Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 7 நீதித்துறை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 7 நீதித்துறை

8th Social Science Guide நீதித்துறை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை ………………….
அ) குடியரசுத் தலைவர்
ஆ) நாடாளுமன்றம்
இ) உச்ச நீதிமன்றம்
ஈ) பிரதம அமைச்சர்
விடை:
இ) உச்ச நீதிமன்றம்

Question 2.
………………… க்கு இடையே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு செயல்முறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.
அ) குடிமக்கள்
ஆ) குடிமக்கள் மற்றும் அரசாங்கம்
இ) இரண்டு மாநில அரசாங்கங்கள்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Question 3.
கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தீர்க்க வழிவகை செய்கிறது?
அ) முதன்மை அதிகார வரம்பு
ஆ) மேல்முறையீட்டு அதிகார வரம்பு
இ) ஆலோசனை அதிகார வரம்பு
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
அ) முதன்மை அதிகார வரம்பு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Question 4.
பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?
அ) பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர்
ஆ) அஸ்ஸாம் மற்றும் வங்காளம்
இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்
ஈ) உத்தரபிரதேசம் மற்றும் பீகார்
விடை:
இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்

Question 5.
பொதுநல வழக்கு முறை இந்தியாவில் …………………. ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அ) உச்சநீதிமன்றம்
ஆ) நாடாளுமன்றம்
இ) அரசியல் கட்சிகள்
ஈ) அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள்
விடை:
அ) உச்ச நீதிமன்றம்

Question 6.
இந்தியாவில் உச்ச நிலையில் உள்ள நீதிமன்றங்கள் எத்தனை?
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
விடை:
அ) ஒன்று

Question 7.
உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம் ………….
அ) சண்டிகர்
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) புதுதில்லி
விடை:
ஈ) புதுதில்லி

Question 8.
FIR என்பது
அ) முதல் தகவல் அறிக்கை
ஆ) முதல் தகவல் முடிவு
இ) முதல் நிகழ்வு அறிக்கை
ஈ) மேற்கூறிய எவையுமில்லை
விடை:
அ) முதல் தகவல் அறிக்கை

Question 9.
குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் …………. என அழைக்கப்படுகின்றன.
அ) மாவட்ட நீதிமன்றங்கள்
ஆ) அமர்வு நீதிமன்றம்
இ) குடும்ப நீதிமன்றங்கள்
ஈ) வருவாய் நீதிமன்றங்கள்
விடை:
ஆ) அமர்வு நீதிமன்றம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………. நீதிமன்றம் இந்தியாவின் பழமையான நீதிமன்றம் ஆகும்.
விடை:
கல்கத்தா

Question 2.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ………….. மற்றும் உடன் இந்திய நீதித்துறையை நிறுவினர்.
விடை:
சுதந்திரம், நடுநிலைத்தன்மை

Question 3.
புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானியான ………… “ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்தார்.
விடை:
மாண்டெஸ்கியூ

Question 4.
…………… பணம், சொத்து, சமூகம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது.
விடை:
உரிமையியல் சட்டங்கள்

Question 5.
பழங்காலத்தில் பெரும்பாலான அரசர்களின் நீதிமன்றங்கள் …………. ன்படி நீதியை வழங்கின.
விடை:
தர்மத்தின்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
1951ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்டது.
விடை:
தவறு

Question 2.
துக்ளக் ஆட்சிக்காலத்தில் சட்ட நடைமுறைகள் அரபுமொழியில் எழுதப்பட்டன.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Question 3.
1773ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டம் உச்சநீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது.
விடை:
சரி

Question 4.
சதர் திவானி அதாலத் ஒரு குற்றவியல் நீதிமன்றமாகும்.
விடை:
தவறு

Question 5.
இந்தியாவில் மிகப்பெரிய நீதிமன்றம் அலகாபாத் நீதிமன்றம் ஆகும்.
விடை:
சரி

Question 6.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கான நீதியைப் பாதுகாக்கிறது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வரும் கூற்றை ஆராய்க.
i) மெக்காலே பிரபுவால் ஒரு சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது.
ii) இது இந்தியச் சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது.

மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) i மற்றும் ii
ஈ) இரண்டும் இல்லை
விடை:
இ) i மற்றும் ii

Question 2.
பின்வரும் கூற்றை ஆராய்க
i) இந்திய தண்டனைச் சட்டம் 1860இல் உருவாக்கப்பட்டது.
ii) கல்கத்தா உயர்நீதிமன்றம் 1862இல் நிறுவப்பட்டது.
iii) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது.

மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை
அ) i மட்டும்
ஆ) ii மற்றும் iii மட்டும்
இ) i, iii மட்டும்
ஈ) அனைத்தும்
விடை:
ஈ) அனைத்தும்

Question 3.
இந்திய உச்சநீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்றுச் சரியானது அல்ல.
i) இந்தியாவின் உச்சநீதிமன்றம் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.
ii) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் கீழ் பகுதி V-இன்படி நிறுவப்பட்டது.
iii) ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தால்
மாற்ற முடியாது.
iv) இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.

அ) i)
ஆ) ii
இ) iii
ஈ) iv
விடை:
இ) iii

Question 4.
கூற்று : உச்சநீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாகும்.
காரணம் : இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளைப் பராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
விடை:
இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

Question 5.
ஆம் / இல்லை எனக் கூறுக.
அ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.
விடை:
ஆம்

ஆ) பணக்காரர் மற்றும் சக்தி படைத்த மக்கள் நீதித்துறை அமைப்பை கட்டுப்படுத்துகின்றனர்.
விடை:
இல்லை

இ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நீதிமன்றங்களின் மூலம் நீதியைப் பெற உரிமை உடையவராவர்.
விடை:
ஆம்

ஈ) அரசியல்வாதிகள் நீதிபதிகளைக் கட்டுப்படுத்த முடியாது.
விடை:
ஆம்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
நீதித்துறை அமைப்பு நமக்கு ஏன் தேவைப்படுகிறது?
விடை:

  • நீதித்துறை அரசின் மூன்றாவது அங்கமாகும்.
  • இது மக்களின் உரிமைகளையும். சுதந்தரத்தையும் பாதுகாக்கிறது.
  • இது நீதியை நிர்வகித்தல், தகராறுகளைத் தீர்த்தல், சட்டங்களுக்கு விளக்கம் அளித்தல், அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது. எனவே நமக்கு நீதித்துறை தேவைப்படுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Question 2.
இந்திய நீதிமன்றங்களின் பல்வேறு படிநிலைகள் யாவை?
விடை:

  • உச்ச நீதிமன்றம்
  • உயர் நீதிமன்றம்
  • மாவட்ட நீதிமன்றம்
  • துணை நீதிமன்றம்

Question 3.
சட்டம், நீதித்துறை – வேறுபடுத்துக.
விடை:
சட்டம்:
இது மக்களை ஆள்வதற்கு ஓர் அரசாங்கத்தாலோ அல்லது நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும்.

நீதித்துறை:
சட்டப்படி, ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு நீதித்துறை எனப்படுகிறது.

Question 4.
மக்கள் நீதிமன்றம் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:

  • விரைவான நீதியை வழங்க லோக் அதாலக் என்ற மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.
  • இது மக்கள் முன்னிலையில் மக்கள் பேசும் மொழியிலேயே பிரச்சனையை விசாரித்து தீர்வு காண்கிறது.
  • ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி. ஒரு சமூக பணியாளர். ஒரு வழக்கறிஞர் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட அமர்வு இதற்குத் தலைமை வகிக்கும்.
  • வழக்குரைஞர் இல்லாமல் வழக்குகள் முன் வைக்கப்படுகின்றன.
  • இந்த வழக்குகள் பரஸ்பர ஒப்புதல் மூலம் தீர்த்து வைக்கப்படுகின்றன.

Question 5.
நடமாடும் நீதிமன்றங்களின் நன்மைகள் யாவை?
விடை:

  • நடமாடும் நீதிமன்றங்கள் கிராமப்புற மக்களின் இடர்களைத் தீர்க்கும் ஒன்றாக இருக்கும்.
  • இது கிராமப்புற மக்களிடையே நீதி அமைப்பு பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கி, அவர்களது செலவைக் குறைத்து அவர்களின் வாழிடங்களிலேயே நீதியை வழங்க வழி செய்கிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
நீதித்துறையின் பங்கு பற்றி எழுதுக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை 2

Question 2.
உரிமையியல் சட்டம், குற்றவியல் சட்டம் – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை 3

Question 3.
உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை விவரி.
விடை:
அ) முதன்மை அதிகார வரம்பு:
உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே முதன்முறையாக தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம்பெற்றுள்ளது. மத்திய அரசிற்கும் ஒருமாநிலம் அல்லது அதற்குமேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகள் ஆகியன முதன்மை அதிகார வரம்புக்குள் அடங்கும்.

ஆ) மேல் முறையீட்டு அதிகார வரம்பு:
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது. அவ்வாறான வழக்குகள் மேல்முறையீட்டுக்குத் தகுதியுள்ளது என உயர்நீதிமன்றத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இ) ஆலோசனை அதிகார வரம்பு:
குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்படும் பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி குறித்து ஆலோசனை வழங்கும் அதிகாரத்தினை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.

ஈ) நீதிப் பேராணை அதிகார வரம்பு:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 32ன் படி உச்ச நீதிமன்றமும் சட்டப்பிரிவு 226ன் படி உயர்நீதிமன்றமும் நீதிப் பேராணைகளை வழங்குகின்றன.

உ) ஆவண நீதிமன்றம்:
இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளை பராமரிக்கிறது. மற்றும் அதன் முடிவுகள் கீழ்நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.

ஊ) சிறப்பு அதிகாரங்கள்:
இது கீழ் நீதிமன்றங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

VIII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு

Question 1.
விவாதி: ஒரு சுதந்திரமான நீதித்துறை என்பது அவசியமா? இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.

Question 2.
மாதிரி நீதிமன்ற அறை அமர்வுக்காக உங்கள் வகுப்பறையை ஒழுங்கமைக்கவும் (ஆசிரியரின் உதவியுடன் ஒரு வழக்கை எடுத்து விவாதிக்கலாம்).

8th Social Science Guide நீதித்துறை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஒழுங்கு முறைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
அ) 1737
ஆ) 1773
இ) 1776
ஈ) 1784|
விடை:
ஆ) 1773

Question 2.
வில்லியம் கோட்டை நிறுவப்பட்டுள்ள இடம்
அ) சென்னை
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
இ) கல்கத்தா

Question 3.
இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட இடம்
அ) சென்னை
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
இ) கல்கத்தா

Question 4.
யாருடைய காலத்தில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன?
அ) மாண்டெஸ்கியூ
ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) காரன் வாலிஸ்
விடை:
ஈ) காரன் வாலிஸ்

Question 5.
விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு
அ) 1992
ஆ) 1994
இ) 1982
ஈ) 2000
விடை:
ஈ) 2000

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பண்டைய காலத்தில் …………. நீதியின் மூலாதாரமாக விளங்கினார்.
விடை:
அரசர்

Question 2.
1801 மற்றும் 1824 ஆம் ஆண்டுகளில் …………….. மற்றும் …………………. ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
விடை:
மதராஸ், பம்பாய்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Question 3.
முதல் லோக் அதலாத் 1982 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ……………….. என்னுமிடத்தில் நடைபெற்றது. ……………….. என்னுமிடத்தில் நடைபெற்றது.
விடை:
ஜுனாகத்

Question 4.
தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் அமைக்கப்பட்ட ஆண்டு …………..
விடை:
1987

Question 5.
ஒரு திறன்மிக்க நீதித்துறை ……………., …………… இருக்க வேண்டும்.
விடை:
சுதந்திரமாகவும், பொறுப்பு உணர்வுடனும்

Question 6.
இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்ட நாள் ……………
விடை:
ஜனவரி 28, 1950

III. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
பண்டைய காலத்தில் நீதி என்ற கருத்து சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தது.
விடை:
சரி

Question 2.
எலிஜா இம்ஃபே என்பவர் சென்னை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
விடை:
தவறு

Question 3.
1862 ஆம் ஆண்டு சென்னை . பம்பாய். கல்கத்தா நகரங்களில் செயல்பட்ட உச்ச நீதிமன்றங்கள் உயர் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டன.
விடை:
சரி

Question 4.
வில்லியம் பெண்டிங் காலத்தில் நான்கு மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
விடை:
தவறு

Question 5.
மாண்டெஸ்கியூ அதிகாரப் பகிர்வு கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
விடை:
சரி

IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வரும் கூற்றை ஆராய்க.
i) நீதித்துறை அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்பாளராக உள்ளது.
ii) நாடாளுமன்றம் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராக உள்ளது.

மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை?
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) i மற்றும் ii
ஈ) இரண்டும் இல்லை
விடை:
அ) i மட்டும்

Question 2.
உயர் நீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?
i) உயர் நீதிமன்றம் மாநிலங்களின் மிக உயர்ந்த நீதிமன்றமாகும்.
ii) இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர் நீதிமன்றம் உள்ளது.
iii) இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் தங்களுக்கென ஒரு பொதுவான நீதிமன்றத்தைக் கொண்டிருக்கலாம்.
iv) தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் ஒரு பொதுவான நீதிமன்றத்தைக் கொண்டுள்ளன.

அ) i
ஆ) ii
இ) iii
ஈ) iv
விடை:
ஈ) iv

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Question 3.
கூற்று : நீதிப்பேராணைகள் வழங்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. உயர் நீதிமன்றங்களுக்குக் கிடையாது.
காரணம் : அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை .

அ) கூற்று சரியானது, காரணம் தவறானது
ஆ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
இ) கூற்று சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றினை விளக்கவில்லை
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் தவறானவை

V. பின்வருவனவற்றிக்கு ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி

Question 1.
மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் அமர்வு நீதிமன்றங்களுக்கிடையேயான வேறுபாடு என்ன?
விடை:

  • மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • மாவட்ட அளவில் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அமர்வு நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 2.
சுதந்திரமான நீதித்துறை ஏன் அவசியம்?
விடை:

  • நியாயமான நீதி கிடைப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் முக்கியமானதாகும்.
  • இந்தியா போன்ற மக்களாட்சி நாடுகளில் நீதித்துறை குடிமக்களின் உரிமைகளின் பாதுகாவலனாக உள்ளது. எனவே சுதந்திரமான நீதித்துறை அவசியமானதாகும்.

VI. பின்வருவனவற்றிற்க்கு விரிவான விடையளி

Question 1.
இந்தியாவில் நீதிமன்றங்களின் அமைப்பினை விவாதி.
விடை:
உச்ச நீதிமன்றம்:

  • உச்ச நீதிமன்றம் இந்தியாவின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.
  • இது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ஆகும்.
  • இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
  • இது ஒரு ஆவண நீதிமன்றமாக செயல்படுகிறது.
  • இது உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யலாம்.
  • இதுவே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.

உயர் நீதிமன்றம் :

  • உயர் நீதிமன்றம் மாநிலங்களின் உயர்ந்த நீதிமன்றமாகும்.
  • இது கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல் முறையீடுகளை விசாரிக்கிறது.
  • அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக நீதிப்பேராணைகள் வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
  • இது கீழ் நீதிமன்றங்களைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றுள்ளது.

மாவட்ட நீதிமன்றங்கள்:
மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகிறது.

அமர்வு நீதிமன்றங்கள்:
குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அமர்வு நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகிறது.

பஞ்சாயத்து நீதிமன்றங்கள்:
கிராம அளவில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பஞ்சாயத்து நீதிமன்றங்கள் கையாளுகிறது.

வருவாய் நீதிமன்றங்கள்:
வருவாய் நீதிமன்றங்கள் சில ஆவணங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறது. இது நில வருவாயை நிர்ணயம் செய்து நில உரிமையாளர்களிடமிருந்து அதனை வசூலிக்கிறது.

லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்):
விரைவான நீதியை வழங்க லோக் அதலாத் அமைக்கப்பட்டது. இது மக்கள் முன்னிலையில் மக்கள் பேசும் மொழியிலேயே பிரச்சனையை விசாரித்து தீர்வு காண்கிறது.

விரைவு நீதிமன்றங்கள்:
இந்நீதிமன்றங்கள் 2000 ஆம் ஆண்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கீழ் நீதிமன்ற வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்டன.

தொலைதூர சட்ட முன்னெடுப்பு:
கிராமப்புற மக்களுக்காக சட்ட உதவி மற்றும் சேவைகள் வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டது. இதில் காணொளிக் கலந்துரையாடல் மூலம் வழக்குரைஞர்களிடமிருந்து மக்கள் சட் ஆலோசனைகளைப் பெறலாம்.

குடும்ப நீதிமன்றங்கள்:
குடும்பம் தொடர்பான சட்ட விவகாரங்களை குடும்ப நீதிமன்றம் கையாளுகிறது. இவைக உரிமையியல் நீதிமன்றங்கள் ஆகும். குழந்தையின் பாதுகாப்பு, மணமுறிவு, தத்தெடுப்ப சிறார் பிரச்சனைகள் ஆகிய குடும்பம் தொடர்பான பல்வேறு உரிமைகள், கோரிக்கைகளுக்கா இந்நீதிமன்றங்கள் பயன்படுகின்றன.

நடமாடும் நீதிமன்றங்கள்:
நடமாடும் நீதிமன்றங்கள் கிராமப்புற மக்களுக்கு இடர்களைத் தீர்க்கும் ஒன்றாய் இருக்கும். இது கிராமப்புற மக்களிடையே நீதி அமைப்பு பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கி. அவர்களது செலவைக் குறைத்து. அவர்களின் வாழிடங்களிலேயே நீதியை வழங்க வகை செய்கிறது.

இ-நீதிமன்றங்கள்:
இத்திட்டத்தின்படி அனைத்து நீதிமன்றங்களும் கணினிமயமாக்கப்படும். நீதித்துறை சேலை மையம் இ-நீதிமன்றத்தின் ஒரு பகுதியாகும். பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் நேரடியா வழக்கு நிலை மற்றும் அடுத்த விசாரணை தேதிகளை கட்டணமின்றி கேட்டறியலாம்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை

Question 2.
இந்திய நீதித்துறையின் பரிமாண வளர்ச்சியை ஆராய்க.
விடை:
பண்டைய காலத்தில் நீதித்துறை:

  • பண்டைய காலத்தில் நீதி என்ற கருத்து சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தது.
  • அரசர் நீதியின் மூலாதாரமாக விளங்கினார்.
  • தர்மத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டது.

இடைக்கால இந்தியாவில் நீதித்துறை:

  • துக்ளக் ஆட்சிகாலத்தில் உரிமையியல் நடைமுறைச் சட்டங்கள் தொகுக்கப்பட்டன. இது ஃபைகா இ-பெரோஸ்-ஷாகி என அழைக்கப்பட்டது.
  •  ஔரங்கசீப் காலத்தில் இது ஃபட்வா-இ-ஆலம்கிர் என்ற சட்டத் தொகுப்பின்படி மாற்ற அமைக்கப்பட்டது.

நவீன இந்தியாவில் நீதித்துறை:

  • 1727 ஆம் ஆண்டு மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் மேயர் நீதிமன்றங்க அமைக்கப்பட்டன.
  • 1773 ஒழுங்கு முறைச் சட்டத்தின் படி கல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
  • 1801 மற்றும் 1824ஆம் ஆண்டுகளில் மதராஸ் மற்றும் பம்பாய் ஆகிய இடங்களில் உச் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
  • 1862 ஆம் ஆண்டு இம்மூன்று இடங்களிலும் இருந்த உச்ச நீதிமன்றங்களுக்குப் பதிலா உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
  • பின்னர் சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
  • காரன்வாலிஸ் காலத்தில் கல்கத்தா, டாக்கா. மூர்ஷிதாபாத் மற்றும் பாட்னா ஆகிய இடங்களி மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
  • பெண்டிங் பிரபு காலத்தில் இந்த நான்கு மேல்முறையீட்டு நீதிமன்றங்களும் நீக்கப்பட்டன.
  • அலகாபாத்தில் சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
  • மெக்காலே என்பவரால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் இந்திய சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது.
  • இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டன.
  • 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றங்களை உருவாக்கியது.
  • 1950 ஜனவரி 28ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 7 நீதித்துறை 4

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

8th Social Science Guide பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி …………..
அ) குடியரசுத் தலைவர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) ஆளுநர்
ஈ) முதலமைச்சர்
விடை:
அ) குடியரசுத் தலைவர்

Question 2.
இந்திய இராணுவப் படையின் முதன்மை நோக்கமானது
அ) தேசிய பாதுகாப்பு
ஆ) தேசிய ஒற்றுமை
இ) அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Question 3.
இராணுவ தினம் அனுசரிக்கப்படும் நாள்
அ) ஜனவரி 15
ஆ) பிப்ரவரி 1
இ) மார்ச் 10
ஈ) அக்டோபர் 7
விடை:
அ) ஜனவரி 15

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 4.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் எதன் கீழ் செயல்படுகிறது?
அ) பாதுகாப்பு அமைச்சகம்
ஆ) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இ) திட்ட மேலாண்மை நிறுவனம்
ஈ) உள்துறை அமைச்சகம்
விடை:
ஈ) உள்துறை அமைச்சகம்

Question 5.
இந்தியக் கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு
அ) 1976
ஆ) 1977
இ) 1978
ஈ) 1979
விடை:
இ) 1978

Question 6.
இந்திய வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளுள் ஒன்று
அ) சத்தியமேவ ஜெயதே
ஆ) பஞ்சசீலம்
இ) மேற்கூறிய இரண்டும்
ஈ) மேற்கூறிய எவையுமில்லை
விடை:
ஆ) பஞ்சசீலம்

Question 7.
பின்வருவனவற்றுள் எந்த தீவுகள் இந்தியாவிற்கு சொந்தமானவை?
அ) அந்தமான் மற்றும் மாலத்தீவு
ஆ) அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்
இ) இலங்கை மற்றும் மாலத்தீவு
ஈ) மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்
விடை:
ஆ) அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவின் மையம் அமைந்துள்ள இடம் ……………….
விடை:
வெல்லிங்டன்

Question 2.
இந்திய கடற்படையின் தலைமை தளபதி ………….. ஆவார்.
விடை:
அட்மிரல்

Question 3.
இந்திய விமானப்படையிலிருந்து ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி …………………. ஆவார்.
விடை:
அர்ஜுன் சிங்

Question 4.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினை வடிவமைத்த முதன்மைச் சிற்பி ……………..
விடை:
ஜவஹர்லால் நேரு

Question 5.
அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர் ………………..
விடை:
வி.கே. கிருஷ்ணமேனன்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
விடை:
தவறு

Question 2.
மெட்ராஸ் ரெஜிமென்ட் பழமையான காலாட்படைப் பிரிவுகளில் ஒன்று.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 3.
விரைவு அதிரடிப் படையானது, மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) ஒரு சிறப்பு பிரிவு ஆகும்.
விடை:
சரி

Question 4.
NCC மாணவர்களுக்கு அடிப்படை இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விடை:
சரி

Question 5.
வங்காளதேசம் இந்தியாவின் ஒரு பகுதி ஆகும்.
விடை:
தவறு

Question 6.
இந்தியாவிற்கும், ASEAN என்ற கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் மியான்மர் ஒரு நிலப்பாலமாக செயல்படுகிறது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
ஆயுதப்படைகள் தொடர்பான பின்வரும் கூற்றினை ஆராய்க.
I. இந்திய இராணுவப் படை ஆயுதப்படைகளின் நிலஅடிப்படையிலான பிரிவு ஆகும்.
II. இந்திய இராணுவப் படையின் நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் மனித மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.

அ) மட்டும் சரி
ஆ) II மட்டும் சரி
இ) 1 மற்றும் II சரி
ஈ) | மற்றும் II தவறு
விடை:
இ) 1 மற்றும் II சரி

Question 2.
கூற்று : குடியரசுத் தலைவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி ஆவார்.
காரணம் : குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் மிக உயர்ந்த பதவி நிலையையும் வகிக்கிறார்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 3.
கூற்று : பன்னாட்டு கூட்டுறவை இந்தியா ஆதரிக்கிறது.
காரணம் : நட்பு – கூட்டுறவு மூலம் நாடுகளுக்கிடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல –
விடை:
இ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 4.
இனவெறிக்கொள்கை பற்றி பின்வரும் எந்த கூற்று சரியானவை அல்ல?
I. நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம்.
II. இது மனிதாபிமானத்திற்கு எதிரானது.
III. இனப்பாகுபாட்டுக் கொள்கை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

அ) 1 மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) II மட்டும்
ஈ) III மட்டும்
விடை:
ஈ) III மட்டும்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 5.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) மாலத்தீவு
ஆ) இலங்கை
இ) மியான்மர்
ஈ) லட்சத்தீவுகள்
விடை:
இ) மியான்மர்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
தேசிய பாதுகாப்பு மிக அவசியமானது ஏன்?
விடை:

  • ஒவ்வொரு நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் தேசிய பாதுகாப்பு மிகவும் அவசியமானது ஆகும்.
  • நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

Question 2.
பின்வருவனவற்றிற்கு விரிவாக்கம் தருக.
அ) SFF
ஆ) ICG
இ) BSF
ஈ) NCC
விடை:
அ) SFF – சிறப்பு எல்லைப்புறப் படை
ஆ) ICG – இந்தியக் கடலோரக் காவல்படை
இ) BSF – எல்லை பாதுகாப்புப் படை
ஈ) NCC – தேசிய மாணவர் படை

Question 3.
மத்திய ரிசர்வ் காவல் படை பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:
அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும். தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பதற்கும். சமூக நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு உதவுவதே மத்திய ரிசர்வ் காவல்படையின் நோக்கமாகும்.

மேலும். சட்டம். ஒழுங்கு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பினை பராமரிப்பதற்கும் இது உதவுகிறது.

