Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

6th Science Guide தாவரங்கள் வாழும் உலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
குளம் வாழிடத்திற்கு உதாரணம்
அ) கடல்
ஆ) நன்னீர் வாழிடம்
இ) பாலைவனம்
ஈ) மலைகள்
விடை:
ஆ) நன்னீர் வாழிடம்

Question 2.
இலைத் துளையின் முக்கிய வேலை ______
அ) நீரைக் கடத்துதல்
ஆ) நீராவிப்போக்கு
இ ஒளிச் சேர்க்கை
ஈ) உறிஞ்சுதல்.
விடை:
இ) ஒளிச் சேர்க்கை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Question 3.
நீரை உறிஞ்சும் பகுதி ____ ஆகும்
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலை
ஈ) பூ
விடை:
அ) வேர்

Question 4.
நீர் வாழ் தாவரங்களின் வாழிடம்
அ) நீர்
ஆ) நிலம்
இ) பாலைவனம்
ஈ) மலை
விடை:
அ) நீர்

II. சரியா, தவறா – தவறு எனில் சரியான விடையை எழுதுக

Question 1.
தாவரங்கள் நீர் இன்றி வாழ முடியும்
விடை:
தவறு
பல்வேறு வளர்சிதை மாற்றங்களைச் செய்வதற்கு தாவரங்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

Question 2.
தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படும்.
விடை:
தவறு
பசுமையான பாகங்களில் மட்டும் பச்சையம் காணப்படுகிறது.

Question 3.
தாவரங்களின் மூன்று பாகங்கள் – வேர், தண்டு, இலைகள்.
விடை:
சரி

Question 4.
மலைகள் நன்னீர் வாழிடத்திற்கு ஓர் உதாரணம்
விடை:
தவறு
மலைகள் நில வாழிடத்திற்கு உதாரணமாகும்.

Question 5.
வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது.
விடை:
தவறு
முட்கள் பொதுவாக இலையின் மாறுபாடு ஆகும்.

Question 6.
பசுந் தாவரங்களுக்கு சூரிய ஒளி தேவை.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
புவி பரப்பில் நீரின் அளவு ………
விடை:
1.70

Question 2.
பூமியில் மிகவும் வறண்ட பகுதி ……..
விடை:
பாலைவனங்கள்

Question 3.
ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும் …….. வேலை
விடை:
வேரின்

Question 4.
ஒளிச் சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி ………
விடை:
இலைகள்

Question 5.
ஆணிவேர்த் தொகுப்பு …… தாவரங்களில் காணப்படுகிறது.
விடை:
இருவித்திலைத்

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 40

V. தாவரங்களின் பாகங்கள் மற்றும் பணிகளில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக.

Question 1.
இலைகள் – தண்டு – வேர் – மலர்கள்
விடை:
வேர் – தண்டு – இலைகள் – மலர்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Question 2.
நீராவிப்போக்கு – கடத்துதல் – உறிஞ்சுதல் – ஊன்றுதல்
விடை:
ஊன்றுதல் – உறிஞ்சுதல் – கடத்துதல் – நீராவிப்போக்கு

VI. மிகக் குறுகிய வினா.

Question 1.
வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களை வகைப்படுத்துக.
விடை:
நில வாழிடம் – நீர் வாழிடம் என வகைப்படும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 80

Question 2.
பாலைவனத் தாவரங்களை அடையாளம் காண்க.
விடை:
சப்பாத்திக்கள்ளி, ஹைடிரில்லா, மா, ரோஜா.
சப்பாத்திக்கள்ளி தாவரங்கள் பாலைவனத்தில் காணப்படுகின்றன. அவை தண்டுகளில் நீரைச் சேமிக்கின்றன.

Question 3.
வாழிடம் என்பதை வரையறு.
விடை:
ஒவ்வொரு உயிரினமும், உயிர்வாழவும், இனப்பெருக்கம் செய்யவும், தேவைப்படும் இடமானது அதன் வாழிடம் ஆகும்.
(உ.ம்) நன்னீர் வாழிடம் – ஆறுகள், குளங்கள், குட்டைகள்.

Question 4.
இலைக்கும், ஒளிச்சேர்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
விடை:
இலைகள் பசுமையாக உள்ளன. அவற்றில் பசுங்கணிகங்கள் காணப்படுகிறது. இவை ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.

VII. குறுகிய வினா.

Question 1.
மல்லிகைக் கொடி ஏன் பின்னுகொடி என அழைக்கப்படுகிறது?
விடை:
நலிந்த, மெலிந்த தண்டுடைய தாவரங்கள் தாமாக நிலைநிற்க இயலாது. எனவே அவை ஆதாரத்தைச் சுற்றிக்கொண்டு ஏறுகின்றன. உம்) பட்டாணி.

Question 2.
ஆணிவேர் மற்றும் சல்லிவேர் தொகுப்புகளை ஒப்பீடு செய்க.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 85

Question 3.
நிலவாழிடம் மற்றும் நீர் வாழிடத்தை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 86

Question 4.
உங்களுடைய பள்ளித் தோட்டத்தில் உள்ள தாவரங்களை பட்டியலிடுக.
விடை:
செம்பருத்தி, பெரணிகள், குரோட்டன்கள், ரோஜா, லில்லி, சப்பாத்திக் கள்ளி (கள்ளி வகைகள்), தென்னை மரங்கள், ராயல்பனை, கிளிட்டோரியா, சைகஸ், தங்க அரளி, ஹெலிகோனியா, தக்காளி, கத்தரி, வெண்டை, முதலானவை மாடித் தோட்டத்தில் உள்ளன.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

VIII. விரிவான வினா.

Question 1.
வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைத் தருக.
விடை:

  1. ஊன்றுதல் – தாவரத்தை பூமியில் நிலை நிறுத்துகிறது.
  2. உறிஞ்சுதல் – மண்ணிலுள்ள நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சி பிற பாகங்களுக்குக் கடத்துகிறது.
  3. சேமிப்பு – சில தாவரங்கள் வேர்களில் உணவைச் சேமிக்கிறது. (எ.கா) கேரட்.

தண்டின் பணிகள்

  • தாங்குதல் – கிளைகளையும், இலைகளையும், மலர்களையும், கனிகளையும் தாங்குகிறது.
  • கடத்தல் – நீரையும் தாது உப்புகளையும் வேர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு மேல் நோக்கிக் கடத்துகிறது.
  • இலைகள் தயாரித்த உணவை மற்ற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
  • சேமித்தல் – கரும்பு போன்ற சில வகை தண்டுகள் உணவைச் சேமிக்கின்றன.

Question 2.
கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் படத்தில் அதன் தொடர்ச்சி கருத்துகளை விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்க.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 90
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 91

6th Science Guide தாவரங்கள் வாழும் உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தோர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
மக்காச் சோளத்தில் காணப்படுவது,
அ) ஆணிவேர்
ஆ) சல்லிவேர்
இ) வேற்றிடவேர்
ஈ) கொத்துவேர்கள்
விடை:
ஆ) சல்லிவேர்

Question 2.
தண்டில் இலை உருவாகும் பகுதி,
அ) கணு
ஆ) கணுவிடை
இ) நுனிமொட்டு
ஈ) பக்கமொட்டு
விடை:
அ) கணு

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Question 3.
இலையின் காம்பு
அ) மஞ்சரிக்காம்பு
ஆ) கூட்டிலைக்காம்பு
இ) பூக்காம்பு,
ஈ) இலைக்காம்பு
விடை:
ஈ) இலைக்காம்பு

Question 4.
இலை பச்சையாகக் காணப்படுவதற்கான காரணம்
அ) குளோரன்கைமா
ஆ) பச்சையம்
இ) இலைத்தாள்
ஈ) இலைத்துளை
விடை:
ஆ) பச்சையம்

Question 5.
விக்டோரியா அமேஸானிக்கா இலையின் விட்டம் அல்லது குறுக்களவு
அ) 2 மீட்டர்
ஆ) 2.5 மீட்டர்
இ) 3 மீட்டர்
ஈ) 1 மீட்டர்
விடை:
இ) 3 மீட்டர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
தாங்கள் வாழிடங்களுக்கேற்ப தாவரங்கள் சில சிறப்புப்பண்புகளைப் பெற்றுக் காணப்படுகின்றன இதற்கு …… என்று பெயர்
விடை:
தகவமைப்புகள்

Question 2.
இந்திய துணைக் கண்டத்தில் காணப்படும், மிகப் பெரிய மணல் குன்றுகளாலான பாலைவன …….. எனப்படும்.
விடை:
தார் பாலைவனம்

Question 3.
இலையின் மையத்தில் காணப்படும் நரம்புக்கு……. என்று பெயர்.
விடை:
நடு நரம்பு

Question 4.
ஒரு உயிரினத்தில் அதன் சூழலுக்கேற்ப காணப்படும் மாற்றத்திற்கு ………. என்று பெயர்.
விடை:
மாறுபாடு

Question 5.
காகிதப்பூ ……என்று அழைக்கப்படுகிறது
விடை:
போகன் வில்லா

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

III. சரியாக வரிசைப்படுத்துக

Question 1.
கடல், ஏரி, ஆறு, குளம்
விடை:
குளம், ஏரி, ஆறு, கடல்

Question 2.
கணுவிடை-கணு- கோணமொட்டு-நுனிமொட்டு
விடை:
நுனிமொட்டு – கோணமொட்டு-கணு- கணுவிடை

IV. மிகக் குறுகிய வினா

Question 1.
இலையின் புற அமைப்பைப் படம் வரைக – பாகங்களைக் குறிக்க
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 95

Question 2.
பூக்களின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்து
விடை:
பூக்களின் அடிப்படையில் தாவரங்கள் இருவகையாகப் பிரிக்கலாம்

