Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

10th Social Science Guide இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
அ) சேமிப்பு மின்கலன்கள்
ஆ) எஃகு தயாரிப்பு
இ) செம்பு உருக்குதல்
ஈ) பெட்ரோலிய சுத்திகரிப்பு
விடை:
ஆ) எஃகு தயாரிப்பு

Question 2.
ஆந்த்ரசைட் நிலக்கரி ……………. கார்பன் அளவை கொண்டுள்ளது.
அ) 80% – 95%
ஆ) 70% க்கு மேல்
இ) 60% – 70%)
ஈ) 50% க்கும் குறைவு
விடை:
அ) 80% – 95%

Question 3.
பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ………………………
அ) ஆக்ஸிஜன்
ஆ) நீர்
இ) கார்பன்
ஈ) நைட்ரஜன்
விடை:
இ கார்பன்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 4.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் ……………………..
அ) சேலம்
ஆ) சென்னை
இ) மதுரை
ஈ) கோயம்புத்தூர்
விடை:
ஈ) கோயம்புத்தூர்

Question 5.
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ……………………..
அ) குஜராத்
ஆ) இராஜஸ்தான்
இ) மகாராஷ்டிரம்
ஈ) தமிழ்நாடு
விடை:
இ மகாராஷ்டிரம்

Question 6.
மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் …………………..
அ) உயிரி சக்தி
ஆ) சூரியன்
இ) நிலக்கரி
ஈ) எண்ணெய்
விடை:
ஆ) சூரியன்

Question 7.
புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ………………..
அ) ஜார்கண்ட்
ஆ) பீகார்
இ) இராஜஸ்தான்
ஈ) அசாம்
விடை:
அ) ஜார்கண்ட்

Question 8.
சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது ………………..
அ) போக்குவரத்து
ஆ) கனிமப்படிவுகள்
இ) பெரும் தேவை
ஈ) மின்சக்தி கிடைப்பது
விடை:
ஆ) கனிமப்படிவுகள்

II. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 2

III. சுருக்கமான விடையளி.

Question 1.
வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.
விடை:
இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் “இயற்கை வளம்” என்று அழைக்கப்படுகிறது.

  1. புதுப்பிக்கக்கூடிய வளம் – சூரிய ஆற்றல்
  2. புதுப்பிக்க இயலாத வளம் – நிலக்கரி

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 2.
கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
விடை:

  • ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும்.
  • கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை அ. உலோகக்கனிமங்கள், ஆ. அலோகக்கனிமங்கள்.

Question 3.
மெக்னீசியத்தின் பயன்களை குறிப்பீடுக.
விடை:

  • இது இரும்பு எஃகு மற்றும் உலோகக் கலவை உற்பத்திக்கு அடிப்படையான மூலப்பொருள் ஆகும்.
  • வெளுக்கும் தூள், பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சிகள், மின்கலன்கள் போன்றவைத் தயாரிப்பதற்கு மெக்னீசியம் பயன்படுகின்றது.

Question 4.
இயற்கை எரிவாயு என்றால் என்ன?
விடை:

  • இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது.
  • இது இயற்கையாக உருவாகும் ஒரு நீர்மகரிம வாயுவாகும்.
  • இவற்றின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவும் பல்வேறு அளவுகளில் உள்ள உயர் அல்கேன்கள் கலந்த கலவைகளால் ஆனது.

Question 5.
நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.
விடை:

  • ஆந்தரசைட்: 80 முதல் 90%
  • பிட்டுமினஸ் : 60 முதல் 80%
  • பழுப்பு நிலக்கரி: 40 முதல் 60%
  • மரக்கரி: 40% கும் குறைவு.

Question 6.
இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக.
விடை:
மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம், பீகார், அசாம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா சணல்கள் உற்பத்தி செய்கின்ற மாநிலங்களாகும்.

Question 7.
இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக.
விடை:
மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் :

  • மும்பை ஹை எண்ணெய் வயல் (65% மிகப்பெரியது)
  • குஜராத் கடற்கரை (2வது பெரியது)
  • அகமதாபாத் – கலோல்பகுதி

IV. வேறுபடுத்துக.

Question 1.
புதுப்பிக்க இயலும் மற்றும் புதுபிக்க இயலாத வளங்கள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 3

Question 2.
உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 4

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 3.
வேளாண் மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 5

Question 4.
சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 6

Question 5.
மரபு சார் மற்றும் மரபு சாரா எரிசக்தி.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 7

V. ஒரு பத்தியில் விடையளி.

Question 1.
இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.
விடை:
பருத்தி நெசவாலைகள் :

  • இந்தியா இத்துறையில் உலகின் இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • பாரம்பரிய தொழில்களான கைவினைப்பொருள்கள், சிறிய விசைத்தறிகள் போன்றவை லட்சக்கணக்கிலான கிராமப்புற மற்றும் புறநகர் மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் ஆதாரங்களாக உள்ளன.
  • பருத்தி இழையிலிருந்து , விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு ஜின்னிங் என்று பெயர்.
  • மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பருத்தியாலைகள் செறிந்து காணப்படுவதால் மும்பை, இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படும் கரிசல் மண், ஈரப்பத காலநிலை மும்பைத் துறைமுகம், எளிதில் கிடைக்கும் நீர்மின்சக்தி, சந்தை வசதி, சிறந்த போக்குவரத்து வசதி ஆகியன மும்பையில் அதிக அளவு பருத்தி நெசவாலைகள் இருப்பதற்கு காரணங்களாக அமைகிறது.
  • மகாராஷ்டிரம், குஜராத் மேற்கு வங்காளம் உத்திரப்பிதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன. இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
  • ஈரோடு திருப்பூர், கரூர், சென்னை , திருநெல்வேலி, மதுரை தூத்துக்குடி, சேலம் மற்றும் விருதுநகர் ஆகியன மாநிலத்தின் பிற முக்கிய நெசவாலை நகரங்களாகும்.

Question 2.
இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.
விடை:

  • இந்தியத் தொழிலகங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கியப் பிரச்சினைகள் கீழே பட்டியிலிடப்பட்டுள்ளன.
  • மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம்.
  • தொழிலகங்கள் நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலபரப்பு இல்லாமை.
  • கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்.
  • கடனுக்கான அதிக வட்டி விகிதம்.
  • மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை.
  • ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில் முறை பயிற்சிகள் இல்லாமை.
  • தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை.

10th Social Science Guide இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
வளங்கள் தொடர்ந்து கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் ……………… வகைப்படும்.
அ) 3
ஆ) 2
இ) 4
ஈ) 6
விடை:
ஆ) 2

Question 2.
……………… புதுப்பிக்க இயலா வளங்களுள் ஒன்று.
அ) உயிரி வாயு
ஆ) காற்றாற்றல்
இ) நிலக்கரி
ஈ) ஒத சக்தி
விடை:
இ நிலக்கரி

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 3.
…………….. தனித்த நிலையில் அரிதாக காணப்படுகிறது.
அ) காப்பர்
ஆ) மாங்கனீசு
இ) இரும்புத்தாது
ஈ) பாக்சைட்
விடை:
இ இரும்புத்தாது

Question 4.
லைமனைட் இரும்பு தாது படிவில் ……………… இரும்புள்ளது.
அ) 72.4%
ஆ) 55%
இ) 69.9%
ஈ) 48.2%
விடை:
ஆ) 55%

Question 5.
இந்தியர்கள்…………….. வளங்கள் ஹேமடைட் வகையையும், மேக்னடைட் வகையையும் சார்ந்தது.
அ) பாக்சைட்
ஆ) இரும்புத்தாது
இ) தாமிரம்
ஈ) மாங்கனீசு
விடை:
இரும்புத்தாது

Question 6.
இரும்பு தாது உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் …………… ஆகும்.
அ) அசாம்
ஆ) பீகார்
இ) ஜார்கண்ட்
ஈ) ராஜஸ்தான்
விடை:
இ ஜார்கண்ட்

Question 7.
………………. ஒரு வெளிர் சாம்பல் நிறம் உடையது.
அ) ஜிப்சம்
ஆ) பாக்சைட்
இ) மைக்கா
ஈ) மாங்கனீசு
விடை:
ஈ) மாங்கனீசு

Question 8.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் ……………….. ஆகும்.
அ) தாமிரம்
ஆ) இரும்பு தாது
இ) சுண்ணாம்புகல்
ஈ) மைக்கா
விடை:
அ) தாமிரம்

Question 9.
அலுமினியத்தின் முக்கிய தாது ……………. ஆகும்.
அ) மேக்னடைட்
ஆ) ஹோமடைட்
இ) லிக்னைட்
ஈ) பாக்சைட்
விடை:
ஈ) பாக்சைட்

Question 10.
…………….. மின்கடத்தா தன்மையுடையவை.
அ) தாமிரம்
ஆ) மைக்கா
இ) பாக்சைட்
ஈ) மாங்கனீசு
விடை:
ஆ) மைக்கா

Question 11.
ஜிப்சம் என்பது …………………….. சல்ஃபேட்டின் நீர்ம கனிமமாகும்.
அ) கால்சியம்
ஆ) பொட்டாசியம்
இ) பாஸ்பரஸ்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) கால்சியம்

Question 12.
நிலக்கரி ……………… வகைப்படும்.
அ) 6
ஆ) 2
இ) 3
ஈ) 4
விடை:
ஈ) 4

Question 13.
……………… கருப்புத் தங்கம் எனப்படுகிறது.
அ) மைக்கா
ஆ) ஜிப்சம்
இ) நிலக்கரி
ஈ) எதுவுமில்லை
விடை:
இ நிலக்கரி

Question 14.
……………… தாது எண்ணெய் எனப்படுகிறது.
அ) நிலக்கரி
ஆ) பெட்ரோலியம்
இ) இயற்கை வாயு
ஈ) உயிரி வாயு
விடை:
ஆ) பெட்ரோலியம்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 15.
GAILன் தலைமையகம் ……………… உள்ள து.
அ) மும்பை
ஆ) சீனா
இ) புதுடெல்லி
ஈ) குஜராத்
விடை:
இ புதுடெல்லி

Question 16.
தேசிய அனல் மின் சக்தி நிலையம் ………………ஆண்டில் தொடங்கப்பட்டது.
அ) 1965
ஆ) 1975
இ) 1955
ஈ) 1985
விடை:
ஆ) 1975

Question 17.
……………… சக்தி ஓடும் நீரிலிருந்து பெறப்படும்.
அ) காற்றாற்றல்
ஆ) ஓதசக்தி
இ) நீர்மின்சக்தி
ஈ) சூரிய சக்தி
விடை:
இ நீர்மின்சக்தி

Question 18.
இந்திய தேசிய நீர்மின் சக்தி நிறுவனம் ……………… இல் உள்ளது.
அ) அலகாபாத்
ஆ) பரிதாபாத்
இ) அகமதாபாத்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) பரிதாபாத்

Question 19.
…………….. இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டது.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) கர்நாடகா
ஈ) ஆந்திரம்
விடை:
ஆ) தமிழ்நாடு

Question 20.
உயிரின கழிவிலிருந்து ……………… பெறப்படுகிறது.
அ) உயிரி சக்தி
ஆ) காற்றாற்றல்
இ) ஓதசக்தி
ஈ) நீராற்றல்
விடை:
அ) உயிரி சக்தி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
கனிம வளங்கள் …………. வகைப்படும்.
விடை:
இரண்டு

Question 2.
வளங்கள் ………… வகைப்படும்.
விடை:
இரண்டு

Question 3.
புவிமேலோட்டில் அதிகம் காணப்படுவது
விடை:
இரும்புத்தாது

Question 3.
மாங்கனீசு ……….. நிறமுடையது.
விடை:
வெளிர்

Question 4.
…………… மனிதனால் கண்டறியப்பட்ட முதல் உலோகம்.
விடை:
தாமிரம்

Question 5.
………….. பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது.
விடை:
அலுமினியம்

Question 7.
…………….. ஒளிபுகும் தன்மையுடையது.
விடை:
மைக்கா

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 8.
………………….. என்பது கால்சியம் சல்பேட்டின் நீர்மக்கனிமம்.
விடை:
ஜிப்சம்

Question 9.
……………… எளிதில் எரியக்கூடியது.
விடை:
நிலக்கரி

Question 10.
…………… என்ற சொல் பெட்ரோ மற்றும் ஒலியம் எனப் பிரிக்கலாம்.
விடை:
பெட்ரோலியம்

Question 11.
…………… எண்ணெய் வயல் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
விடை:
மும்பை ஹை

Question 12.
இந்திய இயற்கை எரிவாயு நிறுவனம் …………..
விடை:
GAIL

Question 13.
……………………. தமிழ்நாட்டின் முக்கிய அனல்மின் நிலையங்களாகும்.
விடை:
தூத்துக்குடி (ம) எண்ணூர்

Question 14.
…………… ஓடும் நீரிலிருந்து பெறப்படுகிறது.
விடை:
நீர்மின்சக்தி

Question 15.
அணுக்கரு பிளவின் மூலம் ……………….. பெறப்படுகிறது.
விடை:
அணுசக்தி

Question 16.
இந்தியாவின் சூரியசக்தி நிறுவனத்தின் தலைமையிடம்
விடை:
புதுதில்லி

Question 17.
பருத்தி இழையிலிருந்து, விதையைப் பிரித்தெடுக்கும் முறை ………….
விடை:
ஜின்னிங்

Question 18.
தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் அமைந்துள்ள மாநிலம் ………………… ஆகும்.
விடை:
கொல்கத்தா

Question 19.
…………….. என்பது குறைவான விலையில் கிடைக்கக்கூடிய இழைநார் ஆகும்.
விடை:
சணல்

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 8
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 9

IV. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
அ) மைக்கா
ஆ) சுண்ணாம்புக்கல்
இ) ஜிப்சம்
ஈ) இரும்பு
விடை:
ஈ) இரும்பு

Question 2.
அ) கோலோரிஸ்
ஆ) ஆந்திரசைட்
இ) பிட்டுமினஸ்
ஈ) லிக்னைட்
விடை:
அ) கோலோரிஸ்

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
இந்தியாவில் உள்ள கனிமங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகள் யாவை?
விடை:

  • இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் கொல்கத்தா.
  • இந்தியச் சுரங்கப் பணியகம் – நாக்பூர்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 2.
இரும்புத் தாது படிவு மற்றும் இரும்பின் அளவை பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 10
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 11

Question 3.
பாக்சைட்டின் பயன்பாடுகள் யாவை?
விடை:

  • அலுமினியம் பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது.
  • விமானக் கட்டுமானங்களிலும் தானியங்கி இயந்திரங்களிலும் அதிகம் பயன்படுகிறது. சிமெண்ட் மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளிலும் பயன்படுகிறது.

Question 4.
புதுப்பிக்க இயலா வளங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • நிலக்கரி
  • பெட்ரோலியம் / கச்சா எண்ணெய்
  • இயற்கை எரிவாயு.

Question 5.
மத்தியப் பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் – குறிப்பு வரைக.
விடை:

  • பட்டு வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
  • இந்நிறுவனம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தின் மத்திய பட்டு வளர்ப்பு வாரியத்தால் 1983ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

Question 6.
வனவளம் சார்ந்த தொழிற்சாலைகள் யாவை?
விடை:

  • காடுகள், காகித தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள்.
  • அரக்கு விளையாட்டு பொருள்கள்
  • ஏட்டுப் பலகை போன்ற பொருள்களைத் தருகின்றன.

VI. வேறுபடுத்துக.

Question 1.
நீர்மின் சக்தி மற்றும் காற்று சக்தி
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 12

Question 2.
இரும்பு எஃகு தொழிற்சாலைகள், மென்பொருள் தொழிற்சாலைகள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 13

VII. ஒரு பத்தியில் விடையளி.

Question 1.
மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் – கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 14

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 4 இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

Question 2.
புதுப்பிக்கக் கூடிய வளங்களைப் பற்றி விவரி.
விடை:
அ. நீர்மின்சக்தி:

  • நீர்மின்சக்தி ஓடும் நீரிலிருந்து பெறப்படுகிறது.
  • இம்மின்சக்தி மாசற்ற மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மின் ஆற்றலாக கருதப்படுகிறது.
  • இந்தியாவானது நீர்மின்சக்தி உற்பத்தி செய்வதற்கான மிக அதிக திறனை பெற்றுள்ள ஒரு மிகச் சிறந்த ஒரு நாடாக உள்ளது.

ஆ. சூரிய ஆற்றல் / சக்தி:

  • சூரிய ஆற்றல் சூரிய ஒளியை நேரடியாகவோ மின் அழுத்திக் கொண்டோ அல்லது செறிவூட்டம் கொண்ட சூரிய ஆற்றல் மூலம் மின்னாற்றலாக மாற்றப்படுதலாகும்.
  • மின் அழுத்திகள், ஒளிமின் விளைவு செயல்பாட்டின் மூலம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன.
  • ஆந்திரப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.

இ. காற்று சக்தி :

  • காற்று வீச்சு அல்லது உந்துதலால் ஏற்படும் ஆற்றலை காற்று விசைச்சுற்று கலன்களின் உதவியோடு மின்னாற்றலாக மாற்றப்பட்டு காற்றாலை மின்சாரம் பெறப்படுகிறது.
  • இது ஒரு மலிவான மற்றும் மாசற்ற ஆற்றல் வளமாகும்.
  • காற்றாலை மின்சாரமானது நீர் ஏற்றுவதற்கும், கப்பல்களை இயக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஈ. உயிரி சக்தி :

  • விலங்குகளின் கழிவுகள், சமையல் கழிவுகள், ஆகாய தாமரை கழிவுகள், வேளாண்கழிவுகள் மற்றும் நகரக் கழிவுகள் போன்ற உயிரின கழிவுகளிலிருந்து உயிரி சக்தி பெறப்படுகிறது.
  • இது மாசற்ற மற்றும் மலிவான ஒரு எரிசக்தி வளமாகும்.
  • உயிரி எரிசக்தி பெரும்பாலும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

உ. ஓத மற்றும் அலை சக்தி:

  • கடல் ஒதங்கள் மற்றும் கடல் அலைகள் என இரண்டு வள ஆதாரங்களிலிருந்து மின் ஆற்றல் பெறப்படுகிறது.
  • காம்பே வளைகுடா ஓத சக்தி உற்பத்திக்கு மிக உகந்த இடமாக உள்ளது. இதே போன்று மற்றொரு ஆலை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

10th Social Science Guide இந்தியா – வேளாண்மை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
……………… மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.
அ) வண்டல்
ஆ) கரிசல்
இ) செம்மண்
ஈ) உவர் மண்
விடை:
இ செம்மண்

Question 2.
எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?
அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
ஆ) இந்திய வானியல் துறை
இ) இந்திய மண் அறிவியல் நிறுவனம்
ஈ) இந்திய மண் ஆய்வு நிறுவனம்
விடை:
அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

Question 3.
ஆறுகளின் மூலம் உருவாகும் மண் ………….
அ) செம்மண்
ஆ) கரிசல் மண்
இ) பாலைமண்
ஈ) வண்டல் மண்
விடை:
ஈ) வண்டல் மண்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 4.
இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை …………………….
அ) ஹிராகுட் அணை
ஆ) பக்ராநங்கல் அணை
இ) மேட்டூர் அணை
ஈ) நாகர்ஜூனா சாகர் அணை
விடை:
ஆ) பக்ராநங்கல் அணை

Question 5.
………………. என்பது ஒரு வாணிபப்பயிர்.
அ) பருத்தி
ஆ) கோதுமை
இ) அரிசி
ஈ) மக்காச் சோளம்
விடை:
அ) பருத்தி

Question 6.
கரிசல் மண் ……………… எனவும் அழைக்கப்படுகிறது.
அ) வறண்ட மண்
ஆ) உவர் மண்
இ) மலை மண்
ஈ) பருத்தி மண்
விடை:
ஈ) பருத்தி மண்

Question 7.
உலகிலேயே மிக நீளமான அணை ………….
அ) மேட்டூர் அணை
ஆ) கோசி அணை
இ) ஹிராகுட் அணை
ஈ) பக்ராநங்கல் அணை
விடை:
இ ஹிராகுட் அணை

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 8.
இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது ………………….
அ) பருத்தி
ஆ) கோதுமை
இ) சணல்
ஈ) புகையிலை
விடை:
இ சணல்

II. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்.

Question 1.
கூற்று : பழங்கள் காய்வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.
காரணம் : உலகளவில் இந்தியா மா, வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
இ கூற்று சரி, காரணம் தவறு.

Question 2.
கூற்று : வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.
காரணம் : நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்

III. பொருந்தாதைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
அ) கோதுமை
ஆ) நெல்
இ) திணை வகைகள்
ஈ) காபி
விடை:
ஈ) காபி

Question 2.
அ) காதர்
ஆ) பாங்கர்
இ) வண்டல் மண்
ஈ) கரிசல் மண்
விடை:
ஈ) கரிசல் மண்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 3.
அ) வெள்ளப் பெருக்க கால்வாய்
ஆ) வற்றாத கால்வாய்
இ) ஏரிப்பாசனம்
ஈ) கால்வாய்
விடை:
இ ஏரிப்பாசனம்

IV. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 2

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
‘மண்’ – வரையறு
விடை:
மண் என்பது கனிமங்களின் கூட்டுப்பொருள்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருள்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும்.

Question 2.
இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
விடை:

  1. வண்டல் மண்
  2. கரிசல் மண்
  3. செம்மண்
  4. சரளை மண்
  5. காடு மற்றும் மலை மண்
  6. வறண்ட பாலை மண்
  7. உப்பு மற்றும் காரமண்
  8. களிமண் மற்றும் சதுப்புநில மண்

Question 3.
கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.
விடை:
நிறம் :
டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது.

மண்ணின் தன்மைகள் :
ஈரமாக இருக்கும் போது சேறாகவும், ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் தன்மையும் உடையது.

Question 4.
‘வேளாண்மை ‘ – வரையறு.
விடை:
வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருள்களையும் வழங்குவதாகும்.

Question 5.
இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.
விடை:

  • தன்னிறைவு வேளாண்மை
  • இடப்பெயர்வு வேளாண்மை
  • தீவிர வேளாண்மை
  • வறண்ட நில வேளாண்மை
  • கலப்பு வேளாண்மை
  • படிக்கட்டு முறை வேளாண்மை

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 6.
இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • காரிஃப் பருவம் – ஜூன்- செப்டம்பர்
  • ராபி பருவம் – அக்டோபர் – மார்ச்
  • சையத் பருவம் – ஏப்ரல் – ஜூன்

Question 7.
இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.
விடை:
தோட்டப்பயிர்கள் – தேயிலை, காபி, இரப்பர்

Question 8.
கால்நடைகள் என்றால் என்ன?
விடை:

  • கால்நடைகள் இந்தியாவின் விவசாயத்தோடு ஒருங்கிணைந்த கூறுகள் ஆகும். கால்நடைகளின் பல்வேறு வகைப் பயன்பாடுகள் காரணமாக இவை சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன.
  • இவை சமூக, கலாச்சாரப் பாதுகாப்பிற்கும் தன் பங்களிப்பை தருகின்றது.
  • ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அளிப்பதன் மூலம் இவை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

Question 9.
இந்தியாவில் மீன்வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக.
விடை:
கடல் மீன்பிடிப்பு:

  • கண்டத்திட்டு பகுதிகளில் மீன்பிடித்தல் நடைபெறுகிறது.
  • கேரளா கடல்மீன் உற்பத்தியில் முதன்மையானதாகவே உள்ளது.

உள்நாட்டு மீன்பிடிப்பு:

  • நீர்த்தேக்கங்களான ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் போன்ற நீர் நிலைகளில் நடைபெறும் நன்னீர் மீன்பிடிப்பு இவற்றில் அடங்கும்.
  • ஆந்திரப்பிரதேசம் உள்நாட்டு மீன் பிடித்தலில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

VI. காரணம் கூறுக.

Question 1.
வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.
விடை:
மக்கள் தொகையில் விவசாயம் 50% பங்கினையும், நாட்டு வருமானத்தில் 25% பங்கினையும் கொண்டுள்ளதால் வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 2.
மழைநீர் சேமிப்பு அவசியம்.
விடை:
இந்தியா அயனமண்டல பருவக்காற்று காலநிலையைப் பெற்றுள்ளதால் மழை ஒழுங்கற்று, சீராக கிடைப்பதில்லை. எனவே கிடைக்கும் நீரை சேமிப்பது அவசியம்.

