Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 2 Chapter 1 உணவு Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 2 Chapter 1 உணவு

5th Science Guide உணவு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
உணவுப் பொருள்களைக் கெட்டுப் போகச் செய்யும் உயிரிசார் காரணி _____________.
(அ) காய வைத்தல்
(ஆ) வெப்பநிலை
(இ) ஈரப்பதம்
(ஈ) பாக்டீரியா
விடை:
(ஈ) பாக்டீரியா

Question 2.
தானியங்கள் _____________ மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
(அ) காய வைத்தல்
(ஆ) உறைய வைத்தல்
(இ) சர்க்கரை சேர்த்தல்
(ஈ) உப்பு சேர்த்தல்
விடை:
(அ) காய வைத்தல்

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 3.
_____________ குறைபாடு காரணமாக இரத்தசோகை நோய் தோன்றுகிறது.
(அ) வைட்டமின் ஏ
(ஆ) வைட்டமின் பி
(இ) இரும்பு
(ஈ) வைட்டமின் டி
விடை:
(இ) இரும்பு

Question 4.
அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வது ______________ என அழைக்கப்படுகிறது.
(அ) உடல்பருமன்
(ஆ) தலைவலி
(இ) காய்ச்ச ல்
(ஈ) வயிற்று வலி
விடை:
(அ) உடல்பருமன்

Question 5.
கார்போஹைட்ரேட்டுகள் எதில் அதிகம் காணப்படுகின்றன?
(அ) நெய்
(ஆ) பழங்க ள்
(இ) அரிசி
(ஈ) எண்ணெய்
விடை:
(இ) அரிசி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
மாலைக்கண் நோய் ______________ ஏ சத்துக் குறைவினால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின்

Question 2.
மராஸ்மஸ் என்பது _______________ குறைபாட்டு நோய் ஆகும்.
விடை:
புரோட்டீன்

Question 3.
உணவில் ஏற்படும் கெட்ட வாசனைக்குக் காரணம் ______________.
விடை:
உணவு கெட்டுப்போதல்

Question 4.
காற்றில் காணப்படும் ஈரப்பதம் உணவு கெட்டுப்போவதற்கான ஓர் _____________ காரணி ஆகும்.
விடை:
உயிரற்ற

Question 5.
தரம் குறைந்த வாயுக்குழாய்களை உபயோகிப்பது ____________ கசிய முக்கியக் காரணம் ஆகும்.
விடை:
வாயு

III. பொருத்துக.

1. புரதக்குறைபாடு – வைட்டமின் டி
2. ரிக்கட்ஸ் – உடல் செயல்பாடு
3. உடல் பருமன் – தீப்பிடிக்கும் பொருள்கள்
4. மண்ணெண்ணெய் — பழங்கள்
5. உறைதல் – குவாஷியோர்கர்
விடை:
1. புரதக்குறைபாடு – குவாஷியோர்கர்
2. ரிக்கட்ஸ் – வைட்டமின் டி
3. உடல் பருமன் – உடல் செயல்பாடு
4. மண்ணெண்ணெய் – தீப்பிடிக்கும் பொருள்கள்
5. உறைதல் – பழங்கள்

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

Question 1.
ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க வினிகர் அதனுடன் சேர்க்கப்படுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
கதிர்வீச்சு பதனம் உணவுப் பொருள்களின் சுவையைப் பாதிக்கும்.
விடை:
தவறு

Question 3.
வாயுக்கசிவு ஏற்பட்டாலும் நாம் மின் சாதனங்களை உபயோகிக்கலாம்.
விடை:
தவறு

Question 4.
அயோடின் குறைவினால் பெரிபெரி நோய் தோன்றுகிறது.
விடை:
தவறு

Question 5.
வளரும் குழந்தைகளின் உணவில் புரதம் அதிக அளவு தேவை.
விடை:
சரி

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
குறைபாட்டு நோய்கள் என்றால் என்ன?
விடை:
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் நம் உணவில் குறைவுபடுவதால் பல வித நோய்கள் தோன்றுகின்றன. இந்நோய்கள் குறைபாட்டு நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 2.
சரிவிகித உணவு என்றால் என்ன?
விடை:
நாம் அன்றாடம் உண்ணும் உணவு திட்ட உணவு எனப்படுகிறது. நமது உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் தேவையான அனைத்து வித ஊட்டச்சத்துக்களையும் திட்ட உணவு சரியன விகிதத்தில் கொண்டிருக்க வேண்டும். இந்த திட்ட உணவே சரிவிகித உணவு என்று அழைக்கப்படுகிறது.

Question 3.
உடல் பருமனை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
விடை:

  1. துரித உணவு, பொரித்த உணவு வகைகள் மற்றும் அதிகக் கொழுப்புடைய இறைச்சி ஆகியவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
  2. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழுதானியங்கள் மற்றும் உலர் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  4. எப்பொழுதும் கணினி அல்லது அலைபேசியில் விளையாடிக் கொண்டிருக்கக்கூடாது.
  5. போதுமான அளவு தூக்கம் அவசியம்.

Question 4.
சிறிதான தீக்காயத்திற்கு நாம் என்ன செய்யலாம்?
விடை:
சிறிதான நெருப்புக் காயங்கள் ஏற்பட்டால் காயம் பட்ட பகுதியை குளிர்ந்த நீர் வரக்கூடிய குழாயின் கீழ் வைக்க வேண்டும் . முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 1

Question 5.
கெட்டுப் போன உணவு – வரையறு.
விடை:
உணவுகளின் மணம் மற்றும் சுவை போன்ற இயற்கையான . நிலைகளில் மாற்றம் ஏற்படும்போது சுவை கெட்டுப்போன உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 6.
உணவுப் பாதுகாப்பின் நோக்கம் என்ன?
விடை:
கீழ்க்காணும் காரணங்களுக்காக உணவு பாதுகாப்பு அவசியமாகும்.

  1. உணவின் நிறம், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு மாறாமல் இருக்க.
  2. உணவுப் பொருள்கள் ஆண்டு முழுவதும் கிடைக்க.
  3. பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியினைத் தடுக்க.
  4. உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்க.
  5. உணவைப் பாதுகாப்பதன் மூலம் நாம் நமது .. உடல்நலத்தைக் பேணுவதோடு, உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கவும் முடிகிறது.

VI. விரிவாக விடையளி.

Question 1.
உணவுப் பாதுகாப்பு முறைகள் பற்றி எழுதுக.
விடை:
உலர வைத்தல் : இது உணவுப் பொருள்களை சூரிய ஒளியில் உலர வைப்பதன்மூலம், அவற்றிலுள்ள நீரை முற்றிலுமாக நீக்கும் முறையாகும். எ.கா. தானியங்கள்.

உப்பிடல் : உணவுப் பொருள்களுடன் உப்பு சேர்க்கப்படும்போது, அவற்றிலுள்ள நீர் அகற்றப்படுகிறது. எ.கா. மீன், ஊறுகாய்.

சர்க்கரை சேர்த்தல்: சர்க்கரையை உணவுப் பொருள்களுடன் சேர்க்கும் போது, அது அவற்றிலுள்ள நீரில் கரைந்து அவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. எ.கா. பழக்கூழ், பழரசம்.

உறைதல்: இம்முறையின் மூலம் உணவுப் பொருள்களின்மீது நடைபெறும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் நொதிகளின் செயல்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். எ.கா. பழங்கள், காய்கறிகள்.

கொதிக்க வைத்தல்: உணவுப் பொருள்களில் உள்ள நுண்ணுயிரிகள் கொதிக்க வைத்தல் மூலம் அழிக்கப்படுகின்றன. எ.கா. பால், தண்ணீ ர்

டப்பா மற்றும் புட்டிகளில் அடைத்தல்: இந்த முறையில் காற்றுப்புகாத டப்பா மற்றும் புட்டிகளில் உணவுப் பொருள்கள் அடைத்து வைக்கப்பட்டு, நுண்கிருமிகள் அவற்றைப் பாதிக்காவண்ணம் அவை காக்கப்படுகின்றன. எ.கா. பால்பொடி (Milk powder)

பாதுகாக்கும் வேதிப்பொருள்களைச் சேர்த்தல்: உணவுப் பொருள்களில் ஏற்படும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக சில வேதிப் பொருள்கள் அவற்றுடன் சேர்க்கப்படுகின்றன.

உதாரணமாக, சோடியம் பென்ஸோயெட் பழங்களோடும், சல்பர் டை ஆக்ஸைடு காய்ந்த பழங்களோடும், வினிகர் ஊறுகாயோடும் சேர்க்கப்படுகின்றது.

Question 2.
பல்வேறு உணவு வகைகளை விளக்குக.
விடை:
கீழே உள்ள அட்டவணையில் ஒருசில முக்கிய உணவுப் , பொருள்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 2
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 3

Question 3.
சமையலறை பாதுகாப்பு பற்றி எழுதுக.
விடை:
சமையல் எரிவாயு எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. இது கசிய ஆரம்பித்தால் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, வாயு உருளைகளைக் கையாளும் போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். வாயு உருளையைக் கையாளும் போது நாம் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் கீழே உள்ள அட்டவணையில் – கொடுக்கப்பட்டுள்ளன.
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 4
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 5
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 6

Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு

மின் சாதனங்கள்
மின் சாதனங்களை ஈரமான கைகளால் தொடக்கூடாது. ஏனெனில் இது சில வேளைகளில் மின் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

நெருப்பு

  • எளிதில் தீப்பற்ற க்கூடிய பொருள்களான மண்ணெண்ணெய் போன்றவற்றை எரியும் அடுப்பின் அருகில் வைக்கக் கூடாது.
  • ஒருவேளை ஒருவர் மீது தீப்பற்றிக்கொண்டால் அவர் மேல் கம்பளி அல்லது தடிமனான தரைவிரிப்பால் மூடவேண்டும்.
  • மண்ணெண்ணெய் அல்லது பிற எண்ணெய் மூலம் தீப்பிடித்தால் தீயை அணைக்க மணலைப் பயன்படுத்த வேண்டும்.
  • திடப் பொருள்களான மரம் போன்றவை தீப்பிடித்தால், தீயை அணைக்க நீரைப் பயன்படுத்த வேண்டும்.
  • மின் சாதனங்கள் தீப்பிடித்தால் அனைத்து மின் – சாதனங்களின் இணைப்பையும் அகற்றி, மின் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். – சரியான தீ அணைப்பானைப் பயன்படுத்தி தீயை அணைக்க – வேண்டும்.

5th Science Guide உணவு InText Questions and Answers

பக்கம் 60 செயல்பாடு 1

கீழ்க்காணும் உணவுப் பொருள்களை கெட்டுப்போகக் கூடியவை மற்றும் கெட்டுப்போகாதவை என வகைப்படுத்தவும்.

உப்பு, சர்க்கரை, ஆப்பிள், சோளம், ஆரஞ்சு, கோதுமை, பருப்பு வகைகள், தக்காளி, பப்பாளி, அரிசி, வெள்ளரிக்காய்.
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 2 Chapter 1 உணவு 7

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

5th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஒளி ____________ அடைவதால், வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.
அ) எதிரொளிப்பு
ஆ) ஒளிவிலகல்
இ) சிதறல்
ஈ) கலப்பு
விடை:
இ) சிதறல்

Question 2.
ஏவுகணை நாயகன் என அழைக்கப்படுபவர் யார்?
அ) சர். C.V. இராமன்
ஆ) முனைவர் A.P.J. அப்துல்கலாம்
இ) முனைவர் M.S. சுவாமிநாதன்
ஈ) இராமனுஜன்
விடை:
ஆ) முனைவர் A.P.J. அப்துல்கலாம்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 3.
மீளக்கூடிய மாற்றத்திற்கான உதாரணம்
அ) பனிக்கட்டி உருகுதல்
ஆ) பலூன் வெடித்தல்
இ) காகிதத்தை எரித்தல்
ஈ) பால் தயிராதல்
விடை:
அ) பனிக்கட்டி உருகுதல்

Question 4.
வேதிவினைகள் எதற்கான உதாரணம்?
அ) மீளக்கூடிய மாற்றம்
ஆ) மீளா மாற்றம்
இ) இரண்டும்
ஈ) இரண்டுமல்ல
விடை:
ஆ) மீளா மாற்றம்

Question 5.
கீழ்க்கண்டவற்றுள் எது உயிர்க்கழிவு அல்ல?
அ) மலர்கள்
ஆ) காய்கறிகள்
இ) பழங்கள்
ஈ) மின்கலங்கள்
விடை:
ஈ) மின்கலங்கள்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தை எழுதியவர் ______________.
விடை:
முனைவர் A.P.J.அப்துல் கலாம்

Question 2.
நீட்சிப்பட்டை மீண்டும் தனது பழைய நிலைக்கே திரும்புகிறது. இது _____________ க்கான உதாரணம் ஆகும்.
விடை:
மீளக்கூடிய மாற்றத்திற்

Question 3.
பெரும்பாலான இயற்பியல் மாற்றங்கள் _____________ மாற்றங்கள் ஆகும்.
விடை:
மீளக் கூடிய

Question 4.
செய்தித் தாள் _____________ கழிவு ஆகும்.
விடை:
மறுசுழற்சிக்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 5.
வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வெளியேற்றப்படும் கழிவுகள் _____________ கழிவுகள் எனப்படும்.
விடை:
வீட்டுக்

III. பொருத்துக.

1. மொட்டு மலராதல் – முனைவர் A.P.J.அப்துல்கலாம்
2. மீளக்கூடிய மாற்றம் – மறுசுழற்சிக் கழிவு
3. இலக்கு 2020 – உயிரிக் கழிவு
4. காகிதம் – பனிக்கட்டி உருகுதல்
5. காய்கறிகள் – மீளா மாற்றம்
விடை:
1. மொட்டு மலராதல் – மீளா மாற்றம்
2. மீளக்கூடிய மாற்றம் – பனிக்கட்டி உருகுதல்
3. இலக்கு 2020 – முனைவர் A.P.J.அப்துல்கலாம்
4. காகிதம் – மறுசுழற்சிக் கழிவு
5. காய்கறிகள் – உயிரிக் கழிவு

IV. தனித்த ஒன்றை வட்டமிடுக.

Question 1.
அ) உருகுதல்
ஆ) உறைதல்
இ) கொதித்தல்
ஈ) சமைத்தல்
விடை:
ஈ) சமைத்தல்

Question 2.
அ) கொதித்தல்
இ) சமைத்தல்
ஆ) எரிதல்
ஈ) துருப்பிடித்தல்
விடை:
அ) கொதித்தல்

Question 3.
அ) காய்கறிகள்
ஆ) மலர்கள்
இ) பழங்கள்
ஈ) வேதிப்பொருள்கள்
விடை:
ஈ) வேதிப்பொருள்கள்

Question 4.
அ) காகிதம்
இ) உலோகம்
ஆ) கண்ணாடி
ஈ) வண்ண ங்கள்
விடை:
ஈ) வண்ண ங்கள்

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
வானம் நீல நிறமாகத் தோன்றுவது ஏன்?
விடை:
நாம் காணக்கூடிய ஒளி நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு (VIBGYOR) போன்ற பல்வேறு வண்ணங்களால் ஆனது. இந்த நிறங்களுள், ஊதா நிற மே அதிகளவு சி த ற லடை கிறது . இக்காரணத்தினால்தான் அநேக நேரங்களில் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.

Question 2.
மீளக்கூடிய மாற்றம் என்றால் என்ன?
விடை:
மறுதலையாக நிகழக்கூடிய மாற்றங்கள் மீளக்கூடிய மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன. எ.கா: தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதும், பனிக்கட்டி நீராக உருகுவதும் மீளக்கூடிய மாற்றம் ஆகும்.

Question 3.
மீளக்கூடிய மற்றும் மீளா மாற்றத்தை வேறுபடுத்துக.
விடை:
மறுதலையாக நிகழக்கூடிய மாற்றங்கள் மீளக்கூடிய மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன. நீரைப் பனிக்கட்டியாகவும், பனிக்கட்டியை நீராகவும் மாற்றிவிடலாம். இது மீளக்கூடிய மாற்றமாகும். சிலவகை மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியாது. இது மீளாமாற்றம் ஆகும். ஒரு காகிதத் துண்டை எரிக்கும் போது, அது சாம்பலாக மாறிவிடுகிறது. அது மீண்டும் காகிதமாக’ மாற முடியாது. இது ஒரு மீளா மாற்றமாகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 4.
கழிவுகளின் வகைகள் யாவை?
விடை:
ஒரு முறை பயன்படுத்திய பிறகு கைவிடப்படக் கூடிய பொருள்களே கழிவுப் பொருள்கள் எனப்படும்.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 1

Question 5.
மின்ன ணுக் கழிவுகள் பற்றி எழுதுக.
விடை:
கணினிப் பாகங்கள், மின்னணு சாதனங்கள், அலைபேசி பாகங்கள், CFL பல்புகள்.

Question 6.
தமிழ்நாட்டு அறிவியலாளர்களைக் குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 2

VI. விரிவாக விடையளி.

Question 1.
பல்வேறு வகையான வீட்டுக் கழிவுகளைப் பற்றி எழுதுக.
விடை:
வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் வீட்டுக்கழிவுகள் எனப்படும். வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளுள் குப்பை மற்றும் கூளங்கள் (பாட்டில்கள், குவளைகள், துணிகள், மக்கிய பொருள்கள், கழிக்கப்பட்ட பொருள்கள், பொட்டலங்கள், செய்தித் தாள்கள், பத்திரிக்கைகள் மற்றும் கட்டப்பட்ட பொருள்கள்) ஆகியவை அடங்கும். வீட்டுக்கழிவுகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

உயிரியல் கழிவுகள் : சமையலறைக் கழிவுகள், காய்கறிகள், மலர்கள், இலைகள், பழங்கள்,

நச்சுச்கழிவுகள் : பழையமருந்துகள், வண்ணங்கள், வேதிப்பொருள்கள், பல்புகள், தெளிக்கும் குவளைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிக் கலன்கள், மின்கலன்கள், காலணிகளுக்கான பாலிஷ்கள்.

மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் : காகிதம், கண்ணாடி, உலோகங்கள், நெகிழிகள்.

திண்மக் கழிவுகள் : இரத்தக்கறை மற்றும் பிற உடல் திரவங்கள் படிந்த துணிகள்.

மின்னணுக் கழிவுகள் : கணினிப் பாகங்கள், மின்னணு சாதனங்கள், அலைபேசி பாகங்கள், CFL பல்புகள்)

Question 2.
வீட்டுக் கழிவுகளை அகற்றுவதற்கான தேவையை விளக்குக.
விடை:
மாசுபாட்டைத் தடுக்க : நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் நில மாசுபாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். இயற்கை

வளங்களைப் பாதுகாக்க : காடுகள், கனிமங்கள் மற்றும் நீர் ஆகிய சுற்றுப்புற ஆதாரங்களைப் பாதுகாக்க முறையான கழிவு நீக்கம் அவசியமாகும்.