  • பூக்கும் தாவரங்கள் எ.கா. ரிக்ஸியா
  • பூவாத தாவரங்கள் எ.கா. மா ம்

Question 3.
ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களை வேறுபடுத்து
விடை:

  • ஜிம்னோஸ்பெர்ம்கள் – பூவாத தாவரங்கள் ஆனால் விதைகளை உருவாக்கும் (எ.கா) பைனஸ், சைகஸ்
  • ஆஞ்சியோஸ்பெர்ம்கள் : பூக்கும் தாவரங்கள் விதைகளை உருவாக்கும். (எ.கா) மா- ரோஜா

Question 4.
காக்டஸ்- தாவரம்-குறிப்பு வரைக
விடை:

  • இது ஒரு பாலைவன வாழ் தாவரம் (இங்கு மழை அளவு குறைவு (அ) காணப்படாது)
  • ‘தண்டு – நீரை சேமிக்கும்.
  • இலைகள் – முட்களாக மாறுபாடடைந்து காணப்படும்.
  • வேர்கள் – நன்கு வளர்ச்சியடைந்து மண்ணின் மிக ஆழத்திற்குச் சென்று நீரை உறிஞ்சுகின்றன.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Question 5.
முட்கள் என்றால் என்ன?
விடை:
சில தாவரங்களில் இலைகள் அல்லது பாகங்கள் முட்களாக மாறுபாடடைந்துள்ளன. இவை நீராவிப் போக்கினால் ஏற்படும் நீரிழப்பைக் குறைக்கின்றன.
(எ.கா) அகேவ் (இலை நுனி மற்றும் விளிம்பு முட்களாக மாறுபாடடைந்துள்ளது)

V. விரிவான விடையளி

Question 1.
பற்றுக்கம்பிக் கொடி-விவரி
விடை:

  • பற்றுக்கம்பி என்பது சில மெலிந்த தண்டுடைய தாவரங்களில், காணப்படுகிறது.
  • இது ஆதாரத்தைச் சுற்றிக் கொண்டு அத்தாவரங்கள் மேலே ஏறுவதற்கு ஏதுவாக உள்ளது.
    1. இனிப்புப்பட்டாணி – இதில் சிற்றிலைகள் பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன.
    2. பாகற்காய் – இதில் கோணமொட்டு பற்றுக்கம்பிகளாக மாற்றம் அடைந்து மேலே ஏறுவதற்கு உதவுகின்றன.

Question 2.
பாலைவன வாழிடம் குறித்தெழுது
விடை:

  • பூமியின் மிக வறண்ட பகுதி.
  • மழை அளவு சராசரி 25 செ.மீக்கும் குறைவாக உள்ளது.
  • பூமியில் சுமார் 20% பாலைவனமாக உள்ளது.
  • தாவரங்கள் – கடுமையான வறட்சியைத் தாங்கும் தகவமைப்புடையவை.
  • தடிமனான இலைகள் நீரையும் கனிம உப்புக்களையும் சேமித்து வைக்கின்றன.
  • தண்டுகள் – நீரை சேமிக்கின்றன. எ.கா. காக்டஸ் (கள்ளி வகைகள்)
  • இலைகள் – முட்களாக மாறுபாடடைந்துள்ளன. எ.கா. ஒபன்ஷியா.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 98

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

6th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
_____ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல
அ) தங்க மோதிரம்
ஆ) இரும்பு ஆணி
இ) ஒளி
ஈ) எண்ணெய்த்துளி
விடை:
இ) ஒளி

Question 2.
400 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ண த்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன்.
அ) 400 மி.லி
ஆ) 600 மி.லி
இ) 200 மி.லி
ஈ) 800 மி.லி
விடை:
இ) 200 மி.லி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 3.
தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை _____ முறையில் நீக்கலாம்
அ) கைகளால் தெரிந்தெடுத்தல்
ஆ) வடிகட்டுதல் இ காந்தப்பிரிப்பு
ஈ) தெளிய வைத்து இறுத்தல்
விடை:
அ) கைகளால் தெரிந்தெடுத்தல்

Question 4.
அரிசி மற்றும் பருப்புகளில் கலந்துள்ள லேசான மாசுப் பொருள்களை _____ முறையில் நீக்கலாம்
அ) வடிகட்டுதல்
ஆ) வண்டலாக்குதல்
இ) தெளிய வைத்து இறுத்தல்
ஈ) புடைத்தல்
விடை:
ஈ) புடைத்தல்

Question 5.
தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்தபின்வருவனவற்றுள் _____ அவசியம் தேவைப்படுகிறது. அ) மழை
ஆ) மண்
ஆ) மண்
இ) நீர்
ஈ) காற்று
விடை:
ஈ) காற்று

Question 6.
_____ வகையான கலவையினை, வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.
அ) திடப்பொருள் – திடப்பொருள்.
ஆ) திடப்பொருள் – நீர்மம்
இ) ‘நீர்மம் – நீர்மம்
ஈ) நீர்மம் – வாயு
விடை:
ஆ) திடப்பொருள் – நீர்மம்

Question 7.
பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல
அ) பாலுடன் காபி
ஆ) எலுமிச்சை ஜூஸ்
இ) நீர்
ஈ) கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரிம்.
விடை:
இ) நீர்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

II. பின்வரும் கூற்று சரியா அல்லது தவறா எனக்கூறு. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.

அ) காற்று அழுத்தத்திற்கு உட்படாது
விடை:
தவறு. காற்று அழுத்தத்திற்கு உட்படும்.

ஆ) திரவங்களுக்கு குறிப்பிட்ட பருமன் இல்லை. ஆனால் குறிப்பிட்ட வடிவம் உண்டு
விடை:
தவறு. திரவங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட பருமன் உண்டு.

இ) திண்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகருகின்றன,
விடை:
தவறு. திண்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகருவதில்லை,

ஈ) சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவி, அந்நீரை வடிகட்டுதல் மூலம் பிரித்தெடுக்கலாம்.
விடை:
தவறு. சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவி, அந்நீரை தெளியவைத்து இறுத்தல் மூலம் பிரித்தெடுக்கலாம்.

உ) திடப்பொருள்களில் இருந்து நீர்மப்பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே.
விடை:
தவறு. நீர்மப்பொருள்களிலிருந்து திண்மப் பொருட்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே.

ஊ) தானியத்தையும் உமியையும் தூற்றுதல் மூலம் பிரிக்கலாம்.
விடை:
சரி.

ஏ) காற்று ஒரு தூய பொருளாகும்
விடை:
தவறு காற்று ஒரு கலவை ஆகும் (அல்லது) காற்று ஒரு தூயபொருள் அல்ல.

ஏ) தயிரிலிருந்து வெண்ணெய் வண்டலாக்குதல் முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.
விடை:
தவறு. தயிரிலிருந்து வெண்ணெய் கடைதல் முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

III. பொருத்துக

அ)
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 40

ஆ)
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 41
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 42

IV. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பருப்பொருள் என்பது ………. ஆல் ஆனவை
விடை:
அணுக்களால்

Question 2.
திண்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி ……. ஐ விடக் குறைவு
விடை:
நீர்மத்தை

Question 3.
நெல் தாவரத்திலிருந்து தானியங்களை ……… முறை மூலம் பிரித்தெடுக்கலாம்
விடை:
கதிரடித்தல்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 4.
உப்புமா வில் இருந்து …… முறையில் மிளகாயினை நீக்கலாம்
விடை:
கைகளால்
தெரிந்தெடுத்தல்

Question 5.
நீரில் இருந்து களிமண் துகள்களை நீக்க ………. முறை பயன்படுத்தப்படுகிறது
விடை:
வடிகட்டுதல்

Question 6.
ஊசி, பென்சில் மற்றும் இரப்பர் வளையம் இவற்றில் ……. காந்தத்தால் கவரப்படும்.
விடை:
ஊசி

Question 7.
குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் பொதுவாக …….. நீராக அமையும்
விடை:
தூய்மையற்ற

V. பின்வரும் ஒப்புமையைப் பூர்த்தி செய்க

Question 1.
திண்மம்: கடினத்தன்மை :: வாயு: _____
விடை:
அழுத்தத்திற்கு உட்படும் தன்மை

Question 2.
துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உடையது: வாயு:: ____ : திண்மம்
விடை:
துகள்களுக்கு இடையே மிகக்குறைந்த இடைவெளி உடையது

Question 3.
பாயும் தன்மை : ____ மற்றும் _____ :: குறிப்பிட்ட பருமன் : ____ மற்றும் _____
விடை:
நீர்மம் மற்றும் வாயு; திண்மம் மற்றும் நீர்மம்

Question 4.
உமி – தானியங்கள்: தூற்றுதல் : மரத்தூள் – சுண்ணக்கட்டி: _____
விடை:
வண்டலாக்குதல் மற்றும் தெளியவைத்து இறுத்தல்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 5.
சூடான எண்ணெயிலிருந்து முறுக்கினை எடுத்தல் : ____ : காபியை வடிகட்டியபின் அடியில் தங்கும் காபித்தூள் : ____
விடை:
கைகளால் தெரிந்தெடுத்தல் ; வடிகட்டுதல்

Question 6.
இரும்பு – கந்தகம் கலவை : _____ :: உளுத்தம் பருப்பு – கடுகு கலவை: உருட்டுதல்
விடை:
காந்தப்பிரிப்பு முறை

VI. குறுவினா

Question 1.
பருப்பொருள் – வரையறு
விடை:
பருப்பொருள் என்பது, எடை உள்ளதும், இடத்தை அடைத்துக் கொள்வதும் ஆகும். திண்மம், திரவம் மற்றும் வாயு நிலைகளில் பருப்பொருள்கள் காணப்படுகின்றன.

