Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Economics Chapter 1 உற்பத்தி Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Economics Chapter 1 உற்பத்தி

7th Social  Science Guide உற்பத்தி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
உற்பத்தி என்பது
அ) பயன்பாட்டை அழித்தல்
ஆ) பயன்பாட்டை உருவாக்குதல்
இ) மாற்று மதிப்பு
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) பயன்பாட்டை உருவாக்குதல்

Question 2.
பயன்பாட்டின் வகைகளாவன
அ) வடிவப் பயன்பாடு
ஆ) காலப் பயன்பாடு
இ) இடப் பயன்பாடு –
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 3.
முதன்மைக் காரணிகள் என்பன _____________
அ) நிலம், மூலதனம்
ஆ) மூலதனம், உழைப்பு
இ) நிலம், உழைப்பு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) மூலதனம், உழைப்பு

Question 4.
தொழில் முனைவோர் என அழைக்கப்படுபவர்
அ) பரிமாற்றம் செய்பவர்
ஆ) முகவர்
இ) அமைப்பாளர்
ஈ) தொடர்பாளர்
விடை:
இ) அமைப்பாளர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_____________ என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும்.
விடை:
பயன்பாடு

Question 2.
பெறப்பட்ட காரணிகள் என்பது ___________ மற்றும் __________ ஆகும்.
விடை:
முதலீடு, அமைப்பு

Question 3.
____________ என்பது நிலையான அளிப்பினை உடையது.
விடை:
நிலம்

Question 4.
____________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இடு பொருள்.
விடை:
உழைப்பு

Question 5.
____________ என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.
விடை:
மூலதனம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 2

IV. குறுகிய விடையளி

Question 1.
உற்பத்தி என்றால் என்ன?
விடை:
உற்பத்தி
நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 2.
பயன்பாடு என்றால் என்ன?
விடை:
பயன்பாடு:
ம் பயன்பாடு என்பது, நமது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும்.

Question 3.
பயன்பாட்டின் வகைகளை எழுதுக.
விடை:
பயன்பாட்டின் வகைகள்:

  • வடிவப் பயன்பாடு
  • இடப் பயன்பாடு
  • காலப் பயன்பாடு

Question 4.
உற்பத்திக் காரணிகளைக் கூறுக.
விடை:
உற்பத்திக் காரணிகள்:
முதல் நிலை உற்பத்திக் காரணிகள்:

  • நிலம்
    உமைப்பு

மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக் காரணிகள்:

  • முதலீடு
  • அமைப்பு

Question 5.
உழைப்பு வரையறு.
விடை:
உழைப்பு:
“வேலையினால் ஏற்படும் துன்பத்தைக் கருதாமல் கைமாறு எதிர்பார்த்து முழுமையாகவோ, பகுதியாகவோ உடல் அல்லது மனதால் பயன் கருதி மேற்கொள்ளும் முயற்சியே உழைப்பு”. – ஆல்பிரட் மார்ஷல்.

Question 6.
வேலை பகுப்பு முறை – வரையறு.
விடை:
வேலை பகுப்பு முறை:
ஓர் உற்பத்தியை நன்கு வரையறுக்கப்பட்ட வெவ்வேறு உட்பிரிவுகளாகப் பிரித்து அந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவினரிடம் ஒப்படைத்தலே வேலைப்பகுப்பு முறை எனப்படும்.

Question 7.
மூலதனத்தின் வடிவங்கள் யாவை?
விடை:
மூலதனத்தின் வடிவங்கள்:
பருமப்பொருள் மூலதனம் (அல்லது) பொருட்சார் மூலதனம் :
இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள்

பணி மூலதனம் (அல்லது) பணவியல் வளங்கள் :
வங்கி வைப்புகள், பங்குகள், பத்திரங்கள்

மனித மூலதனம் (அல்லது) மனிதத் திறன் வளங்கள்
கல்வி, பயிற்சி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடுகள்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 8.
தொழில் முனைவோரின் பண்புகள் மூன்றினைக் கூறுக.
விடை:
தொழில் முனைவோரின் பண்புகள்:

  • இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல்
  • உற்பத்தி அலகின் இருப்பிடத்தை தீர்மானித்தல்
  • புதுமைகளை உருவாக்குதல்

V. விரிவான விடையளி

Question 1.
உற்பத்தியின் வகைகளை விரிவாக எழுதுக.
விடை:
உற்பத்தியின் வகைகள்:
உற்பத்தியில் மூன்று வகைகள் உள்ளன. அவை

  1. முதன்மை நிலை உற்பத்தி:
    • இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாட்டு நிலை முதன்மை நிலை உற்பத்தி எனப்படும். இதில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் வேளாண்மைத்துறை உற்பத்தி’ எனவும் கூறுவர்.
    • வேளாண் தொடர்புடைய செயல்கள், வனப்பாதுகாப்பு, மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், எண்ணெய் வளம் பிரித்தெடுத்தல் ஆகியவை முதன்மை நிலை உற்பத்தி ஆகும்.
  2. இரண்டாம் நிலை உற்பத்தி:
    • முதன்மை நிலையின் உற்பத்திப் பொருட்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்தி, புதிய உற்பத்திப் பொருட்களை உருவாக்கும் செயல்பாடு இரண்டாம் நிலை உற்பத்தி எனப்படும். இதை ‘தொழில்துறை உற்பத்தி’ எனவும் கூறுவர்.
    • நான்கு சக்கர வாகனங்கள், ஆடைகள், இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு, பொறியியல் மற்றும் கட்டடப் பணிகள் இரண்டாம் நிலை உற்பத்தி ஆகும்.
  3. மூன்றாம் நிலை உற்பத்தி:
    • முதன்மை மற்றும் இரண்டாம் நிலைகளின் உற்பத்திப் பொருட்களைச் சேகரிப்பதும் பரிமாற்றம் செய்வதும் மூன்றாம் நிலை உற்பத்தியாகும். சேவைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால் ‘சேவைத்துறை உற்பத்தி’ எனவும் கூறுவர்.
    • வாணிகம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, செய்தித் தொடர்பு, சட்டம், நிர்வாகம், கல்வி, உடல்நலம் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் சேவைத்துறை நிறுவனங்கள்.

Question 2.
நிலம் என்றால் என்ன? அதன் சிறப்பியல்புகளை விவரிக்க?
விடை:
நிலம் :
‘நிலம்’ என்ற உற்பத்திக் காரணி, இயற்கை வளங்கள் அனைத்தையும் அல்லது இயற்கை மனிதனுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கும் கொடை அனைத்தையும் குறிப்பதாகும்.

நிலத்தின் சிறப்பியல்புகள்:
நிலம் இயற்கையின் கொடை:
நிலமானது மனித உழைப்பினால் உருவானதன்று. அது மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடங்குவதற்கு முன்பே தோன்றியதாகும்.

நிலத்தின் அளிப்பு நிலையானது:
நிலத்தின் அளவை மாற்ற முடியாது. நிலத்தின் மேற்பரப்பிலும் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது.

நிலம் அழிவில்லாதது:
மனிதன் உருவாக்கிய அனைத்தும் அழிந்து போகக்கூடியது. ஆனால் நிலம் அழிவில்லாதது.

நிலம் ஒரு முதன்மை உற்பத்திக் காரணி:
எந்த உற்பத்திப் பொருளுக்கும் நிலமே அடிப்படை. தொழிற்சாலைக்கான மூலப்பொருட்கள், பயிர்கள் விளைவிக்க உதவுகிறது.

நிலம் இடம் பெயரக் கூடியதன்று:
நிலத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியாது.

நிலம் ஆற்றல் வாய்ந்தது:
மனிதனால் அழிக்க முடியாத ஆற்றல்களை, நிலம் கொண்டுள்ளது. இயற்கை மாற்றங்களால் செழிப்புத்தன்மையில் மாற்றம் ஏற்படலாம். நிலத்தை முழுமையாக அழிக்க இயலாது.

நிலம் செழிப்புத் தன்மையில் மாறுபடும்:
ஓரிடத்தில் அதிக உற்பத்தி, மற்றொரு இடத்தில் குறைவான உற்பத்தி என வேறுபாடு உள்ளது.

Question 3.
வேலை பகுப்பு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை எழுதுக.
விடை:
வேலை பகுப்பு முறையின் நன்மைகள்: –

  • ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதால் ஒருவர் அந்த வேலையில் திறன் 15 மிக்கவராக மாறுகிறார்.
  • நவீன இயந்திரங்கள் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கிறது.
  • காலமும் மூலப்பொருட்களும் திறமையாகப் பயன்படுத்தப் படுகின்றன.

வேலை பகுப்பு முறையின் தீமைகள்:

  • ஒரே வேலையைத் திரும்ப திரும்பச் செய்வதால் வேலை சுவையற்றதாகவும், களிப்பற்றதாகவும் மாறுகிறது. மனிதத் தன்மையை அழிக்கிறது.
  • ஒரு பகுதி வேலையை மட்டும் மேற்கொள்வதால் குறுகிய தேர்ச்சி மட்டுமே கிடைக்கும்.
  • கைவினைப் பொருட்களின் வளர்ச்சி பாதிக்கும். ஒரு பொருளை முழுமையாக உருவாக்கிய மனநிறைவு கிடைப்பதில்லை.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 4.
மூலதனத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.
விடை:
மூலதனத்தின் சிறப்பியல்புகள்:

  • மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி
  • மனித முயற்சியால் உருவாக்கப்படுகிறது.
  • மூலதனமின்றியும் உற்பத்தி நடைபெறும்.
  • மூலதனம் அதிகம் இயங்கும் தன்மையுடையது.
  • மூலதனம் ஆக்கமுடையது. மூலதனம் பலகாலம் (ஆண்டுகள்) நீடிக்கும்.
  • மூலதனத்தை பயன்படுத்துவதன் நோக்கம் எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டும் என்பதே.

VI. செயல்திட்டம் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்களை முதன்மை , இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை உற்பத்தித் தொடர்புடைய மாதிரிப் படங்களைச் சேகரித்துவரச் செய்து, ஒட்டச் செய்தல்.

Question 2.
மாணவர்களைத் தங்கள் வீட்டின் அருகிலுள்ள வேளாண்மை செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடி நிலம் மற்றும் அதன் தொடர்புடையவற்றை புகைப்படங்கள் எடுத்துத் தாளில் ஒட்டச் செய்தல்.

VII. வாழ்வியல் திறன்கள் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்கள் தொழில் முனைவோர் பற்றி அறிந்து கொள்ள வகுப்பறையை ஒரு நிறுவனம் போல் அமைத்தல். மாணவர்கள் சிலரைத் தொழில் முனைவோர் போலவும் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவது போலவும் நடிக்கச் செய்தல். ஆசிரியரும், மாணவர்களும் சமுதாய முன்னேற்றத்திற்குத் தொழில் முனைவோரின் பங்கு பற்றிக் கலந்துரையாடுதல்.

7th Social  Science Guide உற்பத்தி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பவை __________ உற்பத்தி .
அ) முதன்மை நிலை
ஆ) இரண்டாம் நிலை
இ) மூன்றாம் நிலை
விடை:
இ) மூன்றாம் நிலை

Question 2.
மற்ற உற்பத்திக் காரணிகளோடு ஒப்பிடும்போது ____________ அழியக்கூடியதாக உள்ளது.
அ) மூலதனம்
ஆ) உழைப்பு
இ) நிலம்
விடை:
ஆ) உழைப்பு

Question 3.
விளைபொருளாகிய பருத்தி ஆடையாக உருவாக்கப்படுவது _____________ பயன்பாடு ஆகும்.
அ) காலப்
ஆ) இடப்
இ) வடிவப்
விடை:
இ) வடிவப்

Question 4.
__________ செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி.
அ) மூலதனம்
ஆ) நிலம்
இ) உழைப்பு
விடை:
அ) மூலதனம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 5.
சமுதாய மாற்றம் காணும் முகவர்
அ) தொழில் முனைவோர்
ஆ) உற்பத்தியாளர்
இ) நுகர்வோர்
விடை:
அ) தொழில் முனைவோர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பொருளாதாரத்தில் ___________ மற்றும் ____________ இரண்டும் இன்றியமையாத செயல்கள்.
விடை:
உற்பத்தி, நுகர்வு

Question 2.
_____________ பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரமாகும்.
விடை:
இந்தியப்

Question 3.
உள்ளீட்டுப் பொருள்கள் _____________ காரணியாகும்.
விடை:
உற்பத்திக்

Question 4.
____________ பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விடை:
ஆடம் ஸ்மித்

Question 5.
முதன்மை நிலை உற்பத்தி ___________ துறை உற்பத்தி எனவும் அழைக்கப்படுகிறது.
விடை:
வேளாண்மை

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 3

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
தொழில் முனைவோர் பல உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார்.
விடை:
சரி

Question 2.
நிலத்தின் மேற்பரப்பில் மாற்றம் செய்ய இயலும்.
விடை:
தவறு
சரியான கூற்று : நிலத்தின் மேற்பரப்பில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது.

Question 3.
உழைப்பு ஒரே சீரானது.
விடை:
தவறு
சரியான கூற்று: உழைப்பு ஒரே சீரானதல்ல.

Question 4.
எளிமையாகக் கூறினால் மூலதனம் என்பது செல்வத்தைக் குறிக்கும்.
விடை:
சரி

Question 5.
வேலைப் பகுப்பு முறை கைவினைப் பொருட்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
விடை:
தவறு
சரியான கூற்று: வேலைப் பகுப்பு முறை கைவினைப் பொருட்களின் வளர்ச்சியினைப் பாதிக்கிறது.

V. பின்வரும் கூற்றுக்களை ஆய்ந்து சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
கூற்று : நிலம் இயற்கையின் கொடை
காரணம் : நிலம் மனிதனால் உருவாக்கப்படாத பொருட்களை உள்ளடக்கியது.

அ) கூற்று சரி. காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறு.
விடை:
இ) கூற்றும் காரணமும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 2.
கூற்று : உற்பத்தியில் உழைப்பு என்பது ஒரு செயல்படு காரணியாகும்.
காரணம் : நிலமோ, மூலதனமோ உழைப்பு இல்லாமல் அதிக உற்பத்தியை அளிக்க இயலும்.

அ) கூற்று தவறு, காரணம் சரி
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி, காரணம் தவறு

VI. தவறான இணையைக் கண்டுபிடி.

Question 1.
1. பொறியியல் மற்றும் கட்டடம் – இரண்டாம் நிலை உற்பத்தி
2. எதிர்காலத்தேவைக்காக பொருட்கள் சேகரிப்பு – இடப் பயன்பாடு
3. நாடுகளின் செல்வம் – 1776
4. பணமூலதனம் – வங்கிவைப்புகள், பங்குகள்
விடை:
2. எதிர்காலத் தேவைக்காக பொருட்கள் சேகரிப்பு – இடப் பயன்பாடு

VII. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
வங்கி, போக்குவரத்து, பொறியியல், தகவல் தொடர்பு
விடை:
பொறியியல்

Question 2.
காற்று, நீர், மலை, ஆடை
விடை:
ஆடை

VIII. ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
பொருளாதாரத்தில் உற்பத்தி’ என்ற சொல் எதைக் குறிக்கின்றது?
விடை:
உற்பத்தி:
பொருளாதாரத்தில் உற்பத்தி என்ற சொல், மாற்றத்தக்க மதிப்புடைய பொருள்களையும் சேவைகளையும் உருவாக்குவதைக் குறிக்கிறது.

Question 2.
கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?
விடை:
கலப்பு பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் தனியார் துறை நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவது கலப்பு பொருளாதாரம் ஆகும். எடுத்துக்காட்டு: இந்தியா

Question 3.
உற்பத்திக்கு உதவுகின்ற உள்ளீட்டுப் பொருட்கள் யாவை?
விடை:
உள்ளீட்டுப் பொருட்கள்:

  • நிலம்
  • உழைப்பு
    முதலீடு

Question 4.
மார்ஷலின் கூற்றுப்படி ‘மூலதனம்’ என்றால் என்ன?
விடை:
“இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம் அளிக்கக் கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் ஆகும்” – மார்ஷல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

IX. விரிவான விடையளி

Question 1.
‘மூலதனம்’ குறித்த சிறு குறிப்பு வரைக.
விடை:
எளிமையாகக் கூறினால் மூலதனம் என்பது செல்வம். செல்வத்தை உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட செல்வம்.
வகைகள் :

  1. பருப்பொருள் மூலதனம் – இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள்
  2. பண மூலதனம் – வங்கிவைப்புகள், பங்குகள், பத்திரங்கள்
  3. மனித மூலதனம் – கல்வி, பயிற்சி, சுகாதார முதலீடுகள்

சிறப்பியல்புகள் :

  • செயலற்ற உற்பத்திக் காரணி
  • மனித முயற்சியால் உருவாக்கப்படுவது
  • அதிக இயங்கும் தன்மையுடையது
  • அளிப்பு நெகிழுந்தன்மையுடையது
  • ஆக்கமுடையது
  • பல ஆண்டுகள் நீடுக்கும் .

Question 2.
உழைப்பின் சிறப்பியல்புகள் யாவை?
விடை:

  • உழைப்பு என்பது செயற்படு காரணியாகும்.
  • ஒரே சீரானதல்ல, ஆளுக்கு ஆள் மாறுபடும்.
  • உழைப்பை உழைப்பவரிடமிருந்து பிரிக்க இயலாது.
  • உழைப்பு இடம் பெயரக் கூடியது.
  • தனியாக உழைப்பவரிடம் பேரம் பேசும் ஆற்றல் குறைவு. சங்கம் மூலம் பேரம் பேசும் நாம் ஆற்றல் அதிகம்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி

Question 3.
பயன்பாட்டின் வகைகளை விவரி.
விடை:
வடிவப் பயன்பாடு:
விளை பொருளின் வடிவம் மாற்றப்படும் பொழுது பயன்பாடு அதிகமாகிறது.
எ.கா: விளை பொருளாகிய பருத்தி ஆடையாக மாறும்போது தேவையும், பயன்பாடும் மிகுதியாகிறது.

இடப் பயன்பாடு :
ஒரு விளைபொருள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும் போது பயன்பாடு அதிகமாகிறது.
எ.கா: விளைபொருளான அரிசி தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் பொழுது தேவையும் பயன்பாடும் மிகுதியாகிறது.

காலப் பயன்பாடு:
ஒரு விளைபொருளை எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைக்கும் போது அதன் பயன்பாடு அதிகமாகிறது.
எ.கா: ஆண்டு முழுவதும் பயன்படும் உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்படுவதால் தேவையும் பயன்பாடும் மிகுதியாகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 4
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Economics Chapter 1 உற்பத்தி 5

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

7th Social  Science Guide அரசியல் கட்சிகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
இரு கட்சி முறை என்பது
அ) இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
ஆ) இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது
இ) இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை
விடை:
ஈ) இவற்றுள் எதுவும் இல்லை

Question 2.
இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
அ) ஒரு கட்சி முறை
ஆ) இரு கட்சி முறை
இ) பல கட்சி முறை
ஈ) இவற்றுள் எதுவுமில்லை
விடை:
இ) பல கட்சி முறை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 3.
அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு
அ) தேர்தல் ஆணையம்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) உச்ச நீதிமன்றம்
ஈ) ஒரு குழு
விடை:
அ) தேர்தல் ஆணையம்

Question 4.
அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன?
அ) சமயக் கொள்கைகள்
ஆ) பொது நலன்
இ) பொருளாதார கோட்பாடுகள்
ஈ) சாதி
விடை:
ஆ) பொது நலன்

Question 5.
ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?
அ) இந்தியா
ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ) பிரான்ஸ்
ஈ) சீனா
விடை:
ஈ) சீனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது __________.
விடை:
அரசியல் கட்சிகள்

Question 2.
நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும் __________ என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும்.
விடை:
தேர்தல் ஆணையம்

Question 3.
அரசியல் கட்சிகள் ____________ மற்றும் ___________ இடையே பாலமாக செயல்படுகின்றன.
விடை:
குடிமக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும்

Question 4.
ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் __________ அரசியல் கட்சி தேர்தலில் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட இயலாது.
விடை:
அங்கீகரிக்கப்படாத

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 5.
எதிர்க்கட்சித் தலைவர் _________ அந்தஸ்தில் இருப்பார்.
விடை:
கேபினட் அமைச்சர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 2

IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க

Question 1.
பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க.
அ) நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
ஆ) தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது.
இ) தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது.
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 2.
கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காரணம் : தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணம் தவறு, கூற்று சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

V. ஓரிரு வாக்கியங்களில் விடைகளை எழுதுக

Question 1.
ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் யாவை?
விடை:
ஓர் அரசியல் கட்சியின் அடிப்படைக் கூறுகள் :

  • தலைவர்
  • செயல் உறுப்பினர்கள்
  • தொண்டர்கள்

Question 2.
மூன்று வகை கட்சி முறைகளைக் குறிப்பிடுக.
விடை:
கட்சி முறைகள் :

  • ஒரு கட்சி முறை
  • இரு கட்சி முறை
  • பல கட்சி முறை

Question 3.
இரு கட்சி முறை காணப்படும் நாடுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
இரு கட்சி முறை காணப்படும் நாடுகள் :

  • பிரிட்டன் (தொழிலாளர் கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி)
  • அமெரிக்க ஐக்கிய நாடுகள் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக் கட்சி)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 4.
குறிப்பு வரைக : கூட்டணி அரசாங்கம்.
விடை:
கூட்டணி அரசாங்கம் :

  • பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை .
  • இது போன்ற நேர்வில் சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன. இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.

