Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter 1 ஒளியியல் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 3 Chapter 1 ஒளியியல்

7th Science Guide ஒளியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
ஒளியானது எப்பொழுதும் …………… செல்லும். இந்தப்பண்பு ……….. என அழைக்கப்படுகிறது.
அ) வளைகோட்டில், நிழல்கள்
ஆ) நேர்கோட்டில், நிழல்கள்
இ) நேர்கோட்டில், எதிரொளிப்பு
ஈ) வளைந்து பின் நேராக, நிழல்கள்
விடை:
ஆ) நேர்கோட்டில், நிழல்கள்

Question 2.
ஆடியில் படும் ஒளியானது ………………
அ) ஊடுருவிச் செல்கிறது
ஆ) எதிரொளிப்பு அடைகிறது
இ) உட்கவரப்படுகிறது
ஈ) விலகலடைகிறது
விடை:
ஆ) எதிரொளிப்பு அடைகிறது

Question 3.
……………………. பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது.
அ) நீர்
ஆ) குறுந்தகடு
இ) கண்ணாடி
ஈ) கல்
விடை:
இ) கண்ணாடி

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 4.
ஒளி என்பது ஒரு வகை …………………..
அ) பொருள்
ஆ) ஆற்றல்
இ) ஊடகம்
ஈ) துகள்
விடை:
ஆ) ஆற்றல்

Question 5.
நீங்கள், உங்கள் பிம்பத்தைப் பளப்பளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால் மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது, ஏனெனில் ……………..
அ) ஒழுங்கான எதிரொளிப்பு, மர மேஜையில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு பளப்பளப்பான பரப்பில் நடைபெறுகிறது.
ஆ) ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.

அ) இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.
அ) இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறுகிறது.
விடை:
ஆ) ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.

Question 6.
பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?
அ) கண்ணாடி
ஆ) மரம்
இ) நீர்
ஈ) மேகம்
விடை:
ஈ) மேகம்

Question 7.
ஒளியானது ……………. எதிரொளிப்பு நடைபெறுகிறது.
அ) எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது.
ஆ) எதிரொளிக்கும் பரப்பை அணுகும்போது
இ) எதிராளிக்கும் பரப்பின் வழியே செல்லும்போது
ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை .
விடை:
ஈ) மேற்கூறிய எதுவும் இல்
(குறிப்பு: ஒளியானது எதிரொளிக்கும் பரப்பை அடைந்த பின் எதிரொளிப்பு நடைபெறுகிற)

Question 8.
கீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்?
அ) பிளாஸ்டிக் தட்டு
ஆ) சமதள ஆடி
இ) சுவர்
ஈ) காகிதம்
விடை:
ஆ) சமதள

Question 9.
சிவராஜன் ஒரு மீட்டர் அளவுகோலை, காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத் நேர்க்குத்தாக நிற்க வைக்கிறான். நண்பகலில் தோன்றும் அளவுகோலின் நிழலாக, ……………….
அ) தோன்றாது.
ஆ) காலையில் தோன்றிய நிழலைவிட நீளமானது மற்றும் நிழல், சூரியனின் எதிர்த்திசை தோன்றும்.
இ) காலையில் தோன்றிய நிழலைவிடக் குறைவான நீளம் கொண்டது மற்றும் நிழல், சூரிய அதே திசையில் தோன்றும்.
ஈ) காலையில் தோன்றிய நிழலை விடக் குறைவான நீளம் கொண்டது.
விடை:
அ) தோன்ற

Question 10.
ஊசித்துளைக்காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது, ஏனெனில் ………………………….
அ) ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும்
ஆ) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்லும்போது, தலைகீழாகச் செல்கிறது.
இ) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்கிறது.
ஈ) ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன.
விடை:
அ) ஒளியானது நேர்க்கோட்டில் செல்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 11.
பின்வரும் எந்தக்கூற்று, நிழல்கள் உருவாக்கத்தை விளக்குகிறது?
அ) ஒளி நேர்கோட்டில் செல்கிறது .
ஆ) ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியைத் தன் வழியே அனுமதிப்பதில்லை .
இ) எதிரொளிப்பு, கண்ணாடி போன்ற பரப்புகளில் நடைபெறுகிறது.
ஈ) இடவலமாற்றம் அடைகிறது.

i) அ மற்றும் ஆ
ii) அ மற்றும் ஈ
iii) அ மற்றும் இ
iv) இ மற்றும் ஆ
விடை:
i) அ மற்றும் ஆ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு சமதள ஆடியானது உருவாக்கும் பிம்பம் …………… ஆகும்
விடை:
நேரான மாய பிம்பு

Question 2.
……………. எதிரொளிப்பு ஆனது பொருள்களைக் காண உதவுகிறது
விடை:
ஒளி

Question 3.
ஒளிக்கதிர்கள் பளபளப்பான பரப்பின் மீது விழும்போது, அவை …………………… அடைகின்றன
விடை:
எதிரொளிப்பு .

Question 4.
சூரிய ஒளியானது…………. வண்ண ங்களின் கலவை ஆகும்
விடை:
பல (VIBGYOR)

Question 5.
ஒரு வெள்ளொளி ஆனது, ஏழு வண்ணங்களாகப் பிரிகையடையும் நிகழ்வு …………… எனப்படும்.
விடை:
நிறப்பிரிகை

Question 6.
சந்திரன், சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்களை ……… செய்கிறது.
விடை:
எதிரொளிக்க

Question 7.
……………….. பயன்படுத்தி, சூரிய ஒளியில் அடங்கியுள்ள வண்ணங்களைப் பிரிக்கலாம்
விடை:
முப்பட்டகம்

Question 8.
சொரசொரப்பான பரப்பின் மேல் …………………. எதிராளிப்ப நடைபெறுகிறது.
விடை:
ஒழுங்கற்ற

III. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா, தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில், சரியான கூற்றை எழுதுக

Question 1.
ஆடியின் முன் நிற்கும் போது, உன் வலக் கையின் பிம்பமும், இடக் கையின் பிம்பமும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கின்றன
விடை:
சரி

Question 2.
சூரிய ஒளியானது, நீர்த்துளிகளின் மூலம் நிறப்பிரிகை அடைந்து வானவில் தோன்றுகிறது
விடை:
சரி

Question 3.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. எனவே பெரிஸ்கோப்பின் மூலம் தோன்றும் பிம்பமும் இடவலமாற்றம் அடைகிறது.
சரியான விடை : சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. ஆனால் பெரிஸ்கோப் ஒன்றின் மூலம் கிடைக்கக்கூடிய கடைசி பிம்பமானது இடவலமாற்றம் இன்றி கிடைக்கிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 4.
சூரிய ஒளியைக் கோள்கள் எதிரொளிப்பதன் காரணமாக அதனைக் காண முடிகிறது.
விடை:
சரி

Question 5.
புத்தகத்தின் மேற்பரப்பு, ஒளியை எதிரொளிப்பதால் புத்தகத்தை நாம் காண முடிகிறது.
விடை:
சரி

Question 6.
ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம் , நேர்மாறு பிம்பம் ஆகும்.
விடை:
சரி

Question 7.
ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவும், பொருளின் அளவும் சமம்
சரியான விடை : ஊசித்துளை காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவு பொருளின் அளவிலிருந்து மாறுபடலாம்.
விடை:
தவறு

Question 8.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் தலைகீழ் மாற்றம் அடைகிறது.
சரியான விடை : சமதள ஆடியில் தோன்றும் பிம்பமானது தலைகீழ் மாற்றம் அடைவதில்லை
விடை:
தவறு

Question 9.
சமதள ஆடி, ஒளி ஊடுருவாத ஒரு பொருள் ஆகும்.
விடை:
சரி

Question 10.
ஒரு பொருளின் நிழல், பொருள் இருக்கும் அதே பக்கத்தில் அமையும்.
சரியான விடை : ஒரு பொருளின் நிழலானது ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்திசையில் உருவாகும்.
விடை:
தவறு

Question 11.
நம்மைச்சுற்றி இருக்கும் பொருள்களை, ஒளியின் ஒழுங்கான எதிரொளிப்பின் மூலமே காண்கிறோம்.
விடை:
சரி

Question 12.
ஒரு வெள்ளொளி ஆனது, முப்பட்டகம் வழியே செல்லும்போது, அது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 2

V. சுருக்கமாக விடையளி

Question 1.
எதிரொளிப்பு விதிகளை, படத்துடன் கூறுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 3

Question 2.
படத்தில் ஒரு பென்சில், ஓர் ஆடியில் மேலே இருக்கும் நிலையைக் காட்டுகிறது? எனில்
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 4

அ) ஆடியில் தோன்றும் பென்சிலின் பிம்பத்தை வரைக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 5

ஆ) பென்சிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் எவ்வாறு ஆடியில் எதிரொளிக்கப்பட்டு, கண்ணிற்கு அதன் பிம்பம் கிடைக்கிறது படம் வரைந்து காட்க.
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 6
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 7

Question 3.
ஒருவர், தன் முன்னால் ஆடியில் ஒரு மரத்தின் பிம்பத்தை 3.5 மீட்டர் தொலைவில் இருந்து பார்கிறார். மரம், அவர் கண்களிலிருந்து 0.5 மீட்டர் தொலைவில் பின்னால் இருக்கிறது, எனில் மரத்திற்கும் அவர் கண்ணிற்கும் இடையே உள்ள தொலைவு என்ன? பொருளைக் காண நமக்கு அவசியமான காரணிகள் யாவை?
விடை:
மனிதனுக்கும், கண்ணாடிக்கும் இடையே உள்ள தொலைவு = 3.5m
மனிதனுக்கும், மரத்திற்கும் இடையே உள்ள தொலைவு = 0.5m
மரத்திற்கும் கண்ணாடிக்கும் இடையே மொத்த தொலைவு = 0.5 + 3.5 = 4m
படுகோணம் ∠i = 4m ∠r = 4m
பொருளுக்கும், கண்ணிற்கும் இடையே உள்ள தெலைவு = கண்ணாடி மற்றும் மனிதனுக்கும் இடையே உள்ள தொலைவு + ∠r
= 3.5m + 4m = 7.5m

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 4.
ஒளிரும் பொருள்கள் என்றால் என்ன?
விடை:

  • தாமாகவே ஒளிரக்கூடிய பொருட்கள் ஒளிரும் பொருள்கள் எனப்படும்.
  • (எ.கா) சூரிய ஒளி, மின்சார பல்பு

Question 5.
நிலா ஓர் ஒளிரும் பொருளா? காரணம் கூறு.
விடை:

  • ஆம். சந்திரன் நன்கு ஒளியைத் தரும் மூலம் ஆகும்.
  • ஆனால் சந்திரன் தாமாகவே ஒளியை உமிழாது.
  • சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று அதனை பூமிக்கு பிரதிபலிக்கிறது.

Question 6.
ஒளியை உட்கவரும் பண்பினைப் பொருத்து, பொருள்களின் மூன்று வகைகள் யாவை?
விடை:

  • ஒளி ஊடுருவும் பொருள்கள் (எ.கா) தூய நீர்
  • பகுதி ஒளி ஊடுருவும் பொருள்கள் (எ.கா) சொரசொரப்பான கண்ணாடி
  • ஒளி ஊடுருவாப் பொருள்கள் (எ.கா) கல்

Question 7.
நிழல்களின் பகுதிகள் யாவை?
விடை:

  1. கரு நிழல்
  2. புற நிழல்

Question 8.
நிழல்களின் பண்புகள் யாவை?
விடை:

  • ஒளி ஊடுருவாப் பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.
  • நிழல்கள் எப்பொழுதும் ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் உருவாகும்.
  • ஒரு பொருளின் நிழலின் மூலம் அதன் தன்மையைக் கண்டறிய முடியாது.
  • பொருளின் நிறம் எதுவானாலும், நிழல் கருமையாகவே இருக்கும்.
  • ஒளி மூலம், ஒளி ஊடுருவாப்பொருள் மற்றும் நிழல் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையும்.
  • நிழலின் அளவானது i) ஒளிமூலம் மற்றும் பொருள் மேலும் ii) பொருள் மற்றும் திரை இவற்றிற்கிடையே உள்ள தொலைவை சார்ந்துள்ளது.

Question 9.
சமதள ஆடி என்றால் என்ன?
விடை:

  • காது – சமதள ஆடி என்பது, எதிரொளிப்பின் மூலம் பிம்பத்தை உருவாக்கும் வழவழப்பான ஒரு சமதள பரப்பு ஆகும்.
  • தன் முன் தோன்றும் பொருளின் பிம்பத்தை உருவாக்கும்.

Question 10.
முப்பட்டகம் என்றால் என்ன?
விடை:
முப்பட்டகம் என்பது இரண்டு சமதளப்பரப்புகளுக்கு இடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருள் ஆகும்.

Question 11.
கண்ணுறு ஒளி என்றால் என்ன?
விடை:
மனிதக் கண்ணால் கண்டறியக்கூடிய மின்காந்த கதிர்வீச்சின் வரம்பே கண்ணுறு ஒளி ஆகும்.

Question 12.
கீழ்க்காணும் பொருள்களை அட்டவணையில் சரியான இடத்தில் நிரப்புக.
விடை:
(நட்சத்திரம், செங்கல் சுவர், தாவரங்கள், கண்ணாடி கோள்கள், மின்பல்பு, எரியும் மெழுகுவத்தி)
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 8

Question 13.
1 மீட்டர் 45 செ.மீ உயரமுடைய ஒரு சிறுவன், நீளமான ஓர் ஆடியிலிருந்து 2 மீட்டர் தொலைவில் நிற்கிறான், எனில் பின்வருவனவற்றை நிரப்புக.
அ) சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு ……
விடை:
4 மீ ஆடியிலிருந்து சிறுவன் நிற்கும் தூரம் 1 = 2மீ(∠i)
∠i = ∠r = 2மீ
எனவே சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் உள்ள தொலைவு = சிறுவனிடமிருந்து கண்ணாடியின் தூரம் + கண்ணாடிக்கும் பிம்பத்திற்கும் உள்ள தூரம்.
= 2மீ + 2மீ = 4 மீ

ஆ) ஆடியில் தோன்றும் சிறுவனுடைய பிம்பத்தின் உயரம் …………………
விடை:
சமதள ஆடி ஏற்படுத்தும் பிம்பம் நேரானது. எனவே ஆடியில் தோன்றும் சிறுவனுடைய பிம்பத்தின் உயரம் 1 மீ 45 செ.மீ ஆகும்.

இ) சிறுவன் 1 மீட்டர் தொலைவு ஆடியை நோக்கிச் சென்றால், ஆடிக்கும், பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு …………..
விடை:
சிறுவன் 1 மீட்டர் தொலைவு ஆடியை நோக்கிச் சென்றால் சிறுவனுக்கும்,
ஆடிக்கும் உள்ள தொலைவு ∠i = 1மீ
∠i = ∠r = 1மீ
எனவே ஆடிக்கும், பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு = 1மீ ஆகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 14.
ஏதேனும் ஒரு பொருள் ஒன்றையும் ஊசித்துளைக் காமிரா ஒன்று உருவாக்கும் அப்பொருளின் பிம்பத்தையும் வரைக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 9

Question 15.
அவசர கால ஊர்திகளில் (AMBULANCE) என்ற வார்த்தை வல, இடமாக மாற்றி எழுதப்பட்டிருப்பதன் காரணம் என்ன?
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 10
விடை:
சமதள ஆடியின் இடவலமாற்றம் என்ற பண்பு இதில் பயன்படுத்தப்படுகிறது.

ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக ‘AMBULANCE’ என நேராகத் தெரியும்.

Question 16.
ஆடியில் தோன்றும் சில பெரிய ஆங்கில எழுத்துகளின், பிம்பங்கள் மாறாமல் இருக்கின்றன. இதர பெரிய ஆங்கில எழுத்துகளின் பிம்பங்கள் மாற்றம் அடைகின்றன. இதற்குக் காரணம் என்ன? விளக்குக.
விடை:
A, H, I, M, O, T, U, V, W, X மற்றும் Y போன்ற 11 எழுத்துகளின் பிம்பங்கள் மாற்றம் அடைகின்றன. இதற்கு ‘சமச்சீர் தன்மையே’ காரணமாகும்.

மற்ற எழுத்துக்களின் (B, C, D, E, F, G, J, K, L, N, P, Q, R, S மற்றும் Z) பிம்பங்க ள் மாறாமல் இருக்கின்றன. இதற்கு இடவல மாற்றம்’ காரணமாகும்.

Question 17.
M1 மற்றும் M2 என்ற இரு ஒன்றுக்கொன்று செங்குத்தான சமதள ஆடிகள் படத்தில் காட்டியுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. AB என்ற கதிர் M) என்ற சமதள ஆடியோடு 45° படுகோணத்தை ஏற்படுத்துகிறது.
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 11
அ. …………….. ………….. ஆகியவை எதிரொளிப்புக் கதிர்கள் ஆகும்.
விடை:
BC, CD

ஆ. ……………………… ஆகியவை படுகதிர்கள் ஆகும்.
விடை:
AB, BC

இ. BC என்ற கதிர் ஏற்படுத்தும் படுகோணம் என்ன?
விடை:
45°

ஈ. CD என்ற கதிர் ஏற்படுத்தும் எதிரொளிப்புக் கோணம் என்ன ?
விடை:
45°

Question 18.
ராஜன், கடிகார பிம்பங்களின் படங்களைக் கொண்டு விளையாடுகிறான். அவன் தன் அறையில் உள்ள கடிகாரத்தைப் பார்க்கிறான். அது 1:40 எனக்காட்டுகிறது. பின்வரும் படங்களில், ராஜன் கடிகார மற்றும் அதன் கண்ணாடிப் பிம்பத்தில் கடிகார முட்களை எவ்வாறு வரைந்திருப்பான்?
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 12
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 13

Question 19.
ஒளியின் எதிரொளிப்பு என்றால் என்ன?
விடை:
எந்தவொரு பொருளின் மேற்பரப்பையும் அடைந்த பிறகு, ஒளி கதிர்கள் மீண்டு வருவது ஒளியின் எதிரொளிப்பு எனப்படும்.

