Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

10th Social Science Guide உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?
அ) அமைச்சரவை
ஆ) தலைமை இயக்குநர்
இ) துணை தலைமை இயக்குநர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) தலைமை இயக்குநர்

Question 2.
இந்தியாவில் காலனியாதிக்க வருகை……………………….
அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
ஆ) டச்சு, ஆங்கிலேயர் , டேனிஷ், பிரெஞ்சு
இ) போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்
ஈ) டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு
விடை:
அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர்கள், டேனிஷ், பிரெஞ்சு

Question 3.
காட்(GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் ………………………
அ) டோக்கியோ
ஆ) உருகுவே
இ) டார்குவே
ஈ) ஜெனீவா
விடை:
ஈ) ஜெனீவா

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 4.
இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
அ) 1984
ஆ) 1976
இ) 1950
ஈ) 1994
விடை:
ஈ) 1994

Question 5.
1632இல் ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மான்” வழங்கியவர் யார்?
அ) ஜஹாங்கீர்
ஆ) கோல்கொண்டா சுல்தான்
இ) அக்பர்
ஈ) ஒளரங்கசீப்
விடை:
ஆ) கோல்கொண்டா சுல்தான்

Question 6.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு …………
அ) ஜூன் 1991
ஆ) ஜூலை 1991
இ) ஜூலை – ஆகஸ்ட் 1991
ஈ) ஆகஸ்ட் 1991
விடை:
இ) ஜூலை – ஆகஸ்ட் 1991

Question 7.
இந்திய அரசாங்கத்தால் 1991இல் ………………ஐ அறிமுகப்படுத்தப்பட்டது.
அ) உலகமயமாக்கல்
ஆ) உலக வர்த்த அமைப்பு
இ) புதிய பொருளாதார கொள்கை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ புதிய பொருளாதார கொள்கை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
ஒரு நல்ல பொருளாதாரம் …………….. விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.
விடை:
மூலதனச் சந்தையின்

Question 2.
உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் ………………. ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.
விடை:
ஜனவரி 01 1995

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 3.
……………… ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.
விடை:
பேராசிரியர் தியோடோர் லெவிட்

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 2

IV. கீழ்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
உலகமயமாக்கல் என்றால் என்ன?
விடை:

  • உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.
  • அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.

Question 2.
உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக.
விடை:

  • தொன்மையான உலகமயமாக்கல்
  • இடைப்பட்ட உலகமயமாக்கல்
  • நவீன உலகமயமாக்கல்

Question 3.
பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:
பன்னாட்டு நிறுவனம் என்பது நாட்டில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனமாகும்.

Question 4.
உலகமயமாக்கலை சார்ந்த சீர்திருத்தங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
விடை:

  • சில தொழிற்சாலைகளைத் தவிர, தொழில் உரிமம் பெறுவதை நீக்கியது.
  • பொதுத்துறை நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
  • அயல்நாட்டு செலவாணி ஒழுங்குமுறை பொருத்தமாக திருத்தப்பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட சட்ட ரீதியான நீர்மை விகிதம் (SLR) அதிகரிக்கப்பட்டது.

Question 5.
நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?
விடை:
நியாயமான வர்த்தகமானது, சிறிய விவசாயிகளை உலகளாவிய சந்தை இடத்தில் ஒரு சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பதோடு நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும், கொள்முதல் செய்யவும், அவர்களின் மதிப்பை ஆதரிக்கவும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு வழி முறையாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 6.
“நியாயமான வர்த்தக நடைமுறைகளின்” ஏதாவது இரு கோட்பாடுகளை எழுதுக.
விடை:

  • வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு.
  • நியாயமான வர்த்தக / நடைமுறைகள் மற்றும் நியாயமான விலையில் கொடுப்பது.
  •  குழந்தைத் தொழிலாளர் மற்றும் கட்டாயத் தொழிலாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது,

Question 7.
“உலக வர்த்தக அமைப்பின்” முக்கிய நோக்கம் யாது?
விடை:

  • அயல்நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
  • வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சுவார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
  • வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
  • நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைந்து அறிமுகம் செய்தல்.
  • உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
  • முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
  • முழு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.

Question 8.
உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
விடை:

  • ஒரு சிறந்த பொருளாதாரம், மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
  • வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.
  • புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
விடை:
MNCயின் நன்மைகள் :

  • பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருள்களை தரமாகவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்தி செய்கிறது.
  • பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.
  • பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
  • பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் தீமைகள் :

  • பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை (சில தயாரிப்புகளுக்கு) வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
  • பன்னாட்டு நிறுவனங்கள் சுற்று சூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
  • ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
  • பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு, தார்மீக சட்டங்களை அவர்கள் குற்றம் சாட்டி, மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினை திருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.

Question 2.
‘உலக வர்த்தக அமைப்பு’ பற்றி எழுதுக.
விடை:
உலக வர்த்தக அமைப்பு (WTO):

  • 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை (WTO) அமைப்பதற்கு காட் உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றின் போது இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்திட 104 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது.
  • WTO உடன்படிக்கை ஜனவரி 1, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது.

உலக வர்த்த க அமைப்பு (World Trade Organisation):
தலைமையகம் : ஜெனிவா, சுவிட்சர்லாந்து
நோக்கம் : வணிகத்தினை கட்டுப்படுத்தல், அயல்நாட்டு வாணிபம்
உறுப்பினர்கள் : தலைமை இயக்குநர், துணை தலைமை இயக்குநர்-4 மற்றும் 80 உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 அலுவலக ஊழியர்கள்.

உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்கள்:

  • அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
  • வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
  • வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
  • நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்.
  • உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
  • முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
  • முழு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 3.
உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
விடை:
உலகமயமாக்கலின் சவால்கள்:

  • உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
  • வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
  • உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள் தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
  • இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
  • மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

10th Social Science Guide உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
காட்இன் GATT) ஏழாவது சுற்று …………….. இல் நடந்தது.
அ) சுவிட்சர்லாந்து
ஆ) ஜப்பான்
இ) இங்கிலாந்து
ஈ) டோக்கியோ
விடை:
ஈ) டோக்கியோ

Question 2.
உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் ……………..
அ) பராகுவே
ஆ) டோக்கியோ
இ) அன்னிசி
ஈ) ஜெனீவா
விடை:
ஈ) ஜெனீவா

Question 3.
FERA …………….. உருவானது.
அ) 1947
ஆ) 1999
இ) 1974
ஈ) 1954
விடை:
இ 1974

Question 4.
ஹரோ மோட்டோகிராப் …………….. தொழில்சார் நிறுவனம்.
அ) தகவல் தொடர்பு
ஆ) வங்கி
இ) ஆட்டோமொபைல்ஸ்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ ஆட்டோமொபைல்ஸ்

Question 5.
பயனுள்ள விளம்பர (ம) விற்பனை ஊக்குவிப்பு தொழில்நுட்பங்களை ஏற்கிறது, ……………..
அ) சந்தைப்படுத்தும் மேன்மை
ஆ) நல்ல கருவிகள் கண்டுபிடிப்பு
இ) பண்டங்களின் கண்டுபிடிப்பு
ஈ) நிதி மேன்மை
விடை:
அ) சந்தைப்படுத்தும் மேன்மை

Question 6.
……………….. கிழக்கிந்திய நிறுவனம் துவங்கியது.
அ) 13 டிசம்பர் 1600
ஆ) 31 டிசம்பர் 1600
இ) 21 டிசம்பர் 1800
ஈ) 20 டிசம்பர் 1900
விடை:
ஆ) 31 டிசம்பர் 1600

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 7.
…………….. தலைமையகம் பழவேற்காடு ஆகும்.
அ) போர்த்துகீசியர்
ஆ) டேனியர்
இ) ஸ்பானியர்
ஈ) டச்சுக்காரர்கள்
விடை:
ஈ) டச்சுக்காரர்கள்

Question 8.
இந்தியாவில் டேனிஷ் குடியேற்றங்களால் ……………………….. தலைமையிடமாக மாறியது.
அ) டிராங்குபார் (தரங்கம்பாடி)
ஆ) புலிகாட்
இ) மசூலிப்பட்டினம்
ஈ) பிரெஞ்சு
விடை:
அ) டிராங்குபார் (தரங்கம்பாடி)

Question 9.
ஆரம்பத்தில் இந்தியாவில் போர்த்துகீசியரின் தலைநகரமாக ……………. இருந்தது.
அ) கொச்சின்
ஆ) புலிகாட்
இ) பிரெஞ்சு
ஈ) அச்சிவி
விடை:
அ) கொச்சின்

Question 10.
…………… வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டைக்கு வாணிபத்திற்காக வந்தார்.
அ) மே 1948
ஆ) மே 1498
இ) மார்ச் 1498
ஈ) மார்ச் 1948
விடை:
ஆ) மே 1498

Question 11.
……………… நூற்றாண்டிற்கிடையே உலகமயமாக்கல் குறிப்பிட்ட வேறுபாட்டைக் கொண்டிருந்தது.
அ) 15ஆம்
ஆ) 20ஆம்
இ) 12ஆம்
ஈ) 19ஆம்
விடை:
20 ஆம்

Question 12.
நவீன காலகட்டத்துக்கு முந்தைய காலம் …………………… உலகமயமாக்கல் எனப்படும்.
அ) நவீன
ஆ) இடைப்பட்ட
இ) தொன்மையான
ஈ) வெளி
விடை:
இ தொன்மையான

Question 13.
…………….. பேரரசின் எழுச்சியால் கடல்வழி வாணிபம் ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர்.
அ) ஐரோப்பிய
ஆ) அமெரிக்க
இ) ஆசிய
ஈ) ஆப்பிரிக்க
விடை:
அ) ஐரோப்பிய

Question 14.
கிழக்கிந்திய நிறுவனம் ………………. தொடங்கப்பட்டது.
அ) 1948
ஆ) 1602
இ) 1600
ஈ) 1653
விடை:
ஆ) 1602

Question 15.
……………. காலகட்டம் உலகமயமாக்கலில் ஒரு முக்கிய ஆரம்பகட்டமாக இருந்து வந்தது.
அ) ஹெலினிஸ்டிக்
ஆ) இஸ்லாமிய
இ) இந்துத்துவ
ஈ) அ) (ம) இ)
விடை:
ஆ) இஸ்லாமிய

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.
விடை:
உலகமயமாக்கல்

Question 2.
உலகமயமாக்கலின் ஆரம்ப வடிவத்தை ………….. உலகமயமாக்கல் என்பர்.
விடை:
தொன்மையான

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 3.
17ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ……………… மயமானது.
விடை:
தனியார்

Question 4.
19ஆம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் ……………… வடிவத்தைப் பெற்றது.
விடை:
நவீன

Question 5.
வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும், விரிவுபடுத்தவும் வணிகர்கள் உருவாக்கினார்கள்.
விடை:
தென்னிந்திய வர்த்தக குழுவை

Question 6.
……………… புதிய கடல்வழிப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
விடை:
வாஸ்கோடகாமாவால்

Question 7.
வாஸ்கோடகாமாவின் இரண்டாவது பயணம் ………………. தொடங்கியது.
விடை:
1502

Question 8.
……………….. என்பவரால் டச்சு நிறுவனம் தொடங்கப்பட்டது.
விடை:
அட்மிரல் வான் டெர் ஹகேன்

Question 9.
பிரெஞ்சுக்காரர்களின் தலைமையகமாக 1704ல் ………….. விளங்கியது.
விடை:
பாண்டிசேரி

Question 10.
உலகமயமாக்கலின் கொள்கை ………….. கையெழுத்திட்டபோது சரியானது.
விடை:
டங்கல் வரைவில்

Question 11.
SLR என்பது ……………… எனப்படுகிறது.
விடை:
சட்ட ரீதியிலான நீர்மை விகிதம்

Question 12.
15 பன்னாட்டு நிறுவனங்களில் ………………. அமெரிக்காவை சேர்ந்த தாகும்.
விடை:
11

Question 13.
……………….ஆம் ஆண்டுகளுக்கிடையில் மொத்தம் 12,760 வெளிநாட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
விடை:
1948-1988

Question 14.
……………… நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கிறது.
விடை:
நியாயமான வர்த்தகம்

Question 15.
பன்னாட்டு நிறுவனங்கள் ………………. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
பெரு நிறுவனங்கள்

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 4

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
நவீன உலகமயமாக்கல் வரையறு.
விடை:
19ஆம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் நவீன வடிவத்தை நெருங்கியது.

19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே நடைபெற்ற உலகமயமாக்கல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கொண்டிருந்தன.

அவை, அந்த நூற்றாண்டுகளில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக பொருளாதாரத்தில் மூலதனம் மற்றும் முதலீடு செய்யப்பட்டதும், 20ஆம் நூற்றாண்டில் வணிக உற்பத்தியில் அதிக பங்கினை பெற்றிருந்ததுடன், சேவைகள், வர்த்தகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி வணிகத்தில் எழுச்சியுற்றிருந்ததும் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 2.
2018-ல் இந்தியாவின் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் யாவை?
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 5

Question 3.
சுங்க வரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு வரையறு.
விடை:

  • 1947இல் 23 நாடுகள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • காட்டின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.
  • இதன் இயக்குநர் ஜெனரல் ஆர்தர் டங்கல் கொண்டு வந்த இறுதி சட்ட/ஒப்பந்த வரைவு “டங்கல் வரைவு” என்று அழைக்கப்பட்டது.
  • காட்டின் (GATT) முக்கிய நோக்கம், அர்த்தமுள்ள விதிமுறைகளை பின்பற்றி பலவிதமான கட்டணங்களையும் ஒதுக்கீடுகளையும், மானியங்களையும் குறைப்பதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிப்பது ஆகும்.

Question 4.
நியாயமான வர்த்தக அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள் யாவை?
விடை:

  • சிறிய அளவிலான விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வருமானத்தை உயர்த்துவது மற்றும் உறுதிப்படுத்துவது.
  • பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய பொருளாதார இலாபங்கள், வாய்ப்புகள் மற்றும் இடர்பாடுகளை சமமாக்குதல்.
  • உற்பத்தியாளர் குழுக்களின் நிறுவன மற்றும் வர்த்தக திறன்களை அதிகரித்தல்.

Question 5.
பன்னாட்டு நிறுவனத்தின் (MNC) பரிமாண வளர்ச்சி பற்றிக் கூறுக.
விடை:

  • கிழக்கிந்திய நிறுவனம், ஒரு வர்த்தக நிறுவனமாக இந்தியாவிற்கு வந்தது.
  • 1920களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் பிரித்தெடுக்கப்பட்ட தொழில்களில் அல்லது தொழில் நடத்தும் நாடுகளின் மூலப்பொருள்களை கட்டுப்படுத்தி மெதுவாக இந்தியாவினுள் நுழைந்தன.
  • இந்தியாவில் நான்கு பெரிய ஏற்றுமதி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையாக உள்ளது.
  • இவற்றில் அதிகமானது அமெரிக்காவினுடையது ஆகும். இந்தியாவிலுள்ள 15 பெரிய பன்னாட்டு நிறுவனங்களில், 11 அமெரிக்காவை சேர்ந்ததாகும்.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
MNC-யின் வளர்ச்சிக்கான காரணங்கள் பற்றி விவரிக்க.
விடை:
1. சந்தை நிலப்பரப்பின் விரிவாக்கம்:
பெரிய அளவிலான நிறுவனங்கள் விரிவடைந்து வருவதால், அந்த நிறுவனம் உள்ள நாட்டின் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் அதன் செயல்பாடுகளை மேலும் விரிவாக்குகிறது.

2. சந்தைப்படுத்தும் மேன்மை:
ஒரு பன்னாட்டு நிறுவனம், தேசிய நிறுவனங்களின் மீது சந்தைப்படுத்தும் மேன்மையைக் கொண்டுள்ளது. இது சந்தை மதிப்பினைப் பெற்று, அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் குறைவான சிரமங்களை எதிர் கொள்கிறது.
> மேலும் பயனுள்ள விளம்பர மற்றும் விற்பனை ஊக்குவிப்பு தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்கிறது.

3. நிதி மேன்மை :
> இதில் நிதி வளங்களும், உயர்நிதி பயன்பாடுகளும் உள்ளன.
> இதனால் வெளிப்புற மூலதன சந்தைகளை எளிதில் அணுகமுடியும் மற்றும் அதன் சர்வதேச புகழ் காரணமாக வளங்களை அதிகரிக்கவும் முடியும்.

4. தொழில்நுட்ப மேன்மை :
பின்தங்கிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க, ஊக்கமளித்ததற்கான முக்கிய காரணம் இந்த நிறுவனங்கள் தொழில் வளர்ச்சியில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் காணப்படுவதேயாகும்.

5. பண்டங்களின் கண்டுபிடிப்புகள் :
பன்னாட்டு நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை மேம்பட்ட வடிவமைப்புகளாக உருவாக்குவதற்கான பணியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 2.
உலகமயமாக்கலின் எதிமறைத் தாக்கம் பற்றி விவரிக்கவும்.
விடை:

  • நாடுகளுக்கிடையே மிக அதிகமான மூலதனமானது நியாயமற்ற மற்றும் ஒழுக்கமற்ற விநியோகிப்பாளர்களை அறிமுகப்படுத்துகிறது.
  • தேசிய ஒருமைப்பாட்டை இழந்து வருவதோடு, மிக அதிகமான வர்த்தக பரிமாற்றம் இருப்பதால், சுதந்திரமான உள்நாட்டுக் கொள்கைகள் இழக்கப்படுகின்றன என்பது அச்சத்திற்குரியதாகும்.
  • முக்கிய உள்கட்டமைப்பும் மற்றும் வளங்களை பிரித்தெடுத்தலும் ஒரு பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு தேவை என்றாலும், இது எதிர்மறை சுற்றுச்சூழல் மற்றும் சமூக செலவுகளை அதிகரிக்கும்.
  • அந்நிய செலாவணியை பெறுவதற்காக, இயற்கை வளங்கள் மிக அதிகமாக விரைவாக சுரண்டப்படுகிறது.
  • சுற்றுச்சூழல் பற்றிய தரங்களும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

10th Social Science Guide மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
GNPயின் சமம் …………………
அ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP
ஆ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP
இ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
ஈ) NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
விடை:
இ GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

Question 2.
நாட்டு வருமானம் அளவிடுவது …………………..
அ) பணத்தின் மொத்த மதிப்பு
ஆ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு
இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
விடை:
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

Question 3.
முதன்மை துறை இதனை உள்ளடக்கியது ……………..
அ) வேளாண்மை
ஆ) தானியங்கிகள்
இ) வர்த்த கம்
ஈ) வங்கி
விடை:
அ) வேளாண்மை

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 4.
………………… முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.
அ) செலவு முறை
ஆ) மதிப்பு கூட்டு முறை
இ) வருமான முறை
ஈ) நாட்டு வருமானம்
விடை:
ஆ) மதிப்பு கூட்டு முறை

Question 5.
GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?
அ) வேளாண் துறை
ஆ) தொழில் துறை
இ) பணிகள் துறை
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
இ பணிகள் துறை

Question 6.
பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 இல் ………………….. லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அ) 91.06
ஆ) 92.26
இ) 80.07
ஈ) 98.29
விடை:
ஆ) 92.26

Question 7.
வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ……………… அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.
அ) 1 வது
ஆ) 3 வது
இ) 4 வது
ஈ) 2 வது
விடை:
ஈ) 2 வது

Question 8.
இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் …………….. ஆண்டுகள் ஆகும்.
அ) 65
ஆ) 60
இ) 70
ஈ) 55
விடை:
அ) 65

Question 9.
கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை?
அ) நீர்பாசன கொள்கை
ஆ) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
இ) நில சீர்திருத்தக் கொள்கை
ஈ) கூலிக் கொள்கை
விடை:
ஆ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை

Question 10.
இந்தியப் பொருளாதாரம் என்பது ……………………..
அ) வளர்ந்து வரும் பொருளாதாரம்
ஆ) தோன்றும் பொருளாதாரம்
இ) இணை பொருளாதாரம்
ஈ) அனைத்தும் சரி
விடை:
ஈ) அனைத்தும் சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் ………………. துறை முதன்மை துறையாகும்.
விடை:
பணிகள்

Question 2.
…………….. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
விடை:
பொருளாதாரம்

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 3.
இரண்டாம் துறையை வேறுவிதமான …………….. துறை என அழைக்கலாம்.
விடை:
தொழில்

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 2

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
நாட்டு வருமானம் – வரையறு.
விடை:

  • நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
  • பொதுவாக நாட்டு வருமானம் மொத்த நாட்டு உற்பத்தி (GNP) அல்லது நாட்டு வருமான ஈவு எனப்படுகிறது.

Question 2.
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?
விடை:
ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்)களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

Question 3.
GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:

  • பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுகிறது.
  • பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.
  • உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.
  • வாங்கும் திறனை மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.
  • பொதுத் துறை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள பயன்படுகின்றது.
  • பொருளாதார திட்டமிட வழிக்காட்டியாகவும் பயன்படுகிறது.

Question 4.
தனிநபர் வருமானம் என்றால் என்ன?
விடை:

  • தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
  • நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.
  • Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 3

Question 5.
மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு.
விடை:

  • ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால், இறுதிப்பண்டத்தின் சந்தை மதிப்பை அளவிடலாம்.
  • உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும் பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.

மதிப்புக் கூட்டு முறை:

  • டீத்துாள் + பால் + சர்க்கரை (இடைநிலைப் பண்டங்கள்) = தேனீர் (இறுதிப்பண்டம்)
  • இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு.

Question 6.
இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.
விடை:

  • வேளாண் கொள்கை
  • தொழில்துறை கொள்கை
  • புதிய பொருளாதாரக் கொள்கை
  • வணிகக் கொள்கை
  • ஊதியக் கொள்கை
  • மக்கள் தொகைக் கொள்கை

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 7.
சிறு குறிப்பு வரைக.
1) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)
2) மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)
விடை:
மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)

  • ஐக்கிய நாடுகள் சபை “வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு – மகிழ்ச்சி” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • உறுப்பு நாடுகள் பூடானை ஒரு எடுத்துக்காட்டாக பின்பற்றி மகிழ்ச்சியையும் நல்வழியையும் மகிழ்ச்சி என அழைத்தனர். (அடிப்படை மனித குறிக்கோள்).

GNHயின் 4 தூண்க ள் :

  1. நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி
  2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  3. கலாச்சாரத்தை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்
  4. நல்ல ஆட்சித் திறன்

மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

  • மனித மேம்பாட்டுக் குறியீடு என்பது 1990ம் ஆண்டு பாகிஸ்தானின் முகஹப்-உல் ஹக் என்ற பொருளியல் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு, வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத் தரம், GDP யின் மடக்கை செயல்பாடு என கணக்கிடப்பட்டு வாங்கும் சக்தி சமநிலைக்கு (PPP) சரி செய்யப்படுகிறது.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி.
விடை:
மொத்த நாட்டு உற்பத்தி (GNP):
மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.
GNP = C + I + G + (X-M) +NFIA
C – நுகர்வோர்
I – முதலீட்டாளர்
G – அரசு செலவுகள்
X-M – ஏற்றுமதி – இறக்குமதி
NFIA – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP):
ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்)களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

நிகர நாட்டு உற்பத்தி (NNP):

  • மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.
  • நிகர நாட்டு உற்பத்தி (NNP) = மொத்த நாட்டு உற்பத்தி (GNP) – தேய்மானம்.

நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP):

  • நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தைக் (தேய்மான செலவின் அளவு) கழித்து பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
  • நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) – தேய்மானம்.

தலா வருமானம் அல்லது தனி நபர் வருமானம் (PCI):

  • தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
  • நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.
  • Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 4

தனிப்பட்ட வருமானம் (PI):
நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.

செலவிடத் தகுதியான வருமானம் (DI):

  • தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்படுகின்ற வருமானத்தை செலவிடத் தகுதியான வருமானம் எனப்படுகிறது.
  • இதனை இவ்வாறு அழைக்கலாம்.
    DPI = தனிப்பட்ட வருமானம் – நேர்முகவரி
    நுகர்வு முறையில் DI = நுகர்வுச் செலவு + சேமிப்பு)

Question 2.
GDPஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.
விடை:
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகள் :
செலவின முறை :

  • இந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதிப்பண்ட பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத் தொகையேயாகும்.
  • Y = C + I + G + (X – M)

வருமான முறை:

  • பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது.
  • வருமான முறையில் GDPஐ கணக்கிடும்போது
  • வருமானம் = கூலி + வாரம் + வட்டி + லாபம்.

மதிப்பு கூட்டு முறை:

  • “இறுதிப்பண்டம்” என்பது ஹோட்டலில் ஒரு கோப்பை தேனீர் (Tea) நமக்கு வழங்கப்படுவதாகும். அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் டீதூள், பால் மற்றும் சர்க்கரை “இடைநிலை பண்டங்கள்” ஆகும்.
  • ஒரு கோப்பை தேனீர் இறுதிப் பண்டமாக மாறுவதற்கு இவைகள் ஒரு பகுதியாக அமைகிறது.
  • ஒரு கோப்பை தேனீர் தயாரிக்க பயன்படுத்திய ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால், தேனீரின் சந்தை மதிப்பை அளவிடலாம்.
  • உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.

