Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 4 வளிமண்டலம் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 1 Chapter 4 வளிமண்டலம்

5th Social Science Guide வளிமண்டலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வளிமண்டலம் ___________ அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
விடை:
ஆ) ஐந்து

Question 2.
வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு ___________ ஆகும்.
ஆ) 3%
அ) 0.03%
இ) 1%
ஈ) 0.00003%
விடை:
அ) 0.03%

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Question 3.
உலக வானிலை தினம்
அ) மார்ச்-20
இ) மார்ச்-22
ஆ) மார்ச்-21
ஈ) மார்ச்-23
விடை:
ஈ) மார்ச்-23

Question 4.
இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிடும் தீர்க்கரேகை _______________ வழியாகச் செல்கிறது.
அ) அலகாபாத்
ஆ) அகமதாபாத்
இ) ஹைதராபாத்
ஈ) செகதீய
விடை:
அ) அலகாபாத்

Question 5.
கடகரேகைக்கும் மகரரேகைக்கும், இடையேயும் அமைந்துள்ள மண்டலம் _____________
அ) மிதவெப்ப
ஆ) துணை வெப்பமண்டலம்
இ) குளிர்
ஈ) வெப்ப மண்டலம்
விடை:
ஈ) வெப்ப மண்டலம்

Question 6.
___________ காற்றின் அழுத்தத்தை அளவிட பயன்படுகிறது.
அ) பாரமானி
இ) அனிமோமீட்டர்
ஆ) வெப்பமானி
ஈ) காற்று வேக அளவி
விடை:
அ) பாரமானி

Question 7.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம் 1
மேற்கண்ட படம் ____________ வீசும் திசையைக் காட்டுகிறது.
அ) தென்மேற்கு பருவக்காற்று
ஆ) வட கிழக்கு பருவக்காற்று
இ) சூறாவளிமழை
ஈ) மலைத்தடை மழை
விடை:
ஆ) வட கிழக்கு பருவக்காற்று

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Question 8.
பருவ காலம் என்பது _____________ சொல்லிலிருந்து பெறப்பட்டது.
அ) கிரேக்கம்
ஆ) அரேபியன்
இ) ஆங்கிலம்
ஈ) லத்தீன்
விடை:
ஆ) அரேபியன்

Question 9.
செங்குத்து மேகம் _____________
அ) கீற்று மேகம்
ஆ) படைமேகம்
இ) திறள் மேகம்
ஈ) கார்மேகம்
விடை:
ஈ) கார்மேகம்

Question 10.
_____________ மேகம் மழைப் பொழிவைத் தருகிறது.
அ) வெள்ளி
ஆ) சாம்பல்
இ) வெண்பஞ்சு
ஈ) திரள்
விடை:
ஆ) சாம்பல்

Question 11.
கூற்று1-காற்றின் திசையை அளவிட பயன்படும் கருவி காற்று வேக அளவி. கூற்று II-ஒளியானது ஒலியை விட வேகமாகச் செல்கிறது.
அ) I மட்டும் சரி
ஆ) I தவறு II சரி
இ) I சரி II தவறு
ஈ) இரண்டும் சரி
விடை:
ஆ) I தவறு II சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வானிலையை பற்றி படிக்கும் அறிவியல் _______________ எனப்படும்.
விடை:
வானிலையியல்

Question 2.
வெப்பத்தை அளவிட உதவும் கருவி _____________
விடை:
வெப்பநிலை மானி

Question 3.
புவியின் மேற்பரப்பிற்கு இணையாக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் ___________ ஆகும்.
விடை:
அட்ச ரேகை

Question 4.
______________ மழை மேகம் என அழைக்கப்படுகிறது.
விடை:
கார்மேகம்

III. பொருத்துக.

1. கீற்று மேகம் – சாம்பல் நிற விரிப்பு
2. படைமேகம் – புயல் மேகம்
3. திறள் மேகம் – மழை கொடுக்காது
4. கார்மேகம் – பருத்தி
விடை:
1. கீற்று மேகம் – மழை கொடுக்காது
2. படைமேகம் – சாம்பல் நிற விரிப்பு
3. திறள் மேகம் – பருத்தி
4. கார்மேகம் – புயல் மேகம்

IV. சரியா/தவறா.

Question 1.
அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக் கோடுகள் நேர மண்டலத்தை கணக்கிட பயன்படுகின்றன.
விடை:
தவறு

Question 2.
அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக் கோடுகள், ஒரு நாட்டை கண்டறிய நமக்கு உதவுகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Question 3.
வளிமண்டலமானது கடத்தல் முறையைவிட கதிர்வீச்சு முறையினால் அதிக வெப்பமடைகிறது.
விடை:
சரி

Question 4.
காற்றின் திசை மாற்றத்திற்கு பூமியின் சுழற்சியே காரணமாகும்.
விடை:
சரி

Question 5.
கடிகார திசைக்கு எதிர் திசையில் சூறாவளி நகர்கிறது.
விடை:
சரி

V. சிறு குறிப்பு வரைக.

Question 1.
வானிலை என்றால் என்ன?
விடை:
வானிலை என்பது மிதவெப்ப நிலை, ஈரப்பதம், மேகமூட்டம், அழுத்தம் ஆகியவற்றின் குறுகிய கால நிலையாகும்.

Question 2.
வளிமண்டல அடுக்குகள் யாவை?
விடை:
வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குகள் உள்ளன. அவையாவன – ட்ரோபோஸ்பியர், ஸ்ட்ராடோஸ்பியர், மீஸோஸ்பியர், தெர்மோஸ்பியர் மற்றும் எக்சோஸ்பியர்.

Question 3.
கார்மேகங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
இது அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும். பலத்த மழை தருகிறது. இது செங்குத்து மேகங்கள் மற்றும் புயல் அல்லது மழை மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

Question 4.
மழைத்தடை மழையை வரைபடத்துடன் விவரி.
விடை:
பருவக்காற்று மலைச்சரிவின் ஒரு பக்கத்தில் மோதும் போது மேலெழும்புகிறது. இதன் காரணமாக காற்றானது குளிர்ந்து அதிக மழைப்பொழிவை கொடுக்கிறது. மலையின் அடுத்த பக்கம் மழை மறைவுப்பகுதி எனப்படுகிறது. இது குறைவான மழையையே பெறுகிறது.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம் 2

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
ஜெட் காற்றோட்டம் பற்றி எழுதுக.
விடை:
ஜெட் காற்றோட்டம் : வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டத்தினை ஜெட் காற்றோட்டம் என்கிறோம். இக்காற்றோட்டம் இந்தியாவில் பருவக் காற்றின் தொடக்கக் காலத்தையும் அது முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம்

Question 2.
காற்றின் வகைகளை விளக்குக.
விடை:
காற்று : லூ என்பது இந்தியாவின் வடமேற்கு பகுதியில் வீசும் ஒரு வலிமையான, புழுதி படிந்த, வெப்பமான, வறண்ட கோடைக்காற்று ஆகும். இக்காற்று குறிப்பாக மே, ஜுன் மாதங்களில் வலுவாக வீசும். அதிக வெப்பநிலையால், இக்காற்று உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

கோள் காற்று :
பூமியின் சுழற்சிக்கேற்றவாறு ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்று கோள்காற்று எனப்படும்.

பருவக்காற்று :
மான்சூன் என்ற வார்த்தை மௌசிம்’ என்ற அரேபியச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இதற்கு பருவகாலம் என்று பொருள்.

பருவக்காற்றின் வகைகள் : * தென்மேற்கு பருவக் காற்று * வட கிழக்கு பருவக் காற்று

கடல் காற்று:
இது. மாலைப்பொழுதில் கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது.

நிலக் காற்று:
இது காலைப் பொழுதில் நிலத்தில் இருந்து கடலை நோக்கி வீசுகிறது.

உள்ளுர் காற்று: இது வானிலையை பாதிக்கிறது. * வட மேற்கு இந்தியாவில் வீசும் வெப்பக்காற்று. * வட கிழக்கு இந்தியாவில் வீசும் குளிர்காற்று.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம் 3
ஜெட் காற்றோட்டம் :
வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டத்தினை ஜெட் காற்றோட்டம் என்கிறோம். இக்காற்றோட்டம் இந்தியாவில் பருவக் காற்றின் தொடக்கக் காலத்தையும் அது ) முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.

சூறாவளி (புயல்) :
சூறாவளி தனது நிலையையும் திசையையும் அவ்வப்போது மாற்றுகிறது. காற்றுவேகமும் அவ்வப்போது மாறுபடுகிறது.

Question 3.
‘வானிலைத் தொழிற்சாலை’ பற்றி எழுதுக.
விடை:
நேர் மற்றும் எதிர் (+, -) மின்னூட்டங்கள் ஒன்றையொன்று தாக்கும் போது , மின்னல் , இடி ஆகியவை உற்பத்தியாகின்றன. ஒளி ஒலியை விட வேகமாகச் செல்கிறது. எனவே இடி மின்னலைத் தொடர்ந்து பெரும் சப்தமாக நமக்கு ஒலிக்கிறது. இவ்வாறு வானின் அனைத்து பண்புகளும் ஒன்றாக ஒரே நேரத்தில் செயல்படும் போது அது வானிலை தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிறது.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 வளிமண்டலம் 4

5th Social Science Guide வளிமண்டலம் InText Questions and Answers

பக்கம் 167 செயல்முறைகள் :

வாயுக்களின் முக்கியத்துவத்தை எழுது.
ஆக்சிஜன் : _______________
கார்பன் டை ஆக்சைடு : _______________
ஓசோன் : _______________
விடை:
ஆக்சிஜன் : உயிரினங்கள் உயிர் வாழ
கார்பன் டை ஆக்சைடு : தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்க
ஓசோன் : சூரியனின் புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நம்மைப் பாதுகாக்க

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 3 நல்ல குடிமகன் Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

5th Social Science Guide நல்ல குடிமகன் Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
குடிமை என்ற சொல் ஒரு நாட்டின் ______________ பற்றியதாகும்.
விடை:
குடிமக்கள்

Question 2.
ஒரு நபரை ______________ மாற்றுவதே கல்வியின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
விடை:
மதிப்பு மிக்க மனிதனாக

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 3.
மனிதன் ஒரு _____________
விடை:
சமூக விலங்கு

Question 4.
தன் பணியில் ________________ தவறாமல் இருக்க வேண்டும்.
விடை:
கடமை

II. பொருத்துக.

1. இயல்பான குணம் – சகிப்புத்தன்மை
2. கலாச்சாரம் – பாதிக்கும் காரணி
3. சமுதாயம் – நேரந்தவறாமை
4. கடமை – மொழி
5. வேலையின்மை – நன்மதிப்பு
விடை:
1. இயல்பான குணம் – நன்மதிப்பு
2. கலாச்சாரம் – மொழி
3. சமுதாயம் – சகிப்புத்தன்மை
4. கடமை – நேரந்தவறாமை
5. வேலையின்மை – பாதிக்கும் காரணி

III. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
குடிமகன் என்ற சொல்லை வரையறு.
விடை:
ஒரு குடிமகன் ஒரு குறிப்பிட்ட நாட்டில் உறுப்பினராக இருந்து, பல்வேறு உரிமைகளை அனுபவித்து, தனது

கடமைகளை நிறைவேற்றுகிறார். ஒரு இறைமை பெற்ற அரசு தனது மக்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது தேசத்தில் வாழும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, வேலை செய்யும் உரிமை, நாட்டில் எங்கும் குடியிருக்க உரிமை வழங்கப்படுகிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 2.
ஐந்து தனிப்பட்ட ஒழுக்க நெறிகள் எவை?
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 1

Question 3.
சமூக நெறிமுறைகள் யாவை?
விடை:

  • மக்களுடன் நல்லுறவை எப்போதும் பேணுவது
  • பெரியோர்களை மதிப்பது
  • இயற்கையை மதித்து நடப்பது
  • சகிப்புத் தன்மையுடன் இருப்பது
  • நட்பை பேணி வளர்ப்பது

Question 4.
நற்பண்பு நெறிமுறைகள் என்றால் என்ன?
விடை:
கால நேரம் தவறாமை, ஈடுபாடு, அனைவரையும் சமமாக நடத்துதல், சரியான நேரத்தில் வேலைகளைச் செய்தல், ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல், தவறாமல் கடமைகளைச் செய்தல், ஆகியன நற்பண்பு நெறிமுறைகள் ஆகும்.

IV. விரிவாக விடையளி.

Question 1.
நல்ல மதிப்புகளை வளர்க்கும் ஐந்து காரணிகளை எழுதுக.
விடை:

நற்பண்புகளை வளப்படுத்தக் கூடிய காரணிகள்:

  • எழுத்தறிவு
  • விழிப்புணர்வு மற்றும் நலன்களை உருவாக்குதல்
  • வெற்றி பெறும் வரை கடினமாக முயற்சி செய்தல்
  • தன் தனித் தன்மையை அறிதல்
  • ஏற்றுக் கொள்ளுதல்
  • தன்னம்பிக்கை

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 2.
அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றி எழுதுக.
விடை:

  1. பொதுச் சொத்துக்களை பாதுகாத்தல்.
  2. தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்தல்.
  3. விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல்.
  4. இயற்கை வளங்களை பாதுகாத்தல்.
  5. சுற்றுச்சூழலை பராமரித்தல்.
  6. தேசிய சின்னங்களை கௌரவித்தல்.
  7. தியாகிகளுக்கும் அவர்களின் தியாகங்களுக்கும் மதிப்பளித்தல்,
  8. நமது கலாச்சாரம் மற்றும் பராம்பரியத்தைக் காத்தல்.
  9. நாட்டுப்பற்றை வளர்த்துக் கொள்ளுதல்.

5th Social Science Guide நல்ல குடிமகன் InText Questions and Answers

பக்கம் 159 இவற்றை முயற்சிக்கவும் :

அன்பு, கருணை, பெருந்தன்மை, நேர்மை, உண்மை , நட்பு, விருந்தோம்பல், அமைதி, சகிப்புத்தன்மை, நம்பிக்கை போன்றவை தனிப்பட்ட ‘விழுமங்கள். மேற்கூறிய இந்த மதிப்புகள் உதவியுடன் கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அனைத்து உயிர்களிடத்தும் ___________ காட்ட வேண்டும்.
விடை:
அன்பு

Question 2.
_______________ யோடு ஏழைகளுக்கு உதவுங்கள்.
விடை:
பெருந்தன்மை

Question 3.
________________ ஒரு சிறந்த கொள்கை.
விடை:
நேர்மை

Question 4.
மிகச் சிறந்த உறவாகக் கருதப்படுவது _________________.
விடை:
நட்பு

Question 5.
விருந்தினர்களை உபசரிப்பது _________________ ஆகும்.
விடை:
விருந்தோம்பல்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 6.
துன்புறுபவர்களுக்கு நாம் ______________ காட்டவேண்டும்.
விடை:
கருணை

Question 7.
எப்பொழுதும் _______________ பேசவேண்டும்.
விடை:
உண்மை

Question 8.
பொது இடங்களில் ______________யுடன் நடந்து கொள்ள
விடை:
சகிப்புத்தன்மை

இவற்றை முயற்சிக்கவும் :

Question 1.
உன் தாய்மொழி என்ன?
விடை:
தமிழ்

Question 2.
நமது அலுவல் மொழி எது?
விடை:
நமது அலுவலக மொழி ஆங்கிலம் ஆகும். (அத்துடன் இந்தி, வங்காள மொழி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, கன்னடம், மலையாளம், குஜராத்தி, உருது ஆகியவையும் நமது அலுவலக மொழிகளாகும்).

Question 3.
வட இந்தியாவின் முக்கிய உணவு என்பது ____________
விடை:
கோதுமை

Question 4.
__________ தென்னிந்தியாவின் முக்கிய உணவு
விடை:
அரிசி

Question 5.
உனக்கு எத்தனை மொழிகள் தெரியும்? _________
விடை:
இரண்டு

பண்பாட்டு நெறிமுறைகள் :
நற்பண்பு, பண்படுத்தப்பட்ட நன்நடத்தை ஒரு சமூகத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும்.

பக்கம் 161 சிந்தனை செய் :

Question 1.
____________ பெற மரங்கள் வளர்க்க வேண்டும்.
விடை:
மழை

Question 2.
_____________ வாழ்ந்தால் லட்சக்கணக்கானோர் பயனடைவார்கள்
விடை:
ஒன்று சேர்ந்து

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன்

Question 3.
சேர்ந்தால் ____________ பிரிந்தால் வீழ்வோம்.
விடை:
வாழ்வோம்

கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையில் நல்ல மதிப்புகள் வட்டம் இடுக.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 2
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 3

பக்கம் 162 பின்வருவனவற்றை பொருத்துக.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 4
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 நல்ல குடிமகன் 5

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

5th Social Science Guide வரலாற்றை நோக்கி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பழங்கற்கால மனிதர்கள்.
அ) பருத்தி ஆடைகள் அணிந்திருந்தனர்.
ஆ) தாவரங்களின் இலைகள் மற்றும் தோலை அணிந்தனர்.
இ) கம்பளி ஆடைகள் அணிந்திருந்தனர்.
விடை:
ஆ) தாவரங்களின் இலைகள் மற்றும் தோலை அணிந்தனர்.

Question 2.
பழங்கால மனிதரால் வளர்க்கப்பட்ட விலங்கு
அ) பசு
ஆ) குதிரை
இ) நாய்
விடை:
இ) நாய்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

Question 3.
பழங்கால மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம்.
அ) இரும்பு
ஆ) செம்பு
இ) தங்கம்
விடை:
ஆ) செம்பு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பழங்கால மனிதன் வாழ்ந்த இடம் _____________
விடை:
குகைகள்

Question 2.
எழுத்துக்கள் கண்டுபிடிப்புகளுக்கு முந்திய காலம் _______________
விடை:
வரலாற்றுக்கு முந்தையக் காலம்

Question 3.
இரும்புக் கருவிகளை பயன் படுத்திய காலம் ______________
விடை:
இரும்புக் காலம்

Question 4.
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு ________________
விடை:
கல்சக்கரங்கள்

Question 5.
வரலாற்று ஆராய்ச்சி நடைபெறும் ஒரு தமிழக இடம் _____________
விடை:
கீழடி

III. விரிவாக விடையளி

Question 1.
கற்காலம் என்றால் என்ன?
விடை:
கற்காலம் என்பது கற்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு காலமாகும்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

Question 2.
புதுக்கற்காலக் காலம் வரையறு.
விடை:
கற்கள் கருவியாக பயன்படுத்தப்பட மற்ற கற்களின் உதவியால் கூர்மையாக்கப்பட்டன. இந்த கூர்மையான கருவிகள் விலங்குகளை வேட்டையாட மற்றும் விலங்குகளின் மாமிசத்தை கிழித்தெறிய உதவின.

