Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 23 பொருளாதார உயிரியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 23 பொருளாதார உயிரியல்

9th Science Guide பொருளாதார உயிரியல் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது
அ) பிஸ்ஸி கல்ச்சர்
ஆ) செரிகல்ச்சர்
இ) அக்வா கல்ச்சர்
ஈ) மோனா கல்ச்சர்
விடை:
அ) பிஸ்ஸி கல்ச்சர்

Question 2.
கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?
அ) ஜெர்சி
ஆ) ஹேல்ஸ்டீ ன் – பிரிஸன்
இ) ஷகிவால்
ஈ) ப்ரௌன் சுவிஸ்
விடை:
இ) ஷகிவால்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 3.
பின்வருவனவற்றில் எது இத்தாலியன் இன தேனீ
அ) ஏபிஸ் மெல்லிபோரா
ஆ) ஏபிஸ் டார்சோட்டா
இ) ஏபிஸ் ப்ளோரா
ஈ) ஏபிஸ் சிரானா
விடை:
அ) ஏபிஸ் மெல்லிபோரா

Question 4.
பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை ?
அ) ரோகு
ஆ) கட்லா
இ) மிரிகால்
ஈ) சின்காரா
விடை:
ஈ) சின்காரா

Question 5.
தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
அ) கருவுறாத முட்டை
ஆ) கருவுற்ற முட்டை
இ) பார்த்தினோஜெனிஸிஸ்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
அ) கருவுறாத முட்டை

Question 6.
கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
அ) ஹோல்ஸ்டீன் ஃபிரிஸன்
ஆ) டார்ஸெட்
இ) ஷகிவால்
ஈ) சிவப்பு சிந்தி
விடை:
அ) ஹோல்ஸ்டீ ன் – ஃபிரிஸன்

Question 7.
தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
அ) ஏபிஸ் டார்சோட்டா
ஆ) ஏபிஸ் ப்ளோரா
இ) ஏபிஸ் பெல்ல பெரா
ஈ) ஏபிஸ் இண்டிகா
விடை:
ஈ) ஏபிஸ் இண்டிகா

Question 8.
மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை
அ) தோட்டக்கலை
ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்
இ) போமாலஜி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்

Question 9.
பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை
அ) லைக்கன்
ஆ) ரைசோபியம்
இ) மைக்கோரைசா
ஈ) அசிட்டோபாக்டர்
விடை:
இ) மைக்கோரைசா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 10.
காளான்களின் தாவர உடலம் என்பது
அ) காளான் விதை
ஆ) மைசீலியம்
இ) இலை
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) மைசீலியம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
குயினைன் மருந்து _____ லிருந்து பெறப்படுகிறது.
விடை:
சின்கோனா அபிசினாலிஸ்

Question 2.
கேரிக்கா பப்பையா இலை ____ நோயை சரிசெய்ய பயன்படுகிறது.
விடை:
டெங்கு காய்ச்சல்

Question 3.
மண்புழு உரத்தை உருவாக்குவது _____ மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்.
விடை:
மண்புழுக்களில் சுரக்கும்

Question 4.
_____ கோழை வளர்ப்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக்கூடிய சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.
விடை:
கடல் நீர்வாழ் உயிரி

Question 5.
தேன் கூட்டில் உள்ள வளமான தேனீ ____ ஆகும்.
விடை:
இராணி தேனீ

Question 6.
____ தேனைப் பதப்படுத்துகிறது.
விடை:
பார்மிக் அமிலம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 7.
_____ முறையில் பல்வேறுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலாம்.
விடை:
பலவகை மீன் வளர்ப்பு

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
மைக்கோரைசா ஒரு பாசி.
விடை:
தவறு – மைக்கோரைசா ஒரு பூஞ்சை

Question 2.
பால் கொடுக்கும் விலங்குகள், விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.
விடை:
தவறு – இருபயன் விலங்குகள் விவசாயம் மற்றும் போக்கு வரத்திற்கு பயன்படுகின்றன.

Question 3.
ஏபிஸ் புளோரியா என்பது பாறைத் தேனீ.
விடை:
தவறு – ஏபிஸ் டார்சேட்டா என்பது பாறைத்தேனீ

Question 4.
ஓங்கோல் கால்நடைகள் ஒரு வெளிநாட்டு இனம்.
விடை:
தவறு – ஓங்கோல் கால்நடைகள் ஒரு இந்தியநாட்டு இனம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 5.
வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக் காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 80

V.கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.

Question 1.
அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்
விடை:
அ.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 81

ஆ. மகரந்தம் மற்றும் தேன் ரசம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 82

இ. இறால் மற்றும் நன்னீர் இறால்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 83

ஈ. தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு
Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 84

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?
விடை:
மருத்துவத் தாவரங்களிலிருந்து பெறப்படும் பொருள்கள் எ.கா. ஆல்கலாய்டுகள், டெர்பினாய்டுகள்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 2.
காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?
விடை:

  • சமையலறைத் தோட்டங்கள் – இது நமக்குத் தேவையான காய்கறிகளை வீட்டைச் சுற்றி சிறிய அளவில் வளர்ப்பதாகும். எ.கா. பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், தக்காளி.
  • வணிகத்தோட்டங்கள் – சந்தைகளில் விற்பனை செய்யும் நோக்கத்தோடு பெரிய அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் முறை.
  • செயற்கைக் காய்கறித் தோட்டங்கள் – இது கட்டடங்கள் பசுமை வீடுகள் குளிர்சாதனப் பண்ணைகள் மற்ற பிற செயற்கையான சூழ்நிலைகளில் காய்கறிகளை வளர்க்கும் முறையாகும்.

Question 3.
காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.
விடை:

  1. குளிர்வித்தல் – காளான்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுகிறது. எனவே அதிக நாட்கள் கெடாமல் பதப்படுத்த முடியும்.
  2. உலர்த்துதல் – உணவு உலர்த்தியில் வைத்து காளான்களை உலர்த்தி நீரை வெளியேற்றுவது.

Question 4.
வேதி உரங்களைக் காட்டிலும் மண்புழு உரம் எவ்வாறு சிறந்தது என்பதைப் பட்டியலிடு.
விடை:

  1. இது தாவர வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்தினை அளிக்கிறது.
  2. தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளடக்கியது.
  3. கரிமப் பொருட்கள் மண்ணில் சிதைவடைவதை மேம்படுத்துகிறது.
  4. நோய்க்கிருமிகள் மற்றும் நச்சுத்தன்மை அற்றது.

Question 5.
மண்புழு வளர்ப்பில் பயன்படும் மண்புழு சிற்றினங்கள் யாவை?
விடை:

  • பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ் (இந்திய நீலவண்ண மண்புழு
  • எஸ்செனியாபெடிடா (சிவப்பு மண்புழு)
  • யூட்ரிலஸ் யூஜீனியே (ஆப்ரிக்க மண்புழு)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 6.
தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக.
விடை:

  1. தேன் புரைத் தடுப்பானாகவும் பாக்டீரிய எதிர்ப்பு பொருளாகவும் இரத்தத்தை தூய்மையாக்கவும் பயன்படுகிறது.
  2. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
  3. ஆயுர்வேதம் யூனானி மருத்துவத்தில் பயன்படுகிறது.
  4. இருமல் சளி காய்ச்சல் தொண்டை வறட்சியை நீக்க பயன்படுகிறது.
  5. நாக்கு குடற்புண்களை குணப்படுத்த உதவுகிறது.
  6. செரிமானத்திற்கும் பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது.

VII. விரிவாக விடையளி

Question 1.
மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பின் நிறைகளை எழுதுக?
விடை:
நிறைகள்:

  1. ஊட்டச்சத்தும் நீரும் பாதுகாக்கப்படுகின்றன.
  2. கட்டுப்படுத்தப்பட்ட தாவர வளர்ச்சி காணப்படும்.
  3. பாலை வனங்களிலும் ஆர்டிக் துருவப் பகுதிகளிலும் இந்த முறை ஒரு சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.

Question 2.
காளான் வளர்ப்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.
விடை:
தாவர விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும்.

காளான் வளர்த்தலின் நிலைகள்:

  1. கலத்தல்: வைக்கோலுடன் மாட்டுச்சாணம் கரிமக் கனிம உரங்களைச் சேர்த்து கலப்பு உரமானது தயாரிக்கப்படுகிறது. இது 50°C வெப்ப நிலையில் பாதுகாக்கப்படுகிறது.
  2. காளான் வித்து: ஸ்பான் என்பது காளான் விதையாகும். இந்த ஸ்பான் விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.
  3. உறையிடுதல்: விதைகலந்த உரத்துடன் மண்ணானது மெல்லிய அடுக்காக தூவப்படுகின்றன. இது ஈரப்பதத்தை வழங்கி வெப்பநிலையைச் சீராக்குகின்றன.
  4. பொருத்துதல்: குண்டூசி போன்ற வெண்மையான காளான் மொட்டுகளுக்கு ஊசிகள் என்று பெயர்.
  5. அறுவடை செய்தல்: ஒரு வாரத்தில் 15 – 23°C வெப்பநிலை 3 செ.மீ. உயரம் வரை வளர்கிறது. மூன்று வார காலத்தில் முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.
  6. பதப்படுத்துதல்: இந்த காளான்கள் குளிர்வித்தல் உலர்த்துதல் கலனில் அடைத்தல் மற்றும் வெற்றிட குளிர்வித்தல் முறையில் பதப்படுத்தப்படுகின்றன.

Question 3.
மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?
விடை:

  1. விவசாயக் கழிவுகள்
  2. பயிர்க்கழிவுகள் – நெல் வைக்கோல் அரிசி உமி நார்க்கழிவு
  3. இலை குப்பைகள்
  4. பழம் மற்றும் காய்கறிகள் கழிவுகள்
  5. விலங்கு கழிவுகள்
  6. சாண – எரி வாயு கழிவுகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 4.
மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?
விடை:
அ) இனப்பெருக்க குளம்: ஆரோக்கியமான இனப்பெருக்கத்திற்கேற்ற முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்கள் சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள் அனுப்பப்படுகின்றது.

ஆ) குஞ்சு பொரிக்கும் குழிகள்: இனப்பெருக்க குளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற முட்டைகள் பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன.

இ) நாற்றங்கால் குளங்கள்: 2 முதல் 7 நாட்களுக்குப் பிறகு இளம் மீன் குஞ்சுகள் 60 நாட்கள் வரை 2 – 2.5 செ.மீ. அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.

ஈ) வளர்க்கும் குளங்கள்: இளம் மீன்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மூன்றுமாதம் வரை 10 முதல் 15 செ.மீ. நீளமுடைய மீனாக வளரும் வரை இங்கு வளர்க்கப்படுகின்றன.

உ) இருப்புக்குளங்கள்: விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

Question 5.
பல வகைக் கால்நடை இனங்களை சரியான உதாரணத்துடன் வகைப்படுத்துக.
விடை:
கால்நடை இனங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்

1. பால் உற்பத்தி இனங்கள்
2. இழுவை இனங்கள்
3. இரு பயன்களையும் தரும் இனங்கள்

1. பால் உற்பத்தி இனங்கள் :

  • பாலினைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன.
  • “பசுக்கள்” அதிகளவு பால் தருபவை உள்நாட்டு இனங்கள் வெளிநாட்டு இனங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
  • உள்நாட்டு இனங்கள் எ.கா. சாகிவால், சிவப்பு சிந்தி மற்றும் கிர். இவ்வகை இனங்கள் வலுவான கால்கள்
    நிமிர்ந்த திமில், தளர்வான தோல்களையும் கொண்டது மற்றும் சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.
  • “அயல்நாட்டு இனங்கள்” ஜெர்ஸி ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன் ஆகியவை.

2. இழுவை இனங்கள் :
இவ்வகை இன மாடுகள் உழுதல், பாசனம், வண்டியிழுத்தல் போன்ற வேலைகளைச் செய்ய உதவுகிறது.
எ.கா. காங்கேயம், உம்பளச்சேரி, மாலவி
இவற்றிலுள்ள எருதுகள் கடினமான இழுவை வேலையை நன்றாகச் செய்தாலும் பசுக்கள் குறைந்த அளவு பாலினைக் கொடுக்கிறது.

3. இரு பயன்களையும் தரும் இனங்கள்

  • இவ்வகை இனங்கள் பால் உற்பத்திக்காகவும், பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்காகவும் பயன்படுகின்றன.
  • இந்தியாவில் இவ்வகையைச் சார்ந்த மாடுகள் அதிகமாக விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
  • எ.கா. அரியானா மாடுகள், ஓங்கோல் மாடுகள்
  • இந்தியாவில் எருமை மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பசுக்களைவிட எருமைகளே அதிகளவு பாலினைக் கொடுக்கின்றன. எ.கா. முரா எருமை, மெசானா மற்றும் சுர்தி எருமை

VIII. சிந்திக்க

Question 1.
உயிரி உரமிடல் விவசாயத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது நிரூபி.
விடை:

  1. உயிர் உரமானது தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும்.
  2. இலைகள் தாவர விலங்கு கழிவுகள் மற்றும் நுண்ணுயிர்களால் உருவாகின்றன.

Question 2.
ஒவ்வொரு தேன் கூடும் அறுங்கோண அறைகளைக் கொண்டிருக்கும். அவை எதனால் ஆக்கப்பட்டிருக்கும்? அதன் சிறப்பம்சம் என்ன?
விடை:

  1. தேன் கூடுகள் வேலைக்காரத் தேனீயின் வயிற்றுப்புற சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் மெழுகினால் உருவாக்கப்படுகிறது.
  2. அறுங்கோண வடிவம் என்பது ஒரு பயனுள்ள அமைப்பு.
  3. இராணித் தேனீயின் முட்டைகள் மகரந்தம் மற்றும் தேனீனை சேமிக்க உதவுகிறது.
  4. இவ்வமைப்பு ஒரு திடமான அமைப்பு
  5. குறைந்த பொருள்களைக் கொண்டு அதிக இடத்தினை இவ்வறுங்கோணம் உருவாக்குகிறது.

9th Science Guide பொருளாதார உயிரியல் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
கனிகள் காய்கறிகள் வளர்த்தலுடன் தொடர்புடைய பிரிவு எது? _____
விடை:
தோட்டக்கலை

Question 2.
பழவியல் என்றால் என்ன?
விடை:
பழங்களின் உற்பத்தி –
போமாலஜி

Question 3.
வெள்ளாட்டுச்சாண உரத்தில் காணப்படும் நைட்ரஜனின் அளவு என்ன?
விடை:
3%

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 4.
ரைசோபியம் ஒரு
விடை:
பாக்டீரியம்

Question 5.
ஆயூர்வேதத்தின் தந்தை யார்?
விடை:
சாரக்கா சம்ஹிதா

Question 6.
யோகாவின் தந்தை
விடை:
பதஞ்சலி

Question 7.
உருளைக்கிழங்கு உற்பத்தியில் இந்தியாவின் இடம்
விடை:
முதலிடம்

Question 8.
பூஞ்சை எதிர் பொருளை உற்பத்தி செய்யும்
விடை:
அசோட்டோபாக்டர்

Question 9.
வாஸ்குலர் தாவரங்களின் வேர்களுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்ளும் பூஞ்சை
விடை:
மைக்கோரைசா

Question 10.
நீர்பெரணிகள் ஆகும்.
விடை:
அசோலா

Question 11.
முதல்நிலை வளர்சிதை மாற்றப்பொருள் யாது?
விடை:
சாகிவால்

Question 12.
யூனானி மருத்துவத்தின் தந்தை யார்?
விடை:
கிப்போகிரேட்ஸ்

Question 13.
பட்டன் காளானின் அறிவியல் பெயர் என்ன?
விடை:
அகாரிகஸ் பைஸ்போராஸ்

Question 14.
எந்த வெப்பநிலையில் காளான்கள் சிறப்பாக வளர்கின்றன.
விடை:
15°C – 23°C ல்

Question 15.
இந்திய பசுக்களும் காளைகள் ஆகும்.
விடை:
போஸ் இன்டிகஸ்

Question 16.
இனங்கள் வலுவானகால்களை உடையவை
விடை:
கிர்

Question 17.
இனங்கள் சிறப்பான நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை
விடை:
கார்போஹைட்ரேட்

Question 18.
அயல்நாட்டு இனங்கள் _____
விடை:
ப்ரௌன் ஸ்விஸ்

Question 19.
நன்னீரின் உப்புத்தன்மை
விடை:
0.5 ppts ய

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 20.
கடல்நீரின் உப்புத்தன்மை என்ன?
விடை:
30 முதல் 35 ppt

Question 21.
மீன் உற்பத்தியில் இந்தியாவின் இடம்
விடை:
7வது

Question 22.
கெண்டை மீன்கள் ____ எனப்படும்.
விடை:
கார்ப்புகள்

Question 23.
கெளுத்தி இவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை:
பூனை மீன்

Question 24.
ஜீலேபி கெண்டை என்று அழைக்கப்படும் மீன்
விடை:
கிலேப்பியா

Question 25.
கடல்நீரில் வளரும் பினேய்டு இறால்கள் வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
விடை:
கூனி இறால் வளர்ப்பு

Question 26.
கேரளாவில் பின்பற்றப்படும் பராம்பரிய இறால் வளர்ப்பு இது?
விடை:
பொக்காலி வளர்ப்பு

Question 27.
மண்புழுக்கள் புனிதமானவை என்று கூறியவர் யார்?
விடை:
கிளியோபாட்ரா

Question 28.
சிறிய தேனீக்கள்
விடை:
ஏபிஸ்ஃபுளோரியே

Question 29.
ஆப்ரிக்கன் தேனீக்கள்
விடை:
ஏபிஸ்ஆடம்சோனி

Question 30.
தேனில் உள்ள நொதி
விடை:
இன்வர்டேஸ்

Question 31.
மெசானா சுர்தி எவைகளைக் குறிக்கிறது?
விடை:
எருமை இனங்கள் ஆகும்.

Question 32.
இருபயன்தரும் இனங்கள் யாவை?
விடை:
ஓங்கோல்

Question 33.
ஜாதிமாட்டின் பெயர் தருக.
விடை:
உம்பளச்சேரி

Question 34.
ஒரிக்கலச்சர் என்பது
விடை:
காய்கறிப்பண்ணை
தொடர்பான அறிவியல்

Question 35.
புளோரிகல்ச்சர் என்றால் என்ன?
விடை:
பூந்தோட்ட பண்ணை
தொடர்பான அறிவியல்
பிரதமமந்திரி பயிர்க்

Question 36.
‘PMFBY’ விரிவாக்கம் தருக.
விடை:
காப்பீட்டுத் திட்டம்

Question 37.
விவசாயிகளுக்கான உருவாக்கப்பட்ட செயலி எது?
விடை:
உழவன் செயலி (Uzhavan App)

Question 38.
தாவரங்கள் வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு கூரையுடன் கூடிய அமைப்பு
விடை:
பசுமை வீடு அல்லது
பாலித்தீன் வீடு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 39.
பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் பயன் என்ன?
விடை:
வேளாண் பயிர்காப்பீட்டுத்
திட்டமாகும்

Question 40.
BGR – 34 என்றால் என்ன?
விடை:
இரத்த சர்க்கரை அளவு
ஒழுங்குபடுத்தும் மருந்து

Question 41.
ஹைட்ரோ போனிக்ஸ் முறையை உருவாக்கியவர் _____
விடை:
ஜீலியஸ் வானி சாக்ஸ் – ஜெர்மன் தாவரவியலாளர்

Question 42.
கம்பம் பள்ளத்தாக்கில் காணப்படும் மாட்டினங்கள் ______
விடை:
புலிக்குளம் மாடுகள்

Question 43.
இளம் ஆண் கன்று இவ்வாறு அழைக்கப்படுகிறது.
விடை:
கிடாரி

Question 44.
____ ஆற்று இறால்கள்
விடை:
மேக்ரோபிராசியம் ரோசென்
பெர்சி

Question 45.
______ இந்திடிய நிலவண்ண மண்புழுக்கள் ஆகும்.
விடை:
பெரியோனிக்ஸ்
எஸ்கவேட்டல்

Question 46.
_____ இன மாடுகள் அதிக காலம் பால் கொடுக்கும் மாடுகள் ஆகும்.
விடை:
ஹோல்ஸ்டியன்
ஃப்ரெய்ஸ்பன்

Question 47.
இவை கடின நார்ச்சத்து கொண்ட தீவனங்கள் ஆகும்.
விடை:
தவிடு அல்லது சக்கை

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 85

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல் 86

III. கூற்று மற்றும் காரண வகை

Question 1.
கூற்று : கனிம உரங்கள் மண்ணிற்கு ஊட்டச்சத்தினை வழங்குகின்றது.
காரணம் : தாவரக்கழிவுகளிலிருந்து பெறப்படும் கனிம உரங்கள் நைட்ரஜன் சத்தினை மண்ணுக்கு வழங்குகின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 2.
கூற்று : யோகா பயிற்சி மூளை மற்றும் உடலுடன் தொடர்பான பயிற்சி ஆதலால் இது சாதாரண நோய்களுக்கான தீர்வு இல்லை. காரணம் : யோகா மருத்துவ துறைகளில் முக்கிய பங்கு அளிக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

Question 3.
கூற்று : பால் உற்பத்தியானது மாட்டினங்கள் உண்ணும் தீவனத்தை பொறுத்தது.
காரணம் : கறவை இனங்களின் பால் உற்பத்தியானது இனப்பெருக்க காலத்தை பொறுத்தது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

IV. பொருத்தி விடையளி

Question 1.
சுற்றுச்சுழல் அறிவியல் என்பது அறிவியலில் சுற்றுக்சூழலை பற்றி அறிவது. அப்படியானால் போமாலஜி என்பது.
விடை:
பழவியல் அல்லது கனியியல் பற்றியது

Question 2.
அனபினாவானது அசோலர் என்ற நீர்ப்பெரணியில் கூட்டுயிரியாக வாழ்கின்றது. அப்படியானால் லெகூமின்ஸ் தாவரங்களின் வேர் முண்டுகளில் காணப்படுவது.
விடை:
ரைசோபியம்

Question 3.
நிலவேம்பு சிக்கன்குனியாவை குணப்படுத்தும். அப்படியானால் வெப்பானை குணப்படுத்தும் நோய்.
விடை:
படர்தாமரை

Question 4.
மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு முறை ஹைட்ரோபோனிக்ஸ் அப்படியானால் காற்று ஊடக தாவர வளர்ப்பு முறை
விடை:
ஏரோபோனிக்ஸ்

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
தோட்டக்கலை என்றால் என்ன?
விடை:
இது கனிகள் காய்கறிகள் மற்றும் அழகுத் தாவரங்களை வளர்த்தலுடன் தொடர்புடையது. ஹார்டிகல்சர் அல்லது தோட்டக்கலை ஆகும்.

Question 2.
‘பசுமை வீடு’ என்றால் என்ன?
விடை:
1. இது ஒளி ஊடுருவல் கூடிய பொருள்களால் அமைக்கப்பட்ட மேற்கூறையின் கீழ்பயிர்களை வளர்க்கும் முறையாகும்.
2. போதிய அளவு வளர்ச்சி மற்றும் உற்பத்தியைப் பெறுவதற்காக கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை இங்கு காணப்படுகிறது.

Question 3.
பசுந்தாள் உரங்கள் என்றால் என்ன?
விடை:
பசுந்தாள் உரமானது இலைகள் மரக்கிளைகள் புதர்ச்செடிகள் வயல்வெளி நீர்த்தேக்கங்களில் வளரும் தாவரங்களை சேகரித்து மட்கச் செய்து தயாரிக்கப்படும் உரமாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 4.
“உயிரி உரத்திட்டம்” என்றால் என்ன?
விடை:
இத்திட்டம் தமிழ்நாடு அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கை விவசாயத்தை முறை யாக நிர்வகிப்பதும் மண் வளத்தை அதிகரிப்பதற்கு உதவி செய்வதும் இதன் நோக்கமாகும்.

Question 5.
‘மீன் வளர்ப்பு’ என்றால் என்ன?
விடை:
பிசிகல்ச்சர் அல்லது மீன் வளர்ப்பு என்பது மீன்களை குளம் நீர்த்தேக்கம் ஏரிகள் ஆறுகள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்ய வைத்து வளர்த்தெடுக்கும் செயல்முறையாகும்.

Question 6.
இறால்கள் ஊட்டச்சத்து மதிப்பு பற்றி விவரி?
விடை:

  1. இது சுவையானது
  2. அதிக புரதம் A மற்றும் B வைட்டமின்கள் அடங்கியுள்ளது.
  3. கொழுப்பு சத்து குறைவாக உள்ளது.
  4. கொழுப்பு அமிலங்கள் (PUFA) இருப்பதால் ஆரோக்கியத்தில் முக்கிய பங்களிக்கின்றன

Question 7.
மண்புழு உரம் என்றால் என்ன?
விடை:
கரிமப் பொருள்களை மண்புழுக்கள் சிதைவடையப் செய்வதன் மூலம் உருவாகும் மென்மையான துகள் போன்ற கழிவுப் பொருள்களே ‘மண்புழு உரம்’ எனப்படும்.

Question 8.
‘தேனீ வளர்ப்பு’ என்றால் என்ன?
விடை:
தேனுக்காக தேனீக்களை வளர்த்தல் தேனீ வளர்ப்பு எனப்படும்.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
உயிரி உரங்கள் பற்றி விவரி?
விடை:
ரைசோபியம் : லெகூமின்ஸ் தாவரங்களின் வேர் முண்டுகளில் வாழ்ந்து வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்துகிறது.
அசோஸ் பைரில்லம்: வளிமண்டல நைட்ரஜனை
வழங்குகின்றன. எ.கா. மக்காட்சோளம், பார்லி
அசோட்டோ பாக்டர்: நைட்ரஜனை நிலைநிறுத்துகிறது. பூஞ்ஞை எதிர்பொருள் மற்றும் பாக்டீரிய எதிர்பொருள்களையும் உற்பத்தி செய்கின்றன. மைக்சோரைசா: இவைகள் பாஸ்பரஸ் ஊட்டச்சத்தினை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிக்கின்றன. எ.கா. எலுமிச்சை
அசோலா : மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என வழங்கப்படும் நீர்ப்பெரணியாகும். ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 23 பொருளாதார உயிரியல்

Question 2.
மீன் வளர்ப்பு வகைகள் பற்றி விரிவாக விவரி?
விடை:

  1. விரிவான மீன் வளர்ப்பு: பரந்த இடங்களில் குறைவான எண்ணிக்கையிலான மீன்களை இயற்கையான உணவளித்து வளர்த்தல் ஆகும்.
  2. தீவிர மீன் வளர்ப்பு: மிக குறுகிய இடங்களில் அதிகமான எண்ணிக்கையிலான மீன்களை உற்பத்தி அதிகரிக்கும் நோக்கில் செயற்கையான உணவளித்து வளர்க்கும் முறை.
  3. குளத்தில் மீன் வளர்ப்பு: குளத்திலுள்ள நீரில் மீன்களை வளர்ப்பது.
  4. ஆறுகளில் மீன் வளர்ப்பு: ஓடும் நீரில் மீன்களை வளர்ப்பது.
  5. அணைகளில் மீன் வளர்ப்பு: செயற்கையாக கட்டப்பட்ட நீர்த்தேக்கங்களில் மீன்களை வளர்க்கும் முறையாகும்.
  6. ஏரிகளில் மீன்வளர்ப்பு: இயற்கையான நீர்நிலைகளான ஏரிகளில் மீன்களை வளர்த்தல்.
  7. ஒற்றைவகை மீன் வளர்ப்பு: ஒருவகை மீனை மட்டும் நீர்நிலைகளில் வளர்த்தல்.
  8. பலவகை மீன் வளர்ப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட மீன்வகைகளை ஒன்று சேர நீர்நிலைகளில்
  9. ஒருங்கிணைந்த மீன் பண்ணை : விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை.

