Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

6th Social Science Guide இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் …..
அ) புஷ்யமித்ரர்
ஆ) அக்னிமித்ரர்
இ) வாசுவேதர்
ஈ) நாராயணர்
விடை:
அ) புஷ்யமித்ரர்

Question 2.
சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர் ……..
அ) சிமுகா
ஆ) சதகர்ணி
இ) கன்கர்
ஈ) சிவாஸ்வதி
விடை:
அ) சிமுகா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 3.
குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ……..
அ) கனிஷ்கர்
ஆ) முதலாம் கட்பிசஸ்
இ) இரண்டாம் கட்பிசஸ்
ஈ) பன் – சியாங்
விடை:
அ) கனிஷ்கர்

Question 4.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் …. பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத் தோங்கியது.
அ) தக்காணம்
ஆ) வடமேற்கு இந்தியா
இ) பஞ்சாப்
ஈ) கங்கை பள்ளத்தாக்கு சமவெளி
விடை:
ஆ) வடமேற்கு இந்தியா

Question 5.
சாகர்கள் ……….. நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
அ) சிர்கப்
ஆ) தட்சசீலம்
இ) மதுரை
ஈ) புருஷபுரம்
விடை:
அ) சிர்கப்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

Question 1.
கூற்று : இந்தோ – கிரேக்கர்களின், இந்தோ – பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன. காரணம் : குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; ஆனால் காரணம் தவறு
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை:
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று 1: இந்தோ – கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
கூற்று 2 : இந்தோ – கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்து வைத்தனர்.
அ) கூற்று 1 தவறு, ஆனால் கூற்று 2 சரி
ஆ) கூற்று 2 தவறு, ஆனால் கூற்று 1 சரி
இ) இரண்டு கூற்றுகளுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு
விடை:
கூற்று 2 தவறு, ஆனால் கூற்று சரி

Question 3.
பொருந்தாததை வட்டமிடுக.
புஷ்யமித்ரர் வாசுதேவர் சிமுகா (கனிஷ்கர்)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 100
விடை:
கனிஷ்கர்

Question 4.
ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்
கடைசி சுங்க அரசர் யார்?
விடை:
தேவபூதி
சாகர்களில் மிக முக்கியமான, புகழ்பெற்ற அரசர் யார்?
விடை:
ருத்ரதாமன்
மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?
விடை:
வாசுதேவர்
கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
விடை:
புனித தாமஸ்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இந்தோ – பார்த்திய அரசை நிறுவியவர் ………
விடை:
அர்சாகஸ்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 2.
தெற்கே……… இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்
விடை:
சுசர்மன்

Question 3.
ஹாலா எழுதிய நூலின் பெயர் ……..
விடை:
சட்டசாய் (சப்தசதி)

Question 4.
………. கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.
விடை:
சுசர்மன்

Question 5.
குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ……… ஆகும்
விடை:
பெஷாவர் (புருஷபுரம்)

IV. சரியா தவறா என எழுதுக

Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்த து.
விடை:
சரி

Question 2.
காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்
விடை:
சரி

Question 3.
குந்தல சதகர்ணி, சாதவாகனவம்சத்தின், பத்தாவது அரசராவார்.
விடை:
தவறு

Question 4.
‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டது.
விடை:
சரி

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 80
விடை:
ஆ) 3, 4, 5, 1, 2

VI. பின்வருவனவற்றில் தவறான கூற்றைக் கண்டறிக

1. குஷாணர் வடமேற்குச் சீனாவில் வாழ்ந்த யூச்-சி பழங்குடி மக்களின் ஒரு பிரிவினரை உருவாக்கினார்.
2. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.
3. சாஞ்சியின் மாபெரும் ஸ்தூபியும் அதன் சுற்றுவேலியும் சுங்கர் காலத்தைச் சேர்ந்தவை.
4. பன்-சியாங் சீனத் தளபதியாவார். இவர் கனிஷ்கரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை:
2. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.

VII. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
கடைசி மௌரிய அரசருக்கு என்ன நேர்ந்தது?
விடை:

  • மௌரிய பேரரசின் கடைசி அரசர் பிரிகத்ரதா.
  • அவர் அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.

Question 2.
காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம்’ குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:

  • அக்னிமித்ரா காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னி மித்ரா நாடகத்தின் கதாநாயகன். (அக்னிமித்ரா புஷ்யமித்ர சுங்கரின் மகன்)
  • இந்நாடகம் மேலும் வசுமித்ரர் கிரேக்கர்களை வெற்றி கொண்டதைக் குறிப்பிடுகின்றது. (வசுமித்ரர் அக்னிமித்ரரின் மகன்)

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 3.
கன்வ வம்சத்தின் அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • வாசுதேவர்
  • பூமிமித்ரர்
  • நாராயணர்
  • சுசர்மன்

Question 4.
சாதவாகனர்களின் இலக்கியச் சாதனைகளை எடுத்து கூறுக.
விடை:

  • சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.
  • ஹாலா பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் புகழ் பெற்றிருந்தார்.

Question 5.
சாதவாகனர்களின் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?
விடை:

  • காந்தாரம்
  • மதுரா
  • அமராவதி
  • புத்தகயா
  • சாஞ்சி
  • பாகுத்

Question 6.
முதலாம் கட்செஸ்ஸின் சாதனைகைைளக் குறிப்பிடுக.
விடை:

  • முதலாம் கட்பிசஸ் குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி.
  • இவர் இந்தோ – கிரேக்க, இந்தோ – பார்த்திய அரசர்களை வெற்றி கொண்டார்.
  • இவர் பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார்.
  • இவர் தன்னுடைய ஆதிக்கத்தை காபூல், காந்தாரம் மற்றும் சிந்துவரை பரப்பினார்.

Question 7.
கனிஷ்கரின் அவையை அலங்கரித்த துறவிகள், அறிஞர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அஸ்வகோஷர்
  • வசுமித்ரா
  • நாகார்ஜூனா

VIII. கீழ்க் காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?
விடை:
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் :
வடமேற்கிலிருந்து சாகர்கள், சிந்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ – கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய – கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் படையெடுத்தனர்.

  • தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர்.
  • குப்தப்பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி அமைத்தனர்.
  • சேடிகள் (கலிங்கம்) தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 2.
புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.
விடை:

  • புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார்.
  • அவர் மேற்கு நோக்கி உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கி தனது அரசை விரிவு படுத்தினார்.
  • அவர் பாக்டீரிய அரசனின் படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்தார்.
  • அவர் கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் முறியடித்தார்.
  • மேலும் அவர் விதர்பாவையும் கைப்பற்றினார்.

Question 3.
கௌதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெழுதுக.
விடை:

  • கௌதமிபுத்திர சதகர்ணி சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர்
  • இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தவர் என அவரது அன்னையால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்கீர்த்தியில் கூறப்படுகிறார்.
  • பேரரசு மகாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
  • இவரது கப்பல்வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ஆந்திரர்களின் கடல்சார் திறன்களையும் கப்பல்படை வலிமையையும் உணர்த்துகின்றன.

Question 4.
கோண்டோபரித் அரசு வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • இந்தோ – பார்த்திய அரச அல்லது கோண்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது.
  • இந்தோ – பார்த்தியர் ஆட்சிப் பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • கோண்டோ பெர்னஸ் என்னும் பெயர் கிறித்துவ மறை பரப்பாளர் புனித தாமசுடன் தொடர்புடையதாகும்.
  • கிறிஸ்தவ மரபின்படி புனித தாமஸ் கோண்டோ பெர்னஸின் அரசவைக்கு வந்தார்.
  • புனித தாமஸ் கோண்டோ பெர்னஸை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றினார்.

Question 5.
இந்தோ -கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்
விடை:
மினான்டர் இந்தோ – கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர். ஏனெனில்

  • அவர் நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
  • அவரது நாணயங்கள் பரந்து விரிந்த காபூல் பள்ளத்தாக்கு மற்றும் சிந்துநதி தொடங்கி மேற்கு உத்திரப்பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைத்தன.
  • மிலிந்த பன்கா என்னும் பௌத்த நூல் அரசன் மிலிந்தாவுக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாகும் (மிலிந்தா = மினான்டர்)
  • அவர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றினார்.

Question 6.
சாகர்கள் யார்?
விடை:

  • நாடோடி இனத்தவரான சாகர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர்.
  • அவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்
  • அவர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சிந்தியர்கள்.
  • அவர்கள் சமஸ்கிருத மொழியில் சாகர்கள் என அறியப்பட்டனர்.
  • அவர்களால் இந்தியாவில் இந்தோ- கிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Question 7.
கனிஷ்கருடைய மதக்கொள்கை பற்றி எழுதுக.
விடை:

  • கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தர் ; அவரது பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு.
  • அவர் அஸ்வகோஷர் (பாடலிபுத்திர துறவி) என்பவரின் போதனைகளால் பௌத்தத்தைத் தழுவினார்.
  • அவர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்த போதிலும் அதே அளவு மகாயானத்தை ஆதரிப்பவராகவும் முன்னெடுத்துச் செல்பவராகவும் விளங்கினார்.
  • அரச மதமானதால் அவர் பல ஸ்தூபிகளையும் மடலாயங்களையும் கட்டினார் (மதுரா, தட்சசீலம் மற்றும் பேரரசின் இதர பகுதிகளில்)
  • அவர் புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்கு சமயப் பரப்பாளர்களை அனுப்பினார்.
  • அவர் நான்காவது பௌத்தப் பேரவையை குந்தலவனத்தில் (ஸ்ரீநகருக்கு அருகே) கூட்டினார்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.
விடை:

  • இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக்கலைக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளது.
  • கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்
  • மகாயான பௌத்தர்கள் அவர்களிடமிருந்து குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கற்றனர்.
  • அவர்கள் அதன்மூலம் குடைவரைச் சிற்ப கட்டடக்கலையில் திறன் பெற்றனர்.
  • கனிஷ்கருடைய காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைச் செதுக்குவது கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.

Question 2.
மௌரியருக்குப் பின் வந்த காலத்தில் தென்னிந்தியாவில் வணிக – வர்த்தக நிலை குறித்து எழுதவும்.
விடை:

  • இரண்டாம் கட்பிசஸ் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார்.
  • அவர் அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார்.
  • அவருடைய நாணயங்கள் சிலவற்றில் சிவபெருமானின் உருவங்களும் அரசருடைய பட்டயப் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளன.
  • நாணயங்களில் அவை கரோஷ்தி மொழியில் உள்ளன.

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. சாதவாகனர், குஷானர் ஆகியோர்களின் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் அமைந்து ள்ள இடங்களைப் பற்றி ஒரு ஆல்பம் (செருகேடு) தயார் செய்யவும்.
2. இந்தோ – கிரேக்கர், சாகர், குஷாணர் ஆகியோரின் பண்பாட்டுப் பங்களிப்பு குறித்து வகுப்பறையில் மாணவர்களை விவாதிக்க செய்யவும்.

XI. கட்டக வினா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 91

6th Social Science Guide இந்தியா – மௌரியருக்குப் பின்னர் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சி-யூ-கி எழுதிய சீன பௌத்த துறவியும் பயணியுமானவர்
அ) பாஹியான்
ஆ) யுவான் சுவாங்
இ) யூச் – சி
ஈ) பன் – சியாங்
விடை:
ஆ) யுவான் சுவாங்

Question 2.
புஷ்யமித்திரர் …… ஐ தனது தலைநகராக்கினார்
அ) பாடலிபுத்திரம்
ஆ) பெஷாவர்
இ) குந்தலவனம்
ஈ) பார்குத்
விடை:
அ) பாடலிபுத்திரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 3.
சுங்கர் காலத்தில் கற்களுக்குப் பதிலாக …….. பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது.
அ) மரம்
ஆ) இரும்பு
இ) தாமிரம்
ஈ) செங்கல்
விடை:
அ) மரம்

Question 4.
உலகப்புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் … பள்ளத்தாக்கில் இருந்தன
அ) பாமியான்
ஆ) கங்கை
இ) காஷ்மீர்
இ) கென்யான்
விடை:
அ) பாமியான்

Question 5.
…. படிப்படியாக ஏறுமுகம் பெற்று அரசவை மொழியானது
அ) சமஸ்கிருதம்
ஆ) கரோஷ்தி
இ) கன்ன டம்
ஈ) பிராகிருதம்
விடை:
அ) சமஸ்கிருதம்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப்பார்த்து சரியான விடையைக் கண்டுபிழக்கவம்.

Question 1.
கூற்று : பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற பகுதிகளை ஆக்கிரமித்தனர். காரணம்:மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று : மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர்
கூற்று II : கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்
அ) கூற்று 1 தவறு. ஆனால் கூற்று 2 சரி
ஆ) கூற்று 2 தவறு ஆனால் கூற்று 1 சரி
இ) இரண்டு கூற்றுகளுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு
விடை:
இ) இரண்டு கூற்றுகளுமே சரி

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
சிமுகாவைத் தொடர்ந்து பதவியேற்ற அவருடைய சகோதரர் ……..
விடை:
கிருஷ்ணர்

Question 2.
நின்ற கோலத்திலான புத்தரின் வெண்கலச்சிலை கண்டறியப்பட்ட இடம் …….
விடை:
ஒக்-யோ

Question 3.
இந்தியாவில் இந்தோ – கிரேக்கரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள் ………
விடை:
சாகர்கள்

Question 4.
சாக அரசர் மோகாவின் தலைநகர் ………
விடை:
சிர்காப்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

Question 5.
ருத்ரதாமனின் …… கல்வெட்டு தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பாகும்.
விடை:
ஜுனாகத் கிர்னார்

IV. சரியா தவறா

Question 1.
சதகர்னி, சிமுகாவின் சகோதரியின் மகன்
விடை:
சரி

Question 2.
நாக்காள் பதோம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லால் ஆன முத்திரை தாய்லாந்தில் – உள்ளது
விடை:
சரி

Question 3.
மாவோஸின் பெயர் மோரா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடை:
சரி

Question 4.
குஷாணர்கள் சத்ராபிகளை பிராந்திய ஆளுநர்களாக நியமித்தனர்.
விடை:
தவறு

Question 5.
குஷாண ஆட்சியாளர்கள் பௌத்தர்கள்.
விடை:
சரி

V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
கலிங்கத்தில் காரவேல அரசர் குறித்து குறிப்பு வரைக.
விடை:

  • அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர்
  • காரவேலர் பற்றிய செய்திகளை ஹதிகும்பா கல்வெட்டு கூறுகிறது.

Question 2.
சாதவாகனர்களின் ஆட்சிப்பகுதிகளை பெயரிடுக.
விடை:

  • மகாராஷ்டிரா
  • வடக்கு கொங்கன்
  • பெரார்
  • குஜராத்
  • கத்தியவார்
  • மாளவம்

Question 3.
சாகர்கள் எவ்வாறு இந்தியச் சமூகத்தினுள் இரண்டறக் கலந்து வாழ்ந்தனர்?
விடை:

  • சாகர்கள் இந்தியப் பெயர்களைச் சூடிக் கொண்டனர்.
  • அவர்கள் இந்திய மத நம்பிக்கைகளையும் ஏற்கத் தொடங்கினர்.

Question 4.
பௌத்தக் கல்வியும் பண்பாடும் எங்கே சென்றன?
விடை:
பௌத்தக் கல்வியும் பண்பாடும் தட்சசீலத்திலிருந்து சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்றன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர்

VI. கீழ்க்காண்பதற்கு விடையளிக்கவும்

Question 1.
கனிஷ்கருடைய படையெடுப்புகள் குறித்து எழுது.
விடை:

  • கனிஷ்கர் காஷ்மீரைக் கைப்பற்றி தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டார்.
  • அவர் மகதத்திற்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்றார்.
  • விரிந்து பரந்த தனது பேரரசின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதற்காக பார்த்திய அரசருக்கு எதிராகப் போர்தொடுத்தார்.
  • அவர் சீனத்தளபதி பன் – சியாங் என்பவரைத் தோற்கடித்து சீனர்கள் ஊடுருவலைத் தடுத்தார்.
  • அவரது பேரரசு காஷ்மீரிலிருந்து கீழே வாரணாசி வரையிலும் தெற்கே விந்திய மலைகள் வரையிலும் பரவியிருந்தது.
  • பேரரசில் காஸ்கர், யார்க்கண்ட் மற்றும் பாரசீகம், பார்த்தியா எல்லைகளும் அடங்கும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 2 இந்தியா – மௌரியருக்குப் பின்னர் 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

7th Social  Science Guide தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது?
அ) கடற்கரைக் கோவில்
ஆ) மண்டகப்பட்டு
இ) கைலாசநாதர் கோவில்
ஈ) வைகுந்தபெருமாள் கோவில்
விடை:
அ) கடற்கரைக் கோவில்

Question 2.
மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால். எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
அ) 1964
ஆ) 1994
இ) 1974
ஈ) 1984
விடை:
ஈ) 1984

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 3.
முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது?
அ) புடைப்புச் சிற்பங்கள்
ஆ) விமானங்கள்
இ) பிரகாரங்கள்
ஈ) கோபுரங்கள்
விடை:
ஆ) விமானங்கள்

Question 4.
அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது?
அ) திருக்குறுங்குடி
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) திருவில்லிபுத்தூர்
விடை:
அ) திருக்குறுங்குடி

Question 5.
வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார்?
அ) மகேந்திரவர்மன்
ஆ) நந்திவர்மன்
இ) ராஜசிம்மன்
ஈ) இரண்டாம் ராஜராஜன்
விடை:
ஆ) நந்திவர்மன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட குடைவரைக் கோவில் ………………… என்ற இடத்தில் உள்ளது.
விடை:
மண்டகப்பட்டு

Question 2.
முற்கால சோழர் கட்டடக்கலை ……………………. பாணியைப் பின்பற்றியது.
விடை:
செம்பியன் மகாதேவி

Question 3.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் …………………. ஆகும்.
விடை:
1000- கால் மண்டபம்

Question 4.
பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க ……………………. பெயர்பெற்றது.
விடை:
கோபுரங்கள்

Question 5.
விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் ………………… ஆகும்.
விடை:
மண்டபம்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 2

IV. தவறான இணையைக் காண்க

Question 1.
1. கிருஷ்ணாபுரம் கோவில் – திருநெல்வேலி
2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி
3. சேதுபதிகள் – மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள்
4. ஜலகண்டேஸ்வரர் கோவில் – வேலூர்
விடை:
2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 2.
கூற்று : இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
காரணம் : உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.

அ) காரணம், கூற்றை விளக்கவில்லை
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி
திருவில்லிபுத்தூர் அழகர்கோவில், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை
விடை:
பொருந்தாதது எதுவுமில்லை (ஐந்து கோவில்களிலும் விஜயநகர நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன)

Question 4.
பின்வரும் காலத்திற்குப் பெயரிடுக.
அ) கி.பி. 600-850
ஆ) கி.பி. 850-1100
இ) கி.பி. 1100-1350
ஈ) கி.பி. 1350-1600
விடைகள் :
அ) கி.பி. 600-850 : பல்லவர் காலம்
ஆ) கி.பி. 850-1100 : முற்காலச் சோழர் காலம்
இ) கி.பி. 1100-1350 : பிற்காலச் சோழர் காலம்
ஈ) கி.பி. 1350-1600 : விஜயநகர / நாயக்கர் காலம்

Question 5.
சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி
1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
2. பல்லவர் காலகட்டடக்கலைப்பாணியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
3. பின்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.
4. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.
விடை:
1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
3. பிள்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.

