Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

நேரம்: 3.00 மணி
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பகுதி – 1 (மதிப்பெண்கள் : 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
வேர்க்கடலை, மிளகாய் விதை. மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை …………………
(அ) குலை வகை
(ஆ) மணி வகை
(இ) கொழுந்து வகை
(ஈ) இலை வகை
Answer:
(ஆ) மணி வகை

Question 2.
“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” எனக் கூறும் நூல் எது?
(அ) தென்றல் விடு தூது
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) மணிமேகலை
(ஈ) புறநானூறு
Answer:
(ஆ) சிலப்பதிகாரம்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 3.
ஒரு வினையடி பல……………. ஏற்கும்
(அ) பகுதிகளை
(ஆ) விகுதிகளை
(இ) சந்திகளை
(ஈ) சாரியைகளை
Answer:
(ஆ) விகுதிகளை

Question 4.
சந்தத்துடன் உள்ள பாடலில் ……… . இருக்கும்.
(அ) எதுகை
(ஆ) இசை
(இ) உயிர்ப்பு
(ஈ) தொடை
Answer:
(ஆ) இசை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 5.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசன் நூல் …….
(அ) காலக்கணிதம்
(ஆ) கலங்காதிரு மனமே
(இ) எழுந்திரு மனமே
(ஈ) சேரமான் காதலி
Answer:
(ஈ) சேரமான் காதலி

Question 6.
காசிக்காண்டத்தில் பாடுப்பொருள்களாக அமைந்தவை…………….
(i) துறவு
(ii) இல்லறம் பெண்களுக்குரிய பண்புகள்
(iii) வாழ்வியல் நெறிகள்
(iv) மறுவாழ்வில் அடையும் நன்மைகள்
(அ), (ii) சரி
(ஆ) (iii) (iv) சரி
(இ) முதல் மூன்றும் சரி
(ஈ) நான்கும் சரி
Answer:
(ஈ) நான்கும் சரி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 7.
செய்யுளில் பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது …………….. அளபெடையானது.
(அ) இன்னிசை
(ஆ) இசைநிறை
(இ) சொல்லிசை
(ஈ) ஒற்று
Answer:
(இ) சொல்லிசை

Question 8.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்……….
(அ) இராமலிங்க
(அடி) களார்
(இ) தாயுமானவர்
(ஈ) செயங்கொண்டார்
Answer:
(அடி) களார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 9.
தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது. …….. ஆகும்.
(அ) புதுமொழி
(ஆ) பழமொழி
(இ) பிறமொழி
(ஈ) பொதுமொழி
Answer:
(ஈ) பொதுமொழி

Question 10.
விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராதல் …………………. தொழிற்பெயராகும்.
(அ) முதனிலைத்
(ஆ) முதனிலைத் திரிந்த
(இ) மாற்றுத்
(ஈ) துறை சார்ந்த
Answer:
(அ) முதனிலைத்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 11.
தமிழர்கள் ………… வாழ்வைக் கொண்டிருந்தனர்.
(அ) செயற்கை
(ஆ) இயற்கை
(இ) சமரச
(ஈ) சமாதான
Answer:
(ஆ) இயற்கை

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
”பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 12.
எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
(அ) பருத்தி, பகர்
(ஆ) நூல், இருக்கை
(இ) கட்டு, பட்டு
(ஈ) பகர், படம்
Answer:
(இ) கட்டு, பட்டு

Question 13.
காருகர் – பொருள் தருக
(அ) நெய்பவர்
(ஆ) உழுபவர்
(இ) படிப்பவர்
(ஈ) ஓடுபவர்
Answer:
(அ) நெய்பவர்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 14.
இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
(அ) மல்லிகை, முல்லை
(ஆ) அகில், சந்தனம்
(இ) பட்டு, கட்டு
(ஈ) நகரம், வீதி
Answer:
(ஆ) அகில், சந்தனம்

Question 15.
இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) தேம்பாவணி
(இ) காசிக்காண்டம்
(ஈ) கம்பராமாயணம்
Answer:
(அ) சிலப்பதிகாரம்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பகுதி – II (மதிப்பெண்க ள் : 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4×2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) கம்பர் எழுதிய நூல்கள் சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலியன.
(ஆ) சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக்காப்பியங்கள் என வழங்குவர்.
Answer:
(அ) கம்பன் எழுதிய நூல்களை பட்டியலிடுக.
(ஆ) இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படும் நூல் எவை?

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 17.
பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் யாவை?
Answer:

  • உலகியல் நூறு
  • பாவியக்கொத்து
  • நூறாசிரியம்
  • கனிச்சாறு
  • எண்சுவை எண்பது,
  • மகபுகுவஞ்சி
  • பள்ளிப்பறவைகள் முதலியனவாகும்

Question 18.
பாரதியார் எழுதிய நூல்களை எழுதுக.
Answer:
பாரதியார் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 19.
இளங்குமரனாரின் தமிழ்ப்பணியைத் தரமுயர்த்திய நூல்கள் யாவை?
Answer:
இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியனவாகும்.

Question 20.
காற்று மாசடைவதனால் ஏற்படும் நோய்களை எழுதுக.
Answer:
காற்று மாசடைவதால் கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய், இளைப்பு நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

Question 21.
‘அருமை’ எனத் தொடங்கும் குறள் எழுதுக.
Answer:
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 x 2 = 10]

Question 22.
சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.
Answer:
பலகையொலி
பலகை + ஒலி (பலகையின் ஒலி)
பல + கை + ஒலி (பல கைகளால் எழுப்புகின்ற ஓசை)

Question 23.

பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டெழுதுக. (அவிழம், தங்கும், கவிழம், தயங்கும்)
Answer:
விடை:
(அ) காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்.
சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

(ஆ) மலை முகட்டில் மேகம் தங்கும். அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.

Question 24.
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
Answer:
விடு – வீடு
இன்பத்தை விடுவித்தால் வீடுபேறு கிட்டும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:
(1) Land Breeze – நிலக்காற்று
(2) Tempest – பெருங்காற்று

Question 26.
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)
Answer:
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால், கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 27.
மரபுத் தொடர்களுக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
Answer:
(அ) மனக்கோட்டை
(ஆ) கண்ணும் கருத்துமாக
(அ) மனக்கோட்டை : தாய் தன் மகன் படித்து பெரியாளாக வருவான் என்று மனக்கோட்டை கட்டுவாள்.
(ஆ) கண்ணும் கருத்துமாக : பெற்ற குழந்தையைத் தாய், கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வாள்.

Question 28.
தணிந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
தணிந்தான் = தணி + த் ந் + த் + ஆன்
தணி – பகுதி
த் – சந்தி
ந் – ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பகுதி – III (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2×3 = 6]

Question 29.
மொழிபெயர்ப்பு கல்வி பற்றி எழுதுக.
Answer:

  • மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும்
  • பல அறிவுத்துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே.
  • நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும்; மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்தமுடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.
  • நாடு, விடுதலை பெற்ற பிறகு பல நாட்டுத் தூதரகங்கள் நம்நாட்டில் நிறுவப்பட்டன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 30.
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால் ‘ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
Answer:

  • தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையுடன் போன நான் வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப்போனேன்.
  • தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டது.
  • பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டதில் நாலணாவில் அந்த நல்லநாளைக் கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது.
  • காலணாதான் கடன் தரலாம் தருமத்தைத் தரமுடியுமா? தருமத்தை யாசித்துத் தந்தால் தான் பெற முடியும்.
  • ஒருவனுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும். நாம் எப்படி முயற்சி செய்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
திருவள்ளுவர் இல்லறவியலில் ‘விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே’ அமைத்திருக்கிறார்; இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்; முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை ” மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற குறளில் எடுத்துரைக்கிறார். விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் கடமையாக இருந்தது.

(அ) விருந்தோம்பல் பற்றி ஓர் இயலை எழுதியவர் யார்?
Answer:
திருவள்ளுவர்.

(ஆ) திருவள்ளுவர் விருந்தோம்பலை கூறிய இயலின் பெயர் என்ன?
Answer:
இல்லறவியல்

(இ) ‘முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும்’ என்பதனை உணர்த்தும் குறள் எது?
Answer:
“மோப்பக் குழையும் அனிச்சம்”

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2×3 = 6]

Question 32.
பூவைத் தொடுக்கும் பெண்ணின் மனநிலை என்ன?
Answer:

  • இந்தப் பூவை நான் எப்படித் தொடுப்பேன் மிகவும் மென்மையாக இருக்கிறதே.
  • இறுக்கி முடிச்சிட்டால் காம்பு அறுத்து முறியும் தளர்ந்து பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும்.
  • தொடுக்காமல் இருந்தால் யாருக்கும் பயனில்லை.
  • அதனால் என் மனமே நாறாக அது அறுந்து போகாத அளவிற்கு பூவைத் தொடுத்து என் தலையில் நான் சூடிக் கொள்வேன்.

Question 33.
”சித்தாளின் மனச்சுமைகள்
Answer:
செங்கற்கள் அறியாது” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

இடம் :
செய்யுள் வரிகள் கவிஞர் நாகூர்ரூமியால் எழுதப்பட்ட சித்தாளு’ கவிதைப் பேழையில் காணப்படுகிறது.

விளக்கம்:
அடுக்குமாடி அலுவலகம் எதுவாயினும் அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம் அடுத்தவேளை உணவுக்காக மட்டுமே இவள் செத்தாலும் சிறிதளவே சலனங்கள் ஏற்படுத்தும். சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது என்று ஏழையின் நிலையை எடுத்துக்காட்டுகிறார்.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
Answer:
”சிறுதாம்பு” எனத் தொடங்கும் ‘முல்லைப்பாட்டு’ பாடல்.
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்
– நப்பூதனார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

(அல்லது)

”விருந்தினனாக ஒருவன்” எனத் தொடங்கும் ‘காசிக்காண்டம்’ பாடல்.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
– அதிவீரராம பாண்டியர்

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
தும்பை , வாகை விளக்குக.
Answer:
தும்பைத்திணை: பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத்திணை. போரிடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப் பூ மாலையையே சூடியிருப்பார்கள். போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில், போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது. அதிரப் பொருவது தும்பை.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

வாகைத்திணை : போரிலே வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூவைச் சூடி மகிழ்வது, வாகைத்திணை. செரு வென்றது வாகை

Question 36.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 image - 1
இக்குறட்பா பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

Question 37.
சொற்பொருள்பின்வருநிலையணி
Answer:
அணி விளக்கம்:
ஒரு சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளில் வந்தால் சொற்பொருள் பின்வரு நிலையணி.

(எ.கா) ” இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது”

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

விளக்கம்:
இன்மை என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வறுமை என்ற ஒரே பொருளை தருவதால் இது சொற்பொருள் பின்வரு நிலையணி ஆகும்.

பொருள்:
வறுமையை விடக் கொடியது எது என்றால் வறுமையை விட வறுமையே கொடியது.

பகுதி – IV (மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]

Question 38.
அ முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
Answer:
முன்னுரை:
தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வைக் கொண்டிருந்தனர் மழைக்காலத்தில் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிற இயல்பு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

மழைபொழியும் காட்சி :
வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மேகம், ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

முதிய பெண்கள் நற்சொல் கேட்டு நின்ற காட்சி :
முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள், அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்ற காட்சி :
சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள். புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே என்றாள். இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர்.

