Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 3 Chapter 2 வேளாண்மை Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 3 Chapter 2 வேளாண்மை

5th Social Science Guide வேளாண்மை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
________________ என்பது உணவு உற்பத்திக்காக தாவரங்களை வளர்ப்பதாகும்.
அ. நீர்ப்பாசனம்
ஆ. வேளாண்மை
இ. அகழ்வராய்ச்சி
விடை:
ஆ. வேளாண்மை

Question 2.
______________ என்பவர் உணவு அல்லது மூலப் பொருள்களுக்காக தாவரங்களையும், விலங்குகளையும் வளர்க்கிறார்.
அ. மருத்துவர்
ஆ. ஆசிரியர்
இ. விவசாயி
விடை:
இ. விவசாயி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 3.
_______________ வேளாண்மை என்பது பயிர்களுடன் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது.
அ. வணிக
ஆ. கலப்புப் பொருளாதார
இ. தன்னிறைவு
விடை:
ஆ. கலப்புப் பொருளாதார

Question 4.
_______________ நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைக் கண்காணிக்கிறது.
அ. மத்திய நிலத்தடி நீர் வாரியம்
ஆ. மெட்ரோ நீர் வாரியம்
இ. யூனியன் குடிநீர் வாரியம்
விடை:
அ. மத்திய நிலத்தடி நீர் வாரியம்

Question 5.
தமிழகத்தில் உள்ள ______________ மாவட்டத்தில் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
அ. கோயம்புத்தூர்
ஆ. சென்னை
இ. கடலூர்
விடை:
அ. கோயம்புத்தூர்

II. பொருத்துக

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை 1
விடை:
1. தோட்ட வேளாண்மை – ஒற்றைப் பணப் பயிர்
2. கலப்புப் பொருளாதார வேளாண்மை – விலங்குகளை வளர்ப்பது
3. வணிக வேளாண்மை – விற்பனை நோக்கம்
4. கிணற்று நீர்ப் பாசனம் – பழைமையான முறை
5. தன்னிறைவு வேளாண்மை – குடும்ப நுகர்வு

III. சரியா தவறா?

Question 1.
தமிழ்நாட்டின் முதன்மையான பயிர் நெல் ஆகும்.
விடை:
சரி

Question 2.
தமிழ்நாட்டில் இரண்டு மண் வகைகள் உள்ளன.
விடை:
தவறு

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 3.
சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு வகை நுண்பாசன முறையாகும்.
விடை:
சரி

Question 4.
தோட்டப் பயிருக்குப் பலாப்பழம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை:
சரி

Question 5.
மாம்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர் ஆகும்.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
வேளாண்மை என்றால் என்ன?
விடை:
வேளாண்மை என்பது சாகுபடிக்கு மண்ணை உழுதல், பயிர்களை வளர்த்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றைப் பற்றிய கலை மற்றும் அறிவியல் ஆகும்.

Question 2.
விவசாயிகளைப் பற்றி எழுதுக.
விடை:
விவசாயி என்பவர் , உணவு அல்லது மூலப்பொருள்களுக்காகத் தாவரங்களையும், விலங்குகளையும் வளர்ப்பவர் ஆவார். இந்தியா, விவசாயிகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் பெரும்பான்மையான இந்தியர்கள் நேரடியாகவோ, மறைமுகமகவோ விவசாய செயல்பாடுகளில் ஈடுபடுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்திய விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாவர்.

Question 3.
வேளாண்மையின் வகைகளைக் கூறுக.
விடை:
வேளாண்மையில் பல வகைகள் உள்ளன. * தன்னிறைவு வேளாண்மை * வணிக வேளாண்மை * தோட்ட வேளாண்மை * கலப்புப் பொருளாதார வேளாண்மை

Question 4.
கிணற்று நீர்ப் பாசனம் என்றால் என்ன?
விடை:
கிணற்றிலிருந்து நீர்ப்பாசனத்திற்கு நீரை வெளியேற்றுவது கிணற்று நீர்ப்பாசனம் எனப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் கிணற்று நீர்ப்பாசன மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வகைப் பாசனம் மிகவும் மலிவான பாசன முறையாகும்.

Question 5.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
மத்திய நிலத்தடி நீர் வாரியம் நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

V. விரிவான விடையளிக்க

Question 1.
கலப்புப் பொருளாதாரம் மற்றும் தோட்ட வேளாண்மை பற்றி எழுதுக.
விடை:
தோட்ட வேளாண்மை :
ஒரு பண்ணையில் ஒற்றைப் பணப்பயிர் விற்பனைக்காக வளர்க்கப்படுவது தோட்ட வேளாண்மையாகும். எடுத்துக்காட்டுகள் : தேயிலை, காபி, இரப்பர்

கலப்புப் பொருளாதார வேளாண்மை :
கலப்புப் பொருளாதார வேளாண்மை என்பது, பயிர்களைப் பயிரிடுவதோடு மட்டுமல்லாமல் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது. கலப்பு விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்தவர்களாக உள்ளனர்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 2.
ஏதேனும் இரண்டு வகையான நீர்ப்பாசனமுறைகளைப் பற்றி விவரி.
விடை:
தெளிப்பானை நீர்ப்பாசனம் :
தெளிப்பானை நீர்ப்பாசனம் என்பது மழைப்பொழிவு போன்ற நீர்ப்பாசன முறையாகும். குழாய்கள் மூலம் தெளிப்பான்கள் வழியாக நீர் மழை போன்று தெளிக்கப்படுகிறது.

சொட்டு நீர்ப் பாசனம் :
சொட்டு நீர்ப் பாசனம் என்பது ஒரு வகை நுண் பாசன முறையாகும். இம்முறையானது, நீர் – மற்றும் மண்ணின் ஊட்டச்சத்துகளைச் சேமிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த நீர்ப்பாசன முறையில் நீரானது குழாய்களின் மூலம் தாவரங்களின் வேர்களில் மெதுவாகச் சொட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. குழாய்கள் மண்ணின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்புக்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும்.இதனால், நீர் ஆவியாவது குறைகிறது.

Question 3.
தமிழகத்தின் முக்கிய பயிர்களைப் பற்றி விவரி.
விடை:
தமிழ்நாடு, வெவ்வேறு வேளாண் காலநிலைகள் மற்றும் மாறுபட்ட மண் வகைகளைக் கொண்டுள்ளது. இது பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருள்கள், தோட்டப் பயிர்கள், பூக்கள், மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் உற்பத்திக்கு ஏற்றதாகும். தமிழ்நாட்டில் தோட்டக்கலை வேகமாக வளர்ந்து வரும் விவசாயத் துறையாகும்.

இங்கு நெல் அதிகமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஏனெனில் அரிசி மாநிலத்தின் முக்கிய உணவாகும்.

அரிசி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் (கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, பச்சைப் பயறு, உளுத்தம் பருப்பு மற்றும் கொள்ளுப் பயறு) ஆகியவை முக்கிய உணவுப் பயிர்கள் ஆகும்.

பணப்பயிர்களில் பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துகள், காபி, தேயிலை, இரப்பர், தேங்காய், எள் மற்றும் மிளகாய் ஆகியவை அடங்கும்.

மாம்பழம் மற்றும் வாழைப்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர்கள் ஆகும்.

மல்லிகை, செவ்வந்திப் பூ, சாமந்திப் பூ மற்றும் ரோஜா ஆகியவை தமிழகத்தில் வளர்க்கப்படும் முக்கிய பூ வகைகளாகும்.

5th Social Science Guide வேளாண்மை Additional Important Questions and Answers

கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியா ஒரு ____________ நாடு.
விடை:
விவசாய

Question 2.
குடும்ப நுகர்வுக்கு மட்டும் பயன்படுவது ____________ வேளாண்மை ஆகும்.
விடை:
தன்னிறைவு

Question 3.
சந்தையில் விளைபொருள்களை விற்பதே _______________ வேளாண்மையின் நோக்கம் ஆகும்.
விடை:
வணிக

Question 4.
கலப்புப் பொருளாதார வேளாண்மையில் பயிர்களுடன் ______________ வளர்க்கப்படுகின்றன.
விடை:
விலங்குகளும்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 5.
விவசாய விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கும் அரசு நிறுவனம் ______________ ஆகும்.
விடை:
இந்திய உணவுக் கழகம்

Question 6.
விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையிலுள்ள தரகர்களை நீக்க _____________ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
விடை:
உழவர் சந்தையை

Question 7.
வடமேற்கு மற்றும் _______________ பருவ மழையின் மூலம் தமிழகத்திற்கு தண்ணீ ர் கிடைக்கிறது.
விடை:
தென்கிழக்குப்

Question 8.
_____________ நீர்ப்பாசனம் என்பது மிகப் பழமையானது.
விடை:
கிணற்று

Question 9.
வடஇந்தியாவில் அதிகம் பின்பற்றப்படுவது ______________ நீர்ப்பாசனம் ஆகும்.
விடை:
கால்வாய்

Question 10.
பசுமைப் புரட்சியின் தந்தை
விடை:
Dr. M.S. சுவாமிநாதன்

II. சுருக்கமாக விடை தருக

Question 1.
பயிர் உற்பத்தியில் மகசூல் அதிகரிக்கும் முறையின் பெயர் என்ன?
விடை:
பசுமைப் புரட்சி

Question 2.
மழைப் பொழிவு போன்ற நீர்ப் பாசன முறை எது?
விடை:
தெளிப்பானை நீர்ப்பாசனம்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 3.
பழங்கள், பூக்கள், அலங்காரத் தாவரங்கள் வளர்க்கும் அறிவியல் கலை எது?
விடை:
தோட்டக்கலை

Question 4.
தமிழகத்தின் முக்கியமான உணவு எது?
விடை:
அரிசி

Question 5.
தானியங்களும், பருப்பு வகைகளும் எவ்வகைப் பயிர்கள்?
விடை:
உணவுப் பயிர்கள்

Question 6.
பணப் பயிர்களுக்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
பருத்தி, கரும்பு, காபி, தேயிலை

Question 7.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?
விடை:
தஞ்சாவூர்

Question 8.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எது?
விடை:
கோயம்புத்தூர்

Question 9.
தஞ்சாவூர் எங்கு அமைந்துள்ளது?
விடை:
காவிரி டெல்டாவில்

Question 10.
இந்திய விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தில் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை:
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு

5th Social Science Guide வேளாண்மை InText Questions and Answers

பக்கம் 127. செயல்பாடு நாம் செய்வோம்

விவசாயிக்கு அவரின் பண்ணையைக் கண்டுபிடிக்க உதவுக.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை 2
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை 3

பக்கம் 131 செயல்பாடு நாம் செய்வோம்

(இழுவை, இயந்திரம், தூற்றி, விவசாயி)
பின்வருவனவற்றைக் கண்டுபிடிக்க.
Question 1.
நமக்காக உணவை உற்பத்தி செய்பவர்.
வி __ __ யி
விடை:
வசா

Question 2.
இது உழுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இ __ வை இ __ __ __ __ ம்
விடை:
ழு யந்திர

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 2 வேளாண்மை

Question 3.
இது வைக்கோலில் இருந்து தானியங்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
தூ __ றி
விடை:
ற்

Question 4.
இந்தியாவின் நெற்களஞ்சியம் எனப்படும் மாநிலம் எது?
விடை:
ஆந்திரப்பிரதேசம்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

5th Social Science Guide கோட்டைகளும் அரண்மனைகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
____________ கோட்டை விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது.
அ. உதயகிரி
ஆ. வேலூர்
இ. செஞ்சி
விடை:
ஆ. வேலூர்

Question 2.
திருமலை நாயக்கர் அரண்மனை ______________ யில் அமைந்துள்ளது.
அ. சேலம்
ஆ. திருமலை
இ. மதுரை
விடை:
இ. மதுரை

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 3.
உலகின் இடைக்கால கையெழுத்துப் பிரதி நூலகங்களில் ______________ மஹால் ஒன்றாகும்.
அ. சரஸ்வதி
ஆ. லட்சுமி
இ. துர்கா
விடை:
அ. சரஸ்வதி

Question 4.
பத்மநாபபுரம் அரண்மனை ____________ பில் அமைந்துள்ளது.
அ. ஊட்டி
ஆ. கன்னியாகுமரி
இ. சென்னை
விடை:
ஆ. கன்னியாகுமரி

Question 5.
_____________ கோட்டை, டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
அ. திண்டுக்கல்
ஆ. செஞ்சி
இ. தரங்கம்பாடி
விடை:
இ. தரங்கம்பாடி

II. பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 1
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 2

III. சரியா தவறா?

Question 1.
தமிழகம் மன்னர் பலரால் குறிப்பாக சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 2.
வேலூர்க் கோட்டையில் ஐந்து மஹால்கள் உள்ளன.
விடை:
சரி

Question 3.
திண்டுக்கல் கோட்டை மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது.
விடை:
சரி

Question 4.
ஊமையன் கோட்டை என்பது செஞ்சிக் கோட்டையின் மற்றொரு பெயராகும்.
விடை:
தவறு. (ஊமையன் கோட்டை என்பது திருமயம் கோட்டையின் மற்றொரு பெயராகும்)

Question 5.
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் யாவை?
விடை:
சோழர்கள், பாண்டியர்கள், நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட அரண்மனைகளும், கோட்டைகளும் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

Question 2.
தரங்கம்பாடி கோட்டையைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படும் தரங்கம்பாடி கோட்டை, தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் (Tranquebar) வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது.

இந்தக் கோட்டை சரிவக வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டுள்ளது. கோட்டையின் மையப் பகுதியில் நான்கு குவிமாடங்கள் உள்ளன. மண்டபத்தின் மையத்தூண் குவிமாடங்களின் முழு எடையையும் தாங்குகிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 3.
செஞ்சிக் கோட்டையின் சில சிறப்பு அமைவுகள் யாவை?
விடை:
செஞ்சிக் கோட்டை பல சிறப்பு அமைவுகளைக் கொண்டுள்ளது. அவை: திருமண மண்டபம், கோவில்கள், ஆனைக்குளம், களஞ்சியங்கள் மற்றும் கண்காணிப்புக் கோபுரம் ஆகும்.

Question 4.
திருமலை நாயக்கர் அரண்மனை குறித்துச் சிறுகுறிப்பு வரைக.
விடை:
திருமலை நாயக்கர் அரண்மனை மதுரை நகரில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

Question 5.
தஞ்சாவூர் மராத்திய அரண்மனையைக் கட்டியவர் யார்? – அதன் சிறப்பமைவுகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
விடை:
தஞ்சாவூர் மராத்திய அரண்மனை முதலில் தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. தஞ்சாவூர் நாயக்க அரசு வீழ்ச்சியடைந்த பின்னர், இது தஞ்சாவூர் மராத்தியரின் அதிகாரப்பூர்வ இல்லமாகத் திகழ்ந்தது.

தஞ்சாவூர் அரண்மனை வளாகம் ஒரு சுற்றுலாத்தலமாகும். இது மூன்று தனித்தனி பார்வையிடங்களைக் கொண்டுள்ளது. அவையாவன : அரண்மனை, கலைக்கூடம் மற்றும் கையெழுத்துப் பிரதி (Manuscript) நூலகம் (சரஸ்வதி மஹால்)

V. விரிவான விடையளிக்க

Question 1.
வேலூர்க் கோட்டையின் கட்டமைப்பை விவரி.
விடை:
வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.

