Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 1.2 தமிழ்மொழி மரபு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 1.
பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.
Answer:
காகம் கரையும்

  • ஆந்தை அலறும்
  • கிளி பேசும்
  • குயில் கூவும்
  • கூகை குழறும்
  • கோழி கொக்கரிக்கும்
  • சேவல் கூவும்
  • புறா குனுகும்
  • மயில் அகவும்
  • வண்டு முரலும்

Question 2.
ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.
Answer:

  • நிலம் – தரை, மண், இடம், பூவுலகு, பூமி, மனை, புவி. நெருப்பு,
  • தீ – கொள்ளி, அக்கினி, கனல், அனல்.
  • நீர் – தண்ணீர், வெள்ளம், புனல். வளி
  • வளி – காற்று, வாயு, தென்றல், புயல்.
  • விசும்பு – ஆகாயம், வானம், விண்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 3.
ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு 1
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு 2

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பறவைகள் ………………… பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில்
ஆ) விசும்பில்
இ) மரத்தில்
ஈ) நீரில்
Answer:
ஆ) விசும்பில்

Question 2.
இயற்கையைப் போற்றுதல் தமிழர் ……………………..
அ) மரபு
ஆ) பொழுது
இ) வரவு
ஈ) தகவு
Answer:
அ) மரபு

Question 3.
‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) இரண்டு + திணை
ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை
ஈ) இருந்து + திணை
Answer:
அ) இரண்டு + திணை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 4.
‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) ஐம் + பால்
ஆ) ஐந்து + பால்
இ) ஐம்பது + பால்
ஈ) ஐ + பால்
Answer:
ஆ) ஐந்து + பால்

சிந்தனை வினா

Question 1.
நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
மனிதன் தன் வாழ்நாளில் நல்ல முறையில் வாழ்ந்து, தான் வாழ்ந்ததற்கான அடிச்சுவட்டை விட்டுச் செல்கிறான். அவ்வகையில் பழந்தமிழர் தம் வாழ்வில் கடைப்பிடித்து தமக்கு விட்டுச் சென்ற பண்பாட்டை மரபுகளாகப் பின்பற்றுவது நமது கடமையாகும். அதனால்தான், நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றி வந்தனர். மரபு மாறினால் பொருள் மாறிவிடும் பண்பாடும் அர்த்தமற்று போய்விடும். எனவே, நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என கருதுகிறேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வாழ்வுக்குரிய ஒழுங்குமுறைகள் ……………………… எனப்படும்.
அ) அறிவு
ஆ) செல்வம்
இ) ஒழுக்கம்
ஈ) சிறப்பு
Answer:
இ) ஒழுக்கம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 2.
மொழிக்குரிய ஒழுங்குமுறைகள் ……………….. எனப்படும்.
ஆ) கலாச்சாரம்
இ) பண்பாடு
ஈ) ஒழுக்கம்
Answer:
அ) மரபு

Question 3.
திணை ……………….. வகைப்படும்.
அ) மூன்று
ஆ) இரண்டு
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) இரண்டு

Question 4.
பால் …………………. வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஆறு
இ) ஐந்து
ஈ) மூன்று
Answer:
இ) ஐந்து

Question 5.
செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ……………………. கூறுகிறது.
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) சங்கநூல்
ஈ) தொல்காப்பியம்
Answer:
ஈ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 6.
இவ்வுலகம் ……………………. ஆல் ஆனவை.
அ) காற்று
ஆ) நீர்
இ) ஐம்பூதங்கள்
ஈ) நெருப்பு
Answer:
இ) ஐம்பூதங்கள்

Question 7.
எழுத்துகள் நீண்டு ஒலிப்பதை …………………. என்பர்.
அ) குறில்
ஆ) ஆய்தம்
இ) அளபெடை
ஈ) உயிர்மெய்
Answer:
இ) அளபெடை

Question 8.
தொல்காப்பியத்தின் ஆசிரியர் …………………….
அ) தொல்காப்பியர்
ஆ) பவணந்தி முனிவர்
இ) கம்பர்
ஈ) பரணர்
Answer:
அ) தொல்காப்பியர்

Question 9.
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் …………………. ஆகும்.
அ) திருக்குறள்
ஆ) தொல்காப்பியம்
இ) நன்னூல்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஆ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 10.
தொல்காப்பியம் ……………………….. அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
அ) ஐந்து
ஆ) ஆறு
இ) நான்கு
ஈ) மூன்று
Answer:
ஈ) மூன்று

குறுவினா

Question 1.
“இரு திணைகள்” எவையெனச் சுட்டுக.
Answer:
உயர்திணை, அஃறிணை.

Question 2.
“ஐம்பால்கள் எவையெனச் சுட்டுக.
Answer:

  1. ஆண்பால்
  2. பெண்பால்
  3. பலர்பால்
  4. ஒன்றன்பால்
  5. பலவின்பால்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 3.
உயிரளபெடை என்றால் என்ன?
Answer:
செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துகள் ஏழும் அளபெடுக்கும். இஃது உயிரளபெடை எனப்படும்.

Question 4.
ஐம்பூதங்கள் யாவை?
Answer:
நிலம், தீ, நீர், காற்று, வானம் ஆகியன ஐம்பூங்களாகும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

சொல்லும் பொருளும்

1. விசும்பு – வானம்
2. மயக்கம் – கலவை
3. இருதிணை – உயர்திணை, அஃறிணை
4. வழா அமை – தவறாமை
5. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
6. மரபு – வழக்கம்
7. திரிதல் – மாறுபடுதல்
8. செய்யுள் – பாட்டு
9. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)

இளமைப் பெயர்கள்

  • புலி பறழ்
  • சிங்கம் – குருளை
  • யானை – கன்று
  • பசு – கன்று
  • ஆடு – குட்டி

ஒலி மரபுகள்

  • புலி – உறுமும்
  • சிங்கம் – முழங்கும்
  • யானை – பிளிறும்
  • பசு – கதறும்
  • ஆடு – கத்தும்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

Students can Download Tamil Chapter 3.1 மலைப்பொழிவு Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது ….
அ) பணம்
ஆ) பொறுமை
இ) புகழ்
ஈ) வீடு
Answer:
ஆ) பொறுமை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

Question 2.
சாந்த குணம் உடையவர்கள் ………………… முழுவதையும் பெறுவர்.
அ) புத்தகம்
ஆ) செல்வம்
இ) உலகம்
ஈ) துன்பம்
Answer:
இ) உலகம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

Question 3.
மலையளவு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) மலை + யளவு
ஆ) மலை + அளவு
இ) மலையின் + அளவு
ஈ) மலையில் + அளவு
Answer:
ஆ) மலை + அளவு

Question 4.
‘தன்னாடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ….
அ) தன் + னாடு
ஆ) தன்மை + னாடு
இ) தன் + நாடு
ஈ) தன்மை + நாடு
Answer:
இ) தன் + நாடு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

Question 5.
இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …….
அ) இவையில்லாது
ஆ) இவை இல்லாது
இ) இவயில்லாது
ஈ) இவஇல்லாது
Answer:
அ) இவையில்லாது

பொருத்துக
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு - 1

குறுவினா

Quesiton 1.
இந்த உலகம் யாருக்கு உரியது?
Answer:
இந்த உலகம் முழுவதும் சாந்தம் என்னும் அமைதியான பண்புடையவர்களுக்கே

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

Quesiton 2.
உரியது. உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?
Answer:
உலகம் நிலைதடுமாறக்காரணம்: பலவேறுபட்ட சாதிகளாலும் கருத்துவேறுபாடுகளாலும் இவ்வுலகம் நிலைதடுமாறுகிறது.

Quesiton 3.
வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?
Answer:
வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற செய்யவேண்டுவன :
(i) மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும்.
(ii) வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற வேண்டுமானால் மனிதன் நல்ல உள்ளத்தோடு வாழவேண்டும்.

சிறுவினா

சாந்தம் பற்றி இயேசு காவியம் கூறுவன யாவை?
Answer:
சாக்கம் பற்றி இயேசு காவியம் கூறுவன:
சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இவ்வுலகம் முழுவதும் உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது. அறம் என்கிற ஒன்றனை நம்பிய பிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகிவிடும். பொருள் – ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும். இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் – பெற வேண்டும்.

இரக்கம் உடையவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர். இதுதான் அவர்களுக்கான பரிசு . மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும். நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவனுடைய வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.

மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். அவர்கள் தன்னாடு , பிறநாடு என்று பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள் தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

சிந்தனை வினா

எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
Answer:
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ செய்ய வேண்டுவன :
(i) மாணவர்கள் பள்ளியில் தன் நண்பர்களுடன் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். சக மாணவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்க வேண்டும். அவர்கள் கற்பதற்கும் பாடங்களைப் படிப்பதற்கும் உதவி புரிய வேண்டும்.

(ii) வீட்டில் தன் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி ஆகியோருடன் விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும். நான், நீ என்று போட்டிப் போடக்கூடாது. ஆணவமின்றி இருக்க வேண்டும். நாம் சொல்வதை மட்டும் எல்லோரும் செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடாது.

(iii) பொது இடங்களில் (சமுதாயம்) சாதி மத பேதங்களை பார்க்கக்கூடாது. இயற்கை அனைவருக்கும் பொது என்பதனைப் போல் தெய்வமும் பொதுவானது என உணர வேண்டும். பிற மதத் தெய்வங்களை வணங்கவில்லை யென்றாலும், அத்தெய்வங்களைப் பற்றியோ, மதத்தினர் பற்றியோ அவதூறு பேசக்கூடாது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று பாராமல் அனைவரும் ஒரே மனித சாதி என
எண்ண வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

(iv) யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கணியன் பூங்குன்றனார் கூறியதை நினைவில் வைத்து வாழ்ந்தால் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ முடியும்.

கற்பவை கற்றபின்

இயேசுவின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு ஒன்றினை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
(i) ஒரு பெண் பன்னிரண்டு ஆண்டுகளாகத் தீராத நோயினால் துன்பப்படுகின்றாள். அவள் எப்படியாவது அந்நோய் குணமாக வேண்டும் என்று நினைத்தாள். அவள் கூட்டத்திற்கிடையில் நின்றிருந்த இயேசுவின் பின்னால் போய் அவருடைய அங்கியின் ஓரத்தைத் தொட்டாள். உடனடியாக அவள் குணமாகிவிட்டாள். அப்போது இயேசு , “யார் என்னைத் தொட்டது?” என்று கேட்டார். அந்தப் பெண் பயந்து போனாள். பிறகு அவர் முன்னால் வந்து உண்மையைச் சொன்னாள். இயேசு அவளிடம் மகளே , நிம்மதியாகப் போ’ என்று ஆறுதலாகச் சொன்னார்.