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் : தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

பிற தேவைகளுக்காக மறுசுழற்சி செய்தல் : கழிவுகளை மறுசுழற்சி செய்து, நமக்குத் தேவையான பிற பொருள்களைப் பெற முடியும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 3.
உனது பள்ளி வளாகத்தில் காணப்படும் கழிவுகளை நீ எவ்வாறு அகற்றுவாய்?
விடை:

  1. ஒவ்வொரு வகுப்பறையிலும் குப்பைக் கூடை வைக்கப்பட வேண்டும்.
  2. வகுப்பு மாணவர்களை அணிகளாகப் பிரித்து ஒவ்வொரு வாரமும் ஒரு அணி வகுப்பறைச் சுத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
  3. குப்பைகள் மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தரம் பிரிக்கப்பட்டு அவற்றிற்குரிய குப்பைத் தொட்டிகளில் இடப்படவேண்டும். .
  4. பள்ளித் தோட்டத்தின் மூலையில் கம்போஸ்ட் குழி அமைத்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றலாம்.
  5. மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி குப்பைகளைக் குப்பைக் கூடைகளில் மட்டுமே போடும்படி கண்காணிக்க வேண்டும்.

5th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் InText Questions and Answers

பக்கம் 134 செயல்பாடு 3 :

கீழ்க்காணும் பொதுவான மாற்றங்களுள் எவை மீளக் கூடியவை என்று நீ நினைக்கிறாய்?
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 3
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 4

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 1 Chapter 3 ஆற்றல் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 1 Chapter 3 ஆற்றல்

5th Science Guide ஆற்றல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
டீசல் எரியும்போது வேதி ஆற்றல் ________________ ஆற்றலாக மாற்றப்படுகிறது.
அ) காற்று ஆற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) சூரிய ஆற்றல்
ஈ) ஒலி ஆற்றல்
விடை:
ஆ) வெப்ப ஆற்றல்

Question 2.
ஓடும் நீர் ________________ ஆற்றலைப் பெற்றுள்ளது.
அ) நிலை
ஆ) வேதி
இ) இயக்க
ஈ) ஒலி
விடை:
இ) இயக்க

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

Question 3.
ஆற்றலின் அலகு
அ) கிலோகிராம்
ஆ) நியூட்டன்
இ) கெல்வின்
ஈ) ஜுல்
விடை:
ஈ) ஜுல்

Question 4.
கீழ்க்கண்டவற்றுள் எதற்கு காற்றாற்றல் தேவை?
அ) மிதிவண்டி
ஆ) ஒளிச்சேர்க்கை
இ) பாராசூட்
ஈ) வாகனங்கள் 250
விடை:
இ) பாராசூட்

Question 5.
மாட்டுச் சாணத்தில் _____________ ஆற்றல் உள்ளது.
அ) இயக்க
ஆ) வேதி
இ) சூரிய
ஈ) வெப்ப
விடை:
ஈ) வெப்ப

II. கீழ்க்கண்டவற்றுள் நடைபெறும் ஆற்றல் மாற்றங்களைக் கண்டுபிடி.

Question 1.
சலவைப்பெட்டி : வேதி ஆற்றல் → வெப்ப ஆற்றல்

Question 2.
மின்சலவைப்பெட்டி: _____________ → _________
விடை:
மின் ஆற்றல், வெப்ப ஆற்றல்

Question 3.
மின் காற்றாடி : _____________ → __________
விடை:
மின் ஆற்றல், இயந்திர ஆற்றல்

Question 4.
ஒலி பெருக்கி : ______________ → _________
விடை:
மின் ஆற்றல், ஒலி ஆற்றல்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

Question 5.
மின்னியற்றி : ______________ → _________
விடை:
வெப்ப ஆற்றல், மின் ஆற்றல்

III. கீழ்க்கண்டவை பெற்றுள்ள ஆற்றலைக் கண்டுபிடி.

1. மலை உச்சியின் மீது உள்ள கல்
2. உருண்டோடும் பந்து
3. கரி
4. நீர் வீழ்ச்சி
5. மின்கலம்
விடை:
1. மலை உச்சியின் மீது உள்ள கல் – நிலை ஆற்றல்
2. உருண்டோடும் பந்து – இயக்க ஆற்றல்
3. கரி – நிலை ஆற்றல்
4. நீர் வீழ்ச்சி – இயக்க ஆற்றல்
5. மின்கலம் – மின் ஆற்றல்

IV. பொருத்துக.

1. மின்சார மணி – வெப்ப ஆற்றல்
2. நீர்த்தேக்கத்திலுள்ள நீர் – ஒளி ஆற்றல்
3. சூரிய ஆற்றல் – மின்னாற்றல் .
4. காற்றாலை – நிலையாற்றல்
5. டார்ச் விளக்கு – ஒலி ஆற்றல்
விடை:
1. மின்சார மணி – ஒலி ஆற்றல்
2. நீர்த்தேக்கத்திலுள்ள நீர் – நிலையாற்றல்
3. சூரிய ஆற்றல் – வெப்ப ஆற்றல் .
4. காற்றாலை – மின்னாற்றல்
5. டார்ச் விளக்கு – ஒளி ஆற்றல்

V. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

Question 1.
மரத்திலிருந்து விழும் ஆப்பிள், இயக்க ஆற்றலுக்கான எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
சரி

Question 2.
மின்சார தொடர் வண்டிகளை இயக்க மின்னாற்றல் பயன்படுகிறது.
விடை:
சரி

Question 3.
உராய்வின் மூலம் வெப்ப ஆற்றலை உண்டாக்க – முடியாது.
விடை:
தவறு
உராய்வின் மூலம் வெப்ப ஆற்றலை உண்டாக்க முடியும்.

Question 4.
நிலை ஆற்றல் மற்றும் வெப்ப ஆற்றல் இரண்டும் இயந்திர ஆற்றலின் இரு வகைகளாகும்.
விடை:
தவறு
நிலை ஆற்றல் மற்றும் இயக்க ஆற்றல் இரண்டும் – இயந்திர ஆற்றலின் இரு வகைகளாகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

Question 5.
ஆற்றலின் அலகு ஜுல்.
விடை:
சரி

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
ஆற்றல் என்றால் என்ன?
விடை:
அறிவியலில், வேலை செய்யத் தேவையான திறனே ஆற்றல் எனப்படுகிறது.

Question 2.
ஆற்றலின் பல்வேறு வகைகள் யாவை?
விடை:
இயந்திர ஆற்றல், வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல், காற்று ஆற்றல் ஆகியவை ஆற்றலின் பலவகைகள் ஆகும்.

Question 3.
இயந்திர ஆற்றலின் பயன்கள் யாவை?
விடை:

  1. நீர் மின் நிலையங்களில், நீரின் இயக்க ஆற்றலானது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.
  2. காற்றாலைகள், காற்றின் இயக்க ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகின்றன.
  3. சுத்தியின் இயக்க ஆற்றலைக் கொண்டு ஆணியை சுவற்றில் அடிக்க முடியும்.
  4. இயக்க ஆற்றலைக் கொண்டு ஓய்வு நிலையில் உள்ள பொருளை இயக்கத்திற்கோ அல்லது இயக்கத்திலுள்ள பொருளை ஓய்வு நிலைக்கோ கொண்டுவர முடியும்.

Question 4.
ஆற்றல் மாறா விதியைக் கூறு.
விடை:
ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றல் வேறொரு வகை ஆற்றலாக மாறுகிறது. இதுவே ஆற்றல் அழிவின்மை விதி. இதனைக் கூறியவர் ஜூலியஸ் ராபெர்ட் மேயர்.

Question 5.
ஒளியாற்றலின் பயன்கள் யாவை?
விடை:

  1. ஒளி ஆற்றலின் உதவியால், நம்மால் பொருள்களைக் காண முடிகிறது.
  2. தாவரங்கள் ஒளியாற்றலைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்துக் கொள்கின்றன.
  3. ஒளி ஆற்றலின் உதவியால், நமது தோல் வைட்டமின் – D ஐ உற்பத்தி செய்கிறது.
  4. ஒளி ஆற்றல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

VII. விரிவாக விடையளி.

Question 1.
இயந்திர ஆற்றலின் வகைகளை விளக்குக.
விடை:
ஒரு பொருள் தனது நிலையைப் பொறுத்து பெற்றிருக்கும் – ஆற்றல் இயந்திர ஆற்றல் எனப்படும். இயந்திர ஆற்றலை இரண்டாக வகைப்படுத்தலாம்.
→ இயக்க ஆற்றல்
→ நிலை ஆற்றல்

இயக்க ஆற்றல் : நகரும் பொருள் ஒன்று பெற்றிருக்கும் ஆற்றல் இயக்க ஆற்றல் எனப்படும். இது நகர்வு ஆற்றல் எனவும் வழங்கப்படுகிறது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 1

உதாரணம் : நகரும் வாகனம், கிரிக்கெட் விளையாட்டில் வீசப்படும் பந்து, துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டு .
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 2

நிலை ஆற்றல் : ஓய்வு நிலையிலிருக்கும் பொருள் ஒன்று பெற்றிருக்கும் ஆற்றல் நிலை ஆற்றல் எனப்படும். இது தேக்கி வைக்கப்பட்ட ஆற்றல் எனவும் வழங்கப்படுகிறது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 3

உதாரணம் : தரை மட்டத்திலிருந்து உயர்த்தப்பட்ட பொருள், இழுக்கப்பட்ட ரப்பரில் வைக்கப்பட்ட கல் , அணையிலுள்ள நீர்.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 4

Question 2.
ஆற்றல் அழிவின்மையை விளக்குக.
விடை:
ஆற்றலை உருவாக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. – இது ஒரு வடிவிலிருந்து மற்றொரு வடிவிற்கு மாற்றப்படுகிறது. அல்லது ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு கடத்தப்படுகின்றது. ஆற்றல் அழிவின்மைக்கு நமது அன்றாட வாழ்வில் பல உதாரணங்களைக் கூறமுடியும்.

1. நீர்த்தேக்கம் : நீர்த்தேக்கங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீர் நிலையாற்றலைப் பெற்றுள்ளது. நீர் கீழே விழும்போது, நிலை ஆற்றல் இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது. நீரின் இயக்க ஆற்றல் சக்கரங்களைச் சுழலச் செய்வதால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2. மின்சார சாதனங்கள் : மின் அடுப்பு, மின் சலவைப்பெட்டி மற்றும் காற்றாடிகள் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களில் மின்னாற்றல் பயன்படுகிறது. ) அச்சாதனங்களிலுள்ள கம்பிகளில் மின்சாரம் பாய்கிறது. அவ்வாறு மின்சாரம் பாயும்பொழுது அந்தக் கம்பி ) வெப்பமடைகின்றது. இந்த வெப்பத்தின் மூலம் பல்வேறு உபயோகமான வேலைகளைச் செய்ய முடியும். இவ்வாறு, மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல்

3. வாகனங்களை ஓட்டுதல் : வாகனங்களை இயக்குவதற்கு பெட்ரோல், டீசல் அல்லது எரிவாயு போன்ற எரிபொருள்களைப் பயன்படுத்துகிறோம். எஞ்சின்களில் இந்த எரிபொருள்கள் எரியும்போது வேதியாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது. எரியும் பொருள்கள் மூலம் உருவாகும் வெப்பக்காற்று எஞ்சினிலுள்ள பிஸ்டனை நகர்த்தி வாகனத்தை நகர்த்துகின்றது. இவ்வாறு, வெப்ப ஆற்றல், இயக்க ஆற்றலாக மாற்றமடைகிறது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 5
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 6

5th Science Guide ஆற்றல் InText Questions and Answers

பக்கம் 122 செயல்பாடு 1:

பின்வரும் செயல்களுக்கு என்ன தேவை எனக் கண்டுபிடி.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 7
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 3 ஆற்றல் 8

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 6 அணுக்கரு இயற்பியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 6 அணுக்கரு இயற்பியல்

10th Science Guide அணுக்கரு இயற்பியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு :

Question 1.
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் ………… எனக் கருதப்படுகிறது.
அ) தூண்டப்பட்ட கதிரியக்கம்
ஆ) தன்னிச்சையான கதிரியக்கம்
இ) செயற்கைக் கதிரியக்கம்
ஈ) அ மற்றும் இ
விடை:
(ஈ) அ மற்றும் இ

Question 2.
கதிரியக்கத்தின் அலகு
அ) ராண்ட்ஜ ன்
ஆ) கியூரி
இ) பெக்கொரல்
ஈ) இவை அனைத்தும்
விடை:
(ஈ) இவை அனைத்தும்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 3.
செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்
அ) பெக்கொரல்
ஆ) ஐரின் கியூரி
இ) ராண்ட்ஜ ன்
ஈ) நீல்ஸ் போர்
விடை:
(ஆ) ஐரின் கியூரி

Question 4.
கீழ்க்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின் நிறை எண் மாறாமல் இருக்கும்?
(i) α – சிதைவு
(ii) β – சிதைவு
(iii) γ – சிதைவு
(iv) நியூட்ரான் சிதைவு
அ) (i) மட்டும் சரி
ஆ) (ii) மற்றும்
(iii) சரி
இ) (i) மற்றும்
(iv) சரி
ஈ) (ii) மற்றும்
(iv) சரி
விடை:
(ஆ) (ii) மற்றும்
(iii) சரி)

Question 5.
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு
அ) ரேடியோ அயோடின்
ஆ) ரேடியோ கார்பன்
இ) ரேடியோ கோபால்ட்
ஈ) ரேடியோ நிக்கல்
விடை:
(இ) ரேடியோ கோபால்ட்

Question 6.
காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை
அ) கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும்
ஆ) திசுக்களைப் பாதிக்கும்
இ) மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்
ஈ) அதிகமான வெப்பத்தை உருவாக்கும்
விடை:
(இ) மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்

Question 7.
காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க …………… உறைகள் பயன்படுகின்றன. [PTA-3]
அ) காரீய ஆக்சைடு
ஆ) இரும்பு
இ) காரீயம்
ஈ) அலுமினியம்
விடை:
(இ) காரீயம்

Question 8.
கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்
(ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு
(iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்
(iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம்
அ) (i) மற்றும் (ii) சரி
ஆ) (ii) மற்றும் (iii) சரி
இ) (iv) மட்டும் சரி
ஈ) (iii) மற்றும் (iv) சரி
விடை:
(ஈ) (iii) மற்றும் (iv) சரி!

Question 9.
புரோட்டான் – புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு.
அ) அணுக்கரு பிளவு
ஆ) ஆல்பாச் சிதைவு
இ) அணுக்கரு இணைவு
ஈ) பீட்டாச் சிதைவு
விடை:
இ) அணுக்கரு இணைவு

Question 10.
அணுக்கரு சிதைவு வினையில்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 40
அ) 8,6
ஆ) 8, 4
இ) 4, 8
ஈ) கொடுக்கப்பட்ட தரவுகளிலிருந்து காண இயலாது.
விடை:
(ஆ) 8, 4

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 11.
காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்
அ) கல்பாக்கம்
ஆ) கூடங்குளம்
இ) மும்பை
ஈ) இராஜஸ்தான்
விடை:
(அ) கல்பாக்கம்

Question 12.
கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர்வினை நிகழும்.
(ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும்.
(iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினை நிகழும்.
(iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது.
அ) (i) மட்டும் சரி
ஆ) (i) மற்றும் (ii) சரி
இ) (iv) மட்டும் சரி
ஈ) (iii) மற்றும் (iv) சரி
விடை:
(ஆ) (i) மற்றும் (ii) சரி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 1

Question 1.
ஒரு ராண்ட்ஜ ன் என்பது ஒரு வினாடியில் நிகழும் ____ சிதைவுக்குச் சமமாகும்.
விடை:
2.58 × 10-4 கூலும்/கிகி

Question 2.
பாசிட்ரான் என்பது ஓர் ______
விடை:
எலக்ட்ரானின் எதிர்த்துகள்

Question 3.
இரத்தசோகையைக் குணப்படுத்தும் ஐசோடோப்பு ______
விடை:
இரும்பு-59

Question 4.
ICRP என்பதன் விரிவாக்கம் _____
விடை:
International Commission on Radiological Protection

Question 5.
மனித உடலின் மேல்படுகின்ற கதிரியக்கத்தின் அளவினைக் கண்டறிய உதவுவது _______
விடை:
டோசி மீட்டர்

Question 6.
_____ அதிக ஊடுறுவு திறன் கொண்டவை.
விடை:
காமா கதிர்கள்

Question 7.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 43
விடை:
பீட்டா துகள்

Question 8.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 44 இந்த வினை ____ சிதைவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
விடை:
காமா

Question 9.
ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் _____ ஜுல்.
விடை:
3.814 × 10-12

Question 10.
அணுக்கரு இணைவு வினை நடைபெறும் உயர் வெப்பநிலையானது ______ K என்ற அளவில் இருக்கும்.
விடை:
107 முதல் 107

Question 11.
வேளாண்பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு ______
விடை:
பாஸ்பரஸ் (P-32)

Question 12.
கதிரியக்கப் பாதிப்பின் அளவானது 100R என்ற அளவில் உள்ள போது, அது____ஐ உண்டாக்கும்.
விடை:
ரத்தப் புற்றுநோய்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 5

Question 1.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 50
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 52

Question 2.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 53
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 54

Question 3.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 55
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 56

Question 4.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 57
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 58

Question 5.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 59
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 60

IV. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

Question 1.
புளுட்டோனியம் 239 பிளவுக்கு உட்படும் பொருளாகும்.
விடை:
சரி.

Question 2.
அணு எண் 83க்கு மேல் பெற்றுள்ள தனிமங்கள் அணுக்கரு இணைவிற்கு உட்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: அணு எண் 83க்கு மேல் பெற்றுள்ள தனிமங்கள் தன்னிச்சையாக கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்றவை.

Question 3.
அணுக்கரு இணைவு என்பது அணுக்கரு பிளவினை விட அபாயகரமானது ஆகும்.
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 4.
அணுக்கரு உலையில் எரிபொருளாக இயற்கையில் கிடைக்கும் யுரேனியம்-238 எரிபொருளாகப் பயன்படுகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: அணுக்கரு உலையில் எரிபொருளாக இயற்கையில் கிடைக்கும் யுரேனியம்-235 எரிபொருளாகப் பயன்படுகிறது.

Question 5.
அணுக்கரு உலையில் தணிப்பான்கள் இல்லை எனில் அது அணுகுண்டாகச் செயல்படும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: அணுக்கரு உலையில் தணிப்பான்கள் இல்லை எனில், அது அணுகுண்டாகச் செயல்படாது.

Question 6.
அணுக்கரு பிளவின் போது, ஒரு பிளவில் சராசரியாக இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் உற்பத்தியாகும்.
விடை:
சரி

Question 7.
ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் சமன்பாடு அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவு ஆகியவற்றில் பயன்படுகிறது.
விடை:
சரி.

V. கீழ்க்கண்டவற்றைச் சரியான வரிசையில் எழுதுக.

Question 1.
ஊடுருவு திறனின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுதுக.
ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள்
விடை:
காமாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், ஆல்பாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள்

Question 2.
கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
அணுக்கரு உலை, கதிரியக்கம், செயற்கைக் கதிரியக்கம், ரேடியம் கண்டுபிடிப்பு
விடை:
கதிரியக்கம் (1896), ரேடியம் கண்டுபிடிப்பு (1898), செயற்கைக் கதிரியக்கம் (1934), அணுக்கரு உலை (1942).