தமிழ்நாட்டின் கோட்டைகளில், வேலூர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக கருதப்படுகிறது. இது ஆழமான மற்றும் அகலமான அகழியால் சூழப்பட்டுள்ளது. இந்த அகழி, ஆயிரக்கணக்கான முதலைகளைக் கொண்டிருந்ததால் படையெடுப்பவர்கள் இதனைக் கடக்க அஞ்சினர்.

வேலூர்க் கோட்டை இராணுவக் கட்டடக்கலைக்குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு ஆகும். இது இரட்டைக் கோட்டைகளாக உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புற கோபுரங்கள், உட்புற கோபுரங்களைவிடத் தாழ்வாக உள்ளன. 1799ஆம் ஆண்டில், 1 திப்பு சுல்தானின் குடும்பம் ஆங்கிலேயர்களால் இங்குச் சிறை வைக்கப்பட்டது. 1806ஆம் ஆண்டில் வேலூர்க் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் கிளர்ச்சி நடைபெற்றது. வேலூர்க் கோட்டைக்குள் புகழ்பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி மற்றும் பல அரசு அலுவலகங்கள் உள்ளன. வேலூர்க் கோட்டையின் உள்ளே முக்கியமான ஐந்து மஹால்கள் காணப்படுகின்றன,

அவையாவன: ஹைதர் மஹால், திப்பு மஹால், பேகம் மஹால், கண்டி மஹால், பாதுஷா மஹால்

Question 2.
திண்டுக்கல் கோட்டை பற்றி விரிவாக எழுதுக.
விடை:
தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் அமைந்துள்ள திண்டுக்கல் கோட்டை 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டை திண்டுக்கல் மலைக் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது 18ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

மைசூர் அரசின் படையெடுப்பில் இருந்து தங்கள் நாட்டைக் காக்கும் பொருட்டு, மதுரை நாயக்கர்களால் திண்டுக்கல் கோட்டை கட்டப்பட்டது. தற்போது இக்கோட்டையை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பராமரிக்கிறது. கனரக பீரங்கிகளைத் தாங்கும் வகையில் கோட்டை, இரட்டைச் சுவர்களால் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 3.
பத்மநாபபுரம் அரண்மனையின் கட்டடக் கலையையும் அதன் பல்வேறு பிரிவுகளையும் விவரிக்க.
விடை:
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரத்தில் அமைந்துள்ள அழகான வரலாற்று நினைவுச் சின்னமாகும். இது கல்குளம் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது.

பத்மநாபபுரம் அரண்மனை கேரள கட்டடக் கலையைக் கொண்டு மரத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது கலை மற்றும் கைவினைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இராஜமாதா அரண்மனை, சபை, தெற்கு அரண்மனை போன்ற பல்வேறு பார்வையிடங்கள் உள்ளன.

5th Social Science Guide கோட்டைகளும் அரண்மனைகளும் Additional Important Questions and Answers

கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_________________, _____________ மற்றும் _____________ போன்ற அயல் நாட்டினர் இந்தியாவில் கோட்டைகளைக் கட்டினர்.
விடை:
டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்

Question 2.
விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்டது _______________ ஆகும்.
விடை:
வேலூர்க் கோட்டை

Question 3.
1799ஆம் ஆண்டு _______________ குடும்பம் வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தது.
விடை:
திப்பு சுல்தானின்

Question 4.
வேலூர்க் கோட்டையில் _______________ உள்ளது.
விடை:
ஜலகண்டேஸ்வரர் கோயில்

Question 5.
மலைக் கோயில் என அழைக்கப்படுவது ______________ கோட்டையாகும்.
விடை:
திண்டுக்கல்

Question 6.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை _______________
விடை:
புனித ஜார்ஜ் கோட்டை

Question 7.
திருமயம் கோட்டை ______________ என்றும் அழைக்கப்படுகிறது.
விடை:
ஊமையன் கோட்டை

Question 8.
சதுரங்கப்பட்டினம் கோட்டை _______________ உள்ளது.
விடை:
காஞ்சிபுரத்தில்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும்

Question 9.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டை _______________ ஆகும்.
விடை:
செஞ்சிக்கோட்டை

Question 10.
டேனிஷ் கோட்டை என்பது ________________ கோட்டையைக் குறிக்கும்.
விடை:
தரங்கம்பாடி

II. பொருத்துக

1. தரங்கம்பாடி – சரஸ்வதி மஹால்
2. செஞ்சிக்கோட்டை – இராணுவக் கட்டடக்கலை
3. தஞ்சாவூர் கோட்டை – ஆனைக்குளம்
4. பத்மநாபபுரம் அரண்மனை – சரிவகம்
5. வேலூர்க் கோட்டை – கன்னியாகுமரி மாவட்டம்
விடை:
1. தரங்கம்பாடி – சரிவகம்
2. செஞ்சிக்கோட்டை – ஆனைக்குளம்
3. தஞ்சாவூர் கோட்டை – சரஸ்வதி மஹால்
4. பத்மநாபபுரம் அரண்மனை- கன்னியாகுமரி மாவட்டம்
5. வேலூர்க் கோட்டை – இராணுவக் கட்டடக்கலை

5th Social Science Guide கோட்டைகளும் அரண்மனைகளும் InText Questions and Answers

பக்கம் 113 (செயல்பாடு நாம் செய்வோம்)

பின்வரும் படங்களுக்குப் பெயரிடுக. (அரசர், அரசி, இளவரசர், இளவரசி)
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 3
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 4

பக்கம் 117 (செயல்பாடு நாம் செய்வோம்)

பின் வரும் பொருள்களை அவற்றின் பெயர்களுடன் இணைத்துக் காட்டுக.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 5
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 3 Chapter 1 கோட்டைகளும் அரண்மனைகளும் 6

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

10th Science Guide கார்பனும் அதன் சேர்மங்களும் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C,H, அந்தச் சேர்மத்தின் வகை
அ) அல்கேன்
ஆ) அல்கீன்
இ) அல்கைன்
ஈ) ஆல்கஹால்
விடை:
ஆ) அல்கீன்

Question 2.
ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில் பியூட்டன்-1-ஆல். இது எந்த வகைச் சேர்மம்?
அ) ஆல்டிஹைடு
ஆ) கார்பாசிலிக் அமிலம்
இ) கீட்டோன்
ஈ) ஆல்கஹால்
விடை:
ஈ) ஆல்கஹால்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Question 3.
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு …….
அ) ஆல்
ஆ) ஆயிக் அமிலம்
இ) ஏல்
ஈ) அல்
விடை:
இ) ஏல்

Question 4.
பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?
அ) C3 H8 மற்றும் C4 H10
ஆ) C2 H2 மற்றும் C2 H4
இ) CH4 மற்றும் C3 H6
ஈ) C2H5 OH மற்றும் C4 H8 OH
விடை:
அ) C3 H8 மற்றும் C4 H10

Question 5.
C2H5 OH + 3O2 → 2CO2 + 3H2O என்ப து
(Sep.20)
அ) எத்தனால் ஒடுக்கம்
ஆ) எத்தனால் எரிதல்
இ) எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்
ஈ) எத்தனேல் ஆக்சிஜனேற்றம்
விடை:
ஆ) எத்தனால் எரிதல்

Question 6.
எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம் …………
அ) 95.5%
ஆ) 75.5%
இ) 55.5%
ஈ) 45.5%
விடை:
அ) 95.5%

Question 7.
கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது?
அ) கார்பாக்சிலிக் அமிலம்
ஆ) ஈதர்
இ) எஸ்டர்
ஈ) ஆல்டிஹைடு
விடை:
ஆ) ஈதர்

Question 8.
TFM என்பது சோப்பின் எந்தப் பகுதிப்பொருளைக் குறிக்கிறது?
அ) தாது உப்பு
ஆ) வைட்டமின்
இ) கொழுப்பு அமிலம்
ஈ) கார்போஹைட்ரேட்
விடை:
இ) கொழுப்பு அமிலம்

Question 9.
கீழ்கண்டவற்றுள் டிடர்ஜென்ட்டை பற்றி தவறான கூற்று எது?
அ) நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு
ஆ) சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு
இ) டிடர்ஜென்ட்டின் அயனி பகுதி – SO3Na+
ஈ) கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.
விடை:
அ) நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு காரணமாக அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் ……………… ஆகும்.
விடை:
வினைச் செயல் தொகுதி

Question 2.
அல்கைனின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு.
விடை:
CnH2n-2

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Question 3.
IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது (அடிப்படைச் சொல் / பின்னொட்டு / மின்னொட்டு).
விடை:
அடிப்படைச் சொல்

Question 4.
(நிறைவுற்ற / நிறைவுறா) …………. சேர்மங்கள் புரோமின் நீரை நிறமாற்றம் அடையச் செய்யும்.
விடை:
நிறைவுறா

Question 5.
அடர் சல்பியூரிக் அமிலத்தைக் கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும்பொழுது ……….. (ஈத்தீன்/ ஈத்தேன்) கிடைக்கிறது.
விடை:
ஈத்தீன்

Question 6.
100% தூய ஆல்கஹால் ……….. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
தனி ஆல்கஹால்

Question 7.
எத்தனாயிக் அமிலம் …………. லிட்மஸ் தாளை …………… ஆக மாற்றுகிறது.
விடை:
நீல, சிவப்பு

Question 8.
கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்டு நீராற்பகுத்தல் …………. எனப்படும்.
விடை:
சோப்பாக்கல் வினை

Question 9.
உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்க ள் ………… (கிளை / நேரான) சங்கிலி தொடரினை உடையவை.
விடை:
நேரான

III. பொருத்துக. (PTA-2)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 55

விடை:
1-இ,
2-ஈ,
3-உ,
4-ஆ,
5-அ

IV. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. எது சரியான தெரிவோ அதனை தெரிவு செய்க.

i.
கீழ்கண்ட வினாக்களுக்கு பின்வரும் தரவுகளைப் பயன்படுத்தி விடையளி.
அ) A மற்றும் R சரி. R, A-ஐ விளக்குகிறது.
ஆ) A சரி R தவறு
இ) A தவறு R சரி
ஈ) A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.

Question 1.
கூற்று A: கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்க ள் சிறப்பாக செயல் புரிகின்றன. (PTA-4)
காரணம் R: டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகளை வீழ்படிய செய்வதில்லை.
விடை:
அ) A மற்றும் R சரி. R, A-ஐ விளக்குகிறது

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Question 2.
கூற்று A: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்.
காரணம் R: ஹைட்ரோ கார்பன்கள் சகபிணைப்பை பெற்றுள்ளன.
விடை:
ஈ) A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல

V. சிறுவினாக்கள்

Question 1.
எளிய கீட்டோனின் பெயரையும் மூலக்கூறு வாய்ப்பாட்டையும் எழுதுக. [PTA-2]
விடை:

  1. எளிய கீட்டோன்: அசிட்டோன்
  2. மூலக்கூறு வாய்ப்பாடு:
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 75

Question 2.
கீழ்க்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரைப் பொறுத்து வகைப்படுத்துக மற்றும் மூலக்கூறு வாய்பாடை எழுதுக.
1. புரப்பேன்
2. பென்சீன்
3. வளைய பியூட்டேன்
4. பியூரான்
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 76

Question 3.
எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக. (அல்ல து) ஆல்ஹால்களைக் கண்டறியும் சோதனையின் வினையைக் கூறுக. [Sep.20]
விடை:
எத்தனாலைக் காரங்கலந்த KMnO4 அல்லது அமிலங்கலந்த K2Cr2O7 கொண்டு ஆக்ஸிஜனேற்றம் செய்யும் போது எத்தனாயிக் அமிலம் உருவாகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 79
இந்த வினையின் போது ஆரஞ்சு நிறமுடைய K2Cr2O7 பச்சையாக மாறுகிறது. எனவே, இது ஆல்கஹால்களைக் கண்டறியும் சோதனைக்கு பயன்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Question 2.
டிடர்ஜெண்ட்கள் எவ்வாறு நீரை மாசுபடுத்துகின்றன? இம்மாசுபாட்டினை தவிர்க்கும் வழிமுறை (PTA-3)
விடை:

  1. சில டிடர்ஜெண்ட்களின் ஹைட்ரோ கார்பன் கிளை சங்கிலி தொடரை பெற்றிருக்கும்.
  2. தண்ணீ ரில் இருக்கும் நுண்ணுயிரிகளால் இவற்றை மக்கச் செய்ய இயலாது.
  3. இதனால் நீர் மாசடைந்து விடுகிறது.
  4. மிகக் குறைந்த அளவு டிடர்ஜென்ட்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டினை குறைக்கலாம். பாஸ்பேட் இல்லாத டிடர்ஜென்ட்களை பயன்படுத்தலாம்.

Question 3.
சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டை வேறுபடுத்துக. [Sep-20]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 80

VI. விரிவான விடையளி

Question 1.
படிவரிசை என்றால் என்ன? படிவரிசை சேர்மங்களின் மூன்று பண்புகளைக் கூறுக.
விடை:
படிவரிசை:
(i) படிவரிசை என்பது ஒரே பொதுவான மூலக்கூறு வாய்ப்பாட்டையும் ஒத்த வேதிப் பண்புகளையும்
கொண்ட ஒரே தொகுதி அல்லது ஒரே வகையில் உள்ள கரிமச் சேர்மங்களைக் குறிப்பதாகும்.

படிவரிசை சேர்மங்களின் பண்புகள்:

  1. ஒரு படிவரிசையில் உள்ள அடுத்தடுத்த சேர்மங்கள் மெத்திலீன்-CH2 என்ற பொது வேறுபாட்டில் வேறுபடுகின்றன.
  2. ஒரு படி வரிசையில் உள்ள அனைத்து சேர்மங்களும் ஒரே வகை தனிமங்களையும், வினைச்செயல் தொகுதிகளையும் பெற்றிருக்கும்.
  3. ஒரு படிவரிசையிலுள்ள அனைத்து சேர்மங்களையும் ஒரே பொது வாய்ப்பாட்டினால் குறிப்பிட இயலும். (எ.கா) அல்கேன் -CnH2n+1
  4. எல்லாச் சேர்மங்களும் ஒத்த வேதிவினைகளில் ஈடுபடுகின்றன.
  5. எல்லாச் சேர்மங்களையும் ஒரே முறையில் தயாரிக்க இயலும்.

