Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் பொருள்கள் and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

4th Science Guide வேலை மற்றும் ஆற்றல் Text Book Back Questions and Answers

அ. சரியான சொல்லைப் பயன்படுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு விசை செயல்படும்போது செய்யப்பட வேண்டியது
_______________ ஆகும்.
விடை:
வேலை

Question 2.
வேலை செய்யத் தேவைப்படும் திறன் என்பது _______________.
விடை:
ஆற்றல்

Question 3.
_______________ இயந்திரம் சக்கரம் மற்றும் கயிற்றால் ஆனது.
விடை:
கப்பி
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

Question 4.
______________ வேலையை எளிதாக்க உதவுகிறது.
விடை:
எளிய எந்திரம்

Question 5.
சாய்தளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு _______________
விடை:
சரிவுப் பாதை

ஆ. எழுத்துகளை மாற்றியமைத்து, கருவிகளின் பெயர்களைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 2

இ. பொருத்துக.

1. இரண்டாம் வகை நெம்புகோல் – நீர் இறைத்தல்
2. கப்பி – மிதிவண்டி
3. முதல் வகை நெம்புகோல் – கொட்டை உடைப்பான் .
4. சக்கரம் மற்றும் அச்சு – காற்று
5. புதுப்பிக்க இயலும் வளம் – சாய்ந்தாடி
விடை:
1. இரண்டாம் வகை நெம்புகோல் – கொட்டை உடைப்பான்
2. கப்பி – நீர் இறைத்தல்
3. முதல் வகை நெம்புகோல் – சாய்ந்தாடி
4. சக்கரம் மற்றும் அச்சு – மிதிவண்டி
5. புதுப்பிக்க இயலும் வளம் – காற்று

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

ஈ. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வகைப்படுத்துக.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 4

உ. வினாக்களுக்கு விடையளி.

Question 1.
ஆற்றலின் அலகு யாது?
விடை:
ஆற்றலின் அலகு ஜுல் ஆகும்.

Question 2.
எளிய இயந்திரங்கள் சிலவற்றைக் கூறு.
விடை:
கப்பி, ஆப்பு, சாய்தளம், திருகு, நெம்புகோல், சக்கரம் மற்றும் அச்சு ஆகியவை எளிய இயந்திரங்கள் ஆகும்.

Question 3.
முதல் வகை நெம்புகோல் என்றால் என்ன?
விடை:
ஆதராப் புள்ளி திறனுக்கும் பளுவுக்கும் இடையில் உள்ளது. முதல் வகை நெம்புகோல் ஆகும்.

Question 4.
எலுமிச்சை சாறு பிழியும் கருவி எந்த வகை நெம்புகோலைச் சார்ந்தத? ஏன்?
விடை:
எலுமிச்சை சாறுபிழியும் கருவி இரண்டாம் வகை நெம்புகோல் ஆகும். இங்கு பளு (எலுமிச்சை), திறனுக்கும் ஆதாரப் புள்ளிக்கும் இடையில் உள்ளது.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

Question 5.
வேலை – வரையறு.
விடை:
ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு அப்பொருள் நகரும் செயல் வேலை எனப்படும்.

Question 6.
எவையேனும் மூன்று வகையான ஆற்றலை எழுதுக.
விடை:
மின் ஆற்றல், வெப்ப ஆற்றல், வேதி ஆற்றல்

4th Science Guide வேலை மற்றும் ஆற்றல் InText Questions and Answers

பக்கம் 104 சிந்தித்துக் கூறுவோமா!

ஆசிரியர் : நேற்று நான் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது சாலை அமைக்கும் பணியை செய்யும் மேற்கொண்டிருந்த கண்டேன். அந்த இடத்தில் சில பொருள்கள் இருப்பதையும் கண்டேன். அந்த இடத்தில் என்னென்ன பொருள்கள், இயந்திரங்கள் இருந்திருக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா? வேலை செய்யப்பட்டுள்ளதா அல்லது செய்யப்படவில்லையா என்று எப்போது நம்மால் கூறமுடியும்? வேலை செய்வதற்கு இரண்டு முக்கிய நிபந்தனைகள் தேவை.
1. ஒரு விசை பொருளின் மீது செயல்பட வேண்டும்.
2. பொருள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தப்பட வேண்டும்.

ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு அந்தப் பொருள் நகர்ந்தால் வேலை செய்யப்பட்டது எனலாம்.
விடை:
சாலை போடும் இயந்திரம், கடப்பாரை, மண்வெட்டிகள், இரும்புக் கோடரிகள், மண் அள்ளும் கருவிகள் போன்ற கருவிகள் அங்கு பயன்படுத்தப்பட்டன. விசை செலுத்தப்பட்டு சாலையின் பரப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இங்கு வேலை செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிகிறோம்.

பதிலளிப்போமா!

படத்தை உற்றுநோக்கி, வேலை செய்யப்பட்டிருந்தால் ✓ குறியும் வேலை செய்யப்படவில்லை என்றால் ✗ குறியும் இடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 6
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 7

பதிலளிப்போமா!

கீழ்க்கண்ட செயல்பாடுகளில் வேலை செய்யப்பட்டதா அல்லது செய்யப்படவில்லையா என்பதைக் குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 9

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

பக்கம் 107 1. கப்பி

கீழே உள்ள படத்தை உற்றுநோக்கவும். ஒரு சுமையை கப்பியின் உதவியால் தூக்குவது அல்லது கப்பியைப் பயன்படுத்தாமல் தூக்குவது – இவற்றில் எது எளிமையானது?
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 10
விடை:
கப்பியின் உதவியால் சுமையைத் தூக்குவது எளிதானது.

கப்பி என்பது ஒரு வகை இயந்திரம். இது அச்சைப்பற்றி சுழலும் வகையில் அமைந்த சக்கரம் ஆகும். கயிறு அல்லது சங்கிலி கப்பியின் மீது அதிக விசையுடன் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமையைத் தூக்குவது எளிதானது.

2. சாய்தளம்
ஒரு பெட்டியைத் தூக்குவது, ஒரு சரிவுப்பாதையின் மீது அப்பெட்டியை இழுத்து செல்வதைவிட எளிதானதா? படத்தை உற்றுநோக்கி விவாதிக்கவும்.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 11
விடை:
பெட்டியைத் தூக்குவதைக் காட்டிலும் அதை ஒரு சரிவுப் பாதையின் மீது இழுத்துச் செல்வது எளிதானது.

சாய்தளம் என்பது ஒரு விளிம்பு உயரமானதாகவும் மறு விளிம்பு தாழ்வானதாகவும் சரிவாக அமையப்பெற்ற ஒரு தளமாகும். இதன் வழியே பெட்டியை நகர்த்திச் செல்வது எளிதானது.

பக்கம் 109 பதிலளிப்போமா!

எளிய இயந்திரங்களின் வகைகளைக் கண்டறிந்து குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 12
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 13

பக்கம் 110 பதிலளிப்போமா!

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 14
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 15

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

பக்கம் 111 பதிலளிப்போமா!

பளு, திறன் மற்றும் ஆதாரப்புள்ளியைக் குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 16
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 17
1. பளு – பந்து ஆதாரப்
2. திறன் – எடை
3. ஆதாரப்புள்ளி – மையம்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 18
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 19
1. பளு – பந்து
2. திறன் – மட்டை நுனி
3. ஆதாரப்புள்ளி – கை

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 20
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 21
1. பளு – கொட்டை
2. திறன் – கை
3. ஆதராப்புள்ளி – கைப்பிடிகள் இணையுமிடம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 2 ஒளியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 2 ஒளியியல்

10th Science Guide ஒளியியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
அ) A
ஆ) B
இ) C
ஈ) D
விடை:
அ) A

Question 2.
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
அ) f
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f|
ஈ) f க்கும் 21 க்கும் இடையில்
விடை:
இ) 2f

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 3.
மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்
ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.
விடை:
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்)

Question 4.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ____ மதிப்புடையது.
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) நேர்க்குறி
(அ) எதிர்க்குறி
ஈ) சுழி
விடை:
இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி

Question 5.
ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _____
அ) முதன்மைக் குவியம்
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) fக்கும் 2f க்கும் இடையில்
விடை:
ஆ) ஈறிலாத் தொலைவு

Question 6.
ஒரு லென்சின் திறன் – 4D எனில் அதன் குவியத் தொலைவு
அ) 4 மீ
ஆ) – 40 மீ
இ) -0.25 மீ)
ஈ) -2.5 மீ.
விடை:
இ) – 0.25 மீ

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 7.
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது தோற்றுவிக்கப்படுகிறது.
அ) விழித்திரைக்குப் பின்புறம்
ஆ) விழித்திரையின் மீது
இ) விழித்திரைக்கு முன்பாக
ஈ) குருட்டுத் தானத்தில்
விடை:
இ) விழித்திரைக்கு முன்பாக

Question 8.
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது (PTA-2, Sep.20)
அ) குவி லென்சு
ஆ) குழி லென்சு
இ) குவி ஆடி
ஈ) இரு குவிய லென்சு
விடை:
ஈ) இரு குவிய லென்சு

Question 9.
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஆ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
இ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
விடை:
அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு

Question 10.
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசைவேகங்கள் VB,VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?
அ) VB = VG = VR
ஆ) vB > VG > VR
இ) VB < VG < VR
ஈ) vB < VG > VR
விடை:
இ) VB < vG < VR]

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒளி செல்லும் பாதை _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
ஒளிக்கதிர்

Question 2.
ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட _____
விடை:
அதிகம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 3.
படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது _____ சிதறல் எனப்படும்.
விடை:
மீட்சிச்

Question 4.
ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது, படுகின்ற ஒளிக்கதிரின்ன் _____ ன் நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.
விடை:
அலை நீளத்தின்

Question 5.
_____ கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
விடை:
ஐரிஸ் (Iris)

III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதை விட அதிகமாக இருக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதைவிட குறைவாக இருக்கும்.

Question 2.
லென்சின் திறனானது லென்சின் குவிய தொலைவைச் சார்ந்தது.
விடை:
சரி.

Question 3.
விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: விழிலென்சின் குவிக்கும் திறன் குறைவதால் தூரப்பார்வை ஏற்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 4.
குவிலென்சானது, எப்போதும் சிறிய மாய பிம்பத்தையே உருவாக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: குழிலென்சானது எப்போதும் சிறிய மாயபிம்பத்தை தரும்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 20

விடை:
1-ஈ,
2-அ,
3-உ,
4-ஆ,
5-இ

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப் பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
(இ கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று. ரு கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வுமிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

Question 2.
கூற்று: விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால், கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடு தோன்றுகிறது.
காரணம்: குழிலென்சைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக் குறைப்பாட்டைச் சரிசெய்யலாம்.
விடை:
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
விடை:
காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் (c), மற்றோர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் (v) இடையே உள்ள தகவு ஒளிவிலகல் எண் (µ) எனப்படும்.
µ = \(\frac{c}{v}\)

Question 2.
ஸ்நெல் விதியைக் கூறுக. [Qy-2019]
விடை:
ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது, படுகோணத்தின்
சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமம். இவ்விதி ‘ஸ்நெல் விதி என்று அழைக்கப்படுகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 46

Question 3.
குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும் போது உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர் வரைபடம் வரைக. (GMQP-2019)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 47

Question 4.
நிறப்பிரிகை வரையறு.
விடை:
வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும் போது அதில் உள்ள நிறங்கள் தனித் தனியாகப் பிரிகை அடைகின்றன. இந்நிகழ்வு ‘நிறப்பிரிகை’ எனப்படும்.

Question 5.
ராலே சிதறல் விதியைக் கூறுக. [PTA-3]
விடை:
ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த் தகவில் இருக்கும். சிதறல் அளவு ∝ \(\frac{1}{\lambda^{4}}\)
இவ்விதியின் படி, குறைந்த அலைநீளம் கொண்ட நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது.

Question 6.
குவிலென்சு மற்றும் குழிலென்சு – வேறுபடுத்துக. [PTA-3; Qy-2019]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 70

Question 7.
விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?
விடை:
அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண்பதற்கு ஏற்ப விழி லென்சு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை, விழி ஏற்பமைவுத் திறன்’ எனப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 8.
கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை? (GMQP-2019)
விடை:

  1. விழி லென்சின் குவிய தூரம் குறைவதாலும்
  2. விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும்
  3. விழிக்கோளம் நீண்டு விடுவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.

Question 9.
வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது? (PTA-1)
விடை:
சூரிய ஒளியானது, வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் போது, குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது, அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது. இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.

Question 10.
போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன? (PTA-4)
விடை:

  1. சிவப்பு நிறம் அதிக அலைநீளம் உடையது.
  2. எனவே, குறைவாக சிதறல் அடையும் சிவப்புநிற ஒளி மூடுபனி, புகை போன்றவற்றிலும் எளிதாக ஊடுருவி நமது கண்ணை அடைகிறது.

VII. விரிவாக விடையளி

Question 1.
ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக. [Qy-2019]
விடை:

  1. ஒளி என்பது ஒருவகை ஆற்றல்.
  2. ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது.
  3. ஒளி பரவ ஊடகம் தேவையில்லை. வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும்.
  4. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 × 108 மீ வி-1.
  5. ஒளியானது அலை வடிவில் செல்வதால், அது அலைநீளம் (λ) மற்றும் அதிர்வெண் (v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும். இவை C = vλ என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப்படுகிறது.