எலும்புகள், கொம்புகள், கற்கள், தோல், மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவை கற்கருவிகளாகவும் ஆயுதங்களாகவும், பயன்படுத்தப்பட்டன. வரலாற்றில் இந்த நிலை புதிய கற்காலம் (Neolithic age) என்று அழைக்கப்பட்டது.

Question 3.
எந்தக்காலத்தில் கல்லும் தாமிரமும் பயன்படுத்தப் பட்டன?
விடை:
கற்காலத்தில் கல் பயன்படுத்தப்பட்டது. புதிய கற்காலத்தின் இறுதியில் செம்புக்காலத்தில் கல்லுடன் தாமிரம் பயன்படுத்தப்பட்டது.

Question 4.
வரலாற்றை நாம் கற்க உதவும் மூலங்கள் யாவை?
விடை:
கைவினைப் பொருள்கள், மண்பாண்டங்கள், நாணயங்கள், சிலைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள் எழுதப்பட்ட ஆவணங்கள் போன்றவை வரலாற்றைக் கட்டமைக்க உதவும் – மதிப்புமிக்க ஆதாரங்களாகும்.

Question 5.
அருங்காட்சியகம் என்றால் என்ன?
விடை:
அருங்காட்சியகம் என்பது அரிய மற்றும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாக்கப்படும் இடம். இவை மக்களின் வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைத் தருகின்றன. எனவே, கடந்த காலத்தின் எச்சங்களைப் பாதுகாப்பது முக்கியமாகும். எச்சங்கள் என்பது பழங்கால மக்கள் பயன்படுத்திய பூமியில் புதையுண்ட பொருள்கள் ஆகும்.

Question 6.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 1

Question 7.
பழங்கற்காலக் கருவிகளை வகைப்படுத்துக.
விடை:
பண்டைய மனிதர்கள் விலங்குகளோடு சேர்ந்து காடுகளில் வாழ்ந்தனர். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், விலங்குகளை விரட்டவும், வேர்கள், குருத்துகள் முதலியவைகளை தோண்டவும் கற்கருவிகளைப் பயன்படுத்தினர்,

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

கற்கள் கருவியாக பயன்படுத்தப்பட மற்ற கற்களின் உதவியால் கூர்மையாக்கப்பட்டன. இந்த கூர்மையான கருவிகள் விலங்குகளை வேட்டையாட மற்றும் விலங்குகளின் மாமிசத்தை கிழித்தெறிய உதவின.

எலும்புகள், கொம்புகள், கற்கள், தோல், மரங்களின் கிளைகள், குச்சிகள் ஆகியவை கற்கருவிகளாகவும் – ஆயுதங்களாகவும், பயன்படுத்தப்பட்டன, வரலாற்றில் இந்த நிலை புதிய கற்காலம் (Neolithic age) என்று அழைக்கப்பட்டது.
1. பழங்காலத்தில் கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
2. குவார்ட்சைட் என்ற கல்லிலிருந்து ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன.
3. நெருப்பை உருவாக்க சிக்கி முக்கி கற்கள் பயன்படுத்தப்பட்டன.

5th Social Science Guide வரலாற்றை நோக்கி InText Questions and Answers

பக்கம் 150 செயல்பாடு :

Question 1.
பழைய கற்கால மனிதர்களால் உண்ணப்பட்ட உணவு எது?
விடை:
வேர்கள், குருத்துகள், மாமிசம், தானியம்

Question 2.
குகைகளில் பழைய மனிதர்கள் ஏன் வாழ்ந்தார்கள்?
விடை:
பழங்கால மனிதர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு வீடு கட்டத் தெரியாது. எனவே அவர்கள் குகைகளில் வாழ்ந்து வந்தனர்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி

Question 3.
ஏன் பச்சையாக மாமிசத்தை சாப்பிட்டார்கள்?
விடை:
கற்கால மனிதர்களுக்கு நெருப்பை உருவாக்கவும் சமைக்கவும் தெரியாது. எனவே அவர்கள் பச்சையாக மாமிசத்தை சாப்பிட்டார்கள்.

செயல்பாடு :

வரலாற்று காலத்தின் வயதைக் கண்டுபிடி.

பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், செம்புக் காலம், இரும்புக் காலம்
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 2
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 3
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 4
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 வரலாற்றை நோக்கி 5

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 9 கரைசல்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 9 கரைசல்கள்

10th Science Guide கரைசல்கள் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு :

Question 1.
நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது ………….. கலவை
அ) ஒருபடித்தான
ஆ) பலபடித்தான
இ) ஒருபடித்தான மற்றும் பலபடித்தானவை
ஈ) ஒருபடித்தானவை அல்லாதவை
விடை:
அ) ஒருபடித்தான

Question 2.
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ……..
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
விடை:
அ) 2

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

Question 3.
கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ……
அ) அசிட்டோன்
ஆ) பென்சீன்
இ) நீர்
ஈ) ஆல்கஹால்
விடை:
இ) நீர்

Question 4.
குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் …
எனப்படும்.
அ) தெவிட்டிய கரைசல்
ஆ) தெவிட்டாத கரைசல்
இ) அதி தெவிட்டிய கரைசல்
ஈ) நீர்த்த கரைசல்
விடை:
அ) தெவிட்டிய கரைசல்

Question 5.
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க [Sep.20]
அ) நீரில் கரைக்கப்பட்ட உப்பு
ஆ) நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்
இ) நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்
ஈ) கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
விடை:
ஈ) கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்

Question 6.
குறிப்பிட்ட வெப்பநிலையில் அழுத்தத்தை அதிகரிக்கும்போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ……………………….. .
அ) மாற்றமில்லை
ஆ) அதிகரிக்கிறது
இ) குறைகிறது
ஈ) வினை இல்லை
விடை:
ஆ) அதிகரிக்கிறது

Question 7.
100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி. நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்?
அ) 12 கி
ஆ) 11 கி
இ) 16 கி
ஈ) 20 கி
விடை:
ஆ) 11 கி

Question 8.
25% ஆல்க ஹால் கரைசல் என்பது ……………
அ) 100 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்க ஹால்
ஆ) 25 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்க ஹால்
இ) 75 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்க ஹால்
ஈ) 25 மி.லி. நீரில் 75 மி.லி. ஆல்க ஹால்
விடை:
இ) 75 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்கஹால்

Question 9.
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் …. [PTA-5]
அ) ஈரம் மீது அதிக நாட்டம்
ஆ) ஈரம் மீது குறைந்த நாட்டம்
இ) ஈரம் மீது நாட்டம் இன்மை
ஈ) ஈரம் மீது மந்தத்தன்மை
விடை:
அ) ஈரம் மீது அதிக நாட்டம்

Question 10.
கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ………….
அ) ஃபெரிக் குளோரைடு
ஆ) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
இ) சிலிக்கா ஜெல்
ஈ) இவற்றுள் எதுமில்லை
விடை:
இ) சிலிக்கா ஜெல்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

Question 1.
ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு கொண்ட கூறினை …………….. என அழைக்கிறோம். (GMQP-2019)
விடை:
கரைபொருள்

Question 2.
திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு ஒரு எடுத்துக்காட்டு ………….
விடை:
பாதரசத்துடன் கலந்த சோடியம் (இரசக் கலவை)

Question 3.
கரைதிறன் என்பது ……………….. கி கரைப்பானில் கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்.
விடை:
100

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

Question 4.
முனைவுறும் சேர்மங்கள் ………… கரைப்பானில் கரைகிறது.
விடை:
முனைவுறு

Question 5.
வெப்பநிலை அதிகரிக்கும் போது கனஅளவு சதவீதம் குறைகிறது ஏனெனில் …….
விடை:
திரவங்கள் வெப்பத்தால் விரிவடையும்

III. பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 50
விடை:
1-இ,
2- அ,
3-ஈ,
4-ஆ

IV. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
இருமடிக்கரைசல் என்பது மூன்று கூறுகளைக் கொண்டது.
விடை:
தவறு.
சரியான விடை: இருமடிக்கரைசல் என்பது இரண்டு கூறுகளைக் கொண்டது.

Question 2.
ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறுக்கு கரைப்பான் என்று பெயர். [PTA-4)
விடை:
தவறு.
சரியான விடை: ஒரு கரைசலில் குறைந்த அளவு எடை கொண்ட கூறுக்கு கரைபொருள் என்று பெயர்.

Question 3.
சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீரற்ற கரைசலாகும். [PTA-4]
விடை:
தவறு.
சரியான விடை: சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீர்க்கரைசல் ஆகும்.

Question 4.
பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்பாடு MgSO4.7H2O
விடை:
தவறு.
சரியான விடை: பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்பாடு FeSO4.7H2O

Question 5.
சிலிகா ஜெல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்கிறது. ஏனெனில் அது ஒரு ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம் ஆகும்.
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
கரைசல் – வரையறு:
விடை:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களின் ஒரு படித்தான கலவை கரைசல் எனப்படும்.

Question 2.
இருமடிக்கரைசல் என்றால் என்ன?
விடை:
ஒரு கரைபொருளையும் ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும் கரைசல் இருமடிக்கரைசல் எனப்படும்.

Question 3.
கீழ்க்கண்டவற்றுக்கு தலா ஒரு எடுத்துக்காட்டு தருக.

  1. திரவத்தில் வாயு (PTA-1)
  2. திரவத்தில் திண்ம ம் (PTA-1)
  3. திண்மத்தில் திண்மம்
  4. வாயுவில் வாயு

விடை:

  1. நீரில் கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு (சோடா நீர்)
  2. நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு
  3. தங்கத்தில் கரைக்கப்பட்ட காப்பர் (உலோகக் கலவைகள்)
  4. ஆக்ஸிஜன் – ஹீலியம் வாயுக்கலவை

Question 4.
நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  1. நீர்க்கரைசல் : எந்தவொரு கரைசலில், கரைபொருளைக் கரைக்கும் கரைப்பானாக நீர் செயல்படுகிறதோ அக்கரைசல் நீர்க் கரைசல் எனப்படும்.
  2. நீரற்ற கரைசல் : எந்த ஒரு கரைசலில் நீரைத்தவிர, பிற திரவங்கள் கரைப்பானாக செயல்படுகிறதோ அக்கரைசல் நீரற்ற கரைசல் என அழைக்கப்படுகிறது.

Question 5.
கன அளவு சதவீதம் – வரையறு.
விடை:
(i) ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் கன அளவை சதவீதத்தில் குறித்தால் அது அக்கரைசலின் கனஅளவு சதவீதம் என வரையறுக்கப்படுகிறது.
(ii)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 58

Question 6.
குளிர் பிரதேசங்களில் நீர்வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. ஏன்? [PTA-5]
விடை:

  1. குளிர் பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளில் அதிக அளவு ஆக்ஸிஜன் கரைந்துள்ளது.
  2. ஏனெனில், வெப்பநிலை குறையும் போது ஆக்ஸிஜனின் கரைதிறன் அதிகரிக்கிறது. எனவே நீர்வாழ் உயிரினங்கள் குளிர் பிரதேசங்களில் அதிகமாக வாழ்கின்றன.

Question 7.
நீரேறிய உப்பு – வரையறு.
விடை:

  1. அயனிச் சேர்மங்கள் அவற்றின் தெவிட்டிய கரைசலில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நீர் மூலக்கூறுகளுடன் சேர்ந்து படிகமாகிறது.
  2. இந்தப் படிகங்களுடன் காணப்படும் நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையே படிகமாக்கல் நீர் எனப்படும்.
  3. அத்தகைய படிகங்கள் நீரேறிய உப்புகள் எனப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

Question 8.
சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலைக் குளிர்விக்கும்போது படிகங்களாக மாறுகிறது. ஏன்?
விடை:

  1. நிறமற்ற, நீரற்ற காப்பர் சல்பேட் உப்பில் சில துளி நீரினைச் சேர்க்கும்போது அல்லது குளிர்விக்கும்போது கரைசலில் உள்ள மூலக்கூறுகள் நெருங்கி அமைகின்றன.
  2. எனவே, அவை நீரேறிய உப்பாக அல்லது படிகங்களாக மாறுகின்றன.

Question 9.
ஈரம் உறிஞ்சிகள் மற்றும் ஈரம் உறிஞ்சிக் கரைபவைகளை அடையாளம் காண்க.
(அ) அடர் சல்பியூரிக் அமிலம்
(ஆ) காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட்
(இ) சிலிக்கா ஜெல்
(ஈ) கால்சியம் குளோரைடு
(உ) எப்சம் உப்பு
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 60

VI. விரிவாக விடையளி

Question 1.
குறிப்பு வரைக: அ) தெவிட்டிய கரைசல் ஆ) தெவிட்டாத கரைசல்.
விடை:
(அ) தெவிட்டிய கரைசல் :
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசல் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் தெவிட்டிய கரைசல். உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 36 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது. மேலும் கரைபொருளைச் சேர்க்கும்போது அது கரையாமல் முகவையின் அடியில் தங்கிவிடுகிறது. –

(ஆ)தெவிட்டாத கரைசல்:
குறிப்பிட்ட வெப்பநிலையில் தெவிட்டிய கரைசலில் கரைந்துள்ள கரைபொருளின் அளவை விடக் குறைவான கரைபொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும். உதாரணமாக 25°C வெப்பநிலையில் 100 கி நீரில், 10 கி அல்லது 20 கி அல்லது 30 கி சோடியம் குளோரைடு உப்பினைக் கரைத்து தெவிட்டாத கரைசல் உருவாக்கப்படுகிறது.

Question 2.
கரைதிறனை பாதிக்கும் பல்வேறு காரணிகள் பற்றி குறிப்பு வரைக. . (GMQP-2019)
விடை:
ஒரு கரைபொருளின் கரைதிறனை மூன்று முக்கிய காரணிகள் தீர்மானிக்கின்றன. அவைகளாவன:

(i) கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை
(ii) வெப்பநிலை
(iii) அழுத்த ம்

(i) கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை:

  • கரைதிறனில், கரைப்பான் மற்றும் கரைபொருளின் தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது.
  • நீர் பெரும்பான்மையான பொருட்களை கரைக்கும் தன்மையை கொண்டிருந்தாலும், சில பொருள்கள் நீரில் கரைவதில்லை.
  • இதனையே ஒத்த கரைபொருட்கள் ஒத்த கரைப்பானில் கரைகிறது என்கிறோம்.
  • கரை பொருளுக்கும் கரைப்பானுக்கும் இடையே ஒற்றுமை காணப்படும் போதுதான் கரைதல் நிகழ்கிறது.
  • முனைவுறும் சேர்மங்கள் *முனைவுறும் கரைப்பானான நீரில் எளிதில் கரைகிறது.
  • முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறாக் கரைப்பானில் எளிதில் கரைகிறது.
  • ஆனால் முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறு கரைப்பானிலும், முனைவுறுச் சேர்மங்கள் முனைவுறா கரைப்பானிலும் கரைவதில்லை.

(ii) வெப்பநிலை:
திரவத்தில் திண்மங்களின் கரைதிறன்:

  • பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்மப் பொருளின் கரைதிறன் அதிகரிக்கிறது.
  • வெப்பக்கொள் செயல்முறையில், வெப்பநிலை அதிகரிக்கும்போது கரைதிறன் அதிகரிக்கிறது.
  • வெப்ப உமிழ் செயல்முறையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைதிறன் குறைகிறது.

திரவத்தில் வாயுக்களின் கரைதிறன்:

  • திரவத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது வாயுவின் கரைதிறன் குறைகிறது.
  • திரவத்தின் வெப்பநிலை குறையும் போது வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது.

(iii) அழுத்த ம் :

  • வாயுக்களை கரைபொருளாக கொண்ட திரவ கரைசல்களில் மட்டுமே அழுத்தத்தின் விளைவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
  • திரவ அழுத்தத்தை அதிகரிக்கும் போது ஒரு திரவத்தில் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

Question 3.
(i) MgSO4.7H2O உப்பை வெப்பப்படுத்தும் போது என்ன நிகழ்கிறது? [PTA-4]
(ii) கரைதிறன் – வரையறு.
விடை:
(i) MgSO4.7H2O வெப்ப விளைவு:
மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரேட் படிகத்தை வெப்பப்படுத்தும் போது ஏழு நீர் மூலக்கூறுகளை இழந்து நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டாக மாறுகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 65
(ii) கரைதிறன்
கரைதிறன் என்பது எவ்வளவு கரைபொருள் குறிப்பிட்ட அளவு கரைப்பானில் கரையும் என்பதற்கான அளவீடாகும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 66

Question 4.
ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் யாவை? (PTA-2; Qy-2019)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 70

Question 5.
180 கி நீரில் 45 கி சோடியம் குளோரைடைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. கரைபொருளின் நிறை சதவீதத்தை காண்க.
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 71

Question 6.
15லி எத்தனால் நீர்க்கரைசலில் 3.5லி எத்தனால் கலந்துள்ளது. எத்தனால் கரைசலின் கன அளவு சதவீதத்தை கண்டறிக. [PTA-2] விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 72

VII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்

Question 1.
விணு 50 கி சர்க்கரையை 250 மி.லி. சுடுநீரில் கரைக்கிறார். சரத் 50 கி அதே வகை சர்க்கரையை 250 மி.லி. குளிர்ந்த நீரில் கரைக்கிறார். யார் எளிதில் சர்க்கரையை கரைப்பார்கள்? ஏன்? [PTA-6]
விடை:

  1. விணு சர்க்கரையை வேகமாக கரைப்பார். ஏனெனில், குளிர்ந்த நீரில் கரைவதை விட சர்க்கரை, சுடுநீரில் அதிக அளவில் கரைகிறது.
  2. ஏனெனில், வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்மப் பொருளின் கரைதிறன் அதிகரிக்கிறது.

