Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 2 Chapter 3 தாவரங்கள் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 2 Chapter 3 தாவரங்கள்

4th Science Guide தாவரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இலையின் முனைப்பகுதி ____________ ஆகும்.
அ) இலைத்தாள்
ஆ) இலை நுனி
இ) மைய நரம்பு
ஈ) நரம்புகள்
விடை:
ஆ) இலை நுனி

Question 2.
பின்வருவனவற்றில் எது முதன்மை உற்பத்தியாளர்?
அ) தாவரம்
ஆ) விலங்கு
இ) மனிதன்
ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை
விடை:
அ) தாவரம்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 3.
குளிர்காலத்தில் மட்டுமே மலரும் மலர் எது?
அ) மல்லிகை
ஆ) மணிப்பூ
இ) டிசம்பர் பூ
ஈ) கனகாம்பரம்
விடை:
இ) டிசம்பர் பூ

Question 4.
அலங்காரத் தாவரத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) பார்த்தீ னியம்
ஆ) மாங்காய்
இ) விசிறி வாழை
ஈ) நிலக்கடலை
விடை:
இ) விசிறி வாழை

Question 5.
பின்வருவனவற்றுள் எந்தத் தாவரத்தின் மலர் உண்ணக் கூடியது?
அ) காலிபிளவர்
ஆ) உருளைக்கிழங்கு
இ) புதினா
ஈ) முட்டைக்கோஸ்
விடை:
அ) காலிபிளவர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒளிச்சேர்க்கையின் போது ____________ உறபத்தி செய்யப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது.
விடை:
உணவு

Question 2.
பசுந்தாவரங்கள் ____________ நிறமியைக் கொண்டுள்ளன.
விடை:
பச்சையம்

Question 3.
வெங்காயம் தாவரத்தின் ____________ பகுதியாகும்.
விடை:
தண்டுப்

Question 4.
மலரின் ஆண் பகுதி __________ ஆகும்.
விடை:
மகரந்தம்

Question 5.
உணவாகப் பயன்படும் விதைக்கு ஓர் எடுத்துக்காட்டு _______________
விடை:
அரிசி

III. ஓரிரு வார்த்தையில் விடையளி.

Question 1.
தாவரத்தின் பெண் பகுதி எது?
விடை:
சூலகம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 2.
உணவாகப் பயன்படும் ஏதேனும் ஓர் இலையின் பெயரை எழுதுக.
விடை:
கொத்துமல்லி.

Question 3.
உணவில் நறுமணப் பொருளாகப் பயன்படும் பூ எது?
விடை:
கிராம்பு.

Question 4.
விதைகளில் காணப்படும் சத்துகள் யாவை?
விடை:
கார்போஹைட்ரேட், புரதங்கள்.

Question 5.
கோடைக்காலத்தில் பூக்கும் மலர்களுள் ஏதேனும் ஒன்றின் பெயரை எழுதுக.
விடை:
ரோஜா.

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
இலையின் பாகங்களை எழுதுக.
விடை:
இலைத்தாள், இலை நுனி, மைய நரம்பு, நரம்புகள், இலைக்காம்பு.

Question 2.
ஒளிச்சேர்க்கை – வரையறு.
விடை:
ஒளிச்சேர்க்கை என்பது சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையம் (குளோரோபில்), நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் ஒரு செயல்முறையாகும்.

Question 3.
அயல் தாவரங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
சைக்கஸ், பெரணி, குரோட்டன்ஸ், விசிறி வாழை, படகு அல்லி, கற்றாழை.

Question 4.
நிலத்திற்கு அடியில் காணப்படும் எவையேனும் இரு தண்டிகளின் பெயர்களை எழுதுக.
விடை:
இஞ்சி, உருளைக் கிழங்கு.

Question 5.
நாம் ஏன் பார்த்தீனியம் தாவரத்தைத் தொடக்கூடாது?
விடை:
இத்தாவரத்தின் மகரந்தத் துகள்கள் இயற்கையிலேயே ஒவ்வாமை கொண்டவை. ஆகையால் இவ்வகைச் செடியைத் தொடாமல் இருப்பது நல்லது.

V. விரிவாக விடையளி.

Question 1.
ஓர் இலையின் படம் வரைந்து, எவையேனும் நான்கு பாகங்களைக் குறித்து விளக்குக.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 2

  • இலைத்தாள் : இது இலை யின் பரந்த தட்டையான பகுதியாகும் (லாமினா).
  • இலைநுனி : இது இலை யின் முனைப் பகுதியாகும்.
  • மைய நரம்பு : இலையின் நடுவில் மைய நரம்பு செல்கிறது.
  • நரம்புகள் : இலை நரம்புகள் மைய நரம்பிலிருந்து கிளைகளாகப் பிரிகின்றன. அவை நீர் மற்றும் தாதுக்களைக் கொண்டு செல்லும் வெற்றுக்குழாய்கள் ஆகும். .
  • இலைக்காம்பு : இலைக்காம்பானது இலையை முதன்மைத் தண்டுப் பகுதியுடன் இணைக்கிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 2.
மலரின் படம் வரைந்து அவற்றின் பாகங்களை விவரி.
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 3
அல்லிவட்டம் : அல்லி வட்டம் பிரகாசமான நிறமுடைய மலரின் அடுக்கு ஆகும். தேனீக்கள் அல்லது வண்ணத்துப்பூச்சிகள் போன்ற பூச்சியினங்களை ஈர்ப்பதே இதன் முக்கிய பணியாகும். பூச்சிகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

மகரந்தம் : மகரந்தம் மலரின் மையத்தில் காணப்படுகின்றது. இதில் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தத் துகள்கள் உள்ளன. இது மலரின் ஆண் பாகமாகும். சூலகம் : மலரின் நடுப்பகுதியில் சூலகம் காணப்படுகிறது. சூலகம் மகரந்தத் துகள்களுடன் இணைந்து கனியாக மாறுகிறது. இது மலரின் பெண் பாகமாகும்.

4th Science Guide தாவரங்கள் InText Questions and Answers

பக்கம் 78 சிந்தித்து விடையளி

Question 1.
இலையின் எப்பகுதி கார்பன் டை ஆக்சைடை சேகரிக்கிறது?
விடை:
இலைத்துளைகள்.

Question 2.
இலையின் எப்பகுதி நீரை எடுத்துச் செல்கிறது?
விடை:
இலை நரம்புகள்

பக்கம் 79 சிந்தித்து விடையளி

Question 1.
தாவரங்கள் இல்லாமல் உயிரினங்களால் ஏன் வாழ முடியாது?
விடை:
தாவரங்களால் மட்டுமே உணவைத் தயாரிக்கும் முடியும். பிற உயிரினங்கள் தங்கள் உணவுக்காக தாவரங்களைச் சார்ந்து வாழ்கின்றன. எனவே தாவரங்கள் இல்லாமல் உயிரினங்களால் வாழ முடியாது.

விடையளிப்போம்

அடைப்புக் குறியில் உள்ள எழுத்துகளை ஒழுங்குபடுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் வெளியிடுவது _______________ (ன்சி ஆஜக்)
விடை:
ஆக்சிஜன்

Question 2.
முதல் நிலை உற்பத்தியாளர் என்பது ___________ (ம்ரவதா)
விடை:
தாவரம்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 3.
இலைத்துளைகள் இலையின் ___________ பகுதியில் காணப்படுகின்றன (ழ்கீ).
விடை:
கீழ்

Question 4.
உணவு தயாரித்தலில் ஈடுபடும் நிறமி ______________ (சைம்ச்பய).
விடை:
பச்சையம்

செய்து கற்போம்

இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றை, சூரிய ஒளி படும்படியாகவும், மற்றொன்றை சூரிய ஒளி படாமல் முழுமையாக மூடப்பட்ட பெட்டியிலும் வைக்கவும். இரண்டிலும் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வாருங்கள். ஒரு வாரம் சென்ற பிறகு இரு தொட்டிச் செடிகளையும் உற்று நோக்குங்கள்.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 4
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 5

பக்கம் 81 செய்து கற்போம்

உங்கள் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள பூக்கும் மற்றும் பூவாத் தாவரங்களைப் பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 7

பக்கம் 82 செய்து கற்போம்

பச்சையமற்ற தாவரங்கள் காணப்படும் இடங்களைப் பட்டியலிடுக.
விடை:
அழுகிய மரக்கட்டை, ஈரமான ரொட்டி, விழுந்து கிடக்கும் மரங்கள், அழுகிய உணவுப் பொருள்கள்.

விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
____________ ஒரு பூவாத் தாவரமாகும்.
விடை:
பெரணி

Question 2.
தாவரங்கள் __________ மற்றும் நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
விடை:
மலர்

Question 3.
___________ தாவரங்கள் வாழ்வதற்கும் அவற்றின் உணவைப் பெறவும் மற்ற உயிரினங்களைச் சார்ந்துள்ளன.
விடை:
பச்சையமற்ற

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 4.
ஆட்டோட்ரோப் தாவரங்கள் _____________, ____________ மற்றும் பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்கின்றன.
விடை:
காற்று, சூரிய ஒளி

III. மலரின் பாகங்கள்

நீங்கள் பூக்களைப் பார்த்திருக்கிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் அளிக்க முயற்சிக்கவும்.
Question 1.
உங்களுக்குப் பிடித்த மலர் எது? ___________
விடை:
ரோஜா

Question 2.
உங்களுக்குப் பிடித்த மலரின் நிறம் என்ன? __________
விடை:
சிவப்பு

Question 3.
அதன் வாசனை எப்படி உள்ளது? ______________
விடை:
நறுமணம் மிக்கதாக உள்ளது.

மலரில் காணப்படக்கூடிய நான்கு முக்கிய பாகங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன:
புல்லிவட்டம் : மலரானது மொட்டாக இருக்கும்போது அதனைப் பாதுகாக்கும் வெளிப்புற அடுக்கு புல்லிவட்டம் ஆகும். இது பெரும்பாலும் பச்சை நிறத்தில் காணப்படும்.

அல்லிவட்டம் : அல்லி வட்டம் பிரகாசமான நிறமுடைய மலரின் அடுக்கு ஆகும். தேனீக்கள் அல்லது வண்ணத்துப்பூச்சிகள் போன்ற பூச்சியினங்களை ஈர்ப்பதே இதன் முக்கிய பணியாகும். பூச்சிகள் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.

மகரந்தம் : மகரந்தம் மலரின் மையத்தில் சூலகம் காணப்படுகின்றது. இதில் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தத் துகள்கள் உள்ளன. இது மலரின் ஆண் பாகமாகும்.

சூலகம் : மலரின் நடுப்பகுதியில் சூலகம் காணப்படுகிறது. சூலகம் மகரந்தத் துகள்களுடன் இணைந்து கனியாக மாறுகிறது. இது மலரின் பெண் பாகமாகும்.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 8

பக்கம் 83 விடையளிப்போம்

Question 1.
புல்லிவட்டமானது மலர் மொட்டாக இருக்கும் போது அதனை _______________
விடை:
பாதுகாக்கிறது.

Question 2.
மகரந்தத்தில் _____________ துகள்கள் உள்ளன.
விடை:
மகரந்தத்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 3.
சூலகம் என்பது மலரின் ____________ பகுதியாகும்.
விடை:
பெண்

செய்து கற்போம்

ஆசிரியர்களுக்கான குறிப்பு
சில செம்பருத்திப் பூக்களை வகுப்பறைக்குக் கொண்டு வாருங்கள். அவற்றை மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் கொடுக்கவும். அவற்றைக் கொண்டு மலரின் பாகங்களை அறிமுகப்படுத்துங்கள். அவர்கள் உற்றுநோக்கி உணர்ந்த பின் மலரின் பாகங்கள் குறித்து அவர்கள் கூறுவதைப் பதிவிடச் சொல்லுங்கள். மலரின் பாகங்கள்
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 9
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 10

பக்கம் 86 விடையளிப்போம்

பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.
Question 1.
டிசம்பர் பூ, சம்பங்கி பூ, மணிப்பூ (டியூலிப்)
விடை:
சம்பங்கி பூ

Question 2.
குங்குமப்பூ, டாலியா, ரோஜா
விடை:
ரோஜா

Question 3.
ரோஜா, படகு அல்லி, குரோட்டன்ஸ்
விடை:
ரோஜா

பக்கம் 88 விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
_____________ மலர் உணவாகப் பயன்படுகின்றது.
விடை:
வாழை

Question 2.
உருளைக் கிழங்கின் __________ பகுதி உணவாகப் – பயன்படுகிறது.
விடை:
தண்டுப்

Question 3.
_____________ தாவரம் தண்டுகளில் உணவைச் சேமிக்கின்றது.
விடை:
கரும்பு

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள்

Question 4.
விதைகளில் _________________ மற்றும் ______________ போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
விடை:
கார்போஹைட்ரேட், புரதங்கள்

பக்கம் 89 செய்து கற்போம்

தாவரத்தின் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது என்பதை அறிந்து பட்டியலை நிரப்புக.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 11
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 3 தாவரங்கள் 12

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 2 Chapter 2 நீர் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 2 Chapter 2 நீர்

4th Science Guide நீர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பூமியில் நீர் மிகவும் __________ வளமாகும்.
அ) விலை மதிப்புள்ள
ஆ) திட
இ) வாயு
விடை:
அ) விலை மதிப்புள்ள

Question 2.
நீரானது. ______________ நிலைகளில் காணப்படுகிறது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
விடை:
ஆ) மூன்று

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 3.
நீரானது _____________ வெப்பநிலைக்குக் கீழ் உறைந்து பனிக்கட்டியாக மாறுகிறது.
அ) 10°C
ஆ) 100°C
இ) 0°C
விடை:
இ) 0°C

Question 4.
நீரானது நீராவியாக மாறும் முறை____________ ஆகும்.
அ) சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) உறைதல்
விடை:
ஆ) ஆவியாதல்

Question 5.
சுற்றுப்புறத்திலுள்ள உயிரினங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது எது?
அ) மிதிவண்டி
ஆ) நீர் சுழற்சி
இ) நீரின் மறுசுழற்சி
விடை:
ஆ) நீர் சுழற்சி

II. கோடிட்ட இடங்களைச் சரியான விடைகளால் நிரப்புக.

Question 1.
நீரானது வெப்பப்படுத்தப்படும் போது _______________ ஆக மாறுகிறது. (பனிக்கட்டி / நீராவி)
விடை:
நீராவி

Question 2.
நீரானது _______________ பனிக்கட்டியாக மாறுகிறது (வெப்பப்படுத்துவதால் / உறைவதால்).
விடை:
உறைவதால்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 3.
நீர்த்துளிகள் இணைவதால் _____________ உருவாகும் (மழை மேகம்).
விடை:
மேகம்

Question 4.
நீர் சுழற்சியானது ____________ கிடைப்பதை அதிகரிக்கிறது (நீர்த்தொட்டி / நிலத்தடிநீர்).
விடை:
நிலத்தடி நீர்

Question 5.
______________ மழைநீர் சேகரிப்பு முறைகளுள் ஒன்றாகும் (மேற்கூரை நீர் சேகரிப்பு நீர் சுழற்சி).
விடை:
மேற்கூரை நீர் சேகரிப்பு

III. சரியா அல்லது தவறா என எழுதுக.

Question 1.
பொருள்களின் அனைத்து நிலைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது நீர் ஆகும்.
விடை:
சரி

Question 2.
பூமியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது நீர் சுழற்சி ஆகும்.
விடை:
சரி

Question 3.
வெப்பபடுத்துவதால் நீர் நீராவியாக மாறுவது ஆவியாதல் எனப்படும்.
விடை:
சரி

Question 4.
நமது மூளை தனது நிறையில் 37% நீரைக் கொண்டுள்ளது.
விடை:
தவறு

Question 5.
மேற்கூரை நீர் சேகரிப்புமுறை வேளாண்மையில் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
தவறு

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
நீரின் நிலைகளை எழுதுக.
விடை:
பனிக்கட்டி (திண்மம்), நீர் (திரவம்), நீராவி (வாயு)

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 2.
உறைதல் என்றால் என்ன?
விடை:
ஒரு திரவப் பொருள் குளிர்ச்சியினால் திண்மப் பொருளாக மாறுவது உறைதல் எனப்படுகிறது.

