Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Science Guide Pdf Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல் Questions and Answers, Notes.

TN Board 5th Science Solutions Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

5th Science Guide நமது சுற்றுச்சூழல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கீழ்க்காண்பவற்றுள் அதிக அளவில் பால் கொடுக்கும் கால்நடை எது?
அ. பசுமாடு
ஆ. யாக் எருமை
இ. எருமை மாடு
ஈ. ஆடு
விடை:
இ. எருமை மாடு

Question 2.
பறவைப் பண்ணைகளில் ______________ உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
அ. கோழிகள்
ஆ. பசுமாடுகள்
இ. பறவை இனங்கள்
ஈ. ஆடுகள்
விடை:
இ. பறவை இனங்கள்

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 3.
_____________ ஒரு மிகச் சிறந்த உரம்.
அ. மண்புழு உரம்
ஆ. பழங்க ள்
இ. செயற்கை உரம்
ஈ. யூரியா
விடை:
அ. மண்புழு உரம்

Question 4.
________________ வேளாண்மையை விட இலாபகரமானது.
அ. பால் பண்ணை
ஆ. பண்ணைத்தொழில்
இ. பறவைப் பண்ணை
ஈ.. வேளாண்மை
விடை:
ஆ. பண்ணைத்தொழில்

Question 5.
பறவைப் பண்ணைத் தொழிலில் தமிழ்நாட்டின் _______________ மாவட்டம் சிறந்து விளங்குகிறது.
அ. அரியலூர்
ஆ. சேலம்
இ. நாமக்கல்
ஈ. தஞ்சாவூர்
விடை:
இ. நாமக்கல்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் ______________ வகையான இனங்கள் உள்ளன.
விடை:
26

Question 2.
____________ பால் பசுமாட்டின் பாலை விட அதிக ஊட்டச்சத்து கொண்டது.
விடை:
எருமை மாட்டின்

Question 3.
______________ இல் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது.
விடை:
சக்கை

Question 4.
பறவைப் பண்ணைகளில் உள்ள பறவைகளின் எச்சம் ______________ ஆகப் பயன்படுகிறது.
விடை:
உரம்

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 5.
மண்புழு உரமாக்கல் என்பது ___________ சத்து நிறைந்த உரமாக மாற்றுவதாகும்.
விடை:
கரிமக் கழிவுகளை

III. பொருத்துக

1. ஸ்ருதி – முட்டை
2. வெள்ளிப் புரட்சி – போக்குவரத்து
3. முட்டைக்கோழி – பருப்பு வகைத் தாவரங்கள்
4. பசுமை உரம் – எருமை மாடு
5. கால்நடைகள் – பால்
விடை:
1. ஸ்ருதி – எருமை மாடு
2. வெள்ளிப் புரட்சி – பால்
3. முட்டைக்கோழி – முட்டை
4. பசுமை உரம் – பருப்பு வகைத் தாவரங்கள்
5. கால்நடைகள் – போக்குவரத்து

IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.

Question 1.
பண்ணைத் தொழில் வியாபார நோக்கில் செய்யப்படுகிறது.
விடை:
சரி

Question 2.
மண்புழு உரத்தை கழிவுநீர் சுத்திகரிப்பிற்குப் பயன்படுத்தலாம்.
விடை:
சரி

Question 3.
பருப்பு வகைத் தாவரங்கள் தாவர இலையில் நைட்ரஜனைச் சேமித்து வைக்கின்றன.
விடை:
தவறு.
பருப்பு வகைத் தாவரங்கள் வேர் முண்டுகளில் நைட்ரஜனைச் சேமித்து வைக்கின்றன.

Question 4.
நாமக்கல் மாவட்டம் பால் பண்ணைக்குப் பெயர் பெற்றது.
விடை:
தவறு
நாமக்கல் மாவட்டம் கோழிப் பண்ணைக்குப் பெயர் பெற்றது.

Question 5.
முர்ரா என்பது எருமை மாட்டின் ஒரு இனம்.
விடை:
சரி

V. சுருக்கமாக விடையளி

Question 1.
பண்ணை வளர்ப்பு என்றால் என்ன?
விடை:
பண்ணை வளர்ப்பு என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்க்கும் முறையாகும்.