முடிவுரை:
முல்லை நிலத்தின் மழைப்பொழிவையும், முல்லை மலரும் நெல்லும் தூவி முதுபெண்டிர் தெய்வத்தை வழிபட்டதையும், விரிச்சி கேட்டதையும் முல்லைப்பாட்டில் நப்பூதனார் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

(அல்லது)

(ஆ) கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
Answer:

  • நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல்.
  • பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்.
  • எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்துகொள்ளுங்கள்.
  • சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்.
  • அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்.
  • அங்குள்ளவர்களிடம், பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள்’ என்று சொல்லுங்கள்.
  • பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள். உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர்..
  • நீண்ட வழியைக் கடந்து வந்த உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக் கூறுவர்.
  • அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 39.
(அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
கபிலன்,
பாரதியார் தெரு,
மதுரை- 08.

பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
மதுரை-08.

ஐயா,
பொருள் : உணவு தரமில்லை , விலை கூடுதல் புகார் அளித்தல் – சார்பு. வணக்கம்.

நான் காலையில் சுந்தர பவன் உணவு விடுதிக்குச் சாப்பிடச் சென்று இருந்தேன். நான்கு இட்லிகள் மட்டும்தான் சாப்பிட்டேன். அதற்கு ரூ.50/- விலை போட்டார்கள். அந்த அளவிற்கு இட்லியின் தரமும் இல்லை. இட்லிக்குச் சாம்பார் மட்டும் தான் கொடுத்தார்கள். சட்னி கொடுக்கவில்லை. கேட்டால் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகின்றனர். அதனால், ஐயா அவர்கள் அந்த உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

நன்றி

இடம் : மதுரை
தேதி : 18.05.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள,
கபிலன்.

குறிப்பு

  1. உணவு விடுதியின் பில்
  2. அவர்கள் பேசிய ஆடியோ
  3. புகைப்படம்
  4. உறைமேல் முகவரி

பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
மதுரை – 625008.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

(அல்லது)

(ஆ) உனது பாட்டியின் உடல் நலம் குறித்தும், நீ விரைவில் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் கடிதம் ஒன்று வரைக.
Answer:
எண்.82, மீனாட்சி நகர்,
சென்னை .
10.04.2019

அன்புள்ள பாட்டிக்கு,
நான் இங்கு நலம். அதுபோல் அங்கு இருக்கும் அனைவரின் நலனையும் அறிய ஆவலாக இருக்கிறேன் பாட்டி, நான் நடந்து முடிந்த தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து இருக்கிறேன். சென்ற வாரம் உங்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தீர்கள் என்று சித்தப்பா கூறியிருந்தார். கவலைப்படாதீர்கள் மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளைச் சரியான நேரத்திற்கு மறக்காமல் சாப்பிடுங்கள். உங்கள் உடல்நிலையை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்த மாதம் எனக்குத் தொடர் விடுமுறை வருகிறது. அப்போது நான், அம்மா, அப்பா அனைவரும் வந்து உங்களைப் பார்க்கிறோம். வீட்டில் இருக்கும் அனைவரையும் கேட்டதாகக் கூறவும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

இங்ஙனம்,
உங்கள் அன்பு பேத்தி,
சுதா.

உறைமேல் முகவரி
பெறுநர், சிவகாமி பாட்டி,
35 முதல் மாடவீதி,
மதுரை 625 008.

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 image - 2
Answer:
உருமி மேளம் இசைத்திடவே
ஒய்யார ஆட்டம் நடக்குதையா!
முண்டாசு கட்டிய ஆடவர்கள்
முன்பின் சுழற்றி ஆடிடவே
நாட்டுப்புறத்தின் வடிவாக
நயமுடன் பிறந்ததே ஒயிலாட்டம் !

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 41.
வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் படிவம் நிரப்புதல்.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 image - 3
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 image - 4

Question 42.
(அ) பள்ளியிலும், வீட்டிலும் நீங்கள் கடைப்பிடிப்பனவற்றை வரிசைப்படுத்தி எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 image - 5
Answer:
(அல்லது)

மொழிபெயர்க்க :
(ஆ) Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.

சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற தமிழ்நாட்டின் 5 புவியியல் பாகுபாட்டின்படி, மருத நிலப் பகுதியே பயிரிடுவதற்குச் செழுமையான பகுதியாகக் கருதப்பட்டது. விவசாயியின் சொத்து அங்கு கிடைக்கும் வெயில், பருவ மழை மற்றும் நிலத்தின் செழுமையைச் சார்ந்திருந்தது. இயற்கையில் கிடைக்கும் மூலக்கூறுகளில் சூரிய ஒளியே இன்றியமையாததாகப் பழந்தமிழர்களால் கருதப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
(அ) மொழிபெயர்ப்பின் செம்மை பற்றி விவரி.
Answer:

  • Hundred railsleepers were washed away என்பதை, தொடர்வண்டியில் உறங்கிக் கொண்டிருந்த நூறுபேர்.
  • வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்று ஒரு செய்தித்தாள் வெளியிட்டது.
  • Railsleeper என்பது தொடர்வண்டியின் போக்குவரத்துப் பாதையான தண்டவாளத்தில் உள்ள குறுக்குக் கட்டைகளைக் குறிக்கும்.
  • அதனை உறங்கிக் கொண்டிருந்தோர் என மொழிபெயர்த்தது பெரும்பிழையே.
  • Camel என்பதற்கு வடம் (கயிறு, ஒட்டகம் என இருபொருள் உண்டு.
  • ஊசி காதில் வடம் நுழையாது என்னும் வேற்றுமொழித் தொடரை ஊசி காதில் ஒட்டகம் நுழையாது என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோம்.
  • இத்தொடரில் வடம் என்பதே பொருத்தமான சொல்லாக அமையும். அதாவது ஊசி காதில் நூல் நுழையுமே அன்றிக் கயிறு நுழையாது என்பதே.
  • மொழிபெயர்ப்புகள் கழிவின்றி, சிதறலின்றி மூல மொழியின் கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
  • Underground drainage என்ற தொடரை மொழிபெயர்ப்ப தில் தடுமாற்றம் வந்தது.
  • பாதாளச் சாக்கடை என்பது போன்றெல்லாம் மொழிபெயர்த்தனர்.
  • தமிழோடு தொடர்புடைய மலையாள மொழியில் பயன்படுத்திய புதைசாக்கடை என்ற சொல் பொருத்தமாக இருப்பதைக் கண்டனர்.
  • அதையே பயன்படுத்தவும் தொடங்கினர்.
  • Tele என்பது தொலை என்பதைக் குறிக்கிறது. ஆகவே Telegraph/ Television.
  • Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொழிபெயர்க்கப்படுகிறபோது தொலைவரி, தொலைக்காட்சி.
  • தொலைபேசி, தொலைநோக்கி, தொலை அளவியல் என்றவாறு முன் ஒட்டுகளுடன் மொழிபெயர்க்கப்பட்டன.
  • இதற்கு மாறாக, Transcribe, Transfer, Transform, Transact ஆகியவற்றை மொழிபெயர்க்கும் போது படியெடுத்தல், மாறுதல்.
  • உருமாற்றுதல், செயல்படுத்துதல் என்றவாறு மொழிபெயர்க்கப்படுகின்றன.
  • Trans என்ற முன் ஓட்டை வைத்து மொழிபெயர்க்கவில்லை.
  • இவ்வாறு இடம்பார்த்து மொழிபெயர்ப்பு, முறையாகச் செய்யப்பட வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

(அல்லது)

(ஆ) நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.

  • அனைவருக்கும் வணக்கம். பொம்மலாட்டம் என்பது மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு வகை கூத்துக் கலையாகும்.
  • பார்ப்பவரின் கண்ணையும் கருத்தையும் மனதையும் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
  • நெகிழிப்பைகளின் வரவால் மக்கள் எவ்வாறு அவதிப்படுகின்றனர் என்பதை இந்த பொம்மலாட்டம்.
  • மூலம் மாணவர்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்கினார்கள். பொம்மலாட்டத்தைத் தோற்பாவைக் கூத்து என்றும் அழைப்பர்.
  • தோலில் செய்த வெட்டு வரைபடங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.
  • தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது.
  • இசை, ஓவியம், நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன.
  • கூத்து நிகழ்த்தும் திரைச் சீலையின் நீளம், அகலம் ஆகியன பாவையின் அமைப்பையும் எண்ணிக்கையையும் பொறுத்து வேறுபடுகின்றன.
  • இந்நிகழ்ச்சியில் பாவையின் அசைவு உரையாடல் இசை ஆகியனவற்றோடு ஒளியும் முதன்மை பெறுகின்றது.
  • பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
  • திருக்குறளில் பரப்பாவையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது.
  • தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து. பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
  • நெகிழி அல்லது பிளாஸ்டிக் என்பது ஒரு பொருள்.
  • ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுதி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். மலைகாக வகை
  • பொருள் மண்ணுக்குள் சென்றால் சீக்கிரம் மக்காமல் அப்படியே இருந்து விடுகிறது.
  • அதனால் மரங்களில் வேர்களுக்கு ஆக்கிஜன் கிடைக்கக் கடினமாக இருக்கிறது.
  • எந்த ஒரு பொருள் பூமியில் மக்கவில்லையோ அது மனித இனத்திற்கே பேராபத்து என்பதை இந்தப்.
  • பொம்மலாட்டம் மூலமாக மாணவர்களுக்கு மிக எளிதாகச் சென்று சேர்ந்தது.
  • பொம்மலாட்டம் கலைஞர் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 44.
(அ) ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
Answer:
சூழல் – வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்.
மாலா : வணக்கம். கரீனா தமிழ்நாட்டிற்கு உன்னை வரவேற்கிறேன். எப்படியுள்ளது நம் தமிழ்நாடு.
கரீனா : வணக்கம். சற்று வித்தியாசமாகவே உள்ளது. ஆனாலும் ஏற்றுக்கொள்கிறேன்.
மாலா : உன்னை கண்டதும் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. நீ தமிழில் பேசுகிறாயே!
கரீனா : ஆமாம் தமிழ் பேச மட்டும் தெரியும். தமிழ் திரைப்படங்களும் பார்ப்பேன்.
மாலா : தமிழ் உரைநடை சிறுகதை, புதுக்கவிதை வடிவங்கள் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நீ விரும்பினால் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம்.
கரீனா : வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பார்த்து இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடிக்கும்.
மாலா : அறிஞர் அண்ணாவின் உரைநடை தமிழில் மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கும்.
கரீனா : உரைநடை என்றால் என்ன? நீயும் நானும் பேசுகிறோமே அதுதான் உரைநடை பேசினால் உரையாடல் எழுதினால் உரைநடை.
கரீனா : ஓ … உரைநடையைக் கற்பது மிகவும் எளிமைதான்.
மாலா : ஆம். எங்கள் தமிழ் மொழியில் சொல்லையோ கருத்தையோ அளவாகப் பயன்படுத்தி உரைநடையை மிகவும் அழகுபடுத்தியுள்ளனர்.
கரீனா : மிக்க மகிழ்ச்சி நீ உரைநடையின் சிறப்பைப் பற்றிக் கூறக் கூற அவற்றைப் படித்து இன்புற ஆவலாக உள்ளேன். நன்றி

(அல்லது)

(ஆ) அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

காஞ்சிப்புரத்துக்காரன்:

  • சட்டைப் பையிலிருந்து கடிதத்தையும் மூன்று ரூபாயையும் எடுத்து , ” குப்புசாமிகிட்டே குடுத்துடுங்க.
  • இல்லே, தங்கவேலு கிட்ட வேணும்னாலும் குடுத்துடுங்க. இன்னொரு சமயம் பட்டணம் வந்தா ஆசுபத்ரிலே போயி பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுக்.
  • கடிதத்தையும் ரூபாயையும் என்னிடம் கொடுத்தான், அப்புறம் ஒரு நிமிஷம் எதையோ யோசித்துப் பார்த்தேன்.
  • மனசுக்குள் கணக்கு போடுகிறவன் போல் அவனுடைய முகபாவனையும் தலையசைப்பும் இருந்தன.
  • மறு நிமிஷத்திலேயே, “இந்தாருங்க, இதையும் குப்புசாமிக்குக் குடுக்கச் சொல்லுங்க” என்று சொல்லித் தன்.
  • இடது கையில் தொங்கிய துணிப்பையிலிருந்து இரண்டு சாத்துக்குடிப் பழங்களை எடுத்துக்கொடுத்தான்.
  • “என் பசங்களுக்கு நாலு பழம் வாங்கினேன்.
  • போகட்டும். இவரு ஆசுபத்திரிலே இருக்கிறாரு. நாம்ப வேறு என்னத்தைச் செய்யப் போறோம்?”
  • இத்துடனும் அவன் நிறுத்தவில்லை! தன் உபயமாக ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்து.
  • குப்புசாமியிடமோ தங்கவேலுவிடமோ சேர்க்கச் சொன்னான்.
  • அவன் குப்புசாமிக்காகத்தான் கொடுத்தானோ, குப்புசாமிக்காகக் காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு கண்ணீர் வடிக்கும் அந்த வீரப்பன்.
  • குப்புசாமியின் உயிருக்குக் கொடுக்கும் மதிப்பைக் கண்டு தான் கொடுத்தானோ? என்று அழகிரிசாமியின்.
  • ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தரான – காஞ்சிபுரத்துக்காரனை ஆசிரியர் காட்டுகின்றார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Question 45.
(அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
Answer:
பொருட்காட்சி

முன்னுரை:
விடுமுறை தினத்தைச் சிறந்த முறையில் செலவழிப்பதற்கான நடைபெறும் பொருட்காட்சிகள் மக்களின் மனதையும் கருத்தினையும் கவரும் வகையில் அமைதல் வேண்டும். 14.1.2019 அன்று தமிழக முதல்வர் சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சியைத் திறந்து வைத்தார்கள். அனைவரும் சென்று கண்டுகளித்தோம்.

கண்ணைக் கவரும் மாதிரிகள்:
பிற்காலச் சோழ மன்னர்களில் சிறந்து விளங்கிய இராசராச சோழன் தஞ்சையில் எழுப்பிய வியத்தகு பெரிய கோயிலின் மாதிரி பொருட்காட்சியின் வாயிலில் அமைத்திருந்தார்கள். அது காண்போர் கண்ணைக் கவர்ந்து இழுத்தது.

கலை பண்பாட்டு அரங்குகள் :
பொருட்காட்சியின் உள்ளே இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்கள் மாநிலத்தின் கலை, பண்பாடு, நாகரிகம் முதலியவைப் பற்றி விளக்கும் அரங்கங்கள் நம்மை வரவேற்கின்றன. குழந்தைகளுக்காகச் சிறுவர் உலகம் வரவேற்கிறது. அதன் உள்ளே ரயில் வண்டி மிகப்பெரிய இராட்டினம் ஆகியவை உள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

குழந்தைகளுக்கான அரங்குகள் :
விளையாட்டுப் போட்டிகளும், மாயாஜாலங்களும், இழுவைப் பாலமும், துப்பறியும் நாய்களின் வியத்தகு செயல்களும், கோளரங்கமும் அறிவியல் வளர்ச்சியை விளக்கும்.

அறிவியல் கூடங்கள்:
அறிவியல் வேளாண்மையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் அதில் இடம் பெற்றுள்ள காய்கனி வகைகளும் இழுவைப்பாலமும் போக்குவரத்துத் துறையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் மாதிரிகள் அடங்கிய அரங்கமும் விடுதலைக்குப் பிறகு நம் நாட்டின் முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் செயல்படுகிறது.

அங்காடி வீதிகள் :
வீட்டின் அன்றாடத் தேவைகளுக்கும் உதவக்கூடிய பொருள்களை விற்கும் அங்காடிகளும் சிற்றுண்டி விடுதிகளும் நிறைந்து நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

முடிவுரை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் பொருட்காட்சி அமைந்திருந்தது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

(அல்லது)
(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – இராணுவ அமைப்பு – பீல்டு மார்சல் – குறிக்கோள்கள் – முதன்மைக் குறிக்கோள் – இதரக் குறிக்கோள் – முடிவுரை.

முன்னுரை:
இந்தியத் தரைப்படை இந்தியப் படைத்துறையின் மிகப்பெரிய பிரிவாகும். இது இந்தியாவின் எல்லைக் கண்காணிப்பு , உள்நாட்டு பாதுகாப்பு அமைதி நிலை நாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும் ஈடுபடுகின்றது. இந்திய தரைப்படை இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

இராணுவ அமைப்பு:
ஏறத்தாழ 11,30,000 படையினர் இப்படைப் பிரிவில் செயலார்ந்த தீவிரப் பணியாற்றுகின்றனர். மேலும் ஏறத்தாழ 18,00,000 படையினர் இருப்புப் படையாக தயார் நிலையில் உள்ளனர். இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும். வீரர்கள் தன்னார்வத்தின் மூலமே படையில் சேர்க்கப்படுகின்றனர். இருப்பினும் இந்திய அரசியலமைப்பில் அவசர காலத்தில் கட்டாயத்தின் பேரிலும் வீரர்களை படையில் சேர்க்க வழிவகை உண்டு. அது ஒருபோதும் நடைமுறை படுத்தப்படவில்லை. இந்தியத் தரைப்படை எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

பீல்டு மார்சல்:
இந்தியா விடுதலை அடைந்த 1947ஆம் ஆண்டில் இந்தியத் தரைப்படை உருவாக்கப்பட்டு ஆங்கிலேய இந்தியாவின் தரைப்படை இந்திய தரைப்படையுடன் இணைக்கப்பட்டது. இந்திய தரைப்படை உலகின் பல சச்சரவுப் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதி காக்கும் படையாகப் பணியாற்றியுள்ளது. இப்படை தரைப்படையின் தலைமைப் பதவி பீல்டு மார்சல். இது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. இந்நாள் வரை இரண்டு தரைப்படை பட்டாளர்கள் மட்டுமே இந்த உயர் பதவியை அடைந்திருக்கின்றனர். அவ்விருவருள் பீல்டு மார்சல் , மானக்கா 1973 ஓய்வு பெற்ற பின் 30 ஆண்டுகள் கழித்து 1986இல் பீல்டு மார்சல் கரியப்பா ஆவார்.

குறிக்கோள்கள்:
இந்திய தரைப்படையின் கோட்பாடுகள் இந்திய இராணுவத்தின் மற்ற படைப் பிரிவுகளை போன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமையப்பட்டன.

முதன்மைக் குறிக்கோள்:
நாட்டின் பாதுகாப்பு நலன் அரசுரிமையைப் பாதுகாத்தல், மாநில ஒருங்கிணைப்பைப் பாதுகாத்தல், வேற்று நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்தல்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

இதர குறிக்கோள்கள் :
பிற மறைமுகப் போர்களில் அரசு முகமைகளுக்கு உதவுதல் மற்றும் பிற உள்நாட்டு அச்சுறுத்தல்களைக் களைதல், குடிமக்களுக்கு அவசர காலத் தேவையின் போது உதவியளித்தல்.

விடுதலையின் போது நாட்டின் எல்லைகளைக் காப்பதே இந்தியத் தரைப்படையின் தலையாயக் கடமையாகக் கருதப்பட்டது. ஆயினும், தற்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பிலும் குறிப்பாக காஷ்மீர், அசாம் ஆகிய மாநிலங்களில் தரைப்படை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியத் தரைப்படையில் சுமார் 10 லட்சம் படைவீரர்கள் 34 பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.

முடிவுரை:
இந்திய இராணுவத்தைப் பற்றி அப்துல் கலாம் கருத்து இந்த உலகமே இந்தியாவை எதிர்த்தாலும், 15 நாட்கள் அவர்களை எதிர்த்து சண்டையிடும் வல்லமை பெற்றது இந்திய நாடு என்று கூறியுள்ளார். கலாம் அவர்கள் இந்தியர்களைப் பார்த்து கனவு காணுங்கள்’ என்று கூறினார். அது நம் வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல. நம் எதிர்கால இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

நேரம்: 3.00 மணி
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15) 

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)

Question 1.
”சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்” என்று பாடியவர் யார்?
(அ) பாரதிதாசன்
(ஆ) பெருஞ்சித்திரனார்
(இ) சச்சிதானந்தன்
(ஈ) ஆறுமுகநாவலர்
Answer:
(இ) சச்சிதானந்தன்

Question 2.
‘சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப்பட்டவர்……….
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) சுரதா
(ஈ) கவிமணி
Answer:
(அ) பாரதியார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 3.
ஒரு தொடர்மொழியில் இரண்டு சொற்கள் இருந்து அவற்றின் இடையே சொல்லோ உருபோ இன்றி பொருள் தருவது……………… எனப்படும்.
(அ) தொகை நிலைத் தொடர்
(ஆ) பெயரெச்சத் தொடர்
(இ) வினையெச்சத் தொடர்
(ஈ) விளித் தொடர்
Answer:
(அ) தொகை நிலைத் தொடர்

Question 4.
மொழிபெயர்த்தல் என்னும் தொடரைத் தொல்காப்பியர் கையாண்ட இடம் ……………
(அ) பெயரியல்
(ஆ) வினையியல்
(இ) மரபியல்
(ஈ) உயிரியல்
Answer:
(இ) மரபியல்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 5.
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது’ – இவ்வடிகளில் அமைந்துள்ள முரண் சொல்………
அ) என்னுடல், என் மனம்
(ஆ) புல்லரிக்காது இறந்துவிடாது
(இ) புகழ்ந்தால், இகழ்ந்தால்
(ஈ) புகழ்ந்தால் என் மனம்
Answer:
(இ) புகழ்ந்தால், இகழ்ந்தால்

Question 6.
உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின்
(அ) சிந்தனை ஆற்றல்
(ஆ) செல்வம்
(இ) வாழ்நாள்
(ஈ) ஆற்றல்
Answer:
(அ) சிந்தனை ஆற்றல்

Question 7.
சாலச் சிறந்தது’ என்பது …….. தொடராகும்.
(அ) பெயரெச்சத்தொடர்
(ஆ) உரிச்சொல்தொடர்
(இ) விளித்தொடர்
(ஈ) வினையெச்சத்தொடர்
Answer:
(ஆ) உரிச்சொல்தொடர்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 8.
நன்மொழி என்பதன் இலக்கணக் குறிப்பு ….
(அ) வியங்கோள் வினைமுற்று
(ஆ) பண்புத்தொகை
(இ) வினையெச்சம்
(ஈ) உம்மைத்தொகை
Answer:
(ஆ) பண்புத்தொகை

Question 9.
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
(அ) வேற்றுமை உருபு
(ஆ) எழுவாய்
(இ) உவம உருபு
(ஈ) உரிச்சொல்
Answer:
(அ) வேற்றுமை உருபு

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 10.
விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பயணம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு – இதன் விருந்து போற்றிய நிலை……….
(அ) நிலத்திற்கேற்ற விருந்து
(ஆ) இன்மையிலும் விருந்து
(இ) இரவிலும் விருந்து
(ஈ) உற்றாரின் விருந்து
Answer:
(ஆ) இன்மையிலும் விருந்து

Question 11.
முல்லைப்பாட்டை இயற்றியவர்………… ஆவார்.
(அ) பேயனார்
(ஆ) ஓதலாந்தையார்
(இ) நப்பூதனார்
(ஈ) நக்கண்ணையார்
Answer:
(இ) நப்பூதனார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை! அறிக!