Question 2.
‘A’ என்பது நீல நிறப் படிக உப்பு. இதனைச் சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து ‘B’ ஆக மாறுகிறது. ‘B’-இல் நீரைச் சேர்க்கப்படும்போது ‘B’ மீண்டும் ‘A’ ஆக மாறுகிறது. ‘A’ மற்றும் ‘B’ யினை அடையாளம் காண்க. [Qy-2019]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 79

Question 3.
குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? அல்லது அடிவாரத்தில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? விளக்குக.
விடை:

  1. குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குகின்றன.
  2. ஏனெனில், மலை உச்சியில் அழுத்தம் குறைவதால் கரைதிறனும் குறைகிறது.
  3. இதனால் CO2 வாயு குமிழ்களாக வெளியேறுகிறது.

கருத்தியல் சிந்தனை

Question 1.
அனைத்து கரைசல்களும் கலவைகளே. ஆனால், அனைத்து கலவைகளும் கரைசல்கள் அல்ல; ஏன்?
விடை:

  1. கரைசல்கள் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் கலந்த கலவையாகும். இது ஒருபடித்தான கலவை. எ.கா. உப்பு + நீர்
  2. ஆனால், கலவையில் காணப்படும் பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயற்பியல் நிலைகளில் காணப்படும். இது ஒருபடித்தானதாகவோ. பலபடித்தானதாகவோ இருக்கலாம்.
    எ.கா. உப்பு + நீர் (ஒருபடித்தான கலவை) மணல் + நீர் (பலபடித்தான கலவை)
    ஆகவே அனைத்து கலவைகளும் கரைசல்கள் ஆகாது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

Question 2.
உங்களிடம் சோடியம் குளோரைடு மாதிரி கரைசல்கள் இரண்டு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில், எது தெவிட்டிய கரைசல் என்று அடையாளம் காண முடியுமா? ஆம் எனில் எவ்வாறு அடையாளம் காண்பாய்?
விடை:

  1. ஆம். அடையாளம் காண முடியும்.
  2. எக்கரைசலில் சோடியம் குளோரைடை மேலும் கரைக்க முடியாதோ அது தெவிட்டிய கரைசல் ஆகும். எக்கரைசலில் சோடியம் குளோரைடை மேலும் கரைக்க முடியுமோ அது தெவிட்டாத கரைசல் ஆகும்.

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
கரைசல்களின் கன அளவு சதவீதம் வெப்பநிலை அதிகரிக்கும்போது குறைவதற்கான காரணம் [PTA-2]
(அ) திரவங்களின் வெப்ப விரிவு
(ஆ) திரவங்களின் குளிர் விளைவு
(இ) கரைசலின் செறிவு அதிகமாதல்
(ஈ) கரைசலின் செறிவு குறைதல்
விடை:
அ) திரவங்களின் வெப்ப விரிவு

Question 2.
25 விழுக்காடு (25%) எத்தனால் கரைசல் என்பது [PTA-4]
(அ) 25 மிலி எத்தனால் 100 மிலி நீரில் உள்ளது
(ஆ) 25 மிலி எத்தனால் 25 மிலி நீரில் உள்ளது
(இ) 25 மிலி எத்தனால் 75 மிலி நீரில் உள்ளது
(ஈ) 75 மிலி எத்தனால் 25 மிலி நீரில் உள்ளது
விடை:
இ) 25 மிலி எத்தனால் 75 மிலி நீரில் உள்ளது

2 மதிப்பெண்கள்

Question 1.
சேர்மம் A என்பது நிறமற்ற, படிக வடிவமுடைய, நீரேறிய மெக்னீசியதின் உப்பு ஆகும். இதை வெப்பப்படுத்தும் போது நீரற்ற உப்பாக மாறுகிறது. வெப்பப்படுத்தும்போது சேர்மம் A இழந்த நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை, பச்சை விட்ரியாலில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்குச் சமமானது.
(அ) சேர்மம் A-யை அடையாளம் காண்க.
(ஆ) இந்த வெப்பப்படுத்தும் வினைக்கான வேதிச் சமன்பாட்டைத் தருக.
விடை:
சேர்மம் A-மெக்னீசியம் சல்பேட் ஹெப்போஹைட்ரேட்வெப்பப்படுத்தும்போது 7 நீர்மூலக்கூறுகளை இழந்து MgSO4 என்ற நீரற்ற உப்பாக மாறுகிறது. பச்சை விட்ரியரிலில் உள்ள – (FeSO47H2O) 7 நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் சேர்மம் A இழந்த நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் சமம்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 75

Question 2.
300 கெல்வின் வெப்பநிலையில் 50 கிராம் நீரில் 10 கிராம் கரைபொருளைக் கரைத்து ஒரு தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது எனில் கரைபொருளின் கரைதிறனைக் கணக்கிடுக.
விடை:
கரைபொருளின் நிறை = 10 கி
கரைப்பானின் நிறை = 50 கி
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 76

7 மதிப்பெண்கள்

Question 1.
கரைசல்கள் உருவாதல் தொடர்பான கீழ்காணும் கூற்றை ஆராய்ந்து ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக. “ஒத்த கரைப்பான்கள் ஒத்த கரை பொருளைக் கரைக்கின்றன.”
விடை:
“ஒத்த கரைபொருட்கள் ஒத்த கரைப்பானில் கரைகிறது”

  1. கரைபொருளுக்கும் கரைப்பானுக்கும் இடையே ஒற்றுமை காணப்படும் போதுதான் கரைதல் நிகழ்கிறது. முனைவுறும் சேர்மங்கள் முனைவுறும் கரைப்பானில் எளிதில் கரைகிறது.
  2. எ.கா: சமையல் உப்பு முனைவுறும் சேர்மம். எனவே இது முனைவுறும் கரைப்பானான நீரில் எளிதில் கரைகிறது.
  3. முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறா கரைப்பானில் எளிதில் கரைகிறது.
  4. எ.கா. ஈதரில் கரைக்கப்பட்ட கொழுப்பு. ஆனால், முனைவுறாச் சேர்மங்கள் முனைவுறும் கரைப்பானில் கரைவதில்லை. அதுபோல, முனைவுறும் சேர்மங்கள் முனைவுறா கரைப்பானில் கரைவதில்லை.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள்

அரசு தேர்வு வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
காப்பர் (II) சல்பேட் பென்டாஹைட்ரேட்-ன் பொதுப் பெயர் ………. [Qy-2019]
அ) பச்சை விட்ரியால்
ஆ) நீல விட்ரியால்
இ) ஜிப்சம்
ஈ) எப்சம் உப்பு
விடை:
ஆ) நீல விட்ரியால்

2 மதிப்பெண்கள்

Question 1.
298 K வெப்பநிலையில் 15கி நீரில், 1.5கி கரைபொருளை கரைத்து ஒரு தெவிட்டிய கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதே வெப்பநிலையில் கரைப்பானின் கரைதிறனைக் கண்டறிக. [Qy-2019]
விடை:
கரைப்பானின் நிறை = 1.5 கி
கரைபொருளின் நிறை = 15 கி
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 80

4 மதிப்பெண்கள்

Question 1.
(அ) 100 கி. நீரில் 25 கி சர்க்கரையைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதன் கரைபொருளின் நிறை சதவீதத்தைக் காண்க.
[Sep.2020)
(ஆ) சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினைத் திருத்துக)
(i) அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய திரவ மருந்துகள், வாய் கழுவும் திரவங்கள், புரைத் தடுப்பான்கள், கிருமிநாசினிகள் போன்ற கரைசல்களில் உள்ள கரைபொருளின் அளவுகள் w/w என்ற பதத்தால் குறிப்பிடப்படுகிறது.
(ii) களிம்புகள், அமிலநீக்கிகள், சோப்புகள் போன்றவற்றில் உள்ள கரைசல்களின் செறிவுகள் v/v என்று குறிப்பிடப்படுகிறது.
விடை:
(அ) கரைபொருளின் நிறை = 25 கி
கரைப்பானின் நிறை = 100 கி
Samacheer Kalvi 10th Science Guide Chapter 9 கரைசல்கள் 85

(ஆ) (i) தவறு. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய திரவ மருந்துகள், வாய் கழுவும் திரவங்கள், புரைத் தடுப்பான்கள், கிருமிநாசினிகள் போன்ற கரைசல்களில் உள்ள கரைபொருளின் அளவுகள் v/v என்ற பதத்தால் குறிப்பிடப்படுகிறது.
(ii) தவறு. களிம்புகள், அமிலநீக்கிகள், சோப்புகள் போன்றவற்றில் உள்ள கரைசல்களின் செறிவுகள் W/W என்று குறிப்பிடப்படுகிறது.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 1 நமது பூமி Questions and Answers, Notes.

TN Board 5th Social Science Solutions Term 1 Chapter 1 நமது பூமி

5th Social Science Guide நமது பூமி Text Book Back Questions and Answers

I. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பூமிக்கும் சூரியனுக்குமிடையே உள்ள தொலைவு _____________ ஆகும்.
விடை:
150 மில்லியன் கிலோ மீட்டர்

Question 2.
பூமியின் சுழற்சியினால் _______________ ஏற்படுகிறது.
விடை:
பருவ காலங்கள்

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

Question 3.
பனியால் சூழப்பட்டுள்ள கண்டம் ______________ ஆகும்.
விடை:
அண்டார்டிக்கா

Question 4.
_______________ மிகப் பெரிய கண்டமாகும்.
விடை:
ஆசியா

Question 5.
செந்நிறக்கோள் என அழைக்கப்படுவது ______________
விடை:
செவ்வாய்

Question 6.
நம் பூமி _______________ சதவீதம் உப்பு நீரால் சூழப்பட்டுள்ளது.
விடை:
71%

II. பொருத்துக.

1. மிகச்சிறிய கண்டம் – தொலைவான கோள்
2. நீலக்கோள் – ஆஸ்திரேலியா
3. நெப்டியூன் – பூமி
விடை:
1. மிகச்சிறிய கண்டம் – ஆஸ்திரேலியா
2. நீலக்கோள் – பூமி
3. நெப்டியூன் – தொலைவான கோள்

III. சுருக்கமான பதில் :

Question 1.
புவியின் தோற்றம் வரையறு.
விடை:
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் வெடிப்பு” என்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டது. அதன் காரணமாக எண்ணிலடங்கா விண்மீன்களும் வான் பொருள்களும் தோன்றின. இவை அனைத்தும் பொதுவாக பேரண்டம் என அழைக்கப்பட்டது. இதனை அண்டம் என்று குறிப்பிடுகின்றனர்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

Question 2.
சூரிய மண்டலத்தை வரையறு.
விடை:
சூரியக் குடும்பத்தில் சூரியன் உட்பட எட்டு கோள்கள், மற்றும் அதன் துணைக்கோள்கள், குறுங்கோள்கள், எரிகற்கள், வால்நட்சத்திரங்கள் ஆகியவை உள்ளன. இந்த பொருள்கள் அனைத்தும் அதன் வலுவான ஈர்ப்பு விசையினால் பிணைக்கப்பட்டுள்ளன.

Question 3.
புவியில் எத்தனை பெருங்கடல்கள் உள்ளன?
விடை:
பூமியில் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் தெற்குக் கடல், ஆகிய ஐந்து பெருங்கடல்கள் உள்ளன.

Question 4.
வேறுபடுத்துக: சுற்றுதல் – சுழலுதல்
விடை:
பூமிக்கு இரண்டு இயக்கங்கள் உள்ளன. பூமி தன்னைத்தானே சுற்றுவதன் காரணமாக இரவும் பகலும் ஏற்படுகின்றன. பூமி சூரியனை சுற்றி வலம் வருவதினால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.

IV. பத்தி விடையளி:

Question 1.
பேரண்டம் பற்றி உனக்கு என்ன தெரியும்?
விடை:
பேரண்டம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பரந்தவெளி ஆகும். இப்பேரண்டமானது கோடிக்கணக்கான விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள், கோள்கள், வால் நட்சத்திரங்கள், விண்கற்கள், எரிகற்கள் மற்றும் துணைக்கோள்களை உள்ளடக்கியுள்ளது. பிரபஞ்சத்தின் துல்லியமான அளவு இன்னும் முழுவதுமாக அறியப்படவில்லை. பிரபஞ்சம் இன்னும் வெளிப்புறமாக விரிவடைந்து கொண்டேதான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

Question 2.
புவிக்கோளின் தன்மை பற்றி விவரி.
விடை:
பூமி சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள ஐந்தாவது பெரிய கோளாகும். பூமி தன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் அதே வேளையில் சூரியனைச் சுற்றி சுழன்று கொண்டும் வலம் வருகிறது.

பூமிக்கு இரண்டு இயக்கங்கள் உள்ளன. பூமி தன்னைத்தானே சுற்றுவதன் காரணமாக இரவும் பகலும் ஏற்படுகின்றன. பூமி சூரியனை சுற்றி வலம் வருவதினால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.

V. விரிவாக விடையளி

Question 1.
சூரிய குடும்பத்தின் படம் வரைந்து விளக்குக.
விடை:
நமது சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. வெளிக் கோள்கள் வாயுக்களால் ஆனவை. அவை வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன். உள்-பாறை கோள்கள் புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய் ஆகும். உறைந்திருக்கும் கோள்கள் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 1

VI. வசயல்யாகு

Question 1.
கண்டங்களைக் கண்டுபிடித்து அவற்றின் பெயரை எழுது.
விடை:
பூமியின் மேற்பரப்பில் நாம் வாழ்கிறோம். இது 7 கண்டங்களையும் 5 பெருங்கடல்களையும் உள்ளடக்கியது.

ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா – ஆகியவை ஏழு கண்டங்கள் ஆகும்.

நாம் வாழும் ஆசியக் கண்டம்தான் அனைத்திலும் மிகப் பெரியது. ஆஸ்திரேலியா, மிகச்சிறிய கண்டம். அண்டார்டிக்கா கண்டம் பனி நிறைந்தது.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 2

Question 2.
வரைபடத்தில் ஐந்து பெரிய கடல்களை குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 3

Question 3.
உலக வரைபடத்தில் பாலைவனங்கள் மற்றும் காடுகளை குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 4

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி

VII. வரைபடப்பயிற்சி:

Question 1.
உலக வரைபடத்தில் கண்டங்களின் பெயர்களை குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 நமது பூமி 2

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

10th Science Guide தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ……..
அ) 6, 16
ஆ) 7, 17
இ) 8, 18
ஈ) 7, 18
விடை:
ஈ) 7, 18

Question 2.
நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை …..
அ) அணு எண்
ஆ) அணு நிறை
இ) ஐசோடோப்பின் நிறை
ஈ) நியூட்ரானிக் எண்ணிக்கை
விடை:
அ) அணு எண்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Question 3.
ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது? (PTA-1)
அ) 17வது
ஆ) 15வது
இ) 18வது
ஈ) 16வது
விடை:
அ) 17வது

Question 4.
………………. என்பது ஆவர்த்த ன பண்பு
அ) அணு ஆரம்
ஆ) அயனி ஆரம்
இ) எலக்ட்ரான் நாட்டம்
ஈ) எலக்ட்ரான் கவர்தன்மை
விடை:
ஈ) எலக்ட்ரான் கவர்தன்மை

Question 5.
துருவின் வாய்ப்பாடு [Qy-2019]
அ) FeO × H2O
ஆ) FeO4 × H2O
இ) Fe2O3 × H2O
ஈ) FeO
விடை:
இ) Fe2O3 × H2O

Question 6.
அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு
அ) ஆக்ஸிஜனேற்றி
ஆ) ஆக்ஸிஜன் ஒடுக்கி
இ) ஹைட்ரஜனேற்றி
ஈ) சல்பர் ஏற்றி
விடை:
ஆ) ஆக்ஸிஜன் ஒடுக்கி

Question 7.
மெல்லிய படலமாக துத்தநாக படிவை பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு ……….. எனப்படும்.
அ) வர்ண ம் பூசுதல்
ஆ) நாகமுலாமிடல்
இ) மின்முலாம் பூசுதல்
ஈ) மெல்லியதாக்கல்
விடை:
ஆ) நாகமுலாமிடல்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Question 8.
கீழ்க்கண்ட மந்த வாயுக்களில் எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களை கொண்டது?
அ) He
ஆ) Ne
இ) Ar
ஈ) Kr
விடை:
அ) He

Question 9.
நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம்
அ) நியூட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு
ஆ) எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
இ) குறைந்த உருவளவு
ஈ) அதிக அடர்த்தி
விடை:
ஆ) எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்ப

Question 10.
இரசக் கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் (GMQP-2019)
அ) Ag
ஆ) Hg
இ) Mg
ஈ) AI
விடை:
ஆ) Hg

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு மூலக்கூறில் இரு பிணைப்புற்ற அணுக்கட்டு இடையில் உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.7க்கு மேல் எனில், பிணைப்பின் இயல்பு ………… ஆகும்.
விடை:
அயனித்தன்மை [PTA-5]

Question 2.
நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை ………. ஆகும்.
விடை:
அணு எண்]

Question 3.
தனிம வரிசை அட்டவணையில் மிக நீள் தொடர் …………… ஆகும்.
விடை:
6வது தொடர்

Question 4.
Cl2 மூலக்கூறில் உள்ள CI அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் 1.98A எனில் CI அணுவின் ஆரம்
விடை:
0.99A

Question 5.
A, A+ மற்றும் A இவற்றில் மிகச்சிறிய உருவ அளவு உள்ளது …..
விடை:
A+

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Question 6.
நவீன ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர் …………
விடை:
ஹென்றி மோஸ்லே

Question 7.
அயனி ஆரம், தொடரில் ……. (குறைகின்றது, அதிகரிக்கின்றது)
விடை:
குறைகின்றது

Question 8.
…………. மற்றும் ………….. ஆனது உள் இடைத் தனிமங்கள் எனப்படும்.
விடை:
லாந்தனைடுகள், ஆக்டினைடுகள்

Question 9.
அலுமினியத்தின் முக்கியத்தாது………. ஆகும்.
விடை:
பாக்சைட்

Question 10.
துருவின் வேதிப்பெயர்………. ஆகும்.
விடை:
நீரேற்றமடைந்த பெர்ரிக் ஆக்சைடு

III. பொருத்துக

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 1
விடை:
1- ஆ,
2- உ,
3-ஈ,
4-இ,
5-அ

V. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

Question 1.
மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணுநிறையைச் சார்ந்தது. [Qy-2019]
விடை:
தவறு.
சரியான கூற்று: மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணு எண்ணைச் சார்ந்தது

Question 2.
இடப்புறத்திலிருந்து வலப்புறம் செல்கையில் அயனி ஆரமானது தொடரில் அதிகரிக்கும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: இடப்புறத்திலிருந்து வலப்புறமாக செல்கையில் அயனி ஆரம் குறைகிறது.