(ii) இன்னொரு முறை, யவீரு என்ற அதிகாரி இயேசுவிடம் வந்து, தயவுசெய்து என் வீட்டுக்கு வாருங்கள். என்னுடைய குட்டிப் பெண் மிகவும் உடம்பு முடியாமல் இருக்கிறாள் என்று கெஞ்சினார். ஆனால், இயேசு அங்கே போவதற்கு முன்பே அவள் இறந்து விட்டாள். இருந்தாலும், யவீருவின் வீட்டுக்கு இயேசு போனார். அங்கே நிறைய பேர் அந்தக் குடும்பத்தாருடன் சேர்ந்து புலம்பி அழுது கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “அழாதீர்கள், அவள் தூங்குகிறாள்” என்று சொன்னார். பிறகு, அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து, சிறுமியே, எழுந்திரு!” என்று சொன்னார். உடனே அவள் எழுந்து உட்கார்ந்தாள். சாப்பிட அவளுக்கு ஏதாவது கொடுக்கும்படி இயேசு அவளுடைய அப்பா, அம்மாவிடம் சொன்னார். அந்த பெற்றோர் அளவிலா ஆனந்தம் அடைந்தனர். இதேபோல் பல நிகழ்வுகள் இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்துள்ளன.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
2. கண்ண தாசனின் சிறப்புப் பெயர் கவியரசு .
3. கண்ணதாசன் தமிழக அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.
4. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசு காவியம் ஆகும்.
5. மலைப்பொழிவு என்னும் பகுதி இயேசு காவியம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
6. இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும்.
7. போட்டி இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

விடையளி :

Question 1.
கவிஞர் கண்ணதாசன் எவ்வகையான நூல்களை எழுதினார்?
Answer:
காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் கண்ணதாசன்.

Question 2.
தலைவர்கள் என்று இயேசுநாதர் குறிப்பிடப்பட்டவர் யாவர்?
Answer:
சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்று இயேசுநாதர் கூறுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

Question 3.
அறம் பற்றி இயேசுநாதர் கூறியவை பற்றி எழுதுக.
Answer:
இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது. அறம் என்கிற ஒன்றனை நம்பிய பிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசுநாதர் கூறியுள்ளார்.

Question 4.
உண்மையில்லா உறவுகளாக இயேசுநாதர் கூறுவது யாது?
Answer:
மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். மேலும், அவர்கள் தன்னாடு, பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.

பாடலின் பொருள்

(தம் சீடர்களுக்கு அறிவுரை கூற எண்ணிய இயேசுநாதர் ஒரு குன்றின் மீது ஏறி நின்று பேசத் தொடங்கினார்.)

சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள்தான் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு

இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைத்தடுமாறுகிறது. அறம் என்கிற ஒன்றனை நம்பிய பிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும். இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும்.

இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர். இதுதான் அவர்களுக்கான பரிசு . மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும். அவன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.

மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். மேலும் அவர்கள் தன்னாடு என்றும், பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள்தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 1.
‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
* வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!*

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே! – பாரதியார்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 2.
படித்துச் சுவைக்க.
Answer:
செந்தமிழ் அந்தாதி
செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே! – முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!
எழில்மகவே! எந்தம் உயிர்.
உயிரும்நீ; மெய்யும்நீ; ஓங்கும் அறமாம்
பயிரும்நீ; இன்பம்நீ; அன்புத் தருவும்நீ;
வீரம்நீ; காதல் நீ; ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ; யாவும்நீ யே! – து. அரங்க ன்

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ………………………..
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
Answer:
அ) வைப்பு

Question 2.
‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
Answer:
ஆ) என்று+என்றும்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 3.
‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
Answer:
இ) வானம் + அளந்தது

Question 4.
‘அறிந்தது + அனைத்தும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) அறிந்தது அனைத்தும்
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
Answer:
இ) அறிந்ததனைத்தும்

Question 5.
‘வானம் + அறிந்த’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) வானம் அறிந்து
ஆ) வான் அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
Answer:
இ) வானமறிந்த

தமிழ்மொழி வாழ்த்து – இப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

வாழ்க – வானமளந்த
வாழிய – வாழ்க
ங்கள் – ன்றென்றும்
ண்மொழி – ளர்மொழி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

குறுவினா

Question 1.
தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
Answer:
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது.

Question 2.
தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
Answer:
வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது.

சிறுவினா

Question 1.
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
Answer:

  • எல்லா காலத்திலும் நிலைபெற்று தமிழே! வாழ்க.
  • எல்லாவற்றையும் அறிந்துரைக்கும் தமிழே! வாழ்க.
  • ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட தமிழே! வாழ்க.
  • உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க.
  •  எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
  • தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும் சிறப்படைக!
  • பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.
  • என்றென்றும் தமிழே! வாழ்க!
  • வானம் வரையுள்ள எல்லாப் பொருட்களின் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

சிந்தனை வினா

Question 1.
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
Answer:

  • நமது தாய்மொழி தமிழ். இதன் சிறப்புகள் பல. இம்மொழி வரலாற்றுத் தொன்மை, – பண்பாட்டு வளம், சொல்வளம், கருத்துவளம் ஆகியவற்றால் ஓங்கி உயர்ந்துள்ளது.
  • அழியாத மொழியாக, சிதையாத மொழியாக, அன்று முதல் இன்றுவரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே மொழி நம் தமிழ் மொழிதான்.
  • தமிழ் மொழி ஒன்றுதான், வாழ்வுக்கே இலக்க
  • இத்தகைய வளமிக்க மொழியாக விளங்குவதனால் தான் பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கிறார்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
……………………. கருத்தை அறிவிக்கும் கருவி ஆகும்.
அ) நாடு
ஆ) மாநிலம்
இ) மொழி
ஈ) ஊர்
Answer:
இ) மொழி

Question 2.
தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை ……………….. ஆகக் கருதிப் போற்றி வந்துள்ளனர்.
அ) அறிவு
ஆ) புத்தி
இ) உயிர்
ஈ) தலை
Answer:
இ) உயிர்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 3.
…………………. அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே.
அ) கடல்
ஆ) பூமி
இ) வானம்
ஈ) நாடு
Answer:
இ) வானம்

Question 4.
‘இசை’ என்பதன் பொருள் ………………….
அ) கருவி
ஆ) புகழ்
இ) பொறுமை
ஈ) சிறுமை
Answer:
ஆ) புகழ்

Question 5.
………………. நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே.
அ) சூழ்கடல்
ஆ) ஆர்கழி
இ) சூழ்கலி
ஈ) விரிகடல்
Answer:
இ) சூழ்கலி

Question 6.
வானமளந்தது அனைத்தும் அளந்திடு …………………….. வாழியவே.
அ) வண்மொழி
ஆ) பண்மொழி
இ) தன்மொழி
ஈ) செம்மொழி
Answer:
அ) வண்மொழி

Question 7.
தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க ……………………
அ) ஆந்திரா
ஆ) கர்நாடகா
இ) கேரளம்
ஈ) தமிழ்நாடு
Answer:
ஈ) தமிழ்நாடு

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 8.
விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………..
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) சுரதா
ஈ) வாணிதாசன்
Answer:
ஆ) பாரதியார்

Question 9.
சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர் ……………….
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) தமிழண்ணல்
ஈ) கு.பா.ரா.
Answer:
அ) பாரதியார்

Question 10.
‘சிந்துக்குத் தந்தை, புதிய அறம் பாட வந்த அறிஞர்’ என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ……………………..
அ) சீட்டுக்கவி
ஆ) பாரதிதாசன்
இ) குமரகுருபரர்
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்

Question 11.
‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் …………………
அ) சுரதா
ஆ) பாரதிதாசன்
இ) காந்தி
ஈ) வாணிதாசன்
Answer:
ஆ) பாரதிதாசன்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 12.
‘வண்மொழி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………..
அ) வண் + மொழி
ஆ) வண்மை + மொழி
இ) வளமை + மொழி
ஈ) வாண் + மொழி
Answer:
ஆ) வண்மை +மொழி

Question 13.
‘ஏழ்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) ஏழ் + கடல்
ஆ) ஏழ்மை + கடல்
இ) ஏழு + கடல்
ஈ) எளிமை + கடல்
Answer:
இ) ஏழு + கடல்

Question 14.
‘வளர் + மொழி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) வளர்மொழி
ஆ) வளமைமொழி
இ) வளமொழி
ஈ) வளர்ந்தமொழி
Answer:
அ) வளர்மொழி

Question 15.
‘சீட்டு + கவி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) சீட்டுகவி
ஆ) சீட்டுக்கவி
இ) சீடைக்கவி
ஈ) சீட்கவி
Answer:
ஆ) சீட்டுக்கவி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 16.
‘சிந்தனை + ஆளர்’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) சிந்தனை ஆளர்
ஆ) சிந்தனைஎளர்
இ) சிந்தனையாளர்
ஈ) சிந்து ஆளர்
Answer:
இ) சிந்தனையாளர்

குறுவினா

Question 1.
வளமான தமிழ்மொழி எதனை அறிந்து உரைக்கும்?
Answer:
ஆகாயத்தில் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி.

Question 2.
தமிழ்மொழி எது உள்ள வரையிலும் வாழ வேண்டும்?
Answer:
எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க!

Question 3.
எந்த இருள் நீங்க வேண்டும்?
Answer:
எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்க வேண்டும்.

Question 4.
தமிழ்மொழி எங்குச் சிறப்படைய வேண்டும்?
Answer:
தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படைய வேண்டும்.

Question 5.
எந்தத் துன்பம் நீங்கி தமிழ்நாடு ஒளிர வேண்டும்?
Answer:
பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 6.
பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் யாவை?
Answer:
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதியார்.

Question 7.
பாரதியார் நடத்திய இதழ்கள் யாவை?
Answer:
இந்தியா, விஜயா இதழ்களை நடத்தினார்.

Question 8.
பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?
Answer:
சந்திரிகையின் கதை, தராசு போன்றவை பாரதியார் எழுதிய உரைநடை நூல்களாகும்.