VI. தொடர்புபடுத்தி விடைக் காண்க.

Question 1.
தன்னிச்சையான உமிழ்வு: இயற்கைக் கதிரியக்கம் : : தூண்டப்பட்ட உமிழ்வு : ______
விடை:
செயற்கை கதிரியக்கம்

Question 2.
அணுக்கரு இணைவு: உயர் வெப்பநிலை : : அணுக்கரு பிளவு: _____
விடை:
அறை வெப்பநிலை

Question 3.
வேளாண்விளைச்சல் அதிகரிப்பு: ரேடியோ பாஸ்பரஸ் : : இதயத்தின் சீரான செயல்பாடு :______
விடை:
ரேடியோ சோடியம்

Question 4.
மின்புலத்தால் விலக்கம்: α- கதிர் : : சுழி விலக்கம் : _____
விடை:
γ கதிர் (காமா)

VII. கணக்கீடுகள் :

Question 1.
88Ra226 என்ற தனிமம் 3 ஆல்பா சிதைவிற்கு உட்படுகிறது எனில் சேய் தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 52.1
(அணு எண் 82, நிறை எண் 214)
∴ நியூட்ரான்களின் எண்ணிக்கை
= நிறை எண் – அணு எண்
= 214 – 82 = 132

Question 2.
கோபால்ட் மாதிரி, ஒரு வினாடியில் 75.6 மில்லி கியூரி என்ற அளவில் தூண்டப்பட்ட கதிரியக்கச்சிதைவினை வெளியிடுகிறது எனில் இச்சிதைவினைப் பெக்கொரல் அலகிற்கு மாற்றுக. (ஒரு கியூரி என்பது 3.7 × 1010 பெக்கொரல்).
விடை:
1 கியூரி = 3.7 × 1010
பெக்கொரெல் சிதைவு / விநாடி
75.6 மில்லி கியூரி = 75.6 × 10-3 × 1 கியூரி
∴ 75.6 × 10-3 × 3.7 × 1010
= 279.7 × 107 பெக்கொரல்

VIII.பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப் பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க. .

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: ஒரு நியூட்ரான் U235 மீது மோதி பேரியம் மற்றும் கிரிப்டான் என இரண்டுத் துகள்களை உருவாக்குகிறது.
காரணம்: U235 பிளவுக்குட்படும் பொருளாகும்.
விடை:
அகூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 2.
கூற்று : β – சிதைவின்போது நியூட்ரான் எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது.
காரணம் : β சிதைவின் போது, அணு எண் ஒன்று அதிகரிக்கிறது.
விடை:
ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது.

Question 3.
கூற்று : அணுக்கரு இணைவிற்கு உயர் வெப்பநிலை தேவை.
காரணம் : அணுக்கரு இணைவில் அணுக்கருக்கள் இணையும் போது ஆற்றலை உமிழ்கிறது.
விடை:
அ) அகூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

Question 4.
கூற்று: கட்டுப்படுத்தும் கழிகள் என்பவை நியூட்ரான்களை உட்கவரும் கழிகள் ஆகும்.
காரணம்: அணுக்கரு பிளவு வினையினை நிலை நிறுத்துவதற்காகக் கட்டுப்படுத்தும் கழிகள் பயன்படுகின்றன.
விடை:
அ) அகூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

IX. சுருக்கமான விடையளி.

Question 1.
இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் யார்?
விடை:
ஹென்றி பெக்கொரல்.

Question 2.
பிட்ச் பிளண்ட் (pitch blende) தாதுப் பொருளில் உள்ள கதிரியக்கப் பொருள் யாது?
விடை:
யுரேனியம்

Question 3.
கதிரியக்கத்தைத் தூண்டக்கூடிய இரண்டு தனிமங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
போரான், அலுமினியம்.

Question 4.
இயற்கைக் கதிரியக்கத்தின் போது வெளியாகும் மின்காந்த கதிரின் பெயரை எழுதுக.
விடை:
காமா கதிர்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 5.
A – என்பது கதிரியக்கத் தனிமம் ஆகும். இது α-துகளை வெளியிட்டு 104R259 என்ற தனிமத்தை
உருவாக்குகிறது எனில் A – தனிமத்தின் அணு எண் மற்றும் நிறை எண்ணைக் கண்டறிக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 55.1
A- தனிமத்தின் அணு எண்: 106
A – தனிமத்தின் நிறை எண்: 263

Question 6.
அணுக்கரு பிளவு வினையில் உருவாகும் சராசரி ஆற்றலை எழுதுக.
விடை:
3.2 × 10-11J

Question 7.
மரபியல் குறைபாட்டை உருவாக்கும் அபாயகரமான கதிரியக்கப் பொருள் எது?
விடை:
காமா.

Question 8.
ஒரு மனிதனில் இறப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அமைந்துள்ள கதிரியக்கப் பாதிப்பின் அளவு என்ன ?
விடை:
600 R.

Question 9.
எங்கு, எப்போது முதல் அணுக்கரு உலை கட்டப்பட்டது?
விடை:
1942 சிகாகோ, USA.

Question 10.
கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.
விடை:
பெக்கொரல் (Bq).

Question 11.
எந்தெந்தப் பொருள்கள் கதிரியக்கப் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்?
விடை:
காரீயத்திலான கையுறைகள், காரீயத்திலான மேலாடைகள்.

X. சிறு வினாக்கள்.

Question 1.
இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக. (PTA-1)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 55.5

Question 2.
வரையறு : மாறுநிலை நிறை
விடை:
தொடர்வினையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்குத் தேவையான பிளவுப் பொருள்களின், குறைந்த அளவு நிறை ‘மாறுநிலை நிறை’ எனப்படும்.

Question 3.
வரையறு : ராண்ட்ஜ ன்
விடை:

  1. ராண்ட்ஜ ன் என்பது காமா (γ) மற்றும் X கதிர்களால் வெளியிடப்படும் கதிரியக்கத்தின் மற்றுமோர் அலகு.
  2. ஒரு ராண்ட்ஜ ன் என்பது நிலையான அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத நிலையில் 1 கிலோகிராம் காற்றில் கதிரியக்கப் பொருளானது 2.58 x 10- கூலும் மின்னூட்டங்களை உருவாக்கும் அளவாகும்.

Question 4.
சாடி மற்றும் ஃபஜன்ஸின் இடம்பெயர்வு விதியைக் கூறுக.
விடை:

  1. கதிரியக்கத் தனிமம் ஒன்று ஒரு – துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் நான்கும், அணுஎண்ணில் இரண்டும் என்ற அளவில் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும்.
  2. கதிரியக்கத் தனிமம் ஒன்று B – துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் மாறாமலும், அணு எண்ணில் ஒன்று அதிகரித்தும் புதிய சேய் உட்கரு உருவாகும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 5.
அணுக்கரு உலையில் உள்ள கட்டுப்படுத்தும் கழிகளின் செயல்பாடுகளைத் தருக.
விடை:

  1. தொடர் வினையை நிலை நிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையைத் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுகிறது.
  2. போரான் மற்றும் காட்மியம் கழிகளே பெரும்பாலும் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை நியூட்ரான்களை உட்கவரும் திறன் பெற்றவை.

Question 6.
ஜப்பானில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு புதிதாகப் பிறக்கும் சில குழந்தைகளுக்குப் பிறவிக்குறைபாடுகள் காணப்படுவது ஏன்?
விடை:

  1. 1945ல் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டின் கதிரியக்க பாதிப்பினால் பிறவிக் குறைபாடுகள் காணப்படுகின்றன.
  2. அனைத்துவித உயிர்களுக்கும் தீங்கிழைக்கக்கூடிய காமாக் கதிர்களை போன்ற கதிர்வீச்சுக்களும் இத்துடன் வெளியாகி இக்குறைபாடுகளை ஏற்படுத்தின.

Question 7.
ஒரு மருத்துவமனையில் திரு. ராமு என்பவர் X-கதிர் தொழில்நுட்பவியலாளராக உள்ளார். அவர் காரீயத்தாலான மேலாடையை அணியாமல் பணி செய்கிறார். அவருக்கு நீங்கள் தரும் ஆலோசனைகள் என்ன?
விடை:

  1. மருத்துவமனைகளில் X-கதிர்வீச்சு நிகழும் பகுதிகளில் பணியாற்றுவோர் கையடக்க டோசி மீட்டரை அணிந்து கொள்வதன் மூலம் கதிரியக்க உட்கவர் அளவினை அறிந்து கொள்ள இயலும்.
  2. காரீயத்திலான மேலாடையை அணிந்து கொள்வது இன்றியமையாதது.

Question 8.
விண்மீன் ஆற்றல் என்றால் என்ன?
விடை:
சூரியனைப் போன்ற விண்மீன்கள், அதிக அளவு ஆற்றலை ஒளி மற்றும் வெப்ப வடிவில் உமிழ்கின்றன. இந்த ஆற்றலானது விண்மீன் ஆற்றல் எனப்படும்.

Question 9.
வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ ஐசோடோப்புகளின் பயன்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
விடை:

  1. கதிரியக்கப் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 பயிர் உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.
  2. பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணுயிரிகளால் வேளாண் உற்பத்திப்பொருள்கள் கெட்டுப் போகாமல் நுண்ணுயிரிகளை அழித்து, வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்க பயன்படுகின்றன.
  3. சேமிக்கப்படும் சிலவகை தானியங்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்தி, அவைகளை நீண்ட நாள்களுக்கு அதே புதுத் தன்மையோடு பயன்படுத்திட இயலும்.
  4. சிறிதளவு கதிர்வீச்சின் மூலம் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அழுகிப் போகாமல் இருக்கச் செய்ய பயன்படுகிறது.
  5. பருப்பு வகைத் தானியங்களைச் சேமிப்புக் காலத்தில் முளைவிடாமல் பாதுகாக்கவும் இயலும்.

XI. விரிவாக விடையளி :

Question 1.
கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாடற்ற தொடர் வினையை விளக்குக.
விடை:
தொடர்வினையினைக் கட்டுப்பாடான தொடர் வினை மற்றும் கட்டுப்பாடற்ற தொடர்வினை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

அ) கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை
இவ்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கை ஒன்று’ என்ற அளவில் உள்ளது. அதாவது, உட்கவரும் பொருட்களைக் கொண்டு வெளிவரும் நியூட்ரான்களில் ஒரே ஒரு நியூட்ரானை மட்டும் தொடர்வினைக்கு அனுமதித்து, மற்ற நியூட்ரான்கள் உட்கவரப்படுகின்றன. இத்தொடர் வினையின் மூலம் வெளியேற்றப்படும் ஆற்றல் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தப்படுகின்றன. அணுக்கரு உலையில் முழுவதும் நிலைநிறுத்தப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலை உருவாக்க
கட்டுப்பாடான தொடர்வினையே பயன்படுத்தப்படுகிறது.

ஆ) கட்டுப்பாடாற்ற தொடர்வினை
இவ்வினையில் எண்ணற்ற நியூட்ரான்கள் பெருக்கமும், அதன் காரணமாகப் பிளவும் அதிகமாக பிளவுப் பொருள்களும் உருவாகின்றன. இதன் முடிவில் ஒரு விநாடிக்குள் அதிகமாக ஆற்றல் வெளியேறுகின்றது.
இவ்வகை தொடர்வினையைப் பயன்படுத்தி அணு குண்டு வெடித்தல் நிகழ்த்தப்படுகிறது.

Question 2.
ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக. [PTA-3]
விடை:
இந்த மூன்று கதிர்களின் பண்புகளில் சில ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் காணப்படுகின்றன.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 60.1
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 60.2
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 60.3

Question 3.
அணுக்கரு உலை என்றால் என்ன? அதன் இன்றியமையாத பாகங்களின் செயல்பாடுகளை விவரிக்க.
விடை:
அணுக்கரு உலை என்பது முழுவதும் தற்சார்புடைய கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு பிளவு வினை நடைபெற்று மின் உற்பத்திச் செய்யும் இடமாகும். அணுக்கரு உலையின் இன்றியமையாத பாகங்களின் செயல்பாடுகள் எரிபொருள் :

  1. பிளவுக்குட்படும் பொருளே எரிபொருளாகும்.
  2. அணுக்கரு உலையில் பொதுவாகப் பயன்படும் எரிபொருள் யுரேனியம் ஆகும்.

தணிப்பான் :

  1. உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரான்களைக் குறைந்த ஆற்றல் கொண்ட நியூட்ரான்களாகக் குறைப்பதற்குத் தணிப்பான் பயன்படுகிறது.
  2. எ.கா. கிராஃபைட் மற்றும் கனநீர்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 70

கட்டுப்படுத்தும் கழி :

  1. தொடர்வினையை நிலை நிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுவது கட்டுப்படுத்தும் கழியாகும்.
  2. எ.கா. போரான் மற்றும் காட்மியம் கழிகளே பெரும்பாலும் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை நியூட்ரான்களை உட்கவரும் திறன் பெற்றவை.

குளிர்விப்பான் :

  1. அணுக்கரு உலையினுள் உருவாகும் வெப்பத்தை நீக்குவதற்காகக் குளிர்விப்பான் பயன்படுகிறது.
  2. இதில் உருவாகும் நீராவியைக் கொண்டு விசையாழியை இயக்கி மின் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
  3. நீர், காற்று மற்றும் ஹீலியம் ஆகியவை சில குளிர்விப்பான்களாகும்.

XII. உயர் சிந்தனைக்கானவனாககள.

Question 1.
அணுக்கரு வினைக்குட்படும் கதிரியக்கத் தனிமம் ஒன்றின் நிறை எண்: 232, அணு எண் : 90 எனில் கதிரியக்கத்திற்குப் பின் காரீய ஐசோடோப்பாக மாறுகிறது. காரீய ஐசோடோப்பின் நிறை எண் 208 மற்றும் அணு எண் 82 எனில் இவ்வினையில் நிகழ்ந்துள்ள ஆல்பா மற்றும் பீட்டாச் சிதைவுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 70.2

Question 2.
X-கதிர் படங்களை அடிக்கடி எடுக்கக் கூடாது. காரணங்களை எழுதுக. [PTA-5]
விடை:
X- கதிர்கள் உடலை ஊடுருவிச் செல்லும் தன்மை உடையவை. எனவே, சில நுட்பமான பாகங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க காரீய உடை அணிவது நல்லது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல்

Question 3.
அலை பேசி கோபுரங்கள் மனித வாழிடத்திலிருந்து தொலைவில் அமைக்கப்பட வேண்டும் – ஏன்?
விடை:
அலைபேசி கோபுரங்கள் உயர் அதிர்வெண் உடைய அலை அல்லது மைக்ரோ அலைகளை வெளியிடுகிறது. இம்மாதிரியான மின்காந்த அலைகள் உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடியவை. புற்றுநோய், குழந்தைப் பிறப்பு கோளாறுகள், ஞாபகமறதி போன்றவற்றை ஏற்படுத்தும்.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
தகுந்த காரணங்களோடு தொடர்புபடுத்தி கோடிட்ட இடங்களை நிரப்புக. (PTA-6)
(அ) அணுக்கரு பிளவு : அணுகுண்டு அணுக்கரு இணைவு : ………
விடை:
ஹைட்ரஜன் குண்டு

(ஆ) கதிரியக்க அயோடின் : முன்கழுத்துக்கழலை கதிரியக்க சோடியம் :..
விடை:
இதயம் சீராக செயல்பட

2 மதிப்பெண்கள்

Question 1.
92U235 என்ற அணுக்கருவானது ஓர் ஆல்பா சிதைவிற்கு உட்படுகிறது எனில் புதிதாக உருவாகும் சேய் உட்கருவின் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. (7 Marks) (PTA-1)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 80
நியூட்ரான்களின் எண்ணிக்கை = நிறை எண்- அணு எண்
= 231 – 91 = 140

Question 2.
கதிரியக்கத்தின் மருத்துவப் பயன்பாடுகள் ஏதேனும் நான்கினை எழுதுக. (7 Marks)[PTA 2)]
விடை:
ரத்தச் சுழற்சியில் உள்ள குறைபாடுகளை அறியவும், எலும்புகளில் வளர்சிதை மாற்றக் குறைபாட்டினை அறியவும், மூ ளையில் உள்ள கட்டிகளை அறியவும் கதிரியக்க ஐசேடோப்புகள் பயன்படுகின்றன. ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், சல்பர் போன்ற சில கதிரியக்க ஐசோடோப்புகள் நோய்களைக் கண்டறியப் பயன்படுகின்றன.

Question 3.
U235 தனிமத்தின் அணுக்கரு பிளவு கீழ்க்கண்டவாறு நிகழ்கிறது. (4Marks) [PTA-4]
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 86 வினையில் வெளியாகும் சேய் உட்கரு தனிமங்கள் X மற்றும் Yயினைக் காண்க.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 90

4 மதிப்பெண்கள்

Question 1.
(i) காமா கதிரியக்கத்தின் ஏதேனும் இரு பண்புகளை எழுதுக. [PTA-3]
விடை:

  1. காமா கதிர்கள் ஃபோட்டான்கள் எனப்படும் மின்காந்த அலைகளாகும்.
  2. இவை மின்சுமையற்றவை (அ) நடுநிலைத்துக்கள். காமாத்துகளின் மின்சுமை = சுழி.
  3. ஒளியின் திசைவேகத்தில் செல்லும்.

(ii) கட்டுப்படுத்தும் கழிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  1. தொடர்வினையை நிலைநிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுவது கட்டுப்படுத்தும் கழியாகும்.
  2. போரான் மற்றும் காட்மியம் கழிகளே பெரும்பாலும் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை நியூட்ரான்களை உட்கவரும் திறன் பெற்றவை.

Question 2.
(i) கீழ்க்காண் அணுக்கரு வினையில் X எனும் உட்கரு Y எனும் உட்கருவாக மாறுகிறது. உட்கரு இன் அணு எண் மற்றும் நிறை எண்ணைக் காண்க. [PTA-5]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 92

(ii) 1 கிகி நிறை வழுவுடைய ஒரு கதிரியக்கப் பொருளானது அணுக்கரு இணைவின் போது வெளியாகும் மொத்த ஆற்றலைக் கணக்கிடுக.
விடை:
வினையின்போது நிறைவழு (m) = 1 kg
ஒளியின் திசைவேகம் (c) = 3 × 108 ms-1
ஐன்ஸ்டீ னின் நிறை ஆற்றல் சமன்பாடு,
E = mc2
= 1 × (3 × 108)2
E = 0.9 × 1017 J

Question 3.
தொழில் துறையில் கதிரியக்க! ஐசோடோப்புகளின் பயன்களை தருக. (PTA-4)
விடை:

  1. தொழிற்சாலைகளில் தயாரிப்பின்போது ஏற்படும் உற்பத்திக் குறைபாடுகளான விரிசல்கள் மற்றும் கசிவுகளைக் கண்டறிய கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
  2. பல்வேறுதொழிற்சாலைகளில் வாயுக்கள், திரவங்கள் மற்றும் திண்மங்களின் அளவுகளைக் கண்டறிய கதிரியக்க மூலங்கள் பயன்படுகின்றன.

