Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 5 செல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 5 செல்

6th Science Guide செல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு
அ) சென்டி மீட்டர்
ஆ) மில்லி மீட்டர்
இ) மைக்ரோ மீட்டர்
ஈ) மீட்டர்
விடை:
இ) மைக்ரோ மீட்டர்

Question 2.
நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.
அ) தாவர செல்
ஆ) விலங்கு செல்
இ) நரம்பு செல்
ஈ) மீட்டர்
விடை:
அ) தாவர செல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 3.
யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது.
அ) செல் சுவர்
ஆ) நியூக்ளியஸ்
இ) நுண்குமிழ்கள்
ஈ) பசுங்கணிகம்
விடை:
ஆ) நியூக்ளியஸ்

Question 4.
கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
அ) ஈஸ்ட்
ஆ) அமீபா
இ) ஸ்பைரோ கைரா
ஈ) பாக்டீரியா
விடை:
இ) ஸ்பைரோகைரா

Question 5.
யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்.
அ) செல்சுவர்
ஆ) சைட்டோபிளாசம்
இ) உட்கரு (நியூக்ளியஸ்)
ஈ) நுண்குமிழ்கள்
விடை:
ஆ) சைட்டோபிளாசம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
செல்களைக் காண உதவும் உபகரணம் ______
விடை:
மைக்ரோஸ்கோப் (அ)
நுண்ணோக்கி

Question 2.
நான் செல்லில் உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறேன் நான் யார்? ______
விடை:
பசுங்கணிகம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 3.
நான் ஒரு காவல்காரன் நான் செல்லினுள் யாரையும், உள்ளேயும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்?____
விடை:
செல் சவ்வ

Question 4.
செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _____
விடை:
ராபர்ட் ஹூக்

Question 5.
நெருப்புக் கோழியின் முட்டை ____ தனி செல் ஆகும்.
விடை:
மிகப் பெரிய

III. சரியா? (அ) தவறா? என கூறுக. தவறாக இருப்பின் சரியான விடையை எழுதவும்.

Question 1.
உயிரினங்களின் மிகச் சிறிய அலகு’ செல்.
விடை:
சரி

Question 2.
மிக நீளமான செல் நரம்பு செல்.
விடை:
சரி

Question 3.
பூமியில் முதன் முதலாக உருவான செல் புரோகோயோட்டிக் செல் ஆகும்.
விடை:
சரி

Question 4.
தாவரத்திலும், விலங்கிலும் உள்ள நுண்ணுறுப்புகள், செல்களால் ஆனவை.
விடை:
தவறு
சரியான விடை : நுண்ணுறுப்புகள் – செல்லினுள் காணப்படுகின்றன.

Question 5.
ஏற்கனவே உள்ள செல்களிலிருந்து தான் புதிய செல் உருவாகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 60

V. சரியான முறையில் வரிசைப்படுத்துக்

Question 1.
யானை, பசு, பாக்டீரியா, மாமரம், ரோஜாச் செடி
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 61

Question 2.
கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை, பூச்சிகளின் முட்டை.
விடை:
பூச்சிகளின் முட்டை, கோழி முட்டை, நெருப்புக் கோழி முட்டை.

VI. ஒப்புமை தருக.

Question 1. புரோகேரியோட்: பாக்டீரியா :: யூகேரியோட் : _____
விடை:
தாவர செல்கள் / விலங்கு செல்கள்

Question 2.
ஸ்பைரோகைரா: தாவர செல்:: அமீபா : _____
விடை:
விலங்கு செல்

Question 3.
உணவு உற்பத்தியாளர்: பசுங்கணிகம் :: ஆற்றல் மையம் : _____
விடை:
மைட்டோகான்டிரியா

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
1665 ஆம் ஆண்டு செல்லைக் கண்டறிந்தவர் யார்?
விடை:
ஆங்கில அறிவியலாளர் ராபர்ட் ஹீக் , 1665 ஆம் ஆண்டு மெல்லிய கார்க் (மரத் தக்கை) கை நுண்ணோக்கியைக் கொண்டு கண்டபோது செல்களைக் கண்டறிந்தார்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 2.
நம்மிடம் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்த செல்கள்?
விடை:
யூகேரியாட்டிக் வகை செல்கள் ஆகும்.

Question 3.
செல்லின் முக்கிய கூறுகள் யாவை?
விடை:

  1. செல்லைச் சுற்றிக் காணப்படும் வெளி உறையான செல்சவ்வு
  2. திரவநிலை சைட்டோபிளாசம்
  3. உட்கரு

Question 4.
தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்புகள் எது?
விடை:

  1. செல் சுவர்
  2. பசுங்கணிகம்

Question 5.
யூகேரியாட்டிக் செல்லிற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக?
விடை:

  1. தாவர செல்கள்
  2. விலங்கு செல்கள்
  3. பெரும்பான்மையான பூஞ்சைகள் மற்றும் ஆல்காக்கள்

Question 6.
நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?
விடை:
சைட்டோபிளாசம் நகரும் மையப்பகுதியாகும்.

Question 7.
சிவா “சிறிய வெங்காயத்தை பெரிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது, பெரிய வெங்காயம் பெரிய செல்களைக் கொண்டுள்ளன” என்கிறான். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? ஏன்?
விடை:
மறுக்கிறேன் – ஏனெனில் செல்லின் அளவிற்கும், உயிரினத்தின் அளவிற்கும் தொடர்பு இல்லை.
(எ.கா) சுண்டெலியின் செல்லைவிட யானையின் செல் பெரியதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவ்வாறே சிறிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது பெரிய வெங்காய செல்கள் பெரிதாக இருப்பதில்லை.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

VIII. குறுகிய விடையளி:

Question 1.
உயிரினங்களைக் கட்ட உதவும், கட்டுமானம் – செல் எனப்படுகிறது ஏன்?
விடை:

  • ஒரு செங்கல் கட்டிடத்தின் அடிப்படை அலகாக இருப்பது போலவே, ஒரு செல் மனித, விலங்கு, தாவர உடலின் அடிப்படை அலகாக உள்ளது.
  • எனவே உயிரினங்களைக் கட்ட உதவும், கட்டுமானம் செல் எனப்படுகிறது.

Question 2.
பின்வரும் தாவர செல்லில் ஏதேனும் நான்கு பாகங்களைக் குறி :
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 80

Question 3.
புரோகேரியாட்டிக், யூகேரியாட்டிக் செல்கள் – வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 85

Question 4.
நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 86

  • சென்டிரியோல் – தாவர செல்லில் காணப்படாது
  • செல்சுவர், பசுங்கணிகம் – விலங்கு செல்லில் காணப்படாது.

Question 5.
செல் உயிரியலில் இராபர்ட் ஹூக்கின் பங்களிப்பு பற்றி விளக்குக.
இராபர்ட் ஹூக் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்.
விடை:

  • அவர் அக்கால நுண்ணோக்கியை மேம்படுத்தி, கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார்.
  • அவர் நீர் லென்சைக் கொண்டு நுண்ணோக்கியின் கீழ் வைக்கப்பட்ட பொருளை கண்டறிந்தார்.
  • மரத்தக்கையின் சிறிய மெல்லிய பகுதியை, நுண்ணோக்கியிலிருந்து பார்த்து செல்களைக் கண்டறிந்தார்.
  • அதனடிப்படையில் 1665 ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலில் ‘செல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
  • செல்லைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு செல் உயிரியல் எனப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

IX. விரிவான விடையளி :

Question 1.
எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 90

Question 2.
புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களை குறி.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 91

X. செயல் திட்டம் (மாணவர்களுக்கானது)

1. உங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி உங்களால் தாவர செல்லின் முப்பரிமாண படத்தை வரைக.
2. ஜெல்லி, கேக் போன்ற உணவு பொருட்களைப் பயன்படுத்தி செல்லை உருவாக்குக. அச்செல்லின் நுண்ணுறுப்புகளைக் குறிக்க கொட்டைகள் உலர் பழங்கள் போன்றவற்றை பயன்படுத்துக. இந்த மாதிரியை உங்கள் வகுப்பறையில் காட்சிப் பொருளாக வைத்து ஆசிரியர்களையும் மற்ற வகுப்பு மாணவர்களையும் அழைத்து அதைப் பார்க்கச் செய்க. அதைப் பற்றி அவர்களைக் கேள்விகள் கேட்கச் சொல்லி அதற்குரிய பதில்களை நீங்கள் கூறுங்கள்.

6th Science Guide செல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
இப்புவியில் முதல் முதலில் உருவான செல்.
அ) யூகேரியாட்டிக் செல்
ஆ) ஆல்காக்களின் செல்
இ) பூஞ்சைகளின் செல்
ஈ) புரோகேரியாட்டிக் செல்
விடை:
ஈ) புரோகேரியாட்டிக் செல்

Question 2.
எஸ்ஸெரிச்சியா கோலை பாக்டீரியாவின் வாழிடம்.
அ) மண் வாழும் பாக்டீரியா
ஆ) மனித சிறுகுடலில் வாழும் பாக்டீரியா
இ) நீர் வாழும் பாக்டீரியா
ஈ) வாயு மண்டலத்தில் காணப்படும் பாக்டீரியா
விடை:
ஆ) மனித சிறுகுடலில் வாழும் பாக்டீரியா

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 3.
இவை ஒளியை ஈர்க்க பயன்படும் நிறமி.
அ) பச்சையம்
ஆ) பசுங்க ணிகம்
இ) குரோமோபிளாஸ்ட்
ஈ) லூகோ பிளாஸ்ட்
விடை:
அ) பச்சையம்

Question 4.
கோழி முட்டையின் மையத்திலுள்ள மஞ்சள் நிறப்பகுதி.
அ) சைட்டோபிளாசம்
ஆ) செல் உறை
இ) சேமிப்பு உணவு
ஈ) உட்கரு
விடை:
ஈ) உட்கரு

II. உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம்:

Question 1.
உறுதிப்படுத்துதல் (A) : பசுங்கணிகம் ஒரு செல் நுண்ணுறுப்பு
காரணம் (R) : நுண்ணுறுப்பு என்பது தனிப்பட்ட அமைப்பு, பணி செய்யும் செல்லின் தனிப் பகுதி.
அ) உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானது. R- Aஐ சரியாக விளக்குகிறது.
ஆ) A மற்றும் R சரியானது ஆனால் R – Aஐ சரியாக விளக்கவில்லை.
இ) A சரியானது ஆனால் R தவறானது.
ஈ) A தவறு ஆனால் R சரியானது.
விடை:
அ) உறுதிப்படுத்துதல் – A மற்றும் காரணம் R சரியானது. R – Aஐ சரியாக விளக்குகிறது.

Question 2.
உறுதிப்படுத்துதல் (A) : மைட்டோகாண்டிரியா செல்லின் முக்கிய நுண்ணுறுப்பு ஆகும்.
காரணம் (R) : மைட்டோகாண்டிரியா உணவு தயாரித்தலில் ஈடுபடுகிறது.
அ) உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானது. R- Aஐ சரியாக விளக்குகிறது.
ஆ) A மற்றும் R சரியானது ஆனால் R – Aஐ சரியாக விளக்கவில்லை.
இ) A சரியானது ஆனால் R தவறானது.
ஈ) A தவறு ஆனால் R சரியானது.
விடை:
இ) A சரியானது ஆனால் R தவறானது.

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 95

IV. மிகக் குறுகிய விடையளி

Question 1.
பின்வரும் செல்களை அவற்றின் அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
அ) பாக்டீரிய செல்
ஆ) தவளையின் முட்டை
இ) கோழியின் முட்டை
ஈ) மனித – அண்டம் (அ) முட்டை
விடை:
அ) பாக்டீரிய செல்
ஆ) மனித – அண்டம் (அ) முட்டை
இ) தவளையின் முட்டை
ஈ) கோழியின் முட்டை

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல்

Question 2.
உயிருள்ள செல்லை இறந்த செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுத்து வாய்.
விடை:

  • உயிருள்ள செல்களில் உட்கரு காணப்படும்.
    (எ.கா) வெங்காய சதைப்பற்றுள்ள இலையின் உட்புறசவ்வு
  • உயிரற்ற செல்களில் உட்கரு காணப்படாது. (எ.கா) மரத்தக்கை செல்கள்.

Question 3.
மிகப்பெரிய ஆஞ்சியோஸ்பெர்ம் தாவர செல் யாது?
விடை:
ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரப்பிரிவின் மிகப்பெரிய செல் சிட்ரஸ் ரெட்டிக்குலேட்டா (ஆரஞ்சு தசையில் தெளிவாகத் தெரியும்) சிட்ரஸ் மேக்ஸிமா.

Question 4.
செல்லின் நுண்ணுறுப்புகளில் உறையற்ற நுண்ணுறுப்பு?
விடை:
ரிபோசோம்களில் உறை காணப்படுவதில்லை.

Question 5.
பின்வரும் வரைபடத்தை கண்டறி அதில் A, B, C, D, என்னவென்று குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 96

Question 6.
பின்வரும் வரைபடத்தை கண்டறி அதில் A, B, C என்னவென்று குறிப்பிடுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 97

Question 7.
பின்வரும் வரைபடத்தில் A, B, C, D என்னவென்று காண்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 98

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 5 செல் 99

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 4 காற்று Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 4 காற்று

6th Science Guide காற்று Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
காற்றில் நைட்ரஜனின் சதவீதம்
அ) 78%
ஆ) 21%
இ) 0.03%
ஈ) 1%
விடை:
அ) 78%

Question 2.
தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் ____ ஆகும்.
அ) இலைத்துளை
ஆ) பச்சையம்
இ) இலைகள்
ஈ) மலர்கள்
விடை:
அ) இலைத்துளை

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 3.
காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _____ ஆகும்.
அ) நைட்ரஜன்
ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு
இ) ஆக்சிஜன்
ஈ) நீராவி
விடை:
இ) ஆக்சிஜன்

Question 4.
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் ______
அ) உணவிற்கு நிறம் அளிக்கிறது.
ஆ) உணவிற்கு சுவை அளிக்கிறது.
இ) உணவிற்கு புரதத்தையும், தாது உப்புகளையும் அளிக்கிறது.
ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.
விடை:
ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது

Question 5.
காற்றில் உள்ள ____ மற்றும் _____ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.
i) நைட்ரஜன்
ii) கார்பன்-டை-ஆக்ஸைடு
iii) மந்த வாயுக்கள்
iv) ஆக்சிஜன்
அ) i மற்றும் ii
ஆ) i மற்றும் iii
இ) ii மற்றும் iv
ஈ) i மற்றும் iv
விடை:
ஈ மற்றும் iv

II. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Question 1.
காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி ______ ஆகும்.
விடை:
ஆக்சிஜன் (O2)

Question 2.
ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு _____ ஆகும்.
விடை:
ஆக்சிஜன் (O2)

Question 3.
சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _______
விடை:
ஆக்சிஜன்(O2)

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 4.
இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் _____ காணமுடியும்.
விடை:
தூசுப் பொருட்களைக்

Question 5.
_____ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல ______ மாற்றும்.
விடை:
கார்பன்-டை-ஆக்ஸைடு(CO2)

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளது.
விடை:
தவறு. உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு ஆக்சிஜன் உள்ளது.

Question 2.
புவி வெப்பமயமாதலை மரங்களை நடுவதன் மூலம் குறைக்கலாம்.
விடை:
சரி

Question 3.
காற்றின் இயைபு எப்பொழுதும் சமமான விகிதத்தில் இருக்கும்.
விடை:
தவறு.
காற்றின் இயைபு இடத்திற்கு இடமும், காலநிலையைப் பொருத்தும் மாறுபாடு அடைகிறது.

