Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

10th Social Science Guide காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?
அ) வஹாபி கிளர்ச்சி
ஆ) ஃபராசி இயக்கம்
இ) பழங்குடியினர் எழுச்சி
ஈ) கோல் கிளர்ச்சி
விடை:
ஆ) ஃபராசி இயக்கம்

Question 2.
‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?
அ) டிடு மீர்
ஆ) சித்து
இ) டுடு மியான்
ஈ) ஷரியத்துல்லா
விடை:
இ டுடு மியான்

Question 3.
நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார் ?
அ) சாந்தலர்கள்
ஆ) டிடு மீர்
இ) முண்டா
ஈ) கோல்
விடை:
அ) சாந்தலர்கள்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 4.
கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
அ) தாதாபாய் நௌரோஜி
ஆ) நீதிபதி கோவிந்த் ரானடே
இ) பிபின் சந்திர பால்
ஈ) ரொமேஷ் சந்திரா
விடை:
இ பிபின் சந்திர பால்

Question 5.
வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது ?
அ) 1905 ஜூன் 19
ஆ) 1906 ஜூலை 18
இ) 1907 ஆகஸ்ட் 19
ஈ) 1905 அக்டோபர் 16
விடை:
1905 அக்டோபர் 16

Question 6.
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
அ) கோல் கிளர்ச்சி
ஆ) இண்டிகோ கிளர்ச்சி
இ) முண்டா கிளர்ச்சி
ஈ) தக்காண கலவரங்கள்
விடை:
இ முண்டா கிளர்ச்சி

Question 7.
1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
அ) அன்னி பெசன்ட் அம்மையார்
ஆ) பிபின் சந்திர பால்
இ) லாலா லஜபதி ராய்
ஈ) திலகர்
விடை:
ஈ) திலகர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 8.
நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
அ) தீன பந்து மித்ரா
ஆ) ரொமேஷ் சந்திர தத்
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) பிர்சா முண்டா
விடை:
அ) தீன பந்து மித்ரா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக .

Question 1.
மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான …………….. இயக்கம் 1827ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.
விடை:
வஹாபி

Question 2.
சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ………………
விடை:
கோல் கிளர்ச்சி

Question 3.
……………… சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது.
விடை:
சோட்டா நாக்பூர் குத்தகை

Question 4.
சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு …………….
விடை:
1908

Question 5.
W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ………..
விடை:
1885

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
(i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.
(ii) 1831 – 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன்கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.
(iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.
(iv) 1879ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை
ஆ) (ii) மற்றும் (iii) சரியானவை
இ) (iii) மற்றும் (iv) சரியானவை
ஈ) (i) மற்றும் (iv) சரியானவை
விடை:
அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 2.
(i) காலனி ஆட்சி பற்றியப் பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.
(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். (
(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.

அ) (i) மற்றும் (iii) சரியானவை
ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை
இ) (ii) மற்றும் (iii) சரியானவை
ஈ) (iii) மற்றும் (iv) சரியானவை
விடை:
ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை

Question 3.
கூற்று : இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.
காரணம் : இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று தவறு காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

Question 4.
கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம் : மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
விடை:
இ கூற்றும் மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
ஆங்கிலேயே இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
விடை:

  • மறுசீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள்
  • சமய இயக்கங்கள்
  • சமூகக் கொள்ளை
  • மக்களின் கிளர்ச்சி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 2.
வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.
விடை:
சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.

Question 3.
வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?
விடை:

  • இந்தியா பொருளாதார ரீதியாக அடிபணிந்து பிரிட்டிஷ் தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்குபவராக மாற்றப்பட்டது.
  • அதேசமயம் இது ஆங்கில உற்பத்தியை கைவிடுவதற்கும் பிரிட்டிஷ் மூலதனத்தின் முதலீட்டிற்கும் ஒரு சந்தையாக மாறியது.
  • எனவே காலனித்துவ பொருளாதாரம் இந்தியாவுக்கு எந்தவொரு சாதகமான வருமானமும் இல்லாமல் தொடர்ந்து இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வளங்களை மாற்றுவதாக இருந்தது.
  • இது ‘செல்வத்தின் வடிகால்’ என்று அழைக்கப்படுகிறது.

Question 4.
தன்னாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.
விடை:

  • அரசியலமைப்பு வழிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிற்குள் தன்னாட்சியை அடைவது.
  • தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியை அடைவது. ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுக்குப் பின்னர் இந்த அரசாட்சி சாராதநிலை வழங்கப்பட்டது.
  • அவர்களின் இலக்குகளை அடைய வன்முறையல்லாத அரசியல் சாசன வழிமுறைகளைக் கையாள்வது.

Question 5.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.
விடை:

  • லக்னோ ஒப்பந்தத்தின் (1916) போது காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென்பதே ஏற்றுக்கொண்டது.
  • இதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
1857ஆம் ஆண்டின் கிளாச்சியான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்.
விடை:
காரணங்கள் : ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை :
உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.

வாரிசு இழப்புக் கொள்கை:

  • சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.
  • இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரத்தன்மை இல்லாதது.
  • 1806ஆம் ஆண்டில் வேலூரில் சிப்பாய்கள் சமயக் குறியீடுகளை நெற்றியில் அணிவதற்கும், தாடி வைத்துக் கொள்வதற்கும், தடைவிதிக்கப்பட்டதோடு தலைப்பாகைகளுக்கு பதிலான வட்ட வடிவிலான தொப்பிகளை அணியுமாறும் பணிக்கப்பட்டனர்.
  • ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்தும் சிப்பாய்கள் கவலை அடைந்தனர்.
  • ஐரோப்பிய சிப்பாய்களுடன் ஒப்பிடுகையில் இந்திய சிப்பாய்களுக்கு மிகக் குறைந்த அளவில்
    ஊதியம் வழங்கப்பட்டது.
  • அவர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டனர்.

உடனடிக்காரணம்:

  • புதிய என்ஃபீல்டு துப்பாக்கிக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் பற்றிய வதந்திகள் புரட்சிக்கு வித்திட்டது.
  • பசு மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பசை (கிரீஸ்) இத்தகைய புதிய குண்டு பொதியுறையில் (காட்ரிட்ஜ்களில்) பயன்படுத்தப்பட்டன.
  • சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம் கொண்டனர்.
  • மார்ச் 29ஆம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ஐரோப்பிய அதிகாரியைத் தாக்கினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 2.
1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்துகொண்டனர்?
விடை:
இந்து முஸ்லிம் பிரிவினை:
வங்காள அடையாளத்தை உணர்வுப் பெருமையுடன் உருவாக்க வட்டார மொழிப் பத்திரிகைகளின் வளர்ச்சி பெரும் பங்காற்றியது.

பிரிவினைக்கு எதிரான இயக்கம்:

  • பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிப்பது அவற்றில் ஒரு முறையாகும்.
  • எனினும் சுதேசி இயக்கத்தின் கொள்கை வங்கப் பிரிவினையைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதில் இன்னமும் கட்டுப்பட்டிருந்தது.
  • 1905 அக்டோபர் 16இல் வங்காளம் அதிகாரப்பூர்வமாகப் பிரிவினையானபோது அந்தநாள் துக்கநாளாக அறிவிக்கப்பட்டது.
  • ஆயிரக்கணக்கானவர்கள் கங்கை நதியில் புனித நீராடியதோடு வந்தே மாதரம் பாடலை பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள்.

வங்காளத்தில் புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் (1905-1911):

  • புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் இந்தியாவைத் தற்சார்பு அடையச் செய்யும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக எப்போதும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருந்தன.
  • வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது நான்கு முக்கியப் போக்குகள் காணப்பட்டன.
    1. மிதவாதப்போக்கு
    2. ஆக்கப்பூர்வ சுதேசி
    3. தீவிர தேசியவாதம்
    4. புரட்சிகர தேசியவாதம்

10th Social Science Guide காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இந்தியா கிழக்கிந்திய கம்பெனியால் கொள்ளையடிக்கப்படும் செயலானது ………………………. ஆண்டுகளுக்கு நீடித்தது.
அ) 100
ஆ) 190
இ) 109
ஈ) 209
விடை:
ஆ) 190

Question 2.
……………… ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு பெரும் சவாலாக இருந்தது.
அ) 1857
ஆ) 1987
இ) 1587
ஈ) 1875
விடை:
அ) 1857

Question 3.
மார்ச் 29ம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ……………………… அதிகாரியைத் தாக்கினார்.
அ) அமெரிக்க
ஆ) ரஷ்ய
இ) ஐரோப்பி
ஈ) எதுவுமில்லை
விடை:
இ ஐரோப்பிய

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 4.
1857ஆம் ஆண்டில் பிற்பகுதியில் …………….. ஆங்கிலேய துருப்புகளால் கைப்பற்றப்பட்டது.
அ) சென்னை
ஆ) தில்லி
இ) மும்பை
ஈ) ஆந்த்ரா
விடை:
ஆ) தில்லி

Question 5.
இந்திய ராணுவத்தின் கட்டமைப்பில் ………………. முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
அ) ஐந்து
ஆ) இரண்டு
இ) மூன்று |
ஈ) ஏழு
விடை:
ஆ) இரண்டு

Question 6.
பருவத்தின் இறுதியில் இண்டிகோ பயிருக்கு ……………. விவசாயிகளுக்கு ஆங்கிலேய முகவர்கள் கொடுத்தனர்.
அ) குறைந்த விலையில்
ஆ) அதிக விலையில்
இ) நடுத்தர விலையில்
ஈ) மிக அதிக விலையில்
விடை:
அ) குறைந்த விலையில்

Question 7.
இண்டிகோ கிளர்ச்சி தொடங்கப்பட்ட ஆண்டு ………………….
அ) 1989
ஆ) 1859
இ) 1789
ஈ) 1895
விடை:
ஆ) 1859

Question 8.
அதிக அளவிலான வரி விதிப்பு ……………… பாதித்தது.
அ) வேளாண்மை
ஆ) மீன்பிடித்தல்
இ) சுரங்கத் தொழில்
ஈ) தொழிலகம்
விடை:
அ) வேளாண்மை

Question 9.
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராக 1885இல் ………………. இருந்தார்.
அ) உமேஷ் சந்திர பானர்ஜி
ஆ) A.O. ஹியூம்
இ) கர்சன் பிரபு
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) உமேஷ் சந்திர பானர்ஜி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 10.
……………. ல் சுதேசி இயக்கம் மாற்றுப்பாதையில் செல்லத் துவங்கியது.
அ) 1806
ஆ) 1906
இ) 1916
ஈ) 1866
விடை:
ஆ) 1906

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பிளாசிப் போருக்கு வித்திட்டவர் ……………. ஆவார்.
விடை:
ராபர்ட் கிளைவ்

Question 2.
கிராம அமைப்புகளின் கட்டமைப்பு மூலமாக ………….. விவசாயிகள் ஒன்று திரட்டப்பட்டனர்.
விடை:
பெரும் எண்ணிக்கையில்

Question 3.
ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இந்தியாவில் …………….. பற்றிய எந்த விரிவான திட்டமும் நடைமுறைப்படுத்தவில்லை.
விடை:
தனிச்சொத்துரிமை

Question 4.
சாந்தலர் வசமிருந்த பகுதிகளை ஒழுங்குபடுத்த கொண்டு வரப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கிய மண்ட லம் ………….. ஆகும்.
விடை:
சாந்தல் பர்கானா

Question 5.
கூட்டாக நிலத்தை வைத்துக் கொண்டு ………………. என்ற முறையில் விவசாயம் செய்வதில் முண்டா மக்கள் பெயர் பெற்றவர்கள்.
விடை:
குண்டக்கட்டி

Question 6.
தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க ………………. தமது சேவைகளை வழங்கினார்.
விடை:
A.0. ஹியூம்

Question 7.
வட இந்தியாவின் பாதிக்கப்பட்ட ………………. வாழ்ந்த மக்களும் உள்நாட்டுக் கிளர்ச்சிக்கு சரிசமமாக ஆதரவு தெரிவித்தனர்.
விடை:
கிராம சமூகத்தில்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 8.
1905ஆம் ஆண்டின் ………………. மிகவும் அதிருப்தியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.
விடை:
வங்கப் பிரிவினை

Question 9.
1914ஆம் அண்டு ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் போர் அறிவித்த நிலையில் மித தேசியவாத மற்றும் தாராளமய தலைமை …………… ஆதரவைத் தந்தது.
விடை:
பிரிட்டிஷாருக்கு

Question 10.
முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை ……………. ஏற்றது.
விடை:
காங்கிரஸ் தலைமை

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : ஹாஜி ஷரீயத்துல்லா என்பவரால் 1819ஆம் ஆண்டு பராசி இயக்கம் தொடங்கப்பட்டது.
காரணம் : ஃஷரீயத்துல்லாவிற்கு பிறகு டுடுமியான் தலைமை ஏற்றார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
விடை:
ஆ) கூற்று தவறு காரணம் சரி.

Question 2.
கூற்று : வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும், நிலப்பிரபுக்களுக்கும் ஏகிராகத் துவங்கப்பட்டது.
காரணம் : டிடு மீர் விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நபராகத் திகழ்ந்தார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
விடை:
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
சமய இயக்கங்கள் குறிப்பு வரைக.
விடை:
சமய இயக்கங்களுக்கு தலைமையேற்ற சமயத்தலைவர்கள் சமயச் சிந்தனைகளின் அடிப்படையில் சமூகத்தை சீரமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்.

Question 2.
சமூகக் கொள்கை குறிப்பு வரைக.
விடை:

  • இத்தகைய இயக்கங்களின் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும் பாரம்பரிய உயர்குடியினராலும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர்.
  • ஆனால் அச்சமூகத்தைச் சார்ந்த மக்கள் அவர்களைத் தங்களுடைய மேம்பாட்டிற்காக உழைத்த நாயகர்களாகவும், சாதனையாளர்களாகவும் கண்டனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 3.
மேலாதிக்கக் கொள்கை குறிப்பு வரைக.
விடை:

  • ஆங்கிலேயர் தங்களை வானளாவிய அதிகாரங்கள் கொண்ட உயர் அதிகார அமைப்பாக கருதினார்கள்.
  • உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.

Question 4.
1857ம் ஆண்டின் பெருங்கலகத்தின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • இராணுவ வீரர்களுடன் ஆயுதமேந்திய படைகளும் இணைந்து நடந்த முதல் மாபெரும் புரட்சி இதுவேயாகும்.
  • இருதரப்புகளிலும் தூண்டப்பட்டதால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கிளர்ச்சியில் வன்முறை வெடித்தது.

Question 5.
இந்தியா ஆங்கிலேய அரசுக் காலனியாக மாறுதல் பற்றி எழுதுக.
விடை:

  • 1858ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செலுத்தப்படும் ஆங்கிலேய அரசின் காலனிகளில் ஒன்றாக இந்தியா அறிவிக்கப்பட்டது.
  • அமைச்சரவை உறுப்பினர் ஒருவரிடம் பொறுப்பு வழங்கப்பட்டது, அவர் இந்தியாவுக்கான அரசுச் செயலராக பதவி வகிப்பார்.

Question 6.
பிரித்தாளும் கொள்கை வரையறு.
விடை:
இந்திய சமூகத்தின் சாதி, மதம், மொழி மற்றும் மண்டலம் ஆகியன சார்ந்த வேறுபாடுகளை ஆகிலேயர்கள் தங்களுக்கச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டதையடுத்து அது பிரித்தாளும் கொள்கை என்று அறியப்பட்டது.

Question 7.
வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போக்குகள் யாவை?
விடை:

  • மிதவாதப் போக்கு
  • ஆக்கபூர்வ சுதேசி
  • தீவிர தேசியவாதம்
  • புரட்சிகர தேசியவாதம்

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய கோரிக்கைகளை எழுதுக.
விடை:

  • மாகாண மற்றும் மத்திய அளவில் சட்டமேலவைகளை உருவாக்குகிறது.
  • சட்டமேலவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.
  • நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிப்பது. – இராணுவச்செலவுகளைக் குறைப்பது.
  • உள்நாட்டு வரிகளைக் குறைப்பது.
  • நீதிபதி மூலமாக விசாரணையை விரிவுசெய்வது.
  • ஒரே நேரத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆட்சிப்பணித் தேர்வுகளை நடத்துவது.
  • காவல்துறை சீர்திருத்தங்கள்.
  • வனச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல்.
  • இந்தியத் தொழிற்சாலைகளின் மேம்பாடு மற்றும் முறையற்ற கட்டணங்கள் மற்றும் கலால் வரிகளை முடிவுக்குக் கொண்டுவருவது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

Question 2.
இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய எழுச்சி மற்றும் பொருளாதாரத்தை பற்றி விவரிக்க.
விடை:
அ. தேசியத்தின் எழுச்சி:
19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆங்கிலக் கல்வி பெற்ற இந்தியர்களின் புதிய சமூக வகுப்பினர் மத்தியில் தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

பல்வேறு பிரச்சாரங்கள் மூலமாக தேசம், தேசியம் மற்றும் பல்வேறு மக்களாட்சியின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றிய கருத்துக்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய பணியை இந்திய அறிவாளர்கள் மேற்கொண்டனர். வட்டார மொழி மற்றும் ஆங்கில அச்சு ஊடகங்களின் வளர்ச்சி இது போன்ற கருத்துகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியது.

எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருந்தாலும் தேசிய அளவிலான வீச்சைக் கொண்டு அகில இந்தியா முழுவதும் தொடர்புகளை உருவாக்கும் திறன் பெற்றிருந்தனர்.

அவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களாக பணியாற்றினார்கள்.

ஆ. காலனி ஆட்சிபற்றிய பொருளாதார விமர்சனம்:
காலனி ஆட்சி பற்றி பொருளாதார விமர்சனத்தை உருவாக்குவதே தொடக்ககால இந்திய தேசியவாதிகளின் பங்களிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது.

தாதாபாய் நௌரோஜி, நீதிபதி ரானடே மற்றும் ரொமேஷ் சந்திர தத் ஆகியோர் காலனி ஆட்சியில் பொருளாதாரம் பற்றிய இந்த விமர்சனத்தைச் செய்வதில் முக்கியப் பங்காற்றினார்கள்.

இந்தியாவை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அடக்கி ஆள்வதுதான் பிரிட்டிஷாரின் வளத்துக்கு அடிப்படையானது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கமே முக்கியத் தடையாக உள்ளதென்று அவர்கள் முடிவு செய்தனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

10th Social Science Guide ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வேலுநாச்சியார்
ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்
விடை:
ஆ) பூலித்தேவர்

Question 2.
சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
அ) வேலுநாச்சியார்
ஆ) கட்டபொம்மன்
இ) பூலித்தேவர்
ஈ) ஊமைத்துரை
விடை:
இ) பூலித்தேவர்

Question 3.
சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
அ) கயத்தாறு
ஆ) நாகலாபுரம்
இ) விருப்பாட்சி
ஈ) பாஞ்சாலங்குறிச்சி
விடை:
ஆ) நாகலாபுரம்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 4.
திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வீரபாண்டிய கட்டபொம்மன்
ஈ) கோபால நாயக்கர்
விடை:
அ) மருது சகோதரர்கள்

Question 5.
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
அ) 1805 மே 24
ஆ) 1805 ஜூலை 10
இ) 1806 ஜூலை 10
ஈ) 1806 செப்டம்பர் 10
விடை:
இ 1806 ஜூலை 10

Question 6.
வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
அ) கர்னல் பேன்கோர்ட்
ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
இ) சர் ஜான் கிரடாக்
ஈ) கர்னல் அக்னியூ
விடை:
இ சர் ஜான் கிரடாக்

Question 7.
வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
அ) கல்கத்தா
ஆ) மும்பை
இ) டெல்லி
ஈ) மைசூர்
விடை:
அ) கல்கத்தா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பாளையக்காரர் முறை தமிழகத்தில் ……………… என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
விஸ்வநாத நாயக்கர்

Question 2.
வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக ………………. பாதுகாப்பில் இருந்தனர்.
விடை:
கோபால நாயக்கர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 3.
கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் என்பவரை அனுப்பிவைத்தார்.
விடை:
இராமலிங்க முதலியார்

Question 4.
கட்டபொம்மன் ………………. என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
விடை:
கயத்தார்

Question 5.
மருது சகோதரர்களின் புரட்சிபிரிட்டிஷ்குறிப்புகளில் …………….. என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை:
2ம் பாளையக்காரர் போர்

Question 6.
…………….. என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.
விடை:
ஃபதேக் ஹைதர்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
(i) பாளையக்காரர் முறை காகதீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழி நடத்தினார்.

அ) (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி.
ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.
இ) (iii) மற்றும் (iv) மட்டும் சரி.
ஈ) (i) மற்றும் (iv) மட்டும் சரி.
விடை:
ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 2.
(i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.
(ii) காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.
(iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழி நடத்தினார்.
(iv) காரன்வாலிஸ் மே 1799ல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
இ) (ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி
ஈ) (i) மற்றும் (iv) ஆகியவை சரி
விடை:
ஆ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி

Question 3.
கூற்று : பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.
காரணம் : மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
விடை:

  • பாளையக்காரர்கள் வரிவசூலிப்பதிலும், நிலப்பகுதிகளை நிர்வகிப்பதிலும், வழக்குகளை விசாரிப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் தன்னிச்சையாகச் செயல்பட முடிந்தது.
  • அவர்களது காவல் காக்கும் கடமை படிக்காவல் என்றும் அரசுக்காவல் என்றும் அழைக்கப்பட்டது.

Question 2.
கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.
விடை:
கிழக்கில் அமையப்பெற்ற பாளையங்கள்:
சாத்தூர், நாகலாபுரம், எட்டையபுரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி ஆகியனவாகும்.

மேற்கில் அமையப்பெற்ற முக்கியமான பாளையங்கள் :
ஊத்துமலை, தலைவன் கோட்டை நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர் ஆகியனவாகும்.

Question 3.
களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குக் செல்லும் படையை பலப்படுத்தினார்.
  • மேலும் கம்பெனியின் 1000 சிப்பாய்களோடு நவாபால் அனுப்பப்பட்ட 600 க்கும் மேற்பட்ட படை வீரர்களையும் மாபூஸ்கான் பெற்றார்.
  • மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தும் முன்பாக திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் பூலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.
  • களக்காட்டில் நடைப்பெற்ற போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. cooooooooo பிரிலியண்ட் ’ஸ்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 4.
கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சர்ச்சை ஏற்படக் காரணமாக விளங்கியது எது?
விடை:

  • வசூலிக்கப்பட்ட வரியில் ஆறில் ஒரு பங்கு நவாபிற்கும் அவர் குடும்ப பராமரிப்பிற்கும் என ஒதுக்கப்பட்டது.)
  • பாஞ்சாலங்குறிச்சியிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை கம்பெனி பெற்றிருந்தது,
  • அனைத்து பாளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.
  • ஆட்சியர்கள் பாளையக்காரர்களை அவமானப்படுத்தியதோடு வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.
  • இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட அடிப்படையானது.

Question 5.
திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.
விடை:

  • பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801ஆம் ஆண்டின் பேரறிக்கை ஆகும்.
  • இப்பேரறிக்கை திருச்சியில் அமையப்பெற்ற நவாபின் கோட்டையின் முன்சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரிலும் ஒட்டப்பட்டது.
  • ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்ட னர்.
  • உத்தி விரைவில் பாளையக்காரர்களின் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக.
விடை:
வீரபாண்டிய கட்டபொம்மன் :

  • பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.
  • தொடர்ந்து நடந்த சம்பவங்கள் கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் மோதல்போக்கை ஏற்படுத்தின.
  • ளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.
  • ஆட்சியர்கள் பாளையக்காரர்களிடம் வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.
  • இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும்பகை ஏற்பட அடிப்படையானது.

ஜாக்சனோடு ஏற்பட்ட மோதல்:

  • 1798 ஆகஸ்ட் 19இல் இராமநாதபுத்தில் வந்து தன்னைச் சந்திக்குமாறு, கட்டபொம்மனுக்கு அவர் ஆணை பிறப்பித்தார்.
  • ஆனால் கட்டபொம்மன் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காததோடு ஜாக்சன் அவரைச் சந்திக்க மறுத்தார்.
  • ஊமைத்துரை கட்டபொம்மன் தப்ப உதவினார்.
  • சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை:

  • மே 1799இல் மதராஸில் இருந்த வெல்லெஸ்லி பிரபு திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
  • பானெர்மென் செப்டம்பர் 5 அன்று முழுப் படைகளையும் பாஞ்சாலங்குறிச்சியில் கொண்டுவந்து நிறுத்தினார்.
  • பானெர்மென் இராமலிங்கரை தூதனுப்பி கட்டபொம்மனைச் சரணடையுமாறு கேட்டுக்கொண்டார்.
  • கட்டபொம்மன் மறுத்தார்.
  • கள்ளர்பட்டியில் நடைபெற்ற மோதலில் சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்டார்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்படல் :

  • கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பிச் சென்றார்.
  • எட்டையபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்களால் துரோகமிழைக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியில் பிடிபட்டார்.
  • திருநெல்வேலிக்கு மிக அருகேயுள்ள கயத்தாறில் பாளையங்கோட்டைக்கு முன்பாக இருந்த புளியமரத்தில் சகப் பாளையக்காரர்களின் முன்னிலையில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 2.
சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆராய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக.
விடை:

  • மருது சகோதரர்கள் இருவரும் சிவகங்கையின் முத்துவடுகநாதரின் திறமையான படைத்தளபதிகளாவார்.
  • மருது சகோதரர்கள் பிரிட்டிஷாரை எதிர்க்கத் திட்டமிட்டனர்.
  • 1800இல் மீண்டும் கலகம் வெடித்தது.
  • இது இரண்டாம் பாளையக்காரர் போர் எனப்பட்டது.

சிவகங்கையின் வீழ்ச்சி:

  • ஆங்கிலேயர்கள் மே 1801இல் தஞ்சாவூரிலும், திருச்சியிலும் இருந்த கலகக்காரர்களைத் தாக்கினார்கள்.
  • கலகக்காரர்கள், பிரான்மலையிலும், காளையார் கோவிலும் தஞ்சம் புகுந்தனர்.
  • அவர்கள் பிரிட்டிஷ் படைகளால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டனர்.
  • இறுதியாக வலுவான இராணுவமும், சிறப்பான தலைமையும் கொண்ட ஆங்கிலேய கம்பெனியே விஞ்சி நின்றது.
  • கலகம் தோற்றதால் 1801இல் சிவகங்கை இணைக்கப்பட்டது.
  • ஊமைத்துரையும், செவத்தையாவும் பிடிக்கப்பட்டு 1801 நவம்பர் 16இல் பாஞ்சாலங்குறிச்சியில் தலை துண்டிக்கப்பட்டனர்.
  • கலகக்காரர்களில் 73 பேர் பிடிக்கப்பட்டு மலேசியாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
  • மருது சகோதரர்களின் கலகம் தென்னிந்தியப் புரட்சி என்று அழைக்கப்படுவதோடு தமிழக வரலாற்றில் தனித்துவம் பெற்றதாகவும் கருதப்படுகிறது.

கர்நாடக உடன்படிக்கை:

  • 1801 ஜூலை 31இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின்படி பிரிட்டிஷார் நேரடியாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினர்.
  • பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்ததுடன் அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு அவர்களது படைகளும் கலைக்கப்பட்டன.

Question 3.
வேலூரில் 1806இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.
விடை:
புரட்சி வெடித்தல்:

  • 1806 ஜூலை 10 அன்று அதிகாலையிலேயே முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர்.
  • கோட்டைக் காவற்படையின் உயர் பொறுப்புவகித்த கர்னல் பேன்கோர்ட் என்பவர்தான் முதல் பலியானார்.
  • இருபத்தி மூன்றாம் படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் மீக்காரஸ் கொல்லப்பட்டார்.
  • கோட்டையைக் கடந்து சென்று கொண்டிருந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் துப்பாக்கிகளின் முழக்கத்தைக் கேட்டார்.
  • சூழலை விசாரித்தறிய முற்பட்ட அவரது உடல் தோட்டாக்களால் துளைக்கப்பட்டது.
  • ஏறத்தாழ பனிரெண்டுக்கும் அதிகமான அதிகாரிகள் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் கொல்லப்பட்டார்கள்.
  • அவர்களின் லெப்டினென்ட் எல்லியும், லெப்டினென்ட் பாப்ஹாமும் பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

ஜில்லஸ்பியின் கொடுங்கோன்மை:

  • கோட்டைக்கு வெளியேயிருந்த மேஜர் கூட்ஸ் ஆற்காட்டின் குதிரைப்படைத் தளபதியாக இருந்த கர்னல் ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தார்.
  • புரட்சிக்காரர்கள் திப்புவின் மூத்த மகனான ஃபதே ஹைதரை புதிய மன்னராகப் பிரகடனம் செய்து மைசூர் சுல்தானின் புலி கொடியை கோட்டையில் ஏற்றியிருந்தனர்.

புரட்சியின் பின்விளைவுகள் :

  • திப்புவின் மகன்களை கல்கத்தாவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
  • கலவரத்தை அடக்குவதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்குப் பரிசுத்தொகையும் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
  • புதிய இராணுவ விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது.

10th Social Science Guide ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
பரம்பரை பரம்பரையாக ………………… பாளையக்காரர்கள் இருக்கிறார்கள்.
அ) 72
ஆ) 52
இ) 62)
ஈ) 27
விடை:
அ) 72

Question 2.
…………… இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்குக் கப்பம் கட்டும் குறுநில அரசைக் குறிக்கிறது.
அ) சமஸ்கிருதம்
ஆ) ஹிந்தி
இ) தமிழ்
ஈ) பெங்காலி
விடை:
இ தமிழ்

Question 3.
எந்த ஆண்டில் பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன?
அ) 16 மார்ச் 1761
ஆ) 18 மே 1961
இ) 16 மே 1761
ஈ) 18 மார்ச் 1761
விடை:
இ 16 மே 1761

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 4.
யூசுப்கான் மீது நம்பிக்கை துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டு?
அ) 1764
ஆ) 1876
இ) 1766
ஈ) 1876
விடை:
அ) 1764

Question 5.
ஹைதர் அலி தனது ……………… கோட்டை படைத்தலைவரான சையதிடம் அவருக்கு வேண்டிய ராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார்.
அ) திருச்சி
ஆ) தஞ்சாவூர்
இ) திண்டுக்கல்
ஈ) மதுரை
விடை:
இ திண்டுக்கல்

Question 6.
பிரிட்டிஷ் படைகளால் கோபால நாயக்கர் ……………. வெற்றிகொள்ளப்பட்டார்.
அ) 1872
ஆ) 1901
இ) 1801
ஈ) 1972
விடை:
இ 1801

Question 7.
கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவையானது 1798ஆம் ஆண்டு வாக்கில் …………………. பகோடாக்களாக இருந்தது.
அ) 2510
ஆ) 3310
இ) 6310
ஈ) 3301
விடை:
ஆ) 3310

Question 8.
1798 ஆகஸ்ட் 18ல் …………… வந்து தன்னைச் சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஜாக்சன் ஆணை பிறப்பித்தார்.
அ) திருச்சி
ஆ) இராமநாதபுரம்
இ) திண்டுக்கல்
ஈ) மதுரை
விடை:
ஆ) இராமநாதபுரம்

Question 9.
மருது சகோதரர்களும், கட்டபொம்மனும் இணைந்து …………….ஐ எதிர்ப்பது என்று முடிவெடுத்தனர்.
அ) துருக்கியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) ஆங்கிலேயர்கள்
ஈ) டச்சுக்காரர்கள்
விடை:
இ ஆங்கிலேயர்கள்

Question 10.
சிவசுப்ரமணியனார் நாகலாபுரத்தில் ………………. அன்று தூக்கிலிடப்பட்டார்.
அ) 13 செப்டம்பர்
ஆ) 31 செப்டம்பர்
இ) 13 அக்டோபர்
ஈ) 30 அக்டோபர்
விடை:
அ) 13 செப்டம்பர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நாடுபிடிக்கும் நோக்கத்திற்கு முதல் எதிர்வினை ……………… பகுதியின் நெற்கட்டும் செவலில் ஆட்சிபுரிந்து வந்த பூலித்தேவரிடமிருந்து வெளிப்பட்டது.
விடை:
திருநெல்வேலி

Question 2.
பூலித்தேவர் மைசூரின் …………….. மற்றும் பிரெஞ்சுகாரர்களது ஆதரவினைப் பெற முயன்றது.
விடை:
உடையாள்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 3.
……………… என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில்புரிந்த பெண்ணின் பெயராகும்.
விடை:
ஹைதர் அலி

Question 4.
வசூலிக்கப்பட்ட வரியில் ……………… நவாபிற்கும் குடும்ப பராமரிப்பிற்கும் ஒதுக்கப்பட்டது.
விடை:
ஆறில் ஒரு பங்கு

Question 5.
கட்டபொம்மனும் நிலுவைத் தொகையில் ………………. பகோடாக்கள் நீங்கலாக பிற நிலுவைத் தொகையினை செலுத்தி இருந்தனர். விடை:
1080

Question 6.
.கட்டபொம்மணின் ………………. மேஜர் பானர்மென் செப்டம்பர் 5 அன்று கோட்டையைத் தாக்கினார்.
விடை:
பிடிகொடுக்கா பதிலால்

Question 7.
………………. கோட்டை மிக குறைந்த காலத்தில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டது.
விடை:
பாஞ்சாலங்குறிச்சி

Question 8.
மருது சகோதரர்கள் …………….. நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர்.
விடை:
ஜீன் 1801

Question 9.
ஆங்கிலேயரின் ………………. என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களில் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.
விடை:
பிரித்தாளும் கொள்கை

Question 10.
கலகக்காரர்களில் ……………… பிடிக்கப்பட்டு மலேயாவின் பினாங்கிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
விடை:
73 பேர்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பினார்.
காரணம் : மாபூஸ்கான் வெற்றி பெற்றார்.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை .

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 2.
கூற்று : நாயக்க மன்னர்களால் 75 பாளையங்கள் உருவாக்கப்பட்டது.
காரணம் : இவை இரு தொகுதியைக் கொண்டது .

அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.
இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.
விடை:
ஈ) கூற்று தவறானது. காரணம் சரியானது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
ஏன் யூசுப்கான் பூலித்தேவருடன் போர் தொடுக்க ஆயத்தமாகவில்லை?
விடை:
கம்பெனியாரால் அனுப்பப்பட்ட யூசுப்கான் (கான்சாகிப் என்றும் தமது மதமாற்றத்திற்கு முன்பு மருதநாயகம் என்றும் அழைக்கப்பட்டவர்) திருச்சிராப்பள்ளியில் இருந்து தான் எதிர்பார்த்த பெரும்பீரங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் வந்துசேரும் வரை பூலித்தேவர் மீது தாக்குதல் தொடுக்க அவர் ஆயுத்தமாகவில்லை.

Question 2.
பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யாவை?
விடை:

  • நெற்கட்டும்செவல்
  • வாசுதேவநல்லூர்
  • பனையூர்

Question 3.
ஒண்டிவீரன் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • ஒண்டிவீரன் பூலித்தேவரின் படைப் பிரிவுகளில் ஒன்றனுக்குத் தலைமையேற்றிருந்தார்.
  • பூலித்தேவரோடு இணைந்து போரிட்ட அவர் கம்பெனிப் படைகளுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தினார்.

Question 4.
குயிலி பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியாகத் திகழ்ந்த குயிலி, உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
  • உடையாள் என்பது குயிலி பற்றி உளவு கூறமறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில்புரிந்த பெண்ணின் பெயராகும்.
  • குயிலி தனக்குத்தானே நெருப்புவைத்துக்கொண்டு (1780) அப்படியே சென்று பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கிலிருந்த அனைத்துத் தளவாடங்களையும் அழித்தார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

Question 5.
கர்நாடக உடன்படிக்கை வரையறு.
விடை:
1799 மற்றும் 1800-1801ஆம் ஆண்டு பாளையக்காரர்களின் கலகம் அடக்கப்பட்டதன் விளைவு தமிழகத்திலிருந்த அனைத்து உள்ளூர் குடித்தலைமையினரின் எண்ணங்களையும் நீர்த்துப்போகச்செய்தது.
1801 ஜூலை 31இல் ஏற்பட்ட கர்நாடக உடன்படிக்கையின் விதிகளின்படி, பிரிட்டிஷார் நேரயாக தமிழகத்தின்மீது தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தியதோடு பாளையக்காரர் முறையும் முடிவுக்கு வந்ததுடன் அனைத்துக் கோட்டைகளும் இடிக்கப்பட்டு அவர்களது படைகளும் கலைக்கப்பட்டன.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
வேலூர்ப் புரட்சியைப் பற்றி மதிப்பிடுக.
விடை:
புரட்சியைப் பற்றிய மதிப்பீடு:
வெளியிலிருந்து உடனடியாக எந்தவொரு உதவியும் கிடைக்காத காரணத்தினாலேயே வேலூர் புரட்சி தோல்வியுற்றது.

புரட்சிக்கான ஏற்பாடுகளை 23ஆம் படைப்பிரிவின் 2ஆவது பட்டாளத்தைச் சேர்ந்த சுபேதார்களான ஷேக் ஆடமும், ஷேக் ஹமீதும், ஜமேதாரான ஷேக் ஹீஸைனும், 1ஆம் படைப்பிரிவின் 1ஆம் பட்டாளத்தைச் சேர்ந்த இரு சுபேதார்களும், ஜமேதார் ஷேக் காஸிமும் சிறப்பாகச் செய்திருந்ததாகத் தெரிகிறது.

1857ஆம் ஆண்டு பெரும்கலகத்திற்கான அனைத்து முன் அறிகுறிகளையும், எச்சரிக்கைகளையும் வேலூர் புரட்சி கொண்டிருந்தது.

ஒரே வித்தியாசம் என்னவென்றால், கலகத்தைத் தொடர்ந்து எந்த உள்நாட்டுக் கிளர்ச்சியும் ஏற்படவில்லை .

1806ஆம் ஆண்டு புரட்சியானது வேலூர் கோட்டையுடன் முடிந்துவிடவில்லை.

பெல்லாரி, வாலாஜாபாத், ஹைதராபாத், பெங்களூரு, நந்திதுர்க்கம், சங்கரிதுர்க்கம் ஆகிய இடங்களிலும் அது எதிரொலித்தது.

Question 2.
வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
தனது தந்தையாரான ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் இறப்பிற்குப் பின் பாஞ்சாலக்குறிச்சியின் பாளையக்காரராக தனது முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.

கம்பெனி நிர்வாகிகளான ஜேம்ஸ் லண்டன் மற்றும் காலின் ஜாக்சன் என்போர் இவரை அமைதியை விரும்பும் மனம் கொண்டவராகவே கருதினார்.

எனினும் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் மோதல்போக்கை ஏற்படுத்தின.

1781இல் கம்பெனியாருடன் நவாப் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின்படி, மைசூரின் திப்பு சுல்தானுடன் ஆற்காட்டு நவாப் போர்புரிந்து கொண்டிருந்தபோது, கர்நாடகப்பகுதியில் வரி மேலாண்மையும், நிர்வாகமும் கம்பெனியின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் செல்லும்நிலை ஏற்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 6 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

வசூலிக்கப்பட்ட வரியில் ஆறில் ஒரு பங்கு நவாபிற்கும் அவர் குடும்ப பராமரிப்பிற்கும் என ஒதுக்கப்பட்டது.)
இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சியிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையை கம்பெனி பெற்றிருந்தது.

அனைத்துப் பாளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி அதன் ஆட்சியர்களை நியமித்தது.

ஆட்சியர்கள் பாளையக்கரர்களை அவமானப்படுத்தியதோடு வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர்.

இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட அடிப்படையானது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

10th Social Science Guide 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
அ) 1827
ஆ) 1829
இ) 1826
ஈ) 1927
விடை:
ஆ) 1829

Question 2.
தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?
அ) ஆரிய சமாஜம்
ஆ) பிரம்ம சமாஜம்
இ) பிரார்த்தனை சமாஜம்
ஈ) ஆதி பிரம்ம சமாஜம்
விடை:
அ) ஆரிய சமாஜம்

Question 3.
யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஆ) இராஜா ராம்மோகன் ராய்
இ) அன்னிபெசன்ட்
ஈ) ஜோதிபா பூலே
விடை:
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?
அ) பார்சி இயக்கம்
ஆ) அலிகார் இயக்கம்
இ) இராமகிருஷ்ணர்
ஈ) திராவிட மகாஜன சபை
விடை:
அ) பார்சி இயக்கம்

Question 5.
நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
அ) பாபா தயாள் தாஸ்
ஆ) பாபா ராம்சிங்
இ) குருநானக்
ஈ) ஜோதிபா பூலே
விடை:
ஆ) பாபா ராம்சிங்

Question 6.
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
அ) M.G. ரானடே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) ஜோதிபா பூலே
ஈ) அய்யன்காளி
விடை:
அ) M.G. ரானடே

Question 7.
‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
அ) தயானந்த சரஸ்வதி
ஆ) அயோத்தி தாசர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) சுவாமி சாரதாநந்தா
விடை:
அ) தயானந்த சரஸ்வதி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
……………. சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.
விடை:
இராமலிங்க சுவாமிகள்

Question 2.
புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் …………………
விடை:
மகாதேவ் கோவிந்த் ரானடே

Question 3.
குலாம்கிரி நூலை எழுதியவர் …………………..
விடை:
ஜோதிபா பூலே

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
இராமகிருஷ்ணா மிஷன் ………………ஆல் நிறுவப்பட்டது.
விடை:
சுவாமி விவேகானந்தர்

Question 5.
………………. அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.
விடை:
சிங்சபா

Question 6.
‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையைத் துவக்கியவர் ……………. ஆவார்.
விடை:
அயோத்தி தாசர்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) இராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.
ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.
iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.
iv) இராஜா ராம் மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

அ) i) சரி
ஆ) i), ii) ஆகியன சரி
இ) i), ii), iii) ஆகியன சரி
ஈ) i), iii) ஆகியன சரி
விடை:
ஈ) i), iv) ஆகியன சரி

Question 2.
i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.
ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்பு திருமணங்களையும் ஊக்குவித்தது.
iii) ஜோதிபாபூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.
iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.

அ) i) சரி
ஆ) ii) சரி
இ) i), ii) ஆகியன சரி
ஈ) iii), iv) ஆகியன சரி
விடை:
இ) i), ii) ஆகியன சரி

Question 3.
i) இராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.
ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை இராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.
iii) இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ணா மிஷனை ஏற்படுத்தினார்.
iv) இராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.

அ) i) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) சரி
ஈ) iv) சரி
விடை:
ஆ) i) மற்றும் ii) சரி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.
காரணம் : ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
இ) இரண்டுமே தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.
விடை:
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 2

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.
விடை:

  • நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கைக் கூறுகளை முன் வைத்தார்.
  • தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
  • அவர் ஒருவரே உண்மையின் எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின் சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர். அவருக்கிணையாருமில்லை.
  • நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
  • அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.

Question 2.
சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
விடை:

  • சாதிமறுப்பு, சமபந்தி, சாதிமறுப்புத் திருமணம் விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாவார்.
  • மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) விதவை மறுமணச் சங்கம் (1861), புனே சர்வஜனிக் சபா (1870), தக்காணக் கல்விக்கழகம் (1884) ஆகிய அமைப்புகளை நிறுவினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 3.
இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:

  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
  • துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்.
  • அன்பையும், இரக்கத்தையும் அனைத்து உயிரினங்களிடமும் காட்டினர். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
  • 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
  • அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.

Question 4.
பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?
விடை:
சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள், விதவைப் பெண்கள் மறுமணம், பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Question 5.
ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.
விடை:
ஜோதிபா பூலே :

  • 1852 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
  • ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்ரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
  • ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

Question 1.
19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
விடை:

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியா சதி, குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை, பலதார மறுமணம் மற்றும் பல சமூக தீமைகளால் பிடிக்கப்பட்டிருந்தது.
  • பெண்களுக்கு கல்வி பெற அனுமதிக்கப்படவில்லை.
  • பெண்கள் ஆண்களை விட தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டனர்.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நிலை பரிதாபகரமாக இருந்தது.
  • பள்ளிகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் நுழைய தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு தடை விதிக்கப்பட்டது.
  • ஆகவே, தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு கல்வியில்லை.
  • மூடநம்பிக்கை, மத நம்பிக்கை மற்றும் விலங்குகளை பலி கொடுப்பது போன்ற தீய நடைமுறைகள் இந்திய சமுதாயத்தில் இருந்தன.
  • குழந்தை திருமண முறை இருந்ததால் குழந்தை விதவைகளுக்கு வழிவகுத்தது.
  • இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 2.
இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.
விடை:
இராமகிருஷ்ண பரமஹம்சர் :

  • இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886) பஜனைப்பாடல்களை மனமுருகிப் பாடுவார்.
  • அவர் கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.
  • அவருடைய கருத்தினப்டி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும். ஜீவன் என்பதே சிவன் எனவும் அவர் கூறினார்.
  • மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.

சுவாமி விவேகாநந்தர்:

  • பின்னாளில் நரேந்திரநாத் தத்தா என்றழைக்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர் (1863-1902).
  • இராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடராவார்.
  • மரபு சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மனநிறைவு பெறாத அவர், நடைமுறை வேதாந்தமான மனிதகுலத்திற்குத் தொண்டுசெய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.
  • இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
  • அவருடைய சிந்தனைகள், பொருள் உற்பத்தியில் மேலைநாடுகள் செய்திருந்த சாதனைகளைக் கண்டு தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்த இந்தியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது.
  • 1893இல் சிக்காகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்திமார்க்கத் தத்துவம் குறித்தும் அவராற்றிய சொற்பொழிவுகள் அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது.

Question 3.
பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.
விடை:
ராஜாராம் மோகன்ராய்:

  • விதவைப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார்.
  • பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றார்.
  • மக்களைப் பகுத்தறிவோடும், பரிவோடும், மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
  • பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் எனும் கருத்தை வலுவாக முன் வைத்தார்.

தயானந்த சரஸ்வதி:
குழந்தை திருமணம் மற்றும் விதவை மறுமணம் போன்ற நடைமுறைகளை அவர் அறிவித்தார்.

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்:

  • இவர் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தினார்.
  • இவர் விதவை மறுமணத்தை ஆதரித்தார் மற்றும் பலதார மணம் (ம) குழந்தை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
  • பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது.
  • பெண்கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய அவர் பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார்.

ஜோதிபாபூலே:

  • இவர் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.
  • விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
  • ஜோதிபாபூலேவும் அவருடைய மனைவி சாவித்ரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

10th Social Science Guide 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
நவீன இந்தியாவின் முன்னோடி …………
அ) ஜோதிபாய் பூலே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) விவேகானந்தர்
ஈ) இராஜாராம் மோகன்ராய்
விடை:
ஈ) இராஜாராம் மோகன் ராய்

Question 2.
மகரிஷி …………….. கொள்கைக் கூறுகளை முன்வைத்தார்.
அ) 4
ஆ) 5
இ) 8
ஈ) 6
விடை:
அ) 4

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 3.
தேவேந்திரநாத் ……………… சீர்திருத்தவாதியாவார்.
அ) மிதவாத
ஆ) தீவிரவாத
இ) கம்யூனிச
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) மிதவாத

Question 4.
அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் ………….
அ) யாசர் அரபாத்
ஆ) கமால் பாட்சா
இ) ஆசாத்
ஈ) சர் சையது அகமது கான்
விடை:
ஈ) சர் சையது அகமது கான்

Question 5.
ஜோதிபா பூலேவின் ……………. சாவித்திரி பாய் ஆவார்.
அ) மகள்
ஆ) தாய்
இ) சகோதரி
ஈ) மனைவி
விடை:
ஈ) மனைவி

Question 6.
வங்காளத்தை சேர்ந்த முதன்மையான சீர்திருத்தவாதி ……………
அ) அஹமது கான்
ஆ) M.G. ரானடே
இ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஈ) அய்யன்காளி
விடை:
இ ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

Question 7.
……………… நூல்கள் முற்போக்கானவை.
அ) சீக்கியம்
ஆ) இந்து
இ) கிறித்துவ
ஈ) இஸ்லாமிய
விடை:
ஆ) இந்து

Question 8.
தியோபந்த் இயக்கம் ஒரு ……………… இயக்கம் ஆகும்.
அ) அரசியல்
ஆ) சமூக
இ) கலாச்சார
ஈ) மீட்பு
விடை:
ஈ) மீட்பு

Question 9.
ராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர் ……………. ஆவார்.
அ) ஜோதிபா பூலே
ஆ) அய்யன்காளி
இ) விவேகானந்தர்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ விவேகானந்தர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 10.
ஜோதிபா பூலே எழுதிய நூல் …………… ஆகும்.
அ) சுதேசி
ஆ) குலாம்கிரி
இ) இண்டிகா
ஈ) வெனிஸ் நகர வணிகர்
விடை:
ஆ) குலாம்கிரி

Question 11.
……………….. நாராயணகுருவால் கவரப்பட்டார்.
அ) பூலே
ஆ) அய்யன்காளி
இ) ராமலிங்க அடிகள்
ஈ) அயோத்தி தாசர்
விடை:
ஆ) அய்யன்காளி

Question 12.
இராமகிருஷ்ணரின் போதனைகளை பரப்பும் பெரும்பணியின் பின்புலமாய் …………………… இருந்தார்.
அ) பரமஹம்சர்
ஆ) விவேகானந்தர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) அய்யன்காளி
விடை:
ஆ) விவேகானந்தர்

Question 13.
மௌலானா முகமத் உல்-ஹசன் ……………… புதிய தலைவரானார்.
அ) தியோபந்தின்
ஆ) புதிய தியோபந்த்
இ) அலிகார்
ஈ) அஹமது கான்
விடை:
அ) தியோபந்தின்

Question 14.
விவேகானந்தரின் இயற்பெயர் …………………………
அ) நரேந்திரநாத் தத்தா
ஆ) இராமலிங்க அடிகள்
இ) அயோத்தி தாசர்
ஈ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
விடை:
நரேந்திரநாத் தத்தா