Question 9.
பாரதிதாசன், பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?
Answer:
சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன், பாரதியாரைப் புகழ்ந்துள்ளார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

சிறுவினா

Question 1.
பாரதியார் குறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : பாரதியார்
இயற்பெயர் : சுப்பிரமணியன்
ஊர் : எட்டயபுரம்
பிறப்பு : 11.12.1882
பெற்றோர் : சின்னசாமி – இலக்குமி அம்மையார்
சிறப்பு பெயர்கள் : பாரதி, ஷெல்லிதாசன், புதுக்கவிதைக்கு முன்னோடி, சரஸ்வதி பட்டம், காளிதாசன், தேசாபிமானி, நித்தியதீரர், மகாகவி.
இதழ்ப்பணி : சக்கரவர்த்தினி, கர்மயோகி, பாலபாரத், சுதேசமித்திரன், இந்தியா, விஜயா.
இயற்றியவை : கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், சந்திரிகையின் கதை, தராசு, புதுக்கவிதைகள், பாப்பா பாட்டு, பூலோக ரம்பை, திண்டி மசாஸ்திரி, சின்ன சங்கரன் கதை, நவதந்திரக் கதைகள்.
இறப்பு : 11.09.1921 (39 ஆண்டுகள்)

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

சொல்லும் பொருளும்

1. நிரந்தரம் – காலம் முழுமையும்
2. வைப்பு – நிலப்பகுதி
3. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
4. வண்மொழி – வளமிக்க மொழி
5. இசை – புகழ்
6. தொல்லை – பழமை, துன்பம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.4 உண்மை ஓளி

Students can Download Tamil Chapter 2.4 உண்மை ஓளி Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.4 உண்மை ஓளி

மதிப்பீடு

Question 1.
உண்மை ஒளி’ படக்கதையைச் கதையாகச் சுருக்கி எழுதுக.
Answer:
ஜென் குரு ஒருவர் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். குழந்தைகளிடம் உண்மையான ஒளி எது?’ என்பதைப் பற்றி இன்று அறிந்து கொள்ளப் போகிறோம் என்று கூறிவிட்டு தொடங்கினார்.

பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிரும் ஒன்றே. பசி, தாகம், தூக்கம் ஆகியவை எல்லா உயிர்களுக்கும் உண்டு. அதுமட்டுமில்லாமல் இரவும் பகலும் மாறி மாறி வருவதுபோல வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்று கூறினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.4 உண்மை ஓளி

பிறகு, “இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது என்பதை எந்த நொடியில் நீங்கள் அறிவீர்கள்?” என்று மாணவர்களிடம் கேட்டார். அதற்கு ஒரு மாணவன், “தொலைவில் விலங்கு குதிரையா? கழுதையா? என்பதை அடையாளம் காணக்கூடிய நொடியில் வெளிச்சம் வந்துவிட்டதை நான் அறிவேன் ஐயா” என்றான். அதனைக் குரு ஏற்றுக் கொள்ளவில்லை.

மற்றொரு மாணவன் “தூரத்திலிருக்கும் மரம் ஆலமரமா? அரசமரமா? என்பதை அடையாளம் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்துவிட்டது என்பதை அறியலாம். சரிதானே ஐயா?” என்றான்.

குரு “வேறு யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். உடனே மாணவர்கள் “எங்களுக்குத் தெரியவில்லை ஐயா, தாங்களே கூறிவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். ஒரு மனிதரைக் காணும்போது இவர் என் உடன்பிறந்தவர் என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதுதான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள்” என்று குரு கூறினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.4 உண்மை ஓளி

“இரவும் பகலும் வெறும் காலவேறுபாடுகள் தான். உண்மையான ஒளி உள்ளத்தின் உள்ளே ஏற்பட வேண்டியது என்பதை நீங்கள் அளித்த விளக்கத்தின் மூலம் நாங்கள் புரிந்து கொண்டேம் ஐயா” என்று மாணவர்கள் கூறினர். உள்ளுக்குள் ஒளி இல்லையென்றால் உச்சி வெயில் கூடக் காரிருளே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

வகுப்பு முடிந்த பிறகு குரு அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இருட்டுவதற்குள் ஊரை அடைய வேண்டும் என்று எண்ணிக்கொண்டே சென்றார். சாலையோரம் ஒருவன் மயங்கிக் கிடந்தான். குதிரையை நிறுத்தி, கீழே இறங்கிய குரு அந்த மனிதனை எழுப்பிப் பார்த்தார். அவன் மயங்கிய நிலையிலேயே இருந்தான். மீண்டும் மீண்டும் எழுப்பியதில் மயங்கியவன் எழுந்தான்.

குரு , கொஞ்சம் நீரைக் கொடுத்துக் குடிக்கச் செய்தார். மயங்கியவன், தான் பசியால் மயங்கி விழுந்துவிட்டதாகவும் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறினான். மேல் பரிதாபப்பட்டு அவனைக் கிரையில் அன வனைக் குதிரையில் அழைத்துச் செல்ல N எண்ணினார். அதனால் அவனை மெதுவாகக் குதிரையின் மீது குரு ஏற்றினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.4 உண்மை ஓளி
குதிரையில் ஏறிய அவன் குதிரையை அடித்து விரட்டத் தொடங்கினான். குதிரையைத் – திருடுவதற்குகாகத்தான் மயங்கியவன் போல் நடித்துள்ளான் என்பதைக் குரு உணர்ந்தார்.

குரு குதிரையில்லாமல் எங்கும் செல்ல இயலாது என்பதால், எப்படியாவது ஒரு கை குதிரையை வாங்கிக் கொண்டுதான் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்தார். அந்தச் சந்தையில் குருவின் குதிரை நின்று கொண்டிருந்தது. குரு அவன் தோளைத் தொட்டார். குழந்தாய்! என்று அழைத்தார். ஒன்றும் தெரியாதவன் போல் குருவைப் பார்த்து “ஆ! நீங்களா?” என்று கேட்டான். குரு அவனிடம், ” யாரிடமும் சொல்லாதே!” என்றார். குதிரையைத் திருடியவன் எதை? ஏன்?” என்று கேட்டான். குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால், இது உனக்கு எப்படிக் கிடைத்தது என்று யாரிடமும் சொல்லாதே” என்று குரு கூறினார். திருடன் இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.4 உண்மை ஓளி

உடனே, குரு “நீ நினைப்பது எனக்குப் புரிகிறது குழந்தாய்! ஆனால், நான் ஏமாந்து போனது தெரிந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால் கூட அவர்களுக்கு யாரும் உதவ முன்வரமாட்டார்கள். புரிகிறதா? குறுகிய தன்னலத்துக்காக நல்ல கோட்பாடுகளை அழித்துவிடக்கூடாது. இதை நீ தெரிந்துகொள்” என்று கூறினார்.
குதிரையைத் திருடியவன் குருவின் பெருந்தன்மையை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தான்.

கற்பவை கற்றபின்

Question 1.
ஜென் கதைகளில் வேறு சிலவற்றை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
ஜென் கதை – வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத்தளபதிக்கு போரை இழக்க மாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.4 உண்மை ஓளி

என்னதான் நம்பிக்கை இருந்தாலும் வீரர்களில்லாமல் தனி ஆளாய் என்ன செய்ய இயலும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள். உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டி விடுகிறேன். அதில் தலைவிழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பி விடுவோம். வெற்றியா? தோல்வியா? நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?” “ஆ…. நல்ல யோசனை. அப்படியே செய்வோம்.”

நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.
தலை…!
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி, வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக எதிரி நாட்டினருடன் சண்டையிட்டனர்.

அம்! என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது. துணைத் தளபதி வந்தான். “நாம் வென்றுவிட்டோம். கடவுள் தீர்ப் முடியாதல்லவா….” என்றான் உற்சாகத்துடன்.
“ஆமாம்… உண்மைதான்” என்று கூறியபடி அந்த நாணயத்தைத் துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.

நாணயத்தின் இருபக்கங்களிலும் தலை.

இக்கதையில் மூலம் நாம் உணர்வது தன்னம்பிக்கைதான் வெற்றியின் முதல்படி என்பதாகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.4 உண்மை ஓளி

Question 2.
உண்மை ஒளி’ படக்கதையை வகுப்பறையில் நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:

காட்சி -1

ஜென் குரு : குழந்தைகளே! உண்மையான ஒளி எது என்பதைப் பற்றி இன்று அறிந்து கொள்ளப் போகிறோம்.
மாணவர்கள் : அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் ஐயா!
ஜென் குரு : பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிரும் ஒன்றே. பசி, தாகம், தூக்கம் ஆகியவை எல்லா உயிர்களுக்கும் உண்டு.

மேலும் இரவும் பகலும் மாறி மாறி வருவது போல வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இப்பொழுது உங்களை ஒரு கேள்வி கேட்கட்டுமா? இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது என்பதை எந்த நொடியில் நீங்கள் அறிவீர்கள்?
மாணவன் : தொலைவில் நிற்கும் விலங்கு குதிரையா? கழுதையா? என்பதை அடையாளம் காணக்கூடிய நொடியில் வெளிச்சம் வந்துவிட்டதை நான் அறிவேன் ஐயா.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.4 உண்மை ஓளி

ஜென் குரு : இல்லை. வேறு யாராவது கூறுங்கள் பார்ப்போம்.
மாணவன் : தூரத்திலிருக்கும் மரம் ஆலமரமா? அரசமரமா? என்பதை அடையாளம் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்துவிட்டது என்பதை அறியலாம். சரிதானே ஐயா!
ஜென் குரு : இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா? மாணவர்கள் எங்களுக்குத் தெரியவில்லை ஐயா. தாங்களே கூறி விடுங்கள்.
ஜென் குரு : ஒரு மனிதரைக் காணும் போது இவர் உடன்பிறந்தவர் என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதுதான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள்.
மாணவர்கள் : இரவும் பகலும் வெறும் கால வேறுபாடுகள் தான். உண்மையான ஒளி உள்ளத்தின் உள்ளே ஏற்பட வேண்டியது என்பதை தாங்கள் புரிந்துகொண்டோம் ஐயா.
ஜென் குரு : உள்ளுக்குள் ஒளி இல்லையென்றால் உச்சி வெயில் கூடக் காரிருளே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மீண்டும் நாளை சந்திப்போம். வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து செல்கின்றனர்.)