மத்திய ரிசர்வ் காவல் படையின் ஒரு சிறப்பு பிரிவு விரைவு அதிரடிப்படை ஆகும். இது கலவரம். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல். மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அமைதியற்ற சூழ்நிலைகள் ஆகியவற்றை திறம்பட எதிர்கொள்கிறது.

Question 4.
அணிசேரா இயக்க நிறுவனத் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • இந்தியாவின் ஜவஹர்லால் நேரு
  • யூகோஸ்லாவியாவின் டிட்டோ
  • எகிப்தின் நாசர்
  • இந்தோனேசியாவின் சுகர்ணோ
  • கானாவின் குவாமே நிக்ரூமா

Question 5.
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகளை எழுதுக.
விடை:

  • தேசிய நலனைப் பாதுகாத்தல்
  • உலக அமைதியினை அடைதல்
  • ஆயுதக்குறைப்பு
  • காலனித்துவம். இனவெறி மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றை நீக்குதல்
  • நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
  • பொருளாதார வளர்ச்சி

Question 6.
சார்க் உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • இந்தியா
  • வங்காளதேசம்
  • பாகிஸ்தான்
  • நேபாளம்
  • பூடான்
  • இலங்கை
  • மாலத்தீவு
  • ஆப்கானிஸ்தான்

VII. விரிவான விடையளி

Question 1.
இந்திய இராணுவப் படையின் அமைப்பு மற்றும் நிர்வாகத்தினை விவரி.
விடை:
அமைப்பு:

  • இந்திய இராணுவப் படை என்பது நில அடிப்படையிலான ஒரு பிரிவு ஆகும்.
  • இது உலக அளவில் மிகப்பெரிய தன்னார்வப் படைப் பிரிவு ஆகும்.
  • இது ஜெனரல் எனப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட இராணுவப் படைத் தளபதியால் வழி நடத்தப்படுகிறது.
  • இந்திய இராணுவம் “ரெஜிமென்ட்” என்ற ஒரு அமைப்பு முறையைக் கொண்டது.
  • இது செயல்பாட்டு ரீதியாகவும். புவியியல் அடிப்படையிலும் ஏழு படைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்:

  • தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமையைப் பேணுகிறது.
  • அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைப் பாதுகாத்தல். உள்நாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டின் எல்லைக்குள் அமைதியையும். பாதுகாப்பையும் பேணுதல் ஆகியவை இதன் பணிகளாகும்.
  • மேலும் இயற்கைப் பேரழிவு மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளையும் செய்கிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 2.
துணை இராணுவப் படை பற்றி எழுதுக.
விடை:

  • உள்நாட்டு பாதுகாப்பைப் பராமரிக்கவும், கடலோரப் பகுதியைப் பாதுகாக்கவும், இராணுவத்திற்கு உதவும் படைகள் துணை இராணுவப் படைகள் என்றழைக்கப்படுகின்றன.
  • இவை இரயில் நிலையங்கள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் ஆகிய முக்கியமான பகுதிகளைப் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன.
  • இயற்கை மற்றும் மனித பேரழிவுகளிலிருந்து மக்களை மீட்கும் பணிகளையும் செய்கின்றன.
  • அமைதி காலங்களில் இத்துணை இராணுவப் படைகள் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்கும் பணியையும் செய்கின்றன.

அஸ்ஸாம் ரைபிள்ஸ்:

  • இது 1835ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இது அஸ்ஸாம் பகுதியில் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது.
  • இது இராணுவ பயிற்சி பெற்ற மக்கள் படை ஆகும்.
  • இதில் தற்போது 46 படைப் பிரிவுகள் உள்ளன.
  • இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

சிறப்பு எல்லைப்புறப் படை:

  • இது ஒரு துணை இராணுவ சிறப்புப் படை ஆகும்.
  • இது 1962இல் உருவாக்கப்பட்டது.
  • இது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

Question 3.
பஞ்சசீலத்தின் ஐந்து கொள்கைகளை எழுதுக.
விடை:

  • ஒவ்வொரு நாட்டின் எல்லையையும், இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்
  • பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை
  • பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்
  • பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்
    அமைதியாக இணைந்திருத்தல்

Question 4.
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. எப்படி?
விடை:

  • அண்டை நாடுகளுடன் இந்தியாவின் நிலைப்பாடு தனித்துவமானது.
  • இந்தியா சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளுடன் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது,
  • ஏனெனில் ஒத்துழைப்பு மூலமே நாடுகளிடையேயான பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.
  • இந்தியா தன் அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துகிறது.
  • வள ஆதாரங்கள், கருவிகள் மற்றும் பயிற்சி ஆகிய வடிவில் அண்டை நாடுகளுக்குத் தேவையான ஆதரவினை இந்தியா அளித்து வருகிறது.
  • பொருட்கள். மக்கள் ஆற்றல். மூலதனம் மற்றும் தகவல்கள் ஆகியவற்றின் தடையில்லா பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக அதிக இணைப்பும் ஒருங்கிணைப்பும் அளிக்கப்படுகிறது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
பாதுகாப்பு படைப்பிரிவுகளில் பணிசெய்வது நாட்டின் மிக மதிப்பு மிக்க மற்றும் மரியாதைக்குரிய நிலையை உறுதிப்படுத்துகிறது. அதன் முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக.

IX. செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள்

Question 1.
நமது பாதுகாப்பு அமைப்புப் பற்றி ஒரு படத்தொகுப்பு தயார் செய்க.

Question 2.
இந்திய இராணுவத்தில் வழங்கப்படும் விருதுகள் குறித்த தகவல்களைச் சேகரி. (உ.ம். பரம்வீர் சக்ரா )

Question 3.
வகுப்பில் உள்ள மாணவர்களை எட்டு குழுக்களாகப் பிரிக்கவும். ஒவ்வொரு குழுவும் ஒரு சார்க் நாட்டின் பிரதிநிதியாகும். ஒவ்வொரு குழுவும் அந்த நாட்டின் பெயர் மற்றும் தேசியக்கொடியினைக் காட்சிப்படுத்தவும். பின்வரும் தலைப்புகளில் குழு கலந்துரையாடல் அல்லது வினாடி வினா நடத்தவும்.
i) நிலம் மற்றும் மக்கள்
ii) அரசாங்கத்தின் அமைப்பு
iii) மூலதனம்
iv) நாணயம்
v) இந்தியாவுடனான உடன்பாட்டு அம்சங்கள்

8th Social Science Guide பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்திய ஆயுதப் படைகள் எதன் கீழ் செயல்படுகின்றன?
அ) பாதுகாப்பு அமைச்சகம்
ஆ) வெளியுறவுத் துறை அமைச்சகம்
இ) உள்துறை அமைச்சகம்
ஈ) தேசிய பாதுகாப்பு அமைச்சகம்
விடை:
அ) பாதுகாப்பு அமைச்சகம்

Question 2.
சீன-இந்தியப் போர் நடைபெற்ற ஆண்டு,
அ) 1963
ஆ) 1962
இ) 1965
ஈ) 1959
விடை:
ஆ) 1962

Question 3.
இந்திய கடலோர காவல் படை எதன் கீழ் செயல்படுகிறது?
அ) பாதுகாப்பு அமைச்சகம்
ஆ) வெளியுறவுத் துறை அமைச்சகம்
இ) உள்துறை அமைச்சகம்
ஈ) கடற்படைத் தளபதி
விடை:
அ) பாதுகாப்பு அமைச்சகம்

Question 4.
இனவெறிக் கொள்கை பின்பற்றப்பட்ட நாடு.
அ) தென் அமெரிக்கா
ஆ) தென் ஆப்பிரிக்கா
இ) ஸ்ரீலங்கா
ஈ) இந்தியா
விடை:
ஆ) தென் ஆப்பிரிக்கா

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 5.
இந்தியா எந்த நாட்டோடு பொதுவான நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை?
அ) நேபாளம்
ஆ) பர்மா
இ) ஆப்கானிஸ்தான்
ஈ) ஸ்ரீலங்கா
விடை:
ஈ) ஸ்ரீலங்கா

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
உலக அளவில் மிகப்பெரிய தன்னார்வப் படைப்பிரிவு ………… ஆகும்.
விடை:
இந்திய இராணுவப்படை

Question 2.
இந்தியக் கடற்படை …………. பிரிவுகளைக் கொண்டது.
விடை:
மூன்று

Question 3.
இந்திய இராணுவத்தின் மிக உயர்ந்த பதவி …………. ஆகும்.
விடை:
பீல்டு மார்ஷல்

Question 4.
இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் ………….. ஆவார்.
விடை:
சாம் மானக்ஷா

Question 5.
இந்தியாவின் இரண்டாவது பீல்டு மார்ஷல் ………….. ஆவார்.
விடை:
கே.எம். கரியப்பா

Question 6.
இனவெறிக் கொள்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆண்டு
விடை:
1990

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை 2

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
சிறப்பு எல்லைப்புறப் படை இந்திய கடற்படையின் ஒரு பிரிவு ஆகும்.
விடை:
தவறு

Question 2.
விரைவு அதிரடிப் படை இயற்கை பேரழிவு மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளைச் செய்கிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 3.
முதலாம் இராஜேந்திரன் இலங்கையின் மீது கடற்படையெடுப்பை நிகழ்த்தினார்.
விடை:
தவறு

Question 4.
இந்தியா பி.பி.ஐ.என். என்ற கூட்டமைப்பில் ஒரு உறுப்பு நாடாகும்.
விடை:
சரி

Question 5.
அணிசேராமை என்பது நடுநிலைமையும் அல்ல. ஈடுபாடின்மையும் அல்ல.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் தொடர்பான பின்வரும் கூற்றினை ஆராய்க.
I. அஸ்ஸாம் ரைபிள்ஸ் 1835 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
II. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

அ) 1 மட்டும் சரி
ஆ) II மட்டும் சரி
இ) 1 மற்றும் II சரி
ஈ) மற்றும் II தவறு
விடை:
அ) மட்டும் சரி

Question 2.
கூற்று : தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிகச்சிறந்த வெற்றியாகும்.
காரணம் : இந்தியா அனைத்து வகையான இனப்பாகுபாட்டிற்கும் எதிராகப் போராடியது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றினை விளக்கவில்லை
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

Question 3.
ஊர்க்காவல் படை பற்றிய பின்வரும் எந்த கூற்று / கூற்றுகள் சரியானது அல்ல?
I. இந்திய ஊர்க்காவல் படை இந்திய இராணுவத்திற்குத் துணையான ஒரு தன்னார்வப் படை ஆகும்.
II. 20 முதல் 35 வயதுடைய இந்தியக் குடிமக்கள் ஊர்க்காவல் படையில் சேரலாம்.
III. ஊர்க்காவல் படையில் சேரும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.

அ) 1 மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) II மட்டும்
ஈ) III மட்டும்
விடை:
அ) 1 மற்றும் II

Question 4.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) மத்திய ரிசர்வ் காவல் படை
ஆ) இந்தோ -திபெத்திய எல்லைக் காவல்
இ) எல்லை பாதுகாப்புப் படை
ஈ) சிறப்பு எல்லைப் புற படை
விடை:
ஈ) சிறப்பு எல்லைப் புற படை

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
இந்திய கடற்படை பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  • இந்திய கடற்படையின் முதன்மை நோக்கம் நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதாகும்.
  • இது நாட்டின் பிற ஆயுதப்படைகளுடன் இணைந்து செயல்படுகிறது.
  • இந்திய நிலப்பகுதி. மக்கள். கடல்சார் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அல்லது தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுகிறது.
  • இது அட்மிரல் என்றழைக்கப்படும் கடற்படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது.
  • இது மூன்று கடற்படைப் பிரிவுகளைக் கொண்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Question 2.
எல்லை பாதுகாப்புப் படையின் பணிகளைக் கூறு.
விடை:
எல்லை பாதுகாப்புப் படை இந்திய நில எல்லைப் பகுதிகளைக் காப்பது மற்றும் நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.

Question 3.
ஊர்க்காவல் படை பற்றி உமக்கு யாது தெரியும்?
விடை:

  • ஊர்க்காவல் படை ஒரு தன்னார்வப் படை ஆகும்.
  • இது இந்தியக் காவல்துறைக்கு துணையாக பணியாற்றுகிறது.
  • இப்படையின் உறுப்பினர்கள் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளான தொழில்சார் வல்லுநர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாய மற்றும் தொழில்துறை பணியாளர்கள் ஆகியோர்களிடமிருந்து நியமிக்கப்படுகிறார்கள்.
  • 15 முதல் 50 வயதுடைய அனைவரும் உறுப்பினராகலாம்.
  • உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.

Question 4.
இந்தியாவுடன் பொது எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் யாவை?
விடை:

  • பாகிஸ்தான்
  • ஆப்கானிஸ்தான்
  • நேபாளம்
  • சீனா
  • பூடான்
  • வங்காளதேசம்
  • மியான்மர்

Question 5.
இந்தியாவின் அண்டை நாடுகள் யாவை?
விடை:

  • வடமேற்கில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்
  • வடக்கில் சீனா, நேபாளம், பூடான்
  • கிழக்கில் வங்காளதேசம்
  • தூரகிழக்கில் மியான்மர்
  • தென்கிழக்கில் இலங்கை
  • தென்கிழக்கில் மாலத்தீவு

VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

Question 1.
அணிசேராமை பற்றி விவரிக்க.
விடை:
அணிசேராமை என்ற சொல் வி.கே. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

அறிவியல் அணிசேராமை என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தலைமையிலான இராணுவக் கூட்டில் இணையாமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலே அணி சேராதிருத்தலின் நோக்கமாகும். அணிசேராமை என்பது நடுநிலைமையும் அல்ல, ஈடுபாடின்மையும் அல்ல.

அணிசேராமை என்பது எந்தக் கூட்டணியிலும் சேராமல் சர்வதேச பிரச்சனைகளில் சுதந்திரமாக தீர்மானிக்கும் நிலைபாட்டைக் குறிக்கும்.

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்:
இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, யுகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 6 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை 3

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

8th Social Science Guide சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சிவப்பு விளக்கு ஒளிரும் போது
அ) பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லலாம்.
ஆ) நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.
இ) உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்
ஈ) செல்லிடப்பேசியில் உரையாடலாம்
விடை:
ஆ) நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.

Question 2.
பாதசாரிகள் சாலையைக் கடக்குமிடம்
அ) எங்குவேண்டுமானாலும்
ஆ) சமிக்ஞைகளுக்கு அருகில்
இ) வரிகோட்டு பாதையில்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) வரிகோட்டு பாதையில்

Question 3.
சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்
அ) டிசம்பர்
ஆ) ஜனவரி
இ) மார்ச்
ஈ) மே
விடை:
ஆ) ஜனவரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 4.
அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்
அ) 108
ஆ) 100
இ) 106
ஈ) 101
விடை:
அ) 108

Question 5.
சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?
அ) அதிவேகம்
ஆ) குடிபோதையில் ஓட்டுதல்
இ) ஓட்டுநர்கள் கவனச்சிதறல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும் .

Question 6.
போக்குவரத்துக் குறியீடுகளின் முதல் வகை
அ) கட்டாய குறியீடுகள்
ஆ) எச்சரிக்கை குறியீடுகள்
இ) தகவல் குறியீடுகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) கட்டாய குறியீடுகள்

Question 7.
சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
அ) 2014
ஆ) 2015
இ) 2016
ஈ) 2017
விடை:
இ) 2016

Question 8.
ABS என்பதனை விரிவாக்கம் செய்க.
அ) எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)
ஆ) வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)
இ) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti – lock Braking System)
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti – lock Braking System)

Question 9.
வளைவில் முந்துவது
அ) அனுமதிக்கப்படுகிறது
ஆ) அனுமதியில்லை
இ) கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
ஈ) நமது விருப்பம்
விடை:
ஆ) அனுமதியில்லை

Question 10.
அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது
அ) முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்கவேண்டும்.
ஆ) முன்னுரிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை.
இ) நம் வாகனத்தினைச் சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.
ஈ) அவசர சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்.
விடை:
இ) நம் வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் ……………… புறம் செல்லவும்
விடை:
இடது

Question 2.
கட்டாய குறியீடுகள் ………… வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
விடை:
வட்ட

Question 3.
………………. வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றது
விடை:
வேகக் கட்டுப்பாட்டுக் கருவி

Question 4.
அதிக வேகம் : ………………. ஆபத்து
விடை:
அதிக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 5.
நான்கு சக்கர வாகனத்தில் ………….. அணிவதும் இரு சக்கர வாகனத்தில் …………… அணிவதும் கட்டாயம் எனச் சட்டம் உள்ளது.
விடை:
இருக்கை வார்பட்டை, தலைக்கவசம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
சாலை விபத்துக்கள் தொடர்பான பிரச்சனை சாலையில் மட்டுமே உள்ளது.
விடை:
தவறு

Question 2.
பாதை தடத்தை மாற்றும் முன்பு கண்ணாடியினைப் பார்க்க வேண்டும்.
விடை:
சரி

Question 3.
ஒளிரும் மஞ்சள் விளக்கு, வேகத்தினை குறைத்தும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
விடை:
சரி

Question 4.
இருசக்கர வண்டியில் ஒருவர் மட்டுமே பின் இருக்கையில் அமர அனுமதிக்கப்படுகிறார்கள்.
விடை:
சரி

Question 5.
சாலைகள் மனிதனின் மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று.
விடை:
தவறு

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வரும் கூற்று(களில்) சரியல்லாதது எது?
i) முன்புற வாகனத்திலிருந்து சரியான இடைவெளியில் தொடரவும்.
ii) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடிக்க வேண்டும். ஒருபோதும் வேகத்திற்கான எல்லையினைத் தாண்டக்கூடாது.
iii) வாகனம் ஓட்டும்பொழுது இருக்கை வார்பட்டை அணியத் தேவையில்லை.
iv) வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகத்தினைக் குறைக்க வேண்டாம்.

அ) i, iii மட்டும்
ஆ) ii, iv மட்டும்
இ) i, ii மட்டும்
ஈ) iii, iv மட்டும்
விடை:
ஈ) iii, iv மட்டும்

Question 2.
கூற்று : மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்களை ஏற்படுத்துகின்றது.
காரணம் : மயக்கம் காரணமாக பார்வை பாதிக்கப்படுகின்றது.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

Question 3.
கூற்று : சாலை குறியீடுகள் எளிதில் புரிந்துகொள்ள கூடிய ஒன்று.
காரணம் : அவைகள் பெரும்பாலும் படங்களாக இருக்கின்றன.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 4.
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி (சாலை பாதுகாப்பு விதிகள்)
அ) வளைவுகளில் மெதுவாக செல்
ஆ) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடி
இ) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து
ஈ) சாலைகளில் நடப்பதைத் தவிர்க்கவும்
விடை:
இ) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து

Question 5.
பின்வரும் குறியீடுகள் எதைக் குறிப்பிடுகின்றன.
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 3
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 2

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
சாலை பாதுகாப்பினை நீவிர் எவ்வாறு உறுதி செய்வாய்?
விடை:
சாலைப் பாதுகாப்பினை உறுதி செய்தல்:

  • நான் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் குறியீடுகளை கண்டிப்பாக பின்பற்றுவேன்.
  • சாலை விபத்துக்கள் யூகிக்கக்கூடியவை அதனால் அவை நிகழாமல் தடுக்க வேண்டும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 2.
சாலை பாதுகாப்பு நமக்கு ஏன் முக்கியமானது?
விடை:
சாலை பாதுகாப்பு முக்கியமானது:
ஏனெனில்

  • சாலையில் ஏற்படும் விபத்துகள் மற்றும் நிகழும் அசம்பாவிதங்கள் வருந்தத்தக்க நிகழ்வுகள் ஆகும். இவை படுகாயங்களுக்கும் இறப்பிற்கும் வழி வகுக்கின்றன.
  • இந்த இறப்புகள் மற்றும் படுகாயங்கள் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன.

Question 3.
சாலை விபத்துக்களின் நேரடி விளைவுகள் என்ன?
விடை:
சாலை விபத்துக்களின் நேரடி விளைவுகள்:

  • உயிரிழப்பு
  • படுகாயம்
  • உடமைகளுக்கு சேதம்

Question 4.
போக்குவரத்து சமிக்ஞைகளின் விளக்குகளின் படம் வரைந்து அதன் பொருளைக் குறிப்பிடு.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 4

Question 5.
சாலை பாதுகாப்புக் குறித்த பிரேசிலியா அறிவிப்பைப் பற்றிக் குறிப்பு எழுதுக.
விடை:
சாலை பாதுகாப்புக் குறித்த பிரேசிலியா அறிவிப்பு:
ஐ.நா உலக சுகாதார அமைப்பு இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பிற்கான இரண்டாவது உலகளாவிய மாநாடு. இந்தியா பிரேசிலியா பிரகடனத்தில் 2015ல் கையெழுத்திட்டது.

பங்குபெற்ற அனைவரும் இப்பதிற்றாண்டுக்குள் சாலை பாதுகாப்பினை மேம்படுத்தவும் போக்குவரத்தினால் ஏற்படும் இறப்புகளை குறைக்கும் வழிகளை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ளனர்.

Question 6.
சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கம் யாது?
விடை:
சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிப்பதன் நோக்கம்:
சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிப்பதன் நோக்கம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதும் ஆகும்.

சாலையினை உபயோகிப்பவர்களுக்கு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.

Question 7.
ஏதேனும் நான்கு சாலை விதிகளை எழுதுக.
விடை:
சாலை விதிகள் :

  • 1988 ல் இந்தியப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், 1989ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
  • ஒருவழி சாலையில் ஓட்டுநர் தனது வலதுபுறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். எதிர்புறமாக ஒரு போதும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
  • இருவழிச் சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்
  • ஓட்டுநர்கள் தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம் அருகில் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.
  • மருத்துவ ஊர்தி, தீயணைப்பு வாகனங்கள், இராணுவபாதுகாப்பு வாகனங்கள் போன்றவற்றிற்கு வழிவிடுவது நமது பொறுப்பாகும்.

Question 8.
மது அருந்துதல் வாகன ஓட்டுதலை எவ்வாறு பாதிக்கின்றது?
விடை:
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல்.

  • மது அருந்துவது கவனத்தைக் குறைக்கும் அதன் காரணமாக வரும் மயக்கத்தினால் பார்வை தடைபடுகின்றது.
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

VII. விரிவான விடையளி

Question 1.
சாலை விபத்துக்களுக்கான காரணங்களை விவரி.
விடை:
சாலை விபத்துக்களுக்கான காரணங்கள்:

  1. அதிகவேகம் :
    • பெரும்பாலான உயிரிழப்பு விபத்துக்கள் அதிக வேகத்தினால்தான் ஏற்படுகின்றன. அதிக வேகம், அதிக ஆபத்து.
    • வேக அதிகரிப்பு, விபத்து மற்றும் விபத்து காயத்தின் தீவிரத்தினை அதிகரிக்கிறது. பின்னால் மிக நெருக்கமாக பின்தொடர்தல் (Tailgating) சட்டவிரோதம் மற்றும் ஆபத்தானது.
  2. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் :
    • மது அருந்துவது கவனத்தைக் குறைக்கும். அதன் காரணமாக வரும் மயக்கத்தினால் பார்வை தடைபடுகிறது.
    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துகள் ஏற்படுகின்றன.
  3. வாகன ஓட்டிகளின் கவனச் சிதறல் :
    • இந்நாட்களில் வாகனம் ஓட்டும்போது செல்லிடப் பேசியில் பேசுவது பெரிய கவனச் சிதறலாக உள்ளது.
    • கவனக் குறைவு, பகல் கனவு, வாகனம் ஓட்டும்போது கண்ணாடியைச் சரிசெய்தல், வாகனத்தில் உள்ள ஒலி சாதனம், சாலையில் விலங்குகள் நடமாட்டம் பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அகியவையும் கவனச் சிதறல்களுக்கான காரணங்கள்.
  4. சிவப்பு விளக்கில் நில்லாமை :
    • நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பதே சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்வதன் முக்கிய நோக்கம்.
    • போக்குவரத்து சைகைகளை முறையாகச் கடைப்பிடிக்கும்போது நேரம் சேமிக்கப்படுகிறது. சேர வேண்டிய இடத்தை உரிய நேரத்தில் பாதுகாப்புடன் சென்றடைய முடிகிறது.
  5. பாதுகாப்பு கருவிகளை தவிர்த்தல் :
    • விபத்துக்களின் போது ஏற்படும் காயங்களின் தீவிரத்தை நான்கு சக்கர வாகனங்களில் இருக்கைப் பட்டை அணிவதும், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதும் குறைக்கின்றன.
      பிறகாரணிகள் :

      • ஓட்டுநர்கள்
      • பாதசாரிகள்
      • பயணிகள்
      • வாகனங்கள்
      • சாலைகளின் தரம்
      • வானிலை ஆகும்.