7 மதிப்பெண்கள்

Question 1.
கதிரியக்கத்தின் மருத்துவப் பயன்பாடுகள் ஏதேனும் நான்கினை எழுதுக. (PTA-2)
விடை:

  1. கதிரியக்க ஐசோடோப்புகள் – மருத்துவத் துறையில் இரண்டு : வகைகளில் வகைப்படுத்தப்பட்டு – பயன்படுத்தப்படுகிறது. அவை: 1
    நோயறிதல் 2) கதிரியக்கச் சிகிச்சை.
  2. ரத்தச் சுழற்சியில் உள்ள குறைபாடுகளை அறியவும், எலும்புகளில் வளர்சிதை மாற்றக் குறைபாட்டினை அறியவும், மூளையில் உள்ள கட்டிகளை அறியவும் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
  3. ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன், சல்பர் போன்ற சில கதிரியக்க ஐசோடோப்புகள் நோய்களைக் கண்டறியப்
    பயன்படுகின்றன.
  4. கதிரியக்க சோடியம் – 24 (Na24) இதயத்தைச் சீராக செயல்பட வைக்க உதவுகிறது.
  5. கதிரியக்க அயோடின் – 131 (I131) முன் கழுத்துக் கழலையைக் குணப்படுத்த உதவுகிறது.
  6. கதிரியக்கப் பாஸ்பரஸ் – 32 (P32) தோல் நோய்ச் சிகிச்சையில் பயன்படுகிறது.

Question 2.
கதிரியக்க ஐசோடோப்புக்கள் தொழிற் சாலைகளில் எவ்வாறு பயன்படுகின்றன? [PTA-4]
விடை:

  1. தொழிற்சாலைகளில் தயாரிப்பின் போது ஏற்படும் உற்பத்திக் குறைபாடுகளான விரிசல்கள் மற்றும் கசிவுகளைக் கண்டறிய கதிரியக்க ஐசோடோப்புகள்
    பயன்படுகின்றன: பல்வேறு தொழிற்சாலைகளில் வாயுக்கள், திரவங்கள் மற்றும் திண்மங்களின் அளவுகளைக் கண்டறிய கதிரியக்க மூலங்கள் பயன்படுகின்றன.
  2. வானூர்திகளில் எடுத்துச் செல்லப்படும் சுமைகளில் வெடி – பொருள்கள் உள்ளனவா? என்பதனைக் கண்டறிய கலிபோர்னியம்-252(Cf252)பயன்படுகிறது.
  3. பல்வேறு தொழிற்சாலைகளில் புகையை உணரும் கண்டுணர்வியாக அமர்சியம்-241 (Am241)
    ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.

அரசு தேர்வு வினா-விடை

I மதிப்பெண்

Question 1.
தன்னிச்சையாக கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்ற தனிமம் (GMQP-2019)
(அ) Ni
(ஆ) Pd
(இ) Pt
(ஈ) U
விடை:
(ஈ) U

4 மதிப்பெண்கள்

Question 2.
அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவின் தன்மைகளை எழுதுக. (PTA-6; GMQP-2019)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 6 அணுக்கரு இயற்பியல் 95

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

5th Science Guide பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்க்கண்டவற்றுள் எது பொருள்களின் நிலையைக் குறிக்கிறது?
அ) திட, திரவ நீர்
ஆ) திட, திரவ வாயு
இ) திட, திரவ, மரக்கட்டை
ஈ) திட, திரவ, சர்க்க ரை
விடை:
ஆ) திட, திரவ வாயு

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எது திடப்பொருள்?
அ) மண்ணெண்ணெய்
ஆ) காற்று
இ) நீர்
ஈ) ஆப்பிள்
விடை:
ஈ) ஆப்பிள்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

Question 3.
சணல் இழைகள் எதிலிருந்து பெறப்படுகின்றன?
அ) இலைகள்
ஆ) தண்டு
இ) பூ
ஈ) வேர்
விடை:
ஆ) தண்டு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பருத்தி விளைய ஏற்ற மண் _______________.
விடை:
வண்டல் மண்/கரிசல் மண்

Question 2.
பருத்தி இழைகளிலிருந்து நூல்களைக் தயாரிக்கும் முறைக்கு ______________ என்று பெயர்.
விடை:
நூற்றல்

Question 3.
விதை நீக்கல் என்பது விதைகளிலிருந்து ____________ யை பிரிக்க உதவுகிறது.
விடை:
இழை

Question 4.
செயற்கை இழைக்கு மற்றொரு பெயர் _____________
விடை:
மனிதனால் உருவாக்கப்பட்ட இழை

Question 5.
கம்பளி ஆடைகள் _______________ (தாவரம் / விலங்கு) லிருந்து தயாரிக்கப்படுகின்றன.
விடை:
விலங்கு

III. பொருத்துக.

1. நூல் – விதை நீக்கல்
2. பஞ்சு – நூற்றல்
3. துணிகள் – மரக்கூழ்
4. ரேயான் – தண்டு
5. சணல் – நெய்தல்
விடை:
1. நூல் – நூற்றல்
2. பஞ்சு – விதை நீக்கல்
3. துணிகள் – நெய்தல்
4. ரேயான் – மரக்கூழ்
5. சணல் – தண்டு

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

Question 1.
தேங்காயின் வெளிப்புறம் உள்ள பொருள் நார் எனப்படுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

Question 2.
பீன்ஸ் மற்றும் பட்டாணிகள் பயறு வகையைச் சார்ந்தவை.
விடை:
சரி

Question 3.
மேஜை ஒரு வீட்டு உபயோகப் பொருள்.
விடை:
சரி

Question 4.
இனிப்புச் சோளம் மக்காச் சோள வகையைச் சார்ந்தது அல்ல,
விடை:
தவறு
இனிப்புச் சோளம் சோளவகையைச் சார்ந்தது.

Question 5.
பருத்திப் பந்தில் சணல் இழைகள் உள்ளன.
விடை:
தவறு
பருத்திப் பந்தில் நூல் இழைகள் உள்ளன.

V. கீழ்க்கண்டவற்றை பூர்த்தி செய்க.

Question 1.
திடப்பொருள் : மேஜை :: ________________ : நீர்
விடை:
திரவப்பொருள்

Question 2.
பருத்தி விதைகள் : ______________ :: பஞ்சு : நூற்றல்
விடை:
ஜின்னிங்

Question 3.
நார் இழைகள் : ______________ :: பருத்தி இழைகள் : பருத்திச் செடி
விடை:
தென்னை

Question 4.
கறுப்பு மிளகு : மசாலா :: இனிப்பு சோளம் : _________________
விடை:
சோளப் பொருள்கள்

VI. சுருக்கமாக விடையளி:

Question 1.
விதை நீக்கல் என்றால் என்ன?
விடை:
இழைகளை அதன் விதையிலிருந்து பிரித்தெடுக்கும் முறை விதை நீக்குதல் (ஜின்னிங்) எனப்படும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

Question 2.
கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் யாவை?
விடை:
ரொட்டி, கேக், பாஸ்தா, முளைகட்டிய கோதுமை, உடைத்த கோதுமை போன்றவை கோதுமையிலிருந்து கிடைக்கும் பொருட்களாகும்.

Question 3.
செயற்கை இழை என்றால் என்ன?
விடை:
வேதிமுறைகளைப் பயன்படுத்தி மனிதனால் பலவிதமான இழைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை செயற்கை இழைகள் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 4.
மேல்நோக்கு விசை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் நீரில் மூழ்கும்போது நீரானது அப்பொருளின் மீது ஒரு விசையைச் செலுத்துகிறது. இதற்கு மேல்நோக்குவிசை என்று பெயர்.

Question 5.
முழு தானியங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
விடை:
கோதுமை, சோளம், அரிசி, பார்லி, பட்டாணி மற்றும் சிறுதானியங்கள் ஆகியவை உணவு தானியங்களுக்கு சில ) உதாரணங்களாகும்.

VII. விரிவாக விடையளி:

Question 1.
பொருள்களின் மூன்று நிலைகளை விளக்குக.
விடை:
திடப்பொருள் :
திடப்பொருளில் மூலக்கூறுகள் – மிக நெருக்கமாக அமைந்துள்ளன. இவற்றை அழுத்தமுடியாது. இவை குறிப்பிடத்தக்க உருவம், வடிவம் மற்றும் கன அளவைப் பெற்றிருக்கும்.

திரவம் :
திரவங்களில் மூலக்கூறுகள் தளர்வாக இடைவெளிவிட்டு பிணைக்கப்பட்டிருக்கும். எனவே, திரவங்களை சிறிதளவே அழுத்தலாம். இவை குறிப்பிட்ட கன அளவைப் பெற்றிருக்கும். ஆனால், குறிப்பிட்ட வடிவம் மற்றும் உருவத்தைப் பெற்றிருக்காது.

வாயு :
வாயுக்களில் மூலக்கூறுகள் மிகவும் தளர்வாக பிணைக்கப்பட்டுள்ளன. எனவே, வாயுக்களை எளிதில் அழுத்தலாம்.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 1

Question 2.
பருத்திப் பந்திலிருந்து துணிகளை உருவாக்கும் முறைகளை விளக்குக.
விடை:
பருத்தியிலிருந்து விதைகளை நீக்கிய பிறகு பெறப்படும் – பொருள் பஞ்சு எனப்படும். இந்தப் பஞ்சை இணைத்து, பிறகு நன்கு அழுத்தி பந்துகளாக உருட்டுகின்றனர். எஞ்சிய சிறு இழைகளும், கழிவுகளும் இழை நீக்குதல் முறையில் நீக்கப்படுகின்றன.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 2
நூற்றல் : பஞ்சிலிருந்து நூல் பருத்திப் பந்துகள் தயாரிக்கும் முறை நூற்றல் விதை நீக்குதல் எனப்படும். இயந்திரங்களைக் கொண்டு பெரிய அளவில் பருத்தி இழைகள் நூல்கள் நூற்கப்படுகின்றன.

நூ லி லி ருந்து துணி உருவாதல் : நெய்தல் மற்றும் பின்னுதல் இவை இரண்டும் துணிகளை இழைகளிலிருந்து உருவாக்கும் மிக முக்கியமான செயல்முறைகளாகும். இரண்டு விதமான நூல்களைப் பயன்படுத்தி துணிகளை உருவாக்கும் முறை நெய்தல் எனப்படும். தறி என்று அழைக்கப்படும் இயந்திரத்தைக் கொண்டு நெசவாளர்கள் துணிகளை நெய்கின்றனர்.

தறிகள் கைத்தறியாகவோ அல்லது விசைத்தறியாகவோ இருக்கலாம். பின்னுதலில் ஒற்றை நூலைக்கொண்டு ) துணிகள் உருவாக்கப் படுகின்றன. இவையும் கைகளினாலோ அல்லது இயந்திரங்களினாலோ – செய்யப்படலாம்.

VII. காரணம் கூறுக.

Question 1.
குடைகள் ஏன் செயற்கைத் துணிகள் கொண்டு உருவாக்கப்படுகின்றன?
விடை:
செயற்கைத் துணிகள் இயற்கை இழைகளைக் காட்டிலும் நீர் ) விலக்கு விசை (hydrophobic) அதிகம் கொண்டவை. இயற்கை இழைகள் நீரை அதிகம் உறிஞ்சக் கூடியவை. ஆனால் செயற்கைத் துணி இழைகளுக்கு நீரை உறிஞ்சும் தன்மை கிடையாது. எனவே குடைகள் செயற்கைத் . துணிகள் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

Question 2.
ஒரு பொருள் திரவத்தில் மூழ்குவதும் மிதப்பதும் எதனைச் சார்ந்தது?
விடை:
ஒரு பொருளின் அடர்த்தி திரவத்தின் மேல்நோக்கு விசையைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் அது மூழ்கிவிடும். பொருளின் அடர்த்தி, திரவத்தின் மேல்நோக்கு விசையைக் காட்டிலும் குறைவாக இருந்தால் அது

5th Science Guide பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் InText Questions and Answers

பக்கம் 117 செயல்பாடு 3

ஒரு வாளியில் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட பொருட்களை அதில் போடவும். ஆப்பிள், கத்திரிக்கோல், முள்கரண்டி, பளிங்குக் கற்கள், பிளாஸ்டிக் பந்து. நீ காண்பவற்றைக் கொண்டு அட்டவணையை நிரப்புக.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 3
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 4

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள்

பக்கம் 118 செயல்பாடு 4

உப்பு, சர்க்கரை, சாக்பீஸ், மணல் மற்றும் மரத்தூள் போன்ற பொருட்களைச் சேகரிக்கவும். ஐந்து பீக்கர்களை எடுத்துக்கொள்ளவும். முதல் பீக்கரில் சர்க்கரை, இரண்டாவது பீக்கரில் உப்பு என மற்ற பொருட்களையும் ஒவ்வொரு பீக்கரிலும் – தனித்தனியாக எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கலக்கவும். சிறிதுநேரம் அப்படியே வைத்துவிடவும். என்ன நிகழ்கிறது என்று கவனித்து குறித்துக் கொள்ளவும்.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 5
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 6

பக்கம் 119 செயல்பாடு 5

தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய், கடுகு எண்ணெய், எலுமிச்சைச்சாறு, வினிகர் போன்ற பொருட்களை எடுத்துக்கொள். ஐந்து சோதனைக் குழாய்களை எடுத்து அவற்றை பாதியளவு நீரால் நிரப்பவும். ஒரு சோதனைக்குழாயில் ஏதேனும் ஒரு திரவத்தை ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும். அப்படியே சிறிதுநேரம் வைத்துவிடவும். இப்பொழுது திரவங்களை உற்றுநோக்கவும். இந்த சோதனைகளை மற்ற திரவத்துடன் சேர்த்து செய்துபார்க்கவும். கவனித்தவற்றை அட்டவணைப் படுத்தவும்,
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 7
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 8
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்கள் 9

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

5th Science Guide உறுப்பு மண்டலங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
மனித உணவுப் பாதையின் நீளம் என்ன?
அ) 3-5 மீ
ஆ) 5-6 மீ
இ) 9-11 மீ)
ஈ) 8-9 மீ
விடை:
ஈ) 8-9 மீ

Question 2.
சுவாசத்துடன் தொடர்புடைய உறுப்பு எது?
அ) சிறுநீரகம்
ஆ) நுரையீரல்கள்
இ) இதயம்
ஈ) மூளை
விடை:
ஆ) நுரையீரல்கள்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

Question 3.
நமது உடலில் எத்தனை சிறுநீரகங்கள் உள்ளன?
அ) 2
ஆ) 3
இ) 1
ஈ) 4
விடை:
அ) 2

Question 4.
மூளையின் செயல்பாட்டு அலகு ____________
அ) நியூரான்
ஆ) நெஃப்ரான்
இ) மூளைத்தண்டு
ஈ) நரம்புகள்
விடை:
அ) நியூரான்

Question 5.
இரத்தத்தை உந்தித் தள்ளுவது ____________
அ) நுரையீரல்கள்
ஆ) இதயம்
இ) சிறுநீரகங்கள்
ஈ) எலும்புகள்
விடை:
ஆ) இதயம்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
உறுப்புகளின் தொகுதிகள் ________________ மண்டலத்தை உண்டாக்குகின்றன.
விடை:
உறுப்பு

Question 2.
உடல் கழிவுகளை வெளியேற்றும் செயல் ____________ எனப்படும்.
விடை:
கழிவு நீக்கம்

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மனித இதயத்திலுள்ள அறைகளின் எண்ணிக்கை ______________
விடை:
நான்கு

Question 4.
சிறுநீரகங்களின் செயல் அலகு ______________
விடை:
நெஃப்ரான்கள்

Question 5.
மனித நரம்பு மண்டலம் _______________ பிரிக்கப்பட்டுள்ளது. பகுதிகளாகப்
விடை:
இரண்டு

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக.

Question 1.
மனித சுவாச மண்டலத்தில் மூச்சுக்குழாயின் நீளம் 8 – 10 செ.மீ.
விடை:
(தவறு)
மனித சுவாச மண்டலத்தில் மூச்சுக்குழாயின் நீளம் 10 – 12 செ.மீ.

Question 2.
இரத்த ஓட்ட மண்டலம் இதயம், இரத்தம் மற்றும் இரத்தக்குழாய்களை உள்ளடக்கியது.
விடை:
சரி

Question 3.
இரத்தத்தின் முக்கியப்பணி ஊட்டச்சத்து, ஆக்சிஜன், கழிவுப்பொருள்கள் மற்றும் ஹார்மோன்களைக் கடத்துவதாகும்.
விடை:
சரி

Question 4.
மூளை மார்பெலும்புகளால் மூடப்பட்டுள்ளது.
விடை:
தவறு
மூளை கிரேனியம் எலும்புகளால் மூடப்பட்டுள்ளது.

Question 5.
சிறுநீரகங்களின் செயல் அலகு நியூரான்.
விடை:
தவறு
சிறுநீரகங்களின் செயல் அலகு நெப்ரான்.

IV. பொருந்தாத ஒன்றை வட்டமிடு.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் 1
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் 2

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

V. பொருத்துக.

1. செரிமான மண்டலம் – சிறுநீரகம்
2. சுவாச மண்டலம் – மூளை
3. இரத்த ஓட்ட மண்டலம் – உணவுக்குழாய்
4. கழிவுநீக்க மண்டலம் – இதயம்
5. நரம்பு மண்டலம் – நுரையீரல்
விடை:
1. செரிமான மண்டலம் – உணவுக்குழாய்
2. சுவாச மண்டலம் – நுரையீரல்
3. இரத்த ஓட்ட மண்டலம் – இதயம்
4. கழிவுநீக்க மண்டலம் – சிறுநீரகம்
5. நரம்பு மண்டலம் – மூளை

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
நமது வாயில் உள்ள செரிமானச் சுரப்பிகளைக் கூறுக.
விடை:
நமது வாயில் உள்ள செரிமானச் சுரப்பிகள் உமிழ்நீர்ச் சுரப்பிகள் ஆகும். இவை மேலண்ண ச் சுரப்பி, நாவடிச் சுரப்பி, கீழ்த்தாடைச் சுரப்பி ஆகிய மூன்று இணைகள் ஆகும்.

Question 2.
சுவாசித்தல் என்றால் என்ன?
விடை:
சுவாச மண்டலமானது உடலிலுள்ள திசுக்களுக்கு ஆக்சிஜனை வழங்கி, அத்திசுக்களிலிருந்து கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறது.

Question 3.
பெரிகார்டியல் திரவத்தின் பணி என்ன?
விடை:
இதயம் ஒரு வெற்றிடமான, தசையாலான உறுப்பாகும். இது சற்றே கூம்பு வடிவமுடையது. இதனைச் சூழ்ந்துள்ள இரட்டை அடுக்கு சவ்வானது பெரிகார்டியல் திரவத்தால் – நிரப்பப்பட்டுள்ளது. இந்த பெரிகார்டியல் திரவம் இதயத்தை – அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது.

Question 4.
இதய அறைகளின் பெயர்களைக் கூறுக.
விடை:
இதயமானது நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ) இதயத்தின் மேலறைகள் இரண்டும் ஏட்ரியா (அ) ஆரிக்கிள்கள் என்றழைக்கப்படுகின்றன. தடித்த இரண்டு கீழறைகளும் வெண்ட்ரிக்கிள்கள் என்றழைக்கப்படுகின்றன.

Question 5.
கழிவு நீக்க உறுப்புகளை வரிசைப்படுத்து.
விடை:
(சிறுநீர்ப்பை , சிறுநீர்க் குழாய், சிறுநீரகம், சிறுநீர்ப் புறவெளி) சிறுநீரகம், சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை , சிறுநீர்ப் புறவெளி

Question 6.
தானியங்கு நரம்பு மண்டலத்தின் இரு பணிகள் யாவை?
விடை:
தானியங்கு நரம்பு மண்டலம் உடலின் உள் உறுப்புகளின் நரம்புகளைக் கட்டுப்படுத்துகிறது.