Question 3.
நீர் சுழற்சியில் உள்ள முறைகளை எழுதுக.
விடை:

  1. ஆவியாதல்
  2. சுருங்குதல்
  3. வீழ்படிவாதல்
  4. மீண்டும் கடலை அடைதல்

Question 4.
2001ஆம் ஆண்டில் மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய மாநிலம் எது?
விடை:
தமிழ்நாடு

Question 5.
மழைநீர் சேகரிப்புக் குழி அமைக்கத் தேவையானவை எவை?
விடை:
சிறிய கற்கள், பெருமணல்.

V. விரிவாக விடையளி.

Question 1.
நீர் சுழற்சி என்றால் என்ன? நீர் சுழற்சியின் முக்கியத்துவங்களுள் எவையேனும் மூன்றினை எழுதுக.
விடை:
“ஆவியாதல், சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் போன்ற முறைகளினால் நீரில் ஏற்படும் தொடர்ச்சியான சுழற்சியே நீர் சுழற்சி எனப்படுகிறது.” நீர் சுழற்சியின் முக்கியத்துவம்

  • நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கிறது.
  • பூமியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது.
  • தாவரங்கள் மற்றும் விலங்குகள் முக்கியமாக மனிதர்களுக்கு நீர் கிடைக்கச் செய்கிறது.
  • பூமியில் தொடர்ந்து நீர் காணப்படுவதை உறுதிசெய்ய நீர் சுழற்சி அவசியமாகிறது.

Question 2.
மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன? மழைநீர் சேகரிப்பின் நன்மைகளை எழுதுக.
விடை:
எதிர்காலப் பயன்பாட்டிற்காக மழைநீரைச் சேகரித்து, சேமித்து வைக்கும் முறைக்கு மழைநீர் சேகரிப்பு என்று பெயர். இயற்கையான நீர்நிலைகள் அல்லது செயற்கையான தொட்டியில் மழை நீரானது சேகரிக்கப்படு கிறது. கட்டடங்களின் மேற்கூரையிலிருந்து மழைநீரைச் சேகரிப்பதும் ஒரு வகையான மழைநீர் சேகரிப்பாகும்.

மேற்கூரையிலிருந்து மழைநீரானது குழாய்களின் வழியாகப் பூமிக்குள் செலுத்தப்படுகிறது. நீரானது குழாய்களின் வழியாக கற்களாலும், பெருமணலாலும் நிரப்பப்பட்டுள்ள குழிகளுக்குள் செல்கிறது. இவ்வாறு செல்லும்போது அதிலுள்ள அசுத்தங்கள் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீராக சேகரிக்கப்படுகிறது.

மழைநீர் சேகரிப்பின் பயன்கள்

  • நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.
  • வேளாண்மைக்குப் பயன்படுகிறது.
  • வாழும் உயிரினங்களுக்கு நீர் கிடைக்க வழிவகுக்கிறது.

VI. கீழேயுள்ள படத்திற்கு வண்ணம் தீட்டி தேவையான இடத்தில் கீழ்க்காணும் பெயர்களை எழுதுக.

(சுருங்குதல், ஆவியாதல், நீர் நிலைகள், வீழ்படிவாதல்)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 2

4th Science Guide நீர் InText Questions and Answers

பக்கம் 69 செய்து கற்போம்

கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து அப்பொருள்களின் நிலையை எழுதுக. (திண்மம், திரவம், வாயு)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 4

செய்து கற்போம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களைச் சரியான விடையைக் கொண்டு நிரப்புக.
(திரவம், திண்மம், உருகுதல், உறைதல், குளிர்தல், வெப்பப்படுத்துதல், வாயு)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 6
உனது ஊரிலுள்ள ஏதேனும் இரண்டு நீர்நிலைகளை எழுது. ஆறு, கண்மாய்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

விடையளிப்போம்

Question 1.
பொருள்களின் மூன்று நிலைகளுக்கும் நீர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது ஏன்?
விடை:
இது பூமியில் திண்ம நிலையில் பனிக்கட்டியாகவும், திரவநிலையில் நீராகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது.

பூமியில் பனிக்கட்டி ஆர்ட்டிக் பகுதிகளிலும், நீர் அனைத்து நீர் நிலைகளிலும், நீராவி மேகங்களிலும் உள்ளது. இதனால் நீர் பூமியில் மூன்று நிலைகளிலும் உள்ளது என்பது தெளிவாகிறது.

Question 2.
கீழ்க்காண்பனவற்றுள் எது நீர்மநிலையில் உள்ளது?
மழை / பனிக்கட்டி / பனித்துளி
விடை:
மழை

செய்து கற்போம்

Question 1.
ஒரு தட்டில் நீரை ஊற்றி, அதை உறையவைப்பானில் (freezer) வைக்கவும். சில மணி நேரத்திற்குப் பின் வெளியே எடுக்கவும். நீரில் என்ன மாற்றம் நடைபெற்றிருக்கும்?
விடை:
நீர் பனிக்கட்டி எனும் திண்மமாக உறைந்திருக்கும்.

Question 2.
இப்பொழுது அந்த பனிக்கட்டியை அப்படியே மேசையின் மீது சிறிதுநேரம் வைக்கவும். பனிக்கட்டிக்கு என்ன நிகழ்கிறது?
விடை:
பனிக்கட்டி உருகி நீர் எனப்படும் திரவமாக மாறிவிடுகிறது.

Question 3.
அந்தத் தட்டிலுள்ள நீரை ஒரு கொதிகலனில் ஊற்றவும். வீட்டிலுள்ள பெரியவர்களின் உதவியுடன் அந்த கொதிகலனை வெப்பப்படுத்தவும். நீர் கொதிக்கும்போது கொதிகலனின் வாய்ப்பகுதியை உற்றுநோக்கவும். நீங்கள் பார்ப்பது என்ன?
விடை:
நீர் வெப்பத்தால் நீராவியாக மாறி வாயுவாக வெளி வருகிறது.

பக்கம் 72 சிந்தித்து விடையளி

Question 1.
ஈரமான துணியில் இருக்கும் நீருக்கு என்ன நிகழ்கிறது?
விடை:
இது வெளியில் உள்ள வெப்பத்தால் ஆவியாகி வெளியேறுகிறது.

விடையளிப்போம்

சரியான விடையைத் தேர்வு செய்க.
Question 1.
நீர் சுழற்சியில் ______________
அ) ஆவியாதல் மட்டும் நிகழ்கிறது
ஆ) உறைதல் மட்டும் நிகழ்கிறது
இ) ஆவியாதல் மற்றும் உறைதல் நிகழ்கின்றன
விடை:
இ) ஆவியாதல் மற்றும் உறைதல் நிகழ்கின்றன

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

பக்கம் 73 விடையளிப்போம்

Question 1.
சொற்களிலுள்ள எழுத்துகளைச் சரியாக முறைப்படுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக. (தருங்கல்கு, ஆல்வியாத, டிவீபழ்ல்தவா) ___________, _____________, ________________
விடை:
சுருங்குதல், ஆவியாதல், வீழ்படிவாதல்

Question 2.
வேளாண்மைக்கு நீர் சுழற்சி அவசியமானதா? ____________
விடை:
ஆம்

Question 3.
மனிதர்களுக்கு நீர் சுழற்சி ஏன் அவசியமாகிறது? _______________
விடை:
நீர் சுழற்சியால் மனிதர்கள் உயிர் வாழத் தேவையான நீர் கிடைக்கிறது.

Question 4.
குளிர்பானமுள்ள குவளைகளின் வெளிப்பரப்பில் நீர்த்திவலைகள் தோன்றும் நிகழ்வின் பெயர் என்ன? _____________
விடை:
சுருங்குதல்

பக்கம் 74 விடையளிப்போம்

Question 1.
மழைநீர் சேகரிப்பின் இதர பயன்களைப் பட்டியலிடுக.
விடை:

  1. கோடை காலங்களில் நமக்கு நீர் கிடைக்கிறது.
  2. தாவரங்கள், பிற உயிரினங்கள் வாழத் தேவையான நீர் தொடர்ந்து கிடைக்கிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 2.
உமது பள்ளியில் மழை நீரைச் சேமிக்க சில வழிமுறைகளைக் கூறுக..
விடை:

  1. மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்.
  2. பள்ளிக் கூரையிலிருந்து விழுகின்ற மழை நீரை வீணாக்காமல் தொட்டிக்குள் செலுத்த வேண்டும்.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 2 Chapter 1 உணவு and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 2 Chapter 1 உணவு

4th Science Guide உணவு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இவற்றுள் எந்த உணவை சமைக்காமல் உண்ணலாம்?
அ) இறைச்சி
ஆ) கேரட்
இ) மீன்
ஈ) உருளைக்கிழங்கு
விடை:
ஆ) கேரட்

Question 2.
சமைக்காத உணவு என்பது _____________
அ) துரித உணவு
இ) பச்சையான உணவு
ஆ) ஆரோக்கியமான உணவு
ஈ) சமைத்த உணவு
விடை:
இ) பச்சையான உணவு

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 3.
சூரிய அடுப்பு ___________ மாசுபாட்டைக் குறைக்கிறது.
அ) காற்று
ஆ) நீர்
இ) நிலம்
ஈ) ஒளி
விடை:
அ) காற்று

Question 4.
இவற்றுள் எந்த ஒன்றை ‘உலரவைத்தல்’ முறையில் பாதுகாக்க முடியாது?
அ) நெல்
ஆ) பயறு வகைகள்
இ)மீன்
ஈ) வாழைப்பழம்
விடை:
ஈ) வாழைப்பழம்

Question 5.
நாம் ____________ மூலம் உணவு வீணாவதைத் தவிர்க்கலாம்.
அ) தேவைப்படுவோருக்கு அளிப்பதன்
ஆ) நம் தேவைக்கு மேல் உண்பதன்
இ) அதிகமான உணவை வாங்குவதன்
ஈ) குப்பைத்தொட்டியில் வீசுவதன்
விடை:
அ) தேவைப்படுவோருக்கு அளிப்பதன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_______________ நமக்கு வேலை செய்யவும், விளையாடவும் ஆற்றலைத் தருகிறது. (பச்சையான உணவு / துரித உணவு)
விடை:
பச்சையான உணவு

Question 2.
சமைத்த உணவு எளிதாக _____________ (செரிக்கும் / செரிக்காது).
விடை:
செரிக்கும்

Question 3.
அழுத்த சமையற்கலன் ஒரு ______________ சமையல் பாத்திரமாகும் (நவீன / பழங்கால).
விடை:
நவீன

Question 4.
நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையானது சுத்தமான காற்று, பாதுகாக்கப்பட்ட நீர் மற்றும் _____________ உணவு ஆகும் (துரித / சுகாதாரமான).
விடை:
சுகாதாரமான

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 5.
நாம் இடியாப்பத்தை _______________ முறையில் தயாரிக்கிறோம் (வேக வைத்தல் / நீராவியில் வேக வைத்தல்).
விடை:
நீராவியில் வேக வைத்தல்

III. பொருத்துக.

1. திராட்சை – நவீன பாத்திரம்
2. காய்கறிக்கலவை – உடல்நலமில்லாத போது எடுத்துக்கொள்ளும் உணவு
3. மின் அழுத்த சமையற்கலன் – பழங்கால பாத்திரம்
4. மண்பானை – பச்சை உணவு
5. குறைந்த கொழுப்புள்ள உணவு – சாலட்
விடை:
1. திராட்சை – பச்சை உணவு
2. காய்கறிக்கலவை – சாலட்
3. மின் அழுத்த சமையற்கலன் – நவீன பாத்திரம்
4. மண்பானை – பழங்கால பாத்திரம்
5. குறைந்த கொழுப்புள்ள உணவு – உடல்நலமில்லாத போது எடுத்துக்கொள்ளும் உணவு

IV. சரியா அல்லது தவறா என எழுதுக.

Question 1.
பிரியாணி ஒரு பச்சை உணவு.
விடை:
தவறு

Question 2.
வறுத்தல் என்பது சமையலின் ஒருவகையாகும்.
விடை:
சரி

Question 3.
நம்மால் தோசைக்கல்லில் சோறு சமைக்க முடியும்.
விடை:
தவறு

Question 4.
சூரிய அடுப்பில் சமைப்பதற்கு, சூரிய ஒளி தேவை.
விடை:
சரி

Question 5.
அதிகமான எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வது நம் உடல்நலத்திற்குக் கேடு தரும்.
விடை:
சரி

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
எவையேனும் மூன்று சமைக்கும் முறைகளின் பெயர்களை எழுதுக.
விடை:
வேகவைத்தல், பொரித்தல், வறுத்தல்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
உடல் நலமில்லாதபோது நீங்கள் உண்ணக்கூடிய எவையேனும் இரண்டு உணவுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
தானியக் கஞ்சி, இட்லி

Question 3.
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பச்சை உணவை வரைந்து வண்ணமிடுக.
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 1

Question 4.
உணவுப் பாதுகாப்பு முறைகள் எவையேனும் இரண்டு பற்றி எழுதுக.
விடை:

  1. உப்பில் ஊறவைத்தல்
  2. உலர வைத்தல்

Question 5.
உங்கள் வீட்டில் உணவு வீணாவதை நீங்கள் எவ்விதம் குறைப்பாய்?
விடை:
தேவைப்படும் உணவை மட்டும் எடுத்துக் கொள்வேன். அதிகமாக இருந்தால் பிறருடன் பகிர்ந்து கொள்வேன்.

VI. விரிவாக விடையளி.

Question 1.
எவையேனும் நான்கு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.
விடை:
1. உப்பில் ஊறவைத்தல் : பழங்கள் மற்றும் காய்கறிகள் – போன்றவற்றை எண்ணெய் மற்றும் உப்பில் ஊறவைத்து பயன்படுத்தும் முறைக்கு உப்பில் ஊறவைத்தல் என்று பெயர். எ.கா. ஊறுகாய்.

2. குளிரூட்டுதல் : உணவைப் பாதுகாக்க குறுகிய காலத்திற்கு அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் முறைக்கு குளிரூட்டுதல் என்று பெயர். எ.கா. பழங்கள், காய்கறிகள்.

3. உலர வைத்தல் : உலர்த்துதல் மூலம் உணவில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும் முறைக்கு உலரவைத்தல் என்று பெயர். எ.கா. காய்ந்த மிளகாய்

4. புட்டியில் அடைத்தல் : காற்றுப்புகாத இறுக்கமான புட்டிகளில் உணவினைச் சேமிக்கும் முறைக்கு புட்டியில் அடைத்தல் என்று பெயர். எ.கா.ஜாம்.

Question 2.
எவையேனும் நான்கு சமைக்கும் முறைகளை விவரி.
விடை:
வேக்வைத்தல் : இம்முறையில் உணவுப்பொருளானது கொதிக்கும் நீரில் மூழ்க வைத்து சமைக்கப்படுகிறது. இதனால் உணவுப்பொருளானது மிருதுவாகிறது. எ.கா. அரிசி, முட்டை .

ஆவியில் வேகவைத்தல் : இது பாத்திரத்தில் உணவை வைத்து அதை கொதிக்கும் நீரின்மேல் எழும்பி வரும் நீராவியில் வைத்து சமைக்கும் முறையாகும். எ.கா. இட்லி, இடியாப்பம்.

வறுத்தல் : இம்முறையில் உணவானது ஒரு வறுக்கும் பாத்திரத்தில் வைக்கப்பட்டு மூடிவைக்காமல் சூடாக்கிச் சமைக்கப்படுகிறது. எ.கா. நிலக்கடலை. பொரித்தல் : இது சூடான எண்ணெய்யில் உணவினைச் சமைக்கும் முறையாகும். எ.கா. சிப்ஸ், பூரி.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 3.
சுகாதாரமாகச் சமைக்கும் வழிமுறைகள் எவையெவை?
விடை:

  • சமைக்கும் முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவவேண்டும்.
  • நறுக்குவதற்கு முன்பு காய்கறி மற்றும் பழங்களைக் கழுவவேண்டும்.
  • சமையல் பாத்திரங்கள் மற்றும் கத்திகளைக் கழுவவேண்டும்.
  • அதிக நேரத்திற்கு உணவினைச் சமைக்க வேண்டாம். ஏனெனில் உண வில் உள்ள சத்துகள் அழிக்கப்பட்டுவிடும்.
  • உணவினைச் சமைப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்த வேண்டாம். உணவுப் பொருள்களை அவற்றின் காலாவதி தேதிக்குப்பிறகு பயன்படுத்துவது உடல்நலத்திற்கு நல்லதன்று.