Question 2.
குவிலென்சு ஒன்றினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களுக்கான விதிகளை கதிர்படங்களுடன் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 40

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 3.
கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக. [PTA-6]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 45
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 48

Question 4.
கூட்டு நுண்ணோக்கி ஒன்றின் அமைப்பையும் செயல்படும் விதத்தையும் விளக்குக. (Qy-2019)
விடை:
அமைப்பு: கூட்டு நுண்ணோக்கியானது இரண்டு குவி லென்சுகளைக் கொண்டது.
1) பொருளருகு லென்சு (அ) பொருளருகு வில்லை.
2) கண்ணருகு லென்சு (அ) கண்ணருகு வில்லை.
பொருளருகு லென்சு: பொருளுக்கு அருகில் உள்ள குறைந்த குவியதூரம் கொண்டு குவிலென்சு
கண்ணருகு லென்சு: கண்ணிற்கு அருகில் உள்ள அதிக விட்டமும், அதிக குவிய தூரமும் கொண்ட குவிலென்சு.
இந்த இரண்டு லென்சுகளும் முன்னும் பின்னும் நகரக்கூடிய வகையில் குறுகலான குழாயினுள் பொருத்தப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 50
செயல்படும் விதம்:

  1. பொருள் (AB)-யானது, பொருளருகு லென்சின் குவியதூரத்தை விடச் சற்றுக் கூடுதலான தொலைவில் வைக்கப்படுகிறது.
  2. பொருளருகு லென்சின் மறுபுறத்தில் பெரிய, தலைகீழான, மெய்ப் மெய்ப்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
  3. இந்த பிம்பமானது கண்ணருகு லென்சிற்குப் பொருளாகச் செயல்படுகிறது.
  4. மேலும், இப்பிம்பமானது (A’B’) கண்ணருகு லென்சின் முதன்மைக் குவியத்திற்குள் அமையுமாறு கண்ணருகு லென்சு சரிசெய்யப்படுகிறது. கண்ணருகு லென்சு, அளவில் பெரிய நேரான மாயபிம்பத்தைப் (A”B”) பொருள் இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கிறது.

VIII. கணக்கீடுகள்.

Question 1.
10 செ.மீ குவிய தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.
விடை:
கொடுக்கப்பட்டவை :
பொருளின் தொலைவு U = -20 செ.மீ
குவிலென்சின் குவியதூரம் f = 10 செ.மீ
கண்டறிய :
பிம்பத்தின் தொலைவு v=?
பிம்பத்தின் தன்மை யாது?
தீர்வு :
பொருளானது லென்சின் இடது பக்கத்தில் வைக்கப்படும்போது f = 10 செ.மீ
u = – 20 செ.மீ
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 52
பிம்பத்தின் தொலைவு v = 20 செ.மீ
பெரிதாக்கப்பட்ட தலைகீழான பிம்பம் 20 செ.மீ தொலைவில் லென்சின் வலப்பக்கத்தில் உருவாகிறது.
உருப்பெருக்கம் m = \(\frac{v}{u}\) = \(\frac{20}{-20}\) = -1
(-ve குறி பிம்பத்தின் தன்மையை குறிக்கிறது. தலைகீழான பிம்பம்)

Question 2.
3 செ.மீ உயரமுள்ள பொருளொன்று 15 செ.மீ குவிய தொலைவு கொண்ட குழிலென்சிற்கு முன்பாக 10 செ.மீ தொலைவில் வைக்கப்படுகிறது எனில் – லென்சினால் உருவாக்கப்படும் பிம்பத்தின் உயரத்தைக் கண்டுபிடி.
விடை:
கொடுக்கப்பட்டவை:
பொருளின் தொலைவு u = -10 செ.மீ
(பொருளானது இடப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது)
குவிய தொலைவு f = -15 செ.மீ
(∵ குவிலென்சு)
கண்ட றிய:
பிம்பத்தின் தொலைவு v = ?
பொருளின் உயரம் h = 3 செ.மீ
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 53
உருப்பெருக்கம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 54
∴ பிம்பத்தின் அளவு,
h’ = 1.8 செ.மீ

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத் தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது ! தவறுதலாக கீழே விழுந்து, இருசம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர். அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?
விடை:

  1. மாணவர் தொடர்ந்து சோதனையை செய்ய முடியும். குவிலென்சு உடைவதற்கு முன்னால் எவ்வித பிம்பம் கிடைக்குமோ அதே அளவுள்ள பிம்பம் கிடைக்கும்.
  2. ஆம். அவருக்கு பிம்பங்கள் கிடைக்கும். ஆனால், உருவாக்கப்படும் பிம்பத்தின் செறிவு குறைவாக இருக்கும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 2.
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
விடை:
(i) ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரிதாக உள்ளதெனில் அதன் பார்வைப்புலம் மற்றும் ரெட்டினாவின் பரப்பும் அதிகமாக இருக்கும். இதனால் இரவு நேரத்தில் படும் சுற்றுப்புற ஒளியானது அதிக அளவில் கண்ணை அடையும். எனவே, இரவு நேரத்தில் இரையைத் தேட எளிதாக இருக்கும்.

(ii) இதனால் இரவு நேரத்தில் படும் சுற்றுப்புற ஒளியானது அதிக அளவில் கண்ணை அடையும். எனவே, இரவு நேரத்தில் இரையைத் தேட எளிதாக இருக்கும்.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
ராமன் ஒளிச்சிதறலில் சிதறலடைந்த ஒளியானது …………………… வரிகளை உள்ளடக்கியது. (PTA-5)
அ) ஸ்டோக்ஸ்
ஆ) ஆண்டிஸ்டோக்ஸ்
இ) ராலே
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

2 மதிப்பெண்கள்

Question 1.
கீழ்காணும் கதிர் வரைபடத்தை நிறைவு செய்க.
[PTA-6]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 49
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 49.2

Question 2.
பொதுவாக மனிதக் கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறுத் தொலைவு மதிப்பு என்ன ? [PTA-6]
விடை:
பொதுவாக மனிதக் கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறுத் தொலைவு மதிப்பு 25 செமீ.

4 மதிப்பெண்கள்

Question 1.
வகுப்பறையில் உள்ள மாணவர் ஒருவரால் புத்தகத்தை வாசிக்க முடிகிறது. ஆனால் அவரை கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தெளிவாகப் பார்க்க இயலவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள இக்குறைபாட்டின் பெயர், காரணம் மற்றும் சரிசெய்யும் முறையினைத் தருக. (7 Marks) (PTA-1)
விடை:
குறைபாட்டின் பெயர்: கிட்டப்பார்வை (மையோபியா)
காரணம்: விழிலென்சின் குவிய தூரம் குறைவதாலும், விழிலென்சிற்கும் விழித்திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. அதனால் தான் வகுப்பறையில் உள்ள மாணவரால் புத்தகத்தை வாசிக்க முடிகிறது. தொலைவில் கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தெளிவாகப் பார்க்க இயலவில்லை.
சரி செய்யும் முறை: தகுந்த குவியத் தொலைவு கொண்ட குழிலென்சைப் பயன்படுத்துவதன் மூலம் இக்குறைபாட்டை சரிசெய்யலாம்.

Question 2.
எளிய நுண்ணோக்கியில் பிம்பம் உருவாதலுக்கான கதிர் வரைபடம் வரைக. (PTA-2)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 60

Question 3.
எளிய நுண்ணோக்கியில் உருவாகும் பிம்பத்தின் நிலை, தன்மை மற்றும் அளவினைக் காண்க. (PTA-2)
விடை:
எளிய நுண்ணோக்கி:
(i) குவிலென்சைக் கண்களுக்கு அருகில் வைத்து, பொருள்களைப்பார்க்கும் போது பொருள்களின் பெரிதாக்கப்பட்ட மாயப்பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
(ii) AB என்ற பொருளை, குவி லென்சின் முக்கிய குவியத்திற்குள் (u < f) வைத்து லென்சின் மறுபுறத்தின் வழியாகப் பொருளைக் காண வேண்டும். குவிலென்சின் முக்கிய குவியத்திற்கும், ஒளியியல் மையத்திற்கும் இடையே பொருள் வைக்கப்படும்போது, லென்சானது நேரான, பெரிதாக்கப்பட்ட மாயப் பிம்பத்தை பொருள் இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல்

Question 4.
மாறாத வெப்பநிலையில் ஒரு கலனில் உள்ள வாயுவின் ஆரம்ப அழுத்தத்தை, நான்கு மடங்கு அதிகரிக்கும் போது, அவ்வாயுவின் பருமன் 20 cc (V1 cc)-லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், இறுதி பருமன் V2 cc-வைக் கணக்கிடுக. [PTA-3]
விடை:
தொடக்க அழுத்தம் (P1) = P
இறுதி அழுத்தம் (P2) = 4P
தொடக்க பருமன் (V1) = 20 cc = 20 செமீ3
இறுதி பருமன் (V2) = ?
பாயில் விதியின்படி,
PV = மாறிலி
P1V1 = P2V2
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 65
v2 = 5 செமீ3

Question 5.
ஒரு லென்சின் திறன்-2 டையாப்டர் எனில், லென்சின் குவியதூரத்தைக் காண்க.(PTA-4)
விடை:
கொடுக்கப்பட்டவை: லென்சின் திறன் = -2
கண்டறிய: லென்சின் குவியதூரம் f = ?
தீர்வு:
P = \(\frac{1}{f}\) (or) f = \(\frac{1}{P}\)
f = \(\frac{1}{-2}\) = -0.5m
f = -0.5m

Question 6.
3 செமீ உயரமுள்ள பொருளொன்று 10 செமீ தூரத்தில் குவிலென்சின் முன் வைக்கப்படுகிறது. லென்சின் மையத்திலிருந்து 20 செமீ தொலைவில் பிம்பம் உருவாகிறது எனில் பிம்பத்தின் உருப்பெருக்கம் மற்றும் உயரத்தைக் கணக்கிடுக. (PTA-5)
விடை:
கொடுக்கப்பட்டவை:
உயரம் h = 3cm, u = 10 cm, v = 20 cm !
கண்ட றிய:
உருப்பெருக்கம் m = ?
பிம்பத்தின் உயரம் h’ = ?
தீர்வு: m = –\(\frac{v}{u}\) = \(\frac{-20}{10}\) = -2
உருப்பெருக்கம், m = -2
m = \(\frac{h’}{h}\)
-2 = \(\frac{h’}{3}\)
பிம்பத்தின் உயரம் h’ = -6 cm

7 மதிப்பெண்கள்

Question 1.
வெற்றிடத்தில் பயணிக்கும் 3000A அலைநீளமுள்ள கண்ணுறு ஒளியின் அதிர்வெண்ணைக் காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை: [PTA-5)
அலைநீளம் λ = 3000 A [∵1A = 10-10m]
= 3000 × 10-10m
ஒலியின் திசைவேகம்,
c = 3 × 108 ms-1
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 692

அரசு தேர்வு வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
ஒரு பொருளிலிருந்து செல்லும் ஒளிக்கற்றையானது 0.3 மீ. குவியத் தொலைவு கொண்ட விரிக்கும் லென்சால் குவிக்கப்பட்டு 0.2 மீ. என்ற தொலைவில் பிம்பத்தை ஏற்படுத்து கிறது எனில் பொருளின் தொலைவைக் கணக்கிடுக.? (Sep.20)
விடை:
f = -0.3 மீ, v = -0.2 மீ
லென்சு சமன்பாட்டிலிருந்து
Samacheer Kalvi 10th Science Guide Chapter 2 ஒளியியல் 90

4 மதிப்பெண்கள்

Question 1.
தொலைநோக்கிகளின் நன்மைகள் யாவை? [Qy-2019]
விடை:

  1. கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் குறித்த விரிவான பார்வையைத் தருகிறது.
  2. தொலைநோக்கியுடன் ஒளிப்படக் கருவியை இணைப்பதன் மூலம் வான் பொருள்களை ஒளிப்படம் எடுக்கலாம்.
  3. குறைவான செறிவுடைய ஒளியிலும் தொலைநோக்கியைப் பயன்படுத்தலாம்.

Question 2.
எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள் யாவை? (Sep.20)
விடை:
எளிய நுண்ணோக்கியின் பயன்பாடுகள்:

  1. இது கடிகாரம் பழுது பார்ப்பவர்கள் மற்றும் ஆபரணங்கள் செய்பவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
  2. சிறிய எழுத்துக்களைப் படிக்க உதவுகிறது.
  3. பூக்கள் மற்றும் பூச்சிகளின் பாகங்களை உற்றுநோக்கப் பயன்படுகிறது.
  4. தடய அறிவியல் துறையில், கைரேகை களைப் பகுத்தறியப் பயன்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 1 இயக்க விதிகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 1 இயக்க விதிகள்

10th Science Guide இயக்க விதிகள் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?
அ) பொருளின் எடை
ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்
இ) பொருளின் நிறை
ஈ) அ மற்றும் ஆ
விடை:
இ) பொருளின் நிறை

Question 2.
கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
அ) உந்த மாற்று வீதம்
ஆ) விசை மற்றும் காலமாற்ற வீதம்
இ) உந்த மாற்றம்
ஈ) நிறை வீத மாற்றம்
விடை:
இ) உந்த மாற்றம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 3.
கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்
இ) அ மற்றும் ஆ
ஈ) சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
விடை:
இ) அ மற்றும் ஆ)

Question 4.
உந்த மதிப்பைy அச்சிலும் காலத்தினை அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
அ) கணத்தாக்கு விசை
ஆ) முடுக்கம்
இ) விசை
ஈ) விசை மாற்ற வீதம்
விடை:
இ) விசை

Question 5.
விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
அ) நீச்சல் போட்டி
ஆ) டென்னிஸ்
இ) சைக்கிள் பந்தயம்
ஈ) ஹாக்கி
விடை:
இ) சைக்கிள் பந்தயம்

Question 6.
புவிஈர்ப்பு முடுக்கம் -ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்?
அ) cms-1
ஆ) Nkg-1
இ) Nm2 kg-1
ஈ) cm2s-2
விடை:
ஆ) Nkg-1

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 7.
ஒரு கிலோ கிராம் எடை என்பது ………… ற்கு சமமாகும்.
அ) 9.8 டைன்
ஆ) 9.8 × 104 N
இ) 98 × 104 டைன்
ஈ) 980 டைன்
விடை:
இ) 98 × 104 டைன்

Question 8.
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
அ) 4M
ஆ) 2M
இ) M/4.
ஈ) M
விடை:
ஈ) M
குறிப்பு: நிறை மதிப்பு, எங்கும் மாறாது. ஆனால் எடையின் மதிப்பு, புவிஈர்ப்பு முடுக்க (g) மதிப்பைப் பொறுத்து இடத்திற்கு இடம் மாறும்.