VII. வேறுபடுத்துக.

Question 1.
ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 3

Question 2.
வெள்ளப் பெருக்கு கால்வாய் மற்றும் வற்றாத கால்வாய்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 4

Question 3.
கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 5

Question 4.
வண்டல் மண் மற்றும் கரிசல் மண்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 6

VIII. பத்தியளவில் விடையளி.

Question 1.
இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 7
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 8
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 9

Question 2.
‌பல்நோக்குத்‌ ‌திட்டம்‌ ‌என்றால்‌ ‌என்ன?‌ ‌ஏதேனும்‌ ‌ இரண்டு‌ ‌இந்திய‌ ‌பல்நோக்கு‌ ‌திட்டங்கள்‌ ‌பற்றி‌ ‌எழுதுக.‌
விடை:
‌பல்நோக்குத்‌ ‌திட்டம்:‌ ‌

  • இது‌ ‌ஒரு‌ ‌அறிவியல்‌ ‌ முறையிலான‌ ‌நீர்வள‌ ‌மேலாண்மை‌ ‌திட்டமாகும்.‌
  • ஆற்றின்‌ ‌ குறுக்கே‌ ‌பல்வேறு‌ ‌நோக்கங்களுக்காக‌ ‌அணைகளைக்‌ கட்டுவதால்‌ ‌இவை‌ ‌பல்நோக்கு‌ ‌ஆற்றுப்பள்ளத்தாக்குத்‌ ‌திட்டங்கள்‌ ‌என்று‌ ‌அழைக்கப்படுகிறது.‌
  •  ‌நீர்ப்பாசனம்,‌ ‌நீர்மின்‌ ‌உற்பத்தி,‌ ‌குடிநீர்‌ ‌மற்றும்‌ ‌தொழிற்சாலைக்கு‌ ‌நீர்‌ ‌வழங்குதல்,‌ ‌வெள்ளத்தடுப்பு,‌ ‌மீன்வள‌ ‌மேம்பாடு,‌ ‌நீர்‌ ‌வழிப்‌ ‌போக்குவரத்து‌ ‌போன்றவை‌ ‌இதன்‌ ‌பல்வேறு‌ ‌நோக்கங்களாகும்.‌
  • நீர்‌ ‌மின்‌ ‌சக்தி‌ ‌மற்றும்‌ ‌ நீர்ப்பாசனம்‌ ‌ஆகியவை‌ ‌பெரும்பாலான‌ ‌பல்நோக்கு‌‌ ஆற்றுப்‌ ‌பள்ளத்தாக்குத்‌ ‌திட்டத்தின்‌ ‌முக்கிய‌ ‌நோக்கங்களாகும்.‌ ‌

பல்நோக்குத்‌ ‌திட்டத்தின்‌ ‌பெயர்:‌
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 10

Question 3.
தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க .
விடை:
தீவிர வேளாண்மையின் பண்புகள் :

  • தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அறிமுகப்படுத்துவதாகும்.
  • சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் மற்றும் இரசாயான உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சலை பெறுவது இதன் நோக்கமாகும்.

தோட்ட வேளாண்மையின் பண்புகள் :

  • தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்படுகிறது.
  • இவை மலைச் சரிவுகளில் பெரிய எஸ்டேட் பண்ணைகளாக உள்ளது.
  • கடற்கரைப் பகுதிகளுக்கு அருகாமையில் பயிரிடுதல் இவற்றின் ஏற்றுமதிக்கு உகந்ததாக அமையும்.
  • தேயிலை, காபி, இரப்பர் மற்றும் வாசனைப் பொருட்கள் ஆகியவை இந்தியாவின் முக்கியத் தோட்டப்பயிர்களாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 4.
நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள் பற்றி விவரி.
விடை:
உணவுப்பயிர்கள்:
அதிக மக்கள் தொகை காரணமாக இந்திய வேளாண்மை பெரும்பாலும் உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

நெல் :

  • நெல் இந்தியாவின் பூர்வீகப் பயிராகும். உலகளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
  • இது அயனமண்டலப் பயிராகும். 24°C சராசரி வெப்பநிலையும், 150 செ.மீ ஆண்டு மழையளவும் உள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
  • வளமான களிமண் அல்லது வண்டல் மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது.
  • நெல் பயிரிட அதிகமான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
  • இந்தியாவில் நெல் மூன்று முறைகளில் பயிரிடப்படுகின்றது. விதைத் தூரல் முறை
  • ஏர் உழுதல் (அ) துளையிடும் முறை
  • நாற்று நடுதல் முறை

கோதுமை :

  • நெற்பயிருக்கு அடுத்தாற்போல் இரண்டாவது முக்கிய உணவுப் பயிராக விளங்குவது கோதுமை ஆகும்.
  • சுமார் 85 சதவிகிதத்திற்கும் மேலான கோதுமை உற்பத்தி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது.
  • இதைத் தவிர மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் கரிசல்மண் பிரதேசமும் கோதுமை உற்பத்தியில் ஒரு முக்கிய பங்களிப்பினை அளிக்கிறது.

10th Social Science Guide இந்தியா – வேளாண்மை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… இடத்திற்கு இடம் மாறுபடும்.
அ) காலநிலை
ஆ) வானிலை
இ) மண்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ மண்

Question 2.
மண்துகள்கள் ……………… வகைப்படும்.
அ) 4
ஆ) 3
இ) 5
ஈ) 7
விடை:
ஆ) 3

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 3.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ……………… ஆண்டு தொடங்கப்பட்டது.
அ) 1935
ஆ) 1953
இ) 1967
ஈ) 1992
விடை:
ஆ) 1953

Question 4.
மண் ……………. பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அ) 8
ஆ) 7
இ) 3
ஈ) 2
விடை:
அ) 8

Question 5.
வேளாண் பயிர்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு செல்லும் முறை ……….
அ) வேளாண்மை
ஆ) நீர்ப்பாசனம்
இ) கால்வாய்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) நீர்ப்பாசனம்

Question 6.
……………… பாசனம் இந்தியாவின் 2வது முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாகும்.
அ) கால்வாய்
ஆ) கிணற்று
இ) ஏரிப்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) கால்வாய்

Question 7.
………………. பாசனம் இரண்டு வகைப்படும்.
அ) கால்வாய்ப்
ஆ) ஏரிப்
இ) கிணற்றுப்
ஈ) சொட்டுநீர்ப்
விடை:
அ) கால்வாய்ப்

Question 8.
சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ……………. நீர் சேமிக்கப்படுகிறது.
அ) 60%
ஆ) 70%
இ) 20%
ஈ) 80%
விடை:
ஆ) 70%

Question 9.
தண்ணீ ர் பயன்பாட்டை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் …….
அ) ICAR
ஆ) PMKY
இ) IBWL
ஈ) எதுவுமில்லை
விடை:
PMKY

Question 10.
……………… வேளாண்மை வெட்டுதல் (ம) எரித்தல் வேளாண்மை எனப்படுகிறது.
அ) தன்னிறைவு
ஆ) இடப்பெயர்வு
இ) கலப்பு
ஈ) வறண்ட நில
விடை:
ஆ) இடப்பெயர்வு

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 11.
வேளாண் பருவம் ……………… வகைப்படும்.
அ) 4
ஆ) 7
இ) 3
ஈ) 5
விடை:
இ 3

Question 12.
கம்பு ………………ஐ பூர்வீகமாக கொண்ட பயிர்.
அ) ஆசியா
ஆ) இந்தியா
இ) ஆப்பிரிக்கா
ஈ) யூரேசியா
விடை:
இ ஆப்பிரிக்கா

Question 13.
இந்தியாவின் முக்கியப் பயிர் …………………….
அ) கோதுமை
ஆ) நெல்
இ) சோளம்
ஈ) பார்லி
விடை:
ஆ) நெல்

Question 14.
ஏற்றுமதி நோக்கத்திற்காக பயிரிடப்படுபவை ……………… பயிர்கள் ஆகும்.
அ) உணவு
ஆ) வாணிப
இ) முக்கிய
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) வாணிய

Question 15.
அசாமிகா எனும் தேயிலையின் பிறப்பிடம் ……………. ஆகும்.
அ) ஜப்பான்
ஆ) சீனா
இ) இத்தாலி
ஈ) இந்தியா
விடை:
ஈ) இந்தியா

Question 16.
கடல் மீன்பிடிப்பில் முதலிடம் பிடிக்கும் மாநிலம் ……………… ஆகும்.
அ) அசாம்
ஆ) தமிழ்நாடு
இ) கேரளா
ஈ) கர்நாடகா
விடை:
இ கேரளா

Question 17.
உள்நாட்டு மீன்பிடிப்பில் முதலிடம் ………….
அ) பீகார்
ஆ) குஜராத்
இ) ஆந்திரப் பிரதேசம்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ ஆந்திரப் பிரதேசம்

Question 18.
காற்று (ம) நீரின் மூலமான மண் அரிப்பில் பெரும் அளவு பாதிக்கப்படுகிறது ………..
அ) வளமற்ற மண்
ஆ) மண்ண ரிப்பு
இ) பற்றாக்குறை
ஈ) நீர்ப்பாசனம்
விடை:
ஆ) மண்ணரிப்பு

Question 19.
வேளாண்மை ……………… மூலதனம் தேவைப்படும் தொழிலில் ஒன்று.
அ) குறைவு
ஆ) அதிக
இ) நடுநிலைமை
ஈ) எதுமில்லை
விடை:
ஆ) அதிக

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 20.
உருளைக்கிழங்கால் ஏற்படும் புரட்சி ………………. புரட்சி.
அ) மஞ்சள்
ஆ) நீலம்
இ) பழுப்பு
ஈ) வட்ட
விடை:
ஈ) வட்ட

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வளங்களில் …………………….. மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
விடை:
மண்வளம்

Question 2.
இந்தியா …………….. மண் வகையைக் கொண்டது.
விடை:
8

Question 3.
……………………. என்பது தண்ணீ ர் பயன்பாட்டை ஏற்படுத்தப்பட்ட திட்டம்.
விடை:
PMKY

Question 4.
இந்திய உணவுப்பயிர்கள் ………… வகைப்படும்.
விடை:
ஆறு

Question 5.
நாட்டின் மூன்றாவது முக்கிய உணவுப் பயிர் …………… ஆகும்.
விடை:
சோளம்

Question 6.
………….. நம் நாட்டின் முக்கிய தானியப்பயிர் ஆகும்.
விடை:
பார்லி

Question 7.
இந்தியா ……………………. உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
விடை:
கரும்பு

Question 8.
பருத்தி உற்பத்தியில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக ……….. இரண்டாவது இடத்திலுள்ளது.
விடை:
சீனா

Question 9.
காபி …………….. சூழலில் நன்கு வளரும்.
விடை:
நிழலில்

Question 10.
உலக காபி உற்பத்தியில் இந்தியா ……………. இடத்தை வகிக்கிறது.
விடை:
ஏழாவது

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 11.
இந்தியா மொத்த கால்நடைகளில் மாடுகள் ……………… ஆகும்.
விடை:
37.3%

Question 12.
பழங்காலம் தொட்டே நறுமணப் பொருட்களுக்கு ………… உலக புகழ்பெற்றது.
விடை:
இந்தியா

Question 13.
இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு ……………. தொடங்கியது.
விடை:
1919

Question 14.
………………… நறுமணப் பொருள் உற்பத்தியில் முதன்மையான மாநிலம்.
விடை:
கேரளா

Question 15.
………………… ஆற்றுப் பள்ளத்தாக்கு என்பது நீர்வள மேலாண்மையான திட்டமாகும்.
விடை:
பல்நோக்கு

III. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்.

Question 1.
கூற்று : கரிசல் மண் தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளிலிருந்து உருவாகிறது.
காரணம் : பருத்தி, தினை கரிசல்மண்ணில் நன்கு வளரும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
கூற்று : சொட்டு நீர்ப் பாசனத்தில் நீரானது குழாயிலுள்ள நுண்துளைகள் வழியே பயிருக்கு பாய்ச்சப்படுகிறது.
காரணம் : இப்பாசனம் மூலம் 70% நீர் வீணாகிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
இ கூற்று சரி, காரணம் தவறு

IV. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
அ) வண்ட ல் மண்
ஆ) செம்மண்
இ) கரிசல் மண்
ஈ) பாசனம்
விடை:
ஈ) பாசனம்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 2.
அ) மாடு
ஆ) வெள்ளாடு
இ) எருமை
ஈ) மீன்
விடை:
ஈ) மீன்

V. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 11
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 12

VI. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
நீர்ப்பாசனம் குறிப்பு வரைக.
விடை:

  • வேளாண் பயிர்களுக்கு செயற்கை முறையில் நீரைக் கொண்டு செல்லும் முறை நீர்ப்பாசனம் என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தியா அதிக வெப்பத்தையும் சீரற்ற பருவகால மழைப்பொழிவையும் கொண்டிருப்பதால், வறண்ட காலங்களிலும் வேளாண் நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்ப்பாசனம் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

Question 2.
வேகத் தெளிப்பு நீர்ப்பாசனம் குறிப்பு வரைக.
விடை:

  • இவ்வகை நீர்ப்பாசனத்தில் நீரானது குறுகிய குழாய் மூலமாக வேகமாக செலுத்தப்படுகிறது. 4 மீட்டர் உயரம் வரையுள்ள பயிர் வகைகளுக்கும் இவற்றின் மூலம் நீர் பாசனம் செய்யலாம்.
  • எ.கா. கரும்பு மற்றும் சோளப் பயிர்கள்

Question 3.
தமிழ்நாட்டில் கால்நடை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
விடை:

  • தமிழ்நாடு அரசு மாநில அளவிலான கால்நடை கணக்கெடுப்பை கால்நடை வளர்ப்புத் துறை உதவியுடன் மேற்கொள்கிறது.
  • இக்கணக்கெடுப்புகள் மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை , மீன்வளத் துறை போன்றவற்றின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்படுகிறது.

Question 4.
பாசனத்தின் மூலங்கள் யாவை?
விடை:

  • கால்வாய் பாசனம்
  • கிணற்றுப் பாசனம்
  • ஏரிப் பாசனம்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 5.
தோட்டக்கலை பயிர்கள் குறிப்பு வரைக.
விடை:

  • தோட்டக்கலைப் பயிர்கள் என்பது பழங்கள், மலர்கள் மற்றும் காய்வகைப் பயிர்களைக் குறிக்கிறது.
  • பழங்கள் மற்றும் காய்வகைகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

Question 6.
கலப்பு வேளாண்மை என்பது யாது?
விடை:
கலப்பு வேளாண்மை என்பது பயிரிடுதலுடன் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேன் வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

VII. காரணம் கூறுக.

Question 1.
சொட்டு நீர்ப் பாசனம் மூலம் நீரை சேமிக்கலாம்.
விடை:
நீர் சொட்டு சொட்டாக விடப்படுவால் நீர் சேமிக்கப்படுகிறது.
இந்நீர்ப்பாசனத்தின் மூலம் 70% நீர் சேர்க்கப்படுகிறது.

Question 2.
சணல் ஒரு வெப்பமண்டலப் பயிராகும்.
விடை:
வண்டல் மண்ணில் சணல் வளர்வதால் சணல் ஒரு வெப்பமண்டல இழைப் பயிராகும்.

VIII. வேறுபடுத்துக.

Question 1.
செம்மண் மற்றும் சரளை மண்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 13

Question 2.
கால்வாய்ப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை 14

IX. பத்தியளவில் விடையளி.

Question 1.
கிணற்றுப் பாசனம் பற்றி குறிப்பு வரைக.
விடை:
கிணற்றுப் பாசனம்:

  • கிணறு என்பது புவியில் செங்குத்தாக தோண்டப்பட்ட பள்ளம் அல்லது ஆழ்துளை மூலம் நிலத்தடி நீரை புவியின் மேற்பரப்பிற்கு கொண்டுவருதல் ஆகும்.
  • இது நாட்டின் மலிவான மற்றும் நம்பகமான நீர்ப்பாசன ஆதாரமாக உள்ளது.
  • மழைப்பொழிவு குறைவான பகுதிகளிலும் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனம் இல்லாத பகுதிகளிலும் கிணற்றுப் பாசனம் அவசியமாகிறது.
  • கிணறுகள் இரண்டு வகைப்படும். அவை,
    1. திறந்தவெளிக் கிணறுகள்
    2. ஆழ்துளைக் கிணறுகள்.

1 . திறந்த வெளிக் கிணறுகள்:

  • நிலத்தடி நீர் போதுமான அளவிற்கு இருக்கக் கூடிய பகுதிகளில் இவ்வகைப் பாசனம் காணப்படுகிறது.
  • இப்பாசனம் கங்கை சமவெளி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா , காவிரி, நர்மதை மற்றும் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

2. ஆழ்த்துளைக் கிணறுகள்:

  • ஆழ்த்துளைக் கிணற்று பாசனம் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகள், மின் மிகை பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது.
  • குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இப்பாசனம் அதிகளவில் காணப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 3 இந்தியா – வேளாண்மை

Question 2.
இந்தியாவின் முக்கிய பயிர்கள் மற்றும் அதில் வாணிபப் பயிர்கள் பற்றி விவரி.
விடை:
இந்தியாவின் சாகுபடியாகும் முக்கியப் பயிர்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.

  1. உணவு பயிர்கள் – நெல், கோதுமை, மக்காச்சோளம், தினைப்பயிர்கள், பருப்பு வகைகள்.
  2. வாணிபப் பயிர்கள் – கரும்பு, புகையிலை, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள்.
  3. தோட்டப்பயிர்கள் – தேயிலை, காபி, இரப்பர்
  4. தோட்டக்கலைப் பயிர்கள் – பழங்கள், மலர்கள், மற்றும் காய்கறிகள்

2. வாணிபப்பயிர்கள் :

  • வணிக நோக்கத்திற்காக பயிரிடப்படும் பயிர்களை வாணிபப்பயிர்கள் என அழைக்கிறோம்.
  • வாணிபப்பயிர்கள் கரும்பு, புகையிலை, இழைப்பயிர்கள் (பருத்தி மற்றும் சணல்) மற்றும் எண்ணெய் வித்துக்களை உள்ளடக்கியதாகும்.

கரும்பு:

  • இந்தியா கரும்பில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகும்.
  • இப்பயிர் சர்க்கரை தொழிற்சாலைக்கு மூலப்பொருளை அளிக்கிறது.
  • இந்தியாவில் உத்தரப்பிரதேசம் கரும்பின் முதன்மை உற்பத்தியாளராகும்.
  • அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை கரும்பு அதிகம் உற்பத்தி செய்யும் பிற மாநிலங்களாகும்.

பருத்தி:

  • இது இந்தியாவின் மிகப் பெரிய தொழிற்சாலை பிரிவுக்கு மூலப் பொருள்களை அளிக்கிறது.
  • பருத்தி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

சணல்:

  • சணல் ஒரு வெப்பமண்டல இழைப்பயிராகும்.
  • சணல் பயிரிடுவதிலும் உற்பத்தியிலும் மேற்கு வங்காள மாநிலம் முதலிடம் வகிக்கிறது.
  • பீகார், அசாம் மற்றும் மேகாலயா சணல் பயிரிடும் மற்ற மாநிலங்களாகும்.

எண்ணெய் வித்துக்கள்:

  • இந்தியர்களின் உணவில் கொழுப்பு சத்தை அதிகம் அளிப்பது எண்ணெய் வித்துக்கள் ஆகும்.
  • நிலக்கடலை, கடுகு, எள், ஆளி விதை, சூரியகாந்தி, ஆமணக்கு, பருத்தி விதைகள், நைஜர் விதைகள் போன்றவை முக்கியமான எண்ணெய் வித்துக்கள் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

10th Social Science Guide இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ………………..
அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) பஞ்சாப்
ஈ) மத்தியப் பிரதேசம்
விடை:
இ) பஞ்சாப்

Question 2.
கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு …………….. காற்றுகள் உதவுகின்றன.
அ) லூ
ஆ) நார்வெஸ்டர்ஸ்
இ) மாஞ்சாரல்
ஈ) ஜெட் காற்றோட்டம்
விடை:
இ மாஞ்சாரல்

Question 3.
ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ………………. ஆகும்.
அ) சமவெப்ப கோடுகள்
ஆ) சம மழைக்கோடுகள்
இ) சம அழுத்தக்கோடுகள்
ஈ) அட்சக் கோடுகள்
விடை:
அ) சமவெப்ப கோடுகள்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 4.
இந்தியாவின் காலநிலை ……………… ஆக பெயரிடப்பட்டுள்ளது.
அ) அயன மண்டல ஈரக் காலநிலை
ஆ) நிலநடுக் கோட்டுக் காலநிலை
இ) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை
ஈ) மித அயனமண்டலக் காலநிலை
விடை:
இ அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை

Question 5.
பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
அ) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
ஆ) இலையுதிர்க் காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக் காடுகள்
விடை:
ஆ) இலையுதிர்க் காடுகள்

Question 6.
சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ………………..
அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரப் பிரதேசம்
இ) மத்தியப் பிரதேசம்
ஈ) கர்நாடகா
விடை:
ஆ) ஆந்திரப் பிரதேசம்

Question 7.
யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது …………………
அ) நீலகிரி
ஆ) அகத்திய மலை
இ) பெரிய நிக்கோபார்
ஈ) கட்ச்
விடை:
ஈ) கட்ச்

II. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 2

III. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.
காரணம் : இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

IV. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க.

Question 1.
ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.
அ) பாலைவனம்
ஆ) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா
இ) கோதாவரி டெல்டா
ஈ) மகாநதி டெல்டா
விடை:
அ) பாலைவனம்

Question 2.
இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
அ) அட்ச பரவல்
ஆ) உயரம்
இ) கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்
ஈ) மண்
விடை:
ஈ) மண்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
காலநிலை பாதிக்கும் காரணிகளை பட்டியலிக.
விடை:

  • அட்சப் பரவல்
  • கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு
  • கடல் மட்டத்திலிருந்து உயரம்
  • பருவக்காற்று
  • நிலத்தோற்றம்
  • ஜெட் காற்றுகள்

Question 2.
“வெப்ப குறைவு விகிதம்” என்றால் என்ன?
விடை:

  • புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.50C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.
  • இதற்கு ‘வெப்ப குறைவு விகிதம்’ என்று பெயர்.

Question 3.
“ஜெட் காற்றோட்டங்கள்” என்றால் என்ன?
விடை:
வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் “ஜெட் காற்றுகள்” என்கிறோம்.

Question 4.
பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  • இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக்கால காற்றாகும்.
  • பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.
  • இந்தியா ஒரு ஆண்டின் கணிசமான காலத்தில் பருவக்காற்றுகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 5.
இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • குளிர்காலம்: ஜனவரி முதல் பிப்ரவரி வரை
  • கோடைக்காலம்: மார்ச் முதல் மே வரை
  • தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது மழைக்காலம்: ஜீன் முதல் செப்டம்பர் வரை
  • வடகிழக்கு பருவக் காற்று காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை.

Question 6.
‘பருவமழை வெடிப்பு’ என்றால் என்ன?
விடை:

  • தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46°C வரை உயருகிறது.
  • இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) பருவமழை வெடிப்பு எனப்படுகிறது.

Question 7.
அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.
விடை:

  • மேற்கு கடற்கரை,
  • அசாம்,
  • மேகாலயாவின் தென்பகுதி,
  • திரிபுரா,
  • நாகலாந்து,
  • அருணாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகள் 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவையும் பெறுகின்றன.

Question 8.
இந்தியாவில் சதுப்புநிலக்காடுகள் காணப்படும் இடங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகள் உள்ளன.
  • மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் இவ்வகை ஓதக்காடுகள் காணப்படுகின்றன.
  • இவை “மாங்குரோவ் காடுகள்” என்றும் அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 9.
இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
விடை:

  • மன்னார் வளைகுடா
  • நீலகிரி
  • சுந்தரவனம்
  • அகத்தியமலை
  • கஞ்சன்ஜங்கா

VI. வேறுபடுத்துக.

Question 1.
வானிலை மற்றும் காலநிலை. வ.எண் வானிலை
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 3

Question 2.
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர்க் காடுகள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 4

Question 3.
வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 5

VII. காரணம் கண்டறிக.

Question 1.
மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.
விடை:
மேற்கு கடலோர சமவெளி குறுகலானது. சராசரியாக 65 கி.மீ பரப்பு கொண்டது. எனவே குறுகலானது.

Question 2.
இந்தியா அயன மண்டலப் பருவக்காற்றுக் காலநிலையைப் பெற்றுள்ளது.
விடை:
இந்தியா வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. பருவமழை என்பது இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணியாகும்.

Question 3.
மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை.
விடை:
கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ளதால் தாவரங்கள் குளிர்ச்சியாக உள்ளது.