Question 4.
திமிங்கலம் ஆக்சிஜனை சுவாசிக்க நீரின் மேற்பரப்பிற்கு வரும்.
விடை:
சரி

Question 5.
காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் சுவாசம் மூலமும், விலங்குகளின் ஒளிச்சேர்க்கை மூலமும் சமன் செய்யப்படுகிறது.
விடை:
தவறு
காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலமும், விலங்குகளின் சுவாசம் மூலமும் சமன் செய்யப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 70

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.
  2. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
  3. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
  4. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலதிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.
  5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.
  6. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

விடை:

  1. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
  2. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.
  3. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
  4. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
  5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.
  6. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலத் திலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

VI. ஒப்புமை தருக.

Question 1.
ஒளிச்சேர்க்கை : _____ :: சுவாசம் : ஆக்சிஜன்.
விடை:
கார்பன்-டை-ஆக்ஸைடு

Question 2.
காற்றின் 78% : எரிதலுக்கு துணை புரிவதில்லை :: _____
____ : எரிதலுக்கு துணை புரிகிறது.
விடை:
காற்றின் 21%

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

VII. கொடுக்கப்பட்டுள்ள படத்தை கூர்ந்து கவனித்து, கேள்விக்கு பதிலளிக்கவும்.

Question 1.
மீன்காட்சியகத்தில் தொட்டியில் உள்ள தாவரங்களை நீக்கினால் என்னவாகும்?
விடை:

  • மீன்களிடமிருந்து வெளியேறும் கழிவுகளை தாவரங்கள் உறிஞ்சி அகற்றும். தாவரங்கள் இல்லையென்றால் கழிவுகளினால் தொட்டியில் உள்ள நீரின் நிறம் மாறுபட்டு துர்நாற்றம் ஏற்படும்.
  • தாவரங்கள் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதுடன், CO2 மற்றும் NH3ன் அளவை குறைக்கின்றன.
  • மீன்களுக்கு மறைவிடமாகவும் இருப்பதால் மீன்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணரக்கூடும்.
  • நீர்ப்பாசிகளின் அளவு அதிகமாகும்.

Question 2.
மீன் காட்சியகத்தில் உள்ள மீன்களை நாம் நீக்கிய பின் தாவரங்களுடன் அதனை ஓர் இருண்ட அறையினுள் வைத்தால் என்னவாகும்?
விடை:

  • பொதுவாக தாவரங்கள் (நீர் வாழ் மற்றும் நிலம் வாழ்) தங்களது உணவை ‘ஒளிச்சேர்க்கை ‘ மூலம் தயாரித்துக் கொள்கின்றன.
  • நீர் வாழ் தாவரங்கள், நீரில் கரைந்துள்ள (CO2) மற்றும் கிடைக்கும் சிறிதளவு சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றன.
  • மீன்களை (CO2 வெளியிடுபவை) நீக்கிய பின், தாவரங்களுடன் இருண்ட அறையில் தொட்டியை வைக்கும் போது, அவைகளால் ‘ஒளிச்சேர்க்கை ‘ செய்ய இயலாது.
  • எனவே சில நாட்களில் அத்தாவரங்கள் மடிந்து போகின்றன.
    Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 80

VIII. மிகக் குறுகிய விடையளி

Question 1.
வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் உள்ள ஐந்து அடுக்குகளின் பெயர்களை தருக.
விடை:
நமது பூமியானது காற்றாலான ஒரு மிகப்பெரிய மேலுறையால் மூடப்பட்டுள்ளது. இது வளிமண்டலம் எனப்படும்.
வளிமண்டலத்தின் 5 அடுக்குகள்.

  1. அடி வளி மண்ட லம் (Troposphere)
  2. அடுக்கு வளி மண்ட லம் (Stratosphere)
  3. இடைவளி மண்ட லம் (Mesosphere)
  4. அயனி மண்ட லம் (Ionosphere)
  5. புறவளி மண்ட லம் (Exosphere)

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 2.
நிலத் தாவரங்களின் வேர்கள், சுவாசத்திற்கான ஆக்சிஜனை எவ்வாறு பெறுகின்றன?
விடை:

  • மண்ணிலுள்ள காற்று இடைவெளிகளில் ஆக்ஸிஜன் உள்ளது.
  • இந்த ஆக்ஸிஜன் வேர்நுனி மூடிகளின் வழியாகப் பரவல் முறையில் தாவரத்தின் பிறபாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

Question 3.
ஒருவரின் ஆடையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
விடை:

  • கம்பளி (அல்லது) ஈரச்சாக்கு கொண்டு தீயினை முழுவதும் மூட வேண்டும்.
  • பின்பு தரையில் உருட்ட வேண்டும்.
  • ஏனெனில் பொருட்கள் எரிவதற்கு ஆக்சிஜன் (O2) தேவை. இவ்வாறு செய்யும் போது எரிவதற்கு வேண்டிய O2 இல்லாது போக தீ அணைந்து விடுகின்றது. தகுந்த தீயணைப்பானைப் பயன்படுத்துவதும் மிகச்சிறந்தது.

Question 4.
நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால் என்ன நிகழும் ?
விடை:
பல சுகாதார நிலைமைகள் மற்றும் ஆபத்து காரணிகள் வாய் வழி சுவாசித்தலினால் ஏற்படக்கூடும்.

  • குறட்டை
  • உலர்ந்தவாய்
  • நாள்பட்ட சோர்வு
  • பல் ஆரோக்கியக் குறைவு.

IX. குறுகிய விடையளி

Question 1.
மழைக் காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும் பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?
விடை:
மழைக்காலங்களில் காற்றில் அதிகமான ஈரப்பதம் காணப்படும். இதனால் பிஸ்கட் தனது மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது.

Question 2.
பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?
விடை:

  • வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையில் மாசுக்கள் கலந்துள்ளன. இந்த மாசு நிறைந்த காற்றினை பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் சுவாசிக்க நேர்ந்தால் சுவாசம் மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.
  • இவற்றை தடுப்பதற்காக போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிகின்றனர்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

X. விரிவான விடையளி:

Question 1.
தாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை- ஆக்ஸைடு இவற்றின் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?
விடை:

  • தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடும் ஆக்ஸிஜனை விலங்கினங்கள் தங்கள் சுவாசத்திற்குப் பயன்படுத்துகின்றன.
  • தாவரங்கள் சுவாசித்தலின் போது எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜனை விட அதிகளவு ஆக்ஸிஜனை ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடுகின்றன.
  • இந்த ஆக்ஸிஜனை, விலங்கினங்கள் தங்கள் சுவாசத்திற்கு எடுத்துக்கொண்டு CO2யை வெளியேற்றுகின்றன.
  • இவ்வாறு வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் (O2) மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு (CO2) சமநிலை, தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சுவாசம் மூலமும், தாவரங்களின் ஒளிச் சேர்க்கை மூலமும் பாதுகாக்கப்படுகிறது.

Question 2.
பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?
விடை:

  • உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழக் காரணமாக இருக்கும் மிக முக்கியமான தனிமமான ஆக்ஸிஜன் வளிமண்டலத்தில் (காற்றில்) உள்ளது.
  • சூரியனிடமிருந்து வரும் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்வீச்சுகள் புவியின் மேற்பரப்பிற்கு வருவதை வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலம் தடுக்கின்றது.
  • புவியில் தகுந்த வெப்பநிலை இருக்கக் காரணம் வளிமண்டலமே, இதன் காரணமாகவே புவியில் உயிரினங்கள் வாழ முடிகிறது.
  • வளிமண்டலத்தில் உள்ள நீராவி, நம் சுற்றுப் புறத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

XI. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி:

Question 1.
தீயணைப்பானிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளி யிடப்படுகிறது என உங்களால் யூகிக்க முடிகிறதா?
விடை:

  • CO2 வாயு எரிதலுக்குத் துணைபுரிவதில்லை.
  • எரியும் பொருள்களின் மீது இது தெளிக்கப்படும் போது. ஆக்ஸிஜன் துணைபுரிவது தடுக்கப்படுகிறது. எனவே தீ கட்டுக்குள் வருகிறது.

6th Science Guide காற்று Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
மேகங்கள் உருவாகக் காரணமான நீராவியைக் கொண்டுள்ள அடுக்கு எது?
அ) அடுக்கு வளிமண்டலம்
ஆ) இடைவளி மண்டலம்
இ) அடிவளிமண்ட லம்
ஈ) புறவளி மண்ட லம்
விடை:
இ) அடிவளிமண்டலம் பருவம்

Question 2.
பசுமைத்தாவரங்கள் உணவுத் தயாரிக்கப் பயன்படும் காற்றின் பகுதிப்பொருள்
அ) N2
ஆ) O2
இ) H2
ஈ) CO2
விடை:
ஈ) CO2

Question 3.
ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வின் பெயரென்ன?
அ) உள்ளெரிதல்
ஆ) எரிதல்
இ) கருகுதல்
ஈ) உருகுதல்
விடை:
அ) உள்ளெரிதல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 4.
சுவாசித்தலின் போது நாம் வெளியேற்றும் காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் சதவீதம்
அ) 78%
ஆ) 16%
இ) 4%
ஈ) 21%
விடை:
ஆ) 16%

Question 5.
இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்துதலில் பயன்படுத்தப்படுவது
அ) திரவ அம்மோனியா
ஆ) திரவ நைட்ரஜன்
இ) திண்ம CO2
ஈ) ஹீலியம்
விடை:
இ) திண்ம CO2

II. சரியா ? தவறா ? எனக்கூறுக. தவறு எனில் சரியாக எழுதவும்

Question 1.
புரத உற்பத்திக்கும், உரங்கள் தயாரிக்கவும் ஆக்ஸிஜன் பயன்படுகிறது.
விடை:
தவறு – புரத உற்பத்திக்கும், உரங்கள் தயாரிக்கவும் நைட்ரஜன் பயன்படுகிறது.

Question 2.
கால்சியம் ஹைட்ராக்ஸைடு கரைசலினுள் CO2யை செலுத்தினால் பால் போல் மாறுகிறது.
விடை:
சரி

Question 3.
கடலோர பகுதிகளிலுள்ள காற்றில் அதிகளவு ஆக்ஸிஜன் காணப்படும்.
விடை:
தவறு – கடலோர பகுதிகளிலுள்ள காற்றில் அதிகளவு நீராவி காணப்படும்.

Question 4.
சூரியனிடமிருந்து ஒளி ஆற்றலைப் பெறுவதே குளோரோஃபில்லின் பணி ஆகும்.
விடை:
சரி

Question 5.
கார்பன் டை ஆக்ஸைடு வாயு – 57°C ல் திரவநிலைக்கு மாறுகிறது.
விடை:
தவறு – கார்பன் டை ஆக்ஸைடு வாயு – 57°C திண்மநிலைக்கு மாறுகிறது.

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 77

IV. மிகக்குறுகிய விடையளி

Question 1.
ஒசோன் படலம் எங்குள்ளது?
விடை:
அடிவளி மண்டலத்திற்கு மேலே உள்ள அடுக்கு வளி மண்டலத்தில் ஓசோன் படலம் உள்ளது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று

Question 2.
“காற்று ஒரு அடிப்படைப் பொருளல்ல, அது ஒரு கலவை”? ஏன்?
விடை:
காற்று என்பது N2, O2, CO2 மற்றும் பல வாயுக்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு கலவை ஆகும்.

Question 3.
காற்றின் சதவீத இயைபை அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 85

Question 4.
எரிதல் என்றால் என்ன?
விடை:
ஆக்ஸிஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது ஒளியையும், வெப்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வு எரிதல் எனப்படும்.

Question 5.
உள்ளெரிதலை வரையறு. ஒரு உதாரணம் கொடு?
விடை:
ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் எரிதல் நிகழ்வு உள்ளெரிதல் எனப்படும். (எ.கா.) இராக்கெட் உந்திகள் (எரிபொருள், ஆக்ஸிஜன் கலவை)

V. விரிவான விடையளி

Question 1.
நைட்ரஜன் கண்டுபிடிப்பை விவரி.
விடை:

  • டேனியல் ரூதர்ஃபோர்டு நைட்ரஜனைக் கண்டறிந்தார்.
  • முதலில் எரியும் மெழுகுவர்த்தி கொண்ட மணிஜாடியைப் பயன்படுத்தி O2 யை CO2 ஆக மாற்றினார்.
  • பின்பு அக்காற்றினை, சுண்ணாம்பு நீரில் செலுத்தி CO2யை நீக்கினார்.
  • இப்போது, இக்காற்று எரிதலுக்குத் துணைபுரியவில்லை, தாவரம் சுவாசிக்கவும் பயன்படவில்லை.
  • ‘ஏனெனில், காற்றில் O2 மற்றும் CO2 வாயுக்கள் இல்லை.
  • இவ்வாயுவின் பண்புகள் அறிந்து, நைட்ரஜன்’ எனப்பெயரிட்டார்.

Question 2.
தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கை நிகழ்வினை விரிவாக விளக்குக.
விடை:

  • தாவரங்கள் தனது உணவினை ‘ஒளிச்சேர்க்கை’ மூலம் உற்பத்தி செய்கின்றன.
  • காற்றிலுள்ள CO2ம் மண்ணிலுள்ள நீரும் சூரிய ஒளி துணையுடன் வினைபுரிந்து உணவு உற்பத்தி செய்கின்றன.
    Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 95
  • இவ்வினையில், குளோரோபில் என்ற பச்சை நிற நிறமி சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுகிறது.
  • சுவாசித்தலின் போது எடுத்துக் கொண்ட ஆக்ஸிஜனை விட அதிகளவு ஆக்ஸிஜனை, ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் வெளியிடுகின்றன.

Question 3.
காற்றின் பயன்களைக் குறிப்பிடுக.
விடை:

  1. தாவர மற்றும் விலங்குகளின் சுவாசத்திற்குப் பயன்படுகிறது.
  2. மரக்கட்டை, நிலக்கரி, மண்ணெண்ணெய், LPG போன்றவற்றை எரிக்க உதவுகிறது.
  3. அழுத்தப்பட்ட காற்று, வாகன டயர்களில் நிரப்பப்படுகிறது.
  4. இயற்கையின் நீர்சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  5. சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை ஓசோன் படலம் தடுக்கிறது.
  6. மருத்துவமனை நோயாளிகளுக்கும், மலைச்சிகரம் ஏறுபவர்களுக்கும், ஆழ்கடல் நீந்துபவர்களுக்கும் சுவாசிக்க O2வாயு பயன்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 4 காற்று 98

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

6th Science Guide நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம்
அ) இட மாற்றம்
ஆ) நிற மாற்றம்
இ) நிலை மாற்றம்
ஈ) இயைபு மாற்றம்
விடை:
இ) நிலை மாற்றம்

Question 2.
ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ———— ஆகும்.
அ) வேதியியல் மாற்றம்
ஆ) விரும்பத்தகாத மாற்றம்
இ) மீளா மாற்றம்
ஈ) இயற்பியல் மாற்றம்
விடை:
ஈ) இயற்பியல் மாற்றம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 3.
பால் தயிராக மாறுவது ஒரு _____ ஆகும்.
அ) மீள் மாற்றம்
ஆ) வேகமான மாற்றம்
இ) மீளா மாற்றம்
ஈ) விரும்பத்தகாத மாற்றம்
விடை:
இ) மீளா மாற்றம்

Question 4.
கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?
அ) துருப்பிடித்தல்
ஆ) பருவநிலை மாற்றம்
இ) நில அதிர்வு
ஈ) வெள்ளப்பெருக்கு
விடை:
ஆ) பருவநிலை மாற்றம்

Question 5.
காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு ஆகும்.
அ) மீள் மாற்றம்
ஆ) வேகமான மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
விடை:
ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம். (மீள் / மீளா)
விடை:
மீள்

Question 2.
முட்டையை வேகவைக்கும் போது _____ மாற்றம் நிகழ்கிறது. (மீள் / மீளா)
விடை:
மீளா

Question 3.
நமக்கு ஆபத்தை விளைவிப்பவை ______ மாற்றங்கள். (விரும்பத்தக்க / விரும்பத்தகாத)
விடை:
விரும்பத்தகாத

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 4.
தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது _____ (இயற்கையான / மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்) ஆகும்.
விடை:
இயற்கையான

Question 5.
பட்டாசு வெடித்தல் என்பது ஒரு ____ மாற்றம்; விதை முளைத்தல் ஒரு ____ மாற்றம். (மெதுவான / வேகமான)
விடை:
வேகமான,
மெதுவான

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
குழந்தைகளுக்குப் பற்கள் முளைப்பது மெதுவான மாற்றம்.
விடை:
சரி

Question 2.
தீக்குச்சி எரிவது மீளா மாற்றம்.
தீக்குச்சி எரிவது ஒரு மீள் மாற்றம்.
விடை:
தவறு

Question 3.
அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு மனிதனால் தவறு. ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.
சரியான விடை : அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு இயற்கையான மாற்றம்.
விடை:
தவறு

Question 4.
உணவு செரித்தல் என்பது ஓர் இயற்பியல் மாற்றம்.
சரியான விடை : உணவு செரித்தல் என்பது ஓர் வேதியியல் மாற்றம்.
விடை:
தவறு.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 5.
உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ஒரு. கரைபொருள் ஆகும்.
சரியான
சரியான விடை : உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ‘ஒரு கரைப்பான் ஆகும்.
விடை :
தவறு

IV. ஒப்புமை தருக.

Question 1.
பால் தயிராதல்: மீளா மாற்றம் :: மேகம் உருவாதல் :- _____ மாற்றம்.
விடை:
மீள்

Question 2.
ஒளிச்சேர்க்கை : _____ மாற்றம் :: நிலக்கரி எரிதல் : மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.
விடை:
இயற்கையான

Question 3.
குளுக்கோஸ் கரைதல் : மீள் மாற்றம் :: உணவு செரித்தல் : ____ மாற்றம்
விடை:
மீளா

Question 4.
உணவு சமைத்தல் : விரும்பத்தக்க மாற்றம் :: உணவு கெட்டுப்போதல் : _____ மாற்றம்.
விடை:
விரும்பத்தகாத

Question 5.
தீக்குச்சி எரிதல்: ____ மாற்றம் :: பூமி சுற்றுதல் : மெதுவான மாற்றம்.
விடை:
வேகமான

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

V. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தைக் கூறுக.

