத்திலிருந்து சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களுக்கு வெளியேற வைக்கின்றன.
  3. சமூக – பண்பாட்டுக் காரணங்கள் :
    • பெண்களின் திருமணத்திற்கு பின் இடம்பெயர்வு, புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம்பெயர்தல் ஆகியவை சமூக பண்பாட்டுப் பழக்கத்தினை அடிப்படையாகக் கொண்டவை.
  4. மக்கள்தொகை சார்ந்த காரணங்கள் :
    • மக்கள் தொகையின் உட்கூறு பண்புகளான வயது, பாலினம், அதிக மற்றும் குறைந்த மக்கள் தொகை போன்றவை இடம்பெயர்வுக்கான முக்கிய காரணங்களாகும்.
    • பிற பிரிவினரை விட இளையோர் இடம்பெயர்வு அதிகம். திருமணத்திற்கு பின் பெண்கள் புலம் பெயர்கிறார்கள். அதிக மக்கள் தொகை ஓர் உந்து காரணி. குறைவான மக்கள்தொகை ஓர் இழுகாரணி.
  5. அரசியல் காரணங்கள் :
    • காலங்காலமாக காலனி ஆதிக்கம், போர்கள், அரசாங்கக் கொள்கைகள் போன்றவை இடம்பெயர்தலில் முக்கிய பங்குவகிக்கின்றன. பழங்காலத்திலிருந்தேபோர்கள் இடம்பெயர்வுக்கான குறிப்பிடத்தக்க காரணமாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 3.
நகரமயமாக்கலினால் ஏற்படும் சவால்களை ஆராய்க.
விடை:
குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதிகள் :
நகர்ப்புற மக்கள்தொகை அதிகரிப்பால் குடியிருப்பு இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. தரமற்ற குடியிருப்புகள் உருவாகின்றன. விரைவான நகரமயமாக்கலால் குடிசைப்பகுதிகள் உருவாகின்றன.

மக்கள் நெரிசல் :
அதிக மக்கள் நெரிசல் சுகாதாரமற்ற சுற்றுப்புறச் சூழலுக்கு வழிவகுக்கிறது. மக்கள் நெரிசல் பல நோய்கள் மற்றும் கலவரங்களுக்கு காரணமாகிறது.

தண்ணீ ர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதாரம் :
எந்த ஒரு நகரத்திலும் நாள் முழுவதும் நீர் விநியோகம் இல்லை. வடிகாலமைப்பு மோசமாக உள்ளது. குப்பைகளை அகற்றுதல் கடினமான பணியாக உள்ளது.

போக்குவரத்து மற்றும் நெரிசல் :
இருசக்கர வாகனங்கள் மற்றும் மகிழுந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. போதுமான திட்டங்களும், கட்டமைப்புகளும் இல்லை .

மாசடைதல் :
பல நகரங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர், தொழிலகங்களிலிருந்து வெளியேற்றப்படும் சுத்தகரிக்கப்படாத கழிவுநீர் ஆகியன அருகில் உள்ள நீர்நிலைகளில் கலக்கின்றன. நகர்ப்புற மையங்களைச் சுற்றியுள்ள தொழிலகங்கள் புகை மற்றும் நச்சு வாயுக்களை வெளியிட்டு வளிமண்டலத்தை மாசுபடுத்துகின்றன.

IX. செயல்பாடுகள்

Question 1.
உனது பகுதியில் உள்ள மக்கள் இடம் பெயர்தலுக்கான காரணங்களை ஆராய்ந்து பட்டியலிடுக.
விடை:
எனது பகுதியில் மக்கள் தங்கள் பூர்வீக இடங்களிலிருந்து வளர்ந்து வரும் நகரம் மற்றும் மாநகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். பல ஆண்டுகள் தொடர்ந்து பருவமழை பொய்த்துப் போவதால் வேலை தேடியும் குழந்தைகளின் கல்விக்காகவும் புலம் பெயர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு – ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு)

எனது பகுதி வறட்சி பாதித்த பகுதி என்பதால் மக்கள் செழிப்பான பகுதியை நோக்கி நல்ல ஊதியம், நல்ல வேலைவாய்ப்பு தேடி நகர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு – ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு)

திருமணத்தின் காரணமாக, மக்கள்தொகை காரணி அடிப்படையில், பெண்கள் திருமணத்திற்குப்பின் இடம் பெயர்கிறார்கள்.(உள்நாட்டு இடம்பெயர்வு – ஊரகத்திலிருந்து நகர்ப்புறத்துக்கு மற்றும் ஊரகத்திலிருந்து ஊரகத்திற்கு)

பருவகால இடம்பெயர்வு, முதுமை, பணி நிறைவு, பணி ஓய்வு காரணமாக மக்கள் பூர்வீக இடங்களுக்கு அமைதியான வாழ்க்கை வாழவும், நகர்ப்புற பிரச்சனைகளிலிருந்து மீளவும் இடம்பெயர்கின்றனர். (உள்நாட்டு இடம்பெயர்வு – நகர்ப்புறத்திலிருந்து ஊரகத்திற்கு)

Question 2.
நகரமயமாக்கலின் விளைவுகள் சார்பான தகவல்கள் மற்றும் படங்களைச் சேகரித்து தொகுப்பு படம் (Album) ஒன்றைத் தயார் செய்க. (மாணவர்களுக்கானது)

8th Social Science Guide இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நகரமயமாக்கலின் உலக சராசரி சதவீதம் …………
அ) 55
ஆ) 60
இ) 65
ஈ) 70
விடை:
அ) 55

Question 2.
…………………. ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள் தொகை ஊரக மக்கள் தொகையைவிட அதிகமானது.
அ) 2005
ஆ) 2007
இ) 2009
ஈ) 2011
விடை:
ஆ) 2007

Question 3.
வரலாற்றுக்கு முந்தைய நகரங்களான உர் மற்றும் பாபிலோன் அமைந்த பகுதி …………..
அ) இந்தியா
ஆ) கிரீஸ்
இ) எகிப்து
ஈ) மெசபடோமியா
விடை:
ஈ) மெசபடோமியா

Question 4.
2017 ஆம் ஆண்டில் ………….. புலம் பெயர்வில் இந்தியா மிகப்பெரிய நாடு.
அ) உள்நாட்டு
ஆ) பருவகால
இ) சர்வதேச
ஈ) கட்டாய
விடை:
இ) சர்வதேச

Question 5.
உலக மக்கள் தொகையில் அதிக சதவீதம் மற்றும் சர்வதேச புலம் பெயர்ந்தோர் அதிக சதவீதம் கொண்ட மண்டலம்
அ) ஆப்பிரிக்கா
ஆ) ஆசியா
இ) ஐரோப்பா
ஈ) லத்தீன் அமெரிக்கா
விடை:
ஆ) ஆசியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பின்தங்கிய நாடுகளைச் சார்ந்த தொழிற்திறன் கொண்ட மக்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடி வளர்ந்த நாடுகளுக்குச் செல்லுதல் ………….. எனப்படும்.
விடை:
அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 2.
அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் காரணமாக பூர்வீக பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைதல் ……….. என அழைக்கப்படுகிறது.
விடை:
அறிவுசார் வெளியேற்ற விளைவு

Question 3.
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நகரங்கள் …………… அருகில் காணப்பட்டன
விடை:
ஏஜியன் கடல்

Question 4.
பாரிஸ், லண்டன், வெனிஸ் ……………. ல் காணப்படும் நகரங்கள்
விடை:
ஜரோப்பா

Question 5.
பொதுவாக அதிகம் நடைபெறக்கூடிய இடம் பெயர்வு ……………….. ஆகும்
விடை:
ஊரகப்பகுதியிலிருந்து நகர்ப்புறம் நோக்கி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 2

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
குடிபெயர்பவர் என்பவர் சர்வதேச எல்லைக்கு வெளியிலிருந்து ஒரு புதிய நாட்டில் குடி புகுபவர்கள் ஆகும்
விடை:
சரி

Question 2.
குடியேறுபவர் என்பவர் தன்னுடைய நாட்டிலிருந்து வோறாடு நாட்டிற்கு குடியேறுபவர் ஆவர்
விடை:
சரி

Question 3.
மக்கள் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல காரணமாக அமையும் காரணிகள் உந்துகாரணிகள் எனப்படும்
விடை:
சரி

Question 4.
பிறபகுதிகளில் இருந்து ஓர் இடத்தைநோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் இழ காரணிகள் எனப்படும்.
விடை:
சரி

Question 5.
கால்நடையுடன் இடம் பெயர்வு பருவகால இடம் பெயர்வு அல்ல
விடை:
தவறு

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க.

Question 1.
கூற்று : இடம் பெயர்வு என்பது இருபுவியியல் பிரதேசங்களுக்கிடையே நடைபெறும் ஒருவகையான மக்கள் தொகை நகர்வாகும்.
காரணம் : ஊரகத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்தல் விளைவு நகரமயமாக்கல் ஆகும்.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மக்கள் எவ்வாறு நிரந்தர குடியிருப்புகளில் வாழத் தொடங்கினர்?
விடை:
நாடோடி மக்கள் காடுகளில் வாழ்வதை தவிர்த்து நாகரிக வாழ்க்கையைப் பின்பற்றத் தொடங்கியபோது வளமான நிலம் மற்றும் வளர்ப்பு விலங்குகளுடன் உறவை மேம்படுத்திக் கொண்டனர்.

இதன் விளைவாக மனிதகுலம் குறிப்பிட்ட அளவு மாற்றமடைந்தது. நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு நிரந்தர குடியிருப்புகளில் வாழத் தொடங்கினர்.

Question 2.
அரசியல் காரணங்களுக்கான இழுகாரணிகள் மற்றும் உந்து காரணிகள் யாவை?
விடை:
அரசியல் காரணங்களுக்கான இழுகாரணிகள் :

  • அரசியல் பாதுகாப்பு
  • தனித்துவம் மற்றும் சுதந்திரம்
    குறைந்த செலவு மற்றும் எளிதில் கிடைக்கும் சேவைகள்

அரசியல் காரணங்களுக்கான உந்து காரணிகள் :

  • போர், சமூக அமைதியின்மை பாதுகாப்பு சார்ந்தவை
  • குறைவான அல்லது பற்றாக்குறையான சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு

Question 3.
ஆண்களைவிட பெண்கள் அதிகமாக புலம்பெயரும் பகுதிகளைப் பெயரிடு.
விடை:
ஆண்களைவிட பெண்கள் அதிகம் புலம் பெயரும் பகுதிகள் :

  • ஐரோப்பா
  • வட அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா
  • லத்தீன் அமெரிக்கா
  • கரீபியன்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 4.
இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகள் யாவை?
விடை:
இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகள் :

  • மக்கள் தொகை விளைவுகள்
  • சமூக விளைவுகள்
  • பொருளாதார விளைவுகள்
  • சுற்றச் சூழல் விளைவுகள்

Question 5.
நகரமயமாக்கலை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
விடை:
நகரமயமாக்கலின் மூன்று காரணிகள் :
இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி ஊரகத்திலிருந்து நகர்புறங்களுக்கு இடம் பெயர்தல் ஊரகப் பகுதிகளை நகர்புறங்களாக மறுசீரமைப்பு செய்தல்

Question 6.
உலக நகரமயமாக்கலில் முதல் ஐந்து பகுதிகளின் % ஐ பட்டியலிடு.
விடை:
உலக நகரமயமாக்கல் சதவீதம் :

  1. வட அமெரிக்கா (82%)
  2. இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள்(81%)
  3. ஐரோப்பா (74%)
  4. ஓசியானியா (68%)
  5. ஆசியா (50%)

VII. விரிவான விடையளி

Question 1.
நவீனகால துரித நகரமயமாக்கம் எவ்வாறு மக்கள் தொகையை மறுபரவலுக்கு உட்படுத்துகிறது?
விடை:
நவீன காலம் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. இது நகரமயமாக்கலின் மூன்றாம் கட்டமாகும்.

  • 19ஆம் நூற்றாண்டின்தொழிற்புரட்சிநகரங்கள் மற்றும்மாநகரங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்தியது.
  • நகர்புற நாகரிகத்தினால் வட அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனில் அதிக எண்ணிக்கையிலான புதிய நகரங்கள் உருவாயின.
  • நவீன தொலைத்தொடர்பு, போக்குவரத்து, புதிய வணிக கடல் வழித் தடங்களின் வளர்ச்சி வணிகத்தளங்களையும், நகர்புற பகுதிகளையும் வலுப்படுத்தின.
  • ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. 1930க்கு பின் ஐம்பது நகரங்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக்கொண்டுள்ளன.
  • கெய்ரோ, நைரோபி, மும்பசா, புலவையோ, டூலா, அபிடியான், லாகோஸ், அக்ரா, அடிஸ் அப்பா, லிப்போல்டுவில், லவுண்டா, கேப்டவுன், நட்டால், பிரிட்டோரியா போன்றவை ஆப்பிரிக்காவின் முக்கிய நகரங்கள்.
  • நவீனகால துரித நகரமயமாக்கம் உலகம் முழுவதிலும் மக்கள் தொகையை மறு பரவலுக்கு உட்படுத்துகிறது.

Question 2.
உலக நகரமயமாக்கலின் வளர்ச்சி (பண்டையகாலம்) வரலாற்றை சுருக்கமாக எழுது.
விடை:
பண்டைய காலத்தில் நகரமயமாக்கலின் வளாச்சி :
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே நகர மையங்கள் உருவாகத் தொடங்கின (10000 ஆண்டுகளுக்கு முன்) தொடக்க கால மனிதர்கள் நிரந்தரக் குடியிருப்புகளை உருவாக்கத் தொடங்கினர்.

  • எகிப்து, கிரேக்கம் மற்றும் இந்திய ஆற்றுப்பள்ளத்தாக்கு பகுதிகளில் வேளாண் சார்ந்த சமூகங்கள் தோன்றி அவை நகர்புறம் சார்ந்த சமூகம் மற்றும் நகரமையங்களாக உருவாயின.
  • உணவுதானிய மிகை உற்பத்தியே நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம்.
  • உலக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அமைந்த நகரங்கள்.
    உலக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அமைந்த நகரங்கள் :

    • உர் மற்றும் பாபிலோன்(மெசபடோமியா)
    • தீப்ஸ் மற்றும் அலெக்சாந்திரியா (எகிப்து)
    • ஏதென்ஸ் (கிரேக்கம்)
    • ஹரப்பா மற்றும் மொகஞ்சதரோ (இந்தியா)
  • கிரேக்க மற்றும் ரோமானிய காலனியாதிக்க காலங்களில் நகர்ப்புற மையங்களின் அளவு மற்றும் எண்ணிக்கை அதிகரித்தது.
  • 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏஜியன் கடலுக்கு அருகில் பல நகரங்கள் காணப்பட்டன.
  • கிரேக்க காலனியாதிக்க காலங்களில் வர்த்தக விரிவாக்கம் பல நகரங்கள் மற்றும் மாநகரங்களை தோற்றுவித்தது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

Question 3.
இடம் பெயர்தலின் முக்கிய விளைவுகளை விளக்குக.
விடை:
இடம் பெயர்வானது குடியேற்றம் மற்றும் குடியிறக்கம் ஆகிய இரு பகுதிகளையும் பாதிப்படையச் செய்கிறது.

அ) மக்கள் தொகை விளைவுகள் :
திருமணத்திற்கு பிறகு நடைபெறும் பெண்களின் இடம் பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதியில் பாலின விகிதம் குறையவும் திருமணமாகி செல்லுமிடங்களில் பாலின விகிதம் அதிகரிக்கவும் வழி வகுக்கிறது.

வேலைதேடிச் செல்லும் ஆண் தொழிலாளர்களின் இடம் பெயர்வு அவர்களின் பூர்வீக பகுதிகளில் சார்ந்து இருப்போரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகின்றது.

ஆ) சமூக விளைவுகள் : பல்வேறு பகுதிகளிலிருந்து நடைபெறும் இடம் பெயர்வு பன்முக சமுதாயம் உருவாக வழி வகுக்கின்றது. மக்கள் குறுகிய மனப்பான்மையை விட்டு தாராள மனப்பான்மைக்கு மாற ஏற்ற சூழலை உருவாக்குகிறது.

இ) பொருளாதார விளைவுகள் :
அதிக மக்கள் தொகை பகுதிகளிலிருந்து குறைந்த மக்கள் தொகை பகுதிகளை நோக்கி நகரும் இடம் பெயர்வு மக்கள் வள விகிதம் சமநிலையற்றதாகி விட காரணமாகிறது. சில வேளை இருபகுதிகளும் உகந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளாக மாறவும் செய்யலாம்.

அறிவுசார்ந்த மக்கள் வெளியேறுதல் (Brain Drain) நடைபெறுகிறது (பின்தங்கிய நாடுகள் → வளர்ந்த நாடுகள்) பூர்வீக பகுதிகள் பின்தங்குகின்றன. (அறிவுசார் வெளியேற்ற விளைவு)

ஈ) சுற்றுச்சூழல் விளைவுகள் :

  • நகரங்களில் மக்கள் நெரிசல் மற்றும் வளங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • காற்று, நீர், நிலம் மாசு அடைய வழி வகுக்கிறது.
  • குடி நீர் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், மோசமான வடிகால் அமைப்பு மற்றும் போதிய குடியிருப்பின்மை பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • குடிசை வாழ் பகுதிகள் உருவாகின்றன.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 4 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் 3

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

9th Science Guide தாவர உலகம் – தாவர செயலியல் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் ________
அ) ஒளி சார்பசைவு
ஆ) புவி சார்பசைவு
இ) தொடு சார்பசைவு
ஈ) வேதி சார்பசைவு
விடை:
இ) தொடு சார்பசைவு

Question 2.
ஒளிச்சேர்கையின் போது நடைபெறுவது
அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.
ஆ) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்
இ) நீர் மற்றும் CO2 இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்
ஈ) CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
விடை:
அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 3.
நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது _____ எனப்படும்.
அ) நடுக்கமுறு வளைதல்
ஆ) ஒளிசார்பசைவு
இ) நீர்சார்பசைவு
ஈ) ஒளியுறு வளைதல்
விடை:
இ) நீர்சார்பசைவு

Question 4.
இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?
அ) வேதி சார்பசைவு
ஆ) நடுக்கமுறு வளைதல்
இ) ஒளி சார்பசைவு
ஈ) புவிஈர்ப்பு சார்பசைவு
விடை:
இ) ஒளி சார்பசைவு

Question 5.
தாவரத்தின் வேர் ____ ஆகும்?
I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு
II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு
III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு
அ) 1 மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) III மற்றும் IV
ஈ) 1 மற்றும் IV
விடை:
ஆ) II மற்றும் III

Question 6.
வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது _____ எனப்படும்.
அ) வெப்ப சார்பசைவு
ஆ) வெப்பமுறு வளைதல்
இ) வேதி சார்பசைவு
ஈ) நடுக்கமுறு வளைதல்
விடை:
ஆ) வெப்பமுறு வளைதல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 7.
இலையில் காணப்படும் பச்சையம் ____ க்கு தேவைப்படும்.
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) நீராவிப்போக்கு
இ) சார்பசைவு
ஈ) திசை சாரா தூண்டல் அசைவு
விடை:
அ) ஒளிச்சேர்க்கை

Question 8.
நீராவிப் போக்கு ____ ல் நடைபெறும்.
அ) பழம்
ஆ) விதை
இ) மலர்
ஈ) இலைத்துளை
விடை:
ஈ) இலைத்துளை

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
______ இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.
விடை:
ஒளிச்சார்பசைவு

Question 2.
_____ நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
விடை:
வேர்

Question 3.
தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி _____ எனப்படும்.
விடை:
பச்சையம்

Question 4.
சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ____ எனப்படும்.
விடை:
ஒளியுறு வளைதல்

Question 5.
புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ______ எனப்படும்.
விடை:
புவிசார்பசைவு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 6.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 வை உள்ளிழுத்துக் கொள்கின்றன ஆனால் அவைகளின் உயிர் வாழ்தலுக்கு ______ தேவைப்படும்.
விடை:
ஆக்ஸிஜன்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 30

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் ஒளிச்சார்பசைவு எனப்படும்.
விடை:
தவறு
வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் வேதிசார்பசைவு எனப்படும்.

Question 2.
தண்டுப் பகுதி நேர் ஒளிசார்பசைவு மற்றும் எதிர்புவி சார்பசைவு உடையது.
விடை:
சரி

Question 3.
வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் குறைந்துவிடும்.
விடை:
தவறு
வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளைகள் திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் அதிகரிக்கும்.

Question 4.
ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.
விடை:
தவறு
ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் O2, உற்பத்தியாகும்.

Question 5.
வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 6.
தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும்போது நீர் இழப்பு ஏற்படும்.
விடை:
தவறு
தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் திறந்திருக்கும்போது நீர் இழப்பு ஏற்படும்.

V. மிகச் சுருக்கமாக விடையளி.

Question 1.
திசைச் சாரா தூண்டல் அசைவு என்றால் என்ன?
விடை:
அசைவுகள் திசைத் தூண்டுதலின் ஒரு திசையை சார்ந்து அமையாதிருத்தல்.

Question 2.
பின்வரும் வாக்கியத்தைக் கொண்டு, தாவரப் பாகத்தின் பெயரிடவும்.
விடை:
அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
விடை:
வேர்

ஆ) ஒளி இருக்கும் திசையை நோக்கியும், ஆனால் புவிஈர்ப்பு விசையின் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
விடை:
தண்டு

Question 3.
ஒளிசார்பசைவு (phototroism) ஒளியுறு வளைதல் (photonasty) வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 69

Question 4.
ஒளிச்சேர்க்கையின் போது ஆற்றல் X ஆனது Y ஆற்றலாக மாறுகிறது
அ) X மற்றும் Y என்றால் என்ன?
ஆ) பசுந்தாவரங்கள் தற்சார்பு உணவு ஊட்டமுறையை கொண்டவை? ஏன்?
விடை:
அ) X-சூரிய ஒளி Y-வேதியாற்றல்
ஆ) தனக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொள்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 5.
நீராவிப் போக்கு – வரையறு.
விடை:
நீர் தாவரத்தில் மேல் பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையான தண்டுகளின் வழியாக நீராவியாக வெளியேற்றப்படும் நிகழ்ச்சி.

Question 6.
இலைத்துளையைச் சூழ்ந்துள்ள செல் எது?
விடை:
காப்பு செல்கள் இலைத்துளை மூடித் திறப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுக.
அ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள் ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்
விடை:
அ. திசைசார் அசைவு,
ஆ. திசை சாரா அசைவு

Question 2.
ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.
விடை:

  • எதிர் புவி சார்பசைவு ஆகும்.
  • எதிர்புவி சார்பசைவு உடைய வேர்களை உருவாக்குகின்றன.
  • இவை 180° கோணத்தில் செங்குத்தான சுவாச வேர்களைக் கொண்டவை.