VIII. விரிவான விடையளி.

Question 1.
தென்மேற்கு பருவக் காற்று குறித்து எழுதுக.
விடை:
தென்மேற்கு பருவக்காற்றுக் காலம் அல்லது மழைக்காலம்:

  • இந்திய காலநிலையின் முக்கிய அம்சமாக தென்மேற்கு பருவக்காற்று விளங்குகிறது.
  • பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கணக் கடற்கரை பகுதிக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும் ஜூலை 15இல் அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.
  • உலகளாவிய காலநிலை நிகழ்வான எல்நினோ தென்மேற்கு பருவக்காற்றுக் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46°C வரை உயருகிறது.
  • இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) பருவமழை வெடிப்பு எனப்படுகிறது.
  • இக்காற்று இந்தியாவின் தென்முனையை அடையும்பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும் மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.
  • தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவை தருகிறது.
  • வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது. மேகாலாயாவில் உள்ள மௌசின்ராமில் மிக கனமழையைத் தருகிறது.
  • இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப் பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது.

Question 2.
இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
விடை:
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்:

  • ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டர் உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
  • மேற்குதொடர்ச்சி மலை கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், கேரளா, அசாம், மேற்கு வங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
  • இரப்பர், எபனி, ரோஸ் மரம், தென்னை , மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

அயன மண்டல இலையுதிர்க்காடுகள்:

  • இவ்வகை காடுகள் ஆண்டு சராசரி மழைப்பொழிவு அளவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
  • இதனை ‘பருவக்காலக் காடுகள்’ என்றும் அழைக்கலாம்.
  • இக்காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைக்காலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன.
  • தேக்கு மற்றும் சால் மிக முக்கிய மரங்களாகும்.

அயன மண்டல வறண்ட காடுகள்:
ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.

பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள் :

  • இக்காடுகளை ‘முட்புதர் காடுகள்’ என்றும் அழைப்பர்.
  • கருவேலம், சீமை கருவேல மரம், ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.

அல்பைன்/இமயமலைக்காடுகள்:
உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில் இக்காடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு இமயமலைக்காடுகள், மேற்கு இமயமலைக்காடுகள்:
அல்பைன் காடுகள்:

  • இவ்வகைக்காடுகள் ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன.
  • ஓக், சில்வர், பீர், பைன் மற்றும் ஜுனிபர் மரங்கள் இக்காட்டின் முக்கிய மரவகைகளாகும்.

அலையாத்திக் காடுகள்:

  • கங்கை – பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகள் உள்ளன.
  • மகாந்தி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளிலும் இவ்வகை ஓதக்காடுகள் காணப்படுகின்றன.
  • இவை “மாங்குரோவ் காடுகள்” என்றும் அழைக்கப்படுகின்றன.

10th Social Science Guide இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
சமச்சீர் காலநிலை ………………. காலநிலை எனப்படுகிறது.
அ) பிரிட்டிஷ்
ஆ) பிரெஞ்சு
இ) ரஷ்ய
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) பிரிட்டிஷ்

Question 2.
சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகள் ………….. இருக்கும்.
அ) வெப்பமாக
ஆ) குளிராக
இ) மிதமாக
ஈ) மித குளிராக
விடை:
ஆ) குளிராக

Question 3.
வானிலை நிபுணர்களை ……………… பிரிவாக பிரித்துள்ளனர்.
அ) 3
ஆ) 4
இ) 2
ஈ) 5
விடை:
ஆ) 4

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 4.
தென்னிந்தியாவில் காற்றின் திசையானது ……………… ஆக உள்ள து.
அ) கிழக்கு-மேற்கு
ஆ) மேற்கு-கிழக்கு
இ) வடக்கு-தெற்கு
ஈ) தெற்கு-வடக்கு
விடை:
அ) கிழக்கு-மேற்கு

Question 5.
இந்திய காலநிலை முக்கிய அம்சமாக ………………. விளங்குகிறது.
அ) வடமேற்கு
ஆ) தென்மேற்கு
இ) தென்கிழக்கு
ஈ) வடகிழக்கு
விடை:
இ) தென்மேற்கு

Question 6.
……………… மழைப்பொழிவை இந்தியா தென்மேற்கு பருவக்காற்று மூலம் பெறுகிறது.
அ) 25%
ஆ) 75%
இ) 57%
ஈ) 52%
விடை:
ஆ) 75%

Question 7.
இந்தியாவின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு …………………….. ஆகும்.
அ) 181 செ.மீ
ஆ) 118 செ.மீ
இ) 150 செ.மீ
ஈ) 105 செ.மீ
விடை:
ஆ) 118 செ.மீ

Question 8.
இலையுதிர்க்காடுகள் ………………….. வெப்பத்தைக் கொண்டுள்ளது.
அ) 22°C
ஆ) 27°C
இ) 25°C
ஈ) 42°C
விடை:
ஆ) 27°C

Question 9.
பாலைவனக் காடுகளை ………… என்பர்.
அ) முட்புதர்க் காடுகள்
ஆ) வறண்ட காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக் காடுகள்
விடை:
அ) முட்புதர்க் காடுகள்

Question 10.
…………….. காடுகளை மாங்குரோவ் காடுகள் என்பர்.
அ) அல்பைன்
ஆ) மலைக் காடுகள்
இ) அலையாத்தி
ஈ) வறண்ட காடுகள்
விடை:
இ அலையாத்தி

Question 11.
IBWL ………………ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
அ) 1972
ஆ) 1960
இ) 1952
ஈ) 1925
விடை:
இ 1952

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 12.
இந்தியா …………….. தேசிய பூங்காக்களைக் கொண்டுள்ளது.
அ) 120
ஆ) 102
இ) 140
ஈ) 104
விடை:
ஆ) 102

Question 13.
இந்தியா ………….. உயிர்க்கோள காப்பகங்களை கொண்டுள்ளது…
அ) 18
ஆ) 81
இ) 8
ஈ) 14
விடை:
அ) 18

Question 14.
புலிகள் பாதுகாப்பு திட்டம் …………. ஆண்டு தொடங்கப்பட்டது.
அ) April 1973
ஆ) Sep 1937
இ) Nov 1793
ஈ) Oct 1903
விடை:
அ) April 1973

Question 15.
உலகளாவிய காலநிலை நிகழ்வு …………………. எனப்படுகிறது.
அ) எல்நினோ
ஆ) பருவமழை வெடிப்பு
இ) மாஞ்சஹல்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) எல்நினோ

Question 16.
இந்திய காலநிலையை பாதிக்கும் முக்கிய காரணி ……………… ஆகும்.
அ) நிலத்தோற்றம்
ஆ) வனஉயரி
இ) பருவகால காற்று
ஈ) ஜெட் காற்று
விடை:
இ) பருவகால காற்று

Question 17.
யுனெஸ்கோவின் கீழுள்ள உயிர்க்கோள காப்பகங்கள் …………….. ஆகும்.
அ) 18)
ஆ) 11
இ) 17
ஈ) 12
விடை:
ஆ) 11

Question 18.
பருத்தி ஆடைகளை ……………… காலத்தில் அணிகிறோம்.
அ) குளிர்
ஆ) கோடை
இ) இலையுதிர்க் காலம்
ஈ) பனிக்காலம்
விடை:
ஆ) கோடை

Question 19.
இந்தியா ……………… வனவிலங்கு சரணாலயங்களைக் கொண்டுள்ளது.
அ) 551
ஆ) 515
இ) 505
ஈ) 102
விடை:
ஆ) 515

Question 20.
…………… என்பது குறிப்பிட்ட இடத்தில் நிலவும் வளிமண்டலத் தன்மையைக் குறிக்கும்.
அ) காலநிலை
ஆ) வானிலை
இ) மான்சூன்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) வானிலை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. இந்தியாவை இருசம பாகங்களாகப் பிரிக்கிறது.
விடை:
கடகரேகை

Question 2.
இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் முக்கிய காரணி …………….. ஆகும்.
விடை:
பருவக்காற்று

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 3.
ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டல தன்மையைக் குறிப்பது ……………….
விடை:
வானிலை

Question 4.
ஒரு குறிப்பிட்ட பகுதியின் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பது …………………..
விடை:
காலநிலை

Question 5.
வளிமண்டல குறுகிய பகுதியில் வேகமாக நகரும் காற்றுகள் …………………….. எனப்படும்.
விடை:
ஜெட்காற்றுகள்

Question 6.
மான்சூன் என்ற சொல் ……………. என்ற அரபுச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
விடை:
மௌசிம்

Question 7.
மௌசிம் என்பதன் பொருள் ……………… ஆகும்.
விடை:
பருவகாலம்

Question 8.
இந்தியக் காலநிலை ……………. பருவங்களைக் கொண்டுள்ளது.
விடை:
4

Question 9.
…………….க் காலத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுகிறது.
விடை:
கோடை

Question 10.
தென்மேற்கு பருவக் காற்றுக் காலத்தின் மற்றொரு பெயர் ……………….
விடை:
மழைக்காலம்

Question 11.
உலகின் மிக அதிகளவு மழை பெறும்பகுதி ……………
விடை:
மௌசின்ராம்

Question 12.
மௌசின்ராம் ……………. அமைந்துள்ளது.
விடை:
மேகாலயாவில்

Question 13.
இயற்கைச்சூழ்நிலை அல்லது காடுகளை வாழிடமடாகக் கொண்டு வாழும் விலங்குகள் …………….. எனப்படுகின்றன.
விடை:
வன உயிரினங்கள்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 14.
………………. என்பது நிலம் மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
விடை:
உயிர்க்கோள பெட்டகம்

Question 15.
சுமார் …………………… மேல் உள்ள இமயமலைகளில் காணப்படும் காடுகள் அல்பைன்.
விடை:
2400மீ

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 6
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 7

IV. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : ஜெட் காற்றுகள் குறுகிய பகுதியில் பொதுவாக நகரும்.
காரணம் : வெப்ப மண்டல தாழ்வழுத்தங்களை ஜெட் காற்றுகள் உருவாக்கும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி
விடை:
ஈ) கூற்று தவறு காரணம் சரி

V. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க.

Question 1.
வடகிழக்கு பருவக்காற்று மூலம் நல்ல மழைப்பொழிவு பெறும் மாநிலம் ஆகும்.
அ) அஸ்ஸாம்
ஆ) பீகார்
இ) ஒரிசா
ஈ) மேற்கு வங்காளம்
விடை:
இ ஒரிசா

Question 2.
வங்கக் கடலில் உருவாகும் புயலால் மழை பெறும் மாநிலம்
அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரா
இ) கர்நாடகம்
ஈ) மத்தியப்பிரதேசம்
விடை:
ஈ) மத்தியப் பிரதேசம்

VI. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
வானிலை, காலநிலை என்றால் என்ன?
விடை:
வானிலை :
வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும்.

காலநிலை:
காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 2.
பருவக்காற்று – வரையறு.
விடை:

  • “மான்சூன்” என்ற சொல் “மௌசிம்” என்ற அரபு சொல்லிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பருவகாலம் ஆகும்.
  • பருவ காலம் என்ற சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரபு மாலுமிகளால் இந்தியப் பெருங்கடல் கடற்கரைப் பகுதிகளில் மாறி வீசும் காற்றுகளை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.
  • இக்காற்று கோடைக்காலத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு நோக்கியும், குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு நோக்கியும் விசுகிறது.

Question 3.
நார்வெஸ்டர் என்றால் என்ன?
விடை:

  • ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையிலிருந்து வீசும் தலக்காற்று நார்வெஸ்டர் (அல்லது) கால்பைசாகி என்றழைக்கப்படுகிறது.
  • இக்காற்று கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளான பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய குறுகியக் கால மழையைத் தருகிறது.

Question 4.
இயற்கைத் தாவரங்கள் குறிப்பு வரைக.
விடை:

  • இயற்கைத் தாவரம் என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ மனித உதவியில்லாமல் இயற்கையாக வளர்ந்துள்ள தாவர இனத்தை குறிக்கிறது.
  • இவை இயற்கையான சூழலில் காணப்படுகின்றன.
  • ஒரு பகுதியில் இயல்பாகவே நீண்ட காலமாக மனிதர்களின் தலையீடு இன்றி இயற்கையாக வளரும் மரங்கள், புதர்கள், செடிகள், கொடிகள் போன்ற அனைத்து தாவர உயிரினங்களையும் இயற்கைத் தாவரங்கள் என்கிறோம்.

Question 5.
இந்திய வனவிலங்கு வாரியம் – குறிப்பு வரைக.
விடை:

  • 1952ம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக் குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்க நிறுவப்பட்ட அமைப்பாகும்.
  • இந்திய வனவிலங்கின் செழுமைத் தன்மையையும், பன்மையையும் பாதுகாக்க 102 தேசிய பூங்காக்கள் மற்றும் 515 வனவிலங்குகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன.

VII. வேறுபடுத்துக.

Question 1.
காற்று மோதும் பக்கம் மற்றும் காற்று மோதாப் பக்கம்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 8

Question 2.
குளிர்காலம் மற்றும் கோடைக்காலம்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் 9

VIII. காரணம் கண்ட றிக.

Question 1.
தமிழ்நாடு தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் குறைந்த மழையைப் பெறுகிறது.
விடை:
மழை மறைவுப் பகுதியில் அமைந்துள்ளதால் குறைந்த மழையைப் பெறுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 2.
சமச்சீர் காலநிலை – பிரிட்டிஷ் காலநிலை
விடை:
சமச்சீர் காலநிலை அதிக வெப்பமுடையதாகவோ (அ) மிகக் குளிராகவோ இல்லாததால் பிரிட்டிஷ் காலநிலை எனப்படுகிறது.

IX. விரிவான விடையளி.

Question 1.
இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள் யாவை?
விடை:
அட்சங்கள் கடல் மட்டத்திலிருந்து உயரம், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகளாகும்.

அட்சங்கள் :

  • இந்தியா 8°4′ வட அட்சம் முதல் 37°6′ வட அட்சம் வரை அமைந்துள்ளது.
  • 23°30′ வட அட்சமான கடகரேகை நாட்டை இரு சமபாகங்களாக பிரிக்கிறது.
  • கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிக வெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது.
  • கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகள் மித வெப்ப காலநிலையைக் கொண்டுள்ளது.

உயரம்:

  • புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.50C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.
  • இதற்கு “வெப்ப குறைவு விகிதம்” என்று பெயர்.
  • எனவே சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகள் குளிராக இருக்கும்.
  • உதகை தென்னிந்தியாவின் இதர மலை வாழிடங்கள் மற்றும் இமயமலையில் அமைந்துள்ள முசௌரி, சிம்லா போன்ற பகுதிகள் சமவெளிகளைவிட மிகவும் குளிராக உள்ளது.

கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு:

  • இந்தியாவில் பெரும்பகுதி குறிப்பாக தீபகற்ப இந்தியா கடலிலிருந்து வெகுதொலைவில் இல்லை.
  • இதன் காரணமாக இப்பகுதி முழுவதும் நிலவும் காலநிலை கடல் சார் ஆதிக்கத்தை கொண்டுள்ளது.
  • இப்பகுதியில் குளிர்காலம் குளிரற்று காணப்பட்டு வருடம் முழுவதும் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.

பருவக்கால காற்று:

  • இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி பருவக்கால காற்றாகும்.
  • இவை பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.
  • தென் மேற்கு பருவக்காற்று தொடக்கத்தின் காரணமாக வெப்பநிலை குறைந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமழை வரை பொழிகிறது. இதேபோல் தென்கிழக்கு இந்தியாவின் காலநிலையும் வடகிழக்கு பருவக்காற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.

ஜெட் காற்றோட்டங்கள்:

  • வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் “ஜெட்காற்றுகள்” என்கிறோம்.
  • கீழை ஜெட் காற்றோட்டங்கள் தென்மேற்கு மற்றும் பின்னடையும் பருவக்காற்று காலங்களில் வெப்பமண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 2 இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

Question 2.
வடக்கிழக்கு பருவக்காற்று காலம் விவரி.
விடை:

  • செப்டம்பர் மாத இறுதியில் அழுத்த மண்டலமானது புவியில் தெற்கு நோக்கி நகர ஆரம்பிப்பதால் தென்மேற்கு பருவக்காற்று பின்னடையும் பருவக்காற்றாக நிலப்பகுதியிலிருந்து வங்காளவிரிகுடா நோக்கி வீசுகிறது.
  • பூமி சுழல்வதால் ஏற்படும் விசையின் (கொரியாலிஸ் விசை) காரணமாக காற்றின் திசை மாற்றப்பட்டு வடகிழக்கிலிருந்து வீசுகிறது.
  • எனவே இக்காற்று வடகிழக்கு பருவக்காற்று என அழைக்கப்படுகிறது.
  • இப்பருவக்காலம் இந்திய துணைக்கண்ட பகுதியில் வட கீழைக் காற்றுத் தொகுதி தோன்றுவதற்கு காரணமாக உள்ளது எனலாம்.
  • வங்கக்கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டின் பல பகுதிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளும் மழையைப் பெறுகின்றன.
  • கடற்கரைப் பிரதேசங்களில் கனமழையுடன் கூடிய பலத்த புயல் காற்று, பெரும் உயிர்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது.
  • இப்பருவத்தில் நாடு முழுவதும் பகல் நேர வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

10th Social Science Guide இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் ……..
அ) 2500 கி.மீ
ஆ) 2933 கி.மீ
இ) 3214 கி.மீ
ஈ) 2814 கி.மீ
விடை:
இ) 3214கி.மீ

Question 2.
பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு …..
அ) நர்மதா
ஆ) கோதாவரி
இ) கோசி
ஈ) தாமோதர்
விடை:
இ கோசி

Question 3.
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி …………….. என அழைக்கப்படுகிறது.
அ) கடற்கரை
ஆ) தீபகற்பம்
இ) தீவு
ஈ) நீர்ச்சந்தி
விடை:
ஆ) தீபகற்பம்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 4.
பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ……………ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
அ) கோவா
ஆ) மேற்கு வங்காளம்
இ) இலங்கை
ஈ) மாலத்தீவு
விடை:
இ இலங்கை

Question 5.
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
அ) ஊட்டி
ஆ) ஆனை முடி
இ) கொடைக்கானல்
ஈ) ஜின்டா கடா
விடை:
ஆ) ஆனை முடி

Question 6.
பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ………………
அ) பாபர்
ஆ) தராய்
இ) பாங்கர்
ஈ) காதர்
விடை:
இ பாங்கர்

Question 7.
பழவேற்காடு ஏரி ……………. மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
விடை:
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

II. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 2

III. காரணம் கூறுக.

Question 1.
இமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:

  • இமயமலைகள் ஒரு இளம் மடிப்பு மலை.
  • வடக்கே இருந்த யுரேசியா, தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதிகள் ஒன்றை நோக்கி இமயமலைகள் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவிமேலோடு ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மடிப்பு இமயமலை உருவானது

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 2.
வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்.
விடை:

  • வடஇந்திய ஆறுகள் இமயமலையில் உற்பத்தியாகின்றன.
  • எனவே ஆண்டு முழுவதும் நதிகளில் நீர் கிடைக்கிறது.
  • தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கி பாய்கின்றன.

Question 3.
தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கிப்பாயும் நதிகள்.
விடை:

  • இந்நதிகள் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகின்றன.
  • இந்த ஆறுகள் பள்ளத்தாக்கில் செங்குத்து சாய்வுடன் பாய்கிறது.

Question 4.
மேற்கு நோக்கிப்பாயும் நதிகள் டெல்டாவை உருவாக்குவதில்லை.
விடை:

  • மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மிக முக்கிய தூரமே ஓடி கடலில் கலக்கின்றன.
  • பள்ளத்தாக்குகள் வழிப் பாய்வதால் டெல்டாவை உருவாக்க முடிவதில்லை.

IV. வேறுபடுத்துக.

Question 1.
இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 3

Question 2.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 4

Question 3.
மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 5

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
விடை:
வடமேற்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடனும், வடக்கில் சீனா, நேபாளம், பூடானுடனும், கிழக்கில் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளுடனும்
தெற்கில் இலங்கையுடனும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

Question 2.
இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
விடை:

  • மத்திய தீர்க்கரேகையான 82°30′ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
  • இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது. கிழக்கு தீர்க்க ரேகையின் தலநேரம், இந்திய திட்ட நேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 3.
தக்காண பீடபூமி – குறிப்பு வரைக.
விடை:

  • தக்காணபீடபூமி, தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பைக் கொண்டதாகும்.
  • இது தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது.
  • சுமார் 7 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டுள்ளது.
  • கடல் மட்டத்திலிருந்து 500 மீ முதல் 1000 மீ உயரம் வரையும் அமைந்துள்ளது.

Question 4.
இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.
விடை:
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்:
அ) நர்மதை
ஆ) தபதி
இ) மாகி
ஈ) சபர்மதி

Question 5.
இலடச்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.
விடை:
இலட்சத்தீவுகள் :

  • இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது.
  • இத்தீவுகள் சுமார் 32 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகும்.
  • இதன் நிர்வாகத் தலைநகரம் கவரட்டி ஆகும்.

VI. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.

Question 1.
இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
விடை:
இந்தியாவின் பெரும் அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்.

  1. ட்ரான்ஸ் இமயமலைகள்
  2. இமயமலைகள்
  3. கிழக்கு இமயமலை/பூர்வாஞ்சல் குன்றுகள்

1. டிரான்ஸ் இமயமலைகள் (மேற்கு இமயமலைகள்):

  • இம்மலைகள் ஜம்மு – காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது. இவை ‘திபெத்தியன் இமயமலை’ எனவும் அழைக்கப்படுகிறது.
  • இப்பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள் கடலடி உயிரினப் படிமங்களைக் கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும்.
  • இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகும்.

2. இமயமலை:

  • இவை வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ளது.
  • இது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
  • வடக்கே இருந்த யுரேசியா நிலப்பகுதியும், தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதியும் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இடையிலிருந்த டெத்தீஸ் என்ற கடல் மடிக்கப்பட்டு இமயமலை உருவானது.
  • இது பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது.
  • இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
    1. உள் இமயமலைகள் / இமாத்ரி
    2. மத்திய இமயமலை / இமாச்சல்
    3. வெளி இமயமலை / சிவாலிக்

3. பூர்வாஞ்சல் குன்றுகள் :

  • இவை இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
  • இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
  • பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன.

இமயமலையின் முக்கியத்துவம்:

  • வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
  • வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. எ.கா. சிந்து, கங்கை , பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
  • இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
  • பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
  • வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
  • இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 2.
தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.
விடை:
தீபகற்ப இந்திய ஆறுகள்:

  • தென் இந்தியாவில் பாயும் ஆறுகள் தீபகற்ப ஆறுகள் எனப்படுகின்றன.
  • பெரும்பாலான ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
  • இவை பருவகால ஆறுகள் அல்லது வற்றும் ஆறுகள் எனப்படும்.
  • தீபகற்ப ஆறுகளை அவை பாயும் திசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
    1. கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
    2. மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்

கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் :
அ. மகாநதி:

  • இந்நதி சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சிகாவிற்கு அருகில் உற்பத்தியாகி ஒடிசா மாநிலத்தின் வழியாக சுமார் 85 கி.மீ நீளத்திலும் பாய்கிறது.
  • மகாநதி பல கிளையாறுகளாகப் பிரிந்து டெல்டாவை உருவாக்குகிறது.
  • இந்நதி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

ஆ. கோதாவரி:

  • தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறாகும்.
  • நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
  • இந்நதி விருத்தகங்கா எனவும் அழைக்கப்படுகிறது.
  • கோதாவரி டெல்டா பகுதியில் நன்னீர் ஏரியான கொல்லேறு ஏரி அமைந்துள்ளது.

இ. கிருஷ்ணா :

  • மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மகாபலேஷ்வர் என்ற பகுதியில் ஊற்றாக உருவாகிறது.
  • இது தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது மிகப்பெரிய நதியாகும்.
  • கொய்னா, பீமா, முசி, துங்கபத்ரா மற்றும் பெடவாறு போன்றவை இவ்வாற்றின் முக்கிய துணை ஆறுகளாகும்.

ஈ. காவிரி:

  • காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவிரியில் உற்பத்தியாகிறது.
  • இது தென் இந்தியாவின் கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
  • திருச்சிராப்பள்ளிக்கு முன் ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் மற்றும் காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து, இறுதியில் பூம்புகார் என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.

மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்:
அ) நர்மதை :

  • மத்தியப்பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் உற்பத்தியாகிறது.
  • இது மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமானதாகும்.
  • பர்னா, ஹலுன், ஹொன், பஞ்சர், தூதி, சக்கார், டவா மற்றும் கோலர் ஆகியவை இதன் முதன்மையான துணையாறுகள் ஆகும்.