Question 3.
எல்லா தாதுக்களும் கனிமங்களே. ஆனால் எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆகா.
விடை:
சரி.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Question 4.
அலுமினியக்கம்பிகள், மின்கம்பிகள் உருவாக்க பயன் படுவதன் காரணம் அதன் வெள்ளியைப் போன்ற நிறமே.
விடை:
தவறு.
சரியான கூற்று: அலுமினியக்கம்பிகள், மின் கம்பிகள் உருவாக்க பயன்படுவதன் காரணம் அதன் கடத்தும் திறனே.

Question 5.
உலோகக் கலவை என்பது உலோகங்களின் பல படித்தான கலவை ஆகும். [Qy-2019]
விடை:
தவறு.
சரியான விடை: உலோகக்கலவை என்பது உலோகங்களின் ஒருபடித்தான கலவை ஆகும்.

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

கீழ்க்கண்ட வினாக்களை, கீழ்க்கண்ட குறிப்புகள் மூலம் விடையளிக்கவும்.

(i) கூற்றும் காரணமும் சரியானது. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
(ii) கூற்று சரி, காரணம் தவறு.
(iii) கூற்று தவறு, காரணம் சரி.
(iv) கூற்றும் காரணமும் சரி. ஆனால், காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

Question 1.
கூற்று: HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு.
காரணம் : ‘H’ க்கும் ‘F’ க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9
விடை:
(iii) கூற்று தவறு, காரணம் சரி.
குறிப்பு: HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு, முனைவுறும் சகப்பிணைப்பு (Polar Covalent bond) ஆகும்.

Question 2.
கூற்று: மெக்னீசியத்தை இரும்பின் மீது பூசுவதால், துருப்பிடித்தலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
காரணம்: மெக்னீசியம், இரும்பைவிட வினைபுரியும் தன்மைமிக்கது.
விடை:
(i) , கூற்றும் காரணமும் சரியானது. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.

Question 3.
கூற்று : சுத்தப்படுத்தப்படாத தாமிர பாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது
காரணம்: தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை.
விடை:
(iv) கூற்றும் காரணமும் சரி. ஆனால், காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
A என்பது செம்பழுப்பு உலோகம் இது. ‘O2‘ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில், B என்ற கருமையான சேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A-யானது சிவப்பு நிற C-ஐ உருவாக்கும் எனில் A, B, C என்னவென்று வினைகளுடன் விளக்குக. [PTA-1]
விடை:
செம்பழுப்பு உலோகம் A என்பது தாமிரம் (காப்பர்) ஆகும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 25
முடிவு:-
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 26

Question 2.
A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A-ஆனது ‘O2‘ உடன் 800°C-யில் வினைபுரிந்து B-யை உருவாக்கும். A-யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள் செய்யப் பயன்படும். A மற்றும் B என்ன?
விடை:
வெள்ளியின் வெண்மை கொண்ட A உலோகம் அலுமினியம் ஆகும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 27
முடிவு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 28

Question 3.
துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக. (PTA-4)
விடை:

  1. இரும்பானது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பழுப்பு நிற, நீரேறிய பெர்ரிக் ஆக்சைடை உருவாக்குகிறது.
  2. இச்சேர்மமே துரு எனப்படும். இந்நிகழ்ச்சி துருபிடித்தல் எனப்படும்.
    4Fe + 3O2 + x H2O → 2 Fe2O3.xH2O
    (துரு)

Question 4.
இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களை தருக.
விடை:

  1. ஆக்ஸிஜன் (காற்று)
  2. நீர்

VII. விரிவாக விடையளி.

Question 1.
அ) பாக்சைட் தாதுவை தூய்மையாக்கும் போது அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு காரத்தை சேர்ப்பதன் காரணம் என்ன?
விடை:

  1. பாக்சைட் தாதுவினை நன்கு தூளாக்கி, சலவை சோடாவுடன் 150°C வெப்பநிலையில், குறிப்பிட்ட அழுத்தத்தில் வினைப்படுத்தும்போது, சோடியம் மெட்டா அலுமினேட் உருவாகிறது.
    Al2O3 + 2 NaOH → 2NaAlO2 + H2O
  2. இதனை நீரினால் நீர்க்கச் செய்து அலுமினியம் ஹைட்ராக்சைடு பெறப்படுகிறது.
  3. இதனை 1000°C வெப்பநிலையில் உலர்த்திட, அலுமினா உருவாகிறது.
  4. அலுமினாவை மின்னாற்பகுப்பு மூலம் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது.
  5. ஆக்சைடை, ஹைட்ராக்சைடாக மாற்றி ஒடுக்குவதற்காக பாக்சைட் தாதுவை தூய்மையாக்கும் போது அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு காரம் சேர்க்கப்படுகிறது.

ஆ) அலுமினா மற்றும் கிரையோலைட்டுடன், இன்னும் ஒரு பொருள், மின்பகுளியுடன் சேர்க்கப்பட்டு அலுமினியம் பிரிக்க உதவுகிறது. அது என்ன? அதற்கான காரணம் என்ன?
விடை:

  1. அலுமினா மற்றும் கிரையோலைட்டுடன் சேர்க்கப்படும் மற்றொரு மின்பகுளி ஃப்ளூரஸ்பார் ஆகும்.
  2. இது மின்பகுளியின் உருக்கு வெப்ப நிலையைக் குறைக்கிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Question 2.
ஒரு உலோகம் A-யின் எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் 2,8,18,1 ஆகும். A-ஆனது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பச்சை படலத்தை உருவாக்கும். A அடர் H2SO4 உடன் வினைபுரிந்து C மற்றும் D ஐ உருவாக்கும். D யானது வாயுநிலை சேர்மம் எனில் A, B, C மற்றும் D எவை?
விடை:
உலோகம் A ஆனது காப்பர் ஆகும்.
2Cu + O2 + CO2 + H2O → CuCO3. Cu (OH)2
(B) (கார காப்பர் கார்பனேட்)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 50
முடிவு:-
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 51

Question 3.
ஊது உலையில் உருக்கிப் பிரிதலை விவரி.
விடை:
ஊது உலையில் உருக்கிப்பிரித்தல் : வறுக்கப்பட்ட தாது, கல்கரி, சுண்ணாம்புக்கல் இவற்றை 8 : 4 : 1 என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு, உலையின் மேலுள்ள கிண்ணக் கூம்பு அமைப்பு வழியாக, செலுத்தப்படுகிறது. உலையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன.
கீழ்ப்பகுதி (எரிநிலை மண்டலம்) :

  1. இந்தப் பகுதியின் வெப்பநிலை 1500°C ஆகும் வெப்பக் காற்றுடன் தாதுக்கலவை சேரும்போது, ஆக்சிஜனுடன் எரிந்து CO2வாக மாறுகிறது.
  2. இவ்வினையிலிருந்து வெப்ப ஆற்றல் வெளியாவதால் வெப்ப உமிழ் வினை எனப்படும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 53

நடுப்பகுதி அல்லது உருக்கு மண்டலம்

(i) இப்பகுதி 1000°C வெப்பவினையில் உள்ளது. இங்கு CO2 ஆனது CO ஆக ஒடுக்கமடைகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 52
(ii) சுண்ணாம்புக்கல் சிதைந்து, கால்சியம் ஆக்சைடையும் CO2– வையும் தரும்.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 53.2

(iii) மேற்கண்ட இருவினைகளில், வெப்பம் உட்கவரப்படுவதால் வெப்ப கொள்வினைகள் ஆகும். கால்சியம் ஆக்சைடு மணலுடன் சேர்ந்து கால்சியம் சிலிகேட் எனும் கசடாகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 54

மேற்பகுதி (ஒடுக்கு மண்டலம்)

(i) இப்பகுதியில் 400°C வெப்பநிலையில் ஃபெரிக் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மூலம் இரும்பாக ஒடுக்கம் அடைகிறது.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 55

(ii) கசடை நீக்கிய பிறகு, உருக்கிய இரும்பானது, உலையின் அடியில் சேகரிக்கப்படுகிறது. இவ்விரும்பு மீண்டும் உருக்கப்பட்டு விதவித அச்சுக்களில் வார்க்கப்படுதால், இது வார்ப்பிரும்பு எனப்படும்.

VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

Question 1.
A என்ற உலோகம் 3-ஆம் தொடரையும் 13ம் தொகுதியையும் சார்ந்தது. செஞ்சூடேறிய A நீராவியுடன் சேர்ந்து B யை உருவாக்கும். உலோகம் A-யானது NaOH உடன் சேர்ந்து C-ஐ உருவாக்கும் எனில் A,B,C எவை எவை என வினைகளுடன் எழுதுக.
[PTA-1]
விடை:
3-ஆம் தொடரையும் 13ம் தொகுதியையும் சார்ந்த உலோகம் அலுமினியம் (A).
2 Al + 3H2O → Al2O3 + 3H2
(B)
(அலுமினியம் ஆக்சைடு)
2A1 + 2 NaOH + 2 H2O → 2 NaAlO2 + 3H2
(C)
(சோடியம் மெட்டா அலுமினேட்)
முடிவு:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 58

Question 2.
எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும், ஏன்? [PTA-3; Qy-2019]
விடை:

  1. நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம் அலுமினிய உலோகத்துடன் வினைபுரியாது.
  2. மாறாக, அலுமினியத்தின் மேல் ஆக்சைடு படலம் உருவாவதால், அதன் வினைபடும் திறன் தடுக்கப்படுகிறது.

Question 3.
(a) HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
(b) இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
(c) இப்பண்பு தொடரிலும் தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?
விடை:
(a) முனைவுறும் சகப்பிணைப்பு (Polar covalent bond)
(b) எலக்ட்ரான் கவர்தன்மை
(c)

  1. தொடரில், இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லும்போது எலக்ட்ரான் கவர்தன்மை அதிகரிக்கும். ஏனெனில் அணுக்கரு மின்சுமை அதிகரிக்கும் போது எலக்ட்ரான் கவர்ச்சி விசை அதிகமாகும்.
  2. தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்தன்மை குறைகிறது. ஏனெனில் ஆற்றல் மட்டத்தின் எண்ணிக்கை அதிகமாகிறது.

PTA மாதிரி வினா-விடை

2 மதிப்பெண்கள்

Question 1.
காப்பர் ஒரு செம்பழுப்பு நிற உலோகம், காப்பர், ஆக்ஸிஜனுடன் 1370K-ஐ விடக் குறைந்த வெப்பநிலையில் வினைபுரிந்து கருமைநிற A என்ற சேர்மத்தைத் தருகிறது. காப்பர், ஆக்சிஜனுடன், 1370K ஐ விட உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து சிவப்பு நிற சேர்மம் B-ஐத் தருகிறது. A, B உருவாகும் வினைகளுக்கான சமன் செய்யப்பட்ட வேதிச் சமன்பாடுகளை எழுதுக. [PTA-4]
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 60

Question 2.
(i) ‘X’ என்ற தனிமம் நவீன தனிம வரிசை அட்டவணையில் 1-வது தொகுதியை சேர்ந்தது. X என்பது ஒரு வாயு மேலும் அதனுடைய சகபிணைப்பு ஆர மதிப்பு 0.37A°. Xஐக் கண்டறிந்து அதன் வேதிக் குறியீட்டை எழுதுக. [PTA-6]
விடை:
ஹைட்ரஜன் – 1வது தொகுதி தனிமம். சகப்பிணைப்பு ஆர மதிப்பு 0.37A° கொண்ட தனிமம். ஹைட்ரஜனின் வேதி குறியீடு – H. ஹைட்ரஜன் மூலக்கூறின் குறியீடு – H2.

(ii) A என்ற ஓர் உலோகம் நவீன தனிமவரிசை அட்டவணையில் போரான் குடும்பத்தை
சேர்ந்தது மற்றும் சிறந்த ஒடுக்கியாக செயல்படக் கூடியது. இது இரும்பு ஆக்சைடை இரும்பாக ஒடுக்குகிறது. மேலும் இது சமையல் பாத்திரங்கள் செய்யப் பயன்படுகிறது. A என்ற உலோகம் இரும்பு ஆக்சைடை ஒடுக்குவதற்கான சமன் செய்யப்பட்ட வேதிச் சமன்பாட்டை எழுதுக. [PTA-6]
விடை:
போரான் குடும்பத்தை சேர்ந்தது.
இரும்பு ஆக்சைடை இரும்பாக ஒடுக்குகிறது.
Fe2O2 + 2Al → 2Fe + Al2O3 + வெப்ப ஆற்றல்
அலுமினியம், சமையல் பாத்திரங்கள் செய்வதற்கு பயன்படுகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Question 3.
(i) பின்வரும் கூற்றுகளிலிருந்து தனிம வரிசை அட்டவணையில் அவை எந்த தொகுதியைச் சேர்ந்தவை எனவும், அத்தொகுதியைச் சேர்ந்த ஏதேனும் இரண்டு தனிமங்களின் பெயர்களைத் தருக. (PTA-1)
அ) இந்தத் தொகுதி தனிமங்களின் அணுக்கள் மிகவும் நிலையான எலக்ட்ரான் அமைப்பைக் கொண்டவை.
ஆ இந்தத் தொகுதி தனிமங்கள் பெரும்பாலும் வேதி வினைகளில் ஈடுபடுவது இல்லை.
விடை:
18வது தொகுதித் தனிமங்கள் (அல்லது) பூஜ்ஜியத் தொகுதித் தனிமங்கள் – He, Ne, Ar, Kr.

Question 4.
காப்பர் பைரைட்டுகள் காப்பரின் முதன்மையான தாது ஆகும். இது நுரைமிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது. காரணங்கள் தருக.
[PTA-4]
விடை:
காப்பர் பைரைட்டுகள் காப்பரின் முதன்மையான தாதுவாகும். இது நுரைமிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
நுரைமிதப்பு முறை: பைன் ஆயிலின் மூலம் தாதுக்களையும், நீரின் மூலம் தாதுக்கூளங்களையும் எந்த அளவிற்கு எளிதில் ஈரப்பதம் ஏற்ற முடியுமோ, அதுவே, இம்முறையின் தத்துவமாகும். லேசான தாதுக்களான, சல்பைடு தாதுக்கள், இம்முறையில் அடர்ப்பிக்கப்படுகின்றன.

(ii) எ.கா ஜிங்க் ப்ளன்ட் ZnS முறை:
நன்கு தூளாக்கப்பட்ட தாதுவானது, எண்ணெயும், நீரும் கொண்ட ஒரு பெரிய தொட்டியில் இடப்பட்டு, அவற்றின் மேல் நன்கு அழுத்தப்பட்ட காற்று செலுத்தப்படுகின்றது. தாதுவானது எண்ணெயின் மூலம் ஈரப்படுத்தப்பட்டு நுரைவடிவில், தாதுக் கூளத்திலிருந்து பிரிக்கப்படுகின்றது. வெளிப்பரப்பிற்கு வந்துவிடும், மாசுக்கள் அடியில் தங்கிவிடும். எ.கா. ஜிங்க் ப்ளன்ட் (ZnS).
Samacheer Kalvi 10th Science Guide Chapter 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 58.2

7 மதிப்பெண்கள்

Question 1.
தனிமங்களின் நவீன ஆவர்த்தன அட்டவணையில் காணப்படும் ஆவர்த்தன பண்புகள் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளுக்கான விளக்கங்களைத் தருக. [PTA-6]
(அ) ஒரு தொடரில் இடமிருந்து வலமாக செல்லும்போது அணு ஆரமதிப்புகள் குறைகின்றன. ஆனால் ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும்போது அவை அதிகரிக்கின்றன.
(ஆ) எலக்ட்ரான் நாட்டத்தின் மதிப்புகள் ஒரு தொடரில் இடமிருந்து வலமாக செல்லும் போது அதிகரித்தும் ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது குறைந்தும் காணப்படுகின்றன.
(இ) அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் ஒரு தொடரில் இடமிருந்து வலமாக செல்லும்போது அதிகரித்தும் ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாகச்செல்லும் போது குறைந்தும் காணப்படுகின்றன.
விடை:
(அ) மேலிருந்து கீழாக அணு ஆரம் அதிகரிக்கிறது.
காரணம்: வெளிக்கூட்டு எண் அதிகரிப்பது.
இடமிருந்து வலமாக அணு ஆரம் குறைகிறது.
காரணம்: வெளிக்கூட்டு எண் மாறாது. எனினும், புரோட்டான்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை அதிகரித்து, அணுவின் உருவளவு சுருங்குகிறது.

(ஆ) மேலிருந்து, கீழாக எலக்ட்ரான் நாட்டம் குறைகிறது.
காரணம் : அணு ஆரம் அதிகரிப்பதால், வெளிக்கூட்டு எலக்ட்ரான்கள் இலகுவாக பிணைக்கப்பட்டிருக்கின்றன. எனவே எலக்ட்ரான் நாட்டம் குறைகிறது.
இடமிருந்து, வலமாக எலக்ட்ரான் நாட்டம் அதிகரிக்கிறது.
காரணம் : அணு ஆரம் குறைவதால் எலக்ட்ரான் நாட்டம் அதிகரிக்கிறது.