VI. பின்வருவனவற்றிற்கு விடை அளிக்கவும்

Question 1.
அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் ஏதேனும் நான்கினை எழுதுக.
விடை:
அரசியல் கட்சியின் செயல்பாடுகள் :

  • வழங்குதல்
  • பரிந்துரைத்தல்
  • ஏற்பாடு செய்தல்
  • ஊக்குவித்தல்
  • ஒருங்கிணைத்தல்
  • ஆட்சி அமைத்தல் ஆகியன

ஏற்பாடு செய்தல் :
அரசியல் பிரச்சாரம், பேரணி ஆகியவற்றை ஏற்பாடு செய்தல், தேர்தலில் வெற்றி பெற தேர்தல் அறிக்கையை வெளியிடுதல் ஆகியன ஓர் அரசியல் கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகும்.

பரிந்துரைத்தல் :
அரசியல் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனி நபரை பரிந்துரை செய்கிறது.

ஊக்குவித்தல் :
அரசியல் கட்சி மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் முன் வைக்கிறது.

ஆட்சி அமைத்தல் :
அரசாங்கத்தை ஏற்படுத்தி இயக்குதல், பொதுவான கொள்கையை உருவாக்குதல் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் செய்கின்றன.

Question 2.
ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது?
விடை:
அரசியல் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுதல் :
இந்தியாவில் அரசியல் கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

  1. மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6% வாக்குகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  2. ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  3. இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2 % தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

VI. உயர் சிந்தனை வினா

Question 1.
ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியமா?
விடை:
ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியம். ஏனெனில்,
அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பாகும். அரசியல் கட்சிகள் முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

அரசியல் கட்சிகள் பொதுக் கருத்துக்களை உருவாக்குவதில்லை. அவை குடிமக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்கின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 2.
தேசிய கட்சி, மாநிலக் கட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகியவற்றிற்கு சில உதாரணங்கள் தருக.
விடை:
தேசிய கட்சி : > காங்கிரஸ்

  • பாரதிய ஜனதா கட்சி
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
  • மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி

மாநிலக் கட்சி :

  • திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
  • அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)
  • ஆம் ஆத்மி கட்சி
    அசாம் கன பரிஷத்

பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி :

  • அம்ரா பங்ளி (மேற்கு வங்களாம்)
  • மக்கள் ஜனநாயக முன்னணி (திரிபுரா)
  • இந்திய ஜனநாயக கட்சி (தமிழ்நாடு)
  • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (தமிழ்நாடு)

VIII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

Question 1.
ஒரு தேர்தல் அறிக்கையை எழுதுக. (election manifesto) (நீ ஒரு கட்சித் தலைவராக இருந்தால்)

7th Social  Science Guide அரசியல் கட்சிகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
இந்தியா __________ ஆம் ஆண்டு மக்களாட்சி நாடானது.
அ) 1947
ஆ) 1949
இ) 1950
ஈ) 1952)
விடை:
இ) 1950

Question 2.
ஓர் அரசியல் கட்சி _____________ அடிப்படை ககொண்ட
அ) 3
இ) 5
ஈ) 6
பொன்
விடை:
அ) 3

Question 3.
அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளில் ஒன்று _________
அ) தொழிலாளர் கட்சி
ஆ) காங்கிரஸ் கட்சி
இ) பழமை வாதக் கட்சி
ஈ) ஜனநாயகக் கட்சி
விடை:
ஈ) ஜனநாயகக் கட்சி

Question 4.
ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிக்க அக்கட்சி குறைந்தபட்சம் __________ உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்
அ) 50
ஆ) 100
இ) 500
ஈ) 1000
விடை:
ஆ) 100

Question 5.
எதிர்க்கட்சித் தலைவர் ___________ அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.
அ) முதலமைச்சர்
ஆ) கேபினட் அமைச்சர்
இ) பிரதமர்
ஈ) துணை அமைச்சர்
விடை:
ஆ) கேபினட் அமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
துடிப்பான ____________ நாட்டிற்கு ஒரு வலிமையான அரசியல் கட்சி அவசியம்.
விடை:
மக்களாட்சி

Question 2.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை இடம் ___________ ல் அமைந்துள்ளது.
விடை:
புதுதில்லி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 3.
____________ ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அல்லது ஒதுக்கப்படாத சின்னங்கள் என இருவகை உண்டு.
விடை:
1968

Question 4.
_____________ சின்னங்களை வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது.
விடை:
விலங்குகளின்

Question 5.
___________ மற்றும் ___________ தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு வாய்ந்தது ஆகும்.
விடை:
சுதந்திரமான, நியாயமான

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 3

IV. சரியா தவறா என குறிப்பிடுக

Question 1.
மக்களாட்சியில் மக்கள் எந்த விஷயங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.
விடை:
சரி

Question 2.
பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது.
விடை:
சரி

Question 3.
விதிவிலக்காக யானை மற்றும் சிங்கம் ஆகிய சின்னங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
விடை:
சரி

Question 4.
சிவசேனா மகராஷ்மரத்தில் ஒரு மாநிலக் கட்சி
விடை:
சரி

Question 5.
ஸ்வீடன் இரு கட்சி முறை கொண்டது.
விடை:
தவறு
சரியான கூற்று : ஸ்வீடன் பலகட்சி முறை கொண்டது

V. தவறான இணையைக் கண்டுபிடி

1. ஒதுக்கப்பட்ட சின்னங்கள் – அங்கீகரிக்கப்பட்ட கட்சி
3. தனித்துவமான சின்னங்கள் – இந்திய உச்சநீதி மன்றம்
விடை:
3) தனித்துவமான சின்னங்கள் – இந்திய உச்சநீதி மன்றம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

VI. பொருந்தாதைக் கண்டுபிடி

Question 1.
பிரான்ஸ், கொரியா, ஸ்வீடன், நார்வே
விடை:
கொரியா

Question 2.
திமுக, அதிமுக, பிஜேபி, மதிமுக
விடை:
பிஜேபி

VII. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க

Question 1.
எது/ எவை சரியான கூற்று கூற்றுகள்.
அ) கூட்டாட்சி அமைப்பை பின்பற்றும் நாடுகளில் இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன.
ஆ) கியூபாவில் ஒரு கட்சி முறை நடைமுறையில் உள்ளது.
இ) நார்வே பல கட்சி முறையைப் பின்பற்றுகிறது.
ஈ) தேர்தல் குழு சின்னங்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படுகிறது.
விடை:
அனைத்தும் சரி

Question 2.
கூற்று : சில கட்சிகள் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கின்றன.
காரணம் : பலகட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணம் தவறு, கூற்று சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

VIII. ஓரிரு வாக்கியங்களில் குறுகிய விடையளி

Question 1.
ஓர் அரசியல் கட்சியை தோற்றுவிப்பது எப்படி?
விடை:
அரசியல் கட்சியை தோற்றுவித்தல் : ஓர் அரசியல் கட்சி

  • இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
  • குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வாக்காளர் அட்டையை கொண்டிருத்தல் வேண்டும்.
  • கட்சி அமைப்பு குறித்த ஆவணத்தை கொண்டிருத்தல் வேண்டும்.

Question 2.
தேர்தல் ஆணையம் பற்றி உனக்கு என்ன தெரியும்?
விடை:
தேர்தல் ஆணையம் :

  1. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்துவதற்கு அதிகாரம் கொண்ட ஒரு சுதந்திரமான சட்டப்படியான அரசியலமைப்பு ஆகும்.
  2. இதன் தலைமை இடம் புதுதில்லியில் அமைந்துள்ளது.

Question 3.
‘சுயேட்சை வேட்பாளர்’ – விளக்குக.
விடை:
சுயேட்சை வேட்பாளர் : சுயேட்சை வேட்பாளர் என்பவர் எந்தக் கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர் ஆவார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள்

Question 4.
‘தேர்தல் குழு சின்னங்கள்’ – சிறுகுறிப்பு வரைக.
விடை:
தேர்தல் குழு சின்னங்கள் :
1968 ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி, ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் ஒதுக்கப்படாத சின்னங்கள் என்று இரண்டு வகை உள்ளது.

ஒதுக்கப்பட்ட சின்னம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு மட்டுமானது என பொருள்படும்.

ஒதுக்கப்படாத சின்னம் என்பது அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னம் ஆகும்.

IX. விரிவான விடையளி

Question 1.
எப்பொழுது ஓர் அரசியல் கட்சி பிராந்திய / மாநிலக் கட்சி என அங்கீகரிக்கப்படுகிறது?
விடை:
ஓர் அரசியல் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறுதல் :

  • இந்திய தேர்தல் ஆணையம் ஓர் அரசியல் கட்சியை மாநில (பிராந்திய) கட்சியாக அங்கீகரிப்பதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
  • மாநில சட்டப் பேரவைக்கான தேர்தலில் செல்லத்தக்க வாக்குகளில் குறைந்தபட்சம் 6% வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும்.
  • 25 தொகுதிகளுக்கு ஒரு மக்களவைத் தொகுதி அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  • மாநில சட்டமன்ற மொத்த தொகுதிகளில் 3% தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

Question 2.
‘ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு குறித்து விளக்குக.
விடை:
எதிர்க்கட்சி :

  • தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சி என அழைக்கப்படுகிறது.
  • மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாய்ந்த எதிர்க்கட்சி மிகவும் அவசியம். அது ஆளும் கட்சி போன்றே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
  • அது அரசாங்கத்தின் கொள்கைகள், அறிமுகப்படுத்தப்படும் சட்ட மசோதாக்களை தீவிரமாக விமர்சிக்கும்.
  • எதிர்க்கட்சி, அரசின் தவறான கொள்கைகள் மற்றும் தோல்விகளை வெளிப்படுத்தும். ஆளுங்கட்சியின் தன்னிச்சையான போக்கினை கட்டுப்படுத்தும்.
  • எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தைக் கொண்டிருப்பார்.

Question 3.
வேறுபடுத்துக: தேசியக்கட்சி மற்றும் பிராந்தியக் கட்சி. தேசியக் கட்சி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 4

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 2 அரசியல் கட்சிகள் 5

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Civics Chapter 1 சமத்துவம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Civics Chapter 1 சமத்துவம்

7th Social  Science Guide சமத்துவம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை ?
அ) பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை
ஆ) தேர்தலில் போட்டியிடும் உரிமை
இ) அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்
ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்
விடை:
ஈ) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்

Question 2.
கீழ்க்க ண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?
அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது.
ஆ) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்
இ) சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
ஈ) சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு
விடை:
அ) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 3.
இந்தியாவில் ளளககம் தான் னைத்து கடும் உரிமை வமங்கப்ப வயது ____________
அ) 21
ஆ) 18
இ) 25
ஈ) 31 –
விடை :
ஆ) 18

Question 4.
சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
அ) இயற்கை சமத்துவமின்மை
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
இ) பொருளாதார சமத்துவமின்மை
ஈ) பாலின சமத்துவமின்மை
விடை:
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

Question 5.
சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு
அ) 1981
ஆ) 1971
இ) 1991
ஈ) 1961
விடை:
ஆ) 1971

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
குடிமை சமத்துவம் ______________ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.
விடை:
சட்டத்து

Question 2.
____________ முதல் ____________ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.
விடை:
14, 18

Question 3.
தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ____________ உரிமை ஆகும்.
விடை:
அரசியல்

Question 4.
சமத்துவம் என்பது முதலாவதாக ____________ இல்லாததாகும்.
விடை:
சமூக அறிவியல்

III. குறுகிய விடையளி

Question 1.
சமத்துவம் என்றால் என்ன?
விடை:
சமத்துவம் :
சமத்துவம் என்பது ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பால், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு, வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் முதலியவற்றை உறுதி செய்தலாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 2.
பாலின சமத்துவம் ஏன் தேவையானது?
விடை:
பாலின சமத்துவம் தேவையானது. ஏனெனில்:

பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் ஆண்களைக் காட்டிலும் பலவீனமானவர்கள் என்பதோடு சமூகத்தில் ஆண்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துள்ளனர். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்.

பாலியல் சமத்துவம் என்பது ஆண் பெண் இருவரும் வாய்ப்புகள் மற்றும் வளங்களை பெறுதல் ஆகும்.

Question 3.
குடிமை சமத்துவம் என்றால் என்ன ?
விடை:
குடிமை சமத்துவம் :
அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும். குடிமக்களிடையே எந்த பாகுபாடும் இருத்தல் கூடாது. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம்.

IV. விரிவான விடையளி

Question 1.
சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.
விடை:
சமத்துவத்தின் முக்கியத்துவம் :

  • சமத்துவம் பல நூறு ஆண்டுகளாக மனித சமூகத்தை ஊக்குவித்து வழிநடத்திய ஆற்றல் வாய்ந்த நீதி மற்றும் அரசியல் கோட்பாடாகும்.
  • சமத்துவம் என்ற கோட்பாடு மனித இனம் அதனுடைய சாதி, நிறம், பால், இனம் அல்லது தேசியம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களும் சமமான மதிப்புள்ளவர்கள் என்ற கோட்பாட்டை அறைகூவுகிறது.
  • மக்களாட்சிக் கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம் ஆகியவை நீதியின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படும் போது மட்டுமே பொருளுடையதாக இருக்கும்.
  • குடிமை சமத்துவம், சமூக சமத்துவம், அரசியல் சமத்துவம், பாலின சமத்துவம் ஆகியவற்றைப் பெற வேண்டும்.
  • சமத்துவம் தனிமனித மாண்பினை தக்க வைக்கிறது. மேலும் சமூகம் நல்ல முறையில் இயங்குவதற்கு சமத்துவம் ஒரு முக்கியமான கோட்பாடாகும்.

Question 2.
அரசியல் சமத்துவம் என்றால் என்ன?
விடை:
அரசியல் சமத்துவம் :
இந்தியா தன்னுடைய குடிமக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதியளிக்கிறது. அரசியல்

உரிமைகள் :
வாக்களிக்கும் உரிமை – பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளும் உரிமை – அரசை விமர்சனம் செய்யும் உரிமை குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.

  • இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 25 வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
  • மக்கள் அரசை விமர்சிக்கலாம். மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கலாம்.
  • நாட்டின் பிரதமரின் வாக்கும், ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 3.
இந்திய அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை எவ்வாறு பாதுகாக்கிறது?
விடை:
இந்திய அரசியலமைப்பில் சமத்துவம் :
உலகின் அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்புகளும் அதன் மக்களுக்கு சமத்துவத்தை உறுதி அளித்துள்ளன. இதே போன்று இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14

  • 18 மூலம் சமத்துவத்தை அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உத்தரவாதம் அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 15 – பாகுபாட்டை தடை செய்கிறது.
  • சட்டப்பிரிவு 16 – பொது வேலை வாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது.
  • சட்டப்பிரிவு 17 – தீண்டாமையை ஒழிக்கிறது.
  • சட்டப்பிரிவு 18 – பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலை தடை செய்கிறது.
    சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும்
  • சட்டத்தின்படி சமமான பாதுகாப்பு என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 ல் மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.

V. உயர் சிந்தனை வினா

Question 1.
பள்ளிகளில் சமத்துவமின்மையை நாம் எவ்வாறு அகற்ற முடியும்?
விடை:
பள்ளிகளில் சமத்துவமின்மையை அகற்றுதல் :
திறன் குழுக்கள் குறித்த மறு சிந்தனை; வகுப்பறையில் மாணவர்களின் பல்வேறு குழுக்கள் அமைத்தல் பற்றி முயற்சி செய்தல், முன்னரே கருத்துருவாக்கம் செய்யப்பட்ட திறன் அடிப்படையில் தனியான செயல்பாடுகளை உருவாக்குவதற்குப் பதில் மாணவர்கள் பல்வேறு பயிற்சிகள் மூலமாக பல நிலைகளிலான சவால்களை மேற்கொள்ளுதல்.

திறந்த முடிவுகளுடன் கூடிய அதிக செயல்பாடுகளை கொடுப்பதன் மூலம் பல்வேறு அளவிலான திறன்களை ஈர்த்து பிரச்சனைக்கு தீர்வுகாண முயலுதல்.

மாணவர்களை இணைந்து செயல்பட அனுமதித்தல். ஒரு மாணவன் எழுதுவதில் திறமை கொண்டிருக்கலாம். மற்றொரு மாணவன் அதிக படைப்பாற்றல் மிக்கவராய் இருக்கலாம். ஒருவருக்கொருவர் உதவி தங்களையே வியந்து நோக்க உதவுதல்.

மொழித்திறனை சரிபார்க்கவும். ஆசிரியர் மாணவர்களை விவரிக்கும் மற்றும் வகுப்பறையில் மாணவர்கள் தங்களுக்குள்ளே பயன்படுத்தும் மொழியையும் கவனிக்கவும்.

ஏற்ற பாடச் செயல்பாடுகளை உருவாக்கவும், எல்லா நேரமும், எல்லா மாணவர்களுக்கும் ஏற்ற செயல்பாடுகளை உருவாக்குவது இயலாது. ஆனால் மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

உடனடி தண்டனைகளை தவிர்க்கவும். தண்டனைகளுக்குப் பதிலாக எங்கே உரையாடல் மூ லம் தீர்வுகாண இயலும் என்பதைப் பரிசீலனை செய்யவும்.

உறவுகளைப் பலப்படுத்துவோம். வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் உறவு மற்றும் மாணவர்களுக்கிடையிலான உறவு மிகவும் அவசியம். இது மாணவர்களை, எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு நபராக, நடுநிலை திறன் கொண்ட ஒரு குழந்தையாக அனுமதிக்கிறது.

VI. வாழ்வியல் திறன்

Question 1.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 2

7th Social  Science Guide Chapter 1 சமத்துவம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
____________ மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மை.
அ) பொருளாதாரம்
ஆ) நிறம்
இ) உயரம்
ஈ) திறன்
விடை:
அ) பொருளாதாரம்

Question 2.
ஏ.வி. டைசி ____________ சட்ட வல்லுநர்.
அ) இந்திய
ஆ) பிரிட்டிஷ்
இ) அமெரிக்க
ஈ) பிரெஞ்சு
விடை:
ஆ) பிரிட்டிஷ்

Question 3.
___________ என்பது அரசியல் சமத்துவம் அல்ல.
அ) வாக்குரிமை
ஆ) பொது அலுவலில் பங்கேற்பு
இ) சுயமரியாதை
ஈ) அரசை விமர்சனம் செய்தல்
விடை:
இ) சுயமரியாதை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 4.
இந்தியாவில் ____________ வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
அ) 18
ஆ) 21
இ) 25
ஈ) 30
விடை:
இ) 25

Question 5.
____________ பாகுபாட்டை தடை செய்கிறது.
அ) சட்டப்பிரிவு 14
ஆ) சட்டப்பிரிவு 15
இ) சட்டப்பிரிவு 16
ஈ) சட்டப்பிரிவு 17
விடை:
ஆ) சட்டப்பிரிவு 15

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இயற்கை மனிதனை சமமாக __________
விடை:
உருவாக்கவில்லை

Question 2.
சமத்துவம் மனித சமூகத்தை வழிநடத்திய ஆற்றல் வாய்ந்த ___________ மற்றும் ___________ கோட்பாடாகும்.
விடை:
நீதி, அரசியல்

Question 3.
சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை, ஏ.வி. டைசி என்ற ___________ சட்ட வல்லுநர் வாதுரைத்தார்.
விடை:
பிரிட்டிஷ்

Question 4.
____________ ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
விடை:
1952

Question 5.
___________ மற்றும் ____________ என்பது மக்களாட்சியின் தூண்கள் ஆகும்.
விடை:
சமத்துவம், நீதி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 3

IV. சரியா தவறா என குறிப்பிடுக

Question 1.
சுதந்திரம் மற்றும் சமத்துவம் மக்களாட்சிக் கோட்பாடுகளாகும்.
விடை:
சரி

Question 2.
குடிமை சமத்துவம் என்பது சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம்.
விடை:
சரி

Question 3.
பாலின சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
விடை:
சரி

Question 4.
மனித மாண்பு என்பது சுயமரியாதை ஆகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 5.
பாலின சமத்துவம் என்பது ஐ.நா. நிறுவனத்தின் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் ஐந்தாவது ஆகும்.
விடை:
சரி

V. தவறான இணையைக் கண்டுபிடி

Question 1.
1) சமத்துவம் – மரியாதை
2) சமத்துவம் – மனித மாண்பு
3) சமத்துவம் – ஏழைகளுக்கல்ல
விடை:
3) சமத்துவம் – ஏழைகளுக்கல்ல

VI. பொருந்தாதைக் கண்டுபிடி

Question 1.
சமூகம், குடிமை, மதம் சார்ந்த, அரசியல்.
விடை:
மதம் சார்ந்த

Question 2.
ராம்மோகன் ராய், M.G. ரானடே, E.C. வித்யாசாகர், நேரு.
விடை:
நேரு

VII. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
“சமத்துவம்” – வரையறு. (பேராசிரியர் லாஸ்கி கூற்றுப்படி)
விடை:
பேராசிரியர் லாஸ்கி அவர்களது கூற்றுப்படி “சமத்துவம்” :
“சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல, வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும். முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும் இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கம் வழங்கப்படுவதும் ஆகும்.”

Question 2.
இந்திய வாக்குரிமை குறித்து நீ என்ன அறிந்துள்ளாய்?
விடை:
இந்திய வாக்குரிமை :

  • இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது
  • 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம்

Question 3.
பெண்கள் சம அந்தஸ்து பெறுவதற்கு கடினமாக பணியாற்றிய சமூக செயல்பாட்டாளர்கள் சிலரைக் குறிப்பிடுக.
விடை:
பெண்கள் சம அந்தஸ்து பெற கடினமாகப் பணியாற்றியவர்கள் :

  • ராஜாராம் மோகன்ராய்
  • ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  • தயானந்த சரஸ்வதி
  • M.G. ரானடே

VII. விடையளிக்கவும்

Question 1.
சமத்துவத்தை எவ்வாறு மேம்படுத்துவாய்?
விடை:
நாம் சமத்துவத்தை பின்வருமாறு மேம்படுத்தலாம்.