4th Science Guide உணவு InText Questions and Answers

பக்கம் 73 செய்து கற்போம்

கீழ்க்காணும் உணவுப்பொருள்களை வகைப்படுத்துக.
(கேரட், முட்டை, தேங்காய் எண்ணெய், பால், முள்ளங்கி, இறைச்சி, உருளைக்கிழங்கு, தயிர், கத்தரி, வெண்டைக்காய், மீன், முருங்கைக்காய், வெண்ணெய், வெங்காயம், மோர், வெள்ளரிக்காய், நெய்)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 2
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 3

பக்கம் 74 சிந்தித்து விடையளி

எந்தெந்த உணவுப்பொருள்களை சமைக்காமல் சாப்பிடுகிறீர்கள்?
விடை:
காரட், வெள்ளரி, பழங்கள்

பக்கம் 75 விடையளிப்போம்

எவையேனும் ஐந்து பச்சையான மற்றும் சமைத்த உணவுகளை எழுதவும்.
விடை:
அ. பச்சையான உணவு : _____________, _____________, _____________, _____________, _____________
விடை:
காரட், வெள்ளரி, ஆப்பிள், பப்பாளி, மாதுளை

ஆ. சமைத்த உணவு : _____________, _____________, _____________, _____________, _____________
விடை:
சோறு, மீன், இறைச்சி, முட்டை, கீரைகள்

பக்கம் 77 விடையளிப்போம்

Question 1.
உன் வீட்டில் பின்பற்றும் இரண்டு சமையல் முறைகளை – எழுதுக : ___________, ____________
விடை:
வேகவைத்தல், பொரித்தல்

Question 2.
சரியா அல்லது தவறா என எழுதுக.
அ. சமைக்கும் முன் கைகளைக் கழுவ வேண்டும். __________
விடை:
சரி

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

ஆ. காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்கியபின் கழுவ வேண்டும். ________________
விடை:
தவறு

பக்கம் 78 செய்து கற்போம்

கொடுக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படும் சமையல் பாத்திரங்களை எழுதுக.
(கடாய், பானை, அழுத்த சமையற்கலன், தவா, இட்லி குக்கர்)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 4
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 5

விடையளிப்போம்

சரியா அல்லது தவறா என எழுதுக.
Question 1.
முன்பு மக்கள் தங்கள் உணவை அழுத்தச் சமையற்கலனில் சமைத்தனர்.
விடை:
தவறு

Question 2.
சூரிய அடுப்பு எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கிறது.
விடை:
சரி

Question 3.
அழுத்த சமையற்கலன் என்பது சமையல் பாத்திரம் இல்லை.
விடை:
தவறு

பக்கம் 80

பொருத்தமான ஒன்றினைக் குறியீடு (✓) செய்யவும்.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 7

விடையளிப்போம்

ஆம் அல்லது இல்லை என்று எழுதவும்
Question 1.
துரித உணவு உடல்நலத்திற்கு நல்லது. இல்லை
விடை:
இல்லை

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவ வேண்டும்.
விடை:
ஆம்

விவாதிப்போம்

இங்கு நந்தினியின் மதிய உணவுப்பெட்டி உள்ளது.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 8

அ. இதிலுள்ளவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுப்பொருள்களா?
விடை:
இல்லை .

ஆ. ஓர் ஆரோக்கியமற்ற உணவினை நீக்கிவிட்டு, உன் விருப்பப்படி ஆரோக்கியமான ஓர் உணவினைச் சேர்க்க பரிந்துரைக்கவும். மாறுதலுக்கான காரணத்தையும் தருக.
விடை:
இதில் உள்ள சிப்ஸ்’ ஆரோக்கியமற்ற உணவாகும். இதை நீக்கிவிட்டு காய்கறிக் கலவையை (சாலட்) சேர்த்துக் கொள்ளலாம்.

காரணம் : சிப்ஸ் என்பது எண்ணெய்யில் வறுக்கப்பட்ட ஆரோக்கிமற்ற உணவாகும். எனவே இதை நீக்கி விட்டு சத்துக்கள் நிறைந்த காய்கறிக் கலவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சிந்தித்து விடையளி

நீங்கள் நோயுற்றிருக்கும் போது, உங்களுக்கு என்ன வகையான உணவினை உண்ணத் தருவார்கள்?
விடை:
அரிசி அல்லது தானியக் கஞ்சி, இட்லி, பழச்சாறு ஆகியவற்றைத் தருவார்கள்.

பக்கம் 81 விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
_____________ எளிதில் செரிக்கக் கூடிய உணவாகும். (இட்லி / பிரியாணி)
விடை:
இட்லி

Question 2.
நாம் _____________ உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். (துரித / புதிய)
விடை:
துரித

சிந்தித்து விடையளி

Question 1.
வழக்கமாக நீங்கள் உங்களுடைய மதிய உணவை வீணாக்காமல் சாப்பிடுகிறீர்களா? இல்லை எனில், ஏன்?
விடை:
ஆம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
உமது பள்ளியிலும் வீட்டிலும் உணவு வீணாவதைக் குறைக்க, சில வழிகளைப் பரிந்துரைக்கலாமா?
விடை:

  • உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்கான எளிய – வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • உன்னால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அதை மட்டும் எடுத்துக் கொள். மேலும், எடுத்ததைச் சாப்பிட்டுவிடு.
  • அதிகமுள்ள உணவைப் பகிர்ந்து உண்ணலாம்.
  • அதிகமுள்ள உணவை, பசியுடன் இருக்கும் விலங்குகளுக்கு அளிக்கலாம்.

பக்கம் 83 விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
உலகப் பட்டினியால் வாடுவோர் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் ______________
விடை:
மே 28

Question 2.
ஊறுகாய் _______________________ முறையில் பாதுகாக்கப்படுகிறது.
விடை:
உப்பில் ஊற வைத்தல்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 3 வெப்ப இயற்பியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 3 வெப்ப இயற்பியல்

10th Science Guide வெப்ப இயற்பியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பொது வாயு மாறிலியின் மதிப்பு
அ) 3.81 Jமோல்-1 K-1
ஆ) 8.03 Jமோல்-1 K-1
இ) 1.38 Jமோல்-1 K-1
ஈ) 8.31 Jமோல்-1 K-1
விடை:
ஈ) 8.31 Jமோல்-1 K-1

Question 2.
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் [PTA-1; Qy-2019)
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) சுழி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) சுழி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 3.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது அல்லது குளிர்விக்கும் போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
அ) X அல்ல து – X
ஆ) Y அல்ல து -Y
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ) (அ) அல்ல து (ஆ)
விடை:
இ) (அ) மற்றும் (ஆ)

Question 4.
மூலக்கூறுகளின் சராசரி _____ வெப்பநிலை ஆகும்.
அ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக் கிடையே உள்ள வேறுபாடு
ஆ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக் கிடையேயான வேறுபாடு
ஈ) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
விடை:
இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

Question 5.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
அ) A ← B, A ← C, B ← C
ஆ) A → B, A → C, B → C
இ) A → B, A ← C, B → C
ஈ) A ← B, A → C, B ← C
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 45
விடை:
அ) A ← B, A → C, B ← C

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

Question 1.
அவகேட்ரோ எண்ணின் மதிப்பு ………
விடை:
6.023 × 1023/மோல்) (Sep.20)

Question 2.
வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது ………….. அளவுகள். (PTA-2)
விடை:
ஸ்கேலர்

Question 3.
……………. நிறையுள்ள நீரின் வெப்பநிலையை ………… உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.
விடை:
ஒரு கிராம், 1° C

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 4.
பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் ………… எதிர்த்தகவில் அமையும்.
விடை:
பருமனுக்கு)

III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் தோற்ற விரிவு என்பது இயல்பு விரிவை விட அதிகம். விடை:
தவறு.
சரியான கூற்று: திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் இயல்பு விரிவு என்பது தோற்ற விரிவைவிட அதிகம்.

Question 2.
ஒரு பொருளில் வெப்ப ஆற்றலானது எப்பொழுதும் உயர் வெப்பநிலை பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலை பகுதிக்குப் பரவும். விடை:
சரி.

Question 3.
சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு எதிர் தகவில் அமையும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு நேர் தகவில் அமையும்.

IV. பொருத்துக. 
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 69

விடை:
1-ஈ,
2-உ,
3-அ,
4-ஆ,
5-இ

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: ஒரு உலோகத்தின் ஒரு முனையில் வெப்பப்படுத்தும் போது மற்றொரு முனையும் வெப்பம் அடையும்.
காரணம் : வெப்ப ஆற்றலானது வெப்பநிலை குறைவாக உள்ள பகுதியிலிருந்து வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதிக்கு பரவும். விடை:
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 2.
கூற்று: திட மற்றும் திரவ பொருள்களை விட வாயு பொருட்கள் அதிக அமுக்கத்திற்கு உட்படும். (PTA2)
காரணம் : அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த வகையில் அதிகம்.
விடை: (அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
ஒரு கலோரி வரையறு. [GMQP-2019]
விடை:
ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.

Question 2.
நீள் வெப்ப விரிவு மற்றும் பரப்பு வெப்ப விரிவு – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 65

Question 3.
பரும வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன? [PTA-6]
விடை:
ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு பரும வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 70 SI அலகு செல்வின்-1

Question 4.
பாயில் விதியைக் கூறுக. [GMQP-2019]
விடை:
மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடையவாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்.
P ∝ 1/V

Question 5.
பரும விதியைக் கூறுக.
விடை:
மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும். இது சார்லஸ் விதி என்றும் அழைக்கப்படும்.
v ∝ T அல்லது \(\frac{\mathrm{V}}{\mathrm{T}}\) = மாறிலி

Question 6.
இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 75

Question 7.
உண்மை வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன? உண்மை வெப்ப விரிவு குணகம் வரையறுக்கவும். மேலும் அதன் அலகினை எழுதுக, (Sep:20)
விடை:

  1. ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மை பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு, உண்மை வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும்.
  2. இதன் SI அதை கெல்வின்-1 ஆரும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 8.
தோற்ற வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
விடை:

  1. ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்தகவு நோற்ற விரிவு குணகம் என அழைக்கப்படும்.
  2. இதன் SI அலகு கெல்வின்’ ஆகும்.

VII கணக்கங்கள்

Question 1.
காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்குவெட்டு பரப்பு 10மீ2 லிருந்து ! 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையை கணக்கிடுக. (காப்பரின் பரப்பு வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)
விடை:
கொடுக்கப்பட்டவை :
காப்பர் தண்டின் பரப்பு A = 10 m2
பரப்பு நீட்சிக்குப்பின் A2 = 11 m2
தொடக்க வெப்பநிலை T1 = 90K
காப்பரின் வெப்பவிரிவு குணகம் = 0.0021 K-1
கண்டறிய : இறுதி வெப்பநிலை = T2=?
தீர்வு :
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 66
இறுதி வெப்பநிலை.
T2 = 137.6K

Question 2.
துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும்போது, அதனுடைய பருமன் 0.25மீ3 விருந்து 0.3 மீ3 ஆக உமருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் படிம வெப்ப விரிவு குணகத்தை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை :
துத்தநாகத்தகட்டின் பருமன்
V0 = 0.25 மீ3
பருமனில் மாற்றம் ∆V = 0.3 மீ3 – 10.25 மீ3
= 1.05 மீ3
வெப்பநிலை மாறுபாடு
∆T = 50K
கண்டறிய : பரும வெப்ப விரிவு குணகம் = ?
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 78
∴ பரும வெப்ப விரிவு குணகம் = 0.0004 K-1

VIII. விரிவாக விடையணி

Question 1.
நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி. [Qy-2019]
விடை:
நல்லியல்பு வாயுக்களின் பண்புகளை (அழுத்தம், பருமன், வெப்பநிலை மற்றும் அணுக்களின் எண்ணிக்கை) தொடர்புபடுத்தும்
சமன்பாடு அவ்வாயுக்களின் நல்லியல்பு சமன்பாடு ஆகும். ஒரு நல்லியல்பு வாயுவானது பாயில் விதி, சார்லஸ் விதி மற்றும் அவகேட்ரோ விதிகளுக்கு உட்படும்.
பாயில் விதிப்படி, PV – மாறிலி ….. (1)
சார்லஸ் விதிப்படி, V/T= மாறிலி …. (2)
அவகேட்ரோ விதிப்படி, V/N = மாறிலி …. (3)
(1), (2) மற்றும் (3) சமன்பாடுகளிலிருந்து, PV/nT= மாறிலி ….. (4)
மேற்கண்ட இந்த சமன்பாடு வாயு இணை சமன்பாடு என அழைக்கப்படும்.
μ மோல், அளவுள்ள வாயுவினைக் கொண்டிருக்கும் வாயுக்களில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை அவகேட்ரோ எண்ணின் (NA) μ மடங்கிற்கு சமமாகும்.
இந்த மதிப்பானது சமன்பாடு (4ல்) பிரதியிட, அதாவது n = μNA ……. (5)
PV/μNAT= மாறிலி
இந்த மாறிலி போல்ட்ஸ்மேன் மாறிலி
(kB = 1 381 × 10-23JK-1) என அழைக்கப்படுகிறது.
சமன்பாடு (5)-5 சமன்பாடு (4)ல் பிரதியிட
PV/μNAT = kB
PV = μNA kB T
இங்கு μNA kB = R, இது பொது வாயு மாறிலி என அழைக்கப்படும்.
இதன் மதிப்பு 8.31 J mol-1K-1
PV = RT ….. (6)

  • இந்த நல்லியல்பு வாயுச் சமன்பாடு, குறிப்பிட்ட நிலையில் உள்ள வாயுவின் பல்வேறு காரணிகளுக்கிடையே உள்ள தொடர்பினை அளிப்பதால் இது வாயுக்களின் நிலைச்சமன்பாடு எனவும் அழைக்கப்படும்.
  • மேலும் இச்சமன்பாடு எந்தவொரு வாயுக்களின் நிலையினையும் விவரிக்கப் பயன்படுகிறது.

Question 2.
திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் ! தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.
(GMQP-2019)
விடை:
உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற
வெப்ப விரிவினை கணக்கிடுவதற்கான சோதனை.

  1. உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு கணக்கிட வேண்டிய திரவத்தினை கொள்கலனில் நிரப்பி சோதனையை தொடங்கலாம்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 95
  2. இப்பொழுது கொள்கலனில் உள்ள திரவத்தின் நிலையை L1 என குறித்துக்கொள்ளலாம்.
  3. பிறகு கொள்கலன் மற்றும் திரவம் வெப்பப்படுத்தப்படுகிறது.
  4. தொடக்கத்தில் கொள்கலனானது வெப்ப ஆற்றலைப் பெற்று விரிவடையும். அப்போது திரவத்தின் பருமன் குறைவதாகத் தோன்றும்,
  5. இந்த நிலையை L2 எனக் குறித்துக் கொள்ளலாம்.
  6. மேலும் வெப்பப்படுத்தும் போது திரவமானது விரிவடைகிறது. தற்போது திரவத்தின் நிலையை L3, எனக் குறித்துக்கொள்ளலாம்.
  7. நிலை L1 மற்றும் L3 க்கு இடையேயான வேறுபாடு தோற்ற வெப்ப விரிவு எனவும், நிலை L2 மற்றும் L2 இடையேயான வேறுபாடு உண்மை வெப்ப விரிவு எனவும் அழைக்கப்படுகிறது.
  8. எப்போதும் உண்மை வெப்ப விரிவு தோற்ற வெப்ப விரிவை விட அதிகமாக இருக்கும்.
    உண்மை வெப்ப விரிவு = L3 – L2,
    தோற்ற வெப்ப விரிவு = L3 – L1

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?
விடை:
0°C வெப்பநிலையில் பனிக்கட்டியால் எடுத்துக் கொள்ளப்பட்ட உள்ளுறை வெப்பத்தின் மதிப்பு அதிகம். ஏனெனில், பனிக்கட்டி என்பது நீரின் திண்ம வடிவம். அதற்கு நீரைவிட அடர்த்தி அதிகம். – எனவே, பனிக்கட்டி உள்ள கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்.

