Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

10th Social Science Guide தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ……………………..
அ) தூத்துக்குடி
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) மதுரை
விடை:
இ) சென்னை

Question 2.
குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது ………………
அ) சேலம்
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) தருமபுரி
விடை:
ஆ) கோயம்புத்தூர்

Question 3.
……………….. என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.
அ) வேளாண்மை
ஆ) தொழில்
இ) இரயில்வே
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) தொழில்

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 4.
திருப்பூர் ………………. தொழிலுக்கு பெயர்பெற்றது.
அ) தோல் பதனிடுதல்
ஆ) பூட்டு தயாரித்தல்
இ) பின்னலாடை தயாரித்தல்
ஈ) வேளாண் பதப்படுத்துதல்
விடை:
இ பின்னலாடை தயாரித்தல்

Question 5.
…………….. இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.
அ) ஓசூர்
ஆ) திண்டுக்கல்
இ) கோவில்பட்டி
ஈ) திருநெல்வேலி
விடை:
அ) ஓசூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் …………………. மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளது.
விடை:
வேலூர்

Question 2.
சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் ……………ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
ஏப்ரல் 2000

Question 3.
………. என்பவர் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகளின் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
விடை:
தொழில் முனைவோர்

III. தவறான ஒன்றினை தேர்வு செய்க.

Question 1.
பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?
அ) ராணிப்பேட்டை
ஆ) தர்மபுரி
இ) ஆம்பூர்
ஈ) வாணியம்பாடி
விடை:
ஆ) தர்மபுரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 2.
பின்வருவனவற்றில் எது தொழில் துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?
அ) TIDCO
ஆ) SIDCO
இ) MEPG
ஈ) SIPCOT
விடை:
இ MEPG

IV. பின்வருவனவற்றைப் பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் 2

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
விடை:

  • நிலத்தின் உற்பத்தித்திறன் குறைந்து வருவதால் விவசாயத் துறையில் தொழிலாளர் ஊதியம் குறைவாக உள்ளது.
  • நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் விவசாயத் துறையில் நில உற்பத்தித்திறன் அதிகரிக்க முடியாது.

Question 2.
தொழில் துறை தொகுப்பு என்றால் என்ன?
விடை:
தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.

Question 3.
தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?
விடை:

  • தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.
  • ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
  • கைத்தறி நெசவுத்தொழில் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.
விடை:
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT)
தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)
சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.

தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – வரையறுக்கப்பட்டது (TANSI)
சிறுநிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 5.
தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?
விடை:

  • வேதிப்பொருள்கள், நெசவுத் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தை கெடுக்கிறது.
  • இந்த திரவக் கழிவுகள் சேரும் நீர் நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது.
  • உலகளாவிய அளவில் போட்டிப் போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலை வாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது. பணியாளர்களின் தரமானது, இன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவதால் குறைகிறது.

Question 6.
தொழில்முனைவோர் என்பவர் யாவர்?
விடை:

  • ஒரு “தொழில் முனைவோர்” என்பவர் புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
  • இவர்களிடம் சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகளும் மற்றும் தலைமைக்குத் தேவையான பண்புகளும் இருக்கும்.

Question 7.
தொழில்முனைவு என்றால் என்ன?
விடை:

  • தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே தொழில் qமுனைவு எனப்படும்.
  • இவை ஒன்றை உருவாக்குவதற்கும் மேலும் பெரிதுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?
விடை:
வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்புகள் பின்வருமாறு:

  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல்.
  • துறை சார்ந்த சிறப்பு கவனம்.
  • நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல்.
  • புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி.
  • நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம்.
  • பல்வேறு திறமையான தொழிலாளர்கள்.
  • சுய உதவி குழுக்கள் செயல்படுதல்.
  • வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு.

Question 2.
தமிழ்நாட்டின் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக.
விடை:
இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது.

காலனித்துவ காலத்திலிருந்து பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது.

நமது நாட்டின் மிகப் பெரிய பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் தமிழகம் பெரும்பங்கு வகிக்கிறது.

ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத்தறித் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.

திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும்.

இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது.

இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது.

மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது.

வாகனக் கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருள்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது.

பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.

நவீன தொகுப்புகளைத் தவிர பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன.

Question 3.
தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
கல்வி:

  • திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது.
  • நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

உள்கட்டமைப்பு:

  • மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது.
  • மின்சார விநியோகம் மட்டுமல்லாது தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும்.
  • குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது.

தொழில்துறை ஊக்குவிப்பு:
சிறந்த தொழிற்பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்த பகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 4.
தொழில்முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக.
விடை:
தொழில் முனைவோரின் பங்கு:

  • நாட்டில் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு மிக முக்கியமானதாகும்.
  • தொழில் முனைவோர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுவதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிறார்கள்.
  • இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு (GDP) உற்பத்தி மற்றும் தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள்.
  • குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தை செயல்பட வைக்கிறார்கள்.
  • தொழில்முனைவோர் கைவினைஞர்கள், தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். இலாபத்தினை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.
  • தொழில் முனைவோர், குறைந்த விலையில் சிறந்த தரமான பொருட்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர். இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.

10th Social Science Guide தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
தொழில்துறைத் தொகுப்பு ……………. வளர்ந்தது.
அ) 1915
ஆ) 1930
இ) 1920
ஈ) 1945
விடை:
இ 1920

Question 2.
…………….. தொழில் தொகுப்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
அ) டெக்ஸ்டைல்ஸ்
ஆ) பில்டிங்
இ) கைத்தறி நெசவுத் தொழில்
ஈ) ஏதுமில்லை
விடை:
இ) கைத்தறி நெசவுத் தொழில்

Question 3.
தோல் உற்பத்தி நடைபெறுமிடம் …………… ஆகும்.
அ) கோயம்புத்தூர்
ஆ) வேலூர்
இ) திருச்சி
ஈ) நாமக்கல்
விடை:
ஆ) வேலூர்

Question 4.
திருச்சிராப்பள்ளியில் உள்ள BHEL நிறுவனம் ………….. தயாரிக்கிறது.
அ) தொட்டிகள்
ஆ) கொதிகலன்கள் (ம) விசையாழிகள்
இ) ரயில் பெட்டிகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) கொதிகலன்கள் (ம) விசையாழிகள்

Question 5.
…………………. சேலம் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது.
அ) 1920
ஆ) 1973
இ) 1937
ஈ) 1945
விடை:
ஆ) 1973

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 6.
1990ல் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ………….. தொழில்மயமாதலின் இறுதி கட்டம்.
அ) முன் காலகட்டம்
ஆ) பிந்தைய காலகட்டம்
இ) நவீன காலகட்டம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) பிந்தைய காலகட்டம்

Question 7.
தொழிற்சாலைகளை அதிகளவு கொண்ட மாநிலம் ……………….. ஆகும்.
அ) கேரளா
ஆ) கர்நாடகா
இ) தமிழ்நாடு
ஈ) ஆந்திரப் பிரதேசம்
விடை:
இ தமிழ்நாடு

Question 8.
ஈரோடு (ம) சேலம் பகுதியில் அதிகளவு மின்தறி அலகுகள் இருப்பதால் ……………… பரவலாக உள்ளது.
அ) தீப்பெட்டி
ஆ) கட்டுமானம்
இ) மின்விசைத்தறித்தொழில்
ஈ) நெசவுத் தொழில்
விடை:
இ மின்விசைத் தறித்தொழில்

Question 9.
பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்திட்ட பங்கினை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினை ……………. கொண்டுள்ளது.
அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருப்பூர்
ஈ) தஞ்சை
விடை:
இ திருப்பூர்

Question 10.
……………… அரைக்கோளத்திலுள்ள நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகள் எனப்படுகின்றது.
அ) கிழக்கு
ஆ) மேற்கு
இ) வடக்கு
ஈ) தெற்கு
விடை:
ஈ) தெற்கு

Question 11.
வீட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையம் …………….. ஆகும்.
அ) ஈரோடு
ஆ) சேலம்
இ) கரூர்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ கரூர்

Question 12.
வேலூர் ……………… ஏற்றுமதியின் சிறந்து விளங்குகிறது.
அ) வீட்டுப்பொருள்
ஆ) விசைத்தறி
இ) தோல்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ தோல்

Question 13.
……………. போக்குவரத்திற்கு சிறந்தது.
அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) அ) (ம) ஆ)
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) தமிழ்நாடு

Question 14.
TIDCO ………………. தொடங்கப்பட்டது.
அ) 1949
ஆ) 1971
இ) 1965
ஈ) 1956
விடை:
இ 1965

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………….. என்பது புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைக்கும் புத்தாக்கம் புனைபைவர் ஆவார்.
விடை:
தொழில் முனைவோர்

Question 2.
……………… ஒன்றை உருவாக்குவதற்கும் பெரிதுபடுத்துவதற்கான திறனாகும்.
விடை:
தொழில் முனைவு

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 3.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் ……………. தொடங்கப்பட்டது.
விடை:
ஜனவரி 16, 2016

Question 4.
…………….. என்பது சென்னையில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.
விடை:
MEPZ

Question 5.
MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த ……………. GST சாலையில் அமைந்துள்ளது.
விடை:
தாம்பரம்

Question 6.
திறமை வாய்ந்த மனிதவளங்கள் ………… தேவைப்படுகின்றன.
விடை:
தொழிற்சாலைக்கு

Question 7.
…………….. தொழிற்சாலையும், வேலைவாய்ப்பையும் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
தோல் உற்பத்தி

Question 8.
50க்கும் மேற்பட்ட அலகுகளைக் கொண்டு ………………. முக்கிய மையமாகத் திகழ்கிறது.
விடை:
கரூர்

Question 9.
மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையும் நிறைவேற்றுமிடம் ……………… எனப்படும்.
விடை:
தொழிற்சாலை

Question 10.
வருமானம் அதிகரிப்பு ………….. தேவைக்கு வழி வகுக்கிறது.
விடை:
பண்டங்கள் (ம) பணிகளின்

III. தவறான ஒன்றினை தேர்வு செய்க.

Question 1.
…………… தீப்பெட்டி தொழிற்சாலைக்கு பெயர் பெற்ற இடமாகும்.
அ) ராணிப்பேட்டை
ஆ) தர்மபுரி
இ) சிவகாசி
ஈ) திருப்பூர்
விடை:
இ சிவகாசி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 2.
…………. உள்நாட்டுப் போக்குவரத்துக்கு சிறந்த மாநிலமாகும்.
அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரப்பிரதேசம்
இ) கேரளா
ஈ) கர்நாடகா
விடை:
அ) தமிழ்நாடு

IV. பின்வருவனவற்றை பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் 4

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் – வரையறு.
விடை:

  • மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும்.
  • மத்திய அரசு அமைத்த நாட்டின் ஏழு ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • இது அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த தாம்பரம் GST சாலையில் அமைந்துள்ளது.

Question 2.
தொழிற்சாலை வரையறு.
விடை:
பொதுவாக மூலப்பொருள்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் “தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது.

Question 3.
தொழிற்சாலைகளின் வகைகள் யாவை?
விடை:

  • பயனர்கள்
  • பயன்Question படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை
  • நிறுவன உரிமையாளர்கள்
  • அளவு

Question 4.
தொழில்மயமாதல் வரையறு.
விடை:
நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருள்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது தொழில்மயமாதல் எனப்படும்.

Question 5.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் வரையறு.
விடை:

  • ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும்.
  • இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
தமிழகத்தில் தொழில் விரிவாக்கத்திற்கு திறவுகோலாக செயல்படும் முகமைகளை விவரி.
விடை:
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்:
1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.

தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்:
1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்:
நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – வரையறுக்கப்பட்டது:
புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது.

தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – வரையறுக்கப்பட்டது:
சிறுநிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Question 2.
தமிழ்நாட்டின் முக்கிய தானியங்கி தொகுப்புகள் பற்றி விவரிக்க.
விடை:

  • சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுகிறது.
  • சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது.
  • சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன.
  • பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹூன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட்
  • நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன.
  • எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது.
  • பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
  • கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

10th Social Science Guide அரசாங்கமும் வரிகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள் ………………………….
அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி
ஆ) மைய, மாநில மற்றும் கிராம
இ) மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து
ஈ) ஏதுமில்லை
விடை:
அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி

Question 2.
இந்தியாவில் உள்ள வரிகள் ………………… .
அ) நேர்முக வரிகள்
ஆ) மறைமுக வரிகள்
இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ)
ஈ) ஏதுமில்லை
விடை:
இ இரண்டும் (அ) மற்றும் (ஆ)

Question 3.
வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?
அ) பாதுகாப்பு
ஆ) வெளிநாட்டுக் கொள்கை
இ) பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி ………………..
அ) சேவை வரி
ஆ) கலால் வரி
இ) விற்பனை வரி
ஈ) மத்திய விற்பனை வரி
விடை:
இ விற்பனை வரி

Question 5.
ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?
அ) மதிப்புக் கூட்டு வரி (VAT)
ஆ) வருமான வரி
இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
ஈ) விற்பனை வரி
விடை:
இ பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

Question 6.
இந்தியாவில் வருமானவரிச்சட்டம் முதன் முதலில் …..ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அ) 1860
ஆ) 1870
இ) 1880
ஈ) 1850
விடை:
அ) 1860

Question 7.
சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு ……………. வரி விதிக்கப்படுகிறது.
அ) வருமான வரி
ஆ) சொத்து வரி
இ) நிறுவன வரி
ஈ) கலால் வரி
விடை:
ஆ) சொத்து வரி

Question 8.
கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை?
அ) பண்டங்களின் பற்றாக்குறை
ஆ) அதிக வரி விகிதம்
இ) கடத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………….. மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது.
விடை:
வரி

Question 2.
“வரி” என்ற வார்த்தை ……………. சொல்லிலிருந்து பெறப்பட்டது.
விடை:
வரிவிதிப்பு

Question 3.
……………… வரியில் வரியின் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது.
விடை:
நேர்முக

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி …………………… ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
விடை:
1 ஜூலை 2017

Question 5.
வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் ………………. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கருப்பு பணம்

III. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
GST பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
i) GST ‘ஒரு முனைவரி’
ii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
iii) இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
iv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.

அ) (1) மற்றும் (ii) சரி
ஆ) (ii), (iii) மற்றும் (iv) சரி
இ) (ii), (iii) மற்றும் (iv) சரி
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரியானவை.
விடை:
இ (ii), (iii) மற்றும் (iv) சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 2

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
வரி வரையறுக்க.
விடை:

  • வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும்.
  • அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாகச் செலுத்த வேண்டியதே வரி.

Question 2.
அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?
விடை:

  • நாட்டின் நிதி நிர்வாகத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நாம் வரி செலுத்த வேண்டும்.
  • வரிவிதிப்பு மூலம் வழங்கப்படுகின்ற பணத்தை பல செயல்பாடுகளைச் செய்ய மாநிலங்கள் பயன்படுத்துகின்றன.

Question 3.
வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.
விடை:
வரிகளின் வகைகள் :
நேர்முக வரிகள் மற்றும் மறைமுக வரிகள்.

நேர்முக வரிகள் :

  • வருமான வரி
  • நிறுவன வரி
  • சொத்து வரி (அ) செல்வ வரி

மறைமுக வரிகள்:

  • முத்திரைத்தாள் வரி
  • பொழுபோக்கு வரி
  • கலால் வரி (அ) சுங்கத்தீர்வை
  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி – சிறு குறிப்பு வரைக.
விடை:

  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.
  • இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
  • மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி ஒரு வரி” என்பதாகும்.
  • இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

Question 5.
வளர்வீத வரி என்றால் என்ன?
விடை:

  • வளர்வீத வரி விதிப்பு முறையில் வரியின் அடிப்படைத்தளம் அதிகரிக்கும் போது (பெருக்கப்படும்) வரி விகிதமும் (பெருகி) அதிகரிக்கிறது.
  • அதாவது வருமானம் அதிகரிக்கும் போது, வரி விகிதமும் அதிகரிக்கும்.

Question 6.
கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
விடை:

  • கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
  • வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.

Question 7.
வரி ஏய்ப்பு என்றால் என்ன?
விடை:

  • தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும்.
  • வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை
    1. வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்
    2. விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது.
    3. மறைக்கப்பட்ட பணம்.
    4. கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்.

Question 8.
வரிக்கும் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஏதேனும் இரண்டை பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 3

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.
விடை:
வரிகளின் வகைகள்: அ) நேர்முக வரிகள் ஆ) மறைமுக வரிகள்
அ) நேர்முக வரிகள் :
நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும். சில நேர்முக வரிகள்: வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.

வருமான வரி :

  • வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும்.
  • இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது.

நிறுவன வரி:

  • இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது.
  • இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.

சொத்து வரி (அ) செல்வ வரி:

  • சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும்.
  • இந்த வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.

ஆ) மறைமுக வரிகள்:

  • ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது “மறைமுகவரி” எனப்படும்.
  • சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்.

முத்திரைத்தாள் வரி:
முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்களான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.

பொழுதுபோக்கு வரி :

  • எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.
  • உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

சுங்கத் தீர்வை (அ) கலால் வரி:
சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும்.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி: (GST)
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.

  • இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
  • மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி – ஒரு வரி” என்பதாகும்.
  • இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 2.
GST யின் அமைப்பை எழுதுக.
விடை:
பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு (GST)
மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): (மாநிலத்திற்குள்):
மதிப்புக் கூட்டு வரி (VAT) / விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி, மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): (மாநிலத்திற்குள்):
மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை, கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம், (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி).

