Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 2 மின்னியல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 2 மின்னியல்

6th Science Guide மின்னியல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்
அ) மின் விசிறி
ஆ) சூரிய மின்கலன்
இ) மின்கலன்
ஈ) தொலைக்காட்சி
விடை:
இ) மின்கலன்

Question 2.
மின்சாரம் தயாரிக்கப்படும் இடம் _____
அ) மின்மாற்றி
ஆ) மின்உற்பத்தி நிலையம்
இ) மின்சாரக்கம்பி
ஈ) தொலைக்காட்சி
விடை:
ஆ) மின்உற்பத்தி நிலையம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 3.
மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 20
விடை:
அ) Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 21

Question 4.
கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 12
விடை:
ஈ) Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 13

Question 5.
கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
அ) வெள்ளி
ஆ) மரம்
இ) அழிப்பான்
ஈ) நெகிழி
விடை:
அ) வெள்ளி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
____ பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.
விடை:
மின்கடத்தி

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 2.
ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம் ____ எனப்படும்.
விடை:
மின்னோட்டம்

Question 3.
_____ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.
விடை:
தாவி

Question 4.
மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு _____ முனையைக் குறிக்கும் _____
விடை:
நேர்

Question 5.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு ஆகும் _____
விடை:
மின்கல அடுக்கு

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
பக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்டப் பாதைகள் உண்டு.
விடை:
சரி.

Question 2.
இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.
விடை:
தவறு. – இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் நேர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.

Question 3.
சாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது மூடப் பயன்படும் மின்சாதனம் ஆகும்.
விடை:
சரி.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 4.
தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.
விடை:
தவறு – தூய நீர் என்பது ஒரு மின்கடத்தாப்பொருள் ஆகும்.

Question 5.
துணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
விடை:
தவறு – துணை மின்கலன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.

IV. பொருத்துக. 

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 50
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 51

V. பின்வரும் சொற்களைக் கொண்டு ஒரு முழுமையான வாக்கியத்தை உருவாக்குக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 55
விடை:
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் மின்கலன் ஆகும்.

VI. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 56
விடை:
மின்விளக்கு A மட்டும் ஒளிர K1 மற்றும் K2 சாவிகள் மட்டும் இணைக்கப்பட வேண்டும்.

Question 2.
கூற்று (A) : நமது உடலானது மின் அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.
காரணம் (R) : மனித உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
ஆ) A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) A-தவறு ஆனால் R சரி.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.

Question 3.
எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா?
விடை:
முடியும். எலுமிச்சம் பழத்தை மின்பகுளியாகவும் தாமிரக்கம்பி மற்றும் குண்டூசியை எலுமிச்சை பழத்திற்குள் செலுத்தி நேர் மற்றும் எதிர்மின்வாய்களாகக் கொண்டு மின்னோட்டத்தை உருவாக்க முடியும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக. இரும்புச் சங்கிலி ஒரு மின்கடத்தி ஆகும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 25

Question 5.
டார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது?
விடை:
டார்ச் விளக்கில் எளிய மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.

Question 6.
பொருந்தாததை வட்டமிடுக. அதற்கான காரணம் தருக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 40
மின்னியற்றி மின் மூலமாகும். மற்றவை மின்சுற்றின் பாகங்களாகும்.

VII. குறுகிய விடையளி :

Question 1.
தொடரிணைப்பு ஒன்றிற்கு மின்சுற்றுப் படம் வரையவும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 44

Question 2.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.
விடை:
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படாது. ஏனெனில் கடிகார மின்கலனின் மின்னழுத்தம் மிக மிகக் குறைவு. (1.5V)

Question 3.
வெள்ளி உலோகம் மிகச் சிறந்த மின் கடத்தியாகும். ஆனால் அது மின் கம்பி உருவாக்கப் பயன்படுத்தப்படுவதில்லை ? ஏன்?
விடை:
வெள்ளி விலை உயர்ந்த உலோகம். எனவே பொருளாதார ரீதியாக மின்கம்பி உருவாக்க பயன்படுத்துவதில்லை.

VIII. விரிவான விடையளி:

Question 1.
மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.
விடை:
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின்மூலங்கள் எனப்படும். அனல் மின் நிலையங்கள் :

  1. அனல் மின்நிலையங்களில் நிலக்கரி, டீசல் (அ) வாயுக்களை எரித்து உருவாக்கப்படும் நீராவியால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
  2. இங்கு வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
    நீர் மின் நிலையங்கள் ;

    1. அணைக்கட்டில் பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
    2. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

அறிவியல் அணுமின் நிலையம் :

  1. அணுக்கரு ஆற்றலைக் கொண்டு நீர் கொதிக்க வைக்கப்பட்டு டர்பைன் இயக்கப்படுகிறது.
  2. இங்கு அணுக்கரு ஆற்றல் இயக்க ஆற்றலாக பின் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது. காற்றாலை :
    1. காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.
    2. இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 2.
மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 50.2

Question 3.
மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
மின்கடத்திகள் :

  1. மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருட்கள் மின்கடத்திகள் எனப்படும்.
  2. (எ.கா.) உலோகங்கள் (தாமிரம், இரும்பு) மாசுப்பட்ட நீர் மற்றும் புவி

போன்றவை. அரிதிற் கடத்திகள் (மின்கடத்தாப் பொருள்கள்):

  1. மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்காத பொருட்கள் அரிதிற்கடத்திகள் (அ) மின்கடத்தாப் பொருட்கள் எனப்படும்.
  2. (எ.கா.) பிளாஸ்டிக், கண்ணாடி, மரம், ரப்பர், பீங்கான், எபோனைட் போன்றவை.

IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

Question 1.
ராகுல் ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, இரு இணைப்புக் கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ , மின்கல அடுக்கோ இல்லை. எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எலுமிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மின்கல அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது. அந்த மின்விளக்கு ஒளிருமா?
விடை:

  1. மின்விளக்கு ஒளிரும்.
  2. எலுமிச்சம் பழத்தின் ஒரு புறத்தில் தாமிரக் கம்பியையும் மற்றொரு புறம் குண்டூசியை செருக வேண்டும்.
  3. இரண்டையும் இணைப்புக்கம்பியுடன் இணைத்து மின் விளக் கோடு இணைத்தால் மின்சாரம் உருவாகி மின்விளக்கு எரியும்.
  4. எலுமிச்சை – மின்பகுளியாகவும், தாமிரம் – நேர்மின்வாயாகவும், குண்டூசி – எதிர்மின்வாயாகவும் செயல்பட்டு மின்சாரம் உருவாகி மின்விளக்கு எரியும்.
    Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 55.2

X. கீழ்க்காணும் கட்டத்திலிருந்து மின்கடத்திகள் மற்றும் அரிதிற் கடத்திகளை கண்டறிந்து அட்டவணையில் நிரப்புக.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 56.2
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 56.3

6th Science Guide மின்னியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
இங்கு வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
அ) நீர்மின் நிலையம்
ஆ) அணுமின்நிலையம்
இ) அனல்மின் நிலையம்
ஈ) காற்றாலை
விடை:
இ) அனல்மின்நிலையம்

Question 2.
மின்காந்தங்களுக்கிடையே கம்பிச்சுருள் சுழல்வதால் ஏற்படுகிறது.
அ) வெப்பம்
ஆ) மின்காந்தத் தூண்டல்
இ) இயக்க ஆற்றல்
ஈ) ஏதுமில்லை
விடை:
ஆ) மின்காந்தத்தூண்டல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

Question 3.
கீழ்க்கண்டவைகளில் எதில் துணை மின்கலன்கள் பயன்படுகிறது?
அ) கைக்கடிகாரம்
ஆ) ரோபோ பொம்மை
இ) மடிக்கணினி
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
இ) மடிக்கணினி

Question 4.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்று முறை ____
அ) பக்க இணைப்பு
ஆ) தொடரிணைப்பு
இ) எளிய மின்சுற்று
ஈ) ஏதுமில்லை
விடை:
அ) பக்க இணைப்பு

Question 5.
மின்சாரத்தை உருவாக்கும் மீன் வகை _____
அ) கெண்டை
ஆ) ஈல்
இ) கட்லா
ஈ) சாலமன் மீன்
விடை:
ஆ) ஈல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் _______ எனப்படும்
விடை:
மின்மூலங்கள்

Question 2.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை அதிகமுள்ள இடம் _____ ஆகும்.
விடை:
ஆரல்வாய்மொழி

Question 3.
மின்நிலையங்களில் அதிகக்காலம் இயங்கக்கூடிய மற்றும் சிக்கனமானவை _____
விடை:
நீர்மின் நிலையங்கள்

Question 4.
நேர் மற்றும் எதிர் அயனிகளைத் தரக்கூடிய வேதிக்கரைசல் ____ ஆகும்.
விடை:
மின்பகுளி

Question 5.
மின்விளக்கைக் கண்டுபிடித்தவர் ______
விடை:
தாமஸ் ஆல்வா எடிசன்

III. கூற்றும் காரணமும்.

Question 1.
கூற்று (A) : மின்சாரம் தொடர்பான சோதனைகளை டார்ச் விளக்கு (அ) வானொலியில் பயன்படும் மின்கலன்களைக் கொண்டே செய்ய வேண்டும்.
காரணம்(R): வீட்டில் (அ) பள்ளியில் உள்ள மின்சாரத்தில் மின்னழுத்தம் அதிகம் மற்றும் ஆபத்தானது
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
ஆ) A சரி ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) A தவறு ஆனால் R சரி.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.

Question 2.
கூற்று (A) : முதன்மை மின்கலன்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது. காரணம்(R): வாகனங்களில் உள்ள மின்கலன் முதன்மை மின்கலன் ஆகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான உதாரணம்.
ஆ) A சரி ஆனால் R தவறு.
இ) A மற்றும் R சரி, ஆனால் R என்பது A க்கு உதாரணம் அல்ல.
ஈ) A தவறு ஆனால் R சரி.
விடை:
ஆ) A சரி ஆனால் R தவறு

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல்

IV. மிகக்குறுகிய விடையளி.

Question 1.
ஒரு மின்கல அடுக்கை உருவாக்க எத்தனை மின்கலன்கள் தேவை?
விடை:

  1. மின்கலன் உருவாக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்கள் தேவை.
  2. மின்கல அடுக்கு பல மின்கலன்களின் தொகுப்பாகும்.

Question 2.
ஒரு மின்சுற்றை உருவாக்க தேவையானவை யாவை?
விடை:
ஒரு சாவி, இணைப்புக்கம்பி, மின்கலன் மற்றும் மின்விளக்கு ஆகியவை தேவை.

Question 3.
ஒரு டார்ச் விளக்கினுள் மின்கலன்களை எவ்வாறு இணைத்தால் மின்விளக்கு எரியும்?
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 60
ஒரு மின்கலனின் நேர்முனை மற்றதன் எதிர்முனையில் படுமாறு இணைக்க வேண்டும். அப்போது தான் மின்விளக்கு எரியும்.

Question 4.
மின்சுற்றின் மூன்று வகைகளை எழுதுக.
விடை:

  1. எளிய மின்சுற்று
  2. தொடரிணைப்பு
  3. பக்க இணைப்பு

Question 5.
மின்னோட்டம் என்றால் என்ன?
விடை:
கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் எனப்படும்.

V. விரிவான விடையளி.

Question 1.
மின்கலன் என்றால் என்ன? மின்கலனின் வகைகள் யாவை?
விடை:

  1. மின்கலன் என்பது வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் ஆகும்.
  2. மின்கலன் இருவகைப்படும் அவை முதன்மை மின்கலன்கள் மற்றும் துணை மின்கலன்கள் ஆகும்.

முதன்மை மின்கலன்கள் :

  1. இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது.
  2. ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
  3. சிறிய உருவளவில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
  4. எ.கா. கைக்கடிகாரம், சுவர்க்கடிகாரம், ரோபோ பொம்மைகளில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள்

துணை மின்கலன்கள் :

  1. இவற்றை பல முறை மின்னேற்றம் செய்து மீண்டும் மீண்டும்பயன்படுத்தலாம்.
  2. இதன் உருவளவு பயன்பாட்டை பொருத்து சிறிதாக (அ) பெரிதாக இருக்கும்.
  3. எ.கா. கைப்பேசி, மடிக்கணினி, அவசர கால விளக்கு மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள்.

Question 2.
ஒருவருக்கு மின் அதிர்ச்சி ஏற்பட்டால் அவரைக் காப்பாற்ற செய்ய வேண்டியவை யாவை?
விடை:

  1. மின்னதிர்வு ஏற்படக் காரணமான மின்இணைப்பை அணைக்கவேண்டும்.
  2. சாவியிலிருந்து இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
  3. மின்கடத்தாப் பொருளைக் கொண்டு மின்கம்பியின் தொடர்பில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்.
  4. முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 2 மின்னியல் 90

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

10th Science Guide இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
அ) போத்துத் தேர்வு முறை
ஆ) கூட்டுத் தேர்வு முறை
இ) தூய வரிசைத் தேர்வு முறை
ஈ) கலப்பினமாக்கம்
விடை:
ஆ) கூட்டுத் தேர்வு முறை

Question 2.
பூசா கோமல் என்பது ____________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
அ) கரும்பு
ஆ) நெல்
இ) தட்டைப்பயிறு
ஈ) மக்காச் சோளம்
விடை:
இ) தட்டைப்பயிறு

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 3.
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது _____________ இன் ரகமாகும்.
அ) மிளகாய்
ஆ) மக்காச்சோளம்
இ) கரும்பு
ஈ) கோதுமை
விடை:
ஈ) கோதுமை

Question 4.
தன்னுடைய 50வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ____________ ஆகும்.
அ) TR 8
ஆ) IR 24
இ) அட்டாமிட்டா 2
ஈ) பொன்னி
விடை:
அ) IR8

Question 5.
உயிர்த்தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
அ) உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி
ஆ) வாழும் உயிரினங்கள்
இ) வைட்டமின்கள்
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
ஈ) (அ) மற்றும் (ஆ)

Question 6.
DNA வை வெட்டப் பயன்படும் நொதி [PTA-2, Sep.20]
அ) கத்திரிக்கோல்
ஆ) ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்
இ கத்தி
ஈ) RNA நொதிகள்
விடை:
ஆ) ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்)

Question 7.
rDNA என்பது ____________
அ) ஊர்தி DNA
ஆ) வட்ட வடிவ DNA
இ) ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNA-வின் சேர்க்கை .
ஈ) சாட்டிலைட் DNA
விடை:
இ) ஊர்தி DNA மற்றும் விரும்பத்தக்க DNA-வின் சேர்க்கை

Question 8.
DNA விரல்ரேகை தொழில்நுட்பம் _______ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
அ) ஓரிழை
ஆ) திடீர்மாற்றமுற்ற
இ) பல்லுருத்தோற்ற
ஈ) மீண்டும் மீண்டும் வரும் தொடர்
விடை:
ஈ) மீண்டும் மீண்டும் வரும் தொடர்

Question 9.
மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ____________ என அழைக்கப்படுகின்றன.
அ) அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
ஆ) மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை
இ) திடீர் மாற்றம் அடைந்தவை
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
ஈ) (அ) மற்றும் (ஆ)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 10.
ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n=6x=42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே ஆகும்.
அ) n = 7 மற்றும் x = 27
ஆ) n = 21 மற்றும் x = 21
இ) n = 7 மற்றும் x = 7
ஈ) n = 21 மற்றும் x = 7
விடை:
ஈ) n = 21 மற்றும் x = 7

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
______________ என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும்.
விடை:
தாவர பயிர்ப் பெருக்கம்

Question 2.
புரதம் செறிந்த கோதுமை ரகம் _____________ ஆகும்.
விடை:
அட்லஸ் 66

Question 3.
______________ என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆகும்.
விடை:
கால்ச்சிசின்

Question 4.
விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை _____________ எனப்படும்.
விடை:
உயிரூட்டச் சத்தேற்றம்

Question 5.
நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட ___________ என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும்.
விடை:
அட்டாமிட்டா 2

Question 6.
______________ தொழில் நுட்பம் மரபியல் ரீதியாக உயிரினங்களை உற்பத்தி செய்ய வழிவகை செய்துள்ளது.
விடை:
ஜீன் குளோனிங்

Question 7.
ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியானது DNA மூலக்கூறை _____________ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் துண்டாக்குகிறது.
விடை:
கார வரிசை (பேலின்ட்ரோம் வரிசை)

Question 8.
ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு ____________ இடையே காணப்படும்.
விடை:
ஒற்றைக் கரு இரட்டையர்கள்

Question 9.
வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு _____________ ஆகும்.
விடை:
குருத்தணுக்கள்

Question 10.
ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, _________ உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.
விடை:
பிளாஸ்மிட் .

III. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின் சரியான கூற்றை எழுதுக.

Question 1.
கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும்.
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 2.
இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை சடுதிமாற்றம் எனப்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை பன்மய பயிர்ப்பெருக்கம் எனப்படும்.

Question 3.
உடல் இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே தூய வரிசை எனப்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: உடல் இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன்கள் எனப்படும்.

Question 4.
இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம் பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம் பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் இரும்புச் சத்தின் தரத்தை தீர்மானிக்கிறது.

Question 5.
கோல்டன் ரைஸ் ஒரு கலப்புயிரி.
விடை:
தவறு.
சரியான கூற்று: கோல்டன் ரைஸ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி.

Question 6.
பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக் கூடியது.
விடை:
சரி.

Question 7.
செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்குள் நடைபெறும் கருவுறுதலாகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: செயற்கை கருவுறுதல் என்பது உடலுக்கு வெளியே (ஆய்வுக்கூடத்தில் நடைபெறும் கருவுறுதலாகும்.

Question 8.
DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பவரால் உருவாக்கப்பட்டது.
விடை:
சரி.

Question 9.
மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது DNA லைகேஸைக் குறிக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது ரெஸ்ட்ரிக்சன் நொதிகளைக் குறிக்கும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 1
விடை:
1 – இ
2 – உ
3 – ஆ
4 – அ
5 – ஈ
6 – ஏ
7 – ஊ
8 – எ

V. கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள்.

பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 1.
கூற்று: கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும்.
காரணம்: கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 2.
கூற்று: கால்ச்சிசின் குரோமோசோம் எண்ணிக்கையைக் குறைக்கிறது. [PTA-2]
காரணம்: சகோதரி குரோமோட்டிடுகள் எதிரெதிர்த் துருவங்களை நோக்கி நகர்வதை அது ஊக்குவிக்கிறது.
விடை:
ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 3.
கூற்று: rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது. [PTA-4]
காரணம்: இலக்கு உயிரினத்தில் விரும்பத்தகாத ஜீன்களை நுழைக்காமல் விரும்பத்தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப்படுகின்றன.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.

VI. ஒரே வாக்கியத்தில் விடையளி.

Question 1.
அதிக நார்ச்சத்தும் புரதமும் நிறைந்த கோதுமை ரகத்தின் பெயரை எழுதுக.
விடை:
டிரிட்டிக் கேல் (6n).

Question 2.
நெல்லில் அரைக் குள்ள வகைகள் அறிமுகம் செய்யப்படுள்ளன. இது நெல்லில் காணப்படும் குள்ள மரபணுவால் (ஜீனால்) சாத்தியமானது. இந்த குள்ள மரபணுவின் (ஜீன்) பெயரை எழுதுக.
விடை:
டீ-ஜியோ -வூ-ஜென் (DGWG) என்ற குள்ள நெல் வகையின் ஜீன், sd1(semi-dwarf).

Question 3.
மரபுப் பொறியியல் – வரையறு.
விடை:
ஜீன்களை நாம் விரும்பியபடி கையாள்வதும் புதிய உயிர்களை உருவாக்க ஜீன்களை ஒரு உயிரியிலிருந்து மற்றொரு உயிருக்கு இடம் மாற்றுதலும் மரபுப் பொறியியல் எனப்படும்.

Question 4.
குருத்தணுக்களின் வகைகளை எழுதுக. [PTA-2]
விடை:

  1. கருநிலைக் குருத்தணுக்கள்,
  2. முதிர் குருத்தணுக்கள் (அ) உடலக் குருத்தணுக்கள்.

Question 5.
அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் என்றால் என்ன? [PTA-6]
விடை:
மரபுப் பண்பு மாற்றம் என்பது rDNA தொழில்நுட்பம் மூலம் உயிரினங்களில் விரும்பிய பண்புகளை ஏற்படுத்த ஜீனில் மாற்றத்தை ஏற்படுத்துவது, அல்லது ஜீன்களை விரும்பியபடி கையாள்வது ஆகும். புதிதாக உள் நுழைக்கப்படும் ஜீன் ‘அயல் ஜீன்’ எனப்படும்.

இம்முறையில் மாற்றப்பட்ட ஜீன் அல்லது புதிய ஜீனைப் பெற்ற தாவர, விலங்குகள் மரபுப் பண்பு மாற்றப்பட்ட உயிரிகள் எனப்படும்.

VII. சுருக்கமாக விடையளி :

Question 1.
நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் பற்றி விவரி. [PTA-6]
விடை:

  1. வைரஸ்கள், பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகள் போன்ற நோய் உயிரிகளால் தாவரங்களில் நோய்கள் ஏற்படுகின்றன.
  2. இது பயிர்களின் மகசூலைப் பாதிக்கிறது. எனவே பூஞ்சைக் கொல்லிகள், பாக்டீரியக் கொல்லிகளைக் குறைவாக பயன்படுத்தி, மகசூலை அதிகமாக்கி அதே வேளையில் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற பயிர் வகைகளை உற்பத்திச் செய்வது அவசியமாகிறது.
  3. பயிர்ப்பெருக்கத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற சில ரகங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 2

Question 2.
இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவிய கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த பண்புகளை எழுதுக. [PTA-4]
விடை:

  1. ஹிம்கிரி: இலை மற்றும் பட்டைத்துரு நோய், ஹில்பண்ட் நோய்களுக்கெதிரான எதிர்ப்புத் தன்மை பெற்றது.
  2. அட்லஸ் 66: புரதம் செறிந்த கோதுமை ரகம்.
  3. சோனாலிகா மற்றும் கல்யாண் சோனா: அதிக மகசூல் தருகிற மற்றும் அரைக் குள்ள உயரமுடைய ரகம்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 3.
லைசின் அமினோ அமிலம் செறிந்த இரண்டு மக்காச்சோள கலப்புயிரி வகைகளின் பெயரை எழுதுக. [GMQP-2019]
விடை:
லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச் சோள ரகங்கள்:

  1. புரோட்டினா
  2. சக்தி மற்றும்
  3. ரத்னா .

Question 4.
வேறுபடுத்துக. [PTA-1]
அ) உடல செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை
ஆ) மாறுபாடு அடையாத செல்கள் மற்றும் மாறுபட்ட செல்கள்
விடை:
அ)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 3

ஆ)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 4

Question 5.
DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக. [PTA-3; Sep.20]
விடை:
டி.என்.ஏ. விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாடுகள் :

  • டி.என்.ஏ. விரல் ரேகைத் தொழில்நுட்பமானது தடயவியல் பயன்பாடுகளில் குற்றவாளிகளை அடையாளம் காணப் பயன்படுகிறது.
  • இது ஒரு குழந்தையின் தந்தையை அடையாளம் காண்பதில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணவும் பயன்படுகிறது.
  • இது உயிரினத் தொகையின் மரபியல் வேறுபாடுகள் பரிணாமம் மற்றும் இனமாதல் ஆகியவற்றை அறிய உதவுகிறது.

Question 6.
குருத்தணுக்கள் எவ்வாறு புதுப்பித்தல் செயல்பாட்டிற்கு பயன்படுகின்றன?
விடை:

  1. சில நேரங்களில் நமது உடலின் செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஜீன் கோளாறுகளினாலோ, நோய்களாலோ அல்லது விபத்தினாலோ நிரந்தரமான சேதமடையலாம்.
  2. இந்த சூழ்நிலைகளில் மேற்கண்ட குறைபாடுகளை சரிசெய்ய குருத்தணு சிகிச்சை பயன்படும்.
  3. பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சீமர் நோய் போன்ற நரம்புச் சிதைவு குறைபாடுகளை குணப்படுத்த நரம்புக் குருத்தணுக்கள் பயன்படுத்தப்பட்டு சிதைவடைந்த அல்லது இழந்த நியூரான்களுக்கு பதிலாக பதிலீடு செய்யப்படுகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 7.
உட்கலப்பு மற்றும் வெளிக் கலப்பு – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 5

VIII. விரிவாக விடையளி

Question 1.
விலங்குகளில் கலப்பின வீரியத்தின் விளைவுகள் யாவை? [PTA-1 & 5]
விடை:
கலப்பின சேர்க்கை மூலம் உயர்தரப் பண்புகளை உடைய கலப்பினங்களை உற்பத்தி செய்வது ஹெட்டிரோசிஸ் அல்லது கலப்பின வீரியம் எனப்படும்.

விலங்குப் பெருக்கத்தில் கலப்பின வீரியத்தின் விளைவுகள் :

  1. கால்நடைகளில் பால் உற்பத்தியை அதிகரித்தல்.
  2. கோழிகளில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல்
  3. உயர் தர இறைச்சியை உற்பத்திச் செய்தல்
  4. வீட்டு விலங்குகளின் வளர் வீதத்தை அதிகப்படுத்துதல்.

Question 2.
சடுதிமாற்றத்தை எடுத்துக்காட்டுடன் விவரி.
விடை:
ஒரு உயிரினத்தின் DNA-வின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும். இது மரபியல் வேறுபாடுகளை உண்டாக்குவதன் மூ லமாக, உயிரினங்களில் மாற்றங்கனை ஏற்படுத்தும் செயல் ஆகும். சடுதிமாற்றத்துக்கு உட்படும் உயிரினம் “சடுதிமாற்றமுற்ற உயிரினம்” எனப்படும்.

சடுதிமாற்றத்தைத் தூண்டும் காரணிகள் “மியூடாஜென்கள்” அல்லது “சடுதிமாற்றத் தூண்டிகள்” எனப்படும். சடுதி மாற்றத் தூண்டிகள் இரு வகைப்படும். அவை இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் மற்றும் வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள் ஆகும்.
1. இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள்
சடுதிமாற்றத்தைத் தூண்டும் கதிர் வீச்சுகளான X-கதிர்கள் a, B மற்றும் / கதிர்கள், புறஊதாக் கதிர்கள் மற்றும் வெப்பநிலை போன்றவை இயற்பியல் சடுதிமாற்றத் தூண்டிகள் எனப்படும்.

2. வேதியியல் சடுதிமாற்றத் தூண்டிகள்
சடுதிமாற்றத்தைத் தூண்டும் வேதிப்பொருட்கள் வேதியியல்
சடுதிமாற்றத் தூண்டிகள் எனப்படும். எ.கா. கடுகு வாயு மற்றும் நைட்ரஸ் அமிலம். பயிர் மேம்பாட்டிற்கு தூண்டப்பட்ட சடுதிமாற்றத்தைப் பயன்படுத்துவதே “சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கம்” எனப்படும்.

சடுதிமாற்ற பயிர்ப்பெருக்கத்தின் சாதனைகள்

  • ஸொனாரா – 64 என்ற கோதுமை ரகத்தில் இருந்து காமாக்கதிர்களைப் பயன்படுத்தி சர்பதி ஸொனாரா என்ற கோதுமை ரகம் உருவாக்கப்பட்டது.
  • உவர் தன்மையைத் தாங்கும் திறன் மற்றும் தீங்குயிரி எதிர்ப்புத் தன்மை பெற்ற அட்டாமிட்டா 2 அரிசி ரகம்.
  • கடினமான கனி உறை கொண்ட நிலக்கடலை ரகம்.

Question 3.
உயிரூட்டச் சத்தேற்றம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
விரும்பத் தக்க ஊட்டச் சத்துக்களான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர் தாவரங்களை உற்பத்திச் செய்யப் பயன்படுத்தப்படும் அறிவியல் முறையே உயிரூட்டச் சத்தேற்றம் எனப்படும். இதன் மூலம் உருவாக்கப்பட்ட சில பயிர் ரகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச்சோள ரகங்களான புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா (இந்தியாவில் உருவாக்கப்பட்டவை).
  2. புரதம் செறிந்த கோதுமை ரகமான அட்லஸ் 66.
  3. இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம்.
  4. வைட்டமின் A செறிந்த கேரட், பூசணி மற்றும் கீரை ரகங்கள்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 4.
ஜீன் குளோனிங் தொழில்நுட்பத்தைப் படத்துடன் விவரி.
விடை:
குளோன் என்பது ஒரு உயிரினத்தின் நகல் ஆகும். குளோனிங் என்பது மரபொத்த உயிரிகளை பிரதிகளாக உற்பத்தி செய்யும் முறையாகும்.

ஜீன் குளோனிங் முறையில், ஒரு ஜீன் அல்லது டி.என்.ஏ துண்டானது பாக்டீரிய செல்லினுள் செலுத்தப்பட்டு, பாக்டீரிய செல் பகுப்படையும் போது அதனுடன், உட்செலுத்தப்பட்ட டி.என்.ஏ துண்டு நகல் பெருக்கம் அடைவதாகும்.