Question 20.
ஓர் ஒளிக்கதிர் 50° கோணத்தில் ஒரு சமதள ஆடியில் விழுகிறது எனில் எதிரொளிப்புக்கோணம் என்ன?
விடை:
படுகோணத்தின் மதிப்பு = 90° – 50° = 40° (∠i)
ஒளி எதிராளிப்பு விதியின்படி, படுகோணமும், எதிராளிப்புக் கோணமும் சமம்.
i = r
∠i = 40° ∠r = 40°
எனவே எதிராளிப்புக்கோணம் = 40° ஆகும்.

Question 21.
சமதள ஆடியில் இடவல மாற்றம் பற்றி நீவிர் அறிவது என்ன?
விடை:
சமதள ஆடியின் இடவல மாற்றப் பண்பின் காரணமாக ஆங்கில எழுத்து ‘b’ ஆனது d’ போன்று தெரியும்.

Question 22.
வெள்ளொளியின் நிறத்தொகுப்பை எவ்வாறு பெறலாம்?
விடை:

  • ஒரு வெள்ளொளியானது முப்பட்டகத்தின் ஒரு சமதளப் பரப்பின் வழியே செல்லும்போது, மற்றொரு சமதளப்பரப்பின் வழியே ஏழு வண்ணங்களாக பிரிகையடையும். இந்நிகழ்வு நிறப்பிரிகை ஆகும்.
  • இதில் பெறப்படும் நிறங்கள் நிறத்தொகுப்பு எனப்படும்.

Question 23.
நியூட்டன் வட்டினை வேகமாகச் சுழற்றும் போது, ஏன் அது வெண்மை நிறத்துடன் தோற்றமளிக்கிறது?
விடை:
நியூட்டன் வட்டினை அதன் மையம் வழியேச் செல்லும் அச்சினைப் பொருத்து வேகமாகச் – சுழற்றும் போது, நம் கண்ணின் ரெட்டினா வெண்மை நிறத்தை உணர்த்துகிறது.

நியூட்டன் வட்டு மூலம், வெண்மை நிறம், ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடிகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 24.
நிழல் என்றால் என்ன? நிழலை உருவாக்க தேவையான பொருள்கள் யாவை?
விடை:

  • ஒளி ஊடுருவாப் பொருளானது, ஒளியை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை. எனவே நிழல் உருவாகிறது.
  • சூரிய ஒளி, ஒளி ஊடுருவாப் பொருள், திரை ஆகியவை நிழலை உருவாக்க தேவையான பொருள்கள் ஆகும்.

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவாக விடையளி.

Question 1.
ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு என்றால் என்ன? படத்துடன் விவரி.
விடை:
ஒழுங்கான எதிரொளிப்பு :

  • எதிரொளிக்கும் பரப்பு வழவழப்பாகவும் சமதளமாகவும் இருப்பின் ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறும்.
  • ஒழுங்கான எதிராளிப்பில் படுகதிர்கள் இணைகதிர்களாகப் பரப்பின் மேல் விழுந்து இணைகதிர்களாகவே எதிரொளிக்கப்படுகின்றன.
    Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 14

ஒழுங்கற்ற எதிரொளிப்பு :

  • பரப்பு சொரசொரப்பாக இருப்பின் ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறும்
  • இந்நிகழ்வில் எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் வெவ்வேறு திசையில் செல்கின்றன.

Question 2.
ஒளிரும் மற்றும் ஒளிராமூலங்கள் இவற்றிற்கிடையான வேறுபாட்டைக்கூறுக. ஒவ்வொன்றிற்கும் ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 15

Question 3.
அன்றாட வாழ்வில் நீ காணும் ஒளியின் நேர்க்கோட்டு பண்பு நிகழ்வுகள் இரண்டினை கூறுக.
விடை:

  1. மரங்களின் கிளைகளின் வழியே சூரிய ஒளி நேராக செல்லுதல்
  2. சிமெண்ட் கிரிலின், சிறு துளைகளின் வழியே சூரிய ஒளி நேராக செல்லுதல்.
  3. லேசர் மற்றும் டார்ச் விளக்கின் ஒளி நேராக செல்லுதல்

Question 4.
எதிரொளிப்பு மற்றும் நிழல் – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 16

Question 5.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் பண்புகளைக் கூறுக.
விடை:

  1. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது.
  2. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம், மெய் பிம்பம் ஆகும்.
  3. சமதள ஆடியில் தோன்றும் பிம்பமும் பொருளும் ஒரே அளவில் இருக்கும்.
  4. சமதள ஆடியிலிருந்து, பொருள் இருக்கும் தொலைவும் பிம்பம் தோன்றும் தொலைவும் சமம்.
  5. சமதள ஆடியின் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் பெறும்.

Question 6.
பின்வரும் படங்களின் மூலம் நீவீர் அறிவது என்ன?
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 17
விடை:

  1. ஒளியானது நேர்கோட்டில் செல்லும்
  2. ஒளியானது தானே வளைந்து செல்லாது
  3. இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படும்
  4. மேற்கண்ட படத்திலிருந்து B படமானது ஒளியின் முக்கியமான இப்பண்பினை விளக்குகிறது.
  5. படம் A-வில் ஒளியானது தானாகவே வளைகிறது. இந்த பண்பு ஒளியில் நடைபெறாத நிகழ்வாகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 7.
பின்வருவனவற்றை வரையறுக்க.
i) படுகதிர்
ii) எதிரொளிப்புக் கதிர்
iii) குத்துக்கோடு
iv) படுகோணம்
விடை:

  1. படுகதிர் :
    எதிரொளிக்கும் பரப்பில் படும் ஒளிக்கதிர் படுகதிர் எனப்படும்.
  2. எதிரொளிப்புக் கதிர் :
    எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டு வரும் கதிர் எதிரொளிப்புக் கதிர் எனப்படும்.
  3. குத்துக்கோடு :
    படுபுள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு குத்துக்கோடு எனப்படும்.
  4. படுகோணம் :
    படுகதிர்க்கும் குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் படுகோணம் எனப்படும்

Question 8.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பங்களை ஊசித்துளைக் காமிரா காமிரா உருவாக்கும் பிம்பங்களோடு ஒப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 18

7th Science Guide ஒளியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கண்ணுறு ஒளியின் அலைநீள நெடுக்கம் ஆனது …………….. வரை மதிப்பு உடையது.
அ) 300 nm முதல் 600 nm வரை
ஆ) 300 nm முதல் 700 nm வரை
இ) 400 nm முதல் 700 nm வரை
ஈ) 400 nm முதல் 600 nm வரை
விடை:
இ) 400 nm முதல் 700 nm வரை

Question 2.
ஓர் அலைநீளம் கொண்ட நிறம், நம் கண்ணின் விழித்திரையை அடையும் போது நம் மூ ளை ……………… உணர்ந்து கொள்கிறது.
அ) பல நிறங்களை
ஆ) குறிப்பிட்ட நிறங்களை
இ) வெள்ளை நிறத்தை
ஈ) இவற்றில் ஒன்றுமில்லை
விடை:
ஆ) குறிப்பிட்ட நிறங்களை

Question 3.
…………………… சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.
அ) சிவப்பு
ஆ) பச்சை
இ) வெள்ளை
ஈ) மெஜந்தா
விடை:
ஈ) மெஜந்தா

Question 4.
…………………….. நிறங்களைச் சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும் போது வெள்ளை நிறம் கிடைக்கிறது.
அ) முதன்மை நிலை
ஆ) இரண்டாம் நிலை
இ) மூன்றாம் நிலை
ஈ) இவை அனைத்தும்
விடை:
அ) முதன்மை நிலை

Question 5.
கண்ணாடித்துண்டின் மேல் விழும் ஒளிக்கதிர் ………… என அழைக்கப்படுகிறது.
அ) எதிரொளிப்புக் கதிர்
ஆ) படுகதிர்
இ) படுபுள்ளி
ஈ) குத்துக்கோடு
விடை:
ஆ) படுகதிர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒளி என்பது ஆற்றலின் ஒரு வடிவம். அது நம் கண்ணின் ………….. தூண்டி பார்வையை ஏற்படுத்துகிறது.
விடை:
விழித்திரையைத்

Question 2.
முப்பட்டகம் என்பது இரண்டு சமதளப்பரப்புகளுக்கு இடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் …………. உருவாக்கப்பட்ட பொருள் ஆகும்.
விடை:
கண்ணாடி அல்லது

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 3.
நிறங்களின் தொகுப்பு என்பது ……………….. தனித்துவமான நிறங்களை ஒரு விகிதத்தில் கலந்து புதிய நிறங்களை உருவாக்குவது ஆகும்.
விடை:
இரண்டு அல்லது மூன்று

Question 4.
………….. என்ற அறிவியல் அறிஞர் ஒளி காட்சி மற்றும் ஒளியியல் தொடர்பான புரிதலுக்கு முக்கிய பங்காற்றியவர்.
விடை:
அல்-ஹசன்-ஹயத்தம்

Question 5.
எதிரொளிப்புக் கதிர்ற்கும், குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் ………… ஆகும்
விடை:
எதிரொளிப்புக் கோணம்

III. சரியா, தவறா என கண்டுபிடி (தவறாக இருப்பின் சரியான வார்த்தையை கண்டுபிடி)

Question 1.
ஒளிக்கதிர் கோடுகளை வரைவதின் மூலம் பொருளின் பிம்பத்தின் நிலையை அறியலாம்.
விடை:
சரி

Question 2.
திரையில் வீழ்த்தப்படும் பிம்பங்கள் மாய பிம்பம் என்று அழைக்கப்படுகிறது.
விளக்கம் : திரையில் வீழ்த்தப்படும் பிம்பங்கள் மெய் பிம்பம் என்று அழைக்கப்படுகிறது.
விடை:
தவறு

Question 3.
கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் நம் கண்ணின் விழித்திரையை அடையும் போது மூளையானது வெண்மையை உணர்கிறது.
விடை:
சரி

Question 4.
ஆரஞ்சு நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது, சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது
விளக்கம் : ஊதா நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது, சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது
விடை:
தவறு

Question 5.
சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று, பின் அதனைப்பூமிக்கும் பிரதிபலிக்கிறது.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 19

V. ஒப்புமை தருக.

Question 1.
முதன்மை நிறம் : ஊதா
இரண்டாம் நிறம் : ………………….
விடை:
மெஜந்தா

Question 2.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருந்தால் : சூரிய கிரகணம்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி இருந்தால் : …………….
விடை:
சந்திரகிரகணம்

Question 3.
வெப்ப ஒளி மூலங்கள் : எரியும் மெழுகுவர்த்தி
வாயுவிறக்க ஒளி மூலங்கள் : ……………………
விடை:
நியான் விளக்கு

Question 4.
ஒளிரும் பொருள் : சூரியன்
உயிரி ஒளிர்தல் : …………………….
விடை:
ஜெல்லி மீன்

VI. கூற்று மற்றும் காரணம்

Question 1.
கூற்று : தாவரங்கள் சூரிய ஒளி, காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடு மற்றும் புவியில் உள்ள நீர் ஆகியவற்றைப் மற்றும் புவியில் உள்ள நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒளிச் சேர்க்கை என்னும் நிகழ்வு மூலம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.

காரணம் : தாவரங்களின் ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு சூரிய ஒளி மிகவும் அவசியம் ஆகும்.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 2.
கூற்று : சந்திரன் ஒளியை வெளியிடுகிறது குறிப்பாக இரவில் சந்திரன் ஒளியைத் தருகிறது.
காரணம் : சந்திரன் ஓர் ஒளிரும் பொருள் ஆகும்.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Question 3.
கூற்று : பென்சிலின் நிழல் திரையில் உருவாகவில்லை.
காரணம் : நிழலின் உருவம் மற்றும் அளவு, ஒளி ஊடுருவாப் பொருளின் அளவுக்கு நேர்த்தகவில் அமையும்.
விடை:
ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

VII. பொருந்தாத ஒன்றை கண்டுபிடி

Question 1.
மின்மினிப்பூச்சி, ஜெல்லி மீன், நெருப்பு ஈ, வீட்டு ஈ
விடை:
வீட்டு ஈ
விளக்கம் : வீட்டு ஈ இயற்கையாக ஒளியை வெளியடாது.

Question 2.
எரியும் மெழுகுவர்த்தி, சுடர் ஏரி விளக்கு நியான் விளக்கு, சில ஆழ்கடல் தாவரங்கள்
விடை:
சில ஆழ்கடல் தாவரங்கள்
விளக்கம் : இவை இயற்கையாக ஒளியை வெளியிடுகின்றன.

VIII. சுருக்கமான விடையளி

Question 1.
வெப்ப ஒளி மூலங்கள் மற்றும் வாயுவிறக்க ஒளி மூலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு தருக?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 20

Question 2.
ஒளியின் சில அடிப்படைப் பண்புகள் யாவை?
விடை:

  • ஒளியின் நேர்க்கோட்டு பண்பு
  • ஒளியின் எதிரொளித்தல் பண்பு
  • ஒளியின் வேகம்
  • பொருள்களோடு ஒளியின் செயல்பாடு
  • நிறமாலை

Question 3.
சோலா கிராமி என்றால் என்ன?
விடை:

  • காமிராவின் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையாத காலத்தில், ஊசித்துளை காமிரா, சூரியனின் இயக்கத்தைப் பதிவு செய்ய பயன்பட்டது.
  • இவ்வகையான புகைப்படம் எடுக்கும் முறைக்குச் சோலா கிராமி என்று பெயர்.
  • இவை நிலையான பொருள்களைப் புகைப்படம் எடுப்பதற்கும், சூரிய கிரகணத்தை காண்பதற்கும் பயன்படுகிறது.

Question 4.
குத்துக்கோடு என்றால் என்ன?
விடை:
படுபுள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்கும் செங்குத்தாக வரையப்படும் கோடு குத்துக்கோடு எனப்படும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 5.
ஒளி எதிரொளிப்பு விதிகள் யாவை?
விடை:

  • படுகோணமும் (i), எதிராளிப்புக் கோணமும் (r) சமம் ∠i = ∠r
  • படுகதிர். குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்புக் கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.

Question 6.
ஒளிக்கதிர்களின் தொகுப்பு என்றால் என்ன?
விடை:
பொதவாக ஒளி என்பது ஒரே ஒரு கதிர் அன்று, அது பல ஒளிக்கதிர்களின் தொகுப்பு ஆகும்.

Question 7.
கிரகணம் என்றால் என்ன?
விடை:
ஒளியின் முன்னிலையில் ஏதேனும் ஒரு வானியல் பொருள் பகுதியாகவோ முழுவதுமாக மற்றொரு வானவியல் பொருளால் மறைக்கப்படும் போது கிரகணம் தோன்றுகிறது.

Question 8.
வாகனங்களின் பின்புறம் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன?
விடை:

  • சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் குறைவான அளவில் சிதறடிக்கப்படுகின்றன.
  • சிவப்பு நிறமானது மற்ற நிறங்களைவிட அதிக அலைநீளம் கொண்டது ஆகும்.
  • எனவே சிவப்பு நிறம் காற்றில் அதிக தொலைவு பயணம் செய்யும்.

Question 9.
நிறங்களின் தொகுப்பு என்பது யாது?
விடை:

  • நிறங்களின் தொகுப்பு என்பது இரண்டு அல்லது மூன்று தனித்துவமான நிறங்களை குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் கலந்து புதிய நிறங்களை உருவாக்குவது ஆகும்.
  • அவ்வகையில் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்களும் தனித்துவமான நிறங்கள் ஆகும்
  • இவை முதன்மை நிறங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

Question 10.
VIBGYOR – யின் விளக்கம் தருக?
விடை:
V – ஊதா
I – கருநீலம்
B – நீலம்
G – பச்சை
Y – மஞ்சள்
O – ஆரஞ்சு
R – சிவப்பு

IX. விரிவான விடையளி

Question 1.
கிரணங்களின் வகைகளை பற்றி விளக்குக.
விடை:
சூரிய கிரகணம் :
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 21

  • சூரியனுக்கும் புவிக்கும் இடையே சந்திரன் சுற்றி வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது.
  • சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் ஆனது, புவியின் மேல் விழுகிறது.
  • புவியில் A என்ற பகுதியில் இருப்பவர்களால் சூரியணைக் காண இயலாது.
  • இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
  • அதே போன்று புவியின் B மற்றும் C என்ற பகுதியில் இருப்பவர்களால் சூரியனைப் பகுதியாகக் காண இயலும்.

சந்திர கிரகணம் :
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 22

  • சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவியானது இருக்கும் போது எந்திர கிரகணம் நிகழ்கிறது.
  • சூரியனிடமிருந்து வரும் ஒளியை புவியானது தடுத்து வருகிறது.
  • எனவே புவியின் நிழலானது சந்திரனின் மேல் விழுகிறது.
  • இதனால் புவியிலிருப்பவர்களுக்கும் சந்திரனை முழுவதுமாகவோ பகுதியாகவோ காண இயலாது.
  • இது சந்திரகிரகணம் எனப்படும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல்

Question 2.
ஒளி இழைகளை பற்றி விரிவாக விளக்குக?
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 23

  1. ஒளி இழை என்பது முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் படி செயல்படும் ஒரு சாதனம் ஆகும்.
  2. இச்சாதனம் மூலம் ஒளி சமிக்ஞைகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் குறைவான நேரத்தில் மிகுந்த ஆற்றல் இழப்பு இல்லாமல் அனுப்ப இயலும்.
  3. இதனுள் சமிக்கைகளை அனுப்பும் வகையில் கண்ணாடி உள்ளகம் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வளையும் தன்மை கொண்ட இழைகளும் உள்ளன.
  4. ஒளி இழையினை வளைக்கலாம், மடக்காலம்.
  5. ஒளியிழையின் ஒரு முனையில் ஒளியானது விழும்போது அது கண்ணாடி உள்ளகத்தில் முழு அக எதிரொளிப்பு அடைந்து மறு முனையில் குறைந்த ஆற்றல் இழப்புடன் வெளிவருகிறது.
  6. தரவு அல்லது தகவல் ஒளியியல் துடிப்புகளாக ஒளி இழையின் மூலம் அனுப்பப்படுகிறது.
  7. ஒளி இழைகள் கேபிள் தொலைத்தொடர்பு அகன்ற அலைவரிசை தொடர்புச் சாதனங்கள் போன்ற அதிக வேக தொடர்பு அனுப்புகைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
  8. தொலை தொடர்புக்கு முன்னர் பயன்படுத்திய தாமிரக் கம்பியிலான வடத்திற்கு மாற்றாக இப்பொழுது ஒளியிழைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  9. தாமிரக் கம்பியிலான வடத்தைவிட ஒளியிழை வடத்தின் மூலம் அதிக அளவு தகவல்களை அனுப்ப முடியும்.