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST): (மாநிலங்களுக்கு இடையே)
நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. (5%, 12%, 18% மற்றும் 28%) காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

Question 3.
கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக.
விடை:
கருப்பு பணம் (Black Money) என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு பணத்திற்கான காரணங்கள்:
கருப்பு பணத்திற்கு பல காரணங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அவை

  1. பண்டங்கள் பற்றாக்குறை
  2. உரிமம் பெறும் முறை
  3. தொழில் துறையின் பங்கு
  4. கடத்தல்
  5. வரியின் அமைப்பு

10th Social Science Guide அரசாங்கமும் வரிகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… வளர்வீத வரி விதிப்பு முறைக்கு நேர் எதிர் மாறானதாகும்.
அ) விகித வரி விதிப்பு வரி
ஆ) தேய்வுவீத வரி விதிப்பு முறை
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தேய்வுவீத வரி விதிப்பு முறை

Question 2.
ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித …………………. .
அ) வளர்வீத வரி விதிப்பு முறை
ஆ) தேய்வுவீத வரி விதிப்பு முறை
இ) கலால் வரி
ஈ) (ஆ) மற்றும் (அ)
விடை:
இ கலால் வரி

Question 3.
வருமானம் அதிகரிக்கும் போது வரி விகிதமும் ……………………
அ) குறைகிறது
ஆ) அதிகரிக்கிறது
இ) சற்று அதிகரிக்கிறது
ஈ) சற்று குறைகிறது
விடை:
ஆ) அதிகரிக்கிறது

Question 4.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ………………ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
அ) மார்ச் 10, 2019
ஆ) மார்ச் 29, 2018
இ) மார்ச் 29, 2017
ஈ) மார்ச் 20, 2017
விடை:
இ) மார்ச் 29, 2017

Question 5.
………………. பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.
அ) முத்திரைத்தாள் வரி
ஆ) சுங்கத் தீர்வை
இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
ஈ) பொழுதுபோக்கு வரி
விடை:
ஆ) சுங்கத் தீர்வை

Question 6.
திரைப்பட கட்டணம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை பார்ப்பதற்காக விதிக்க ப்படுகிற வரி …………………
அ) சுங்கத்தீர்வை
ஆ) பொழுதுபோக்கு வரி
இ) முத்திரைத்தாள் வரி
ஈ) வருமான வரி
விடை:
ஆ) பொழுதுபோக்கு வரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 7.
சொத்துத் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவை மீது விதிக்கப்படும் வரி ………………….
அ) சொத்து வரி
ஆ) வருமான வரி
இ முத்திரைத்தாள் வரி
ஈ) கலால் வரி
விடை:
இ முத்திரைத்தாள் வரி

Question 8.
சொத்துக்களுக்கான வரி ………………. அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகிறது.
அ) ஒன்றியம்
ஆ) உள்ளூர்
இ) பஞ்சாயத்து
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
ஆ) உள்ளூர்

Question 9.
இந்தியாவில் அரசாங்கத்தினால் …………… வரி வசூலிக்கப்படுகிறது.
அ) இரண்டு அடுக்கு
ஆ) நான்கு அடுக்கு
இ) மூன்று அடுக்கு
ஈ) ஆறு அடுக்கு
விடை:
இ) மூன்று அடுக்கு

Question 10.
தனிநபர் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரி …………….. ஆகும்.
அ) வருமான வரி
ஆ) நிறுவன வரி
இ) செல்வ வரி
ஈ) (அ) மற்றும் (ஆ)
விடை:
இ செல்வ வரி

Question 11.
தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஈவு தொகைக்கானக் கட்டணம் போன்றவை வசூலிக்கப்படும் வரி ………………….
அ) செல்வ வரி
ஆ) நிறுவன வரி
இ) முத்திரைத்தாள் வரி
ஈ) சுங்கத்தீர்வை
விடை:
ஆ) நிறுவன வரி

Question 12.
நேர்முக வரிகளுள் …………….. ஒன்று.
அ) GST
ஆ) சுங்கத்தீர்வை
இ) பொழுதுபோக்கு
ஈ) செல்வ வரி
விடை:
ஈ) செல்வ வரி

Question 13.
அரசாங்கம் மக்களின் நலனிற்கும் ……………… வரிகளைப் பயன்படுத்தலாம்.
அ) தனியார் சேவை
ஆ) பொது சேவை
இ) நிறுவன சேவை
ஈ) அ) மற்றும் ஆ) இரண்டும்
விடை:
ஆ) பொது சேவை

Question 14.
வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வரி ………..
அ) உறுதி விதி
ஆ) சமத்துவ விதி
இ) உற்பத்தி திறன்
ஈ) நெகிழ்ச்சி வரி
விடை:
ஈ) நெகிழ்ச்சி வரி

Question 15.
……………. சேவையை மத்திய அரசாங்கம் வழங்குகிறது.
அ) பாதுகாப்பு
ஆ) அயல்நாட்டு கொள்கை
இ) சட்டம் மற்றும் ஒழுங்கு
ஈ) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
விடை:
ஆ) அயல்நாட்டு கொள்கை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது ……………… அத்தியாவசியப் பணியாக உள்ளது.
விடை:
ராணுவத்தின்

Question 2.
………………. அரசாங்கத்தில் துடிப்பான நீதித்துறை உள்ளது.
விடை:
மத்திய

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 3.
வரிவிதிப்பு முறை ……………. என்ற கருத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
விடை:
நல அரசு

Question 4.
……………. என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணம்.
விடை:
வரிகள்

Question 5.
வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறன் ………… என கூறப்படுகிறது.
விடை:
நிதித்துறை

Question 6.
தற்கால இந்திய வரி முறையானது ………………. முறையை அடிப்படையாக கொண்டது.
விடை:
பண்டைய கால வரி

Question 7.
இந்தியாவில் முதன் முதலாக வருமானவரி ………………. என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
சர் ஜேம்ஸ் வில்சன்

Question 8.
………………. இந்தியாவில் உள்ள சிறப்பு உரிமைகளில், மூலதன சொத்துகளில் விற்பனையில் இருந்து வரும் வட்டி லாபங்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது.
விடை:
நிறுவன வரி

Question 9.
…………….. சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படும் வரி.
விடை:
செல்வ வரி

Question 10.
இந்தியாவின் சில முக்கிய மறைமுக வரி, சுங்க வரி மற்றும் ……………………. ஆகும்.
விடை:
பண்டங்கள் பணிகள் வரி

Question 11.
………………. அரசாங்க ஆவணத்திற்கு விதிக்கப்படுவதாகும்.
விடை:
முத்திரைத்தாள் வரி

Question 12.
……………… உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரி ஆகும்.
விடை:
சுங்கத்தீர்வை

Question 13.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ……………… முதல் செயல்பட்டு வருகிறது.
விடை:
ஜூலை 1, 2017

Question 14.
……………. என்பது செலுத்தப்படாத வரி பணமாகும்.
விடை:
கருப்பு பணம்

Question 15.
……………… அபாரதங்களில் 5 ஆண்டுகள் சிறை தண்டணையும் அதிக அபராதமும் அடங்கும்.
விடை:
வரி விதிப்பு

Question 16.
…………….. கருப்பு பணத்திற்கான காரணங்களில் ஒன்று.
விடை:
கடத்தல்

Question 17.
வரி விதிப்பு ……………… உருவாக்குகிறது.
விடை:
சமூக நலனை

Question 18.
………………. வரி விதிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
விடை:
வட்டார வளர்ச்சியில்

Question 19.
…………… என்பது பணவீகிதத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக பயன்படுகிறது.
விடை:
வரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 20.
……………… என்பது பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்துவதாகும்.
விடை:
கட்டணம்

III. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) கருப்பு பணம் என்பது செலுத்தப்படும் வரிப் பணமாகும்.
ii) வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட பணம் ஆகும்.
iii) வரி அமைப்பு கருப்பு பணத்திற்கான காரணங்களுள் ஒன்று.

அ) i) மற்றும் ii) சரி
ஆ) ii) மற்றும் iii) சரி
இ) i) மற்றும் iii) சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
ii) மற்றும் iii) சரி

Question 2.
i) வருமான வரி 1866ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
ii) இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
iii) இது ஒரு நேர்முக வரி ஆகும்.
iv) வருமான வரி வளர்வீத வரியின் எடுத்துக்காட்டாகும்.

அ) i) மற்றும் ii) சரி
ஆ) ii) iii) iv) சரி
இ) i), iii), iv) சரி
ஈ) எல்லாம் சரி
விடை:
ஆ) ii), iii), iv) சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும் 5

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
வரி ஏய்ப்பின் அபராதங்களைப் பற்றி எழுதுக.
விடை:

  • ஒரு நபர் வரி ஏய்ப்பு செயலை முழுமையாகச் செய்தால், அவர் மோசமான குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும். வரி ஏய்ப்பு அபராதங்களில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிக அளவு அபராதமும் அடங்கும்.
  • பிரதிவாதிகள், வழக்கு விசாரணைக்கான செலவுகளைச் செலுத்த உத்தரவிடப்படலாம்.
  • வரி ஏய்ப்பிற்கான அபராதம், குற்றத்தின் தன்மை, மற்றும் அதன் தீவிரத்தினைப் பொறுத்து கடுமையானதாக இருக்கும்.

Question 2.
பொழுதுபோக்கு வரி வரையறு.
விடை:
எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.

உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

Question 3.
பாதுகாப்பு (அ) இராணுவம் வரையறு.
விடை:

  • எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது இராணுவத்தின் அத்தியாவசியப் பணியாகக் கருதப்படுகிறது.
  • பாதுகாப்புப் படைகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் மத்திய அரசாங்கமே பொறுப்பாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 4 அரசாங்கமும் வரிகளும்

Question 4.
விகித வரி விதிப்பு முறை வரையறு.
விடை:

  • ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித வரி விதிப்பு முறை எனப்படுகிறது.
  • அனைத்து வரி செலுத்துவோரும், தங்கள் வருமானத்தில் அதே விகிதத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
வரி அமைப்பு பற்றி விவரி.
விடை:

  • ஒவ்வொரு வகையான வரியும் சில நன்மைகள் மற்றும் தீமைகளைப் பெற்றுள்ளன.
  • நாம் கொண்டுள்ள வரி அமைப்பு, பல்வேறு வகையான வரிகளின் தொகுப்பாகும்.
  • ஆடம் ஸ்மித் முதல் பல பொருளாதார வல்லுநர்கள் வரி விதிப்புக் கொள்கைகளைக் கொடுத்துள்ளனர்.
  • அவைகளில் பொதுவான வகைகளை இங்கு நினைவு கூறுவது முக்கியமானதாகும்.
  1. சமத்து விதி :
    • வரி ஒரு கட்டாயக் கட்டணம் என்பதால், வரி முறையை வடிவமைப்பதில் சமத்துவம் என்பது முதன்மை என்பதை அனைத்து பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
    • பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்தவேண்டும், ஏனென்றால் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது.
  2. உறுதி விதி:
    ஒவ்வொரு வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரி முறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.
  3. சிக்கன மற்றும் வசதி விதி:
    • வரி எளிமையானதாக இருந்தால், வரி வசூலிப்பதற்கான செலவு (வரி செலுத்துவோர் செலவு + வரி வசூலிப்போர் செலவு) மிகக் குறைவாக இருக்கும்.
    • மேலும், ஒரு நபருக்கு வரி செலுத்தப் போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட வேண்டும்.
    • இது வசதிக்கான வரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வசதியான வரி, வரி வசூலிக்கும்
      செலவை குறைக்கிறது.
  4. உற்பத்தித் திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி:
    • அரசாங்கம் போதுமான வரி வருவாயைப் பெறக்கூடிய வரிகளை தேர்வு செய்ய வேண்டும்.
    • நிறைய வரிகளுக்குப் பதிலாக அதிக வரி வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
    • இது உற்பத்தித் திறன் வரியாகும். > மக்கள் தங்கள் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்கள்.
    • எனவே, மக்கள் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும்.
    • இது நெகிழ்ச்சி வரி எனப்படுகிறது.

Question 2.
பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வரிவிதிப்பின் பங்கினை விவரி.
விடை:
பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வரி விதிப்பின் பங்கு பின்வருமாறு.

  1. வளங்களைத் திரட்டுதல்:
    • வரிவிதிப்பு அரசாங்கத்திற்கு கணிசமான அளவிற்கு வருவாய் திரட்டுவதற்கு உதவுகிறது.
    • குறிப்பாக நேர்முக வரிகளான தனிநபர் வருமானவரி, நிறுவனவரி மற்றும் மறைமுக வரிகளான ஆயத்தீர்வை, சுங்கவரி ஆகியவற்றின் மூலமாக வரி வருவாய் திரட்டப்படுகிறது.
  2. வருமான ஏற்றதாழ்வுகளை குறைத்தல்:
    • வரியின் மூலம் சமத்துவமுறையை உருவாக்கலாம்.
    • குறிப்பாக, நேர்முக வரியில் வளர்வீத வரி முறை பின்பற்றப்படுகிறது.
    • அதேபோல சில மறைமுக வரியான ஆடம்பரப் பண்டங்களின் மீது விதிக்கப்படும் வரி வளர்வீத வரியின் தன்டையுடையதாகும்.
  3.  சமூக நலன் :
    • வரி விதிப்பு சமூக நலனை உருவாக்குகிறது.
    • சில விரும்பத்தகாத பொருட்களான மதுபானங்கள் போன்ற பொருட்களின் மீது அதிகமாக வரி விதிப்பதன் மூலம் சமூக நலன் பாதுகாக்கப்படுகிறது.
  4. அந்நியச் செலாவணி:
    • வரிவிதிப்பு ஏற்றுமதியை ஊக்குவிப்பதுடன் இறக்குமதியைத் தடுக்கிறது. பொதுவாக, வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளும் ஏற்றுமதி பொருட்களுக்கு வரிகளை விதிப்பதில்லை.
  5. வட்டார முன்னேற்றம்:
    • வட்டார வளர்ச்சியில் வரி விதிப்பு முக்கியப் பங்கினை வகிக்கிறது.
    • பின் தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்காக வரிச் சலுகையையும், வரி விலக்குகளையும் அளிப்பதன் மூலம், அப்பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு வணிக நிறுவனங்களைத் தூண்டுகிறது.
  6. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் :
    • வரி என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளுள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.
    • அரசாங்கம் பண்டங்கள் மீதான வரி விகிதத்தை குறைப்பதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

9th Social Science Guide உள்ளாட்சி அமைப்புகள் Text Book Back Questions and Answers

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
அ) பல்வந்ராய் மேத்தா குழு
ஆ) அசோக் மேத்தா குழு
இ) GVK ராவ் மேத்தா குழு
ஈ) LM சிங்வி மேத்தா குழு
விடை:
இ) GVK ராவ் மேத்தா குழு

Question 2.
_____ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பாண்டியர்
ஈ) பல்ல வர்
விடை:
அ) சோழர்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 3.
73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.
அ) 1992
ஆ) 1995
இ) 1997
ஈ) 1990
விடை:
அ) 1992

Question 4.
ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் ____ ஆவார்.
அ) ஆணையர்
ஆ) மாவட்ட ஆட்சியர்
இ) பகுதி உறுப்பினர்
ஈ) மாநகரத் தலைவர்
விடை:
ஆ) மாவட்ட ஆட்சியர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
‘உள்ளாட்சி அமைப்புகளின்’ தந்தை என அழைக்கப்படுபவர் _____
விடை:
ரிப்பன் பிரபு

Question 2.
நமது விடுதலைப் போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது ____ ஆக விளங்கியது.
விடை:
நம்பிக்கை

Question 3.
சோழர் காலத்தின் போது கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசிய தேர்தல் முறை ____ என்றழைக்கப்பட்டது.
விடை:
குடவோலை முறை

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 4.
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ____ ஆகும்.
விடை:
கிராம ஊராட்சி

Question 5.
பேரூராட்சிகளின் நிர்வாகத்தினைக் கண்காணிப்பவர் ____ ஆவார்.
விடை:
செயல் அலுவலர்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள் 55

IV. தவறுகளைக் கண்டறிந்து பிழை திருத்தி எழுதவும்.

1. ஊராட்சி ஒன்றியம் பல மாவட்டங்கள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
2. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
3. நகராட்சி ஆணையர் ஓர் இந்திய அரசுப்பணிகள் அலுவலர் ஆவார்.
4. ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை:
1. ஊராட்சி ஒன்றியம் பல ஊராட்சிகள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
2. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைந்துள்ளது.
3. தவறு இல்லை.
4. உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தலைவர் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

V. சுருக்கமான விடையளி

Question 1.
கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?
விடை:

  • சொத்து வரி
  • நில வரி
  • வீட்டு வரி
  • தொழில் வரி
  • குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
  • கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 2.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:

  • மூன்று அடுக்கு அமைப்பு
  • கிராம சபை
  • தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்.
  • நிதி ஆணையத்தினை நிறுவுதல்.
  • மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு.
  • பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கீடு.
  • மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.

Question 3.
கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?
விடை:

  • குடிநீர் வழங்குதல்
  • வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்
  • சாலைகளைப் பராமரித்தல்
  • தொகுப்பு வீடுகளைக் கட்டுதல்
  • சிறிய பாலங்களைப் பராமரித்தல்
  • இடுகாடுகளைப் பராமரித்தல்
  • வடிகால் அமைப்புக்களைப் பராமரித்தல்
  • தெருக்களைச் சுத்தம் செய்தல்
  • பொதுக்கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல்
  • தெருவிளக்குகளைப் பராமரித்தல்
  • கிராம நூலகங்களைப் பராமரித்தல்

Question 4.
உள்ளாட்சி அமைப்புகளின் விருப்பப்பணிகள் யாவை?
விடை:

  • கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளைப் பராமரித்தல்.
  • சந்தைகளையும் திருவிழாக்களையும் நடத்துதல்
  • மரங்களை நடுதல்.
  • விளையாட்டு மைதானங்களைப் பராமரித்தல்
  • வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள், இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடைகளின் கொட்டகை ஆகியவற்றைப் பராமரித்தல்.
  • பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களைக் கட்டுப்படுத்துதல்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 5.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:

  • பேரூராட்சி
  • நகராட்சி
  • மாநகராட்சி

VI. ஒரு பத்தியில் விடையளி.

Question 1.
1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:

  • ஊராட்சி மற்றும் நகராட்சியின் ‘உள்ளாட்சி அமைப்பு’ நிறுவனங்களாகச் செயல்படும்.
  • குடியரசு அமைப்பின் அடிப்படை அலகுகள்: வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் (கிராமங்கள்) மற்றும் பகுதி குழுக்கள் (நகராட்சிகள்) ஆகியன.
  • கிராமங்கள் இடையில் காணப்படும் வட்டாரம் / வட்டம் / மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன.
  • நேரடித் தேர்தல் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன.
  • அனைத்து நிலைகளிலும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
  • பெண்களுக்கு 1/3 பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
  • தலைவர் பதவிக்கும் 1/3 பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துதல், ஆட்சிகலைக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Question 2.
உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் யாவை?
விடை:

  • உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறை யின்மை.
  • நிதி ஒதுக்கீடு மற்றும் தேவைகளின் மதிப்பீடு ஒத்துப்போவதில்லை.
  • உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதி, வகுப்பு மற்றும் சமயம் ஆகிய மூன்றும் முக்கிய பங்காற்றுகின்றன. > மக்களாட்சியின் அடிப்படை நிலையிலுள்ள அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்பற்ற நிலை.

VII. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. உன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியைச் சந்தித்து உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்ற விவரங்களை சேகரி.

9th Social Science Guide உள்ளாட்சி அமைப்புகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள்
அ) பல்லவர்கள்
ஆ) ஆங்கிலேயர்
இ) குப்தர்கள்
ஈ) சோழர்கள்
விடை:
ஈ) சோழர்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 2.
மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்தியது
அ) 1909 மிண்டோ – மார்லி சீர்திருத்தச்சட்டம்
ஆ)1919 மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம்
இ) 1773 ஒழுங்குபடுத்தும் சட்டம்
ஈ) 1935 இந்திய அரசுச்சட்டம்
விடை:
ஈ) 1935 இந்திய அரசுச்சட்டம்

Question 3.
இந்திய நிர்வாகம் பிராந்திய மொழியிலேயே நடைபெற வேண்டும் என விரும்பியவர்
அ) டல்ஹௌசி
ஆ) வெல்லெஸ்லி
இ) மன்றோ
ஈ) ரிப்பன்
விடை:
இ) மன்றோ

Question 4.
இந்தியாவில் வாக்களிக்கத் தேவையான குறைந்தபட்ச வயது
அ) 18
ஆ) 21
இ) 25
ஈ) 16
விடை:
அ) 18

Question 5.
மேயரின் பதவிக்காலம்
அ) 3 ஆண்டுகள்
ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
ஈ) 6 ஆண்டுகள்
விடை:
இ) 5 ஆண்டுகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கிராம ஊராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் ____ ஆண்டுகள்.
விடை:
ஐந்து

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 2.
தமிழ்நாட்டில் இருந்த உள்ளாட்சி அமைப்புகள் பற்றி தெரிவிப்பது ____ கல்வெட்டுக்கள் ஆகும்.
விடை:
உத்திரமேரூர்

Question 3.
கிராம ஊராட்சிக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர்
விடை:
ஊராட்சி மன்ற தலைவர்

Question 4.
பெரியார் ____ நகராட்சியின் பெருந்தலைவராகப் பணியாற்றினார்.
விடை:
ஈரோடு

Question 5.
மாநில அளவில் தேர்தல்களை நடத்துவது _____
விடை:
மாநிலத் தேர்தல் ஆணையம்

III. சுருக்கமாக விடையளி

Question 1.
ஊராட்சி ஒன்றியத்தின் பணிகள் யாவை?
விடை:

  • குடிநீர் வழங்கல்
  • கிராம சுகாதார நிலையங்கள் பராமரிப்பு
  • சாலைகள் பராமரிப்பு
  • மகப்பேறு விடுதிகளை நிறுவுதல்
  • பொதுக் கண்காட்சிகள் நடத்துதல்
  • கால்நடை மருத்துவமனைகளை நிறுவுதல்
  • சமூகக் காடுகளை பராமரித்தல்
  • துவக்கப்பள்ளி கட்டடங்களை சீர் செய்தல்

Question 2.
பிற நகர்புற பஞ்சாயத்துக்கள் யாவை?
விடை:

  • அறிவிக்கப்பட்ட பகுதி குழுக்கள்
  • நகர் பகுதி குழுக்கள்
  • இராணுவ குடியிருப்பு வாரியம்
  • குடியிருப்புகள்
  • துறைமுகப் பொறுப்பு கழகம்
  • சிறப்பு நோக்க நிறுவனம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள்

Question 3.
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகளின் பெயர்களை எழுதுக.
விடை:

  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • திருச்சி
  • திருநெல்வேலி
  • சேலம்
  • ஈரோடு
  • வேலூர்
  • தூத்துக்குடி
  • திருப்பூர்
  • தஞ்சாவூர்
  • திண்டுக்கல்

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?
விடை:

  • சொத்து வரி
  • தொழில் வரி
  • வீட்டு வரி
  • குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
  • நில வரி
  • கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்

Question 2.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:

  • மூன்று அடுக்கு அமைப்பு
  • கிராம சபை
  • தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்.
  • நிதி ஆணையத்தினை நிறுவுதல்.
  • மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு.
  • பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இட ஒதுக்கீடு.
  • மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 5 உள்ளாட்சி அமைப்புகள் 90

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

10th Social Science Guide உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
…………….. என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும்.
அ) உணவு கிடைத்தல்
ஆ) உணவுக்கான அணுகல்
இ) உணவின் முழு ஈடுபாடு
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
அ) உணவு கிடைத்தல்

Question 2.
தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை …………….. மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
அ) FCI
ஆ) நுகர்வோர் கூட்டுறவு
இ) ICICI
ஈ) IFCI
விடை:
அ) FCI

Question 3.
எது சரியானது?
i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்
ii) MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை
iii) PDS – பொது விநியோக முறை
iv) FCI – இந்திய உணவுக் கழகம்

அ) i மற்றும் ii சரியானவை
ஆ) iii மற்றும் iv சரியானவை
இ) ii மற்றும் iii சரியானவை
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 4.
நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480ஐ கொண்டு வந்த நாடு …………
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சிங்கப்பூர்
ஈ) இங்கிலாந்து
விடை:
அ) அமெரிக்கா

Question 5.
…………….. இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
அ) நீலப் புரட்சி
ஆ) வெள்ளைப் புரட்சி
இ) பசுமைப் புரட்சி
ஈ) சாம்பல் புரட்சி
விடை:
இ பசுமைப் புரட்சி

Question 6.
உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் …………
அ) கேரளா
ஆ) ஆந்திரபிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) கர்நாடகா
விடை:
இ தமிழ்நாடு

Question 7.
………………. என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.
அ) ஆரோக்கியம்
ஆ) ஊட்டச்சத்து
இ) சுகாதாரம்
ஈ) பாதுகாப்பு
விடை:
ஆ) ஊட்டச்சத்து

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………… ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.
விடை:
எடை குறைவாக இருப்பது

Question 2.
………………ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
விடை:
2013

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 3.
பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருள்களை வழங்குவதில் ……………… முக்கியப் பங்கு வகிக்கிறது.
விடை:
நுகர்வோர் கூட்டுறவு

III. பின்வருவனவற்றைப் பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 2

IV. சரியான கூற்றை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
காரணம் : பொருள்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

அ) கூற்று சரியானது, காரணம் தவறானது
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது
இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்
விடை:
ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்

V. குறுகிய விடையளிக்கவும்.

Question 1.
FAO வின்படி உணவு பாதுகாப்பை வரையறு.
விடை:
“எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவுப் பாதுகாப்பு இருக்கிறது.”