V. சரியா? தவறா?

Question 1.
இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்.
விடை:
சரி

Question 2.
முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின் சமகாலத்தவர் ஆவர்.
விடை:
தவறு

Question 3.
பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாய் திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள் ஆகும்.
விடை:
சரி

Question 4.
பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.
விடை:
சரி

Question 5.
தாதாபுரம் கோவிலில் விஜயநகர மற்றும் நாயக்கர் கால ஓவியங்களைக் காணமுடியும்.
விடை:
தவறு

VI. குறுகிய விடையளி

Question 1.
பஞ்சபாண்டவ இரதம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
பஞ்சபாண்டவ இரதம்:

  • தமிழ் திராவிட கோவில் கட்டடக் கலை மரபிற்கு ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவ இரதங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன (மகாபலிபுரம்).
  • அவை திரௌபதி இரதம், தர்ம ராஜா இரதம், பீமரதம், அர்ச்சுன இரதம், நகுல சகாதேவ இரதம் ஆகியவை.
  • அவை மாடக்குழிகளாலும், பூவணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
  • பிரமாண்டமான கலைப்படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி புடைப்புச் சிற்பம் ஏறத்தாழ 100 அடி நீளமும் 45 அடி உயரமும் கொண்ட கருங்கல் பாறையாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 2.
சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றிக் கூறுக
விடை:
சித்தன்னவாசல் ஓவியங்கள்:

  1. சித்தன்னவாசல் சமணத்துறவிகள் வாழ்ந்த குகையாகும். அவர்கள் குகைச் சுவர்களில் சாந்துபூசி, ஈரம் காய்வதற்கு முன்னரே ஓவியங்களைத் தீட்டியுள்ளனர்.
  2. இன்றைக்கு இருப்பனவற்றுள் தாமரைத் தடாக ஓவியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  3. மிகச் சிறந்த வர்ணங்களின் பயன்பாட்டிற்கும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ள நேர்த்திக்கும் – புகழ்பெற்றதாகும். தாமரை மலர்கள், குளமெங்கும் நீரில் பரவிக்கிடக்கும் இலைகள், யானை. எருமை, அன்னப்பறவை. பூக்களைப் பறிக்கும் மனிதன் ஆகிய ஓவியக்காட்சி மனங்களைக் கொள்ளை கொள்கின்றது.

Question 3.
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடுக.
விடை:
தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்கள்:

  • தஞ்சாவூர் பெரிய கோவில் ஒரு பெரிய கோவில் வளாகமாக இருந்தது.
  • அதன் விமானம் 216 அடிகள் உயரம் கொண்டதாகும். உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் ஒன்று. அதன் சிகரம் தட்சிண மேரு என்றழைக்கப்படுகிறது.
  • இங்குள்ள மிகப்பெரும் நந்தியின் சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும் (16 அடி நீளம் 13 அடி உயரம்).

Question 4.
இராமேஸ்வரம் கோவில் நம் கவனத்தை ஈர்க்கும் விதத்தைக் கூறுக.
விடை:
நம் கவனத்தை ஈர்க்கும் இராமேஸ்வரம் கோவில்:

  1. இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன. உலகிலேயே மிகவும் நீளமான பிரகாரங்கள் இவையே எனச் சொல்லப்படுகிறது.
  2. இது மூன்று பிரகாரச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது.
  3. வெளிப்பிரகாரம் (7 மீட்டர் உயரம், 120 மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு மேற்குப் பிரகாரங்கள்)
    • வடக்கு தெற்கு பிரகாரங்கள் (195 மீட்டர் நீளமுடையவை)
    • உட்புறப் பிரகாரங்கள் (மிகப்பழமையானவை)
  4. 1200க்கும் மேற்பட்ட தூண்கள் வெளிப்பிரகாரத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.

VII. விரிவான விடையளி

Question 1.
பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது விளக்குக. குடைவரைக் கோவில்களிலிருந்து கட்டுமானக் கோவில்களுக்கான மாற்றம் (பல்லவர் காலம்):
விடை:

  • பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது.
  • குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும் போது பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி செதுக்கப்படும். பின்னர் அப்பாறையே குடையப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்படும்.
  • பல்லவ அரசர் மகேந்திரவர்மன் குடைவரைக் கட்டடக் கலைக்கு முன்னோடியாவார். மண்டகப்பட்டு, முதல் குடைவரைக் கோவிலாகும்.
  • குடைவரைக் கோவிலின் முன்புறம் அமைந்துள்ள இரண்டு தூண்கள் அக்கோவிலைத் தாங்கி நிற்கும்.
  • கி.பி.700 க்குப் பின் குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது. சிற்பிகள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டானது. கடற்கரைக் கோவில் தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கோவில்.
  • ஒரே பாறையில் கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் – கோவில்கள் பாறைப் பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன.
  • காஞ்சி கைலாசநாதர் கோவில் (ராஜசிம்மன்), வைகுண்டப்பெருமாள் கோவில் (இரண்டாம் நந்திவர்மன்) ஆகியவை எடுத்துக்காட்டுகள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 2.
விஜயநகர , நாயக்கர் கால கட்டடக்கலையானது பல்லவர் மற்றும் பிற்கால சோழர் கட்டடக்கலையிலிருந்து எவ்விதம் வேறுபடுகிறது என விவாதிக்கவும்.
விடை:
விஜயநகர / நாயக்கர் கால கட்டடக்கலை:
விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஒரு புதிய வடிவிலான கட்டடக்கலைப் பாணி ‘மண்டபங்கள்’ உருவானது.

15 முதல் 17ம் நூற்றாண்டு வரையிலான விஜயநகர, நாயக்க கட்டடக்கலையின் முக்கியக் கூறுகள் அழகூட்டப்பட்ட மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவ அளவிலான சிலைகள், கோபுரங்கள், பிரகாரங்கள், இசைத் தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள் ஆகும்.

கோவில்களோடு சேர்ந்து தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன. கோவில்களுக்கான நுழைவாயில்கள் நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் கட்டப்பட்டன. சிற்பங்களோடு கூடிய மாடக்குழிகளை அமைக்கும் பழக்கம் நாயக்கர் காலத்திலும் தொடர்ந்தது.

பல்லவர்கள் மற்றும் பிற்காலச் சோழர்கள் காலக் கட்டடக்கலை :
பல்லவர் ஆட்சிக்காலத்தில் குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும் போது பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி செதுக்கப்பட்டு பின்னர் அப்பாறையே குடையப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்படும்.

குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை கி.பி. 700க்குப் பின்னர் மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது.

ஒரே பாறையில் ஒரு கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் கோவில்கள் பாறைப்பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன. இரதங்களின் வெளிப்பக்கச் சுவர்கள் மாடக்குழிகளாலும் பூவணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பிற்காலச் சோழர்கள் காலத்தில் தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் அமைந்துள்ள இரண்டு உன்னதமான கோவில்கள் சோழர்களின் கட்டடக்கலை முதிர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன.

தஞ்சாவூர் பெரிய கோவில் (கி.பி.1009) ராஜராஜன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

பிற்காலச் சோழர்கள் காலம் பொலிவுமிக்க கோபுரங்களுக்காகப் புகழ்பெற்றது.

VIII. உயர்சிந்தனை வினா

Question 1.
திராவிடக் கட்டடக்கலை உள்நாட்டில் தோன்றியதை விளக்குக.
விடை:
உள் நாட்டில் தோன்றிய திராவிடக் கட்டடக்கலை :

  • திராவிடக் கட்டடக்கலை நம்மண்ணில் பிறந்ததாகும். காலப்போக்கில் பரிணாமச் செயல்பாட்டின் வழியாய் அக்கலை மேம்பாடு அடைந்தது.
  • மகாபலிபுரத்திலுள்ள ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலத்தில் முந்திய குடைவரைக் கோவில்களே (குகைக்கோவில்கள்) தமிழ் திராவிடக் கட்டடக்கலையின் எடுத்துக்காட்டுகளாகும்.
  • கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய கோவில்கள் மரத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அவை இயற்கை சக்திகளால் அழிவுக்கு உள்ளாகி இருக்கலாம்.
  • தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்து கட்டங்களாக நடைபெற்றுள்ளது.
    • பல்லவர் காலம் (கி.பி 600 – 850)
    • முற்காலச் சோழர்கள் காலம் (கி.பி 850 – 1100)
    • பிற்காலச் சோழர்கள் காலம் (கி.பி. 1100 – 1350)
    • விஜயநகர / நாயக்கர் காலம் (கி.பி. 1350 – 1600)
    • நவீன காலம் (கி.பி. 1600க்கு பின்ன ர்)

Question 2.
கோயில் கலை வளர்ச்சியானது நாயக்கர் காலத்தில் சிறந்தோங்கியது என்பதை தெளிவுபடுத்துக.
விடை:
நாயக்கர் காலத்தில் சிறந்தோங்கிய கோயில் கலை வளர்ச்சி:

  • நாயக்கர்கள் காலத்தில் (விஜயநகர காலம்) மண்டபங்களிலுள்ள ஒற்றைக்கல் தூண்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன.
  • தூண்களில் குதிரைகள், சிங்கங்கள் மற்றும் கடவுளர்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இம்மண்டபங்களுள் மிகவும் புகழ்பெற்றது மதுரை கோவிலில் அமைந்துள்ள புதுமண்டபம்.
  • 15 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கட்டடக் கலையின் முக்கியக் கூறுகள் அழகூட்டப்பட்ட மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவ அளவிலான சிலைகள், கோபுரங்கள், பிரகாரங்கள், இசைத் தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள் ஆகும்.
  • தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன. நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் நுழைவாயில்கள் கட்டப்பட்டன.
  • பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களை அமைக்கும் முறை அதிகரித்தது. இவற்றை நாம் அழகியநம்பி கோவில், கோபாலகிருஷ்ண கோவில், ஆதிநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில் ஆகியவற்றில் காணலாம்.
  • மண்டபக் கட்டடக்கலைக்கு 1000-கால் மண்டபம், ரதிமண்டபம் (திருக்குறுங்குடி, நாங்குநேரி) ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.
  • நாயக்கர் கால ஓவியங்கள் வரதராஜ பெருமாள் கோவில், கூடலழகர் கோவில் மற்றும் திருவில்லிபுத்தூர், அழகர் கோவில், திருவண்ணாமலை மற்றும் திருவரங்கம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களில் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் நாயக்க ஆட்சியாளர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட கோவில்களுக்குச் சென்று கட்டுமானத்திலும் சிற்பங்களிலும் அவை ஒன்றோடொன்று எவ்விதம் வேறுபடுகின்றன என்பதைக் கண்டறியவும்.

7th Social  Science Guide தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
……………………. கோவில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது.
அ) காஞ்சி கைலாசநாதர்
ஆ) நெல்லையப்பர்
இ) மீனாட்சியம்மன்
ஈ) வைகுண்டப் பெருமாள்
விடை:
ஈ) வைகுண்டப் பெருமாள்

Question 2.
முற்கால ………………….. பல்லவர்களின் சமகாலத்தவராவர்.
அ) சேரர்கள்
ஆ) சோழர்கள்
இ) பாண்டியர்கள்
ஈ) நாயக்கர்கள்
விடை:
இ) பாண்டியர்கள்

Question 3.
…………………….. சமணத்துறவிகள் வாழ்ந்த குகையாகும்.
அ) சித்தன்னவாசல்
ஆ) திருமலாபுரம்
இ) மதுரை
ஈ) கழுகுமலை
விடை:
அ) சித்தன்னவாசல்

Question 4.
முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலை ……………………. பாணியைப் பின்பற்றி அமைந்ததாகும்.
அ) விஜயாலயன்
ஆ) செம்பியன் மகாதேவி
இ) இராஜராஜன்
ஈ) இராஜேந்திரன்
விடை:
ஆ) செம்பியன் மகாதேவி

Question 5.
தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவில் …………………… ல் கட்டி முடிக்கப்பட்டது.
அ) 1009
ஆ) 1019
இ) 1029
ஈ) 1039
விடை:
அ) 1009

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………………………. கட்டடக்கலை நம் மண்ணில் பிறந்ததாகும்.
விடை:
திராவிட

Question 2.
பாண்டியர் காலத்துச் சிவன் கோவில்களின் ……………. தாய்ப் பாறையிலிருந்து செதுக்கப்பட்டவையாகும்.
விடை:
லிங்கங்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 3.
கி.பி. 850ல் …………………. காலத்தில் சோழர்கள் முக்கியத்துவம் பெறத் துவங்கினார்கள்.
விடை:
விஜயாலய சோழன்

Question 4.
மதுரைநாயக்க அரசர்களின் சிற்றரசர்களான ………………….. இராமநாதபுரத்தை ஆண்ட னர்.
விடை:
சேதுபதிகள்

Question 5.
விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் பெரும்பாலும் …………………… கதைக் காட்சிகளைக் கொண்டுள்ளன.
விடை:
ராமாயணக்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 3

IV. தவறான இணையைக் காண்க

Question 1.
1. மகேந்திரவர்மன் – முற்காலச் சோழர்கள் காலம்
2. இராஜசிம்மன் – பல்லவர்கள் காலம்
3. இராஜராஜன் II – பிற்காலச் சோழர்கள் காலம்
4. விஜயாலயன் – பாண்டியர்கள் காலம்
விடை:
1. மகேந்திரவர்மன் – முற்காலச் சோழர்கள் காலம், 4. விஜயாலயன் – பாண்டியர்கள் காலம்

Question 2.
கூற்று : கி.பி. 1009ல் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்டது.
காரணம் : இது ராஜேந்திர சோழன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

அ) காரணம், கூற்றை விளக்கவில்லை
ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி
இராஜராஜன், இராஜேந்திரன், இராஜராஜன் II, செம்பியன் மகாதேவி, இராஜசிம்மன். விஜயாலயன்
விடை:
இராஜசிம்மன்

Question 4.
பின்வரும் காலத்தின் சிறப்புக்கூறுகளைப் பெயரிடுக.
அ) பல்லவர்கள் காலம்
ஆ) முற்காலச் சோழர்கள் காலம்
இ) பிற்காலச் சோழர்கள் காலம்
ஈ) விஜயநகர / நாயக்கர் காலம்
விடைகள்:
அ) பல்லவர்கள் காலம் : பாறைச் சிற்பங்கள்
ஆ) முற்காலச் சோழர்கள் காலம் : விமானங்கள்
இ) பிற்காலச் சோழர்கள் காலம் : கோபுரங்கள்
ஈ) விஜயநகர நாயக்கர் காலம் : மண்டபங்கள்

Question 5.
சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி
1. பாண்டியர் காலச் சிலைகள் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
2. தாராசுரம் கோவிலை இராஜேந்திர சோழன் கட்டுவித்தார்.
3. கட்டுமானக் கோவில்கள் சிற்பிகள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்த அதிக வாய்ப்பினைக் கொடுக்கவில்லை.
4. சித்தன்னவாசல் சமணத்துறவிகள் வாழ்ந்த குகையல்ல.
விடை:
1. பாண்டியர் காலச் சிலைகள் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

V. சரியா? தவறா?

Question 1.
வைகுண்டப் பெருமாள் கோவிலிலுள்ள கருவறைகளில் ஒன்று சிவபெருமானுக்கும் மற்றொன்று விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளது.
விடை:
சரி

Question 2.
தாதாபுரம் கோவில் திண்டிவனத்துக்கு அருகேயுள்ளது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 3.
சித்தன்னவாசல் பௌத்த துறவிகள் வாழ்ந்த குகையாகும்.
விடை:
தவறு

Question 4.
இந்திரனின் யானை வழிபட்ட கடவுள் ஐராவதீஸ்வரர்.
விடை:
சரி

Question 5.
வெளிப்புறத்தில் கட்டப்பட்ட தூண்களுடன் கூடிய மண்டபங்கள் பொது நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்டவை.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
பல்லவர் காலத்துப் பாண்டியர் சிற்பங்களை விவரி.
விடை:
பல்லவர் காலத்துப் பாண்டியர் சிற்பங்கள்:

  • பாறை குடைவரைக் கோவில்களில் குகைகளின் சுவர்கள் கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
  • கட்டுமானக் கோவில்களைப் பொருத்தமட்டிலும் கருவறையின் சுவர்களில் அலங்கார வேலைப்பாடுகள் காணப்படவில்லை. மாறாகக் கட்டுமானங்களிலும் தூண்களிலும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இச்சிற்பங்கள் கம்பீரமாகவும், அகன்ற தோள்களோடும் ஒடிசலான உடல்வாகுடனும் அழகான ஆபரணங்களோடும் உயரமான கிரீடங்களோடும் காட்சியளிக்கின்றன.

Question 2.
பிள்ளையார்பட்டி கோவில் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
பிள்ளையார்பட்டி கோவில்:

  • பிற்காலப் பாண்டியர்களின் பங்களிப்புக்கு சான்றாக 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிள்ளையார்பட்டியிலுள்ள (காரைக்குடிக்கு அருகில்) குடைவரைக் கோவில் அமைந்துள்ளது.
  • சிற்பங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றுக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • நுழைவாயிலைப் பார்த்தவண்ணம் அழகான கணேசனின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.
  • தேசிவிநாயகம் என குகைக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கைகளைக் கொண்டுள்ள கணபதியின் தும்பிக்கை வலது புறமாகத் திரும்பியுள்ளது.

Question 3.
முற்கால சோழர்கள் கட்டடக்கலை பற்றி குறிப்பு வரைக.
விடை:
முற்கால சோழர்கள் கட்டடக்கலை:

  1. இக்கால கோவில் கட்டடக்கலை செம்பியன் மகாதேவி பாணியைப் பின்பற்றி அமைந்தது.
  2. கோவில்களில் அதிக எண்ணிக்கையில் தேவகோஷ்டங்கள் என்ற மாடக்குழிகள் இருந்தால் அதை செம்பியன் மகாதேவி பாணி என வகைப்படுத்தலாம்.
  3. எ.கா: திருப்புறம்பியம் (செம்பியன் மகாதேவியால் மறுவடிவாக்கம் செய்யப்பட்டது) கோவில்.

Question 4.
விஜயநகர / நாயக்கர் கால சிறப்பித்துக் சொல்ல வேண்டிய மிகப்பெரும் கலைப் படைப்புகள் யாவை?
விடை:
சிறப்பான மாபெரும் கலைப் படைப்புகள்:

  1. ஜலகண்டேஸ்வரர் கோவில் (வேலூர்)
  2. தாடிக் கொம்பில் உள்ள கோவில் (திண்டுக்கல்)
  3. கிருஷ்ணாபுரத்தில் உள்ள கோவில் (திருநெல்வேலி)
  4. பெரிய கோவிலுக்குள் அமைந்த சுப்பிரமணியசுவாமி கோவில் (தஞ்சாவூர்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

Question 5.
கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்களைப் பெயரிடுக.
விடை:
கடவுளர்களின் புடைப்புச் சிற்பங்கள்:

  • சிவன்
  • விஷ்ணு
  • பிரம்மன்
  • பார்வதி
  • கணபதி
  • சுப்பிரமணியன்
  • தட்சிணாமூர்த்தி

VII. விரிவான விடையளி

Question 1.
பல்லவர் காலத்துப் பாண்டியர் கோவில்கள் – விவாதிக்க.
விடை:
பல்லவர் காலத்துப் பாண்டியர் கோவில்கள்:
முற்காலப் பாண்டியர்கள் பல்லவர்களின் சமகாலத்தவராவர்.