Question 3.
தேனீக்களின் வகைகள் யாவை?
விடை:

  1. இராணீத்தேனீ: இது தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும் இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது. இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன. தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும். இராணீத்தேனீக்களின் ஆயுள் காலம் 3 – 4 ஆண்டுகள் ஆகும்.
  2. ஆண் தேனீ – (ட்ரோன்கள்): இவை இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் தேனீக்களாகும். இவை கருவுறாமுட்டையிலிருந்து உருவாகின்றது. இராணீத்தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே இதன் முக்கியப்பணியாகும்.
  3. வேலைக்காரத் தேனீ: இவை இனப்பெருக்கத்திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். தேன் சேகரித்தல் சிறிய தேனீக்களைப் பராமரித்தல், தேன் கூட்டைப் பாதுகாத்தல் கூட்டின் வெப்பத்தைப் பராமரித்தல் போன்றவை இவற்றின் பணிகளாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

9th Science Guide நுண்ணுயிரிகளின் உலகம் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது
அ) காசநோய்
ஆ) மூளைக்காய்ச்சல்
இ) டைபாய்டு
ஈ) காலரா
விடை:
அ) காசநோய்

Question 2.
மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை
அ) தும்மல்
ஆ) இருமல்
இ) கடத்திகள்
ஈ) துளிர்தொற்று முறை
விடை:
இ) கடத்திகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
டிப்தீரியா எதைத் தாக்குகிறது?
அ) நுரையீரல்
ஆ) தொண்டை
இ) இரத்தம்
ஈ) கல்லீரல்
விடை:
ஆ) தொண்டை

Question 4.
காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு
அ) எலும்பு மஜ்ஜை
ஆ) குடல்
இ) மண்ணீ ரல்
ஈ) நுரையீரல்
விடை:
ஈ) நுரையீரல்

Question 5.
மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____ தர்க்கும்.
அ) குடலினை
ஆ) நுரையீரலினை
இ) கல்லீரலினை
ஈ) நிணநீர் முனைகளை
விடை:
ஆ) நுரையீரலினை

Question 6.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு
அ) கல்லீரல்
ஆ) நுரையீரல்
இ) சிறுநீரகம்
ஈ) மூளை
விடை:
அ) கல்லீரல்

Question 7.
குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.
அ) தோல்
ஆ) வாய் மற்றும் மூக்கு
இ) காதுகள்
ஈ) கண்
விடை:
ஆ) வாய் மற்றும் மூக்கு

II. கோடிட்ட இடத்தை நிரப்பு

Question 1.
______ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.
விடை:
கெட்டழிக்கும்
பாக்டீரியங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 2.
டைபாய்டு காய்ச்சல் _____ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
விடை:
சால்மோனெல்லாடைஃபி

Question 3.
எச்1 என்1 வைரஸ் _____ ஐ உருவாக்குகிறது.
விடை:
பன்றிக்காய்ச்சல்

Question 4.
டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ____ ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது
விடை:
ஏடிஸ் எய்ஜிப்டி கொசு

Question 5.
______ என்ற தடுப்பூசி காசநோய்க்கு போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.
விடை:
பிசிஜி

Question 6.
காலரா ____ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா ____ ஆல் ஏற்படுகிறது.
விடை:
விப்ரியோ காலரா,
பிளாஸ்மோடியம்

III. விரிவுபடுத்தி எழுதுக

Question 1.
ORS
விடை:
ORS – Oral Re hydration Source

Question 2.
WHO
விடை:
WHO – World Health Organization

Question 3.
HIV
விடை:
HIV – Human Immuno Deficiency Virus

Question 4.
BCG
விடை:
BCG – Bacillus Calmelte Guerin

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 5.
DPT
விடை:
DPT – Dipetheria, Pertussis and Tetanus

IV. கீழ்காண்பனவற்றுள் தனித்திருப்பதை தெரிந்தெடு.

Question 1.
எய்ட்ஸ், ரெட்ரோ வைரஸ், லிம்போசைட்ஸ், பி.சி.ஜி
விடை:
பி.சி.ஜி

Question 2.
பாக்டீரிய நோய், ரேபிஸ், காலரா, சாதாரண சளி மற்றும் இன்ஃபுளுயன்சா
விடை:
காலரா

V. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
ரைசோபியமானது, பருப்பு வகைத் தாவரங்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துபவையோடு தொடர்புடையது.
விடை:
சரி

Question 2.
தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடம் இருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.
விடை:
தவறு – தொற்று வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு பரவுவதாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார்.
விடை:
சரி

Question 4.
ஹெப்பாடைட்டிஸ் பி, ஹெப்பாடைட்டிஸ் ஏ-வைக் காட்டிலும் அபாயகரமானது.
விடை:
சரி

VI. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 50
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 51

VII. கீழ்க்காண்பவனவற்றை வரையறு.

Question 1.
நோய்க்கிருமி
விடை:
உயிருள்ள ஒரு நுண்ணுயிரி பிற உயிரினங்களுக்கு நோயை உண்டாக்குதல். எ.கா. பாக்டீரியா வைரஸ்

Question 2.
பாக்டீரியோஃபேஜ்கள்
விடை:
பாக்டீரியாவைத் தாக்கி தீங்கு பயக்கும் வைரஸ்.

Question 3.
பிரியான்கள்
விடை:

  • நோயை உண்டாக்கும் புரதத்துகள்.
  • புரதத்தை மட்டுமே கொண்ட வைரஸ்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 4.
நோய் எதிர்ப்பு தடுப்பூசி
விடை:
இவை உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ (அ) அவற்றின் விளைபொருள்களின் உதவியுடனோ நோயினைத் தடுக்கவும் (அ) சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் பொருள்.

VIII. சுருக்கமாக விடையளி

Question 1.
விரியான் மற்றும் வீரியாய்டு வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 60

Question 2.
மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.
விடை:

  • நோய் கடத்தி – பெண் அனபிலிஸ் கொசுக்கள்
  • பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம் சாவுக்கான மலேரியா ஒட்டுண்ணி.

Question 3.
மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன? இந்த வகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.
விடை:
முத்தடுப்பூசி : மூன்று விதமான பாக்டீரிய நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி (DPT)
தடுக்கப்படும் நோய்கள் :

  1. தொண்டை அடைப்பான்,
  2. கக்குவான் இருமல்,
  3. டெட்டானஸ்

Question 4.
சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக.
விடை:
காசநோய், கக்குவான் இருமல், சாதாரண சளி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 5.
வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன? இதைத் தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.
விடை:
ரோட்டா வைரஸ்
தடுக்கும் முறை: கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்துதல். தூய்மையாக உணவை உண்ணுதல்.

Question 6.
இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 68

IX. விரிவாக விடையளி

Question 1.
பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய வகைகளைப்பற்றிய ஒரு தொகுப்பினைத் தருக.
விடை:
பாக்டீரியாக்களின் வடிவங்கள்
வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 70

1. கோல் வடிவம் :

  1. கோல் வடிவ பாக்டீரியங்கள் “பேசில்லைகள்” எனப்படும்.
  2. இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ”பேசில்லஸ்” எனப்படும்.

2. கோள வடிவம் :

  1. கோள வடிவ பாக்டீரியங்கள் ‘கோக்கைகள்’ எனப்படும்
  2. இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ‘கோக்கஸ்’ எனப்படும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 71

3. திருகு வடிவம்

  1. திருகு வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் ‘ஸ்பைரில்லா’ எனப்படும்.
  2. இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ‘ஸ்பைரில்லம்’ எனப்படும்.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 72

Question 2.
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.
விடை:
I. விவசாயம்:
a) உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணிகளாக நுண்ணுயிரிகள் :

  1. தாவரங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் (அ) நோயினை உருவாக்கும் உயிரிகள் மற்றும்
    பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பயன்படுகின்றன.
  2. எ.கா. பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) – என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து ‘படிம்’ புரதம் என்ற புரதமானது உற்பத்தியாகிறது.
  3. இவை பூச்சிகளின் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மை உடையதாக இருந்து அவற்றைக் கொல்கின்றன.

பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதை நீரோடு கலந்து, பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கும் போது பூச்சிகளின் இளம் உயிரிகள் கொல்லப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

b) உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள்:

  1. நிலத்திலுள்ள மண்ணினை சத்துமிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் ஆகும்.
  2. எ.கா. பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை உயிரி உரங்களுக்கான
    ஆதாரங்களாகும்.

    • தனி நிலையில் வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
      எ.கா. நைட்ரோசோமோனஸ், நாஸ்டாக், அசட்டோபாக்டர், கிளாஸ்டிரிடியம்
    • கூட்டியிரியாக வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
      எ.கா. ரைசோபியம், ஃப்ரான்கியா, மைக்கோரைசா.

II. தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகள்:

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 40

Question 3.
பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 41

Question 4.
புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்டவணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 43
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 44

அட்டவணையின் அவசியம்
அட்டவணையில் உள்ள தடுப்பூசி மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால், காசநோய், போலியோ மற்றும் தட்டம்மை போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

X. வலியுறுத்தல் மற்றும் காரணம்

சரியான ஒன்றை பதிலாகக் குறிக்கவும்
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

Question 1.
கூற்று : சின்னம்மை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம் : சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
விடை:
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.

Question 2.
கூற்று : எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம்.
காரணம் : நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.
விடை:
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு.

XI. சிந்திக்கும் திறனை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள்

Question 1.
தொற்றக்கூடிய நோய்கள் உனது பள்ளிவளாகத்திலிருந்தால் அதனைக் குறைப்பதற்கு நீவிர் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்க.
விடை:
முன்னெச்சரிக்கை நடவடிக்கை

  1. பள்ளிவளாகம், வகுப்பறை குடிதண்ணீர் தொட்டிகள், விளையாட்டுத்திடல், உணவருந்தும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றைத் தூய்மையாக வைப்பது அவசியம்.
  2. கொசுக்கள் பெருகும் இடங்கள், தண்ணீர் தேங்கும் இடங்கள், ஆகியவற்றை கண்காணித்து உடனுக்குடன் துப்புரவு செய்தல்.
  3. மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்றவற்றைப் பரப்பும் கொசுக்கள், கொசுப் புழு (லார்வா) இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல்.
  4. தண்ணீர் தொட்டிகள் சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும். தண்ணீர் ஒழுகும் குழாய்கள் உடனடியாக சரி செய்யப்படவேண்டும்.
  5. கழிவறைகள் பயன்படுத்திய உடன் ஒரு நாளைக்கு 3 முறையாவது கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  6. டெட்டால், பீனாஸில் போன்ற கிருமி நாசினிகளை கலந்து நீரால் சுத்தம் செய்வது அவசியம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 2.
தேஜஸ் டைபாய்டு என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்; சச்சின் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். இவ்விரு நோய்களிலும் எந்த நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்? ஏன் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்?
விடை:
அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவது காசநோய்
காசநோயின் பாதிப்புகள் :

  1. இந்நோய்க்காரணி மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்
  2. இது காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்
  3. இந்நோய் நுரையீரல் செல்களை தாக்குகிறது.
  4. இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரலாகும்.
  5. அறிகுறிகள் இருமல், நெஞ்சுவலி, உடல் எடைக்குறைவு மற்றும் பசியின்மை.
  6. எனவே, டைபாய்டு நோயைவிட காசநோய் கடுமையானது.

9th Science Guide நுண்ணுயிரிகளின் உலகம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
விடைகள் சால்மோனெல்லா டைஃப்பியில் காணப்படும் கசையிழை வகை _____ ஆகும்.
விடை:
பெரிடிரைக்கஸ்

Question 2.
பாக்டீரியாவின் செல்சுவர் _____ ஆல் ஆனது.
விடை:
பெப்டிடோகிளைக்கான்

Question 3.
பிளாஸ்மிடு _____ எனப்படும்.
விடை:
குரோமோசோம் சாராத வட்ட
DNA

Question 4.
திராட்சைக் கொத்துக்கள் போல் காணப்படும் பாக்டீரியா _____ எனப்படும்.
விடை:
ஸ்டெபைலோகோக்கை

Question 5.
டிரெப்போனிமா பாலிடியம் _____ வகை பாக்டீரியா.
விடை:
ஸ்பைரோஃகிட்ஸ்

Question 6.
போர்டிடெல்லா பெர்டூசிஸ் உருவாக்குவது _____ நோயாகும்.
விடை:
கக்குவான் இருமல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 7.
பாக்டீரியாலஜியின் தந்தை என அழைக்கப்படுபவர்.
விடை:
ராபர்ட் கோச்

Question 8.
மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸைக் கண்டறிந்தவர் _____ ஆகும்.
விடை:
இராபர்ட் கோச்

Question 9.
வைரஸ் என்ற சொல்லை உருவாக்கியவர் _____
விடை:
M.பெசிரெங்க்

Question 10.
மிகப்பெரிய வைரஸ் என்பது _____ ஆகும்.
விடை:
பெரியம்மை வைரஸ்

Question 11.
வைரஸின் தனித்தன்மை அதன் ____ ஐ பொருத்தது.
விடை:
புரத உறை

Question 12.
மெல்லிய சிக்கலான நுண் இழைகளாலான பூஞ்சைகளின் ஹைபாக்கள் ______ எனப்படும்.
விடை:
மைசீலியம்

Question 13.
பிரியான் என்ற வார்த்தை உருவாக்கியவர் ____ ஆவார்.
விடை:
ஸ்டான்லி B. புருஷ்ஷினர்

Question 14.
உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படும் நாள் _____
விடை:
ஏப்ரல் 25ம் தேதி

Question 15.
குளிர், கடும் சுரம், வாந்தி, குமட்டல், தலைவலி மூட்டுக்களில் வலி, நடப்பதில் சிரமம் இவை எந்த வகை காய்ச்சலின் அறிகுறி
விடை:
சிக்குன்குனியா

Question 16.
கன்ன உமிழ் நீர் சுரப்பி வீக்கம், மற்றும் தாடையை அசைத்தலில் சிரமம் ஏற்படுத்தும் நோய் ____ ஆகும்.
விடை:
பொன்னுக்கு வீங்கி

Question 17.
_____ என்டரிக் நோய் என அழைக்கப்படுகிறது.
விடை:
டைஃபாய்டு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 18.
விப்ரியோ காலரா உருவாக்கும் நச்சானது _______ எனப்படும்.
விடை:
குளோரஜென்.

Question 19.
மலேரியாவை உண்டாக்கும் நோய் கிருமி எந்தப் பிரிவைச் சார்ந்தது?
விடை:
புரோட்டசோவா

Question 20.
குயினைன் எந்த நோய்க்கான மருந்து?
விடை:
மலேரியா

Question 21.
கியூலெக்ஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் பரவும் நோய் _____ ஆகும்.
விடை:
பைலேரியாசிஸ்

Question 22.
இரவு கால நேர பாதிப்பு காணப்படும் நோய் _____ ஆகும்.
விடை:
பைலேரியாசிஸ்

Question 23.
பன்றிக் காய்ச்சல் உலகெங்கும் பரவிக் காணப்படும் நாடுகளின் எண்ணிக்கை _____
விடை:
20

Question 24.
பறவைக்காய்ச்சல் முதலில் கண்டறியப்பட்ட நாடு ______
விடை:
தென்சீனா மற்றும்
ஹாங்காங்

Question 25.
AIDS நோய் முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட மாநிலம் _____
விடை:
தமிழ்நாடு

Question 26.
நுண்ணுயிரிகள் ஒரு செல் உடையவை, பல செல்லுடையவை மற்றும் செல்லமைப்பற்றவை இவை முறையே ………….
விடை:
பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்

Question 27.
நைட்ரோசோமோனஸ் ஒரு ………. பாக்டீரியாவாகும்.
விடை:
கீமோடிராப்பிக் (அ)
வேதிச்சேர்க்கை பாக்டீரியா

Question 28.
ஹெலிபோபாக்டர் பைலோரி ஒரு …….. வடிவ பாக்டீரியம்
விடை:
சுருள் வடிவ பாக்டீரியம்

Question 29.
தன் நுண்ணோக்கியைத் தானே வடிவமைத்த விஞ்ஞானியின் பெயர் …… ஆகும்
விடை:
ஆன்டன் வான் லூவன் ஹிக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 30.
Bt – பருத்தி என்பது குறிப்பது……. ஆகும்.
விடை:
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்

Question 31.
ஸ்ட்ரெப்டோபைசிஸ் எரித்திரியஸ் உருவாக்கும் எதிர் உயிரி பொருள் …….. எனப்படும்.
விடை:
எரித்ரோமைசின்

Question 32.
இமயமலை கீழ் பகுதியில் வாழும் மக்களிடையே காணப்படும் ‘காய்ட்டர்’ எனும் நோய் ………… எனப்படுகிறது.
விடை:
எண்டமிக் நோய்

Question 33.
எளிய வைரஸ் சாதாரணமாக ………. எனப்படுகிறது.
விடை:
விரியான்

Question 34.
வீரியாய்டுகள் என்பவை ……….. ஆகும்.
விடை:
வைரஸின் புரத உறை சாரா
நோயுண்டாக்கும் RNA ஆகும்

Question 35.
CJD நோய் ………… நோய் எனப்படும்
Answer;
நரம்புகளை செயலிழக்கச்
செய்யும் நோய்

Question 36.
டியூபர்குலின் தோல் பரிசோதனை ………… எனப்படும்.
Answer;
மான்ஃடாக்ஸ் சோதனை

Question 37.
போலியோ சொட்டு மருந்து (Pulse Polio) வழங்கும் தொடங்கப்பட்ட நாள், வரும் ………. ஆகும்.
விடை:
28 நவம்பர் 1995 ஆம் ஆண்டு

Question 38.
ஹெப்பாடிடிஸிஸ் A ……….. மூலம் பரவும் நோய் ஆகும்
விடை:
நீரினால்

Question 39.
மஞ்சள் காய்ச்ச ல் என அழைக்கப்படுவது …………. ஆகும்.
விடை:
HAV – எனப்படும் –
ஹெப்பாடிடிசிஸ் A வைரஸ்

Question 40.
சிக்குன் குனியா உருவாக்கப்படும் வைரஸ் பிரிவு
விடை:
ஓரிழை RNAT

Question 41.
சாதாரண காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியாக பயன்படும் மருந்து …….. ஆகும்.
விடை:
பாராசெட்டமால்

Question 42.
பைலேரியாசிஸ் பாதிக்கும் உடலின் மண்டலம்
விடை:
நிணநீர் மண்டலம்

Question 43.
மனித பாப்பிலோமா வைரஸ் உண்டாக்கும் நோய் …….
விடை:
பிறப்புறுப்பில் கொப்பளம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 44.
உயிருள்ள தடுப்பூசி மருந்துகள்………… ஆகும்.
விடை:
BCG மற்றும் போலியோ
தடுப்பூசி

Question 45.
MMR தடுப்பூசி முதலில் போடப்படும் வயது …………. ஆகும்.
விடை:
15 மாதங்கள் முதல் 2 வயது
வரை

Question 46.
DT எனும் ஆண்டிஜென்கள் பாதுகாக்கும் இரண்டு நோய்கள் ……….. மற்றும் ………… ஆகும்.
விடை:
முப்திரியா, டெட்டனஸ்

Question 47.
TAB என்பது எந்த மூன்று நோய்களுக்கான ஒரே தடுப்பூசி மருந்து
விடை:
டைபாய்டு, பாரா டைஃபாய்டு A
மற்றும் பாரா டைஃபாய்டு B

Question 48.
இன்ஃபுளுயன்சா வைரஸ் H5N1 மற்றும் HIN1 உருவாக்கும் நோய்கள் ……… மற்றும் ……..
விடை:
பறவைக்காய்ச்சல் மற்றும்
பன்றிக் காய்ச்சல்

Question 49.
கொளெரியா, HAV, H5N1 இவை பரவுவது முறையே …………., …………. மற்றும் ………. ஆகும்.
விடை:
பாலியல் தொடர்பு,
சுகாதாரமற்ற நீர், வாய்,
கண்கள், சளி

Question 50.
வைரஸ் என்பது …………. இன சொல்
விடை:
லத்தீன்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 80

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 81

III. கூற்று மற்றும் காரண வகை

அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) – (A) ஐ சரியாக விளக்குகிறது
ஆ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; காரணம் (R) – (A) ஐ சரியாக விளக்கவில்லை
இ) கூற்று (A) சரியானது; காரணம் (R) தவறானது
ஈ) கூற்று (A) மற்றும் காரணம் (R) தவறானது

Question 1.
கூற்று (A) : டைஃபாய்டு சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரினால் பரவுகிறது.
காரணம்(R) : நோய் பாதிக்கப்பட்டவரின் கழிவு கலந்த நீர் மற்றும் உணவினால் நோய் பரவுகிறது.
விடை:
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) – (A) ஐ சரியாக விளக்குகிறது

Question 2.
கூற்று (A) : இந்தியாவில் 13 ஜனவரி 2011 முதல் போலியோ நோய் கண்டறியப்படவில்லை
காரணம்(R) : டிசம்பர் மாதம் 1995 முதல் பல்ஸ்-போலியோ – போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது. விடை:
அ) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரியானது; (R) — (A) ஐ சரியாக விளக்குகிறது

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
உறுதிப்படுத்துதல் (A) : சின்னம்மை வாரிசெல்லா ஜோஸ்டர் வைரஸால் ஏற்படுகிறது.
காரணம் (R) : சிவப்புப் புள்ளி போன்ற வீக்கமுடைய தோற்றம் (அ) தோலில் தடிப்புகள் தோன்றல் இருமல், தும்மல், கண் சிவப்படைதல் காணப்படுகிறது.
விடை:
இ)உறுதிப்படுத்துதல் (A) சரியானது; காரணம் (R) தவறானது

IV. ஒத்த கூற்று தருக

Question 1.
எக்ஸோடாக்சின் – நோய் கிருமியிலிருந்து நேரடியாக உருவாகும் நச்சு.
எண்டோடாக்சின் –
விடை:
நோய் கிருமி சிதைவடைவதால் உருவாகும் நச்சு

Question 2.
டைஃபாய்டு – சுகாதாரமற்ற நீரினால் பரவும் நோய்.
மலேரியா _______
விடை:
மலேரியா – கடத்தி மூலம் பரவும் நோய்

Question 3.
AIDS – பான்டமிக் நோய்
மலேரியா _____
விடை:
மலேரியா – ஸ்போராடிக் நோய்

Question 4.
அனபிலிஸ் – மலேரியக் கடத்தி
கியூலெக்ஸ் _____
விடை:
கியூலெக்ஸ் – பில்லேரியக் கடத்தி

Question 5.
பிரியான் – வைரஸின் புரதம்
விரியான் _____
விடை:
விரியான் – வைரஸின் நியூக்ளிக் அமிலம்

Question 6.
நோய் தடுப்பூசி – நோய் வருமுன் காத்தல்
நோய் எதிர் உயிரி _____
விடை:
நோய் எதிர் உயிரி – நோய் வந்த பின் காத்தல்

V. படத்தைக் கண்டறி – பாகங்களைக் குறித்திடுக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 90

2 Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 91

VI. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
நுண்ணுயிரிகள் என்பதன் கீழ் வருவனவற்றை விவரி.
விடை:
நுண்ணுயிரிகள் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, நுண்ணுயிரி ஆல்கா, புரோட்டிஸ்டுகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. 2. பாக்டீரியாவின் நான்கு வடிவங்கள் யாவை?

  1. கோக்கை வடிவம் (உருளை வடிவம்)
  2. பேசில்லஸ் வடிவம் (குச்சி வடிவம்)
  3. ஸ்பைரில்லம் (சுருள் வடிவம்) iv) விப்ரியோ (கமா, வடிவம்)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம்

Question 3.
உறையுடைய பாக்டீரியா என்றால் என்ன?
விடை:

  • சில பாக்டீரியங்களில் செல்சுவரினைச் சுற்றி பல கூட்டுச் சர்க்கரைகளால் (பாலி சாக்கரைடு உருவான கூடுதலான மெல்லிய படலம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.
  • பணி – பாதுகாப்புப்பணி

Question 4.
பாக்டீரியாக்களின் தற்சார்பு ஊட்டமுறையின் 2 வகைகள் யாவை?
விடை:

  • தற்சார்பு ஊட்டமுறை – தன் உணவை கனிம ஆதாரங்களிலிருந்து உருவாக்கும். இதற்கு தற்சார்பு ஊட்டமுறை என்று பெயர் – இது இருவகைப்படும்.
  • ஒளிச்சார்பு பாக்டீரியங்ள் (சுயஜீவிகள்) – இவை ஒளி ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு
    வாழ்கின்றன.
  • வேதிச்சார்பு பாக்டீரியங்கள் – இவ்வகை பாக்டீரியங்கள் வேதிப்பொருட்களை (கரிம , கனிம் ஆற்றலை ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றன.

Question 5.
உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணி (அ) உயிரி பூச்சிக் கொல்லி என்றால் என்ன?
விடை:

  • பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து உருவாகும் படிம புரதம், பூச்சிகளின் இனம் உயிரிகளைக் கொல்கிறது.
  • இதற்கு உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணி (அ) உயிரி பூச்சிக் கொல்லி என்று பெயர்.
  • பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகின்றன. அவற்றை நீரோடு சேர்த்து கரைத்து பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கப்படுகிறது. பூச்சிகளின் இனம் உயிரிகளைக் கொல்கிறது.

VII. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
கடத்திகளால் பரவும் நோய்களின், நோய்கிருமி, பரவும் முறை அறிகுறிகள், தவிர்க்கும் மற்றும் தடுக்கும் முறைகளை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 95
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 96
Samacheer Kalvi 9th Science Guide Chapter 22 நுண்ணுயிரிகளின் உலகம் 97

Question 2.
நோய் எதிர்ப்பு திறனூட்டல் என்றால் என்ன? தடுப்பூசி மருந்துகளின் இரு வகைகள் யாவை?
விடை:
நோய் எதிர்ப்பு திறனூட்டல் என்பது ஆன்டிஜென்களையோ (அ) ஆன்டிபாடிகளையோ (நோய் எதிர் உயிர்பொருள்) கொடுத்து நோய்க்கு எதிராகத் தடுப்பினை ஏற்படுத்தும் செயல் ஆகும். நோய் தடுப்பு மருந்தினை உடலினுள் செலுத்தி நோயினைத் தடுக்கும் செயல் தடுப்பூசி போடுதல் எனப்படும். இது இரு வகைப்படும்.