  • அனைவரையும் நியாயமாக நடத்துதல்.
  • அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டினை உருவாக்குதல்.
  • வாய்ப்புகள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்துதல்.
  • முழு ஆற்றலையும் மேம்படுத்த ஊக்குவித்தல்.
  • கல்வி .

Question 2.
விளக்குக :
அ) மனித மாண்பு
ஆ) வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம்.
விடை:
அ) மனித மாண்பு :

  • மனித மாண்பு என்பது சுயமரியாதை ஆகும். மனித மாண்பு என்பது முக்கியமான மனித உரிமை என்பதோடு இதிலிருந்தே அனைத்து அடிப்படை உரிமைகளும் தோன்றுகின்றன.
  • மாண்பு என்பது கௌரவமான மேலான சிறந்த தகுதி ஆகும். ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் மதிப்பு மிக்க ஓர் உறுப்பினர் என்பதை கருதுதல் வேண்டும்.

ஆ) வாய்ப்பு மற்றும் கல்வியில் சமத்துவம் :

  • அனைத்து தனி மனிதர்களும் கல்வியினை பெறுவதற்கு வாய்ப்புகளை கொண்டிருத்தல் வேண்டும். அவர்களது ஆளுமையை மேம்படுத்த வாய்ப்புகள் பெற்றிருத்தல் வேண்டும்.
  • சமூகத்தில் நாம் சமமாக நடத்தப்படுவதற்கு நமக்கு சமத்துவம் தேவைப்படுகிறது. நாம் சமமாக நடத்தப்பட்டால் மதிப்பையும் மாண்பையும் பெறுவோம்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Civics Chapter 1 சமத்துவம் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

7th Social  Science Guide மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
காக்கச இனத்தை _____________ என்றும் அழைக்கலாம்.
அ) ஐரோப்பியர்கள்
ஆ) நீக்ரோய்டுகள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை:
அ) ஐரோப்பியர்கள்

Question 2.
_____________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்.
அ) காக்கச இனம்
ஆ) நீக்ரோக்கள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை:
இ) மங்கோலியர்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
உலக மக்கள் தொகை தின ______________ ஆகும்.
அ) தொகை 1
ஆ) ஜூன் 1
இ) ஜூலை 11
ஈ) டிசம்பர் 2
விடை:
இ) ஜூலை 11

Question 4.
கிராமப்புறக் குடியிருப்புகள் ____________ அருகில் அமைந்துள்ளது.
அ) நீர்நிலைகள்
ஆ) மலைப் பகுதிகள்
இ) கடலோரப் பகுதிகள்
ஈ) பாலைவனப் பகுதிகள்
விடை:
அ) நீர்நிலைகள்

Question 5.
அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம்
2) மீப்பெருநகரம்
3) தலைநகரம்
4) இணைந்த நகரம்

அ) 4, 1, 3, 2
ஆ) 1, 3, 4, 2
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 1, 2, 4
விடை:
ஆ) 1, 3, 4, 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தென் ஆப்பிரிக்காவின் ___________ பாலைவனத்தில் புஷ்மென்கள் காணப்படுகிறது.
விடை:
கலஹாரி

Question 2.
மொழியின் பங்கு என்பது __________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்.
விடை:
மொழிக்

Question 3.
____________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
விடை:
நகர

Question 4.
_____________ நகரங்கள் பொதுவாக கிராமப்புற நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்.
விடை:
செயற்கைகோள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
______________ குடியிருப்பானது வழிபாட்டுத்தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்.
விடை:
யாத்திரைக்

III. அ. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 2

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 4

IV. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (✓) செய்யவும்

Question 1.
கூற்று : உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன.
காரணம் : மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : பழனி தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
காரணம் : அங்கு இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

V. பொருந்தாதை வட்டமிடுக.

Question 1.
மீன்பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல்
விடை:
வங்கி அலுவல்

Question 2.
இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை
விடை:
கங்கை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம்
விடை:
காஞ்சிபுரம்

VI. கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
இனங்களின் வகைகள்யாவை?
விடை:
இனங்களின் வகைகள் : > காக்க சாய்டு (ஐரோப்பியர்கள்) > நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்) > மங்கோலாய்டு (ஆசியர்கள்) > ஆஸ்ட்ரலாய்டு (ஆஸ்திரேலியர்கள்)

Question 2.
மொழி என்றால் என்ன?
விடை:
மொழி:
சமுதாய அமைப்பிற்கு மொழி கலாச்சாரத்தைப் பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர் மற்றாருவருடன் தொடர்பு கொள்வதற்கு (எழுத்து வடிவம் அல்லது ஒலி வடிவம்) பயன்படுத்தப்படுகிறது.

Question 3.
குடியிருப்பு வரையறு.
விடை:
குடியிருப்பு:
குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம்மற்றும்பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றனர்.

Question 4.
நகர்ப்புற குடியிருப்புகள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
விடை:
நகர்ப்புற குடியிருப்புகள் வகைப்படுத்தலின் அடிப்படை

  • மக்கள் தொகையின் அளவு
  • தொழில் அமைப்பு
  • நிர்வாகம்

Question 5.
பொலிவுறு நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
பொலிவுறு நகரம் :
நகர்ப்புறப் பகுதியில் உள் கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாகக் கிடைக்கக் கூடிய சந்தை உள்ள இடங்களே பொலிவுறு நகரமாகும்.

தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.

VII. காரணம் கூறுக

Question 1.
மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
விடை:
மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
ஏனெனில்

  • மும்பை 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான மிகப்பெரிய நகரமாகும்.
  • மும்பை ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 2.
இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது.
விடை:
இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது.
ஏனெனில்

  • இமயமலைப் பகுதியில் காலநிலை, மலைப்பாதை, அடர்ந்த காட்டுப் பகுதி, புல்வெளிகள், தீவிர சாகுபடி பிரதேசங்கள் காணப்படுகிறது.
  • வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுகிறது.

VIII. வேறுபடுத்துக.

Question 1.
மொழி மற்றும் மதம் – மொழி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 5

Question 2.
நீக்ரோ இனம் மற்றும் மங்கோலிய இனம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 6

Question 3.
பெருநகரம் மற்றும் நகரம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 7

Question 4.
நகர்ப்புற குடியிருப்பு மற்றும் கிராமப்புறக் குடியிருப்பு
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 8

IX. பத்தியளவில் விடையளி

Question 1.
நான்கு முக்கிய மனித இனங்களைப் பற்றி விவரிக்கவும்.
விடை:
நான்கு முக்கிய மனித இனங்கள்:
ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களைக் காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள் மனித இனம் ஆகும்.

காக்கசாய்டு:

  • ஐரோப்பிய இனத்தவர்கள்
  • யூரேஷியாவில் காணப்படுகிறார்கள்.
  • வெள்ளை நிறத்தோல், அடர்பழுப்பு நிறக் கண்கள், அலை போன்ற முடி, நீளமான மூக்கு உடையவர்கள்.

நீக்ராய்டு:

  • ஆப்பிரிக்க இனத்தவர்கள்,
  • ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் காணப்படுகிறார்கள்.
  • கருமை நிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, தடித்த உதடுகள் கொண்டவர்கள்.

மங்கோலாய்டு:

  • ஆசிய அமெரிக்க இனத்தவர்கள்
  • ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.
  • வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தோல் , நீளமான முடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை, மத்திமமான மூக்கு உடையவர்கள்.

ஆஸ்ட்ரலாய்டு:

  • ஆஸ்திரேலிய இனத்தவர்கள்.
  • ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறார்கள்.
  • அகலமான மூக்கு, சுருள் முடி, கருப்புநிறத் தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்கள், ‘குட்டையானவர்கள்.

Question 2.
கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?
விடை:
கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள்:

  • இயற்கையான நிலத்தோற்றம்
  • உள்ளூர் தட்பவெப்பநிலை
  • மண்வளம் மற்றும் நீர்வளங்கள்
  • சமூக நிறுவனங்கள்
  • பொருளாதார நிலை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் யாவை? ஏதாவது மூன்றினைப் பற்றி விரிவாக எழுதவும்.
விடை:
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள்:
கிராமப்புறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் நேர்கோட்டு, செவ்வகமான, வட்டமான, நட்சத்திர வடிவமான கிராமம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நேர்கோட்டு குடியிருப்பு:
சாலைகள், இருப்புப்பாதைகள், ஆறு அல்லது கால்வாய், பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு நேர்கோட்டு குடியிருப்பு எனப்படும்.

எடுத்துக்காட்டு :
இமயமலை, ஆல்ப்ஸ், ராக்கி மலைத்தொடர்.

செவ்வக வடிவக் குடியிருப்பு:
இவ்வகைக் குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் ஒன்றையொன்று நேர்கோணத்திலும் சந்தித்துக் கொள்ளும். செவ்வக வடிவக் குடியிருப்புகள் சமவெளிப் பகுதிகள், மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டு : சட்லஜ்
வட்டவடிவக் குடியிருப்பு:
ஒரு மையப்பகுதியை சுற்றி வட்ட வடிவமாகக் காணப்படும் குடியிருப்புகளை வட்டவடிவக் குடியிருப்புகள் என்கிறோம். இவை ஏரிகள், குளங்களைச் சுற்றிக் காணப்படும்.

X. செயல்முறைகள்

ஆராய்க
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 9
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 10

7th Social  Science Guide மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
____________ பொதுவாக ஆசிய அமெரிக்க இனத்தவர்களாவார்.
அ) காக்கசாய்டு
ஆ) நீக்ராய்டு
இ) மங்கோலாய்டு
ஈ) ஆஸ்ட்ரலாய்டு
விடை:
இ) மங்கோலாய்டு

Question 2.
______________ ஒரு நாடோடிகள் மதம்.
அ) இந்து மதம்
ஆ) ஷாமானிஸம்
இ) இஸ்லாம்
ஈ) ஷிண்டோயிசம்
விடை:
ஆ) ஷாமானிஸம்

Question 3.
இந்திய அரசால் __________ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அ) 18
ஆ) 20
இ) 22
ஈ) 24
விடை:
இ) 22

Question 4.
மிகப்பெரிய நகரம் ஒன்றுக்கு எடுத்துக்காட்டு ___________
அ) டோக்கியோ
ஆ) கோயம்புத்தூர்
இ) சூரத்
ஈ) பரிதாபாத்
விடை:
அ) டோக்கியோ

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
தமிழ்நாட்டில் _____________ முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
அ) 12
ஆ) 14
இ) 16
ஈ) 18
விடை:
அ) 12

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது __________ எனப்படும்.
விடை:
புலம்பெயர்வு

Question 2.
_____________ அமைப்பிற்கு மொழி ஒரு பிரதான கருவியாகும்.
விடை:
சமுதாய

Question 3.
குழுமிய குடியிருப்பை ___________ எனவும் அழைக்கலாம்.
விடை:
மையக் குடியிருப்பு

Question 4.
_____________ தொழிலுக்கு ஏற்ப ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும் கடற்கரைச் சமவெளிகளையும் வாழ்வதற்கு ஏற்ற இடமாகக் கருதுகிறார்கள்
விடை:
விவசாய

Question 5.
ஹஜிப்பூர் ஒரு __________ நகரம்.
விடை:
செயற்கைக்கோள்

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 11
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 12

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
காக்கசாய்டு என்பவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள்.
விடை:
சரி

Question 2.
ஆஸ்திரேலியர்கள் அகலமான மூக்கு, கருப்புநிறத் தோல் உடையவர்கள்.
விடை:
சரி

Question 3.
மதம் ஒரு குழுவின் அடையாளம்.
விடை:
சரி

Question 4.
பண்டைய வீடுகளில் பெரிய முற்றம், திறந்த வெளிக்காற்றுப் பகுதிகள் இருந்தன.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
கல்கத்தா ஒரு மீப்பெரு நகரமாகும்.
விடை:
சரி

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானதை தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : பல்வேறு வகையான மரபு வழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம் வகைப்படுத்தப்படுகிறது.
காரணம் : மனித இனத்தை மனித உயிர்களுக்குள்ளே பல்வேறு குழுக்களாக வரையறுத்துள்ளனர்.

அ) கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு காரணம் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : கேரள கடற்கரையோரத்தில் வறண்ட (அல்லது) உயர்நிலைக் குடியிருப்புகள் காணப்படுகின்றன.
காரணம் : நீர் ஆதாரங்களாலும் நிலத்தோற்ற அமைப்பாலும் உயர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.

அ) கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

VI. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
சிறு கிராமம், கிராமம், இணைந்த நகரம், சிறு சந்தை
விடை:
இணைந்த நகரம்

Question 2.
பஞ்சாபி, ராஜஸ்தானி, குஜராத்தி, கன்னடா
விடை:
கன்னடா

VII. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

1. ஜுடாய்ஸம் – சினகாக்
2. சமணம் – அகியாரி
விடை:
2. சமணம் – அகியாரி

VIII. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
திராவிட அரசுகளையும், திராவிட மொழிகளையும் பெயரிடு.
விடை:
திராவிட அரசுகள் (மூவேந்தர்கள்):

  • சேரர்
  • சோழர்
  • பாண்டியர்

திராவிட மொழிகள் :

  • தமிழ்
  • தெலுங்கு
  • கன்னடம்
  • மலையாளம்
  • துளு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 2.
‘யாத்திரைக் குடியிருப்பு’ – சிறுகுறிப்பு வரைக..
விடை:
யாத்திரைக் குடியிருப்பு:
கதை யாத்திரைக் குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் (அல்லது) மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும்.
எ.கா: தமிழ்நாட்டில் உள்ள பழனி – முருகன் கோயில்.

Question 3.
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் – விளக்குக.
விடை:
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் :
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
எ.கா: பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சிந்து, கங்கை சமவெளிகள்.

Question 4.
சிதறிய குடியிருப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
சிதறிய குடியிருப்புகள் :

  • கோசி மலைப் பாதையின் வடக்குப் பகுதி
  • கங்கைச் சமவெளி
  • ராஜஸ்தானின் பாலைவனப் பகுதி
  • இமயமலை மற்றும் நீலகிரியின் மலையடிவாரம்.

Question 5.
‘மிகப்பெரிய நகரம்’ குறித்து குறிப்பு வரைக.
விடை:
மிகப்பெரிய நகரம் :

  • 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும். மிகப்பெரிய நகரம் ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும்.
  • கேன்டன், டோக்கியோ, டெல்லி, மும்பை முதலியவை மிகப்பெரு நகரங்களாகும்.

IX. விரிவான விடையளி

Question 1.
‘இந்திய மொழிகள் ‘ குறித்து எழுதுக.
விடை:

  1. இந்தியா பலவகையான மொழிகளைக் கொண்ட நாடு. இந்திய மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
  2. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி இருந்தாலும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 97% மக்களால் இந்த அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் பேசப்படுகின்றன.
  3. தென்னிந்தியாவின் முக்கிய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். இவை திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகின்றன.

Question 2.
“செயற்கைக் கோள் நகரம்” குறித்து எழுதுக.
விடை:
செயற்கைக் கோள் நகரம்:

  • அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட முக்கியமான பெரு நகரங்களில் நகர்ப்புறங்களுக்கு வெளியே வடிவமைக்கப்படும் வீடுகளே செயற்கைக் கோள் நகரமாகும்.
  • பொதுவாக செயற்கைக் கோள் நகரங்கள் கிராம, நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும். இந்தியாவின் அநேக செயற்கைக் கோள் நகரங்கள் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டதாகவே உள்ளது.
  • செயற்கைக் கோள் நகரங்கள் சில நேரங்களில் பீகாரின், ரோஷ்டாஸ்மாவட்டத்தில் உள்ள டெஹ்ரி மற்றும் டால்மியா நகர் போல் இரட்டை நகரங்களாக காணப்படும்.
  • இந்நகரங்கள் சாலைகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.
    எ.கா: பாட்னா, பரோவ்னி, வாரணாசி, ஹஜிப்து

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
விளக்குக: “நீர் நிலைக் குடியிருப்புகள் மற்றும் வறண்ட (அல்லது) உலர்நிலைக் குடியிருப்புகள்
விடை:
நீர் நிலைக் குடியிருப்புகள்:

  • இவ்வகையான குடியிருப்புகளை அவற்றின் பெயரைக் கொண்டே (நீர் நிலை) அறிந்து கொள்ள முடியும்.
  • நீர் நிலைகளான கிணறுகள், ஏரி, குளம், ஆறு, குட்டைகள் ஆகியவற்றை ஒட்டிய இடங்களின் அடைந்திருப்பதே நீர்நிலைக் குடியிருப்புகள் ஆகும்.

வறண்ட /உலர்நிலைக் குடியிருப்புகள் :

  • வறண்ட இடம் என்பது சுற்றியுள்ள நிலத்தைக் காட்டிலும் சற்று உயரத்தில் அமைந்துள்ள இடமாகும்.
  • நீர் ஆதாரங்களாலும், நிலத்தோற்ற அமைப்பாலும் உலர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.
  • இந்நிலையில் கேரளக் கரையோரத்திலும் மற்றும் டெல்டா கரையோரப் பகுதிகளிலும் இவ்வகையான குடியிருப்புகள் காணப்படுகின்றன.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 13

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

7th Social  Science Guide நிலத்தோற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் ____________ ஆகும்.
அ) உட்பாயத் தேக்கம்
ஆ) வண்டல் விசிறி
இ) வெள்ளச் சமவெளி
ஈ) டெல்டா
விடை:
ஆ) வண்டல் விசிறி

Question 2.
குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றின் குறுக்காக அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) பெண்ணாறு
இ) சிற்றாறு
ஈ) வைகை
விடை:
இ) சிற்றாறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 3.
பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ______________ ஆகும்.
அ) சர்க்
ஆ) அரெட்டுகள்
இ) மொரைன்
ஈ) டார்ன் ஏரி
விடை:
இ) மொரைன்

Question 4.
மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சீனா
ஈ) பிரேசில்
விடை:
இ) சீனா

Question 5.
பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று ___________
அ) கடல் ஓங்கல்கள்
ஆ) கடல் வளைவுகள்
இ) கடல் தூண்க ள்
ஈ) கடற்கரைகள்
விடை:
ஈ) கடற்கரைகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் _____________ என்கிறோம்.
விடை:
பாறை சிதைவடைதல்

Question 2.
ஆறு, ஏரியில் அல்லது கடலில் சேரும் இடம் _____________ எனப்படுகிறது.
விடை:
ஆற்று முகத்துவாரம்

Question 3.
காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் ___________ பாலைவனத்தில் காணப்படுகிறது.
விடை:
கலஹாரி

Question 4.
ஜெர்மனியில் காணப்படும் சர்க் ___________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கார் சர்க்

Question 5.
உலகின் மிக நீண்ட கடற்கரை __________ ஆகும்.
விடை:
மியாமி கடற்கரை

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 2

IV. பின்வரும் தகவல்களை கருத்தில் கொண்டு சரியான விடையை (✓) குறியிடுக.

Question 1.
கூற்று : முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாக்கப்படுகின்றன.
காரணம் : கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
கூற்று : கடல் வளைவுகள் இறுதியில் கடல் தூண்களாகின்றன.
காரணம் : கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
அரித்தல் வரையறு.
விடை:
அரித்தல் :
நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்.

Question 2.
உட்பாயத் தேக்கம் என்றால் என்ன?
விடை:
உட்பாய்த் தேக்கம் :
நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் உட்பாய்த் தேக்கம் எனப்படும்.

Question 3.
குதிரைக் குளம்பு ஏரி எவ்வாறு உருவாகிறது?
விடை:
குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake):

  • ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன.
  • நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஓர் ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake) எனப்படுகிறது.

Question 4.
பனியாற்று அரித்தலினால் ஏற்படும் முதன்மை நிலத்தோற்றங்களை குறிப்பிடவும்.
விடை:
பனியாற்று அரித்தலால் ஏற்படும் முதன்மை நிலத் தோற்றங்கள்:

  • சர்க்
  • அரட்டுகள்
  • ‘U’வடிவ பள்ளத்தாக்கு

Question 5.
காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
காளான் பாறைகள்:
பாலைவனத்தில் வேகமான செயல்முறைக் காரணியான காற்று, பாறையின் மேற்பகுதியைவிட கீழ்ப்பகுதியை வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகிறது.

இவ்வாறான காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் காண இயலும். இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 6.
காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.
விடை:
காயல்கள் :
கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் எனப்படும்.

உதாரணம்:
கேரளாவிலுள்ள வேம்பநாடு ஏரி தமிழ்நாட்டிலுள்ள பழவற்ேகாடு ஏரி, ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி

VI. கீழ் குறிப்பிட்டவைகளை வேறுபடுத்துக.

Question 1.
கிளையாறு மற்றும் துணையாறு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 3

Question 2.
‘V’ வடிவ பள்ளத்தாக்கு மற்றும் ‘U’ வடிவ பள்ளத்தாக்கு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 4

Question 3.
கண்டப் பனியாறு மற்றும் மலைப்பனியாறு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 5

VII. காரணம் தருக.

Question 1.
ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
விடை:
ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
ஏனெனில்
மியான்டர் ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் செயல்களுக்கு உட்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப்பகுதிகள் குறைந்து (நெருக்கமாக) வருகின்றன.