காட்சி – 2

(குரு அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்படுகிறார்.)
ஜென் குரு : (மனதிற்குள்) இருட்டுவதற்குள் ஊரை அடைய வேண்டும்.
ஜென் குரு :(வழியில்) ஆ! யாரது சாலையோரம் படுத்துக்கிடப்பது.
(குதிரையை நிறுத்தி, கீழே இறங்கிய குரு அந்த மனிதனை எழுப்புகிறார்)
ஜென் குரு : குழந்தாய்! எழுந்திரு. நீ யார்? ஏன் இங்கே படுத்திருக்கிறாய்?
(மனதிற்குள்) இவன் மயக்கம் அடைந்திருக்கிறான்.
(படுத்திருப்பவனுக்கு நீரைப் பருகத் தருகிறார் குரு.)
ஜென் குரு : குழந்தாய்! எழுந்திரு . இந்த நீரைக் கொஞ்சம் குடி.
(மயக்கமடைந்தவன் எழுந்து உட்காருகிறான்.)

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.4 உண்மை ஓளி
வழிப்போக்கன் : பசியால் மயங்கி விழுந்து விட்டேன். ஐயா. நான் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டும்.
ஜென் குரு : அப்படியா! சரி என்னிடம் குதிரையிருக்கிறது. நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். (குரு , அவனைத் தன் குதிரையின் மீது உட்கார வைக்கிறார்.)
ஜென் குரு : மெதுவாக ஏறுப்பா! பார்த்து உட்கார். (குதிரையில் ஏறிய அவன் குதிரையை அடித்து விரட்டத் தொடங்குகிறான்.)
ஜென் குரு : ஆ! என்ன இது? ஓ! இவன் திருடன் போல இருக்கிறது. என் குதிரையைத் திருடவே இப்படி நடித்திருக்கிறான். (குரு ஏமாற்றத்துடன் நடந்து ஊரை அடைகிறார்.)

காட்சி – 3

இடம் : சந்தை
ஜென் குரு – (மனதிற்குள்) இங்கு எப்படியாவது ஒரு குதிரையை வாங்கிக் கொண்டுதான் ஊருக்குத் திரும்ப வேண்டும்.
ஜென் குரு : ஆ! அதோ அங்கு நிற்பது என்னுடைய குதிரையைப் போல் உள்ளதே
(குருவிடம் குதிரையைத் திருடியவன் அங்கு நிற்கிறான். குரு அவன் தோளைத் தொடுகிறார்)
ஜென் குரு : குழந்தாய்!
திருடன் : ஆ. நீங்களா? (குரு மெல்லச் சிரிக்கிறார்)
ஜென் குரு : யாரிடமும் சொல்லாதே !
திருடன் : எதை? ஏன்?

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.4 உண்மை ஓளி
ஜென் குரு : குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால், இது உனக்கு எப்படிக் கிடைத்தது என்று யாரிடமும் சொல்லாதே.
திருடன் : (மனத்திற்குள்) இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.
ஜென் குரு : நீ நினைப்பது எனக்குப் புரிகிறது குழந்தாய்! ஆனால், நான் ஏமாந்து போனது தெரிந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால் கூட அவர்களுக்கு யாரும் உதவ முன்வர மாட்டார்கள். புரிகிறதா? குறுகிய தன்னலத்துக்காக நல்ல கோட்பாடுகளை அழித்துவிடக்கூடாது. இதை நீ தெரிந்து கொள்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

Students can Download Tamil Chapter 3.5 ஆகுபெயர் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ……………..
அ) பொருளாகு பெயர்
ஆ) சினையாகு பெயர்
இ) பண்பாகு பெயர்
ஈ) இடவாகு பெயர்
Answer:
அ) பொருளாகு பெயர்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

Question 2.
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது …………
அ) முதலாகு பெயர்
ஆ) சினையாகு பெயர்
இ) தொழிலாகு பெயர்
ஈ) பண்பாகு பெயர்
Answer:
ஆ) சினையாகு பெயர்

Question 3.
மழை சடசடவெனப் பெய்தது. இத்தெடரில் அமைந்துள்ளது …………..
அ) அடுக்குத்தொடர்
ஆ) இரட்டைக்கிளவி
இ) தொழிலாகு பெயர்
ஈ) பண்பாகுபெயர்
Answer:
ஆ) இரட்டைக் கிளவி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

Question 4.
அடுக்குத் தொடரில் ஒரே சொல் …………………… முறை வரை அடுக்கி வரும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
இ) நான்கு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

குறுவினா

Question 1.
ஒரு பெயர்ச்சொல் எப்போது ஆகுபெயர் ஆகும்?
Answer:
ஒரு பெயர்ச்சொல் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வரும்போது அது ஆகுபெயர் ஆகிறது.

Question 2.
இரட்டைக் கிளவி என்பது யாது? சான்று தருக.
Answer:
சொற்கள் இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் இரட்டைக் கிளவி எனப்படும். சான்று : விறுவிறு , கலகல, மளமள மாலா கலகலவெனச் சிரித்தாள்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

சிறுவினா 

Question 1.
பொருளாகு பெயரையும் சினையாகு பெயரையும் வேறுபடுத்துக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர் - 1

Question 2.
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் – ஒப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர் - 2

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

கற்பவை கற்றபின்

Question 1.
பள்ளி நூலகத்திலிருந்து நூல் ஒன்றை எடுத்துவந்து அந்நூலில் ஆகுபெயர்களாக இடம் பெற்றுள்ள பெயர்ச்சொற்களைத் தொகுக்க.
Answer:
முகிலன் தன் பெற்றோருடன் தீபாவளிக்குப் புதிய ஆடை வாங்குவதற்குக் கடைக்குச் சென்றான். முகிலனின் அப்பா அவன் அம்மாவிடம் “காஞ்சி வேணுமா? ஆரணி வேணுமா?” என்று கேட்டார். முகிலனின் அம்மா, எனக்கு காஞ்சிதான் வேணும்” என்று கூறினார். பார்த்தவுடனேயே தேர்ந்தெடுத்துவிட்டார். பிறகு முகிலனுக்கு முழுக்கால் சட்டைக்கும் மேல் சட்டைக்கும் துணி எடுக்க ஆண்கள் பிரிவுக்குச் சென்றனர். கடைக்காரரிடம் ‘2 மீட்டர் கொடு’ என்று கேட்டார். தனக்கும் எடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறினர். முகிலன் தன் தந்தையிடம் பசிக்கிறது என்று கூறியதால் உணவகம் சென்றனர்.

மூவரும் பொங்கல் உண்டனர். முகிலனின் அம்மா முருங்கை சாம்பார் நன்றாக உள்ளது என்று கூறினார். அங்கு முகிலனின் மாமாவைப் பார்த்தனர். அவருடன் பேசிக் கொண்டே பேருந்து நிலையம் சென்றனர். முகிலனின் அப்பா மாமாவிடம், “வயலில் என்ன பயிர் வைத்துள்ளாய்?” என்று கேட்டார். மாமா , “கீரை விதைத்துள்ளேன்” என்றார். மேலும், “செவலைக்குக் காலில் அடிப்பட்டு விட்டது. கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஒரே அலைச்சலாக இருக்கிறது” என்று கூறினார். விவசாயம் செய்வதிலும் பல துன்பங்கள் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்வது? சரி பேருந்து வந்து விட்டது. நாங்கள் புறப்படுகிறோம்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டனர்.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர் - 3

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

Question 2.
அன்றாடப் பேச்சு வழக்கில் இடம்பெறும் அடுக்குத்தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றைத் தொகுக்க.
Answer:
அடுக்குத் தொடர் :
1. ஓட்டப்பந்தயத்தில் ஓடிய நண்பனை நான் ஓடு ஓடு என்று உற்சாகப்படுத்தினேன்.
2. எழுத எழுத கையெழுத்து அழகாக இருக்கும்.
3. இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக வருக என வரவேற்றார் பள்ளி முதல்வர்.
4. கந்தன் பாம்பு பாம்பு என்று அலறினான்.
5. பேச்சுப்போட்டியில் பேசிய மாணவனை அனைவரும் அருமை அருமை என்று பாராட்டினார்.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர் - 4

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

இரட்டைக் கிளவி :

1. முல்லை மலர் கமகம என் மணம் வீசுகிறது.
2. மரக்கிளை மடமட என முறிந்தது.
3. வெளியில் சென்று வந்தாலே கசகச என வியர்வை வந்து விடும்.
4. கொடைக்கானல் சென்ற போது கிடுகிடு பள்ளத்தைப் பார்த்தேன்.
5. வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க குடுகுடு கிழவர் வந்தார்.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர் - 5

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
2. பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகி வருவது பொருளாகு பெயர்.
3. சினையின் (உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது சினையாகு பெயர்.
4. இந்தியா வென்றது – இடவாகுபெயர்.
5. திசம்பர் சூடினாள் – காலவாகுபெயர்.
6. இனிப்பு தின்றான் – பண்பாகு பெயர்
7. சுண்டல் தின்றான் – தொழிலாகு பெயர்
8. இரட்டைச் சொற்களாகவே வரும் சொற்கள் இரட்டைக்கிளவி.
9. ஒரே சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும் சொல் அடுக்குத்தொடர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

மொழியை ஆள்வோம்

கேட்க.

மனித நேயம் பற்றித் தலைவர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே மனித நேயம் பற்றித் தலைவர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டு மகிழ வேண்டும்.

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்றைப் பற்றி இரண்டு நிமிடம் பேசுக.

அ) உண்மை
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
உண்மை – வாய்மை என்றும் மெய் என்றும் கூறப்படும். இவ்வாய்மையை வள்ளுவர்
“வாய்மை எனப்படுவதுயாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.”

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

– என்று கூறுகிறார். வாய்மை என்றால் பிறர் மனம் புண்படாதபடி பேசுதல் என்கிறார்.

ஒருவரைப் பெரியவர் சிறியவர் என்று இனம் காண்பது அவர்கள் செய்யும் செயல்களை வைத்துதான். எல்லோருக்கும் உண்மையாக இருங்கள். பொய் கூறாதீர்கள். ஆயிரம் நன்மைகள் கிடைத்தாலும் பொய்மையை அகற்றி உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உண்மை என்றவுடன் நம் நினைவிற்கு வருபவர்கள் இரண்டு பேர். ஒருவர் அரிச்சந்திரன். மற்றொருவர் காந்தியடிகள். அரிச்சந்திரன் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் உண்மையை மட்டுமே பேசியவன். அந்த உறுதிப்பாட்டினால் என்றென்றும் மக்கள் மனதில் நிற்கிறான்.

அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்துதான் காந்தியடிகள் தாம் உண்மையைப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தவர்.