Question 2.
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை விளக்குக.
விடை:
சாலைவிபத்துக்கள் தடுக்க இந்திய அரசாங்கத்தின் முயற்சிகள் :
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், சாலை விபத்துக்களையும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒரு பன்முக ஏற்புடைய வியூகம் :
ஆங்கில எழுத்து நான்கு’E’ அடிப்படையில் சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட பன்முகயுக்தியாகும். பொறியியல், செயலாக்கம், கல்வி, அவரசம் (Engineering, Enforcement, Education, Emergency)

வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துதல் :

  • சரக்கு வாகனங்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் கம்பிகளை ஏற்றிச் செல்ல தடை. கனரக வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு கட்டாயம்.
  • இரு சக்கர வாகனங்களில் ABS / CBS நிறுத்தக் கருவி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருசக்கர வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்புவிளக்கு ஒளிர்விப்பான் (AHO) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பணமில்லா பரிவர்த்தனை மூலம் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம்:

  • தேசிய நெடுஞ்சாலை எண் 8 மற்றும் 33 ஆகியவற்றில் இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • தற்பொழுது தங்க நாற்கர சாலைகளிலும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு, மேற்கு இணைப்புச் சாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உடனடி விரைவு அவசர சிகிச்சை ஊர்திகள் :

  • தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவிலும் ஓர் அவசர சிகிச்சை ஊர்தி NHAI ஆல் நிறுத்தப்பட்டுள்ளது.
  • அவசர ஊர்திக்கான அழைப்புகளை ஏற்க 24 × 7 செயல்படும் அமைப்பும் தன்னார்வ தொண்டர்களுக்கு முதலுதவி பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் :
தொடர்ச்சியான உணர்கருவிகள் மூலம் வேகம் கண்டறியப்பட்டு தானாகவே வேகத்தினை குறைப்பதுடன், முன்னர் தீர்மானிக்கப்பட்ட வேகத்தினை மீறி வாகனம் செல்வதையும் தடுக்கிறன்றது

பல்வேறு செய்திக் குறியீடுகள் :
பயணிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டிய முக்கியத் தகவல்களை தெரிவிக்கும் ஒளி உமிழும் முனைய பலகைகள் (LED Boards)

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 3.
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
விடை:
சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :

  • எப்பொழுதும் இடதுபுறமாகவே செல்லுதல்
  • வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகம் குறைத்தல்
  • தலைக்கவசம் அணிதல்
  • வேகவரம்பை ஒருபோதும் மீறாதிருத்தல்
  • சரியான இடைவெளி விட்டு பின் தொடர்தல்
  • நெடுஞ்சாலைகளில் வாகனம் நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்துதல்.
  • சாலை குறியீடுகளைப் பின்பற்றுதல்
  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல்
  • வாகனம் ஓட்டும்பொழுது செல்லிடப்பேசியை பயன்படுத்துதலையும், அதிக சப்தம் நிறைந்த இசை கேட்பதையும் தவிர்த்தல்.
  • பாதை தடத்தை மாற்றுவதற்கு முன் கண்ணாடி வழியே வாகன வருகையை உறுதி செய்தல், வாகனம் ஓட்டும்போது அமைதியாக இருப்துடன் இருக்கை வார்பட்டையை அணிதல்.
  • பாதசாரிகள் சாலையைக் கடக்க வரிக்கோடு பாதையை மட்டும் பயன்படுத்துதல்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
இருசக்கர வாகனம் இரவில் ஓட்டும்போது தேவைப்படுவன என்ன?
விடை:
இருசக்கர வாகனம் இரவில் ஓட்டும்போது தேவைப்படுவன :

  • உங்கள் வாகனவிளக்குகளை சரியான நிலையில் வைத்திருக்கவும்.
  • சாலைகளில் நீங்கள் தெளிவாக தெரியும்படி பார்வை விசாலப்படுத்தப்பட வேண்டும்.
  • உங்கள் பார்வை தெளிவாக இருப்பதை உறுதி செய்யவும்.
  • பிறவாகனங்களின் விளக்குகளையும் சமமாகப் பாவியுங்கள்.
  • பாதுகாப்பாகவும் மெதுவாகவும் வாகனங்களை ஓட்டவும்.
  • உங்கள் வேகத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
  • சாலைகளில் காணப்படும் உயிருள்ளவற்றின் மீது உங்கள் கவனம் இருத்தல் அவசியம்.
  • சரியான அளவிலான தகுந்த உடைகளை அணியுங்கள்.
  • போதுமான ஓய்வு தேவை.
  • சரியான பயண் திட்டமிடுதல் அவசியம்.

Question 2.
ஓட்டுநர்களின் களைப்பு மற்றும் சோர்வினைக் குறைக்கும் சில வழிகளைப் பட்டியலிடுக.
விடை:
ஓட்டுநர்களின் களைப்பு மற்றும் சோர்வினைக் குறைக்கும் சிவ வழிகள் :

  • நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளுமுன் குறைந்தபட்சம் முந்தைய இரவில் 6 மணி தூக்கம் அவசியம்
  • சாதாரணமாக விழித்திருக்கும் போது கால இடைவெளிகளில் பயணம் மேற்கொள்க.
  • ஒவ்வொரு இரண்டு மணி நேர பயணத்திற்குப் பின் அல்லது ஒவ்வொரு 120 கி.மீ பயணத்திற்குப் பின் சிறிய இடைவெளி தேவை.
  • முன்னிருக்கையில் விழித்திருக்கும் பயணியுடன் பயணம் செய்க.
  • கண்களில் சோர்வு தென்பட்டால் வாகனம் ஓட்டுவதை நிறுத்துக.
  • ஓரு நாளைக்கு 8/10 மணி நேரத்திற்கு மேல் பயணிக்க வேண்டாம்.
  • வாய்ப்பு இருந்தால் வண்டி ஓட்டுவதை பார்த்து கொள்க.
  • மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்த வேண்டாம்.
  • கலைப்பால் உணர்ந்தால் 15 நிமிடங்கள் மனதை இதமாக்குக.
  • இசையை விட வானொலி பேச்சைக் கேட்க.
  • வாகனத்தின் வெப்பநிலையை இதமாக வைத்துக் கொள்க.
  • வாகன இருக்கையை புதிய நிலையில் வைத்துக்கொள்க.
  • சத்தான நொறுக்குத் தீனிகளை உண்க. சர்க்கரை தவிர்க்கவும். குடிமையியல்
  • கார் கதவு சன்னலை திறக்கவும்.
  • மிதமான அளவில் காபி அருந்துக.
  • நிறுத்துக, உடலை நிமிர்த்துக. சரிப்படுத்துக.

IX. செயல் திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
குழந்தைகளுக்கான சில அடிப்படை சாலை பாதுகாப்பு விதிகளைப் பட்டியலிடுக.

Question 2.
சாலை பாதுகாப்பு முறைகளைச் செய்து காட்டுக.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 3.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினைத் தயாரித்துப் பள்ளியில் சுற்றுக்கு அனுப்புக.

8th Social Science Guide சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தேசிய நெடுஞ்சலைகளில் ஒவ்வொரு ………………… கி.மீ தொலைவிலும் ஓர் அவசர சிகிச்சை ஊர்தி நிறுத்தப்பட்டிருக்கின்றது.
அ) 50
ஆ) 100
இ) 150
ஈ) 200
விடை:
அ) 50

Question 2.
இருசக்கர வண்டியின் பின் இருக்கையில் ……………. நபர் மட்டுமே அமர அனுமதி உண்டு .
அ) இல்லை
ஆ) ஒரு
இ) இரண்டு
ஈ) இரண்டுக்குமேல்
விடை:
ஆ) ஒரு

Question 3.
சிவப்பு வண்ண இலக்கத்தகடு ……………. வாகனத்தில் பயன்படுத்தப்படுகிறது.
அ) அயல்நாட்டு தூதர்கள்
ஆ) சாதாரண குடிமகன்
இ) மாவட்ட ஆட்சியர்
ஈ) இந்தியக் குடியரசுத் தலைவர்
விடை:
ஈ) இந்தியக் குடியரசுத் தலைவர்

Question 4.
சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டு ………..
அ) 1991 – 2000
ஆ) 2001 – 2010
இ) 2011 – 2020
ஈ) 2021 – 2030
விடை:
இ) 2011 – 2020

Question 5.
விபத்துகளின் நேரடி விளைவுகள் …………….
அ) உயிரிழப்பு
ஆ) படுகாயம்
இ) உடமைகளுக்கு சேதம்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 6.
விபத்துக்களின் போது ஏற்படும் காயங்களின் தீவிரத்தை குறைப்பவை ………………
அ) இருக்கைவார்பட்டை மற்றும் தலைக்கவசம்
ஆ) போதைப் பொருட்கள் மற்றும் மருந்துகள்
இ) பகல்கனவு மற்றும் இசை
ஈ) போதை பொருட்கள் மற்றும் அதிவேகம்
விடை:
அ) இருக்கைவார்பட்டை மற்றும் தலைக்கவசம்

Question 7.
சாலை விபத்துக்கான காரணம்
அ) தடுத்து நிறுத்தும் கருவி பழுது
ஆ) டயர் வெடித்தல் இ) அதிகப்படியான சுமை
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும் கை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பெரும்பாலான உயிரிழப்பு விபத்துக்கள் …………. காரணமாக ஏற்படுகின்றது.
விடை:
அதிக வேகம்

Question 2.
மது அருந்தியதை கண்டறிய …………. செய்யப்படுகிறது
விடை:
சீரற்ற சுவாச பரிசோதனை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 3.
சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்வதன் முக்கிய நோக்கம் ………. ஆகும்.
விடை:
நேரத்தை மிச்சப்படுத்தல்

Question 4.
இரு சக்கர வண்டியில் ஏறுவதற்கு முன் …………. பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
விடை:
தலைக்கவசம் அணிவதை

Question 5.
மோட்டார் வாகனச் சட்டம் ……………. ல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ………….. ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குவந்தது
விடை:
1988, 1989

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 5

IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தினை குறைக்கும் பொழுது தனது வலது கையினை மேல் உயர்த்தி நிதானமாக மேலும் கீழம் அசைக்க வேண்டும்.
விடை:
சரி

Question 2.
தீயணைப்பு வண்டி, அவசர சிகிச்சை ஊர்தி, காவல்துறை வாகனங்கள் ஆகியன மீட்பு வாகனங்கள்
விடை:
சரி

Question 3.
தகவல் குறியீடுகள் பொதுவாக செவ்வக வடிவில் இருக்கும்
விடை:
சரி

Question 4.
இரவில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும் போது சைகைவிளக்குகளை காவலர்கள் அணைத்துவிடலாம்
விடை:
சரி

Question 5.
வாகனம் ஓட்டும்போது எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

Question 1.
பின்வரும் கூற்று / கூற்றுகளில் சரியில்லாதது எது / எவை?
i) இந்தியா, பிரேசிலியா பிரகடனத்தில் 2015 ஆம் அண்டு கையெழுத்திட்டது.
ii) சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இரு சித்திரபுத்தகங்களை வெளியிட்டுள்ளது.
iii) சாலை பாதுகாப்பு வாரம் இந்தியாவில் பொதுப்பணித்துறை அமைச்சகத்தால் துவங்கப்பட்டது.
iv) பிரேசிலியா பிரகடனம் முதலாவது உலகளாவிய உயர்மட்ட மாநாடு

அ) i, iii மட்டும்
ஆ) ii, iv மட்டும்
இ) i, ii மட்டும்
ஈ) iii, iv மட்டும்
விடை:
ஈ) iii, iv மட்டும்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 2.
கூற்று : மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துகள் ஏற்படுகிறது.
காரணம் : மது அருந்துவது கவனத்தைக் குறைத்து பார்வையை தடைபடுத்துகின்றது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்றுசரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

Question 3.
கூற்று : ஒளிரும் சிவப்பு மற்றும் மஞ்சள் சமிக்ஞைகளில் கடக்க வேண்டும்.
காரணம் : வரிக்கோடு பாதையில் ஒருபோதும் கடக்கக் கூடாது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை:
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

Question 4.
பொருந்தாத ஒன்றை கண்டுபிடி
அ) இருக்கை வார்பட்டை அணியவேண்டும்.
ஆ) இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிய வேண்டும்
இ) வாகனம் ஓட்டும்பொழுது செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது
ஈ) நெடுஞ்சாலை விதிகளை மதிக்க வேண்டாம்
விடை:
ஈ) நெடுஞ்சாலை விதிகளை மதிக்க வேண்டாம்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
சாலைவிபத்து படுகாயங்களுக்கும் இறப்பிற்கும் காரணம் என்ன?
விடை:

  • பிரச்சனை சாலைகளால் அல்ல நம் கவனக்குறைவால்தான். இது போன்ற விபரீதங்கள் ஏற்படுகின்றன.
  • மெதுவாக நகரும் வாகனங்கள் மற்றும் அதிவேக வாகனங்களைக் கொண்ட பலவகைப்பட்ட சிக்கலான போக்குவரத்தும் காரணம்.

Question 2.
‘108 அவசரகால சேவை’ – குறிப்பு வரைக.
விடை:
அவரசகால சேவை (108) :

  • இது ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம் (மருத்துவ ஊர்தி), காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள் ஆகியவற்றை அளிக்கும் ஒரு அவசரகால சேவையாகும்.
  • சாலையில் யாரேனும் பாதிக்கப்பட்டதைக் கண்டால் பதற்றப்படாமல் உதவிக்கு 108 என்ற எண்ணையும் சாலை விபத்துகளுக்கு 103 என்ற எண்ணையும் அழைக்கவும்.

Question 3.
இந்திய தண்டனைச் சட்டம் 304 A பிரிவு கூறுவதென்ன?
விடை:
இந்திய தண்டனைச் சட்டம் 304 A பிரிவு:
இந்தப்பிரிவின் கீழ் ஓட்டுநர் மீது கிரிமினல் குற்றவழக்கு பதிவு செய்ய நேரிடும். கண்மூடித்தனமாக ஓட்டுவதாலும் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பு தொடர்பான குற்றங்கள் தொடர்புடையது இப் பிரிவ.

Question 4.
ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
விடை:கட்டாய ஆவணங்கள் :

  • ஓட்டுநர் உரிமம்
  • வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்
  • வரிச் சான்றிதழ்
  • காப்பீட்டுச் சான்றிதழ்
  • வாகன உறுதித்தன்மை மற்றும் அனுமதிச் சான்றிதழ்

Question 5.
விளக்குக : “பல்வேறு வண்ண இலக்கத்தகடுகள்”
விடை:

  • சிவப்பு வண்ணத் தகடு – குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் வாகனங்களில்
  • நீல வண்ண த் தகடு – அயல்நாட்டுத் தூதர்கள் / பிரதிநிதிகள் பயன்படுத்தும் வாகனங்களில்
  • வெள்ளை வண்ணத்தகடு – சாதாரணமான குடிமகனுக்குச் சொந்தமான வாகனத்தில்
  • மஞ்சள் வண்ணத் தகடு – வணிக ரீதியான வாகனத்தில்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

Question 6.
‘சேது பாரதம்’ என்றால் என்ன?
விடை:
சேது பாரதம் :

  • தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்களை கட்டுவதற்கான திட்டம் சேது பாரதம். இது 2016ல் தொடங்கப்பட்டது.
  • 2019ம் ஆண்டுக்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் இருப்புப் பாதை குறுக்கீடு இல்லாமல் உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

Question 7.
“வாழ்வை காப்பாற்று நிறுவனம் (Save LIFE foundation)” – சிறு குறிப்பு தருக.
விடை:
வாழ்வை காப்பாற்று நிறுவனம் :

  • இது ஒரு சுதந்திரமான, இலாபநோக்கில்லாத, அரசு சாரா, பொதுத் தொண்டு அறக்கட்டளையாகும்.
  • இந்நிறுவனம் இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ வசதியினை மேம்படுத்துவதற்காக பணியாற்றி வருகின்றது.

Question 8.
“சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டு 2011 – 2020” குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டு 2011 – 2020 :

  • ஐக்கியநாடுகள் பொதுச்சபையினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பதிற்றாண்டில் (2011 – 2020) இலட்சக்கணக்கான உயிர்களை
  • சாலைகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல்
  • சாலை உபயோகிப்பவர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
  • அவசரகால சேவையினை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் காக்க முற்படுகின்றது.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ள சாலைப்பாதுகாப்பு குறிப்புகள் யாவை?
விடை:
பரிந்துரைக்கப்பட்டுள்ள குறிப்புகள் :
ஒவ்வொருவரும் கைக்கொள்ள வேண்டியன.

  • இருக்கை வார் பட்டையை பயன்படுத்துதல்
  • இருசக்கரவண்டியில் தலைக்கவசம் அணிதல்
  • நிலைமைக்கு ஏற்றாற்போல் பாதுகாப்பான வேகத்திலும் பாதுகாப்பான இடைவெளி விட்டும் வாகனம் ஓட்டுதல்
  • மதுபோதையில் வாகனம் ஓட்டாதிருத்தல் குடிமையியல்
  • வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியை பயன்படுத்தாதிருத்தல்
  • பாதசாரிகள் அல்லது மிதிவண்டி ஓட்டுபவர் போல பார்க்கக்கூடிய அளவில் இருத்தல்.
  • நெடுஞ்சாலை விதிகளை அறிந்து மதித்தல்
  • வாகனத்தை நல்ல நிலையில் பராமரித்தல்
  • ஓட்டும் வாகனத்திற்கு பயிற்சியும் ஓட்டுநர் உரிமமும் பெறுதல்
  • விபத்து நடந்தால் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை அறிந்து கொள்ளுதல்.

Question 2.
சாலை விபத்துக்கான ‘பல்வேறு காரணிகளை’ விளக்குக.
விடை:
விபத்துக்கான பல்வேறு காரணிகள் :
ஓட்டுநர்கள் – அதிக வேகத்தில் செலுத்துதல், கண்மூடித்தனமாக ஓட்டுதல், விதிகளை மீறுதல், குறியீடுகளை புரிந்துகொள்ள தவறுதல், களைப்பு மற்றும் மது அருந்துதல்.

பாதசாரிகள் – கவனமின்மை, கல்வியறிவின்மை, தவறான இடங்களில் சாலையைக் கடப்பது, சாலையில் நடப்பது, போக்குவரத்து விதிகளை கவனிக்காமல் சாலையில் குறுக்காக செல்பவர்.

பயணிகள் – வாகனத்திற்கு வெளியே உடலின் பகுதிகளை நீட்டுதல், ஓட்டுநர்களுடன் பேசுதல், படிக்கட்டுகளில் பயணம் செய்தல், ஓடும் பேருந்தில் ஏறுதல்.

வாகனங்கள் – தடுத்து நிறுத்தும் கருவி மற்றும் வாகனத் திசை திருப்பி பழுதடைதல், சக்கரத்தில் உள்ள டயர் வெடித்தல், போதுமான வெளிச்சம் தராத முகப்பு விளக்குகள், அதிகப்படியான மற்றும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்படி சுமை ஏற்றுதல்

சாலைகளின் தரம் – பழுதடைந்த சாலைகள், குழிகளான சாலைகள், நெடுஞ்சாலைகளை இணைக்கும் அரிக்கப்பட்ட ஊரக சாலைகள், சட்டத்திற்கு புறம்பான வேகத்தடைகள் மற்றும் திருப்பங்கள்.

வானிலை – மூடுபனி, பனி, கனமழை, காற்று, புயல் மற்றும் ஆலங்கட்டி மழை.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 5 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் 6

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

8th Social Science Guide மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் …………………… மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அ) ஐ.நா.சபை
ஆ) உச்ச நீதிமன்றம்
இ) சர்வதேச நீதிமன்றம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) ஐ.நா.சபை

Question 2.
1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் …………… இல் கூடினர்.
அ) பெய்ஜிங்
ஆ) நியூயார்க்
இ) டெல்லி
ஈ) இவைகளில் எதுவுமில்லை
விடை:
அ) பெய்ஜிங்

Question 3.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
அ) 1990
ஆ) 1993
இ) 1978
ஈ) 1979
விடை:
ஆ) 1993

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 4.
ஐ.நா. சபை 1979 ஆம் ஆண்டை ……………………… சர்வதேச ஆண்டாக அறிவித்தது.
அ) பெண்குழந்தைகள்
ஆ) குழந்தைகள்
இ) பெண்கள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) குழந்தைகள்

Question 5.
உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
அ) டிசம்பர் 9
ஆ) டிசம்பர் 10
இ) டிசம்பர் 11
ஈ) டிசம்பர் 12
விடை:
ஆ) டிசம்பர் 10

Question 6.
மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?
அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)
இ) மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)
ஈ) சர்வதேசப் பெண்கள் ஆண்டு
விடை:
அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHR)

Question 7.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?
அ) ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
இ) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவர்
ஈ) ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி
விடை:
ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Question 8.
உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?
ஆ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 50
விடை:
ஆ) 30

Question 9.
தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?
அ) 5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை
ஆ) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
இ) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
விடை:
ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

Question 10.
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
அ) புது டெல்லி
ஆ) மும்பை
இ) அகமதாபாத்
ஈ) கொல்கத்தா
விடை:
அ) புது டெல்லி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ ………………. உண்டு .
விடை:
உரிமை

Question 2.
மனித உரிமைகள் என்பது ……………. உரிமைகள்.
விடை:
இயல்பான அடிப்படை

Question 3.
மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு …………………
விடை:
1997

Question 4.
இந்திய அரசியலமைப்பின் 24 வது சட்டப்பிரிவு ……………. ஐ தடைசெய்கிறது.
விடை:
குழந்தைத் தொழிலாளர் முறை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 5.
ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு ……………..
விடை:
1945

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகள் ஒரே மாதிரியானவை.
விடை:
தவறு

Question 2.
மனித மற்றும் குடிமகனின் உரிமைகள் அறிவிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டது.
விடை:
தவறு

Question 3.
1993ஆம் ஆண்டு மனித உரிமைச் சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக வழிவகுத்தது.
விடை:
சரி

Question 4.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.
விடை:
தவறு

Question 5.
மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய, மாநில அளவிலான மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
தவறான கூற்றை கண்டறியவும்
அ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.
ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.
இ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.
ஈ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டதாகும்.
விடை:
ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்

Question 2.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.
அ) இது 1993 இல் நிறுவப்பட்டது.
ஆ) மனித உரிமை மீறல் வழக்குகளில் குற்றவாளியைத் தண்டிக்க ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை .
இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.
ஈ) இந்த ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்புகிறது.
விடை:
இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்

Question 3.
கூற்று : டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
காரணம் : இது எலினார் ரூஸ்வெல்டின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்று காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 4.
பின்வரும் கூற்றை ஆராய்க.
1) மாநில மனித உரிமைகள் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு ஆகும்.
2) மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக்

கொண்டதாகும். மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1,2
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) 1 மட்டும்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
மனித உரிமைகள் என்றால் என்ன?
விடை:
மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக் குழுக்களின் தன்மை, மொழி மற்றம் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும்.

Question 2.
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் (UDHR) முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் (UDHR) முக்கியத்தும் :

  • உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா பொதுச்சபையால் 1948ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இந்த அறிவிப்பு பாரிஸ் நகரில் (பிரான்ஸ்) 1948ம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. (பொதுச்சபை தீர்மானம் 217 A)
  • இது மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என்று அழைக்கப்படுகிறது.
  • இதன் கொள்கைகள் 185க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. உலக மனித உரிமைகள் அறிவிப்பு 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Question 3.
இந்திய அரசியலமைப்பின் 45 வது சட்டப்பிரிவு எதனை அறிவுறுத்துகிறது?
விடை:
இந்திய அரசியலமைப்பின் 45வது சட்டப்பிரிவு :
பிரிவு 45 ஆறு (6) வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசு முயல்கிறது.

Question 4.
கல்வி உரிமைச் சட்டம் பற்றி எழுதுக.
விடை:
கல்வி உரிமைச் சட்டம் :
சட்டப்பிரிவு 21A அரசாங்கம் 6 முதல் 14வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.

Question 5.
பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களைக் குறிப்பிடுக.
விடை:
பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் :

  • இந்து விதவை மறுமணச் சட்டம் 1856 (விதவைகள் மறுமணத்தை சட்ட பூர்வமாக்கியது)
  • வரதட்சணைத் தடைச் சட்டம் 1961
    (வரதட்சணை என்ற பெயரில் மோசமாக நடத்துவதற்கு கடுமையான தண்டனை வழங்குகிறது.
  • வன்கொடுமை தடுப்பு சட்டம் 2005 (கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் துன்புறுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது)

Question 6.
அரசியல் உரிமைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
விடை:
அரசியல் உரிமைகள் :

  • கருத்துச் சுதந்திரம்
  • அமைதியாக கூட்டம் நடத்துதல்
  • தன் நாட்டின் அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் உரிமை
  • வாக்களிக்கும் உரிமை
  • பேச்சுரிமை
  • ந தகவல்களைப் பெறும் உரிமை

Question 7.
மனித உரிமைகளின் ஐந்து முதன்மைப் பிரிவுகளை குறிப்பிடுக.
விடை:
மனித உரிமைகளின் முதன்மைப் பிரிவுகள் :

  1. வாழ்வியல் உரிமைகள்
  2. அரசியல் உரிமைகள்
  3. சமூக உரிமைகள்
  4. பொருளாதார உரிமைகள் 5.கலாச்சார உரிமைகள்

VII. விரிவான விடையளி

Question 1.
மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகளை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 2
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 3

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 2.
மனித உரிமைகளின் ஏதேனும் ஐந்து அடிப்படைப் பண்புகளை விவரி.
விடை:
மனித உரிமைகளின் அடிப்படைப்பண்புகள் :
இயல்பானவை : மனித உரிமை எந்த ஒரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை.

அடிப்படையானவை : மனிதனின் வாழ்க்கையும் கண்ணியமும் இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் அர்த்தமற்றதாகிவிடும்.

மாற்றமுடியாதவை : மனித உரிமைகள் தனிநபரிடம் இருந்து பறிக்கமுடியாதவை

பிரிக்க முடியாதவை : பிற உரிமைகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்தாலும் இந்த அடிப்படை மனித உரிமைகளை மறுக்க முடியாது.

உலகளாவியவை: ஒருவரின் தோற்றம் (அல்லது) நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் இந்த உரிமைகள் அமல்படுத்தப்படுகின்றன.

உலகளாவியவை : ஒருவரின் தோற்றம் (அல்லது) நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் இந்த உரிமைகள் அமல்படுத்தப்படுகின்றன.

சார்புடையவை : ஒரு உரிமையைப் பயன்படுத்தும் போது மற்றொன்றை உணராமல் இருக்க முடியாது. இவை ஒன்றுக்கொன்று சார்புடையவை

Question 3.
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் யாவை?
விடை:
குழந்தைகள் பாதுகாப்புக்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் :
இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

கல்வி உரிமைச் சட்டம் :
சட்டப்பிரிவு 21A அரசாங்கம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.

குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்புச் சட்டம் 1986)
15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது.

சிறார் நீதிச் சட்டம் 2000 (குழந்தைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்)
பொதுவான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.

போக்சோ (POSCO) சட்டம் 2012
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம். குழந்தைகளின் நலனே மிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டிய அம்சம் எனக் கருதுகிறது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
உலகளாவிய மனித உரிமைகள் அறிவிப்பு யாருக்கு பொருந்தும்? இது உங்களுக்கு ஏன் மக்கியமாக இருக்கிறது?
விடை:
உலகளாவிய மனித உரிமைகள் அறிவிப்பு அனைவருக்கும் பொருந்தும்.
குற்றவாளிகள், நாட்டுத் தலைவர்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள், ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், அகதிகள், நாடற்றோர், வேலையற்றோர், வேலையிலுள்ளோர், வங்கியாளர்கள், தீவிரவாதிகள், ஆசிரியர்கள், நடனக்கலைஞர்கள் விண்வெளிவீரர்கள் …..

IX. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு

Question 1.
நீங்கள் அனுபவிக்கும் பத்து உரிமைகள் மற்றும் உங்களுக்கான பொறுப்புகளைப் பட்டியலிடுக.
விடை:
நான் அனுபவிக்கும் உரிமைகள் :

  • வாழ்வுக்கான உரிமை
  • கல்விக்கான உரிமை
  • தனிநபர் சுதந்திர உரிமை
  • சமயச் சுதந்திர உரிமை
  • கருத்துச் சுதந்திர உரிமை
  • இயங்குவதற்கான உரிமை
  • சமத்துவ உரிமை
  • நீதிபெறும் உரிமை கழக அமைப்புகள் நிறுவுவதற்கான உரிமை காலச்சார சுதந்திர உரிமை

எனக்கான பொறுப்புகள் :

  • அரசியலமைப்பை ஆதரிக்க, பாதுகாக்க வேண்டிய கடமை.
  • ஜனநாயக முறைகளில் பங்கேற்றல்
  • மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி சட்டங்களை மதித்தல் மற்றும் கீழ்ப்படிதல்
  • மற்றவர்களின் உரிமைகள், நம்பிக்கைகள், கருத்துக்களை மதித்தல்.
  • தல சமூகத்தில் பங்கேற்றல்
  • மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புக்களுக்கான வருமானவரி மற்றும் பிறவரிகளை நேர்மையுடன் குறிப்பிட்ட காலவரையரையில் செலுத்துதல்.
  • தேவை ஏற்பட்டால் நாட்டைப் பாதுகாத்தல்
  • சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சனைகளை அறிந்து கொள்ளுதல்.

8th Social Science Guide மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் Additinal Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஹேபியஸ் கார்பஸ் சட்டம் (இங்கிலாந்து) ____________
அ) 1628
ஆ) 1679
இ) 1689
ஈ) 1789
விடை:
ஆ) 1679

Question 2.
மனித உரிமைகள் பற்றிய சிந்தனை வலுவாக எழுச்சி பெறக் காரணம் ____________.
அ) பிரெஞ்சுப் புரட்சி
ஆ) முதல் உலகப்போர்
இ) அமெரிக்க விடுதலைப் போர்
ஈ) இரண்டாம் உலகப் போர்
விடை:
ஈ) இரண்டாம் உலகப் போர்

Question 3.
மனித உரிமைகள் பிரகடனத்தில் __________ சட்டப்பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன.
அ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 50
விடை:
ஆ) 30

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 4.
சமயச் சுதந்திரம் ஒரு __________
அ) வாழ்வியல் உரிமை
ஆ) சமூக உரிமை
இ) கலாச்சார உரிமை
ஈ) அரசியல் உரிமை
விடை:
இ) கலாச்சார உரிமை

Question 5.
____________ ஒரு வாழ்வியல் உரிமையாகும்.
அ) வாழ்வதற்கான உரிமை
ஆ) வாக்களிக்கும் உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி உரிமை
விடை:
அ) வாழ்வதற்கான உரிமை 6

Question 6.
மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவற்றின் கீழுள்ள துறைகள் இந்திய அரசியலமைப்பின் ___________ அட்டவணையில் உள்ளது.
அ) ஐந்தாவது
ஆ) ஆறாவது
இ) ஏழாவது
ஈ) எட்டாவது
விடை:
இ) ஏழாவது

Question 7.
சர்வதேச பெண்கள் ஆண்டு ________
அ) 1975
ஆ) 1976
இ) 1977
ஈ) 1978
விடை:
ஈ) 1978

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
முக்கியமான தேசியச் சொத்தாகக் கருதப்படுவது ___________
விடை:
குழந்தை

Question 2.
முதுமை காலத்தில் ___________ மனித உரிமைகளாக கருதப்படுகின்றன.
விடை:
பாதுகாப்பும் ஆதரவும்

Question 3.
__________ பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சமமான உரிமைகளை உறுதி செய்கிறது.
விடை:
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம்

Question 4.
___________ 1997 பெண்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
விடை:
பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம்

Question 5.
அனைத்து வகையான __________ மற்றும் தவறான பயன்பாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது சமூகத்தின் முக்கிய நோக்கம்.
விடை:
சுரண்டல்கள்

Question 6.
சிவில் உரிமைகள் ____________ உருவாக்கப்படுகின்றன.
விடை:
சமூகத்தினால்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 4

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
ஒரு தனிநபர் சமுதாயத்தில் முழுமையாக பங்கேற்பது அவசியமானது அல்ல.
விடை:
தவறு

Question 2.
எந்த ஒரு தேசமும் தனிநபருக்கான மனித உரிமைகளை பறிக்க இயலும்.
விடை:
தவறு

Question 3.
குழந்தைத் தொழிலாளர் சட்டம் 15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த வழி செய்கிறது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 4.
ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் ஒரு அரசு சார்பு நிறுவனம்.
விடை:
தவறு

Question 5.
அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் தொகுப்பானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வேரூன்றியிருந்தது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
தவறான கூற்றைக் கண்டறியவும்
அ) பிரிவு 39 (F) ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகை செய்கிறது.
ஆ) பிரிவு 45 – 18 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க முயல்கிறது.
இ) சட்டப்பிரிவு 21A கல்வி உரிமைச் சட்டம்.
ஈ) போக்சோ சட்டம் – பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்.
விடை:
ஆ) பிரிவு 45 – 18 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க முயல்கிறது.

Question 2.
‘குழந்தைகள் உரிமை’ குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.
அ) பதினான்கு வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர்.
ஆ) குழந்தைகளின் உரிமைகள் ஐ.நா. சபையால் வெளியிடப்பட்டது.
இ) குழந்தை ஒரு முக்கியமான தேசிய சொத்து.
ஈ) தேசத்தின் எதிர்காலம் அந்நாட்டின் குழந்தைகள் எவ்வாறு வளர்ந்து முதிர்ச்சியடைகிறார்கள் என்பதை பொறுத்தது.
விடை:
அ) பதினான்கு வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தை எனப்படுவர்.

Question 3.
கூற்று: UDHR உலகில் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட ஆவணம் ஆகும்.
காரணம்: உலக மனித உரிமைகள் அறிவிப்பு (UDHR) 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று சரி காரணம் தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது

Question 4.
பின்வரும் கூற்றை ஆராய்க
1) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) பல உறுப்பினர்களைக் கொண்ட ஆணையம்.
2) NHRC ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது.

மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
அ) ஐந்தாவது
ஆ) ஆறாவது
இ) 1 மற்றும் 2
ஈ) எதுவுமில்லை
விடை:
இ) 1 மற்றும் 2

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
“மனித உரிமைகளுக்கான உலகளாகவி அறிவிப்பு (UDHR)” கூறுவது என்ன?
விடை:
மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHR) முகவுரை :
“மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் அறிவாற்றலையும் மனசாட்சியையும் இயற்பண்பாகச் கொண்டவர்களாகவும் எல்லா மக்களிடையேயும் பொதுவான சகோதரத்துவத்தின் உணர்வை வளர்க்க கடமைப்பட்டவர்களும் ஆவர்.

Question 2.
“சைரஸ் சிலிண்டர் கி.மு. 539” குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
சைரஸ் சிலிண்டர் கி.மு. 539 :

  • பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னரான மகா சைரஸ் அடிமைகளை விடுவித்தார். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தார். இன சமத்துவத்தை நிலை நாட்டினார்.
  • ஆணைகள் அக்காடியன் மொழியில், கியூனி பார்ஃம் எழுத்துக்களில் சுட்ட களிமண் சிலிண்டரில் பதிவு செய்யப்பட்டன.
  • ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல்மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Question 3.
மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள் யாவை?
விடை:
மனித உரிமைகள் கொண்டுள்ள அடிப்படை மதிப்புகள்:

  • கண்ணியம் (வாழ்வதற்கான மற்றும் ஒருமைப்பாட்டிற்கான உரிமை)
  • நீதி (நேர்மையான விசாரணைக்கான உரிமை)
  • சமத்துவம் (சட்டத்தின் முன் அனைவரும் சமம், பாகுபாடின்மை )

Question 4.
“மனித உரிமைகள் தினம்” எப்பொழுது கொண்டாடப்படுகிறது? ஏன்?
விடை:

  • மனித உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா. பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.

Question 5.
“மனித உரிமைகள் ஆணையம்” குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க ஐ.நா. சபையின் முக்கிய அங்கமான பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC) அதிகாரம் பெற்றது.

மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக தேசிய மற்றும் மாநில அளவிலான மனித உரிமை ஆணையங்கள் நிறுவப்பட்டன.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Question 6.
மனித உரிமை நிறுவனங்கள் – விளக்குக.
விடை:
மனித உரிமை நிறுவனங்கள் :
அரசு சாரா நிறுவனங்கள் அரசாங்கங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன் மனித உரிமைக் கொள்கைகளின்படி செயல்படுமாறு வலியுறுத்துகின்றன.

ஆன்ஸ்டி இண்டர்நேஷனல், குழந்தைகள் பாதுகாப்பு நிதியம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவை சில அரசு சாரா நிறுவனங்களாகும்.

Question 7.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் என்றால் என்ன ?
விடை:
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் :

  • இச்சட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாரிசுதாரர்களின் சட்ட பூர்வ கடமையாகிறது.
  • முதுமை காலத்தில் பாதுகாப்பும் ஆதரவும் மனித உரிமைகளாக கருதப்படுகின்றன.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
“எழுதப்பட்ட ஆவணங்களின் முன்னோடி” எனக் கருதப்படுபவை யாவை?
விடை:
எழுதப்பட்ட ஆவணங்களின் முன்னோடி:

  • மகாசாசனம் 1215 (இங்கிலாந்து)
  • உரிமை மனு 1628 (இங்கிலாந்து)
  • ஹேபியஸ் கார்பஸ் சட்டம் 1679 (இங்கிலாந்து)
  • ஆங்கில உரிமைகள் மசோதா 1689
  • மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைகள் பற்றிய பிரான்சின் அறிவிப்பு 1789
  • அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உரிமைகள் மசோதா 1791

Question 2.
“தேசிய மனித உரிமைகள் ஆணையம்” குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
தேசிய மனித உரிமைகள் ஆணையம்:

  • இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) 1993 அக்டோபர் 12 அன்று நிறுவப்பட்டது.
  • இது சுதந்திரமான, சட்டபூர்வமான, அரசியலமைப்பு சாராத ஓர் அமைப்பாகும்.
  • பல உறுப்பினர்கள் கொண்ட இது ஒரு தலைவரையும் பிற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
  • குடியரசுத் தலைவர் ஆணைய தலைவரையும் பிற உறுப்பினர்களையும் நியமிக்கிறார். அவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை. இதில் எது முன்னதாக வருகிறதோ அது வரை பதவியில் நீடிப்பர்.
  • ஆணையம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை சட்டம், புலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் திட்டம், பயிற்சி அளித்தல், நிர்வாகம்.
  • இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Question 3.
பெண்கள் உரிமைகளை விவரி.
விடை:
பெண்கள் உரிமைகள் :
பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளும் மனித உரிமைகளாகும். பெண்களுக்கு தங்களது உரிமைகளை முழுமையாகவும், சமமாகவும் அனுபவிக்கவும், அனைத்து பாகுபாடுகளிலிருந்தும் விடுபடவும் உரிமை உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் சமமான உரிமைகளை உறுதி செய்கிறது.

1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மசோதாவை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்றுக் கொண்டது. இது பெண்களுக்கான சர்வதேச உரிமைகள் மசோதா என அழைக்கப்படுகிறது.

1995 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நான்காவது உலக மகளிர் மாநாடு, பெண்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும், உலகளவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு தளத்தை உருவாக்கியது.

யுனிபெம் (UNIFEM) என்றழைக்கப்படும் பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு 1995 முதல் செயல்பட்டு வருகிறது. இது பெய்ஜிங் மாநாட்டின் முடிவுகளை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்டது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 4 மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் 5

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

8th Social Science Guide சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சமயச்சார்பின்மை என்பது
அ) அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது
ஆ) அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.
இ) எந்தசமயத்தைச்சார்ந்தகுடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாகவாழ்தல்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணைக்கமாக வாழ்தல்

Question 2.
இந்தியா ஒரு ………….. கொண்ட நாடாகும்.
அ) பல்வேறு சமயநம்பிக்கை
ஆ) பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை
இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்

Question 3.
இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு
அ) 1951
ஆ) 1976
இ) 1974
ஈ) 1967
விடை:
ஆ) 1976

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 4.
பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?
அ) அடிப்படை உரிமைகள்
ஆ) அடிப்படை கடமைகள்
இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
ஈ) அரசியலமைப்பின் முகவுரை
விடை:
ஈ) அரசியலமைப்பின் முகவுரை

Question 5.
சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது
அ) நீதித்துறை
ஆ) பாராளுமன்றம்
இ) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை
ஈ) அடிப்படை உரிமைகள்
விடை:
ஈ) அடிப்படை உரிமைகள்

Question 6.
அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது?
அ) சமய போதனைகள்
ஆ) நீதி நெறிக்கல்வி
இ) உடற்கல்வி
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
ஈ) இவற்றுள் எதுவுமில்லை

Question 7.
ஒரு நாடு சமயச்சார்ப்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது
அ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்
ஆ) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளைத் தடை செய்தால்
இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
ஈ) எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்
விடை:
இ) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சமயம் நமக்கு ……………….. போதிக்கவில்லை .
விடை:
பகைமையை

Question 2.
சமயச்சார்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது ………………… அளிக்கிறது.
விடை:
சமஉரிமை

Question 3.
…………….. என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்.
விடை:
ஆத்திகம்

Question 4.
நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் ……………. மற்றும் …………. ஊக்குவிப்பதாகும்.
விடை:
தேசிய ஒற்றுமைமையயும், ஒருமைப்பாட்டையும்

Question 5.
பிரிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் ………………….. காட்டுவதைத் தடை செய்கிறது.
விடை:
பாகுபாடு

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
இந்திய நாட்டிற்கென ஒரு சமயம் உள்ளது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 2.
சமயச்சார்பின்மை என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது.
விடை:
தவறு

Question 3.
மொகலாய பேரரசர் அக்பர் சமயச் சகிப்புத்தன்மைக் கொள்கையை பின்பற்றினார்.
விடை:
சரி

Question 4.
சமண சமயம் சீனாவில் தோன்றியது.
விடை:
தவறு

Question 5.
இந்திய அரசாங்கம் அனைத்து சமய விழாக்களுக்கும் விடுமுறையை அறிவிக்கிறது.
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
i) இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சார்பின்மை விலைமதிப்பற்ற ஒன்றாகும்.
ii) சமயச்சார்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை .
iii) அரசியலமைப்பு பிரிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது.
iv) அக்பரின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது.

அ) i, ii மட்டும்
ஆ) ii, iii மட்டும்
இ) iv மட்டும்
ஈ) i, ii, iv மட்டும்
விடை:
ஈ) i, ii, iv மட்டும்

Question 2.
கூற்று : ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்.
காரணம் : அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு.

i) கூற்று சரி காரணம் தவறு
ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
iii) கூற்று தவறு, காரணம் சரி
iv) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
விடை:
ii) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 3.
கூற்று : இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்.
காரணம் : இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட நாடாகும்.

i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
ii) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை .
iii) கூற்று தவறு, காரணம் சரி
iv) இரண்டும் தவறு
விடை:
i) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது

Question 4.
தவறான இணையைத் தேர்க.
i) தீன் இலாகி – ஒரு புத்தகம்
ii) கஜுராஹோ – இந்து கோவில்
iii) அசோகர் – பாறைக் கல்வெட்டு
iv) இக்பால் – கவிஞர்
விடை:
i) தீன் இலாகி – ஒரு புத்தகம்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
சமயச்சார்பின்மையைப் பரப்பிட பங்களித்த சில இந்தியர்களது பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
சமயச்சார்பின்மைப் பரவலில் பங்களித்த இந்தியர்கள் :

  • இராஜாராம் மோகன்ராய்
  • சர் சையது அகமதுகான்
  • இரவீந்திரநாத் தாகூர்
  • மகாத்மா காந்தி
  • B.R அம்பேத்கர்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 2.
சமயச்சார்பின்மை என்பது எதனைக் குறிக்கிறது?
விடை:
சமயச்சார்பின்மை
“பிற மதங்களின் மீது சகிப்புத்தன்மையான அணுகு முறை மற்றும் வெவ்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்த குடிமக்களுடன் அமைதியாக இணங்கி வாழும் ஒரு மனப்பாங்கு” சமயச்சார்பின்மை ஆகும்.

Question 3.
சமயச்சார்பின்மையின் நோக்கங்களைக் கூறுக.
விடை:
சமயச் சார்பின்மையின் நோக்கங்கள் :
ஒரு சமயம் சார்ந்த குழு மற்றொரு சமயக்குழுவின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது.

ஒரு சமயத்தைச் சார்ந்த சில உறுப்பினர்கள் அதே சமயத்தைச் சார்ந்த மற்ற உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பது. – அரசானது எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையும் பின்பற்ற வலியுறுத்தாமல் இருப்பது அல்லது தனிநபர்களின் சமய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது.

Question 4.
அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
விடை:
அரசிடமிருந்து சமயத்தை பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் சமயச்

சார்பின்மை என்பது அரசையும் மதத்தையும் தனித்தனியாக பிரிக்கும் கோட்பாடு ஆகும். பரந்த அளவில் கூறுவதென்றால் அரசானது சமய விவகாரங்களிலோ அல்லது சமயமானது அரசின் நடவடிக்கைகளிலோ தலையிடாது இருத்தல் ஆகும்.

ஒவ்வொரு குடிமகனும் தனது மனச்சாட்சியின்படி சுதந்திரமாக அவரது நம்பிக்கையை பரப்புதல், பின்பற்றுதல் மற்றும் சமயத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை வெளியிடுதல், மாற்றிக் கொள்ளுதல் அல்லது இல்லாமல் இருத்தல்.

Question 5.
சமயச்சார்பற்ற நாட்டின் சிறப்புப் பண்புக் கூறுகள் யாவை?
விடை:
சமயச் சார்பற்ற நாட்டின் பண்புகள் :

  • சுதந்திரக் கோட்பாடு – (எந்தச் சமயத்தையும் பின்பற்ற அரசின் அனுமதி)
  • சமத்துவக் கோட்பாடு – (எந்த ஒரு சமயத்திற்கும் அரசு மற்றவற்றிற்கு மேலாக முன்னுரிமை அளிக்காமை)
  • நடுநிலைக் கோட்பாடு – (சமய விவகாரங்களில் அரசின் நடுநிலைமை)

Question 6.
சமயச்சார்பின்மை தொடர்பான இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள் மூன்றினைக் குறிப்பிடுக.
விடை:
சமயச்சார்பின்மை தொடர்பான இந்திய அரசியலமைப்புப் பிரிவுகள் :

  • பிரிவு 15 – சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை தடை செய்தல்.
  • பிரிவு 27 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்
  • பிரிவு 27 – எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்தவொரு குடிமகனையும் வரி செலுத்துமாறு வற்புறுத்தாமை.

VII. விரிவான விடையளி

Question 1.
சமயச்சார்பற்ற கல்வி நமக்கு ஏன் தேவை?
விடை:
சமயச்சார்பற்ற கல்வி நமக்கு தேவை.
ஏனெனில்

  • குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கும், சக்திவாய்ந்த ஆற்றல் மற்றும் அறிவான நோக்கத்தினை உருவாக்குவதற்கும்.
  • தார்மீக மற்றும் மனிதநேய பார்வையை உருவாக்குவதற்கும்.
  • இளைஞர்களை நல்ல குடிமக்களாக்க பயிற்சியளிப்பதற்கும்
  • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டுறவு வாழ்க்கை போன்ற மக்களாட்சியின் மதிப்புகளை பலப்படுத்துவதற்கும்
  • வாழ்க்கை குறித்த பரந்த பார்வையை அளிப்பதற்கும்
  • பிறரை பாராட்டுதல் மற்றவர் நிலையிலிருந்து புரிந்து கொள்ளும் மன்பான்மையை வளர்ப்பதற்கும்.
  • அன்பு, சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு, சமத்துவம் மற்றும் இரக்க உணர்வை வளர்ப்பதற்கும்.
  • பொருள் முதல்வாத கொள்கை மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கிணைக்கவும் தேவைப்படுகிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 2.
இந்தியா போன்ற நாட்டிற்குச் சமயச்சார்பின்மை அவசியம் – நிரூபிக்கவும்.
விடை:
இந்தியா போன்ற நாட்டிற்குச் சமயச் சார்பின்மை அவசியம்.
ஏனெனில்

  • இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்பது மட்டுமின்றி சமய மேலாதிக்கத்தைக் தடுக்க பல்வேறு வழிகளில் செயலாற்றுகிறது.
  • ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையின் மிகச் சிறந்த பேறான சுதந்திரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க சமயச்சார்பின்மை உதவுகிறது.
  • சமயச்சார்பற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை உரிமைகளுக்கு இந்திய அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது.
  • சமயச் சார்பின்மை நாகரிகப்பண்புகள் வாழ அனுமதிக்கிறது.
  • மக்கள் பிற சமயத்தை மதிக்க வலியுறுத்துகிறது
  • சமயச் சார்பின்மை சமய நம்பிக்கையைப் பொறுத்தவரை சம உரிமையை வழங்குகிறது.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
சில சமயக் குழுக்கள் தங்களது சமயம் நரபலியை அனுமதிக்கிறது என்று கூறினால் அரசாங்கம் அவர்கள் கொள்கையில் தலையிடுமா?
விடை:
ஆம். சில சமயக் குழுக்கள் தங்களது சமயம் நரபலியை அனுமதிக்கிறது என்று கூறினால் அரசாங்கம் அவர்கள் கொள்கையில் தலையிடும்.

எந்த சமயமும், உயிருள்ள எந்தப் பொருளையும் கொல்ல போதிக்கவில்லை, இரக்கம் (கருணை) காட்டுதல் அனைத்து சமயங்களின் அடிப்படைப்பண்பு. நமது நாட்டின் சட்டம் கூட உயிர்களைக் கொல்லுதல் சட்டவிரோதம் என அறிக்கையிடுகிறது. மேலும் நரபலி மனித உரிமைகளுக்கு எதிரானது.