Question 9.
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?
அ) 50% குறையும்
ஆ) 50% அதிகரிக்கும்
இ) 25% குறையும்
ஈ) 300% அதிகரிக்கும்
விடை:
ஈ) 300% அதிகரிக்கும்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 30

Question 10.
ராக்கெட் ஏவுதலில் _____ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது. (GMQP-2019)
அ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
இ) நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
ஈ) அ மற்றும் இ
விடை:
ஈ) அ மற்றும் இ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு _____ தேவை.
விடை:
விசை

Question 2.
நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் திடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன் நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு _____ மூலம் விளக்கப்படுகிறது.
விடை:
இயக்கத்தில் நிலைமம்

Question 3.
மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் _____ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் குறியிலும் குறிக்கப்படுகிறது.
விடை:
எதிர், நேர்

Question 4.
மகிழுந்தின் சக்கரத்தின் சுழற்றி வேகத்தினை மாற்ற _____ பயன்படுகிறது.
விடை:
பற்சக்கரம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 5.
100 கி.கி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் _____ அளவாக இருக்கும்.
விடை:
980 N

III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

Question 1.
துகள் அமைப்பில் ஏற்படும் நேர்க்கோட்டு உந்தம் எப்போதும் மாறிலியாகும்.
விடை:
தவறு. சரியான கூற்று : புற விசை செயல்படாத போது ஒரு அமைப்பின் நேர்க்கோட்டு உந்தம் மாறிலியாக இருக்கும்.

Question 2.
பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான எடைக்கு சமமாக இருக்கும்.
விடை:
தவறு. சரியான கூற்று: பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான எடைக்கு சமமாக இருக்காது.

Question 3.
பொருட்களின் எடை நில நடுக்கோட்டுப்பகுதியில் பெருமமாகவும், துருவப்பகுதியில் குறைவாகவும் இருக்கும்.
விடை:
தவறு. சரியான கூற்று : பொருட்களின் எடை நில நடுக்கோட்டுப் பகுதியில் குறைவாகவும், துருவப் பகுதியில் பெருமமாகவும் இருக்கும்.

Question 4.
திருகுமறை (Screw) ஒன்றினை குறைந்த கைப்பிடி உள்ள திருகுக் குறடு (Spanner) வைத்து திருகுதல், நீளமான கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்துத் திருகுதலை விட எளிதானதாகும்.
விடை:
தவறு. சரியான கூற்று: திருகுமறை (Screw) ஒன்றினை நீளமான கைப்பிடி உள்ள திருகுக் குறடு (Spanner) வைத்து திருகுதல், குறைந்த கைப்பிடி கொண்ட திருகுக் குறடினை வைத்துத் திருகுதலை விட எளிதானதாகும்.

Question 5.
புவியினை சுற்றி வரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர், புவிஈர்ப்பு விசை இல்லாததால் எடையிழப்பை உணர்கிறார். விடை:
தவறு. சரியான கூற்று: புவியினை சுற்றி வரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரரின் புவி ஈர்ப்பு முடுக்கம், விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால் எடையிழப்பை உணர்கிறார்.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 35
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 36

V. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.

Question 1.
கூற்று: வலஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பு, இடஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பிற்கு சமமானதாக இருக்கும். காரணம்: உந்த அழிவின்மை விதி என்பது புறவிசை மதிப்பு சுழியாக உள்ளபோது மட்டுமே சரியானதாக இருக்கும்.
விடை:
(ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 2.
கூற்று: ‘g’ ன் மதிப்பு புவிப்பரப்பில் இருந்து உயர செல்லவும் புவிப்பரப்பிற்கு கீழே செல்லவும் குறையும்.
காரணம்: ‘g’ மதிப்பானது புவிப்பரப்பில் பொருளின் நிறையினைச் சார்ந்து அமைகிறது.
விடை:
(இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு.

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
விடை:
ஒவ்வொரு பொருளும் தன் மீது சமன் செய்யப்படாத புற விசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையையோ, அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை நிலைமம்’ என்றழைக்கப்படுகிறது.

Question 8.
பெரிய வாகனங்களில் திருகுமறைகளை (nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner) பயன்படுத்தப்படுவது ஏன்?
விடை:

  1. விசையின் திருப்புத்திறன், திருகுக்குறடின் கைப்பிடி நீளத்தைப் பொறுத்து அதிகரிக்கிறது. ஆகவே திருகுக்குறடின் கைப்பிடி நீளமாக இருக்கிறது.
  2. விசையின் திருப்புத்திறன் Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 40

Question 9.
கிரிக்கெட் விளையாட்டில் மேலிருந்து விழும் பந்தினை பிடிக்கும் போது, விளையாட்டு வீரர் தம் கையினை பின்னோக்கி இழுப்பது ஏன்?
விடை:
விளையாட்டு வீரர் தன் கையை பின்னோக்கி இழுப்பதற்கு காரணம்

  1. மோதும் காலம் சற்று அதிகரிக்கிறது.
  2. தன் கையில் பந்து ஏற்படுத்தும் கணத்தாக்கு விசையின் அளவை இது குறைக்கிறது.

Question 10.
விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?
விடை:

  1. விண்வெளி வீரர் உண்மையில் மிதப்பதில்லை.
  2. விண்கலம் மிக அதிக சுற்றியக்க திசைவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர் அக்கலத்துடன் இணைந்து சம வேகத்தில் நகர்கிறார்.
  3. அவரது முடுக்கம், விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால், அவர் தடையின்றி விழும் நிலையில் (free fall) உள்ளார்.
  4. அப்போது அவரது தோற்ற எடை மதிப்பு சுழியாகும். (R = 0). எனவே அவர் அக்கலத்துடன் எடையற்ற நிலையில் காணப்படுகிறார்.

VII. கணக்கீடுகள்

Question 1.
இருபொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 ms-2 மதிப்பில் அதை முடுக்குவித்தால், அதே விசை கொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?
விடை:
கொடுக்கப்பட்டவை:
இரு பொருட்களின் நிறை விகிதம் 3 : 4
சிறிய பொருளின் நிறை = m1 = 3 kg எனவும்,
பெரிய பொருளின் நிறை = m2 = 4 kg எனவும் கருதுக.
அதிக நிறையுடைய பெரிய பொருள் மீது விசை செயல்படுவதால் ஏற்படும் முடுக்கம், a2 = 12 ms-2 கண்டறிய: சிறிய பொருளின் மீதான குறைந்த விசை a1 = ?
தீர்வு:
நியூட்டனின் இரண்டாம் விதிப்படி,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 45
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதிப்படி,
F1 = -F2,
3a1 = -48 ∴ a1 = –\(\frac{48}{3}\) = -16 ms-2
சிறிய பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் : 16 ms-2

Question 2.
1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10 மீவி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் மீண்டும் உயரச்செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
நிறை (m) = 1 கிகி
தொடக்க திசைவேகம் u = 10 மீவி-1
இறுதி திசைவேகம் v = -10 மீவி-1
கண்டறிய: பந்தில் ஏற்படும் உந்தமாற்றம்
= ?
தீர்வு: மோதலுக்கு முன் உந்தம்
= mu = 1 × 10
= 10 கிகி மீவி-1
மோதலுக்கு பின் உந்தம்
= mv = -(1 × 10)
= – 10 கிகி மீவி-1
உந்த மாற்றம் = mv- mu
= – 10 – 10 கிகி மீவி-1
= – 20 கிகி மீவி-1

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 3.
இயந்திரப் பணியாளர் ஒருவர் 40 cm கைப்பிடி நீளம் உடைய திருகுக்குறடு கொண்டு 140 N விசை மூலம் திருகு மறை ஒன்றை கழற்றுகிறார். 40 N விசை கொண்டு அதே திருகு மறையினை கழற்ற எவ்வளவு நீள கைப்பிடி கொண்ட திருகுக்குறடு தேவை?
விடை:
கொடுக்கப்பட்டவை:
விசை F1 = 140 N
நீளம் L1 = 40 cm = 40 × 10-2m
விசை F2 = 40N
நீளம் L2 = ?
கண்ட றிய: F1 × L2 = F2 × L2
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 46
நீளம் L2 = 1.4 m

Question 4.
இரு கோள்களின் நிறை விகிதம் முரையே 2:5, அவைகளின் ஆர விகிதம் முறையே 4:7 எனில், அவற்றின் ஈர்ப்பு முடுக்கம்
விகிதத்தை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
இரு கோள்களின் நிறை விகிதம் 2 : 5
m1 : m2 = 2 : 5
ஆரவிகிதம் = 4 : 7
r1 : r2 = 4 : 7
சிறிய பொருளின் நிறை m1 = 2 kg
பெரிய பொருளின் நிறை m2 = 5 kg
கண்ட றிய:
புவி ஈர்ப்பு முடுக்க விகிதம் g1 : g2 = ?
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 50

VIII. விரிவாக விடையளி.

Question 1.
நிலைமத்தின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. (PTA-3)
விடை:
நிலைமத்தின் வகைகள்:

(i) ஓய்வில் நிலைமம்
(ii) இயக்கத்தில் நிலைமம்
(iii) திசையில் நிலைமம்

(i) ஓய்வில் நிலைமம்: நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு, ஓய்வில் நிலைமம் எனப்படும். (எ.கா) கிளைகளை உலுக்கிய பின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள், பழங்கள்.

(ii) இயக்கத்தில் நிலைமம்: இயக்க நிலையில் உள்ள பொருள், தமது இயக்க நிலை மாற்றத்தை
எதிர்க்கும் பண்பு, இயக்கத்தில் நிலைமம் எனப்படும். (எ.கா) நீளம் தாண்டுதல் போட்டியில் நீண்ட தூரம் தாண்டுவதற்காக, தாண்டும் முன் சிறிது தூரம் ஓடுவது.

(iii) திசையில் நிலைமம்: இயக்க நிலையில் உள்ள பொருள், இயங்கும் திசையில் இருந்து மாறாது, திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு திசையில் நிலைமம் எனப்படும். (எ.கா) ஓடும் மகிழுந்து வளைபாதையில் செல்லும் போது பயணியர் ஒருபக்கமாக சாய்தல்.

Question 2.
நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.
விடை:
நியூட்டனின் முதல்விதி:

  1. ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
  2. இவ்விதி விசையினை வரையறுக்கிறது. பொருட்களின் நிலைமத்தையும் விளக்குகிறது.

நியூட்டனின் இரண்டாம் இயக்கவிதி:

  1. பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும், இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
  2. இவ்விதி விசையின் எண்மதிப்பை அளவிட உதவுகிறது. இதை ‘விசையின் விதி’ என்றும் அழைக்கலாம்.
    F = ma

நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதி:

  1. ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு. விசையும் எதிர் விசையும் எப்போதும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
  2. (எ.கா) பறவைகள் தமது சிறகுகளின் விசை (விசை) மூலம் காற்றினை கீழே தள்ளுகின்றன. காற்றானது அவ்விசைக்கு சமமான விசையினை (எதிர்விசை) உருவாக்கி பறவையை மேலே பறக்க வைக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 3.
விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதிமூலம் தருவி.
விடை:
நியூட்டனின் இரண்டாம் இயக்கவிதி:
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும், இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.

விசைக்கான சமன்பாடு:
m நிறை மதிப்புடைய பொருள் ஒன்று u என்ற ஆரம்ப திசைவேகத்தில் நேர்க்கோட்டு இயக்கத்தில் உள்ளதெனக் கொள்வோம்.