Question 2.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை?
விடை:
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள்: கிடைத்தல், அணுகல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.

Question 3.
பசுமைப் புரட்சியில் இந்திய உணவுக் கழகத்தின் (FCI)யின் பங்கு என்ன?
விடை:

  • விவசாயிகளின் பயிர்களுக்கு விதைப்புப் பருவத்திற்கு முன்பே குறைந்தபட்ச விலை F(Minimum Support Price) யை ஊக்கத்தொகையாக வழங்குகிறது.
  • உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை FCI வாங்குகிறது.
  • கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்கள் களஞ்சியங்களில் சேமிக்கப்படுகின்றன.

Question 4.
பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
விடை:

  • உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரித்தல்.
  • உணவு தானியங்களை இறக்குமதி செய்வதில் குறைப்பு.
  • அதிக மகசூல் தரக்கூடிய கோதுமை மற்றும் அரிசி கணிசமாக வளர்ந்தன.
  • இது ஏராளமான வேலைகளை உருவாக்கியது.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 5.
தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
விடை:

  • புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம்.
  • ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்.
  • பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்.
  • பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்.
  • தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்.
  • மதிய உணவுத் திட்டம்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.
விடை:
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா ஒரு திட்டமிட்ட வளர்ச்சியினை பின்பற்ற முடிவு செய்தது.

விவசாயத்தில் ஆரம்பத்தில் கவனம் செலுத்திய பின்னர், தொழில்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இந்தியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான வறட்சி, உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது.

இருப்பினும், அப்பொழுது இருந்த அற்றிய செலாவணி இருப்பானது, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கவில்.ை

பணக்கார நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் இந்தியா கோர வேண்டியிருந்தது.

1960களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (P.L.480) திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்து வரும் ஒரு நாடு புரட்சிக்கு சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது.

எனவே அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள் உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான திட்டத்தை வகுத்து அறிமுகப்படுத்தியது,

இந்தத் திட்டம் நீர்ப்பாசனம் இருக்கும் இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

திட்டங்களின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால் அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.

இவ்வாறு, பசுமைப் புரட்சியானது நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது.

Question 2.
குறைந்த பட்ச ஆதரவு விலையை விளக்குக.
விடை:
குறைந்தபட்ச ஆதரவு நிலை:

  • குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அந்த பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு விலை, நிபுணர் குழுவால் நிர்ணயிக்கப்படுகிறது.
  • குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்த பின்னர், இந்த பயிர்கள் பரவலாக வளர்க்கப்படும் இடங்களில் அரசு கொள்முதல் மையங்களைத் திறக்கும்,
  • அந்த விவசாயிகள் தங்கள் பயிர், விளைப் பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற்றால் திறந்தவெளி சந்தையில் விற்க இயலும்.
  • மறுபுறம், திறந்தவெளி சந்தையில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருந்தால், விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விலையைப் பெறுவார்கள்.

Question 3.
பொது விநியோக முறையை விவரிக்கவும்.
விடை:

  • தமிழ்நாடு “உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்டது.
  • உலகளாவிய பொது வழங்கல் முறையின் கீழ் குடும்ப வழங்கல் அட்டை பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பொது வழங்கல் முறை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது.
  • இலக்கு பொது வழங்கல் முறையில் பயனாளிகள் சில அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு உரிமைகள் வழங்கப்படுகிறது.
  • மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் பொருள்களுக்கு மானியம் அளிக்கின்றன.
  • மானியத்தின் நிலை மற்றும் அளவு மாநிலங்களுக்கு இடையே வேறுபடுகிறது.
  • தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் 2013இல் நிறைவேற்றப்பட்டது.
  • 50% நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்.
  • குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைக் குடும்பங்கள் என அழைக்கப்படுகின்றன.
  • இந்த முன்னுரிமை குடும்பங்களுக்கு தற்பொழுது பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை பெறும் உரிமை உண்டு.
  • தமிழ்நாடு தொடர்ந்து உலகளாவிய பொது வழங்கல் முறையைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசியை வழங்குகிறது.

Question 4.
வாங்கும் திறனை பாதிக்கும் காரணிகள் யாவை? அவற்றை விளக்குக.
விடை:
வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள்:
அதிக மக்கள் தொகை :
இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1000க்கு 1.7 ஆக உள்ளது.

அதிக மக்கள் தொகை அதிக தேவைக்கு வழிவகுக்கிறது. ஆனால் அளிப்பு தேவைக்கு சமமாக இல்லை.எனவே சாதாரண விலை நிலை, அதிகமாக இருக்கும். எனவே, இது குறிப்பாக, கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.

அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்தல் :

  • அத்தியாவசிய பொருட்களின் விலையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
  • விலைகளின் தொடர்ச்சியான உயர்வானது வாங்கும் சக்தியை சுரண்டி, ஏழை மக்களை மோசமாகப் பாதிக்கிறது.

பொருள்களுக்கான தேவை :
பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும் போது, பொருள்களின் விலையும் அதிகரிக்கிறது. அதனால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.

பொருள்களின் விலை நாணய மதிப்பை பாதிக்கிறது:
விலை அதிகரிக்கும் போது, வாங்கும் திறன் குறைந்து இறுதியாக நாணயத்தின் மதிப்பு குறைகிறது.

பொருள்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு:

  • பொருள்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் பொழுது, பொருட்களின் விலை அதிகரிக்கிறது.
  • ஆகையால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

வறுமை மற்றும் சமத்துவமின்மை :

  • இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.
  • இது சமுதாயத்தில் வறுமை நிலையை அதிகரிக்க வழிவகுக்கிறது.
  • வறுமையாலும் மற்றும் செல்வத்தின் சமமற்ற வழங்குதலாலும் பொதுவாக வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 5.
புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய குறிக்கோள்கள் யாவை?
விடை:
இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்கள் பின்வருமாறு:

உள்ளீடுகளின் உற்பத்தித்திறனை உயர்த்துதல் :
இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கிய நோக்கமானது வீரியவித்து விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற உள்ளீடுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாகும்.

ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டவை:
வேளாண் கொள்கையானது பொதுவாக வேளாண்மையின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலமும், குறிப்பாக சிறிய மற்றும் ஓரளவு வைத்திருக்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டதை அதிகரிப்பதாகும்.

ஏழை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல் :
ஏழை விவசாயிகளுக்கு நிறுவன கடன் ஆதரவை விரிவுபடுத்துதல், நில சீர்திருத்தங்கள் செய்தல், இடைத்தரகர்களை ஒழித்தல் போன்றவற்றின் மூலம் ஏழை மற்றம் குறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே விவசாயக் கொள்கையாகும்.

விவசாயத் துறையை நவீனமயமாக்குதல் :
விவசாய நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் உயர் ரக விதைகள் (HYV) விதைகள், உரங்கள் போன்ற மேம்பட்ட விவசாய உள்ளீடுகளைப் பயன்படுத்துல் ஆகியவை அடங்கும்.

சுற்றுச்சூழல் சீரழிவு:
இந்தியாவின் விவசாயக் கொள்கை இந்திய விவசாயத்தின் அடித்தளத்தின் சுற்றுச்சூழல் சீரழிவை சரி செய்யும் மற்றொரு நோக்கத்தையும் கொண்டுள்ளது.

அதிகாரத்துவ தடைகளை நீக்குதல் :

  • விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் பற்றும் சுய உதவி நிறுவனங்கள் மீதான அதிகாரத்துவ தடைகளை நீக்குவதற்கு இந்த கொள்கை மற்றொரு குறிக்கோளை அமைத்துள்ளது.
  • இதனால் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.

10th Social Science Guide உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் ………….. வகைகளாக உள்ள ன.
அ) ஐந்து
ஆ) மூன்று .
இ) நான்கு
ஈ) ஆறு
விடை:
ஆ) மூன்று

Question 2.
பல பரிமாண வறுமை குறியீடு ………………… ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அ) 2018
ஆ) 2010
இ) 2013
ஈ) 2016
விடை:
ஆ) 2010

Question 3.
புதிய விவசாயக் கொள்கை 2018ல் ………………. அரசால் அறிவிக்கப்பட்டது.
அ) மாநில
ஆ) மத்திய
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) மத்திய

Question 4.
வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் ……………. மிகப்பெரிய பொருளாதாரமாக மாறி, அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது.
அ) இந்தியா
ஆ) அமெரிக்கா
இ) சீனா
ஈ) ரஷ்யா
விடை:
இ சீனா

Question 5.
பொருள்களுக்கான தேவை அதிகரிக்க, பொருளின் விலையும் …………………
அ) அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ) மிக அதிகம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) அதிகரிக்கும்

Question 6.
…………….. கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.
அ) வறுமை
ஆ) சமத்துவமின்மை
இ) பொருளின் உற்பத்தி
ஈ) அதிக மக்கள் தொகை
விடை:
ஈ) அதிக மக்கள் தொகை

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 7.
தொடர்ச்சியான உயர்வானது வாங்கும் சக்தியை சுரண்டி ……………….. மக்களை மோசமாகப் பாதிக்கிறது.
அ) கிராமப்புற
ஆ) நகர்புற
இ) ஏழை
ஈ) பணக்கார
விடை:
இ ஏழை

Question 8.
இந்தியாவில் ………………. அமைப்புகளில் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது.
அ) நான்கு அடுக்கு
ஆ) மூன்று அடுக்கு
இ) எட்டு அடுக்கு
ஈ) இரண்டு அடுக்கு
விடை:
ஆ) மூன்று அடுக்கு

Question 9.
இந்திய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ……………….யை நம்பியுள்ளது.
அ) இறக்குமதி
ஆ) ஏற்றுமதி
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) இறக்குமதி

Question 10.
உணவு தானியங்களின் விளைச்சல் ……………. ஆக அதிகரித்துள்ளது.
அ) நான்கு மடங்கு
ஆ) எட்டு மடங்கு
இ) 20 மடங்கு
ஈ) 40 மடங்கு
விடை:
அ) நான்கு மடங்கு

Question 11.
………………. ஈட்டுதலுக்கான திறன் மற்றும் வேலைவாய்ப்புடன் நெருக்கமாக உள்ளது.
அ) உணவை உறிஞ்சுதல்
ஆ) உணவுக்கான அணுகல்
இ) உணவு கிடைத்தல்
ஈ) ஆ) மற்றும் இ)
விடை:
ஆ) உணவுக்கான அணுகல்

Question 12.
மானியத்தின் நிலை மற்றும் அளவு ………………. இடையே வேறுபடுகிறது.
அ) மாவட்டம்
ஆ) நாடு
இ) மாநிலம்
ஈ) அ) மற்றும் இ)
விடை:
இ மாநிலம்

Question 13.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் தமிழ்நாட்டில் ……………… ல் துவங்கப்பட்டது.
அ) நவம்பர் 1, 2016
ஆ) நவம்பர் 20, 2012
இ) அக்டோபர் 1, 2016
ஈ) நவம்பர் 1, 2010.
விடை:
அ) நவம்பர் 1, 2016

Question 14.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் …………… நகர்புற குடும்பங்களை கொண்டுள்ளது.
அ) 90%
ஆ) 40%
இ) 60%
ஈ) 50%
விடை:
ஈ) 50%

Question 15.
முதல் ஐந்து மாவட்டங்களில் …………….. உள்ளது.
அ) தருமபுரி
ஆ) அரியலூர்
இ) கோயம்புத்தூர்
ஈ) பெரம்பலூர்
விடை:
ஈ) கோயம்புத்தூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பிரபல விவசாய விஞ்ஞானி முனைவர் ………………….
விடை:
எம்.எஸ். சுவாமிநாதன்

Question 2.
……………… உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாக பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்.
விடை:
உணவினை உறிஞ்சுதல்

Question 3.
மக்களின் …………………….. ஒரு நாட்டின் மொத்த வளர்ச்சியுடன் தொடர்புடையது.
விடை:
உணவு பாதுகாப்பு

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Question 4.
……………. உணவு உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது.
விடை:
ஃபோர்டு அறக்கட்டளை

Question 5.
…………….. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்டது.
விடை:
தமிழ்நாடு

Question 6.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் குடும்பங்கள் ……………… என்று அழைக்கப்படுகிறது.
விடை:
முன்னுரிமை குடும்பங்கள்

Question 7.
……………… இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய ஏறத்தாழ்வு உள்ளது.
விடை:
வறுமை மற்றும் சமத்துவமின்மை

Question 8.
………………. என்பது வாங்கும் சக்தி தொடர்பான ஒரு கருத்தாகும்.
விடை:
வாங்கும் சக்தி சமநிலை

Question 9.
……………… வாங்கும் சக்தி சமநிலையில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
விடை:
இந்தியா

Question 10.
இந்தியாவின் விவசாய கொள்கை ………………. சரி செய்யும் மற்றொரு நோக்கமாகும்.
விடை:
சுற்றுச்சீரழிவை

Question 11.
பல பரிமாண வறுமை குறியீடு ஆனது ……………… மற்றும் ……………… ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.
விடை:
UNDP, OPHUI

Question 12.
வறுமைக் குறைப்பில் ……………. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
விடை:
தமிழகம்

Question 13.
ஊட்டச்சத்து குறைபாட்டினால் மற்றொரு குறியீடாக எடை ……………… உள்ளது.
விடை:
குறைவு

Question 14.
……………. நலவாழ்விலும் ஊட்டசத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
மனித ஆரோக்கியத்திலும்

Question 15.
RCHP – ன் விரிவாக்கம் ………………………. ஆகும்.
விடை:
மதிய உணவு குழந்தைகள் சுகாதார திட்டங்கள்

Question 16.
………………. உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்று.
விடை:
ICDS

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 4

IV. சரியான கூற்றை தேர்வு செய்க.

Question 1.
கூற்று (A) : தாங்கியிருப்பு என்பது உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகத்தின் மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது.
காரணம் (R) : உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை திசிமி வாங்குகிறது.

அ) A சரி R தவறு
ஆ) A மற்றும் R இரண்டும் தவறு
இ) A சரி ஆனால் R ஆனது A வை விளக்கவில்லை .
ஈ) A சரி ஆனால் R ஆனது A வை விளக்குகிறது.
விடை:
அ) A சரி R தவறு

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

V. குறுகிய விடையளிக்கவும்.

Question 1.
உணவு கிடைத்தல் வரையறு.
விடை:
உணவு கிடைத்தல் என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்.

Question 2.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் யாவை?
விடை:

  • மதிய உணவுத் திட்டம்
  • குழந்தைகள் சுகாதர திட்டங்கள் (Reproductive and Child Health Programme)
  • தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி (National Rural Health Mission)

Question 3.
வறுமையின் பல பரிமாணத்தின் இயல்புகள் யாவை?
விடை:
உடல், நலம், கல்வி, வாழ்க்கைத் தரம், வருமானம், அதிகாரமளித்தல், பணியின் தரம் மற்றும் வன்முறையினால் அச்சுறுத்தப்படுதல் போன்ற ஏழை மக்களின் அனுபவத்தை இழக்கும் பல காரணிகளால் பல பரிமாண வறுமை உருவாகிறது.

Question 4.
தாங்கியிருப்பு வரையறு.
விடை:
தாங்கியிருப்பு என்பது உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசி, இந்திய உணவுத் கழகத்தின் மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது.

Question 5.
வாங்கும் திறன் வரையறு.
விடை:

  • வாங்கும் திறன் என்பது ஒரு அலகு பணம் மூலம் வாங்கக் கூடிய பொருள்கள் அல்லது சேவைகளின் அளவின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் நாணயத்தின் மதிப்பு ஆகும்.
  • விலை ஏறும் போது வாங்கும் திறன் குறைகிறது.
  • விலை குறையும் போது வாங்கம் திறன் அதிகரிக்கிறது.

Question 6.
உணவினை உறிஞ்சுதல் வரையறு.
விடை:
உணவினை உறிஞ்சுதல் என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
உணவு பாதுகாப்பு பற்றி விவரிக்க.
விடை:
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உணவு பாதுகாப்பினைப் பின்வருமாறு வரையறுக்கிறது.

“எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆராக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது.”

பிரபல விவசாய விஞ்ஞானி முனைவர் எம்.எஸ். சுவாமிநாதனின் கருத்துப்படி, “சரிவிகித உணவு, பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழல், சுகாதாரம், ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரம்பக் கல்வி ஆகியவற்றிற்கான உடல், பொருளாதார மற்றும் சமூக அணுகல்” என்பது ஊட்டச்சத்து பாதுகாப்பாகும்.

உணவின் அடிப்படைக் கூறுகள் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள்:
உணவு கிடைத்தல், உணவு அணுகல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.

1. உணவு கிடைத்தல் :
என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்.

2. உணவுக்கான அணுகல் :
என்பது முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூற்றாகும். எனவே, இது ஈட்டுதலுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. திறன்களும், வாய்ப்புகளும் ஒருவரின் சொத்துக்கள் மற்றும் கல்வியுடன் தொடர்புடையது.

3. உணவினை உறிஞ்சுதல் :
என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும். 2. தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்களை விவரி.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்கள்:

  1.  டாக்டர் முத்துலெட்சமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் கீழ், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.12,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது.
  2.  முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் 2011-12 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைவருக்கும் உடல் நலம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்குவதாகும்.
  3.  தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் இலவசமாக ஆம்புலன்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. (108 அவசர ஆம்புலன்ஸ் சேவை)
  4. பள்ளி சுகாதார திட்டம்’ விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது.
  5. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

10th Social Science Guide உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?
அ) அமைச்சரவை
ஆ) தலைமை இயக்குநர்
இ) துணை தலைமை இயக்குநர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) தலைமை இயக்குநர்

Question 2.
இந்தியாவில் காலனியாதிக்க வருகை……………………….
அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
ஆ) டச்சு, ஆங்கிலேயர் , டேனிஷ், பிரெஞ்சு
இ) போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்
ஈ) டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு
விடை:
அ) போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர்கள், டேனிஷ், பிரெஞ்சு

Question 3.
காட்(GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் ………………………
அ) டோக்கியோ
ஆ) உருகுவே
இ) டார்குவே
ஈ) ஜெனீவா
விடை:
ஈ) ஜெனீவா

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 4.
இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
அ) 1984
ஆ) 1976
இ) 1950
ஈ) 1994
விடை:
ஈ) 1994

Question 5.
1632இல் ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மான்” வழங்கியவர் யார்?
அ) ஜஹாங்கீர்
ஆ) கோல்கொண்டா சுல்தான்
இ) அக்பர்
ஈ) ஒளரங்கசீப்
விடை:
ஆ) கோல்கொண்டா சுல்தான்

Question 6.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு …………
அ) ஜூன் 1991
ஆ) ஜூலை 1991
இ) ஜூலை – ஆகஸ்ட் 1991
ஈ) ஆகஸ்ட் 1991
விடை:
இ) ஜூலை – ஆகஸ்ட் 1991

Question 7.
இந்திய அரசாங்கத்தால் 1991இல் ………………ஐ அறிமுகப்படுத்தப்பட்டது.
அ) உலகமயமாக்கல்
ஆ) உலக வர்த்த அமைப்பு
இ) புதிய பொருளாதார கொள்கை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ புதிய பொருளாதார கொள்கை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
ஒரு நல்ல பொருளாதாரம் …………….. விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.
விடை:
மூலதனச் சந்தையின்

Question 2.
உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் ………………. ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.
விடை:
ஜனவரி 01 1995

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 3.
……………… ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.
விடை:
பேராசிரியர் தியோடோர் லெவிட்

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 2

IV. கீழ்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
உலகமயமாக்கல் என்றால் என்ன?
விடை:

  • உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.
  • அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.