Question 2.
சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி, தூசு போன்ற நுண்ணிய மாசுப் பொருட்கள் எவ்வாறு நீக்கப்படுகிறது?
விடை:
நாம் சமைக்கப் பயன்படுத்தும் அரிசியிலுள்ள உமி, தூசி போன்ற நுண்ணிய மாசுப்பொருட்கள் வண்டலாக்குதல் முறையில் நீக்கப்படுகின்றன, நீரில் அரிசியைக் கழுவும் போது இலேசான மாசுக்கள் நீரில் மிதக்கும், எடை அதிகமுள்ள அரிசி நீரில் மூழ்கி அடியில் தங்கும்.

Question 3.
கலவைகளை நாம் ஏன் பிரித்தெடுக்க வேண்டும் ?
விடை:
ஒரு கலவை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையான துகள்களைக் கொண்ட தூய்மையற்ற பொருளாகும். எனவே, கலவைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.

Question 4.
கலவைக்கு ஒரு எடுத்துக்காட்டினைக் கூறி அது எவ்வாறு கலவை என்று அழைக்கப்படுகிறது, என்பதைக் காரணத்துடன் நியாயப்படுத்தவும்
விடை:
22 கேரட் கோல்டு என்பது கலவைக்கு ஒரு உதாரணம். ஏனெனில், 22 கேரட் கோல்டு என்பது தங்கம் மற்றும் காப்பர் அல்லது தங்கம் மற்றும் காட்மியம் கலவையாகும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 5.
படிய வைத்தல் – வரையறு
விடை:
கரையாத திண்மம் மற்றும் நீர்மம் கொண்ட கலவையிலிருந்து கனமான திண்மத்தை அடியில் வண்டலாகப் படியவைக்கும் முறையே படிய வைத்தல்’ எனப்படும்.

Question 6.
தூய பொருளுக்கும் தூய்மையற்ற பொருளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளைக் கூறுக
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 60

VII. சிறுவினா

Question 1.
இரப்பர் பந்தை அழுத்தும் போது வடிவம் மாறுகிறது. அதை திண்மம் என அழைக்கலாமா?
விடை:
ஆம். ஒரு திண்மப் பொருள் குறிப்பிட்ட வடிவத்தையும், பருமனளவையும் கொண்டுள்ளது. பந்தை அழுத்தும் போது, இரப்பர் பந்தின் வடிவம் மட்டுமே மாற்றமடைகிறது,

Question 2.
வாயுக்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை ஏன்?
விடை:
வாயுவின் துகள்களுக்கு இடையே, குறைவான ஈர்ப்பு விசை செயல்படுவதால், வாயுக்கள் குறிப்பிட்ட வடிவம் பெற்றிருப்பதில்லை. எனவே, அவை கொள்கலனின் வடிவத்தைப் பெறுகின்றன.

Question 3.
பாலில் இருந்து பாலாடைக் கட்டியை எம்முறையில் பெறுவாய்? விளக்கவும்,
விடை:
கடைதல் மற்றும் திரியச் செய்தல் முறையில் பாலிலிருந்து பாலாடைக்கட்டி பெறலாம். 6 முக்கிய படி நிலைகளில் இது பெறப்படுகிறது.

  1. அமிலத்தன்மையாக்கல்
  2. திரியச் செய்தல்
  3. தயிர் மற்றும் மோர் இவற்றைப் பிரித்தல்
  4. உப்பு இடுதல்
  5. வடிவமைத்தல்
  6. பக்குவப்படுத்துதல்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து அதில் பின்பற்றப்படும் பிரித்தல் முறையினை விவரிக்கவும்.
விடை:
கொடுக்கப்பட்டுள்ள படம் சலித்தல் முறையில் பிரித்தெடுத்தலைக் காட்டுகிறது. இது வெவ்வேறு அளவுடைய திடப்பொருட்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுகிறது.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 65
உதாரணம் – மாவிலிருந்து தவிடு நீக்குதல், மணலிலிருந்து சரளைக் கல்லை நீக்குதல்.

Question 5.
பருப்புடன் அதிக அளவில் சிறு காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றை எவ்வாறு நீக்குவாய் ?
விடை:
பருப்புடன் அதிக அளவில் சிறு காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றைத் தூற்றுதல்’ முறையில் நீக்கலாம்.
இலேசான காகிதத்துண்டுகள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு தனிக்குவியலாகச் சேரும். எடை அதிகமுள்ள பருப்பு, தூற்றுபவரின் அருகே சிறு குவியலாகச் சேரும்.

Question 6.
உணவுக் கலப்படம் என்றால் என்ன?
விடை:
கடைகளில் நாம் வாங்கும் உணவுப் பொருள்களுடன், தேவையற்ற பொருட்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்களைச் சேர்க்கும் செயல்முறைக்கு உணவுக் கலப்படம்’ என்று பெயர்.

Question 7.
ஒரு வெப்பமான கோடை நாளில் வீட்டிற்கு திரும்பிய திரு.ரகு மோர் பருக விரும்பினார். திருமதி. ரகுவிடம் தயிர் மட்டுமே இருந்தது. அவர் எவ்வாறு தயிரிலிருந்து மோரைப் பெறுவார் ? விளக்கவும்.
விடை:
திருமதி.ரகு தன்னிடமுள்ள தயிரில் அரை குவளை எடுத்து, அதனுடன் அரை குவளை நீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்போது அவர் மோர் பரிமாறலாம்.

VIII. விரிவான விடையளி

Question 1.
மூன்று நிலைமைகளில் உள்ள பருப்பொருள் மூலக்கூறுகளின் அமைப்பை விவரி. உனது விடைக்கான படங்களை வரைக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 80

Question 2.
சுண்ணாம்புத் தூள், கடுகு எண்ணெய், நீர் மற்றும் நாணயங்கள் கொண்ட கலவையை உமது ஆய்வகத்தில் உள்ள தகுந்த உபகரணங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பிரிப்பாய்? பிரித்தல் முறையினைப் படிநிலைகளில் விளக்கும் படத்தினை வரையவும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 85

IX. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
மலரின் அம்மா இரவு உணவை சமைக்கத் தயாராகிறார்கள். தவறுதலாக வேர்க்கடலையுடன் உளுத்தம் பருப்பினை கலந்துவிட்டார். இவ்விரண்டையும் பிரித்தெடுக்க உரிய முறையைப் பரிந்துரைத்து மலருக்கு உண்பதற்கு வேர்க்கடலை கிடைக்க வழி செய்க.
விடை:
துணி சல்லடை கொண்டு சலித்தல் முறையில் வேர்க்கடலை மற்றும் உளுந்தம் பருப்பைப் பிரித்தெடுக்கலாம். ஏனெனில், இரு திடப்பொருட்களும் வெவ்வேறு அளவுடையவை.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 2.
ஒரு குவளை நீரில் புளித் தண்ணீ ரும் சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்கவும். இது ஒரு கலவையா? எதனால் என்று உங்களால் கூற முடியுமா? இந்த கரைசல் இனிப்பானதா? புளிப்பானதா? அல்லது புளிப்பும் இனிப்பும் சேர்ந்ததா?
விடை:

  • ஒரு குவளை நீரில் புளித் தண்ணீ ர், சர்க்கரை கலந்தது ஒரு கலவை ஆகும்.
  • ஏனெனில், கலவை என்பது எளிதில் பிரிக்கக்கூடிய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களைக் கொண்டது.
  • இக்கலவை இனிப்பும், புளிப்பும் கலந்தது.

Question 3.
மூன்று நிலைமைகளில் உள்ள துகள்களின் அமைப்பை கீழே காணலாம்.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 86
அ) படம் 1 பருப்பொருளின் எந்த நிலைமையைக் குறிக்கிறது?
விடை:
படம் – 1: பருப்பொருளின் வாயு நிலையைக் குறிக்கிறது.

ஆ) எப்படத்தில் துகள்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அதிகம்?
விடை:
படம் – 3 : துகள்களுக்கு இடையினான ஈர்ப்பு விசை அதிகம் திண்மநிலை

இ) திறந்த கலனில் வைக்க முடியாதது எது?
விடை:
படம் – 1 : உள்ள வாயுக்களைத் திறந்த கலனில் வைக்க முடியாது.

ஈ) கொள்கலனின் வடிவத்தைக் கொண்டது எது?
விடை:
படம் – 2 : உள்ள திரவம் கொள்கலனின் வடிவத்தைக் கொண்டது.

