Students can Download Tamil Chapter 3.2 தன்னை அறிதல் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கூடு கட்டத் தெரியாத பறவை…..
அ) காக்கை
ஆ) குயில்
இ) சிட்டுக்குருவி
ஈ) தூக்கணாங்குருவி
Answer:
ஆ) குயில்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

Question 2.
தானொரு ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) தா + ஒரு
ஆ) தான் + னொரு
இ) தான் + ஒரு
ஈ) தானே + ஒரு
Answer:
இ) தான் + ஒரு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

குறுவினா

Question 1. ‘
காக்கை ஏன் குயில் குஞ்சைப் போகச் சொன்னது?
Answer:
காக்கை குயில் குஞ்சைப் போகச் சொன்னதற்கான காரணம் : குயிலினத்திற்கென்று தனித்தன்மையுண்டு. காக்கையினத்திற்கென்று தனித்தன்மையுண்டு. இரண்டும் சேர்ந்து ஒரே கூட்டில் வாழ இயலாது என்பதால் காக்கை, குயில் குஞ்சைப் போகச் சொன்னது.

Question 2.
குயில் குஞ்சு தன்னை எப்போது ‘குயில்’ என உணர்ந்தது?
Answer:
குயில் குஞ்சு ஒரு விடியற்காலையில் “கூ” என்று கூவியது. தன் குரல் இனிமையானது என்று அறிந்தது. அப்போது தான் அது தான் ஒரு குயில் என்பதை உணர்ந்தது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

சிறுவினா

குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக.
Answer:
குயில் குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வு :
(i) குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த குயில் குஞ்சு தன்னைக் காக்கைக் குஞ்சாக எண்ணிக் காக்கையைப் போலவே கரைய முயல்கிறது.

(ii) தனியே சென்று வாழ அஞ்சுகிறது. ஒரு விடியற்காலையில் கூ’ என்று கூவியது. தான் குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதனையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்குகிறது.

(iii) நாமும் நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம் என்பதை இந்நிகழ்வு மூலம் உணரலாம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

சிந்தனை வினா

உங்களிடம் உள்ள தனித்தன்மைகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
என்னிடம் உள்ள தனித்தன்மைகள் :

  • அனைவரிடமும் அன்புடன் பழகுதல்
  • பிறருக்கு உதவி செய்தல்
  • பகைவரிடமும் அன்பு பாராட்டுதல்
  • இன்முகத்துடன் இருத்தல்
  • இனிமையாகப் பேசுதல்
  • பிறர் குறைகளைக் கூறாமை
  • பிறருடைய நிறைகளை மட்டும் கூறுதல்
  • பெரியோரை மதித்தல்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

கற்பவை கற்றபின்

பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கு உரிய தனித்தன்மைகளைப் பட்டியலிடுக.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல் - 1

கூடுதல் வினாக்கள் :

1. நமது ஆற்றலை உணர்ந்து கொண்டால் நாமும் வாழ்வில் சாதனைகளைப் புரியலாம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.2 தன்னை அறிதல்

Question 2.
சே. பிருந்தா எழுதிய நூல்கள் யாவை?
Answer:
மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை நூல்களை சே.பிருந்தா எழுதியுள்ளார்.