மதிப்புக் கூட்டு முறை:

  • டீத்துாள் + பால் + சர்க்கரை (இடைநிலைப் பண்டங்கள்) = தேனீர் (இறுதிப்பண்டம்)
  • இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 3.
இந்தியாவில் GDPயில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி.
விடை:
GDPயின் துறை வாரியான பங்களிப்பு (2018-2019):

  • வேளாண்மைத் துறை – 15.87%,
  • விவசாயம், காடுகள் மற்றும் மீன்பிடித்தல் – 15.87%
  • தொழில்துறை – 29.73%
  • சுரங்கம் மற்றும் குவாரி – 2.7%
  • உற்பத்தி – 16.83%
  • மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல், பிற பயன்பாட்டு சேவைகள் – 2.67%
  • கட்டுமானம் – 7.54%
  • பணிகள் துறை – 54.4%
  • வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் – 18.62%
  • நிதி, ரியல் எஸ்டேட் தொழில்முறை சேவைகள் – 20.96%
  • பொது நிர்வாகம், பாதுகாப்பு பிறபணிகள் – 14.82%
  • இந்திய பொருளாதாரத்தில் விவசாய துறையின் பங்களிப்பு, உலக சராசரி 6.4% விட அதிகமாக உள்ளது.
  • ஆனால், தொழில்துறை மற்றும் பணிகள் துறைகளின் பங்களிப்பு, உலக சராசரியை விட 30% தொழில்துறையிலும் மற்றும் 63% பணிகள் துறையிலும் குறைவாகவுள்ளன.

Question 4.
பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளைக் கூறுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 5
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 6

Question 5.
கீழ்க்காணும் பொருளாதார கொள்கைகளை விவரி.
1. வேளாண் கொள்கை
2. தொழிற்கொள்கை
3. புதிய பொருளாதார கொள்கை
விடை:
வேளாண் கொள்கை:
உள்நாட்டு வேளாண்மை மற்றும் வெளிநாட்டு வேளாண்மை இறக்குமதி பொருள்கள் பற்றிய அரசின் முடிவுகளையும், நடவடிக்கைகளையும் பற்றியது வேளாண் கொள்கையாகும்.

சில பரவலான கருப்பொருள்கள், இடர் மேலாண்மை மற்றும் சரிசெய்தல், பொருளாதார நிலைத் தன்மை, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத் தன்மையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டு பொருள்களுக்கான சந்தை அணுகல் ஆகியவை வேளாண் கொள்கையில் அடங்கும்.

சில வேளாண் கொள்கைகள் : விலைக் கொள்கை நில சீர்திருத்த கொள்கை, பசுமைப் புரட்சி, பாசனக் கொள்கை, உணவுக் கொள்கை, விவசாய தொழிலாளர் கொள்கை மற்றும் கூட்டுறவு கொள்கை போன்றவைகளாகும்.

தொழில்துறை கொள்கை:
தொழில்துறை முன்னேற்றம் எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் முக்கியமான அம்சமாகும்.

இது வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நவீனமயமாக்கலுக்கு வழிவகுக்கப்பட்டு இறுதியில் பொருளாதாரம் தன்னிறைவு அடைகிறது.

உண்மையில், தொழில் துறை வளர்ச்சி, விவசாயத்துறை (புதிய பண்ணை தொழில் நுட்பம்) மற்றும் பணிகள் துறை போன்ற துறைகளை ஊக்குவிக்கின்றன.

இது பொருளாதார வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

1948லிருந்து பல தொழில் துறை கொள்கைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது.

எடுத்துக்காட்டாக, சில தொழில் கொள்கைகள்: ஜவுளித் தொழில் கொள்கை சர்க்கரை தொழில் கொள்கை, தொழில்துறை வளர்ச்சி விலைக் கொள்கை, சிறுதொழில் தொழிற்கொள்கை மற்றும் தொழில்துறை தொழிலாளர் கொள்கை போன்றவைகளாகும்.

புதிய பொருளாதாரக் கொள்கை:

  • 1990களின் ஆரம்பத்தில் இந்தியாவின் பொருளாதாரம் கணிசமான கொள்கை மாற்றங்களுக்கு உட்பட்டது.
  • இந்த பொருளாதார சீர்திருத்தம், LPG அல்லது தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என அழைக்கப்படுகிறது.
  • இந்த பொருளாதார சீர்திருத்தங்கள், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றமடையச் செய்தது.

10th Social Science Guide மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது ………………. ஒரு பகுதியாகும்.
அ) மொத்த நாட்டு உற்பத்தி
ஆ) நாட்டு வருமானம்
இ) மொத்த உள்நாட்டு உற்பத்தி
ஈ) நிகர நாட்டு உற்பத்தி
விடை:
இ மொத்த உள்நாட்டு உற்பத்தி

Question 2.
GDPயின் நவீன கருத்து ……………… உருவாக்கப்பட்டது.
அ) 1934
ஆ) 1943
இ) 1955
ஈ) 1933
விடை:
அ) 1934

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 3.
…………… என்பது கூலி + வாரம் + வட்டி + லாபம்.
அ) மதிப்பு கூட்டு முறை
ஆ) அ) (ம) ஆ)
இ) செலவின முறை
ஈ) வருமான முறை
விடை:
ஈ) வருமான முறை

Question 4.
…………………..யை முதன்மைத் துறை என்பர்.
அ) பணிகள் துறை
ஆ) வேளாண் துறை
இ) தொழில் துறை
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) வேளாண் துறை

Question 5.
தொழில் துறைக்கு எடுத்துக்காட்டு ……………..
அ) மீன்பிடித்தல்
ஆ) காடு உருவாக்கம்
இ) பெட்ரோலியம்
ஈ) கால்நடை வளர்ப்பு
விடை:
இ பெட்ரோலியம்

Question 6.
…………….யை மூன்றாம் (ம) நான்காம் தொழிலிருந்து வேறுபடுத்திட முடியும்.
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் துறை
இ) பணிகள் துறை
ஈ) அ) (ம) ஆ)
விடை:
இ) பணிகள் துறை

Question 7.
2019இல் பணிகள் துறையில் …………….. லட்சம் கோடி நடப்பு விலையில் மொத்த மதிப்பு உள்ளது.
அ) 28.62
ஆ) 98.26
இ) 92.26
ஈ) 94.26
விடை:
இ 92.26

Question 8.
பொருளாதார முன்னேற்றம் என்பது ……………. யைக் குறிக்கும்.
அ) அளவின்
ஆ) தரம்
இ) அ) (ம) ஆ)
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தரம்

Question 9.
……………… என்பது பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதாகும்.
அ) நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல்
ஆ) நிகர நாட்டு உற்பத்தி
இ) நிகர உள்நாட்டு உற்பத்தி
ஈ) மனித மேம்பாட்டுக் குறியீடு
விடை:
ஈ) மனித மேம்பாட்டுக் குறியீடு

Question 10.
ஐந்தாண்டுத் திட்டத்தில் ……………… உருவாக்கப்பட்டது.
அ) பொருளாதார வளர்ச்சி
இ) வேலை வாய்ப்பு
ஈ) வறுமை
விடை:
இ வேலை வாய்ப்பு

Question 11.
…………….. பொருளாதார வளர்ச்சியின் பொருந்தும் தன்மை ஆகும்.
அ) வளர்ந்த
ஆ) வளர்ந்து வரும்
இ) வளர்ச்சியடைந்த
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) வளர்ந்த

Question 12.
நிகழ்வெண் அதிர்வெண் பொருளாதார முன்னேற்றத்தில் ………………. செயல்முறை ஆகும்.
அ) படிப்படியாக
ஆ) இலக்க
இ) தொடர்ச்சியான
ஈ) ஆ) (ம) இ)
விடை:
இ தொடர்ச்சியான

Question 13.
பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு ……………. கருத்தாகும்.
அ) குறுகிய
ஆ) அகலமான
இ) பரந்த
ஈ) ஆழமான
விடை:
இ பரந்த

Question 14.
தலா வருமானம் ………………. ஆண்டுகளில் 2 மடங்காய் உயர்ந்துள்ளது.
அ) 21
ஆ) 25
இ) 22
ஈ) 12
விடை:
ஈ) 12

Question 15.
மொத்த தேசிய மகிழ்ச்சி உருவாக்கப்பட்ட ஆண்டு ………….. ஆகும்.
அ) 1927
ஆ) 1972
இ) 1955
ஈ) 1966
விடை:
ஆ) 1972

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இருப்பு (அ) செயல்பாட்டில் நிச்சயமற்ற (அ) ஆபத்தான நிலை தொடர்ந்தால் …………… ஏற்படும்.
விடை:
தடுமாற்றம்

Question 2.
……………. என்ற வார்த்தை பிரிட்டிஷ் பத்திரிக்கையால் உருவாக்கப்பட்டது.
விடை:
GNH

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 3.
இந்திய பொருளாதாரம் ……………… துறைகளைக் கொண்டது.
விடை:
3

Question 4.
உலகளாவிய மென்பொருள் வணிகங்களின் மையம் ………………வில் உள்ளது.
விடை:
பெங்களூரு

Question 5.
UNDP என்பது ……………..
விடை:
ஐ.நா. வளர்ச்சித் திட்டம்

Question 6.
பொருளாதார வளர்ச்சி ………………. உயர்த்தும்.
விடை:
நாட்டு வருமானத்தை

Question 7.
இந்தியாவில் ………….. வேகமாக வளரும் மக்கள் உள்ள னர்.
விடை:
உழைக்கும் வயதில்

Question 8.
வெளி உலகத்துடனான ……………… குறைவாகவே இருந்தது.
விடை:
வர்த்தகம் (ம) தொடர்பு

Question 9.
பொருளாதார அளவைக் கண்டறிய ……………… உதவுகிறது.
விடை:
GDP & GNP

Question 10.
……………… ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாகும்.
விடை:
பொருளாதார வளர்ச்சி

Question 11.
உலகின் மொத்த விவசாயப் பொருட்களின் வெளியீட்டில் …………………… இந்தியாவினால் வெளியிடப்படுகிறது.
விடை:
7.39%

Question 12.
GDP அளவை மட்டும் அளவிடுகிறது …………. அல்ல.
விடை:
தரத்தை

Question 13.
வாங்கும் திறனை மதிப்பீடு செய்ய உதவுவது …………….
விடை:
மொத்த உள்நாட்டு உற்பத்தி

Question 14.
தாதாபாய் நௌரோஜி ……………… பற்றிய கருத்தை வெளியிட்டார்.
விடை:
தனிநபர் விருமானத்தைப்

Question 15.
அங்காடியில் விற்கும் பண்டங்கள் (ம) பணிகளின் மதிப்பு …………..
விடை:
அங்காடி மதிப்பு

Question 16.
இடைநிலைப் பண்ட மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்தால் அது ……………….. எனப்படும்.
விடை:
“இருமுறை கணக்கிடுதல்”

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 17.
………….. குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உயர்வு பணமதிப்பால் அளவிடும் அளவுகோல் ஆகும்.
விடை:
பொருளாதார வளர்ச்சி

Question 18.
வறுமை ஒழிப்பு (ம) ……………. ஆகியவை இந்திய வளர்ச்சிப் பாதையின் பகுதியாகும்.
விடை:
கிராமப்புற வளர்ச்சி

Question 19.
இந்தியா ………………. சட்ட முறையைக் கொண்டுள்ளது.
விடை:
கடுமையான

Question 20.
பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு …………………………. மூலம் மேற்கொள்ளப்படும்.
விடை:
மனித மேம்பாட்டுக்குறியீடு

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 7
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 8

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறைபாடுகள் யாவை?
விடை:

  • GDPயில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்ல.ை
  • GDP அளவை மட்டும் அளவிடுகிறது; தரத்தை அல்ல.
  • GDPயில் நாட்டு வருமான பகிர்ந்தளிப்பு பற்றி கூறவில்லை .
  • GDP மக்கள் வாழும் வாழ்க்கை முறையைப் பற்றி கூறவில்லை.

Question 2.
மொத்த நாட்டு உற்பத்தி (GNP) வரையறு.
விடை:

  • மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும்.
  • வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.
    GNP = C+I+G + (X-M) + NFIA
    C – நுகர்வோர்
    I – முதலீட்டாளர்
    G – அரசு செலவுகள்
    X – M – ஏற்றுமதி – இறக்குமதி
    NFIA – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்

Question 3.
மொத்த மதிப்பு கூடுதல் – வரையறு.
விடை:

  • பொருளாதாரத்தில் ஒரு பகுதி, தொழில் அல்லது துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பே மொத்த மதிப்பு கூடுதல் (GVA) ஆகும்.
  • GVA = GDP + மானியம் – வரிகள் (நேர்முக வரி, விற்பனை வரி).

Question 4.
தனிப்பட்ட வருமானம் (P) வரையறு.
விடை:
நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 5.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரையறு.
விடை:
பண்டங்கள் என்பது தொடக் கூடிய பொருளும், பணிகள் என்பது தொட்டு உணர முடியாததுமான நடவடிக்கைகள் ஆகும்.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறைபாடுகளை விவரி.
விடை:
1. GDPயில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்லை :

  • சந்தையில் விற்கப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்கும்.
  • சுத்தமான காற்று, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமானது.
  • இதற்கு சந்தை மதிப்பு இல்லை. ஆகவே, இவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரம்புக்கு வருவதில்லை .

2. GDP அளவை மட்டும் அளவிடுகிறது; தரத்தை அல்ல:

  • 1970களில் பள்ளிகள் மற்றும் வங்கிகளில் பந்துமுனை பேனாக்கள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை .
  • ஏனென்றால், இந்தியாவில் கிடைக்கக்கூடிய மிக தரமற்ற பொருளாக இருந்தது.
  • பண்டத்தினுடைய தரம் எனபது மிக முக்கியமானதாகும். ஆனால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பின்பற்றப்படுவதில்லை.

3. GDPயில் நாட்டு வருமான பகிர்ந்தளிப்பு பற்றி கூறவில்லை :

  • ஒரு நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரைவாக வளரலாம். ஆனால் வருமானம் சமனற்ற நிலையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
  • இதனால் ஒரு சிறிய சதவீத மக்களே பயன் அடைகிறார்கள்.

4. GDP மக்கள் வாழும் வாழ்க்கை முறையைப் பற்றி கூறவில்லை :
GDP, மிகவும் குறைந்த சுகாதார நிலை, மக்கள் ஜனநாயகமற்ற அரசியல் அமைப்பு, தற்கொலை விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்மட்ட தனிநபர் வருமானத்துடன் கைகோர்த்து செல்கிறது.

Question 2.
பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றி விவரிக்க.
விடை:
பொருளாதார வளர்ச்சி:
ஐக்கிய நாடுகளின் பார்வையில், பொருளாதார வளர்ச்சி என்பது வாழ்க்கை தரம் உயர்தல் அல்லது ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துதலாகும்.

ஒரு பொருளாதாரத்தில் அல்லது நாட்டின் உற்பத்தியில் அதன் குறிப்பிட்ட காலப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி உயர்வு பணமதிப்பினால் அளவிடப்பட்ட அளவு கோல் ஆகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மொத்த தேசிய உற்பத்தி (GNP) ஆகிய இரண்டும் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முக்கிய அளவுகோல்.

பொருளாதார முன்னேற்றம்:
உற்பத்தி நிலையை அல்லது பொருளாதாரத்தின் வெளியீட்டை அதிகப்படுத்துவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.

இது உற்பத்தி அளவு அதிகரிப்பதை மட்டுமில்லாமல், சமூக பொருளாதார காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

தொழில் நுட்ப மேம்பாடு, தொழிலாளர் சீர்திருத்தம், வாழ்க்கைத் தரத்தை அதிகப்படுத்துவது, பொருளாதார அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகிய தரமான அளவுகளை அளப்பதே பொருளாதார முன்னேற்றமாகும்.

ஒரு பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதற்கு மனிதவள மேம்பாடு குறியீடு (HDI) சரியானதாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

10th Social Science Guide இந்தியாவின் சர்வதேச உறவுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லை ஆகும்?
அ) பர்மா – இந்தியா
ஆ) இந்தியா – நேபாளம்
இ) இந்தியா – சீனா
ஈ) இந்தியா – பூடான்
விடை:
இ) இந்தியா – சீனா

Question 2.
இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?
1) ஜி 20
2) ஏசியான் (ASEAN)
3) சார்க் (SAARC)
4) பிரிக்ஸ் (BRICS)

அ) 2 மட்டும்
ஆ) 2 மற்றும் 4
இ) 2, 4 மற்றும் 1
ஈ) 1, 2 மற்றும் 3
விடை:
அ) 2 மட்டும்

Question 3.
ஒபெக் (OPEC) என்பது ……………….
அ) சர்வதேச காப்பீட்டு நிறுவனம்
ஆ) ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்
இ) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு
ஈ) ஒரு சர்வதேச நிறுவனம்
விடை:
இ எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?
அ) வங்காளதேசம்
ஆ) மியான்மர்
இ) ஆப்கானிஸ்தான்
ஈ) சீனா
விடை:
அ) வங்காளதேசம்

Question 5.
பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
i) சல்மா அணை – 1. வங்காளதேசம்
ii) பராக்கா ஒப்பந்தம் – 2. நேபாளம்
iii) சுக்கா நீர்மின்சக்தி திட்டம் – 3. ஆப்கானிஸ்தான்
iv) சாரதா கூட்டு மின்சக்தித் திட்டம் – 4. பூடான்

அ) 3 1 4 2
ஆ) 3 1 2 4
இ) 3 4 1 2
ஈ) 4 3 2 1
விடை:
அ) 3 1 4 2

Question 6.
எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 8
விடை:
இ 7

Question 7.
எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?
அ) இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்
ஆ) மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்
இ) மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு
ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு
விடை:
ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு

Question 8.
எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?
அ) அருணாச்சலப்பிரதேசம்
ஆ) மேகாலயா
இ) மிசோரம்
ஈ) சிக்கிம்
விடை:
ஈ) சிக்கிம்

Question 9.
எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
விடை:
அ) ஐந்து

Question 10.
சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்
அ) மவுண்ட்பேட்டன் பிரபு
ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்
இ) கிளிமன்ட் அட்லி
ஈ) மேற்கூறிய ஒருவருமில்லை
விடை:
ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு ……….. ஆகும்.
விடை:
பூட்டான்

Question 2.
இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக ……….. இருக்கிறது.
விடை:
மியான்மர்

Question 3.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு ………………. ஆகும்.
விடை:
நேபாளம்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
இந்தியாவிற்குச் சொந்தமான …. ……… என்ற பகுதி மேற்கு வங்காளம் – வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது.
விடை:
டீன்பிகா

Question 5.
இடிமின்ன ல் நிலம் என்று அறியப்படும் நாடு ………………. ஆகும்.
விடை:
பூட்டான்

Question 6.
இந்தியாவும் இலங்கையும் ………………ஆல் பிரிக்கப்படுகின்றன.
விடை:
பாக் ஜலசந்தி

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இந்தியா மற்றும் மியான்மரின் கலடன் போக்குவரத்துத் திட்டம் பின் வரும் போக்குவரத்து முறையில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது?
1) சாலை
2) ரயில் வழி
3) கப்பல்
4) உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
அ) 1, 2 மற்றும் 3
ஆ) 1, 3 மற்றும் 4
இ) 2, 3 மற்றும் 4
ஈ) 1, 2, 3 மற்றும் 4
விடை:
ஆ) 1, 3 மற்றும் 4

Question 2.
கூற்று : இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International – Solar Alliance) தொடங்கியுள்ள ன.
காரணம் : இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 3.
பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை?
1. இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு, டாக்கா பல்கலைக்கழகத்தில் ‘தாகூர் இருக்கை’ ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது.
2. மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயில் மியான்மர் ஆகும்.
3. நேபாளம், பூடான் ஆகியவை நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடுகளாகும்.
4. இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பங்குதாரர் நாடு இலங்கையாகும்.

அ) 1, 2 மற்றும் 3
ஆ) 2, 3 மற்றும் 4
இ) 1, 3 மற்றும் 4
ஈ) 1, 2 மற்றும் 4
விடை:
இ 1, 3 மற்றும் 4

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
கூற்று : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒபெக் (OPEC) ஆர்வம் காட்டியுள்ளது.
காரணம் : தேவையான எண்ணெய் வளங்கள் இல்லாததால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
இ கூற்று காரணம் இரண்டும் சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், வங்காளதேசம், மியான்மர், இலங்கை, மற்றும் மாலத்தீவு.

Question 2.
போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) பற்றிய சிறு குறிப்பு வரைக.
விடை:
இந்தியா, ஆப்கானிஸ்தான் உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (Strategic Partnership Agreement) மூலம் வலிமை பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறுசீரமைக்கவும், நிறுவனங்கள், வேளாண்மை, நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய சந்தையை எளிதாக அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை நல்கவும் வழிகோலுகிறது.

Question 3.
பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா.

Question 4.
கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன ?
விடை:

  • கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணைப்பதற்காக சாலை – நதி – துறைமுகம் – சரக்கு போக்குவரத்து திட்டமான கலடன் பன்முக மாதிரி போக்குவரத்து திட்டத்தினை இந்தியா உருவாக்கி வருகிறது.
  • கொல்கத்தா நகரை ஹோசிமின் உடன் இணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு திட்ம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதார மண்டலத்தை உருவாக்க மியான்மர், கம்போடியா, வியட்நாம் வழியே பணிகள் நடைபெறுகிறது.

Question 5.
சபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.
விடை:

  • சபஹார் ஒப்பந்தம் என்பது முக்கூட்டு ஒப்பந்தம் ஆகும்.
  • இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன்படி சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து வழிதடங்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Question 6.
இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகளாவிய குழுக்களைப் பட்டியலிடுக.
விடை:

  • ஐ.பி.எஸ்.ஏ. (IBSA)
  • பிம்ஸ்டெக் (BIMSTEC)
  • பி.சி.ஐ.எம் (BCIM)
  • ஆர்.சி.இ.பி (RCEP)
  • எம்.ஜி.சி. (MGC)
  • ஈ.எ.எஸ் (EAS)

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 7.
ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?
விடை:

  • உற்பத்தித் துறையில் உற்பத்தி மற்றும் திறன் இந்தியா திட்டங்களில் பங்களிக்கிறது.
  • 30,000 இந்திய மக்களுக்குப் பயிற்சி வழங்க ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் குறித்தும் இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் மூன்று உலகளாவிய குழுக்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்தும் எழுதுக.
விடை:

  • பல்வேறு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினராக இந்தியா செயல்படுவதோடு அவற்றில் சிலவற்றின் நிறுவன உறுப்பினராகவும் இருந்து வருகிறது.
  • இந்தியா முறைப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளான ஐ.நா.சபை அணிசேரா இயக்கம், சார்க்க ஜி-20 மற்றும் காமன்வெல்த் போன்றவைகளில் உறுப்பினராக உள்ளது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 3

Question 2.
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.
விடை:
பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாவதற்கான காரணம்:
உறுப்பு நாடுகளிடையே பெருளாதார வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவும், சொந்த மற்றும் சுயமாக நிரூபிக்கும் விதமாக இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

பிரிக்ஸின் நோக்கங்கள் :

  • பிராந்திய வளர்ச்சியை அடைவது.
  • வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே பாலமாக செயல்படுவது.
  • மனித மேம்பாட்டிற்கு மிகப் பரந்த அளவில் பங்களிப்பு செய்தல்.
  • அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்.
  • வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே உள்நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் நடப்பு சர்வதேச சிக்கல்களை எதிர்கொள்ளுதல்.
  • உறுப்பு நாடுகளிடையே தகவல் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதை ஊக்குவித்தல், உறுப்பு நாடுகளில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு பொருளாதார மாற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.

Question 3.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) திட்டம் குறித்தும் அவ்வமைப்பு எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்கின்றன என்பது குறித்தும் குறிப்பிடுக.
விடை:
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு:
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்) ஈராக்கில் பாக்தாத் நகரில் நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகும்.

இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ளது.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் திட்டம்:

  • அதன் உறுப்பு நாடுகளுக்குள் எண்ணெய் கொள்கைகளை ஒருங்கிணைத்தல்.
  • எண்ணெய் சந்தையை நிலைநிறுத்த உதவுதல்.
  • எண்ணெய் நுகர்வு செய்யும் நாடுகளுக்குத் திறமையான, சிக்கனமான, வழக்கமான, விநியோகத்தை அளித்தல்.
  • பெட்ரோலியத் தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு மூலதனத்திற்கு நியாயமான வருவாய் கிடைக்கச் செய்தல்.
  • ஒபெக் எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்தல்
  • பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச மேம்பாட்டு நிதி (OPID) என்பது குறைந்த வட்டி வீதத்தில் கடன் அளிக்கும் நிதி நிறுவனம் ஆகும். – இது சமூக மற்றும் மனிதாபிமானத் திட்டங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.
  • புத்தகங்கள், அறிக்கைகள், வரைபடங்கள், பெட்ரோலிய எரிசக்தி மற்றும் எண்ணெய் சந்தை தொடர்பான மாநாட்டு நடவடிக்கைகள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ஒபெக் கொண்டுள்ளது.
  • மையம் பொது மக்களாலும் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

10th Social Science Guide இந்தியாவின் சர்வதேச உறவுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் மூலம் வலிமை பெற்றது.
அ) இந்தோ பசிபிக்
ஆ) இந்தியா ஆப்கானிஸ்தான்
இ) இந்தியா ஆசியா
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இந்தியா ஆப்கானிஸ்தான்

Question 2.
இந்தியாவும் வங்காளதேசமும் …… நீளம் கொண்ட நிலப்பரப்பை எல்லையாக கொண்டுள்ளன.
அ) 4906.5 கி.மீ
ஆ) 4509.7 கி.மீ
இ) 4096.7 கி.மீ
ஈ) 4976.2 கி.மீ
விடை:
இ 4096.7 கி.மீ

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 3.
…………….. நீரைப் பகிர்ந்து கொள்ள 1977இல் கையெழுத்தான பராக்கா ஒரு வரலாற்று ஒப்பந்தம்.
அ) கங்கை
ஆ) காவிரி
இ) யமுனா
ஈ) அ மற்றும் ஆ
விடை:
அ) கங்கை

Question 4.
இந்திய-வங்காள தேசத்திற்கு பொதுவான 54 நதிகளிலிருந்து அதிகபட்ச நலனைப் பெறுவதற்காக ……………… நாட்டுக் கூட்டு நதி ஆணையம் செயல்படுகிறது.
அ) இரு
ஆ) மூன்று
இ) பல
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) இரு

Question 5.
……………. இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு எனப்படும் ‘இடி மின்னல் நிலம்’ ஆகும்.
அ) மியான்மர்
ஆ) சீனா
இ) பூடான்
ஈ) இந்தோனேசியா
விடை:
இ பூடான்

Question 6.
…………….. பாரத் முதல் பூடான் வரை என்று அறியப்படும் இருதரப்பு வணிக உறவினை அளித்தது.
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) இந்தியா
ஈ) அ மற்றும் ஆ
விடை:
இ இந்தியா

Question 7.
குரு பத்மசம்பவா எனும் ……………. இந்தியாவிலிருந்து பூடானுக்குச் சென்றார்.
அ) சமண துறவி
ஆ) புத்த துறவி
இ) சீக்கிய துறவி
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) புத்த துறவி

Question 8.
இந்தியாவுடன் ஒப்பிடுவதற்கு தகுதி வாய்ந்த நாடு …………… ஆகும்.
அ) பூடான்
ஆ) அசாம்
இ) திரிபுரா
ஈ) சீனா
விடை:
ஈ) சீனா

Question 9.
………………ஆம் ஆண்டு மக்மகான் எல்லைக் கோடு தீர்மானிக்கப்பட்டடது.
அ) 1925
ஆ) 1918
இ) 1914
ஈ) 1941
விடை:
இ) 1914

Question 10.
……………… இந்தியப் பெருங்கடலில் லட்சத்தீவுகளுக்குத் தெற்கில் அமைந்துள்ளது.
அ) மியான்மர்
ஆ) மாலத்தீவு
இ) நேபாள்
ஈ) சீனா
விடை:
ஆ) மாலத்தீவு

Question 11.
எரிபொருள் தேவைகளான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றில் நமது பங்குதாரராக ………………. உள்ள து.
அ) பூடான்
ஆ) நேபாளம்
இ) சீனா
ஈ) மியான்மர்
விடை:
ஈ) மியான்மர்

Question 12.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இயற்கையாக அமைந்த இடைப்படுநாடு …………… ஆகும்.
அ) வங்காள தேசம்
ஆ) கொல்கத்தா
இ) நேபாளம்
ஈ) பூடான்
விடை:
இ நேபாளம்

Question 13.
நேபாளத்தின் பெரிய முதலீட்டாளராக ……………… திகழ்கிறது.
அ) சீனா
ஆ) இந்தியா
இ) நேபாளம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இந்தியா

Question 14.
………………..ம் ஆண்டு கட்டுப்பாடுக் கோடு தீர்மானிக்கப்பட்டது.
அ) 1947
ஆ) 1949
இ) 1972
ஈ) 1994
விடை:
ஆ) 1949

Question 15.
………….. படி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு வழிவகை செய்கிறது.
அ) COMCASA
ஆ) ISRO
இ) AUSINDEX
ஈ) JIM
விடை:
அ) COMCASA

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவிற்குச் சொந்தமான ………………. என்ற பகுதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையிலேயான எல்லையில் உள்ளது.
விடை:
டீன்பிகா

Question 2.
இந்தியா மற்றும் பூடான் இடையே இரு தரப்பு ஒத்துழைப்பிற்கு …………… ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
விடை:
நீர்மின்சக்தி துறை

Question 3.
இருதரப்பு வணிகம் ……………..யைக் கொண்டுள்ளது.
விடை:
மகத்தான வளர்ச்சி

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் ……………… மனப்பான்மையுடனே இருந்து வருகிறது.
விடை:
விரோத

Question 5.
1972ஆம் ஆண்டின் ……………… ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லையாகும்.
விடை:
சிம்லா

Question 6.
……………… ஜப்பானிய ஒத்துழைப்பில் உருவான வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.
விடை:
டெல்லி மெட்ரோ ரயில்

Question 7.
சபஹார் ஒப்பந்தம் எனப்படும் ………………. ஒப்பந்தம் ஆகும்.
விடை:
முக்கூட்டு

Question 8.
உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக ……………… வரை அமைக்கப்பட்டிருந்தது.
விடை:
மெலுக்கா

Question 9.
பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் ……………… நகரில் அமைந்துள்ளது.
விடை:
சீனாவின் ஷாங்காய்

Question 10.
பிரிக்ஸ் என்ற சொல் ……….. என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது.
விடை:
ஜிம் ஓ நீல்

Question 11.
………………… என்பது பல துறை வளர்ச்சி வங்கி.
விடை:
புதிய மேம்பாட்டு வங்கி

Question 12.
CRA என்பதன் விரிவாக்கம் ……………. ஆகும்.
விடை:
அவரச ஒதுக்கீடு ஏற்பாடு

Question 13.
கச்சா எண்ணெய் அதிக அளவில் நுகர்வு செய்யும் நாடுகளில் ……………… ஒன்று.
விடை:
இந்தியாவும்

Question 14.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ………….. கொண்டுள்ளது.
விடை:
ஓபெக்

Question 15.
…………… 1969ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சர்வதேச வடிவமைப்பு போட்டியின் சின்னமாகும்.
விடை:
OPEC இலச்சினை

Question 16.
இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தில் …………….. ஒரு பங்குதாரர் ஆகும்..
விடை:
இலங்கை

Question 17.
தென்கடலில் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்காக கொல்கத்தா நகரை ………….. உடன் இணைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
விடை:
ஹோசிமின்

Question 18.
இந்தியாவையும் காத்மண்டுவையும் இணைப்பதற்கான ……………… நீளமுள்ள மகேந்திர ராஜ் மார்க் இணைப்பை இந்தியா கட்டியுள்ளது.
விடை:
204 கி.மீ

Question 19.
இந்திய அரசாங்கம் ……………… நீர்மீன்சக்தி திட்டங்களை பூடானில் அமைந்துள்ளது.
விடை:
மூன்று

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 20.
அண்டை நாடுகளின் உறவை பொருத்தவரை இந்தியா ……………… நிலையை கொண்டுள்ளது.
விடை:
உன்னத

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) இந்தியாவும் பூடானும் இணக்கதன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ii) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பாதுகாப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பெறுவதற்கு வழிவகை செய்கிறது.
iii) இரு நாடுகளின் இராணுவங்களுக்கிடையே நிகழ்நேரத் தகவல் பகிர்வுக்கு அனுமதியளிக்கிறது.

அ) i), iii) சரி
ஆ) ii), iii) தவறு
இ) i) தவறு
ஈ) எல்லாம் சரி
விடை:
i) தவறு

Question 2.
கூற்று (A) : இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவு நட்பு ரீதியாக உள்ளது.
காரணம் (R) : தமிழ் இனப்பிரச்சினை தொடர்பான காலகட்டத்தில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.

அ) A சரி R ஆனது A-யை விளக்குகிறது.
ஆ) A தவறு R சரி
இ) இரண்டுமே சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
A சரி R ஆனது A-யை விளக்குகிறது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 5

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
கட்டுப்பாடுக் கோடு – வரையறு.
விடை:

  • 1949ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடு 1972ஆம் ஆண்டிற்குப் பின்னர் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு என அழைக்கப்பட்டது.
  • இது 1972ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லையாகும்.

Question 2.
பிரிக்ஸ் குறிப்பு வரைக.
விடை:

  • பிரிக்ஸ் என்ற சொல் ஜிம் ஓ’ நீல் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது.
  • பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 2050ஆம் ஆண்டில் ஆறு தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளைவிட டாலர் மதிப்பில் பெரிய நாடுகளாக உருவாகும் என்றும் கடந்த 300 ஆண்டுகளின் அதிகாரப் போக்கு முற்றிலும் மாறுபடும் என்றும் அவர் கணித்தார்.

Question 3.
குரு பத்மசம்பவா பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • குரு பத்மசம்பவா எனும் புத்த துறவி இந்தியாவிலிருந்து பூடானுக்குச் சென்றார்.
  • அங்கு தனது செல்வாக்கை ஏற்படுத்தி புத்த சமயத்தைப் பரப்பியதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே பாரம்பரியத்தை உறுதிப்படுத்தினார்.

Question 4.
மெலுக்கா – வரையறு.
விடை:
உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக மெலுக்கா என்று அழைக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகம் வரை அமைக்கப்பட்டிருந்தது.

Question 5.
ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவை எழுதுக.
விடை:

  • இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நம்பிக்கைக்குரிய திட்டங்களைப் பல ஆண்டுகளாக மெதுவாகவும் படிப்படியாகவும் ஏற்படுத்தி வருகின்றன.
  • ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து இந்திய ஆஸ்திரேலிய கடற்படை பயிற்சி ஒத்திகையின் மூலம் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளன.

Question 6.
டீன்பிகா பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • இந்தியாவிற்குச் சொந்தமான டீன்பிகா என்ற பகுதி மேற்கு வங்களாம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான எல்லையில் உள்ளது.
  • குறுகலான இப்பாதை 2011ஆம் ஆண்டு வங்களாதேசத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 7.
மக்மகான் எல்லைக் கோடு – வரையறு.
விடை:

  • இந்தியா, சீனா மற்றும் பூடானின் கிழக்குப் பகுதி ஆகிய பகுதிகளுக்கு இடையேயான எல்லைக்கோடு ஆகும்.
  • இது 1914ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா, திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் சார்பில் இந்தியாவிற்கான செயலாளர் ஆர்தர் ஹென்றி மக்மகான் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
பிரிக்ஸ் நிதி கட்டமைப்பு பற்றி விவரிக்க.
விடை:

  • புதிய மேம்பாட்டு வங்கி என்பது பல துறை வளர்ச்சி வங்கி ஆகும்.
  • அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்குக் கடன் வழங்குவதே இதன் முதன்மைச் செயலாகும்.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இது முன்னுரிமை வழங்குகிறது.
  • அவசரகால நிதி ஒதுக்கீடு ஏற்பாடு நாணய விவகாரங்கள் உள்ளிட்ட உலக அளவிலான பண நெருக்கடியில் இருந்து பாதுகாத்திட அடிப்படைத் திட்டம் வழங்க வகை செய்கிறது.

பிரிக்ஸ் பணம் செலுத்தும் திட்டம்:

  • 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் பணம் செலுத்தும் முறை தொடர்பான ஆலோசனைகளைத் தொடங்கினர்.
  • இது உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி, செய்திப் பரிமாற்ற அமைப்பிற்கு மாற்றாக இருக்கும்.

Question 2.
இந்தியாவும் மாலத்தீவும் பற்றி குறிப்பு வரைக.
விடை:
மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுகளுக்குத் தெற்கில் அமைந்துள்ளது.

இதன் அமைவிட முக்கியத்துவத்தினாலும் அருகாமையில் அமைந்திருப்பதாலும் மாலத்தீவினுடனான உறவு இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்தியாவும் மாலத்தீவும் இனம், மொழி, பண்பாடு, சமயம் மற்றும் வணிகத் தொடர்பு ஆகிய பல பரிமாணத் தொடர்புகளைப் பழங்காலத்திலிருந்தே சுமூகமாகப் பேணி வருகின்றன.

இரு நாடுகளுக்கிடையே வணிகம் மற்றும் சுற்றுலா மேம்பட்டு இருக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் வான்வழி கண்காணிப்புத் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை நல்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

10th Social Science Guide இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?
அ) பாதுகாப்பு அமைச்சர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) வெளிவிவகாரங்கள் அமைச்சர்
ஈ) உள்துறை அமைச்சர்
விடை:
இ வெளிவிவகாரங்கள் அமைச்சர்

Question 2.
எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?
அ) இந்தியா மற்றும் நேபாளம்
ஆ) இந்தியா மற்றும் பாகிஸ்தான்
இ) இந்தியா மற்றும் சீனா
ஈ) இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
விடை:
இ இந்தியா மற்றும் சீனா

Question 3.
இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
அ) சட்டப்பிரிவு 50
ஆ) சட்டப்பிரிவு 51
இ) சட்டப்பிரிவு 52
ஈ) சட்டப்பிரிவு 53
விடை:
ஆ) சட்டப்பிரிவு 51

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 4.
இன ஒதுக்கல் கொள்கை என்பது
அ) ஒரு சர்வதேச சங்கம்
ஆ) இராஜதந்திரம்
இ) ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை
ஈ) மேற்கூறியவைகளில் எதுவுமில்லை
விடை:
இ ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை

Question 5.
1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.
அ) வியாபாரம் மற்றும் வணிகம்
ஆ) சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது
இ) கலாச்சார பரிமாற்றங்கள்
ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்
விடை:
ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

Question 6.
நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?
அ) உலக ஒத்துழைப்பு
ஆ) உலக அமைதி
இ) இனச் சமத்துவம்
ஈ) காலனித்துவம்
விடை:
ஈ) காலனித்துவம்

Question 7.
கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?
அ) யூகோஸ்லோவியா
ஆ) இந்தோனேசியா
இ) எகிப்து
ஈ) பாகிஸ்தான்
விடை:
ஈ) பாகிஸ்தான்

Question 8.
பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி.
அ) சமூக நலம்
ஆ) சுகாதாரம்
இ) ராஜதந்திரம்
ஈ) உள்நாட்டு விவகாரங்கள்
விடை:
இ ராஜதந்திரம்

Question 9.
அணிசேராமை என்பதன் பொருள்…………
அ) நடுநிலைமை வகிப்பது
ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்
இ) இராணுவமயமின்மை
ஈ) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை
விடை:
ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்

Question 10.
இராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது ……………
அ) ஆற்றல் பாதுகாப்பு
ஆ) நீர் பாதுகாப்பு
இ) தொற்றுநோய்கள்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் ………….
விடை:
பொக்ரான்

Question 2.
தற்போது நமது வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ……………… உருவாக்குவதற்கான வழிமுறையாக செயல்படுகிறது.
விடை:
உள் முதலீட்டை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 3.
…………. என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
விடை:
இராஜதந்திரம்

Question 4.
இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை ………..
விடை:
அணி சேராக் கொள்கை

Question 5.
நமது மரபு மற்றும் தேசிய நெறிமுறைகள் …………….. நடைமுறைப்படுத்துவதாகும்.
விடை:
படைவலிமைக் குறைப்பை

III. பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். i) பஞ்சசீலம்
ii) சீனாவின் அணுவெடிப்புச் சோதனை
iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்
iv) இந்தியாவின் முதல் அணுவெடிப்புச் சோதனை

அ) (i), (iii), (iv), (ii)
ஆ) (i), (ii), (iii), (iv)
இ) (i), (ii), (iv), (iii)
ஈ) (i), (iii), (ii), (iv)
விடை:
அ) (i), (iii), (iv), (ii)

Question 2.
பின்வருவனவற்றில் அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?
i) அணிசேரா இயக்கம் என்ற சொல் வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
ii) இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும்.
iii) தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
v) இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது.

அ) (1) மற்றும் (ii)
ஆ) (iii) மற்றும் (iv)
இ) (ii) மட்டும்
ஈ) (iv) மட்டும்
விடை:
இ (ii) மட்டும்

Question 3.
கீழ்க்காணும் ஒவ்வொரு கூற்றுக்கும் எதிராக சரியா தவறா என எழுதுக.
அ) பனிப்போரின் போது சர்வதேச விவகாரங்களில் இந்தியா மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்தது.
ஆ) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது.
இ) இந்தியாவின் அணுசக்தி சோதனை பூமிக்கடியிலான அணு சோதனை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.
விடை:
அ) சரி, ஆ) தவறு, இ சரி

Question 4.
கூற்று : 1971இல் இந்தோ – சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சோவியத்யூனியனுடன் இணைந்தது.
காரணம் : இது 1962இன் பேரழிவுகரமான சீன போருக்கு பின் தொடங்கியது.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ கூற்று சரி, காரணம் தவறு.

Question 5.
கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ளது.
காரணம் : உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 6.
இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் இராணுவ முகாம்களில் இணைவதைத் தவிர்ப்பது அவசியமாக இருந்தது ஏனெனில், இந்தியா இதனை / இவைகளை மீட்க வேண்டி இருந்தது.
அ) கடுமையான வறுமை
ஆ) எழுத்தறிவின்மை
இ) குழப்பமான சமூக பொருளாதார நிலைமைகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?
விடை:
வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும்.

Question 2.
இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி.
விடை:
இந்தியாவின் அணுக்கொள்கையின் இரண்டு மையக் கருத்துக்கள் :

  • முதலில் பயன்படுத்துவதில்லை .
  • குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத்திறன்.
  • அணு ஆயுதத்தை போர்த்தாக்குதலுக்கு பயன்படுத்துவது இல்லை என்பதோடு அணு ஆயுதமற்ற எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்துவதுமில்லை என இந்தியா தீர்மானித்துள்ளது.

Question 3.
வேறுபடுத்துக:
விடை:
உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக் கொள்கை.
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 3

Question 4.
பஞ்சசீல கொள்கைகளில் நான்கினைப் பட்டியலிடுக.
விடை:
பஞ்சசீலம் :

  • ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையும் பரஸ்பரம் மதித்தல்.
  • பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை .
  • பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.
  • பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.
  • அமைதியாக சேர்ந்திருத்தல்.

Question 5.
இந்தியா அணிசேரா கொள்கையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?
விடை:
நாட்டின் முதல் பிரதமரான நேரு, அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார்.

எனவே பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்தார்.

Question 6.
சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.
விடை:
சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் :
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை .

Question 7.
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?
விடை:
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் :
இந்தியாவின் ஜவகர்லால் நேரு, யூகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 8.
வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • உடன்படிக்கைகள் மற்றும் நிர்வாக ஒப்பந்தங்கள்
  • தூதுவர்களை நியமித்தல்
  • வெளிநாட்டு உதவி
  • சர்வதேச வணிகம் மற்றும்
  • ஆயுதப்படைகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.
விடை:
அணிசேரா இயக்கம் (The Non Aligned Movement) 1961:

  • அணி சேரா இயக்கம் என்ற சொல் 1953இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • இதன் நோக்கம் இராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலாகும்.
  • அணிசேரா இயக்கமானது 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இது ஒரு அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் கொண்டுள்ளது.
  • பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்தார்.

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் :
ஜவஹர்லால் நேரு – இந்தியா
டிட்டோ – யூகோஸ்லோவியா
நாசர் – எகிப்து
சுகர்னோ – இந்தோனேசியா
குலாமே நிக்ரூமா – கானா

Question 2.
வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் எவை?
விடை:
வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் :

  • நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும் பரப்பளவு.
  • நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தத்துவம் அடிப்படையிலானவை.
  • இயற்கை வளங்கள்
  • பொருளாதார வளர்ச்சியின் அவசியம்
  • அரசியில் நிலைத்தன்மை மற்றும் அரசாங்க அமைப்பு
  • அமைதிக்கான அவசியம், ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதப் பெருக்கத்தடை
  • இராணுவ வலிமை
  • சர்வதேச சூழ்நிலை
  • தேசிய நலனைப் பேணுதல்
  • உலக அமைதியை எய்துதல்
  • ஆயுதக் குறைப்பு
  • பிறநாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்
  • அமைதியான வழிகளில் பிரச்சனைகளைத் தீர்த்தல்
  • அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்

Question 3.
அண்டை நாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவு கொள்கையின் ஏதேனும் இரு கொள்கைகளை விவரி.
விடை:
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துகள் :

  • தேசிய நலனைப் பேணுதல்.
  • உலக அமைதியை எய்துதல்.
  • ஆயுதக் குறைப்பு.
  • பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்.
  • அமைதியான வழிகளில் பிரச்சினைகளைத் தீர்த்தல்.
  • அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு.
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்.
  • காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு.

10th Social Science Guide இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… ஆம் ஆண்டு இந்திய வெளிநாட்டுச் சேவை பயிற்சி நிறுவனம் நிறுவப்பட்டது.
அ) 1953
ஆ) 1986
இ) 1954
ஈ) 1964
விடை:
ஆ) 1986

Question 2.
………………. இந்தோனேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அ) வெளியுறவு கொள்கை
ஆ) பஞ்சசீலக் கொள்கை
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவும் இல்லை
விடை:
ஆ) பஞ்சசீலக் கொள்கை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 3.
………………. அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகளை எதிர்த்தார்.
அ) V. கிருஷ்ண மேனன்
ஆ) நாகா
இ) ஜவகர்லால் நேரு
ஈ) சுகர்னோ
விடை:
இ ஜவகர்லால் நேரு

Question 4.
அணிசேரா இயக்கமானது ……………… உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
அ) 120
ஆ) 105
இ) 98
ஈ) 110
விடை:
அ) 120

Question 5.
சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் ………….. இல் அமைக்கப்பட்டுள்ளது.
அ) புதுடெல்லி
ஆ) மஹாராஷ்டிரா
இ) ராஜஸ்தான்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) புதுடெல்லி

Question 6.
……… ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ண மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
அ) அணிசேரா இயக்கம்
ஆ) உள்நாட்டு கொள்கை
இ) வெளியுறவு கொள்கை
ஈ) சார்க் இயக்கம்
விடை:
அ) அணிசேரா இயக்கம்

Question 7.
இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் ……………… பாலமாக உள்ள து.
அ) ஸ்ரீலங்கா
ஆ) மாலத்தீவு
இ) மியான்மர்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ மியான்மர்

Question 8.
………………. அணுசக்தி ஒப்பந்தம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
அ) இந்தியா – பசிபிக்
ஆ) இந்திய – அமெரிக்க
இ) அ) மற்றும் ஆ) இரண்டும்
ஈ) ஆசியா
விடை:
ஆ) இந்திய – அமெரிக்க

Question 9.
ஆப்பிரிக்க ஆசிய மாநாடு நடைபெற்ற ஆண்டு ……………..
அ) 1965
ஆ) 1975
இ) 1955
ஈ) 1995
விடை:
இ 1955

Question 10.
…………… உலகளவில் முடிவெடுக்கும் மற்றும் நிர்வாகத்தில் ஒரு முக்கிய குரலாக உள்ளது.
ஆ) இலங்கை
ஆ) நேபாள்
இ) பூடான்
ஈ) இந்தியா
விடை:
இந்தியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க முயல்கிறது.
விடை:
வெளியுறவுக் கொள்கை

Question 2.
……………… என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
விடை:
அணிசேராமை

Question 3.
அணிசேராமை இயக்கமானது …………….. பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
விடை:
120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளையும்

Question 4.
……………… என்பது நடுநிலையாக இருப்பது என்பது பொருள் அல்ல.
விடை:
அணிசேராமை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 5.
இரண்டாவது அணு சோதனை ……………… உள்ள பொக்ரான் என்னும் இடத்தில் நடைபெற்றது.
விடை:
ராஜஸ்தானில்

Question 6.
சார்க் நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ………….. நாடுகளுக்கு கூட்டுத்தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகும்.
விடை:
தெற்காசிய

Question 7.
சார்க் செயற்கைக்கோளை ……………… மற்றும் …………….. செலுத்தியது.
விடை:
செய்தித் தொடர்பு, வானிலை ஆய்விற்காக

Question 8.
வரலாறு மற்றும் கலாச்சார ஒற்றுமைத் தன்மைகளை கொண்ட ………………. என்ற கருத்து இந்தியாவின் வெளியுறவு கொள்கையாக இருக்கிறது.
விடை:
அண்டைநாடு

Question 9.
…………….. என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
விடை:
இராஜதந்திரம்

Question 10.
…………….. என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒரு நாட்டால் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவை ஆகும்.
விடை:
வெளியுறவுக் கொள்கை

Question 11.
……………… வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
விடை:
இந்தியா

Question 12.
ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளிகளைக் கொண்டது ………………. ஆகும்.
விடை:
பன்மைகோட்பாடு

Question 13.
………………….. காரணமாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகிறது.
விடை:
பொருளாதார முன்னேற்றம்

Question 14.
………………. நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது.
விடை:
ஐ.நா சபையின் பாதுகாப்பு சபையில்

Question 15.
……………… எதிரான நமது பொதுவான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்க பலமாகும்.
விடை:
தீவிரவாதத்திற்கு

III. பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 1950 – 1960களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறிக்கோளாக இருந்தது.
ii) இது V. கிருஷ்ண மேனன் வழிகாட்டுதலின்படி அமைந்திருந்தது.
iii) அணிசேராமை இயக்கம் 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகள் மற்றும் 10 சர்வதேச நிறுவனங்களை கொண்டுள்ளது.
iv) நேரு ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார்.