ஆ) தபதி :

  • தபதி ஆறு தீபகற்ப இந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். இந்நதி 724 கி.மீ நீளத்தையும், 65145 ச.கி.மீ. பரப்பளவு வடிநிலத்தை கொண்டது.
  • இந்நதி மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்டூல் மாவட்டத்தில் முல்டாய் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகிறது.
  • வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி ஆகியன தபதி ஆற்றின் துணை ஆறுகள் ஆகும்.

Question 3.
கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
விடை:

  • வடிகாலமைப்பு என்பது முதன்மையாறுகளும், துணையாறுகளும் ஒருங்கிணைந்து மேற்பரப்பு நீரை கடலிலோ, ஏரிகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ சேர்க்கும் செயலாகும்.
  • முதன்மை ஆறுகளும், துணையாறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு வடிகால் கொப்பரை என்று அழைக்கப்படுகின்றது.

கங்கை நதி தொகுப்பு:
இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும். கங்கையாற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ. பரப்பளவில் பாய்கிறது. கங்கை சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டியும் அதிக மக்களடர்த்தி கொண்டதாகும் உள்ளன.

கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் 7010மீ உயரத்தில் கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.

இந்நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ. ஆகும்.

வட பகுதியிலிருந்து கோமதி, காக்ரா, கண்டக், கோசி மற்றும் தென் பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன. வங்கதேசத்தில், கங்கை பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.

10th Social Science Guide இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
ஆசிய கண்ட த்தில் இந்தியா …………….. பெரிய நாடு.
அ) ஏழாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இரண்டாவது

Question 2.
இந்தியா ……………… நாட்டுடன் தனது மிக நீண்ட எல்லையைப் பகிர்கிறது.
அ) ஆப்கானிஸ்தான்
ஆ) சீனா
இ) மூன்றாவது
ஈ) பங்களாதேஷ்
விடை:
ஈ) பங்களாதேஷ்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 3.
இந்தியக் கடற்கரை …………….. பகுதிகளைக் கொண்டது.
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஆறு
விடை:
ஆ) மூன்று

Question 4.
இந்திய நிலப்பகுதியின் தென்கோடி முனை ……………. ஆகும்.
அ) இந்திரா முனை
ஆ) குமரி முனை
இ) இந்திரா கோல்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) குமரி முனை

Question 5.
இந்தியா ஏறத்தாழ ……………… தீர்க்க கோடுகளை கொண்டுள்ளது.
அ) 40
ஆ) 30
இ) 20
ஈ) 10
விடை:
ஆ) 30

Question 6.
இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ……………… ஆகும்.
அ) 8°4’வ
ஆ) 37°6’வ
இ) 85°30’கி
ஈ) 82°30’கி
விடை:
ஈ) 82°30’கி

Question 7.
மத்திய தீர்க்க ரேகை …………. வழியே செல்கிறது.
அ) லாகூர்
ஆ) மிர்சாபூர்
இ) சபர்மதி
ஈ) வேதாரண்யம்
விடை:
ஆ) மிர்சாபூர்

Question 8.
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் …………….. நகர்.
அ) டாமன் டையூ
ஆ) சண்டிகர்
இ) அமராவதி
ஈ) பாண்டிச்சேரி
விடை:
இ அமராவதி

Question 9.
இந்திய இயற்கையமைப்பு ……………. பெரும் பிரிவுகளைக் கொண்டது.
அ) 6
ஆ) 5
இ) 4
ஈ) 3
விடை:
ஆ) 5

Question 10.
“இமாலயா” என்ற சொல்லுக்கு ……………. மொழியில் பனி உறைவிடம் எனப் பொருள்.
அ) கிரேக்கம்
ஆ) சமஸ்கிருதம்
இ) லத்தீன்
ஈ) பெங்காலி
விடை:
ஆ) சமஸ்கிருதம்

Question 11.
இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் ……………
அ) நீலகிரி
ஆ) திபெத்தியன்
இ) ஆரவல்லி
ஈ) பெங்காலி
விடை:
இ) ஆரவல்லி

Question 12.
ட்ரான்ஸ் இமயமலையின் மற்றொரு பெயர் …………. இமயமலை.
அ) கிழக்கு
ஆ) சர்வாதிரி
இ) திபெத்தியன்
ஈ) சிவாலிக்
விடை:
இ திபெத்தியன்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 13.
…………….. என்பது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
அ) கிழக்கு
ஆ) இமயமலை
இ) ட்ரான்ஸ் இமயமலை
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இமயமலை

Question 14.
உலகின் உயரமான சிகரங்கள் ………………….
அ) 12
ஆ) 14
இ) 41
ஈ) 21
விடை:
ஆ) 14

Question 15.
பூர்வாஞ்சல் குன்றுகள் ….. மாநிலங்களிடையே பரவியுள்ளது.
அ) வடகிழக்கு
ஆ) வடமேற்கு
இ) தென்மேற்கு
ஈ) தென்கிழக்கு
விடை:
அ) வடகிழக்கு

Question 16.
இமயமலை …………….ற்கு பெயர் பெற்றவை.
அ) சரணாலயம்
ஆ) உயிர்க்கோள காப்பகம்
இ) பல்லுயிர் மண்டலம்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ பல்லுயிர் மண்டலம்

Question 17.
சிந்துவின் துணையாறுகள் …………………. ஆகும்.
அ) 4
ஆ) 5
இ) 6
ஈ) 7
விடை:
ஆ) 5

Question 18.
இந்தியாவின் மிகப்பெரிய வடிகாலமைப்பு ……………… ஆகும்.
அ) சிந்து
ஆ) பிரம்மபுத்திரா
இ) கங்கை
ஈ) வைகை
விடை:
இ கங்கை

Question 19.
…………….. விருத்தகங்கா எனப்படுகிறது.
அ) மகாந்தி
ஆ) கோதாவரி
இ) கிருஷ்ணா
ஈ) காவிரி
விடை:
ஆ) கோதாவரி

Question 20.
……………… இந்தியாவின் முக்கிய தீபகற்ப ஆறு.
அ) நர்மதை
ஆ) தபதி
இ) மாஹி
ஈ) ஸ்ரீரங்கம்
விடை:
ஆ) தபதி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியா பரப்பளவில் உலகின் ………… பெரிய நாடு.
விடை:
ஏழாவது

Question 2.
இந்தியாவின் நிலப்பரப்பு ………………… ச.கி.மீ.
விடை:
32,87,263

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 3.
……………. 15,200 கி.மீ. நில எல்லைகளைக் கொண்டுள்ளது.
விடை:
இந்தியா

Question 4.
இந்தியா ஒரு ………….. ஆகும்.
விடை:
தீபகற்பம்

Question 5.
இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் …………… ஆகும்.
விடை:
7,516.6 கி.மீ.

Question 6.
இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் கடல் பகுதி ……….. ஆகும்.
விடை:
பாக்நீர்ச்சந்தி

Question 7.
இந்தியா ஒரு ………………. ஆகும்.
விடை:
துணைக்கண்டம்

Question 8.
இந்தியாவின் தென்கோடி முனை ……………. ஆகும்.
விடை:
இந்திரா முனை

Question 9.
இந்தியாவின் வடமுனை …………… என அழைக்கப்படுகின்றது.
விடை:
இந்திரா கோல்

Question 10.
…………… இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
விடை:
பூர்வாஞ்சல் குன்றுகள்

Question 11.
இமயமலையின் மத்திய மலைத்தொடர் ……………… ஆகும்.
விடை:
இமாச்சல்

Question 12.
இமயமலையின் வடக்கே ………………………. உள்ளது.
விடை:
இமாத்ரி

Question 13.
ஆறுகளால் கொண்டுவரப்படும் படியவைக்கப்படும் புதிய வண்டல்மண் ……….. எனப்படும்.
விடை:
காதர்

Question 14.
காதர் நிலத்தின் மற்றொரு பெயர் ……………… ஆகும்.
விடை:
பெட்நிலம்

Question 15.
கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர். ……….. எனப்படுகிறது.
விடை:
பூர்வாதிரி

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 6
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 7

IV. காரணம் கூறுக.

Question 1.
இந்தியா ஒரு துணைக்கண்டம்.
விடை:
இயற்கை நில அமைப்பு, காலநிலை இயற்கைத் தாவரம் கனிமங்கள் மற்றும் மனிதவளத்தில் ஒரு கண்டத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால், இந்தியா துணைக்கண்டம் எனப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 2.
வடபெரும் சமவெளி = உலகிலேயே வளமான சமவெளி.
விடை:
துணையாறுகளால் உருவாக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளைக் கொண்டுள்ளது.

V. வேறுபடுத்துக.

Question 1.
இமாத்ரி மற்றும் இமாச்சல்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 8

Question 2.
இராஜஸ்தான் சமவெளி மற்றும் பஞ்சாப் ஹரியானா சமவெளி
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 9

Question 3.
இந்திய திட்ட நேரம் மற்றும் உலகத் திட்ட நேரம்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 10

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
பிரம்மபுத்திரா சமவெளி – குறிப்பு வரைக.
விடை:

  • பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி அஸ்ஸாமில் அமைந்துள்ளது.
  • பிரம்மபுத்திரா ஆற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்நில சமவெளியாக வடபெரும் சமவெளியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
  • சுமார் 56,275 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வண்டல் விசிறிகளாகவும், தராய் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளாகவும் காணப்படுகிறது.

Question 2.
ஏன் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது?
விடை:
பாகிஸ்தான், மியான்மர், வங்காள தேசம், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.

இயற்கை நில அமைப்பு, காலநிலை, இயற்கைத் தாவரம், கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.

Question 3.
இயற்கை அமைப்பின் பிரிவுகள் யாவை?
விடை:
இயற்கை அமைப்பை 5 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை,

  1. வடக்கு மலைகள்
  2. வடபெரும் சமவெளிகள்
  3. தீபகற்ப பீடபூமிகள்
  4. கடற்கரைச் சமவெளிகள்
  5. தீவுகள்

Question 4.
கடற்கரைச் சமவெளி – குறிப்பு வரைக.
விடை:

  • இந்திய தீபகற்ப பீடபூமி குறுகலான, வேறுபட்ட அகலத்தையுடைய வடக்கு தெற்காக அமைந்துள்ள கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது.
  • இக்கடற்கரைச் சமவெளிகள் ஆறுகள், கடல் அலைகள் ஆகியவற்றின் அரித்தல் மற்றும் படிய வைத்தல் செயல்களால் உருவானவை.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 5.
ஆறுகளின் வகைகள் யாவை?
விடை:
ஆறுகளை இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.
இமயமலை ஆறுகள் :
சிந்து, பிரம்மபுத்திரா, கங்கை

தீபகற்ப ஆறுகள் :
நர்மதை, கோதாவரி, தபதி, காவிரி, மகாநதி, கிருஷ்ணா.

Question 6.
இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள் யாவை?
விடை:

  1. நீளமானவை மற்றும் அகலமானவை.
  2. வற்றாத நதிகள்
  3. நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை
  4. ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப்பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றது.

Question 7.
தென்னிந்திய ஆறுகளின் சிறப்பியல்புகள் யாவை?
விடை:

  1. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
  2. குறுகலான மற்றும் நீளம் குறைந்தவை.
  3. வற்றும் ஆறுகள்
  4. நீர் மின்சாரம் உற்பத்திக்கு ஏற்றது.

VII. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.

Question 1.
இமயமலையின் முக்கியத்துவத்தை விவரி.
விடை:
இமயமலையின் முக்கியத்துவம்:

  • தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
  • இந்திய துணைக்கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
  • வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. (எ.கா) சிந்து, கங்கை , பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
  • இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
  • பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
  • வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
  • மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
  • இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

Question 2.
அந்தமான் நிக்கோபர் தீவுகள் பற்றி விவரி.
விடை:

  • இத்தீவுக் கூட்டங்கள் கடலடி மலைத்தொடரின் மேல் பகுதியாக அமைந்துள்ளன.
  • பூமத்தியரேகைக்கு அருகில் உள்ளதாலும், அதிக ஈரப்பதம், அதிக வெப்பம் கொண்ட காலநிலை நிலவுவதாலும் அடர்ந்த காடுகள் இங்கு காணப்படுகின்றன.
  • இத்தீவின் பரப்பளவு 8,249 ச.கி.மீ ஆகும்.
  • இத்தீவுக் கூட்டத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
  • அவை வட பகுதி தீவுகள் அந்தமான் எனவும் தென் பகுதி தீவுகள், நிக்கோபர் எனவும் அழைக்கப்படுகின்றன.
  • இத்தீவுக் கூட்டங்கள் நாட்டின் அமைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
  • இதன் நிர்வாகத் தலைநகரம் போர்ட் பிளேயர் ஆகும்.
  • அந்தமான் தீவுக் கூட்டங்களை நிக்கோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து 100 கால்வாய் பிரிக்கிறது.

VIII. செயல்பாடுகள்

கங்கை ஆறு பாயும் மாநிலங்களை இந்திய நிலவரைபடத்தில் குறிக்கவும்.
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு 11

கங்கை ஆறு பாயும் மாநிலங்கள்
1. உத்தரக்கண்ட்
2. உத்திரப்பிரதேசம்
3. பீகார்
4. மேற்கு வங்காளம்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

10th Social Science Guide தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
1709இல் தரங்கம்பாடியில் ………………. ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.
அ) கால்டுவெல்
ஆ) F.W. எல்லிஸ்
இ) சீகன்பால்கு
ஈ) மீனாட்சி சுந்தரனார்
விடை:
இ சீகன்பால்கு

Question 2.
1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ……………… நிறுவினார்.
அ) இரட்டைமலை சீனிவாசன்
ஆ) B.R. அம்பேத்கார்
இ) ராஜாஜி
ஈ) எம்.சி. ராஜா
விடை:
அ) இரட்டைமலை சீனிவாசன்

Question 3.
இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ………….. .இல் உருவாக்கப்பட்டது.
அ) 1918
ஆ) 1917
இ) 1916
ஈ) 1914
விடை:
அ) 1918

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 4.
அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ………………. நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது.
அ) பணியாளர் தேர்வு வாரியம்
ஆ) பொதுப் பணி ஆணையம்
இ) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்
ஈ) பணியாளர் தேர்வாணையம்
விடை:
அ) பணியாளர் தேர்வு வாரியம்

Question 5.
சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அ) எம்.சி. ராஜா
ஆ) இரட்டை மலை சீனிவாசன்
இ) டி.எம். நாயர்
ஈ) பி. வரதராஜூலு
விடை:
அ) எம்.சி. ராஜா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ……………… ஆகும்.
விடை:
தமிழ்

Question 2.
புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் ………………. ஆவார்.
விடை:
F.W. எல்லிஸ்

Question 3.
……….. தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.
விடை:
மறைமலையடிகள்

Question 4.
தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ……………. ஆகும்.
விடை:
நீதிக்கட்சி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 5.
சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் …………….. என மாற்றம் பெற்றது.
விடை:
பரிதிமாற்கலைஞர்

Question 6.
…………… தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
விடை:
ஆபிரகாம் பண்டிதர்

Question 7.
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ………………
விடை:
டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.
ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.
iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிக்களுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

அ) (i), (ii) ஆகியன சரி
ஆ) (i), (iii) ஆகியன சரி
இ) (iv) சரி
ஈ) (ii), (iii) ஆகியன சரி
விடை:
ஆ) (i), (iii) ஆகியன சரி

Question 2.
கூற்று : சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.
காரணம் : இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.
இ) காரணம், கூற்று இரண்டுமே தவறு.
ஈ) கூற்று சரி. ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை .
விடை:
அ) காரணம், கூற்று ஆகியவை சரி.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • அச்சு இயந்திரத்தின் அறிமுகமும், திராவிட மொழிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட மொழியியல் ஆய்வுகளும் மற்றும் பலவும் தமிழ் மறுமலர்ச்சி செயல்பாடுகளுக்கு அடியுரமாய் விளங்கின.
  • அச்சு இயந்திரத்தின் வருகைக்குப் பின்னர் வந்த தொடக்க ஆண்டுகளில் சமயம் சார்ந்த நூல்களை வெளியிடும் முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. நாளடைவில் படிப்படியாக நிலைமைகள் மாறின.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 2.
தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பை நன்குப் புலப்படுத்துக.
விடை:

  • தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ – ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.
  • ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார்.
  • திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழன் தொன்மையையும் நிலைநாட்டினார்.

Question 3.
தங்களுடைய எழுத்துகளின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டிலிடவும்.
விடை:
சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி.கல்யாண சுந்தரம், பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், சுப்பிரமணிய பாரதி, ச. வையாபுரி, கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் தங்களுக்கே உரித்தான வழிகளில் தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின்
புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர்.

Question 4.
நீதிக்கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்துசமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.
விடை:

  • நீதிக்கட்சி 1926இல் இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது.
  • அதன்படி எந்தவொரு தனிநபரும், சாதிவேறுபாடின்றி கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவும் கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.

Question 5.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிக்கைகளை வெளியிட்டது.

Question 6.
பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.
விடை:

  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார். குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.
  • 1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில், பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு.
  • திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார்.
  • பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்.
விடை:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அறிஞர்களான சி.வை.தாமோதரனார் உ.வே. சாமிநாதர் போன்றவர்கள் தமிழ் செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தனர்.

சி.வை. தாமோதரனார் பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார்.

அவர் பதிப்பித்த நூல்களில் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை மற்றும் சூளாமணி ஆகியவை அடங்கும்.

தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவரான உ.வே. சாமிநாதர் செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்களான சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இவ்வாறு பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறுமரபு, மொழி, இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

1816இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியினை நிறுவிய F.W. எல்லிஸ் தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தை சார்ந்தவை, அவை இந்தோ-ஆரியக்குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.

ராபர்ட் கால்டுவெல் (1814-1891) திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத் தலைப்பிடப்பட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856இல் விரிவுபடுத்தினார்.

திராவிட மொழிகளுக்கிடையில் நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார். மேலும் தமிழின் தொன்மையையும் நிலைநாட்டினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

அவர்கள் தமிழ் மொழியே திராவிடர்களின் மொழியென்றும் தமிழர்கள் பிராமணர்கள் அல்ல என்றும் அவர்களின் சமூக வாழ்வில் சாதிகளில்லை, பாலின வேறுபாடில்லை, சமத்துவம் நிலவியது எனவும் வாதிட்டனர்.

தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு தமிழ் மறுமலர்ச்சி பங்களிப்பைச் செய்தது.

வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட இராமலிங்க அடிகள் நடைமுறையிலிருந்த இந்து சமய பழமைவாதத்தை கேள்விக்குள்ளாக்கினார்.

ஆபிரகாம் பண்டிதர் தமிழ் இசைக்குச் சிறப்புச் செய்ததோடு தமிழ் இசை வரலாறு குறித்து நூல்களையும் வெளியிட்டார்.

சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், திரு.வி.கல்யாண சுந்தரம், பரிதிமாற் கலைஞர் மறைமலையடிகள். சுப்பிரமணிய பாரதி. ச.வையாபுரி. கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் தங்களுக்கே உரித்தான வழிகளில், தங்களின் எழுத்துக்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்தெழுச்சிக்குப் பங்களிப்பு செய்தனர்.

வி. சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.

பண்டிதர் அயோத்திதாசரும் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் சமூகரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் உரிமைகளுக்காகப் பகுத்தறிவுச் சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தனர்.

Question 2.
நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பை சுட்டிக் காட்டவும்.
விடை:
1916 நவம்பர் 20இல் டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்க ஒருங்கிணைந்தனர்.

நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.

சாதி மறுப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்திய சட்டச் சிக்கல்களை நீதிக் கட்சியினர் அகற்றியதோடு பொதுக் கிணறுகளையும் நீர் நிலைகளையும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்துவதை தடுத்த தடைகளைத் தகர்த்தனர்.

ஒடுக்கப்பட்ட பிரிவு குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென நீதிக்கட்சியின் அரசு ஆணை பிறப்பித்தது.

இச்சமூகத் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென 1923இல் தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.

பல்வேறு சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நீதிக்கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளை மேற்கொண்டது.

சமூக நீதியை நிலைநாட்டுவதின் ஒரு பகுதியாக பல்வேறு சாதிகளையம் சமூகங்களையும் சார்ந்தவர்களுக்கு அரசுப் பணிகளில் சேர்வதற்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் பொருட்டு இரண்டு வகுப்புவாரி அரசாணைகள் (1921 செப்டம்பர் 16 மற்றும் 1922 ஆகஸ்ட் 15) இயற்றப்பட்டன.

நிர்வாக அதிகாரங்களை அனைத்து சமூகத்தினரும் பங்கிட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம், அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்தது.

இம்முறையைப் பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய அரசு 1929இல் பொதுப்பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது.

Question 3.
தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈவே.ரா பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.
விடை:
பெரியார் ஈ.வெ.ரா:

  • பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
  • அம்பேத்கார் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்.
  • 1937இல் இராஜாஜியின் தலைமையிலான அரசின் செயல்பாட்டினை எதிர்க்கும் விதமாக பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்ததற்கு எதிராகப் பெரியார் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கத்தை நடத்தினார்.
  • இந்தி எதிர்ப்புப் போராட்டமானது (1937-39) தமிழ்நாட்டு அரசியலில் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த இராஜாஜி (1952-54) பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய தொழில் கல்வி பயிற்சித் திட்டமானது, மாணவர்களுக்கு அவர்களின் தந்தையர்கள் செய்து வந்த தொழில்களில் பயிற்சியளிப்பதாக அமைந்தது.
  • இதை குலக்கல்வித் திட்டம் (சாதியை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறை) என விமர்சித்த பெரியார் இத்திட்டத்தை முழுமையாக எதிர்த்தார்.

பெரியார் ஒரு பெண்ணியவாதி:

  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார்.
  • குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.
  • பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
  • திருமணம் செய்து கொடுப்பது எனும் வார்த்தைகளை மறுத்த அவர் அவை பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன. என்றார்.
  • திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார்.
  • பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் “பெண் ஏன் அடிமையானாள்?” என்பதாகும்.

10th Social Science Guide தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி ………………. ஆகும்.
அ) ஹிந்தி
ஆ) தமிழ்
இ) ஆங்கிலம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தமிழ்

Question 2.
……………….இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
அ) 1999
ஆ) 1909
இ) 1990
ஈ) 1899
விடை:
ஆ) 1909

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 3.
தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும் ………………. செல்வாக்கு தமிழ் மொழியிலிருந்து அகற்றப்படுவதையும் மறைமலை அடிகள் ஊக்குவித்தார்.
அ) பிரான்ஸ்
ஆ) சமஸ்கிருதம்
இ) ஆங்கிலம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) சமஸ்கிருதம்

Question 4.
சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென ………….. தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன.
அ) 1996
ஆ) 1932
இ) 1923
ஈ) 1899
விடை:
இ 1923

Question 5.
……………….. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
அ) பெரியார்
ஆ) காமராஜ்
இ) காந்திஜி
ஈ) நேரு
விடை:
அ) பெரியார்

Question 6.
M.C. ராஜா என அழைக்கப்படுபவர் ………………… களை சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர்.
அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு
ஆ) கீழ் வகுப்பு
இ) மேல் வகுப்பு
ஈ) நடுத்தர வகுப்பு
விடை:
அ) ஒடுக்கப்பட்ட வகுப்பு

Question 7.
அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு 1920 அக்டோபர் 31-ல் …………………. நடைபெற்ற து.
அ) ஆக்ரா
ஆ) கொல்கத்தா
இ) பம்பாய்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ பம்பாய்

Question 8.
சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் …………. ஆவார்.
அ) M.C. ராஜா
ஆ) M. சிங்காரவேலர்
இ) அடிகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) M. சிங்காரவேலர்

Question 9.
இசை நிகழ்ச்சிகளிலும் ……………… ஓரளவிலான இடத்தை பெற்றிருந்தன.
அ) ஹிந்தி
ஆ) தமிழ்
இ) ஆங்கிலம்
ஈ) இவையெல்லாம்
விடை:
ஆ) தமிழ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மறுமலர்ச்சியானது ஒரு ………………. பண்பாட்டு நிகழ்வாகும்.
விடை:
கருத்தியல்

Question 2.
தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு ……………… பங்களித்தது.
விடை:
தமிழ் மறுமலர்ச்சி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 3.
……………… புத்துயிரளித்த M. சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடைமைவாதத்தையும் சமத்துவத்தையும் வளர்த்தார்.
விடை:
பௌத்தம்

Question 4.
………………. ‘தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தை’ என்றும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் எனவும் கருதப்படுகிறார்.
விடை:
மறைலை அடிகள்

Question 5.
நீதிக்கட்சி 1926-ல் ………………. சட்டத்தை இயற்றியது.
விடை:
இந்து சமய அறநிலை

Question 6.
பெரியார் ………………. சமூகத்தை விமர்சித்தார்.
விடை:
ஆணாதிக்க

Question 7.
1893-ல் ……………… எனும் அமைப்பை இரட்டைமலை சீனிவாசன் உருவாக்கினார்.
விடை:
ஆதிதிராவிட மகாஜன சபை

Question 8.
……………….. என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
விடை:
பெண்களின் விடுதலை

Question 9.
………………. எனும் சட்டம் அரசால் 1947-இல் இயற்றப்பட்டது.
விடை:
மதராஸ் தேவதாசி சட்டம்

Question 10.
மதராஸ் தேவதாசி மசோதா சட்டமாக மாறுவதற்கு ……………… காத்திருந்தது.
விடை:
15 ஆண்டுகள்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : மொழி என்பது அடையாளத்தின் வலிமையான குறியீடாகும்.
காரணம் : பண்பாடு மற்றும் உணர்வுகளோடு இயைந்திருப்பதால்.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) காரணம் சரி, கூற்று தவறு
இ) காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) காரணம், கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
விடை:
இ காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 2.
கூற்று : டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார். ‘மதராஸ் தேவதாசி’ சட்டத்தை இயற்றினார்.
காரணம் : 1949ல் இச்சட்டம் இயற்றப்பட்டது.