PTA மாதிரி வினா-விடை

I மதிப்பெண்

Question 1.
வெப்பநிலை உயர்வால் பொருளின் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றம் ……………… என அழைக்கப்படுகிறது. [PTA-5]
அ) வெப்ப விரிவு
ஆ) வெப்பமாற்றம்
இ) வெப்பச்சலனம்
ஈ) ஆவியாதல்
விடை:
(அ) வெப்ப விரிவு

Question 2.
ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயு …………… என அழைக்கப்படுகிறது. (PTA-5)
அ) இயல்பு வாயு
ஆ) நல்லியல்பு வாயு
இ) உயரிய வாயு
ஈ) அரிதான வாயு
விடை:
(ஆ) நல்லியல்பு வாயு

2 மதிப்பெண்கள்

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள கூற்று சரியா? தவறா? எனக் கூறி உமது விடையினை நியாயப்படுத்துக. (PTA-4)
வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருள் குளிர்விக்கப்படுகிறது. அதிக வெப்பநிலையில் உள்ள பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது.
விடை:
தவறு.
வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலையில் உள்ள பொருள் குளிர்விக்கப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 2.
கொடுக்கப்பட்டக் கூற்றினையும், காரணத்தினையும் நன்றாக ஆராய்ந்து சரியான விடையினை தேர்வு செய்க. [PTA-5]
விடை:
கூற்று: வெப்பம் எப்போதும் வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளுக்குப் பரவும். காரணம்: ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போதோ அல்லது குளிர்விக்கும் போதோ பொருளின் நிறையில் எந்த மாற்றமும் ஏற்படுவது இல்லை.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு.
விடை:
(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.)

Question 3.
70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில், 50 மிலி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தின் நிலை கொள்கலனில் 50 மிலியிலிருந்து 48.5 மிலி ஆகக் குறைகிறது. மேலும், ! வெப்பப்படுத்தும்போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மிலி ஆக உயர்கிறது. எனில் திரவத்தின் தோற்ற வெப்ப விரிவு மற்றும் உண்மை வெப்ப விரிவைக் கணக்கிடுக.
விடை:
திரவத்தின் ஆரம்ப நிலை, [PTA-6]
L1 = 50 மிலி
கொள்கலனில் விரிவால் திரவத்தின் நிலை,
L2 = 48.5 மிலி
திரவத்தின் இறுதி நிலை,
L3 = 51.2 மிலி
தோற்ற வெப்ப விரிவு
= L3 – L1
= 51.2 – 50 மிலி
= 1.2 மிலி
உண்மை வெப்ப விரிவு
= L3 – L1
= 51.2 – 48.5 மிலி
= 2.7 மிலி

Question 4.
80°F பாரன்ஹீட் வெப்பநிலையை கெல்வின் வெப்பநிலைக்கு மாற்றுக? (7 Marks) (PTA-6)
விடை:
பாரன்ஹீட் மற்றும் கெல்வின்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல் 96

Question 5.
மின்கம்பங்களின் கம்பிகள் கோடைக் காலங்களில் தாழ்வாகத் தொங்குவது ஏன்?
விடை:
உலோகங்களால் ஆன மின்கம்பிகள் கோடைக்காலங்களில் வெப்பமாதலின் காரணமாக விரிவடைவதால் தாழ்வாகத் தொங்குகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 3 வெப்ப இயற்பியல்

Question 6.
நீர்விரிவுக் குணகம் வரையறு. [PTA-1]
விடை:
ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு நீளத்திற்கும் உள்ள தகவு நீள் வெப்ப விரிவு குணகம் ஆகும்.

4 மதிப்பெண்கள்

Question 1.
கீழ்க்கண்ட கூற்றின் தன்மையை சரியா? அல்லது தவறா? என அறிந்து தவறை சரிசெய்து எழுதுக.
சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவின் வெப்பநிலை அதன் பரும அளவிற்கு எதிர் தகளில் அமையும். (PTA-2) விடை:
தவறு, சார்லஸ் விதிப்படி மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு நேர் தகவில் அமையும்.
V ∝ T
அல்லது \(\frac{\mathrm{V}}{\mathrm{T}}\) – மாறிலி

அரசு தேர்வு வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
வாயுக்களின் அடிப்படை விதிகள் யாவை? [Qy – 2019]
விடை:
வாயுக்களின் அழுத்தம், கனஅளவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் மூன்று அடிப்படை விதிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. அவை

  1. பாயில் விதி
  2. சார்லஸ் விதி
  3. அவகேட்ரோ விதி

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

4th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் Text Book Back Questions and Answers

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சில விலங்குகளின் இளம் உயிரிகளுக்கான முதன்மை ஆற்றல் ஆதாரம்.
அ) நீர்
ஆ) கனிகள்
இ) பால்
விடை:
இ) பால்

Question 2.
பாலில் உள்ள எந்த உயிர்ச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது?
அ) உயிர்ச்சத்து ஈ
ஆ) உயிர்ச்சத்து சி
இ) உயிர்ச்சத்து டி
விடை:
இ) உயிர்ச்சத்து டி

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 3.
மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பழங்கால உணவு வகைகளுள் ஒன்று
அ) நூடுல்ஸ்
ஆ) கேக்
இ) ரொட்டி
விடை:
இ) ரொட்டி

Question 4.
_____________ பச்சையாக உண்ணக்கூடிய ஓர் உணவாகும்.
அ) வெள்ளரி
ஆ) சப்பாத்தி
இ) ரொட்டி
விடை:
அ) வெள்ளரி

Question 5.
பாடல்களைக் கேட்க உதவும் சிறு பொறி கருவி
அ) பென் டிரைவ்
ஆ) புகைப்படக்கருவி
இ) கையடக்க இசைக்கருவி
விடை:
இ) கையடக்க இசைக்கருவி

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பாலாடைக் கட்டி மற்றும் பனீர் ____________ லிருந்து தயாரிக்கப்படுகிறது.
விடை:
பாலி

Question 2.
_____________ மூலம் ஊட்டச்சத்துக்கள் செரிமானத்திற்குத் தயாராகின்றன.
விடை:
சமைத்தல்

இ. பொருத்துக.

1. கையடக்க இசைக்கருவி ‘- உலகத்துடன் தொடர்புகொள்ளல்
2. திறன்பேசி – தகவல் சேமித்தல்
3. கை மின் விளக்கு – விளையாடுதல்
4. விரலி – வெளிச்சம் தருதல்
5. கையடக்கக் கணினி – இசையை ஒலித்தல்
விடை:
1. கையடக்க இசைக்கருவி – இசையை ஒலித்தல்
2. திறன்பேசி – உலகத்துடன் தொடர்புகொள்ளல்
3. கை மின் விளக்கு – வெளிச்சம் தருதல்
4. விரலி – தகவல் சேமித்தல்
5. கையடக்கக் கணினி – விளையாடுதல்

ஈ. ஓரிரு தொடர்களில் விடையளிக்க.

Question 1.
பாலிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்கள் யாவை?
விடை:
தயிர், வெண்ணெய், மோர், நெய், பாலாடைக்கட்டி, பன்னீர் மற்றும் இனிப்புகள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 2.
அடுதல் மூலம் தயாரிக்கப்படும் மூன்று உணவுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
ரொட்டி, பிஸ்கட், கேக்.

Question 3.
திறன்பேசி எந்தெந்த வழிகளில் நமக்கு உதவுகிறது?
விடை:
தகவல் தொடர்பு தவிர, இணைய அணுகல் மற்றும் கோப்புகளைச் சேமித்தல், புகைப்படங்கள் எடுத்தல், இடங்களை அறிதல் போன்ற பல சேவைகளில் திறன்பேசிகள் பயன்படுகின்றன.

Question 5.
உணவு என்றால் என்ன?
விடை:
உணவு என்பது நமது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உணவு நமக்கு ஆற்றல் அளிக்கிறது. பொதுவாக உணவை நாம் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறுகிறோம். நமது உடலை நலமாக – வைத்துக் கொள்ளத் தேவையான ஊட்டச்சத்துகள் உணவில் அடங்கியுள்ளன.

உ. விரிவாக விடையளிக்க.

Question 1.
சமைப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நீக்கப்படுகின்றன. சமையலின் பிற நன்மைகளை எழுதுக.
விடை:
உணவில் பின்வரும் பயனுள்ள மாற்றங்களைச் சமையல் ஏற்படுத்துகிறது.

  1. ஊட்டச்சத்துகள் உடடினயாகச் செரிமான மடைய உதவுகிறது.
  2. உணவை விரும்பும் தன்மை, மணம், சுவையுடன் தயாரிக்க உதவுகிறது.
  3. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை இது அழிக்கிறது.

Question 2.
நாம் ஏன் பாலைப் பருக வேண்டும்?
விடை:
பாலைப் பருகுவதன் நன்மைகள் :

  1. எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்துகிறது.
  2. இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கிறது.
  3. இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
  4. இது ஓர் ஆற்றல் மூலமாகும்.

4th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் InText Questions and Answers

பக்கம் 115 பதிலளிப்போமா!

Question 1.
பாலில் அதிகம் உள்ள சத்து ____________. (கால்சியம் / இரும்புச்சத்து)
விடை:
கால்சியம்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 2.
பாலில் ______________, _____________ மற்றும் _____________ ஆகியவை உள்ளன.
விடை:
சர்க்கரை, புரதம், கொழுப்பு

பக்கம் 117 பதிலளிப்போமா!

Question 1.
பச்சையாக உண்ணக் கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள் ____________, _____________
விடை:
பழங்கள், காரட்டு

Question 2.
சமைத்து உண்ணக்கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள் ___________, _____________.
விடை:
சோறு, ரொட்டி

பக்கம் 119 பதிலளிப்போமா!

Question 1.
ரொட்டி என்பது ___________ (குறைந்த / அதிக) கொழுப்பு கொண்ட உணவு ஆகும்.
விடை:
குறைந்த

Question 2.
பிஸ்கட்டுகள் ______________ (கோதுமை மாவு / அரிசி மாவு) – கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
விடை:
கோதுமை மாவு

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 3.
பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் தொடர்புடையது _____________. (கேக் / பிஸ்கட்)
விடை:
கேக்

பக்கம் 121 பதிலளிப்போமா!

கொடுக்கப்பட்டுள்ள மின்னணு சாதனங்களின் பெயர்களை எழுதுக.
(இணைய ஒளிப்படக் கருவி, ரிமோட், ஒலி பெருக்கி, புகைப்படக்கருவி, தலையணி ஒலிக்கருவி)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 2

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் பொருள்கள் and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

4th Science Guide வேலை மற்றும் ஆற்றல் Text Book Back Questions and Answers

அ. சரியான சொல்லைப் பயன்படுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு விசை செயல்படும்போது செய்யப்பட வேண்டியது
_______________ ஆகும்.
விடை:
வேலை

Question 2.
வேலை செய்யத் தேவைப்படும் திறன் என்பது _______________.
விடை:
ஆற்றல்

Question 3.
_______________ இயந்திரம் சக்கரம் மற்றும் கயிற்றால் ஆனது.
விடை:
கப்பி
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

Question 4.
______________ வேலையை எளிதாக்க உதவுகிறது.
விடை:
எளிய எந்திரம்

Question 5.
சாய்தளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு _______________
விடை:
சரிவுப் பாதை

ஆ. எழுத்துகளை மாற்றியமைத்து, கருவிகளின் பெயர்களைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 2

இ. பொருத்துக.

1. இரண்டாம் வகை நெம்புகோல் – நீர் இறைத்தல்
2. கப்பி – மிதிவண்டி
3. முதல் வகை நெம்புகோல் – கொட்டை உடைப்பான் .
4. சக்கரம் மற்றும் அச்சு – காற்று
5. புதுப்பிக்க இயலும் வளம் – சாய்ந்தாடி
விடை:
1. இரண்டாம் வகை நெம்புகோல் – கொட்டை உடைப்பான்
2. கப்பி – நீர் இறைத்தல்
3. முதல் வகை நெம்புகோல் – சாய்ந்தாடி
4. சக்கரம் மற்றும் அச்சு – மிதிவண்டி
5. புதுப்பிக்க இயலும் வளம் – காற்று

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

ஈ. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வகைப்படுத்துக.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 4

உ. வினாக்களுக்கு விடையளி.

Question 1.
ஆற்றலின் அலகு யாது?
விடை:
ஆற்றலின் அலகு ஜுல் ஆகும்.

Question 2.
எளிய இயந்திரங்கள் சிலவற்றைக் கூறு.
விடை:
கப்பி, ஆப்பு, சாய்தளம், திருகு, நெம்புகோல், சக்கரம் மற்றும் அச்சு ஆகியவை எளிய இயந்திரங்கள் ஆகும்.

Question 3.
முதல் வகை நெம்புகோல் என்றால் என்ன?
விடை:
ஆதராப் புள்ளி திறனுக்கும் பளுவுக்கும் இடையில் உள்ளது. முதல் வகை நெம்புகோல் ஆகும்.

Question 4.
எலுமிச்சை சாறு பிழியும் கருவி எந்த வகை நெம்புகோலைச் சார்ந்தத? ஏன்?
விடை:
எலுமிச்சை சாறுபிழியும் கருவி இரண்டாம் வகை நெம்புகோல் ஆகும். இங்கு பளு (எலுமிச்சை), திறனுக்கும் ஆதாரப் புள்ளிக்கும் இடையில் உள்ளது.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

Question 5.
வேலை – வரையறு.
விடை:
ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு அப்பொருள் நகரும் செயல் வேலை எனப்படும்.

Question 6.
எவையேனும் மூன்று வகையான ஆற்றலை எழுதுக.
விடை:
மின் ஆற்றல், வெப்ப ஆற்றல், வேதி ஆற்றல்

4th Science Guide வேலை மற்றும் ஆற்றல் InText Questions and Answers

பக்கம் 104 சிந்தித்துக் கூறுவோமா!

ஆசிரியர் : நேற்று நான் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது சாலை அமைக்கும் பணியை செய்யும் மேற்கொண்டிருந்த கண்டேன். அந்த இடத்தில் சில பொருள்கள் இருப்பதையும் கண்டேன். அந்த இடத்தில் என்னென்ன பொருள்கள், இயந்திரங்கள் இருந்திருக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா? வேலை செய்யப்பட்டுள்ளதா அல்லது செய்யப்படவில்லையா என்று எப்போது நம்மால் கூறமுடியும்? வேலை செய்வதற்கு இரண்டு முக்கிய நிபந்தனைகள் தேவை.
1. ஒரு விசை பொருளின் மீது செயல்பட வேண்டும்.
2. பொருள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தப்பட வேண்டும்.

ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு அந்தப் பொருள் நகர்ந்தால் வேலை செய்யப்பட்டது எனலாம்.
விடை:
சாலை போடும் இயந்திரம், கடப்பாரை, மண்வெட்டிகள், இரும்புக் கோடரிகள், மண் அள்ளும் கருவிகள் போன்ற கருவிகள் அங்கு பயன்படுத்தப்பட்டன. விசை செலுத்தப்பட்டு சாலையின் பரப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இங்கு வேலை செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிகிறோம்.

பதிலளிப்போமா!

படத்தை உற்றுநோக்கி, வேலை செய்யப்பட்டிருந்தால் ✓ குறியும் வேலை செய்யப்படவில்லை என்றால் ✗ குறியும் இடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 6
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 7

பதிலளிப்போமா!

கீழ்க்கண்ட செயல்பாடுகளில் வேலை செய்யப்பட்டதா அல்லது செய்யப்படவில்லையா என்பதைக் குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 9

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

பக்கம் 107 1. கப்பி

கீழே உள்ள படத்தை உற்றுநோக்கவும். ஒரு சுமையை கப்பியின் உதவியால் தூக்குவது அல்லது கப்பியைப் பயன்படுத்தாமல் தூக்குவது – இவற்றில் எது எளிமையானது?
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 10
விடை:
கப்பியின் உதவியால் சுமையைத் தூக்குவது எளிதானது.