(இ) இடமிருந்து வலமாக அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது.
காரணம் : இடமிருந்து வலமாக செல்லும்போது அணு ஆரம் குறைவதால், எலக்ட்ரான்களை நீக்குவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. மேலிருந்து கீழாக அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
காரணம் : அணு ஆரம் அதிகரிப்பதால், வெளிக்கூட்டு எலக்ட்ரான்கள் இலகுவாக பிணைக்கப்பட்டிருக்கின்றன. எனவே எலக்ட்ரான்களை நீக்குவதற்கு குறைவாக ஆற்றல் தேவைப்படுகிறது.

அரசு தேர்வு வினா-விடை

4 மதிப்பெண்கள்

Question 1.
அரிமானத்தை தடுக்கும் வழிமுறைகளை எழுது. [Hy-2019; Sep.20]
விடை:
1. உலோகக் கலவையாக்கல்:
உலோகங்களை ஒன்றோடொன்று கலந்து கலவையாக்கல் மூலம், அரிமானத்தை தடுக்கலாம்.
எ.கா. துருப்பிடிக்கா இரும்பு.
2. புறப்பரப்பை பூசுதல் :
உலோகத்தின் மீது பாதுகாப்புக் கலவை பூசுதல் அரிமானத்தை தடுக்கும். இதன் வகைகளாவன
அ. நாகமுலாம் பூசுதல் : இரும்பின் மீது துத்தநாக மின் முலாம் பூசுவதற்கு நாகமுலாம் பூசுதல் என்று பெயர்.
ஆ. மின்முலாம் பூசுதல் : ஒரு உலோகத்தை மற்றொரு உலோகத்தின் மேல், மின்சாரத்தின் மூலம் பூசுதல் மின்முலாம் பூசுதல் ஆகும்.
இ. ஆனோட்டாக்கல் : உலோகத்தின் புறப் பரப்பை, மின் வேதிவினைகளின் மூலம், அரிமான எதிர்ப்புள்ளதாய் மாற்றும் நிகழ்வு ஆனோடாக்கல் ஆகும். அலுமினியம் இந்த முறைக்கு பயன்படுகிறது.
ஈ. கேத்தோடு பாதுகாப்பு: எளிதில் அரிமானம் அடையும் உலோகத்தை ஆனோடாகவும், பாதுகாக்க வேண்டிய உலோகத்தைக் கேத்தோடாகவும் கொண்டு, மின் வேதி வினைக்கு உட்படுத்தும் நிகழ்வு கேத்தோடு பாதுகாத்தல் ஆகும். இவ்வினையில் எளிதில் அரிபடும் உலோகம் தியாக உலோகம் எனப்படும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 3 காற்று

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 3 Chapter 3 காற்று Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 3 Chapter 3 காற்று

5th Science Guide காற்று Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
குளோரோபுளுரோகார்பன் _______________ யில் உபயோகப்படுத்தப்படுகிறது.
அ. குளிர்சாதனப் பெட்டி
ஆ. ஏ.சி
இ. இரண்டிலும்
ஈ. எதிலும் இல்லை
விடை:
அ. குளிர்சாதனப் பெட்டி

Question 2.
மோட்டார் வாகனங்களால் வெளியேற்றப்படும் வாயு _______________
அ. கார்பன் மோனாக்சைடு
ஆ. ஆக்சிஜன்
இ. ஹைட்ரஜன்
ஈ. நைட்ரஜன்
விடை:
அ. கார்பன் மோனாக்சைடு

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 3 காற்று

Question 3.
காற்றாலையானது ______________ தயாரிக்கப் பயன்படுகிறது.
அ. வேதி ஆற்றல்
ஆ. இயந்திர ஆற்றல்
இ. மின் ஆற்றல்
ஈ. அனைத்தும்
விடை:
இ. மின் ஆற்றல்

Question 4.
குளிர் காய்ச்சல் _____________ ஆல் வருகிறது.
அ. பூஞ்சை
ஆ. பாக்டீரியா
இ. வைரஸ்
ஈ. புரோடோசோவா
விடை:
இ. வைரஸ்

Question 5.
படை மண்டலத்திற்கு அடுத்து காணப்படும் இடை மண்டலத்தின் உயரம் ______________
அ. 70 -75 கி.மீ
ஆ. 75-80 கி.மீ
இ. 80 -85 கி. மீ
ஈ . 85-90 கி.மீ
விடை:
ஆ. 75-80 கி.மீ

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
வளிமண்டலத்தின் இரண்டாவது பெரிய அடுக்கு _____________ ஆகும்.
விடை:
வெப்ப வளி மண்டலம்

Question 2.
வேதிச் சேர்மங்களை வளிமண்டலத்திற்குள் வெளியிடுவது _____________ எனப்படும்.
விடை:
மாசுபடுதல்

Question 3.
காற்றின் மூலம் பரவும் நோய்கள் ____________ தோன்றுகின்றன.
விடை:
பாக்டீரியாக்கள், வைரஸ்களால்

Question 4.
________________ வளிமண்டல அடுக்கானது நம்மை புறஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
விடை:
ஓசோன் அடுக்கு காணப்படும் படை மண்டல

Question 5.
______________ தாவரங்களால் நைட்ரேட்டுகளாக உபயோகப்படுத்தப்படுகிறது.
விடை:
காற்றில் உள்ள நைட்ரஜன்

III. பொருத்துக

1. அடி வளிமண்டலம் – செயற்கைக்கோள்
2. படைமண்டலம் – விண்கலம்
3. புற வளிமண்டலம் – ஓசோன் அடுக்கு
4. வெப்ப மண்டலம் – விண்கற்கள்
5. இடை மண்டலம் – காலநிலை மாற்றம்
விடை:
1. அடி வளிமண்டலம் – காலநிலை மாற்றம்
2. படைமண்டலம் – ஓசோன் அடுக்கு
3. புற வளிமண்டலம் – விண்கலம்
4. வெப்ப மண்டலம் – செயற்கைக்கோள்
5. இடை மண்டலம் – விண்கற்கள்

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
வளிமண்டலத்தின் அடுக்குகள் யாவை?
விடை:
வளிமண்டலம் ஐந்து வெவ்வேறு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கீழிருந்து மேலாக அவை: அடி வளிமண்டல அடுக்கு, படை மண்டலம், இடை மண்டலம், வெப்ப வளி மண்டலம் மற்றும் வெளி அடுக்கு ஆகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 3 காற்று

Question 2.
காற்று மாசுபாடு என்றால் என்ன?
விடை:
உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பொருள்கள் காற்றில் காணப்படுவதையே காற்று மாசுபடுதல் என்கிறோம். கார்பன் மோனாக்கைடு, சல்ஃபர் ஆக்ஸைடு போன்ற வாயுக்களும், தீங்கு விளைவிக்கும் சிறு துகள்கள், தூசுகள் மற்றும் வாயு அல்லது திரவத்துடன் கலந்துள்ள மிகச் சிறிய திண்மத் துகள்களும் காற்றில் கலக்கும் போது காற்று மாசுபாடு அடைகிறது.

Question 3.
காற்றின் மூலம் பரவும் சில நோய்களைக் கூறுக.
விடை:
காற்று மாசுபாடு அநேக சுவாச நோய்களையும், இதய நோய்களையும் உருவாக்குகிறது. காற்று மாசுபாட்டினால் அநேக மக்கள் இறந்துள்ளனர். காற்று மாசுபடுத்திகள் குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் ஆஸ்த்மா போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.

Question 4.
புவி வெப்பமயமாதல் என்றால் என்ன?
விடை:
காற்று மாசுபாடு காரணமாக கார்பன் டைஆக்சைடின் அளவு – வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. இது பூமியிலிருந்து வெளியேறும் வெப்பத்தைத் தடுத்து மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்புவதால் வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிக்கிறது.

Question 5.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வழிகள் யாவை?
விடை:
மோட்டார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் புகை படிவ எரிபொருள்கள் எரிப்பதைக் குறைத்தல்

V. விரிவாக விடையளி

Question 1.
காற்றின் முக்கியத்துவத்தை விவரி.
விடை:
நீர் சுழற்சி :
காற்றிலுள்ள நீராவியே நீர் சுழற்சி ஏற்படக் காரணமாகிறது. ஏரிகள் மற்றும் பெருங்கடல் போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகி நீராவியாக மாறுகிறது. இந்த நீராவியானது பின்னர் மேகங்களை உருவாக்குகின்றது. இந்த மேகங்கள் நிலத்தை நோக்கி நகர்ந்து, குளிர்வடைந்து நமக்கு மழைப் பொழிவைத் தருகின்றன. மேகங்களின் இந்த நகர்வு காற்றினால் ஏற்படுகிறது.

ஆற்றல்:
நாம் காற்றிலுள்ள ஆக்சிஜனை சுவாசிக்கிறோம். அது நமது உடலிலுள்ள திசுக்களுக்கு வழங்கப்படுகிறது. உடல் செல்கள் ஆக்சிஜனின் உதவியால் உணவு மூலக்கூறுகளை எரித்து நமக்குத் தேவையான ஆற்றலை அளிக்கின்றன. இந்த ஆற்றலின் உதவியால் நாம் பல்வேறு வேலைகளைச் செய்கிறோம்.

காற்றின் வழியே ஒலி பயணிக்கிறது
நாம் நமது சுற்றுப்புறத்திலிருந்து பல்வேறு ஓசைகளைக் கேட்கிறோம். மேலும், நாம் பேசுவதை பிறர் கேட்கின்றனர். இவை காற்றின் மூலமே நடைபெறுகின்றன.

தாவரங்களுக்குப் பயன்படுதல் :
காற்றிலுள்ள நைட்ரஜன் தாவரங்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது. நைட்ரஜனாக்கம் எனும் செயல்முறையின் மூலம் காற்றிலுள்ள நைட்ரஜன் நைட்ரேட்டுகளாக மாற்றமடைகிறது. இந்த நைட்ரேட்டுகள் தாவர வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. மேலும் காற்றானது தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடை பெறுவதற்கும் உதவுகிறது. அயல் கரந்தச் சேர்க்கைக்கும் காற்று உதவுகிறது.

போக்குவரத்து :
வாயுக்களின் நகர்வு காற்று என்று அழைக்கப்படுகிறது. கப்பல் மற்றும் படகுகள் கடலில் பயணிக்க காற்று உதவுகிறது. விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் காற்றிலேயே பயணிக்கின்றன.

விளையாட்டுகள் :
பாராகிளைடிங் என்பது பொழுதுபோக்கு மற்றும் சாகசம் செய்யும் விளையாட்டுப் போட்டி ஆகும். தொங்கு கிளைடிங் என்பதும் ஒரு வகை விளையாட்டு ஆகும். இந்த இரு விளையாட்டுகளுமே காற்றின் உதவியோடுதான் நடை பெறுகின்றன. மற்ற விளையாட்டுகளான கட்டைகளைக் கொண்டு கடல் அலைகளின் மீது சீறிப் பாய்தல், பட்டம் விடுதல் மற்றும் பாய்மரக் கப்பலில் பயணித்தல் போன்றவையும் காற்றின் உதவியோடுதான் நடைபெறுகின்றன.

பாராசூட்டுகளும் வெப்பக் காற்று பலூன்களும்
பாராசூட் மற்றும் வெப்பக் காற்று பலூன்கள் மேலிருந்து கீழே இறங்குவதற்கு உதவி புரிகின்றன. ஆபத்தான அவசர காலங்களில் மக்கள் பாராசூட்டைப் பயன்படுத்தி காற்றின் உதவியுடன் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் கீழே இறங்குகிறார்கள்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 3 காற்று

காற்று ஆற்றல் :
வாயுக்கள் அழுத்தம் அதிகம் உள்ள இடத்திலிருந்து அழுத்தம் குறைந்த இடத்திற்குச் செல்கின்றன. இந்த ஓட்டத்திற்கு காற்று என்று பெயர். காற்றாலைகளின் உதவியுடன் மின்சாரம் தயாரிக்க காற்று உதவுகிறது.

Question 2.
காற்றின் மூலம் பரவும் நோய்கள் மூன்றை விளக்குக.
விடை:
காசநோய் (டிபி), வயிற்றுப்போக்கு மற்றும் குத்து இருமல் போன்றவை பாக்டீரியாக்களால் தோன்றி காற்றின் மூலம் பரவும் பொதுவான நோய்கள் ஆகும்.

காசநோய் (டிபி) :
காசநோயானது மைக்கோபாக்டீரியம் டியபூர்குலோசிஸ் என்னும் பாக்டீரியா மூலம் தோன்றுகிறது. நாம் சுவாசிக்கும்போது காற்றிலுள்ள பாக்டீரியாக்கள் நமது நுரையீரலுக்குள் சென்று அதைப் பாதிக்கின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை காசநோய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொண்டை அடைப்பான் நோய் (டிப்தீரியா) :
இது கார்னி பாக்டீரியம் டிப்தீரியா எனும் பாக்டீரியாவால் உருவாகிறது. இது பொதுவாக மேல் சுவாசப் பாதையைப் (மூக்கு மற்றும் தொண்டை) பாதித்து காய்ச்சல், தொண்டைப் புண் மற்றும் மூச்சு அடைத்தல் போன்றவற்றை உருவாக்குகிறது.

கக்குவான் இருமல் :
இந்த வகை இருமல் போர்டெல்லா பெர்டுசிஸ் எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இதுவும் சுவாசப் பாதையைப் பாதித்து இலேசான காய்ச்சல் மற்றும் ஓசையுடன் கூடிய அதிகப்படியான இருமல் ஆகியவற்றை உண்டாக்குகிறது.

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
வளிமண்டலம் இல்லாவிட்டால் நமது பூமியின் நிலை என்ன ?
விடை:

  1. சுவாசிப்பதற்கு காற்று இல்லாததால் எந்த உயிரினமும் பூமியின் மீது வாழமுடியாது.
  2. காற்று இல்லாவிட்டால் மேகம், மழை எதுவுமின்றி பூமி காய்ந்து கிடக்கும்.
  3. பூமியானது சரமாரியாக விழும் விண்கற்களால் இரவும் பகலும் தாக்கப்படும்.
  4. கதிரவன் வெளியிடும் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியைத் தாக்கி ஊறு விளைவிக்கும்.
  5. காற்று என்ற ஊடகம் இல்லாவிட்டால் ஒலி பரவாது. எனவே எந்த ஓசையையும் குரலையும், இசையையும் கேட்க முடியாது.

Question 2.
காற்று மாசுபாட்டைத் தவிர்க்க சில வழிமுறைகளைக் கூறுக.
விடை:
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நாம் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பெருமளவு காற்று மாசுபடுத்திகள் மோட்டார் – வாகனங்களிலிருந்தே வெளியிடப்படுகின்றன. பொதுப் போக்குவரத்து வாகனங்களை உபயோகிப்பதன் மூலம் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைக்கலாம். நாம் உபயோகிப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் உபயோகிக்க ஊக்கப்படுத்தவேண்டும்.

புதை படிவ எரிபொருள்களை எரிப்பதைக் குறைப்பதன் மூலம் நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம். புதுப்பிக்க முடியாத ஆற்றலத் தவிர்த்து, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களாகிய சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றல் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம். நாம் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளவேண்டும். சில பொருள்களை மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம் அல்லது மறுசுழற்சி செய்யலாம்.

உபயோகப்படுத்தாத நேரங்களில் மின்விசிறி மற்றும் மின்விளக்குகளை அணைத்து வைக்கலாம்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 3 காற்று

ஸிஎஃப்எல் CFL விளக்குகளுக்கு மிகக் குறைந்த அளவு மின்சாரமே தேவை. எனவே அவற்றை உபயோகிப்பதன் மூலம் மின்னாற்றலைச் சேமிக்கலாம்.

அதிக அளவு மரங்களை நடுவதன் மூலம் நாம் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்சைடின் அளவைக் குறைக்கலாம்.

5th Science Guide காற்று Additional Important Questions and Answers

Question 1.
வளிமண்டலத்தின் அடுக்குகள் யாவை?
விடை:
அடி வளிமண்டல அடுக்கு, படை மண்டலம், இடை மண்டலம், வெப்ப வளி மண்டலம், வெளி அடுக்கு (அயனி அடுக்கு)

Question 2.
வானிலை மாற்றங்கள் வளிமண்டலத்தில் எங்கே ஏற்படுகின்றன?
விடை:
அடிவளி மண்டலத்தில்தான் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் மேகம், மழை, பனி ஆகியவை உருவாகின்றன.

Question 3.
ஓசோன் அடுக்கு எங்கே உள்ளது? இதன் பயன் யாது?
விடை:
ஓசோன் அடுக்கு படை மண்டலத்தில் உள்ளது. இது கதிரவனின் புற ஊதாக் கதிர்களை ஈர்த்து, அதனால் ஏற்படும் தீங்குகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

Question 4.
நீர் சுழற்சிக்கு உதவுவது எது?
விடை:
காற்றில் உள்ள நீராவியே நீர் சுழற்சிக்கு உதவுகிறது.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 3 காற்று

Question 5.
ஒலியை நம்மால் எவ்வாறு கேட்க முடிகிறது?
விடை:
ஒலி பரவ ஓர் ஊடகம் தேவை. இதற்கு காற்று ஓர் ஊடகமாக அமைவதால் நம்மால் ஒலியைக் கேட்க முடிகிறது.

Question 6.
காற்றின் உதவியால் நடக்கும் விளையாட்டுகள் எவை?
விடை:
பாராகிளைடிங், தொங்கு கிளைடர், பட்டம் விடுதல், பாய்மரம் செலுத்துதல் ஆகியவை காற்றின் உதவியால் நடைபெறுகின்றன.

Question 7.
காற்று மாசுபாடு அடையக் காரணமானவை எவை?
விடை:
கார்பன் மோனாக்சைடு, சல்ஃபர் ஆக்சைடு, துகள்கள், தூசிகள்

Question 8.
உலக வெப்பமயமாதலின் முக்கிய காரணம் என்ன?
விடை:
வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பதால் அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது.

Question 9.
அமிலமழை எவ்வாறு உருவாகிறது?
விடை:
மழை பெய்யும்போது காற்றில் உள்ள நைட்ரஜன் மற்றும் சல்பர் ஆக்சைடுகள் மழைநீரில் கலந்து அமிலமாக மாறி பூமியில் விழுகின்றன.