Question 2.
பண்ணை வளர்ப்பின் வகைகளை எழுதுக.
விடை:
விவசாயம் செய்வது, பலவிதமான பயிர்களையும் விலங்குகளையும் வளர்ப்பது, பால்பண்ணை , பறவைப் பண்ணை , தேனீ வளப்பு ஆகியவை பண்ணை வளர்ப்பின் வகைகள் ஆகும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 3.
பறவைப் பண்ணை குறித்து எழுதுக.
விடை:
பறவைப் பண்ணையில் பறவை இனங்கள் அவற்றின் முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. கோழி, வாத்து, தாரா, வான்கோழி மற்றும் சில வகை புறாக்கள் பொதுவாக இங்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் 90% கோழிகளே அதிகம் வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் இறைச்சிக் கோழிகள் (பிராய்லர்) எனவும், முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் முட்டைக் கோழிகள் (லேயர்ஸ்) எனவும் அழைக்கப்படுகின்றன.

Question 4.
விலங்கு எரு என்றால் என்ன?
விடை:
விலங்குப் பண்ணைகளில் இருந்து பெறப்படும் கழிவுகளே பொதுவான விலங்கு எரு ஆகும். இது பொதுவாக பன்றி, ஆடு, மாடுகள், செம்மறி ஆடு, குதிரை, கோழி, வான்கோழி, முயல் போன்ற விலங்குகளின் கழிவுகளாகிய சாணம் மற்றும் சிறுநீரைக் கொண்டுள்ளது. பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துப் பொருள்கள் இதில் அதிகம் உள்ளன.

Question 5.
மண்புழு உரம் என்றால் என்ன?
விடை:
மண்புழுக்கள் கரிமக் கழிவுகளை உண்டு அதன் எச்சங்களை சிறு உருண்டைகளாக வெளியேற்றுகின்றன. இது மண்புழு உரம் எனப்படும்.

VI. விரிவாக விடையளி

Question 1.
விலங்குகளின் பயன்கள் யாவை?
விடை:

  • பசு நமக்கு பால் தருகிறது. பசுவின் பாலில் நமக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன.
  • எருதுகள் நிலத்தை உழவும், அறுவடை செய்யவும், போர் அடிக்கவும் உதவி செய்கின்றன.
  • கால்நடைகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப் படுகின்றன.
  • மாட்டுச் சாணம் ஒரு சிறந்த இயற்கை உரம். அது எரிபொருளாகவும். உயிரி வாயு தயாரிப்பதற்கும் பேயன்படுகிறது.
  • பஞ்சகவ்யம் என்பது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். இது பூச்சிகளையும். பூஞ்சைகளையும் கட்டுப்படுத்துவதற்காக விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர், கறந்த பால், தயிர், வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை ஆகும்.
    * கால்நடைகளின் தோலில் இருந்து தோல் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

Question 2.
பறவைப் பண்ணையை எவ்வாறு நிர்வகிப்பாய்?
விடை:
பண்ணைகளில் வளரும் பறவைகளுக்கு மிகவும் தூய்மையான காற்றோட்டம் தேவை. நோய் வராமல் தடுப்பதற்கு கீழ்கண்ட முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.

பண்ணைகளில் உள்ள பறவைக்கூடுகள் சுத்தமாகவும் பூச்சிகள் இல்லாதவாறும் பாதுகாக்கப்படவேண்டும். நல்ல காற்றோட்டம் இருப்பதற்கு ஏற்றவாறு ஜன்னல்கள் இருக்கவேண்டும்.

அதிக முட்டைகள் இடுவதற்கு நல்ல வெளிச்சம் அவசியம். பறவைகளுக்கு தூய்மையான நீர் கொடுக்கப்படவேண்டும். ஏற்ற காலத்தில் போடவேண்டிய தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். இது நோய் வராமல் தடுக்கும்.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 3.
மண்புழு உரத்தின் நன்மைகள் யாவை?
விடை:

  • மண்புழு உரம் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய ஊட்ச்சத்துக்களை அளிக்கிறது. நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளை இது அதிக அளவு கொண்டுள்ளது.
  • நீர் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்தி மண் அரிமானம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • தாவர வளர்ச்சியை ஊக்குவித்து தாவரங்களில் நோய் வராமல் தடுக்கிறது; மற்றும் மண்ணில் காற்று இடைவெளியை அதிகரித்து நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மையையும், காற்றோட்டத்தையும் அதிகரிக்கின்றது.
  • செயற்கை உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கிறது
  • கழிவு நீர் சுத்திகரிப்பிலும் இது பயன்படுகிறது.