பாண்டியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குகைக்கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவைகளில் முக்கியமானவை மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி (சிவன், விஷ்ணு, பிரம்மாவுக்குப் படைத்தளிக்கப்பட்டவை).

சிவலிங்கம் கருவறையின் மையத்தில் நிறுவப்பட்டுள்ளது. நீர் வெளியே செல்ல கால்வாயும் உள்ளது.

தூண்கள் வெவ்வேறு அளவுகளைக் கொண்ட மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அலங்கார வேலைப்பாடுகள் ஒரே மாதிரியாக இல்லை. புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

பாறைகுடைவரைக் கோவில்களும் கட்டுமானக் கோவில்களும் சிறப்புமிக்க அம்சங்களாகும். கழுகுமலை வெட்டுவான் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பாண்டியர் கட்டடக்கலை பாணியை பறைசாற்றுகின்றன.

சிற்பங்கள் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றன. சித்தன்னவாசல் (புதுக்கோட்டை) மற்றும் திருமலாபுரம் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் உன்னதமான ஒவியங்கள் உள்ளன. ஓவியக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

Question 2.
தென்னிந்தியாவில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி பற்றி உனக்குத் தெரிந்ததை எழுது.
விடை:
கோவில் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சி:
தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்து கட்டங்களாக நடைபெற்றுள்ளது. அவை பின்வருமாறு.

  • முதல் கட்டம் – பல்லவர் காலம் கி.பி. 600 – 850
  • இரண்டாம் கட்டம் – முற்காலச் சோழர்கள் காலம் கி.பி. 850 – 1100
  • மூன்றாம் கட்டம் – பிற்காலச் சோழர்கள் காலம் கி.பி. 1100 – 1350
  • நான்காம் கட்டம் – விஜயநகர நாயக்கர் காலம் கி.பி. 1350 – 1600
  • ஐந்தாம் கட்டம் – நவீன காலம் கி.பி. 1600க்குப் பின் திராவிடக் கட்டடக்கலை நம் மண்ணில் பிறந்ததாகும். காலப்போக்கில் பரிணாமச் செயல்பாட்டின் வழியாய் அக்கலை மேம்பாடு அடைந்தது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 2 தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

7th Social  Science Guide புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனில் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?
அ) பொய்கை ஆழ்வார்
ஆ) பெரியாழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆண்டாள்
விடை:
ஆ) பெரியாழ்வார்

Question 2.
அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?
அ) இராமானுஜர்
ஆ) இராமாநந்தர்
இ) நம்மாழ்வார்
ஈ) ஆதி சங்கரர்
விடை:
ஈ) ஆதி சங்கார்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 3.
பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக வட இந்தியாவில் பரவச் செய்தவர் யார்?
அ) வல்லபாச்சாரியார்
ஆ) இராமானுஜர்
இ) இராமாநந்தர்
ஈ) சூர்தாஸ்
விடை:
இ) இராமாநந்தர்

Question 4.
சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?
அ) மொய்னுதீன் சிஸ்டி
ஆ) சுரவார்டி
இ) அமீர் குஸ்ரு ஸ்ரு
ஈ) நிஜாமுதின் அவுலியா
விடை:
அ) மொய்னுதீன் சிஸ்டி

Question 5.
சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரைக் கருதுகின்றனர்?
அ) லேனா
ஆ) குரு அமீர் சிங்
இ) குரு நானக்
ஈ) குரு கோவிந் சிங்
விடை:
இ) குரு நாதால்,

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர் …………………
விடை:
விஷ்ணு சித்தர்

Question 2.
சீக்கியர்களின் புனித நூல் ……………… ஆகும்.
விடை:
குரு கிரந்சாகிப்

Question 3.
மீராபாய் ………………. என்பாரின் சீடராவார்
விடை:
ரவிதாஸ்

Question 4.
……………….. என்பாரின் தத்துவம் விசிஷ்டாத்வைதம் என அறியப்படுகிறது.
விடை:
இராமானுஜர்

Question 5.
தர்பார் சாகிப் குருத்வாரா பாகிஸ்தானின் ……………… என்ற இடத்தில் அமைந்துள்ளது.
விடை:
கர்தார்பூர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 2

IV. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
துக்காராம் – வங்காளம்
சைதன்யதேவா – மகாராஷ்டிரா
பிரம்ம சூத்திரம் – வல்லபாச்சாரியார்
குருத்வாராக்கள் – சீக்கியர்கள்
விடை:
1. ஆண்டாள் – திருவில்லிபுத்தூர்
5. குருத்வாராக்கள் – சீக்கியர்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 2.
கூற்று : குரு கோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குரு கிரந்த் சாகிப் குருவாகக் கருதப்பட்டது.
காரணம் : குரு கிரந்த் சாகிப் நூலைத் தொகுத்தவர் குரு கோவிந் சிங்.

அ) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.
ஆ) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று. காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு.

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார்.
விடை:
ஆண்டாள்

V. சரியா? தவறா?

Question 1.
இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிஸம் காரணமாயிற்று.
விடை:
சரி

Question 2.
இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார்.
விடை:
சரி

Question 3.
குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.
விடை:
சரி

Question 4.
கடவுளை உய்த்துணர உணர்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர்.
விடை:
சரி

Question 5.
அடிப்படை தமிழ் சைவப் புனித நூல்கள் 12 ஆகும்.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
திருமுறை பற்றி நீவிர் அறிவது என்ன?
விடை:
திருமுறை:

  • திருமுறை சைவப் புனித நூல்களின் அடிப்படை.
  • 63 நாயன்மார்களில் ஒருவரான நம்பி ஆண்டார் நம்பி (கி.பி.1000) திருமுறையைத் தொகுத்தார் (நாயன்மார்களின் பாடல்கள் தொகுப்பு).
  • திருமுறை 12 நூல்களைக் கொண்டுள்ளது (11 நூல்கள் நம்பி ஆண்டார் நம்பி, 12வது நூல் சேக்கிழார் – பெரிய புராணம்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 2.
நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களில் முக்கியமானோர் யாவர்?
விடை:
நாயன்மார்கள்:

  • நாயன்மார்கள் 63 பேராவர் (சைவ அடியார்கள்)
  • ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் (மும்மூர்த்திகள்) முக்கியமானவர்கள்

Question 3.
சீக்கிய மதத்தைத் தோற்றுவிக்க குருநானக் எவ்விதம் உதவினார்?
விடை:
சீக்கிய மதம்:

  • குருநானக்கின் போதனைகளே புதிதாக நிறுவப்பட்ட சீக்கிய மதத்தின் மூலக்கோட்பாடாக அமைந்தது.
  • 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் நிறுவினார்.
  • நானக் வேதச் சடங்குகள், சாதிப்பாகுபாடுகள் ஆகியவை மீது வெறுப்புக் கொண்டிருந்தார்.

Question 4.
பண்டரிபுரம் விதோபா கோவிலுக்கு, துக்காரம் எவ்விதம் பணியாற்றினார்?
விடை:
துக்காராமும் விதோபா கோவிலும்:

  • துக்காராம் (கவிஞர், திருத்தொண்டர் – மகாராஷ்டிரா) அவர் இயற்றிய ஆன்மீகப் பாடல்களுக்காகவே நன்கு அறியப்பட்டிருந்தார்.
  • அவருடைய பாடல்களான அபங்கா (அல்லது) கீர்த்தனைகள் விதோபா குறித்து இயற்றப்பட்டது (விஷ்ணுவின் அவதாரம்),
  • விதோபா கோவில் பந்தர்பூரில் உள்ளது. (சோலாப்பூர் மாவட்டம், மகாராஷ்டிரா)

Question 5.
கபீரின் சமயக்கருத்துக்கள் கீழ்நிலை சாதிகளைச் சார்ந்தோருக்கு ஏற்புடையதாயிற்று என்பதை முன்னிலைப்படுத்து.
விடை:
கபீரின் சமயக்கருத்துக்கள்:
பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தன. ஆனால் கபீர் கடவுள் ஒருவரே என்றும், வடிவமற்றவர் என்றும் நம்பினார்.

கபீர் சமயம், சாதி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளை அவர் கண்டனம் செய்தார். பொருளற்ற சடங்கு முறைகளையும் அவர் கண்டனம் செய்தார்.

VII. விரிவான விடையளி

Question 1.
தென்னிந்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளில் பக்தி இயக்கத்திற்கு சான்றோர் பலரது பங்களிப்பினைப் பற்றிக் கூறு.
விடை:
பக்தி இயக்கத்திற்கு சான்றோர் பலரின் பங்களிப்பு:
கடவுளின் மீதான முழுமையான பக்தியே மனிதனை வாழ்வின் இடர்ப்பாடுகளிலிருந்து காத்து முக்தியை அருளுமென பக்தி இயக்கங்களை நிறுவிய சான்றோர்கள் கருதினர்.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் அல்லது வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி தென்னிந்தியாவில் தொடங்கிற்று. ஆண், பெண் கடவுளர்களின் பெயர்களைத் தொடர்ந்து ஓதுதல். கடவுளர்களைப் புகழ்ந்து பாடுதல், மதச் சின்னங்களைச் சுமந்து செல்லுதல், கடவுளுடன் தொடர்புடைய புனிதத்தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவை உள்ளடங்கும்.

தனக்குச் சொந்தமான கடவுளை வழிபடும் பக்தனுக்கும் அக்கடவுளுக்கும் இடையிலான பரஸ்பர உணர்வு ரீதியிலான பற்றுதலுக்கும் அன்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது. சூபி தத்துவமும் இதே போன்ற கருத்தையே போதித்தது.

ஆழ்வார்கள் (வைணவ பக்தி அடியார்கள்), நாயன்மார்கள் (சிவனை வழிபடும் சைவ அடியார்கள்), ஆதிசங்கரர் (அத்வைதம்), இராமானுஜர் (விசிஷ்டாத்வைதம்) ஆகியோர் தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தைப் பரப்பிய சான்றோர் ஆவர்.

இராமாநந்தர், வல்லபாச்சாரியார், சூர்தாஸ், மீராபாய், சைதன்யதேவா, துளசிதாசர் மற்றும் துக்காராம் ஆகியோர் வடஇந்தியாவில் பக்தி இயக்கம் பரவக் காரணமான சான்றோர்கள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 2.
சூபியிஸம் என்றால் என்ன? அது இந்தியாவில் எவ்விதம் தடம் பதித்தது?
விடை:
சூபியிஸம் மற்றும் இந்தியாவில் அதன் தடம் பதிப்பு:
சூபியிஸம்:

  • சூபி எனும் சொல் சுப்’ என்பதிலிருந்து தோன்றியதாகும். அதன் பொருள் கம்பளி ஆகும். சூபிக்கள் சொர சொரப்பான முரட்டுக் கம்பளியாலான உடைகளை அணிந்ததால் சூபிக்கள் என அழைக்கப்பட்டனர்.
  • சூபியிஸம் அடிப்படையில் இஸ்லாமியத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அது இந்து, பௌத்த சமயக் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தது.

இந்தியாவில் தடம் பதித்தல்:

  • பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் டெல்லி சுல்தானிய ஆட்சியின்போது சூபியிஸம் முக்கியத்துவம் பெற்றது.
  • இந்தியக் கருத்தாக்கங்களான யோகப்பயிற்சி, தோற்ற அமைவுகள், இந்திய இசை, நடனம் ஆகியவற்றை கைக்கொண்டது.
  • மொய்னுதீன் சிஸ்டி, சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கினார். நிஜாமுதீன் அவுலியா டெல்லியின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த எண்ணற்ற நபர்களால் பின்பற்றப்பட்டார்.
  • பிர்தௌசி அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் பீகாரில் மட்டுமே காணப்பட்டன. அது சுரவார்டியின் ஒரு கிளைப் பிரிவாகும். (சுரவார்டி அமைப்பு தோற்றுவித்தவர் அப்துல்-வகித் அபு நஜிப் எனும் ஈரானிய சூபி).

Question 3.
இந்திய சமூகத்தில் பக்தி இயக்கம் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தியது?
விடை:
இந்திய சமூகத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்:

  • இந்து சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டப்பட்டது. அதனால் அது இஸ்லாமின் தாக்குதல்களிலிருந்து காக்கப்பட்டது.
  • பக்தி இயக்கச் சான்றோர்களால் இஸ்லாமியத் தத்துவக்கூறுகள் வலியுறுத்தப்பட்டு அமைதியும், இணக்கமும் வளர்ந்தன (தத்துவக் கூறுகள் கடவுள் ஒருமைப்பாடு மற்றும் உலக சகோதரத்துவம்).
  • சாமானிய மக்களின் மொழியைப் பயன்படுத்தி பக்தி இயக்கம் சாமானிய மக்களின் இயக்கமானது.
  • இந்திய மொழிகள் வளர்வதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பிராந்திய மொழிகளின் இலக்கியச் செயல்பாடுகளுக்கு உந்து சக்தியாய் அமைந்தது.
  • இந்து அரசுகளின் அரசர்கள் சரிவைச் சந்தித்த சமஸ்கிருத மொழிக்கு ஆதரவு நல்கினார்.
  • தமிழ் மட்டுமே பக்தி இயக்கக் காலப் பகுதியில் உயிர்த்துடிப்புடன் விளங்கிய ஒரே பழமையான மொழி. பக்தி இயக்கக் கோட்பாடுகளால் அன்றாட வாழ்க்கையைச் சித்தரித்த தமிழ் இலக்கியம், சமயங்களுக்கும், சமய இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது.
  • சாதி முறையும் சமூக ஏற்றதாழ்வுகளும் விமர்சனங்களுக்கு உள்ளாயின.

VIII. உயர்சிந்தனை வினா

Question 1.
இஸ்லாத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி வேத இந்து மதத்தை பக்தி இயக்கம் பாதுகாத்தது என்பதை ஆராய்க.
விடை:
வேத இந்து மதத்தை பக்தி இயக்கம் பாதுகாத்தல் :
இந்து. இஸ்லாம் ஆகிய இரு சமயங்களிலும் அறிவுநிலை கடந்த சமய இயக்கங்கள் செயல்பட்டன. தங்களுடைய போதனைகளில் வெவ்வேறு சமயங்கள் சார்ந்த கூறுகளையும் சேர்த்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை .

ஹரிதாசரின் கூற்று “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே”.

பிற சமய கடுந்தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புலவர்களாகவும் ஞானிகளாகவும் இருந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகநிலைகளைச் சாடியதோடு, ஆண், பெண் சமத்துவத்தையும் முன்னிறுத்தினர்.

ஆதி சங்கரர் பக்தி இயக்கத்தின் மீது கவனம் கொள்ளாது வேத மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டார்.

சமூக, சமத்துவக் கருத்துகளைப் பரப்பிய இராமானுஜர் கோவில்களில் நுழைவதற்கான சாதியக் கட்டுபாடுகளை கண்டனம் செய்தார்.

கபீர், குருநானக் (புதிய சமயப்பிரிவுகள்) மற்றும் வங்காளத்தில் சைதன்ய தேவா ஆகியோர் சிறப்பாய் செயல்பட்டனர்.

இராமாநந்தர், வல்லபாச்சாரியார் (தெலுங்கு), சூர்தாஸ் (ஆக்ரா), மீராபாய் (மேவார்), துளசிதாசர், துக்காராம் ஆகியோரும் பக்தி இயக்கத்தைப் பரப்பியதன் மூலம் வேத இந்து மதத்தைப் பாதுகாத்தனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழகத்தின் பக்தி இயக்கப் பெரியோர் வாழ்ந்த பகுதிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடைய பகுதிகளுக்கு நேரில் செல்க.

7th Social  Science Guide புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பகவத் கீதையில் ……………… சிறந்தது எனக் கூறப்பட்டுள்ளது.
அ) பக்திமார்க்கம்
ஆ) ஞானமார்க்கம்
இ) கர்மா மார்க்கம்
ஈ) நிர்வாணம்
விடை:
அ) பக்திமார்க்கம்

Question 2.
அத்வைதத்தைப் போதித்தவர் ……………
அ) ஆதி சங்கரர்
ஆ) இராமானுஜர்
இ) இராமாநந்தர்
ஈ) சைதன்யர்
விடை:
அ) ஆதி சங்கரர்

Question 3.
17 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த கவிஞரான திருத்தொண்டர் ………………..
அ) சூர்தாசர்
ஆ) துளசிதாசர்
இ) துக்காராம்
ஈ) ரவிதாஸ்
விடை:
இ) துக்காராம்

Question 4.
சிஸ்டி …………………… இயற்கை எய்தினார்.
அ) கர்தார்பூர்
ஆ) குர்தாஸ்பூர்
இ) லாகூர்
ஈ) ஆஜ்மீ ர்
விடை:
ஈ) ஆஜ்மீர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 5.
குருநானக் ……………….. என்ற தனது சீடரைத் தனக்குப் பின்னரான குருவாக நியமித்தார்.
அ) ஆதிக்கிரந்தம்
ஆ) லேனா
இ) குரு கோவிந் சிங்
ஈ) குரு அர்ஜுன் சிங்
விடை:
ஆ) லேனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கபீரின் பாடல்கள் ………………. மொழியில் எழுதப்பட்டவை.
விடை:
போஜ்புரி

Question 2.
2019 குருநானக்கின் ……………….. வது பிறந்தநாளைச் சிறப்பிக்கிறது.
விடை:
550

Question 3.
சூபியிஸம் ………………. கடுமையான ஒழுக்க விதிகளை மறுத்தது.
விடை:
உலேமாக்களின்

Question 4.
வங்காளத்தில் பக்தி இயக்கம் ………………… உடன் தொடர்புடையது.
விடை:
சைதன்ய தேவா

Question 5.
பெரியாழ்வார் ஆண்டாளை கோவில் ………………….. கண்டெடுத்தார்.
விடை:
துளசித் தோட்டத்தில்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 3

IV. சரியான இணையைத் / இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆதி சங்கரர் – சங்கராச்சாரியார்
இராமானுஜர் – அத்வைதம்
திவ்விய பிரபந்தம் – நாயன்மார்கள்
கபீர் – சீக்கியர்
கிர்பான் – குறுவாள்
விடை:
1. ஆதி சங்கரர் – சங்கராச்சாரியார்
5. கிர்பான் – குறுவாள்

Question 2.
கூற்று : கபீர் வாரணாசியை இருப்பிடமாகக் கொண்ட இராமாநந்தரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார்.
காரணம் : அவர் கடவுள்களையும், பெண் கடவுள்களையும் நம்பினார். –

அ) காரணம், கூற்றின் சரியான விளக்கமல்ல.
ஆ) காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
சிஸ்டி, பிர்தௌசி, சுரவார்டி, கால்சா
விடை:
கால்சா

V. சரியா? தவறா?

Question 1.
சிஸ்டி அமைப்பை பின்பற்றியவர்களுள் கவிஞர் அமீர் குஸ்ருவும் ஒருவர்.
விடை:
சரி

Question 2.
தர்மசாலைகள் குருத்வாராக்கள் ஆயின.
விடை:
சரி

Question 3.
உயிர் துடிப்புடன் விளங்கிய ஒரே பழமையான மொழி சமஸ்கிருதம் மட்டுமே.
விடை:
தவறு

Question 4.
மீராபாய் அவருடைய கீர்த்தனைகள் மூலம் பிரபலமானார்.
விடை:
தவறு

Question 5.
ஆதிசங்கரர் பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவினார்.
விடை:
சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
வைணவத்தின் இரு பிரிவுகள் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
வைணவத்தின் இரு பிரிவுகள் வடகலை வைணவம் மற்றும் தென்கலை வைணவம்.