Question 2.
உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக.
விடை:

  • தொன்மையான உலகமயமாக்கல்
  • இடைப்பட்ட உலகமயமாக்கல்
  • நவீன உலகமயமாக்கல்

Question 3.
பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:
பன்னாட்டு நிறுவனம் என்பது நாட்டில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனமாகும்.

Question 4.
உலகமயமாக்கலை சார்ந்த சீர்திருத்தங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
விடை:

  • சில தொழிற்சாலைகளைத் தவிர, தொழில் உரிமம் பெறுவதை நீக்கியது.
  • பொதுத்துறை நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
  • அயல்நாட்டு செலவாணி ஒழுங்குமுறை பொருத்தமாக திருத்தப்பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட சட்ட ரீதியான நீர்மை விகிதம் (SLR) அதிகரிக்கப்பட்டது.

Question 5.
நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?
விடை:
நியாயமான வர்த்தகமானது, சிறிய விவசாயிகளை உலகளாவிய சந்தை இடத்தில் ஒரு சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பதோடு நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும், கொள்முதல் செய்யவும், அவர்களின் மதிப்பை ஆதரிக்கவும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு வழி முறையாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 6.
“நியாயமான வர்த்தக நடைமுறைகளின்” ஏதாவது இரு கோட்பாடுகளை எழுதுக.
விடை:

  • வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு.
  • நியாயமான வர்த்தக / நடைமுறைகள் மற்றும் நியாயமான விலையில் கொடுப்பது.
  •  குழந்தைத் தொழிலாளர் மற்றும் கட்டாயத் தொழிலாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது,

Question 7.
“உலக வர்த்தக அமைப்பின்” முக்கிய நோக்கம் யாது?
விடை:

  • அயல்நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
  • வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சுவார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
  • வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
  • நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைந்து அறிமுகம் செய்தல்.
  • உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
  • முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
  • முழு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.

Question 8.
உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
விடை:

  • ஒரு சிறந்த பொருளாதாரம், மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
  • வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.
  • புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
விடை:
MNCயின் நன்மைகள் :

  • பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருள்களை தரமாகவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்தி செய்கிறது.
  • பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.
  • பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
  • பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் தீமைகள் :

  • பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை (சில தயாரிப்புகளுக்கு) வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
  • பன்னாட்டு நிறுவனங்கள் சுற்று சூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
  • ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
  • பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு, தார்மீக சட்டங்களை அவர்கள் குற்றம் சாட்டி, மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினை திருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.

Question 2.
‘உலக வர்த்தக அமைப்பு’ பற்றி எழுதுக.
விடை:
உலக வர்த்தக அமைப்பு (WTO):

  • 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை (WTO) அமைப்பதற்கு காட் உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றின் போது இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்திட 104 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது.
  • WTO உடன்படிக்கை ஜனவரி 1, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது.

உலக வர்த்த க அமைப்பு (World Trade Organisation):
தலைமையகம் : ஜெனிவா, சுவிட்சர்லாந்து
நோக்கம் : வணிகத்தினை கட்டுப்படுத்தல், அயல்நாட்டு வாணிபம்
உறுப்பினர்கள் : தலைமை இயக்குநர், துணை தலைமை இயக்குநர்-4 மற்றும் 80 உறுப்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 அலுவலக ஊழியர்கள்.

உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்கள்:

  • அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.
  • வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
  • வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
  • நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்.
  • உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
  • முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
  • முழு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 3.
உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
விடை:
உலகமயமாக்கலின் சவால்கள்:

  • உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
  • வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
  • உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள் தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
  • இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
  • மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

10th Social Science Guide உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
காட்இன் GATT) ஏழாவது சுற்று …………….. இல் நடந்தது.
அ) சுவிட்சர்லாந்து
ஆ) ஜப்பான்
இ) இங்கிலாந்து
ஈ) டோக்கியோ
விடை:
ஈ) டோக்கியோ

Question 2.
உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் ……………..
அ) பராகுவே
ஆ) டோக்கியோ
இ) அன்னிசி
ஈ) ஜெனீவா
விடை:
ஈ) ஜெனீவா

Question 3.
FERA …………….. உருவானது.
அ) 1947
ஆ) 1999
இ) 1974
ஈ) 1954
விடை:
இ 1974

Question 4.
ஹரோ மோட்டோகிராப் …………….. தொழில்சார் நிறுவனம்.
அ) தகவல் தொடர்பு
ஆ) வங்கி
இ) ஆட்டோமொபைல்ஸ்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ ஆட்டோமொபைல்ஸ்

Question 5.
பயனுள்ள விளம்பர (ம) விற்பனை ஊக்குவிப்பு தொழில்நுட்பங்களை ஏற்கிறது, ……………..
அ) சந்தைப்படுத்தும் மேன்மை
ஆ) நல்ல கருவிகள் கண்டுபிடிப்பு
இ) பண்டங்களின் கண்டுபிடிப்பு
ஈ) நிதி மேன்மை
விடை:
அ) சந்தைப்படுத்தும் மேன்மை

Question 6.
……………….. கிழக்கிந்திய நிறுவனம் துவங்கியது.
அ) 13 டிசம்பர் 1600
ஆ) 31 டிசம்பர் 1600
இ) 21 டிசம்பர் 1800
ஈ) 20 டிசம்பர் 1900
விடை:
ஆ) 31 டிசம்பர் 1600

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 7.
…………….. தலைமையகம் பழவேற்காடு ஆகும்.
அ) போர்த்துகீசியர்
ஆ) டேனியர்
இ) ஸ்பானியர்
ஈ) டச்சுக்காரர்கள்
விடை:
ஈ) டச்சுக்காரர்கள்

Question 8.
இந்தியாவில் டேனிஷ் குடியேற்றங்களால் ……………………….. தலைமையிடமாக மாறியது.
அ) டிராங்குபார் (தரங்கம்பாடி)
ஆ) புலிகாட்
இ) மசூலிப்பட்டினம்
ஈ) பிரெஞ்சு
விடை:
அ) டிராங்குபார் (தரங்கம்பாடி)

Question 9.
ஆரம்பத்தில் இந்தியாவில் போர்த்துகீசியரின் தலைநகரமாக ……………. இருந்தது.
அ) கொச்சின்
ஆ) புலிகாட்
இ) பிரெஞ்சு
ஈ) அச்சிவி
விடை:
அ) கொச்சின்

Question 10.
…………… வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டைக்கு வாணிபத்திற்காக வந்தார்.
அ) மே 1948
ஆ) மே 1498
இ) மார்ச் 1498
ஈ) மார்ச் 1948
விடை:
ஆ) மே 1498

Question 11.
……………… நூற்றாண்டிற்கிடையே உலகமயமாக்கல் குறிப்பிட்ட வேறுபாட்டைக் கொண்டிருந்தது.
அ) 15ஆம்
ஆ) 20ஆம்
இ) 12ஆம்
ஈ) 19ஆம்
விடை:
20 ஆம்

Question 12.
நவீன காலகட்டத்துக்கு முந்தைய காலம் …………………… உலகமயமாக்கல் எனப்படும்.
அ) நவீன
ஆ) இடைப்பட்ட
இ) தொன்மையான
ஈ) வெளி
விடை:
இ தொன்மையான

Question 13.
…………….. பேரரசின் எழுச்சியால் கடல்வழி வாணிபம் ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர்.
அ) ஐரோப்பிய
ஆ) அமெரிக்க
இ) ஆசிய
ஈ) ஆப்பிரிக்க
விடை:
அ) ஐரோப்பிய

Question 14.
கிழக்கிந்திய நிறுவனம் ………………. தொடங்கப்பட்டது.
அ) 1948
ஆ) 1602
இ) 1600
ஈ) 1653
விடை:
ஆ) 1602

Question 15.
……………. காலகட்டம் உலகமயமாக்கலில் ஒரு முக்கிய ஆரம்பகட்டமாக இருந்து வந்தது.
அ) ஹெலினிஸ்டிக்
ஆ) இஸ்லாமிய
இ) இந்துத்துவ
ஈ) அ) (ம) இ)
விடை:
ஆ) இஸ்லாமிய

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.
விடை:
உலகமயமாக்கல்

Question 2.
உலகமயமாக்கலின் ஆரம்ப வடிவத்தை ………….. உலகமயமாக்கல் என்பர்.
விடை:
தொன்மையான

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 3.
17ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ……………… மயமானது.
விடை:
தனியார்

Question 4.
19ஆம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் ……………… வடிவத்தைப் பெற்றது.
விடை:
நவீன

Question 5.
வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும், விரிவுபடுத்தவும் வணிகர்கள் உருவாக்கினார்கள்.
விடை:
தென்னிந்திய வர்த்தக குழுவை

Question 6.
……………… புதிய கடல்வழிப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது.
விடை:
வாஸ்கோடகாமாவால்

Question 7.
வாஸ்கோடகாமாவின் இரண்டாவது பயணம் ………………. தொடங்கியது.
விடை:
1502

Question 8.
……………….. என்பவரால் டச்சு நிறுவனம் தொடங்கப்பட்டது.
விடை:
அட்மிரல் வான் டெர் ஹகேன்

Question 9.
பிரெஞ்சுக்காரர்களின் தலைமையகமாக 1704ல் ………….. விளங்கியது.
விடை:
பாண்டிசேரி

Question 10.
உலகமயமாக்கலின் கொள்கை ………….. கையெழுத்திட்டபோது சரியானது.
விடை:
டங்கல் வரைவில்

Question 11.
SLR என்பது ……………… எனப்படுகிறது.
விடை:
சட்ட ரீதியிலான நீர்மை விகிதம்

Question 12.
15 பன்னாட்டு நிறுவனங்களில் ………………. அமெரிக்காவை சேர்ந்த தாகும்.
விடை:
11

Question 13.
……………….ஆம் ஆண்டுகளுக்கிடையில் மொத்தம் 12,760 வெளிநாட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
விடை:
1948-1988

Question 14.
……………… நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கிறது.
விடை:
நியாயமான வர்த்தகம்

Question 15.
பன்னாட்டு நிறுவனங்கள் ………………. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
பெரு நிறுவனங்கள்

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 4

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
நவீன உலகமயமாக்கல் வரையறு.
விடை:
19ஆம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் நவீன வடிவத்தை நெருங்கியது.

19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே நடைபெற்ற உலகமயமாக்கல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கொண்டிருந்தன.

அவை, அந்த நூற்றாண்டுகளில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக பொருளாதாரத்தில் மூலதனம் மற்றும் முதலீடு செய்யப்பட்டதும், 20ஆம் நூற்றாண்டில் வணிக உற்பத்தியில் அதிக பங்கினை பெற்றிருந்ததுடன், சேவைகள், வர்த்தகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி வணிகத்தில் எழுச்சியுற்றிருந்ததும் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 2.
2018-ல் இந்தியாவின் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் யாவை?
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் 5

Question 3.
சுங்க வரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு வரையறு.
விடை:

  • 1947இல் 23 நாடுகள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • காட்டின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.
  • இதன் இயக்குநர் ஜெனரல் ஆர்தர் டங்கல் கொண்டு வந்த இறுதி சட்ட/ஒப்பந்த வரைவு “டங்கல் வரைவு” என்று அழைக்கப்பட்டது.
  • காட்டின் (GATT) முக்கிய நோக்கம், அர்த்தமுள்ள விதிமுறைகளை பின்பற்றி பலவிதமான கட்டணங்களையும் ஒதுக்கீடுகளையும், மானியங்களையும் குறைப்பதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிப்பது ஆகும்.

Question 4.
நியாயமான வர்த்தக அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள் யாவை?
விடை:

  • சிறிய அளவிலான விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வருமானத்தை உயர்த்துவது மற்றும் உறுதிப்படுத்துவது.
  • பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய பொருளாதார இலாபங்கள், வாய்ப்புகள் மற்றும் இடர்பாடுகளை சமமாக்குதல்.
  • உற்பத்தியாளர் குழுக்களின் நிறுவன மற்றும் வர்த்தக திறன்களை அதிகரித்தல்.

Question 5.
பன்னாட்டு நிறுவனத்தின் (MNC) பரிமாண வளர்ச்சி பற்றிக் கூறுக.
விடை:

  • கிழக்கிந்திய நிறுவனம், ஒரு வர்த்தக நிறுவனமாக இந்தியாவிற்கு வந்தது.
  • 1920களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் பிரித்தெடுக்கப்பட்ட தொழில்களில் அல்லது தொழில் நடத்தும் நாடுகளின் மூலப்பொருள்களை கட்டுப்படுத்தி மெதுவாக இந்தியாவினுள் நுழைந்தன.
  • இந்தியாவில் நான்கு பெரிய ஏற்றுமதி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையாக உள்ளது.
  • இவற்றில் அதிகமானது அமெரிக்காவினுடையது ஆகும். இந்தியாவிலுள்ள 15 பெரிய பன்னாட்டு நிறுவனங்களில், 11 அமெரிக்காவை சேர்ந்ததாகும்.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
MNC-யின் வளர்ச்சிக்கான காரணங்கள் பற்றி விவரிக்க.
விடை:
1. சந்தை நிலப்பரப்பின் விரிவாக்கம்:
பெரிய அளவிலான நிறுவனங்கள் விரிவடைந்து வருவதால், அந்த நிறுவனம் உள்ள நாட்டின் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் அதன் செயல்பாடுகளை மேலும் விரிவாக்குகிறது.

2. சந்தைப்படுத்தும் மேன்மை:
ஒரு பன்னாட்டு நிறுவனம், தேசிய நிறுவனங்களின் மீது சந்தைப்படுத்தும் மேன்மையைக் கொண்டுள்ளது. இது சந்தை மதிப்பினைப் பெற்று, அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் குறைவான சிரமங்களை எதிர் கொள்கிறது.
> மேலும் பயனுள்ள விளம்பர மற்றும் விற்பனை ஊக்குவிப்பு தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்கிறது.

3. நிதி மேன்மை :
> இதில் நிதி வளங்களும், உயர்நிதி பயன்பாடுகளும் உள்ளன.
> இதனால் வெளிப்புற மூலதன சந்தைகளை எளிதில் அணுகமுடியும் மற்றும் அதன் சர்வதேச புகழ் காரணமாக வளங்களை அதிகரிக்கவும் முடியும்.

4. தொழில்நுட்ப மேன்மை :
பின்தங்கிய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க, ஊக்கமளித்ததற்கான முக்கிய காரணம் இந்த நிறுவனங்கள் தொழில் வளர்ச்சியில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் காணப்படுவதேயாகும்.

5. பண்டங்களின் கண்டுபிடிப்புகள் :
பன்னாட்டு நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை மேம்பட்ட வடிவமைப்புகளாக உருவாக்குவதற்கான பணியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Question 2.
உலகமயமாக்கலின் எதிமறைத் தாக்கம் பற்றி விவரிக்கவும்.
விடை:

  • நாடுகளுக்கிடையே மிக அதிகமான மூலதனமானது நியாயமற்ற மற்றும் ஒழுக்கமற்ற விநியோகிப்பாளர்களை அறிமுகப்படுத்துகிறது.
  • தேசிய ஒருமைப்பாட்டை இழந்து வருவதோடு, மிக அதிகமான வர்த்தக பரிமாற்றம் இருப்பதால், சுதந்திரமான உள்நாட்டுக் கொள்கைகள் இழக்கப்படுகின்றன என்பது அச்சத்திற்குரியதாகும்.
  • முக்கிய உள்கட்டமைப்பும் மற்றும் வளங்களை பிரித்தெடுத்தலும் ஒரு பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு தேவை என்றாலும், இது எதிர்மறை சுற்றுச்சூழல் மற்றும் சமூக செலவுகளை அதிகரிக்கும்.
  • அந்நிய செலாவணியை பெறுவதற்காக, இயற்கை வளங்கள் மிக அதிகமாக விரைவாக சுரண்டப்படுகிறது.
  • சுற்றுச்சூழல் பற்றிய தரங்களும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

9th Social Science Guide அரசாங்கங்களின் வகைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
___, ____ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
விடை:
இங்கிலாந்து, பிரான்ஸ்

Question 2.
பாராளுமன்ற ஆட்சி முறை _____ என்றும் அழைக்கப்படுகின்றது.
விடை:
அமைச்சரவை அரசாங்கம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 3.
பாராளுமன்ற ஆட்சி முறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் _____ ஆவர்.
விடை:
பிரதமர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 30

III. வேறுபடுத்துக

Question 1.
ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 35

Question 2.
நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் அதிபர் மக்களாட்சி.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 40
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 41

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
ஒற்றையாட்சி முறை.
விடை:

  • ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகவும்.
  • மத்திய அரசு அதிகாரம் மிக்கதாகும். நிர்வாக அமைப்புகள் மத்திய அரசினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை மட்டுமே செயல்படுத்தும்.
  • இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இலங்கை ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
  • ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தப்படுகின்றன.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி

Question 1.
அரசியலமைப்பின் வகைகளைப் பட்டியலிடுக.
விடை:

  • எழுதப்பட்ட அரசியலமைப்பு
  • எழுதப்படாத அரசியலமைப்பு
  • நெகிழும் தன்மையுடைய அரசியலமைப்பு
  • நெகிழும் தன்மையற்ற அரசியலமைப்பு

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 2.
கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?
விடை:

  • உள்ளூர் சுய ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துதல்.
  • மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, நிர்வாகத் திறன்கள் மேம்பட வழிவகுக்கிறது.
  • மிகப்பெரிய நாடுகள் தோன்றுவதற்கு வழி செய்கிறது.
  • அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படுவதால் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தடுக்கிறது.
  • மிகப்பெரிய நாடுகளுக்குப் பொருத்தமானது.
  • பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மை அளிக்கிறது.

Question 3.
ஒற்றையாட்சி முறைக்கும் கூட்டாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 45

VI. விரிவான விடையளி

Question 1.
ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.
விடை:

  • சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
  • அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.
  • ஒற்றை ஆட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
  • ஒற்றை ஆட்சி குறைந்த செலவுடையது.
  • அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.
  • ஒற்றுமை, சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.

Question 2.
அதிபர் மக்களாட்சி முறை பற்றிக் குறிப்பு வரைக. மேலும் அதிபர் மக்களாட்சி முறைக்கும் நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.
விடை:

  • அதிபர் மக்களாட்சி முறையில் நிர்வாகத்துறை தன் கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் சட்ட மன்றத்திற்குப் பொறுப்புடையது அல்ல.
  • நிர்வாகத்துறையில் செயல்பாடுகளில் சட்ட மன்றத்தின் தலையீடு இருக்காது.
  • இது அதிகாரப்பகிர்வு கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.
  • இவ்வரசு முறை அமெரிக்கா, பிரேசில், இரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறை யில் உள்ளது.