உண்மை என்பது நாம் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களில் முதன்மையானதாகும். நேர்மை என்றால் நேர்த்தியான வழியில் செல்லுதல், நியாயம் பார்த்து நடத்தல், குறுக்கு வழியில் சாதிக்க நினைக்காமல், உண்மைப் பாதையை விட்டு நீங்காது இருத்தலும் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

எச்செயல் செய்தாலும் உண்மையை மறவாமல் அதன் நினைவைத் துறவாமல் செய்வது அவசியம் என்பது நம் முன்னோர்களின் கருத்து. அப்படிச் செய்யும் செயல்கள் நமக்கு நன்மையைத் தரும்.

உள்ளதை உள்ளவாறே கூறுதல் பற்றி, மகாவீரர், “நீ உண்மை பேசுவதினால், ஒருவர் மனம் நோகும் என்றாலோ, உன் பேச்சு ஒருவருக்கும் பிடிக்காது என்றாலோ, பிற உயிர்களுக்குத் துன்பம் நேரும் என்றாலோ, அதைப் பேசாதிருத்தல் நலம். அது உண்மையாக இருந்தாலும் உனக்குப் பாவமே நல்கும்” என்று கூறுகிறார்.

வாய்மையைப் பேசுவோம். எந்தச் சொல்லிலும் பொருளை மட்டும் நாடாமல் வாய்மையை நாடுவோம். நமக்கும் பிறருக்கும் ஒரு தீங்கும் இல்லாத நலம் தரும் சொற்களைக் கூறுவோம் என்று கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

ஆ) மனித நேயம்
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
மனித நேயம் என்பது பிறர்மீது நாம் காட்டும் அக்கறை, ஆறுதல், நேர்மறை உணர்வு, கருணை உள்ளம், இரக்க குணம், எல்லோருடனும் காட்டும் அன்பு போன்றவற்றின் தொகுப்பே ஆகும். இவற்றை ஒவ்வொருவரும் பெற்றிருத்தல் அவசியம். மனிதநேயம் தன்னலம் அற்ற சேவையாகும்.

நம் உறவினர்களுடன், நண்பர்களுடன் காட்டும் அன்பு, பாசம், கருணை போன்றவை மனிதநேயமாகாது. எந்தத் தொடர்பும் இல்லாதவரின் துன்பத்தைப் பொறுக்காமல் இரக்கப்படுகிறோமே அதுவே மனித நேயம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

அன்னை தெரசாவைக் கொண்டாடுகிறோம். எதற்காக? அவர் சுயநலமற்றவராய் வாழ்ந்ததால் தான். அவர் வாழ்க்கையில் கண்டவை, தியாகம், அறம், மனிதநேயம், ஏழை எளியவர்மீது அக்கறை, கருணை, மதநல்லிணக்கம், விட்டுக்கொடுத்தல் ஆகிய ஒட்டுமொத்த உயர்பண்புகள்தாம்.

மனிதநேயம் என்பது மனிதன், மனிதன் மேல் மட்டும் கொள்ளும் நேயம் என்றல்லாமல் – சற்றே விரிந்த பார்வையோடு இயற்கையின் மாபெரும் படைப்பான மனிதன், தன்னைப் படைத்த இயற்கை முதல் தான் படைத்த விஞ்ஞானம் ஈறாக அனைத்தினிடமும் காட்டுவதே மனிதநேயம் ஆகும் என்பதை உணர வேண்டும். அதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் இராமலிங்க அடிகள் ஆவார்.

மனித நேயத்திற்கு இவரைவிட வேறு யாரையும் எடுத்துக்காட்டாகக் காட்ட இயலாது. – ஏனெனில் இவர் “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று ஓரறிவு * உயிரிடமும் இரக்கம் காட்டியவர். இவர் சாதி, மதம், மொழி, தேசம் போன்ற அனைத்து வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்டு அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா நெறியே குருவருள் நெறி என்றார். அனைத்து உயிர்களும் இறைவனின் குழந்தைகள், அவற்றைச் சமமாக பாவிப்பதும் கருணையால் உபசரிப்பதும் மட்டுமே திருவருளுக்கு உகந்தது என்றார்.

ஒருநாளில் இருபது மணி நேரம் பிறருக்காகவே வாழ்ந்தவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல். இவர் கை விளக்கேந்திய காரிகை’ என்று அழைக்கப்படுபவர். இவர் தமது 31 ஆவது வயதில் தனது குடும்பத்தின் செல்வத்தையும் சுகபோகங்களையும் துறந்து, நோயாளிகளையும் போரில் காயமடைந்தவர்களையும் கவனித்துக் கொள்ளும் தமது நீண்ட நாள் விருப்பதை நிறைவேற்றிக்கொள்ள புறப்பட்டவர். இவர்களெல்லாம் மனித நேயத்தைத் தம்முடையதாக்கிக் கொண்டவர்கள். நாமும் இவர்களைப் போல் மனித நேயத்துடன் வாழ்ந்து மனிதம் காப்போம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

இ) உதவி செய்து வாழ்தல்
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
நான் உதவி செய்து வாழ்தல் பற்றிப் பேச வந்துள்ளேன். உலகில் தோன்றும் அனைத்து உயிர்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. மரம், செடி, கொடிகள், பறவைகள், விலங்குகள் எல்லாம் அவ்வாறே வளர்கின்றன. இவை நமக்கு உதவி செய்து வாழ்தலை உணர்த்துகிறது.

பிறருடைய உதவி தமக்குத் தேவையில்லை என்று யாராலும் தனித்து வாழ இயலாது. ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் பிறரது உதவியை மனிதன் நாடித்தான் ஆகவேண்டும். இவ்வாறு உதவி செய்வதை நன்றி என்கிறோம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

பிறரிடம் உதவியைப் பெற்றுக் கொண்டு நாம் யாருக்கும் உதவாமல் இருக்கக்கூடாது. நாம் நம்மால் இயன்றவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும். நாம் கார்மேகம் போல கைம்மாறு கருதாமல் உதவி செய்ய வேண்டும். தோண்டத் தோண்ட சுரக்கும் நீர் போல, நாம் பிறருக்கு உதவி செய்யச் செய்ய நமக்கு உதவிகள் கிட்டும். இதனை உணர்த்தும் பழமொழி “முன்கை நீண்டால் முழங்கை நீளும்”.

நாம் மரம், செடி, கொடிகளை நீர் ஊற்றி உரமிட்டு வளர்க்கிறோம். அது வளர்ந்து நமக்குப் பல பயன்களைத் தரும். பிறரால் நமக்கு நன்மைகள் கிடைக்கிறதோ இல்லையோ நாம் உதவி செய்தலை வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கை கொண்டு வாழ வேண்டும்.

அது மட்டுமின்றி நாம் எவருக்காவது உதவி செய்தால் அதனை மறந்துவிட வேண்டும். தான் செய்த உதவியைப் பலரிடம் கூறிப் பெருமை தேடிக் கொள்ளக் கூடாது. வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதை உணர வேண்டும். நாம் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுப்பதால் குறைந்து விடுமே என எண்ணாமல் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் துன்பப்படுவர் என்று புறநானூறு கூறுகிறது.

ஒரு சிலர் தானும் யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள். உதவி செய்பவரையும் செய்யவிடாமல் தடுத்து விடுவார்கள். இவ்வாறு இருக்காமல் நாம் நம்மால் இயன்றவரை உதவி செய்து வாழ்வில் உயர்வோம்.

சொல்லக் கேட்டு எழுதுக

1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை.
2. குயில் குளிரில் நடுங்கியது; மழையில் ஒடுங்கியது; வெயிலில் காய்ந்தது.
3. இரக்கம் உடையோர் அருள்பெற்றவர் ஆவர்.
4. காயிதே மில்லத் என்னும் சொல்லுக்குச் “சமுதாய வழிகாட்டி” என்று பொருள்.
5. விடியும் போது குளிரத் தொடங்கிவிட்டது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

கீழ்க்காணும் தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கவிதை எழுதுக
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர் - 6

சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.

(எனவே, ஏனெனில், அதனால், ஆகையால், அதுபோல, இல்லையென்றால், மேலும் ) (எ.கா) காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர்.

ஏனெனில் அவர் எளிமையை விரும்பியவர்.

Question 1.
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும்………………. துன்பப்பட நேரிடும்.
Answer:
இல்லையென்றால்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

Question 2.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது ………………… காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
Answer:
அதனால்/ஆகையால்

Question 3.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம்……………. மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.
Answer:
ஏனெனில்

Question 4.
பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன் ………….. பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
Answer:
எனவே

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

Question 5.
தமிழகத்தில் மழை பெய்துவருகிறது ………………. இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு.
Answer:
மேலும்

கடிதம் எழுதுக.

உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காணவருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
Answer:

அஸ்தம்பட்டி, சேலம்
20-12-2019

அன்புள்ள மாமா,
இங்கு நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். அங்கு உங்கள் நலத்தையும் அத்தையின் நலத்தையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

நம் ஊரில் வருகின்ற மாட்டுப் பொங்கலன்று ஏறுதழுவுதல்’ என்ற நம் பண்பாட்டு – நிகழ்வான காளையை அடக்குதல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு – செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் நடைபெறுவதைப் போன்றே இங்கும் இவ்விழா தி ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள், அத்தையுடன் அடுத்த மாதம் இவ்விழாவைக் காண இங்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன். அப்பாவும், அம்மாவும் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். ஆகவே மற்றவை நேரில் .

இங்ஙனம்,
உங்கள் அன்புள்ள ,
ம. இளங்குமரன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர் - 7

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

மொழியோடு விளையாடு

குறிப்புகளைப் பயன்படுத்தி இடமிருந்து வலமாகக் கட்டங்களை நிரப்புக.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர் - 11
1. நூலகத்தில் இருப்பவை…………………………. நூல்கள். நூல்கள் நிறைந்துள்ள இடம் ……………………
2. உலகப்பொதுமறை ………………………. புரட்சிக்கவிஞர் ……………………………..
3. முனைப்பாடியார் இயற்றியது …………………. நீதிநெறி விளக்கம் பாடியவர் குமரகுருபரர்.
4. குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் ………………………………………………. சுரதா என்பதன் விரிவாக்கம்  ………………….
5. குற்றாலக் குறவஞ்சி பாடியவர்  ………………….
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர் - 8

1. நூலகத்தில் இருப்பவை. நூல்கள். நூல்கள் நிறைந்துள்ள இடம் நூலகம்.
2. உலகப்பொதுமறை திருக்குறள். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
3. முனைப்பாடியார் இயற்றியது அறநெறிச்சாரம். நீதிநெறி விளக்கம் பாடியவர் குமரகுருபரர்.
4. குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் குற்றாலக் குறவஞ்சி. சுரதா என்பதன் விரிவாக்கம் சுப்பிரமணியதாசன்.
5. குற்றாலக் குறவஞ்சி பாடியவர் திரிகூடராசப்பக் கவிராயர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

கீழ்க்காணும் படங்களைப் பார்த்து இரட்டைக்கிளவி அமையுமாறு தொடர்
உருவாக்குக.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர் - 12
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர் - 9

எ.கா : மழை சட சடவெனப் பெய்தது.