IX. செயல் திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
உனது பள்ளி நாட்காட்டியில் உள்ள விடுமுறை நாட்களைக் கவனி. அவற்றில் வெவ்வேறு சமயங்களுடன் தொடர்புடையவை எவை? அவற்றைச் சமயங்களின் அடிப்படையில் பட்டியலிடுக. அது எதனைக் குறிக்கிறது.
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் 2
(பொதுவாக பொங்கல் திருவிழா, உழவர் திருநாள்)

Question 2.
நீ எவ்வாறு சமயச் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வாய்?
Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் 3

8th Social Science Guide சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சமயச் சார்பின்மை இந்தியா போன்ற சமூகத்திற்கு ……………… ஒன்றாகும்.
அ) மதிப்புமிக்க
ஆ) மதிப்பற்ற
இ) பொருளற்ற
ஈ) அர்த்தமற்ற
விடை:
அ) மதிப்புமிக்க

Question 2.
ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக் ஓர் …………….. பத்திரிக்கை எழுத்தாளர்.
அ) அமெரிக்க
ஆ) பிரெஞ்சு
இ) இத்தாலிய
ஈ) ஆங்கிலேய
விடை:
ஈ) ஆங்கிலேய

Question 3.
சமயச்சார்பின்மை என்பது பிற மதங்களின் மீதான ……………………..
அ) பகைமை
ஆ) சகிப்புத்தன்மை
இ) அன்பு
ஈ) பொறுமை
விடை:
ஆ) சகிப்புத்தன்மை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 4.
தீன் – இலாஹி என்பது ……………. பின்பற்றிய மதசகிப்பு தன்மை கொள்கை.
அ) அசோகர்
ஆ) ஷாஜஹான்
இ) அக்பர்
ஈ) அலெக்ஸாண்டர்
விடை:
இ) அக்பர்

Question 5.
இந்தியாவில் அரசாங்க மதம் …………..
அ) இந்து
ஆ) புத்தகம்
இ) கிறித்தவம்
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
ஈ) இவை ஏதுமில்லை

Question 6.
சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்தரம் வழங்கும் அரசியலமைப்பு ………….
அ) பிரிவு 16
ஆ) பிரிவு 26
இ) பிரிவு 28
ஈ) பரிவு 29 (2)
விடை:
ஆ) பிரிவு 26

Question 7.
அக்பரின் கல்லறை உள்ள இடம் ………………….
அ) சிக்கந்தரா
ஆ) புதுடெல்லி
இ) அவுரங்காபாத்
ஈ) செகந்திராபாத்
விடை:
அ) சிக்கந்தரா

Question 8.
………………. வது சட்டத்திருத்தத்தின் மூலம் முகவுரையில் சமயச்சார்பற்ற என்ற சொல் சேர்க்கப்பட்டது.
அ) 370
ஆ) 356
இ) 42
ஈ) 35
விடை:
இ) 42

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சமயச் சார்பின்மை நம்மை ……………… பண்புடன் வாழ அனுமதிக்கிறது
விடை:
நாகரிகப்

Question 2.
இந்திய அரசியலமைப்பில் 42வது சட்டத்திருத்தம் ………………. ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
விடை:
1976

Question 3.
சமயச்சார்பற்ற நாட்டில் எவருக்கும் தனிப்பட்டமுறையில் ……………….. அளிப்பதில்லை.
விடை:
சலுகை

Question 4.
நவீன தேசிய நாடுகள் அனைத்தும் …………….. கொண்டிருக்கின்றன
விடை:
பல சமயங்களை

Question 5.
இந்தியா பல்வேறு சமய …………. கொண்ட சமூகம்.
விடை:
பன்முகத்தன்மை

III. பொருத்துக.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் 4

IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
சமயச் சார்பின்மை சமய நம்பிக்கையை சுதந்திரமாக வெளிப்படுத்த, பின்பற்ற மற்றும் பரப்பு உரிமை வழங்குகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 2.
இந்தியாவில் முதலில் சமய சகிப்புத் தன்மையை கடைப்பிடித்த பேரரசர் அக்பர் ஆவார்.
விடை:
தவறு

Question 3.
சமயச் சார்பின்மை இந்தியாவில் மக்களாட்சி வளாச்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
விடை:
தவறு

Question 4.
சமய நம்பிக்கைகள் அடிப்படையில் அரசு பாகுபாடு காட்டுகிறது.
விடை:
தவறு

Question 5.
நமது அரசியலமைப்பு 1947ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விடை:
தவறு

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
தவறான கூற்றை கண்டறியவும்
i) சமயச் சார்பற்ற இந்திய நாடானது அனைத்து சமய விழாக்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கிறது.
ii) நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் தேசிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஊக்குவிப்பது அல்ல.
iii) சமயச் சார்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
iv) குறுகிய மனப்பான்மையை போக்குவதற்கு சமயச் சார்பற்ற கல்வி தேவை.

அ) i, ii மட்டும்
ஆ) ii, iii மட்டும்
இ) i, iv மட்டும்
ஈ) i, ii மட்டும்
விடை:
இ) i, iv மட்டும்

Question 2.
கூற்று : சமயச்சார்பற்ற கல்வி தேவை.
காரணம் : பொருள் முதல் வாத கொள்கை மற்றும் ஆன்மீக கொள்கையை ஒருங்கிணைக்க தேவைப்படுகிறது.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை:
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 3.
கூற்று : நவீன தேசிய நாடுகள் அனைத்தும் பல சமயங்களைக் கொண்டிருக்கின்றன.
காரணம் : அனைத்து சமயங்களையும் சகித்துக் கொள்ளும் தன்மை அவசியமானதாகும்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

Question 4.
தவறான இணையைத் தேர்க.
அ) புத்தகம் – ஸ்ரீலங்கா
ஆ) தெய்வீக நம்பிக்கை – தீன் – இலாஹி
இ) கல்லறை – சிக்கந்தர
ஈ) பம்பாய் மாநிலம் & ரத்திலால் – 1954
விடை:
அ) புத்தகம் – ஸ்ரீலங்கா குடிமையியல்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரும் சமயங்களின் பெயர்களைக் கூறு.
விடை:

  • இந்து
  • சமணம்
  • புத்தம்
  • சீக்கியம்

Question 2.
ஆத்திகத்திற்கும் சமயச் சார்பின்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
விடை:
ஆத்திகம் மற்றும் சமயச் சார்பின்மை :

  • ஆத்திகம் – கடவுள் அல்லது கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருத்தல்
  • சமயச்சார்பின்மை – அரசோ, சமயமோ ஒன்று மற்றொன்றின் விவகாரங்களில் தலையிடாதிருத்தல்

Question 3.
சமயச் சார்பின்மை குறித்து கவிஞர் இக்பாலின் கருத்து என்ன?
விடை:
சமயச் சார்பின்மை குறித்து கவிஞர் இக்பால் :
‘சமயம் நமக்குப் பகைமையைப் போதிக்கவில்லை நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்தியா நமது வீடு”

Question 4.
“அசோகரின் 12வது பாறை அரசானை” – சிறு குறிப்பு வரைக.
விடை:
அசோகரின் 12வது பாறை அரசானை :
கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே “அரசானது எந்த ஒரு மதத்தைச் சார்ந்த பிரிவினருக்கும் எதிராக குற்றம் காட்டாது” என்று அறிவித்த முதல் பேரரசர் அசோகர் ஆவார்..

தனது 12வது பாறை அரசானையில் “அனைத்து மதப்பிரிவினருடன் சகிப்புத் தன்மையோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது மிகுந்த மரியாதைக்குரிய மன நிலையை வளர்த்துக் கொள்ளவும்” தம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்

Question 5.
“கஜீராஹோ இந்துக் கோவில் (19ம் நூற்றாண்டு)” – சிறு குறிப்பு வரைக
விடை:
கஜீராஹோ கோவில் வழக்கமான சிகரத்திற்குப் பதில் இந்து பாணியிலான கோபுரம், சமண விதானம், புத்த ஸ்தூபி மற்றும் இஸ்லாமிய பாணியிலான குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

Question 6.
இந்தியா குறித்து நமது அரசியலமைப்பு சட்ட முகவுரை கூறுவது என்ன?
விடை:
நமது அரசியலமைப்புச் சட்ட முகவுரையின்படி :
“இந்தியா ஓர் இறையாண்மை வாய்ந்த சமதர்ம, சமயச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு.”

Question 7.
சமயச் சார்பின்மை ஏன் மக்களாட்சி வளர்ச்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது?
விடை:
சமயச் சார்பின்மை மக்களாட்சி வளர்ச்சிக்கான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏனெனில், நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அனைத்து மக்களும் அவர்களது சமயத்தை பின்பற்ற சுதந்திரம் பெற்றிருந்தால் மட்டுமே வலிமையான மற்றும் ஒற்றுமையான நாட்டை உருவாக்க இயலும் என்பதை உணர்த்திருந்தனர்.

Question 8.
அக்பர் தன்னுடைய கல்லறை குறித்து வலியுறுத்தியது என்ன?
விடை:
தன்னுடைய கல்லறை குறித்து அக்பரின் வலியுறுத்தல் :

  • கல்லறையில் இஸ்லாம், இந்து சமயம் உள்ளிட்ட பல்வேறு சமயங்களைச் சார்ந்த கூறுகள் இடம் பெறவேண்டும்.
  • அக்பரின் கல்லறையை நாம் ஆக்ரா அருகில் உள்ள சிக்கந்தராவில் காணலாம்.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
சமயச் சார்பின்மை குறித்து இந்திய அரசியலமைப்பு கொண்டுள்ள சிறப்புக் கூறுகளை விவரி.
விடை:
சிறப்புக் கூறுகள் :

  • அரசானது எந்த ஒரு சமயத்தாலும் தன்னை அடையாளம் காணாது. சமயத்தால் கட்டுப்படுத்தப்படாததாகவும் இருக்கும்.
  • ஒவ்வொருவரும் அவரது விருப்பத்திற்கேற்ப எந்த ஒரு சமயத்தையும் பின்பற்றும் உரிமையை அரசு உறுதி செய்கிறது.
  • எந்த சமயத்திற்கும் அரசு முன்னுரிமை, சலுகை அளிப்பதில்லை.
  • எந்த ஒரு நபருக்கும் அவரது சமய நம்பிக்கையின் காரணமாக அரசு எவ்வித பாகுபாடும் காட்டாது.
  • இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தை உருவாக்குவதோடு தனிமனித மாண்பிற்கும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கிறது.

Question 2.
அரசியலமைப்பு பிரிவுகளின் அடித்தளம் – விவரி
விடை:

  • பிரிவு 15 – சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பிப்பதை தடை செய்கிறது.
  • பிரிவு 16 – பொது வேலை வாய்ப்பில் சமமான வாய்ப்பளித்தல்
  • பிரிவு 25(1) – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் பரப்பவும் உரிமை வழங்குகிறது.
  • பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்ணயிக்க சுதந்திரம்
  • பிரிவு 27 – எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்தவொரு குடிமகனையும் வரி செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது.
  • பிரிவு 28 – சில கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்து நடைபெறும் சமய போதனைகள் அல்லது சமய வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் உரிமை.
  • பிரிவு 29 (2) – அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 3 சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல் 5

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 23 பொருளாதார உயிரியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 23 பொருளாதார உயிரியல்

9th Science Guide பொருளாதார உயிரியல் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது
அ) பிஸ்ஸி கல்ச்சர்
ஆ) செரிகல்ச்சர்
இ) அக்வா கல்ச்சர்
ஈ) மோனா கல்ச்சர்
விடை:
அ) பிஸ்ஸி கல்ச்சர்

Question 2.
கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?
அ) ஜெர்சி
ஆ) ஹேல்ஸ்டீ ன் – பிரிஸன்
இ) ஷகிவால்
ஈ) ப்ரௌன் சுவிஸ்
விடை:
இ) ஷகிவால்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 3.
பின்வருவனவற்றில் எது இத்தாலியன் இன தேனீ
அ) ஏபிஸ் மெல்லிபோரா
ஆ) ஏபிஸ் டார்சோட்டா
இ) ஏபிஸ் ப்ளோரா
ஈ) ஏபிஸ் சிரானா
விடை:
அ) ஏபிஸ் மெல்லிபோரா

Question 4.
பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை ?
அ) ரோகு
ஆ) கட்லா
இ) மிரிகால்
ஈ) சின்காரா
விடை:
ஈ) சின்காரா

Question 5.
தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
அ) கருவுறாத முட்டை
ஆ) கருவுற்ற முட்டை
இ) பார்த்தினோஜெனிஸிஸ்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
அ) கருவுறாத முட்டை

Question 6.
கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
அ) ஹோல்ஸ்டீன் ஃபிரிஸன்
ஆ) டார்ஸெட்
இ) ஷகிவால்
ஈ) சிவப்பு சிந்தி
விடை:
அ) ஹோல்ஸ்டீ ன் – ஃபிரிஸன்

Question 7.
தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
அ) ஏபிஸ் டார்சோட்டா
ஆ) ஏபிஸ் ப்ளோரா
இ) ஏபிஸ் பெல்ல பெரா
ஈ) ஏபிஸ் இண்டிகா
விடை:
ஈ) ஏபிஸ் இண்டிகா

Question 8.
மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை
அ) தோட்டக்கலை
ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்
இ) போமாலஜி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்

Question 9.
பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை
அ) லைக்கன்
ஆ) ரைசோபியம்
இ) மைக்கோரைசா
ஈ) அசிட்டோபாக்டர்
விடை:
இ) மைக்கோரைசா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 10.
காளான்களின் தாவர உடலம் என்பது
அ) காளான் விதை
ஆ) மைசீலியம்
இ) இலை
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) மைசீலியம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
குயினைன் மருந்து _____ லிருந்து பெறப்படுகிறது.
விடை:
சின்கோனா அபிசினாலிஸ்

Question 2.
கேரிக்கா பப்பையா இலை ____ நோயை சரிசெய்ய பயன்படுகிறது.
விடை:
டெங்கு காய்ச்சல்

Question 3.
மண்புழு உரத்தை உருவாக்குவது _____ மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்.
விடை:
மண்புழுக்களில் சுரக்கும்

Question 4.
_____ கோழை வளர்ப்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக்கூடிய சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.
விடை:
கடல் நீர்வாழ் உயிரி

Question 5.
தேன் கூட்டில் உள்ள வளமான தேனீ ____ ஆகும்.
விடை:
இராணி தேனீ

Question 6.
____ தேனைப் பதப்படுத்துகிறது.
விடை:
பார்மிக் அமிலம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 7.
_____ முறையில் பல்வேறுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலாம்.
விடை:
பலவகை மீன் வளர்ப்பு

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
மைக்கோரைசா ஒரு பாசி.
விடை:
தவறு – மைக்கோரைசா ஒரு பூஞ்சை

Question 2.
பால் கொடுக்கும் விலங்குகள், விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.
விடை:
தவறு – இருபயன் விலங்குகள் விவசாயம் மற்றும் போக்கு வரத்திற்கு பயன்படுகின்றன.

Question 3.
ஏபிஸ் புளோரியா என்பது பாறைத் தேனீ.
விடை:
தவறு – ஏபிஸ் டார்சேட்டா என்பது பாறைத்தேனீ

Question 4.
ஓங்கோல் கால்நடைகள் ஒரு வெளிநாட்டு இனம்.
விடை:
தவறு – ஓங்கோல் கால்நடைகள் ஒரு இந்தியநாட்டு இனம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 5.
வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக் காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 80

V.கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.

Question 1.
அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்
விடை:
அ.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 81

ஆ. மகரந்தம் மற்றும் தேன் ரசம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 82

இ. இறால் மற்றும் நன்னீர் இறால்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 83

ஈ. தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 84

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?
விடை:
மருத்துவத் தாவரங்களிலிருந்து பெறப்படும் பொருள்கள் எ.கா. ஆல்கலாய்டுகள், டெர்பினாய்டுகள்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 2.
காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?
விடை:

  • சமையலறைத் தோட்டங்கள் – இது நமக்குத் தேவையான காய்கறிகளை வீட்டைச் சுற்றி சிறிய அளவில் வளர்ப்பதாகும். எ.கா. பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், தக்காளி.
  • வணிகத்தோட்டங்கள் – சந்தைகளில் விற்பனை செய்யும் நோக்கத்தோடு பெரிய அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் முறை.
  • செயற்கைக் காய்கறித் தோட்டங்கள் – இது கட்டடங்கள் பசுமை வீடுகள் குளிர்சாதனப் பண்ணைகள் மற்ற பிற செயற்கையான சூழ்நிலைகளில் காய்கறிகளை வளர்க்கும் முறையாகும்.

Question 3.
காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.
விடை:

  1. குளிர்வித்தல் – காளான்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுகிறது. எனவே அதிக நாட்கள் கெடாமல் பதப்படுத்த முடியும்.
  2. உலர்த்துதல் – உணவு உலர்த்தியில் வைத்து காளான்களை உலர்த்தி நீரை வெளியேற்றுவது.

Question 4.
வேதி உரங்களைக் காட்டிலும் மண்புழு உரம் எவ்வாறு சிறந்தது என்பதைப் பட்டியலிடு.
விடை:

  1. இது தாவர வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்தினை அளிக்கிறது.
  2. தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளடக்கியது.
  3. கரிமப் பொருட்கள் மண்ணில் சிதைவடைவதை மேம்படுத்துகிறது.
  4. நோய்க்கிருமிகள் மற்றும் நச்சுத்தன்மை அற்றது.

Question 5.
மண்புழு வளர்ப்பில் பயன்படும் மண்புழு சிற்றினங்கள் யாவை?
விடை:

  • பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ் (இந்திய நீலவண்ண மண்புழு
  • எஸ்செனியாபெடிடா (சிவப்பு மண்புழு)
  • யூட்ரிலஸ் யூஜீனியே (ஆப்ரிக்க மண்புழு)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 6.
தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக.
விடை:

  1. தேன் புரைத் தடுப்பானாகவும் பாக்டீரிய எதிர்ப்பு பொருளாகவும் இரத்தத்தை தூய்மையாக்கவும் பயன்படுகிறது.
  2. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
  3. ஆயுர்வேதம் யூனானி மருத்துவத்தில் பயன்படுகிறது.
  4. இருமல் சளி காய்ச்சல் தொண்டை வறட்சியை நீக்க பயன்படுகிறது.
  5. நாக்கு குடற்புண்களை குணப்படுத்த உதவுகிறது.
  6. செரிமானத்திற்கும் பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது.

VII. விரிவாக விடையளி

Question 1.
மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பின் நிறைகளை எழுதுக?
விடை:
நிறைகள்:

  1. ஊட்டச்சத்தும் நீரும் பாதுகாக்கப்படுகின்றன.
  2. கட்டுப்படுத்தப்பட்ட தாவர வளர்ச்சி காணப்படும்.
  3. பாலை வனங்களிலும் ஆர்டிக் துருவப் பகுதிகளிலும் இந்த முறை ஒரு சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.

Question 2.
காளான் வளர்ப்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.
விடை:
தாவர விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும்.

காளான் வளர்த்தலின் நிலைகள்:

  1. கலத்தல்: வைக்கோலுடன் மாட்டுச்சாணம் கரிமக் கனிம உரங்களைச் சேர்த்து கலப்பு உரமானது தயாரிக்கப்படுகிறது. இது 50°C வெப்ப நிலையில் பாதுகாக்கப்படுகிறது.
  2. காளான் வித்து: ஸ்பான் என்பது காளான் விதையாகும். இந்த ஸ்பான் விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.
  3. உறையிடுதல்: விதைகலந்த உரத்துடன் மண்ணானது மெல்லிய அடுக்காக தூவப்படுகின்றன. இது ஈரப்பதத்தை வழங்கி வெப்பநிலையைச் சீராக்குகின்றன.
  4. பொருத்துதல்: குண்டூசி போன்ற வெண்மையான காளான் மொட்டுகளுக்கு ஊசிகள் என்று பெயர்.
  5. அறுவடை செய்தல்: ஒரு வாரத்தில் 15 – 23°C வெப்பநிலை 3 செ.மீ. உயரம் வரை வளர்கிறது. மூன்று வார காலத்தில் முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.
  6. பதப்படுத்துதல்: இந்த காளான்கள் குளிர்வித்தல் உலர்த்துதல் கலனில் அடைத்தல் மற்றும் வெற்றிட குளிர்வித்தல் முறையில் பதப்படுத்தப்படுகின்றன.

Question 3.
மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?
விடை:

  1. விவசாயக் கழிவுகள்
  2. பயிர்க்கழிவுகள் – நெல் வைக்கோல் அரிசி உமி நார்க்கழிவு
  3. இலை குப்பைகள்
  4. பழம் மற்றும் காய்கறிகள் கழிவுகள்
  5. விலங்கு கழிவுகள்
  6. சாண – எரி வாயு கழிவுகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 4.
மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?
விடை:
அ) இனப்பெருக்க குளம்: ஆரோக்கியமான இனப்பெருக்கத்திற்கேற்ற முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்கள் சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள் அனுப்பப்படுகின்றது.

ஆ) குஞ்சு பொரிக்கும் குழிகள்: இனப்பெருக்க குளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற முட்டைகள் பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன.

இ) நாற்றங்கால் குளங்கள்: 2 முதல் 7 நாட்களுக்குப் பிறகு இளம் மீன் குஞ்சுகள் 60 நாட்கள் வரை 2 – 2.5 செ.மீ. அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.

ஈ) வளர்க்கும் குளங்கள்: இளம் மீன்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மூன்றுமாதம் வரை 10 முதல் 15 செ.மீ. நீளமுடைய மீனாக வளரும் வரை இங்கு வளர்க்கப்படுகின்றன.

உ) இருப்புக்குளங்கள்: விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

Question 5.
பல வகைக் கால்நடை இனங்களை சரியான உதாரணத்துடன் வகைப்படுத்துக.
விடை:
கால்நடை இனங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்

1. பால் உற்பத்தி இனங்கள்
2. இழுவை இனங்கள்
3. இரு பயன்களையும் தரும் இனங்கள்

1. பால் உற்பத்தி இனங்கள் :

  • பாலினைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன.
  • “பசுக்கள்” அதிகளவு பால் தருபவை உள்நாட்டு இனங்கள் வெளிநாட்டு இனங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
  • உள்நாட்டு இனங்கள் எ.கா. சாகிவால், சிவப்பு சிந்தி மற்றும் கிர். இவ்வகை இனங்கள் வலுவான கால்கள்
    நிமிர்ந்த திமில், தளர்வான தோல்களையும் கொண்டது மற்றும் சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.
  • “அயல்நாட்டு இனங்கள்” ஜெர்ஸி ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன் ஆகியவை.

2. இழுவை இனங்கள் :
இவ்வகை இன மாடுகள் உழுதல், பாசனம், வண்டியிழுத்தல் போன்ற வேலைகளைச் செய்ய உதவுகிறது.
எ.கா. காங்கேயம், உம்பளச்சேரி, மாலவி
இவற்றிலுள்ள எருதுகள் கடினமான இழுவை வேலையை நன்றாகச் செய்தாலும் பசுக்கள் குறைந்த அளவு பாலினைக் கொடுக்கிறது.

3. இரு பயன்களையும் தரும் இனங்கள்

  • இவ்வகை இனங்கள் பால் உற்பத்திக்காகவும், பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்காகவும் பயன்படுகின்றன.
  • இந்தியாவில் இவ்வகையைச் சார்ந்த மாடுகள் அதிகமாக விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
  • எ.கா. அரியானா மாடுகள், ஓங்கோல் மாடுகள்
  • இந்தியாவில் எருமை மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பசுக்களைவிட எருமைகளே அதிகளவு பாலினைக் கொடுக்கின்றன. எ.கா. முரா எருமை, மெசானா மற்றும் சுர்தி எருமை

VIII. சிந்திக்க

Question 1.
உயிரி உரமிடல் விவசாயத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது நிரூபி.
விடை:

  1. உயிர் உரமானது தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும்.
  2. இலைகள் தாவர விலங்கு கழிவுகள் மற்றும் நுண்ணுயிர்களால் உருவாகின்றன.

Question 2.
ஒவ்வொரு தேன் கூடும் அறுங்கோண அறைகளைக் கொண்டிருக்கும். அவை எதனால் ஆக்கப்பட்டிருக்கும்? அதன் சிறப்பம்சம் என்ன?
விடை:

  1. தேன் கூடுகள் வேலைக்காரத் தேனீயின் வயிற்றுப்புற சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் மெழுகினால் உருவாக்கப்படுகிறது.
  2. அறுங்கோண வடிவம் என்பது ஒரு பயனுள்ள அமைப்பு.
  3. இராணித் தேனீயின் முட்டைகள் மகரந்தம் மற்றும் தேனீனை சேமிக்க உதவுகிறது.
  4. இவ்வமைப்பு ஒரு திடமான அமைப்பு
  5. குறைந்த பொருள்களைக் கொண்டு அதிக இடத்தினை இவ்வறுங்கோணம் உருவாக்குகிறது.

9th Science Guide பொருளாதார உயிரியல் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
கனிகள் காய்கறிகள் வளர்த்தலுடன் தொடர்புடைய பிரிவு எது? _____
விடை:
தோட்டக்கலை

Question 2.
பழவியல் என்றால் என்ன?
விடை:
பழங்களின் உற்பத்தி –
போமாலஜி

Question 3.
வெள்ளாட்டுச்சாண உரத்தில் காணப்படும் நைட்ரஜனின் அளவு என்ன?
விடை:
3%

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 4.
ரைசோபியம் ஒரு
விடை:
பாக்டீரியம்

Question 5.
ஆயூர்வேதத்தின் தந்தை யார்?
விடை:
சாரக்கா சம்ஹிதா

Question 6.
யோகாவின் தந்தை
விடை:
பதஞ்சலி

Question 7.
உருளைக்கிழங்கு உற்பத்தியில் இந்தியாவின் இடம்
விடை:
முதலிடம்

Question 8.
பூஞ்சை எதிர் பொருளை உற்பத்தி செய்யும்
விடை:
அசோட்டோபாக்டர்

Question 9.
வாஸ்குலர் தாவரங்களின் வேர்களுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்ளும் பூஞ்சை
விடை:
மைக்கோரைசா

Question 10.
நீர்பெரணிகள் ஆகும்.
விடை:
அசோலா

Question 11.
முதல்நிலை வளர்சிதை மாற்றப்பொருள் யாது?
விடை:
சாகிவால்

Question 12.
யூனானி மருத்துவத்தின் தந்தை யார்?
விடை:
கிப்போகிரேட்ஸ்

Question 13.
பட்டன் காளானின் அறிவியல் பெயர் என்ன?
விடை:
அகாரிகஸ் பைஸ்போராஸ்

Question 14.
எந்த வெப்பநிலையில் காளான்கள் சிறப்பாக வளர்கின்றன.
விடை:
15°C – 23°C ல்

Question 15.
இந்திய பசுக்களும் காளைகள் ஆகும்.
விடை:
போஸ் இன்டிகஸ்

Question 16.
இனங்கள் வலுவானகால்களை உடையவை
விடை:
கிர்

Question 17.
இனங்கள் சிறப்பான நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை
விடை:
கார்போஹைட்ரேட்

Question 18.
அயல்நாட்டு இனங்கள் _____
விடை:
ப்ரௌன் ஸ்விஸ்

Question 19.
நன்னீரின் உப்புத்தன்மை
விடை:
0.5 ppts ய

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 20.
கடல்நீரின் உப்புத்தன்மை என்ன?
விடை:
30 முதல் 35 ppt

Question 21.
மீன் உற்பத்தியில் இந்தியாவின் இடம்
விடை:
7வது

Question 22.
கெண்டை மீன்கள் ____ எனப்படும்.
விடை:
கார்ப்புகள்

Question 23.
கெளுத்தி இவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
பூனை மீன்

Question 24.
ஜீலேபி கெண்டை என்று அழைக்கப்படும் மீன்
விடை:
கிலேப்பியா

Question 25.
கடல்நீரில் வளரும் பினேய்டு இறால்கள் வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
விடை:
கூனி இறால் வளர்ப்பு

Question 26.
கேரளாவில் பின்பற்றப்படும் பராம்பரிய இறால் வளர்ப்பு இது?
விடை:
பொக்காலி வளர்ப்பு

Question 27.
மண்புழுக்கள் புனிதமானவை என்று கூறியவர் யார்?
விடை:
கிளியோபாட்ரா

Question 28.
சிறிய தேனீக்கள்
விடை:
ஏபிஸ்ஃபுளோரியே

Question 29.
ஆப்ரிக்கன் தேனீக்கள்
விடை:
ஏபிஸ்ஆடம்சோனி

Question 30.
தேனில் உள்ள நொதி
விடை:
இன்வர்டேஸ்

Question 31.
மெசானா சுர்தி எவைகளைக் குறிக்கிறது?
விடை:
எருமை இனங்கள் ஆகும்.