அதிபர் மக்களாட்சி முறைக்கும், நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் :

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 80

9th Social Science Guide அரசாங்கங்களின் வகைகள் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அரசாங்கம் என்பது ஒரு அரசின் ____ செயல்பாடுகளைக் குறிப்பதாகும்.
விடை:
நிர்வாக

Question 2.
____, ____ ஆகியவை கூட்டாட்சி ஆட்சி முறைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
விடை:
அமெரிக்க ஐக்கிய
நாடுகள், சுவிட்சர்லாந்து

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 3.
அதிபர் மக்களாட்சிமுறை என்பது ____ ஆட்சி முறை எனக் கருதப்படுகிறது.
விடை:
பொறுப்பில்லாத

Question 4.
அமெரிக்க அதிபர் _____ என்ற அமைச்சரவையின் உதவியோடு ஆட்சி செய்கிறார்.
விடை:
கிச்சன் கேபினட்

Question 5.
ஆங்கில முடியாட்சி என்பது _____ முடியாட்சி ஆகும்.
விடை:
அரசியலமைப்புக்கு உட்பட்ட

II. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
ஐக்கியப் பேரசில் காணப்பட்ட ____ அமைப்பே மிகவும் பழமையான அரசாங்கம் ஆகும்.
அ) மக்களாட்சி
ஆ) முடியாட்சி
இ) சிறுபான்மையினர் ஆட்சி
ஈ) இரட்டை ஆட்சி
விடை:
ஆ) முடியாட்சி

Question 2.
ஒற்றை ஆட்சி அரசுக்கு உதாரணம்
அ) ஆஸ்திரேலியா
ஆ) கனடா
இ) ஜப்பான்
ஈ) இரஷ்யா
விடை:
இ) ஜப்பான்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 3.
கூட்டாட்சி முறை அரசுக்கு உதாரணம்
அ) பிரேசில்
ஆ) ஸ்ரீலங்கா
இ) ஜப்பான்
ஈ) இங்கிலாந்து
விடை:
அ) பிரேசில்

Question 4.
அமெரிக்க அதிபரின் பதவிக்காலம்
அ) 3 ஆண்டுகள்
ஆ) 4 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
ஈ) 6 ஆண்டுகள்
விடை:
ஆ) 4 ஆண்டுகள்

III. சுருக்கமாக விடையளி

Question 1.
அரசாங்கத்தின் மூன்று உறுப்புகளைக் குறிப்பிடுக.
விடை:

  • சட்டமன்றம்
  • நிர்வாகத்துறை
  • நீதித்துறை

Question 2.
கூட்டாட்சி முறை ஆட்சி என்றால் என்ன?
விடை:
அரசியலமைப்பு சட்டத்தின்படி தேசிய அரசும் பிராந்திய அரசுகளும் தங்களது அதிகாரங்களைப் பகிர்ந்து அவரவர் எல்லைக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படுவது கூட்டாட்சி முறை ஆட்சியாகும்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள்

Question 3.
நல் ஆட்சியின் பண்புகளைப் பட்டியிலிடுக.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 75

V. விரிவான விடை தருக.

Question 1.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒற்றை ஆட்சி முறையின் அம்சங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • பலமான மத்திய அரசு
  • மாநில அரசின் மீது மத்திய அரசின் ஆளுமை
  • ஒற்றை அரசமைப்பு
  • அரசியலமைப்பின் நெகிழ்வுத்தன்மை
  • மாநிலங்களின் சமமற்ற பிரதிநிதித்துவம்
  • அவசரகால ஏற்பாடுகள்
  • ஒற்றைக் குடியுரிமை
  • ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை நீதித்துறை
  • அகில இந்தியச் சேவைகள்
  • ஆளுநர்கள் மத்திய அரசினால் நியமிக்கப்படுதல்.

Question 2.
நாடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்கள் யாவை? நாடாளுமன்ற ஆட்சியின் நிறைகள் மற்றும் குறைகள் யாவை?
விடை:
நாடாளுமன்ற ஆட்சி முறையின் அம்சங்கள்

  • பெயரளவில் மற்றும் உண்மையான நிர்வாகிகள்
  • பெரும்பான்மை கட்சி ஆட்சி
  • கூட்டுப் பொறுப்புணர்வு
  • இரட்டை உறுப்பினர்
  • பிரதம மந்திரியின் தலைமை

நிறைகள்

  • சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறைக்கு இடையிலான இணக்கம்
  • பொறுப்பான அரசாங்கம்
  • சர்வாதிகாரத்தைத் தடுக்கிறது.
  • பரவலான பிரதிநிதித்துவம்

குறைகள்

  • நிலையற்ற அரசாங்கம்
  • தொடர்ச்சியற்ற கொள்கைகள்
  • அமைச்சரவையின் சர்வாதிகாரம்
  • அதிகாரங்களைப் பிரிப்பதில் உள்ள சிக்கல்கள்.

மனவரைபடம்
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 4 அரசாங்கங்களின் வகைகள் 90

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Civics Chapter 3 மனித உரிமைகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Civics Chapter 3 மனித உரிமைகள்

9th Social Science Guide மனித உரிமைகள் Text Book Back Questions and Answers

பகுதி – 1 புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின்பற்றிய நாடு
அ) தென் சூடான்
ஆ) தென் ஆப்பிரிக்கா
இ நைஜீரியா
ஈ) எகிப்த்
விடை:
ஆ) தென் ஆப்பிரிக்கா

Question 2.
ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது _____ உரிமைகள்
அ) சமூகம்
ஆ) பொருளாதாரம்
இ) அரசியல்
ஈ) பண்பாட்டு
விடை:
இ) அரசியல்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 3.
ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் – எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்?
அ) சமத்துவ உரிமை
ஆ) சுதந்திர உரிமை
இ) குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை
ஈ) சமய சுதந்திர உரிமை
விடை:
இ) குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை

Question 4.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு _____
அ) 20 நாட்கள்
ஆ) 25 நாட்கள்
இ) 30 நாட்கள்
ஈ) 35 நாட்கள்
விடை:
இ) 30 நாட்கள்

Question 5.
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) மாநில மனித உரிமை ஆணையம் 1993ல் நிறுவப்பட்டது.
ii) இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
iii) இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்.
iv) இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம்.
அ) 1 மற்றும் ii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, ii மற்றும் iii சரி
ஈ) i, ii மற்றும் iv சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iv சரி

Question 6.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A) : உரிமைகளும் கடமைகளும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.
காரணம் (R) : நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
இ) (A) சரி, ஆனால் (R) தவறு.
ஈ) (A) தவறு, ஆனால் (R) சரி
விடை:
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) க்கு சரியான விளக்கம்.

Question 7.
ஐ.நா. சபையின் படி ____ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.
அ) 12
ஆ) 14
இ) 16
ஈ) 18
விடை:
ஈ) 18

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 8.
___ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.
அ) இலக்கியம்
ஆ) அமைதி
இ) இயற்பியல்
ஈ) பொருளாதாரம்
விடை:
ஆ) அமைதி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உலகளாவிய மனித உரிமை பிரகடனம் _____ பிரிவுகளைக் கொண்டுள்ளது.
விடை:
30

Question 2.
அடிப்படைக் கடமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ____ சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது.
விடை:
1976 ஆம் ஆண்டு 42 வது

Question 3.
தேசிய மனித உரிமை ஆணையம் _____ ஆண்டு அமைக்கப்பட்டது.
விடை:
அக்டோபர் 12, 1993

Question 4.
பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989 இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம் ____
விடை:
தமிழ்நாடு

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள் 40

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
மனித உரிமை என்றால் என்ன?
விடை:
“இன், பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே” மனித உரிமை ஆகும்.

Question 2.
அடிப்படை உரிமைகள் யாவை?
விடை:
அடிப்படை உரிமைகள்.

  • சமத்துவ உரிமை
  • சுதந்திர உரிமை
  • சுரண்டலுக்கு எதிரான உரிமை
  • சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
  • சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்.
  • அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 3.
குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளவை யாவை?
விடை:
குழந்தைகளுக்கான உரிமைகள் :

  • வாழ்வதற்கான உரிமை.
  • குடும்பச் சூழலுக்கான உரிமை
  • கல்விக்கான உரிமை
  • சமூக பாதுகாப்பு உரிமை
  • பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
  • விற்பது மற்றும் கடத்தலுக்கு எதிரான உரிமை
  • குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற
    சுரண்டல்களுக்கு எதிரான உரிமை.

Question 4.
அரசியலமைப்புத்தீர்வு வழிகளுக்கான உரிமையைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற தீர்வழிகளுக்கான உரிமைகளின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.
  • நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது இது நீதிப் பேராணை என்று அழைக்கப் படுகிறது.
  • ஒரு செயல் அரசமைப்புச் சட்டத்தின் படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அரசமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன.

Question 5.
போக்சா (POCSO) – வரையறு.
விடை:

  • போக்சா சட்டம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகும்.
    சிறப்பு அம்சங்கள் :
  • இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது. குழந்தைகளின் உடல், மன, அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது.
  • பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்க்குத் தகுந்த தண்டனை வழங்குகிறது.
  • குழந்தையின் வாக்குமூலம் அவ்வாறே பதிவு செய்ய வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 6.
குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?
விடை:
குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் தேவை. ஏனெனில்
குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக விற்பனை அல்லது கடத்தல் செய்யப்படுகின்றனர்.

Question 7.
தொழிலாளர் நலனுக்காக பி.ஆர். அம்பேத்காரின் பங்களிப்பு யாவை?
விடை:
பெண் தொழிலாளர்கள் நலனுக்காக டாக்டர். பி.ஆர். அம்பேத்கார் பங்களிப்பு :

  • சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம்
  • பெண் தொழிலாளர் நலநிதி
  • பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்
  • பெண் தொழிலாளர்களுக்கான பேறுகால நன்மைகள் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.

Question 8.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. நியாயப்படுத்துக.
விடை:

  • சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆயினும் வேலை வாய்ப்புகளில் பாலினப் பாகுபாடு காணப்படுகின்றது.
  • பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே திருமணம் செய்யப்படுவதனால் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகள், கல்வியறிவு, ஆரோக்கியமான வாழ்வை இழந்து விடுகின்றனர்.
  • எனவே பெண்களுக்கான தனிச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

Question 9.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி ஏதேனும் இரண்டு கூறு.
விடை:

  • தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு.
  • தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.
  • தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் (E.S.I.)
  • தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 10.
வேறுபடுத்துக – மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள்.
விடை:
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் :
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள் 65

V. விரிவான விடையளி

Question 1.
உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.
விடை:
உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (UDHR) : –

  • வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கலந்து கொண்ட பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (Universal Declaration of Human Rights) மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.
  • 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா.பொது சபையில் நிறைவேற்றப்பட்ட பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும்.
  • மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன. அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது.

சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் :-

  • ஒரு சமூகத்தில் முழுமையாகப் பங்காற்றத் தேவைப்படும் உரிமைகளே சமூக உரிமைகள்
  • ஒவ்வொரு மனிதனும் தனது தேவைகளை நிறைவேற்றக்கூடிய பொருளாதார நிலைக்கு உறுதி அளிப்பவை பொருளாதார உரிமைகள். ஒரு நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட பொருளாதார சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியன இதனால் பாதுகாக்கப்படுகின்றன.
  • ஒவ்வொருவரும் தமது பண்பாட்டைக் கடைப்பிடிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்துபவை பண்பாட்டு உரிமைகள்.

குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் :-

  • அரசு, சமூக நிறுவனங்கள் மற்றும் தனியாரின் அத்துமீறல்களிடமிருந்து ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பவையே இவ்வுரிமைகள்.
  • ஒருவர் சமூகத்தின் குடிமை மற்றும் அரசியல் வாழ்வில் பங்கேற்கும் திறமையை உறுதி செய்கின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 2.
அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்?
விடை:
அடிப்படைக் கடமைகள் :

  • அடிப்படை கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விதத்தில் அமைந்துள்ளன.
  • 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கவில்லை.
  • 1976ம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் மூலம் அவை இணைக்கப்பட்டன. அரசமைப்பு 11 அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகின்றது.

செயல்படுத்தும் விதம் :

  • சின்னங்களை மதித்தல்
  • இயக்கங்களில் இணைதல், செயல்படுதல்
  • சூழல், பொருட்கள் பாதுகாத்தல்
  • அனைவரும் கற்க வழி செய்தல்
  • ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு செயல்படுத்த முடியும்.

Question 3.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நம் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறது?
விடை:
தேசிய மனித உரிமைகள் ஆணையம் :- (இந்திய மனித உரிமைகள் ஆணையம்)
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். ஒரு இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள தனி மனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் :-

  • மனித உரிமை மீறல் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்திடுதல்.
  • மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்.
  • மனித உரிமைகள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்.
  • சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.
  • மனித உரிமைத் துறையில் பணியாற்றும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்.

Question 4.
தொழிலாளர் சட்டத்தின் மூலம் தொழிலாளர் பெறும் நன்மைகள் யாவை?
விடை:
தொழிலாளர் உரிமைகள் :
சமத்துவத்திற்கான உரிமை, பொது வேலைவாய்ப்பில் சமத்துவம், அமைப்புகள் மற்றும் சங்கம் தொடங்குவதற்கான உரிமை, வாழ்வாதார உரிமை, கடத்தலைத் தடுத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உரிமைகளை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது. பிரிவு 39பி, இருபாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது.

தொழிலாளர்களுக்கான சட்டங்கள் :-

  • தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு.
  • தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.
  • இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்.
  • தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் (ESI).
  • தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்.
  • நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி.

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 5.
அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?
விடை:
அடிப்படை உரிமைகளை கீழ்க்கண்டவாறு என்(நம்) வாழ்க்கையில் அனுபவிக்கின்றேன்
(அனுபவிக்கின்றோம்)
ஒரு மனிதனின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குத் தேவையான உரிமைகள் அடிப்படை உரிமைகள் ஆகும்.

அடிப்படை உரிமைகள் :-

  • சமத்துவ உரிமை
  • சுதந்திர உரிமை
  • சுரண்டலுக்கு எதிரான உரிமை
  • சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
  • சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
  • அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை

சமத்துவ உரிமை :-
சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பதே இவ்வுரிமை ஆகும்.

சுதந்திர உரிமை :-
சுதந்திரமாகப் பேச, ஆயுதமின்றிக் கூட, சங்கங்கள் அமைக்க, இந்தியாவில் எந்த பகுதியிலும் வகிக்க, இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாட, எந்த தொழிலையும் வணிகத்தையும் செய்ய உரிமை வழங்கப்பட்டுள்ளது.

சுரண்டலுக்கெதிரான உரிமை :
14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள், அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

சமயச் சுதந்திரம் மற்றும் பகுத்தறிவுக்கான உரிமை :-
குடிமக்கள் தாங்கள் விரும்பிய சமயத்தினை ஏற்கவும் பின்பற்றவும் உரிமை அளிக்கிறது.

பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் :-
அரசமைப்பு சட்டம் கல்விக்கூடங்களை அமைக்கவும். நமது பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் உரிமை வழங்கியுள்ளது.

அரசமைப்பு தீர்வழிக்களுக்கான உரிமை :-
ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற அரசமைப்பு தீர்வழிகளுக்கான உரிமையின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது. இது நீதிப்பேராணை என்று அழைக்கப்படுகிறது.

VI. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. பாலியியல் ரீதியான துன்புறுத்தல், சுரண்டல் மற்றும் கடத்தல்களில் இருந்து நீ எவ்வாறு உன்னைப் பாதுகாத்துக் கொள்வாய்.
2. “என் நாடு என் உரிமைகள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.

9th Social Science Guide மனித உரிமைகள் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
_____ இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடினார்.
விடை:
நெல்சன் மண்டேலா

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 2.
மனிதனது தேவைகளை நிறைவேற்றக் கூடிய பொருளாதார நிலைக்கு உறுதி அளிப்பவை _____
விடை:
பொருளாதார உரிமைகள்

Question 3.
ஒவ்வொருவரும் தமது பண்பாட்டைக் கடை- பிடிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்துபவை ______
விடை:
பண்பாட்டு உரிமைகள்

Question 4.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் …………. அன்று நிறுவப்பட்டது.
விடை:
1993 அக்டோபர் 12

Question 5.
அரசமைப்பின் பிரிவு_ல் உள்ளபடி 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க சட்டம் _____ இயற்றியது.
விடை:
பிரிவு 21A

II. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
____ ல் ஐ.நா சபை தொடங்கப்பட்டது.
அ) 1945
ஆ) 1947
இ) 1941
ஈ) 1949
விடை:
அ) 1945

Question 2.
பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் ____ ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்டது.
அ) 2005
ஆ) 2006
இ) 2007
ஈ) 2008
விடை:
இ) 2007

Question 3.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ____ ல் இயற்றப்பட்டது.
அ) 2007
ஆ) 2008
இ) 2009
ஈ) 2010
விடை:
இ) 2009

Question 4.
ஆபத்து காலத்தில் உதவிட காவலன் ____ செயலி உதவுகிறது.
அ) SAC
ஆ) SOC
இ) SOS
ஈ) SOD
விடை:
இ) SOS

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள்

Question 5.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் _____ ஆண்டு இயற்றப் பட்டது.
அ) 2008
ஆ) 2010
இ) 2012
ஈ) 2014
விடை:
இ) 2012

III. குறுகிய விடையளி

Question 1.
குடிமை உரிமைகள் என்றால் என்ன?
விடை:
குடிமை உரிமைகள் என்பன ஒவ்வொரு மனிதனுக்கும், இன, தேசிய, நிற, பால், வயது, சமய போன்ற பாகுபாடுகளின்றி அரசின் சட்டத்தால் தரப்படும் உரிமைகளைக் குறிக்கின்றது.

Question 2.
மனித உரிமை குறித்து ஜான் எஃப் கென்னடியின் கூற்று யாது?
விடை:
“ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும் போது ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது” என்றார் ஜான் எஃப் கென்னடி.

Question 3.
இந்திய அரசமைப்பின் குழந்தைகள் உரிமைச் சட்டப் பிரிவுகள் குறித்து எழுது.
விடை:
இந்திய அரசமைப்பில் குழந்தைகள் உரிமை :

  • பிரிவு 24 – பதினான்கு வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது.
  • பிரிவு 45 – பதினான்கு வயது, நிறைவடையும் வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி, அனைத்து குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

IV. விரிவான விடையளி

Question 1.
குழந்தைகளுக்கான உரிமைகள் யாவை? ஏதேனும் நான்கினை விவரி.
விடை:
குழந்தைகளுக்கான உரிமைகள் :-

  • வாழ்வதற்கான உரிமை
  • குடும்பச் சூழல்களுக்கான உரிமை
  • கல்விக்கான உரிமை
  • சமூகப்பாதுகாப்பு உரிமை
  • பாலியல் தொல்லைக்கு எதிரான உரிமை
  • விற்பது அல்லது கடத்துலுக்கெதிரான உரிமை
  • குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கெதிரான உரிமை.

வாழ்வதற்கான உரிமை :-
வாழ்வதற்கான உரிமை என்பது பிறப்புரிமை. அடிப்படைத்தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மற்றும் கண்ணியமான வாழ்வு வாழும் உரிமை ஆகியனவற்றை உள்ளடக்கியது.

குடும்பச் சூழலுக்கான உரிமை :
ஒருகுழந்தைக்கு ஒரு நல்ல குடும்பச்சூழல், இயல்பான குழந்தைப் பருவத்தினைக் கழிக்க உரிமையுண்டு. ஆதரவற்ற, கைவிடப்பட்ட அல்லது அனாதை குழந்தைகளும் வாழ தகுதியுடையவர்கள். இது போன்ற குழந்தைகள், அக்கறையுள்ள குடும்பங்களுக்குத் தத்துக் கொடுக்கப்படலாம்.

சமூகப் பாதுகாப்பு உரிமை :-
உடல் நலமின்மை , இயலாமை அல்லது வயது முதிர்வு காரணமாகப் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களால், குழந்தைகளுக்குத் அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.

கல்விக்கான உரிமை :-
6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க 2009ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Civics Chapter 3 மனித உரிமைகள் 91

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

10th Social Science Guide மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
GNPயின் சமம் …………………
அ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP
ஆ) பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP
இ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
ஈ) NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
விடை:
இ GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

Question 2.
நாட்டு வருமானம் அளவிடுவது …………………..
அ) பணத்தின் மொத்த மதிப்பு
ஆ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு
இ) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு
விடை:
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு

Question 3.
முதன்மை துறை இதனை உள்ளடக்கியது ……………..
அ) வேளாண்மை
ஆ) தானியங்கிகள்
இ) வர்த்த கம்
ஈ) வங்கி
விடை:
அ) வேளாண்மை

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 4.
………………… முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.
அ) செலவு முறை
ஆ) மதிப்பு கூட்டு முறை
இ) வருமான முறை
ஈ) நாட்டு வருமானம்
விடை:
ஆ) மதிப்பு கூட்டு முறை

Question 5.
GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?
அ) வேளாண் துறை
ஆ) தொழில் துறை
இ) பணிகள் துறை
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
இ பணிகள் துறை

Question 6.
பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 இல் ………………….. லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அ) 91.06
ஆ) 92.26
இ) 80.07
ஈ) 98.29
விடை:
ஆ) 92.26

Question 7.
வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ……………… அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.
அ) 1 வது
ஆ) 3 வது
இ) 4 வது
ஈ) 2 வது
விடை:
ஈ) 2 வது

Question 8.
இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் …………….. ஆண்டுகள் ஆகும்.
அ) 65
ஆ) 60
இ) 70
ஈ) 55
விடை:
அ) 65

Question 9.
கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை?
அ) நீர்பாசன கொள்கை
ஆ) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
இ) நில சீர்திருத்தக் கொள்கை
ஈ) கூலிக் கொள்கை
விடை:
ஆ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை

Question 10.
இந்தியப் பொருளாதாரம் என்பது ……………………..
அ) வளர்ந்து வரும் பொருளாதாரம்
ஆ) தோன்றும் பொருளாதாரம்
இ) இணை பொருளாதாரம்
ஈ) அனைத்தும் சரி
விடை:
ஈ) அனைத்தும் சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் ………………. துறை முதன்மை துறையாகும்.
விடை:
பணிகள்

Question 2.
…………….. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
விடை:
பொருளாதாரம்

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 3.
இரண்டாம் துறையை வேறுவிதமான …………….. துறை என அழைக்கலாம்.
விடை:
தொழில்

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 2

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
நாட்டு வருமானம் – வரையறு.
விடை:

  • நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
  • பொதுவாக நாட்டு வருமானம் மொத்த நாட்டு உற்பத்தி (GNP) அல்லது நாட்டு வருமான ஈவு எனப்படுகிறது.