கப்பி என்பது ஒரு வகை இயந்திரம். இது அச்சைப்பற்றி சுழலும் வகையில் அமைந்த சக்கரம் ஆகும். கயிறு அல்லது சங்கிலி கப்பியின் மீது அதிக விசையுடன் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமையைத் தூக்குவது எளிதானது.

2. சாய்தளம்
ஒரு பெட்டியைத் தூக்குவது, ஒரு சரிவுப்பாதையின் மீது அப்பெட்டியை இழுத்து செல்வதைவிட எளிதானதா? படத்தை உற்றுநோக்கி விவாதிக்கவும்.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 11
விடை:
பெட்டியைத் தூக்குவதைக் காட்டிலும் அதை ஒரு சரிவுப் பாதையின் மீது இழுத்துச் செல்வது எளிதானது.

சாய்தளம் என்பது ஒரு விளிம்பு உயரமானதாகவும் மறு விளிம்பு தாழ்வானதாகவும் சரிவாக அமையப்பெற்ற ஒரு தளமாகும். இதன் வழியே பெட்டியை நகர்த்திச் செல்வது எளிதானது.

பக்கம் 109 பதிலளிப்போமா!

எளிய இயந்திரங்களின் வகைகளைக் கண்டறிந்து குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 12
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 13

பக்கம் 110 பதிலளிப்போமா!

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 14
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 15

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

பக்கம் 111 பதிலளிப்போமா!

பளு, திறன் மற்றும் ஆதாரப்புள்ளியைக் குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 16
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 17
1. பளு – பந்து ஆதாரப்
2. திறன் – எடை
3. ஆதாரப்புள்ளி – மையம்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 18
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 19
1. பளு – பந்து
2. திறன் – மட்டை நுனி
3. ஆதாரப்புள்ளி – கை

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 20
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 21
1. பளு – கொட்டை
2. திறன் – கை
3. ஆதராப்புள்ளி – கைப்பிடிகள் இணையுமிடம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 2 ஒளியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 2 ஒளியியல்

10th Science Guide ஒளியியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
அ) A
ஆ) B
இ) C
ஈ) D
விடை:
அ) A

Question 2.
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
அ) f
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f|
ஈ) f க்கும் 21 க்கும் இடையில்
விடை:
இ) 2f

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 3.
மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்
ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.
விடை:
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்)

Question 4.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ____ மதிப்புடையது.
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) நேர்க்குறி
(அ) எதிர்க்குறி
ஈ) சுழி
விடை:
இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி

Question 5.
ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _____
அ) முதன்மைக் குவியம்
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) fக்கும் 2f க்கும் இடையில்
விடை:
ஆ) ஈறிலாத் தொலைவு

Question 6.
ஒரு லென்சின் திறன் – 4D எனில் அதன் குவியத் தொலைவு
அ) 4 மீ
ஆ) – 40 மீ
இ) -0.25 மீ)
ஈ) -2.5 மீ.
விடை:
இ) – 0.25 மீ

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 7.
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது தோற்றுவிக்கப்படுகிறது.
அ) விழித்திரைக்குப் பின்புறம்
ஆ) விழித்திரையின் மீது
இ) விழித்திரைக்கு முன்பாக
ஈ) குருட்டுத் தானத்தில்
விடை:
இ) விழித்திரைக்கு முன்பாக

Question 8.
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது (PTA-2, Sep.20)
அ) குவி லென்சு
ஆ) குழி லென்சு
இ) குவி ஆடி
ஈ) இரு குவிய லென்சு
விடை:
ஈ) இரு குவிய லென்சு

Question 9.
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஆ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
இ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
விடை:
அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு

Question 10.
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசைவேகங்கள் VB,VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?
அ) VB = VG = VR
ஆ) vB > VG > VR
இ) VB < VG < VR
ஈ) vB < VG > VR
விடை:
இ) VB < vG < VR]

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒளி செல்லும் பாதை _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
ஒளிக்கதிர்

Question 2.
ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட _____
விடை:
அதிகம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 3.
படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது _____ சிதறல் எனப்படும்.
விடை:
மீட்சிச்

Question 4.
ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது, படுகின்ற ஒளிக்கதிரின்ன் _____ ன் நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.
விடை:
அலை நீளத்தின்

Question 5.
_____ கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
விடை:
ஐரிஸ் (Iris)

III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதை விட அதிகமாக இருக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதைவிட குறைவாக இருக்கும்.

Question 2.
லென்சின் திறனானது லென்சின் குவிய தொலைவைச் சார்ந்தது.
விடை:
சரி.

Question 3.
விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: விழிலென்சின் குவிக்கும் திறன் குறைவதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 4.
குவிலென்சானது, எப்போதும் சிறிய மாய பிம்பத்தையே உருவாக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: குழிலென்சானது எப்போதும் சிறிய மாயபிம்பத்தை தரும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 20

விடை:
1-ஈ,
2-அ,
3-உ,
4-ஆ,
5-இ

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப் பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
(இ கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று. ரு கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வுமிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

Question 2.
கூற்று: விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால், கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடு தோன்றுகிறது.
காரணம்: குழிலென்சைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக் குறைப்பாட்டைச் சரிசெய்யலாம்.
விடை:
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
விடை:
காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் (c), மற்றோர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் (v) இடையே உள்ள தகவு ஒளிவிலகல் எண் (µ) எனப்படும்.
µ = \(\frac{c}{v}\)

Question 2.
ஸ்நெல் விதியைக் கூறுக. [Qy-2019]
விடை:
ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது, படுகோணத்தின்
சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமம். இவ்விதி ‘ஸ்நெல் விதி என்று அழைக்கப்படுகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 46

Question 3.
குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும் போது உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர் வரைபடம் வரைக. (GMQP-2019)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 47

Question 4.
நிறப்பிரிகை வரையறு.
விடை:
வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும் போது அதில் உள்ள நிறங்கள் தனித் தனியாகப் பிரிகை அடைகின்றன. இந்நிகழ்வு ‘நிறப்பிரிகை’ எனப்படும்.

Question 5.
ராலே சிதறல் விதியைக் கூறுக. [PTA-3]
விடை:
ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த் தகவில் இருக்கும். சிதறல் அளவு ∝ \(\frac{1}{\lambda^{4}}\)
இவ்விதியின் படி, குறைந்த அலைநீளம் கொண்ட நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது.

Question 6.
குவிலென்சு மற்றும் குழிலென்சு – வேறுபடுத்துக. [PTA-3; Qy-2019]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 70

Question 7.
விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?
விடை:
அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண்பதற்கு ஏற்ப விழி லென்சு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை, விழி ஏற்பமைவுத் திறன்’ எனப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 8.
கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை? (GMQP-2019)
விடை:

  1. விழி லென்சின் குவிய தூரம் குறைவதாலும்
  2. விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும்
  3. விழிக்கோளம் நீண்டு விடுவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.

Question 9.
வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது? (PTA-1)
விடை:
சூரிய ஒளியானது, வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் போது, குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது. இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.

Question 10.
போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன? (PTA-4)
விடை:

  1. சிவப்பு நிறம் அதிக அலைநீளம் உடையது.
  2. எனவே, குறைவாக சிதறல் அடையும் சிவப்புநிற ஒளி மூடுபனி, புகை போன்றவற்றிலும் எளிதாக ஊடுருவி நமது கண்ணை அடைகிறது.

VII. விரிவாக விடையளி

Question 1.
ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக. [Qy-2019]
விடை:

  1. ஒளி என்பது ஒருவகை ஆற்றல்.
  2. ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது.
  3. ஒளி பரவ ஊடகம் தேவையில்லை. வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும்.
  4. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 × 108 மீ வி-1.
  5. ஒளியானது அலை வடிவில் செல்வதால், அது அலைநீளம் (λ) மற்றும் அதிர்வெண் (v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும். இவை C = vλ என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப்படுகிறது.

Question 2.
குவிலென்சு ஒன்றினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களுக்கான விதிகளை கதிர்படங்களுடன் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 40

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 3.
கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக. [PTA-6]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 45
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 48

Question 4.
கூட்டு நுண்ணோக்கி ஒன்றின் அமைப்பையும் செயல்படும் விதத்தையும் விளக்குக. (Qy-2019)
விடை:
அமைப்பு: கூட்டு நுண்ணோக்கியானது இரண்டு குவி லென்சுகளைக் கொண்டது.
1) பொருளருகு லென்சு (அ) பொருளருகு வில்லை.
2) கண்ணருகு லென்சு (அ) கண்ணருகு வில்லை.
பொருளருகு லென்சு: பொருளுக்கு அருகில் உள்ள குறைந்த குவியதூரம் கொண்டு குவிலென்சு
கண்ணருகு லென்சு: கண்ணிற்கு அருகில் உள்ள அதிக விட்டமும், அதிக குவிய தூரமும் கொண்ட குவிலென்சு.
இந்த இரண்டு லென்சுகளும் முன்னும் பின்னும் நகரக்கூடிய வகையில் குறுகலான குழாயினுள் பொருத்தப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 50
செயல்படும் விதம்:

  1. பொருள் (AB)-யானது, பொருளருகு லென்சின் குவியதூரத்தை விடச் சற்றுக் கூடுதலான தொலைவில் வைக்கப்படுகிறது.
  2. பொருளருகு லென்சின் மறுபுறத்தில் பெரிய, தலைகீழான, மெய்ப் மெய்ப்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
  3. இந்த பிம்பமானது கண்ணருகு லென்சிற்குப் பொருளாகச் செயல்படுகிறது.
  4. மேலும், இப்பிம்பமானது (A’B’) கண்ணருகு லென்சின் முதன்மைக் குவியத்திற்குள் அமையுமாறு கண்ணருகு லென்சு சரிசெய்யப்படுகிறது. கண்ணருகு லென்சு, அளவில் பெரிய நேரான மாயபிம்பத்தைப் (A”B”) பொருள் இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கிறது.

VIII. கணக்கீடுகள்.

Question 1.
10 செ.மீ குவிய தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.
விடை:
கொடுக்கப்பட்டவை :
பொருளின் தொலைவு U = -20 செ.மீ
குவிலென்சின் குவியதூரம் f = 10 செ.மீ
கண்டறிய :
பிம்பத்தின் தொலைவு v=?
பிம்பத்தின் தன்மை யாது?
தீர்வு :
பொருளானது லென்சின் இடது பக்கத்தில் வைக்கப்படும்போது f = 10 செ.மீ
u = – 20 செ.மீ
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 52
பிம்பத்தின் தொலைவு v = 20 செ.மீ
பெரிதாக்கப்பட்ட தலைகீழான பிம்பம் 20 செ.மீ தொலைவில் லென்சின் வலப்பக்கத்தில் உருவாகிறது.
உருப்பெருக்கம் m = \(\frac{v}{u}\) = \(\frac{20}{-20}\) = -1
(-ve குறி பிம்பத்தின் தன்மையை குறிக்கிறது. தலைகீழான பிம்பம்)

Question 2.
3 செ.மீ உயரமுள்ள பொருளொன்று 15 செ.மீ குவிய தொலைவு கொண்ட குழிலென்சிற்கு முன்பாக 10 செ.மீ தொலைவில் வைக்கப்படுகிறது எனில் – லென்சினால் உருவாக்கப்படும் பிம்பத்தின் உயரத்தைக் கண்டுபிடி.
விடை:
கொடுக்கப்பட்டவை:
பொருளின் தொலைவு u = -10 செ.மீ
(பொருளானது இடப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது)
குவிய தொலைவு f = -15 செ.மீ
(∵ குவிலென்சு)
கண்ட றிய:
பிம்பத்தின் தொலைவு v = ?
பொருளின் உயரம் h = 3 செ.மீ
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 53
உருப்பெருக்கம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 54
∴ பிம்பத்தின் அளவு,
h’ = 1.8 செ.மீ

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத் தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது ! தவறுதலாக கீழே விழுந்து, இருசம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர். அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?
விடை:

  1. மாணவர் தொடர்ந்து சோதனையை செய்ய முடியும். குவிலென்சு உடைவதற்கு முன்னால் எவ்வித பிம்பம் கிடைக்குமோ அதே அளவுள்ள பிம்பம் கிடைக்கும்.
  2. ஆம். அவருக்கு பிம்பங்கள் கிடைக்கும். ஆனால், உருவாக்கப்படும் பிம்பத்தின் செறிவு குறைவாக இருக்கும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 2.
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
விடை:
(i) ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரிதாக உள்ளதெனில் அதன் பார்வைப்புலம் மற்றும் ரெட்டினாவின் பரப்பும் அதிகமாக இருக்கும். இதனால் இரவு நேரத்தில் படும் சுற்றுப்புற ஒளியானது அதிக அளவில் கண்ணை அடையும். எனவே, இரவு நேரத்தில் இரையைத் தேட எளிதாக இருக்கும்.

(ii) இதனால் இரவு நேரத்தில் படும் சுற்றுப்புற ஒளியானது அதிக அளவில் கண்ணை அடையும். எனவே, இரவு நேரத்தில் இரையைத் தேட எளிதாக இருக்கும்.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
ராமன் ஒளிச்சிதறலில் சிதறலடைந்த ஒளியானது …………………… வரிகளை உள்ளடக்கியது. (PTA-5)
அ) ஸ்டோக்ஸ்
ஆ) ஆண்டிஸ்டோக்ஸ்
இ) ராலே
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

2 மதிப்பெண்கள்

Question 1.
கீழ்காணும் கதிர் வரைபடத்தை நிறைவு செய்க.
[PTA-6]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 49
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 49.2

Question 2.
பொதுவாக மனிதக் கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறுத் தொலைவு மதிப்பு என்ன ? [PTA-6]
விடை:
பொதுவாக மனிதக் கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறுத் தொலைவு மதிப்பு 25 செமீ.

4 மதிப்பெண்கள்

Question 1.
வகுப்பறையில் உள்ள மாணவர் ஒருவரால் புத்தகத்தை வாசிக்க முடிகிறது. ஆனால் அவரை கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தெளிவாகப் பார்க்க இயலவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள இக்குறைபாட்டின் பெயர், காரணம் மற்றும் சரிசெய்யும் முறையினைத் தருக. (7 Marks) (PTA-1)
விடை:
குறைபாட்டின் பெயர்: கிட்டப்பார்வை (மையோபியா)
காரணம்: விழிலென்சின் குவிய தூரம் குறைவதாலும், விழிலென்சிற்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. அதனால் தான் வகுப்பறையில் உள்ள மாணவரால் புத்தகத்தை வாசிக்க முடிகிறது. தொலைவில் கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தெளிவாகப் பார்க்க இயலவில்லை.
சரி செய்யும் முறை: தகுந்த குவியத் தொலைவு கொண்ட குழிலென்சைப் பயன்படுத்துவதன் மூலம் இக்குறைபாட்டை சரிசெய்யலாம்.