ஜீன் குளோனிங் செயல் நுட்பத்தின் அடிப்படை நிகழ்வுகளாவன.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 6

 

  • ரெஸ்ட்ரிக்ஸன் நொதியைப் பயன்படுத்தி விரும்பிய டி.என்.ஏ துண்டைப் பிரித்தெடுத்தல்.
  • டி.என்.ஏ. துண்டைத் தகுந்த கடத்தியினுள் (பிளாஸ்மிட்) நுழைத்து மறுசேர்க்கை டி.என்.ஏக்களை’ (rDNA) உருவாக்குதல்.
  • விருந்தோம்பி பாக்டீரிய செல்லின் உள்ளே மறுசேர்க்கை டி.என்.ஏ வை உட்புகுத்துதல் உருமாற்றம்).
  • உருமாற்றமடைந்த விரும்தோம்பி செல்களைத் தேர்ந்தெடுத்து மறுசேர்க்கை டி.என்.ஏ (rDNA) வை பாக்டீரிய செல் பெருக்கம் மூலம் நகல் பெருக்கம் செய்தல்.
  • விருந்தோம்பியின் செல்லில் புதிய ஜீன் தனது பண்புகளை வெளிப்படுத்துதல்.

இம்முறையின் மூலம் பல நொதிகள் ஹார்மோன்கள் மற்றும் மருந்துகளை தயாரிக்கலாம்.

Question 5.
மருத்துவ துறையில் உயிர்தொழில்நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
மரபுப் பொறியியல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பு மிக்க புரதங்கள் அல்லது பாலிபெப்டைடுகள் உருவாக்கப்படுகின்றன. இவை பல நோய் தீர்க்கும் மருந்துப் பொருட்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

rDNA தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவப் பொருட்கள்

  1. இரத்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான இன்சுலின்
  2. வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் குறைபாட்டினை நீக்கும் மனித வளர்ச்சி ஹார்மோன்
  3. ஹீமோஃபிலியா என்ற இரத்த உறைதல் குறைபாட்டு நோய்க் கட்டுப்பாட்டிற்கான ‘இரத்த உறைதல் காரணிகள்’.
  4. திசு பிளாஸ்மினோஜன் தூண்டி, (இரத்தம் உறைதலைத் தடுக்கும் காரணி) இரத்தக் கட்டிகளைக் கரைத்து இதய அடைப்பைத் தவிர்க்க உதவுகின்றது.
  5. ஹெப்பாடிடிஸ் B மற்றும் வெளி நாய்க்கடி (ரேபிஸ்) நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள்.

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத் தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.
விடை:
அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை உற்பத்திச் செய்யும் பயிர்ப்பெருக்க முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. புதிய வகைத் தாவரங்களின் அறிமுகம்
  2. தேர்வு செய்தல்
  3. பன்மய பயிர்ப்பெருக்கம்
  4. சடுதிமாற்றப் பயிர்ப்பெருக்கம்
  5. கலப்பினமாக்கம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

Question 2.
‘இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது.’ காரணங்கள் கூறு.
விடை:
வளரும் நாடுகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளிலும் அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் மற்றும் நவீன விவசாய நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் செயல்முறையே பசுமைப்புரட்சி ஆகும்.

மேலும் நோய் எதிர்ப்பு பூச்சிகள் மற்றும் தீங்குயில்லா மேம்பட்ட ஊட்டச்சத்து போன்றவற்றின் மூலம் பசுமைப்புரட்சி செய்து அதிக மகசூல் தரும் தாவரங்களை உருவாக்கினர். இதனால் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அவை

  • சில நிலங்களில் ஒரே வகையான தாவரங்களையே பயிரிடுகின்றனர்.
  • பூச்சிக் கொல்லிகள் வேதியியல் சேர்மங்களால் தயாரிக்கப்பட்ட உரங்களை பயன்படுத்துகின்றனர்.
  • அதிக விவசாயிகளுக்கு பணம் செலவிட முடியவில்லை
  • சில வகையான தாவரங்களை பயிரிடுவதால் மண்ணின் தரம் பாதிக்கப்படுவதாக சூழ்நிலையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது.

  1. இவை பசுந்தாள் உரம், மண்புழு உரம், வீட்டுக் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட உரம், போன்றவற்றை பயன்படுத்துவதால் சூழ்நிலையையும் மண் வளத்தையும் பாதிப்படையச் செய்ய போவதில்லை.
  2. தாவரங்களின் வேறுபட்ட சிற்றினங்களை வளர்ப்பதால் நோய்த் தடுப்பாற்றல் ஏற்படுகிறது.
  3. மேலும் ஊடுபயிர் பயிரிடுதல் போன்றவற்றினால் பல்லுயிர் நன்மை பெறுகிறது. எனவே இயற்கை விவசாயம் சிறந்தது.

Question 3.
பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டது. இக்கூற்றை சரியான காரணத்துடன் விவரி.
விடை:

  1. இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம் பன்மயம் எனப்படும். ஜீன்கள் அதிகமாகின்றன. எனவே காய்கறிகளும் பழங்களும் அளவில் பெரிதாக கிடைக்கிறது.
  2. மேலும் பழங்களும் காய்கறிகளும் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
  3. மேலும் அவற்றில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே பன்மயம் இராட்சச தன்மையை பண்புகளால் கொண்டது எனலாம்.

Question 4.
P என்ற ஜீன் வைட்டமின் A உற்பத்திக்குத் தேவைப்படுகிறது. இது ‘R’ என்ற மரபுப்பண்பு மாற்றப்பட்ட தாவரத்தை உற்பத்திச் செய்ய ‘Q’ வின் ஜீனோமுடன் இணைக்கப்படுகிறது.
அ) P,Q மற்றும் R என்பன யாவை?
ஆ) இந்தியாவில் Rன் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
அ) P என்பது பீட்டா கரோட்டின் ஜீன்
Q என்பது சாதாரண அரிசி
R என்பது ‘கோல்டன் ரைஸ்’

Samacheer Kalvi 10th Science Guide Chapter 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

ஆ) இந்தியாவில் R-ன் முக்கியத்துவம்:

  • மரபணு மாற்றம் செய்யப்பட்ட ‘கோல்டன் ரைஸ்’ பீட்டா கரோட்டினை உற்பத்திச் செய்யும்.
  • வைட்டமின் A குறைபாட்டைத் தவிர்க்கும்.

அரசு தேர்வு வினா-விடை 
4 மதிப்பெண்கள்

Question 1.
ஜீன் சிகிச்சை முறை பற்றி விளக்குக. [Sep.20]
விடை:
ஜீன் சிகிச்சை முறை :
(i) மனிதனில் குறைபாடுள்ள ஜீன்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட, செயல்படும் ஜீன்களை இடம் மாற்றி மரபு நோய்களையும், குறைபாடுகளையும் சரிசெய்வது ஜீன் சிகிச்சை எனப்படும்.

(ii) குறைபாடு / நோய் உள்ள மனிதரின் ஜீன்கள் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில்நுட்பத்திற்கு உட்படுத்தப்பட்டு திருத்தப்படுகின்றன.

(iii) இம்முறை 1990 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

(iv) உடல் செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் உடல் செல் ஜீன் சிகிச்சை எனப்படும்.

(v) கருநிலை அல்லது இனப்பெருக்க செல்களில் விந்து மற்றும் அண்ட செல்) திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் இன செல் அல்லது கருநிலை செல் ஜீன் சிகிச்சை எனப்படும்.

(vi) இது நாள் வரை இனப்பெருக்க செல்கள் அல்லாத உடல செல்களில் மட்டும் ஜீன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(vii) உடல செல்களில் செய்யப்படும் ஜீன் திருத்தம் அந்த திருத்தம் செய்யப்படும் நோயாளிக்கு மட்டுமே நன்மை பயக்கும். அத்திருத்தம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுவதில்லை.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

10th Science Guide உயிரின் தோற்றமும் பரிணாமமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி
அ) தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும்.
ஆ) தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது.
இ) தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது.
ஈ) தொகுதி வரலாறு மற்றும் தனி உயிரி வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்லை.
விடை:
ஆ) தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது

Question 2.
“பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை” கோட்பாட்டை முன்மொழிந்தவர்.
அ) சார்லஸ் டார்வின்
ஆ) எர்னஸ்ட் ஹெக்கல்
இ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
ஈ) கிரிகர் மெண்டல்
விடை:
இ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

Question 3.
பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?
அ) கருவியல் சான்றுகள்
ஆ) தொல் உயிரியல் சான்றுகள்
இ) எச்ச உறுப்பு சான்றுகள்
ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும்
விடை:
ஆ) தொல் உயிரியல் சான்றுகள்

Question 4.
தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை.
அ) ரேடியோ கார்பன் முறை
ஆ) யுரேனியம் காரீய முறை
இ) பொட்டாசியம் ஆர்கான் முறை
ஈ) அ மற்றும் இ
விடை:
அ) ரேடியோ கார்பன் முறை

Question 5.
வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
அ) கொரானா
ஆ) J.W.கார்ஸ் பெர்கர்
இ) ரொனால்டு ராஸ்
ஈ) ஹியுகோ டி விரிஸ்
விடை:
ஆ) J.W. கார்ஸ் பெர்கர்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சூழ்நிலையின் மாற்றங்களுக்கு எதிர் வினைப்புரியும் விதமாக, தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள் …………….. என அழைக்கப்படுகின்றன.
விடை:
பெறப்பட்ட பண்புகள்

Question 2.
ஒரு உயிரினத்தில் காணப்படும் சிதைவடைந்த மற்றும் இயங்காத நிலையிலுள்ள உறுப்புகள் …………….. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
எச்ச உறுப்புகள்

Question 3.
வௌவால்கள் மற்றும் மனிதனின் முன்னங்கால்கள் …………… உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு.
விடை:
அமைப்பு ஒத்த

Question 4.
பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர் ………….. (PTA-6)
விடை:
சார்லஸ் டார்வின்)

III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாட்டைக் கூறியவர் சார்லஸ்டார்வின். [PTA-5]
விடை:
தவறு.
சரியான கூற்று: உறுப்புகளின் பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாட்டைக் கூறியவர் ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

Question 2.
செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கருவளர்ச்சி முறைகளைக் கொண்டதாக உள்ளன.
விடை:
சரி.

Question 3.
பறவைகள் ஊர்வனவற்றிலிருந்து தோன்றியவை.
விடை:
சரி. [PTA-5]

IV. பொருத்துக: [PTA-5]

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் 20
விடை:
அ – 3,
ஆ – 1,
இ – 4,
ஈ – 2,
உ – 6,
ஊ – 5

IV. ஓரிரு சொற்களில் விடையளி.

Question 1.
மனிதனின் கை, பூனையின் முன்னங்கால், திமிங்கலத்தின் முன் துடுப்பு மற்றும் வௌவாலின் இறக்கை ஆகியவை பார்க்க வெவ்வேறு மாதிரியாகவும், வெவ்வேறு பணிகளுக்கு ஏற்ப தகவமைக்கப்பட்டுள்ளன. இந்த உறுப்புகளுக்கு என்ன பெயர்?
விடை:
அமைப்பு ஒத்த உறுப்புகள்

Question 2.
புதைபடிவப் பறவை என்று கருதப்படும் உயிரினம் எது?
விடை:
ஆர்க்கியாப்டெரிக்ஸ்

Question 3.
புதை உயிர்ப் படிவம் பற்றிய அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
தொல்லுயிரியல்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

VI. சுருக்கமாக விடையளி :

Question 1.
கிவி பறவையின் சிதைவடைந்த இறக்கைகள், ஒரு பெறப்பட்ட பண்பு. ஏன் அது பெறப்பட்ட பண்பு என அழைக்கப்படுகிறது?
[PTA-3]
விடை:

  1. கிவி பறவை தன் இறக்கைகளை பறப்பதற்கு பயன்படுத்தியதில்லை.
  2. லாமர்க்கின் உறுப்புகளின் பயன்படுத்தாமைக் கோட்டிபாட்டின்படி, ஓர் உறுப்பை நீண்டகாலம் பயன்படுத்தாதபோது அது படிப்படியாகக் குன்றல் அடைகிறது.
  3. கிவி பறவையின் சிறப்பிழந்த இறக்கைகள் உறுப்பைப் பயளன்படுத்தாமைக்கான எடுத்துக்காட்டு.

Question 2.
ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாக ஏன் கருதப்படுகிறது?
விடை:

  1. ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்பது பழங்காலப் புதைபடிவப் பறவை.
  2. இது ஜூராசிக் காலத்தில் வாழ்ந்த முற்காலப் பறவை போன்ற உயிரினம். இது ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரியாகக் கருதப்படுகிறது.
  3. இது பறவைகளைப் போல இறகுகளுடன் கூடிய இறக்கைகளை பெற்றிருந்தது. ஊர்வன போல நீண்ட வால், நகங்களை உடைய விரல்கள் மற்றும் கூம்பு வடிவப் பற்களையும் பெற்றிருந்தது.
    எனவே, ஆர்க்கியாப்டெரிக்ஸ் இணைப்பு உயிரியாகக் கருதப்படுகிறது.

Question 3.
வட்டார இன தாவரவியல் என்பதனை வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக. [PTA-2; Sep.20]
விடை:
வட்டார இனத் தாவரவியல் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தாவரங்கள் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழி வழியாக எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பற்றி அறிவதாகும்.

  1. பரம்பரை பரம்பரையாகத் தாவரங்களின் பயன்களை அறிய முடிகிறது.
  2. நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தாவரங்களின் பயன்களைப் பற்றிய தகவலை அளிக்கிறது.
  3. வட்டார இனத் தாவரவியலானது மருந்தாளுநர், வேதியியல் வல்லுநர், மூலிகை மருத்துவப் பயிற்சியாளர் முதலானோருக்குப் பயன்படும் தகவல்களை அளிக்கிறது.
  4. மலைவாழ் பழங்குடி மக்கள் மருத்துவ இன அறிவியல் மூலம் பலவகையான நோய்களைக் குணப்படுத்தும் மருந்துத் தாவரங்களை அறிந்து வைத்துள்ளனர்.
  5. எ.கா.: வயிற்றுப் போக்கு, காய்ச்சல், தலைவலி, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, பாம்பு கடி – மற்றும் தொழு நோய் முதலான நோய்களுக்கு தாவரங்களின் பட்டை, தண்டு, வேர், இலை, பூமொட்டு, பூ, கனி, விதை, எண்ணெய் மற்றும் பிசின் முதலானவற்றைப் பயன்படுத்திக் குணமாக்கினர்.

Question 4.
புதை உயிர்ப் படிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்? (GMQP-2019; Sep.20)
விடை:

  1. படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள கதிரியக்கத் தனிமங்களால் கண்டு பிடிக்கலாம்.
  2. அத்தனிமங்கள் கார்பன், யுரேனியம், காரியம் மற்றும் பொட்டாசியமாக இருக்கலாம்.
  3. உயிரிழந்த தாவரங்களும் விலங்குகளும் கார்பனை உட்கொள்வதில்லை.
  4. அதன் பின்பு அவற்றிலுள்ள கார்பன் அழியத் தொடங்குகிறது. உயிரிழந்த தாவரத்தில் அல்லது விலங்கில் உள்ள கார்பன் (C14)அளவைக் கொண்டு அந்தத் தாவரம் அல்லது விலங்கு எப்போது உயிரிழந்தது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

VII. விரிவான விடையளி :

Question 1.
பரிணாமத்திற்கான உந்துவிசையாக இயற்கைத் தேர்வு உள்ளது. எவ்வாறு? [PTA-6; GMQP-2019]
விடை:
சார்லஸ் டார்வின், தன்னுடைய பதிவுகளையும், முடிவுகளையும் ‘சிற்றினங்களின் தோற்றம் (Origin of Species) என்ற பெயரில் புத்தமாக 1859-ஆம் ஆண்டு வெளியிட்டார். இது பரிணாம மாற்றங்களுக்கான இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை விளக்கியது. டார்வினின் கொள்கைகள்

(i) அதிக இனப்பெருக்கத்திறன்
உயிரினங்கள், அதிக அளவு உயிரிகளை இனப்பெருக்கம் செய்து தங்களுடைய சந்ததியை உருவாக்கும் திறன் பெற்றவை. அவை பெருக்கல் விகித முறையில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் உடையவை. இது இனப்பெருக்கத் திறனை அதிகரித்து அதிக உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

(ii) வாழ்க்கைக்கான போராட்டம்
அதிக உற்பத்தி காரணமாக, பெருக்க விகித முறையில் இனத்தொகை அதிகரிக்கிறது. உயிரினங்கள் வாழத் தேவையான இடமும், உணவும் அதே அளவில் மாறாமல் உள்ளது. இது உயிரினங்களுக்கான உணவு மற்றும் இடத்திற்கான தீவிர போட்டியை உருவாக்கி, போராட்டத்திற்கு வழிவகுக்கிறது. இது மூன்று வகைப்படும்.
(அ) ஒரே சிற்றின உயிரினங்களுக்கு இடையேயான போராட்டம்: ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த உயிரிகளுக்கு இடையே யான போட்டி.
(ஆ) இரு வேறுபட்ட சிற்றினங்களுக்கு இடையேயான போராட்டம்: ஒன்றாக ஒரே இடத்தில் வாழக்கூடிய வெவ்வேறு சிற்றினத்தைச் சார்ந்த உயிரிகளுக்கு இடையேயான போட்டி.
இ) சூழ்நிலை போராட்டம்: அதிக வெப்பம் அல்லது குளிர், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சூழலும் உயிரினங்களின் வாழ்வியலை பாதிக்கின்றன.

(iii) வேறுபாடுகள்:
வேறுபாடுகளுடன் காணப்படுவது அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சிறப்பு பண்பாகும். பரிணாமத்திற்கு சிறிய வேறுபாடுகள் முக்கியமானவையாக உள்ளன. டார்வின் கூற்றுப்படி சாதகமான வேறுபாடுகள் உயிரினங்களுக்கு உபயோகமாகவும், சாதகமற்ற வேறுபாடுகள் உயிரினத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது பயன் அற்றவையாகவும் உள்ளன.

(iv) தக்கன உயிர் பிழைத்தல் அல்லது இயற்கைத் தேர்வு:
வாழ்க்கைக்கான போராட்டத்தின் போது, கடினமான சூழலை எதிர்கொள்ளக்கூடிய உயிரினங்கள், உயிர் பிழைத்து சூழலுக்கு எற்ப தகவமைத்துக் கொள்ளும். கடினமான சூழலை எதிர்கொள்ள முடியாத உயிரினங்கள் உயிர் பிழைக்கத் தகுதியின்றி மறைந்துவிடும். சாதகமான வேறுபாடுகளை உடைய உயிரினங்களைத் தேர்வு செய்யும் இச்செயல்முறை, இயற்கைத் தேர்வு என அழைக்கப்படுகிறது.

(v) சிற்றினங்களின் தோற்றம்
டார்வின் கூற்றுப்படி, பல தலை முறைகளாக படிப்படியாக ஏற்பட்ட சாதகமான வேறுபாடுகளின்
தொகுப்பினால் புதிய சிற்றினங்கள் உருவாகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

Question 2.
அமைப்பு ஒத்த உறுப்புகளையும் செயல் ஒத்த உறுப்புகளையும் எவ்வாறு வேறுபடுத்துவீர்கள்?
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் 90

Question 3.
படிவமாதல் தாவரங்களில் எவ்வாறு நடைபெறுகிறது? [PTA-1]
விடை:
பாறைகளில் புதை உயிர்ப் படிவங்கள் உருவாவதைப் படிவமாதல் என்கிறோம்.
புதை உயிர்ப் படிவமாதலின் வகைகள்:
பொதுவாகப் புதை உயிர்ப் படிவங்கள் கல்லாதல், அச்சு மற்றும் வார்ப்பு, கார்பனாதல், பதப்படுத்துதல், அழுத்தம் மற்றும் ஊடுருவல் ஆகிய வகைகளில் உருவாகின்றன.

(i) கல்லாதல்
சிலிக்கோ போன்ற கனிமங்கள், இறந்த உயிரியின் உள்ளே ஊடுருவி, திசுக்களை அழித்து ஒரு பாறை போன்ற புதைப் படிவத்தை உருவாக்குகிறது. இந்த வகைப் படிவமாதலில் கடின மற்றும் மென்மையான பாகங்கள் படிவம் ஆகின்றன. பெரும்பாலும் எலும்புகளும் மரக் கட்டைகளும் இம்முறையில் படிவம் ஆகின்றன.

(ii) அச்சு மற்றும் வார்ப்பு
தாவரம் அல்லது விலங்கு பாறைகளுக்கு இடையே அதே அமைப்பு மாறாமல் பதப்படுத்தப்படுகிறது. படிவுகளுக்கு இடையே உயிரிகள் புதைவுறும்போது நிலத்தடி நீரினால் அவ்வுயிரியின் உடல் சிதைக்கப்பட்டு ஓர் வெற்றிடம் உருவாகிறது. அந்த வெற்றிடத்தில் புதையுண்ட தாவரம் அல்லது விலங்கு போன்ற ஓர் அச்சு ஏற்படுகிறது. இதன் மூலம் நம்மால் அந்த உயிரியின் உள்ளமைப்பை அறிய இயலாது. பின்பு கனிமங்கள் அல்லது படிவங்கள் இந்த வெற்றிடத்தை நிரப்பும். இது வார்ப்பு எனப்படும்.

(iii) பதப்படுத்துதல்
பனிக்கட்டி அல்லது மரங்களின் தண்டுப் பகுதியில் கசியும் பிசின் போன்றவற்றில் பதியும் உயிரிகள் அழுகிப் போகாமல் பாதுகாக்கப்படுகின்றன. முழுத்தாவரம் அல்லது விலங்கு இம்முறையில் பதப்படுத்தப்படுகிறது.

(iv) அழுத்திய சின்னங்கள்
கடலுக்கு அடியில் உள்ள இறந்த உயிரினங்களின் கடின உறுப்புகள், படிவுகளால் மூ டப்படுகிறது. படிவு உருவாதல் தொடர்ச்சியாக நடைபெற்று, புதை உயிர்ப் படிவமாக மாறுகிறது.

(v) ஊடுருவுதல் அல்லது பதிலீட்டுதல்
சில வேளைகளில் கனிமப் படிவமானது செல் சுவரைத் தாண்டிச் செல்கிறது. இந்தக் கனிம ஊடுருவலானது சிலிகா, கால்சியம் கார்பனேட், மெக்னீசியம் கார்பனேட் போன்ற கனிமங்களால் நிரப்பப்படுகிறது. கடினப் பகுதிகள் கரைக்கப்பட்டு அப்பகுதி கனிமங்களால் நிரப்பப்படுகிறது.

VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
அருண் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென ஒரு செடியின் மீது ஒரு தும்பி அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அதன் இறக்கைகளை உற்று நோக்கினான். காக்கையின் : இறக்கையும் தும்பியின் இறக்கையும் ஒரே மாதிரி உள்ளதாக நினைத்தான். அவன் நினைத்தது சரியா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக. [PTA-2]
விடை:
அவன் நினைத்தது தவறு.

(i) தும்பியின் இறக்கையும் காகத்தின் இறக்கையும் வேறுவேறாக உள்ளன. காகத்தின் அதன் முன்னங் கால்கள் மாறுபாடு அடைந்து இறக்கையாக மாறியுள்ளது. காக்கையின் இறக்கையும் தும்பியின் இறக்கையும் ஒரே வேலையைச் செய்கின்றன. அவை தோன்றிய இடங்கள் வேறு. அதாவது அவ்வுறுப்புகளுக்குப் பெயர் செயல் ஒத்த உறுப்புகள்.

(ii) செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும் ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளைக் கொண்டதாக உள்ளன.

(iii) எனவே தும்பியின் இறக்கையையும் காகத்தின் இறக்கையையும் ஒன்றாகக் கருத முடியாது.

Question 2.
புதை உயிர்ப் படிவங்களின் பதிவுகள் நமக்குப் பரிணாமம் பற்றித் தெரிவிக்கின்றன. எவ்வாறு?
விடை:
பெரும்பாலான முதுகெலும்பற்றவை மற்றும் முதுகெலும்புள்ளவைகளின் பரிணாமப் பாதையைப் புரிந்து கொள்ள புதைபடிவங்கள் பற்றிய ஆய்வுகள் உதவுகின்றன. பரிணாம வளர்ச்சி என்பது எளிய உயிரினங்களில் இருந்து சிக்கலான அமைப்பு கொண்ட உயிரினங்கள் படிப்படியாக தோன்றுவது என்பதை புதைபடிவ ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. தற்காலப் பறவைகளின் தோற்றத்தைத் தொல்லுயிரியல் படிவச் சான்றுகள் ஆதரிக்கின்றன.

(i) ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்பது பழங்காலப் புதைபடிவப் பறவை. இது ஜூராசிக் காலத்தில் வாழ்ந்த முற்காலப் பறவை போன்ற உயிரினம். இது ஊர்வன மற்றும் பறவைகளுக்கு இடையேயான இணைப்பு உயிரியாகக் கருதப்படுகிறது. இது பறவைகளைப் போல இறகுகளுடன் கூடிய இறக்கைகளை பெற்றிருந்தது. ஊர்வன போல நீண்ட வால், நகங்களை உடைய விரல்கள் மற்றும் கூம்பு வடிவப் பற்களையும் பெற்றிருந்தது.

(ii) தாவரப் புதை உயிர்ப் படிவம் என்பது முன்பு இறந்த தாவரங்களின் ஏதேனும் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். புதைபடிவமானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக மண்ணுக்குள் புதைந்து படிவம் ஆனது. பெரும்பாலும் தாவரப் புதை உயிர்ப் படிவங்கள், தாவரத்தின் ஏதேனும் ஒரு உடைந்த பகுதியாக இருக்கலாம். முழுமையாகக் கிடைப்பது அரிது.

(iii) புதை உயிர்ப் படிவங்களின் முக்கியத்துவம்
(அ) முந்தைய தாவரங்களைப் பற்றிய வரலாறு மற்றும் பரிணாமத்தைப் பிரதிபலிக்கிறது
(ஆ) தாவர புதை உயிர்ப் படிவங்கள் மூலம் தாவர உலகத்தைப் பற்றிய ஒரு வரலாற்று அணுகுமுறையை அறிய முடிகிறது.
(இ) தாவர வகைப்பாட்டியலுக்கு இது உதவுகிறது.
(ஈ) தாவரப் புதை உயிர்ப் படிவங்கள், தாவரங்களைப் பற்றிய தெளிவான விளக்கத்தையும் உள்ளமைப்பையும் ஒப்பிட உதவுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும்

Question 3.
ஆக்டோபஸ், கரப்பான்பூச்சி மற்றும் தவளை ஆகிய அனைத்திற்கும் கண்கள் உள்ளன. இவை பொதுவான பரிணாம தோற்றத்தைக் கொண்டுள்ளதால் ஒரே வகையாக கருத முடியுமா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக. [PTA-4]
விடை:

  1. முடியாது. பொதுவான பரிணாம தோற்றத்தை கொண்டுள்ளதால் ஒரே வகையாக கருத முடியாது.
  2. கண்கள் இருக்கும் காரணத்தைக் கொண்டு அவற்றை ஒரே வகையில் சேர்க்க முடியாது.
  3. உயிரியலின் பல்வேறு துறைகளிலிருந்து கிடைத்த சான்றுகளும், உயிரினங்களுக்கு இடையேயான தொடர்புகளை ஆதரிப்பதாக உள்ளன.
  4. ஆக்டோபஸ் மெல்லுடலி தொகுதியையும், கரப்பான் பூச்சிகளுக்கிடையேயான தொகுதியையும், கணுக்காலி தொகுதியையும், தவளை முதுகெலும்பு உள்ளவையாகவும், உள்ளது. ஒரு பண்பினைக் கொண்டு மட்டுமே இவற்றை நாம் ஒரே வகையாக கருத முடியாது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள் Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

10th Science Guide உடல் நலம் மற்றும் நோய்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி
அ) நிக்கோட்டின்
ஆ) டானிக் அமிலம்
இ குர்குமின்
ஈ) லெப்டின்
விடை:
அ) நிக்கோட்டின்

Question 2.
உலக புகையிலை எதிர்ப்பு தினம். [PTA-1]
அ) மே 31
ஆ) ஜூன் 6
இ ஏப்ரல் 22
ஈ) அக்டோபர் 2
விடை:
அ) மே 31

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 3.
சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை
அ) வேறுபட்ட உருவ அமைப்பு கொண்டவை
ஆ) பிளவுக்கு உட்படுவதில்லை
இ திடீர் மாற்றமடைந்த செல்கள்
ஈ) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை
விடை:
ஈ) துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை

Question 4.
நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
அ) கார்சினோமா
ஆ) சார்க்கோமா
இ லுயூக்கேமியா
ஈ) லிம்போமா
விடை:
ஈ) லிம்போமா

Question 5.
அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது [GMQP-2019]
அ) ஞாபக மறதி
ஆ) கல்லீரல் சிதைவு
இ மாயத் தோற்றம்
ஈ) மூளைச் செயல்பாடு குறைதல்
விடை:
ஆ) கல்லீரல் சிதைவு

Question 6.
இதயக்குழல் இதயநோய் ஏற்படக் காரணம்
அ) ஸ்ட்ரெப்டோகாக்கை பாக்டீரியா தொற்று
ஆ) பெரிகார்டியத்தின் வீக்கம்
இ இதய வால்வுகள் வலுவிழப்பு
ஈ) இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை
விடை:
ஈ) இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாமை

Question 7.
எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு என்று பெயர். [PTA-6]
அ) லுயூக்கேமியா
ஆ) சார்க்கோமா
இ) கார்சினோமா
ஈ) லிம்போமா
விடை:
இ) கார்சினோமா

Question 8.
மெட்டாஸ்டாசிஸ் இதனுடன் தொடர்புடையது.
அ) வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)
ஆ) தீங்கற்ற கட்டி
இ அ மற்றும் ஆ
ஈ) மகுடக் கழலை நோய்
விடை:
அ) வீரியமிக்க கட்டி (மாலிக்னன்ட்)

Question 9.
பாலிபேஜியா என்ற நிலை _____________ல் காணப்படுகிறது.
அ) உடற்பருமன்
ஆ) டயாபடீஸ் மெல்லிடஸ்
இ டயாபடீஸ் இன்சிபிடஸ்
ஈ) எய்ட்ஸ்
விடை:
ஆ) டயாபடீஸ் மெல்லிடஸ்

Question 10.
மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
அ) கண்க ள்
ஆ) செவி உணர்வுப் பகுதி
இ) கல்லீரல்
ஈ) மைய நரம்பு மண்டலம்
விடை:
ஈ) மைய நரம்பு மண்டலம்

II. கீழ்க்கண்டவற்றை சரியா, தவறா எனக்கூறுக. தவறுகள் ஏதுமிருப்பின் திருத்தி எழுதுக.

Question 1.
எய்ட்ஸ் என்பது ஒரு கொள்ளை நோய் (எபிடமிக்).
விடை:
தவறு.
சரியான கூற்று: எய்ட்ஸ் என்பது உலகம் முழுவதும் பரவலான ஒரு கொடிய நோய் (பாண்டமிக்).