‘t’ என்ற கால இடைவெளியில் F என்ற சமன் செயப்படாத புற விசையின் தாக்கத்தால், அதன் வேகம் V என்று மாற்றமடைகிறது.
பொருளின் ஆரம்ப உந்தம் Pi = mu
இறுதி உந்தம் Pf = mv
உந்தமாறுபாடு ∆ p = Pf – Pi
= mv – mu
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி,
விசை F ∝ உந்த மாற்றம்/ காலம்
F ∝ (mv – mu) / t
F = Km (v-u)/t
K என்பது விகித மாறிலி; K = 1 (அனைத்து அலகு முறைகளிலும்).
எனவே F = m(v – u) / t
முடுக்கம் = திசை வேகமாற்றம் /காலம் ;
a = (v – u) /t
எனவே, F = m × a
விசை = நிறை × முடுக்கம்

Question 4.
உந்த மாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க. GMQP-2019
விடை:
உந்த மாறாக் கோட்பாடு:
புற விசை ஏதும் தாக்காத வரையில் ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் மீது செயல்படும். மொத்த நேர்க்கோட்டு உந்தம் மாறாமல் இருக்கும். நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை கீழ்கண்ட ஒரு எடுத்துக்காட்டின் மூலம் நிரூபிக்கலாம்:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 52

  1. A மற்றும் B என்ற இரு பொருட்களின் நிறைகள் முறையே m1 மற்றும் m2 என்க. அவை
    நேர்க்கோட்டில் பயணிப்பதாக கொள்வோம்.
  2. u1 மற்றும் u2 என்பவை அவற்றின் ஆரம்ப திசை வேகங்களாக கொள்வோம்.
  3. பொருள் A-ஆனது, B-ஐ விட அதிக திசைவேகத்தில் செல்வதாக கருதுவோம். (u1 > u2).
  4. ‘t’ என்ற கால இடைவெளியில் பொருள் A – னது, B மீது மோதலை ஏற்படுத்துகிறது.
  5. மோதலுக்குப் பிறகு அப்பொருள்கள் அதே நேர்க்கோட்டில் v1 மற்றும் v2 திசைவேகத்தில் பயணிப்பதாக கொள்வோம்.
  6. நியூட்டனின் இரண்டாம் விதிப்படி,
    B-யின் மீது A-ன் விசை
    FA = m2 (v2 – u2) /t
    அதே போல் A யின் மீது B-ன் விசை
    FB = m1(v1 – u1) /t
  7. நியூட்டனின் மூன்றாம் விதிப்படி,
    A-ன் மீது செயல்படும் விசையானது B-ன் மீது செயல்படும் எதிர்விசைக்கு சமம்.
    FB = – FA
    m1 (v1 – u1)/t = -m2(v2 – u2) /t
    m1v1 + m2v2 = m1u1 + m2u2
  8. மேற்காண் சமன்பாடு, இந்நிகழ்வில் வெளிவிசையின் தாக்கம் எதும் இல்லாத போது, மோதலுக்கு பின் உள்ள மொத்த உந்த மதிப்பு, மோதலுக்கு முன் உள்ள மொத்த உந்த மதிப்பிற்கு சமம் என்பதை காட்டுகிறது.
  9. இது பொருளின் மீது செயல்படும் மொத்த உந்தம் ஒரு மாறிலி என்ற நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை நிரூபிக்கிறது.

Question 5.
ராக்கெட் ஏவுதலை விளக்குக. (PTA-4; Sep.20)
விடை:

  1. ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி பயன்படுகின்றன.
  2. ராக்கெட்டுகளில் உள்ள கலனில் திரவ அல்லது திட எரிபொருள்கள் நிரப்பப்படுகின்றன.
  3. அவை எரியூட்டப்பட்டதும், வெப்ப வாயுக்கள் ராக்கெட்டின் வால் பகுதியில் இருந்து அதிக திசைவேகத்தில் வெளியேறுகின்றன.
  4. அவை மிக அதிக உந்தத்தை உருவாக்குகின்றன.
  5. இந்த உந்தத்தை சமன் செய்ய, அதற்கு சமமான எதிர் உந்துவிசை எரிகூடத்தில் (Combustion Chamber) உருவாகி, ராக்கெட் மிகுந்த வேகத்துடன் முன்னோக்கி பாய்கிறது.
  6. ராக்கெட் உயர பயணிக்கும் போது அதில் உள்ள எரிபொருள் முழுவதும் எரியும் வரை அதன் நிறை படிப்படியாக குறைகிறது.
  7. உந்த அழிவின்மை விதியின் படி, நிறை குறையக் குறைய, அதன் திசைவேகம் படிப்படியாக அதிகரிக்கிறது.
  8. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ராக்கெட்டானது புவியின் ஈர்ப்பு விசையினை தவிர்த்து விட்டு செல்லும் வகையில், அதன் திசைவேக மதிப்பு உச்சத்தை அடைகிறது. இது விடுபடுவேகம் (Escape Speed) எனப்படுகிறது.

Question 6.
பொது ஈர்ப்பியல் விதியினை கூறுக. அதன் கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க. (Qy-2019)
விடை:
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி:
அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வோர் துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது. அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர் விகிதத்திலும், அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர் விகிதத்திலும் இருக்கும். மேலும் இவ்விசை நிறைகளின் இணைப்புக் கோட்டின் வழியே செயல்படும். இவ்விசை எப்போதும் ஈர்ப்பு விசையாகும். இவ்விசை, நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல.
இதன் கணிதவியல் சூத்திரம்:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 75
m1 மற்றும் m2 என்ற நிறையுடைய இரு பொருள்கள் r என்ற தொலைவில் வைக்கப்பட்டுள்ளதாக கருதுவோம். இவற்றிற்கிடையே உள்ள ஈர்ப்பு விசை F ஆனது, பொது ஈர்ப்பியல் விதிப்படி,
F ∝ m1 × m2
F ∝ 1/r2
இவை இரண்டையும் இணைத்து
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 78
G என்பது ஈர்ப்பியல் மாறிலி, இதன் மதிப்பு (SI அலகுகளில்) 6.674 × 10-11 Nm2 kg-2

Question 7.
பொது ஈர்ப்பியல் விதியின் பயன்பாட்டினை விவரி.
விடை:
ஈர்ப்பியல் விதியின் பயன்பாடுகள்:

  1. அண்டத்தில் உள்ள விண் பொருட்களின் பரிமாணங்களை அளவிட பயன்படுகிறது.
  2. புவியின் நிறை, ஆரம், புவிஈர்ப்பு முடுக்கம் முதலியனவற்றை துல்லியமாக கணக்கிட உதவுகிறது.
  3. புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
  4. சில நேரங்களில் விண்மீன்களின் சீரற்ற நகர்வு (Wobble) அருகில் உள்ள கோள்களின் இயக்கத்தை பாதிக்கும். அப்போது அவ்விண்மீன்களின் நிறையினை அளவிட பயன்படுகிறது.
  5. தாவரங்களின் வேர் முளைத்தல் மற்றும் வளர்ச்சி புவியின் ஈர்ப்புவிசை சார்ந்து அமைவது ‘புவிதிசை சார்பியக்கம்’ என்றழைக்கப்படுகிறது. இந்நிகழ்வை விளக்க இவ்விதி பயன்படுகிறது.
  6. விண்பொருட்களின் பாதையினை வரையறை செய்வதற்கு இவ்விதி பயன்படுகிறது.

IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
8 கிகி மற்றும் 2 கிகி நிறையுடைய இரு பொருள்கள் வழவழுப்பாக உள்ள பரப்பில் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன. அவை 15N அளவிலான கிடைமட்ட விசை கொண்டு நகர்த்தப்படுகின்றன எனில், 2 கிகி நிறையுடைய பொருள் பெரும் விசையினை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
முதல் பொருளின் நிறை m1 = 8 கிகி
இரண்டாம் பொருளின் நிறை m2 = 2 கிகி
மொத்த நிறை m = m1 + m2
∴ m = 8 + 2 = 10 கிகி
விசை F1 = 15N
கண்டறிய: 2 கி.கி நிறையுடைய பொருள் பெறும் விசை F2=?
தீர்வு:விசை F1 = நிறை × முடுக்கம் = ma
F1 = 10 × a
∴ a = \(\frac{\mathrm{F}_{1}}{10}\) = \(\frac{15}{10}\) = 1.5 ms-2
2 கிகி நிறையுடைய பொருள் பெறும் விசை,
F2 = m2a = 2 × 1.5 = 3N
2 கிகி நிறையுடைய பொருள் பெறும் விசை = 3N

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 2.
கன உந்து (Heavy vehicle) ஒன்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் சம இயக்க ஆற்றலுடன் பயணிக்கின்றன. கன உந்தின் நிறையானது இரு சக்கர வாகன நிறையினை விட நான்கு மடங்கு அதிகம் எனில், இவைகளுக்கிடையே உள்ள உந்த வீதத்தை
கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
கன உந்து (Truck) இயக்க ஆற்றல் = இருசக்கர வாகன (bike) இயக்க ஆற்றல்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 80
சமன்.(2) ஐ (1) ல் பிரதியிட
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 81
கண்டறிய: உந்தவீதம் = ?
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 82

Question 3.
பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதும் இருக்கைப்பட்டை அணிவதும் நமக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். இக்கூற்றினை நியூட்டனின் இயக்க விதிகள் கொண்டு நியாப்படுத்துக.
விடை:

  1. பயணத்தின்போது, திடீரென நிற்கும்போது, உடல் ஓய்வு நிலைக்கு வர முடியாமல் முன்னோக்கி செல்லும்.
  2. இங்கு நியூட்டனின் நிலைமம் விதி செயல்படு கிறது. முன்னோக்கி சாய்வதை தடுக்க இருக்கைப்பட்டை அணிவது அவசியம்.
  3. வாகனத்திலிருந்து திடீரென கீழே விழும்போது தலை தரையில் மோதுவதை தடுக்க தலைக்கவசம் அணிகிறோம். இங்கு நியூட்டனின் மூன்றாம் விதி பயன்படுகிறது.
  4. தலைக்கவசம் இல்லையெனில் விழும்போது எதிர்விசையில் தலையில் காயம் ஏற்படும்.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
இரு பொருள்கள் குறிப்பிட்ட இடை வெளியில் உள்ள போது அவற்றிற்கிடையேயுள்ள விசை F என்க. அவற்றின் தொலைவு இரு மடங்கானால் அவற்றின் ஈர்ப்புவிசை ……. ஆக இருக்கும்.
[PTA-5]
அ) 2F |
ஆ) F/2
இ) F/4
ஈ) 4F
விடை:
(இ) F/4

Question 2.
ஒரு கிராம் நிறையுள்ள பொருளை 1 செமீவி-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசை
அ) 1N
ஆ) 10N
இ) 10′ டைன்
ஈ) 1 டைன்
விடை:
(ஈ) 1 டைன்

2 மதிப்பெண்கள்

Question 1.
தகுந்த காரணங்களோடு இணைகளைத் தொடர்புபடுத்தி கோடிட்ட இடத்தினை நிரப்புக. (4 Marks) [PTA-4]
அ) கதவினைத் திறத்தல்: விசையின்
திருப்புத்திறன் ;
தண்ணீ ர் குழாயைத் திறத்தல்:
இரட்டைகளின் திருப்புத்திறன்
ஆ) பேருந்தினை ஒன்றுக்கு மேற்பட்டோர்
தள்ளுதல்: ஒத்த இணை விசைகள் ;
கயிறிழுக்கும் போட்டி:
எதிரெதிர் திசையில் செயல்படும்
சமமற்ற இணை விசைகள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 2.
மின்தூக்கி ஒன்று 1.8 மீவி-2 முடுக்கத்துடன் கீழே நகர்கிறது எனில் 50 கிகி நிறை கொண்ட மனிதர் எவ்வளவு தோற்ற எடையினை உணர்வார்? [PTA-1]
விடை:
கொடுக்கப்பட்டவை:
முடுக்கம் = 1.8 மீவி-2
நிறை = 50 கிகி
கண்டறிய: தோற்ற எடை R =?
தீர்வு:
மின்தூக்கி ‘a’ என்ற முடுக்க மதிப்பில் கீழே நகர்கிறது எனில்,
தோற்ற எடை, R = m(g-a)
= 50(9.8 – 1.8)
= 50 × 8
தோற்ற எடை = 400 N

Question 3.
கொடுக்கப்பட்டக் கூற்றினையும், காரணத்தினையும் நன்றாக ஆராய்ந்து சரியான விடையினை தேர்வு செய்க.(PTA-3)
கூற்று: நீந்தும் ஒருவர் நீரினை கையால் பின்னோக்கி தள்ளுகிறார். நீரானது அந்த நபரை முன்னோக்கி தள்ளுகிறது. காரணம்: ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு,
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

Question 4.
நிலநடுக்கோட்டுப் பகுதியைவிட துருவப் பகுதியில் ஆப்பிள்களின் எடை அதிகம் ஏன்? (4 Marks) [PTA-3)
விடை:
புவிஈர்ப்பு முடுக்கமதிப்பு புவியில் இடத்திற்கு இடம் மாறுபடுவதால், எடையின் மதிப்பும் இடத்திற்கு இடம் மாறுபடும். பொருட்களின் எடை துருவப்பகுதியில் அதிகமாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் குறைவாகவும் இருக்கும். எனவே நிலநடுக்கோட்டுப் பகுதியைவிட துருவப் பகுதியில் ஆப்பிளின் எடை அதிகமாக இருக்கும்.