Question 1.
குழந்தை வளருதல், கண் சிமிட்டுதல், துருப்பிடித்தல், விதை முளைத்தல்.
விடை:
கண் சிமிட்டுதல் (வேகமான மாற்றம்)

Question 2.
மின் விளக்கு ஒளிர்தல், மெழுகுவர்த்தி எரிதல், காபி குவளை உடைதல், பால் தயிராதல்.
விடை:
பால் தயிராதல் (வேதியியல் மாற்றம்)

Question 3.
முட்டை அழுகுதல், நீராவி குளிர்தல், முடிவெட்டுதல், காய் கனியாதல்.
விடை:
முடி வெட்டுதல் (மனிதனால் ஏற்படுத்தக்கூடிய மாற்றம்)

Question 4.
பலூன் ஊதுதல், பலூன் வெடித்தல், சுவற்றின் வண்ணம் மங்குதல், மண்ணெண்ணெய் எரிதல்.
விடை:
மண்ணெண்ணெய் எரிதல் (வேதியியல் மாற்றம்)

VI. மிகக் குறுகிய விடையளி :

Question 1.
தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்?
விடை:
மெதுவான, வேதியியல் மாற்றம்

Question 2.
உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.
விடை:
ஆம், இயற்பியல் மீள் மாற்றம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 3.
மெதுவான மாற்றத்தை வரையறு.
விடை:
சில மாற்றங்கள் நிகழ அதிக நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. (மணிகள் /நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள்) இவை மெதுவான மாற்றங்கள் எனப்படும்.
(எ.கா.) நகம் / முடி வளர்தல், பருவநிலை மாற்றம், விதை முளைத்தல்.

Question 4.
கரும்புச் சர்க்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது என்ன நிகழும்? இதில் நடைபெறும் ஏதேனும் இரண்டு மாற்றங்களைக் குறிப்பிடுக.
விடை:

  • சர்க்கரை என்பது சுக்ரோஸ் ஆகும்.
  • சுக்ரோஸின் மூலக்கூறு வாய்ப்பாடு C12H22O11 (அ) C12 (H2O)11
  • கரும்புச்சர்க்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது நீர் மூலக்கூறுகளை இழந்து கார்பனாக சிதைவடைகிறது.
  • இச்செயல்முறையின் மாற்றங்கள்
    1. வேதியியல் மாற்றம்
    2. மீளா மாற்றம்

Question 5.
கரைசல் என்றால் என்ன?
விடை:
கரைபொருள் கரைப்பானில் கரையும் போது கரைசல் உண்டாகிறது. கரைபொருள் + கரைப்பான் → கரைசல்

VII. குறுகிய விடையளி:

Question 1.
காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? விவரிக்கவும்.
விடை:

  • காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றம் வேகமான மாற்றம் ஆகும்.
  • ஏனெனில் இம்மாற்றம் நிகழ குறைந்த அளவு நேரத்தையே எடுத்துக் கொள்கின்றன.

Question 2.
காடுகளை அழித்தல் என்பது விரும்பத்தக்க மாற்றமா? உங்கள் பதிலுக்கான காரணத்தை விவரிக்கவும்.
விடை:
இல்லை, காடுகளை அழித்தல் விரும்பத்தகாத மாற்றம் ஆகும். ஏனெனில், சுற்றுச்சுழலுக்குப் பயன்தராத அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய, நம்மால் விரும்பப்படாத மாற்றங்கள் ஆகும்.

Question 3.
விதையிலிருந்து செடி முளைத்தல் என்ன வகையான மாற்றம்? விவரிக்கவும்.
விடை:
விதையிலிருந்து செடி முளைத்தல் ஒரு மெதுவான மாற்றம் ஆகும். இம்மாற்றம் நிகழ் அதிக நேரத்தை (மணிகள் / நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள்) எடுத்துக் கொள்கின்றன.

VIII. விரிவான விடையளி:

Question 1.
உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக.
அ) மெதுவான / வேகமான மாற்றம்
ஆ) மீள் / மீளா மாற்றம்
இ) இயற்பியல் / வேதியல் மாற்றம்
ஈ) இயற்கையான / செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
உ) விரும்பத்தக்க / விரும்பத்தகாத மாற்றம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 60

IX. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்காணும் மாற்றங்களை காண முடியும்.
அ) மெழுகு உருகுதல்.
ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்.
இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்.
ஈ) உருகிய மெழுகு திண்மமாக மாறுதல்.
உ) மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்?
உமது பதிலை நியாயப்படுத்துக.

  • மெழுகுவர்த்தி எரியும் போது உருவாகும் வெப்பத்தினால் திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மெழுகு உருகுகிறது. இது ஒரு மீள் (அ) இயற்பியல் மாற்றம் ஆகும்.
  • மேலும் மெழுகு உருகும் போது மெழுகு அளவும் குறைகிறது. உருகிய மெழுகுவை குளிர்விக்கும் போது அதனைத் திண்மமாக மாற்றலாம்.

6th Science Guide நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
நீரைக் குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் ______
அ) உருகுதல்
ஆ) ஆவியாதல்
இ) ஆவி சுருங்குதல்
ஈ) உறைதல்
விடை:
ஈ) உறைதல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 2.
சமைக்கும் போது காய்கறிகள் மென்மையாக மாறுதல் ஒரு.
அ) வேகமான மாற்றம்
ஆ) வேதியியல் மாற்றம்
இ) செயற்கையான மாற்றம்
ஈ) மீள் மாற்றம்
விடை:
இ) செயற்கையான மாற்றம்

Question 3.
ஏரிகள் மற்றும் ஆறுகளிலிருந்து நீர் ஆவியாதல் வினை ஒரு
அ) மெதுவான மாற்றம்
ஆ) வேகமான மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) அ மற்றும் ஆ இரண்டும்
விடை:
ஈ) அ மற்றும் ஆ இரண்டும்

Question 4.
அயோடின் பதங்கமாதல் ஒரு
அ) வேதியியல் மாற்றம்
ஆ) இயற்பியல் மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) விரும்பத்தகாத மாற்றம்
விடை:
ஆ) இயற்பியல் மாற்றம்

Question 5.
வெள்ளி கொலுசு கருமையடைதல் ஒரு
அ) மீளா மாற்றம்
ஆ) தற்காலிக மாற்றம்
இ) குறைந்த நேர மாற்றம்
ஈ) தொடர்ச்சியான மாற்றம்
விடை:
அ) மீளா மாற்றம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
புதிய பொருட்களை உருவாக்கும் மாற்றம் ______
விடை:
வேதியியல் மாற்றம்

Question 2.
நிலக்கரி உருவாதல் _____ வகை மாற்றம்.
விடை:
மெதுவான மாற்றம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

Question 3.
இயற்கையாக நிகழும், விரும்பத்தகாத மாற்றத்திற்கு ஓர் உதாரணம் ________
விடை:
நில அதிர்வு

Question 4.
_____ ஒரு பொதுக்கரைப்பான்.
விடை:
நீர்

Question 5.
சுற்றுச்சூழல் நண்பனான மாற்றம் ______
விடை:
விரும்பத்தக்க மாற்றம்

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 70

IV. ஒப்புமை தருக.

Question 1.
இரும்பு துருப்பிடித்தல் : விரும்பத்தகாத மாற்றம் :: இறந்த விரும்பத்தக்க மாற்றம் தாவரங்கள் உரமாதல் : ———-

Question 2.
தொட்டால் சிணுங்கி தாவரம் : ____ :: உணவு ஜீரணித்தல் : மீளா மாற்றம்
விடை:
மீள் மாற்றம்

Question 3.
பருவநிலை மாற்றம் : மெதுவான மாற்றம் :: கண்ணாடி உடைதல் : ______
விடை:
வேகமான மாற்றம்

Question 4.
நில அதிர்வு : விரும்பத்தகாத மாற்றம் :: இதயத்துடிப்பு : _____
விடை:
விரும்பத்தக்க மாற்றம்

Question 5.
வெள்ளி ஆபரணங்கள் கருமை அடைதல் : ____ நீர் கொதித்தல் : இயற்பியல் மாற்றம்
விடை:
வேதியியல் மாற்றம்

V. மிகக்குறுகிய விடையளி

Question 1.
வேகமான மாற்றத்திற்கு மூன்று உதாரணங்கள் தருக.
விடை:

  1. பலூன் வெடித்தல்
  2. கண்ணாடி உடைதல்
  3. காகிதம் எரிதல்

Question 2.
மீள் மாற்றம் என்றால் என்ன ?
விடை:
மாற்றமடைந்த பொருள்கள் மீண்டும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தால் அவை மீள்மாற்றம் எனப்படுகின்றன.

Question 3.
இயற்பியல் மாற்றத்திற்கு சில உதாரணங்கள் தருக.
விடை:

  1. பனிக்கட்டி உருகுதல்
  2. உப்பு (அல்லது) சர்க்கரை நீரில் கரைதல்
  3. இரப்பர் வளையம் நீளுதல்

Question 4.
நீர் ஒரு பொதுக்கரைப்பான் ஏன்?
விடை:
நீர் பெரும்பாலான பொருட்களைக் கரைக்கப் பயன்படுவதால் ‘பொது கரைப்பான்’ என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

VI. விரிவான விடையளி

Question 1.
இயற்பியல் மாற்றம் மற்றும் வேதியியல் மாற்றத்தை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 80

Question 2.
இயற்கையான மற்றும் செயற்கையான மாற்றங்களைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
விடை:
இயற்கையான மாற்றம் :

  • இயற்கையில் தானாகவே நிகழும் மாற்றம்
  • மனித கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்றம்
  • எ.கா. புவி சுழற்சி, மழைபெய்தல், நிலவின் பல்வேறு நிலைகள்
    செயற்கையான மாற்றம் மனிதனால் ஏற்படக்கூடிய மாற்றம்) :
  • இயற்கையில் தன்னிச்சையாக நிகழாத மாற்றம்
  • மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்திய மாற்றங்கள்
    எ.கா. சமைத்தல், காடுகளை அழித்தல், பயிரிடுதல், கட்டிடம் கட்டுதல்

Question 3.
நமது உடலில் நிகழும் பல்வேறு மாற்றங்களையும் அவற்றின் வகைகளையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 85

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் 86

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

6th Science Guide உடல் நலமும் சுகாதாரமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ……… தேவைப்படுகிறது.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) கொழுப்பு
இ) புரதம்
ஈ) நீர்
விடை:
இ) புரதம்

Question 2.
ஸ்கர்வி …….. குறைபாட்டினால் உண்டாகிறது
அ) வைட்டமின் A
ஆ) வைட்டமின் B
இ வைட்டமின்
ஈ) வைட்டமின் D
விடை:
இ) வைட்டமின் C

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

Question 3.
கால்சியம் _____ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) கொழுப்பு
இ) புரதம்
ஈ) தாது உப்புகள்
விடை:
ஈ) தாது உப்புகள்

Question 4.
நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், ஏனெனில்
அ) அவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
ஆ) அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.
இ அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.
ஈ) அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.
விடை:
இ) அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

Question 5.
பாக்டீரியா, ஒரு சிறிய ———– நுண்ணுயிரி
அ) புரோகேரியோட்டிக்
ஆ) யூகேரியோட்டிக்
இ) புரோட்டோசோவா
ஈ) செல்லற்ற
விடை:
அ) புரோகேரியோட்டிக்

II. சரியா? தவறா?

Question 1.
நம் உணவில் மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
விடை:
தவறு

Question 2.
நம் உடலில் ஆற்றலை சேமித்து வைக்க கொழுப்பு உதவுகிறது.
விடை:
சரி

Question 3.
அனைத்து பாக்டீரியாக்களும் நீளிழைகளை பெற்றுள்ளன.
விடை:
தவறு

Question 4.
ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து உதவுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

Question 5.
ஓம்புயிரியின் உடலுக்கு வெளியேயும் வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும்
விடை:
தவறு

III. கோழட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
ஊட்டச்சத்து குறைபாடு….. நோய்களுக்கு வழிவகுக்கிறது.
விடை:
குறைபாட்டு

Question 2.
பெரியவர்களில், அயோடின் சத்துக்குறைபாடு……. நோயை ஏற்படுத்துகிறது.
விடை:
காய்ட்டர்

Question 3.
வைட்டமின் D குறைபாடு …… நோயை ஏற்படுத்துகிறது.
விடை:
ரிக்கெட்ஸ்

Question 4.
டைபாய்டு நோய், ……. மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.
விடை:
உணவு

Question 5.
குளிர்காய்ச்சல் (இன்புளுயன்சா)……….. நுண்ணுயிரியால் ஏற்படுகிறது
விடை:
வைரஸ்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

IV. பின்வரும் ஒப்புமைகளை பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 80

V. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 81

VI. நிரப்புக

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 82
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 82.1

VII. சிறுவினாக்கள்

Question 1.
கீழ்க் கண்டவற்றிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக
விடை:
அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருள்கள் – நெய், பால்
அ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள் : வைட்டமின் C – ஸ்கர்வி, வைட்டமின் D-ரிக்கெட்ஸ்

Question 2.
கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தினை வேறுபடுத்தி எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 83

Question 3.
சரிவிகித உணவு வரையறு
விடை:
அனைத்துச் சத்துக்களும் போதுமான அளவில் உணவில் இருந்தால் அதற்கு சரிவிகித உணவு என்று பெயர்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

Question 4.
பழங்களையும் காய்கறிகளையும் வெட்டிய பின் நீரில் கழுவக்கூடாது ஏன்?
விடை:
வைட்டமின்கள் இரு வகைப்படும்

  1. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் – ADEK
  2. நீரில் கரையும் வைட்டமின்கள் – B, C

நீரில் கரையும் வைட்டமின்கள் B, மற்றும் C காய்கறிகளையும் வெட்டிய பின் நீரில் கழுவும் போது கரைந்து விடும்.

Question 5.
வைரஸால் ஏற்படும் நோய்கள் இரண்டினை எழுதுக.
விடை:
1 – எய்ட்ஸ்
2 – ஹிபாட்டிட்டிஸ்

Question 6.
நுண்ணுயிரிகளின் முக்கிய பண்பு என்ன?
விடை:

  • நுண்ணுயிரிகளை நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கலாம்
  • பாக்டீரியாக்கள் – புரோகேரியாட்டிக் நுண்ணுயிரிகள்
  • பாக்டீரியாக்கள் – ஒட்டுண்ணியாகவோ அல்லது தனியாக வாழும்.
  • வைரஸ்கள் செல்லற்ற உயிரியாகும்.
  • இவை உயிருள்ள செல்களில் மட்டுமே வாழும்

VIII. விரிவான விடையளி

Question 1.
வைட்டமின்களையும் அவற்றின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 86

6th Science Guide உடல் நலமும் சுகாதாரமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சூரிய ஒளி வைட்டமின் என்பது
அ) A
ஆ) D
இ) C
ஈ) K
விடை:
ஆ) D

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

Question 2.
நெல்லிக்கனியில் அதிக அளவு காணப்படும் வைட்டமின்
அ) C
ஆ) E
இ) MI
ஈ) D
விடை:
அ) C

Question 3.
தாது உப்புகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) ஆற்றல் தரும் உணவு
ஆ) சரிவிகித உணவு
இ) உடல் வளர்ச்சிக்கான உணவு
ஈ) பாதுகாப்பு உணவு
விடை:
ஈ) பாதுகாப்பு உணவு

Question 4.
முருங்கை இலையில் உள்ள வைட்டமின்கள்
அ) A மற்றும் B
ஆ) C மற்றும் D
இ) K மற்றும் A
ஈ) A மற்றும் C
விடை:
ஈ) A மற்றும் C

Question 5.
ஒரு நாளைக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நீரின் அளவு
அ) 2 லிட்டர்
ஆ) 3 லிட்டர்
இ) 1.5 லிட்டர்
ஈ) 1 லிட்டர்
விடை:
அ) 2 லிட்டர்

II. குறுகிய விடையளி

Question 1.
ஹோமியோஸ்டஸிஸ் வரையறு
விடை:
சுற்றுப்புறத்தில் ஏற்படும் அழுத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்ற வகையில் உடலின் சமநிலையைப் பேணும் நிலையாகும்.