Question 3.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 70
விடை:
6H2O, C6H12O6

Question 4.
பச்சையம் என்றால் என்ன?
விடை:
தாவரங்களில் காணப்படும் ஒளி ஆற்றலை உட்கிரகிக்கக் கூடிய நிறமிகள் – பச்சையம் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 5.
நேர் புவிசார்பசைவு கொண்டிருக்கும் தாவரப் பாகத்தை எழுதுக?
விடை:
வேர் :
வேர்கள் பூமியில் நிலையாக நிற்ப்பதற்காக புவியை நோக்கி வளர்கிறது. எனவே வேர்கள் நேர் புவிசார் பசைவை கொண்டுள்ளது.

Question 6.
தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரம் மற்றும் சூரியகாந்தி தாவரத்தில் ஏற்படும் அசைவுகள் இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 71

Question 7.
ஒரு வேளை ஒரு ரோஜா தாவரத்தை தொட்டியில் வளர்க்கும்போது அதைக் கொண்டு எவ்வாறு நீராவிப்போக்கு நிகழ்வினை நிரூபிப்பீர்கள்
விடை:

  • ஒரு தொட்டி ரோஜா செடியின் மண்பரப்பு மற்றும் கிளை பகுதியை ஒரு பாலித்தின் பையினால் மூடவும்.
  • இந்த அமைப்பை ஒரு மணிநேரம் சூரிய ஒளியில் வைக்கவும்.
  • ஒரு மணி நேரத்திற்குப்பின் பாலித்தின் பையில் நீர் துளிகள் ஒட்டியுள்ளது
  • இந்த நிகழ்வு இலைகள் மூலம் நீராவிப்போக்கு நடப்பதை நிரூபிக்கிறது.

Question 8.
இலைத்துளை மற்றும் பட்டைத்துளை நீராவிப்போக்கினை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 80

Question 9.
தாவர வேர் மற்றும் தண்டு எந்த நேரடித் தூண்டலுக்கு உட்படும்?
விடை:
வேர் – புவியீர்ப்பு விசை
தண்டு – சூரிய ஒளி

VII. விரிவாக விடையளி.

Question 1.
திசை சார்பசைவு மற்றும் திசை சாரா அசைவு வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 81 Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 82

Question 2.
நீராவிப்போக்கின் வகைகளை விவரி.
விடை:

  • இலைத்துளை நீராவிப்போக்கு : – பெருமளவு நீர், இலைத்துளைகள் வழியாக நடைபெறுகிறது. ஏறக்குறைய 90-95% நீர் இழப்பு ஏற்படுகின்றது.
  • கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு : – புறத்தோலின் மேற்புறம் உள்ள கியூடிக்கிள் அடுக்கின் வழியாக நீராவிப்போக்கு நடைபெறுகின்றது.
  • பட்டைத்துளை நீராவிப்போக்கு: இதில் பட்டைத்துளை வழியாக நீர் இழப்பு நடைபெறும். பட்டைத்துளை என்பவை பெரிய மரவகை தாவரங்களின் பட்டைகள், கிளைகள் மற்றும் பிற தாவர உறுப்புகளில் காணப்படும் சிறிய துளைகள் ஆகும்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
A, B மற்றும் C என்று மூன்று தாவரங்கள் உள்ளன. A தாவரத்தில் உள்ள மலரின் இதழ்கள் பகல் நேரத்தில்
பிரகாசமான ஒளியில் திறக்கும். ஆனால் ஒளி மங்கும்போது இருளில் மூடிக்கொள்ளும். தாவரம் B ல் உள்ள மலர்களின் இதழ்கள் இரவு நேரத்தில் திறந்த நிலையில் இருக்கும். ஆனால் பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் மூடிக்கொள்ளும். தாவரம் C யில் உள்ள இலைகளை விரல்களால் தொட்டால் அல்லது திடப் பொருள் ஏதும் அதன் மீது பட்டால் மூடிக்கொள்ளும்.
அ) தாவரம் A மற்றும் B யின் மலர்களில் நிகழும் நிகழ்வினைப் பெயரிடுக.
ஆ) தாவரம் A மற்றும் B யின் மலர்களின் பெயரினை எழுதுக.
இ) தாவரம் C யின் இலைகளில் ஏற்படும் நிகழ்வினைப் பெயரிடுக.
ஈ) தாவரம் C யின் இலைகளில் நிகழும் நடத்தை போன்று வேறு ஒருதாவரத்தின் பெயரினை எழுதுக.
விடை:
அ) தாவரம் A – ஒளியுறு வளைதல்
தாவரம் B – இருளுறு வளைதல் கொண்டுள்ளது
ஆ) A – டான்டலியன்
B – நிலவுமலர்
இ) C – நடுக்கமுறு அசைவு
ஈ) மைமூசா பியூடிகா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 2.
கற்பனை செய்து பாருங்கள் மாணவன் A ஒளிச்சேர்க்கைக்கு தேவையான சில முக்கிய காரணிகளைப் படித்தார். இவர் ஒரு தொட்டித் தாவரத்தினை இருட்டறையில் 24 மணிநேரம் வைத்தார். அடுத்த நாள் அதிகாலையில், அத்தாவரத்தின் ஒரு இலையின் நடுப்பகுதியை கருப்புக் காகிதம் கொண்டு மறைத்தார். பிறகு சில மணி நேரம் அத்தொட்டித் தாவரத்தினை சூரிய ஒளியில் வைத்தார். மற்றும் கருப்புக் காகிதம் கொண்டு மறைக்கப்பட்ட இலையை ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தினார்.
அ) இதனால் ஒளிச்சேர்க்கையில் என்ன அம்சம் நிரூபிக்கப்பட்டது?
ஆ) சோதனைக்கு முன் ஏன் தாவரம் இருட்டறையில் வைக்கப்பட்டது?
இ) இலைகளில் ஸ்டார்ச் உள்ளது என நீ எவ்வாறு நிரூபிப்பாய்?
ஈ) ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் என்ன?
விடை:
அ) ஒளிச்சேர்க்கைக்கு ‘சூரிய ஒளி’ அவசியம் என்பது நிரூபிக்கப்பட்டது.
ஆ) இலையில் உள்ள ஸ்டார்ச்சை நீக்க,
இ) அயோடின் கரைசலைக் கொண்டு ஸ்டார்ச் சோதனை செய்தல்.
ஈ) கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் சூரிய ஒளி, பச்சையம்.

9th Science Guide தாவர உலகம் – தாவர செயலியல் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
ஹீலியோடிராபிசம் ஒரு வகை _____ ஆகும்.
விடை:
ஒளி சார்பசைவு

Question 2.
முதல் நிலை தண்டு என்பது _____ ஆகும்.
விடை:
முளைக்குருத்து

Question 3.
தாவரங்கள் மண்ணிலிருந்து பிற பொருட்களை உறிஞ்சி எவ்வளவு ஜான் பாப்டிஸ்ட் வான் எடையானது அதிகரித்தது என்பதைக் கண்டறியும் சோதனையைச் செய்தவர் _____
விடை:
ஹெல்மான்ட்

Question 4.
தாவரம் CO2 ஐ மீண்டும் O2,ஆக மாற்றுவதாகக் கண்டறிந்த அறிஞர்
விடை:
பிரிஸ்டிலி

Question 5.
உலகில் முதன் முதலாக உருவாகிய தாவரங்கள் _______
விடை:
மாஸ்கள் மற்றும் லிவர்
வோர்ட்ஸ்

Question 6.
பூமியில் காணப்படும் மிக உயரமான புல் வகை _____
விடை:
மூங்கில்

Question 7.
25 – 200cm மழையளவு பொதுவாகக் காணப்படுவது ______
விடை:
காடுகள் வாழிடம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 8.
ஆகாய தாமரையின் பருத்த இலைக் காம்பு எதில் உதவுகிறது?
விடை:
மிதத்தல்

Question 9.
பட்டாணி தாவரத்தின் இரு சொல் பெயர் என்ன?
விடை:
பைசம் சாட்டைவம்

Question 10.
எந்த தாவரத்தில் விலங்கு போல் இயக்கம் காணப்படுகிறது?
விடை:
கிளாமைடோமோனாஸ்

Question 11.
டாராக்சம் அஃபிசினேல் தாவரத்தின் வட்டாரப் பெயர் ______
விடை:
சாதாரண டான்டிலியான்

Question 12.
ஒரு தாவரம் 1 லிட்டர் தண்ணீ ரை உறிஞ்சினால், அதில் எவ்வளவு நீராவிப் போக்கினால் வெளியேற்றப்படுகிறது?
விடை:
999 மில்லி லிட்டர்கள்

Question 13.
தாவரத்தில் ஒரு நாளில் சுவாசித்தல், ஒளிச்சேர்க்கை, நீராவிப் போக்கு நடைபெறும் நேரங்கள் மணி சராசரியாக முறையே ______
விடை:
24, 12, 10

Question 14.
______ தாவரத்தின் இலைகளை நாம் தொட்டவுடன் அவ்விலைகள் தொட்டால்
விடை:
சிணுங்கி (அ) மூடிக்கொள்கின்றன.
மைமோசா பியூடிகா

Question 15.
_______ தாவரத்தின் தண்டின் முனையானது சூரியன் திசையை நோக்கி நகர்கின்றன. இரவு நேரங்களில் எதிர்திசையில் நகர்கின்றன
விடை:
ஹீலியாந்தல்

Question 16.
_____ இலைகள் காற்றினால் நடனம் ஆடுவது போன்ற அழகியத் தோற்றத்தை உருவாக்குகின்றன
விடை:
இந்திய தந்தித் தாவரத்தின்

Question 17.
____ தமிழில் தொட்டால் சிணுங்கி என்று அழைக்கப்படுகிறது
விடை:
மைமோசா புடிகா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 18.
ஒளியின் தூண்டலுக்கு ஏற்ப ஒருதிசை சார்ந்த தாவர பாகத்தில் ஏற்படும் அசைவு ____ எனப்படும்.
விடை:
ஒளி சார்பசைவு

Question 19.
புவி ஈர்ப்புத் திசைக்கு ஏற்ப தாவரத்தின் உறுப்புகளில் ஏற்படும் அசைவு _____ எனப்படும்.
விடை:
புவி சார்பசைவு

Question 20.
தொடுதல் தூண்டலுக்கு ஏற்ப தாவர உறுப்புகளில் ஏற்படும் அசைவு _____ எனப்படும்
விடை:
தொடு உணர்வு சார்பசைவு

Question 21.
வேதிப்பொருளின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு அசைதல் _____ எனப்படும்.
விடை:
வேதி சார்பசைவு

Question 22.
______ தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும் மாலை மூடிய நிலையிலும் காணப்படும்.
விடை:
டாராக்சம் அஃபிசினே

Question 24.
ஒளிச்சேர்க்கையின் முடிவில் ______ ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது.
விடை:
குளுக்கோஸ்

Question 25.
ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் _____ வாயுவை உள்ளெடுத்து செல்கிறது.
விடை:
கார்பன்டை ஆக்ஸைடு

Question 26.
தாவரத்தின் சிறுகிளை கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவினை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது என்று கூறியவர் யார்?
விடை:
ப்ரீஸ்ட்லீ

Question 27.
பச்சையம் _____ மூலக்கூறு அமைப்பில் ஒத்திருக்கும் ஆனால் மைய மூலக்கூறு மட்டும் வேறுபட்டிருக்கும்.
விடை:
ஹீமோகுளோபின்

Question 28.
தாவரங்கள் தங்களின் வேர்களின் மூலம் நீரையும், இலைகளில் _____ வழியாக காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு எடுத்துக்கொள்கிறது,
விடை:
இலைத்துளைகள்

Question 29.
_____ என்ற மரகத பச்சை நிறமுடைய கடல் அட்டை ஒன்றை கண்டுபிடித்தனர்
விடை:
எலிசா குளோரோட்டிகா

Question 30.
இலைகளில் காணப்படும் சிறிய துளைகள் _____ எனப்படும்.
விடை:
இலைத்துளைகள்

Question 31.
தாவரப்பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையானத் தண்டுகளின் நீராவிப்போக்கு மூலமாக நீரானது ஆவியாக வெளியேற்றப்படுவது ____ எனப்படும்.
விடை:
நீராவிப்போக்கு

Question 32.
____ நீராவிப்போக்கின் போது பெருமளவு நீர், இலைத்துளை வழியாக நடைபெறுகிறது.
விடை:
இலைத்துளை

Question 33.
புறத்தோலின் மேற்புறம் உள்ள கியூட்டிக்கிள் அடுக்கின் வழியாக நடைபெறும் நீராவிப்போக்கு ____ எனப்படும்.
விடை:
கியூட்டிக்கிள் நீராவி

Question 34.
_____ நீர் இழப்பு பட்டைத்துளை வழியாக நடைபெறும்
விடை:
பட்டைத்துளை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 35.
இலைத்துளைகளில் உள்ள _____ செல்களில் பச்சையம் உள்ளது
விடை:
காப்பு

Question 36.
உலகின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பிற்கு _____ காரணமாகும்.
விடை:
உலக வெப்பமயமாதல்

Question 37.
_____ தாவரம் தனது வாழ்நாளில் 54 கேலன் நீரினை நீராவியாக வெளியேற்றுகிறது
விடை:
மக்காச்சோள

Question 38.
_____ முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
தாவரங்கள்

Question 39.
உயிரினங்கள் உணவிற்காக ஒன்றையொன்று சார்ந்திருப்பது ____ என அழைக்கப்படுகிறது.
விடை:
உணவுச் சங்கிலி

Question 40.
_____ தாவரங்கள் பிரமிடு வடிவங்களில் காணப்படுகிறது
விடை:
ஊசியிலைத்

Question 41.
____ பகுதியானது அதிகளவு பல்லுயிர்த் தன்மையுடைய நில அமேசான் அமைப்பை பெற்ற இடமாகும்.
விடை:
சாந்தோப்டெரின்

Question 42.
வெஸ்பா ஓரியன்டாலிஸ் மேல்தோல் பகுதியில் _____ என்ற மஞ்சள் நுண் ஒளி உணர் நிறமி காணப்படுகிறது.
விடை:
சாந்தோப்டெரின்

Question 43.
நீரின் தூண்டுதலுக்கு எற்ப தாவரப் பாகத்தில் ஏற்படும் அசைவு நீர் சார்பசைவு ____ எனப்படும்
விடை:
நீர் சார்பசைவு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 44.
ஒளியின் தூண்டலால் ஏற்படும் தாவரத்தின் திசை சாரா வளைதல் நிகழ்ச்சி ______ எனப்படும்
விடை:
ஒளியுறு வளைதல்

Question 45.
_____ தமிழில் ‘தொழு கன்னி’ என்றழைக்கப்படுகிறது
விடை:
டெஸ்மோடியம் கைரன்ஸ்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 78

III. கூற்று மற்றும் காரண வகை

பின்வருவனவற்றில் கூற்று A காரணம் R – என்னவென்று கண்டறி.

Question 1.
கூற்று A- ஒளிச்சேர்க்கை பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் நடைபெறவில்லை
R- மெக்ஸிகோ நாட்டின் பசிபிக் பெருங்கடலில் 2400 மீட்டர் ஆழமுள்ள பகுதியில் வெப்ப நீராற்றல் ஏற்படும் சிறு துளையின் அருகில் பசுங்கந்தக பாக்டீரியங்கள் வாழ்கின்றன
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:
b – A தவறானது ஆனால் R சரியானது.

Question 2.
கூற்று A- ஒளிச்சேர்க்கையினால் உருவாக்கப்படும் ஓசோன் பூமியைப் பாதுகாக்கிறது.
விளக்கம் R- பிற பல வாயுக்களோடு சேர்ந்து CFC ஓசோன் இழப்பிற்குக் காரணமாகிறது.
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:
C. A சரியானது R தவறானது

Question 3.
கூற்று A- நீராவிப் போக்கு ஒரு அவசியமான கேடு.
விளக்கம் R- நீராவிப் போக்கினால் அதிக நீர் உறிஞ்சப்பட்டு தொடர்ந்து கனிமங்களை அளிக்க இவை உதவுகிறது.
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:
d. A சரியானது R சரியானது

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
பூச்சியுண்ணும் தாவரம் என்றால் என்ன? எ.கா. தருக.
விடை:
சில தாவரங்கள் சதுப்பு நிலங்களில் வாழும். அவை நைட்ரஜன் சத்து குறைபாட்டை சரி செய்ய சிறு சிறு பூச்சிகளை (சில சமயம் தவளை போன்றவற்றை பிடித்து உணவாகக் கொள்கின்றன. இவை பூச்சியுண்ணும் தாவரம் என்று அழைக்கப்படுகிறது.
எ.கா : வீனஸ் பூச்சி பிடிப்பான் நெபந்தஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 2.
வேதிச்சார்பசைவு – என்றால் என்ன?
விடை:
வேதிப்பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புகள் வளர்தல் அல்லது அசைதல் வேதி நாட்டம் (அ) வேதிச் சார்பசைவு எனப்படுகிறது. (எ.கா) கருவுறுதல் நிகழ்ச்சியில் மகந்தரக்குழல் சூல் தண்டிலுள்ள சர்க்கரைப் பொருட்களை நோக்கி வளர்தல் ஆகும்.

Question 3.
உணவுச் சங்கிலி என்றால் என்ன?
விடை:
ஒரு உயிரினங்களின் தொடர் ஒன்றை ஒன்று உணவுக்கு சார்ந்து வாழ்வதற்கு ‘உணவுச்சங்கிலி’ என்று பெயர்.

Question 4.
ஊசியிலைக் காட்டு மரங்கள் (அ) கோனிஃபெரஸ் தாவரங்கள் முக்கியத்துவம் யாது?
விடை:
கோனிஃபெரஸ் தாவரங்கள் பிரமிடு வடிவத்தில் காணப்படுவதால், எல்லா இலைகளும் முழுமையாக சூரிய ஒளி பெறுவதால் ஒளிச்சேர்க்கையில் ஈடுபட ஏதுவாக உள்ளது.

Question 5.
தாவரங்களை ஏன் முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கிறோம்?
விடை:
தாவரங்கள் சூரிய ஆற்றலைக் கொண்டு தமக்கு வேண்டிய உணவை தயாரித்துக் கொள்கின்றன. மற்ற விலங்குகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்துள்ளதால், அவை முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுகின்றன.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
திசைசாரா அசைவுகள் விவரி.
விடை:
1. தாவரங்களில் காணப்படும் சில அசைவுகள் திசைசாரா அசைவுகள். தூண்டுதலுக்கேற்ப ஒரு திசையில் அவை நடைபெறுவதில்லை. இவை திசைசாரா (Nastic) அசைவுகளாகும்.
வகைகள்:
1. ஒளியுறு வளைதல்
சில தாவர மலர்கள் காலையில் திறந்தும், மாலையில் மூடியும் காணப்படுகிறது. (எ.கா) டான்டிலியான்

2. இருளுறு வளைதல்
சில தாவர மலர்கள் இரவில் திறந்தும், பகலில் மூடியும் காணப்படுகிறது. (எ.கா) நிலவுமலர் -(ஐபோமியா ஆல்பா )

3. நடுக்கமுறு வளைதல்
சில தாவரத்தின் இலைகள் தொட்டவுடன் மூடிக் கொள்ளுதல். (எ.கா) தொட்டாச் சிணுங்கி

4. வெப்பமுறு வளைதல்
தாவரத்தின் ஒரு பகுதி வெப்ப நிலைக்கு ஏற்ப தன் துலங்களை வெளிப்படுத்துவது. (எ.கா) டூலிப் மலர்கள்.

Question 5.
இலைத்துளையின் முக்கியப் பணிகள் யாவை?
விடை:

  • சுவாச மற்றும் ஒளிச்சேர்க்கைக்கான வாயு பரிமாற்றம் இலைத்துளை வழியாக நடைபெறுகிறது
  • ஆக்ஸிஜன் உள் எடுக்கப்பட்டு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்படும் – சுவாசமும்,
  • கார்பன்-டை-ஆக்ஸைடு உள் எடுக்கப்பட்டு, ஆக்ஸிஜன் வெளியேற்றப்படும் ஒளிச்சேர்க்கையும் இதன் வழியாகவே நடைபெறுகிறது.
  • உறிஞ்சப்பட்ட அதிகபட்ச நீரானது நீராவியாகத் தாவரங்களின் மேற்பகுதியான இலை தண்டுகள் மூலமாக வெளியேற்றப்படும். நீராவிப் போக்கு நிகழ்ச்சியும் இதன் வழியாகவே நடைபெறுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 3 நீரியல் சுழற்சி Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 3 நீரியல் சுழற்சி

8th Social Science Guide நீரியல் சுழற்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு ____________ என்று பெயர்.
அ) ஆற்றின் சுழற்சி
ஆ) நீரின் சுழற்சி
இ) பாறைச் சுழற்சி
ஈ) வாழ்க்கைச் சுழற்சி
விடை:
ஆ) நீரின் சுழற்சி

Question 2.
புவியில் உள்ள நன்னீரின் சதவிகிதம் _____________
அ) 71 %
ஆ) 97 %
இ) 2.8%
ஈ) 0.6 %
விடை:
இ) 2.8%

Question 3.
நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு ____________ என்று பெயர்.
அ) ஆவி சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) பதங்கமாதல்
ஈ) மழை
விடை:
ஈ) மழை

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

Question 4.
நீர் மண்ணின் இரண்டாவது அடுக்கிலிருந்து அல்லது புவியின் மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும், ஓடைகளிலும், ஏரிகளிலும், பெருங்கடலுக்குச் செல்லும் முறைக்கு ______________
அ) ஆவி சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
ஈ) நீர் வழிந்தோடல்
விடை:
ஈ) நீர் வழிந்தோடல்

Question 5.
நீர் தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு __________ என்று அழைக்கின்றனர்.
அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்
ஆ) நீர் சுருங்குதல்
இ) நீராவி சுருங்குதல்
ஈ) பொழிவு
விடை:
அ) நீர் உட்கசிந்து வெளியிடுதல்

Question 6.
குடிப்பதற்கு உகந்த நீரை ____________ என்று அழைப்பர்.
அ) நிலத்தடி நீர்
ஆ) மேற்பரப்பு நீர்
இ) நன்னீர்
ஈ) ஆர்ட்டீ சியன் நீர்
விடை:
இ) நன்னீர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவு __________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
ஈரப்பதம்

Question 2.
நீர்ச் சுழற்சியில் ____________ நிலைகள் உள்ளன.
விடை:
மூன்று

Question 3.
வளிமண்டலத்திலிருந்து புவியை நோக்கி விழும் எல்லா வகையான நீருக்கும் ____________ என்று பெயர்.
விடை:
மழைப்பொழிவு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

Question 4.
மழைத்துளியின் அளவு 0.5 மீ குறைவாக இருந்தால், அம்மழை பொழிவின் பெயர் ___________
விடை:
தூறல்

Question 5.
மூடுபனி __________ ஐ விட அதிக அடர்த்தி கொண்டது.
விடை:
அடர் மூடுபனி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி 1

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
நீராவியாதல் என்பது
i) நீராவி நீராக மாறும் செயலாக்கம்.
ii) நீர் நீராவியாக மாறும் செயலாக்கம்.
iii) நீர் 100°C வெப்பநிலையில் கொதிக்கிறது. ஆனால் 0°C வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.
iv) ஆவியாதல் மேகங்கள் உருவாக காரணமாக அமைகிறது.