Question 3.
ஒளி ஊடுருவும் பொருள்கள் மற்றும் ஒளி ஊடுருவாப் பொருள்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு எழுதுக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 24

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 3 Chapter 1 ஒளியியல் 25

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

6th Science Guide அன்றாட வாழ்வில் தாவரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.
அ) வாத்து
ஆ) கிளி
இ) ஓசனிச்சிட்டு
ஈ) புறா
விடை:
இ) ஓசனிச்சிட்டு

Question 2.
இயற்கையான கொசு விரட்டி
அ) ஜாதிக்காய்
ஆ) மூங்கில்
இ) இஞ்சி
ஈ) வேம்பு
விடை:
ஈ) வேம்பு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 3.
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?
அ) உருளைக்கிழக்கு
ஆ) கேரட்
இ) முள்ளங்கி
ஈ) டர்னிப்
விடை:
அ) உருளைக்கி

Question 4.
பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது?
அ) நெல்லி
ஆ) துளசி
இ) மஞ்சள்
ஈ) சோற்று கற்றாழை
விடை:
அ) நெல்லி

Question 5.
இந்தியாவின் தேசிய மரம் எது?
அ) வேப்பமரம்
ஆ) பலா மரம்
இ) ஆலமரம்
ஈ) மாமரம்
விடை:
இ) ஆலமரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _____ ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
விடை:
16

Question 2.
______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.
விடை:
பருத்தி

Question 3.
நான் தமிழ்நாட்டின் மாநில மரம் நான் யார்? _______
விடை:
பனை

Question 4.
______ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.
விடை:
துளசி

Question 5.
அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ண க் கூடிய பருப்புகள் (அ) விதைகள் ______ எனப்படுகின்றன.
விடை:
பயிறு வகைகள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

III. சரியா? தவறா? தவறாக இருந்தால் சரியாக விடையை எழுதுக.

Question 1.
அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
தவறு. அலங்காரத் தாவரங்கள்

Question 2.
பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.
விடை:
சரி

Question 3.
அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.
விடை:
தவறு – உணவு தாவரம்.

Question 4.
கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.
விடை:
தவறு – கோடை காலத்திற்கு பருத்தி உடைகள் தான் ஏற்றவை.

Question 5.
கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது.
விடை:
தவறு – சர்க்கரை தயாரிக்க பயன்படுகிறது.

IV. பின்வருவனவற்றைப் பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 80

V. ஒப்பிடுக.

Question 1. மாம்பழம் : கனி :: மக்காச்சோளம் : _______
விடை:
தானியம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 2.
தென்னை : நார் :: ரோஜா : _____
விடை:
அத்தர்

Question 3.
தேனீக்கள் : மகரந்தச் சேர்க்கையாளர் :: மண்புழு : ______
விடை:
மண்புழு உரம் தயாரிப்பாளர்

VI. மிகக் குறுகிய விடை தருக.

Question 1.
உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை:
மனிதர்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாக விளங்கும் தாவரங்கள் உணவுத் தாவரங்கள் எனப்படுகின்றன.
(எ.கா.) காய்கறிகள் – பீட்ரூட், கேரட்
தானியங்கள் – நெல், கோதுமை
பருப்பு வகைகள் – கொண்டைக் கடலை, பச்சைப்பயிறு.

Question 2.
மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை:
நோய்களைக் குணப்படுத்த பயன்படும் தாவரங்களை மருத்துவத் தாவரங்கள் என அழைக்கிறோம்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 81

Question 3.
வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?
வன்கட்டை:
வணிக ரீதியில் பயன்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை, அடர்த்தி அடிப்படையில் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 100.1

Question 4.
நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?
விடை:
வெப்ப மண்டலத் தாவரங்களிலிருந்து பெறப்படுவதும் உணவிற்கு நறுமணமூட்டப் பயன்படும் தாவரப் பொருட்கள் நறுமணப் பொருட்கள் எனப்படுகின்றன. பெறப்படும் பொருட்கள்:
மரப்பட்டைகள், வேர்கள், இலைகள், மலர்கள் (அ) தண்டுகள் போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. பயன்க ள்:
உணவிற்கு சுவையூட்டவும் – நிறமூட்டியாகவும், உணவைக் கெடாமல் பாதுகாக்கவும் பயன்ப டுகிறது.
(எ.கா) ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருஞ்சீரகம், ஓமம், பிரியாணி இலை, கொத்தமல்லி விதைகள், இஞ்சி, ஜாதிக்காய் மற்றும் இலவங்கப் பட்டை.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 5.
நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 85

Question 6.
மரக்கட்டைகளின் பயன்கள் யாவை?
வன்கட்டை:
உயர்ரக மரச்சாமான்கள், நாற்காலிகள், மேற்கூரைகள் மற்றும் கட்டில், மேஜை, கதவு, நிலைக்கால் ஜன்னல் போன்ற மரக்கட்டுமானங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.
மென்கட்டை:
ஓட்டுப்பலகைகள், மரப்பெட்டிகள், நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் (அ) காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது.

VII. குறுகிய விடை தருக.

Question 1.
அலங்காரத் தாவரங்கள் பற்றி எழுதுக.
விடை:
அழகியல் காரணங்களுக்காக வீட்டுத் தோட்டங்களில், பூங்காக்களில், மாடித் தோட்டங்களில் வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்கார தாவரங்கள் எனப்படும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 96

Question 2.
வேப்ப மரத்தின் பயன்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 97

Question 3.
எவையேனும் ஐந்து தாவரங்களையும், அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 98

VIII. விரிவான விடை தருக.

Question 1.
மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.
விடை:
வணிக ரீதியாக பயன்படும் மரக்கட்டைகள் வலிமை, அடர்த்தி அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99

Question 2.
விலங்கு – தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.
வரையரை:
உணவு, வசிப்பிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு விலங்குகள் தாவரங்களைச் சார்ந்திருக்கின்றன. இந்தத் தொடர்பினால் விலங்குகள் மட்டுமின்றி, தாவரங்களும் பயனடைகின்றன – இவை பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.2

IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

Question 1.
பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது. இதற்கு காரணம் யாது?
விடை:

  1. நிறைய பாலைவனங்களில் 10 அங்குலத்திற்கும் குறைவான மழை அளவே ஒவ்வொரு ஆண்டும் காணப்படுகிறது.
  2. மழை அளவை விட நீராவிப் போக்கின் அளவு அதிகம்.
  3. பாலைவனங்களில் வாழும் தாவர விலங்கினங்களுக்கு மிகச் சிறிய அளவு தான் கிடைக்கிறது.
  4. மேலும் அவை நீரைச் சேமிக்கவும், வறட்சியைத் தாங்கவும் தகவமைப்புப் பெற்றுள்ளது.
    (எ.கா) கள்ளி வகை தாவரங்கள் – ஒட்டகம் போன்ற விலங்குகள்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 2.
“பனைமரம் உயரமான மரம், அதனால் அது வன்கட்டையைத் தருகிறது” என்று கவிதா கூறினார். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? எதுவாயினும் ஏன் என்பதை எழுதுக.
விடை:

  1. பனை மரங்கள் அதி உயரமான உயரமுடைய தாயிருந்தாலும் அவை மென் கட்டைகளையே உருவாக்கின்றன.
  2. வளையக்கூடிய வலுவற்றதாக இருப்பதால் இதன் கட்டைகள் மென்மையான கட்டைகள் எனப்படுகின்றன.
  3. இதன் கட்டை நார்கள் – தொப்பிகள் போன்ற பொருட்கள் செய்ய பயன்படுகிறது.
  4. ‘கஜா’ புயலில் (நவம்பர் 2018) தென்னை மரங்கள் இலட்சக்கணக்கில் வேரோடு வீழ பனை மென்கட்டைகளை உடையதால் புயலால் சேதமடையவில்லை.

Question 3.
படங்களைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

அ. பாக்டீரியாக்கள் எவ்வாறு மண் வளத்தை அதிகரிக்கின்றன?
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.1
விடை:

  1. தாவர விலங்கு கழிவுகளை மண்ணில் சிதைவடையச் செய்து வளமான மட்கிய உரத்தை உருவாக்குகிறது.
  2. வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தி மண் வளத்தை அதிகரிக்க விவசாயத்திற்கு உதவுகிறது.

ஆ. தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேனீக்கள் அவசியம் எவ்வாறு?
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.3
விடை:
தேனீக்கள் பூக்களிலுள்ள தேனை எடுத்து தேன் பெற உதவுவதோடு அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவி, தாவர இனப்பெருக்கம் நடைபெற மிக அவசியமாகிறது.

6th Science Guide அன்றாட வாழ்வில் தாவரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ஆற்றல் தருபவை.
அ) தாவரங்கள் மட்டும்
ஆ) தாவரங்கள் மற்றும் விலங்குகள்
இ) விலங்குகள் மட்டும்
ஈ) இவை எதுவுமல்ல
விடை:
அ) தாவரங்கள் மட்டும் பருவம்

Question 2.
ரவை உப்புமா எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அ) நெல்
ஆ) கோதுமை
இ) சிறு தானியம்
ஈ) சோளம்
விடை:
ஆ) கோதுமை

Question 3.
இலை நார்கள் காணப்படுவது
அ) அலோ வீரா
ஆ) அகேவ்
இ) தென்னை
ஈ) பருத்தி
விடை:
ஆ) அகேவ்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 4.
எந்த ஒரு நாட்டின் வளமும் பொதுவாக எதனைச் சார்ந்துள்ளது.
அ) கல்வி வளர்ச்சி
ஆ) விவசாய வளர்ச்சி
இ) தொழில் வளர்ச்சி
ஈ) அரசியல் வளர்ச்சி
விடை:
ஆ) விவசாய வளர்ச்சி

Question 5.
தாவரங்கள் அதன் அழகுணர்ச்சிக்காக வளர்க்கப்படுவது.
அ) நார் தாவரங்கள்
ஆ) மருத்துவத் தாவரங்கள்
இ) உணவு தாவரங்கள்
ஈ) அலங்காரத் தாவரங்கள்
விடை:
ஈ) அலங்காரத் தாவரங்கள்

II. மிகக்குறுகிய விடையளி

Question 1.
பழங்காலத்திலிருந்து மனிதர்கள் அரிசி, கேழ்வரகு, கம்பு போன்றவற்றை உணவாக பயன்படுத்தி வந்ததற்கான சான்றுகள் எங்கிருந்து பெறப்பட்டது?
விடை:

  1. பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிடைக்கப் பெற்ற தானியங்களின் எச்சங்கள் மற்றும் படிவுகள் மூலமும்.
  2. பண்டைய இலக்கியக் குறிப்புகளின் வாயிலாகவும் இதன் பயன்பாட்டினை உறுதி செய்யும் சான்றுகள் பெறப்பட்டன.

Question 2.
கயிறு எதிலிருந்து பெறப்படுகிறது?
விடை:
தென்னை , மர தண்டு, இலை பட்டைகளிலிருந்தும் இன்னும், சணல், ஆழிச் செடி போன்ற பல வகையான தாவரப் பகுதிகளிலிருந்து நார்கள் பிரித்தெடுக்கப்பட்டு கயிறுகள் திரிக்கப்படுகின்றன.

Question 3.
இந்தியாவில் சணல் பயிரிடப்படும் இடங்கள் மாநிலங்களின் பெயர் தருக.
விடை:
மேற்கு வங்காளம், அஸ்ஸாம், பீகார், உத்திரப்பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய ஏழு மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகிறது.
மேற்கு வங்காளம் – மொத்த இந்திய சணல் உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது.

Question 4.
பருத்தி தாவரம் ஏன் பணப்பயிராக பயன்படுகிறது?
விடை:

  1. பருத்தி நெசவு நார்களை தரும் (துணி செய்ய உதவும் நார்கள்) தாவரமாகும்.
  2. எனவே மனித அத்தியாவசிய தேவையான உடைகள் 80% பருத்தி மற்றும் பருத்தி சேர்க்கப்பட்ட செயற்கை இழைகளிலிருந்தே பெறப்படுகிறது.
  3. இது அதிக பயிரிடப்படுவதாலும், பயன்படுத்தப்படுவதாலும் பொருளாதார முக்கியத்துவமுடையதாலும் இது பணப்பயிராகக் கருதப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்

Question 5.
மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?
விடை:
நோய்கிருமிகளுக்கு எதிரான வேதி கூட்டுப் பொருள்களை உள்ளடக்கிய தாவரங்கள் – மருத்துவத் தாவரங்கள் எனப்படும்.

Question 6.
பின்வரும் படம் என்னவென்று காண். அதன் பயனையும் தருக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 99.5

  • கொடுக்கப்பட்ட படம் கிராம்பு எனப்படும் வாசனைப் பொருள்.
  • இது மலரின் மொட்டாகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள் 100

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 2 Chapter 6 கணினி வரைகலை Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 2 Chapter 6 கணினி வரைகலை

7th Science Guide கணினி வரைகலை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?
அ) வண்ண ம் தீட்ட
ஆ) நிரல் அமைக்க
இ) வருட
ஈ) PDF ஆக மாற்ற
விடை:
அ) வண்ண ம் தீட்ட

Question 2.
Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது?
அ) இ..ப்பக்க கருவிப் பட்டை
ஆ) வலப்பக்க கருவிப்பட்டை
இ) நடுப்பகுதி கருவிப்பட்டை
ஈ) அடிப்பகுதி கருவிப்பட்டை
விடை:
அ) இடப்பக்க கருவிப்பட்டை

Question 3.
முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?
அ) Ctrl + Z
ஆ) Ctrl + R
இ) Ctrl + Y
ஈ) Ctrl + N
விடை:
அ) Ctrl + Z

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை

Question 4.
Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?
அ) வண்ண ம் தீட்ட
ஆ) கணிதம் கற்க
இ) நிரல் பற்றி அறிய
ஈ) வரைகலையைக் கற்க
விடை:
ஆ) கணிதம் கற்க

Question 5.
Tux Maths ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?
அ) எளிய கூட்டல்
ஆ) வகுத்தல்
இ) படம் வரைதல்
ஈ) பெருக்கல்
விடை:
அ) எளிய கூட்டல்

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
Tux Paint என்றால் என்ன?
விடை:

  • Tux Paint என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இலவச ஓவியப்பயிற்சி செயலியாகும்.
  • இச்செயலியானது மகிழ்ச்சி தரும் ஒலிகளோடு, எளிமையா பயன்படுத்தும் வகையில். மாணவர்களை வழி நடத்தும், உற்சாக மூட்டும் கேலிச் சித்திரங்களோடு உருவாக்கப்பட்டது.

Question 2.
பனுவல் கருவியின் (Textool) பயன் என்ன ?
விடை:
பனுவல் கருவியைப் (Textool) பயன்படுத்தி ADC எழுத்துக்களைத் தட்டச்சு செய்யலாம்.

Question 3.
சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?
விடை:
சேமிக்கப் பயன்படும் குறுக்கு வழி விசை Ctrl + S.

Question 4.
Tux Math என்றால் என்ன?
விடை:

  • ‘Tux Math’ என்பது கணிதம் கற்பதற்கான காணொளி விளையாட்டாகும்.
  • இது ஒரு மாற்றியமைக்கக் கூடிய இலவச மென்பொருளாகும்.
  • கணக்கைச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கற்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை

Question 5.
ரேஞ்சர் விளையாட்டின் பயன் யாது?
விடை:
ரேஞ்சர் விளையாட்டின் பயன் – 10 வரத்தக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்.

7th Science Guide கணினி வரைகலை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

Question 1.
வெளியேறுதல் (Quit) குறுக்கு வழி விசை எது?
அ) Ctrl + X
ஆ) Ctrl + Y
இ) Esc
ஈ) Ctrl + Z
விடை:
இ) Esc

Question 2.
______________ படம் வரைவதற்குப் பயன்படும் திரையின் பெரும் பகுதியாகும்.
அ) கருவிப்பட்டை
ஆ) படம் வரையும் பகுதி
இ) பலவிதக்கருவிகள்
ஈ) வண்ண ங்கள்
விடை:
ஆ) படம் வரையும் பகுதி

Question 3.
Scout என்பது எதற்கு பயன்படுகிறது?
அ) 10 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்
ஆ) 100 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்
இ) 1000 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்
ஈ) மேற்கூரிய அனைத்தும்
விடை:
அ) 10 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்

Question 4.
செயல் மீட்டல் (Redo) என்பதன் குறுக்கு வழி விசை எது?
அ) Ctrl + x
ஆ) Ctrl + z
இ) Ctrl + y
ஈ) Ctrl +r
விடை:
இ) Ctrl + y

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
_____________ என்பது கணிதம் கற்பதற்கான காணொலி விளையாட்டாகும்.
விடை:
Tux Math

Question 2.
______________ கருவியைக் கொண்டு வரைந்த ஓவியத்தை அச்சு எடுக்கலாம்.
விடை:
அச்சு

Question 3.
_____________ குறுக்குவழி விசைகள் ஏற்கனவே வரைந்த ஓவியத்தினைத் திறக்கலாம்.
விடை:
Ctrl + O

Question 4.
____________ கருவியினை பயன்படுத்தி பலவகையான முத்திரைகளை அல்லது படங்களைப் பதிக்கலாம்.
விடை:
முத்திரைக் கருவி

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை

Question 5.
___________ கருவியில் பல சிறப்புக் கருவிகள் உள்ளன.
விடை:
விந்தைக்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை 1

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
விந்தைக் கருவி என்றால் என்ன?
விடை:

  • விந்தைக் கருவியில் பல சிறப்புக் கருவிகள் உள்ளன.
  • வலது பக்கத்தில் விரும்பும் விந்தை விளைவைத் தேர்ந்தெடுத்து, அதனைப் படத்தின் மீது இழுத்தோ அல்லது சொடுக்கியோ உபயோகிக்கலாம்.

Question 2.
தூரிகை (Paint Brush) என்றால் என்ன?
விடை:

  • இக்கருவியினைப் பயன்படுத்தி விரும்பும் ஓவியம் வரையலாம்.
  • வலது பக்கத்தில் உள்ள விதவிதமான தூரிகைகளைத் தேர்ந்தெடுத்து வண்ணம் தொட்டு வரையலாம்.