Question 2.
ஆறுவகையான பெரிய ஊட்டச்சத்துக்களை கூறுக.
விடை:

  1. கார்போஹைட்ரேட்
  2. கொழுப்புகள்
  3. புரதங்கள்
  4. தாது உப்புகள்
  5. வைட்டமின்கள்
  6. நீர்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும்

Question 3.
ஊட்டச்சத்து குறைபாடு என்றால் என்ன?
விடை:
ஊட்டச்சத்து குறைபாடு என்பது நாம் உண்ணும் உணவில், நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருத்தல்

Question 4.
குவாஷியோர் மராஸ்மஸ் வேறுபடுத்துக. குவாஷியோர்
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 86.2

Question 5.
கோழட்ட இடத்தை நிரப்புக
A – கால்சியம் , ரிக்கெட்ஸ், பாஸ்பரஸ் ………….
விடை:
A ஆஸ்டியோமலேசியா

B – அயோடின், கிரிட்டினிசம், இரும்பு ……….
விடை:
B இரத்த சோகை

III. விரிவான விடையளி.

Question 1.
அட்டவணையில் விடுபட்டுள்ள ABCDE மற்றும் F இடங்களை நிரப்புக.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 99
விடை:
A – ஆற்றல் தருதல் B, வெண்ணெய், நெய், பால், மாமிசம்
C – முட்டை, மீன், பால், சோயாபீன்ஸ்.
D – உடல் வளர்ச்சி, செல் பழுது பார்த்தல்.
E- உடலில் பல்வேறு உயிர்வேதி வினைகள் நடைபெற உதவுதல்.
F – கீரை வகைகள், பருப்பு வகைகள், முட்டை பழங்கள்

Question 2.
உடற் பயிற்சியினால் நடைபெறும் நன்மைகளைக் கூறு,
விடை:

  1. வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை அதிகப்படுத்துதல்.
  2. வயது முதிர்ச்சியைத் தவிர்த்தல்.
  3. தசைகள் மற்றும் இதய இரத்த ஓட்ட மண்டலத்தை வலுப்படுத்துதல்.
  4. தடகள விளையாட்டு திறனை மேம்படுத்துதல் எடையைக் குறைத்தல்.
  5. உடற்பயிற்சியானது குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் உடல் பருமன் விளைவுகளை குறைக்கும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 6 உடல் நலமும் சுகாதாரமும் 99.1

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

6th Science Guide கணினி ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
அ) மார்ட்டீன் லூதர் கிங்
ஆ) கிரகாம்பெல்
இ) சார்லி சாப்ளின்
ஈ) சார்லஸ் பாப்பேஜ்
விடை:
இ) சார்லஸ் பாப்பேஜ்

Question 2.
கீழ்க்கண்டவற்றில் கணினியின் மறுவடிவம் எது?
அ) கரும்பலகை
ஆ) கைப்பேசி
இ) வானொலி
விடை:
ஆ) கைப்பேசி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

Question 3.
முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
அ) 1980
ஆ) 1947
இ) 1946
ஈ) 1985
விடை:
இ) 1946

Question 4.
கணினியின் முதல் நிரலர் யார்?
அ) லேடி வில்லிங்டன்
ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்
இ) மேரி க்யூரி
ஈ) மேரிக்கோம்
விடை:
ஆ) அகஸ்டா அடாலவ்லேஸ்

Question 5.
பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.
அ) கணிப்பான்ஆ
ஆ) அபாகஸ்
இ) மின்அட்டை
ஈ) மடிக்கணினி
விடை:
இ) மின் அட்டை

II. கோழட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
தரவு என்பது……. விவரங்கள் ஆகும்.
விடை:
முறைப்படுத்த வேண்டிய

Question 2.
உலகின் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி ………..
விடை:
மின்னணு எண்
ஒருங்கிணைப்பு மற்றும் கணினி

Question 3.
தகவல் என்பது ……. விவரங்கள் ஆகும்.
விடை:
தேவைக்கேற்ப
முறைப்படுத்தப்பட்ட

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

Question 4.
ஐந்தாம் தலைமுறை ………… நுண்ணறிவு கொண்டது.
விடை:
செயற்கை

Question 5.
குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி ……..
விடை:
அனலாக் கம்ப்யூட்டர்

III. கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா? தவறா? எனக் கூறுக :

Question 1.
கணினி ஒரு மின்னணு இயந்திரம்.
விடை:
சரி

Question 2.
கணினியைக் கண்டறிந்தவர் சர் ஐசக் நியூட்டன்.
விடை:
தவறு

Question 3.
கணினி, கணக்கீடுகளை மிக விரைவாகச் செய்யும்.
விடை:
சரி

IV. பொருத்துக .

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம் 90

V. ஒரிரு வரிகளில் பதிலளி

Question 1.
கணினி என்றால் என்ன?
விடை:
கணினி என்பது தரவு மற்றும் தகவல்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க உருவாக்கப்பட்ட ஒரு மின்ன ணு இயந்திரம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம்

Question 2.
கணினியின் முன்னோடிகள் யாவை?
விடை:

  1. சார்லஸ் பாப்பேஜ் :
    சார்லஸ் பாப்பேஜ் கணிதப் பேராசிரியர். அவர்கள் பகுப்பாய்வுப் பொறியை வடிவமைத்தார். இவர் தான் கணினியின் தந்தை’ எனவும் அழைக்கப்படுகிறார்.
  2. அகஸ்டா அடா லவ்லேஸ் :
    இவர் கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் உலகின் முதல் கணினி நிரலர்’ எனப் போற்றப்படுகிறார்.

Question 3.
தரவு பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை:

  1. தரவு என்பது முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள் ஆகும்.
  2. இவை நேரடியாக நமக்கு பயன் தராது பொதுவாக எண், எழுத்து, படக்குறியீடுகளாக இருக்கும்.

Question 4.
ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறு.
விடை:
விசைப்பலகை, சுட்டி, பட்டைக் குறி படிப்பான், எண்ணியல் படக்கருவி போன்றவை.

Question 5.
மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாட்டினை எழுதுக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம் 90.1

VI. விரிவான விடையளி :

Question 1.
கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.
விடை:
கணினியின் பயன்பாடுகள் :

  1. கணினி துணிக்கடை, ரயில் நிலையம், வங்கி, ஏ.டி.எம் போன்ற இடங்களில் பயன்படுகிறது.
  2. கணினி படம் வரைய, கணக்கு போட, விளையாட பயன்படுகிறது.
  3. கணினி பொது அறிவு வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது.
  4. கணினி பல துறைகளில் பயன்படுகிறது. எ.கா. தொழில், கல்வி, மருத்துவம், அறிவியல், தகவல் தொடர்பு.
  5. கணினி தரவு மற்றும் தகவல்களைச் சேகரிக்க பயன்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 7 கணினி ஓர் அறிமுகம் 95

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 2 Chapter 1 வெப்பம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 2 Chapter 1 வெப்பம்

6th Science Guide வெப்பம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்
அ) வேகமாக நகரத் தொடங்கும்
ஆ) ஆற்றலை இழக்கும்
இ) கடினமாக மாறும்
ஈ) லேசாக மாறும்
விடை:
அ) வேகமாக நகரத் தொடங்கும்

Question 2.
வெப்பத்தின் அலகு …………
அ) நியூட்டன்
ஆ) ஜில்
இ) வோல்ட்
ஈ) செல்சியஸ்
விடை:
ஆ) ஜூல்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 3.
30° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை.
அ) 80° C
ஆ) 50° Cக்கு மேல் 80Cக்குள்
இ) 20° C
ஈ) ஏறக்குறைய 40° C
விடை:
ஈ) ஏறக்குறைய 40°

Question 4.
50° C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 50° C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும் பொழுது, வெப்பமானது.
அ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
இ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்
ஈ) இரண்டின் வெப்பநிலையும் உயரும்
விடை:
ஆ). இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
வெப்பம் பொருளிலிருந்து ……. பொருளுக்கு பரவும்.
விடை:
வெப்பநிலை
அதிகமான, குறைவான

Question 2.
பொருளின் சூடான நிலையானது ……… கொண்டு கணக்கிடப்படுகிறது.
விடை:
வெப்பநிலை

Question 3.
வெப்பநிலையின் SI அலகு ………..
விடை:
கெல்வின்

Question 4.
வெப்பப்படுத்தும் பொழுது திடப்பொருள் ………… மற்றும் குளிர்விக்கும் பொழுது ………..
விடை:
விரிவடையும், சுருங்கும்

Question 5.
இரண்டு பொருட்களுக்குக்கிடையே வெப்பப்பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ………. நிலையில் உள்ளன.
விடை:
வெப்பச் சமநிலையில்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல். இது வெப்பநிலை அதிகமான பொருளிலிருந்து வெப்பநிலை குறைவான பொருளிற்கு பரவும்.
விடை:
சரி.

Question 2.
நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது, நீராவி உருவாகும். தவறு.
சரியான விடை : வெப்பம் உட்கவரும் போது நீராவி உருவாகும்.
விடை:
தவறு.

Question 3.
வெப்பவிரிவு என்பது. பொதுவாக தீங்கானது.
சரியான விடை : வெப்ப விரிவு என்பது பொதுவாக தீங்கானது அல்ல.
விடை:
தவறு.

Question 4.
போரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும்பொழுது அதிகம் விரிவடையாது.
விடை:
சரி.

Question 5.
வெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்டும் ஒரே அலகினைப் பெற்றுள்ளன.
சரியான விடை : இரண்டும் வெவ்வேறு அலகினைப் பெற்றுள்ளன.
விடை:
தவறு.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

IV. கீழ்க்கண்டவற்றிற்கு காரணம் தருக.

Question 1.
கொதிக்கவைத்த நீரை சாதாரண கண்ணாடி முகவையில் ஊற்றும் பொழுது, விரிசல் ஏற்படுகிறது. ஆனால் போரோசில் கண்ணாடி முகவையில் ஊற்றும் பொழுது விரிசல் ஏற்படுவதில்லை.
விடை:
போரோசில் கண்ணாடி வெப்பத்திற்கு மிகக் குறைவாகவே விரிவடையும். எனவே விரிசல் ஏற்படுவதில்லை.

Question 2.
மின்கம்பங்களில் உள்ள மின்சாரக்கம்பியானது கோடைக்காலங்களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும்.
விடை:
உலோகங்கள் (மின்சாரக்கம்பி) கோடைக்காலத்தில் வெப்பத்தால் விரிவடையும் எனவே தொய்வாகவும், குளிர்காலத்தில் சுருங்குகின்றன எனவே நேராகவும் இருக்கும்.

Question 3.
இரு உலோகத் தகடுகளைப் பிணைப்பதற்காக அறையப்படும் முன் கடையாணி வெப்பப்படுத்தப்படுகிறது.
விடை:

  • கடையாணி வெப்பப்படுத்தப்படுவதால் விரிவடைகிறது.
  • ஆணியின் அடிப்பக்கத்தை வெப்பமாக உள்ள போது சுத்தியலால் அடித்து மறுபுறமும் புதிய தலைப்பகுதி உருவாக்கப்படும்.
  • குளிரும் போது சுருங்குவதால் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும்.

V. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 30

VI. ஒப்புமை தருக.

Question 1.
வெப்பம் : ஜில் :: வெப்பநிலை : ______
விடை:
கெல்வின்

Question 2.
பனிக்கட்டி : 0° C :: கொதி நீர் : _____
விடை:
100° C

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 3.
மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல் : வெப்பம் :: சராசரி இயக்க ஆற்றல் : _____
விடை:
வெப்பநிலை

VII. மிகக் குறுகிய விடையளி:

Question 1.
வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.
விடை:

  1. மின் இஸ்திரிப் பெட்டி
  2. மின் வெப்பக்கலன்
  3. மின் நீர் சூடேற்றி

Question 2.
வெப்ப நிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் எவ்வளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை அளவிடும் அளவு வெப்பநிலை எனப்படும்.

Question 3.
வெப்பவிரிவு என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அது விரிவடைவது அப்பொருளின் வெப்பவிரிவு எனப்படும்.

Question 4.
வெப்பச்சமநிலை பற்றி நீ அறிந்ததைக் கூறுக.
விடை:

  1. வெப்பத் தொடர்பில் உள்ள இரு பொருள்களின் வெப்பநிலை சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன எனலாம்.
  2. வெப்பச்சமநிலையில் ஒன்றின் வெப்பநிலை மற்றொன்றை பாதிப்பதில்லை.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.
விடை:

  1. வெப்பத்தினால் திடப்பொருட்களின் மூலக்கூறுகளில் இடைவெளி அதிகரிக்கிறது.
  2. மூலக்கூறுகளின் அதிர்வும் இயக்கமும் அதிகரிக்கின்றன.
  3. வெப்பநிலை அதிகரிக்கும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 2.
வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 85

IX. விரிவான விடையளி:

Question 1.
வெப்பவிரிவைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.
விடை:
ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படும் போது அது விரிவடைகிறது. இது வெப்ப விரிவு எனப்படும்.
உதாரணங்கள் :

  1. இரயில் தண்டவாளம் அமைக்கும் போது அதன் இரு இரும்புப் பாளங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. காரணம் வெயில் காலத்தில் அது விரிவடையும்.
  2. மேம்பாலங்களில் கற்காரைப் பாளங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. ஏனெனில் கோடைக்காலத்தில் வெப்பத்தால் அவை விரிவடையும்.
  3. மின்கம்பங்களுக்கிடையே மின்சாரக்கம்பி கோடைக்காலங் களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும். காரணம் வெப்பம் அதிகம் உள்ள போது உலோகங்கள் விரிவடைகின்றன. குளிர்காலங்களில் சுருங்குகின்றன.
  4. இரு உலோகத் தகடுகளை இணைக்க சூடான கடையாணியை துளைகளில் பொருத்தி சுத்தியலால் அடித்து புதிய தலைப்பகுதி உருவாக்கப்படும். கடையாணி குளிரும் போது சுருங்குவதால் தகடுகளை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறது.

X. உயர் சிந்தனைத்திறன் வினாக்களுக்கு விடையளி

Question 1.
குளிர்கால இரவில் நீ உனது படுக்கை அறையில் படுத்துள்ளாய். அப்போது அறையின் ஜன்னல் கதவு தற்செயலாக திறந்துவிட்டால் குளிரினால் நீ உறக்கம் கலைந்து சிரமமாக உணர்கிறாய். இதற்கு என்ன காரணம்? அறையில் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால் அல்லது வெளியே உள்ள குளிர்ச்சி அறைக் குள்ளே கடத்தப்படுவதால் இரண்டில் உனது விடைக்கான காரணத்தினைத் தருக.
விடை:

  1. அறையினுள் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால் குளிராக உணர்வேன்.
  2. குளிர்கால இரவில் வெளியே காற்றின் வெப்பநிலை குறைவு. அறையினுள் அதிகம்.
  3. ஜன்னல் திறக்கும் போது வெப்பமானது அதிக வெப்ப நிலையுள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பொருளுக்கு கடத்தப்படும்.
  4. அறையினுள் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படும். எனவே அறையினுள் வெப்பநிலை குறைந்து நமக்கு குளிர் ஏற்படும்.

Question 2.
ஒருவேளை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்ப நிலையை விடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச்சூழலை முன்பிருந்ததை விட எவ்வாறு உணரும்?
விடை:

  1. நமது உடல் சுற்றுச்சூழலை முன்பிருந்ததை விட வெப்பமாக உணரும்.
  2. ஏனெனில் வெப்பமானது அதிக வெப்பநிலை உள்ள சுற்றுச் சூழலிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள நம் உடலுக்குச் செல்லும். ஆகவே நாம் வெப்பமாக உணர்வோம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 3.
துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும் பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பார்க்கிறாய்? வெப்பத்தின் விளைவால் துகள்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.
விடை:
தகடானது வெப்பத்தால் விரிவடையும். எனவே தகட்டின் துளையின் விட்டம் அதிகரிக்கும்.