  1. உயிருள்ள தடுப்பூசி மருந்துகள் : நோயுண்டாக்கும் உயிரிகளின் நோயுண்டாக்கும் திறன் வலுவிழக்கச் செய்யப்பட்டு இம் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
    எ.கா. பிசிஜி தடுப்பூசி – வாய்வழி போலியோ சொட்டு மருந்து
  2. கொல்லப்பட்ட தடுப்பூசி மருந்துகள் : வெப்பம் (அ) வேதிப்பொருள்களால் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி கொல்லப்பட்டு செயலிழக்கம் செய்யப்படுகிறது. முதன்மையான ஊட்டம் அதைத் (dose) தொடர்ந்து அடுத்தடுத்த வலுவூட்டும் ஊட்டம் வழங்கப்பட வேண்டும்.
    எ.கா. டைபாய்டு, காலரா, கக்குவான் தடுப்பூசிகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

9th Science Guide ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) புரோட்டீன்
இ) வைட்டமின்
ஈ) கொழுப்பு
விடை:
இ) வைட்டமின்

Question 2.
சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘ஸகர்வி’ நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்.
அ) ஜேம்ஸ் லிண்ட்
ஆ) லூயிஸ் பாஸ்டர்
இ) சார்லஸ் டார்வின்
ஈ) ஐசக் நீயூட்டன்
விடை:
அ) ஜேம்ஸ் லிண்ட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 3.
வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை
அ) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
ஆ) கதிர் வீச்சு முறை
இ) உப்பினைச்சேர்த்தல்
ஈ) கலன்களில் அடைத்தல்
விடை:
ஆ) கதிர்வீச்சு முறை

Question 4.
மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1964
ஆ) 1954
இ) 1950
ஈ) 1963
விடை:
ஆ) 1954

Question 5.
உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது
அ) மெழுகுப் பூச்சு
ஆ) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்
இ) உணவின் ஈரத்தன்மை
ஈ) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்
விடை:
இ) உணவின் ஈரத்தன்மை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உணவில் _____ எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்.
விடை:
சரிவிகித உணவு

Question 2.
உணவுப் பொருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கலப்படம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 3.
சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு _____ வைட்டமின் என்று பெயர்.
விடை:
சூரிய ஒளி

Question 4.
நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ____ நீக்குவதாகும்.
விடை:
நீர்

Question 5.
உணவுப் பொருள்களை அவற்றின் _____ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.
விடை:
காலாவதி

Question 6.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ____ மற்றும் ____ பொருட்களுக்கு விவசாயம், அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.
விடை:
கால்நடை உற்பத்திப்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது.
விடை:
தவறு

Question 2.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றது.
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் சிறிய அளவில் தேவைப்படுகின்றது
விடை:
தவறு

Question 3.
வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 4.
உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.
விடை:
சரி

Question 5.
வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விடை:
தவறு

IV. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 30
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 31

V. பொருத்தமான ஒன்றைக் கொண்டு நிரப்புக.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 35
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 36

VI. விரிவாக்கம் தருக

1. ISI,
2. FPO
3. AGMARK
4. FCI
5. FSSAI
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 38

VII. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள். சரியான ஒன்றைத் தேர்ந்தெடு

Question 1.
கூற்று : ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.
காரணம் : இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
கூற்று : அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்.
காரணம் : ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

VIII. காரணம் கூறுக

அ) உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது. ஏனெனில் ______
விடை:
உணவிலுள்ள ஈரப்பதத்தை நீக்க

ஆ) காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. ஏனெனில் ______
விடை:
உணவின் தரம் இழக்கப்படுகிறது.

இ) கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் _____
விடை:
கால்சியம் எலும்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

IX. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
வேறுபடுத்துக
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்
விடை:
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 69

ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள் மேக்ரோ தனிமங்கள்
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 70

Question 2.
உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு பயன்படுத்தப்படுவது ஏன்?
விடை:

  • உணவின் ஈரப்பதம் – சவ்வூடுபரவல் மூலம் நீக்கப்படுகிறது
  • பாக்டீரியாக்களின் வளர்ச்சி – தடுக்கப்படுகிறது
  • நுண்ணுயிரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைக்கப்படுகிறது

Question 3.
கலப்படம் என்றால் என்ன?
விடை:
உணவில் வேறு பொருட்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 4.
உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருட்கள் இரண்டினைக் கூறுக.
விடை:

  • ஆப்பிள் விதைகள் – புரூசிக் அமிலம் காணப்படுகிறது
  • மீன்கள் – கடலினை மாசுபடுத்திய ‘மெர்க்குரி போன்ற நச்சுகள்’ காணப்படுகிறது

Question 5.
உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின் 1-D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?
விடை:

  1. கால்சியம்,
  2. வைட்டமின் D
  3. காலை நேர சூரிய ஒளி

Question 6.
கீழ்க்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக.
அ) கால்சியம்
ஆ) சோடியம்
இ) இரும்பு
ஈ) அயோடின்
விடை:
அ) கால்சியம் – எலும்புகளின் வளர்ச்சி
ஆ) சோடியம் – நரம்பு உணர்த்திறன் கடத்தல்,
இ) இரும்பு – ஹீமோகுளோபினின் முக்கியக் கூறாகச் செயல்படுதல்
ஈ) அயோடின் – தைராய்டு ஹார்மோன் உருவாக்குதல்

Question 7.
ஏதேனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.
விடை:
உப்பினைச் சேர்த்தல் :

  1. உணவில் உள்ள ஈரப்பதம் சவ்வூடு பரவல் மூலம் நீக்கப்படுதல்.
  2. இதன்மூலம் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடைபடுகிறது.
  3. நுண்ணுயரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைதல்.

புகையிடுதல் :
இறைச்சி மற்றும் மீனை புகைத்தலுக்கு உட்படும்போது புகையின் உலர் செயல் உணவை பாதுகாக்கிறது.

Question 8.
கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:

  1. வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வாயுக்கோளாறுகள்
  2. நோய் எதிர்ப்புத்திறன் குறைதல்.
  3. கல்லீரல், சிறுநீரகம் பாதிப்படைதல்
  4. மலக்குடல் புற்றுநோய்
  5. குறைபாடுகளுடைய குழந்தை பிறத்தல்

X. விரிவாக விடையளி

Question 1.
நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகின்றன? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறைபாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.
விடை:
வைட்டமின்களின் பயன்பாடுகள் :

  1. வைட்டமின்களின் மிக முக்கய ஊட்டச்சத்தாகும்.
  2. இவை மிகச்சிறிய அளவில் தேவைப்படுகிறது.
  3. இவை குறிப்பிட்ட உடற் செயலியல் மற்றும் உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 80
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 81

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.
விடை:

  1. நாடு முழுவதும் தானியங்களை விநியோகம் செய்தல்.
  2. சந்தையில் விலையை ஒழுங்குபடுத்துதல்.
  3. விவசாயம் பொருள்களுக்கு சரியான விலை கொடுத்தல்
  4. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான தானியங்களைக் கொடுத்தல்.

உணவு தரகட்டுப்பாட்டு நிறுவனங்களின் பங்குகள்.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 85

XI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
படத்தைப் பார்த்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி
விடை:
அ) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நடைபெறும் செயல்முறையின்
பெயரென்ன?
விடை:
பாலை பாஸ்டர் பதனம் செய்யும்முறை (Pasteurisation)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 86
ஆ) மேற்கண்ட செயல்முறையின் மூலம் பாதுகாக்கப்படும் உணவுப்பொருள் எது?
விடை:
பால்

இ) மேற்கண்ட செயல்முறையானது எந்த வெப்பநிலையில் நடைபெறுகிறது?
விடை:
63°C ல் 30 நிமிடங்கள் கொதிக்க வைத்தல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியிடம் இலை வகைக் காய்கறிகள் மற்றும் பேரீச்சம் பழத்தை
அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர் ஒருவர் அறிவுறுத்துகிறார். அவ்வாறு அவர் சொல்வதற்குக் காரணம் என்ன?
விடை:

  1. இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது.
  2. இலை வகைக் காற்கறிகள் மற்றம் பேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது.
  3. ஆதலால் இரும்புக் குறைபாடு நீங்குவதால் இரத்தச் சோகை குணமாகிறது.

Question 3.
சஞ்சனா ஒரு மளிகைக் கடையில் ஜாம் பாட்டில் வாங்க விரும்புகிறாள். அதை வாங்குவதற்கு முன் அந்தப் பாட்டிலில் உள்ள அட்டை குறிப்பானில் (label) எதைக் குறிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும்?
விடை:

  1. உணவின் பெயர்
  2. காலாவதி நாள்
  3. ISI; AGMARK அல்லது FPO பேன்ற முத்திரைகளை கவனித்து வாங்க வேண்டும்.

9th Science Guide ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
கார்போஹைட்ரேட்டுகள் …………. அளிக்கக் கூடியவை.
விடை:
ஆற்றல்

Question 2.
கிளைகோஜன் ………. மற்றும் ………. சேமித்தல் வைக்கப்படுகிறது.
விடை:
கல்லீரல், தசைகளில்

Question 3.
உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு பயன்படுபவை …………
விடை:
தாவரங்களின்

Question 4.
செல்சுவர் ………… ஆல் ஆனது.
விடை:
செல்லுலோஸ்

Question 5.
புரதங்கள் அமினோ அமிலங்களால் இணைக்கப்பட்ட ……. தொடர் ஆகும்
விடை:
பாலிபெப்டைட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 6.
EAA என்பதன் விரிவாக்கம் ……….
விடை:
Essential Amino acid’s

Question 7.
மனித உடலுக்கு சிறிய அளவில் தேவைப்படும் ஊட்டச்சத்து ……….
விடை:
வைட்டமின்கள்

Question 8.
வைட்டமின் A (ரெட்டினால்) குறைபாடு நோய் …………. மற்றும் …………
விடை:
சீரோப்தால்மியா, நிக்டலோபியா

Question 9.
வைட்டமின் D (கால்கிஃபெரால்) குறைபாடு நோய் ……….
விடை:
ரிக்கெட்ஸ்

Question 10.
மலட்டுத்தன்மை ………… குறைபாட்டு நோய்
விடை:
வைட்டமின் E டோகோ ஃபெரால்

Question 11.
இரத்தப்போக்கு ………… குறைபாட்டு நோய்.
விடை:
வைட்டமின் K

Question 12.
வைட்டமின் B1, (தயமின்) குறைப்பாட்டால் வரும் நோய்
விடை:
பெரி பெரி

Question 13.
வைட்டமின் B, (ரிபோஃபிளேவின்) குறைப்பாட்டால் வரும் நோய் …..
விடை:
எரிபோ பிளாவினோஸிஸ்

Question 14.
பெலாக்ரா நோய் ………… வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின் B3, (நியோசின்)

Question 15.
வைட்டமின் B, (பைரிடாக்ஸின்) குறைப்பாட்டால் ஏற்படும் நோய் ………….
விடை:
டெர்மாடிட்ஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 16.
உயிரைப்போக்கும் இரத்தச்சோகை ………….. குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
வைட்டமின் B12

Question 17.
ஸ்கர்வி ………….. குறைபாட்டு நோய்
விடை:
வைட்டமின் C

Question 18.
…………. என்பவரால் வைட்டமின் என்றவார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
டாக்டர் ஃபன்க்

Question 19.
முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின் ………….
விடை:
வைட்டமின் A

Question 20.
எலும்பிற்கு பலத்தை அளிக்கும் வைட்டமின் …………
விடை:
வைட்டமின் D

Question 21.
மனித தோலினால் உருவாக்கப்படும் வைட்டமின்
விடை:
வைட்டமின் D

Question 22.
தாது உப்பு என்பது ………… தனிமம்.
விடை:
வேதியத்

Question 23.
நீர் ஒரு …………..
விடை:
கரைப்பான்

Question 24.
உலக அயோடின் குறைபாட்டு தினம் ………….
விடை:
அக்டோபர் 21

Question 25.
காய்டர் எனப்படுவது …………..
விடை:
முன் கழுத்துக் கழலை

Question 26.
முன் கழுத்துக் கழலை ………….. குறைப்பாட்டால் ஏற்படுகிறது.
விடை:
அயோடின்

Question 27.
வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் ……..
விடை:
வைட்டமினோசிஸ்

Question 28.
வழக்கத்தை விட அதிகப்படியான வைட்டமின்களின் அளவு இருப்பது ………….. எனப்படும்.
விடை:
ஹைப்பர் வைட்டமின்னோசிஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 29.
ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் காணப்படும் உணவு ………… எனப்படும்.
விடை:
சரிவிகித உணவு

Question 30.
பற்களில் காணப்படும் கடின பகுதி ……
விடை:
எனாமல்

Question 31.
எலும்புக் குறைப்பாட்டு நோய்கள் ஏற்படக் காரணம் …………..
விடை:
கால்சியம்

Question 32.
தசைப்பிடிப்பு, நரம்புத் தூண்டல்கள் கடத்த இயலாமை தோன்றக் காரணம் ………
விடை:
சோடியம்

Question 33.
பொட்டாசியம் குறைப்பாட்டு நோய் ………..
விடை:
தசைச்சோர்வு

Question 34.
இரும்புச்சத்து குறைப்பாட்டால் உண்டாகும் நோய் ….
விடை:
இரத்தசோகை

Question 35.
உறைய வைத்தலில் உணவானது …………… வெப்பநிலைக்குக் கீழே சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
0°C

Question 36.
………….. முறை பால் கெட்டுப் போதலை தவிர்ப்பதற்கு பயன்படுகிறது.
விடை:
பாஸ்டர் பதனம்

Question 37.
நுண்ணுயிரியியலை தோற்றுவித்தவர் ……..
விடை:
லூயிஸ் பாஸ்டர்

Question 38.
வெறிநாய்க்கடி மற்றும் ஆந்த்ராக்ஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை உருவாக்கியவர் …….
விடை:
லூயிஸ் பாஸ்டர்

Question 39.
வெண்மைப் புரட்சி குறிப்பது ……………
விடை:
பால் உற்பத்தி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 40.
வெண்மைப் புரட்சியின் தந்தை …………
விடை:
வர்கிஸ் குரியன்

Question 41.
உலக உணவு தினம் ………….
விடை:
அக்டோபர் 16

Question 42.
உணவில் வேறு ஏதேனும் பொருள்களை சேர்ப்பதோ அல்லது உணவிலிருந்து நீக்குவதோ …………. எனப்படும்.
விடை:
உணவுக் கலப்படம்

Question 43.
மாம்பழங்கள் மற்றும் வாழைப் பழங்களை பழுக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் …………
விடை:
கால்சியம் கார்பைடு

Question 44.
பச்சைக் காய்கறிகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் …………
விடை:
உலோகக் காரீயம்

Question 45.
ஆப்பிள், பேரிக்காய் போன்ற கனிகளில் பளபளப்பிற்காக பூசப்படும் செல்லாக் (அல்லது) செயற்கை மெழுகு …………..
விடை:
கார்னோபா மெழுகு

Question 46.
உப்பில் சேர்க்கப்படும் கலப்பட பொருள்
விடை:
சுண்ணாம்பு

Question 47.
தேயிலைத் தூளில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் …………
விடை:
நிலக்கரி தார்

Question 48.
ஜஸ்கிரீமில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் ……..
விடை:
சலவைத்தூள்

Question 49.
பாலித் தூய்மையைக் கண்டறிய ………….. கரைசல் சேர்க்கப்படுகிறது.
விடை:
அயோடின்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 50

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 56

III. வலியுறுத்தல் மற்றும் காரண வகை

Question 1.
வலியுறுத்தல் : 13 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.
காரணம் : வளரிளம் பருவத்தினர் குறிப்பாக ஆண்கள் வளர்ச்சிக்கு அதிக இரும்புச் சத்து தேவைப்படுகிறது.
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியாக இருந்தது. அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்தது. அதில் அந்தக் காரணம்
வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
இ) வலியுறுத்தல் சரியாக இருந்தது காரணம் மட்டும் தவறு.
ஈ) வலியுறுத்தல் மட்டும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ) வலியுறுத்தல் சரியாக இருந்தது காரணம் மட்டும் தவறு.

Question 2.
வலியுறுத்தல் : நீரை வெளியேற்றல் (dehydration) என்பது உணவிலிருந்து நீரை/ ஈரப்பதத்தை வெளியேற்றுதலாகும்.
காரணம் : நம் உடலில் ஏற்படும் நீர் இழப்பை அதிகத் தண்ணீ ரை அருந்துதல் மூலம் சரி செய்யலாம்.
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.
ஆ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் அல்ல.
இ) வலியுறுத்தல் சரியாக இருந்து காரணம் மட்டும் தவறு.
ஈ) வலியுறுத்தல் மட்டும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) வலியுறுத்தல் மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியாக இருந்து அதில் அந்தக் காரணம் வலியுறுத்தலின் சரியான விளக்கம் ஆகும்.

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்.

Question 1.
உலர்த்துவதால் எவ்வாறு நுண்ணுயிரி களின் வளர்ச்சியைத் தடை செய்ய இயலும்?
விடை:

  • உலர்த்துவதால், உணவுப் பொருளின் ஈரப்பதம் குறைகிறது. பாக்டீரியா, ஈஸ்டு, மற்றும் பூஞ்சைகள் வளர்வதில்லை.
  • அவை வளர்வதற்கு, இனப்பெருக்கம் செய்வதற்கும் ஈரப்பதம் இல்லை.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

Question 2.
சரி விகித உணவு என்றால் என்ன?
விடை:

  • அத்யாவசியமான ஊட்டப் பொருட்கள்’ உணவில் சரியான அளவில் காணப்படுவதற்கு ‘சரி விகித உணவு’ என்று பெயர்.
  • இது இயல்பான உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.
  • இது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

Question 3.
புரதம் நமது உடலைக் கட்டமைக்கிறது – என்று சொல்வது குறித்த உன் கருத்தைப் பதிவு செய்
விடை:

  • புரதம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து
  • உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு தேவையான அடிப்படைப் பொருள்
  • இது அமினோ அமிலங்களின் தொடர் பெப்டைடு இணைப்பால் உருவாகிறது.
  • இதன் குறைபாட்டினால் மராஸ்மஸ், மற்றும் குவாசியாக்கர் போன்ற உடல் வளர்ச்சிக் குறைபாட்டு நோய்கள் உருவாகிறது.

Question 4.
வைட்டமின் A குறைபாட்டின் ஏற்படும் நோய்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 60

Question 5.
கலன்களில் அடைத்தல் (canning) என்றால் என்ன?
விடை:

  • சில உடனடியாக உண்ணும் உணவுகள் பதப்படுத்தப் பட்டுப் பின்னர் தூய்மையான நீராவி செலுத்தப்பட்டு காற்று புகாத கலன்களில் குறிப்பிட்ட அழுத்தத்தில் அடைக்கப்படுகிறது
  • பின்னர் கலன்கள் அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தப்பட்டு குளிருட்டப்படுவதால் நுண்ணுயிரிகள் முழுவதும் அழிக்கப்படுகிறது.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
நமது வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் எவ்வாறு கலப்படம் உள்ளது என்பதைக் கண்டறிவது?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 21 ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் 65

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை ?
அ) நாவடிச் சுரப்பி
ஆ) லாக்ரிமால்
இ) கீழ்தாடைச் சுரப்பி
ஈ) மேலண்ண ச் சுரப்பி
விடை:
ஆ) லாக்ரிமால்

Question 2.
மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ____ ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்கள்
ஆ) புரதங்க ள்
இ) கொழுப்பு
ஈ) சுக்ரோஸ்
விடை:
ஆ) புரதங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _____ ஆகும்.
அ) குரல்வளை மூடி
ஆ) குரல்வளை முனை
இ) கடின அண்ண ம்
ஈ) மிருதுவான அண்ண ம்
விடை:
அ) குரல்வளை மூடிகள்

Question 4.
பித்த நீர் ____ செரிக்க உதவுகிறது.
அ) புரதங்கள்
ஆ) சர்க்கரை
இ) கொழுப்புகள்
ஈ) கார்போஹைட்ரேட்டுகள்
விடை:
இ) கொழுப்புகள்

Question 5.
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு _____ ஆகும்.
அ) குடலுறுஞ்சிகள்
ஆ) கல்லீரல்
இ) நெஃப்ரான்
ஈ) சிறுநீரகக்குழாய்
விடை:
இ) நெஃப்ரான்

Question 6.
கீழ்க்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
அ) யூரியா
ஆ) புரதம்
இ) நீர்
ஈ) உப்பு
விடை:
ஆ) புரதம்

Question 7.
ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ஆகும்.
அ) சிறுநீரகக்குழாய்
ஆ) சிறுநீர்ப்புறவழி
இ விந்துக்குழாய்
ஈ) விதைப்பை
விடை:
ஆ) சிறுநீர்ப்புறவழி

Question 8.
கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
அ) அண்டம்
ஆ) கருப்பை
இ) விந்தகம்
ஈ) அண்டக்குழாய்
விடை:
இ) விந்தகம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி ____ ஆகும்.
விடை:
பைலோரஸ்

Question 2.
உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ___ ஆகும்.
விடை:
நாக்கு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ____ ல் சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
பித்தப்பை

Question 4.
உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ____ ஆகும்.
விடை:
சிறுகுடல்

Question 5.
மனித உடலானது ____ வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.
விடை:
37°C

Question 6.
பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ____ ஆகும்.
விடை:
கருமுட்டை

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
விடை:
தவறு
இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.

Question 2.
செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.
விடை:
சரி

Question 3.
கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள். உப்புகள். குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
விடை:
சரி

IV. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 35
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 36

V. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக

அ) கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்
ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்
இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்
ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை
உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

அ) கழிவு நீக்கம் மற்றும் சுரத்தல்:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 40

ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 42

இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல் உட்கொள்ளுதல்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 43

ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை இரட்டைப் பல்வரிசை
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 44

உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள் வெட்டுப் பற்கள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 45

VI. சுருக்கமான விடையளி

Question 1.
செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?
விடை:

  1. பின்சிறுகுடலில் மிகச்சிறிய விரல் போன்ற குடல் உறிஞ்சிகள் உள்ளன.
  2. இவை ஒவ்வொன்றும் 1மி.மீ. நீளமுடைய குடல் உறிஞ்சிகள் என அழைக்கப்படும்.
  3. இவற்றில் தான் உணவு உறிஞ்சப்படுகிறது.
  4. இதன் உட்பகுதியில் மெல்லிய இரத்தக் குழாய்களும் நிணநீர் கொண்ட குடற்பால் குழல்களும் உள்ளன.

Question 2.
நமக்கு ஏன் வியர்க்கிறது?
விடை:

  1. மனித உடல் இயங்க 37°C வெப்பநிலை தேவை.
  2. வெப்பம் அதிகரிக்கும் பொழுது வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை சுரக்கிறது. இதனால் நமக்கு வியர்க்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 3.
மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. மனித உடலில் நீரையும், மின்பகு பொருட்களையும் சமநிலைப்படுத்த உதவுகிறது.
  2. இரத்தத்தில் அமில-கார சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

Question 4.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எவ்வாறு நடைபெறுகிறது?
விடை:

  1. சிறுநீர்ப்பை சுருக்குத் தசை சுருங்கி மூடிக்கொள்ளும்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
  2. சுருக்குத் தசை சுருங்கி விரியும்போது சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.

Question 5.
முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 55

Question 6.
நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.
விடை:

  1. ஒவ்வொரு நெஃப்ரானிலும் சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் உள்ளன.
  2. சிறுநீரக கார்ப்பசலில் கிண்ண வடிவில் வெளிசெல் பௌமானின் கிண்ணம் அமைந்துள்ளது.
  3. இரத்தமானது நுண் நாளத் தொகுப்பினுள் உட்செல் நுண் தமனி வழியாக உட்சென்று, வெளிச் செல் நுண் தமனி வழியாக வெளியேறுகிறது.
  4. பௌமானின் கிண்ணம் சிறுநீரக நுண் குழலாக தொடர்கிறது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன.
  5. இச்சுருள் நுண் குழல் சேகரிப்பு நாளத்தில் திறக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 56

VII. விரிவாக விடையளி

Question 1.
மனிதனின் உணவுப் பாதையை விவரி.
விடை:
1. வாய்:

  • வாய் உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும்.
  • இது வாய்க்குழிக்குள் திறக்கிறது.
  • இது இரு மென்மையான அசையும் மேல் முன் சிறு குடல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப் பட்டுள்ளது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 57

உமிழ் நீர் சுரப்பிகள்:
வாய்க் குழிக்குள் மேலண்ணச் சுரப்பிகள், நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி என்ற இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன.
இவை உமிழ்நீரை சுரக்கின்றன.

நாக்கு:

  • நாக்கு ஒரு தசையாலான உணர்ச்சி உறுப்பு ஆகும்.
  • இது உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது.

2. தொண்டை :
தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும்.

3. உணவுக்குழல்:

  • இது 22செ.மீ நீளமுடைய தசைப்படலக்குழலாகும்.
  • இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் அலை போன்ற இயக்கம் மூலமாக கடத்துகிறது.

4. இரைப்பை :

  • இது உணவுக்குழலுக்கும், சிறுகுடலுக்கும் இடையே ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
  • இரைப்பையின் உள் அடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது.

5. சிறுகுடல்:

  • இது உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான 5-7 மீ நீளமுள்ள சுருண்ட குழலாகும் மூன்று பகுதிகளை உடையது.
  • டியோடினம் என்பது சிறுகுடலின் மேல் பகுதியாகும். ‘C’ வடிவத்தில் காணப்படுகிறது.
  • பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து டியோடினத்தில் திறக்கின்றது.
  • நடு சிறுகுடல் (அ) ஜூஜிணம் சிறுகுடலின் சிறிய நடுப்பகுதி ஆகும்.
  • பின்சிறுகுடல் (அ) இலியம் சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இது பெருங்குடலில் திறக்கிறது.
    இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.

6. கல்லீ ரல்:

  • உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி ஆகும்.
  • நாளமுள்ள சுரப்பியின் பகுதியாயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி லிப்பேஸ், டிரிப்சின், அமைலேஸ் நொதிகளைக் கொண்டுள்ள கணைய நீரைச் சுரக்கின்றது.

7. பெருங்குடல்:

  • இது பின்சிறு குடலிலிருந்து மலவாய் வரை பரவியுள்ளது.
  • இதனுடைய நீளம் சுமார் 1.5மீட்டர் ஆகும்.
  • இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை
    (i) முன் பெருங்குடல் (அ) சீக்கம்
    (ii) பெருங்குடல் (அ) கோலன்
    (iii) மலக்குடல் (அ) ரெக்டம்.
  • சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் உள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு சீக்கம் ஆகும்.
  • சீக்கம் மனிதனில் பயனற்ற, பணி ஏதுமற்ற எச்ச உறுப்பாகும்.

8. மலக்குடல்:
இது இறுதியாக மலவாயில் திறக்கிறது.

9. மலவாய்:

  • மலவாயில் வளையங்கள் போன்ற மூடிய நிலையிலிருக்கும் மலச்சுருள் தசை உள்ளது.
  • மலவாய் வழியாக செரிக்காத, தன்மயமாகாத உணவு கழிவாக வெளியேற்றப்படுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 2.
சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர் உருவாதலிலுள்ள படிநிலைகளையும் விளக்குக.
விடை:
சிறுநீரகத்தின் வெளி அமைப்பு:

  • இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் அடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு
    ஒட்டிக் காணப்படுகிறது.
  • ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ. நீளம்,
  • சிறுநீரக தூண்க ள் 5 செ.மீ. அகலமும் மற்றும் 3 செ.மீ. பருமனும் கொண்டதாயிருக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 76
    சிறுநீரகத்தினுள் கார்டெக்ஸ் என்ற வெளிப் பகுதியும் மெடுல்லா என்ற உட்பகுதியும் உள்ளன.
  • இவ்விரண்டு பகுதிகளிலும் சிறுநீரக நுண்குழல்கள் உள்ளன. இவை சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகுகள் ஆகும்.
  • மெடுல்லா பகுதியில் கூம்பு வடிவில் சிறுநீரக பிரமிடுகள் உள்ளன.
  • ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப் பகுதி ஹைலம் எனப்படும். இவ்வழியே இரத்த நாளங்களும் மற்றும் நரம்புகளும் உள்ளே நுழைகிறது.