Question 2.
CH3 – CH2 – CH2 – OH என்ற சேர்மத்திற்கு பெயரிடும் முறையை வரிசை கிரமமாக எழுதுக.
விடை:
பிற வினைச் செயல் தொகுதி கரிமச் சேர்மங்களை பெயரிடுதல்
CH3 – CH2 – CH2 – OH

  1. படி 1: இது மூன்று கார்பன் இருக்கும் சங்கிலித் தொடர். எனவே அடிப்படைச் சொல் புரப் ஆகும்.
  2. படி 2: கார்பன்களுக்கு இடையே உள்ள பிணைப்புகள் எல்லாம் ஒற்றை பிணைப்புகளாக இருப்பதால் ‘யேன்’ என்ற முதன்மை பின்னோட்டை சேர்க்க வேண்டும்.
  3. படி 3: கார்பன்சங்கிலியில் – OHதொகுதி இருப்பதால் இது ஒரு ஆல்கஹால். எனவே – OHதொகுதி அண்மையில் அமையும் விதமாக கார்பன் அணுவிலிருந்து எண்ணிடுதலைதொடங்கவேண்டும். (விதி 3)
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 85
  4. படி 4: OH தொகுதியின் இட எண் 1. எனவே இரண்டாம் நிலை பின்னொட்டாக 1 – ஆல் சேர்க்க
    வேண்டும். எனவே சேர்மத்தின் பெயர்
    புரப் + யேன் + (1-ஆல்) = புரப்பேன் -1-ஆல்

Question 3.
கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
விடை:
எத்தனால் தயாரிக்கும் முறை:
(i) தொழிற்சாலைகளில் கரும்புச் சாறின் கழிவுப் பாகிலிருந்து நொதித்தல் முறையில் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.
(ii) கழிவுப்பாகு என்பது செறிவு மிகுந்த கரும்புச் சர்க்கரை கரைசலிலிருந்து சர்க்கரையை படிகமாக்கும் பொழுது மீதமுள்ள ஆழ்ந்த நிறமுள்ள கூழ் போன்ற திரவமாகும்.
(iii) இதில் 30% சுக்ரோஸ் உள்ளது. இதை படிகமாக்கல் முறையில் பிரித்தெடுக்க இயலாது.

1. கழிவுப்பாகினை நீர்த்தல் :
கழிவுப்பாகிலுள்ள சர்க்கரையின் செறிவு 8 லிருந்து 10 சதவீதமாக நீரினால் நீர்க்கப்படுகிறது.

2. அம்மோனியம் உப்புகள் சேர்த்தல் :
நொதித்தலின் போது ஈஸ்ட்டிற்குத் தேவையான நைட்ரஜன் கலந்த உணவினைக் கழிவுப்பாகு கொண்டுள்ளது. நைட்ரஜன் அளவு குறைவாக இருப்பின், அம்மோனியம் சல்பேட் அல்லது அம்மோனியம் பாஸ்பேட் சேர்ப்பதன் மூலம் உரமூட்டப்படுகிறது.

3. ஈஸ்ட்சேர்த்தல் :
படி 2-இல் கிடைக்கும் கரைசல் பெரிய நொதித்தல் தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. கலவை 303K வெப்பநிலையில் சில நாட்களுக்கு வைக்கப்படுகிறது. அந்த நாட்களில் ஈஸ்ட்டிலுள்ள இன்வர்டேஸ், மற்றும் சைமேஸ் ஆகிய நொதிகள் சர்க்கரையை எத்தனாலாக மாற்றுகின்றன.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 86
எத்தனால் நொதித்த நீர்மம் கழுவு நீர்மம் என அழைக்கப்படுகிறது.

4. கழுவு நீர்மத்தைக் காய்ச்சி வடித்தல் :
15 முதல் 18 சதவீதம் ஆல்கஹாலும் மீதிப்பகுதி நீராகவும் உள்ள நொதித்த நீர்மமானது பின்னக் காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. முக்கியப் பின்னப் பகுதியாகக் கிடைத்த எத்தனாலின் நீர்க்கரைசல் 95.5% எத்தனாலையும் 4.5% நீரையும் பெற்றுள்ளது. இது எரிசாராயம் என அழைக்கப்படுகிறது. இக்கலவை சுமார் 5 லிருந்து 6 மணி நேரம் சுட்ட சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சி வடிக்கப்பட்டு 12 மணி நேரம் வைக்கப்படுகிறது. இக்கலவை மீண்டும் காய்ச்சி வடிக்கப்படும் போது தூய ஆல்கஹால் (100%) கிடைக்கிறது. இந்தத் தூய ஆல்கஹால் தனி ஆல்கஹால் எனப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Question 4.
கீழ்க்கண்ட வினைகளின் சமன் செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.
அ. NaOH எத்தனாயிக் அமிலத்துடன் ஏற்படுத்தும் நடுநிலையாக்கல் வினை
ஆ. எத்தனாயிக் அமிலம் NaHCO3 வினைபுரிந்து CO2 வெளியிடும் வினை
இ. எத்தனால் அமில பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் புரியும் ஆக்ஸிஜனேற்ற வினை
ஈ. எத்தனாலின் எரிதல் வினை
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 90

Question 5.
சோப்பின் தூய்மையாக்கல் முறையை விளக்குக. [PTA-6]
விடை:
சோப்பின் தூய்மையாக்கல் வினை

  1. ஒரு சோப்பு மூலக்கூறு வேறுபட்ட இரு வேதிப் பகுதிகளை பெற்றுள்ளன. இப்பகுதிகள் நீருடன் வேறுபட்ட முறையில் வினைபுரிகிறது.
  2. ஒரு முனை சிறிய தலை போன்ற கார்பாக்சிலேட் தொகுதி கொண்ட முனைவுள்ள பகுதியையும், மறுமுனை பெரிய வால் போன்ற நீளமான ஹைட்ரோ கார்பன் சங்கிலி தொடரையுடைய முனைவற்ற பகுதியையும் பெற்றுள்ளது.
  3. முனைவுள்ள பகுதி நீர் விரும்பும் பகுதியாக செயல்பட்டு நீருடன் ஒட்டிக் கொள்கிறது.
  4. முனைவற்ற பகுதி நீரை வெறுக்கும் பகுதியாக செயல்பட்டு ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றுடன் ஒட்டிக் கொள்கிறது.
  5. நீரை வெறுக்கும் பகுதி மாசினை தன்னுள் அடக்கி கொள்கிறது.
  6. நீரை விரும்பும் பகுதி மொத்த மூலக்கூறையும் நீரில் கரைய செய்கிறது. சோப் அல்லது டிடர்ஜெண்டை நீரில் கரைக்கும் பொழுது சோப்பு மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்த கொத்துகளாக (Micelles) மீசெல்ஸ் உருவாகிறது.
  7. இந்த கொத்துகளில் ஹைட்ரோகார்பன் சங்கிலி பகுதியானது, அழுக்கு மற்றும் எண்ணெய் பகுதியோடு ஒட்டிக்கொள்கிறது.
  8. இவ்வாறாக சோப்பின் முனைவற்ற பகுதி அழுக்கைச் சுற்றிக் கொள்கிறது.
  9. சோப்பின் கார்பாக்ஸிலேட் பகுதி, கொத்துகளை நீரில் கரையச் செய்கிறது. இவ்வாறாக அழுக்கு சோப்பினால் நீக்கப்படுகிறது.

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
ஆல்கஹாலின் மூலக்கூறு வாய்ப்பாடு C4H10O அதில் – OH இட எண் 2.
அ) அதனுடைய அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
ஆ) IUPAC பெயரினை எழுதுக.
இ) இச்சேர்மம் நிறைவுற்றவையா? நிறைவுறாதவையா?
விடை:
அ) Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 96
ஆ) 2-பியூட்டனால் (அ) பியூட்-2-ஆல்
இ) நிறைவுற்றவை

Question 2.
ஒரு கரிமச் சேர்மம் A என்பதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4O2. இது பதப்படுத்துதலில் பயன்படுகிறது. மேலும் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய மணமுடைய சேர்மம் B-யை தருகிறது. [PTA-5]
அ) சேர்மம் A-யை கண்டறிக.
ஆ) சேர்மம் B உருவாதல் வினையினை எழுதுக.
இ) இந்நிகழ்விற்கு பெயரிடுக.
விடை:
அ) எத்தனாயிக் அமிலம் (அசிட்டிக் அமிலம்)
ஆ) Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 97
இ) எஸ்டராதல் வினை

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
ஈத்தேனை விட ஈத்தீன் வினைதிறன் மிக்கது. ஏன்? (4 Marks) [PTA-1]
விடை:
ஈத்தீனில் வலிமை குறைந்த இரட்டை வேதிப்பிணைப்பு இருப்பதால் அதன் நிலைப்புத் தன்மை ஈத்தேனைவிடக் குறைவு. எனவே ஈத்தேனைவிட ஈத்தீன் வினைதிறன் மிக்கது.

4 மதிப்பெண்கள்

Question 2.
IUPAC விதிகளின்படி கீழ்காணும் சேர்மங்களுக்கான அமைப்பு வாய்ப்பாடுகளைக் காண்க. (PTA-2)
அ) பென்டனாயிக் அமிலம்
ஆ) 2- மெத்தில் – பியுட்டன் – 2- ஆல்
விடை:
அ) பென்டனாயிக் அமிலம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 98

ஆ) 2-மெத்தில் பியுட்டன்-2-ஆல்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 99

Question 3.
கரிமச் சேர்மங்களின் IUPAC பெயரிடும் முறையின் அடிப்படையில் கீழ்க்காணும் அட்டவணையில் உள்ள கோடிட்ட இடங்களை நிறைவு செய்க. (7 Marks) [PTA-2]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 99.1

Question 4.
கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து அவற்றுள் எத்தனால் மற்றும் எத்தனாயிக் அமிலத்திற்கான பொருத்தமான கூற்றுக்களை வகைப்படுத்துக. (7 Marks) [PTA-4]
அ) இதன் 95.5%-மும் நீரும் சேர்ந்த கரைசல் எரிசாராயம் எனப்படும்.
ஆ) இச்சேர்மத்தின் தூய வகை உறையும் பொழுது பனிக்கட்டி போன்ற படிகங்களாகின்றன.
இ) இச்சேர்மத்தினை சோடாச் சுண்ணாம்பு கொண்டு வெப்பப்படுத்தும்பொழுது கார்பாக்சில் நீக்கம் நடைபெறுகிறது.
விடை:
அ) எத்தனோல்
ஆ) எத்தனோயிக் அமிலம்
இ) எத்தனோயிக் அமிலம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும்

Question 5.
A என்ற சேர்மம் ஒரு நிறமற்ற திரவம் மற்றும் எரிசுவை கொண்டது. சேர்மம் A-யின் ஆவியை 573K வெப்பநிலையில், சூடேற்றப்பட்ட தாமிரத்தின் மீது செலுத்தும்போது ஹைட்ரஜன் நீக்கம் நடைபெற்று அசிட்டால்டிஹைடு உருவாகிறது. சேர்மம் A-ஐக் கண்டறிக. இவ்வேதிவினையில் தாமிரத்தின் பங்கு என்ன? இவ்வேதிவினைக்கான சமன் செய்யப்பட்ட வேதிச் சமன்பாட்டை எழுதுக. [PTA-6]
விடை:
A என்ற சேர்மம் எத்தனால்.
இது நிறமற்றது திரவம் மற்றும் எரிசுவை கொண்டது.
தாமிரத்தின் பணி: எத்தனாலின் ஆவியை வெப்பப்படுத்தப்பட்ட காப்பர் வினையூக்கியின் முன்னிலையில் (573K) செலுத்தும் போது ஹைட்ரஜன் நீக்கமடைந்து அசிட்டால்டிஹைடைத் தருகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 99.4

Question 6.
சோப்பை நீருடன் சேர்க்கும்பொழுது ஏன் மீசெல்ஸ் உருவாகிறது என்பதை தகுந்த படத்துடன் விளக்குக. [PTA-5]
விடை:
(i) ஒரு சோப்பு மூலக்கூறு வேறுபட்ட இரு வேதிப் பகுதிகளை பெற்றுள்ளன. இப்பகுதிகள் நீருடன் வேறுபட்ட முறையில் வினைபுரிகிறது.

(ii) ஒருமுனை சிறிய தலை போன்ற கார்பாக்சிலேட் தொகுதி கொண்ட முனைவுள்ள பகுதியையும், மறுமுனை பெரிய வால் போன்ற நீளமான ஹைட்ரோ கார்பன் சங்கலி தொடரைடைய முனைவற்ற பகுதியையும் பெற்றுள்ளது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 99.5
(iii) முனைவுள்ள பகுதி நீர் விரும்பும் பகுதியாக செயல்பட்டு நீருடன் ஒட்டிக் கொள்கிறது. முனைவற்ற பகுதி நீரை வெறுக்கும் பகுதியாக செயல்பட்டு ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றுடன் ஒட்டிக்கொள்கிறது.

(iv) நீரை வெறுக்கும் பகுதி மாசினை தன்னுள் அடக்கிக் கொள்கிறது. நீரை விரும்பும் பகுதி மொத்த மூலக்கூறையும் நீரில் கரைய செய்கிறது.

(v) சோப்பு அல்லது டிடர்ஜெண்டை நீரில் கரைக்கும் பொழுது சோப்பு மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்த கொத்துகளாக (Micelles) மீசெல்ஸ் உருவாகிறது.

(vi) இந்த கொத்துகளில் ஹைட்ரோகார்பன் சங்கிலி பகுதியானது, அழுக்கு மற்றும் எண்ணெய் பகுதியோடு ஒட்டிக் கொள்கிறது. இவ்வாறாக சோப்பின் முனைவற்ற பகுதி அழுக்கைச் சுற்றிக் கொள்கிறது.

(vii) சோப்பின் கார்பாக்சிலேட் பகுதி, கொத்துகளை நீரில் கரையச் செய்கிறது. இவ்வாறாக அழுக்கு சோப்பினால் நீக்கப்படுகிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

5th Social Science Guide உலகில் உள்ள கண்டங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
உலகில் ______________ கண்டங்கள் உள்ளன.
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) ஒன்பது
விடை:
ஆ) ஏழு

Question 2.
மிகப்பெரிய கண்டம் ______________
அ) ஆப்பிரிக்கா
ஆ) ஆசியா
இ) வட அமெரிக்கா
விடை:
ஆ) ஆசியா

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Question 3.
உலகின் நீளமான நதி ______________
அ) காவிரி
ஆ) கங்கை
இ) நைல்
விடை:
இ) நைல்

Question 4.
சுப்பீரியர் ஏரி (Lake Superior) அமைந்துள்ள இடம் _____________
அ) வட அமெரிக்கா
ஆ) ஆஸ்திரேலியா
இ) ஐரோப்பா
விடை:
அ) வட அமெரிக்கா

Question 5.
பென்குவின்கள் காணப்படும் இடம் ______________
அ) ஆசியா
ஆ) அண்டார்டிகா
இ) ஆப்பிரிக்கா
விடை:
ஆ) அண்டார்டிகா

II. பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் 1
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் 2

III. சரியா | தவறா எழுதுக.

Question 1.
ஆசியா உலகின் மூன்றாவது பெரிய கண்டமாகும்.
விடை:
தவறு

Question 2.
உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Question 3.
இந்தியாவில் உள்ளது. 3. பிரேசில் அதிக அளவில் காபி உற்பத்தி செய்யும் நாடுகளுள் ஒன்று.
விடை:
சரி

Question 4.
பெருந் தடுப்புப் பவளப்பாறை இந்தியாவில் உள்ளது.
விடை:
தவறு

Question 5.
அண்டார்டிகாவில் அரைவருடம் சூரிய ஒளி காணப்படும்.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
கண்டங்களின் பெயர்களை எழுதவும்.