6th Science Guide வெப்பம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியே பாயும் போது ________ ஆற்றல் உருவாகிறது.
அ) மின்னாற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) வேதி ஆற்றல்
ஈ) இயக்க ஆற்றல்
விடை:
ஆ) வெப்ப ஆற்றல்

Question 2.
வெப்பநிலையின் SI அலகு.
அ) கலோரி
ஆ) ஜில்
இ) செல்சியஸ்
ஈ) கெல்வின்
விடை:
ஈ) கெல்வின்

Question 3.
நீர் கொதித்து ஆவியாக மாறும் வெப்பநிலை ______ °C
அ) 0°C
ஆ) 32°C
இ) 100°C
ஈ) 110°C
விடை:
இ) 100°C

Question 4.
A, B என்ற இரு டம்ளர்களில் 50°C வெப்பநிலையில் நீர் உள்ளன. அவை இரண்டையும் C என்ற டம்ளரில் ஊற்றினால் C ல் உள்ள நீரின் வெப்பநிலை _____ °C
அ) 100°C
ஆ) 0°C
இ) 50°C
ஈ) 0° க்கும் 100°C க்கும் இடையே
விடை:
இ) 50°C

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 5.
திரவத்தை குளிர்விக்கும் போது – ஆக மாறுகிறது.
அ) வாயு
ஆ) திண்மம்
இ) நீராவி
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
ஆ) திண்மம்

II. பின்வரும் கூற்று சரியா தவறா எனக்காண்.

Question 1.
வெப்பம் செல்சியஸ் (அ) சென்டிகிரேடில் அளக்கப்படுகின்றது.
விடை:
தவறு

Question 2.
வெப்பநிலை என்பது ஒருவகை ஆற்றல்.
விடை:
தவறு

Question 3.
நமது உடலின் சராசரி வெப்பநிலை 37°C.
விடை:
சரி

Question 4.
இரண்டு பொருட்களும் ஒரே வெப்பநிலைக்கு வரும் வரை வெப்பம் தொடர்ந்து பரிமாற்றம் நடைபெறும்.
விடை:
சரி

Question 5.
அதிர்வுகள் ஒரு மூலக்கூறிலிருந்து அடுத்த மூலக்கூறிற்கு பாய்வதால் வெப்பம் பரவுகிறது.
விடை:
சரி

III. பொருத்துக.
Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 85.1

IV. ஒப்புமை தருக.

Question 1.
வெயில் காலம் : விரிவடைதல் :: குளிர்காலம்: _____
விடை:
சுருங்குதல்

Question 2.
ஆவியாதல் : 100° C :: உறைதல் : _____
விடை:
0° C

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

V. காரணம் கூறுக.

1. மேம்பாலங்களில் கற்காரைப் பாலங்களுக்கிடையே சிறு இடைவெளி விடப்படுகிறது
கோடைக்காலத்தில் வெப்பத்தால் விரிவடையும்.
2. 80°C வெப்பநிலையிலுள்ள இரும்பு குண்டினை 80°C வெப்பநிலை உள்ள நீரில் போடும் போது அது சுருங்குவதில்லை.
ஏனெனில் இரண்டும் வெப்பச் சமநிலையில் உள்ளன.

VI. மிகக்குறுகிய விடையளி

Question 1.
வெப்ப மூலங்கள் யாவை?
விடை:

  1. முதன்மை வெப்ப ஆற்றல் மூலம் சூரியன் ஆகும்.
  2. எரிதல், உராய்வு மற்றும் மின்சாரம் மூலமும் வெப்ப ஆற்றலை பெறலாம்.

Question 2.
வெப்பம் என்றால் என்ன? அலகு யாது?
விடை:

  1. ஒரு பொருளில் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் வெப்பம் எனப்படும்.
  2. SI அலகு ஜூல். மேலும் கலோரி என்ற அலகும் பயன்படுத்தப் படுகிறது.

Question 3.
இரு பொருட்கள் வெப்பச் சமநிலையிலுள்ளன என எவ்வாறு அறியலாம்?
விடை:
வெப்பத் தொடர்பில் உள்ள இருபொருட்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை வெப்பச்சமநிலையில் உள்ளன என அறியலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம்

Question 4.
ஒரு கலோரி வரையறு.
விடை:
ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்த தேவைப்படும் வெப்ப அளவு ஒரு கலோரி எனப்படும்.

Question 5.
இரு பொருட்களுக்கிடையே வெப்ப ஆற்றல் பாயும் திசையை தீர்மானிப்பது எது?
விடை:
பொருட்களின் வெப்பநிலையே வெப்ப ஆற்றல் பாயும் திசையை தீர்மானிக்கின்றன.

VII. விரிவான விடையளி

Question 1.
வெப்பத்தால் பொருளின் நீளத்தில் விரிவடைகிறது என்பதை ஓர் ஆய்வின் மூலம் விளக்குக.
விடை:

  1. வெப்பத்தால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு வெப்ப நீள்விரிவு எனப்படும்.
  2. ஒரு சைக்கிள் கம்பியின் ஒரு முனையை இணைப்புக் கம்பியோடும் தொடர்ந்து மின்கலன் மற்றும் மின்விளக்கோடும் இணைக்க வேண்டும்.
  3. விளக்கின் மறுமுனையை வேறு இணைப்புக்கம்பியோடு இணைத்து இணைப்புக்கம்பியை ஒரு நாணயத்தில் இணைத்து வைக்க வேண்டும்.
  4. நாணயத்தை சைக்கிள் கம்பியில் மோதாதவாறு சிறு இடைவெளியில் மரக்கட்டை மீது வைக்க வேண்டும்.
  5. இப்போது மின்சுற்று திறந்த சுற்றாக உள்ளது மின்விளக்கு எரியாது.
  6. சைக்கிள் கம்பியை வெப்பப்படுத்தினால் நீளம் அதிகரிக்கும் எனவே நாணயத்தில் மோதி மின்சுற்று மூடிய மின்சுற்றாகி விடும்.
  7. எனவே மின்விளக்கு எரியும்.
  8. இந்த ஆய்வின் மூலம் வெப்பத்தால் நீளம் விரிவடைவதை அறியலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 90

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 2 Chapter 1 வெப்பம் 91

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

6th Science Guide விலங்குகள் வாழும் உலகம் Text Book Back Questions and Answers

I. தகுந்த வார்த்தைகளைக் கொண்டு கீழ்க்கண்டவற்றை நிரப்புக

Question 1.
நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை ……. என்று அழைக்கலாம்.
விடை:
வாழிடம்

Question 2.
செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை மற்றும்……… என வகைப்படுத்தலாம்.
விடை:
ஒரு செல் மற்றும் பல
செல் உயிரினம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு ……… பறக்கும் திசையை உதவுகிறது.
விடை:
கட்டுப்படுத்த

Question 4.
அமீபா உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது,
விடை:
பொய்க்கால்கள்

II. சரியா அல்லது தவறா? தவறாக இருப்பின் சரி செய்து எழுதுக

Question 1.
ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக் கூடிய இடம் வாழிடம் எனப்படும்.
விடை:
சரி

Question 2.
புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
விடை:
தவறு.
புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது.

Question 3.
ஒரு செல் உயிரியான அமீபா, பொய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
விடை:
சரி

Question 4.
பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.
விடை:
சரி

Question 5.
பாரமீசியம் ஒரு பலசெல் உயிரி.
விடை:
தவறு.
பார்மீசியம் ஒரு ஒருசெல் உயிரி .

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
வெப்பமண்டல மழைக் காடுகள். புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை …… என்று அழைக்கிறோம்.
விடை:
வாழிடம்

Question 2.
ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் …….. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
ஒரு செல் உயிரினம்

Question 3.
மீனின் சுவாச உறுப்பு ………… ஆகும்
விடை:
செவுள்கள்

Question 4.
கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ………
விடை:
நடக்கின்றன

Question 5.
ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் ……… சேமிக்கின்றன.
விடை:
கொழுப்பு

IV. குறு வினாக்கள்

Question 1.
பறவைகள் தங்கள் இரைகளை எவ்வாறு பிழக்கின்றன?
விடை:
பறவைகளின் உணவு பிடிக்கும் விதம் அதன் இனத்தை பொறுத்தது.

  • நீரில் வாழும் பறவைகள் தலைகீழாகப் பாய்ந்து அதன் அலகு மூலம் நீரில் உள்ள மீன்களைப் பிடிக்கிறது.
  • வயல்வெளிகளில் வாழும் பறவைகள், புல் மற்றும் வயல்களில் பறக்கும் சிறிய பூச்சிகளை தன் அலகு மூலம் பிடிக்கிறது.
  • வானத்தில் பறக்கும் பறவைகள் தரையில் உள்ள விலங்குகளை அதனுடைய காலிலுள்ள கூர்மையான நகங்கள் மூலம் பிடிக்கிறது.

Question 2.
இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்
விடை:
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்களைக் காணலாம்
ஒட்டகம் வாழும் இடங்கள்

  • ஜோத்பூர்
  • பஸ்கர்
  • பிக்கானர்
  • ஜாஸ்சால்மர்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?
விடை:
அமீபா இடப்பெயர்ச்சியின் போது விரல் போன்ற போலி கால்களை உருவாக்குகிறது. இக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.

Question 4.
பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?
விடை:
பாம்பின் உடலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். அவை தலை, உடல், வால். தலையில் உள்ள உறுப்புகள் – இருகண்கள், இரு நாசித்துளைகள், வாய்.

Question 5.
பறவைகள் காற்றில் பறக்கும் போது எந்த உடலமைப்பைப் பயன்படுத்தி பறக்கும் திசையை மாற்றிக் கொள்கின்றன.
விடை:
பறவைகள் பறக்கும் போது அதன் வாலைப் பயன்படுத்தி திசையை மாற்றிக் கொள்கிறது.

V. சிறு வினாக்கள்

Question 1.
ஒரு செல் உயிரிகளை பல செல் உயிரிகளிடமிருந்து வேறுபடுத்துக்
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 80
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 81

Question 2.
துருவக் கரடிகள் மற்றும் பென்குயின்களில் காணப்படும் தகவமைப்புகளை எழுதுக.
விடை:
துருவக்கரடிகள் :

  1. குட்டையான கால்களைப் பெற்றுள்ளது.
  2. வெப்பத்தை குறைப்பதற்கு குறைந்த உடல் பரப்பை பெற்றுள்ளது.
  3. தடித்த தோலைப் பெற்றுள்ளது.
  4. உடல் முழுவதும் மென்மையான அதிகமான ரோமங்களை பெற்றுள்ளது.
  5. தோலுக்கடியில் தடித்த கொழுப்பு திட்டுகளை பெற்றுள்ளது.
  6. கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவையே உண்ணுகிறது.

பென்குயின் :

  1. படகு போன்ற உடல் அமைப்பை பெற்றுள்ளது.
  2. இதன் இறகுகள் சூரிய ஒளியை ஈர்க்கும் தன்மை கொண்டது.
  3. கடினமான தோலை பெற்றுள்ளது.
  4. இதன் அடித்தோல் அதிக கொழுப்பு திட்டுகளைக் கொண்டது.
  5. இது நீருக்குள் பறப்பதற்கு குட்டையான இறகுகளை (துடுப்புகள்) பெற்றுள்ளது.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
பறவைகளின் எவ்வகையான உடலமைப்பு காற்றில் பறக்க உதவி செய்கிறது?
விடை:

  1. பறவைகளின் படகு போன்ற உடலமைப்பு.
  2. பறவைகளின் முன்னங்கால்கள் இறக்கையாக மாறுபாடு அடைந்திருத்தல்.
  3. உள்ளீடற்ற, வெற்றிடத்தினால் ஆன இலேசான எலும்புகளைப் பெற்றிருத்தல்.
  4. பறவைகளின் உடல் இறகுகளால் மூடப்பட்டிருத்தல்.

Question 4.
முதுகெலும்பற்ற விலங்குகளின் வகைகள் யாவை?
விடை:

  1. புரோட்டோசோவா (ஓரு செல் உயிரிகள்)
  2. பொரிஃபெரா (துளையுடலிகள்)
  3. சீலென்டிரேட்டா (குழியுடலிகள்)
  4. பிளாட்டிஹெல்மின்திஸ் (தட்டைபுழு இனம்)
  5. நிமட்டோடா (உருளைப்புழு இனம்)
  6. ஆர்த்ரோபோடா (கணுக்காலிகள்)
  7. மொலஸ்கா (மெல்லுடலிகள்)
  8. எக்கினோ டெர்மேட்டா (முட்தொலிகள்)

VI. விரிவான விடையளி

Question 1.
பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.
விடை:

  1. பாலைவனத்தில் சூடான மணலிருந்து தனது உடலை பாதுகாக்க நீண்ட கால்களைப் பெற்றுள்ளது.
  2. நீர் கிடைக்கும் போது அதிக நீரை அருந்தி தன் உடலில் நீரை சேர்த்து வைக்கிறது.
  3. தன் உடலில் உள்ள நீர் இழப்பை குறைக்க குறைந்த அளவு சிறுநீரை வெளியேற்றுகிறது. மேலும் வியர்வை வெளியேற்றுவதில்லை.
  4. அதன் திமிலில் கொழுப்பை சேமித்து வைக்கிறது. சக்தி தேவைப்படும் போது கொழுப்பை சிதைத்து ஊட்டம் பெறுகிறது.
  5. பாலைவன மிருதுவான மணலில் நடக்க பெரிய தட்டையான திண்டுகால்களைப் பெற்றுள்ளது.
  6. நீண்ட கண் இமைகள் மற்றும் நீண்ட தோல் கண்கள் மற்றும் காதுகளை புழுதிப்புயலிலிருந்து பாதுகாக்கிறது.
  7. நாசி துவாரங்கள் தூசிகள் உள்ளே செல்வதை தடுக்க மூடிய நிலையில் உள்ளது.

6th Science Guide விலங்குகள் வாழும் உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கீழ் உள்ளவையில் எது ஒரு செல் உயிரி
அ. மீன்
ஆ. தவளை
இ. யூக்ளினா
ஈ. பல்லி
விடை:
இ. யூக்ளினா

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 2.
அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு
அ. போலிக் கால்கள்
ஆ. சிலியா
இ. கசையிழை
ஈ.ஏதுமில்லை
விடை:
அ. போலிக் கால்கள்

Question 3.
நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரி
அ. தவளை
ஆ. மீன்
இ. புறா
ஈ. ஒட்டகம்
விடை:
அ. தவளை

Question 4.
எப்போதும் நீர் அருந்தாத விலங்கு
அ. எலி
ஆ. பூனை
இ. நாய்
ஈ. பசு
விடை:
அ. எலி

Question 5.
வேடந்தாங்கல் ____ சரணாலயம்
அ. பறவைகள் சரணாலயம்
ஆ. புலிகள் சரணாலயம்
இ. யானை சரணாலயம்
ஈ. மான்கள் சரணாலயம்
விடை:
அ. பறவைகள் சரணாலயம்

II. சரியா அல்லது தவறா ? தவறாக இருப்பின் சரி செய்து எழுதுக

Question 1.
ஒரு செல் உயிரிகளில் செல் பிரிதல் மூலம் வளர்ச்சியடைகிறது.
விடை:
தவறு
ஒரு செல் உயிரிகளில் செல்களின் அளவு அதிகரிப்பின் மூலம் வளர்ச்சி அடைகிறது.

Question 2.
மீனின் படகு போன்ற உடலமைப்பு நீரில் எளிதாக நீந்த உதவுகிறது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 3.
மீனின் வால், திசையை திருப்பவும் நீரில் அதன் உடல் சமநிலை பெறவும் உதவுகிறது.
விடை:
சரி

Question 4.
பறவையின் பின்னங்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன.
விடை:
தவறு
பறவையின் முன்னங்கால்கள் இறக்கையாக மாறியுள்ளது.

Question 5.
பறவையின் வால் பறக்கும் திசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
விடை:
சரி

III. படத்தில் பாகம் குறி

Question 1.
கீழ் உள்ள அமீபா படத்தில் A மற்றும் B எதைக் குறிக்கிறது.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 30
விடை:
A போலிக்கால்கள்
B உட்கரு

Question 2.
கீழ் உள்ள பரமேசிய படத்தில் A மற்றும் B பாகங்களைக் குறி
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 31
விடை:
A குறுயிழை
B சுருங்கும் நுண் குமிழ்

Question 3.
கீழ் உள்ள யூக்ளினா ) படத்தில் A மற்றும் B எப்பாகத்தைக் குறிக்கிறது.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 32
விடை:
A- கசையிழை
B உட்கரு

IV. குறுவிடை எழுதுக

Question 1.
ஒரு செல் உயிரிகளின் இடப்பெயர்ச்சி உறுப்புக்களை கூறு
விடை:
அ. புரோட்டோ சோவா – போலிக்கால்கள்
ஆ. பாரமீசியம் – குறு இழைகள்
இ. யூக்ளினா – கசையிழை

Question 2.
வலசை போதல் என்றால் என்ன?
Answer;
ஒரு விலங்கு பருவ மாறுபாட்டின் காரணமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்லுதல்.