அ) காரணம், கூற்று ஆகியவை சரி.
ஆ) காரணம் சரி, கூற்று தவறு
இ) காரணம் கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) காரணம், கூற்று இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை:
ஆ) காரணம் சரி, கூற்று தவறு

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
எந்தெந்த துறைகளில் மனிதநேயம் படைப்பாற்றலைத் தூண்டியது?
விடை:
சமூக வாழ்வு மற்றும் அறிவு ஆகிய துறைகளோடு மொழி, இலக்கியம், தத்துவம், இசை, ஓவியம், கட்டடக்கலை போன்ற அனைத்துத் துறைகளிலும் படைபாற்றலைத் தூண்டி எழுப்பியது.

Question 2.
நீதிக்கட்சியின் செயல்பாடுகளைக் கூறு.
விடை:

  • நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.
  • நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தி அரசியல் தளத்தில் அவர்களுக்கென இடத்தை உருவாக்கியது.

Question 3.
இரட்டைமலை சீனிவாசன் பற்றிக் கூறு.
விடை:

  • இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தன்னலமற்ற சேவைக்காக
  • ராவ்சாகிப் (1926),
  • ராவ் பகதூர் (1936),
  • திவான் பகதூர் (1936)
  • ஆகிய பட்டங்களால் அவர் சிறப்புச் செய்யப்பட்டார்.

Question 4.
பெண்கள் இயக்கங்கள் யாவை?
விடை:

  • இந்தியப் பெண்கள் சங்கம் (WIA)
  • அகில இந்திய பெண்கள் மாநாடு (ALWC)

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 10 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

Question 5.
சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட பெண்களின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • முத்துலட்சுமி அம்மையார்,
  • நாகம்மை ,
  • கண்ணம்மா,
  • நீலாவதி,
  • மூவலூர் இராமாமிர்தம்,
  • ருக்மணி அம்மாள்,
  • அலமேலு மங்கை தாயாரம்மாள்,
  • நீலாம்பிகை மற்றும்
  • சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
பெண்களின் இயக்கங்களைப் பற்றி விவரிக்க.
விடை:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை மாகாணத்தில் பெண்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுதல் எனும் நோக்கத்துடன் பல பெண்ணிய இயக்கங்கள் நிறுவப்பெற்றன.

அவைகளுள் தமிழ் நாட்டில் உருவான இந்தியப் பெண்கள் சங்கம், அகில இந்தியப் பெண்கள் மாநாடு ஆகியவை முக்கியமானவையாகும்.

இந்தியப் பெண்கள் சங்கம் என்பது 1917இல் அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் தொடங்கப்பெற்றது.

இவ்வமைப்பு தனிநபர் சுகாதாரம், திருமணச் சட்டங்கள், வாக்குரிமை, குழந்தை வளர்ப்பு மற்றும் பொது வாழ்வில் பெண்களின் பங்கு ஆகியவை குறித்து பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்களையும் செய்தி மடல்களையும் வெளியிட்டனர்.

பெண்களின் விடுதலை என்பது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தோர், பாலின சமத்துவம் மற்றும் பாலினம் குறித்த சமூகத்தின் உணர்வுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகப் பணியாற்றினார்.

தங்களுடைய கருத்துகளைப் பங்கிட்டு கொள்வதற்கான ஒரு இடத்தை பெண்களுக்கு இவ்வியக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய பெண்கள் பலர் இருந்தனர்.
முத்துலட்சுமி அம்மையார், நாகம்மை, கண்ணம்மா, நீலாவதி, மூவலூர் இராமாமிர்தம், ருக்மணி அம்மாள், அலமேலு மங்கை தாயாரம்மாள், நீலாம்பிகை மற்றும் சிவகாமி சிதம்பரனார் ஆகியோர் அவர்களுள் முக்கியமானவர்கள் ஆவர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

10th Social Science Guide தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
அ) T.M. நாயர்
ஆ) P. ரங்கையா
இ) G. சுப்பிரமணியம்
ஈ) G.A. நடேசன்
விடை:
ஆ) P. ரங்கையா

Question 2.
இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?
அ) மெரினா
ஆ) மைலாப்பூர்
இ) புனித ஜார்ஜ் கோட்டை
ஈ) ஆயிரம் விளக்கு
விடை:
ஈ) ஆயிரம் விளக்கு

Question 3.
“அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?
அ) அன்னிபெசன்ட்
ஆ) M. வீரராகவாச்சாரி
இ) B.P. வாடியா
ஈ) G.S. அருண்டேல்
விடை:
அ) அன்னிபெசன்ட்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 4.
கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
அ) S. சத்தியமூர்த்தி
ஆ) கஸ்தூரிரங்கர்
இ) P. சுப்பராயன்
ஈ) பெரியார் ஈவெ.ரா
விடை:
அ) S. சத்தியமூர்த்தி

Question 5.
சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?
அ) K. காமராஜ்
ஆ) C. இராஜாஜி
இ) K. சந்தானம்
ஈ) T. பிரகாசம்
விடை:
ஈ) T. பிரகாசம்

Question 6.
இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?
அ) ஈரோடு
ஆ) சென்னை
இ) சேலம்
ஈ) மதுரை
விடை:
இ சேலம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி ………….- ஆவார்.
விடை:
T. முத்துச்சாமி

Question 2.
………………. எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.
விடை:
பாரத மாதா சங்கம்

Question 3.
சென்னையில் தொழிற்சங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ………………… ஆவார்.
விடை:
B.P. வாடியா

Question 4.
சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் …………..
விடை:
C. இராஜாஜி

Question 5.
……………… முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.
விடை:
யாகுப் ஹசன்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 6.
1932 ஜனவரி 26இல் ……………… புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.
விடை:
ஆரியா (எ) பாஷ்யம்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது.
ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது.
iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.
iv) V.S சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (iii) மட்டும் சரி
இ) (iv) சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி

Question 2.
i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை.
ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் இராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார்.
iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
iv) தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (i) மற்றும் (iii) ஆகியவை சரி
இ) (ii) மட்டும் சரி
ஈ) (i), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
விடை:
இ (ii) மட்டும் சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 2

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பை பட்டியலிடுக.
விடை:

  • தொடக்ககால தேசியவாதிகள் அரசமைப்பு வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • அறைக்கூட்டங்கள் நடத்துவதும் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுவதும் அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன.

Question 2.
திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:

  • திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் வ.உ.சி. சுப்பிரமணிய சிவாவின் தோளோடுதோள் நின்றார்.
  • தலைவர்கள் இருவரும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர். தொடக்கத்தில் வ.உ.சிக்கு கொடுமையான வகையில் இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன.
  • மக்கள் செல்வாக்கு பெற்ற இவ்விரு தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதில் திருநெல்வேலியில் கலகம் வெடித்தது. காவல்நிலைய, நீதிமன்ற, நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
  • காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 3.
இந்தியாவின் விடுதலைப் பேராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு யாது?
விடை:

  • 1916இல் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கிய அவர் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார்.
  • அன்னி பெசன்ட் விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது இந்தியா ஒரு தேசம் எனும் இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதினார்.
  • நியூ இந்தியா, காமன் வீல் எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.
விடை:
சுதேசி இயக்கம் :

  • வங்கப் பிரிவினை (1905) சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்று விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது.
  • வ.உ. சிதம்பரனார். V. சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுரேந்திரநாத் ஆரியா ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த தலைவர்களாவர்.
  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
  • மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக தமிழ் பயன்படுத்தப்பட்டது.
    மக்களின் நாட்டுப்பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்பியதில் சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் மிக முக்கியமானவையாகும்.
  • சுதேசி கருத்துக்களைப் பரப்புரை செய்ய பல இதழ்கள் தோன்றின.
  • சுதேசமித்திரன், இந்தியா ஆகிய இரண்டும் முக்கிய இதழ்களாகும்.
  • சுதேசி இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி:

  • சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் தொடங்கப்பட்ட சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் ஆகும்.
  • இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.

Question 2.
தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.
விடை:
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்:

  • பிராமணரல்லாதோர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்களை ஒரு அரசியல் அமைப்பாக அணிதிரட்டிக் கொண்டனர்.
  • 1912இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.
  • அதன் செயலராக (. நடேசனார் செயலூக்கமிக்க வகையில் பங்காற்றினார்.
  • 1916 ஜீன் மாதத்தில் அவர் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கா ‘திராவிடர் சங்க தங்கும் விடுதி’யை நிறுவினர்.
  • 1916 நவம்பர் 20இல் P. தியாகராயர், டாக்டர் T.M. நாயர், C. நடேசனார் ஆகியோர் தலைமையில் – சுமார் முப்பது பிராமணரல்லாதவர்கள் சென்னை விக்டோரியா பொது அரங்கில் கூடினர்.
  • பிராமணரல்லாதோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 3.
சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி.
விடை:
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்:
காந்தியடிகள் முன்வைத்த கோரிக்கைகளை வைஸ்ராய் ஏற்றுக் கொள்ளாததைத் தொடர்ந்து அவர் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.

ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்து தலைமையேற்று வேதாரண்யம் நோக்கி அணி வகுத்துச் சென்றார்.

1930 ஏப்ரல் 13இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து தொடங்கி ஏப்ரல் 28இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் வேதாரண்யத்தைச் சென்றடைந்தது.

இவ்வணிவகுப்புக்கென்றே “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” எனும் சிறப்புப்பாடலை நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் புனைந்திருந்தார்.

காவல்துறையின் கொடூரமான நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அணிவகுத்துச் சென்ற சத்தியாகிரகிகளுக்கு பயணித்த பாதையெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேதாரண்யம் சென்றடைந்த பின்னர் இராஜாஜியின் தலைமையில் 12 தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பை அள்ளினர்.

T.S.S. ராஜன் திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம், C. சாமிநாதர் மற்றும் K. சந்தானம் ஆகியோர் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற ஏனைய முக்கியத் தலைவர்களாவர்.

தமிழக மாவட்டங்களில் பரவலான போராட்டங்கள்:

  • T. பிரகாசம், K. நாகேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையில் சத்தியாகிரகிகள் சென்னைக்கு அருகேயுள்ள உதயவனம் என்ற இடத்தில் ஒரு முகாமை அமைத்திருந்தனர்.
  • இராமேஸ்வரத்தில் உப்பு சத்தியாகிரம் மேற்கொள்ள முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • உப்புச்சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதியாவார்.
  • 1932 ஜனவரி 26இல், பரவலாக ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றினார்.

திருப்பூர் குமரனின் வீரமரணம்:
1932 ஜனவரி 11இல் திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் நாட்டுப்பற்றுமிகுந்த பாடல்களைப் பாடிச் சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்து உதைக்கப்பட்டனர்.

10th Social Science Guide தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
…………… அடையாறு எனும் இடத்தில் உள் பிரம்மஞான சபை கூடியது.
அ) நவம்பர் 1884
ஆ) டிசம்பர் 1994
இ) டிசம்பர் 1884
ஈ) நவம்பர் 1994
விடை:
ஆ) டிசம்பர் 1994

Question 2.
இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு ………………. கொல்கத்தாவில் நடைபெற்றது.
அ) 1886
ஆ) 1898
இ) 1868
ஈ) 1888
விடை:
அ) 1886

Question 3.
இந்திய தேசியக் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ……………….. பிரதிநிதிகளில் 22 பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தவர்களாவர்.
அ) 22
ஆ) 72
இ) 83
ஈ) 17
விடை:
ஆ) 72

Question 4.
மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக ……………… மொழி பயன்படுத்தப்பட்டது.
அ) ஆங்கிலம்
ஆ) தமிழ்
இ) ஹிந்தி
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தமிழ்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 5.
புரட்சிகர தேசியவாதிகளுக்குப் ………………. பாதுகாப்பான புகலிடமாயிற்று.
அ) தமிழ்நாடு
ஆ) பாண்டிச்சேரி
இ) கேரளா
ஈ) கர்நாடகா
விடை:
ஆ) பாண்டிச்சேரி

Question 6.
…………….இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.
அ) 1912
ஆ) 1921
இ) 1812
ஈ) 1821
விடை:
அ) 1912

Question 7.
……………… நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சரானார்.
அ) சுப்பராயலு
ஆ) T.M. நாயர்
இ) சி. நடேசனார்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) சுப்பராயலு

Question 8.
தமிழ்நாட்டில் …………….. இல் மௌலானா சௌகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
அ) மே 17, 2000
ஆ) 17 ஏப்ரல் 1920
இ) 12 ஏப்ரல் 1922
ஈ) 25 ஏப்ரல் 1930
விடை:
ஆ) 17 ஏப்ரல் 1920

Question 9.
………………. வேல்ஸ் இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது.
அ) 13 ஜனவரி 1922
ஆ) நவம்பர் 1902
இ) நவம்பர் 1930)
ஈ) அக்டோபர் 1919
விடை:
அ) 13 ஜனவரி 1922

Question 10.
……………… வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்தார்.
அ) காந்திஜி
ஆ) ராஜாஜி
இ) நேரு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) ராஜாஜி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………………. 1891இல் சுதேசமித்திரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசியப் பருவ இதழையும் தொடங்கினார்.
விடை:
G. சுப்ரமணியம்

Question 2.
தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற துவக்ககால அமைப்பு ……………… ஆகும்.
விடை:
சென்னை மகாஜன சபை

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 3.
………. ஆகிய இரண்டும் முக்கிய தேசப்பத்திரிக்கை இதழ்களாகும்.
விடை:
சுதேசமித்ரன், தி ஹிந்து

Question 4.
…………… இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
விடை:
சுதேசி

Question 5.
சிறைத்தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்ரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த ………………க்கு இடம்பெயர்ந்தார்.
விடை:
பாண்டிச்சேரி

Question 6.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ………………. ஆவார்.
விடை:
ஆஷ்

Question 7.
……………… பாரதமாதா சங்கம் என்ற அமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார்.
விடை:
செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன்

Question 8.
…………….. பிரம்மஞான சபையின் தலைவரும் மற்றும் அயர்லாந்துப் பெண்மணியும் ஆவார்.
விடை:
அன்னிபெசன்ட்

Question 9.
1923-ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் நீதிக்கட்சியைச் சேர்ந்த ……………… அமைச்சரவையை அமைத்தார்.
விடை:
பனகல் அரசர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 10.
1919 ஏப்ரல் 6-ல் …………….. எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பு வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன.
விடை:
கருப்புச் சட்டத்தை

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று: வங்கப்பிரிவினை சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்றது.
காரணம்: வங்கப் பிரிவினை 1905ஆம் ஆண்டு நடந்தது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி
விடை:
அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

Question 2.
கூற்று: சைமன் குழு இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்டது.
காரணம்: ஒரு இந்தியர்கள் கூட அக்குழுவில் இடம்பெறவில்லை என்பதால்

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
விடை:
ஈ) கூற்று காரணம் இரண்டு சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனாரால் தொடங்கப்பட்ட சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் ஆகும்.
  • இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.

Question 2.
ஜார்ஜ் ஜோசப் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • வழக்கறிஞரும் நன்கு சொற்பொழிவாற்றும் திறன் படைத்தவருமான ஜார்ஜ் ஜோசப் மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதிலும், அதன் நோக்கத்தை மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.
  • செங்கண்ணூரில் (இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம்) பிறந்திருந்தாலும் மதுரையில் வசிப்பதையே விரும்பி மக்களின் வழக்கறிஞராகப் பணி செய்தார்.
  • பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இவர் ஆற்றி சேவையின் காரணமாக மதுரை மக்கள் இவரை ‘ரோசாப்பு துரை’ என அன்புடன் அழைத்தனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

Question 3.
நீல் சிலை அகற்றும் போராட்டம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • ஜேம்ஸ் நீல், மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலாட்படையைச் சேர்ந்தவர்.
  • 1857 பேரெழுச்சியின்போது நடைபெற்ற கான்பூர் படுகொலை என்றழைக்கப்படும் சம்பவத்தில் பல ஆங்கிலப் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

Question 4.
திருப்பூர் குமரனின் வீரமரணம் குறித்து எழுதுக.
விடை:

  • 1932 ஜனவரி 11இல் திருப்பூரில் கொடிகளை ஏந்தியவண்ணம் நாட்டுப்பற்றுமிகுந்த பாடல்களைப் பாடிச் சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்து உதைக்கப்பட்டனர்.
  • பரவலாக திருப்பூர் குமரன் என்றழைக்கப்படும் O.K.S.R. குமாரசாமி தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறே விழுந்து இறந்தார்.
  • ஆகையால் இவர் கொடிகாத்த குமரன் என புகழ்ப்படுகிறார்.

Question 5.
முதல் காங்கிரஸ் அமைச்சரவை பற்றிக் கூறு.
விடை:

  • 1937ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
  • நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது.
  • தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது, மக்களிடையே அது பெற்றிருந்த செல்வாக்கைச் சுட்டிக்காட்டியது.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
சென்னை மகாஜன சபை மற்றும் மிதவாதக் கூட்டத்தை விவரி.
விடை:
சென்னை மகாஜன சபை:

  • தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் துவங்கப்பெற்ற தொடக்ககால அமைப்பு சென்னை மகாஜன சபையாகும்.
  • 1884 மே 16இல் M. வீரராகவாச்சாரி, P. அனந்தாச்சார்லு , P. ரங்கையா மற்றும் சிலரால் நிறுவப்பட்ட இவ்வமைப்பின் முதல் தலைவராக P. ரங்கையா பொறுப்பேற்றார்.
  • இதனுடைய செயலாளராக பொறுப்பேற்ற P. அனந்தாச்சார்லு இதன் செயல்பாடுகளில் பங்காற்றினார்.
  • அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்று கூடி தனிப்பட்ட விதத்திலும் அறைக்கூட்டங்கள் நடத்தியும் பொதுப்பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து தங்கள் கருத்துகளை அரசுக்குத் தெரியப்படுத்தினர்.
  • குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும்.
  • இவ்வமைப்பின் பல கோரிக்கைகள் பின்னர் 1885இல் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் கோரிக்கைகளாயின.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

மிதவாதக் கூட்டம் :

  • சென்னை மகாஜன சபை போன்ற மாகாண அமைப்புகள் அகில இந்திய அளவிலான அமைப்புகள் நிறுவப்படுவதற்கு வழிகோலியது.
  • இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பாக பல கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
  • அவ்வாறான ஒரு கூட்டம் 1884 டிசம்பரில் அடையாறு எனும் இடத்தில் உள்ள பிரம்மஞான சபையில் கூடியது.
  • தாதாபாய் நௌரோஜி, K.T. தெலாங், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் சில முக்கியத் தலைவர்களுடன், சென்னையிலிருந்து G. சுப்பிரமணியம், P. ரங்கையா, P. அனந்தாச்சார்லு போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

VII. செயல்பாடுகள்

தமிழ்நாட்டில் உள்ள சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களை தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 9 தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் 5

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

10th Social Science Guide தேசியம்: காந்திய காலகட்டம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
அ) மோதிலால் நேரு
ஆ) சைஃபுதீன் கிச்லு
இ) முகம்மது அலி
ஈ) ராஜ் குமார் சுக்லா
விடை:
ஆ) சைஃபுதீன் கிச்லு

Question 2.
இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
அ) பம்பாய்
ஆ) மதராஸ்
இ) கல்கத்தா
ஈ) நாக்பூர்
விடை:
ஈ) நாக்பூர்

Question 3.
விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
அ) 1930 ஜனவரி 26
ஆ) 1929 டிசம்பர் 26
இ) 1946 ஜூன் 16
ஈ) 1947 ஜனவரி 15
விடை:
அ) 1930 ஜனவரி 26

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 4.
முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
அ) 1858
ஆ) 1911
இ) 1865
ஈ) 1936
விடை:
இ 1865

Question 5.
1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?
அ) கோவில் நுழைவு நாள்
ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)
இ) நேரடி நடவடிக்கை நாள்
ஈ) சுதந்திரப் பெருநாள்
விடை:
அ) கோவில் நுழைவு நாள்

Question 6.
மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
அ) 1858ஆம் ஆண்டு சட்டம்
ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909
இ) இந்திய அரசுச் சட்டம், 1919
ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935
விடை:
ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
காந்தியடிகளின் அரசியல் குரு ……………… ஆவார்.
விடை:
கோபால கிருஷ்ண கோகலே

Question 2.
கிலாபத் இயக்கத்துக்கு ……………… தலைமை ஏற்றனர்.
விடை:
அலி சகோதரர்கள்

Question 3.
1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ………………. அறிமுகம் செய்தது.
விடை:
இரட்டை ஆட்சி முறையை

Question 4.
வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ………………
விடை:
கான் அப்துல் கஃபார்கான்

Question 5.
சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் ……………..ஐ ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.
விடை:
வகுப்புவாரி ஒதுக்கீடு

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 6.
…………… என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார். விடை:
உஷா மேத்தா
ans:

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.
ii) எம். சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
iii) ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.
iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை.

அ) (i) மற்றும் (ii) சரியானது
ஆ) (ii) மற்றும் (iii) சரியானது
இ) (iv) சரியானது
ஈ) (i), (ii) மற்றும் (iii) சரியானது
விடை:
ஈ) (i), (ii) மற்றும் (iii) சரியானது

Question 2.
கூற்று : காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது.
காரணம் : காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி இர்வின் ஒப்பந்தம் வழிவகை செய்தது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுகான சரியான விளக்கம் ஆகும்.
விடை:
இ கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

Question 3.
கூற்று : காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939ஆம் ஆண்டு பதவி விலகின.
காரணம் : காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விடை:
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம் காந்திய காலகட்டம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம் காந்திய காலகட்டம் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.
விடை:

  • அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இந்தக்கூட்டம் பற்றி அறிந்தவுடன் அந்த இடத்தை பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன் ஜெனரல் ரெஜினால்டு டயர் சுற்றி வளைதார்.
  • ஆயுதமேந்திய வீரர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்கள்.
  • அதிகாரபூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் இந்தத் துப்பாக்கிக்சூட்டில் கொல்லப்பட்டனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 2.
கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தபோது இசுலாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட துருக்கியின் கலிபா கடுமையாக நடத்தப்பட்டார்.
  • அவருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்றழைக்கப்பட்டது.
  • மௌலானா முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி எனும் அலி சகோதரர்கள் தலைமையில் இவ்வியக்கம் நடந்தது.
  • இந்த இயக்கத்துக்கு காந்தியடிகள் ஆதரவளித்தார்.

Question 3.
ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப்பெற்றார்?
விடை:

  • 1922 பிப்ரவரி 5ஆம் நாள் தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் தூண்டுதலில் வன்முறையாக மாறியது.
  • இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர்.
  • இதன் காரணமாக காந்தியடிகள் உடனடியாக இயக்கத்தை திரும்பப்பெற்றார்.

Question 4.
சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
விடை:

  • 1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது.
  • இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.
  • இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர்.
  • காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன.