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 2.
புற்றுநோய் உருவாக்கும் ஜீன்களுக்கு ஆன்கோஜீன்கள் என்று பெயர்.
விடை:
சரி.

Question 3.
உடல் பருமனின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: புற்றுநோயின் பண்பு கட்டிகள் உருவாக்கம் ஆகும்.

Question 4.
வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: வெள்ளையணுக்கள் மட்டும் எண்ணிக்கையில் அதிகரிப்பது லுயூக்கேமியா எனப்படுகிறது.

Question 5.
நோயின் காரணங்கள் பற்றி அறிய உதவும் அறிவியல் பிரிவு நோய்க்காரண ஆய்வு (ஏட்டியாலஜி) எனப்படுகிறது.
விடை:
சரி.

Question 6.
நோயாளிகளின் ஆடைகளை பயன்படுத்துவதனால் எய்ட்ஸ் நோய் பரவாது.
விடை:
சரி.

Question 7.
இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை – 2 உருவாகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: இன்சுலின் பற்றாக்குறையினால் டயாபடீஸ் மெல்லிடஸ் வகை – 1 உருவாகிறது

Question 8.
கார்சினோஜன் என்பவை புற்றுநோயை உருவாக்கும் காரணிகளாகும்.
விடை:
சரி.

Question 9.
நிக்கோட்டின் என்பது மயக்கமூட்டி வகை மருந்து.
விடை:
தவறு.
சரியான கூற்று: நிக்கோட்டின் என்பது புகையிலிருந்து பெறப்படும் நச்சுப் பொருள்.

Question 10.
சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது மூளைக் கோளாறு நோயுடன் தொடர்புடையது.
விடை:
தவறு.
சரியான கூற்று: சிர்ரோசிஸ் (கல்லீரல் வீக்கம்) என்பது கல்லீரல் கோளாறு நோயுடன் தொடர்புடையது.

III. கீழ்க்கண்டவற்றின் விரிவாக்கத்தைத் தருக

Question 1.
IDDM
விடை:
Insulin Dependent Diabetes mellitus (இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய்)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 2.
HIV
விடை:
Human Immuno-deficiency Virus (மனித தடைக்காப்பு குறைவு வைரஸ்)

Question 3.
BMIT
விடை:
Body Mass Index (உடற் பருமக் குறியீடு)

Question 4.
AIDS
விடை:
Acquired Immuno deficiency Syndrome (பெறப்பட்ட நோய்த் தடுப்பாற்றல் குறைவு நோய்)

Question 5.
CHD
விடை:
Coronary Heart Disease (கரோனரி இதய நோய்)

Question 6.
NIDDM
விடை:
Non-Insulin Dependent Diabetes Mellitus (இன்சுலின் சாராத நீரிழிவு நோய்)

IV. பொருத்துக :

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள் 1
விடை:
1 – உ
2 – அ
3 – ஆ
4 – இ
5 – ஈ

V. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
…………. அதிகப்படியாக பயன்படுத்துவதினால் கல்லீரலில் சிர்ரோஸிஸ் நோய் ஏற்படுகிறது.
விடை:
ஆல்கஹால்

Question 2.
புகையிலையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் அதிக நச்சு உள்ள வேதிப்பொருள் …………………..
விடை:
நிக்கோட்டின்

Question 3.
இரத்தப் புற்றுநோய்க்கு ………….. என்று பெயர். [PTA-4]
விடை:
லியூக்கேமியா

Question 4.
சிலவகையான மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினால் உண்டாகும் அதன் குறைவான பதில் விளைவு ………….. எனப்படும்.
விடை:
மருந்து சகிப்புத் தன்மை

Question 5.
இன்சுலின் ஏற்றுக் கொள்ளாமை என்பது …………. நீரிழிவு நோயின் நிலை.
விடை:
வகை – 2

VI. ஒப்புமை வகை வினாக்கள். முதல் சொல்லை அடையாளம் கண்டு அதனோடு தொடர்புடைய சொல்லை நான்காவது கோடிட்ட இடத்தில் எழுதுக.

அ) தொற்று நோய் : எய்ட்ஸ் ; தொற்றா நோய்: ……………..
விடை:
நீரிழிவு நோய் / இதயக்குழல் நோய் / புற்றுநோய்)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

ஆ) கீமோதெரபி : வேதிப்பொருள்கள் ; கதிர்வீச்சு:
விடை:
கதிரியக்கம்

இ உயர் இரத்த அழுத்தம் : ஹைபர் கொலஸ்டீரோலோமியா ; கிளைகோசூரியா: ……..
விடை:
அதிக குளுக்கோஸ் சிறுநீரில் வெளியேற்றம்

VII. ஒரு வாக்கியத்தில் விடையளி :

Question 1.
மனோவியல் மருந்துகள் என்றால் என்ன? [PTA-2]
விடை:
மூளையின் மீது செயல்பட்டு அவற்றின் செயல்பாடுகளான நடத்தை, உணர்வறி நிலை, சிந்திக்கும் திறன், அறிநிலை ஆகியவற்றை மாற்றியமைக்கும் மருந்துகள் மனோவியல் மருந்துகள் எனப்படும்.

இவை மனநிலை மாற்றும் மருந்துகள் என குறிப்பிடப்படுகின்றன.

Question 2.
புகைப்பதால் வரும் நோய்களைக் குறிப்பிடுக.
விடை:

  1. நுரையீரல் புற்றுநோய்
  2. மூச்சுக்குழல் அழற்சி
  3. நுரையீரல் காசநோய்
  4. எம்பைசீமா
  5. ஹைபாக்சியா
  6. அதிக இரத்த அழுத்தம்
  7. முன்சிறுகுடல் புண் (அல்சர்)
  8. வாய்ப் புற்றுநோய்.

Question 3.
உடற்பருமனுக்கு காரணமான காரணிகள் எவை? [PTA-5]
விடை:

  1. மரபியல் காரணிகள்
  2. உடல் உழைப்பின்மை
  3. உணவுப் பழக்கவழக்கங்கள் (அளவுக்கு அதிகமாக உண்ணுதல்)
  4. நாளமில்லா சுரப்பிக் காரணிகள் போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது.

Question 4.
வயது முதிர்ந்தோர் நீரிழிவு என்றால் என்ன?
விடை:
(i) வகை – 2: இன்சுலின் சாராத நீரிழிவு நோய், வயதானோரின் நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும்.

(ii) 80% முதல் 90% வரை நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது. இது மெதுவாகவும், மிதமாகவும் உருவாகி அதிக நிலைப்புத் தன்மை பெறுகிறது.

(iii) பெரும்பாலும் வயது அதிகரித்தல் (நடுத்தர மற்றும் வயதானவர்களை பாதிக்கும்), உடல் பருமன், உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை, அளவுக்கதிகமாக உண்ணுதல், உடல் செயல்பாடுகள் இல்லாமை போன்றவற்றால் ஏற்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 5.
மெட்டாஸ்டாசிஸ் என்றால் என்ன?
விடை:
புற்று செல்கள் உடலின் தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்ந்து, புதிய திசுக்களை அழிக்கின்றன. இந்நிகழ்வு மெட்டாஸ்டாசிஸ் என்று அழைக்கப்படுகிறது.

Question 6.
இன்சுலின் குறைபாடு எவ்வாறு ஏற்படுகிறது?
விடை:
(i) இது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிவதன் காரணமாக ஏற்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக, போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது (ஹைபர்கிளைசீமியா).

(ii) மரபணு மரபுவழி மற்றும் சுற்றுச்சுழல் காரணிகள் (வைரஸ் காரணமாக தொற்றுகள், கடுமையான மன அழுத்தம்) ஆகியவற்றாலும் இது ஏற்படுகிறது.

VII. குறுகிய விடையளி :

Question 1.
HIV பரவக்கூடிய பல்வேறு வழிகள் யாவை? [PTA-1]
விடை:
பொதுவாக HIV பரவும் முறைகள்:

  • பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்ளுதல்.
  • போதை மருந்து ஊசி பயன்படுத்துவோர் இடையே நோய்த் தொற்று ஊசிகள் மூலமாகப் பரவுதல்.
  • பாதிக்கப்பட்ட நபரின் நோய்த் தொற்றுடைய இரத்தம் மற்றும் இரத்தப் பொருள்களைப் பெறுவதன் மூலம் பரவுதல்.
  • பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து சேய்க்கு தாய்சேய் இணைப்புத்திசு மூலம் பரவுதல்.

Question 2.
புற்று செல் சாதாரண செல்லிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? [PTA-4]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள் 2

Question 3.
வகை – 1 மற்றும் வகை – 2 நீரிழிவு நோய்களை வேறுபடுத்துக. [PTA-4]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள் 3

Question 4.
உடற்பருமன் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு பரிந்துரைப்பதன் அவசியம் என்ன?
விடை:
குறைந்த கலோரி, இயல்பான புரதம், வைட்டமின்கள், கனிமங்கள், கட்டுப்படுத்தப் பட்ட கார்போஹைட்ரேட், கொழுப்பு, அதிக நார்ச்சத்து மிக்க உணவுகள் போன்றவை உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பவைகளாகும்.

எடை குறைப்பில் கலோரி கட்டுப்பாடு பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதும் ஆகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 5.
இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூறுக. [GMQP-2019; Sep.20]
விடை:
திட்டமிட்ட உணவுமுறை:
(i) குறைவான கலோரி கொண்ட உணவினை உட்கொள்ளல், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகள், குறைவான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சாதாரண உப்பு ஆகியவற்றைக் குறைவாக உட்கொள்ளுதல் போன்றவை நாம் உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களாகும்.

(ii) அதிகளவு நிறைவுறாத பல் கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்ட உணவு அவசியமானதாகும்.

(iii) நார்ச்சத்து மிக்க உணவுகள், பழங்கள், காய்கறிகள், புரதம், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல் தேவையானதாகும்.

உடல் செயல்பாடுகள்:
நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல், நடத்தல் மற்றும் யோகா போன்றவை உடல் எடையைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான ஒன்றானதாகும். அடிமைப்படுத்தும்

பொருள்களை தவிர்த்தல் :
ஆல்கஹால் பருகுதல் மற்றும் புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.

IX. விரிவான விடையளி :

Question 1.
மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான தீர்வைத் தருக.
விடை:
(i) ஆலோசனை பெறுதல்:
மது அருந்துபவர்கள் தங்கள் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொண்டு அவற்றிலிருந்து விடுபடவும், வாழ்க்கையின் தோல்விகளை ஏற்றுக் கொள்ளவும் தகுந்த ஆலோசனைகள் உதவும்.

(ii) உடல் செயல்பாடுகள்:
மறுவாழ்வை மேற்கொள்ளும் நபர்கள், நூல்கள் வாசித்தல், இசை, விளையாட்டு, யோகா மற்றும் தியானம் போன்ற நலமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

(iii) பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடம் உதவியை நாடுதல்:
சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் சக மனிதர்களிடமிருந்து உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெற வேண்டும். தங்களது பதட்டமான உணர்வுகள், தவறான செயல்களைக் குறித்துப் பேசுவதன் மூலம் மேலும், அத்தவறுகளைச் செய்யாமல் தங்களை தடுத்துக் கொள்ள உதவும்.

(iv) மருத்துவ உதவி:
உளவியலாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களிடமிருந்து உதவிகள் பெறுவதன் மூலம் தங்களுடைய இக்கட்டான நிலையிலிருந்து விடுபட்டு, நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். மதுவிலிருந்து மீட்பு (de-addiction) மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் தனிநபருக்கு உதவிகரமாக உள்ளன. இதனால் அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளிலிருந்து முழுமையாக விடுபட்டு, இயல்பான மற்றும் நலமான வாழ்க்கையை வாழ முடியும்,

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 2.
இதய நோய்கள் ஏற்பட காரணம் வாழ்க்கை முறையே ஆகும். இதை சரிசெய்ய தீர்வுகள் தருக.
விடை:
(i) குறைவான கலோரி கொண்ட உணவினை உட்கொள்ளல், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட உணவு வகைகள், குறைவான கார்போஹைட்ரேட்டுகள் – மற்றும் சாதாரண உப்பு ஆகியவற்றைக் குறைவாக உட்கொள்ளுதல் போன்றவை நாம் உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களாகும்.

(ii) அதிகளவு நிறைவுறாத பல்கொழுப்பு அமிலங்கள் (PUFA) கொண்ட உணவு அவசியமானதாகும்.

(iii) நார்ச்சத்து மிக்க உணவுகள், பழங்கள், காய்கறிகள், புரதம், கனிமங்கள் மற்றும்வைட்டமின்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளுதல் தேவையானதாகும்.

உடல் செயல்பாடுகள்:
நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல் நடத்தல் மற்றும் யோகா போன்றவை உடல் எடையைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான ஒன்றானதாகும்.

அடிமைப்படுத்தும் பொருள்களை தவிர்த்தல்:
ஆல்கஹால் பருகுதல் மற்றும் புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும்.

X. உயர் சிந்தனைக்கான வினாக்கள் :

Question 1.
ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்களில் கொழுப்பின் பங்கு என்ன? [PTA-3]
விடை:

  1. கொழுப்பு படிதலானது, வழக்கமாக குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி பல ஆண்டுகள் நீடிப்பதன் காரணமாக இதய நோய் உண்டாகிறது.
  2. இவை மெல்லிய கொழுப்பு கீரல்கள் முதல் சிக்கலான நாரிழைத் தட்டுகளான, பிளேக் உருவாவது வரை இருக்கலாம்.
  3. இது இதயத் தசைகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற பெரிய மற்றும் நடுத்தர அளவுடைய தமனிகளைச் சுருங்கச் செய்வதன் மூலம், ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் நோய்க்கு வழிவகுக்கிறது.

Question 2.
குப்பை உணவுகளை உண்பதாலும் மென்பானங்களைப் பருகுவதாலும் உடற்பருமன் போன்ற உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் குழந்தைகள் அதனை விரும்புகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்கு நீங்கள் தரும் ஆலோசனைகளைக் கூறுக.
விடை:
(i) குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை கொடுக்க வேண்டும். மேலும் உடல் நலனுக்கு ஏற்ற தின்பண்டங்களை குழந்தைப் பருவத்திலிருந்தே கொடுக்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பண்டங்களை கொடுத்து பழக்கக்கூடாது.

(ii) பழச்சாறு, கரும்புச்சாறு போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளையும் கொடுக்க வேண்டும். புட்டிகளில் அடைத்து விற்கப்படுகிற குளிர்பானங்களை கொடுக்கக்கூடாது.

(iii) இதனால் குழந்தைகள் வளர்ந்து வரும்போது அவர்களுக்கு குப்பை உணவு (Junk foods) மற்றும் குளிர்பானங்களின் மேல் ஈர்ப்பு வராமல் இருக்கும்.

(iv) ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களின் பெற்றோரிடத்தில் குப்பை உணவு மற்றும் சிப்ஸ்கள் (Chips) கொடுத்து அனுப்ப வேண்டாம் என ஆலோசனை கூறலாம்.

(v) குழந்தைகளும் நண்பர்களின் ஆலோசனைகளையும், விளம்பரத் தினையும் பார்த்து குப்பை உணவு மேல் நாட்டம் ஏற்படாவண்ணம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

Question 3.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் நன்மைகள் யாவை? [PTA-6]
விடை:
தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் நன்மைகள்:

  • மிதமான உடற்பயிற்சியுடன் கூடிய குறைந்த கலோரி உணவு உடல் எடையைக் குறைப்பதில் திறன் மிக்கதாக விளங்குகிறது.
  • மன அழுத்தம் காரணமாக அதிகப்படியான உணவு உட்கொள்வதை தியானம் மற்றும் யோக மூலம் குறைக்க முடியும்.
  • உடல் பருமன் தினசரி உடற்பயிற்சியினால் குறைந்து விடும்.
  • மன அழுத்தம் குறைந்து விடும். அதாவது உடற்பயிற்சியின் மூலம் சில ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன.
  • உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது.
  • உடலில் உள்ள எலும்பு மற்றும் தசைகளுக்கு நல்லது.
  • இவைகள் இதய நோய்க்கான காரணிகளை குறைத்து விடுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 4.
ஒரு முன்னணி வார இதழ் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில் நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மக்களிடையே எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு இன்னும் குறைவாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நீ இந்த நாளிதழின் அறிக்கையை உன் வகுப்பிலும் உன் வகுப்பிலுள்ள குழுவினரிடமும் விவாதித்து இந்த அச்சமூட்டும் நோய்க்கு எதிராக செயல்படுதல் குறித்து மக்களுக்கு உதவுவது பற்றி முடிவெடுக்கவும்.

அ) உன்னுடைய பள்ளிக்கு அருகாமையிலுள்ள கிராம மக்களுக்கு நீ மேற்கூறியவற்றை தெரிவிக்கும் போது உனக்கு ஏற்படும் சிரமங்கள் யாவை?
ஆ) இச்சிக்கலுக்கு நீ எவ்வாறு தீர்வு காண்பாய்?
விடை :
அ)

  1. கிராமத்தில் உள்ள மக்களுக்கு அறிவியல் கருத்துக்களை புரிந்து கொள்ளக்கூடிய அளவில் படிப்பறிவு குறைந்து காணப்படலாம். ஆகவே அவர்களுடைய மொழியிலேயே இதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
  2. ஆரம்பத்தில் அவர்கள் இவற்றை அறிந்து கொள்ள விருப்பமில்லாமல் இருக்கலாம்.
  3. பாதுகாப்பான உடலுறவு பற்றி சொல்லித் தருவது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

ஆ)

  1. இந்த பிரச்சனைகளை சமாளிக்க கிராம பஞ்சாயத்து சபை உறுப்பினர்களைக் கொண்டு இதைப்பற்றி பேசச் செய்யலாம்.
  2. கிராமத்திற்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி ஆலோசனை மற்றும் விழிப்புணர்வுகள் வழங்கலாம்.
  3. திரைப்படங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

XI. விழுமிய அடிப்படையிலான வினாக்கள்:

Question 1.
போதை மருந்து அல்லது மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களால் அதிலிருந்து எளிதில் விடுபட முடிவதில்லை ஏன்?
விடை:
போதை மருந்து பழக்கம் உள்ளவர்கள் முழுவதுமாக மதுவை நம்பி இருக்கிறார்கள். மது இல்லாமல் அவர்களால் நிதானமாக இருக்க முடியாது என்ற மாயையில் இருக்கிறார்கள். தீயவிளைவுகளுக்கு உட்படுத்தி நிரந்தரமாக மதுவை சார்ந்திருப்பதற்கு அவர்களின் இந்த எண்ணம் இட்டுச் செல்கிறது.

(i) இயல்பான நல்ல நிலையில் தன்னுடைய உடற்செயலியல் நிலையைப் பராமரிக்க மற்றவர்களைச் சார்ந்திருத்தல் அவசியம்.

(ii) போதை மருந்துகள் அல்லது மது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகின்றன என்ற தவறான, உளவியல் உணர்விலிருந்து விடுபட, அவர்களிடம் மன உறுதி இல்லாததும் ஒரு காரணம்.

Question 2.
புகையிலை பழக்கம் ஒரு மனிதனின் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிக.
விடை:
(i) நுரையீரலின் மூச்சு சிற்றறைகளில் (lung alveoli) ஏற்படும் வீக்கம் வாயு பரிமாற்றத்திற்கான மேற்பரப்பை குறைத்து எம்பைசீமா எனும் நோயை உண்டாக்குகிறது.

(ii) புகைப்பிடித்தலின்போது உண்டாகும் புகையில் உள்ள கார்பன்-மோனாக்சைடு இரத்த சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைப்பை ஏற்படுத்தி அதன் ஆக்சிஜன் எடுத்துச்செல்லும் திறனை குறைக்கிறது. இதனால் உடல் திசுக்களில் ஹைபாக்சியாவை உண்டாக்குகிறது.

இவையே புகையிலை பழக்கம் ஒரு மனிதனின் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 3.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய மூன்று உணவு வகைகளைக் கூறுக. இதை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என விவரி.
விடை:
எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள்

  1. முழுதானியங்கள், சிறுதானியங்கள்
  2. கீரை வகைகள்
  3. கோதுமை மற்றும் தீட்டப்படாத அரிசி

இந்த உணவு வகையில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. கார்போஹைட்ரேட் சற்று குறைவான அளவு உள்ளது.

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

  1. பழச்சாறு /இனிப்பு வகைகள்
  2. ஸ்டார்ச் அதிகமுள்ள காய்கறிகள்
  3. பால் பொருட்கள்

இவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட் உடைந்து ஜீரணமாகி வேகமாக இரத்தத்துடன் கலக்கப்படுகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்.

எனவே புரதச்சத்து நார்ச்சத்து உள்ள உணவு வகையையே அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Question 4.
மனிதர்களின் HIV பற்றிய புரிதல் மற்றும் நடவடிக்கை, அவர்களின் தெரிந்து கொள்ளும் தன்மையைப் பொறுத்து எவ்வாறு மாறுபடுகிறது? [PTA-5]
விடை:
எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எய்ட்ஸ் பற்றிய அறிவு பெற்றவர்களைக் கொண்டு பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம். இந்த நோய் சம்பந்தமாக அறிவியல்பூர்வமாக அதிலுள்ள ஆபத்துக்கள், விளைவுகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எய்ட்ஸ் தடுப்பு :

  1. இரத்த வங்கியிலிருந்து இரத்தம் பெற்று ஏற்றுவதற்கு முன்னர் அக்குறிப்பிட்ட வகை இரத்தமானது HIV சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
  2. மருத்துமனைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஊசிகளை மீண்டும் பயன்படுத்தாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  3. பாதுகாப்பான பாலுறவு மற்றும் ஆணுறைகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளைப் பரிந்துரைக்க வேண்டும்.

XII. கூற்று மற்றும் காரணம்:

கீழ்க்காணும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
இ கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

Question 1.
கூற்று: அனைத்து மருந்துகளும் மூளையின் மீது செயல்படுகின்றன.
காரணம்: மருந்துகள் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளைக் குலைக்கின்றன.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 21 உடல் நலம் மற்றும் நோய்கள்

Question 2.
கூற்று: டயாபடீஸ் மெல்லிடஸ் நோயாளிகளின் சிறுநீரில் அதிகளவு குளுக்கோஸ் வெளியேறுவதைக் காணலாம்.
காரணம்: கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரப்பதில்லை.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

அரசு தேர்வு வினா-விடை க
7 மதிப்பெண்கள்

Question 1.
தவறான பயன்பாட்டுக்கு உள்ளான குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான அணுகுமுறைகள் ஏதேனும் 2 கூறுக. [Sep.20]
விடை:
தவறான பயன்பாட்டுக்கு உள்ளான குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான அணுகுமுறைகள் :
குழந்தைகள் உதவிக்கரம் (Child Helpline) : குழந்தைகள் உதவிக்கரம் சமூகப் பணியாளர்களை நியமித்து குழந்தைகளுக்கு உணவு, உறைவிடம் மற்றும் பாதுகாப்பு வழங்குவதில் உதவி புரிகிறது.

குடும்ப ஆதரவு :
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களுடைய பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு முறையான கவனத்துடன் கூடிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 18 மரபியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 18 மரபியல்

10th Science Guide மரபியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு,

Question 1.
மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ளன.
அ) ஒரு ஜோடி ஜீன்கள்
ஆ) பண்புகளை நிர்ணயிப்பது
இ) மரபணுக்களை (ஜீன்) உருவாக்குவது
ஈ) ஒடுங்கு காரணிகள்
விடை:
ஆ) பண்புகளை நிர்ணயிப்பது

Question 2.
எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?
அ) பிரிதல்
ஆ) குறுக்கே கலத்தல்
இ சார்பின்றி ஒதுங்குதல்
ஈ) ஒடுங்கு தன்மை
விடை:
இ) சார்பின்றி ஒதுங்குதல்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

Question 3.
செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி
அ) குரோமோமியர்
ஆ) சென்ட்ரோசோம்
இ) சென்ட்ரோமியர்
ஈ) குரோமோனீமா
விடை:
இ) சென்ட்ரோமியர்

Question 4.
சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது …………. வகை குரோமோசோம். [Qy-2019]
அ) டீலோ சென்ட்ரிக்
ஆ) மெட்டா சென்ட்ரிக்
இ) சப்-மெட்டா சென்ட்ரிக்
ஈ) அக்ரோ சென்ட்ரிக்
விடை:
ஆ) மெட்டா சென்ட்ரிக்

Question 5.
டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ………….. உள்ளது.
அ) டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை
ஆ) பாஸ்பேட்
இ) நைட்ரஜன் காரங்கள்
ஈ) சர்க்கரை பாஸ்பேட்
விடை:
ஈ) சர்க்கரை பாஸ்பேட்

Question 6.
ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது …………
அ) ஹெலிகேஸ்
ஆ) டி.என்.ஏ பாலிமெரேஸ்
இ) ஆர்.என்.ஏ. பிரைமர்
ஈ) டி.என். ஏ. லிகேஸ்
விடை:
ஈ) டி.என்.ஏ. லிகேஸ்

Question 7.
மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ……………
அ) 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்
ஆ) 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்
இ) 46 ஆட்டோசோம்கள்
ஈ) 46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்
விடை:
அ) 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

Question 8.
பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் ………… என அழைக்கப்படுகிறது.
அ) நான்மய நிலை
ஆ) அன்யூ பிளாய்டி
இ யூபிளாய்டி
ஈ) பல பன்மய நிலை
விடை:
ஆ) ஆன்யூ பிளாய்டி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக OUT

Question 1.
மெண்டலின் ஒரு ஜோடி வேறுபட்ட பண்புகள் ………………. என அழைக்கப்படுகின்றது.
விடை:
அல்லீல்கள்

Question 2.
ஒரு குறிப்பிட்ட பண்பின் (ஜீனின்) வெளித்தோற்றம் எனப்படும்.
விடை:
புறத்தோற்றம் (பீனோடைப்)

Question 3.
ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள்…. என அழைக்கப்படுகின்றன.
விடை:
குரோமோசோம்கள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

Question 4.
ஒரு டி.என்.ஏ இரண்டு …………………. இழைகளால் ஆனது.
விடை:
பாலிநியுக்ளியோடைடு

Question 5.
ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில் ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள் ……………… என அழைக்கப்படுகின்றன.
விடை:
சடுதி மாற்றம்

III. கீழ்க்கண்ட கூற்று சரியா? தவறா? எனக்கூறுக. தவறு எனில் கூற்றினை திருத்துக.

Question 1.
மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமுறையில் 3:1 ஆகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமுறையில் 9 : 3 : 3 : 1.

Question 2.
ஒடுங்கு பண்பானது ஒங்கு பண்பினால் மாற்றப்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால் மறைக்கப்படுகிறது.

Question 3.
ஒவ்வொரு கேமீட்டும் ஜீனின் ஒரே ஒரு அல்லீலைக் கொண்டுள்ளது.
விடை:
சரி.

Question 4.
ஜீன் அமைப்பில் வேறுபட்ட இரண்டு தாவரங்களைக் கலப்பினம் செய்து பெறப்பட்ட சந்ததி கலப்புயிரி ஆகும்.
விடை:
சரி.

Question 5.
சில குரோமோசோம்களில் டீலோமியர் எனப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: சில குரோமோசோம்களில் சாட்டிலைட் எனப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.