1. பறவைகள் படபட என பறந்தன.
2. ரயில் தடதட என ஓடியது.
3. மரக்கிளை மடமட என முறிந்தது

தீ விபத்தும் பாதுகாப்பு முறைகளும்

வினாக்கள் :

Question 1.
தீ விபத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
Answer:
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

  • வீடுகளிலும் பொது இடங்களிலும் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • பொது இடங்களில் தீத்தடுப்பு எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • எச்சரிக்கை ஒலி எவ்வாறு இருக்கும் என்பதைப் பணியாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.
  • தரமான மின் சாதனங்களையே பயன்படுத்த வேண்டும்.
  • சமையல் செய்யும் போது இறுக்கமான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.
  • பட்டாசுகளைப் பாதுகாப்பான இடங்களில், பெரியவர்களின் மேற்பார்வையில் தான் வெடிக்க வேண்டும்.
  • நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
  • பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வெளியேறும் வகையில் அவசரகால வழிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

Question 2.
தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் யாவை?
Answer:

  • உடனடியாகத் தீயணைப்பு மீட்புப் பணித் துறைக்குத் தொலைபேசி வழியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பொழுது தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்தினைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
  • தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் பகுதியில் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
  • தீ விபத்து ஏற்பட்ட உடனே அங்குள்ள தீயணைப்பான்களைக் கொண்டு ஆரம்பக் கட்டத்திலேயே தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.
  • உடுத்தியிருக்கும் ஆடையில் தீப்பிடித்தால் உடனே தரையில் படுத்து உருள வேண்டும் தீக்காயம் பட்ட இடத்தை உடனடியாகத் தண்ணீரைக் கொண்டு குளிர வைக்க வேண்டும்.
  • பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமடைந்து ஓடாமல், அவசரகால வழியில் வெளியேற வேண்டும்.
  • அருகில் இருக்கும் கட்டடங்களுக்குத் தீ பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

Question 3.
பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் முறையைக் கூறுக.
Answer:
பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமடைந்து ஓடாமல், அவசரகால வழியில் வெளியேற வேண்டும்.

Question 4.
தீ விபத்து ஏற்பட்டால் செய்யக்கூடாதவை யாவை?
Answer:

  • தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தின் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது.
  • எண்ணெய் உள்ள இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கத் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.
  • தீக்காயம் பட்ட இடத்தில் எண்ணெய், பேனா மை போன்றவற்றைத் தடவக் கூடாது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

Question 5.
உடலில் தீப்பற்றினால் செய்ய வேண்டிய முதலுதவி யாது?
Answer:

  • உடலில் தீப்பற்றினால் தண்ணீரை ஊற்றி அணைக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த இடம் குளிர்ச்சி அடையும்.
  • பிறகு துணியைக் கொண்டு தீக்காயம் அடைந்த இடத்தை மூடவேண்டும்.
  • தண்ணீர் இல்லாவிட்டால் கம்பளி, கோணி போன்றவற்றால் மூடி தீயை அணைக்க வேண்டும். தீக்காயம் அடைந்தவருக்குத் தாகம் இருந்தால் தண்ணீர் கொடுக்கலாம்.
  • பதற்றம் அடையாமல் உடனடியாக கீழே விழுந்து புரள வேண்டும். (மண் தரையாக இருந்தால் சிறப்பு)

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…

  1. நான் எப்போதும் எளிமையைக் கடைப்பிடிப்பேன்
  2. அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.
  3. என் பணிகளை நேர்மையாகச் செய்வேன்.
  4. நான் என்றும் பொறுமையுடன் இருப்பேன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்

கலைச்சொல் அறிவோம்
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர் - 10

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.6 திருக்குறள்

Students can Download Tamil Chapter 2.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.6 திருக்குறள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
………….. ஒரு நாட்டின் அரணன்று .
அ) காடு
ஆ) வயல்
இ) மலை
ஈ) தெளிந்த நீர்
Answer:
ஆ) வயல்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.6 திருக்குறள்

Question 2.
மக்கள் அனைவரும் ………………. ஒத்த இயல்புடையவர்கள்.
அ) பிறப்பால்
ஆ) நிறத்தால்
இ) குணத்தால்
ஈ) பணத்தால்
Answer:
அ) பிறப்பால்

Question 3.
‘நாடென்ப’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …..
அ) நான் + என்ப
ஆ) நா + டென்ப
இ) நாடு + என்ப
ஈ) நாடு + டென்ப
Answer:
இ) நாடு + என்ப

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.6 திருக்குறள்

Question 4.
கண் + இல்லது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …
அ) கணிஇல்லது
ஆ) கணில்லது
இ) கண்ணில்லாது
ஈ) கண்ணில்லது
Answer:
ஈ) கண்ணில்லது

பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
2. வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
3. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
Answer:
வினையான் வினையாக்கிக் கோடல் தனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.6 திருக்குறள்

குறுவினா

Question 1.
ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?
Answer:
ஒரு செயலைச் செய்ய ஆராய வேண்டுவன : வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் ஐயம் தீர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.

Question 2.
ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?
Answer:
ஒரு நாட்டுக்கு அரண்களாக அமைவன் : தெளிந்த நீர், நிலம், மலை, அழகிய நிழல் உடைய காடு.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.6 திருக்குறள்

Question 3.
சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?
Answer:
சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன :

  • மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே சிறந்த நாடாகும்.
  • பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம் தரும் நாடே சிறந்த நாடாகும்.

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.6 திருக்குறள் - 2
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.6 திருக்குறள் - 1

கூடுதல் வினாக்கள்

விடையளி :

Question 1.
‘பெருமை’ என்ற தலைப்பில் பாட நூலில் இடம்பெற்ற குறட்பாக்களின் கருத்துகளைக் கூறுக.
Answer:

  • பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே. அவர்கள் செய்யும் நன்மை, தீமையாகியச் செயல்களால் அவர்களது சிறப்பியல்புகள் ஒத்திருப்பதில்லை.
  • உயர்ந்த பண்புகளை உடையவர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய நெறிமுறையில் செய்து முடிப்பர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.6 திருக்குறள்

Question 2.
எவ்வாறு வினை செய்ய வேண்டும் என்று குறள் கூறுகிறது?
Answer:

  • வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தையும் ஐயம் தீர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
  • ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பர். அதுபோல ஒரு செயலைச் செய்யும் போதே அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல் வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.4 பயணம்

Students can Download Tamil Chapter 3.4 பயணம் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.4 பயணம்

மதிப்பீடு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.4 பயணம்

Question 1.
‘பயணம் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
பெங்களூரில் அஞ்சலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த கதாசிரியர் தனது மூன்றாவது சம்பளத்தில் ஒரு மிதிவண்டியை வாங்கினார். மிதிவண்டியில் செல்வதுதான் அவருடைய பொழுதுபோக்கு. தன் நண்பர்களுடன் ஐந்தாறு மாதத்திற்கொருமுறை கிருஷ்ணராஜ் சாகர் அணைக்குச் செல்வார். ஒருமுறை மகாபலிபுரம் கூட சென்றுள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.4 பயணம்

ஹாசன் வழியாக மங்களூரு செல்ல வேண்டும் என்ற ஆர்வமிகுதியால் ஒருமுறை புறப்பட்டார். இரு நாட்களில் ஹாசன் வந்து சேர்ந்தார். பகலில் வெப்பமும் இரவில் கடும் மழையும் பெய்தது. அதனால் மறுநாள் பயணம் செய்தார்.
சக்லேஷ்பூர்வரைக்கும் சிறு சிறு தூறலில் நனைந்தபடி மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தார். மிதிவண்டிச் சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது. ஒட்டுகிற கருவிகளும் காற்றடிக்கும் கருவியும் இல்லாததால் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டே நடந்தார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.4 பயணம்

மழையின் வேகத்தையும் மீறி ஒரு குரல் அவரைத் தடுத்து நிறுத்தியது. குரல் வந்த திசையில் இருந்த குடிசைக்குச் சென்றார். அங்கிருந்த சிறுவன் ஒரு துண்டு கொண்டு வந்து தந்தான். தன் அம்மாவிடம் அம்மா பாவம்மா இவரு” என்று கூறிவிட்டு அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தான். மிதிவண்டியில் பெங்களூருவில் இருந்து வந்ததையும், கன்னியாகுமரிக்கு மிதிவண்டியில் போயிருந்ததையும் அவர் சொல்லக் கேட்டு வியந்தான்.

டில்லிக்கு , இமயமலைக்கு மிதிவண்டியில் செல்ல முடியுமா என்று கேட்டான். செல்ல முடியும் அவர் கூறினார். அச்சிறுவன் எனக்கு மிதிவண்டின்னா ரொம்ப ஆசை. ஆனா அம்மா வாங்கித் தரமாட்றாங்க” என்று ஏக்கத்துடன் கூறினான். அவர் அவனிடம் “நீ பெரியவனானதும் வாங்கித் தருவார்கள்’ என்று சமாதானப்படுத்தினார். இரவு தூங்கும்போது அவனுடைய மிதிவண்டிப் பயிற்சியைப் பற்றிச் சொன்னான். தன்னுடைய பயண அனுபவங்களை அவனிடம் பகிர்ந்து கொண்டார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.4 பயணம்

மறுநாள் காலை மிதிவண்டியைச் சரி செய்த பின்னர் அச்சிறுவன் மிதிவண்டியை ஓட்டினான். முதலில் தட்டுத் தடுமாறி ஓட்டினான். ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஓட்டிவிட்டு வீடு திரும்பினர். அவனுடைய அம்மா கொடுத்த அவலைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மழை வந்துவிட்டது. மழைநின்றதும் புறப்பட்டார். ஆனால் அச்சிறுவன் கேட்டுக் கொண்டதால் அவனுக்கு மிதிவண்டியைக் கொடுத்து ஓட்டச் செய்தார். விட்டு விட்டு மழை பெய்ததால் இரவு அங்கேயே தங்கிவிட்டார். இரவு முழுவதும் அவருடைய பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். விடிந்ததும் அவன் அவருடன் செல்வதற்கு அனுமதி கேட்டான். அவர் சரி என்றார். அவனுடைய அம்மாவும் இசைந்தார்.