Question 12.
இப்பாடலின் ஆசிரியர் யார்?
(அ) கண்ண தாசன்
(ஆ) பாரதிதாசன்
(இ) ஜெயகாந்தன்
(ஈ) பாரதியார்
Answer:
(அ) கண்ண தாசன்

Question 13.
முத்தொழில்கள் யாவை?
(அ) அறம், பொருள், இன்பம்
(ஆ) இயல், இசை, நாடகம்
(இ) ஆக்கல், அழித்தல், காத்தல்
(ஈ) ஆடல், பாடல், ஓடுதல்
Answer:
(இ) ஆக்கல், அழித்தல், காத்தல்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 14.
இப்பாடல் இடம் பெற்ற அடி எதுகைகளை எழுதுக.
(அ) இவை சரி, இவை தவறு
(ஆ) சரி, தவறு
(இ) இவை, இயம்பு
(ஈ) மூன்றும், ஆறும்
Answer:
(அ) இவை சரி, இவை தவறு

Question 15.
இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
(அ) அன்னை மொழியே
(ஆ) காசிக்காண்டம்
(இ) முல்லைப்பாட்டு
(ஈ) காலக்கணிதம்
Answer:
(ஈ) காலக்கணிதம்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பகுதி – II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4×2 = 8]

Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
Answer:
(அ) “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழி பெயர்ப்பு ” என்கிறார் மணவை முஸ்தபா.
(ஆ) இறைவனுக்கு உகந்த கலையாகப் பரதநாட்டியம் கருதப்படுகிறது.

விடை: அ) மொழிபெயர்ப்பு பற்றி மணவை முஸ்தபா கருத்து யாது?
ஆ) பரத நாட்டியம் எவ்வகைக் கலையாகக் கருதப்படுகிறது?

Question 17.
மழைமேகம் எவ்வாறு பெருமழை பெய்கிறது?
Answer:
மழைமேகம் ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுந்து மலையைச் சூழ்ந்து வேகத்துடன் பெருமழை பொழிகிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 18.
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
Answer:

  1. மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.
  2. வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது நாக்கை வைகை மாதிரி வினாத்தாள் விளையாட்டால்.
  3. நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.

Question 19.
அமிலமழை குறிப்பு வரைக.
Answer:
கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்துவிடுவதால் அமிலமழை பெய்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 20.
தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
Answer:
விருந்தளிக்க செல்வம் மட்டும் இருந்தால் போதாது. விருந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் வேண்டும். பணம் இல்லை என்றாலும், எண்ணம் இருந்தால் தன்னிடம் இல்லை என்றாலும், பிறரிடம் கடன் பெற்றாவது விருந்து அளிக்கப்படும். அதற்குப் பணம் முக்கியம் இல்லை. எண்ணம் தான் முக்கியம்.

Question 21.
குன்றேறி ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
Answer:
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்கவும். [5×2 = 10]

Question 22.
வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றுக. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.
Answer:
பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

Question 23.
தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்கள் எண்ணங்களால் நிரப்புக. (வெள்ளை , பச்சை , கருக்கத், சிவந்தது)
Answer:

  • வானம் கருக்கத் தொடங்குகிறது.
  • அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகர் முகம் சிவந்தது.
  • வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
  • கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பச்சை புல்வெளிகள்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 24.
இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு சொல் அமைக்க இயற்கை – செயற்கை
Answer:
பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் யன்படுகின்றன.

Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:

  • Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
  • Bio technology – உயிரித் தொழில்நுட்பம்

Question 26.
பார் – வேர்ச்சொல்லைக் கொண்டு எழுவாய்த் தொடர், வினையெச்சத் தொடர் ஆகியவை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 image - 1

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 27.
நிறுத்தக் குறிகளை இடுக. மென்பொருள்கள் கவிதைகள் கதைகள் விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களுடன் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை.
Answer:
மென்பொருள்கள் கவிதைகள், கதைகள், விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களுடன் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை.

Question 28.
இகழ்தல், நண்பா – இலக்கணக் குறிப்பு தருக.
Answer:
இகழ்தல் – தொழிற்பெயர்
நண்பா – விளித்தொடர்

பகுதி – III (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு -1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 29.
மனிதர்களின் மூளையைப் போன்றது. செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் எழுதுக.
Answer:
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது. எதிர்காலத்தில் ரோபோ’ விடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக அலுவலகம் செல்லும் பெற்றோர்களை நாம் பார்க்கப்போகிறோம். வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும், அவர்களுக்கு உற்ற தோழனாய்ப் பேச்சுக் கொடுத்தும் பேணும் ரோபோக்களை நாம் பார்க்கப்போகிறோம்! செயற்கை நுண்ணறிவுள்ள ரோபோக்களால், மனிதன் செய்ய இயலாத, அலுப்புத் தட்டக்கூடிய, கடினமான செயல்களைச் செய்யமுடியும்; மனித முயற்சியில் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்யமுடியும்!

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு நல்குகிறது. பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதர் அளிக்கும் சேவைகளை ரோபோக்கள் அளிக்கும். மேலும், நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, உடன் வந்திருக்கும் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவது எனப் பலவற்றைச் செய்யும்.

எதிர்காலத்தில் நாம் பயணிக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயக்கவேண்டியிருக்கும். இத்தகைய ஊர்திகள் ஏற்படுத்தும் விபத்துகள் குறையும், போக்குவரத்து நெரிசல் இருக்காது. அதன்மூலம் பயண நேரம் குறையும், எரிபொருள் மிச்சப்படும். இத்தகைய மென்பொருள்கள் கவிதைகள், கதைகள், விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு மனிதர்களுடன் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை! கல்வித் துறையில் இத்தொழில் நுட்பத்தைப் பலவிதங்களில் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 30.
ஜெயகாந்தன் சிறுகதை மன்னன்’ என எவ்வாறு பெயர் பெற்றார்?
Answer:

  • ஜெயகாந்தன் பேசி, “எதற்காக எழுதுகிறேன்?” என்ற தலைப்பில் கட்டுரையாகத் தொகுக்கப்பட்ட பகுதியும், ‘யுகசந்தி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘தர்க்கத்திற்கு அப்பால்’ என்னும் சிறுகதையும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
  • தான் வாழ்ந்த காலத்தில் சிக்கல்கள் பலவற்றை ஆராய், எடுத்துச் சொல்ல, தன் பார்வைக்கு உட்பட்ட தீர்ப்பைச் சொல்ல அவர் மேற்கொண்ட நடவடிக்கையே படைப்பு.
  • அவருடைய படைப்புகள் உணர்ச்சி சார்ந்த எதிர்வினைகளாக இருக்கின்றன. இதுவே அவருக்குச் சிறுகதை மன்னன் என்ற பட்டத்தைத் தேடித்தந்தது.
  • இவர் குறும்புதினங்களையும், புதினங்களையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் படைத்துள்ளார். தன் கதைகளைத் திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.
  • தலைசிறந்த உரத்த சிந்தனைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்; சாகித்திய அகாதெமி விருதையும். ஞானபீட விருதையும் பெற்ற இவருடைய கதைகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது, பழந்தமிழர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது. எழுவரின் கொடைப் பெருமை சிறுபாணாற்றுப்படையிலும், பெருஞ்சித்திரனார் பாடலிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றுப்படை இலக்கியங்கள், கொடை இலக்கியங்களாகவே உள்ளன. பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது.

(அ) வள்ளல்களின் எண்ணிக்கை யாது?
கடையேழு வள்ளல்கள்

(ஆ) எழுவரின் கொடைச் சிறப்பைக் கூறும் நூல்கள் எவை?
Answer:

  1. சிறுபாணாற்றுப்படை
  2. பெருஞ்சித்திரனார் பாடல்

(இ) பதிற்றுப்பத்து எந்த அரசரைப் பற்றிக் கூறுகிறது?
Answer:
சேர அரசர்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2 x 3 = 6]

Question 32.
வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
Answer:

  • திருவடியில் அணிந்த சிறு செம்பொன்னால் ஆன கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும்.
  • இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும்.
  • பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டின் வட்டி வடிவான சுட்டி பதிந்தாடட்டும். கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும்.
  • உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளியுள்ள முத்துக்களோடு ஆடட்டும்.
  • தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க!
  • இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக.

Question 33.
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
Answer:
தமிழ் :

  • தமிழ், இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
  • ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது. சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

கடல் :

  • கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது.
  • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது. மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது.
  • தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
(அ) “சிறுதாம்பு ” எனத் தொடங்கும் முல்லைப்பாட்டு பாடல்.
Answer:
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், ” கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம் – நப்பூதனார்

(அல்லது)

(ஆ) “வாளால் அறுத்து” எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடல்.
Answer:
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே. – குலசேகராழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
Answer:

  • அகவல் ஓசை பெற்று வரும்.
  • ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
  • ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
  • மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்க அமையும்.
  • ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.

Question 36.
‘ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து’ – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 image - 2
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 image - 3

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 37.
நிரல்நிறைப் பொருள்கோள் விவரி.
Answer:
ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக அமைந்து வருவது ‘நிரல்நிறைப் பொருள்கோள் ‘ ஆகும். இது முறை நிரல்நிறைப் பொருள்கோள், எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் என இருவகைப்படும்.

(அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்:
செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் முறை நிரல்நிறைப் பொருள்கோள் ‘ ஆகும்.

(எ.கா.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’

இக்குறளில் பண்பு பயன் என்ற இரு சொற்களை வரிசைப்படுத்தி, அவற்றிற்குரிய விளைவுகளாக அன்பு, அறன் என்று வரிசைப்படுத்தி உள்ளார். அவற்றை இல்வாழ்க்கையின் பண்பு, அன்பு என்றும் அதன் பயன், அறன் என்றும் பொருள் கொள்ள வேண்டும். எனவே, அன்புக்குப் பண்பும் அறத்துக்குப் பயனும் பயனிலைகளாக – நிரல்நிறையாக – நிறுத்திப் பொருள் கொள்வதால், இப்பாடல் முறை நிரல்நிறைப் பொருள்கோள்’ எனப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்:
செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்’ ஆகும்.

(எ.கா) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனையவர்’

இக்குறளில் முதல் அடியில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்திவிட்டு, அடுத்த அடியில் பயனிலைகளாகக் கற்றார், கல்லாதார் (ஏனையவர்) என வரிசைப்படுத்தி உள்ளார். அவற்றைக் கற்றார் மக்கள் என்றும், கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். எனவே, இக்குறள் ‘எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ‘ ஆகும்.

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]

Question 38.
(அ) ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.
Answer:

  • ஆற்றுப்படுத்துதல் என்பது வள்ளலை நாடி எதிர்வருபவர்களை அழைத்து யாம் இவ்விடத்தைச் சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம்.
  • நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.
  • ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கிறது.
  • தன்னிடம் இல்லை என்றோ அல்லது தெரியாது என்றோ யார் வந்தாலும் அவர்களுக்கு – வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.
  • அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழிகாட்டுகின்றனர். அன்றைய ஆற்றுப்படுத்துதல் இன்றைய வழிகாட்டுதலாக மாறியுள்ளது.
  • இது ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் அடைந்துள்ளது. உதவி தேவைப்படுபவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இதுவே இன்றைய ஆற்றுப்படுத்துதல் ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

(அல்ல து)

(ஆ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
Answer:
இடைக்காடனார் இறைவனை வணங்குதல் :

  • இடைக்காடனார் இறைவன் திருமுன் விழுந்து வணங்கி எழுந்து, “தமிழறியும் பெருமானே!
  • அடியார்க்கு நல்நிதி போன்றவனே ! திருஆலவாயிலில் உறையும் இறைவனே ! அழகிய வேப்பமலர் மாலையை அணிந்த பாண்டியன்.
  • பொருட்செல்வத்தோடு கல்விச் செல்வமும் மிக உடையவன் எனக் கூறக் கேட்டு.
  • அவன் முன் சொற்சுவை நிரம்பிய கவிதை பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் புலமையை அவமதித்தான்” என்றார்.