Question 7.
இரத்தத்தின் பணிகள் யாவை?
விடை:
இரத்தம் சத்துக்கள், ஆக்சிஜன், கழிவுகள், மற்றும் ஹார்மோன்களைக் கடத்துகிறது. மனித உடலில் இரத்தத்தின் அளவு 4-5 லிட்டராகும். இது நீரின் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துகிறது. இரத்தமானது உடல் முழுவதும் இதயத்தால் உந்தித் தள்ளப்படுகிறது. இது திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இறுதியாக நுரையீரலை அடைந்து மீண்டும் ஆக்சிஜனைப் பெறுகிறது.

VII. விரிவாக விடையளி.

Question 1.
செரிமான மண்டலத்தின் பணிகள் யாவை?
விடை:
செரிமான மண்டலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. செரிமானப் பாதை
  2. செரிமானச் சுரப்பிகள்

நாம் உண்கின்ற உணவானது சிக்கலான சேர்மங்களான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன. இவை முறையே எளிய மூலக்கூறுகளான குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசராலாக மாற்றமடைகின்றன.

இந்த எளிய மூலக்கூறுகள் பின்னர் இரத்தம் அல்லது நிணநீர் இவற்றில் ஏதாவது ஒன்றினால் உட்கிரகிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றமடைகின்றன. இவ்வாறு சிக்கலான மூலக்கூறுகள் எளிய மூலக்கூறுகளாக மாற்றம் அடையும் செயல் முறையானது செரிமானம் என்றழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

Question 2.
இரத்த ஓட்டமண்டலத்தின் முக்கியப் பாகங்களை விளக்குக.
விடை:
1. இதயம் : இதயம் ஒரு வெற்றிடமான, தசையாலான உறுப்பாகும். இது சற்றே கூம்பு வடிவமுடையது. இதனைச் சூழ்ந்துள்ள இரட்டை அடுக்கு சவ்வானது பெரிகார்டியம் என்றழைக்கப்படுகிறது. சவ்வுகளுக்கிடையில் உள்ள இடை வெளியானது பெரிகார்டியல் திரவத்தால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த பெரிகார்டியல் திரவம் இதயத்தை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது. இதயமானது இரண்டு நுரையீரல்களுக்கிடையில் மார்பறையின் உட்புறத்தில் (விலா) அமைந்துள்ளது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் 3
இதயமானது நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதயத்தின் மேலறைகள் இரண்டும் ஏட்ரியா (அ) ஆரிக்கிள்கள் என்றழைக்கப்படுகின்றன. தடித்த இரண்டு கீழறைகளும் வெண்ட்ரிக்கிள்கள் என்றழைக்கப்படுகின்றன. இதயத்தின் மேல் மற்றும் கீழ் அறைகளைப் பிரிக்கின்ற தசையாலான சுவர்கள் அல்லது தசைகள் ஆரிக்குலோவெண்ட்ரிக்குலார் இடைச்சுவர் எனப்படுகின்றன.

இதயத்தின் வலது பக்கம் ஆக்சிஜனற்ற (அசுத்த) இரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து பெற்று, ஆக்சிஜனைப் பெறுவதற்காக நுரையீரலுக்கு உந்தித் தள் ளு கி றது. இதயத்தின் இடது பக்கம் ஆக்சிஜனேற்றமடைத்த இரத்தத்தை நுரையீரலிலிருந்து பெற்று உடலின் பல்வேறு பாகங்களுக்கு உந்தித் தள்ளுகிறது.

2. இரத்தம் : இரத்தம் சத்துக்கள், ஆக்சிஜன், கழிவுகள், மற்றும் ஹார்மோன்களைக் கடத்துகிறது. மனித உடலில் இரத்தத்தின் அளவு 4-5 லிட்டராகும். இது நீரின் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்துகிறது. இரத்தமானது உடல் முழுவதும் இதயத்தால் உந்தித் தள்ளப்படுகிறது. இது திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இறுதியாக நுரையீரலை அடைந்து மீண்டும் ஆக்சிஜனைப் பெறுகிறது.

3. இரத்த நாளங்கள் – இரத்த நாளங்கள் தமனிகள் மற்றும் சிரைகளைக் கொண்டுள்ளன. தமனிகள் ஆக்சிஜனேற்ற இரத்தத்தையும் (நுரையீரல் தமனியைத் தவிர – இது இதயத்திலிருந்து ஆக்சிஜனற்ற இரத்தத்தை எடுத்துச் செல்கிறது), சிரைகள் ஆக்சிஜனற்ற இரத்தத்தையும் (நுரையீரல் சிரை தவிர – இது ஆக்சிஜனேற்ற இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு வருகிறது) எடுத்துச் செல்கின்றன.

Question 3.
மனித மூளையின் மூன்று முக்கியப் பாகங்களை விளக்கு.
விடை:
மனித மூளை மூன்று முக்கியப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முன்மூளை (பெருமூளை)
நடுமூளை (சிறுமூளை)
பின்மூளை (முகுளம்)

முன்மூனை (பெருமூளை) = முன்மூளையானது பெருமூளை, தலாமஸ் மற்றும் ஹைபோதலாமஸ் ஆகியவற்றால் ஆனது. இதுவே மூளையின் மிகப் பெரிய பகுதியாகும். இது மனித நினைவாற்றலின் மையமாகும். இது புத்திக்கூர்மை, கற்பனைத் திறன், காரணகாரியம் ஆகியவற்றிற்குக் காரணமாகிறது.

நடுமூளை (சிறுமூளை)
இது பெருமூளையின் பின்பகுதியில் அமைந்துள்ளது. இது உடலில் தசைகளின் இயக்கத்தை ஒருங்கிணைக்கிறது. இது உடலின் சமநிலையைப் பராமரிப்பதில் உதவுகிறது.

பின்மூளை (முகுளம்)
பின்மூளை பான்ஸ் மற்றும் முகுளத்தால் ஆனது. இது மூளைத்தண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது சுவாசம், இதயத் துடிப்பு மற்றும் பிற தன்னிச்சையற்ற தசைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, இது முக்கிய முடிச்சு’ என்றழைக்கப்படுகிறது: இது மூளையைத் தண்டுவடத்துடன் இணைக்கிறது.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் 4

Question 4.
கீழே உள்ள படத்தில் மூளையின் பாகங்களைக் குறிக்கவும்.
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் 5
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள் 4

VIII. உயர் சிந்தனை வினாக்கள்.

Question 1.
இருசக்கர வாகனம் ஓட்டுவது ஹெல்மட் அணிவது ஏன்?
விடை:
இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது அதில் உள்ளவர்களுக்கு தலைக்காயங்கள் அதிகம் ஏற்படுகின்றன. இந்தத் தலைக்காயங்களாலே பெருமளவு மரணம் ஏற்படுகிறது. எனவே தலைக்காயங்களைத் தவிர்க்கவும். மூளையைப் பாதுகாத்துக் கொள்ளவும். ஹெல்மட் அணிவது அவசியம் ஆகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 1 Chapter 1 உறுப்பு மண்டலங்கள்

Question 2.
துரித உணவை உண்பது நமது உடல் நலத்தைக் கெடுக்கும் நியாயப்படுத்து.
விடை:
துரித உணவில் பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து கிடையாது. இதனால் உடல் பருமன், மனச்சோர்வு, இதயநோய்கள், நீரிழிவு – 2ம் வகை, புற்றுநோய், விரைவில் மரணம் ஆகியவை ஏற்படுகின்றன. உடல்நலத்திற்கு துரித உணவு பெருங்கேடாக அமைவதால் இதைத் தவிர்ப்பது சிறந்தது.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 3 Chapter3 நாம் சுவாசிக்கும் காற்று Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

4th Science Guide நாம் சுவாசிக்கும் காற்று Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடு.

Question 1.
காற்று ஒரு ______________
அ. கலவை
ஆ. கூட்டு
இ. சிக்கல்
விடை:
அ. கலவை

Question 2.
காற்றில் ஆக்ஸிஜன் _____________ சதவீதம் உள்ளது.
அ. 21
ஆ. 78
இ. 1
விடை:
அ. 21

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

Question 3.
சில தாவரங்களின் வேர் முடிச்சுகளில் உள்ளது.
அ. ஆக்ஸிஜன்
ஆ. நைட்ரஜன்
இ. நியான்
விடை:
ஆ. நைட்ரஜன்

Question 4.
காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம்
அ. கழிவு
ஆ. புகை
இ. நீராவி
விடை:
ஆ. புகை

II. நான் யார்?

(மிதிவண்டி, மரம், கார்பன் டை ஆக்சைடு, காற்று)

Question 1.
நான் வாயுக்களின் கலவை.
விடை:
காற்று

Question 2.
நான் உங்களுக்கு ஆக்ஸிஜனை தருகிறேன்.
விடை:
மரம்

Question 3.
நான் எரிவதற்கு உதவி செய்பவன் அல்ல.
விடை:
கார்பன் டை ஆக்சைடு

Question 4.
என் மீது சவாரி செய்வத மூலம் மாசுபாட்டைக் குறைக்கலாம்
விடை:
மிதிவண்டி

III. சரியா தவறா என எழுதுக.

Question 1.
தாவரங்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் தேவை.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

Question 2.
காற்றில் ஆக்ஸிஜன் வாயு மட்டுமே உள்ளது.
விடை:
தவறு

Question 3.
பொருள்களை எரிக்க ஆர்கான் வாயு பயன்படுகிறது.
விடை:
தவறு

Question 4.
கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் உடல் நலத்தற்கு தீமையானது.
விடை:
சரி

IV. பொருத்துக.

1. நைட்ரஜன் – காற்று மாசுபாடு
2. பலூன் – புகை மற்றும் மூடுபனி
3. புகை – 78%
4. நுரையீரல் – காற்று புற்றுநோய்
விடை:
1. நைட்ரஜன் – 78%
2. பலூன் – காற்று
3. புகை – காற்று மாசுபாடு
4. நுரையீரல் – புகை மற்றும் மூடுபனி

V. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
காற்று என்பது பல ____________ கலவையாகும்.
விடை:
வாயுக்களின்

Question 2.
காற்றில் _____________ அளவு கார்பன் டை ஆக்ஸைடு உள்ளது.
விடை:
0.04%

Question 3.
நாம் ____________ வாயுவை உள்ளிழுக்கிறோம்
விடை:
ஆக்ஸிஜன்

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

Question 4.
_____________ வாயு தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
கார்பன் டை ஆக்சைடு

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
நமது அன்றாட வாழ்க்கையில் காற்றின் முக்கியத்துவம் என்ன ?
விடை:
மழையை உருவாக்குவதற்கும், பயிர்களின் வளர்ச்சிக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசிப்பதற்கும் காற்று அவசியமானது.

Question 2.
காற்றின் கூறுகள் யாவை?
விடை:
ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஆர்கான், கார்பன் டை ஆக்சைடு, நீராவி

Question 3.
காற்று மாசுபடுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:
உலக வெப்பமயமாதல், பனிப்புகை உருவாக்கம், அமில மழை உருவாக்கம், ஏரோசால் உருவாக்கம், ஓசோன் குறைதல்

Question 4.
ஆக்ஸிஜனின் பயன்கள் யாவை?
விடை:
சுவாசித்தல், எரிதல், உலோகங்களை உருக்கி இணைத்தல் ஆகியவை ஆக்ஸிஜனின் பயன்கள் ஆகும்.

VII. விரிவாக விடையளி.

Question 1.
காற்று மாசுபாட்டை குறைக்கும் வழிமுறைகள் யாவை?
விடை:

  1. காற்று ஆற்றல் ஆதாரத்தை (எ.கா. சூரிய ஆற்றல்) பயன்படுத்த வேண்டும்.
  2. தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் காற்றில் கலப்பதைத் தடுக்க காற்று வடிகட்டிகளை பயன்படுத்தவேண்டும்.
  3. மோட்டார் வாகனங்களின் சான்றிதழ் மற்றும் புகை உமிழ்வு சோதனையினை செயல்படுத்தப்பட வேண்டும்.
  4. கார்பன் டைஆக்சைடை உறிஞ்சுவதற்கு அதிகமான மரங்களை நட்வேண்டும்.

Question 2.
காற்று மாசுபடுவதால் ஏற்படும் நோய்கள் யாவை?
விடை:

  1. சுவாச நோய்கள். எ.கா. காய்ச்சல், காசநோய்
  2. இருதய இரத்தநாள பாதிப்பு
  3. சோர்வு, தலைவலி மற்றும் பதட்டம்
  4. நரம்பு மண்டல பாதிப்பு

Question 3.
கார்பன் டைஆக்சைடின் பயன்கள் எழுதுக.
விடை:

  1. ஒளிச்சேர்க்கையில் பயன்படுகிறது.
  2. தீ அணைப்பான்களில் பயன்படுத்தப்படுகிறது.
  3. குளிர்சாதனப் பெட்டிகளில் உலர் பனிக்கட்டியாகப்
    பயன்படுத்தப்படுகிறது.
  4. நெகிழி மற்றும் பலபடிமம் (Polymer) தயாரிக்கப் பயன்படுகிறது.

VIII. கூடுதல் வினா :

Question 1.
காற்று என்றால் என்ன?
விடை:
பல வாயுக்களின் கலவையே காற்று ஆகும்.

Question 2.
ஆக்சிஜன் ஏன் மிகவும் முக்கியமானது?
விடை:
ஆக்சிஜன் சுவாசத்திற்கு தேவை. எனவே இது மிகவும் முக்கியமானது.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

Question 3.
காற்றைக் கொண்டு இசைக்கப்படும் கருவிகள் யாவை?
விடை:
1. நாதஸ்வரம் 2. புல்லாங்குழல்

Question 4.
பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவினை நீண்ட நாள் பாதுகாக்கப் பயன்படுவது எது?
விடை:
நைட்ரஜன்

Question 5.
ஒரு மனிதன் உயிர்வாழத் தேவையான ஆக்ஸிஜனை பெறுவதற்கு எத்தனை மரங்கள் தேவை?
விடை:
மூன்று மரங்கள்

Question 6.
ஓசோன் அடுக்கினைப் பாதிப்பவை எவை?
விடை:
குளோரோ புளூரோ கார்பன்கள் (CFC) ஓசோன் அடுக்கினைப் பாதிக்கின்றன.

Question 7.
அமில மழை உண்டாகக் காரணமான இரண்டு வாயுக்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
சல்பர் டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள்

Question 8.
காற்றில் கார்பன் டை ஆக்சைடு உள்ள தைக் கண்டுபிடித்தவர் யார்?
விடை:
ஜோசப் பிளாக் என்ற ஸ்காட்லாந்து வேதியியலாளர், காற்றில் கார்பன் டை ஆக்சைடு இருப்பதைக் கண்டுபிடித்தவர்.

4th Science Guide நாம் சுவாசிக்கும் காற்று InText Questions and Answers

பக்கம் 85 செய்து மகிழ்வோம்

காலி தண்ணீர் பாட்டிலின் மூடியில் ஒரு சிறு துளையிட்டு, அம் மூடியால் பாட்டிலை இறுக்காக மூடவும். அம்மூடி உங்கள் முகத்தின் அருகே இருக்கும் வகையில் வைத்து பாட்டிலின் மையத்தில் உங்கள் கையால் அழுத்தவும். நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 1
விடை:
காற்று வேகமாக வெளிவருவதை உணரமுடியும்.

பக்கம் 89 முயல்வோம்

காற்று / வாயு உள்ள பொருள்களை (✓) குறியிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 2
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 3

பக்கம் 90 முயல்வோம்

நீராவியை வெளியிடுபவைகளை (✓) குறியிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 4
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 5

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

பக்கம் 90 நிரப்புவோம்

காற்றில் இருக்கும் வாயுக்களின் சதவீதத்தை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 7

பக்கம் 91 விவாதிப்போம்

சில பல்பொருளங்காடிகளில், நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பல வண்ணங்கள் கொண்ட பெரிய பலூன்கள் பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் நைட்ரஜன் வாயுவை நிரப்புவதற்கான காரணத்தை உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடுக.
விடை:
நைட்ரஜன், காற்றை விட சிறிது லேசான, மந்தமான வாயுவாகும். எனவே பலூன் அதிக உயரத்தில் பறக்கத் தேவையில்லாதபோது நைட்ரஜன் அதில் பயன்படுத்தப்படுகிறது.

பக்கம் 93 முயல்வோம்

பின்வருவனவற்றை வகைப்படுத்து.
(நாய், பூனை, தென்னை மரம், குரங்கு, கத்திரிக்காய் செடி, பப்பாளி செடி)
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 9

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று

பக்கம் 95 முயல்வோம்

புவி வெப்பமயமாதலுக்கு காரணமானவற்றை (✓) குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 10
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 3 நாம் சுவாசிக்கும் காற்று 11

பக்கம் 96 செயல்பாடு

காற்று மாசுபாட்டின் விளைவுகள் குறித்த விளம்பர முழக்கங்களை எழுதி காட்சிக்கு ஒட்டவும்.
1. _______________________
2. _______________________
3. _______________________
4. _______________________
விடை:
1. உலகனைத்திற்கும் ஒரு தாய் மடியாம் புவி இயற்கையை காப்போம்.
2. மரத்தின் சேவை நமக்கு தேவை.
3. இன்று காற்று மாசுபாடு நாளை நுரையீரல் அழிபாடு.
4. மரம் வளர்ப்போம் தூய காற்று சுவாசிப்போம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 3 Chapter2 விலங்குகளின் வாழ்க்கை Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

4th Science Guide விலங்குகளின் வாழ்க்கை Text Book Back Questions and Answers

I. நான் யார்?
(எறும்பு, பறவை, ஒட்டகம், வௌவால், சிங்கம்)

Question 1.
எனது குழு காலனிகள் என்று அழைக்கப்படுகிறது ______________ .
விடை:
எறும்பு

Question 2.
எங்களின் வீடு கூடாகும் _____________.
விடை:
பறவை

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Question 3.
மணலில் நடப்பதற்காக என் கால் பாதங்கள் அகலமாக உள்ளன. _____________.
விடை:
ஒட்டகம்

Question 4.
எனது பாதையில் உள்ள பொருள்களைக் கண்டுபிடிக்க மீயொலியைப் பயன்படுத்துவேன். _____________.
விடை:
வௌவால்

Question 5.
நான் பகலிலும், இரவிலும் சுறுசுறுப்பாக இருப்பேன். _____________.
விடை:
சிங்கம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இரவில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகளை என்று ____________ அழைப்பர்.
விடை:
இரவில் இரைதேடும் விலங்குகள்

Question 2.
______________ பெற்றோரின் கவனிப்புக்கு மிகவும் பிரபலமானது.
விடை:
கங்காரு

Question 3.
ஆந்தைகளின் குழு ______________ எனப்படும்.
விடை:
கூட்டம்

Question 4.
______________ தேன்கூட்டில் வாழ்கின்றன.
விடை:
தேனீக்கள்

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Question 5.
_______________ நம் இரத்ததை உறிஞ்சும்.
விடை:
கொசு

III. பொருத்துக :

1. இறக்கையற்ற பூச்சி – நுகர்தல்
2. யானை – செவுள்கள்
3. ஒட்டகச்சிவிங்கி – மந்தை
4. எறும்புகள் – நீண்ட கழுத்து
5. மீன் – வெள்ளிமீன்
விடை:
1. இறக்கையற்ற பூச்சி – வெள்ளிமீன்
2.. யானை – மந்தை
3. ஒட்டகச்சிவிங்கி – நீண்ட கழுத்து
4. எறும்புகள் – நீண்ட நுகர்தல்
5. மீன் – செவுள்கள்

IV. பின்வரும் கேள்விகளுக்கு சுருக்கமாக பதிலளிக்க.

Question 1.
பறவைகள் கூடுகளை ஏன் உருவாக்குகின்றன?
விடை:
பறவைகள் தம் இளம் பறவைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு கூடுகளை உருவாக்குகின்றன.