Question 3.
Ace விளையாட்டின் பயன் யாது?
விடை:

  • 20 வரத்தக்க வகையில் நான்கு கணிதச் செயல்பாடுகளையும் பயன்படுத்துதல்.
  • இதில் குறை எண்கள் மற்றும் விடுபட்ட எண்கள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.

Question 4.
அழிப்பான் (Eraser) பயன் யாது?
விடை:

  • இக்கருவி வண்ணத்தூரிகையை போலவே இருக்கும்.
  • இதனை இழுத்து அல்லது சொடுக்கி படங்களை அழிக்கலாம்.

Question 5.
முத்திரை கருவி (Stamp tool) பயன் யாது?
விடை:
இக்கருவியினை பயன்படுத்தி பலவகையான முத்திரைகளை அல்லது படங்களைப் பதிக்கலாம்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை 2

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்

6th Science Guide வன்பொருளும் மென்பொருளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
அ) தாய்ப்ப லகை
ஆ) SMPS
இ) RAM
ஈ) MOUSE
விடை:
ஈ) MOUSE

Question 2.
கீழ்வருவனவற்றுள் எவை சரியானது?
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
ஆ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
இ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
விடை:
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்

Question 3.
LINUX என்பது
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனிஉரிமை மென்பொருள்
இ) கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
விடை:
ஈ) கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள்

Question 4.
கீழ்வருவனவற்றுள் எவை கட்டண மற்றும் தனி உரிமை மென் பொருள்?
அ) WINDOWS
ஆ) MACOS
இ) Adobe Photoshop
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 5.
______ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) ANDROID
ஆ) Chrome
இ) Internet
ஈ) Pendrive
விடை:
அ) ANDROID

II. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் 80

III. சிறுவினா

Question 1.
வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் 81

Question 2.
இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக.
விடை:
கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயங்கு தளம் ஆகும்.
கணினி இயங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளை கொண்ட மென் பொருளை, இயக்க மென்பொருள் என்கிறோம். இயங்கு தளமின்றி கணினியைப் பயன்படுத்த முடியாது. (எ.கா.) Linux, Windows, Mac, Android.
Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் 85

Question 3.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக.
விடை:
கட்டற்ற மென்பொருட்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம்.
திற மூல மென்பொருட்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. (எ.கா.) :

  1. லினக்ஸ்,
  2. ஜியோ ஜீப்ரா

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்

6th Science Guide வன்பொருளும் மென்பொருளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
இணையதளம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே
அ) கூகுள்
ஆ) Chrome
இ) மின்ன ஞ்சல்
ஈ) Whatsapp
விடை:
இ) மின்னஞ்சல்

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானது
அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஆ) கட்டற்ற மற்றும் திறனற்ற மூல மென்பொருள்
இ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
விடை:
அ) கட்டற்ற மற்றும் திற மூல

Question 3.
______ மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனருக்கு உதவுகிறது.
அ) அமைப்பு மென்பொருள்
ஆ) இயக்க மென்பொருள்
இ) கட்டற்ற மென்பொருள்
ஈ) பயன்பாட்டு மென்பொருள்
விடை:
ஈ). பயன்பாட்டு மென்பொருள்

Question 4.
Windos என்பது
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனி உரிமை மென்பொருள்
இ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஈ) கட்டணமில்லா மற்றும் தனியுரிம மென்பொருள்
விடை:
அ) கட்டண மென்பொருள்

Question 5.
_____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) Linux
ஆ) Chrome
இ) Google
ஈ) pendrive
விடை:
ஆ) Linux

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும்

II. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் 86

III. சிறுவினா

Question 1.
மென்பொருள் எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
மென்பொருளைச் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. இயக்க மென்பொருள்
  2. பயன்பாட்டு மென்பொருள்

Question 2.
பயன்பாட்டு மென்பொருள் என்றால் என்ன?
விடை:
கணினியை நமது தேவைக்கேற்ப பயன்படுத்த உதவும் மென்பொருளே பயன்பாட்டு மென்பொருள் ஆகும். இவற்றை இயக்க மென்பொருளின் உதவியுடனே நிறுவ முடியும். இவ்வகை மென்பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனர்களுக்கு உதவுகிறது.

Question 3.
Open Source Initiative என்றால் என்ன ?
விடை:
திற மூல மென்பொருள் தயாரித்தலையும் பயன்படுத்துதலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் Open Source Initiative.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 6 வன்பொருளும் மென்பொருளும் 95

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள்

6th Science Guide கணினியின் பாகங்கள் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
உள்ளீட்டுக்கருவி அல்லாது எது?
அ) சுட்டி
ஆ) விசைப்பலகை
இ) ஒலிபெருக்கி
ஈ) விரலி
விடை:
இ) ஒலிபெருக்கி

Question 2.
மையச் செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?
அ) ஈதர்நெட் (Ethernet)
ஆ) வி.ஜி.ஏ. (VGA)
இ) எச்.டி.எம்.ஐ (HDMI)
ஈ) யு.எஸ்.பி (USB)
விடை:
இ) எச்.டி.எம்.ஐ (HDMI)

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள்

Question 3.
கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?
அ) ஒலிபெருக்கி
ஆ) சுட்டி
இ) திரையகம்
ஈ) அச்சுப்பொறி
விடை:
ஆ) சுட்டி

Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?
அ) ஊடலை
ஆ) மின்னலை
இ) வி.ஜி.ஏ. (VGA)
ஈ) யு.எஸ்.பி. (USB)
விடை:
அ) ஊடலை

Question 5.
விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.
அ) வெளியீட்டுக்கருவி
ஆ) உள்ளீட்டுக்கருவி
இ) சேமிப்புக்கருவி
ஈ) இணைப்புக்கருவி
விடை:
இ) சேமிப்புக்கருவி

II. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 40

III. குறுகிய விடையளி:

Question 1.
கணினியின் கூறுகள் யாவை?
விடை:

  1. உள்ளீட்டகம் (Input Unit)
  2. மையச்செயலகம் (CPU)
  3. வெளியீட்டகம் (Output Unit)
    Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 45

Question 2.
உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 50

Question 3.
பல்வேறு இணைப்பு வடங்களைக் கூறி, எவையேனும் மூன்றனை விளக்குக.
விடை:
இணைப்புவடங்களின் வகைகள்:

  1. Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 52 (VGA – Video Graphics Array)
  2. எச்டிஎம்ஐ (HDMI – High Definition Multimedia Interface)
  3. யுஎஸ்பி (USB – Universal Serial Bus)
  4. தரவுக்கம்பி (Data Cable)
  5. ஒலி வடம் (Audio Cable)
  6. மின் இணைப்புக்கம்பி (Power cord)
  7. ஒலி வாங்கி இணைப்புக்கம்பி (Mic Cable)
  8. ஈதர் நெட் இணைப்புக்கம்பி (Ethernet Cable)

1. யுஎஸ்பி (USB) இணைப்பு வடம்:
அச்சுப்பொறி (Printer), வருடி (Scanner), விரலி (Pen drive), சுட்டி (Mouse), விசைப்பலகை (Key Board), இணையப்படக்கருவி (Web Camera), திறன்பேசி (Smart Phone) போன்றவற்றைக் கணினியுடன் இணைக்க பயன்படுகிறது.

2. தரவுக்கம்பி (Data cable) இணைப்பு வடம் :
கணினியின் மையச்செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க தரவுக்கம்பி பயன்படுகிறது.

3. மின் இணைப்பு வடம் (Power card) :
மையச்செயலகம், கணினித்திரை, ஒலிப்பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின்இணைப்பை வழங்குகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள்

செயல்பாடு (மாணவர்களுக்கானது)

4-3-2-1 எனும் சூத்திரத்தைக் கொண்டு கணினியை இணைக்கும் செயல்பாடு
விடை:
கணினியின் பல்வேறு பாகங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலம் ஒரு கணினியானது முழுமையடைகிறது. மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4-3-2-1. எனும் சூத்திரத்தை பயன்படுத்தி கணினியின் பாகங்களை இணைக்கவும். அதாவது 4 கருவிகளான. மையச்செயலகம், கணினித்திரை, விசைப்பலகை, சுட்டி இவைகளை 3 இணைப்புக் கம்பிகளைக் கொண்டு இணைத்தல். மேலும் மையச்செயலகம் கணினித்திரை ஆகிய 2-ற்கும் மின் இணைப்பு கொடுத்து 1 முழுமையான கணினியை இயங்கு நிலைக்குக் கொண்டுவருதல்.

ஒரு முழுமையான கணினியைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான பாகங்கள். சுட்டி, விசைப்பலகை, கணினித்திரை, மையச் செயலகம் மற்றும் இவைகளை இணைப்பதற்குத் தேவையான இணைப்பு மற்றும் மின்கம்பிகள்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 95

6th Science Guide கணினியின் பாகங்கள் Additional Important Questions and Answers

I. கூடுதல் வினாக்கள்

Question 1.
சரியான விடையைத் தேர்ந்தெடு:1. கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?
அ) உள்ளீட்டகம்
ஆ) வெளியீட்டகம்
இ) சுட்டி
ஈ) மையச் செயலகம்
விடை:
இ) சுட்டி

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள்

Question 2.
கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ ஐ பயன்படுத்தலாம்.
அ) நகர்த்தும் உருளை
ஆ) இடது பொத்தான்
இ) வலது பொத்தான்
விடை:
அ) நகர்த்தும் உருளை

Question 3.
ஒலிவடம் ______ ஐ இணைக்க பயன்படுகிறது.
அ) மையச் செயலகத்துடன் கைப்பேசி
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை
இ) கணினி திரையை மையச் செயலகத்துடன்
ஈ) கணினியுடன் ஈதர்நெட்டை
விடை:
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை

Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?
அ) யு.எஸ்.பி.
ஆ) மின் இணைப்பு வடம்
இ) எச்.டி.எம்.ஐ
ஈ) அருகலை
விடை:
ஈ) அருகலை

Question 5.
நுண்கணினியை _____ என அழைக்கிறோம்.
அ) மேசைக்கணினி
ஆ) தனியாள் கணினி
இ) மடிக்கணினி
ஈ) பலகைக் கணினி
விடை:
ஆ) தனியாள் கணினி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
____, _____, விடைகள் , கணினியில் உள்ளீடு செய்வதற்கு விசைப்பலகையே ஆதாரமாகும்.
விடை:
எண்ணையும்,
எழுத்தையும்

Question 2.
கணினியின் எல்லாப்பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப் படுத்துவது _____ ஆகும்.
விடை:
கட்டுப்பாட்டகம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள்

Question 3.
கணினியில் உள்ள நினைவகத்தை _____ என பிரிக்கலாம்.
விடை:
இரண்டாக

Question 4.
தரவுகளை ______ என்ற அலகால் அளக்கலாம்.
விடை:
பிட்

Question 5.
சுட்டியை கணினியுடன் இணைக்கும் வடம் ______
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 96

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 7 கணினியின் பாகங்கள் 96.2

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

7th Science Guide வகைப்பாட்டியலின் அடிப்படைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?
அ) ஒற்றுமை
ஆ) வேறுபாடு
இ) இரண்டும்
ஈ) எதுவும் இல்லை
விடை:
இ) இரண்டும்

Question 2.
ஏறுத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை
அ) 8.7 மில்லியன்
ஆ) 8.6 மில்லியன்
இ) 8.5 மில்லியன்
ஈ) 8.8 மில்லியன்
விடை:
அ) 8.7 மில்லியன்

Question 3.
உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு
அ) வரிசை
ஆ) பேருலகம்
இ) தொகுதி
ஈ) குடும்பம்
விடை:
ஆ) பேருலகம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

Question 4.
ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
அ) அரிஸ்டாட்டில்
ஆ) லின்னேயஸ்
இ) விட்டேக்கர்
ஈ) பிளேட்டோ
விடை:
இ) விட்டேக்கர்

Question 5.
புறாவின் இருசொற் பெயர்
அ) ஹோமோ செப்பியன்
ஆ) ராட்டஸ் ராட்டஸ்
இ) மாஞ்சிபெரா இண்டிகா
ஈ) கொலம்பா லிவியா
விடை:
ஈ) கொலம்பா லிவியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………………. 1623 ல் இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார்
விடை:
காஸ்பார்டு பா ஹீன்

Question 2.
சிற்றினம் என்பது ………………… வகைப்பாட்டின் நிலை ஆகும்
விடை:
உயிரின

Question 3.
…………… பச்சையமற்ற மற்றும் ஒளிச்சேர்க்கை தன்மையற்றது.
விடை:
புஞ்சை

Question 4.
வெங்காயத்தின் இரு சொற் பெயர் …………………
விடை:
அல்லியம் சட்டைவம்

Question 5.
…………….. தந்தை , கரோலஸ் லின்னேயஸ் ஆவார்
விடை:
நவீன வகைப்பாட்டிலின்

III. சரியா அல்லது தவறா கூறு – தவறான பதிலுக்குச் சரியான பதிலைக் கொடுக்கவும்

Question 1.
உயிரினம் உருவாகுதல் மற்றும் பரிணாம முக்கியத்துவத்தை அறிய வகைப்பாட்டியல் உதவுகிறது.
விடை:
சரி

Question 2.
மீன்கள் நீரில் வாழும் முதுகெலும்புடையவை ஆகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

Question 3.
1979 ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்ட
விடை:
தவறு

Question 4.
உண்மையான உட்கரு புரோகேரியாட்டிக் செல்களில் காணப்படுகிறது.
விடை:
தவறு – உண்மையான உட்கரு யுகேரியோட்டின் செல்களில் காணப்படுகிறது.

Question 5.
விலங்கு செல்கள் செல்சுவர் பெற்றவை.
விடை:
தவறு – விலங்கு செல்கள் செல்சுவர் அற்றவை.

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 2

V. கூற்று மற்றும் காரணங்காணல் வினாக்கள்

Question 1.
கூற்று : இரு சொல் பெயர் என்பது உலகளாகிய பெயராகும். இது இரு பெயர்களைக் கொண்டது.
காரணம் : கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் முதன்முதலில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

i) கூற்று சரி, காரணமும் சரி
ii) கூற்று சரி, காரணம் தவறு
iii) கூற்று தவறு, காணரம் சரி
iv) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை:
ii) கூற்று சரி, காரணம் தவறு

Question 2.
கூற்று : அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல், தொகுத்தல் ஆகியவை வகைப்பாட்டியலில் அவசியமானவை.
காரணம் : இவை வகைப்பாட்டியலின் அடிப்படைப் படிநிலைகள்.

i) கூற்று சரி, காரணமும் சரி
ii) கூற்று சரி, காரணம் தவறு
iii) கூற்று தவறு, காரணம் சரி
iv) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
i) கூற்று சரி, காரணமும் சரி

VI. மிகக் குறுகிய விடையளி

Question 1.
வகைப்பாட்டியல் என்றால் என்ன?
விடை:
வகைப்படுத்துதல் என்பது உயிரினங்களைக் கண்டறிந்து குழக்களாகப் பிரித்தல் ஆகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

Question 2.
ஐந்துலக வகைப்பாட்டினைப் பட்டியலிடுக
விடை:

  1. மொனிரா
  2. புரோடிஸ்டா
  3. பூஞ்சை
  4. தாவர உலகம்
  5. விலங்கு உலகம்

Question 3.
இருபிளவு திறவுகோல் வரையறு?
விடை:
உயரினங்களை அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துதல் ஆகும்.

Question 4.
மொனிராவிற்கு இரண்டு உதாரணம் தருக.
விடை:

  1. பாக்டீரியா
  2. நீலப்பசும் பாசிகள்

Question 5.
இரு சொற்பெயரிடும் முறை என்பது யாது?
விடை:

  • இரு சொல் பெயரிடும் முறை என்பது உயிரினங்களுக்கு உலக அளவில் பெயரிடும் முறை ஆகும்.
  • ஒவ்வொரு உயிரினத்தையும் இரண்டு பெயர் கொண்ட பெயர்களோடு அழைப்பதை இருசொற்பெரிடும் முறை என்கிறோம்.

Question 6.
இருசொற்பெயரைக் குறிப்பிடுக.
விடை:
அ. மனிதன் – ஹோமோ சேப்பிரியன்ஸ்
ஆ. நெல் – ஒரைசா சட்டைவா

Question 7.
புரோடிஸ்டா குறித்து இரண்டு குறிப்புகள் எழுதுக.
விடை:

  • புரோட்டிஸ்டாவில் ஒரு சொல் உயிரிகளும் சில எளிய பல செல் யூகேரியயோட்டுகளும் அடங்கும்
  • தாவரவகை புரோட்டிஸ்டுகள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிப்பவை

VII. குறுகிய விடையளி

Question 1.
வகைப்பாட்டின் படிநிலைகளைப் பற்றி எழுதுக.
விடை:

  1. உலகம்
  2. தொகுதி
  3. வகுப்பு
  4. வரிசை
  5. குடும்பம்
  6. பேரினம்
  7. சிற்றினம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

Question 2.
தாவர உலகம் மற்றும் விலங்கு உலகத்தை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 3

Question 3.
ஐந்து உலக வகைப்பாட்டின் இரண்டு நிறைகளை எழுதுக.
விடை:

  1. எளிமையான உயிரினத்தில் இருந்து சிக்கலான உயிரினம் வரை படிப்படியாக பரிணாம வளர்ச்சி இடைவதை இது குறிக்கிறது.
  2. இவ்வகைப்பாட்டின் அமைப்பானது அதிகமாக அறிவியல் நீதியாகவும் மற்றும் இயற்கையின் முறைப்படியும் அமைந்துள்ளது.

VIII. விரிவான விடையளி

Question 1.
ஐந்து உலக வகைப்பாட்டின் வரைபடம் வரைக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 4

Question 2.
இருசொற் பெயரிடும் முறை குறிப்பு வரைக.
விடை:

  • காஸ்பார்டு பாஹீன் 1623 ல் உயரினங்களை இரண்டு சொல் கொண்ட பெயர்களோடு அழைப்பதை அறிமுகப்படுத்தினார்.
  • இதற்கு இருசொல் பெயரிடும் முறை என்று பெயர்.
  • இதனை 1753 ஆம் ஆண்டு கரோலஸ் லின்னேயஸ் என்பவர் செயல்படுத்தினார்.
  • இவரே நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
  • இம்முறைப்படி ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேரினப்பெயரும், இரண்டாவதாக சிற்றினப் பெயருமாக இருக்கும்.
  • ஆங்கிலத்தில் எழுதும்போது பேரினப் பெயரின் முதல் எழுத்து பெரிய எழுத்திலும் சிற்றினட் பெயரின் முதல் எழுத்து சிறிய எழுத்திலும் எழுதப்பட வேண்டும். எ.கா. வெங்காயத்தின் இருசொல் பெயர் அல்லியம் சட்டைவம்.