Question 15.
மேற்கத்திய கருத்துக்களின் சிந்தனைகளின் தாக்கங்களுக்குள்ளானது ……………………… வர்க்க ம் ஆகும்.
அ) இஸ்லாம்
ஆ) இந்து
இ) நடுத்தர
ஈ) எதுவுமில்லை
விடை:
இ நடுத்தர

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இராஜா ராம் மோகன் ராய் …………….., ……………… பெற்றிருந்தார்.
விடை:
ஒரு கடவுள் கோட்பாடு, உருவ வழிபாடு எதிர்ப்பு

Question 2.
இராஜராம் மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை …………….. நிறுவினார்.
விடை:
20 ஆகஸ்ட் 1808

Question 3.
தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு ……………… எனப்பட்டது.
விடை:
ஆதி பிரம்ம சமாஜம்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 4.
இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் ……………… முக்கியப் பங்காற்றியது.
விடை:
பிரம்ம ஞான சபை

Question 5.
அன்னிபெசன்டின் நாளிதழ்கள் … ………………….. ஆகியன ஆகும்.
விடை:
நியூ இண்டியா, காமன் வீல்

Question 6.
ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி ……………… பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.
விடை:
1920

Question 7.
……………… அகாலி இயக்கத்தின் முன்னோடி ஆகும்.
விடை:
சிங்சபா

Question 8.
அயோத்தி தாசர் ………………. எனும் அமைப்பை உருவாக்கினார்.
விடை:
திராவிடர் கழகம்

Question 9.
………………. எனும் ஊரில் பெரிய கோவிலைக் கட்டியவர் நாராயணகுரு.
விடை:
அருவிபுரம்

Question 10 .
……………… மறுமண சீர்திருத்த சட்டம் இயற்றப்பட்டது.
விடை:
1856

Question 11.
தக்காணக் கல்விக் கழகத்தை நிறுவியவர் …………………..
விடை:
M.G. ரானடே

Question 12.
வேதங்களுக்கு திரும்புவோம் என்பது ………………. சமாஜத்தின் முழக்கமாகும்.
விடை:
ஆசிய

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 13.
ஆணும், பெண்ணும் சமம் என்று ………………. கூறியது.
விடை:
சீக்கிய சீர்திருத்த இயக்கம்

Question 14.
சுத்தி இயக்கத்தை நிறுவியவர் ………………. ஆவார்.
விடை:
தயானந்த சரஸ்வதி

Question 15.
உலக சமய மாநாடு ……………….. நடந்தது.
விடை:
1893

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
i) அய்யன்காளி 1863ல் பிறந்தார்.
ii) “ஜீவன்” என்பதே “சிவன்” என பரமஹம்சர் கூறினார்.
iii) பரமஹம்சரின் சீடர் ஜோதிபா பூலே.
iv) 1999ல் பிரம்மஞான சபை தொடங்கப்பட்டது.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) i, iv சரி
ஈ) iii சரி
விடை:
அ) i, ii சரி

Question 2.
கூற்று : சர்சையது அஹமது கான், ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்.
காரணம் : இஸ்லாமியர்கள் மேலை நாட்டு அறிவியலை கற்க வேண்டும் என்பதற்காக.

அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று, காரணம் தவறு
இ) கூற்று காரணம் சரி.
ஈ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
விடை:
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் 4

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
இந்து புத்தெழுச்சி இயக்கத்திற்கு வித்திட்டவர்களின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:

  • சுவாமி தயானந்த சரஸ்வதி
  • இராமகிருஷ்ண பரமஹம்சர்
  • சுவாமி விவேகானந்தர்
  • அன்னிபெசன்ட்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 2.
இராமகிருஷ்ண மிஷனின் செயல்பாடுகள் யாவை?
விடை:

  • மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவது.
  • மருத்துவ உதவி
  • இயற்கைச் சீற்றங்களின் போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வது.

Question 3.
பிரம்மஞான சபையின் முக்கியப் பங்கு யாது?
விடை:

  • பிரம்மஞான சபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாகமூட்டியது.
  • இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞானசபை முக்கியப் பங்காற்றுகிறது.

Question 4.
அலிகார் இயக்கம் பற்றி குறிப்பிடுக.
விடை:

  • சர் சையத் அகமத்கான் 1875ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கிலோ – ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்.
  • ‘அலிகார் இயக்கம்’ எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியை மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது.
  • இந்திய முஸ்லீம்களின் கல்விவரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும்.
  • 1920இல் இக்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 5 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

Question 5.
தியோபந்த் இயக்கம் பற்றி எழுதுக. தியோபந்த் இயக்கம்:
விடை:

  • தியோபந்த் இயக்கம் ஒரு மீட்பியக்கமாகும்.
  • இவ்வியக்கம் பழமைவாய்ந்த முஸ்லீம் உலகமக்களால், தொடங்கப்பெற்றது.
  • இவ்வுலேமாக்கள் முகமது குவாசிம் நானோதவி (1832 – 1880), ரஷித் அகமத் கங்கோத்ரி (1826 – 1905) ஆகியோரின் தலைமையில் 1866 இல் உத்தரப்பிரதேசத்தில் சகரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினர்.
  • இதன் நோக்கம் இஸ்லாமிய சமூகத்தின் ஒழுக்கத்தையும் மதத்தையும் மீட்டெடுப்பதாய் அமைந்தது.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
சீக்கியர் சீர்திருத்த இயக்கம் பற்றி விவரிக்க.
விடை:
சீக்கியர் சீர்திருத்த இயக்கம் (நிரங்கரிகள், நாம்தாரிகள்):

  • பஞ்சாப் சீக்கியச் சமூகத்திலும் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • நிரங்கரி இயக்கத்தின் நிறுவனரான பாபா தயாள்தாஸ் நிரங்கரி (உருவமற்ற) இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார்.
  • சிலைவழிபாடு, சிலைவழிபாட்டோடு தொடர்புடைய சடங்குகள் ஆகியவற்றை மறுத்தல், குருநானக்கின் தலைமையையும் ஆதிகிரந்தத்தையும் மதித்தல் ஆகியன அவருடைய போதனைகளின் சாரமாக விளங்கின.
  • மது அருந்துவதையும், மாமிசம் உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்திக் கூறினார்.
  • ஆரியசமாஜம் கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த ஒரு சூழலில் சிங்சபா எனும் அமைப்பு அமிர்தசரசில் நிறுவப்பட்டது. சீக்கியமதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பதே சபாவின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது.
  • ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தரஸில் சீக்கியர்களுக்கென கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது. > சிங்சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.

Question 2.
இராமலிங்க சுவாமிகள் பற்றி குறிப்பெழுதுக.
விடை:

  • வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட, இராமலிங்க சுவாமிகள் அல்லது இராமலிங்க அடிகள் (1823 – 1874) சிதம்பரத்திற்கு அருகேயுள்ள மருதூர் எனும் கிராமத்தில் பிறந்தார்.
  • முறையான கல்வியை அவர் பெற்றிராவிட்டாலும் அளப்பரியப் புலமையைப் பெற்றிருந்தார்.
  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
  • “துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்” எனும் கருத்தினை முன்வைத்தார்.
  • அவர் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
  • அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

10th Social Science Guide இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தெரிவு செய்க.

Question 1.
எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?
அ) உட்ரோ வில்சன்
ஆ) ட்ரூமென்
இ) தியோடர் ரூஸ்வேல்ட்
ஈ) பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
விடை:
ஆ) ட்ரூமென்

Question 2.
சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
அ) செப்டம்பர் 1959
ஆ) செப்டம்பர் 1949
இ) செப்டம்பர் 1954
ஈ) செப்டம்பர் 1944
விடை:
ஆ) செப்டம்பர் 1949

Question 3.
அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ………………… ஆகும்.
அ) சீட்டோ
ஆ) நேட்டோ
இ) சென்டோ
ஈ) வார்சா ஒப்பந்தம்
விடை:
ஆ) நேட்டோ

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 4.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
அ) ஹபீஸ் அல் – ஆஸாத்
ஆ) யாசர் அராபத்
இ) நாசர்
ஈ) சதாம் உசேன்
விடை:
ஆ) யாசர் அராபத்

Question 5.
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
அ) 1975
ஆ) 1976
இ) 1973
ஈ) 1974
விடை:
ஆ) 1976

Question 6.
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
அ) 1979
ஆ) 1989
இ) 1990
ஈ) 1991
விடை:
ஈ) 1991

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ………………. ஆவார்.
விடை:
டாக்டர் சன்-யாட்-சென்

Question 2.
1918இல் ………….. பல்கலைகழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைவு நிறுவப்பட்டது.
விடை:
பீகிங்

Question 3.
டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் …………….. ஆவார்.
விடை:
சியாங்-கை-ஷேக்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 4.
அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் ……………… ஆகும்.
விடை:
சென்டோ (அ) பாக்தாத் ஒப்பந்தம்

Question 5.
துருக்கிய அரபுப்பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம் ……………
விடை:
வெர்செய்ல்ஸ்

Question 6.
ஜெர்மனி நேட்டோவில் …………….ஆம் ஆண்டு இணைந்தது.
விடை:
1955

Question 7.
ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ……………… நகரில் அமைந்துள்ளது.
விடை:
ஸ்ட்ராஸ்பர்க்

Question 8.
ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ……………….. ஆகும்.
விடை:
மாஸ்டிரிக்ட்

III. சரியான வாக்கியம் வாக்கியங்களைத் தெரிவு செய்க.

Question 1.
i) கற்றறிந்த சிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1898) இளம் பேரரசர் துவக்கிய சீர்த்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறியப்படுகிறது.
ii) கோமிங்டாங் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
iii) மஞ்சூரியா மீதும் ஷாண்டுங் மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதிக்க யுவான் ஷி-கே உடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.
iv) சோவியத் நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்தது.

அ) i) மற்றும் ii) சரி
ஆ) ii) மற்றும் iii) சரி
இ) i) மற்றும் iii) சரி
ஈ) i) மற்றும் iv) சரி
விடை:
இ) i) மற்றும் iii) மட்டும் சரி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 2.
i) கிழக்கு ஐரோப்பாவில் 1948இல் சோவியத்நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளை சோவியத் இராணுவம் விடுதலை செய்தது.
ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.
iii) சிட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.
iv) ஜப்பானுக்கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப் பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும் திறனை எடுத்துக்காட்ட விரும்பியது.

அ) ii), iii) மற்றும் iv) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) மற்றும் iv) சரி
ஈ) i), ii) மற்றும் iii) சரி
விடை:
ஆ) i) மற்றும் ii) மட்டும் சரி

Question 3.
கூற்று : அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மறு நிர்மானத்திற்காக முன்வைக்கப்பட்டது.
காரணம் : அமெரிக்க நாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கின் கீழ் கொண்டுவர நினைத்தது.

அ) கூற்றும் காரணமும் இரண்டுமே சரி. ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
ஆ) கூற்றும் காரணமும் தவறானவை
இ) கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
விடை:
இ கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.

IV. பொருத்துக

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 2

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.

Question 1.
சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக.
விடை:
1911ஆம் ஆண்டு சீனப்புரட்சி:

  • மஞ்சு வம்சத்தின் சிதைவு 1908ஆம் ஆண்டு பேரரசின் பாதுகாவலராயிருந்த பேராசிரியர் தாவோகரின் மரணத்தோடு துவங்கியது.
  • புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்படலாயினர்.
  • உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மட்டங்களில் பரவியது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 2.
மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • 1933ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின் மீதான முழுக் கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
  • ஒரு நீண்ட பயணத்தை முன்னெடுத்து 1,00,000 பொதுவுடைமை இராணுவத்தினர் 1934-இல் கிளம்பினர்.
  • அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது. இவ்வாறு கிளம்பிய 1,00,000 பேரில் வெறும் 20,000 பேர் மட்டும் 1935இன் பிற்பகுதியில் 6,000 மைல்களைக் கடந்து வடக்கு ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
  • அவர்களோடு மற்ற பொதுவுடைமைவாதப் படைகளும் சேர்ந்து கொண்டன.

Question 3.
பாக்தாத் உடன்படிக்கை பற்றி அறிந்ததை எழுதுக.
விடை:
சென்டோ (CENTO) அல்லது பாக்தாத் ஒப்பந்தம்:

  • துருக்கி, ஈராக், பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் 1955இல் ஏற்படுத்திய ஒப்பந்தமே பாக்தாத் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது.
  • 1958இல் இணைந்ததோடு, இவ்வொப்பந்தம் மத்திய உடன்படிக்கை அமைப்பு என்று அறியப்பட்டது.
  • இவ்வொப்பந்தம் 1979இல் கலைக்கப்பட்டது.

Question 4.
மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
விடை:
மார்ஷல் திட்டம் :

  • மேற்கு ஐரோப்பிய நாடுகளை தன் செல்வாக்கினுள் வைத்துக் கொள்ள அமெரிக்க ஐக்கிய நாடு மார்ஷல் திட்டத்தை உருவாக்கியது.
  • இத்திட்டம் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்தது.
  • அமெரிக்க ஐக்கிய நாட்டின் செயலர், ஜார்ஜ், சி. மார்ஷல் ஐரோப்பாவின் சுய முன்னேற்ற முயற்சிக்குத் தம் நாடு பண உதவி செய்யுமென்று அறிவித்தார்.
  • நிதியுதவி வழங்கும் மார்ஷலின் திட்டமானது 1951-இல் முடிவுக்கு வந்தது.

Question 5.
மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:

  • அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் கூடிய முதலாளித்துவ நாடுகள் உலக அரசியலில் முதலாம் உலக நாடுகள் என்றும் சோவியத் நாட்டின் தலைமையில் கூடிய பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலக நாடுகள் என்றும் அழைக்கப்பட்டன.
  • இவ்விரு பிரிவிலும் சேராமல் வெளியிலிருந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்டன.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 6.
கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?
விடை:

  • சோவியத்நாடு கியூபாவில் அணுசக்தியோடு இணைக்கப்பட்ட ஏவுகணைகளை இரகசியமாக நிறுவப்போவதாய் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசிற்கு உளவுத்துறை தகவல் கொடுத்தது.
  • இறுதியாக சோவியத் நாட்டின் குடியரசுத் தலைவர் குருசேவ் ஏவுகணைகளைத் திரும்பப்பெற உறுதியளித்ததால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

VI. விரிவான விடை தருக.

Question 1.
சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.
விடை:
கோமிங்டாங்கும் ஷியாங்கே-ஷேக்கும்

  • சன்யாட் சென் இறந்தபின் கோமிங்டாங்கின் தலைவராக ஷியாங்கே-ஷேக்கும்.
  • பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களாக சூ-யென்-லாயும் மாசே துங்கும் விளங்கினர்.
  • பொதுவுடைமைவாதத்தின் தீவிர விமர்சகரான ஷியாங் தனது கட்சிக்குள்ளிருந்த பொதுவுடைமைவாதிகளை முக்கிய பொறுப்புகளிலிருந்து விடுவித்தார்.
  • வெற்றிகரமாக அவர் 1928ஆம் ஆண்டு பீகிங் நகரைக் கைப்பற்றினார்.
  • மீண்டும் சீனாவில் ஒரு நடுவண் அரசு உருவானது.

விவசாயிகளை வழி நடத்திய மாவோ:

  • கோமிங்டாங்கின் கட்டுப்பாடு நகரங்களின் மீது கடுமையாக இருந்ததை மாவோ (மா சே துங்) உணர்ந்தார்.
    அதனால் அவர் விவசாயிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்.
  • மாவோவின் தலைமையில் சில நூறு கம்யூனிஸ்டுகள் காடுகள் சூழ்ந்த மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்தனர்.
  • கோமிங்டாங்கால் அக்காட்டு மலைப்பகுதிகளில் நுழைய முடியாத அதே வேளையில் மாவோவின் படை பெருகிக் கொண்டே சென்றது.

1934இல் நீண்ட பயணம்:

  • 1933ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின் மீதான முழுக்கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
  • 1934இல் 1,00,000 பொதுவுடைமை இராணுவத்தினர் நீண்ட பயணத்தை மேற்கொண்டனர்.
  • அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது.
  • இவ்வாறு கிளம்பிய 1,00,000 பேரில் வெறும் 20,000 பேர் மட்டும் 1935இன் பிற்பகுதியில் 6,000 மைல்களை கடந்து வடக்கு ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
  • அவர்களோடு மற்ற பொதுவுடைமைவாதப் படைகளும் சேர்ந்து கொண்டன. 1937ஆம் ஆண்டில் ஏறக்குறைய ஒரு கோடி மக்களின் தலைவராக மாவோ அங்கீகரிக்கப்பட்டார்.