Question 2.
உடல் தகவமைப்பு என்றால் என்ன?
விடை:
வாழ்விடத்திற்கு ஏற்ப விலங்குகளின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் உடல் தகவமைப்பு எனப்படும்.

Question 3.
எதிரொலித்து இடமாக்கல் — வரையறு.
விடை:
வௌவால் இரவில் தங்கள் வழியைக் கண்டுபிடிப்பதற்கும், அவற்றின் பாதையில் உள்ள பொருள்களை தெரிந்து கொள்வதற்கும் மீயொலியை பயன்படுத்துகிறது. இதனையே நாம் எதிரொலித்து இடமாக்கல்’ என்கிறோம்.

Question 4.
எறும்புகள் அதிர்வுகளை எவ்வாறு உணர்கின்றன?
விடை:
எறும்புகள் கால்களினால் தரையின் அதிர்வுகளை உணர்கின்றன.

Question 5.
குழுக்களாக வாழும் மூன்று விலங்குகளை எழுதுக.
விடை:
யானைகள், மான்கள், வரிக்குதிரைகள்

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Question 6.
பறவைகள் ஏன்’V’ வடிவத்தில் பறக்கின்றன?
விடை:
காற்றின் எதிர்ப்பைக் குறைக்க பறவைகள் ‘V’ வடிவத்தில் பறக்கின்றன. பறவைகள் V’ வடிவத்தில் பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன.

V. பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க.

Question 1.
விலங்குகள் ஏன் குழுக்களாக வாழ்கின்றன?
விடை:
உணவைத் தேடவும், வாழிடங்களை தேர்ந்தெடுக்கவும், தமது இனத்தைப் பாதுகாக்கவும் மற்றும் பேணுவதற்கும் விலங்குகள் சேர்ந்து வாழ்கின்றன.

Question 2.
பூச்சியின் மூன்று முக்கிய உடல் பகுதிகளை விளக்குக.
விடை:
தலை : தலையில் காணக்கூடிய முக்கிய பாகங்கள் பெரிய கூட்டுக் கண்கள், உணர்வு நீட்சிகள் மற்றும் வாயுறுப்புகள் ஆகும்.

மார்புப் பகுதி : இது உடலின் நடுப் பகுதியை குறிப்பதாகும். இது மூன்று இணை கால்களையும் இரண்டு இணை இறக்கைகளையும் பெற்றுள்ளது.

வயிற்றுப் பகுதி : இது பூச்சிகளின் கடைசி உடற் பகுதியாகும். பெரும்பாலான பூச்சிகளின் வயிற்றுப் பகுதிகள் கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

Question 3.
இரவில் இரைதேடும் விலங்குகள் பற்றி எழுதுக.
விடை:
சில விலங்குகள் இரவில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. இத்தகைய விலங்குகளை இரவில் இரைதேடும் விலங்குகள் என்று அழைக்கின்றார்கள். (எ.கா. ஆந்தை, வௌவால்). இரவில் இரைதேடும் விலங்குகள் பொதுவாக மிகவும் சிறந்த செவிப்புலன், நுகர்தல் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கண்பார்வை ஆகியவற்றைப் பெற்றுள்ளன.

V. கூடுதல் வினா :

Question 1.
குழு நடத்தை என்றால் என்ன?
விடை:
விலங்குகள் அதே இனத்தை சார்ந்த பிற உயிரினங்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிட்டு வாழ்வது குழு நடத்தை எனப்படும்.

Question 2.
தகவமைப்பு என்பது என்ன?
விடை:
ஒரு விலங்கு தன் வாழ்விடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது தகவமைப்பு ஆகும்.

Question 3.
ஓமடீடியா என்றால் என்ன?
விடை:
பூச்சிகளின் கூட்டுக் கண்கள் சிறிய அலகுகளால் ஆனவை. அவை ஒமடீடியா எனப்படும்.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

Question 4.
பகலில் இரைதேடும் விலங்குகள் – குறிப்பு வரைக.
விடை:
பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் விலங்குகள் பகலில் இரைதேடும் விலங்குகள் எனப்படும் (எ-டு) கோழி.

Question 5.
பெற்றோரின் பராமரிப்பு என்று எது அழைக்கப்படுகிறது?
விடை:
பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் பெற்றோரின் பராமரிப்பு என்று அழைக்கப்படுகிறது.

Question 6.
தேனீக் குழுவில் உள்ள தேனீக்கள் எவை?
விடை:

  1. ராணித்தேனீ
  2. ட்ரோன்கள் எனப்படும் ஆண் தேனீக்கள்
  3. வேலைக்காரத் தேனீக்கள்

Question 7.
கூட்டமாக வாழும் விலங்குகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
விடை:
யானைகள், மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள்.

Question 8.
குளிரும்போது நாய் நடுங்குவது ஏன்?
விடை:
குளிரும்போது உடல் சூட்டை அதிகரிக்க நாய் நடுங்குகிறது.

Question 9.
பாம்பு சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை எதன் மூலம் உணர்கிறது?
விடை:
பாம்பு தன் நாக்கைக் கொண்டு சுற்றுப்புறங்களில் உள்ளவற்றை உணர்கிறது.

Question 10.
வௌவால் எத்தகைய ஒலியைப் பயன்படுத்துகிறது?
விடை:
வௌவால் மீயொலியைப் பயன்படுத்துகிறது.

4th Science Guide விலங்குகளின் வாழ்க்கை InText Questions and Answers

பக்கம் 79 முயல்வோம்

விலங்குகளை அவற்றின் குழு நடத்தையுடன் பொருத்துக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 2

முயல்வோம்

கீழ்க்கண்ட வினாக்களை படித்து ஏற்ற விடையை கண்டறிந்து எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 4

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை

பக்கம் 83 முயல்வோம்

விடுபட்ட வார்த்தையை நிரப்புக.
பட்டாம்பூச்சி மற்ற பூச்சிகளைப் போல மூன்று உடல் பாகங்களைக் கொண்டுள்ளது. அவை ______________ மற்றும் _____________ கொண்டுள்ளது. பட்டாம்பூச்சியின் மார்புப் பகுதியில் நான்கு ________________ மற்றும் ஆறு கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி அதன் இரண்டு ________________னால் நுகர்கின்றது.
விடை:
பட்டாம்பூச்சி மற்ற பூச்சிகளைப் போல மூன்று உடல் பாகங்களைக் கொண்டுள்ளது. அவை தலை, மார்புப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதி கொண்டுள்ளது. பட்டாம்பூச்சியின் மார்புப் பகுதியில் நான்கு இறக்கைகள் மற்றும் ஆறு கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி அதன் இரண்டு உணர் நீட்சிகளினால் நுகர்கின்றது.

பக்கம் 85 கண்டறிவோம்

இரவில் இயங்கும் விலங்குகளை வட்டமிடு.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 6

பக்கம் 86 நிரப்புவோம்

விலங்குகளை உற்றுநோக்கி அவற்றின் செயல்களை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 7
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை 8

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 4 மின்னோட்டவியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 4 மின்னோட்டவியல்

10th Science Guide மின்னோட்டவியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
(a) மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்
(b) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
(c) மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
(d) மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
விடை:
(b) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

Question 2.
மின்தடையின் SI அலகு (Qy-2019)
(a) மோ
(b) ஜூல்
(c) ஓம்
(d) ஓம் மீட்டர்
விடை:
(c) ஓம்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 3.
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?
(a) சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
(b) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
(c) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது
(d) மின்விளக்கு மின்னேற்றமடையும்.
விடை:
(b) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.

Question 4.
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு? (GMQP-2019)
(a) மின்தடை எண்
(b) மின் கடத்து திறன்
(c) மின் ஆற்றல்
(d) மின் திறன்
விடை:
(c) மின் ஆற்றல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின் வழியாக _____ பாய்ந்து செல்லாது.
விடை:
மின்னோட்டம்

Question 2.
மின்னழுத்த வேறுபாட்டிற்கும் மின்னோட்டத் திற்கும் இடையே உள்ள விகிதம் ______
விடை:
மின்தடை

Question 3.
வீடுகளில் ____ மின்சுற்று பயன்படுத்தப் படுகிறது.
விடை:
பக்க இணைப்பு

Question 4.
___ மற்றும் _____ ஆகியவைகளின் பெருக்கல் பலன் மின்திறன் ஆகும்.
விடை:
மின்னழுத்த வேறுபாடு, மின்னோட்டம்)

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 5.
LED என்பதன் விரிவாக்கம் _____.
விடை:
Light Emitting Diode

III. கீழ்கண்ட கூற்றுகள் சரியா? அல்லது தவறா? எனக் கூறு. தவறெனில் சரியானக் கூற்றை எழுதுக.

Question 1.
திறன் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.
விடை:
தவறு.
சரியான கூற்று: மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.

Question 2.
வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாக்க பயன்படுத்துவது மின் சுற்று உடைப்பி.
விடை:
சரி.

Question 3.
மின்னோட்டத்தின் SI அலகு கூலூம் ஆகும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் ஆகும்.

Question 4.
ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1000 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று : ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1 கிலோ வாட் மணிக்கு சமமாக இருக்கும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 5.
மூன்று மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது அவைகளின் தொகுபயன் மின் தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் குறைந்த மதிப்பைவிட குறைவாக இருக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும்போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர் மதிப்பைவிட அதிகமாக இருக்கும்.

IV. பொருத்துக. [PTA-5]

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 66
விடை:
i – உ,
ii – அ,
iii – ஆ,
iv – இ,
v – ஈ

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப் பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: உலோகப்பரப்புடைய மின்கருவிகளில் மூன்று காப்புறை பெற்ற கம்பிகள் பயன்படுத்தப்
பட்டிருக்கும்.
காரணம்: இந்த இணைப்பினால் அதனோடு இணைக்கப்படும் கம்பிகள் சூடாவது தடுக்கப்படும்.
விடை:
(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

Question 2.
கூற்று: மின்கலத்தோடு இருக்கும் ஒரு சிறிய மின்சுற்றில் மின்கலத்தின் நேர் மின்வாய் பெரும மின்னழுத்தத்தில் இருக்கும்.
காரணம்: உயர் மின்னழுத்தப் புள்ளியை நோக்கி மின்னோட்டம் பாய்ந்து செல்லும்.
விடை:
(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

Question 3.
கூற்று: LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட சிறந்தது.
காரணம் : LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட குறைவான மின் திறனை நுகரும்.
விடை:
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

VI. குறு வினாக்கள்

Question 1.
மின்னோட்டத்தின் அலகை வரையறு.
விடை:
மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A). ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்குவெட்டுப் பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் – பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது. எனவே
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 79

Question 2.
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
விடை:
R ∝ \(\frac{\mathrm{L}}{\mathrm{A}}\) எனில் A என்பது குறுக்கு வெட்டு பரப்பு. இது R உடன் எதிர்விகிதத் தொடர்புடையது. எனவே Aன் மதிப்பு அதிகமாக இருக்கும் போது மின்தடையின் மதிப்பு குறையும்.

Question 3.
மின்னிழை விளக்குகளில் டங்ஸ்டன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மின் உருகி இழையாக அதனை பயன்படுத்துவதில்லை. ஏன்?
விடை:

  1. மின் உருகு இழையானது குறைந்த உருகுநிலையை கொண்டபொருள்களால் செய்யப்படுகிறது.
  2. ஏனெனில் சுற்றில் அதிக மின்னோட்டம் பாயும் போது மின் உருகு இழை உருகி மின் சுற்று துண்டிக்கப்பட வேண்டும். ஆனால் டங்ஸ்டன் உயர் உருகுநிலையை உடையது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 4.
மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்தி செயல்படும் இரண்டு மின்சாதனங்கள் பெயரினை கூறு.
விடை:
மின்னோட்டத்தின் வெப்பநிலையை பயன்படுத்தி செயல்படும் இரு சாதனங்கள்:

  1. மின் சூடேற்றி (Electric heater)
  2. மின் அடுப்பு (Electric oven)

VII. சிறுவினாக்கள்

Question 1.
மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு வரையறு.
விடை:

  1. மின்னழுத்தம் : ஒரு புள்ளியில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர்மின்னூட்டத்தை முடிவில்லா தொலைவில் இருந்து மின்விசைக்கு எதிராக அப்புள்ளிக்கு கொண்டுவர செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது.
  2. மின்னழுத்த வேறுபாடு: இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு என்பது ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஓரலகு நேர் மின்னூட்டத்தை மின் விலக்கு விசைக்கு எதிராக நகர்த்த செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 70

Question 2.
வீட்டிலுள்ள மின்சுற்றில் புவித் தொடுப்புக் கம்பியின் பங்கு என்ன?
விடை:

  1. வீடுகளுக்கான மின்சுற்றில் பச்சை காப்புறை பெற்ற மூன்றாவது கம்பி ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த கம்பியை புவித் தொடுப்புக் கம்பி என்று அழைப்பார்கள்.
  2. புவித் தொடுப்புக் கம்பியின் மறுமுனையானது பூமியில் புதைக்கப்பட்ட உலோக குழாய் அல்லது உலோக தகடுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
  3. இந்த கம்பியானது மின்னோட்டத்திற்கு குறைந்த மின்தடையை தருகிறது. உலோகப் பரப்புடைய மின்சலவைப் பெட்டி, மேஜை மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டி போன்ற மின்கருவிகளில் சில நேரங்களில் மின்கசிவு ஏற்படும்.
  4. மின்கசிவினால் உருவாகும் ஆபத்தான மின்னோட்டம் புவித் தொடுப்புக் கம்பி வழியாக புவிக்கு செல்கிறது. எனவே, புவித்தொடுப்புக் கம்பி இணைப்பானது ஒரு பாதுகாப்பு அரணாக அமைந்து மின்கசிவினால் உண்டாகும் மின்னதிர்ச்சியைத் தவிர்க்கிறது.

Question 3.
ஓம் விதி வரையறு.
விடை:
மாறா வெப்பநிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின்
முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.
1 ∝ V. எனவே, \(\frac{1}{\mathrm{V}}\) = மாறிலி, இந்த மாறிலி மதிப்பு \(\frac{1}{\mathrm{R}}\) ஆகும்.
எனவே, 1 = (\(\frac{1}{\mathrm{R}}\))V
V = IR

Question 4.
மின் தடை எண் மற்றும் மின் கடத்து எண் ஆகியவற்றை வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 80

Question 5.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றில் எந்த வகை மின்சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன?
விடை:

  1. வீட்டிலுள்ள அனைத்து சுற்றுக்களும் பக்க இணைப்பு முறையில் இணைக்கப்படுகின்றன.
  2. ஒரு சுற்றில் தடை ஏற்பட்டாலும் அது மற்ற சுற்றுக்களை பாதிக்காது.
  3. பக்க இணைப்பின் மற்றொரு நன்மை என்னவெனில் அனைத்து மின் சாதனங்களும் சமமான மின்னழுத்தத்தை பெறும்.

VIII .நெடு வினாக்கள்

Question 1.
மூன்று மின் தடைகளை
(அ) தொடர் இணைப்பு
(ஆ) பக்க இணைப்பில் இணைக்கும் போது கிடைக்கும் தொகுபயன் மின்தடைக்கான கோவையை தகுந்த மின்சுற்றுப் படம் வரைந்து கணக்கிடு.
விடை:
(அ)

  1. மின் தடையாக்கிகள் தொடர் இணைப்பு: ஒரு மின்சுற்றில் தொடர் இணைப்பு என்பது மின்கூறுகளை ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து ஒரு மூடிய சுற்றை உருவாக்குவது ஆகும். தொடர் சுற்றில் மின்னோட்டமானது ஒரே ஒரு மூடிய சுற்றின் வழியாக பாயும்.
  2. இந்த மூடிய சுற்றில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் இணைப்பு தடைப்பட்டால் மின்சுற்றின் வழியாக மின்னோட்டம் பாயாது.
  3. எனவே சுற்றில் இணைக்கப் பட்டுள்ள மின் சாதனங்கள் வேலை செய்யாது. விழாக்களில் பயன்படுத்தப்படும் ஒளிரும் தொடர் விளக்குகள் தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும்.
  4. எனவே, மின் தடையாக்கிகள் தொடராக உள்ள போது ஒவ்வொரு மின் தடையாக்கியின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் பாயும்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 86
  5. இங்கு மூன்று மின்தடையாக்கிகள் R1, R2, மற்றும் R3, தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. படத்தில் I என்ற மின்னோட்டம் இந்த மின்தடையாக்கிகள் வழியே செல்கிறது. மின்தடையாக்கிகள் R1, R2, மற்றும் R3, யின் குறுக்கே உள்ள மின்னழுத்தங்கள் முறையே V1, V2, மற்றும் V3, ஆகும்.
  6. ஓம் விதியின்படி
    V1 = IR1 …. (1)
    V2 = IR2 …. (2)
    V3 = IR3
    ஒவ்வொரு மின்தடைக்கும் எதிராக உள்ள மின்னழுத்த வேறுபாட்டின் கூடுதலை V எனலாம்.
    V = V1 + V2 +V3
    சமன்பாடுகள் (1), (2), மற்றும் (2)-யிலிருந்து
    V = IR1 + IR2 + IR3 …. (4)
  7. தொகுபயன் மின்தடை என்பது அனைத்து மின்தடையாக்கி களுக்கு பதிலாக அதே அளவு மின்னோட்டம் சுற்றின் வழியே செல்ல அனுமதிக்கும் ஒரு மின் தடையாக்கியின் மின்தடை ஆகும். இந்த தொகுபயன் மின்தடை Rs எனப்படும். எனவே,
    V = IRS ….. (5)
    சமன்பாடுகள் (4) மற்றும் (5), லிருந்து,
    IRS = I[R1 + R2 + R3]
    எனவே, RS = R1 + R2 + R3
  8. எனவே பல மின்தடையாக்கிகள் தொடர் இணைப்பில் இணைக்கப் படும் போது தொகுபயன் மின்தடை தனித்தனி மின் தடையாக்கிகளின் மின் தடைகளின் கூடுதலுக்கு சமம் என புரிந்துக் கொள்ளலாம். சம மதிப்பு உடைய ‘n’ மின்தடைகள் தொடரிணைபில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை ‘nR’ ஆகும். அதாவது, RS = nR மின்தடைகள்தொடரிணைப்பில் இணைக்கப்படும் போதுதொகுபயன்மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் உயர் மதிப்பை விட அதிகமாக இருக்கும்.