அ) i, iv சரி
ஆ) ii சரி
இ) ii, iii சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
இ) ii, iii சரி

V. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
212°F வெப்பநிலையில் நீர் கொதிக்கிறது. ஆனால் 32°F வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது.
விடை:
சரி

Question 2.
மூடுபனி எனப்படுவது காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகளைப் பெற்றிருப்பதில்லை.
விடை:
தவறு

Question 3.
அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் பொதுவாக இடைநீர் ஓட்டம் எனக் குறிப்பிடப்படுகிறது.
விடை:
சரி

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
நீர் கொள் பரப்பு பற்றி குறிப்பு வரைக
விடை:

  • நீர் கொள் பாறையானது நிலத்திற்கு அடியில் உள்ள நீர் புகக்கூடிய மேலும் நீரை தக்க வைத்துக் கொள்ள கூடிய ஒன்றாகும்.
  • இது பாறையின் பிளவுகளாக காணப்படுவதோடு, நிலத்தடி நீரைப் புதுப்பித்துக் கொள்ளவும் உதவுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

Question 2.
நீர் சுழற்சி – வரையறு
விடை:

  • நீரியல் சுழற்சி சூரிய உந்துதல் செயலாக்கத்தால் நடைபெறும் உலகளாவிய நிகழ்வாகும்.
  • நீர் கடலில் இருந்து ஆவியாதல் மூலம் வளி மண்டத்திற்குச் சென்று, பின் அங்கிருந்து மழைப் பொழிவாக நிலத்திற்கும், நிலத்திலிருந்து நீராக கடலுக்கும் சென்றடைவதே நீர் சுழற்சி ஆகும்.
  • புவித் தொடர்புடைய இயக்கங்களில் நீர்ச்சுழற்சி மிக முக்கியமானதாகும்.

Question 3.
பனி உருவாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது?
விடை:

  • நீர்த்துளிகள் புவியின் மேற்பரப்பில் குளிர்ந்த பொருள்களின் மீது படும்பொழுது பனி உருவாகிறது.
  • பொருட்களின் வெப்பநிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக் குறைவாக இருக்கும் பொழுது பனி உருவாகிறது.

Question 4.
‘மேல் மட்ட நீர் வழிந்தோடல்’ குறிப்பு வரைக.
விடை:

  • மழைப்பொழிந்தவுடன் மழை நீரின் ஒரு பகுதி நீரோடையோடு கலந்து விடுகிறது.
  • இது மழைப்பொழிவு அதிகமாகவும் நீண்ட காலத்திற்கும் ஊடுருவலை விட அதிகமாக இருக்கும் பொழுதும் ஏற்படுகிறது. இந்நிலையில் அதிக நீரானது நிலப்பரப்பில் செரிவடைகிறது.
  • மேலும் நிலச்சரிவின் காரணமாக மற்றொரு இடத்திற்கு நகர்வதால் நிலநீர் ஓட்டம் எனவும் அறியப்படுகிறது.
  • இந்த நிலநீர் ஒட்டம் ஆறுகள், சிறு ஓடைகள் மற்றும் கடல்களில் இணைவதால் மேல்மட்ட நீர் வழிந்தோடல் என அழைக்கப்படுகிறது.

VII. காரணம் கூறுக

Question 1.
நீர் புகாத இடங்களில் நீரின் ஊடுருவல் குறைவாக உள்ளது
விடை:
நீர் புகாத இடங்களில் நீரின் ஊடுருவல் குறைவாகவே இருக்கும். ஏனெனில் நீர் புகாத இடங்களில் மண்ணடுக்கு மற்றும் நீர் புகா பாறை அடுக்குகள் வாயிலாக நீர் உட்கசிந்து கீழ் நோக்கி சரிவர செல்ல இயலாது. ஆதலால் நீரின் ஊடுருவலும் குறைவாகவே இருக்கும்.

Question 2.
புவியில் நன்னீர் குறைவாக உள்ளது
விடை:
புவியின் மேற்பரப்பில் பெரும்பாலான பகுதிகள் உவர்ப்பு நீராலான பேராழிகளும், கடல்களுமே உள்ளன. புவியின் மொத்த நீரில் 97.2 சதவீதம் உவர்ப்பு நீர் காணப்படுவதால் நன்னீரின் அளவு குறைவாகவே உள்ளது.

Question 3.
துருவப்பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும் பனிப்பொழிவு பொதுவான நிகழ்வாக உள்ளது.
விடை:
துருவப்பகுதிகளிலும், உயரமான மலைப் பகுதிகளிலும் வெப்பம் குறைந்து காணப்படும். இப்பகுதிகளில் மேகத்திலுள்ள வெப்பம் குறைவதின் காரணமாக நீராவிகளும் அடிக்கடி நேரடியாக பனிக்கட்டியாக மாறுகிறது. மேலும் இவை பனியின் நுண் துகள்களைத் திரளாகக் கொண்டு பனிப்பொழிவாக பெய்கிறது.

VIII. விரிவான விடையளி

Question 1.
நீர்ச் சுழற்சியின் பல்வேறு படிநிலைகளைப் படத்துடன் விவரி
விடை:
நீர்மயியல் சுழற்சி என்பது இயற்கையாக மற்றும் தொடர்ச்சியான நீர்ச்சுழற்சியாகும். நீர்மயியல் சுழற்சி மூன்று முக்கிய நிலைகளில் நடைபெறுகிறது. அவை

  • ஆவியீர்ப்பு
  • பொழிவு
  • நீர்வழிந்தோடல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

ஆவியீர்ப்பு:
ஆவியீர்ப்பு என்பது புவியின் மேற்பரப்பு நீர் நிலைகளில் இருந்து ஆவியாதல் வழியாகவும் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் உட்கசிந்து வெளியிடுதல் மூலமாகவும் நிகழும் புவியின் மொத்த நீர் இழப்பாகும்.

விளை நிலப்பகுதிகளில் ஆவியாதல் மற்றும் நீர் உட்கசிந்து வெளியிடுதலைத் தனித்தனியாகக் கணிப்பது கடினம். எனவே இங்கு அனைத்து நிகழ்வுகளும் ஆவியீர்ப்பு என அழைக்கப்படுகிறது.

பொழிவு:

  • மழைப்பொழிவு என்பது மேகங்களிலிருந்து பல்வேறு வடிவங்களில் நீராக புவியின் மேற்பரப்பை வந்தடையும் நிகழ்வு ஆகும்.
  • பனிப்படிகங்கள் மற்றும் மேகத்துளிகள் ஒன்று கூடிப் பெரியதாகும் பொழுது அவை கனமாவதால் வளிமண்டலத்தின் வழியாக மழையாக வீழ்கிறது.
  • பொழிவின் வகைகளை மழை, கல்மழை, உறைபனி மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பனி என வகைப்படுத்தலாம்.

நீர் வழிந்தோடல் :

  • நீர் வழிந்தோடல் என்பது ஓடும் நீர், ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் செல்வதாகும். நீர் வழிந்தோடலால் மேற்பரப்பு நீரும், நிலத்தடி நீரும் புதுப்பிக்கப்படுகின்றன.
  • நீர் ஊடுருவல் மூ லம் நிலத்தடியில் ஊடுருவி நீர்கொள் பாறை அடுக்குகளில் சேமித்து நிலத்தடி நீரைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது.
  • நீர் வழிந்தோடலின் அளவானது மழை வீழ்ச்சியின் அளவு, மண்ணின் நீர் புகும் தன்மை, தாவரமூட்டம் மற்றும் நிலச்சரிவைச் சார்ந்து உள்ளது.
  • நீர் வழிந்தோடல் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    1. மேல்மட்ட மழைநீர் வழிந்தோடல்
    2. அடிப்பரப்பு நீர் வழிந்தோடல்
    3. அடி மட்ட நீர் ஒட்டம்

Question 2.
தாவரங்களின் நீர் உட்கசிந்து வெளியேறுதலுக்கும், ஆவியாதலுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறுக
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி 2
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி 3

Question 3.
மழைப்பொழிவின் பல வகைகளை விவரி
விடை:

  • மழைப்பொழிவு என்பது மேகங்களிலிருந்து பல்வேறு வடிவங்களில் நீராக புவியின் மேற்பரப்பை வந்தடையும் நிகழ்வு ஆகும்.
  • பொழிவின் வடிவம் ஓரிடத்தில் நிலவும் வானிலை அல்லது காலநிலையைச் சார்ந்தே அமைகிறது.
  • பொழிவின் வகைகளை மழை, கல்மழை, உறைபனி மழை, ஆலங்கட்டி மழை மற்றும் பனி என வகைப்படுத்தலாம்.

மழை:

  • பொழிவின் பொதுவான வடிவம் மழைப்பொழிவு. இம்மழைப்பொழிவு நீர்த்துளிகளின் வடிவத்தில் உள்ளதால் மழை எனப்படுகிறது.
  • நீர்த்துளிகள் 0.5 மி.மீ விட்டத்திற்கு அதிகமாக இருந்தால் மழைப்பொழிவு எனவும் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருப்பதால் அதை தூறல் எனவும் அழைக்கப்படுகிறது.

கல்மழை:
நீர்த்துளிகளும் 5 மி.மீ விட்டத்திற்கு மேல் உள்ள பனித்துளிகளும் கலந்து காணப்படும் பொழிவிற்கு கல்மழை என்று பெயர்.

உறைபனி மழை:
மழைத்துளிகள், சில நேரங்களில் புவிப்பரப்பிற்கு அருகாமையில் குளிர்ந்த காற்று வழியாக விழும்பொழுது உறைவதில்லை. மாறாக குளிர்ந்த புவிப்பரப்பைத் தொடும் பொழுது அம்மழைத்துளிகள் உறைந்து விடுகின்றன. இவையே உறைபனி எனப்படுகிறது. இம் மழைத்துளியின் விட்டத்தின் அளவு 0.5 மி.மீ விட அதிகமாக இருக்கும்.

ஆலங்கட்டி மழை:
மழைப் பொழிவானது 5 மி.மீ விட்டத்தை விட பெரிய உருண்டையான பனிக்கட்டிகளைக் கொண்டிருந்தால் ஆலங்கட்டி மழை என்று பெயர். இது கார் திரள் மேகங்களிலிருந்து இடியுடன் கூடிய மழையாக உருவாகிறது.

பனி:
மேகத்திலுள்ள வெப்பம் குறைவதின் காரணமாக நீராவி அடிக்கடி நேரடியாக பனிக்கட்டிகளாக மாற்றப்படுகிறது. இது துகள் போன்று பனியின் நுண்துகள்களைத் திரளாகக் கொண்டு காணப்படுகிறது. இந்தப் பனித்திரள்துகள்கள் பொழிவதைப் பனிப்பொழிவு என அழைக்கிறோம்.

Question 4.
நீர் வழிந்தோடல் மற்றும் அதன் வகைகளை விவரி.
விடை:

  • நீர் வழிந்தோடல் என்பது ஒடும் நீர், ஈர்ப்பு விசையினால் இழுக்கப்பட்டு நிலப்பகுதியின் மேற்பரப்பு முழுவதும் செல்வதாகும்.
  • நீர் வழிந்தோடலால் மேற்பரப்பு நீரும், நிலத்தடி நீரும் புதுப்பிக்கப்படுகின்றன. நீர் ஊடுருவல் மூ லம் நிலத்தடியில் ஊடுருவி நீர் கொள் பாறை அடுக்குகளில் சேமித்து நிலத்தடி நீரைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது.
  • நீர் வழிந்தோடலின் அளவானது மழைவீழ்ச்சியின் அளவு, மண்ணின் நீர் புகும் தன்மை, தாவரமூட்டம் மற்றம் நிலச்சரிவைச் சார்ந்து உள்ளது.
  • மழைப்பொழிவின் கால இடைவெளி மற்றும் நீர் வழிந்தோடல் உருவாக்கத்தின் அடிப்படையில் நீர் வழிந்தோடல் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. i) மேல்மட்ட மழைநீர் வழிந்தோடல் ii) அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் iii) அடி மட்ட நீர் ஒட்டம்

மேல்மட்ட மழைநீர் வழிந்தோடல்:
மழைப் பொழிந்தவுடன் மழை நீரின் ஒரு பகுதி நீரோடையோடு கலந்து விடுகிறது.

இது மழைப்பொழிவு அதிகமாகவும் நீண்ட காலத்திற்கும் ஊடுருவலை விட அதிகமாக இருக்கும் பொழுதும் ஏற்படுகிறது. இந்நிலையில் அதிக நீரானது நிலப்பரப்பில் செரிவடைவதோடு அது நிலச்சரிவின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதால் நிலநீர் ஓட்டம் எனவும் அறியப்படுகிறது.

இந்த நிலநீர் ஓட்டம் ஆறுகள், சிறு ஓடைகள் மற்றும் கடல்களில் இணைவதால் இது மேல்மட்ட நீர் வழிந்தோடல் என அழைக்கப்படுகிறது.

அடிபரப்பு நீர் வழிந்தோடல்:

  • நீரானது அடிமண் அடுக்கினுள் நுழைந்து நிலத்தடி நீரில் கலக்காமல் பக்கவாட்டு திசையில் நகர்ந்து ஓடைகள், ஆறுகள் மற்றும் கடலுடன் கலப்பதால் இதற்கு அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் என்று பெயர்.
  • மேலும் இது இடைநீர் ஓட்டம் எனவும் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது.

அடிமட்ட நீர் ஓட்டம்:

  • செறிவடைந்த நிலத்தடி நீர் மண்டலத்திலிருந்து நீர் பாதை வழியாக நிலத்தடி நீராக ஓடுவதே அடிமட்ட நீர் ஓட்டமாகும்.
  • நிலத்தடி நீர் மட்டத்தை விட நீர் பாதையின் உயரம் குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே இது காணப்படும்.

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
படத்தில் உள்ள விடுபட்ட நீரின் சுழற்சிகளைக் கண்டுபிடித்து அதற்குரிய இடத்தில் எழுதவும்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி 4

8th Social Science Guide நீரியல் சுழற்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
புவியில் உள்ள நன்னீரில் நிலத்தடி நீரின் அளவு
அ) 0.6%
ஆ) 0.1%
இ) 0.04%
ஈ) 2.2%
விடை:
அ) 0.6%

Question 2.
____________ ஆவியாதலின் எதிர்வினைச் செயலாகும்
அ) நீர் உட்கசிதல்
ஆ) நீர் சுருங்குதல்
இ) நீர் ஊடுருவல்
ஈ) நீர் வழிந்தோடல்
விடை:
ஆ) நீர் சுருங்குதல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

Question 3.
பொருட்களின் வெப்பநிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக் குறைவாக இருக்கும் பொழுது ____________ உருவாகிறது
அ) உறைபனி
ஆ) மூடுபனி
இ) அடர்மூடுபனி
ஈ) பனி
விடை:
ஈ) பனி

Question 4.
மழைத்துளியின் விட்டமானது 0.5 மி.மீ அளவினை விட… அதிகமாக இருப்பின், அதனை ____________ மழை என்கிறோம்
அ) உறை பனி
ஆ) கல் மழை
இ) ஆலங்கட்டி மழை
ஈ) பனி மழை
விடை:
அ) உறை பனி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஈரப்பதம் குறையும் பொழுது ஆவியாதல் விகிதம் ___________
விடை:
அதிகரிக்கும்

Question 2.
_____________ மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கிடைக்கச் செய்கிறது.
விடை:
நீர் ஊடுருவல்

Question 3.
துருவப்பகுதிகளிலும், உயர்வான மலைப்பகுதிகளிலும் __________ காணப்படுகிறது.
விடை:
பனிப் பொழிவு

Question 4.
மழைநீரில் ____________ சதவீதம் மட்டுமே கடல் மற்றும் பேராழிகளில் கலக்கிறது.
விடை:
35

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி 5

IV. சரியா கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
மழைப்பொழிவும், அதன் பல வகை வடிவ விபரங்களும்.
i) பொழிவு வானிலை அல்லது காலநிலையைச் சார்ந்திருக்கும்
ii) பனிக்கட்டிகளும், நீர்த்துளிகளும் சேர்ந்து ஆலங்கட்டி மழை உருவாகிறது
iii) மழைத்தூறல் கார்திரள் மேகங்களிலிருந்து உருவாகிறது
iv) ஆலங்கட்டி மழை பெரிய உருண்டையான பனிக்கட்டிகளை கொண்டிருக்கும்

அ) i, iii சரி
ஆ) ii சரி
இ) i, iv சரி
ஈ) ii, iv சரி
விடை:
இ) i, iv சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

V. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
மொத்த நன்னீரில் 0.01 சதவீதம் ஏரிகளாக உள்ளன.
விடை:
சரி

Question 2.
காற்றின் வேகம் அதிகரிக்கும் பொழுது ஆவியாதல் விகிதம் குறையும்.
விடை:
தவறு

Question 3.
நீரின் ஊடுருவல் மண்ணின் மேற்பரப்பின் அருகில் நடைபெறுகிறது.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
நீரியல் சுழற்சியின் முக்கிய கூறுகள் யாவை?
விடை:

  • நீரியல் சுழற்சியில் ஆறு முக்கிய கூறுகள் காணப்படுகின்றன.
  • ஆவியீர்ப்பு, திரவமாய் சுருங்குதல், பொழிவு, நீர் ஊடுருவல், உட்கசிதல், நீர் வழிந்தோடல் போன்றவை அதன் கூறுகளாகும்.

Question 2.
நீர் ஊடுருவல் என்றால் என்ன?
விடை:

  • புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர்ப் புகுவதை நீர் ஊடுருவல் என்பர்.
  • நீர் ஊடுருவல் மூலம் மண் தற்காலிமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் கிடைக்க செய்கிறது.

Question 3.
நீர் சுருங்குதல் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • நீராவி, நீராக மாறும் செயல்முறையை நீர் சுருங்குதல் என்று அழைப்பர்.
  • வளி மண்டலத்தில் வெப்பக்காற்று மேலே எழுந்து, குளிர்வடைந்து நீராவியைத் தக்க வைத்து கொள்ளும் திறனை இழக்கும் பொழுது, நீர் சுருங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது.

Question 4.
கல் மழை எவ்வாறு உருவாகிறது?
விடை:

  • சில நேரங்களில் வளி மண்டல வெப்பநிலை 0°C க்கும் குறைவாக இருக்கும் அடுக்குகளில் மழைத்துளி விழும்பொழுது நீர் உறைநிலைக்குச் சென்று விடுகிறது.
  • அது புவியை நோக்கி வரும் பொழுது பனிக்கட்டிகளாக மாறுகிறது.
  • ஆதலால் பனிக்கட்டிகளும், நீர்த்துளிகளும் இணைந்து புவியின் மீது கல்மழையாக பொழிகிறது.

VII. காரணம் கூறுக

Question 1.
நீர் சுருங்குதல் ஆவியாதலின் எதிர்வினைச் செயலாகும்
விடை:
நீர் சுருங்குதலில் நீராவி நீராக மாறுகிறது. ஆனால் ஆவியாதலில் நீர் நீராவியாக மாறுகிறது. எனவே நீர் சுருங்குதல் ஆவியாதலின் எதிர்வினைச் செயலாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி

Question 2.
நீர் சுருங்குவதால் மேகங்கள் உருவாகி மழை பொழிகிறது
விடை:
வளி மண்டலத்தில் வெப்பக்காற்று மேலே எழுந்து, குளிர்வடைந்து நீராவியைத் தக்க வைத்து கொள்ளும் திறனை இழக்கும் பொழுது, நீர் சுருங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது. மிகுதியான நீராவி நீர் சுருங்குதலால் மேகத்துளிகளாக மாறி மேகங்களாகவும் உருவாகிறது. இம்மேகங்களே மழைப் பொழிவை உருவாக்குகிறது.

VIII. விரிவான விடையளி

Question 1.
நீர் ஊடுருவல் மற்றும் நீர் உட்கசிதலை விவரி?
விடை:
நீர் ஊடுருவல்:
புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடுக்கிற்குள் நீர் புகுவதற்கு நீர் ஊடுருவல் என்று பெயர்.

நீர் ஊடுருவல் மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரைச் சேமித்து மண்ணில் உள்ள உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் கிடைக்கச் செய்கிறது.

மழை நீர் நிலத்திலிருந்து புவிக்கு அடியில் உள்ள பாறைகளின் அடுக்குகளைச் சென்றடைகிறது. இவ்வாறு செல்லும் நீரானது நீரூற்று மற்றும் மலைகளின் தாழ்வான பகுதிகளின் வழியாக புவியின் மேற்பரப்பை வந்தடைகிறது.

ஊடுருவலின் விகிதத்தை மண்ணின் இயற்பியல் தன்மை,மேற்பரப்பில் உள்ள தாவரங்கள், மண்ணின் ஈரத்தன்மை, வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவின் அளவு ஆகியவைத் தீர்மானிக்கின்றன.

நீர் உட்கசிதல் மற்றும் நீர் ஊடுருவல் ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

நீர் உட்கசிதல்:
நீர் உட்கசிவு என்பது மண்ணடுக்கு மற்றும் பாறை அடுக்குகளின் வாயிலாக ஊடுருவிய நீர் கீழ்நோக்கி நிலத்திற்கு அடியில் செல்வதாகும்.

நீர் உட்கசிவு என்பது ஊடுருவிய நீர் மண்ணின் அடுக்கு வழியாக பாறை இடுக்குகளுக்குச் சென்று நிலத்தடி நீராகிறது. பொதுவாக – நீர் உட்கசிதல் என்பது செறிவூட்டப்பட்ட பகுதியிலிருந்து செறிவூட்டப்படாத பகுதிக்குச் செல்லும் நீரோட்டம் ஆகும்.