சிறுநீர் உருவாகும் முறை:
மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது.
1. கிளாமருலார் வடிகட்டுதல்
2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்
3. குழல்களில் சுரத்தல்

1. கிளாமருலார் வடிகட்டுதல்:

  • கிளாமருலஸ் மற்றும் பௌமானின் கிண்ணம் அகியவற்றின் எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக இரத்தம் வடிகட்டப்படுகிறது.
  • இவ்வாறாக வடிகட்டப்பட்ட திரவத்திற்கு கிளாமரூலார் வடி திரவம் என்றுபெயர்.

2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்:

  1. அண்மை சுருள் நுண் குழலில் வடிதிரவத்தில் உள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.

VIII. கூற்று மற்றும் காரணம் கீழ்காணும்

ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு கூற்றும் அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.

அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை .
இ) கூற்றும் சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

1. கூற்று: சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது. காரணம்: யூரியா ஒரு நச்சுத்தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.
விடை:
அ). கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 2.
கூற்று: இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன. காரணம்: பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

IX. சிந்திக்க

Question 1.
இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் எச்செயலானது பாதிக்கப்படும்?
அ)ஸ்டார்ச்சிலிருந்து சர்க்கரையாக மாறும் செரிமான மாற்றம்.
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்
இ) நியூக்ளிக் அமிலங்களின் செரிமானம்
ஈ)கொழுப்புகள் கிளிசராலாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் உடைதல்.
விடை:
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்

Question 2.
மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் மற்றும் மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளங்களைப் பெயரிடுக.
விடை:

  1. மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் இரத்தக்குழாய் – உட்செல் நுண்தமனி.
  2. மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளம் – வெளிச்செல் நுண் தமனி

Question 3.
மருத்துவ நோயறிதலில் சிறுநீர் பகுப்பாய்வானது மிக முக்கியமான பகுதியாக இருப்பதாக ஏன் கருதுகிறாய்?
விடை:

  • இது ஒரு நோயாளியில் பொதுவான உடல் ஆரோக்கியம், பற்றி வருடாந்திர ஆய்வு அல்லது அறுவை சிகிச்சைக்கு முன் உடல் நலம் பற்றி அறிதல் அல்லது கருத்தரித்தல் பற்றி ஆராய்தல் போன்றவற்றிற்கு இது உதவுகிறது.
  • சிறுநீரகத்தின் செயல்பாடு, சிறுநீர்பாதை அல்லது சிறுநீர் தொற்று பற்றி அறிய உதவுகிறது.
  • உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற குறைபாடுகளான நீரழிவு நோய் மற்றும் மஞ்சட்காமாலை பற்றி அறிய முடிகிறது.
  • ஒரு நோயாளியின் நோய் நிலை பற்றியும் சிகிச்சையின் விளைவு எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 4.
உனது மருத்துவர் ஏன் அதிக நீர் குடிக்க அறிவுறுத்துகிறார்?
விடை:
காரணங்கள்

  • தீவிர உடற்பயிற்சியின் போதும் அல்லது வெப்பம் அதிகரிக்கும் போதும் உடல் செயல் பாதிக்கப்படாமல் அதிகப்படுத்துவதற்கு நீர் உதவுகிறது.
  • நீர் சத்து நம் உடலில் ஆற்றல் நிலையையும் மூளையின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அதிக நீர் எடுத்துக் கொள்ளாவிட்டால் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.
  • மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
  • சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

Question 5.
நமது உள்ளங்கைகளிலும், பாதங்களின் உள்ளங்காலிலும் ஏன் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன என்று உன்னால் யூகிக்கமுடிகிறதா?
விடை:
ஆம், யூகிக்க முடிகிறது.
காரணங்கள்:

  • வியர்த்தல் மூலம் உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிறது.
  • வியர்த்தல் நிகழ்ச்சி பரிவு நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • உள்ளங்கை மற்றும் பாதங்களில் வியர்ப்பதால் உடலின் வெப்பநிலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
  • பதட்டம் பயம் போன்ற நேரங்களில் இவற்றின் சுரப்பு அதிகரிப்பால் வியர்த்தல் தூண்டப்பட்டு உள்ளங்கால்களிலும், உள்ளங்கைகளிலும் அதிகம் வியர்க்கிறது.

X. கீழ்கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத் தேர்விலிருந்து எடுத்து பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 65
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 66
விடை:
ஈ) 1. கருப்பை நாளம்
2. அண்டகம்
3. செர்விக்ஸ்
4. கர்ப்பப்பை
5. யோனி

9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
அனைத்து உறுப்பு மண்டலங்களின் செயல்களையும் ஒருங்கிணைக்கும் மண்டலம் ______
விடை:
நாளமில்லா சுரப்பி
மண்டலம்

Question 2.
மனிதனில் உள்ள பின்கடைவாய்ப் பற்களின் எண்ணிக்கை _____
விடை:
12

Question 3.
தொண்டை வழியாக விழுங்கப்படும் உணவு _____ எனப்படும்.
விடை:
உணவுக் கவளம்

Question 4.
“இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை” என போற்றப்படுபவர் _____
விடை:
வில்லியம் பியூமாண்ட்

Question 5.
உணவுக் கால்வாயில் உள்ள மிகவும் நீளமான பகுதி ______ நீளமுடையது.
விடை:
5-7 மீட்டர்

Question 6.
கல்லீரல் செல்கள் _____ சுரக்கிறது.
விடை:
பித்த நீரை

Question 7.
1.5மீ நீளமுடைய தடித்த குழாயான உணவுப் பாதையின் பகுதி ______
விடை:
பெருங்குடல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 8.
மலவாயிலுள்ள வளையங்கள் போன்ற மூடிய நிலையில் இருக்கும் தசை _______ எனப்படும்.
விடை:
மலச்சுருள் தசை

Question 9.
கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, புரதம் செரித்தல் முழுமை அடையும் பகுதி ______
விடை:
சிறுகுடல்

Question 10.
தோலின் மூலம் வளர்சிதை கழிவுகள் வெளியேற்றுதல் ____ எனப்படும்.
விடை:
வியர்த்தல்

Question 11.
நெப்ரான்கள் _____ லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.
விடை:
1700-1800

Question 12.
பெண்களில் விந்துக்களைப் பெறும் பகுதியாகவும், பிறப்புக் கால்வாயாகவும் செயல்படுவது
விடை:
யோனிக்குழாய்

Question 13.
கிராஃபியன் பாலிக்கிள் சுரக்கும் ஹார்மோன் _____
விடை:
ஈஸ்ட்ரோஜென்

Question 14.
புரத செரித்தல் தொடங்கும் பகுதி _____
விடை:
இரைப்பை

Question 15.
உமிழ் நீரில் உள்ள நொதி _____
விடை:
டையலின்

Question 16.
ஒரு நாளில் சுரக்கப்படும் உமிழ் நீரின் அளவு யாது?
விடை:
1.5லிட்டர்

Question 17.
எந்த உறுப்பு மருந்தும் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குகிறது?
விடை:
கல்லீரல்

Question 18.
சக்கஸ் என்ட்ரிக்ஸ் சுரப்பில் உள்ள நொதிகள் எந்த ஊடகத்தில் நன்றாக செயல்படுகின்றன?
விடை:
காரத்தன்மையில்

Question 19.
சிறுகுடலின் ______ பகுதியில் செரிக்கப்பட்ட உணவு உறிஞ்சப்படுகிறது.
விடை:
பின்சிறுகுடல் (அ)
இலியம்

Question 20.
உடலினை சீர்ச்சமநிலையில் (ஹோமியோஸ்பேஸிஸ்) வைக்க உதவும் நிகழ்ச்சி _____
விடை:
கழிவு நீக்கம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 21.
மிகப்பெரிய, மிகச்சிறிய, உமிழ்நீர்ச் சுரப்பிகள் _____, ______
விடை:
நாவடிச் சுரப்பி,
மேலண்ண சுரப்பி

Question 22.
குடல் உறிஞ்சிகள் ஒவ்வொன்றும் _____ நீளமுடையது.
விடை:
1 மி.மீட்டர்

Question 23.
விந்தணுவிற்கு ஆற்றலை அளிக்கும் ஆதாரமாக _____ இருக்கிறது.
விடை:
பிரக்டோஸ்

Question 24.
வெட்டுப்பற்களின் எண்ணிக்கை _____
விடை:
8

Question 25.
உமிழ்நீர்ச்சுரப்பியின் நொதி ______
விடை:
டையலின்

Question 26.
சிறு குடலின் நடுப்பகுதி _____ ஆகும்.
விடை:
நடுசிறு குடல் (அ) ஜிஜீனம்

Question 27.
சிறுகுடல் நீரைச் சுரக்கும் சுரப்பிகள் அமைந்துள்ள பகுதி _____.
விடை:
நடுசிறு குடல் (அ) ஜிஜீனம்

Question 28.
சிறுகுடல் நீரில் உள்ள நொதிகள் _____, _____, ______ மற்றும் ____
விடை:
சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ், லிப்பேஸ்

Question 29.
குடலுறிஞ்சியில் காணப்படும் அமைப்புகள் _____ மற்றும் _____
விடை:
மெல்லிய இரத்தக்
குழாய்கள்,
குடற்பால் குழல்கள்

Question 30.
கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நீர் திவளைகளை வெளியேற்றும் நுரையீரலின் செயல் _____
விடை:
மூச்சு வெளிவிடுதல்

Question 31.
____ சிறுநீரகம் சற்று கீழே காணப்படுகிறது –
விடை:
வலது புறமுள்ள

Question 32.
நம்முடைய புறச்சட்டக மண்டலம் செய்யும் பணி _____ மற்றும் _____
விடை:
பாதுகாத்தல்,
கழிவுநீக்கம்

Question 33.
சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்திலுள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு _____
விடை:
சீக்கம்

Question 34.
முதலில் தோன்றும் தற்காலிக இணைப் பற்களின் எண்ணிக்கை ___ ஆகும்.
விடை:
இருபது

Question 35.
நாக்கு அடியில் ____ என்ற சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளது
விடை:
ஃப்ருனுலம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 36.
தோல் ஓர் முதிர்ச்சியடைந்த மனிதனின் உடல் எடையில் ____ சதவீ-தத்தைக் கொண்டுள்ளது
விடை:
15%

Question 37.
மனிதனின் சிறுநீர் _____ தன்மையுடைய திரவமாக இருக்கிறது.
விடை:
உயர் உப்படர்வு

Question 38.
முதல் சிறுநீரக மாற்றத்தை செய்தவர்
விடை:
ஜோசப் இ. முர்ரே

Question 39.
பெண் இன ஹார்மோன்கள் ____ மற்றும் ____ ஆகும்.
விடை:
ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான்

Question 40.
குழந்தை பிறப்பின்போது பிறப்புக் கால்வாயாக செயல் ஆற்றுபவை _____
விடை:
யோனி

Question 41.
இரத்தம் உறிஞ்சும் பொருட்கள் _____, ____, ______
விடை:
எளியபொருட்கள், நீர், தாது உப்புகள்

Question 42.
செரிமான மண்டலத்தின் இரண்டு தொகுப்பு உறுப்புகள் ____, _____
விடை:
உணவுப்பாதை, செரிமானச் சுரப்பிகள்

Question 43.
புரதச் செரிமானம் _____ ல் ஆரம்பிக்கிறது
விடை:
வாய்க்குழியில்

Question 44.
_____ ஒரு செரிமான ஊக்கியாகும்
விடை:
ரென்னின்

Question 45.
_____ சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்
விடை:
இலியம்

Question 46.
உடலில் காணப்படும் மிகப்பெரிய செரிமானச் சுரப்பி _____ ஆகும்.
விடை:
கல்லீரல்

Question 47.
______ இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையே அமைந்துள்ளது
விடை:
கணையம்

Question 48.
இரத்தத்தில் அமில – காரச்சமநிலையை ஒழுங்குபடுத்துவது_ ____ ஆகும்.
விடை:
சிறு நீரகம்

Question 49.
பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து ____ திறக்கின்றது.
விடை:
டியோடினத்தில்

Question 50.
_____ செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகிய இரண்டு செயல்களையும் செய்கிறது
விடை:
சிறுகுடல்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 68
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 69

III. கூற்று மற்றும் காரண வகை

கீழ்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு வழிகாட்டி கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
இ) கூற்று சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Question 1.
கூற்று: பித்த உப்புகள் பால்மமாக்கல் என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.
காரணம்: கல்லீரல் வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
விடை: ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.

Question 2.
கூற்று: கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. காரணம்: இது கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டையைப் பதிய வைத்தல், நஞ்சுக் கொடி உருவாதல் மற்றும் கர்ப்பத்தினைப் பராமரித்தல் போன்ற வேலைகளைச் செய்கிறது.
விடை:
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.

IV. படம் வரைந்து பாகங்களைக் குறித்துக் காட்டவும்.

Question 1.
கீழ்கண்ட படத்தில் (A) சிஸ்டிக் நாளம், (B) பித்தப்பை, (C) முன் சிறு குடல், (D) கணையம் ஆகிய பாகங்களைக் குறி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 80

Question 2.
சிறுநீரகத்தில் கீழ்கண்ட பாகங்களைக் குறி.
(A) பெருந்தமணி,
(B) சிறுநீர்பை,
(C) சிறுநீர்குழாய்,
(D) சிறு நீரக தமனி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 88

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
இரத்த ஓட்ட மண்டலம் செய்யும் பணிகள் யாவை?
விடை:
இந்த மண்டலம் சுவாச வாயுக்கள், ஊட்டச் சத்துப் பொருட்கள், கழிவுப் பொருட்கள் போன்ற வற்றைக் கடத்துகிறது.

Question 2.
உமிழ் நீரில் உள்ள நொதிகளின் பெயர்களைக் குறிப்பிடு?
விடை:

  1. டையலின்
  2. லைசோசைம்

Question 3.
பித்த உப்புக்களின் பெயர்களைக் குறிப்பிடு?
விடை:

  1. சோடியம் கிளைக்கோலேட்
  2. சோடியம் டாரோ கிளைக்கோலேட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

Question 4.
அதிகப்படியான கொழுப்பு உடலில் என்ன மாற்றம் அடைகிறது?
விடை:
அதிகப்படியான கொழுப்புகள் கொழுப்புத் திசுக்களில் அடுக்காக சேமித்து வைக்கப்படுகின்றன.

Question 5.
சிறுநீரகத்தை சுற்றியுள்ள உறைகளை வரிசைப்படுத்தி கூறு.
விடை:

  1. தசை நார் இணைப்புத் திசுக்கள்
  2. சிறுநீரக கேப்சியூல்கள்
  3. கொழுப்பு கேப்சியூல்கள்
  4. இழைகளாலான சவ்வு

Question 6.
சிறுநீரக பழுதடைவு ஏன் ஏற்படுகிறது?
விடை:
சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக்கழிவுகள் உடலில் குவிகின்றன. இந்த நிலை சிறுநீரக பழுதடைவு எனப்படுகிறது.

Question 7.
மனிதனின் ஆண் பெண்களில் பால் முதிர்ச்சி அடையும் வயதினைக் குறிப்பிடு?
விடை:

  1. ஆண்க ளில் பால் முதிர்ச்சி 13-14 வயதில் ஏற்படுகிறது.
  2. பெண்க ளில் 11-13 வயதில் ஏற்படுகிறது.
  3. இந்த வயது பருவமடையும் வயது எனப்படுகிறது.

Question 8.
எந்த செல்கள் ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன?
விடை:
விந்தகத்திலுள்ள லேடிக் செல்கள் டெஸ்டோஸ்டீரான் என்ற ஆண் இன ஹார்மோனைச் சுரக்கின்றன.

Question 9.
மாதவிடாய் சுழற்சி வரையறு.
விடை:
ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையானது முதிர்ச்சியடைந்து ஏதாவது ஒரு அண்டகத்திலிருந்து ஒவ்வொரு 28 நாட்கள் இடைவெளியில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு பெண் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் சுழற்சி மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சி எனப்படும்.

Question 10.
டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனின் பணிகளை பட்டியலிடு.
விடை:

  1. விந்தணு உருவாதலைத் தூண்டுகிறது.
  2. ஆண் தன்மையின் பண்புகளாகிய தாடி, மீசை, உடலிலுள்ள முடி மற்றும் குரலில் ஏற்படும் மாற்றத்தினையும் (கனத்த குரல்) உருவாக்குகிறது.

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
உணவு செரித்தலில் இரைப்பையின் பங்கினை விவரி.
விடை:

  1. இரைப்பையானது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே அமைந்துள்ளது. ‘J’ போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
  2. இரைப்பை நீரில் Hcl, பெப்சின் மற்றும் ரெனின் உள்ளது.
  3. ஹைட்ரோ குளோரிக் அமிலம், செயலற்ற பெப்சினோஜனை செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றுகிறது.
  4. Hcl உணவோடு விழுங்கப்பட்ட பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது.
  5. ரெனின் பால் புரதமாகிய கேசின்னை உறைய வைக்கிறது. இரைப்பையில் உள்ள இரைப்பை நீர் மற்றும் செரிக்கப்பட்ட உணவுக்கு இரைப்பை பாகு என்று பெயர்.
  6. இந்த இரைப்பைப் பாகு குடலுக்குள் மெதுவாக குடல்வாய் (அ) பைலோரஸ் வழியாக நகர்கிறது.

Question 2.
கூழ்மப் பிரிப்பு அல்லது செயற்கை சிறுநீரகம் பற்றி குறிப்பு வரைக.
விடை:

  1. சிறுநீரகமானது நைட்ரஜன் கழிவுப் பொருட்களை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
  2. சிறுநீரகங்கள் தங்கள் வடிகட்டும் திறனை இழக்கும் போது அதிகப்படியான திரவம் மற்றும் நச்சுக் கழிவுகள் உடலில் சேர்கிறது. இந்த நிலைக்கு சிறுநீரக பழுதடைவு என்று பெயர்.
  3. இதற்காக நோயாளியின் இரத்தத்தை வடிகட்ட ஒரு செயற்கை சிறுநீரகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கூழ்மப் பிரிப்பு (dialysis) என்று பெயர்.
  4. இம்முறையில் செயற்கை சிறுநீரகத்தை பயன்படுத்தி இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. இதற்கு ஹீமோடையலிஸிஸ் என்று பெயர்.
  5. பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மருந்துகளாலோ அல்லது கூழ்மப் பிரிப்பினாலோ சிகிச்சையளிக்கப்பட முடியாத போது நோயாளிகள் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Question 3.
கல்லீரலின் பணிகளை பட்டியலிடு?
விடை:

  1. இரத்த சர்க்கரை மற்றும் அமினோ அமில அளவைப் கட்டுப்படுத்துதல்.
  2. கருவில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குதல்.
  3. இரத்தம் உறைதலுக்குப் பயன்படும் பைபிரினோஜென் மற்றும் புரோத்ராம்பின் ஆகியவற்றை உருவாக்குதல்.
  4. சிவப்பு இரத்த அணுக்களை அழித்தல்.
  5. இரும்பு, தாமிரம், வைட்டமின்கள் A மற்றும் D ஆகியவற்றை சேமித்து வைத்தல்.
  6. ஹெப்பாரின் தயாரித்தல் (இரத்தம் உறைதலை தடுப்பான்)
  7. நச்சுகள் மற்றும் உலோக நஞ்சினை வெளியேற்றல்.
  8. மருந்துப் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குதல்.

கல்லீரல் சுரக்கும் பித்த நீரிலுள்ள பித்த உப்புக்கள் பால்மமாக்கல் முறையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.

Question 4.
அ) நெஃப்ரானின் படம் வரைந்து பாகங்களைக் குறி.
ஆ) முக்கிய பாகங்களின் பணியைக் கூறு.
விடை:
அ) நெஃப்ரானின் படம்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 20 விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் 90

ஆ) பணிகள்:

  1. பௌமானின் கிண்ண ம் : இரத்தமானது வடிகட்டப்படுகிறது.
  2. அண்மை சுருள் நுண்குழல் : வடி திரவத்திலுள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீள உறிஞ்சுகிறது.
  3. சேய்மை சுருள் நுண் குழல் :
    1. ஹைட்ரஜன் அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருள்கள் நுண் நாளங்களுக்குள் சுரக்கின்றன.
    2. பொட்டாசியம், பெனிசிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள் நுண்குழல்களில் வடிதிரவமாக கடக்கின்றன. இதுவே இறுதியாக சிறுநீர் எனப்படுகிறது.
  4. சேகரிப்பு நாளம் :
    இறுதியாக சேகரிப்பு நாளத்தில் சிறுநீரானது சேர்ந்து பெல்விஸ் பகுதிக்குச் சென்று சிறுநீர்க் குழாய்கள் வழியாக சிறுநீர்பையை அடைந்து பெரிஸ்டால்சிஸ் இயக்கத்தின் மூலம் வெளியேறுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

9th Science Guide தாவர உலகம் – தாவர செயலியல் Text Book Back Questions and Answers

பகுதி – I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் ________
அ) ஒளி சார்பசைவு
ஆ) புவி சார்பசைவு
இ) தொடு சார்பசைவு
ஈ) வேதி சார்பசைவு
விடை:
இ) தொடு சார்பசைவு

Question 2.
ஒளிச்சேர்கையின் போது நடைபெறுவது
அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.
ஆ) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்
இ) நீர் மற்றும் CO2 இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்
ஈ) CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
விடை:
அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 3.
நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது _____ எனப்படும்.
அ) நடுக்கமுறு வளைதல்
ஆ) ஒளிசார்பசைவு
இ) நீர்சார்பசைவு
ஈ) ஒளியுறு வளைதல்
விடை:
இ) நீர்சார்பசைவு

Question 4.
இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?
அ) வேதி சார்பசைவு
ஆ) நடுக்கமுறு வளைதல்
இ) ஒளி சார்பசைவு
ஈ) புவிஈர்ப்பு சார்பசைவு
விடை:
இ) ஒளி சார்பசைவு

Question 5.
தாவரத்தின் வேர் ____ ஆகும்?
I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு
II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு
III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு
அ) 1 மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) III மற்றும் IV
ஈ) 1 மற்றும் IV
விடை:
ஆ) II மற்றும் III

Question 6.
வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது _____ எனப்படும்.
அ) வெப்ப சார்பசைவு
ஆ) வெப்பமுறு வளைதல்
இ) வேதி சார்பசைவு
ஈ) நடுக்கமுறு வளைதல்
விடை:
ஆ) வெப்பமுறு வளைதல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 7.
இலையில் காணப்படும் பச்சையம் ____ க்கு தேவைப்படும்.
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) நீராவிப்போக்கு
இ) சார்பசைவு
ஈ) திசை சாரா தூண்டல் அசைவு
விடை:
அ) ஒளிச்சேர்க்கை

Question 8.
நீராவிப் போக்கு ____ ல் நடைபெறும்.
அ) பழம்
ஆ) விதை
இ) மலர்
ஈ) இலைத்துளை
விடை:
ஈ) இலைத்துளை

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

Question 1.
______ இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.
விடை:
ஒளிச்சார்பசைவு

Question 2.
_____ நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
விடை:
வேர்

Question 3.
தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி _____ எனப்படும்.
விடை:
பச்சையம்

Question 4.
சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ____ எனப்படும்.
விடை:
ஒளியுறு வளைதல்

Question 5.
புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ______ எனப்படும்.
விடை:
புவிசார்பசைவு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 6.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 வை உள்ளிழுத்துக் கொள்கின்றன ஆனால் அவைகளின் உயிர் வாழ்தலுக்கு ______ தேவைப்படும்.
விடை:
ஆக்ஸிஜன்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 30

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் ஒளிச்சார்பசைவு எனப்படும்.
விடை:
தவறு
வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் வேதிசார்பசைவு எனப்படும்.

Question 2.
தண்டுப் பகுதி நேர் ஒளிசார்பசைவு மற்றும் எதிர்புவி சார்பசைவு உடையது.
விடை:
சரி

Question 3.
வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் குறைந்துவிடும்.
விடை:
தவறு
வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளைகள் திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் அதிகரிக்கும்.

Question 4.
ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.
விடை:
தவறு
ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் O2, உற்பத்தியாகும்.

Question 5.
வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 6.
தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும்போது நீர் இழப்பு ஏற்படும்.
விடை:
தவறு
தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் திறந்திருக்கும்போது நீர் இழப்பு ஏற்படும்.

V. மிகச் சுருக்கமாக விடையளி.

Question 1.
திசைச் சாரா தூண்டல் அசைவு என்றால் என்ன?
விடை:
அசைவுகள் திசைத் தூண்டுதலின் ஒரு திசையை சார்ந்து அமையாதிருத்தல்.

Question 2.
பின்வரும் வாக்கியத்தைக் கொண்டு, தாவரப் பாகத்தின் பெயரிடவும்.
விடை:
அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
விடை:
வேர்

ஆ) ஒளி இருக்கும் திசையை நோக்கியும், ஆனால் புவிஈர்ப்பு விசையின் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
விடை:
தண்டு

Question 3.
ஒளிசார்பசைவு (phototroism) ஒளியுறு வளைதல் (photonasty) வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 69

Question 4.
ஒளிச்சேர்க்கையின் போது ஆற்றல் X ஆனது Y ஆற்றலாக மாறுகிறது
அ) X மற்றும் Y என்றால் என்ன?
ஆ) பசுந்தாவரங்கள் தற்சார்பு உணவு ஊட்டமுறையை கொண்டவை? ஏன்?
விடை:
அ) X-சூரிய ஒளி Y-வேதியாற்றல்
ஆ) தனக்கு வேண்டிய உணவை தானே தயாரித்துக் கொள்கிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 5.
நீராவிப் போக்கு – வரையறு.
விடை:
நீர் தாவரத்தில் மேல் பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையான தண்டுகளின் வழியாக நீராவியாக வெளியேற்றப்படும் நிகழ்ச்சி.

Question 6.
இலைத்துளையைச் சூழ்ந்துள்ள செல் எது?
விடை:
காப்பு செல்கள் இலைத்துளை மூடித் திறப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

VI. சுருக்கமாக விடையளி.

Question 1.
பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுக.
அ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள் ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்
விடை:
அ. திசைசார் அசைவு,
ஆ. திசை சாரா அசைவு

Question 2.
ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.
விடை:

  • எதிர் புவி சார்பசைவு ஆகும்.
  • எதிர்புவி சார்பசைவு உடைய வேர்களை உருவாக்குகின்றன.
  • இவை 180° கோணத்தில் செங்குத்தான சுவாச வேர்களைக் கொண்டவை.