அ) i), ii) சரி
ஆ) i), iv) சரி
இ) iii), iv) சரி
ஈ) எல்லாம் சரி
விடை:
இ iii), iv) சரி

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 5

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
சார்க் குறிப்பு வரைக.
விடை:
சார்க் என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள எட்டு நாடுகளின் ஒரு பொருளாதார மற்றும் புவி அரசியல் அமைப்பாகும்.

சார்க் நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், தெற்காசிய நாடுகளிடையே கூட்டுத் தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகியனவாகும்.

Question 2.
இராஜதந்திரம் – வரையறு.
விடை:
ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் சூழலுக்குத் தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.

Question 3.
உலகப் பாதுகாப்பு இந்தியாவில் எவற்றில் பிரதிப்பலிக்கிறது?
விடை:

  • இராணுவ நவீனமயமாக்கல்
  • கடல்சார் பாதுகாப்பு
  • அணுசக்தி

Question 4.
வெளியுறவு அமைச்சகம் என்றால் என்ன?
விடை:
வெளியுறவு அமைச்சகம் எனப்படும் இந்திய வெளிவிவகார அமைச்சரவை இந்திய அரசின் ஒரு அங்கமாக இருந்து நாட்டின் வெளியுறவுகளைப் பொறுப்பேற்று நடத்துகிறது.

1986ஆம் ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டுப் சேவை பயிற்சி நிறுவனம் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.

Question 5.
அணிசேரா இயக்கம் பற்றி ஜவகர்லால் நேரு கூறியது யாது?
விடை:
“பரந்த அளிவில் அணிசேராமை என்பது இராணுவக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளாதது அல்ல.

அதாவது பிரச்சனைகளை முடிந்தவரை இராணுவக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அது சில நேரங்களில் மட்டும் ஏற்பட்டாலும் சுதந்திரமாக மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியிலான உறவைப் பராமரித்தல்”.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 6.
உள்நாட்டுக் கொள்கை வரையறு.
விடை:
உள்நாட்டுக் கொள்கை :
உள்நாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கையாகும்.

இது உள்விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
பஞ்சசீலம் – விவரி.
விடை:
(சமஸ்கிருதச் சொற்களான பாஞ்ச் = ஐந்து, சீலம் = நற்பண்புகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது)
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 6

  • இந்தியா (பிரதமர் – ஜவகர்லால் நேரு) மற்றும் சீனா (பிரதமர் – சூ-யென்-லாய்) ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியுடன் இணங்கியிருத்தலுக்கான 5 கொள்கைகள் (பஞ்சசீலம்), 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் கையெழுத்தானது.
  • இரு அரசாங்கங்களும் பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.
  • இந்தக் கொள்கைகள் இந்தோனேசியாவில் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க – ஆசிய மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

Question 2.
தற்கால சூழலில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வழிகாட்டும் சக்தியாக இந்தியா எவ்வாறு மாற்றமடைந்துள்ளது?
விடை:
பொருளாதார வளர்ச்சி :

  • தற்போது இந்தியாவின் அரசியல் நகர்வுகளில் தவிர்க்கவியலாத பொருளாதாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.
  • பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகின்றன.
  • விரைவான, சமமான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் முதன்மைக் குறிக்கோளாக உள்ளது.
  • நாடு சர்வதேச பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
  • இதனை அடைவதற்குத் தேவையானவை பொருளாதார வளர்ச்சி, சந்தை, மூலதனம், தொழில்நுட்பம், மரபுப்பிணைப்பு, பணியாளர்திறன், நியாயமான உலகளாவிய நிர்வாகம் மற்றும் ஒரு நிலையான நியாயமான வளர்ச்சிக்கு உகந்த சூழல் ஆகியனவாகும்.

வழிகாட்டும் சக்தியாக இந்தியா:

  • ஜி-20 நாடுகள், கிழக்காசிய உச்சிமாநாடு, பிரிக்ஸ் ஆகியவற்றால் உறுப்புநாடாக இந்தியா இருப்பதும் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு நாடாக இருப்பதும் அதன் நிலைக்கு ஒரு சான்றாகும்.
  • ஐ.நா சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது.
  • இந்தியா தற்போது தனது அதிகரித்துவரும் நலனை உலகின் பல பகுதிகளில் ஆழப்பதித்து வருகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 3 மாநில அரசு Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 3 மாநில அரசு

10th Social Science Guide மாநில அரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
மாநில ஆளுநரை நியமிப்பவர் ……………..
அ) பிரதமர்
ஆ) முதலமைச்சர்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) தலைமை நீதிபதி
விடை:
இ குடியரசுத் தலைவர்

Question 2.
மாநில சபாநாயகர் ஒரு ……………..
அ) மாநிலத் தலைவர்
ஆ) அரசின் தலைவர்
இ) குடியரசுத் தலைவரின் முகவர்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

Question 3.
கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல ……………….
அ) சட்டமன்றம்
ஆ) நிர்வாகம்
இ) நீதித்துறை ஈ) தூதரகம்
விடை:
ஈ) தூதரகம்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 4.
ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) ஆளுநர்
இ) முதலமைச்சர்
ஈ) சட்டமன்ற சபாநாயகர்
விடை:
ஆ) ஆளுநர்

Question 5.
ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை …………………
அ) முதலமைச்சர்
ஆ) அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்
இ) மாநில தலைமை வழக்குரைஞர்
ஈ) உயர்நீதிமன்ற நீதிபதிகள்
விடை:
ஈ) உயர்நீதிமன்ற நீதிபதிகள்

Question 6.
அமைச்சரவையின் தலைவர் ………………..
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) சபாநாயகர்
ஈ) பிரதம அமைச்சர்
விடை:
அ) முதலமைச்சர்

Question 7.
மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது ………………..
அ) 25 வயது
ஆ) 21 வயது
இ) 30 வயது
ஈ) 35 வயது
விடை:
இ 30 வயது

Question 8.
கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை.
அ) ஆந்திரப் பிரதேசம்
ஆ) தெலுங்கானா
இ) தமிழ்நாடு
ஈ) உத்திரப் பிரதேசம்
விடை:
இ) தமிழ்நாடு

Question 9.
இந்தியாவில் முதன் முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
அ) கொல்கத்தா, மும்பை, சென்னை
ஆ) டெல்லி மற்றும் கொல்கத்தா
இ) டெல்லி, கொல்கத்தா, சென்னை
ஈ) கொல்கத்தா, சென்னை, டெல்லி
விடை:
அ) கொல்கத்தா, மும்பை, சென்னை

Question 10.
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
அ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
ஆ) கேரளா மற்றும் தெலுங்கானா
இ) பஞ்சாப் மற்றும் ஹரியானா
ஈ) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
விடை:
இ பஞ்சாப் மற்றும் ஹரியானா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ………………. இடம் கொடுக்கிறார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 2.
சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ……………… ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை:
மக்களால்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 3.
………………. மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.
விடை:
ஆளுநர்

Question 4.
அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ……………..ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.
விடை:
குடியரசுத் தலைவர்

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 2

IV. சரியான கூற்றினை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு.
காரணம் : குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
விடை:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

V. சுருக்கமான விடையளி.

Question 1.
மாநில ஆளுநரின் முக்கியத்துவம் என்ன?
விடை:

  • மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் ஆளுநர் ஆவார்.
  • மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது.
  • ஆளுநர், மாநில நிர்வாகத்தின் தலைவராக செயல்படுவது மட்டுமல்லாமல் ஏராளமான அதிகாரங்கள் பெற்றவராகவும் திகழ்கிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 2.
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?
விடை:

  • அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவர் இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

Question 3.
உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை?
விடை:
சென்னை, மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.

மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.

Question 4.
உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டதென்ன?
விடை:
உயர்நீதி மன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.

நாட்டின், இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை.

VI. விரிவான விடையளி.

Question 1.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
விடை:
1. அமைச்சரவை தொடர்பானவை:

  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
  • அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். – தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
  • அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
  • அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

2. ஆளுநர் தொடர்பானவை:

  • கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
  • மாநில அரசு வழக்குரைஞர்
  • மாநில தேர்தல் ஆணையர்
  • அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

3. சட்டமன்றம் தொடர்பானவை:

  • சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
  • சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
  • சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
  • எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.

Question 2.
ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி.
விடை:
சட்டமன்ற அதிகாரங்கள் :

  • ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார்.
  • ஆனால் அவர் சட்டமன்றத்தின் உறுப்பினராக இல்லை.
  • ஆளுநர் பின்வரும் சட்டமன்ற அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.
  • ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும் ஒத்திவைக்கவும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.
  • தேர்தல் முடிந்து சட்டசபை அமைந்த முதல் கூட்டத்தொடரிலும் மற்றும் ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டத்திலும் உரையாற்றுகின்றனர்.
  • நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.
  • சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும் பொழுது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.
  • ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.
  • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும்.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213இன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 3.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.
விடை:
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்:

  • மாநில அரசின் கொள்கைகளை உருவாக்கி அவற்றை உறுதியாக நடைமுறைப்படுத்துகிறது.
  • சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து எல்லா முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
  • நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்காக வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
  • முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
  • மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.
  • மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
  • ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.
  • அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
  • ஆண்டு வரவு- செலவு திட்டம் அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.

10th Social Science Guide மாநில அரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் …………….. ஆவார்.
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) குடியரசு தலைவர்
ஈ) பிரதமர்
விடை:
ஆ) ஆளுநர்

Question 2.
மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறும் ……………. ஆகும்.
அ) சட்டப்பிரிவு 157
ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 154
ஈ) சட்டப்பிரிவு 158
விடை:
இ சட்டப்பிரிவு 154

Question 3.
ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் ………………. மரபுகள் பின்பற்றப்படுகிறது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
விடை:
அ) இரண்டு

Question 4.
……………… மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) பிரதமர்
விடை:
அ) முதலமைச்சர்

Question 5.
ஆண்டு வரவு செலவு திட்டம் ……………… ஆல் இறுதி செய்யப்படுகிறது.
அ) சட்டமேலவை
ஆ) சட்டமன்ற பேரவை
இ) அமைச்சரவை
ஈ) எதுவும் இல்லை
விடை:
இ அமைச்சரவை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 6.
……………இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை மசோதா மூலம் சட்டமேலவை நீக்கப்பட்டது.
அ) 1956
ஆ) 1986
இ) 1862
ஈ) 1950
விடை:
ஆ) 1986

Question 7.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகம் உலகிலேயே ………………க்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகமாகும்.
அ) பாம்பே
ஆ) கொல்கத்தா
இ) சண்டிகர்
ஈ) லண்டன்
விடை:
ஈ) லண்டன்

Question 8.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை ……………… தீர்மானிக்கப்படுகிறது.
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) ஆளுநா
விடை:
ஆ) குடியரசுத் தலைவர்

Question 9.
……………… ஒரு மாநிலமாக இல்லாத போதும் தனக்கென்று சொந்தமாக ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.
அ) சென்னை
ஆ) ஹைதராபாத்
இ) டெல்லி
ஈ) கொல்கத்தா
விடை:
இ டெல்லி

Question 10.
1862இல் ……………. கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டன.
அ) உயர் நீதிமன்றங்கள்
ஆ) உச்ச நீதிமன்றங்கள்
இ) மாவட்ட நீதிமன்றங்கள்
ஈ) எதுவும் இல்லை
விடை:
அ) உயர் நீதிமன்றங்கள்

Question 11.
சட்டமேலவை தேர்தலில் …… ……….. பங்கு உறுப்பினர்கள் பட்டதாரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
அ) 1/3
ஆ) 1/12
இ) 1/6
ஈ) 1/10
விடை:
1/12

Question 12.
சட்டமேலவை உறுப்பினர்களின் பதவி காலம் ……………. ஆகும்.
அ) 5 ஆண்டுகள்
ஆ) 6 ஆண்டுகள்
இ) 4 ஆண்டுகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) 6 ஆண்டுகள்

Question 13.
சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ……………. பங்கிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அ) 1/3
ஆ) 2/3
இ) 1/4
ஈ) 2/4
விடை:
அ) 1/3

Question 14.
அமைச்சரவையானது ……………… க்கு பொறுப்பானது.
அ) சட்டமேலவை
ஆ) நிர்வாகத்துறை
இ) சட்டமன்றம்
ஈ) இரண்டும் (ஆ) மற்றும் (இ)
விடை:
இ சட்டமன்றம்

Question 15.
…………….. ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதை கூறுகிறது.
அ) சட்டப்பிரிவு 164 (1A)
ஆ) சட்டப்பிரிவு 164 (1)
இ) சட்டப்பிரிவு 163
ஈ) சட்டப்பிரிவு 361
விடை:
ஆ) சட்டப்பிரிவு 1640

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்திய அரசியலமைப்பு ……………… அரசாங்கத்தை வழங்குகிறது.
விடை:
கூட்டாச்சி

Question 2.
…………… மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார்.
விடை:
ஆளுநர்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 3.
ஆளுநரின் முன் அனுமதியுடன்தான் ………………. சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.
விடை:
பண மசோதாவை

Question 4.
மாநில அரசின் …………… நீதித்துறை அதிகாரங்கள் மூலம் ஆளுநர் நியமனம் செய்கிறார்.
விடை:
தலைமை வழக்குரைஞரை

Question 5.
ஆளுநர் மாநிலத்தின் …………… ஆவார்.
விடை:
பெயரளவு நிர்வாகி

Question 6.
அரசியலமைப்பு ………………. ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்கிறது.
விடை:
சட்டப்பிரிவு 163

Question 7.
……………… என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும்.
விடை:
அமைச்சரவை

Question 8.
சட்டமன்ற உறுப்பினர்களிடையே ……………… மற்றும் ………………. தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
விடை:
சபாநாயகர், துணை சபாநாயகர்

Question 9.
……………… இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது.
விடை:
சட்டமேலவை

Question 10.
முதலமைச்சர் …………….. ஆவார்.
விடை:
உண்மையான நிர்வாகி

Question 11.
சட்ட மேலவை ………………. கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறார்.
விடை:
சட்டப்பிரிவு 169

Question 12.
முதலமைச்சர் என்பவர் ……………… ஆவார்.
விடை:
அரசாங்கத்தின் தலைவர்

Question 13.
பொதுப்பட்டியலிலும் ……………… சட்டம் இயற்றலாம்.
விடை:
சட்டமன்றம்

Question 14.
சட்டமன்றம் மாநிலத்தின் …………….. கட்டுப்படுத்துகிறது.
விடை:
நிதி நிலையைக்

Question 15.
………….ஆம் ஆண்டு ஏழாவது திருத்தச் சட்டம் அங்கிகரிக்கப்பட்டது.
விடை:
1956

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 4

IV. சரியான கூற்றினை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : மாநில சட்டமன்றம் பிரபலமான ஓர் அவை ஆகும்.
காரணம் : சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 500 இருக்க வேண்டும்.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
விடை:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 2.
கூற்று : இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி அரசாங்கத்தை வழங்குகிறது.
காரணம் : கூட்டாச்சியில் தேசியத் தலைநகரான டெல்லியுடன் 9 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்கள் உள்ளன.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

V. சுருக்கமான விடையளி.

Question 1.
சட்ட மேலவை குறிப்பு வரைக.
விடை:

  • சட்டமன்ற மேலவை சட்டமேலவை என்றும் அழைக்கப்படுகிறது.
  • சட்டமேலவை (விதான் பரிஷத்) இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது. இந்தியாவின் 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் சட்டமேலவை உள்ளது.
  • 1986இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் 1986 நவம்பர் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.

Question 2.
அமைச்சரவை மற்றும் அமைச்சரவை குழுக்கள் என்றால் என்ன?
விடை:

  • அமைச்சரவை என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும்.
  • இது காபினெட் அமைச்சர்களை மட்டும் உள்ளடக்கியது.
  • இதுவே மாநில அரசின் உண்மையான அதிகார மையமாக விளங்குகிறது.
  • அமைச்சரவை குழுக்கள் எனப்படும் வெவ்வேறு குழுக்கள் மூலம் காபினெட் செயலாற்றுகிறது. அவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அவை: ஒன்று நிரந்தரமானது மற்றொன்று தற்காலிகமானது ஆகும்.

Question 3.
முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
விடை:

  • முதலமைச்சர் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.
  • முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எவ்வளவு காலத்திற்கு தொடர்கிறதோ அதுவரை அவர் முதலமைச்சராக நீடிக்கலாம்.
  • சட்டமன்றத்தில் எப்பொழுது அவர் பெரும்பான்மையை இழக்கிறாரோ அப்பொழுது தனது பதவியை இராஜினாமா செய்கிறார்.

Question 4.
சபாநாயகர் குறிப்பு வரைக.
விடை:

  • சட்டமன்ற உறுப்பினர்களிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • சட்டமன்றம் கலைக்கப்படும்பொழுது சபாநாயகர் தமது பதவியை இழக்க மாட்டார்.
  • சபாநாயகர் இல்லாதபோது அவரது பணியைத் துணை சபாநாயகர் மேற்கொள்கிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 5.
ஆவணங்களின் பாதுகாப்புப் பெட்டகம் வரையறு.
விடை:

  • உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு சான்றாதாரமாக பாதுகாக்கப்படுகின்றன.
  • எதிர்காலத்தில் எழும் கேள்விகளுக்கு தீர்வாக கடந்த கால தீர்ப்புகள் உதவுகின்றன.
  • இதனால் உயர் நீதிமன்றம் பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது.

VI. விரிவான விடையளி.

Question 1.
ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள் பற்றி விவரி.
விடை:
நிர்வாக அதிகாரங்கள் :

  • மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமனம் செய்கிறார்.
  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
  • அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
  • மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நியமனம் செய்து, அவரது பணிக்காலம், பணியின் தன்மையைத் தீர்மானிக்கிறார்.
  • ஆளுநர், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதுடன், துணை வேந்தர்களையும் நியமனம் செய்கிறார்.
  • குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, குடியரசுத் தலைவரின் பெயரில் இவரே மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்கிறார்..

Question 2.
சட்டமன்றத்தின் செயல்பாடுகளை விவரி.
விடை:
சட்டமன்ற அதிகாரங்கள்:

  • அரசியலமைப்பின்படி மாநிலப் பட்டியலிலுள்ள அனைத்துத் துறைகள் மீதும் சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றலாம்.
  • பொதுப்பட்டியலிலும் சட்டமன்றம் சட்டம் இயற்றலாம்.
  • ஆனால் அதே சட்டத்தை நடுவண் அரசு இயற்றும்பொழுது மாநில அரசின் சட்டம் செயலற்றதாகி விடும்.
  •  மத்திய நாடாளுமன்ற நடைமுறையைப் போன்றே மாநில சட்டமன்றத்தின் மசோதாவும் சட்டமாக நிறைவேற்றுகிறது.

நிதி அதிகாரங்கள்:

  • சட்டமன்றம் மாநிலத்தின் நிதி நிலையைக் கட்டுப்படுத்துகிறது.
  • சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும் பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
  • பண மசோதா கீழவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.
  • சட்டமன்றக் கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்க முடியாது.

நிர்வாகத் துறையின் மீது கட்டுப்பாடுகள்:

  • அமைச்சரவையானது சட்டமன்றத்திற்குப் பொறுப்பானது.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.
  • அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.

Question 3.
ஆளுநரின் நீதித்துறை மற்றும் விருப்புரிமை அதிகாரங்களை விவரி.
விடை:
நீதித்துறை அதிகாரங்கள்:

  • மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்கிறார்.
  • உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.
  • ஆளுநரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.
  • குற்றவாளிகளின் கருணை மனு அடிப்படையில் குற்றவாளிகளை மன்னிக்கலாம் அல்லது குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். (மரண தண்டனையைப் பெற்ற குற்றவாளியைத் தவிர)

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

விருப்புரிமை அதிகாரங்கள்:

  • குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்க முடியும்.
  • மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மையைப் பெறாத போது, ஆளுநர் எந்தக் கட்சி தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
  • சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அமைச்சரவையை ஆளுநர் கலைக்க முடியும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 2 நடுவண் அரசு Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 2 நடுவண் அரசு

10th Social Science Guide நடுவண் அரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ……………… ஆவார்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) தலைமை நீதிபதி
இ) பிரதம அமைச்சர்
ஈ) அமைச்சர்கள் குழு
விடை:
அ) குடியரசுத் தலைவர்

Question 2.
ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்
ஈ) லோக் சபாவின் சபாநாயகர்
விடை:
ஈ) லோக் சபாவின் சபாநாயகர்

Question 3.
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) மக்களவை
இ) பிரதம அமைச்சர்
ஈ) மாநிலங்களவை
விடை:
ஆ) மக்களவை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 4.
லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது …………………….
அ) 18 வயது
ஆ) 21 வயது
இ) 25 வயது
ஈ) 30 வயது
விடை:
இ 25 வயது

Question 5.
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு .
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) மாநில அரசாங்கம்
ஈ) நாடாளுமன்றம்
விடை:
ஈ) நாடாளுமன்றம்

Question 6.
கீழ்க்கண்ட எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்.
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 360
இ) சட்டப்பிரிவு 356
ஈ) சட்டப்பிரிவு 365
விடை:
ஆ) சட்டப்பிரிவு 360

Question 7.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்
அ) குடியரசுத் தலைவர்
ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
இ) ஆளுநர்
ஈ) பிரதம அமைச்சர்
விடை:
அ) குடியரசுத் தலைவர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
……………………… மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.
விடை:
நிதி

Question 2.
……………… நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியச் செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
விடை:
பிரதம அமைச்சர்

Question 3.
…………….. அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.
விடை:
துணைக் குடியரசுத் தலைவர்

Question 4.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் ……………….
விடை:
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 5.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது …………………
விடை:
65

Question 6.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ………………. ஆகும்.
விடை:
உச்ச நீதிமன்றம்

Question 7.
தற்சமயம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை ……………………
விடை:
28

III. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
(i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
(ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
(iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
(iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i& iv சரியானவை
ஈ) i, ii & iii சரியானவை
விடை:
ஈ) i, ii & iii சரியானவை

Question 2.
(i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
(ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும்.
(iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
(iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

அ) ii & iv சரியானவை
ஆ) iii & iv சரியானவை
இ) i & iv சரியானவை
ஈ) i & ii சரியானவை
விடை:
அ) ii & iv சரியானவை

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 2

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி.

Question 1.
இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
விடை:

  • குடியரசுத் தலைவர், ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார்.
  • குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
  • அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தகுதி உடையவர் ஆவார்.

Question 2.
நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
விடை:
நடுவண் அமைச்சர்கள் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  1. காபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
  2. இராசாங்க அமைச்சர்கள்
  3. இணை அமைச்சர்கள்

Question 3.
உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
விடை:

  • இந்தியக்குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
  • அவர் பத்து ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
  • குடியரசுத் தலைவர் பார்வையில் சிறப்பு மிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.

Question 4.
நிதி மசோதா குறிப்பு வரைக.
விடை:

  • நிதி மசோதா என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாவை குறிக்கிறது.
  • இது பொதுவாக பணம் பெறுதல், பணம் செலவழித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • எ.டு. வரிச் சட்டங்கள், கறுப்புப் பணம் தடுப்பு போன்றவை.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 5.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக.
விடை:

  • நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்வதற்கும் இவருக்கு உரிமை உண்டு.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்.

VI. விரிவான விடையளி.

Question 1.
இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி.
விடை:
குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்: சட்டமன்ற அதிகாரங்கள்:

  • பொதுத்தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார்.
  • மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது.
  • குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டுமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
  • அவர் நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் ஒரு சட்ட மசோதா நிலுவையில் இருந்தாலும் அது குறித்து செய்தி அனுப்பலாம்.
  • குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன.
  • நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யமுடியாது.
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத் தலைவர் முடிவுக்குக் கொண்டுவரலாம்.
  • மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.

நீதி அதிகாரங்கள்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

குடியரசு தலைவரின் சிறப்பு அதிகாரங்கள் :
பிரிவு 361(1)ன் படி குடியரசுத் தலைவர் மற்றும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தை செய்யவேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

Question 2.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிவரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக.
விடை:
தனக்கேயுரிய நீதி வரையறை:
உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக வரும் வழக்குகள் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டவை ஆகும். அவைகள்,

  • இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்கள்.
  • அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எழும் சிக்கல்கள் ஆகியன உச்ச நீதிமன்றத்தின் தனக்கேயுரிய நீதி வரையறைக்குட்பட்டதாகும்.
  • அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்திட நீதிப்பேராணைகளை உச்சநீதிமன்றம் வழங்குகிறது.

மேல்முறையீட்டு நீதிவரையறை:
உச்ச நீதிமன்றமே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.