(ஆ) பக்க இணைப்பு :

  1. பக்க இணைப்பு மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டமூடிய சுற்று இருக்கும்.
  2. ஒரு மூடிய சுற்று திறந்திருந்தாலும் மற்ற மூடிய சுற்றுக்களின் வழியாக மின்னோட்டம் பாயும். நமது மின்தடையாக்கிகள் பக்க இணைப்பு வீடுகளில் உள்ள மின்கம்பியிடல் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 68
  3. மூன்று மின்தடையாக்கிகள் R1,R2 மற்றும் R3 யானது A மற்றும் B புள்ளிகளுக்கிடையே பக்க இணைப்பில் இணைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு மின்தடையாக்கிக்கும் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடானது சமமாக இருக்கும். இது A மற்றும் B புள்ளிகளுக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு சமமாக இருக்கும்.
  4. ஒரு வோல்ட் மீட்டர் மூலமாக இந்த மின்னழுத்த வேறுபாடு அளவிடப்படுகிறது. புள்ளி A யை அடையும் மின்னோட்டம் | ஆனது I1, I2, மற்றும் I3, என பிரிந்து முறையே R1, R2, மற்றும் R3 வழியே செல்கிறது.
  5. ஓம் விதியின்படி
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 77
    மின் சுற்றிலுள்ள மொத்த மின்னோட்டம்
    I = I1 + I2 + I3
    சமன்பாடுகள் (6), (7) மற்றும் (8)-லிருந்து
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 78
    மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடை Rp. என்க. எனவே
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 79.1
  6. எனவே பல மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப் படும் போது தனித்தனி மின்தடையாக்கிகளின் மின் தடையின் தலைகீழிகளின் கூடுதல் தொகுப்யன் மின்தடையின் தலைகீழிகளுக்கு சமம். சம மதிப்புடைய ‘n’ மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்பப்படும் போது அதன் தொகுபயன் மின்தடை \(\frac{\mathrm{R}}{\mathrm{n}}\) ஆகும்.
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 82
  7. மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது தொகுபயன் மின்தடையானது தனித்தனியான மின்தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.

Question 2.
(அ) மின்னோட்டம் என்றால் என்ன? (PTA-1)
ஆ) மின்னோட்டத்தின் அலகை வரையறு. [PTA-1]
இ) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிடமுடியும்? அதனை ஒரு மின்சுற்றில் – எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்? [PTA-1 &5]
விடை:
(அ)

  1. மின்னோட்டம் i என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது. கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது.
  2. அதாவது ஓரலகு நேரத்தில் கடத்தியின் ஒரு குறுக்கு வெட்டுப் பகுதியை கடந்து செல்லும் மின்னூட்டங்களின் அளவு மின்னோட்டமாகும்.
  3. ஒரு கடத்தியின் குறுக்கு வெட்டுப் பகுதி வழியாக Q அளவு மின்னூட்டம் ‘t’ காலத்தில் கடந்து சென்றால் அதில் பாயும் மின்னோட்டமானது I = \(\frac{\mathrm{Q}}{t}\)
    Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 87

(ஆ) மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A). ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில்
கடத்தியின் எதாவது ஒரு குறுக்குவெட்டுப் பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது. எனவே,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 89
(இ) மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி அம்மீட்டர். ஒரு அம்மீட்டரானது மின்சுற்றில் எப்பொழுதும் தொடரிணைப்பில் இணைக்கப்பட வேண்டும். அம்மீட்டர் மிகக் குறைந்த மின்தடையை உடையது. அதனை பக்க இணைப்பில் இணைத்தால் கருவி பழுதுபடும். அம்மீட்டரை இணைக்கும் மாதிரி சுற்றுப்படம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 89.2

Question 3.
அ) ஜூல் வெப்ப விதி வரையறு.
ஆ) நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த உலோகக் கலவை மின்சார வெப்பமேற்றும் சாதனமாக
பயன்படுத்தப்படுவது ஏன்?
இ) ஒரு மின் உருகு இழை எவ்வாறு மின்சாதனங்களை பாதுகாக்கிறது?
விடை:
(அ) (i) R மின்தடையுள்ள மின்தடை யாக்கியின் வழியாக பாயும் மின்னோட்டம் I என்க. மின்தடையாக்கியின் முனை களுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு V என்க. t விநாடிகளில் மின்தடை வழியே பாயும் மின்னூட்டம் Q என்க.

(ii) Q மின்னூட்டத்தை மின்தடை யாக்கியின் முனை களுக்கிடையே உள்ள V மின்னழுத்த வேறுபாட்டில் இயக்க செய்யப்படும் வேலையானது VQ ஆகும். இந்த வேலை மின்தடையில் வெப்ப ஆற்றலாக மாறி வெளிப்படுகிறது. எனவே உருவாக்கப்பட்ட வெப்பம்
H = W = VQ
Q = It. என நமக்கு தெரியும்.
H = VIt ……. (1)

(iii) ஓம் விதியிலிருந்து, V= IR. எனவே H = I2 Rt ….. (2)
இது ஜூல் வெப்ப விதி எனப்படும். இவ்விதியின் படி ஒரு மின்தடையில் உருவாகும் வெப்பமானது

  • அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் இருமடிக்கு நேர்விகிதத்திலும்
  • மின்தடைக்கு நேர் விகிதத்திலும்
  • மின்னோட்டம் பாயும் காலத்திற்கு நேர் விகிதத்திலும் இருக்கும்.

(ஆ) மின் சலவைப் பெட்டி, ரொட்டி சுடும் அடுப்பு, மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களில் மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் வெப்பத்தினை உண்டாக்க நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த நிக்ரோம் என்ற உலோக கலவையினால் ஆன சுருள் வெப்பமேற்றும் சாதனமாக பயன்படுகிறது. ஏனெனில் இப்பொருள்

  1. அதிக மின்தடையை கொண்டது,
  2. அதிக உருகுநிலை கொண்டது,
  3. விரைவில் ஆக்சிகரணத்திற்கு உள்ளாகாது.

(இ) மின் உருகு இழை மின் சுற்றோடு தொடராக இணைக்கப்படும். சுற்றில் அதிக மின்னோட்டம் பாயும் போது ஜூல் வெப்பவிளைவு காரணமாக மின் உருகு இழை உருகி மின்சுற்று துண்டிக்கப்படுகிறது. எனவே, மின்சுற்றும், மின்சாதனங்களும் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கப் படுகிறது. மின் உருகு இழையானது குறைந்த உருகுநிலையை கொண்ட பொருள்களால் செய்யப்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 4.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றை விளக்கவும். (Sep.20).
விடை:
(i) மின் நிலையங்களிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரமானது வீடுகள் மற்றும் தொழிற் சாலைகளுக்கு பூமிக்கடியில் பதிக்கப்பட்ட கம்பிவடங்கள் அல்லது மின்கம்பங்களின் மீது வரும் கம்பிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

(ii) நமது வீடுகளில் மின்னியல் வல்லுநர்களால் உருவாக்கப்படும் மின்சுற்றுக்கள் மூலமாக மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மின்மாற்றி போன்ற மின் பகிர்மான செய்யும் இடத்திலிருந்து மின்னோட்டமானது முதன்மைமின்னளவி பெட்டிக்கு கொண்டுவரப்பப்படுகிறது. முதன்மை மின்னளவிப் பெட்டியில் இரண்டு முக்கிய பாகங்கள் இருக்கும்.
(i) மின் உருகு இழை
(ii) மின்னளவிப் பெட்டி.
(iii) மின்னளவிப் பெட்டி எவ்வளவு மின்னாற்றல் பயன்படுத்தபடுகிறது என்பதனை அளவிடுகிறது. மின் உருகு இழை என்பது ஒரு சிறிய கம்பி இழை அல்லது ஒரு சிறிய மின்சுற்று உடைப்பி (MCB). வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாப்பதே மின் உருகு இழை அல்லது மின்சுற்று உடைப்பியின் பணி ஆகும்.

(iv) மின்சுற்று உடைப்பி என்பது தானாகவோ அல்லது கைமுறை உள்ளீடு மூலமாகவோ செயல்படுத்தக் கூடிய ஒரு சாவி ஆகும். இந்த சாவியைச் சுற்றி சிறிய கம்பிச் சுருள் சுற்றியிருக்கும். மின் சுற்றில் அதிகப்படியாக மின்னோட்டம் செல்லும் போது சுற்றியுள்ள கம்பி சுருளானது மின்காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது. எனவே, மின் சுற்று உடைக்கப்பட்டு மின் சாதனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

(v) வீடுகளுக்கு வரும் மின்னோட்டமானது இரண்டு விதமான மின் காப்பிடப்பப்பட்ட கம்பிகள் மூலமாக கொண்டு வரப்படுகின்றன. இந்த இரண்டு கம்பிகளில் ஒன்று சிவப்பு காப்புறை கொண்ட கம்பி. அது மின்னோட்ட கம்பி எனப்படும். கறுப்பு காப்புறை உள்ள மற்றொரு கம்பி நடுநிலை கம்பி எனப்படும்.

(vi) நமது வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சாரமானது 220 வோல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட ஒரு மாறு திசை மின்னோட்டமாகும். இவ்விரு கம்பிகளும் வாட்-மணி மீட்டருடன் (மின்னளவிப் பெட்டி) இணைக்கப்பட்டுள்ளன. மின்னோட்ட கம்பி மின்உருகு இழை வழியாக மின்னளவிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நடுநிலை கம்பி நேரடியாக மின்னளவிப் பெட்டியோடு இணைக்கப்பட்டுள்ளது.

(vii) மின்னளவிப் பெட்டியிலிருந்து வரும் கம்பியானது முதன்மைச் சாவியுடன் இணைக்கப் பட்டுள்ளது. இந்த சாவியானது தேவைப்படும் போது மின்னோட்டத்தை நிறுத்துவதற்கு பயன்படுகிறது.

(viii) முதன்மை சுற்றியிலிருந்து வரும் மின்னோட்ட கம்பிகள் வீட்டினுள் அமைக்கப்பட்டிருக்கும் தனித் தனிச் சுற்றுகளுக்குத் திறனை வழங்கும். இரு வகையான மின்சுற்றுகள் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மின் பல்புகள், மின் விசிறிகள் அடங்கிய ஒரு சுற்றுக்கு 5 A அளவிலான குறைந்த திறன் வழங்கும் சுற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

(ix) குளிர்சாதன பெட்டிகள், நீர் சூடேற்றிகள், மின் சலவை பெட்டி, ரொட்டி சுடும் அடுப்பு, மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் அடங்கிய மின்திறன் சுற்றுகளுக்கு 15A அளவிலான அதிக திறன் வழங்கும் சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.

(x) வீட்டிலுள்ள அனைத்து சுற்றுக்களும் பக்க இணைப்பு முறையில் இணைக்கப்படுவதால் ஒரு சுற்றில் தடை ஏற்பட்டாலும் அது மற்ற சுற்றுக்களை பாதிக்காது. பக்க இணைப்பின் மற்றொரு நன்மை என்னவெனில் அனைத்து மின்சாதனங்களும் சமமான மின்னழுத்தத்தை பெறும்.

Question 5.
அ) சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியை விட LEDதொலைக்காட்சிப் பெட்டியினால் ஏற்படும் நன்மைகள் யாவை? (PTA-6)
ஆ) LED விளக்கின் நன்மைகளை பட்டியலிடுக. [PTA-1]
விடை:
(அ) LED தொலைகாட்சியின் நன்மைகள்

  1. இதன் வெளியீடு பிரகாசமாக இருக்கும்.
  2. இது மெல்லிய அளவுடையதாக இருக்கும்.
  3. குறைவான சக்தியை பயன்படுத்துகிறது மற்றும் குறைவான ஆற்றலை நுகர்கிறது.
  4. இதன் ஆயுட்காலம் அதிகம்.
  5. இது மிகவும் நம்பகத்தன்மை உடையது.

(ஆ)LED விளக்கின் நன்மைகள்

  1. LED-ல் மின் இழையில்லாத காரணத்தினால் வெப்ப ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை. மின் இழை மின் விளக்கைவிட குறைந்த வெப்பநிலையைக் கொண்டிருக்கும்.
  2. ஒளிரும் மின் இழை பல்புடன் ஒப்பிடும் போது இது குறைந்த திறனை நுகரும்.
  3. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
  4. பல நிறங்களில் வெளியீட்டினை பெற்றுக் கொள்ள சாத்தியமாகிறது.
  5. மலிவு விலை மற்றும் ஆற்றல் சிக்கனம் உடையது.
  6. பாதரசம் மற்றும் பிற நச்சுப் பொருள்கள் பயன்படுத்தப்படு வதில்லை.
  7.  மின்னாற்றல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழி களில் ஒன்று அதிக எண்ணிக்கையிலான LED மின் விளக்குகளை பயன்படுத்துதல் ஆகும்.

IX. கணக்குகள்

Question 1.
ஒரு மின் சலவைப் பெட்டி அதிகபட்ச வெப்பத்தை வெளிவிடும் போது 420 வாட் மின்திறனை நுகர்கிறது. குறைந்தபட்ச வெப்பத்தை வெளிவிடும் போது 180 வாட் மின் திறனை நுகர்கிறது. அதற்கு 220 , வோல்ட் மின்னழுத்தம் கொடுக்கப்பட்டால் இரு நிலைகளிலும் அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவுகளை கணக்கிடு.
விடை:
கொடுக்கப்பட்டவை: மின்சலவைப் பெட்டி நுகரும் மின்திறன் = 420 வாட்
மின்னழுத்த வேறுபாடு
v = 220V
கண்டறிய:
மின்னோட்டம் I = ? ஒவ்வொரு நிகழ்விலும்
தீர்வு :
P = VI.
∴ I = \(\frac{\mathrm{P}}{\mathrm{V}}\) = \(\frac{\mathrm{420}}{\mathrm{220}}\) = \(\frac{21}{11}\)
அதிகபட்ச வெப்பத்தை வெளிவிடும்போது மின்னோட்டம் I = 1.909 A
குறைந்தபட்ச வெப்பத்தை வெளிவிடும்போது
P = 180 வாட்
கொடுக்கப்பட்ட மின்னழுத்தம் = 220 V
I = \(\frac{P}{V}\)
குறைந்தபட்ச வெப்பத்தை வெளிவிடும் போது, மின்னோட்டம் –
= \(\frac{180}{220}\) = \(\frac{99}{11}\) = 0.818 A

Question 2.
100 வாட் மின் திறனுள்ள ஒரு மின் விளக்கு தினமும் 5 மணிநேரம் பயன்படுத்தப்படுகிறது. இது போல நான்கு 60 வாட் மின் விளக்கு தினமும் 5 மணி ! நேரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னழுத்த ஆற்றலை கிலோ வாட் மணி அலகில் கணக்கிடு.
விடை:
கொடுக்கப்பட்டவை:
ஒரு 100 வாட் மின்விளக்கினால் பயன்படுத்தப்படும் மின்னோட்டம் = 100 வாட் காலம் = 5 மணிநேரம் (தினசரி).
ஜனவரி மாதத்தில் நுகர்வு = 31 நாட்கள் நான்கு 60 வாட் மின்விளக்குகளின் மின்னோட்டம் பயன்பாடு = தினசரி 5 மணிநேரம். கண்டறிய :
ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னழுத்த ஆற்றல் =? (கிலோ வாட் மணி அலகில்)
தீர்வு :
100 வாட் மின்விளக்கால் நுகரப்பட்ட ஆற்றல்
= பல்பின் திறன் × காலம்
= 100 × 31 × 5 = 15500
100 வாட் மின்விளக்கால் பயன்படுத்தப்பட்ட
ஆற்றல் = 15.5 கிலோவாட் மணி
60 வாட் மின்விளக்கு நான்கால் நுகரப்பட்ட ஆற்றல் = 4 × 60 × 5 × 31
= 37,200 கிலோவாட் மணி
நான்கு 60 w மின்விளக்கு
= 37.2 கிலோ வாட் மணி
ஜனவரியில் நுகரப்பட்ட மொத்த ஆற்றல்
= 15.5 + 37.2
= 52.7 கிலோ வாட் மணி

Question 3.
மூன்று வோல்ட் மின்னழுத்தம் மற்றும் 600 மில்லி ஆம்பியர் மின்னோட்டமும் பாயும் ஒரு டார்ச் விளக்கினால் உருவாகும்
அ) மின் திறன்
ஆ) மின்தடை மற்றும்
இ) நான்கு மணிநேரத்தில் நுகரப்படும் மின்னாற்றல் ஆகியவைகளை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
டார்ச் விளக்கின் மின்னழுத்தம் V = 3V
மின்னோட்டம் I = 600 மில்லி ஆம்பியர்
= 600 × 10-3 = 0.6A
கண்ட றிய:
அ) மின்திறன் P = ?
ஆ) மின்த டை R = ?
இ) நான்கு மணி நேரத்தில் நுகரப்படும் மின்னாற்றல் = ?
தீர்வு:
அ) P = VI = 3 × 0.6 = 1.8 வாட்
v = IR ∴ R = \(\frac{\mathrm{V}}{\mathrm{I}}\)
ஆ) மின்தடை R = \(\frac{\mathrm{R}}{\mathrm{0.6}}\) = 5Ω
இ) 4 மணிநேரத்தில் நுகரப்படும் மின்னாற்றல்
= பல்பின் திறன் × காலம்
= 1.8 × 4
ஆற்றல் E = 7.2 வாட் மணி

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

Question 4.
R மின்தடையுள்ள ஒரு கம்பியானது ஐந்து சம நீளமுடைய கம்பிகளாக வெட்டப் படுகிறது.
அ) வெட்டப்பட்ட கம்பியின் மின்தடை வெட்டப்படாத அசல் கம்பியின் மின் தடையோடு ஒப்பிடுகையில் எவ்வாறு மாற்றமடைகிறது?
ஆ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் பக்க இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன்மின்தடையை கணக்கிடுக. இ) வெட்டப்பட்ட ஐந்து துண்டு கம்பிகளையும் தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பில் இணைக்கும் போது கிடைக்கும் தொகுபயன் மின் தடைகளின் விகிதத்தை கணக்கிடுக.
விடை:
கொடுக்கப்பட்டவை:
ஒரு கம்பியின் மின்தடை = R
கம்பியின் நீளம் =5 சமநீளமுள்ள துண்டுகள்
தீர்வு :
அ) வெட்டப்பட்ட கம்பிகள் ஒவ்வொன்றும் சமமான நீளம் எனில் ஒவ்வொரு துண்டிற்குமான மின்தடை = \(\frac{\mathrm{R}}{5}\)
ஆ) எல்லா துண்டுகளும் பக்க இணைப்பில் இணைக்கும்போது தொகுபயன் மின்தடை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 866

இ) தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பில் இணைக்கும் போது தொகுபயன் மின்தடை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 88
Rs மற்றும் Rp களின் விகிதம் = 25 : 1
Rs : Rp = 25 : 1

X. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
இரு மின் தடையாக்கிகளை பக்க இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை 20. தொடரிணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை 92. இரு மின்
தடைகளின் மதிப்புக்களையும் கணக்கிடு. விடை: பக்க இணைப்பில் தொகுபயன்மின்தடை
Rp = 2Ω
தொடர் இணைப்பில் தொகுபயன் மின்தடை
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 82.3
R1 = 3Ω அல்லது 6Ω
R1 = 6Ω எனில், R2 = (9 – 3) = 6Ω
R1 = 6Ω எனில், R2 = (9 – 6) = 3Ω

Question 2.
ஐந்து ஆம்பியர் மின்னோட்டம் பாயும் ஒரு மின்சுற்றில் ஒரு வினாடி நேரத்தில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடு. (GMQP-2019)
விடை:
கொடுக்கப்பட்டவை:
மின்னோட்டம் = 5 ஆம்பியர்
கண்டறிய:
ஒருவினாடி நேரத்தில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை n = ?
தீர்வு:
I = \(\frac{\mathrm{Q}}{t}\)
ஒரு எலக்ட்ரானின் மின்சுமை
e = 1.6 × 10-19 கூலூம்
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 90
1 கூலூம் = 6.25 × 1018 எலக்ட்ரான்கள்
1 ஆம்பியர் மின்னோட்டத்தில் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
= 6.25 × 1018 எலக்ட்ரான்கள்
∴ 5 ஆம்பியர் மின்னோட்டத்தில்
= 5 × 6.25 × 1018 எலக்ட்ரான்கள்
= 3.125 × 1019 எலக்ட்ரான்கள்
மாற்றுமுறையில் தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 92
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
n = 3.125 × 1019 எலக்ட்ரான்கள்

Question 3.
10Ω மின்தடையுள்ள ஒரு கம்பித் துண்டின் நீளத்தை அதன் அசல் நீளத்திலிருந்து மூன்று மடங்கு நீட்டித்தால் அதன் புதிய மின் தடையின் மதிப்பு எவ்வளவு?
விடை:
கொடுக்கப்பட்டவை:
கம்பியின் மின்தடை R = 10Ω
நீளம் 3 மடங்கு நீட்டப்படும்போது = 3L(அசல் நீளத்திலிருந்து)
கண்டறிய: புதிய மின்தடை = ?
தீர்வு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 87.5
நீளமானது மூன்று மடங்கு நீட்டப்படும்போது
பரப்பு 3 மடங்கிற்கு குறைக்கப்படும் \(\left(\frac{\mathrm{A}}{3}\right)\)
புதிய நீளம் = 3L
புதிய பரப்பு = \(\frac{\mathrm{A}}{3}\)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 99

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் AC முனைகளுக்கிடையே உள்ள தொகுபயன் மின் தடையைக் காண்க. (PTA-2)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 89.3
இரண்டு 5Ω மின்தடைகள் தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டு பின், 10Ω மின்தடையுடன் இணையாக இணைக்கப்பட்டுள்ளது.
Rs = 5 + 5 = 10
Rp = \(\frac{1}{10}\) + \(\frac{1}{10}\) = \(\frac{2}{10}\)
Rp = 5 ஓம்.