Question 3.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 70
விடை:
6H2O, C6H12O6

Question 4.
பச்சையம் என்றால் என்ன?
விடை:
தாவரங்களில் காணப்படும் ஒளி ஆற்றலை உட்கிரகிக்கக் கூடிய நிறமிகள் – பச்சையம் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 5.
நேர் புவிசார்பசைவு கொண்டிருக்கும் தாவரப் பாகத்தை எழுதுக?
விடை:
வேர் :
வேர்கள் பூமியில் நிலையாக நிற்ப்பதற்காக புவியை நோக்கி வளர்கிறது. எனவே வேர்கள் நேர் புவிசார் பசைவை கொண்டுள்ளது.

Question 6.
தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரம் மற்றும் சூரியகாந்தி தாவரத்தில் ஏற்படும் அசைவுகள் இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 71

Question 7.
ஒரு வேளை ஒரு ரோஜா தாவரத்தை தொட்டியில் வளர்க்கும்போது அதைக் கொண்டு எவ்வாறு நீராவிப்போக்கு நிகழ்வினை நிரூபிப்பீர்கள்
விடை:

  • ஒரு தொட்டி ரோஜா செடியின் மண்பரப்பு மற்றும் கிளை பகுதியை ஒரு பாலித்தின் பையினால் மூடவும்.
  • இந்த அமைப்பை ஒரு மணிநேரம் சூரிய ஒளியில் வைக்கவும்.
  • ஒரு மணி நேரத்திற்குப்பின் பாலித்தின் பையில் நீர் துளிகள் ஒட்டியுள்ளது
  • இந்த நிகழ்வு இலைகள் மூலம் நீராவிப்போக்கு நடப்பதை நிரூபிக்கிறது.

Question 8.
இலைத்துளை மற்றும் பட்டைத்துளை நீராவிப்போக்கினை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 80

Question 9.
தாவர வேர் மற்றும் தண்டு எந்த நேரடித் தூண்டலுக்கு உட்படும்?
விடை:
வேர் – புவியீர்ப்பு விசை
தண்டு – சூரிய ஒளி

VII. விரிவாக விடையளி.

Question 1.
திசை சார்பசைவு மற்றும் திசை சாரா அசைவு வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 81 Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 82

Question 2.
நீராவிப்போக்கின் வகைகளை விவரி.
விடை:

  • இலைத்துளை நீராவிப்போக்கு : – பெருமளவு நீர், இலைத்துளைகள் வழியாக நடைபெறுகிறது. ஏறக்குறைய 90-95% நீர் இழப்பு ஏற்படுகின்றது.
  • கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு : – புறத்தோலின் மேற்புறம் உள்ள கியூடிக்கிள் அடுக்கின் வழியாக நீராவிப்போக்கு நடைபெறுகின்றது.
  • பட்டைத்துளை நீராவிப்போக்கு: இதில் பட்டைத்துளை வழியாக நீர் இழப்பு நடைபெறும். பட்டைத்துளை என்பவை பெரிய மரவகை தாவரங்களின் பட்டைகள், கிளைகள் மற்றும் பிற தாவர உறுப்புகளில் காணப்படும் சிறிய துளைகள் ஆகும்.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
A, B மற்றும் C என்று மூன்று தாவரங்கள் உள்ளன. A தாவரத்தில் உள்ள மலரின் இதழ்கள் பகல் நேரத்தில்
பிரகாசமான ஒளியில் திறக்கும். ஆனால் ஒளி மங்கும்போது இருளில் மூடிக்கொள்ளும். தாவரம் B ல் உள்ள மலர்களின் இதழ்கள் இரவு நேரத்தில் திறந்த நிலையில் இருக்கும். ஆனால் பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் மூடிக்கொள்ளும். தாவரம் C யில் உள்ள இலைகளை விரல்களால் தொட்டால் அல்லது திடப் பொருள் ஏதும் அதன் மீது பட்டால் மூடிக்கொள்ளும்.
அ) தாவரம் A மற்றும் B யின் மலர்களில் நிகழும் நிகழ்வினைப் பெயரிடுக.
ஆ) தாவரம் A மற்றும் B யின் மலர்களின் பெயரினை எழுதுக.
இ) தாவரம் C யின் இலைகளில் ஏற்படும் நிகழ்வினைப் பெயரிடுக.
ஈ) தாவரம் C யின் இலைகளில் நிகழும் நடத்தை போன்று வேறு ஒருதாவரத்தின் பெயரினை எழுதுக.
விடை:
அ) தாவரம் A – ஒளியுறு வளைதல்
தாவரம் B – இருளுறு வளைதல் கொண்டுள்ளது
ஆ) A – டான்டலியன்
B – நிலவுமலர்
இ) C – நடுக்கமுறு அசைவு
ஈ) மைமூசா பியூடிகா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 2.
கற்பனை செய்து பாருங்கள் மாணவன் A ஒளிச்சேர்க்கைக்கு தேவையான சில முக்கிய காரணிகளைப் படித்தார். இவர் ஒரு தொட்டித் தாவரத்தினை இருட்டறையில் 24 மணிநேரம் வைத்தார். அடுத்த நாள் அதிகாலையில், அத்தாவரத்தின் ஒரு இலையின் நடுப்பகுதியை கருப்புக் காகிதம் கொண்டு மறைத்தார். பிறகு சில மணி நேரம் அத்தொட்டித் தாவரத்தினை சூரிய ஒளியில் வைத்தார். மற்றும் கருப்புக் காகிதம் கொண்டு மறைக்கப்பட்ட இலையை ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தினார்.
அ) இதனால் ஒளிச்சேர்க்கையில் என்ன அம்சம் நிரூபிக்கப்பட்டது?
ஆ) சோதனைக்கு முன் ஏன் தாவரம் இருட்டறையில் வைக்கப்பட்டது?
இ) இலைகளில் ஸ்டார்ச் உள்ளது என நீ எவ்வாறு நிரூபிப்பாய்?
ஈ) ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் என்ன?
விடை:
அ) ஒளிச்சேர்க்கைக்கு ‘சூரிய ஒளி’ அவசியம் என்பது நிரூபிக்கப்பட்டது.
ஆ) இலையில் உள்ள ஸ்டார்ச்சை நீக்க,
இ) அயோடின் கரைசலைக் கொண்டு ஸ்டார்ச் சோதனை செய்தல்.
ஈ) கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் சூரிய ஒளி, பச்சையம்.

9th Science Guide தாவர உலகம் – தாவர செயலியல் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
ஹீலியோடிராபிசம் ஒரு வகை _____ ஆகும்.
விடை:
ஒளி சார்பசைவு

Question 2.
முதல் நிலை தண்டு என்பது _____ ஆகும்.
விடை:
முளைக்குருத்து

Question 3.
தாவரங்கள் மண்ணிலிருந்து பிற பொருட்களை உறிஞ்சி எவ்வளவு ஜான் பாப்டிஸ்ட் வான் எடையானது அதிகரித்தது என்பதைக் கண்டறியும் சோதனையைச் செய்தவர் _____
விடை:
ஹெல்மான்ட்

Question 4.
தாவரம் CO2 ஐ மீண்டும் O2,ஆக மாற்றுவதாகக் கண்டறிந்த அறிஞர்
விடை:
பிரிஸ்டிலி

Question 5.
உலகில் முதன் முதலாக உருவாகிய தாவரங்கள் _______
விடை:
மாஸ்கள் மற்றும் லிவர்
வோர்ட்ஸ்

Question 6.
பூமியில் காணப்படும் மிக உயரமான புல் வகை _____
விடை:
மூங்கில்

Question 7.
25 – 200cm மழையளவு பொதுவாகக் காணப்படுவது ______
விடை:
காடுகள் வாழிடம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 8.
ஆகாய தாமரையின் பருத்த இலைக் காம்பு எதில் உதவுகிறது?
விடை:
மிதத்தல்

Question 9.
பட்டாணி தாவரத்தின் இரு சொல் பெயர் என்ன?
விடை:
பைசம் சாட்டைவம்

Question 10.
எந்த தாவரத்தில் விலங்கு போல் இயக்கம் காணப்படுகிறது?
விடை:
கிளாமைடோமோனாஸ்

Question 11.
டாராக்சம் அஃபிசினேல் தாவரத்தின் வட்டாரப் பெயர் ______
விடை:
சாதாரண டான்டிலியான்

Question 12.
ஒரு தாவரம் 1 லிட்டர் தண்ணீ ரை உறிஞ்சினால், அதில் எவ்வளவு நீராவிப் போக்கினால் வெளியேற்றப்படுகிறது?
விடை:
999 மில்லி லிட்டர்கள்

Question 13.
தாவரத்தில் ஒரு நாளில் சுவாசித்தல், ஒளிச்சேர்க்கை, நீராவிப் போக்கு நடைபெறும் நேரங்கள் மணி சராசரியாக முறையே ______
விடை:
24, 12, 10

Question 14.
______ தாவரத்தின் இலைகளை நாம் தொட்டவுடன் அவ்விலைகள் தொட்டால்
விடை:
சிணுங்கி (அ) மூடிக்கொள்கின்றன.
மைமோசா பியூடிகா

Question 15.
_______ தாவரத்தின் தண்டின் முனையானது சூரியன் திசையை நோக்கி நகர்கின்றன. இரவு நேரங்களில் எதிர்திசையில் நகர்கின்றன
விடை:
ஹீலியாந்தல்

Question 16.
_____ இலைகள் காற்றினால் நடனம் ஆடுவது போன்ற அழகியத் தோற்றத்தை உருவாக்குகின்றன
விடை:
இந்திய தந்தித் தாவரத்தின்

Question 17.
____ தமிழில் தொட்டால் சிணுங்கி என்று அழைக்கப்படுகிறது
விடை:
மைமோசா புடிகா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 18.
ஒளியின் தூண்டலுக்கு ஏற்ப ஒருதிசை சார்ந்த தாவர பாகத்தில் ஏற்படும் அசைவு ____ எனப்படும்.
விடை:
ஒளி சார்பசைவு

Question 19.
புவி ஈர்ப்புத் திசைக்கு ஏற்ப தாவரத்தின் உறுப்புகளில் ஏற்படும் அசைவு _____ எனப்படும்.
விடை:
புவி சார்பசைவு

Question 20.
தொடுதல் தூண்டலுக்கு ஏற்ப தாவர உறுப்புகளில் ஏற்படும் அசைவு _____ எனப்படும்
விடை:
தொடு உணர்வு சார்பசைவு

Question 21.
வேதிப்பொருளின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு அசைதல் _____ எனப்படும்.
விடை:
வேதி சார்பசைவு

Question 22.
______ தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும் மாலை மூடிய நிலையிலும் காணப்படும்.
விடை:
டாராக்சம் அஃபிசினே

Question 24.
ஒளிச்சேர்க்கையின் முடிவில் ______ ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது.
விடை:
குளுக்கோஸ்

Question 25.
ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் _____ வாயுவை உள்ளெடுத்து செல்கிறது.
விடை:
கார்பன்டை ஆக்ஸைடு

Question 26.
தாவரத்தின் சிறுகிளை கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவினை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது என்று கூறியவர் யார்?
விடை:
ப்ரீஸ்ட்லீ

Question 27.
பச்சையம் _____ மூலக்கூறு அமைப்பில் ஒத்திருக்கும் ஆனால் மைய மூலக்கூறு மட்டும் வேறுபட்டிருக்கும்.
விடை:
ஹீமோகுளோபின்

Question 28.
தாவரங்கள் தங்களின் வேர்களின் மூலம் நீரையும், இலைகளில் _____ வழியாக காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு எடுத்துக்கொள்கிறது,
விடை:
இலைத்துளைகள்

Question 29.
_____ என்ற மரகத பச்சை நிறமுடைய கடல் அட்டை ஒன்றை கண்டுபிடித்தனர்
விடை:
எலிசா குளோரோட்டிகா

Question 30.
இலைகளில் காணப்படும் சிறிய துளைகள் _____ எனப்படும்.
விடை:
இலைத்துளைகள்

Question 31.
தாவரப்பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையானத் தண்டுகளின் நீராவிப்போக்கு மூலமாக நீரானது ஆவியாக வெளியேற்றப்படுவது ____ எனப்படும்.
விடை:
நீராவிப்போக்கு

Question 32.
____ நீராவிப்போக்கின் போது பெருமளவு நீர், இலைத்துளை வழியாக நடைபெறுகிறது.
விடை:
இலைத்துளை

Question 33.
புறத்தோலின் மேற்புறம் உள்ள கியூட்டிக்கிள் அடுக்கின் வழியாக நடைபெறும் நீராவிப்போக்கு ____ எனப்படும்.
விடை:
கியூட்டிக்கிள் நீராவி

Question 34.
_____ நீர் இழப்பு பட்டைத்துளை வழியாக நடைபெறும்
விடை:
பட்டைத்துளை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 35.
இலைத்துளைகளில் உள்ள _____ செல்களில் பச்சையம் உள்ளது
விடை:
காப்பு

Question 36.
உலகின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பிற்கு _____ காரணமாகும்.
விடை:
உலக வெப்பமயமாதல்

Question 37.
_____ தாவரம் தனது வாழ்நாளில் 54 கேலன் நீரினை நீராவியாக வெளியேற்றுகிறது
விடை:
மக்காச்சோள

Question 38.
_____ முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
தாவரங்கள்

Question 39.
உயிரினங்கள் உணவிற்காக ஒன்றையொன்று சார்ந்திருப்பது ____ என அழைக்கப்படுகிறது.
விடை:
உணவுச் சங்கிலி

Question 40.
_____ தாவரங்கள் பிரமிடு வடிவங்களில் காணப்படுகிறது
விடை:
ஊசியிலைத்

Question 41.
____ பகுதியானது அதிகளவு பல்லுயிர்த் தன்மையுடைய நில அமேசான் அமைப்பை பெற்ற இடமாகும்.
விடை:
சாந்தோப்டெரின்

Question 42.
வெஸ்பா ஓரியன்டாலிஸ் மேல்தோல் பகுதியில் _____ என்ற மஞ்சள் நுண் ஒளி உணர் நிறமி காணப்படுகிறது.
விடை:
சாந்தோப்டெரின்

Question 43.
நீரின் தூண்டுதலுக்கு எற்ப தாவரப் பாகத்தில் ஏற்படும் அசைவு நீர் சார்பசைவு ____ எனப்படும்
விடை:
நீர் சார்பசைவு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 44.
ஒளியின் தூண்டலால் ஏற்படும் தாவரத்தின் திசை சாரா வளைதல் நிகழ்ச்சி ______ எனப்படும்
விடை:
ஒளியுறு வளைதல்

Question 45.
_____ தமிழில் ‘தொழு கன்னி’ என்றழைக்கப்படுகிறது
விடை:
டெஸ்மோடியம் கைரன்ஸ்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல் 78

III. கூற்று மற்றும் காரண வகை

பின்வருவனவற்றில் கூற்று A காரணம் R – என்னவென்று கண்டறி.

Question 1.
கூற்று A- ஒளிச்சேர்க்கை பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் நடைபெறவில்லை
R- மெக்ஸிகோ நாட்டின் பசிபிக் பெருங்கடலில் 2400 மீட்டர் ஆழமுள்ள பகுதியில் வெப்ப நீராற்றல் ஏற்படும் சிறு துளையின் அருகில் பசுங்கந்தக பாக்டீரியங்கள் வாழ்கின்றன
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:
b – A தவறானது ஆனால் R சரியானது.

Question 2.
கூற்று A- ஒளிச்சேர்க்கையினால் உருவாக்கப்படும் ஓசோன் பூமியைப் பாதுகாக்கிறது.
விளக்கம் R- பிற பல வாயுக்களோடு சேர்ந்து CFC ஓசோன் இழப்பிற்குக் காரணமாகிறது.
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:
C. A சரியானது R தவறானது

Question 3.
கூற்று A- நீராவிப் போக்கு ஒரு அவசியமான கேடு.
விளக்கம் R- நீராவிப் போக்கினால் அதிக நீர் உறிஞ்சப்பட்டு தொடர்ந்து கனிமங்களை அளிக்க இவை உதவுகிறது.
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:
d. A சரியானது R சரியானது

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
பூச்சியுண்ணும் தாவரம் என்றால் என்ன? எ.கா. தருக.
விடை:
சில தாவரங்கள் சதுப்பு நிலங்களில் வாழும். அவை நைட்ரஜன் சத்து குறைபாட்டை சரி செய்ய சிறு சிறு பூச்சிகளை (சில சமயம் தவளை போன்றவற்றை பிடித்து உணவாகக் கொள்கின்றன. இவை பூச்சியுண்ணும் தாவரம் என்று அழைக்கப்படுகிறது.
எ.கா : வீனஸ் பூச்சி பிடிப்பான் நெபந்தஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்

Question 2.
வேதிச்சார்பசைவு – என்றால் என்ன?
விடை:
வேதிப்பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்புகள் வளர்தல் அல்லது அசைதல் வேதி நாட்டம் (அ) வேதிச் சார்பசைவு எனப்படுகிறது. (எ.கா) கருவுறுதல் நிகழ்ச்சியில் மகந்தரக்குழல் சூல் தண்டிலுள்ள சர்க்கரைப் பொருட்களை நோக்கி வளர்தல் ஆகும்.

Question 3.
உணவுச் சங்கிலி என்றால் என்ன?
விடை:
ஒரு உயிரினங்களின் தொடர் ஒன்றை ஒன்று உணவுக்கு சார்ந்து வாழ்வதற்கு ‘உணவுச்சங்கிலி’ என்று பெயர்.

Question 4.
ஊசியிலைக் காட்டு மரங்கள் (அ) கோனிஃபெரஸ் தாவரங்கள் முக்கியத்துவம் யாது?
விடை:
கோனிஃபெரஸ் தாவரங்கள் பிரமிடு வடிவத்தில் காணப்படுவதால், எல்லா இலைகளும் முழுமையாக சூரிய ஒளி பெறுவதால் ஒளிச்சேர்க்கையில் ஈடுபட ஏதுவாக உள்ளது.

Question 5.
தாவரங்களை ஏன் முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கிறோம்?
விடை:
தாவரங்கள் சூரிய ஆற்றலைக் கொண்டு தமக்கு வேண்டிய உணவை தயாரித்துக் கொள்கின்றன. மற்ற விலங்குகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்துள்ளதால், அவை முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுகின்றன.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
திசைசாரா அசைவுகள் விவரி.
விடை:
1. தாவரங்களில் காணப்படும் சில அசைவுகள் திசைசாரா அசைவுகள். தூண்டுதலுக்கேற்ப ஒரு திசையில் அவை நடைபெறுவதில்லை. இவை திசைசாரா (Nastic) அசைவுகளாகும்.
வகைகள்:
1. ஒளியுறு வளைதல்
சில தாவர மலர்கள் காலையில் திறந்தும், மாலையில் மூடியும் காணப்படுகிறது. (எ.கா) டான்டிலியான்

2. இருளுறு வளைதல்
சில தாவர மலர்கள் இரவில் திறந்தும், பகலில் மூடியும் காணப்படுகிறது. (எ.கா) நிலவுமலர் -(ஐபோமியா ஆல்பா )

3. நடுக்கமுறு வளைதல்
சில தாவரத்தின் இலைகள் தொட்டவுடன் மூடிக் கொள்ளுதல். (எ.கா) தொட்டாச் சிணுங்கி

4. வெப்பமுறு வளைதல்
தாவரத்தின் ஒரு பகுதி வெப்ப நிலைக்கு ஏற்ப தன் துலங்களை வெளிப்படுத்துவது. (எ.கா) டூலிப் மலர்கள்.

Question 5.
இலைத்துளையின் முக்கியப் பணிகள் யாவை?
விடை:

  • சுவாச மற்றும் ஒளிச்சேர்க்கைக்கான வாயு பரிமாற்றம் இலைத்துளை வழியாக நடைபெறுகிறது
  • ஆக்ஸிஜன் உள் எடுக்கப்பட்டு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்படும் – சுவாசமும்,
  • கார்பன்-டை-ஆக்ஸைடு உள் எடுக்கப்பட்டு, ஆக்ஸிஜன் வெளியேற்றப்படும் ஒளிச்சேர்க்கையும் இதன் வழியாகவே நடைபெறுகிறது.
  • உறிஞ்சப்பட்ட அதிகபட்ச நீரானது நீராவியாகத் தாவரங்களின் மேற்பகுதியான இலை தண்டுகள் மூலமாக வெளியேற்றப்படும். நீராவிப் போக்கு நிகழ்ச்சியும் இதன் வழியாகவே நடைபெறுகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 18 திசுக்களின் அமைப்பு Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 18 திசுக்களின் அமைப்பு

9th Science Guide திசுக்களின் அமைப்பு Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
உயிருள்ள மெல்லிய சுவருடைய பல கோண வடிவ செல்களைக் கொண்டுள்ள திசு.
அ) பாரன்கைமா
ஆ) கோலன்கைமா
இ) ஸ்கிளிரன்கைமா
ஈ) மேலே கூறிய எதுவும் இல்லை
விடை:
அ) பாரன்கைமா

Question 2.
நார்கள் கொண்டுள்ளது
அ) பாரன்கைமா
ஆ) ஸ்கிளிரன்கைமா
இ) கோலன்கைமா
ஈ) ஏதும் இல்லை
விடை:
ஆ) ஸ்கிளிரன்கைமா

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 3.
துணை செல்கள் ____ வுடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.
அ) சல்லடைக் கூறுகள்
ஆ) பாத்திரக் கூறுகள்
இ) ட்ரைக்கோம்கள்
ஈ) துணை செல்கள்
விடை:
அ) சல்லடைக் கூறுகள்

Question 4.
கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?
அ) பாரன்கைமா
ஆ) கோலன்கைமா
இ) சைலம்
ஈ) ஸ்கீளிரன்கைமா
விடை:
இ) சைலம்

Question 5.
ஏரேன்கைமா எதில் கண்டறியப்படுகிறது?
அ) தொற்று தாவரம்
ஆ) நீர்வாழ் தாவரம்
இ) சதுப்பு நில தாவரம்
ஈ) வறண்ட தாவரம்
விடை:
ஆ) நீர்வாழ் தாவரம்

Question 6.
மிருதுவான தசை காணப்படுவது
அ) கர்ப்பப்பை
ஆ) தமனி
இ) சிரை
ஈ) அவை அனைத்திலும்
விடை:
ஈ) அவை அனைத்திலும்

Question 7.
நரம்பு செல்கள் பெற்றிறாதது.
அ) ஆக்சான்
ஆ) நரம்பு நுனி
இ) தசைநாண்கள்
ஈ) டென்ட்ரைட்
விடை:
இ) தசை நாண்கள்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 1

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
உள்ளுறுப்புகளுக்கு _____ திசுக்கள் உறுதியை அளிக்கின்றன.
விடை:
கோலன்கைமா

Question 2.
பாரன்கைமா, குளோரன்கைமா கோலன்கைமா, ஸ்கிளிரன்கைமா எளிய ஆகியவை _____ வகை திசுக்களாகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 3.
_____ மற்றும் ____ ஆகியவை கூட்டுத்திசுக்களாகும்.
விடை:
சைலம், புளோயம்

Question 4.
குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் _____ பகுதியில் உள்ளன.
விடை:
சுவாச குழாய்

Question 5.
சிறுகுடலின் புறணி ____ ஆல் ஆனது.
விடை:
தூண் எபிதீலியம்

Question 6.
மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுறும் உண்டு ஒத்திசைவான குரோமோசோம் போது, ____ குரோமோசோம்கள்
விடை:
ஒன்றின் பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும்.

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
எபிதீலிய திசு விலங்கு உடலின் பாதுகாப்பு திசுவாகும்.
விடை:
சரி

Question 2.
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை சிற்றிடை இணைப்பு திசுவின் இருவகையாகும்.
விடை:
தவறு
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை ஆதார இணைப்புத் திசுவின் இரு வகையாகும்.

Question 3.
பாரன்கைமா ஒரு எளிய திசு
விடை:
சரி

Question 4.
ஃபுளோயம் டிரக்கிடுகளால் ஆனது.
ஃபுளோயம் சல்லடைக் குழாயினால் ஆனது.
விடை:
தவறு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 5.
கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுகின்றன.
சைலத்தில் நாளங்கள் காணப்படுகின்றன
விடை:
தவறு

V. சுருக்கமாக விடையளி

Question 1.
இடை ஆக்குத்திசுக்கள் என்பவை யாவை? எவ்வாறு அவை மற்ற ஆக்குத் திசுக்களிலிருந்து வேறுபடுகின்றன.
விடை:
விளக்கம் :

  • முதல் நிலை ஆக்குத் திசுவின் ஒரு பகுதி பிரிந்து நிலையான திசுப்பகுதிகளுக்கிடையே இவை காணப்படுகின்றன.
  • இடையில் காணப்படுவதால் இடை ஆக்குத்திசு எனப்படுகிறது. இருப்பிடம் :
    1.  இலையடி – (எ.கா) பைனஸ் தாவரம்
    2.  கணுவிடைப் பகுதியின் அடி (எ.கா) புற்கள்

Question 2.
கூட்டுத்திசு என்றால் என்ன? பல்வேறு வகையான கூட்டுதிசுவின் பெயர்களை எழுது.
விடை:
வரையறை :
ஒன்றுக்கும் மேற்பட்ட பலவகை செல்கள் – ஒன்றாக தொகுப்பாக ஒரு பணியைச் செய்கின்றன.
வகைகள் : இருவகைப்படும்
1) சைலம் – (நீரைக் கடத்தும் திசு)
2) புளோயம் – (உணவைக் கடத்தும் திசு)

1) சைலம் கூறுகள் : –

  1. சைலம் டிரக்கீடுகள்
  2. சைலம் நார்கள்
  3. சைலம் குழாய்கள்
  4. சைலம் பாரன்கைமா

2) புளோயம் கூறுகள் :

  1. சல்லடைக்குழாய்
  2. துணைசெல்கள்
  3. புளோயம் பாரன்கைமா
  4. புளோயம் நார்கள்

Question 3.
அதிக அளவு நமது உடலில் காணப்படும் தசை திசுக்களை குறிப்பிடுக. அவற்றின் செயல்பாட்டினை வகுத்துரை.
விடை:
1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை),
2. மென்தசை (வரியற்ற தசை)

1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை)

  • நம் உடலில் அதிகம் காணப்படுகிறது.
  • இவை எலும்புடன் ஒட்டி உடலின் அசைவிற்குக் காரணமாக உள்ளதால் எலும்புச் சட்டகத்தசை எனப்படுகிறது.
  • இவை நம் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால். இவை இயக்க (தன்னிச்சை) தசைகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • இவைகளில் இருண்ட மற்றும் இருளற்ற பட்டைகள் மாறி மாறி காணப்படுவதால் இவை வரித்தசை-கள் எனப்படுகிறது.
    எ.கா. கை, கால்களில் காணப்படும் மூட்டுத் தசைகள்

2. மென்தசை (வரியற்ற தசை)

  • இத்தசைகள் கதிர் வடிவில் உள்ளது. மையப்பகுதி அகன்றும் முனைப் பகுதி சுருங்கியும் உள்ளது.
  • இத்தசைகளில் கோடுகள் மற்றும் வரிகள் கிடையாது.
  • இவை நம் இச்சைகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை. எனவே இவை இயங்கு தசைகள் என அழைக்கப்படுகிறது.
    எ.கா. இரத்த நாளம், இரப்பை, சுரப்பிகள், சிறுநீர்ப்பை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 4.
எலும்பு இணைப்புத்திசு என்றால் என்ன? எப்படி அவை நமது உடல் செயல்பட உதவுகின்றன?
விடை:
எலும்புத் திசு :
இது திடமான விறைத்த மற்றும் உறுதியான இளக்கமற்ற எலும்பு சட்டக இணைப்புத் திசு.