Question 2.
வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
விடை:
வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
ஏனெனில்
ஆறு தன் கரைகளை தாண்டி நிரம்பி வழிகின்ற போது ஆற்றின் அண்டைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

இவ்வெள்ளப் பெருக்கு மென்மையான மண் மற்றும் இதர பொருட்களை அடுக்குகளாக படியவைக்கின்றது. இவை வண்டல் படிவுகள் ஆகும். இதனால் வளமான சமதள வெள்ளச் சமவெளி உண்டாகிறது.

Question 3.
கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன.
விடை:
கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன.
ஏனெனில்

  • கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும் போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை தோற்றுவிக்கின்றது.
  • மேலும் கடல் அலைகள் மேற்கூரையை அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் எனப்படும்.

VIII. பத்தி அளவில் விடை அளிக்க.

Question 1.
ஆற்றின் அரிப்பால் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்களை விவரிக்க.
விடை:
ஆற்றின் அரிப்பில் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்கள் :
‘V’ வடிவ பள்ளத்தாக்கு :
ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும். இந்தப் பள்ளத்தாக்கு குறுகிய படுகை உடையதாக ‘V’ வடிவில் காணப்படும். இதைத்தான் ‘V’ வடிவ பள்ளத்தாக்கு என்கிறோம்.

நீர் வீழ்ச்சி :
நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.

ஆற்று வளைவுகள் :
ஆறானது சமவெளிப்பகுதியை அடையும்போது அது சுழன்று, பெரிய திருப்பங்களுடன் செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் ஆற்றுவளைவுகள் எனப்படும்.

குதிரைக் குளம்பு ஏரி:
ஆற்று வளைவுகள் தொடர்ந்து இருபக்கங்களிலும் அரித்தலுக்கு உட்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன. நாளடைவில் – ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஓர் ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி எனப்படும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விளக்குக.
விடை:
காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்: காளான் பாறைகள்:
பாலைவனத்தில் காற்றின் வேகமான செயல்பாடு, பாறையின் மேற்பகுதியை விட கீழப்பகுதியை வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப் பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகிறது.

இவ்வாறான காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் காண இயலும். இவை காளான் பாறைகள் எனப்படும்.

காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்:
ஒரு தனித்துவிடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண்போன்று காட்சி அளிப்பது காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் எனப்படும்.

மணல் குன்றுகள்:
காற்று வீசும்போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது. காற்று வீசுவது நிற்கும்போது மணலானது உயரம் குறைவான குன்றுகள் போன்று படிய வைக்கின்றது. இப்படிவுகள் மணல்குன்றுகள் எனப்படும்.

பிறைவடிவ மணல் குன்றுகள் :
பிறைச் சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் பிறைவடிவ மணல் குன்றுகள் எனப்படும்.

காற்றடி வண்டல் படிவுகள்:
மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது. இவ்வாறு கடத்தப்பட்ட மணல் ஒரு பெரும் பரப்பில் படிவதை காற்றடி வண்டல் படிவுகள் என்கிறோம்.

Question 3.
அரெட்டுகள் எவ்வாறு தோன்றுகின்றன?
விடை:
அரெட்டுகள் தோற்றம் :
பனி உருகும் போது, சர்க்கானது நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப் பகுதிகளில் உருவாகின்றன. இந்த ஏரிகள் டார்ன் ஏரி என்று அழைக்கப்படுகிறது.

அடுத்தடுத்த இரண்டு சர்க்குகள் ஒன்றை நோக்கி ஒன்று அரிக்கப்படும் போது, இதற்கு முன்னர் அமைந்த வட்டமான நிலத்தோற்றம் குறுகிய மற்றும் மலைச் சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றம் அடைகின்றன. இம்முகடுகள் அரெட்டுகள் என்ற கத்திமுனைக் குன்றுகளாக உருவெடுக்கின்றன.

IX.

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களை தொடர்புடைய கட்டங்களில் நிரப்பவும்
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 6
(பர்கான் , V’ வடிவ பள்ளத்தாக்கு , ஓங்கல், அரெட், தனிக்குன்றுகள், மொரைன், வண்டல் விசிறி மற்றும் காயல்)
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 7

Question 2.
உன் வீட்டு அருகே கீழ்க்காணும் ஏதேனும் ஒரு நிலத்தோற்றத்தை கண்டறிந்து குறிப்பு எழுதுக.
விடை:

  1. குன்று
  2. நீர்வீழ்ச்சி
  3. ஆறு அல்லது ஓடை
  4. கடற்கரை

2. நீர்வீழ்ச்சி – குற்றாலம் நீர்வீழ்ச்சி :
நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.

7th Social  Science Guide நிலத்தோற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
ஆறு ஓர் ஏரியிலோ, கடலிலோ அல்லது பேராழியிலோ கலக்கும் இடம் _____________
அ) ஆற்று வளைவு
ஆ) காயல்
இ) கழிமுகம்
ஈ) முகத்துவாரம்
விடை:
ஈ) முகத்துவாரம்

Question 2.
டார்ன் ஏரி என்பது ___________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
அ) ஆறு
ஆ) பனியாறு
இ) கடல்
ஈ) காற்று
விடை:
ஆ) பனியாறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 3.
காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு
அ) குற்றாலம்
ஆ) வேம்பநாடு
இ) கார்ரி
ஈ) மியாமி
விடை:
ஆ) வேம்பநாடு

Question 4.
வடசீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _____________
அ) கோபி
ஆ) கலஹாரி
இ) தார்
ஈ) சஹாரா
விடை:
அ) கோபி

Question 5.
மிசிசிபி என்பது ஒரு ____________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
அ) மலை
ஆ) நீர்வீழ்ச்சி
இ) ஆறு
ஈ) கடற்கரை
விடை:
இ) ஆறு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படிதல் செய்தல் மூலம் உயர்நிலங்களாகவும் மாற்றுதல் ___________ எனப்படும்.
விடை:
சமப்படுத்துதல்

Question 2.
சேத்தியாத்தோப்பு ______________ மாவட்டத்தில் உள்ளது.
விடை:
கடலூர்

Question 3.
___________ டெல்டா தமிழ்நாட்டில் காணப்படுகிறது.
விடை:
காவேரி

Question 4.
உலகிலேயே மிக நீளமான கடற்கரை _____________ ஆகும்.
விடை:
மியாமி கடற்கரை

Question 5.
மலைச் சரிவில் ஈர்ப்பு விசையின் காரணமாக மெல்ல நகரும் பனிக்குவியல் ____________ ஆகும்
விடை:
பனியாறு

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 8

IV. சரியா / தவறா எனக் கூறுக.

Question 1.
பொதுவாக ஆறுகள் ஒரு மலையில் இருந்தோ அல்லது குன்றிலிருந்தோ உற்பத்தியாகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
தென் அமெரிக்காவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உயரமான நீர்வீழ்ச்சி ஆகும்.
விடை:
சரி

Question 3.
கழிமுகப் பகுதிகள் அனைத்தும் மிகச்சிறந்த உற்பத்தி நிலங்களாகும்.
விடை:
சரி

Question 4.
உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினா கடற்கரை ஆகும்.
விடை:
சரி

Question 5.
கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுகள் எனப்படுகின்றன.
விடை:
சரி

V. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : ஆறு கடலை அடையும் போது பல பிரிவுகளாக பிரிந்து செல்கின்றது. இவை கிளையாறுகள் என்று அழைக்கப்படுகின்றன.
காரணம் : ஆறு கடலை அடையும்போது ஆற்று நீரின் வேகம் குறைந்து விடுகின்றது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : மணல் துகள்கள் எடை அதிகமாக இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது.
காரணம் : காற்று வீசுவது நிற்கும் போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

VI. தவறான இணையைக் கண்டுபிடி

Question 1.
1. வேம்பநாடு – கேரளா
2. புலிகாட் – கர்நாடகம்
விடை:
2. புலிகாட் – கர்நாடகம்

VII. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
ஆற்றுவளைவு, கழிமுகம், கத்திமுனைக் குன்றுகள், உயர் அணை
விடை:
கத்தி முனைக் குன்றுகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
காவேரி, கலஹாரி, கங்கை , மிசிசிபி
விடை:
கலஹாரி

VIII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
‘சமப்படுத்துதல்’ என்றால் என்ன?
விடை:
சமப்படுத்துதல் :
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படிதல் செய்தல் மூ லம் உயர்நிலங்களாகவும் மாற்றுவதற்கு நிலங்களை சமப்படுத்துதல் என்று பெயர்.

Question 2.
புவிமேற்பரப்பில் காணப்படும் எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்களில் சிலவற்றை பெயரிடு.
விடை:
எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்கள் :

  • மலைகள்
  • பீடபூமிகள்
  • பள்ளத்தாக்குகள்

Question 3.
பிரசித்த பெற்ற உலகத்தின் சில நீர்வீழ்ச்சிகளைப் பெயரிடுக.
விடை:
உலகப் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகள்:

  • ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா, தென் அமெரிக்கா)
  • நயாகரா நீர்வீழ்ச்சி (கனடா, அமெரிக்க எல்லை, வடஅமெரிக்கா)
  • விக்டோரியா நீர்வீழ்ச்சி (ஜாம்பியா, ஜிம்பாப்வே எல்லை, ஆப்பிரிக்கா)
  • குற்றாலம் நீர்வீழ்ச்சி (தமிழ்நாடு, இந்தியா)

Question 4.
கழிமுகம் (டெல்டா) என்றால் என்ன? சில கழிமுகங்களின் பெயர்களைக் கூறு.
விடை:
கழிமுகம்:

  • அனைத்து முகத்துவாரங்களின் படிவுகளும் ஒருங்கிணைந்து டெல்டா எனப்படும். கழிமுகப்பகுதியை ஏற்படுத்துகின்றன. கழிமுகப் பகுதிகள் அனைத்தும் மிகச் சிறந்த உற்பத்தி நிலங்களாகும்.
  • காவேரி டெல்டா
  • கங்கை டெல்டா
  • மிசிசிபி டெல்டா

Question 5.
கடற்கரை எவ்வாறு உருவாகிறது?
விடை:
கடற்கரை:
கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை எனப்படும். எ.கா: மியாமி கடற்கரை, மெரினா கடற்கரை

IX. பத்தி அளவில் விடை அளிக்க.

Question 1.
கடற்குகைகள் எவ்வாறு உருவாகின்றன?
விடை:
கடற்குகைகள்:
கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பலவகைப்பட்ட கடலோர நிலப்பரப்புகள் உருவாகின்றன. கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும்.

கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. காலப்போக்கில் இவை பெரிய மற்றும் பரந்த விரிசல்களாக மாறுகின்றன. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்கள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் (Sea Caves) எனப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
நீர், காற்று, பனி, கடல் அலை போன்ற காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்களை பெயரிடு.
விடை:
பல்வேறு காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:

  • நீர் :’V’ வடிவ பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, ஆற்றுவளைவு, குதிரைக் குளம்பு ஏரி.
  • காற்று : காளான் பாறைகள், காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்
  • பனி : பனி அரி பள்ளம், கத்திமுனைக் குன்றுகள் (அரட்டுகள்),’U’ வடிவ பள்ளத்தாக்கு
  • கடல் அலை : கடல் ஓங்கல், கடற்குகைகள், கடல் வளைவுகள், கடல் தூண்கள்.

Question 3.
கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விவரி.
விடை:
கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:
கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பலவகைப்பட்ட கடலோர நிலப்பரப்புக்கள் உருவாகின்றன.

கடல் ஓங்கல் :
கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பினாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும்.

கடற்குகைகள்:
கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்ககள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் (Sea Caves) எனப்படும்.

கடல் வளைவுகள் :
கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும்போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை (Sea Arches) தோற்றுவிக்கின்றது.

கடல் தூண்கள் :
கடல் அலைகள் மேற்கூரையை மேலும் அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் (Sea Stacks) எனப்படும்.

கடற்கரை:
கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை (Beach) எனப்படும்.

மணல் திட்டுகள் :
கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுகள் (Sand Bars) எனப்படும்.

காயல்கள் (அல்லது) உப்பங்கழிகள்:
கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 9

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

7th Social  Science Guide தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?
அ) விஜயாலயன்
ஆ) முதலாம் ராஜராஜன்
இ) முதலாம் ராஜேந்திரன்
ஈ) அதிராஜேந்திரன்
விடை:
அ) விஜயாலயன்

Question 2.
கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?
அ) கடுங்கோன்
ஆ) வீரபாண்டியன்
இ) கூன்பாண்டியன்
ஈ) வரகுணன்
விடை:
அ) கடுங்கோன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 3.
கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?
அ) மண்ட லம்
ந ஆ) நாடு
இ) கூற்றம்
ஈ) ஊர்
விடை:
ஈ) ஊர்

Question 4.
விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) வீர ராஜேந்திரன்
ஆ) ராஜாதிராஜா
இ) ஆதி ராஜேந்திரன்
ஈ) இரண்டாம் ராஜாதிராஜா
விடை:
இ) ஆதி ராஜேந்திரன்

Question 5.
சோழர்களின் கட்டக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
அ) கண்ணாயிரம்
ஆ) உறையூர்
இ) காஞ்சிபுரம்
ஈ) தஞ்சாவூர்
விடை:
ஈ) தஞ்சாவூர்

Question 6.
கீழக்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
அ) சோழமண்டலம்
ஆ) பாண்டிய நாடு
இ) கொங்குப்பகுதி
ஈ) மலைநாடு
விடை:
ஆ) பாண்டிய நாடு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
_______________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.
விடை:
முதலாம் ராஜராஜன்

Question 2.
_______________ வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.
விடை:
முதலாம் ராஜேந்திரன்

Question 3.
_____________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.
விடை:
ஐடில பராந்தக நெடுஞ்சடையன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 4.
பாண்டியப் பேரரசின் அரசுச் செயலகம் ____________ என அறியப்பட்டது.
விடை:
எழுத்து மண்டபம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 3

IV. சரியா? தவறா?

Question 1.
டெல்லி சுல்தானுக்குக் கட்டுப்பட்ட ஒரு முஸ்லீம் அரசு மதுரையில் உருவானது.
விடை:
சரி

Question 2.
‘கூடல் நகர் காவலன்’ என்பது பாண்டிய அரசரின் பட்டமாகும்.
விடை:
சரி

Question 3.
சோழ அரசு வைகையின் கழிமுகப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
விடை:
தவறு – காவிரியின் கழிமுகப் பகுதி

Question 4.
முதலாம் குலோத்துங்கன் சாளுக்கிய – சோழ அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.
விடை:
சரி

Question 5.
சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.
விடை:
சரி

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க

பொருத்தமான விடையை (✓ டிக் இட்டுக் காட்டவும்.

Question 1.
பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.
ii) அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.
iii) அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.
iv) அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்

அ) i), ii) மற்றும் iii)
ஆ) ii), iii) மற்றும் iv)
இ) i), ii) மற்றும் iv)
ஈ) i), iii) மற்றும் iv)
விடை:
இ) i), ii) மற்றும் iv)

Question 2.
ராஜேந்திர சோழனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர் கங்கைகொண்ட சோழன் எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்.
ii) அவர் தெற்கு சுமத்ராவைக் கைப்பற்றினார்.
iii) அவர் சோழர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினார் எனப் போற்றப்படுகிறார்.
iv) அவர் ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்ற அவருடைய கப்பற்படை உதவியது.

அ) i) மற்றும் ii)
ஆ) iii) மற்றும் iv)
இ) i), ii) மற்றும் iv)
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

Question 3.
கூற்று : யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.
காரணம் : நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 4.
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவுகளை இறங்குவரிசையில் வரிசைப்படுத்தவும்.
1. நாடு
2. மண்ட லம்
3. ஊர்
4. கூற்றம்
விடை:
1. மண்டலம்
2. நாடு
3. கூற்றம்
4. ஊர்

Question 5.
கீழ்க்காணும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படி எழுதவும்.
1) மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
2) உள்நாட்டுப்போர் தொடங்கியது.
3) மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
4) மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு, மகன்கள். ஒருவர் வீரபாண்டியன் மற்றொருவர் சுந்தர பாண்டியன்.
5) சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
6) மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
விடை:
4, 1, 2, 5, 6, 3

Question 6.
கண்டுபிடிக்கவும்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 4
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 5

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
விடை:

  • சந்தனக் கட்டை
  • கருங்காலிக் கட்டை
  • சுவையூட்டும் பொருட்கள்
  • விலையுயர்ந்த ஆபரணக் கற்கள்
  • மிளகு
  • எண்ணெய்
  • நெல்
  • தானியங்கள்
  • உப்பு

Question 2.
‘சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?
விடை:
பாண்டிய அரசர்களும், உள்ளூர் தலைவர்களும் பிராமணர்கள் குடியிருப்புகளை உருவாக்கினர். அக்குடியிருப்புகள் சதுர்வேதி மங்கலம்’ என அழைக்கப்பட்டன.

Question 3.
‘காணிக்கடன்’ பற்றி எழுதுக.
விடை:

  • சோழ அரசின் பொது வருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது. நிலவரியானது காணிக்கடன் என அழைக்கப்பட்டது.
  • மகசூலில் மூன்றில் ஒரு பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.
  • இவ்வரி பெரும்பாலும் தானியமாகவே வசூலிக்கப்பட்டது.

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்

Question 1.
சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
விடை:

  • சோழ அரசர்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறையை உருவாக்கியிருந்தனர். பல்வேறு அமைப்புகள் மூலம் நடைபெற்ற சோழர்களின் உள்ளாட்சி நிர்வாகம் ஒரு மிகச் சிறந்த அம்சமாகும்.
  • சோழ மன்னர்கள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். பல வாய்க்கால்களை வெட்டினர்.
  • அவர்கள் தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தராசுரம் ஆகிய இடங்களில் கோயில்களைக் கட்டினர்.
  • நடனம், இசை, நாடகம், கட்டக்கலை மற்றும் ஓவியக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
  • சோழப் பேரரசர்கள் கல்விப்பணிக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர். பல கல்லூரிகளை நிறுவினர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
‘சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள்’ – இக்கூற்றை உறுதி செய்க.
விடை:

  • சோழ அரசர்கள் கல்விப் பணிகளுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.
  • முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேதக்கல்லூரி ஒன்றை நிறுவினார். அங்கு 14 ஆசிரியர்கள் மற்றும் 340 மாணவர்கள் இருந்தனர்.
  • அங்கு வேதங்கள், இலக்கணம், உபநிடதங்கள் ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன.
  • திருபுவனை, திருமுக்கூடல் ஆகிய இடங்களிலும் கல்லூரிகள் தொடங்கப்பட்டன
  • பெரிய புராணம் மற்றும் கம்பராமாயணமும் சோழர் காலத்தவையேயாகும்.

IX. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

நான் யார்?
1. மாலிக்கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பிற்கு நானே பொறுப்பு.
2. நான் பதினாறு மைல் நீளமுள்ள தடுப்பு அணையைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டினேன்.
3. நான் நீர் விநியோகம் செய்வதற்காகக் கட்டப்பட்டவன்.
4. நான் திருமுறையைத் தொகுத்தேன்.
5. நான் ஒரு சிறப்பு வாய்ந்த துறைமுகம். மார்க்கோபோலோ என்னை இருமுறை காணவந்தார்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 6

X. கட்டக வினாக்கள்

Question 1.
சோழர்கால இலக்கியங்கள் இரண்டின் பெயர்களை எழுதுக.
விடை:
கொற்கை

Question 2.
முத்துக்குளித்தலோடு தொடர்புடைய துறைமுகம் எது?
விடை:
பெரிய புராணம், கம்பராமாயணம்

Question 3.
காசு, களஞ்சு, பொன் என்பவை எதைக் குறிக்கின்றன?
விடை:
தங்க நாணயங்கள்

Question 4.
காயல்பட்டினம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை:
தூத்துக்குடி

Question 5.
முதலாம் பராந்தகனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய அரசன் யார்?
விடை:
இரண்டாம் ராஜ சிம்மன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 6.
புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் எங்குள்ளது?
விடை:
மதுரை

XI. களப்பயணம் (மாணவர்களுக்கானது)

Question 1.
சோழர்கள் அல்லது பாண்டியர்களால் கட்டப்பட்ட ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று அதன் உன்னதத்தைப் பார்க்கவும்.

7th Social  Science Guide தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
திருஞான சம்பந்தரால் சமணமதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவர்.
அ) அரிகேசரி
ஆ) முதலாம் பராந்தகர்
இ) விஜயாலயர்
ஈ) இரண்டாம் ராஜசிம்மர்
விடை:
அ) அரிகேசரி

Question 2.
சோழ மன்னர்கள் மிகுதியாகப் பற்று கொண்டிருந்தது.
அ) புத்த சமயம்
ஆ) சமணமதம்
இ) சைவ சமயம்
ஈ) வைஷ்ணவம்
விடை:
இ) சைவ சமயம்

Question 3.
பாண்டியர்களின் தலைநகர்
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) கொற்கை
ஈ) தஞ்சாவூர்
விடை:
ஆ) மதுரை

Question 4.
பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்
அ) மார்க்கோபோலோ
ஆ) மெகஸ்தனிஸ்
இ) அல்பரூனி
ஈ) யுவான் சுவாங்
விடை:
அ) மார்க்கோபோலோ

Question 5.
மார்க்கோபோலோ ___________ லிருந்து இந்தியாவுக்கு வந்தார்.
அ) சீனா
ஆ) வெனிஸ்
இ) கிரீஸ்
ஈ) போர்ச்சுகல்
விடை:
ஆ) வெனிஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் __________
விடை:
முதலாம் ராஜராஜன்

Question 2
கங்கை கொண்டான் எனப் பெயர் பெற்றவர் ___________.
விடை:
முதலாம் ராஜேந்திரன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 3.
குந்தவை ___________ னின் மகளாவார்.
விடை:
முதலாம் ராஜராஜன்

Question 4.
பாண்டியர்களின் காலத்தில் நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் ____________ என அழைக்கப்பட்டனர்.
விடை:
பூமி புத்திரர்

Question 5.
வீரசோமேஸ்வரரை சுந்தர பாண்டியன் ____________ என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தார்.
விடை:
கண்ணனூர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 7

IV. சரியா? தவறா?

Question 1.
முதலாம் ராஜராஜன் முதலாம் ராஜேந்திரனின் மகன் ஆவார்.
விடை:
தவறு (தந்தை)

Question 2.
சோழர்களின் ஆட்சிக்காலத்தில் அரசுரிமை பரம்பரை இயல்புடையதாய் இருந்தது.
விடை:
சரி

Question 3.
சோழர்கள் காலத்தில் விளைச்சலில் 1/5 பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.
விடை:
தவறு (1/3 பகுதி)

Question 4.
நாயன்மார்கள் சைவ சமணத்தினர்கள் ஆவர்
விடை:
சரி

Question 5.
மதுரை பொதுமக்களால் கூடல்’ என்று போற்றப்பட்டது.
விடை:
சரி

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க:

பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்.