Question 5.
முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?
விடை:

  • டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து திருப்தி அடையாத காங்கிரசார் சிலர், முழுமையான சுதந்திரம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.
  • 1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது.
  • அதில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 6.
பகத் சிங் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • பஞ்சாபில் பகத்சிங், சுக்தேவ், மற்றும் அவர்களது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு இராணுவத்தை மீண்டும் அமைத்தனர்.
    லாலா லஜபதிராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை
  • அதிகாரி சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்டார்.
  • அவர்கள் “இன்குலாப் ஜிந்தாபாத்” “பாட்டாளி வர்க்கம் வாழ்க” ஆகிய முழக்கங்களை எழுப்பினார்கள்.
  • ராஜகுருவும் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
  • பகத்சிங்கின் அசாத்தியமான துணிச்சல் இந்தியா முழுவதும் வாழ்ந்த இளைஞர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.

Question 7.
பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?
விடை:

  • தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
  • ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.
விடை:
ஜெனரல் டயரின் கொடுங்கோன்மை:

  • அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இந்தக்கூட்டம் பற்றி அறிந்தவுடன் அந்த இடத்தை பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன் ஜெனரல் ரெஜினால்டு டயர் சுற்றி வளைத்தார்.
  • உயர்ந்த மதில்களுடன் அமைந்த அந்த மைதானத்துக்கு இருந்த ஒரே வாயில் பகுதியை ஆக்ரமித்த ஆயுதமேந்திய வீரர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்கள்.
  • அதிகாரபூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.
  • ஓராயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

கிலாபத் இயக்கம் :

  • 1918இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது.
  • இசுலாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட துருக்கியின் கலிபா கடுமையாக நடத்தப்பட்டார்.
  • அவருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்றழைக்கப்பட்டது.
  • இந்த இயக்கத்துக்கு காந்தியடிகள் ஆதரவளித்தார்.
  • இந்த இயக்கத்தை இந்து முஸ்லீம்களை இணைக்க ஒரு வாய்ப்பாகக் கருதினார்.
  • 1919ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு அவர் தலைமையேற்றார்.
  • அல்லாஹூ அக்பர், வந்தே மாதரம், இந்து முஸ்லீம் வாழ்க ஆகிய மூன்று தேசிய முழக்கங்களை முன்மொழிந்த சௌகத் அலியின் யோசனையை காந்தியடிகள் ஆதரித்தார்.
  • ஒத்துழையாமை இயக்கம் 1920 ஆகஸ்டு முதல் நாள் தொடங்கியது.

வரிகொடா இயக்கம் மற்றும் சௌரி சௌரா சம்பவம்:

  • 1922 பிப்ரவரி மாதம் பர்தோலியில் வரிகொடா இயக்க பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார்.
  • இந்த இயக்கங்கள் ஒரு தேசியத் தலைவராக காந்தியடிகளின் நற்பெயரைப் பெரிதும் மேம்படுத்தின.
  • குறிப்பாக விவசாயிகள் மத்தியில் ஒரு மாபெரும் தலைவராக அவரது மரியாதையை உயர்த்தின.
  • வேல்ஸ் இளவரசரின் இந்தியப் பயணத்தை புறக்கணிப்பது வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
  • 1922 பிப்ரவரி 5ஆம் நாள் தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அருகே சௌரி சௌரா என்ற கிராமத்தில் தேசியவாதிகள் நடத்தியப் பேரணி காவல்துறையினரின் கோபமுட்டும் நடவடிக்கைகளினால் வன்முறையாக மாறியது.
  • தாம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை உணர்ந்த காவல்துறையினர் பாதுகாப்புக்காக தங்களை காவல்நிலையத்துக்குள் அடைத்துக் கொண்டனர்.
  • ஆனால் ஆத்திரம்கொண்ட கூட்டத்தினர் 22 காவலருடன் காவல்நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்களும் உயிரிழந்தனர்.
  • காந்தியடிகள் உடனடியாக இந்த இயக்கத்தை திரும்பப்பெற்றார்.

சைமன் குழு புறக்கணிப்பு:

  • 1927 நவம்பர் 8ஆம் நாள் இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்காா இந்திய சட்டபூர்வ ஆணையத்தை நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது.
  • சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.
  • இது ‘சைமன் குழு’ என்றே அழைக்கப்பட்டது.
    இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாக இந்தக் குழுவில் இடம்பெற்றனர்.
  • இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர்.
  • காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன.

Question 2.
காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.
விடை:

  • டொமினியன் அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து திருப்தி அடையாத காங்கிரசார் சிலர், முழுமையான சுதந்திரம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.
  • 1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது.
  • அதில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.

உப்பு சத்தியாகிரகம்:

  • 1930 ஜனவரி 31ஆம் நாளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவுடன் அரசப்பிரதிநிதி (வைசிராய்) இர்வின் பிரபுவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. அவை கீழ்க்கண்டவையாகும்:
  • இராணுவம் மற்றும் ஆட்சிப்பணி சேவைகளுக்கான செலவுகளை 50 சதவிகிதம் வரை குறைப்பது.
  • முழுமையான புறக்கணிப்பை அறிமுகம் செய்வது.
  • அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது.
  • நிலவருவாயை 50 சதவிகிதமாக குறைப்பது.
  • உப்பு வரியை ரத்துசெய்வது.

வட்டமேசை மாநாடு:

  • காங்கிரசின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை.
  • இந்தப் பிரச்சனை குறித்து எந்தவித முடிவும் எட்டப்படாமலேயே மாநாடு நிறைவடைந்தது.

காந்தி-இர்வின் ஒப்பந்தம்:
வன்முறையில் ஈடுபடாத அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது, கைப்பற்றப்பட்ட நிலத்தைத் திரும்பத் தருவது, பதவி விலகிய அரசு ஊழியர்கள் விஷயத்தில் நீக்குபோக்காக நடந்துகொள்வது ஆகிய கோரிக்கைகளை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொண்டது.

கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது.

சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டல் :
இந்தியா திரும்பிய பிறகு காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டினார்.

  • இந்தமுறை அரசு எதிர்ப்பை சமாளிக்க ஆயத்தமாக இருந்தது.
  • படைத்துறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு 1932 ஜனவரி 4ஆம் நாள் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.
  • விரைவில் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
  • ஆர்ப்பட்டங்கள் மற்றும் மறியல் செய்த மக்கள் படைகொண்டு அடக்கப்பட்டனர்.

அதன் முக்கிய விதிமுறைகள் :

  • தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன. மாறாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
  • ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71லிருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையில் 18 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 3.
இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.
விடை:
நேரு அறிக்கை:

  • அரசியல் சாசன வரைவுக்காக திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான திட்டம் வகுக்க மோதிலால் நேரு தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது.
  • அந்தக் கமிட்டியின் அறிக்கை ‘நேரு அறிக்கை’ என்று அழைக்கப்பட்டது.

சுதந்திரம் பற்றிய பேச்சுவார்த்தை: சிம்லா மாநாடு

  • 1945ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் நாள் வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது.
  • இந்ததிட்டம் மூலமாக அரசப்பிரதிநிதிகள் செயற்குழுவில் இந்துக்களும் முஸ்லீம்களும் சம எண்ணிக்கையில் இடம்பெற்ற ஓர் இடைக்கால அரசுக்கு வகை செய்யப்பட்டது.
  • போர் தொடர்பான துறை தவிர்த்து அனைத்து இதர துறைகளும் இந்திய அமைச்சர்கள் வசம் கொடுக்கப்பட இருந்தன.

அமைச்சரவைத் தூதுக்குழு:

  • பிரிட்டனில் தொழிற்கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று கிளெமன்ட் அட்லி பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார்.
  • பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் வெளியுறவு ஆகிய துறைகளில் கட்டுப்பாட்டுடன் கூடிய மத்திய அரசை நிறுவ வகை செய்தது.
  • முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இல்லாத மாகாணங்கள், வடமேற்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள், மற்றும் வடகிழக்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்கள் என மூன்றுவகையாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.

10th Social Science Guide தேசியம்: காந்திய காலகட்டம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
காந்தியடிகள் 1893 ஏப்ரல் மாதம் ……………… புறப்பட்டுச் சென்றார்.
அ) வடஆப்பிரிக்கா
ஆ) தென்னாப்பிரிக்கா
இ) தென் அமெரிக்கா
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தென்னாப்பிரிக்கா

Question 2.
……………. நூற்றாண்டின் கடைசியில் ஜெர்மானிய செயற்கை சாயங்களால் இண்டிகோ எனப்படும் நீலச்சாயம் சந்தையில் விற்கப்படுவது குறைந்தது.
அ) பன்னிரெண்டாம்
ஆ) பதினெட்டாம்
இ) பத்தொன்பதாம்
ஈ) இருபதாம்
விடை:
இ பத்தொன்பதாம்

Question 3.
………………இல் உள்ள ஜாலியன்வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13 ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அ) அமிர்தசரஸ்
ஆ) நாக்பூர்
இ) தில்லி
ஈ) கொல்கத்தா
விடை:
அ) அமிர்தசரஸ்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 4.
ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலையில் அதிகாரப்பூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் மற்றும் ……………… க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அ) 10
ஆ) 100
இ) 1000
ஈ) 10000
விடை:
இ 1000

Question 5.
……………… ஆண்டு தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு காந்தியடிகள் தலைமையேற்றார்.
அ) நவம்பர் 1920
ஆ) அக்டோபர் 1919
இ) டிசம்பர் 1991
ஈ) நவம்பர் 1991
விடை:
அ) நவம்பர் 1919

Question 6.
……………. மாதம் நாக்பூரில் நடந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ) நவம்பர் 1920
ஆ) அக்டோபர் 1919
இ) டிசம்பர் 1920
ஈ) நவம்பர் 1902
விடை:
இ டிசம்பர் 1920

Question 7.
இந்திய தேசிய காங்கிரஸ் ……………… க்கு அங்கீகாரம் அளித்தது.
அ) காந்தியடிகள்
ஆ) நேரு
இ) கோபால கிருஷ்ண கோகலே
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) காந்தியடிகள்

Question 8.
காந்தியடிகள் ………………. பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.
அ) 98
ஆ) 87
இ 78
ஈ) 88
விடை:
இ 78

Question 9.
…………….. ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது.
அ) 1898
ஆ) 1878
இ) 1888
ஈ) 1988
விடை:
ஆ) 1878

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 10.
……………… ஆம் ஆண்டு லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தது.
அ) டிசம்பர் 1920)
ஆ) நவம்பர் 1902
இ) நவம்பர் 1930
ஈ) அக்டோபர் 1919
விடை:
இ நவம்பர் 1930

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ……………… ஒப்பந்தத்தின் படி ரத்து செய்யப்பட்டது.
விடை:
ஸ்மட்ஸ்-காந்தி

Question 2.
காந்தியடிகளுக்கு ………………….. ஆகியோரின் எழுத்துகளுடன் அறிமுகம் கிடைத்தது.
விடை:
டால்ஸ்டாய், ஜான் ராஸ்கின்

Question 3.
ரௌலட் சட்டத்தை ……………… என்றழைத்த காந்தியடிகள் அதனை எதிர்த்து நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்துக்கு 1919 ஏப்ரல் 6-ல் அழைப்புவிடுத்தார்.
விடை:
கருப்புச் சட்டம்

Question 4.
……………. மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு பெரும் எண்ணிக்கையில் சுயராஜ்ஜிய கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விடை:
ஆங்கிலேய இந்தியாவின் பேரரசு

Question 5.
1922 பிப்ரவரி மாதம் ……………… வரிகொடா இயக்கம் பிரச்சாரத்தை காந்தியடிகள் அறிவித்தார்.
விடை:
பர்தோலி

Question 6.
1925ல் தலைவர் சி.ஆர். தாஸ் மறைந்த பிறகு ……………… கட்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.
விடை:
சுயராஜ்ஜிய கட்சி

Question 7.
அரசியல் சாசன வரைவுக்கான குழுவின் ……………… நேரு அறிக்கை என்று அழைக்கப்பட்டது.
விடை:
கமிட்டி அறிக்கை

Question 8.
………………இல் இடஒதுக்கீடு வழங்குவது கிறித்து ஜின்னா சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
விடை:
மத்திய சட்டபேரவையில்

Question 9.
தமிழ்நாட்டில் ………………யிலிருந்து ………………வரை தண்டியாத்திரை போன்று ஒரு யாத்திரையை சி.ராஜாஜி மேற்கொண்டார்.
விடை:
திருச்சிராப்பள்ளி – வேதாரண்யம்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 10.
கான் அப்துல் கஃபார்கான் …………….. என்றழைக்கப்பட்ட குடைகிட்மட்கர் இயக்கத்தை நடத்தினார்
விடை:
செஞ்சட்டைகள்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : ஜாலியன் வாலா பாக் படுகொலை 1919 ஏப்ரல் 13ல் நடந்தது.
காரணம் : ஜெனரல் டயரின் தலைமையில் நடந்தது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

Question 2.
கூற்று : காந்தியடிகள் தனது 61வது வயதில் 24 நாட்களில் 241 மைல் கடந்து தண்டியை அடைந்தார்.
காரணம் : ஏப்ரல் 4ஆம் நாள் தண்டி கடற்கரையை சென்றடைந்தார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விடை:
ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம் காந்திய காலகட்டம் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம் காந்திய காலகட்டம் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
இரட்டை ஆட்சி குறிப்பு வரைக.
விடை:

  • 1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம் செய்யப்பட்டது.
  • இதன் மூலம் மாகாண அரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துறைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது.
  • நிதி, பாதுகாப்பு, காவல்துறை, நீதித்துறை, நிலவருவாய், மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் ஆங்கிலேயர்கள் வசம் ஒதுக்கப்பட்டன.

Question 2.
நேரு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகள் யாவை?
விடை:

  • இந்தியாவுக்கு தன்னாட்சி அந்தஸ்து என்ற டொமினியன் தகுதி.
  • மத்திய சட்டப் பேரவை மற்றும் மாகாண சட்டப் பேரவைகளுக்கு கூட்டு மற்றும் கலவையான வாக்காளர் தொகுதிகளுடன் தேர்தல் நடைபெறுவது.
  • மத்திய சட்டப் பேரவை மற்றும் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள மாகாண சட்ட பேரவைகளில் முஸ்ம்களுக்கு இடஒதுக்கீடு அதேபோல் இந்துக்களுக்கு அவர்கள் சிறுபான்மையிராக உள்ள வடமேற்கு எல்லை மாகாணத்தில் இட ஒதுக்கீடு.
  • பொது வாக்களிப்பு முறையும் அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

Question 3.
காந்தி இர்வின் ஒப்பந்தம் குறிப்பு வரைக.
விடை:

  • காந்தியடிகளுடன் அரசப்பிரதிநிதி இர்வின் பிரபு பேச்சுவார்த்தைகளை நடத்தியதையடுத்து 1931 மார்ச் 5ஆம் நாள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது.
  • கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக உப்புக் காய்ச்சவும் வன்முறை இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது.

Question 4.
B.R. அம்பேத்கரின் தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை எழுதுக.
விடை:

  • அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாகுபாடுகளை முழுமையாக அவர் அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கினார்.
  • கல்வி, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதுப்பழக்கத்தை கைவிடவும் அவர் பணியாற்றினார்.
  • கோயில் நுழைவுப் போராட்டம் என்பது இந்தப்பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும்.
  • 1933 ஜனவரி 8ஆம் நாள் ‘கோவில் நுழைவு நாள்’ என அனுசரிக்கப்பட்டது.

Question 5.
இந்திய அரசுச் சட்டம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • சட்டமறுப்பு இயக்கத்தின் ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளில் 1935ஆம் ஆண்டு இந்திய அரசர் சட்டமும் ஒன்றாகும்.
  • மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மத்தியில் இரட்டையாட்சி ஆகியன இந்தச் சட்டத்தின் ‘ முக்கிய அம்சங்களாகும்.

Question 6.
காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகல் பற்றிக் கூறு.
விடை:

  • 1939இல் இரண்டாம் உலக போர் மூண்டது.
  • காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் கூட்டணிப் படைகள் சார்பாக இந்த போரில் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு நுழைந்தது.
  • எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின.
  • ஜின்னா 1940ஆம் ஆண்டு வாக்கில் முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Question 7.
கிரிப்ஸ் தூதுக்குழுவின் திட்ட அறிக்கை யாது?
விடை:

  • போருக்குப் பிறகு தன்னாட்சி (டொமினியன் தகுதி) வழங்குவது.
  • பாகிஸ்தான் உருவாக்க கோரிக்கையை ஏற்கும் விதமாக இந்திய அளவரசர்கள் பிரிட்டிஷாருடன் தனி ஒப்பந்தத்தைக் கையெழுத்திடலாம்.
  • போரின் போது பாதுகாப்புத் துறை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருப்பது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 8 தேசியம்: காந்திய காலகட்டம்

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
ஒத்துழையாமை இயக்கத்தின் திட்டத்தின் கூறுகளை விவரி.
விடை:

  1. பட்டங்கள் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பது.
  2. அரசின் செயல்பாடுகளில் ஒத்துழைக்காமலிருப்பது.
  3. நீதிமன்ற வழக்குகளில் வழக்குரைஞர்கள் ஆஜராகாமல் இருப்பது. நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளுக்கு தனியார் மத்தியஸ்தம் மூலமாகத் தீர்வு காண்பது.
  4. 1919ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டப்பேரவைகளை புறக்கணிப்பது.
  5. அரசு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் இதர அரசு விழாக்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவு.
  6. குடிமைப்பணி (சிவில்) அல்லது இராணுவப் பதவிகளை ஏற்க மறுப்பது.
  7. அந்நியப் பொருள்களின் புறக்கணிப்பு மற்றும் உள்ளூர் பொருள்களுக்கு ஊக்கம் தரும் சுதேசி இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

10th Social Science Guide காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?
அ) வஹாபி கிளர்ச்சி
ஆ) ஃபராசி இயக்கம்
இ) பழங்குடியினர் எழுச்சி
ஈ) கோல் கிளர்ச்சி
விடை:
ஆ) ஃபராசி இயக்கம்

Question 2.
‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?
அ) டிடு மீர்
ஆ) சித்து
இ) டுடு மியான்
ஈ) ஷரியத்துல்லா
விடை:
இ டுடு மியான்

Question 3.
நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார் ?
அ) சாந்தலர்கள்
ஆ) டிடு மீர்
இ) முண்டா
ஈ) கோல்
விடை:
அ) சாந்தலர்கள்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 4.
கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
அ) தாதாபாய் நௌரோஜி
ஆ) நீதிபதி கோவிந்த் ரானடே
இ) பிபின் சந்திர பால்
ஈ) ரொமேஷ் சந்திரா
விடை:
இ பிபின் சந்திர பால்

Question 5.
வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது ?
அ) 1905 ஜூன் 19
ஆ) 1906 ஜூலை 18
இ) 1907 ஆகஸ்ட் 19
ஈ) 1905 அக்டோபர் 16
விடை:
1905 அக்டோபர் 16

Question 6.
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
அ) கோல் கிளர்ச்சி
ஆ) இண்டிகோ கிளர்ச்சி
இ) முண்டா கிளர்ச்சி
ஈ) தக்காண கலவரங்கள்
விடை:
இ முண்டா கிளர்ச்சி

Question 7.
1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
அ) அன்னி பெசன்ட் அம்மையார்
ஆ) பிபின் சந்திர பால்
இ) லாலா லஜபதி ராய்
ஈ) திலகர்
விடை:
ஈ) திலகர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 8.
நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
அ) தீன பந்து மித்ரா
ஆ) ரொமேஷ் சந்திர தத்
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) பிர்சா முண்டா
விடை:
அ) தீன பந்து மித்ரா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக .

Question 1.
மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான …………….. இயக்கம் 1827ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.
விடை:
வஹாபி

Question 2.
சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ………………
விடை:
கோல் கிளர்ச்சி

Question 3.
……………… சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது.
விடை:
சோட்டா நாக்பூர் குத்தகை

Question 4.
சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு …………….
விடை:
1908

Question 5.
W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ………..
விடை:
1885

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
(i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.
(ii) 1831 – 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன்கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.
(iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.
(iv) 1879ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை
ஆ) (ii) மற்றும் (iii) சரியானவை
இ) (iii) மற்றும் (iv) சரியானவை
ஈ) (i) மற்றும் (iv) சரியானவை
விடை:
அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 2.
(i) காலனி ஆட்சி பற்றியப் பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.
(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். (
(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.

அ) (i) மற்றும் (iii) சரியானவை
ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை
இ) (ii) மற்றும் (iii) சரியானவை
ஈ) (iii) மற்றும் (iv) சரியானவை
விடை:
ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை

Question 3.
கூற்று : இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.
காரணம் : இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று தவறு காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

Question 4.
கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம் : மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
விடை:
இ கூற்றும் மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
ஆங்கிலேயே இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
விடை:

  • மறுசீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள்
  • சமய இயக்கங்கள்
  • சமூகக் கொள்ளை
  • மக்களின் கிளர்ச்சி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 2.
வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.
விடை:
சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.

Question 3.
வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?
விடை:

  • இந்தியா பொருளாதார ரீதியாக அடிபணிந்து பிரிட்டிஷ் தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்குபவராக மாற்றப்பட்டது.
  • அதேசமயம் இது ஆங்கில உற்பத்தியை கைவிடுவதற்கும் பிரிட்டிஷ் மூலதனத்தின் முதலீட்டிற்கும் ஒரு சந்தையாக மாறியது.
  • எனவே காலனித்துவ பொருளாதாரம் இந்தியாவுக்கு எந்தவொரு சாதகமான வருமானமும் இல்லாமல் தொடர்ந்து இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வளங்களை மாற்றுவதாக இருந்தது.
  • இது ‘செல்வத்தின் வடிகால்’ என்று அழைக்கப்படுகிறது.

Question 4.
தன்னாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.
விடை:

  • அரசியலமைப்பு வழிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிற்குள் தன்னாட்சியை அடைவது.
  • தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியை அடைவது. ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுக்குப் பின்னர் இந்த அரசாட்சி சாராதநிலை வழங்கப்பட்டது.
  • அவர்களின் இலக்குகளை அடைய வன்முறையல்லாத அரசியல் சாசன வழிமுறைகளைக் கையாள்வது.

Question 5.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.
விடை:

  • லக்னோ ஒப்பந்தத்தின் (1916) போது காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென்பதே ஏற்றுக்கொண்டது.
  • இதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
1857ஆம் ஆண்டின் கிளாச்சியான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்.
விடை:
காரணங்கள் : ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை :
உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.

வாரிசு இழப்புக் கொள்கை:

  • சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.
  • இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரத்தன்மை இல்லாதது.
  • 1806ஆம் ஆண்டில் வேலூரில் சிப்பாய்கள் சமயக் குறியீடுகளை நெற்றியில் அணிவதற்கும், தாடி வைத்துக் கொள்வதற்கும், தடைவிதிக்கப்பட்டதோடு தலைப்பாகைகளுக்கு பதிலான வட்ட வடிவிலான தொப்பிகளை அணியுமாறும் பணிக்கப்பட்டனர்.
  • ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்தும் சிப்பாய்கள் கவலை அடைந்தனர்.
  • ஐரோப்பிய சிப்பாய்களுடன் ஒப்பிடுகையில் இந்திய சிப்பாய்களுக்கு மிகக் குறைந்த அளவில்
    ஊதியம் வழங்கப்பட்டது.
  • அவர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டனர்.

உடனடிக்காரணம்:

  • புதிய என்ஃபீல்டு துப்பாக்கிக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் பற்றிய வதந்திகள் புரட்சிக்கு வித்திட்டது.
  • பசு மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பசை (கிரீஸ்) இத்தகைய புதிய குண்டு பொதியுறையில் (காட்ரிட்ஜ்களில்) பயன்படுத்தப்பட்டன.
  • சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம் கொண்டனர்.
  • மார்ச் 29ஆம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ஐரோப்பிய அதிகாரியைத் தாக்கினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 2.
1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்துகொண்டனர்?
விடை:
இந்து முஸ்லிம் பிரிவினை:
வங்காள அடையாளத்தை உணர்வுப் பெருமையுடன் உருவாக்க வட்டார மொழிப் பத்திரிகைகளின் வளர்ச்சி பெரும் பங்காற்றியது.

பிரிவினைக்கு எதிரான இயக்கம்:

  • பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிப்பது அவற்றில் ஒரு முறையாகும்.
  • எனினும் சுதேசி இயக்கத்தின் கொள்கை வங்கப் பிரிவினையைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதில் இன்னமும் கட்டுப்பட்டிருந்தது.
  • 1905 அக்டோபர் 16இல் வங்காளம் அதிகாரப்பூர்வமாகப் பிரிவினையானபோது அந்தநாள் துக்கநாளாக அறிவிக்கப்பட்டது.
  • ஆயிரக்கணக்கானவர்கள் கங்கை நதியில் புனித நீராடியதோடு வந்தே மாதரம் பாடலை பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள்.