செயல்பாடுகள் :

  • உடலுக்கு வடிவத்தையும், கட்டமைப்பையும் கொடுக்கிறது.
  • மென்மையான திசுக்களுக்கும், உள் உறுப்புகளுக்கும் ஆதாரத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கிறது.

Question 5.
பாலினப் பெருக்கத்தின் போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?
விடை:

  • பாலினப் பெருக்கம் செய்யும் உயிரினங்களில் இருமய நிலை டிப்ளாய்டு) செல்கள் காணப்படுகிறது.
  • கேமீட்டுகள் உருவாக்கம் மைட்டாசிஸ் முறையில் நடைபெற்றால், குரோமோசோம் எண்ணிக்கை இரட்டிப்படையும் – அப்போது அந்த உயிரினம் அசாதாரணமானதாகக் காணப்பட வாய்ப்புள்ளது.

குன்றல்பகுப்பு (மியாசிஸ்) முக்கியத்துவம் :

  • குன்றல் பகுப்பின் (மியாசிஸ்) போது குரோமோசோம் எண் சரி பாதியாக குறைக்கப்படுகிறது. (n)
  • கருவுறும் போது, ஆண் மற்றும் பெண் கேமீட்டுகள் இணைந்து டிப்ளாய்டு (2n) (இருமைய) நிலையைப் பெறுகிறது.
  • இவ்வாறு குரோமோசோம் எண்ணிக்கையை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Question 6.
மைட்டாசிஸின் எந்த நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையப்பகுதியில் அமைகின்றன?
எப்படி?
விடை:

  • மெட்டா நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையத்தில் உள்ளது.
  • குரோமோசோமில் உள்ள சென்டிரோமியர்கள் ஸ்பிண்டில் இழைகளால் இணைக்கப்பட்டிருப்பதால், குரோமோசோம் செல்லின் மையத்தில் உள்ளது.

VI. விரிவாக விடையளி

Question 1.
நிலைத்த திசுக்கள் யாவை? வெவ்வேறு வகையான எளிய நிலைத்த திசுக்களை விவரிக்க.
விடை:
வரையறை :

நிலைத்த திசுக்கள், பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ (ஆ) தற்காலிகமாகவோ இழந்த திசுக்கள்.
இவை இருவகைப்படும்
1. எளியத்திசு,
2. கூட்டுத்திசு

1. எளியத்திசு
ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆன திசு, இவை மூன்று வகைப்படும்.
அ) பாரன்கைமா,
ஆ) கோலன்கைமா,
இ) ஸ்கிளீரன்கைமா

அ) பாரன்கைமா
சம அளவுடைய, மெல்லிய சுவருடைய முட்டை
(அ) பலகோண அமைப்புடைய செல் இடைவெளிகளுடன் கூடிய திசுவாகும்.
(i) ஏரன்கைமா,
(ii) குளோரன்கைமா
(i) ஏரன்கைமா
நீர்வாழ் தாவரங்களில் பாரன்கைமா காற்றிடைப் பகுதிகளைக் கொண்டுள்ளதால் – ஏரன்கைமா எனப்படும்.

(ii) குளோரன்கைமா
பாரன்கைமா திசு மீது ஒளிபடும் போது – பசுங்கணிகங்களை உற்பத்தி செய்து – குளோரன்கைமாவாக மாறும்.

பணி :

  1. நீரை, உணவைச் சேமித்தல்
  2. உறிஞ்சுதல், சுரத்தல்
  3. மிதத்தல் etc,.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 65

ஆ) கோலன்கைமா

  • நீண்ட சதுர அல்லது சிறுத்த முனையுடைய உயிருள்ள செல்கள்.
  • சீரற்ற தடித்த லிக்னின் இல்லாத செல்சுவர் கொண்டது.

பணி : புறத்தோலுக்கடியில் காணப்படுகிறது. தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது.
இ) ஸ்கிளீரன்கைமா

  • லிக்னினால் ஆன தடித்த செல்சுவரை கொண்டது.
  • முதிர்ந்த நிலையில் புரோட்டோபிளாசம் அற்று காணப்படுகிறது. இருவகைப்படும்.
    1. நார்கள்,
    2. ஸ்கீளிரைடுகள்

1) நார்கள்

  • நீண்ட ஸ்கிளீரன்கைமா செல்களால் ஆனது. செல்சுவர் லிக்னின் பொருளால் ஆனது.
  • 1-3 mm சில தாவரங்களில் 20 மிமீ முதல் 550 மிமீ வரை நீளமுடையவை.
  • கன்னாபினஸ் சட்டைவா (சணல்)
  • கார்கோரஸ் காப்சுலரிஸ் (ஜீட் வகை) சணல்
  • லின்னம் யுசிட்டாஸ்ஸிமம் (ஆளி)
    பணி – வலுதரும் திசு – எ.கா. சைலம் நார்கள்

2) ஸ்கிளீரைடுகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 66

  • இது அகன்று ஒற்றையாகவோ (அ) தொகுப்பாகக் காணப்படும்.
  • இதன் செல்சுவர் லிக்னின் என்னும் பொருளால் ஆனது
  • குழிகள் நிலைத்த தோற்றத்துடன் காணப்படுகின்றது.

பணி – பழங்கள் மற்றும் விதைகளின்
உறைகளில் காணப்படுகிறது.
வலுதரும் திசுவாகும். எ.கா. – பட்டாணி விதையுறை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 2.
சைலக்கூறுகளைப் பற்றி எழுதுக.
விடை:
சைலம் : நீரைக் கடத்தும் திசு – தாவர உடலுக்கு இயந்திர உதவியை அளிக்கிறது.
கூறுகள்
இவற்றின் கூறுகள் :
1). சைலம் டிரக்கீடுகள்,
2). சைலம் வெஸல்கள் (குழாய்கள்),
3). சைலம் நார்கள்,
4). சைலம் பாரன்கைமா

சைலம் டிரக்கீடுகள்

  • நீண்ட அல்லது குழாய் போன்றவை.
  • தடித்த மற்றும் லிக்னின் சுவரைக் கொண்ட இறந்த செல்களாகும்.
  • செல்களின் முனைப்பகுதி – மழுங்கியது. சிறுத்த (அ) உளி போன்ற அமைப்புடையது.
  • பலவகை இரண்டாம் நிலைத் தடிப்புகளைக் கொண்டுள்ளது.

சைலம் நார்கள்

  • நீண்ட செல்கள் – முனைகள் கூரானவை.
  • நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.

சைலக்குழாய்கள்

  • நீண்ட குழாய் வடிவம் – அகன்றது நீள் அச்சுக்கு இணையானது
  • செல்சுவர் – லிக்னின் காணப்படும் – அகன்ற மையக் குழிகளைக் கொண்டுள்ளது – இறந்தவை
  • நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.

சைலம் – பாரன்கைமா

  • செல்கள் மெல்லிய சுவரை உடையவை – உயிருள்ளவை
  • பணி – கடத்துதலில் உதவுவதோடு, ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளைச் சேகரிக்கிறது.
    Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 70

Question 3.
மைட்டாஸிஸ் மற்றும் மியாசிஸ்க்கு இடையேயுள்ள வேறுபாட்டினை பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 78

VII. மதிப்பு அடிப்படை கேள்விகள்

Question 1.
இரத்தத்திலிருந்து அனைத்து இரத்தத்தட்டுகளையும் நீக்கும் போது என்ன விளைவு ஏற்படும்?
விடை:

  • இரத்த தட்டுகளின் முக்கிய பணி காயம்பட்ட இடத்தில் இரத்த உறைவு ஏற்படுத்தி இரத்த இழப்பை தடுத்தல்.
  • இரத்தத்திலிருந்து இரத்தத் தட்டுகளை நீக்கிவிட்டால் காயம்பட்ட இடத்தில் இரத்த உறைவு நிகழாது. மாறாக, இரத்த இழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடும்.

Question 2.
இரத்தத்தில் எவை உண்மையான செல்கள் இல்லை? ஏன்?
விடை:

  • இரத்தத்தில் RBC, WBC, இரத்த தட்டுகள் காணப்பட்டாலும், RBC, மற்றும் இரத்தத்தட்டுகள் இவற்றில் உட்கருக்கள் இல்லை எனவே இவை உண்மையான செல்களாகக் கருதப்படவில்லை.
  • WBC மட்டுமே இரத்தத்தில் காணப்படும் உண்மையான செல்கள் ஆகும்.

9th Science Guide திசுக்களின் அமைப்பு Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண்வினாக்கள்.

Question 1.
லிக்னின் காணப்படும் எளிய வலிமை தரும் திசு _______
விடை:
கோலன்கைமா

Question 2.
ஒரு தாவரத்தில் பொதுவாகக் காணப்படும் எளியத்திசு ______
விடை:
பாரன்கைமா

Question 3.
திசுக்களைப் பற்றி அறிகிற அறிவியல் பிரிவு _____
விடை:
ஹிஸ்டாலஜி (Histology)

Question 4.
தென்னையின் மட்டையில் காணப்படும் திசு _____
விடை:
ஸ்கிளிரன்கைமா

Question 5.
எந்தத்திசு தாவரத்தின் நீள் வளர்ச்சிக்காக காரணமாக உள்ளது?
விடை:
நுனி ஆக்குத்திசு

Question 6.
____ முதிர்ந்த பின்பும் தன் உட்கருவை இழக்காமலுள்ளது?
விடை:
துணை செல்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 7.
புளோயம் திசுவில் காணப்படும் உயிரற்ற கூறு ______
விடை:
புளோயம் நார்கள்

Question 8.
வயலிலுள்ள ஒரு கரும்பு, தாவரத்தின் நுனிப்பகுதி நீக்கப்பட்டாலும் அது தொடர்ந்து நீளமாக வளர்வதற்குக் காரணம் ______
விடை:
இடை ஆக்கு திசு

Question 9.
லிக்னினை தனது இரண்டாம் செல்சுவரில் கொண்டுள்ள திசு _______
விடை:
ஸ்கிளிரன்கைமா

Question 10.
ஜீட் என்பது ______
விடை:
இரண்டாம் பாஸ்ட் நார்கள்

Question 11.
இரத்தம் உறைதலுக்கு காரணமான வைட்டமின் _______
விடை:
வைட்டமின் K

Question 12.
தசை நாரின் சைட்டோபிளாசம் _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
சார்கோஃபிளாசம்

Question 13.
எந்த விலங்கில் கொழுப்புத்திசு அதிக அளவில் காணப்படுகிறது?
விடை:
திமிங்கலம்

Question 14.
இரத்தம் மற்றும் எலும்பு _____ திசுவிலிருந்து தோன்றுகிறது?
விடை:
மீசோடெர்ம்

Question 15.
நமது உடலில் 60% கரிம பொருட்கள் காணப்படும் உறுப்பு ______
விடை:
எலும்பு

Question 16.
இரத்தக் குழாய்களின் உள் அடுக்கு ______ திசுவினால் ஆனது?
விடை:
எபிதீலிய திசு

Question 17.
இரத்தத்திற்கும் உடல் திரவங்களுக்கு மிடையே இணைப்பாக செயல்படுவது _______
விடை:
நிணநீர்

Question 18.
சுருங்கும் புரதம் காணப்படுவது _______
விடை:
எலும்பின் மஜ்ஜை

Question 19.
சுருங்கும் புரதம் காணப்படுவது ______
விடை:
தசை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 20.
எலும்பு மேட்ரிக்ஸில் அதிகம் காணப்படுவது ______
விடை:
கால்சியம் மற்றும்
பாஸ்பரஸ்

Question 21.
இரு நியூரான்களை இணைப்பது ______
விடை:
சினாப்ஸ்

Question 22.
தண்டின் குறுக்களவு அதிகரிக்கக் காரணம் ______
விடை:
பக்க ஆக்குத் திசு

Question 23.
இரத்தக் குழாய்களின் உள்பூச்சாகக் காணப்படுவது ____ ஆகும்
விடை:
தட்டு எபிதீலியம்

Question 24.
சிறுகுடலில் உள் பூச்சாகக் காணப்படும் திசு _____ ஆகும்.
விடை:
எளிய தூண் எபிதீலியத்திசு

Question 25.
சிறுநீரக நுண்குழலின் உள்பூச்சாகக் காணப்படுவது _____ ஆகும்
விடை:
கனசதுர எபிதீலியத்திசு

Question 26.
பெலோபியன் நுண்குழலின் உள்பூச்சாகக் காணப்படுவது ______
விடை:
குறுயிழை எபிதீலியத்திசு

Question 27.
மனித உடலில் அதிகபட்சமாகக் காணப்படும் திசு _____ ஆகும்.
விடை:
இணைப்புத் திசு

Question 28.
குரோமோசோம்கள் பூங்கொத்து போன்ற அமைப்பு நிலையைப் பெற்று லெப்டோடீன் காணப்படும் நிலை _____ ஆகும்.
விடை:
லொயோலா

Question 29.
கயாஸ்மா உருவாக்கம் மற்றம் குறுக்கெதிர் மாற்றம் நடைபெறும் புரோநிலையின் துணை நிலை _____ ஆகும்.
விடை:
பேக்கிடீன்

Question 30.
வெள்ளை நாரால் ஆன தசையையும் எலும்பையும் இணைக்கும் திசுவிற்கு _____ என்று பெயர்.
விடை:
தசை நாண்

Question 31.
சல்லடை செல்களில் _____ காணப்படுவதில்லை.
விடை:
துணை செல்கள்

Question 32.
உடலின் வெப்பநிலையை சீராக வைப்பது _____ திசுவாகும்
விடை:
கொழுப்புத்திசு

Question 33.
மைட்டாசிஸை முதன் முதலில் கண்டறிந்தவர் _______
விடை:
ஃப்ளம்மிங்

Question 34.
ஆளி தாவரவியல் பெயர் ______ ஆகும்
விடை:
லின்னம் யுசிட்டாஸ்ஸிமம்
(ஆளி)

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 35.
தோலை தசையுடன் இணைக்கும் திசு ______
விடை:
சிற்றடைவிழையம்

Question 36.
சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுவது _____
விடை:
கொழுப்புத்திசு

Question 37.
செல்பிரிதலின் உட்கரு பிரிதலுக்கு _____ என்று பெயர்
விடை:
கேரியோகைனசிஸ்

Question 38.
வெள்ளையணுக்களில் சைட்டோபிளாசத்தில் துகள்கள் அற்றவை _____ எனப்படும்
விடை:
ஏகிராணுலோசைட்ஸ்

Question 39.
இலை உருவாக்கத்திற்குக் காரணமான ஆக்குதிசு ____ எனப்படும்
விடை:
தட்டு ஆக்குத்திசு

Question 40.
உருளைக் கிழங்கின் பாரன்கைமாவின் வெற்றிடத்தில் காணப்படும் பொருள் _____ எனப்படும்.
விடை:
ஸ்டார்ச்

Question 41.
சைலம் குழாய்கள் காணப்படும் இம்னோஸ்பெர்ம் ____ ஆகும்
விடை:
நீட்டம்

Question 42.
டெரிடோபைட்டாவிலும் ஜிம்னோஸ்பெர்ம்களிலும் மட்டும் காணப்படும் புளோயம் கூறு ____ ஆகும்
விடை:
சல்லடை செல்

Question 43.
கொலாஜன் நார்கள், மீள்நார்கள் மற்றும் ஃபைரோப்ளாஸ்ட் செல்களாலான முறையான இணைப்புத்திசு ____ ஆகும்
விடை:
சிற்றிடைவிழையம்

Question 44.
மனித உடலின் மிகவும் நீளமான செல் _____ ஆகும்.
விடை:
நியூரான்

Question 45.
_____ செல் சுவரில் துளைகள் காணப்படுவதில்லை
விடை:
துணை செல்கள்

Question 46.
ஆப்பிளில் பாரன்கைமா ______ சேமித்து வைத்துள்ளது
விடை:
சர்க்கரையை

Question 47.
_____ தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது
விடை:
கோலன்கைமா

Question 48.
_____ ஒரு கடத்தும் திசுவாகும்
விடை:
சைலம்

Question 49.
ஃபுளோயத்தின் கடத்தும் கூறுகள் ______ கூறுகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
சல்லடைக்குழாய்

Question 50.
_____ கழிவுப் பொருள்களை நீக்கும் பணியில் ஈடுபடுகின்றன
விடை:
எபிதீலியத் திசுக்கள்

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 60

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 61

III. கூற்று மற்றும் காரண வகை

உறுதிபடுத்துதல் : A காரணம் : R
விவரிப்பு :
பின்வரும் கேள்விகளில் ஒரு கூற்று (A) தரப்பட்டுள்ளது. அதற்குரிய காரணம் (R) அதன் கீழ் தரப்பட்டுள்ளது. இவற்றிற்குக் கீழாகத் தரப்பட்டுள்ளவற்றிலிருந்து கேள்விக்கான சரியான விடையைத் தெரிவு செய்க.
a) A மற்றும் R சரி. R – A ஐச் சரியாக விளக்குகிறது.
b) A மற்றும் R சரி. R – A ஐச் சரியாக விளக்கவில்லை.
c) A சரி R தவறானது
d) A மற்றும் R இரண்டும் தவறானது

Question 1.
உறுதிபடுத்துதல் (A) : காது மடல்கள் மென்மையான வளையும் தன்மையுடையவை
காரணம் (R) : காது மடல்களில் ஹையலின் எனப்படும் குருத்தெலும்புத்திசு காணப்படுகிறது.
விடை:
c) A சரி R தவறானது

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 2.
உறுதிபடுத்துதல் (A): ஆதார இணைப்புத் திசுவில் அதிக அளவு உயிரற்ற செல்லிடைவெளி செல்லிற்கு புறம்பான மேட்ரிக்ஸ் காணப்படுகிறது.
காரணம் (R) : செல்லிடை வெளிகளில் புரத நார்கள் காணப்படுகிறது.
விடை:
b) A மற்றும் R சரி. R-A ஐச் சரியாக விளக்கவில்லை.

Question 3.
உறுதிபடுத்துதல் (A) : இரத்த வெள்ளையணுக்கள் தெளிவான உட்கரு கொண்டவை. அமீபா போன்று நகரும் தன்மை கொண்டவை. காரணம் (R) : இதில் கிராணுலோசைட்ஸ் ஏகிராணுலோசைட்ஸ் எனும் இருவகைகள் உள்ளன.
விடை:
b) A மற்றும் R சரி. R-A ஐச் சரியாக விளக்கவில்லை.

IV. பின்வரும் வரைபடம் என்னவென்று காண் அதன் பாகங்களைக் கண்டறி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 75

Question 2.
3 வகையான தசைத்திசுக்கள் யாவை? அவற்றின் படம் வரைக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 79

V. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
கோலன்கைமா திசு – சைலம் மற்றும் புளோயத்தில் காணப்படுவது இல்லை. ஏன்?.
விடை:

  • கோலன்கைமா உயிருள்ள வலு தரும் திசு.
  • ஆனால் சைலத்திலும், புளோயத்திலும் நிறைய உயிரற்ற செல்களே காணப்படுகின்றன.
  • ஸ்கிளிரன்கைமா நார்களில் லிக்னின் படிந்து காணப்படுவதால் அது வலு தருகிறது.
  • எனவே சைலம், புளோயம் திசுக்களில் கோலன்கைமா திசுக்கள் காணப்படுவதில்லை.

Question 2.
கோலன்கைமா மற்றம் ஸ்கிளீரன்கைமா வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 80

Question 3.
கூட்டு எபிதீலியம் (அ) அடுக்கு எபிதீலியம் குறிப்பு வரைக.
விடை:
அமைப்பு :

  • பல அடுக்குகளாக செல்கள் காணப்படுகிறது.
  • எனவே பல் அடுக்கு எபிதீலியம் என்று அழைக்கப்படுகிறது.
  • சுரத்தல் மற்றும் உறிஞ்சுதலில் குறைந்த அளவே பங்கு வகிக்கின்றன.
  • இது அடித்தளத் திசுக்களுக்கு இயந்திர மற்றும் இரசாயன அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும்.

Question 4.
நமது உடலின் நீர் பாதுகாப்பு உறையாகச் செயல்படுவது எது?
விடை:
நமது தோலில் அமைந்துள்ள எபிதீலியத் திசுக்களே, நீர் பாதுகாப்பு உறையாகச் செயல்பட்டு நீர் உட்புகாமல் உடலை பாதுகாக்கிறது.

Question 5.
மைக்ரோகிலியா என்றால் என்ன?
விடை:

  • வேறுபாடடைந்த நரம்பு செல்கள் மைக்ரோகிலியா எனப்படும்.
  • இவை விழுங்கு தன்மை கொண்டவை.
  • இவை ஆஸ்ட்ரோகிலியா, ஆலிகோடென்ரோகிலியா என்று அழைக்கப்படுகின்றன.

Question 6.
ஏமைட்டாசிஸ் செல் பகுப்பு நடைபெறும் உயிரினங்களின் பெயர் தருக.
விடை:

  • ஏமைட்டாசிஸ் ஒரு பாலிலா இனப்பெருக்க முறையாகும்.
  • இது பாக்டீரியா, புரோட்டோசோவா, ஈஸ்ட் (மொட்டிடுதல்), நோயுற்ற செல்கள், வயதான செல்கள், பாலூட்டிகளில் குருத்தெலும்பு செல்கள் மற்றும் கரு உறைகளில் நடைபெறுகிறது.

Question 7.
கொழுப்புத் திசுவின் பணிகள் யாவை?
விடை:

  • உடல் உறுப்புகளை அதனதன் இடத்தில் நிலை நிறுத்துகிறது.
  • சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியில் இருந்து பாதுகாக்கும் அதிர்ச்சி உறிஞ்சியாக உள்ளது.
  • பாதுகாப்பு உறையாகச் செயல்பட்டு உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்கிறது.

Question 8.
சைலம் வெஸல்கள் மற்றும் டிரக்கீடுகளில் காணப்படும் தடிப்புகள் யாவை?
விடை:

  • ஆம், சைலம் வெஸல்கள் மற்றும் டிரக்கீடுகளில் இரண்டாம் செல்சுவரில் தடிப்புகள் காணப்படுகின்றன.
  • அவையாவன, ஏணி வடிவ, வலைப்பின்னல் தடிப்பு, ஏணி வடிவ சுருள் தடிப்பு, குழி தடிப்பு மற்றும் வளையத் தடிப்பு ஆகும்.

Question 9.
மைட்டாசிஸ் அனாநிலை, மியாசிஸ் அனாநிலை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 86

VI. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
சல்லடை செல் மற்றும் சல்லடை குழாய் வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 87
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 88

Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

Question 2.
பல்வேறு வகை எபிதீலியத் திசுக்களின் அட்டவணை தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 89
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 90

Question 3.
மைட்டாசிஸ் – மியாசிஸ் முக்கியத்துவம் தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு 93

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

9th Social Science Guide பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்

Question 1.
கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.
(அ) காவலர்கள்
(ஆ) தீயணைப்புப் படையினர்
(இ) காப்பீட்டு முகவர்கள்
(ஈ) அவசர மருத்துவக் குழு
விடை:
(இ) காப்பீட்டு முகவர்கள்

Question 2.
‘விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்! என்பது எதற்கான ஒத்திகை?
(அ) தீ
(ஆ) நிலநடுக்கம்
(இ) சுனாமி
(ஈ) கலவரம்
விடை:
(ஆ) நிலநடுக்கம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

Question 3.
தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.
(அ) 114
(ஆ) 112
(இ) 115
(ஈ) 118
விடை:
(ஆ) 112

Question 4.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?
(அ) தீ விபத்திலிருந்து தப்பிக்க நில்! விழு! உருள்!
(ஆ) “விழு! மூடிக்கொள்! பிடித்துக்கொள்!” என்பது நிலநடுக்க தயார் நிலை.
(இ) “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது வெள்ளப் பெருக்குக்கான தயார் நிலை.
(ஈ) துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் தரையில் கிடைமட்டமாகப்படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக் கொள்ளவும்.
விடை:
(இ) “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது வெள்ளப் பெருக்குக்கான தயார் நிலை.

Question 5.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர் கொள்வதோடு தொடர்புடையது?
(அ) “காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
(ஆ) “கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் கடலோரத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்துகொள்ளவும்.
(இ) கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
(ஈ) “கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்க வேண்டும்.
விடை:
(இ) கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.

II. சுருக்கமாக விடையளி

Question 1.
பேரிடர் முதன்மை மீட்புக் குழு என்பவர் யாவர்?
விடை:
பேரிடர் முதன்மை மீட்புக் குழு:

  • காவலர்கள்
  • தீயணைப்புத் துறையினர்
  • அவசர மருத்துவக் குழுக்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

Question 2.
ஜப்பானில் மிக அதிக அடர்த்தியில் நிலநடுக்க வலை காணப்பட்டாலும் இந்தோனேசியாவில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஏன்?
விடை:
இந்தோனேசியா அதிக நிலநடுக்கப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஐப்பானை விட அதிக பரப்பளவைக் கொண்டுள்ளதால் இந்தோனேசியாவில்தான் உலகிலேயே அதிக நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன.

Question 3.
இந்தியாவில் ஒவ்வொருநாளும் எத்தனை ஆண்கள் பெண்கள் தீவிபத்தினால் இறக்கின்றனர்?
விடை:
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 42 பெண்களும் 21 ஆண்களும் தீ விபத்தினால் இறக்கின்றனர்.

Question 4.
சுனாமிக்கு பிறகு என்ன செய்ய வேண்டும்?
விடை:

  • ஆழிப்பேரலை தொடர்பான அண்மைச் செய்திகளுக்கு வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காணவும்.
  • காயமடைந்தவர்களுக்கும் ஆழிப்பேரலையில் சிக்கிக்கொண்ட நபர்களுக்கும் உதவிசெய்யவும்.
  • ஆழிப்பேரலையிலிருந்து யாரையாவது மீட்க வேண்டுமென்றால் சரியான உபகரணங்களுடன் கூடிய வல்லுனர்களை உதவிக்கு அழைக்கவும்.

III. விரிவான விடையளி

Question 1.
ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • ஆழிப் பேரலை உயிர்ச் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது. நிலநடுக்கம், கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளே ஆழிப் பேரலையாகும்.
  • ஆழிப் பேரலையானது 10-30 மீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 700 – 800 கிலோமீட்டர் வேகத்தில்
    செல்லக்கூடியது.
  • இது வெள்ளப் பெருக்கை உண்டாக்கும். இது மின்சாரம், தகவல் தொடர்பு, நீர் அளிப்பு போன்றவற்றைப் பாதிக்கின்றது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

Question 2.
நில நடுக்கத்தின்போது கட்டடத்திற்குள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
விடை:

  1. மேசையின் அடியில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து மேசையின் காலை ஒருகையால் பிடித்துக்கொண்டு ஒரு கையால் தலையை மூடிக்கொள்ளவும். அறையில் எந்த மரச்சாமான்களும் இல்லையெனில், அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக்கொள்ளவும்.
  2. அறையின் மூலையில், மேசையின் அடியில் அல்லது கட்டிலுக்கு அடியில் அமர்ந்து கொள்ளவும்.
  3. கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
  4. நிலநடுக்கம் முடியும் வரை உள்ளே பாதுகாப்பாக இருக்கவும், அதன் பிறகு வெளியேறுவது பாதுகாப்பானது.