Question 1.
1) பிற்காலப் பாண்டியர் புதிய கோவில்கள் எதையும் நிர்மாணிக்கவில்லை.
2) அவர்கள் ஏற்கனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர். .
3) அவர்கள் புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டினர்
4) மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சாவூரில் உள்ளது.

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 1, 2 மற்றும் 3 சரி
இ) மேற்கூறிய எல்லாம் சரி
ஈ) 1, 3 மற்றும் 4 சரி
விடை:
ஆ) 1, 2 மற்றும் 3 சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 2.
கூற்று : சுந்தர பாண்டியன் தனது தந்தை மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார்.
காரணம் : மாறவர்மன் குலசேகரன் தனது மகன் வீரபாண்டியனைக் கூட்டு அரசராக நியமித்தார்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

VI. தவறான இணையைக் கண்டு பிடிக்கவும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 8
விடை:
காணிக்கடன் – சொத்துவரி

VII. பொருந்தாததைக் கண்டுபிடி.

Question 1.
காசு, கழஞ்சு, பொன், தங்கம்
விடை:
தங்கம்

Question 2.
மிளகு, எண்ணெய், ஆபரணக்கற்கள், ஏலம்
விடை:
ஏலம்

VIII. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
குடவோலை முறை – சிறு குறிப்பு வரைக.
விடை:
சோழ அரசில் கிராம சபை உறுப்பினர்கள் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்முறையில் தகுதியுடைய வேட்பாளர்களின் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும்.

ஒரு சிறுவனை அழைத்து குடத்துக்குள் உள்ள ஓலைத் துண்டுகளை எடுக்கச் சொல்லி அதிலுள்ள பெயர்வாசிக்கப்படும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இம்முறையின் படி பல குழுக்கள் முடிவு செய்யப்படும்.

Question 2.
முதலாம் குலோத்துங்கள் யார்?
விடை:

  • முதலாம் ராஜராஜ சோழரின் மகளான குந்தவையை சாளுக்கிய இளவரசரான விமலாதித்தியன் மணந்தார்.
  • அவர்களின் மகனான ராஜ ராஜ நரேந்திரன் முதலாம் ராஜேந்திரனின் மகளான அம்மங்கா இ தேவியை மணந்தார். இவர்களின் மகனே முதலாம் குலோத்துங்கள் ஆவார்.

Question 3.
பிற்காலச் சோழர்கள் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் யாவை?
விடை:
யானைத் தந்தங்கள் பவழம், சங்குகள், ஒளி புகும், புகாக் கண்ணாடிகள், பாக்கு, ஏலம், வர்ணப்பட்டு நூல்களோடு நெய்யப்பட்ட பருத்தி இழைத்துணிகள்

Question 4.
பாண்டிய மன்னர்கள் செய்த யாகங்கள் யாவை?
விடை:

  • அஸ்வமேத யாகம்
  • ஹிரண்ய கர்ப்பம்
  • வாஜ்பேய வேள்வி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 5.
மாலிக்கபூர் ஏன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார்?
விடை:

  • மாறவர்மன் குலசேகரன் தனது மகனான வீரபாண்டியனைக் கூட்டு அரசராக நியமித்தார்.
  • இதனால் தனது தந்தை மீது வெறுப்புற்ற இவரது இன்னொரு மகனான சுந்தர பாண்டின் தந்தை மாறவர்மன் குலசேகரனைக் கொன்றார்.
  • தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப்போரில் வீரபாண்டியன் சுந்தர பாண்டியனைத் தோற்கடித்தார்.
  • தோல்வியுற்ற சுந்தர பாண்டியன் டெல்லிக்குச் சென்று அலாவுதீன் கில்ஜியிடம் அடைக்கலமானார்.
  • இதனால் அலாவுதீன் கில்ஜி தனது படைத்தளபதியான மாலிக்கபூரை பாண்டியநாட்டின் மீது படையெடுக்கும்படி அனுப்பிவைத்தார்.

IX. விடையளிக்கவும்.

Question 1.
முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் பெருமைகளை விளக்குக.
விடை:
முதலாம் ராஜராஜன்

  • சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற அரசர் முதலாம் ராஜராஜன் ஆவார்.
  • இவர் தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை வென்றார்.
  • இலங்கை வரை சோழர்களின் ஆட்சியை விரிவடையச் செய்தார்.
  • தஞ்சாவூர் பிரகதிஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார்.

முதல் ராஜேந்திரன்:

  • முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு தென்னிந்தியாவில் ஒரு வலுவான சக்தியாக விளங்கியது.
  • இவர் கங்கைப் பகுதியை வென்றார். இதனால் கங்கை கொண்டான் என்ற பட்டம் பெற்றார்.
  • கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டினார்.
  • ஸ்ரீ விஜயப் பேரரசைக் கைப்பற்றினார்.
  • இவரது காலத்தில் கடல் கடந்த வணிகம் சிறப்பாக நடைபெற்றது.

Question 2.
சோழர்கள் காலத்து உள்ளாட்சி நிர்வாகம் பற்றி கூறு.
விடை:

  • உள்ளாட்சி நிர்வாகம் ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகள் மூலம் செயல்பட்டது.
  • விவசாயிகளின் குடியிருப்புகள் ஊர்கள் என அழைக்கப்பட்டன.
  • பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் நீதி, நிதி மற்றும் பொது நிர்வாகங்களை மேற்கொண்டனர்.
  • வணிகர்களின் குடியிருப்பை நகரத்தார் நிர்வகித்தனர்.
  • கட்டுமானக் கலைஞர்கள், இரும்புத் தொழில் செய்வோர், தங்க வேலை செய்வோர், நெசவு செய்வோர், மட்பாண்டம் வனைவோர் ஆகியோரும் நகரத்தில் வாழ்ந்தனர்.
  • ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

Question 3.
பாண்டியர்கள் கோவில் கட்டடக் கலைக்கு ஆற்றிய பணிகள் யாவை?
விடை:

  • இடைக்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களும் புதிய கோவில்கள் ஒன்றையும் கட்டவில்லை. ஏற்கனவே இருந்த கோவில்களைப் பராமரித்தனர்.
  • புதிய கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டிப் பெரிதாக்கினர்.
  • பெரிய வடிவிலான அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய ஒற்றைக் கல்தூண்களைக் கட்டினர்.
  • சிவன், விஷ்ணு, கொற்றவை, கணேசர், சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் இக்கோவில்களில் காணப்படும் சிறந்த கலை வடிவங்களாகும்.
  • பாண்டியர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பேராதரவு நல்கினர்.
  • புதிய கோபுரங்களையும்மண்டபங்களையும் கட்டி இக்கோவிலைத்தொடர்ந்து விசாலப்படுத்தினர்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 9
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 3 தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் 10

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

7th Social  Science Guide வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்?
அ) கல்ஹ ணர்
ஆ) விசாகதத்தர்
இ) ராஜசேகரர்
ஈ) சந்த் பார்தை
விடை:
ஈ) சந்த் பார்தை

Question 2.
பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?
அ) முதலாம் போஜா
ஆ) முதலாம் நாகபட்டர்
இ) ஜெயபாலர்
ஈ) சந்திரதேவர்
விடை:
ஆ) முதலாம் நாகபட்டர்

Question 3.
கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?
அ) மங்கோலியா
ஆ) துருக்கி
இ) பாரசீகம்
ஈ) ஆப்கானிஸ்தான்
விடை:
ஈ) ஆப்கானிஸ்தான்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 4.
கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?
அ) சிலை வழிபாட்டை ஒழிப்பது.
ஆ) இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
இ) இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
ஈ) இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது
விடை:
ஆ) இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் …………. ஆவார்
விடை:
தர்ம பாலர்

Question 2.
கி.பி ……………….. இல் சிந்துவை அராபியர் கைப்பற்றினர்
விடை:
712

Question 3.
ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் …….. ஆவார்
விடை:
சிம்மராஜ்

Question 4.
காந்தர்யா கோவில் ………………. ல் அமைந்துள்ளது
விடை:
மத்தியப் பிரதேசம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 2

IV. சரியா? தவறா?

Question 1.
ராஜபுத்ர என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.
விடை:
தவறு (சமஸ்கிருத வார்த்தை)

Question 2.
அரசர் கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 3.
அபுகுன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது.
விடை:
தவறு (சமணகோயில்)

Question 4.
ரக்ஷாபந்தன் சகோதர உறவு தொடர்பான விழாவாகும்.
விடை:
சரி

Question 5.
இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அரேபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.
விடை:
தவறு (அரேபியர்கள் இந்தியரிடமிருந்து கற்றுக் கொண்டனர்)

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையைக் டிக் (✓) இட்டுக் காட்டவும்.

Question 1.
கூற்று : கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.
காரணம் : கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது.

அ) காரணம் கூற்றிக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றிக்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று தவறு. காரணம் சரி.
ஈ) கூற்றும், காரணமும் தவறு.
விடை:
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

Question 2.
கூற்று : மகிபாலரால் தனது நாட்டை வாரணாசியைக் கடந்துவிரிவுபடுத்த முடியவில்லை .
காரணம் 1 :மகிபாலரும் முதலாம் ராஜேந்திர சோழனும் சமகாலத்தவர் ஆவார்.

அ) I சரி
ஆ) II சரி
இ) I மற்றும் II சரி
ஈ) | மற்றும் பதவறு
விடை:
இ) மற்றும் 1 சரி

Question 3.
கூற்று : இந்தியாவில் இஸ்லாமியக்காலக்கட்டம் கி.பிபொ.ஆ) 712 இல் அராபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை. இந்த
காரணம் : கூர்ஜரப் பிரதிகாரர்கள் அரேபியரைக் கடுமையாக எதிர்த்தனர்.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ)காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி –
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

Question 4.
கூற்று : இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார்.
காரணம் : ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை..

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு, காரணம் சரி. க
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறு

Question 5.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. அவற்றில் எது/எவை சரியானவை என்பதைக் கண்டறியவும்.
i. ரக்ஷாபந்தன் என்ற மரபானது ராஜபுத்திரர்களுடையது.
ii. வங்கப் பிரிவினையின் போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார்.
iii. இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது.

அ) கூற்று சரியானது.
ஆ) கூற்று ii சரியானது.
இ) கூற்று iii சரியானது.
ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியானவை.
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியானவை

VI. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக.
விடை:

  • கூர்ஜரப் பிரதிகாரர்கள், ராஷ்டிர கூடர்கள், பாலர்கள் ஆகிய மூவரும் வளம் நிறைந்த கன்னோஜியின் மீது தங்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர்.
  • இதனால் இவர்களுக்குள் மும்முனைப் போராட்டம் ஏற்பட்டது.

Question 2.
ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக.
விடை:
பிரதிகாரர்கள், சௌகான்கள், சோலங்கிகள், பரமாரர்கள்.

Question 3.
பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?
விடை:
பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் கோபாலர் ஆவார்.

Question 4.
தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துக்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அப்பாசித்துகள்
  • உமையாத்துகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 5.
காசிம் தோற்கடித்த சிந்து மன்னரின் பெயரைக் குறிப்பிடுக.
விடை:
தாஹீர்

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும். சிந்துவை

Question 1.
அரேபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்)
விடை:

  • அராபிய அறிஞர்கள் பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர்.
  • சமஸ்கிருத மொழியிலிருந்த வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பான பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
  • 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக் கொண்டனர்.
  • பூஜ்யத்தின் பயன்பாட்டை கற்றுக் கொண்டனர்.
  • இந்தியர்களிடமிருந்து சதுரங்க விளையாட்டைக் கற்றுக் கொண்டனர்.

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
மாமுது கஜினியின் படையெடுப்பிற்கும் முகமது கோரியின் படையெடுப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:
மாமூது கஜினியின் படையெடுப்பு :
வட இந்தியாவின் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களையும் நகரங்களையும் கொள்ளையடிப்பதே மாமூது கஜினியின் நோக்கமாகும்.

முகமது கோரியின் படையெடுப்பு :
இந்தியாவைக் கைப்பற்றி தனது பேரரசை விரிவாக்கம் செய்வதே முகமது கோரியின் நோக்கமாகும்.

Question 2.
கண்டுபிடித்து நிரப்புக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 4

IX. மாணவர் செயல்பாடு

Question 1.
வார்த்தைத் துளிகள் :
இவ்வார்த்தைகள் பற்றி மாணவர்களுக்கு என்ன தெரியும் என்பதை மாணவர்கள் விவாதிக்க வேண்டும்; குறிப்பும் எழுத வேண்டும்.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 5
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 6

X. வரைபட வினா

Question 1.
இந்திய ஆறுகள் வரைபடத்தில் பிரதிகாரர்கள், சௌகான்கள், பாலர்கள், பரமாரர்கள் ஆண்ட பகுதிகளைக் குறிப்பிடுக. (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

XI. கட்டக வினாக்கள்

Question 1.
மாமூது கஜினியால் தோற்கடிக்கப்பட்ட பஞ்சாபின் ஷாகி வம்ச அரசர் யார்?
விடை:
ஜெயபாலர்

Question 2.
ராஜபுத்திர ஓவிய பாணிகள் ………………… என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
ராஜஸ்தானி

Question 3.
ராஜபுத்திரக் குலங்கள் எத்தனை இருந்தன?
விடை:
3G

Question 4.
இந்தியாவில் முதல் இஸ்லாமியப் பேரரசை உருவாக்கியவர் யார்?
விடை:
முகமது கோரி

Question 5.
டெல்லியின் முதல் சுல்தான் யார்?
விடை:
குத்புதீன் ஐபக்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 6.
மெக்கா எங்குள்ளது?
விடை:
அராபியா

XII . வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)

Question 1.
ராஜபுத்திர அரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட கோவில்களின் படங்களைக் கொண்டு ஒரு செருகேட்டினை (ஆல்பம்) தயார் செய்யவும்.

7th Social  Science Guide வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூர்ஜரப் பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர்
அ) ஹரிச்சந்திரா
ஆ) வத்சராஜா
இ) நாகபட்டர்
ஈ) தேவ பாலர்
விடை:
அ) ஹரிச்சந்திரா

Question 2.
பாலர் வம்சத்தினைத் தோற்றுவித்தவர்
அ) தர்ம பாலர்
ஆ) தேவ பாலர்
இ) கோபாலர்
ஈ) மகி பாலர்
விடை:
இ) கோபாலர்

Question 3.
தேவபாலர் ஆதரித்த மதம்
அ) சீக்கிய மதம்
ஆ) இந்து மதம்
இ) பௌத்த மதம்
ஈ) சமண மதம்
விடை:
இ) பௌத்த மதம்

Question 4.
கஜினி மாமுதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர்
அ) ஜெயச்சந்திரா
ஆ) ஜெயபாலர்
இ) ராஜ்ய பாலர்
ஈ) ஜெய சுந்தர்
விடை:
ஆ) ஜெயபாலர்

Question 5.
முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி
அ) பால்பன்
ஆ) இல்டுமிஷ்
இ) நாசிர் உதீன்
ஈ) குத்புதீன் ஐபக்
விடை:
ஈ) குத்புதீன் ஐபக்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ராஜபுத்திரர்களின் கூட்டமைப்பு ……………… எனப்பட்டது
விடை:
ராஜபுதனம்

Question 2.
பால வம்சத்தின் மிகச் சிறந்த வலிமை மிக்க அரசர் ……………. ஆவார்
விடை:
முதலாம் மகிபாலர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 3.
சௌகான் வம்சத்தைச் தோற்றுவித்தவர் ……………. ஆவார்
விடை:
சிம்மராஜ்

Question 4.
சௌகான்களின் தலைநகர் ………………… ஆகும்
விடை:
சாகம்பரி

Question 5.
இறைதூதர் முகமது நபி தோற்றுவித்த சமயம் ………….
விடை:
இஸ்லாம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 7

IV. சரியா? தவறா?

Question 1.
தர்ம பாலர் வீக்கிரமசீலா மடாலயத்தை நிறுவினார்.
விடை:
சரி

Question 2.
மும்முனைப் போட்டிக்குப் பின், மூன்று சக்திகளும் பலம் பெற்றன
விடை:
தவறு (பலவீன மடைந்தன)

Question 3.
சௌகான் வம்சாவளியின் முதல் அரசர் பிருதிவிராஜ் ஆவார்.
விடை:
சரி

Question 4.
சூரியனார் கோவில் கொனார்க்கில் உள்ளது.
விடை:
சரி

Question 5.
இரண்டாம் தரெயின் போர் ராஜபுத்திரர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
விடை:
சரி

V. கூற்று மற்றும் காரணம்

அ) கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து, சரியான கூற்று கூற்றுகளைக் கூறவும்.
1. தர்மபாலர் தலைசிறந்த சமண மத ஆதரவாளர் ஆவார்.
2. அவர் நாலந்தா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்
3. தர்மபாலருக்குப்பின் அவரது மகன் தேவபாலர் ஆட்சிக்கு வந்தார்

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 2 மற்றும் 3 சரி
இ) 1 மற்றும் 2 தவறு
ஈ) அனைத்தும் சரி
விடை:
இ) 1 மற்றும் 2 தவறு

Question 2.
கூற்று : தரெய்ன் போரின் வெற்றிக்குப் பின் முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார்.
காரணம் : தனது நாட்டின் எல்லையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய துருக்கியரையும், மங்கோலியரையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
அ) காரணம் கூற்றக்கான சரியான விளக்கம் ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

ஆ) தவறான இணையைக் கண்டறியவும் :
Question 1.
1. வத்ச ராஜா – பிரதிகாரர்கள்
2. கோபாலர் – பாலர்கள்
3. சிம்மராஜ் பராமரர்கள்
விடை:
3. சிம்மராஜ் – பராமரர்கள்

Question 2.
1. பிரதிகாரர்கள் – மாளவம்
2. பாலர்கள் – வங்காளம்
3. பராமரர்கள் – டெல்லி
விடை:
3. பராமரர்கள் – டெல்லி

இ) பொருந்தாததைக் கண்டுபிடி.
Question 1.
பிரதிகாரர்கள், சோலங்கிகள், துருக்கியர், பராமரர்கள்
விடை:
துருக்கியர்

Question 2.
சோமநாதபுரம், ஆம்பர், கஜுராகோ, தில்வாரா
விடை:
ஆம்பர்

VI. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
வங்கப்பிரிவினை எப்போது நிகழ்ந்தது?
விடை:
வங்கப்பிரிவினை 1905ல் நிகழ்ந்தது.

Question 2.
ரக்ஷா பந்தன் பற்றி சிறு குறிப்பு வரைக. (ராக்கி)
விடை:

  • ரக்ஷா பந்தன் என்பது ராஜபுத்திரர்களுக்கு உரிய ஒரு விழாவாகும்
  • இது சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் ஒரு விழாவாகும்.
  • ஒரு பெண் ஒரு ஆடவரின் மணிக்கட்டில் ராக்கியைக் கட்டி விட்டால் அப்பெண் அந்த ஆடவனை சகோதரனாகக் கருதுகிறார் என்று பொருள்.
  • அப்படியான ஆண்கள் அப்பெண்களைப் பாதுகாக்கக் கடமைப் பட்டவர்கள் ஆவர்.

Question 3.
ராஜபுத்திரர்களின் தோற்றம் பற்றி கூறு.
விடை:

  • ராஜபுத் எனும் சொல் ரஜ்புத்ர எனும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
  • ராஜபுத்திரர்கள் தங்கள் வம்சாவளித் தோற்றத்தைக் கடந்த காலத்திலிருந்து தொடங்குகின்றனர்.
  • அவர்களின் மிக முக்கியமான மூன்று குலங்கள் சூரிய வம்சி, எனும் சூரிய குலம், சந்திர வம்சி எனும் சந்திர குலம் மற்றும் அக்னி குலம் என்பனவாகும்.
  • ராஜபுத்திரர்களில் 36 அரச குலங்கள் உள்ளன.