Question 2.
ஐரேப்பியக்குழு எவ்வாறு ஐரோப்பிய இணைவானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.
விடை:
ஐரோப்பிய குழுமம்:

  • ஐரோப்பியர்களுக்கிடையே மூண்ட போர்களைத் தவிர்க்கவும் அதிலும் குறிப்பாக பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்த பகைமையை ஒடுக்கவும்
  • ஒருங்கிணைந்த ஐரோப்பாவைக் கொண்ட சோவியத் நாட்டின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும்.
  • அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளுக்கும் சோவியத் நாட்டின் படைகளுக்கும் சமமாக ஒரு படை பலத்தை நிறுவவும்.
  • கண்டங்களிடையே அல்லது கண்டங்களில் பொருளாதார மற்றும் இராணுவ வளங்களையும் திறன்களையும் முழுதாகப் பயன்படுத்தவும் முடியும் என்று கருதப்பட்டது.

ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம்:

  • ஐரோப்பியப் பாதுகாப்பு சமூகமும் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகமும் துவங்கப்பட்டன.
  • ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தைச் சேர்ந்த ஆறு நாடுகள் கூடி ரோம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
  • ஐரோப்பியப் பொருளாதார, சமூகம் பிரெஸெல்ஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்டு ஏற்படுத்தியது.

ஐரோப்பியப் பொருளாதார சமூகம்:

  • இச்சமூகம் பண்டங்கள், சேவைகள், முதலீடு, தொழிலாளர்கள் போன்றவற்றின் நகர்வை எல்லைகள் கொண்டு நிறுத்துவதை மாற்றியது.
  • சந்தைப்போட்டியைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது கொள்கைகளையும் தனியார் ஒப்பந்தங்களையும் புறக்கணித்தது.
  • ஐரோப்பிய பொதுச்சந்தை என்பது ஒரு வெற்றிகரமான முயற்சியாகும்.

ஒற்றை ஐரோப்பியச் சட்டம்:

  • ஒற்றை ஐரோப்பியச் சட்டம் 1 ஜுலை 1987இல் நடைமுறைக்கு வந்தது.
  • ஐரோப்பியப் பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கி அதற்கு சட்டவடிவம் கொடுத்தது.
  • ஒரு சட்ட நிறைவேற்றத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என நிலை நிறுத்தப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

ஐரோப்பிய ஒன்றியம்:

  • 1992 பிப்ரவரி 7இல் கையெழுத்திடப்பட்ட மாஸ்டிரிகட் (நெதர்லாந்து) ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்படுத்தியது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. பிரெஸெல்ஸ் (பெல்ஜியம்) நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

10th Social Science Guide இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
………………. சீனாவில் ஒரு கம்யூனிச அரசை நிறுவியது.
அ) முதல் உலகப் போர்
ஆ) இரண்டாம் உலகப் போர்
இ) அ (மற்றும்) ஆ
ஈ) பனிப்போர்.
விடை:
ஆ) இரண்டாம் உலகப் போர்

Question 2.
மார்ஷல் திட்டத்தின் மூலம் அமெரிக்கா ………………………ன் நம்பிக்கையை வென்றது.
அ) ஜெர்மனி
ஆ) ஐரோப்பா
இ) ஜப்பான்
ஈ) இத்தாலி
விடை:
ஆ) ஐரோப்பா

Question 3.
……………… சுவர் உடைக்கப்பட்டதோடு பனிப்போர் முடிவுக்கு வந்தது.
அ) சீனா
ஆ) பெர்லின்
இ) ஐரோப்பா
ஈ) எதுமில்லை
விடை:
ஆ) பெர்லின்

Question 4.
நீண்ட வரலாற்றைக் கொண்ட ……………… நாகரிகம் ஐரோப்பாவை விட மேம்பட்டதாகும்.
அ) ரஷ்யா
ஆ) சீன
இ) பிரெஞ்சு
ஈ) அ (மற்றும்) ஆ
விடை:
ஆ) சீன

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 5.
மஞ்சு வம்சத்தின் சிதைவு பேரரசியார் தாவேகரின் மரணத்தோடு …………………..ல் துவங்கியது.
அ) 1917
ஆ) 1929
இ) 1908
ஈ) 1999
விடை:
இ 1908

Question 6.
இராணுவக் கிளர்ச்சி ……………………….. ல் ஏற்பட்டது.
அ) 1911 அக்டோபர்
ஆ) 1929 அக்டோபர் .
இ) 1909 அக்டோபர்
ஈ) 1999 அக்டோபர்
விடை:
1911 அக்டோபர்

Question 7.
சீனக் குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராக …………….. தேர்வு செய்யப்பட்டார்.
அ) ஷியாங் கைஷேக்
ஆ) சோ என் லாய்
இ) Dr. சன்யாட் சென்
ஈ) மாசே துங்
விடை:
இ Dr. சன்யாட் சென்

Question 8.
யுவான் ஷி கேயின் கீழ் ………………. வருடம் சீனா ஒருமைப்பாட்டுடன் விளங்கியது.
அ) 2
ஆ) 3
இ) 6
ஈ) 4
விடை:
ஈ) 4

Question 9.
பீகிங் பல்கலைக் கழகத்தில் ……………… கற்கும் அமைப்பு உருவானது.
அ) பாசிசம்
ஆ) நாசிசம்
இ) மார்க்ஸியம்
ஈ) சீக்கியம்
விடை:
இ மார்க்ஸியம்

Question 10.
பொதுவுடைமை (மற்றும்) செல்வாக்கின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் …………… ஆவார்.
அ) ஷியாங் கை ஷேக்
ஆ) கோமிங்டாங்
இ) சன்யாட் சென்
ஈ) மா சே துங்
விடை:
ஆ) கோமிங்டாங்

Question 11.
1928ல் கோமிங்டாங் …………………….. யைக் கைப்பற்றினார்.
அ) நான்கிங்
ஆ) பீகிங்
இ) ஹாங்கிங்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) பீகிங்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 12.
………………. முழு சீன பொதுவுடைமையும் மாவே வசம் வந்தது.
அ) 1933
ஆ) 1928
இ) 1954
ஈ) 1952
விடை:
அ) 1933

Question 13.
பீகிங்கை சுற்றியிருந்த பகுதி …………….. கட்டுப்பாட்டின் கீழிருந்தது.
அ) மார்ஷல்
ஆ) ஷியாங் கை ஷேக்
இ) யுவான் கே ஷேக்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஷியாங் கை ஷேக்

Question 14.
……………. வர்க்கத்தின் ஆதரவைப் பெற மாவோ முயற்சித்தார்.
அ) முதல்தர
ஆ) நடுத்தர
இ) கீழ்த்தர
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) நடுத்தர

Question 15.
தற்போதைய உலகில் …………….. வல்லரசுகள் உள்ள ன.
அ) 4
ஆ) 5
இ) 2
ஈ) 3
விடை:
இ 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
…………….. என்பது வடக்கு அட்லாண்டிக் சாசனம் ஆகும்.
விடை:
நேட்டோ

Question 2.
…………….. சீனப் புரட்சியில் ஒரு முக்கிய எழுச்சியாகும்.
விடை:
தைபிங் கலகம்

Question 3.
…………… என்பது இராணுவக் கூட்டுகளின் ஒப்பந்தமாகும்.
விடை:
NATO

Question 4.
நேட்டோ போல எந்தவொரு அமைப்பையும், ……………… கொண்டிருக்கவில்லை .
விடை:
சீட்டோ

Question 5.
……………. 1991ல் முடிவுக்கு வந்தது.
விடை:
வார்சா ஒப்பந்தம்

Question 6.
சீட்டோ ……………….ல் கலைக்கப்பட்டது.
விடை:
1979

Question 7.
1958ல் அமெரிக்கா சீட்டோவில் இணைந்ததோடு இவ்வொப்பந்தம் ……………… எனப் பெயர் மாற்றப்பட்டது.
விடை:
மத்திய உடன்படிக்கை அமைவு

Question 8.
யூதர்களின் பூர்வீகப்பகுதி …………….. ஆகும்.
விடை:
பாலஸ்தீனம்

Question 9.
உலக சீயோனிய இயக்கம் ……………… உருவானது.
விடை:
1897

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 10.
பெர்லின் சுவர் ………………. தகர்க்க ப்பட்டது.
விடை:
1961

Question 11.
…………….. கிழக்கு, மேற்கு ஜெர்மனியை இணைப்பதில் பெரும் பங்காற்றினார்.
விடை:
ஹெல்மட்கோல்

Question 12.
பெரிட்ஸ்ரோய்கா என்பதன் பொருள் …………….. என்பதாகும்.
விடை:
மறுகட்டமைப்பு

Question 13.
மாஸ்கோ நகரின் மேயர் ……………. ஆவார்.
விடை:
எல்சின்

Question 14.
செர்னோபில் பேரழிவு. ……………… நடந்தது.
விடை:
உக்ரைனில்

Question 15.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ……………… உறுப்பு நாடுகள் உள்ளன.
விடை:
28

III. சரியான வாக்கியம் வாக்கியங்களைத் தெரிவு செய்க.

Question 1.
i) ஒற்றை ஐரோப்பிய சட்டம் 1992 பிப்ரவரி 7ல் கையெழுத்தானது.
ii) ஒற்றை ஐரோப்பியா வெளியுறவுக் கொள்கையின் ஒத்துழைப்பை நாடியது.
iii) ஐரோப்பிய ஒன்றியத்தில் 29 நாடுகள் உள்ளது.
iv) மாஸ்டிரிக்ட் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவானது.

அ) i, iii சரி
ஆ) ii, iv சரி
இ) ii, iii சரி
ஈ) iv சரி
விடை:
ஆ) ii, iv சரி

Question 2.
கூற்று : இஸ்ரேல் என்ற தேசம் 1948ல் உருவானது.
காரணம் : பாலஸ்தீன விடுதலை அமைப்பின் முக்கிய தலைவர் “யாசர் அராபத்” ஆவார்.

அ) கூற்று, காரணம் சரி
ஆ) கூற்று, காரணம் தவறு
இ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமாக இல்லை.
ஈ) கூற்று, காரணம் தவறு, காரணம் கூற்றுக்கு பொருத்தமானது.
விடை:
இ கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமாக இல்லை.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
பனிப்போர் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:

  • இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் நாட்டிற்கும் இந்நாடுகளின் நட்பு நாடுகளுக்குமிடையே மூண்ட விரோதம், பரபரப்பையே பனிப்போர் என்கின்றனர்.
  • அவை நேரடியாக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தவில்லை.
  • மாறாக அவர்கள் அரசியல் பொருளாதார சிந்தனைத் தளங்களைத் தேர்வு செய்து கொண்டனர்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 2.
அணிசேரா இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை?
விடை:

  • அமைதியோடு இணைந்திருத்தல்.
  • அமைதியையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தப் பாடுபடல்.
  • எந்த அணியோடும் ராணுவக் கூட்டுறவுக் கொள்ளாமல் இருத்தல்.
  • எந்த வல்லரசுக்கும் நாட்டிற்குள் ராணுவ நிலைகள் ஏற்படுத்த அனுமதி வழங்காமல் இருத்தல்.

Question 3.
புலம்பெயர் சமூகம் பற்றி எழுதுக.
விடை:

  • யூதர்களின் பூர்வீகப்பகுதியான பாலஸ்தீனத்தில் 1900இல் ஆயிரம் யூதர்களே குடியிருந்தனர்.
  • இவ்வினத்தின் பதினைந்து மில்லியன் மக்கள் ஐரோப்பாவிலும் வடக்கு அமெரிக்காவிலும் பரவிக்கிடந்தனர்.
  • இதுவே ‘புலம்பெயர்’ சமூகம் என்று குறிக்கப்படுகிறது.

Question 4.
பாலஸ்தீனிய விடுதலை அமைப்புப் பற்றி எழுதுக.
விடை:

  • இஸ்ரேல் என்ற தேசம் 1948இல் உருவாவதற்கு முன் பாலஸ்தீனில் வாழ்ந்த அரேபியர்களுக்கும் அவர்கள் வம்சாவளியினருக்குமாக உருவாக்கப்பட்ட ஒரு பரந்த அமைப்பு இதுவாகும்.
  • இரகசியமாக செயல்பட்டு வந்த எதிர்ப்பு இயக்கங்கள் தங்களை ஒருங்கிணைக்க 1964-இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
  • இவ்வமைப்பின் முக்கிய தலைவர் யாசர் அராபத் ஆவார்.

Question 5.
பெரிஸ்ட்ரோய்கா என்றால் என்ன?
விடை:
வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் முன்னேற்றத்திற்கு சோவியத்தின் பொருளாதாரம் ஈடுகொடுக்கும்படி அதற்குப் புத்துணர்வு ஊட்ட வெளிப்படைத்தன்மை கொள்கையோடு அறிமுகப்படுத்தப்பட்டதே பெரிஸ்ட்ரோய்கா ஆகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

VI. விரிவான விடை தருக.

Question 1.
கியூபாவின் புரட்சி பற்றி விவரிக்க.
விடை:
அமெரிக்க ஐக்கிய நாடு மத்திய அமெரிக்காவிலும் (ஹோண்டுரஸ், எல் சல்வதோ, நிகரகுவா, பனாமா, க்வாத்தமாலா) கரீபியப் பகுதியிலும் (கியூபா, டோமினியக் குடியரசு, ஹைதி) கிழக்கு ஆசியாவிலும் (பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தெற்கு வியட்நாம், தாய்லாந்து) தனக்கு துணைக் கோள்களாகச் சுற்றிச் செயல்படும் நாடுகளைக் கொண்டிருந்தது.

இந்நாடுகள் இராணுவ அதிகாரிகளாலும் பெரும் நிலச்சுவான்தாரர்களாலும் சில சூழ்நிலைகளில் பெருமுதலாளிகளாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தன.

காஸ்ட்ரோ பதவியேற்ற பின் கியூபாவிலிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சொந்தமான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களைச் சுத்திகரிக்க மறுத்தன.

அதற்குப் பதிலடியாக அமெரிக்க ஐக்கிய நாடு அதுவரை கியூபாவிலிருந்து மொத்தமாக சர்க்கரைக் கொள்முதல் செய்து வந்ததை நிறுத்திக் கொண்டது.

காஸ்ட்ரோநாட்டிலிருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் சர்க்கரை ஆலைகளை தேசியமயமாக்கியதன் மூலம் மின்சார விநியோகத்திலும் தொலைபேசி வசதிகள் ஏற்படுத்துவதிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கிருந்த ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

Question 2.
சூயஸ் கால்வாய் சிக்கல் பற்றி விவரிக்க.
விடை:
எகிப்தில் 1952இல் நிகழ்ந்த ஓர் இராணுவக் கிளர்ச்சியின் மூலமாக கர்னல் நாசர் குடியரசுத்தலைவராக ஆக்கப்பட்டார்.

  • அவர் 1956ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்.
  • இது பிரிட்டிஷாரின் நல்லெண்ணெத்திற்கு விரோதமாகத் தெரிந்தது.
  • இராஜதந்திரப் பிரயோகங்கள் பலனளிக்காத நிலையில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடிவுசெய்தன.
  • இஸ்ரேலியப் படைகள் அக்டோபர் 29இல் எகிப்து மீது படையெடுத்தன.
  • இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பிரிட்டன் தனது படைகளைக் கால்வாயைக் காப்பாற்றும் வகையில் நிறுத்தி வைக்க அனுமதி கோரியது.
  • இதற்கு எகிப்து மறுத்ததால் அக்டோபர் 31இல் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து அந்நாட்டின் விமானத்தளங்கள் மீதும் இன்னபிற முக்கியத்தளங்கள் மீதும் சூயஸ்கால்வாய்ப் பகுதியிலும் குண்டுவீசின.
  • எனினும் உலக நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் நவம்பர் 6ஆம் தேதி பிரான்சும் பிரிட்டனும் தங்கள் எதிர்ப்பை நிறுத்திக்கொண்டன.
  • இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி நேரு இப்பிரச்சனைக்கு முடிவுகட்ட சீரிய பங்காற்றினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 3 இரண்டாம் உலகப்போர் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

10th Social Science Guide இரண்டாம் உலகப்போர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
அ) செப்டம்பர் 2, 1945
ஆ) அக்டோபர் 2, 1945
இ) ஆகஸ்ட் 15, 1945
ஈ) அக்டோபர் 12, 1945
விடை:
அ) செப்டம்பர் 2, 1945

Question 2.
சர்வதேச சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?
அ) ரூஸ்வெல்ட்
ஆ) சேம்பெர்லின்
இ) உட்ரோ வில்சன்
ஈ) பால்டுவின்
விடை:
இ உட்ரோ வில்சன்

Question 3.
ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
அ) க்வாடல்கெனால் போர்
ஆ) மிட்வே போர்
இ) லெனின்கிரேடு போர்
ஈ) எல் அலாமெய்ன் போர்
விடை:
ஆ) மிட்வே போர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 4.
அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
அ) கவாசாகி
ஆ) இன்னோசிமா
இ) ஹிரோஷிமா
ஈ) நாகசாகி
விடை:
இ ஹிரோஷிமா

Question 5.
ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?
அ) ரஷ்யர்கள்
ஆ) அரேபியர்கள்
இ) துருக்கியர்கள்
ஈ) யூதர்கள்
விடை:
ஈ) யூதர்கள்

Question 6.
ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இங்கிலாந்துப் பிரதமர் யார்?
அ) சேம்பர்லின்
ஆ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
இ) லாயிட் ஜார்ஜ்
ஈ) ஸ்டேன்லி பால்டுவின்
விடை:
அ) சேம்பர்லின்

Question 7.
எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?
அ) ஜீன் 26, 1942
ஆ) ஜீன் 26, 1945
இ) ஜனவரி 1, 1942
ஈ) ஜனவரி 1, 1945
விடை:
ஆ) ஜீன் 26, 1945

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இராணுவ நீக்கம் செய்யப்பட்ட …………….. பகுதியை ஹிட்லர் தாக்கினார்.
விடை:
ரைன்லாந்து

Question 2.
இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிக்கிடையேயான ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.
விடை:
ரோம்-பெர்லின் டோக்கியோ அச்சு உடன்படிக்கை

Question 3.
……………… கடன் குத்தகைத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
விடை:
ரூஸ்வெல்ட்

Question 4.
1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ………………. ஆவார்.
விடை:
சேம்பர்லின்

Question 5.
……………. என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.
விடை:
ரேடார்

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர் 2

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

Question 1.
கூற்று : குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.
காரணம் : அவர் 1941இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
இ) காரணம் கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை.
ஈ) காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை .
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
விடை:

  • இத்தாலி – முசோலினி
  • ஜெர்மனி – ஹிட்லர்
  • ஸ்பெயின் – பிராங்கோ

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 2.
ஹிட்லர் ஜெர்மன் மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?
விடை:
அடால்ப் ஹிட்லரின் எழுச்சி:

  • ஜெர்மனி பெருமளவு அவமானப்படுத்தப்பட்டதாக நிலவிய கருத்தைப் பயன்படுத்தி, தனது வல்லமை மிக்க சொற்பொழிவாற்றும் திறமையாலும் உணர்ச்சிமிக்கப் பேச்சுக்களாலும் ஜெர்மனியை அதன் இராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதாகவும் கூறி அடால்ப் ஹிட்லர் மக்களைத் தன்பக்கம் ஈர்த்தார்.
  • தேசிய சமதர்மவாதிகள் கட்சியை நிறுவினர்.
  • ஒன்று ஜெர்மனியரே சுத்தமான ஆரிய இனத்தவர் எனும் இனஉயர்வு மனப்பாங்கு மற்றொன்று மிக ஆழமான யூத வெறுப்பு.