6th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்தெழுதுக

Question 1.
பின்வருவனவற்றுள் எவை ஒருபடித்தானவை ?
i) பனிக்கட்டி
ii) மரக்கட்டை
iii) மணல்
iv) காற்று
அ) (i) மற்றும் (iii)
ஆ) (ii) மற்றும் (iv)
இ) (i) மற்றும் (iv)
ஈ) (iii) மற்றும் (iv)
விடை:
இ) (i) மற்றும் (iv)

Question 2.
மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையை அதிகபட்சம் கொண்டது
அ) திரவங்க ள்
ஆ) பிளாஸ்மா துகள்கள்
இ) திண்மங்கள்
ஈ) வாயுக்கள்
விடை:
இ திண்மங்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 3.
பின்வருவனவற்றுள் எது பருப்பொருள் அல்ல?
அ) எலக்ட்ரான்
ஆ) இரத்தம்
இ) நிலா பாறை
ஈ) ஈரப்பதம்
விடை:
அ) எலக்ட்ரான்

Question 4.
உருவளவு, நிறம் மற்றும் வடிவம் அடிப்படையிலான மாறுபட்ட பொருட்களைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை
அ) கைகளால் தெரிந்தெடுத்தல்
ஆ) தூற்றுதல்
இ) கதிரடித்தல்.
ஈ) சலித்தல்
விடை:
அ). கைகளால் தெரிந்தெடுத்தல்

Question 5.
கோதுமை மாவுடன் கலப்படம் செய்யப்பட்ட ரவையைப் பிரித்தெடுக்க பயன்படும் முறை
அ) சலித்தல்
ஆ) வடிகட்டுதல்
இ) தூற்றல்
ஈ) கதிரடித்தல்
விடை:
அ) சலித்தல்

II. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 80.3

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
______ துகள்கள் குறிப்பிட்ட வடிவமாக நெருங்கிப் பொதிந்துள்ளன.
விடை:
திண்மத்

Question 2.
கிடைக்கும் இடத்தை நிரப்ப, இடம் முழுவதும் பரவும் தன்மையே ______ எனப்படும்.
விடை:
விரவுதல்

Question 3.
மிகவும் தூய்மையான தங்கத்தைக் குறிப்பது _____
விடை:
24கேரட்

Question 4.
பால் ஒரு _____
விடை:
கலவை

Question 5.
துணி துவைக்கும் இயந்திரத்தின் செயல்படும் தத்துவம் _____
விடை:
மைய விலக்கல்

IV. குறுவினா

Question 1.
பருப்பொருள்களின் ஏதேனும் இரு சிறப்புப் பண்புகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. பருப்பொருள் துகள்களுக்கு இடையில் இடைவெளி உள்ளது,
  2. பருப்பொருள் துகள்களுக்கு இடையில் ஈர்ப்பு விசை உள்ளது

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 2.
கண்ணாடி எவ்வகைப் பருப்பொருள்?
விடை:
கண்ணாடி ஒரு திடப்பொருள் போன்று இருப்பினும் அதுவன்று. கண்ணாடி ஒரு வழிந்தோடக்கூடிய நீர்மம்.

Question 3.
சேர்மம் என்பது என்ன ?
விடை:
சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணையும் வேதியியல் சேர்க்கையாகும்.

Question 4.
மாவிலிருந்து தவிடுநீக்கப் பயன்படும் முறையைக் குறிப்பிட்டு விவரி.
விடை:
மாவிலிருந்து ‘சலித்தல்’ முறையில் தவிடு நீக்கப்படுகிறது. வெவ்வேறு அளவுடைய திடப்பொருள்களைப் பிரித்தெடுக்க இம்முறை ஏற்றதாகும்.

Question 5.
தெளியவைத்து இறுத்தல் என்றால் என்ன ?
விடை:
வண்டலாக்குதலுக்குப்பின், வண்டலைப் பாதிக்காதவாறு மேல் அடுக்கிலுள்ள நீரினைக் கவனமாக மற்றொரு கலனிற்கு மாற்றுதலே தெளியவைத்து இறுத்தல் ஆகும்.

V. விரிவாக விடையளி

Question 1.
வாயுக்கள் மற்றும் திரவங்களுக்கு இடையேயான சில ஒற்றுமைகள் யாவை?
விடை:

  1. வாயுக்களுக்கும், திரவங்களுக்கும் குறிப்பிட்ட வடிவம் கிடையாது.
  2. வாயு மற்றும் திரவத் துகள்கள் நகரும் தன்மையுடையன, இந்த இயக்கத்தை விரவுதல் என்கிறோம்.
  3. திரவங்களை வாயுக்களாக ஆவியாக்கவும், வாயுக்களை திரவங்களாக ஆவி சுருங்கவும் (குளிர்தல்) செய்யலாம்.

Question 2.
தெளியவைத்து இறுத்தலும், வடிகட்டுதலும் எவ்வாறு வேறுபடுகின்றன.? இவற்றுள் எது விரைவானது?
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 95
குறிப்பு: பொதுவாக, வடிகட்டுதல் முறையே, தெளியவைத்து இறுத்தலை விட விரைவானதும், முழுமையான பிரித்தல் முறையாகவும் கருதப்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 98

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

6th Science Guide விசையும் இயக்கமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
வேகத்தின் அலகு _____அமீ
அ) மீ
ஆ) விநாடி
இ) கிலோகிராம்
ஈ) மீ/வி
விடை:
ஈ) மீ/வி

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?
அ) பூமி தன் அச்சைப் பற்றிச் சுழலுதல்
ஆ) நிலவு பூமியைச் சுற்றி வருதல்
இ) அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
இ)அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 3.
கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு
அ) வேகம்=தொலைவு × காலம்
ஆ) வேகம்= தொலைவு / காலம்
இ) வேகம் = காலம் /தொலைவு
ஈ) வேகம் = 1/ (தொலைவு × காலம்)
விடை:
ஆ) வேகம் தொலைவு / காலம்

Question 4.
கீதா தன் தந்தையின் வண்டியினை எடுத்துக் கொண்டு அவளுடைய வீட்டிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள மாமா வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.
கூற்று 1 : கீதாவின் வேகம் 1 கி.மீ/ நிமிடம்
கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ/மணி
அ) கூற்று 1 மட்டும் சரி
ஆ) கூற்று 2 மட்டும் சரி
இ) இரண்டு கூற்றுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
அ)கூற்று 1 மட்டும் சரி

II. கீழ்க்க ண்ட கூற்றுகள் சரியா/தவறா எனக் கூறு.தவறு எனில் சரியான விடைகள் விடையை எழுதுக.

Question 1.
மையப் புள்ளியைப் பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்.
விடை:
சரி

Question 3.
மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் ஒரு சீரான இயக்கமாகும்.
சரியான விடை : இது சீரற்ற இயக்கம்
விடை:
தவறு

Question 4.
வருங்காலத்தில் மனிதர்களின் பதிலியாக ரோபாட்டுகள் செயல்படும். அக உணர்வு நிலையில் இருக்காது
விடை:
தவறு

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் _____
விடை:
நேர்க்கோட்டு இயக்கம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 2.
புவிஈர்ப்பு விசை _____ விசையாகும்.
விடை:
தொடா விசை

Question 3.
மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ______ இயக்கமாகும்.
விடை:
தற்சுழற்சி இயக்கம்

Question 4.
ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால், அப்பொருளின் இயக்கம் ______
விடை:
சீரான இயக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 51
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 52

V. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.

Question 1.
பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல்: _____
விடை:
தொடா விசை

Question 2.
தொலைவு : மீட்டர் :: வேகம் : _____?
விடை:
மீ/வி

Question 3.
சுழற்சி இயக்கம்: பம்பரம் சுற்றுதல் :: அலைவு இயக்கம் : ___?
விடை:
தனிஊசல்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

VI. சீரான வேகத்தில் காட்டினுள் செல்லும் ஒருயானை கடக்கும் தொலைவு, காலத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான வேகத்தின் அடிப்படையில் கீழ்கண்ட அட்டவணையை பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 60
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 60.1

VII. வலை அட்டவனையைப் பூர்த்தி செய்க:

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 61

VIII. ஒரு வார்த்தையில் விடையை எழுதுக.

Question 1.
தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் பெயர் ___
விடை:
தொடா விசை

Question 2.
காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது _____
விடை:
இயக்கம்

Question 3.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், திரும்பத் திரும்ப நிகழும் இயக்கம் _____ எனப்படும்.
விடை:
அலைவு இயக்கம்

Question 4.
சம கால இடைவெளியில், சமதொலைவை கடக்கும் பொருளின் இயக்கம் _____
விடை:
சீரான இயக்கம்

Question 5.
நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் _____
விடை:
செயற்கை நுண்ணறிவு

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

IX. ஒரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
விசை – வரையறு.
விடை:
விசை என்பது பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது.

Question 2.
பொருள் நகரும் பாதையைப் பொறுத்து இயக்கங்களை எவ்வாறு வகைப் படுத்தலாம்?
விடை:

  1. நேர்க்கோட்டு இயக்கம்
  2. வளைவுப்பாதை இயக்கம்
  3. வட்டப்பாதை இயக்கம்
  4. தற்சுழற்சி இயக்கம்
  5. அலைவு இயக்கம்
  6. ஒழுங்கற்ற இயக்கம்

Question 3.
நீ இயங்கும் மகிழுந்தினுள் உட்கார்ந்திருக்கும் போது உன்னருகில் அமர்ந்திருக்கும் உன் நண்பனைப்பொறுத்து நீ என்ன நிலையில் உள்ளாய்?
விடை:
இயங்கும் மகிழுந்தினுள் நானும் என் நண்பனும் உட்கார்ந்திருக்கும் போது, என் நண்பனும், நானும் ஓய்வு நிலையில் இருப்போம் என கருதுகிறேன்.

Question 4.
பூமியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும் – விவரி
விடை:
ஒரு குறிப்பிட்டட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்களை கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம். எனவே, புவியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும்.

Question 5.
சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 65

X. கணக்கிடுக.

Question 1.
ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் சராசரி வேகம் என்ன?
தீர்வு :
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 66
விடை:
80 கிலோ மீட்டர்/ மணி

XI. விரிவான விடையளி.

Question 1.
இயக்கம் என்றால் என்ன?
விடை:
இயக்கம்:

  • இயக்கம் என்பது காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொள்வதை இயக்கம் என்கிறோம்.
  • இயங்கும் பாதையின் அடிப்படையில் இயக்கத்தை வகைப்படுத்தலாம்:
  1. நேர்க்கோட்டு இயக்கம்
    பொருளானது நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கும். (உம்) நேர்க்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன். தானாகக் கீழே விழும் பொருள்.
  2. வளைவுப்பாதை இயக்கம்
    பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும்.(உ.ம்) பந்தினை வீசுதல்
  3. வட்டப்பாதை இயக்கம்
    ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கும் (உம்) கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல்.
  4. தற்சுழற்சி இயக்கம்
    ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் (உம்): பம்பரத்தின் இயக்கம்.
  5. அலைவு இயக்கம்
    ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகர்தல் – (உ.ம்) தனிஊசல்.
  6. ஒழுங்கற்ற இயக்கம் ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்.