Question 2.
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?
விடை:
ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்)களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

Question 3.
GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:

  • பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுகிறது.
  • பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.
  • உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.
  • வாங்கும் திறனை மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.
  • பொதுத் துறை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள பயன்படுகின்றது.
  • பொருளாதார திட்டமிட வழிக்காட்டியாகவும் பயன்படுகிறது.

Question 4.
தனிநபர் வருமானம் என்றால் என்ன?
விடை:

  • தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
  • நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.
  • Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 3

Question 5.
மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு.
விடை:

  • ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால், இறுதிப்பண்டத்தின் சந்தை மதிப்பை அளவிடலாம்.
  • உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும் பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.

மதிப்புக் கூட்டு முறை:

  • டீத்துாள் + பால் + சர்க்கரை (இடைநிலைப் பண்டங்கள்) = தேனீர் (இறுதிப்பண்டம்)
  • இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு.

Question 6.
இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.
விடை:

  • வேளாண் கொள்கை
  • தொழில்துறை கொள்கை
  • புதிய பொருளாதாரக் கொள்கை
  • வணிகக் கொள்கை
  • ஊதியக் கொள்கை
  • மக்கள் தொகைக் கொள்கை

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 7.
சிறு குறிப்பு வரைக.
1) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)
2) மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)
விடை:
மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)

  • ஐக்கிய நாடுகள் சபை “வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு – மகிழ்ச்சி” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • உறுப்பு நாடுகள் பூடானை ஒரு எடுத்துக்காட்டாக பின்பற்றி மகிழ்ச்சியையும் நல்வழியையும் மகிழ்ச்சி என அழைத்தனர். (அடிப்படை மனித குறிக்கோள்).

GNHயின் 4 தூண்க ள் :

  1. நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி
  2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  3. கலாச்சாரத்தை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்
  4. நல்ல ஆட்சித் திறன்

மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

  • மனித மேம்பாட்டுக் குறியீடு என்பது 1990ம் ஆண்டு பாகிஸ்தானின் முகஹப்-உல் ஹக் என்ற பொருளியல் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு, வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத் தரம், GDP யின் மடக்கை செயல்பாடு என கணக்கிடப்பட்டு வாங்கும் சக்தி சமநிலைக்கு (PPP) சரி செய்யப்படுகிறது.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி.
விடை:
மொத்த நாட்டு உற்பத்தி (GNP):
மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.
GNP = C + I + G + (X-M) +NFIA
C – நுகர்வோர்
I – முதலீட்டாளர்
G – அரசு செலவுகள்
X-M – ஏற்றுமதி – இறக்குமதி
NFIA – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP):
ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்)களின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும்.

நிகர நாட்டு உற்பத்தி (NNP):

  • மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கிய பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும்.
  • நிகர நாட்டு உற்பத்தி (NNP) = மொத்த நாட்டு உற்பத்தி (GNP) – தேய்மானம்.

நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP):

  • நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தைக் (தேய்மான செலவின் அளவு) கழித்து பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
  • நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) – தேய்மானம்.

தலா வருமானம் அல்லது தனி நபர் வருமானம் (PCI):

  • தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
  • நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் தலா வருமானம் பெறப்படுகிறது.
  • Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 4

தனிப்பட்ட வருமானம் (PI):
நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.

செலவிடத் தகுதியான வருமானம் (DI):

  • தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்படுகின்ற வருமானத்தை செலவிடத் தகுதியான வருமானம் எனப்படுகிறது.
  • இதனை இவ்வாறு அழைக்கலாம்.
    DPI = தனிப்பட்ட வருமானம் – நேர்முகவரி
    நுகர்வு முறையில் DI = நுகர்வுச் செலவு + சேமிப்பு)

Question 2.
GDPஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.
விடை:
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகள் :
செலவின முறை :

  • இந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதிப்பண்ட பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத் தொகையேயாகும்.
  • Y = C + I + G + (X – M)

வருமான முறை:

  • பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது.
  • வருமான முறையில் GDPஐ கணக்கிடும்போது
  • வருமானம் = கூலி + வாரம் + வட்டி + லாபம்.

மதிப்பு கூட்டு முறை:

  • “இறுதிப்பண்டம்” என்பது ஹோட்டலில் ஒரு கோப்பை தேனீர் (Tea) நமக்கு வழங்கப்படுவதாகும். அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் டீதூள், பால் மற்றும் சர்க்கரை “இடைநிலை பண்டங்கள்” ஆகும்.
  • ஒரு கோப்பை தேனீர் இறுதிப் பண்டமாக மாறுவதற்கு இவைகள் ஒரு பகுதியாக அமைகிறது.
  • ஒரு கோப்பை தேனீர் தயாரிக்க பயன்படுத்திய ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால், தேனீரின் சந்தை மதிப்பை அளவிடலாம்.
  • உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.

மதிப்புக் கூட்டு முறை:

  • டீத்துாள் + பால் + சர்க்கரை (இடைநிலைப் பண்டங்கள்) = தேனீர் (இறுதிப்பண்டம்)
  • இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 3.
இந்தியாவில் GDPயில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி.
விடை:
GDPயின் துறை வாரியான பங்களிப்பு (2018-2019):

  • வேளாண்மைத் துறை – 15.87%,
  • விவசாயம், காடுகள் மற்றும் மீன்பிடித்தல் – 15.87%
  • தொழில்துறை – 29.73%
  • சுரங்கம் மற்றும் குவாரி – 2.7%
  • உற்பத்தி – 16.83%
  • மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல், பிற பயன்பாட்டு சேவைகள் – 2.67%
  • கட்டுமானம் – 7.54%
  • பணிகள் துறை – 54.4%
  • வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் – 18.62%
  • நிதி, ரியல் எஸ்டேட் தொழில்முறை சேவைகள் – 20.96%
  • பொது நிர்வாகம், பாதுகாப்பு பிறபணிகள் – 14.82%
  • இந்திய பொருளாதாரத்தில் விவசாய துறையின் பங்களிப்பு, உலக சராசரி 6.4% விட அதிகமாக உள்ளது.
  • ஆனால், தொழில்துறை மற்றும் பணிகள் துறைகளின் பங்களிப்பு, உலக சராசரியை விட 30% தொழில்துறையிலும் மற்றும் 63% பணிகள் துறையிலும் குறைவாகவுள்ளன.

Question 4.
பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளைக் கூறுக.
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 5
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 6

Question 5.
கீழ்க்காணும் பொருளாதார கொள்கைகளை விவரி.
1. வேளாண் கொள்கை
2. தொழிற்கொள்கை
3. புதிய பொருளாதார கொள்கை
விடை:
வேளாண் கொள்கை:
உள்நாட்டு வேளாண்மை மற்றும் வெளிநாட்டு வேளாண்மை இறக்குமதி பொருள்கள் பற்றிய அரசின் முடிவுகளையும், நடவடிக்கைகளையும் பற்றியது வேளாண் கொள்கையாகும்.

சில பரவலான கருப்பொருள்கள், இடர் மேலாண்மை மற்றும் சரிசெய்தல், பொருளாதார நிலைத் தன்மை, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத் தன்மையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்நாட்டு பொருள்களுக்கான சந்தை அணுகல் ஆகியவை வேளாண் கொள்கையில் அடங்கும்.

சில வேளாண் கொள்கைகள் : விலைக் கொள்கை நில சீர்திருத்த கொள்கை, பசுமைப் புரட்சி, பாசனக் கொள்கை, உணவுக் கொள்கை, விவசாய தொழிலாளர் கொள்கை மற்றும் கூட்டுறவு கொள்கை போன்றவைகளாகும்.

தொழில்துறை கொள்கை:
தொழில்துறை முன்னேற்றம் எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் முக்கியமான அம்சமாகும்.

இது வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நவீனமயமாக்கலுக்கு வழிவகுக்கப்பட்டு இறுதியில் பொருளாதாரம் தன்னிறைவு அடைகிறது.

உண்மையில், தொழில் துறை வளர்ச்சி, விவசாயத்துறை (புதிய பண்ணை தொழில் நுட்பம்) மற்றும் பணிகள் துறை போன்ற துறைகளை ஊக்குவிக்கின்றன.

இது பொருளாதார வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

1948லிருந்து பல தொழில் துறை கொள்கைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது.

எடுத்துக்காட்டாக, சில தொழில் கொள்கைகள்: ஜவுளித் தொழில் கொள்கை சர்க்கரை தொழில் கொள்கை, தொழில்துறை வளர்ச்சி விலைக் கொள்கை, சிறுதொழில் தொழிற்கொள்கை மற்றும் தொழில்துறை தொழிலாளர் கொள்கை போன்றவைகளாகும்.

புதிய பொருளாதாரக் கொள்கை:

  • 1990களின் ஆரம்பத்தில் இந்தியாவின் பொருளாதாரம் கணிசமான கொள்கை மாற்றங்களுக்கு உட்பட்டது.
  • இந்த பொருளாதார சீர்திருத்தம், LPG அல்லது தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என அழைக்கப்படுகிறது.
  • இந்த பொருளாதார சீர்திருத்தங்கள், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றமடையச் செய்தது.

10th Social Science Guide மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது ………………. ஒரு பகுதியாகும்.
அ) மொத்த நாட்டு உற்பத்தி
ஆ) நாட்டு வருமானம்
இ) மொத்த உள்நாட்டு உற்பத்தி
ஈ) நிகர நாட்டு உற்பத்தி
விடை:
இ மொத்த உள்நாட்டு உற்பத்தி

Question 2.
GDPயின் நவீன கருத்து ……………… உருவாக்கப்பட்டது.
அ) 1934
ஆ) 1943
இ) 1955
ஈ) 1933
விடை:
அ) 1934

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 3.
…………… என்பது கூலி + வாரம் + வட்டி + லாபம்.
அ) மதிப்பு கூட்டு முறை
ஆ) அ) (ம) ஆ)
இ) செலவின முறை
ஈ) வருமான முறை
விடை:
ஈ) வருமான முறை

Question 4.
…………………..யை முதன்மைத் துறை என்பர்.
அ) பணிகள் துறை
ஆ) வேளாண் துறை
இ) தொழில் துறை
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) வேளாண் துறை

Question 5.
தொழில் துறைக்கு எடுத்துக்காட்டு ……………..
அ) மீன்பிடித்தல்
ஆ) காடு உருவாக்கம்
இ) பெட்ரோலியம்
ஈ) கால்நடை வளர்ப்பு
விடை:
இ பெட்ரோலியம்

Question 6.
…………….யை மூன்றாம் (ம) நான்காம் தொழிலிருந்து வேறுபடுத்திட முடியும்.
அ) முதன்மைத் துறை
ஆ) இரண்டாம் துறை
இ) பணிகள் துறை
ஈ) அ) (ம) ஆ)
விடை:
இ) பணிகள் துறை

Question 7.
2019இல் பணிகள் துறையில் …………….. லட்சம் கோடி நடப்பு விலையில் மொத்த மதிப்பு உள்ளது.
அ) 28.62
ஆ) 98.26
இ) 92.26
ஈ) 94.26
விடை:
இ 92.26

Question 8.
பொருளாதார முன்னேற்றம் என்பது ……………. யைக் குறிக்கும்.
அ) அளவின்
ஆ) தரம்
இ) அ) (ம) ஆ)
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) தரம்

Question 9.
……………… என்பது பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதாகும்.
அ) நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல்
ஆ) நிகர நாட்டு உற்பத்தி
இ) நிகர உள்நாட்டு உற்பத்தி
ஈ) மனித மேம்பாட்டுக் குறியீடு
விடை:
ஈ) மனித மேம்பாட்டுக் குறியீடு

Question 10.
ஐந்தாண்டுத் திட்டத்தில் ……………… உருவாக்கப்பட்டது.
அ) பொருளாதார வளர்ச்சி
இ) வேலை வாய்ப்பு
ஈ) வறுமை
விடை:
இ வேலை வாய்ப்பு

Question 11.
…………….. பொருளாதார வளர்ச்சியின் பொருந்தும் தன்மை ஆகும்.
அ) வளர்ந்த
ஆ) வளர்ந்து வரும்
இ) வளர்ச்சியடைந்த
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) வளர்ந்த

Question 12.
நிகழ்வெண் அதிர்வெண் பொருளாதார முன்னேற்றத்தில் ………………. செயல்முறை ஆகும்.
அ) படிப்படியாக
ஆ) இலக்க
இ) தொடர்ச்சியான
ஈ) ஆ) (ம) இ)
விடை:
இ தொடர்ச்சியான

Question 13.
பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு ……………. கருத்தாகும்.
அ) குறுகிய
ஆ) அகலமான
இ) பரந்த
ஈ) ஆழமான
விடை:
இ பரந்த

Question 14.
தலா வருமானம் ………………. ஆண்டுகளில் 2 மடங்காய் உயர்ந்துள்ளது.
அ) 21
ஆ) 25
இ) 22
ஈ) 12
விடை:
ஈ) 12

Question 15.
மொத்த தேசிய மகிழ்ச்சி உருவாக்கப்பட்ட ஆண்டு ………….. ஆகும்.
அ) 1927
ஆ) 1972
இ) 1955
ஈ) 1966
விடை:
ஆ) 1972

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இருப்பு (அ) செயல்பாட்டில் நிச்சயமற்ற (அ) ஆபத்தான நிலை தொடர்ந்தால் …………… ஏற்படும்.
விடை:
தடுமாற்றம்

Question 2.
……………. என்ற வார்த்தை பிரிட்டிஷ் பத்திரிக்கையால் உருவாக்கப்பட்டது.
விடை:
GNH

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 3.
இந்திய பொருளாதாரம் ……………… துறைகளைக் கொண்டது.
விடை:
3

Question 4.
உலகளாவிய மென்பொருள் வணிகங்களின் மையம் ………………வில் உள்ளது.
விடை:
பெங்களூரு

Question 5.
UNDP என்பது ……………..
விடை:
ஐ.நா. வளர்ச்சித் திட்டம்

Question 6.
பொருளாதார வளர்ச்சி ………………. உயர்த்தும்.
விடை:
நாட்டு வருமானத்தை

Question 7.
இந்தியாவில் ………….. வேகமாக வளரும் மக்கள் உள்ள னர்.
விடை:
உழைக்கும் வயதில்

Question 8.
வெளி உலகத்துடனான ……………… குறைவாகவே இருந்தது.
விடை:
வர்த்தகம் (ம) தொடர்பு

Question 9.
பொருளாதார அளவைக் கண்டறிய ……………… உதவுகிறது.
விடை:
GDP & GNP

Question 10.
……………… ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாகும்.
விடை:
பொருளாதார வளர்ச்சி

Question 11.
உலகின் மொத்த விவசாயப் பொருட்களின் வெளியீட்டில் …………………… இந்தியாவினால் வெளியிடப்படுகிறது.
விடை:
7.39%

Question 12.
GDP அளவை மட்டும் அளவிடுகிறது …………. அல்ல.
விடை:
தரத்தை

Question 13.
வாங்கும் திறனை மதிப்பீடு செய்ய உதவுவது …………….
விடை:
மொத்த உள்நாட்டு உற்பத்தி

Question 14.
தாதாபாய் நௌரோஜி ……………… பற்றிய கருத்தை வெளியிட்டார்.
விடை:
தனிநபர் விருமானத்தைப்

Question 15.
அங்காடியில் விற்கும் பண்டங்கள் (ம) பணிகளின் மதிப்பு …………..
விடை:
அங்காடி மதிப்பு

Question 16.
இடைநிலைப் பண்ட மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்தால் அது ……………….. எனப்படும்.
விடை:
“இருமுறை கணக்கிடுதல்”

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 17.
………….. குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உயர்வு பணமதிப்பால் அளவிடும் அளவுகோல் ஆகும்.
விடை:
பொருளாதார வளர்ச்சி

Question 18.
வறுமை ஒழிப்பு (ம) ……………. ஆகியவை இந்திய வளர்ச்சிப் பாதையின் பகுதியாகும்.
விடை:
கிராமப்புற வளர்ச்சி

Question 19.
இந்தியா ………………. சட்ட முறையைக் கொண்டுள்ளது.
விடை:
கடுமையான

Question 20.
பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு …………………………. மூலம் மேற்கொள்ளப்படும்.
விடை:
மனித மேம்பாட்டுக்குறியீடு

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 7
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி ஓர் அறிமுகம் 8

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறைபாடுகள் யாவை?
விடை:

  • GDPயில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்ல.ை
  • GDP அளவை மட்டும் அளவிடுகிறது; தரத்தை அல்ல.
  • GDPயில் நாட்டு வருமான பகிர்ந்தளிப்பு பற்றி கூறவில்லை .
  • GDP மக்கள் வாழும் வாழ்க்கை முறையைப் பற்றி கூறவில்லை.

Question 2.
மொத்த நாட்டு உற்பத்தி (GNP) வரையறு.
விடை:

  • மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும்.
  • வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.
    GNP = C+I+G + (X-M) + NFIA
    C – நுகர்வோர்
    I – முதலீட்டாளர்
    G – அரசு செலவுகள்
    X – M – ஏற்றுமதி – இறக்குமதி
    NFIA – வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்

Question 3.
மொத்த மதிப்பு கூடுதல் – வரையறு.
விடை:

  • பொருளாதாரத்தில் ஒரு பகுதி, தொழில் அல்லது துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பே மொத்த மதிப்பு கூடுதல் (GVA) ஆகும்.
  • GVA = GDP + மானியம் – வரிகள் (நேர்முக வரி, விற்பனை வரி).

Question 4.
தனிப்பட்ட வருமானம் (P) வரையறு.
விடை:
நேர்முக வரிவிதிப்பிற்கு முன் தனி நபர்கள் மற்றும் ஒரு நாட்டின் குடும்பங்களின் மூலம் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படுகின்ற மொத்த பண வருமானத்தை தனிப்பட்ட வருமானம் எனலாம்.

Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

Question 5.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரையறு.
விடை:
பண்டங்கள் என்பது தொடக் கூடிய பொருளும், பணிகள் என்பது தொட்டு உணர முடியாததுமான நடவடிக்கைகள் ஆகும்.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறைபாடுகளை விவரி.
விடை:
1. GDPயில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்லை :

  • சந்தையில் விற்கப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்கும்.
  • சுத்தமான காற்று, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமானது.
  • இதற்கு சந்தை மதிப்பு இல்லை. ஆகவே, இவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரம்புக்கு வருவதில்லை .

2. GDP அளவை மட்டும் அளவிடுகிறது; தரத்தை அல்ல:

  • 1970களில் பள்ளிகள் மற்றும் வங்கிகளில் பந்துமுனை பேனாக்கள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை .
  • ஏனென்றால், இந்தியாவில் கிடைக்கக்கூடிய மிக தரமற்ற பொருளாக இருந்தது.
  • பண்டத்தினுடைய தரம் எனபது மிக முக்கியமானதாகும். ஆனால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பின்பற்றப்படுவதில்லை.

3. GDPயில் நாட்டு வருமான பகிர்ந்தளிப்பு பற்றி கூறவில்லை :

  • ஒரு நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரைவாக வளரலாம். ஆனால் வருமானம் சமனற்ற நிலையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
  • இதனால் ஒரு சிறிய சதவீத மக்களே பயன் அடைகிறார்கள்.

4. GDP மக்கள் வாழும் வாழ்க்கை முறையைப் பற்றி கூறவில்லை :
GDP, மிகவும் குறைந்த சுகாதார நிலை, மக்கள் ஜனநாயகமற்ற அரசியல் அமைப்பு, தற்கொலை விகிதம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்மட்ட தனிநபர் வருமானத்துடன் கைகோர்த்து செல்கிறது.