வடகலை வைணவம்:
காஞ்சிபுரத்தில் வடகலை வைணம் செழித்தோங்கியது. அது புகழ்பெற்ற சமஸ்கிருதக் கல்வி மையம். வடகலையின் முக்கியத்துவம் சமஸ்கிருத வேத நூல்கள்.

தென்கலை வைணவம்:
திருவரங்கத்தை தென்கலை வைணவம் மையமாகக் கொண்டிருந்தது. தென்கலையின் முக்கியத்துவம் தமிழ்மொழியில் எழுதப்பட்ட (12 ஆழ்வார்கள்) திவ்விய பிரபந்தம்.

Question 2.
வல்லபாச்சாரியார் குறித்து ஒரு சிறுகுறிப்பு வரைக.
விடை:
வல்லபாச்சாரியார்:
பார் வல்லபாச்சாரியார் ஒரு தெலுங்கு தத்துவஞானி. அவர் மதுராவுக்கு அருகே கோவர்த்தன் குன்றுகளில் கிருஷ்ண பகவானுக்கு ஒரு கோவிலை அமைத்தார்.

Question 3.
கால்சாவின் உறுப்பினர் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய ஐந்து தனித்தன்மைகள் யாவை?
விடை:
கால்சா உறுப்பினரின் ஐந்து தனித்தன்மைகள்:

  • கேஷ் – (வெட்டப்படாத முடி)
  • கன்கா – (சிகைக்கோல்)
  • கிர்பான் – (குறுவாள்)
  • கடா – (இரும்புக் காப்பு)
  • கச்சேரா – (கீழ்ப்பகுதி உள்ளாடை)

Question 4.
ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தொடங்கிய வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி எவற்றை உள்ளடக்கியதாக அமைந்தது.
விடை:
தமிழகத்தில் தொடங்கிய வழிபாட்டு முறைகள் (ஏழாம் நூற்றாண்டு):

  • ஆண், பெண் கடவுளர்களின் பெயர்களைத் தொடர்ந்து ஓதுதல்.
  • கடவுளர்களைப் புகழ்ந்து பாடுதல்.
  • மதச் சின்னங்களை அணிந்து கொள்தல் (அல்லது) அடையாளச் சின்னங்களைச் சுமந்து செல்தல்.
  • கடவுளுடன் தொடர்புடைய புனிதத்தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்தல்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 5.
சமய இயக்கங்களில் பிற சமயங்கள் சார்ந்த கூறுகளைச் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டப்பட்டதா?
விடை:
இல்லை . எவ்விதத் தயக்கமும் காட்டப்படவில்லை .
இந்து, இஸ்லாம் இரு சமயங்களிலும் அறிவுநிலை கடந்த சமய இயக்கங்கள் செயல்பட்டன. தங்களுடைய போதனைகளில் வெவ்வேறு சமயங்கள் சார்ந்த கூறுகளையும் சேர்த்துக் கொள்வதில் தயக்கம் காட்டவில்லை.

எடுத்துக்காட்டு: “இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே” என்பது ஹரிதாசர் கூற்று.

VII. விரிவான விடையளி

Question 1.
“ஆதி சங்கரரின் தத்துவமும் அவரின் பணிகளும்” – விவரி.
விடை:

  • ஆதிசங்கரர் (சங்கராச்சாரியார்) அத்வைதம் எனும் தத்துவத்தைப் போதித்தார்.
  • “ஞானத்தைப் பெறுவதன் வழியாக ஜீவாத்மா பரமாத்மாவுடன் (பிரம்மா) இணையும்” என்பதே அத்வைதத்தின் சாரமாகும்.
  • சங்கரர் பத்ரிநாத், பூரி, துவாரகா, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவினார். அவை கற்றுக் கொள்ளுதல் மற்றும் வழிபாட்டு மையங்களாகத் திகழ்ந்தன.
  • பக்தி இயக்கத்தின் மீது கவனம் கொள்ளாத அவர் வேத மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆர்வம் கொண்டார்.
  • பிரம்ம சூத்திரம் (வேதாந்தப் பள்ளியின் அடிப்படை நூல்) நூலுக்கு அவர் எழுதிய உரையே அவர் பணிகளில் சாலச் சிறந்தது. அவர் உபநிடதங்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

Question 2.
“குருநானக்” வரலாற்றைச் சுருக்கமாக எழுது
விடை:
குருநானக்:

  • குருநானக் 1469ல் லாகூருக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்தார்.
  • செய்வதில் ஆர்வம் காட்டினார்.
  • இயல்பான உலக வாழ்க்கையில் அவரை அவருடைய பெற்றோர்கள் ஈடுபடுத்துவதில் அக்கறை கொண்ட போதிலும், அவர் ஆன்மீகத்தில் மனச்சாய்வு கொண்டிருந்தார்.
  • நானக் பல புனிதத் தலங்களுக்குச் சென்று வந்த பின் இறுதியில் லாகூருக்கு அருகிலுள்ள கர்தார்பூரில் குடியேறினார். 1539 அங்கே இயற்கை எய்தினார்.
  • இந்திய அரசால் நானக் கோவிலையும் (குர்தாஸ்பூர்) குருத்வாரா தர்பார் சாகிப்பையும் (பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர்) இணைக்கும் நடைபாதை ஒன்றை 2019ல் அவருடைய

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

Question 3.
பக்தி இயக்கத்திற்கு கபீரின் பங்களிப்பு – விளக்குக.
விடை:
கபீர் மற்றும் பக்தி இயக்கம் :
கபீர் ஓர் இஸ்லாமியராக இருந்தபோதிலும், இராமாநந்தரின் (வாரணாசியை இருப்பிடமாகக் கொண்ட அடியார்) செல்வாக்கிற்கு ஆட்பட்டார்.

சில இந்து சமயக் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அவர் இந்து இஸ்லாம் சமயங்களிடையே ஒத்திசைவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார்.

அவரின் கருத்துக்கள் இந்து சமூகத்தில் குறிப்பாக கீழ்நிலை சாதிகளைச் சார்ந்தோர்க்கு ஏற்புடையதாய் அமைந்தன. கபீர் சமயம், சாதி, செல்வம் அடிப்படையிலான பாகுபாடுகளை கண்டனம் செய்தார்.

அவர் கடவுள் ஒருவரே, அவர் வடிவமற்றவர் என்று நம்பினார். பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தன. கபீர் பொருளற்ற சடங்கு முறைகளையும் எதிர்த்தார்.

அவருடைய பாடல்கள் போஜ்புரி மொழியோடு உருது கலந்து எழுதப்பட்டவை. (கிரந்தவளி மற்றும் பைஜக் அவருடைய கவிதைத் தொகுப்புகள்)

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 History Chapter 1 புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும் 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

6th Social Science Guide பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ……
அ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஆ) சேரன் செங்குட்டுவன்
இ) இளங்கோ அடிகள்
ஈ) முடத்திருமாறன்
விடை:
ஆ) சேரன் செங்குட்டுவன்

Question 2.
கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
அ) பாண்டியர்
ஆ) சோழர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
விடை:
இ) பல்லவர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 3.
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ……. ஆவர்.
அ) சாத வாகனர்கள்
ஆ) சோழர்கள்
இ) களப்பிரர்கள்
ஈ) பல்லவர்கள்
விடை:
இ) களப்பிரர்கள்

Question 4.
சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு ………
அ) மண்ட லம்
ஆ) நாடு
இ) ஊர்
ஈ) பட்டினம்
விடை:
இ) வர்

Question 5.
குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
அ) கொள்ளையடித்தல்
ஆ) ஆநிரை மேய்த்தல்
இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
ஈ) வேளாண்மை
விடை:
இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

II. கூற்றை வாசிக்கவும், சரியான விடையை (✓) செய்யவும்

Question 1.
கூற்று : புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.
காரணம் : சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; காரணம் தவறு
ஈ. கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?
விடை:
1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்
2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.
அ. 1 மட்டும்
ஆ. 1 மற்றும் 3 மட்டும்
இ. 2 மட்டும்
விடை:
ஆ. 1 மற்றும் 3 மட்டும்

Question 3.
பண்டைக்காலத்தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது.
அ. ஊர்<நாடு < கூற்றம் < மண்டலம்
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
இ. ஊர் < மண்டலம் < கூற்றம் < நாடு
ஈ. நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்
விடை:
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 4.
அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 80
விடை:
அ) 3, 2, 1

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வெண்ணி போரில் வெற்றி பெற்றது …………
விடை:
கரிகால் வளவன்

Question 2.
சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ……….
விடை:
தொல் காப்பியம்

Question 3.
காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ……… கட்டினார்
விடை:
கரிகாலன்

Question 4.
படைத்தலைவர் ………… என அழைக்கப்பட்டார்
விடை: தானைத்தலைவன் Question 5. நில வரி ……. என அழைக்கப்பட்டது விடை:
இறை

IV. சரியா /தவறா

Question 1.
சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர் விடை:
தவறு

Question 2.
சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.
விடை:
தவறு

Question 3.
கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர் ஆவார்
விடை:
சரி

Question 4. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்.
விடை:
தவறு

Question 5.
கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டன.
விடை:
தவறு

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 90
விடை:
அ. பாண்டியர்
ஆ. சேரர்
இ. சோழர்
ஈ) வேளிர்

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
பண்டைக்காலத் தமிழகத்தின் வரலாற்றை மறு கட்டுமானம் செய்ய உதவும் இரு இலக்கிய சான்றுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தொல்காப்பியம்
  • எட்டுத் தொகை
  • பத்துப்பாட்டு

Question 2.
நடுகல் அல்லது வீரக்கல் என்றால் என்ன?
விடை:
பண்டைத் தமிழகத்தில் போரில் மரணமடைந்த வீரர்களின் நினைவைப் போற்ற நடப்பட்டவை நடுகற்கள் (வீரக்கற்கள்)

Question 3.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து திணைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • குறிஞ்சி – முல்லை மருதம்
  • நெய்தல் – பாலை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 4.
சங்க காலத்தோடு தொடர்புடைய இரு தொல்லியல் ஆய்விடங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அரிக்கமேடு
  • ஆதிச்ச நல்லூர்

Question 5.
கடையெழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • பாரி
  • காரி
  • ஓரி
  • பேகன்
  • ஆய்
  • அதியமான்
  • நள்ளி

Question 6.
களப்பிரர் காலத்தைச் சேர்ந்த ஏதேனும் மூன்று தமிழ் இலக்கியங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • தமிழ் நாவலர் சரிதை
  • யாப்பெருங்கலம்
  • பெரியபுராணம்

VII. கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்

Question 1.
சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
விடை:

  • சங்ககாலப் பெண்கள் கற்றறிந்தவர்கள், அறிவுக் கூர்மையுடையவர்கள்
  • அரிய நூல்களைக் கொடுத்துச் சென்றுள்ள நாற்பது பெண் புலவர்கள் வாழ்ந்தனர்.
  • சொந்த விருப்பத்தைச் சார்ந்து திருமணம் அமைந்தது. கற்பு மிகச் சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது.
  • பெற்றோரின் சொத்துக்களில் மகனுக்கும், மகளுக்கும் சமமான பங்கு உண்டு.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்படுகிறான். நிறுவுக.
விடை:

  • கரிகாலன் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் பதினொரு வேளிர் தலைவர்களின் கூட்டுப்படைகளை வெண்ணி போரில் தோற்கடித்தார். காடுகளை விளைநிலங்களாக மாற்றினார்.
  • வேளாண்மை மேம்பாட்டிற்காக காவிரியில் கல்லணை கட்டினார்.
  • புகார் துறைமுகம் மூலம் நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பட்டினப்பாலை நூல் மூலம் தெரிகிறது. எனவே கரிகாலன் சோழர்களின் மிகச்சிறந்த அரசனாகக் கருதப்படுகிறான்.

Question 2.
களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக.
விடை:

  • தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரிய புராணம் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கியச் சான்றுகள் களப்பிரர்கள் ஆட்சி குறித்தவை.
  • சீவகசிந்தாமணி, குண்டலகேசி, இரண்டும் களப்பிரர்கள் காலத்தவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பல இயற்றப்பட்டன. .
  • இக்காலத்தில்தான் சமணமும், பௌத்தமும் முக்கியத்துவம் பெற்றன.
  • சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து முறை உருவானது.
  • வணிகமும் வர்த்தகமும் செழித்தோங்கின. எனவே களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் அல்ல.

X. வாழ்க்கைத்திறன் (மாணவர்களுக்கானது)

1. பல்வகை நிலப்பரப்புக் காட்சிப் படங்களைச் சேகரித்து, ஒட்டி, அவை எந்தத் திணைப் பகுதியைச் சேர்ந்தவை என்பதைக் கண்டுபிடிக்கவும். அங்கு விளையும் முக்கியப் பயிர்கள், வாழும் மக்களின் தொழில் ஆகியவை பற்றி எழுதவும்.

XI. கட்டக வினாக்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 91
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 92

6th Social Science Guide பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் கூற்றுப்படி தமிழ்மொழி …….. மொழியின் அளவிற்குப் பழமையானது
அ) சீன
ஆ) கிரேக்க
இ) இலத்தீன்
ஈ) ஆங்கிலம்
விடை:
இ) இலத்தீன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Question 2.
சிலப்பதிகார காவியப் பாத்திரம்
அ) கண்ண கி
ஆ) மணிமேகலை
இ) சீதை
ஈ) பாஞ்சாலி
விடை:
அ) கண்ண கி

Question 3.
பாண்டியர் துறைமுகம்
அ) புகார்
ஆ) கொற்கை
இ) முசிறி
ஈ) தொண்டி
விடை:
ஆ) கொற்கை

Question 4.
இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிடப்படுவது
அ) முசிறி
ஆ) மதுரை
இ) வஞ்சி
ஈ) புகார்
விடை:
அ) முசிறி

II. கூற்றை வாசிக்கவும். சரியான விடையை (✓) செய்யவும்

கூற்று : களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்ல.
காரணம் : இலக்கியச் சான்றுகள், புதிய எழுத்துமுறை, வணிகம் வர்த்தகம் செழிப்பு பற்றி தெரிகிறது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை அல்ல?

1. பாண்டியர் அத்திப்பூ மாலை சூடினர்
2. குறிஞ்சி மக்களின் வழிபடு தெய்வம் இந்திரன்
3. இயற்கை வரலாறு நூலின் ஆசிரியர் இளைய பிளினி
அ) 1, 2 மற்றும் 3
ஆ) 2 மற்றும் 3
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 3
விடை:
அ) 1, 2 மற்றும் 3

III. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
‘மென்புலம்’ – ‘வன்புலம்’ குறிப்பு தருக.
விடை:
மென்புலம் :

  • மருத நிலம் ‘மென்புலம்’ (நன்செய்) என அழைக்கப்பட்டது. நெல்லும் கரும்பும் விளைந்தன.
    வன்புலம் :
  • நெய்தல் தவிர மற்றவை ‘வன்புலம் ‘ (புன்செய்) என அழைக்கப்பட்டன. தானியங்களும் பருப்புவடை ககளும் விளைந்தன.

Question 2.
அணிகலன்கள் செய்யப் பயன்பட்டவை யாவை?
விடை:

  • தங்கம்
  • வெள்ளி
  • முத்துக்கள்
  • நவரத்தினக் கற்கள்
  • சங்கு
  • பாசிமணிகள்

Question 3.
முக்கிய இறக்குமதிப் பொருட்கள் யாவை?
விடை:

  • புஷ்பராகம்
  • ஈயம்
  • திராட்சை மது
  • கண்ணாடி
  • குதிரைகள்

Question 4.
இந்தியப் பட்டு குறித்து நீ அறிவன யாவை?
விடை:

  • இந்திய வணிகர்கள் ரோமப் பேரரசுக்கு விநியோகம் செய்த பட்டு மிக முக்கியமானது.
  • ரோமப் பேரரசர் ஆரிலியன் இந்தப் பட்டானது எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது என்றார்.

Question 5.
அரசுரிமைச் சின்னங்கள் யாவை?
விடை:

  • செங்கோல்
  • முரசு
  • வெண்கொற்றக் குடை

IV. கீழ்க்காண்பதற்கு விடையளிக்கவும்

Question 1.
சங்ககால மத நம்பிக்கைகள், சமூக பிரிவுகள் பற்றி விவரி.
விடை:

  • மக்களின் முதன்மைக் கடவுள் சேயோன் அல்லது முருகன்.
  • வழிபடப்பட்ட ஏனைய கடவுளர் சிவன், மாயோன் (விஷ்ணு, இந்திரன். வருணன், கொற்றவை ஆ கியோராவர்.
  • நடுகல் வழிபாடும் வழக்கத்தில் இருந்தது.
  • பௌத்தமும் சமணமும் கூட உடனிருந்தன.
  • வடக்கே வளர்ந்திருந்ததைப் போன்று தமிழகத்தில் சாதிமுறை வளர்ந்திருக்கவில்லை.
  • ஒப்பீட்டளவில் வர்ணாசிரம முறை திராவிடத் தென்னாட்டில் பின்னர் வந்ததே.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் சங்க காலம் 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

7th Social  Science Guide ஊடகமும் ஜனநாயகமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?
அ) வானொலி
ஆ) தொலைக்காட்சி
இ) செய்தித்தாள்
ஈ) இணையதளம்
விடை:
இ) செய்தித்தாள்

Question 2.
கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது ___________
அ) இதழ்க ள்
ஆ) அறிக்கைகள்
இ) நாளிதழ்கள்
ஈ) வானொலி
விடை:
ஈ) வானொலி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 3.
உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம் _____________.
அ) தட்டச்சு
ஆ) தொலைக்காட்சி
இ) தொலைப்பேசி
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை:
ஆ) தொலைக்காட்சி

Question 4.
வெகுஜன ஊடகம் என்பது ___________
அ) தட்டச்சு
ஆ) தொலைக்காட்சி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) அ மற்றும் ஆ

Question 5.
ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்
அ) நிறைய பணம் ஈட்ட
ஆ) நிறுவனத்தை ஊக்கப்படுத்த
இ) நடுநிலையான தகவலை தருவதற்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) நடுநிலையான தகவலை தருவதற்கு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது __________.
விடை:
ஊடகம்

Question 2.
ஒவ்வொரு தனிமனிதனும் ___________ ஆகும்
விடை:
ஊடகத்தின் வெளிப்பாடு

Question 3.
அச்சு இயந்திரம் __________ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது
விடை:
ஜோஹன்னஸ் குட்டன்பெர்க்

Question 4.
நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு ____________ ஆகும்.
விடை:
நெறிமுறை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 5.
இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் ___________.
விடை:
ஆகாசவானி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 2

IV. கீழ்க்காணும் வாக்கிங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.
காரணம் : பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
தவறான ஒன்றை கண்டுபிடிக்க
அ) செய்தித்தாள்கள்
ஆ) நாளிதழ்கள்
இ) அறிக்கைகள்
ஈ) கீச்சகம்
உ) சுவராட்டிகள்
விடை:
ஈ) கீச்சகம்

Question 3.
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்
அ) ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சாதனம் ஆகும்
ஆ) ஊடகம் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனமாகும்
இ) ஊடகம் மக்களிடம் பொது கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது
ஈ) ஊடகத்திற்கு எந்த பொறுப்பும் கிடையாது

i) அ, ஆ மற்றும் இ சரி
ii) அ, ஆ மற்றும் ஈ சரி
iii) ஆ, இ மற்றும் சரி
iv) அ, ஆ மற்றும் ஈ சரி
விடை:
i) அ, ஆ மற்றும் இ சரி

V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
ஊடகம் என்றால் என்ன?
விடை:

  • ஊடகம் என்பது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக் கூடிய சாதனமாகும்.
  • ஊடகம் என்பது அச்சு , ஒலி, ஒளி என அனைத்துவகை பரப்பு சாதனங்களையும் உள்ளடக்கியதே ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 2.
சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?
விடை:

  1. சட்டமன்றத்தில் பேச்சுவார்த்தை முடிந்த பின் பத்திரிக்கையாளர்கள் அமைச்சர்களால் வரவழைக்கப்பட்டு தேவையான தகவல்களை வெளியிடுவர்.
  2. பத்திரிக்கையாளர்களும், ஊடகமும், கூட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வர்.
  3. இறுதியாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் தகவல்கள் வெளியிடப்படும்.