Question 10.
வைரஸ்களால் தோன்றும் நோய்கள் எவை?
விடை:
சாதாரண சளி, குளிர் காய்ச்சல் (ஃபுளு), அம்மைக் கட்டு, தட்டம்மை, மணல்வாரி அம்மை.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 3 Chapter 2 விலங்குகள் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 3 Chapter 2 விலங்குகள்

5th Science Guide விலங்குகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
பிரிதல் என்பது ____________ வகை இனப்பெருக்கம்.
அ. பாலிலா
ஆ. பால்
இ. குஞ்சு பொரித்தல்
ஈ. குட்டி ஈனுதல்
விடை:
அ. பாலிலா

Question 2.
______________ ஒரு முட்டையிடும் விலங்கு.
அ. பசுமாடு
ஆ. மான்
இ. ஆடு
ஈ. வாத்து
விடை:
ஈ. வாத்து

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள்

Question 3.
அழியும் நிலையில் உள்ள விலங்குகள் ______________ இல் பாதுகாக்கப்படுகின்றன.
அ. அருங்காட்சியகம்
ஆ. சர்க்கஸ்
இ. பண்ணை
ஈ. சரணாலயம்
விடை:
ஈ. சரணாலயம்

Question 4.
முண்டந்துறை சரணாலயம் ______________ மாவட்டத்தில் உள்ளது.
அ. திருப்பூர்
ஆ. திருவாரூர்
இ. திருநெல்வேலி
ஈ. திருவள்ளூர்
விடை:
இ. திருநெல்வேலி

Question 5.
நீலச் சங்கத்தின் முக்கிய நோக்கம் விலங்குகளை _______________
அ. துன்புறுத்தல்
ஆ. சிறைபிடித்தல்
இ. காப்பாற்றுதல்
ஈ. புறக்கணித்தல்
விடை:
இ. காப்பாற்றுதல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
நேரடியாக குட்டிகளை ஈனும் விலங்குகள் ____________ என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
குட்டி ஈனும் விலங்குகள்

Question 2.
விலங்குகளை _______________, அவற்றை அழியும் நிலைக்கு கொண்டு செல்லும்.
விடை:
வேட்டையாடுதல்

Question 3.
கிர் தேசியப் பூங்கா ____________ க்கு பெயர் பெற்றது.
விடை:
ஆசிய சிங்கத்துக்கு

Question 4.
நீலச் சிலுவை சங்கம் என்பது ஒரு ______________ நல அமைப்பாகும்.
விடை:
விலங்குகளின்

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள்

Question 5.
நீலகிரி வரையாடு ஒரு ____________ இனமாகும்.
விடை:
அழியும் நிலையில் உள்ள

III. பொருத்துக

1. கரு – பாலிலா இனப் பெருக்கம்
2. குட்டியீனும் விலங்கு – யானை
3. அழியும் நிலையில் உள்ள விலங்குகள் – பூனை
4. முதுமலை – கருமுட்டை
5. துண்டாதல் – காண்டாமிருகம்
விடை:
1. கரு – கருமுட்டை
2. குட்டியீனும் விலங்கு – -பூனை
3. அழியும் நிலையில் உள்ள விலங்குகள் – காண்டாமிருகம்
4. முதுமலை – யானை
5. துண்டாதல் – பாலிலா இனப் பெருக்கம்

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
கருவுறுதல் என்றால் என்ன?
விடை:
ஆண் உயிரணுக்கள் பெண் உயிரணுக்களைச் சென்றடையும் போது அவை ஒன்றோடொன்று இணைகின்றன. இந்த உயிரணுக்களின் இணைவு கருவுறுதல் எனப்படும்.

Question 2.
பாலினப் பெருக்கத்தின் நிலைகள் யாவை?
விடை:
பால் இனப்பெருக்கம் கீழ்க்காணும் நிலைகளைக் கொண்டது. அ. கருவுறுதலுக்கு முன் ஆ. கருவுறுதல் இ. கருவுற்றபின்

Question 3.
பாலிலா இனப்பெருக்கத்தின் பல்வேறு வகைகளைக் கூறுக.
விடை:
பிளவிப் பெருக்கம், மொட்டு விடுதல், துண்டாதல், சிதறல்கள் (ஸ்போர்கள்) ஆகியவை பாலிலா இனப்பெருக்கத்தின் பல்வேறு வகைகள் ஆகும்.

Question 4.
குட்டியீ னும் விலங்குகளுக்கும், முட்டையிடும் விலங்குகளுக்கும், உள்ள வேறுபாடுகளைக் கூறுக.
விடை:
Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள் 1

Question 5.
நீலச் சிலுவை சங்கம் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
நீலச் சிலுவை சங்கம் என்பது இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள விலங்குகளின் நலனிற்காக பதிவு – செய்யப்பட்ட அமைப்பு ஆகும். ஒவ்வொரு செல்லப் பிராணியும் ஆரோக்கிய வாழ்வை, மகிழ்ச்சியான இல்லத்தில் ) அனுபவிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் 1897ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள்

தங்களின் செல்லப் பிராணிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க முடியாத நபர்களுக்கு இது உதவுவது, புறக்கணிக்கப்பட்ட விலங்குகளுக்கு ஒரு இல்லம் கண்டுபிடித்துக் கொடுப்பது மற்றும் விலங்குகளை வைத்திருப்போருக்கு பொறுப்புணர்வைக் கற்றுக் கொடுப்பது ஆகிய பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

V. விரிவாக விடையளி.

Question 1.
பாலிலா இனப்பெருக்க முறைகளை விளக்குக.
விடை:
பிளவிப் பெருக்கம் : பிளவிப் பெருக்கம் முதுகெலும்பற்ற பல செல்களுடைய உயிரிகளில் நடைபெறுகிறது. இம்முறையில் ஒரு உயிரினம் தானாகவே இரண்டு உயிரினங்களாகப் பிரிவடைகிறது. எடுத்துக்காட்டாக, தட்டைப்புழு, கடற்பஞ்சு, கடல் வெள்ளரி போன்ற உயிரினங்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிவடைந்து ஒவ்வொன்றும் இரு புது உயிரிகளாக வளர்ச்சியுறுகின்றன.

மொட்டு விடுதல் : மொட்டு விடுதல் என்பது ஒரு வகை பாலிலா இனப் பெருக்கமாகும். உடல் உறுப்புகள் புறவளர்ச்சி பெறுவதன் மூலம் இவ்வகை இனப்பெருக்கம் நடை பெறுகிறது. இம்மொட்டுக்கள் பின்னர் தாய் உடலிலிருந்து பிரிந்து புதிய உயிரினம் உருவாகின்றது. மொட்டு விடுதல் பொதுவாக முதுகெலும்பற்ற விலங்குகளாகிய ஹைட்ரா மற்றும் பவளப் பாறைகளில் நடைபெறுகிறது.

துண்டாதல் : உயிரிகளின் உடல் சிறு சிறு துண்டுகளாகப் பிளவு பட்டு பின்னர் அவை புதிய உயிரியாக வளர்ச்சியடைவது துண்டாதல் எனப்படும். இவ்வகையான இனப்பெருக்கம் கடற்பஞ்சு மற்றும் நட்சத்திர மீன்களில் – காணப்படுகிறது. இது விபத்தின் மூலமோ அல்லது எதிரிகளின் தாக்குதல் மூலமோ அல்லது இயற்கையாகவோ நடைபெறலாம்.

சிதறல்கள்: ஒரு சில புரோட்டாசோவாக்கள், பாக்டீரியாக்கள், தாவரங்கள் மற்றும் பூஞ்சைகள் ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. ஸ்போர்கள் என்பவை ஒரு உயிரினத்தின் வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு பகுதியாக ) இயற்கையாக வளரக்கூடியவை. இவை உடலத்திலிருந்து பிரிந்து, சிதறலடைந்து காற்று அல்லது நீர் மூலமாகப்

பரவுகின்றன. பின்னர் ஏற்ற சூழலில் முழுமையான உயிரினமாக வளர்ச்சியடைகின்றன.

Question 2.
விலங்குகள் அழிந்து போவதற்கான காரணங்கள் யாவை?
விடை:
ஒரு தாவரம் அல்லது விலங்கு அழியும் நிலையில் இருப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு.

  • அநேக விலங்குகளுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்கக்கூடிய காடுகள் மனிதத் தேவைகளுக்காக அழிக்கப்படுகின்றன.
  • அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் அவற்றின் கொம்பு, தோல், பல் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருள்களுக்காக வேட்டையாடப்படுகின்றன.
  • நீர் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை விலங்குகளைப் பாதிக்கின்றன.
  • சில நேரங்களில் சில விலங்குகள் மனிதர்களால் அவற்றின் இயற்கை வாழிடத்தை விட்டு வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அவை அங்கு வாழமுடியாமல் அழிந்துவிடுகின்றன.
  • பூச்சிகள், புழுக்கள் மற்றும் களைச் செடிகளை அழிப்பதற்காக உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளையும் பாதிக்கின்றன.
  • இயற்கைப் பேரழிவுகளான வெள்ளம், புயல், மற்றும் தீ விபத்துகளாலும் இவை அழிகின்றன.

Question 3.
தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயம் குறித்து விவரிக்க.
விடை:
தேசியப் பூங்கா என்பது வன உயிரிகளின் நலனைப் பேணுவதற்கான பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பு ஆகும்.

இப்பகுதிகளில் பல்வேறு தேவைகளுக்காக காடுகளைப் பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பு மற்றும் பயிரிடுதல் போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. மேலும் இந்த நிலப்பகுதிகளை தனிநபர் எவரும் தனது உடைமையாக்கிக் கொள்ளமுடியாது. இந்த தேசியப் பூங்காக்களின் பரப்பளவு 100 முதல் 500 சதுர கிலோமீட்டர் வரை இருக்கும்.

ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா : ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவானது உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள நைனிடால் என்னும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. புலிகளே இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.

காஸிராங்கா தேசியப்பூங்கா: வன விலங்குகளான காண்டாமிருகம், புலி, யானை, காட்டெருமை மற்றும் கடமான் ஆகியவை இங்கு காணப்படுகின்றன.

கிர் வன தேசியப் பூங்கா : இது குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆசிய சிங்கங்களை அவற்றின் இயற்கை வாழிடத்திலேயே காணலாம்.

சுந்தர்பான் தேசியப் பூங்கா : மேற்கு வங்கத்திலுள்ள சுந்தர்பான் தேசியப் பூங்காவானது புலிகளின் காப்பகமாகவும், கங்கை நதியின் டெல்டா பகுதியில் அமைந்துள்ள உயிர்கோளக் காப்பமாகவும் உள்ளது.

கன்ஹா தேசியப் பூங்கா : மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கன்ஹா தேசியப் பூங்காவானது புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.

பெரியார் தேசியப் பூங்கா : பெரியார் தேசியப் பூங்கா கேரளாவில் உள்ள தேக்கடியில் அமைந்துள்ளது. பல்வேறு வகையான உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன. அவற்றுள் கம்பீரமான யானைகள், ராஜரீகமான புலிகள் மற்றும் மீன்கள், ஊர்வன மற்றும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன.

கிண்டி தேசியப் பூங்கா : இந்தப் பூங்காவானது சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. புள்ளிமான், புல்வாய் மான், நதிநீர் நாய், கழுதைப்புலி, குல்லாய் குரங்கு, புனுகுப்பூனை, குள்ளநரி, எறும்பு உண்ணி , முள்ளெலி மற்றும் சாதாரண கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளின் வசிப்பிடமாக இந்தப் பூங்கா உள்ளது.

சரணாலயம் என்பது விலங்குகளின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்ட பகுதி ஆகும். மரம் வெட்டுதல், காடு சார்ந்த பொருள்களைச் சேகரித்தல் மற்றும் தனிநபர் உரிமை கோருதல் போன்றவற்றிற்கு இங்கு அனுமதி உண்டு. சுற்றுலாப் பயணிகளுக்கு இங்கு அனுமதி உண்டு.

களக்காடு வனவிலங்குகள் சரணாலயம் : இந்த சரணாலயம் புலிகளுக்குப் பெயர் பெற்றது.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள்

முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் : இந்த சரணாலயம் ஊட்டியில் அமைந்துள்ளது. வங்கப்புலி, யானை மற்றும் சிறுத்தைப் புலி போன்றவை இங்கு காணப்படுகின்றன.

முண்டந்துறை வனவிலங்குகள் சரணாலயம் : இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. இங்கு காணப்படும் முக்கிய விலங்கு புலி ஆகும்.

ஆனைமலை வனவிலங்குகள் சரணாலயம் : இது இந்திராகாந்தி வன விலங்கு சரணாலயம் என்றும் வழங்கப்படுகிறது. இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது. செந்நாய், காட்டு நாய் மற்றும் இராட்சச அணில் ஆகியவை இங்கு உள்ளன.

வேடந்தாங்கல் வனவிலங்குகள் சரணாலயம் : இது தமிழ்நாட்டின் மிகப் பழமையான சரணாலயம் ஆகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கரண்டிவாயன், நத்தைக் கொத்தி நாரை மற்றும் பெலிகான் போன்ற அநேக வலசை போகும் பறவைகள் காணப்படுகின்றன.

சரணாலயங்களின் பயன்கள் :

  • விலங்கினங்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தங்களை தகவமைத்துக் கொள்ள இயலும்.
  • வேறுபட்ட இனங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளமுடியும்.
  • விலங்குகளின் இயற்கை வாழிடம் பாதுகாக்கப்படுகிறது.
  • இவற்றைப் பராமரிக்கும் செலவு குறைவு. மேலும் இவற்றை எளிதில் கையாளவும் முடியும்.

5th Science Guide விலங்குகள் Additional Important Questions and Answers

Question 1.
இனப்பெருக்கத்தின் இருவகைகள் யாவை?
விடை:
பால் இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம்

Question 2.
கருவுறுதல் என்றால் என்ன?
விடை:
ஆண் உயிரணுக்கள் பெண் உயிரணுக்களைச் சென்றடைந்து இணைவது கருவுறுதல் எனப்படும்.

Question 3.
வளர் உருமாற்றம் என்றால் என்ன?
விடை:
இனப்பெருக்கத்தில் முட்டை, லார்வா, பியூபா, முழுவளர்ச்சி அடைந்த பூச்சி என்ற நான்கு நிலைகளில் புதிய உயிரினம் உருவாதல் வளர் உருமாற்றம் எனப்படும். எ.கா. பட்டுப்பூச்சி

Question 4.
பிளவிப் பெருக்கம் என்றால் என்ன?
விடை:
தட்டைப் புழு, கடற்பஞ்சு, கடல் வெள்ளரி ஆகிய உயிரினங்கள் தங்கள் உடலை இரண்டு உயிரினங்களாகப் பிரித்துக் கொண்டு வளர்வது பிளவிப் பெருக்கம் எனப்படுகிறது.

Question 5.
அழியும் நிலையில் உள்ள சில விலங்குகளைக் குறிப்பிடு.
விடை:
சிங்கவால் குரங்கு, ஆசிய சிங்கம், நீலகிரி வரையாடு, பனிச்சிறுத்தை

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 2 விலங்குகள்

Question 6.
சிவப்பு விவர புத்தகம் என்பது என்ன?
விடை:
அழியும் நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய புத்தகம் சிவப்பு விவர புத்தகம் எனப்படுகிறது.

Question 7.
நீலகிரியில் உள்ள தேசிய பூங்காக்கள் எவை?
விடை:
முதுமலை தேசியப்பூங்கா, முக்கூர்த்தி தேசியப்பூங்கா

Question 8.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சரணாலயம் பற்றிக் குறிப்பிடுக.
விடை:
முண்டந்துறை வன விலங்குகள் சரணாலயம் திருநெல்வேலியில் உள்ளது. இங்கு காணப்படும் முக்கிய விலங்கு புலி ஆகும்.

Question 9.
நீலச் சிலுவைச் சங்கத்தின் பணி யாது?
விடை:
புறக்கணிக்கப்பட்ட விலங்குகளுக்கு ஓர் இல்லம் கண்டு பிடித்துக் கொடுப்பது, விலங்குகளை வைத்திருப்போருக்கு பொறுப்புணர்வைக் கற்றுக் கொடுப்பது ஆகியவை இதன் பணிகளாகும்

Question 10.
இந்தியாவின் நீலச்சிலுவை சங்கம் யாரால் உருவாக்கப்பட்டது?
விடை:
இந்தியாவின் நீலச் சிலுவைச் சங்கம் சென்னையைச் சேர்ந்த கேப்டன் வி.சுந்தரம் என்பவரால் உருவாக்கப்பட்டது.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

5th Science Guide நமது சுற்றுச்சூழல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்க்காண்பவற்றுள் அதிக அளவில் பால் கொடுக்கும் கால்நடை எது?
அ. பசுமாடு
ஆ. யாக் எருமை
இ. எருமை மாடு
ஈ. ஆடு
விடை:
இ. எருமை மாடு

Question 2.
பறவைப் பண்ணைகளில் ______________ உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
அ. கோழிகள்
ஆ. பசுமாடுகள்
இ. பறவை இனங்கள்
ஈ. ஆடுகள்
விடை:
இ. பறவை இனங்கள்

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 3.
_____________ ஒரு மிகச் சிறந்த உரம்.
அ. மண்புழு உரம்
ஆ. பழங்க ள்
இ. செயற்கை உரம்
ஈ. யூரியா
விடை:
அ. மண்புழு உரம்

Question 4.
________________ வேளாண்மையை விட இலாபகரமானது.
அ. பால் பண்ணை
ஆ. பண்ணைத்தொழில்
இ. பறவைப் பண்ணை
ஈ.. வேளாண்மை
விடை:
ஆ. பண்ணைத்தொழில்

Question 5.
பறவைப் பண்ணைத் தொழிலில் தமிழ்நாட்டின் _______________ மாவட்டம் சிறந்து விளங்குகிறது.
அ. அரியலூர்
ஆ. சேலம்
இ. நாமக்கல்
ஈ. தஞ்சாவூர்
விடை:
இ. நாமக்கல்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் ______________ வகையான இனங்கள் உள்ளன.
விடை:
26

Question 2.
____________ பால் பசுமாட்டின் பாலை விட அதிக ஊட்டச்சத்து கொண்டது.
விடை:
எருமை மாட்டின்

Question 3.
______________ இல் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது.
விடை:
சக்கை

Question 4.
பறவைப் பண்ணைகளில் உள்ள பறவைகளின் எச்சம் ______________ ஆகப் பயன்படுகிறது.
விடை:
உரம்

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 5.
மண்புழு உரமாக்கல் என்பது ___________ சத்து நிறைந்த உரமாக மாற்றுவதாகும்.
விடை:
கரிமக் கழிவுகளை

III. பொருத்துக

1. ஸ்ருதி – முட்டை
2. வெள்ளிப் புரட்சி – போக்குவரத்து
3. முட்டைக்கோழி – பருப்பு வகைத் தாவரங்கள்
4. பசுமை உரம் – எருமை மாடு
5. கால்நடைகள் – பால்
விடை:
1. ஸ்ருதி – எருமை மாடு
2. வெள்ளிப் புரட்சி – பால்
3. முட்டைக்கோழி – முட்டை
4. பசுமை உரம் – பருப்பு வகைத் தாவரங்கள்
5. கால்நடைகள் – போக்குவரத்து

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.