Question 5.
ஒரு பொருளின் மீது 5N விசை செயல்பட்டு, அப்பொருளை 5 செமீவி-2 என்ற அளவிற்கு முடுக்குவிக்கிறது எனில் அப்பொருளின் நிறையினைக் கணக்கிடுக. (4 Marks) [PTA-5]
விடை:
கொடுக்கப்பட்டவை:
F = 5N
a = 5cm s-2
= 0.05 ms-2
கண்டறிய: பொருளின் நிறை m =?
F = ma
m = \(\frac{F}{a}\) = \(\frac{5}{0.05}\)
m = 100 kg

Question 6.
புவியின் மேற்பரப்பின் மையத்தில் இருந்து எந்த உயரத்தில் புவியின் ஈர்ப்பு முடுக்கமானது, புவிமேற்பரப்பு ஈர்ப்பு முடுக்கத்தின் 1/4 மடங்காக அமையும்? (4 Marks) [PTA-6]
விடை:
புவிமேற்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் = g
புவி மையத்தில் இருந்து கணக்கீடு செய்ய வேண்டிய உயரம்
R’ = R + h
அவ்வுயரத்தில் புவிஈர்ப்பு முடுக்கம் –
g’ = g/4
தீர்வு;
R’ உயரத்தில் ஈர்ப்பு முடுக்கம்
g’ = GMm/R’2
புவிப்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம்
g = GMm/ R2
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 86
கணக்கீடு செய்ய வேண்டிய உயரம்
R’ = R + h
h = R ஆதலால்
R’ = 2R
புவியின் மையத்தில் இருந்து, புவி ஆரத்தை போல் இருமடங்குதொலைவில், ஈர்ப்பு முடுக்க மதிப்பு புவிப்பரப்பின் முடுக்கத்தைப்போல் 1/4 மடங்காக அமையும்.

7 மதிப்பெண்கள்

Question 1.
(i) சொகுசுப் பேருந்துகளில் அதிர்வுறுஞ்சிகள் பயன்படுத்தப் படுகிறது. ஏன்? (PTA-2)
விடை:
சீரற்ற பரப்பில் பேருந்து பயணத்தின்போது கணத்தாக்கு விசை அதிர்வுகளை குறைப்பதற்கு அதிர்வுறுஞ்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. சொகுசுப் பேருந்துகளில் இவை தேவையற்ற அதிர்வுகளை உறிஞ்சிக்கொண்டு நம்மை பாதுகாக்கின்றன.

(ii) பூமியில் 686 N எடையுள்ள மனிதர் நிலவுக்குச் சென்றால் அங்கு அவரது எடை மதிப்பினைக் கணக்கிடுக. (நிலவின் ‘g’ மதிப்பு 1.625 மீவி-2).
தீர்வு:
w = mg = 686NT
m = \(\frac{w}{g}\) = \(\frac{686}{9.8}\) = 70 kg
W = mg = 70 × 1.625
W = 113.75 N

(ii) பறவை பறத்தலில் உள்ள இயக்க விதியினைக் கூறுக. அவ்விதிக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
விடை:
பறவை பறத்தலில் உள்ள இயக்க விதி, நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி ஆகும். மேலும் ஓர் எடுத்துக்காட்டு: நீச்சல் வீரர் ஒருவர் நீரினை கையால் பின்நோக்கி தள்ளுதலின் மூலம் விசையினை ஏற்படுத்துகிறார். நீரானது அந்நபரை விசைக்கு சமமான எதிர்விசை கொண்டு முன்னே தள்ளுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள்

Question 2.
m நிறை உடைய பொருள் ஒன்று u என்ற ஆரம்ப திசைவேகத்தில் நகர்கிறது. F என்ற விசை செயல்பட்டு t என்ற கால இடைவெளியில் v என்ற திசைவேகமாக மாற்றமடைந்து a என்ற அளவில் முடுக்கமடைகிறது. இத்தரவுகளைக் கொண்டு விசை, நிறை மற்றும் முடுக்கத்திற்கான தொடர்பைத் தருவிக்கவும். (PTA-5)
விடை:
பொருளின் ஆரம்ப திசைவேகம் = mu
பொருளின் இறுதி திசைவேகம் = mv
திசைவேக மாறுபாடு
= mv – mu
= m(v – u) …. (1)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 90
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி,
∴ செயல்படும் விசை,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 91
செயல்படும் விசை,
F ∝ ma
F ∝ k ma (k = 1)
∴ F = ma
ஆகவே, பொருளின் மீது செயல்படும் விசை
= நிறை × முடுக்கம்

அரசு தேர்வு வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
5 கி.கி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2 கி.கி மீவி-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.
[GMQP-2019]
தரவுகள்:
நிறை (m) = 5 கிகி
நேர்க்கோட்டு உந்தம் (p) = 2 கிகி மீவி-1
சூத்திரம் :
நேர்க்கோட்டு உந்தம் (p)
= நிறை (m) × திசைவேகம் (v)
∴ திசைவேகம் (v)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 1 இயக்க விதிகள் 92

Question 2.
பற்சக்கரங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக. [Sep.20]
விடை:
பற்சக்கரங்கள் வட்டப்பரப்பின் விளிம்பு-களில் பல் போன்று மாற்றம் செய்யப்பட்ட அமைப்புகள் ஆகும். பற்சக்கரங்கள் மூலம் திருப்புவிசையினை மாற்றி இயங்குகின்ற வாகனசக்கரங்களின் சுழற்சி வேகத்தை மாற்றலாம். மேலும் திறனை கடத்துவதற்கும் இவை உதவுகின்றன.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

4th Social Science Guide குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
____________ இந்திய சட்டத்திற்கு எதிரானது.
அ) பள்ளியில் குழந்தைகள் படித்தல்.
ஆ) தொழில்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.
இ பள்ளி செயல்காடுகளில் குழந்தைகள் பங்கேற்றல்.
ஈ) குழந்தைகள் தரமான உணவைப் பெறுதல்.
விடை:
ஆ) தொழில்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.

Question 2.
போலியோ சொட்டு மருந்து _____________ களுக்கு வழங்கப்படுகின்றன.
அ) ஆண்
ஆ) பெண்
இ குழந்தை
ஈ) மூத்த குடிமக்கள்
விடை:
இ குழந்தை

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Question 3.
ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பை ___________ என்பர்.
அ) கதைப் புத்தகம்
ஆ) விதிமுறைப் புத்தகம்
இ அரசியலமைப்பு
ஈ) பாடநூல்
விடை:
இ அரசியலமைப்பு

Question 4.
பின்வருவனவற்றில் எது குழந்தைகளின் உரிமை இல்லை ?
அ) ஓட்டுநர் உரிமம் பெறுதல்
ஆ) கல்வி பெறுதல்
இ போதுமான உணவைப் பெறுதல்
ஈ) ஆரோக்கியமாக வாழ்தல்
விடை:
அ) ஓட்டுநர் உரிமம் பெறுதல்

II. சரியா, தவறா என எழுதுக.

Question 1.
போலியோ சொட்டு மருந்தைப் பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை ஆகும்.
விடை:
சரி

Question 2.
அனைத்து வயது குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான . உரிமைகள் உள்ளன.
விடை:
தவறு

Question 3.
6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வேலை செய்ய வேண்டும்.
விடை:
தவறு

Question 4.
குழந்தைகளைத் துன்புறுத்துவது தவறானது.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Question 5.
குழந்தைகள் தவறான தொடுதலை அறிந்திருக்க வேண்டும்.
விடை:
சரி

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. சிறார் உதவி மைய எண் – ஒரு நாட்டின் உறுப்பினர்
2. தடுப்பூசிகள் – சுகாதாரம்
3. வாஷ் (Wash) – சட்டவிரோதமானது
4. குடிமகன் – நோய்களிலிருந்து பாதுகாப்பு
5. குழந்தைத் தொழிலாளர் – 1098
விடை:
1. சிறார் உதவி மைய எண் – 1098
2. தடுப்பூசிகள் – நோய்களிலிருந்து பாதுகாப்பு
3. வாஷ் (Wash) – சுகாதாரம்
4. குடிமகன் – ஒரு நாட்டின் உறுப்பினர்
5. குழந்தைத் தொழிலாளர் – சட்டவிரோதமானது

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
உங்கள் உடலில் யாரும் தொடக்கூடாத மூன்று பகுதிகள் யாவை?
விடை:
உடலில் யாரும் தொடக்கூடாத மூன்று பகுதிகள் உதடுகள், மார்பு மற்றும் கால்களுக்கு இடையில் ஆகிய பகுதிகள் ஆகும்.

Question 2.
குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ள பல்வேறு உரிமைகள் யாவை?
விடை:

  1. உயிர்வாழ்வதற்கான உரிமை.
  2. வளர்ச்சிக்கான உரிமை
  3. பாதுகாப்பு உரிமை
  4. பங்கேற்பதற்கான உரிமை

Question 3.
உயிர்வாழ்வதற்கான உரிமை – குறிப்பு வரைக.
விடை:
இது ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதாகும். வாஷ் (Wash) திட்டமும் இதன் ஒரு பகுதியாகும்.

Question 4.
பங்கேற்பதற்கான உங்கள் உரிமையை எப்போதாவது நீங்கள் பயன்படுத்திருக்கறீர்களா? விவரிக்க.
விடை:
ஆம். எங்கள் வீட்டை புதுபிக்கும் பொழுது எவ்வாறெல்லாம் வண்ணம் பூச வேண்டும் என்று என் தந்தையுடன் விவாதித்து உள்ளேன்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Question 5.
உரிமைகள் முக்கியமானவை. ஏன்?
விடை:
நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காவும் உருவாக்கப்பட்டதே உரிமைகள் ஆகும். எனவே உரிமைகள் முக்கியமானவை ஆகும்.

V. கூடுதல் வினா :

Question 1.
குடிமகன் என்பது யார்?
விடை:
குடிமகன் என்பது ஒரு நாட்டின் உறுப்பினராக இருக்கும் ஒரு நபர் ஆவார்.

Question 2.
அரசியலமைப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பு அரசியலமைப்பு எனப்படும்.

Question 3.
வாஷ் (Wash) பற்றி எழுதுக.
விடை:
வாஷ் (Wash) என்பது நீர், சுகாதாரம், மற்றும் தூய்மையைக் குறிக்கும்.

Question 4.
இலவசக் கல்வியை வழங்குவது யாருடைய கடமையாகும்?
விடை:
இலவசக் கல்வியை வழங்குவது அரசின் கடமையாகும்.

4th Social Science Guide குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் InText Questions and Answers

பக்கம்-132 செயல்பாடு

சிந்தித்து எழுதுக.
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கண்டால், நீ என்ன செய்வாய்?
1. ___________________
2. ___________________
3. ___________________
விடை:
1. கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி கூறுவேன்.
2. அரசின் இலவச கல்வியைப் பற்றி கூறுவேன்.
3. கற்றலின் இனிமையை கூறுவேன்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

பக்கம்-134 செயல்பாடு

உங்கள் வீட்டின் அருகில், பள்ளிக்குச் செல்லாத ஒரு குழந்தையை அடையாளம் காணவும். இக்கேள்வித்தாளைப் பூர்த்தி செய்யவும்.
1. குழந்தையின் பெயர் : ________________
2. குழந்தையின் வயது : ________________
3. இந்நாள்வரை அக்குழந்தை பள்ளிக்குச் சென்றுள்ளதா? ஆம்/இல்லை
4. பள்ளிக்குச் செல்லாதற்கான காரணம்: ________________
5. அவள் / அவனை நீங்கள் எவ்வாறு வழிநடத்துவீர்கள்? : _________________
விடை:
1. குழந்தையின் பெயர் : மாலா
2. குழந்தையின் வயது : 7
3. இந்நாள்வரை அக்குழந்தை பள்ளிக்குச் சென்றுள்ளதா? ஆம்/இல்லை
4. பள்ளிக்குச் செல்லாதற்கான காரணம்: வறுமை
5. அவள் / அவனை நீங்கள் எவ்வாறு வழிநடத்துவீர்கள்?
அரசின் இலவச கல்வி திட்டத்தை பற்றி கூறி பள்ளிக்குச் செல்லுமாறு கூறுவேன்.