Question 6.
டி.என்.ஏ பாலிமெரேஸ் நொதியின் உதவியுடன் புதிய நியூக்ளியோடைடுகள் சேர்க்கப்பட்டு புதிய நிரப்பு டி.என்.ஏ இழை உருவாகிறது. விடை:
சரி

Question 7.
டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 45 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை.
விடை:
தவறு
சரியான கூற்று: டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 47 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 30
விடை:
1 – இ,
2 – ஈ,
3 – உ,
4 – அ,
5 – ஆ

V. ஒரு வாக்கியத்தில் விடையளி.

Question 1.
ஈரிணை வேறுபட்ட பண்புகளைக் கொண்ட உயிரிகளில் கலப்பினம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
இரு பண்புக் கலப்பு.

Question 2.
எந்தச் சூழ்நிலையில் இரண்டு அல்லீல்களும் ஒத்த நிலையில் இருக்கும்?
விடை:
ஹோமோசைகஸ் நிலை (ஒத்த கருநிலை TT, tt)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

Question 3.
ஒரு தோட்டப் பட்டாணிச் செடி இலைக் கோணத்தில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. மற்றொரு செடி நுனியில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. இவற்றுள் எது ஓங்கு பண்பைப் பெற்றிருக்கும்?
விடை:
இலைக் கோணத்தில் மலர்களைத் தோற்றுவிக்கும் பட்டாணிச் செடி ஓங்கு பண்பைப் பெற்றிருக்கும்.

Question 4.
மரபுவழியாக ஒரு குறிப்பிட்ட பண்பினைக் கடத்தும் டி.என்.ஏ.வின் பகுதிக்கு என்ன பெயர்?
விடை:
ஜீன்.

Question 5.
டி.என்.ஏவில் நியூக்ளியோடைடுகளை இணைக்கும் பிணைப்பின் பெயரை எழுதுக.
விடை:
ஹைட்ரஜன் பிணைப்பு.

VI. குறுகிய விடையளி :

Question 1.
மெண்டல் தன் ஆய்விற்கு ஏன் தோட்டப் பட்டாணிச் செடியைத் தேர்ந்தெடுத்தார்?
விடை:
பட்டாணிச் செடியில் இயற்கையாகவே தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதால், தூய தாவரங்களைப் பெருக்கம் செய்வது எளிது.

Question 2.
பீனோடைப், ஜீனோடைப் பற்றி நீவிர் அறிவது என்ன?
விடை:
பீனோடைப்: ஒரு குறிப்பிட்ட பண்பின் வெளித்தோற்றத்தினை புறத்தோற்றம் (பீனோடைப்) என்கிறோம். புறத்தோற்ற விகிதம் 3 : 1.
ஜீனோடைப்: தாவரங்களின் ஜீனாக்கம் ஜீனோடைப் எனப்படும். ஜீனாக்க விகிதம் 1 : 2 : 1.

Question 3.
அல்லோசோம்கள் என்றால் என்ன? [PTA-2; Qy-2019]
விடை:

  1. ஓர் உயிரியின் பாலினத்தை நிர்ணயிக்கின்ற குரோமோசோம்கள் அல்லோசோம்கள் எனப்படும்.
  2. இவை பால் குரோமோசோம்கள் அல்லது ஹெட்டிரோ குரோமோசோம்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  3. இவற்றில் X குரோமோசோம்கள் மற்றும் Y குரோமோசோம்கள் என இரு வகைகள் உள்ளன.

Question 4.
ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன? (PTA-4)
விடை:

  1. இரண்டு டி.என்.ஏ இரட்டிப்பாதலின் போது ஓர் இழையில் சேய் இழை தொடர்ச்சியான இழையாக உருவாக்கப்படுகிறது.
  2. மற்றோர் இழையில் டி.என்.ஏவின் சிறிய பகுதிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த இழையில் சிறிய பகுதியே ஒகசாகி துண்டுகள் என அழைக்கப்படுகின்றன.
  3. இந்தத் துண்டுகள் டி.என்.ஏ லிகேஸ் நொதியால் ஒன்றிணைக்கப்படுகின்றன.

Question 5.
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் யூபிளாய்டி நிலை சாதகமானதாக ஏன் கருதப்படுகிறது?
விடை:

  1. மும்மயத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பொதுவாக மலட்டுத்தன்மையுடையவை.
  2. நான்மய நிலைத் தாவரங்கள் நன்மை பயக்கக்கூடியவை. ஏனெனில், நான்மய நிலை, பெரும்பாலும் அளவில் பெரிய பழம் மற்றும் பூக்களை விளைவிக்கும்.
  3. எனவே யூபிளாய்டி நிலைத் தாவரங்கள் சாதகமாகக் கருதப்படுகிறது.

Question 6.
ஒரு தூய நெட்டைத் தாவரமானது (TT) தூய குட்டைத் தாவரத்துடன் கலப்பு செய்யப்படுகிறது. இதில் தோன்றும் F1 மற்றும் F2 தலைமுறை தாவரங்கள் எவ்வகை தன்மையுடையன என்பதை விளக்குக. [PTA-5]
விடை:
ஒரு பண்பின் இரு மாற்றுத் தோற்றங்களைத் தனித்தனியாகப் பெற்ற இரு தாவரங்களைக் கலப்புறச் செய்வது ஒரு பண்பு கலப்பு.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 80

  1. F1 தலைமுறையின் ஒரு பண்பு கலப்பு உயிர்களை கலப்பு செய்யும்போது, நெட்டை, குட்டை தாவரங்கள் 3 :1 என்ற விகிதத்தில் தோன்றின.
  2. F2 தலைமுறையில், 3 வகையான தாவரங்கள் தோன்றின.
    தூய நெட்டை (TT)- 1
    கலப்பின நெட்டை (Tt) – 2
    தூய குட்டை (Tt)- 1

Question 7.
குரோமோசோமின் அமைப்பை விவரிக்கவும். (PTA-6)
விடை:
(i) சகோதரி குரோமேட்டிடுகள் என்று குரோமோசோம் அழைக்கப்படும் இரண்டு ஒத்த இழைகளை உள்ளடக்கியமெல்லிய, நீண்ட மற்றும் நூல் போன்ற அமைப்புகள், குரோமோசோம்கள் எனப்படும். சென்ட்ரோமியர், இரண்டு குரோமேட்டிடுகளையும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒன்றாக இணைக்கிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 85

(ii) ஒவ்வொரு குரோமேட்டிடும், திருகு போல் சுருக்கம் சுருட்டப்பட்ட மெல்லிய குரோமோனீமா என்ற அமைப்பால் ஆனது. குரோமோனீமா தன் முழு நீளத்திற்கும் எண்ணற்ற மணி போன்ற குரோமோமியர்களைக் கொண்டுள்ளது.

(iii) குரோமோசோம்கள் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, குரோமோசோம் புரதங்கள் (ஹிஸ்டோன் மற்றும் ஹிஸ்டோன் அல்லாதவை) மற்றும் சில உலோக அயனிகள் ஆகியவற்றைக் கொண்டது.

(iv) இந்தப் புரதங்கள் குரோமோசோம் கட்டமைப்பிற்கு ஆதாரமாக விளங்குகின்றன. ஒரு குரோமோசோம் கீழ்க்கண்ட பகுதிகளை உள்ளடக்கியது.

(v) முதன்மைச் சுருக்கம் :
குரோமோசோமின் இரண்டு கரங்களும் இணையும் புள்ளி, முதன்மைச் சுருக்கம் அல்லது சென்ட்ரோமியர் ஆகும். செல் பிரிதலின் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோம்களுடன் இணையும் பகுதி சென்ட்ரோமியர் ஆகும்.

(vi) இரண்டாம் நிலைச் சுருக்கம் :
சில குரோமோசோம்கள் ஏதேனும் சில பகுதிகளில் இரண்டாம் நிலைச் சுருக்கங்களையும் பெற்றிருக்கும். இந்தப் பகுதி உட்கருப் பகுதி அல்லது உட்கருமணி உருவாக்கும் பகுதி (உட்கருவில் உட்கருமணி உருவாக்கம்) என அழைக்கப்படுகிறது.

(vii) டீலோமியர் :
குரோமோசோமின் இறுதிப் பகுதி டீலோமியர் என அழைக்கப்படுகிறது. குரோமோசோமின் இரண்டு நுனிகளும் எதிரெதிர்த் தன்மை உடையன. இது அருகில் உள்ள குரோமோசோம்கள் ஒன்றுடன் ஒன்று சேருவதைத் தடுக்கிறது. டீலோமியர் குரோமோசோம்களுக்கு நிலைப்புத் தன்மையை அளித்துப் பராமரிக்கிறது

(viii) சாட்டிலைட்
சில குரோமோசோம்களின் ஒரு முனையில் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது. இந்த இணையுறுப்பு சாட்டிலைட் என அழைக்கப்படுகிறது. சாட்டிலைட்டைப் பெற்றுள்ள

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

Question 8.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் டி.என்.ஏவின் பாகங்களைக் குறிக்கவும் அதன் அமைப்பை பா சுருக்கமாக விவரிக்கவும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 88
விடை:
டி.என்.ஏ மூலக்கூறின் வேதி இயைபு
டி.என்.ஏ என்பது மில்லியன் கணக்கான நியூக்ளியோடைடுகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மூலக்கூறு ஆகும். எனவே இது பாலி நியூக்ளியோடைடு எனவும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு / நியூக்ளியோடைடுகளும் மூன்று கூறுகளை உள்ளடக்கியது.

  1. ஒரு சர்க்கரை மூலக்கூறு – டீ ஆக்சிரை போஸ் சர்க்கரை
  2. ஒரு நைட்ரஜன் காரம்
    டி.என்.ஏ வில் உள்ள நைட்ரஜன் காரங்கள் இரு வகைப்படும். அவை
    (அ) பியூரின்கள் (அடினைன் மற்றும் குவானைன்)
    (ஆ) பிரிமிடின்கள் (சைட்டோசின் மற்றும் தைமின்)
  3. ஒரு பாஸ்பேட் தொகுதி
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 89

VII. விரிவான விடையளி :

Question 1.
தகுந்த எடுத்துக்காட்டுடன் இரு பண்புக் கலப்பை விளக்குக. இது ஒரு பண்புக் கலப்பிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது?
விடை:
(i) இரண்டு இணை எதிரெதிரான பண்புகளைப் பற்றிய இனக் கலப்பு இருபண்பு கலப்பு எனப்படும். மெண்டல், விதையின் நிறம் மற்றும் வடிவத்தைத் தன் ஆய்வுக்குத் தோந்தெடுத்தார். (விதையின் நிறம் – மஞ்சள் மற்றும் பச்சை விதையின் வடிவம் – உருண்டை மற்றும் சுருங்கியது.

(ii) மெண்டல் உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரத்தை சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரத்துடன் கலப்பினம் செய்து கீழ்க்கண்ட முடிவுகளைக் கண்டறிந்தார்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 89.1
(1) மெண்டல், முதலில் தூய உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரத்தை தூய சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரத்துடன் கலப்பு செய்யும் போது F1 சந்ததியில் கிடைத்த அனைத்துத் தாவரங்களும் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரங்களாகக் காணப்பட்டன. சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் F1ல் தோன்றவில்லை. இதிலிருந்து அவர் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரங்கள் ஓங்கு பண்புத் தாவரங்கள் எனவும், சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் ஒடுங்கு பண்புத் தாவரங்கள் எனவும் கண்டறிந்தார்.

(2) முதல் சந்ததியில் தோன்றிய இரு பண்புக் கலப்புயிரியான உருண்டை வடிவ மஞ்சள் நிற விதைகளைத் தன் மகரந்தச் சேர்க்கைக்குட்படுத்தும் போது நான்கு விதமான தாவரங்கள் தோன்றின. அவை முறையே உருண்டை மஞ்சள் (9, உருண்டை பச்சை (3), சுரங்கிய மஞ்சள் (3), சுருங்கிய பச்சை 1 நிற விதைகளுடைய தாவரங்கள். எனவே இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் 9:3:3:1 ஆகும்.

மேற்கண்ட ஆய்வின் அடிப்படையில் பண்புகளுக்கான காரணிகள் தனித்தன்மையுடனும் சார்பின்றியும் கேமீட்டுகளில் காணப்படுகின்றன. இக்காரணிகள் ஒவ்வொன்றும் சார்பின்றி தனித்தன்மை இழக்காமல் அடுத்த சந்ததிக்குச் செல்லும். இரு பண்புக் கலப்பின் முடிவுகள்

இரு பண்புக் கலப்பின்
இறுதியில் மெண்டல் கீழ்க்காணும் முடிவுகளைக் கண்டறிந்தார்.

(1) நான்கு வகைத் தாவரங்கள் இரு பண்புக் கலப்பின் முடிவில் F2 சந்ததியில் நான்கு விதமான தாவரங்கள் தோன்றின. அவற்றில் 9 தாவரங்கள் ஓங்கு பண்புடனும் 3 தாவரங்கள் ஓர் ஓங்கு பண்பு மற்றும் ஒடுங்கு பண்புடனும் அடுத்த மூன்று தாவரங்கள் மற்றொரு ஓங்கு மற்றும் ஒடுங்கு பண்புடனும், ஒரே ஒரு தாவரம் மட்டும் இரண்டு ஒடுங்கு பண்புடனும் தோன்றின.

(2) புதிய தாவரங்கள்
இரண்டு புதிய பண்புகளுடைய தாவரங்கள் தோன்றின. அவை உருண்டை வடிவப் பச்சை நிற விதைகள், சுருங்கிய மஞ்சள் நிற விதைகள், இவை இரண்டாம் சந்ததியில் தோன்றிய தாவரங்கள் ஆகும்.

வேறுபாடு
ஒரு பண்பு கலப்பில் இரு நிற மாற்றுத் தோற்றங்களைத் தனித்தனியாக பெற்ற இரு தாவரங்களைக் கொண்டு கலப்படம் செய்வதாகும். இரு பண்பு கலப்பில் இரண்டு இணை பண்புகளைக் கொண்ட தாவரங்களை கலப்பினம் செய்வதாகும்.

Question 2.
டி.என்.ஏ அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது? டி.என்.ஏ.வின் உயிரியல் முக்கியத்துவம் யாது? [Qy-2019]
விடை:
I. வாட்சன் மற்றும் கிரிக்கின் டி.என்.ஏ. மாதிரி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 89.5

  1. டி.என்.ஏ மூலக்கூறு இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளால் ஆனது.
  2. இந்த இழைகள் இரட்டைச் சுருள் அமைப்பை உருவாக்குகின்றன. இவ்விழைகள் ஒன்றுக்கொன்று எதிர் இணை இயல்புடன் எதிரெதிர் திசைகளில் செல்கின்றன.
  3. மையத்தில் உள்ள நைட்ரஜன் காரங்கள், சர்க்கரை – பாஸ்பேட் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகள் டி.என்.ஏ.வின் முதுகெலும்பாக உள்ளன.
  4. நைட்ரஜன் காரங்கள் இணைவுறுதல், எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட விதத்திலேயே அமைகிறது. அவை எப்பொழுதும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப்படுகின்றன.
    1. அடினைன் (A) தைமினுடன் (T) இரண்டு ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப் பட்டுள்ளது. (A = T)
    2. சைட்டோசின்(C) குவானைனுடன் (G) மூன்று ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப் பட்டுள்ளது.(C = G)
      இத்தகைய இணைவுறுதல் நிரப்பு கார இணைவுறுதல் என்ற அழைக்கப்படுகிறது.
  5. நைட்ரஜன் காரங்களுக்கு இடையேயான ஹைட்ரஜன் பிணைப்பு டி.என்.ஏ விற்கு நிலைப்புத் தன்மையைத் தருகிறது.
  6. இரட்டைச் சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றும் 34 A° (3.4nm) அளவிலானது. ஒரு முழு சுற்றில் பத்து கார இணைகள் உள்ளன.
  7. இரட்டைச் சுருளில் உள்ள நியூக்ளியோடைடுகள் பாஸ்போடை எஸ்டர் பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

II. உயிரியல் முக்கியத்துவம்

  1. இது மரபியல் தகவல்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது.
  2. இது புரதங்கள் உருவாக்கத்திற்குத் தேவையான தகவல்களைப் பெற்றுள்ளது.
  3. ஒரு உயிரினத்தின் வளர்ச்சி சார் மற்றும் வாழ்வியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.

Question 3.
புதிதாகப் பிறந்த குழந்தையின் பாலின நிர்ணயம் ஒரு தற்செயல் நிகழ்வு. தாயோ தந்தையோ இதற்குப் பொறுப்பாக கருத முடியாது. குழந்தையின் பாலினத்தை எத்தகைய இன செல் இணைவு முடிவு செய்கிறது?
விடை:
மனிதனில் பாலின நிர்ணயம்:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 90

  1. மனிதனில் உள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி (23வது ஜோடி) பால் குரோமோசோம்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெண் கேமீட்டுகள் அல்லது அண்ட செல்கள் ஒரே மாதிரியான குரோமோசோம் அமைப்பைப் (22 + x) பெற்றுள்ளன. ஆகவே, மனித இனத்தின் பெண் உயிரிகள் ஹோமோகேமீட்டிக் ஆகும்.
  2. ஆண் கேமீட்டுகள் அல்லது விந்தணுக்கள் இரண்டு வகைப்படும். இரண்டு வகைகளும் சம விகிதத்தில் உருவாகின்றன. அவை (22 + X) குரோமோசோம்களை உடைய விந்தணுக்கள் மற்றும் (22 + Y) குரோமோசோம்களை உடைய விந்தணுக்கள். மனித இனத்தில் ஆண்கள் ஹெட்டிரோகேமீட்டிக் என அழைக்கப்படுகின்றனர்.
  3. அண்டம் (X), X – குரோமோசோம் கொண்ட விந்தணுவோடு இணைந்தால், XX உயிரி (பெண்) உருவாகிறது. அண்டம் (X), Y – குரோமோசோம் கொண்ட விந்தணுவோடு இணைந்தால் XY – உயிரி (ஆண்) உருவாகிறது. தந்தை உருவாக்கும் விந்தணுவே, குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கிறது. குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தாய்க்கு எவ்விதப் பங்கும் இல்லை.
  4. எவ்வாறு குரோமோசோம்கள் பாலின நிர்ணயித்தலில் பங்கு கொள்கின்றன என்பதைப் பார்ப்போம். (22 + X) அண்டம் (22 + X) விந்தணுவுடன் கருவுறும் பொழுது பெண் குழந்தை (44 + XX) உருவாகிறது. (22 + X) அண்டம், (22 + Y) விந்தணுவுடன் கருவுறும் பொழுது ஆண் குழந்தை (44 + XY) உருவாகிறது.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்.

Question 1.
தோட்டப் பட்டாணிச் செடியிலுள்ள மலர்கள் அனைத்தும் தன் மகரந்த சேர்க்கை நடைபெறும் இரு பால் மலர்கள். ஆகவே அவற்றில் குறுக்கே கலத்தல் மூலம் கலப்பினம் செய்வது கடினம். இவ்வகைப் பட்டாணிச் செடியில் எவ்வாறு ஒரு பண்பு மற்றும் இருபண்பு கலப்பை மெண்டல் மேற்கொண்டார்?
விடை:

  1. மெண்டல் தோட்டப் பட்டாணி செடியினை ஆண், பெண் பெற்றோர்களாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
  2. சில தாவரங்களில் பூக்களில் உள்ள மகரந்தத்தினை நீக்கிவிட்டார். அந்த தாவரங்களை பெண் தாவரங்களாக எடுத்துக்கொண்டார்.
  3. சில தாவரங்களின் சூல் முடியை வேறு மகரந்த தூள் வந்தடையாமல் மறைத்து வைத்துவிட்டார்.

Question 2.
இதனால் 40% தன்மகரந்த சேர்க்கை நடைபெறுவதைக் கொண்டு ஒரு பண்பு மற்றும் இரு பண்பு கலப்பினை மேற்கொண்டார். தூய நெட்டைப் பட்டாணிச் செடியானது தூய குட்டைப் பட்டாணிச் செடியுடன் கலப்பினம் செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைத்த F1 (முதல் சந்ததி) தாவரம் கலப்பினம் செய்யப்பட்டு F2 (இரண்டாம் சந்ததி) தாவரங்களை உருவாக்கியது.
[GMQP-2019]
அ. F1 தாவரங்கள் எவற்றை ஒத்து இருந்தன?
ஆ. F2 சந்ததியில் தோன்றிய நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்களின் விகிதம் என்ன?
இ. எவ்வகைத் தாவரம் F1 மறைக்கப்பட்டு F2 சந்ததியில் மீண்டும் உருவானது?
விடை:
அ) F1 தாவரங்கள் தங்கள் பெற்றோரைப் போல் ஓங்கு பண்பான நெட்டைத் தாவரங்களாக காணப்பட்டன.
ஆ) F2 சந்ததியில் 3 நெட்டைத் தாவரங்களும் ஒரு குட்டைத் தாவரமும் கிடைத்தது.
புறத்தோற்ற விகிதம் 3 : 1
ஜீனாக்க விகிதம் 1 : 2 : 1
இ) F1ல் குட்டை தாவரம் மறைக்கப்பட்டு F2ல் சந்ததியில் மீண்டும் உருவானது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

Question 3.
கவிதா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவரின் குடும்ப மரபினால் அவர் பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்க முடியும்’ என அவர் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். அவரின் குடும்ப உறுப்பினர்களின் கூற்று உண்மையா? உங்கள் விடையை நியாயப்படுத்துக.
விடை:

  1. கவிதாவின் குடும்ப உறுப்பினர்களின் கூற்றில் உண்மையில்லை. தவறானது.
  2. ஏனெனில் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதும் பெண் குழந்தையைப் பெற்றெடுப்பதும் நாம் தீர்மானிப்பதல்ல.
  3. ஆண்கள் ஒரு X குரோமோசோம்கள் மற்றும் ஒரு Y குரோமோசோம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பெண்கள் இரண்டு X குரோமோசோம்களையே பெற்றிருக்கிறார்கள்.
  4. அண்டமானது x + x என இணைந்தால் XX உயிரி (பெண்) உண்டாகிறது. அண்டமானது x + y என இணைந்தால் ஓங்கு உயிரி (ஆண்) உருவாகிறது.
  5. தந்தை உருவாக்கும் விந்தணுவே குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கிறது. குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தாய்க்கு எவ்வித பங்கும் இல்லை.

IX விழுமிய அடிப்படையிலான வினாக்கள்.

Question 1.
எச்சூழலில் சார்பின்றி ஒதுங்குதல் விதியானது நல்ல முடிவைத் தரும்? ஏன்?
விடை:

  1. சார்பின்றி ஓங்குதல் விதியானது இரு பண்பு கலப்பு விதியினை ஆதாரமாகக் கொண்டது.
  2. இரு பண்புகளைக் கலப்பினம் செய்து பெறப்பட்ட தாவரங்களை அடிப்படையாக இந்த விதியில் எடுத்துக் கொண்டால்,
  3. ஒவ்வொரு பண்பும் நிர்ணயம் செய்வது ஒரு ஜோடி அல்லீல்கள் அதாவது ஓங்கு பண்பு மற்றும் ஒடுங்கு பண்பு.
  4. ஒவ்வொரு அல்லீல்களின் பண்பு சேய்த்தாவரங்களுக்கு கடத்தப்படுகிறது.
  5. இரு பண்பு கலப்பில் கிடைத்த ஜீனாக்க விகிதம் 9:3:3:1
  6. ஒவ்வொரு காரணிகளையும் அதன் ஜீன்களிலிருந்து நாம் காணலாம்.
  7. மேலும் பெற்றோர்களின் பண்புகள் இரண்டாம் தலைமுறையிலும் வெளிக்கொணரப்படுகிறது.
  8. ஒவ்வொரு பண்புகளும் அல்லீல்களாக நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே சார்பின்றி – ஒதுங்குதல் நல்ல முடிவைத் தரும்.

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
பீனோடைப் மற்றும் ஜீனோடைப்பை வேறுபடுத்துக. [PTA-4]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 91

4 மதிப்பெண்கள்

Question 1.
Tt × tt என்ற காரணிகளைக் கொண்ட இரு பெற்றோர்களிடையே கலப்பு செய்யும் போது அதன் F1 தலைமுறையில் உருவாகும் ஜீனாக்க விகிதம் என்ன? (PTA-4)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 95

Question 2.
அ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் நிகழ்வில் டி.என்.ஏ.வின் இரண்டு இழைகளையும் பிரிக்கும் நொதி …………
ஆ) இரட்டிப்பாதல் கவையின் மேலே உள்ள இரட்டைச் சுருளைப் பிரித்து, முறுக்கல்களை நீக்கும் நொதி …………
இ) நியூளியோடைடுகளை சேர்க்கும் நொதி ……….
ஈ) டி.என்.ஏ.வின் துண்டுகளை ஒன்றிணைக்கப் பயன்படும் நொதி ……….
உ) இரட்டிப்பாதல் கவையின் இரு பக்கங்களும் …….. என்ற இடத்தில் சந்திக்கும்போது இரட்டிப்பாதல் முடிவடைகிறது.
விடை:
அ) ஹெலிகேஸ்
ஆ) டோபோஐசோமெரெஸ்
இ) டி.என்.ஏ. பாலிமெரேஸ்
ஈ) டி.என்.ஏ லிகேஸ்
உ) டெர்மினஸ்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல்

அரசு தேர்வு வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
சரியான இணையைக் காண்க:. [Sep.20]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 18 மரபியல் 1
விடை :
(அ) – (iv),
(ஆ) – (i),
(இ) – (iii),
(ஈ) – (ii)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

10th Science Guide தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு,

Question 1.
இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்
அ) வெங்காயம்
ஆ) வேம்பு
இ) இஞ்சி
ஈ) பிரையோஃபில்லம்
விடை:
ஈ) பிரையோஃபில்லம்

Question 2.
பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டுவிடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் _____
அ) அமீபா
ஆ) ஈஸ்ட்
இ) பிளாஸ்மோடியம்
ஈ) பாக்டீரியா
விடை:
ஆ) ஈஸ்ட்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Question 3.
சின்கேமியின் விளைவால் உருவாவது
அ) சூஸ்போர்கள்
ஆ) கொனிடியா
இ) சைகோட் கருமுட்டை
ஈ) கிளாமிடோஸ்போர்கள்
விடை:
இ) சைகோட் (கருமுட்டை)

Question 4.
மலரின் இன்றியமையாத பாகங்கள்
அ) புல்லிவட்டம், அல்லிவட்டம்
ஆ) புல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம்
இ) அல்லிவட்டம், சூலக வட்டம்
ஈ) மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்
விடை:
ஈ) மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்

Question 5.
காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்
அ) காம்பற்ற சூல்முடி
ஆ) சிறிய மென்மையான சூல்முடி
இ) வண்ண மலர்கள்
ஈ) பெரிய இறகு போன்ற சூல்முடி
விடை:
ஈ) பெரிய இறகு போன்ற சூல்முடி

Question 6.
மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
அ) உற்பத்தி செல்
ஆ) உடல செல்
இ) மகரந்தத்தூள் தாய் செல்
ஈ) மைக்ரோஸ்போர்
விடை:
அ) உற்பத்தி செல்

Question 7.
இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது?
அ) இருமயம் கண்டவை
ஆ) பாலுறுப்புகளை உருவாக்குபவை
இ) ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன
ஈ) இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன
விடை:
ஈ) இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன

Question 8.
விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) எபிடிடைமிஸ்
ஆ) விந்து நுண்நாளங்கள்
இ) விந்து குழல்கள்
ஈ) விந்துப்பை நாளங்கள்
விடை:
அ) எபிடிடைமிஸ்

Question 9.
விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்
அ) முதல்நிலை விந்து வளர் உயிரணு
ஆ) செர்டோலி செல்கள்
இ) லீடிக் செல்கள்
ஈ) ஸ்பெர்மட்டோ கோனியா
விடை:
ஆ) செர்டோலி செல்கள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Question 10.
ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது
அ) பிட்யூட்டரியின் முன்கதுப்பு
ஆ) முதன்மை பாலிக்கிள்கள்
இ) கிராஃபியன் பாலிக்கிள்கள்
ஈ) கார்பஸ் லூட்டியம்
விடை:
இ) கிராஃபியன் பாலிக்கிள்கள்

Question 11.
கீழ்க்க ண்டவற்றுள் எது IUCD?
அ) காப்பர் – டி
ஆ) மாத்திரைகள் (Oral Pills)
இ) கருத்தடை திரைச் சவ்வு
ஈ) அண்டநாளத் துண்டிப்பு
விடை:
அ) காப்பர்-டி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல் நடைபெறும்போது சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை _______
விடை:
ஏழு

Question 2.
கருவுறுதலுக்குப் பின் சூற்பை ஆக மாறுகிறது.
விடை:
கனி

Question 3.
பிளனேரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்கம் – ஆகும்.
விடை:
இழப்பு மீட்டல்

Question 4.
மனிதரில் கருவுறுதல் ____ ஆகும்.
விடை:
அகக்கருவுறுதல்

Question 5.
கருவுறுதலுக்குப் பின் _____ நாட்களில் கரு பதித்தல் நடைபெறுகிறது.
விடை:
6 முதல் 7

Question 6.
குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு _____ எனப்படும்.
விடை:
கொலஸ்ட்ரம்

Question 7.
புரோலாக்டின் _____ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.
விடை:
முன்பிட்யூட்டரி சுரப்பி!