Question 1.
பண்ணைத் தொழில் வியாபார நோக்கில் செய்யப்படுகிறது.
விடை:
சரி

Question 2.
மண்புழு உரத்தை கழிவுநீர் சுத்திகரிப்பிற்குப் பயன்படுத்தலாம்.
விடை:
சரி

Question 3.
பருப்பு வகைத் தாவரங்கள் தாவர இலையில் நைட்ரஜனைச் சேமித்து வைக்கின்றன.
விடை:
தவறு.
பருப்பு வகைத் தாவரங்கள் வேர் முண்டுகளில் நைட்ரஜனைச் சேமித்து வைக்கின்றன.

Question 4.
நாமக்கல் மாவட்டம் பால் பண்ணைக்குப் பெயர் பெற்றது.
விடை:
தவறு
நாமக்கல் மாவட்டம் கோழிப் பண்ணைக்குப் பெயர் பெற்றது.

Question 5.
முர்ரா என்பது எருமை மாட்டின் ஒரு இனம்.
விடை:
சரி

V. சுருக்கமாக விடையளி

Question 1.
பண்ணை வளர்ப்பு என்றால் என்ன?
விடை:
பண்ணை வளர்ப்பு என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்க்கும் முறையாகும்.

Question 2.
பண்ணை வளர்ப்பின் வகைகளை எழுதுக.
விடை:
விவசாயம் செய்வது, பலவிதமான பயிர்களையும் விலங்குகளையும் வளர்ப்பது, பால்பண்ணை , பறவைப் பண்ணை , தேனீ வளப்பு ஆகியவை பண்ணை வளர்ப்பின் வகைகள் ஆகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 3.
பறவைப் பண்ணை குறித்து எழுதுக.
விடை:
பறவைப் பண்ணையில் பறவை இனங்கள் அவற்றின் முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. கோழி, வாத்து, தாரா, வான்கோழி மற்றும் சில வகை புறாக்கள் பொதுவாக இங்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் 90% கோழிகளே அதிகம் வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் இறைச்சிக் கோழிகள் (பிராய்லர்) எனவும், முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் முட்டைக் கோழிகள் (லேயர்ஸ்) எனவும் அழைக்கப்படுகின்றன.

Question 4.
விலங்கு எரு என்றால் என்ன?
விடை:
விலங்குப் பண்ணைகளில் இருந்து பெறப்படும் கழிவுகளே பொதுவான விலங்கு எரு ஆகும். இது பொதுவாக பன்றி, ஆடு, மாடுகள், செம்மறி ஆடு, குதிரை, கோழி, வான்கோழி, முயல் போன்ற விலங்குகளின் கழிவுகளாகிய சாணம் மற்றும் சிறுநீரைக் கொண்டுள்ளது. பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துப் பொருள்கள் இதில் அதிகம் உள்ளன.

Question 5.
மண்புழு உரம் என்றால் என்ன?
விடை:
மண்புழுக்கள் கரிமக் கழிவுகளை உண்டு அதன் எச்சங்களை சிறு உருண்டைகளாக வெளியேற்றுகின்றன. இது மண்புழு உரம் எனப்படும்.

VI. விரிவாக விடையளி

Question 1.
விலங்குகளின் பயன்கள் யாவை?
விடை:

  • பசு நமக்கு பால் தருகிறது. பசுவின் பாலில் நமக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன.
  • எருதுகள் நிலத்தை உழவும், அறுவடை செய்யவும், போர் அடிக்கவும் உதவி செய்கின்றன.
  • கால்நடைகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப் படுகின்றன.
  • மாட்டுச் சாணம் ஒரு சிறந்த இயற்கை உரம். அது எரிபொருளாகவும். உயிரி வாயு தயாரிப்பதற்கும் பேயன்படுகிறது.
  • பஞ்சகவ்யம் என்பது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். இது பூச்சிகளையும். பூஞ்சைகளையும் கட்டுப்படுத்துவதற்காக விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர், கறந்த பால், தயிர், வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை ஆகும்.
    * கால்நடைகளின் தோலில் இருந்து தோல் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

Question 2.
பறவைப் பண்ணையை எவ்வாறு நிர்வகிப்பாய்?
விடை:
பண்ணைகளில் வளரும் பறவைகளுக்கு மிகவும் தூய்மையான காற்றோட்டம் தேவை. நோய் வராமல் தடுப்பதற்கு கீழ்கண்ட முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

பண்ணைகளில் உள்ள பறவைக்கூடுகள் சுத்தமாகவும் பூச்சிகள் இல்லாதவாறும் பாதுகாக்கப்படவேண்டும். நல்ல காற்றோட்டம் இருப்பதற்கு ஏற்றவாறு ஜன்னல்கள் இருக்கவேண்டும்.

அதிக முட்டைகள் இடுவதற்கு நல்ல வெளிச்சம் அவசியம். பறவைகளுக்கு தூய்மையான நீர் கொடுக்கப்படவேண்டும். ஏற்ற காலத்தில் போடவேண்டிய தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். இது நோய் வராமல் தடுக்கும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 3.
மண்புழு உரத்தின் நன்மைகள் யாவை?
விடை:

  • மண்புழு உரம் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்ச்சத்துக்களை அளிக்கிறது. நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளை இது அதிக அளவு கொண்டுள்ளது.
  • நீர் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்தி மண் அரிமானம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • தாவர வளர்ச்சியை ஊக்குவித்து தாவரங்களில் நோய் வராமல் தடுக்கிறது; மற்றும் மண்ணில் காற்று இடைவெளியை அதிகரித்து நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மையையும், காற்றோட்டத்தையும் அதிகரிக்கின்றது.
  • செயற்கை உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கிறது
  • கழிவு நீர் சுத்திகரிப்பிலும் இது பயன்படுகிறது.

5th Science Guide நமது சுற்றுச்சூழல் Additional Important Questions and Answers

Question 1.
சுற்றுச் சூழலின் இருவகைகள் யாவை?
விடை:
இயற்பியல் சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் சுற்றுச்சூழல் ஆகியவை இருவகை சுற்றுச்சூழல்கள் ஆகும்.

Question 2.
பண்ணை என்பது யாது?
விடை:
பயிர்ச் சாகுபடிக்கும், விலங்குகளை வளர்ப்பதற்கும் உதவும் நிலப்பரப்பே பண்ணை என அழைக்கப்படுகிறது.

Question 3.
பாலுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் யாவை?
விடை:
பசு, எருமை மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு மற்றும் ஒட்டகம் போன்றவை பாலுக்காக வளர்க்கப்படுகின்றன.

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை இனம் எது?
விடை:
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை இனம் காங்கேயம் ஆகும்.

Question 5.
பஞ்சகவ்யம் என்பது யாது?
விடை:
மாட்டின் சாணம், சிறுநீர், பால், தயிர், வெல்லம், நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கும் ஆயுர்வேத மருந்து ( பஞ்சகவ்யம் ஆகும். இது பூச்சிகள், பூஞ்சைகளைக் கட்டுப்படுத்த விவசாயத்தில் பயன்படுகிறது.

Question 6.
தமிழ்நாட்டில் எங்கு கோழிப்பண்ணைகள் அதிகம் காணப்படுகின்றன?
விடை:
தமிழ்நாட்டில் நாமக்கல், பல்லடம், சென்னை ஆகிய இடங்களில் கோழிப் பண்ணைகள் அதிகம் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 7.
பறவைகள் மூலம் கிடைக்கும் முக்கியப் பொருள்கள் எவை?
விடை:
முட்டை, இறைச்சி, உரம் ஆகியவை பறவைகளிடமிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியப் பொருள்கள் ஆகும்.

Question 8.
பறவைகளுக்கு ஏற்படும் நோய்கள் எவை?
விடை:
வைரஸ் தாக்குதலால் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பாக்டீரியாக்களால் பறவைக் காலரா தோன்றுகிறது.

Question 9.
தேன் நமக்கு எவ்வாறு பயன்படுகிறது?
விடை:
தேன் ஒரு கிருமி நாசினி. இது ஓர் எதிர் உயிரியும் ஆகும். இது – செரிமானம் மற்றும் பசியைத் தூண்டுகிறது. இருமல், காய்ச்சல், சளித் தொல்லையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

Question 10.
பருப்பு வகைத் தாவரங்கள் எவ்வாறு சிறந்த உரமாகின்றன?
விடை:
பருப்பு வகைத் தாவரங்களின் வேர் முண்டுகளில் நைட்ரஜன் சேமித்து வைக்கப்படுகிறது. இத்தாவரங்கள் மண்ணுடன் சேர்த்து உழப்படும்போது பயிர்களுக்கு சிறந்த உரமாகின்றன.

5th Science Guide நமது சுற்றுச்சூழல் InText Questions and Answers

பக்கம் 76 செயல்பாடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.
(எண்ணெய் வித்துக்கள், முட்டை, தேன், உணவு தானியங்கள், மீன்)
பசுமைப்புரட்சி : ________________
நீலப்புரட்சி M : ________________
வெள்ளிப்புரட்சி : ________________
தங்கப்புரட்சி : ________________
மஞ்சள் புரட்சி : ________________
விடை:
பசுமைப்புரட்சி : உணவு தானியங்கள்
நீலப்புரட்சி M : மீன்
வெள்ளிப்புரட்சி : முட்டை
தங்கப்புரட்சி : தேன்
மஞ்சள் புரட்சி : எண்ணெய் வித்துக்கள்

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Science Guide Pdf Chapter 5 ஒலியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Science Solutions Chapter 5 ஒலியியல்

10th Science Guide ஒலியியல் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
அ. அலையின் திசையில் அதிர்வுறும்.
ஆ. அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை.
இ. அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்
ஈ. அதிர்வுறுவதில்லை.
விடை:
(அ) அலையின் திசையில் அதிர்வுறும்

Question 2.
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்
அ. 330 மீவி-1
ஆ. 660 மீவி-1
இ. 156 மீவி-1
ஈ. 990 மீவி-1
விடை:
(அ) 330 மீவி-1

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 3.
மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் (PTA-6)
அ. 50 kHz
ஆ. 20 kHz
இ. 15000 kHz
ஈ. 10000 kHz
விடை:
(ஆ) 20 kHz

Question 4.
காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. அதன் வெப்ப நிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.
அ. 330 மீவி-1
ஆ. 165 மீவி-1
இ. 330 × \(\sqrt{2}\) மீவி-1
ஈ. 320 × \(\sqrt{2}\) மீவி-1
விடை:
இ. 330 × \(\sqrt{2}\) மீவி-1

Question 5.
1.25 × 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?
அ. 27.52 மீ
ஆ. 275.2 மீ
இ. 0.02752 மீ
ஈ. 2.752 மீ
விடை:
இ 0.02752 மீ

Question 6.
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும் ?
அ. வேகம்
ஆ. அதிர்வெண்
இ. அலைநீளம்
ஈ. எதுவுமில்லை
விடை:
ஈ எதுவுமில்லை

Question 7.
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி – எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன ?
அ. 17 மீ
ஆ. 20 மீ
இ. 25 மீ
ஈ. 50 மீ
விடை:
இ 25

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது _____ ஆகும்.
விடை:
அதிர்வுகள்

Question 2.
ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் _____ லிருந்து _____ நோக்கி அதிர்வடைகிறது.
விடை:
வடக்கு, தெற்கு

Question 3.
450 Hz அதிர்வெண் உடைய ஊதல் ஒலியானது 33 மீவி | வேகத்தில் ஓய்வு நிலையிலுள்ள கேட்குநரை அடைகிறது. கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் ______ (ஒலியின் திசைவேகம் = 330 மீவி-1).
விடை:
500 Hz

Question 4.
ஒரு ஒலி மூலமானது 40 கிமீ/மணி வேகத்தில், 2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை நோக்கி நகர்கிறது. ஒலியின் திசைவேகம் 1220 கிமீ / மணி எனில் கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண்
விடை:
2068 Hz

III. சரியா, தவறா? தவறு எனில் காரணம் தருக.

Question 1.
ஒலியானது திட, திரவ, வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும்.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஒலி அலைகள் வெற்றிடத்தில் பரவாது.

Question 2.
நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.
விடை:
சரி.

Question 3.
ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது அல்ல.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 4.
ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் அதிகம்.
விடை:
தவறு.
சரியான கூற்று: ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் குறைவு.

IV. பொருத்துக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 10
விடை:
1-c,
2-d,
3-b,
4-a

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ, அதனைத் தெரிவு செய்க.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

Question 1.
கூற்று: காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும்.
காரணம்: ஏனெனில், ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
விடை:
கூற்று, காரணம் – இரண்டும் தவறு.

Question 2.
கூற்று: ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும்.
காரணம்: திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களை விட அதிகம்.
விடை:
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

VI. குறு வினாக்கள்.

Question 1.
நெட்டலை என்றால் என்ன?
விடை:
ஒரு ஊடகத்தில் ஒலியலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அது நெட்டலை எனப்படும்.

Question 2.
செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?
விடை:
20 Hz முதல் 20,000 Hz-க்கு இடைப்பட்ட அதிர்வெண் செவியுணர் ஒலியின் அதிர்வெண்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 3.
எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன? (GMQP-2019)
விடை:
எதிரொலி கேட்பதற்கான குறைந்த பட்சத் தொலைவு 17.2 மீ ஆகும்.

Question 4.
அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது 331 மீவி – வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அதிர்வெண் என்ன?
விடை:
ஒலியின் அதிர்வெண் = n
அலைநீளம் λ = 0.20 மீ
ஒலியின் வேகம் V = nλ
∴ அதிர்வெண், n = \(\frac{\mathrm{V}}{\lambda}\)
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 50

Question 5.
மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.
விடை:
கொசு, டால்பின், வௌவால், நாய்.

VII. சிறு வினாக்கள்: –

Question 1.
ஒலியானது கோடை காலங்களை விட மழைக் காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்? [PTA-6]
விடை:

  1. மழைக்காலங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.
  2. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது.
  3. எனவே ஒலியானது கோடை காலங்களைவிட மழைக்காலங்களில் வேகமாகப் பரவுகிறது.

Question 2.
இராஜஸ்தான் பாலைவனங்களில் காற்றின் வெப்பநிலை 46°C-ஐ அடைய இயலும். அந்த வெப்ப நிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன? (V = 331 மீவி-1).
விடை:
வாயுவில் ஒலியின் திசைவேகம் (0°C யில்)
V0 = 331 மீவி-1
ராஜஸ்தானில் காற்றின் வெப்பநிலை
T = 46° C
VT = V0 + (0.61 × T) = 331 + (0.61 × 46) = 359.06 மீவி-1

Question 3.
இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்? [PTA-6]
விடை:

  1. இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பதினால், குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  2. பரவளையத்தில் பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில் எங்கு மோதினாலும் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  3. இதனால் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் செவிகளையும் ஒலித் தெளிவாக சென்றடையும்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 4.
டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக. [GMQP-2019; Sep.20]
விடை:

  1. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும் போது.
  2. ஒலி மூலம் (S) மற்றும் கேட்குநர் (L) சம இடைவெடைவெளியில் நகரும்போது.

VIII. கணக்கீடுகள்:

Question 1.
ஒரு ஊடகத்தில் 200 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 400 மீவி 1 வேகத்தில் பரவுகிறது. ஒலி அலையின் அலைநீளம்
காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை :
அலையின் அதிர்வெண், n = 200 Hz
ஒலியின் வேகம், V = 400 மீவி-1
கண்டறிய :
அலைநீளம் λ = ?
தீர்வு :
ஒளியின் திசைவேகம் V = nλ
∴ அலைநீளம், λ = \(\frac{\mathrm{V}}{n}\) = \(\frac{\mathrm{400}}{200}\) = 2 மீ.

Question 2.
வானத்தில் மின்னல் ஏற்பட்டு 9.8 விநாடிகளுக்குப் பின்பு இடியோசை கேட்கிறது. காற்றில் ஒலியின் திசைவேகம் 300 மீவி-1 எனில் மேகக்கூட்டங்கள் எவ்வளவு உயரத்தில் உள்ளது?
விடை:
கொடுக்கப்பட்டவை :
நேரம், t = 9.8 விநாடிகள்
ஒலியின் திசைவேகம் = 300 மீவி-1
கண்ட றிய :
மேகக் கூட்டங்களின் உயரம், d = ?
தீர்வு :
v = \(\frac{d}{t}\)
∴ d = V × t
= 300 × 9.8
மேகக் கூட்டங்களின் உயரம் = 2940 மீ.

Question 3.
ஒருவர் 600 Hz அதிர்வெண் உடைய ஒலி மூலத்திலிருந்து 400 மீ தொலைவில் அமர்ந்துள்ளார். ஒலி மூலத்திலிருந்து வரும் அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரத்தைக் காண்க.
விடை:
கொடுக்கப்பட்டவை :
அதிர்வெண், n = 600 Hz
கண்டறிய :
அலைவு நேரம், T = ?
தீர்வு :
T = \(\frac{1}{n}\) = \(\frac{1}{600}\) = 0.0017 விநாடிகள்
அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரம், T = 0.0017 விநாடிகள்.