Question 32.
இருபயன்தரும் இனங்கள் யாவை?
விடை:
ஓங்கோல்

Question 33.
ஜாதிமாட்டின் பெயர் தருக.
விடை:
உம்பளச்சேரி

Question 34.
ஒரிக்கலச்சர் என்பது
விடை:
காய்கறிப்பண்ணை
தொடர்பான அறிவியல்

Question 35.
புளோரிகல்ச்சர் என்றால் என்ன?
விடை:
பூந்தோட்ட பண்ணை
தொடர்பான அறிவியல்
பிரதமமந்திரி பயிர்க்

Question 36.
‘PMFBY’ விரிவாக்கம் தருக.
விடை:
காப்பீட்டுத் திட்டம்

Question 37.
விவசாயிகளுக்கான உருவாக்கப்பட்ட செயலி எது?
விடை:
உழவன் செயலி (Uzhavan App)

Question 38.
தாவரங்கள் வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு கூரையுடன் கூடிய அமைப்பு
விடை:
பசுமை வீடு அல்லது
பாலித்தீன் வீடு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 39.
பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் பயன் என்ன?
விடை:
வேளாண் பயிர்காப்பீட்டுத்
திட்டமாகும்

Question 40.
BGR – 34 என்றால் என்ன?
விடை:
இரத்த சர்க்கரை அளவு
ஒழுங்குபடுத்தும் மருந்து

Question 41.
ஹைட்ரோ போனிக்ஸ் முறையை உருவாக்கியவர் _____
விடை:
ஜீலியஸ் வானி சாக்ஸ் – ஜெர்மன் தாவரவியலாளர்

Question 42.
கம்பம் பள்ளத்தாக்கில் காணப்படும் மாட்டினங்கள் ______
விடை:
புலிக்குளம் மாடுகள்

Question 43.
இளம் ஆண் கன்று இவ்வாறு அழைக்கப்படுகிறது.
விடை:
கிடாரி

Question 44.
____ ஆற்று இறால்கள்
விடை:
மேக்ரோபிராசியம் ரோசென்
பெர்சி

Question 45.
______ இந்திடிய நிலவண்ண மண்புழுக்கள் ஆகும்.
விடை:
பெரியோனிக்ஸ்
எஸ்கவேட்டல்

Question 46.
_____ இன மாடுகள் அதிக காலம் பால் கொடுக்கும் மாடுகள் ஆகும்.
விடை:
ஹோல்ஸ்டியன்
ஃப்ரெய்ஸ்பன்

Question 47.
இவை கடின நார்ச்சத்து கொண்ட தீவனங்கள் ஆகும்.
விடை:
தவிடு அல்லது சக்கை

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 85

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 86

III. கூற்று மற்றும் காரண வகை

Question 1.
கூற்று : கனிம உரங்கள் மண்ணிற்கு ஊட்டச்சத்தினை வழங்குகின்றது.
காரணம் : தாவரக்கழிவுகளிலிருந்து பெறப்படும் கனிம உரங்கள் நைட்ரஜன் சத்தினை மண்ணுக்கு வழங்குகின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 2.
கூற்று : யோகா பயிற்சி மூளை மற்றும் உடலுடன் தொடர்பான பயிற்சி ஆதலால் இது சாதாரண நோய்களுக்கான தீர்வு இல்லை. காரணம் : யோகா மருத்துவ துறைகளில் முக்கிய பங்கு அளிக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

Question 3.
கூற்று : பால் உற்பத்தியானது மாட்டினங்கள் உண்ணும் தீவனத்தை பொறுத்தது.
காரணம் : கறவை இனங்களின் பால் உற்பத்தியானது இனப்பெருக்க காலத்தை பொறுத்தது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

IV. பொருத்தி விடையளி

Question 1.
சுற்றுச்சுழல் அறிவியல் என்பது அறிவியலில் சுற்றுக்சூழலை பற்றி அறிவது. அப்படியானால் போமாலஜி என்பது.
விடை:
பழவியல் அல்லது கனியியல் பற்றியது

Question 2.
அனபினாவானது அசோலர் என்ற நீர்ப்பெரணியில் கூட்டுயிரியாக வாழ்கின்றது. அப்படியானால் லெகூமின்ஸ் தாவரங்களின் வேர் முண்டுகளில் காணப்படுவது.
விடை:
ரைசோபியம்

Question 3.
நிலவேம்பு சிக்கன்குனியாவை குணப்படுத்தும். அப்படியானால் வெப்பானை குணப்படுத்தும் நோய்.
விடை:
படர்தாமரை

Question 4.
மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு முறை ஹைட்ரோபோனிக்ஸ் அப்படியானால் காற்று ஊடக தாவர வளர்ப்பு முறை
விடை:
ஏரோபோனிக்ஸ்

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
தோட்டக்கலை என்றால் என்ன?
விடை:
இது கனிகள் காய்கறிகள் மற்றும் அழகுத் தாவரங்களை வளர்த்தலுடன் தொடர்புடையது. ஹார்டிகல்சர் அல்லது தோட்டக்கலை ஆகும்.

Question 2.
‘பசுமை வீடு’ என்றால் என்ன?
விடை:
1. இது ஒளி ஊடுருவல் கூடிய பொருள்களால் அமைக்கப்பட்ட மேற்கூறையின் கீழ்பயிர்களை வளர்க்கும் முறையாகும்.
2. போதிய அளவு வளர்ச்சி மற்றும் உற்பத்தியைப் பெறுவதற்காக கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை இங்கு காணப்படுகிறது.

Question 3.
பசுந்தாள் உரங்கள் என்றால் என்ன?
விடை:
பசுந்தாள் உரமானது இலைகள் மரக்கிளைகள் புதர்ச்செடிகள் வயல்வெளி நீர்த்தேக்கங்களில் வளரும் தாவரங்களை சேகரித்து மட்கச் செய்து தயாரிக்கப்படும் உரமாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 4.
“உயிரி உரத்திட்டம்” என்றால் என்ன?
விடை:
இத்திட்டம் தமிழ்நாடு அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கை விவசாயத்தை முறை யாக நிர்வகிப்பதும் மண் வளத்தை அதிகரிப்பதற்கு உதவி செய்வதும் இதன் நோக்கமாகும்.

Question 5.
‘மீன் வளர்ப்பு’ என்றால் என்ன?
விடை:
பிசிகல்ச்சர் அல்லது மீன் வளர்ப்பு என்பது மீன்களை குளம் நீர்த்தேக்கம் ஏரிகள் ஆறுகள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்ய வைத்து வளர்த்தெடுக்கும் செயல்முறையாகும்.

Question 6.
இறால்கள் ஊட்டச்சத்து மதிப்பு பற்றி விவரி?
விடை:

  1. இது சுவையானது
  2. அதிக புரதம் A மற்றும் B வைட்டமின்கள் அடங்கியுள்ளது.
  3. கொழுப்பு சத்து குறைவாக உள்ளது.
  4. கொழுப்பு அமிலங்கள் (PUFA) இருப்பதால் ஆரோக்கியத்தில் முக்கிய பங்களிக்கின்றன

Question 7.
மண்புழு உரம் என்றால் என்ன?
விடை:
கரிமப் பொருள்களை மண்புழுக்கள் சிதைவடையப் செய்வதன் மூலம் உருவாகும் மென்மையான துகள் போன்ற கழிவுப் பொருள்களே ‘மண்புழு உரம்’ எனப்படும்.

Question 8.
‘தேனீ வளர்ப்பு’ என்றால் என்ன?
விடை:
தேனுக்காக தேனீக்களை வளர்த்தல் தேனீ வளர்ப்பு எனப்படும்.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
உயிரி உரங்கள் பற்றி விவரி?
விடை:
ரைசோபியம் : லெகூமின்ஸ் தாவரங்களின் வேர் முண்டுகளில் வாழ்ந்து வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்துகிறது.
அசோஸ் பைரில்லம்: வளிமண்டல நைட்ரஜனை
வழங்குகின்றன. எ.கா. மக்காட்சோளம், பார்லி
அசோட்டோ பாக்டர்: நைட்ரஜனை நிலைநிறுத்துகிறது. பூஞ்ஞை எதிர்பொருள் மற்றும் பாக்டீரிய எதிர்பொருள்களையும் உற்பத்தி செய்கின்றன. மைக்சோரைசா: இவைகள் பாஸ்பரஸ் ஊட்டச்சத்தினை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிக்கின்றன. எ.கா. எலுமிச்சை
அசோலா : மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என வழங்கப்படும் நீர்ப்பெரணியாகும். ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 2.
மீன் வளர்ப்பு வகைகள் பற்றி விரிவாக விவரி?
விடை:

  1. விரிவான மீன் வளர்ப்பு: பரந்த இடங்களில் குறைவான எண்ணிக்கையிலான மீன்களை இயற்கையான உணவளித்து வளர்த்தல் ஆகும்.
  2. தீவிர மீன் வளர்ப்பு: மிக குறுகிய இடங்களில் அதிகமான எண்ணிக்கையிலான மீன்களை உற்பத்தி அதிகரிக்கும் நோக்கில் செயற்கையான உணவளித்து வளர்க்கும் முறை.
  3. குளத்தில் மீன் வளர்ப்பு: குளத்திலுள்ள நீரில் மீன்களை வளர்ப்பது.
  4. ஆறுகளில் மீன் வளர்ப்பு: ஓடும் நீரில் மீன்களை வளர்ப்பது.
  5. அணைகளில் மீன் வளர்ப்பு: செயற்கையாக கட்டப்பட்ட நீர்த்தேக்கங்களில் மீன்களை வளர்க்கும் முறையாகும்.
  6. ஏரிகளில் மீன்வளர்ப்பு: இயற்கையான நீர்நிலைகளான ஏரிகளில் மீன்களை வளர்த்தல்.
  7. ஒற்றைவகை மீன் வளர்ப்பு: ஒருவகை மீனை மட்டும் நீர்நிலைகளில் வளர்த்தல்.
  8. பலவகை மீன் வளர்ப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட மீன்வகைகளை ஒன்று சேர நீர்நிலைகளில்
  9. ஒருங்கிணைந்த மீன் பண்ணை : விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை.

Question 3.
தேனீக்களின் வகைகள் யாவை?
விடை:

  1. இராணீத்தேனீ: இது தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும் இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது. இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன. தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும். இராணீத்தேனீக்களின் ஆயுள் காலம் 3 – 4 ஆண்டுகள் ஆகும்.
  2. ஆண் தேனீ – (ட்ரோன்கள்): இவை இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் தேனீக்களாகும். இவை கருவுறாமுட்டையிலிருந்து உருவாகின்றது. இராணீத்தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே இதன் முக்கியப்பணியாகும்.
  3. வேலைக்காரத் தேனீ: இவை இனப்பெருக்கத்திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். தேன் சேகரித்தல் சிறிய தேனீக்களைப் பராமரித்தல், தேன் கூட்டைப் பாதுகாத்தல் கூட்டின் வெப்பத்தைப் பராமரித்தல் போன்றவை இவற்றின் பணிகளாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

8th Social Science Guide குடிமக்களும் குடியுரிமையும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
அ) பிறப்பின் மூலம்
ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்
இ) வம்சாவழியின் மூலம்
ஈ) இயல்பு குடியுரிமை மூலம்
விடை:
ஆ) சொத்துரிமை பெறுவதன் மூலம்

Question 2.
அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
அ) பகுதி II
ஆ) பகுதி II பிரிவு 5-11
இ) பகுதி II பிரிவு 5-6
ஈ) பகுதி I பிரிவு 5-11
விடை:
ஆ) பகுதி II பிரிவு 5-11

Question 3.
இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) இந்திய தலைமை நீதிபதி
விடை:
ஆ) குடியரசுத் தலைவர்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
ஒரு நாட்டின் _____________, அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
விடை:
குடிமக்கள்

Question 2.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் _____________ குடியுரிமையை மட்டும் வழங்குகிறது.
விடை:
ஒற்றைக்

Question 3.
இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் ______________ என அழைக்கப்படுகிறார்.
விடை:
வெளிநாட்டு வாழ் இந்தியன்

Question 4.
மக்கள் அனைவரும் உரிமைகள் மற்றும் __________ யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனர்.
விடை:
குடிமை பொறுப்பை

Question 5.
_____________ என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.
விடை:
உலகளாவிய குடியுரிமை

III. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது.
விடை:
தவறு

Question 2.
வெளிநாட்டுக் குடியுரிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவருக்கு வாக்குரிமை உண்டு.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Question 3.
அடிப்படை உரிமைகளை இந்தியக் குடிமகன் அனுபவிக்க நமது அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது.
விடை:
சரி

Question 4.
நாட்டுரிமையை மாற்ற இயலும். ஆனால் குடியுரிமையை மாற்ற இயலாது.
விடை:
தவறு

IV. கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருத்தமான விடைகளை தேர்வு செய்க

Question 1.
ஒரு இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.
i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது
ii) பதிவு செய்வதன் மூலம்
iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது

அ) i மற்றும் ii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, ii, iv சரி
ஈ) i, ii, iii சரி,
விடை:
ஆ) i மற்றும் iii சரி

Question 2.
கூற்று : 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினர்.
காரணம் : 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்லல
இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஈ) காரணம், கூற்று இரண்டும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்ததைகளில் விடையளி

Question 1.
குடியுரிமையின் வகைகளை குறிப்பிடுக.
விடை:
குடியுரிமை இரண்டு வகைப்படும்
இயற்கை குடியுரிமை:
ஒருவர் பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமையே இயற்கை குடியுரிமையாகும்.

இயல்புக் குடியுரிமை:
இயல்பாக விண்ணப்பித்து ஒருவர் பெறும் குடியுரிமையை இயல்புக் குடியுரிமை என்பர்.

Question 2.
ஓர் இந்தியக் குடிமகன் நமது நாட்டில் அனுபவிக்கும் உரிமைகள் யாவை?
விடை:
ஓர் இந்தியக் குடிமகன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட உரிமைகளை அனுபவிக்கிறார்.

  • அடிப்படை உரிமைகள்
  • மக்களவை தேர்தலுக்கும், மாநில சட்ட மன்ற தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை
  • இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை
  • இந்திய பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில் உறுப்பினராவதற்கான உரிமை

Question 3.
நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக
விடை:

  • அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல்
  • சட்டத்துக்கு கீழ்படிதல்
  • சமுதாயத்திற்கு தன் பங்களிப்பை ஆற்றுதல் மற்றும் குடிமைப் பணியை செயலாற்றுதல்.

Question 4.
இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை எழுதுக?
விடை:
1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் இந்திய குடிமகனாவதற்கு ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.

  • பிறப்பால் குடியுரிமை பெறுதல்
  • வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்
  • பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
  • இயல்பாக விண்ணப்பித்து குடியுரிமை பெறுதல்
  • பிரதேசங்களை இணைத்தல் மூலம் குடியுரிமை பெறுதல்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Question 5.
1955 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?
விடை:
1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. மேலும் இச்சட்டம் இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், நீக்குதலையும் பற்றிய விதிகளை கூறுகிறது.

VI. விரிவான விடையளி

Question 1.
ஒருவருக்கு எதன் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை இரத்து செய்யப்படுகிறது?
விடை:
குடியுரிமை ரத்து பற்றிய மூன்று வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியின் 5 முதல் 11 வரையிலான விதிகள் குறிப்பிடுகின்றன.

  1. குடியுரிமையை துறத்தல் (தானாக முன் வந்து குடியுரிமையைத் துறத்தல்)
    • ஒருவர் வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.
  2. குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டப்படி நடைபெறுதல்)
    • ஓர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்டுகிறது.
  3. குடியுரிமை மறுத்தல்: (கட்டாயமாக முடிவுக்கு வருதல்)
    • மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் முதலியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது.

VII. மாணவர்களுக்கான செயல்பாடு (மாணவர்களுக்கானது)

அட்டவணைப்படுத்துக:
அ. நல்ல குடிமகனாக வகுப்பறையிலும், வகுப்பறைக்கு வெளியிலும் நீவிர் எவ்வாறு நடந்து கொள்வாய் என அட்டவணைப்படுத்துக.
ஆ. நல்ல குடிமகனாக உன்னுடைய பொறுப்புகள் எவை (ஏதேனும் மூன்று கருத்துக்களை எழுதுக)

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும் 1

8th Social Science Guide குடிமக்களும் குடியுரிமையும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
நற்பண்புகளுடன் இந்திய அரசியமைப்பில் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளுள் ஏதேனும் ஒன்றில் போதிய அறிவினைப் பெற்று __________ குடியினம
அ) வம்சாவளி குடியுரிமை
ஆ) பதிவு செய்தல்
இ) இயல்பு
ஈ) பிறப்பால் பெறுதல்
விடை:
இ) இயல்பு

Question 2.
இந்திய அரசியலமைப்பு _____________ சட்டத்திருத்தத்தின்படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அ) 55-வது
ஆ) 46-வது
இ) 44-வது
ஈ) 42-வது
விடை:
ஈ) 42-வது

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Question 3.
இந்தியக் குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் _____________ ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
அ)6
ஆ) 7
இ) 5
ஈ) 3
விடை:
ஆ) 7

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
குடிமகன் என்ற சொல் ____________ என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
விடை:
சிவிஸ் (CIVIS)

Question 2.
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பொருட்டு, இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் நமது _____________ ஊக்கவிக்கிறது.
விடை:
அரசியலமைப்பு

Question 3.
இந்திய ஒற்றைக் குடியுரிமை இந்திய மக்கள் அனைவருக்கும் ________________ வழங்குகிறது.
விடை:
சம உரிமையை

Question 4.
_____________ ஆம் நாள் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் இந்திய அரசால் கொண்டாடப்படுகிறது.
விடை:
ஜனவரி 9

III. சரியா? தவறா?

Question 1.
2015 ஜனவரி 9 முதல் PIO முறை இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு OCI முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விடை:
சரி

Question 2.
பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் முதலியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை குடியுரிமை எனப்படும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

Question 3.
இந்திய அரசியலமைப்பில் எட்டாவது அட்டவணையில் தற்போது 22 மொழிகள் உள்ளன.
விடை:
சரி

IV. கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருத்தமான விடைகளை தேர்வு செய்க

Question 1.
இந்திய குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை கூறுகிறது.
i) நற்பண்புகளுடன் இந்திய மொழிகளுள் ஏதேனும் ஒன்றில் போதிய அறிவினைப் பெற்று குடியுரிமை பெறுதல்
ii) 1985-ல் ஜப்பான் தம்பதிகளுக்கு இந்தியாவில் ஒர் குழந்தை பிறந்து, அது பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுதல்
iii) பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
iv) சொத்துரிமை பெற்று குடியுரிமை பெறுதல்

அ) i மற்றும் ii சரி)
ஆ) ii மற்றும் iii சரி
இ) ii, iii, மற்றும் iv சரி
ஈ) i, சரி iii
விடை:
ஆ) ii மற்றும் iii சரி

V. கீழ்கண்ட வினாக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி

Question 1.
ஒற்றைக் குடியுரிமை பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஒற்றைக் குடியுரிமையை வழங்குகிறது. அதுவே இந்தியக் குடியுரிமை எனப்படுகிறது.
  • ஒற்றைக் குடியுரிமையில் இந்திய மக்கள் அனைவரும் மாநில வேறுபாடின்றி சம உரிமையை பெறுகின்றனர்.
  • அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற கூட்டாட்சி அமைப்பு கொண்டுள்ள நாடுகளில் இரட்டைக் குடியுரிமை (தேசிய மற்றும் மாநில குடியுரிமை) வழங்கப்படுகிறது.

Question 2.
உலகளாவிய குடியுரிமை பற்றி எழுதுக
விடை:

  • ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமகன் என்பதை விட உலகளாவிய சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அங்கம் என்பதே உலகளாவிய குடியுரிமை ஆகும்.
  • உலக மக்கள் அனைவருக்கும் உரிமைகளும், குடிமைப் பொறுப்புகளும் இயற்கையாகவே உள்ளன
  • புதிய சமூகத்தை உருவாக்குவதில் இன்றைய இளைஞர்களின் ஈடுபாட்டையும், பங்களிப்பையும் பெறுவதே உலகளாவிய குடியுரிமையின் அடிப்படையாகும்.

Question 3.
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களைப் பற்றி எழுதுக
விடை:
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்கள் இரண்டு வகையினராக அழைக்கப்டுகிறார்கள்

  1. அந்நியர் (Alien)
    • ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக அல்லாத அனைவரும் அந்நியர் எனப்படுவர்.
    • எ.கா வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு மாணவர்கள்
  2. குடியேறியவர் (immigrant)
    • ஒரு நாட்டில் எவ்வித தடையும் இன்றி நிரந்தரமாக வசிப்பதற்கும், பணி புரிவதற்கும் உரிமை பெறும் அந்நியர் குடியேறியவர் எனப்படுகிறார்.

VI. கீழ்க்கண்டவைகளுக்கு விடையளி

Question 1.
இந்தியக் குடிமகனாவதற்குரிய ஐந்து வழிமுறைகளை விளக்குக.
விடை:
1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது. அவைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

I. பிறப்பால் குடியுரிமை பெறுதல்:
இக்குடியுரிமை பிறப்பிடத்தால் தீர்மானிக்கப்படுகிறது. 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜீலை வரை

  • இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்.
  • 1987 ஜீலை 1 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அச்சமயத்தில் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 2004 டிசம்பர் 3 மற்றும் அதன் பிறகு இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாகவும், மற்றவர் சட்டவிரோதமின்றி இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்து இருந்தால் குடியுரிமை பெறுகின்றனர்.

II. வம்சாவளியால் குடியுரிமை பெறுதல்:

  • 1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 10க்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் அவருடைய
  • தந்தை இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் வம்சாவளி மூலம் இந்தியக் குடியுரிமையை பெறுகிறார்.
  • 2004 டிசம்பர் 3 ம் நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளிக் குடிமகனாக முடியாது.

III. பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்:
இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு நபர் எந்த ஒரு நாட்டில் வசித்தாலும் அல்லது பிரிக்கப்படாத இந்தியாவிற்கு வெளிப்பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் பதிவு செய்தலின் மூலம் குடியுரிமை பெறலாம்.

இந்தியக் குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் 7 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.

IV. இயல்புக் குடியுரிமை :
ஒருவர் விண்ணப்பிப்பதன் மூலம் மத்திய அரசு அவருக்கு இயல்பு குடியுரிமைக்கான சான்றிதழை வழங்குகிறது.
எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒரு இந்தியர் அவர் வசிக்கும் நாட்டின் குடிமகனாவதை தடுக்கும் பொருட்டு இயல்பு குடியுரிமை வழங்கப்படுகிறது.

வெளிநாட்டுக் குடியுரிமையை ஒருவர் துறக்கும் பட்சத்திலும், ஒருவர் இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் அல்லது இந்திய அரசுப் பணியில் இருக்கும் பட்சத்திலும் மற்றும் நற்பண்புகளோடு இந்திய முக்கிய மொழிகளுள் ஏதேனும் ஒன்றில் போதிய அறிவினை பெறும் பொழுதும் இயல்புக் குடியுரிமையைப் பெற தகுதியுடையவராவர்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும்

V. பிரதேசங்களை இணைத்தல் மூலம் பெறும் குடியுரிமை:
எந்தவொரு வெளிநாட்டுப் பகுதியும் இந்தியாவுடன் இணையும் போது, இந்திய அரசு, அப்பகுதி மக்களை இந்திய குடிமக்களாக ஏற்றுக் கொள்கிறது. அந்த குறிப்பிட்ட நாளில் இருந்து அவர்கள் இந்திய குடிமக்களாகின்றனர்.