Question 2.
பொருளின் இயக்கத்தினை எவற்றின் அடிப்படையில் நாம் வகைப்படுத்தலாம்?
விடை:
எடுத்துக்காட்டுடன் விளக்குக. பொருளின் இயக்கத்தை நாம் காலம் மற்றும் வேகத்தைப் பொறுத்து வகைப் படுத்தலாம். கால இடைவெளி அடிப்படையில்:
1. கால ஒழுங்கு இயக்கம்
2. கால ஒழுங்கற்ற இயக்கம்

1. கால ஒழுங்கு இயக்கம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்களை நாம் கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம். (எ.கா) புவியை சுற்றிய நிலவின் இயக்கம்.

2. கால ஒழுங்கற்ற இயக்கம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக நடைபெறாது. இவ்வியக்கம் கால ஒழுங்கற்ற இயக்கம். சீரான வேகத்தின் அடிப்படையில்
1. சீரான இயக்கம்
2. சீரற்ற இயக்கம்

1. சீரான இயக்கம்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை சீரான இயக்கம் என்கிறோம். (எ.கா) தொடர்வண்டியின் இயக்கம்.
2. சீரற்ற இயக்கம்.
மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை நாம் சீரற்ற இயக்கம் என்கிறோம். (எ.கா) வாகன இயக்கம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

XII. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 80
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 81

6th Science Guide விசையும் இயக்கமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
பூமி சுழல்வது
அ) மேற்கிலிருந்து கிழக்காக
ஆ) கிழக்கிலிருந்து மேற்காக
இ) வடக்கிலிருந்து தெற்காக
ஈ) தெற்கிலிருந்து வடக்காக
விடை:
அ) மேற்கிலிருந்து கிழக்காக

Question 2.
ஓர் அறையில் அங்கும் இங்குமாக நகரும் ‘ஈ’ -யின் பாதை
அ) கால ஒழுங்கு இயக்கம்
ஆ) கால ஒழுங்கற்ற இயக்கம்
இ) வளைவுப் பாதை இயக்கம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) கால ஒழுங்கற்ற இயக்கம்

Question 3.
சராசரி வேகத்திற்கான SI அலகு.
அ) மீட்டர்/வினாடி
ஆ) கிலோமீட்டர்/வினாடி
இ) கிலோமீட்டர் / நேரம்
ஈ) மீட்டர்/நேரம்
விடை:
அ) மீட்டர்/வினாடி

Question 4.
தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையானது சராசரியாக ____ வேகத்தில் ஒடும் மிக வேகமான விலங்காகும்.
அ) 100 கி.மீ/மணி
ஆ) 200 கி.மீ/மணி
இ) 112கி.மீ/மணி
ஈ) 10கி.மீ/மணி
விடை:
இ 112கி.மீ/மணி

Question 5.
புவியைச் சுற்றிய நிலவின் இயக்கம் _____
அ) அலைவு இயக்கம்
ஆ) கால ஒழுங்கு இயக்கம்
இ) வளைவு இயக்கம்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
ஆ) கால ஒழுங்கு இயக்கம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

II. சரியா?தவறா? என எழுதுக தவறு எனில் சரியான விடையை எழுதுக.

Question 1.
காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக்கொள்வது இயக்கம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல் தற்சுழற்சி இயக்கம் ஆகும்.
சரியான விடை : வட்டப்பாதை இயக்கமாகும்
விடை:
தவறு.

Question 3.
ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தையின் இயக்கம் கால ஒழுங்கு இயக்கம் ஆகும்.
விடை:
சரி

Question 4.
அலைவு இயக்கம் அனைத்தும் கால ஒழுங்கு இயக்கமாகும்.
விடை:
சரி

Question 5.
தொலைவின் SI அலகு கிலோமீட்டர்
தவறு சரியான விடை : தொலைவின் SI அலகு மீட்டர் (அ)
விடை:
தவறு

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கூட்டம் மிகுந்த கடைத்தெருவில் மக்களின் இயக்கம் _____
விடை:
ஒழுங்கற்ற இயக்கம்

Question 2.
மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கம் ____
விடை:
சீரற்ற இயக்கம்

Question 3.
பிரியா தனது மிதிவண்டியில் 2 மணி நேரத்தில் 40 கி.மீ தூரம் பயணம் செய்தால் அவளுடைய சராரரி வேகம் _____
விடை:
20 கிலோமீட்டர்/மணி

Question 4.
இயக்கம் _____ வகைப்படும்.
விடை:
நான்கு

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 5.
ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் _____
விடை:
தற்சுழற்சி இயக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 81.1

V. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.

Question 1.
தொடர் வண்டியின் இயக்கம் : சீரான இயக்கம் வாகனங்களின் இயக்கம் : _____
விடை:
சீரற்ற இயக்கம்

Question 2.
கால ஒழுங்கு இயக்கம் : புவியைச் சுற்றிய நிலவின் இயக்கம் அலைவு இயக்கம் : _____
விடை:
தனி ஊசலின் இயக்கம்

VI. விடுபட்ட இடங்களை நிரப்புக.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 85

VII. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 86

VIII. குறுகிய விடையளி.

Question 1.
ஓய்வு நிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் காலத்தைப் பொறுத்து தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரே இடத்தில் இருப்பதை ஓய்வு நிலை என்கிறோம்.

Question 2.
விசையின் இரண்டு வகைகள் யாவை?
விடை:

  1. தொடு விசை
  2. தொடா விசை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 3.
தொடு விசை என்றால் என்ன?
விடை:
விசையானது பொருளினைத் தொடுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய விசை தொடுவிசை என அழைக்கப்படுகிறது.

Question 4.
சராசரி வேகம் என்றால் என்ன?
விடை:
ஓரலகு காலத்தில் ஒரு பொருள் எவ்வளவு தூரம் கடந்தது என்று கூறுவதே சராசரி வேகமாகும்.

Question 5.
ஒருபேருந்தானது மணிக்கு 40 கி.மீவேகத்தில் பயணம் செய்து 200கி.மீ தொலைவினைக் கடந்தால் அப்பேருந்து பயணம் செய்ய எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
விடை:
காலம் (t) = கடந்த தொலைவு (d) / சராசரி வேகம்
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 86.2
= 5 மணி.

IX. விரிவான விடையளி.

Question 1.
விசை என்றால் என்ன ? விசையின் வகைகளை விளக்குக.
விடை:
விசை: பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது. விசையின் வகைகள் :

1. தொடு விசை
2. தொடா விசை

தொடு விசை: விசையானது பொருளினைத் தொடுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய விசை தொடுவிசை என அழைக்கப்படுகிறது. எ.கா. கால்பந்தை உதைத்தல்.
தொடா விசை: விசையானது பொருளினைத் தொடாமல் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய விசைகள் தொடா விசைகள் என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 95

பொருளின் மீது செயல்படுத்தப்படும் விசையானது

  • பொருளை ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கோ அல்லது இயக்க நிலையிலிருந்து ஓய்வு நிலைக்கோ மாற்றும்.
  • இயங்கும் பொருளின் வேகத்தினையோ அல்லது திசையையோ அல்லது இரண்டையுமோ மாற்றும்.
  • பொருளின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 96

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 1 அளவீடுகள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 1 அளவீடுகள்

6th Science Guide அளவீடுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.
அ) மீட்டர் அளவு கோல்
ஆ) மீட்டர் கம்பி
இ) பிளாஸ்டிக் அளவுகோல்
ஈ) அளவு நாடா
விடை:
ஈ) அளவு நாடா

Question 2.
7மீ என்பது செ.மீ -ல்
அ) 70 செ.மீ
ஆ) 7 செ.மீ
இ) 700 செ.மீ
ஈ) 7000 செ.மீ
விடை:
இ) 700 செ.மீ

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Question 3.
ஒரு அளவை அளவிடும் முறைக்கு என்று பெயர்
அ) இயல் அளவீடு
ஆ) அளவீடு
இ) அலகு
ஈ) இயக்கம்
விடை:
ஆ) அளவீடு

Question 4.
சரியானதைத் தேர்ந்தெடு
அ) கி.மீ > மி.மீ > செ.மீ > மீ
ஆ) கி.மீ > மி.மீ > செ.மீ > மீ
இ) கி.மீ > மீ > செ.மீ > மி.மீ
ஈ) கி.மீ > செ.மீ > மீ > மி.மீ
விடை:
இ) கி.மீ > மீ > செ.மீ > மி.மீ

Question 5.
அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும் போது, உனது கண்ணின் நிலை _____ இருக்க வேண்டும்.
அ) அளவிடும் புள்ளிக்கு இடது புறமாக
ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக
இ) புள்ளிக்கு வலது புறமாக
ஈ) வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்
விடை:
ஆ) அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக

II. சரியா தவறா என எழுதுக.

Question 1.
நிறையை 126 கிகி எனக் கூறுவது சரியே.
விடை:
சரி

Question 2.
ஒருவரின் மார்பளவை அளவுகோல் பயன்படுத்தி அளவிட முடியும்.
விடை:
தவறு

Question 3.
10 மி.மீ என்பது 1 செ.மீ ஆகும்.
விடை:
சரி

Question 4.
முழம் என்பது நீளத்தை அளவிடும் நம்பத் தகுந்த முறையாகும்.
விடை:
தவறு

Question 5.
SI அலகு முறை என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அலகு முறையாகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
SI அலகு முறையில் நீளத்தின் அலகு _______
விடை:
மீட்டர்

Question 2.
500 கிராம் = _____ கிலோகிராம்.
விடை:
0.5.