மாநில உயர் நீதிமன்றங்கள் உரிமையியல், குற்றவியல் அரசியலமைப்பு வழக்குகள் மீதான தீர்ப்புகளுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கின்றது.

ஆலோசனை நீதிவரையறை:
பொது முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தினைப் பெற அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு அதிகாரத்தினை வழங்குகிறது.

இதர நீதிவரையறை:
உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தின் பொதுவான செயல்முறைகள், வழிமுறைகளை ஒழுங்குப்படுத்தும் விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 3.
இந்தியப் பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
விடை:

  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • பிரதம அமைச்சர் அமைச்சர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
  • தான் தலைமை வகிக்கும், அமைச்சரவைக் கூட்டத்தின் தேதி, நாள், நிகழ்ச்சிநிரல் குறித்து முடிவு செய்வார்.
  • காபினெட் அமைச்சரவை கூட்டம் நடைபெறாத பொழுது பிரதம அமைச்சர் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவரை இயல்பாகக் கலந்தாலோசிக்கலாம்.
  • பிரதம அமைச்சர் பல்வேறு துறைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
  • நடுவண் அரசின் விவகாரங்கள் மற்றும் சட்டத்திற்கான முன்மொழிவுகள் போன்ற அமைச்சரவையின் அனைத்து முடிவுகளையும் குடியரசுத் தலைவருடன் விவாதிக்கிறார்.
  • பிரதம அமைச்சர் என்பவர் குடியரசுத் தலைவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
  • பிரதம அமைச்சர் நாட்டின் உண்மையான தலைவராவார். அவர் நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.
  • சர்வதேச மாநாடுகளான காமன்வெல்த், அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு, சார்க் நாடுகளின் மாநாடு ஆகியவற்றில் இந்திய நாட்டின் பிரதிநிதியாகப் பிரதமர் பங்கு கொள்கிறார்.

Question 4.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க.
விடை:
இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றுதல், நிர்வாகத்தினை மேற்பார்வையிடுதல், வரவு-செலவு திட்டத்தினை நிறைவேற்றுதல், பொதுமக்கள் குறைகளைப் போக்குதல், மேலும் வளர்ச்சித் திட்டங்கள், சர்வதேச உறவுகள், உள்நாட்டுக் கொள்கைகள் போன்றவைகளை விவாதித்தல் என பல பணிகளைச் செய்கிறது.

நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் ஆகியோரை அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளின்படி பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளது. > மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உண்டு.

10th Social Science Guide நடுவண் அரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………. நாட்டின் இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றமாகும்.
அ) உயர் நீதிமன்றம்
ஆ) உச்ச நீதிமன்றம்
இ) குடும்ப நீதிமன்றம்
ஈ) குற்றவியல் நீதிமன்றம்
விடை:
ஆ) உச்ச நீதிமன்றம்

Question 2.
இந்திய அரசிற்கும் ஒரு மாநிலம் அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல்கள் ………………..
அ) ஆலோசனை
ஆ) தனக்கேயுரிய வரையறை
இ) இதர நீதிவரையறை
ஈ) மேல்முறையீட்டு நீதிவரையறை
விடை:
ஆ) தனக்கேயுரிய வரையறை

Question 3.
நடுவண் அரசாங்கத்தின் ………………. அங்கம் நீதித்துறை ஆகும்.
அ) முதலாவது
ஆ) மூன்றாவது
இ) ஐந்தாவது
ஈ) இரண்டாவது
விடை:
ஆ) மூன்றாவது

Question 4.
ஒருங்கிணைந்த நீதித்துறையானது ……………… அதிகாரப் படிநிலையைக் கொண்டுள்ளது.
அ) இரட்டை
ஆ) ஒற்றை
இ) இரண்டும்
ஈ) பல
விடை:
ஆ) ஒற்றை

Question 5.
இந்திய உச்சநீதிமன்றம் ……………..ஆம் நாள் துவங்கப்பட்டது.
அ) ஜீன் 28, 1950
ஆ) ஜனவரி 28, 1950
இ) ஜீன் 20, 1940
ஈ) ஜனவரி 20, 1940
விடை:
ஆ) ஜனவரி 28, 1950

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 6.
உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி உட்பட ………………. நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
அ) 65
ஆ) 34
இ) 43
ஈ) 25
விடை:
ஆ) 34

Question 7.
உச்சநீதிமன்றத்தின் நிரந்தரத் தலைமையிடம் ………….. ஆகும்.
அ) புதுதில்லி
ஆ சென்னை
இ) ஹைதராபாத்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) புதுதில்லி

Question 8.
இந்திய அரசியலமைப்புச் …………………….. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது.
அ) சட்டப்பிரிவு 25
ஆ) சட்டப்பிரிவு 26
இ) சட்டப்பிரிவு 76
ஈ) சட்டப்பிரிவு 14
விடை:
இ சட்டப்பிரிவு 76

Question 9.
இந்திய நாடாளுமன்றத்தில் . ……. …. பகுதிகள் உள்ளன.
அ) நான்கு
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஐந்து
விடை:
ஆ) மூன்று

Question 10.
மக்களவை இந்திய நாடாளுமன்றத்தின் ………………. ஆகும்.
அ) நிரந்தர அவை
ஆ) புகழ்மிக்க அவை
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) புகழ்மிக்க அவை

Question 11.
நடுவண் அமைச்சர்களில் கடைசி தரநிலையில் ……………… உள்ள னர்.
அ) காபினெட் அமைச்சர்கள்
ஆ) இராசங்க அமைச்சர்கள்
இ) இணை அமைச்சர்கள்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ இணை அமைச்சர்கள்

Question 12.
……………… என்பவர் குடியரசு தலைவருக்கும் அமைச்சரவைக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்.
அ) பிரதம அமைச்சர்
ஆ) காபினெட் அமைச்சர்
இ) இணை அமைச்சர்
ஈ) கவர்னர்
விடை:
அ) பிரதம அமைச்சர்

Question 13.
………………. நாடாளுமன்ற முறை வெஸ்ட்மினிஸ்டர் முறை என்றழைக்கப்படுகிறது.
அ) புதுதில்லி
ஆ) சீனா
இ) இங்கிலாந்து
ஈ) எதுவுமில்லை
விடை:
இ இங்கிலாந்து

Question 14.
63வது பிரிவின் படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியைத் ……………… வகிக்கிறார்.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) கவர்னர்
இ) துணை குடியரசுத் தலைவர்
ஈ) பிரதமர்
விடை:
இ துணை குடியரசுத் தலைவர்

Question 15.
குடியரசுத் தலைவர் ஆண்டிற்கு …………….. முறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
அ) நான்கு
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஒரு
விடை:
இ இரண்டு

Question 16.
நடுவண் ……………… ஆனது நாடாளுமன்றம் என்றழைக்கப்படுகிறது.
அ) சட்டமன்றம்
ஆ) நிர்வாகம்
இ) நீதிமன்றம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) சட்டமன்றம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நடுவண் அரசு தலைமையகம் ……………. உள்ளது.
விடை:
புதுதில்லி

Question 2.
நடுவண் அரசு ………………. அம்சங்களைக் கொண்டது.
விடை:
மூன்று

Question 3.
……………… நிர்வாக அதிகாரம் பெற்றவர் ஆவார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 4.
……………… பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கக் கூடாது.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 5.
புதுதில்லியிலுள்ள ………………. குடியரசுத் தலைவரின் இல்லம் ஆகும்.
விடை:
ராஷ்டிரபதி பவன்

Question 6.
இந்திய அரசியலமைப்பு …………. வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டணை பெற்ற ஒருவரின் தண்டணையை குறைக்கவும் அதிகாரம் வழங்குகிறது.
விடை:
சட்டத்தின 72

Question 7.
……………… அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும் இரகசியகாப்பும் கொடுக்கிறார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 8.
நிர்வாகத்தின் மையக் கரு ………………. ஆகும்.
விடை:
காபினெட்

Question 9.
இந்திய நாடாளுமன்றதில் மேலவை மற்றும் கீழவை கொண்டுள்ளதால் …………… ஆகும்.
விடை:
ஈரவை சட்டமன்றம்

Question 10.
மாநிலங்களவையின் ………………. அதன் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
விடை:
துணைத் தலைவர்

Question 11.
மக்களவைக்கு அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ………………. ஆவார்.
விடை:
552

Question 12.
மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைத்திட ……………… அதிகாரம் உண்டு .
விடை:
நாடாளுமன்றத்திற்கே

Question 13.
மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் ……………. பின்பற்றப்படுகிறது.
விடை:
வயது வந்தோர் வாக்குரிமை

Question 14.
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர் …………………. ஆவார்.
விடை:
சபாநாயகர்

Question 15.
ஒரு சட்டத்திணை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும் அதிகாரம் ……………. ஆகும்.
விடை:
நீதிப்புனராய்வு

Question 16.
…………….. எதிர்பாரா நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி .
விடை:
எதிர்பாரா செலவு நிதி

III. சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
(i) மக்களவையானது நாடாளுமன்றத்தின் நிரந்தர அவை ஆகும்.
(ii) தற்சமயம் மக்களவை 543 உறுப்பினர்களை நியமிக்கப்படுகிறது.
(iii) ஆங்கிலோ – இந்தியன் சமூகத்திலிருந்து 2 உறுப்பினர்களை குடியரசு தலைவர் நியமிக்கிறார்.
(iv) தற்சமயம் மக்களவை 545 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

அ) ii) மற்றும் iv) சரி
ஆ) iii) மற்றும் iv) சரி
இ) i) மற்றும் iv) சரி
ஈ) i), ii) & iii) சரி
விடை:
ஆ) iii) மற்றும் iv) சரி

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 2.
(i) நடுவண் அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அமைதி பெற்ற பின்னரே நடுவண் நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்.
(ii) அவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியும்.
(iii) எதிர்பார்த்த செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு.
(iv) ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்.

அ) ii) மற்றும் iv) சரி
ஆ) iii) மற்றும் iv) சரி
இ) i) மற்றும் iv) சரி
ஈ) i), ii) & iii) சரி
விடை:
இ i) மற்றும் iv) சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு 4

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி.

Question 1.
முடிவு வாக்கு என்றால் என்ன?
விடை:
மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100இன் படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம்.

இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிக்கிறது.

அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.

Question 2.
மாநிலங்களவை குறிப்பு எழுதுக.
விடை:
ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவை 250 உறுப்பினர்களை கொண்டது.

இதில் 238 உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

12 உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார். இலக்கியம், அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு அல்லது செயல்முறை அணுமூலம் கொள்ளலாம்.

Question 3.
தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் யாவை?
விடை:

  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
  • மக்களவை உறுப்பினராவதற்கான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

Question 4.
இராணுவ அதிகாரங்கள் குறிப்பு வரைக.
விடை:

  • நடுவண் அரசின் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தைச் சட்டப்பிரிவு 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
  • அவர் சட்டத்தின்படி ராணுவத்தை வழிநடத்துகிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 2 நடுவண் அரசு

Question 5.
துணைக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • மாநிலங்களவையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறார்.
  • மாநிலங்களவையின் மரபு ஒழுங்கு முறைகளைத் தீர்மானிக்கிறார்.
  • மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்கிறார்.

VI. விரிவான விடையளி.

Question 1.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 76 இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமிக்க வழிவகை செய்கிறது.
  • இவர் நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி ஆவார்.
  • இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
  • உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தேவையான தகுதிகளை இவரும் கொண்டிருக்க வேண்டும்.
  • எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவரால் அவர் பதவியிலிருந்து அகற்றப்படலாம் அல்லது அவர் குடியரசுத் தலைவருக்குப் பதவி விலகல் கடிதத்தை அளித்து பதவி விலகலாம்.

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்:

  • இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார்.
  • இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை இவருக்கு உண்டு.
  • நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும், பங்கு கொள்வதற்கும் இவருக்கு உரிமை உண்டு.
  • நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டத்திலோ அல்லது எந்தவொரு கூட்டுக் குழு கூட்டத்திலோ வாக்கு அளிக்கும் உரிமை இன்றி உறுப்பினராக இவர் இடம் பெறுவார்.
  • நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும், சட்ட விலக்களிப்புகளையும் இவரும் பெறுகிறார்.

Question 2.
இந்திய குடியரசுத் தலைவரின் நிதி மற்றும் இராஜதந்திர அதிகாரங்களை விவரி.
விடை:

  • நடுவண் அரசின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினைக் குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்ற பின்னரே நடுவண் நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதியினைக் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளது.
  • இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு.
  • ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு நிதிக்குழுவினை அமைக்கிறார்.

இராஜதந்திர அதிகாரங்கள்:
வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார்.

வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

10th Social Science Guide இந்திய அரசியலமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்காணும் வரிசையில் ‘முகவுரை’ பற்றிய சரியான தொடர் எது?
அ) குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம இறையாண்மை .
ஆ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
இ) இறையாண்மை , குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.
ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக , குடியரசு.
விடை:
ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.

Question 2.
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
அ) ஒரு முறை
ஆ) இரு முறை
இ) மூன்று முறை
ஈ) எப்பொழுதும் இல்லை
விடை:
அ) ஒரு முறை

Question 3.
ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும்?
அ) வம்சாவளி
ஆ) பதிவு
இ) இயல்புரிமை
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
இ இயல்புரிமை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 4.
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி?
அ) சமத்துவ உரிமை
ஆ) சுரண்டலுக்கெதிரான உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை
விடை:
இ) சொத்துரிமை

Question 5.
கீழ்கண்டவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
அ) கர்நாடகாவிலிருந்து கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்
ஆ) கிறித்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்.
இ) ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.
விடை:
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.

Question 6.
பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?
அ) சமய உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
ஈ) சொத்துரிமை
விடை:
இ அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

Question 7.
அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
அ) உச்சநீதி மன்றம் விரும்பினால்
ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்
இ) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்.
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
இ தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்

Question 8.
நமது அடிப்படை கடமைகளை ………….. இடமிருந்து பெற்றோம்.
அ) அமெரிக்க அரசியலமைப்பு
ஆ) கனடா அரசியலமைப்பு
இ) ரஷ்யா அரசியலமைப்பு
ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு
விடை:
இ ரஷ்யா அரசியலமைப்பு

Question 9.
எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 360
ஈ) சட்டப்பிரிவு 368
விடை:
இ சட்டப்பிரிவு 360

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 10.
எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய – மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N. வெங்கடாசலையா குழு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

அ) 1, 2 &3
ஆ) 1 & 2
இ) 1 &3
ஈ) 2 & 3
விடை:
ஆ) 1 & 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ……………… தோன்றியது.
விடை:
அமெரிக்க ஐக்கிய நாடுகளில்

Question 2.
அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை:
Dr. சச்சிதானந்த சின்கா

Question 3.
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு ……….
விடை:
26 நவம்பர் 1949

Question 4.
………………… பேராணைகள் சட்டப்பிரிவு 32இல் குறிப்பிடப்படுகின்றன.
விடை:
ஐந்து வகையான

Question 5.
இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் …………… பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
விடை:
51A

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 2

IV. கறுதிய விடை தருக

Question 1.
அரசியலமைப்பு என்றால் என்ன?
விடை:

  • ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும்.
  • அது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணி ஆகும்.
  • அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (U.S.A.) தோன்றியது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 2.
குடியுரிமை என்பதன் பொருள் என்ன?
விடை:

  • ‘சிட்டிசன்’ (Citizen) எனும் சொல் ‘சிவிஸ்’ (Civis) எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
  • இதன் பொருள் ஒரு ‘நகர அரசில் வசிப்பவர்’ என்பதாகும். இந்திய அரசியலமைப்பு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
  • இந்திய அரசியலமைப்பின் பகுதி || சட்டப்பிரிவுகள் 5லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.

Question 3.
இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.
விடை:

  • சமத்துவ உரிமை
  • சுதந்திர உரிமை
  • சுரண்டலுக்கெதிரான உரிமை
  • சமயச் சார்பு உரிமை
  • கல்வி, கலாச்சார உரிமை
  • அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

Question 4.
நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?
விடை:

  • நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
  • இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.

Question 5.
இந்தியாவின் செம்மொழிகள் எவை?
விடை:
தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஓடியா.

Question 6.
தேசிய அவசரநிலை என்றால் என்ன?
விடை:
தேசிய அவசரநிலை (பிரிவு 352):

  • போர், அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது.
  • ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும்பொழுது அது ‘உள்நாட்டு அவசரநிலை’ எனப்படுகிறது.

Question 7.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.
விடை:

  • சட்டமன்ற உறவுகள்
  • நிர்வாக உறவுகள்
  • நிதி உறவுகள்

V. விரிவான விடை தருக.

Question 1.
இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
விடை:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்புக் கூறுகள் :

  • உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
  • இதன் பெரும்பாலான கருத்துக்கள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை,
  • இது நெகிழாத் தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
  • கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
  • இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
  • சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
  • உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 2.
அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
விடை:

  • தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
  • இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது.

சமத்துவ உரிமை:

  • பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
  • பிரிவு 17 – தீண்டாமையை ஒழித்தல்.
  • பிரிவு 18 – இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்றப் பட்டங்களை நீக்குதல்.

சுதந்திர உரிமை :

  • பிரிவு 21 – வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்பு பெறும் உரிமை.
  • பிரிவு 21 A – தொடக்கக் கல்வி பெறும் உரிமை.
  • பிரிவு 22 – சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.

சுரண்டலுக்கெதிரான உரிமை:

  • பிரிவு 23 – கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.
  • பிரிவு 24 – தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.

சமய சார்பு உரிமை:

  • பிரிவு 25 – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை.
  • பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
  • பிரிவு 27 – எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.
  • பிரிவு 28 – மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை.

கல்வி கலாச்சார உரிமை:

  • பிரிவு 29 – சிறுபான்மையினரின் எழுத்து, மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.
  • பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.

அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை:
பிரிவு 32 – தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.

Question 3.
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமையைப் பற்றி எழுதுக.
விடை:
அரசியல் சட்ட மேல் முறையீட்டு உரிமைகள் (சட்டப்பிரிவு – 32):

  • நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
  • இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.
  • Dr. B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு-32 இந்திய அரசியலமைப்பின் ‘இதயம் மற்றும் ஆன்மா ‘ ஆகும்.

அ. ஆட்கொணர்வு நீதிப்பேராணை:
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.

ஆ. கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை:
மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறைகளிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இ. தடையுறுத்தும் நீதிப்பேராணை:
ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.

ஈ. ஆவணக் கேட்பு பேராணை:
உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.

உ. தகுதி முறை வினவும் நீதிப்பேராணை:
இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 4.
அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 3

10th Social Science Guide இந்திய அரசியலமைப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
அமைச்சரவை தூதுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு …………….
அ) 1964
ஆ) 1946
இ) 1856
ஈ) 1846
விடை:
ஆ) 1946

Question 2.
……………….. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவரானார்.
அ) Dr. A.P.J. அப்துல் கலாம்
ஆ) Dr. இராஜேந்திர பிரசாத்
இ) Dr. சச்சிதானந்த சின்கா
ஈ) V.T. கிருஷ்ணமாச்சாரி
விடை:
ஆ) Dr. இராஜேந்திர பிரசாத்

Question 3.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு …………………
அ) 15 ஆகஸ்ட் 1947
ஆ) 26 ஆகஸ்ட் 1949
இ) 26 நவம்பர் 1949
ஈ) 26 ஜனவரி 1950
விடை:
ஈ) 26 ஜனவரி 1950

Question 4.
ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி, பொருத்தமான அங்கீகாரத்துடன் ………………………. செய்வதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
அ) வம்சாவளி
ஆ) பிறப்பு
இ) பதிவு
ஈ) இயல்புரிமை
விடை:
இ பதிவு

Question 5.
ஒருவர் தன் குடியுரிமையை ……………. வழிகளில் இழப்பார்.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) இரண்டு
விடை:
அ) மூன்று

Question 6.
உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு உரிய அதிகாரிக்கு அனுப்பச் செய்ய கீழ்மன்றங்களுக்கு இடும் ஆணை ……………………
அ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
ஆ) ஆவணக் கேட்பு பேராணை
இ) தடையுறுத்தும் நீதிப்பேராணை
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) ஆவணக் கேட்பு பேராணை

Question 7.
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதில் இருந்து ………….. பாதுகாக்கிறது.
அ) தடையுறுத்தும் நீதிப்பேராணை
ஆ) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
இ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை
ஈ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
விடை:
இ ஆட்கொணர்வு நீதிப்பேராணை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 8.
மற்ற அடிப்படை உரிமைகளையும் …………. சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம்.
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) ஆளுநர்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) குடியரசுத் தலைவர்

Question 9.
இந்திய அரசியலமைப்பின் ……………… இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுகிறது.
அ) பகுதி IV
ஆ) பகுதி II
இ) பகுதி III
ஈ) (ஆ) மற்றும் (இ) இரண்டும்
விடை:
இ பகுதி

Question 10.
1946 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் சேர்க்கப்பட்ட பொறுப்புகளே குடிமக்க ளின் ……………… ஆகும்.
அ) நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்
ஆ) அடிப்படைக் கடமைகள்
இ) அடிப்படை உரிமைகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) அடிப்படைக் கடமைகள்

Question 11.
அடிப்படைக் கடமைகளின் புதிய பகுதி ………… என்ற ஒரேயொரு பிரிவைக் கொண்டது.
அ) சட்டதிருத்தம் 21 A
ஆ) சட்டதிருத்தம் 45A
இ) சட்டதிருத்தம் 51A
ஈ) சட்டதிருத்தம் 20 A
விடை:
இ சட்டதிருத்தம் 51 A

Question 12.
1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து ……………… துறைகளை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது.
அ) 6
ஆ) 5
இ) 4
ஈ) 3
விடை:
ஆ) 5

Question 13.
ஒரு மாநில அரசின் …………….. அதன் சொந்த மாநிலத்தில் மட்டுமே உள்ளது.
அ) நிர்வாக அதிகாரம்
ஆ) நிதி அதிகாரம்
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) நிர்வாக அதிகாரம்

Question 14.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி சேர்காரிய கமிஷனில் நியமிக்கப்பட்ட ஆண்டு …………………
அ) 1938
ஆ) 1983
இ) 1883
ஈ) 1838
விடை:
ஆ) 1983

Question 15.
அரசியலமைப்பு சட்டப் பகுதி XVII இல் …………….. பற்றி விவரிக்கிறது.
அ) அலுவலக மொழிகள்
ஆ) அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
இ) செம்மொழிகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) அலுவலக மொழிகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நிர்ணய சபையில் ……………… உறுப்பினர்கள் இருந்தனர்.
விடை:
389

Question 2.
………………. இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விடை:
டாக்டர் B.R. அம்பேத்கர்

Question 3.
………………. என்பவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கையெழுத்திடப்பட்டது.
விடை:
பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா

Question 4.
முகவுரை ………………. என குறிப்பிடப்பட்டது.
விடை:
அரசியலமைப்பின் திறவுகோல்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 5.
………………… குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு முகவுரை அமைந்துள்ளது.
விடை:
ஜவகர்லால் நேருவின்

Question 6.
இந்தியா ஒரு …………., …………….., …………….., ………………., ………………… என தமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.
விடை:
இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயசார்ப்பற்ற, ஜனநாயக , குடியரசு

Question 7.
குடிமகன் என்பதன் பொருள் ………………
விடை:
நகர அரசியல் வசிப்பவர்

Question 8.
…………….. நடைமுறைக்கு கொண்டு வந்த ஆண்டு 1955 ஆகும்.
விடை:
குடியுரிமைச் சட்டம்

Question 9.
தற்போது ……………… அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
விடை:
ஆறு

Question 10.
……………….. அரசியலமைப்பின் பாதுகவாலன் என அழைக்கப்படுகிறது.
விடை:
உச்ச நீதிமன்றம்

Question 11.
…………. நீதிமன்ற சட்டத்தால் செயல்படுத்த முடியும்.
விடை:
அடிப்படை உரிமைகள்

Question 12.
…………….. உறவுகளை விவரிக்க இந்திரா காந்தி சர்காரியா கமிஷணாக நியமிக்கப்பட்டார்.
விடை:
மத்திய, மாநில

Question 13.
மிக முக்கியமான உள்மாநில சபை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு …………….
விடை:
1990

Question 14.
உள்நாட்டு அவசர நிலை …………. ஆண்டுகளில் அறிவிக்கப்படுகிறது.
விடை:
மூன்று

Question 15.
அதிகபட்சம் அவசர நிலையின் காலம் ………………. ஆண்டுகள் ஆகும்.
விடை:
3

Question 16.
அரசியலமைப்பு செயல்பாடு ……………… தலைமையில் செயல்படுத்தப்பட்டது.
விடை:
M.N. வெங்கடாசலய்யா

Question 17.
டாக்டர் B.R. அம்பேத்கர் கூற்றுப்படி அரசியலமைப்பு ……………… இதயம் மற்றும் ஆன்மா ஆகும்.
விடை:
சட்டப்பிரிவு 32

Question 18.
இந்திய அரசியலமைப்பு சட்டம் …………. எழுதப்பட்டது.
விடை:
இத்தாலிய பாணியில்

Question 19.
…………….. செம்மொழி தகுதியை பெற்றுள்ளன.
விடை:
6 மொழிகள்

Question 20.
……………… அரசு எல்லா சமயமும் சமம் என பாதுகாக்கிறது.
விடை:
சமயசார்பற்ற அரசு

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு 5

IV. குறுகிய விடை தருக.

Question 1.
அரசியலமைப்பின் அவசியம் யாது?
விடை:

  • அனைத்து மக்களாட்சி நாடுகளும் தங்களை நிர்வகித்துக்கொள்ள ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை பெற்றுள்ளன.
  • ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ விரும்பும் வகையில் சில அடிப்படைக் கொள்கைகளை அரசியலமைப்பு வகுத்துக் கொடுக்கிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 2.
குடியுரிமைச் சட்டம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு, 1955ல் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டம், குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகிறது.
  • இச்சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் எட்டு முறை திருத்தப்பட்டுள்ளது.