VII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 2 குடிமக்களும் குடியுரிமையும் 2

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

9th Science Guide நுண்ணுயிரிகளின் உலகம் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது
அ) காசநோய்
ஆ) மூளைக்காய்ச்சல்
இ) டைபாய்டு
ஈ) காலரா
விடை:
அ) காசநோய்

Question 2.
மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை
அ) தும்மல்
ஆ) இருமல்
இ) கடத்திகள்
ஈ) துளிர்தொற்று முறை
விடை:
இ) கடத்திகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
டிப்தீரியா எதைத் தாக்குகிறது?
அ) நுரையீரல்
ஆ) தொண்டை
இ) இரத்தம்
ஈ) கல்லீரல்
விடை:
ஆ) தொண்டை

Question 4.
காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு
அ) எலும்பு மஜ்ஜை
ஆ) குடல்
இ) மண்ணீ ரல்
ஈ) நுரையீரல்
விடை:
ஈ) நுரையீரல்

Question 5.
மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____ தர்க்கும்.
அ) குடலினை
ஆ) நுரையீரலினை
இ) கல்லீரலினை
ஈ) நிணநீர் முனைகளை
விடை:
ஆ) நுரையீரலினை

Question 6.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு
அ) கல்லீரல்
ஆ) நுரையீரல்
இ) சிறுநீரகம்
ஈ) மூளை
விடை:
அ) கல்லீரல்

Question 7.
குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.
அ) தோல்
ஆ) வாய் மற்றும் மூக்கு
இ) காதுகள்
ஈ) கண்
விடை:
ஆ) வாய் மற்றும் மூக்கு

II. கோடிட்ட இடத்தை நிரப்பு

Question 1.
______ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.
விடை:
கெட்டழிக்கும்
பாக்டீரியங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 2.
டைபாய்டு காய்ச்சல் _____ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
விடை:
சால்மோனெல்லாடைஃபி

Question 3.
எச்1 என்1 வைரஸ் _____ ஐ உருவாக்குகிறது.
விடை:
பன்றிக்காய்ச்சல்

Question 4.
டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ____ ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது
விடை:
ஏடிஸ் எய்ஜிப்டி கொசு

Question 5.
______ என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.
விடை:
பிசிஜி

Question 6.
காலரா ____ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா ____ ஆல் ஏற்படுகிறது.
விடை:
விப்ரியோ காலரா,
பிளாஸ்மோடியம்

III. விரிவுபடுத்தி எழுதுக

Question 1.
ORS
விடை:
ORS – Oral Re hydration Source

Question 2.
WHO
விடை:
WHO – World Health Organization

Question 3.
HIV
விடை:
HIV – Human Immuno Deficiency Virus

Question 4.
BCG
விடை:
BCG – Bacillus Calmelte Guerin

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 5.
DPT
விடை:
DPT – Dipetheria, Pertussis and Tetanus

IV. கீழ்காண்பனவற்றுள் தனித்திருப்பதை தெரிந்தெடு.

Question 1.
எய்ட்ஸ், ரெட்ரோ வைரஸ், லிம்போசைட்ஸ், பி.சி.ஜி
விடை:
பி.சி.ஜி

Question 2.
பாக்டீரிய நோய், ரேபிஸ், காலரா, சாதாரண சளி மற்றும் இன்ஃபுளுயன்சா
விடை:
காலரா

V. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
ரைசோபியமானது, பருப்பு வகைத் தாவரங்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துபவையோடு தொடர்புடையது.
விடை:
சரி

Question 2.
தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடம் இருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.
விடை:
தவறு – தொற்று வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார்.
விடை:
சரி

Question 4.
ஹெப்பாடைட்டிஸ் பி, ஹெப்பாடைட்டிஸ் ஏ-வைக் காட்டிலும் அபாயகரமானது.
விடை:
சரி

VI. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 50
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 51

VII. கீழ்க்காண்பவனவற்றை வரையறு.

Question 1.
நோய்க்கிருமி
விடை:
உயிருள்ள ஒரு நுண்ணுயிரி பிற உயிரினங்களுக்கு நோயை உண்டாக்குதல். எ.கா. பாக்டீரியா வைரஸ்

Question 2.
பாக்டீரியோஃபேஜ்கள்
விடை:
பாக்டீரியாவைத் தாக்கி தீங்கு பயக்கும் வைரஸ்.

Question 3.
பிரியான்கள்
விடை:

  • நோயை உண்டாக்கும் புரதத்துகள்.
  • புரதத்தை மட்டுமே கொண்ட வைரஸ்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 4.
நோய் எதிர்ப்பு தடுப்பூசி
விடை:
இவை உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ (அ) அவற்றின் விளைபொருள்களின் உதவியுடனோ நோயினைத் தடுக்கவும் (அ) சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் பொருள்.

VIII. சுருக்கமாக விடையளி

Question 1.
விரியான் மற்றும் வீரியாய்டு வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 60

Question 2.
மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.
விடை:

  • நோய் கடத்தி – பெண் அனபிலிஸ் கொசுக்கள்
  • பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம் சாவுக்கான மலேரியா ஒட்டுண்ணி.

Question 3.
மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன? இந்த வகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.
விடை:
முத்தடுப்பூசி : மூன்று விதமான பாக்டீரிய நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி (DPT)
தடுக்கப்படும் நோய்கள் :

  1. தொண்டை அடைப்பான்,
  2. கக்குவான் இருமல்,
  3. டெட்டானஸ்

Question 4.
சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக.
விடை:
காசநோய், கக்குவான் இருமல், சாதாரண சளி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 5.
வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன? இதைத் தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.
விடை:
ரோட்டா வைரஸ்
தடுக்கும் முறை: கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்துதல். தூய்மையாக உணவை உண்ணுதல்.

Question 6.
இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 68

IX. விரிவாக விடையளி

Question 1.
பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய வகைகளைப்பற்றிய ஒரு தொகுப்பினைத் தருக.
விடை:
பாக்டீரியாக்களின் வடிவங்கள்
வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 70

1. கோல் வடிவம் :

  1. கோல் வடிவ பாக்டீரியங்கள் “பேசில்லைகள்” எனப்படும்.
  2. இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ”பேசில்லஸ்” எனப்படும்.

2. கோள வடிவம் :

  1. கோள வடிவ பாக்டீரியங்கள் ‘கோக்கைகள்’ எனப்படும்
  2. இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ‘கோக்கஸ்’ எனப்படும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 71

3. திருகு வடிவம்

  1. திருகு வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் ‘ஸ்பைரில்லா’ எனப்படும்.
  2. இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ‘ஸ்பைரில்லம்’ எனப்படும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 72

Question 2.
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.
விடை:
I. விவசாயம்:
a) உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணிகளாக நுண்ணுயிரிகள் :

  1. தாவரங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் (அ) நோயினை உருவாக்கும் உயிரிகள் மற்றும்
    பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பயன்படுகின்றன.
  2. எ.கா. பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) – என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து ‘படிம்’ புரதம் என்ற புரதமானது உற்பத்தியாகிறது.
  3. இவை பூச்சிகளின் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மை உடையதாக இருந்து அவற்றைக் கொல்கின்றன.

பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதை நீரோடு கலந்து, பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கும் போது பூச்சிகளின் இளம் உயிரிகள் கொல்லப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

b) உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள்:

  1. நிலத்திலுள்ள மண்ணினை சத்துமிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் ஆகும்.
  2. எ.கா. பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை உயிரி உரங்களுக்கான
    ஆதாரங்களாகும்.

    • தனி நிலையில் வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
      எ.கா. நைட்ரோசோமோனஸ், நாஸ்டாக், அசட்டோபாக்டர், கிளாஸ்டிரிடியம்
    • கூட்டியிரியாக வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
      எ.கா. ரைசோபியம், ஃப்ரான்கியா, மைக்கோரைசா.

II. தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகள்:

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 40

Question 3.
பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 41

Question 4.
புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்டவணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 43
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 44

அட்டவணையின் அவசியம்
அட்டவணையில் உள்ள தடுப்பூசி மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால், காசநோய், போலியோ மற்றும் தட்டம்மை போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

X. வலியுறுத்தல் மற்றும் காரணம்

சரியான ஒன்றை பதிலாகக் குறிக்கவும்
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

Question 1.
கூற்று : சின்னம்மை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம் : சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
விடை:
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.

Question 2.
கூற்று : எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம்.
காரணம் : நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.
விடை:
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு.

XI. சிந்திக்கும் திறனை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள்

Question 1.
தொற்றக்கூடிய நோய்கள் உனது பள்ளிவளாகத்திலிருந்தால் அதனைக் குறைப்பதற்கு நீவிர் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்க.
விடை:
முன்னெச்சரிக்கை நடவடிக்கை

  1. பள்ளிவளாகம், வகுப்பறை குடிதண்ணீர் தொட்டிகள், விளையாட்டுத்திடல், உணவருந்தும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றைத் தூய்மையாக வைப்பது அவசியம்.
  2. கொசுக்கள் பெருகும் இடங்கள், தண்ணீர் தேங்கும் இடங்கள், ஆகியவற்றை கண்காணித்து உடனுக்குடன் துப்புரவு செய்தல்.
  3. மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்றவற்றைப் பரப்பும் கொசுக்கள், கொசுப் புழு (லார்வா) இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல்.
  4. தண்ணீர் தொட்டிகள் சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும். தண்ணீர் ஒழுகும் குழாய்கள் உடனடியாக சரி செய்யப்படவேண்டும்.
  5. கழிவறைகள் பயன்படுத்திய உடன் ஒரு நாளைக்கு 3 முறையாவது கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  6. டெட்டால், பீனாஸில் போன்ற கிருமி நாசினிகளை கலந்து நீரால் சுத்தம் செய்வது அவசியம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 2.
தேஜஸ் டைபாய்டு என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்; சச்சின் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். இவ்விரு நோய்களிலும் எந்த நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்? ஏன் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்?
விடை:
அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவது காசநோய்
காசநோயின் பாதிப்புகள் :

  1. இந்நோய்க்காரணி மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்
  2. இது காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்
  3. இந்நோய் நுரையீரல் செல்களை தாக்குகிறது.
  4. இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரலாகும்.
  5. அறிகுறிகள் இருமல், நெஞ்சுவலி, உடல் எடைக்குறைவு மற்றும் பசியின்மை.
  6. எனவே, டைபாய்டு நோயைவிட காசநோய் கடுமையானது.

9th Science Guide நுண்ணுயிரிகளின் உலகம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
விடைகள் சால்மோனெல்லா டைஃப்பியில் காணப்படும் கசையிழை வகை _____ ஆகும்.
விடை:
பெரிடிரைக்கஸ்

Question 2.
பாக்டீரியாவின் செல்சுவர் _____ ஆல் ஆனது.
விடை:
பெப்டிடோகிளைக்கான்

Question 3.
பிளாஸ்மிடு _____ எனப்படும்.
விடை:
குரோமோசோம் சாராத வட்ட
DNA

Question 4.
திராட்சைக் கொத்துக்கள் போல் காணப்படும் பாக்டீரியா _____ எனப்படும்.
விடை:
ஸ்டெபைலோகோக்கை

Question 5.
டிரெப்போனிமா பாலிடியம் _____ வகை பாக்டீரியா.
விடை:
ஸ்பைரோஃகிட்ஸ்

Question 6.
போர்டிடெல்லா பெர்டூசிஸ் உருவாக்குவது _____ நோயாகும்.
விடை:
கக்குவான் இருமல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 7.
பாக்டீரியாலஜியின் தந்தை என அழைக்கப்படுபவர்.
விடை:
ராபர்ட் கோச்

Question 8.
மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸைக் கண்டறிந்தவர் _____ ஆகும்.
விடை:
இராபர்ட் கோச்

Question 9.
வைரஸ் என்ற சொல்லை உருவாக்கியவர் _____
விடை:
M.பெசிரெங்க்

Question 10.
மிகப்பெரிய வைரஸ் என்பது _____ ஆகும்.
விடை:
பெரியம்மை வைரஸ்

Question 11.
வைரஸின் தனித்தன்மை அதன் ____ ஐ பொருத்தது.
விடை:
புரத உறை

Question 12.
மெல்லிய சிக்கலான நுண் இழைகளாலான பூஞ்சைகளின் ஹைபாக்கள் ______ எனப்படும்.
விடை:
மைசீலியம்

Question 13.
பிரியான் என்ற வார்த்தை உருவாக்கியவர் ____ ஆவார்.
விடை:
ஸ்டான்லி B. புருஷ்ஷினர்

Question 14.
உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படும் நாள் _____
விடை:
ஏப்ரல் 25ம் தேதி

Question 15.
குளிர், கடும் சுரம், வாந்தி, குமட்டல், தலைவலி மூட்டுக்களில் வலி, நடப்பதில் சிரமம் இவை எந்த வகை காய்ச்சலின் அறிகுறி
விடை:
சிக்குன்குனியா

Question 16.
கன்ன உமிழ் நீர் சுரப்பி வீக்கம், மற்றும் தாடையை அசைத்தலில் சிரமம் ஏற்படுத்தும் நோய் ____ ஆகும்.
விடை:
பொன்னுக்கு வீங்கி

Question 17.
_____ என்டரிக் நோய் என அழைக்கப்படுகிறது.
விடை:
டைஃபாய்டு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 18.
விப்ரியோ காலரா உருவாக்கும் நச்சானது _______ எனப்படும்.
விடை:
குளோரஜென்.

Question 19.
மலேரியாவை உண்டாக்கும் நோய் கிருமி எந்தப் பிரிவைச் சார்ந்தது?
விடை:
புரோட்டசோவா

Question 20.
குயினைன் எந்த நோய்க்கான மருந்து?
விடை:
மலேரியா

Question 21.
கியூலெக்ஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் பரவும் நோய் _____ ஆகும்.
விடை:
பைலேரியாசிஸ்

Question 22.
இரவு கால நேர பாதிப்பு காணப்படும் நோய் _____ ஆகும்.
விடை:
பைலேரியாசிஸ்

Question 23.
பன்றிக் காய்ச்சல் உலகெங்கும் பரவிக் காணப்படும் நாடுகளின் எண்ணிக்கை _____
விடை:
20

Question 24.
பறவைக்காய்ச்சல் முதலில் கண்டறியப்பட்ட நாடு ______
விடை:
தென்சீனா மற்றும்
ஹாங்காங்

Question 25.
AIDS நோய் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட மாநிலம் _____
விடை:
தமிழ்நாடு

Question 26.
நுண்ணுயிரிகள் ஒரு செல் உடையவை, பல செல்லுடையவை மற்றும் செல்லமைப்பற்றவை இவை முறையே ………….
விடை:
பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்

Question 27.
நைட்ரோசோமோனஸ் ஒரு ………. பாக்டீரியாவாகும்.
விடை:
கீமோடிராப்பிக் (அ)
வேதிச்சேர்க்கை பாக்டீரியா

Question 28.
ஹெலிபோபாக்டர் பைலோரி ஒரு …….. வடிவ பாக்டீரியம்
விடை:
சுருள் வடிவ பாக்டீரியம்

Question 29.
தன் நுண்ணோக்கியைத் தானே வடிவமைத்த விஞ்ஞானியின் பெயர் …… ஆகும்
விடை:
ஆன்டன் வான் லூவன் ஹிக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 30.
Bt – பருத்தி என்பது குறிப்பது……. ஆகும்.
விடை:
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்

Question 31.
ஸ்ட்ரெப்டோபைசிஸ் எரித்திரியஸ் உருவாக்கும் எதிர் உயிரி பொருள் …….. எனப்படும்.
விடை:
எரித்ரோமைசின்

Question 32.
இமயமலை கீழ் பகுதியில் வாழும் மக்களிடையே காணப்படும் ‘காய்ட்டர்’ எனும் நோய் ………… எனப்படுகிறது.
விடை:
எண்டமிக் நோய்

Question 33.
எளிய வைரஸ் சாதாரணமாக ………. எனப்படுகிறது.
விடை:
விரியான்

Question 34.
வீரியாய்டுகள் என்பவை ……….. ஆகும்.
விடை:
வைரஸின் புரத உறை சாரா
நோயுண்டாக்கும் RNA ஆகும்

Question 35.
CJD நோய் ………… நோய் எனப்படும்
Answer;
நரம்புகளை செயலிழக்கச்
செய்யும் நோய்

Question 36.
டியூபர்குலின் தோல் பரிசோதனை ………… எனப்படும்.
Answer;
மான்ஃடாக்ஸ் சோதனை

Question 37.
போலியோ சொட்டு மருந்து (Pulse Polio) வழங்கும் தொடங்கப்பட்ட நாள், வரும் ………. ஆகும்.
விடை:
28 நவம்பர் 1995 ஆம் ஆண்டு

Question 38.
ஹெப்பாடிடிஸிஸ் A ……….. மூலம் பரவும் நோய் ஆகும்
விடை:
நீரினால்

Question 39.
மஞ்சள் காய்ச்ச ல் என அழைக்கப்படுவது …………. ஆகும்.
விடை:
HAV – எனப்படும் –
ஹெப்பாடிடிசிஸ் A வைரஸ்

Question 40.
சிக்குன் குனியா உருவாக்கப்படும் வைரஸ் பிரிவு
விடை:
ஓரிழை RNAT

Question 41.
சாதாரண காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியாக பயன்படும் மருந்து …….. ஆகும்.
விடை:
பாராசெட்டமால்

Question 42.
பைலேரியாசிஸ் பாதிக்கும் உடலின் மண்டலம்
விடை:
நிணநீர் மண்டலம்

Question 43.
மனித பாப்பிலோமா வைரஸ் உண்டாக்கும் நோய் …….
விடை:
பிறப்புறுப்பில் கொப்பளம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 44.
உயிருள்ள தடுப்பூசி மருந்துகள்………… ஆகும்.
விடை:
BCG மற்றும் போலியோ
தடுப்பூசி

Question 45.
MMR தடுப்பூசி முதலில் போடப்படும் வயது …………. ஆகும்.
விடை:
15 மாதங்கள் முதல் 2 வயது
வரை

Question 46.
DT எனும் ஆண்டிஜென்கள் பாதுகாக்கும் இரண்டு நோய்கள் ……….. மற்றும் ………… ஆகும்.
விடை:
முப்திரியா, டெட்டனஸ்

Question 47.
TAB என்பது எந்த மூன்று நோய்களுக்கான ஒரே தடுப்பூசி மருந்து
விடை:
டைபாய்டு, பாரா டைஃபாய்டு A
மற்றும் பாரா டைஃபாய்டு B

Question 48.
இன்ஃபுளுயன்சா வைரஸ் H5N1 மற்றும் HIN1 உருவாக்கும் நோய்கள் ……… மற்றும் ……..
விடை:
பறவைக்காய்ச்சல் மற்றும்
பன்றிக் காய்ச்சல்

Question 49.
கொளெரியா, HAV, H5N1 இவை பரவுவது முறையே …………., …………. மற்றும் ………. ஆகும்.
விடை:
பாலியல் தொடர்பு,
சுகாதாரமற்ற நீர், வாய்,
கண்கள், சளி

Question 50.
வைரஸ் என்பது …………. இன சொல்
விடை:
லத்தீன்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 80

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 81

III. கூற்று மற்றும் காரண வகை

அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) – (A) ஐ சரியாக விளக்குகிறது
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; காரணம் (R) – (A) ஐ சரியாக விளக்கவில்லை
இ) கூற்று (A) சரியானது; காரணம் (R) தவறானது
ஈ) கூற்று (A) மற்றும் காரணம் (R) தவறானது

Question 1.
கூற்று (A) : டைஃபாய்டு சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரினால் பரவுகிறது.
காரணம்(R) : நோய் பாதிக்கப்பட்டவரின் கழிவு கலந்த நீர் மற்றும் உணவினால் நோய் பரவுகிறது.
விடை:
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) – (A) ஐ சரியாக விளக்குகிறது

Question 2.
கூற்று (A) : இந்தியாவில் 13 ஜனவரி 2011 முதல் போலியோ நோய் கண்டறியப்படவில்லை
காரணம்(R) : டிசம்பர் மாதம் 1995 முதல் பல்ஸ்-போலியோ – போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது. விடை:
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) — (A) ஐ சரியாக விளக்குகிறது

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
உறுதிப்படுத்துதல் (A) : சின்னம்மை வாரிசெல்லா ஜோஸ்டர் வைரஸால் ஏற்படுகிறது.
காரணம் (R) : சிவப்புப் புள்ளி போன்ற வீக்கமுடைய தோற்றம் (அ) தோலில் தடிப்புகள் தோன்றல் இருமல், தும்மல், கண் சிவப்படைதல் காணப்படுகிறது.
விடை:
இ)உறுதிப்படுத்துதல் (A) சரியானது; காரணம் (R) தவறானது

IV. ஒத்த கூற்று தருக

Question 1.
எக்ஸோடாக்சின் – நோய் கிருமியிலிருந்து நேரடியாக உருவாகும் நச்சு.
எண்டோடாக்சின் –
விடை:
நோய் கிருமி சிதைவடைவதால் உருவாகும் நச்சு

Question 2.
டைஃபாய்டு – சுகாதாரமற்ற நீரினால் பரவும் நோய்.
மலேரியா _______
விடை:
மலேரியா – கடத்தி மூலம் பரவும் நோய்

Question 3.
AIDS – பான்டமிக் நோய்
மலேரியா _____
விடை:
மலேரியா – ஸ்போராடிக் நோய்

Question 4.
அனபிலிஸ் – மலேரியக் கடத்தி
கியூலெக்ஸ் _____
விடை:
கியூலெக்ஸ் – பில்லேரியக் கடத்தி

Question 5.
பிரியான் – வைரஸின் புரதம்
விரியான் _____
விடை:
விரியான் – வைரஸின் நியூக்ளிக் அமிலம்

Question 6.
நோய் தடுப்பூசி – நோய் வருமுன் காத்தல்
நோய் எதிர் உயிரி _____
விடை:
நோய் எதிர் உயிரி – நோய் வந்த பின் காத்தல்

V. படத்தைக் கண்டறி – பாகங்களைக் குறித்திடுக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 90

2 Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 91

VI. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
நுண்ணுயிரிகள் என்பதன் கீழ் வருவனவற்றை விவரி.
விடை:
நுண்ணுயிரிகள் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, நுண்ணுயிரி ஆல்கா, புரோட்டிஸ்டுகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. 2. பாக்டீரியாவின் நான்கு வடிவங்கள் யாவை?

  1. கோக்கை வடிவம் (உருளை வடிவம்)
  2. பேசில்லஸ் வடிவம் (குச்சி வடிவம்)
  3. ஸ்பைரில்லம் (சுருள் வடிவம்) iv) விப்ரியோ (கமா, வடிவம்)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
உறையுடைய பாக்டீரியா என்றால் என்ன?
விடை:

  • சில பாக்டீரியங்களில் செல்சுவரினைச் சுற்றி பல கூட்டுச் சர்க்கரைகளால் (பாலி சாக்கரைடு உருவான கூடுதலான மெல்லிய படலம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.
  • பணி – பாதுகாப்புப்பணி

Question 4.
பாக்டீரியாக்களின் தற்சார்பு ஊட்டமுறையின் 2 வகைகள் யாவை?
விடை:

  • தற்சார்பு ஊட்டமுறை – தன் உணவை கனிம ஆதாரங்களிலிருந்து உருவாக்கும். இதற்கு தற்சார்பு ஊட்டமுறை என்று பெயர் – இது இருவகைப்படும்.
  • ஒளிச்சார்பு பாக்டீரியங்ள் (சுயஜீவிகள்) – இவை ஒளி ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு
    வாழ்கின்றன.
  • வேதிச்சார்பு பாக்டீரியங்கள் – இவ்வகை பாக்டீரியங்கள் வேதிப்பொருட்களை (கரிம , கனிம் ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றன.

Question 5.
உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணி (அ) உயிரி பூச்சிக் கொல்லி என்றால் என்ன?
விடை:

  • பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து உருவாகும் படிம புரதம், பூச்சிகளின் இனம் உயிரிகளைக் கொல்கிறது.
  • இதற்கு உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணி (அ) உயிரி பூச்சிக் கொல்லி என்று பெயர்.
  • பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகின்றன. அவற்றை நீரோடு சேர்த்து கரைத்து பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கப்படுகிறது. பூச்சிகளின் இனம் உயிரிகளைக் கொல்கிறது.

VII. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
கடத்திகளால் பரவும் நோய்களின், நோய்கிருமி, பரவும் முறை அறிகுறிகள், தவிர்க்கும் மற்றும் தடுக்கும் முறைகளை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 95
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 96
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 97

Question 2.
நோய் எதிர்ப்பு திறனூட்டல் என்றால் என்ன? தடுப்பூசி மருந்துகளின் இரு வகைகள் யாவை?
விடை:
நோய் எதிர்ப்பு திறனூட்டல் என்பது ஆன்டிஜென்களையோ (அ) ஆன்டிபாடிகளையோ (நோய் எதிர் உயிர்பொருள்) கொடுத்து நோய்க்கு எதிராகத் தடுப்பினை ஏற்படுத்தும் செயல் ஆகும். நோய் தடுப்பு மருந்தினை உடலினுள் செலுத்தி நோயினைத் தடுக்கும் செயல் தடுப்பூசி போடுதல் எனப்படும். இது இரு வகைப்படும்.

  1. உயிருள்ள தடுப்பூசி மருந்துகள் : நோயுண்டாக்கும் உயிரிகளின் நோயுண்டாக்கும் திறன் வலுவிழக்கச் செய்யப்பட்டு இம் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
    எ.கா. பிசிஜி தடுப்பூசி – வாய்வழி போலியோ சொட்டு மருந்து
  2. கொல்லப்பட்ட தடுப்பூசி மருந்துகள் : வெப்பம் (அ) வேதிப்பொருள்களால் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி கொல்லப்பட்டு செயலிழக்கம் செய்யப்படுகிறது. முதன்மையான ஊட்டம் அதைத் (dose) தொடர்ந்து அடுத்தடுத்த வலுவூட்டும் ஊட்டம் வழங்கப்பட வேண்டும்.
    எ.கா. டைபாய்டு, காலரா, கக்குவான் தடுப்பூசிகள்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

8th Social Science Guide மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) துணைக் குடியரசுத் தலைவர்
இ) பிரதம மந்திரி
ஈ) முதலமைச்சர்
விடை:
அ) குடியரசுத் தலைவர்

Question 2.
மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) சபாநாயகர்
ஈ) உள்துறை அமைச்சர்
விடை:
ஆ) முதலமைச்சர்

Question 3.
மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்
அ) உள்துறை அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) சபாநாயகர்
ஈ) ஆளுநர்
விடை:
ஈ) ஆளுநர்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 4.
உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி
ஈ) குடியரசுத் தலைவர்
விடை:
ஆ) முதலமைச்சர்

Question 5.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
அ) 62
ஆ) 64
இ) 65
ஈ) 58
விடை:
ஆ) 62

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை ____________ ஆகும்.
விடை:
29

Question 2.
ஆளுநரின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள் ஆகும்.
விடை:
5

Question 3.
மாவட்ட நீதிபதிகள் ____________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.
விடை:
ஆளுநர்

Question 4.
ஆளுநர் ஒரு மாநிலத்தின் ____________ ஆவார்.
விடை:
நிர்வாகத் தலைவர்

Question 5.
ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக ____________ வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
விடை:
25 வயது

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 2.
ஆளுநர் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.
விடை:
தவறு

Question 3.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை .
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்
i) குடியரசுத் தலைவர்
ii) துணை குடியரசுத் தலைவர்
iii) ராஜ்ய சபை உறுப்பினர்கள்
iv) சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்

அ) i, ii & iii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) i, ii, iii மற்றும் iv சரி
விடை:
இ) i, iii மற்றும் iv சரி

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக
விடை:

  • இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும்
  • சட்டமன்ற மேலவை, சட்டமன்ற கீழவை முதலியன இரு அவைகளாகும்.