இடைக்காடனாரின் சினம்:

  • இடைக்காடனார் இறைவனிடம், “பாண்டியன் என்னை இகழவில்லை, சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும்.
  • சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்” என்று சினத்துடன் கூறிச் சென்றார்.
  • அவரது சொல் வேற்படைபோல் இறைவனின் திருச்செவியின் சென்று தைத்தது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

இறைவன் இலிங்க வடிவை மறைத்தல்:

1. கோவிலை விட்டு வெளியேறிய இடைக்காடனாருக்கும் அவர் நண்பராகிய கபிலருக்கும் மனமகிழ்ச்சி உண்டாக்க நினைத்தார். இறைவன் ஞானமயமாகிய தம்முடைய இலிங்க வடிவத்தை மறைத்து உமாதேவியாரோடும் திருக்கோவிலைவிட்டு வெளியேறி நேர் வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி அங்கு சென்று இருந்தார். பாண்டிய மன்னனின் வேண்டுதல்:

2. இறைவனே, என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் நல் ஒழுக்கத்தில் குறைந்தனரோ? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ?

எமது தந்தையே யான் அறியேன்” என்று வேண்டினான் பாண்டிய மன்னன். இறைவன் மன்னனிடம், “சிறந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த கடம்பவனத்தை வி ஒருபோதும் நீங்கமாட்டோம். இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர வேறு குற்றம் உன்னிடம் இல்லை.

  • இடைக்காடனார் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம்” என்றார். தமாகா லைலாகாத

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 39.
(அ) உனது பகுதியில் நூலகம் அமைத்துத் தர வேண்டி விண்ணப்பம் ஒன்று வரைக.
Answer:

சென்னை,
29.10.2019

அனுப்புநர்
ச.தருண்,
15, காந்தி தெரு,
சென்னை – 600088.

பெறுநர்
மாநகராட்சி அலுவலர்
மாநகராட்சி அலுவலகம்,
சென்னை – 600 088.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: குடியிருக்கும் பகுதியில் நூலக வசதி வேண்டுதல்’.

வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் சில ஆண்டுகளாக வசித்து வருகின்றேன். இன்றைய உலகில் பலவகையான புத்தகங்களைப் படித்து அறிவை வளர்க்க வேண்டும். இங்கு நூலகம் இல்லாததால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வேறு நூலகத்திற்குச் சென்று வருவதற்குள் காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால் மாணவர்கள் வீட்டில் சரியாகப் படிக்க முடியவில்லை . மதிப்பெண் எடுக்க முடியவில்லை . கல்லூரி மாணவர்களும் அவதிப்படுகிறார்கள். எனவே, எங்கள் பகுதிக்கு ஒரு நூலகம் அமைத்துத் தர வேண்டி மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

நன்றி.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
(ச. தருண்

இடம் : சென்னை
நாள்: 29.10.2019
உறைமேல் முகவரி

பெறுநர்
மாநகராட்சி அலுவலர்,
மாநகராட்சி அலுவலகம்,
சென்னை – 600 088.

அல்லது)

(ஆ) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

4.4.2019
காஞ்சிபுரம்.

– அன்புள்ள மாமா,
நான் இங்கு நலம் அது போல் வீட்டில் உள்ள அனைவரும் நலமாக இருக்கிறார்கள். உங்கள் வீட்டில் அனைவரும் நலம் என நம்புகிறேன். நடந்து முடிந்த தேர்வுகளில் நான் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளேன். கடந்த வாரம் எங்கள் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் நான் நடனம் ஒன்றில் பங்கு கொண்டேன். ஆண்டுவிழாவிற்கு வந்திருந்த ஒருவர் பணப்பையைத் தவற விட்டு விட்டார். அதை நான் எடுத்துத் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தேன்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

தலைமையாசிரியர் ஒலிபெருக்கியில் சொல்லி அந்தப் பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தார் அந்த பணப்பைக்குச் சொந்தக்காரர் என்னை மேடைக்கு அழைத்து பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார், சிறு உதவி செய்ததற்குப் பெரிய அளவில் மரியாதை செய்தார். என் தம்பி தங்கைகளை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் வர வேண்டும் என்றார். இந்த மகிழ்ச்சியான நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். பகிர்ந்து கொண்டேன். சுபம் நிறைக.

இங்ஙனம்,
தங்கள் அன்பு,
யாழினி.

உறைமேல் முகவரி
பெறுநர் மங்களம் நகர்,
சூளைமேடு,
சென்னை – 600 004.

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து வரிகளில் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 image - 4

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1
விருப்புடன் செய்க ஈகை
வெறுப்பு வேண்டாம் தம்பி
ஒரு பிறவியில் செய்க நன்மை
ஏழு பிறவியிலும் தவிர்க்க தீமை!
வாழ்த்தும் வயது இருப்பின் வாழ்த்தட்டும்
இல்லையெனில்
வணங்கட்டும் உங்களின் செய்கையை!

Question 41.
வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் படிவம் நிரப்புக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1 image - 5

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 42.
(அ) தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக்கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே விளையாடிக்கொண்டிருக்கும் தங்கை, காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன், எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள் ! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்படவைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக.
Answer:
J

(அல்ல து)

(ஆ) மொழிபெயர்க்க.
Answer:
Malar : Devi, switch off the lights when you leave the room.
Devi : Yeah. We have to save electricity…
Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi : Who knows? In future, our country may launch artificial moons to light our night time sky!
Malar : I have read some other countries are going to launch these types of illumination satellites near future.
Devi : Superb news! If we launch artificial moons, they can assist in disaster relief by beaming light on areas that lost power!

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

விடை
மலர் : தேவி, அறையை விட்டு வெளி செல்லும் போது மின்விளக்குகளை அணைத்துவிட்டு செல்ல வேண்டும்.
தேவி : ஆமாம்! நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்.
மலர் : இரவு நேரங்களில் மட்டும் தெருவிளக்குகளில் நம்நாட்டில் அதிக அளவு மின்சாரம் பயன்படுகிறது.
தேவி : யாருக்குத் தெரியும்? இனி வரும் காலங்களில் நமது நாட்டில் செயற்கை நிலாக்களை உருவாக்கி இரவு நேரங்களில் ஆகாயத்தில் வெளிச்சங்களை உருவாக்கலாமோ!
மலர் : நாடுகளில் வெளிச்சத்தை உண்டாக்கும் ஒரு சில செயற்கை கோள்கள் அமைத்திருப்பதாக நான் படித்திருக்கிறேன்.
தேவி : சிறப்பான செய்தி ! பேரிடர் காலங்களில் இந்த செயற்கை நிலாக்களைக் கொண்டு மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இதையே பயன்படுத்தலாம்.

பகுதி – V(மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
(அ) மொழிப் பெயர்ப்பின் பயன்கள் யாவை?
Answer:
மொழிபெயர்ப்பின் துணை:

  • இது மொழிபெயர்ப்புக் காலம், காலையில் எழுந்தவுடன் நாளிதழ்ப்படிப்பு, மொழிபெயர்ப்பு மூலமே நமக்குச் சாத்தியமாகிறது.
  • இரவு தொலைக்காட்சியில் காணும், கேட்கும் செய்திகளும் மொழிபெயர்ப்பு மூலமே கிடைக்கின்றன.
  • நம் பணிகள் பலவற்றிலும் மொழிபெயர்ப்பின் துணை இருந்து கொண்டே இருக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

மொழிகளின் பங்கு :

1. இன்றைய வளரும் நாடுகளில் அறிவியலை உருவாக்க – அரசியலை உருவாக்க – பொருளியலை உருவாக்க – சமூகவியலை உருவாக்க – இலக்கியத்தை உருவாக்க மொழிபெயர்ப்பே உதவுகிறது.

2. மொழிபெயர்ப்பு, மனிதர்களையும், நாடுகளையும், காலங்களையும் இணைக்கிற நெடுஞ்சாலையாக இருக்கிறது. காலத்தால் இடத்தால் மொழியால் பிரிக்கப்பட்ட மானுடத்தை இணைக்கிறது;

3. கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கும் அது மனித வாழ்வின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

4. பல மொழிகளிலும் காணப்படும் சிறப்புக்கூறுகளை எல்லாம் ஒருங்கு சேர்த்து அனைவருக்கும் பொதுமையாக்குகிறது.

5. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழிபெயர்க்கப்படுகின்றன.

6. புள்ளிவிவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

7. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம், இரண்டாமிடம் மலையாளம், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிலைகளில் முறையே தெலுங்கு, இந்தி, கன்னடம், வடமொழி, ரஷ்யமொழி, வங்கமொழி, மராத்தி மொழி போன்றவை இடம்பெறுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

அறிவியல் கண்டுபிடிப்புக்களும், இலக்கியப் படைப்புகளும் :

  • மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.
  • பிற இனத்தவரின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் போன்றவற்றை அறியமுடிகிறது.
  • அதிலிருந்து நல்லனவற்றை நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது. பிறமொழி இலக்கிய அறிவு கிடைக்கிறது. அதன்மூலம் நம் இலக்கியத்தை வளப்படுத்த முடிகிறது.
  • உலகப்புகழ் பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியப் படைப்புகளையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
  • கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் பயன்கலை என்று குறிப்பிடுவார்கள்.
  • மொழிபெயர்ப்பு மூலம் ஒரு நாட்டின் வரலாற்றிலும், இலக்கியத்திலும், பண்பாட்டிலும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

(அல்ல து)

(ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

முன்னுரை:
இந்தியா நிலப்பரப்பில் உலகில் ஏழாவது பெரிய நாடு மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் ரோஜாவின் ராஜா, சமாதானப்புறா ஜவஹர்லால் நேரு இந்தியாவைப் பொருளாதாரத்தில் முன்னேற்ற வேண்டும் என்று ஐந்தாண்டு திட்டங்களைத் தீட்டினார். வளர்ச்சிப் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிற இந்தியாவில் இன்றைய மாணவர்கள் நாளைய மன்னர்கள், ஆகையால் மாணவர்களுக்குச் சமுதாயத் தொண்டு ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.

விடுதலைக்கு முன்:
மாண்பு என்றால் மாட்சி, பெருமை, சிறப்பு என்று பொருள் அதனால் மாணாக்கர் என்று அழைக்கப்பட்ட சொல். மாணவர் என்று மருவிவிட்டது. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தி அடிகள் தலைமையேற்றார். ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். மாணவர்கள் கல்லூரியை விட்டு விலகினர். போராட்டங்களில் ஈடுபட்டனர். சிறை சென்றனர். இறுதியில் விடுதலை கிடைத்தது. உலகெங்கும் மாணவர்கள் கலந்து கொண்டு நடத்திய அறப்போராட்டங்கள் தோற்றதாக
வரலாறு இல்லை.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

நாட்டின் முன்னேற்றம்:
இந்தியப் பேரரசு எத்துணை திட்டங்களைத் தீட்டிப் பொருள் உற்பத்தி செய்தாலும் வளர்ச்சிப் பாதையில் சென்றாலும் சாதிமத வேற்றுமை, மக்கள் பெருக்கம், அறியாமை, தீண்டாமை, பதுக்கல், கடத்தல் ஆகியவைகள் வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக உள்ளன. இத்தகைய விலங்குகளால் மக்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சமுதாயத் தொண்டில் மாணவனின் பங்கு :
சாலைப் போக்குவரத்தைச் சீர் செய்ய காவலர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். சாலையில் விபத்துகளினால் பாதிக்கப்பட்டவரை உடனே மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். உடல் ஊனமுற்றவர்களுக்கு மாணவர்கள் வழிகாட்டிகளாக விளங்கலாம்.