Question 3.
முத்துத் துறைமுக நிகழ்வை விவரி.
விடை:

  • 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன் அறிவிப்பின்றி பெரும் தாக்குதலைத் தொடுத்தன.
  • அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையை முடமாக்கி விட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது தான் படையெடுக்கும் போது எதிர்ப்பேதும் இருக்காது என ஜப்பான் நினைத்ததே இதற்குக் காரணமாகும்.
  • இத்தாக்குதலில் பல போர் கப்பல்களும் போர் விமானங்களும் அழிக்கப்பட்டன.
  • மிக முக்கியமாக இத்தாக்குதல் பெருமளவிலான வளங்களைக் கொண்டிருந்த அமெரிக்க நாட்டை நேசநாடுகளின் அணியில் இப்போரில் பங்கேற்க வைத்தது.

Question 4.
பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?
விடை:

  • 1942இல் பிரிட்டன் பொதுவான பெவரிட்ஜ் அறிக்கை என்றழைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டது.
  • பொதுமக்களுக்கு அதிக வருமானத்தை அளிப்பது, உடலநலப் பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் பல திட்டங்கள் தொகுப்பாக இடம் பெற்றிருந்தன.

Question 5.
பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • “பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்கள்” எனக் குறிக்கப்படும் உலகவங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு உலக வங்கியின் இரு முக்கிய அங்கங்கள்.
  • புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கானப் பன்னாட்டு வங்கி, மற்றொன்று பன்னாட்டு வளர்ச்சி முகமை ஆகும். இவையிரண்டுமே உலகவங்கி என்ற பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 6.
பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?
விடை:
பன்னாட்டு நிதியமைப்பின் நோக்கங்கள் :
உலக அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பைப் பேணுவது, நிதி நிலையை உறுதியானதாக வைத்திருத்தல், பன்னாட்டு வணிகத்திற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது, வேலை வாய்ப்பினைப் பெருக்குவது, நீடித்தப் பொருளாதார வளர்ச்சி, உலகம் முழுவதிலும் வறுமையை ஒழிப்பது என்பனவாகும்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
விடை:
இரண்டாம் உலகப்போரின் விளைவுகள்:
உலகம் இரு அணிகளாகப் பிரிதல்:

  • இரண்டாவது உலகப்போர் உலகில் அடிப்படையானதும் முக்கியமானதுமான பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
  • ஒரு அணி கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட அமெரிக்காவால் தலைமையேற்கப்பட்டது.
  • மற்றொரு அணிக்கு சோவியத் யூனியன் தலைமை தாங்கியது.
  • கம்யூனிச நாடுகள், கம்யூனிசமல்லாத நாடுகளென ஐரோப்பா இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

அணு ஆயுதப்பரவல்:

  • அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் போட்டியில் இறங்கி, ஆயுதங்களைப் பெருக்கிக் குவித்தன.
  • பல நாடுகளில் இராணுவத்திற்கான செலவினங்கள் உச்சத்தை எட்டின.

பன்னாட்டு முகமைகள் :

  • பல பன்னாட்டு முகமைகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
  • காலனி நீக்கச் செயல்பாட்டின் அடிப்படையில் காலனியாதிக்கச் சக்திகள் தங்களது காலனிகளுக்கு விடுதலை வழங்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர்.
  • அதில் இந்தியா முதலாவதாய் சுதந்திரம் பெற்றது.

Question 2.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க.
விடை:
நிர்வாக அமைப்பு:

  • ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்வது செயலகம் ஆகும்.
  • இதன் தலைமைச் செயலாளர், பொதுச்சபையில், பாதுகாப்பு சபையின் பரிந்துரையின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • பொதுச் செயலாளர் தனது காபினெட் உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் ஆகியோரின் துணையோடு ஐக்கிய நாடுகள் சபையை நடத்துகிறார்.
  • பன்னாட்டு நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் சபையின் நீதி நிர்வாகக்கிளையாகும்.
  • இது ஹாலந்திலுள்ள தி ஹேக்கில் அமைந்துள்ளது. பொருளாதார சமூக மாமன்றம் ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது அங்கமாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் அனைத்துப் பொருளாதாரச் சமூகப் பணிகளை ஒருங்கிணைப்பது இவ்வமைப்பின் பணியாகும்.
  • உலகின் பல்வேறு பகுதிகளில் வட்டாரங்களின் வளர்ச்சிக்காக பல பிராந்திய பொருளாதார ஆணையங்கள் செயல்படுகின்றன.
  • அவைப் பொருளாதார சமூகமாமன்றத்தின் துணையமைப்புகளாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

ஐ.நா.வின் செயல்பாடுகள்:

  • 1950களில் காலனியாதிக்க நீக்கம் முக்கிய பிரச்சனையாகும்.
  • மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகாலமாற்றம், பாலினச் சமத்துவம் ஆகியன தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு வளையத்தினுள் உள்ளன.
  • மிகச் சிறப்பாகக் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியது ஐ.நா.வின் அமைதிப்படை ஆகும்.
  • உலகம் முழுவதிலும் மோதல்கள் அரங்கேறியப் பல்வேறு பகுதிகளில் அப்படை பணி செய்துள்ளது.

10th Social Science Guide இரண்டாம் உலகப்போர் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
1919 ஜீன்-ல் ……………… உடன்படிக்கையோடு முதல் உலகப் போர் முடிவுற்றது.
அ) லண்ட ன்
ஆ) வெர்செய்ல்ஸ்
இ) பிரெஸ்ட் லிட்டோவஸ்க்
ஈ) மங்க ளூர்
விடை:
ஆ) வெர்செய்ல்ஸ்

Question 2.
செக்கோஸ்லோவாக்கியாவின் ஒரு பகுதி …………………
அ) ரைன்லாந்து
ஆ) நியூசிலாந்து
இ) அயர்லாந்து
ஈ) சூடட்டன்லாந்து
விடை:
ஈ) சூடட்டன்லாந்து

Question 3.
கிழக்குப் பகுதிகளில் ………………. இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
அ) ரஷ்யா
ஆ) சீனா
இ) ஜப்பான்
ஈ) ஜெர்மனி
விடை:
இ ஜப்பான்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 4.
இங்கிலாந்துப் பிரதமர் …………………. ஆவார்.
அ) கிளமென்சோ
ஆ) கெரனர்ஸ்கி
இ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
ஈ) முசோலினி
விடை:
இ வின்ஸ்டன் சர்ச்சில்

Question 5.
சேம்பர்லின் தனது பிரதமர் பதவியை …………………….. ல் துறந்தார்.
அ) 1941
ஆ) 1907
இ) 1991
ஈ) 1940
விடை:
ஈ) 1940

Question 6.
ஹிட்லரின் ‘மின்னல் வேகத் தாக்குதல் ‘…………………… எனப்பட்டது.
அ) ரேடார்
ஆ) சோனார்
இ) பிளிட்ஸ்கிரிக்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ பிளிட்ஸ்கிரிக்

Question 7.
ஹிட்லர் தனது திட்டங்களை …………………….. மூலம் பிரிட்டனை வற்புறுத்த விருப்பினார்.
அ) இராணுவ தாக்குதல்
ஆ) பனிப் போர்
இ) குண்டு தாக்குதல்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ குண்டு தாக்குதல்

Question 8.
லண்டன் நகரம் குண்டுக்கு இரையான இந்நிகழ்வு …………………. எனப்பட்டது.
அ) இறுதி தீர்வு
ஆ) பேரழிவு
இ) மின்ன ல்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ மின்னல்

Question 9.
ஜப்பான் ………………. உடன் சேர்ந்து போரிட்டது.
அ) அச்சு நாடுகள்
ஆ) நேச நாடுகள்
இ) நடுநிலை நாடுகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) அச்சு நாடுகள்

Question 10.
கடன் குத்தகைத் திட்டத்தை ……………… ல் ரூஸ்வெல்ட் தொடங்கினார்.
அ) 1941 மார்ச்
ஆ) 1940 ஜீலை
இ) 1971 ஆகஸ்ட்
ஈ) 1970 டிசம்பர்
விடை:
அ) 1941 மார்ச்

Question 11.
1945ல் …………….. கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
அ) ஹிட்லர்
ஆ) முசோலினி
இ) ஸ்மட்ஸ்
ஈ) ஹெர்சாக்
விடை:
ஆ முசோலினி

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 12.
ஹிட்லர் ……………… ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார்.
அ) 1945
ஆ) 1954
இ) 1934
ஈ) 1905
விடை:
1945

Question 13.
1931ல் …………ப் படைகள் மஞ்சூரியாவின் மீது படையெடுத்தன.
அ) ஜப்பானிய
ஆ) சீன
இ) பிரெஞ்சு
ஈ) இல்லை
விடை:
அ) ஜப்பானிய

Question 14.
சீனத் தலைநகர் ………………… ஆகும்.
அ) நான்கிங்
ஆ) ஷாங்காய்
இ) ரூர்கேலா
ஈ) பெய்ஜிங்
விடை:
ஈ) பெய்ஜிங்

Question 15.
பெய்ஜிங் பொதுவாக ……………… என அழைக்கப்படுகிறது.
அ) இத்தாலி
ஆ) ஹங்கேரி
இ) ருமேனியா
ஈ) பீகிங்
விடை:
ஈ) பீகிங்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
முதல் உலகப் போர் ……………….. எனப்பட்டது.
விடை:
மாபெரும் போர்

Question 2.
போரின் இழப்பீட்டை ……………… வழங்கியது.
விடை:
ஜெர்மனி

Question 3.
சூடட்டன்லாந்தில் பேசும் மொழி ………………. ஆகும்.
விடை:
ஜெர்மன்

Question 4.
இத்தாலி அல்பேனியாவைக் கைப்பற்றிய ஆண்டு ………………….
விடை:
1939

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 5.
அமெரிக்க கப்பற்படைத் தளம் ……………………… ஆகும்.
விடை:
முத்துத் துறைமுகம்

Question 6.
க்வாடெல்கெனால் போர் …………………….. மாதங்கள் நீடித்தது.
விடை:
பல

Question 7.
காலனித்துவ அடிப்படையில் ………………….. முதலாவதாக சுதந்திரமடைந்தது.
விடை:
இந்தியா

Question 8.
இரண்டாம் உலகப் போரின் போது உலகம் …………….. துருவங்களாகப் பிரிந்தது.
விடை:
இரு

Question 9.
………………த் தொழில் யூதர்களின் முக்கிய தொழில் ஆகும்.
விடை:
வட்டி

Question 10.
ஷேக்ஸ்பியரின் பிரபலமான நாடகம் ……………… ஆகும்.
விடை:
வெனிஸ் நகர வணிகர்

Question 11.
மனித உரிமைப் பிரகடனம் ……………… கட்டுரைகளைக் கொண்டது.
விடை:
30

Question 12.
மனித உரிமைகள் தினம் ……………… ஆகும்.
விடை:
டிசம்பர் – 10

Question 13.
ஐக்கிய நாடுகள் …………………. உறுப்பு நாடுகளைக் கொண்டது.
விடை:
193

Question 14.
ஐ.நா வின் தலைமையகம் ……………………
விடை:
நியூயார்க்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 15.
உலக வங்கி ……………. பிரிவைக் கொண்டது.
விடை:
2

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர் 4

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : இத்தாலி முசோலினியின் சர்வாதிகார ஆட்சி 1933ல் தூக்கியெறியப்பட்டது.
காரணம் : ஜெர்மனி வடக்கே ஒரு பொம்மை அரசை நிறுவி அதில் முசோலினியை அமரவைத்தது.

அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமானது.
ஆ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமாக இல்லை.
இ) இரண்டும் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
விடை:
ஈ) கூற்று தவறு. காரணம் சரி

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் ஆக்கிரமிப்புகள் யாவை?
விடை:

  • தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் தனது பேரரசை விரிவாக்க வேண்டுமென்ற தனது திட்டத்தில் ஜப்பான் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது.
  • குவாம், பிலிப்பைன், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, டச்சு, கிழக்கிந்தியா (இந்தோனேசியா). பர்மா ஆகிய அனைத்தும் ஜப்பானிடம் வீழ்ந்தன.

Question 2.
பேரழிவுப் படுகொலை – நீவீர் அறிந்தது என்ன?
விடை:
இரண்டாவது உலகப் போரின் போது ஜெர்மானியர்களால் ஆறு மில்லியன் யூத மக்கள் கொல்லப்பட்ட இன அழிப்பை விளக்குவதற்கு பேரழிவுப்படுகொலை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 3.
மனித உரிமைப் பிரகடனம் வரையறு.
விடை:

  • ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய மனித உரிமை சாசனத்தில் இனம், பால், மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளின்றி அடிப்படைச் சுதந்திரமும் மனித உரிமைகளும் உலகளாவிய முறையில் கடைபிடிக்கப்படுவதை ஊக்குவிக்கப்போவதாக உறுதிமொழி மேற்கொண்டது.
  • உலகளாவிய முறையில் மனித உரிமைகளைக் காப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.

Question 4.
இஸ்ரேல் நாட்டின் பிறப்பு பற்றி எழுதுக.
விடை:

  • மேற்சொல்லப்பட்ட பேரழிவின் முக்கிய விளைவு யூத இன மக்களுக்கென இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டதாகும்.
  • வரலாற்று ரீதியாக, ரோமர்கள் காலத்திலிருந்து இதுவே அவர்களின் தாயகமாகும்.

Question 5.
ஐநாவின் முக்கியத் துணை அமைப்புகள் யாவை? –
விடை:
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு.

  • உலக சுகாதார நிறுவனம்.
  • ஐ.நா. கல்வி, அறிவியல், மற்றும் பண்பாட்டு அமைப்பு.

Question 6.
உலக வங்கியின் இரு முக்கிய அம்சங்கள் யாவை?
விடை:

  • புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கானப் பன்னாட்டு வங்கி.
  • பன்னாட்டு வளர்ச்சி முகமை.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
பன்னாட்டு நிதியமைப்பை பற்றி விவரி.
விடை:
பன்னாட்டு நிதியமைப்பானது அடிப்படையில் ஹேரி டேக்ஸ்டர் ஒயிட், ஜான் மேனார்டு கெய்ன்ஸ் எனும் புகழ்பெற்றப் பொருளாதார நிபுணர்களின் மூளையில் உதித்த குழந்தையாகும்.

இவ்வமைப்பு 1945இல் 29 உறுப்புநாடுகளைக் கொண்டு முறையாக தொடங்கப்பெற்றது. தற்போது 189 நாடுகள் உறுப்புநாடுகளாக உள்ளன.

இதனுடைய அடிப்படை நோக்கம் உலகம் முழுவதிலும் நிதி மற்றும் வளர்ச்சியின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவதாகும்.