Question 3.
கோடை உறக்கம் என்றால் என்ன ?
விடை:
சில விலங்குகள் அதிகப்படியான வெப்பத்தை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி உறக்கத்தில் ஈடுபடும். எ.கா – நத்தை

Question 4.
குளிர்கால உறக்கம் என்றால் என்ன?
விடை:
சில விலங்குகள் அதிகப்படியான குளிரை தவிர்க்க அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி உறக்கத்தில் ஈடுபடும். எ.கா- ஆமை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம்

Question 5.
இருமைப்பார்வை என்றால் என்ன?
விடை:
பறவைகள் ஒரே சமயத்தில் இரு கண்கள் மூலம் வெவ்வேறு பொருள்களை காண முடியும் இதற்கு இருமைப்பார்வை என்று பெயர்.

Question 6.
பாலைவனக்கப்பல் என எதை ஏன் அழைக்கின்றோம்.
விடை:

  • ஒட்டகம் பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது.
  • ஒட்டகம் பெரிய தட்டையான திண்டு கால்களை பெற்றுள்ளது.
  • இக்கால்களின் உதவியால் பாலைவன மிருதுவான மணலில் நன்றாக நடக்கிறது.

V. விரிவான விடையளி

Question 1.
பறவைகள் பெற்றுள்ள தகவமைப்புகளைக் கூறு
விடை:

  1. பறவைகள் இறகுகளால் மூடப்பட்ட உடலைப் பெற்றுள்ளதால் குறைந்த எடையுடன் பறக்க உதவுகிறது.
  2. பறவைகளின் வாய்கள் அலகுகளாக மாறியுள்ளது.
  3. நுரையீரல் மூலம் சுவாசிக்கிறது.
  4. முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளது
  5. வெற்றிடத்தாலான எலும்புகளைப் பெற்றுள்ளது
  6. பறவைகளின் கால்கள் கூர்மையான நகங்களைப் பெற்றுள்ளதால், நடக்கவும், மரங்களின் கிளைகளை பற்றிக் கொள்ளவும் உதவுகிறது.
  7. பறவையின் வால் பறக்கும் திசையை மாற்ற உதவுகிறது.
  8. பறவையின் கண்கள் ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு பொருள்களை பார்க்க உதவுகிறது.

விலங்குகள் வாழும் உலகம் – மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் 90

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

6th Science Guide தாவரங்கள் வாழும் உலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
குளம் வாழிடத்திற்கு உதாரணம்
அ) கடல்
ஆ) நன்னீர் வாழிடம்
இ) பாலைவனம்
ஈ) மலைகள்
விடை:
ஆ) நன்னீர் வாழிடம்

Question 2.
இலைத் துளையின் முக்கிய வேலை ______
அ) நீரைக் கடத்துதல்
ஆ) நீராவிப்போக்கு
இ ஒளிச் சேர்க்கை
ஈ) உறிஞ்சுதல்.
விடை:
இ) ஒளிச் சேர்க்கை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Question 3.
நீரை உறிஞ்சும் பகுதி ____ ஆகும்
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலை
ஈ) பூ
விடை:
அ) வேர்

Question 4.
நீர் வாழ் தாவரங்களின் வாழிடம்
அ) நீர்
ஆ) நிலம்
இ) பாலைவனம்
ஈ) மலை
விடை:
அ) நீர்

II. சரியா, தவறா – தவறு எனில் சரியான விடையை எழுதுக

Question 1.
தாவரங்கள் நீர் இன்றி வாழ முடியும்
விடை:
தவறு
பல்வேறு வளர்சிதை மாற்றங்களைச் செய்வதற்கு தாவரங்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

Question 2.
தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படும்.
விடை:
தவறு
பசுமையான பாகங்களில் மட்டும் பச்சையம் காணப்படுகிறது.

Question 3.
தாவரங்களின் மூன்று பாகங்கள் – வேர், தண்டு, இலைகள்.
விடை:
சரி

Question 4.
மலைகள் நன்னீர் வாழிடத்திற்கு ஓர் உதாரணம்
விடை:
தவறு
மலைகள் நில வாழிடத்திற்கு உதாரணமாகும்.

Question 5.
வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது.
விடை:
தவறு
முட்கள் பொதுவாக இலையின் மாறுபாடு ஆகும்.

Question 6.
பசுந் தாவரங்களுக்கு சூரிய ஒளி தேவை.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
புவி பரப்பில் நீரின் அளவு ………
விடை:
1.70

Question 2.
பூமியில் மிகவும் வறண்ட பகுதி ……..
விடை:
பாலைவனங்கள்

Question 3.
ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும் …….. வேலை
விடை:
வேரின்

Question 4.
ஒளிச் சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி ………
விடை:
இலைகள்

Question 5.
ஆணிவேர்த் தொகுப்பு …… தாவரங்களில் காணப்படுகிறது.
விடை:
இருவித்திலைத்

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 40

V. தாவரங்களின் பாகங்கள் மற்றும் பணிகளில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக.

Question 1.
இலைகள் – தண்டு – வேர் – மலர்கள்
விடை:
வேர் – தண்டு – இலைகள் – மலர்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Question 2.
நீராவிப்போக்கு – கடத்துதல் – உறிஞ்சுதல் – ஊன்றுதல்
விடை:
ஊன்றுதல் – உறிஞ்சுதல் – கடத்துதல் – நீராவிப்போக்கு

VI. மிகக் குறுகிய வினா.

Question 1.
வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களை வகைப்படுத்துக.
விடை:
நில வாழிடம் – நீர் வாழிடம் என வகைப்படும்.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 80

Question 2.
பாலைவனத் தாவரங்களை அடையாளம் காண்க.
விடை:
சப்பாத்திக்கள்ளி, ஹைடிரில்லா, மா, ரோஜா.
சப்பாத்திக்கள்ளி தாவரங்கள் பாலைவனத்தில் காணப்படுகின்றன. அவை தண்டுகளில் நீரைச் சேமிக்கின்றன.

Question 3.
வாழிடம் என்பதை வரையறு.
விடை:
ஒவ்வொரு உயிரினமும், உயிர்வாழவும், இனப்பெருக்கம் செய்யவும், தேவைப்படும் இடமானது அதன் வாழிடம் ஆகும்.
(உ.ம்) நன்னீர் வாழிடம் – ஆறுகள், குளங்கள், குட்டைகள்.

Question 4.
இலைக்கும், ஒளிச்சேர்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
விடை:
இலைகள் பசுமையாக உள்ளன. அவற்றில் பசுங்கணிகங்கள் காணப்படுகிறது. இவை ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.

VII. குறுகிய வினா.

Question 1.
மல்லிகைக் கொடி ஏன் பின்னுகொடி என அழைக்கப்படுகிறது?
விடை:
நலிந்த, மெலிந்த தண்டுடைய தாவரங்கள் தாமாக நிலைநிற்க இயலாது. எனவே அவை ஆதாரத்தைச் சுற்றிக்கொண்டு ஏறுகின்றன. உம்) பட்டாணி.

Question 2.
ஆணிவேர் மற்றும் சல்லிவேர் தொகுப்புகளை ஒப்பீடு செய்க.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 85

Question 3.
நிலவாழிடம் மற்றும் நீர் வாழிடத்தை வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 86

Question 4.
உங்களுடைய பள்ளித் தோட்டத்தில் உள்ள தாவரங்களை பட்டியலிடுக.
விடை:
செம்பருத்தி, பெரணிகள், குரோட்டன்கள், ரோஜா, லில்லி, சப்பாத்திக் கள்ளி (கள்ளி வகைகள்), தென்னை மரங்கள், ராயல்பனை, கிளிட்டோரியா, சைகஸ், தங்க அரளி, ஹெலிகோனியா, தக்காளி, கத்தரி, வெண்டை, முதலானவை மாடித் தோட்டத்தில் உள்ளன.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

VIII. விரிவான வினா.

Question 1.
வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைத் தருக.
விடை:

  1. ஊன்றுதல் – தாவரத்தை பூமியில் நிலை நிறுத்துகிறது.
  2. உறிஞ்சுதல் – மண்ணிலுள்ள நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சி பிற பாகங்களுக்குக் கடத்துகிறது.
  3. சேமிப்பு – சில தாவரங்கள் வேர்களில் உணவைச் சேமிக்கிறது. (எ.கா) கேரட்.

தண்டின் பணிகள்

  • தாங்குதல் – கிளைகளையும், இலைகளையும், மலர்களையும், கனிகளையும் தாங்குகிறது.
  • கடத்தல் – நீரையும் தாது உப்புகளையும் வேர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு மேல் நோக்கிக் கடத்துகிறது.
  • இலைகள் தயாரித்த உணவை மற்ற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
  • சேமித்தல் – கரும்பு போன்ற சில வகை தண்டுகள் உணவைச் சேமிக்கின்றன.

Question 2.
கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் படத்தில் அதன் தொடர்ச்சி கருத்துகளை விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்க.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 90
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 91

6th Science Guide தாவரங்கள் வாழும் உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தோர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
மக்காச் சோளத்தில் காணப்படுவது,
அ) ஆணிவேர்
ஆ) சல்லிவேர்
இ) வேற்றிடவேர்
ஈ) கொத்துவேர்கள்
விடை:
ஆ) சல்லிவேர்

Question 2.
தண்டில் இலை உருவாகும் பகுதி,
அ) கணு
ஆ) கணுவிடை
இ) நுனிமொட்டு
ஈ) பக்கமொட்டு
விடை:
அ) கணு

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Question 3.
இலையின் காம்பு
அ) மஞ்சரிக்காம்பு
ஆ) கூட்டிலைக்காம்பு
இ) பூக்காம்பு,
ஈ) இலைக்காம்பு
விடை:
ஈ) இலைக்காம்பு

Question 4.
இலை பச்சையாகக் காணப்படுவதற்கான காரணம்
அ) குளோரன்கைமா
ஆ) பச்சையம்
இ) இலைத்தாள்
ஈ) இலைத்துளை
விடை:
ஆ) பச்சையம்

Question 5.
விக்டோரியா அமேஸானிக்கா இலையின் விட்டம் அல்லது குறுக்களவு
அ) 2 மீட்டர்
ஆ) 2.5 மீட்டர்
இ) 3 மீட்டர்
ஈ) 1 மீட்டர்
விடை:
இ) 3 மீட்டர்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
தாங்கள் வாழிடங்களுக்கேற்ப தாவரங்கள் சில சிறப்புப்பண்புகளைப் பெற்றுக் காணப்படுகின்றன இதற்கு …… என்று பெயர்
விடை:
தகவமைப்புகள்

Question 2.
இந்திய துணைக் கண்டத்தில் காணப்படும், மிகப் பெரிய மணல் குன்றுகளாலான பாலைவன …….. எனப்படும்.
விடை:
தார் பாலைவனம்

Question 3.
இலையின் மையத்தில் காணப்படும் நரம்புக்கு……. என்று பெயர்.
விடை:
நடு நரம்பு

Question 4.
ஒரு உயிரினத்தில் அதன் சூழலுக்கேற்ப காணப்படும் மாற்றத்திற்கு ………. என்று பெயர்.
விடை:
மாறுபாடு

Question 5.
காகிதப்பூ ……என்று அழைக்கப்படுகிறது
விடை:
போகன் வில்லா

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

III. சரியாக வரிசைப்படுத்துக

Question 1.
கடல், ஏரி, ஆறு, குளம்
விடை:
குளம், ஏரி, ஆறு, கடல்

Question 2.
கணுவிடை-கணு- கோணமொட்டு-நுனிமொட்டு
விடை:
நுனிமொட்டு – கோணமொட்டு-கணு- கணுவிடை

IV. மிகக் குறுகிய வினா

Question 1.
இலையின் புற அமைப்பைப் படம் வரைக – பாகங்களைக் குறிக்க
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 95

Question 2.
பூக்களின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்து
விடை:
பூக்களின் அடிப்படையில் தாவரங்கள் இருவகையாகப் பிரிக்கலாம்

  • பூக்கும் தாவரங்கள் எ.கா. ரிக்ஸியா
  • பூவாத தாவரங்கள் எ.கா. மா ம்

Question 3.
ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களை வேறுபடுத்து
விடை:

  • ஜிம்னோஸ்பெர்ம்கள் – பூவாத தாவரங்கள் ஆனால் விதைகளை உருவாக்கும் (எ.கா) பைனஸ், சைகஸ்
  • ஆஞ்சியோஸ்பெர்ம்கள் : பூக்கும் தாவரங்கள் விதைகளை உருவாக்கும். (எ.கா) மா- ரோஜா

Question 4.
காக்டஸ்- தாவரம்-குறிப்பு வரைக
விடை:

  • இது ஒரு பாலைவன வாழ் தாவரம் (இங்கு மழை அளவு குறைவு (அ) காணப்படாது)
  • ‘தண்டு – நீரை சேமிக்கும்.
  • இலைகள் – முட்களாக மாறுபாடடைந்து காணப்படும்.
  • வேர்கள் – நன்கு வளர்ச்சியடைந்து மண்ணின் மிக ஆழத்திற்குச் சென்று நீரை உறிஞ்சுகின்றன.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்

Question 5.
முட்கள் என்றால் என்ன?
விடை:
சில தாவரங்களில் இலைகள் அல்லது பாகங்கள் முட்களாக மாறுபாடடைந்துள்ளன. இவை நீராவிப் போக்கினால் ஏற்படும் நீரிழப்பைக் குறைக்கின்றன.
(எ.கா) அகேவ் (இலை நுனி மற்றும் விளிம்பு முட்களாக மாறுபாடடைந்துள்ளது)

V. விரிவான விடையளி

Question 1.
பற்றுக்கம்பிக் கொடி-விவரி
விடை:

  • பற்றுக்கம்பி என்பது சில மெலிந்த தண்டுடைய தாவரங்களில், காணப்படுகிறது.
  • இது ஆதாரத்தைச் சுற்றிக் கொண்டு அத்தாவரங்கள் மேலே ஏறுவதற்கு ஏதுவாக உள்ளது.
    1. இனிப்புப்பட்டாணி – இதில் சிற்றிலைகள் பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன.
    2. பாகற்காய் – இதில் கோணமொட்டு பற்றுக்கம்பிகளாக மாற்றம் அடைந்து மேலே ஏறுவதற்கு உதவுகின்றன.

Question 2.
பாலைவன வாழிடம் குறித்தெழுது
விடை:

  • பூமியின் மிக வறண்ட பகுதி.
  • மழை அளவு சராசரி 25 செ.மீக்கும் குறைவாக உள்ளது.
  • பூமியில் சுமார் 20% பாலைவனமாக உள்ளது.
  • தாவரங்கள் – கடுமையான வறட்சியைத் தாங்கும் தகவமைப்புடையவை.
  • தடிமனான இலைகள் நீரையும் கனிம உப்புக்களையும் சேமித்து வைக்கின்றன.
  • தண்டுகள் – நீரை சேமிக்கின்றன. எ.கா. காக்டஸ் (கள்ளி வகைகள்)
  • இலைகள் – முட்களாக மாறுபாடடைந்துள்ளன. எ.கா. ஒபன்ஷியா.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம் 98

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

6th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
_____ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல
அ) தங்க மோதிரம்
ஆ) இரும்பு ஆணி
இ) ஒளி
ஈ) எண்ணெய்த்துளி
விடை:
இ) ஒளி

Question 2.
400 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு கிண்ண த்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன்.
அ) 400 மி.லி
ஆ) 600 மி.லி
இ) 200 மி.லி
ஈ) 800 மி.லி
விடை:
இ) 200 மி.லி

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 3.
தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை _____ முறையில் நீக்கலாம்
அ) கைகளால் தெரிந்தெடுத்தல்
ஆ) வடிகட்டுதல் இ காந்தப்பிரிப்பு
ஈ) தெளிய வைத்து இறுத்தல்
விடை:
அ) கைகளால் தெரிந்தெடுத்தல்

Question 4.
அரிசி மற்றும் பருப்புகளில் கலந்துள்ள லேசான மாசுப் பொருள்களை _____ முறையில் நீக்கலாம்
அ) வடிகட்டுதல்
ஆ) வண்டலாக்குதல்
இ) தெளிய வைத்து இறுத்தல்
ஈ) புடைத்தல்
விடை:
ஈ) புடைத்தல்

Question 5.
தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்தபின்வருவனவற்றுள் _____ அவசியம் தேவைப்படுகிறது. அ) மழை
ஆ) மண்
ஆ) மண்
இ) நீர்
ஈ) காற்று
விடை:
ஈ) காற்று

Question 6.
_____ வகையான கலவையினை, வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.
அ) திடப்பொருள் – திடப்பொருள்.
ஆ) திடப்பொருள் – நீர்மம்
இ) ‘நீர்மம் – நீர்மம்
ஈ) நீர்மம் – வாயு
விடை:
ஆ) திடப்பொருள் – நீர்மம்

Question 7.
பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல
அ) பாலுடன் காபி
ஆ) எலுமிச்சை ஜூஸ்
இ) நீர்
ஈ) கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரிம்.
விடை:
இ) நீர்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

II. பின்வரும் கூற்று சரியா அல்லது தவறா எனக்கூறு. தவறாக இருப்பின் சரியான கூற்றை எழுதுக.

அ) காற்று அழுத்தத்திற்கு உட்படாது
விடை:
தவறு. காற்று அழுத்தத்திற்கு உட்படும்.