சாலையில் கிடக்கும் கண்ணாடித் துண்டுகள், ஆணிகள், வாழைப்பழத் தோல்கள், புகைந்து கொண்டிருக்கும் வெண்சுருட்டுத் துண்டுகள் போன்றவற்றை மாணவர்கள் வெட்கம் பாராமல் எடுத்துச் சென்று மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போட வேண்டும். மாணவர்கள் கண்மூடி வழக்கமான மூடப்பழக்க வழக்கங்களை மண்மூடிப் போகச் செய்தல் வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

முடிவுரை:
”ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்”

என்றார் வள்ளுவர் தன்னால் இயலும் தொண்டுகளை எங்கெங்கு செய்ய இயலுமோ அங்கெல்லாம் செய்தல் வேண்டும் என்பது இக்குறளின் பொருள். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது பழமொழி இவைகளை எல்லாம் மாணவர்கள் பசுமையாக உள்ளத்தில் கொண்டு சமுதாயத் தொண்டு ஆற்றிட வேண்டும்.

Question 44.
(அ) அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
Answer:
அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது. ஐயங்களை நீக்குகிறது. பழைய தவறான புரிதல்களை நீக்குகிறது. எண்ணங்களை மாற்றுகிறது அறிவியலால் ஒருகாலத்தில் நிறுவப்பட்டிருந்த கருத்து பின்னால் மறுக்கப்படுவதும் நேர்கிறது. மீண்டும் புதிய தடங்களைப் பதித்துப் புதிய பாதையிலே அறிவியல் இயங்குகிறது.

இயற்கையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் அறிவியல் சிந்தனை, போற்றுதலுக்குரியதாக இருக்கிறது. அதிலும் தன்னால் எந்த இயக்கமும் மேற்கொள்ள இயலாத நிலையிலும் அறிவியலின் இயங்கும் தன்மையை அறிந்து புது உண்மைகளைச் சொன்ன ஒருவரை உலகம் போற்றுவதில் வியப்பில்லை.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

அவருடன் விண்வெளி பயணம் என்பது மிகவும் சுவாரசியமான ஒன்று. நானும் அவரும் விண்வெளியில் சென்று கொண்டு இருக்கும் போது நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் நம் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது.

சில நேரங்களில் உண்மைப் புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்துவிடுகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும், புனைவு இலக்கியம் படைப்பவர்களது கற்பனைகளையெல்லாம் மிஞ்சுவதாகவே கருந்துளைகள் பற்றிய உண்மைகள் உள்ளன. அதனை அறிவியல் உலகம் மிக மெதுவாகவே புரிந்துகொள்ள முயல்கிறது என்று ஸ்டிஃபன் ஹாக்கிங் கூறினார்.

(அல்லது)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

(ஆ) அனுமான் ஆட்டத்தைக் கூறுக.
Answer:

  • திடீரென்று மேளமும் நாதசுரமும் துரித கதியில் ஒலிக்கத் தொடங்கின.
  • எதற்கென்று தெரியாமல் கூட்டம் திகைத்துப் பந்தலை நோக்குகையில் பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால் வழியாகக் கீழே குதித்தார்.
  • அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம். ஜ்வாலை புகைவிட்டுக் கொண்டு எரிந்தது. கூட்டம் தானாகவே பின்னால் நகர்ந்தது.
  • அனுமார் கால்களைத் தரையில் பதித்து உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கினார்.
  • தீயின் ஜ்வாலை மடிந்து அலை பாய்ந்தது. கைகளைத் தரையில் ஊன்றி அனுமார் கரணமடித்தார்.
  • சுருண்ட வால் இவன் பக்கமாக வந்து விழுந்தது.
  • கூட்டம் அச்சத்தோடு கத்தியபடி அலைக்கழிந்தது.
  • அனுமார் பெரிதாகச் சிரித்துக்கொண்டு நின்றார். அனுமார் நின்றதும் கூட்டம் கொஞ்சம் அமைதியுற்றது.
  • முன்நோக்கி நகர்ந்து வந்தது. அனுமார் நேசப்பான்மையோடு சிரித்து வாலை மேலே தூக்கிச் சுற்றினார்.
  • தீ வட்டமாகச் சுழன்றது. வேகம் கூடக்கூட, கூட்டம் இன்னும் முன்னால் நகர்ந்து வந்தது.
  • இவன் நெருங்கி அனுமார் பக்கம் சென்றான்.
  • அனுமார் இன்னொரு பாய்ச்சல் பாய்ந்து வேகமாக ஆட ஆரம்பித்தார். வர வர ஆட்டம் துரிதகதிக்குச் சென்றது.
  • பதுங்கியும் பாய்ந்தும் ஆடினார்.
  • ஆட ஆட, புழுதி புகை போல எழுந்தது. கழுத்துமணி அறுந்து கீழே விழுந்தது.
  • ஒன்றையும் பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் தன்னை இழந்தவராக ஆடினார்.
  • மேளமும், நாதசுரமும் அவர் ஆட்டத்தோடு இணைந்து செல்ல முடியவில்லை. தடுமாறிவிட்டது.
  • மேல் மூச்சு வாங்க அனுமார் ஆட்டத்தை நிறுத்தினார். மேளமும் நாதசுரமும் நின்றன.
  • அயர்ச்சியோடு மேளக்காரன் தோளிலிருந்து தவுலை இறக்கிக் கீழே வைத்தான்.
  • ஆட்டம் முடிந்தது. தீர்மானமாகியது போல எஞ்சி இருந்த கூட்டமும் அவசர அவசரமாகக் கலைய ஆரம்பித்தது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Question 45.
(அ) நூலகம் காட்டும் அறிவு’ – என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று தருக. முன்னுரை:
Answer:
“வாழ்க்கை என்றொரு புத்தகம்
பக்கங்கள் எத்தனை யார் அறிவார்?”

எனும் வினாவால் வாழ்க்கையே புத்தகம்தான் என எடுத்தியம்பும் வல்லிக்கண்ணனின் பார்வை வீச்சு சிறப்புடையதாகும். வாழ்க்கையையே புத்தக நோக்கினில் பார்த்ததற்கும், வாழ்க்கையில் பள்ளிப் புத்தகம் தவிர வேறு புத்தகங்களைப் பார்த்ததேயில்லை என்பதற்கும் எத்தனை வேறுபாடு. இங்குதான் நூலகத்தை மறந்த நிலை என்பது வெளிப்படுகிறது.

அறிஞர்களை உருவாக்கும் நூலகம்:
அடுத்தவரைப் பற்றி பேசிப்பேசி நாட்களை ஓட்டியும், போட்டியும், வஞ்சமும் நிறைந்த உலகில் ஒரு நிமிடம் நூலகத்தை நோக்கிப் பயணத்தைத் திருப்புங்கள். அயர்வுகளைத் தீர்க்கும் அருமருந்து அங்குதான் உள்ளது. பல்வேறு அறிவியலறிஞர்களும், அறிஞர்களும் இங்கிருந்து தான் வெளிப்படுகின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

எல்லா நூலையும் நாம் விலை கொடுத்து வாங்கிக் கற்க முடியாது. ஆனால் எல்லா நூல்களின் இருப்பிடமான நூல் நிலையம் சென்றால் அங்கிருந்து நாம் பல நூல்களைக் கற்கலாம் அல்லவா?

நூலகத்தினை பயன்படுத்தும் விதம்:
நூலகத்தினை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றனர் எனில், பத்திரிகை படிக்க வருபவர் சிலர் ; விளையாட்டுச் செய்திகளை விருப்பமுடன் படிப்பவர் பலர்; இதழ்களில் அட்டைப்படங்களைக் காண வருபவர்கள் சிலர்; திரையுலகை தரிசிக்க வருபவர் பலர் என எண்ணற்ற முகங்களை வழி நடத்துவது இந்நூல் நிலையங்களாகும்.

நூல்களைக்கூட படித்திட வாங்கிச்சென்று, வேண்டிய பக்கங்களைக் கிழித்து எடுத்துத் திருப்பித் தருபவர் உண்டு. நூலினில் பல படங்களை வரைந்து வைத்தல், சில பெயர்களை எழுதுதல் என எண்ணற்ற சிறு செயல்கள் செய்து தமது சிறுமையை வெளிப்படுத்துபவர் உளர்.

அறிவுக்களஞ்சியம் :
பிறமொழி அறிவு வளர்ந்திட உதவும் நூல்கள் உதவியால், பிற மொழியாளரிடம் பேசும் அளவிற்கு தம்மை உயர்த்திக் கொண்டவர் உண்டு. மொழிகளைப் பற்றி நூல்கள் மட்டுமல்லாமல் அறிவியல்,பழங்கால வரலாறுகள், கதைகள், நாவல்கள், கவிதை நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள், சிறு தொழில் கற்றிட உதவும் நூல்கள், சமையல் குறிப்புகள் எனப் பல்வேறு பிரிவுகளில் அமைந்து அறிவுக் களஞ்சியமாய்த் திகழ்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

பல்வேறு நூலகங்களின் பெயர்கள் :
நூலகங்கள் இல்லாத இடங்களில்லை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் முதலிய இடங்களில் உள்ளது. ஊர்கள் தோறும், மாவட்டங்கள் தோறும் நூலகங்கள் உண்டு. மாநிலத்தின் தலைமையிடத்திலும் நூலகம் உண்டு. சென்னையில் மாநில மைய நூலகமான கன்னிமாரா நூலகம்’ அமைந்துள்ளது.

தேவநேயப் பாவாணர் நூலகம், மறைமலையடிகள் நூலகம், சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நூலகம், சாது சேஷய்யா ஓரியண்டல் நூலகம், வ.உ.சி. நூலகம், கவிமணி நூலகம் என்பன போன்ற பல நூலகங்கள் மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வள்ளுவரின் பெயரில் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அறிவுச் சுரங்கமாய் நூலகம்:
நூலகங்களில் நூல்கள் பெற வேண்டுமானால், நூலக உறுப்பினராகிக் கொண்டு அதன் பிறகு நூலை எடுத்துக் கொள்ளலாம். மனிதன் அறிவுச் சுரங்கமாய் விளங்க நூலகமே முக்கியக் காரணம். பள்ளிகளில் மாணவர்கள் பேச்சுப் போட்டியில், கட்டுரைப் போட்டியில் பரிசுகளைப் பெற்றிட நூலகமும் ஒரு காரணமே.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

எவரொருவர் அறிவின் பிறப்பிடமாகத் திகழ்கிறாரோ அவரைத் துன்பம் நெருங்குவதில்லை. அவரது அறிவுத் திறனால் துன்பம் வராமல் காக்கப்படுகிறது. இதையே வள்ளுவர்,

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய் ” – எனும்

குறள் மூலம் அறிவுறுத்துகிறார். இவ்வாறு ஒருவர் அறிவின் சுடராய்த் திகழ நூலகம் மிக முக்கியமான வழிகாட்டியாகும்.

முடிவுரை:
இவ்வாறு நூலகமானது ஒரு மனிதனுக்கு அறிவு, சிந்திக்கும் ஆற்றல் வழங்குவதோடு தகுதியுடையவராய் எழச் செய்யும் அற்புத மருந்தாகும். மாணவப் பருவத்திலேயே நூலகத்தினைப் பயன்படுத்துதல் இன்றியமையாதது.

எங்கே கிளம்பி விட்டீர்கள், நூலக உறுப்பினர் ஆகத்தானே!

(அல்ல து)

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – வரதட்சணை – பண்டைய பெண்களின் பெருமை – ”திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்” – பலியாகும் பெண்கள் – ” மாமியார் உடைத்தால் மண்சட்டி திருமணம் – வேண்டாம் வரதட்சணை – “பெண்கள் நாட்டின் கண்கள்’ – முடிவுரை.