Question 3.
உள்ளூர் ஊடகத்தின் முக்கியத்துவம் யாவை?
விடை:
உள்ளூர் ஊடகம் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மக்களின் நலனுக்காக செயல்படுவதாகும்.

Question 4.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் நிரூபிக்கவும்.
விடை:

  • ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.
  • நாட்டின் தொலை தூர பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது.
  • ஊடகம் தகவல்கள் மற்றும் அறிவை வழங்கும் மிக முக்கிய சாதனமாக செயல்படுகிறது.

Question 5.
ஊடகத்தின் ஏதாவது இரண்டு பொறுப்புகளைக் கூறுக.
விடை:

  • அரசு சிறப்பாக செயல்படுவதற்கு விழிப்பான மற்றும் சுதந்திரமான ஊடகம் மிகவும் அவசியமாகும்.
  • நம்பகத்தன்மையான தகவல்களை மக்களிடம் வழங்குவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும்

Question 1.
ஊடகத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:

  1. குறுகிய தொடர்பு ஊடகம் – கேபிள் தொலைக்காட்சி, நேரடி அஞ்சல், கருத்தரங்கு
  2. தொலைத் தொடர்பு ஊடகம் – திரைப்படங்கள் தொலைக்காட்சி, வானொலி
  3. அச்சு ஊடகம் – செய்தித்தாள்கள், இதழ்கள், பத்திரிக்கைகள், புத்தகங்கள். சுவரொட்டிகள், அறிக்கைகள்
  4. இணைய ஊடகம் – கூகுள் இணைய தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள்
  5. சமூக ஊடகம் – ட்விட்டர், முகநூல், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 2.
ஜனநாயகத்தில் ஊடகம் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது?
விடை:

  • ஊடகமானது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும்.
  • ஜனநாயக சமுதாயத்தில் பொதுமக்களின் கருத்துக்களை செயல்படுத்தும் சக்தியாகும்.
  • ஜனநாயக மதிப்புகளை பலப்படுத்துவதோடு மக்களுக்கு அறிவையும், வலிமையும் அளிக்கிறது.
  • வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • அரசின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலம் அரசைப் பற்றி மக்கள் அறிந்துகொள்கிறார்கள்.
  • நடப்பு செய்தி பற்றிய விவாதத்தை ஏற்படுத்துவதனால் ஒரே பிரச்சினைகளுக்குப் பல்வேறு கருத்துக்களை பெற முடிகிறது.
  • அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை நினைவூட்டுகிறது.
  • ஊடகம் அரசிற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக செயல்படுகிறது.
  • ஊடகம் இல்லாத ஜனநாயகம் என்பது சக்கரம் இல்லாத வாகனத்திற்கு ஒப்பாகும்.

Question 3.
ஊடகத்தினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை:

  • ஊடகம் தகவல் மற்றும் தொழில்நுட்ப உலகில் வெகுஜன மக்களுக்கு தகவல்களை அளிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
  • ஜனநாயகத்தில் ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தொழில்நுட்ப மாற்றத்தினால் மக்கள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.
  • ஊடகம் இந்த உலகை சிறியதாகவும் மக்களுக்கு மிக நெருக்கமாகவும் மாற்றியுள்ளது.

VII. உயர் சிந்தனை வினா

Question 1.
ஊடகம் அவசியமா? ஏன்?
விடை:

  • ஆம், ஊடகம் நமக்கு அவசியமானது.
  • ஊடகம் உள்ளூர் அளவிலும், உலக அளவிலும் தகவல்களை பகிர்ந்து கொள்ள, உருவாக்க, பரப்புவதற்கான மிகச் சிறந்த தகவல் தொடர்பு சாதனமாகும்.
  • மக்கள் ஒருவருக்கொருவர் எளிதில் தொடர்பு கொள்ளவும், கோடிக்கணக்கான மக்களுக்கு தகவல்கள் சென்றடையவும் தேவைப்படுகிறது.

Question 2.
பத்திரிக்கையாளர் சந்திப்பை பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
விடை:

  • பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என்பது தகவல்கள் ஊடகங்களை சென்றடைவதற்கு உதவுகிறது.
  • பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு செய்திகள் மக்களை சென்றடைவதற்கு முக்கிய சேவை ஆற்றி வருகிறது.
  • பத்திரிக்கையாளர்கள் அவர்களுடைய பங்களிப்பை சிறந்த முறையில் செயலாற்ற உதவுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 3.
ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
விடை:

  • ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்று.
  • இணையதளங்களும், தொலைக்காட்சியும் நமது கண் பார்வையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணமாய் அமைகிறது.
  • அதிகமான நேரங்களை சினிமா படங்களை பார்ப்பதற்கும், நாடகங்களை பார்ப்பதற்கும் செலவிடுவதன் மூலம் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது.

VIII. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
ஒரு குறிப்பிட்ட செய்தியை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய தகவல்கள் பல்வேறு ஊடகங்களில் எவ்வாறு வந்துள்ளன என்பதை ஒப்பீடு செய்க. மற்றும் அந்த செய்திகளின் ஒற்றுமை மற்றும் வேற்றுமையை எழுதுக.

Question 2.
ஊடகத்தின் வளர்ச்சியைப் பற்றி படத்தொகுப்பு தயாரிக்கவும் (ஆரம்பம் முதல் தற்போது வரை)

Question 3.
மாதிரி செய்தித்தாளினை தயார்செய்து, அதனை வகுப்பறையில் அனைவரும் அறியும்படி காட்சிப்படுத்துக.

7th Social  Science Guide ஊடகமும் ஜனநாயகமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
ஆகாசவானி என்பது ___________
அ) வானிலிருந்து வரும் ஒலி
ஆ) நிலவிலிருந்து வரும் ஒலி
இ) பூமியில் இருந்து வரும் ஒலி
ஈ) மனிதனிலிருந்து வரும் ஒலி
விடை:
அ) வானிலிருந்து வரும் ஒலி

Question 2.
அச்சு இயந்திரம் ____________ ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அ) 1453
ஆ) 1463
இ) 1473
ஈ) 1543
விடை:
அ) 1453

Question 3.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் ____________
அ) நீதித்துறை
ஆ) நிர்வாகத்துறை
இ) ஊடகம்
ஈ) சட்டமன்றம்
விடை:
இ) ஊடகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தனிமனித தொடர்பு சாதனம் ___________.
விடை:
அலைப்பேசி

Question 2.
ஜனநாயகம் என்பது ___________.
விடை:
மக்களால் ஆட்சி செய்யப்படுதல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 3.
ஜனநாயகம் இரண்டு ___________ சொற்களால் ஆனது.
விடை:
கிரேக்க

Question 4.
டெமோஸ் என்பது _____________ஐ குறிக்கிறது.
விடை:
குடிமக்களை

Question 5.
க்ரோடஸ் என்பதற்கு ____________ என்று பெயர்.
விடை:
அதிகாரம் / ஆட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 3

IV. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : நெறிமுறை என்பது நம் வாழ்க்கையை வாழ தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பாகும்.
காரணம் : இவை முறையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக அவசியமாகும்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 2.
தவறான ஒன்றை கண்டுபிடிக்க
அ) ட்விட்டர்
ஆ) முகநூல்
இ) வாட்ஸ்ஆ ப்
ஈ) கடிதம்
விடை:
ஈ) கடிதம்

V. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
உள்ளூர் ஊடகங்கள் ஒரு சிலவற்றின் பெயர்களை கூறுக.
விடை:
ஏ.எம்.என். தொலைக்காட்சி, தினதந்தி, தின மலர், மாலை முரசு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும்

Question 2.
லொயோலா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 4

மன வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Civics Chapter 2 ஊடகமும் ஜனநாயகமும் 5

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

6th Social Science Guide தேசியச் சின்னங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தேசிய பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் …
அ) பிங்காலி வெங்கையா
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) காந்திஜி
விடை:
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

Question 2.
இந்தியாவின் தேசிய கீதம். ……….
அ) ஜன கண மன
ஆ) வந்தே மாதரம்
இ) அமர் சோனார் பாங்கலே
ஈ) நீராருங் கடலுடுத்த
விடை:
அ) ஜன கண மன

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Question 3.
ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்
அ) அக்பர்
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை:
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

Question 4.
…………… பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாளாக கொண்டாடுகிறோம்.
அ) மகாத்மா காந்தி
ஆ) சுபாஷ் சந்திர போஸ்
இ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஈ) ஜவஹர்லால் நேரு
விடை:
அ) மகாத்மா காந்தி

Question 5.
நம் தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தின் நிறம் …………
அ) வெளிர்நீலம்
ஆ) கருநீலம்
இ) நீலம்
ஈ) பச்சை
விடை:
ஆ) கருநீலம்

Question 6.
இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி …… அருங்காட்சியத்தில் உள்ளது.
அ) சென்னை கோட்டை
ஆ) டெல்லி
இ) சாரநாத்
ஈ) கொல்கத்தா
விடை:
அ) சென்னை கோட்டை

Question 7.
தேசிய கீதத்தை இயற்றியவர் …………..
அ) தேவேந்திரநாத் தாகூர்
ஆ) பாரதியார்
இ) ரவீந்திரநாத் தாகூர்
ஈ) பாலகங்காதர திலகர்
விடை:
இ) ரவீந்திரநாத் தாகூர்

Question 8.
தேசியக்கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு ………….
அ) 50 வினாடிகள்
ஆ) 52 நிமிடங்கள்
இ) 52 வினாடிகள்
ஈ) 20 வினாடிகள்
விடை:
இ) 52 வினாடிகள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Question 9.
1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடியவர் ………….
அ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) மகாத்மா காந்தி
ஈ) சரோஜினி நாயுடு
விடை:
ஆ) ரவீந்திரநாத் தாணர்

Question 10.
விடுதலை நாளின் போது டெல்லியில் கொடியேற்றுபவர்……
அ) பிரதம அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) துணைக்குடியரசுத் தலைவர்
ஈ) அரசியல் தலைவர் எவரேனும்
விடை:
அ) பிரதம அமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்திய தேசிய இலச்சினை ………….. உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடை:
சாரநாத்

Question 2.
இந்தியாவின் தேசியக் கனி …………….
விடை:
மாம்பழம்

Question 3.
இந்தியாவின் தேசியப் பறவை …………
விடை:
மயில்

Question 4.
இந்தியாவில் தேசிய மரம் ………..
விடை:
ஆலமரம்

Question 5.
1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்ட கொடி ………….. என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை:
குடியாத்தம்

Question 6.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ……………
விடை:
பிங்காலி வெங்கையா

Question 7.
சக ஆண்டு முறையைத் துவக்கியவர் ………..
விடை:
கனிஷ்கர்

Question 8.
இந்தியாவின் மிக நீளமான ஆறு ………..
விடை:
கங்கை

Question 9.
இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் …………
விடை:
டி. உதயகுமார்

Question 10.
தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ………… ஆரங்களைக் கொண்டது.
விடை:
24

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

III. சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
நான்முகச் சிங்கம் தற்போது ………… அருங்காட்சியகத்தில் உள்ளது. (கொல்கத்தா / சாரநாத்)
விடை:
சாரநாத்

Question 2.
தேசிய கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு ……. (1950 /1947)
விடை:
1950

Question 3.
……………. இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. (லாக்டோ பேசில்லஸ்/ரைசோபியம்)
விடை:
லாக்டோபேசில்லஸ்

IV. நிரப்புக.

Question 1.
காவி – தைரியம்; வெள்ளை – ……………
விடை:
நேர்மை

Question 2.
குதிரை – ஆற்றல்; காளை – ……………….
விடை:
கடின உழைப்பு

Question 3.
1947 – விடுதலை நாள்; 1950 – ……….
விடை:
குடியரசு நாள்

V. பொருந்தியுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 60
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 61
விடை:
ஈ  அ ஆ  இ

VI. பொருந்தியபின் பொருந்தாதது எது?

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 62
விடை:
1 – இ,
2 – ஈ,
3 – அ,
4 – ஆ

VII. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அ) தேசியக் கொடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.
ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.
விடை:
1 – இ

Question 2.
அ) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார்
ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.
இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.
விடை:
2 – ஆ

VIII. சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

1) ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
2) நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
3) அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
விடை:
1

IX. விடையளிக்கவும்.

Question 1.
தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை?
விடை:

  • காவிநிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது.
  • பச்சைநிறம் செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது.
  • வெள்ளை நிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது.
  • கருநீல நிறத்தில் அமைந்துள்ள அசோக் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது.

Question 2.
தேசிய இலச்சினையின் பாகங்கள் எவை?
விடை:

  • மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தியிருக்குமாறு வட்ட வடிவமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

Question 3.
தேசியக் கீதத்தின் சிறப்பு அம்சங்கள் எவை?
விடை:

  • ஜன கண மன இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது.
  • ஜனவரி 24, 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.

Question 4.
இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்தை வரைந்து வரையறுக்கவும்.
விடை:

  • இந்திய ரூபாய்க் குறியீடு என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணக்குறியீடு ஆகும். (வடிவமைத்தவர் டி. உதயகுமார்)
  • இந்த வடிவமைப்பு இந்திய அரசால் 15 ஜூலை 2010-ல் மக்களுக்கு அளிக்கப்பட்டது.
    Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 90

Question 5.
தேசிய இலச்சினை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
தேசிய இலச்சினை இந்திய அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் கடவுச்சீட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

Question 6.
தேசிய உறுதி மொழியை எழுதியவர் யார்?
விடை:
தேசிய உறுதி மொழியை எழுதியவர் பிதிமாரி வெங்கட சுப்பாராவ்.

Question 7.
தேசிய இலச்சினையின் அடிப்பாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?
விடை:
யானை, குதிரை, காளை மற்றும் சிங்கம்

Question 8.
இயற்கை தேசிய சின்னங்கள் எவை?
விடை:

  • ஆலமரம் – மயில்
  • கங்கை ஆறு
  • ஆற்று ஓங்கில்
  • ராஜநாகம்
  • தாமரை
  • புலி
  • யானை
  • லாக்டோபேசில்லஸ்
  • மாம்பழம்

Question 9.
மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
விடை:
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.

X. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. இயற்கை தேசியச் சின்னங்களைக் காட்சிப்படமாக வரைக / கதை உருவாக்குக.
2. உன் வகுப்பு / பள்ளிக்கான அடையாளக் குறியீட்டை (Logo) உருவாக்குக.

Question 3.
அறுகி வரும் உயிரினங்களைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும் கலந்துரையாடுக.
விடை:

  • உயிரினங்களின் பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவது தலையாய பணியாகும்.
  • உயிரினங்கள் பாதுகாப்பில் எந்த மையங்கள் செயல்படுகிறது என்பதை தெரிந்து வைத்து கொண்டிருக்க வேண்டும்.
  • அம்மையங்களுக்கு உறுதுணையாக இருந்து நம்மால் இயன்ற சேவையை செய்ய வேண்டும்.

Question 4.
பள்ளியில் நடைபெற்ற தேசிய விழா / நிகழ்வு குறித்து உள்ளூர் செய்தித்தாளுக்கு செய்தி அறிக்கை தயாரிக்கவும்.
விடை:
கண்களுக்கு விருந்து!

  • ஏஞ்சல் பள்ளியில் மாணவர்களின் அணிவகுப்பு, உடற்பயிற்சி மற்றும் கலைநிகழ்ச்சி, சுதந்திரதின விழாவின் முக்கியமான நிகழ்வுகள்.
  • வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் நாட்டியங்கள் அமைக்கப்பட்ருந்தன.

XI. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

Question 1.
குறிப்பிட்ட சில உயிரினங்களை மட்டும் தேசியச் சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணங்களை ஆய்க.
விடை:

  • இந்திய குடிமகனின் ஆழ் மனதில் நாட்டின் பெருமைகளை விதைப்பதற்கும்.
  • இந்தியா மற்றும் இந்தியர்களின் தனி தன்மையை உலகிற்கு உணர்த்துவதற்கும்.

6th Social Science Guide தேசியச் சின்னங்கள் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
திருப்பூர் குமரனின் …… மற்றும் ………. நினைவு கூறும் வகையில் அவரது நூற்றாண்டில் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது
விடை:
அர்ப்பணிப்பு, தியாகத்தை

Question 2.
விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடியை ………….. 15.08.1947ல் செங்கோட்டையில் முல்லி) ஏற்றினர்.
விடை:
ஜவஹர்லால் நேரு

Question 3.
16ம் நூற்றாண்டில் ஷெர்ஷா சூரியால் வெளியிடப்பட்ட நாணயம் ………….. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
ரூபாய்

Question 4.
…………… செரிமானத்துக்கும், குளிர்ச்சி தருவதற்கும் உகந்தது.
விடை:
தயிர்

Question 5.
1947-ல் இருந்து 26 ஜனவரி 1950 வரை ……….. இந்தியாவின் கௌரவத் தலைவராக இருந்து வந்தார்.
விடை:
பிரிட்டனின் அரசி

Question 6.
முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள் ………. என அழைக்கப்பட்டது.
விடை:
இமாம்பசந்த்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள்

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
தேசியக் கீதத்தை பாடும் போது பின்பற்ற வேண்டியன யாவை?
விடை:

  • பாடும் போது அனைவரும் எவ்வித அசைவுகளும் இன்றி நேராக நிற்க வேண்டும்.
  • பொருள் புரிந்து சரியாகப் பாட வேண்டும்.