வங்காளத்தில் புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் (1905-1911):

  • புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் இந்தியாவைத் தற்சார்பு அடையச் செய்யும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக எப்போதும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருந்தன.
  • வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது நான்கு முக்கியப் போக்குகள் காணப்பட்டன.
    1. மிதவாதப்போக்கு
    2. ஆக்கப்பூர்வ சுதேசி
    3. தீவிர தேசியவாதம்
    4. புரட்சிகர தேசியவாதம்

10th Social Science Guide காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இந்தியா கிழக்கிந்திய கம்பெனியால் கொள்ளையடிக்கப்படும் செயலானது ………………………. ஆண்டுகளுக்கு நீடித்தது.
அ) 100
ஆ) 190
இ) 109
ஈ) 209
விடை:
ஆ) 190

Question 2.
……………… ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு பெரும் சவாலாக இருந்தது.
அ) 1857
ஆ) 1987
இ) 1587
ஈ) 1875
விடை:
அ) 1857

Question 3.
மார்ச் 29ம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ……………………… அதிகாரியைத் தாக்கினார்.
அ) அமெரிக்க
ஆ) ரஷ்ய
இ) ஐரோப்பி
ஈ) எதுவுமில்லை
விடை:
இ ஐரோப்பிய

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 4.
1857ஆம் ஆண்டில் பிற்பகுதியில் …………….. ஆங்கிலேய துருப்புகளால் கைப்பற்றப்பட்டது.
அ) சென்னை
ஆ) தில்லி
இ) மும்பை
ஈ) ஆந்த்ரா
விடை:
ஆ) தில்லி

Question 5.
இந்திய ராணுவத்தின் கட்டமைப்பில் ………………. முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
அ) ஐந்து
ஆ) இரண்டு
இ) மூன்று |
ஈ) ஏழு
விடை:
ஆ) இரண்டு

Question 6.
பருவத்தின் இறுதியில் இண்டிகோ பயிருக்கு ……………. விவசாயிகளுக்கு ஆங்கிலேய முகவர்கள் கொடுத்தனர்.
அ) குறைந்த விலையில்
ஆ) அதிக விலையில்
இ) நடுத்தர விலையில்
ஈ) மிக அதிக விலையில்
விடை:
அ) குறைந்த விலையில்

Question 7.
இண்டிகோ கிளர்ச்சி தொடங்கப்பட்ட ஆண்டு ………………….
அ) 1989
ஆ) 1859
இ) 1789
ஈ) 1895
விடை:
ஆ) 1859

Question 8.
அதிக அளவிலான வரி விதிப்பு ……………… பாதித்தது.
அ) வேளாண்மை
ஆ) மீன்பிடித்தல்
இ) சுரங்கத் தொழில்
ஈ) தொழிலகம்
விடை:
அ) வேளாண்மை

Question 9.
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராக 1885இல் ………………. இருந்தார்.
அ) உமேஷ் சந்திர பானர்ஜி
ஆ) A.O. ஹியூம்
இ) கர்சன் பிரபு
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) உமேஷ் சந்திர பானர்ஜி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 10.
……………. ல் சுதேசி இயக்கம் மாற்றுப்பாதையில் செல்லத் துவங்கியது.
அ) 1806
ஆ) 1906
இ) 1916
ஈ) 1866
விடை:
ஆ) 1906

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பிளாசிப் போருக்கு வித்திட்டவர் ……………. ஆவார்.
விடை:
ராபர்ட் கிளைவ்

Question 2.
கிராம அமைப்புகளின் கட்டமைப்பு மூலமாக ………….. விவசாயிகள் ஒன்று திரட்டப்பட்டனர்.
விடை:
பெரும் எண்ணிக்கையில்

Question 3.
ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இந்தியாவில் …………….. பற்றிய எந்த விரிவான திட்டமும் நடைமுறைப்படுத்தவில்லை.
விடை:
தனிச்சொத்துரிமை

Question 4.
சாந்தலர் வசமிருந்த பகுதிகளை ஒழுங்குபடுத்த கொண்டு வரப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கிய மண்ட லம் ………….. ஆகும்.
விடை:
சாந்தல் பர்கானா

Question 5.
கூட்டாக நிலத்தை வைத்துக் கொண்டு ………………. என்ற முறையில் விவசாயம் செய்வதில் முண்டா மக்கள் பெயர் பெற்றவர்கள்.
விடை:
குண்டக்கட்டி

Question 6.
தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க ………………. தமது சேவைகளை வழங்கினார்.
விடை:
A.0. ஹியூம்

Question 7.
வட இந்தியாவின் பாதிக்கப்பட்ட ………………. வாழ்ந்த மக்களும் உள்நாட்டுக் கிளர்ச்சிக்கு சரிசமமாக ஆதரவு தெரிவித்தனர்.
விடை:
கிராம சமூகத்தில்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 8.
1905ஆம் ஆண்டின் ………………. மிகவும் அதிருப்தியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.
விடை:
வங்கப் பிரிவினை

Question 9.
1914ஆம் அண்டு ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் போர் அறிவித்த நிலையில் மித தேசியவாத மற்றும் தாராளமய தலைமை …………… ஆதரவைத் தந்தது.
விடை:
பிரிட்டிஷாருக்கு

Question 10.
முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை ……………. ஏற்றது.
விடை:
காங்கிரஸ் தலைமை

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : ஹாஜி ஷரீயத்துல்லா என்பவரால் 1819ஆம் ஆண்டு பராசி இயக்கம் தொடங்கப்பட்டது.
காரணம் : ஃஷரீயத்துல்லாவிற்கு பிறகு டுடுமியான் தலைமை ஏற்றார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
விடை:
ஆ) கூற்று தவறு காரணம் சரி.

Question 2.
கூற்று : வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும், நிலப்பிரபுக்களுக்கும் ஏகிராகத் துவங்கப்பட்டது.
காரணம் : டிடு மீர் விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நபராகத் திகழ்ந்தார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
விடை:
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
சமய இயக்கங்கள் குறிப்பு வரைக.
விடை:
சமய இயக்கங்களுக்கு தலைமையேற்ற சமயத்தலைவர்கள் சமயச் சிந்தனைகளின் அடிப்படையில் சமூகத்தை சீரமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்.

Question 2.
சமூகக் கொள்கை குறிப்பு வரைக.
விடை:

  • இத்தகைய இயக்கங்களின் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும் பாரம்பரிய உயர்குடியினராலும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர்.
  • ஆனால் அச்சமூகத்தைச் சார்ந்த மக்கள் அவர்களைத் தங்களுடைய மேம்பாட்டிற்காக உழைத்த நாயகர்களாகவும், சாதனையாளர்களாகவும் கண்டனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 3.
மேலாதிக்கக் கொள்கை குறிப்பு வரைக.
விடை:

  • ஆங்கிலேயர் தங்களை வானளாவிய அதிகாரங்கள் கொண்ட உயர் அதிகார அமைப்பாக கருதினார்கள்.
  • உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.

Question 4.
1857ம் ஆண்டின் பெருங்கலகத்தின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • இராணுவ வீரர்களுடன் ஆயுதமேந்திய படைகளும் இணைந்து நடந்த முதல் மாபெரும் புரட்சி இதுவேயாகும்.
  • இருதரப்புகளிலும் தூண்டப்பட்டதால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கிளர்ச்சியில் வன்முறை வெடித்தது.

Question 5.
இந்தியா ஆங்கிலேய அரசுக் காலனியாக மாறுதல் பற்றி எழுதுக.
விடை:

  • 1858ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செலுத்தப்படும் ஆங்கிலேய அரசின் காலனிகளில் ஒன்றாக இந்தியா அறிவிக்கப்பட்டது.
  • அமைச்சரவை உறுப்பினர் ஒருவரிடம் பொறுப்பு வழங்கப்பட்டது, அவர் இந்தியாவுக்கான அரசுச் செயலராக பதவி வகிப்பார்.

Question 6.
பிரித்தாளும் கொள்கை வரையறு.
விடை:
இந்திய சமூகத்தின் சாதி, மதம், மொழி மற்றும் மண்டலம் ஆகியன சார்ந்த வேறுபாடுகளை ஆகிலேயர்கள் தங்களுக்கச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டதையடுத்து அது பிரித்தாளும் கொள்கை என்று அறியப்பட்டது.

Question 7.
வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போக்குகள் யாவை?
விடை:

  • மிதவாதப் போக்கு
  • ஆக்கபூர்வ சுதேசி
  • தீவிர தேசியவாதம்
  • புரட்சிகர தேசியவாதம்

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய கோரிக்கைகளை எழுதுக.
விடை:

  • மாகாண மற்றும் மத்திய அளவில் சட்டமேலவைகளை உருவாக்குகிறது.
  • சட்டமேலவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.
  • நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிப்பது. – இராணுவச்செலவுகளைக் குறைப்பது.
  • உள்நாட்டு வரிகளைக் குறைப்பது.
  • நீதிபதி மூலமாக விசாரணையை விரிவுசெய்வது.
  • ஒரே நேரத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆட்சிப்பணித் தேர்வுகளை நடத்துவது.
  • காவல்துறை சீர்திருத்தங்கள்.
  • வனச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல்.
  • இந்தியத் தொழிற்சாலைகளின் மேம்பாடு மற்றும் முறையற்ற கட்டணங்கள் மற்றும் கலால் வரிகளை முடிவுக்குக் கொண்டுவருவது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 2.
இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய எழுச்சி மற்றும் பொருளாதாரத்தை பற்றி விவரிக்க.
விடை:
அ. தேசியத்தின் எழுச்சி:
19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆங்கிலக் கல்வி பெற்ற இந்தியர்களின் புதிய சமூக வகுப்பினர் மத்தியில் தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

பல்வேறு பிரச்சாரங்கள் மூலமாக தேசம், தேசியம் மற்றும் பல்வேறு மக்களாட்சியின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றிய கருத்துக்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய பணியை இந்திய அறிவாளர்கள் மேற்கொண்டனர். வட்டார மொழி மற்றும் ஆங்கில அச்சு ஊடகங்களின் வளர்ச்சி இது போன்ற கருத்துகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியது.

எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருந்தாலும் தேசிய அளவிலான வீச்சைக் கொண்டு அகில இந்தியா முழுவதும் தொடர்புகளை உருவாக்கும் திறன் பெற்றிருந்தனர்.

அவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களாக பணியாற்றினார்கள்.

ஆ. காலனி ஆட்சிபற்றிய பொருளாதார விமர்சனம்:
காலனி ஆட்சி பற்றி பொருளாதார விமர்சனத்தை உருவாக்குவதே தொடக்ககால இந்திய தேசியவாதிகளின் பங்களிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது.

தாதாபாய் நௌரோஜி, நீதிபதி ரானடே மற்றும் ரொமேஷ் சந்திர தத் ஆகியோர் காலனி ஆட்சியில் பொருளாதாரம் பற்றிய இந்த விமர்சனத்தைச் செய்வதில் முக்கியப் பங்காற்றினார்கள்.

இந்தியாவை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அடக்கி ஆள்வதுதான் பிரிட்டிஷாரின் வளத்துக்கு அடிப்படையானது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கமே முக்கியத் தடையாக உள்ளதென்று அவர்கள் முடிவு செய்தனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

10th Social Science Guide ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வேலுநாச்சியார்
ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்
விடை:
ஆ) பூலித்தேவர்

Question 2.
சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
அ) வேலுநாச்சியார்
ஆ) கட்டபொம்மன்
இ) பூலித்தேவர்
ஈ) ஊமைத்துரை
விடை:
இ) பூலித்தேவர்

Question 3.
சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
அ) கயத்தாறு
ஆ) நாகலாபுரம்
இ) விருப்பாட்சி
ஈ) பாஞ்சாலங்குறிச்சி
விடை:
ஆ) நாகலாபுரம்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 4.
திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வீரபாண்டிய கட்டபொம்மன்
ஈ) கோபால நாயக்கர்
விடை:
அ) மருது சகோதரர்கள்

Question 5.
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
அ) 1805 மே 24
ஆ) 1805 ஜூலை 10
இ) 1806 ஜூலை 10
ஈ) 1806 செப்டம்பர் 10
விடை:
இ 1806 ஜூலை 10

Question 6.
வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
அ) கர்னல் பேன்கோர்ட்
ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
இ) சர் ஜான் கிரடாக்
ஈ) கர்னல் அக்னியூ
விடை:
இ சர் ஜான் கிரடாக்

Question 7.
வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
அ) கல்கத்தா
ஆ) மும்பை
இ) டெல்லி
ஈ) மைசூர்
விடை:
அ) கல்கத்தா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பாளையக்காரர் முறை தமிழகத்தில் ……………… என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
விஸ்வநாத நாயக்கர்

Question 2.
வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக ………………. பாதுகாப்பில் இருந்தனர்.
விடை:
கோபால நாயக்கர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 3.
கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் என்பவரை அனுப்பிவைத்தார்.
விடை:
இராமலிங்க முதலியார்

Question 4.
கட்டபொம்மன் ………………. என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
விடை:
கயத்தார்

Question 5.
மருது சகோதரர்களின் புரட்சிபிரிட்டிஷ்குறிப்புகளில் …………….. என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை:
2ம் பாளையக்காரர் போர்

Question 6.
…………….. என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.
விடை:
ஃபதேக் ஹைதர்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
(i) பாளையக்காரர் முறை காகதீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழி நடத்தினார்.

அ) (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி.
ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.
இ) (iii) மற்றும் (iv) மட்டும் சரி.
ஈ) (i) மற்றும் (iv) மட்டும் சரி.
விடை:
ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 2.
(i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.
(ii) காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.
(iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழி நடத்தினார்.
(iv) காரன்வாலிஸ் மே 1799ல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
இ) (ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
ஈ) (i) மற்றும் (iv) ஆகியவை சரி
விடை:
ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி

Question 3.
கூற்று : பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.
காரணம் : மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
விடை:

  • பாளையக்காரர்கள் வரிவசூலிப்பதிலும், நிலப்பகுதிகளை நிர்வகிப்பதிலும், வழக்குகளை விசாரிப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் தன்னிச்சையாகச் செயல்பட முடிந்தது.
  • அவர்களது காவல் காக்கும் கடமை படிக்காவல் என்றும் அரசுக்காவல் என்றும் அழைக்கப்பட்டது.

Question 2.
கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.
விடை:
கிழக்கில் அமையப்பெற்ற பாளையங்கள்:
சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி ஆகியனவாகும்.

மேற்கில் அமையப்பெற்ற முக்கியமான பாளையங்கள் :
ஊத்துமலை, தலைவன் கோட்டை நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர் ஆகியனவாகும்.

Question 3.
களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குக் செல்லும் படையை பலப்படுத்தினார்.
  • மேலும் கம்பெனியின் 1000 சிப்பாய்களோடு நவாபால் அனுப்பப்பட்ட 600 க்கும் மேற்பட்ட படை வீரர்களையும் மாபூஸ்கான் பெற்றார்.
  • மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தும் முன்பாக திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் பூலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.
  • களக்காட்டில் நடைப்பெற்ற போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. cooooooooo பிரிலியண்ட் ’ஸ்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 4.
கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சர்ச்சை ஏற்படக் காரணமாக விளங்கியது எது?
விடை:

  • வசூலிக்கப்பட்ட வரியில் ஆறில் ஒரு பங்கு நவாபிற்கும் அவர் குடும்ப பராமரிப்பிற்கும் என ஒதுக்கப்பட்டது.)
  • பாஞ்சாலங்குறிச்சியிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை கம்பெனி பெற்றிருந்தது,
  • அனைத்து பாளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.
  • ஆட்சியர்கள் பாளையக்காரர்களை அவமானப்படுத்தியதோடு வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.
  • இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட அடிப்படையானது.

Question 5.
திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.
விடை:

  • பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801ஆம் ஆண்டின் பேரறிக்கை ஆகும்.
  • இப்பேரறிக்கை திருச்சியில் அமையப்பெற்ற நவாபின் கோட்டையின் முன்சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரிலும் ஒட்டப்பட்டது.
  • ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்ட னர்.
  • உத்தி விரைவில் பாளையக்காரர்களின் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.
விடை:
வீரபாண்டிய கட்டபொம்மன் :

  • பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.
  • தொடர்ந்து நடந்த சம்பவங்கள் கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் மோதல்போக்கை ஏற்படுத்தின.
  • ளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.
  • ஆட்சியர்கள் பாளையக்காரர்களிடம் வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.
  • இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும்பகை ஏற்பட அடிப்படையானது.

ஜாக்சனோடு ஏற்பட்ட மோதல்:

  • 1798 ஆகஸ்ட் 19இல் இராமநாதபுத்தில் வந்து தன்னைச் சந்திக்குமாறு, கட்டபொம்மனுக்கு அவர் ஆணை பிறப்பித்தார்.
  • ஆனால் கட்டபொம்மன் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காததோடு ஜாக்சன் அவரைச் சந்திக்க மறுத்தார்.
  • ஊமைத்துரை கட்டபொம்மன் தப்ப உதவினார்.
  • சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை:

  • மே 1799இல் மதராஸில் இருந்த வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
  • பானெர்மென் செப்டம்பர் 5 அன்று முழுப் படைகளையும் பாஞ்சாலங்குறிச்சியில் கொண்டுவந்து நிறுத்தினார்.
  • பானெர்மென் இராமலிங்கரை தூதனுப்பி கட்டபொம்மனைச் சரணடையுமாறு கேட்டுக்கொண்டார்.
  • கட்டபொம்மன் மறுத்தார்.
  • கள்ளர்பட்டியில் நடைபெற்ற மோதலில் சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டார்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்படல் :

  • கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பிச் சென்றார்.
  • எட்டையபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்களால் துரோகமிழைக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியில் பிடிபட்டார்.
  • திருநெல்வேலிக்கு மிக அருகேயுள்ள கயத்தாறில் பாளையங்கோட்டைக்கு முன்பாக இருந்த புளியமரத்தில் சகப் பாளையக்காரர்களின் முன்னிலையில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 2.
சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆராய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக.
விடை:

  • மருது சகோதரர்கள் இருவரும் சிவகங்கையின் முத்துவடுகநாதரின் திறமையான படைத்தளபதிகளாவார்.
  • மருது சகோதரர்கள் பிரிட்டிஷாரை எதிர்க்கத் திட்டமிட்டனர்.
  • 1800இல் மீண்டும் கலகம் வெடித்தது.
  • இது இரண்டாம் பாளையக்காரர் போர் எனப்பட்டது.

சிவகங்கையின் வீழ்ச்சி:

  • ஆங்கிலேயர்கள் மே 1801இல் தஞ்சாவூரிலும், திருச்சியிலும் இருந்த கலகக்காரர்களைத் தாக்கினார்கள்.
  • கலகக்காரர்கள், பிரான்மலையிலும், காளையார் கோவிலும் தஞ்சம் புகுந்தனர்.
  • அவர்கள் பிரிட்டிஷ் படைகளால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டனர்.
  • இறுதியாக வலுவான இராணுவமும், சிறப்பான தலைமையும் கொண்ட ஆங்கிலேய கம்பெனியே விஞ்சி நின்றது.
  • கலகம் தோற்றதால் 1801இல் சிவகங்கை இணைக்கப்பட்டது.
  • ஊமைத்துரையும், செவத்தையாவும் பிடிக்கப்பட்டு 1801 நவம்பர் 16இல் பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்டனர்.
  • கலகக்காரர்களில் 73 பேர் பிடிக்கப்பட்டு மலேசியாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
  • மருது சகோதரர்களின் கலகம் தென்னிந்தியப் புரட்சி என்று அழைக்கப்படுவதோடு தமிழக வரலாற்றில் தனித்துவம் பெற்றதாகவும் கருதப்படுகிறது.

கர்நாடக உடன்படிக்கை:

  • 1801 ஜூலை 31இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின்படி பிரிட்டிஷார் நேரடியாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர்.
  • பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்ததுடன் அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு அவர்களது படைகளும் கலைக்கப்பட்டன.

Question 3.
வேலூரில் 1806இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.
விடை:
புரட்சி வெடித்தல்:

  • 1806 ஜூலை 10 அன்று அதிகாலையிலேயே முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர்.
  • கோட்டைக் காவற்படையின் உயர் பொறுப்புவகித்த கர்னல் பேன்கோர்ட் என்பவர்தான் முதல் பலியானார்.
  • இருபத்தி மூன்றாம் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் மீக்காரஸ் கொல்லப்பட்டார்.
  • கோட்டையைக் கடந்து சென்று கொண்டிருந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிகளின் முழக்கத்தைக் கேட்டார்.
  • சூழலை விசாரித்தறிய முற்பட்ட அவரது உடல் தோட்டாக்களால் துளைக்கப்பட்டது.
  • ஏறத்தாழ பனிரெண்டுக்கும் அதிகமான அதிகாரிகள் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் கொல்லப்பட்டார்கள்.
  • அவர்களின் லெப்டினென்ட் எல்லியும், லெப்டினென்ட் பாப்ஹாமும் பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

ஜில்லஸ்பியின் கொடுங்கோன்மை:

  • கோட்டைக்கு வெளியேயிருந்த மேஜர் கூட்ஸ் ஆற்காட்டின் குதிரைப்படைத் தளபதியாக இருந்த கர்னல் ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தார்.
  • புரட்சிக்காரர்கள் திப்புவின் மூத்த மகனான ஃபதே ஹைதரை புதிய மன்னராகப் பிரகடனம் செய்து மைசூர் சுல்தானின் புலி கொடியை கோட்டையில் ஏற்றியிருந்தனர்.

புரட்சியின் பின்விளைவுகள் :

  • திப்புவின் மகன்களை கல்கத்தாவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
  • கலவரத்தை அடக்குவதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பரிசுத்தொகையும் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
  • புதிய இராணுவ விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது.

10th Social Science Guide ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
பரம்பரை பரம்பரையாக ………………… பாளையக்காரர்கள் இருக்கிறார்கள்.
அ) 72
ஆ) 52
இ) 62)
ஈ) 27
விடை:
அ) 72

Question 2.
…………… இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்குக் கப்பம் கட்டும் குறுநில அரசைக் குறிக்கிறது.
அ) சமஸ்கிருதம்
ஆ) ஹிந்தி
இ) தமிழ்
ஈ) பெங்காலி
விடை:
இ தமிழ்

Question 3.
எந்த ஆண்டில் பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன?
அ) 16 மார்ச் 1761
ஆ) 18 மே 1961
இ) 16 மே 1761
ஈ) 18 மார்ச் 1761
விடை:
இ 16 மே 1761

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 4.
யூசுப்கான் மீது நம்பிக்கை துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டு?
அ) 1764
ஆ) 1876
இ) 1766
ஈ) 1876
விடை:
அ) 1764

Question 5.
ஹைதர் அலி தனது ……………… கோட்டை படைத்தலைவரான சையதிடம் அவருக்கு வேண்டிய ராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார்.
அ) திருச்சி
ஆ) தஞ்சாவூர்
இ) திண்டுக்கல்
ஈ) மதுரை
விடை:
இ திண்டுக்கல்

Question 6.
பிரிட்டிஷ் படைகளால் கோபால நாயக்கர் ……………. வெற்றிகொள்ளப்பட்டார்.
அ) 1872
ஆ) 1901
இ) 1801
ஈ) 1972
விடை:
இ 1801

Question 7.
கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவையானது 1798ஆம் ஆண்டு வாக்கில் …………………. பகோடாக்களாக இருந்தது.
அ) 2510
ஆ) 3310
இ) 6310
ஈ) 3301
விடை:
ஆ) 3310

Question 8.
1798 ஆகஸ்ட் 18ல் …………… வந்து தன்னைச் சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஜாக்சன் ஆணை பிறப்பித்தார்.
அ) திருச்சி
ஆ) இராமநாதபுரம்
இ) திண்டுக்கல்
ஈ) மதுரை
விடை:
ஆ) இராமநாதபுரம்

Question 9.
மருது சகோதரர்களும், கட்டபொம்மனும் இணைந்து …………….ஐ எதிர்ப்பது என்று முடிவெடுத்தனர்.
அ) துருக்கியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) ஆங்கிலேயர்கள்
ஈ) டச்சுக்காரர்கள்
விடை:
இ ஆங்கிலேயர்கள்

Question 10.
சிவசுப்ரமணியனார் நாகலாபுரத்தில் ………………. அன்று தூக்கிலிடப்பட்டார்.
அ) 13 செப்டம்பர்
ஆ) 31 செப்டம்பர்
இ) 13 அக்டோபர்
ஈ) 30 அக்டோபர்
விடை:
அ) 13 செப்டம்பர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நாடுபிடிக்கும் நோக்கத்திற்கு முதல் எதிர்வினை ……………… பகுதியின் நெற்கட்டும் செவலில் ஆட்சிபுரிந்து வந்த பூலித்தேவரிடமிருந்து வெளிப்பட்டது.
விடை:
திருநெல்வேலி

Question 2.
பூலித்தேவர் மைசூரின் …………….. மற்றும் பிரெஞ்சுகாரர்களது ஆதரவினைப் பெற முயன்றது.
விடை:
உடையாள்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 3.
……………… என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில்புரிந்த பெண்ணின் பெயராகும்.
விடை:
ஹைதர் அலி

Question 4.
வசூலிக்கப்பட்ட வரியில் ……………… நவாபிற்கும் குடும்ப பராமரிப்பிற்கும் ஒதுக்கப்பட்டது.
விடை:
ஆறில் ஒரு பங்கு

Question 5.
கட்டபொம்மனும் நிலுவைத் தொகையில் ………………. பகோடாக்கள் நீங்கலாக பிற நிலுவைத் தொகையினை செலுத்தி இருந்தனர். விடை:
1080

Question 6.
.கட்டபொம்மணின் ………………. மேஜர் பானர்மென் செப்டம்பர் 5 அன்று கோட்டையைத் தாக்கினார்.
விடை:
பிடிகொடுக்கா பதிலால்

Question 7.
………………. கோட்டை மிக குறைந்த காலத்தில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டது.
விடை:
பாஞ்சாலங்குறிச்சி

Question 8.
மருது சகோதரர்கள் …………….. நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர்.
விடை:
ஜீன் 1801

Question 9.
ஆங்கிலேயரின் ………………. என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களில் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.
விடை:
பிரித்தாளும் கொள்கை

Question 10.
கலகக்காரர்களில் ……………… பிடிக்கப்பட்டு மலேயாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
விடை:
73 பேர்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பினார்.
காரணம் : மாபூஸ்கான் வெற்றி பெற்றார்.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 2.
கூற்று : நாயக்க மன்னர்களால் 75 பாளையங்கள் உருவாக்கப்பட்டது.
காரணம் : இவை இரு தொகுதியைக் கொண்டது .