Question 2.
மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினராவதற்கு உள்ள தகுதிகள் யாவை?
விடை:

  • சட்டமன்ற பேரவை உறுப்பினராக ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது.

Question 3.
முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
விடை:

  • ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார்.
  • முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  • இவர் பதவியேற்கும் போது உறுப்பினராக இல்லாவிட்டால் மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.

Question 4.
மாநில அமைச்சரவை குழு எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
விடை:
முதலமைச்சர், அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.

முதல்வர் மற்றும் அவரது தலைமையிலான பல்வேறு துறை அமைச்சர்களும் கொண்ட அமைப்பு மாநில அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. இதுவே அமைச்சரவை குழுவாகும்.

VII. விரிவான விடையளி

Question 1.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:

  • மாநிலத்தின் தலைமை நிர்வாகி முதலமைச்சர் ஆவார். மாநில அரசின் பல முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.
  • அமைச்சரவையை உருவாக்குவதில் ‘முதலமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார். இவரது ஆலோசனையின் பெயரில் அமைச்சர்களை ஆளுனர் நியமிக்கிறார்.
  • பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்கி, அவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
  • முதலமைச்சர் மாநில அரசின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும் மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி செய்கிறார்.
  • மாநில அரசின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியானது ஆகும்.
  • இவர் மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
  • முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படியே ஆளுனர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்.

Question 2.
மாநில சட்ட மன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:
சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும். மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்டமன்றத்தின் முக்கிய பணி ஆகும்.

சட்டமன்றம் மாநிலப்பட்டியல் மற்றும் மத்தியப்பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டத்தை இயற்றலாம். எனினும் நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலாது.

மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுப்பாட்டினை செலுத்துகிறது.

மாநில அமைச்சரவை சட்டமன்றத்திற்கு பொறுப்புள்ளதாகவும் மற்றும் பதில் அளிக்கவும் கடமைப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயல்பாடுகளில் திருப்தி ஏற்படாவிட்டால் மாநில சட்டமன்றத்தில் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இயற்றி அமைச்சரவையை நீக்கம் செய்திடலாம்.

மாநில சட்டமன்றம் ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுபடுத்துகிறது. நிதி மசோதாவை சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டு வர இயலும்.

சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசு வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலக்கிக் கொள்ளவோ இயலாது.

சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கு கொள்கின்றனர்.

குறிப்பாக அரசியலமைப்பைத் திருத்தும் சில நேர்வுகளில் சட்டமன்றம் பங்கு வகிக்கிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 3.
உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களையும், பணிகளையும் எழுது?
விடை:
உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அடிப்படை உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர்நீதிமன்றம் பல வித நீதிப் பேராணைகளைப் பிறப்பிக்கின்றன.

குறிப்பாக ஆட்கொணர்வு, தகுதி முறை வினவும், தடை உறுத்தும், கட்டளையிடும் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதிப் பேராணை ஆகியவற்றைப் பிறப்பிக்கின்றன.

ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்கலாக அனைத்து சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.

சார்நிலை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கில் அதில் சட்ட முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்றம் திருப்தியுறும் போது இவ்வழக்கினை எடுத்து தானே முடிவு செய்யலாம்.

இது மாநிலத்திலுள்ள அனைத்து சார் நிலை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.

உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தைப் போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின் ஆதாரச் சான்றாக உள்ள பதிவுரு நீதிமன்றமாக விளங்குகிறது.

குறிப்பாக அரசியலமைப்பின் பாதுகாப்பு என்பது நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதன் மூ லமே உறுதி செய்யப்படுகிறது.

VIII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களின் ஆளுநர், முதலமைச்சர் பெயர்களைப் பட்டியலிடுக.

Question 2.
தமிழ்நாட்டின் அமைச்சர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறைகளையும் பட்டியலிடுக.

8th Social Science Guide மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தமிழக சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை
அ) 500
ஆ) 545
இ) 234
ஈ) 118
விடை:
இ) 234

Question 2.
மாநிலத்தின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர்
அ) மாநில முதலமைச்சர்
ஆ) கல்வி அமைச்சர்
இ) மாநில ஆளுநர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) மாநில ஆளுநர்

Question 3.
மாநில அரசின் சட்டங்கள் யாரால் இயற்றப்படுகின்றன
அ) மாநில ஆளுநர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) சட்டமன்ற உறுப்பினர்கள்
விடை:
ஈ) சட்டமன்ற உறுப்பினர்கள்

Question 4.
சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
அ) 5 ஆண்டுகள் தா
ஆ) 6 ஆண்டுகள்
இ) 2 ஆண்டுகள்
ஈ) 4 ஆண்டுகள்
விடை:
ஆ) 6 ஆண்டுகள்

Question 5.
மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) அமைச்சர் குழு
ஈ) குடியரசுத்தலைவர்
விடை:
ஆ) முதலமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பதவியேற்ற முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால் ______________ காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்
விடை:
ஆறு மாத

Question 2.
சட்டமன்ற _____________ உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
விடை:
மேலவை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 3.
சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது ______________ அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கிறார்
விடை:
ஆளுநர்

Question 4.
____________ ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுப்படுத்துகிறது
விடை:
மாநில சட்டமன்றம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 2

IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
மாநில அரசாங்கம் ஆளுநரை பதவியிலிருந்து நீக்கலாம்.
விடை:
தவறு

Question 2.
மேலவையில் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை:
தவறு

Question 3.
அனைத்து சார்நிலை நீதிமன்றங்களும் உயர்நீதி மன்றங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
விடை:
சரி

V. சரியா கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
சட்டமன்ற பேரவைக்கான நடைமுறைகள்
i) சட்டமன்ற கூட்டத்திற்கு அவைத்தலைவர் தலைமை ஏற்கிறார்.
ii) இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
iii) சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
iv) இது மேலவையைக் காட்டிலும் அதிக அதிகாரமுடையது

அ) 1 மற்றும் ii சரி
ஆ) i, iii மற்றும் iv சரி
இ) ii, iii மற்றும் iv சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
இ) ii, iii மற்றும் iv சரி

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
சட்டமன்ற மேலவை பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையானது நாற்பது உறுப்பினர்களுக்குக் குறையாமலும், அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.

சட்டமன்ற மேலவை ஒரு நிலையான அவையாகும். இதன் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Question 2.
ஆளுநரின் நிலைப்பாடுகள் பற்றி நீவிர் அறிவன யாவை?
விடை:

  • மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தில் பெயரளவு நிர்வாகத் தலைவராக உள்ளார்.
  • இவர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள உறவுகளைப் பராமரிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்தவர் ஆவார்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 3.
உயர்நீதி மன்ற நீதிபதிகளின் தகுதிகள் யாவை?
விடை:

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • இந்தியாவில் 10 ஆண்டுகள் நீதித்துறை அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதி மன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
சட்டமன்ற பேரவைக்கான தேர்தல் பற்றி விரிவாக எழுது
விடை:
சட்டமன்ற பேரவைக்கான தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் தமது வேட்பாளர்களை நியமிக்கின்றன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு கோருகிறார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம்.

எந்த கட்சியையும் சாராத ஒருவரும் தேர்தலில் போட்டியிடலாம். அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர் சுயேச்சை வேட்பாளர் என அழைக்கப்படுகிறார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஒரு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 18 வயது நிரம்பிய அனைவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம்.

அரசியலமைப்பின்படி ஒரு மாநில சட்டமன்றத்தில் 500 உறுப்பினர்களுக்கு மேலாகவும் 60 உறுப்பினர்களுக்கு குறைவாகவும் இருத்தல் கூடாது.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் மாநில ஆளுநர், சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அதனை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த அழைப்பு விடுக்கலாம்.

சபாநாயகர் இல்லாத நேர்வுகளில் துணை சபாநாயகர் சட்டமன்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார்.

Question 2.
ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:
ஆளுநர் ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக செயல்களும் ஆளுநரின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆளுநர் முதலமைச்சரையும் அவரது ஆலோசனையில் பேரில் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கிறார்.

மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதோடு சில இதர நியமனங்களையும் மேற்கொள்கிறார்.

ஆளுநரின் அறிக்கையின் படி குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்.

மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார்.

மாநில சட்டமன்ற கூட்டத்ததைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் மற்றும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் அதிகாரம் கொண்டுள்ளார். > ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே பண மசோதாவைச் சட்டமன்றத்தில் கொண்டு வர முடியும்.

மாநில சட்ட மேலவைக்கு அறிவியல், இலக்கியம், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றிய அறிஞர்களில், ஆறில் ஒரு பங்கு அளவிற்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கிறார்.

மாநில அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமன்றத்திற்குள் சமர்பிக்கப்படுகிறது.

சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது ஆளுநர் அவசரச் சட்டத்தை பிறப்பிக்கிறார்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 3

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

8th Social Science Guide புவிப்படங்களைக் கற்றறிதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும் பாடப்பிரிவு ……………. ஆகும்.
அ) மக்களியல்
ஆ) புவிப்படவியல்
இ) இயற்கையமைப்பு
ஈ) இடவியல்
விடை:
ஆ) புவிப்படவியல்

Question 2.
ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம் ……………
அ) நிலக்கானி படங்கள்
ஆ) நிலத்தோற்ற புவிப்படம்
இ) கால நிலையியல் புவிப்படம்
ஈ) மூலாதார புவிப்படம்
விடை:
ஆ) நிலத்தோற்ற புவிப்படம்

Question 3.
ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகள் ………………. வண்ண ம் மூலம் குறிப்பிடப்படுகிறது.
அ) மஞ்சள்
ஆ) பழுப்பு
இ) வெளிர் நீலம்
ஈ) அடர் நீலம்
விடை:
இ) வெளிர் நீலம்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 4.
பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் ……………… ஆகும்.
அ) நிலக்கானி புவிப்படங்கள்
ஆ) தலப்படங்கள்
இ) சம அளவுக்கோட்டுப் படங்கள்
ஈ) போக்குவரத்துப் படங்கள்
விடை:
அ) நிலக்கானி புவிப்படங்கள்

Question 5.
மக்கட்தொகை பரவலை ………………. மூலம் காண்பிக்கலாம்.
அ) கோடுகள்
ஆ) வண்ண ங்கள்
இ) புள்ளிகள்
ஈ) சமஅளவுக்கோடுகள்
விடை:
இ) புள்ளிகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
புவிக் கோள மாதிரி என்பது ……………….. ன் உண்மையான உருவ மாதிரியாக்கமாகும்.
விடை:
புவி

Question 2.
புவியின் கோள வடிவத்தை ஒரு சமதளப்பரப்பில் வரையப்படும் முறை …………. எனப்ப டும்.
விடை:
வரைபடக் கோட்டுச் சட்டம்

Question 3.
சம அளவு உயரமுள்ள இடங்களை இணைக்கும் கோடு ………………..
விடை:
சம அளவுக் கோடு (சம உயரக்கோடு)

Question 4.
காணிப்படங்கள் பொதுவாக …………………….. ஆல் பராமரிக்கப்படுகின்றன.
விடை:
அரசாங்கம்

Question 5.
………………… புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
விடை:
கருத்துப் படங்கள்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 1
அ) 3, 5, 1, 4, 2
ஆ) 4, 1, 2, 5, 3
இ) 2, 5, 1, 3, 4
ஈ) 5, 2, 4, 1, 3
விடை:
ஆ) 4, 1, 2, 5, 3

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று : சிறிய அளவைப் புவிப்படங்களில் பிரதான தோற்றங்களை மட்டுமே காண்பிக்கப்படுகின்றன.
காரணம் : குறைந்த அளவு இடமே உள்ளதால், பெரிய பரப்பிலான கண்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றை மட்டுமே காண்பிக்க இயலும்.

அ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 2.
கூற்று : மரபுக் குறியீடுகளும், சின்னங்களும் வரைபடத்தின் திறவுகோல் ஆகும்.
காரணம் : இவை குறைந்த அளவிலான படத்தில் அதிக விவரங்களைத் தருகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

V. சுருக்கமாக விடையளி

Question 1.
“புவிப்பட அளவை” – வரையறு.
விடை:
புவிப்பட அளவை என்பது புவிப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் புவிப்படப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் இடையிலான விகிதத்தைக் குறிப்பதாகும்.

Question 2.
இயற்கையமைப்புப் புவிப்படம் என்றால் என்ன?
விடை:
ஒரு பகுதியின் பல்வேறு இயற்கை அம்சங்களைக் காண்பிப்பதற்கு வரையப்படும் படங்கள் இயற்கையமைப்புப் படங்கள் எனப்படுகின்றன.

Question 3.
வரைபடக் கோட்டுச் சட்டம் பற்றி சிறுகுறிப்பு வரைக
விடை:
கோள வடிவமான புவியை ஒரு சமதளப் பரப்பில் வரைவதற்கு பின்பற்றப்படும் ஒரு நுணுக்க முறையே வரைபடக் கோட்டுச் சட்டமாகும்.

வளைவான மேற்பரப்புடைய புவியை புவிப்படத்தில் சரியான முறையில் வரைவது கடினம். புவிப்படங்களில் ஏற்படும் இவ்வகை தவறுகளை குறைக்க வரைபட வல்லுநர்கள் புவியின் மேற்பரப்பை படத்தில் குறிப்பதற்கு புவிப்படக் கோட்டுச் சட்டங்கள் பயன்படுத்துகின்றனர்.

Question 4.
இடைநிலைத் திசைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • வடகிழக்கு
  • வடமேற்கு
  • தென்கிழக்கு
  • தென்மேற்கு

Question 5.
காணிப் புவிப்படங்களின் பயன்கள் யாவை?
விடை:

  • ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களைக் காண்பிக்க காணிப் புவிப்படங்கள் பயன்படுகின்றன.
  • இப்படங்கள் உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, வரிவிதிப்பு, பெரும் பண்ணை பராமரிப்பு, சட்ட ஆவணங்களில் சொத்து விவரங்களைக் குறிப்பிடுதல் போன்றவற்றிற்கு பயன்படுகின்றன.

VI. வேறுபடுத்துக

Question 1.
நிலத்தோற்றப் படங்கள் மற்றும் கருத்துப்படங்கள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 2

Question 2.
பெரிய அளவை மற்றும் சிறிய அளவை புவிப்படங்கள்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 3

Question 3.
புவிக்கோள மாதிரி மற்றும் புவிப்படம்
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 4

VII. பின்வருபவைகளுக்கு விரிவான விடையளி

Question 1.
பல்வேறு புவிப்பட அளவைகளை விரிவாக விளக்குக
விடை:
புவிப்படங்களின் அளவைகள் மூன்று வகைகளில் குறிப்பிடப்படுகின்றன. அவை

  1. வாக்கிய முறை அல்லது சொல்லளவை
  2. பிரதிபின்ன முறை அல்லது விகிதாச்சார முறை
  3. வரைகலை அளவை அல்லது நேரியல் அளவை

வாக்கிய முறை அல்லது சொல்லளவை:
இம்முறையில் அளவுத்திட்டமானது சொற்களால் விவரிக்கப்படுகிறது. 1 செ.மீ என்பது 1 கி.மீ. அதாவது வரைபடத்தில் 1 செ.மீ என்பது நிலப்பகுதியில் 1 கி.மீ. தூரத்தைக் குறிக்கின்றது. ஆகையால் வரைபடத்தில் 1 செ.மீ : 1 கி.மீ., 1 அங்குலம் : 1 மைல் எனக் குறிக்கப்பட்டிருக்கும்.

பிரதிபின்ன முறை (அ) எண்சார் பின்ன முறை (அ) விகிதாச்சார முறை:

  • இம்முறையில் புவிப்படப்பரப்பில் உள்ள தொலைவும் புவிப்பரப்பில் உள்ள தொலைவும் ஒரே அளவில் குறிப்பிடப்படுகிறது.
  • உதாரணமாக 1 : 50,000 என்பது புவிப்படத்தில் 1 அலகு என்பது புவியில் 50,000 அலகுகளைக் குறிக்கின்றது. அதாவது வரைபடத்தில் 1 செ.மீ அல்லது 1 அங்குலம் என்பது புவியில் 50,000 செ.மீ அல்லது 50,000 அங்குலம் என்பதைக் குறிக்கின்றது.
  • பிரதிபின்ன முறையில் அளவையானது 1/50,000 அல்லது 1: 50,000 எனக் குறிப்பிடப்படுகிறது.

வரைகலை அளவை அல்லது நேரியல் அளவை:
இந்த அளவை ஒரு சிறிய வரைக்கோல் போன்று வரைபடத்தின் அடிப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். இக்கோடு மேலும் சிறிய அளவிலான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்

இதன் ஒவ்வொரு சிறு பகுதியும் நிலப்பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட தூரத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. ஒரு சிறு துண்டு நூல் அல்லது பிரிப்பான்களின் உதவியோடு புவிப்படத்தில் குறிப்பிடப்பட்ட அளவையைக் கொண்டு நேரடியாக நிலப்பகுதியில் உள்ள சரியான தூரத்தை அளவிட முடியும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 2.
காணிப் புவிப்படங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை விவரி.
விடை:

  • ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களைக் காண்பிக்கப் பயன்படும் படங்கள் காணிப்புவிப்படங்கள் எனப்படுகின்றன.
  • இவ்வகைப்படங்கள் திட்ட புவிப்படங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • இவை பெரிய அளவையைக் கொண்டுள்ளதால் குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் கட்டடங்களின் முழு விவரங்களையும் அளிக்கின்றன.
  • இவை நகராட்சி வரிவிதிப்பு, பெரும் பண்ணை பராமரிப்பு, சட்ட ஆவணங்களில் சொத்து விவரங்களைக் குறிப்பிடுதல் போன்றவற்றிற்குப் பயன்படுகின்றன.
  • இவை அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

காணிப்புவிப்படத்தின் முக்கியத்துவம்:
காணிப்புவிப்படங்கள், ஒரு நிலத்தின் நில உடமை, எல்லைகள், மாதிரிப் படங்கள், கட்டடத்திட்டப் படங்கள், விளக்கப் படங்கள் ஆகியவை மூலம் ஆவணங்களாக பதிவு செய்கின்றன.

தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் மதிப்பினை அறிந்துகொள்ளவும், வரிவிதிப்பிற்கும் இவ்வகைப் புவிப்படங்கள் பயன்ப்படுத்தப்பட்டன

Question 3.
மரபுக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக
விடை:
புவிப்படத்தில் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பிடப்படுவதற்கு புவிப்படக் குறியீடு மற்றும் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  • இச்சின்னங்கள் புவிப்பட திறவு விசை பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.
  • ஒரு சிறிய பகுதியில் அதிக தகவல்களை இக்குறியீடுகள் மற்றும் சின்னங்கள் அளிக்கின்றன.
  • இதன் மூலம் புவிப்படங்களை எளிதாக உருவாக்கலாம். இவற்றின் மூலம் புவிப்படக் கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
  • சில குறியீடுகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்த சர்வதேச ஒப்பந்தம் அல்லது நடைமுறை பின்பற்றப்படுகிறது. இவை மரபுக் குறியீடுகள் மற்றும் சின்னங்கள் எனப்படுகின்றன.
  • சில மரபுக் குறியீடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 5

VIII. மாணாக்கர்கள் செயல்பாடுகள்

அ) புவிப்படத்தின் தலைப்பினைக் கோடிட்டுக் காட்டுக.
ஆ) படத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் குறியிட்டுக் காட்டுக.
இ) இருப்புப்பாதை தென்மேற்கிலிருந்து …………. திசையை நோக்கிச் செல்கிறது.
ஈ) பூங்காவானது இருப்புப்பாதைக்கு எத்திசையில் அமைந்துள்ளது?
உ) பள்ளிக்கு சிவப்பு வண்ண ம் தீட்டுக.
ஊ) பல்பொருள் அங்காடிக்கு பழுப்பு நிற வண்ண ம் தருக.
எ) உணவகத்தை அடையாளம் கண்டு மஞ்சள் வண்ணம் தருக.
ஏ) இருப்புப்பாதைக்குக் கிழக்கிலுள்ள வீட்டிற்கு ஆரஞ்சு வண்ணம் தருக.
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 6

8th Social Science Guide புவிப்படங்களைக் கற்றறிதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
புவிப்படங்கள் புவியை …………………… சித்தரிக்கின்றன.
அ) இரு பரிமாணத்தில்
ஆ) முப்பரிமாணத்தில்
இ) ஒரு பரிமாணத்தில்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
அ) இரு பரிமாணத்தில்

Question 2.
பெரிய அளவிலான நிலப்பகுதிகளைக் காண்பிக்க …………… புவிப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அ) பெரிய அளவை
ஆ) சிறிய அளவை
இ) நடுத்தர அளவை
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) சிறிய அளவை

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடி.
அ) பிரதிபின்ன முறை
ஆ) எண்சார் பின்ன முறை
இ) விகிதாச்சார முறை
ஈ) வாக்கிய முறை
விடை:
ஈ) வாக்கிய முறை

Question 4.
வரைகலை அளவை ஒரு சிறிய ……………….. போன்று குறிக்கப்பட்டிருக்கும்.
அ) முக்கோணம்
ஆ) நூல்
இ) வரைக்கோல்
ஈ) கடிகாரம்
விடை:
இ) வரைக்கோல்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 5.
‘ஐசோ’ என்ற கிரேக்க மொழிச் சொல்லின் பொருள் …………………
அ) இணைப்பு
ஆ) நேர்மறை
இ) சமம்
ஈ) ஒரே மாதிரியான
விடை:
இ) சமம்

II. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 7
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 8

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : காணிப் புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமை பற்றிய விவரங்களை தெரிவிப்பதில்லை.
காரணம் : இவை சிறிய அளவைகளைக் கொண்டு வரையப்பட்டுள்ளன.

அ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானவை
விடை:
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

IV. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
புவிப்படம் என்றால் என்ன?
விடை:
புவிப்படம் என்பது முழுப்புவியையோ அல்லது புவியின் ஒரு பகுதியையோ ஒரு சமதளப் பரப்பில் அளவையுடன் பதிலீட்டுக் காட்டும் ஒரு முறையாகும்.

Question 2.
சம அளவுக்கோடுகள் என்பன யாவை?
விடை:
சம மதிப்புள்ள இடங்களை இணைக்கும் கோட்டிற்கு சம அளவுக் கோடுகள் என்று பெயர். சம வெப்பக் கோடுகள் மற்றும் சம அழுத்தக் கோடுகள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Question 3.
புவிப்படத்தைக் கற்றறிதல் என்றால் என்ன?
விடை:
புவிப்படத்தைக் கற்றறிதல் என்பது புவிப்படத்தில் உள்ள விவரங்களைப் புரிந்து கொள்ளுதல் அல்லது புவியியல் சார்ந்த விவரங்களை விவரணம் செய்தல் ஆகும்.

Question 4.
புவிப்படத்தின் கூறுகள் யாவை?
விடை:

  • தலைப்பு
  • புவிப்பட விளக்கம் அல்லது திறவு விசை
  • புவிப்படமூலம்
  • மரபுக் குறியீடுகள்
  • புவிப்பட அளவை
  • திசைகள்
  • புவிப்பட கோட்டுச் சட்டம் மற்றும் அமைவிட குறிப்பு
  • சின்னங்கள்

Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல்

Question 5.
ஒரு எளிமையான வாக்கிய அளவுத்திட்டத்தின் குணாதிசயங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அளவையின் தொகுதி சென்டி மீட்டரிலிருந்தால் அதன் விகுதி மீட்டரிலோ அல்லது கிலோ மீட்டரிலோ இருக்கும்.
  • தொகுதி அங்குலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதன் விகுதி மைல்களில் இருக்கும்

Question 6.
நிழற்பட்டைப் படம் என்றால் என்ன?
விடை:

  • நிழற்பட்டைப் படம் என்பது ஒரு கருத்துப் படமாகும். இவற்றில் மக்களடர்த்தி, தனிநபர் வருமானம் போன்றவற்றைக் காண்பிக்கலாம்.
  • மேலும் பிரதேச வேறுபாடுகளையும் நிழற்பட்டைகள் மூலம் காண்பிக்கலாம்.

V. விரிவான விடை தருக

Question 1.
புவிப்படங்களின் பயன்களை வெளிக் கொணர்.
விடை:

  • பொருட்கள் மற்றும் இடங்களின் அமைவிடத்தைக் கண்டறியப் பயன்படுகிறது.
  • போக்குவரத்து வழித்தடங்களைக் காணப்பயன்படுகிறது.
  • இராணுவத்தினருக்கு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் காணப் பயன்படுகிறது.
  • சுற்றுலா வழிகாட்டியாக பயன்படுகிறது.
  • உலகளாவிய பல்வேறு நிகழ்வுகளின் பரவல்களைக் காணப்பயன்படுகிறது.
  • வானிலை நிகழ்வுகளை அறிவிக்கிறது.
  • புவியியலை கற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
  • உலகை ஒரு சிறிய அளவில் சரியான வடிவில் காண்பிக்கின்றது.

VI. மனவரைபடம்

புவிப்படங்களைக் கற்றறிதல்
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 9
Samacheer Kalvi 8th Social Science Guide Geography Chapter 8 புவிப்படங்களைக் கற்றறிதல் 10