குறிப்பு :
இந்தக் கணக்கெடுப்பு பெற்றோர்களுக்கும் அக்குழந்தைக்குமானது. : அந்த வகுப்பு குழந்தைகள் இருவர் கொண்ட குழுக்களாக, ஒரு குடும்பம் அல்லது குழந்தையைப் பேட்டி காணவும்.. ஒவ்வொரு நிலைபாட்டிற்கும் தீர்வுகள் குறித்து ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடலாம்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

4th Social Science Guide சென்னை மாகாணத்தின் வரலாறு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மதராஸ் மாகாணம் ___________ இல் உருவாக்கப்பட்டது.
அ) 1800
ஆ) 1801
இ 1802
ஈ) 1803
விடை:
ஆ) 1801

Question 2.
மதராஸ் மாநிலம் அதிகாரப்பூர்வமாக ___________ இல் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
அ) 1947
ஆ) 1953
இ 1956
ஈ) 1969
விடை:
ஈ) 1969

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Question 3.
மாமல்லபுரம் _____________ வம்சத்தினரால் உருவாக்கப்பட்டது.
அ) நாயக்கர்
ஆ) பல்லவ
இ சோழ
ஈ) ஆங்கிலேய
விடை:
ஆ) பல்லவ

Question 4.
“தென்னிந்தியாவின் ஸ்பா” என்று அழைக்கப்படுவது எது?
அ) போடிநாயக்கனூர்
ஆ) ஒகேனக்கல்
இ குற்றாலம்
ஈ) செஞ்சிக் கோட்டை
விடை:
இ குற்றாலம்

Question 5.
எட்டு அடுக்கிலான மிகச் சிறிய அளவிலுள்ள மனோரா கோட்டையைக் கட்டியவர் ___________ ஆவார்.
அ) சரபோஜி மன்னர்
ஆ) சின்ன பொம்மி நாயக்கர்
இ திம்மா ரெட்டி நாயக்கர்
ஈ) திருமலை நாயக்கர்
விடை:
அ) சரபோஜி மன்னர்

II. சரியா, தவறா என எழுதுக.

Question 1.
மதராஸ் மாகாணத்தின் தலைநகரம் மதராஸ் நகரம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர், பழங்கால சோழர்களின் கிராமமாகும்.
விடை:
தவறு

Question 3.
திருமலை நாயக்கர் அரண்மனை திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Question 4.
கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது.
விடை:
சரி

Question 5.
கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரிய கோயில் எனவும் அறியப்படுகிறது.
விடை:
தவறு

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. காவலூர் – கிழக்கின் டிராய்
2. செஞ்சிக் கோட்டை – ஊட்டி
3. போடிநாயக்கனூர் – வைணு பாப்பு ஆய்வகம்
4. முத்து நகரம் – ஏலக்காய் நகரம்
5. ஜான் சல்லிவன் – தூத்துக்குடி
விடை:
1. காவலூர் – வைணு பாப்பு ஆய்வகம்
2. செஞ்சிக் கோட்டை – கிழக்கின் டிராய்
3. போடிநாயக்கனூர் – ஏலக்காய் நகரம்.
4. முத்து நகரம் – தூத்துக்குடி
5. ஜான் சல்லிவன் – ஊட்டி

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
செஞ்சிக் கோட்டையின் முக்கியத்துவத்தைக் கூறுக.
விடை:
செஞ்சிக் கோட்டையானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று குன்றுகள் சூழ்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

Question 2.
திருமலை நாயக்கர் அரண்மனையின் முக்கிய அம்சங்கள் யாவை?
விடை:
திருமலை நாயக்கர் அரண்மனை திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டடக்கலைகளின் ஒருமித்த கலவையாக இருப்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

Question 3.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
மேட்டூர் அணை, ஒகேனக்கல் அருவி, ஏர்காடு:

Question 4.
கல்லணை – குறிப்பு வரைக.
விடை:
கல்லணை தென்னிந்தியாவில் காவிரியாற்றின் குறுக்கே கி.பி. பொ.ஆ.) 2 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர் கரிகாலனால் கட்டப்பட்டது.

Question 5.
மலைக் கோட்டை – குறிப்பு வரைக.
விடை:
83 மீட்டர் உயரமுள்ள பழமையான ஒரு பாறையின் மீது மலைக்கோட்டை கோயில் கட்டப்பட்டுள்ளது. அக்கோட்டையின் உள்ளே இரண்டு இந்து கோயில்கள் உள்ளன.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Question 6.
தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
மெரினா கடற்கரை, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் மற்றும் மகாபலிபுரம்.

V. கூடுதல் வினா.

Question 1.
மதராஸ் மாகாணத்தின் தலைநகரம் எது?
விடை:
தற்போது சென்னை என்று அழைக்கப்படும் மதராஸ் நகரம், அன்றைய மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாகும்.

Question 2.
உத்திரமேரூர் எங்கு அமைந்துள்ளது?
விடை:
உத்திரமேரூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Question 3.
அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தின் பகுதிகள் யாவை?
விடை:
இன்றைய விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தின் பகுதிகள் ஆகும்.

Question 4.
“சைலம்” என்றால் என்ன?
விடை:
“சைலம்” என்றால் மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும்.

Question 5.
தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மலைவாழிடம் எது?
விடை:
தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மலை வாழிடம் ஊட்டி ஆகும்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

4th Social Science Guide உலகெலாம் தமிழர்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
இலங்கையின் அலுவலக மொழிகளில் ஒன்று _____________ ஆகும்.
(அ) மாண்டரின்
(ஆ) இந்தி
(இ தமிழ்
(ஈ) சமஸ்கிருதம்
விடை:
(இ தமிழ்

Question 2.
நவீன சிங்கப்பூர் _____________ இல் நிறுவப்பட்டது.
(அ) 1819
(ஆ) 1820
(இ. 1947
(ஈ) 1835
விடை:
(அ) 1819

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Question 3.
பண்டைய காலங்களில், மலேசியாவில் உள்ள கெடா மாநிலம் கடல் வழியாக தமிழ்நாட்டின் ___________ உடன் இணைக்கப்பட்டிருந்தது.
(அ) விசாகப்பட்டினம்
(ஆ) நாகப்பட்டினம்
(இ மதுரை
(ஈ) சென்னை
விடை:
(ஆ) நாகப்பட்டினம்

Question 4.
மியான்மரின் முதன்மையான சமயம் _____________ ஆகும்.
(அ) இந்து சமயம்
(ஆ) சமண சமயம்
(இ) புத்த சமயம்
(ஈ) சீக்கிய சமயம்
விடை:
(இ) புத்த சமயம்

Question 5.
ஆங்கிலேயர்கள் மொரீஷியஸைக் கைப்பற்றிய ஆண்டு ___________ ஆகும்.
(அ) 1810
(ஆ) 1820
(இ) 1910
(ஈ) 1920
விடை:
(அ) 1810

II. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மலேசியாவில் பல்லவர்களும் சோழர்களும் செல்வாக்கு பெற்றிருந்தனர்.
விடை:
சரி

Question 2.
தென் பசிபிக் பகுதியில் உள்ள எரிமலை தீவுகளின் கூட்டம் பிஜி ஆகும்.
விடை:
சரி

Question 3.
மன்னர் அனவர்தா மின்சாவின் மகன் கியான்சித்தா ஆவார்.
விடை:
சரி

Question 4.
ரீயூனியன் தீவு என்பது, பிரெஞ்சு வெளியுறவுத் துறையின் ஒரு பகுதியாகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Question 5.
தமிழ்நாட்டில் மட்டுமே தமிழர்கள் வாழ்கின்றனர்.
விடை:
தவறு

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. ஆனந்தா கோயில் – சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ்
2. துணைநிலை ஆளுநர்- ரத்து ஜோனி
3. திருக்குறளி – நாகப்பட்டினம்
4. அஞ்சல் அருங்காட்சியகம் மியான்மர்
5. பண்டைய துறைமுகம் – மொரீஷியஸ்
விடை:
1. ஆனந்தா கோயில் – மியான்மர்
2. துணைநிலை ஆளுநர் – சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ்
3. திருக்குறளி – ரத்து ஜோனி
4. அஞ்சல் அருங்காட்சியகம் – மொரீஷியஸ்
5. பண்டைய துறைமுகம் – நாகப்பட்டினம்

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான கடந்தகால உறவுகளை விவரிக்கவும்.
விடை:
தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவுகள் 2000! ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். நாகப்பட்டினத்திலிருந்து கெடாவுக்கு வழக்கமான போக்குவரத்து இருந்தது.

Question 2.
ரீயூனியன் தீவு – குறிப்பு வரைக.
விடை:
மொரீஷியஸ் அருகிலுள்ள ரீயூனியன் என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இது பிரெஞ்சு : வெளியுறவுத் துறையின் ஓர் அங்கமாகும்.

Question 3.
அலுவலக மொழிகளுள் ஒன்றாக தமிழ்மொழியினைக் கொண்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்.

Question 4.
மொரீஷியஸ் நாட்டைக் கட்டமைத்ததில் தமிழர்களின் பங்களிப்பினைக் கூறுக.
விடை:
தமிழர்கள், இத்தீவை வாழ்வதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும், பல கட்டடங்களைக் கட்டுவதற்கும் உதவினர்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Question 5.
அ. மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகை எது?
விடை:
தைப்பூசம்

ஆ. மியான்மர் நாட்டின் தேசத் தந்தை யார்?
விடை:
அனவர்தா மின்சா

V. கூடுதல் வினா.

Question 1.
இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் இரண்டு குழுக்கள் யாவை?
விடை:

  1. இலங்கை தமிழர்கள்.
  2. இந்தியத் தமிழர்கள்.

Question 2
எத்தனை முறை உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் நடத்தப்பட்டன.
விடை:
மூன்று முறைகள்.

Question 3.
சிங்கப்பூரில் உள்ள தமிழர்களின் கடின உழைப்பின் அடையாளங்கள் யாவை?
விடை:
ஜொகூர் பாலம், செம்பவாங் கப்பல் கட்டும் தளம், கல்லாங் விமான ! நிலையம் மற்றும் புனித ஆண்ட்ரு கதீட்ரல் ஆகியன தமிழர்களின் கடின உழைப்பின் அடையாளங்கள் ஆகும்.

Question 4.
பிஜியில் உருவாக்கப்பட்ட மகளிர் சங்கம் எது?
விடை:
இந்திய சன்மார்க்க மகளிர் சங்கம்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Question 5.
மியான்மரில் (பர்மா) உள்ள இந்துக்களின் கோயில்கள் சிலவற்றை கூறு.
விடை:
மாரியம்மன் கோயில், முருகன் கோயில், திருமால் கோயில்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 2 Chapter 3 போக்குவரத்து Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 2 Chapter 3 போக்குவரத்து

4th Social Science Guide போக்குவரத்து Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
பின்வருவனவற்றில் நிலவழிப்போக்குவரத்திற்கு எது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அ) மகிழுந்து
ஆ) கப்பல்
இ) சிறுவிமானம்
ஈ) விமானம்
விடை:
அ) மகிழுந்து

Question 2.
முதல் இரும்புப்பாதை போடப்பட்ட ஆண்டு _____________
அ) 2019
ஆ) 1853
இ) 1947
ஈ) 1950
விடை:
ஆ) 1853

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Question 3.
தங்க நாற்கரச் சாலையை இணைக்கும் முக்கிய நகரங்களில் ஒன்று ____________
அ) சென்னை
ஆ) கன்னியாகுமரி
இ) மதுரை
ஈ) திருச்சி
விடை:
அ) சென்னை

Question 4.
____________ பழமையான போக்குவரத்து முறையாகும்.
அ) கப்பல்
ஆ) மிதிவண்டி
இ) நடைப்பயணம்
ஈ) மாட்டுவண்டி
விடை:
ஈ) மாட்டுவண்டி

Question 5.
போக்குவரத்து முறைகள் ____________ வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அ) 3
ஆ) 4
இ) 5
ஈ) 6
விடை:
ஆ) 4

II. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமானநிலையம் – பேருந்து
2. முக்கியமான மக்கள் போக்குவரத்து – சென்னை
3. கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு வரை செல்லும் இரயில் – திருச்சிராப்பள்ளி
4. தமிழ்நாட்டில் உள்ள பிரதான கப்பல் துறைமுகம் – 2015
5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு – ஹிம்சாகர் விரைவு இரயில்
விடை:
1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமானநிலையம் – திருச்சிராப்பள்ளி
2. முக்கியமான மக்கள் போக்குவரத்து – பேருந்து
3. கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு வரை செல்லும் இரயில் – ஹிம்சாகர் விரைவு இரயில்
4. தமிழ்நாட்டில் உள்ள பிரதான கப்பல் துறைமுகம் – சென்னை
5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு – 2015

III. சரியா? தவறா ? 

Question 1.
மக்களுக்கு போக்குவரத்து தேவையானது அல்ல.
விடை:
தவறு

Question 2.
துறைமுகங்கள் வர்த்தகத்திற்கு முக்கிய மையங்களாக உள்ளன.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Question 3.
நாட்டின் பல பகுதிகளை சாலைவழிப் போக்குவரத்து இணைக்கவில்லை.
விடை:
தவறு

Question 4.
சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகச் சிறியதாகும்.
விடை:
தவறு

Question 5.
தமிழ்நாட்டில் ஐந்து பெரிய துறைமுகங்கள் உள்ளன.
விடை:
தவறு

IV. குறுகிய விடையளி.

Question 1.
போக்குவரத்து – வரையறு.
விடை:
போக்குவரத்து என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் பொருட்கள் முதலியன ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு இடம்பெயர்தல் ஆகும்.

Question 2.
பல்வேறு போக்குவரத்து முறைகளைப் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து 1

Question 3.
இரயில் போக்குவரத்து – விவரி. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மிக முக்கியமான இரண்டு இரயில் இணைப்புகளைக் கூறுக.
விடை:
இந்தியாவின் பல மாநிலங்களை இணைக்கும் போக்குவரத்து முறையில் இரயில் போக்குவரத்து முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் மிகப் பழமையான இரயில் நிலையங்களில் ஒன்று 1856 இல் இராயபுரத்தில் கட்டப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து செல்லும் முக்கிய இரயில் இணைப்புகள் :
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து 2

Question 4.
வான்வழிப் போக்குவரத்து என்றால் என்ன? வான்வழிப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் யாவை?
விடை:
வான்வழிப் போக்குவரத்து என்பது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு மிக விரைவாகப் பயணம் செய்ய உதவும் போக்குவரத்து முறையாகும்.

ஆகாய விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப் படுகின்றன.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Question 5.
போக்குவரத்தின் ஏதேனும் மூன்று நன்மைகளை எழுதுக.
விடை:

  1.  ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நாம் விரைந்து செல்ல, போக்குவரத்து உதவுகிறது.
  2. ஓரிடத்தில் விளையும் பொருள்களை வேறிடத்திற்கு கொண்டு சேர்க்க இது உதவுகிறது.
  3. அவசர காலங்களில் மருந்துகள், உணவுகள், மீட்புக் குழுக்களை அனுப்பி வைக்க போக்குவரத்து உதவுகிறது.

4th Social Science Guide போக்குவரத்து InText Questions and Answers

பக்கம் 119 செயல்பாடு

Question 1.
இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலம் இரண்டுக்கும் மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்டுள்ளது?
விடை:
தமிழ்நாடு.