Question 4.
தர்மபாலர் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • தர்ம பாலர், கோபாலர் என்பவருடைய மகன் ஆவார்.
  • இவர் வட இந்தியாவில் ஒரு வலிமை மிக்க சக்தியாக விளங்கினார்.
  • கன்னோசி மீது படையெடுத்து வெற்றி பெற்றார்.
  • அவர் மிகச் சிறந்த பௌத்த ஆதரவாளராவார்.
  • அவர் விக்ரமசீலா என்ற கல்விக்கான மடாலயத்தை உருவாக்கினார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Question 5.
கஜினி மாமூதுவின் வெற்றிகளைக் குறிப்பிடுக.
விடை:

  • கஜினி மாமூது ஷாகி அரசுக்கு எதிராக படையெடுத்து அதன் அரசர் ஜெயபாலைத் தோற்கடித்தார்
  • வைகிந்த் என்னுமிடத்தில் ஆனந்த பாலரைத் தோற்கடித்தார்.
  • நாகர்கோட், தானேஸ்வர் ஆகிய நகரங்களைச் சூறையாடினார்.
  • கன்னோஜியின் மன்னரைத் தோற்கடித்தார்.
  • மதுரா நகர் மற்றும் சோமநாதபுரம் கோவிலைக் கொள்ளையடித்தார்.

VII. விடையளிக்கவும்.

Question 1.
கலை மற்றும் கட்டடக் கலைக்கு ராஜபுத்திரர்களின் பங்களிப்பினை விவாதி.
விடை:
கலை :

  • ராஜபுத்திரர்களின் காலத்தில் இலக்கியம், இசை, நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளும் கவின் கலைகளும் செழிப்புற்றன.
  • ராஜஸ்தானி என்றழைக்கப்பட்ட ஓவியக்கலை தோன்றியது.

கட்டடக் கலை :
ராஜபுத்திரர்கள் சித்தோர்கார், ரான்தம்பூர், கும்பல்கார், மாண்டு, குவாலியர், சந்தேரி, அசிர்கார் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினர்.

குவாலியரிலுள்ள மான்சிங் அரண்மனை, ஆம்பர் கோட்டை, உதய்பூரில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அரண்மனை ஆகியவை இவர்கள் காலத்தவையாகும்.

கஜுராகோ எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள கோவில், கொனார்க்கிலுள்ள சூரியனார் கோவில், அபு குன்றின் மீது அமைந்துள்ள தில்வாரா கோயில், காந்தர்யா கோவில் ஆகியவை ராஜபுத்திரரின் கோவில் கட்டடக்கலைக்கு சிறந்த சான்றுகளாகும்.

Question 2.
பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு யாது?
விடை:

  1. பாலர்கள் பௌத்த கோயில்களையும், புகழ் பெற்ற நாளந்தா, விக்கிரமசீலா பல்கலைக்கழகங்களையும் ஆதரித்தனர்.
  2. பாலர்கள் மூலம் பௌத்த சமயம் திபெத்தில் நிறுவப்பட்டது.
  3. சுமத்ரா மற்றும் ஜாவாவைச் சேர்ந்த இந்து பௌத்த அரசுகளுடன் பாலர்கள் சுமூகமான உறவு கொண்டிருந்தனர்.
  4. தனித்தன்மை வாய்ந்த பாலர்களின் கலை உருவானது.
  5. செப்புச் சிலைகளிலும் பனை ஓலைகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் வெளியிடப்பட்டன.

Question 3.
முதல் மற்றும் இரண்டாம் தரெய்ன் போர்களை விவரிக்க.
விடை:
முதல் தரெய்ன் போர் :

  • முகமது கோரி முல்தான் மற்றும் பஞ்சாப்பைத் தாக்கி அவற்றைக் கைப்பற்றினார்.
  • இந்த ஆபத்தான சூழலில் பிருதிவிராஜ் சௌகானின் தலைமையில் வட இந்திய இந்து அரசர்கள் ஒரு கூட்டணியை உருவாக்கினர்.
  • 1191ல் தரெய்ன் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் பிருதிவிராஜ் சௌகான் முகமது கோரியைத் தோற்கடித்தார். இது முதல் தரெய்ன் போர் எனப்படுகிறது.

இரண்டாம் தரெய்ன் போர் :

  • இத்தோல்விக்குப் பழிவாங்கும் பொருட்டு முகமது கோரி ஒரு பெரும் படையைத் திரட்டி பிருதிவி ராஜிக்கு எதிராக புறப்பட்டார்.
  • பல இந்து அரசர்களும் குறுநிலத் தலைவர்களும் பிருதிவிராஜிக்கு ஆதரவு அளித்தனர்.
  • ஆயினும் 1192ல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் முகமது கோரியால் தாற்கடிக்கப்பட்டார். பிருதிவிராஜ் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
  • இப்போர் ராஜபுத்திரர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 2 வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 8

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

7th Social  Science Guide இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
……………….. என்பவை பாறைகள், கற்கள், கோவில் சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.
அ) காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்
ஆ) பயணக்குறிப்புகள்
இ) நாணயங்கள்
ஈ) பொறிப்புகள்
விடை:
ஈ) பொறிப்புகள்

Question 2.
கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ………………… ஆகும்.
அ) வேளாண்வகை
ஆ) சாலபோகம்
இ) பிரம்மதேயம்
ஈ) தேவதானம்
விடை:
ஈ) தேவதானம்

Question 3.
………………… களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.
அ) சோழர்
ஆ) பாண்டியர்
இ) ராஜபுத்திரர்
ஈ) விஜயநகர அரசர்கள்
விடை:
அ) சோழர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 4.
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ……………….. ஆகும்.
அ) அயினி அக்பரி
ஆ) தாஜ் – உல் – மா – அசிர்
இ) தசுக் – இ – ஜாஹாங்கீரி
ஈ) தாரிக் – இ – பெரிஷ்டா
விடை:
ஆ) தாஜ் – உல் – மா – அசிர்

Question 5.
அரேபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ………….. ஆவார்.
அ) மார்க்கோபோலோ
ஆ) அல் – பரூனி
இ) டோமிங்கோ பயஸ்
ஈ) இபன் பதூதா
விடை:
ஈ) இபன் பதூதா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………………… கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.
விடை:
உத்திரமேரூர்

Question 2.
தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் ……………. ஆவார்
விடை:
முகமது கோரி

Question 3.
ஒரு ……………….. என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது
விடை:
ஜிட்டல்

Question 4.
அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் ………………… ஆவார்
விடை:
மின்கஜ் உஸ் சிராஜ்

Question 5.
கி.பி 1420 இல் விஜயநகருக்கு வருகை புரிந்த இத்தாலியப் பயணி ……………. ஆவார்
விடை:
நிகோலோ கோண்டி

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 2

IV. சரியா? தவறா?

Question 1.
பள்ளிச்சந்தம் என்பது சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் அரசியல் நிலை குறித்த தகவல்களை நமக்கு வழங்குகின்றன.
விடை:
தவறு (பொருளாதார நிலை)

Question 3.
தாமிரத்தின்விலை அதிகமாக இருந்ததால் அரசு ஆணைகளையும் அரசவைநிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கு குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்படுத்தப்பட்டன.
விடை:
சரி

Question 4.
டோமிங்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி 1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.
விடை:
தவறு (விஜயநகரப் பேரரசுக்கு வருகை புரிந்தார்)

V. கூற்று மற்றும் காரணம்

அ) கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை ழக் (✓) இட்டுக் காட்டவும்.

கூற்று : முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

ஆ) தவறான இணையைக் கண்டறியவும் :
1. மதுரா விஜயம் – கங்கா தேவி
2. அபுல் பாசல் – அயினி அக்பரி
3. இபன் பதூதா – தாகுயூக் – இ – ஹிந்த்
4. அமுக்தமால்யதா – கிருஷ்ணதேவராயர்
விடை:
3. இபன் பதூதா – தாகுயூக் – இ – ஹிந்த்

இ) பொருந்தாததைக் கண்டுபிழ.
அ) பொறிப்புகள்
ஆ) பயணக்குறிப்புகள்
இ) நினைவுச் சின்னங்கள்
ஈ) நாணயங்கள்
விடை:
ஆ) பயணக்குறிப்புகள்

VI. ஒரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்.

Question 1.
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
விடை:
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி என்பவர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?
விடை:
சுய சரிதை

Question 3.
ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?
விடை:
தசுக் – இ – ஜஹாங்கீரி

Question 4.
வரலாற்றை அறிந்து கொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.
விடை:

  • முதல் நிலைச் சான்றுகள்
  • இரண்டாம் நிலைச் சான்றுகள்

Question 5.
இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய திகளையும், கோட்டைகளையும் பட்டியலிடவும்.
விடை:
மசூதிகள்:

  1. குவ்வத் – உல் – இஸ்லாம் மசூதி
  2. மோத் – கி – மசூதி
  3. ஜமா மசூதி
  4. பதேப்பூர் சிக்ரி தர்கா
  5. சார்மினார்.

கோட்டைகள்:

  1. ஆக்ரா கோட்டை
  2. சித்தூர் கோட்டை
  3. குவாலியர் கோட்டை
  4. டெல்லி செங்கோட்டை
  5. தௌலதாபாத் மற்றும் பிரோஷ் கொத்தளம்

Question 6.
இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த முக்கியமான அயல் நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.
விடை:

  • மார்கோபோலா
  • அல்பரூனி
  • இபன் பதூதா
  • நிகோலோ கோண்டி
  • அப்துல் ரஸாக்
  • டோமிங்கோ பயஸ்

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்

Question 1.
டெல்லி சுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.
விடை:

  • டெல்லி சுல்தான்கள் பலவகையான நாணயங்களை வெளியிட்டனர்.
  • தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களை வெளியிட்டனர்.
  • ஜிட்டல் எனப்படும் செம்பு நாணயங்களும், டங்கா எனப்படும் வெள்ளி நாணயங்களும் வெளியிடப்பட்டன.
  • நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள படங்களும், உருவங்களும், அரசர்களுடைய பெயர்கள், பட்டங்கள் அவர்களின் உருவப்படங்கள், நிகழ்வுகள், இடங்களின் பெயர்கள் சின்னங்கள் ஆகி யவற்றை நமக்கு உணர்த்துகின்றன.
  • அரசர்களின் இராணுவப் படையெடுப்புகள், பிரதேச விரிவாக்கம், வணிகத் தொடர்பு மற்றும் சமய நம்பிக்கை ஆகியவையும் நாணயங்களில் இடம் பெற்றுள்ளன.
  • நாணயங்களில் உள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்து விளக்குகின்றது.
  • அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள் நாட்டின் பொருளாதார வளத்தை எடுத்துக்காட்டுகிறது.
  • அதேபோன்று முகமது பின்துக்ளக்கின் செப்பு நாணயங்கள் நாட்டின் நலிவு நிலையைக் காட்டுகின்றன.

VIII. கட்டக வினாக்கள்

Question 1.
…………. பேரரசர் ஒளரங்கசீப்பின் காலத்தைச் அரசவை அறிஞர் ஆவார்.
விடை:
காஃபி கான்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
திருவாலங்காடு செப்பேடுகள் ………………….. சேர்ந்ததாகும்.
விடை:
முதலாம் இராஜேந்திர சோழன்

Question 3.
……………….. என்பது கல்விக் கூடங்களைப் பராமரிப்பதற்கான நிலமாகும்.
விடை:
சாலபோகம்

Question 4.
பெரியபுராணத்தைத் தொகுத்தவர் ………………… ஆவார்.
விடை:
சேக்கிழார்

Question 5.
………………… ஓர் அரேபியச் சொல். இதன் பொருள் வரலாறு’ என்பதாகும்.
விடை:
தாரிக்

Question 6.
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கே அமைந்திருந்த …………….. க்கு மாற்றினார்.
விடை:
தேவகிரி

IX. உயர் சிந்தனை வினா வது

Question 1.
“நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதாரச் செழிப்பைச் சுட்டிக்காட்டுகிறது.” விளக்குக.
விடை:

  • பழங்கால அரசர்களால் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
  • செப்பு நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் தங்க நாணயங்களை அவர்கள் வெளியிட்டனர்.
  • உண்மையிலேயே உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதாரச் செழிப்பை எடுத்துக் காட்டும் ஓர் அளவு கோல் ஆகும்.
  • அலாவுதீன் கில்ஜி போன்ற அரசர்கள் தங்க நாணயங்களை வெளியிட்டனர். இது அவர்களின் செல்வச் செழிப்பையும், உயர்ந்த பொருளாதார நிலையையும் உணர்த்துகிறது.
  • இம்மன்னர்கள் காலத்தில் தங்கம் தாராளமாகக் கிடைத்திருக்கிறது.
  • ஆனால் முகமது பின் துக்ளக் போன்ற மன்னர்களின் காலத்தில் நாட்டில் அமைதியும் செழிப்பும் இல்லை. எனவே அவர் தோல் நாணயங்களை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
  • இவ்வாறு நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதார செழிப்பைக் காட்டுகிறது என்பதை அறியலாம்.

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
இடைக்கால இந்தியாவின் அரண்மனைகள், கோட்டைகள், மசூதிகள், கல்லறைகள் ஆகியவற்றின் படங்கள் அடங்கிய செருகேடு (ஆல்பம்) ஒன்றைத் தயார் செய்யவும்.

XI. வாழ்க்கைத் திறன் (மாணவர்களுக்கானது)

Question 1.
உனது நகரத்தில் அல்லது கிராமத்திலுள்ள நூல்களிலிருந்து அங்குக் கிடைக்கும் முதல் நிலை, இரண்டாம் நிலைச் சான்றுகளைக் கண்டறிந்து அறிக்கை ஒன்றைத் தயார் செய்யவும்.

7th Social  Science Guide இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்
அ) வேளாண்வகை
ஆ) பிரம்ம தேயம்
இ) சாலபோகம்
ஈ) தேவதானம்
விடை:
அ) வேளாண்வகை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை
அ) நீதி நிர்வாகம்
ஆ) நிதி நிர்வாகம்
இ) கிராம நிர்வாகம்
ஈ) இராணுவ நிர்வாகம்
விடை:
இ) கிராம நிர்வாகம்

Question 3.
வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்.
அ) சோழர்கள்
ஆ) முகலாயர்கள்
இ) விஜயநகரப் பேரரசர்கள்
ஈ) டெல்லி சுல்தான்கள்
விடை:
ஈ) டெல்லி சுல்தான்கள்

Question 4.
தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்.
அ) சேரர்கள் காலம்
ஆ) சோழர்கள் காலம்
இ) பாண்டியர் காலம்
ஈ) பல்லவர்கள் காலம்
விடை:
ஆ) சோழர்கள் காலம்

Question 5.
இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்
அ) மார்க்கோபோலோ
ஆ) அல் பரூனி
இ) இபன் பதூதா
ஈ) நிகோலோ கோண்டி
விடை:
இ) இபன் பதூதா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
பொறிப்புகள் என்பவை …………………. மேல் பொறிக்கப்படும் எழுத்துக்களாகும்
விடை:
கடினமான மேற்பரப்பு

Question 2.
பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ………… எனப்பட்டன
விடை:
பிரம்ம தேயம்

Question 3.
பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் ………………..
விடை:
தஞ்சாவூர்

Question 4.
சார்மினார் அமைந்துள்ள இடம் …………………….
விடை:
ஹைதராபாத்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 5.
தபகத் என்ற அரேபியச் சொல்லின் பொருள் ……………..
விடை:
தலைமுறைகள்

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 3

IV. சரியா? தவறா?

Question 1.
அயல்நாட்டு வரலாற்றுத் தொகுப்பாளர்களின் குறிப்புகள் சாதாரண மக்களின் வாழ்நிலை குறித்து ஏராளமான செய்திகளைத் தருகின்றன.
விடை:
தவறு (குறைவான செய்திகளையே தருகின்றன)

Question 2.
கல்வெட்டுக்களில் கொடை வழங்கியவர் மட்டுமே சிறப்புக் கவனம் பெறுகிறார்
விடை:
சரி

Question 3.
திருவாலங்காடு செப்பேடுகள் முதலாம் இராஜ ராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தது.
விடை:
தவறு (முதலாம் இராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்தது)

Question 4.
ஆழ்வார்கள் மொத்தம் 63 பேர் இருந்தனர்
விடை:
தவறு (12 பேர்)

Question 5.
சீனாவிலிருந்து தாம் கப்பலில் வந்ததாக மார்க்கோபோலோ கூறியிருக்கிறார்.
விடை:
சரி

V. கூற்று மற்றும் காரணம்

கூற்றைக் காரணத்தோடு பொருத்துக . பொருத்தமான விடையை முக் (✓) இட்டுக் காட்டவும்.

Question 1.
கூற்று : முகமது பின் துக்ளக் தங்க நாணயங்களை வெளியிட்டார்.
காரணம் : இது நாட்டில் செல்வச் செழிப்பு இருந்ததைக் காட்டுகிறது.

அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று தவறு. காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
விடை:
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 2.
கூற்று : அல்பரூனி ஒரு கற்றறிந்த அறிஞர்
காரணம் : இவர் சமஸ்கிருதம் மற்றும் இந்தியத் தத்துவங்களையும் கற்றார்.

அ)காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
விடை:
அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

VI. தவறான இணையைக் கண்டறியவும் :

Question 1.
1. நாணயங்கள் – முதல் நிலைச் சான்றுகள்
2. வாழ்க்கை வரலாறு – இரண்டாம் நிலைச் சான்றுகள்
3. தஜுக் – கிரேக்க சொல்
4. தாகுயுக் – அரேபியச் சொல்
விடை:
3. தஜுக் – கிரேக்க சொல்

Question 2.
1. காயல் – தூத்துக்குடி மாவட்டம்
2. உத்திரமேரூர் – காஞ்சிபுரம் மாவட்டம்
3. தஜுக் – வாழ்க்கை வரலாறு
4. தாரிக் – வரலாறு
விடை:
3. தஜுக் – வாழ்க்கை வரலாறு

VII. பொருந்தாததைக் கண்டுபிடி.

Question 1.
பாபர் நாமா, அக்பர் நாமா, அயினி அக்பரி, தபகத் – இ – அக்பரி
விடை:
பாபர் நாமா

Question 2.
கல்லறைகள், கோட்டைகள், கோபுரங்கள், நாணயங்கள்
விடை:
நாணயங்கள்

VIII. ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சான்றுகள் – வரையறு.
விடை:
கடந்த காலத்தை மறு கட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும்.

Question 2.
நினைவுச் சின்னங்கள் என்றால் என்ன? –
விடை:
கோவில்கள், அரண்மனைகள், மசூதிகள், கல்லறைகள், கோட்டைகள், கோபுரங்கள், ஸ்தூபிகள் ஆகிய கட்டடங்கள் நினைவுச் சின்னங்கள் ஆகும்.

Question 3.
தாரிக்-இ-பெரிஷ்டா என்ற நூலை எழுதியவர் யார்? அந்நூல் கூறுவது என்ன?
விடை:

  • பெரிஷ்டா என்பவர் தாரிக் – இ – பெரிஷ்டா என்ற நூலை எழுதினார்.
  • இந்நூல் இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி பற்றி விவரிக்கிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

Question 4.
வாழ்க்கை வரலாறு மற்றும் சுய சரிதை – வேறுபடுத்துக.
விடை:

  • ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி வேறொருவர் எழுதிய வரலாற்றுக் குறிப்பு வாழ்க்கை வரலாறு எனப்படும்.
  • எடுத்துக்காட்டு : அபுல் பாசல் எழுதிய அயினி அக்பரி என்ற நூல். இது அக்பரின் வாழ்க்கையைப் பற்றிய நூல்
  • ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி அவரே எழுதிய வரலாற்றுக்குறிப்பு சுய சரிதை எனப்படும். எடுத்துக்காட்டு: பாபர் எழுதிய பாபர் நாமா என்ற நூல். இது பாபரின் வாழக்கையைப் பற்றிய நூல்

IX. விடையளிக்கவும்.

Question 1.
சான்றுகளை வகைப்படுத்தி, அவற்றை விவரிக்கவும்.
விடை:

  • கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும்.
  • சான்றுகள் முதல் நிலைச்சான்றுகள் மற்றும் இரண்டாம் நிலைச் சான்றுகள் என இருவகைப்படும்.

முதல் நிலைச் சான்றுகள் :
பொறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள், ஆகியவையும் அவற்றிலிருந்து கிடைக்கப் பெறும் செய்திகளும் முதல் நிலைச் சான்றுகள் ஆகும்.

இரண்டாம் நிலைச் சான்றுகள் :
இலக்கியங்கள், கால வரிசையிலுள்ள நிகழ்வுப்பதிவுகள், பயணக்குறிப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுய சரிதைகள் ஆகியவை இரண்டாம் நிலைச் சான்றுகள் ஆகும்.

Question 2.
சமயச் சார்பற்ற இலக்கியங்கள் பற்றி ஒரு விளக்கம் தருக.
விடை:

  1. மதுரா விஜயம், அமுக்த மால்யதா ஆகியவை சமய சார்பற்ற இலக்கியங்கள் ஆகும். இவை விஜய க. நகரப் பேரரசைப் பற்றி அறிய உதவுகின்றன.
  2. மதுரா விஜயம் கங்காதேவியாலும், அமுக்த மால்யதா என்ற நூல் கிருஷ்ண தேவராயராலும் எழுதப்பட்டன.
  3. இராஜபுத்திர அரசர்களைப் பற்றிய பிருதிவி ராஜ ராசோ என்ற நூலை சந்த் பார்தை என்பவர் எழுதினார்.
  4. கல்ஹணரின் ராஜதரங்கினி இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்துதெரிவிக்கிறது.