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
ஏன் யூசுப்கான் பூலித்தேவருடன் போர் தொடுக்க ஆயத்தமாகவில்லை?
விடை:
கம்பெனியாரால் அனுப்பப்பட்ட யூசுப்கான் (கான்சாகிப் என்றும் தமது மதமாற்றத்திற்கு முன்பு மருதநாயகம் என்றும் அழைக்கப்பட்டவர்) திருச்சிராப்பள்ளியில் இருந்து தான் எதிர்பார்த்த பெரும்பீரங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் வந்துசேரும் வரை பூலித்தேவர் மீது தாக்குதல் தொடுக்க அவர் ஆயுத்தமாகவில்லை.

Question 2.
பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யாவை?
விடை:

  • நெற்கட்டும்செவல்
  • வாசுதேவநல்லூர்
  • பனையூர்

Question 3.
ஒண்டிவீரன் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • ஒண்டிவீரன் பூலித்தேவரின் படைப் பிரிவுகளில் ஒன்றனுக்குத் தலைமையேற்றிருந்தார்.
  • பூலித்தேவரோடு இணைந்து போரிட்ட அவர் கம்பெனிப் படைகளுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தினார்.

Question 4.
குயிலி பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாகத் திகழ்ந்த குயிலி, உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
  • உடையாள் என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில்புரிந்த பெண்ணின் பெயராகும்.
  • குயிலி தனக்குத்தானே நெருப்புவைத்துக்கொண்டு (1780) அப்படியே சென்று பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கிலிருந்த அனைத்துத் தளவாடங்களையும் அழித்தார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 5.
கர்நாடக உடன்படிக்கை வரையறு.
விடை:
1799 மற்றும் 1800-1801ஆம் ஆண்டு பாளையக்காரர்களின் கலகம் அடக்கப்பட்டதன் விளைவு தமிழகத்திலிருந்த அனைத்து உள்ளூர் குடித்தலைமையினரின் எண்ணங்களையும் நீர்த்துப்போகச்செய்தது.
1801 ஜூலை 31இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின்படி, பிரிட்டிஷார் நேரயாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதோடு பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்ததுடன் அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு அவர்களது படைகளும் கலைக்கப்பட்டன.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
வேலூர்ப் புரட்சியைப் பற்றி மதிப்பிடுக.
விடை:
புரட்சியைப் பற்றிய மதிப்பீடு:
வெளியிலிருந்து உடனடியாக எந்தவொரு உதவியும் கிடைக்காத காரணத்தினாலேயே வேலூர் புரட்சி தோல்வியுற்றது.

புரட்சிக்கான ஏற்பாடுகளை 23ஆம் படைப்பிரிவின் 2ஆவது பட்டாளத்தைச் சேர்ந்த சுபேதார்களான ஷேக் ஆடமும், ஷேக் ஹமீதும், ஜமேதாரான ஷேக் ஹீஸைனும், 1ஆம் படைப்பிரிவின் 1ஆம் பட்டாளத்தைச் சேர்ந்த இரு சுபேதார்களும், ஜமேதார் ஷேக் காஸிமும் சிறப்பாகச் செய்திருந்ததாகத் தெரிகிறது.

1857ஆம் ஆண்டு பெரும்கலகத்திற்கான அனைத்து முன் அறிகுறிகளையும், எச்சரிக்கைகளையும் வேலூர் புரட்சி கொண்டிருந்தது.

ஒரே வித்தியாசம் என்னவென்றால், கலகத்தைத் தொடர்ந்து எந்த உள்நாட்டுக் கிளர்ச்சியும் ஏற்படவில்லை .

1806ஆம் ஆண்டு புரட்சியானது வேலூர் கோட்டையுடன் முடிந்துவிடவில்லை.

பெல்லாரி, வாலாஜாபாத், ஹைதராபாத், பெங்களூரு, நந்திதுர்க்கம், சங்கரிதுர்க்கம் ஆகிய இடங்களிலும் அது எதிரொலித்தது.

Question 2.
வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
தனது தந்தையாரான ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் இறப்பிற்குப் பின் பாஞ்சாலக்குறிச்சியின் பாளையக்காரராக தனது முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.

கம்பெனி நிர்வாகிகளான ஜேம்ஸ் லண்டன் மற்றும் காலின் ஜாக்சன் என்போர் இவரை அமைதியை விரும்பும் மனம் கொண்டவராகவே கருதினார்.

எனினும் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் மோதல்போக்கை ஏற்படுத்தின.

1781இல் கம்பெனியாருடன் நவாப் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின்படி, மைசூரின் திப்பு சுல்தானுடன் ஆற்காட்டு நவாப் போர்புரிந்து கொண்டிருந்தபோது, கர்நாடகப்பகுதியில் வரி மேலாண்மையும், நிர்வாகமும் கம்பெனியின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் செல்லும்நிலை ஏற்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

வசூலிக்கப்பட்ட வரியில் ஆறில் ஒரு பங்கு நவாபிற்கும் அவர் குடும்ப பராமரிப்பிற்கும் என ஒதுக்கப்பட்டது.)
இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சியிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை கம்பெனி பெற்றிருந்தது.

அனைத்துப் பாளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.

ஆட்சியர்கள் பாளையக்கரர்களை அவமானப்படுத்தியதோடு வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.

இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட அடிப்படையானது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

10th Social Science Guide 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
அ) 1827
ஆ) 1829
இ) 1826
ஈ) 1927
விடை:
ஆ) 1829

Question 2.
தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?
அ) ஆரிய சமாஜம்
ஆ) பிரம்ம சமாஜம்
இ) பிரார்த்தனை சமாஜம்
ஈ) ஆதி பிரம்ம சமாஜம்
விடை:
அ) ஆரிய சமாஜம்

Question 3.
யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஆ) இராஜா ராம்மோகன் ராய்
இ) அன்னிபெசன்ட்
ஈ) ஜோதிபா பூலே
விடை:
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?
அ) பார்சி இயக்கம்
ஆ) அலிகார் இயக்கம்
இ) இராமகிருஷ்ணர்
ஈ) திராவிட மகாஜன சபை
விடை:
அ) பார்சி இயக்கம்

Question 5.
நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
அ) பாபா தயாள் தாஸ்
ஆ) பாபா ராம்சிங்
இ) குருநானக்
ஈ) ஜோதிபா பூலே
விடை:
ஆ) பாபா ராம்சிங்

Question 6.
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
அ) M.G. ரானடே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) ஜோதிபா பூலே
ஈ) அய்யன்காளி
விடை:
அ) M.G. ரானடே

Question 7.
‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
அ) தயானந்த சரஸ்வதி
ஆ) அயோத்தி தாசர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) சுவாமி சாரதாநந்தா
விடை:
அ) தயானந்த சரஸ்வதி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.
விடை:
இராமலிங்க சுவாமிகள்

Question 2.
புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் …………………
விடை:
மகாதேவ் கோவிந்த் ரானடே

Question 3.
குலாம்கிரி நூலை எழுதியவர் …………………..
விடை:
ஜோதிபா பூலே

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
இராமகிருஷ்ணா மிஷன் ………………ஆல் நிறுவப்பட்டது.
விடை:
சுவாமி விவேகானந்தர்

Question 5.
………………. அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.
விடை:
சிங்சபா

Question 6.
‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையைத் துவக்கியவர் ……………. ஆவார்.
விடை:
அயோத்தி தாசர்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) இராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.
ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.
iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.
iv) இராஜா ராம் மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

அ) i) சரி
ஆ) i), ii) ஆகியன சரி
இ) i), ii), iii) ஆகியன சரி
ஈ) i), iii) ஆகியன சரி
விடை:
ஈ) i), iv) ஆகியன சரி

Question 2.
i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.
ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்பு திருமணங்களையும் ஊக்குவித்தது.
iii) ஜோதிபாபூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.
iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.

அ) i) சரி
ஆ) ii) சரி
இ) i), ii) ஆகியன சரி
ஈ) iii), iv) ஆகியன சரி
விடை:
இ) i), ii) ஆகியன சரி

Question 3.
i) இராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.
ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை இராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.
iii) இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ணா மிஷனை ஏற்படுத்தினார்.
iv) இராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.

அ) i) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) சரி
ஈ) iv) சரி
விடை:
ஆ) i) மற்றும் ii) சரி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.
காரணம் : ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
இ) இரண்டுமே தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.
விடை:
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 2

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.
விடை:

  • நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கைக் கூறுகளை முன் வைத்தார்.
  • தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
  • அவர் ஒருவரே உண்மையின் எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின் சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர். அவருக்கிணையாருமில்லை.
  • நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
  • அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.

Question 2.
சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
விடை:

  • சாதிமறுப்பு, சமபந்தி, சாதிமறுப்புத் திருமணம் விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாவார்.
  • மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) விதவை மறுமணச் சங்கம் (1861), புனே சர்வஜனிக் சபா (1870), தக்காணக் கல்விக்கழகம் (1884) ஆகிய அமைப்புகளை நிறுவினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 3.
இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
  • துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்.
  • அன்பையும், இரக்கத்தையும் அனைத்து உயிரினங்களிடமும் காட்டினர். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
  • 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
  • அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.

Question 4.
பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?
விடை:
சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள், விதவைப் பெண்கள் மறுமணம், பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Question 5.
ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.
விடை:
ஜோதிபா பூலே :

  • 1852 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
  • ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்ரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
  • ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
விடை:

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியா சதி, குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை, பலதார மறுமணம் மற்றும் பல சமூக தீமைகளால் பிடிக்கப்பட்டிருந்தது.
  • பெண்களுக்கு கல்வி பெற அனுமதிக்கப்படவில்லை.
  • பெண்கள் ஆண்களை விட தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டனர்.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நிலை பரிதாபகரமாக இருந்தது.
  • பள்ளிகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் நுழைய தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு தடை விதிக்கப்பட்டது.
  • ஆகவே, தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு கல்வியில்லை.
  • மூடநம்பிக்கை, மத நம்பிக்கை மற்றும் விலங்குகளை பலி கொடுப்பது போன்ற தீய நடைமுறைகள் இந்திய சமுதாயத்தில் இருந்தன.
  • குழந்தை திருமண முறை இருந்ததால் குழந்தை விதவைகளுக்கு வழிவகுத்தது.
  • இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 2.
இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.
விடை:
இராமகிருஷ்ண பரமஹம்சர் :

  • இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886) பஜனைப்பாடல்களை மனமுருகிப் பாடுவார்.
  • அவர் கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.
  • அவருடைய கருத்தினப்டி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும். ஜீவன் என்பதே சிவன் எனவும் அவர் கூறினார்.
  • மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.

சுவாமி விவேகாநந்தர்:

  • பின்னாளில் நரேந்திரநாத் தத்தா என்றழைக்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர் (1863-1902).
  • இராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடராவார்.
  • மரபு சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மனநிறைவு பெறாத அவர், நடைமுறை வேதாந்தமான மனிதகுலத்திற்குத் தொண்டுசெய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.
  • இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
  • அவருடைய சிந்தனைகள், பொருள் உற்பத்தியில் மேலைநாடுகள் செய்திருந்த சாதனைகளைக் கண்டு தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்த இந்தியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது.
  • 1893இல் சிக்காகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்திமார்க்கத் தத்துவம் குறித்தும் அவராற்றிய சொற்பொழிவுகள் அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது.

Question 3.
பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.
விடை:
ராஜாராம் மோகன்ராய்:

  • விதவைப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார்.
  • பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றார்.
  • மக்களைப் பகுத்தறிவோடும், பரிவோடும், மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
  • பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் எனும் கருத்தை வலுவாக முன் வைத்தார்.

தயானந்த சரஸ்வதி:
குழந்தை திருமணம் மற்றும் விதவை மறுமணம் போன்ற நடைமுறைகளை அவர் அறிவித்தார்.

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்:

  • இவர் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தினார்.
  • இவர் விதவை மறுமணத்தை ஆதரித்தார் மற்றும் பலதார மணம் (ம) குழந்தை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
  • பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது.
  • பெண்கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய அவர் பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார்.

ஜோதிபாபூலே:

  • இவர் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.
  • விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
  • ஜோதிபாபூலேவும் அவருடைய மனைவி சாவித்ரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

10th Social Science Guide 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
நவீன இந்தியாவின் முன்னோடி …………
அ) ஜோதிபாய் பூலே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) விவேகானந்தர்
ஈ) இராஜாராம் மோகன்ராய்
விடை:
ஈ) இராஜாராம் மோகன் ராய்

Question 2.
மகரிஷி …………….. கொள்கைக் கூறுகளை முன்வைத்தார்.
அ) 4
ஆ) 5
இ) 8
ஈ) 6
விடை:
அ) 4

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 3.
தேவேந்திரநாத் ……………… சீர்திருத்தவாதியாவார்.
அ) மிதவாத
ஆ) தீவிரவாத
இ) கம்யூனிச
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) மிதவாத

Question 4.
அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் ………….
அ) யாசர் அரபாத்
ஆ) கமால் பாட்சா
இ) ஆசாத்
ஈ) சர் சையது அகமது கான்
விடை:
ஈ) சர் சையது அகமது கான்

Question 5.
ஜோதிபா பூலேவின் ……………. சாவித்திரி பாய் ஆவார்.
அ) மகள்
ஆ) தாய்
இ) சகோதரி
ஈ) மனைவி
விடை:
ஈ) மனைவி

Question 6.
வங்காளத்தை சேர்ந்த முதன்மையான சீர்திருத்தவாதி ……………
அ) அஹமது கான்
ஆ) M.G. ரானடே
இ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஈ) அய்யன்காளி
விடை:
இ ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

Question 7.
……………… நூல்கள் முற்போக்கானவை.
அ) சீக்கியம்
ஆ) இந்து
இ) கிறித்துவ
ஈ) இஸ்லாமிய
விடை:
ஆ) இந்து

Question 8.
தியோபந்த் இயக்கம் ஒரு ……………… இயக்கம் ஆகும்.
அ) அரசியல்
ஆ) சமூக
இ) கலாச்சார
ஈ) மீட்பு
விடை:
ஈ) மீட்பு

Question 9.
ராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர் ……………. ஆவார்.
அ) ஜோதிபா பூலே
ஆ) அய்யன்காளி
இ) விவேகானந்தர்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ விவேகானந்தர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 10.
ஜோதிபா பூலே எழுதிய நூல் …………… ஆகும்.
அ) சுதேசி
ஆ) குலாம்கிரி
இ) இண்டிகா
ஈ) வெனிஸ் நகர வணிகர்
விடை:
ஆ) குலாம்கிரி

Question 11.
……………….. நாராயணகுருவால் கவரப்பட்டார்.
அ) பூலே
ஆ) அய்யன்காளி
இ) ராமலிங்க அடிகள்
ஈ) அயோத்தி தாசர்
விடை:
ஆ) அய்யன்காளி

Question 12.
இராமகிருஷ்ணரின் போதனைகளை பரப்பும் பெரும்பணியின் பின்புலமாய் …………………… இருந்தார்.
அ) பரமஹம்சர்
ஆ) விவேகானந்தர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) அய்யன்காளி
விடை:
ஆ) விவேகானந்தர்

Question 13.
மௌலானா முகமத் உல்-ஹசன் ……………… புதிய தலைவரானார்.
அ) தியோபந்தின்
ஆ) புதிய தியோபந்த்
இ) அலிகார்
ஈ) அஹமது கான்
விடை:
அ) தியோபந்தின்

Question 14.
விவேகானந்தரின் இயற்பெயர் …………………………
அ) நரேந்திரநாத் தத்தா
ஆ) இராமலிங்க அடிகள்
இ) அயோத்தி தாசர்
ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
விடை:
நரேந்திரநாத் தத்தா

Question 15.
மேற்கத்திய கருத்துக்களின் சிந்தனைகளின் தாக்கங்களுக்குள்ளானது ……………………… வர்க்க ம் ஆகும்.
அ) இஸ்லாம்
ஆ) இந்து
இ) நடுத்தர
ஈ) எதுவுமில்லை
விடை:
இ நடுத்தர

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இராஜா ராம் மோகன் ராய் …………….., ……………… பெற்றிருந்தார்.
விடை:
ஒரு கடவுள் கோட்பாடு, உருவ வழிபாடு எதிர்ப்பு

Question 2.
இராஜராம் மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை …………….. நிறுவினார்.
விடை:
20 ஆகஸ்ட் 1808

Question 3.
தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு ……………… எனப்பட்டது.
விடை:
ஆதி பிரம்ம சமாஜம்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் ……………… முக்கியப் பங்காற்றியது.
விடை:
பிரம்ம ஞான சபை

Question 5.
அன்னிபெசன்டின் நாளிதழ்கள் … ………………….. ஆகியன ஆகும்.
விடை:
நியூ இண்டியா, காமன் வீல்

Question 6.
ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி ……………… பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.
விடை:
1920

Question 7.
……………… அகாலி இயக்கத்தின் முன்னோடி ஆகும்.
விடை:
சிங்சபா

Question 8.
அயோத்தி தாசர் ………………. எனும் அமைப்பை உருவாக்கினார்.
விடை:
திராவிடர் கழகம்

Question 9.
………………. எனும் ஊரில் பெரிய கோவிலைக் கட்டியவர் நாராயணகுரு.
விடை:
அருவிபுரம்

Question 10 .
……………… மறுமண சீர்திருத்த சட்டம் இயற்றப்பட்டது.
விடை:
1856

Question 11.
தக்காணக் கல்விக் கழகத்தை நிறுவியவர் …………………..
விடை:
M.G. ரானடே

Question 12.
வேதங்களுக்கு திரும்புவோம் என்பது ………………. சமாஜத்தின் முழக்கமாகும்.
விடை:
ஆசிய

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 13.
ஆணும், பெண்ணும் சமம் என்று ………………. கூறியது.
விடை:
சீக்கிய சீர்திருத்த இயக்கம்

Question 14.
சுத்தி இயக்கத்தை நிறுவியவர் ………………. ஆவார்.
விடை:
தயானந்த சரஸ்வதி

Question 15.
உலக சமய மாநாடு ……………….. நடந்தது.
விடை:
1893

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) அய்யன்காளி 1863ல் பிறந்தார்.
ii) “ஜீவன்” என்பதே “சிவன்” என பரமஹம்சர் கூறினார்.
iii) பரமஹம்சரின் சீடர் ஜோதிபா பூலே.
iv) 1999ல் பிரம்மஞான சபை தொடங்கப்பட்டது.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) i, iv சரி
ஈ) iii சரி
விடை:
அ) i, ii சரி

Question 2.
கூற்று : சர்சையது அஹமது கான், ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்.
காரணம் : இஸ்லாமியர்கள் மேலை நாட்டு அறிவியலை கற்க வேண்டும் என்பதற்காக.

அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று, காரணம் தவறு
இ) கூற்று காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
விடை:
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 4

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
இந்து புத்தெழுச்சி இயக்கத்திற்கு வித்திட்டவர்களின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • சுவாமி தயானந்த சரஸ்வதி
  • இராமகிருஷ்ண பரமஹம்சர்
  • சுவாமி விவேகானந்தர்
  • அன்னிபெசன்ட்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 2.
இராமகிருஷ்ண மிஷனின் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவது.
  • மருத்துவ உதவி
  • இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வது.

Question 3.
பிரம்மஞான சபையின் முக்கியப் பங்கு யாது?
விடை:

  • பிரம்மஞான சபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது.
  • இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞானசபை முக்கியப் பங்காற்றுகிறது.

Question 4.
அலிகார் இயக்கம் பற்றி குறிப்பிடுக.
விடை:

  • சர் சையத் அகமத்கான் 1875ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கிலோ – ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்.
  • ‘அலிகார் இயக்கம்’ எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியை மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது.
  • இந்திய முஸ்லீம்களின் கல்விவரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும்.
  • 1920இல் இக்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 5.
தியோபந்த் இயக்கம் பற்றி எழுதுக. தியோபந்த் இயக்கம்:
விடை:

  • தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கமாகும்.
  • இவ்வியக்கம் பழமைவாய்ந்த முஸ்லீம் உலகமக்களால், தொடங்கப்பெற்றது.
  • இவ்வுலேமாக்கள் முகமது குவாசிம் நானோதவி (1832 – 1880), ரஷித் அகமத் கங்கோத்ரி (1826 – 1905) ஆகியோரின் தலைமையில் 1866 இல் உத்தரப்பிரதேசத்தில் சகரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினர்.
  • இதன் நோக்கம் இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்கத்தையும் மதத்தையும் மீட்டெடுப்பதாய் அமைந்தது.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
சீக்கியர் சீர்திருத்த இயக்கம் பற்றி விவரிக்க.
விடை:
சீக்கியர் சீர்திருத்த இயக்கம் (நிரங்கரிகள், நாம்தாரிகள்):

  • பஞ்சாப் சீக்கியச் சமூகத்திலும் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • நிரங்கரி இயக்கத்தின் நிறுவனரான பாபா தயாள்தாஸ் நிரங்கரி (உருவமற்ற) இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார்.
  • சிலைவழிபாடு, சிலைவழிபாட்டோடு தொடர்புடைய சடங்குகள் ஆகியவற்றை மறுத்தல், குருநானக்கின் தலைமையையும் ஆதிகிரந்தத்தையும் மதித்தல் ஆகியன அவருடைய போதனைகளின் சாரமாக விளங்கின.
  • மது அருந்துவதையும், மாமிசம் உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்திக் கூறினார்.
  • ஆரியசமாஜம் கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த ஒரு சூழலில் சிங்சபா எனும் அமைப்பு அமிர்தசரசில் நிறுவப்பட்டது. சீக்கியமதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பதே சபாவின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது.
  • ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தரஸில் சீக்கியர்களுக்கென கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது. > சிங்சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.

Question 2.
இராமலிங்க சுவாமிகள் பற்றி குறிப்பெழுதுக.
விடை:

  • வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட, இராமலிங்க சுவாமிகள் அல்லது இராமலிங்க அடிகள் (1823 – 1874) சிதம்பரத்திற்கு அருகேயுள்ள மருதூர் எனும் கிராமத்தில் பிறந்தார்.
  • முறையான கல்வியை அவர் பெற்றிராவிட்டாலும் அளப்பரியப் புலமையைப் பெற்றிருந்தார்.
  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
  • “துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்” எனும் கருத்தினை முன்வைத்தார்.
  • அவர் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
  • அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.