Question 3.
ஆழிப் பேரலையை எவ்வாறு எதிக்கொள்வாய்?
விடை:
ஆழிப்பேரலையை எதிர் கொள்ளல் :

  1. நீங்கள் இருக்கும் வீடு, பள்ளி, பணிபுரியுமிடம், அடிக்கடி சென்று வருமிடம் போன்றவை கடலோர ஆழிப் பேரலை பாதிப்பிற்குட்பட்ட இடங்களா எனக் கண்டறிந்து திட்டமிடவும்.
  2. ஆழிப் பேரலை தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை அறிந்துகொள்ள உள்ளூர் வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காணவும்.
  3. ஆழிப் பேரலையைப் பற்றி கலந்துரையாடி மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்,.

Question 4.
தீ விபத்தின்போது என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • அமைதியாக இருக்கவும்.
  • அருகில் உள்ள தீ அபாயச்சங்குப் பொத்தானை அழுத்தவும் அல்லது 112 ஐ அழைக்கவும்.
  • கட்டடத்தைவிட்டு உடனடியாக வெளியேறவும்.
  • தீவிபத்தின்போது ஓடாமல் நடந்து வெளியேறும் பகுதிக்குச் செல்லவும்.
  • மின் தூக்கிகளை பயன்படுத்தக்கூடாது.

செயல்பாடுகள்

1. தீ விபத்திற்கான ஒத்திகை பயிற்சி. (மாணவர்களுக்கானது)
2. நில நடுக்கத்திற்கான ஒத்திகை பயிற்சி (மாணவர்களுக்கானது)

9th Social Science Guide பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
நிலநடுக்கம் ____ என்ற கருவியால் பதிவு செய்யப்படுகிறது.
விடை:
சீஸ்மோக்ராப்

Question 2.
நிலநடுக்கம் ____ அளவையில் அளக்கப்படுகிறது.
விடை:
ரிக்டர்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

Question 3.
ஆழிப்பேரலை மணிக்கு ____ வேகத்தில் செல்லக்கூடியது
விடை:
700-800 கிலோ மீட்டர்

Question 4.
ஆழிப்பேரலையானது _____ மீட்டர் உயரத்தில் செல்லக்கூடியது
விடை:
10-30

Question 5.
இந்தியாவில் தீமற்றும் தீசார்ந்த விபத்துகளால் சுமார் ____ பேர் இறக்கின்றனர்.
விடை:
25,000

II. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
பேரிடர் என்றால் என்ன?
விடை:
பேரிடர் என்பது உயிருக்கும் உடைமைகளுக்கும் அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்தும் பேராபத்து.

Question 2.
நிலநடுக்கம் – சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • புவித்தட்டுகளின் நகர்வால் புவியின் ஒருபகுதியில் திடீரென ஏற்படும் நில அதிர்வை நிலநடுக்கம் என்கிறோம்.
  • நிலநடுக்கம் புவித்தட்டுகளின் எல்லைகளில் ஏற்படுகிறது. புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றுமிடத்தை நிலநடுக்க மையம் என்கிறோம்.
  • நிலநடுக்க மையத்திற்குச் செங்குத்தாக புவியின் மேற்பரப்பில் காணப்படும் இடத்திற்கு மையப்புள்ளி எனப் பெயராகும்.
  • நிலநடுக்க பாதிப்புகள் மையப்புள்ளிக்கு அருகில்தான் மிக அதிகம்.

Question 3.
பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?
விடை:
பேரிடர் மேலாண்மை :

  • தடுத்தல்
  • தணித்தல்
  • தயார்நிலை
  • எதிர்கொள்ளல் மற்றும் மீட்டல்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 8 பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

III. விரிவான விடையளிக்கவும்

Question 1.
தீ விபத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை – யாது? விவரி.
விடை:
தீ விபத்தின் போது செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை :

  • நீங்கள் இருக்கும் கட்டத்தின் வெளியேறும் வழி குறித்தத் திட்டத்தினைத் தெரிந்து கொள்ளவும்.
  • தீ அபாயச் சங்கு எச்சரிக்கை ஒலி கேட்டவுடன் அமைதியாகவும் வேகமாகவும் வெளியேற வேண்டும்.
  • கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்கவேண்டாம்.
  • நீங்கள் வெளியேறும் வழியில் புகையிருந்தால் தரையில் தவழ்ந்து செல்லவும்.
  • கட்டத்திலிருந்து வெளியேறும் பகுதியைத் தெரிந்துகொள்ளவும்.
  • தீ அணைப்பான், தீ அபாயச்சங்கு இருக்குமிடம் மற்றும் வெளியேறும் வழி போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 95

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

9th Social Science Guide நிலவரைபடத் திறன்கள் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது.
அ) தலைப்பு
ஆ) அளவை
இ) திசைகள்
ஈ) நிலவரைப்படக் குறிப்பு
விடை:
ஈ) நிலவரைப்படக் குறிப்பு

Question 2.
நிலவரைப்படத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்.
அ) முறைக்குறியீடுகள்
ஆ) இணைப்பாய புள்ளிகள்
இ) வலைப்பின்னல் அமைப்பு
ஈ) திசைகள்
விடை:
அ) முறைக்குறியீடுகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 3.
உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக் கோள்கள்.
அ) 7
ஆ) 24
இ) 32
ஈ) 64
விடை:
ஆ) 24

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 40

III. கொடுக்கப்பட்டுள்ள கூற்றை ஆராய்ந்து சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கூற்று (A): செங்குத்துக் கோடுகளும் இடைமட்டக் கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் உருவாக்கும் வலை அமைப்பிற்கு இணைப்பாயங்களின் அமைப்பு.
காரணம் (R): கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் செல்லும் கோடுகள் முறையே வடக்கைக்கோடுகள், கிழக்கைக்கோடுகள் என்று அழைக்கின்றன.
அ) A மற்றும் R இரண்டும் சரி R ஆனது A விற்கு சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி R ஆனால் ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல
இ) A சரி R தவறு
ஈ) A தவறு R சரி
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி R ஆனது A விற்கு சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 2.
கூற்று (A): ஒரு நிலவரைப்படத்தில் உள்ள வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள செய்திகளைப் புரிந்து கொள்ளப் பயன்படாது. காரணம் (R): இது பொதுவாக நிலவரைப்படத்தின் அடிப்பகுதியில் இடது அல்லது வலது புற ஓரத்தில் காணப்படும்.
அ) A தவறு R சரி
ஆ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R ஆனது A விற்கு சரியான விளக்கமல்ல
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A மற்றும் R இரண்டும் சரி, R ஆனது A விற்கு சரியான விளக்கம்
விடை:
அ) A தவறு R சரி

IV. சுருக்கமான விடையளி

Question 1.
நிலைவரைபடம் என்றால் என்ன?
விடை:
நிலவரைபடம்:

  • நிலவரைபடம் ஒரு புவியிலாளரின் அடிப்படைக் கருவியாகும். இது வரைபடங்கள் வார்த்தைகள் மற்றும் குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத்தெளிவாகவும் திறப்படவும் விளக்குகிறது.
  • புவியியல் கற்பித்தலில் ஒருங்கிணைந்த பகுதியாகவும் இருப்பிட வழிகாட்டியாகவும் நிலவரைபடங்கள் சொல்லப்படுகின்றன.

Question 2.
நிலவரைப்படத்தின் கூறுகள் யாவை?
விடை:
நிலவரைபடத்தின் கூறுகள்:
தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோடுச்சட்டம் நிலவரைபடக் குறிப்பு, முறைக் குறியீடுகள்.

Question 3.
A மற்றும் B ஆகிய இரு நகரத்துக்கு இடையான தூரம் 5கி.மீ. ஆகும். இது நிலவரைப்படத்தில் 5செ.மீ. இடையாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தூரத்தை கணக்கிட்டு பிரதி பின்ன முறையில் விடை தருக.
விடை:
நிலவரைபடத்தூரம் = 5 செ.மீ.
புவிபரப்பின் தூரம் = 5 கி.மீ.
1cm=1km ஃ 5cm=5km
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 50
ஃஎனவே பிரதி பின்ன முறை = RF = 1:100000

Question 4.
நில அளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக
விடை:
சங்கிலி, பட்டகக் காந்தவட்டை, சமதளமேசை, மட்டமானி, அப்ளே மட்டம், சாய்வுமானி, தியோடலைட் மொத்த ஆய்வு நிலையம், உலகலாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்குமுறை.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 5.
தொலை நுண்ணுணர்வு – வரையறு?
விடை:

  • தொலை நுண்ணுணர்வு என்பது புவியில் உள்ள பொருட்களை நேரிடையாகத் தொடர்பு கொள்ளாமல் தொலைவிலிருந்து உற்று நோக்கி அவற்றின் தகவல்களைச் சேகரிப்பது ஆகும்.
  • தொலை என்பது தூரத்தையும் நுண்ணுணர்தல்’ என்பது தகவல்களைச் சேகரிப்பதையும் குறிக்கும்.

Question 6.
தொலை நுண்ணுணர்வின் கூறுகள் யாவை?
விடை:
தொலை நுண்ணுணர்வின் கூறுகள்

  • ஆற்றல் மூலம்
  • இலக்கு
  • அனுப்பும் வழி
  • உணர்விகள்

V. காரணம் கூறுக

Question 1.
நிலவரைபடம் வரைதலில் செயற்கைக்கோள் பதிமங்கள் துணைபுரிகின்றன.
விடை:
ஏனெனில்,

  • செயற்கைக் கோள் பதிமங்கள் செயற்கைக் கோள்களின் எண்ணிம தோற்றுரு செய்யப்பட்ட படங்களை (digitally transmitted images) குறிப்பிடுகிறது. புவியின் தன்மைகள், விவரங்கள், மாறுதல்கள் பற்றி அறிய வான்வெளி செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்படும் படங்கள்.
  • மிகக்குறுகிய காலத்தில் முழுப்பகுதியில் உள்ள அனைத்து தகவல்களையும் சேகரிக்கலாம். எளிதாக பட மேம்பாட்டிற்கான மென்பொருள்களுடன் ஒருங்கிணைக்கப்படலாம். செயற்கைக்கோள் பதிமங்கள் பயன்பாடு 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் நிலவரைபட உருவாக்கத்தை மேலும் ஊக்குவித்தனர்.

Question 2.
புவியியல் வல்லுநர்களின் அடிப்படைக் கருவி நிலவரைப்படம்.
விடை:
ஏனெனில்,
நிலவரைப்படம் வரைபடங்கள், வார்த்தைகள், குறியீடுகள் மூலம் புவியின் மேற்பரப்பினைத் தெள்ளத் தெளிவாகவும், திறம்படவும் விளக்குகிறது. புவியியல் கற்பித்தல் ஒருங்கிணைந்த பகுதியாகவும், இருப்பிட வழிகாட்டியாகவும் நிலவரைப்படங்கள் அமைகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 3.
நிலவரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட புவி வலைப்பின்னல் அமைப்பு பயன்படுகிறது.
விடை:
ஏனெனில்,

  • நிலபரைப்படத்தில் ஓர் இடத்தின் அமைவிடம் அதன் அட்சக்கோடு மற்றும் தீர்க்கக்கோடு மூலம் வரையறுக்கப்படுகிறது. படத்தில் ஒரு கட்டம் என்பது ஓரிடத்தின் அமைவிடத்தைக் காட்ட உதவும் எண்ணெழுத்துக் குறியீடுகள் கொண்ட வரிசைகளின் அமைப்பாகும்.
  • படத்தில் இடவலமான கிடைமட்டக் கோடுகள் வடக்கைக் கோடுகள் (Northing) என்றும், மேல்கீழ் செங்குத்துக் கோடுகள் கிழக்கைக் கோடுகள் (Easting) என்றும் அழைக்கப்படுகின்றன. இக்கோடுகள் வெட்டும் புள்ளிகள் இணைப்பாயப் புள்ளிகள் ஆகும்.
  • வலைப்பின்னல் (Grid) என்பது தல வரைபடத்தில் பல கோடுகள் இணைந்து ஓர் இடத்தின் அமைவிடத்தைத் துல்லியமாகக் காட்டும் நுட்பம் ஆகும்.

VI. வேறுபடுத்துக

Question 1.
புவிமாதிரி மற்றும் நிலவரைபடம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 30

Question 2.
வான் வழி புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் பதிமங்கள் செயற்கைக்கோள் பதிமங்கள்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 80

Question 3.
புவியியல் தகவல் அமைப்பு மற்றும் உலக அமைபிட கண்டறியும் தொகுதி
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 81

VII. விரிவான விடையளிக்கவும்

Question 1.
நிலவரைபடங்களில் அளவை என்பதன் பொருள் என்ன? அதன் வகைகளை விளக்குக.
விடை:
அளவை:
அளவையைக் கொண்டு வரைவதன் மூலம் முழுப் புவியையும் ஒரு காகிதத்தில் காட்ட முடியும். அளவை
என்பது நிலவரைபடத்தில் இரு புள்ளிகளுக்கும் புவிப்பரப்பில் அதே இரு புள்ளிகளுக்கும் இடையிலுள்ள தூரவிகிதம் ஆகும். அளவைகள் மூன்று முறைகளில் நிலவரைபடத்தில் காட்டப்படுகின்றன.

சொல்லளவை முறை:
நிலவரைபடத்திலுள்ள தூரம் மற்றும் புவியின் உண்மையான தூரத்தினை ஒப்பீடு செய்து சொற்களில் குறிப்பிடுவது சொல்லளவை முறையாகும். அதாவது ஒரு சென்டிமீட்டர் பத்து கிலோமீட்டர்க்குச் சமம். இது 1 செ.மீ = 10 கி.மீ என்று குறிக்கப்படுகிறது.

பிரதிபின்ன முறை:
இம்முறையில் நிலவரைபட மற்றும் உண்மையான தூரங்களின் ஒப்பீடு விகிதமாகவோ, பின்னமாகவோ வெளிப்படுத்தப்படும். இது வழக்கமாக R:F என சுருக்கமாகக் கூறப்படுகிறது (R.F. = பிரதிபின்ன முறை).
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 55

கோட்டளவை முறை:
நில வரைபடங்களில் ஒரு நீண்ட கோடு பல சம பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் நிலப்பரப்பில் எவ்வளவு தூரத்தைக் காட்டுகிறது என்பதை அறிவதே கோட்டளவை முறையாகும். இந்த முறையின் மூலம் நிலவரைபடத்திலுள்ள தூரத்தினை நேரடியாக அளக்க உதவுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 2.
திசைகள் – தகுந்த படம் வரைந்து விளக்குக.
விடை:
திசைகள்:

  • பொதுவாக நிலவரைப்படங்கள் வடதிசையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன.
  • ஒரு நிலவரைபடத்தில் வடக்குதிதிசை எப்போதும் புவியின் வட துருவத்தை நோக்கியே உள்ளது.
    Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 56
  • நாம் வட துருவத்தைப் பார்த்து நின்றால், நமது , வலக்கை கிழக்கு திசையையும், இடக்கை மேற்குத் திசையையும் நமது பின்புறம் தெற்கு திசையையும் காட்டும்.
  • இவை அடிப்படை திசைகளாகும். பொதுவாக, நிலவரைபடத்தின் மீது காணப்படும் அம்புமுனை வடக்குத் திசையைக் குறிப்பிடும்.

Question 3.
உலக அமைவிடத் தொகுதியின் (GPS) பயன்களை விவரி.
விடை:
உலக அமைவிட கண்டறியும் தொகதியின் நன்மைகள் (GPS):

  • கைப்பேசிகள், கைக்கடிகாரங்கள், புல்டோசர்கள், கப்பல் கொள்கலன்கள் மற்றும் தானியிங்கி பணப்பரிமாற்ற கருவிகள் (ஏ.டி.எம்) என அனைத்திலும் தொழில் நுட்பம் உதவுகிறது.
  • உலக அமைவிட கண்டறியும் தொகுதியின் முக்கிய நோக்கம் பயண தகவல்களை தூரம், வழி மற்றம் திசை) மிக துல்லியமாக தருவதே ஆகும். இராணுவ போர்த்தேடல்கள் மற்றம் போர்க்கால மீட்பு நடவடிக்கைகளிலும் உறுதுணையாகத் திகழ்கின்றது. நம்பிக்கையான சுற்றுலா வழிக் காட்டியாகவும் உள்ளது.
  • விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நெருக்கடிகாலத் தேவைகளைத் துரிதமாக வழங்குதல் மற்றும் பேரிடல் நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஜி.பி.எஸ் பெரிதும் உதவுகிறது.
  • வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உலக அமைவிட கண்டறியும் தொகுதிகளின் உதவுயுடன் சிறப்பாக செயல்படுகின்றன.

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

1. செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை உன்னால் கற்பனை செய்ய இயலுமா? (மாணவர்களுக்கானது)

2. உங்களை நிலவரைபடவியலாளராக (Cartographer) நினைத்துக்கொண்டு உங்கள் பகுதியின் வரைபடத்தை வரைக. (மாணவர்களுக்கானது)

9th Social Science Guide நிலவரைபடத் திறன்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
20ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை
அ) தலப்படங்கள்
ஆ) வானவியல் புகைப்படங்கள்
இ) நிலவரைபடங்கள்
ஈ) செயற்கைக்கோள் பதிமங்கள்
விடை:
ஈ) இயற்கைக்கோள் பதிமங்கள்

Question 2.
மிகப்பறந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம்.
அ) பெரிய அளவை நிலவரைபடம்
ஆ) கருத்துசார் வரைபடம்
இ) இயற்கை வரைபடம்
ஈ) சிறிய அளவை நிலபரைபடம்
விடை:
ஈ) சிறிய அளவை நிலவரைப்படம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நிலவரைபடம் என்பது ஒரு …………..
விடை:
இருப்பிட வழிகாப்பு

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 2.
………….. என்பது உலகிலேயே மிகப்பழைய வரைபடமாகக் கருதப்படுகிறது.
விடை:
பாபிலோனிய நிலவரை
படம்-அமாகோ முண்டி)

Question 3.
தொலை என்பது ………… குறிக்கும்
விடை:
தூரத்தை

Question 4.
நுண்ணுணர்தல் என்பது …………. குறிக்கும்
விடை:
தகவல்களைச்
சேகரிப்பதைக்

Question 5.
GIS என்பது ………
விடை:
புவியியல் தகவல்
அமைப்பு

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 86

IV. குறுகிய விடையளி.

Question 1.
உலக நிலபரைப்படங்களை உருவாக்கியவர் யாவர்?
விடை:

  • ஹெரோடோடஸ்
  • அனாக்ஸிமண்டர் பிதாகோரஸ்
  • எரடோஸ்தெனிஸ்
  • தாலமி
  • அல் இட்ரிஸி

Question 2.
முதல் நில வரைபடவியலாளர் யார்? ஏன்?
விடை:
பண்டைய கிரேக்க நாட்டைச் சேர்ந்த அனாக்ஸிமேன்டர் என்பவர் வரைந்த நிலவரைபடமே உலகின் முதல் நிலவரைபடம் ஆகும். இக்காரணத்தால் அவர் முதல் நிலவரைபடவியலாளராகக் கருதப்படுகிறார்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 3.
புவித் தகவல் தொகுதியின் வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் செயல்பாடுகள் யாவை?
விடை:
புவி தகவல் தொகுதியின் வன்பொருள் மற்றும் மென்பொருளின் செயல்பாடுகள்

  • புள்ளி விவர உள்ளீடு மற்றும் சரிபார்த்தல்
    • தொகுத்தல்
    • சேமித்தல்
    • புதுப்பித்தல் மற்றும் மாற்றியமைத்தல்
    • மேலாண்மை மற்றும் பரிமாற்றம் செய்தல் கையாளுதல்
    • மாற்றியமைத்தல் மற்றம் தகவல் தரல்
    • பகுப்பாய்வு மற்றும் சேர்த்தமைத்தல்

Question 4.
புவியைக் குறித்துக்காட்டுவதற்கான முறைகள் யாவை?
விடை:

  • சொல்லளவை முறை
  • பிரதி பின்ன முறை
  • கோட்டளவை முறை

V. வேறுபடுத்துக

Question 1.
பெரிய அளவை நிலவரைபடம் மற்றும் சிறிய அளவை நிலவரைபடம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 87

VI. விரிவான விடையளி

Question 1.
பின்வரும் நிறக் குறியீடுகள் நிலவரைபங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
விடை:

  • பழுப்பு : நிலம் அல்லது புவி அம்சங்கள் – சம உயரக் கோடுகள், அரிக்கப்பட்ட பகுதிகள், முக்கிய குன்றுப் பகுதிகள், மணல் பகுதிகள் மற்றும் குன்றுகள், இரண்டாம் நிலை அல்லது சரளை சாலைகள்.
  • வெளிர் நீலம் : நீர் நிலைகள் – கால்வாய்கள், கடற்கரைகள், அணைகள், ஏரிகள், சதுப்பு நிலங்கள், வெள்ளக்கரை, குளங்கள், ஆறுகள் நீர்த்தேக்கத் தொட்டிகள்.
  • கருநீலம் : தேசிய நீர் வழிகள்.
  • பச்சை தாவரங்கள் – பயிரிடப்பட்டவயல்கள், கோல்ஃப்மைதானங்கள், இயற்கை மற்றும் வேட்டையாடுதலுக்கு
    ஒதுக்கப்பட்ட எல்லைகள், பழத்தோட்டங்கள் மற்றும் திராட்சை தோட்டங்கள், பொழுதுபோக்கு மைதானங்கள், வனப்பகுதி.
  • கருப்பு : கட்டுமான இடங்கள் – சாலைகள், தடங்கள், இருப்புப் பாதைகள், கட்டடங்கள், பாலங்கள், கல்லறைகள், தகவல் தொடர்பு கோபுரங்கள், அணைச் சுவர்கள், அகழ்வாய்வுகள் மற்றும் சுரங்க இடிபாடுகள், தொலைபேசி இணைப்புகள், மின் இணைப்புகள், காற்றாலைகள், எல்லைகள்.
  • சிவப்பு :கட்டுமான இடங்கள் – தேசிய, கிளை மற்றும் முக்கிய சாலைகள், கலங்கரை விளக்கங்கள் மற்றும்
    கடல் விளக்குகள்.
  • இளஞ்சிப்பு : பன்னாட்டு எல்லைகள்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள்

Question 2.
புவன் (Bhuvan) அறிவியல் அறிஞர்கள் கொள்கை வகுப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மிக அதிக அளவில் பயன்படுகிறது என்பதை நியாயப்படுத்துக.
விடை:

  • புவன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு புவி’ என்று பொருள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் (ISRO) ஆகஸ்டு 12ம் நாள், 2009ஆம் ஆண்டு, இலவச இணைய தளம் கணினி சார்ந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.
  • செயற்கைக்கோள் படங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ஏழு செயற்கை கோள்களின் மூலம் கார்ட்டோசாட் I மற்றும் கார்டோசாட் II எடுக்கப்பட்ட படங்களும் இதில் உள்ளடக்கியது.
  • உலகின் எந்த ஒரு பகுதி அல்லது ஓர் இடத்தின் பெயர்களையோ அட்ச தீர்க்கப் பரவலைக் கொண்டு ஆராய்ந்து அறியலாம். விஞ்ஞானிகள், அறிஞர்கள், கல்வியாளர்கள் கொள்கை வகுப்பாளர்கள் அல்லது பொது மக்கள் ஆகியோருக்கு புவன் மிகுந்த பயனை அளிக்கிறது.

புவனின் நன்மைகள்:

  • தனது முப்பரிமாண அமைவு மூலம் புவன் புவி மெய்யாகவே அண்டவெளியில் சுழல்வதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.
  • மாணவர்கள், அறிவியல் மற்றும் பல்வேறு இடங்களின் வரலாறு போன்ற பலவகையான பாடங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
  • இயற்கை வளத் தகவல்களையும் பேரிடர்கள் பற்றிய தகவல்களையும் உரிய நேரத்தில் தெரிவிப்பதில் மிகவும் உறுதுணையாக உள்ளது.
  • ஆட்சியாளர் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உதவுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 7 நிலவரைபடத் திறன்கள் 91

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

9th Social Science Guide மனிதனும் சுற்றுச் சூழலும் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ____ என்கிறோம்.
அ) சுற்றுச்சூழல்
ஆ) சூழலமைப்பு
இ) உயிர்க் காரணிகள்
ஈ) உயிரற்றக் காரணிகள்
விடை:
அ) சுற்றுச்சூழல்

Question 2.
ஒவ்வொர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் ____ ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அ) ஆகஸ்டு 11
ஆ) செப்டம்பர் 11
இ) ஜுலை 11
இ) ஜனவரி 11
விடை:
இ) ஜுலை 11

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 3.
மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____ ஆகும்.
அ) மக்கள்தொகையியல்
ஆ) புறவடிவமைப்பியல்
இ) சொல்பிறப்பியல்
ஈ) நிலநடுக்கவரைவியல்
விடை:
அ) மக்கள் தொகையியல்

Question 4.
விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது
____ ஆகும்.
அ) மீன்பிடித்தல்
ஆ) மரம் வெட்டுதல்
இ) சுரங்கவியல்
ஈ) விவசாயம்
விடை:
இ) சுரங்கவியல்

Question 5.
பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன _____
அ) பாதி முடிக்கப்பட்ட பொருள்கள்
ஆ) முடிக்கப்பட்ட பொருள்கள்
இ) பொருளாதார பொருள்கள்
ஈ) மூலப்பொருள்கள்
விடை:
ஆ) முடிக்கப்பட்ட பொருள்கள்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 60

III. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளைக்கருத்தில்கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கூற்று (A) : படுக்கை அடுக்கில் உள்ள ஒசோன் படலத்தை பாதுகாப்பு கேடயம் என்கிறோம்.
காரணம் (R) : புற ஊதாக்கதிர் வீச்சு புவியை அடையாமல் தடுக்கிறது.
அ) A வும் R ம் சரி மற்றும் A என்பது R ன் சரியான விளக்கம்.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் A வானது R- ன் சரியான விளக்கமல்ல.
இ) A தவறு ஆனால் R சரி
ஈ) A மற்றும் R இரண்டும் தவறு
விடை:
அ) A-வும் R- ம் சரி மற்றும் A-என்பது R-ன் சரியான விளக்கம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 2.
கூற்று (A) : மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது.
காரணம் (R) : மூன்றாம் நிலைத்தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.
அ) A மற்றும் R இரண்டும் தவறு.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால், A வானது R க்கு விளக்கம் தரவில்லை.
இ) A சரி, ஆனால், R தவறு.
ஈ) A மற்றும் R இரண்டும் சரி. A வானது R க்கு சரியான விளக்கம் தருகிறது.
விடை:
இ) A சரி ஆனால் R தவறானது.