Question 3.
குடியுரிமைச் சட்டத்தின் படி ஒருவர் எந்தெந்த ஒரு முறையில் குடியுரிமை பெறமுடியும்?
விடை:

  1. பிறப்பின் மூலம்
  2. வம்சாவளி மூலம்
  3. பதிவின் மூலம்
  4. இயல்புரிமை மூலம்
  5. பிரதேச இணைவின் மூலம்

Question 4.
குறிப்பு வரைக. அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
விடை:
அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை:
சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.

ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை:
மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

Question 5.
அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல் பற்றி எழுதுக.
விடை:
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத்தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19ன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.

மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத்தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம்.

குடியரசுத்தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

Question 6.
ஏழாவது அட்டவணையின் அதிகாரப் பகிர்வினைப் பற்றி கூறுக.
விடை:

  • மத்திய பட்டியல்
  • மாநில பட்டியல்
  • பொதுப்பட்டியல்
  • என மூன்று பட்டியல்கள் முறையே 97, 66, 47 என்று அதிகாரத்தை வழங்கியுள்ளது.

V. விரிவான விடை தருக.

Question 1.
அவசரகால ஏற்பாட்டின் பிரிவுகள் என்னென்ன? அவற்றை விவரிக்கவும்.
விடை:
தேசிய அவசரநிலை (சட்டப்பிரிவு 352):
போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத்தலைவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.

போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது.

ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘உள்நாட்டு அவசர நிலை’ எனப்படுகிறது.

இந்த வகையான அவசரநிலைகள் 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன.

மாநில அவசரநிலை (சட்டப்பிரிவு 356):
ஒரு மாநிலத்தில், மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் பொழுது அரசியலமைப்பின் விதிகளுக்கேற்ப ஆளுநர் அறிக்கை அளிக்கும் பொழுது, குடியரசுத்தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.

மாநிலமானது, குடியரசுத்தலைவர் சார்பாக ஆளுநரால் ஆளப்படுகிறது.

நிதி சார்ந்த அவசரநிலை (சட்டப்பிரிவு 360):
இந்த வகையான அவசர நிலையில் மத்திய-மாநில அரசு ஊழியர் எந்த வகுப்பினராயினும் அவர்களது ஊதியம், படிகள் மற்றும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைவரது ஊதியமும் குடியரசுத்தலைவரின் ஓர் ஆணையின் மூலம் குறைக்கப்படும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 1 இந்திய அரசியலமைப்பு

Question 2.
அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் பற்றி விவரிக்கவும்.
விடை:
‘அமெண்ட்மெண்ட்’ எனும் சொல் மாற்றம், மேம்படுத்துதல், மற்றும் சிறு மாறுதல் என்பதைக் குறிக்கிறது.
அரசியலமைப்பின் சட்டம் பகுதி ல் 368வது சட்டப்பிரிவு, அரசியலமைப்பினை சட்ட திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பற்றி தெரிவிக்கின்றது.

வழிமுறைகள் :
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும், அவையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மற்றும் அவைக்கு வந்து, வாக்களித்தவர்களில் 3ல் 2 பங்குக்கு குறையாமல் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும்.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தபின் மசோதா திருத்தப்பட்டச் சொற்களுடன் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்படும்.

நாடாளுமன்றத்தால் மட்டுமே அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரமுடியும்.

மாநில சட்ட மன்றத்தால் அரசியலமைப்பில் எந்தவொரு சட்டத்திருத்தத்தையும் கொண்டுவர முடியாது.

அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வகைகள்:

  • அரசியலமைப்பின் 368வது சட்டப்பிரிவு மூன்று வகைகளில் அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களைச் செய்ய வழிவகுக்கிறது.
  • நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.
  • நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

10th Social Science Guide தமிழ்நாடு – மானுடப் புவியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா …………..
அ) காவிரி டெல்டா
ஆ) மகாந்தி டெல்டா
இ) கோதாவரி டெல்டா
ஈ) கிருஷ்ணா டெல்டா
விடை:
அ) காவிரி டெல்டா

Question 2.
தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் ……………….
அ) பருப்பு வகைகள்
ஆ) சிறுதானியங்கள்
இ) எண்ணெய் வித்துக்கள்
ஈ) நெல்
விடை:
ஆ) சிறுதானியங்கள்

Question 3.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ……………….
அ) மேட்டூர்
ஆ) பாபநாசம்
இ) சாத்தனூர்
ஈ) துங்கபத்ரா
விடை:
அ) மேட்டூர்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 4.
தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ………………
அ) 3 மற்றும் 15
ஆ) 4 மற்றும் 16
இ) 3 மற்றும் 16
ஈ) 4 மற்றும் 15
விடை:
அ) 3 மற்றும் 15

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு ……………….. சதவீதத்தை வகிக்கிறது.
விடை:
21

Question 2.
சாத்தனூர் அணை …………….. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
விடை:
தென்பெண்னை

Question 3.
மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ………. ஆகும்.
விடை:
சென்னை பன்னாட்டு விமான நிலையம்

Question 4.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு ………………. அழைக்கப்படுகிறது.
விடை:
வணிக சமநிலை

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 2

IV. சரியான கூற்றினை கண்டுபிடி.

Question 1.
கூற்று : கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
காரணம் : இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 2.
கூற்று : நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்.
காரணம் : இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டின் வேளாண் பருவக்காலங்களை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 3

Question 2.
கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் ‘மான்செஸ்டர்’ என அழைக்கப்படுகிறது?
விடை:

  • பருத்தி நெசவாலைகள் கோயம்புத்தூர் பகுதிகளில் செறிந்து காணப்படுகின்றன.
  • கோயம்புத்தூர் நெசவுத்தொழில் மூலம் மாநில பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.
  • பருத்தி கோயம்புத்தூர் பீடபூமியில் பயிரிடப்பிடுகிறது. எனவே, கோயம்புத்தூர் ‘தமிழ்நாட்டின் மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறது.

Question 3.
தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, அமராவதி அணை, கிருஷ்ணகிரி அணை, முல்லைப் பெரியாறு அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை

Question 4.
பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன ?
விடை:

  • சென்னையில் புறநகர் இரயில் போக்குவரத்து மற்றும் பறக்கும் தொடருந்துத் திட்டம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.
  • மெட்ரோ இரயில்வே அமைப்பு, இப்போக்குவரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 5.
தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை பட்டியலிடுக.
விடை:

  • விமானநிலையங்கள் : கோயம்புத்தூர், மதுரை, மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியன நாட்டில் பிற சர்வதேச விமானநிலையங்கள் ஆகும். தூத்துக்குடி, மற்றும் சேலம் ஆகியவை உள்நாட்டு விமானநிலையங்கள் ஆகும்.
  • துறைமுகங்கள்: சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்களாகும்.

VI. வேறுபடுத்துக.

Question 1.
கடல் மீன்பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன் பிடித்தல்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 4

Question 2.
உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 5

Question 3.
மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 6

VII. கீழ்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.

Question 1.
விவசாயிகள் இரசாயன வேளாண்மையிலிருந்து கரிம (இயற்கை) வேளாண்மைக்கு மாறுகிறார்கள்.
விடை:

  • தற்போதைய மாறிவரும் சூழலில் மக்கள் பெரும்பாலும் கரிம வேளாண் பொருட்களை விரும்புகிறார்கள்.
  • வேதியியல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பயிர் தூண்டுதல்கள் போன்ற கனிம விவசாயத்தைப் பயன்படுத்துவதற்கு பதிலாக விவசாயிகள் பூமியின் உரங்களைப் பயன்படுத்துகின்றன.

Question 2.
கிராமங்களை விட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம்.
விடை:

  • வேளாண்மை, தொழிற்துறை வளர்ச்சி போன்றவை மக்கள் தொகை அதிகளவில் இருப்பதற்கான காரணங்கள் ஆகும்.
  • எ.கா. மதுரை, சென்னை , கோயம்புத்தூர்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 3.
தமிழ்நாட்டின் ‘நெசவாலை தலைநகர்’ என கரூர் அழைக்கப்படுகிறது.
விடை:
ஜவுளி ஆலைகள் கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ளன.
ஜவுளி மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கை கொடுத்துள்ளன.
எனவே, கரூர் ‘நெசவாலைத் தலைநகரம்’ எனப்படுகிறது.

VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டின் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக.
விடை:
தோட்டப்பயிர்கள் :

  • தேயிலை, காப்பி, இரப்பர், முந்திரி மற்றும் சின்கோனா ஆகியன மாநிலத்தின் முக்கிய தோட்டப் பயிர்களாகும்.
  • தமிழ்நாடு தேயிலை பயிரிடும் பரப்பு மற்றம் உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது.
  • நீலகிரி மலைகள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன.
  • மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காப்பி பயிரிடப்படுகின்றது.
  • நீலகிரி மலைகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைச்சரிவுகளில் காப்பி குறிப்பிடத்தகுந்த அளவில் பயிரிடப்படுகிறது.
  • திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள மலைச் சரிவுகளில் காப்பி பயிரிடப்படுகின்றது.
  • காப்பி உற்பத்தியில் கர்நாடக மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது.
  • இரப்பர் தோட்டங்கள் கன்னியாகுமரியில் அதிகமாக காணப்படுகிறது.
  • தமிழ்நாட்டிலுள்ள, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சிகளின் சரிவுகளில் மிதவெப்பம் மற்றும் ஈரமான காலநிலை உள்ள பகுதிகளில் மிளகு விளைகின்றது.
  • கடலூர் மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் முந்திரி பயிரிடப்படுகின்றது.

Question 2.
தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.
விடை:
தமிழ்நாட்டின் நீர் வளங்கள்:
மனித குலத்திற்கும் புவியில் வாழும் இலட்சக்கணக்கான உயிரினங்களுக்கும் நீர் இயற்கையின் ஒரு விலைமதிப்பற்ற பரிசாகும்.

தமிழ்நாட்டின் நீர் வளங்கள்:
இந்தியப் பரப்பளவில் 4 சதவீதத்தையும் மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் கொண்டுள்ளது தமிழ்நாடு, இந்திய நீர் வளத்தில் 2.5 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் உள்ள நீர்வள ஆதாரங்கள்:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 7

  • பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள், அடிப்படையில் வேளாண் நீர்பாசன மேம்பாட்டிற்காகவும் மற்றும் நீர் மின்சக்தி உற்பத்திக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இருப்பினும் இவை வேறு பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

Question 3.
தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 8
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 9

Question 4.
தமிழ்நாட்டில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் பற்றி அதற்கான காரணங்களை எழுதுக.
விடை:

  • ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள் தொகை எனப்படுகிறது.
  • மக்கள் தொகைப் பண்புகள் பற்றிய புள்ளிவிவர, ஆய்வுகள் மக்கட்தொகையில் என அழைக்கப்படுகின்றது.

அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள்:
கோவை, சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகியவை தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களாகும்.

இம்மாவட்டங்களில் அதிக அளவிலான மக்கள் தொகை இருப்பதற்குக் காரணம் விவசாயம் மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 5.
தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை விவரி.
விடை:
சாலைகளின் வகைகள்:

  • மாநிலத்தின் மொத்த சாலைகளின் நீளம் 1,67,000 கிலோமீட்டர் ஆகும். இதில் 60,628 கிலோமீட்டர் மாநில நெடுங்சாலைகள் துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.
  • தனியார் துறை கூட்டணி இயக்கத் திட்டத்தின் கீழ் (PPP) மொத்த சாலைத் திட்டங்களில் 20% பங்களிப்புடன் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 10

இரயில்வே போக்குவரத்து :

  • தெற்கு இரயில்வேயின் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.
  • தற்போது தெற்கு இரயில்வே வலைப்பின்னல் இந்தியாவின் தென் தீபகற்ப பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் புறநகர் இரயில் போக்குவரத்து மற்றும் பறக்கும் தொடருந்துத் திட்டம் ஆகியவை நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.
  • மெட்ரோ இரயில்வே அமைப்பு மே 2017 முதல் பாதாள இரயில் இயக்கத்துடன், இப்போக்குவரத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

வான்வழி போக்குவரத்து :

  • தமிழ்நாட்டில் 4 முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
  • சென்னை சர்வதேச விமானநிலையமானது மும்பை மற்றும் புது டெல்லிக்கு அடுத்தாக இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையாக உள்ளது.
  • கோயம்புத்தூர் மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியன நாட்டில் பிற சர்வதேச விமான நிலையங்களின் ஆகும்.
  • துாத்துக்குடி மற்றும் சேலம் ஆகியவை உள்நாட்டு விமாநிலையங்கள் ஆகும்.

நீர்வழிப் போக்குவரத்து:

  • சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி தமிழ்நாட்டின் மூன்று முக்கிய துறைமுகங்களாகும்.
  • நாகப்பட்டினத்தில் இடைநிலை துறைமுகமும் பிற பகுதிகளில் 15 சிறிய துறைமுகங்களும் இம்மாநிலத்தில் உள்ளன.
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறு துறைமுகங்களும் தமிழ்நாட்டின் கடல்சார் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

Question 6.
சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி எழுதவும்.
விடை:

  • சாலை சமிக்கைகளை அறிதல்
  • நில், கவனி, செல்
  • ஒரு வாகனம் நெருங்குகிறதா என கவனியுங்கள்.
  • சாலையில் விரைந்து செல்ல வேண்டாம்.
  • பாதசாரிகளுக்கான பாதையில் சாலையைக் கடக்க வேண்டும்.
  • வாகனம் ஓட்டும் போது கைகளை நீட்ட வேண்டாம்.
  • ஒரு போதும் வளைவுகளில் சாலையைக் கடக்காதீர் (மற்றும்) நகரும் வாகனத்தால் பாதுகாப்பாக இருங்கள்.

10th Social Science Guide தமிழ்நாடு – மானுடப் புவியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கோயம்புத்தூர் மாவட்டம் ……………. உற்பத்தியில் முதல்நிலை வகிக்கிறது.
அ) உளுந்து
ஆ) கொண்டக்கடலை
இ) பச்சப்பயிறு
ஈ) கொள்ளு
விடை:
ஆ) கொண்டக்கடலை

Question 2.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ……………. பயிரிடப்படுகிறது.
அ) உளுந்து
ஆ) கொண்டக்கடலை
இ) பச்சைப்பயிறு
ஈ) கொள்ளு
விடை:
ஆ) கொண்டக்கடலை

Question 3.
மலையடுக்குப் பகுதியில் ……………. அணை கட்டப்பட்டுள்ளது.
அ) பவானி
ஆ) மேட்டூர்
இ) அமராவதி
ஈ) சாத்தனூர்
விடை:
ஆ) மேட்டூர்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 4.
கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரியிலிருந்து …………………. தொலைவில் தர்மபுரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.
அ) 17 கி.மீ
ஆ) 7 கி.மீ
இ) 12 கி.மீ
ஈ) 15 கி.மீ
விடை:
ஆ) 7 கி.மீ

Question 5.
…………………. நகரிலிருந்து ஏறத்தாழ 47 கி.மீ தொலைவில் மணிமுத்தாறு அணை கட்டப்பட்டுள்ளது.
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ) தூத்துக்குடி
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) திருநெல்வேலி

Question 6.
வைகை அணை ………………. நாள் திறக்கப்பட்டது.
அ) 1995, ஜனவரி 22ஆம்
ஆ) 1959, ஜீன் 12ஆம்
இ) 1959, ஜனவரி 21ஆம்
ஈ) 1969, ஜனவரி 21ஆம்
விடை:
இ) 1959, ஜனவரி 21ஆம்

Question 7.
இந்தியாவில், தோல் பதனிடும் தொழிலகங்களில் தமிழ்நாடு ……………. உற்பத்தியையும் அளிக்கிறது.
அ) 40%
ஆ) 60%
இ) 50%
ஈ) 65%
விடை:
ஆ) 60%

Question 8.
……………… உலகளவில் திறன்படைத்த அலைகளில் ஒன்றாகும்.
அ) காகித நிறுவனம்
ஆ) கீழ் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆய்வகம்
இ) தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம்
ஈ) அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனம்
விடை:
அ) காகித நிறுவனம்

Question 9.
மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு ………………. பெரிய மாநிலமாக உள்ளது.
அ) நான்காவது
ஆ) மூன்றாவது
இ) இரண்டாவது
ஈ) ஏழாவது
விடை:
இ இரண்டாவது

Question 10.
……………… மாவட்டத்தில் குறைந்த அளவு மக்களடர்த்தி பதிவாகியுள்ளது.
அ) நாகப்பட்டினம்
ஆ) நீலகிரி
இ) இராமநாதபுரம்
ஈ) புதுக்கோட்டை
விடை:
ஆ) நீலகிரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………… என்பது மனித சமுதாயம் வளர்ச்சி பெற்ற வழிமுறைகள் ஆகும்.
விடை:
மானுடப் புவியியல்

Question 2.
அக்ரிகல்சரின் பொருள் ……………….
விடை:
நிலம் மற்றும் வளர்த்தல்

Question 3.
TRRI-ன் விரிவாக்கம் …………….
விடை:
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 4.
கோயம்புத்தூர் பீடபூமியிலும், கம்பம் பள்ளத்தாக்கிலும் ……………… பயிரிடப்படுகின்ற ன.
விடை:
சோளம்

Question 5.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் …………….. என்றும் அழைக்கப்படுகிறது.
விடை:
ஆவின்

Question 6.
பரப்பலாறு திட்டம் ……………….. அருகே அமைந்துள்ளது.
விடை:
ஓட்டஞ்சத்திரம்

Question 7.
கரூர் ……………… என்றழைக்கப்படுகிறது.
விடை:
தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம்

Question 8.
இராமநாதபுரத்தின் சில பகுதிகளில் ……………… உற்பத்தி செய்யப்படுகிறது.
விடை:
செயற்கைப் பட்டு துணிகள்

Question 9.
உற்பத்தித் தொழில் என்பது மாநிலப் பொருளாதாரத்தின் ………………. ஒன்றாகும்.
விடை:
துடிப்பான துறைகளில்

Question 10.
தமிழ்நாட்டில் சர்க்க ரைத் தொழிலகம் ஒரு ………………..
விடை:
வேளாண் சார்ந்த தொழிலகமாகும்

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 11
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 12

IV. கூற்று வகை வினா.

Question 1.
கூற்று : நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 4வது இடத்தை வகிக்கிறது.
காரணம் : காஞ்சி புரம் பட்டு என்பது அதன் தனித்தன்மை , தரம் (ம) பாரம்பரிய பதிப்பால் உலகறியப்பட்டது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 2.
கூற்று : கைத்தறித் துறையானது மாநிலத்தின் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகும்.
காரணம் : இது கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தையும், வருவாயையும் அளிக்கின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம் ஆகும்.

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
நீர்ப்பாசனம் வரையறு.
விடை:

  • மாநிலத்தின் பருவமழை சமச்சீரற்ற நிலையில் உள்ளது.
  • மேலும் இவை பருவகாலத்தில் மட்டுமே பொழிகிறது.
  • எனவே மாநிலத்தில் பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற நீர்ப்பாசனம் மிகவும் இன்றியமையாததாகும்.
  • வறண்ட காலங்களில் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகிறது.

Question 2.
டான் டீ வரையறு.
விடை:

  • டான் டீ இந்நிறுவனம் இந்தியாவில் கருப்பு வகை தேயிலை உற்பத்தியிலும், கலப்பு வகை தேயிலை உற்பத்தியிலும் முன்னனி வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றாகும்.
  • (தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம்) இந்நிறுவனத்தின் தேயிலை பயிரிடும் பரப்பு ஏறத்தாழ 4,500 ஹெக்டேர் ஆகும்.

Question 3.
உள்நாட்டு மீன்பிடிப்பு பற்றிக் குறிப்பிடுக.
விடை:

  • ஏரிகள், ஆறுகள், குளங்கள், கழிமுகங்கள், காயல்கள் மற்றும் சதுப்புநிலப்பகுதி போன்ற நீர் நிலைகளில் உள்நாட்டு மீன் பிடித்தல் நடைபெறுகிறது.
  • சிப்பிகள் மற்றும் இறால்கள் மீன் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.
  • கட்டுமரம், டீசல் படகுகள் மற்றும் மீன் வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் நடைபெறுகிறது.

Question 4.
தொழிலகங்கள் வரையறு.
விடை:

  • மூலப்பொருள்களை இயந்திரங்களின் மூலம் உற்பத்திப் பொருள்களாகவோ அல்லது பயன்படுத்தக்கூடிய பொருள்களாகவோ மாற்றப்படும் இடமே தொழிலகங்களாகும்.
  • பருத்தி நெசவாலை, சர்க்கரை ஆலை, காகித ஆலை, தோல் தொழிலகம், சிமெண்ட் ஆலை, மின்சாதனப் பொருள்கள் உற்பத்தி ஆலை, வாகன உதிரிபாகங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய தொழிலகங்கள் ஆகும்.

Question 5.
புவியியல் குறியீடு வரையறு.
விடை:

  • புவியியல் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் பொருள்களின் மீது பயன்படுத்தப்படும் குறிப்பாகும்.
  • இது உற்பத்தி செய்யும் உரிமையாளர்களுக்கு உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. கோயம்புத்தூர் – மாவு இரைக்கும் இயந்திரம் கோரப்பட்டு சேலை சில முக்கிய புவியியல் குறியீடுகள்
    Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 13

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 6.
தமிழ்நாட்டிலுள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் யாவை?
விடை:
டைடல் பூங்கா, அசெண்டாஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான மகேந்திரா உலக நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம் – டைடல் பூங்கா II மற்றும் டைடல் பூங்கா III, கோயம்புத்தூர் சிறப்பு பொருளாதார மண்டலம் – டைடல் பூங்கா ஆகியனவாகும்.

Question 7.
மக்கட்தொகையியல் – வரையறு.
விடை:

  • ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள் தொகை எனப்படுகிறது.
  • மக்கள் தொகைப் பண்புகள் பற்றி புள்ளிவிவர ஆய்வுகள் ‘மக்கட்தொகையியல்’ என அழைக்கப்படுகிறது.

VI. வேறுபடுத்துக.

Question 1.
காகித தொழிலகம் மற்றும் சிமெண்ட் தொழிலகம். காகித தொழிலகம்
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 14

Question 2.
பவானி சாகர் அணை மற்றும் வைகை அணை.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல் 15

VII. கீழ்க்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.

Question 1.
ஈரோடு தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு எனப்படுகிறது.
விடை:
கைத்தறி, விசைத்தறி மற்றும்) ஆயத்த ஆடைகளின் விற்பனைக்கு ஏற்றதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

Question 2.
சுற்றுலாத் துறை ஒரு தொழிலகமாக கருதப்படுகிறது.
விடை:
ஏனெனில் இதில் ஏராளமான மக்களுக்கு வெலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்.

Question 1.
வேளாண்மையைத் தீர்மானிக்கும் புவியியல் காரணிகளை விவரிக்கவும்.
விடை:
நிலத்தோற்றம், காலநிலை, மண் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவை வேளாண்மை வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய புவியியல் காரணிகளாகும்.

நிலத்தோற்றம்:

  • தமிழ்நாடானது மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகள் ஆகிய பல்வேறுபட்ட நில அமைப்புகளைக் கொண்டுள்ளது.
  • மேற்கண்டவற்றுள் சமவெளிகள் வேளாண் உற்பத்திக்கு ஏற்ற வளமான வண்டல் மண்ணைக் கொண்டுள்ளதால் சமவெளிப் பகுதிகள் வேளாண் தொழிலுக்கு ஏற்றதாக உள்ளது.
  • எ.கா. வண்டல் மண் நிறைந்துள்ள காவிரி சமவெளி தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க வேளாண் பகுதியாகும்.

காலநிலை:

  • தமிழ்நாடு பூமத்தியரேகைக்கு அருகிலும், வெப்ப மண்டலத்திலும் அமைந்துள்ளதால் வெப்ப மண்டலக் காலநிலையைப் பெறுகிறது.
  • ஆகையால் தமிழ்நாட்டின் வெப்பநிலை ஆண்டு முழுவதும் அதிகமாக உள்ளது.
  • எனவே வெப்பமண்டலப் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன.