Question 2.
தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:
எண்ணூர், சென்னை, தூத்துக்குடி.

Question 3.
கடல் போக்குவரத்து தொடர்பான உள்கட்டமைப்பைக் கையாளும் அரசு நிறுவனத்தின் பெயரைக் கூறுக.
விடை:
கப்பல் போக்குவரத்துக் கழகம்.

பக்கம் 120 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
விமானப் போக்குவரத்தில் எந்த வாகனம் குறுகிய தூரப் போக்குவரத்திற்கு உதவுகிறது?
விடை:
ஹெலிகாப்டர்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Question 2.
தமிழ்நாட்டில் எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?
விடை:
நான்கு (சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி).

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

4th Social Science Guide தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
எந்த வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ளது.
அ) முதுமலை வனவிலங்கு சரணாலயம்
ஆ) கார்பெட் தேசிய பூங்கா
இ) சுந்தரவன தேசிய பூங்கா
ஈ) ரத்தம்பூர் தேசிய பூங்கா
விடை:
அ) முதுமலை வனவிலங்கு சரணாலயம்

Question 2.
மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் ____________
அ) ஆரவல்லி மலைத்தொடர்
ஆ) நீலகிரி மலைகள்
இ) இமயமலை மலைத்தொடர்
ஈ) விந்திய மலைகள்
விடை:
ஆ) நீலகிரி மலைகள்

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 3.
மரங்களின் உச்சிக் கிளைகள் இணைந்து சங்கிலித் தொடர் போல உருவாவதற்கு பெயர் ____________
அ) சூரிய ஒளி
ஆ) விதானம்
இ) காடுகள்
ஈ) சதுப்புநிலம்
விடை:
ஆ) விதானம்

Question 4.
தமிழ்நாட்டில் _____________ நிலவுகிறது.
அ) அதிகபட்ச குளிர்
ஆ) அதிகமான மழைப்பொழிவு
இ) வெப்பமண்டல வானிலை
ஈ) பனிப்பொழிவு
விடை:
இ) வெப்பமண்டல வானிலை

Question 5.
___________ அதிக மழைப்பொழிவுள்ள இடங்களில் காணப்படும்.
அ) இலையுதிர்க் காடுகள்
ஆ) சதுப்புநிலக் காடுகள்
இ) பசுமை மாறாக் காடுகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஈ) இவற்றில் எதுவுமில்லை

II. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. தமிழ்நாட்டின் மலைத்தொடர்கள் – பாம்பன் பாலம்
2. சுருளி நீர்வீழ்ச்சி – மேற்குத்தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
3. இந்தியாவின் முதல் கடல்பாலம் – தேனி
4. பிச்சாவரம் – இந்தியாவிலேயே மூன்றாவது நீளமானது
5. தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதி – சதுப்புநிலக்காடுகள்
விடை:
1. தமிழ்நாட்டின் மலைத்தொடர்கள் – மேற்குத்தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
2. சுருளி நீர்வீழ்ச்சி – தேனி
3. இந்தியாவின் முதல் கடல்பாலம் – பாம்பன் பாலம்
4. பிச்சாவரம் – சதுப்புநிலக்காடுகள்
5. தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதி – இந்தியாவிலேயே மூன்றாவது நீளமானது

III. சரியா? தவறா?

Question 1.
தமிழ்நாடு இந்தியாவில் பதினோறாவது மிகப்பெரிய மாநிலம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
தமிழ்நாடு இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
விடை:
தவறு

Question 3.
குறிஞ்சி மலர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 4.
தமிழ்நாடு ஆண்டு முழுவதும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலையைக் கொண்டுள்ளது.
விடை:
சரி

Question 5.
இலையுதிர் காடுகள் இலைகளை உதிர்ப்பதில்லை.
விடை:
தவறு

IV. குறுகிய விடையளி.

Question 1.
தமிழ்நாட்டுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களை பட்டியலிடுக.
விடை:
கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்.

Question 2.
தமிழ்நாட்டின் நில அமைப்பு வகைகள் யாவை?
விடை:
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. மலைகள்
  2. பீடபூமிகள்
  3. சமவெளிகள்
  4. கடற்கரை.

Question 3.
தமிழ்நாட்டின் பல்வேறு வகையான சமவெளிகள் யாவை?
விடை:

  1. ஆற்றுச் சமவெளி
  2. கடற்கரைச் சமவெளி.

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் பெயர்களைக் கூறுக.
விடை:

  1. குற்றாலம் நீர்வீழ்ச்சி
  2. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
  3. சுருளி நீர்வீழ்ச்சி
  4. வட்டப்பாறை நீர்வீழ்ச்சி

Question 5.
தமிழ்நாட்டின் காலநிலை பற்றி விவரி.
விடை:
தமிழ்நாடு வெப்ப மண்டலக் கால நிலையைக் கொண்டிருப்பதால், இங்கு கோடைகாலத்திற்கும், குளிர்காலத்திற்கும் மிகவும் குறைந்த அளவிலேயே வேறுபாடு காணப்படுகிறது. தமிழ்நாடு அதன் இட அமைவைப் பொறுத்து ஆண்டு முழுவதும் மிதமான குளிருடன் வெப்ப மற்றும் ஈரப்பதமான வானிலையையும் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பருவமழையைச் சார்ந்துள்ளது என்பதால் பருவமழை பொய்க்கும் காலங்களில் வறட்சியை எதிர்கொள்கிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 6.
வேறுபடுத்துக – பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர்க் காடுகள்.
விடை:
அ) பசுமை மாறாக் காடுகள் (Evergreen Forests)
“Evergreen” என்ற வார்த்தையின் பொருள் ever / / எப்பொழுதும் / green / பசுமை = always green / எப்பொழுதும் பசுமையானது என்பதாகும்.

இந்தக் காடுகளில் உள்ள மரங்களில் இலைகள் எப்பொழுதும் பசுமையாகவே இருக்கும். தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இவ்வகைக் காடுகளை நாம் காணலாம்.

ஆ) இலையுதிர்க் காடுகள் (Deciduous Forests)
இந்த காடுகளிலுள்ள மரங்களின் இலைகள் வறட்சிக் காலங்களில் உதிர்ந்துவிடும். இவ்வகைக் காடுகள் பொதுவாக பசுமைமாறாக் காடுகளின் அருகில் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் மலைகளின் கீழ்ப்பகுதிகளில் வளர்கின்றன.

4th Social Science Guide தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு InText Questions and Answers

பக்கம் 107 செயல்பாடு
Question 1.
இந்திய அரசியல் வரைபடத்தில் தமிழ்நாட்டின் ஏதாவது 2 அண்டை மாநிலங்களைக் குறிக்கவும்.

Question 2.
கீழே குறிப்பிட்டுள்ளவற்றை வரைபடத்தில் குறிக்கவும்.
அ. இந்தியப் பெருங்கடல்
ஆ. அரபிக்கடல்
இ. வங்காளவிரிகுடா
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு 1

பக்கம் 108 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் – சந்திக்கும் இடம் எது?
விடை:
நீலகிரி மலைத்தொடர்.

Question 2.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஏதேனும் இரண்டு வன விலங்கு சரணாலயங்களின் பெயர்களைக் கூறு.
விடை:

  1. முதுமலை வனவிலங்குச் சரணாலயம்.
  2. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம்.

பக்கம்111 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஆறுகள் சிலவற்றின் பெயர்களைக் கூறு.
விடை:
பாலாறு, செய்யாறு, பெண்ணை , வெள்ளாறு.

Question 2.
குற்றாலம் நீர் வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
விடை:
குற்றாலம் நீர்வீழ்ச்சி தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

பக்கம் 111 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
தமிழ்நாடு எந்தெந்த மாதங்களில் தென் மேற்கு பருவமழையைப் பெறுகிறது?
விடை:
ஜுன் – செப்டம்பர்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 2.
தமிழ்நாட்டின் வானிலை பற்றி ஒரு வரியில் விடை கூறு.
விடை:
தமிழ் நாடு வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டிருப்பதால் இங்கு கோடை காலத்திற்கும், குளிர் காலத்திற்கும் குறைந்த அளவிலேயே வேறுபாடு காணப்படுகிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

4th Social Science Guide சங்க கால வள்ளல்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மூவேந்தர்களுள் ஒருவர் ___________ ஆவார்.
அ) ஆய்
ஆ) பாரி
இ) சேரன்
ஈ) நள்ளி
விடை:
இ) சேரன்

Question 2.
கடையெழு வள்ளல்கள் ____________ களை ஆட்சி செய்தனர்.
அ) சமவெளி
ஆ) பாலைவனம்
இ) ஆறு
ஈ) மலைப்பகுதி
விடை:
ஈ) மலைப்பகுதி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 3.
___________ மாவட்டத்தில் பறம்பு நாடு அமைந்துள்ளது.
அ) தருமபுரி
ஆ) திண்டுக்கல்
இ) சிவகங்கை
ஈ) நாமக்கல்
விடை:
இ) சிவகங்கை

Question 4.
பேகன் _____________ மலையிலுள்ள ஒரு மலைப்பாங்கான பகுதியை ஆட்சி செய்தார்.
அ) பழநி
ஆ) கொடைக்கானல்
இ) பொதிகை
ஈ) கொல்லி
விடை:
அ) பழநி

Question 5.
அதியமான் ஒரு ______________ யை ஔவையாருக்குக் கொடுத்தார்.
அ) போர்வை
ஆ) நெல்லிக்கனி
இ) பரிசு
ஈ) தேர்
விடை:
ஆ)நெல்லிக்கனி

II. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. ஆய் – தருமபுரி மாவட்டம்
2. அதியமான் – பொதிகை மலை
3. வல்வில் ஓரி – சிவகங்கை மாவட்டம்
4. பாரி – கொல்லிமலை
விடை:
1. ஆய் – பொதிகை மலை
2. அதியமான் – தருமபுரி மாவட்டம்
3. வல்வில் ஓரி – கொல்லிமலை
4. பாரி – சிவகங்கை மாவட்டம்

III. சரியா? தவறா ?

Question 1.
பாரி இயற்கையைப் பாதுகாக்கவில்லை.
விடை:
தவறு

Question 2.
சங்க காலத்தில் ஏழு புகழ் பெற்ற வள்ளல்கள் இருந்தனர்.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 3.
நாம் மக்களுக்கும், விலங்குகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
விடை:
சரி

Question 4.
நெடுமுடிக்காரி தோட்டிமலைப் பகுதியை ஆட்சி செய்தார்.
விடை:
தவறு

IV. பின்வரும் கேள்விகளுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சங்க இலக்கியத்தைப் பற்றி எழுதுக.
விடை:
சங்க இலக்கியம் என்பது பல்வேறு இலக்கிய நயம் வாய்ந்த செவ்வியல் பாடல்கள் கொண்டதாகும்.

Question 2.
பாரியை எதிர்த்து வெற்றி அடைய இயலாத போது மூவேந்தர்கள் என்ன செய்தனர்?
விடை:
மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து பாரியின் பறம்பு நாட்டைத் தாக்கினர். உணவும் நீரும் பறம்பு மலைக்குச் செல்லாதபடி தடை செய்தனர்.

Question 3.
அதியமான் ஏன் ஔவையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தார்?
விடை:
வாழ்க்கையை எப்படி சிறப்பாக வாழ வேண்டும் என்று கற்பிக்கக் கூடிய புலவர் ஔவையார். எனவே அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று அதியமான் ஔவையாருக்கு நெல்லிக் கனியைக் கொடுத்தார்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 4.
வல்வில் ஓரி எதனால் புகழடைந்தால்?
விடை:
வல்வில் ஓரி கைவினைக் கலைஞர்களின் திறமைக்கு வெகுமதி அளித்தார். எனவே அவர் புகழ் அடைந்தார்.

4th Social Science Guide சங்க கால வள்ளல்கள் InText Questions and Answers

பக்கம் 95 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
எவையேனும் மூன்று வள்ளல்களின்
விடை:
பெயர்களைக் கூறுக. பேகன், பாரி, அதியமான்.

Question 2.
கடையெழு வள்ளல்கள் எந்தக் காலகட்டத்தில் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர்?
விடை:
கடையெழு வள்ளல்கள் சங்க காலத்தில் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர்.

பக்கம் 97 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
பேகன் ஆட்சி செய்த மலைப்பகுதி எது?
விடை:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள – பழநி மலைப்பகுதி.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 2.
பேகன், தமது நடைப்பயணத்தின் போது என்ன பார்த்தார்?
விடை:
மயில் ஒன்று நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

Question 3.
நடுங்கிக் கொண்டிருந்த மயிலைக் கண்டு, பேகன் என்ன செய்தார்?
விடை:
மயில் குளிரால் நடுங்குவதாகக் கருதிய பேகன் அதன் மீது போர்வையைக் கொண்டு போர்த்தினார்.

பக்கம் 99 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
பாரி ஆட்சி செய்த பகுதி எது?
விடை:
பறம்பு மலையில் உள்ள பறம்பு நாட்டை பாரி ஆட்சி செய்தார்.

Question 2.
மலையடிவாரங்களிலிருந்து பறம்பு நாட்டிற்குச் செல்ல விடாமல் நிறுத்தப்பட்டவை எவை?
விடை:
தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் பறம்பு நாட்டிற்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டன.

Question 3.
முல்லைக் கொடிக்கு ஆதரவாக பாரி எதைக் கொடுத்தார்?
விடை:
முல்லைக் கொடிக்கு ஆதரவாக பாரி தன்னுடைய தேரைக் கொடுத்தார்.