Question 3.
டெல்லிக்கும், சென்னைக்கும் இடையில் உள்ள தொலைவு _____ என்ற அலகால் அளக்கப்படுகிறது
விடை:
கிலோ மீட்டர்

Question 4.
1மீ = _____ செ.மீ என அளவிடப்படுகிறது.
விடை:
100

Question 5.
5 கி.மீ = ______ மீ.
விடை:
5000

IV. ஒப்புமை தருக.

Question 1.
சர்க்கரை : பொதுத்தராசு; எலுமிச்சை சாறு : ______ ?
விடை:
அளவுசாடி.

Question 2.
மனிதனின் உயரம் : செ.மீ; கூர்மையான பென்சிலின் முனையின் நீளம் : ______?
விடை:
மி.மீட்டர்

Question 3.
பால் : பருமன்; காய்கறிகள் : _____
விடை:
எடை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

V. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 60

VI. அட்டவணையை நிரப்புக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 41
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 42

VII. பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.

Question 1.
மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.
விடை:
1 மில்லிமீட்டர், 1 சென்டிமீட்டர், 1 மீட்டர், 1 கிலோ மீட்டர்.

VIII. கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள் தேடுக

Question 1.
10-3 என்பது
விடை:
மில்லிமீட்டர்

Question 2.
காலத்தின் அலகு
விடை:
விநாடி

Question 3.
சாய்வாக அளவிடுவதால் ஏற்படுவது
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 10

Question 4.
கடிகாரம் காட்டுவது
விடை:
நேரம்

Question 5.
ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு
விடை:
நிறை

Question 6.
பல மாணவர்களின் பதிவுகளிலிருந்து கடைசியாக எடுக்கப்படும் ஒரு தனி அளவீடு
விடை:
சராசரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Question 7.
_____ என்பது ஒரு அடிப்படை அளவு
விடை:
நீளம்

Question 8.
வாகனங்கள் கடக்கும் தொலைவைக் காட்டுவது
விடை:
ஒடோமீட்டர்

Question 9.
தையல்காரர் துணியைத் தைக்க அளவிடப் பயன்படுத்துவது.
விடை:
நாடா

Question 10.
நீர்மங்களை அளவிட உதவும் அளவீடு.
விடை:
லிட்டர்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 50
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 51

IX. ஓரிரு வார்த்தைகளில் விடை தருக.

Question 1.
SI என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை:
பன்னாட்டு அலகு முறை [International System of units]

Question 2.
நிறையை அளவிடப் பயன்படும் ஒரு கருவி.
விடை:
பொதுத்தராசு.

Question 3.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
விடை:
விடை:
கிலோகிராம், மில்லி மீட்டர், சென்டி மீட்டர், நேனோ மீட்டர்.

Question 4.
நிறையின் SI அலகு என்ன?
விடை:
கிலோகிராம்.

Question 5.
ஒரு அளவீட்டில் இருக்கும் இரு பகுதிகள் என்ன?
விடை:

  1. பன்மடங்கு
  2. துணைப் பன்மடங்குகள்.

X. ஓரிரு வரிகளில் விடையளி:

Question 1.
அளவீடு – வரையறு.
விடை:
தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது ‘அளவீடு’ எனப்படும்.

Question 2.
நிறை வரையறு.
விடை:
நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவே ஆகும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Question 3.
இரு இடங்களுக்கு இடையே உள்ள தொலைவு 43.65 கி.மீ இதன் மதிப்பை மீட்டரிலும், சென்டிமீட்டரிலும் மாற்றுக.
விடை:
தொலைவு = 43.65 கி.மீ (1 கி.மீ = 1000 மீட்டர்)
தொலைவு = 43650 மீட்டர் (1 மீட்டர் = 100 செ.மீ)
தொலைவு = 4365000 செ.மீ

Question 4.
அளவுகோலில் அளவிடும் போது, துல்லியமான அளவீடு பெறப் பின்பற்றப்படும் விதிமுறைகள் என்ன?
விடை:

  1. இடமாறு தோற்றப் பிழையைத் தவிர்க்கவும்.
  2. அளவீட்டை கீழ்நோக்கி செங்குத்தாகப் பார்ப்பதன் மூலம் துல்லியமான அளவீட்டை பெறலாம்.

XI. கீழ்க்கண்டவைகளைத் தீர்க்க.

Question 1.
உனது வீட்டில் இருந்து உனது பள்ளிக்கு இடையே உள்ள தொலைவு 2250மீ. இந்தத் தொலைவினை கிலோமீட்டராக மாற்றுக.
விடை:
வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு = 2250 மீ
தொலைவு = 2.250 கிலோமீட்டர்.

Question 2.
கூர்மையான ஒரு பென்சிலின் நீளத்தை அளவிடும் போது அளவு கோலின் ஒரு முனை 2.0 செ.மீ மற்றும் அடுத்த முனை 12.1 செ.மீ என்ற இரு அளவுகளைக் காட்டினால் பென்சிலின் நீளம் என்ன?
விடை:
அளவு கோலின் ஒரு முனை = 2.0 செ.மீ
அடுத்த முனை = 12.1 செ.மீ
பென்சிலின் நீளம் = 10.1 செ.மீ (அல்லது) 10 செ.மீ மற்றும் 1 மி.மீ

XII. விரிவாக எழுதுக.

Question 1.
வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.
விடை:
1. ஆவது முறை:

  • ஒரு வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைக்கவும்
  • கம்பியானது வளைகோட்டின் எல்லாப் பகுதியையும் தொடுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும் முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறிக்க வேண்டும்.
  • கம்பியை நேராக நீட்டி குறிக்கப்பட்ட தொடக்கப்புள்ளிக்கும், முடிவுப் புள்ளிக்கும் இடையிலான தொலைவை அளவுகோல் கொண்டு அளவிடவும்.
  • இதுவே வளைகோட்டின் நீளமாகும்.

2 ஆவது முறை :

  • கவையின் இரு முனைகளை 0.5 செ.மீ அல்லது 1 செ.மீ இடைவெளி உள்ளவாறு பிரிக்க வேண்டும்.
  • வளைகோட்டின் ஒரு முனையிலிருந்து கவையை வைத்து தொடங்கவும். மறுமுனை வரை அளந்து குறிக்க வேண்டும்.
  • வளைகோட்டின் மேல் சம அளவு பாகங்களாகப் பிரிக்கவும். குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவிட வேண்டும்.
  • வளைகோட்டின் நீளம் = (பாகங்களின் எண்ணிக்கை × ஒரு பாகத்தின் நீளம்) + மீதம் உள்ள கடைசி பாகத்தின் நீளம்.

Question 2.
கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக்
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 59
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 61
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 62

6th Science Guide அளவீடுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
7 மீ என்ப து மி.மீ ல்
அ) 0.7 மி.மீ
ஆ) 700 மி.மீ
இ 7000 மி.மீ
ஈ) 70 மி.மீ
விடை:
இ) 7000 மி.மீ

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Question 2.
SI அலகுமுறையில் மின்னோட்டத்தின் அலகு.
அ) கெல்வின்
ஆ) ஆம்பியர்
இ) வினாடி
ஈ) வோல்ட்
விடை:
ஆ) ஆம்பியர்

Question 3.
நீளத்தின் அலகு
அ) மீட்டர்
ஆ) லிட்டர்
இ) வினாடி
ஈ) கிலோகிராம்
விடை:
அ) மீட்டர்

Question 4.
திரவத்தின் பருமனை அளவிட உதவும் கருவிகள்
அ) குடுவைகள்
ஆ) Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 92
இ) பியூரெட்டுகள்
ஈ) அனைத்தும்
விடை:
ஈ) அனைத்தும்

Question 5.
ஒழுங்கற்ற பொருள்களின் பருமனை அளந்தறிய ____ முறை பயன்படுகிறது.
அ) தராசு
ஆ) மின்னணுதராசு
இ) நீர் இடப்பெயர்ச்சி
ஈ) மணல் கடிகாரம்
விடை:
இ) நீர் இடப்பெயர்ச்சி

II. சரியா? தவறா? என எழுதுக.

Question 1.
தெரிந்த ஒரு அளவைக் கொண்டு தெரியாத அளவை ஒப்பிடுவது நிறை எனப்படும்.
விடை:
தவறு

Question 2.
நீளம், அகலம் என இருவகையான நீளத்தைப் பயன்படுத்தி பரப்பளவை கணக்கிடலாம்.
விடை:
சரி

Question 3.
மின்னணுத்தராசைப் பயன்படுத்தி மிகத்துல்லியமாக எடையை அளக்கலாம்.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
7875 செ.மீ = ____ மீ ____ செ.மீ
விடை:
78.மீ;75.செ.மீ

Question 2.
1195 மீ = ____ கி.மீ. _____ மீ.
விடை:
1 கி.மீ; 195 மீ

Question 3.
15 செ.மீ 10 மி.மீ = ____ மி.மீ
விடை:
160 மி.மீ

Question 4.
45 கி.மீ 33மீ = _____ மீ
விடை:
45033 மீ

Question 5.
மெட்ரிக் முறை அலகுகள் _____ ஆண்டு ஃபிரெஞ்சு காரர்களால் 1790
விடை:
உருவாக்கப்பட்டது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 65

V. பின்வரும் அலகினை ஏறுவரிசையில் எழுதுக.

Question 1.
டன் → கிராம் → கிலோகிராம் → மெட்ரிக் டன்.
விடை:
கிராம் → கிலோகிராம் → டன் → மெட்ரிக் டன்.