மண்:

  • வேளாண்மையின் மிக முக்கியமான கூறுகளுள் ஒன்று மண் ஆகும்.
  • இது பயிர்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.

நீர்ப்பாசனம்:

  • மாநிலத்தின் பருவமழை சமச்சீரற்ற நிலையில் உள்ளது.
  • மேலும் இவை பருவகாலத்தில் மட்டுமே பொழிகிறது.
  • எனவே மாநிலத்தில் பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற நீர்ப்பாசனம் மிகவும் இன்றியமையாததாகும்.
  • வறண்ட காலங்களில் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 7 தமிழ்நாடு – மானுடப் புவியியல்

Question 2.
தமிழ்நாட்டின் கனிம வளங்களை விவரிக்க.
விடை:
வெர்மிகுலைட், மேக்னடைட், ரூடுனைட், ரூட்டைல், செம்மணிக்கல், மாலிப்படினம் மற்றும் இல்மனைட் ஆகிய வளங்களில் தமிழ்நாடு முன்னணி உற்பத்தியாளராக உள்ளது.

பழுப்பு நிலக்கரி 55% வெர்மிகுலைட் 75%, டுனைட் 59%, செம்மணிக்கல் 59%, மாலிப்டீனம் 52% மற்றும் டைட்டானியம் 30% தாதுக்கள் நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பாகும்.

மாநிலத்தில் காணப்படும் முக்கியமான தாதுக்கள் பின்வருமாறு: நெய்வேலி, மிகப்பெரிய பழுப்பு நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளது.

இராமநாதபுரம் பகுதிகளில் நிலக்கரி படிமங்கள் காணப்படுகின்றன.

காவிரி வடிநிலப் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு படிவுகள் காணப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையிலும் இரும்புத்தாது படிவுகள் காணப்படுகின்றன.

சேர்வராயன் குன்றுகள், கோத்தகிரி, உதகமண்டலம், பழனிமலை மற்றும் கொல்லிமலைப் பகுதிகளில் பாக்சைட் தாதுகள் காணப்படுகின்றன.

திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஜிப்சம் கிடைக்கிறது.

கன்னியாகுமரி கடற்கரை மணல் பரப்புகளில் இல்மனைட் மற்றும் ரூட்டைல் காணப்படுகிறது.

கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுண்ணாம்பு கிடைக்கிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

10th Social Science Guide தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ………. முதல் ……………….. வரை உள்ளது.
அ) 8°4’வ முதல் 13°35’வ வரை
ஆ) 8°5’தெ முதல் 13°35’தெ வரை
இ) 8°0’வ முதல் 13°05’வ வரை
ஈ) 8°0’தெ முதல் 13°05’தெ வரை
விடை:
அ) 8°4’வ முதல் 13°35’வ வரை

Question 2.
தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் …………………….. முதல் ………………… வரை உள்ளது.
அ) 76°18’கி முதல் 80°20’கி வரை
ஆ) 76°18’மே முதல் 80°20’மே வரை
இ) 10°20’கி முதல் 86°18’கி வரை
ஈ) 10°20’மே முதல் 86°18’மே வரை
விடை:
அ) 76°18’கி முதல் 80°20’கி வரை

Question 3.
தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் …………….. ஆகும்.
அ) ஆனைமுடி
ஆ) தொட்டபெட்டா
இ) மகேந்திரகிரி
ஈ) சேர்வராயன்
விடை:
ஆ) தொட்டபெட்டா

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 4.
கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?
அ) பாலக்காடு
ஆ) செங்கோட்டை
இ) போர்காட்
ஈ) அச்சன்கோவில்
விடை:
இ) போர்காட்

Question 5.
கீழ்க்க ண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?
அ) பெரியார்
ஆ) காவிரி
இ) சித்தார்
ஈ) பவானி
விடை:
அ) பெரியார்

Question 6.
தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?
அ) இராமநாதபுரம்
ஆ) நாகப்பட்டினம்
இ) கடலூர்
ஈ) தேனி
விடை:
இ கடலூர்

Question 7.
பின்னடையும் பருவக்காற்று ……………… லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.
அ) அரபிக்கடல்
ஆ) வங்கக் கடல்
இ) இந்தியப் பெருங்கடல்
ஈ) தைமுர்க்கடல்
விடை:
ஆ வங்கக் கடல்

Question 8.
கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம் ………………..
அ) தேனி
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) இராமநாதபுரம்
விடை:
அ) தேனி

Question 9.
தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் ………………
அ) தர்மபுரி
ஆ) வேலூர்
இ) திண்டுக்கல்
ஈ) ஈரோடு
விடை:
அ) தர்மபுரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி ……………. ஆகும்.
விடை:
கோயம்புத்தூர் பீடபூமி

Question 2.
கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் …………….. ஆகும்.
விடை:
சோலைக்கரடு

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 3.
ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் ……………. மற்றும் ……………. ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
விடை:
கொள்ளிடம், காவிரி

Question 4.
………………. தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.
விடை:
நீலகிரி வரையாடு

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 2

IV. கூற்று வகை வினா.

Question 1.
கூற்று : தமிழ்நாடு தென்மேற்கு பருவகாற்று காலங்களில் அதிக மழையைப் பெறுவதில்லை
காரணம் : இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு.
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.
விடை:

  • கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே கேரளாவும், வடக்கே ஆந்திர பிரதேசமும், வடமேற்கே கர்நாடகாவும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் தமிழ்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன.
  • மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ச்சந்தி தமிழ்நாட்டையும், இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள இலங்கையையும் பிரிக்கின்றன.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 2.
‘தேரீ” – என்றால் என்ன?
விடை:
இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் ‘தேரி’ என்று அழைக்கப்படுகிறது.

Question 3.
கடற்கரைச் சமவெளி எவ்வாறு உருவாகிறது?
விடை:
ஆறுகளின் படிவு, கடல் அலைகளின் அரிப்பு மற்றும் படிதல் ஆகியவற்றால் கடற்கரை சமவெளி உருவாகிறது.

Question 4.
தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.
விடை:
பாம்பன், முயல்தீவு, குருசடை, நல்லதண்ணி தீவு, பள்ளி வாசல், ஸ்ரீரங்கம், உப்புதண்ணித் தீவு, தீவுத்திடல், காட்டுப்பள்ளித் தீவு, குவிப்பில் தீவு மற்றும் விவேகானந்தர் நினைவுப் பாறை ஆகியன தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் ஆகும்.

Question 5.
தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு மற்றும் இராமந்தி ஆகியன இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.

Question 6.
பேரிடர் அபாய நேர்வு – வரையறு.
விடை:

  • உயிர்களுக்கும், உடமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவுதான் பேரிடர் எனப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் அபாய நேர்வு குறைப்பு அமைப்பின், கூற்றுப்படி அபாய குறைப்பு என்பது பேரிடருக்கான காரணங்களை முறையாக கண்டறிந்து பேரிடரின் போது அதன் தாக்கங்களைக் குறைப்பதாகும்.

Question 7.
புயலின்போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது?
விடை:

  • மீனவர்கள் கூடுதலான மின்சாதனங்களுடன் (பேட்டரிகள்) ஒரு வானொலிப்பெட்டியை வைத்திருத்தல் வேண்டும்.
  • இக்காலங்களில் கடலுக்குச் செல்வதை தவிர்த்து, படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

VI. வேறுபடுத்துக.

Question 1.
தாமிரபரணி மற்றும் காவிரி
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 3
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 4

VII. கீழ்க்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.

Question 1.
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.
விடை:
வங்காள விரிகுடாவிலிருந்து பிரியும் ஆறுகளால் பல இடங்களில் பிரிக்கப்படுகிறது. மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் இதைப் பிரிப்பதால் இவை தொடர்ச்சியற்றவை.

Question 2.
தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு மிகக்குறைந்த மழையைப் பெறுகிறது.
விடை:
அரபிக் கடலிலிருந்து வீசும் காற்றின் மழைமறைவுப் பகுதியில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் குறைந்த மழையைப் பெறுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 3.
கடலூர் ஒரு பல்வழி பேரழிவு மண்டலம்.
விடை:
வெள்ளம், சூறாவளி போன்ற பல பாதிப்புகளுக்கு கடலூர் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே கடலூர் பல்வழி பேரழிவு மண்டலம் எனப்படுகிறது.

VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டின் பீடபூமி நிலதோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்.
விடை:

  • தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.
  • ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • இதன் உயரம் கிழக்கிலிருந்து மேற்காக உயர்ந்து செல்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 150 மீட்டர் முதல் 600 மீட்டர் உயரம் வரை வேறுபட்டு காணப்படுகிறது.
  • தமிழ்நாட்டின் வட மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பாரமஹால் பீடபூமியானது மைசூர் பீடபூமியின் ஒரு பகுதியாகும்.
  • இதன் உயரம் சுமார் 350 மீட்டர் முதல் 710 மீட்டர் வரை காணப்படுகிறது. இந்தப் பீடபூமியில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன.
  • கோயம்புத்தூர் பீடபூமி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இதன் உயரம் 150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை மாறுபடுகிறது.
  • இப்பீடபூமி சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
  • மோயர் ஆறு இப்பீடபூமியை மைசூரிலிருந்து இருந்து பிரிக்கிறது.
  • மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இப்பீட பூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்கி உள்ளன.
  • நீலகிரி பகுதிகளில் பல மலையிடை பீடபூமிகள் காணப்படுகின்றன. சிகூர் பீடபூமி அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  • மதுரை பீடபூமி, மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது. இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை நீண்டுள்ளது.
  • வைகை மற்றும் தாமிரபரணி வடிநிலப் பகுதிகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.

Question 2.
காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.
விடை:
காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகி 850 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.

தமிழ்நாட்டில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையாக உள்ளது.

ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

பவானி ஆறு இதன் துணையாறாக வலதுகரையில் காவிரியுடன் இணைகிறது.

பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதிக்குள் நுழைகிறது,

கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் வலதுகரையில் மேலும் இரண்டு துணை ஆறுகளான அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள் இணைகின்றன.

இப்பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால், இது அகன்ற காவிரி என அழைக்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொலேருன் அல்லது கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது.

இவ்விரு கிளைகள் இணைந்து “ஸ்ரீரங்கம் தீவை” உருவாக்குகின்றன. கிராண்ட் அணைகட் என்றழைக்கப்படும் கல்லணை காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப்பின்னல் அமைப்பு ‘தென்னிந்தியாவின் தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.
பின்னர் கடலூருக்கு தெற்கே வங்க கடலில் கலக்கிறது.

Question 3.
தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்.
விடை:
குளிர்காலம்:

  • ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்துக்கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது.
  • இக்காலத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகின்றன.)
  • ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராகக் காணப்படுகிறது.
  • தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது 15°C முதல் 25°C வரை மாறுபடுகிறது. இருந்தபோதிலும் மழைவாழிடங்களில் குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5°க்கும் குறைவாக உள்ளது.
  • நீலகிரியில் சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் 0°C ஆகவும் பதிவாகிறது.

கோடைக்காலம்:
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்துக்கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது.

பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது படிப்படியாக அதிகரிக்கிறது. தமிழகம், கடக ரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது.

பொதுவாக வெப்பநிலையானது 30°C லிருந்து 40°C வரை வேறுபடுகிறது. இப்பருவத்தில் குறிப்பாக மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன்பருவ மழை மூலமும், வெப்பச்சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் பற்றி விளக்குக.
விடை:
தமிழ்நாட்டின் மண் வகைகள்:

  • தமிழ்நாட்டில் காணப்படும் மண்களை அதன் தன்மைகளைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை
    1. வண்டல் மண்,
    2. கரிசல் மண்,
    3. செம்மண்,
    4. சரளை மற்றும்
    5. உவர் மண்.

வண்டல் மண்:
வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகின்றன. தமிழ்நாட்டின் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது.

சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நைட்ரஜன் மற்றும் பாஸ்போரிக் அமிலம் ஆகிய தாதுக்களைக் கொண்டுள்ளதால் வண்டல் மண் ஒரு வளம் மிகுந்த மண்ணாகும்.

இம்மண்ணில் நைட்ரஜன் மற்றும் இலைமக்குகள் குறைவாக உள்ளன. இது நுண்துளைகள் மற்றும் களிமண் கலந்த மண் ஆகும். நெல், கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் போன்ற பயிர்கள் இம்மண்ணில் பயிரிடப்படுகின்றன.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவ்வகை மண் அதிகம் காணப்படுகிறது.

கரிசல் மண்:

  • தீப்பாறகைள் சிதைவடைவதன் மூலம் கரிசல் மண் உருவாகிறது.
  • இது ரெகூர் மண் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இம்மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் பருத்தி மண் என்றும் அழைக்கப்படுகறிது.
  • கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கரிசல் மண் பெருமளவில் காணப்படுகிறது.

செம்மண்:

  • தமிழ்நாட்டில் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு செம்மண் பரவியுள்ளது.
  • இவை குறிப்பாக மாநிலத்தின் மத்திய மாவட்டங்களில் காணப்படுகின்றன.
  • செம்மண் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

சரளை மண் :

  • சரளை மண்ணானது அதில் கரைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்லப்படுவதால் உருவாகிறது.
  • இவை வளமற்ற மண்ணாகும்.
  • காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், நீலகிரி மலையின் சில பகுதிகளிலும் இம்மண் காணப்படுகிறது.

உவர் மண்:

  • தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இம்மண் காணப்படுகிறது.
  • சுனாமியினால் ஏற்பட்ட சுனாமி அலைகள் அதிக அளவு மணல் படிவுகளை தமிழக கடற்கரைப் பகுதிகளில் படிய வைத்துள்ளன.
  • இதனால் கடற்கரையில் சில பகுதிகள் பயிரிட உகந்ததாக இல்லை .

Question 5.
புயலுக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகளை எழுதுக.
விடை:
வதந்திகளை நம்பாமல் அமைதியாகவும் பதற்றமடையாமலும் இருத்தல், அலைபேசிகள் மின்னூட்டம் செய்யப்பட்டதை உறுதி செய்து குறுஞ்செய்திகளை பெறுதல்.

வானொலி மற்றும் காணொளி பெட்டிகள் மூலம் அவ்வப்போதைய வானிலை நிலைமைகளைக் கேட்டு தெரிந்து கொள்ளல்.

முக்கிய மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா கொள்கலன்களில் பாதுகாப்பாக வைத்திருத்தல், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அவசரகால மூட்டைத்தொகுப்பை தயார் நிலையில் வைத்திருத்தல், குடியிருப்பு பாதுகாப்பாக இருப்பதையும் சரி செய்வதையும் உறுதி செய்தல், கூர்மையானப் பொருட்கள் வெளிப்பகுதிகளில் இல்லாமல், கால்நடைகள் செல்ல மற்றும் கால்நடை பாதுகாப்பிற்காக அவற்றை அவிழ்த்து விடுதல் வேண்டும்.

மீனவர்கள் கூடுதலான மின்சாதானங்களுடன் கூடிய பேட்டரிகள் ஒரு வானொலிப்பெட்டியை வைத்திருத்தல் வேண்டும்.

இக்காலங்களில் கடலுக்குப் செல்வதை தவிர்த்து படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

10th Social Science Guide தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
தமிழ்நாடு உருவான காலகட்டத்தில் …………….. மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.
அ) 13
ஆ) 23
இ) 31
ஈ) 27
விடை:
அ) 13

Question 2.
மேற்குதொடர்ச்சி மலை …………….. சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது.
அ) 1500
ஆ) 2500
இ) 5200
ஈ) 250
விடை:
ஆ) 2500

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 3.
……………… உயரமான சிகரம் அதனைத் தொடர்ந்து மற்றொரு சிகரம் முக்குருத்தி.
அ) தொட்டபெட்டா
ஆ) பகாசுரா
இ) வேம்படி சோலை
ஈ) கோட்டை மலை
விடை:
அ) தொட்டபெட்டா

Question 4.
……………… மலை ஏலமலைக் குன்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
அ) பொதிகை
ஆ) ஏலக்காய்
இ) பழனி
ஈ) நீலகிரி
விடை:
ஆ) ஏலக்காய்

Question 5.
……………. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
அ) கொடைக்கானல்
ஆ) ஏற்காடு
இ) மேல்பட்டு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) ஏற்காடு

Question 6.
……………… குறிப்பிடத்தக்க வேளாண் பருவ விளைபொருளாக உள்ளது.
அ) மாம்பழம்
ஆ) ஆப்பிள்
இ) பலாப்பழம்
ஈ) அன்னாச்சி
விடை:
இ பலாப்பழம்

Question 7.
……………. சமவெளி தமிழ்நாட்டிலுள்ள வளமான சமவெளிகளுள் ஒன்றாகும்.
அ) காவிரி
ஆ) பவானி
இ) நொய்யல்
ஈ) அமராவதி
விடை:
அ) காவிரி

Question 8.
பாலாறு ……………..வின் கோலார் மாவட்டத்தில் தலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தி ஆகிறது.
அ) தமிழ்நாடு
ஆ) கர்நாடகா
இ) கேரளா
ஈ) ஆந்திரா
விடை:
ஆ) கர்நாடகா

Question 9.
………………. இந்து சமய மக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது.
அ) பெண்ணையாறு
ஆ) வைகை
இ) தாமிரபரணி
ஈ) போலார்
விடை:
அ) பெண்ணையாறு

Question 10.
மத்திய மற்றும் வடமேற்கு தமிழகம் ……………… செ.மீ வரை மழையைப் பெறுகின்றன.
அ) 20-60
ஆ) 50-100
இ) 60-90
ஈ) 100-150
விடை:
ஆ) 50-100

Question 11.
தேசிய வளக்கொள்கை செயல்படுத்தப்பட்ட ஆண்டு …………………
அ) 1999
ஆ) 1888
இ) 1989
ஈ) 1988
விடை:
ஈ) 1988

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 12.
வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் உள்ள மரங்கள் …………… மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.
அ) 25
ஆ) 30
இ) 63
ஈ) 90
விடை:
ஆ) 30

II. கோடிட்ட இட ங்களை நிரபுக.

Question 1.
……………… மற்றும் …………….. தமிழ்நாட்டையும் இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள இலங்கையையும் பிரிக்கின்றன.
விடை:
மன்னார் வளைகுடா, பாக் நீர்ச்சந்தி

Question 2.
மேற்கு தொடர்ச்சி மலையின் உயரம் …….. வரை ஆகும்.
விடை:
2000 மீட்டர் – 3000 மீட்டர்

Question 3.
ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகள் …………….. மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளன.
விடை:
ஆனைமலை

Question 4.
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு நோக்கிய நீட்சி ……….. மற்றும் ………. குன்றுகள் ஆகும்.
விடை:
வருசநாடு, ஆண்டிப்பட்டி

Question 5.
கல்வராயன் மலை தொடரின் உயரம் …………….. வரை காணப்படுகிறது.
விடை:
600 மீ முதல் 1220 மீ

Question 6.
கல்வராயன் என்ற சொல் ……………… என்ற சொல்லிருந்து பெறப்பட்டது.
விடை:
கரலர்

Question 7.
…………….. கொல்லிமலையில் அமைந்துள்ள முக்கியமான புனிதத் தலமாகும்.
விடை:
அரப்பளிஸ்வரர் கோவில்

Question 8.
காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள வலைப்பின்னல் அமைப்பு …………… என அழைக்கப்படுகிறது.
விடை:
தென்னிந்தியாவின் தோட்டம்

Question 9.
சூரியனின் செங்குத்துக் கதிர்கள் …………….. மகர ரேகைக்கும் இடையே விழுகிறது.
விடை:
பூமத்திய ரேகைக்கும்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 10.
வால்பாறைக்கு அருகிலுள்ள சின்னக்கல்லார் இந்தியாவின் …………….. அதிக மழை பெறும் பகுதியாக உள்ளது.
விடை:
மூன்றாவது

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 5
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 6

IV. கூற்று வகை வினா.

Question 1.
கூற்று : குளிர்க்காலத்தில் சூரியனின் சாய்வுக் கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் இடையே விழுகிறது.
காரணம் : குளிர்கால வெப்பநிலையானது 30°C/ – 40°C வரை மாறுபடுகிறது.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு.
விடை:
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

Question 2.
கூற்று : தமிழ்நாடு ஒரு வெப்ப மண்டலத்திலுள்ள மாநிலம்.
காரணம் : கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்படுகிறது.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு.
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டின் கடைக்கோடிப் பகுதிகள் யாவை?
விடை:

  • கிழக்கில் கோடியக்கரையும்
  • மேற்கில் ஆனைமலையும்
  • வடக்கில் பழவேற்காடு ஏரியும்
  • தெற்கில் குமரிமுனையும் அமைந்துள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 2.
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பின் சிறப்பு அம்சங்கள் யாவை?
விடை:
தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீடபூமியில் தமிழ்நாடு அமைந்துள்ளது.

இப்பகுதி கிரெட்டேசியஸ் காலத்தில் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியிலிருந்து உருவான ஒரு பகுதியாகும். தமிழ்நாடானது நிலத்தோற்றத்தின் அடிப்படையில் மேற்கு தொடர்ச்சிமலை, கிழக்கு தொடர்ச்சிமலை, கடற்கரைச் சமவெளிகள் மற்றும் நாட்டுச் சமவெளிகள் என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Question 3.
தமிழ்நாட்டில் கடற்கரையின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:

  • வங்காள விரிகுடாக் கடலையொட்டிய சோழமண்டலக் கடற்கரை பல அழகான மற்றும் சிறப்புவாய்ந்த கடற்கரைகளைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் தங்க மணல் கடற்கரை பகுதியில் பனை மரங்களும், சவுக்குத் தோப்புகளும் பரவலாகக் காணப்படுகின்றன.
  • சென்னையின் மெரினா மற்றும் எலியட் கடற்கரைகளும் கோவளம் (காஞ்சிபுரம்) மற்றும் வெள்ளி கடற்கரை (கடலூர்) ஆகியவை புகழ்பெற்ற தமிழக கடற்கரையாகும்.

Question 4.
தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோளப் பெட்டகங்கள் யாவை?
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 7

Question 5.
இயற்கைப் பேரிடர் என்றால் என்ன?
விடை:
உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிதான் பேரிடர் எனப்படுகிறது.

Question 6.
நிலச்சரிவு வரையறு.
விடை:

  • மலைகள் அல்லது குன்றுகள் ஒரு பகுதியோ அல்லது பாறைகளோ சரிந்து வீழ்தல் நிலச்சரிவு எனப்படுகிறது.
  • கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் நிலச்சரிவுக்கு உள்ளாகும் மற்ற பகுதிகளாகும்.

Question 7.
நீர் சேகரிப்பதற்கான சில வழிமுறைகள் யாவை?
விடை:
நீர் மாசுபடுதலைத் தடுத்தல், நீர் மறுசுழற்சி, சிக்கனமான நிலத்தடி நீர் பயன்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, மரபுவழி நீர்வளங்களைப் புதுப்பித்தல், காடுகளின் பரப்பளவை அதிகரித்தல், பயிரிடும் முறைகளை மாற்றுதல், வெள்ளப்பெருக்கு மேலாண்மை, புவி வெப்ப நீர் பயன்பாடு ஆகியன நீர்வளத்தை பாதுகாக்கும் சில வழிமுறைகள் ஆகும்.

VI. வேறுபடுத்துக.

Question 1.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 8

Question 2.
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் 9

VII. கீழ்க்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.

Question 1.
கடல் பாதுகாப்பு மேலாண்மையில் சதுப்பு நிலத் தாவரங்கள் முக்கிய பங்கு வக்கிறது.
விடை:
சதுப்பு நிலத் தாவரங்கள் புயலின் பாதிப்பிலிருந்து கடற்கரைப் பகுதிகளையும், பவளப்பாறைகள், புல்வெளிகளை வேரின் மூலம் பாதுகாக்கிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 6 தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்

Question 2.
வெப்பமண்டல முட்புதர்க்காடுகள் குறைந்த மழையைத் தருகின்றன.
விடை:
வெப்பமண்டல முட்புதர்க்காடுகள் 400 மீட்டர் உயரத்திற்கு மேலுள்ளதால் குறைந்த மழையைத் தருகின்றன.

VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்.

Question 1.
தமிழகத்தில் உள்ள காடுகள் ஏதேனும் மூன்றினைப் பற்றி விவரி?
விடை:
காடுகளின் வகைகள் :

  • வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்
  • மிதவெப்பமண்டல மலைக்காடுகள்
  • வெப்பமண்டல இலையுதிர்க் காடுகள்

வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்

  • இவ்வகைக்காடுகள் அதிக மழைபெறும் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • இவை அடர்ந்த மற்றும் மரக்கிளை அடுக்குகள் கொண்டதாக காணப்படுகின்றன.
  • திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவுகளில் இவை காணப்படுகிறது.
  • இலவங்க மரம், மலபார், கருங்காலி மரம், பனாசமரம், ஜாவாபிளம், ஜமுன், பலா மருது, அயனி, கிராப் மிர்ட்டல் போன்றவை இக்காடுகளில் காணப்படும் முக்கிய மர வகைகளாகும்.
  • அரை பசுமைமாறாக் வகைக் காடுகளானது உப அயனமண்டலக் காலநிலை நிலவும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது.
  • சேர்வராயன் மலை, கொல்லி மலை, பச்சை மலை ஆகியன இவ்வகை காடுகள் காணப்படும் முக்கிய பகுதிகள் ஆகும்.
  • இந்திய மகோகனி, குரங்கு, தேக்கு, உல்லி காசியா, பலா மற்றும் மா மரங்கள் ஆகியன இப்பகுதியில் காணப்படும் முக்கிய மரங்களாகும்.