Question 2.
தமிழகத்தின் மாநில இயற்கைச் சின்னங்கள் பட்டியலிடுக.
விடை:
மாநில விலங்கு – வரையாடு
மாநில பறவை – மரகதப்புறா
மாநில மலர் – செங்காந்தள் மலர்
மாநில மலர் – பனைமரம்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Civics Chapter 1 தேசியச் சின்னங்கள் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 Geography Chapter 1 வளங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 Geography Chapter 1 வளங்கள்

6th Social Science Guide வளங்கள் Text Book Back Questions and Answers

அ) பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 20
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 21

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கரும்பிலிருந்து ……… தயாரிக்கப்படுகிறது.
விடை:
சர்க்கரை

Question 2.
வளங்களை ……….. கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.
விடை:
கவனமாக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் ……… எனப்படுகிறது.
விடை:
உள்ளூர் வளங்கள்

Question 4.
தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ……. வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கண்டறியப்பட்ட வளங்கள்

Question 5.
………………. வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.
விடை:
பணமதிப்புள்ள

Question 6.
இயற்கை வளங்களை சேகரித்தல் …………… எனப்படுகிறது.
விடை:
முதல்நிலைச் செயல்பாடு

இ) சிறு குறிப்பு வரைக.

Question 1.
புதுபிக்கக் கூடிய வளங்கள்.
விடை:

  • ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
  • எ.கா.: காற்று, நீர், சூரிய ஒளி

Question 2.
மனித வளம்.
விடை:

  • இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனிதவளம் என அழைக்கப்படுகிறது.
  • எ.கா. மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

Question 3.
தனிநபர் வளம்.
விடை:

  • தனிநபர் வளங்கள் என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும்.
  • எ.கா. : அடுக்குமாடிக் கட்டடங்கள்.

Question 4.
மூன்றாம் நிலை செயல்பாடுகள்.
விடை:
உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்புத்துறை

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

ஈ) மிகச் சுருக்கமாக விடையளி.

Question 1.
வளங்கள் என்றால் என்ன?
விடை:

  • மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
  • எல்லா வளங்களுக்கும் மதிப்பு உண்டு.
  • எ.கா. : பெட்ரோலியம், காற்று

Question 2.
கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
விடை:
தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவு அறியப்பட்டிருக்கிறதுமான வளங்கள் கண்டறியப்பட்ட வளங்கள் எனப்படும். எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.

Question 3.
உயிரற்ற வளங்களை வரையறு.
விடை:

  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
  • எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

Question 4.
நிலையான வளர்ச்சி என்றால் என்ன?
விடை:

  • நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • வருங்கால தலைமுறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைக்க வேண்டும்.
    இவ்வாறு சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி எனப்படும்.

உ) சுருக்கமான விடையளி.

Question 1.
உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் வளங்களை வேறுபடுத்துக. உள்ளூர் வளங்கள்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 60

Question 2.
மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக கருதப்படுவது ஏன்?
விடை:
கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறன் ஆகியவை மனிதனை ஒரு மதிப்புமிகு வளமாக உருவாக்குகிறது. எனவே மனிதனை நாம் தனி ஒரு வளமாக கருதுகின்றோம்.
எ.கா. : மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
நாட்டு வளம் மற்றும் பன்னாட்டு வளம் ஒப்பிடுக.
விடை:
நாட்டு வளங்கள் :
ஒரு நாட்டின் அரசியல் எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல் பகுதிகளுக்கு உட்பட்ட வளங்கள். எ.கா. : இந்தியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள்

பன்னாட்டு வளங்கள் :
எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் உட்படாத மிகப்பரந்த திறந்தவெளி பெருங்கடல் பகுதியில் காணப்படும் வளங்கள் (இப்பகுதிக்கு உட்பட்ட வளங்களை உலக நாடுகளுக்கிடையேயான
ஒப்பந்தங்களின் மூலமாகவே பயன்படுத்த இயலும்). எ.கா. : திமிங்கலப் புனுகு

Question 4.
மனிதன் உருவாக்கிய வளத்திற்கும், மனித வளத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 61

Question 5.
வளப்பாதுகாப்பைப் பற்றி காந்தியடிகளின் சிந்தனை என்ன?
விடை:

  • வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே.
  • உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனக் குற்றம் சாட்டும் மகாத்மா காந்தி வளங்கள் மிகுதியாக எடுக்கப்படுவதும், மனித தேவைகள் எல்லையை மீறுவதும் காரணங்களாக அமைகின்றன என்கிறார்.

ஊ) விரிவான விடையளி. (100 – 120 வார்த்தைகள் வரை)

Question 1.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.
விடை:
இயற்கை வளங்களை அதன் தோற்றம், வளர்ச்சி நிலை, புதுப்பித்தல், பரவல் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

I. தோற்றத்தின் அடிப்படையில்
– உயிரியல் வளங்கள்
– உயிரற்ற வளங்கள்

  • உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். எ.கா. : தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள்
  • உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலம், நீர், காற்று, கனிமங்கள்.

II. வளர்ச்சி நிலை அடிப்படையில்
– கண்டறியப்பட்ட வளங்கள்.
– மறைந்திருக்கும் வளங்கள்

  • கண்டறியப்பட்ட வளங்கள் தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
    எ.கா. : நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.
  • தற்பொழுது அதிக பயன்பாட்டில் இல்லாததும் அதன் அளவு மற்றும் இருப்பிடம் அறியப்படாமல் உள்ளதுமான வளங்கள் மறைந்திருக்கும் வளங்கள் எனப்படும்.
    எ.கா. : வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காணப்படும் காடிச்சத்து.

III. புதுப்பித்தலின் அடிப்படையில்
– புதுப்பிக்கக் கூடிய வளங்கள்
– புதுப்பிக்க இயலா வளங்கள்

  • ஒருமுறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் எனப்படும்.எ.கா. : காற்று, நீர், சூரிய ஒளி
  • குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் எனப்படும்.
    எ.கா. : நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு, கனிமங்கள்

Question 2.
வளங்களை பாதுகாப்பது எப்படி?
விடை:
வளங்களைப் பாதுகாத்தல் :

  • வளத்தினை கவனமாக கையாளுதல் என்பது வளங்களைப் பாதுகாத்தல் எனப்படுகிறது.
  • மக்கள் தொகையின் திடீர் பெருக்கத்தினால் வளங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. வளங்கள் குறைந்து வரும் வேகமும் அதிகரிக்கிறது.
  • இதைத் தவிர்த்திட நிலையான வளர்ச்சி அவசியம்.

நிலையான வளர்ச்சி நடைபெற:

  • வீணாக்குதலையும் அதிகப்படியான பயன்பாட்டினையும் தவிர்க்க வேண்டும்.
  • மறுபயன்பாடுள்ள வளங்களை மறு சுழற்சி செய்ய வேண்டும்.
  • மாசைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • வளங்களைப் பாதுகாக்க (3Rs) பின்பற்ற வேண்டும். அவைகள் குறைத்தல் (Reduce) மறுபயன்பாடு (Reuse) Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 70 (Recycle)

Question 3.
வளத்திட்டமிடல் என்றால் என்ன? அதன் அவசியம் என்ன?
விடை:

  • வளத்திட்டமிடல் என்பது வளங்களை சரியாகப் பயன்படுத்தும் திறன் ஆகும்.
  • வளத்திட்டமிடல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் வளங்கள் மிகவும் குறைவாக உள்ளது. வளத்திட்டமிடுதல் தற்போது வளங்களை சரியாகப் பயன்படுத்தவும். வருங்கால தலைமுறைகளுக்கு சேமித்து வைக்கவும் உதவி புரிகிறது.
  • வளங்கள் மிகக் குறைவாக இருப்பது மட்டுமல்ல. அவை புவியின் மீது ஒழுங்கற்ற பரவலுடன் காணப்படுகிறது.
  • வளங்களை அதிக சுரண்டலில் இருந்து தடுத்து பாதுகாக்க வளத்திட்டமிடுதல் அவசியம்.

Question 4.
முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.
விடை:
முதல்நிலை செயல்பாடுகள் :

  • பழங்கால மனிதர்கள் தங்களின் தேவைக்கேற்ப பொருட்களை சேகரித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாத்தனர்.
  • மனிதன் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற சில செயல்பாடுகளில் ஈடுபட்டான்.
  • இவ்வாறான வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், மீன்பிடித்தல், காட்டு வளங்களை சேகரித்தல் போன்ற அவனது செயல்பாடுகள் முதல் நிலை செயல்பாடுகளாக அமைந்தன.
  • பின்னர் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால் பயிர் செய்து விவசாயத்தின் மூலம் தேவையை நிறைவு செய்தான்.
  • சுரங்கத்தொழில் இன்றைய நிலையிலும் முன்னிலை வகிக்கும் செயல்பாடாக உள்ளது.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகள்: இயற்கை வளங்கள் தொழில்நுட்பத்தினால் மாற்றுருவாக்கம் செய்யப்பட்டு, புதிய பொருளாகக்
    கிடைக்கிறது. எ.கா. : கரும்பு → சர்க்கரை
  • மூலப்பொருட்களிலிருந்து வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றும் இச்செயல்பாடு ” இரண்டாம் நிலை செயல்பாடுகள்” எனப்படும்.
  • இரண்டாம் நிலை செயல்பாடுகளுக்கு மனிதத்திறனும் சிந்தனைகளும் அடிப்படைத் தேவையாகும்.

மூன்றாம் நிலை செயல்பாடுகள் :

  • உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.
  • முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருட்களை பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பாகும்.
    எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்பு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

எ) வாக்கியமும் புரிதலும்

Question 1.
வாக்கியம் : வெப்பமண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்கு பதிலாக சூரிய ஒளி ஆற்றல் ஒரு சிறந்த மாற்று ஆகும்.
புரிதல் 1: நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்துக் கொண்டே வருகிறது.
புரிதல் 2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது. சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
வாக்கியம் : வளங்களை பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.
புரிதல் 1: வளங்களை பாதுகாக்க வேண்டாம்.
புரிதல் 2 : வளங்களை பாதுகாக்க வேண்டும்.
சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஆ) புரிதல் 2 மட்டும் சரி

Question 3.
வாக்கியம் : மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்.
புரிதல் 1: உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது.
புரிதல் 2 : மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை.
சரியான விடையை தேர்ந்தெடு.
அ) புரிதல் 1 மட்டும் சரி
ஆ) புரிதல் 2 மட்டும் சரி
இ) புரிதல் 1 மற்றும் 2 தவறு
ஈ) புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை:
ஆ) புரிதல் மட்டும் சரி

ஏ. வளங்களை பாதுகாக்க மூன்று பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி என்ற சொற்களை சரியான இடத்தில் எழுதுக.

Question 1.
நீ இளம் வயதில் பயன்படுத்திய மிதிவண்டியை உனது பக்கத்து வீட்டு குழந்தைக்கு கொடுத்தல் ………….
விடை:
மறுபயன்பாடு

Question 2.
கழிப்பறையில் குறைவான நீரை பயன்படுத்துதல் …………..
விடை:
குறைத்தல்

Question 3.
பயன்படுத்திய நெகிழிப் பொருள்களை உருக்கி சாலை அமைத்தல் ………….
விடை:
மறுசுழற்சி

ஐ. குறுக்கெழுத்துப் புதிர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 75

இடமிருந்து வலம்:

Question 1.
எங்கும் காணப்படும் வளங்கள்
விடை:
உலகளாவிய வளம்

Question 2.
காலத்தை சமநிலையில் வைக்கும் வளர்ச்சி
விடை:
நிலையான வளர்ச்சி

Question 3.
சூரியனிடமிருந்து பெறப்படும் ஆற்றல்
விடை:
சூரிய ஆற்றல்

Question 4.
இயற்கையினால் அளிக்கப்படும் வளம்
விடை:
இயற்கை வளங்கள்

Question 5.
ஒரு நாட்டிற்கு சொந்தமான வளங்கள்
விடை:
நாட்டு வளங்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 6.
குறிப்பிட்ட இடங்களில் காணப்படும் வளம்
விடை:
உள்ளூர் வளம்

மேலிருந்து கீழ் :

Question 1.
வளங்களை பாதுகாக்கும் வழிமுறைகளில்
விடை:
மறுபயன்பாடு ஒன்று

Question 2.
திமிங்கலப் புனுகு வளம்
விடை:
இது ஒரு பன்னாட்டு

ஓ. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பொருளாதாரச் செயல்பாடுகள் தொடர்பான படங்களை உற்றுநோக்கி அட்டவணையை நிரப்புக.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 90
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 91
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 91.1

ஒள) ஆசிரியர் செயல்பாடுகள்

1. பள்ளி அல்லது வகுப்பளவில் மாதத்திற்கு நெருநாள் “மின்சாரம் சேமித்தல் நாள்” கொண்டாடுதல்.
2. பயன்பாடற்ற பொருள்களைக் கொண்டு பள்ளியின் நடைக்கூடச் சுவர்ப் பகுதியை அலங்கரிக்கவும்.
3. பள்ளியின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு தொழிற்சாலைக்கு களப்பயணம் மேற்கொள்ளவும்.
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொழில்கள் தொடர்பான படங்கள் சேகரிக்கச் செய்தல்.
1. மீன் பிடித்தல்
2. வேட்டையாடுதல்
3. உணவு சேகரித்தல்
4. காட்டு வளங்களைச் சேகரித்தல்
5. சுரங்கத் தொழில்
6. விவசாயம்
7. கால்நடை வளர்த்தல்
8. மரங்களை வெட்டுதல்

6th Social Science Guide வளங்கள் Additional Important Questions and Answers

அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான இரு முக்கிய காரணிகள் …………
விடை:
காலமும் தொழில்நுட்பமும்

Question 2.
இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் அனைத்து வளங்களும் …………. எனப்படும்.
விடை:
இயற்கை வளங்கள்

Question 3.
புவியைத் தோண்டும் முயற்சியின் போதுதான் மனிதன் வேறு சில விலைமதிப்புள்ள உலோகங்களையும் கண்டறிந்து அவற்றினால் …………… செய்தான்.
விடை:
அணிகலன்கள்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 4.
புதுப்பிக்க இயலாத வளங்கள் அனைத்தும் ஒருநாள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ………….. போய்விடும்.
விடை:
இல்லாமல்

Question 5.
திமிங்கலப் புனுகு …………… தயாரிக்கப் பயன்படுகிறது.
விடை:
வாசனை திரவியங்கள்

Question 6.
கடல் காடிச்சத்தானது நிலக்காடிச் சத்தை விட மிகுந்த …………..
விடை:
வீரியத் தன்மையுடையது

ஆ) சிறுகுறிப்பு வரைக

Question 1.
புதுப்பிக்க இயலா வளங்கள் :
விடை:
குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும். எ.கா. நிலக்கரி, பெட்ரோலியம்

Question 2.
சமூக வளங்கள் :
விடை:
ஒரு பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் கிடைக்கும் வளத்தினை பயன்படுத்திக் கொள்வர். இது சமூகவளம் எனப்படும். எ.கா. பூங்கா

Question 3.
உலகின் பெரும் மருந்தகம் :
விடை:

  • வெப்ப மண்டல மழைக்காடுகள் உலகின் பெரும் மருந்தகம்’ எனப்படுகிறது.
  • இங்கு காணப்படும் தாவரங்களில் 25ரூ மருத்துவ குணம் கொண்ட தாவரங்களாகும். எ.கா. சின்கோனா.

இ) மிகச் சுருக்கமான விடையளி

Question 1.
இயற்கை வளங்கள் எதனடிப்படையில் வகைப்படுத்தப் படுகின்றன?
விடை:

  • தோற்றம்
  • வளர்ச்சி நிலை
  • புதுப்பித்தல்
  • பரவல்
  • உரிமை

Question 2.
ஆரம்ப நிலையில் மனிதனின் அடிப்படைத் தேவைகள் யாவை?
விடை:

  • உணவு
  • உடை
  • இருப்பிடம்

Question 3.
புதுப்பிக்க இயலா வளங்கள் சிலவற்றைக் குறிப்பிடு.
விடை:

  • நிலக்கரி
  • பெட்ரோலியம்
  • இயற்கை வாயு
  • கனிமங்கள்

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

7th Social  Science Guide மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?
அ) தாதாஜி கொண்ட தேவ்
ஆ) கவிகலாஷ்
இ) ஜீஜாபாய்
ஈ) ராம்தாஸ்
விடை:
அ) தாதாஜி கொண்ட தேவ்

Question 2.
மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?
அ) தேஷ்முக்
ஆ) பேஷ்வா
இ) பண்டிட்ராவ்
ஈ) பட்டீல்
விடை:
ஆ) பேஷ்வா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?
அ) ஷாகு
ஆ) அனாஜி தத்தா
இ) தாதாஜி கொண்ட தேவ்
ஈ) கவிகலாஷ்
விடை:
ஈ) கவிகலாஷ்

Question 4.
சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.
அ) பீரங்கிப்படை
ஆ) குதிரைப்படை
இ) காலட்படை
ஈ) யானைப்படை
விடை:
இ) காலட்படை

Question 5.
குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) ஷாகு
விடை:
ஆ) பாஜிராவ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மகாராஷ்டிராவில் பரவிய ………………………….. இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
விடை:
பக்தி

Question 2.
பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர்………………….
விடை:
காமவிஸ்தார்

Question 3.
மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு …………………… இடத்தில் சோகமாய் முடிந்தது.
விடை:
பானிபட்

Question 4.
அஷ்டபிரதானில் இடம் பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ………………..
விடை:
சுமந்த் /துபிர்

Question 5.
சிவாஜியைத் தொடர்ந்து ……………………. வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.
விடை:
அனாஜி தத்தோ

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 2

IV. சரியா? தவறா?

Question 1.
மலை மற்றும் மலைப்பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாத்தது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 2.
பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.
விடை:
தவறு

Question 3.
சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.
விடை:
சரி

Question 4.
தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
விடை:
சரி

Question 5.
அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்து முறை படையெடுத்தார்
விடை:
தவறு

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
காரணம் : மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அ) கூற்றிற்கான காரணம் சரி
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை:
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு

Question 2.
வாக்கியம் -1 : செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.
வாக்கியம் – II : இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்படை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

அ) சரி
ஆ) II சரி
இ) I மற்றும் II சரி
ஈ) I மற்றும் II தவறு
விடை:
அ) சரி

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடிக்க ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே , சிவாஜி, சாம்பாஜி, ஷாகு
விடை:
ரகுஜி, போன்ஸ்லே

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 4.
தவறான இணையைக் கண்டுபிடிக்க.
1. கெய்க்வாட் – பரோடா
2. பேஷ்வா – நாக்பூர்
3. ஹோல்கா – இந்தூர்
4. சிந்தியா – குவாலியர்
விடை:
பேஷ்வா – நாக்பூர்

Question 5.
காலவரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்துக.
I. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
II. பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.
III. சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
IV. பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்.
விடை:
1649 – சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
1656 – சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
1713 – பாலாஜி விஸ்வநாத் பீஷ்வாவாக பொறுப்பேற்றார்
1749 – பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.
விடை:

  • மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
  • மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

Question 2.
சௌத் மற்றும் சர்தேஷ்முகி
விடை:
சௌத் – மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு 1/4 பாதுகாப்பு கட்டணமாக சர்தேஷ்முகி – பத்தில் ஒரு பங்கு 1/10 அரசருக்கான கட்டணமாக

Question 3.
மராத்தியர்களின் வருவாய் நிர்வாகத்தில் காமவிஸ்தரின் பங்கு
விடை:

  • பீஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தாரி எனும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது.
  • அவர் பீஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார்.
  • வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

Question 4.
சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல்.
விடை:
முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது செய்தபோது கவிகலேஷீம் உடனிருந்தார். ஆகவே இருவரும் ஔரங்கசீப்பின் கட்டளையின்படி அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

Question 5.
1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர்.
விடை:
மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761ல் டெல்லிக்கு அருகேயுள்ள பானிபட்டில் முடிந்தது. பஞ்சாபைக் கடந்த தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவடையச் செய்ய மராத்தியர்கள் மேற்கொண்ட முயற்சி ஆப்கானியர்களின் அரசர் அகமது ஷா அப்தலியால் தடுக்கப் பெற்றது.