IX. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 3 நீரியல் சுழற்சி 6

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

8th Social Science Guide வானிலை மற்றும் காலநிலை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புவியின் வளிமண்டலம் ___________ நைட்ரஜன் மற்றும் ___________ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.
அ) 78% மற்றும் 21%
ஆ) 22% மற்றும் 1%
இ) 21% மற்றும் 0.97%
ஈ) 10% மற்றும் 20%
விடை:
அ) 78% மற்றும் 21%

Question 2.
__________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
அ) புவி
ஆ) வளிமண்டலம்
இ) காலநிலை
ஈ) சூரியன்
விடை:
இ) காலநிலை

Question 3.
புவி பெறும் ஆற்றல் ____________
அ) நீரோட்டம்
ஆ) மின்காந்த அலைகள்
இ) அலைகள்
ஈ) வெப்பம்
விடை:
ஈ) வெப்பம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Question 4.
கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.
அ) சமவெப்பக்கோடு
ஆ) சம சூரிய வெளிச்சக் கோடு
இ) சம காற்றழுத்தக் கோடு
ஈ) சம மழையளவுக் கோடு
விடை:
ஈ) சம மழையளவுக் கோடு

Question 5.
______________ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.
அ) காற்றுமானி
ஆ) அழுத்த மானி
இ) ஈரநிலை மானி
ஈ) வெப்ப மானி
விடை:
இ) ஈரநிலை மானி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
__________ என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.
விடை:
வானிலை

Question 2.
வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு ___________
விடை:
வளியியல்

Question 3.
புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் ______________
விடை:
கிரீன்லாந்து மலைத் தொடர் (மரணப் பள்ளத்தாக்கு)

Question 4.
காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் ___________
விடை:
ஒப்பு ஈரப்பதம்

Question 5.
அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _________ மற்றும் __________ ஆகியவை அளக்கப்படுகின்றன.
விடை:
காற்றின் வேகம், காற்றின் திசை

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Question 6.
சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு __________
விடை:
சம வெப்பக் கோடு

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் ஆன கலவையாகும்.
விடை:
சரி

Question 2.
வானிலை பற்றிய அறிவியல் பிரிவிற்கு காலநிலை என்று பெயர்.
விடை:
தவறு

Question 3.
சமமான சூரிய வெளிச்சம் உள்ள பகுதிகளை இணைக்கும் கோட்டிற்கு சம சூரிய வெளிச்சக் கோடு என்று பெயர்.
விடை:
சா

Question 4.
ஈரப்பதத்தை கணக்கிடும் கருவி அரனிராய்டு அழுத்தமானி .
விடை:
தவறு

V. சுருக்கமாக விடையளி

Question 1.
காலநிலை – வரையறு.
விடை:

  • காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும்
  • இது வளி மண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டு கூறுவதாகும்.

Question 2.
“வெயிற் காய்வு” என்றால் என்ன?
விடை:
ஒரு இடத்தில் கிடைக்கும் சூரியக் கதிர் வீச்சின் அளவு ‘வெயிற் காய்வு’ எனப்படும்.

Question 3.
“வளிமண்டலக் காற்றழுத்தம்” என்றால் என்ன?
விடை:
புவியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள காற்றின் எடையே வளிமண்டலக் காற்றழுத்தம் எனப்படும்.

Question 4.
சிறு குறிப்பு வரைக: கோள் காற்று / நிரந்தரக் காற்று
விடை:

  • ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் அல்லது நிலையான காற்று என்று அழைப்பர்.
  •  எ.கா. வியாபாரக்காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Question 5.
சம அளவுக் கோடுகள் – “ஐசோலைன்ஸ்’ என்றால் என்ன?
விடை:

  • நில வரைபடங்களில் வானிலைக் கூறுகளின் பரவலைச் சம அளவுக்கோட்டு வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகிறது.
  • சம அளவுக்கோடு என்பது சம அளவுள்ள இடங்களை இணைப்பதாகும்.
  • இக்கோடுகள் வானிலைக் கூறுகளின் அடிப்படையைக் கொண்டு அளவுக்கோடுகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

VI. வேறுபடுத்துக

Question 1.
காலநிலை மற்றும் வானிலை காலநிலை
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 2

Question 2.
முழுமையான ஈரப்பதம் மற்றும் ஒப்பு ஈரப்பதம்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 3

Question 3.
கோள் காற்று மற்றும் பருவகாலக் காற்றுகள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 4

VII. காரணம் கூறுக

Question 1.
காலநிலையும் வானிலையும் வெவ்வேறு இடங்களில் மாறுபடுகின்றன.
விடை:
புவி கோள வடிவமானது. ஆதலால் புவியின் மேற்பரப்பில் சூரியக்கதிர்கள் ஒரே சீராக விழுவதில்லை . புவியின் துருவப் பகுதிகள் சூரியனுடைய சாய்வான கதிர்களை பெறுகின்றன. அதனால் அங்கு சூரிய வெளிச்சம் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதால் அங்கு மிகக் கடும் குளிர் நிலவுகிறது. பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள்செங்குத்தாக விழுவதால் அங்கு காலநிலையானது மிகவும் வெப்பமுடையதாகவும், குளிர்காலமே இல்லாததாகவும் உள்ளது. எனவே காலநிலையும், வானிலையும் வெவ்வேறு இடங்களில் மாறுபடுகின்றன.

Question 2.
உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.
விடை:
ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கு 1°C வெப்பநிலை குறையும், உயரே செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் குறைவதால் தட்ப வெப்பநிலையும் குறையும். எனவே உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.

Question 3.
மலை ஏறுபவர்கள் உயர்ந்த சிகரங்களுக்குச் செல்லும்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்கின்றனர்.
விடை:
மிக உயரமான இடங்களில் காற்றில் ஆக்ஸிஜன் அளவும் காற்றின் அழுத்தமும் குறைவதால், மலையேறுபவர்கள் ஆக்ஸிஜனை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர். ஏனெனில் அழுத்தம் அதிகமான இடங்களிலிருந்து அழுத்தம் குறைவான இடங்களுக்குச் செல்லும் பொழுது மூச்சுத்திணறல் ஏற்படும்.

VIII. விரிவான விடையளி

Question 1.
வெப்பநிலை எவ்வாறு அளவிடப்படுகிறது?
விடை:

  • வெப்பநிலை என்பது ஒரு குறிப்பிட்ட கன அளவு காற்றில் குறிப்பிட்ட நேரத்தில் அளவிடப்படுகிறது.
  • இது செல்சியஸ், பாரன்ஹீட் மற்றும் கெல்வின் அளவுகளால் அளவிடப்படுவதாகும்.
  • வானிலை ஆய்வாளர்கள் வெப்பநிலையை அளக்க வெப்பமானி, ஸ்டீவன்சன் திரை வெப்பமானி மற்றும் குறைந்த பட்ச அதிகபட்ச வெப்பமானி மூலமும் கணக்கிடுகிறார்கள்.
  • சூரிய கதிர்களிலிருந்து புவி பெறுகின்ற வெப்ப ஆற்றலானது வெளியேறுகின்ற புவி கதிர்வீசலால் இழக்கப்படுகிறது.
  • வளிமண்டலம் புவி கதிர்வீசலால் வெளியேற்றும் வெப்பத்தால் பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் அதிக வெப்பமடைகிறது.
  • ஆகையால் நாள்தோறும் அதிகபட்ச வெப்பநிலை பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் பதிவாகிறது.
  • குறைந்த பட்ச வெப்பநிலை அதிகாலை 4.00 மணி முதல் சூரிய உதயத்திற்கு முன் பதிவாகிறது.

Question 2.
காற்றையும், அதன் வகைகளைப் பற்றியும் விவரி.
விடை:

  • கிடைமட்டமாக நகரும் வாயுவிற்கு காற்று என்று பெயர். செங்குத்தாக நகரும் வாயுவிற்கு காற்றோட்டம் என்று பெயர்.
  • காற்று எப்பொழுதும் உயர் அழுத்தப்பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்த பகுதியை நோக்கி வீசும்.
  • காற்றின் அமைப்புகள் மூன்று பெரும் வகைகளாகப்
  • பிரிக்கப்பட்டுள்ளன. அவை
    1. கோள் காற்றுகள் (அ) நிரந்தர காற்றுகள்
    2. பருவக்காலக் காற்றுகள் மற்றும்
    3. தலக் காற்றுகள் (அ) பிரதேசக் காற்றுகள்

1. கோள் காற்றுகள்:
ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்றுகள் (அ) நிலையான காற்று என்று அழைப்பர். எ.கா. வியாபாரக்காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று

2. பருவக்காலக் காற்றுகள்:
பருவத்திற்கு ஏற்றவாறு அதன் திசையை மாற்றி வீசும். இக்காற்றுகள் கோடைக்காலத்தில் கடலிலிருந்து நிலத்தை நோக்கியும், குளிர்காலத்தில் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும்.

3. தலக் காற்றுகள் (அ) பிரதேசக் காற்றுகள்:
ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும். எ.கா. நிலக்காற்று, கடல் காற்று

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Question 3.
வானிலைக் கூறுகளையும் அதை அளக்க உதவும் கருவிகளையும் பட்டியலிடுக. உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் ஏதேனும் 3 ஆலோசனைகளை அளிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 5
உலக வெப்பமயமாதலைக் குறைக்கும் ஏதேனும் 3 ஆலோசனைகளை அளிக்கவும்.

  • புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுதல். (எ.கா. நிலக்கரி போன்ற எரிபொருட்கள்)
  • மரங்களை பாதுகாத்தல் மற்றும் வளர்த்தல்
  • மக்கிப்போகாத நெகிழி போன்ற பொருட்களின் கண்மூடித்தமான உபயோகத்தை தவிர்த்தல்

X. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

Question 1.
மழைமானி மற்றும் காற்று திசை காட்டி கருவிகளின் மாதிரிகளை உருவாக்குக.

Question 2.
சிறிய அளவிலான மாதிரி வானிலை மையத்தை உன் பள்ளியில் உருவாக்கு.

Question 3.
தினமும் வானிலை அறிக்கையை படித்து அல்லது தொலைக்காட்சியின் மூலம் அறிந்து கீழே உள்ள கட்டங்களில் நிரப்பு.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 6
தகவல் ஆதாரம்:

8th Social Science Guide வானிலை மற்றும் காலநிலை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
காலநிலையின் அறிவியல் பிரிவு ____________
அ) வளியியல்
ஆ) காலநிலையியல்
இ) உயிரியியல்
ஈ) பறவையியல்
விடை:
ஆ) காலநிலையியல்

Question 2.
கிளைமோ என்றால் தமிழில் ______________ என்று பொருள்
அ) சாய்வுக்கோணம்
ஆ) வெப்பம்
இ) கதிர்வீச்சு
ஈ) கடத்தல்
விடை:
அ) சாய்வுக்கோணம்

Question 3.
உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்டவர் __________
அ) அல்-பலாஹி
ஆ) அலாவுதீன்
இ) அல்புக்கக்
ஈ) ஆலன்
விடை:
அ) அல்-பலாஹி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
புவியில் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ள இடம் _____________
விடை:
சோவியத் வோஸ்டக்

Question 2.
உலகில் இதுவரை பதிவான மிக அதிக பட்ச காற்றழுத்தம் பதிவாகியுள்ள இடம் ____________
விடை:
அகாட், ரஷ்யா, டிசம்பர் 31, 1968

Question 3.
உலகில் இதுவரை பதிவான மிக குறைந்த பட்ச காற்றழுத்தம் பதிவாகியுள்ள இடம் பசுபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவிற்கு அருகிலுள்ள __________ என்ற கடல் பகுதியில் உருவான டையூனின் கண் பகுதியாகும்.
விடை:
குவாம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Question 4.
கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்றழுத்தத்தின் அளவு __________ ஆகும்
விடை:
1013.25 மில்லியன்

Question 5.
பூமியில் உள்ள எல்லா பகுதிகளிலும் காற்றழுத்தத்தின் அளவு __________ ஆகும்
விடை:
1.03 கிலோ / ச.செ.மீ

Question 6.
சம அளவுள்ள வெப்ப நிலைமை இணைக்கும் கற்பனைக் கோடு ____________
விடை:
சம வெப்பக் கோடு

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 7

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
ஐசோபார் – சம மழையளவுக்கோடு
விடை:
தவறு

Question 2.
ஐசோஹைட்ஸ் – சம மழையளவுக்கோடு
விடை:
சரி

Question 3.
ஐசோதெர்ம் – சமவெப்பக்கோடு
விடை:
சரி

Question 4.
ஐசோகெல் – சமசூரிய வெளிச்சக்கோடு
விடை:
சரி

Question 5.
ஐசோக்ரைம் – சம காற்றழுத்த மாறுபாட்டுக்கோடு
விடை:
தவறு

V. குறுகிய விடையளி

Question 1.
வெப்ப குறைவு வீதம் வரையறு.
விடை:
வெப்பநிலை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் வேறுபடுகிறது. வெப்பம் மாறும் மண்டலத்தில், வெப்பநிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு 6.5°C என்ற அளவில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது. இதனை வெப்ப குறைவு வீதம் என்றழைப்பர்.

Question 2.
புவியின் வெப்பமண்டல பகுதிகள் யாவை?
விடை:

  • வெப்பமண்டலம்
  • மித வெப்பமண்டலம்
  • குளிர் மண்டலம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை

Question 3.
சுய ஈரப்பதம் என்றால் என்ன?
விடை:
ஒரு குறிப்பிட்ட எடைக்கொண்ட காற்றிலுள்ள நீராவியின் எடை ஈரப்பதம் எனப்படும். பொதுவாக கிராம் நீராவி /கிலோகிராம் காற்று எனக் குறித்துக் காட்டப்படுகிறது.

VI. வேறுபடுத்துக

Question 1.
காற்று திசைக்காட்டி மற்றும் அனிமாமீட்டர்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 8

Question 2.
வெப்பமண்டலம் மற்றும் மித வெப்பமண்டலம்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 9

VII. காரணம் கூறுக

Question 1.
குளிர் மண்டலம் துருவ மண்டலம் என்றழைக்கப்படுகிறது.
விடை:

  • உறைப்பனி மண்டலம் ஆர்ட்டிக் வட்டத்திற்கும், வட துருவப்பகுதிக்கு இடையேயும், அண்டார்டிக் வட்டத்திற்கும் தென்துருவப்பகுதிக்கு இடையேயும் அமைந்துள்ளன.
  • இங்கு ஆண்டு முழுவதும் குறைந்த வெப்பத்தைப் பெறுவதால் இப்பிரதேசம் பனியால் சூழப்பட்டுள்ளது.
  • இப்பகுதி துருவ மண்டலம் என்றழைக்கப்படுகிறது.

VIII. விரிவான விடையளி

Question 1.
குறைந்த மற்றும் அதிகபட்ச ஈரப்பதத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்.
விடை:
குறைந்த ஈரப்பதம்:

  • கண் எரிச்சல், தோல் சம்பந்தமான வியாதிகள், சளித்தொல்லைகள், தொண்டை எரிச்சல் ஆகியவை குளிர்காலத்தில் குறைந்த ஈரப்பதத்தினால் மனிதர்களுக்கு வரக்கூடிய வியாதிகள் ஆகும்.
  • ப்ளூ காய்ச்சல் அனைவருக்கும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
    அதிக ஈரப்பதம்: ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

IX. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 10
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 2 வானிலை மற்றும் காலநிலை 11

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 18 திசுக்களின் அமைப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 18 திசுக்களின் அமைப்பு

9th Science Guide திசுக்களின் அமைப்பு Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
உயிருள்ள மெல்லிய சுவருடைய பல கோண வடிவ செல்களைக் கொண்டுள்ள திசு.
அ) பாரன்கைமா
ஆ) கோலன்கைமா
இ) ஸ்கிளிரன்கைமா
ஈ) மேலே கூறிய எதுவும் இல்லை
விடை:
அ) பாரன்கைமா

Question 2.
நார்கள் கொண்டுள்ளது
அ) பாரன்கைமா
ஆ) ஸ்கிளிரன்கைமா
இ) கோலன்கைமா
ஈ) ஏதும் இல்லை
விடை:
ஆ) ஸ்கிளிரன்கைமா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 3.
துணை செல்கள் ____ வுடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.
அ) சல்லடைக் கூறுகள்
ஆ) பாத்திரக் கூறுகள்
இ) ட்ரைக்கோம்கள்
ஈ) துணை செல்கள்
விடை:
அ) சல்லடைக் கூறுகள்

Question 4.
கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?
அ) பாரன்கைமா
ஆ) கோலன்கைமா
இ) சைலம்
ஈ) ஸ்கீளிரன்கைமா
விடை:
இ) சைலம்

Question 5.
ஏரேன்கைமா எதில் கண்டறியப்படுகிறது?
அ) தொற்று தாவரம்
ஆ) நீர்வாழ் தாவரம்
இ) சதுப்பு நில தாவரம்
ஈ) வறண்ட தாவரம்
விடை:
ஆ) நீர்வாழ் தாவரம்

Question 6.
மிருதுவான தசை காணப்படுவது
அ) கர்ப்பப்பை
ஆ) தமனி
இ) சிரை
ஈ) அவை அனைத்திலும்
விடை:
ஈ) அவை அனைத்திலும்

Question 7.
நரம்பு செல்கள் பெற்றிறாதது.
அ) ஆக்சான்
ஆ) நரம்பு நுனி
இ) தசைநாண்கள்
ஈ) டென்ட்ரைட்
விடை:
இ) தசை நாண்கள்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 1

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
உள்ளுறுப்புகளுக்கு _____ திசுக்கள் உறுதியை அளிக்கின்றன.
விடை:
கோலன்கைமா

Question 2.
பாரன்கைமா, குளோரன்கைமா கோலன்கைமா, ஸ்கிளிரன்கைமா எளிய ஆகியவை _____ வகை திசுக்களாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 3.
_____ மற்றும் ____ ஆகியவை கூட்டுத்திசுக்களாகும்.
விடை:
சைலம், புளோயம்

Question 4.
குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் _____ பகுதியில் உள்ளன.
விடை:
சுவாச குழாய்

Question 5.
சிறுகுடலின் புறணி ____ ஆல் ஆனது.
விடை:
தூண் எபிதீலியம்

Question 6.
மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுறும் உண்டு ஒத்திசைவான குரோமோசோம் போது, ____ குரோமோசோம்கள்
விடை:
ஒன்றின் பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும்.

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
எபிதீலிய திசு விலங்கு உடலின் பாதுகாப்பு திசுவாகும்.
விடை:
சரி

Question 2.
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை சிற்றிடை இணைப்பு திசுவின் இருவகையாகும்.
விடை:
தவறு
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை ஆதார இணைப்புத் திசுவின் இரு வகையாகும்.

Question 3.
பாரன்கைமா ஒரு எளிய திசு
விடை:
சரி

Question 4.
ஃபுளோயம் டிரக்கிடுகளால் ஆனது.
ஃபுளோயம் சல்லடைக் குழாயினால் ஆனது.
விடை:
தவறு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 5.
கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுகின்றன.
சைலத்தில் நாளங்கள் காணப்படுகின்றன
விடை:
தவறு

V. சுருக்கமாக விடையளி

Question 1.
இடை ஆக்குத்திசுக்கள் என்பவை யாவை? எவ்வாறு அவை மற்ற ஆக்குத் திசுக்களிலிருந்து வேறுபடுகின்றன.
விடை:
விளக்கம் :

  • முதல் நிலை ஆக்குத் திசுவின் ஒரு பகுதி பிரிந்து நிலையான திசுப்பகுதிகளுக்கிடையே இவை காணப்படுகின்றன.
  • இடையில் காணப்படுவதால் இடை ஆக்குத்திசு எனப்படுகிறது. இருப்பிடம் :
    1.  இலையடி – (எ.கா) பைனஸ் தாவரம்
    2.  கணுவிடைப் பகுதியின் அடி (எ.கா) புற்கள்

Question 2.
கூட்டுத்திசு என்றால் என்ன? பல்வேறு வகையான கூட்டுதிசுவின் பெயர்களை எழுது.
விடை:
வரையறை :
ஒன்றுக்கும் மேற்பட்ட பலவகை செல்கள் – ஒன்றாக தொகுப்பாக ஒரு பணியைச் செய்கின்றன.
வகைகள் : இருவகைப்படும்
1) சைலம் – (நீரைக் கடத்தும் திசு)
2) புளோயம் – (உணவைக் கடத்தும் திசு)

1) சைலம் கூறுகள் : –

  1. சைலம் டிரக்கீடுகள்
  2. சைலம் நார்கள்
  3. சைலம் குழாய்கள்
  4. சைலம் பாரன்கைமா

2) புளோயம் கூறுகள் :

  1. சல்லடைக்குழாய்
  2. துணைசெல்கள்
  3. புளோயம் பாரன்கைமா
  4. புளோயம் நார்கள்

Question 3.
அதிக அளவு நமது உடலில் காணப்படும் தசை திசுக்களை குறிப்பிடுக. அவற்றின் செயல்பாட்டினை வகுத்துரை.
விடை:
1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை),
2. மென்தசை (வரியற்ற தசை)

1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை)

  • நம் உடலில் அதிகம் காணப்படுகிறது.
  • இவை எலும்புடன் ஒட்டி உடலின் அசைவிற்குக் காரணமாக உள்ளதால் எலும்புச் சட்டகத்தசை எனப்படுகிறது.
  • இவை நம் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால். இவை இயக்க (தன்னிச்சை) தசைகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • இவைகளில் இருண்ட மற்றும் இருளற்ற பட்டைகள் மாறி மாறி காணப்படுவதால் இவை வரித்தசை-கள் எனப்படுகிறது.
    எ.கா. கை, கால்களில் காணப்படும் மூட்டுத் தசைகள்

2. மென்தசை (வரியற்ற தசை)

  • இத்தசைகள் கதிர் வடிவில் உள்ளது. மையப்பகுதி அகன்றும் முனைப் பகுதி சுருங்கியும் உள்ளது.
  • இத்தசைகளில் கோடுகள் மற்றும் வரிகள் கிடையாது.
  • இவை நம் இச்சைகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை. எனவே இவை இயங்கு தசைகள் என அழைக்கப்படுகிறது.
    எ.கா. இரத்த நாளம், இரப்பை, சுரப்பிகள், சிறுநீர்ப்பை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 4.
எலும்பு இணைப்புத்திசு என்றால் என்ன? எப்படி அவை நமது உடல் செயல்பட உதவுகின்றன?
விடை:
எலும்புத் திசு :
இது திடமான விறைத்த மற்றும் உறுதியான இளக்கமற்ற எலும்பு சட்டக இணைப்புத் திசு.