பக்கம் 100 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
அதியமானுக்கு பரிசாக என்ன கிடைத்தது?
விடை:
அதியமானுக்குப் பரிசாக அரியவகை நெல்லிக் கனி கிடைத்தது.

Question 2.
ஔவையார் என்பவர் யார்?
விடை:
ஔவையார் என்பவர் பழம் பெரும் புலவர். இது

Question 3.
ஒளவையாருக்கு நெல்லிக்கனியை அதியமான் எதற்காகக் கொடுத்தார்?
விடை:
புலமைமிக்க ஒளவையாரைப் போல, வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ வேண்டும் என்று மக்களுக்குக் கற்பிக்கக்கூடிய புலவர்கள் பலர் இருக்கமாட்டார்கள். எனவே ஒளவையார் நீண்ட காலம் வாழ வேண்டுமென்று அவருக்கு அதியமான் நெல்லிக் கனியைக் கொடுத்தார்.

செயல்பாடு வள்ளல்கள்

கொடுத்த பொருள்களைப் பட்டியலிடுக.
1. பாரி – தேர்
2. பேகன் – போர்வை
3. அதியமான் – நெல்லிக்கனி

பக்கம் 103 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
வல்வில் ஓரி எந்த மலைப்பாங்கான பகுதியை ஆட்சிசெய்தார்?
விடை:
வல்வில் ஓரி கொல்லிமலையின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 2.
சங்ககால வள்ளல்கள் எதன் அடிப்படையில் மக்களால் அறியப்பட்டனர்?
விடை:
சங்ககால வள்ளல்கள் அவர்களது பண்புகளின் அடிப்படையில் மக்களால் அறியப்பட்டனர்.

பக்கம் 102 செயல்பாடு

பின்வருவனவற்றைப் பொருத்துக.
1. பாரி – விலங்குகளிடம் அன்பு காட்டுதல்
2. பேகன் – ஓரி கைவினைக்கலைஞர்களைக் கௌரவித்தல்
3. அதியமான் – இயற்கையிடம் அன்பு காட்டுதல்
4. வல்வில் – மக்களை மதித்தல்
விடை:
1. பாரி – இயற்கையிடம் அன்பு காட்டுதல்
2. பேகன் – விலங்குகளிடம் அன்பு காட்டுதல்
3. அதியமான் – மக்களை மதித்தல்
4. வல்வில் – ஓரி கைவினைக்கலைஞர்களைக் கௌரவித்தல்

பக்கம் 103 செயல்பாடு

கடையெழு வள்ளல்களையும், அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளையும் பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள் 1
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள் 2

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

4th Science Guide பருப்பொருள் மற்றும் பொருள்கள் Text Book Back Questions and Answers

அ. பொருந்தாததைக் கண்டுபிடி.

Question 1.
செங்கல், கயிறு, பட்டுத் துணி, அன்னாசிப்பழம்
விடை:
பட்டுத் துணி

Question 2.
கல், இரப்பர் வளையம், சைக்கிள் டியூப், மின் கம்பி
விடை:
கல்

Question 3.
சூரியன், மெழுகுவர்த்தி, டார்ச், பேனா
விடை:
பேனா

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 4.
குடை, நீர்புகா மேலாடை, இறுக்கமான சட்டை (ஜெர்கின்), ஸ்பாஞ்ச்
விடை:
ஸ்பாஞ்ச்

Question 5.
கண்ணாடிப் புட்டி, தேர்வு அட்டை, காகிதத் தட்டு, மரப்பலகை
விடை:
கண்ணாடிப் புட்டி

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
எளிதில் அழுத்த அல்லது வெட்டக் கூடிய பொருள்கள் _____________ பொருள்கள் எனப்படும்.
விடை:
மென்மையான

Question 2.
தங்கமும் வைரமும் ____________ பொருளுக்கான எடுத்துக்காட்டுகள்.
விடை:
பளபளப்பான

Question 3.
எளிதாக வளைக்கவோ நீட்டவோ இயலும் பொருள்கள் ___________ பொருள்கள் எனப்படும்.
விடை:
நெகிழ்வுத்தன்மை உள்ள

Question 4.
_____________ பொருள்கள் ஒளியை முழுமையாகத் தம் வழியே கடந்து செல்ல அனுமதிக்கின்றன.
விடை:
ஒளிபுகும்

Question 5.
______________ பார்வையைத் தூண்டி, பொருள்களைத் தெளிவாகப் பார்க்க உதவும் இயற்கைக் காரணி.
விடை:
ஒளி

இ. பொருத்துக.

1. ஒளி மூலம் – கண்ணாடி
2. நீர்புகாத் தன்மை – தாவர எண்ணெய்
3. ஒளி ஊடுருவுதல் – சூரியன்
4. ஒளிகசியும் – உலோகம்
5. ஒளிபுகா – நீர்புகா மேலாடை
விடை:
1. ஒளி மூலம் – சூரியன்
2. நீர்புகாத் தன்மை – நீர்புகா மேலாடை
3. ஒளி ஊடுருவுதல் – கண்ணாடி
4. ஒளிகசியும் – தாவர எண்ணெய்
5. ஒளிபுகா – உலோகம்

ஈ. சரியா? தவறா? என எழுதுக.

Question 1.
சொரசொரப்பான பொருள்களை எளிதாக நம்மால் அழுத்தவோ, வெட்டவோ வளைக்கவோ முடியாது.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 2.
மங்கலான பொருள்கள் ஒளியைப் பிரதிபலிக்கின்றன.
விடை:
தவறு

Question 3.
உப்புத்தாள் மென்மையான பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
தவறு

Question 4.
ஒளிபுகாப் பொருள்கள் ஒளியை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை.
விடை:
சரி

Question 5.
கண்ணாடிகள் அவற்றின் மீது விழும் ஒளியின் திசையை மாற்றிவிடுகின்றன.
விடை:
சரி

உ. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
ஒரு பொருள் நீர்புகாத் தன்மை உடையது என்று எப்பொழுது கூற முடியும்?
விடை:
நீரைத் தன்னுள் ஊடுருவிச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் நீர்புகாப் பொருள்கள் எனப்படும். எ.கா: நீர்புகா மேலாடை, அலுமினியத் தகடு, மாத்திரை அட்டை.

Question 2.
ஒளி மூலம் என்றால் என்ன?
விடை:
ஒளியைக் கொடுக்கும் பொருள்கள் ஒளி மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 3.
ஒளிபுகும் மற்றும் ஒளிபுகாப் பொருள்களுக்கு இடையேயான வேறுபாடு யாது?
விடை:
ஒளிபுகும் பொருள்கள் :
தம் வழியே ஒளியை முழுமையாக ஊடுருவ அனுமதிக்கும் பொருள்கள் ஒளிபுகும் பொருள்கள் எனப்படும். எனவே, இவற்றின் வழியே மறுபக்கம் உள்ள பொருள்களையும் தெளிவாக நாம் பார்க்க முடியும். எ.கா: காற்று, கண்ணாடி, தூய நீர்.

ஒளிபுகாப் பொருள்கள் :
தம் வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் ஒளிபுகாப் பொருள்கள் எனப்படும். எனவே இதனால் அதன் மறுபக்கம் உள்ள பொருள்களை நம்மால் பார்க்க முடியாது. எ.கா : மரம், கல், உலோகங்கள்.

Question 4.
ஒளி எதிரொளிப்பு வரையறு.
விடை:
ஒளியானது பளபளப்பான பரப்பின் மீது பட்டுத் திருப்பி அனுப்பப்படுவதையே ஒளி எதிரொளிப்பு என்கிறோம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களுள் எவை ஒளிபுகும், ஒளி கசியும் அல்லது ஒளிபுகாப் பொருள்கள் என வகைப்படுத்துக.
(காற்று, பாறை, நீர், அலுமினியத்தகடு, கண்ணாடி, பனி, மரப்பலகை, பாலிதீன் பை, குறுந்தகடு, எண்ணெயில் நனைத்த காகிதம், கண்ணாடிக் குவளை மற்றும் நிறக் கண்ணாடி)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 2

4th Science Guide பருப்பொருள் மற்றும் பொருள்கள் InText Questions and Answers

பக்கம் 96 பதிலளிப்போமோ!

கீழ்க்காணும் பொருள்கள் எவற்றால் ஆனவை எனக் கண்டறிந்து எழுதுக.
(காகிதம், களிமண், கண்ணாடி, மரம், நெகிழி, உலோகம், இரப்பர், மெழுகு)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 4
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 5

பக்கம் 96 பதிலளிப்போமோ!

ஒரே வித பொருளால் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் இணைக்க.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 7
குறிப்பு :
அ) நெகிழிப் பொருள்கள்
ஆ) மரப்பொருள்கள்
இ) தோல் பொருள்கள்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

பதிலளிப்போமா!

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் கடினமானவையா, மென்மையானவையா என எழுதுக. .
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 9

பக்கம் 97 பதிலளிப்போமோ!

கொடுக்கப்பட்ட பொருள்களை சொரசொரப்பானவை அல்லது வழுவழுப்பானவை என வகைப்படுத்துக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 10
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 11

செயல்பாடு

நெகிழ்வுத் தன்மையைச் சோதித்தல்
மாணவர்களிடம் ஒரு நெகிழி அளவுகோல் மற்றும் தர அளவுகோலைக் கொடுத்து அவற்றை வளைத்துப் பார்த்து உற்றுநோக்கியதை அட்டவணைப்படுத்தச் செய்க.
(வளைகிறது, வளையவில்லை)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 12
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 13

பக்கம் 98 செயல்பாடு

ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் முக்கால் பங்கு அளவிற்கு நீரை நிரப்பவும். அதில் ஓர் ஆரஞ்சுப்பழத்தை தோலுடனும் மற்றொன்றைத் தோல் இல்லாமலும் போடவும். அவற்றுள் எந்த ஆரஞ்சுப் பழம் மிதக்கிறது என்பதை உற்றுநோக்கி அதற்கான காரணத்தைக் கூறு.
விடை:
தோலுள்ள ஆரஞ்சுப்பழம் மிதக்கிறது. ஏனெனில் ஆரஞ்சுத் தோல் நீர் புகாப் பொருளாகும். தோல் இல்லாத பழத்திற்குள் நீர் புகுவதால் அது மூழ்கி விடுகிறது.

பக்கம் 99 செயல்பாடு

வாக்கியத்தை உங்கள் சொந்த சொற்களைக் கொண்டு பூர்த்தி செய்க.

Question 1.
ஒளிபுகும் பொருள்கள் ஒளியை _________________
விடை:
தன் வழியே ஒளியை முழுமையாக ஊடுருவ அனுமதிக்கும்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 2.
ஒளிகசியும் பொருள்கள் ஒளியை ________________
விடை:
தன் வழியே சிறிதளவு ஒளியைமட்டும் கடந்து செல்ல அனுமதிக்கும்.

Question 3.
ஒளிபுகாப் பொருள்கள் ஒளியை ___________________
விடை:
தன் வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காது.

பதிலளிப்போமா!

பின்வரும் பொருள்களுள் எவையெவை ஒளிபுகும், ஒளி கசியும் அல்லது ஒளிபுகாத் தன்மை கொண்டவை என்பதை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 14
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 15

பக்கம் 100 பதிலளிப்போமா!

கண்ணாடி, தேர்வு அட்டை, மேசையின் மேற்பகுதி, ஒரு தட்டில் உள்ள தண்ணீர் போன்ற சில பொருள்கள் மீது உங்கள் முகத்தைப் பார்க்க முயற்சிக்கவும். உங்கள் முகத்தைத் தெளிவாகக் காட்டும் பொருள்கள் எவை? அது ஏன் என உங்களுக்குத் தெரியுமா?
விடை:
கண்ணாடி என் முகத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில் கண்ணாடியில் ஒளி முழுமையாக எதிரொளிப்பு அடைகிறது.

செயல்பாடு

ஒளி எதிரொளிப்பு

தேவையான பொருள்கள் :
முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் டார்ச் விளக்கு
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 16
செய்முறை :
1. ஓர் அறையின் கதவு மற்றும் சாளரங்களை மூடி இருட்டாக்கவும்.
2. உன் நண்பனிடம் கையில் ஒரு கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு அறையின் ஒரு மூலையில் நிற்கச் சொல்லவும்.
3. அறையின் மற்றொரு மூலையில் கையில் டார்ச் விளக்குடன் நீ நிற்கவும்
4. இப்போது டார்ச் விளக்கை ஒளிரச் செய்யவும்.
5. டார்ச் வெளிச்சத்தைக் கண்ணாடியின் மீது நேரடியாகப் படுமாறு செய்யுவும் என்ன நிகழ்கிறது?
6. உனது உற்றுநோக்கலிருந்து பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்.
அ. நீங்கள் கண்ணாடியின் கோணத்தை மாற்றும் போது, ஒளியில் என்ன மாற்றம் நிகழ்கிறது?
விடை:
கண்ணாடியின் கோணத்தை மாற்றும் போது எதிரொளிக்கும் ஒளியின் கோணமும் மாறுகிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

ஆ. கண்ணாடியின் மூலம் எதிரொளிக்கப்பட்ட ஒளியின் திசையை மாற்ற இயலுமா?
விடை:
ஆம். கண்ணாடியின் மூலம் எதிரொளிக்கப்பட்ட ஒளியின் திசையை மாற்ற இயலும்.