அங்கிருந்து புறப்படும்போது, அவர்களுக்குப் பணம் தரலாம் என்று எண்ணினார். ஆனால் கொடுக்காமல் மனதில் ஊமை வலியுடன் புறப்பட்டார். அச்சிறுவனைப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றார். சிறுவன் மிதிவண்டியைக் கொஞ்ச தூரம் ஓட்டிச் சென்று திரும்பினான். பிறகு பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் உணவகத்தில் சாப்பிட்டனர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.4 பயணம்

அரிசிக்கெரே நெருங்கியதும் வீடுகள் தென்பட்டன. வாகனங்கள், மனித நடமாட்டம் அவருடைய மனதைக் கிளர்ச்சியடைய செய்தது. அச்சிறுவன், “இன்னும் கொஞ்ச தாரம்தான் எங்க மாமா வீடு. அது வரைக்கும் நானே மிதிவண்டியில் போய் வரட்டா? கொஞ்ச நேரம் அவங்க மிதிவண்டியைத் தொட்டுட்டா என்னா கத்து கத்துவாங்க தெரியுமா? இப்ப அவங்க முன்னால நான் போய் எறங்கினதுமே அதிசயப்படுவாங்க. அதுவரைக்கும் போய் வரட்டா?” என்று கேட்டான். அவரும் சரி என்றார். அவனும் மிதிவண்டியில் பாய்ந்து விட்டான். அவர் தேநீர் குடித்துவிட்டு அவனுக்காகக் காத்திருந்தார்.

சாலை மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆட்டோக்கள், லாரிகள் என வேகவேகமாகச் செல்லும் வாகனங்கள் அவர் சட்டென் அச்சிறுவனைப்பற்றியோசித்தார். அச்சிறுவனுடைய குடும்பம், அவன் ஆசை , அவன் வேகம் எல்லாம் அவர் மனதில் அலைமோதின. தெருமூ லை வரைக்கும் பார்த்தார். அவன் அவரைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது. எதிர்பாராத விதமாக முன்னால் வந்து நின்ற ஹாசன் பேருந்தில் சட்டென்று ஏறி உட்கார்ந்து விட்டார். வண்டியும் உடனே கிளம்பி விட்டது.

கற்பவை கற்றபின்

Question 1.
நீங்கள் சென்று வந்த பயணம் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 : என்னடா கணேஷ் நீ ஏன் இன்று பள்ளிக்கு வரவில்லை? உடல் நிலை சரியில்லையா?
மாணவன் 2 : நான் நன்றாகத்தான் இருக்கிறேன். அரையாண்டு விடுமுறை என்பதால் என்னுடைய அப்பா எங்களைக் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றார். நேற்று இரவுதான் வந்தோம். நான்கைந்து நாட்கள் இரயிலிலும், மகிழுந்திலும் சென்றது களைப்பாக இருந்தது. அதுதான் வரவில்லை
மாணவன் 1: அப்படியா? கன்னியாகுமரியில் என்னவெல்லாம் பார்த்தாய்?
மாணவன் 2: முதலில் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்றோம். அக்கோவில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்தது. அன்னையின் மூக்கில் உள்ள மூக்குத்தி இரத்தினக் கல்லால் ஆனது. அதன் ஒளியைப் பார்த்து அனைவரும் வியந்து போனோம்.
மாணவன் 1: அப்படியா? அதற்கடுத்து எங்கு சென்றீர்கள்?
மாணவன் 2 : பிறகு கடற்கரையில் மெதுவாக நடந்து சென்று கடலலைகளின் ஆரவாரத்தைக் கண்டு மகிழ்ந்தோம். நானும் என் தங்கையும் கடல் நீரில் இறங்கி குளித்தோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
மாணவன் 1: எனக்குக் கூட கடற்கரைக்குச் செல்வது மிகவும் பிடிக்கும். ஆமாம் கன்னியாகுமரியில் முக்கடல் சேரும் என்று சொல்வார்களே?
மாணவன் 2 : சரியாகச் சொன்னாய். வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடல்களும் சங்கமிக்கின்றன. இந்த இடத்தினை குமரிமுனை என்பார்கள்.
மாணவன் 1: கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
மாணவன் 2 : அங்கு பதினாறு தூண்களைக் கொண்ட சிறப்புமிக்க நீராடுதுறை இருந்தது. அங்கு கருமணல், செம்மணல், வெண்மணல் முதலிய மூன்று நிற மணல்களுடம் வேற்றுமையின்றி விரவிக் கிடந்தன. நாங்கள் முழு நிலவு நாளில் சென்றிருந்ததால் சூரியனையும் சந்திரனையும் எதிரெதிர் திசையில் கண்டோம். இக்காட்சி வேறெங்கும் பார்க்க இயலாது.
மாணவன் 1: நான்கூட கேள்விப்பட்டிருக்கிறேன்.
மாணவன் 2: காந்தி நினைவாலயம் சென்றோம். அங்கு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளன்று சூரியனின் கதிர்கள் அவரது
அஸ்திக்கலசம் வைக்கப்பட்ட மேடை மீது விழும் என்று கூறினார்கள்.
மாணவன் 1: வியப்பாக உள்ளதே!
மாணவன் 2: எனக்கும் வியப்பாகத்தான் உள்ளது. அதன்பிறகு கடற்கரையில் இருந்து
சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள விவேகானந்தர் பாறைக்குப் படகில் சென்றோம். படகில் சென்ற அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது.
மாணவன் 1 : நீ கூறியதைக் கேட்டதும் நானே கன்னியாகுமரிக்குச் சென்று வந்தது போல் உள்ளது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.4 பயணம்

மாணவன் 2: சரிடா. நான் உன்னைப் பார்க்க வந்ததே வீட்டுப்பாடங்கள் என்னென்ன உள்ளது என்பதைக் கேட்கத்தான் வந்தேன். சீக்கிரம் சொல், நான் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
மாணவன் 1: இன்று வீட்டுப்பாடம் ஏதும் கொடுக்கவில்லை.
மாணவன் 2: நல்லதாப் போச்சு. எனக்கும் ஓய்வெடுக்க நேரம் கிடைத்தது. நான் சென்று
வருகிறேன்.

Question 2.
நீங்கள் சுற்றுலா செல்ல மேற்கொண்ட ஆயத்தப் பணிகள் பற்றிப் பேசுக.
Answer:
நான் சுற்றுலா செல்ல மேற்கொண்ட ஆயத்தப் பணிகள் :

  • முதலில் விமானத்தில் செல்வதற்கான பயணச் சீட்டை முன்பதிவு செய்வேன்.
  • செல்லவிருக்கும் ஊரின் தட்பவெப்ப நிலைக்கேற்றபடி உடைகளை எடுத்து வைப்பேன்.
  • எத்தனை நாட்கள் தங்கவிருக்கிறேனோ அத்தனை உடைகளை எடுத்து வைத்துக் கொள்வேன்.
  • நான் தங்கும் இடத்தில் துணி துவைத்துப் போடும் வசதி இருந்தால் குறைவான எண்ணிக்கையில் ஆடையை எடுத்து வைப்பேன்.
  • தேவையான சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்றவற்றை எடுத்து வைப்பேன்.
  • முதலுதவிக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை எடுத்து வைப்பேன்.
  • அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வைப்பேன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.3 கண்ணியமிகு தலைவர்

Students can Download Tamil Chapter 3.3 கண்ணியமிகு தலைவர் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.3 கண்ணியமிகு தலைவர்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காயிதேமில்லத் ………. பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
அ) தண்மை
ஆ) எளிமை
இ) ஆடம்பரம்
ஈ) பெருமை
Answer:
ஆ) எளிமை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.3 கண்ணியமிகு தலைவர்

Question 2.
காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்குச் ………………… என்பது பொருள்.
அ) சுற்றுலா வழிகாட்டி
ஆ) சமுதாய வழிகாட்டி
இ) சிந்தனையாளர்
ஈ) சட்ட வல்லுநர்
Answer:
ஆ) சமுதாய வழிகாட்டி

Question 3.
விடுதலைப்போராட்டத்தின்போது காயிதேமில்லத்………. இயக்கத்தில் கலந்துகொண்டார்.
அ) வெள்ளையனே வெளியேறு
ஆ) உப்புக் காய்ச்சும்
இ) சுதேசி
ஈ) ஒத்துழையாமை
Answer:
ஈ) ஒத்துழையாமை

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.3 கண்ணியமிகு தலைவர்

Question 4.
காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ………………
அ) சட்டமன்றம்
ஆ) நாடாளுமன்றம்
இ) ஊராட்சி மன்றம்
ஈ) நகர் மன்றம்
Answer:
ஆ) நாடாளுமன்றம்

Question 5.
எதிரொலித்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) எதிர் + ரொலித்தது
ஆ) எதில் + ஒலித்தது
இ) எதிர் + ஒலித்தது
ஈ) எதி + ரொலித்தது
Answer:
இ) எதிர் + ஒலித்தது

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.3 கண்ணியமிகு தலைவர்

Question 6.
முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) முதுமொழி
ஆ) முதுமைமொழி
இ) முதியமொழி
ஈ) முதல்மொழி
Answer:
அ) முதுமொழி

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.3 கண்ணியமிகு தலைவர்

குறுவினா

Question 1.
விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.
Answer:
விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு :
விடுதலைப் போராட்டத்தின் போது காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். அவருடைய வேண்டுகோள் காயிதே மில்லத் அவர்களின் மனதில் தீராத விடுதலை வேட்கையை ஏற்படுத்தியது. தமது கல்வியைவிட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.3 கண்ணியமிகு தலைவர்

Question 2.
காயிதே மில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைப்பிடித்தார் என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக.
Answer:
காயிதே மில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் கடைப்பிடித்த எளிமை :
மில்லத் அவர்கள் தம் ஒரே மகனுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தார். அவரது இல்லத்திருமணம் ஆடம்பரமாக நிகழும் என எல்லாரும் எண்ணியிருந்தனர். ஆனால் அவர் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாகத் தம் மகனின் திருமணத்தை நடத்தினார். பெண் வீட்டாரிடம் மணக்கொடையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவினா

ஆட்சி மொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை விளக்குக.
Answer:
ஆட்சி மொழி பற்றிய காயிதே மில்லத் அவர்களின் கருத்து :

(i) இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சிமொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

(ii) மிகுதியான மக்கள் பேசும் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று சிலரும் பழமை வாய்ந்த மொழியை ஆட்சி மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சிலரும் பரிந்துரை செய்தனர்.