  1. ஆசியா
  2. ஆப்பிரிக்கா
  3. வட அமெரிக்கா
  4. தென் அமெரிக்கா
  5. அண்டார்டிகா
  6. ஐரோப்பா
  7. ஆஸ்திரேலியா

Question 2.
தாஜ்மஹால் எங்கு அமைந்துள்ளது?
விடை:
தாஜ்மஹால் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

Question 3.
வட அமெரிக்காவின் சிறப்பு அம்சங்களைப் பற்றி எழுதுக.
விடை:
வட அமெரிக்கா முழுவதும் வட கோளத்தில் உள்ளது. ஆசியா, ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து வட அமெரிக்கா மூன்றாவது மிகப்பெரிய நிலப்பரப்பினைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய நன்னீர் ஏரியான சுப்பீரியர் ஏரி இக்கண்டத்தில்தான் உள்ளது. மிசிசிப்பி – மிசௌரி நதி வட அமெரிக்காவில் நீளமான நதிகளுள் ஒன்று. அமெரிக்க ஐக்கிய நாடுகள் வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகும்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Question 4.
பெருந்தடுப்புப் பவளப்பாறை எங்கு அமைந்துள்ளது?
விடை:
பெருந்தடுப்புப் பவளப்பாறைத் திட்டுகள் ஆஸ்திரேலியாவின் பெருமைகளுள் ஒன்று. இது ஏறக்குறைய 2,500 தனிப்பட்ட பவளப்பாறைகளால் ஆனது. இவற்றை விண்வெளியில் இருந்துகூடக் காணலாம்.

Question 5.
எக்கண்டம் உறை பனிக் கண்டம் என்று
விடை:
அழைக்கப்படுகிறது? அண்டார்டிகா, பூமியின் மிகவும் குளிர்ந்த கண்டம் ஆகும். இக்கண்டம் வெள்ளைக்கண்டம் அல்லது உறைந்த கண்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

V. விரிவாக விடையளிக்க.

Question 1.
ஏதேனும் இரு கண்டங்களைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:
ஆசியா : உலகத்திலுள்ள கண்டங்களுள் ஆசியாதான் மிகப்பெரிய நிலப்பரப்பினையும், மிகுந்த மக்கள் தொகையினையும் கொண்டுள்ள கண்டமாகும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனாவும், இந்தியாவும் ஆசியாவில்தான் உள்ளன. பூமியின் மிக உயர்ந்த இடமான, இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் ஆசியாவில்தான் உள்ளது. பண்டைய நாகரிகங்களான சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம், மெசபடோமியா – நாகரிகம் போன்றவை ஆசியாவில் தான் தோன்றியுள்ளன.

ஐரோப்பா : ஐரோப்பாவும், ஆசியாவும் பெரிய நிலப்பரப்பின் பகுதிகளாக உள்ளன. யூரல் மலைத்தொடர்களும், காஸ்பியன் கடலும் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவைப் பிரிக்கின்றன. உலகின் மிகச் சிறிய நகரமான வாடிகன் நகரம் ஐரோப்பாவில்தான் உள்ளது. வோல்கா நதி ஐரோப்பாவின் மிக நீளமான நதிகளுள் ஒன்று ஆகும்.

Question 2.
இந்தியாவில் உள்ள நினைவுச்சின்னங்கள் பற்றி எழுதுக.
விடை:
இந்தியாவில் பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. தாஜ்மஹால் ஒரு நினைவுச் சின்னம் ஆகும். இது ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. தாஜ்மஹால் வெள்ளைப் பளிங்குக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அழகான நினைவுச் சின்னமானது உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மேலும் சில வரலாற்று நினைவுச் சின்னங்களாவன, புதுதில்லியில் உள்ள இந்தியாவின் வாயில், மும்பையிலுள்ள இந்தியாவின் நுழைவாயில், போபால் அருகே உள்ள சாஞ்சி ஸ்தூபி, தமிழ்நாட்டில் உள்ள புனித ஜார்ஜ்கோட்டை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள்

Question 3.
ஆஸ்திரேலியாவைப் பற்றி விரிவாக எழுதவும்.
விடை:
ஆஸ்திரேலியா, ஒரு தீவுக் கண்டமாகும். இது தனித்துவம் பெற்ற இயற்கைக் காட்சிகளும் இயற்கை அதிசயங்களும் கொண்ட கண்டமாகும். பெருந் தடுப்புப் பவளப்பாறைத்திட்டுகள் ஆஸ்திரேலியாவின் பெருமைகளுள் ஒன்று. ஏறக்குறைய 2,500 தனிப்பட்ட பவளப்பாறைகளால் ஆனது. இவற்றை விண்வெளியில் இருந்துகூடக் காணலாம். ஆஸ்திரேலிய டாஸ்மேனியா மற்றும் பல தீவுகளை உள்ளடக்கியது.

5th Social Science Guide உலகில் உள்ள கண்டங்கள் InText Questions and Answers

பக்கம் 132 செயல்பாடு

நாட்டின் பெயர் மற்றும் அது எக்கண்டத்தில் இடம் பெற்றுள்ளது என்பதனைக் கீழுள்ள அட்டவணையில் எழுதுக.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் 3
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 3 உலகில் உள்ள கண்டங்கள் 4

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 2 Chapter 2 நீர்க் கோளம் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 2 Chapter 2 நீர்க் கோளம்

5th Social Science Guide நீர்க் கோளம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
நீர்க்கோளம் என்பது, பூமியின் மேற்பரப்பில் உள்ள மொத்த _____________ அளவைக் குறிக்கும்.
அ) காற்று
ஆ) நீர்
இ) நிலம்
ஈ) தாவரங்கள்
விடை:
ஆ) நீர்

Question 2.
பொருந்தாதவற்றைக் கண்டுபிடி.
அ) கங்கை
ஆ) அட்லாண்டிக்
இ) ஆர்டிக்
ஈ) பசிபிக்
விடை:
அ) கங்கை

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம்

Question 3.
நீர்ப்பரப்பின் அனைத்துப் பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டிருந்தால் ____________ என அழைக்கப்படுகிறது.
அ) ஆறு
ஆ) வளைகுடா
இ) ஏரி
ஈ) விரிகுடா
விடை:
ஆ) வளைகுடா

Question 4.
ஆவியாதல் என்பது, நீர்சுழற்சியின் ______________ படிநிலை.
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
விடை:
அ) முதல்

Question 5.
ஒரு நீர்ப்பரப்பின் ஒரு பகுதியை நிலம் சூழ்ந்திருந்து, மற்றப் பகுதிகள் கடலை நோக்கி இருந்தால் _____________ எனப்படும்.
அ) கடல்
ஆ) நீர்ச்சந்தி
இ) விரிகுடா
ஈ) குளம்
விடை:
இ) விரிகுடா

II. பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம் 1
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம் 2

III. சரியா | தவறா எழுதுக.

Question 1.
பூமியில் 97% நீர் உப்பாக உள்ளது.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம்

Question 2.
நமது அன்றாடத் தேவைகளுக்கு நீர் தேவை இல்லை.
விடை:
தவறு

Question 3.
கடல்நீர் இனிப்பாக இருக்கும்.
விடை:
தவறு

Question 4.
நாம் பாத்திரங்களைக் கழுவி முடிக்கும் வரையில் குழாயைத் திறந்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
விடை:
தவறு

Question 5.
நாம் தண்ணீரைச் சேமிக்க வேண்டும்.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
நீர்க்கோளம் வரையறு.
விடை:
நீர்க்கோளம் என்பது, நமது புவிக்கோளில் அடங்கியுள்ள முழு நீர்ப்பரப்பினையும் குறிக்கும். மேற்பரப்பில் உள்ள நீர், நிலத்தடி நீர் மற்றும் காற்றில் கலந்துள்ள நீர் ஆகிய அனைத்தும் நீர்க்கோளத்தில் அடங்கும்.

Question 2.
நீர்க்கோளம் முக்கியமானது. ஏன்?
விடை:
நமது அன்றாட வாழ்வில் நீரின் தேவை மிகுதியாக உள்ளது. பருக, குளிக்க, சமைக்க போன்ற பல அன்றாட நடவடிக்கைகளுக்கு நீர் தேவைப்படுகிறது. விலங்குகள் மற்றும் தாவரங்கள் உயிர்வாழ நீர் தேவை. நீர் இல்லாவிடில், நீர் ஆவியாகி மேகங்களாக உருவாக முடியாது. அதனால் மழை இருக்காது. எனவே நீர்க்கோளம் பூமியில் ) உயிரினங்கள் உயிர்வாழ மிக முக்கியமானதாகும்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம்

Question 3.
பல்வேறு வகையான நீர்ப்பரப்புகளின் பெயர்களை எழுதுக.
விடை:
ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீரோடைகள், கடல்கள், பெருங்கடல்கள் ஆகியவை பல்வேறு வகையான நீர்ப்பரப்புகள் ஆகும்.

V. விரிவாக விடையளி.

Question 1.
நீர் சுழற்சியின் படிநிலைகள் யாவை?
விடை:
முதல் நிலை : ஆவியாதல் (Evaporation)
சூரிய ஒளி, நீர்ப்பரப்புகளான பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள் போன்றவற்றின் மேல் விழுவதால், நீர் மெதுவாக ஆவியாகிக் காற்றில் கலக்கிறது.

இரண்டாம் நிலை : ஆவி சுருங்குதல் (Condensation)
நீர் ஆவியாகி மேலே செல்லும்பொழுது குளிரான வெப்பநிலை, அவற்றை குளிர்வித்து மீண்டும் நீர்மமாக மாற்றுகிறது. இதுவே ஆவிசுருங்குதல் எனப்படுகிறது. காற்றானது இந்த நீர்மத்தைச் சுழற்றுவதால் மேகங்கள் உருவாகின்றன

மூன்றாம் நிலை : மழைப்பொழிவு (Precipitation)
காற்றின் இயக்கத்தால் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. அவை மழைபொழியும் மேகங்களாக மாறி மழையாக மீண்டும் பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது. இந்தச் செயல்முறை, மழைப்பொழிவு என்று கூறப்படுகிறது. இம் மழைப்பொழிவானது தட்ப வெப்ப நிலையைப் பொருத்து மழையாகவோ, ஆலங்கட்டி மழையாகவோ, பனிப்பொழிவாகவோ, பனித்துளியாகவோ இருக்கக்கூடும்.

நான்காம் நிலை : வழிந்தோடுதல் மற்றும் உறிஞ்சப்படுதல் (Runoff and infiltration)
நீரானது பெருங்கடல்கள், ஆறுகள் அல்லது நிலமேற்பரப்பில் வழிந்தோடுகிறது அல்லது மண்ணால் உறிஞ்சப்படுகிறது. இச் சுழற்சி தொடர்ந்து நடைபெறுகிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 2 நீர்க் கோளம்

Question 2.
நீரைச் சேகரிக்க உதவும் வழிமுறைகளுள் சிலவற்றைக் கூறுக.
விடை:

  1. நாம் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
  2. நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
  3. சாக்கடை, கழிவுகளை நீரில் கலப்பதால் நீர் மாசடைந்து போய்விடுகிறது. நம்மால் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.
  4. தூவாலைகளில் குளிப்பதை விட வாளியில் தண்ணீர் எடுத்துக் குளிப்பது சிறந்தது.
  5. தண்ணீர்க் குழாய்களைத் தேவையின்றி திறந்து வைத்து நீரை வீணாக்கக் கூடாது.
  6. குழாய்களில் நீர் கசியாமல், சொட்டிக் கொண்டிராமல் பாதுகாக்க வேண்டும்.
  7. பல் துலக்கும் போதும், துவைக்கும் போதும் தண்ணீ ரை வீணாக ஓடவிடக்கூடாது.
  8. மழை நீர் சேகரிப்பை ஒவ்வொரு வீட்டிலும் மேற்கொள்ள வேண்டும்.
  9. தோட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைத்து மழை பெய்யும் போது நீரை சேமித்து வைக்கலாம்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி

5th Social Science Guide பண்டைய அகழ்வாராய்ச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Question 1.
அகழ்வாராய்ச்சியின் மூலம் மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த இடங்கள் பற்றிய வரலாற்றினைப் படிப்பவர்கள் ______________
அ) தொல்பொருள் ஆய்வாளர்
ஆ) அறிவியலாளர்
இ) அகழ்வாராய்ச்சியாளர்
விடை:
அ) தொல்பொருள் ஆய்வாளர்

Question 2.
எகிப்தில் உள்ள சிறிய பிரமிடுகள் _____________ க்காக உருவாக்கப்பட்டன.
அ) இளவரசர்
ஆ) அரசர்
இ) அரசி
விடை:
இ) அரசி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி

Question 3.
சிந்துவெளி நாகரிகம் ______________ நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.
அ) எகிப்து
ஆ) ஹரப்பா
இ) அமெரிக்கா
விடை:
ஆ) ஹரப்பா

Question 4.
ஆதிச்சநல்லூர் ______________ இல் உள்ளது.
அ) தூத்துக்குடி
ஆ) சென்னை
இ) புதுச்சேரி
விடை:
அ) தூத்துக்குடி

Question 5.
கீழடி _____________ காலம் என்பதனைத் தெரிவிக்கிறது.
அ) நவீன
ஆ) சங்க
இ) இடைக்
விடை:
ஆ) சங்க

II. பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி 1
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி 2

III. சரியா தவறா?

Question 1.
அகழ்வாராய்ச்சியின் போது தொல்கைவினைப் பொருள்கள் கண்டறியப்பட்டன.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி

Question 2.
சிந்துவெளி நாகரிகம் ஹரப்பாவில் உள்ளது.
விடை:
சரி

Question 3.
ஆதிச்சநல்லூர் என்ற தொல்பொருள் ஆய்வு இடம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ளது.
விடை:
தவறு

Question 4.
கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சி, கீழடி ஒரு வளர்ச்சியடைந்த நகரம் என்பதனைத் தெரிவிக்கிறது.
விடை:
சரி

Question 5.
ரோமன் விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், நவரத்தினக்கற்கள் போன்றவை அரிக்கமேடு என்ற இடத்தில் கண்டறியப்பட்டன.
விடை:
சரி

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
அகழ்வாராய்ச்சி என்றால் என்ன?
விடை:
அகழ்வாராய்ச்சி என்பது பூமியின் மேற்பரப்பின்கீழ் என்ன இருக்கிறது என்பதைப்பற்றி ஆராய்வதாகும். இந்த ஆய்வு, வரையறைக்குட்பட்டு நிகழ்த்தப்படுகிறது.

Question 2.
தொல்பொருள் ஆய்வாளர் என்பவர் யார்?
விடை:
மனிதர்கள் மற்றும் இடங்களின் வரலாற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆய்வு செய்பவர்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள் என்றழைக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் தொல்கைவினைப் பொருள்களையும் பகுப்பாய்வு செய்வார்கள்.