Question 3.
இந்தியாவுக்கு வருகை தந்த அந்நிய நாட்டுப் பயணிகள் பற்றி விரிவாக எழுதவும்.
விடை:

  • மார்க்கோ போலோ என்ற வெனிஸ் நகரப் பயணி பாண்டிய மன்னர்கள் காலத்தில் தமிழகத்திற்கு வந்தார்.
  • அவர் காயல் துறைமுகம் பற்றியும் அரேபியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் கடல் வழியாக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்.
  • கற்றறிந்த அறிஞரான அல்பரூனி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்திய மக்களைப் பற்றி அறிய முயன்றார்.
  • இவர் சமஸ்கிருத மொழியைக் கற்றார்.
  • இந்தியத் தத்துவங்களைக் கற்றார்.
  • அவர் எழுதிய தாகுயூக் – இ – ஹிந்த் என்ற நூலில் இந்தியாவின் நிலைகளையும், அறிவு முறையினையும், சமூக விதிகளையும் மதத்தையும் குறித்து விவாதித்துள்ளார்.
  • மொரக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதாவின் பயணநூல்ரிக்ளா – பயணங்கள் என்பதாகும். அவர் இந்தியாவின் சமூக நிலை, சாதி, சதி என்ற உடன் கட்டை ஏறும் பழக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
  • இந்திய வணிக நடவடிக்கைகள் பற்றியும் இவரது நூல் தெரிவிக்கிறது.
  • இவர்கள் தவிர நிகோலோ கோண்டி, அப்துர் ரஸாக், டோமிங்கோ பயஸ் ஆகிய அந்நியப் பயணிகளும் இந்தியாவுக்கு வந்தனர்.
  • இவர்கள் விஜயநகரப் பேரரசின் சிறப்பு பற்றி தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

7th Social  Science Guide புவியின் உள்ளமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்வு செய்க

Question 1.
நைஃப் (Nife) __________ ஆல் உருவானது.
அ) நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
ஆ) சிலிக்கா மற்றும் அலுமினியம்
இ) சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
ஈ) இரும்பு மற்றும் மெக்னீசியம்
விடை:
அ) நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்

Question 2.
நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ___________ விளிம்பின் அருகில் ஏற்படுகின்றது.
அ) மலை
ஆ) சமவெளிகள்
இ) தட்டுகள்
ஈ) பீடபூமிகள்
விடை:
இ) தட்டுகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 3.
நிலநடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை ___________ மூலம் அளக்கலாம்.
அ) சீஸ்மோகிராஃப்
ஆ) ரிக்டர் அளவு கோல்
இ) அம்மீட்டர் தான்
ஈ) ரோட்டோ மீட்டர்
விடை:
ஆ) ரிக்டர் அளவு கோல்

Question 4.
பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான பிளவு _________ என்று அழைக்கப்படுகிறது.
அ) எரிமலைத்துளை
ஆ) ளிமலைப் பள்ளம்
இ) நிலநடுக்க மையம்
ஈ) எரிமலை வாய்
விடை:
அ) எரிமலைத் துளை

Question 5.
மத்திய தரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படும் எரிமலை ___________
அ) ஸ்ட்ராம்போலி
ஆ) கரக்கபோவா
இ) பியூஜியாமா
ஈ) கிளிமாஞ்சாரோ
விடை:
அ) ஸ்ட்ராம்போலி

Question 6.
___________ பகுதி ” பசிபிக் நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படுகிறது.
அ) பசிபிக் வளையம்
ஆ) மத்திய அட்லாண்டிக்
இ) மத்திய கண்டம்
ஈ) அண்டார்ட்டிக்
விடை:
அ) பசிபிக் வளையம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக. அக

Question 1.
புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு _____________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி

Question 2.
நில நடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் __________ ஆகும்.
விடை:
நில அதிர்வுமானி (Seismograph)

Question 3.
பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி ___________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
எரிமலை வெளியேற்றம்

Question 4.
செயல்படும் எரிமலைக்கு உதாரணம் ____________ ஆகும்.
விடை:
செயின்ட் ஹெலன்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 5.
எரிமலைகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை __________ என அழைக்கின்றனர்.
விடை:
எரிமலை ஆய்வியல்

III. பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
மேலோடு, மாக்மா, புவிக்கருவம், கவசம்
விடை:
மாக்மா

Question 2.
நிலநடுக்க மையம், நில நடுக்க மேல் மையப்புள்ளி, எரிமலைவாய், சிஸ்மிக் அலைகள்
விடை:
எரிமலைவாய்

Question 3.
உத்தரகாசி, சாமோலி, கொய்னா, கரக்கடோவே
விடை:
கரக்கடோவே

Question 4.
லாவா , எரிமலைவாய், சிலிக்கா, எரிமலை பள்ளம்.
விடை:
சிலிக்கா

Question 5.
ஸ்ட்ராம் போலி, ஹெலென் , ஹவாய், பூயூஜியாமா
விடை:
ஹவாய்

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 2

V. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (✓) செய்யவும்

Question 1.
கூற்று : பூமியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு ஒப்பிடலாம்.
காரணம் : புவியின் உட்பகுதியானது மேலோடு, மெல்லிய புறத்தோல், புவிக்கருவம் ஆகியவற்றைக் கொண்டது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி, காரணம் தவறு ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 2.
கூற்று : உலகின் மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் பசிபிக் கடலில் உள்ளன.
காரணம் : பசிபிக் கடலின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கிறோம்.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு, காரணம் சரி ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

VI. ஒரு வரியில் விடையளிக்கவும்:

Question 1.
புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக.
விடை:
புவிமேலோடு (Crust)

Question 2.
சியால் (SIAL) என்றால் என்ன?
விடை:
கண்டங்களின் மேற்பகுதி.

Question 3.
புவிப் பாறைக்கோளத் தட்டின் நகர்வின் பெயர் என்ன?
விடை:
கண்டத்திட்டு நகர்வுகள்

Question 4.
செயலிழந்த எரிமலைக்கு உதாரணம் தருக.
விடை:
ஆப்பிரிக்காவின் கென்யா எரிமலைகள்.

VII. கீழ்கண்டவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
மெல்லிய புறத்தோல் (அ) கவசம் என்றால் என்ன?
விடை:
மெல்லிய புறத்தோல் (அ) கவசம்:

  • புவி மேலோட்டின் அடுத்த அடுக்கு கவசம் (mantle) எனப்படுகிறது.
  • கவசம் மேல் கவசம் மற்றும் கீழக்கவசம் என இருவகைப்படும்.

Question 2.
புவிக்கருவம் பற்றி சுருக்கமாக எழுதவும்.
விடை:
புவிக்கருவம் :

  • புவியின் மையப் பகுதியை புவிக்கரு எனக் குறிப்பிடுகின்றனர். இது பேரிஸ்பியர் என்றும் அழைக்கப்படுகிறது.
  • புவிக்கரு இரண்டு அடுக்குகளைக் கொண்டது.
    1. வெளிப்புற புவிக்கரு (திரவநிலையில் இரும்புக் குழம்பு)
    2. உட்புற புவிக்கும் (திட நிலையில் உள்ள நைஃப்)

Question 3.
நிலநடுக்கம் வரையறு.
விடை:
நிலநடுக்கம் : புவியின் மேலோட்டின், ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாராத நகர்வானது, நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே “நிலநடுக்கம்” என்கிறோம்.

Question 4.
சீஸ்மோகிராஃப் என்றால் என்ன?
விடை:
சீஸ்மோகிராஃப்:
புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவியை சீஸ்மோகிராஃப் என அழைக்கிறோம்.

Question 5.
எரிமலை என்றால் என்ன?
விடை:
எரிமலை:
புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்னும் பாறைக் குழம்பு வெளியேறுவதையே எரிமலை என்கிறோம்.

Question 6.
செயல்படும் அடிப்படையில் மூன்று எரிமலைகளின் பெயர்களை எழுதுக.
விடை:
செயல்படும் அடிப்படையில் எரிமலைகளின் வகைகள்:

  • கேடய எரிமலை
  • தழல் கூம்பு எரிமலை
  • பல்சிட்டக் கூம்பு எரிமலை

VIII. காரணம் கூறு

Question 1.
புவியின் உட்புறத்திலிருந்து ஒருவருமே மாதிரி எடுக்கவில்லை.
விடை:
புவியின் உட்புறத்திலிருந்து ஒருவருமே மாதிரி எடுக்கவில்லை.
ஏனெனில்
புவியின் மையப்பகுதி (புவிக்கரு ) 5150 கி.மீ முதல் 6370 கி.மீ அளவில் பரந்துள்ளது. அதிக வெப்பநிலையும் அழுத்தமும் கொண்ட பகுதி. வெளிப்புறக் கருவில் திரவநிலையில் இரும்பாலான குழம்பு உள்ளது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 2.
கண்டங்களின் மேலோடு கடலின் மேலோட்டைவிட அடர்த்தி குறைவு.
விடை:
கண்டங்களின் மேலோடு கடலின் மேலோட்டை விட அடர்த்தி குறைவு.
ஏனெனில்
கண்டங்களின் மேற்பகுதி கருங்கற் பாறைகளால் ஆனது. முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது. இதுவேசியால் என அழைக்கப்படுகிறது. இதன் சராசரி அடர்த்தி 2.7 கி/செ.மீ3

மேலோட்டின் கீழ்பகுதி அடர்ந்த பசால்ட் பாறைகளால் ஆனது. கடல் தரைகளான இப்பகுதி சிலிக்கா மற்றும் மக்னீசியத்தை மூலக்கூறுகளாக கொண்டு அமைந்துள்ளது. இதுவே சிமா என அழைக்கப்படுகிறது. இதன் சராசரி அடர்த்தி 3.0 கி/செ.மீ3

IX. வேறுபடுத்துக.

Question 1.
சியால் மற்றும் சிமா
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 3

Question 2.
செயல்படும் எரிமலை மற்றும் உறங்கும் எரிமலை
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 4

X. பத்தியளவில் விடையளி

Question 1.
நிலநடுக்கத்தின் விளைவுகள் பற்றி எழுதுக.
விடை:
நிலநடுக்கத்தின் விளைவுகள்:
புவி மேலோட்டின் ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாரா நகர்வு, நிலத்தை அதிரவைக்கும் அசைவையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே நிலநடுக்கம் ஆகும்.

நிலநடுக்கம் புவிப்பரப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன.

கட்டிடங்கள் இடிந்து விழுவது நிலநடுக்கத்தின் முக்கிய விளைவாகும். மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து நொறுக்கி மரணக் குழிகளாக மாறுகின்றன.

நிலத்தடி நீர் அமைப்பும் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிப்படைகிறது.

தீப்பற்றுதல் மற்றோர் முக்கிய ஆபத்தாகும்.

நிலநடுக்கத்தால் கடலில் ஏற்படும் பெரிய அலைகளான சுனாமி ஜப்பானிய கடலோரப் பகுதிகளிலும், பசிபிக் கடலோரப் பகுதிகளிலும் பொதுவாக காணப்படுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெருத்த சேதத்தை உண்டாக்குகின்றன.

Question 2.
எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகளை விளக்குக.
விடை:
எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகள்:
புவிமேற்பரப்பு பிளவு வழியே மாக்மா பாறைக் குழம்பு வெளியேறுவது எரிமலை ஆகும். எரிமலைகள் அதன் எரிமலை குழம்பு வெளியேறும் கால அளவினை கொண்டு > செயல்படும் எரிமலை > செயல்படாத எரிமலை > செயலிழந்த எரிமலை என மூவகைப்படும்.

செயல்படும் எரிமலை:

  • அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலை செயல்படும் எரிமலைகள் ஆகும். பெரும்பாலான எரிமலைகள் பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளன.
  • ஸ்ட்ராம்போலி (மத்திய தரைக்கடல்)
  • செயின்ட் ஹெலன் (அமெரிக்கா)
  • மவுனோலோ (ஹவாய்) ஆகியன செயல்படும் எரிமலைகள்.

செயல்படாத எரிமலை :

  • பல ஆண்டுகளாக எரிமலைக்குழம்பை வெளியேற்றும் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் செயல்படக் கூடிய எரிமலைகள் செயல்படாத எரிமலைகள் ஆகும். இவை உறங்கும் எரிமலைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  • வெசுவியஸ் (இத்தாலி)
  • பியூஜியாமா (ஜப்பான்)
  • சிரகோட்டா (இந்தோனேஷியா) ஆகியன செயல்படாத எரிமலைகள்.

செயலிழந்த எரிமலை :

  • வெடிப்பு ஆற்றல் முழுவதையும் இழந்து, வெடிப்பதை நிறுத்திவிட்ட எரிமலை செயலிழந்த எரிமலை எனப்படும்.
  • போப்பா (மியான்மர்)
  • கிளிமாஞ்சரோ (ஆப்பிரிக்கா)
  • கென்யா (ஆப்பிரிக்கா) ஆகியன செயலிழந்த எரிமலைகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 3.
முக்கியமான எரிமலை மண்டலங்களை எழுதி ஏதேனும் ஒன்று பற்றி விவரி
விடை:
முக்கியமான எரிமலை மண்டலங்கள்:
உலகில் மூன்று முக்கிய எரிமலை நிகழ்வு பகுதிகள் உள்ளன. அவை

  • பசிபிக் வளையப் பகுதி
  • மத்திய கண்டப் பகுதி
  • மத்திய அட்லாண்டிக் பகுதி.

பசிபிக்வளையப் பகுதி:

  • இந்த எரிமலைப் பகுதியானது குவிய கடல்தட்டின் எல்லை பகுதியில் அமையப் பெற்றுள்ளது. பசிபிக் பெருக்கடலின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ளது.
  • மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் இப்பகுதியில் அமைந்திருப்பதால் இதனை “பசிபிக் நெருப்பு வளையம்” என்று அழைக்கின்றனர்.

XI. சிந்தனை வினா (HOTS)

Question 1.
பூமியின் உட்கருவம் மிகவும் வெப்பமானது ஏன்?
விடை:
பூமியின் உட்கருவம் மிகவும் வெப்பமானது.
ஏனெனில் புவிக்கரு
புவியின் மையப் பகுதியாகவும் புவியின் மிகுந்த வெப்பமான அடுக்காகவும் உள்ளது. நைஃப் என்ற உட்புற புவிக்கரு அதிக அடர்த்தியும் வெப்பமும் கொண்டது. வெளிப்புற புவிக்கருவானது திரவ நிலையில் இரும்புக் குழம்பாலானது.

Question 2.
எரிமலைகள் அழிவானதா அல்லது ஆக்கப்பூர்வமானதா?
விடை:
எரிமலைகள் அழிவானது மற்றும் ஆக்கபூர்வமானது
அழிவானது: –

  1. எரிமலை வெடிப்பு நிலநடுக்கங்கள், பெரு வெள்ளப் பெருக்குகள், மண் சரிவுகள், பாறை வீழ்ச்சிகள் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
  2. லாவா எனும் எரிமலைக் குழம்பு நீண்ட தூரம் பயணிக்கும் பொழது தனது பாதைய அனைத்தையும் எரிக்கும், புதைக்கும் அல்லது சேதத்திற்கு உட்படுத்தும்.
  3. உண்டாகும் பெருமளவு தூசு மற்றும் சாம்பல் சுவாசத்தை கடினமாக்கும் அல்லது எரிச்சல் ஊட்டும்.
  4. ளிமலை வெடிப்புகள் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும். எளிமலைப் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தைப் பாதிக்கும்.

ஆக்கபூர்வமானது:

  1. ளிமலையின் போது உண்டாகும் பொருட்கள் மண் வளத்தை அதிகரித்து வேளாண் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கிறது.
  2. வெப்பமான எரிமலைப் பகுதி புவி வெப்ப ஆற்றலை உருவாக்குவதற்கு உதவுகிறது.
  3. பெரும்பாலான ளிமலைப் பொருட்கள் கட்டுமானப் பொருட்களாக பயன்படுகின்றன.
  4. செயல்படாத (உறங்கும்) எரிமலைகள் மற்றும் செயல்படும் எரிமலைகள் அதிகமாக ஈர்க்கும் சுற்றுலாத் தலங்களாக இருக்கின்றன. –

Question 3.
எரிமலை எவ்வாறு ஒரு தீவை உருவாக்குகிறது?
விடை:
எரிமலை ஒரு தீவை உருவாக்குதல்:

  1. பல எரிமலைகள் புவியின் பெருங்கடல்களின் அடியில் உருவாகின்றன. கடல் நீருக்குக் கீழே வெடிப்புக்கு உட்படும் எரிமலை பெருங்கடலின் நீர்ப்பரப்புக்கு மேலே எழும்புகிறது.
  2. பெருங்கடல் தீவுகள் எரிமலைத் தீவுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
  3. ஐஸ்லாந்து நாடு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நீருக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் உருவானதாகும்.

XII. செயல்பாடுகள்

Question 1.
நிலநடுக்கம் மற்றும் எரிமலை பற்றிய படங்களை வைத்து ஒரு புத்தகம் தயாரிக்கவும். (மாணவர்களுக்கானது)

Question 2.
எரிமலையின் பாகங்களைக் குறிக்கவும்.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 5

Question 3.
உலக வரைபடத்தில் பசிபிக் நெருப்பு வளையத்தைக் குறிப்பிடுக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 6
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

7th Social  Science Guide புவியின் உள்ளமைப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
புவியின் கொள்ளளவில் கவசம் _____________ கொண்டுள்ளது.
அ) 1%
ஆ) 84%
இ) 51%
ஈ) ஒன்றுமில்லை
விடை:
ஆ) 84%

Question 2.
வெளிப்புற புவிக்கருவில் ___________ மிகுதியாக உள்ளது.
அ) சிலிக்கா
ஆ) மக்னீ சியம்
இ) இரும்பு
ஈ) நிக்கல்
விடை:
இ) இரும்பு

Question 3.
கொலம்பியா பீடபூமி’ ___________ ல் உள்ளது
அ) வட அமெரிக்கா
ஆ) தென் அமெரிக்கா
இ) ஆஸ்திரேலியா
ஈ) கனடா
விடை:
அ) வட அமெரிக்கா

Question 4.
பேரென் தீவு கடைசியாக ___________ ம் ஆண்டில் எரிமலைக் குழம்பை வெடித்து வெளியேற்றியது.
அ) 1997
ஆ) 2007
இ) 2017
ஈ) 1987
விடை:
இ) 2017

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 5.
உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை ____________
அ) மவுனாலோ
ஆ) செயின்ட் ஹெலன்
இ) ஸ்டாராம் போலி
ஈ) பினாடுபோ
விடை:
அ) மவுனாலோ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
எரிமலைகள் பற்றி அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் ______________ என அழைக்கப்படுகின்றனர்.
விடை:
எரிமலை ஆய்வியலாளர்கள்

Question 2.
எரிமலை மீண்டும் வெடித்து கூம்பு வட்டக் குன்றின் உச்சியில் தோற்றுவிக்கும் பெரிய பள்ளம் ____________
விடை:
வட்ட எரிமலைவாய்

Question 3.
எரிமலைகள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகள் ____________ எனப்படும்.
விடை:
எரிமலை ஆய்வியல்

Question 4.
புவியின் சுற்றளவு _____________ கி.மீ ஆகும்.
விடை:
6371

Question 5.
கவசமானது சுமார் _____________ கி.மீ தடிமனாக காணப்படுகிறது.
விடை:
2900

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 7
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 8

IV. சரியா? தவறா?

Question 1.
கடல் தரைகள் பகுதி பசால்ட் பாறைகளாலானது
விடை:
சரி

Question 2.
ஜப்பானிய கடலோரப் பகுதிகளில் சுனாமியின் உருவாக்கம் பொதுவாகக் காணப்படுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 3.
உலகில் 68 % நிலநடுக்கங்கள் பசிபிக் வளைய பகுதியில் ஏற்படுகின்றன.
விடை:
சரி

Question 4.
எரிமலை வெடிப்பு வெளியேற்றத்துக்கு எடுத்துக்காட்டு கரக்காட்டாவோ தீவிலுள்ள எரிமலை ஆகும்.
விடை:
சரி

Question 5.
பேரன் தீவு அந்தமான் கடலில் உள்ளது.
விடை:
சரி

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானதை தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : சிலிகா அதிகமுள்ள அமில லாவா வேகமாகப் படிகின்றது.
காரணம் : செயல்படாத எரிமலைகள் அதிக செயல்பாடு கொண்டவை. அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலைகள்.
அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

Question 2.
கூற்று : புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவி ரிக்டர் ஆகும்
காரணம் : சுனாமி கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் உண்டாகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறு
விடை:
இ) கூற்றும் தவறு ஆனால் காரணம் சரி

VI. தவறான இணையைக் கண்டு பிடிக்கவும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 9
விடை:
புவிமேலோடு – அஸ்தினோஸ்பியர்

VII. பொருத்தமில்லாதாதைக் கண்டுபிடி,

Question 1.
புவிமேலோடு, புவிக்கரு, எரிமலைப்பள்ளம், கவசம்
விடை:
எரிமலைப் பள்ளம்

Question 2.
சியால் (SIAL), நைஃப் (NIFE), சிமா (SIMA), எபின் (EFIN)
விடை:
எபின் (EFIN)

VIII. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி:

Question 1.
மூன்று வகையான நிலநடுக்க அலைகளைப் பெயரிடு.
விடை:
மூன்று வகையான நிலநடுக்க அலைகள்:

  • P – அலைகள் (அழுத்த அலைகள்)
  • S – அலைகள் (முறிவு அலைகள்)
  • L – அலைகள் (மேற்பரப்பு அலைகள்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 2.
மென் அடுக்கு (மென் பாறைக் கோளம்) என்றால் என்ன?
விடை:
மென் பாறைக் கோளம் :
புவி மேலோட்டிற்கும் கவச மேலடுக்கிற்கும் இடையே உள்ள பகுதியே மென்பாறைக் கோளம் எனப்படும்.

Question 3.
“நீல நிறக் கோள்” குறித்து எழுதுக.
விடை:
நீல நிறக் கோள்:

  • பூமியின் பரப்பு 71% நீரால் சூழப்பட்டுள்ளது.
  • பூமி நீல நிறக்கோள் ‘ என அழைக்கப்டுகிறது.