VI. மிகக் குறுகிய விடையளி (2 மதிப்பெண்கள்)

Question 1.
பன்னாட்டு அலகு முறை அல்லது SI அலகு என்றால் என்ன?
விடை:
ஒரே மாதிரியான அளவிடும் முறைக்காக உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட அலகுகளுக்கு பன்னாட்டு அலகு முறை அல்லது SI அலகு என்று பெயர்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Question 2.
நிறை எடை வேறுபடுத்துக?
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 70

Question 3.
மிகக் குறுகிய நீளங்களை அளக்க உதவும் அளவீடுகள் யாவை?
விடை:

  1. மில்லி மீட்டர்
  2. சென்டி மீட்டர்

Question 4.
அடிப்படை இயற்பியல் அளவுகள் யாவை?
விடை:
1- நீளம்;
2 – நிறை;
3 – காலம்,
4 – மின்னோட்டம்,
5 – வெப்பநிலை,
6 – ஒளிச்செறிவு,
7 – பொருளின் அளவு

Question 5.
முற்காலத்தில் மக்கள் பகல் நேரத்தை கணக்கிட பயன்படுத்திய கடிகாரங்கள் யாவை?
விடை:
1- மணல் கடிகாரம்;
2 – சூரியக் கடிகாரம்

Question 6.
நேரத்தை துல்லியமாக கணக்கிட உதவும் கடிகாரங்கள் யாவை?
விடை:
1 – மின்ன ணு கடிகாரம்;
2 – நிறுத்துக் கடிகாரம்

Question 7.
ஒடோமீட்டர் என்றால் என்ன?
விடை:
தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிட உதவும் கருவி.

VII. விரிவான விடை எழுதுக.

Question 1.
அளவு கோலைப் பயன்படுத்தி அளக்கும் போது ஏற்படும் கவனிக்க வேண்டிய வழிமுறைகளைக் கூறு?
விடை:

  1. அளக்க வேண்டிய பொருளை எப்போதும் அளவு கோலின் சுழியில் “O” பொருந்துமாறு வைக்க வேண்டும்.
  2. அளக்க வேண்டிய பொருளை அளவு கோலுக்கு இணையாக வைக்க வேண்டும்
  3. எப்போதும் சுழியிலிருந்து (‘O’) அளவிட வேண்டும்.
  4. முதலில் பெரிய பிரிவுகளையும் (செ.மீ) பிறகு சிறிய பிரிவு (மி.மீ) களையும் அளவிட வேண்டும்
  5. அளவுகளைக் குறிக்கும் போது பெரிய அளவுகளை முதலிலும், அதன் பின் புள்ளி வைத்த பின் சிறிய அளவுகளைக் குறிக்க வேண்டும்.
    எ.கா. ஒரு பென்சிலின் நீளம் 6 செ.மீ, 2 மி.மீ என்றால் (6.2 செ.மீ)

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள்

Question 2.
ஒரு ஒழுங்கற்ற வடிவம் கொண்ட கல்லின் பருமனை எவ்வாறு காண்பாய்?
விடை:

  1. அளவுகள் குறிக்கப்பட்ட ஒரு உருளை வடிவ குவளையில் 50 மி.லி அளவு வரை நீரால் நிரப்பவும்.
  2. கன அளவு காண வேண்டிய கல்லை ஒரு நூலில் கட்டி ஜாடியில் உள்ள நீரினுள் அடிமட்டம் வரை மெதுவாக விடவும்.
  3. இப்போது ஜாடியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் நீர்மட்டம் 75 மி.லி.
  4. கல் நீரை இடப்பெயர்ச்சி செய்ததால், நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
  5. இடப்பெயர்ச்சி செய்த நீரின் அளவே கல்லின் பருமனாகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 1 அளவீடுகள் 90

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

6th Social Science Guide பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
குப்த வம்சத்தை நிறுவியவர் … ஆவார்.
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) ஸ்ரீகுப்தர்
இ) விஷ்ணு கோபர்
ஈ) விஷ்ணுகுப்தர்
விடை:
ஆ) ஸ்ரீ குப்தர்

Question 2.
பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் … ஆவார்.
அ) காளிதாசர்
ஆ) அமரசிம்மர்
இ) ஹரிசேனர்
ஈ) தன்வந்திரி
விடை:
இ) ஹரிசேனர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 3.
சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் … என்ற இடத்தில் உள்ளது.
அ) மெக்ராலி
ஆ) பிதாரி
இ) கத்வா
ஈ) மதுரா
விடை:
அ) மெக்ராலி

Question 4.
அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் …..
அ) சரகர்
ஆ) சுஸ்ருதர்
இ) தன்வந்திரி
ஈ) அக்னிவாசர்
விடை:
ஆ) சுஸ்ருதர்

Question 5.
வங்காளத்தின் கௌட அரசர் ………
அ) சசாங்கர்
ஆ) மைத்திரகர்
இ) ராஜ வர்த்தனர்
ஈ) இரண்டாம் புலிகேசி
விடை:
அ) சசாங்கர்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

Question 1.
கூற்று : வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.
காரணம் : முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்.
அ. காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ. காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
விடை:
அ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

Question 2.
கூற்று 1 : தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.
கூற்று 2 : குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்.
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி.
ஆ) இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி.
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி.

Question 3.
கீழ்க்கான்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?
அ) ஸ்ரீ குப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர்
ஆ) முதலாம் சந்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்
இ) ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – முதலாம் சந்திரகுப்தர்
ஈ) விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திர குப்தர் – முதலாம் சந்திரகுப்தர்
விடை:
அ) ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிமாதித்யர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 4.
கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது/எவை சரியானது சரியானவை
விடை:
என்பதைக் கண்டறியவும்.
1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி
ஈ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு
விடை:
அ) 1 மட்டும் சரி

Question 5.
பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
காளிதாசர், ஹரிசேனர், சமுத்திரகுப்தர் சரகர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 65
விடை:
சமுத்திரகுப்தர்

Question 2.
ரத்னாவளி, ஹர்சரிதா நாகநந்தா, பிரியதர்சிகா
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 66
விடை:
ஹர்சரிதா

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இலங்கை அரசர்………… சமுத்திரகுப்தரின், சமகாலத்தவர் ஆவார்.
விடை:
ஸ்ரீமேகவர்மன்

Question 2.
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின் போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி ………… இந்தியாவிற்கு வந்தார்.
விடை:
பாகியான்

Question 3.
……….. படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
விடை:
ஹூணர்கள்

Question 4.
………. அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.
விடை:
நிலவரி

Question 5.
குப்தர்களின் அலுவலக மொழி…………..
விடை:
சமஸ்கிருதம்

Question 6.
பல்லவ அரசர் ………… சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை:
விஷ்ணுகோபன்

Question 7.
வர்த்த ன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ……… ஆவார்.
விடை:
ஹர்ஷவர்த்தனர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 8.
ஹர்ஷர் தலைநகரை ………. லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
விடை:
தானேஷ்வரி

IV. சரியா/தவறா என எழுதுக

Question 1.
தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்.
விடை:
சரி

Question 2.
குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ – ஆரிய பாணியை ஒத்துள்ளன.
விடை:
தவறு

Question 3.
குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.
விடை:
தவறு

Question 4.
ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்
விடை:
தவறு

Question 5.
ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்.
விடை:
தவறு

V. பொருத்துக

அ)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 90
விடை:
ஆ) 2, 4, 1, 3, 5

ஆ)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 91
விடை:
இ) 3, 5, 1, 2, 4

VI. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
‘கவிராஜா’ என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? ஏன்?
விடை:

  • ‘கவிராஜா’ என்ற பட்டம் சமுத்திர குப்தருக்கு வழங்கப்பட்டது.
  • ஏனெனில் அவர் கவிதைப் பிரியரும் இசைப்பிரியருமாவார்.

Question 2.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத்தரப்பட்ட பாடப்பிரிவுகள் யாவை?
விடை:

  • பௌத்த தத்துவம்
  • யோகா
  • வேத இலக்கியங்கள்
  • மருத்துவம்

Question 3.
அரசர்களின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை விளக்குக.
விடை:

  • குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப் படுத்தினர்.
  • அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 4.
உலோகவியலில் குப்தர்களின் சாதனைகளை எடுத்துக் கூறுக.
விடை:

  • உலோகவியலில் குப்தர்களின் சாதனை எனப்படுவது மெக்ராலி இரும்புத்தூணாகும். இது டெல்லி யில் சந்திரகுப்தரால் நிறுவப் பட்டதாகும்.
  • இத்தூண் இன்றளவும் துருப்பிடிக்காமல் உள்ளது.

Question 5.
ஹூணர்கள் என்போர் யார்?
விடை:

  • ஹூணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினர்.
  • இவர்கள் ரோமாபுரியையும் கான்ஸ்டாண்டி நோபிளையும் பேரச்சத்திற்கு உள்ளாக்கினர்.

Question 6.
ஹர்ஷர் காலத்தில் வசூலிக்கப்பட்ட மூன்று வகையான வரிகளைக் குறிப்பிடுக.
விடை:

  • பாகா
  • ஹிரண்யா
  • பாலி

Question 7.
ஹர்ஷர் எழுதிய நூற்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ரத்னாவளி
  • நாகநந்தா
  • பிரியதர்சிகா

VII. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
பிரசஸ்தி (மெய்க்கீர்த்தி) :

  • பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் புகழ்வது.
  • அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்து பாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர்.
  • இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காக தூண்களில் பொறிக்கப்பட்டன.

Question 2.
சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.
விடை:

  • சமுத்திர குப்தர் மகத்தான போர்த்தளபதி. அவர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார்.
  • அவர் பல்லவ அரசர் விஷ்ணு கோபனை தோற்கடித்தார்.
  • அவர் வட இந்தியாவில் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார்.
  • அவர் தென்னிந்தியாவில் 12 அரசர்களை சிற்றரசர்களாக்கி கப்பம் கட்டச் செய்தார்.
  • அவரின் மேலாதிக்கத்தை கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி ஆகியவற்றின் அரசர்களும் ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் ஏற்றுக் கொண்டனர்.