Question 3.
முதுகுநாணற்றவையின் வகைப்பாட்டினை அவற்றின் பொதுப்பண்புகள் மற்றம் எடுத்துக்காட்டுகளுடன் எழுது.
விடை:
புரோட்டோசோவா :
நுண்ணோக்கி மூலம் பார்க்கக்கூடிய ஒரு செல் உயிரி.
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 5
வளைத்தசைப் புழுக்கள் :
மூவடுக்கு உயிரிகள் உடல் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இருபால் உயிரிகள் எ.கா. மண்புழு

கணுக்காலிகள் :
கைட்டினால் ஆன புறச்சட்டகத்தை கொன்டுள்ளது. இணைக்கால்கள் மற்றும் இணையுறுப்புகளால் ஆனாது. ஒருபால் உயிரிகள் எ.கா நண்டு.

மெல்லுடலிகள் :
கண்டங்களற்ற உடலமைப்பு மாண்டில் கால்சியத்தினால் ஆன ஓடு காணப்படுகிறது. பால் இனப்பெருக்கம். எ.கா. நத்தை

முட்தொலிகள்:
கடலில் மட்டுமே வாழ்பவை நீர்க்குழல் மண்டலமும், குழாய் கால்களும் உணவூட்டத்திற்கும் சுவாசத்திற்கும் இடப்பெயர்ச்சிக்கும் உதவுகிறது. எ.கா.கடல் வெள்ளரி.

IX. உயர்சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

Question 1.
சாறுண்ணி, ஒட்டுண்ணி மற்றும் கூட்டுயிரி உணவூட்டம் எந்தப் பேருலகத்தில் காணப்படுகிறது? ஏன்?
விடை:

  • பூஞ்சைகள் சாறுண்ணிகளாகவும், சிதைப்பான்களாகவும் அல்லது ஒட்டுண்ணிகளாகவும் காணப்படுகிறது.
  • இவை தனக்கு தேவையான ஊட்டப் பொருள்களை உணவுப் பொருள்களின் மீது செரிமான நொதியைச் சுரந்து அவற்றைச் செரித்து உறிஞ்சுதல் மூலம் உணவாகப் பெறுகின்றன.
  • பூஞ்சைகள் கூட்டுயிரிகளாக ஒரு சில மரங்களின் வேர்களில் உள்ளது. பூஞ்சை மரங்களிலிருந்து உணவை உறிஞ்சுகின்றன. மேலும் தாது உப்புகளை உறிஞ்சி பூஞ்சை தாவரத்திற்கு கொடுக்கிறது.

X. பின்வரும் படங்களைப் பார்த்து உயிரினங்களின் உலகத்தின் பெயரை எழுதுக.

Question 1.
சில உயிரினங்களின் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உயிரினங்கள் எந்த உலகத்தைச் சார்ந்தவை என்பதை அடையாளம் கண்டு எழுதுக.
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 6
விடை:
(a) தாவரம்
(b) மொனிரா
(c) புரோடிஸ்டா
(d) விலங்கு
(e) பூஞ்சை

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

Question 2.
ப்ளாண்ட்டே மற்றும் அனிமேலியா வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 7

7th Science Guide வகைப்பாட்டியலின் அடிப்படைகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
…………………….க்கும் மேலான உயிரினங்களை அறிவியல் வல்லுநர்கள் வகைப்படுத்தி உள்ளனர்.
அ) 1 மில்லியன்
ஆ) 2 மில்லியன்
இ) 20 மில்லியன்
ஈ) 10 மில்லியன்
விடை:
ஆ) 2 மில்லியன்

Question 2.
வகைப்பாட்டின் அடிப்படை அலகு ……………… ஆகும்.
அ) பேரினம்
ஆ) குடும்பம்
இ) சிற்றினம்
ஈ) தொகுதி
விடை:
இ) சிற்றினம்

Question 3.
இருபால் உயிரிகள் காணப்படும் தொகுதி ……………………
அ) வளைத்தசைப் புழுக்கள்
ஆ) புரோட்டோசோவா
இ) கணுக்காலிகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
அ) வளைத்தசைப் புழுக்கள்

Question 4.
இருபல் அமைவு காணப்படும் வகுப்பு ………………….
அ) பாலூட்டிகள்
ஆ) பறவைகள்
இ) இருவாழ்விகள்
ஈ) ஆ மாற்றம் ஆ
விடை:
அ) பாலூட்டிகள்

Question 5.
குளிர் இரத்தப் பிராணிகளுக்கு எடுத்துக்காட்டு…………..
அ) முதலை
ஆ) மீன்கள்
இ) முதலை மற்றும் மீன்கள்
ஈ) பூனை
விடை:
இ) முதலை மற்றும் மீன்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஆல்காக்காளின் தாவர உடலானது …………….. எனப்படும்
விடை:
தாலஸ்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

Question 2.
அடியாண்டம் ………………….. க்கு எடுத்துக் காட்டு
விடை:
பெரணி

Question 3.
ஐந்து உலக வகைப்பாட்டு முறை. ………………… என்பவரால் முன்மொழியப்பட்டது
விடை:
R.H. விட்டேக்கர்

Question 4.
…………………. நவீன வகைப்பாட்டியலின் தந்தை
விடை:
கரோலஸ் லின்னேயஸ்

Question 5.
மனிதனின் அறிவியல் பெயர் ………………….
விடை:
ஹோமோ சேப்பியன்ஸ்

III. சரியா? தவறா?

Question 1.
ஃபோனிகஸ் டாக்டைலிஃபெரா பப்பாளியின் அறிவியல் பெயராகும்
விடை:
தவறு

Question 2.
பேரினம் என்பது உயிரினங்களின் மிகப்பெரிய படிநிலை ஆகும்.
விடை:
தவறு

Question 3.
வகைப்பாட்டின் மூலம் பல்வேறு புவியியல் பகுதிகளில் காணப்படும் உயிரினங்களின் தகவல்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
விடை:
சரி

Question 4.
உட்கரு அற்ற இரத்தச் சிவப்பணுக்கள் பாலூட்டிகளில் காணப்படுகிறது.
விடை:
சரி

Question 5.
குழியுடலிகள் ஒரு செல் உயிரிகளாகும்.
விடை:
தவறு

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 8

V. கூற்று மற்றம் காரணங்காணல் வினாக்கள்

Question 1.
கூற்று : அரிஸ்டாட்டில் உயிரினங்களை தாவரங்கள் அல்லது விலங்கினங்கள் எனப் பிரித்தார்.
காரணம் : அவர் ஒரு கிரேக்க தத்துவ மற்றும் சிந்தனையாளர்.

i) கூற்று சரி, காரணமும் சரி
ii) கூற்று சரி, காரணம் தவறு
iii) கூற்று தவறு, காணரம் சரி
iv) இரண்டும் தவறு
விடை:
i) கூற்று சரி, காரணமும் சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

Question 2.
கூற்று : உருளைப் புழுக்கள் உடற்கண்டங்கள் அற்றவை.
காரணம் : பெரும்பாலும் இவைகள் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.

i) கூற்று, காரணம் இரண்டும் சரி
ii) கூற்று சரி, காரணம் தவறு
iii) இரண்டும் தவறு
iv) கூற்று தவறு. காரணம் சரி
விடை:
i) கூற்று, காரணம் இரண்டும் சரி

VI. மிகக் குறுகிய வினாக்கள்

Question 1.
வகைப்பாட்டின் படிநிலைகள் என்றால் என்ன?
விடை:
வகைப்பாட்டின் பிரிவுகளை மற்ற உயிரினங்களோடு அவற்றிற்குள்ள தொடர்பினை இறங்கு வரிசையில் அமைக்கும் முறையே ஆகும்.

Question 2.
இருவாழ்விகளின் பொதுப்பண்புகள் இரண்டினை எழுதுக
விடை:

  1. குளிர் இரத்தப் பிராணிகள்
  2. பால்வழி இனப்பெருக்கம் கொள்பவை

Question 3.
பூக்கும் தாவரங்கள் அவற்றின் கனியுறுப்பைப் பொறுத்து எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
விடை:

  1. ஆஞ்சியோஸ்பெர்ம்
  2. ஜிம்னோஸ்பெர்ம்

Question 4.
ஒரு வித்திலை மற்றும் இருவித்திலைத் தாவரம் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 9

VII. குறுகிய வினாக்கள்

Question 1.
அரிஸ்டாட்டிலின் வகைப்பாட்டியல் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  • அரிஸ்டாட்டில் அனைத்து உயிரிகளையும் தாவரங்களையும் அல்லது விலங்குகள் என்று பிரித்தார்.
  • விலங்குகளை இரத்தம் உடைய மற்றும் இரத்தம் அற்ற விலங்குகள் எனப் பிரித்தார்
  • இறுதியாக இடப்பெயர்ச்சியின் அடிப்படையில் நடப்பவை, பறப்பவை, நீந்துபவை எனப் பிரித்தார்.

Question 2.
மொனிராவின் மூன்று பொதுப்பண்புகளை எழுதுக.
விடை:

  1. ஒரு செல் உயிரினங்கள்
  2. தெளிவான உட்கரு மற்றும் உட்கருச் சவ்வு இருக்காது.
  3. தற்சார்பு மற்றம் பிறசார்பு ஊட்ட முறை உடையவை.

Question 3.
ஐந்துலக வகைப்பாட்டின் குறைகளை எழுதுக.
விடை:

  • பல செல் உயிரினங்கள் புரோட்டிஸ்கெளில் இருந்து பலமுறை தோற்றுவிக்கப்படுகிறது.
  • அடிமட்ட உயிரினங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை .
  • வைரஸ்களுக்கு முறையான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

Question 4.
வட்டார மொழிப்பெயர் என்றால் என்ன?
விடை:
வட்டார மொழிப் பெயர் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் அறியப்படும் ஒரு உள்ளூர் பெயராகும்.

VIII. விரிவான விடையளி

Question 1.
ஆஞ்சியோஸ்பெர்மகளைப் பற்றி நீவிர் அறிவன யாவை?
விடை:

  1. தாவர உடலானது உண்மையான வேர் தண்டு மற்றும் இலைகள் என வேறுபாடு அடைந்து காணப்படுகிறது.
  2. புல்லி, வட்டம், அல்லி வட்டம், மகரந்தத்தான் வட்டம் மற்றும் சூலக வட்டம் என நான்கு அடுக்குகளைக் கொண்ட மலர்கள் உருவாவதால் பூக்கும் தாவரங்கள் எனப்படுகின்றன.
  3. சூலகம் தனியாகவும் சூல்கள் விதையாகவும் மாறுகின்றன
  4. வாஸ்குலார் திசுவான சைலம், சைலக் குழாய்களையும் மற்றும் புளோயம் துணை செல்களையும் கொண்டுள்ளன.

Question 2.
ஐந்துலக் வகைப்பாட்டின் நிறைகளை விவரி.
விடை:

  1. இவ்வகைப்பாட்டின் அமைப்பானது அதிகமாக அறிவியல் நீதியாகவும் இயற்கையின் முறைப்படியும் அமைந்துள்ளது.
  2. செல் அமைப்பு. உணவு ஊட்டமுறை மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பநிலையின் பண்புகளைத் தெளிவாக குறிக்கின்றது.
  3. மரபு வழியில் உயிரினங்கள் வகைப்படுத்தப்படுவதால் இது மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவீன வகைப்பாட்டு முறையாகும்.
  4. எளிய உயிரினத்தில் இருந்து சிக்கலான உயிரினம் வரை படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைவதை இது குறிக்கிறது.

Question 3.
வகைப்பாட்டின் அவசியத்தை பட்டியலிடுக.
விடை:

  • உயிரினங்களை சரியாக இனம் கண்டறிய பயன்படுகிறது
  • ஓர் உயிரினத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியினைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.
  • பல்வேறுபட்ட உயிரினங்களுக்கு இடையிலான தொடர்பினை உறுதி செய்ய உதவுகிறது.
  • பல்வேறு புவியியல் பகுதிகளில் காணப்படும் உயிரினங்களின் தகவல்களைப்பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
  • எளிமையான உயிரினங்களில் இருந்து சிக்கலான உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பதைப்பற்றி புரிந்து கொள் உதவுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 10
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் 11

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

6th Science Guide மனித உறுப்பு மண்டலங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருட்கள் _______
அ) ஆக்சிஜன்
ஆ) சத்துப் பொருட்கள்
இ) ஹார்மோன்கள்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 2.
மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு ______
அ) இரைப்பை
ஆ) மண்ணீ ரல்
இ) இதயம்
ஈ) நுரையீரல்கள்
விடை:
ஈ) நுரையீரல்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

Question 3.
நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது. அ) தசைச் சுருக்கம்
ஆ) சுவாசம்
இ) செரிமானம்
ஈ) கழிவுநீக்கம்
விடை:
இ) செரிமானம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
ஒரு குழுவான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குவது _____ மண்டலம் ஆகும்.
விடை:
உறுப்பு

Question 2.
மனித மூளையை பாதுகாக்கும் எலும்புச் சட்டகத்தின் பெயர் _____ ஆகும்.
விடை:
மண்டையோடு

Question 3.
மனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு ______ என்று பெயர்.
விடை:
கழிவு நீக்கம்

Question 4.
மனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு _____ ஆகும்.
விடை:
தோல்

Question 5.
நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்ற வேதிப்பொருட்களுக்கு ______ என்று பெயர்.
விடை:
ஹார்மோன்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
இரத்தம் எலும்புகளில் உருவாகின்றது.
விடை:
தவறு – இரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றது.

Question 2.
இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.
விடை:
தவறு – இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை கடத்துகிறது.

Question 3.
உணவுக் குழலுக்கு இன்னொரு பெயர் உணவுப்பாதை.
விடை:
தவறு – உணவுக் குழாயின் இன்னொரு பெயர் உணவுப் பாதை.

Question 4.
இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச்சிறிய நுண்குழலுக்கு இரத்தக் குழாய்கள் என்று பெயர்.
விடை:
சரி

Question 5.
மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்.
விடை:
சரி.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 80

V. கீழுள்ளவற்றை முறைப்படுத்தி எழுதுக.

Question 1.
இரைப்பை → பெருங்குடல் → உணவுக்குழல் → தொண்டை → வாய் → சிறுகுடல் → மலக்குடல் → மலவாய்
விடை:
வாய் → தொண்டை → உணவுக்குழல் → இரைப்பை → சிறுகுடல் → பெருங்குடல் → மலக்குடல் → மலவாய்

Question 2.
சிறுநீர்ப் புறவழி → சிறுநீர்நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீரகம்
விடை:
சிறுநீரகம் → சிறுநீர் நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீர்ப் புறவழி

VI. ஒப்புமை தருக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 85

VII. மிகக் குறுகிய விடையளி :

Question 1.
எலும்பு மண்டலம் என்றால் என்ன ?
விடை:

  1. எலும்பு மண்டலமானது எலும்புகள், குருத்தெலும்புகள் மற்றும் மூட்டுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
  2. தசைகள் இணைக்கப்படுவதற்கு ஏற்ற பகுதியாக திகழ்கின்றது.
  3. நடத்தல், ஓடுதல், மெல்லுதல் போன்ற செயல்களுக்கு இது உதவுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

Question 2.
எபிகிளாட்டிஸ் என்றால் என்ன?
விடை:
மூச்சுக்குழலின் மேற்பகுதியிலுள்ள குரல்வளை மூடி (எப்பி கிளாட்டிஸ் என்ற அமைப்பு சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதை தடுக்கிறது.

Question 3.
மூவகையான இரத்தக்குழாய்களின் பெயர்களை எழுதுக.
விடை:
தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் ஆகும்.

Question 4.
விளக்குக – மூச்சுக்குழல்
விடை:

  1. பொதுவாக காற்றுக் குழாய் என்றழைக்கப்படும் மூச்சுக் குழலானது குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்பட்டுள்ளது.
  2. இது குரல்வளை மற்றும் தொண்டையை நுரையீரல்களுடன் இணைத்து காற்று செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

Question 5.
செரிமான மண்டலத்தின் ஏதேனும் இரண்டு பணிகளை எழுதுக.
விடை:

  1. சிக்கலான உணவுப் பொருட்களை எளிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது.
  2. செரிக்கப்பட்ட உணவை உட்கிரகித்தல் போன்ற செயல்களைச் செய்கிறது.

Question 6.
கண்ணின் முக்கிய பாகங்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  1. கண் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
  2. அவை கார்னியா, ஐரிஸ் மற்றும் கண்மணி (பியூப்பில்)

Question 7.
முக்கியமான ஐந்து உணர் உறுப்புக்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  1. கண்கள்
  2. செவிகள்
  3. மூக்கு
  4. நாக்கு
  5. தோல்

VIII. குறுகிய விடையளி:

Question 1.
விலா எலும்புக்கூடு பற்றி சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  1. விலா எலும்புக்கூடு 12 இணைகள் கொண்ட வளைந்த தட்டையான விலா எலும்புகளைக் கொண்டுள்ளது.
  2. இது மென்மையான இதயம், நுரையீரல் போன்ற இன்றியமையாத உடல் உறுப்புகளைப் பாதுகாக்கின்றன.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

Question 2.
மனித எலும்பு மண்டலத்தின் பணிகளை எழுதுக.
விடை:

  1. எலும்பு . மண்டலம் உடலுக்கு வடிவம் கொடுக்கிறது.
  2. தசைகள் இணைக்கப்படுவதற்கு ஏற்ற பகுதியாக எலும்புகள் திகழ்கின்றன.
  3. நடத்தல், ஓடுதல், மெல்லுதல் போன்ற செயல்களுக்கு எலும்பு மண்டலம் உதவுகிறது.
  4. உடலில் உள்ள மிருதுவான உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது.