செயல்பாடுகள் :

  • உடலுக்கு வடிவத்தையும், கட்டமைப்பையும் கொடுக்கிறது.
  • மென்மையான திசுக்களுக்கும், உள் உறுப்புகளுக்கும் ஆதாரத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது.

Question 5.
பாலினப் பெருக்கத்தின் போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?
விடை:

  • பாலினப் பெருக்கம் செய்யும் உயிரினங்களில் இருமய நிலை டிப்ளாய்டு) செல்கள் காணப்படுகிறது.
  • கேமீட்டுகள் உருவாக்கம் மைட்டாசிஸ் முறையில் நடைபெற்றால், குரோமோசோம் எண்ணிக்கை இரட்டிப்படையும் – அப்போது அந்த உயிரினம் அசாதாரணமானதாகக் காணப்பட வாய்ப்புள்ளது.

குன்றல்பகுப்பு (மியாசிஸ்) முக்கியத்துவம் :

  • குன்றல் பகுப்பின் (மியாசிஸ்) போது குரோமோசோம் எண் சரி பாதியாக குறைக்கப்படுகிறது. (n)
  • கருவுறும் போது, ஆண் மற்றும் பெண் கேமீட்டுகள் இணைந்து டிப்ளாய்டு (2n) (இருமைய) நிலையைப் பெறுகிறது.
  • இவ்வாறு குரோமோசோம் எண்ணிக்கையை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Question 6.
மைட்டாசிஸின் எந்த நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையப்பகுதியில் அமைகின்றன?
எப்படி?
விடை:

  • மெட்டா நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையத்தில் உள்ளது.
  • குரோமோசோமில் உள்ள சென்டிரோமியர்கள் ஸ்பிண்டில் இழைகளால் இணைக்கப்பட்டிருப்பதால், குரோமோசோம் செல்லின் மையத்தில் உள்ளது.

VI. விரிவாக விடையளி

Question 1.
நிலைத்த திசுக்கள் யாவை? வெவ்வேறு வகையான எளிய நிலைத்த திசுக்களை விவரிக்க.
விடை:
வரையறை :

நிலைத்த திசுக்கள், பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ (ஆ) தற்காலிகமாகவோ இழந்த திசுக்கள்.
இவை இருவகைப்படும்
1. எளியத்திசு,
2. கூட்டுத்திசு

1. எளியத்திசு
ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆன திசு, இவை மூன்று வகைப்படும்.
அ) பாரன்கைமா,
ஆ) கோலன்கைமா,
இ) ஸ்கிளீரன்கைமா

அ) பாரன்கைமா
சம அளவுடைய, மெல்லிய சுவருடைய முட்டை
(அ) பலகோண அமைப்புடைய செல் இடைவெளிகளுடன் கூடிய திசுவாகும்.
(i) ஏரன்கைமா,
(ii) குளோரன்கைமா
(i) ஏரன்கைமா
நீர்வாழ் தாவரங்களில் பாரன்கைமா காற்றிடைப் பகுதிகளைக் கொண்டுள்ளதால் – ஏரன்கைமா எனப்படும்.

(ii) குளோரன்கைமா
பாரன்கைமா திசு மீது ஒளிபடும் போது – பசுங்கணிகங்களை உற்பத்தி செய்து – குளோரன்கைமாவாக மாறும்.

பணி :

  1. நீரை, உணவைச் சேமித்தல்
  2. உறிஞ்சுதல், சுரத்தல்
  3. மிதத்தல் etc,.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 65

ஆ) கோலன்கைமா

  • நீண்ட சதுர அல்லது சிறுத்த முனையுடைய உயிருள்ள செல்கள்.
  • சீரற்ற தடித்த லிக்னின் இல்லாத செல்சுவர் கொண்டது.

பணி : புறத்தோலுக்கடியில் காணப்படுகிறது. தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது.
இ) ஸ்கிளீரன்கைமா

  • லிக்னினால் ஆன தடித்த செல்சுவரை கொண்டது.
  • முதிர்ந்த நிலையில் புரோட்டோபிளாசம் அற்று காணப்படுகிறது. இருவகைப்படும்.
    1. நார்கள்,
    2. ஸ்கீளிரைடுகள்

1) நார்கள்

  • நீண்ட ஸ்கிளீரன்கைமா செல்களால் ஆனது. செல்சுவர் லிக்னின் பொருளால் ஆனது.
  • 1-3 mm சில தாவரங்களில் 20 மிமீ முதல் 550 மிமீ வரை நீளமுடையவை.
  • கன்னாபினஸ் சட்டைவா (சணல்)
  • கார்கோரஸ் காப்சுலரிஸ் (ஜீட் வகை) சணல்
  • லின்னம் யுசிட்டாஸ்ஸிமம் (ஆளி)
    பணி – வலுதரும் திசு – எ.கா. சைலம் நார்கள்

2) ஸ்கிளீரைடுகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 66

  • இது அகன்று ஒற்றையாகவோ (அ) தொகுப்பாகக் காணப்படும்.
  • இதன் செல்சுவர் லிக்னின் என்னும் பொருளால் ஆனது
  • குழிகள் நிலைத்த தோற்றத்துடன் காணப்படுகின்றது.

பணி – பழங்கள் மற்றும் விதைகளின்
உறைகளில் காணப்படுகிறது.
வலுதரும் திசுவாகும். எ.கா. – பட்டாணி விதையுறை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 2.
சைலக்கூறுகளைப் பற்றி எழுதுக.
விடை:
சைலம் : நீரைக் கடத்தும் திசு – தாவர உடலுக்கு இயந்திர உதவியை அளிக்கிறது.
கூறுகள்
இவற்றின் கூறுகள் :
1). சைலம் டிரக்கீடுகள்,
2). சைலம் வெஸல்கள் (குழாய்கள்),
3). சைலம் நார்கள்,
4). சைலம் பாரன்கைமா

சைலம் டிரக்கீடுகள்

  • நீண்ட அல்லது குழாய் போன்றவை.
  • தடித்த மற்றும் லிக்னின் சுவரைக் கொண்ட இறந்த செல்களாகும்.
  • செல்களின் முனைப்பகுதி – மழுங்கியது. சிறுத்த (அ) உளி போன்ற அமைப்புடையது.
  • பலவகை இரண்டாம் நிலைத் தடிப்புகளைக் கொண்டுள்ளது.

சைலம் நார்கள்

  • நீண்ட செல்கள் – முனைகள் கூரானவை.
  • நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.

சைலக்குழாய்கள்

  • நீண்ட குழாய் வடிவம் – அகன்றது நீள் அச்சுக்கு இணையானது
  • செல்சுவர் – லிக்னின் காணப்படும் – அகன்ற மையக் குழிகளைக் கொண்டுள்ளது – இறந்தவை
  • நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.

சைலம் – பாரன்கைமா

  • செல்கள் மெல்லிய சுவரை உடையவை – உயிருள்ளவை
  • பணி – கடத்துதலில் உதவுவதோடு, ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளைச் சேகரிக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 70

Question 3.
மைட்டாஸிஸ் மற்றும் மியாசிஸ்க்கு இடையேயுள்ள வேறுபாட்டினை பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 78

VII. மதிப்பு அடிப்படை கேள்விகள்

Question 1.
இரத்தத்திலிருந்து அனைத்து இரத்தத்தட்டுகளையும் நீக்கும் போது என்ன விளைவு ஏற்படும்?
விடை:

  • இரத்த தட்டுகளின் முக்கிய பணி காயம்பட்ட இடத்தில் இரத்த உறைவு ஏற்படுத்தி இரத்த இழப்பை தடுத்தல்.
  • இரத்தத்திலிருந்து இரத்தத் தட்டுகளை நீக்கிவிட்டால் காயம்பட்ட இடத்தில் இரத்த உறைவு நிகழாது. மாறாக, இரத்த இழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடும்.

Question 2.
இரத்தத்தில் எவை உண்மையான செல்கள் இல்லை? ஏன்?
விடை:

  • இரத்தத்தில் RBC, WBC, இரத்த தட்டுகள் காணப்பட்டாலும், RBC, மற்றும் இரத்தத்தட்டுகள் இவற்றில் உட்கருக்கள் இல்லை எனவே இவை உண்மையான செல்களாகக் கருதப்படவில்லை.
  • WBC மட்டுமே இரத்தத்தில் காணப்படும் உண்மையான செல்கள் ஆகும்.

9th Science Guide திசுக்களின் அமைப்பு Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண்வினாக்கள்.

Question 1.
லிக்னின் காணப்படும் எளிய வலிமை தரும் திசு _______
விடை:
கோலன்கைமா

Question 2.
ஒரு தாவரத்தில் பொதுவாகக் காணப்படும் எளியத்திசு ______
விடை:
பாரன்கைமா

Question 3.
திசுக்களைப் பற்றி அறிகிற அறிவியல் பிரிவு _____
விடை:
ஹிஸ்டாலஜி (Histology)

Question 4.
தென்னையின் மட்டையில் காணப்படும் திசு _____
விடை:
ஸ்கிளிரன்கைமா

Question 5.
எந்தத்திசு தாவரத்தின் நீள் வளர்ச்சிக்காக காரணமாக உள்ளது?
விடை:
நுனி ஆக்குத்திசு

Question 6.
____ முதிர்ந்த பின்பும் தன் உட்கருவை இழக்காமலுள்ளது?
விடை:
துணை செல்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 7.
புளோயம் திசுவில் காணப்படும் உயிரற்ற கூறு ______
விடை:
புளோயம் நார்கள்

Question 8.
வயலிலுள்ள ஒரு கரும்பு, தாவரத்தின் நுனிப்பகுதி நீக்கப்பட்டாலும் அது தொடர்ந்து நீளமாக வளர்வதற்குக் காரணம் ______
விடை:
இடை ஆக்கு திசு

Question 9.
லிக்னினை தனது இரண்டாம் செல்சுவரில் கொண்டுள்ள திசு _______
விடை:
ஸ்கிளிரன்கைமா

Question 10.
ஜீட் என்பது ______
விடை:
இரண்டாம் பாஸ்ட் நார்கள்

Question 11.
இரத்தம் உறைதலுக்கு காரணமான வைட்டமின் _______
விடை:
வைட்டமின் K

Question 12.
தசை நாரின் சைட்டோபிளாசம் _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
சார்கோஃபிளாசம்

Question 13.
எந்த விலங்கில் கொழுப்புத்திசு அதிக அளவில் காணப்படுகிறது?
விடை:
திமிங்கலம்

Question 14.
இரத்தம் மற்றும் எலும்பு _____ திசுவிலிருந்து தோன்றுகிறது?
விடை:
மீசோடெர்ம்

Question 15.
நமது உடலில் 60% கரிம பொருட்கள் காணப்படும் உறுப்பு ______
விடை:
எலும்பு

Question 16.
இரத்தக் குழாய்களின் உள் அடுக்கு ______ திசுவினால் ஆனது?
விடை:
எபிதீலிய திசு

Question 17.
இரத்தத்திற்கும் உடல் திரவங்களுக்கு மிடையே இணைப்பாக செயல்படுவது _______
விடை:
நிணநீர்

Question 18.
சுருங்கும் புரதம் காணப்படுவது _______
விடை:
எலும்பின் மஜ்ஜை

Question 19.
சுருங்கும் புரதம் காணப்படுவது ______
விடை:
தசை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 20.
எலும்பு மேட்ரிக்ஸில் அதிகம் காணப்படுவது ______
விடை:
கால்சியம் மற்றும்
பாஸ்பரஸ்

Question 21.
இரு நியூரான்களை இணைப்பது ______
விடை:
சினாப்ஸ்

Question 22.
தண்டின் குறுக்களவு அதிகரிக்கக் காரணம் ______
விடை:
பக்க ஆக்குத் திசு

Question 23.
இரத்தக் குழாய்களின் உள்பூச்சாகக் காணப்படுவது ____ ஆகும்
விடை:
தட்டு எபிதீலியம்

Question 24.
சிறுகுடலில் உள் பூச்சாகக் காணப்படும் திசு _____ ஆகும்.
விடை:
எளிய தூண் எபிதீலியத்திசு

Question 25.
சிறுநீரக நுண்குழலின் உள்பூச்சாகக் காணப்படுவது _____ ஆகும்
விடை:
கனசதுர எபிதீலியத்திசு

Question 26.
பெலோபியன் நுண்குழலின் உள்பூச்சாகக் காணப்படுவது ______
விடை:
குறுயிழை எபிதீலியத்திசு

Question 27.
மனித உடலில் அதிகபட்சமாகக் காணப்படும் திசு _____ ஆகும்.
விடை:
இணைப்புத் திசு

Question 28.
குரோமோசோம்கள் பூங்கொத்து போன்ற அமைப்பு நிலையைப் பெற்று லெப்டோடீன் காணப்படும் நிலை _____ ஆகும்.
விடை:
லொயோலா

Question 29.
கயாஸ்மா உருவாக்கம் மற்றம் குறுக்கெதிர் மாற்றம் நடைபெறும் புரோநிலையின் துணை நிலை _____ ஆகும்.
விடை:
பேக்கிடீன்

Question 30.
வெள்ளை நாரால் ஆன தசையையும் எலும்பையும் இணைக்கும் திசுவிற்கு _____ என்று பெயர்.
விடை:
தசை நாண்

Question 31.
சல்லடை செல்களில் _____ காணப்படுவதில்லை.
விடை:
துணை செல்கள்

Question 32.
உடலின் வெப்பநிலையை சீராக வைப்பது _____ திசுவாகும்
விடை:
கொழுப்புத்திசு

Question 33.
மைட்டாசிஸை முதன் முதலில் கண்டறிந்தவர் _______
விடை:
ஃப்ளம்மிங்

Question 34.
ஆளி தாவரவியல் பெயர் ______ ஆகும்
விடை:
லின்னம் யுசிட்டாஸ்ஸிமம்
(ஆளி)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 35.
தோலை தசையுடன் இணைக்கும் திசு ______
விடை:
சிற்றடைவிழையம்

Question 36.
சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுவது _____
விடை:
கொழுப்புத்திசு

Question 37.
செல்பிரிதலின் உட்கரு பிரிதலுக்கு _____ என்று பெயர்
விடை:
கேரியோகைனசிஸ்

Question 38.
வெள்ளையணுக்களில் சைட்டோபிளாசத்தில் துகள்கள் அற்றவை _____ எனப்படும்
விடை:
ஏகிராணுலோசைட்ஸ்

Question 39.
இலை உருவாக்கத்திற்குக் காரணமான ஆக்குதிசு ____ எனப்படும்
விடை:
தட்டு ஆக்குத்திசு

Question 40.
உருளைக் கிழங்கின் பாரன்கைமாவின் வெற்றிடத்தில் காணப்படும் பொருள் _____ எனப்படும்.
விடை:
ஸ்டார்ச்

Question 41.
சைலம் குழாய்கள் காணப்படும் இம்னோஸ்பெர்ம் ____ ஆகும்
விடை:
நீட்டம்

Question 42.
டெரிடோபைட்டாவிலும் ஜிம்னோஸ்பெர்ம்களிலும் மட்டும் காணப்படும் புளோயம் கூறு ____ ஆகும்
விடை:
சல்லடை செல்

Question 43.
கொலாஜன் நார்கள், மீள்நார்கள் மற்றும் ஃபைரோப்ளாஸ்ட் செல்களாலான முறையான இணைப்புத்திசு ____ ஆகும்
விடை:
சிற்றிடைவிழையம்

Question 44.
மனித உடலின் மிகவும் நீளமான செல் _____ ஆகும்.
விடை:
நியூரான்

Question 45.
_____ செல் சுவரில் துளைகள் காணப்படுவதில்லை
விடை:
துணை செல்கள்

Question 46.
ஆப்பிளில் பாரன்கைமா ______ சேமித்து வைத்துள்ளது
விடை:
சர்க்கரையை

Question 47.
_____ தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது
விடை:
கோலன்கைமா

Question 48.
_____ ஒரு கடத்தும் திசுவாகும்
விடை:
சைலம்

Question 49.
ஃபுளோயத்தின் கடத்தும் கூறுகள் ______ கூறுகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
சல்லடைக்குழாய்

Question 50.
_____ கழிவுப் பொருள்களை நீக்கும் பணியில் ஈடுபடுகின்றன
விடை:
எபிதீலியத் திசுக்கள்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 60

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 61

III. கூற்று மற்றும் காரண வகை

உறுதிபடுத்துதல் : A காரணம் : R
விவரிப்பு :
பின்வரும் கேள்விகளில் ஒரு கூற்று (A) தரப்பட்டுள்ளது. அதற்குரிய காரணம் (R) அதன் கீழ் தரப்பட்டுள்ளது. இவற்றிற்குக் கீழாகத் தரப்பட்டுள்ளவற்றிலிருந்து கேள்விக்கான சரியான விடையைத் தெரிவு செய்க.
a) A மற்றும் R சரி. R – A ஐச் சரியாக விளக்குகிறது.
b) A மற்றும் R சரி. R – A ஐச் சரியாக விளக்கவில்லை.
c) A சரி R தவறானது
d) A மற்றும் R இரண்டும் தவறானது

Question 1.
உறுதிபடுத்துதல் (A) : காது மடல்கள் மென்மையான வளையும் தன்மையுடையவை
காரணம் (R) : காது மடல்களில் ஹையலின் எனப்படும் குருத்தெலும்புத்திசு காணப்படுகிறது.
விடை:
c) A சரி R தவறானது

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 2.
உறுதிபடுத்துதல் (A): ஆதார இணைப்புத் திசுவில் அதிக அளவு உயிரற்ற செல்லிடைவெளி செல்லிற்கு புறம்பான மேட்ரிக்ஸ் காணப்படுகிறது.
காரணம் (R) : செல்லிடை வெளிகளில் புரத நார்கள் காணப்படுகிறது.
விடை:
b) A மற்றும் R சரி. R-A ஐச் சரியாக விளக்கவில்லை.

Question 3.
உறுதிபடுத்துதல் (A) : இரத்த வெள்ளையணுக்கள் தெளிவான உட்கரு கொண்டவை. அமீபா போன்று நகரும் தன்மை கொண்டவை. காரணம் (R) : இதில் கிராணுலோசைட்ஸ் ஏகிராணுலோசைட்ஸ் எனும் இருவகைகள் உள்ளன.
விடை:
b) A மற்றும் R சரி. R-A ஐச் சரியாக விளக்கவில்லை.

IV. பின்வரும் வரைபடம் என்னவென்று காண் அதன் பாகங்களைக் கண்டறி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 75

Question 2.
3 வகையான தசைத்திசுக்கள் யாவை? அவற்றின் படம் வரைக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 79

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
கோலன்கைமா திசு – சைலம் மற்றும் புளோயத்தில் காணப்படுவது இல்லை. ஏன்?.
விடை:

  • கோலன்கைமா உயிருள்ள வலு தரும் திசு.
  • ஆனால் சைலத்திலும், புளோயத்திலும் நிறைய உயிரற்ற செல்களே காணப்படுகின்றன.
  • ஸ்கிளிரன்கைமா நார்களில் லிக்னின் படிந்து காணப்படுவதால் அது வலு தருகிறது.
  • எனவே சைலம், புளோயம் திசுக்களில் கோலன்கைமா திசுக்கள் காணப்படுவதில்லை.

Question 2.
கோலன்கைமா மற்றம் ஸ்கிளீரன்கைமா வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 80

Question 3.
கூட்டு எபிதீலியம் (அ) அடுக்கு எபிதீலியம் குறிப்பு வரைக.
விடை:
அமைப்பு :

  • பல அடுக்குகளாக செல்கள் காணப்படுகிறது.
  • எனவே பல் அடுக்கு எபிதீலியம் என்று அழைக்கப்படுகிறது.
  • சுரத்தல் மற்றும் உறிஞ்சுதலில் குறைந்த அளவே பங்கு வகிக்கின்றன.
  • இது அடித்தளத் திசுக்களுக்கு இயந்திர மற்றும் இரசாயன அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும்.

Question 4.
நமது உடலின் நீர் பாதுகாப்பு உறையாகச் செயல்படுவது எது?
விடை:
நமது தோலில் அமைந்துள்ள எபிதீலியத் திசுக்களே, நீர் பாதுகாப்பு உறையாகச் செயல்பட்டு நீர் உட்புகாமல் உடலை பாதுகாக்கிறது.

Question 5.
மைக்ரோகிலியா என்றால் என்ன?
விடை:

  • வேறுபாடடைந்த நரம்பு செல்கள் மைக்ரோகிலியா எனப்படும்.
  • இவை விழுங்கு தன்மை கொண்டவை.
  • இவை ஆஸ்ட்ரோகிலியா, ஆலிகோடென்ரோகிலியா என்று அழைக்கப்படுகின்றன.

Question 6.
ஏமைட்டாசிஸ் செல் பகுப்பு நடைபெறும் உயிரினங்களின் பெயர் தருக.
விடை:

  • ஏமைட்டாசிஸ் ஒரு பாலிலா இனப்பெருக்க முறையாகும்.
  • இது பாக்டீரியா, புரோட்டோசோவா, ஈஸ்ட் (மொட்டிடுதல்), நோயுற்ற செல்கள், வயதான செல்கள், பாலூட்டிகளில் குருத்தெலும்பு செல்கள் மற்றும் கரு உறைகளில் நடைபெறுகிறது.

Question 7.
கொழுப்புத் திசுவின் பணிகள் யாவை?
விடை:

  • உடல் உறுப்புகளை அதனதன் இடத்தில் நிலை நிறுத்துகிறது.
  • சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியில் இருந்து பாதுகாக்கும் அதிர்ச்சி உறிஞ்சியாக உள்ளது.
  • பாதுகாப்பு உறையாகச் செயல்பட்டு உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்கிறது.

Question 8.
சைலம் வெஸல்கள் மற்றும் டிரக்கீடுகளில் காணப்படும் தடிப்புகள் யாவை?
விடை:

  • ஆம், சைலம் வெஸல்கள் மற்றும் டிரக்கீடுகளில் இரண்டாம் செல்சுவரில் தடிப்புகள் காணப்படுகின்றன.
  • அவையாவன, ஏணி வடிவ, வலைப்பின்னல் தடிப்பு, ஏணி வடிவ சுருள் தடிப்பு, குழி தடிப்பு மற்றும் வளையத் தடிப்பு ஆகும்.