Question 2.
எளிய நுண்ணோக்கியில் பிம்பம் உருவாதலுக்கான கதிர் வரைபடம் வரைக. (PTA-2)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 60

Question 3.
எளிய நுண்ணோக்கியில் உருவாகும் பிம்பத்தின் நிலை, தன்மை மற்றும் அளவினைக் காண்க. (PTA-2)
விடை:
எளிய நுண்ணோக்கி:
(i) குவிலென்சைக் கண்களுக்கு அருகில் வைத்து, பொருள்களைப்பார்க்கும் போது பொருள்களின் பெரிதாக்கப்பட்ட மாயப்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
(ii) AB என்ற பொருளை, குவி லென்சின் முக்கிய குவியத்திற்குள் (u < f) வைத்து லென்சின் மறுபுறத்தின் வழியாகப் பொருளைக் காண வேண்டும். குவிலென்சின் முக்கிய குவியத்திற்கும், ஒளியியல் மையத்திற்கும் இடையே பொருள் வைக்கப்படும்போது, லென்சானது நேரான, பெரிதாக்கப்பட்ட மாயப் பிம்பத்தை பொருள் இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 4.
மாறாத வெப்பநிலையில் ஒரு கலனில் உள்ள வாயுவின் ஆரம்ப அழுத்தத்தை, நான்கு மடங்கு அதிகரிக்கும் போது, அவ்வாயுவின் பருமன் 20 cc (V1 cc)-லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், இறுதி பருமன் V2 cc-வைக் கணக்கிடுக. [PTA-3]
விடை:
தொடக்க அழுத்தம் (P1) = P
இறுதி அழுத்தம் (P2) = 4P
தொடக்க பருமன் (V1) = 20 cc = 20 செமீ3
இறுதி பருமன் (V2) = ?
பாயில் விதியின்படி,
PV = மாறிலி
P1V1 = P2V2
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 65
v2 = 5 செமீ3

Question 5.
ஒரு லென்சின் திறன்-2 டையாப்டர் எனில், லென்சின் குவியதூரத்தைக் காண்க.(PTA-4)
விடை:
கொடுக்கப்பட்டவை: லென்சின் திறன் = -2
கண்டறிய: லென்சின் குவியதூரம் f = ?
தீர்வு:
P = \(\frac{1}{f}\) (or) f = \(\frac{1}{P}\)
f = \(\frac{1}{-2}\) = -0.5m
f = -0.5m

Question 6.
3 செமீ உயரமுள்ள பொருளொன்று 10 செமீ தூரத்தில் குவிலென்சின் முன் வைக்கப்படுகிறது. லென்சின் மையத்திலிருந்து 20 செமீ தொலைவில் பிம்பம் உருவாகிறது எனில் பிம்பத்தின் உருப்பெருக்கம் மற்றும் உயரத்தைக் கணக்கிடுக. (PTA-5)
விடை:
கொடுக்கப்பட்டவை:
உயரம் h = 3cm, u = 10 cm, v = 20 cm !
கண்ட றிய:
உருப்பெருக்கம் m = ?
பிம்பத்தின் உயரம் h’ = ?
தீர்வு: m = –\(\frac{v}{u}\) = \(\frac{-20}{10}\) = -2
உருப்பெருக்கம், m = -2
m = \(\frac{h’}{h}\)
-2 = \(\frac{h’}{3}\)
பிம்பத்தின் உயரம் h’ = -6 cm

7 மதிப்பெண்கள்

Question 1.
வெற்றிடத்தில் பயணிக்கும் 3000A அலைநீளமுள்ள கண்ணுறு ஒளியின் அதிர்வெண்ணைக் காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை: [PTA-5)
அலைநீளம் λ = 3000 A [∵1A = 10-10m]
= 3000 × 10-10m
ஒலியின் திசைவேகம்,
c = 3 × 108 ms-1
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 692

அரசு தேர்வு வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
ஒரு பொருளிலிருந்து செல்லும் ஒளிக்கற்றையானது 0.3 மீ. குவியத் தொலைவு கொண்ட விரிக்கும் லென்சால் குவிக்கப்பட்டு 0.2 மீ. என்ற தொலைவில் பிம்பத்தை ஏற்படுத்து கிறது எனில் பொருளின் தொலைவைக் கணக்கிடுக.? (Sep.20)
விடை:
f = -0.3 மீ, v = -0.2 மீ
லென்சு சமன்பாட்டிலிருந்து
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 90

4 மதிப்பெண்கள்

Question 1.
தொலைநோக்கிகளின் நன்மைகள் யாவை? [Qy-2019]
விடை:

  1. கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் குறித்த விரிவான பார்வையைத் தருகிறது.
  2. தொலைநோக்கியுடன் ஒளிப்படக் கருவியை இணைப்பதன் மூலம் வான் பொருள்களை ஒளிப்படம் எடுக்கலாம்.
  3. குறைவான செறிவுடைய ஒளியிலும் தொலைநோக்கியைப் பயன்படுத்தலாம்.

Question 2.
எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள் யாவை? (Sep.20)
விடை:
எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள்:

  1. இது கடிகாரம் பழுது பார்ப்பவர்கள் மற்றும் ஆபரணங்கள் செய்பவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
  2. சிறிய எழுத்துக்களைப் படிக்க உதவுகிறது.
  3. பூக்கள் மற்றும் பூச்சிகளின் பாகங்களை உற்றுநோக்கப் பயன்படுகிறது.
  4. தடய அறிவியல் துறையில், கைரேகை களைப் பகுத்தறியப் பயன்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 1 இயக்க விதிகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 1 இயக்க விதிகள்

10th Science Guide இயக்க விதிகள் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?
அ) பொருளின் எடை
ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்
இ) பொருளின் நிறை
ஈ) அ மற்றும் ஆ
விடை:
இ) பொருளின் நிறை

Question 2.
கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
அ) உந்த மாற்று வீதம்
ஆ) விசை மற்றும் காலமாற்ற வீதம்
இ) உந்த மாற்றம்
ஈ) நிறை வீத மாற்றம்
விடை:
இ) உந்த மாற்றம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 3.
கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்
இ) அ மற்றும் ஆ
ஈ) சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
விடை:
இ) அ மற்றும் ஆ)

Question 4.
உந்த மதிப்பைy அச்சிலும் காலத்தினை அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
அ) கணத்தாக்கு விசை
ஆ) முடுக்கம்
இ) விசை
ஈ) விசை மாற்ற வீதம்
விடை:
இ) விசை

Question 5.
விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
அ) நீச்சல் போட்டி
ஆ) டென்னிஸ்
இ) சைக்கிள் பந்தயம்
ஈ) ஹாக்கி
விடை:
இ) சைக்கிள் பந்தயம்

Question 6.
புவிஈர்ப்பு முடுக்கம் -ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்?
அ) cms-1
ஆ) Nkg-1
இ) Nm2 kg-1
ஈ) cm2s-2
விடை:
ஆ) Nkg-1

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 7.
ஒரு கிலோ கிராம் எடை என்பது ………… ற்கு சமமாகும்.
அ) 9.8 டைன்
ஆ) 9.8 × 104 N
இ) 98 × 104 டைன்
ஈ) 980 டைன்
விடை:
இ) 98 × 104 டைன்

Question 8.
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
அ) 4M
ஆ) 2M
இ) M/4.
ஈ) M
விடை:
ஈ) M
குறிப்பு: நிறை மதிப்பு, எங்கும் மாறாது. ஆனால் எடையின் மதிப்பு, புவிஈர்ப்பு முடுக்க (g) மதிப்பைப் பொறுத்து இடத்திற்கு இடம் மாறும்.

Question 9.
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?
அ) 50% குறையும்
ஆ) 50% அதிகரிக்கும்
இ) 25% குறையும்
ஈ) 300% அதிகரிக்கும்
விடை:
ஈ) 300% அதிகரிக்கும்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 30

Question 10.
ராக்கெட் ஏவுதலில் _____ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது. (GMQP-2019)
அ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
இ) நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
ஈ) அ மற்றும் இ
விடை:
ஈ) அ மற்றும் இ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு _____ தேவை.
விடை:
விசை

Question 2.
நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன் நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு _____ மூலம் விளக்கப்படுகிறது.
விடை:
இயக்கத்தில் நிலைமம்

Question 3.
மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் _____ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் குறியிலும் குறிக்கப்படுகிறது.
விடை:
எதிர், நேர்

Question 4.
மகிழுந்தின் சக்கரத்தின் சுழற்றி வேகத்தினை மாற்ற _____ பயன்படுகிறது.
விடை:
பற்சக்கரம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 5.
100 கி.கி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் _____ அளவாக இருக்கும்.
விடை:
980 N

III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

Question 1.
துகள் அமைப்பில் ஏற்படும் நேர்க்கோட்டு உந்தம் எப்போதும் மாறிலியாகும்.
விடை:
தவறு. சரியான கூற்று : புற விசை செயல்படாத போது ஒரு அமைப்பின் நேர்க்கோட்டு உந்தம் மாறிலியாக இருக்கும்.

Question 2.
பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான எடைக்கு சமமாக இருக்கும்.
விடை:
தவறு. சரியான கூற்று: பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான எடைக்கு சமமாக இருக்காது.

Question 3.
பொருட்களின் எடை நில நடுக்கோட்டுப்பகுதியில் பெருமமாகவும், துருவப்பகுதியில் குறைவாகவும் இருக்கும்.
விடை:
தவறு. சரியான கூற்று : பொருட்களின் எடை நில நடுக்கோட்டுப் பகுதியில் குறைவாகவும், துருவப் பகுதியில் பெருமமாகவும் இருக்கும்.

Question 4.
திருகுமறை (Screw) ஒன்றினை குறைந்த கைப்பிடி உள்ள திருகுக் குறடு (Spanner) வைத்து திருகுதல், நீளமான கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்துத் திருகுதலை விட எளிதானதாகும்.
விடை:
தவறு. சரியான கூற்று: திருகுமறை (Screw) ஒன்றினை நீளமான கைப்பிடி உள்ள திருகுக் குறடு (Spanner) வைத்து திருகுதல், குறைந்த கைப்பிடி கொண்ட திருகுக் குறடினை வைத்துத் திருகுதலை விட எளிதானதாகும்.

Question 5.
புவியினை சுற்றி வரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர், புவிஈர்ப்பு விசை இல்லாததால் எடையிழப்பை உணர்கிறார். விடை:
தவறு. சரியான கூற்று: புவியினை சுற்றி வரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரரின் புவி ஈர்ப்பு முடுக்கம், விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால் எடையிழப்பை உணர்கிறார்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 35
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 36

V. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.

Question 1.
கூற்று: வலஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பு, இடஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பிற்கு சமமானதாக இருக்கும். காரணம்: உந்த அழிவின்மை விதி என்பது புறவிசை மதிப்பு சுழியாக உள்ளபோது மட்டுமே சரியானதாக இருக்கும்.
விடை:
(ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 2.
கூற்று: ‘g’ ன் மதிப்பு புவிப்பரப்பில் இருந்து உயர செல்லவும் புவிப்பரப்பிற்கு கீழே செல்லவும் குறையும்.
காரணம்: ‘g’ மதிப்பானது புவிப்பரப்பில் பொருளின் நிறையினைச் சார்ந்து அமைகிறது.
விடை:
(இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு.

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
விடை:
ஒவ்வொரு பொருளும் தன் மீது சமன் செய்யப்படாத புற விசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையையோ, அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை நிலைமம்’ என்றழைக்கப்படுகிறது.

Question 8.
பெரிய வாகனங்களில் திருகுமறைகளை (nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner) பயன்படுத்தப்படுவது ஏன்?
விடை:

  1. விசையின் திருப்புத்திறன், திருகுக்குறடின் கைப்பிடி நீளத்தைப் பொறுத்து அதிகரிக்கிறது. ஆகவே திருகுக்குறடின் கைப்பிடி நீளமாக இருக்கிறது.
  2. விசையின் திருப்புத்திறன் Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 40

Question 9.
கிரிக்கெட் விளையாட்டில் மேலிருந்து விழும் பந்தினை பிடிக்கும் போது, விளையாட்டு வீரர் தம் கையினை பின்னோக்கி இழுப்பது ஏன்?
விடை:
விளையாட்டு வீரர் தன் கையை பின்னோக்கி இழுப்பதற்கு காரணம்

  1. மோதும் காலம் சற்று அதிகரிக்கிறது.
  2. தன் கையில் பந்து ஏற்படுத்தும் கணத்தாக்கு விசையின் அளவை இது குறைக்கிறது.

Question 10.
விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?
விடை:

  1. விண்வெளி வீரர் உண்மையில் மிதப்பதில்லை.
  2. விண்கலம் மிக அதிக சுற்றியக்க திசைவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர் அக்கலத்துடன் இணைந்து சம வேகத்தில் நகர்கிறார்.
  3. அவரது முடுக்கம், விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால், அவர் தடையின்றி விழும் நிலையில் (free fall) உள்ளார்.
  4. அப்போது அவரது தோற்ற எடை மதிப்பு சுழியாகும். (R = 0). எனவே அவர் அக்கலத்துடன் எடையற்ற நிலையில் காணப்படுகிறார்.

VII. கணக்கீடுகள்

Question 1.
இருபொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 ms-2 மதிப்பில் அதை முடுக்குவித்தால், அதே விசை கொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?
விடை:
கொடுக்கப்பட்டவை:
இரு பொருட்களின் நிறை விகிதம் 3 : 4
சிறிய பொருளின் நிறை = m1 = 3 kg எனவும்,
பெரிய பொருளின் நிறை = m2 = 4 kg எனவும் கருதுக.
அதிக நிறையுடைய பெரிய பொருள் மீது விசை செயல்படுவதால் ஏற்படும் முடுக்கம், a2 = 12 ms-2 கண்டறிய: சிறிய பொருளின் மீதான குறைந்த விசை a1 = ?
தீர்வு:
நியூட்டனின் இரண்டாம் விதிப்படி,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 45
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதிப்படி,
F1 = -F2,
3a1 = -48 ∴ a1 = –\(\frac{48}{3}\) = -16 ms-2
சிறிய பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் : 16 ms-2

Question 2.
1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10 மீவி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் மீண்டும் உயரச்செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
நிறை (m) = 1 கிகி
தொடக்க திசைவேகம் u = 10 மீவி-1
இறுதி திசைவேகம் v = -10 மீவி-1
கண்டறிய: பந்தில் ஏற்படும் உந்தமாற்றம்
= ?
தீர்வு: மோதலுக்கு முன் உந்தம்
= mu = 1 × 10
= 10 கிகி மீவி-1
மோதலுக்கு பின் உந்தம்
= mv = -(1 × 10)
= – 10 கிகி மீவி-1
உந்த மாற்றம் = mv- mu
= – 10 – 10 கிகி மீவி-1
= – 20 கிகி மீவி-1

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 3.
இயந்திரப் பணியாளர் ஒருவர் 40 cm கைப்பிடி நீளம் உடைய திருகுக்குறடு கொண்டு 140 N விசை மூலம் திருகு மறை ஒன்றை கழற்றுகிறார். 40 N விசை கொண்டு அதே திருகு மறையினை கழற்ற எவ்வளவு நீள கைப்பிடி கொண்ட திருகுக்குறடு தேவை?
விடை:
கொடுக்கப்பட்டவை:
விசை F1 = 140 N
நீளம் L1 = 40 cm = 40 × 10-2m
விசை F2 = 40N
நீளம் L2 = ?
கண்ட றிய: F1 × L2 = F2 × L2
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 46
நீளம் L2 = 1.4 m

Question 4.
இரு கோள்களின் நிறை விகிதம் முரையே 2:5, அவைகளின் ஆர விகிதம் முறையே 4:7 எனில், அவற்றின் ஈர்ப்பு முடுக்கம்
விகிதத்தை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
இரு கோள்களின் நிறை விகிதம் 2 : 5
m1 : m2 = 2 : 5
ஆரவிகிதம் = 4 : 7
r1 : r2 = 4 : 7
சிறிய பொருளின் நிறை m1 = 2 kg
பெரிய பொருளின் நிறை m2 = 5 kg
கண்ட றிய:
புவி ஈர்ப்பு முடுக்க விகிதம் g1 : g2 = ?
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 50

VIII. விரிவாக விடையளி.

Question 1.
நிலைமத்தின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. (PTA-3)
விடை:
நிலைமத்தின் வகைகள்:

(i) ஓய்வில் நிலைமம்
(ii) இயக்கத்தில் நிலைமம்
(iii) திசையில் நிலைமம்

(i) ஓய்வில் நிலைமம்: நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு, ஓய்வில் நிலைமம் எனப்படும். (எ.கா) கிளைகளை உலுக்கிய பின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள், பழங்கள்.

(ii) இயக்கத்தில் நிலைமம்: இயக்க நிலையில் உள்ள பொருள், தமது இயக்க நிலை மாற்றத்தை
எதிர்க்கும் பண்பு, இயக்கத்தில் நிலைமம் எனப்படும். (எ.கா) நீளம் தாண்டுதல் போட்டியில் நீண்ட தூரம் தாண்டுவதற்காக, தாண்டும் முன் சிறிது தூரம் ஓடுவது.