Question 3.
கட்டுப்படாத இயங்கு தசைக்கும் கட்டுபாட்டில் இயங்கும் தசைக்குமுள்ள வேறுபாட்டை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 86
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 87

IX. விரிவான விடையளி

Question 1.
நாளமில்லா சுரப்பி மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தின் பணிகளை பட்டியலிடுக.
விடை:
நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் பணிகள் :

  1. உடலின் பல்வேறு செயல்களை ஒழுங்குபடுத்தி இது நமது உடலின் உட்புற சூழலைப் பராமரிக்கின்றது.
  2. திசுக்களுக்கு “ஹார்மோன்கள்” எனப்படும் வேதித் தூதுவர் மூலம் செய்தி அனுப்பி செயல்களைக் கட்டுப்படுத்துகிறது. (எ.கா.) வளர்ச்சி ஹார்மோன் – வளர்ச்சியை தூண்டுகிறது. அட்ரீனலின் ஹார்மோன் – கோபம், பயம் போன்ற நேரங்களில் செயல்படுகிறது.

நரம்பு மண்டலத்தின் பணிகள் :

  1. உணர்ச்சி, உள்ளீடு : உணர் உறுப்புகளிலிருந்து சமிக்ஞை கடத்தப்படுதல்
  2. ஒருங்கிணைப்பு : உணர்ச்சி சமிக்ஞைகளை ஒருங்கிணைந்து வெளிப்பாடுகளை உருவாக்குதல் மற்றும் பதில்களை உருவாக்குதல்.
  3. ஒருவர் வாழ்நாளில் மூளையில் 100 மில்லியனுக்கும் அதிகமான தகவல்கள் சேமித்து வைக்க முடியும்.
  4. செயல் வெளிப்பாடு : மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளை செயல்படும் உறுப்புகளாகிய தசை மற்றும் சுரப்பி செல்களுக்குக் கடத்துதல்.

Question 2.
கீழ்கண்ட மனித கழிவு நீக்க மண்டலத்தில் முக்கியமான நான்கு பாகங்களை எழுதுக. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.
அ. மேற்கண்ட கழிவு நீக்க மண்டலத்தில் எந்த பாகம் இரத்தத்திலுள்ள அதிக உப்பு மற்றும் நீரை நீக்குகிறது.
ஆ. சிறுநீர் எங்கு சேமிக்கப்படுகிறது?
இ. மனித உடலிலிருந்து சிறுநீர் எந்தக் குழல் வழியாக வெளியேற்றப்படுகிறது?
ஈ. சிறு நீரகத்திலுள்ள சிறுநீரை எந்தக் குழல் சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்கிறது?
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 88
விடை:
அ. சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகு நெப்ரான்களாகும். சிறுநீர்ப்பை இவை இரத்தத்திலுள்ள அதிக உப்பு மற்றும் நீரை நீக்குகிறது.
சிறுநீர்ப் புறவழி
ஆ. சிறுநீர் சிறுநீர்ப்பையில் சேமிக்கப்படுகிறது.
இ. சிறுநீர்ப் புறவழி எனப்படும் யூரித்ரா சிறுநீரை வெளி யேற்றுகிறது.
ஈ. சிறுநீர்க்குழாய் சிறுநீரை சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்கிறது.

X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

Question 1.
உதரவிதானத்தில் அசைவுகள் இல்லையெனில் என்ன நடக்கும்?
விடை:

  1. சுவாசத்தில் பங்கு கொள்ளும் ஒரு முக்கியமான தசை உதரவிதானம் ஆகும்.
  2. உதரவிதானம் சுருங்கி விரியும் தன்மையால் நுரையீரல் விரிவடைந்து ஒரு வெற்றிடம் உருவாகிறது.
  3. இதனால் காற்று உள்ளிழுக்கப்படுகிறது.
  4. உதரவிதானம் ஏதேனும் காரணத்தால் செயல்படாவிட்டால் சுவாசம் நடைபெற முடியாது.
  5. இதனால் மனிதன் இறக்க நேரிடும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள்

Question 2.
இதயத்தின் இரு பாகங்கள் தடித்த தசைச்சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன. ஏன்?
விடை:

  1. இதயத்தின் வென்ட்ரிகுலார் சுவர்கள் ஆரிக்கிள் சுவர்களை விட தடித்துக் காணப்படுகின்றன.
  2. இடது வென்ட்ரிக்களின் சுவர்கள் வலது வென்ட்ரிக்கிள் சுவர்களை விட தடித்துக் காணப்படும்.
  3. ஏனெனில் இரத்தம் மகா தமனி அல்லது பெருந்தமனிக்குள் செலுத்தப்பட அதிக விசை தேவைப்படுகிறது.
  4. எனவே வென்ட்ரிக்கிள் சுவர்கள் தடித்துக் காணப்படுகிறது.

Question 3.
கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பது ஏன்?
விடை:

  1. வியர்வை சுரத்தல் அல்லது வியர்த்தல் என்பது நம் உடலின் வெப்ப நிலையை ஒரே சீராக வைத்திருக்க உதவும் ஒரு முக்கியச் செயலாகும்.
  2. கோடை காலங்களில் வெப்பம் அதிகமாகும் போது நமது உடலில் வியர்த்தல் ஏற்படுகிறது.
  3. அந்த வியர்வை அதிக வெப்பத்தை எடுத்து ஆவியாகி உடலை குளிர்விக்கிறது. இதனால் உடல் வெப்பநிலை உயராமல் சீராக்கப்படுகிறது.

Question 4.
உணவை விழுங்கும் போது சில சமயங்களில் விக்கல் மற்றும் இருமல் ஏற்படுவது ஏன்?
விடை:
காரணங்கள் :

  1. வேகமாக சாப்பிடுவதாலும் உணவுடன் அதிக அளவு காற்று சேர்த்து விழுங்கப்படுவதாலும்.
  2. அதிக கொழுப்பு சத்துள்ள மற்றும் வாசனைப் பொருட்கள் உள்ள உணவு சேர்த்துக் கொள்ளப்படுவதாலும்.’
  3. அதிக அளவு கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் அல்லது ஆல்கஹால், குடிக்கும் பொழுது இரைப்பை விரிவடைந்து, உதரவிதானத்தை உரசுவதால் விக்கல் மற்றும் இருமல் ஏற்படுகிறது.

6th Science Guide மனித உறுப்பு மண்டலங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
பிறந்த குழந்தைகள் _____ எலும்புகள் கொண்டுள்ளன.
அ) 206
ஆ) 200க்கும் மேற்பட்ட
இ) 300க்கும் அதிகமான
ஈ) 210
விடை:
இ) 300க்கும் அதிகமான

Question 2.
மனிதர்களின் முகத்திலேயே _____ தான் மிகப் பெரியது மற்றும் உறுதியானது.
அ) ஹயாய்டு எலும்பு
ஆ) அங்கவடி எலும்பு
இ) மண்டை ஓட்டு எலும்பு,
ஈ) கீழ்த்தாடை எலும்பு
விடை:
ஈ) கீழ்த்தாடை எலும்பு

Question 3.
இதயத்தின் சுவர் _____ ஆனது
அ) மென்தசைகள்
ஆ) இதயத்தசை
இ) எலும்புத்தசைகள்
ஈ) இருதலைத்தசை
விடை:
ஆ) இதயத்தசை

Question 4.
இதயம் இரு சுவர்களைக் கொண்ட எந்த உறையினால் சூழப்பட்டுள்ளது?
அ) புளூரா
ஆ) நுண்காற்றுப்பை சுவர்
இ) பெரிகார்டியம்
ஈ) ஐரிஸ்
விடை:
இ) பெரிகார்டியம்

Question 5.
மூச்சுக்கிளைக்குழல் பல நுண் குழல்களாகப் பிரிந்து இவற்றில் முடிவடைகின்றன?
அ) செரிப்ரம்
ஆ) தைமஸ்
இ) நுண்காற்றுப்பைகள்
ஈ) செவிமடல்
விடை:
இ) நுண்காற்றுப்பைகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
மனிதனின் எலும்பு மண்டலம் 206 எலும்புகள், சில _____, _______, ______ ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
விடை:
குறுத்தெலும்புகள், இணைப்பு இழைகள், தசைநார்கள்

Question 2.
மூளை மூன்று உறைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகிறது அவற்றிற்கு _____ என்று பெயர்.
விடை:
மூளை உறைகள்.

Question 3.
நாம் நடக்கும் போதும் ஓடும் போதும் மலையில் ஏறும்போதும் _____ நமது உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன.
விடை:
செவிகள்

Question 4.
மார்புக் கூட்டில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா சுரப்பி ______
விடை:
தைமஸ்

Question 5.
ஆக்ஸிஜன் மற்றும் யூரியா உள்ள இரத்தத்தினை சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்வது _____
விடை:
சிறுநீரகத்தமனி

Question 6.
______ மூளையை உடலில் உள்ள பல்வேறு பாகங்களோடு நரம்புகளினால் இணைக்கக் கூடியது.
விடை:
தண்டுவடம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 90

IV. மிகக்குறுகிய விடையளி

Question 1.
எலும்பு மண்டலத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?
விடை:

  1. அச்சுச் சட்டகம்
  2. இணையுறுப்புச் சட்டகம்

Question 2.
செவி சிற்றெலும்புகளின் பெயர்களைக் கூறுக?
விடை:

  1. சுத்தி எலும்பு
  2. பட்டடை எலும்பு
  3. அங்கவடி எலும்பு

Question 3.
நமது உடலில் உள்ள மிக நீளமான எலும்பு எது?
விடை:
தொடை எலும்பு.

Question 4.
இதயத்தை உருவாக்கும் தசைகள் யாவை?
விடை:
இதயத்தசை

Question 5.
உணவுக் குழாயின் நீளம் என்ன?
விடை:
உணவுக்குழாய் சுமார் 9 மீட்டர் நீளமுடையது.

V. விரிவான விடையளி

Question 1.
அ) தசைகள் எவ்வாறு இயங்குகிறது?
ஆ) இரத்த ஓட்ட மண்டலம் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
விடை:
அ) தசைகள் இயங்கும் விதம் :

  1. தசைகளால் தள்ள இயலாது. இழுத்துக் கொள்ள மட்டுமே இயலும்.
  2. மூட்டுக்களில் எலும்புகளில் அசைவிக்க இரு தசைகள் தேவைப்படுகிறது.
  3. ஒரு தசை சுருங்கும் பொழுது மற்றொன்று விரிவடைகிறது.
  4. எ.கா. முன்னங்கையை மேலும் கீழும் அசைவிக்க இருதலைத் தசை, முத்தலைத் தசை என இருவகைத் தசைகள் தேவைப்படுகின்றன.
  5. முன்னங்கையை தூக்கி உயர்த்தும் பொழுது இருதலைத்தசை சுருங்கி சிறியதாகிறது அதே சமயம் முத்தலைத் தசை விரிந்து கையை மேலே உயர்த்த உதவுகிறது.
  6. முன்னங்கையை கீழிறக்கும் பொழுது முத்தலைத் தசை சுருங்கி இருதலைத்தசை விரிவடைந்து கையை கீழே இறக்க உதவுகிறது.

ஆ. மனிதனில் இரத்த ஓட்ட மண்டலத்தின் முக்கியத்துவம்

  1. மனித இரத்த ஓட்ட மண்டலம் இதயம், இரத்தக்குழாய்கள், இரத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  2. இது நமது உடலில் உள்ள சுவாச வாயுக்கள், உணவுச் சத்துப் பொருட்கள், ஹார்மோன்கள், கழிவுப் பொருள்கள் போன்றவற்றைக் கடத்துகிறது.
  3. இது தீங்கு விளைவிக்கக்கூடிய நோய்க் கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றது.
  4. உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைக்கவும் உதவி செய்கின்றது.
  5. நமது இதயம் நம்முடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இரத்தத்தை உந்தி அனுப்புகிறது.

Question 2.
தமனியை சிரையினின்று வேறுபடுத்தி அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 96

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 6 மனித உறுப்பு மண்டலங்கள் 97

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 5 செல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 5 செல்

6th Science Guide செல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு
அ) சென்டி மீட்டர்
ஆ) மில்லி மீட்டர்
இ) மைக்ரோ மீட்டர்
ஈ) மீட்டர்
விடை:
இ) மைக்ரோ மீட்டர்

Question 2.
நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.
அ) தாவர செல்
ஆ) விலங்கு செல்
இ) நரம்பு செல்
ஈ) மீட்டர்
விடை:
அ) தாவர செல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 3.
யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது.
அ) செல் சுவர்
ஆ) நியூக்ளியஸ்
இ) நுண்குமிழ்கள்
ஈ) பசுங்கணிகம்
விடை:
ஆ) நியூக்ளியஸ்

Question 4.
கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
அ) ஈஸ்ட்
ஆ) அமீபா
இ) ஸ்பைரோ கைரா
ஈ) பாக்டீரியா
விடை:
இ) ஸ்பைரோகைரா

Question 5.
யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்.
அ) செல்சுவர்
ஆ) சைட்டோபிளாசம்
இ) உட்கரு (நியூக்ளியஸ்)
ஈ) நுண்குமிழ்கள்
விடை:
ஆ) சைட்டோபிளாசம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
செல்களைக் காண உதவும் உபகரணம் ______
விடை:
மைக்ரோஸ்கோப் (அ)
நுண்ணோக்கி

Question 2.
நான் செல்லில் உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறேன் நான் யார்? ______
விடை:
பசுங்கணிகம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 3.
நான் ஒரு காவல்காரன் நான் செல்லினுள் யாரையும், உள்ளேயும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்?____
விடை:
செல் சவ்வ

Question 4.
செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _____
விடை:
ராபர்ட் ஹூக்

Question 5.
நெருப்புக் கோழியின் முட்டை ____ தனி செல் ஆகும்.
விடை:
மிகப் பெரிய

III. சரியா? (அ) தவறா? என கூறுக. தவறாக இருப்பின் சரியான விடையை எழுதவும்.

Question 1.
உயிரினங்களின் மிகச் சிறிய அலகு’ செல்.
விடை:
சரி

Question 2.
மிக நீளமான செல் நரம்பு செல்.
விடை:
சரி

Question 3.
பூமியில் முதன் முதலாக உருவான செல் புரோகோயோட்டிக் செல் ஆகும்.
விடை:
சரி

Question 4.
தாவரத்திலும், விலங்கிலும் உள்ள நுண்ணுறுப்புகள், செல்களால் ஆனவை.
விடை:
தவறு
சரியான விடை : நுண்ணுறுப்புகள் – செல்லினுள் காணப்படுகின்றன.

Question 5.
ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து தான் புதிய செல் உருவாகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 60

V. சரியான முறையில் வரிசைப்படுத்துக்

Question 1.
யானை, பசு, பாக்டீரியா, மாமரம், ரோஜாச் செடி
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 61

Question 2.
கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை, பூச்சிகளின் முட்டை.
விடை:
பூச்சிகளின் முட்டை, கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை.

VI. ஒப்புமை தருக.

Question 1. புரோகேரியோட்: பாக்டீரியா :: யூகேரியோட் : _____
விடை:
தாவர செல்கள் / விலங்கு செல்கள்

Question 2.
ஸ்பைரோகைரா: தாவர செல்:: அமீபா : _____
விடை:
விலங்கு செல்

Question 3.
உணவு உற்பத்தியாளர்: பசுங்கணிகம் :: ஆற்றல் மையம் : _____
விடை:
மைட்டோகான்டிரியா

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
1665 ஆம் ஆண்டு செல்லைக் கண்டறிந்தவர் யார்?
விடை:
ஆங்கில அறிவியலாளர் ராபர்ட் ஹீக் , 1665 ஆம் ஆண்டு மெல்லிய கார்க் (மரத் தக்கை) கை நுண்ணோக்கியைக் கொண்டு கண்டபோது செல்களைக் கண்டறிந்தார்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 2.
நம்மிடம் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்த செல்கள்?
விடை:
யூகேரியாட்டிக் வகை செல்கள் ஆகும்.

Question 3.
செல்லின் முக்கிய கூறுகள் யாவை?
விடை:

  1. செல்லைச் சுற்றிக் காணப்படும் வெளி உறையான செல்சவ்வு
  2. திரவநிலை சைட்டோபிளாசம்
  3. உட்கரு

Question 4.
தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்புகள் எது?
விடை:

  1. செல் சுவர்
  2. பசுங்கணிகம்

Question 5.
யூகேரியாட்டிக் செல்லிற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக?
விடை:

  1. தாவர செல்கள்
  2. விலங்கு செல்கள்
  3. பெரும்பான்மையான பூஞ்சைகள் மற்றும் ஆல்காக்கள்

Question 6.
நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?
விடை:
சைட்டோபிளாசம் நகரும் மையப்பகுதியாகும்.

Question 7.
சிவா “சிறிய வெங்காயத்தை பெரிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது, பெரிய வெங்காயம் பெரிய செல்களைக் கொண்டுள்ளன” என்கிறான். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? ஏன்?
விடை:
மறுக்கிறேன் – ஏனெனில் செல்லின் அளவிற்கும், உயிரினத்தின் அளவிற்கும் தொடர்பு இல்லை.
(எ.கா) சுண்டெலியின் செல்லைவிட யானையின் செல் பெரியதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவ்வாறே சிறிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது பெரிய வெங்காய செல்கள் பெரிதாக இருப்பதில்லை.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

VIII. குறுகிய விடையளி:

Question 1.
உயிரினங்களைக் கட்ட உதவும், கட்டுமானம் – செல் எனப்படுகிறது ஏன்?
விடை:

  • ஒரு செங்கல் கட்டிடத்தின் அடிப்படை அலகாக இருப்பது போலவே, ஒரு செல் மனித, விலங்கு, தாவர உடலின் அடிப்படை அலகாக உள்ளது.
  • எனவே உயிரினங்களைக் கட்ட உதவும், கட்டுமானம் செல் எனப்படுகிறது.

Question 2.
பின்வரும் தாவர செல்லில் ஏதேனும் நான்கு பாகங்களைக் குறி :
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 80

Question 3.
புரோகேரியாட்டிக், யூகேரியாட்டிக் செல்கள் – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 85

Question 4.
நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 86

  • சென்டிரியோல் – தாவர செல்லில் காணப்படாது
  • செல்சுவர், பசுங்கணிகம் – விலங்கு செல்லில் காணப்படாது.