Question 9.
மைட்டாசிஸ் அனாநிலை, மியாசிஸ் அனாநிலை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 86

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
சல்லடை செல் மற்றும் சல்லடை குழாய் வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 87
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 88

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 2.
பல்வேறு வகை எபிதீலியத் திசுக்களின் அட்டவணை தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 89
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 90

Question 3.
மைட்டாசிஸ் – மியாசிஸ் முக்கியத்துவம் தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 93

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 1 பாறை மற்றும் மண் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 1 பாறை மற்றும் மண்

8th Social Science Guide பாறை மற்றும் மண் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது?
அ) வளிமண்டலம்
ஆ) உயிர்க்கோளம்
இ) நிலக்கோளம்
ஈ) நீர்க்கோளம்
விடை:
இ) நிலக்கோளம்

Question 2.
உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்
அ) ஆகஸ்ட் 15)
ஆ) ஜனவரி 12
இ) அக்டோபர் 15
ஈ) டிசம்பர் 5
விடை:
ஈ) டிசம்பர் 5

Question 3.
உயிரினப் படிமங்கள் ______________ பாறைகளில் காணப்படுகின்றன.
அ) படிவுப் பாறைகள்
ஆ) தீப்பாறைகள்
இ) உருமாறியப் பாறைகள்
ஈ) அடியாழப் பாறைகள்
விடை:
அ) படிவுப் பாறைகள்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 4.
மண்ணின் மேல் நிலை அடுக்கு
அ) கரிம மண் அடுக்கு
ஆ) அடி மண் அடுக்கு
இ)அடி மண்
ஈ) அடித்தள பாறை
விடை:
அ) கரிம மண் அடுக்கு

Question 5.
பருத்தி வளர ஏற்ற மண்
அ) செம்மண்
ஆ) கரிசல் மண்
இ) வண்டல் மண்
ஈ) மலை மண்
விடை:
ஆ) கரிசல் மண்

Question 6.
மண்ணின் முக்கிய கூறு
அ) பாறைகள்
ஆ) கனிமங்கள்
இ) நீர்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) கனிமங்கள்

Question 7.
கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?
அ) வண்டல் மண்
ஆ) கரிசல் மண்
இ) செம்மண்
ஈ) மலை மண்
விடை:
அ) வண்டல் மண்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு …………………..
விடை:
பாறையியல் (petrology)

Question 2.
___________ மண் தினைப் பயிர்கள் விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.
விடை:
செம்மண்

Question 3.
‘புவியின் தோல்’ என்று ______________ அழைக்கப்படுகிறது.
விடை:
மண்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 4.
உருமாறிய பாறைகளின் ஒரு வகையான ___________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது
விடை:
வெள்ளை பளிங்கு

Question 5.
__________ பாறை முதன்மை பாறை’ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
தீப்

III. சரியா / தவறா என்க குறிப்படுக.

Question 1.
தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
விடை:
சரி

Question 2.
களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது.
விடை:
தவறு

Question 3.
செம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில் உருவாகிறது.
விடை:
தவறு

Question 4.
இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு “செயற்கை மணல்” (M – Sand) பயன்படுகிறது.
விடை:
சரி

Question 5.
படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன.
விடை:
தவறு

IV. பொருத்துக

Question 1.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 1
அ) 2 1 4 3
ஆ) 2 1 3 4
இ) 4 3 2 1
ஈ) 3 4 2 1
விடை:
அ) 2 1 4 3

Question 2.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 2
அ) 2 4 1 3
ஆ) 2 4 1 3
இ) 3 1 2 4
ஈ) 3 1 4 2
விடை:
அ) 2 4 1 3

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க

Question 1.
அ) தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
ஆ) பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உருமாறுகிறது.
இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.
ஈ) தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை
விடை:
இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை – தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 2.
அ) மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது
ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.
இ) மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம்.
ஈ) இலைமக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்.
விடை:
ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உவாகிறது – தவறு

VI. கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைக் கண்டுபிடித்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
கூற்று 1 – படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை.
கூற்று 2 – படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.

அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு.
ஈ) கூற்று 2 சரி ஆனால் கூற்று 1 தவறு.
விடை:
அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1க்கு சரியான விளக்கம்

VII. காரணம் கூறுக

Question 1.
நீர்த்தேக்கப் படுகைகளில் இரசாயன படிவுப் பாறைகள் காணப்படுகின்றன.
விடை:
இரசாயன படிவுப் பாறைகள், பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து, இரசாயன கலவையாக மாறுகிறது. இவை ஆவியாதல் மூலம் உருவாகின்றன. இப்பாறைகள் உப்பு படர் பாறைகள் என்றும் அழைக்கப்படுகிறது.

Question 2.
தீப்பாறைகள் எரிமலை பகுதிகளில் காணப்படுகிறது.
விடை:
தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவானதாகும். மேலும் இப்பாறைகள் எரிமலை செயல்பாடுகளோடு தொடர்புடையவை.

VIII. வேறுபடுத்துக

Question 1.
உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 3

Question 2.
மண் வள பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 4
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 5

IX. சுருக்கமாக விடையளி

Question 1.
தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?
விடை:

  • தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக்குழம்பு உறைந்து உருவாகின்றன.
  • இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உருவாவதால் இவற்றை முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்று அழைக்கிறோம்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 2.
பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி?
விடை:

  • மண்ணின் கூட்டுப் பொருள்களான கனிமங்கள், கரிமப் பொருள்கள், நீர் மற்றும் காற்று ஆகும்.
  • கனிமங்கள் – 45%
    கரிமப் பொருள்கள் – 5%
    நீர் – 25%
    காற்று – 25% கொண்டுள்ளது.

Question 3.
‘பாறைகள்’ வரையறு.
விடை:

  • பாறைகள் என்பது திட கனிம பொருட்களால் புவியின் மேற்பரப்பில் மற்ற கோள்களில் உள்ளது போல் உருவானதாகும்.
  • புவியின் மேலோடு பாறைகளால் உருவானது. இது ஒரு திட நிலையில் உள்ள ஒரு முக்கியமான இயற்கை வளம் ஆகும்.
  • பாறைகள் இயற்கையிலே கடின மற்றும் மென்தன்மை கொண்டதாகும்.

Question 4.
மண்ணின் வகைகளைக் கூறுக.
விடை:

  • வண்டல் மண்
  • கரிசல் மண்
  • செம்மண்
  • சரளை மண்
  • மலை மண்
  • பாலை மண்

Question 5.
மண்வளப் பாதுகாப்பு என்றால் என்ன?
விடை:
மண் வளப் பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல் முறையாகும்.

X. விரிவான விடையளி

Question 1.
மண் உருவாக்கச் செயல்முறைகள் பற்றி விவரி.
விடை:

  • மண் என்பது பல்வகை கரிமப் பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப் பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவையாகும்.
  • மண்ணில் உள்ள கனிமங்கள் மண்ணை உருவாக்கும் ஒரு அடிப்படை காரணியாகும்.
  • பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல் முறைகளுக்கு உட்படுத்தப்படும் பொழுது மண்ணாக உருவாகிறது.
  • நீர், காற்று, வெப்ப நிலைமாறுபாடு, புவி ஈர்ப்பு விசை, வேதிபரிமாற்றம், உயிரினங்கள் மற்றும் அழுத்த வேறுபாடுகளால் தாய்ப்பாறைகள் உடைபட்டு மிருதுவான துகள்களாக மாறுகின்றன.

Question 2.
பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்.
விடை:
பாறைகள் தோன்றும் முறைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  • தீப்பாறைகள்,
  • படிவுப் பாறைகள்
  • உருமாறியப் பாறைகள் (அ) மாற்றுருப் பாறைகள்.

தீப்பாறைகள்: தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவானதாகும். இதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் அவை.
I. வெளிப்புறத் தீப்பாறைகள்,
II. ஊடுருவிய தீப்பாறைகள்

I. வெளிப்புறத் தீப்பாறைகள்: புவியின் உட்பகுதியிலிருந்து அதன் மேல் பகுதிக்கு வரும் செந்நிற, உருகிய பாறைக் குழம்பு ‘லாவா’ புவியின் மேற்பரப்பிற்கு வந்து குளிர்ந்த பாறைகளாக மாறுகிறது. இவ்வாறு உருவாகும் பாறைகள் ‘வெளிப்புறத்தீப்பாறைகள்’ என்றழைக்கப்படுகிறது.

II. ஊடுருவிய தீப்பாறைகள்: பாறைக்குழம்பு புவிபரப்பிற்கு கீழே பாறை விரிசல்களிலும், பாறைகளிலும் ஊடுருவில் சென்று உறைந்து உருவாகும் பாறைகள் ஊடுருவிய தீப்பாறைகள் எனப்படும். இவை இரண்டு வகைப்படும். அவை

  • அடியாழப் பாறைகள் (அ) பாதாளப் பாறைகள்
  • இடையாழப் பாறைகள்

படிவுப் பாறைகள்: படிவுப்பாறைகள் அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன. படிவுப் பாறைகளின் படிய வைக்கும் செயல்முறைகள் மற்றும் படிவுகளின் தன்மையை பொருத்து படிவுப் பாறைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  • உயிரினப் படிவுப் பாறைகள்
  • பௌதீக படிவுப் பாறைகள்
  • இரசாயன படிவுப் பாறைகள்

உருமாறிய பாறைகள்: அதிக வெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும், படிவுப்பாறைகளும் மாற்ற மடைந்து உருமாறிய பாறைகளாக மாறுகிறது. இப்பாறைகள் இரண்டு வகைப்படும் அவை

  • வெப்ப உருமாற்றம்
  • இயக்க உருமாற்றம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 3.
மண்ண டுக்குகள் பற்றி விவரிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 6
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 7

Question 4.
மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்.
விடை:
மண்ணின் வகைபாடு: மண் உருவாகும் விதத்தில் அவற்றின் நிறம் பௌதீக மற்றும் இரசாயன பண்புகளின் அடிப்படையில் ஆறு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன அவை.

  • வண்டல் மண்
  • கரிசல் மண்
  • செம்மண்
  • சரளை மண்
  • மலை மண்
  • பாலை மண்

வண்டல் மண்: வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள் மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது. இது மற்ற மண் வகைகளைக் காட்டிலும் வளம் மிக்கது. இது நெல், கரும்பு, கோதுமை, சணல் மற்றும் மற்ற உணவுப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

கரிசல் மண்: கரிசல் மண், தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன. கரிசல் மண்ணில் பருத்திப் பயிர் நன்கு வளரும்.

செம்மண்: செம்மண், உருமாறியப் பாறைகள் மற்றும் படிகப்பாறைகள் ஆகியவைசிதைவடைவதால் உருவாகிறது. இது வளம் குறைந்த மண்ணாக இருப்பதால் தினைப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

சரளை மண்: சரளை மண் அயன மண்டல பிரதேச காலநிலையில் உருவாகிறது. இம்மண் வளம் குறைந்து காணப்படுவதால் தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்றது.

மலை மண் : மலை மண், மலைச் சரிவுகளில் காணப்படுகிறது. இப்பகுதிகளில் கார தன்மையுடன் குறைந்த பருமன் கொண்ட அடுக்காக உள்ளது.

பாலை மண்: பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது. வளம் குறைந்த இம்மண்ணில் வேளாண்மையை மேற்கொள்ள இயலாது.

XI. செயல்பாடுகள்

Question 1.
இணையதள உதவியுடன் கீழ்க்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 8
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 9

Question 2.
வரைபடப் பயிற்சி (வரைபட பயிற்சி புத்தகத்தில் காண்க)
விடை:
இந்திய புறவெளி நிலவரைபடத்தில் கரிசல் மண் காணப்படும் பகுதிகளைக் குறிக்கவும்.

Question 3.
கண்காட்சி (மாணவர்களுக்கானது)
விடை:
பல்வேறு வகையான மண் மாதிரிகளைச் சேகரித்து உன் வகுப்பறையில் காட்சிப்படுத்தவும்.

Question 4.
குழுக் கலந்துரையாடல்
விடை:
இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமானப் பணிகளுக்கு “செயற்கை மணல்” (M-Sand) பயன்படுத்த காரணம்.

  1.  தரம்
  2. நன்மைகள்
  3. தீமைகள் தரம்:
  • M-Sand (Manufactured Sand) உருவாக்கப்படக்கூடிய மணல்
  • M-Sand
    நன்மைகள்:
  • ஆறுகளிலிருந்து மணல் எடுப்பது தவிர்க்கப்படுவதுடன் ஆறுகள் பாதுகாக்கப்படுகிறது.
  • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
  • செயற்கை மணல் பயன்படுத்துவதால் கட்டுமானம் உறுதியாக இருக்கும்.
  • கட்டுமானச் செலவு குறைகிறது.
  • இயற்கை மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.
    தீமைகள்:
  • (M-Sand) செயற்கை மணலில் ஈரப்பதம் குறைவு.
  • கட்டுமானப் பணிகளுக்கு அதிக நீரும், சிமெண்ட்டும் தேவை.

8th Social Science Guide பாறை மற்றும் மண் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
வேளாண்மையை மேற்கொள்ள இயலாத மண் __________
அ) பாலை மண்
ஆ) செம்மண்
இ) கரிசல் மண்
ஈ) சரளை மண்
விடை:
அ) பாலை மண்

Question 2.
நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ ___________ வருடங்கள் ஆகும்.
அ) 200
ஆ) 2000
இ) 3000
ஈ) 400
விடை:
இ) 3000

Question 3.
கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு.
அ) இலை மக்கு அடுக்கு
ஆ) மேல்மட்ட அடுக்கு
இ) உயர் மட்ட அடுக்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) மேல்மட்ட அடுக்கு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 4.
உலகின் மிகப்பழமையான படிவுப்பாறைகள் ______________ ல் கண்டுபிடிக்கப்பட்டன.
அ) இந்தியா
ஆ) அயர்லாந்து
இ) கிரீன்லாந்து
ஈ) பின்லாந்து
விடை:
இ) கிரீன்லாந்து

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
‘இக்னியஸ்’ என்றால் ____________ என்று பொருள்படும்.
விடை:
தீ

Question 2.
‘செடிமெண்டரி’ என்பதன் பொருள்
விடை:
படிய வைத்தல்

Question 3.
எரிமலையிலிருந்து வெடித்து வெளியேறும் பாறைக் குழம்பு ___________
விடை:
லாவா

III. சரியா, தவறா?

Question 1.
புவியின் ஆழப்பகுதியில் உருகிய பாறைக்குழம்பு லாவா எனப்படும்.
விடை:
தவறு

Question 2.
மலை மண் அயன மண்டல பிரதேச கால நிலையில் உருவாகிறது.
விடை:
தவறு

Question 3.
பாறைகள் மற்றும் மண் வகைகள் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்கள் ஆகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 4.
செம்மண்ணில் உள்ள இரும்பு ஆக்ஸைடு அளவைப் பொருத்து மண்ணின் நிறமானது பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரை வேறுபடுகிறது.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 10

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க

Question 1.
1. மண் இயற்கை முறையில் நீரை வடிக்கட்ட பயன்படுகிறது.
2. காலநிலையைப் பொருத்து மண் உருவாகிறது.
3. கரிசல் மண் உவர்தன்மை மற்றும் நுண்துளைகளைக் கொண்டது.
4. மண்ணின் குறுக்கமைப்பு என்பது புவி மேற்பரப்பிலிருந்து தாய் பாறை வரை உள்ள மண் அடுக்குகளின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகும்.
விடை:
3) தவறு. கரிசல் மண் உவர்தன்மை மற்றும் நுண்துளைகளைக் கொண்டது.

VI. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றினை கண்டுபிடித்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுது

கூற்று 1: மண்ணின் கூட்டுப் பொருள்களான கனிமங்கள், கரிமப் பொருள்கள், நீர் மற்றும் காற்று ஆகும்.
கூற்று 2: மண்ணின் கலவையானது இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறுபடுகிறது.

அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு.
ஈ) கூற்று 2 சரி ஆனால் கூற்று 1 தவறு.
விடை:
ஆ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம் அல்ல

VII. வேறுபடுத்துக

Question 1.
இயற்கை மணல், செயற்கை மணல்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 11

VIII. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
மண்ணின் குறுக்கமைப்பு என்றால் என்ன?
விடை:
மண்ணின் குறுக்கமைப்பு என்பது புவி மேற்பரப்பிலிருந்து தாய் பாறை வரை உள்ள மண் அடுக்குகளின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகும்.

Question 2.
மண்ணின் பயன்களின் ஏதேனும் இரண்டினைக் கூறு.
விடை:

  • மண்ணின் உள்ள கனிமங்கள், பயிர்கள் மற்றும் தாவரங்களை ஊட்டமாக வளரச் செய்கின்றன.
  • மண் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கும், தாவரங்கள் வளர்வதற்கும் அடிப்படையாக உள்ளது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண்

Question 3.
‘பாறையியல்’ சிறு குறிப்பு வரைக.
விடை:

  • பாறையியல் என்பது புவி மண்ணியலின்’ ஒரு பரிவு ஆகும்.
  • இது பாறைகள் ஆய்வுடன் தொடர்புடையது
  • பாறையியல் (petrology) என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது. “பெட்ரஸ்” (petrus) என்பது பாறைகளையும் (Logos) “லோகோஸ்” என்பது அதைப் பற்றிய படிப்பு ஆகும்.

IX. விரிவான விடையளிக்கவும்

Question 1.
பாறைகளின் பயன்களை கூறு :
விடை:

  • சிமெண்ட் தயாரித்தல்
  • சுண்ண எழுதுகோல்
  • கட்டடப் பொருள்கள்
  • குளியல் தொட்டி
  • நடைபாதையில் பதிக்கப்படும் கல்
  • அணிகலன்கள்
  • கூரைப் பொருள்கள்
  • அலங்காரப் பொருள்கள்
  • தங்கம், வைரம் மற்றும் நவரத்தினங்கள் போன்ற மதிப்புமிக்க பொருள்கள் தயாரிக்க பயன்படுகிறது.

X. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 12
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 1 பாறை மற்றும் மண் 13

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

8th Social Science Guide கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை ……………….
அ) கேப்பிளாங்கா
ஆ) அகுல்காஸ் முனை
இ) நன்னம்பிக்கை முனை
ஈ) கேப்டவுன்
விடை:
இ) நன்னம்பிக்கை முனை

Question 2.
எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் ……………..
அ) பனாமா கால்வாய்
ஆ) அஸ்வான் கால்வாய்
இ) சூயஸ் கால்வாய்
ஈ) ஆல்பர்ட் கால்வாய்
விடை:
இ) சூயஸ் கால்வாய்

Question 3.
மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க.
(i) சராசரி மழையளவு 15 சென்டிமீட்டர்.
(ii) கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும்.
(iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.
(iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன.

அ) i சரியானது
ஆ) ii மற்றும் iv சரியானவை
இ) iii மற்றும் iv சரியானவை
ஈ) அனைத்தும் சரியானவை
விடை:
ஆ) ii மற்றும் iv

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 4.
சரியானவை ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர் ………………
அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்
ஆ) இமய மலைத்தொடர்
இ) பிளிண்டர்கள் மலைத்தொடர்
ஈ) மெக்டோனெல் மலைத்தொடர்
விடை:
அ) பெரிய பிரிப்பு மலைத்தொடர்

Question 5.
கல்கூர்லி சுரங்கம் ………………… கனிமத்திற்குப் புகழ்பெற்றது.
அ) வைரம்
ஆ) பிளாட்டினம்
இ) வெள்ளி
ஈ) தங்கம்
விடை:
ஈ) தங்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
அட்லஸ் மலை ………………… கண்டத்தில் அமைந்துள்ளது.
விடை:
ஆப்பிரிக்கா

Question 2.
ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ………………….. ஆகும்.
விடை:
கிளிமஞ்சாரோ

Question 3.
ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் மரம் ……………….
விடை:
யூக்கலிப்டஸ்

Question 4.
ஆஸ்திரேலியாவில் உள்ள மிதவெப்ப மண்டல புல்வெளிகள் …………………… என அழைக்கப்படுகின்றன.
விடை:
டவுன்ஸ்

Question 5.
அண்டார்டிகாவில் நிறுவப்பட்ட முதல் இந்திய ஆய்வு நிலையம் ……………………
விடை:
தட்சின் கங்கோத்ரி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 1

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : அரோரா என்பது வானத்தில் தோன்றும் வண்ண ஒளிகள் ஆகும்.
காரணம் : அவை வளிமண்டலத்தின் மேலடுக்குக் காந்த புயலால் ஏற்படுகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் உண்மை . கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் உண்மை . கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் உண்மை ஆனால் கூற்று தவறு.
விடை:
இ) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 2.
கூற்று : ஆப்பிரிக்காவின் நிலவியல் தோற்றங்களில் ஒரு முக்கிய அம்சம் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு ஆகும்.
காரணம் : புவியின் உள்விசை காரணமாக புவியின் மேற்பரப்பில் உண்டான பிளவு.

அ) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுகான காரணம் சரியான விளக்கம்.
ஆ) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் கூற்றுகான காரணம் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுகான காரணம் சரியான விளக்கம்

V. சுருக்கமாக விளையளி

Question 1.
ஆப்பிரிக்கா ‘தாய் கண்டம்’ என அழைக்கப்படுவது ஏன்?
விடை:
புவியில் மனித இனங்கள் வாழ்ந்த பழமையான கண்டம் என்பதால் ஆப்பிரிக்கா ‘தாய் கண்டம்’ என அழைக்கப்பட்டது.

Question 2.
ஆப்பிரிக்காவின் முக்கியமான ஆறுகள் யாவை?
விடை:

  • நைல் நதி
  • காங்கோ நதி
  • நைஜர் நதி
  • ஜாம்பசி நதி
  • லிம்போபோ நதி
  • ஆரஞ்சு நதி

Question 3.
ஆஸ்திரேலியாவின் நிலத்தோற்ற பிரிவுகள் யாவை?
விடை:

  • மேற்கு ஆஸ்திரேலிய பெரிய பீடபூமி
  • மத்திய தாழ் நிலங்கள்
  • கிழக்கு உயர் நிலங்கள்

Question 4.
அண்டார்டிகா கண்டத்தின் தன்மை குறித்து எழுதவும்.
விடை:

  • அண்டார்டிகா கண்டம் ஒரு தனித்துவம் வாய்ந்த கண்டமாகும். இது பூர்வீக மக்களைக் கொண்டிருக்கவில்லை.
  • அண்டார்டிகாவில் எந்த ஒரு நாடும் இல்லை.
  • இது துருவப் பகுதியில் அமைந்துள்ளதால், நிரந்தர பனியுடன் மிகக் குளிர்ந்த பிரதேசமாக உள்ளது.
  • இது மலைத்தொடர்கள், சிகரங்கள், பள்ளத்தாக்குகள், பனியாறுகள், பீடபூமிகள் மற்றும் எரிமலைகளை உள்ளடக்கியதாகும்.