Question 2.
5 ஓம் மின்தடையுள்ள ஒரு கம்பியானது ஐந்து சம பாகங்களாக வெட்டப் படுகிறது. வெட்டப்பட்ட ஐந்து கம்பித் துண்டுகளையும் பக்க இணைப்பில் இணைக்கும்போது அவற்றின் தொகுபயன் மின்தடையினைக் கணக்கிடுக. (PTA-3)
விடை:
ஒரு கம்பியின் மின்தடை = 5Ω
கம்பி 5 பாகங்களாக வெட்டப்பட்ட பிறகு, ஒவ்வொரு துண்டு கம்பியின் மின்தடை,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 90.2
தொகுபயன் மின்தடை Rp = 0.2Ω

Question 3.
மின்னாற்றல் நுகர்வின் அலகினைவரையறு. (PTA-5)
விடை:
மின்னாற்றல் நுகர்வின் SI அலகு வாட் விநாடி. இதன் பெரிய அலகு கிலோ வாட் மணி (kWh).
ஒரு கிலோவாட் மணி என்பது ஒரு யூனிட் மின்னாற்றல் ஆகும். ஒரு கிலோவாட் மணி என்பது 1000 வாட் மின்சாரம் ஒரு மணி
நேரத்தில் நுகரப்படுவதாகும்.

Question 4.
தூயநீர் மின்சாரத்தை கடத்துமா? உனது பதிலை நியாயப்படுத்து. (PTA-5)
விடை:
தூய நீர் மின்சாரத்தை கடத்துவதில்லை. இதில் அயனிகள் இல்லாததே இதற்குக் காரணம். நாம் ஒரு சிட்டிகை உப்பை , சேர்க்கும்போது அது மின்சாரத்தை கடத்த முடியும்.

4 மதிப்பெண்கள்

1. பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 92.6
விடை:
அ) (iii)
ஆ) (i)
இ) (iv)
ஈ) (ii)

Question 2.
5Ω மின்தடை கொண்ட மின்சூடேற்றி ஒரு மின்மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6A மின்னோட்டமானது, இந்த சூடேற்றி வழியாகப் பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவை காண்க. (PTA-4)
விடை:
மின்தடை R = 5Ω
மின்னோட்டம் I = 6A
நேரம் t = 5 நிமிடங்கள்
= 5 × 60 = 300 நிமிடங்கள்
5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவு
H = I2Rt
H = (6)2 × 5 × 300
ஆகவே, H = 54000 J

4 மதிப்பெண்கள்

Question 1.
ஏதாவது ஓர் ஆங்கில எழுத்து மற்றும் ஓர் எண்ணை , ஏழு துண்டு காட்சிப் பதிவில் வெளிப்படுத்துக. (7 Marks) (PTA-3)
விடை:
(i) ஓர் ஆங்கில எழுத்து: a, f, e, d ஆகிய 4 உமிழ் டையோடுகளுக்கு மின்னழுத்தம் கொடுக்கும்போது, கீழ்க்கண்டவாறு ‘C’ என்ற ஆங்கில எழுத்து காட்சியளிக்கும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 90.9
(ii)ஓர் எண் : a, b, c, d, e, f மற்றும் g ஆகிய ஏழு உமிழ்டையோடுகளுக்கும், மின்னழுத்தம் கொடுக்கும்போது, துண்டுகள் ஒளியினை உமிழ்ந்து, 8 என்ற எண் காட்சியளிக்கும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 93

7 மதிப்பெண்கள்

Question 1.
படத்தில் காட்டியுள்ளவாறு 6 வோல்ட் மின் கலத்தோடு 20 ஓம் மின்தடை கொண்ட மின்விளக்கு மற்றும் 4 ஓம் மின்தடை கொண்ட மின்தடையாக்கி தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. எனில், (PTA-6)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல் 94
(அ) தொடரிணைப்பில் மொத்த மின்தடையைக் காண்க.
(ஆ) மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தினைக் காண்க.
(இ) மின்தடையாக்கிகள் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டினைக் காண்க.
விடை:
a) தொடரிணைப்பில் மொத்த மின்தடை
Rs = R1 + R2
= 20Ω + 4Ω = 24Ω

b) மின்சுற்றில் பாயும் மின்னோட்டம் ஓம் விதியின்படி,
V = IR
இங்கு, V = 6V,
மொத்த மின்தடை = 24Ω
I = \(\frac{\mathrm{V}}{\mathrm{R}}\) = \(\frac{\mathrm{6}}{\mathrm{24}}\) = 0.25 A

c) மின்தடையாக்கிகள் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு = IR
I = 0.25 A
R = \(\frac{\mathrm{24}}{\mathrm{6}}\) = 4Ω
IR = 0.25 × 4 = 1V.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 4 மின்னோட்டவியல்

அரசு தேர்வு வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
5Ω மின்தடை கொண்ட மின் சூடேற்றி ஒரு மின் மூலத்துடன் இணைக்கப்படுகிறது. 6 A மின்னோட்டமானது இந்த சூடேற்றி வழியாக பாய்கிறது எனில் 5 நிமிடங்களில் உருவாகும் வெப்பத்தின் அளவு: (Sep.20)
(அ) 48000
(ஆ) 54000
(இ) 45000
(ஈ) 84000
விடை:
(ஆ) 54000 J

2 மதிப்பெண்கள்

Question 1.
30 வோல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட ஒரு கடத்தியின் முனைகளுக்கு இடையே 2 ஆம்பியர் மின்னோட்டம் செல்கிறது எனில் அதன் மின்தடையைக் காண்க. [Qy-2019]
விடை:
கடத்தியின் முனைகளுக்கு இடையே பாயும்
மின்னோட்டம் = 2 A
மின்னழுத்த வேறுபாடு
V = 30V
ஓம் விதியின் படி: R = \(\frac{\mathrm{V}}{\mathrm{I}}\)
R = \(\frac{\mathrm{30}}{\mathrm{2}}\) = 15Ω

Question 2.
10 கூலும் மின்னூட்டம் 5 விநாடி நேரம் ஒரு மின் விளக்கின் வழியாக பாய்கிறது எனில் அதன் வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவு என்ன? (GMQP-2019)
விடை:
மின்னூட்டம் Q = 10 கூலும்.
காலம் t = 5 விநாடி
எனவே, மின்னோட்டம்
I = \(\frac{\mathrm{Q}}{\mathrm{t}}\) = \(\frac{\mathrm{10}}{\mathrm{5}}\) = 2A

Question 3.
ஒரு மின்சுற்றில் பொருத்தப்பட்டுள்ள 100W, 200V மின்விளக்கின் பாயும் மின்னோட்டம் மற்றும் மின் தடையை கணக்கிடு. (Qy-2019)
விடை:
மின்திறன் P = 100W
மின் அழுத்தம் V = 200V
மின்திறன் P = V I
∴ மின்னோட்டம், I = \(\frac{\mathrm{P}}{\mathrm{V}}\) = \(\frac{\mathrm{100}}{\mathrm{20}}\) = 0.5A
மின்தடை, R = \(\frac{\mathrm{V}}{\mathrm{I}}\) = \(\frac{\mathrm{200}}{\mathrm{0.5}}\) = 400Ω

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

4th Science Guide பசுமை சுற்றுச்சூழல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கழிவு மேலாண்மை செயல்களில் முதல் படி எது?
அ. கழிவுகளை அகற்றுவது
ஆ. கழிவுகளை பிரித்தல்
இ. கழிவு சேகரிப்பு
விடை:
ஆ. கழிவுகளை பிரித்தல்

Question 2.
மக்காத அல்லது உயிரி சிதைவு அடையாத கழிவு எது?
அ. காகிதக் குவளை
ஆ. நெகிழித்தட்டு
இ. தேங்காய் ஓடு
விடை:
ஆ. நெகிழித்தட்டு

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 3.
______________ அதிக குப்பைகளை ஈர்க்கிறது. எனவே எப்போதும் கழிவுகளை ஒரு தொட்டியில் வைப்பது முக்கியம்.
அ. கழிவு சேகரிப்பு
ஆ. சுற்றுச்சூழல்
இ. குப்பை
விடை:
இ. குப்பை

Question 4.
_____________ என்பது மூன்று R இல் உள்ள முதல் R ஆகும்.
அ. மறுபயன்பாடு
ஆ. குறைத்தல்
இ. மறு சுழற்சி
விடை:
ஆ. குறைத்தல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
______________ கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். (ஊறுகாய்க்கு பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல்,
ஒரு நெகிழி பையில் வேண்டாம் என்று சொல்வது)
விடை:
ஊறுகாய்க்கு பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல்

Question 2.
எளிதில் மக்கக்கூடிய பைகள், குப்பைக் கூடைகள் மற்றும் பல் துலக்கிகள் தயாரிக்க ____________ உதவுகிறது.
விடை:
மூங்கில்

Question 3.
_______________ நமது சுற்றுச் சூழலை அச்சுறுத்தும் மாசுபாட்டிற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
நெகிழி மாசுபாடு

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 4.
_____________ ஒரு மறுசுழற்சி செய்ய முடியாத பொருள்கள் ஆகும்.
விடை:
பல அடுக்கு நெகிழி

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. நெகிழிவுக் கழிவுகள் – மூன்று கேள்
2. கழிவுகளை பிரித்தலின் நான்காம்படி – மக்கும் தன்மை அற்றது
3. குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம் – சுற்றுச்சூழலை பாதிக்கும்
4. சில்வர் பாத்திரம் – கழிவுகளை அகற்றல்
விடை:
1. நெகிழிவுக் கழிவுகள் – சுற்றுச்சூழலை பாதிக்கும்
2. கழிவுகளை பிரித்தலின் நான்காம்படி – கழிவுகளை அகற்றல்
3. குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம் – மூன்று கேள்
4. சில்வர் பாத்திரம் – மக்கும் தன்மை அற்றது

V. சரியா தவறா என எழுதுக.

Question 1.
3Rகள் செயல்முறைகளினால் நிலப்பகுதியில் நிரப்புவற்கு செல்லும் கழிவுகளின் அளவு குறைக்கப்படுகின்றது.
விடை:
சரி

Question 2.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பர்.
விடை:
தவறு

Question 3.
நெகிழிப்பை, தெர்மோகோல் பல அடுக்கு நெகிழி ஆகியவை மறுசுழற்சி பொருள்களாகும்.
விடை:
தவறு

Question 4.
குப்பைகளை முறையாக பிரிக்கக்கூடாது.
விடை:
தவறு

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்ளில் விடையளி.

Question 1.
மூன்று Rகள் என்றால் என்ன?
விடை:
குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse) மற்றும் மறுசுழற்சி (Recycle) போன்ற செயல்களை 3Rகள் என்கிறோம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 2.
மக்கும் கழிவு என்றால் என்ன?
விடை:
நுண்ணுயிரிகளால் சிதையக்கூடிய பொருள்கள் ‘உயிரி சிதைவிற்கு உட்படும் பொருள்கள்’ அல்லது மக்கும் பொருள்கள் எனப்படும்

Question 3.
கழிவு மேலாண்மையின் வெவ்வேறு படிகளை எழுதுக.
விடை:

  1. கழிவுகளை பிரித்தல்.
  2. கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்.
  3. கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்.

Question 4.
மறுசுழற்சி செய்யக்கூடிய ஏதேனும் ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை:
காகிதம், அட்டை, நெகிழி, உலோகங்கள், கண்ணாடி

VII. பின்வருபவைகளுக்கு விடை தருக.

Question 1.
நீங்கள் வீட்டில் எவ்வாறு குப்பைக் கழிவுகளை கையாளுவீர்கள்?
விடை:
வீட்டிலுள்ள கழிவுகளை மக்கும் தன்மை கொண்டவை, மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாதவை எனப் பிரிக்க வேண்டும். இயற்கையாக மக்கும் தன்மை கொண்ட கழிவுகளை உரங்களாக மாற்றவேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடிய கண்ணாடி கழிவுகள் மற்றும் கழிவுகளைக் கொண்டு புதிய பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்கலாம்.

Question 2.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் யாவை?
விடை:
நெகிழிப் பைகள், நெகிழி தட்டுகள், நெகிழி நீர் பைகள், நெகிழிக் குழாய்கள், நெகிழித் தாள்கள்.

Question 3.
மறுசுழற்சியின் நன்மைகளை எழுதுக.
விடை:
மறுசுழற்சி, புதிய பொருள்களை உருவாக்க தேவைப்படும் நீர், தாதுக்கள், மரம் போன்ற வளங்களை சேமிக்க உதவுகிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 4.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்றால் என்ன?
விடை:
நாம் பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருள்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.

IX. கூடுதல் வினா :

Question 1.
எப்பொருளை கழிவு என்கிறோம்?
விடை:
மீண்டும் தேவைப்படாத பொருளை கழிவு என்கிறோம்.

Question 2.
கழிவு மேலாண்மை என்றால் என்ன?
விடை:
சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாப்பதற்காக, கழிவுகளை முறையாக கையாளுவதற்கு நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் கழிவு மேலாண்மை ‘ ஆகும்.

Question 3.
கழிவு நீக்கம் என்றால் என்ன?
விடை:
கழிவு நீக்கம் மறுசுழற்சி செய்ய இயலாத கழிவினை அகற்றும் நிகழ்வாகும்

Question 4.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றால் என்ன?
விடை:
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதென்பது, இயற்கையில் காணப்படும் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.

Question 5.
மறு பயன்பாடு என்றால் என்ன?
விடை:
மறுபயன்பாடு என்பது ஒரு பொருளை மீண்டும் மீண்டும் ஒரே பயன்பாட்டிற்கோ அல்லது வேறு பயன்பாட்டிற்கோ உபயோகப்படுத்துவதாகும்.

Question 6.
பச்சை, நீலம், சிவப்புத் தொட்டிகளில் எத்தகைய கழிவுகள் இருக்க வேண்டும்?
விடை:
பச்சை – மக்கும் கழிவு
நீலம் – மறுசுழற்சி செய்யப்படும் கழிவு
சிவப்பு – மறுசுழற்சி செய்ய இயலாத கழிவு

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 7.
கழிவு நீக்கத்தின் இருவகைகள் யாவை?
விடை:

  1. நிலப்பகுதியில் நிரப்புதல்
  2. திறந்த வெளியில் குவித்தல்

Question 8.
செயற்கை நெகிழி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
விடை:
செயற்கை நெகிழி லியோ பேக்லேண்டு என்பவரால் 1907ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

Question 9.
100% மறுசுழற்சி செய்யக்கூடிய பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை:
உணவு மற்றும் பானங்கள் உள்ள கண்ணாடி கொள்கலன்கள்.

Question 10.
தேசிய பசுமை படையின் குறிக்கோள் என்ன?
விடை:
“பசுமை எங்கோ வளமை அங்கே”

4th Science Guide பசுமை சுற்றுச்சூழல் InText Questions and Answers

பக்கம் 65 செயல்பாடு

கழிவு மேலாண்மையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
(கழிவுகளை அகற்றுவது, கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல், கழிவுகளை பிரித்தல், கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்)
1. ______________________
2. ______________________
3. ______________________
4. ______________________
விடை:
1. கழிவுகளை பிரித்தல்.
2. கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்.
3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்.
4. கழிவு நீக்கம்

பக்கம் 68 நிரப்புவோம்

நீங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைக்கக்கூடிய, மறுபயன்பாடு செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய நான்கு பொருள்களை பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 2

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

பக்கம் 70 செயல்பாடு

கீழே உள்ள படங்களை உற்றுநோக்கி, ஒவ்வொரு கழிவு வகையிலும் உங்கள் வீட்டில் உள்ள மூன்று பொருள்களின் பெயர்களை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 3
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 4
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 5
Question 1.
மக்கும் தன்மை கொண்ட கழிவுகள்
விடை:
வாழைத்தண்டு, காய்கறிகள், பாக்கு மட்டைத் தட்டு

Question 2.
மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள்
விடை:
காகிதம், அட்டை, நெகிழி, உலோகங்கள், கண்ணாடி

Question 3.
மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள்
விடை:
நெகிழி பை, மருத்துவ கழிவு, CFL விளக்கு, பாலிஸ்டர்.

பக்கம் 74 முயற்சிப்போம்

நீங்கள் பயன்படுத்தும் அல்லது கடையில் பார்த்த மறுசுழற்சி செய்ய முடியாத ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை:
நெகிழிப்பைகள், நெகிழித்தட்டுகள், CFL விளக்கு, பல அடுக்கு நெகிழி, பாலிஸ்டர்.