VII. கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிக்கவும்

Question 1.
மராத்தியர்களின் ஆட்சியில் சிவாஜியின் சிறப்பு அம்சங்களை மதிப்பிடுக.
விடை:

  • சிவாஜியின் அரசியல் முறை மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது.
  • முதல் வட்டத்தில் மக்களின் மீது அக்கறை கொண்ட அவர் எந்த வகையிலும் மக்கள் துண்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை.
  • இரண்டாவது வட்டத்தில் அவர் மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ளவில்லை.
  • கொள்ளையடிக்கப் படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களை காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத், சர்தேஷ்முகி ஆகிய வரிகளை செலுத்த வேண்டும்.
  • மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
  • கிராமங்கள் தேஷ்முக் என்பவர்களால் நிர்வாகிக்கப்பட்டது.
  • ஒவ்வொரு கிராமத்திலும் அதிகாரம் மிக்க ஒரு கிராமத்தலைவர் இருந்தார். அவருக்கு உதவ கணக்கரும், ஆவணக் காப்பாளர் ஒருவரும் பணியாற்றினார்.
  • மைய அரசு இல்லாத நேரத்தில் உள்ளூர் சமுதாய அளவிலான அதிகாரிகள் உண்மையான அரசாய்ச் செயல்பட்டனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.
விடை:
கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத் (மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு (1/4) பாதுகாப்பு கட்டணமாக) சர்தேஷ்முகி (பத்தில் ஒரு பங்கு (1/10) அரசருக்கான கட்டணமாக) ஆகிய வரிகளைச் செலுத்த வேண்டும்.

பீஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தார் என்னும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது. அவர் பீஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார். கப்பமோ, வரியோ வசூலிக்கப்பட வேண்டிய பகுதியில் பாதுகாப்பிற்காக சில வீரர்கள் அடங்கிய படைப்பிரிவை வைத்துக்கொள்ள இவர் அதிகாரம் பெற்றிருந்தார்.

வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஆவணங்களைப் பீஷ்வா அலுவலகம் அங்கொன்று இங்கொன்றாகச் சரி பார்த்தது. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொருமுறை ஏலம் விடப்பட்டன.

‘குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பீஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தில் வெற்றி பெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும், நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதிவரை அவர் முதலில் செலுத்திட வேண்டும். தமது சொந்தப் பணத்திலிருந்து அவர் அதைச் செலுத்தலாம் அல்லது வட்டிக்கு கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்ட வேண்டும்.

IX. வரைபடம்

Question 1.
மராத்தியப் பேரரசின் முக்கிய நகரங்கள் மற்றும் கோட்டைகளைக் குறிப்பிடுக.
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பொருத்துக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 4

Question 2.
குழுச் செயல்பாடு:
தஞ்சாவூர் மராத்தியர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும் குறிப்பாக அவர்கள் கல்வி, கலை மற்றும் கட்டடக் கலைக்கு ஆற்றிய பங்களிப்புகள்

7th Social  Science Guide மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அப்தலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து வருவதற்கு முன் ………………. முறை படையெடுத்துள்ளார்.
அ) 10
ஆ) 8
இ) 6
ஈ) 12
விடை:
ஆ) 8

Question 2.
சாம்பாஜியின் பாதுகாவலராய் இருந்தவர் …………………..
அ) சாகு
ஆ) பாஜிராவ்
இ) கவிகலாஷ்
ஈ) ராஜா ஜெய் சிங்
விடை:
இ) கவிகலாஷ்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சாதாரண வருவாய்த்துறை அலுவலகராகப் பணியைத் தொடங்கிய …………….. 1713ல் பீஷ்வா ஆனார்.
அ) பாஜிராவ்
ஆ) பாலாஜி விஸ்வநாத்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) அகமது ஷா அப்தலி
விடை:
ஆ) பாலாஜி விஸ்வநாத்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
காமவிஸ்தார் ……………………. ஆல் பணியமர்த்தப்பட்டார்
விடை:
பீஷ்வா

Question 2.
கவிகலாஷ் …………….. செய்பவராகவுமிருந்தார்
விடை:
மாந்திரீகம்

Question 3.
சிவாஜியின் பாதுகாவலரான ……………………. இயற்கை எய்தியபின் முழுமையான சுதந்திரம் பெற்றவரானார்.
விடை:
கொண்டதேவ்

Question 4.
மாரத்திய பிரதம அமைச்சர் ………………. என்று அழைக்கப்பட்டார்
விடை:
பீஷ்வா

Question 5.
சிவாஜியின் தந்தை ………….
விடை:
காஜி போன்ஸ்லே

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 5

IV. சரியா? / தவறா?

Question 1.
தொடக்கத்தில் காலட்படையே சிவாஜியின் இராணுவத்தில் முதுகெலும்பாய்த் திகழ்ந்தது
விடை:
சரி

Question 2.
மராத்தியப் பேரரசில் நியாயதிஸ் என்பவர் நவீனகால பிரதமருக்கு இணையானவர்
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சத்ரபதி எனும் சமஸ்கிருத சொல் அரசன் அல்லது பேரரசன் என்பதற்கு இணையானது. இச்சொல்லைமராத்தியர்கள் குறிப்பாகசிவாஜிபயன்படுத்தினார்
விடை:
சரி

V. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
காரணம் : மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

அ) கூற்றிற்கான காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணம் தவறு
இ) கூற்றிற்கான காரணம் சரி
ஈ) கூற்றும் மற்றும் காரணம் தவறு
விடை:
இ) கூற்றிற்கான காரணம் சரி

Question 2.
பொருந்தாததைக் கண்டுபிடிக்க பாலாஜி விஸ்வநாத், பாஜிராவ், பாலாஜி பாஜிராவ், அகமது ஷா அப்தாலி –
விடை:
அகமது ஷா அப்தாலி

Question 3.
தவறான இணையைக் கண்டுபிடிக்க.
அமத்யா – நிதியமைச்சர்
சேனாபதி – தலைமைத் தளபதி
வாக்குய் – நாவிஸ் – உள்துறை அமைச்சர்
துபிர் – தலைமை நீதிபதி
விடை:
துபிர் – தலைமை நீதிபதி

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
மராத்தியர்களுக்கு விசுவாசமாய் இருந்த குடும்பங்களின் பெயர்களை கூறுக.
விடை:
1. கெய்க்வாட் – பரோடா
2. பான்ஸ்லே – நாக்பூர்
3. ஹோல்கார் – இந்தூர்
4. சிந்தி அல்லது சிந்தியா – குவாலியார்
5. பீஷ்வா – புனே

Question 2.
அஷ்டப்பிரதான் என்றால் என்ன?
விடை:

  • அஷ்டப்பிரதான் என்பது மராத்தியப் பேரரசில் இருந்த எட்டு அமைச்சர்கள் ஆவர்
  • இந்த அமைச்சர் குழு 1674 ல் சத்ரபதி சிவாஜியால் அமைக்கப்பட்டது.

VII. விரிவான விடையளி

Question 1.
மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள் யாவை?
விடை:

  • மராத்திய நாட்டின் புவியியல் கூறுகள் மராத்தியர்களிடையே சில தனித்தன்மை வாய்ந்த பண்புகளை வளர்த்திருந்தன. அவை இந்தியாவின் ஏனைய மக்களிடமிருந்து மராத்திய மக்களை வேறுபடுத்திக் காட்டின.
  • பாறைகளும், குன்றுகளும் அடங்கிய நிலப்பகுதி, அந்நிய படையெடுப்பாளரிடமிருந்து மராத்தியருக்கு பாதுகாப்பளித்தது.
  • கொரில்லாப் போர் முறைக்கு உகந்ததாய் விளங்கியது.
  • மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
  • மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 6

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

6th Social Science Guide குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அ) அங்கம்
ஆ) மகதம்
இ) கோசலம்
ஈ) வஜ்ஜி
விடை:
ஆ) மகதம்

Question 2.
கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
அ) அஜாதசத்ரு
ஆ) பிந்துசாரா
இ) பத்மநாப நந்தா
ஈ) பிரிகத்ரதா
விடை:
அ) அஜாதசத்ரு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 3.
கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
அ) அர்த்த சாஸ்திரம்
ஆ) இண்டிகா
இ) முத்ராராட்ஷம்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனத்தும்

Question 4.
சந்திரகுப்த மௌரியர் அரியணையைத் துறந்து ……………. என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.
அ) பத்ரபாகு
ஆ) Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 60
இ) பார்ஸ்வ நாதா
ஈ) ரிஷபநாதா
விடை:
அ) பத்ரபாகு

Question 5.
செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் ………….
அ) டாலமி
ஆ) கொளடில்யர்
இ) ஜெர்சக்ஸ்
ஈ) மெகஸ்தனிஸ்
விடை:
ஈ) மெகஸ்தனிஸ்.

Question 6.
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) சந்திரகுப்த மௌரியர்
ஆ) அசோகர்
இ) பிரிகத்ரதா
ஈ) பிந்துசாரர்
விடை:
இ) பிரிகத்ரதா

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்துக . சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.
காரணம் : தர்மத்தின் கொள்கையின் படி அவர் ஆட்சி புரிந்தார்.
அ) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) கூற்றும் காரணமும் உண்மையான, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.
விடை:
கூற்று 1 : ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.
கூற்று 2 : மௌரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, 2 ஆகிய இரண்டும்
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
விடை:
ஆ) 2 மட்டும்

Question 3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.
விடை:
1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, மற்றும் 2
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை
விடை:
இ) 1 மற்றும் 2

Question 4.
கீழ்க்காண்பனவற்றை காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 65
விடை:
இ) ஹரியங்கா சிசுநாகா நந்தா மெளரியா

Question 5.
கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்கு காரணமாயிற்று
1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின.
3. கடலின் மீதான ஆதிக்கம்
4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்
அ) 1, 2 மற்றும் 3 மட்டும்
ஆ) 3 மற்றும் 4 மட்டும்
இ) 1, 2 மற்றும் 4 மட்டும்
ஈ) இவை அனைத்தும்
விடை:
இ) 1, 2 மற்றும் 4 மட்டும்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………….. மகதத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.
விடை:
ராஜகிரகம்

Question 2.
முத்ரராட்சசத்தை எழுதியவர் ……………
விடை:
விசாகதத்தர்

Question 3.
…………. பிந்துசாரரின் மகனாவார்.
விடை:
அசோகர்

Question 4.
மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் ………..
விடை:
சந்திகுப்த மௌரியர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 5.
நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ………….. பணியமர்த்தப்பட்டனர்.
விடை:
தர்ம – மகா மாத்திரர்கள்

IV. சரியா? தவறா?

Question 1.
தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது.
விடை:
தவறு

Question 2.
அசோகர் கலிங்கப்போரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்.
விடை:
தவறு

Question 3.
அசோகருடைய தம்மா பௌத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
விடை:
சரி

Question 4.
நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.
விடை:
தவறு

Question 5.
புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
விடை:
சரி

V. பொருத்துக. கணா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 85
விடை:
அ) 3 4 1 2

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகளைக் குறிப்பிடவும்.
விடை:

  • அர்த்த சாஸ்திரம்
  • முத்ராராட்க்ஷம்

Question 2.
ஸ்தூபி என்றால் என்ன?
விடை:

  • ஸ்தூபி என்பது அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பு. செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டது.
  • புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

Question 3.
மகத அரச வம்சங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ஹரியங்கா வம்சம்
  • சிசுநாக நம்சம்
  • நந்த வம்சம்
  • மௌரிய வம்சம்

Question 4.
மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?
விடை:

  • நிலங்களே அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. நிலவரி (பாகா) மொத்த விளைச்சலில் 1/6 பங்கு.
  • கூடுதல் வருவாயாக காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள் அமைந்தன.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Question 5.
நகரங்களின் நிர்வாகத்தில் நகரிகா வுக்கு உதவியவர் யார்?
விடை:

  • ஸ்தானிகா
  • கோவா

Question 6.
அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப் பேராணைகளிலிருந்து நீங்கள் அறிவதென்ன?
விடை:
அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மூவேந்தர்கள்

  • பாண்டியர்
  • சோழர்
  • கேரள புத்திரர் மற்றும் சத்திய புத்திரர்

Question 7.
மௌரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக.
விடை:
மாமூலனாரின் அகநானுற்றுப்பாடல்

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
பௌத்தத்தைப் பரப்புவதற்கு அசோகர் என்ன செய்தார்? (ஏதேனும் மூன்று)
விடை:

  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்றும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

Question 2.
மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.
விடை:

  • மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்திருந்தது. வளம் மிகுந்த இப்பகுதி வேளாண் விளைச்சலை அதிகரித்தது, இது அரசுக்கு நிலையான வருமானத்தை அளித்தது.
  • அடர்ந்த காடுகள் கட்டுமானத்திற்கு மரங்களையும் படைகளுக்கு யானைகளையும் வழங்கியது.
  • அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவியது.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கலிங்கப்போர் அசோகரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எவ்வாறு?
விடை:

  • கி.மு 261ல் அசோகர் கலிங்கத்தின் மீது போர்தொடுத்து வெற்றி பெற்றார்.
  • 13வது பாறைக் கல்வெட்டில் அசோகரே கலிங்கப் போரின் பயங்கரத்தை விவரித்துள்ளார்.
  • அப்போருக்குப் பின் அசோகர் ஒரு பௌத்தர் ஆனார்.
  • தர்மத்தின் கொள்கையை பரப்புவதற்காக சுற்றுப்பயணங்கள் (தர்மயாத்திரைகள்) மேற்கொண்டார்.
  • அவரது கொள்கை அனைத்து மதங்களின் சாரமாகவுள்ள மனிதாபிமானத்தை உள்ளடக்கியது.
  • இரக்க உணர்வு, அறக்கொடை, தூய்மை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
  • அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
  • தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

Question 2.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத்திட்டங்களை எழுதுக.
விடை:

  • அனைவருக்கும் இலவசக் கல்வி
  • இயலாதவர்களுக்கும், முதியோருக்கும், நோயாளிகளுக்கும் தேவையில் உள்ளோருக்கும் இலவச உணவு.
  • அனைத்து குடிமக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை.
  • வீடற்றவர்களுக்கு இலவச தங்குமிடம்.
  • அனைவருக்கும் நீதி, பாலினம், மதம், சாதி பாகுபாடின்றி சமத்துவம்.

IX. படங்களைப் படிப்போம்.

இது அசோகருடைய பேராணைகள் பற்றிய படம்
அ) பேராணைகள் என்றால் என்ன?
ஆ) எவ்வகைகளில் அசோகரது பேராணைகள் பயன்படுகின்றன?
இ) இப்பேராணைகள் எங்கெல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன?
ஈ) சாஞ்சி கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து முறையின் பெயரென்ன?
உ) பாறைப் பேராணைகள் மொத்தம் எத்தனை உள்ளன?
விடை:
அ) பேராணைகள் என்பது அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட பிரகடனங்கள் ஆகும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 90
ஆ) அசோகர் அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், மக்கள் நலன் மீது கொண்டிருந்த அக்கறையையும் தெரிந்துக் கொள்ள பேராணைகள் பயன்படுகின்றன.
இ) தூண்களிலும், பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் இப்பேராணைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஈ) பிராமி உ) 33 பாறைப் பேராணைகள் உள்ளன.

X. நான் யார்.

Question 1.
நான் ஹரியங்கா அரசவம்சத்தைச் சேர்ந்தவன். திருமண உறவுகளின் மூலம் எனது பிரதேசங்களை விரிவுபடுத்தினேன். அஜாதசத்ரு எனது மகன், நான் யார்?
விடை:
பிம்பிசாரர்

Question 2.
சமூகத்தை மாற்றியமைத்ததில் நான் முக்கியப்பங்கு வகித்தேன். கலப்பைக் கொழுமுனை – செய்வதற்கு நான் பயன்படுகிறேன். நான் யார்?
விடை:
இரும்பு

Question 3.
நான் தேவனாம்பிய என அறியப்பட்டேன். நான் அமைதி வழியை தழுவிக் கொண்டேன் நான் யார்?
விடை:
அசோகர்

Question 4.
நான் இந்தியாவின் முதல் பேரரசை நிறுவினேன், நான் சல்லேகனா நோன்பிருந்தேன் நான் யார்?
விடை:
சந்திரகுப்த மௌரியர்

Question 5.
அசோகரின் சிங்கத் தலைப்பகுதி தூணில் நான் காணப்படுகிறேன். நம்முடைய தேசக் கொடியின் மையத்தில் உள்ளேன். நான் யார்?
விடை:
அசோக சக்கரம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

XI. அர்த்தப்படுத்தி விடையைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 91

Question 1.
மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம் ………. (39, 30, 27, 6, 5)
விடை:
ஹரியங்கா

Question 2.
………… பேரரசு இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும். (26, 30, 27)
விடை:
மௌரிய

Question 3.
…………… புதிய தலை நகரான பாடலிபுத்திரத்திற்கு அடித்தளமிட்டார். (2, 13, 27, 38)
விடை:
உதயன்

Question 4.
…………….. ஒரு முக்கியமான ஏற்று மதிப்பொருள். (17, 36, 24, 11, 19, 22, 31, 34)
விடை:
நறுமணப்பொருள்

Question 5.
பண்டைய மகத நாட்டில் இருந்த மடலாயம் பின்னர் புகழ்பெற்ற கல்வி நிலையமாக திகழ்ந்தது. (18, 35, 16, 14)
விடை:
நாளந்தா

Question 6.
நிலவரி …………… (20, 5)
விடை:
பகா

Question 7.
கலிங்கப் போரின் பயங்கரம் …………. பொறிக்கப்பட்டுள்ளது. (21, 37, 3, 4, 32, 33, 9, 10)
விடை:
பாறைக்கல்வெட்டு

Question 8.
கிரேக்கர்கள் பிந்துசாரரை ………. என்று அழைத்தனர். (1, 25, 28, 13, 4, 14)
விடை:
8அமிர்தகதா

Question 9.
சாரநாத் தூணின் சிகரப்பகுதியில் அமைந்துள்ளது ………… (13, 28, 24, 7, 8, 3, 4, 29, 23)
விடை:
தர்மச்சக்கரம்

Question 10.
அமைச்சரவை ………….. என அழைக்கப்பட்டது. (24, 16, 15, 30, 20, 30, 40, 12)
விடை:
மந்திரிபரிஷத்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

XII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. களப் பயணமாக அருங்காட்சியகம் செல்லுதல்.
2. அசோகர், சந்திர குப்தர் ஆகியவர்களோடு தொடர்புடைய திரைப்படங்களைக் காணுதல்.