(iii) ஆனால் காயிதே மில்லத் அவர்கள் பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழியாக்க வேண்டுமென்றால், முதன்முதலாகப் பேசப்பட்ட மொழிகள் திராவிட மொழிகளில் மிகவும் இலக்கியச் செறிவுகொண்ட தமிழ் மொழிதான் மிகப் பழமையான மொழி. எனவே, தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.3 கண்ணியமிகு தலைவர்

சிந்தனை வினா

நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணிகளைச் செய்வீர்கள்?
Answer:
மக்கள் நலப் பணிகள் :
மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறையுள் ஆகியனவாகும். இவற்றில் முதலிரண்டு இடத்தில் உள்ளவை உணவும் உடையும். இவை வேளாண்மையை ஆணி வேராகக் கொண்டவை. அத்தகு வேளாண்மை சிறப்பாக அமைய நீர்நிலைகளை வளப்படுத்துவேன். கோடைக்காலங்களில் தூர் எடுத்து மழைநீரைச் சேமிக்க வழிவகை செய்வேன். அனைத்து இல்லங்களிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டி அமைக்க உத்தரவிடுவேன்.

கல்வி இல்லா குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவேன். போக்குவரத்து வசதிக்காக சாலைகளைச் சீரமைத்து மக்கள் அவதிப்படாமல் இருக்க உதவுவேன்.

மக்கள் தொகைக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களை அமைத்துத் தருவேன். கல்வியைப் பெற்றுவிட்டால் மாநிலத்தை அவர்களே செம்மைப்படுத்தி விடுவார்கள். இவையே நான் செய்யும் மக்கள் நலப்பணிகள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.3 கண்ணியமிகு தலைவர்

கற்பவை கற்றபின்

எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த பிற தலைவர்கள் குறித்து வகுப்பறையில் பேசுக.
Answer:
அனைவருக்கும் வணக்கம்! எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர்கள் என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.

கக்கன் :
இவர் சுதந்திர போராட்டத் தியாகி. எளிமையின் அடையாளமாகப் போற்றப்படுகிறார். காமராஜர், பக்தவச்சலம் ஆகியோர் தமிழக முதல்வரர்களாக இருந்தபோது, அவர்களது அமைச்சரவையில் பத்து ஆண்டுகளும், லோக்சபா உறுப்பினராக ஐந்தாண்டுகளும் பதவி றாலும், குடியிருக்க சொந்தமாக வீடில்லாமல் வாடகை வீட்டில் வாழ்ந்தவர். அரசு பேருந்தில் பயணம் செய்வார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்.

காமராஜர் :
தன்னலம் இல்லா உழைப்பு, எளிமை, நேர்மை இவற்றுக்கெல்லாம் சொந்தக்காரர் காமராசர். இவருடைய குடும்பம் வறுமையில் வாடியதால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனாலும் பல மேதைகளின் அறிவைப் பெற்றவர். மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதும் எளிமையாகவே வாழ்ந்தவர். தன் பதவியைப் பயன்படுத்தி நேர்மைக்குப் புறம்பான எச்செயலையும் செய்யாதவர். தம் உறவினர்களுக்கு அரசுப் பணிகளுக்கோ கல்லூரிப் படிப்பிற்கோ பரிந்துரை செய்யாதவர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.3 கண்ணியமிகு தலைவர்

இவர்களின் எளிமையான வாழ்வைப் படித்து நாமும் எளிமையாக வாழ்வோம். வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

தெரிந்து தெளிவோம்
(i) தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார். – அறிஞர் அண்ணா
(ii) இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர். – தந்தை பெரியார்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. காயிதே மில்லத் எளிமையின் சிகரமாக வாழ்ந்தவர்.
2. “மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று வெளிப்படையாக கூறியவர் காயிதே மில்லத்.
3. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 1962 ஆம் ஆண்டு போர் மூண்டது.
4. காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் முகமது இசுமாயில்.
5. காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லின் பொருள் சமுதாய வழிகாட்டி என்பதாகும்.
6. சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக காயிதே மில்லத் பணியாற்றிய காலம் 1946 முதல் 1952 வரை.
7. “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்” என்று காயிதே மில்லத் அவர்களைப் பாராட்டியவர் தந்தை பெரியார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.3 கண்ணியமிகு தலைவர்

குறுவினா :

Quesiton 1.
காயிதே மில்லத் அவர்களால் தொடங்கப்பட்ட கல்லூரிகள் எவை?
Answer:

  • திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி
  • கேரளாவில் ஃபரூக் கல்லூரி.

Question 2.
காயிதே மில்லத் அவர்களைப் பற்றி அறிஞர் அண்ணா கூறியது யாது?
Answer:
“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்” என்று அறிஞர் அண்ணா காயிதே மில்லத் பற்றிக் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.3 கண்ணியமிகு தலைவர்

Question 3.
காயிதே மில்லத் அவர்களின் கல்விப் பணியை எழுதுக.
Answer:
கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணினார் காயிதே மில்லத். “கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை” என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார். திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றை தொடங்க அவரே காரணமாக இருந்தார்.

சிறுவினா :

Question 1.
நேர்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் காயிதே மில்லத். விளக்குக.
Answer:
காயிதே மில்லத் ஒருமுறை தமது இயக்க அலுவலகத்தில் இருந்த போது அங்கிருந்த பணியாளரை அழைத்து, அவரிடம் ஓர் உறையையும் பணத்தையும் கொடுத்து, ‘அஞ்சல்தலை வாங்கி இந்த உறையில் ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுங்கள்” என்று கூறினார். அந்தப் பணியாளர் “ஐயா நம் அலுவலகத்திலேயே அஞ்சல் தலைகள் வாங்கி வைத்துள்ளோம். அவற்றிலிருந்து ஒன்றை எடுத்து ஒட்டி விடுகிறேன்” என்றார். அதற்கு அந்தத் தலைவர், “வேண்டாம். இது நான் தனிப்பட்ட முறையில் அனுப்பும் கடிதம். அதற்கு இயக்கப் பணத்தில் இருந்து வாங்கப்பட்ட அஞ்சல்தலைகளைப் பயன்படுத்துவது முறையாகாது” என்று கூறினார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

Students can Download Tamil Chapter 3.2 தன்னை அறிதல் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கூடு கட்டத் தெரியாத பறவை…..
அ) காக்கை
ஆ) குயில்
இ) சிட்டுக்குருவி
ஈ) தூக்கணாங்குருவி
Answer:
ஆ) குயில்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

Question 2.
தானொரு ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) தா + ஒரு
ஆ) தான் + னொரு
இ) தான் + ஒரு
ஈ) தானே + ஒரு
Answer:
இ) தான் + ஒரு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

குறுவினா

Question 1. ‘
காக்கை ஏன் குயில் குஞ்சைப் போகச் சொன்னது?
Answer:
காக்கை குயில் குஞ்சைப் போகச் சொன்னதற்கான காரணம் : குயிலினத்திற்கென்று தனித்தன்மையுண்டு. காக்கையினத்திற்கென்று தனித்தன்மையுண்டு. இரண்டும் சேர்ந்து ஒரே கூட்டில் வாழ இயலாது என்பதால் காக்கை, குயில் குஞ்சைப் போகச் சொன்னது.

Question 2.
குயில் குஞ்சு தன்னை எப்போது ‘குயில்’ என உணர்ந்தது?
Answer:
குயில் குஞ்சு ஒரு விடியற்காலையில் “கூ” என்று கூவியது. தன் குரல் இனிமையானது என்று அறிந்தது. அப்போது தான் அது தான் ஒரு குயில் என்பதை உணர்ந்தது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

சிறுவினா

குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக.
Answer:
குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வு :
(i) குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த குயில் குஞ்சு தன்னைக் காக்கைக் குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது.

(ii) தனியே சென்று வாழ அஞ்சுகிறது. ஒரு விடியற்காலையில் கூ’ என்று கூவியது. தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது.

(iii) நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பதை இந்நிகழ்வு மூலம் உணரலாம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

சிந்தனை வினா

உங்களிடம் உள்ள தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
என்னிடம் உள்ள தனித்தன்மைகள் :

  • அனைவரிடமும் அன்புடன் பழகுதல்
  • பிறருக்கு உதவி செய்தல்
  • பகைவரிடமும் அன்பு பாராட்டுதல்
  • இன்முகத்துடன் இருத்தல்
  • இனிமையாகப் பேசுதல்
  • பிறர் குறைகளைக் கூறாமை
  • பிறருடைய நிறைகளை மட்டும் கூறுதல்
  • பெரியோரை மதித்தல்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

கற்பவை கற்றபின்

பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கு உரிய தனித்தன்மைகளைப் பட்டியலிடுக.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல் - 1

கூடுதல் வினாக்கள் :

1. நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் நாமும் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

Question 2.
சே. பிருந்தா எழுதிய நூல்கள் யாவை?
Answer:
மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை சே.பிருந்தா எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7

Students can download 12th Business Maths Chapter 2 Integral Calculus I Ex 2.7 Questions and Answers, Samacheer Kalvi 12th Business Maths Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7

Integrate the following with respect to x.

Question 1.
\(\frac{1}{9-16 x^{2}}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q1

Question 2.
\(\frac{1}{9-8 x-x^{2}}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q2

Question 3.
\(\frac{1}{2 x^{2}-9}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q3

Question 4.
\(\frac{1}{x^{2}-x-2}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q4

Question 5.
\(\frac{1}{x^{2}+3 x+2}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q5
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q5.1

Question 6.
\(\frac{1}{2 x^{2}+6 x-8}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q6

Question 7.
\(\frac{e^{x}}{e^{2 x}-9}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q7

Question 8.
\(\frac{1}{\sqrt{9 x^{2}-7}}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q8
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q8.1

Question 9.
\(\left(\frac{1}{\sqrt{x^{2}+6 x+13}}\right)\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q9

Question 10.
\(\left(\frac{1}{\sqrt{x^{2}-3 x+2}}\right)\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q10

Question 11.
\(\frac{x^{3}}{\sqrt{x^{8}-1}}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q11

Question 12.
\(\sqrt{1+x+x^{2}}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q12

Question 13.
\(\sqrt{x^{2}-2}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q13

Question 14.
\(\sqrt{4 x^{2}-5}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q14
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q14.1

Question 15.
\(\sqrt{2 x^{2}+4 x+1}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q15

Question 16.
\(\frac{1}{x+\sqrt{x^{2}-1}}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.7 Q16