Question 3.
பிரமிடுகள் பற்றிய சிறுகுறிப்பு வரைக.
விடை:
பிரமிடுகள் என்பன எகிப்தில் உள்ள அரச குடும்பத்தினரின் கல்லறைகள் ஆகும். பிரமிடுகள் பற்றி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டபோது அரசிக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிலான பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகச் சிறப்பான வடிவமைப்பினைக் கொண்ட மிகப் பெரிய கல்லறைகள் அரச குடும்பத்திற்காக கட்டப்பட்டன என்பதனைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். பிரமிடுகளிலிருந்து கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகள், மக்களின் சராசரி உயரம் மற்றும் வயது பற்றிய தகவல்களைக் கொடுத்தன.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி

Question 4.
ஆதிச்சநல்லூரில் கண்டறியப்பட்ட தொல்கைவினைப் பொருள்கள் யாவை?
விடை:
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில், முதுமக்கள் தாழிகள், பல்வகைப்பட்ட மட்பாண்டங்கள் (கருப்பு, சிவப்பு) இரும்பாலான குத்துவாள், கத்திகள், ஈட்டிகள், அம்புகள், சில கல்மணிகள், சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன.

Question 5.
கீழடி எங்கு அமைந்துள்ளது?
விடை:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் தாலுகாவில் கீழடி அமைந்துள்ளது.

V. விரிவான விடையளிக்க.

Question 1.
சிந்துவெளி நாகரிகம் பற்றி விவரி.
விடை:
சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோண்டப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வு தளம் இதுவாகும். அங்கு சுட் செங்கற்கள் நிலத்தடியில் காணப்பட்டன. நகரமானது நன்கு திட்டமிட்டும், சரியான வடிகால் அமைப்புகளுடனும், கிணறுகளுடனும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மூடிய வடிகால்களுக்கு கழிவு நீரை அனுப்பும் வழி இருந்தது. மேம்படுத்தப்பட்ட தானியக் களஞ்சியங்கள், பெரிய குளம் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் இருந்தன. நகரமும் அதன் நாகரிகமும் அவர்களின் காலத்தை விட மிக உயர்ந்த நிலையில் இருந்தன என்பது கண்டறியப்பட்டது.

Question 2.
கீழடி பற்றி விவரி.
விடை:
இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை திருபுவனம் தாலுகாவிலுள்ள கீழடி கிராமத்தில் சங்ககாலத்தைச் சேர்ந்த பழமையான நகரத்தை அகழ்ந்து ஆய்வு செய்துள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள், நன்கு அமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு போன்ற சான்றுகள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன.

மேலும் தமிழ்-பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்கள், கண்ணாடியிலான மணிகள், செம்மணிகள், வெண்கல்படிகம், முத்துகள், தங்க ஆபரணங்கள், இரும்புப் பொருள்கள் , சங்குவளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை போன்றவையும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் ரோம் நாட்டைச் சேர்ந்த பழங்காலத் தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. இவை இந்தியாவிற்கும் ரோம் நாட்டிற்கும் இடையே நிலவிய வாணிகத்தொடர்பை உறுதி செய்கின்றன.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 2 Chapter 1 பண்டைய அகழ்வாராய்ச்சி

Question 3.
அரிக்கமேடு பற்றி விரிவாக எழுதவும்.
விடை:
அரிக்கமேடு, புதுச்சேரி அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும். கடற்கரை கிராமமாக இருந்த அரிக்கமேடு, ரோம் நகருடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது என்பதனை அகழ்வாராய்ச்சி மூலம் அறிய முடிகிறது.

அங்கு ரோமானிய விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், பலவகை கண்ணாடி மணிகள், விலை உயர்ந்த கற்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மதுக்குடுவைகள் போன்றவற்றை தொல்பொருள் ஆய்வாளர் கண்டறிந்தார். அவர், மேலும் அக்கிராமத்திலுள்ள மீனவர்களுக்கு அந்தத் தொல்கைவினைப் பொருள்கள் யாவும் புதியனாக இருந்தன என்பதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 10 வேதிவினைகளின் வகைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

10th Science Guide வேதிவினைகளின் வகைகள் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
H2 + Cl2(g) → 2HCl(g) என்ப து
அ) சிதைவுறுதல் வினை
ஆ) சேர்க்கை வினை
இ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
ஈ) இரட்டை இடப்பெயர்ச்சி வினை
விடை:
இ) சேர்க்கை வினை

Question 2.
ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.
அ) வெப்பம்
ஆ) மின்னாற்றல்
இ) ஒளி
ஈ) எந்திர ஆற்றல்
விடை:
இ) ஒளி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Question 3.
கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது. C(5) + O2(g) → CO2(g).
இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப்படுகிறது?
(i) சேர்க்கை வினை
(ii) எரிதல் வினை
(iii) சிதைவுறுதல் வினை
(iv) மீளா வினை
அ) (i) மற்றும் (ii)
ஆ) (i) மற்றும் (iv)
இ) (i), (ii) மற்றும் (iii)
ஈ) (i), (ii) மற்றும் (iv)
விடை:
ஈ) (i), (ii) மற்றும் (iv)

Question 4.
Na2SO4(aq) + BaCl2(aq) – BaSO4(s) ↓+ 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருவனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது?
அ) நடுநிலையாக்கல் வினை
ஆ) எரிதல் வினை
இ) வீழ்படிவாதல் வினை
ஈ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
விடை:
இ) வீழ்படிவாதல் வினை

Question 5.
வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
(i) இயக்கத்தன்மை உடையது.
(ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.
(iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.
(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.
அ) (i), (ii) மற்றும் (iii)
ஆ) (i), (ii), மற்றும் (iv)
இ) (ii), (iii) மற்றும் (iv)
ஈ) (i), (iii) மற்றும் (iv)
விடை:
அ) (i), (ii) மற்றும் (iii)

Question 6.
X5 + 2HCl(aq) → Cl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது?
(i) Zn
(ii) Ag
(iii) Cu
(iv) Mg
சரியான இணையைத் தேர்ந்தெடு.
அ) (i) மற்றும் (ii)
ஆ) (ii) மற்றும் (iii)
இ) (iii) மற்றும் (iv)
ஈ) (i) மற்றும் (iv)
விடை:
ஈ) (i) மற்றும் (iv)

Question 7.
பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்” வகை அல்ல? [PTA-3]
அ) C(s) + O2(g) → CO2(g)
ஆ) 2K(s) + Br2(l) → 2KBr(s)
இ) 2CO(g) + O2(g) → 2CO2(g)
ஈ) 4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)
விடை:
இ) 2CO(g) + O2(g) → 2CO2(g)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Question 8.
பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது?
அ) A(s) + B(s) → C(s) + D(s)
ஆ) A(s) + B(s) → C(s) + D(aq)
இ) A(aq) + B(aq) → C(s) + D(aq)
ஈ) A(aq) + B(s) → C(aq) + D(l)
விடை:
இ) A(aq) + B(aq) → C(s) + D(aq)

Question 9.
ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில் அதன் (OH) ஹைட்ராக்ஸைடு அயனி செறிவு என்ன?
அ) 1 × 10-3M
ஆ) 3M
இ) 1 × 10-11M
ஈ) 11 M
விடை:
இ) 1 × 10-11M

Question 10.
தூளாக்கப்பட்ட CaCO, கட்டியான CaCO, விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்
அ) அதிக புறப்பரப்பளவு
ஆ) அதிக அழுத்தம்
இ) அதிக செறிவினால்
ஈ) அதிக வெப்பநிலை
விடை:
அ) அதிக புறப்பரப்பளவு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ……………… என்று அழைக்கப்படுகிறது.
விடை:
நடுநிலையாக்கல் வினை

Question2.
ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினைபுரியும்போது …………………. வாயு வெளியேறுகிறது.
விடை:
ஹைட்ரஜன்

Question 3.
பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை ………….. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
இயற்பியல் சமநிலை

Question 4.
ஒரு பழச்சாறின் pH மதிப்பு 5.6 இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும் போது இதன் pH மதிப்பு …………….. (அதிகமாகிறது / குறைகிறது).
விடை:
அதிகமாகிறது

Question 5.
25°C வெப்பநிலையில் நீரின் அயனிப் பெருக்கத்தின் மதிப்பு ……….
விடை:
1.00 × 10-14 மோல்’டெசிமீ-6

Question 6.
மனித ரத்தத்தின் பொதுவான pH மதிப்பு.
விடை:
7.35-7.45

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Question 7.
மின்னாற்பகுப்பு என்பது ……………. வகை வினையாகும்.
விடை:
சிதைவடைதல்

Question 8.
தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளை பொருள்கள் எண்ணிக்கை ……
விடை:
ஒன்று

Question 9.
வேதி எரிமலை என்பது …………… வகை வினைக்கு எடுத்துக்காட்டாகும்.
விடை:
சிதைவடைதல்

Question 10.
ஹைடிரஜன் (H+) அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி ………… என்று அழைக்கப் படுகிறது.
விடை:
ஹைட்ரோனியம் அயனி

III. பொருத்துக.

Question 1.
வினையின் வகைகளை அடையாளம் காண்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 60
விடை:
1-இ,
2-அ,
3-ஈ,
4-ஆ

IV. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைடிரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்ய வல்லது.
விடை:
தவறு.
சரியான கூற்று: சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்துடன் ஹைட்ரஜனை வெளியேற்றாது.

Question 2.
SO3, CO2, NO2; போன்ற வாயுக்கள் கரைந்துள்ள மழைநீரின் pH மதிப்பு 7-யை விட குறைவாக இருக்கும்.
விடை:
சரி.

Question 3.
ஒரு மீள்வினையின் சமநிலையில் வினை விளை மற்றும் வினைபடு பொருள்களின் செறிவு சமமாக இருக்கும்.
விடை:
தவறு
சரியான கூற்று: மீள்வினையில் சமநிலையில் செறிவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

Question 4.
ஒரு மீள்வினையின் ஏதேனும் ஒரு வினை விளை பொருளை அவ்வப்பொழுது நீக்கும்பொழுது அவ்வினையின் விளைச்சல் அதிகரிக்கிறது.
விடை:
சரி.

Question 5.
pH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது. எனவே அக்கரைசல் காரத்தன்மை கொண்டது.
விடை:
தவறு.
சரியான விடை: pH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது. எனவே அக்கரைசல் அமிலத்தன்மை கொண்டது.

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
பொட்டாசியம் குளோரைடு நீர்க்கரைசலை சில்வர் நைட்ரேட் நீர்க்கரைசலுடன் சேர்க்கும்பொழுது வெண்மை நிற வீழ்படிவு உண்டாகிறது. இவ்வினையின் வேதிச்சமன்பாட்டைத் தருக. (PTA-6)
விடை:
KCl + AgNO3 → KNO3 + AgCl ↓

Question 2.
வெப்பநிலை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?
விடை:
வெப்பம் அதிகரிக்கும் போது வினைபடுபொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கின்றது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Question 3.
சேர்க்கை அல்லது கூடுகை வினை வரையறு. வெப்ப உமிழ் சேர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு தருக.
விடை:

  1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வினைபடு பொருள்கள் இணைந்து ஒரு சேர்மம் உருவாகும் வினை சேர்க்கை வினை அல்லது கூடுகை வினை ஆகும்.
  2. இதனை தொகுப்பு வினை அல்லது இயைபு வினை என்றும் அழைக்கலாம்.
    எ.கா: 2Mg(s) + O2(g) → 2MgOs

Question 4.
மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 70

VI. விரிவாக விடையளி.

Question 1.
வெப்பச்சிதைவு வினைகள் என்பது யாவை?
விடை:

  1. இவ்வகை வினைகளில் வினைபடு பொருள் வெப்பத்தினால் சிதைவுறுகிறது.
  2. உதாரணமாக மெர்குரி (II) ஆக்சைடு வெப்பத்தினால் சிதைவுற்று மெர்குரி மற்றும் ஆக்சிஜன் வாயுவாக மாறுகிறது.
  3. வெப்பத்தை எடுத்துக்கொண்டு இவ்வினை நிகழ்வதால் இது வெப்பச் சிதைவு வினை எனப்படுகிறது.
  4. மேலும், இவ்வினை சேர்மத்திலிருந்து தனிமம் / தனிமம் சிதைவடைதல் என்ற வகையைச் சார்ந்தது.
  5. அதாவது மெர்குரிக் ஆக்சைடு, மெர்குரி மற்றும் ஆக்ஸிஜன் என்ற தனிமங்களாகச் சிதைவடைகிறது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 71
  6. இதுபோன்று, கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் போது அது சிதைவுற்று கால்சியம் ஆக்சைடு மற்றும் கார்பன்-டை- ஆக்சைடாக மாறுகிறது. இவ்வினை சேர்மத்திலிருந்து சேர்மம் / சேர்மம் என்ற வகையைச் சார்ந்தது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 72

Question 2.
இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் வகைகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.(Sep.20)
விடை:
இரு வகையான இடப்பெயர்ச்சி வினைகள் உள்ளன. அவையாவன
(1) வீழ்படிவாக்கல் வினை
(2) நடுநிலையாக்கல் வினை

1. வீழ்படிவாக்கல் வினை:

  1. இரு சேர்மங்களின் நீர்க்கரைசல்களை கலக்கும் பொழுது, அவை வினைபுரிந்து நீரில் கரையாத ஒரு விளைபொருளும், நீரில் கரையும் ஒரு விளைபொருளும் தோன்றினால் அவ்வினை வீழ்படிவாக்கல் வினை எனப்படும்.
  2. எடுத்துக்காட்டாக பொட்டாசியம் அயோடைடு மற்றும் லெட் நைட்ரேட்டின் தெளிவான நீர்க்கரைசல்களைக் கலக்கும் பொழுது ஒரு இரட்டை இடப்பெயர்ச்சி வினை நடக்கிறது.
    Pb(NO3)2(aq) + 2 KI(aq) → PbI2(s) + 2 KNO3(aq)
  3. இங்கு பொட்டாசியமும் லெட் உலோகமும் ஒன்றையொன்று இடப்பெயர்ச்சி செய்துகொண்டு மஞ்சள் நிற லெட் அயோடைடு வீழ்படிவைத் தருகிறது.

2. நடுநிலையாக்கல் வினை:

  1. ஒரு அமிலமும், காரமும் வினைபுரிந்து உப்பும் நீரும் கிடைக்கின்றன. இவ்வினை நடுநிலையாக்கல் வினை எனப்படுகிறது.
  2. எடுத்துக்காட்டாக சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்திற்கு இடையேயான வினையை கருதுவோம்.
  3. இங்கு சோடியம், ஹைட்ரஜனை ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலிருந்து இடப்பெயர்ச்சி செய்கிறது.
  4. இதன் விளைவாக சோடியம் குளோரைடு என்ற நடுநிலையான நீரில் கரையும் உப்பு கிடைக்கிறது.
    NaOH(aq) + HCl(aq) → NaCl(aq) + H2O(l)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Question 3.
ஒரு வினையின் வினை வேகத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.
விடை:
வினையின் வேகத்தை பின்வரும் காரணிகள் பாதிக்கின்றன:
1. வினைபடு பொருளின் தன்மை
2. வினைபடுபொருளின் செறிவு
3. வெப்பநிலை
4. அழுத்தம்
5. வினையூக்கி
6. வினைபடுபொருளின் புறப்பரப்பளவு

1. வினைபடு பொருளின் தன்மை:

  1. சோடியம், ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வேகமாக வினைபுரிகிறது. ஆனால் அசிட்டிக் அமிலத்துடன் மெதுவாக வினைபுரிகிறது.
  2. ஏனெனில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அசிட்டிக் அமிலத்தை விட வினைதிறன் மிக்கது.
  3. எனவே, வினைபடுபொருளின் இயல்பு வினைவேகத்தை பாதிக்கிறது.
    2Na(s) + 2HCl(aq) → 2NaCl(aq) + H2(g) (வேகமாக)
    2Na(s) + 2CH3COOH(aq) → 2CH3COONa(aq) + H2(g) (மெதுவாக)

2. வினைபடுபொருளின் செறிவு :

  1. வினைபடுபொருளின் செறிவு அதிகரிக்கும் போது வினைவேகம் அதிகரிக்கிறது.
  2. செறிவு அதிகமாக இருக்கும்போது குறிப்பிட்ட கனஅளவில் துகள்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே வினையின் வேகமும் அதிகரிக்கும்.