ஆ) திரவங்களுக்கு குறிப்பிட்ட பருமன் இல்லை. ஆனால் குறிப்பிட்ட வடிவம் உண்டு
விடை:
தவறு. திரவங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை. ஆனால் குறிப்பிட்ட பருமன் உண்டு.

இ) திண்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகருகின்றன,
விடை:
தவறு. திண்மத்தில் உள்ள துகள்கள் எளிதில் நகருவதில்லை,

ஈ) சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவி, அந்நீரை வடிகட்டுதல் மூலம் பிரித்தெடுக்கலாம்.
விடை:
தவறு. சமைக்கும் முன் பருப்பு வகைகளை நீரில் கழுவி, அந்நீரை தெளியவைத்து இறுத்தல் மூலம் பிரித்தெடுக்கலாம்.

உ) திடப்பொருள்களில் இருந்து நீர்மப்பொருள்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே.
விடை:
தவறு. நீர்மப்பொருள்களிலிருந்து திண்மப் பொருட்களைப் பிரிப்பதற்கென பயன்படுத்தப்படும் வடிகட்டி என்பது ஒரு வகையான சல்லடையே.

ஊ) தானியத்தையும் உமியையும் தூற்றுதல் மூலம் பிரிக்கலாம்.
விடை:
சரி.

ஏ) காற்று ஒரு தூய பொருளாகும்
விடை:
தவறு காற்று ஒரு கலவை ஆகும் (அல்லது) காற்று ஒரு தூயபொருள் அல்ல.

ஏ) தயிரிலிருந்து வெண்ணெய் வண்டலாக்குதல் முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.
விடை:
தவறு. தயிரிலிருந்து வெண்ணெய் கடைதல் முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

III. பொருத்துக

அ)
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 40

ஆ)
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 41
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 42

IV. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பருப்பொருள் என்பது ………. ஆல் ஆனவை
விடை:
அணுக்களால்

Question 2.
திண்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி ……. ஐ விடக் குறைவு
விடை:
நீர்மத்தை

Question 3.
நெல் தாவரத்திலிருந்து தானியங்களை ……… முறை மூலம் பிரித்தெடுக்கலாம்
விடை:
கதிரடித்தல்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 4.
உப்புமா வில் இருந்து …… முறையில் மிளகாயினை நீக்கலாம்
விடை:
கைகளால்
தெரிந்தெடுத்தல்

Question 5.
நீரில் இருந்து களிமண் துகள்களை நீக்க ………. முறை பயன்படுத்தப்படுகிறது
விடை:
வடிகட்டுதல்

Question 6.
ஊசி, பென்சில் மற்றும் இரப்பர் வளையம் இவற்றில் ……. காந்தத்தால் கவரப்படும்.
விடை:
ஊசி

Question 7.
குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் பொதுவாக …….. நீராக அமையும்
விடை:
தூய்மையற்ற

V. பின்வரும் ஒப்புமையைப் பூர்த்தி செய்க

Question 1.
திண்மம்: கடினத்தன்மை :: வாயு: _____
விடை:
அழுத்தத்திற்கு உட்படும் தன்மை

Question 2.
துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உடையது: வாயு:: ____ : திண்மம்
விடை:
துகள்களுக்கு இடையே மிகக்குறைந்த இடைவெளி உடையது

Question 3.
பாயும் தன்மை : ____ மற்றும் _____ :: குறிப்பிட்ட பருமன் : ____ மற்றும் _____
விடை:
நீர்மம் மற்றும் வாயு; திண்மம் மற்றும் நீர்மம்

Question 4.
உமி – தானியங்கள்: தூற்றுதல் : மரத்தூள் – சுண்ணக்கட்டி: _____
விடை:
வண்டலாக்குதல் மற்றும் தெளியவைத்து இறுத்தல்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 5.
சூடான எண்ணெயிலிருந்து முறுக்கினை எடுத்தல் : ____ : காபியை வடிகட்டியபின் அடியில் தங்கும் காபித்தூள் : ____
விடை:
கைகளால் தெரிந்தெடுத்தல் ; வடிகட்டுதல்

Question 6.
இரும்பு – கந்தகம் கலவை : _____ :: உளுத்தம் பருப்பு – கடுகு கலவை: உருட்டுதல்
விடை:
காந்தப்பிரிப்பு முறை

VI. குறுவினா

Question 1.
பருப்பொருள் – வரையறு
விடை:
பருப்பொருள் என்பது, எடை உள்ளதும், இடத்தை அடைத்துக் கொள்வதும் ஆகும். திண்மம், திரவம் மற்றும் வாயு நிலைகளில் பருப்பொருள்கள் காணப்படுகின்றன.

Question 2.
சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி, தூசு போன்ற நுண்ணிய மாசுப் பொருட்கள் எவ்வாறு நீக்கப்படுகிறது?
விடை:
நாம் சமைக்கப் பயன்படுத்தும் அரிசியிலுள்ள உமி, தூசி போன்ற நுண்ணிய மாசுப்பொருட்கள் வண்டலாக்குதல் முறையில் நீக்கப்படுகின்றன, நீரில் அரிசியைக் கழுவும் போது இலேசான மாசுக்கள் நீரில் மிதக்கும், எடை அதிகமுள்ள அரிசி நீரில் மூழ்கி அடியில் தங்கும்.

Question 3.
கலவைகளை நாம் ஏன் பிரித்தெடுக்க வேண்டும் ?
விடை:
ஒரு கலவை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையான துகள்களைக் கொண்ட தூய்மையற்ற பொருளாகும். எனவே, கலவைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.

Question 4.
கலவைக்கு ஒரு எடுத்துக்காட்டினைக் கூறி அது எவ்வாறு கலவை என்று அழைக்கப்படுகிறது, என்பதைக் காரணத்துடன் நியாயப்படுத்தவும்
விடை:
22 கேரட் கோல்டு என்பது கலவைக்கு ஒரு உதாரணம். ஏனெனில், 22 கேரட் கோல்டு என்பது தங்கம் மற்றும் காப்பர் அல்லது தங்கம் மற்றும் காட்மியம் கலவையாகும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 5.
படிய வைத்தல் – வரையறு
விடை:
கரையாத திண்மம் மற்றும் நீர்மம் கொண்ட கலவையிலிருந்து கனமான திண்மத்தை அடியில் வண்டலாகப் படியவைக்கும் முறையே படிய வைத்தல்’ எனப்படும்.

Question 6.
தூய பொருளுக்கும் தூய்மையற்ற பொருளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளைக் கூறுக
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 60

VII. சிறுவினா

Question 1.
இரப்பர் பந்தை அழுத்தும் போது வடிவம் மாறுகிறது. அதை திண்மம் என அழைக்கலாமா?
விடை:
ஆம். ஒரு திண்மப் பொருள் குறிப்பிட்ட வடிவத்தையும், பருமனளவையும் கொண்டுள்ளது. பந்தை அழுத்தும் போது, இரப்பர் பந்தின் வடிவம் மட்டுமே மாற்றமடைகிறது,

Question 2.
வாயுக்களுக்கு குறிப்பிட்ட வடிவம் இல்லை ஏன்?
விடை:
வாயுவின் துகள்களுக்கு இடையே, குறைவான ஈர்ப்பு விசை செயல்படுவதால், வாயுக்கள் குறிப்பிட்ட வடிவம் பெற்றிருப்பதில்லை. எனவே, அவை கொள்கலனின் வடிவத்தைப் பெறுகின்றன.

Question 3.
பாலில் இருந்து பாலாடைக் கட்டியை எம்முறையில் பெறுவாய்? விளக்கவும்,
விடை:
கடைதல் மற்றும் திரியச் செய்தல் முறையில் பாலிலிருந்து பாலாடைக்கட்டி பெறலாம். 6 முக்கிய படி நிலைகளில் இது பெறப்படுகிறது.

  1. அமிலத்தன்மையாக்கல்
  2. திரியச் செய்தல்
  3. தயிர் மற்றும் மோர் இவற்றைப் பிரித்தல்
  4. உப்பு இடுதல்
  5. வடிவமைத்தல்
  6. பக்குவப்படுத்துதல்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து அதில் பின்பற்றப்படும் பிரித்தல் முறையினை விவரிக்கவும்.
விடை:
கொடுக்கப்பட்டுள்ள படம் சலித்தல் முறையில் பிரித்தெடுத்தலைக் காட்டுகிறது. இது வெவ்வேறு அளவுடைய திடப்பொருட்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுகிறது.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 65
உதாரணம் – மாவிலிருந்து தவிடு நீக்குதல், மணலிலிருந்து சரளைக் கல்லை நீக்குதல்.

Question 5.
பருப்புடன் அதிக அளவில் சிறு காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றை எவ்வாறு நீக்குவாய் ?
விடை:
பருப்புடன் அதிக அளவில் சிறு காகிதத் துண்டுகள் கலந்திருப்பின் அவற்றைத் தூற்றுதல்’ முறையில் நீக்கலாம்.
இலேசான காகிதத்துண்டுகள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு தனிக்குவியலாகச் சேரும். எடை அதிகமுள்ள பருப்பு, தூற்றுபவரின் அருகே சிறு குவியலாகச் சேரும்.

Question 6.
உணவுக் கலப்படம் என்றால் என்ன?
விடை:
கடைகளில் நாம் வாங்கும் உணவுப் பொருள்களுடன், தேவையற்ற பொருட்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்களைச் சேர்க்கும் செயல்முறைக்கு உணவுக் கலப்படம்’ என்று பெயர்.

Question 7.
ஒரு வெப்பமான கோடை நாளில் வீட்டிற்கு திரும்பிய திரு.ரகு மோர் பருக விரும்பினார். திருமதி. ரகுவிடம் தயிர் மட்டுமே இருந்தது. அவர் எவ்வாறு தயிரிலிருந்து மோரைப் பெறுவார் ? விளக்கவும்.
விடை:
திருமதி.ரகு தன்னிடமுள்ள தயிரில் அரை குவளை எடுத்து, அதனுடன் அரை குவளை நீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்போது அவர் மோர் பரிமாறலாம்.

VIII. விரிவான விடையளி

Question 1.
மூன்று நிலைமைகளில் உள்ள பருப்பொருள் மூலக்கூறுகளின் அமைப்பை விவரி. உனது விடைக்கான படங்களை வரைக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 80

Question 2.
சுண்ணாம்புத் தூள், கடுகு எண்ணெய், நீர் மற்றும் நாணயங்கள் கொண்ட கலவையை உமது ஆய்வகத்தில் உள்ள தகுந்த உபகரணங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பிரிப்பாய்? பிரித்தல் முறையினைப் படிநிலைகளில் விளக்கும் படத்தினை வரையவும்.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 85

IX. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
மலரின் அம்மா இரவு உணவை சமைக்கத் தயாராகிறார்கள். தவறுதலாக வேர்க்கடலையுடன் உளுத்தம் பருப்பினை கலந்துவிட்டார். இவ்விரண்டையும் பிரித்தெடுக்க உரிய முறையைப் பரிந்துரைத்து மலருக்கு உண்பதற்கு வேர்க்கடலை கிடைக்க வழி செய்க.
விடை:
துணி சல்லடை கொண்டு சலித்தல் முறையில் வேர்க்கடலை மற்றும் உளுந்தம் பருப்பைப் பிரித்தெடுக்கலாம். ஏனெனில், இரு திடப்பொருட்களும் வெவ்வேறு அளவுடையவை.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 2.
ஒரு குவளை நீரில் புளித் தண்ணீ ரும் சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்கவும். இது ஒரு கலவையா? எதனால் என்று உங்களால் கூற முடியுமா? இந்த கரைசல் இனிப்பானதா? புளிப்பானதா? அல்லது புளிப்பும் இனிப்பும் சேர்ந்ததா?
விடை:

  • ஒரு குவளை நீரில் புளித் தண்ணீ ர், சர்க்கரை கலந்தது ஒரு கலவை ஆகும்.
  • ஏனெனில், கலவை என்பது எளிதில் பிரிக்கக்கூடிய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களைக் கொண்டது.
  • இக்கலவை இனிப்பும், புளிப்பும் கலந்தது.

Question 3.
மூன்று நிலைமைகளில் உள்ள துகள்களின் அமைப்பை கீழே காணலாம்.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 86
அ) படம் 1 பருப்பொருளின் எந்த நிலைமையைக் குறிக்கிறது?
விடை:
படம் – 1: பருப்பொருளின் வாயு நிலையைக் குறிக்கிறது.

ஆ) எப்படத்தில் துகள்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை அதிகம்?
விடை:
படம் – 3 : துகள்களுக்கு இடையினான ஈர்ப்பு விசை அதிகம் திண்மநிலை

இ) திறந்த கலனில் வைக்க முடியாதது எது?
விடை:
படம் – 1 : உள்ள வாயுக்களைத் திறந்த கலனில் வைக்க முடியாது.

ஈ) கொள்கலனின் வடிவத்தைக் கொண்டது எது?
விடை:
படம் – 2 : உள்ள திரவம் கொள்கலனின் வடிவத்தைக் கொண்டது.

6th Science Guide நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்தெழுதுக

Question 1.
பின்வருவனவற்றுள் எவை ஒருபடித்தானவை ?
i) பனிக்கட்டி
ii) மரக்கட்டை
iii) மணல்
iv) காற்று
அ) (i) மற்றும் (iii)
ஆ) (ii) மற்றும் (iv)
இ) (i) மற்றும் (iv)
ஈ) (iii) மற்றும் (iv)
விடை:
இ) (i) மற்றும் (iv)

Question 2.
மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையை அதிகபட்சம் கொண்டது
அ) திரவங்க ள்
ஆ) பிளாஸ்மா துகள்கள்
இ) திண்மங்கள்
ஈ) வாயுக்கள்
விடை:
இ திண்மங்கள்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 3.
பின்வருவனவற்றுள் எது பருப்பொருள் அல்ல?
அ) எலக்ட்ரான்
ஆ) இரத்தம்
இ) நிலா பாறை
ஈ) ஈரப்பதம்
விடை:
அ) எலக்ட்ரான்

Question 4.
உருவளவு, நிறம் மற்றும் வடிவம் அடிப்படையிலான மாறுபட்ட பொருட்களைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை
அ) கைகளால் தெரிந்தெடுத்தல்
ஆ) தூற்றுதல்
இ) கதிரடித்தல்.
ஈ) சலித்தல்
விடை:
அ). கைகளால் தெரிந்தெடுத்தல்

Question 5.
கோதுமை மாவுடன் கலப்படம் செய்யப்பட்ட ரவையைப் பிரித்தெடுக்க பயன்படும் முறை
அ) சலித்தல்
ஆ) வடிகட்டுதல்
இ) தூற்றல்
ஈ) கதிரடித்தல்
விடை:
அ) சலித்தல்

II. பொருத்துக

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 80.3

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
______ துகள்கள் குறிப்பிட்ட வடிவமாக நெருங்கிப் பொதிந்துள்ளன.
விடை:
திண்மத்

Question 2.
கிடைக்கும் இடத்தை நிரப்ப, இடம் முழுவதும் பரவும் தன்மையே ______ எனப்படும்.
விடை:
விரவுதல்

Question 3.
மிகவும் தூய்மையான தங்கத்தைக் குறிப்பது _____
விடை:
24கேரட்

Question 4.
பால் ஒரு _____
விடை:
கலவை

Question 5.
துணி துவைக்கும் இயந்திரத்தின் செயல்படும் தத்துவம் _____
விடை:
மைய விலக்கல்

IV. குறுவினா

Question 1.
பருப்பொருள்களின் ஏதேனும் இரு சிறப்புப் பண்புகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. பருப்பொருள் துகள்களுக்கு இடையில் இடைவெளி உள்ளது,
  2. பருப்பொருள் துகள்களுக்கு இடையில் ஈர்ப்பு விசை உள்ளது

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்

Question 2.
கண்ணாடி எவ்வகைப் பருப்பொருள்?
விடை:
கண்ணாடி ஒரு திடப்பொருள் போன்று இருப்பினும் அதுவன்று. கண்ணாடி ஒரு வழிந்தோடக்கூடிய நீர்மம்.