வேண்டாம் வரதட்சணை
குறிப்புச் சட்டகம்

முன்னுரை
பொருளுரை: வரதட்சணைக் கொடுமை
பலியாகும் பெண்கள்
திருமணம்
வேண்டாம் வரதட்சணை
முடிவுரை –

முன்னுரை
வரதட்சணை என்பது, மணமான பெண் தன் தாய் வீட்டிலிருந்து கொண்டு வரும் சீதனம், பெண்களுக்கு மேலும் பொறுப்புகளையும், உறவுகளையும் சேர்க்கக் கூடியது. அவளது திருமண வாழ்க்கையாகும். இது திருமணத்தின் தனித்தன்மை என்று நாம் குறிப்பிடலாம். பெண்கள் குடும்பத் தலைவி என்ற பொறுப்பை ஏற்று, செயல்பட்டு தன் வாழ்க்கையில் முன்னேறுவது திருமணத்திற்குப் பின் என்றும் நாம் கூறலாம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

‘திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’ என்பார்கள். அக்காலங்களில் பெண்கள் வேலைக்குச் செல்லாத காரணத்தால், வீட்டில் எல்லா வேலைகளையும் சுமந்து தன் கணவனது சொற்படி நடந்து அவனது பொருளாதார மேம்பாட்டிற்காக சிறு அன்பளிப்பாக இச்சீதனம் வழங்கப்பட்டது.

வரதட்சணைக் கொடுமை:
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால், திருமணம் வரதட்சணையால் தான் நிச்சயிக்கப்படுகிறது. அக்காலத்திலிருந்தே மணமகனின் வீட்டார். பெண் வீட்டாரிடம் வரதட்சணைக் கேட்டு வருகின்றனர். பெண் வீட்டாரோ, அதை எப்படிக் கொடுக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பார்கள்.

பலியாகும் பெண்கள் :
திருமணம் முடிந்து சில நாட்கள் செல்ல, மாமியாரும், அப்பெண்ணுடைய கணவரும் அவளைக் கொடுமைப்படுத்துவார்கள். “மாமியார் உடைந்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் அது பொன் ஓடாக மாறுவதேன்?” அவர்களோ, தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கொண்டே இருப்பர். இதனால் ஏராளமான பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

திருமணம்:
திருமணம் என்பதொரு புனிதமானச் செயல், அப்படிப்பட்ட செயலை வரதட்சணை என்னும் பயங்கர உருவத்தால் நாம் பாவச் செயலாக்கக்கூடாது. வரதட்சணை கேட்டாலும் அவரவர் தகுதிக்கு ஏற்றபடி கேட்கவேண்டும். இக்காலத்தில் வரதட்சணை கேட்பவர்கள் மீது வழக்குத் தொடரலாம்.

முன், சீதனம் என்று அழைக்கப்பட்டது. பின் கட்டாயமாக்கப்பட்டு வரதட்சணை என்று அழைக்கப்படுகிறது. முன், அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இப்போது பல கொடுமைகளைப் புரியும் வழக்கமாக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கு நேரும் கொடுமைகள் பற்பல.

“உன் விழிப்பில்தான் நாட்டின் பிழைப்பே உள்ளது”

வேண்டாம் வரதட்சணை :
பெண்கள் இல்லையேல் நாட்டின் வளர்ச்சி இல்லை. இத்தகைய பெண்களைக் கொடுமைப்படுத்தி பணம் பறிப்பது வேதனைக்குரிய விஷயம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

முடிவுரை :
வீட்டிற்கு வரும் பெண் வரதட்சணையோடு வராமல், பாசம், பண்பு, நல்ல குணம், நட்பு போன்ற நற்குணங்கள் பலவற்றைக் கொண்டு வந்தால், புன்னகையும் பொன் நகையாகும். ஓர் ஆணுக்குக் கல்வியளிப்பது அவருக்கு மட்டுமே சிறப்பு. ஆனால், ஒரு பெண்ணுக்குக் கல்வியளித்தல் என்பது, அது அக்குடும்பத்திற்கே கல்வியளிப்பது போன்றதாகும். வரதட்சணைக்குப் பதிலாகப் படித்த பெண்ணாக, கல்வி கேள்விகளில் சிறந்தவளாக்குதல் வீட்டிற்கும், ஏன் நாட்டிற்கும் பெருமை. எனவே, வரதட்சணையை ஒழிக்க முயன்று நமது நாட்டினை ஒரு பூஞ்சோலையாக மாற்றிக் காட்டுவோம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 1

Samacheer Kalvi 10th English Model Question Papers 2019-2020 Tamil Nadu

Expert Teachers at SamacheerKalvi.Guru has created Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi 10th English Model Question Papers 2019-2020 Pdf Free Download of TN SSLC Class 10th English Model Question Papers, Previous Year Question Papers, Sample Papers are part of Samacheer Kalvi 10th Model Question Papers 2020 Tamilnadu.

Here we have given the Government of TN State Board Samacheer Kalvi 10th Std English Model Question Papers with Answers 2019-20 Pdf. Students can view or download the Samacheer Kalvi Class 10th English New Model Question Papers 2020 Tamil Nadu Pdf for their upcoming TN SSLC board examinations. Students can also read Tamilnadu Samcheer Kalvi 10th English Book Solutions.

Tamil Nadu Samacheer Kalvi 10th English Model Question Papers 2019 2020

Samacheer Kalvi 10th English Model Question Papers with Answers 2020 Tamil Nadu

Samacheer Kalvi 10th English Model Question Paper Design 2019-2020 Tamil Nadu

Samacheer Kalvi 10th English Model Question Paper Design Tamil Nadu

It is necessary that students will understand the new pattern and style of Tamil Nadu Samacheer Kalvi 10th English Model Question Papers 2020 Answer Keys according to the latest exam pattern. These State Board 10th Standard English Public Exam Model Question Papers 2019-20 Tamil Nadu are useful to understand the pattern of questions asked in the board exam. Know about the important concepts to be prepared for TN SSLC Board Exams and Score More marks.

We hope the given Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi Class 10th English Model Question Papers 2019 2020 Pdf Free Download will help you.

If you have any queries regarding the Government of TN State Board Samacheer Kalvi SSLC 10th Standard English Model Question Papers with Answers 2019 20, Sample Papers, Previous Year Question Papers, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi 10th Tamil Model Question Papers 2019-2020 Tamil Nadu

Expert Teachers at SamacheerKalvi.Guru has created Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Tamil Model Question Papers 2019-2020 Pdf Free Download of TN SSLC Class 10th Tamil Model Question Papers, Previous Year Question Papers, Sample Papers are part of Samacheer Kalvi 10th Model Question Papers 2020 Tamilnadu.

Here we have given the Government of TN State Board Samacheer Kalvi 10th Std Tamil Model Question Papers with Answers 2019-20 Pdf. Students can view or download the Samacheer Kalvi Class 10th Tamil New Model Question Papers 2020 Tamil Nadu Pdf for their upcoming TN SSLC board examinations. Students can also read Tamilnadu Samcheer Kalvi 10th Tamil Book Solutions.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Papers 2019 2020

Samacheer Kalvi 10th Tamil Model Question Papers with Answers 2020 Tamil Nadu

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper Design 2019-2020 Tamil Nadu

Samacheer Kalvi 10th Tamil Model Question Papers Tamil Nadu

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper Weightage of Marks

Samacheer Kalvi 10th Tamil Model Question Papers Tamil Nadu 1

It is necessary that students will understand the new pattern and style of Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Papers 2020 Answer Keys according to the latest exam pattern. These State Board 10th Standard Tamil Public Exam Model Question Papers 2019-20 Tamil Nadu are useful to understand the pattern of questions asked in the board exam. Know about the important concepts to be prepared for TN SSLC Board Exams and Score More marks.

We hope the given Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi Class 10th Tamil Model Question Papers 2019 2020 Pdf Free Download will help you.

If you have any queries regarding the Government of TN State Board Samacheer Kalvi SSLC 10th Standard Tamil Model Question Papers with Answers 2019 20, Sample Papers, Previous Year Question Papers, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi 10th Social Science Model Question Papers 2019-2020 English Tamil Medium Tamil Nadu

Expert Teachers at SamacheerKalvi.Guru has created Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Model Question Papers 2019-2020 Pdf Free Download in English Medium and Tamil Medium of TN SSLC Class 10th Social Science Model Question Papers, Previous Year Question Papers, Sample Papers are part of Samacheer Kalvi 10th Model Question Papers 2020 Tamilnadu.

Here we have given the Government of TN State Board Samacheer Kalvi 10th Std Social Science Model Question Papers with Answers 2019-20 Tamil Medium Pdf. Students can view or download the Samacheer Kalvi Class 10th Social Science New Model Question Papers 2020 Tamil Nadu English Medium Pdf for their upcoming TN SSLC board examinations. Students can also read Tamilnadu Samcheer Kalvi 10th Social Science Book Solutions.

Tamil Nadu Samacheer Kalvi 10th Social Science Model Question Papers 2019 2020 Tamil English Medium

Tamil Nadu Samacheer Kalvi 10th Social Science Model Question Papers English Medium

Tamil Nadu Samacheer Kalvi 10th Social Science Model Question Papers Tamil Medium

  • Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 1
  • Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 2
  • Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 3
  • Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 4
  • Samacheer Kalvi 10th Social Science Model Question Paper 5

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper Design 2019-2020 Tamil Nadu

Types of Questions Marks No. of Questions to be Answered Total Marks
Part-I
Multiple Choice Questions
1 14 14
Part-II
(Totally 14 questions will be given. Answer any Ten. Any one question should be answered compulsorily)
2 10 20
Part-Ill
(Totally 14 questions will be given. Answer any Ten. Any one question should be answered compulsorily)
5 10 50
Part-IV 8 2 16
Total Marks 100

Samacheer Kalvi 10th Social Science Model Question Paper Weightage of Marks

Purpose Weightage
1. Knowledge 30%
2. Understanding 40%
3. Application 20%
4. Skill/Creativity 10%

It is necessary that students will understand the new pattern and style of Tamil Nadu Samacheer Kalvi 10th Social Science Model Question Papers 2020 according to the latest exam pattern. These State Board 10th Standard Social Science Public Exam Model Question Papers 2019-20 Tamil Nadu in Tamil Medium and English Medium are useful to understand the pattern of questions asked in the board exam. Know about the important concepts to be prepared for TN SSLC Board Exams and Score More marks.

We hope the given Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi Class 10th Social Science Model Question Papers 2019 2020 Pdf Free Download in English Medium and Tamil Medium will help you.

If you have any queries regarding the Government of TN State Board Samacheer Kalvi SSLC 10th Standard Social Science Model Question Papers with Answers 2019 20, Sample Papers, Previous Year Question Papers, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi 10th Science Model Question Papers 2019-2020 English Tamil Medium Tamil Nadu

Expert Teachers at SamacheerKalvi.Guru has created Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Model Question Papers 2019-2020 Pdf Free Download in English Medium and Tamil Medium of TN SSLC Class 10th Science Model Question Papers, Previous Year Question Papers, Sample Papers are part of Samacheer Kalvi 10th Model Question Papers 2020 Tamilnadu.

Here we have given the Government of TN State Board Samacheer Kalvi 10th Std Science Model Question Papers with Answers 2019-20 Tamil Medium Pdf. Students can view or download the Samacheer Kalvi Class 10th Science New Model Question Papers 2020 Tamil Nadu English Medium Pdf for their upcoming TN SSLC board examinations. Students can also read Tamilnadu Samcheer Kalvi 10th Science Book Solutions.

Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Papers 2019 2020 Tamil English Medium

Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Papers English Medium

Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Papers Tamil Medium

  • Samacheer Kalvi 10th Science Model Question Paper 1
  • Samacheer Kalvi 10th Science Model Question Paper 2
  • Samacheer Kalvi 10th Science Model Question Paper 3
  • Samacheer Kalvi 10th Science Model Question Paper 4
  • Samacheer Kalvi 10th Science Model Question Paper 5

Samacheer Kalvi 10th Science Model Question Paper Design 2019-2020 Tamil Nadu

Types of Questions Marks No. of Questions to be Answered Total Marks
Part-I
Multiple Choice Questions
1 12 12
Part-II
(Totally 9 questions will be given. Answer any Seven. Any one question should be answered compulsorily)
2 7 14
Part-Ill
(Totally 9 questions will be given. Answer any Seven. Any one question should be answered compulsorily)
4 7 28
Part-IV 7 3 21
Total Marks 75

Samacheer Kalvi 10th Science Model Question Paper Weightage of Marks

Purpose Weightage
1. Knowledge 30%
2. Understanding 40%
3. Application 20%
4. Skill/Creativity 10%

It is necessary that students will understand the new pattern and style of Tamil Nadu Samacheer Kalvi 10th Science Model Question Papers 2020 according to the latest exam pattern. These State Board 10th Standard Science Public Exam Model Question Papers 2019-20 Tamil Nadu in Tamil Medium and English Medium are useful to understand the pattern of questions asked in the board exam. Know about the important concepts to be prepared for TN SSLC Board Exams and Score More marks.

We hope the given Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi Class 10th Science Model Question Papers 2019 2020 Pdf Free Download in English Medium and Tamil Medium will help you.

If you have any queries regarding the Government of TN State Board Samacheer Kalvi SSLC 10th Standard Science Model Question Papers with Answers 2019 20, Sample Papers, Previous Year Question Papers, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi 10th Model Question Papers 2020-2021 Tamil Nadu English Tamil Medium

Expert Teachers at SamacheerKalvi.Guru has created Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Model Question Papers 2020-2021 Pdf Free Download in English Medium and Tamil Medium of TN SSLC Class 10th Model Question Papers, 10th Quarterly Half Yearly Model Question Papers Tamil Nadu, Previous Year Question Papers, Sample Papers, are part of Samacheer Kalvi.

Here we have given the Government of TN State Board Samacheer Kalvi 10th Std Model Question Papers for All Subjects with Answers 2020-21 Tamil Medium Pdf. Students can view or download the Samacheer Kalvi Class 10th New Model Question Papers 2021 Tamil Nadu English Medium Pdf for their upcoming TN SSLC board examinations. Students can also read Tamilnadu Samcheer Kalvi 10th Books Solutions.

Tamil Nadu Samacheer Kalvi 10th Public Model Question Papers 2020 2021 English Tamil Medium

Samacheer Kalvi 10th Model Question Papers for All Subjects

It is necessary that students will understand the new pattern and style of Tamil Nadu Board Model Question Papers for 10th Standard Samacheer Kalvi according to the latest exam pattern. These State Board 10th Public Model Question Papers 2020-21 Tamil Nadu in Tamil Medium and English Medium are useful to understand the pattern of questions asked in the board exam. Know about the important concepts to be prepared for TN SSLC Board Exams and Score More marks.

We hope the given Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi Class 10th Model Question Papers 2020 2021 Pdf Free Download in English Medium and Tamil Medium will help you.

If you have any queries regarding the Government of TN State Board Samacheer Kalvi SSLC 10th Standard Model Question Papers with Answers 2020 21, 10th Quarterly Half Yearly Model Question Papers Tamil Nadu, Sample Papers, Previous Year Question Papers, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi 10th Maths Model Question Papers 2019-2020 English Tamil Medium Tamil Nadu

Expert Teachers at SamacheerKalvi.Guru has created Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Maths Model Question Papers 2019-2020 Pdf Free Download in English Medium and Tamil Medium of TN SSLC Class 10th Maths Model Question Papers, Previous Year Question Papers, Sample Papers are part of Samacheer Kalvi 10th Model Question Papers 2020 Tamilnadu.

Here we have given the Government of TN State Board Samacheer Kalvi 10th Std Maths Model Question Papers with Answers 2019-20 Tamil Medium Pdf. Students can view or download the Samacheer Kalvi Class 10th Maths New Model Question Papers 2020 Tamil Nadu English Medium Pdf for their upcoming TN SSLC board examinations. Students can also read Tamilnadu Samcheer Kalvi 10th Maths Book Solutions.

Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Papers 2019 2020 Tamil English Medium

Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Papers English Medium

Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Papers Tamil Medium

  • Samacheer Kalvi 10th Maths Model Question Paper 1
  • Samacheer Kalvi 10th Maths Model Question Paper 2
  • Samacheer Kalvi 10th Maths Model Question Paper 3
  • Samacheer Kalvi 10th Maths Model Question Paper 4
  • Samacheer Kalvi 10th Maths Model Question Paper 5

Samacheer Kalvi 10th Maths Model Question Paper Design 2019-2020 Tamil Nadu

Types of Questions Marks No. of Questions to be Answered Total Marks
Part-I
Multiple Choice Questions
1 14 14
Part-II
(Totally 14 questions will be given. Answer any Ten. Any one question should be answered compulsorily)
2 10 20
Part-Ill
(Totally 14 questions will be given. Answer any Ten. Any one question should be answered compulsorily)
5 10 50
Part-IV 8 2 16
Total Marks 100

Samacheer Kalvi 10th Maths Model Question Paper Weightage of Marks

Purpose Weightage
1. Knowledge 30%
2. Understanding 40%
3. Application 20%
4. Skill/Creativity 10%

It is necessary that students will understand the new pattern and style of Tamil Nadu Samacheer Kalvi 10th Maths Model Question Papers 2020 according to the latest exam pattern. These State Board 10th Standard Maths Public Exam Model Question Papers 2019-20 Tamil Nadu in Tamil Medium and English Medium are useful to understand the pattern of questions asked in the board exam. Know about the important concepts to be prepared for TN SSLC Board Exams and Score More marks.

We hope the given Tamil Nadu State Board New Syllabus Samacheer Kalvi Class 10th Maths Model Question Papers 2019 2020 Pdf Free Download in English Medium and Tamil Medium will help you.

If you have any queries regarding the Government of TN State Board Samacheer Kalvi SSLC 10th Standard Maths Model Question Papers with Answers 2019 20, Sample Papers, Previous Year Question Papers, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi 10th Books Solutions Guide

Expert Teachers at SamacheerKalviGuru.com has created Tamilnadu State Board Samacheer Kalvi 10th Books Answers and Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi Books Solutions. Here we have given TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Guide Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas.

Students can also read Tamil Nadu Samacheer Kalvi 10th Model Question Papers 2020-2021.

Tamilnadu Samacheer Kalvi 10th Guide Text Book Back Answers Solutions Pdf Free Download

TN Samacheer Kalvi 10th Book Back Answers Solutions Guide

We hope the given Tamilnadu State Board Samacheer Kalvi Class 10th Std Books Solutions and Answers Pdf Free Download in English Medium and Tamil Medium will help you. If you have any queries regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Standard Guides Pdf of Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, Formulas, drop a comment below and we will get back to you at the earliest.

Samacheer Kalvi 10th Maths Solutions Chapter 5 Coordinate Geometry Additional Questions

You can Download Samacheer Kalvi 10th Maths Book Solutions Guide Pdf, Tamilnadu State Board help you to revise the complete Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 10th Maths Solutions Chapter 5 Coordinate Geometry Additional Questions

Question 1.
Find a relation between x and y such that the point (x, y) is equidistant from the points (7, 1) and (3, 5).
Solution:
Let P(x, y) be equidistant from the points A(7, 1) and B(3, 5).
We are given that AP = BP. So, AP2 = BP2
(x – 7)2 + (y – 1)2 =(x – 3)2 + (y – 5)2
x2 – 14x + 49 + y2 – 2y + 1 = x2 – 6x + 9 + y2 – 10y + 25
x – y = 2
Which is the required relation
Samacheer Kalvi 10th Maths Chapter 5 Coordinate Geometry Additional Questions 1

Question 2.
Show that the points (1, 7), (4, 2), (-1, -1) and (-4, 4) are the vertices of a square.
Solution:
Let A(1, 7), B(4, 2), C(-1, -1) and D(-4, 4) be the given points. To prove that ABCD is a square, we have to prove that all its sides are equal and both its diagonals are equal.
Samacheer Kalvi 10th Maths Chapter 5 Coordinate Geometry Additional Questions 2
Since, AB = BC = CD = DA and AC = BD, all the four sides of the quadrilateral ABCD are equal and its diagonals AC and BD are also equal. Therefore, ABCD is a square.

Samacheer Kalvi 10th Maths Solutions Chapter 5 Coordinate Geometry Additional Questions

Question 3.
If A (-5, 7), B (-4, -5), C (-1, -6) and D (4, 5) are the vertices of a quadrilateral, find the area of the quadrilateral ABCD.
Solution:
By joining B to D, you will get two triangles ABD and BCD.
Now, the area of ∆ABD
Samacheer Kalvi 10th Maths Chapter 5 Coordinate Geometry Additional Questions 3
So, the area of quadrilateral ABCD = 53 + 19 = 72 square units.

Question 4.
Find the coordinates of the points of trisection (i.e. points dividing in three equal parts) of the line segment joining the points A(2, -2) and B(-7, 4).
Solution:
Let P and Q be the points of trisection at AB. i.e., AP = PQ = QB
Samacheer Kalvi 10th Maths Chapter 5 Coordinate Geometry Additional Questions 4
Therefore, P divides AB internally in the ratio 1 : 2. Therefore, the coordinates at P, by applying the section formula, are
Samacheer Kalvi 10th Maths Chapter 5 Coordinate Geometry Additional Questions 5
Now, Q also divides AB internally in the ratio 2 : 1, so, the coordinates at Q are
Samacheer Kalvi 10th Maths Chapter 5 Coordinate Geometry Additional Questions 6
Therefore, the coordinates of the points at trisection of the line segment joining A and B are (-1, 0) and (-4, 2).

Samacheer Kalvi 10th Maths Solutions Chapter 5 Coordinate Geometry Additional Questions

Question 5.
If the points A(6, 1), B(8, 2), C(9, 4) and D(P, 3) are the vertices of a parallelogram, taken in order. Find the value of P.
Solution:
We know that diagonals of a parallelogram bisect each other.
So, the coordinates at the mid-point of AC = coordinates of the mid-point of BD.
Samacheer Kalvi 10th Maths Chapter 5 Coordinate Geometry Additional Questions 7

Question 6.
Find the area of a triangle whose vertices are (1,-1), (-4, 6) and (-3, -5).
Solution:
The area of the triangle formed by the vertices A(1, -1), B(-4, 6) and C(-3, -5), by using the formula
Samacheer Kalvi 10th Maths Chapter 5 Coordinate Geometry Additional Questions 8
So, the area of the triangle is 24 square units.

Question 7.
If A(-2, -1), B(a, 0), C(4, b) and D(1, 2) are the vertices of a parallelogram, find the values of a and b.
Solution:
We know that the diagonals of a parallelogram bisect each other. Therefore the co-ordinates of the midpoint of AC are same as the co-ordinates of the mid-point of BD. i.e.
Samacheer Kalvi 10th Maths Chapter 5 Coordinate Geometry Additional Questions 9

Samacheer Kalvi 10th Maths Solutions Chapter 5 Coordinate Geometry Additional Questions

Question 8.
Find the area of the quadrilateral whose vertices, taken in order, are (-3, 2), (5, 4), (7, -6) and (-5, -4).
Solution:
We have Area of the quadrilateral
Samacheer Kalvi 10th Maths Chapter 5 Coordinate Geometry Additional Questions 10

Question 9.
Find the area of the triangle formed by the points P(-1.5, 3), Q(6, -2) and R(-3, 4).
Solution:
The area of the triangle formed by the given points is equal to
Samacheer Kalvi 10th Maths Chapter 5 Coordinate Geometry Additional Questions 11
Can we have a triangle of area 0 square units? What does this mean?
If the area of a triangle is 0 square units, then its vertices will be collinear.

Question 10.
Find the value of k if the pointsA(2, 3), B(4, k) and (6, -3) are collinear.
Since the given points are collinear, the area a the triangle formed by them must be 0, i.e.
Samacheer Kalvi 10th Maths Chapter 5 Coordinate Geometry Additional Questions 12