3. வெப்பநிலை :

  1. வெப்பநிலை உயரும்போது வினையின் வேகமும் அதிகரிக்கும்.
  2. ஏனெனில் வெப்பம் அதிகரிக்கும்போது வினைபடுபொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கிறது.

4. அழுத்தம் :

  1. வாயுநிலையிலுள்ள வினைபடு பொருள்களில் அழுத்தம் அதிகரிக்கும் போது வினையின் வேகமும் அதிகரிக்கும்.
  2. ஏனெனில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது வினைப்படு பொருள்களின் துகள்கள் மிக அருகே வந்து அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றன.

5. வினையூக்கி :
வினையூக்கி என்பது வினையில் நேரடியாக ஈடுபடாது. ஆனால், அவ்வினையில் வேகத்தை அதிகரிக்கும்.

6. வினைபடு பொருள்களின் புறப்பரப்பளவு:
வேதிவினையில் கட்டியான வினைபடுபொருள்களை விட, தூளாக்கப்பட்ட வினைபடுபொருள்கள் விரைவாக வினைபுரியும்.

Question 4.
அன்றாட வாழ்வில் pH எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது?
விடை:
அன்றாட வாழ்வின் pH-ன் பங்கு:

(1) தாவரங்களும், விலங்குகளும் pH சார்ந்த உணர்வுள்ளவையா?

  1. நமது உடலானது 7.0 முதல் 7.8 வரை உள்ள pH எல்லை சார்ந்து வேலை செய்கிறது.
  2. உயிரினங்கள் ஒரு குறுகிய pH எல்லைக்குள் மட்டுமே உயிர் வாழ இயலும்.
  3. நம் உடலில் உள்ள திரவங்கள் வெவ்வேறு pH மதிப்புகளைக் கொண்டவை.
  4. எடுத்துக்காட்டாக மனித ரத்தத்தின் pH மதிப்பு 7.35 லிருந்து 7.45 ஆகும். இந்த மதிப்பிலிருந்து
    குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ, அது நோயை உண்டாக்கும்.

(2) மனித செரிமான மண்டலத்தில் pH மதிப்பு

  1. நமது இரைப்பை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கிறது என்பது ஒரு வியப்பூட்டும் செய்தியாகும்.
  2. இந்த அமிலம் இரைப்பையை பாதிக்காமல் உணவைச் செரிக்க உதவுகிறது.
  3. சரியான செரிமானம் இல்லாத போது, இரைப்பையானது கூடுதலான அமிலத்தைச் சுரந்து வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
  4. இரைப்பையில் உள்ள திரவத்தின் தோராயமான pH மதிப்பு 2.0 ஆகும்.

(3) pH மாற்றம் – பற்சிதைவுக்குக் காரணம்

  1. மனித உமிழ்நீரின் pH மதிப்பு 6.5 – 7.5 வரை உள்ளது.
  2. நமது பற்களின் மேற்பரப்பு படலமானது கால்சியம் பாஸ்பேட் என்ற மிகக் கடினமான பொருளினால் ஆனது.
  3. ஏனெனில் உமிழ்நீரின் pH 5.5-க்கும் கீழே குறையும் பொழுது, பற்களின் மேற்பரப்பு படலம் (எனாமல்) பாதிக்கப்படுகிறது. இது பற்சிதைவு எனப்படுகிறது.
  4. பொதுவாக நாம் பயன்படுத்தப்படும் பற்பசைகள் காரத்தன்மை கொண்டவை. இவை கூடுதல் அமிலத்தன்மையை நடுநிலையாக்கம் செய்து பற்சிதைவைத் தடுக்கின்றன.

(4) மண்ணின் pH

  1. விவசாயத்திற்கு மண்ணின் pH மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
  2. சிட்ரிக் அமிலம் கொண்ட பழங்கள் சற்று காரத்தன்மை உள்ள மண்ணிலும், நெல் அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும், கரும்பு நடுநிலைத்தன்மை கொண்ட மண்ணிலும் வளரும்.

(5) மழை நீரின் pH

  1. மழை நீரின் pH மதிப்பு ஏறக்குறைய 7 ஆகும். இது, மழைநீர் நடுநிலைத் தன்மையானது மற்றும் தூய்மையானது என்பதைக் குறிக்கிறது.
  2. வளிமண்டலக் காற்று சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகிய வாயுக்களால் மாசுபடும் பொழுது அவை மழைநீரில் கரைந்து pH மதிப்பைப்பை 7ஐ விடக் குறையச் செய்கின்றன.
  3. இவ்வாறு மழைநீரின் pH 7ஐ விட குறையும் பொழுது அம்மழை அமிலமழை எனப்படுகிறது.
  4. இந்த அமிலமழை நீர் ஆறுகளில் சேரும் பொழுது அவற்றின் pH ஐ குறைக்கின்றன.
  5. இதனால் நீர்வாழ் உயிரிகளின் வாழ்வு பாதிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

Question 5.
வேதிச் சமநிலை என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை?
விடை:
(1) வேதிச்சமநிலை :

  1. வேதிச்சமநிலை என்பது ஒரு மீள் வேதிவினையின் வினைபடு பொருள் மற்றும் வினை விளைபொருளின் செறிவில் எந்த மாற்றமும் நிகழாத நிலை ஆகும்.
  2. சமநிலையில், முன்னோக்கு வினையின் வேகம்
    = பின்னோக்கு வினையின் வேகம்.

(2) பண்புகள்: [PTA-3]

  1. வேதிச் சமநிலையில், முன்னோக்கு வினையின் வேகமும், பின்னோக்கு வினையின் வேகமும் சமம்.
  2. நேரத்தை பொருத்து அழுத்தம், செறிவு, நிறம், அடர்த்தி, பாகுநிலை போன்றவை மாறாது.
  3. வேதிச்சமநிலை என்பது ஒரு இயங்குச் சமநிலை. ஏனெனில் முன்னோக்கு வினையும், பின்னோக்கு வினையும் தொடர்ந்து நிலையாக நடந்து கொண்டிருக்கும்.
  4. இயற்பியல் சமநிலையில், அனைத்து நிலைமைகளும் மாறாத கனஅளவைப் பெறுகின்றன.

VII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
‘A’ என்ற திண்மச் சேர்மத்தை வெப்பப்படுத்தும் பொழுது சிதைந்து ‘B’ மற்றும் ‘C’ என்ற வாயுவைத் தருகிறது. ‘C’ என்ற வாயுவை நீரில் செலுத்தும்போது அமிலத்தன்மையாக மாறுகிறது. A, B மற்றும் C-யைக் கண்டறிக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 55
A CaCO3 கால்சியம் கார்பனேட்
B CaO கால்சியம் ஆக்சைடு
C CO2 கார்பன் டை ஆக்சைடு

Question 2.
காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா? உனது கூற்றை நியாயப்படுத்துக.
விடை:

  1. காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தக்கூடாது.
  2. ஏனெனில், நிக்கல், காப்பர் சல்பேட்டில் உள்ள காப்பரை இடமாற்றம் செய்கிறது.
  3. மேலும் காப்பரானது நிக்கல் கரண்டியில் வீழ்படிவாக சேகரிக்கப்படுகிறது.
    Nis + CuSO4(aq) → NiSO4(aq) + Cu(s)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

VIII. கணக்கீடுகள்

Question 1.
எலுமிச்சை சாறின் pH மதிப்பு 2 எனில், ஹைட்ரஜன் அயனியின் செறிவின் மதிப்பு என்ன?
விடை:
எலுமிச்சை சாறின் pH மதிப்பு = 2
[H+] = ?
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 65

Question 2.
1.0 × 10-4 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக.(PTA-1; GMQP-2019)
விடை:
[H+] = 1.0 × 10-4
pH = – log10 [H+] = -log10 [1 × 10-4]
pH = – (log10 1 – 4 log10 10)
= (0) + (4 × log10 10) = 0 + 4 × 1 = 4

Question 3.
1.0 × 10-5 மோலார் செறிவுள்ள KOH கரைசலின் pH மதிப்பைக் காண்க. (PTA-6)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 66
[OH] = 1 × 10-5 மோல் லி-1
pOH = – log10[OH] = – log10 [10-5]
= – (-5 × log10 10)
= – (-5) = 5
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 75
pH = 14 – pOH
pH = 14 – 5
pH = 9

Question 4.
ஒரு கரைசலில் ஹைடிராக்சைடு அயனிச் செறிவு 1.0 × 10-11 மோல் எனில் அதன் pH மதிப்பு என்ன? (PTA-5) விடை:
[OH] = 1 × 10-11 M
pOH = -log10 [OH]
= -log10 [10-11]
= -(-11 × log10 10)
= – (-11) = 11
pH + pOH = 14
pH = 14 – pOH = 14 – 11
pH = 3

கருத்துச் சிந்தனை

Question 1.
அனைத்து – எரிதல் வினைகளும் ஆக்ஸிஜனேற்ற வினைகள்; ஆனால் அனைத்து ஆக்சிஜனேற்ற வினைகளும் எரிதல் வினைகள் அல்ல; ஏன்?
விடை:
எரிதல் வினைகள், வெப்பம் மற்றும் ஒளியுடன் தொடர்புடையவை. அனைத்து எரிதல் வினைகளும், வினை நடைபெற வேண்டி, ஆக்சிஜனை உட்கிரகித்துக் கொண்டு ஆக்ஸிஜனேற்றம் அடைகின்றன. ஆனால், ஆக்சிஜனேற்ற வினை என்பது, வெப்பத்தை உள்ளடக்கியதல்ல. ஆக்ஸிஜனேற்ற வினையில் ஆக்சிஜன் அணு சேர்க்கப்படும் அல்லது ஹைட்ரஜன் அணு குறைக்கப்படும். ஆகவே, அனைத்து ஆக்ஸிஜனேற்ற வினைகளும் எளிதில் வினைகள் அல்ல.

Question 2.
அறை வெப்பநிலையில் தூய நீரின் pH மதிப்பு 7. ஏன்?
விடை:
தூய நீரைப் பொறுத்தவரை, ஹைட்ரஜன் அயனிகளின் எண்ணிக்கையும், ஹைட்ராக்சில் அயனிகளின் எண்ணிக்கையும் எப்போதும் சம அளவிலேயே இருக்கும். இதனால், தூய நீர் நடுநிலைத் தன்மையுடன் இருக்கும். மேலும், ஹைட்ரஜன் அயனியின் செறிவு 10-7 மோல்ஸ்/லி என்பதால், தூய நீரின் pH மதிப்பு 7 ஆகும்.

செயல்பாடு 10.1

* ஒரு பீக்கரில் சுமார் 50 மிலி கழிவறையைச் சுத்தம் செய்யும் அமிலத்தை எடுத்துக் கொள்.
* ஒரு சிறிய இரும்பு ஆணியை அதில் வைக்கவும்.
* 10 நிமிடங்களுக்கு பின்பு பீக்கரில் என்ன நிகழ்கிறது என்பதை கவனி.
* ஏதேனும் மாற்றத்தை உன்னால் கவனிக்க முடிகிறதா?
* காண்பனவற்றை தொகுத்து வேதிவினைகளுடன் எழுதுக.
விடை:

  1. கழிவறையைச் சுத்தம் செய்யும் அமிலம் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகும்.
  2. அதில் ஒரு சிறிய இரும்பு ஆணியை வைக்கும்போது ஹைட்ரஜன் வாயுவை குமிழிகளாக இரும்பு இடப்பெயர்ச்சி செய்கிறது.
  3. இது ஒற்றை இடப்பெயர்ச்சி வினை ஆகும்.
  4. காரணம். ஹைட்ரஜனைவிட இரும்பு அதிக வினைதிறன் மிக்கது.
  5. வேதிவினை
    Fe(s) + 2HCl(aq) → FeCl2(aq) + H2(g)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

செயல்பாடு 10.2

* சிறிதளவு சில்வர் நைட்ரேட் படிகங்களை ஒரு சோதனைக் குழாயில் எடுத்துக்கொள்.
* சுமார் 5 மிலி குழாய் நீரை சோதனைக் குழாயில் சேர்க்கவும்.
* சில்வர் நைட்ரேட் படிகங்களை நீரில் சேர்த்து கலக்கவும்.
* மாற்றங்களை கவனித்து உன்னுடைய உற்றுநோக்கலை எழுதுக. இதிலிருந்து என்ன உணர்கிறாய்?
விடை:

  1. 5 மிலி குழாய் நீரில் உள்ள குளோரைடு அயனிகளுடன் சில்வர் நைட்ரேட் வினைபுரிந்து வெண்மை நிற சில்வர் குளோரைடு வீழ்படிவாகிறது.
  2. இது வீழ்படிவாக்கல் வினை ஆகும்.
  3. NaCl(aq) + AgNO3(aq) → AgCl ↓+ NaNO3(aq)

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
ஓர் எரிதல் வினையில் [PTA-2]
அ) ஆக்சிஜன் வாயு வெளிவிடப்படுகிறது
ஆ) நைட்ரஜன் வாயு வெளியிடப்படுகிறது
இ) ஆக்சிஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது
ஈ) நைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது
விடை:
இ) ஆக்சிஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது

Question 2.
ஒரு வேதிச்சமநிலையில் வினைபடு, வினைவிளை பொருட்களின் செறிவுகள் ………. [PTA-5]
அ) வேறுபட்டு இருக்கின்றன
ஆ) ஒரே மாதிரியாக இருக்கின்றன
இ) கணிக்க முடியாதவை
ஈ) சமமாக இராது
விடை:
அ) வேறுபட்டு இருக்கின்றன)

2 மதிப்பெண்கள் 

Question 1.
ஒரு கரைசலின் pH மதிப்பு சுழியாக இருந்தால் அக்கரைசலின் தன்மை யாது? காரணம் தருக.
விடை:
pH மதிப்பு 0-14. 0-7 அமிலப்பண்பு . [PTA-3)
7 நடுநிலை, 7-14 காரத்தன்மை கொண்டது.
pH மதிப்பு குறையும்போது அமிலத்தன்மை அதிகரிக்கிறது.
– log [H+] = 0
[H+] = 1
ஹைட்ரஜன் அயனியின் செறிவு 1. எனவே அதிக அமிலத்தன்மை கொண்டதாகும்.