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

III. பொருத்தும்

Question 1.
கீழ்கண்ட வார்த்தைகளை அதற்குரிய பொருளோடு பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 30
விடை:
1 – ஆ,
2 – இ,
3 – அ

Question 2.
கீழ்கண்ட வார்த்தைகளை அதற்குரிய பொருளோடு பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 45
விடை:
அ – 3,
ஆ – 1,
இ – 4,
ஈ – 2

IV. கீழ்க்கண்ட கூற்று சரியா, தவறா எனக் கூறுக. தவறை திருத்தி எழுதுக.

Question 1.
சூலின் காம்புப் பகுதி பூக்காம்பு எனப்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: சூலின் காம்புப் பகுதிசூல்காம்பு எனப்படும்.

Question 2.
விதைகள் பாலின் இனப்பெருக்கத்தின் மூலம் உருவாகின்றது.
விடை:
சரி.

Question 3.
ஈஸ்ட் பாலிலா இனப்பெருக்க முறையான செல்பிரிதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஈஸ்ட் பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் அல்லது அரும்புதல் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.

Question 4.
மகரந்தத்தூள்களை ஏற்கக்கூடிய சூலகத்தின் பகுதி சூல்தண்டாகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மகரந்த தூள்களை ஏற்கக் கூடிய சூலகத்தின் பகுதி சூலகமுடி.

Question 5.
பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலரிலுள்ள மகரந்தத்தூள்கள் உலர்ந்து, மென்மையாக, எடையற்றதாகக்
காணப்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று : காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலரிலுள்ள மகரந்ததூள்கள் உலர்ந்து, மென்மையாக, எடையற்றதாகக் காணப்படும்.

Question 6.
இனப்பெருக்க உறுப்புகள் உற்பத்தி செய்யக்கூடிய இனச்செல்கள் இரட்டைமயத் தன்மையுடையவை.
விடை:
தவறு.
சரியான கூற்று: இனப்பெருக்க உறுப்புகள் உற்பத்தி செய்யக்கூடிய இனச்செல்கள் ஒற்றைமய தன்மையுடையவை.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Question 7.
பிட்யூட்டரியின் பின்கதுப்பு LH-ஐச் சுரக்கிறது.
விடை:
தவறு.
பிட்யூட்டரியின் முன்கதுப்பு LH-ஐச் சுரக்கிறது.

Question 8.
கருவுற்றிருக்கும் போது மாதவிடாய் சுழற்சி நடைபெறுவதில்லை.
விடை:
சரி.

Question 9.
இனச்செல் உருவாதலை அறுவை சிகிச்சை முறையிலான கருத்தடை முறை தடை செய்கிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: கரு உருவாதலை அறுவை சிகிச்சை முறையிலான கருத்தடை முறை தடை செய்கிறது.

Question 10.
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரானின் மிகை சுரப்பு மாதவிடாய்க்கு காரணமாகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் குறைசுரப்பு மாதவிடாய்க்கு காரணமாகிறது.

V. ஒரு வார்த்தையில் விடையளி :

Question 1.
ஒரு மகரந்தத்தூளிலிருந்து இரண்டு ஆண் கேமீட்டுகள் மட்டும் உருவாகிறது எனில், பத்து சூல்களை கருவுறச் செய்ய எத்தனை மகரந்தத் தூள்கள் தேவைப்படும்?
விடை:
10 மகரந்த தூள்கள்.

Question 2.
சூலகத்தின் எப்பகுதியில் மகரந்தத்தூள் முளைத்தல் நடைபெறுகிறது?
விடை:
சூல்முடி.

Question 3.
மொட்டுவிடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இரண்டு உயிரிகளைக் குறிப்பிடவும்.
விடை:
ஈஸ்ட், ஹைட்ரா.

Question 4.
ஒரு விதையில் உள்ள கருவூணின் வேலை என்ன?
விடை:
உருவாகும் கருவிற்கு ஊட்டமளிக்கும்.

Question 5.
கருப்பையின் அதி தீவிர தசைச் சுருக்குதலுக்கு காரணமான ஹார்மோனின் பெயரைக் கூறுக.
விடை:
ஆக்ஸிடோசின்.

Question 6.
விந்து செல்லின் அக்ரோசோமில் காணப்படக்கூடிய நொதியின் பெயரென்ன?
விடை:
ஹயலு ரானிடேஸ்

Question 7.
உலக மாதவிடாய் சுகாதார தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
விடை:
மே 28.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Question 8.
கருத்தடையின் தேவை என்ன?
விடை:
குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துதல்.

Question 9.
கீழ்க்கண்ட நிகழ்வுகள் பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் எந்த பாகத்தில் (உறுப்பில்) நடைபெறுகிறது?
அ) கருவுறுதல்
ஆ) பதித்தல்
விடை:
அ. கருவுறுதல் – அண்ட நாளத்தின் ஆம்புல்லா பகுதி.
ஆ. பதித்தல் – கருப்பை

VI. குறுவினாக்கள்.

Question 1.
பிளனேரியாவை துண்டு துண்டாக வெட்டினால் என்ன நிகழும்?
விடை:

  1. பிளனேரியாவை துண்டு துண்டாக வெட்டினால் ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரினத்தைத் தோற்றுவிக்கிறது.
  2. இழந்த பாகங்களை மீண்டும் உருவாக்கி புதிய உயிரியைத் தோற்றுவித்தல் இழப்பு மீட்டல் எனப்படும்.

Question 2.
உடல இனப்பெருக்கம் ஏன் குறிப்பிட்ட தாவரங்களில் மட்டும் நடைபெறுகிறது? (PTA-1)
விடை:

  1. சில தாவரங்கள் விதைகளை தோற்றுவிப்பதில்லை. அந்த தாவரங்களில் மட்டும் உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
  2. மேலும் தாய் தாவரத்திலுள்ள வேர், தண்டு, இலை அல்லது மொட்டு முதலான ஏதேனும் ஓர் உறுப்பிலிருந்து இளம் தாவரம் தோன்றி அது தனித்தாவரமாக வளர்கிறது.
  3. மேலும் குன்றாப்பகுப்பு மட்டும் நடைபெறுவதால் இளந்தாவரங்கள் தாய்த்தாவரங்களைப் போன்றே காணப்படுகின்றன.
  4. எனவே குறிப்பிட்ட தாவரங்களில் மட்டும் உடல் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.

Question 3.
இரண்டாகப் பிளத்தல் பல்கூட்டுப் பிளத்தலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 50

Question 4.
மூவிணைவு – வரையறு. (GMQP-2019; Qy-2019)
விடை:

  1. கருவுறுதலின்போது உடல் செல்லானது இரண்டு விந்தணுக்களை உருவாக்குகிறது.
  2. இந்த இனச்செல்கள் சூல்பையை அடைந்தவுடன் ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து இரட்டைமய சைகோட்டைத் தோற்றுவிக்கிறது.
  3. மற்றோர் ஆணினசெல் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து முதன்மை கருவூண் உட்கருவினை தோற்றுவிக்கிறது.
  4. இது மும்மய உட்கரு ஆகும். இவ்விளைவு மூவிணைவு எனப்படும்.

Question 5.
பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலரின் பண்புகள் யாவை? [PTA-6]
விடை:

  1. பூச்சிகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்டமோஃபிலி என்று பெயர்.
  2. பூச்சிகளைக் கவர்வதற்கு ஏற்றாற்போல பல ‘நிறம், மணம், தேன் சுரக்கும் தன்மை ஆகியவற்றுடன் இவ்வகை மலர்கள் காணப்படும்.
  3. இவ்வகை மலர்களில் மகரந்தத்தூள் பெரியதாகவும் வெளியுறையானது துளைகளுடனும் – வெளிப்பக்கத்தில் முட்களுடனும் காணப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Question 6.
ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்க உறுப்புகளைக் கூறுக.
விடை:
விந்துக்குழல், எபிடிடைமிஸ் (விந்தணு முதிர்ச்சிப்பை), விந்துப்பை (செமினல் வெசிக்கிள்), புராஸ்டேட் சுரப்பி (முன்னிலைச் சுரப்பி), ஆண்குறி (பீனிஸ்) போன்றவை ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்க உறுப்புகளாகும்.

Question 7.
கொலஸ்ட்ரம் (சீம்பால்) என்றால் என்ன? பால் உற்பத்தியானது ஹார்மோன்களால் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது? (PTA-2) விடை:

  1. குழந்தை பிறப்பிற்குப் பிறகு பால் சுரப்பியிலிருந்து முதன் முதலில் வெளிவரும் பால் கொலஸ்ட்ரம் (சீம்பால்) எனப்படும்.
  2. முன் பிட்யூட்டரி சுரக்கும் புரோலாக்டின் என்னும் ஹார்மோன் பால் சுரப்பியின் நுண்குழல்களிலிருந்து பால் உற்பத்தியாதலைத் தூண்டுகிறது.
  3. பின் பிட்யூட்டரியின் ஹார்மோன்னான ஆக்சிடோசின் பால் வெளியேறுவதைத் தூண்டுகிறது.

Question 8.
மாதவிடாயின் போது மாதவிடாய் சுகாதாரம் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது? [PTA-4]
விடை:

  1. நாப்கின்களை முறையாக, குறிப்பிட்ட இடைவெளிகளில் மாற்றுவதன் மூலமாக கலவிக் கால்வாயில் நுண்ணுயிர்கள் மூலமாக ஏற்படும் தொற்றினையும், பிறப்புறுப்புகளில் உண்டாகும் வியர்வையினையும் தடுக்கலாம்.
  2. பிறப்புறுப்புகளை வெந்நீரைக் கொண்டு தூய்மைப்படுத்துவதன் மூலம் மாதவிடாய் நாள்களில் ஏற்படும் தசைப் பிடிப்புகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்.
  3. இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிவதால், பிறப்புறுப்புகளில் காற்றோட்டத்தை பெறுவதன் மூலம் வியர்வை உருவாதல் தடுக்கப்படுகிறது.

Question 9.
தாயின் கருப்பையில் வளர்கின்ற கருவானது எவ்வாறு ஊட்டம் பெறுகிறது? [PTA-6]
விடை:
தாய் சேய் இணைப்புத்திசு உருவாக்கம்:

  1. தாய் சேய் இணைப்புத் திசுவானது தட்டு வடிவமான, கருப்பைச் சுவருடன் இணைந்த, வளரும் கருவிற்கும் தாய்க்கும் இடையே தற்காலிக இணைப்பை ஏற்படுத்தும் ஒரு அமைப்பாகும்.
  2. இது உணவுப் பொருள்களின் பரிமாற்றம், ஆக்ஸிஜன் பரவல், நைட்ரஜன் கழிவுகளை வெளியேற்றுவது மற்றும் கார்பன் டை ஆக்சைடை நீக்குதல் போன்றவற்றை அனுமதிக்கிறது.
  3. சேயுடன் தாய் சேய் இணைப்புத் திசுவை இணைக்கின்ற இரத்த நாளங்களைக் கொண்ட கொடி தொப்புள்கொடி என்றழைக்கப்படுகிறது.

Question 10.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C மற்றும் D ஆகிய பாகங்களை அடையாளம் காணவும். (GMQP-2019)
விடை:
A – எக்ஸைன்
B – இன்டைன்
C – உற்பத்தி செல்
D – உடல் உட்கரு
Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 70

Question 11.
பூக்கும் தாவரங்களில் நடைபெறும் பால் இனப்பெருக்கத்தின் நிகழ்வுகளை எழுதுக.
அ) முதல் நிகழ்வின் வகைகளைக் கூறுக.
ஆ) அந்நிகழ்வின் நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடுக.
விடை:
தாவரங்களின் பால் இனப்பெருக்கம் :
பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்கம் இரண்டு படிநிலைகளில் நடைபெறுகிறது.
1. மகரந்தச்சேர்க்கை
2. கருவுறுதல்
அ) பூவின் மகரந்தப் பையிலிருந்து மகரந்தத்தூள், சூலக முடியைச் சென்று அடைவது மகரந்தச் சேர்க்கை எனப்படும்.

மகரந்தச்சேர்க்கையின் வகைகள்:
(1) தன் மகரந்தச்சேர்க்கை
(2) அயல் மகரந்தச்சேர்க்கை.

(1) தன் மகரந்தச்சேர்க்கை (ஆட்டோகேமி):
ஒரு மலரிலுள்ள மகரந்தத் தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
எ.கா. ஹைபிஸ்கஸ்.

ஆ) தன் மகரந்தச் சேர்க்கையின் நன்மைகள்:

  1. இருபால் மலர்களில் தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
  2. மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.
  3. மகரந்தத்தூள்கள் வீணடிக்கப் படுவதில்லை

தன் மகரந்தச்சேர்க்கையின் தீமைகள்:

  1. விதைகள் குறைந்த எண்ணிக்கையில் உருவாகின்றன.
  2. கருவூண் மிகச் சிறியது. எனவே விதைகள் மிக நலிவடைந்த தாவரங்களை உருவாக்கும்.
  3. புதிய வகைத் தாவரம் உருவாகாது.

2. அயல் மகரந்தச்சேர்க்கை (அல்லோகேமி) :
ஒரு மலரின் மகரந்தத்தூள் அதே இனத்தைச் சார்ந்த மற்றொரு தாவரத்தின் மலரில் உள்ள சூலக முடியைச் சென்று அடைவது அயல் மகரந்தச்சேர்க்கை எனப்படும். எ.கா: ஆப்பிள், திராட்சை, பிளம் முதலியன.

அயல் மகரந்தச் சேர்க்கையின் நன்மைகள்:

  1. அயல் மகரந்தச் சேர்க்கையின் மூலம் உருவாகும் விதைகள், வலிமையான தாவரங்களை உருவாக்கும். இதன் மூலம் புதிய வகைத் தாவரங்கள் உருவாகின்றன.
  2. நன்கு முளைக்கும் திறன் கொண்ட விதைகள் உருவாகின்றன.

அயல் மகரந்தச்சேர்க்கையின் தீமைகள்:

  1. அயல்மகரந்தச்சேர்க்கை , புறக் காரணிகளை நம்பி இருப்பதால் மகரந்தச் சேர்க்கை தடைபடுகிறது.
  2. அதிக அளவில் மகரந்தத்தூள் வீணாகிறது.
  3. சில தேவையில்லாத பண்புகள் தோன்றுகின்றன.
  4. மலர்கள் புறக்காரணிகளைச் சார்ந்து இருக்கின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

Question 12.
விந்தகம் மனிதனில் வயிற்றுக்குழிக்கு வெளிப்புறத்தில் அமைந்திருப்பதன் காரணம் என்ன? அவற்றைக் கொண்டிருக்கும் பையின் பெயரென்ன?
விடை:
விந்தகத்தை கொண்டிருக்கும் பையின் பெயர் விதைப்பை. விந்தணுவானது. நம் உடல் வெப்பநிலையை விட குறைவான வெப்பநிலையில் உருவாவதால் உடலின் வெப்பநிலை பாதிக்காத வண்ணம் உடலின் வெளியே அமைந்திருக்கிறது.

Question 13.
மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் நிலை, சுரப்புநிலை என்றும் அழைக்கப்படுவதன் காரணம் என்ன ?
விடை:
கருவுறுதல் நிகழாத நிலையில், கார்பஸ்லூட்டியம் சிதைந்து கருப்பையின் சுவர் உரிந்து கருவுறாத முட்டை இரத்தத்துடன் வெளியேறும். மேலும் கார்பஸ் லூட்டியத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட புரோஜெஸ்டிரான் அளவு குறைந்து, மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே சுரப்பு நிலை என அழைக்கப்படுகிறது.

Question 14.
நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணம் என்ன?
விடை:

  1. படிப்பின்மை, புரிதலின்மை, விழிப்புணர்வின்மை போன்ற காரணங்களால் நம் நாட்டில் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.
  2. மேலும் தன் குடும்பத்திற்கு அதிக பிள்ளைகள் இருந்தால், சொந்த தொழில் வேலை மூலம், குடும்பத்திற்கு அதிக வருமானம் ஈட்டலாம் என்ற தவறான கருத்துக்களுடனும் பெரும்பாலான மக்கள் இருப்பதும் ஒரு காரணமாகும்.

VII. விரிவான விடையளி.

Question 1.
பூக்கும் தாவரத்திலுள்ள சூலகத்தின் அமைப்பை விளக்குக.
விடை:
சூலின் அமைப்பு

  1. சூலின் முக்கியமான பகுதி சூல் திசு ஆகும்.
  2. இது இரண்டு சூல் உறைகளால் சூழப்பட்டுள்ளது.
  3. மேல் பகுதியில் சூல் உறை இணையாமல் அமைந்த இடைவெளியானது சூல்துளை ஆகும்.
  4. சூலானது சூல் அறையினுள் சிறிய காம்பின் மூலம் ஒட்டிக் கொண்டுள்ளது. இதற்கு சூல் காம்பு என்று பெயர்.
  5. சூலின் அடிப்பகுதி சூல் அடி எனப்படும். கருப்பையினுள் உள்ள சூல் திசுவினுள் ஏழு செல்களும் எட்டு உட்கருக்களும் அமைந்துள்ளன.
  6. சூல் துளையின் அருகில் உள்ள மூன்று கருப்பை செல்கள், அண்டசாதனத்தை உருவாக்குகின்றன.
  7. அடிப்பகுதியில் உள்ள மூன்று உட்கருக்களும் எதிர்த் துருவ செல்களாக உள்ளன.
  8. மையத்தில் உள்ள ஒரு செல் துருவ செல்லாகவும் உள்ளது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 75
  9. அண்ட சாதனமானது ஓர் அண்ட செல்லையும் இரண்டு பக்கவாட்டு செல்களையும் கொண்டுள்ளது.
  10. இந்த பக்கவாட்டு செல்கள் சினையாற்றியம் (Synergids) என அழைக்கப்படுகின்றன.

Question 2.
மாதவிடாய் சுழற்சியின் நிலைகள் யாவை? அந்நிலைகளின் போது அண்டகம் மற்றும் கருப்பையில் நிகழும் மாற்றங்களைக் குறிப்பிடுக. (PTA-3)
விடை:
மாதவிடாய் சுழற்சியின் நிலைகள்

  1. மாதவிடாய் அல்லது அழிவுநிலை
  2. பாலிக்குலார் அல்லது பெருக்கநிலை
  3. அண்டம் விடுபடும் நிலை
  4. லூட்டியல் அல்லது உற்பத்தி நிலை

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 76

VIII. உயர்சிந்தனை வினாக்கள்

Question 1.
பூக்கும் தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழாயை உருவாக்குகிறது. இது இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச்செல்கிறது. அண்ட செல்லுடன் கருவுறுதல் நடைபெறுவதற்கு ஒரே ஒரு ஆண் கேமீட் மட்டும் போதுமானதெனில், இரண்டு ஆண் கேமீட் ஏன் எடுத்துச் செல்லப்படுகிறது?
விடை:

  1. முதல் ஆண் கேமிட் அண்ட செல்லுடன் இணைந்து கருவுறுதல் ஏற்படுகிறது.
  2. இரண்டாம் ஆண் கேமிட் இரட்டையே உட்கருவுடன் இணைந்து கருவூண் உட்கருவினை தோற்றுவிக்கிறது.
  3. இது மும்மய உட்கரு ஆகும். இந்த கருவூண் கருவிற்கு ஊட்டமளிக்கிறது.
  4. இந்த ஊட்டம் விதை முளைத்து இளம் செடியாக வளர்ந்து வருவதற்கு தேவையான கருவூண் இதில் சேமித்து வைக்கப்படுகிறது.
  5. எனவே இரண்டு ஆண் கேமிட் எடுத்துச் செல்லப்படுகிறது.

Question 2.
பருவமடைமடைதலுக்கு முன்னரும், கர்ப்பத்தின் போதும் மாதவிடாய் சுழற்சி நிகழ்வதில்லை ஏன்?
விடை:

  1. பெண்கள் 11 லிருந்து 13 வயதிற்குள் பருவமடைகின்றனர்.
  2. இந்த வயதிற்கு முன் அண்டம் உருவாவதற்கும் அண்டம் விடுபடுவதற்கும் உள்ள ஹார்மோன் சுரப்பதில்லை.
  3. எனவே பருவமடைதல் நடைபெறாததால் மாதவிடாய் சுழற்சி நடைபெறுதில்லை.
  4. மேலும் பருவமடைந்த பின் கருவுறுதல் நடைபெற்று கருபதிவு நடைபெற்ற பின்னர், LH மற்றும் FSH சுரப்பு அதிகமாகி, கார்பஸ் லூட்டியத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட புரோஜெஸ்டிரான் அளவு அதிகமாவதினால், மாதவிடாய் ஏற்படுவதில்லை.
  5. மேலும் எண்டோமெட்ரியம் கருபதிவுக்கு தயார் ஆகிறது.
  6. எனவே கருவுறுதல் நடைபெற்ற பின்னர் மாதவிடாய் ஏற்படுவதில்லை.

Question 3.
கீழ்க்கண்ட பத்தியைப் படித்து கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி. ராகினியும் அவளது பெற்றோரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நாப்கின்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடனே, ராகினியின் பெற்றோர்கள் அந்த சேனலை மாற்றினர். ஆனால் ராகினி அதற்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்து, அந்த விளம்பரத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் விளக்கினாள்.
அ) முதல் மாதவிடாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அது எப்போது நிகழ்கிறது?
ஆ) மாதவிடாயின் போது மேற்கொள்ள வேண்டிய நாப்கின் சுகாதாரத்தை வரிசைப்படுத்துக.
இ) தன் பெற்றோரின் இச்செயலுக்கு ராகினி தனது எதிர்ப்பைத் தெரிவித்தது சரியா? சரி எனில் விளக்கம் கூறுக.
விடை:
அ) முதல் மாதவிடாய் பூப்படைதல் என்று அழைக்கப்படுகிறது. அது 11 வயதிலிருந்து 13 வயதிற்குள் நடைபெறுகிறது.

ஆ)

  1. நாப்கின்கள் மற்றும் டாம்பூன்ஸ் (உறிபஞ்சுகள்) களைப் பயன்படுத்திய பிறகு, மூடப்பட்ட நிலையில் (தாள்களைக் கொண்டு) அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவை மூலம் நோய் பரவும்.
  2. பயன்படுத்திய நாப்கின்கள் மற்றும் டாம்பூன்களை கழிவறை சாதனங்களுக்குள் போடக்கூடாது.
  3. பயன்படுத்திய நாப்கின்களை எரியூட்டிகளைப் (Incinerator) பயன்படுத்தி முறையாக அகற்ற வேண்டும்.

இ) சரி. மறுப்பு தெரிவித்தது சரிதான். ஏனெனில் சில விளம்பரங்கள் நமக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும். மேலும் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விளக்கங்கள் நமக்கு கிடைக்கும். மேலும், அதன் தேவையையும், முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
முதிர்ந்த மகரந்தத் தூளின் உற்பத்தி செல்லில் நடைபெறும் செல்பிரிதல் வகை [PTA-1]
அ) மைட்டாசிஸ்
ஆ) மியாசிஸ்
இ) ஏமைட்டாசிஸ்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
அ) மைட்டாசிஸ்

Question 2
மனிதரில் ஓர் ஆண் கேமீட்டும் ஒரு பெண் கேமீட்டும் இணைந்து கருமுட்டை உருவாகிறது. கருமுட்டையின் நிலை ……….. [PTA-4] அ) ஒருமையம்
ஆ) இருமயம்
இ) மும்மயம்
ஈ) நான்மயம்
விடை:
ஆ) இருமயம்

2 மதிப்பெண்கள்

Question 1.
தாவரங்களில் கருவுறுதலின் முக்கியத்தை எழுதுக. [PTA-2]
விடை:
சூற்பையைத் தூண்டி, கனியை உருவாக்குகிறது. புதிய பண்புகள் தோன்றக் காரணமாகிறது.

அரசு தேர்வு வினா-விடை

7 மதிப்பெண்கள்

Question 1.
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று (UTI)- ன் விளைவுகளைக் கூறுக. [Sep.20]
விடை:
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று (UTI) : ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரையும் பல நோய்கள் தாக்குகின்றன. ஆனால்
பெண்கள் அதிக அளவில் சில நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தோல், மலக்குடல் அல்லது கலவிக்கால்வாயில் உள்ள பாக்டீரியாக்களின் மூலமாக பெண்கள் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இது சிறுநீர்ப்புற வழியின் மூலமாக மேலே செல்கிறது. சிறுநீர் பாதை தொற்று நோயின் வகைகள்.

  1. சிறுநீர்ப்பை அழற்சி (Cystitis) அல்லது சிறுநீர்ப்பை தொற்று : பாக்டீரியங்கள் சிறுநீர்ப்பையில் தங்கி பல்கிப் பெருகி வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக இது 20 முதல் 50 வயதுடையோரைப் பாதிக்கிறது.
  2. சிறுநீரகத் தொற்று : பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் நாளத்தின் வழியாக மேல்நோக்கிச் சென்று ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்களையும் பாதிக்கிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தில் தொற்றினை ஏற்படுத்தி, அதன் தொடர்ச்சியாக உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
  3. நோய் அறிகுறியற்ற பாக்டீரியூரியா (Asymptomatic Bacteriuria) : சிறுநீர்ப்பையில் காணப்படும் இப்பாக்டீரியா எந்த நோய் அறிகுறியினையும் வெளிப்படுத்துவதில்லை.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

10th Science Guide சுற்றுச்சூழல் மேலாண்மை Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
காடுகள் அழிப்பினால் மழை பொழிவு …………………
விடை:
குறைகிறது.

Question 2.
மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது ……………………
விடை:
மண் அரிப்பு

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 3.
சிப்கோ இயக்கம் ………எதிராக ஆரம்பிக்கப்பட்டது.
விடை:
காடுகளை அழிப்பதற்கு

Question 4.
…………………… என்பது தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோள பாதுகாப்பு மையமாகும்.
விடை:
நீலகிரி

Question 5.
ஓத ஆற்றல் ………… வகை ஆற்றலாகும்.
விடை:
புதுப்பிக்கத்தக்க

Question 6.
கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை ………… எரிபொருட்கள் ஆகும்.
விடை:
புதைபடிவ

Question 7.
மின்சார உற்பத்திக்கு மிகவும் அதிக அளவில் பயன்படுத்துப்படும் எரிபொருள் ……….. ஆகும்.
விடை:
நிலக்கரி)

II. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

Question 1.
உயிரி வாயு ஒரு புதைபடிவ எரிபொருளாகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: பெட்ரோலியம் / நிலக்கரி / இயற்கை வாயு – ஒரு புதைபடிவ எரிபொருளாகும்.

Question 2.
மரம் நடுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.
விடை:
சரி

Question 3.
வாழிடங்களை அழிப்பது வன உயிரிகளின் இழப்புக்குக் காரணமாகும்.
விடை:
சரி.

Question 4.
அணு ஆற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: அணு ஆற்றல் ஒரு புதுப்பிக்க இயலாத ஆற்றலாகும்

Question 5.
அதிகப்படியான கால்நடை மேய்ச்சல், மண்ணரிப்பைத் தடுக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: அதிகப்படியான கால்நடை மேய்ச்சல் மண்ணரிப்பை ஏற்படுத்தும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 6.
வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டவிரோதமான செயலாகும்.

Question 7.
தேசியப்பூங்கா ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
விடை:
சரி.

Question 8.
வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
விடை:
சரி.

III. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை 1
விடை:
1 – இ,
2 – உ
3 – ஊ
4 – ஆ
5 – அ
6 – ஈ
7 – எ

IV. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்? [PTA-5]
(i) தார்
(ii) கரி
(iii) பெட்ரோலியம்

அ) i மட்டும்
ஆ) மற்றும் ii
இ ii மற்றும் iii)
ஈ) i, ii மற்றும் iii
விடை:
இ) ii மற்றும் ii

Question 2.
கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவீர் பயன்படுத்துவீர்?
அ) கழிவுகள் உருவாகும் அளவைக் குறைத்தல்.
ஆ) கழிவுகளை மறு பயன்பாட்டு முறையில் பயன்படுத்துதல்
இ கழிவுகளை மறு சுழற்சி செய்தல்
ஈ) மேலே உள்ளவை அனைத்தும்
விடை:
ஈ) மேலே உள்ளவை அனைத்தும்

Question 3.
வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள்
(i) கார்பன் மோனாக்சைடு
(ii) சல்பர் டை ஆக்சைடு
(iii) நைட்ரஜன் ஆக்ஸைடுகள்

அ) மற்றும் ii
ஆ) i மற்றும் iii
இ ii மற்றும் iii
ஈ) i,ii மற்றும் iii
விடை:
ஈ) i, ii மற்றும் iii

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 4.
மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது
அ) காடுகள் அழிப்பு
ஆ) காடுகள்/மரம் வளர்ப்பு
இ அதிகமாக வளர்த்தல்
ஈ) தாவரப் பரப்பு நீக்கம்
விடை:
ஆ) காடுகள்/மரம் வளர்ப்பு

Question 5.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
அ) பெட்ரோலியம்
ஆ) கரி
இ அணுக்கரு ஆற்றல்
ஈ) மரங்க ள்
விடை:
ஈ) மரங்கள்

Question 6.
கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம்
அ) மழைப்பொழிவு இல்லாத இடம்
ஆ) குறைவான மழைப்பொழிவு உள்ள இடம்
இ அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்
ஈ). இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்

Question 7.
கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/வளங்கள்
அ) காற்றாற்றல்
ஆ) மண்வ ளம்
இ வன உயிரி
ஈ) மேலே உள்ள அனைத்தும்
விடை:
அ) காற்றாற்றல்

Question 8.
கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம்/மூலங்கள்
அ) மின்சாரம்
ஆ) கரி
இ உயிரி வாயு
ஈ) மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு
விடை:
ஈ) மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு

Question 8.
பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது
அ) பூமி குளிர்தல்
ஆ) புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல்
இ தாவரங்கள் பயிர் செய்தல்
ஈ) பூமி வெப்பமாதல்
விடை:
ஈ) பூமி வெப்பமாதல்

Question 10.
மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம் (PTA-2)
அ) நீர் ஆற்றல்
ஆ) சூரிய ஆற்றல்
இ காற்றாற்றல்
ஈ) வெப்ப ஆற்றல்
விடை:
அ) நீர் ஆற்றல்

Question 11.
புவி வெப்பமாதலின் காரணமான ஏற்படக்கூடிய விளைவு
அ) கடல் மட்டம் உயர்தல்
ஆ) பனிப்பாறைகள் உருகுதல்
இ தீவுக்கூட்டங்கள் மூழ்குதல்
ஈ) மேலே கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேலே கூறிய அனைத்தும்

Question 12.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?
அ) காற்றாற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
ஆ) காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன.
இ காற்றாற்றல் மாசு ஏற்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஈ) காற்று ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டினைக் குறைக்கலாம்.
விடை:
ஆ) காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன

V. ஒரு வாக்கியத்தில் விடையளி.

Question 1.
மரங்கள் வெட்டப்படுவதால் உண்டாகும் விளைவுகள் யாவை?
விடை:
காடுகள் அழிக்கப்படுவதால் பெரு வெள்ளம், வறட்சி, மண்ணரிப்பு, வன உயிரிகள் அழிப்பு, அருகிவரும் சிற்றினங்கள் முற்றிலுமாக அழிதல், உயிர்புவி சுழற்சியில் சமமற்ற நிலை, பருவ நிலைகளில் மாற்றம், பாலைவனமாதல் போன்ற சூழல் பிரச்சினைகள் உண்டாகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 2.
வன உயிரினங்களின் வாழிடம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:
வன உயிர்களின் வாழிடம் அழிக்கப்படுவதால் அவை உணவு, உறைவிடம் தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. மனிதர்களுக்கும், பயிர்களுக்கும் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.

Question 3.
மண்ணரிப்பிற்கான காரணிகள் யாவை?
விடை:
அதி வேகமாக வீசும் காற்று, பெரு வெள்ளம், நிலச்சரிவு, மனிதனின் நடவடிக்கைகள், (வேளாண்மை , காடழிப்பு, சுரங்கங்கள் ஏற்படுத்துதல்) மற்றும் கால்நடைகளின் அதிக மேய்ச்சல் ஆகியவை மண்ணரிப்பிற்கான முக்கிய காரணிகளாகும்.

Question 4.
புதைபடிவ எரிபொருள்களை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்.
விடை:
புதை படிவ எரிபொருட்களை நாம் தொடர்ந்து அதிகமாக பயன்படுத்தினால் மிக விரைவாக தீர்ந்து போகக் கூடிய நிலை உருவாகும். மேலும் இவை உற்பத்தியாவதற்கு நீண்டகாலம் ஆவதோடு இவ்வினை மிக மெதுவாகவும் நடைபெறக்கூடியது. எனவே புதைபடிவ எரிபொருட்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

Question 5.
சூரிய ஆற்றல் மூலம் எவ்வாறு ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எனப்படுகிறது?
விடை:
சூரிய ஒளி இயற்கையில் மிக அதிக அளவில் கிடைக்கிறது. இத மிகக் குறைந்த அளவு நேரத்திலேயே புதுப்பிக்கக்கூடியது. தொடர்ச்சியாக நாம் பயன்படுத்தலாம். எனவே இவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எனப்படுகிறது.

Question 6.
மின்னணுக் கழிவுகள் எவ்வாறு உற்பத்தியாகின்றன? [PTA-6]
விடை:
மின்னணுக் கழிவுகள் பயன்படுத்த முடியாத, பழைய, மீண்டும் சரிப்படுத்தி உபயோகிக்க முடியாத, மின்சார மற்றும் மின்னணு சாதனங்களின் மூலம் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. வீட்டு உபயோக சாதனங்களான குளிர்ச் சாதன பெட்டிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள், மிக்ஸி, கிரைண்டர், நீர் சூடேற்றி போன்றவற்றினை நாம் மீண்டும் பயன்படுத்த முடியாமல் போனால்
மின்னணுக் கழிவுகள் தோன்றுகின்றன.

VI. சுருக்கமாக விடையளி :

Question 1.
மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள் யாவை? [PTA-4]
விடை:

  1. மழைநீர் சேகரிப்பு மிக வேகமாகக் குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.
  2. பெருகிவரும் நீர்த் தேவைகளை சமாளிக்கப் பயன்படுகிறது.
  3. பெரு வெள்ளம் மற்றும் மண் அரிப்பைத் தடுக்கப் பயன்படுகிறது.
  4. நிலத்தடியில் சேகரிக்கப்படும் நீர் மனித மற்றும் விலங்கு கழிவுகளால் மாசடைவதில்லை. எனவே, இதனை குடிநீராகப் பயன்படுத்த முடியும்.

Question 2.
உயிரி வாயுவை பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை? [PTA-1]
விடை:

  • உயிரி வாயுக்கள் எரியும் போது புகையை வெளியிடுவதில்லை. எனவே இவை குறைந்த மாசினை உண்டாக்குகின்றன.
  • உயிரியக் கழிவுகள் மற்றும், கழிவுப் பொருட்கள் போன்ற கரிமப் பொருள்களை சிதைவடையச் செய்வதற்கு மிகச் சிறந்த வழியாகும்.
  • படியும் கழிவுகளில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் அளவு மிகுந்திருப்பதால், அதனை சிறந்த உரமாக பயன்படுத்தலாம்.
  • இது பயன்படுத்த, பாதுகாப்பனதும் வசதியானதுமாகும்.
  • பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறும் அளவை பெருமளவு குறைக்கிறது.

Question 3.
கழிவுநீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?
விடை:

  1. கழிவு நீர் விவசாய நிலங்களை அசுத்தப்படுகிறது.
  2. சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது.
  3. பலவிதமான நோய்கள் உருவாக காரணமாகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 4.
காடழிப்பினால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை?
விடை:
காடுகள் அழிக்கப்படுவதால் பெரு வெள்ளம், வறட்சி, மண்ணரிப்பு, வன உயிரிகள் அழிப்பு; அருகிவரும் சிற்றினங்கள் முற்றிலுமாக அழிதல், உயர்புவி சுழற்சியின் சமமற்ற நிலை பருவ நிலைகளின் மாற்றம், பாலைவனமாதல் போன்ற சூழல் பிரச்சனைகள் உண்டாகின்றன.

VII. விரிவாக விடையவி

Question 1.
மழைநீர் சேமிப்பு அமைப்புகள் எவ்வாறு நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன?
விடை:
(i) மேற்கூரைகளில் விழும் மழை நீரைச் சேமித்தல்:
மழைநீரை மிகச் சிறப்பான முறையில் மேற்கூரைகளிலிருந்து சேமிக்கலாம். வீட்டின் மேற்கூரை, அடுக்கு மாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள், கோயில்கள் ஆகியவற்றில் பெய்யும் மழைநீரை, தொட்டிகளில் சேகரித்து, வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தலாம்.

(ii) கசிவு நீர்க் குழிகள்:
இம்முறையில், மேற்கூரை மற்றும் திறந்த வெளிகளிலிருந்து பெறப்படும் மழைநீர் வடிகட்டும் தொட்டிகளுக்கு குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் நீர், கசிவு நீர் குழிகள் மூலம் மண்ணுக்குள் ஊடுருவி, நிலத்தடி நீராக சேகரிக்கப்படுகிறது.

Question 2.
மண்ணரிப்பை நீவீர் எவ்வாறு தடுப்பீர்? [PTA-3]
விடை:

  • தாவரப்பரப்பை நிலை நிறுத்திக் கொள்வதன் மூலம் மண்ணரிப்பைத் தடுக்கலாம்.
  • கால்நடைகளின் அதிகமான மேய்ச்சலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மண் அரிப்பைத் தடுக்கலாம்.
  • பயிர் சுழற்சி மற்றும் மண்வள மேலாண்மை மூலம் மண்ணில் கரிமப் பொருள்களின் அளவை மேம்படுத்தலாம்.
  • நிலப்பரப்பில் ஓடும் நீரினை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சேமிப்பதன் மூலம் மண் அரிப்பைத் தடுக்கலாம்.
  • காடுகள் உருவாக்கம், மலைகளில் நிலத்தை சமப்படுத்துதல், நீரோட்டத்திற்கு எதிர்திசையில் மண் உழுதல் ஆகியவை மூலம் மண் அரிப்பைத் தடுக்கலாம்.
  • காற்றின் வேகத்தை மட்டுப்படுத்த அதிக பரப்பில் மரங்களை நடுவதன் மூலம் (பாதுகாப்பு அடுக்கு மண் அரிப்பைத் தடுக்கலாம்.

Question 3.
திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள் யாவை? அவற்றினை எவ்வாறு கையாளலாம்?
விடை:
திடக்கழிவு என்பது நகர்ப்புறக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. பல்வேறு வகையான திடக்கழிவுகளை நிலத்தில் நிரப்புவதால் நிலம் வெகுவாக பாதிக்கப்பபட்டு சீர் குலைகிறது. திடக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கழிவுப் பொருட்களை சேகரித்தல், சுத்தப்படுத்துதல் மற்றும் முறையாக வெளியேற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

திடக்கழிவுகளை அகற்றும் முறை:
(i) தனித்துப் பிரித்தல்: பல்வேறு வகையான திடக்கழிவுகளை மக்கும் தன்மை உள்ளவை மற்றும் மக்கும் தன்மையற்றவை என தனித்து பிரிப்பதாகும்.

(ii) நிலத்தில் நிரப்புதல் : தாழ்வான பகுதிகளில் திடக்கழிவுகளை நிரப்புவதாகும். கழிவுப் பொருட்களை நிரப்பிய பிறகு அதன் மேல் மண்ணை ஒரு அடுக்கு நிரப்பி சரக்கு ஊர்திகள் மூலம் அழுத்தச் செய்யலாம். 2 முதல் 12 மாதங்களுக்குள் கழிவுகள் நிலைப்படுத்தப்படுகின்றன. அதில் உள்ள கரிம பொருட்கள் சிதைவடைகின்றன.

(iii) எரித்து சாம்பலாக்கல் : எரியும் தன்மையுடைய கழிவுகளான மருத்துவ மனை கழிவுகளை முறையாக அமைக்கப்பட்ட எரியூட்டிகளில் அதிக வெப்பநிலையில் எரித்து சாம்பலாக்கலாம்.

(iv) உரமாக்குதல்: உயிரி சிதைவடையக் கூடிய கழிவுகளை மண்புழுக்களைப் பயன்படுத்தியும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தியும் சிதைவடையச் செய்து மட்கிய உரமாக மாற்றுவதாகும்.

கழிவு மறுசுழற்சி
(i) பழைய புத்தகங்கள் வாரப் பத்திரிகைகள் செய்தித் தாள்கள் ஆகியவற்றை மீண்டும் காகித ஆலைகளில் பயன்படுத்தி காகித உற்பத்தி செய்யலாம்.

(ii) வேளாண் கழிவுகள், தேங்காய், சணல், பருத்தியின் தண்டு, கரும்புச் சக்கை ஆகியவற்றைக் கொண்டு காகிதங்கள் மற்றும் அட்டைகள் தயாரிக்கலாம். நெல் தவிடைக் கால்நடைத் தீவனமாக பயன்படுத்தலாம்.

(iii) மாட்டுச் சாணம் மற்றும் பிற உயிரி கழிவுகளை கொண்டு கோபர் கேஸ் எனப்படும் உயிரி வாயு உற்பத்தி செய்வதோடு அதனை வயல்களில் உறமாகவும் பயன்படுத்தலாம்.

Question 4.
காடுகளின் முக்கியத்துவம் பற்றி கூறுக. [GMQP-2019]
விடை:

  • காடுகள் நமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பவை. காடுகள் மனித வாழ்விற்கு இன்றியமையாதவை.
  • மேலும் பலதரப்பட்ட புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களின் ஆதாரமாகவும் விளங்குபவை.
  • காடுகள், மரம், உணவு தீவனம். நார்கள் மற்றும் மருந்துப் பொருட்களை அளிப்பவை.
  • காடுகள் சுற்றுச்சூழல் முக்கியத்துவமுடைய பெரும் காரணிகளாகும்.
  • காடுகள் கார்பனை நிலைநிறுத்துவதால், அவைகார்பன்தொட்டி என்றும் அழைக்கப்படுகின்றன.
  • தட்பவெட்ப நிலையை ஒழுங்குபடுத்தி, மழைப்பொழிவை அதிகமாக்கி புவி வெப்பமாதலைக் குறைத்து, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களை தடுத்து வன உயிரிகளைப் பாதுகாத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளாக மாறி செயல் படுகின்றன.
  • சுற்றுச் சூழல் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Question 5.
மண்ணரிப்பினால் உண்டாகக்கூடிய விளைவுகள் யாவை?
விடை:

  1. மண்ணின் மேலடுக்கு மட்கிய இலை தழைகள், மற்றும் தாது உப்புக்கள் முதலிய, தாவரங்கள் வளர்ச்சியடையத் தேவையான அவசிய பொருட்களைக் கொண்டுள்ளது.
  2. மேலடுக்கு மண், காற்று மற்றும் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படுவது “மண்ணரிப்பு ” எனப்படும்.
  3. மண்ணரிப்பின் காரணமாக மண்ணின் மட்கு , ஊட்டப்பொருட்கள், வளம் ஆகியவை வெகுவாகக் குறைந்து மண்வளத்தைக் குறைக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 6.
வனங்களை மேலாண்மை செய்வதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் ஏன் ஒரு சவாலான பணியாகக் கருதப்படுகிறது?
விடை:
(i) மனிதர்களின் தேவை, மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக அதிகரித்துள்ளது.

(ii) மனிதன் தன்னுடைய தேவைகளுக் காகவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் மிக அதிகமாக இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதால் அவை மிகவும் வேகமாக குறையத் தொடங்கியுள்ளன.

(iii) இயற்கை வளங்கள் அவற்றின் உயிரிய பொருளாதார மற்றும் பொழுதுபோக்கு மதிப்புகளுக்காகப் பாதுகாக்கப்படுகின்றன.

(iv) இயற்கை வளங்களின் அதிகமான மற்றும் திட்டமிடப்படாத பயன்பாடு சுற்றுச்சூழலில் ஒரு சமமற்ற நிலையை உருவாக்கிவிடும்.

(v) எனவே இயற்கை வளங்கள், அவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கேற்ப, அவற்றினை பயன்படுத்துவதில் ஒரு முறையான சமநிலை பராமரிப்பு அவசியமாகிறது.

(vi) காடுகள் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் உடைய பெரும் காரணிகளாகும். காடுகள் தட்பவெட்ப நிலையை ஒழுங்குபடுத்தி, மழைப்பொழிவை அதிகமாக்கி புவி வெப்பமாதலைக் குறைத்து, வெள்ளம் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களை தடுத்து வன உயிரிகளை பாதுகாத்து நீர் பிடிப்பு பகுதிகளாக மாறி செயல்படுகின்றன. சுற்றுச் சூழல் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

(vii) வன உயிரிகள், வனச் சுற்றுலாவை மையமாகக் கொண்டு வருவாயைப் பெருக்குவதால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திட உதவுகின்றன. காடுகள் பாதுகாப்பும், வன உயிரின பாதுகாப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவை,

(viii) சமீப காலங்களில் மனித ஆக்கிரமிப்பின் காரணமாக இந்திய வன உயிரினங்களுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவைகளால் வனங்களை மேலாண்மை செய்வதும் வன உயிரினங்களை பாதுகாப்பதும் சவாலான பணியாகக் கருதப்படுகிறது.

VIII. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களில் சரியாகப் பொருந்தியுள்ளதை கீழ்க்காண் வரிசைகளின் உதவியுடன் தேர்வு செய்து எழுதுக.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.
இ கூற்று சரியானது. ஆனால், காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: மழை நீர் சேமிப்பு என்பது மழை நீரை சேமித்து பாதுகாப்பதாகும்.
காரணம்: மழை நீரை நிலத்தடியில் கசிய விட்டு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.

Question 2.
கூற்று: CFL பல்புகள் மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் மின்னாற்றலை சேமிக்க முடியும்.
காரணம் : CFL பல்புகள் சாதாரண பல்புகளை விட விலை அதிகமானவை. எனவே சாதாரண பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்கலாம்.
விடை:
இ கூற்று சரியானது. ஆனால், காரணம் சரியல்ல.

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
உயிர்ப்பொருண்மை சிதைவடைவதன் மூலம் நமக்கு கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கின்றன. இருப்பினும் நாம் அவற்றைப் பாதுகாப்பது அவசியமாகிறது ஏன்?
விடை:

  1. நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் ஆகியவை இயற்கை வளங்களாகும்.
  2. இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த உயிரினங்கள் காற்றில்லா சூழலில் மட்குதல் போன்ற இயற்கை நிகழ்வுகள் காரணமாக உருவானவையாகும்.
  3. நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எண்ணெய் இருப்புகள், நாம் தொடர்ந்து அதிகமாக பயன்படுத்தினால் மிக விரைவாகத் தீர்ந்து போகக்கூடிய நிலையில் உள்ளன.
  4. இவை மேலும் உற்பத்தியாவதற்கு நீண்டகாலம் ஆவதோடு இவ்வினை மிக மெதுவாகவும் நடைபெறக்கூடியது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 2.
மரபுசாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மரபுசாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதன் நோக்கங்கள் யாவை?
விடை:
(i) புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு மற்றும் அணுக்கரு ஆற்றல் போன்றவை மிகக் குறைந்த அளவே இயற்கையில் கிடைக்கிறது.

(ii) ஆனால் மக்களின் பயன்பாடுகள் அதிகமாகியுள்ளன. மேலும் இவை மிகப்பெரும் செலவில் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

(iii) புதுப்பிக்க இயலும் ஆற்றல் மூலங்கள் என்பவை உயிரி எரிபொருள், உயிரிடப் பேராண்மை ஆற்றல், புவிவெப்ப ஆற்றல், நீராற்றல், சூரிய ஆற்றல், காற்றாற்றல் போன்றவை.

(iv) இத்தகைய ஆற்றல் மூலங்கள் அதிக அளவில் கிடைக்கக் கூடியதும் இயற்கையாக தம்மை குறுகிய காலத்தில் புதுப்பித்துக் கொள்ளக் கூடியதுமாகும். மேலும் மிகக் குறைந்த செலவில் ஆற்றலை தொடர்ச்சியாக பெறலாம்.

(v) எனவே மரபுசாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மரபுசார் ஆற்றல் மூ லங்கள் பயன்படுத்தப்படுகிறது.

Question 3.
தமிழக அரசு நெகிழிப் பொருளையும் பிளாஸ்டிக் பொருளையும் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. இதற்கான மாற்று முறைகள் ஏதேனும் இருப்பின் அதனை கூறு. இந்தத் தடையின் காரணமாக சுற்றுச்சூழல் எவ்வாறு சீரடையும்?
விடை:

  1. நெகிழிப் பொருள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் நுண்ணுயிரிகள் சிதை வடையக் கூடியவை அல்ல.
  2. இவற்றை நாம் பயன்படுத்தினால் நிலம் மற்றம் நீர்நிலைகளில் குவிந்து கிடக்கும்.
  3. நிலங்களில் குவிந்து கிடந்தால் மண்வளத் தன்மை குறைந்து விடுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பாதிப்படைகிறது.
  4. நீர் நிலைகளில் நீரின் புறப்பரப்பு முழுவதும் நெகிழிப்பைகளால் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் நீர்நிலைகளிலுள்ள உயிரினங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகின்றது.
  5. நிலத்தில் வாழும் உயிரினங்களான மாடு போன்றவற்றின் உணவுப்பையில் சேகரமாகி உயிரின இழப்பு ஏற்படுகிறது.
  6. நெகிழியை எரிப்பதினால் டையாக்ஸின் என்னும் நச்சு உருவாகி நோய் எதிர்ப்பு சக்தியையும், இனப்பெருக்க மண்டலங்களையும் பாதிப்படையச் செய்கின்றன.

மாற்று முறைகள் :

  1. சுற்றுச் சூழ்நிலைகள் பாதிக்காத பொருட்களின் மூலமாக பைகள் தயாரித்து உபயோகப்படுத்தலாம்.
  2. நெகிழி தட்டுகள்/நெகிழி குவளைகளுக்குப் பதிலாக நுண்ணுயிரிகளை சிதைவடையக் கூடிய பொருட் களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நெகிழி தட்டுகள் / குவளைகள் பயன்படுத்தலாம்.
  3. பாத்திரங்கள், கொள்கலன்கள் போன்றவை எஃகு பொருட்களினால் செய்யப்பட்டவைகளை பயன்படுத்தலாம்
  4. கடைத்தெருவிற்கு செல்வதற்கு துணிப்பைகளை பயன்படுத்தலாம்.

X. விழுமிய அடிப்படையிலான வினாக்கள்.

Question 1.
சூரிய மின்கலன்கள் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. ஏன்? உமது விடைக்கான மூன்று காரணங்களைக் கூறுக.
விடை:

  • சூரிய மின்கலன்களின் விலை அதிகம்.
  • அதிக ஆற்றல் தேவைப்படின் அதிகமான சூரிய மின்கலன்களை பயன்படுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களால் இதனை பயன்படுத்த முடியாது.
  • சூரிய ஆற்றல் வருடம் முழுவதும் கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

Question 2.
கீழ்க்காணும் கழிவுகளை எவ்வாறு கையாளுவாய்?
(அ) வீட்டுக் கழிவுகளான காய்கறிக் கழிவுகள்
(ஆ) தொழிற்சாலை கழிவுகளான கழிவு உருளைகள்.
இக்கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமா? ஆம் எனில் எவ்வாறு பாதுகாக்கும்?
விடை:
(அ) வீட்டுக்கழிவுகளான காய்கறிக் கழிவுகளை நாம் உரமாக பயன்படுத்தலாம். உரமாக நாம் தோட்டங்களின் பயன்படுத்தப்படும் போது அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள் மண்ணோடு கலக்கப்பட்டு மண்வளத் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனை மீண்டும் தாவரங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.

(ஆ) கழிவு உருளைகளை மறு சுழற்சி செய்து வேறு ஏதேனும் எந்திர பாகங்களையே அல்லது வேறு உருளைகளையோ தயாரிக்கலாம்.

இக்கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும். எவ்வாறு எனில், இக்கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு, மறுபயன்பாட்டின் மூலம் உபயோகப் படுத்தப்படலாம்.

Question 3.
4-R முறையினைப் பயன்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்க ஏதேனும் மூன்று செயல்பாடுகளை கூறுக.
விடை:
குறைத்தல் (Reduce): நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எண்ணெய்ப் பயன்பாட்டினை குறைத்துக் கொள்ளலாம்.

மறுபயன்பாடு (Reuse): வீட்டில் உள்ள காய்கறிக்கழிவுகளை மறுபயன்பாட்டிற்கான உரமாக பயன்படுத்தலாம்.

மீட்டெடுத்தல் (Recovery): மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுப் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம், நாம் செலவினங்களை மீட்டெடுக்கலாம்.

மறுசுழற்சி (Recycle): கழிவு நீரினை மறுசுழற்சி செய்து தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சி பயன்படுத்தலாம்.

PTA மாதிரி வினா-விடை
1. மதிப்பெண்

Question 1.
கடலோரங்களில் உண்டாகும் கடல் நீரின் வேகமான இடப்பெயர்ச்சியினால் ஏற்படும் ஆற்றல் ……………. ஆகும். [PTA-6]
அ) ஓத ஆற்றல்
ஆ) காற்றாற்றல்
இ சூரிய ஆற்றல் ஈ) நீராற்றல்
விடை:
அ) ஓத ஆற்றல்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை

2. மதிப்பெண்கள்

Question 1.
3R முறை என்றால் என்ன? [PTA-1]
விடை:
கழிவுகளை சிறப்பான முறையில் கையாளுவதற்கு 3R முறை ஏற்றதாகும். Reduce – குறைத்தல், Reuse – மறுபயன்பாடு, Recycle – மறுசுழற்சி.

அரசு தேர்வு வினா-விடை 
1. மதிப்பெண்

Question 1.
பொருத்துக . [Sep.20]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 22 சுற்றுச்சூழல் மேலாண்மை 2
(அ) (1)-(i), (2)-(iii), (3)-(iv), (4)-(ii)
(ஆ) (1)-(ii), (2)-(i), (3)-(iii), (4)-(iv)
(இ) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i)
(ஈ) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)
விடை:
(ஈ) (1)-(ii), (2)-(iv), (3)-(i), (4)-(iii)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

10th Science Guide தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு …………..
அ) மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது
ஆ) குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
இ) வேர் உருவாதலை ஊக்குவிப்பது
ஈ) இளம் இலைகள் மஞ்சளாவது
விடை:
ஆ) குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது

Question 2.
நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்
அ) சைட்டோகைனின்
ஆ) ஆக்சின்
இ ஜிப்ரல்லின்
ஈ) எத்திலின்
விடை:
ஆ) ஆக்சின்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 3.
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
அ) 2, 4D
ஆ) GA 3
இ) ஜிப்ரல்லின்
ஈ) IAAI
விடை:
அ) 2, 4D

Question 4.
அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ……………. என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
அ) டார்வின்
ஆ) N. ஸ்மித்
இ) பால்
ஈ) F.W. வெண்ட்
விடை:
ஈ) F.W. வெண்ட்

Question 5.
கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது ………… தெளிக்கப்படுகிறது.
அ) ஆக்சின்
ஆ) சைட்டோகைனின்
இ) ஜிப்ரல்லின்கள்
ஈ) எத்திலின்
விடை:
இ) ஜிப்ரல்லின்கள்

Question 6.
LH ஐ சுரப்பது ……………
அ) அட்ரினல் சுரப்பி
ஆ) தைராய்டு சுரப்பி
இ) பிட்யூட்டரியின் முன் கதுப்பு
ஈ) ஹைபோ தலாமஸ்
விடை:
இ) பிட்யூட்டரியின் முன் கதுப்பு

Question 7.
கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்:
அ) பிட்யூட்டரி சுரப்பி
ஆ) அட்ரினல் சுரப்பி
இ) உமிழ் நீர் சுரப்பி
ஈ) தைராய்டு சுரப்பி
விடை:
இ) உமிழ்நீர் சுரப்பி

Question 8.
கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும் நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
அ) கணையம்
ஆ) சிறுநீரகம்
இ) கல்லீரல்
ஈ) நுரையீரல்
விடை:
அ) கணையம்

Question 9.
கீழ்கண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது? [PTA-2]
அ) பினியல் சுரப்பி
ஆ) பிட்யூட்டரி சுரப்பி
இ) தைராய்டு சுரப்பி
ஈ) அட்ரினல் சுரப்பி
விடை:
ஆ) பிட்யூட்டரி சுரப்பி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
செல் நீட்சியடைதல், நுனி ஆதிக்கம் ஆகியவற்றை உருவாக்குவதும், உதிர்தலை தடை செய்வதும் …………… ஹார்மோன் ஆகும்.
விடை:
ஆக்சின்

Question 2.
தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் …………… ஆகும்.
விடை:
எத்திலின்

Question 3.
இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் ……………
விடை:
அப்சிசிக் அமிலம்

Question 4.
ஜிப்ரல்லின்கள் ……………. தாவரங்களில் தண்டு நீட்சியடைவதைத் தூண்டுகின்றன.
விடை:
நெருங்கிய இலையடுக்கம் கொண்ட

Question 5.
நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட ஹார்மோன் …………… ஆகும்.
விடை:
சைட்டோகைனின்

Question 6.
உடலில் கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது …………..
விடை:
பாராதார்மோன்

Question 7.
லாங்கர்ஹான் திட்டுகளில் உள்ள பீட்டா செல்கள் …………..ஐச் சுரக்கிறது. (PTA-6)
விடை:
இன்சுலின்

Question 8.
தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பணிகளை ……………. கட்டுப்படுத்துகிறது.
விடை:
தைராய்டைத் தூண்டும் ஹார்மோன் (TSH)

Question 9.
குழந்தைகளில் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக
விடை:
கிரிட்டினிசம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

III. பொருத்துக.

Question 1.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 60
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 61

Question 2.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 62
விடை:
அ – 3,
ஆ – 5,
இ – 2,
ஈ – 1,
உ – 4

IV. சரியா அல்லது தவறா என எழுதவும். தவறாயின் சரியான கூற்றினை எழுதவும்.

Question 1.
செல்பகுப்பைத் தூண்டி கனிம ஊட்ட ஆக்சின் இடப்பெயர்ச்சியை ஊக்குவிக்கும் தாவர உறை ஆதிக்கம் ஹார்மோன் சைட்டோகைனின் ஆகும். எத்திலின் கனிகள் பழுத்தல்
விடை:
சரி.
அப்சிசிக் அமிலம் /பசுங்கணியம் உதிர்தல்

Question 2.
ஜிப்ரல்லின்கள் தக்காளியில் கருவுறாக் கனிகளை உருவாக்குகின்றன. சைட்டோகைனின் தேங்காயின் செல் பகுப்பு
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 3.
எத்திலின் இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் மூப்படைவதைத் தடை செய்கின்றது.
விடை:
தவறு.
சரியான கூற்று: எத்திலின் இலைகள், மலர்கள், கனிகள் மூப்படைவதை விரைவுப்படுத்துகிறது.