மித வெப்பமண்டல மாறாக் காடுகள்:

  • இவ்வகை காடுகள் ஆனைமலை, நீலகிரி மற்றும் பழனி மலைகளில் சுமார் 1,000 மீட்டர் உயரமான பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் காணப்படுகின்றன.
  • இவ்வகை காடுகள் சோலாஸ் அழைக்கப்படுகிறது. இவ்வகை காடுகளில் மரங்கள் பொதுவாக குறைந்த உயரத்துடன் பசுமையாகக் காணப்படுகின்றன.
  • பொதுவாக நீலகிரி, சாம்பா, வெள்ளைலிட்சா, ரோஸ் ஆப்பிள் போன்ற மரங்கள் இக்காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

வெப்பமண்டல இலையுதிர்க் காடுகள்:

  • இவ்வகைக்காடுகள் பசுமைமாறாக் காடுகள் மற்றும் அரை பசுமைமாறாக் காடுகளின் விளிம்புப் பகுதிகளில் காணப்படுகின்றன.
  • இக்காடுகளில் உள்ள மரங்கள் கோடை பருவங்களில் தங்களது இலைகளை உதிர்த்து விடுகின்றன.
  • இக்காடுகளில் உள்ள மரங்கள் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியன.
  • பருத்திப் பட்டு மரம், இலவம், கடம்பா, டாகத், தேக்கு, வாகை, வெக்காளி மரம் மற்றும் சிரஸ் போன்றவை இங்கு காணப்படும் முக்கிய மர வகைகளாகும். மூங்கில்களும், இக்காடுகளில் காணப்படுகிறது.
  • இக்காடுகளில் காணப்படும் சில மரவகைகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

10th Social Science Guide இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு …………………
அ) வரைபடவியல்
ஆ) மக்களியல்
இ) மானுடவியல்
ஈ) கல்வெட்டியல்
விடை:
ஆ) மக்களியல்

Question 2.
……………. போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
அ) இரயில்வே
ஆ) சாலை
இ) வான்வழி
ஈ) நீர்வழி
விடை:
ஆ) சாலை

Question 3.
இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம் …………………….
அ) 5846 கி.மீ
ஆ) 5847 கி.மீ
இ) 5849 கி.மீ
ஈ) 5800 கி.மீ
விடை:
அ) 5846 கி.மீ

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 4.
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் …………………
அ) பெங்களூரு
ஆ) சென்னை
இ) புது டெல்லி
ஈ) ஹைதராபாத்
விடை:
ஈ) ஹைதராபாத்

Question 5.
எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து …………………
அ) சாலைப்போக்குவரத்து
ஆ) இரயில் போக்குவரத்து
இ) வான்வழிப் போக்குவரத்து
ஈ) நீர்வழிப் போக்குவரத்து
விடை:
இ வான்வழிப் போக்குவரத்து

Question 6.
கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன் (ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
அ) ஏர் இந்தியா
ஆ) இந்தியன் ஏர்லைன்ஸ்
இ) வாயுதூத்
ஈ) பவன்ஹான்ஸ்
விடை:
ஈ) பவன்ஹான்ஸ்

Question 7.
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் ………………………
அ) சிமெண்ட்
ஆ) ஆபரணங்கள்
இ) தேயிலை
ஈ) பெட்ரோலியம்
விடை:
ஈ) பெட்ரோலியம்

II. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 2

III. குறுகிய விடையளி.

Question 1.
இடம்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:

  • இடப்பெயர்வு என்பது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்வதாகும்.
  • இது உள்நாட்டு இடப்பெயர்வு (ஒரு நாட்டின் எல்லைக்குள்) மற்றும் சர்வதேச இடப்பெயர்வு (நாடுகளுக்கு இடையே) என இருவகைப்படும்.

Question 2.
இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக.
விடை:

  • இந்திய இரயில்வே அமைப்பு நாட்டினுடைய உள்நாட்டு போக்குவரத்திற்கான முக்கிய உயிர் நாடியாக அமைந்துள்ளது.
  • இது மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது.
  • வணிகம், சுற்றுலா, கல்வி போன்றவற்றையும் ஊக்குவிக்கிறது.
  • மூலப்பொருள்களைத் தொழிற்சாலைக்கும் தயாரிக்கப்பட்ட தொழிலக பொருள்களைச் சந்தைகளுக்கும் கொண்டு செல்லும் இரயில்வேயின் பணி மதிப்பிட முடியாத ஒன்று ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 3.
நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக.
விடை:

  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களையும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் அதன் சந்தை பகுதிகளோடு இணைப்பதற்கு எளிதான மற்றும் சிறந்த போக்குவரத்தாக குழாய் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது
  • இவை நகரங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.

Question 4.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்களைக் குறிப்பிடுக.
விடை:
1. தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண். 1:
இது ஹால்தியா மற்றும் அலகாபாத் இடையே 1620 கி.மீ. நீளத்தை கொண்டு கணக்கிடப்படுகிறது. கங்கை -பாகிரதி ஹீக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

2. தேசிய நிர்வழிப்போக்குவரத்து எண். 2:
இது பிரம்மபுத்ரா ஆற்றில் துபிரி மற்றும் காடியாவிற்கு இடையே சுமார் 891 கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது.

Question 5.
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண். 3:
விடை:
இந்த நீர்வழி கேரளா மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே உள்ளது.

Question 6.
தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
விடை:

  • தகவல்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்களின் பரிமாற்றத்தையே தகவல் தொடர்பு என்கிறோம்.
  • கவல் தொடர்புகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
    1. தனிமனித தகவல் தொடர்பு.
    2. பொதுத்தகவல் தொடர்பு.

Question 7.
பன்னாட்டு வணிகம் – வரையறு.
விடை:

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது.
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியன பன்னாட்டு வணிகத்தின் இரு கூறுகள் ஆகும்.

Question 8.
சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக.
விடை:

  • சாலை வழி உலகளாவிய போக்குவரத்து முறையாகும்.
  • சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இது குறுகிய, மத்திய மற்றும் தொலைதூர சேவைகளுக்கு பொருத்தமானதாக உள்ளது.
  • சாலைகளை அமைப்பது மற்றும் பராமரிப்பு செய்வது மற்ற போக்குவரத்து முறைகளை ஒப்பிடும்பொழுது மலிவானதாகும்.
  • சாலைப் போக்குவரத்து அமைப்பு மூலம் பண்ணைகள், தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றிற்கிடையில் எளிதில் தொடர்பை ஏற்படுத்த முடியும்.
  • இது சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மலிவான போக்குவரத்தாகும்.

IV. வேறுபடுத்துக.

Question 1.
மக்களடர்த்தி மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 3

Question 2.
தனி நபர் தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தகவல் தொடர்பு.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 4

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 3.
அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 5

Question 4.
சாலை வழிபோக்குவரத்து மற்றும் இரயில் வழிபோக்குவரத்து.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 6

Question 5.
நீர்வழிப்போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 7

Question 6.
உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 8

V. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.

Question 1.
நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை.
விடை:
கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.

இந்திய நகரமயமாக்கம்:
நகர்புற மக்கள் தொகை சதவிகிதத்தின் அடிப்படையிலேயே நகரமயமாக்கம் அளவிடப்படுகிறது.

நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனைகள்:

  • நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • நகர்புறங்களில் மக்கள் நெருக்கடியை தோற்றுவிக்கிறது.
  • நகர்புறங்களில் குடியிருப்புகளின் பற்றாக்குறையை உருவாக்குகிறது.
  • குடிசைப் பகுதிகள் தோன்ற காரணமாக உள்ளது.
  • போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.
  • குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது.
  • வடிகால் பிரச்சனைகள் உண்டாகின்றன.
  • திடக்கழிவு மேலாண்மையை சிக்கலாக்குகிறது.
  • குற்றங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.

Question 2.
இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை விளக்குக.
விடை:
செயற்கைக் கோளானது தொடர்ச்சியாக மிகப் பெரும் பரப்பிலான பதிமம் மற்றும் தகவல்களை அளிப்பதன் மூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனமாக இந்தியாவில் விளங்குகிறது.

செயற்கைக்கோள் பதிமங்களைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு, வானிலை முன் அறிவிப்பு, இயற்கை பேரழிவு கண்காணிப்பு, எல்லைப்பகுதி கண்காணிப்பு போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1929 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட பின்னர் தொலைத் தொடர்பு பரிமாற்றத்தில் செய்ற்கைக் கோள்கள் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் செய்றைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு இரண்டு பிரிவுகளைக் கொண்டது.

  1. இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT)
  2. இந்திய தொலையுணர்வு செயற்கைகோள் அமைப்பு (IRS)

1983-ல் நிறுவப்பட்ட இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு தொலைத்தொடர்பு, வானியல் ஆய்வு மற்றும் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பல்நோக்கு திட்ட அமைப்பாக உள்ளது.

இன்சாட் வரிசை செய்றைக்கோள், கைபேசி, தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக் காட்சிகளுக்கு சமிக்கைகளை அனுப்ப பயன்படுகிறது. மேலும் இது வானிலையை கண்டறியவும், ராணுவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இன்சாட் வரிசை, ஜி-சாட் வரிசை, கல்பனா 1. ஹேம்சாட், எஜீசாட் (Edusat) போன்றவை தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தப்படும் முக்கிய செயற்கைக்கோளாகும்.

ஆகஸ்ட் 30, 1983 ஆம் ஆண்டு ஏவப்பட்ட இன்சாட் 1B தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 3.
இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.
விடை:

  • சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இது சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மலிவான போக்குவரத்தாகும்.

தேசிய நெடுங்சாலைகள்:

  • தேசிய நெஞ்சாலைகள் இந்திய சாலைப் போக்குவரத்தின் மிக முக்கியமான அமைப்பாகும்.
  • நாட்டின் எல்லைகளையும், மாநிலங்களின் தலைநகரங்கள், முக்கியத் துறைமுகங்கள், இரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா மையங்கள், தொழில் மையங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன.
  • இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH44 ஆகும்.
  • குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH47A ஆகும்.

மாநில நெடுஞ்சாலைகள்:
மாநில நெடுஞ்சாலைகள் பொதுவாக மாநிலத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களை, மாநில தலைநகரத்துடனும் தேசிய நெடுஞ்சாலைகளுடனும் அண்டை மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்கின்றன.

இந்தச் சாலைகள் மாநில பொதுப்பணித் துறையினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

மாவட்டச் சாலைகள்:

  • மாவட்டச் சாலைகளானது மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கிறது.
  • மாவட்ட சாலைகள் மாநிலத்தின் பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 2016-இன்படி இந்தியாவில் மாவட்டச் சாலைகளின் நீளம் 5,61,940 கி.மீ. (16.81%) ஆகும்.

ஊரகப் பகுதி சாலைகள் (கிராமச் சாலைகள்)
இது பல்வேறு கிராமங்களை அதன் அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கிறது. இவைகள் கிராம பஞ்சயாத்துகள் மூலம் பராமரிக்கப்படுகின்றன.

எல்லைப்புறச் சாலைகள்:

  • எல்லைப் புறச் சாலைகள் நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாலை வகைகளாகும்.
  • இவைகள் எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
  • இவ்வமைப்பு 1960-இல் நிறுவப்பட்டது. இச்சாலைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

தங்க நாற்கரச் சாலைகள்:
இது 5,846 கி.மீ நீளத்தையும் 4 முதல் 6 வழிகளைக் கொண்டதாகவும் உள்ளது.

விரைவுச் சாலைகள்:

  • விரைவுச் சாலைகள் என்பன நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப் பாதைகளைப் கொண்ட அதிவேக போக்குவரத்திற்கான சாலைகள் ஆகும்.
  • முக்கியமான சில விரைவுச் சாலைகள்
    1. மும்பை – பூனா விரைவுச் சாலை
    2. கொல்கத்தா – டம்டம் விமான நிலைய விரைவுச் சாலை
    3. துர்காப்பூர் – கொல்கத்தா விரைவுச்சாலை
    4. புதுடெல்லி மற்றும் ஆக்ரா இடையேயான யமுனா விரைவுச்சாலை

பன்னாட்டு நெடுஞ்சாலைகள்:

  • இந்தியாவை அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள சாலைகள் பன்னாட்டு நெடுஞ்சாலைகள் ஆகும்.
  • இச்சாலைகள் பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய அண்டை நாடுகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கின்றன.

10th Social Science Guide இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ……………..ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
அ) 1972
ஆ) 1982
இ) 1872
ஈ) 1782
விடை:
இ) 1872

Question 2.
ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம்பெயர்வது …………..
அ) இடப்பெயர்வு
ஆ) நகரமயமாக்கல்
இ) உலகமயமாக்கல்
ஈ) மக்கள் தொகை
விடை:
அ) இடப்பெயர்வு

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 3.
……………… மக்கள் தொகையில் 1000 ஆண்க ளுக்குள்ள பெண்களைக் குறிக்கும்.
அ) எழுத்தறிவு
ஆ) கட்டமைப்பு
இ) வயதுக்கலவை
ஈ) பாலின விகிதம்
விடை:
ஈ) பாலின விகிதம்

Question 4.
கிராமப்புற சமுதாயம் நகர்ப்புற சமுதாயமாக மாற்றமடைவதை ………………. என்கிறோம்.
அ) போக்குவரத்து
ஆ) உலகமயமாக்கல்
இ) நகரமயமாக்கல்
ஈ) தொழில்மயமாக்கல்
விடை:
இ நகரமயமாக்கல்

Question 5.
நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு ………………. இடத்திலுள்ளது.
அ) மூன்றாவது
ஆ) இரண்டாவது
இ) நான்காவது
ஈ) ஏழாவது
விடை:
ஆ) இரண்டாவது

Question 6.
போக்குவரத்து …………… வகைப்படும்.
அ) 7
ஆ) 8
இ) 4
ஈ) 3
விடை:
ஈ 3

Question 7.
இந்தியாவின் குறைந்த நீளமுடைய நெடுஞ்சாலை ………………………. ஆகும்.
அ) NH44
ஆ) NH47A
இ) NH34 B
ஈ) NH4
விடை:
இ NH47A

Question 8.
இந்தியாவின் நீளமான நெடுஞ்சாலை ………………. ஆகும்.
அ) NH34
ஆ) NH74
இ) NH44
ஈ) NH47A
விடை:
இ) NH44

Question 9.
கிராமங்களை இணைப்பதில் முக்கிய பங்காற்றுவது …………..
அ) மாவட்ட சாலை
ஆ) கிராம சாலை
இ) நெடுஞ்சாலை
ஈ) எல்லைப்புற சாலை
விடை:
ஆ) கிராம சாலை

Question 10.
மாவட்ட சாலை …………… துறையால் பராமரிக்கப்படுகிறது.
அ) மாநில
ஆ) மாவட்ட
இ) கிராமம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) மாநில

Question 11.
தங்க நாற்கர சாலையின் நீளம் …………….. ஆகும்.
அ) 5432 கி.மீ
ஆ) 5846 கி.மீ
இ) 3216 கி.மீ
ஈ) 3015 கி.மீ
விடை:
5846 கி.மீ

Question 12.
வடக்கு இரயில்வேயின் தலைமையகம் ……………… ஆகும்.
அ) மும்பை
ஆ) ஜபல்பூர்
இ) சென்னை
ஈ) புதுடெல்லி
விடை:
ஈ) புதுடெல்லி

Question 13.
மத்திய இரயில்வேயின் தலைமையகம் …………….. ஆகும்.
அ) சென்னை
ஆ) ஜபல்பூர்
இ) மும்பை
ஈ) டெல்லி
விடை:
இ மும்பை

Question 14.
………………. போக்குவரத்து அமைப்பின் முதுகெலும்பாக உள்ளது.
அ) சாலை
ஆ) இரயில்வே
இ) நீர்வழி
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இரயில்வே

Question 15.
……………. மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை .
அ) பிலாஸ்பூர்
ஆ) ஹசிப்பூர்
இ) கௌஹாத்தி
ஈ) மேகாலயா
விடை:
ஈ) மேகாலயா

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 16.
இந்திய இரயில் சேவை முதன்முதலில் ……………… தொடங்கப்பட்டது.
அ) குஜராத்
ஆ) ஜம்மு
இ) லடாக்
ஈ) கொல்கத்தா
விடை:
ஈ) கொல்கத்தா

Question 17.
நீர்வழிப் போக்குவரத்து …………… வகைப்படும்.
அ) 4
ஆ) 3
இ) 2
ஈ) 5
விடை:
இ 2

Question 18.
இந்திய விமான நிலைய பொறுப்பாணையம் …………… ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அ) 1985
ஆ) 1995
இ) 1885
ஈ) 1895
விடை:
ஆ) 1995

Question 19.
இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் ……………… வணிகம் ஆகும்.
அ) இருதரப்பு
ஆ) பன்னாட்டு
இ) சர்வதேச
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) இருதரப்பு

Question 20.
உள்நாட்டு வணிகம், ………………. வணிகம் எனப்படுகிறது.
அ) இருதரப்பு
ஆ) பன்னாட்டு
இ) சர்வதேச
ஈ) உள்ளூர்
விடை:
ஈ) உள்ளூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ……………. ஆகும்.
விடை:
இந்தியா

Question 2.
……………………… என்பது ஒரு வருடத்தில் 1000 மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையாகும்.
விடை:
பிறப்பு விகிதம்

Question 3.
……………. என்பது ஓர் ஆண்டில் 1000 மக்கள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பது.
விடை:
இறப்பு விகிதம்

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 4.
மக்கள் தொகை மாற்றங்கள் பற்றி படிப்பது ……………… ஆய்வின் முக்கிய அம்சமாகும்.
விடை:
மக்கள்தொகை

Question 5.
போக்குவரத்து அமைப்பு நாட்டின் ………………… கருதப்படுகிறது.
விடை:
உயிர்நாடியாக

Question 6.
……………………… மலிவான போக்குவரத்து ஆகும்.
விடை:
சாலை வழி போக்குவரத்து

Question 7.
சாஹி (ராயல்) சாலை ……….. என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விடை:
கிராண்ட் ட்ரங்க்சாலை

Question 8.
………….. அதிவிரைவு வண்டி இந்தியாவின் மிக அதிவேக இரயில்வண்டி ஆகும்.
விடை:
காத்திமன்

Question 9.
…………….. மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை .
விடை:
மேகாலயா

Question 10.
………………. இந்தியாவில் பயணிகள் மற்றும் சரக்குகள் போக்குவரத்தில் முக்கியமான ஒன்று.
விடை:
நீர்வழிப் போக்குவரத்து

Question 11.
………………. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
கடல்வழி போக்குவரத்து

Question 12.
இந்தியாவில் ……………. முக்கிய கப்பல் கட்டும் தளங்கள் உள்ளன.
விடை:
நான்கு

Question 13.
……………….. பயணசெலவு மிகுந்த போக்குவரத்து ஆகும்.
விடை:
வான்வழிப் போக்குவரத்து

Question 14.
இந்திய அரசாங்கம் ………….. என்ற விமான சேவையை வழங்குகிறது.
விடை:
ஏர் இந்தியா

Question 15.
………….. தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள்.
விடை:
இன்சாட் 1B

Question 16.
…………… என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணி ஆகும்.
விடை:
வணிகம்

Question 17.
இந்தியாவில் தொலைக்காட்சி வலையமைப்பு ………. என அழைக்கப்படுகிறது.
விடை:
தூர்தர்ஷன்

Question 18.
தொலைப்பேசி ………….. வளர்ச்சிக்கு உதவிக்கரமாக உள்ளது.
விடை:
வணிக

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 19.
வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள ………….. முறை பயன்படுகிறது.
விடை:
ISD

Question 20.
அகில இந்திய வானொலி ……………. எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
ஆகாச வாணி

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 9
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 10

IV. குறுகிய விடையளி.

Question 1.
மக்கள் தொகை வரையறு.
விடை:
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் வசிக்கின்ற மொத்த மக்களின் எண்ணிக்கையே ஒரு நாட்டின் மக்கள் தொகை என்றழைக்கப்படுகிறது.

Question 2.
மக்கள் தொகை மாற்றம் – வரையறு.
விடை:
ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலிருந்து மற்றொரு காலப் பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதையோ அல்லது குறைவதையோ மக்கள் தொகை மாற்றம் என்பதாகும்.

Question 3.
பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் – வரையறு.
விடை:
பிறப்பு விகிதம் : பிறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் 1000 மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆகும்.

இறப்பு விகிதம்:
இறப்பு விகிதம் எனப்படுவது ஓர் ஆண்டில் 1000 மக்கள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.

Question 4.
நகரமயமாக்கம் என்றால் என்ன?
விடை:
கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.

Question 5.
இந்திய இரயில்வே துறை இரும்புப்பாதையின் அகலத்தை அடிப்படையாக் கொண்டு எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
விடை:
இந்திய இரயில்வே துறை இரும்புப்பாதையின் அகலத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்காலம். அவை,

  • அகலப்பாதை (1,676 மீ அகலம்]
  • மீட்டர் பாதை [1.00மீ அகலம்]
  • குறுகிய பாதை [0.762 மீ]
  • குறுகிய தூக்குப் பாதை [0.610 அகலம்]

Question 6.
செய்தித்தாள் ஊடகம் – வரையறு.
விடை:

  • செய்தித்தாள் எல்லோராலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த அச்சு ஊடகத்தின் கீழ்வரும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும்.
  • இந்தியாவில் உள்ளூர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்திகளை அளிக்கக்கூடிய பல செய்தித்தாள்கள் உள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

Question 7.
இந்தியாவில் முக்கிய கப்பல் தளங்கள் யாவை?
விடை:

  • இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் – விசாகப்பட்டினம்
  • கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை – கொல்கத்தா
  • மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை – மும்பை
  • கொச்சி கப்பல் கட்டும் தளம் – கொச்சி

V. வேறுபடுத்துக.

Question 1.
மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்டச் சாலைகள்.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Geography Chapter 5 இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் 11

VI. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.

Question 1.
குறிப்பு வரைக. 1. மக்கள் தொகைக் கலவை 2. வயதுக் கலவை 3. பாலின விகிதம் 4. எழுத்தறிவு விகிதம் 5. மக்கள் தொகை
விடை:
1. மக்கள் தொகைக் கலவை:

  • மக்கள் தொகைக் கலவை என்பது பல்வேறு பண்புகளான வயது, பாலினம், திருமணநிலை, சாதி, மதம், மொழி, கல்வி, தொழில் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • மக்கள் தொகை கலவை பற்றி கற்பது சமூக – பொருளாதார மற்றும் மக்கள் தொகையின் அமைப்பை அறிய உதவுகிறது.

வயதுக் கலவை:

  • வயதுக் கலவை என்பது ஒரு நாட்டின் மக்கள் தொகையில் உள்ள பல்வேறு வயது பிரிவினர் எண்ணிக்கையை குறிக்கிறது.
  • நாட்டின் மக்கள் தொகை வயதின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுறிது.

பாலின விகிதம் :
பாலின விகிதம் என்பது மக்கள் தொகையில் ஆயிரம் ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும்.

எழுத்தறிவு விகிதம்:
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7வயதிற்கு அதிகமான ஒருவர் ஏதாவதொரு மொழியைப் புரிந்துகொண்டு எழுதப் படிக்க தெரிந்தால் அவர் எழுத்தறிவு பெற்றவர் ஆவார்.

மக்கள் தொகை இயக்கவியல்:
மக்கள் தொகை இயக்கவியல் என்பது மக்கள் தொகை அளவு மற்றும் அதன் பண்பு மாற்றங்கள் தொடர்பான காரணிகள் குறித்து கற்கும் ஒரு துறையாகும்.

Question 2.
வணிகம் வரையறு. வணிகத்தின் வகைகளை விவரி.
விடை:

  • வணிகம் என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணியாகும்.
  • வணிகம் என்பது பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்குவதும் விற்பதும் அல்லது பரிமாற்றம் செய்து கொள்ளும் செயலாகும்.

வணிக வகைகள் :
பொதுவாக வணிகம் இருவகைப்படும். அவை

  1. உள்நாட்டு வணிகம்
  2. பன்னாட்டு வணிகம்

1. உள்நாட்டு வணிகம்:

  • ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் உள்நாட்டு வணிகம் எனவும் உள்ளூர் வணிகம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • (எ.கா.) உள்நாட்டு வணிகத்தில் நிலவழி போக்குவரத்து முக்கிய பங்காற்றுகிறது. (குறிப்பாக சாலை மற்றும் இரயில் வழி).

பன்னாட்டு வணிகம்:

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது.
  • எ.கா. பன்னாட்டு வணிகத்தில் நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

இருத்தரப்பு மற்றும் பலதரப்பு வணிகம்:
வணிகம் இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்றால் அவை இருத்தரப்பு வணிகம் என்றும், வணிகம் இரண்டிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெற்றால் அது பல்தரப்பு வணிகம் என்றும் அழைக்கப்படுகிறது.