Question 2.
நம் அன்றாட வாழ்வில் சில நேரங்களில் வேகமாக நடைபெறும் வேதிவினைகளும் சில நேரங்களில் மெதுவாக நடைபெறும் வேதி வினைகளும் தேவை. இவை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டுத் தருக. (7 Marks) (PTA-3)
விடை:

  1. வேகமாக நடைபெறும் வினை – உணவு செரித்தல்.
  2. மெதுவாக நடைபெறும் வினை – இரும்பு துருப்பிடித்தல்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

4 மதிப்பெண்கள்

Question 1.
பின்வரும் வேதிவினைகளை அணுக்கள் இடம் மாறி அமைவதின் அடிப்படையில் வகைப்படுத்தி உமது விடையை நியாயப்படுத்துக.
[PTA-1]
2 KClO3 → 2KCl + 3O2
Zn + CuSO4 → ZnSO4 + Cu
2Mg + O2 → 2MgO
NaSO4 + BaCl2 → BaSO4 + 2NaCl
விடை:
(i) சிதைவு வினை:
2 KClO3 → 2KCl + 3O2
பொட்டாசியம் குளோரேட் சேர்மமானது பொட்டாசியம் குளோரைடு மற்றும் மூலக்கூறுகளாக சிதைவடைகிறது.

(ii) ஒற்றை இடப்பெயர்ச்சி:
Zn + CuSO4 → ZnSO4 + Cu
ஜிங்க்தனிமம்காப்பர்சல்ஃபேட்டிலிருந்து காப்பரை இடப்பெயர்ச்சி செய்து ஜிங்க் சல்பேட் மற்றும் காப்பர் தனிமத்தை உருவாக்குகிறது.

(iii) சேர்க்கை வினை:
2Mg + O2 → 2MgO
மெக்னீசியம், ஆக்ஸிஜனுடன் இணைந்து மெக்னீசியம் ஆக்ஸைடைத் தருகிறது.

(iv) இரட்டை இடப்பெயர்ச்சி:
NaSO4 + BaCl2 → BaSO4 + 2NaCl
சோடியம் மற்றும் பேரியம் அயனிகள் இடபெயர்ச்சியாவதால் பேரியம் சல்பேட் மற்றும் சோடியம் குளோரைடு உருவாகிறது.

Question 2.
பின்வரும் வேதிவினைகளில் எவ்வினை நடப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது? உமது விடையை ஆதாரத்துடன் தருக[PTA-3]
a) 2NaCl + F2 → 2NaF + Cl2
b) NaF + Cl2 → NaCl + F2
விடை:
2NaCl(aq) + F2(g) → 2NaF(aq) + Cl2(g)
2NaF(aq) + Cl2(g) → 2NaCl + F2(g)

  1. முதல் வினையில் சோடியம் குளோரைடிலிருந்து குளோரின் புளூரினால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது.
  2. இரண்டாவது வினையில் குளோரின், புளூரினை சோடியம் புளூரைடிலிருந்து இடப்பெயர்ச்சி செய்கிறது.
  3. மேற்கண்ட இரண்டு வினைகளில் இரண்டாம் வினை நடக்க இயலாது. ஏனெனில் குளோரினைவிட புளூரின் வினைதிறன் மிக்கது. மேலும் தனிம வரிசை அட்டவணையில் குளோரினுக்கு மேலே உள்ளது.
  4. எனவே இடப்பெயர்ச்சி வினைகளில், தனிமங்களின் வினைதிறன் மற்றும் தனிம வரிசை அட்டவணையில் அவற்றின் இடம் ஆகியவை வினை நடைபெறுவதை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

Question 3.
கீழ்க்காணும் வேதி வினைகளில் எது நடுநிலையாக்கல் வினை? காரணம் தருக.
NaOH(aq) + HCl(aq) → 3CO2(g) + 4H2O(g) + வெப்பம் (7 Marks) (PTA-4)
விடை:
NaOH(aq) + HCl(aq) → 3CO2(g) + 4H2O(g) + வெப்பம் மேற்கண்ட வினை நடுநிலையாக்கல் வினையாகும்.

காரணம்: சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திற்கு இடையேயான வினை நடுநிலையாக்கல் வினையாகும். இங்கு சோடியம், ஹைட்ரஜனை ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலிருந்து இடப்பெயர்ச்சி செய்கிறது. இதன் விளைவாக சோடியம் குளோரைடு என்ற நடுநிலையான நீரில் கரையும் உப்பு கிடைக்கிறது.

Question 4.
வினைபடு பொருட்களின் இயல்பு மற்றும் செறிவு எவ்வாறு ஒரு வேதிவினையின் வேகத்தைப் பாதிக்கின்றன என்பதை விளக்குக.
(7 Marks) (PTA-5)
விடை:
சோடியம், ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வேகமாக வினைபுரிகிறது. ஆனால், அசிட்டிக் அமிலத்துடன் மெதுவாக வினைபுரிகிறது. ஏனெனில் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அசிட்டிக் அமிலத்தைவிட வினைதிறன் மிக்கது. எனவே வினைபடுபொருளின் இயல்பு வினைவேகத்தைப் பாதிக்கிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 90

வினைபடு பொருள்களின் செறிவு
அதிகரிக்கும் போது வினைவேகம் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட கன அளவு கொண்ட கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவு செறிவு ஆகும். செறிவு அதிகமாக இருக்கும்போது குறிப்பிட்ட கனஅளவில் துகள்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். எனவே வினையின் வேகமும் அதிகரிக்கும்.

துத்தநாக துகள்கள், 1M ஹைட்ரோகுளோரிகக் அமிலத்தைவிட 2M ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் வேகமாக வினைபுரிகின்றது.

Question 5.
வெப்பநிலையை உயர்த்தும் போது பொதுவாக ஒரு வேதிவினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்? (4 Marks) [PTA-6 & GMQP-2019]
விடை:
வெப்பநிலையை உயர்த்தும் போது வேதிவினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏனெனில் வெப்பம் அதிகரிக்கும் போது வினைபடு பொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து வினையின் வேகம் அதிகரிக்கின்றது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள்

அரசு தேர்வு வினா-விடை

7 மதிப்பெண்கள்

Question 1.
ஒற்றை இடப்பெயர்ச்சி வினையை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக. (Sep.20)
விடை:
ஒற்றை இடப்பெயர்ச்சி வினைகள் :

  1. இவ்வகை வினை ஒரு தனிமம் மற்றும் சேர்மத்திற்கிடையே நிகழ்வதாகும் அவை வினைபடும் பொழுது நிகழ்வதாகும். அவை வினைபடும்பொழுது சேர்மத்திலுள்ள ஒரு தனிமம் மற்றொரு தனிமத்தால் இடப்பெயர்ச்சி அடைந்து புதிய சேர்மத்தையும், தனிமத்தையும் தருகிறது.
  2. ஒற்றை இடப்பெயர்ச்சி வினைகளின் பொதுவான வடிவம் வருமாறு.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 10 வேதிவினைகளின் வகைகள் 95
  3. தனிமம் ‘A’ ஆனது ‘B’ என்ற தனிமத்தை அதனுடைய சேர்மமான ‘BC’ யிலிருந்து இடப்பெயர்ச்சி செய்கிறது. எனவே இது ஒற்றை இடப்பெயர்ச்சி வினை எனப்படுகிறது.
  4. துத்தநாக உலோகத்தை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் வைக்கும்பொழுது ஹைட்ரஜன் வாயு வெளிவருகிறது.
  5. இங்கு ஹைட்ரஜன் துத்தநாகத்தால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு துத்தநாக குளோரைடு உருவாகிறது.
    Zn(s) + 2HCl(aq) → ZnCl2(aq) + H2(g)
    Feo + CuSO4(aq) → FeSO4(aq) + Cu(s)
  6. காப்பர் (II) சல்பேட்டின் நீர்க்கரைசலில் ஒரு இரும்பு ஆணியை வைக்கும் பொழுது இரும்பு, காப்பரை இடப்பெயர்ச்சி செய்கிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 4 வளிமண்டலம் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 1 Chapter 4 வளிமண்டலம்

5th Social Science Guide வளிமண்டலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வளிமண்டலம் ___________ அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
விடை:
ஆ) ஐந்து

Question 2.
வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு ___________ ஆகும்.
ஆ) 3%
அ) 0.03%
இ) 1%
ஈ) 0.00003%
விடை:
அ) 0.03%

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Question 3.
உலக வானிலை தினம்
அ) மார்ச்-20
இ) மார்ச்-22
ஆ) மார்ச்-21
ஈ) மார்ச்-23
விடை:
ஈ) மார்ச்-23

Question 4.
இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிடும் தீர்க்கரேகை _______________ வழியாகச் செல்கிறது.
அ) அலகாபாத்
ஆ) அகமதாபாத்
இ) ஹைதராபாத்
ஈ) செகதீய
விடை:
அ) அலகாபாத்

Question 5.
கடகரேகைக்கும் மகரரேகைக்கும், இடையேயும் அமைந்துள்ள மண்டலம் _____________
அ) மிதவெப்ப
ஆ) துணை வெப்பமண்டலம்
இ) குளிர்
ஈ) வெப்ப மண்டலம்
விடை:
ஈ) வெப்ப மண்டலம்

Question 6.
___________ காற்றின் அழுத்தத்தை அளவிட பயன்படுகிறது.
அ) பாரமானி
இ) அனிமோமீட்டர்
ஆ) வெப்பமானி
ஈ) காற்று வேக அளவி
விடை:
அ) பாரமானி

Question 7.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம் 1
மேற்கண்ட படம் ____________ வீசும் திசையைக் காட்டுகிறது.
அ) தென்மேற்கு பருவக்காற்று
ஆ) வட கிழக்கு பருவக்காற்று
இ) சூறாவளிமழை
ஈ) மலைத்தடை மழை
விடை:
ஆ) வட கிழக்கு பருவக்காற்று

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Question 8.
பருவ காலம் என்பது _____________ சொல்லிலிருந்து பெறப்பட்டது.
அ) கிரேக்கம்
ஆ) அரேபியன்
இ) ஆங்கிலம்
ஈ) லத்தீன்
விடை:
ஆ) அரேபியன்

Question 9.
செங்குத்து மேகம் _____________
அ) கீற்று மேகம்
ஆ) படைமேகம்
இ) திறள் மேகம்
ஈ) கார்மேகம்
விடை:
ஈ) கார்மேகம்

Question 10.
_____________ மேகம் மழைப் பொழிவைத் தருகிறது.
அ) வெள்ளி
ஆ) சாம்பல்
இ) வெண்பஞ்சு
ஈ) திரள்
விடை:
ஆ) சாம்பல்

Question 11.
கூற்று1-காற்றின் திசையை அளவிட பயன்படும் கருவி காற்று வேக அளவி. கூற்று II-ஒளியானது ஒலியை விட வேகமாகச் செல்கிறது.
அ) I மட்டும் சரி
ஆ) I தவறு II சரி
இ) I சரி II தவறு
ஈ) இரண்டும் சரி
விடை:
ஆ) I தவறு II சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வானிலையை பற்றி படிக்கும் அறிவியல் _______________ எனப்படும்.
விடை:
வானிலையியல்

Question 2.
வெப்பத்தை அளவிட உதவும் கருவி _____________
விடை:
வெப்பநிலை மானி

Question 3.
புவியின் மேற்பரப்பிற்கு இணையாக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் ___________ ஆகும்.
விடை:
அட்ச ரேகை

Question 4.
______________ மழை மேகம் என அழைக்கப்படுகிறது.
விடை:
கார்மேகம்

III. பொருத்துக.

1. கீற்று மேகம் – சாம்பல் நிற விரிப்பு
2. படைமேகம் – புயல் மேகம்
3. திறள் மேகம் – மழை கொடுக்காது
4. கார்மேகம் – பருத்தி
விடை:
1. கீற்று மேகம் – மழை கொடுக்காது
2. படைமேகம் – சாம்பல் நிற விரிப்பு
3. திறள் மேகம் – பருத்தி
4. கார்மேகம் – புயல் மேகம்

IV. சரியா/தவறா.

Question 1.
அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக் கோடுகள் நேர மண்டலத்தை கணக்கிட பயன்படுகின்றன.
விடை:
தவறு

Question 2.
அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக் கோடுகள், ஒரு நாட்டை கண்டறிய நமக்கு உதவுகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Question 3.
வளிமண்டலமானது கடத்தல் முறையைவிட கதிர்வீச்சு முறையினால் அதிக வெப்பமடைகிறது.
விடை:
சரி

Question 4.
காற்றின் திசை மாற்றத்திற்கு பூமியின் சுழற்சியே காரணமாகும்.
விடை:
சரி

Question 5.
கடிகார திசைக்கு எதிர் திசையில் சூறாவளி நகர்கிறது.
விடை:
சரி

V. சிறு குறிப்பு வரைக.

Question 1.
வானிலை என்றால் என்ன?
விடை:
வானிலை என்பது மிதவெப்ப நிலை, ஈரப்பதம், மேகமூட்டம், அழுத்தம் ஆகியவற்றின் குறுகிய கால நிலையாகும்.

Question 2.
வளிமண்டல அடுக்குகள் யாவை?
விடை:
வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குகள் உள்ளன. அவையாவன – ட்ரோபோஸ்பியர், ஸ்ட்ராடோஸ்பியர், மீஸோஸ்பியர், தெர்மோஸ்பியர் மற்றும் எக்சோஸ்பியர்.

Question 3.
கார்மேகங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
இது அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும். பலத்த மழை தருகிறது. இது செங்குத்து மேகங்கள் மற்றும் புயல் அல்லது மழை மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

Question 4.
மழைத்தடை மழையை வரைபடத்துடன் விவரி.
விடை:
பருவக்காற்று மலைச்சரிவின் ஒரு பக்கத்தில் மோதும் போது மேலெழும்புகிறது. இதன் காரணமாக காற்றானது குளிர்ந்து அதிக மழைப்பொழிவை கொடுக்கிறது. மலையின் அடுத்த பக்கம் மழை மறைவுப்பகுதி எனப்படுகிறது. இது குறைவான மழையையே பெறுகிறது.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம் 2

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
ஜெட் காற்றோட்டம் பற்றி எழுதுக.
விடை:
ஜெட் காற்றோட்டம் : வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டத்தினை ஜெட் காற்றோட்டம் என்கிறோம். இக்காற்றோட்டம் இந்தியாவில் பருவக் காற்றின் தொடக்கக் காலத்தையும் அது முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Question 2.
காற்றின் வகைகளை விளக்குக.
விடை:
காற்று : லூ என்பது இந்தியாவின் வடமேற்கு பகுதியில் வீசும் ஒரு வலிமையான, புழுதி படிந்த, வெப்பமான, வறண்ட கோடைக்காற்று ஆகும். இக்காற்று குறிப்பாக மே, ஜுன் மாதங்களில் வலுவாக வீசும். அதிக வெப்பநிலையால், இக்காற்று உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

கோள் காற்று :
பூமியின் சுழற்சிக்கேற்றவாறு ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்று கோள்காற்று எனப்படும்.

பருவக்காற்று :
மான்சூன் என்ற வார்த்தை மௌசிம்’ என்ற அரேபியச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதற்கு பருவகாலம் என்று பொருள்.

பருவக்காற்றின் வகைகள் : * தென்மேற்கு பருவக் காற்று * வட கிழக்கு பருவக் காற்று

கடல் காற்று:
இது. மாலைப்பொழுதில் கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது.

நிலக் காற்று:
இது காலைப் பொழுதில் நிலத்தில் இருந்து கடலை நோக்கி வீசுகிறது.