Question 5.
ஆஸ்திரேலியாவின் பொருளாதார நடவடிக்கைகள் ஏதெனும் நான்கினைக் குறிப்பிடுக.
விடை:
வேளாண்மை , வளம் சார்ந்த தொழில்கள், மீன்பிடித்தல், உற்பத்தித் தொழில்கள், வணிகம் மற்றும் சேவைப்பிரிவு ஆகியவை ஆஸ்திரேலியாவின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.

VI. வேறுபடுத்துக

Question 1.
சாஹேல் மற்றும் சகாரா
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 2

Question 2.
மேற்கு அண்டார்டிகா மற்றும் கிழக்கு அண்டார்டிகா
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 3

Question 3.
பெரிய பவளத் திட்டு மற்றும் ஆர்டீசியன் வடிநிலம்.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 4
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 5

VII. காரணம் கூறு

Question 1.
எகிப்து நைல் நதியின் நன்கொடை என அழைக்கப்படுகிறது ஏன்?
விடை:
நைல் நதி எகிப்தின் வாழ்வாதாரமாக விளங்குகிறது, நைல் நதி எகிப்தில் இல்லையென்றால் இந்நாடு பாலைவனமாக இருந்திருக்கும். இதனால் எகிப்து நைல் நதியின் நன்கொடை எனப்படுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 2.
வெப்ப பாலைவனங்கள் கண்டங்களின் மேற்கு விளிம்புகளில் அமைந்துள்ளன.
விடை:
மேற்கு விளிம்புகள் மணல் மற்றும் பாறைகளால் ஆன பகுதியாக உள்ளது. எனவே இப்பகுதி வறண்ட வெப்ப பாலைவனமாக உள்ளது.

Question 3.
அண்டார்டிகா ஆராய்ச்சியாளர்களின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
விடை:
உலகின் எந்த ஒரு நாட்டின் மக்களும் அண்டார்டிகாவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், தரவுகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே இக்கண்டம் ‘ஆராய்ச்சியாளர்களின் கண்டம் என அழைக்கப்படுகிறது.

VIII. விரிவான விடையளி

Question 1.
ஆஸ்திரேலியாவின் கனிம வளங்கள் குறித்து விரிவாக எழுதவும்.
விடை:

  • ஆஸ்திரேலியா பாக்சைட், லைமோனைட், ரூட்டில் மற்றும் சிர்கான் உற்பத்தியில் முன்னணி நாடாக உள்ளது.
  • தங்கம், ஈயம், லித்தியம், மாங்கனீசு தாது மற்றும் துத்தநாகம் உற்பத்தியில் இது இரண்டாவது இடம் வகிக்கிறது.
  • இரும்புத்தாது மற்றும் யுரேனிய உற்பத்தியில் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது.
  • நிலக்கரி உற்பத்தியில் நான்காவது இடம் வகிக்கிறது.
  • மேற்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் நிலக்கரி வயல்கள் உள்ளன.
  • மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் இரும்புத் தாது கிடைக்கிறது.
  • கார்பென்டேரியா வளைகுடா, பெர்த் மற்றும் டாஸ்மேனியாவை சுற்றியுள்ள பகுதிகளில் பாக்சைட் கிடைக்கிறது.
  • பாஸ் நீர்ச்சந்தி மற்றும் மேற்கு பிரிஸ்பேன் பகுதிகளில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கிடைக்கிறது.
  • வட யூனியன் பிரதேசம் மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் யுரேனியம் கிடைக்கிறது.
  • கால் வாலி மற்றும் க..ல் கார்லி பகுதிகளில் தங்கம் கிடைக்கிறது.
  • காரியம், துத்தநாகம், வெள்ளி, டங்ஸ்டன், நிக்கல் மற்றும் செம்பு ஆகியவை ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் கிடைக்கின்றன.

Question 2.
அண்டார்டிகா கண்டத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றி விவரி.
விடை:
தாவரங்கள்:

  • அண்டார்டிகாவில் வெப்பநிலையானது ஆண்டு முழுவதும் உறை நிலைக்குக் கீழே இருப்பதால் புவியியல் பெரிய தாவரங்கள் எதுவும் காணப்படவில்லை.
  • சிறுவகை தாவரங்களான பாசிகள், படர்பாசிச் செடிகள், நுரைப்பாசிகள். மரப்பாசிகள், நுண்ணிய பூஞ்சைகள் போன்றவை பனியை தாங்கி வளர்கின்றன.
  • பிளாங்டன். பாசிகள் மற்றும் மரப்பாசிகள் நன்னீர் மற்றும் உவர் நீர் ஏரிகளில் காணப்படுகின்றன.

விலங்கினங்கள்:

  • சிறிய வகை செம்மீன்களான கிரில்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.
  • நீலத்திமிங்கலம், கடற்பசு மற்றும் கடல்பறவைகளான பென்குவின், அல்பட்ராஸ். போலார் ஸ்குவா மற்றும் ஸ்டவுட் ஆகியவையும் காணப்படுகின்றன.
  • இங்குள்ள பறவைகள் மற்றும் விலங்கினங்கள் குளிர்கால நிலையை எதிர்கொள்ள தங்கள் உடலில் புளூபர் எனப்படும் அடர்த்தியான கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன.
  • பென்குயின் பறவைகள் இறக்கைகளுக்குப் பதிலாக நீந்துவதற்குப் பயன்படும் பிலிப்பர் மற்றும் அகலமான பாதங்களைப் பெற்றுள்ளன. இப்பறவைகளால் பறக்க இயலாது.
  • சிறிய முதுகெலும்பற்ற உயிரினங்கள் இங்குள்ள நிலவாழ் விலங்கினங்களாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 3.
ஆப்பிரிக்காவின் இயற்கைப் பிரிவுகளை எழுதி அவற்றில் ஏதேனும் ஒன்றினை விளக்கவும்.
விடை:
ஆப்பிரிக்காவின் இயற்கைப் பிரிவுகள்:

  • சஹாரா
  • சாஹேல்
  • சவானா
  • பெரிய பள்ளத்தாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பெரிய ஏரிகள்
  • கிழக்கு ஆப்பிரிக்க உயர் நிலங்கள்
  • சுவாலி கடற்கரை
  • காங்கோ வடிநிலம் / ஜையர் வடிநிலம்
  • தென் ஆப்பிரிக்கா

சஹாரா:

  • ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உலகப் புகழ்ப்பெற்ற சகாரா பாலைவனம் அமைந்துள்ளது.
  • இது உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல பாலைவனமாகும்.
  • சகாராவின் மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், கிழக்கில் செங்கடலும், வடக்கில் மத்திய தரைக்கடலும் தெற்கில் சாஹேல் ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
  • இது 11 நாடுகளில் பரவியுள்ளது.
  • சகாரா பாலைவனம் மலைகள், பீடபூமிகள், எர்க்ஸ், பாலைவனச் சோலை, மணல், உப்பு ஏரி, ஆற்றுக் கொப்பரைகள் மற்றும் ஊதுபள்ளங்கள் போன்ற பல்வேறு நிலத்தோற்றங்களை உள்ளடக்கியது.
  • மௌண்ட் கௌசி எனப்பட்ட செயலிழந்த எரிமலை சஹாரா பாலைவனத்தின் மிக உயரமான பகுதியாகும்,

X. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

Question 1.
கீழ்க்கண்ட நாடுகளில் டிசம்பர் மாத பருவநிலை மற்றும் அது எந்த கோளத்தில் அமைந்துள்ளது என்பதனைக் கண்டறியவும்.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 6

Question 2.
ஆஸ்திரேலிய அரசியல் புவிவரைபடத்தில் உள்ள மாநிலங்களின் பெயர்களை எழுதவும்.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 7

8th Social Science Guide கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கடகரேகை, புவி நடுக்கோடு மற்றும் மகரரேகை போன்ற மூன்று முக்கிய அட்ச ரேகைகளும் கடந்து செல்லும் கண்டம்.
அ) தென் அமெரிக்கா
ஆ) ஆப்பிரிக்கா
இ) ஆஸ்திரேலியா
ஈ) அண்டார்டிகா
விடை:
ஆ) ஆப்பிரிக்கா

Question 2.
ஆப்பிரிக்காவின் முக்கியத் தீவு
அ) டாஸ்மேனியா
ஆ) நியூசிலாந்து
இ) மடகாஸ்கர்
ஈ) சார்டினியா
விடை:
இ) மடகாஸ்கர்

Question 3.
உலகின் ஆழமான மற்றும் அதிக நீளம் கொண்ட நன்னீர் ஏரி
அ) விக்டோரியா ஏரி
ஆ) சுப்பீரியர் ஏரி
இ) ஒண்டேரியோ ஏரி
ஈ) டாங்கனிக்கா ஏரி
விடை:
ஈ) டாங்கனிக்கா ஏரி

Question 4.
உலகின் மிக நீளமான நதி
அ) நைல்
ஆ) சிந்து
இ) அமேசான்
ஈ) வோல்கா
விடை:
அ) நைல்

Question 5.
நைல் நதி கலக்கும் கடல்
அ) இந்திய பெருங்கடல்
ஆ) பசிபிக் பெருங்கடல்
இ) மத்திய தரைக்கடல்
ஈ) செங்கடல்
விடை:
இ) மத்திய தரைக்கடல்

Question 6.
உலகப்புகழ் பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி உருவாகியுள்ள ஆறு
அ) நைல்
ஆ) காங்கோ
இ) ஜாம்பசி
ஈ) நைஜர்
விடை:
இ) ஜாம்பசி புவியியல்

Question 7.
உலகின் மிகப்பெரிய தீவு
அ) கிரீன்லாந்து
ஆ) ஆஸ்திரேலியா
இ) மடகாஸ்கர்
ஈ) இந்தோனேஷியா
விடை:
ஆ) ஆஸ்திரேலியா

Question 8.
ஆஸ்திரேலியா கண்டத்தைக் கண்டுபிடித்தவர்
அ) லிவிங்ஸ்டோன்
ஆ) ஸ்டான்லி
இ) ஜேம்ஸ் குக்
ஈ) டார்வின்
விடை:
இ) ஜேம்ஸ் குக்

Question 9.
வெள்ளைக் கண்டம் என அழைக்கப்படுவது
அ) ஆஸ்திரேலியா
ஆ) அண்டார்டிகா
இ) தென் அமெரிக்கா
ஈ) வட அமெரிக்கா
விடை:
ஆ) அண்டார்டிகா

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 10.
ஆஸ்திரேலியா கண்டத்தை இரு சம பாகங்களாகப் பிரிப்பது
அ) புவிநடுக்கோடு
ஆ) கடகரேகை
இ) மகரரேகை
ஈ) ஆர்டிக் வட்டம்
விடை:
இ) மகரரேகை

Question 11.
ஆப்பிரிக்காவின் ………….. உலகின் பெரும் மருந்தகம் என்று அழைக்கப்படுகின்றன.
அ) வெப்ப மண்டல மழைக்காடுகள்
ஆ) சஹாரா
இ) பாபோ மரம்
ஈ) சாஹேல்
விடை:
அ) வெப்ப மண்டல மழைக்காடுகள்

Question 12.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி
அ) ஆல்பர்ட் ஏரி
ஆ) எட்வர்ட் ஏரி
இ) கிவ் ஏரி
ஈ) விக்டோரியா ஏரி
விடை:
ஈ) விக்டோரியா ஏரி

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
உலகின் இரண்டாவது பெரிய கண்டம் …………………………
விடை:
ஆப்பிரிக்கா

Question 2.
மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலை சகாரா பாலைவனத்திலிருந்து பிரிப்பது …………………..
விடை:
அட்லஸ் மலை

Question 3.
உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ……………… ஏரி ஆகும்.
விடை:
சுப்பீரியர்

Question 4.
தென் ஆப்பிரிக்காவின் அரை வறண்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் செம்மறி ஆடு வளர்ப்பு …………… என்று அழைக்கப்படுகிறது.
விடை:
காரூஸ்

Question 5.
ஆப்பிரிக்க ஆறுகளின் தந்தை என அழைக்கப்படுவது ……………..
விடை:
நைல் நதி

Question 6.
தென் ஆப்பிரிக்காவின் வாழ்வாதார நதி எனப்படுவது ……………
விடை:
ஜாம்பசி நதி கண்ட

Question 7.
ங்களில் மிகச்சிறியது …………………
விடை:
ஆஸ்திரேலியா

Question 8.
ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மலைக்காடுகள் …………… என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
புவியின் அணிகலன்

Question 9.
உலகில் இரண்டாவது மக்கள் தொகையைக் கொண்ட கண்டம் …………….
விடை:
ஆப்பிரிக்கா

Question 10.
ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு – ………………….
விடை:
நைஜீரியா

Question 11.
ஆஸ்திரேலியாவின் தலைநகர் ………………….
விடை:
கான்பெரா

Question 12.
உலகின் மிகப்பெரிய ஒற்றை சிற்ப பாறை ………………….
விடை:
அயர்ஸ் பாறை (அ) உலுரு பாறை

Question 13.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாலைவனம் …………………..
விடை:
பெரிய விக்டோரியா பாலைவனம்

Question 14.
ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நதி ……………….
விடை:
முர்ரே நதி

Question 15.
ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு …………………
விடை:
கங்காரு

Question 16.
ஆப்பிள் தீவு எனப்படுவது ………………
விடை:
டாஸ்மேனியா

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 17.
ஆஸ்திரேலியாவின் பணப்பயிர் எனப்படுவது ………………….
விடை:
ஆட்டு உரோமம்

Question 18.
அண்டார்டிகாவிலுள்ள ……………. பனியாறு உலகின் மிகப்பெரிய பனியாறாகும்.
விடை:
லாம்பர்ட்

Question 19.
கடல் வாழ் உயிரினங்களில் மிகப்பெரியது ………………
விடை:
நீலத்திமிங்கலம்

Question 20.
ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் ……………………
விடை:
கனிமங்கள்

Question 21.
சாஹேல் என்றால் ……………. அல்லது ………………. என்று பொருள்படும்.
விடை:
எல்லை, விளிம்பு

Question 22.
இருண்ட கண்டம் எனப்படுவது ………………..
விடை:
ஆப்பிரிக்கா

Question 23.
நைல் நதியின் நன்கொடை எனப்படுவது ……………..
விடை:
எகிப்து

Question 24.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் மிகப்பெரிய பனித் தொகுப்பு ………………
விடை:
அண்டார்டிகா

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 8

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : ஆஸ்திரேலியாவின் கிழக்கு உயர் நிலங்கள் பெரும்பரப்பு மலைத்தொடர் என்றும் அழைக்கப்படுகிறது.
காரணம் : இவை ஆஸ்திரேலியாவை வடக்கு தெற்காகப் பிரிக்கின்றன.

அ) கூற்றும், காரணமும் தவறு
ஆ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றினை விளக்குகிறது.
இ) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை .
ஈ) கூற்று சரி, காரணம் தவறு.
விடை:
ஈ) கூற்று சரி, காரணம் தவறு.

Question 2.
கூற்று : ஆஸ்திரேலியாவின் ஆறுகளில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
காரணம் : ஆஸ்திரேலியாவின் அனைத்து பகுதிகளும் ஆண்டு முழுவதும் கனமழை பெறுகிறது.

அ) கூற்றும், காரணமும் தவறு
ஆ) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றினை விளக்குகிறது.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
அ) கூற்றும், காரணமும் தவறு

V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
ஆப்பிரிக்கா இருண்ட கண்டம் எனப்படுவதேன்?
விடை:
ஆப்பிரிக்காவின் உட்பகுதியின் பெரும்பகுதியின் தன்மை குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. எனவே ஆப்பிரிக்கா ஒரு இருண்ட கண்டம்’ என்றழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 2.
ஆப்பிரிக்க நாடுகளை புவியியல் அமைவிட அடிப்படையில் வகைப்படுத்துக.
விடை:

  • மேற்கு ஆப்பிரிக்கா
  • வட ஆப்பிரிக்கா
  • மத்திய ஆப்பிரிக்கா
  • கிழக்கு ஆப்பிரிக்கா
  • தென் ஆப்பிரிக்கா

Question 3.
நைல் நதி பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • உலகின் மிக நீளமான நதி நைல் ஆகும்.
  • நைல் நதி எகிப்தில் இல்லையெனில் இந்நாடு பாலைவனமாக இருந்திருக்கும்.
  • வெள்ளை நைல் மற்றும் நீல நைல் ஆகியவை நைல் நதியின் துணை ஆறுகளாகும்.
  • இவ்விரண்டும் சூடானிலுள்ள கார்ட்டும் என்ற இடத்தில் இணைந்து நைல் நதியைத் தோற்றுவிக்கின்றன.
  • நைல் நதி மத்தியத்தரைக்கடலில் கலக்கிறது.
  • இது ஆப்பிரிக்க ஆறுகளின் தந்தை எனப்படுகிறது.

Question 4.
புவி நடுக்கோட்டுக் காலநிலை பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • காங்கோ வடிநிலம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க உயர்நிலங்களில் புவி நடுக்கோட்டுக் காலநிலை நிலவுகிறது.
  • இங்கு ஆண்டு முழுவதும் வெப்பம் மற்றும் மழைப்பொழிவு இரண்டும் மிகுந்து காணப்படும்.

Question 5.
ஆப்பிரிக்காவின் கனிம வளம் பற்றி ஒரு விளக்கம் தருக.
விடை:

  • ஆப்பிரிக்கா, சில கனிம வளங்களை அதிகம் கொண்டுள்ளது.
  • தென் ஆப்பிரிக்கா, காங்கோ, போஸ்ட்வானா, சியராலியோன் மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளில் வைரச் சுரங்கங்கள் காணப்படுகின்றன.
  • கிம்பர்லி ஒரு முக்கியமான வைர உற்பத்தி மையமாகும்.
  • அங்கோலா, நைஜீரியா, காபன் மற்றும் காங்கோ நாடுகளில் அதிக எண்ணெய் வளங்கள் காணப்படுகின்றன.
  • தென் ஆப்பிரிக்கா, நமீபியா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் கானா ஆகிய நாடுகளில் தங்கம் காணப்படுகிறது.
  • குரோமியம், கோபால்ட், தாமிரம், இரும்பு தாது, மக்னீசியம், துத்தநாகம் மற்றும் நிக்கல் ஆகியவையும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்படுகின்றன.

Question 6.
ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து அமைப்புகள் பற்றி கூறு.
விடை:

  • ஆஸ்திரேலியாவில் பல வகையான போக்குவரத்து அமைப்புகள் காணப்படுகின்றன.
  • இந்நாடு சாலைப்போக்குவரத்தை பெரிதும் நம்பியுள்ளது.
  • இந்நாட்டில் 30க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன.
  • இந்நாட்டின் நகரங்களில் பயணிகள் இரயில் போக்குவரத்து நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.

Question 7.
அண்டார்டிகாவின் தாதுவளம் பற்றி உமக்கு என்ன தெரியும்?
விடை:
அண்டார்டிகா கண்டத்தில் தங்கம், பிளாட்டினம், நிக்கல், தாமிரம் மற்றும் பெட்ரோலியம் நிறைந்து இருக்கலாம் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குரோமியம், ஈயம், மாலிப்டினம், தகரம், யுரேனியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை இருப்பதற்கான தடயங்கள் காணப்படுகின்றன.

மேலும் வெள்ளி, பிளாட்டினம், இரும்புத்தாது, கோபால்ட், மாங்கனீசு, டைட்டானியம் ஆகியவை இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

Question 8.
நீர்ச்சந்தி என்றால் என்ன?
விடை:
இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய நீர்ப்பகுதி, நீர்ச்சந்தி எனப்படுகிறது.

Question 9.
நிலச்சந்தி என்றால் என்ன?
விடை:
இரு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய பகுதி மற்றும் இருநீர்ப் பகுதியைப் பிரிப்பது நிலச்சந்தி எனப்படுகிறது.

Question 10.
வளைகுடா என்றால் என்ன?
விடை:
வளைகுடா என்பது நிலப்பரப்பை ஊடுருவி நீண்டு காணப்படும் கடல் நீர்ப்பரப்பு ஆகும்.

VI. வேறுபடுத்துக

Question 1.
வெப்பமண்டல பருவக்காற்றுக் காலநிலை மற்றும் மித வெப்ப மண்டலக் காலநிலை.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 9

Question 2.
புவி நடுக்கோட்டுக் காலநிலை மற்றும் மத்திய தரைக்கடல் காலநிலை.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 10

VII. காரணம் கூறு

Question 1.
கிழக்கு ஆப்பிரிக்க உயர் நிலங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது.
விடை:
இப்பகுதி வளமான புல்வெளிகள், காடுகள், நீரோடைகள் மற்றும் நீர் வீழ்ச்சிகள் போன்ற இயற்கை காட்சிகளைக் கொண்டுள்ளது. இம்மலைப் பகுதிகளில் காணப்படும் பனி சூழ்ந்த காலைப்பொழுதும், மலைத்தென்றலும் மிகவும் இனிமையானவை. இவை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்கின்றன.

Question 2.
அண்டார்டிகாவில் உறைநிலைக் காலநிலை நிலவுகிறது.
விடை:
அண்டார்டிகா புவிநடுக்கோட்டிற்கு வெகு தொலைவில் அமைந்துள்ளது. இதனால் உறைநிலைக் காலநிலை நிலவுகிறது.

Question 3.
அண்டார்டிகா கண்டத்தில் பெரிய தாவரங்கள் எதுவும் காணப்படவில்லை.
விடை:
அண்டார்டிகா கண்டத்தில் வெப்பநிலையானது ஆண்டு முழுவதும் உறைநிலைக்குக் கீழே இருப்பதால் தாவரங்கள் காணப்படவில்லை .

VIII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

Question 1.
ஆப்பிரிக்காவின் போக்குவரத்து அமைப்பினை விவாதி.
விடை:
ஒரு பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து முக்கிய பங்கினை வகிக்கிறது. பாதகமான இயற்கை நிலத்தோற்ற அமைப்பும், மந்த பொருளாதார வளர்ச்சியும் ஆப்பிரிக்க நாடுகளின் போக்குவரத்து வளர்ச்சியைப் பாதிப்படையச் செய்கின்றன.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா)

நிலவழிப் போக்குவரத்து:
பாலைவனம் மற்றும் அடர்ந்த காடுகள் மிகுந்துள்ளதால் சாலைகள் மற்றும் இருப்புப் பாதைகளை அமைப்பது மிகவும் கடினம். இது பெரிய தடையாக உள்ளது.

தென் ஆப்பிரிக்கா, கென்யா, எகிப்து, லிபியா, மொராக்கோ, மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் ஓரளவிற்கு சாலை மற்றும் இருப்புப்பாதை போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளன.

நீர்வழிப் போக்குவரத்து:
ஆப்பிரிக்காவின் கடல் போக்குவரத்துப் பாதைகள் ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றோடு இணைந்துள்ளன.