Question 2.
பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றி விவரிக்க.
விடை:
பொருளாதார வளர்ச்சி:
ஐக்கிய நாடுகளின் பார்வையில், பொருளாதார வளர்ச்சி என்பது வாழ்க்கை தரம் உயர்தல் அல்லது ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துதலாகும்.

ஒரு பொருளாதாரத்தில் அல்லது நாட்டின் உற்பத்தியில் அதன் குறிப்பிட்ட காலப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தி உயர்வு பணமதிப்பினால் அளவிடப்பட்ட அளவு கோல் ஆகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மொத்த தேசிய உற்பத்தி (GNP) ஆகிய இரண்டும் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முக்கிய அளவுகோல்.

பொருளாதார முன்னேற்றம்:
உற்பத்தி நிலையை அல்லது பொருளாதாரத்தின் வெளியீட்டை அதிகப்படுத்துவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது ஆகியவை இதில் அடங்கும்.

இது உற்பத்தி அளவு அதிகரிப்பதை மட்டுமில்லாமல், சமூக பொருளாதார காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

தொழில் நுட்ப மேம்பாடு, தொழிலாளர் சீர்திருத்தம், வாழ்க்கைத் தரத்தை அதிகப்படுத்துவது, பொருளாதார அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகிய தரமான அளவுகளை அளப்பதே பொருளாதார முன்னேற்றமாகும்.

ஒரு பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதற்கு மனிதவள மேம்பாடு குறியீடு (HDI) சரியானதாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

10th Social Science Guide இந்தியாவின் சர்வதேச உறவுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லை ஆகும்?
அ) பர்மா – இந்தியா
ஆ) இந்தியா – நேபாளம்
இ) இந்தியா – சீனா
ஈ) இந்தியா – பூடான்
விடை:
இ) இந்தியா – சீனா

Question 2.
இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?
1) ஜி 20
2) ஏசியான் (ASEAN)
3) சார்க் (SAARC)
4) பிரிக்ஸ் (BRICS)

அ) 2 மட்டும்
ஆ) 2 மற்றும் 4
இ) 2, 4 மற்றும் 1
ஈ) 1, 2 மற்றும் 3
விடை:
அ) 2 மட்டும்

Question 3.
ஒபெக் (OPEC) என்பது ……………….
அ) சர்வதேச காப்பீட்டு நிறுவனம்
ஆ) ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்
இ) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு
ஈ) ஒரு சர்வதேச நிறுவனம்
விடை:
இ எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?
அ) வங்காளதேசம்
ஆ) மியான்மர்
இ) ஆப்கானிஸ்தான்
ஈ) சீனா
விடை:
அ) வங்காளதேசம்

Question 5.
பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
i) சல்மா அணை – 1. வங்காளதேசம்
ii) பராக்கா ஒப்பந்தம் – 2. நேபாளம்
iii) சுக்கா நீர்மின்சக்தி திட்டம் – 3. ஆப்கானிஸ்தான்
iv) சாரதா கூட்டு மின்சக்தித் திட்டம் – 4. பூடான்

அ) 3 1 4 2
ஆ) 3 1 2 4
இ) 3 4 1 2
ஈ) 4 3 2 1
விடை:
அ) 3 1 4 2

Question 6.
எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 8
விடை:
இ 7

Question 7.
எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?
அ) இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்
ஆ) மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்
இ) மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு
ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு
விடை:
ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவு

Question 8.
எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?
அ) அருணாச்சலப்பிரதேசம்
ஆ) மேகாலயா
இ) மிசோரம்
ஈ) சிக்கிம்
விடை:
ஈ) சிக்கிம்

Question 9.
எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
விடை:
அ) ஐந்து

Question 10.
சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்
அ) மவுண்ட்பேட்டன் பிரபு
ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்
இ) கிளிமன்ட் அட்லி
ஈ) மேற்கூறிய ஒருவருமில்லை
விடை:
ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு ……….. ஆகும்.
விடை:
பூட்டான்

Question 2.
இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக ……….. இருக்கிறது.
விடை:
மியான்மர்

Question 3.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு ………………. ஆகும்.
விடை:
நேபாளம்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
இந்தியாவிற்குச் சொந்தமான …. ……… என்ற பகுதி மேற்கு வங்காளம் – வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது.
விடை:
டீன்பிகா

Question 5.
இடிமின்ன ல் நிலம் என்று அறியப்படும் நாடு ………………. ஆகும்.
விடை:
பூட்டான்

Question 6.
இந்தியாவும் இலங்கையும் ………………ஆல் பிரிக்கப்படுகின்றன.
விடை:
பாக் ஜலசந்தி

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இந்தியா மற்றும் மியான்மரின் கலடன் போக்குவரத்துத் திட்டம் பின் வரும் போக்குவரத்து முறையில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது?
1) சாலை
2) ரயில் வழி
3) கப்பல்
4) உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
அ) 1, 2 மற்றும் 3
ஆ) 1, 3 மற்றும் 4
இ) 2, 3 மற்றும் 4
ஈ) 1, 2, 3 மற்றும் 4
விடை:
ஆ) 1, 3 மற்றும் 4

Question 2.
கூற்று : இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International – Solar Alliance) தொடங்கியுள்ள ன.
காரணம் : இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

Question 3.
பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை?
1. இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு, டாக்கா பல்கலைக்கழகத்தில் ‘தாகூர் இருக்கை’ ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது.
2. மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயில் மியான்மர் ஆகும்.
3. நேபாளம், பூடான் ஆகியவை நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடுகளாகும்.
4. இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பங்குதாரர் நாடு இலங்கையாகும்.

அ) 1, 2 மற்றும் 3
ஆ) 2, 3 மற்றும் 4
இ) 1, 3 மற்றும் 4
ஈ) 1, 2 மற்றும் 4
விடை:
இ 1, 3 மற்றும் 4

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
கூற்று : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒபெக் (OPEC) ஆர்வம் காட்டியுள்ளது.
காரணம் : தேவையான எண்ணெய் வளங்கள் இல்லாததால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
இ கூற்று காரணம் இரண்டும் சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், வங்காளதேசம், மியான்மர், இலங்கை, மற்றும் மாலத்தீவு.

Question 2.
போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) பற்றிய சிறு குறிப்பு வரைக.
விடை:
இந்தியா, ஆப்கானிஸ்தான் உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (Strategic Partnership Agreement) மூலம் வலிமை பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பை மறுசீரமைக்கவும், நிறுவனங்கள், வேளாண்மை, நீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வரியில்லாமல் இந்திய சந்தையை எளிதாக அடைதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை நல்கவும் வழிகோலுகிறது.

Question 3.
பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா.

Question 4.
கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன ?
விடை:

  • கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணைப்பதற்காக சாலை – நதி – துறைமுகம் – சரக்கு போக்குவரத்து திட்டமான கலடன் பன்முக மாதிரி போக்குவரத்து திட்டத்தினை இந்தியா உருவாக்கி வருகிறது.
  • கொல்கத்தா நகரை ஹோசிமின் உடன் இணைக்கும் நோக்கம் கொண்ட ஒரு திட்ம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பொருளாதார மண்டலத்தை உருவாக்க மியான்மர், கம்போடியா, வியட்நாம் வழியே பணிகள் நடைபெறுகிறது.

Question 5.
சபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.
விடை:

  • சபஹார் ஒப்பந்தம் என்பது முக்கூட்டு ஒப்பந்தம் ஆகும்.
  • இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன்படி சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து வழிதடங்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Question 6.
இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகளாவிய குழுக்களைப் பட்டியலிடுக.
விடை:

  • ஐ.பி.எஸ்.ஏ. (IBSA)
  • பிம்ஸ்டெக் (BIMSTEC)
  • பி.சி.ஐ.எம் (BCIM)
  • ஆர்.சி.இ.பி (RCEP)
  • எம்.ஜி.சி. (MGC)
  • ஈ.எ.எஸ் (EAS)

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 7.
ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?
விடை:

  • உற்பத்தித் துறையில் உற்பத்தி மற்றும் திறன் இந்தியா திட்டங்களில் பங்களிக்கிறது.
  • 30,000 இந்திய மக்களுக்குப் பயிற்சி வழங்க ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் குறித்தும் இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் மூன்று உலகளாவிய குழுக்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்தும் எழுதுக.
விடை:

  • பல்வேறு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினராக இந்தியா செயல்படுவதோடு அவற்றில் சிலவற்றின் நிறுவன உறுப்பினராகவும் இருந்து வருகிறது.
  • இந்தியா முறைப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளான ஐ.நா.சபை அணிசேரா இயக்கம், சார்க்க ஜி-20 மற்றும் காமன்வெல்த் போன்றவைகளில் உறுப்பினராக உள்ளது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 3

Question 2.
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.
விடை:
பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாவதற்கான காரணம்:
உறுப்பு நாடுகளிடையே பெருளாதார வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவும், சொந்த மற்றும் சுயமாக நிரூபிக்கும் விதமாக இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

பிரிக்ஸின் நோக்கங்கள் :

  • பிராந்திய வளர்ச்சியை அடைவது.
  • வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே பாலமாக செயல்படுவது.
  • மனித மேம்பாட்டிற்கு மிகப் பரந்த அளவில் பங்களிப்பு செய்தல்.
  • அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்.
  • வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே உள்நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் நடப்பு சர்வதேச சிக்கல்களை எதிர்கொள்ளுதல்.
  • உறுப்பு நாடுகளிடையே தகவல் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதை ஊக்குவித்தல், உறுப்பு நாடுகளில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு பொருளாதார மாற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.

Question 3.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) திட்டம் குறித்தும் அவ்வமைப்பு எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்கின்றன என்பது குறித்தும் குறிப்பிடுக.
விடை:
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு:
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்) ஈராக்கில் பாக்தாத் நகரில் நிறுவப்பட்ட அரசுகளுக்கிடையேயான ஓர் அமைப்பாகும்.

இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ளது.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் திட்டம்:

  • அதன் உறுப்பு நாடுகளுக்குள் எண்ணெய் கொள்கைகளை ஒருங்கிணைத்தல்.
  • எண்ணெய் சந்தையை நிலைநிறுத்த உதவுதல்.
  • எண்ணெய் நுகர்வு செய்யும் நாடுகளுக்குத் திறமையான, சிக்கனமான, வழக்கமான, விநியோகத்தை அளித்தல்.
  • பெட்ரோலியத் தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு மூலதனத்திற்கு நியாயமான வருவாய் கிடைக்கச் செய்தல்.
  • ஒபெக் எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்தல்
  • பெட்ரோலிய ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச மேம்பாட்டு நிதி (OPID) என்பது குறைந்த வட்டி வீதத்தில் கடன் அளிக்கும் நிதி நிறுவனம் ஆகும். – இது சமூக மற்றும் மனிதாபிமானத் திட்டங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.
  • புத்தகங்கள், அறிக்கைகள், வரைபடங்கள், பெட்ரோலிய எரிசக்தி மற்றும் எண்ணெய் சந்தை தொடர்பான மாநாட்டு நடவடிக்கைகள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ஒபெக் கொண்டுள்ளது.
  • மையம் பொது மக்களாலும் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

10th Social Science Guide இந்தியாவின் சர்வதேச உறவுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… உறவு போர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் மூலம் வலிமை பெற்றது.
அ) இந்தோ பசிபிக்
ஆ) இந்தியா ஆப்கானிஸ்தான்
இ) இந்தியா ஆசியா
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இந்தியா ஆப்கானிஸ்தான்

Question 2.
இந்தியாவும் வங்காளதேசமும் …… நீளம் கொண்ட நிலப்பரப்பை எல்லையாக கொண்டுள்ளன.
அ) 4906.5 கி.மீ
ஆ) 4509.7 கி.மீ
இ) 4096.7 கி.மீ
ஈ) 4976.2 கி.மீ
விடை:
இ 4096.7 கி.மீ

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 3.
…………….. நீரைப் பகிர்ந்து கொள்ள 1977இல் கையெழுத்தான பராக்கா ஒரு வரலாற்று ஒப்பந்தம்.
அ) கங்கை
ஆ) காவிரி
இ) யமுனா
ஈ) அ மற்றும் ஆ
விடை:
அ) கங்கை

Question 4.
இந்திய-வங்காள தேசத்திற்கு பொதுவான 54 நதிகளிலிருந்து அதிகபட்ச நலனைப் பெறுவதற்காக ……………… நாட்டுக் கூட்டு நதி ஆணையம் செயல்படுகிறது.
அ) இரு
ஆ) மூன்று
இ) பல
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) இரு

Question 5.
……………. இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு எனப்படும் ‘இடி மின்னல் நிலம்’ ஆகும்.
அ) மியான்மர்
ஆ) சீனா
இ) பூடான்
ஈ) இந்தோனேசியா
விடை:
இ பூடான்

Question 6.
…………….. பாரத் முதல் பூடான் வரை என்று அறியப்படும் இருதரப்பு வணிக உறவினை அளித்தது.
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) இந்தியா
ஈ) அ மற்றும் ஆ
விடை:
இ இந்தியா

Question 7.
குரு பத்மசம்பவா எனும் ……………. இந்தியாவிலிருந்து பூடானுக்குச் சென்றார்.
அ) சமண துறவி
ஆ) புத்த துறவி
இ) சீக்கிய துறவி
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) புத்த துறவி

Question 8.
இந்தியாவுடன் ஒப்பிடுவதற்கு தகுதி வாய்ந்த நாடு …………… ஆகும்.
அ) பூடான்
ஆ) அசாம்
இ) திரிபுரா
ஈ) சீனா
விடை:
ஈ) சீனா

Question 9.
………………ஆம் ஆண்டு மக்மகான் எல்லைக் கோடு தீர்மானிக்கப்பட்டடது.
அ) 1925
ஆ) 1918
இ) 1914
ஈ) 1941
விடை:
இ) 1914

Question 10.
……………… இந்தியப் பெருங்கடலில் லட்சத்தீவுகளுக்குத் தெற்கில் அமைந்துள்ளது.
அ) மியான்மர்
ஆ) மாலத்தீவு
இ) நேபாள்
ஈ) சீனா
விடை:
ஆ) மாலத்தீவு

Question 11.
எரிபொருள் தேவைகளான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றில் நமது பங்குதாரராக ………………. உள்ள து.
அ) பூடான்
ஆ) நேபாளம்
இ) சீனா
ஈ) மியான்மர்
விடை:
ஈ) மியான்மர்

Question 12.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இயற்கையாக அமைந்த இடைப்படுநாடு …………… ஆகும்.
அ) வங்காள தேசம்
ஆ) கொல்கத்தா
இ) நேபாளம்
ஈ) பூடான்
விடை:
இ நேபாளம்

Question 13.
நேபாளத்தின் பெரிய முதலீட்டாளராக ……………… திகழ்கிறது.
அ) சீனா
ஆ) இந்தியா
இ) நேபாளம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இந்தியா

Question 14.
………………..ம் ஆண்டு கட்டுப்பாடுக் கோடு தீர்மானிக்கப்பட்டது.
அ) 1947
ஆ) 1949
இ) 1972
ஈ) 1994
விடை:
ஆ) 1949

Question 15.
………….. படி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு வழிவகை செய்கிறது.
அ) COMCASA
ஆ) ISRO
இ) AUSINDEX
ஈ) JIM
விடை:
அ) COMCASA

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவிற்குச் சொந்தமான ………………. என்ற பகுதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையிலேயான எல்லையில் உள்ளது.
விடை:
டீன்பிகா

Question 2.
இந்தியா மற்றும் பூடான் இடையே இரு தரப்பு ஒத்துழைப்பிற்கு …………… ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
விடை:
நீர்மின்சக்தி துறை

Question 3.
இருதரப்பு வணிகம் ……………..யைக் கொண்டுள்ளது.
விடை:
மகத்தான வளர்ச்சி

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 4.
இந்தியாவுடனான உறவை பாகிஸ்தான் ……………… மனப்பான்மையுடனே இருந்து வருகிறது.
விடை:
விரோத

Question 5.
1972ஆம் ஆண்டின் ……………… ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லையாகும்.
விடை:
சிம்லா

Question 6.
……………… ஜப்பானிய ஒத்துழைப்பில் உருவான வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.
விடை:
டெல்லி மெட்ரோ ரயில்

Question 7.
சபஹார் ஒப்பந்தம் எனப்படும் ………………. ஒப்பந்தம் ஆகும்.
விடை:
முக்கூட்டு

Question 8.
உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக ……………… வரை அமைக்கப்பட்டிருந்தது.
விடை:
மெலுக்கா

Question 9.
பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் ……………… நகரில் அமைந்துள்ளது.
விடை:
சீனாவின் ஷாங்காய்

Question 10.
பிரிக்ஸ் என்ற சொல் ……….. என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது.
விடை:
ஜிம் ஓ நீல்

Question 11.
………………… என்பது பல துறை வளர்ச்சி வங்கி.
விடை:
புதிய மேம்பாட்டு வங்கி

Question 12.
CRA என்பதன் விரிவாக்கம் ……………. ஆகும்.
விடை:
அவரச ஒதுக்கீடு ஏற்பாடு

Question 13.
கச்சா எண்ணெய் அதிக அளவில் நுகர்வு செய்யும் நாடுகளில் ……………… ஒன்று.
விடை:
இந்தியாவும்

Question 14.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கொண்ட ஒரு தகவல் மையத்தை ………….. கொண்டுள்ளது.
விடை:
ஓபெக்

Question 15.
…………… 1969ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சர்வதேச வடிவமைப்பு போட்டியின் சின்னமாகும்.
விடை:
OPEC இலச்சினை

Question 16.
இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தில் …………….. ஒரு பங்குதாரர் ஆகும்..
விடை:
இலங்கை

Question 17.
தென்கடலில் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்காக கொல்கத்தா நகரை ………….. உடன் இணைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
விடை:
ஹோசிமின்

Question 18.
இந்தியாவையும் காத்மண்டுவையும் இணைப்பதற்கான ……………… நீளமுள்ள மகேந்திர ராஜ் மார்க் இணைப்பை இந்தியா கட்டியுள்ளது.
விடை:
204 கி.மீ

Question 19.
இந்திய அரசாங்கம் ……………… நீர்மீன்சக்தி திட்டங்களை பூடானில் அமைந்துள்ளது.
விடை:
மூன்று

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 20.
அண்டை நாடுகளின் உறவை பொருத்தவரை இந்தியா ……………… நிலையை கொண்டுள்ளது.
விடை:
உன்னத

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) இந்தியாவும் பூடானும் இணக்கதன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ii) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பாதுகாப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பெறுவதற்கு வழிவகை செய்கிறது.
iii) இரு நாடுகளின் இராணுவங்களுக்கிடையே நிகழ்நேரத் தகவல் பகிர்வுக்கு அனுமதியளிக்கிறது.

அ) i), iii) சரி
ஆ) ii), iii) தவறு
இ) i) தவறு
ஈ) எல்லாம் சரி
விடை:
i) தவறு

Question 2.
கூற்று (A) : இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவு நட்பு ரீதியாக உள்ளது.
காரணம் (R) : தமிழ் இனப்பிரச்சினை தொடர்பான காலகட்டத்தில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.

அ) A சரி R ஆனது A-யை விளக்குகிறது.
ஆ) A தவறு R சரி
இ) இரண்டுமே சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
A சரி R ஆனது A-யை விளக்குகிறது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள் 5

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
கட்டுப்பாடுக் கோடு – வரையறு.
விடை:

  • 1949ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடு 1972ஆம் ஆண்டிற்குப் பின்னர் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு என அழைக்கப்பட்டது.
  • இது 1972ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லையாகும்.

Question 2.
பிரிக்ஸ் குறிப்பு வரைக.
விடை:

  • பிரிக்ஸ் என்ற சொல் ஜிம் ஓ’ நீல் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்டது.
  • பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 2050ஆம் ஆண்டில் ஆறு தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளைவிட டாலர் மதிப்பில் பெரிய நாடுகளாக உருவாகும் என்றும் கடந்த 300 ஆண்டுகளின் அதிகாரப் போக்கு முற்றிலும் மாறுபடும் என்றும் அவர் கணித்தார்.

Question 3.
குரு பத்மசம்பவா பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • குரு பத்மசம்பவா எனும் புத்த துறவி இந்தியாவிலிருந்து பூடானுக்குச் சென்றார்.
  • அங்கு தனது செல்வாக்கை ஏற்படுத்தி புத்த சமயத்தைப் பரப்பியதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே பாரம்பரியத்தை உறுதிப்படுத்தினார்.