உள்ளுர் காற்று: இது வானிலையை பாதிக்கிறது. * வட மேற்கு இந்தியாவில் வீசும் வெப்பக்காற்று. * வட கிழக்கு இந்தியாவில் வீசும் குளிர்காற்று.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம் 3
ஜெட் காற்றோட்டம் :
வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டத்தினை ஜெட் காற்றோட்டம் என்கிறோம். இக்காற்றோட்டம் இந்தியாவில் பருவக் காற்றின் தொடக்கக் காலத்தையும் அது ) முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.

சூறாவளி (புயல்) :
சூறாவளி தனது நிலையையும் திசையையும் அவ்வப்போது மாற்றுகிறது. காற்றுவேகமும் அவ்வப்போது மாறுபடுகிறது.

Question 3.
‘வானிலைத் தொழிற்சாலை’ பற்றி எழுதுக.
விடை:
நேர் மற்றும் எதிர் (+, -) மின்னூட்டங்கள் ஒன்றையொன்று தாக்கும் போது , மின்னல் , இடி ஆகியவை உற்பத்தியாகின்றன. ஒளி ஒலியை விட வேகமாகச் செல்கிறது. எனவே இடி மின்னலைத் தொடர்ந்து பெரும் சப்தமாக நமக்கு ஒலிக்கிறது. இவ்வாறு வானின் அனைத்து பண்புகளும் ஒன்றாக ஒரே நேரத்தில் செயல்படும் போது அது வானிலை தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிறது.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம் 4

5th Social Science Guide வளிமண்டலம் InText Questions and Answers

பக்கம் 167 செயல்முறைகள் :

வாயுக்களின் முக்கியத்துவத்தை எழுது.
ஆக்சிஜன் : _______________
கார்பன் டை ஆக்சைடு : _______________
ஓசோன் : _______________
விடை:
ஆக்சிஜன் : உயிரினங்கள் உயிர் வாழ
கார்பன் டை ஆக்சைடு : தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்க
ஓசோன் : சூரியனின் புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நம்மைப் பாதுகாக்க

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 3 நல்ல குடிமகன் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

5th Social Science Guide நல்ல குடிமகன் Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
குடிமை என்ற சொல் ஒரு நாட்டின் ______________ பற்றியதாகும்.
விடை:
குடிமக்கள்

Question 2.
ஒரு நபரை ______________ மாற்றுவதே கல்வியின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
விடை:
மதிப்பு மிக்க மனிதனாக

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 3.
மனிதன் ஒரு _____________
விடை:
சமூக விலங்கு

Question 4.
தன் பணியில் ________________ தவறாமல் இருக்க வேண்டும்.
விடை:
கடமை

II. பொருத்துக.

1. இயல்பான குணம் – சகிப்புத்தன்மை
2. கலாச்சாரம் – பாதிக்கும் காரணி
3. சமுதாயம் – நேரந்தவறாமை
4. கடமை – மொழி
5. வேலையின்மை – நன்மதிப்பு
விடை:
1. இயல்பான குணம் – நன்மதிப்பு
2. கலாச்சாரம் – மொழி
3. சமுதாயம் – சகிப்புத்தன்மை
4. கடமை – நேரந்தவறாமை
5. வேலையின்மை – பாதிக்கும் காரணி

III. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
குடிமகன் என்ற சொல்லை வரையறு.
விடை:
ஒரு குடிமகன் ஒரு குறிப்பிட்ட நாட்டில் உறுப்பினராக இருந்து, பல்வேறு உரிமைகளை அனுபவித்து, தனது

கடமைகளை நிறைவேற்றுகிறார். ஒரு இறைமை பெற்ற அரசு தனது மக்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது தேசத்தில் வாழும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, வேலை செய்யும் உரிமை, நாட்டில் எங்கும் குடியிருக்க உரிமை வழங்கப்படுகிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 2.
ஐந்து தனிப்பட்ட ஒழுக்க நெறிகள் எவை?
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 1

Question 3.
சமூக நெறிமுறைகள் யாவை?
விடை:

  • மக்களுடன் நல்லுறவை எப்போதும் பேணுவது
  • பெரியோர்களை மதிப்பது
  • இயற்கையை மதித்து நடப்பது
  • சகிப்புத் தன்மையுடன் இருப்பது
  • நட்பை பேணி வளர்ப்பது

Question 4.
நற்பண்பு நெறிமுறைகள் என்றால் என்ன?
விடை:
கால நேரம் தவறாமை, ஈடுபாடு, அனைவரையும் சமமாக நடத்துதல், சரியான நேரத்தில் வேலைகளைச் செய்தல், ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல், தவறாமல் கடமைகளைச் செய்தல், ஆகியன நற்பண்பு நெறிமுறைகள் ஆகும்.

IV. விரிவாக விடையளி.

Question 1.
நல்ல மதிப்புகளை வளர்க்கும் ஐந்து காரணிகளை எழுதுக.
விடை:

நற்பண்புகளை வளப்படுத்தக் கூடிய காரணிகள்:

  • எழுத்தறிவு
  • விழிப்புணர்வு மற்றும் நலன்களை உருவாக்குதல்
  • வெற்றி பெறும் வரை கடினமாக முயற்சி செய்தல்
  • தன் தனித் தன்மையை அறிதல்
  • ஏற்றுக் கொள்ளுதல்
  • தன்னம்பிக்கை

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 2.
அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றி எழுதுக.
விடை:

  1. பொதுச் சொத்துக்களை பாதுகாத்தல்.
  2. தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்தல்.
  3. விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல்.
  4. இயற்கை வளங்களை பாதுகாத்தல்.
  5. சுற்றுச்சூழலை பராமரித்தல்.
  6. தேசிய சின்னங்களை கௌரவித்தல்.
  7. தியாகிகளுக்கும் அவர்களின் தியாகங்களுக்கும் மதிப்பளித்தல்,
  8. நமது கலாச்சாரம் மற்றும் பராம்பரியத்தைக் காத்தல்.
  9. நாட்டுப்பற்றை வளர்த்துக் கொள்ளுதல்.

5th Social Science Guide நல்ல குடிமகன் InText Questions and Answers

பக்கம் 159 இவற்றை முயற்சிக்கவும் :

அன்பு, கருணை, பெருந்தன்மை, நேர்மை, உண்மை , நட்பு, விருந்தோம்பல், அமைதி, சகிப்புத்தன்மை, நம்பிக்கை போன்றவை தனிப்பட்ட ‘விழுமங்கள். மேற்கூறிய இந்த மதிப்புகள் உதவியுடன் கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அனைத்து உயிர்களிடத்தும் ___________ காட்ட வேண்டும்.
விடை:
அன்பு

Question 2.
_______________ யோடு ஏழைகளுக்கு உதவுங்கள்.
விடை:
பெருந்தன்மை

Question 3.
________________ ஒரு சிறந்த கொள்கை.
விடை:
நேர்மை

Question 4.
மிகச் சிறந்த உறவாகக் கருதப்படுவது _________________.
விடை:
நட்பு

Question 5.
விருந்தினர்களை உபசரிப்பது _________________ ஆகும்.
விடை:
விருந்தோம்பல்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 6.
துன்புறுபவர்களுக்கு நாம் ______________ காட்டவேண்டும்.
விடை:
கருணை

Question 7.
எப்பொழுதும் _______________ பேசவேண்டும்.
விடை:
உண்மை

Question 8.
பொது இடங்களில் ______________யுடன் நடந்து கொள்ள
விடை:
சகிப்புத்தன்மை

இவற்றை முயற்சிக்கவும் :

Question 1.
உன் தாய்மொழி என்ன?
விடை:
தமிழ்

Question 2.
நமது அலுவல் மொழி எது?
விடை:
நமது அலுவலக மொழி ஆங்கிலம் ஆகும். (அத்துடன் இந்தி, வங்காள மொழி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, கன்னடம், மலையாளம், குஜராத்தி, உருது ஆகியவையும் நமது அலுவலக மொழிகளாகும்).

Question 3.
வட இந்தியாவின் முக்கிய உணவு என்பது ____________
விடை:
கோதுமை

Question 4.
__________ தென்னிந்தியாவின் முக்கிய உணவு
விடை:
அரிசி

Question 5.
உனக்கு எத்தனை மொழிகள் தெரியும்? _________
விடை:
இரண்டு

பண்பாட்டு நெறிமுறைகள் :
நற்பண்பு, பண்படுத்தப்பட்ட நன்நடத்தை ஒரு சமூகத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும்.

பக்கம் 161 சிந்தனை செய் :

Question 1.
____________ பெற மரங்கள் வளர்க்க வேண்டும்.
விடை:
மழை

Question 2.
_____________ வாழ்ந்தால் லட்சக்கணக்கானோர் பயனடைவார்கள்
விடை:
ஒன்று சேர்ந்து

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 3.
சேர்ந்தால் ____________ பிரிந்தால் வீழ்வோம்.
விடை:
வாழ்வோம்

கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையில் நல்ல மதிப்புகள் வட்டம் இடுக.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 2
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 3

பக்கம் 162 பின்வருவனவற்றை பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 4
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 5

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

5th Social Science Guide வரலாற்றை நோக்கி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பழங்கற்கால மனிதர்கள்.
அ) பருத்தி ஆடைகள் அணிந்திருந்தனர்.
ஆ) தாவரங்களின் இலைகள் மற்றும் தோலை அணிந்தனர்.
இ) கம்பளி ஆடைகள் அணிந்திருந்தனர்.
விடை:
ஆ) தாவரங்களின் இலைகள் மற்றும் தோலை அணிந்தனர்.

Question 2.
பழங்கால மனிதரால் வளர்க்கப்பட்ட விலங்கு
அ) பசு
ஆ) குதிரை
இ) நாய்
விடை:
இ) நாய்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

Question 3.
பழங்கால மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம்.
அ) இரும்பு
ஆ) செம்பு
இ) தங்கம்
விடை:
ஆ) செம்பு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பழங்கால மனிதன் வாழ்ந்த இடம் _____________
விடை:
குகைகள்

Question 2.
எழுத்துக்கள் கண்டுபிடிப்புகளுக்கு முந்திய காலம் _______________
விடை:
வரலாற்றுக்கு முந்தையக் காலம்

Question 3.
இரும்புக் கருவிகளை பயன் படுத்திய காலம் ______________
விடை:
இரும்புக் காலம்

Question 4.
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு ________________
விடை:
கல்சக்கரங்கள்

Question 5.
வரலாற்று ஆராய்ச்சி நடைபெறும் ஒரு தமிழக இடம் _____________
விடை:
கீழடி

III. விரிவாக விடையளி

Question 1.
கற்காலம் என்றால் என்ன?
விடை:
கற்காலம் என்பது கற்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு காலமாகும்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

Question 2.
புதுக்கற்காலக் காலம் வரையறு.
விடை:
கற்கள் கருவியாக பயன்படுத்தப்பட மற்ற கற்களின் உதவியால் கூர்மையாக்கப்பட்டன. இந்த கூர்மையான கருவிகள் விலங்குகளை வேட்டையாட மற்றும் விலங்குகளின் மாமிசத்தை கிழித்தெறிய உதவின.

எலும்புகள், கொம்புகள், கற்கள், தோல், மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவை கற்கருவிகளாகவும் ஆயுதங்களாகவும், பயன்படுத்தப்பட்டன. வரலாற்றில் இந்த நிலை புதிய கற்காலம் (Neolithic age) என்று அழைக்கப்பட்டது.

Question 3.
எந்தக்காலத்தில் கல்லும் தாமிரமும் பயன்படுத்தப் பட்டன?
விடை:
கற்காலத்தில் கல் பயன்படுத்தப்பட்டது. புதிய கற்காலத்தின் இறுதியில் செம்புக்காலத்தில் கல்லுடன் தாமிரம் பயன்படுத்தப்பட்டது.

Question 4.
வரலாற்றை நாம் கற்க உதவும் மூலங்கள் யாவை?
விடை:
கைவினைப் பொருள்கள், மண்பாண்டங்கள், நாணயங்கள், சிலைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள் எழுதப்பட்ட ஆவணங்கள் போன்றவை வரலாற்றைக் கட்டமைக்க உதவும் – மதிப்புமிக்க ஆதாரங்களாகும்.

Question 5.
அருங்காட்சியகம் என்றால் என்ன?
விடை:
அருங்காட்சியகம் என்பது அரிய மற்றும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாக்கப்படும் இடம். இவை மக்களின் வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன. எனவே, கடந்த காலத்தின் எச்சங்களைப் பாதுகாப்பது முக்கியமாகும். எச்சங்கள் என்பது பழங்கால மக்கள் பயன்படுத்திய பூமியில் புதையுண்ட பொருள்கள் ஆகும்.

Question 6.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 1

Question 7.
பழங்கற்காலக் கருவிகளை வகைப்படுத்துக.
விடை:
பண்டைய மனிதர்கள் விலங்குகளோடு சேர்ந்து காடுகளில் வாழ்ந்தனர். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், விலங்குகளை விரட்டவும், வேர்கள், குருத்துகள் முதலியவைகளை தோண்டவும் கற்கருவிகளைப் பயன்படுத்தினர்,

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

கற்கள் கருவியாக பயன்படுத்தப்பட மற்ற கற்களின் உதவியால் கூர்மையாக்கப்பட்டன. இந்த கூர்மையான கருவிகள் விலங்குகளை வேட்டையாட மற்றும் விலங்குகளின் மாமிசத்தை கிழித்தெறிய உதவின.

எலும்புகள், கொம்புகள், கற்கள், தோல், மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவை கற்கருவிகளாகவும் – ஆயுதங்களாகவும், பயன்படுத்தப்பட்டன, வரலாற்றில் இந்த நிலை புதிய கற்காலம் (Neolithic age) என்று அழைக்கப்பட்டது.
1. பழங்காலத்தில் கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
2. குவார்ட்சைட் என்ற கல்லிலிருந்து ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன.
3. நெருப்பை உருவாக்க சிக்கி முக்கி கற்கள் பயன்படுத்தப்பட்டன.

5th Social Science Guide வரலாற்றை நோக்கி InText Questions and Answers

பக்கம் 150 செயல்பாடு :

Question 1.
பழைய கற்கால மனிதர்களால் உண்ணப்பட்ட உணவு எது?
விடை:
வேர்கள், குருத்துகள், மாமிசம், தானியம்

Question 2.
குகைகளில் பழைய மனிதர்கள் ஏன் வாழ்ந்தார்கள்?
விடை:
பழங்கால மனிதர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு வீடு கட்டத் தெரியாது. எனவே அவர்கள் குகைகளில் வாழ்ந்து வந்தனர்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

Question 3.
ஏன் பச்சையாக மாமிசத்தை சாப்பிட்டார்கள்?
விடை:
கற்கால மனிதர்களுக்கு நெருப்பை உருவாக்கவும் சமைக்கவும் தெரியாது. எனவே அவர்கள் பச்சையாக மாமிசத்தை சாப்பிட்டார்கள்.

செயல்பாடு :

வரலாற்று காலத்தின் வயதைக் கண்டுபிடி.

பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், செம்புக் காலம், இரும்புக் காலம்
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 2
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 3
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 4
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 5