Question 3.
சேர்மம் என்பது என்ன ?
விடை:
சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணையும் வேதியியல் சேர்க்கையாகும்.

Question 4.
மாவிலிருந்து தவிடுநீக்கப் பயன்படும் முறையைக் குறிப்பிட்டு விவரி.
விடை:
மாவிலிருந்து ‘சலித்தல்’ முறையில் தவிடு நீக்கப்படுகிறது. வெவ்வேறு அளவுடைய திடப்பொருள்களைப் பிரித்தெடுக்க இம்முறை ஏற்றதாகும்.

Question 5.
தெளியவைத்து இறுத்தல் என்றால் என்ன ?
விடை:
வண்டலாக்குதலுக்குப்பின், வண்டலைப் பாதிக்காதவாறு மேல் அடுக்கிலுள்ள நீரினைக் கவனமாக மற்றொரு கலனிற்கு மாற்றுதலே தெளியவைத்து இறுத்தல் ஆகும்.

V. விரிவாக விடையளி

Question 1.
வாயுக்கள் மற்றும் திரவங்களுக்கு இடையேயான சில ஒற்றுமைகள் யாவை?
விடை:

  1. வாயுக்களுக்கும், திரவங்களுக்கும் குறிப்பிட்ட வடிவம் கிடையாது.
  2. வாயு மற்றும் திரவத் துகள்கள் நகரும் தன்மையுடையன, இந்த இயக்கத்தை விரவுதல் என்கிறோம்.
  3. திரவங்களை வாயுக்களாக ஆவியாக்கவும், வாயுக்களை திரவங்களாக ஆவி சுருங்கவும் (குளிர்தல்) செய்யலாம்.

Question 2.
தெளியவைத்து இறுத்தலும், வடிகட்டுதலும் எவ்வாறு வேறுபடுகின்றன.? இவற்றுள் எது விரைவானது?
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 95
குறிப்பு: பொதுவாக, வடிகட்டுதல் முறையே, தெளியவைத்து இறுத்தலை விட விரைவானதும், முழுமையான பிரித்தல் முறையாகவும் கருதப்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் 98

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

6th Science Guide விசையும் இயக்கமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
வேகத்தின் அலகு _____அமீ
அ) மீ
ஆ) விநாடி
இ) கிலோகிராம்
ஈ) மீ/வி
விடை:
ஈ) மீ/வி

Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?
அ) பூமி தன் அச்சைப் பற்றிச் சுழலுதல்
ஆ) நிலவு பூமியைச் சுற்றி வருதல்
இ) அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
இ)அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 3.
கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு
அ) வேகம்=தொலைவு × காலம்
ஆ) வேகம்= தொலைவு / காலம்
இ) வேகம் = காலம் /தொலைவு
ஈ) வேகம் = 1/ (தொலைவு × காலம்)
விடை:
ஆ) வேகம் தொலைவு / காலம்

Question 4.
கீதா தன் தந்தையின் வண்டியினை எடுத்துக் கொண்டு அவளுடைய வீட்டிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள மாமா வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு செல்வதற்கு 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாள்.
கூற்று 1 : கீதாவின் வேகம் 1 கி.மீ/ நிமிடம்
கூற்று 2: கீதாவின் வேகம் 1 கி.மீ/மணி
அ) கூற்று 1 மட்டும் சரி
ஆ) கூற்று 2 மட்டும் சரி
இ) இரண்டு கூற்றுமே சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
அ)கூற்று 1 மட்டும் சரி

II. கீழ்க்க ண்ட கூற்றுகள் சரியா/தவறா எனக் கூறு.தவறு எனில் சரியான விடைகள் விடையை எழுதுக.

Question 1.
மையப் புள்ளியைப் பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்.
விடை:
சரி

Question 3.
மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் ஒரு சீரான இயக்கமாகும்.
சரியான விடை : இது சீரற்ற இயக்கம்
விடை:
தவறு

Question 4.
வருங்காலத்தில் மனிதர்களின் பதிலியாக ரோபாட்டுகள் செயல்படும். அக உணர்வு நிலையில் இருக்காது
விடை:
தவறு

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் _____
விடை:
நேர்க்கோட்டு இயக்கம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 2.
புவிஈர்ப்பு விசை _____ விசையாகும்.
விடை:
தொடா விசை

Question 3.
மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ______ இயக்கமாகும்.
விடை:
தற்சுழற்சி இயக்கம்

Question 4.
ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால், அப்பொருளின் இயக்கம் ______
விடை:
சீரான இயக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 51
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 52

V. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.

Question 1.
பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல்: _____
விடை:
தொடா விசை

Question 2.
தொலைவு : மீட்டர் :: வேகம் : _____?
விடை:
மீ/வி

Question 3.
சுழற்சி இயக்கம்: பம்பரம் சுற்றுதல் :: அலைவு இயக்கம் : ___?
விடை:
தனிஊசல்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

VI. சீரான வேகத்தில் காட்டினுள் செல்லும் ஒருயானை கடக்கும் தொலைவு, காலத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. சீரான வேகத்தின் அடிப்படையில் கீழ்கண்ட அட்டவணையை பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 60
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 60.1

VII. வலை அட்டவனையைப் பூர்த்தி செய்க:

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 61

VIII. ஒரு வார்த்தையில் விடையை எழுதுக.

Question 1.
தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் பெயர் ___
விடை:
தொடா விசை

Question 2.
காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறுபடுவது _____
விடை:
இயக்கம்

Question 3.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், திரும்பத் திரும்ப நிகழும் இயக்கம் _____ எனப்படும்.
விடை:
அலைவு இயக்கம்

Question 4.
சம கால இடைவெளியில், சமதொலைவை கடக்கும் பொருளின் இயக்கம் _____
விடை:
சீரான இயக்கம்

Question 5.
நுணுக்கமான அல்லது கடினமான வேலைகளைச் செய்யுமாறு கணினி நிரல்களால் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் _____
விடை:
செயற்கை நுண்ணறிவு

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

IX. ஒரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
விசை – வரையறு.
விடை:
விசை என்பது பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது.

Question 2.
பொருள் நகரும் பாதையைப் பொறுத்து இயக்கங்களை எவ்வாறு வகைப் படுத்தலாம்?
விடை:

  1. நேர்க்கோட்டு இயக்கம்
  2. வளைவுப்பாதை இயக்கம்
  3. வட்டப்பாதை இயக்கம்
  4. தற்சுழற்சி இயக்கம்
  5. அலைவு இயக்கம்
  6. ஒழுங்கற்ற இயக்கம்

Question 3.
நீ இயங்கும் மகிழுந்தினுள் உட்கார்ந்திருக்கும் போது உன்னருகில் அமர்ந்திருக்கும் உன் நண்பனைப்பொறுத்து நீ என்ன நிலையில் உள்ளாய்?
விடை:
இயங்கும் மகிழுந்தினுள் நானும் என் நண்பனும் உட்கார்ந்திருக்கும் போது, என் நண்பனும், நானும் ஓய்வு நிலையில் இருப்போம் என கருதுகிறேன்.

Question 4.
பூமியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும் – விவரி
விடை:
ஒரு குறிப்பிட்டட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்களை கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம். எனவே, புவியின் சுழற்சி கால ஒழுங்கு இயக்கமாகும்.

Question 5.
சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் வேறுபடுத்துக.
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 65

X. கணக்கிடுக.

Question 1.
ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் சராசரி வேகம் என்ன?
தீர்வு :
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 66
விடை:
80 கிலோ மீட்டர்/ மணி

XI. விரிவான விடையளி.

Question 1.
இயக்கம் என்றால் என்ன?
விடை:
இயக்கம்:

  • இயக்கம் என்பது காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக் கொள்வதை இயக்கம் என்கிறோம்.
  • இயங்கும் பாதையின் அடிப்படையில் இயக்கத்தை வகைப்படுத்தலாம்:
  1. நேர்க்கோட்டு இயக்கம்
    பொருளானது நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கும். (உம்) நேர்க்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன். தானாகக் கீழே விழும் பொருள்.
  2. வளைவுப்பாதை இயக்கம்
    பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும்.(உ.ம்) பந்தினை வீசுதல்
  3. வட்டப்பாதை இயக்கம்
    ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கும் (உம்) கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல்.
  4. தற்சுழற்சி இயக்கம்
    ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் (உம்): பம்பரத்தின் இயக்கம்.
  5. அலைவு இயக்கம்
    ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகர்தல் – (உ.ம்) தனிஊசல்.
  6. ஒழுங்கற்ற இயக்கம் ஒரு ஈயின் இயக்கம் அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்.

Question 2.
பொருளின் இயக்கத்தினை எவற்றின் அடிப்படையில் நாம் வகைப்படுத்தலாம்?
விடை:
எடுத்துக்காட்டுடன் விளக்குக. பொருளின் இயக்கத்தை நாம் காலம் மற்றும் வேகத்தைப் பொறுத்து வகைப் படுத்தலாம். கால இடைவெளி அடிப்படையில்:
1. கால ஒழுங்கு இயக்கம்
2. கால ஒழுங்கற்ற இயக்கம்

1. கால ஒழுங்கு இயக்கம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கங்களை நாம் கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம். (எ.கா) புவியை சுற்றிய நிலவின் இயக்கம்.

2. கால ஒழுங்கற்ற இயக்கம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக நடைபெறாது. இவ்வியக்கம் கால ஒழுங்கற்ற இயக்கம். சீரான வேகத்தின் அடிப்படையில்
1. சீரான இயக்கம்
2. சீரற்ற இயக்கம்

1. சீரான இயக்கம்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை சீரான இயக்கம் என்கிறோம். (எ.கா) தொடர்வண்டியின் இயக்கம்.
2. சீரற்ற இயக்கம்.
மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை நாம் சீரற்ற இயக்கம் என்கிறோம். (எ.கா) வாகன இயக்கம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

XII. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 80
விடை:
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 81

6th Science Guide விசையும் இயக்கமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
பூமி சுழல்வது
அ) மேற்கிலிருந்து கிழக்காக
ஆ) கிழக்கிலிருந்து மேற்காக
இ) வடக்கிலிருந்து தெற்காக
ஈ) தெற்கிலிருந்து வடக்காக
விடை:
அ) மேற்கிலிருந்து கிழக்காக

Question 2.
ஓர் அறையில் அங்கும் இங்குமாக நகரும் ‘ஈ’ -யின் பாதை
அ) கால ஒழுங்கு இயக்கம்
ஆ) கால ஒழுங்கற்ற இயக்கம்
இ) வளைவுப் பாதை இயக்கம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) கால ஒழுங்கற்ற இயக்கம்

Question 3.
சராசரி வேகத்திற்கான SI அலகு.
அ) மீட்டர்/வினாடி
ஆ) கிலோமீட்டர்/வினாடி
இ) கிலோமீட்டர் / நேரம்
ஈ) மீட்டர்/நேரம்
விடை:
அ) மீட்டர்/வினாடி

Question 4.
தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையானது சராசரியாக ____ வேகத்தில் ஒடும் மிக வேகமான விலங்காகும்.
அ) 100 கி.மீ/மணி
ஆ) 200 கி.மீ/மணி
இ) 112கி.மீ/மணி
ஈ) 10கி.மீ/மணி
விடை:
இ 112கி.மீ/மணி

Question 5.
புவியைச் சுற்றிய நிலவின் இயக்கம் _____
அ) அலைவு இயக்கம்
ஆ) கால ஒழுங்கு இயக்கம்
இ) வளைவு இயக்கம்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
ஆ) கால ஒழுங்கு இயக்கம்

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

II. சரியா?தவறா? என எழுதுக தவறு எனில் சரியான விடையை எழுதுக.

Question 1.
காலத்தைப் பொறுத்து ஒரு பொருள் தனது நிலையை மாற்றிக்கொள்வது இயக்கம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
கயிற்றின் ஒரு முனையில் கல்லினைக் கட்டிச் சுற்றுதல் தற்சுழற்சி இயக்கம் ஆகும்.
சரியான விடை : வட்டப்பாதை இயக்கமாகும்
விடை:
தவறு.

Question 3.
ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தையின் இயக்கம் கால ஒழுங்கு இயக்கம் ஆகும்.
விடை:
சரி

Question 4.
அலைவு இயக்கம் அனைத்தும் கால ஒழுங்கு இயக்கமாகும்.
விடை:
சரி

Question 5.
தொலைவின் SI அலகு கிலோமீட்டர்
தவறு சரியான விடை : தொலைவின் SI அலகு மீட்டர் (அ)
விடை:
தவறு

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
கூட்டம் மிகுந்த கடைத்தெருவில் மக்களின் இயக்கம் _____
விடை:
ஒழுங்கற்ற இயக்கம்

Question 2.
மாறுபட்ட வேகங்களில் இயங்கும் பொருளின் இயக்கம் ____
விடை:
சீரற்ற இயக்கம்

Question 3.
பிரியா தனது மிதிவண்டியில் 2 மணி நேரத்தில் 40 கி.மீ தூரம் பயணம் செய்தால் அவளுடைய சராரரி வேகம் _____
விடை:
20 கிலோமீட்டர்/மணி

Question 4.
இயக்கம் _____ வகைப்படும்.
விடை:
நான்கு

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 5.
ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல் _____
விடை:
தற்சுழற்சி இயக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 81.1

V. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.

Question 1.
தொடர் வண்டியின் இயக்கம் : சீரான இயக்கம் வாகனங்களின் இயக்கம் : _____
விடை:
சீரற்ற இயக்கம்

Question 2.
கால ஒழுங்கு இயக்கம் : புவியைச் சுற்றிய நிலவின் இயக்கம் அலைவு இயக்கம் : _____
விடை:
தனி ஊசலின் இயக்கம்

VI. விடுபட்ட இடங்களை நிரப்புக.
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 85

VII. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 86

VIII. குறுகிய விடையளி.

Question 1.
ஓய்வு நிலை என்றால் என்ன?
விடை:
ஒரு பொருள் காலத்தைப் பொறுத்து தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரே இடத்தில் இருப்பதை ஓய்வு நிலை என்கிறோம்.

Question 2.
விசையின் இரண்டு வகைகள் யாவை?
விடை:

  1. தொடு விசை
  2. தொடா விசை

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும்

Question 3.
தொடு விசை என்றால் என்ன?
விடை:
விசையானது பொருளினைத் தொடுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய விசை தொடுவிசை என அழைக்கப்படுகிறது.

Question 4.
சராசரி வேகம் என்றால் என்ன?
விடை:
ஓரலகு காலத்தில் ஒரு பொருள் எவ்வளவு தூரம் கடந்தது என்று கூறுவதே சராசரி வேகமாகும்.

Question 5.
ஒருபேருந்தானது மணிக்கு 40 கி.மீவேகத்தில் பயணம் செய்து 200கி.மீ தொலைவினைக் கடந்தால் அப்பேருந்து பயணம் செய்ய எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
விடை:
காலம் (t) = கடந்த தொலைவு (d) / சராசரி வேகம்
Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 86.2
= 5 மணி.

IX. விரிவான விடையளி.

Question 1.
விசை என்றால் என்ன ? விசையின் வகைகளை விளக்குக.
விடை:
விசை: பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசை என அழைக்கப்படுகிறது. விசையின் வகைகள் :

1. தொடு விசை
2. தொடா விசை

தொடு விசை: விசையானது பொருளினைத் தொடுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய விசை தொடுவிசை என அழைக்கப்படுகிறது. எ.கா. கால்பந்தை உதைத்தல்.
தொடா விசை: விசையானது பொருளினைத் தொடாமல் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய விசைகள் தொடா விசைகள் என அழைக்கப்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 95

பொருளின் மீது செயல்படுத்தப்படும் விசையானது

  • பொருளை ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கோ அல்லது இயக்க நிலையிலிருந்து ஓய்வு நிலைக்கோ மாற்றும்.
  • இயங்கும் பொருளின் வேகத்தினையோ அல்லது திசையையோ அல்லது இரண்டையுமோ மாற்றும்.
  • பொருளின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Samacheer Kalvi 6th Science Guide Term 1 Chapter 2 விசையும் இயக்கமும் 96