Question 5.
செல் உயிரியலில் இராபர்ட் ஹூக்கின் பங்களிப்பு பற்றி விளக்குக.
இராபர்ட் ஹூக் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்.
விடை:

  • அவர் அக்கால நுண்ணோக்கியை மேம்படுத்தி, கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்.
  • அவர் நீர் லென்சைக் கொண்டு நுண்ணோக்கியின் கீழ் வைக்கப்பட்ட பொருளை கண்டறிந்தார்.
  • மரத்தக்கையின் சிறிய மெல்லிய பகுதியை, நுண்ணோக்கியிலிருந்து பார்த்து செல்களைக் கண்டறிந்தார்.
  • அதனடிப்படையில் 1665 ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலில் ‘செல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
  • செல்லைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு செல் உயிரியல் எனப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

IX. விரிவான விடையளி :

Question 1.
எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 90

Question 2.
புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களை குறி.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 91

X. செயல் திட்டம் (மாணவர்களுக்கானது)

1. உங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி உங்களால் தாவர செல்லின் முப்பரிமாண படத்தை வரைக.
2. ஜெல்லி, கேக் போன்ற உணவு பொருட்களைப் பயன்படுத்தி செல்லை உருவாக்குக. அச்செல்லின் நுண்ணுறுப்புகளைக் குறிக்க கொட்டைகள் உலர் பழங்கள் போன்றவற்றை பயன்படுத்துக. இந்த மாதிரியை உங்கள் வகுப்பறையில் காட்சிப் பொருளாக வைத்து ஆசிரியர்களையும் மற்ற வகுப்பு மாணவர்களையும் அழைத்து அதைப் பார்க்கச் செய்க. அதைப் பற்றி அவர்களைக் கேள்விகள் கேட்கச் சொல்லி அதற்குரிய பதில்களை நீங்கள் கூறுங்கள்.

6th Science Guide செல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
இப்புவியில் முதல் முதலில் உருவான செல்.
அ) யூகேரியாட்டிக் செல்
ஆ) ஆல்காக்களின் செல்
இ) பூஞ்சைகளின் செல்
ஈ) புரோகேரியாட்டிக் செல்
விடை:
ஈ) புரோகேரியாட்டிக் செல்

Question 2.
எஸ்ஸெரிச்சியா கோலை பாக்டீரியாவின் வாழிடம்.
அ) மண் வாழும் பாக்டீரியா
ஆ) மனித சிறுகுடலில் வாழும் பாக்டீரியா
இ) நீர் வாழும் பாக்டீரியா
ஈ) வாயு மண்டலத்தில் காணப்படும் பாக்டீரியா
விடை:
ஆ) மனித சிறுகுடலில் வாழும் பாக்டீரியா

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 3.
இவை ஒளியை ஈர்க்க பயன்படும் நிறமி.
அ) பச்சையம்
ஆ) பசுங்க ணிகம்
இ) குரோமோபிளாஸ்ட்
ஈ) லூகோ பிளாஸ்ட்
விடை:
அ) பச்சையம்

Question 4.
கோழி முட்டையின் மையத்திலுள்ள மஞ்சள் நிறப்பகுதி.
அ) சைட்டோபிளாசம்
ஆ) செல் உறை
இ) சேமிப்பு உணவு
ஈ) உட்கரு
விடை:
ஈ) உட்கரு

II. உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம்:

Question 1.
உறுதிப்படுத்துதல் (A) : பசுங்கணிகம் ஒரு செல் நுண்ணுறுப்பு
காரணம் (R) : நுண்ணுறுப்பு என்பது தனிப்பட்ட அமைப்பு, பணி செய்யும் செல்லின் தனிப் பகுதி.
அ) உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானது. R- Aஐ சரியாக விளக்குகிறது.
ஆ) A மற்றும் R சரியானது ஆனால் R – Aஐ சரியாக விளக்கவில்லை.
இ) A சரியானது ஆனால் R தவறானது.
ஈ) A தவறு ஆனால் R சரியானது.
விடை:
அ) உறுதிப்படுத்துதல் – A மற்றும் காரணம் R சரியானது. R – Aஐ சரியாக விளக்குகிறது.

Question 2.
உறுதிப்படுத்துதல் (A) : மைட்டோகாண்டிரியா செல்லின் முக்கிய நுண்ணுறுப்பு ஆகும்.
காரணம் (R) : மைட்டோகாண்டிரியா உணவு தயாரித்தலில் ஈடுபடுகிறது.
அ) உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானது. R- Aஐ சரியாக விளக்குகிறது.
ஆ) A மற்றும் R சரியானது ஆனால் R – Aஐ சரியாக விளக்கவில்லை.
இ) A சரியானது ஆனால் R தவறானது.
ஈ) A தவறு ஆனால் R சரியானது.
விடை:
இ) A சரியானது ஆனால் R தவறானது.

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 95

IV. மிகக் குறுகிய விடையளி

Question 1.
பின்வரும் செல்களை அவற்றின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
அ) பாக்டீரிய செல்
ஆ) தவளையின் முட்டை
இ) கோழியின் முட்டை
ஈ) மனித – அண்டம் (அ) முட்டை
விடை:
அ) பாக்டீரிய செல்
ஆ) மனித – அண்டம் (அ) முட்டை
இ) தவளையின் முட்டை
ஈ) கோழியின் முட்டை

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 2.
உயிருள்ள செல்லை இறந்த செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுத்து வாய்.
விடை:

  • உயிருள்ள செல்களில் உட்கரு காணப்படும்.
    (எ.கா) வெங்காய சதைப்பற்றுள்ள இலையின் உட்புறசவ்வு
  • உயிரற்ற செல்களில் உட்கரு காணப்படாது. (எ.கா) மரத்தக்கை செல்கள்.

Question 3.
மிகப்பெரிய ஆஞ்சியோஸ்பெர்ம் தாவர செல் யாது?
விடை:
ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரப்பிரிவின் மிகப்பெரிய செல் சிட்ரஸ் ரெட்டிக்குலேட்டா (ஆரஞ்சு தசையில் தெளிவாகத் தெரியும்) சிட்ரஸ் மேக்ஸிமா.

Question 4.
செல்லின் நுண்ணுறுப்புகளில் உறையற்ற நுண்ணுறுப்பு?
விடை:
ரிபோசோம்களில் உறை காணப்படுவதில்லை.

Question 5.
பின்வரும் வரைபடத்தை கண்டறி அதில் A, B, C, D, என்னவென்று குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 96

Question 6.
பின்வரும் வரைபடத்தை கண்டறி அதில் A, B, C என்னவென்று குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 97

Question 7.
பின்வரும் வரைபடத்தில் A, B, C, D என்னவென்று காண்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 98

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 99

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 4 காற்று Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 4 காற்று

6th Science Guide காற்று Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
காற்றில் நைட்ரஜனின் சதவீதம்
அ) 78%
ஆ) 21%
இ) 0.03%
ஈ) 1%
விடை:
அ) 78%

Question 2.
தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் ____ ஆகும்.
அ) இலைத்துளை
ஆ) பச்சையம்
இ) இலைகள்
ஈ) மலர்கள்
விடை:
அ) இலைத்துளை

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 3.
காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _____ ஆகும்.
அ) நைட்ரஜன்
ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு
இ) ஆக்சிஜன்
ஈ) நீராவி
விடை:
இ) ஆக்சிஜன்

Question 4.
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் ______
அ) உணவிற்கு நிறம் அளிக்கிறது.
ஆ) உணவிற்கு சுவை அளிக்கிறது.
இ) உணவிற்கு புரதத்தையும், தாது உப்புகளையும் அளிக்கிறது.
ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.
விடை:
ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது

Question 5.
காற்றில் உள்ள ____ மற்றும் _____ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.
i) நைட்ரஜன்
ii) கார்பன்-டை-ஆக்ஸைடு
iii) மந்த வாயுக்கள்
iv) ஆக்சிஜன்
அ) i மற்றும் ii
ஆ) i மற்றும் iii
இ) ii மற்றும் iv
ஈ) i மற்றும் iv
விடை:
ஈ மற்றும் iv

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி ______ ஆகும்.
விடை:
ஆக்சிஜன் (O2)

Question 2.
ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு _____ ஆகும்.
விடை:
ஆக்சிஜன் (O2)

Question 3.
சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _______
விடை:
ஆக்சிஜன்(O2)

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 4.
இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் _____ காணமுடியும்.
விடை:
தூசுப் பொருட்களைக்

Question 5.
_____ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல ______ மாற்றும்.
விடை:
கார்பன்-டை-ஆக்ஸைடு(CO2)

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளது.
விடை:
தவறு. உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு ஆக்சிஜன் உள்ளது.

Question 2.
புவி வெப்பமயமாதலை மரங்களை நடுவதன் மூலம் குறைக்கலாம்.
விடை:
சரி

Question 3.
காற்றின் இயைபு எப்பொழுதும் சமமான விகிதத்தில் இருக்கும்.
விடை:
தவறு.
காற்றின் இயைபு இடத்திற்கு இடமும், காலநிலையைப் பொருத்தும் மாறுபாடு அடைகிறது.

Question 4.
திமிங்கலம் ஆக்சிஜனை சுவாசிக்க நீரின் மேற்பரப்பிற்கு வரும்.
விடை:
சரி

Question 5.
காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் சுவாசம் மூலமும், விலங்குகளின் ஒளிச்சேர்க்கை மூலமும் சமன் செய்யப்படுகிறது.
விடை:
தவறு
காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலமும், விலங்குகளின் சுவாசம் மூலமும் சமன் செய்யப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 70

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.
  2. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
  3. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
  4. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலதிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.
  5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.
  6. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

விடை:

  1. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
  2. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.
  3. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
  4. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
  5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.
  6. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலத் திலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

VI. ஒப்புமை தருக.

Question 1.
ஒளிச்சேர்க்கை : _____ :: சுவாசம் : ஆக்சிஜன்.
விடை:
கார்பன்-டை-ஆக்ஸைடு

Question 2.
காற்றின் 78% : எரிதலுக்கு துணை புரிவதில்லை :: _____
____ : எரிதலுக்கு துணை புரிகிறது.
விடை:
காற்றின் 21%

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

VII. கொடுக்கப்பட்டுள்ள படத்தை கூர்ந்து கவனித்து, கேள்விக்கு பதிலளிக்கவும்.

Question 1.
மீன்காட்சியகத்தில் தொட்டியில் உள்ள தாவரங்களை நீக்கினால் என்னவாகும்?
விடை:

  • மீன்களிடமிருந்து வெளியேறும் கழிவுகளை தாவரங்கள் உறிஞ்சி அகற்றும். தாவரங்கள் இல்லையென்றால் கழிவுகளினால் தொட்டியில் உள்ள நீரின் நிறம் மாறுபட்டு துர்நாற்றம் ஏற்படும்.
  • தாவரங்கள் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதுடன், CO2 மற்றும் NH3ன் அளவை குறைக்கின்றன.
  • மீன்களுக்கு மறைவிடமாகவும் இருப்பதால் மீன்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணரக்கூடும்.
  • நீர்ப்பாசிகளின் அளவு அதிகமாகும்.

Question 2.
மீன் காட்சியகத்தில் உள்ள மீன்களை நாம் நீக்கிய பின் தாவரங்களுடன் அதனை ஓர் இருண்ட அறையினுள் வைத்தால் என்னவாகும்?
விடை:

  • பொதுவாக தாவரங்கள் (நீர் வாழ் மற்றும் நிலம் வாழ்) தங்களது உணவை ‘ஒளிச்சேர்க்கை ‘ மூலம் தயாரித்துக் கொள்கின்றன.
  • நீர் வாழ் தாவரங்கள், நீரில் கரைந்துள்ள (CO2) மற்றும் கிடைக்கும் சிறிதளவு சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றன.
  • மீன்களை (CO2 வெளியிடுபவை) நீக்கிய பின், தாவரங்களுடன் இருண்ட அறையில் தொட்டியை வைக்கும் போது, அவைகளால் ‘ஒளிச்சேர்க்கை ‘ செய்ய இயலாது.
  • எனவே சில நாட்களில் அத்தாவரங்கள் மடிந்து போகின்றன.
    Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 80

VIII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் உள்ள ஐந்து அடுக்குகளின் பெயர்களை தருக.
விடை:
நமது பூமியானது காற்றாலான ஒரு மிகப்பெரிய மேலுறையால் மூடப்பட்டுள்ளது. இது வளிமண்டலம் எனப்படும்.
வளிமண்டலத்தின் 5 அடுக்குகள்.

  1. அடி வளி மண்ட லம் (Troposphere)
  2. அடுக்கு வளி மண்ட லம் (Stratosphere)
  3. இடைவளி மண்ட லம் (Mesosphere)
  4. அயனி மண்ட லம் (Ionosphere)
  5. புறவளி மண்ட லம் (Exosphere)

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 2.
நிலத் தாவரங்களின் வேர்கள், சுவாசத்திற்கான ஆக்சிஜனை எவ்வாறு பெறுகின்றன?
விடை:

  • மண்ணிலுள்ள காற்று இடைவெளிகளில் ஆக்ஸிஜன் உள்ளது.
  • இந்த ஆக்ஸிஜன் வேர்நுனி மூடிகளின் வழியாகப் பரவல் முறையில் தாவரத்தின் பிறபாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

Question 3.
ஒருவரின் ஆடையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
விடை:

  • கம்பளி (அல்லது) ஈரச்சாக்கு கொண்டு தீயினை முழுவதும் மூட வேண்டும்.
  • பின்பு தரையில் உருட்ட வேண்டும்.
  • ஏனெனில் பொருட்கள் எரிவதற்கு ஆக்சிஜன் (O2) தேவை. இவ்வாறு செய்யும் போது எரிவதற்கு வேண்டிய O2 இல்லாது போக தீ அணைந்து விடுகின்றது. தகுந்த தீயணைப்பானைப் பயன்படுத்துவதும் மிகச்சிறந்தது.

Question 4.
நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால் என்ன நிகழும் ?
விடை:
பல சுகாதார நிலைமைகள் மற்றும் ஆபத்து காரணிகள் வாய் வழி சுவாசித்தலினால் ஏற்படக்கூடும்.

  • குறட்டை
  • உலர்ந்தவாய்
  • நாள்பட்ட சோர்வு
  • பல் ஆரோக்கியக் குறைவு.

IX. குறுகிய விடையளி

Question 1.
மழைக் காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும் பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?
விடை:
மழைக்காலங்களில் காற்றில் அதிகமான ஈரப்பதம் காணப்படும். இதனால் பிஸ்கட் தனது மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது.

Question 2.
பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?
விடை:

  • வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையில் மாசுக்கள் கலந்துள்ளன. இந்த மாசு நிறைந்த காற்றினை பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் சுவாசிக்க நேர்ந்தால் சுவாசம் மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.
  • இவற்றை தடுப்பதற்காக போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிகின்றனர்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

X. விரிவான விடையளி:

Question 1.
தாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை- ஆக்ஸைடு இவற்றின் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?
விடை:

  • தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடும் ஆக்ஸிஜனை விலங்கினங்கள் தங்கள் சுவாசத்திற்குப் பயன்படுத்துகின்றன.
  • தாவரங்கள் சுவாசித்தலின் போது எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜனை விட அதிகளவு ஆக்ஸிஜனை ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடுகின்றன.
  • இந்த ஆக்ஸிஜனை, விலங்கினங்கள் தங்கள் சுவாசத்திற்கு எடுத்துக்கொண்டு CO2யை வெளியேற்றுகின்றன.
  • இவ்வாறு வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் (O2) மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு (CO2) சமநிலை, தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சுவாசம் மூலமும், தாவரங்களின் ஒளிச் சேர்க்கை மூலமும் பாதுகாக்கப்படுகிறது.

Question 2.
பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?
விடை:

  • உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழக் காரணமாக இருக்கும் மிக முக்கியமான தனிமமான ஆக்ஸிஜன் வளிமண்டலத்தில் (காற்றில்) உள்ளது.
  • சூரியனிடமிருந்து வரும் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்வீச்சுகள் புவியின் மேற்பரப்பிற்கு வருவதை வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலம் தடுக்கின்றது.
  • புவியில் தகுந்த வெப்பநிலை இருக்கக் காரணம் வளிமண்டலமே, இதன் காரணமாகவே புவியில் உயிரினங்கள் வாழ முடிகிறது.
  • வளிமண்டலத்தில் உள்ள நீராவி, நம் சுற்றுப் புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

XI. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி:

Question 1.
தீயணைப்பானிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளி யிடப்படுகிறது என உங்களால் யூகிக்க முடிகிறதா?
விடை:

  • CO2 வாயு எரிதலுக்குத் துணைபுரிவதில்லை.
  • எரியும் பொருள்களின் மீது இது தெளிக்கப்படும் போது. ஆக்ஸிஜன் துணைபுரிவது தடுக்கப்படுகிறது. எனவே தீ கட்டுக்குள் வருகிறது.

6th Science Guide காற்று Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
மேகங்கள் உருவாகக் காரணமான நீராவியைக் கொண்டுள்ள அடுக்கு எது?
அ) அடுக்கு வளிமண்டலம்
ஆ) இடைவளி மண்டலம்
இ) அடிவளிமண்ட லம்
ஈ) புறவளி மண்ட லம்
விடை:
இ) அடிவளிமண்டலம் பருவம்

Question 2.
பசுமைத்தாவரங்கள் உணவுத் தயாரிக்கப் பயன்படும் காற்றின் பகுதிப்பொருள்
அ) N2
ஆ) O2
இ) H2
ஈ) CO2
விடை:
ஈ) CO2

Question 3.
ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வின் பெயரென்ன?
அ) உள்ளெரிதல்
ஆ) எரிதல்
இ) கருகுதல்
ஈ) உருகுதல்
விடை:
அ) உள்ளெரிதல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 4.
சுவாசித்தலின் போது நாம் வெளியேற்றும் காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் சதவீதம்
அ) 78%
ஆ) 16%
இ) 4%
ஈ) 21%
விடை:
ஆ) 16%

Question 5.
இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்துதலில் பயன்படுத்தப்படுவது
அ) திரவ அம்மோனியா
ஆ) திரவ நைட்ரஜன்
இ) திண்ம CO2
ஈ) ஹீலியம்
விடை:
இ) திண்ம CO2

II. சரியா ? தவறா ? எனக்கூறுக. தவறு எனில் சரியாக எழுதவும்

Question 1.
புரத உற்பத்திக்கும், உரங்கள் தயாரிக்கவும் ஆக்ஸிஜன் பயன்படுகிறது.
விடை:
தவறு – புரத உற்பத்திக்கும், உரங்கள் தயாரிக்கவும் நைட்ரஜன் பயன்படுகிறது.