Question 4.
மெலுக்கா – வரையறு.
விடை:
உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக மெலுக்கா என்று அழைக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகம் வரை அமைக்கப்பட்டிருந்தது.

Question 5.
ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவை எழுதுக.
விடை:

  • இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நம்பிக்கைக்குரிய திட்டங்களைப் பல ஆண்டுகளாக மெதுவாகவும் படிப்படியாகவும் ஏற்படுத்தி வருகின்றன.
  • ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து இந்திய ஆஸ்திரேலிய கடற்படை பயிற்சி ஒத்திகையின் மூலம் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளன.

Question 6.
டீன்பிகா பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • இந்தியாவிற்குச் சொந்தமான டீன்பிகா என்ற பகுதி மேற்கு வங்களாம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான எல்லையில் உள்ளது.
  • குறுகலான இப்பாதை 2011ஆம் ஆண்டு வங்களாதேசத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 5 இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Question 7.
மக்மகான் எல்லைக் கோடு – வரையறு.
விடை:

  • இந்தியா, சீனா மற்றும் பூடானின் கிழக்குப் பகுதி ஆகிய பகுதிகளுக்கு இடையேயான எல்லைக்கோடு ஆகும்.
  • இது 1914ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியா, திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் சார்பில் இந்தியாவிற்கான செயலாளர் ஆர்தர் ஹென்றி மக்மகான் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
பிரிக்ஸ் நிதி கட்டமைப்பு பற்றி விவரிக்க.
விடை:

  • புதிய மேம்பாட்டு வங்கி என்பது பல துறை வளர்ச்சி வங்கி ஆகும்.
  • அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்குக் கடன் வழங்குவதே இதன் முதன்மைச் செயலாகும்.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இது முன்னுரிமை வழங்குகிறது.
  • அவசரகால நிதி ஒதுக்கீடு ஏற்பாடு நாணய விவகாரங்கள் உள்ளிட்ட உலக அளவிலான பண நெருக்கடியில் இருந்து பாதுகாத்திட அடிப்படைத் திட்டம் வழங்க வகை செய்கிறது.

பிரிக்ஸ் பணம் செலுத்தும் திட்டம்:

  • 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் பணம் செலுத்தும் முறை தொடர்பான ஆலோசனைகளைத் தொடங்கினர்.
  • இது உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி, செய்திப் பரிமாற்ற அமைப்பிற்கு மாற்றாக இருக்கும்.

Question 2.
இந்தியாவும் மாலத்தீவும் பற்றி குறிப்பு வரைக.
விடை:
மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுகளுக்குத் தெற்கில் அமைந்துள்ளது.

இதன் அமைவிட முக்கியத்துவத்தினாலும் அருகாமையில் அமைந்திருப்பதாலும் மாலத்தீவினுடனான உறவு இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்தியாவும் மாலத்தீவும் இனம், மொழி, பண்பாடு, சமயம் மற்றும் வணிகத் தொடர்பு ஆகிய பல பரிமாணத் தொடர்புகளைப் பழங்காலத்திலிருந்தே சுமூகமாகப் பேணி வருகின்றன.

இரு நாடுகளுக்கிடையே வணிகம் மற்றும் சுற்றுலா மேம்பட்டு இருக்கின்றன.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒருங்கிணைந்த ரோந்து மற்றும் வான்வழி கண்காணிப்புத் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை நல்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

10th Social Science Guide இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?
அ) பாதுகாப்பு அமைச்சர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) வெளிவிவகாரங்கள் அமைச்சர்
ஈ) உள்துறை அமைச்சர்
விடை:
இ வெளிவிவகாரங்கள் அமைச்சர்

Question 2.
எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?
அ) இந்தியா மற்றும் நேபாளம்
ஆ) இந்தியா மற்றும் பாகிஸ்தான்
இ) இந்தியா மற்றும் சீனா
ஈ) இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
விடை:
இ இந்தியா மற்றும் சீனா

Question 3.
இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
அ) சட்டப்பிரிவு 50
ஆ) சட்டப்பிரிவு 51
இ) சட்டப்பிரிவு 52
ஈ) சட்டப்பிரிவு 53
விடை:
ஆ) சட்டப்பிரிவு 51

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 4.
இன ஒதுக்கல் கொள்கை என்பது
அ) ஒரு சர்வதேச சங்கம்
ஆ) இராஜதந்திரம்
இ) ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை
ஈ) மேற்கூறியவைகளில் எதுவுமில்லை
விடை:
இ ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை

Question 5.
1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.
அ) வியாபாரம் மற்றும் வணிகம்
ஆ) சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது
இ) கலாச்சார பரிமாற்றங்கள்
ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்
விடை:
ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

Question 6.
நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?
அ) உலக ஒத்துழைப்பு
ஆ) உலக அமைதி
இ) இனச் சமத்துவம்
ஈ) காலனித்துவம்
விடை:
ஈ) காலனித்துவம்

Question 7.
கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?
அ) யூகோஸ்லோவியா
ஆ) இந்தோனேசியா
இ) எகிப்து
ஈ) பாகிஸ்தான்
விடை:
ஈ) பாகிஸ்தான்

Question 8.
பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி.
அ) சமூக நலம்
ஆ) சுகாதாரம்
இ) ராஜதந்திரம்
ஈ) உள்நாட்டு விவகாரங்கள்
விடை:
இ ராஜதந்திரம்

Question 9.
அணிசேராமை என்பதன் பொருள்…………
அ) நடுநிலைமை வகிப்பது
ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்
இ) இராணுவமயமின்மை
ஈ) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை
விடை:
ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்

Question 10.
இராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது ……………
அ) ஆற்றல் பாதுகாப்பு
ஆ) நீர் பாதுகாப்பு
இ) தொற்றுநோய்கள்
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் ………….
விடை:
பொக்ரான்

Question 2.
தற்போது நமது வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ……………… உருவாக்குவதற்கான வழிமுறையாக செயல்படுகிறது.
விடை:
உள் முதலீட்டை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 3.
…………. என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
விடை:
இராஜதந்திரம்

Question 4.
இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை ………..
விடை:
அணி சேராக் கொள்கை

Question 5.
நமது மரபு மற்றும் தேசிய நெறிமுறைகள் …………….. நடைமுறைப்படுத்துவதாகும்.
விடை:
படைவலிமைக் குறைப்பை

III. பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். i) பஞ்சசீலம்
ii) சீனாவின் அணுவெடிப்புச் சோதனை
iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்
iv) இந்தியாவின் முதல் அணுவெடிப்புச் சோதனை

அ) (i), (iii), (iv), (ii)
ஆ) (i), (ii), (iii), (iv)
இ) (i), (ii), (iv), (iii)
ஈ) (i), (iii), (ii), (iv)
விடை:
அ) (i), (iii), (iv), (ii)

Question 2.
பின்வருவனவற்றில் அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?
i) அணிசேரா இயக்கம் என்ற சொல் வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
ii) இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும்.
iii) தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
v) இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது.

அ) (1) மற்றும் (ii)
ஆ) (iii) மற்றும் (iv)
இ) (ii) மட்டும்
ஈ) (iv) மட்டும்
விடை:
இ (ii) மட்டும்

Question 3.
கீழ்க்காணும் ஒவ்வொரு கூற்றுக்கும் எதிராக சரியா தவறா என எழுதுக.
அ) பனிப்போரின் போது சர்வதேச விவகாரங்களில் இந்தியா மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்தது.
ஆ) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது.
இ) இந்தியாவின் அணுசக்தி சோதனை பூமிக்கடியிலான அணு சோதனை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.
விடை:
அ) சரி, ஆ) தவறு, இ சரி

Question 4.
கூற்று : 1971இல் இந்தோ – சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சோவியத்யூனியனுடன் இணைந்தது.
காரணம் : இது 1962இன் பேரழிவுகரமான சீன போருக்கு பின் தொடங்கியது.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
இ கூற்று சரி, காரணம் தவறு.

Question 5.
கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ளது.
காரணம் : உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 6.
இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் இராணுவ முகாம்களில் இணைவதைத் தவிர்ப்பது அவசியமாக இருந்தது ஏனெனில், இந்தியா இதனை / இவைகளை மீட்க வேண்டி இருந்தது.
அ) கடுமையான வறுமை
ஆ) எழுத்தறிவின்மை
இ) குழப்பமான சமூக பொருளாதார நிலைமைகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?
விடை:
வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும்.

Question 2.
இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி.
விடை:
இந்தியாவின் அணுக்கொள்கையின் இரண்டு மையக் கருத்துக்கள் :

  • முதலில் பயன்படுத்துவதில்லை .
  • குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத்திறன்.
  • அணு ஆயுதத்தை போர்த்தாக்குதலுக்கு பயன்படுத்துவது இல்லை என்பதோடு அணு ஆயுதமற்ற எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்துவதுமில்லை என இந்தியா தீர்மானித்துள்ளது.

Question 3.
வேறுபடுத்துக:
விடை:
உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக் கொள்கை.
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 3

Question 4.
பஞ்சசீல கொள்கைகளில் நான்கினைப் பட்டியலிடுக.
விடை:
பஞ்சசீலம் :

  • ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையும் பரஸ்பரம் மதித்தல்.
  • பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை .
  • பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.
  • பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.
  • அமைதியாக சேர்ந்திருத்தல்.

Question 5.
இந்தியா அணிசேரா கொள்கையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?
விடை:
நாட்டின் முதல் பிரதமரான நேரு, அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார்.

எனவே பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்தார்.

Question 6.
சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.
விடை:
சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் :
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை .

Question 7.
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?
விடை:
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் :
இந்தியாவின் ஜவகர்லால் நேரு, யூகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 8.
வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • உடன்படிக்கைகள் மற்றும் நிர்வாக ஒப்பந்தங்கள்
  • தூதுவர்களை நியமித்தல்
  • வெளிநாட்டு உதவி
  • சர்வதேச வணிகம் மற்றும்
  • ஆயுதப்படைகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.
விடை:
அணிசேரா இயக்கம் (The Non Aligned Movement) 1961:

  • அணி சேரா இயக்கம் என்ற சொல் 1953இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • இதன் நோக்கம் இராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலாகும்.
  • அணிசேரா இயக்கமானது 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இது ஒரு அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் கொண்டுள்ளது.
  • பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்தார்.

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் :
ஜவஹர்லால் நேரு – இந்தியா
டிட்டோ – யூகோஸ்லோவியா
நாசர் – எகிப்து
சுகர்னோ – இந்தோனேசியா
குலாமே நிக்ரூமா – கானா

Question 2.
வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் எவை?
விடை:
வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் :

  • நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும் பரப்பளவு.
  • நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தத்துவம் அடிப்படையிலானவை.
  • இயற்கை வளங்கள்
  • பொருளாதார வளர்ச்சியின் அவசியம்
  • அரசியில் நிலைத்தன்மை மற்றும் அரசாங்க அமைப்பு
  • அமைதிக்கான அவசியம், ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதப் பெருக்கத்தடை
  • இராணுவ வலிமை
  • சர்வதேச சூழ்நிலை
  • தேசிய நலனைப் பேணுதல்
  • உலக அமைதியை எய்துதல்
  • ஆயுதக் குறைப்பு
  • பிறநாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்
  • அமைதியான வழிகளில் பிரச்சனைகளைத் தீர்த்தல்
  • அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்

Question 3.
அண்டை நாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவு கொள்கையின் ஏதேனும் இரு கொள்கைகளை விவரி.
விடை:
இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துகள் :

  • தேசிய நலனைப் பேணுதல்.
  • உலக அமைதியை எய்துதல்.
  • ஆயுதக் குறைப்பு.
  • பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்.
  • அமைதியான வழிகளில் பிரச்சினைகளைத் தீர்த்தல்.
  • அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு.
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்.
  • காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு.

10th Social Science Guide இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
……………… ஆம் ஆண்டு இந்திய வெளிநாட்டுச் சேவை பயிற்சி நிறுவனம் நிறுவப்பட்டது.
அ) 1953
ஆ) 1986
இ) 1954
ஈ) 1964
விடை:
ஆ) 1986

Question 2.
………………. இந்தோனேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அ) வெளியுறவு கொள்கை
ஆ) பஞ்சசீலக் கொள்கை
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவும் இல்லை
விடை:
ஆ) பஞ்சசீலக் கொள்கை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 3.
………………. அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகளை எதிர்த்தார்.
அ) V. கிருஷ்ண மேனன்
ஆ) நாகா
இ) ஜவகர்லால் நேரு
ஈ) சுகர்னோ
விடை:
இ ஜவகர்லால் நேரு

Question 4.
அணிசேரா இயக்கமானது ……………… உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
அ) 120
ஆ) 105
இ) 98
ஈ) 110
விடை:
அ) 120

Question 5.
சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் ………….. இல் அமைக்கப்பட்டுள்ளது.
அ) புதுடெல்லி
ஆ) மஹாராஷ்டிரா
இ) ராஜஸ்தான்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) புதுடெல்லி

Question 6.
……… ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ண மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
அ) அணிசேரா இயக்கம்
ஆ) உள்நாட்டு கொள்கை
இ) வெளியுறவு கொள்கை
ஈ) சார்க் இயக்கம்
விடை:
அ) அணிசேரா இயக்கம்

Question 7.
இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் ……………… பாலமாக உள்ள து.
அ) ஸ்ரீலங்கா
ஆ) மாலத்தீவு
இ) மியான்மர்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ மியான்மர்

Question 8.
………………. அணுசக்தி ஒப்பந்தம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
அ) இந்தியா – பசிபிக்
ஆ) இந்திய – அமெரிக்க
இ) அ) மற்றும் ஆ) இரண்டும்
ஈ) ஆசியா
விடை:
ஆ) இந்திய – அமெரிக்க

Question 9.
ஆப்பிரிக்க ஆசிய மாநாடு நடைபெற்ற ஆண்டு ……………..
அ) 1965
ஆ) 1975
இ) 1955
ஈ) 1995
விடை:
இ 1955

Question 10.
…………… உலகளவில் முடிவெடுக்கும் மற்றும் நிர்வாகத்தில் ஒரு முக்கிய குரலாக உள்ளது.
ஆ) இலங்கை
ஆ) நேபாள்
இ) பூடான்
ஈ) இந்தியா
விடை:
இந்தியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க முயல்கிறது.
விடை:
வெளியுறவுக் கொள்கை

Question 2.
……………… என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
விடை:
அணிசேராமை

Question 3.
அணிசேராமை இயக்கமானது …………….. பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
விடை:
120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளையும்

Question 4.
……………… என்பது நடுநிலையாக இருப்பது என்பது பொருள் அல்ல.
விடை:
அணிசேராமை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 5.
இரண்டாவது அணு சோதனை ……………… உள்ள பொக்ரான் என்னும் இடத்தில் நடைபெற்றது.
விடை:
ராஜஸ்தானில்

Question 6.
சார்க் நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ………….. நாடுகளுக்கு கூட்டுத்தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகும்.
விடை:
தெற்காசிய

Question 7.
சார்க் செயற்கைக்கோளை ……………… மற்றும் …………….. செலுத்தியது.
விடை:
செய்தித் தொடர்பு, வானிலை ஆய்விற்காக

Question 8.
வரலாறு மற்றும் கலாச்சார ஒற்றுமைத் தன்மைகளை கொண்ட ………………. என்ற கருத்து இந்தியாவின் வெளியுறவு கொள்கையாக இருக்கிறது.
விடை:
அண்டைநாடு

Question 9.
…………….. என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
விடை:
இராஜதந்திரம்

Question 10.
…………….. என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒரு நாட்டால் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவை ஆகும்.
விடை:
வெளியுறவுக் கொள்கை

Question 11.
……………… வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
விடை:
இந்தியா

Question 12.
ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளிகளைக் கொண்டது ………………. ஆகும்.
விடை:
பன்மைகோட்பாடு

Question 13.
………………….. காரணமாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகிறது.
விடை:
பொருளாதார முன்னேற்றம்

Question 14.
………………. நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது.
விடை:
ஐ.நா சபையின் பாதுகாப்பு சபையில்

Question 15.
……………… எதிரான நமது பொதுவான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்க பலமாகும்.
விடை:
தீவிரவாதத்திற்கு

III. பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 1950 – 1960களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறிக்கோளாக இருந்தது.
ii) இது V. கிருஷ்ண மேனன் வழிகாட்டுதலின்படி அமைந்திருந்தது.
iii) அணிசேராமை இயக்கம் 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகள் மற்றும் 10 சர்வதேச நிறுவனங்களை கொண்டுள்ளது.
iv) நேரு ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார்.

அ) i), ii) சரி
ஆ) i), iv) சரி
இ) iii), iv) சரி
ஈ) எல்லாம் சரி
விடை:
இ iii), iv) சரி

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 4
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 5

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
சார்க் குறிப்பு வரைக.
விடை:
சார்க் என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள எட்டு நாடுகளின் ஒரு பொருளாதார மற்றும் புவி அரசியல் அமைப்பாகும்.

சார்க் நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், தெற்காசிய நாடுகளிடையே கூட்டுத் தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகியனவாகும்.

Question 2.
இராஜதந்திரம் – வரையறு.
விடை:
ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் சூழலுக்குத் தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.

Question 3.
உலகப் பாதுகாப்பு இந்தியாவில் எவற்றில் பிரதிப்பலிக்கிறது?
விடை:

  • இராணுவ நவீனமயமாக்கல்
  • கடல்சார் பாதுகாப்பு
  • அணுசக்தி

Question 4.
வெளியுறவு அமைச்சகம் என்றால் என்ன?
விடை:
வெளியுறவு அமைச்சகம் எனப்படும் இந்திய வெளிவிவகார அமைச்சரவை இந்திய அரசின் ஒரு அங்கமாக இருந்து நாட்டின் வெளியுறவுகளைப் பொறுப்பேற்று நடத்துகிறது.

1986ஆம் ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டுப் சேவை பயிற்சி நிறுவனம் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.

Question 5.
அணிசேரா இயக்கம் பற்றி ஜவகர்லால் நேரு கூறியது யாது?
விடை:
“பரந்த அளிவில் அணிசேராமை என்பது இராணுவக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளாதது அல்ல.

அதாவது பிரச்சனைகளை முடிந்தவரை இராணுவக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அது சில நேரங்களில் மட்டும் ஏற்பட்டாலும் சுதந்திரமாக மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியிலான உறவைப் பராமரித்தல்”.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Question 6.
உள்நாட்டுக் கொள்கை வரையறு.
விடை:
உள்நாட்டுக் கொள்கை :
உள்நாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கையாகும்.

இது உள்விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
பஞ்சசீலம் – விவரி.
விடை:
(சமஸ்கிருதச் சொற்களான பாஞ்ச் = ஐந்து, சீலம் = நற்பண்புகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது)
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 4 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 6

  • இந்தியா (பிரதமர் – ஜவகர்லால் நேரு) மற்றும் சீனா (பிரதமர் – சூ-யென்-லாய்) ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியுடன் இணங்கியிருத்தலுக்கான 5 கொள்கைகள் (பஞ்சசீலம்), 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் கையெழுத்தானது.
  • இரு அரசாங்கங்களும் பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.
  • இந்தக் கொள்கைகள் இந்தோனேசியாவில் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க – ஆசிய மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

Question 2.
தற்கால சூழலில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வழிகாட்டும் சக்தியாக இந்தியா எவ்வாறு மாற்றமடைந்துள்ளது?
விடை:
பொருளாதார வளர்ச்சி :

  • தற்போது இந்தியாவின் அரசியல் நகர்வுகளில் தவிர்க்கவியலாத பொருளாதாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.
  • பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகின்றன.
  • விரைவான, சமமான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் முதன்மைக் குறிக்கோளாக உள்ளது.
  • நாடு சர்வதேச பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
  • இதனை அடைவதற்குத் தேவையானவை பொருளாதார வளர்ச்சி, சந்தை, மூலதனம், தொழில்நுட்பம், மரபுப்பிணைப்பு, பணியாளர்திறன், நியாயமான உலகளாவிய நிர்வாகம் மற்றும் ஒரு நிலையான நியாயமான வளர்ச்சிக்கு உகந்த சூழல் ஆகியனவாகும்.

வழிகாட்டும் சக்தியாக இந்தியா:

  • ஜி-20 நாடுகள், கிழக்காசிய உச்சிமாநாடு, பிரிக்ஸ் ஆகியவற்றால் உறுப்புநாடாக இந்தியா இருப்பதும் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு நாடாக இருப்பதும் அதன் நிலைக்கு ஒரு சான்றாகும்.
  • ஐ.நா சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது.
  • இந்தியா தற்போது தனது அதிகரித்துவரும் நலனை உலகின் பல பகுதிகளில் ஆழப்பதித்து வருகிறது.