(iii) திசையில் நிலைமம்: இயக்க நிலையில் உள்ள பொருள், இயங்கும் திசையில் இருந்து மாறாது, திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு திசையில் நிலைமம் எனப்படும். (எ.கா) ஓடும் மகிழுந்து வளைபாதையில் செல்லும் போது பயணியர் ஒருபக்கமாக சாய்தல்.

Question 2.
நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.
விடை:
நியூட்டனின் முதல்விதி:

  1. ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
  2. இவ்விதி விசையினை வரையறுக்கிறது. பொருட்களின் நிலைமத்தையும் விளக்குகிறது.

நியூட்டனின் இரண்டாம் இயக்கவிதி:

  1. பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும், இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
  2. இவ்விதி விசையின் எண்மதிப்பை அளவிட உதவுகிறது. இதை ‘விசையின் விதி’ என்றும் அழைக்கலாம்.
    F = ma

நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதி:

  1. ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு. விசையும் எதிர் விசையும் எப்போதும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
  2. (எ.கா) பறவைகள் தமது சிறகுகளின் விசை (விசை) மூலம் காற்றினை கீழே தள்ளுகின்றன. காற்றானது அவ்விசைக்கு சமமான விசையினை (எதிர்விசை) உருவாக்கி பறவையை மேலே பறக்க வைக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 3.
விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதிமூலம் தருவி.
விடை:
நியூட்டனின் இரண்டாம் இயக்கவிதி:
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும், இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.

விசைக்கான சமன்பாடு:
m நிறை மதிப்புடைய பொருள் ஒன்று u என்ற ஆரம்ப திசைவேகத்தில் நேர்க்கோட்டு இயக்கத்தில் உள்ளதெனக் கொள்வோம்.

‘t’ என்ற கால இடைவெளியில் F என்ற சமன் செயப்படாத புற விசையின் தாக்கத்தால், அதன் வேகம் V என்று மாற்றமடைகிறது.
பொருளின் ஆரம்ப உந்தம் Pi = mu
இறுதி உந்தம் Pf = mv
உந்தமாறுபாடு ∆ p = Pf – Pi
= mv – mu
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி,
விசை F ∝ உந்த மாற்றம்/ காலம்
F ∝ (mv – mu) / t
F = Km (v-u)/t
K என்பது விகித மாறிலி; K = 1 (அனைத்து அலகு முறைகளிலும்).
எனவே F = m(v – u) / t
முடுக்கம் = திசை வேகமாற்றம் /காலம் ;
a = (v – u) /t
எனவே, F = m × a
விசை = நிறை × முடுக்கம்

Question 4.
உந்த மாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க. GMQP-2019
விடை:
உந்த மாறாக் கோட்பாடு:
புற விசை ஏதும் தாக்காத வரையில் ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் மீது செயல்படும். மொத்த நேர்க்கோட்டு உந்தம் மாறாமல் இருக்கும். நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை கீழ்கண்ட ஒரு எடுத்துக்காட்டின் மூலம் நிரூபிக்கலாம்:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 52

  1. A மற்றும் B என்ற இரு பொருட்களின் நிறைகள் முறையே m1 மற்றும் m2 என்க. அவை
    நேர்க்கோட்டில் பயணிப்பதாக கொள்வோம்.
  2. u1 மற்றும் u2 என்பவை அவற்றின் ஆரம்ப திசை வேகங்களாக கொள்வோம்.
  3. பொருள் A-ஆனது, B-ஐ விட அதிக திசைவேகத்தில் செல்வதாக கருதுவோம். (u1 > u2).
  4. ‘t’ என்ற கால இடைவெளியில் பொருள் A – னது, B மீது மோதலை ஏற்படுத்துகிறது.
  5. மோதலுக்குப் பிறகு அப்பொருள்கள் அதே நேர்க்கோட்டில் v1 மற்றும் v2 திசைவேகத்தில் பயணிப்பதாக கொள்வோம்.
  6. நியூட்டனின் இரண்டாம் விதிப்படி,
    B-யின் மீது A-ன் விசை
    FA = m2 (v2 – u2) /t
    அதே போல் A யின் மீது B-ன் விசை
    FB = m1(v1 – u1) /t
  7. நியூட்டனின் மூன்றாம் விதிப்படி,
    A-ன் மீது செயல்படும் விசையானது B-ன் மீது செயல்படும் எதிர்விசைக்கு சமம்.
    FB = – FA
    m1 (v1 – u1)/t = -m2(v2 – u2) /t
    m1v1 + m2v2 = m1u1 + m2u2
  8. மேற்காண் சமன்பாடு, இந்நிகழ்வில் வெளிவிசையின் தாக்கம் எதும் இல்லாத போது, மோதலுக்கு பின் உள்ள மொத்த உந்த மதிப்பு, மோதலுக்கு முன் உள்ள மொத்த உந்த மதிப்பிற்கு சமம் என்பதை காட்டுகிறது.
  9. இது பொருளின் மீது செயல்படும் மொத்த உந்தம் ஒரு மாறிலி என்ற நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை நிரூபிக்கிறது.

Question 5.
ராக்கெட் ஏவுதலை விளக்குக. (PTA-4; Sep.20)
விடை:

  1. ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி பயன்படுகின்றன.
  2. ராக்கெட்டுகளில் உள்ள கலனில் திரவ அல்லது திட எரிபொருள்கள் நிரப்பப்படுகின்றன.
  3. அவை எரியூட்டப்பட்டதும், வெப்ப வாயுக்கள் ராக்கெட்டின் வால் பகுதியில் இருந்து அதிக திசைவேகத்தில் வெளியேறுகின்றன.
  4. அவை மிக அதிக உந்தத்தை உருவாக்குகின்றன.
  5. இந்த உந்தத்தை சமன் செய்ய, அதற்கு சமமான எதிர் உந்துவிசை எரிகூடத்தில் (Combustion Chamber) உருவாகி, ராக்கெட் மிகுந்த வேகத்துடன் முன்னோக்கி பாய்கிறது.
  6. ராக்கெட் உயர பயணிக்கும் போது அதில் உள்ள எரிபொருள் முழுவதும் எரியும் வரை அதன் நிறை படிப்படியாக குறைகிறது.
  7. உந்த அழிவின்மை விதியின் படி, நிறை குறையக் குறைய, அதன் திசைவேகம் படிப்படியாக அதிகரிக்கிறது.
  8. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ராக்கெட்டானது புவியின் ஈர்ப்பு விசையினை தவிர்த்து விட்டு செல்லும் வகையில், அதன் திசைவேக மதிப்பு உச்சத்தை அடைகிறது. இது விடுபடுவேகம் (Escape Speed) எனப்படுகிறது.

Question 6.
பொது ஈர்ப்பியல் விதியினை கூறுக. அதன் கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க. (Qy-2019)
விடை:
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி:
அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வோர் துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது. அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர் விகிதத்திலும், அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் இருக்கும். மேலும் இவ்விசை நிறைகளின் இணைப்புக் கோட்டின் வழியே செயல்படும். இவ்விசை எப்போதும் ஈர்ப்பு விசையாகும். இவ்விசை, நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல.
இதன் கணிதவியல் சூத்திரம்:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 75
m1 மற்றும் m2 என்ற நிறையுடைய இரு பொருள்கள் r என்ற தொலைவில் வைக்கப்பட்டுள்ளதாக கருதுவோம். இவற்றிற்கிடையே உள்ள ஈர்ப்பு விசை F ஆனது, பொது ஈர்ப்பியல் விதிப்படி,
F ∝ m1 × m2
F ∝ 1/r2
இவை இரண்டையும் இணைத்து
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 78
G என்பது ஈர்ப்பியல் மாறிலி, இதன் மதிப்பு (SI அலகுகளில்) 6.674 × 10-11 Nm2 kg-2

Question 7.
பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாட்டினை விவரி.
விடை:
ஈர்ப்பியல் விதியின் பயன்பாடுகள்:

  1. அண்டத்தில் உள்ள விண் பொருட்களின் பரிமாணங்களை அளவிட பயன்படுகிறது.
  2. புவியின் நிறை, ஆரம், புவிஈர்ப்பு முடுக்கம் முதலியனவற்றை துல்லியமாக கணக்கிட உதவுகிறது.
  3. புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
  4. சில நேரங்களில் விண்மீன்களின் சீரற்ற நகர்வு (Wobble) அருகில் உள்ள கோள்களின் இயக்கத்தை பாதிக்கும். அப்போது அவ்விண்மீன்களின் நிறையினை அளவிட பயன்படுகிறது.
  5. தாவரங்களின் வேர் முளைத்தல் மற்றும் வளர்ச்சி புவியின் ஈர்ப்புவிசை சார்ந்து அமைவது ‘புவிதிசை சார்பியக்கம்’ என்றழைக்கப்படுகிறது. இந்நிகழ்வை விளக்க இவ்விதி பயன்படுகிறது.
  6. விண்பொருட்களின் பாதையினை வரையறை செய்வதற்கு இவ்விதி பயன்படுகிறது.

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
8 கிகி மற்றும் 2 கிகி நிறையுடைய இரு பொருள்கள் வழவழுப்பாக உள்ள பரப்பில் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன. அவை 15N அளவிலான கிடைமட்ட விசை கொண்டு நகர்த்தப்படுகின்றன எனில், 2 கிகி நிறையுடைய பொருள் பெரும் விசையினை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
முதல் பொருளின் நிறை m1 = 8 கிகி
இரண்டாம் பொருளின் நிறை m2 = 2 கிகி
மொத்த நிறை m = m1 + m2
∴ m = 8 + 2 = 10 கிகி
விசை F1 = 15N
கண்டறிய: 2 கி.கி நிறையுடைய பொருள் பெறும் விசை F2=?
தீர்வு:விசை F1 = நிறை × முடுக்கம் = ma
F1 = 10 × a
∴ a = \(\frac{\mathrm{F}_{1}}{10}\) = \(\frac{15}{10}\) = 1.5 ms-2
2 கிகி நிறையுடைய பொருள் பெறும் விசை,
F2 = m2a = 2 × 1.5 = 3N
2 கிகி நிறையுடைய பொருள் பெறும் விசை = 3N

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 2.
கன உந்து (Heavy vehicle) ஒன்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் சம இயக்க ஆற்றலுடன் பயணிக்கின்றன. கன உந்தின் நிறையானது இரு சக்கர வாகன நிறையினை விட நான்கு மடங்கு அதிகம் எனில், இவைகளுக்கிடையே உள்ள உந்த வீதத்தை
கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
கன உந்து (Truck) இயக்க ஆற்றல் = இருசக்கர வாகன (bike) இயக்க ஆற்றல்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 80
சமன்.(2) ஐ (1) ல் பிரதியிட
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 81
கண்டறிய: உந்தவீதம் = ?
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 82

Question 3.
பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதும் இருக்கைப்பட்டை அணிவதும் நமக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். இக்கூற்றினை நியூட்டனின் இயக்க விதிகள் கொண்டு நியாப்படுத்துக.
விடை:

  1. பயணத்தின்போது, திடீரென நிற்கும்போது, உடல் ஓய்வு நிலைக்கு வர முடியாமல் முன்னோக்கி செல்லும்.
  2. இங்கு நியூட்டனின் நிலைமம் விதி செயல்படு கிறது. முன்னோக்கி சாய்வதை தடுக்க இருக்கைப்பட்டை அணிவது அவசியம்.
  3. வாகனத்திலிருந்து திடீரென கீழே விழும்போது தலை தரையில் மோதுவதை தடுக்க தலைக்கவசம் அணிகிறோம். இங்கு நியூட்டனின் மூன்றாம் விதி பயன்படுகிறது.
  4. தலைக்கவசம் இல்லையெனில் விழும்போது எதிர்விசையில் தலையில் காயம் ஏற்படும்.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
இரு பொருள்கள் குறிப்பிட்ட இடை வெளியில் உள்ள போது அவற்றிற்கிடையேயுள்ள விசை F என்க. அவற்றின் தொலைவு இரு மடங்கானால் அவற்றின் ஈர்ப்புவிசை ……. ஆக இருக்கும்.
[PTA-5]
அ) 2F |
ஆ) F/2
இ) F/4
ஈ) 4F
விடை:
(இ) F/4

Question 2.
ஒரு கிராம் நிறையுள்ள பொருளை 1 செமீவி-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசை
அ) 1N
ஆ) 10N
இ) 10′ டைன்
ஈ) 1 டைன்
விடை:
(ஈ) 1 டைன்

2 மதிப்பெண்கள்

Question 1.
தகுந்த காரணங்களோடு இணைகளைத் தொடர்புபடுத்தி கோடிட்ட இடத்தினை நிரப்புக. (4 Marks) [PTA-4]
அ) கதவினைத் திறத்தல்: விசையின்
திருப்புத்திறன் ;
தண்ணீ ர் குழாயைத் திறத்தல்:
இரட்டைகளின் திருப்புத்திறன்
ஆ) பேருந்தினை ஒன்றுக்கு மேற்பட்டோர்
தள்ளுதல்: ஒத்த இணை விசைகள் ;
கயிறிழுக்கும் போட்டி:
எதிரெதிர் திசையில் செயல்படும்
சமமற்ற இணை விசைகள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 2.
மின்தூக்கி ஒன்று 1.8 மீவி-2 முடுக்கத்துடன் கீழே நகர்கிறது எனில் 50 கிகி நிறை கொண்ட மனிதர் எவ்வளவு தோற்ற எடையினை உணர்வார்? [PTA-1]
விடை:
கொடுக்கப்பட்டவை:
முடுக்கம் = 1.8 மீவி-2
நிறை = 50 கிகி
கண்டறிய: தோற்ற எடை R =?
தீர்வு:
மின்தூக்கி ‘a’ என்ற முடுக்க மதிப்பில் கீழே நகர்கிறது எனில்,
தோற்ற எடை, R = m(g-a)
= 50(9.8 – 1.8)
= 50 × 8
தோற்ற எடை = 400 N

Question 3.
கொடுக்கப்பட்டக் கூற்றினையும், காரணத்தினையும் நன்றாக ஆராய்ந்து சரியான விடையினை தேர்வு செய்க.(PTA-3)
கூற்று: நீந்தும் ஒருவர் நீரினை கையால் பின்னோக்கி தள்ளுகிறார். நீரானது அந்த நபரை முன்னோக்கி தள்ளுகிறது. காரணம்: ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு,
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

Question 4.
நிலநடுக்கோட்டுப் பகுதியைவிட துருவப் பகுதியில் ஆப்பிள்களின் எடை அதிகம் ஏன்? (4 Marks) [PTA-3)
விடை:
புவிஈர்ப்பு முடுக்கமதிப்பு புவியில் இடத்திற்கு இடம் மாறுபடுவதால், எடையின் மதிப்பும் இடத்திற்கு இடம் மாறுபடும். பொருட்களின் எடை துருவப்பகுதியில் அதிகமாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் குறைவாகவும் இருக்கும். எனவே நிலநடுக்கோட்டுப் பகுதியைவிட துருவப் பகுதியில் ஆப்பிளின் எடை அதிகமாக இருக்கும்.

Question 5.
ஒரு பொருளின் மீது 5N விசை செயல்பட்டு, அப்பொருளை 5 செமீவி-2 என்ற அளவிற்கு முடுக்குவிக்கிறது எனில் அப்பொருளின் நிறையினைக் கணக்கிடுக. (4 Marks) [PTA-5]
விடை:
கொடுக்கப்பட்டவை:
F = 5N
a = 5cm s-2
= 0.05 ms-2
கண்டறிய: பொருளின் நிறை m =?
F = ma
m = \(\frac{F}{a}\) = \(\frac{5}{0.05}\)
m = 100 kg

Question 6.
புவியின் மேற்பரப்பின் மையத்தில் இருந்து எந்த உயரத்தில் புவியின் ஈர்ப்பு முடுக்கமானது, புவிமேற்பரப்பு ஈர்ப்பு முடுக்கத்தின் 1/4 மடங்காக அமையும்? (4 Marks) [PTA-6]
விடை:
புவிமேற்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் = g
புவி மையத்தில் இருந்து கணக்கீடு செய்ய வேண்டிய உயரம்
R’ = R + h
அவ்வுயரத்தில் புவிஈர்ப்பு முடுக்கம் –
g’ = g/4
தீர்வு;
R’ உயரத்தில் ஈர்ப்பு முடுக்கம்
g’ = GMm/R’2
புவிப்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம்
g = GMm/ R2
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 86
கணக்கீடு செய்ய வேண்டிய உயரம்
R’ = R + h
h = R ஆதலால்
R’ = 2R
புவியின் மையத்தில் இருந்து, புவி ஆரத்தை போல் இருமடங்குதொலைவில், ஈர்ப்பு முடுக்க மதிப்பு புவிப்பரப்பின் முடுக்கத்தைப்போல் 1/4 மடங்காக அமையும்.