Question 2.
கால்சியம் ஹைட்ராக்ஸைடு கரைசலினுள் CO2யை செலுத்தினால் பால் போல் மாறுகிறது.
விடை:
சரி

Question 3.
கடலோர பகுதிகளிலுள்ள காற்றில் அதிகளவு ஆக்ஸிஜன் காணப்படும்.
விடை:
தவறு – கடலோர பகுதிகளிலுள்ள காற்றில் அதிகளவு நீராவி காணப்படும்.

Question 4.
சூரியனிடமிருந்து ஒளி ஆற்றலைப் பெறுவதே குளோரோஃபில்லின் பணி ஆகும்.
விடை:
சரி

Question 5.
கார்பன் டை ஆக்ஸைடு வாயு – 57°C ல் திரவநிலைக்கு மாறுகிறது.
விடை:
தவறு – கார்பன் டை ஆக்ஸைடு வாயு – 57°C திண்மநிலைக்கு மாறுகிறது.

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 77

IV. மிகக்குறுகிய விடையளி

Question 1.
ஒசோன் படலம் எங்குள்ளது?
விடை:
அடிவளி மண்டலத்திற்கு மேலே உள்ள அடுக்கு வளி மண்டலத்தில் ஓசோன் படலம் உள்ளது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 2.
“காற்று ஒரு அடிப்படைப் பொருளல்ல, அது ஒரு கலவை”? ஏன்?
விடை:
காற்று என்பது N2, O2, CO2 மற்றும் பல வாயுக்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு கலவை ஆகும்.

Question 3.
காற்றின் சதவீத இயைபை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 85

Question 4.
எரிதல் என்றால் என்ன?
விடை:
ஆக்ஸிஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது ஒளியையும், வெப்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வு எரிதல் எனப்படும்.

Question 5.
உள்ளெரிதலை வரையறு. ஒரு உதாரணம் கொடு?
விடை:
ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் எரிதல் நிகழ்வு உள்ளெரிதல் எனப்படும். (எ.கா.) இராக்கெட் உந்திகள் (எரிபொருள், ஆக்ஸிஜன் கலவை)

V. விரிவான விடையளி

Question 1.
நைட்ரஜன் கண்டுபிடிப்பை விவரி.
விடை:

  • டேனியல் ரூதர்ஃபோர்டு நைட்ரஜனைக் கண்டறிந்தார்.
  • முதலில் எரியும் மெழுகுவர்த்தி கொண்ட மணிஜாடியைப் பயன்படுத்தி O2 யை CO2 ஆக மாற்றினார்.
  • பின்பு அக்காற்றினை, சுண்ணாம்பு நீரில் செலுத்தி CO2யை நீக்கினார்.
  • இப்போது, இக்காற்று எரிதலுக்குத் துணைபுரியவில்லை, தாவரம் சுவாசிக்கவும் பயன்படவில்லை.
  • ‘ஏனெனில், காற்றில் O2 மற்றும் CO2 வாயுக்கள் இல்லை.
  • இவ்வாயுவின் பண்புகள் அறிந்து, நைட்ரஜன்’ எனப்பெயரிட்டார்.

Question 2.
தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கை நிகழ்வினை விரிவாக விளக்குக.
விடை:

  • தாவரங்கள் தனது உணவினை ‘ஒளிச்சேர்க்கை’ மூலம் உற்பத்தி செய்கின்றன.
  • காற்றிலுள்ள CO2ம் மண்ணிலுள்ள நீரும் சூரிய ஒளி துணையுடன் வினைபுரிந்து உணவு உற்பத்தி செய்கின்றன.
    Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 95
  • இவ்வினையில், குளோரோபில் என்ற பச்சை நிற நிறமி சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுகிறது.
  • சுவாசித்தலின் போது எடுத்துக் கொண்ட ஆக்ஸிஜனை விட அதிகளவு ஆக்ஸிஜனை, ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் வெளியிடுகின்றன.

Question 3.
காற்றின் பயன்களைக் குறிப்பிடுக.
விடை:

  1. தாவர மற்றும் விலங்குகளின் சுவாசத்திற்குப் பயன்படுகிறது.
  2. மரக்கட்டை, நிலக்கரி, மண்ணெண்ணெய், LPG போன்றவற்றை எரிக்க உதவுகிறது.
  3. அழுத்தப்பட்ட காற்று, வாகன டயர்களில் நிரப்பப்படுகிறது.
  4. இயற்கையின் நீர்சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  5. சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை ஓசோன் படலம் தடுக்கிறது.
  6. மருத்துவமனை நோயாளிகளுக்கும், மலைச்சிகரம் ஏறுபவர்களுக்கும், ஆழ்கடல் நீந்துபவர்களுக்கும் சுவாசிக்க O2வாயு பயன்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 98

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

6th Science Guide நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம்
அ) இட மாற்றம்
ஆ) நிற மாற்றம்
இ) நிலை மாற்றம்
ஈ) இயைபு மாற்றம்
விடை:
இ) நிலை மாற்றம்

Question 2.
ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ———— ஆகும்.
அ) வேதியியல் மாற்றம்
ஆ) விரும்பத்தகாத மாற்றம்
இ) மீளா மாற்றம்
ஈ) இயற்பியல் மாற்றம்
விடை:
ஈ) இயற்பியல் மாற்றம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 3.
பால் தயிராக மாறுவது ஒரு _____ ஆகும்.
அ) மீள் மாற்றம்
ஆ) வேகமான மாற்றம்
இ) மீளா மாற்றம்
ஈ) விரும்பத்தகாத மாற்றம்
விடை:
இ) மீளா மாற்றம்

Question 4.
கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?
அ) துருப்பிடித்தல்
ஆ) பருவநிலை மாற்றம்
இ) நில அதிர்வு
ஈ) வெள்ளப்பெருக்கு
விடை:
ஆ) பருவநிலை மாற்றம்

Question 5.
காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு ஆகும்.
அ) மீள் மாற்றம்
ஆ) வேகமான மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
விடை:
ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம். (மீள் / மீளா)
விடை:
மீள்

Question 2.
முட்டையை வேகவைக்கும் போது _____ மாற்றம் நிகழ்கிறது. (மீள் / மீளா)
விடை:
மீளா

Question 3.
நமக்கு ஆபத்தை விளைவிப்பவை ______ மாற்றங்கள். (விரும்பத்தக்க / விரும்பத்தகாத)
விடை:
விரும்பத்தகாத

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 4.
தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது _____ (இயற்கையான / மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்) ஆகும்.
விடை:
இயற்கையான

Question 5.
பட்டாசு வெடித்தல் என்பது ஒரு ____ மாற்றம்; விதை முளைத்தல் ஒரு ____ மாற்றம். (மெதுவான / வேகமான)
விடை:
வேகமான,
மெதுவான

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
குழந்தைகளுக்குப் பற்கள் முளைப்பது மெதுவான மாற்றம்.
விடை:
சரி

Question 2.
தீக்குச்சி எரிவது மீளா மாற்றம்.
தீக்குச்சி எரிவது ஒரு மீள் மாற்றம்.
விடை:
தவறு

Question 3.
அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு மனிதனால் தவறு. ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.
சரியான விடை : அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு இயற்கையான மாற்றம்.
விடை:
தவறு

Question 4.
உணவு செரித்தல் என்பது ஓர் இயற்பியல் மாற்றம்.
சரியான விடை : உணவு செரித்தல் என்பது ஓர் வேதியியல் மாற்றம்.
விடை:
தவறு.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 5.
உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ஒரு. கரைபொருள் ஆகும்.
சரியான
சரியான விடை : உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ‘ஒரு கரைப்பான் ஆகும்.
விடை :
தவறு

IV. ஒப்புமை தருக.

Question 1.
பால் தயிராதல்: மீளா மாற்றம் :: மேகம் உருவாதல் :- _____ மாற்றம்.
விடை:
மீள்

Question 2.
ஒளிச்சேர்க்கை : _____ மாற்றம் :: நிலக்கரி எரிதல் : மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.
விடை:
இயற்கையான

Question 3.
குளுக்கோஸ் கரைதல் : மீள் மாற்றம் :: உணவு செரித்தல் : ____ மாற்றம்
விடை:
மீளா

Question 4.
உணவு சமைத்தல் : விரும்பத்தக்க மாற்றம் :: உணவு கெட்டுப்போதல் : _____ மாற்றம்.
விடை:
விரும்பத்தகாத

Question 5.
தீக்குச்சி எரிதல்: ____ மாற்றம் :: பூமி சுற்றுதல் : மெதுவான மாற்றம்.
விடை:
வேகமான

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

V. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தைக் கூறுக.

Question 1.
குழந்தை வளருதல், கண் சிமிட்டுதல், துருப்பிடித்தல், விதை முளைத்தல்.
விடை:
கண் சிமிட்டுதல் (வேகமான மாற்றம்)

Question 2.
மின் விளக்கு ஒளிர்தல், மெழுகுவர்த்தி எரிதல், காபி குவளை உடைதல், பால் தயிராதல்.
விடை:
பால் தயிராதல் (வேதியியல் மாற்றம்)

Question 3.
முட்டை அழுகுதல், நீராவி குளிர்தல், முடிவெட்டுதல், காய் கனியாதல்.
விடை:
முடி வெட்டுதல் (மனிதனால் ஏற்படுத்தக்கூடிய மாற்றம்)

Question 4.
பலூன் ஊதுதல், பலூன் வெடித்தல், சுவற்றின் வண்ணம் மங்குதல், மண்ணெண்ணெய் எரிதல்.
விடை:
மண்ணெண்ணெய் எரிதல் (வேதியியல் மாற்றம்)

VI. மிகக் குறுகிய விடையளி :

Question 1.
தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்?
விடை:
மெதுவான, வேதியியல் மாற்றம்

Question 2.
உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.
விடை:
ஆம், இயற்பியல் மீள் மாற்றம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 3.
மெதுவான மாற்றத்தை வரையறு.
விடை:
சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. (மணிகள் /நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள்) இவை மெதுவான மாற்றங்கள் எனப்படும்.
(எ.கா.) நகம் / முடி வளர்தல், பருவநிலை மாற்றம், விதை முளைத்தல்.

Question 4.
கரும்புச் சர்க்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது என்ன நிகழும்? இதில் நடைபெறும் ஏதேனும் இரண்டு மாற்றங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • சர்க்கரை என்பது சுக்ரோஸ் ஆகும்.
  • சுக்ரோஸின் மூலக்கூறு வாய்ப்பாடு C12H22O11 (அ) C12 (H2O)11
  • கரும்புச்சர்க்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது நீர் மூலக்கூறுகளை இழந்து கார்பனாக சிதைவடைகிறது.
  • இச்செயல்முறையின் மாற்றங்கள்
    1. வேதியியல் மாற்றம்
    2. மீளா மாற்றம்

Question 5.
கரைசல் என்றால் என்ன?
விடை:
கரைபொருள் கரைப்பானில் கரையும் போது கரைசல் உண்டாகிறது. கரைபொருள் + கரைப்பான் → கரைசல்

VII. குறுகிய விடையளி:

Question 1.
காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? விவரிக்கவும்.
விடை:

  • காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றம் வேகமான மாற்றம் ஆகும்.
  • ஏனெனில் இம்மாற்றம் நிகழ குறைந்த அளவு நேரத்தையே எடுத்துக் கொள்கின்றன.

Question 2.
காடுகளை அழித்தல் என்பது விரும்பத்தக்க மாற்றமா? உங்கள் பதிலுக்கான காரணத்தை விவரிக்கவும்.
விடை:
இல்லை, காடுகளை அழித்தல் விரும்பத்தகாத மாற்றம் ஆகும். ஏனெனில், சுற்றுச்சுழலுக்குப் பயன்தராத அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய, நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் ஆகும்.

Question 3.
விதையிலிருந்து செடி முளைத்தல் என்ன வகையான மாற்றம்? விவரிக்கவும்.
விடை:
விதையிலிருந்து செடி முளைத்தல் ஒரு மெதுவான மாற்றம் ஆகும். இம்மாற்றம் நிகழ் அதிக நேரத்தை (மணிகள் / நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள்) எடுத்துக் கொள்கின்றன.

VIII. விரிவான விடையளி:

Question 1.
உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக.
அ) மெதுவான / வேகமான மாற்றம்
ஆ) மீள் / மீளா மாற்றம்
இ) இயற்பியல் / வேதியல் மாற்றம்
ஈ) இயற்கையான / செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
உ) விரும்பத்தக்க / விரும்பத்தகாத மாற்றம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 60

IX. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்காணும் மாற்றங்களை காண முடியும்.
அ) மெழுகு உருகுதல்.
ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்.
இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்.
ஈ) உருகிய மெழுகு திண்மமாக மாறுதல்.
உ) மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்?
உமது பதிலை நியாயப்படுத்துக.

  • மெழுகுவர்த்தி எரியும் போது உருவாகும் வெப்பத்தினால் திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மெழுகு உருகுகிறது. இது ஒரு மீள் (அ) இயற்பியல் மாற்றம் ஆகும்.
  • மேலும் மெழுகு உருகும் போது மெழுகு அளவும் குறைகிறது. உருகிய மெழுகுவை குளிர்விக்கும் போது அதனைத் திண்மமாக மாற்றலாம்.

6th Science Guide நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
நீரைக் குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் ______
அ) உருகுதல்
ஆ) ஆவியாதல்
இ) ஆவி சுருங்குதல்
ஈ) உறைதல்
விடை:
ஈ) உறைதல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 2.
சமைக்கும் போது காய்கறிகள் மென்மையாக மாறுதல் ஒரு.
அ) வேகமான மாற்றம்
ஆ) வேதியியல் மாற்றம்
இ) செயற்கையான மாற்றம்
ஈ) மீள் மாற்றம்
விடை:
இ) செயற்கையான மாற்றம்

Question 3.
ஏரிகள் மற்றும் ஆறுகளிலிருந்து நீர் ஆவியாதல் வினை ஒரு
அ) மெதுவான மாற்றம்
ஆ) வேகமான மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) அ மற்றும் ஆ இரண்டும்
விடை:
ஈ) அ மற்றும் ஆ இரண்டும்

Question 4.
அயோடின் பதங்கமாதல் ஒரு
அ) வேதியியல் மாற்றம்
ஆ) இயற்பியல் மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) விரும்பத்தகாத மாற்றம்
விடை:
ஆ) இயற்பியல் மாற்றம்

Question 5.
வெள்ளி கொலுசு கருமையடைதல் ஒரு
அ) மீளா மாற்றம்
ஆ) தற்காலிக மாற்றம்
இ) குறைந்த நேர மாற்றம்
ஈ) தொடர்ச்சியான மாற்றம்
விடை:
அ) மீளா மாற்றம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
புதிய பொருட்களை உருவாக்கும் மாற்றம் ______
விடை:
வேதியியல் மாற்றம்

Question 2.
நிலக்கரி உருவாதல் _____ வகை மாற்றம்.
விடை:
மெதுவான மாற்றம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 3.
இயற்கையாக நிகழும், விரும்பத்தகாத மாற்றத்திற்கு ஓர் உதாரணம் ________
விடை:
நில அதிர்வு

Question 4.
_____ ஒரு பொதுக்கரைப்பான்.
விடை:
நீர்

Question 5.
சுற்றுச்சூழல் நண்பனான மாற்றம் ______
விடை:
விரும்பத்தக்க மாற்றம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 70

IV. ஒப்புமை தருக.

Question 1.
இரும்பு துருப்பிடித்தல் : விரும்பத்தகாத மாற்றம் :: இறந்த விரும்பத்தக்க மாற்றம் தாவரங்கள் உரமாதல் : ———-

Question 2.
தொட்டால் சிணுங்கி தாவரம் : ____ :: உணவு ஜீரணித்தல் : மீளா மாற்றம்
விடை:
மீள் மாற்றம்

Question 3.
பருவநிலை மாற்றம் : மெதுவான மாற்றம் :: கண்ணாடி உடைதல் : ______
விடை:
வேகமான மாற்றம்

Question 4.
நில அதிர்வு : விரும்பத்தகாத மாற்றம் :: இதயத்துடிப்பு : _____
விடை:
விரும்பத்தக்க மாற்றம்

Question 5.
வெள்ளி ஆபரணங்கள் கருமை அடைதல் : ____ நீர் கொதித்தல் : இயற்பியல் மாற்றம்
விடை:
வேதியியல் மாற்றம்

V. மிகக்குறுகிய விடையளி

Question 1.
வேகமான மாற்றத்திற்கு மூன்று உதாரணங்கள் தருக.
விடை:

  1. பலூன் வெடித்தல்
  2. கண்ணாடி உடைதல்
  3. காகிதம் எரிதல்

Question 2.
மீள் மாற்றம் என்றால் என்ன ?
விடை:
மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தால் அவை மீள்மாற்றம் எனப்படுகின்றன.

Question 3.
இயற்பியல் மாற்றத்திற்கு சில உதாரணங்கள் தருக.
விடை:

  1. பனிக்கட்டி உருகுதல்
  2. உப்பு (அல்லது) சர்க்கரை நீரில் கரைதல்
  3. இரப்பர் வளையம் நீளுதல்

Question 4.
நீர் ஒரு பொதுக்கரைப்பான் ஏன்?
விடை:
நீர் பெரும்பாலான பொருட்களைக் கரைக்கப் பயன்படுவதால் ‘பொது கரைப்பான்’ என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

VI. விரிவான விடையளி

Question 1.
இயற்பியல் மாற்றம் மற்றும் வேதியியல் மாற்றத்தை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 80

Question 2.
இயற்கையான மற்றும் செயற்கையான மாற்றங்களைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
விடை:
இயற்கையான மாற்றம் :

  • இயற்கையில் தானாகவே நிகழும் மாற்றம்
  • மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்றம்
  • எ.கா. புவி சுழற்சி, மழைபெய்தல், நிலவின் பல்வேறு நிலைகள்
    செயற்கையான மாற்றம் மனிதனால் ஏற்படக்கூடிய மாற்றம்) :
  • இயற்கையில் தன்னிச்சையாக நிகழாத மாற்றம்
  • மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்திய மாற்றங்கள்
    எ.கா. சமைத்தல், காடுகளை அழித்தல், பயிரிடுதல், கட்டிடம் கட்டுதல்

Question 3.
நமது உடலில் நிகழும் பல்வேறு மாற்றங்களையும் அவற்றின் வகைகளையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 85

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 86