Question 4.
ஒரு கப்பலிலிருந்து கடலின் ஆழத்தை நோக்கி மீயொலிக் கதிர்கள் செலுத்தப்படுகிறது. கடலின் ஆழத்தை அடைந்து எதிரொலித்து 1.6 விநாடிகளுக்குப் பிறகு ஏற்பியை அடைகிறது எனில் கடலின் ஆழம் என்ன? (கடல் நீரில் ஒலியின்
திசைவேகம் 1400 மீவி-1)
விடை:
கொடுக்கப்பட்டவை :
ஒலியின் திசைவேகம்,
V = 1400 மீவி-1
காலம், t = 1.6 விநாடி
கண்ட றிய : கடலின் ஆழம் d = ?
தூரம் (ஆழம்) = தூரம் × காலம்
தீர்வு :
2d = V × t
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 30

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 5.
ஒருவர் 680 மீ இடைவெளியில் அமைந்துள்ள இரண்டு செங்குத்தானச் சுவர்களுக்கு இடையே நிற்கிறார். அவர் தனது கைகளைத் தட்டும் ஓசையானது எதிரொளித்து முறையே 0.9 விநாடி மற்றும் 1.1 விநாடி இடைவெளியில் கேட்கிறது. காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன?
விடை:
கொடுக்கப்பட்டவை :
முதல் எதிரொலியின் நேரம், t1 = 0.9 விநாடி
இரண்டாம் எதிரொலியின் நேரம்,
t2 = 1.1 விநாடி
மனிதனுக்கும் சுவருக்கும்
இடையிலான தூரம், d = 680 மீ
கண்டறிய :
காற்றில் ஒலியின் திசைவேகம்,
V = ?
தீர்வு :
V = \(\frac{2 d}{t}\)
V = \(\frac{2 d}{t_{1}+t_{2}}\)
V = \(\frac{2 \times 680}{(0.9+1.1)}\) = \(\frac{2 \times 680}{2}\) = 680 மீவி-1
காற்றில் ஒலியின் திசைவேகம் = 680 மீவி-1

Question 6.
இரண்டு கேட்குநர்கள் 4.5 கி.மீ இடைவெளியில் இரண்டு படகுகளை நிறுத்தியுள்ளனர். ஒரு படகிலிருந்து, நீரின் மூலம் செலுத்தப்படும் ஒலியானது 3 விநாடிகளுக்குப் பிறகு மற்றொரு படகை அடைகிறது. நீரில் ஒலியின் திசைவேகம் என்ன ?
விடை:
கொடுக்கப்பட்டவை :
இரண்டு கேட்குநர்களின் இடைவெளி,
d = 4.5 கி.மீ
நேரம், t = 3 விநாடிகள்
கண்டறிய : நீரில் ஒலியின் திசைவேகம் = ?
தீர்வு :
ஒலியின் திசைவேகம்,
V = \(\frac{d}{t}\)
d = 4.5 கி.மீ
d = (4.5 × 1000)
= 4500 மீ
V = \(\frac{4500}{3}\) = 1550 மீவி-1

Question 7.
கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய 1 விநாடி எடுத்துக்கொள்கிறது. நீரில் ஒலியின் வேகம் 1450 மீவி-1 எனில் கடலின் ஆழம் என்ன ?
விடை:
கொடுக்கப்பட்டவை :
மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய எடுக்கும் காலம் = \(\frac{1}{2}\)s
நீரில் ஒலியின் வேகம் = V = 1450 மீவி-1
கண்டறிய : கடலின் ஆழம் = ?
கடலின் ஆழம் (அ) ஒலி சைகை கடந்த தொலைவு
(d) = வேகம் × காலம்
= V × t
= 1450 × \(\frac{1}{2}\) = 725 மீ.

IX. நெடு வினாக்கள்

Question 1.
வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?
விடை:
ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள்:
(i) அடர்த்தியின் விளைவு : வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் தகவில் அமையும். எனவே, வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
v ∝ \(\sqrt{\frac{1}{d}}\)

(ii) வெப்பநிலையின் விளைவு : வாயுக்களில் ஒலியின் திசைவேகம், அதன் வெப்ப நிலையின் இருமடி மூலத்திற்கு நேர் தகவில் அமையும். எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது, திசைவேகமும் அதிகரிக்கிறது.
v ∝ \(\sqrt{\mathrm{T}}\)
வெப்பநிலை T°C-ல் திசைவேகமானது.
VT = (V0 + 0.61 T) ms-1
இங்கு V0 என்பது 0° C வெப்பநிலையில் வாயுக்களில் ஒலியின் திசைவேகம் ஆகும். காற்றிற்கு V0 = 331 மீவ-1!. எனவே ஒவ்வொருடிகிரி செல்சியஸ்வெப்பநிலை அதிகரிப்பிற்கும் திசைவேகமானது 0.61 மீவி-1 அதிகரிக்கிறது.

(iii) ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு: காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும்போது, ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது. எனவே தான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

Question 2.
ஒலி எதிரொலித்தல் என்றால் என்ன? விவரி.
அ) அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு.
ஆ) அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு.
இ) வளைவானப் பரப்புகளில் ஒலி எதிரொலிப்பு.
விடை:
ஒலி எதிரொலித்தல் : ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பரவும் போது இரண்டாவது ஊடகத்தால் எதிரொலிக்கப்பட்டு முதலாம் ஊடகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. இதுவே ஒலி எதிரொலித்தல் ஆகும்.
(அ)

  1. திடப்பொருளில் பயணிக்கும் ஒலி அலையின் இறுக்கங்கள் காற்று ஊடகத்தின் விளிம்பை அடைவதாகக் கொள்வோம்.
  2. அப்போது இறுக்கங்களானது, காற்று ஊடகத்தின் பரப்பில் F என்ற விசையைச் செலுத்தும்.
  3. அடர்குறை ஊடகம் (காற்று) குறைந்த அளவு உருக்குலைக்கும் பண்பை பெற்றுள்ளதால்
    இரண்டையும் பிரிக்கும் மேற்பரப்பு பின்னோக்கித் தள்ளப்படுகிறது.
  4. இதனால் அடர்குறை ஊடகத்தில் துகள்கள் மிக எளிதாக இயங்குவதால் விளிம்புப்பகுதியில் தளர்ச்சிகள் தோன்றுகின்றன.
  5. இடமிருந்து வலமாக பயணித்த இறுக்கங்கள் எதிரொலிக்கப்பட்ட பின் தளர்ச்சிகளாக மாறி வலது புறத்திலிருந்து இடது புறமாகப் பரவுகிறது.

(ஆ)

  1. ஒரு நெட்டலையானது ஊடகத்தில் பரவும் போது இறுக்கங்களாகவும், தளர்ச்சிகளாகவும் பரவும். ஒலி அலையின் இறுக்கங்கள் இடமிருந்து வலமாக பரவி ஒரு சுவரில் மோதிக் கொள்வதாக கருதிக் கொள்வோம்.
  2. அவ்வாறு மோதிக்கொள்ளும் போது இறுக்கங்கள் சுவரினை நோக்கி F என்ற ஒரு விசையை செயல்படுத்தும்.
  3. அதே வேளையில் சுவரானது அதற்கு சமமான மற்றும் எதிர் திசையில் R = -F என்ற விசையை திரும்பச் செலுத்தும். இதனால் சுவற்றின் அருகில் மீண்டும் இறுக்கங்கள் ஏற்படும்.
  4. இவ்வாறு இறுக்கங்கள் சுவரில் மோதி மீண்டும் இறுக்கங்களாகவே எதிரொலிக்கிறது. அதன் திசை மட்டும் மாறியிருக்கும்.

(இ)

  1. வளைவானப் பரப்புகளில் பட்டு மோதி எதிரொலிக்கும் போது ஒலி அலைகளின் செறிவு மாறுகிறது.
  2. குவிந்த பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் விரிவடைந்து செல்கிறது. அதன் செறிவும் குறைகிறது. அதேபோல குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  3. எனவே எதிரொலித்தக் கதிர்களின் செறிவும் ஒரு புள்ளியில் குவிக்கப் படுகிறது.
  4. ஒலியை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவிக்கவேண்டியத் தேவைகள் இருந்தால் மட்டுமே வளைவான எதிரொலிக்கும் பகுதிகள் பயன்படுத்தப் படுகிறது.
  5. பேசும் கூடங்களின் மேற்பகுதி பரவளையத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில் எங்கு மோதினாலும் பரவளையத்தில் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  6. இதனால், இதனுள் அமர்ந்து ஒருவர் மெல்லிய குரலில் பேசினாலும், மீண்டும் மீண்டும் எதிரொலித்து வரும் ஒலியினால் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் செவியையும் அடையும்.

Question 3.
அ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன? (அல்லது) மீயொலி அலைகள் என்றால் என்ன?
ஆ) மியொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?
இ) மீயொலி அதிர்வுகளை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.
விடை:
(அ) மீயொலி அதிர்வுறுதல் : (Sep.20)
மீயொலி அலைகள் 20,000 Hz-க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளாகும். மனிதர்களால் கேட்க இயலாது. வௌவால் ஏற்படுத்தும் ஒலியினை மீயொலிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

  1. மனிதர்களால் கேட்க இயலாத அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகள்.
  2. மீயொலி அலைகள் 2,000 Hz-க்கும் அதிகம்.
  3. எ.கா. வௌவால் ஏற்படுத்தும் ஒலி.

(ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள் :

  1. கடலின் அடியில் நீர்மூழ்கிக் கப்பல்களின் தொலைவு மற்றும் ஏதேனும் பாறைகள் உள்ளதா என அறியவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் பயன்படுகிறது.
  2. மகப்பேறியல் துறையில் அல்ட்ராசோனாகிராபி கருவியில் பயன்படுகிறது.
  3. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய பயன்படுகிறது.
  4. பாலில் வேண்டிய அளவு கொழுப்பு இவற்றை கலக்க உதவுகிறது.
  5. மீயொலி அதிர்வுகள் SONOR ல் பயன்படுத்தப்படுகிறது.
  6. விலங்குகளுக்கு இது தொடர்பு கொள்ள பயன்படுகிறது.
  7. மீயொலி தூய்மைப்படுத்துதல்.
  8. மீயொலி உருக்கி ஒட்டுதல் (Welding)

(இ) மீயொலி அதிர்வுகளை உணரும் மூன்று விலங்குகள் :

  1. நாய்கள், டால்பின்கள் – 40,000 Hz அதிர்வெண் கேட்கும் திறன்.
  2. வௌவால்கள் – 1,20,000 Hz அதிர்வெண் கேட்கும் திறன்.

Question 4.
எதிரொலி என்றால் என்ன?
அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக. (PTA-1)
ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்களைக் கூறுக. (PTA-1; Sep.20)
இ) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தைக் காண்க.
விடை:
ஒலி அலைகள் சுவர்கள், மேற்கூரைகள், மலைகள் போன்றவற்றின் பரப்புகளில் மோதி பிரதிபலிக்கப்படும் நிகழ்வே எதிரொலி ஆகும். (அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகள்

  1. எழுப்பப்படும் ஒலிக்கும், எதிரொலிக்கும் இடையே 0.1 விநாடிகள் இருக்க வேண்டும்.
  2. எதிரொலி கேட்க வேண்டுமானால் குறைந்தபட்சத் தொலைவானது காற்றில் ஒலியின் திசைவேகத்தின் மதிப்பில் 1/20 பகுதியாக இருக்க வேண்டும்.

(ஆ) மருத்துவ பயன்கள் :

  1. மகப்பேறியல் துறையில் அல்ட்ராசோனோ கிராபி கருவியில் பயன்படுகிறது.
  2. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது.
  3. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது, இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.

(இ) ஒலியின் திசைவேகத்தைக் கண்டறிதல் :
தேவையான கருவிகள்:
ஒலி மூலம், அளவு நாடா, ஒலி ஏற்பி மற்றும் நிறுத்துக் கடிகாரம்

செய்முறை:

  1. ஒலி மூலத்திற்கும், எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையேயானத் தொலைவை (d) அளவு நாடாவைப் பயன்படுத்தி அளந்து கொள்ளவும்.
  2. ஒலி ஏற்பியை ஒலி மூலத்திற்கு அருகில் வைக்கவும். தற்போது ஒலி சமிக்ஞைகள் ஒலி மூ லத்திலிருந்து வெளிப்படும்.
  3. நிறுத்துக் கடிகாரத்தைப் பயன்படுத்தி ஒலிமூலத்திலிருந்து வெளிப்பட்ட ஒலி சமிக்ஞைகளுக்கும், எதிரொலித்து வந்த ஒலி சமிக்ஞைகளுக்கும் இடையேயான கால இடைவெளியை’ எனக் குறித்துக் கொள்ளவும்.
  4. இந்த சோதனையை மூன்று அல்லது நான்கு முறை செய்து பார்க்கவும். சராசரி கால இடைவெளியைக் கணக்கிடவும்.

ஒலியின் திசைவேகம் கணக்கிடல் :
ஒலி மூலத்திலிருந்து வெளியான ஒலித்துடிப்பு ஒலி மூலத்திலிருந்து சுவர் வரை சென்று பின்னர் எதிரொலித்து ஒலி மூலம் வரையுள்ள 2d தொலைவை t நேரத்தில் கடந்து செல்கிறது. எனவே,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 55

கருத்துரு வினா

Question 1.
நிலவில் எழுப்பப்படும் ஒலியை கேட்க இயலுமா? எவ்வாறு கேட்கலாம்?
விடை:
கேட்க இயலாது. ஒலி பரவ ஊடகம் தேவை. நிலவில் வளிமண்டலம் இல்லை . ஆனால் மைக்ரோபோன் கொண்டு குறுக்கலையாக மாற்றப்படும் போது ஒலியை கேட்கலாம்.

Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல்

PTA மாதிரி வினா-விடை

1 மதிப்பெண்

Question 1.
ஒலி ஊடகத்தில் செல்லும் திசைவேகம் சார்ந்து கீழ்க்காணும் ஊடகங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக. (PTA-1)
அ) காற்று > கண்ணாடி > நீர்
ஆ) நீர் > காற்று > கண்ணாடி
இ) கண்ணாடி <நீர் > காற்று
ஈ) கண்ணாடி > நீர் > காற்று
விடை:
(இ) கண்ணாடி < நீர் > காற்று

Question 2.
தகுந்த காரணங்களோடு தொடர்புப்படுத்தி கோடிட்ட இடங்களை நிரப்புக. (PTA-3)
அ) வௌவால்கள்: மீயொலி ; புவி அதிர்வு : குற்றொலி
ஆ) மெதுவாகப் பேசும் கூடம்: எதிரொலியின் பயன்பாடு; செயற்கைக்கோள் இருப்பிடம் அறிதல் : டாப்ளர் விளைவின் பயன்பாடு

2 மதிப்பெண்கள்

Question 1.
90 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூ லமானது ஒலியின் திசைவேகத்தில் (1/10) மடங்கு வேகத்தில், நிலையான இடத்தில் உள்ள கேட்குநரை அடைகிறது எனில் அவரால் உணரப்படும் அதிர்வெண் என்ன? (PTA-4)
விடை:
ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி, ஒலி மூலம் நகரும்போது, தோற்ற அதிர்வெண்ணுக்கானச் சமன்பாடு
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 70
n’ = 100 Hz

Question 2.
கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய 1 விநாடி எடுத்துக்கொள்கிறது. நீரில் ஒலியின் வேகம் 1450 மீவி-1 எனில் கடலின் ஆழம் என்ன ? (PTA-5)
விடை:
மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய
எடுக்கும் காலம் = \(\frac{1}{2}\)s
நீரில் ஒலியின் வேகம் = V = 1450 மீவி-1
கடலின் ஆழம் (அ) ஒலி சைகை கடந்த தொலைவு (d) = வேகம் × காலம்
= V × t
= 1450 × \(\frac{1}{2}\) = 725 மீ.

Question 3.
500 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது. 30 மீவி-1 வேகத்தில் ஓய்வில் உள்ள கேட்குநரை நோக்கி நகர்கிறது. காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 எனில் கேட்குநரால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண் என்ன?
(PTA-2)
விடை:
ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி, ஒலி மூலம் நகரும்போது, தோற்ற அதிர்வெண்ணுக்கானச் சமன்பாடு
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 75

Question 3.
ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண்ணானது உண்மையான அதிர்வெண்ணில் பாதியாக இருக்க வேண்டுமெனில் ஒலி மூலம் எவ்வளவு வேகத்தில் கேட்குநரைவிட்டு விலகிச் செல்லவேண்டும்? (7 Marks) (PTA-5)
விடை:
ஒலி மூலமானது, ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை விட்டு விலகிச் செல்லும்போது, தோற்ற அதிர்வெண்ணிற்கான சமன்பாடு,
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 78

4 மதிப்பெண்கள்

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து ஒலி எதிரொலிப்புக் கோணத்தைக் கணக்கிடுக.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 79
விடை:
படுகோணம் ∠i = ∠90° – ∠50°
∠i = 40°
எதிரொலிப்பு விதியின்படி,
∠i = ∠r
∠i = 40°
∴ எதிரொலிப்புக் கோணம்,
∠r = 40°

அரசு தேர்வு வினா-விடை

7 மதிப்பெண்கள்

Question 1.
ஒரு ஒலி மூலமானது 50 மீவி திசைவேகத்தில் ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி நகருகிறது கேட்குநரால் உணரப்படும் ஒலி மூலத்தின் அதிர்வெண்ணானது 1000 Hz ஆகும். அந்த ஒலிமூலமானது ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை விட்டு விலகிச் செல்லும் போது உணரப்படும் தோற்ற அதிர்வெண் என்ன? (ஒலியின் திசைவேகம் 330 மீவி-1). (GMQP-2019)
விடை:
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 90
ஒலி மூலத்தின் உண்மையான அதிர்வெண் 848.48 Hz. ஆகும். ஒலி மூலமானது கேட்குநரை விட்டு விலகிச் செல்லும்போது உள்ள தோற்ற அதிர்வெண்ணிற்கானச் சமன்பாடு.
Samacheer Kalvi 10th Science Guide Chapter 5 ஒலியியல் 95
= 736.84 Hz.