Question 4.
புவியின் நகர்வுகளை அதன் ஆக்க சக்திகளின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
ஆக்க சக்திகளின் அடிப்படையில் புவி நகர்வுகள் :

  • புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றல் அக உந்து சக்திகள்
  • புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் சக்திகள் புற உந்து சக்திகள்

Question 5.
நிலநடுக்கத்தால் ஏற்படும் முக்கிய விளைவு என்ன?
விடை:
நிலநடுக்கத்தால் ஏற்படும் முக்கிய விளைவு: புவியின் மேலோட்டில் பிளவு மற்றும் விரிசல்கள் கொண்ட ஒரு பகுதி பிளந்து, கீழ் இறங்குவதே நிலநடுக்கத்தால் ஏற்படும் முக்கிய விளைவாகும்.

IX. விரிவான விடை தருக.

Question 1.
‘கண்டத்தட்டு நகர்வுகள் குறித்து எழுதுக
விடை:
கண்டத்தட்டு நகர்வுகள் :
கற்கோள் உடைப்பால் ஏற்படும் தட்டுகளை கற்கோள தட்டுகள் என்கிறோம்.

கற்கோள தட்டுகளின் (கண்டத்தட்டுகள் அல்லது கடற் தட்டுகள்) நகர்வுகளே கண்டத்தட்டு நகர்வுகளாகும்.

புவியின் உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பமானது இத்தட்டுகளின் இயக்க சக்தியாக செயல்படுகிறது. இத்தட்டுகள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் நகர்கின்றன.

சிற்சில பகுதிகளில் தட்டுகள் ஒன்றிலிருந்து மற்ஹான்று விலகிச் செல்கின்றன. சிற்சில பகுதிகளில் ஒன்று மற்றொன்றின் அருகாமையில் நெருங்கிவரும்போது மோதிக் கொள்கின்ளன.

ஒரு கடற்தட்டு கண்டத்தட்டின் மீது போதும் போது கண்டத்தட்டுகளின் விளிம்பு பகுதியில் எரிமலைகளாக உருவெடுக்கின்றது. சமயங்களில் தட்டுகள் ஒன்றின் மீது மற்றொன்று மோதும் போது வளைந்து மடிப்புகளை உருவாக்குகின்றன. இமயமலைச் சிசரங்கள் உருவானது இவ்வகையில்தான்.

புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றல் அக உந்து சக்திகள்

புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் சக்திகள் புற உந்து சக்திகள் என புவியின் நகர்வுகளை ஆக்க சக்தியின் அடிப்படையில் பிரிக்கலாம்.

Question 2.
எரிமலை வெடிப்பின் விளைவுகள் யாவை?
விடை:
எரிமலை வெடிப்பின் விளைவுகள் :

  • புவியின் உள் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமானது 35 மீட்டருக்கு 1° செ ஆக உயர்ந்து கொண்டே வருகிறது.
  • வெப்பத்துடன் அழுத்தமும் அதிகரிக்கின்றது. 15 கிலோமீட்டர் ஆழத்தில் அழுத்தமானது சதுர செ.மீக்கு 5 டன்கள் என்ற அளவில் உயருகின்றது.
  • இத்தகைய நிலையில் புவியின் உள்ளே பாறைக் குழம்பு மிதமான இளகிய நிலையில் உள்ளது. இதுவே மாக்மா ஆகும். மிகுதியான அழத்த நிலையில் மாக்மாவானது எளிதில் பற்றக் கூடிய வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் திறன் கொண்டதாக காணப்படுகிறது.
  • இத்திறன் காரணமாகவே ஆற்றலற்ற புவிப்பகுதிகளில் மாக்மா பாறைக்குழம்பு வெடித்து வெளியேறுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு

Question 3.
மத்திய தரைக்கடல் – இமயமலை நிலநடுக்கம் பகுதி குறித்து எழுது. மேலும் இப்பகுதியில் ஏற்பட்ட சில நிலநடுக்கங்கள் பற்றி கூறுக.
விடை:
மத்திய தரைக்கடல் – இமயமலை நிலநடுக்கப்பகுதி:

  1. உலகின் 31% நிலநடுக்கங்கள் ஆசியா கண்டத்தில் உள்ள இமயமலைப் பகுதியிலும் வடமேற்கு சீனாவிலிருந்து மத்திய தரைக்கடல் பகுதி வரையிலும் ஏற்படுகின்றன.
  2. இந்தியாவின் இமயமலைப் பகுதிகள், கங்கை பிரம்மபுத்திரா சமவெளிகள் நிலநடுக்க பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
  3. அதிக எண்ணிக்கையிலுள்ள நிலநடுக்கங்கள் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளன. மோசமான மற்றும் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டதாக உணரப்பட்டுள்ளது.
  4. உத்திரகாசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1991)
  5. சாமோலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1999)
  6. நிலநடுக்கப் பாதிப்புகள் அற்ற பகுதிகளாக சொல்லப்பட்ட தக்காண பீடபூமியிலேயே இரண்டு மிக மோசமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
  7. கெய்னாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1967)
  8. லாத்தூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1993)

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 1 புவியின் உள்ளமைப்பு 10

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

7th Social  Science Guide டெல்லி சுல்தானியம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
_______________ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
அ) முகமதுகோரி
ஆ) ஜலாலுதீன்
இ) குத்புதீன் ஐபக்
ஈ) இல்துமிஷ்
விடை:
இ) குத்புதீன் ஐபக்

Question 2.
குத்புதீன் தனது தலைநகரை ___________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
அ) லாகூர்
ஆ) புனே
இ) தௌலதாபாத்
ஈ) ஆக்ரா
விடை:
அ) லாகூர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 3.
______________ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
அ) ரஸ்ஸியா
ஆ) குத்புதீன் ஐபக்
இ) இல்துமிஷ்
த ஈ) பால்பன்
விடை:
இ) இல்துமிஷ்

Question 4.
டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.
அ) முகமது பின் துக்ளக்
ஆ) பிரோஷ் ஷா துக்ளக்
இ) ஜலாலுதீன்
ஈ) கியாசுதீன்
விடை:
ஈ) கியாசுதீன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் ___________ ஆவார்
விடை:
கியாசுதீன் துக்ளக்

Question 2.
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார்.
விடை:
தேவகிரி

Question 3.
புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை __________ ஆதரித்தார்.
விடை:
பால்பன்

Question 4.
டெல்லியிலுள்ள குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார்.
விடை:
குத்புதீன் ஐபக்

Question 5.
இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் _____________ ஆட்சியின் போது ஏற்பட்டது.
விடை:
இல்துமிஷ்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 2

IV. சரியா, தவறா?

Question 1.
குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்
விடை:
தவறு (குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்தார்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 2.
ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.
விடை:
சரி

Question 3.
ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.
விடை:
தவறு (இல்துமிஷ் ஐபக்கின் மருமகன்)

Question 4.
தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ்ஷா மறுத்துவிட்டார்.
விடை:
சரி

V. சரியான விடையை (✓) டிக் செய்யவும். கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக.

அ) கூற்று : மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம் : செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணமும் கூற்றும் தவறானவை.
ஈ) கூற்று தவறு; காரணம் சரி.
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.

ஆ) சரியான இணையைத் தேர்வு செய்க.
1. ஹொய்சாளர் – தேவகிரி
2. யாதவர் – துவாரசமுத்திரம்
3. காகதியர் – வாராங்கல்
4. பல்லவர் – மதுரை
விடை:
3) காகதியர் – வாராங்கல்

இ) தவறான கூற்றினை கண்டறியவும். தம்

  1. 1206 இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்.
  2. ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்.
  3. மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார்.
  4. இப்ராகிம் லோடி 1526 இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார்.

விடை:
2) ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்.

VI. கீழ்க்காண்பனவற்றிற்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
முறையான ஊதியத்திற்கு மாற்றாக ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயரென்ன?
விடை:
ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயர் இக்தா’

Question 2.
ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
விடை:
ஆக்ரா நகரத்தை சிக்கந்தர் லோடி நிர்மாணித்தார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 3.
கி.பி (பொ. ஆ) 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியர் யார்?
விடை:
முகமது கோரி 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவினார்.

Question 4.
‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர் கொள்வதற்காக இல்துமிஷ் – துருக்கியப் பிரபுக்கள் நாற்பது பேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழு சகல்கானி அல்லது நான்பதின்மர் எனப்பட்டது.

Question 5.
அலாவுதீன் கில்ஜி எவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்?
விடை:
அலாவுதீன் கில்ஜி வடக்கே பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை தன் வசமாக்கினார்.

அவரது படைத் தளபதியான மாலிக் கபூர் மூலம் தெற்கே தேவகிரியை ஆண்ட யாதவர்கள், துவார சமுத்திரத்தின் ஹொய்சாலர்கள், வாராங்கல்லின் காகதீயர்கள் மற்றும் மதுரைப் பாண்டியர்கள் ஆகியோர் அவரது ஆதிக்கத்தின் கீழ் வந்தனர். இவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்.

Question 6.
பிரோஷ்ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக.
விடை:

  • பிரோஷ்ஷா துக்ளக் கல்லூரிகள், மசூதிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கட்டினார்.
  • பல மனிதாபிமான நடவடிக்கைகளையும் அவர் மேற் கொண்டார்.
  • மனிதாபிமானமற்ற கொடூரமான தண்டனைகளை ஒழித்தார்.
  • அநேக வரிகளை ரத்து செய்தார்.
  • விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தார்.
  • பல நீர்ப்பாசனக் கால்வாய்களை வெட்டினார்.
  • 1200 புதிய தோட்டங்களை உருவாக்கினார்.

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்.

Question 1.
1398 ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
விடை:

  • தைமூர் சாமர்கண்ட் பகுதியை ஆட்சி செய்தார்.
  • இவர் வட இந்தியாவுக்கு மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
  • 1938 ல் இந்தியாவிற்குள் படையெடுத்து நுழைந்தார்.
  • டெல்லி மற்றும் பஞ்சாப் பகுதிகளைக் கொள்ளையடித்தார்.
  • தங்கம், வெள்ளி, நகைகள் எனப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்து எடுத்துச் சென்றார்.
  • திரும்பிச் செல்லும் போது தச்சு வேலை செய்வோர் மற்றும் கட்டடக் கலைஞர்கள் போன்ற இந்தியக் கலைஞர்களை சாமர்க்கண்டிற்கு அழைத்துச் சென்றார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
முகமது பின் துக்ளக்கை டெல்லியின் சுல்தானாக நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
விடை:

  • முகமது பின் துக்ளக் மிகவும் கற்றறிந்த மனிதர். ஆனாலும் அவர் குரூரம் நிறைந்தவராய் இருந்தார்.
  • இந்தியா முழுவதையும் தனது நாடாக்க வேண்டும் என கனவு கண்டார்.
  • தலைநகரை மாற்றிய அவரது திட்டம் தோல்வி கண்டது.
  • துக்ளக் நிலவரியை உயர்த்தியதோடு, வரியை பணமாகவே செலுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார். இதுவும் மக்களுக்கு பெரும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியது.
  • முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய திட்டங்கள் அனைத்துமே சிறந்தவைகளாகும். ஆனால் சூழ்நிலையை அறிந்து அவைகள் நடைமுறைப் படுத்தப் படவில்லை. எனவே அவரது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன,
  • அவரது அவசர கொள்கை முடிவுகளும், சில நடைமுறைப்படுத்த இயலாத திட்டங்களும் துக்ளக் மரபின் வீழ்ச்சிக்குக் காரணமாயின.

IX. வரைபட வினா

Question 1.
இந்திய ஆறுகள் வரைபடத்தில் துக்ளக் வம்சத்தின் ஆட்சி எல்லையையும் கீழ்க்காணும் பகுதிகளையும் குறிப்பிடுக.
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

  1. டெல்லி
  2. தேவகிரி
  3. லாகூர்
  4. மதுரை

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பொருத்துக
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 4

Question 2.
டெல்லி சுல்தானியத்தின் இஸ்லாமிய கலை, கட்டடக் கலை தொடர்பான படங்களைக் கொண்டு செருகேடு (ஆல்பம் ) ஒன்றைத் தயார் செய்யவும்.

7th Social  Science Guide டெல்லி சுல்தானியம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

Question 1.
மம்லுக் என்ற அராபிய வார்த்தையின் பொருள்
அ) எஜமான்
ஆ) அடிமை
இ) சக்தி
ஈ) வெற்றி
விடை:
ஆ) அடிமை

Question 2.
இபன் பதூதா _______________ நாட்டுப் பயணி
அ) சீனா
ஆ) கிரீஸ்
இ) மொராக்கோ
ஈ) போர்ச்சுகல்
விடை:
இ) மொராக்கோ

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 3.
தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு
அ) 1398
ஆ) 1368
இ) 1389
ஈ) 1498
விடை:
அ) 1398

Question 4.
சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர்
அ) ஆலம்ஷா
ஆ) முகமது ஷா
இ) முபாரக் ஷா
ஈ) கிசிர்கான்
விடை:
ஈ) கிசிர்கான்

Question 5.
முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1556
ஆ) 1526
இ) 1625
ஈ) 1562
விடை:
ஆ) 1526

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் ____________
விடை:
குத்புதீன் ஐபக்

Question 2.
குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் ____________
விடை:
குத்புதீன் ஐபக்

Question 3.
கில்ஜி வம்சத்தின் முதல் அரசர் __________
விடை:
ஜலாலுதீன் கில்ஜி

Question 4.
முகமது பின் துக்ளக் தேவகிரியின் பெயரை __________ என மாற்றினார்.
விடை:
தௌலதாபாத்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 5.
இப்ராகிம் லோடி ___________ என்பவரின் மகன் ஆவார்.
விடை:
சிக்கந்தர் லோடி

III. பொருத்துக வாதம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 5

IV. சரியா, தவறா?

Question 1.
பால்பன் பாரசீகக் கவிஞரான அமிர்குஸ்ரு என்பவரை ஆதிரித்தார்.
விடை:
சரி

Question 2.
முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் ஜானாகான்.
விடை:
சரி

Question 3.
முகமது பின் துக்ளக் கல்வி அறிவற்றவர்
விடை:
தவறு (கற்றிந்தவர்)

Question 4.
பிரோஷ் ஷா துக்ளக்கின் இறுதி நாட்கள் மகிழ்ச்சி நிறைந்தவையாக இல்லை.
விடை:
சரி

Question 5.
தைமூர் டெல்லியைக் கொள்ளையடித்த போதிலும், அவர் அம்மக்களை துன்புறுத்தவில்லை
விடை:
தவறு (மக்களைக் கொன்றார்)

V. அ) கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக. சரியான விடையைக் (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று 1 : துருக்கிய பிரபுக்கள் ரஸ்ஸியாவுக்கு எதிராகக் கலகம் செய்து அவரைக் கொலை செய்தனர்.
கூற்று 2 : ரஸ்ஸியா ஒரு எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப் பெரிதும் நம்பினார்.

அ) கூற்றும் காரணமும் தவறு.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
ஈ) கூற்று சரி. காரணம் தவறு.
விடை:
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

ஆ) தவறான கூற்றினைக் கண்டறியவும்.

1. முகமது கோரிக்கு மகன்கள் இல்லை
2. குவ்வத் – உல் – இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதி இந்தியாவிலுள்ள மிகப்பழமையான மசூதி எனக்கருதப்படுகிறது.
3. அலாவுதீன் கில்ஜி ஜலாலுதீன் கில்ஜியின் மகன் ஆவார்.
4. சிக்கந்தர் லோடியின் தலைநகர் ஆக்ரா ஆகும்.
5. பாபர் டெல்லி சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
விடை:
3) அலாவுதீன் கில்ஜி ஜலாலுதீன் கில்ஜியின் மகன் ஆவார்

VI. தவறான இணையைக் கண்டு பிடிக்கவும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 6
விடை:
3) பகலூல் லோடி

VII. பொருந்தாததைக் கண்டுபிடி

Question 1.
பிரோஷாபாத், ஜான்பூர், காரா, ஹிசார்.
விடை:
காரா

Question 2.
குத்புதீன் ஐபக், இல்துமிஷ், பால்பன், அமிர்குஸ்ரு
விடை:
அமிர்குஸ்ரு

VIII. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
இல்துமிஷ் எவ்வாறு தன் நாட்டை மங்கோலியப் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தார்?
விடை:
ஏற்கனவே செங்கிங்கானால் தோற்கடிக்கப்பட்டு, விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலு தீன் என்பவர் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை இல்துமிஷ் மறுத்துவிட்டார். இதனால் மங்கோலியர் இல்துமிஷ் மீது படையெடுக்கவில்லை.

Question 2.
ஜவ்ஹர் பற்றி சிறுகுறிப்பு வரைக..
விடை:

  • ஜவ்ஹர் என்பது ராஜபுத்திரர்களிடையே நிலவிய ஒரு சடங்கு ஆகும்.
  • இதன்படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாளவர். பெண்கள் அதன் தீப்புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்.

Question 3.
அலாவுதீனின் வரிவசூல் முறை பற்றி கூறு.
விடை:

  • அலாவுதீன் வரிகளை வசூல் செய்யும் பணியை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
  • அவர் கட்டாய உணவு தானியக் கொள் முதல் முறையை அறிமுகம் செய்தார்.
  • கொள்முதல் விலை சுல்தானால் நிர்ணயம் செய்யப்பட்டது. வரியாக வசூலிக்கப்பட்ட தானியம் அரசாங்க பண்டக சாலையில் சேர்த்து வைக்கப்பட்டது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 4.
சையது வம்சத்தின் தோற்றம் பற்றி எழுதுக.
விடை:
தைமூர் டெல்லியை விட்டுச் செல்வதற்கு முன்பாக, தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு (டெல்லி, மீரட், பஞ்சாப்) கிசிர்கான் என்ற தனது பிரதிநிதியை ஆளுநராக நியமித்துச் சென்றார். அவர் தோற்றுவித்த அரசே சையது அரசவம்சம் ஆகும்.

Question 5.
முதல் பானிபட் போர் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • முதல் பானிபட் போர் 1526 ஆம் ஆண்டு பாபருக்கும் இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்றது.
  • இப்போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்தார்.
  • இதனால் லோடி அரச வம்சத்திற்கும், டெல்லி சுல்தானியத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
  • பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார்.

IX. விடையளிக்கவும்

Question 1.
இஸ்லாமியக் கலை மற்றும் கட்டக்கலையை விவரி.
விடை:

  • முஸ்லீம் பிரபுக்களும் அதிகாரிகளும் நகரங்களிலும், கிராமங்களிலும் தங்கள் குடியிருப்புகளைக் கட்டிக் கொண்டனர்.
  • பின் அவற்றைச் சுற்றி அழகு மிக்க மசூதிகளைக் கட்டினர்.
  • மசூதிகள் மற்றும் மதரசாக்களின் சுவர்களிலும் கதவுகளிலும் குரானிலுள்ள வரிகளைச் செதுக்கியிருந்தனர்.
  • கட்டடங்களின் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும், அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்திருந்தன. எனவே அப்பாணி இந்தோ – சாராசானிக் கலை வடிவம் என அழைக்கப்பட்டது.
  • குதுப்மினார், அலெய் தாவாசா, மோத்தி மசூதி, இல்துமிஸ் மற்றும் பால்பன் ஆகியோரின் கோட்டைகள் ஆகியவை அப்பாணியில் அமைக்கப்பட்டவையாகும்.

Question 2.
பால்பனின் பெருமைகளை வெளிக் கொணர்.
விடை:

  • பால்பன் ஒரு மிகச் சிறந்த அரசர்.
  • நாற்பதின்பர் என்று அழைக்கப்பட்ட துருக்கியப்பிரபுக்கள் குழு அவரோடு பகைமை பாராட்டியதால் அவ்வமைப்பை அவர் ஒழித்தார்.
  • தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரையும், இடையூராய் இருப்போரையும் கண்டறிய ஒரு ஒற்றர் துறையை நிறுவினார்.
  • அரசு அதிகாரத்திற்குக் கீழ்ப்படியாமை, எதிர்த்தல் போன்றவற்றைக் கண்டித்தார்.
  • வங்காள ஆளுநராக இருந்த துக்ரில்கான பால்பனுக்கு எதிராகக் கலகம் செய்ததால் அவர் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
  • அவர் தனது எதிரிகளிடம் கருணையில்லாமல் நடந்து கொண்டார்.
  • மங்கோலியரிடம் இணக்கமான உறவு கொண்டிருந்தார்.
  • அமிர்குஸ்ரு என்ற பாரசீகக் கவிஞரை ஆதிரித்தார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 3.
முகமது பின் துக்ளக்கின் நாணயச் சீர்திருத்தத்தை விவாதி.
விடை:

  • முகமது பின் துக்ளக் நிலவரி பணமாக வசூலிக்கப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இது மக்களை அதிகமாகப் பாதித்தது.
  • போதுமான அளவுக்கு நாணயங்களோ, புதிய நாணயங்களை வெளியிடும் அளவுக்கு வெள்ளியோ கைவசம் இல்லை. இதை உணர்ந்த துக்ளக் செப்பு நாணயங்களை வெளியிட்டார்.
  • இதனால் கள்ள நாணயங்கள் பெருகிவிட்டன. ஒட்டு மொத்த வருவாய் நிர்வாக முறை சீர்குலைந்தது.
  • இதனால் வணிகம் பாதிக்கப்பட்டது.
  • எனவே செப்பு நாணயங்களைப் பெற்றுக் கொண்டு அதற்கு மாறாக தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களைக் கொடுத்தார். இதனால் அரசு திவாலானது.
  • இதனால் மீண்டும் நிலவரியை உயர்த்தினார். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு நாட்டில் அடிக்கடி பஞ்சம் ஏற்பட்டது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 7