Question 3.
குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?
விடை:
குப்தர் காலத்தில் நிலங்களை வகைப்படுத்துதல்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 95

Question 4.
சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.
விடை:
சிரெஸ்தி :
சிரெஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்.
கார்த்தவாகா :
சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.

Question 5.
கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.
விடை:

  • முன்பிருந்த மரபான பாறைக் குடைவரைக் கோவில்களிலிருந்து கட்டுமானக் கோவில்களை முதன் முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே.
  • இக்கோவில்கள் கோபுரங்களோடும், விரிவான செதுக்கு வேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் கட்டப்பட்டன.
  • மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா, பாக், உதயகிரி, ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
  • இக்காலக்கட்டத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் திராவிடப் பாணியை ஒத்திருக்கின்றன.

Question 6.
காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள் சாகுந்தலம், மாளவிகாக்கனிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும்.
  • அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகு வம்சம், குமார சம்பவம், ரிது சம்காரம் ஆகும்.

Question 7.
ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.
விடை:

  • ஹர்ஷரே ஒரு கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்.
  • சிறந்த கவிஞர்களும் கலைஞர்களும் அவரைச் சூழ்ந்து இருந்தனர்.
  • ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா ஆகியவை அவருடைய புகழ்பெற்ற நூல்கள்.
  • அவரின் அவையை பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகியோர் அலங்கரித்தனர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது.
அ) நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை
ஆ) தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை
இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை
ஈ) மன்னர்களின் ஆடம்பர இயல்பை
விடை:
இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை

Question 2.
பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?
அ) குகைச் சுவர்களில்
ஆ) கோவில்களின் விதானங்களில்
இ) பாறைகளில்
ஈ) பாப்பிரஸ் இலைகளில்
விடை:
அ) குகைச் சுவர்களில்

Question 3.
குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?
அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
ஆ) தென்னிந்தியப் படையெழுச்சி தயப் படையெழுச்சு
இ) ஹூணர்களின் படையெடுப்பு
ஈ) மத சகிப்புத் தன்மை
விடை:
அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

Question 4.
குப்தர்கள் காலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?
விடை:

  • நவீன உலகிற்கு விட்டுச் சென்ற பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும், அதன் பரிணாம வளர்ச்சியான தசம எண் முறையும்.
  • ஆரியப்பட்டர் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார். அவர்தான் பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர்.

IX. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. காளிதாசரின் நாடகம் ஒன்றினை வகுப்பறையில் மேடையேற்றவும்.
2. மௌரியர் காலச் சமுதாயத்திற்கும் குப்தர்கள் கால சமுதாயத்திற்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பீடு செய்க.

வாழ்க்கைத் திறன்கள் (மாணவர்களுக்கானது)

1. வானியல் துறைக்கு ஆரியப்பட்டர், வராகமிகிரர், பிரம்மகுப்தர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பினைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கவும்.
2. செயற்கைக்கோள் ஏவுவதைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள அருகேயுள்ள இஸ்ரோ மையத்திற்குச் சென்று வரவும்.

XI. கட்டக வினா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 40
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 41

6th Social Science Guide பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஸ்ரீகுப்தருக்குப் பின் அரசப் பதவியேற்றவர்.
அ) முதலாம் குமாரகுப்தர்
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) கடோத்கஜர்
விடை:
ஈ) கடோத்கஜர்

Question 2.
நிதி சாரம் என்னும் நூலில் முக்கியத்துவம் பெறுவது
அ) வணிகம்
ஆ) இராணுவம்
இ) வேளாண்மை
ஈ) கருவூலம்
விடை:
ஈ) கருவூலம்

Question 3.
தனக்குத்தானே அரசராக முடி சூட்டிக் கொண்ட ஹுண தலைவர்
அ) யசோதர்மன்
ஆ) அட்டில்லா
இ) மிகிரகுலர்
ஈ) தோரமானர்
விடை:
ஈ) தோரமானர்

Question 4.
தினாரா என்பது குப்தர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட ……. நாணயங்கள்
அ) செப்பு
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) பொன்
விடை:
ஈ) பொன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 5.
ஹர்ஷர் கலந்து கொண்ட கும்பமேளா விழா நடைபெற்ற இடம்
அ) அலகாபாத்
ஆ) காசி
இ) அயோத்தி
ஈ) பிரயாகை
விடை:
ஈ) பிரயாகை

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப்பார்த்து சரியான விடையைக் கண்டுபிழக்கவம்.

Question 1.
கூற்று : குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசரான முதலாம் நரசிம்ம குப்தர் மிகிரகுலருக்கு கப்பம் கட்டி வந்தார்.
காரணம் : மிகிர குப்தர் பௌத்தத்தைப் பகைமையோடு பார்த்ததால் மன வேதனை அடைந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினார்.
அ) காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) காரணமும் சுற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

Question 2.
கூற்று 1 : குப்தர்கள் காலத்தைக் காட்டிலும் ஹர்ஷர் காலத்தில் குற்றவியல் சட்டங்கள் கடுமையாக இல்லை.
கூற்று II : சட்டங்களை மீறுவோர்க்கும் அரசருக்கு எதிராக சதி செய்வோர்க்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி
ஆ) இரண்டாம் கூற்று தவறு. ஆனால் முதல் கூற்று சரி.
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…….. பேரவையில் ஹர்ஷர் தனது செல்வங்களை கொடையாக விநியோகித்தார்.
விடை:
பிரயாகை

Question 2.
சீனர்களின் தலைநகரான …… மாபெரும் கலை, கல்விக்கான மையம்
விடை:
சியான்

Question 3.
முதலாம் சந்திரகுப்தரின் மனைவி ………
விடை:
குமாரதேவி

Question 4.
அரசர்களின் படையெடுப்பு நடவடிக்ககைகளில் வருவாயின் …….. முதலீடு செய்யப்பட்டது.
விடை:
உபரியே

Question 5.
விவசாயிகள் பல்வேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் ……….. நிலைக்கு தள்ளப்பட்டனர்.
விடை:
கொத்தடிமை

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 96
விடை:
ஆ) 4, 5, 2, 1, 3

V. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
லிச்சாவி குறித்து குறிப்பு வரைக.
விடை:

  • கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்ட ஆட்சி பகுதி கொண்ட லிச்சாவி பழமையான கன சங்கங்களில் ஒன்று.
  • முதலாம் சந்திரகுப்தர் புகழ்பெற்ற, வலிமைவாய்ந்த அந்த அரச குடும்பத்தில் குமாரதேவியை மணந்தார்.

Question 2.
கவிராஜா குறித்து நீ அறிவதென்ன?
விடை:

  • சமுத்திர குப்தர் வெளியிட்ட தங்க நாணயங்களில் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
  • அவர் ஒரு சிறந்த கவிதைப் பிரியரும் இசைப்பிரியருமாவார். அதனால் கவிராஜா எனும் பட்டம் பெற்றார்.

Question 3.
பாஹியானின் பயணக் குறிப்புகள் மகதத்து மக்களின் வாழ்க்கை பற்றி என்ன கூறுகிறது?
விடை:

  • பாஹியான் கூற்றுப்படி மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.
  • கயா பாழடைந்திருந்தது. கபில வஸ்து காடாகியிருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள்’ செல்வத்தோடும் செழிப்போடும் வாழந்தனர்.

VII. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
குப்த அரசர்களால் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் யார்?
விடை:

  • உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தண்ட நாயகர் மற்றும் மகாதண்ட நாயகர் என அழைக்கப்பட்டனர்.
  • தேசம் அல்லது புக்தி எனப்படும் பிராந்திய அதிகாரிகள் ‘உபாரிகா’ எனும் ஆளுநர்கள் விஷ்யா எனப்படும் மாவட்டங்களில் அதிகாரிகள் விஷ்யாபதிகள், கிராம அளவில் கிராமிகா, கிராமிதியாகஷா எனும் அதிகாரிகள் செயல்பட்டனர்.
  • இராணுவப் பதவிகளின் பெயர்கள் : பாலாதிகிரிதா (காலாட்படை தளபதி) மஹா பாலாதிகிரிதா
    (குதிரைப்படை தளபதி) ‘தூதகா’ எனும் ஒற்றர்கள்.

Question 2.
குப்தர் கால சமூகம் பற்றி நீ அறிவதென்ன?
விடை:

  • குப்தர் காலச் சமூகம் நான்கு வர்ணங்களைக் கொண்ட தந்தை வழிச் சமூகம்.
  • மனுவின் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
  • பெண்கள் தந்தையின், கணவனின் அல்லது மூத்த மகனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.
  • பலதார மணம் பரவலாக நடைமுறையில் இருந்தது. அரசர்களும் நிலப்பிரபுக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைப் பெற்றிருந்தனர்.
  • உடன்கட்டை ஏறும் (சதி முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றப்பட்டது.

Question 3.
நாளந்தா பல்கலைக்கழகம் பற்றி எழுதுக.
விடை:

  • குப்தர்கள் ஆதரவில் 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் நாளந்தா பல்கலைக்கழகம் தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசி அரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது.
  • முக்கிய பாடம் பௌத்தத் தத்துவம், மருத்துவம், வேத இலக்கியம், யோகா கற்பிக்கப்பட்டன.
  • யுவான் சுவாங் பௌத்தத் தத்துவத்தைப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.
  • நாளந்தாவில் 8 மகாபாட சாலைகளும் 3 மிகப் பெரிய நூலகங்களும் இருந்தன.
  • பக்தியார் கில்ஜி தலைமையில் வந்த மம்லுக்குகளால் அழித்து தரைமட்டமாக்கப்பட்டது.
  • நாளந்தா யுனேஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னம்.

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 99