Question 4.
எக்சாப்தல்மிக் காய்டர், தைராக்சின் மிகைச் சுரப்பின் காரணமாக ஏற்படுகிறது.
விடை:
சரி.

Question 5.
பிட்யூட்டரி சுரப்பி நான்கு கதுப்புகளாக பிரிந்துள்ளது.
விடை:
தவறு.
சரியான கூற்று: பிட்யூட்டரி சுரப்பி இரண்டு கதுப்புகளாகப் பிரிந்துள்ளது.

Question 6.
கார்பஸ் லூட்டியம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைச் சுரக்கிறது.
விடை: தவறு.
சரியான கூற்று: கிராஃபியன் செல்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சுரக்கின்றன.

V. கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள். பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
(இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு, ஆனால், காரணம் சரி.

Question 1.
கூற்று: சந்தைப்படுத்தப்படும் காய்கறிகளில் சைட்டோகைனினைத் தெளிப்பது அவை பல நாட்கள் கெடாமல் இருக்கச் செய்யும். காரணம் : சைட்டோகைனின்கள் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சியினால் இலைகள் மற்றும் ஏனைய உறுப்புகள் முதுமையடைவதைத் தாமதப்படுத்தப்படுகின்றன.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
கூற்று: பிட்யூட்டரி சுரப்பி தலைமை சுரப்பி’ என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: இது பிற நாளமில்லா சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 3.
கூற்று: டயாபடிஸ் மெல்லிடஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
காரணம்: இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
விடை:
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல. குறிப்பு: இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படுவதால், டயாபடிஸ் மெலிடஸ் உண்டாகிறது என்பதுவே கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

VI. ஓரிரு வார்த்தையில் விடையளி.

Question 1.
வெள்ளரியில் ஆண்மலர்கள் உற்பத்தியாவதைத் தூண்டும் ஹார்மோன் எது?
விடை:
ஜிப்ரல்லின்கள்.

Question 2.
செயற்கை ஹார்மோன் ஒன்றின் பெயரினை எழுதுக.
விடை:
2, 4D (2, 4 டைகுளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம்).

Question 3.
தக்காளியில் கருவுறாக் கனியைத் தூண்டும் ஹார்மோன் எது?
விடை:
ஜிப்ரல்லின்கள்.

Question 4.
குழந்தைப் பேற்றிற்குப்பின் பால் சுரக்க காரணமான ஹார்மோன் எது?
விடை:
புரோலாக்டின் (PRL).

Question 5.
மனிதரில் நீர் மற்றும் தாது உப்புக்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனின் பெயரைக் கூறு. [PTA-5]
விடை:

  1. வாசோபிரஸ்ஸின் அல்லது ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன் – நீர் இழப்பை குறைக்கிறது.
  2. பாரா தார்மோன், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
  3. ஆல்டோஸ்டிரான், நீர்ம அளவை ஒழுங்குபடுத்துகிறது.

Question 6.
மனிதர்களில் அவசர கால நிலைகளை எதிர் கொள்ள சுரக்கும் ஹார்மோன் எது?
விடை:
எபிநெஃப்ரின் (அட்ரினலின்) மற்றும் நார்எபிநெஃப்ரின் (நார்அட்ரினலின்)

Question 7.
செரித்தலுக்குரிய நொதிகளையும், ஹார்மோன்களையும் எந்த சுரப்பி சுரக்கிறது?
விடை:
கணையம்.

Question 8.
சிறுநீரகத்தோடு தொடர்புடைய பணிகளைச் செய்யும் ஹார்மோன்களின் பெயர்களைக் கூறு.
விடை:

  1. ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன்
  2. ஆல்டோஸ்டிரான்
  3. பாராதார்மோன்

VII. மிகக் குறுகிய விடையளி :

Question 1.
செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எ.கா. தருக. [PTA-4]
விடை:
ஆக்சின்களை ஒத்த பண்புகளைக் கொண்ட செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஆக்சின்கள், ‘செயற்கை ஆக்சின்கள் என அழைக்கப்படுகின்றன.
எ.கா: 2, 4D (2,4 டைக்ளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம்)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 2.
“போல்டிங்” என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்? (GMQP-2019)
விடை:
நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் (Bolting) என்று பெயர்.

Question 3.
அப்சிசிக் அமிலத்தின் ஏதேனும் இரண்டு வாழ்வியல் விளைவுகளைத் தருக.
விடை:
அப்சிசிக் அமிலத்தின் வாழ்வியல் விளைவுகள்

  1. ABA உதிர்தல் நிகழ்வை (இலைகள், மலர்கள், மற்றும் கனிகள் ஆகியவை கிளைகளிலிருந்து தனித்து உதிர்ந்து விடுவதை) ஊக்குவிக்கிறது.
  2. நீர் இறுக்கம் மற்றும் வறட்சிக் காலங்களில் ABA இலைத் துளையை மூடச் செய்கிறது.

Question 4.
தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலைத் தடை செய்ய நீ என்ன செய்வாய்? தகுந்த காரணங்களுடன் கூறுக.
விடை:

  1. தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலை தடுக்க ஆக்சின் தெளிக்கப்பட வேண்டும்.
  2. ஏனெனில் ஆக்சின்கள் உதிர்தல் அடுக்கு உருவாதலைத் தடை செய்கின்றன.

Question 5.
வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?
விடை:

  1. நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹார்மோன்கள் வேதியியல் தூதுவர்கள் ஆவர். இவை மிகக் குறைவான அளவு சுரக்கும். இவை இரத்தத்தில் பரவுதல் மூலம் உடலின் தொலைதூர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
  2. இவை குறிப்பிட்ட உறுப்புகளில் செயல்படுகின்றன. இத்தகைய உறுப்புகள் இலக்கு உறுப்புகள் எனப்படுகின்றன.

Question 6.
நாளமுள்ளச் சுரப்பிக்கும் நாளமில்லாச் சுரப்பிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 70

Question 7.
பாராதார்மோனின் பணிகள் யாவை?
விடை:

  1. மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தினை ஒழுங்குபடுத்துகிறது.
  2. இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றில் செயலாற்றுகிறது.

Question 8.
பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள் யாவை? அவை எந்த திசுக்களின் மேல் செயல்படுகின்றன?
[PTA-2]
விடை:
சுரக்கப்படும் ஹார்மோன்:

  1. வாசோபிரஸ்ஸின் அல்லது ஆன்டிடை யூரிட்டிக் ஹார்மோன் (ADH)
  2. ஆக்ஸிடோசின்
  3. வாசோபிரஸ்ஸின் சிறுநீரக குழல்களில் உள்ள திசுக்களிலும், ஆக்சிடோசின் கருப்பையில் உள்ள திசுக்களிலும், பால் சுரப்பியிலும் தன்னுடைய செயல்களைச் செய்கின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 9.
தைராய்டு ஹார்மோன்கள் ஏன் ஆளுமை ஹார்மோன்கள்’ என்று அழைக்கப்படுகின்றன? [GMQP-2019]
விடை:
தைராய்டு ஹார்மோன்கள் உடல், மனம் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுவதால், ஆளுமை ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 10.
எந்த ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அவசியமாகிறது? நாம் உட்கொள்ளும் உணவில் அயோடின் குறைவாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:

  1. தைராக்ஸின் ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அமிலமாகிறது.
  2. அயோடின் குறைவாக சுரப்பதால் தைராய்டு குறைபாடுகளாகிய எளிய காய்டர், கிரிட்டினிசம், மிக்ஸிடிமா போன்ற குறைபாட்டு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

VIII. குறுகிய விடையளி.

Question 1.
அ. வாயு நிலையில் உள்ள தாவரஹார்மோன் எது? தாவரங்களில் அதன் மூன்று செயல்பாடுகளை எழுதுக.
ஆ. தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன் என்று அழைக்கப்படுவது எது? ஏன்?
விடை:
(அ) எத்திலின் வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் ஆகும்.

  1. கனிகள் பழுப்பதை எத்திலின் ஊக்குவிக்கின்றது. எ.கா. தக்காளி, ஆப்பிள், மா, வாழை.
  2. எத்திலின் இருவிதையிலைத் தாவரங்களில் வேர் மற்றும் தண்டு நீட்சி அடைவதைத் தடைசெய்கிறது.
  3. எத்திலின் இலைகள் மற்றும் மலர்கள் மூப்படைவதை விரைவு படுத்துகிறது.

(ஆ)

  1. இறுக்க நிலை ஹார்மோன் என்று அப்சிசிக் அமிலம்.
  2. இவை பல்வேறு வகையான இறுக்க நிலைக்கு எதிராக தாவரங்களின் சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது. எனவே, இது இறுக்க நிலை ஹார்மோன் என அழைக்கப்படுகிறது.

Question 2.
வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் முளைக் குருத்து உறையின் நுனியில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை விளக்கும் ஆய்வினை விவரி.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 80

  1. ஃபிரிட்ஸ் வார்மால்ட் வெண்ட் (1903 – 1990) என்ற டச்சு நாட்டு உயிரியல் அறிஞர் தாவரங்களில் ஆக்சின் இருப்பதையும், அதன் விளைவுகளையும் விளக்கினார். அவர் அவினா முளைக்குருத்து உறையில் வரிசைக்கிரமமான பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
  2. இவர் தனது முதல் ஆய்வில் அவினா தாவரத்தின் முளைக்குருத்து உறையின் நுனியை நீக்கினார். நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறை வளரவில்லை. இது வளர்ச்சிக்குத் தேவையான ஏதோ ஒரு பொருள் முளைக்குருத்து உறையின் நுனியிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டியது.
  3. அவர் தனது இரண்டாவது ஆய்வில் அகார் துண்டை , நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறையின் மீது வைத்தார். முளைக்குருத்து உறைநுனி எவ்வித பதில் விளைவையும் காட்டவில்லை.
  4. அவர் தனது அடுத்த ஆய்வில் முளைக்குருத்து உறையின் நுனியை வெட்டி எடுத்து, அதனை அகார் துண்டத்தின் மீது வைத்தார். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் நுனியை நீக்கிவிட்டு, அகார் துண்டத்தை நுனி நீக்கப்பட்ட முளைக்குருத்து உறையின் மீது வைத்தார். அது நேராக வளர்ந்தது.
  5. இந்த ஆய்வானது முளைக்குருத்து உறையின் நுனியில் இருந்து அகார் துண்டத்துள் ஊடுருவி சென்ற ஏதோ ஒரு வேதிப்பொருள் தான் வளர்ச்சியைத் தூண்டியது என்பதைக் காட்டியது.
  6. தன்னுடைய ஆய்வுகளில் இருந்து முளைக்குருத்து உறையின் நுனியில் இருந்து ஊடுருவிய வேதிப்பொருளே வளர்ச்சிக்குக் காரணம் என்று வெண்ட் முடிவு செய்தார். அந்த வேதிபொருளுக்கு ஆக்சின்’ என்று பெயரிட்டார். அதன் பொருள் வளர்ச்சி’ என்பது ஆகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 3.
ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
விடை:

  1. தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும்போது, அது கணுவிடைப் பகுதியின் அசாதாரண நீட்சியைத் தூண்டுகிறது. (எ.கா) மக்காச்சோளம் மற்றும் பட்டாணி.
  2. நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் (Bolting) என்று பெயர்.
  3. ஜிப்ரல்லின்கள் இருபாலிணைந்த தாவரங்களில் ஓரில்லத் தாவரங்களில்) ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன (வெள்ளரி).
  4. ஜிப்ரல்லின்கள் உருளைக் கிழங்கின் உறக்க நிலையை நீக்குகின்றன.
  5. விதைகளற்ற கனிகளைத் (கருவுறாக் கனிகள் – கருவுறுதல் நடைபெறாமலேயே கனிகள் உருவாதல்) தூண்டுவதில் ஆக்சின்களைவிட ஜிப்ரல்லின்கள் திறம் மிக்கவை (எ.கா) தக்காளி.

Question 4.
ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?
விடை:
ஈஸ்ட்ரோஜன் அண்டத்திலுள்ள கிராஃபியன் செல்களினால் சுரக்கப்படுகின்றது. ஈஸ்ட்ரோஜனின் பணிகள்:

  1. இது பருவமடைதலின் உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
  2. அண்ட செல் உருவாக்கத்தைத் துவக்குகிறது.
  3. அண்ட பாலிக்கிள் செல்கள் முதிர்வடை வதைத் தூண்டுகிறது.
  4. இரண்டாம் நிலை பால் பண்புகள் (மார்பக வளர்ச்சி, குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கிறது.

Question 5.
ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) மற்றும் இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலைகள் யாவை? இவை இரண்டும் எவ்வாறு வேறுபடுகிறது.
விடை:
(அ) ஆன்டி டையூட்ரிக் ஹார்மோன் (ADH) குறைவாக சுரப்பதால், நீர் மீள உறிஞ்சப்படுவது குறைகிறது. இதனால் அதிகப்படியான சிறுநீர் வெளியேறும் நிலை (பாலியூரியா) உண்டாகிறது. இக்குறைபாடு டயாபடீஸ் இன்சிபிடஸ் எனப்படும்.

(ஆ) இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படுவதால், டயாபடீஸ் மெலிடஸ் உண்டாகிறது. இதனால்,

  1. இரத்த சர்க்கரை அதிகரித்தல் (ஹைபர்கிளைசீமியா)
  2. சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுதல் (கிளைக்கோசூரியா)
  3. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (பாலியூரியா)
  4. அடிக்கடி தாகம் எடுத்தல் (பாலிடிப்சியா)
  5. அடிக்கடி பசி எடுத்தல் (பாலிஃபேஜியா) போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. (ADH) குறைவாக சுரப்பதால் டயாபடிஸ் இன்சிபிடஸ் ஏற்படும். இன்சுலின் குறைவாக சுரப்பதால் டயாபடிஸ் மெலிடஸ் ஏற்படுகிறது.

VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள் :

Question 1.
பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?
அ. ஜிப்ரல்லின்னை நெல் நாற்றுகளில் தெளித்தால்
ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது
விடை:
(அ) ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளின் மீது தெளித்தால் நெல்லின் கணுவிடைப் பகுதியின் அசாதாரண நீட்சியினைத் தூண்டி தண்டு நீட்சியடைகிறது.
(ஆ) அழுகிய பழம் அதிக எத்திலின் வாயுவினை உருவாக்குகிறது. இந்த எத்திலின் வாயு பழுக்காத பழங்களை பழுக்க வைக்க ஊக்குவிக்கிறது.
(இ) வளர்ப்பு ஊடகங்களில் சைட்டோகைனின் சேர்க்கப்படாவிட்டால் செல் பகுப்பு நடைபெறாமல் திசுக்களின் வளர்ச்சி பாதிப்படைகிறது. புதிதாக வளர்ச்சி ஏற்படாமல் இருக்கிறது.

Question 2.
ஜப்பானில் நெற்பயிரானது ஜிப்ரல்லா பியூஜிகுராய் என்னும் பூஞ்சையால் ஏற்பட்ட பக்கானே நோயினால் பாதிக்கப்பட்டது. அதற்குக் காரணம் இப்பூஞ்சை உற்பத்தி செய்த ஹார்மோன் என முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.
அ. இந்த செயல்முறையில் சம்மந்தப்பட்ட ஹார்மோனை அடையாளம் காண்க.
ஆ. இந்த ஹார்மோனின் எப்பண்பு இந்த நோயை விளைவித்தது?
இ. இந்த ஹார்மோனின் இரண்டு பணிகளைக் கூறுக.
விடை:
(அ) ஜிப்ரல்லின் அமிலம்
(ஆ) கணுவிடைப்பகுதியின் அசாதரண நீட்சி என்ற பண்பின் காரணமாக இந்த நோய் ஏற்பட்டது.
(இ) இரண்டு பணிகள்:

  1. கணுவிடைப்பகுதியின் அசாதாரண நீட்சி.
  2. மலர்கள் மலர்தல்.
  3. ஆண் மலர்களை அதிகப்படியாக தோற்றுவிப்பது.

Question 3.
செந்திலுக்கு, அதிக இரத்த அழுத்தம், பிதுங்கிய கண்கள் மற்றும் அதிகமான உடல் வெப்ப நிலை உள்ளது. இந்நிலைக்குக் காரணமான நாளமில்லாச் சுரப்பியை அடையாளம் கண்டு அதில் சுரக்கும் எந்த ஹார்மோன், இந்நிலைக்குக் காரணம் எனக் கண்டறிந்து எழுதுக. விடை:

  1. நாளமில்லா சுரப்பி – தைராய்டு சுரப்பி
  2. சுரக்கப்படும் ஹார்மோன் – தைராக்ஸின்
  3. தைராக்சின் ஹார்மோனின் அதிகரித்த சுரப்பின் காரணமாக இந்த நிலை உண்டாகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 4.
சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான். தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?
விடை:
சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்ததால் வினாத்தாளை மனதில் கொண்டதால் மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி வசப்பட்டான். இதற்கு காரணம் அட்ரீனல் சுரப்பியின் அட்ரீனல் மெடுல்லாவினால் சுரக்கப்படும் அட்ரீனலின் (எபிநெஃப்ரின்) என்ற ஹார்மோன் ஆகும். இதனால் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே அதிகப்படியான வியர்வை ஏற்படுகிறது. இதற்கு
காரணம் மன அழுத்தமே ஆகும்.

Question 5.
சூசனின் தகப்பனார், மிகவும் சோர்வடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், அவரது இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க தினமும் ஊசி மூலம் மருந்து செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு இந்நிலை ஏற்படக் காரணமென்ன? இதனை தடுக்கும் வழி முறைகளைக் கூறுக.
விடை:
சூசனின் தகப்பனார் டயாபடீஸ் மெலிடஸ் என் நோயினால் பாதிப்படைந்துள்ளார். இந்நிலை ஏற்படக் காரணம் இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்பட்டதால் இந்நோய் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்பது பாலியூரியா எனப்படும். மேலும் சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுகிறது. தடுக்கும் முறை:

  1. புரதச் சத்துள்ள உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். மாவுச் சத்துள்ள பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.
  2. உடற்பயிற்சி செய்வது மிக அவசியம்
  3. சரியான நேரத்தில் உணவருந்துதல் மிகவும் அவசியம்.

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
படத்தில் உள்ள நபரைப் பாதித்துள்ள குறைபாட்டினை அடையாளம் காண்க. இது ஏன் ஏற்படுகிறது? [PTA-1]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 90
விடை:
படத்தில் உள்ள நபரைப் பாதித்துள்ள குறைபாடு எளிய காய்டர். உணவில் தேவையான அளவு அயோடின் இல்லாததால் இந்நோய் ஏற்படுகிறது.

Question 2.
கருவுறாக் கனி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக. (7 Marks) [PTA-6]
விடை:

  1. கருவுறாக்கனிகள் – ஆக்சின்களைத் தெளிப்பதால் கருவுறுதல் நடைபெறாமலேயே விதையிலாக் கனிகள் உருவாதல் தூண்டப்படுகிறது. இம்முறையில் உருவாகும் கனிகள் கருவுறாக் கனிகள் எனப்படும்.
  2. எ.கா. தர்பூசணி, தக்காளி.

Question 3.
கார்ப்பஸ்லூட்டியம் எவ்வாறு உருவாகிறது? அது சுரக்கும் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக. (7 Marks) [PTA-2]
விடை:

  1. பெண்களின் அண்டம் விடுபடும்போது பிரியும் முதிர்ந்த ஃபாலிக்கிள்கள், கார்ப்பஸ்லூட்டியத்தை உருவாக்குகின்றன.
  2. அது சுரக்கும் ஹார்மோன்: புரொஜெஸ்டிரான்.

4 மதிப்பெண்கள்

Question 1.
எத்திலீனின் வாழ்வியல் விளைவுகளுள் ஏதேனும் இரண்டினை எழுதுக. (7 Marks) [PTA-3]
விடை:

  1. எத்திலீன் கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கிறது. எ.கா. தக்காளி, ஆப்பிள், மா, வாழை.
  2. எத்திலீன் இருவிதையிலைத் தாவரங்களில் வேர் மற்றும் தண்டு நீட்சி அடைவதைத் தடை செய்கிறது.
  3. எத்திலீன் இலைகள் மற்றும் மலர்கள் மூப்படைவதை விரைவுபடுத்துகிறது.
  4. எத்திலீன் இலைகள், மலர்கள் மற்றும் கனிகளில் உதிர்தல் அடுக்கு உற்பத்தியாவதைத் தூண்டுகிறது. இதனால் இவை முதிர்ச்சி அடையும் முன்னரே உதிர்ந்துவிடுகின்றன.
  5. எத்திலீன் மொட்டுகள், விதைகளின் உறக்கத்தை நீக்குகிறது.

அரசு தேர்வு வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
______ தேங்காயின் இளநீரில் அதிகமாகக் காணப்படுகிறது. [Sep.20]
அ) ஆக்சின்
ஆ) சைட்டோகைனின்
இ) ஜிப்ரல்லின்கள்
ஈ) எத்திலின்
விடை:
ஆ) சைட்டோகைனின்

2 மதிப்பெண்கள்

Question 1.
“தலைமை சுரப்பி” என அழைக்கப்படும் சுரப்பி எது? காரணம் கூறு. [Qy-2019]
விடை:
“தலைமை சுரப்பி” என அழைக்கப்படும் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி ஆகும். இது பிற நாளமில்லாச் சுரப்பிகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதால் இது “தலைமைச்சுரப்பி” என்று அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

Question 2.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C, D ஆகிய பாகங்களை அடையாளம் காணவும். [Sep.20]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 95
விடை:
A : தைராய்டு குருத்தெலும்பு
B : தைராய்டு சுரப்பி
C : மூச்சுக்குழல்
D : திரளை

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 15 நரம்பு மண்டலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 15 நரம்பு மண்டலம்

10th Science Guide நரம்பு மண்டலம் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு :

Question 1.
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம் [Qy-2019]
அ) கண் விழித்திரை
ஆ) பெருமூளைப் புறணி
இ) வளர் கரு
ஈ) சுவாச எபிதீலியம்
விடை:
அ) கண் விழித்திரை

Question 2.
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது
அ) சிறுநீரகம்
ஆ) காது
இ) மூளை
ஈ) நுரையீரல்
விடை:
இ) மூளை

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 3.
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
அ) மூளை, தண்டுவடம், தசைகள்
ஆ) உணர்வேற்பி, தசைகள், தண்டுவடம்
இ) தசைகள், உணர்வேற்பி, மூளை
ஈ) உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்
விடை:
ஈ) உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்

Question 4.
டென்ட்ரான்கள் செல் உடலத்தை _____ தூண்டலையும், ஆக்சான்கள் செல் உடலத்திலிருந்து _____ தூண்டலையும் கடத்துகின்றன.
அ) வெளியே / வெளியே
ஆ) நோக்கி வெளியே
இ) நோக்கி / நோக்கி
ஈ) வெளியே / நோக்கி
விடை:
ஆ) நோக்கி / வெளியே

Question 5.
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
அ) அரக்னாய்டு சவ்வு
ஆ) பையா மேட்டர்
இ) டியூரா மேட்டர்
ஈ) மையலின் உறை
விடை:
இ) டியூரா மேட்டர்

Question 6.
_____ இணைமூளை நரம்புகளும் ______ இணைதண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன.
அ) 12, 31
ஆ) 31, 12
இ) 12, 13
ஈ) 12, 21
விடை:
அ) 12, 31

Question 7.
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
அ) உட்செல் நியூரான்கள்
ஆ) கடத்து நரம்பு செல்கள்
இ) வெளிச்செல் நரம்பு செல்கள்
ஈ) ஒரு முனை நியூரான்கள்
விடை:
இ) வெளிச்செல் நரம்பு செல்கள்

Question 8.
மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப்பகுதி எது? – [PTA-5]
அ) தலாமஸ்
ஆ) ஹைபோதலாமஸ்
இ) பான்ஸ்
ஈ) கார்பஸ் கலோசம்
விடை:
ஈ) கார்பஸ் கலோசம்

Question 9.
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம் [Sep.20]
அ) தசைகள்
ஆ) ஆக்சான்கள்
இ) டெண்ட்ரைட்டுகள்
ஈ) சைட்டான்
விடை:
ஆ) ஆக்சான்கள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 10.
வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
அ) முகுளம்
ஆ) வயிறு
இ) மூளை
ஈ) ஹைப்போதலாமஸ்
விடை:
அ) முகுளம்

Question 11.
கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
அ) நியூரிலெம்மா
ஆ) சார்கோலெம்மா
இ) ஆக்ஸான்
ஈ) டெண்டிரான்கள்
விடை:
ஆ) சார்கோலெம்மா

Question 12.
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
அ) முகுளம்
ஆ) பெருமூளை
இ) பான்ஸ்
ஈ) ஹைபோதலாமஸ்
விடை:
ஈ) ஹைபோதலாமஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
நமது உடலில் உள்ளவற்றுள் _____ என்பது மிக நீளமான செல்லாகும்.
விடை:
நரம்பு செல் (அ) நியூரான்

Question 2.
_____ நியூரான்களில் தூண்டல்கள் மிக துரிதமாக கடத்தப்படும்.
விடை:
பலமுனை

Question 3.
புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தால் ஒரு விலங்கினம் வெளிப்படுத்தும் விளைவு _____ எனப்படும்.
விடை:
துலங்கல்

Question 4.
செல் உடலத்தை நோக்கி தூண்டல்களைக் கொண்டு செல்பவை ______.
விடை:
டெண்ட்ரைட்டுகள்

Question 5.
தானியங்கு நரம்பு மண்டலத்தில் உள்ள _____ மற்றும் ______ ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன.
விடை:
பரிவு நரம்புகளும், எதிர் பரிவு நரம்புகளும்

Question 6.
நியூரானில் ______ என்னும் நுண்ணுறுப்பு மட்டும் காணப்படுவதில்லை.
விடை:
சென்ட்ரியோல்

Question 7.
மூளைப் பெட்டகத்தினுள் நிலையான அழுத்தத்தை _______ பேணுகிறது.
விடை:
மூளை தண்டுவடத் திரவம்

Question 8.
பெருமூளையின் புறப்பரப்பு ______ மற்றும் ____ ஆகியவற்றால் அதிகரிக்கிறது.
விடை:
கைரி, சல்சி

Question 9.
மனித மூளையில் கடத்து மையமாக செயல்படும் பகுதி _______
விடை:
தலாமஸ்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

III. சரியா தவறா எனக் கண்டறிந்து தவற்றினை திருத்தி எழுதவும்.

Question 1.
டெண்ட்ரான்கள் என்பவை செல் உடலத்திலிருந்து தூண்டல்களை வெளிப்புறமாக கடத்தும் நீளமான நரம்பு நாரிழைகள்.
விடை:
தவறு.
சரியான கூற்று: டெண்ட்ரான்கள் என்பவை தூண்டல்களை உடலத்தை நோக்கி கடத்தும் நீளமான நரம்பு நாரிழைகள்.

Question 2.
பரிவு நரம்பு மண்டலம் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக செயல்படுகின்றது. (PTA-3)
விடை:
தவறு.
சரியான கூற்று பரிவு நரம்பு மண்டலம் தானியங்கு நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.

Question 3.
மனித உடலில் உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்தும் மையமாக ஹைபோதலாமஸ் உள்ளது.
விடை:
சரி.

Question 4.
பெருமூளை உடலின் தன்னிச்சையான செயல்படும் செயல்களை கட்டுப்படுத்துகிறது.
விடை:
தவறு.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 5.
மைய நரம்பு மண்டலத்தின் வெண்மை நிற பகுதிகள் மையலின் உறையுடன் கூடிய நரம்பு நாரிழைகளால் உருவாகின்றது.
விடை:
சரி.

Question 6.
உடலின் அனைத்து நரம்புகளும், மெனிஞ்சஸ் என்னும் உறையால் போர்த்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. (PTA-3)
விடை:
தவறு
சரியான கூற்று: மூளை மெனிஞ்சஸ் என்னும் உறையால் போர்த்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

Question 7.
மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மூளைத் தண்டுவடத் திரவம் அளிக்கிறது.
விடை:
சரி.

Question 8.
உடலில் ஒரு தூண்டப்படக்கூடிய மிக துரிதமான பதில் விளைவை உண்டாக்குவது அனிச்சை வில் ஆகும்.
விடை:
சரி.

Question 9.
சுவாசத்தை ஒழுங்குபடுத்துவதில் முகுளம் முக்கிய பங்காற்றுகிறது.
விடை:
சரி.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 60
விடை:
அ – 3,
ஆ – 1,
இ – 4,
ஈ – 2

V. கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள். பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
(இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
(ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு.