இவ்வமைப்பு பணம் செலுத்துவதில் சமநிலைப் பிரச்சனைகளை (ஏனெனில் இந்நாடுகளால் தங்கள் இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடிவதில்லை) சந்திக்கும் நாடுகளுக்குக் கடன் வழங்கும்.

ஆனால் கடன் வாங்கும் நாடுகள் மீது இவ்வமைப்பு வரவு செலவுத்திட்டங்களைச் சுருக்குதல், செலவுகளைச் சுருக்குதல் போன்ற கடுமையான நிபந்தனைகளைச் சுமத்துகிறது.

இந்நடவடிக்கைகள் பெரும்பாலும் வளரும் நாடுகளால் விரும்பப்படுவதில்லை.

ஏனெனில் மக்களுக்கு மானியம் வழங்கும் பல்வேறு திட்டங்களைக் கைவிட வேண்டிய சூழல் உருவாகிறது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர்

Question 2.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஐரோப்பாவில் மக்கள் நல அரசுகள் பற்றி விவரி.
விடை:
மக்கள் நலஅரசு எனும் சொற்றொடர், அரசாங்கமே மக்களின் சமூகப் பொருளாதார நலன்களுக்குப் பொறுப்பு என்ற கோட்பாட்டைக், குறிப்பதாகும்.

1942இல் பிரிட்டன் பொதுவாக பெவரிட்ஜ் அறிக்கை என்றழைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டது.

பொதுமக்களுக்கு அதிக வருமானத்தை அளிப்பது, உடல் நலப்பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் பல திட்டங்கள் தொகுப்பாக இடம் பெற்றிருந்தன.

போருக்குப் பின்னர் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சியமைத்தது.

“தொட்டிலிலிருந்து கல்லறை வரை” மக்களைக் கவனித்துக்கொள்ளும் திட்டங்களை மேற்கொள்ளப்போவதாக அவ்வரசு உறுதியளித்தது.

தேசிய நலச் சேவையின் மூலம் இலவச மருத்துவ வசதி, முதியோர்க்கு ஓய்வூதியம், வேலையற்றோர்க்கு உதவித்தொகை போன்ற நிதியுதவிகள் குழந்தை நல சேவைகள், குடும்பநலச்சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

அனைவருக்குமான இலவசப் பள்ளிக் கல்வி என்பதற்கு மேலாக இவையனைத்தும் அளிக்கப்பட்டன.

VII. செயல்பாடுகள்

உலக வரைபடத்தில் அச்சு நாடுகள், நேசநாடுகள் ஆகியவற்றைக் குறிக்கவும்.
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 3 இரண்டாம் உலகப்போர் 5

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 2 ண்டைய நாகரிகங்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

9th Social Science Guide ண்டைய நாகரிகங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________ என்கிறோம்.
அ) அழகெழுத்து
ஆ) சித்திர எழுத்து
இ) கருத்து எழுத்து
ஈ) மண்ணடுக்காய்வு
விடை:
ஆ) சித்திர எழுத்து

Question 2.
எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை __________
அ) சர்கோபகஸ்
ஆ) ஹைக்சோஸ்
இ) மம்மியாக்கம்
ஈ) பல கடவுளர்களை வணங்குதல்
விடை:
இ) மம்மியாக்கம்

Question 3.
சுமேரியரின் எழுத்துமுறை _____ ஆகும்
அ) பிக்டோகிராபி
ஆ) ஹைரோகிளிபிக்
இ) சோனோகிராம்
ஈ) க்யூனிபார்ம்
விடை:
ஈ) க்யூனிபார்ம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 4.
ஹரப்பா மக்கள் _______ பற்றி அறிந்திருக்கவில்லை
அ) தங்கம் மற்றும் யானை
ஆ) குதிரை மற்றும் இரும்பு
இ) ஆடு மற்றும் வெள்ளி
ஈ) எருது மற்றும் பிளாட்டினம்
விடை:
ஆ) குதிரை மற்றும் இரும்பு

Question 5.
சிந்துவெளி மக்கள் இழந்த மெழுகு செயல் முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _____ ஆகும்
அ) ஜாடி
ஆ) மதகுரு அல்லது அரசன்
இ) பறவை
ஈ) நடனமாடும் பெண்
விடை: ஈ) நடனமாடும் பெண்

Question 6.
i) மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்
ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்
iii) யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.
iv) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்
அ) (i) சரி
ஆ) (i) மற்றும்
(ii) சரி
இ) (iii) சரி ஈ)
(iv) சரி
விடை:
ஈ) (iv) – சரி

Question 7.
i) யாங்ட்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
ii) வு-டி சீனப்பெருஞ்சுவரைக் கட்டினார்
iii) சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்
iv) தாவோயிசத்தை நிறுவியவர் மென்சியஸ் என்று சீன மரபு கூறுகிறது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (iii) சரி
ஈ) (iii) மற்றும்
(iv) சரி
விடை:
இ) (iii) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 8.
பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?
அ) சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்
ஆ) பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்
இ) சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள் – அஸிரியர்கள்
ஈ) பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்
விடை:
இ) சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள் – அஸிரியர்கள்

Question 9.
கூற்று:- மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
காரணம் :- அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ)கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஆ) கூற்றும் கரரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_______ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.
விடை:
ஸ்பிங்க்ஸின்

Question 2.
எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை ______ ஆகும்.
விடை:
ஹைரோகிளிபிக் (சித்திர எழுத்து முறை)

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 3.
_______ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைவிளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.
விடை:
ஹமுராபியின் சட்டத் தொகுப்பு

Question 4.
சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ______ ஆவார்.
விடை:
லாவோ ட் சு

Question 5.
ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள _______ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
விடை:
சுடுமண்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.
ஆ)க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன் தொடர்புடையவை.
இ) சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவங்களும், செம்பில் செய்யப்பட்ட நடனமாடும் பெண் உருவமும் எகிப்தியர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
ஈ) மெசபடோமியர்கள் சூரிய நாள்காட்டி முறையை வகுத்தார்கள்.
விடை:
ஆ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 2.
அ) அமோன் ஓர் எகிப்திய கடவுள்
ஆ)அரண்களால் சூழ்ந்த ஹரப்பா நகரத்தில் கோயில்கள் இருந்தன.
இ) பெரிய ஸ்பிங்ஸ் என்பது பழங்கால மெசபடோமியாவில் உள்ள பிரமிடு வடிவ நினைவுச்சின்னமாகும்.
ஈ) பானை வனைவதற்கான சக்கரத்தைக் கண்டுபிடித்த பெருமை எகிப்தியர்களைச் சாரும் .
விடை:
அ) அமோன் ஓர் எகிப்திய கடவுள்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள் 3

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் – விளக்குக
விடை:

  • பாரோக்கிகளின் சாதிகளான பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. எ.கா: கெய்சோ அருகிலுள்ள கிஸா பிரமிடுகள்.
  • பிரமிடுகள் எகிப்தியரின் பொறியியல், கட்டுமானம், மனித ஆற்றல் மேலாண்மை திறன்களை
    வெளிப்படுத்துகின்றன.
  • 73 மீட்டர் நீள 20 மீட்டர் உயர சிங்க உடலும், மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக் படிமம் ஸ்பிங்க்ஸ், உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று.

Question 2.
சிகுரட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக.
விடை:

  • சுமேரிய நாகரிகத்தில் மெஸபடோமியா) நகரின் மத்தியில் கட்டப்பட்ட செங்குத்தான பிரமிடுகள் வடிவ கோவில்கள் ‘சிகுராட்’ எனப்படும். உச்சிக்குச் செல்ல படிக்கட்டுகள் உண்டு.
  • சிகுராட்டைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்வாரங்கள், புனித இடங்கள், விருந்து அரங்குகள், தொழிற்கூடங்கள், களஞ்சியங்கள், கிடங்குகள், நிர்வாகக் கட்டிடங்கள், கல்லறைகள் அடங்கிய வளாகங்கள் இருந்தன. (புகழ்பெற்ற சிகுராட் இருக்குமிடம் உர்).

Question 3.
ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி
விடை:

  • சுமேரியர்களின் குடும்ப உரிமைகள், வணிகம், அடிமை முறை, வரிகள், கூலி குறித்த 282 குற்றப்பிரிவுகளுக்கான சட்டங்களைக கூறும் முக்கியமான சட்ட ஆவணம்.
  • “கண்ணுக்குக் கண்”, “பல்லுக்குப்பல்” என்ற பழிக்குப்பழி வாங்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட பழைய சட்டங்களின் தொகுப்பு

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு.
ஹைரோகிளிபிக்ஸ் – எகிப்திய எழுத்து முறை :

  • நினைவுச் சின்னங்களில் உள்ள முத்திரை மற்றும் இதர பொருட்களில் இந்த சித்திர எழுத்து முறை பயன்பட்டது.
  • இந்த எழுத்துக்கள் எகிப்தியரின் குறியீகளைப் பயன்படுத்தும் திறனைக் காட்டுகின்றன.
    கியூனிபார்ம் – சுமேரிய எழுத்து முறை:
  • சுமேரியர்கள் கில்காமெஷ் என்ற காவியம் மற்றும் வணிகப் பரிமாற்றங்கள், கடிதங்கள், கதைகள் எழுதுவதற்கு இந்த ஆய்வு வடிவ எழுத்துக்களைப் பயன்படுத்தினார்கள்.
  • இந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட சுட்ட களிமண் பலகைகள் சுமேரிய நாகரிகம் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகின்றன.

Question 2.
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு.
விடை:
தத்துவம்:
லாவோட்சு – தாவோயிசத்தை தோற்றுவித்தவர். ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணம் என்று வாதிட்டவர். சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர்.

கன்பூசியஸ்:
ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர். புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி மற்றும் அரசியல் சீர்திருத்தவாதி. “ஒருவது தனிப்பட்ட வாழ்க்கை சீர்திருத்தப்பட்டால் அவரது குடும்ப வாழ்க்கை முறைப்படுத்தப்படும். குடும்பம் முறைப்படுத்தப்பட்டு விட்டால் தேச வாழ்வு முறைபடுத்தப்பட்டு விடும்” என்றார்.

மென்சியஸ்:
சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறிய புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி.

இலக்கியம்:
இராணுவ உற்பத்தியாளர் சன் ட் சூ – போர்க்கலை
அதிகாரப்பூர்வ சீன அரசு நூல் – திஸ்பிரிங் அண்ட் அடோம் அனல்ஸ் (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்)
ஹான் வம்ச காலத்தில் முறைப்படுத்தப்பட்ட சீனாவின் மிகப் பழமையான மருத்தவ நூல் – மஞ்சள் பேரரசரின் கேனன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்)

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 3.
சிந்துவெளி நாகரிகத்தின் மறைந்த பொக்கிஷங்களைப் பற்றி எழுது.
விடை:
சிந்துவெளி நாகரிகத்தின் புதையுண்ட பொக்கிஷங்கள்:

  • “சிந்துவெளி நாகரிகம்” பண்டைய நாகரிகங்களில் முக்கியமான ஒன்றாகும். இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஹரப்பாதான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம்.
  • ஹரப்பா நகரங்களில் மதில் சுவர்கள், நன்கு திட்டமிட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர்க் கால்வாய்கள் ஆகியவை காணப்படுகின்றன.
  • அவர்கள் சுட்ட மற்றும் சுடாத செங்கற்களையும் கற்களையும் கட்டமானங்களுக்குப் பயன்படுத்தினார்கள். உள்ளாட்சி அமைப்பு ஒன்று நகரங்களில் திட்டமிடலை கட்டுப்படுத்தியிருக்க கூடும்.
  • மொஹஞ்சதாரோவில் உள்ள நன்கு தளமிடப்பட்ட பல அறைகள் கொண்ட மாபெரும் குளியல் குளம் ஒரு முக்கியமான கட்டுமானமாகும்.
  • தோண்டியெடுக்கப்பட்ட சில கட்டுமானங்கள் களஞ்சியங்கள் போல் காணப்படுகின்றன.
  • அவர்கள் உலோகத்தாலும் கல்லாலுமான அணிகலங்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் மேலும் பருத்தி மற்றும் பட்டாடைகளைப் பயன்படுத்தினார்கள். செம்பு மற்றும் தங்கத்தாலான அணிகலன்களைப் பயன்படுத்தினார்கள்.
  • அவர்கள் பெண் தெய்வத்தை வழிபட்டார்கள். காலிபங்கனில் நெருப்புக் குண்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இறந்தவர்களைப் புதைப்பது வழக்கத்திலிருந்தது.
  • ஹரப்பர்களின் எழுத்துக்களுக்கான பொருள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் ஹரப்பா நாகரிகம் பற்றி முழுமையாக அறிய முடியாமல் உள்ளது.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. வெண்கலக் கால நாகரிகம் நிலவிய இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும்
2. பிரமிடுகள் மற்றும் எகிப்தியர்களின் எழுத்துமுறை குறித்து ஒரு விளக்கப்படம் தயாரிக்கவும்.
3. சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த முத்திரைகள், பானைகள் உள்ள படங்களைச் சேகரிக்கவும்.

9th Social Science Guide ண்டைய நாகரிகங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
எகிப்தின் நைல் நதியின் நன்கொடை என்றவர் ______
அ) கன்பூசியஸ்
ஆ) ஹெரோடெட்டஸ்
இ) ஹோவாங்ஹோ
ஈ) லாவோட்சே
விடை:
ஆ) ஹெரோடெட்டஸ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 2.
கடல் வழியாக சங்க காலத்தில் தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்
அ) பாரசீகர்கள்
ஆ) கிரேக்கர்
இ) எகிப்தியர்
ஈ) சீனர்கள்
விடை:
இ) எகிப்தியர்

Question 3.
எகிப்தின் பாரோ என்பது _____ ஆகும்
அ) மாய சக்தி
ஆ) தெய்வீக சக்தி
இ) கடவுள் நம்பிக்கை
ஈ)மனித சக்தி
விடை:
ஆ) தெய்வீக சக்தி

Question 4.
நீர் கடிகாரம் மற்றும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட 12 மாத நாட்காட்டியை _______ உருவாக்கினார்
அ) சுமேரியர்
ஆ) எகிப்தியர்
இ) சீனர்
ஈ) இந்தியர்
விடை:
அ) சுமேரியர்

Question 5.
சீனாவின் துயரம் என அழைக்கப்படும் ஆறு _____
அ) மஞ்சள் ஆறு
ஆ) சிவப்பு ஆறு
இ) வெள்ளை ஆறு
ஈ) சிந்து ஆறு
விடை:
அ) மஞ்சள் ஆறு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
குவின் வம்சத்தை தோற்றுவித்தவர் _______
விடை:
ஷிஹிவாங்டி

Question 2.
சீனப்பெருஞ்சுவரைக் கட்டியவர் _______
விடை:
ஷிஹிவாங்டி

Question 3.
உலகின் முதல் இராணுவ அரசு _______
விடை:
அஸிரிய பேரரசு இரும்பு தொழில் நுட்பம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 4.
பல கடவுள் கோட்பாடு கொண்ட நாகரீகம் _______
விடை:
சுமேரிய நாகரீகம்

Question 5.
காற்று, ஆகாயம் கடவுளாக வணங்கியவர் _______
விடை:
சுமேரியர்

III. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள் 10

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

அ) எகிப்திய அரசர் பாரோ என்ற சொல்லால் அழைக்கப்பட்டனர்.
ஆ)எகிப்தியர் மரணத்திற்கு பிறகு வாழ்வு இல்லை என்றனர்.
இ) அடிமை முறை இல்லை, சிறை பிடிக்கப்பட்டோர் அடிமைகளாக
ஈ) பதப்படுத்தப்பட்ட இறந்த உடலை மம்மி என்று அழைத்தனர்.
1) அ, ஆ, இ (சரி)
2) ஆ (சரி)
3) இ, ஈ, (சரி)
4) அ, ஈ (சரி)
விடை:
4) அ, ஈ (சரி)

Question 2.
அ) பாரோக்களின் சமாதிகளாக கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்கள் பிரமிடுகள் ஆகும்.
ஆ)ஸ்பிங்ஸின் பிரம்மாண்டமான சிலை மனித உடலும் சிங்க முகமும் கொண்ட சுண்ணாம்பு கல் படிமம்
இ) அனுபிஸ் இறப்பின் கடவுள்
ஈ) மரணத்திலிருந்து காப்பாற்றும் கடவுள் அனுபிஸ்
1) அ, ஆ, இ (சரி)
2) ஈ (தவறு)
3) ஆ (தவறு)
4) அ, இ, ஈ (சரி)
விடை:
4) அ, இ, ஈ (சரி)

V. சுருக்கமான விடை தருக.

Question 1.
எகிப்திய மம்மிகள் பற்றி சிறுகுறிப்பு வரைக?
விடை:
இறந்த உடலை நாட்ரன் உப்பை கொண்டு 40 நாட்களுக்கு பாதுகாத்து உடலின் ஈரப்பதம் முழுவதும் உறிஞ்சிய பிறகு உடலை மரத்தூளால் நிரப்பி, லினன் துண்டுகளால் சுற்றி, துணியால் மூடி வைத்துவிடுவார்கள். உடலை சார்க்கோபேகஸ் எனப்படும் கல்லாலான சவப்பெட்டியில் பாதுகாப்பார்கள். இவையே மம்மிகள் என்று அழைக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 2.
சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?
விடை:

  • பருவநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான. வணிகத்தில் வீழ்ச்சி, நதியின் வறட்சி அல்லது வெள்ளப்பெருக்கு, அந்நியர் படையெடுப்பு முதலியன சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியுறக் காரணங்கள் ஆகும்.
  • சிந்துவெளி நாகரிகம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. அது கிராமப் பண்பாடாக இந்தியாவில் தொடர்ந்தது.