5th Science Guide நமது சுற்றுச்சூழல் Additional Important Questions and Answers

Question 1.
சுற்றுச் சூழலின் இருவகைகள் யாவை?
விடை:
இயற்பியல் சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் சுற்றுச்சூழல் ஆகியவை இருவகை சுற்றுச்சூழல்கள் ஆகும்.

Question 2.
பண்ணை என்பது யாது?
விடை:
பயிர்ச் சாகுபடிக்கும், விலங்குகளை வளர்ப்பதற்கும் உதவும் நிலப்பரப்பே பண்ணை என அழைக்கப்படுகிறது.

Question 3.
பாலுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் யாவை?
விடை:
பசு, எருமை மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு மற்றும் ஒட்டகம் போன்றவை பாலுக்காக வளர்க்கப்படுகின்றன.

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை இனம் எது?
விடை:
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை இனம் காங்கேயம் ஆகும்.

Question 5.
பஞ்சகவ்யம் என்பது யாது?
விடை:
மாட்டின் சாணம், சிறுநீர், பால், தயிர், வெல்லம், நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கும் ஆயுர்வேத மருந்து ( பஞ்சகவ்யம் ஆகும். இது பூச்சிகள், பூஞ்சைகளைக் கட்டுப்படுத்த விவசாயத்தில் பயன்படுகிறது.

Question 6.
தமிழ்நாட்டில் எங்கு கோழிப்பண்ணைகள் அதிகம் காணப்படுகின்றன?
விடை:
தமிழ்நாட்டில் நாமக்கல், பல்லடம், சென்னை ஆகிய இடங்களில் கோழிப் பண்ணைகள் அதிகம் காணப்படுகின்றன.

Samacheer Kalvi 5th Science Guide Term 3 Chapter 1 நமது சுற்றுச்சூழல்

Question 7.
பறவைகள் மூலம் கிடைக்கும் முக்கியப் பொருள்கள் எவை?
விடை:
முட்டை, இறைச்சி, உரம் ஆகியவை பறவைகளிடமிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியப் பொருள்கள் ஆகும்.

Question 8.
பறவைகளுக்கு ஏற்படும் நோய்கள் எவை?
விடை:
வைரஸ் தாக்குதலால் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பாக்டீரியாக்களால் பறவைக் காலரா தோன்றுகிறது.

Question 9.
தேன் நமக்கு எவ்வாறு பயன்படுகிறது?
விடை:
தேன் ஒரு கிருமி நாசினி. இது ஓர் எதிர் உயிரியும் ஆகும். இது – செரிமானம் மற்றும் பசியைத் தூண்டுகிறது. இருமல், காய்ச்சல், சளித் தொல்லையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

Question 10.
பருப்பு வகைத் தாவரங்கள் எவ்வாறு சிறந்த உரமாகின்றன?
விடை:
பருப்பு வகைத் தாவரங்களின் வேர் முண்டுகளில் நைட்ரஜன் சேமித்து வைக்கப்படுகிறது. இத்தாவரங்கள் மண்ணுடன் சேர்த்து உழப்படும்போது பயிர்களுக்கு சிறந்த உரமாகின்றன.

5th Science Guide நமது சுற்றுச்சூழல் InText Questions and Answers

பக்கம் 76 செயல்பாடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.
(எண்ணெய் வித்துக்கள், முட்டை, தேன், உணவு தானியங்கள், மீன்)
பசுமைப்புரட்சி : ________________
நீலப்புரட்சி M : ________________
வெள்ளிப்புரட்சி : ________________
தங்கப்புரட்சி : ________________
மஞ்சள் புரட்சி : ________________
விடை:
பசுமைப்புரட்சி : உணவு தானியங்கள்
நீலப்புரட்சி M : மீன்
வெள்ளிப்புரட்சி : முட்டை
தங்கப்புரட்சி : தேன்
மஞ்சள் புரட்சி : எண்ணெய் வித்துக்கள்