டர்பன், தர்-இ-சலாம், மொஹாபு, அலெக்சாந்திரியா, கேப்டவுன், அல்ஜியஸ் மற்றும் அபிட்ஜன் ஆகியவை முக்கிய துறைமுகங்களாகும்.

வான்வழிப் போக்குவரத்து:
வான்வழிப் போக்குவரத்து ஆப்பிரிக்காவின் முக்கிய தலைநகரங்களையும் உலகின் பிற பகுதிகளையும் இணைக்கிறது. கெய்ரோ, ஜோகன்னஸ்பர்க், நைரோபி, டாக்கா, அடிஸ் அபாபா, காஸாபிளாங்கா, டர்பன் ஆகியவை முக்கிய பன்னாட்டு விமான நிலையங்களாகும்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 7 கண்டங்களை ஆராய்தல் (ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா) 11

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

8th Social Science Guide இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?
அ) கல்லிருந்து சிலையைச் செதுக்குதல்
ஆ) கண்ணாடி வளையல் உருவாக்குதல்
இ) பட்டு சேலை நெய்தல்
ஈ) இரும்பை உருக்குதல்
விடை:
ஈ) இரும்பை உருக்குதல்

Question 2.
____________ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.
அ) நெசவு
ஆ) எஃகு
இ) மின்சக்தி
ஈ) உரங்கள்
விடை:
அ) நெசவு

Question 3.
கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் __________
அ) பம்பாய்
ஆ) அகமதாபாத்
இ) கான்பூர்
ஈ) டாக்கா
விடை:
இ) கான்பூர்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 4.
இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன ?
அ) மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
ஆ) எழுத்தறிவின்மையைக் குறைத்தல்
இ) வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்
ஈ) பெண்களுக்கு அதிகாரமளித்தல்
விடை:
இ) வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்

Question 5.
இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது?
அ) ஆட்சியாளர்களின் ஆதரவின்மை
ஆ) இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
இ) இந்தியாவின் தொழிற்துறை கொள்கை
ஈ) பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை
விடை:
இ) இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
……………………… இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
விடை:
கைவினைப் பொருட்கள்

Question 2.
தொழிற்புரட்சி நடைபெற்ற இடம் ………………..
விடை:
இங்கிலாந்து

Question 3.
அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …………………
விடை:
1839

Question 4.
கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் …………….. இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.
விடை:
ரிஷ்ரா

Question 5.
……………….. ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது.
விடை:
சூயஸ் கால்வாய்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
இந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது.
விடை:
சரி

Question 2.
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 3.
நவீன முறையில் முதன்முதலாக இரும்புஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது.
விடை:
தவறு

Question 4.
1948 ஆம் ஆண்டு தொழிலக கொள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது.
விடை:
தவறு

Question 5.
பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்குச் சான்றாக உள்ளது.
விடை:
தவறு

V. சரியான கூற்றை கண்டுபிடி.

Question 1.
பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்துக் குறியிடவும் :
i) எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து’.
ii) இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது.
iii) சௌராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது.
iv) சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவானது.

அ) i மற்றும் ii சரி
ஆ) ii மற்றும் iv சரி
இ) iii மற்றும் iv சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஆ) ii மற்றும் iv சரி

Question 2.
கூற்று : இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர்.
காரணம் : பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்
ஆ) கூற்று சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்றும் காரணமும் சரி ,
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்

Question 3.
பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாதது ஒன்று எது?
அ) பெர்னியர் – ஷாஜகான்
ஆ) பருத்தி ஆலை – அகமதாபாத்
இ) TISCO – ஜாம்ஜெட்பூர்
ஈ) பொருளாதார தாரளமயமாக்கல் – 1980
விடை:
ஈ) பொருளாதார தாராளமயமாக்கல் – 1980

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
இந்தியாவின் பாரம்பரிய கைவினை பொருட்களின் தொழிற்சாலைகள் யாவை?
விடை:
இந்தியாவின் பாரம்பரிய கைவினை பொருட்கள் தொழிற்சாலைகள் :

  • நெசவு
  • மரவேலை
  • தந்தவேலை
  • மதிப்புமிக்க கற்களை வெட்டுதல்
  • தோல்
  • வாசனை மரங்களில் வேலைபாடுகள் செய்தல்
  • உலோக வேலை
  • நகைகள் செய்தல்

Question 2.
செல்வச் சுரண்டல் கோட்பாடு பற்றி எழுதுக.
விடை:
செல்வச் சுரண்டல் கோட்பாடு :
தாதாபாய் நௌரோஜி. “ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 3.
பெரிய அளவில் நெசவு உற்பத்திக்கு பயன்படுத்திய கண்டுபிடிப்புகளின் பெயர்களை எழுது.
விடை:
பெரிய அளவில் நெசவு உற்பத்திக்கு பயன்படுத்திய கண்டுபிடிப்புகள் :

  • காட்டன் ஜின்
  • பறக்கும் எறிநாடா
  • நூற்கும் ஜென்னி
  • நீராவி

Question 4.
இயந்திரம் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) :
இந்தியாவில் உள்ள ஒரு வணிக சங்கம். CII ஓர் அரசு சாரா, இலாப நோக்கமற்ற, தொழிற்துறை வழி நடத்துதல் மற்றும் தொழிற்துறையை நிர்வாகிக்கும் அமைப்பு.

1985ல் நிறுவப்பட்டது. தனியார் மற்றும் பொதுத்துறைகளை உள்ளடக்கிய SME மற்றும் MNC (சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள்) ஆகியவற்றிலிருந்து சுமார் 9000 உறுப்பினர்கள் உள்ளனர்.

Question 5.
தொழில்மயம் அழிதல் என்றால் என்ன?
விடை:
தொழில்மயம் அழிதல் :

  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியத் தொழிற்துறையானது வீழ்ச்சியின் காலத்தைச் சந்தித்தது.
  • பாரம்பரிய இந்திய கைவினைத் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் வருமானத்தின் வீழ்ச்சி ஆகியன தொழில்மயமழிதல் எனப்படுகிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
இந்தியத் தொழில்மயம் அழிதலுக்கு பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை எவ்வாறு காரணமானது?
விடை:
இந்திய தொழில்மயம் அழிதலுக்கு காரணமான பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை :
இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அனைத்து கொள்கைகளும் இந்திய உள்நாட்டு தொழில்களின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

கிழக்கிந்தியக் கம்பெனியால் பின்பற்றப்பட்ட தடையில்லா வாணிபக் கொள்கை, இந்திய வர்த்தகர்கள் தங்கள் கொருட்களை சந்தை விலைக்கு குறைவாக விற்க கட்டாயப்படுத்தியது. பல கைவினைஞர்கள் தங்கள் மூதாதையர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட கைவினைத் திறமைகளை கைவிடவும் கட்டாயப்படுத்தியது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் மலிவான விலையில் இந்திய தயாரிப்பு பொருட்களை பெருமளவுக்கு வாங்கி மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் லாபத்திற்கு விற்க வேண்டும் என்பதாகும். இது இந்திய பாரம்பரிய தொழில்களை வெகுவாக பாதித்தது.

இந்தியாவின் வர்த்தக நலன்களுக்கெதிரான பாதுகாப்பு கட்டணங்களின் கொள்கையை ஆங்கிலேயர்கள் பின்பற்றினர். பிரிட்டனில் இந்தியப் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்பட்டன. இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட ஆங்கிலப் பொருட்களுக்கு பெயரளவில் வரி விதிக்கப்பட்டன.

Question 2.
தோட்டத் தொழில்கள் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
தோட்டத் தொழில்கள் :
தோட்டத் தொழில் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டது. தோட்டத் தொழில் முதன் முதலில் ஐரோப்பியர்களை ஈர்த்தது. பெரிய அளவில் வேலைகளை வழங்க முடிந்தது. பிரிட்டிஷ் சமுதாயத்தால் அதிகரித்து வரும் தேநீர், காபி மற்றும் கருநீலச் சாயம் (இண்டிகோ) ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.

அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் 1839 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதே நேரத்தில் காபி தோட்டமும் தொடங்கப்பட்டது. தேயிலைத் தோட்டம் கிழக்கிந்தியப் பகுதிகளில் மிக முக்கியமான தொழிலாக இருந்தது போல காபி தோட்டமும் தென்னிந்தியாவின் நடவடிக்கைகளிள் மையமாக மாறியது.

மூன்றாவது முக்கிய தோட்டத் தொழிலான சணல் பல தொழிற்சாலைகள் உருவாக வழிவகுத்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஊழியர்கள் பலரால் இந்தத் தொழில்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன.

Question 3.
1991 ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு தொழிற்துறையின் வளர்ச்சியை விளக்குக.
விடை:
1991 சீர்திருத்தங்களுக்குப் பிறகு தொழிற்துறையின் வளர்ச்சி :

  • 1991 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. தொழிற் துறையின் செயல்திறனை மேம்படுத்த இந்தியா ஒரு முக்கியமான முடிவை எடுத்தது.
  • 10வது மற்றும் 11வது ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.
  • தொழிற்துறை உரிமத்தை ஒழித்தல், விலைக்கட்டுப்பாடுகளை நீக்குதல், சிறு தொழில்களுக்கான கொள்கைகளை நீர்த்து போகச் செய்தல் மற்றும் ஏகபோக சட்டத்தின் மாயயை ஒழித்தல் ஆகியவை இந்தியத் தொழிற்துறை செழிக்க உதவியது.
  • புதிய பொருளாதார கொள்கை வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறது.

VIII. உயர் சிந்தனை வினா

எவ்வாறு கைவினைப்பொருட்களும், இயந்திர தயாரிப்புப் பொருட்களும் வேறுபடுகின்றன.
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 2

X. செயல் திட்டம் மற்றும் செயல்பாடுகள்

Question 1.
உனது மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் பெயர்களை எழுதி வேளாண்மை தொழிற்சாலை மற்றும் வனப்பொருட்கள் தொழிற்சாலை ஆகியவைகளை வகைப்படுத்தவும்.
விடை:
தமிழக தொழிலகங்கள்
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 3

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 2.
தொழிலக முன்னேற்றத்தால் காற்று, நீர், நிலம் ஆகியவை எவ்வாறு மாசுபடுகிறது என்பதை திட்ட செயல்முறை மூலம் தயாரிக்கவும். (மாணவர்களுக்கானது)

Question 3.
விளக்க காட்சியின் மூலம் இந்தியாவில் தொழிலக வளர்ச்சியினால் ஏற்படும் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தவும். (மாணவர்களுக்கானது)

8th Social Science Guide இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
……………….. களின் காலகட்டத்தை தொழிற்துறையின் மீட்பு காலமாகக் கருதலாம்.
அ) 1960
ஆ) 1970
இ) 1980
ஈ) 1990
விடை:
இ) 1980

Question 2.
……………….. ஆம் ஆண்டில் ரயில்வேயின் நீளம் 2573 கி.மீ
அ) 1861
ஆ) 1886
இ) 1907
ஈ) 1914
விடை:
அ) 1861

Question 3.
………………. காரணமாக பருத்தி ஆலைகள் அதிகரித்தன.
அ) உப்பு சத்தியாக்கிரகம்
ஆ) அஹிம்சை இயக்கம்
இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஈ) சுதேசி இயக்கம்
விடை:
ஈ) சுதேசி இயக்கம்

Question 4.
முதல் முறையாக நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்ட இடம் …………….
அ) ஜாம்ஷெட்பூர்
ஆ) குல்டி
இ) பிலாய்
ஈ) டாடாநகர்
விடை:
ஆ) குல்டி

Question 5.
………………………. ஆலைகள் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு சொந்தமானவையாக இருந்தன.
அ) சணல்
ஆ) பருத்தி
இ) நெசவு
ஈ) அரிசி
விடை:
அ) சணல்

Question 6.
……………………… நடுப்பகுதியில் இந்தியாவில் தொழில்மயமாக்கலின் செயல்பாடு தொடங்கியது.
அ) 18ம் நூற்றாண்டின்
ஆ) 17ம் நூற்றாண்டின்
இ) 19ம் நூற்றாண்டின்
ஈ) 16ம் நூற்றாண்டின்
விடை:
இ) 19ம் நூற்றாண்டின்

Question 7.
…………………….. ஆட்சி இந்தியாவை தங்கள் தயாரிப்பு பொருட்களுக்கான சந்தையாக மாற்றியது
அ) பிரிட்டிஷ்
ஆ) பிரெஞ்சு
இ) ஜப்பானிய
ஈ) சீன
விடை:
அ) பிரிட்டிஷ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மணி தயாரிக்கப்படும் உலோகமான …………. சௌராஷ்டிரா பெயர் பெற்றது
விடை:
வெண்கலம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 2.
இந்தியாவின் பழமையான தொழில் ………………….. தொழிலாகும்
விடை:
நெசவு

Question 3.
கிழக்கிந்தியக் கம்பெனியால் பின்பற்றப்பட்ட கொள்கை ………. கொள்கை
விடை:
தடையில்லா வாணிபக்

Question 4.
இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ஆங்கிலேய பொருட்களுக்கு ………………. மட்டுமே வரி விதிக்கப்பட்டன.
விடை:
பெயரளவில்

Question 5.
19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியத் தொழிற்துறையானது ……………… ச் சந்தித்தது.
விடை:
வீழ்ச்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 4

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
மூன்றாவது முக்கிய தோட்டத் தொழிலான சணல் பல தொழிற்சாலைகள் உருவாக வழிவகுத்தது.
விடை:
சரி

Question 2.
பருத்தி ஆலைகள் பம்பாய் மற்றும் அகமதாபாத்தில் ஏற்படுத்தப்பட்டன.
விடை:
சரி

Question 3.
சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இங்கிலாந்துக்குமான தூரத்தைக் குறைத்தது
விடை:
தவறு

Question 4.
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு ஓர் அரசு சார்பு சங்கம்
விடை:
தவறு

Question 5.
2001 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
விடை:
தவறு

V. சரியான கூற்றை கண்டுபிடி.

Question 1.
பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்து குறியிடவும் :
i) இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஒரு சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளன.
ii) கைவினைப் பொருட்கள் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்தன.
iii) இந்தியக் கிராமங்களில் கைவினைத் தொழில் முதல் பெரிய வேலைவாய்ப்பாக இருந்தது.
iv) மஸ்லின் ஆடைகளுக்கு டாக்கா புகழ்பெற்றது.

அ) i மற்றும் ii சரி
ஆ) ii மற்றும் iii சரி
இ) i, ii மற்றும் iv சரி
ஈ) i, iii மற்றும் iv சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iv சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 2.
கூற்று : தோட்டத் தொழில் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டது.
காரணம் : தோட்டத் தொழில் பெரிய அளவில் வேலைகளை வழங்க முடிந்தது மேலும் அதிகரித்து வரும் தேநீர், காபி ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்.
ஆ) கூற்று சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்றும் காரணமும் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்

Question 3.
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?
அ) பெர்னியர் – ஷாஜஹான்
ஆ) டவேர்னியர் – பிரெஞ்சு நாட்டு பயணி
இ) பாலிகன்ஜ் – முதல் காகித ஆலை
ஈ) நௌரோஜி – இரும்பு மற்றும் எஃகு
விடை:
ஈ) நௌரோஜி – இரும்பு மற்றும் எஃகு

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
உலகப் புகழ் பெற்ற “டாக்கா மஸ்லின்” குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
டாக்கா மஸ்லின் :

  • கி.மு. 2000 ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் மிகச் சிறந்த தரம் வாய்ந்த இந்திய மஸ்லின் ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • 50 மீட்டர் அளவு கொண்ட மெல்லிய இந்த மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடாலம்.

Question 2.
தொழிலகங்களை வகைப்படுத்துக.
விடை:
தொழிலக வகைப்பாடு :

  • மூலப்பொருட்களின் அடிப்படை – வேளாண் அடிப்படை – கனிம அடிப்படை
  • பங்களிப்பின் அடிப்படை – அடிப்படை தொழில்கள் – முக்கிய தொழில்கள்
  • தொழில் உரிமத்தின் அடிப்படை – பொதுத்துறை – தனியார் துறை – கூட்டுறவுத் துறை

Question 3.
‘நாம் தற்சார்பை அடைந்துள்ளோம்’ – நிறுவுக.
விடை:
தற்சார்புடைமை :

  • தற்சார்பு இலக்கை அடைந்திருப்பது தொழிற்துறை வளர்ச்சியின் மற்றொரு சாதகமான அம்சமாகும்.
  • இயந்திரங்கள், ஆலைகள் மற்றும் இதர தளவாடங்கள் உற்பத்தியில் நாம் தற்சார்பினை அடைந்துள்ளோம். தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான தளவாடங்களின் பெரும்பகுதி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

Question 4.
1950 – 1965 காலகட்டத்தில் இந்தியாவின் தொழில் வளர்ச்சி குறித்து எழுதுக.
விடை:
தொழில்துறை வளர்ச்சி (1950 – 1965) :
இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான நுகர்வோர் பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டன. தொழிற்துறை பலவீனமான உள்கட்டமைப்புடன் வளர்ச்சியடையாமல் இருந்தது.

மலதனம் பொருட்களின் வளர்ச்சியில் இக்காலகட்டம் கவனம் செலுத்தியது. இதன் விளைவாக உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஒரு துரிதமான வளர்ச்சியைக் கண்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 5.
நவீன தொழிலகங்களின் தொடக்கம் குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
நவீன தொழிலகங்களின் தொடக்கம் :

  • நவீன தொழிலகங்களின் தொடக்கம் முக்கியமாக சணல், பருத்தி, எஃகு தொழில்களின் வளர்ச்சியுடன் தொடர்புடையது.
  • நிலக்கரி சுரங்கத் தொழில் வளர்ச்சி குறிப்பிட்ட அளவில்தான் இருந்தது.
  • ரயில்வே மற்றும் சாலைகளின் வளர்ச்சி வேகப்படுத்தப்பட்ட பின் தொழில் மயமாக்கல் தொடங்கியது.
  • உலகப்போர்களுக்குப்பின் இரசாயனம், இரும்பு மற்றும் எஃகு சர்க்கரை, சிமெண்ட், கண்ணாடி மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற தொழில்கள் உத்வேகம் பெற்றன.

VII. பின்வருவனவற்றிற்கு விரிவான விடையளி

Question 1.
இந்தியாவில் பிரிட்டிஷாரின் வெற்றியானது எவ்வாறு சுயச்சார்புடன் இருந்த இந்திய பொருளாதாரத்தை காலனித்துவ பொருளாதாரமாக மாற்றியது?
விடை:
இந்தியப் பொருளாதாரம் (சுயச்சார்பு) காலனித்துவ பொருளாதாரமாக மாறுதல் :

பூர்வீக ஆட்சியாளர்கள், உயர் குடியினர் மற்றும் நிலக்கிழார்கள் இந்திய நிலப்பகுதிகளை பிரிட்டிஷார் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றி கொண்டதால் தங்கள் அதிகாரத்தையும் செல்வ வளத்தையும் இழந்தனர்.

அரசவையில் நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்ட பொருட்களை காட்சிப்படுத்துவதும் பிற சடங்கு சம்பிரதாயங்களும் மறைந்தன. இதனால் பூர்வீக ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்ட கைவினைஞர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்து ஏழைகளாயினர்.

பல தலைமுறைகளாக தங்கள் கைவினைத் தொழிலை மட்டுமே மேற்கொண்ட இந்திய கைவினைஞர்கள் மற்ற தொழில்களுக்கான திறமைகளை கொண்டிருக்கவில்லை. எனவே அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வயல்வெளிகளில் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.

விவசாயத்தின் மீது இம்மாற்றம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது. தகுதிக்கேற்ற வேலையின்மை அதிக அளவில் விவசாயத் தொழிலில் ஏற்பட்டது.

விவசாயமும் வணிகப் பயிர்களுக்கு மாறியதால் இந்திய வேளாண்சார்ந்த தொழிலகங்கள் அழிவை நோக்கிச் சென்றன.

பல்வேறு பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் செல்வாக்கு பரவியதால் உள்நாட்டு கைத்தொழில்களின் சிறப்பான காலம் முடிவுக்கு வந்தது. ‘நவீன தொழிலகங்களின் வளர்ச்சி குறித்து எழுதுக.

Question 2.
நவீன தொழிலகங்களின் வளர்ச்சி :
விடை:
2573 கி.மீ ஆக 1861 ல் இருந்த ரயில்வேயின் நீளம் 55,773 கி.மீ ஆக 1914ல் அதிகரித்தது.

சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தை சுமார் 4830 கி.மீ தூ ரமாக குறைத்தது. இது இந்தியாவின் தொழில்மயமாக்கலுக்கு மேலும் உதவியது.

சுதேசி இயக்கத்தின் விளைவாக பருத்தி ஆலைகள் 194 லிருந்து 273 ஆகவும் சணல் ஆலைகள் 36லிருந்து 64 ஆகவும் அதிகரித்தன.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் அதிகாரத்தைப் பலப்படுத்தி ஏராளமான தொழில் முனைவோர்களையும் வெளிநாட்டு மூலதனத்தையும் (குறிப்பாக இங்கிலாந்து) ஈர்த்தனர். அதிக லாபம் ஈட்டும் இந்திய தொழிற்துறைகள் அந்நிய முதலாளிகளை கவர்ந்திழுத்தது.

வேலையாட்களும் மூலப்பொருட்களும் மிகவும் மலிவு. இந்தியாவும் அண்டை நாடுகளும் சந்தையை வழங்க தயாராக இருந்தன.

Question 3.
1956 ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தின்படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?
விடை:
தொழிற்துறை வகைகள் : 1956 தொழில்துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழிற்துறை மூன்று பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அட்டவணை – 1

  • அரசாங்கம் மட்டுமே இவ்வகையான தொழிற்துறைகளை நிர்வகிக்கும்.
  • அணுசக்தி, மின்னணு, இரும்பு மற்றும் எஃகு ஆகியன அவற்றுள் சில.

அட்டவணை – 2
சாலைகள் மற்றும் கடல்போக்குவரத்து, இயந்திரக் கருவிகள், அலுமினியம், நெகி ழி மற்றும் உரங்கள் உள்ளிட்ட ரசாயனங்கள், இரும்பு கலவை மற்றும் குறிப்பிட்ட வகையான சுரங்கங்கள் ஆகியவை அடங்கும்.

அட்டவணை – 3
மீதமுள்ள தொழில்கள் மற்றும் தனியாருக்கு விடப்பட்ட துறைகள் ஆகியன இவ்வகையின் கீழ் அடங்கும்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 5