XIV. வாழ்க்கைத்திறன் (மாணவர்களுக்கானது)

1. அசோகச் சக்கரத்தின் மாதிரி ஒன்றைச் செய்யவும்.
2. காஞ்சி ஸ்தூபியின் மாதிரி ஒன்றைச் செய்யவும்.
3. நமது தேசக் கொடியின் படம் வரைந்து வர்ணம் தீட்டவும்.

XV. விடைக்கட்டம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 92
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 93

6th Social Science Guide குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் …………. மகாஜனபதங்கள் இருந்தன.
அ) பத்து
ஆ) பதினான்கு
இ) பதினாறு
ஈ) பதினெட்டு
விடை:
இ) பதினாறு

Question 2.
தலைநகரான பாடலிபுத்திர நகருக்கு ………. நுழைவு வாயில்கள் இருந்தன.
அ) 24
ஆ) 32
இ) 49
ஈ) 64
விடை:
ஈ) 64

Question 3.
கலிங்கப் போரின் பயங்கரம் ……… வது பாறைக்கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.
அ) 10
ஆ) 11
இ) 12
ஈ) 13
விடை:
ஈ) 13

Question 4.
காலசோகா ………. வம்சத்தைச் சேர்ந்தவர்
அ) ஹரியங்கா
ஆ) சிசுநாக
இ) நந்த
ஈ) மௌரிய
விடை:
ஆ) சிசுநாக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

II. சாற்றைக் காரணத்துடன் பொருந்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கூற்று : மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது.
காரணம் : பிம்பிசாரர் படையெடுப்பு மற்றும் திருமண உறவு ஆகியவற்றின் மூலம் அரசை விரிவுபடுத்தினார்.
அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி,
ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு
விடை:
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி , அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிழ.
1. நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக 40 உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது 5 உறுப்பினர்களைக் கொண்ட எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
2. நகர நிர்வாகம் ‘நகரிகா என்னும் அதிகாரியின் கீழிருந்தது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 2 இல்லை
விடை:
ஆ) 2 மட்டும்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………….. சந்திரகுப்த மௌரியரால் வெற்றி கொள்ளப்பட்டார்.
விடை:
தனநந்தர்

Question 2.
…………….. ராஜகிரகத்தில் முதல் பௌத்த சபை மாநாட்டைக் கூட்டினார்.
விடை:
அஜாத சத்ரு

Question 3.
…………… பொருள் குறித்து அசோகரின் இரண்டாம் தூண் கல்வெட்டில் விளக்கப்பட்டுள்ளது.
விடை:
தர்மத்தின்

Question 4.
……………… என்னும் அமைச்சரவை அரசருக்கு உதவியது.
விடை:
மந்திரி பரிஷத்

IV. சரியா? தவறா?

1. சமூக மாற்றத்தில் தங்கம் குறிப்பிடத்தக்கப் பங்கினை வகித்தது.
விடை:
தவறு

Question 2.
மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்து இருந்தது.
விடை:
சரி

Question 3.
மகாபத்ம நந்தரும் அவருடைய எட்டு மகன்களும் நவநந்தர்கள் என அழைக்கப்பட்டனர்.
விடை:
சரி

Question 4.
அசோகர் மூன்றாம் பௌத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.
விடை:
தவறு

V. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 96
விடை:
அ) 4 3 2 1

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் செயல்பட்ட இருவகை அரசுகள் யாவை?
விடை:

  • கண சங்கங்கள் – மேட்டுக்குடி மக்கள் அடங்கிய குழுவின் ஆட்சி
  • முடியாட்சி அரசுகள் – மன்னராட்சி முறையில் அமைந்தவை.

Question 2.
பத்ரபாகு யார்?
விடை:

  • பத்ரபாகு ஒரு சமணத்துறவி.
  • இவர் சந்திரகுப்த மௌரியரை தென்னிந்தியாவிற்கு அழைத்துச் சென்றார்.

Question 3.
அசோகர் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்?
விடை:

  • இரக்க உணர்வு
  • அறக்கொடை
  • தூய்மை புனிதத்தன்மை
  • சுய – கட்டுப்பாடு
  • உண்மையுடைமை
  • மரியாதையும் பணிவும்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?
விடை:

  • அசோகருக்குப் பின் வந்து அரசர்கள் வலிமை குன்றியவர்கள்
  • பேரரசின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற கலகங்கள்
  • பாக்டீரிய நாட்டைச் சேர்ந்த கிரேக்கர்களின் படையெடுப்பு பேரரசை வலிமை குன்றச் செய்தது.
  • மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவருடைய படைத் தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.
  • புஷ்யமித்ரர் சுங்க அரச வம்சத்தை ஏற்படுத்தினார்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 2 History Chapter 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

7th Social  Science Guide முகலாயப் பேரரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஹீமாயூன்
ஆ) பாபர்
இ) ஜஹாங்கீர்
ஈ) அக்பர்
விடை:
ஆ) பாபர்

Question 2.
அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?
அ) பானிபட்
ஆ) சௌசா
இ) ஹால்டிகட்
ஈ) கன்னோசி
விடை:
இ) ஹால்டிகட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 3.
ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?
அ) பாபர்
ஆ) ஹிமாயூன்
இ) இப்ராஹிம் லோடி
ஈ) ஆலம்கான்
விடை:
ஆ) ஹிமாயூன்

Question 4.
மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஷெர்ஷா
ஆ) அக்பர்
இ) ஜஹாங்கீர்
ஈ) ஷாஜஷான்
விடை:
ஆ) அக்பர்

Question 5.
அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
அ) பீர்பால்
ஆ) ராஜா பகவன்தாஸ்
இ) இராஜ தோடர்மால்
ஈ) இராஜா மான்சிங்
விடை:
இ) இராஜ தோடர்மால்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர்…………………. ஆகும்.
விடை:
சேத்தக்

Question 2.
பதேபூர் சிக்ரியிலுள்ள. …………………… அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்.
விடை:
இபாதத் கானா

Question 3.
அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி. ………………
விடை:
சலீம் சிஸ்டி

Question 4.
ஜப்தி என்னும் முறை …………………. ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.
விடை:
ஷாஜகான் .

Question 5.
…………….. வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
விடை:
சுயயுர்கள்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 2

IV. சரியா? தவறா?

Question 1.
பாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
ஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்.
விடை:
தவறு

Question 3.
ஒளரங்கசீப், ராஜபுதனப் பெண்ணைத் திருமணம் செய்தார்.
விடை:
தவறு

Question 4.
தன் மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜூனைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.
விடை:
சரி

Question 5.
ஔரங்கசீப் காலக்கட்டத்தில், முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்றது.
விடை:
தவறு

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்
காரணம் : ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 2.
கூற்று : ஒளரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
காரணம் : ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஆ) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 3.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
I. கம்ரான் ஆப்கானியரின் மகனாவார் ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.
II. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்.
III. ஒளரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்றுவிட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
IV. இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அ) I, II மற்றும் III சரி
ஆ) II, III மற்றும் IV சரி
இ) I, III மற்றும் IV சரி
ஈ) II, III, IV மற்றும் 1 சரி
விடை:
ஆ) II, III மற்றும் IV சரி

Question 4.
காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக.
1. கன்வா போர்
2. சௌசா போர்
3. கன்னோசி போர்
4. சந்தேரி போர்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 3

Question 5.
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக.
i) சர்க்கார்
ii) பர்கானா
iii) சுபா |
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 4

VI. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 5
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 6

VII. குறுகிய வினா

Question 1.
1526 இல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழலை எழுதுக.
விடை:
1524 வரையிலும் பஞ்சாப்பைக் கடந்து பாபர் வேறு எதற்கும் ஆசைப்படவில்லை. அச்சமயத்தில் தௌலத்கான் லோடியின் மகன் தில்வார்கான், டெல்லி சுல்தானின் மாமனார் ஆலம்கான் ஆகிய இருவரும் காபூல் வந்தனர்.

டெல்லி சுல்தான் இப்ராகிம் லோடியைப் பதவியை விட்டு நீக்க பாபரின் உதவி கேட்டு வந்தனர். இதுவே 1526 ல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழல் ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
ஹிமாயூன் 1555 இல் டெல்லியை மீண்டும் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிடுக.
விடை:
ஷெர்ஷாவால் தோற்கடிக்கப்பட்ட ஹிமாயூன் பாரசிக அரசர் சபாவிட் வம்சத்தை சேர்ந்த ஷா-தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555 ல் டெல்லியை மீண்டும் கைப்பற்றினார்.

Question 3.
மன்சப்தாரி முறையைப் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகம் செய்தார். இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக மாற்றப்பட்டது. இப்பணியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மன்சப் (படிநிலை, தகுதி அந்தஸ்து) வழங்கப்பட்டது. அப்படியான தகுதியைப் பெற்றவர் மன்சப்தார் ஆவார்.

VIII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

Question 1.
முகலாயர்களின் நிலவருவாய் முறையைப் பற்றி விவரி
விடை:
அக்பரின் ஆட்சியின்போது நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.

அக்பரின் வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் அறிமுகம் செய்த முறையை பின்பற்றினார். அம்முறையை மேலும் சீர் செய்தார்.

தோடர்மாலின் ஜப்த் முறை வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின்படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றின் இயல்புக்கும் வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன.

பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு வரியாக செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது. ஷாஜகானின் காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பெற்றது.

முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை ஜாகீர் எனப் பெயரிட்டு செயல்படுத்தினார். இந்நிலவுரிமை ஒப்பந்த காமுறை டெல்லி சுல்தான்கள் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதாகும். இம்முறையின் கீழ் குறிப்பிட்ட ஒரு பகுதியின் நிலவரி வசூல் செய்யும் பொறுப்பும் அப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் ராணுவ அல்லது சிவில் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய பெயர் ஜாகீர்தார் ஆகும்.

தங்களது ஊதியத்தை பணமாக பெறாத ஒவ்வொரு மன்சப்தாரும் ஜாகீர்தார் ஆவார்.

ஜாகீர்தார் தம் அதிகாரிகள் மூலம் நிலவரியை வசூல் செய்தார். மாவட்ட அளவிலான அதிகாரி அமில் சூஜார் ஆவார்.

அவருக்கு பொட்டாடார், கனுங்கோ, பட்வாரி, முக்காதம் போன்ற துணைநிலை அதிகாரிகள் உதவி செய்தனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.
விடை:

  • அக்பர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார். அவருடைய சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன.
  • பல்வேறு விதமான நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் கொண்டிருந்த அறிஞர்களை அவர் ஆதரித்தார்.
  • அபுல்பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான் – இ-கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா
    பகவன்தாஸ், ராஜா மான்சிங் ஆகியோர் அப்பரின் அவையில் இடம் பெற்றிருந்தனர்.
  • பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சென், ஒவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
முகலாயர் ஆட்சியில் ஷாஜகானின் காலத்தை மற்ற முகலாய ஆட்சியாளர்களோடு ஒப்பிடுக.
விடை:

  1. முகலாயப் பேரரசும், அதன் புகழும் உன்னதமும் ஷாஜகான் காலத்தில் உச்சத்தை எட்டியது. பேரரசர் அமர்வதற்காக விலையுயர்ந்த நவரத்தினக் கற்கள் பதிக்கப் பெற்ற மயிலாசனம் தயாரிக்கப்பட்டது.
  2. யமுனை நதிக்கரையில் புகழ்பெற்ற தாஜ்மஹால் எழுப்பப்பட்டது.
  3. ஆக்ராவிலுள்ள முத்து மசூதி, டெல்லியிலுள்ள மிகப்பெரிய ஜீம்மா மசூதி ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டவையாகும்.

X. வரைபடம்

Question 1.
முகலாயப் பேரரசில் அக்பர் மற்றும் ஒளரங்கசீப்பின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளைப் குறிக்கவும், முகலாயர்களின் முக்கிய போர்களைக் குறிக்கவும்.
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

XI. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
அக்பரின் அவையில் இருந்த வல்லுநர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுக.

Question 2.
மாதிரி இபாத்கானவை வகுப்பறையில் நடத்திக்காட்டுக

7th Social  Science Guide முகலாயப் பேரரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்நதெடுத்து எழுதுக.

Question 1.
பாபர் தமக்கு பிடித்த தன் மூத்த மகன் ………………… தம் வாரிசாக அறிவித்தார்.
அ) ஹிமாயூன்
ஆ) ஹிண்டல்
இ) கம்ரான்
ஈ) ஜஹாங்கீர்
விடை:
அ) ஹிமாயூன்

Question 2.
முகலாய மாமன்னர்களில் கடைசி அரசர் ……………..
அ) ஷாஜகான்
ஆ) ஷெர்சா
இ) ஒளரங்கசீப்
ஈ) ஜஹாங்கீர்
விடை:
இ) ஔரங்கசீப்

Question 3.
முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமான …………….. ஷாஜகானால் கட்டப்பட்டது.
அ) ஜிம்மா மசூதி
ஆ) மோதி மசூதி
இ) முத்து மசூதி
ஈ) செங்கோட்டை
விடை:
ஈ) செங்கோட்டை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பாபர் முகலாய ஆட்சியை தொடங்கிய ஆண்டு ……………..
விடை:
1526

Question 2.
முதல் பானிபட் போரில் பாபர் ………………… ஜத் தோற்கடித்தார்.
விடை:
இப்ராஹிம் லோடி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 3.
…………………. ல் உள்ள அக்பரின் கல்லறை கட்டப் பணிகளை ஜஹாங்கீர் நிறைய செய்தார்.
விடை:
சிக்கந்தராவில்

Question 4.
செங்கோட்டை ……………….. கட்டப்பட்டுள்ளது.
விடை:
சிவப்பு நிறக் கற்களால்

Question 5.
மன்சப்தார் ………………….. எனும் இருவிடயங்களைச் சார்ந்திருந்தன.
விடை:
சாட், சவார்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 7

IV. சரியா? / தவறா?

Question 1.
நகரங்களும், பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டன
விடை:
சரி

Question 2.
ஜஹாங்கீர் மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தார்.
விடை:
தவறு

Question 3.
சவார் என்பது மன்சப்தார் பராமரிக்க வேண்டிய யானைகள், யானைகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
விடை:
தவறு

Question 4.
முகலாய வம்சத்தின் ஆட்சி பாபர் இந்தியாவிற்கு வந்தவுடன் தொடங்கப்பட்டது
விடை:
சரி

Question 5.
அக்பர்அனைத்து மதங்களைச்சார்ந்தோரையும் சமமாகவும் பெருந்தன்மையோடும் நடத்தினார்
விடை:
சரி

V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று : சில மராத்திய போர்த் தளபதிகள் குறிப்பாக ஷாஜி பான்ஸ்லே போன்றோர் தக்காண அரசர்களிடம் பணியில் சேர்ந்தனர். இவர்கள் மரத்திய வீரர்களைக் கொண்ட அணிகளுக்குப் பயிற்சியளித்து முகலாயர்களுக்கு எதிராகப் போரிடச் செய்தனர்.
காரணம் : இதனால் தக்காணத்தில் மராத்தியர்களையும் சேர்த்து முகலாயர்களுக்கு எதிராக ஒரு நீண்ட நெடிய எதிர்ப்பு உருவாகியது.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு

Question 2.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
i) 1556 ல் ஷெர்ஷா இயற்கை எய்திய பின்னர், அரசராக முடிசூட்டப் பெற்றார்.
ii) நல்ல பயணத்தரும் ஒரு நிலவருவாய் முறையினை அறிமுகம் செய்தார்
iii) படையெடுப்பின் மூலமாகவும் நட்புறவின் மூலமாகவும் அக்பர் இந்தியாவின் பெரும் – பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
iv) 1556 ல் டெல்லியில் தமது நூலகத்தின் படிக்கட்டுகளில் இடறி விழுந்த பாபர் மரணத்தைத் தழுவினார்.

அ) i, ii மற்றும் iii சரி
ஆ) ii, iii சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) ii, iii, iv மற்றும் 1 சரி
விடை:
ஆ) ii, iii சரி

Question 3.
காலவரிசைப்படி அரசர்களை வரிசைப்படுத்துக.
விடை:
ஹிமாயூன், பாபர், ஜஹாங்கீர், அக்பர், ஷாஜஹான், ஔரங்கசீப்
பாபர் – 1526 – 1530
ஹிமாயூன் – 1530 – 1540
அக்பர் – 1556 – 1605
ஜஹாங்கீர் – 1605 – 1627
ஷாஜஹான் – 1627 – 1658
ஒளரங்கசீப் – 1658 – 1707

Question 4.
பொருத்துக
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 8

VI. சுருக்கமான விடையளி

Question 1.
முகலாயர்களின் உள்ளாட்சி நிர்வாகம் எப்படி இருந்தது?
விடை:

  • நகரங்களும், பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டன கொத்தவால் சட்டம் ஒழுங்கை பராமரித்தார்.
  • கிராம நிர்வாகம் கிராம பஞ்சாயத்துகளிடம் வழங்கப்பட்டிருந்தது.
  • பஞ்சாயத்து உறுப்பினர்கள் தீர்ப்புகளை வழங்கினார்.

Question 2.
முகலாயர்களின் படைநிர்வாகம் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
முகலாய இராணுவமானது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, பீரங்கிப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தன.

அரசர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, சிறப்பு வாய்ந்த ஆயுதங்களை ஏந்திய எண்ணிக்கையிலும் அதிகமான பாதுகாப்பு வீரர்களையும், அரண்மனைக் காவலர்களாகவும் பராமரித்தார்.

VII. விடையளி

Question 1.
முகலாயர்களின் சமயக்கொள்கை குறித்து எழுதுக?
விடை:

  • முகலாயப் பேரரசர்கள் இஸ்லாமைப் பின்பற்றினர்
  • அக்பர் தம்முடைய சமயக்கொள்கையில் தாராள மனப்பாங்கு கொண்டவராக இருந்தார்
  • அக்பர் அனைத்து மதங்களிலுமுள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து தீன்-இலாகி என்னும் ஒரே சமயத்தை உருவாக்க முயன்றார்
  • அக்பருடைய கொள்கையை ஜஹாங்கீரும் ஷாஜகானும் பின்பற்றினர்.
  • ஒளரங்கசீப்தன்னுடைய முன்னோர்களின் தாராளக் கொள்கையை மறுத்தார். இந்துக்களின் மீது ஜிசியா வரியையும், யாத்ரீகர்களின் மீதான வரியையும் விதித்தார்.
  • ஏனைய மதங்களின் மீதான அவரின் சகிப்புத்தன்மை இன்மை மக்களிடையே அவரை விரும்பத்தகாதவராக ஆக்கியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு 9