7 மதிப்பெண்கள்

Question 1.
(i) சொகுசுப் பேருந்துகளில் அதிர்வுறுஞ்சிகள் பயன்படுத்தப் படுகிறது. ஏன்? (PTA-2)
விடை:
சீரற்ற பரப்பில் பேருந்து பயணத்தின்போது கணத்தாக்கு விசை அதிர்வுகளை குறைப்பதற்கு அதிர்வுறுஞ்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. சொகுசுப் பேருந்துகளில் இவை தேவையற்ற அதிர்வுகளை உறிஞ்சிக்கொண்டு நம்மை பாதுகாக்கின்றன.

(ii) பூமியில் 686 N எடையுள்ள மனிதர் நிலவுக்குச் சென்றால் அங்கு அவரது எடை மதிப்பினைக் கணக்கிடுக. (நிலவின் ‘g’ மதிப்பு 1.625 மீவி-2).
தீர்வு:
w = mg = 686NT
m = \(\frac{w}{g}\) = \(\frac{686}{9.8}\) = 70 kg
W = mg = 70 × 1.625
W = 113.75 N

(ii) பறவை பறத்தலில் உள்ள இயக்க விதியினைக் கூறுக. அவ்விதிக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
விடை:
பறவை பறத்தலில் உள்ள இயக்க விதி, நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி ஆகும். மேலும் ஓர் எடுத்துக்காட்டு: நீச்சல் வீரர் ஒருவர் நீரினை கையால் பின்நோக்கி தள்ளுதலின் மூலம் விசையினை ஏற்படுத்துகிறார். நீரானது அந்நபரை விசைக்கு சமமான எதிர்விசை கொண்டு முன்னே தள்ளுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 2.
m நிறை உடைய பொருள் ஒன்று u என்ற ஆரம்ப திசைவேகத்தில் நகர்கிறது. F என்ற விசை செயல்பட்டு t என்ற கால இடைவெளியில் v என்ற திசைவேகமாக மாற்றமடைந்து a என்ற அளவில் முடுக்கமடைகிறது. இத்தரவுகளைக் கொண்டு விசை, நிறை மற்றும் முடுக்கத்திற்கான தொடர்பைத் தருவிக்கவும். (PTA-5)
விடை:
பொருளின் ஆரம்ப திசைவேகம் = mu
பொருளின் இறுதி திசைவேகம் = mv
திசைவேக மாறுபாடு
= mv – mu
= m(v – u) …. (1)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 90
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி,
∴ செயல்படும் விசை,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 91
செயல்படும் விசை,
F ∝ ma
F ∝ k ma (k = 1)
∴ F = ma
ஆகவே, பொருளின் மீது செயல்படும் விசை
= நிறை × முடுக்கம்

அரசு தேர்வு வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
5 கி.கி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2 கி.கி மீவி-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.
[GMQP-2019]
தரவுகள்:
நிறை (m) = 5 கிகி
நேர்க்கோட்டு உந்தம் (p) = 2 கிகி மீவி-1
சூத்திரம் :
நேர்க்கோட்டு உந்தம் (p)
= நிறை (m) × திசைவேகம் (v)
∴ திசைவேகம் (v)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 92

Question 2.
பற்சக்கரங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக. [Sep.20]
விடை:
பற்சக்கரங்கள் வட்டப்பரப்பின் விளிம்பு-களில் பல் போன்று மாற்றம் செய்யப்பட்ட அமைப்புகள் ஆகும். பற்சக்கரங்கள் மூலம் திருப்புவிசையினை மாற்றி இயங்குகின்ற வாகனசக்கரங்களின் சுழற்சி வேகத்தை மாற்றலாம். மேலும் திறனை கடத்துவதற்கும் இவை உதவுகின்றன.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

4th Social Science Guide குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
____________ இந்திய சட்டத்திற்கு எதிரானது.
அ) பள்ளியில் குழந்தைகள் படித்தல்.
ஆ) தொழில்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.
இ பள்ளி செயல்காடுகளில் குழந்தைகள் பங்கேற்றல்.
ஈ) குழந்தைகள் தரமான உணவைப் பெறுதல்.
விடை:
ஆ) தொழில்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.

Question 2.
போலியோ சொட்டு மருந்து _____________ களுக்கு வழங்கப்படுகின்றன.
அ) ஆண்
ஆ) பெண்
இ குழந்தை
ஈ) மூத்த குடிமக்கள்
விடை:
இ குழந்தை

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Question 3.
ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பை ___________ என்பர்.
அ) கதைப் புத்தகம்
ஆ) விதிமுறைப் புத்தகம்
இ அரசியலமைப்பு
ஈ) பாடநூல்
விடை:
இ அரசியலமைப்பு

Question 4.
பின்வருவனவற்றில் எது குழந்தைகளின் உரிமை இல்லை ?
அ) ஓட்டுநர் உரிமம் பெறுதல்
ஆ) கல்வி பெறுதல்
இ போதுமான உணவைப் பெறுதல்
ஈ) ஆரோக்கியமாக வாழ்தல்
விடை:
அ) ஓட்டுநர் உரிமம் பெறுதல்

II. சரியா, தவறா என எழுதுக.

Question 1.
போலியோ சொட்டு மருந்தைப் பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை ஆகும்.
விடை:
சரி

Question 2.
அனைத்து வயது குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான . உரிமைகள் உள்ளன.
விடை:
தவறு

Question 3.
6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வேலை செய்ய வேண்டும்.
விடை:
தவறு

Question 4.
குழந்தைகளைத் துன்புறுத்துவது தவறானது.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Question 5.
குழந்தைகள் தவறான தொடுதலை அறிந்திருக்க வேண்டும்.
விடை:
சரி

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. சிறார் உதவி மைய எண் – ஒரு நாட்டின் உறுப்பினர்
2. தடுப்பூசிகள் – சுகாதாரம்
3. வாஷ் (Wash) – சட்டவிரோதமானது
4. குடிமகன் – நோய்களிலிருந்து பாதுகாப்பு
5. குழந்தைத் தொழிலாளர் – 1098
விடை:
1. சிறார் உதவி மைய எண் – 1098
2. தடுப்பூசிகள் – நோய்களிலிருந்து பாதுகாப்பு
3. வாஷ் (Wash) – சுகாதாரம்
4. குடிமகன் – ஒரு நாட்டின் உறுப்பினர்
5. குழந்தைத் தொழிலாளர் – சட்டவிரோதமானது

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
உங்கள் உடலில் யாரும் தொடக்கூடாத மூன்று பகுதிகள் யாவை?
விடை:
உடலில் யாரும் தொடக்கூடாத மூன்று பகுதிகள் உதடுகள், மார்பு மற்றும் கால்களுக்கு இடையில் ஆகிய பகுதிகள் ஆகும்.

Question 2.
குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ள பல்வேறு உரிமைகள் யாவை?
விடை:

  1. உயிர்வாழ்வதற்கான உரிமை.
  2. வளர்ச்சிக்கான உரிமை
  3. பாதுகாப்பு உரிமை
  4. பங்கேற்பதற்கான உரிமை

Question 3.
உயிர்வாழ்வதற்கான உரிமை – குறிப்பு வரைக.
விடை:
இது ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதாகும். வாஷ் (Wash) திட்டமும் இதன் ஒரு பகுதியாகும்.

Question 4.
பங்கேற்பதற்கான உங்கள் உரிமையை எப்போதாவது நீங்கள் பயன்படுத்திருக்கறீர்களா? விவரிக்க.
விடை:
ஆம். எங்கள் வீட்டை புதுபிக்கும் பொழுது எவ்வாறெல்லாம் வண்ணம் பூச வேண்டும் என்று என் தந்தையுடன் விவாதித்து உள்ளேன்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Question 5.
உரிமைகள் முக்கியமானவை. ஏன்?
விடை:
நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காவும் உருவாக்கப்பட்டதே உரிமைகள் ஆகும். எனவே உரிமைகள் முக்கியமானவை ஆகும்.

V. கூடுதல் வினா :

Question 1.
குடிமகன் என்பது யார்?
விடை:
குடிமகன் என்பது ஒரு நாட்டின் உறுப்பினராக இருக்கும் ஒரு நபர் ஆவார்.

Question 2.
அரசியலமைப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பு அரசியலமைப்பு எனப்படும்.

Question 3.
வாஷ் (Wash) பற்றி எழுதுக.
விடை:
வாஷ் (Wash) என்பது நீர், சுகாதாரம், மற்றும் தூய்மையைக் குறிக்கும்.

Question 4.
இலவசக் கல்வியை வழங்குவது யாருடைய கடமையாகும்?
விடை:
இலவசக் கல்வியை வழங்குவது அரசின் கடமையாகும்.

4th Social Science Guide குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் InText Questions and Answers

பக்கம்-132 செயல்பாடு

சிந்தித்து எழுதுக.
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கண்டால், நீ என்ன செய்வாய்?
1. ___________________
2. ___________________
3. ___________________
விடை:
1. கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி கூறுவேன்.
2. அரசின் இலவச கல்வியைப் பற்றி கூறுவேன்.
3. கற்றலின் இனிமையை கூறுவேன்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

பக்கம்-134 செயல்பாடு

உங்கள் வீட்டின் அருகில், பள்ளிக்குச் செல்லாத ஒரு குழந்தையை அடையாளம் காணவும். இக்கேள்வித்தாளைப் பூர்த்தி செய்யவும்.
1. குழந்தையின் பெயர் : ________________
2. குழந்தையின் வயது : ________________
3. இந்நாள்வரை அக்குழந்தை பள்ளிக்குச் சென்றுள்ளதா? ஆம்/இல்லை
4. பள்ளிக்குச் செல்லாதற்கான காரணம்: ________________
5. அவள் / அவனை நீங்கள் எவ்வாறு வழிநடத்துவீர்கள்? : _________________
விடை:
1. குழந்தையின் பெயர் : மாலா
2. குழந்தையின் வயது : 7
3. இந்நாள்வரை அக்குழந்தை பள்ளிக்குச் சென்றுள்ளதா? ஆம்/இல்லை
4. பள்ளிக்குச் செல்லாதற்கான காரணம்: வறுமை
5. அவள் / அவனை நீங்கள் எவ்வாறு வழிநடத்துவீர்கள்?
அரசின் இலவச கல்வி திட்டத்தை பற்றி கூறி பள்ளிக்குச் செல்லுமாறு கூறுவேன்.

குறிப்பு :
இந்தக் கணக்கெடுப்பு பெற்றோர்களுக்கும் அக்குழந்தைக்குமானது. : அந்த வகுப்பு குழந்தைகள் இருவர் கொண்ட குழுக்களாக, ஒரு குடும்பம் அல்லது குழந்தையைப் பேட்டி காணவும்.. ஒவ்வொரு நிலைபாட்டிற்கும் தீர்வுகள் குறித்து ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடலாம்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

4th Social Science Guide சென்னை மாகாணத்தின் வரலாறு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மதராஸ் மாகாணம் ___________ இல் உருவாக்கப்பட்டது.
அ) 1800
ஆ) 1801
இ 1802
ஈ) 1803
விடை:
ஆ) 1801

Question 2.
மதராஸ் மாநிலம் அதிகாரப்பூர்வமாக ___________ இல் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
அ) 1947
ஆ) 1953
இ 1956
ஈ) 1969
விடை:
ஈ) 1969

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Question 3.
மாமல்லபுரம் _____________ வம்சத்தினரால் உருவாக்கப்பட்டது.
அ) நாயக்கர்
ஆ) பல்லவ
இ சோழ
ஈ) ஆங்கிலேய
விடை:
ஆ) பல்லவ

Question 4.
“தென்னிந்தியாவின் ஸ்பா” என்று அழைக்கப்படுவது எது?
அ) போடிநாயக்கனூர்
ஆ) ஒகேனக்கல்
இ குற்றாலம்
ஈ) செஞ்சிக் கோட்டை
விடை:
இ குற்றாலம்

Question 5.
எட்டு அடுக்கிலான மிகச் சிறிய அளவிலுள்ள மனோரா கோட்டையைக் கட்டியவர் ___________ ஆவார்.
அ) சரபோஜி மன்னர்
ஆ) சின்ன பொம்மி நாயக்கர்
இ திம்மா ரெட்டி நாயக்கர்
ஈ) திருமலை நாயக்கர்
விடை:
அ) சரபோஜி மன்னர்

II. சரியா, தவறா என எழுதுக.

Question 1.
மதராஸ் மாகாணத்தின் தலைநகரம் மதராஸ் நகரம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர், பழங்கால சோழர்களின் கிராமமாகும்.
விடை:
தவறு

Question 3.
திருமலை நாயக்கர் அரண்மனை திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Question 4.
கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது.
விடை:
சரி

Question 5.
கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரிய கோயில் எனவும் அறியப்படுகிறது.
விடை:
தவறு

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. காவலூர் – கிழக்கின் டிராய்
2. செஞ்சிக் கோட்டை – ஊட்டி
3. போடிநாயக்கனூர் – வைணு பாப்பு ஆய்வகம்
4. முத்து நகரம் – ஏலக்காய் நகரம்
5. ஜான் சல்லிவன் – தூத்துக்குடி
விடை:
1. காவலூர் – வைணு பாப்பு ஆய்வகம்
2. செஞ்சிக் கோட்டை – கிழக்கின் டிராய்
3. போடிநாயக்கனூர் – ஏலக்காய் நகரம்.
4. முத்து நகரம் – தூத்துக்குடி
5. ஜான் சல்லிவன் – ஊட்டி

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
செஞ்சிக் கோட்டையின் முக்கியத்துவத்தைக் கூறுக.
விடை:
செஞ்சிக் கோட்டையானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று குன்றுகள் சூழ்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

Question 2.
திருமலை நாயக்கர் அரண்மனையின் முக்கிய அம்சங்கள் யாவை?
விடை:
திருமலை நாயக்கர் அரண்மனை திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டடக்கலைகளின் ஒருமித்த கலவையாக இருப்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

Question 3.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
மேட்டூர் அணை, ஒகேனக்கல் அருவி, ஏர்காடு:

Question 4.
கல்லணை – குறிப்பு வரைக.
விடை:
கல்லணை தென்னிந்தியாவில் காவிரியாற்றின் குறுக்கே கி.பி. பொ.ஆ.) 2 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர் கரிகாலனால் கட்டப்பட்டது.

Question 5.
மலைக் கோட்டை – குறிப்பு வரைக.
விடை:
83 மீட்டர் உயரமுள்ள பழமையான ஒரு பாறையின் மீது மலைக்கோட்டை கோயில் கட்டப்பட்டுள்ளது. அக்கோட்டையின் உள்ளே இரண்டு இந்து கோயில்கள் உள்ளன.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Question 6.
தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
மெரினா கடற்கரை, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் மற்றும் மகாபலிபுரம்.

V. கூடுதல் வினா.

Question 1.
மதராஸ் மாகாணத்தின் தலைநகரம் எது?
விடை:
தற்போது சென்னை என்று அழைக்கப்படும் மதராஸ் நகரம், அன்றைய மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாகும்.

Question 2.
உத்திரமேரூர் எங்கு அமைந்துள்ளது?
விடை:
உத்திரமேரூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Question 3.
அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தின் பகுதிகள் யாவை?
விடை:
இன்றைய விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தின் பகுதிகள் ஆகும்.

Question 4.
“சைலம்” என்றால் என்ன?
விடை:
“சைலம்” என்றால் மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும்.

Question 5.
தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மலைவாழிடம் எது?
விடை:
தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மலை வாழிடம் ஊட்டி ஆகும்.