IV. சுருக்கமான விடையளி

Question 1.
மக்கள் அடர்த்தி என்றால் என்ன?
விடை:

  • ஒரு சதுர கி.மீ நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை மக்களடர்த்தி என்கிறோம்.
  • மிகப்பரந்த நிலப்பரப்பில், குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருந்தால், அதை குறைந்த மக்களடர்த்தி என்றும் குறைந்த நிலப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசித்தால் அதிக மக்களடர்த்தி என்றும் அழைக்கிறோம்.
  • Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 65

Question 2.
கொள்ளை நோய் என்றால் என்ன?
விடை:

  • 14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் “பிளேக்” என்ற கொள்ளை நோயினால் 30 – 60 சதவீதம் மக்கள் இறந்தனர்.
  • பெரிய எண்ணிக்கையிலான மக்கள் ஒரு நோயினால் இறந்தால் அது கொள்ளை நோய் எனப்படும்

Question 3.
வரையறு
அ) மக்கள் தொகை வளர்ச்சி
விடை:

  • மக்கள் தொகை வளர்ச்சி என்பது பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு
    “மக்கள் தொகை வளர்ச்சி” ஆகும்.
  • மக்கள் தொகை வளர்ச்சி = (பிறப்பு விகிதம் + குடியிறக்கம்) – (இறப்பு விகிதம் + குடியேற்றம்)

ஆ) மக்கள் தொகை கணக்கெடுப்பு
விடை:
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசாங்கம் மக்களின் வயது, பாலினம், கல்வியறிவு விகிதம் மற்றும்
தொழில் போன்ற விவரங்களைப் பதிவு செய்து, மக்கள் தொகை பற்றிக் கணக்கெடுப்பு நடத்தி தகவல்களைச் சேகரிக்கிறது.

இ) வளம் குன்றா வளர்ச்சி
விடை:
எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளுக்கான வள இருப்பை உறுதி செய்வதோடு நிகழ்காலத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதாகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

V. காரணம் கூறுக.

Question 1.
காடுகளை மீட்டெடுத்தல் உலகம் முழுவதும் ஊக்கப்படுத்தப்படுகிறது.
விடை:

  • மீள் காடாக்குதல் என்பது மரங்கள் வெட்டப்பட்ட அதே இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டுவளர்ப்பதன்
    மூலம்காடுகளை அழிவிலிருந்து பாதுகாத்துவனவளம்குறையாமல்பாதுகாக்கலாம். சிலசமயங்களில் காடுகளே தங்கள் வளத்தை மீட்டெடுத்துக் கொள்கின்றன.
  • காடுகளில் எந்த வகை மரம் வெட்டப்பட்டதோ அதே வகை மரத்தை அதன் எண்ணிக்கை குறையாத வகையில் நட்டு வளர்த்து இருக்கின்ற காட்டு வளத்தைப் பாதுகாக்க மீள் காடாக்குதல் ஊக்கப்படுத்தப்படுகிறது.

Question 2.
அமில மழை சுற்றுச்சூழலை அழிக்கிறது.
விடை:

  • அமிலமழை நீர்த்த கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் அடங்கியது.
  • அமில மழைக்குக் காரணமான வாயுக்கள் கந்தகடை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் படிம எரிபொருள் எரிக்கப்படுவதால் ஏற்படுகிறது.
  • எரிக்கப்பட்ட மாசுப்பொருள்கள் நீராவியோடு சேர்ந்து சூரிய ஒளி மற்றும் உயிர்வளித் துணையோடு அமிலமாக மாறி, நிலம், நீர் மற்றும் காற்றை மாசுபடுத்துகிறது.

Question 3.
நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கை ஓர் அறிவுசார் பொருளாதாரம்.
விடை:

  • ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகிய அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கை,
  • இதில் ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் வங்கி சேவைகள் அடங்கும்.

Question 4.
மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவேண்டும்.
விடை:
மக்கள் தொகை வளர்ச்சி வேலை வாய்ப்பின்மை மாசு, குறைந்த மருத்துவ வசதி, குறைந்த அடிப்படைக் கட்டமைப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 5.
வளம் குன்றா வளர்ச்சியின் இலக்குகள் புவியைப் பாதுகாப்பதாக இருக்கிறதா?
விடை:

  • வளங்களைப் பாதுகாத்துதல் மற்றும் அது சார்ந்த விழிப்புணர்வு, புவியில் வாழும் உயிர்களைப் பாதுகாக்க அவசியமானது.
  • வளம் குன்றா வளர்ச்சி எதிர்காலச் சந்ததியினருக்கு வள இருப்பை உறுதி செய்கிறது. நிகழ் காலத் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

VI. வேறுபடுத்துக.

Question 1.
முதல்நிலைத் தொழில் மற்றும் இரண்டாம் நிலைத்தொழில்.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 68

VII. விரிவான விடையளி

Question 1.
மக்கள் தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
விடை:

  • புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள் தொகை பரவல் ஆகும்.
  • உலகில் எல்லா இடங்களிலும் மக்கள் தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை.

அ. இயற்கை காரணிகள் :
வெப்பநிலை, மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள், கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு உள்ளிட்டவை மக்கள் தொகை பரவலுக்கான இயற்கை காரணிகள் ஆகும்.

ஆ.வரலாற்றுக் காரணிகள் :
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியவை மக்கள் தொகை பரவலுக்கான வரலாற்றுக் காரணிகள் ஆகும்.

இ. பொருளாதாரக காரணிகள் :
கல்விக்கூடங்கள் வேலைவாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள், வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவுதலுக்கான பொருளாதாரக் காரணிகள் ஆகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 2.
கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.
விடை:
அ. கிராமக் குடியிருப்புகள் :
முதன்மை தொழில்களான வேளாண்மை வனத்தொழில், கனிமத்தொழில் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றை
மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகின்றன.

கிராமக்குடியிருப்பு வகைகள் :
செவ்வக வடிவக் குடியிருப்புகள் :
சமவெளிப் பகுதிகளிலும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகளாகும். இங்குச் சாலைகள் செவ்வக வடிவில் காணப்படுவதோடு ஒன்றையொன்று செங்கோணங்களில் வெட்டிச் செல்லும்.

நேர்க்கோட்டுக் குடியிருப்புகள்
இவ்வகையான குடியிருப்புகள் சாலை, தொடர்வண்டிப் பாதை, ஆற்றுங்கரை மற்றும் அணைகட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.

வட்டவடிவக் குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் ஏரிகள், குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி வட்டமாகவோ அல்லது அரைவட்டமாகவோ காணப்படுகின்றன.

நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் :
நட்சத்திர வடிவ குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது காப்பிடப்படாத சாலை சந்திப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன. இவை நட்சத்திர வடிவத்தில் எல்லாத் திசைகளிலும் பரவிக் காணப்படும்.

முக்கோண வடிவக் குடியிருப்புகள் :
ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகளாகும்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
உனது பகுதியைப் பற்றி நீ பார்த்தறிந்த குடியிப்பு வகைகளை பற்றி எழுதுக.
(மாணவர்களுக்கானது)

9th Social Science Guide மனிதனும் சுற்றுச் சூழலும் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
Environ என்பதன் பொருள் …. என்பதாகும்
விடை:
சுற்றுப்புறம்

Question 2.
பாப்புலஸ் என்பதன் பொருள் …….
விடை:
மக்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 3.
கிரேக்கத்தில் ‘Demos’ என்றால் ……. என்று பொருள்
விடை:
மக்கள்

Question 4.
நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதல் நடத்தியநாடு ……
விடை:
டென்மார்க்

Question 5.
……… உலகிலேயே மிகப்பெரிய நகரமாகும்.
விடை:
டோக்கியோ

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 80
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 81

III. குறுகிய விடையளி.

Question 1.
சுற்றுச் சுழல் என்பதன் பொருள் யாது?
விடை:
சுற்றுச்சூழல் (Environment) என்ற சொல் என்வீரான் (Environ) என்ற பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும். Environ என்பதன் பொருள் சுற்றுப்புறம் என்பதாகும். சுற்றுச்சூழல் என்பது உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியதாகும்.

Question 2.
மக்கள் தொகை என்றால் என்ன?
விடை:

  • மக்கள் என்ற சொல், இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். பாப்புலஸ் என்றால் மக்கள் என்ற பொருளாகும்.
  • ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கையை மக்கள் தொகை என்கிறோம்.

Question 3.
காடுகளை அழித்தல் என்றால் என்ன?
விடை:
காடுகளை அழித்தல் என்பது மக்கள் தங்களின் பிற பயன்பாடுகளுக்காகக் காடுகளில் உள்ள மரங்களை நிரந்தரமாக வெட்டியெடுத்து நிலத்தைப் பதப்படுத்திப் பயன்படுத்துவதாகும்.

Question 4.
மின்னணுக் கழிவுகள் குறிப்பு வரைக.
விடை:
மின்னணுக் கழிவுகள் (e-waste) என்பவை பயன்படுத்த இயலாத எல்லா மின்னணுக்கருவிகளாகும். (எ.கா) கணினிகள், தொலைகாட்சிப் பெட்டிகள், கைப்பேசிகள் மற்றும் மின்னஞ்சல் கருவிகள்

Question 5.
அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.
விடை:

  • அதிக மக்களடர்த்திப் பகுதிகள் : (50 பேர் /1 ச.மீ)
    கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, வடமேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி.
  • குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள் : (10 பேருக்கு குறைவு /1 ச.மீ)
    மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியா, வடக்கு ரஷ்யா மற்றும் கனடா.

Question 6.
பாக் வளைகுடாவை உள்ளூர் மக்களும், அரசாங்கமும் மீட்டெடுத்த வழிமுறைகளில் இரண்டை எழுதுக.
விடை:

  • பாக் வளைகுடா பகுதிகளில் வளரும் தாவர இனங்களின் நாற்றுகளை நட்டு கவனமாக வளர்க்கப்படுகின்றன.
  • மன்னார் வளைகுடா பல்லுயிர்த் தொகுதியிலிருந்து முருகைப் பாறைகளைக் கொண்டு வந்து பாக் வளைகுடாவில் வளர்த்து இங்கு எஞ்சியிருக்கும் மாங்குரோவ் காடுகளை வரைபடமாக்குவதோடு அதைச் சுற்றிய நிலப்பகுதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது கற்றறியப்படுகிறது.
  • மாங்குரோவ் காடுகளைப் பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பதில் உள்ளூர் அமைப்புகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். இக்காடுகளைப் பற்றிய விழிப்புணர்வும் கல்வியறிவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

IV. வேறுபடுத்துக.

Question 1.
பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 85

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 2.
கிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 86

V. விரிவான விடையளி

Question 1.
நகரக் குடியிருப்புகளின் வகைப்பாடுகளை விவரி.
விடை:
நகரப்பகுதிகள், அதன்பரப்பு, கிடைக்கும் சேவைகள் மற்றும் நடைபெறும்செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில்
நகரம், பெருநகரம், மாநகரம், மீப்பெருநகரம் நகரங்களின் தொகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நகரம் (Town) : நகரம் பொதுவாகக் கிராமத்தைவிடப் பெரியதாகவும் பெருநகரத்தைவிடச் சிறியதாகவும் இருக்கும். ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் (எ.கா) சென்னைக்கு அருகில் உள்ள அரக்கோணம்.

பெருநகரம் (City) : பெருநகரங்கள் நகரங்களை விடப் பெரியதாகவம் மிக அதிகப் பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்டதாகவும் இருக்கும். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் (எ.கா) கோயம்புத்தூர்.

மாதகரம் (Metropolitan City) : மாநகரம் பத்து லட்சத்திலிருந்து ஐம்பது இலட்சம் வரையிலான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (எ.கா.) மதுரை மாநகரம்

மீப்பெருநகரம் (Mega City) : மீப்பெருநகரம் ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். (எ.கா) சென்னைப் பெருநகரம் (Greater Chennai)

நகரங்களின் தொகுதி (Conurbation) : நகரங்களின் தொகுதி (Conurbation) நகரங்களின் தொகுதி பல நகரங்களையும் பெருநகரங்களையும் பிற நகர்புறப் பகுதிகளையும் கொண்டிருக்கும் (எ.கா) டெல்லி நகரத் தொகுதி.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 90

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும்

Question 2.
காடுகளைப் பாதுகாத்தல் குறித்து விவரி?
விடை:
(i) மரம் வெட்டுதலை முறைப்படுத்துவதன் மூலம் காடுகளைப் பாதுகாக்க முடியும்.
(ii) தொடர் கண்காணிப்பு மூலமும் மனித நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் காட்டுத் தீ ஏற்படுவதைத் தவிர்த்து காடுகளைப் பாதுகாக்கலாம்.
(iii) காடு வளர்ப்பு மற்றும் மீட்டுருவாக்கம் : மீள் காடாக்குதல் என்பது மரங்கள் வெட்டப்பட்ட அதே இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதன்மூலம் காடுகளை அழிவிலிருந்து பாதுகாத்து வனவளம் குறையாமல் பாதுகாக்கலாம். சில சமயங்களில் காடுகளே தங்கள் வளத்தை மீட்டெடுத்துக் கொள்கின்றன. பொதுவாகக் காடுகள் மீட்டுருவாக்கம் என்பது புதிய மரக்கன்றுகளை நடுதல் அல்லது தரிசு நிலங்களில் விதைகளை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் காடுகள் வளர்க்கப்படுவதாகும்.
(iv) வனவளங்களின் பயன்பாடு : நாம் உயிர்வாழ்வதற்குப் தேவையான காற்று முதல் பயன்படுத்தும் மரக் கட்டைகள் வரை அனைத்திற்கும் காடுகளைச் சார்ந்திருக்கின்றோம். இவை தவிர விலங்குகளின் வாழ்விடமாகவும் மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் காடுகள் உள்ளன. காடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்கள் நம் அன்றாட வாழ்விற்கு அவசியமாகும். இதனால் வன வளத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

மனவரைபடம்
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 6 மனிதனும் சுற்றுச் சூழலும் 95

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 5 உயிர்க்கோளம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 5 உயிர்க்கோளம்

9th Social Science Guide உயிர்க்கோளம் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி ______
அ) தூந்திரா
ஆ) டைகா
இ) பாலைவனம்
ஈ) பெருங்கடல்கள்
விடை:
அ) தூந்திரா

Question 2.
உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு.
அ) சூழ்நிலை மண்டலம்
ஆ) பல்லுயிர்த் தொகுதி
இ) சுற்றுச்சூழல்
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை:
அ) சூழ்நிலை மண்டலம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 3.
வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்.
அ) உற்பத்தியாளர்கள்
ஆ) சிதைப்போர்கள்
இ) நுகர்வோர்கள்
ஈ) இவர்களில் யாரும் இல்லை
விடை:
ஆ) சிதைப்போர்கள்

Question 4.
பாலைவனத் தாவரங்கள் வளரும் சூழல்.
அ) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
ஆ) குறைந்த அளவு ஈரப்பசை
இ) குளிர் வெப்பநிலை
ஈ) ஈரப்பதம்
விடை:
அ) உவர்ப்பியமுள்ள மணற்பகுதி

Question 5.
மழைக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்.
அ) மிக அதிகப்படியான ஈரப்பதம்
ஆ) மிக அதிகமான வெப்பநிலை
இ) மிக மெல்லிய மண்ணடுக்கு
ஈ) வளமற்ற மண்
விடை:
ஈ) வளமற்ற மண்

II. கூற்று (A) காரணம் (R)கண்ட றிக

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ. கூற்று சரி, காரணம் தவறு
ஈ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

Question 1.
கூற்று : பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளாது.
காரணம் : ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 2.
கூற்று : குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பலவகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையம் ஆகும்.
காரணம் : இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை அடையாளங் காண்பர்.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் ____ எனப்படும்.
விடை:
சூழ்நிலை மண்டலம்

Question 2.
பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுபவை _____
விடை:
நுகர்வோர்கள்

Question 3.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சிக்கலான உணவுச் சங்கிலி அமைப்பினை _____ என அழைக்கின்றோம்.
விடை:
உணவு வலை

Question 4.
மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை _____ என்கிறோம்.
விடை:
பல்லுயிர்த்தொகுதி

Question 5.
பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் _____ எனப்படும்
விடை:
பாலைவனத்தாவரங்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 6.
____ நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.
விடை:
கடல்

IV. சுருக்கமான விடையளி.

Question 1.
உயிர்க்கோளம் என்றால் என்ன?
விடை:

  • உயிர்க்கோளம், பாறைக் கோளம், நீர்க் கோளம், வளிக்கோளத்தை உள்ளடக்கிய புவியின் நான்காவது கோளமாகும்.
  • கடல் மட்டத்திலிருந்து வளிமண்டல கீழடுக்கில் சுமார் 20 கி.மீ. உயரம் வரை பரவியுள்ள இக்கோளம் தாவர இனங்களும், விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.

Question 2.
சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?
விடை:

  • பல்வேறு உயிரினங்களின் தொகுதி ‘சூழ்நிலை மண்டலம்’ ஆகும். இம்மண்டலத்தில் வாழ்கின்ற, உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, உயிரற்ற சுற்றுச் சூழல் காரணிகளோடும் தொடர்பு கொள்கின்றன.
  • சூழ்நிலை மண்டலம் மிகச் சிறிய அலகிலிருந்து (எ.கா. மரப்பட்டை) உலகளாவிய சூழ்நிலை மண்டலம் (அல்லது) சூழல் கோளம் வரை (எ.கா. விவசாய நிலம், வனச்சூழல் அமைப்பு) வேறுபட்டுக் காணப்படுகிறது.

Question 3.
உயிரினப் பன்மை என்றால் என்ன?
விடை:
ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பது ‘உயிரினப் பன்மை’ ஆகும். எ.கா. தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற நுண்ணியிரிகள்.

Question 4.
“உயிரினப் பன்மை இழப்பு” என்பதன் பொருள் கூறுக?
விடை:
மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு ‘உயிரினப் பன்மையின் இழப்பு’ எனப்படும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 5.
பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைக் குறிப்பிடுக.
விடை:
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகள்.

  • வெப்ப மண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதி.
  • வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி
  • பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி
  • மித வெப்பமண்டலப் பல்லுயிர்த் தொகுதி.
  • தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி.

V. காரணம் கூறுக

Question 1.
உற்பத்தியாளர்கள், தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
ஏனெனில்,
உற்பத்தியாளர்கள் சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் ஆகும். இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன. (எ.கா.) தாவரங்கள், பாசி, பாக்டீரியா.

Question 2.
உயிர்க்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது.
விடை:
ஏனெனில்,
உயிர்க்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலம் மற்றும் பல்லுயிர்த் தொகுதி அமைப்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது. உலக சூழ்நிலை மண்டலம் விவசாய நிலம், குளச் சூழ்நிலை மண்டலம், வனச் சூழல் அமைப்பு மற்றும் பிற சூழ்நிலை மண்டலங்கள் என வேறுபட்டுக் காணப்படுகிறது. அனாலும் இங்க உயிரினங்கள் நிலையாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் காணப்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

VI. வேறுபடுத்துக.

Question 1.
உற்பத்தியாளர் – சிதைப்பவர்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 60

Question 2.
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி – நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 61

Question 3.
வெப்பமண்டலத் தாவரங்கள் – பாலைவனத் தாவரங்கள்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 62
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 62.1

Question 4.
சவானா – தூந்திரா
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 68.1

VII. விரிவான விடையளி

Question 1.
சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.
விடை:
சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள்.

  • உயிரற்ற கூறுகள்
  • உயிருள்ள கூறுகள்
  • ஆற்றல் கூறுகள் என மூவகைப்படும்

உயிரற்ற கூறுகள்..
சுற்றுச் சூழலில் உள்ள உயிரற்ற, கரிம, இயற்பியல் மற்றும் இரசாயன காரணிகளை உள்ளடக்கியதாகும்.
(எ.கா.) நிலம், காற்று, நீர், சுண்ணாம்பு, இரும்பு போன்றவை.

உயிருள்ள கூறுகள் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியவை.

  • உற்பத்தியாளர்கள்
    இவை தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய உயிரினங்கள்.
  • முதல் நிலை நுகர்வோர் – தாவர உண்ணிகள்
  • இரண்டாம் நிலை நுகர்வோர் – ஊன் உண்ணிகள்
  • சிதைப்போர்கள் – சாறுண்ணிகள் எனப்படும். இவை இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்சுடியவை.

ஆற்றல் கூறுகள் (Energy Components)
உயிர்க்கோளம் முழுமைக்கும் ஆற்றலை வழங்கக்கூடியது சூரியன் ஆகும்.
அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும் ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் சூரிய ஆற்றல் பயன்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 2.
சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகளை எழுதுக.
விடை:
சூழ்நிலை மண்ட லத்தின் செயல்பாடுகள் (Functions of an ecosystem)
சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகள் ஆற்றல் ஓட்டத்தின் அமைப்பைச் சார்ந்துள்ளன.
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 68
அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு

  • ஆற்றல் மட்டம்
  • உணவுச் சங்கிலி
  • உணவு வலை ஆகியவற்றை உருவாக்குகின்றன.

ஆற்றல் மட்டம்.
ஆற்றல் ஓட்டம் பெரும்பாலும் சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்கு முறையில் நடைபெறுகிறது. இந்நிலைகள் ஆற்றல் மட்டம் எனப்படுகிறது.
உணவுச் சங்கிலி.
உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம் பல்வேறு ஆற்றல் மட்டத்தின் வழியாகத் தொடர்ச்சியாக நடைபெறுவதை உணவுச் சங்கிலி என்று அழைக்கிறோம்.

உணவு வலை.
உணவுச் சங்கிலிகள் (Food Chain) ஒன்றினையொன்று சார்ந்து, பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை (Food web) எனப்படுகிறது. (ஆற்றல் மட்டம் → உணவுச் சங்கிலி → உணவு வலை)

Question 3.
புவியில் உள்ள நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியை விவரி.
விடை:
நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி

  • இங்கு காணப்படும் உயிரினங்கள் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டு அவை வாழுகின்ற சூழலுக்கும் சக்தி மூலங்களுக்கும், இடத்திற்கும் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன
  • நீர்வாழ் உயிரினங்களின் மீதும் உயிரற்ற காரணகளின் தாக்கம் காணப்படுகிறது.
  • நன்னீர்வாழ் பல்லுயிர்தொகுதி மற்றும் கடல்நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி என இரண்டு வகை உண்டு.

நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி

  • இத்தொகுதியானது ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இத் தொகுதி உயிரினங்கள் – தாவரங்கள்
    • அல்லி
    • தாமரை
    • பாசியினத் தாவரங்கள் – விலங்குகள்
    • ஆமை
    • முதலை
    • மீன் இனங்கள்.

கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
கடல் நீரில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விட ஆதாரமாக உள்ள இத்தொகுதி புவியில் காணப்படும் மிகப்பெரிய பல்லுயிர்த்தொகுதியாகும். இரண்டாம் வகை கடல்நீர்வாழ் உயிரினங்களான பவளப்பாறைகள் (coral reefs) உள்ளன. மனிதர்கள் இத்தொகுதியை நீர், உணவு, பொழுதுபோக்கு அம்சங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இத்தொகுதியில் காணப்படும் பிரச்சனைகள் அதிக அளவில் மீன்பிடத்தல், சுற்றுச்சூழல் மாசுபடுதல், கடல் மட்டம் உயர்தல்.

VIII. கீழ்க்கண்டவற்றின் தினங்களைக் கண்டுபிடி

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 75

IX. நில வரைபடப் பயிற்சி (மாணவர்களுக்கானது)

உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்

1. பிரெய்ரி
2. டௌன்ஸ்
3. தூந்திர பல்லுயிர்த் தொகுதி
4. வெப்பமண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

X. படத்தைப் பார்த்து விடையளி

Question 1.
ஆர்டிக் தூந்திர உணவு வலை பற்றி உனது சொந்த கருத்தை வரையறு. (மாணவர்களுக்கானது)
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 80

9th Social Science Guide உயிர்க்கோளம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_____ புவியின் நான்காவது கோளமாகும்.
விடை:
உயிர்க்கோளம்

Question 2.
_____ என்பது பல்வேறு உயிரினங்களின் தொகுதி ஆகும்.
விடை:
சூழ்நிலை மண்டலம்

Question 3.
சூழ்நிலை மண்டலத்தைப்பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ____ ஆகும்.
விடை:
சூழலியல்

Question 4.
சூழலியல் பற்றிப் படிப்பவர் ____ எனப்படுகிறார்.
விடை:
சூழலியலாளர்

Question 5.
______ தற்சார்பு ஊட்ட உயிரி என அழைக்கப்படுகின்றன
விடை:
உற்பத்தியாளர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 6.
தூந்திரப் பகுதி மக்கள் குளிர்காலங்களில் _____ என்ற வீடுகளில் வாழ்கிறார்கள்.
விடை:
இக்ளு

II. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
உயிர்கோளம் முழுமைக்கும் _____ ஆற்றலை வழங்குகிறது.
அ) பூமி
ஆ) சூரியன்
இ) வெள்ளி
ஈ) செவ்வாய்
விடை:
ஆ) சூரியன்

Question 2.
பாலைவனப் பகுதியில் ஆண்டுச் சராசரி மழை _____ குறைவாக உள்ளது
அ) 15 செ.மீட்டருக்கு
ஆ) 50 செ.மீட்டருக்கு
இ) 35 செ.மீட்டருக்கு
ஈ) 25 செ.மீட்டருக்கு
விடை:
ஈ) 25 செ.மீட்டருக்கு

Question 3.
புவியின் மொத்த நீர்ப்பரப்பு ____ ஆகும்.
அ) 71%
ஆ) 73%
இ 75%
ஈ) 79%
விடை:
ஈ) 79%

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 4.
புவியின் மொத்த நிலப்பரப்பு ___ ஆகும்.
அ) 21%
ஆ) 25%
இ 27%
ஈ) 29%
விடை:
ஈ) 29%

Question 5.
இந்தியாவில் ____ உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
அ) 15
ஆ) 18
இ) 19
ஈ) 36
விடை:
ஆ) 18

III. குறுகிய விடையளி.

Question 1.
வாழ்விடம் என்றால் என்ன?
விடை:
விலங்கு, தாவரம் மற்றும் நுண்ணுயிரிகள் எந்த இடத்தில் வாழ்கின்றதோ அவ்விடம், அவற்றின் வாழ்விடம் எனப்படுகிறது.

Question 2.
நுகர்வோர் என்றால் என்ன?
விடை:

  • நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களைச் சார்ந்திருக்கும் உயிரினங்கள் நுகர்வோர் எனப்படும்.
  • இவை பிற சார்பு ஊட்ட உயிரி என்று அழைக்கப்படுகின்றன.

Question 3.
சாறுண்ணிகள் என்றால் என்ன?
விடை:
இறந்த அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்கூடியவை சாறுண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. எ.கா. பூஞ்சைகள், காளான்கள்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம்

Question 4.
உணவு வலை என்றால் என்ன?
விடை:
உணவுச் சங்கலிகள் ஒன்றினையொன்று சார்ந்து, பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை எனப்படுகிறது.

Question 5.
பாலைவனச் சோலை என்றால் என்ன?
விடை:

  • பாலைவனச்சோலை என்பது பாலை வனங்கள் மற்றும் அரை வறண்டப் பாலைவனப் பிரதேசங்களில் காணப்படும் வளமான நன்னீர் பகுதியாகும்.
  • பாலைவனச் சோலைகள் நீரூற்றிலிருந்து நீரைப் பெறுகின்றன பேரீட்சை, அத்தி, சிட்ரஸ் பழங்கள் மக்காச்சோளம் போன்றவை பாலைவனச் சோலைக்கு அருகில் விளைவிக்கப்படுகின்றன.

IV. விரிவான விடையளி.

Question 1.
நீர்வாழ் உயிரிகளின் சூழ்நிலை அமைப்பை நிலவாழ் உயிரிகளின் சூழ்நிலை அமைப்பிலிருந்து வேறுபடுத்து.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 91

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 92
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 5 உயிர்க்கோளம் 93