Question 1.
கூற்று (A): மைய நரம்பு மண்டலம் முழுமையும், மூளைத் தண்டு வடத் திரவத்தால் நிரம்பியுள்ளது.
காரணம் (R) : மூளைத் தண்டுவடத் திரவத்திற்கு இத்தகைய பணிகள் கிடையாது.
விடை:
(இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 2.
கூற்று (A): டியூரா மேட்டர் மற்றும் பையா மேட்டர்களுக்கிடைப்பட்ட இடைவெளியில் கார்பஸ் கலோசம் அமைந்துள்ளது.
காரணம் (R): இது மூளைப் பெட்டகத்தினுள் நிலையான உள் அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
விடை:
(ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு.

VI. ஒரு வார்த்தையில் விடையளி.

Question 1.
தாண்டல் என்பதை வரையறு.
விடை:
புறச்சூழ்நிலையில் ஏற்படும் மாற்றம்.

Question 2.
பின் மூளையின் பாகங்கள் யாவை? [PTA-2]
விடை:

  1. சிறுமூளை
  2. பான்ஸ்
  3. முகுளம்

Question 3.
மூளையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உறுப்புகள் யாவை? [PTA-4]
விடை:
மூன்று பாதுகாப்பான உறைகளால் மூளை சூழப்பட்டுள்ளது. அவை –

  1. டியூரா மேட்டர்
  2. அரக்னாய்டு உறை
  3. பையா மேட்டர்

Question 4.
கட்டுப்படுத்தப்பட்ட அனிச்சைச் செயலுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
விடை:
ஹார்மோனியம் வாசித்தலின்போது இசை குறிப்புகளுக்கேற்ப சரியான கட்டையை அழுத்துவதும், விடுவிப்பதும் ஆகும்.

Question 5.
நரம்பு மண்டலத்திற்கும், நாளமில்லா சுரப்பி மண்டலத்திற்குமிடையே இணைப்பாகச் செயல்படும் உறுப்பு எது?
விடை:
ஹைப்போதலாமஸ்.

Question 6.
அனிச்சை வில் என்பதை வரையறு. [PTA-4]
விடை:
நரம்பு செல்களுக்கிடையே நடைபெறும் தூண்டல் துவங்கல் அனிச்சைச் செயல் பாதைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அனிச்சை வில் எனப்படும்.

VII. வேறுபடுத்துக.

Question 1.
இச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல். [PTA-5]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 62

Question 2.
மையலின் உறை உள்ள மற்றும் மையலின் உறையற்ற நரம்பு நாரிழைகள். (4 Marks) [PTA-3]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 63

VIII. விரிவான விடையளி :

Question 1.
நியூரானின் அமைப்பை படத்துடன் விவரி. [GMQP-2019; Qy-2019]
விடை:
நியூரான் என்பது கீழ்க்காணும் மூன்று பகுதிகளைக் கொண்டது.
(1) சைட்டான்
(2) டெண்ட்ரைட்டுகள் மற்றும்
(3) ஆக்சான்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 66

(1) சைட்டான் :

  1. சைட்டான் என்பது செல் உடலம் அல்லது பெரிகேரியோன் என்றும் அழைக்கப்படும். இதன் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிரம்பியுள்ள பகுதி நியூரோபிளாசம் என்று அழைக்கப்படுகிறது. இதனுள் அளவில் பெரிய துகள்கள் நிரம்பியுள்ளன. இத்துகள்கள் நிசில்
    துகள்கள் எனப்படுகின்றன.
  2. மேலும் மற்ற செல் நுண்ணுறுப்புகளான மைட்டோகாண்ட்ரியா, ரிபோசோம்கள், லைசோசோம்கள் மற்றும் எண்டோபிளாச வலைப்பின்னல் ஆகியவையும் சைட்டோபிளாசத்தில் உள்ளன.
  3. நியூரான்கள் பகுப்படையும் தன்மையற்றவை. சைட்டோபிளாசத்தினுள்ளே பல நுண் இழைகள் காணப்படுகின்றன. அவை செல் உடலத்தின் வழியாக நரம்பு தூண்டல்களை முன்னும் பின்னும் கடத்துவதற்கு உதவுகின்றன.

(2) டெண்ட்ரைட்டுகள்:

  1. செல் உடலத்தின் வெளிப்புறமாக பல்வேறு கிளைத்த பகுதிகள் காணப்படுகின்றன. இவை நரம்புத் தூண்டல்களை சைட்டானை நோக்கிக் கடத்துகின்றன.
  2. பிற நரம்பு செல்களில் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை உள்வாங்கிக் கொள்ளும் பரப்பினை அதிகமாக்குகின்றன.

(3) ஆக்சான்:

  1. ஆக்சான் என்பது தனித்த, நீளமான, மெல்லிய அமைப்பு ஆகும். ஆக்சானின் முடிவுப்பகுதி நுண்ணிய கிளைகளாகப் பிரிந்து குமிழ் போன்ற “சினாப்டிக் குமிழ்” பகுதிகளாக முடிகின்றது.
  2. ஆக்சானின் பிளாஸ்மா சவ்வு, ஆக்ஸோலெம்மா என்றும், சைட்டோபிளாசம், ஆக்ஸோபிளாசம் என்றும் அழைக்கப்படும். இவை தூண்டல்களை சைட்டானில் இருந்து எடுத்துச் செல்கின்றன.
  3. ஆக்ஸானின் மேற்புறம் ஒரு பாதுகாப்பு உறையால் போர்த்தப்பட்டுள்ளது. இவ்வுறை மையலின் உறை எனப்படும். இவற்றின் மேற்புறம் ஸ்வான் செல்களால் ஆன உறையால் பாதுகாக்கப்படுகிறது. இவ்வுறை நியூரிலெம்மா எனப்படும்.
  4. மையலின் உறைதொடர்ச்சியாக இல்லாமல் குறிப்பிட்ட இடைவெளிகளுடன் அமைந்திருக்கிறது. இந்த இடைவெளிகள் ரேன்வீரின் கணுக்கள் எனப்படுகின்றன. இக் கணுக்களுக்கு இடையே உள்ள பகுதி கணுவிடைப் பகுதி எனப்படுகிறது.
  5. மையலின் உறையானது ஒரு பாதுகாப்பு உறையாகச் செயல்பட்டு நரம்பு தூண்டல்கள் மிக விரைவாக கடத்தப்பட உதவுகிறது.
    சினாப்ஸ் :
  6. ஒரு நியூரானின் சினாப்டிக் குமிழ் பகுதிக்கும் மற்றொரு நியூரானின் டெண்ட்ரான் இணையும் பகுதிக்கும் இடையிலுள்ள இடைவெளிப் பகுதி சினாப்டிக் இணைவுப் பகுதி எனப்படுகிறது.
  7. ஒரு நியூரானிலிருந்து தகவல்கள் மற்றொரு நியூரானுக்கு கடத்தப்படுவது சினாப்டிக் குமிழ் பகுதியில் வெளிப்படுத்தப்படும் வேதிப்பொருள் மூலமாக நடைபெறுகிறது. இவ்வேதிப்பொருட்கள் நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் அல்லது நரம்புணர்வு கடத்திகள் எனப்படுகின்றன.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 2.
மூளையின் அமைப்பையும் பணிகளையும் விளக்குக. [PTA-1; Qy-2019]
விடை:
மனித மூளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன :
(1) முன் மூளை
(2) நடு மூளை
(3) பின் மூளை
(1) முன் மூளை :

  1. முன் மூளையானது பெருமூளை (செரிப்ரம்) மற்றும் டயன்செஃப்லான் என்பவைகளால் ஆனது. டயன்செஃப்லான் மேற்புற தலாமஸ் மற்றும் கீழ்ப்புற ஹைப்போதலாமஸ் கொண்டுள்ளது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 70
  2. பெருமூளை :
    மூளையின் மூன்றில் இரண்டு பகுதி அளவுக்கு பெரும்பான்மையாக இப்பகுதி அமைந்துள்ளது. பெரு மூளையானது நீள் வாட்டத்தில் வலது மற்றும் இடது என இரு பிரிவுகளாக ஒரு ஆழமான பிளவு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிளவு நடுப்பிளவு எனப்படும்.
  3. இப்பிரிவுகள் செரிப்ரல் ஹெமிஸ்பியர்/பெருமூளை அரைக் கோளங்கள் என்று அழைக்கப்படும். இப்பிரிவுகள் மூளையின் அடிப்பகுதியில் கார்பஸ் கலோசம் என்னும் அடர்த்தியான நரம்புத் திசுக்கற்றையால் இணைக்கப்பட்டுள்ளன.
  4. பெருமூளையின் வெளிப்புற பகுதி, சாம்பல் நிறப் பகுதியால் ஆனது. இது பெருமூளைப் புறணி எனப்படும்.
  5. பெருமூளையின் உட்புற ஆழமான பகுதி வெண்மை நிறப் பொருளால் ஆனது. பெருமூளைப் புறணி அதிகமான மடிப்புகளுடன் பல சுருக்கங்களைக் கொண்டு காணப்படும்.
  6. இவற்றின் மேடு “கைரி” என்றும், பள்ளங்கள் “சல்சி” என்றும் அழைக்கப்படும்.
  7. ஒவ்வொரு பெரு மூளை அரைக்கோளமும், முன்புறக் கதுப்பு, பக்கவாட்டுக் கதுப்பு, மேற்புறக் கதுப்பு மற்றும் பின்புறக் கதுப்பு என்று பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பெருமூளை கதுப்புகள் என அழைக்கப்படும். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயலுக்கு பொறுப்பானவை. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கதுப்பில் ஏற்படும் சேதம் அந்தப் பகுதிக்கான செயல்களை பாதிக்கும்.
  8. பெரு மூளையானது சிந்தித்தல், நுண்ண றிவு, விழிப்புணர்வு நிலை, நினைவுத் திறன், கற்பனைத்திறன், காரணகாரியம் ஆராய்தல் மற்றும் மன உறுதி ஆகியவற்றுக்கு காரணமானதாகும்.
  9. தலாமஸ் :
    பெருமூளையின் உட்புற ஆழமான பகுதியான மெடுல்லாவைச் சூழ்ந்து தலாமஸ் அமைந்துள்ளது. உணர்வு மற்றும் இயக்க தூண்டல்களைக் கடத்தும் முக்கியமான கடத்து மையமாக தலாமஸ் செயல்படுகிறது.
  10. ஹைபோதலாமஸ் :
    ஹைபோ என்பதற்கு கீழாக என்று பொருள். இப்பொருளுக்கேற்ப இது தலாமஸின் கீழ்ப்பகுதியில் உள்ளது.
    இது உள்ளார்ந்த உணர்வுகளான பசி, தாகம், தூக்கம், வியர்வை, பாலுறவுக் கிளர்ச்சி, கோபம், பயம், ரத்த அழுத்தம், உடலின் நீர் சமநிலை பேணுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. இது உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் மையமாக செயல்படுகிறது.
  11. மேலும் இது பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பு ஹார்மோன் சுரப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. தலாமஸ் நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பு மண்டலத்தின் இணைப்பாக செயல்படுகிறது.

(2) நடுமூளை :

  1. இது தலாமஸிற்கும் பின் மூளைக்கும் இடையில் அமைந்துள்ளது. நடுமூளையின் பின்புறத்தில் நான்கு கோள வடிவிலான பகுதிகள் உள்ளன. இவை கார்ப்போரா குவாட்ரிஜெமினா என அழைக்கப்படும்.
  2. இவை பார்வை மற்றும் கேட்டலின் அனிச்சைச் செயல்களை கட்டுப்படுத்துகிறது.

(3) பின் மூளை :
பின் மூளையானது சிறுமூளை, பான்ஸ் மற்றும் முகுளம் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியது.

  1. சிறுமூளை : மூளையின் இரண்டாவது மிகப்பெரிய பகுதி சிறு மூளை ஆகும். சிறு மூளையானது மையப் பகுதியில் இரண்டு பக்கவாட்டு கதுப்புகளுடன் காணப்படும். இது இயக்கு தசைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உடல் சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
  2. பான்ஸ் : “பான்ஸ்” என்னும் இலத்தின் மொழி சொல்லுக்கு “இணைப்பு” என்று பொருள். இது சிறு மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் இணைப்பு பகுதியாக செயல்படுகிறது. இது சிறுமூளை, தண்டுவடம், நடுமூளை மற்றும் பெருமூளை ஆகியவற்றிற்கிடையே சமிக்ஞைகளை கடத்தும் மையமாக செயல்படுகிறது. இது சுவாசம் மற்றும் உறக்க சுழற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
  3. முகுளம் : மூளையின் கீழ்ப்பகுதியான முகுளம் தண்டுவடத்தையும் மூளையின் பிற பகுதிகளையும் இணைக்கிறது. இது இதயத் துடிப்பினை கட்டுப்படுத்தும் மையம், சுவாசத்தினை கட்டுப்படுத்தும் சுவாச மையம், இரத்தக் குழாய்களின் சுருக்கத்தினை கட்டுப்படுத்தும் மையம் ஆகிய மையங்களை உள்ளடக்கியது. மேலும் உமிழ்நீர் சுரப்பது மற்றும் வாந்தி எடுத்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது.

Question 3.
உனது கையை யாராவது சிறு ஊசி மூலம் குத்தும்போது நீ என்ன செய்வாய்? என்பதனையும் இந்த நரம்புத் தூண்டல் செல்லக்கூடிய பாதையை படம் வரைந்து பாகங்களுடன் விளக்குக.
விடை:

  1. என் கையை யாராவது சிறு ஊசி மூலம் குத்தும்போது, நான் உடனடியாக என்னுடைய கையை பாதுகாப்பாக விலக்கிக் கொள்வேன். இதற்குப் பெயர் அனிச்சை செயல்.
  2. பெரும்பாலான அனிச்சைச் செயல்கள் தண்டுவடத்தினால் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே இவை தண்டுவட அனிச்சைச் செயல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  3. நரம்பு செல்களுக்கிடையே நடைபெறும் தூண்டல் துலங்கல் அனிச்சைச் செயல் பாதைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அனிச்சை வில் எனப்படும்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 77
  4. ஊசி நம் கையை குத்தும்போது வலி என்னும் தூண்டல் உணர்வு அமைப்புகள், வலி உணர்வேற்பிகள் எனப்படும்.
  5. இந்த வலியானது உணர் நரம்பு செல்களில் தூண்டல்களை ஏற்படுத்துகிறது.
  6. தண்டுவடத்திற்கு இத்தகவல்கள் உணர்வு நரம்பு செல்கள் மூலம் கடத்தப்படுகிறது.
  7. தண்டுவடமானது இத்தூண்டல்களை பகுத்தறிந்து, உரிய துலங்கலை கடத்தும் மையத்தின் நரம்பு செல்கள் மூலமாக இயக்க நரம்பு செல்களுக்கு கடத்துகிறது.
  8. தண்டுவடம் பிறப்பிக்கும் கட்டளைகளை இயக்க நரம்பு செல்கள் நமது கைகளுக்கு எடுத்துச் செல்கிறது.
  9. நமது கையில் உள்ள தசை நார்கள் சுருங்குவதன் மூலம் நாம் நமது கையை ஊசி குத்தும் இடத்திலிருந்து உடனடியாக விலக்கிக் கொள்கிறோம்.
  10. மேலே உள்ள உதாரணத்தில் தசை நார்கள் என்பது வலியின் காரணமான விளைவினை வெளிப்படுத்தும் உறுப்பாகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 4.
தண்டுவடத்தின் அமைப்பினை விவரி.
விடை:

  1. தண்டுவடமானது குழல் போன்ற அமைப்பாக முதுகெலும்பின் உள்ளே முள்ளெலும்புத் தொடரின் நரம்புக் குழலுக்குள் அமைந்துள்ளது. மூளையைப் போன்று தண்டுவடமும் மூ வகை சவ்வுகளால் மூடப்பட்டுள்ளது.
  2. இது முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கி இடுப்பெலும்பின் கீழ்ப்புறம் வரை அமைந்துள்ளது. தண்டுவடத்தின் கீழ்ப்புறம் குறுகிய மெல்லிய நார்கள் இணைந்தது போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது “ஃபைலம் டெர்மினலே” எனப்படுகிறது.
  3. தண்டுவடத்தின் உட்புறம், தண்டுவடத் திரவத்தால் நிரம்பியுள்ள குழல் உள்ளது. இது மையக்குழல் எனப்படுகிறது.
  4. தண்டுவடத்தின் சாம்பல் நிறப் பகுதியானது ஆங்கில எழுத்தான “H” போன்று அமைந்துள்ளது. “H” எழுத்தின் மேற்பக்க முனைகள் ” வயிற்றுப்புறக் கொம்புகள்” என்றும், கீழ்ப்பக்க முனைகள் ”முதுகுப்புறக் கொம்புகள்” என்றும் குறிப்பிடப்படுகிறது.
  5. வயிற்றுப்புறக் கொம்புப்பகுதியில் கற்றையான நரம்பிழைகள் சேர்ந்து பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன. முகுதுப்புற கொம்பு பகுதிகளிலிருந்து வெளிப்புறமாக வரும் நரம்பிழைகள் எதிர்பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன.
  6. இவையிரண்டும் இணைந்து தண்டுவட நரம்புகளை உண்டாக்குகின்றன. வெளிப்புற வெண்மை நிற பகுதி நரம்பிழைக் கற்றைகளைக் கொண்டுள்ளது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 80
  7. தண்டு வடமானது, மூளைக்கும் பிற உணர்ச்சி உறுப்புகளுக்கும் இடையே உணர்வுத் தூண்டல்களையும், இயக்கத் தூண்டல்களையும், முன்னும் பின்னுமாக கடத்தக்கூடியது.
  8. இது உடலின் அனிச்சைச் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது.

Question 5.
ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு நரம்பு தூண்டல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன?
விடை:

  1. உணர் உறுப்புகளான கண், மூக்கு, தோல் போன்றவற்றின் மூலம், புறச் சூழ்நிலையிலிருந்து பெறப்படும் தூண்டல்கள் உணர்வேற்பிகளின் மூலம் உணரப்படுகின்றன.
  2. இத்தூண்டல்கள் மின்தூண்டல்களாக நியூரான்கள் வழி கடத்தப்படுகின்றன. மேலும் இத்தூண்டல்கள் டெண்ட்ரான் முனை வழியாக செல் உடலத்துக்குள் கடத்தப்பட்டு ஆக்ஸான் முனையை சென்றடைகின்றன.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 85
  3. இப்போது ஆக்ஸான் முனையானது நரம்புணர்வு கடத்திகளை (நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்) வெளியிடுகிறது. இவை நரம்பு இணைவுப் பகுதியில் பரவி அடுத்த நியூரானிலுள்ள டெண்ட்ரான்களை அடைந்து செல் உடலத்தில் மின் தூண்டல்களாக கடத்தப்படுகின்றன.
  4. இவ்வாறு தொடர்ந்து கடத்தப்பட்டு மின் தூண்டல்கள் மூளை அல்லது தண்டுவடத்தைச் சென்றடைகின்றன. இதற்குரிய துலங்கல்கள் (Response) மூளை அல்லது தண்டுவடத்திலிருந்து வெளிப்பட்டு குறிப்பிட்ட தசைகள் அல்லது சுரப்பிகளை சென்றடைகின்றன.
  5. ஒரு குறிப்பிட்ட நியூரான்களின் தொகுப்பில் நடைபெறும் நரம்பு தூண்டல்கள் செல்லும் பாதையானது, எப்பொழுதும் ஒரு நியூரானின் ஆக்சான் முனையிலிருந்து மற்றொரு நியூரானின் டெண்ட்ரான் முனைக்கு சினாப்ஸ் அல்லது சினாப்டிக் குமிழ் மூலம் கடத்தப்படுவதை சினாப்டிக் கடத்துதல் என்கிறோம்.
  6. நரம்புணர்வு கடத்திகள்: நரம்புணர்வு கடத்திகள் என்பவை ஒரு நரம்புச் செல்லின் ஆக்சான் முனையிலிருந்து மற்றொரு நரம்புச் செல்லின் டெண்டிரான் முனைக்கு அல்லது எந்த இலக்கு உறுப்புகளோடு இணைக்கப்பட்டுள்ளதோ அந்த குறிப்பிட்ட இலக்கு உறுப்புக்கு நரம்புத் தூண்டல்களை கடத்தும் வேதிப் பொருள்கள் (அசிட்டைல் கோலின்) ஆகும்.

Question 6.
நியூரான்கள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்குக. [PTA-6; Qy-2019] விடை:
அமைப்பின் அடிப்படையில் நியூரான்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  1. ஒருமுனை நியூரான்கள்: இவ்வகை நியூரான்களில் ஒருமுனை மட்டுமே சைட்டானில் இருந்து கிளைத்து காணப்படும். இதுவே ஆக்சான் மற்றும் டெண்டிரானாக செயல்படும்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 86
  2. இரு முனை நியூரான்கள்: சைட்டானிலிருந்து இரு நரம்புப் பகுதிகள் இருபுறமும் இணைக்கப்பட்டிருக்கும். ஒன்று ஆக்சானாகவும் மற்றொன்று டெண்டிரானாகவும் செயல்படும். ஒருமுனை நியூரான்கள்
  3. பலமுனை நியூரான்கள்: சைட்டானிலிருந்து பலமுனை நியூரான்கள் பலடென்ட்ரான்கள் கிளைத்து ஒரு முனையிலும், ஆக்சான் ஒரு முனையிலும் காணப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம் 87

Question 1.
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு ‘A’, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது ‘B’ என்னும் எலும்பு சட்டகத்துக்குள், ‘C’ என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. ‘A’யிலிருந்து, ‘D’ எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன. (PTA-6)

  1. ‘A’ என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
  2. அ) ‘B’ எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
    ஆ) ‘C’ எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
  3. ‘D’ என்பது எத்தனை இணை நரம்புகள்?

விடை:

  1. A என்பது தண்டுவடமாகும்.
  2. (அ) ‘B’ எனப்படும் எலும்புச் சட்டகத்தின் பெயர் நரம்புக் குழல்.
    (ஆ) ‘C’ எனப்படும் உறையானது மெனிஞ்சஸ் மூளை உறைகள்.
  3. ‘D’ என்பது 31 ஜோடி இணை நரம்புகள்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 15 நரம்பு மண்டலம்

Question 2.
நம் உடலில் அதிகமான அளவு காணப்படும் நீளமான ‘L’ செல்கள் ஆகும். செல்களில் நீண்ட கிளைத்த பகுதி ‘M’ என்றும், குறுகிய கிளைத்த பகுதிகள் N’ என்றும் அழைக்கப்படும். இரண்டு ‘L’ செல்களுக்கிடையேயான இடைவெளி பகுதி ‘O’ என்று அழைக்கப்படும். இந்த இடைவெளிப் பகுதியில் வெளியிடப்படும் வேதிப்பொருளான ‘P’ நரம்புத் தூண்டலை கடத்த உதவுகிறது.

  1. ‘L’ செல்களின் பெயரை கூறுக.
  2. ‘M’ மற்றும் ‘N’ என்பவை யாவை?
  3. ‘O’ என்னும் இடைவெளி பகுதியின் பெயர் என்ன?
  4. ‘P’ எனப்படும் வேதிப் பொருளின் பெயரை கூறுக.

விடை:

  1. ‘L’ செல் நியூரான் (அ) நரம்பு செல் ஆகும்.
  2. ‘M’ என்பது டெண்ட்ரைட்டுகள் ஆகும். ‘N’ என்பது ஆக்சான்.
  3. ‘O’ என்பது சினாப்ஸ்.
  4. ‘P’ எனப்படும் வேதிப்பொருள் நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் ஆகும்.

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
சிறுமூளையின் பணிகளை எழுதுக. [PTA-6]
விடை:
சிறுமூளை இயக்கு தசைகளின் இயக்கங்களைத் கட்டுப்படுத்துதல் மற்றும் உடல் சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.

அரசு தேர்வு வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
நியூரான்களின் மூன்று வகை அமைப்பை எழுதி அவை காணப்படும் இடத்தைக் கூறுக.(Sep.20)
விடை:
நியூரான்களின் மூன்று வகை அமைப்புகளும், அவை காணப்படும் இடங்களும் :
ஒரு முனை நியூரான்கள் : வளர் கருவின் ஆரம்ப நிலையில் மட்டும் காணப்படும். முதிர் உயிரிகளில் காணப்படாது. இரு முனை நியூரான்கள் : கண்ணின் விழித்திரையிலும், நாசித்துளையில் உள்ள ஆல்ஃபேக்டரி எபீதிலியத்திலும் காணப்படும்.
பல முனை நியூரான்கள் : ‘மூளையின் புறப்பரப்பான பெருமூளைப் புறணியில் காணப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 23 காட்சித் தொடர்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 23 காட்சித் தொடர்பு Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 23 காட்சித் தொடர்பு

10th Science Guide காட்சித் தொடர்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது? [PTA-3]
அ) Paint
ஆ) PDF
இ_ MS Word
ஈ) Scratch
விடை:
ஈ) Scratch

Question 2.
பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம் (GMQP-2019)
அ) கோப்புத் தொகுப்பு
ஆ) பெட்டி
இ) Paint
ஈ) ஸ்கேனர்
விடை:
அ) கோப்புத் தொகுப்பு

Samacheer Kalvi 10th Science Guide Chapter 23 காட்சித் தொடர்பு

Question 3.
நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது? [PTA-1]
அ) Script area
ஆ) Block palette
இ) Stage
ஈ) Sprite
விடை:
அ) Script area

Question 4.
நிரலாக்கத்தைத் தொகுக்கப் பயன்படுவது எது? [PTA-2]
அ) Inkscape
ஆ) Script editor
இ) Stage
ஈ) Sprite
விடை:
ஆ) Script editor

Question 5.
பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவது எது?
அ) Block palette
ஆ) Block menu
இ) Script area
ஈ) Sprite
விடை:
ஆ) Block menu

II. பொருத்துக.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 23 காட்சித் தொடர்பு 1
விடை :
1. நிரலாக்கப் பகுதி Script Area – உ. நிரல் உருவாக்கம் Build Scripts
2. கோப்புத் தொகுப்பு Folder – ஈ. கோப்பு சேமிப்பு Store files
3. ஸ்கிராச்சு Scratch – ஆ. அசைவூட்ட மென்பொருள் Animation software
4. ஆடை திருத்தி Costume editor – இ. நிரல் திருத்தி Edit programs
5. நோட்பேடு Notepad – அ. குறிப்புகளைத் தட்டச்சு செய்தல் Type notes

III. சுருக்கமாக விடையளி

Question 1.
ஸ்கிராச்சு (SCRATCH) என்றால் என்ன?
விடை:

  1. அசைவூட்டல்களையும் கேலிச்சித்திரங்களையும் விளையாட்டுக்களையும் எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருள் ஸ்கிராச்சு எனப்படும்.
  2. இது ஒரு காட்சி நிரல் மொழி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 23 காட்சித் தொடர்பு

Question 2.
திருத்தி (EDITOR) குறித்தும் அதன் வகைகள் குறித்தும் எழுது.
விடை:
ஸ்கிராச்சு சூழல் திருத்தி மூன்று பிரிவுகளைக் கொண்டது.

  1. ஸ்டேஜ் (Stage)
  2. ஸ்பிரைட் (Sprite)
  3. ஸ்கிரிப்ட் எடிட்டர் (Script editor)

(1) ஸ்டேஜ் (மேடை) :

  1. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ் என்பர்.
  2. இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும்.
  3. தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.

(2) ஸ்பிரைட் :

  1. ஸ்கிராச்சு சாளரத்தின் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களை ஸ்பிரைட்டுகள் என்பர்.
  2. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும்.
  3. ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

(3) ஸ்கிரிப்ட் எடிட்டர் (அ) காஸ்டியூம் (ஒப்பனை) எடிட்டர் :
நிரல்களையும் ஸ்பிரைட் படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும்.

Question 3.
மேடை (STAGE) என்றால் என்ன? (அல்லது) ஸ்கிராச்சு சூழல் திருத்தியில் மேடை (STAGE) என்பது பற்றி சிறு குறிப்பு எழுதுக. (Sep.20)
விடை:

  1. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ் என்பர்.
  2. இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும்.
  3. தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.

Question 4.
ஸ்பிரைட் (SPRITE) என்றால் என்ன?
விடை:

  1. ஸ்கிராச்சு சாளரத்தில் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களைக் (Characters) ஸ்பிரைட்கள் என்பர்.
  2. ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும்.
  3. ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.

PTA மாதிரி வினா-விடை
1. மதிப்பெணம்

Question 1.
கணிப்பொறியில் குறிப்புகளைச் சேகரித்து வைக்க …………. பயன்படுகிறது. [PTA-4]
அ) Notepad
ஆ) Paint
இ) Scanner
ஈ) Scratch
விடை:
அ) Notepad

Samacheer Kalvi 10th Science Guide Chapter 23 காட்சித் தொடர்பு

Question 2.
கணினியில் இடம்பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் ………… என்று குறிக்கப்படுகிறது. [PTA-6]
அ) கட்டளை
ஆ) கோப்புத் தொகுப்பு
இ கோப்பு
ஈ) Paint
விடை:
இ) கோப்பு