Question 3.
மெசபடோமியா நாகரிகம் உலகிற்கு அளித்த பங்களிப்பு பற்றி எழுதுக
விடை:

  • சுமேரியர்கள், குயவர்கள் சக்கரத்தை முதலில் கண்டுபிடித்தனர். 360 நாட்கள் கொண்ட நாட்காட்டியை தயாரித்து 360 பாகைகளாக பிரித்தனர்.
  • கியுனிபார்ம் எழுத்துமுறை அவர்கள் பங்களிப்பு. ஹமுராபியின் சட்டத் தொகுப்பு மெசபடோமியர்களின் மற்றொரு சாதனை ஆகும்.

VI. தலைப்பு வினாக்கள்.

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

Question 1.
தொடக்க கால நாகரிகம் அ) நாகரிகம் என்றால் என்ன?
விடை:
முன்னேறிய முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை.

ஆ) தொடக்க கால நாகரிகங்களின் பெயர்களை எழுதுக, எகிப்திய,
விடை:
மெசபடோமிய, சிந்துவெளி, சீன நாகரிகங்கள்.

இ) பெரும்பாலான மக்களுக்கு வாழ்வதாரமாக இருந்தவை எவை?
விடை:
செழிப்பான பகுதிகளின் விவசாயிகள் உற்பத்தி செய்த உபரி உணவு, பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு உணவளிக்கப் போதுமானதாக இருந்தது.

ஈ) நாகரிகம் வடிவம் பெறத் தொடங்கியபோது என்ன நடந்தது?
விடை:
பெரிய கட்டடங்கள், எழுத்துக்கலை உருவாக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பம் சமூக மேம்பாட்டை உருவாக்கியது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள்

Question 2.
எகிப்திய நாகரிகத்தின் பண்புகள்
அ) எகிப்து “நைல் நதியின் நன்கொடை” என்று அழைக்கப்படுவது ஏன்?
விடை:
எகிப்திய நாகரிகம் நைல் நதியின் செழிப்பை நம்பி இருந்தது. எனவே எகிப்து “நைல் நதியின் நன்கொடை” என அழைக்கப்பட்டது.

ஆ) பாரோ மற்றும் விசியர்கள் என்போர் யார்?
விடை:
பாரோக்கள்: எகிப்திய அரசர்கள்
விசியர்கள்: பாரோக்களின் கீழ் மாகாணங்களை ஆளும் நிர்வாகிகள்.

இ) பிரமிடுகள் என்றால் என்ன? அதனை ஏன் கட்டினார்கள்?
Answer:
பிரமிடு என்பது பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் ஆகும்.
அது இறந்துபோன பாரோவின் சமாதியாக கட்டப்பட்டது.

ஈ) மம்மி உருவாக்க முறையைக் கூறு.
விடை:
எகிப்தியர்களின் மரணத்திற்குப் பிறகு வாழ்வு இருப்பதாக நம்பினார்கள். எனவே அவர்கள் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைத்தார்கள். இவ்வாறு உடல்களை பதப்படுத்தி வைக்கும் முறைக்கு மம்மியாக்கம் என்று பெயர்.

VII. விரிவான விடையளி.

Question 1.
எகிப்தியர்களின் தத்துவம், அறிவியல், இலக்கியம் பற்றி விவரி?
விடை:
தத்துவம்:

  • பண்டைய எகிப்திய தத்துவமாக கிட்டத்தட்ட எதுவும் அறியப்படவில்லை.
  • பண்டைய கிரேக்க தத்துவம் எகிப்தில் ஊன்றியிருப்பதாக சிறிய எண்ணிக்கையிலான அறிஞர்கள் கருதுகின்றனர்.

அறிவியல்:

  • சூரிய கடிகாரம், நீர் கடிகாரம், கண்ணாடி ஆகியவை எகிப்தியர்களால் கண்டுடிக்கப்பட்டவை.
  • அவர்கள் சூரியனை அடிப்படையாக வைத்து ஒரு நாட்காட்டியை உருவாக்கினார்கள். அதில் 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் இருந்தன. ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இலக்கியம்:
→ இலக்கியப் படைப்புகளில் கணிதம், வானவியல், மருத்துவம், மாந்திரீகம், மதம் குறித்து எழுதப்பட்டவையும் உண்டு.

மனவரைபடம்

பண்டைய நாகரிகங்கள்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள் 11
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 2 ண்டைய நாகரிகங்கள் 12

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

10th Social Science Guide இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) போப்
ஈ) ஸ்பெயின்
விடை:
இ போப்

Question 2.
யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
அ) ஹெர்மன் கோர்ட்ஸ்
ஆ) பிரான்சிஸ்கோ பிசாரோ
இ) தௌசெயின்ட் லாவெர்ட்யூர்
ஈ) முதலாம் பெட்ரோ
விடை:
அ) ஹெர்மன் கோர்ட்ஸ்

Question 3.
பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?
அ) ஆங்கிலேயர்
ஆ) ஸ்பானியர்
இ) ரஷ்யா
ஈ) பிரெஞ்சுக்காரர்
விடை:
ஆ) ஸ்பானியர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 4.
லத்தீன் அமெரிக்காவுடன் ‘அண்டை நாட்டுடன் நட்புறவு’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்? அ) ரூஸ்வெல்ட்
ஆ) ட்ரூமன்
இ) உட்ரோவில்சன்
ஈ) ஐசனோவர்
விடை:
அ) ரூஸ்வெல்ட்

Question 5.
உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ?
அ) ஐரோப்பா
ஆ) லத்தீன் அமெரிக்கா
இ) இந்தியா
ஈ) சீனா
விடை:
ஆ) லத்தின் அமெரிக்கா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சமூக ஜனநாயக கட்சியை நிறுவியர் …………………..
விடை:
பெர்டினன்ட் லாஸ்ஸல்வி

Question 2.
நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் ………………….
விடை:
ஜோசப் கோயபெல்ஸ்

Question 3.
வியட்நாம் தேசியவாதிகள் கட்சி ……………… இல் நிறுவப்பட்டது.
விடை:
1927

Question 4.
நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை ……………………….. என அழைக்கப்பட்டது.
விடை:
கெஸ்டபோ

Question 5.
தென்னாப்பிரிக்க ஒன்றியம் …………………… ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.
விடை:
1910

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 6.
ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா …………………….. ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
விடை:
27

Question 7.
போயர்கள் …………………….. என்றும் அழைக்கப்பட்டனர்.
விடை:
ஆப்பிரிக்க நேர்கள்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

Question 1.
i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கியக் கடமையாக இருந்தது.
ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.
iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் ஏற்பட்டது.
iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

அ) i), ii) ஆகியவை சரி
ஆ) iii) சரி
இ) iii), iv) ஆகியவை சரி
ஈ) i), ii), iii) ஆகியவை சரி
விடை:
ஈ) i), ii), iii) ஆகியவை சரி

Question 2.
கூற்று : தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.
காரணம் : அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல் இருந்ததினால் இந்நிலை உண்டானது.

அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு
ஈ) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை .
விடை:
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 3.
கூற்று : 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது.
காரணம் : ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.

அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் சரியான காரணமல்ல
இ) கூற்று காரணம் இரண்டுமே தவறு
ஈ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுடன் பொருந்தவில்லை .
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி

IV. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 2

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
இந்தோ-சீனாவில் நடைபெற்ற ‘வெள்ளை பயங்கரம்’ குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • 1929இல் வியட்நாம் வீரர்கள் இராணுவப்புரட்சி செய்தனர்.
  • பிரெஞ்சு கவர்னர் ஜெனரலைக் கொலை செய்வதற்கான முயற்சியும் தோல்வி அடைந்தது.
  • இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்களின் தலைமையில் மிகப்பெரும் விவசாயிகளின் புரட்சியும் நடைபெற்றது.
  • இப்புரட்சி ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ‘வெள்ளை பயங்கரவாதம்’ என்பது அரங்கேறியது. புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

Question 2.
ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.
விடை:

  • இங்கிலாந்திற்கும் ஆங்கிலப் பேரரசின் உறுப்பு நாடுகளுக்கும் 1932இல் நடைபெற்ற ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
  • இம்மாநாட்டில் பங்கேற்றநாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருள்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக்கொண்டன.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 3.
முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை?
விடை:

  • 1922 அக்டோபரில் ஒரு நீண்ட அமைச்சரவைச் சிக்கலின் போது முசோலினி பாசிஸ்டுகளின் மாபெரும் அணிவகுப்பு ஒன்றை ரோமபுரியை நோக்கி நடத்தினார்.
  • முசோலினியின் வலிமையைக் கண்டு வியந்துபோன அரசர் மூன்றாம் விக்டர் இம்மானுவேல், முசோலினியை ஆட்சியமைக்க வரவேற்றார்.

Question 4.
1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டின் சாரத்தைக் குறிப்பிடுக.
விடை:

  • 1884-1885 ஆண்டுகளில் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டில் காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்கள் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
  • ஆனால் ஆங்கிலேயருக்கும், தென்னாப்பிரிக்க போயர்களுக்கும் இடையே நடைபெற்றப் போர் இத்தீர்மானத்திற்கு எதிரான செயலாகும்.

Question 5.
பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
விடை:

  • பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மைக்கும் உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கும் மரண அடியைக் கொடுத்தது.
    எடுத்துக்காட்டாக வேளாண் உற்பத்திப் பொருள்களின் விலை பாதியாகக் குறைந்தது.
  • விலைவாசியில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இந்திய தேசியவாதிகளை உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் கோரிக்கையை வைக்கத் தூண்டியது.

Question 6.
‘டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக.
விடை:
டாலர் ஏகாதிபத்தியம் :
இச்சொல் தொலைதூர நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்வதன் மூலம் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவும், தக்கவைத்துக் கொள்ளவும், அமெரிக்கா பின்பற்றியக் கொள்கையை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாகும்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
விடை:

  • பாசிசத்தின் தோற்றம் 1919லிருந்து தொடங்குகிறது.
  • 1919ஆம் ஆண்டில், ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது, மியூனிச் நகரில் சந்தித்து தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் உழைப்பாளர் கட்சி சுருக்கமாக நாசி சட்சியை நிறுவியது.
  • ஹிட்லரும் அவர்களுள் ஒருவராக இருந்தார்.
  • முதல் உலகப்போரின்போது ஹிட்லர் பவேரியாவின் படையில் பணியாற்றினார்.
  • அவரின் ஆற்றமிக்க உரை வீரர்களைத் தட்டி எழுப்பியது.
  • 1923இல் பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற அவர் முயற்சியை மேற்கொண்டார்.
  • சிறையில் இருந்தபோது தனது அரசியல் சிந்தனைகளை உள்ளடக்கிய சுயசரிதை நூலான மெயின்காம்ப் (எனது போராட்டம்) என்னும் நூலை எழுதினார்.
  • அதன்விளைவாகத் தொழிலதிபதிர்களும் வங்கியாளர்களும் குடியாட்சிக் கட்சியினரும் ஹிட்லரை சான்சிலராக முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தும்படி குடியரசுத் தலைவர் வான் ஹிண்டன்பர்க் என்பவரை வற்புறுத்தினார்.
  • மூன்றாவது ரெய்க் என்றழைக்கப்பட்ட ஹிட்லரின் நாசி அரசு முதல் உலகப்போருக்குப் பின்னர் ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த பாராளுமன்ற ஜனநாயக அரசை முடிவுக்குக் கொண்டுவந்தது.
  • ஹிட்லர் வெய்மர் குடியரசின் கொடிக்குப் பதிலாக ஸ்வஸ்திக் சின்னம் பொறிக்கப்பட்ட தேசிய சோசலிசக் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.
  • ஜெர்மனி மிகவும் மையப்படுத்தப்பட்ட நாடாக மாற்றப்பட்டது. > நாசிச கட்சியைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை என்று அறிவிக்கப்பட்டன.
  • பழுப்பு நிறச் சட்டை அணிந்த போர்வீரர்கள், முழங்கால்களுக்கு மேல்வரும் காலணிகள் அணிந்த புயல்படையினர் ஆகியோரின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது.
  • ஹிட்லர் இளைஞர் அணியும், தொழிலாளர் அமைப்பும் நிறுவப்பட்டன.
  • தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட்டன. > அவற்றின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • நாசிச கட்சியின் பரப்புரைகளுக்கு ஜோசப் கோயபெல்ஸ் தலைமையேற்றார்.
  • இவர் திட்டமிடப்பட்ட பரப்புரைகளின் மூலம் பொதுமக்களின் கருத்துக்களை நாசிகளுக்கு ஆதரவாக மாற்றினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 2.
உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்.
விடை:
இந்தியாவில் காலனியாதிக்கநீக்கம்:
மாகாணங்களில் இரட்டையாட்சி:

  • இந்தியாவில் காலனிய நீக்கச்செயல்பாடானது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 1905இல் சுதேசி இயக்கத்தோடு துவங்கியது.
  • முதல் உலகப்போரானது விரைவான அரசியல் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது.
  • 1919இல் இந்திய அரசுச்சட்டம் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்தது.
  • இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டையாட்சி தொடர்பான ஏற்பாடுகளை மறுத்ததோடு சட்டசபைகளைப் புறக்கணிக்கவும் முடிவு செய்தது.

இந்தியாவைத் தொழில்மயமாக்குவதில் நடவடிக்கைக் குறைபாடுகள்:

  • சர்க்கரை, சிமெண்ட் மற்றும் சில வேதியியல் பொருள்களுக்கு எதிர்மறையான பாகுபாட்டு மனப்பான்மையோடு வழங்கப்பட்ட பாதுகாப்பைத் தவிர காலனியப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றமேதுமில்லை.
  • ஆனால் உள்நாட்டுத் தொழில்களைப் பொறுத்தமட்டில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுரைகளும், கல்வியும் வழங்குதல் புதிய துறைகள் தொடர்பாக முன்னோடித் தொழில் கூடங்களை அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் அரசு உதவிகள் செய்தது.
  • ஆனால் ஆங்கிலேய நிறுவனங்கள் அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.

பொருளாதாரப் பெருமந்தத்தின் போது இந்தியா:

  • 1929ஆம் ஆண்டுப் பொருளாதாரப்பெருமந்தம் ஆங்கிலேய வணிக வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெரும் சேதத்தை உண்டாக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • இங்கிலாந்து பெருமந்தத்தின் தீயவிளைவுகளைத் தனது காலனிய நாடுகளின் தோள்களுக்கு மாற்றியது.
  • இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்ப) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருள்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக்கொண்டன.

இந்திய வேளாண்மையின் மீது பெருமந்தம் ஏற்படுத்தியத் தாக்கம்:

  • பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மைக்கும் உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கும் மரண அடியைக் கொடுத்தது.
  • ஆனால் விவசாயி, நிலத்திற்குக் கொடுக்க வேண்டிய குத்தகைத் தொகையில் மாற்றமேதுமில்லை.
  • விவசாயப் விளைபொருள்களின் விலையை பொறுத்தமட்டிலும் அரசுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பணம் இரண்டு மடங்காகியிற்று.
  • விலைவாசியில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இந்திய தேசியவாதிகளை உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் கோரிக்கையை வைக்கத் தூண்டியது.

1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்:

  • ஆங்கிலேயர்களுக்கு இந்திய தேசியவாதிகளைச் சமாதானம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடே 1935 இந்திய அரசுச் சட்டம்.
  • இச்சடம் உள்ளாட்சி அரசு நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கியதோடு நேரடித் தேர்தலையும் அறிமுகம் செய்தது.
  • இச்சட்டத்தின் அடிப்படையில் 1937ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல்களில் பெரும்பாலான மாகாணங்களில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் அதிர்வை ஏற்படுத்தும் வெற்றியைப் பெற்றது.

Question 3.
தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
விடை:
தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவளியினரே ஆப்பிரிக்கநேர்கள் என்றும் அழைக்கப்பட்ட போயர்கள் அவர் இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

தென்னாப்பிரிக்காவில் தேசிய அரசியல்

  • தென்னாப்பிரிக்காவில் இரு முக்கிய அரசியல் கட்சிகள் செயல்பட்டன.
  • முதல் பிரதம மந்திரியான போது, தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்தவர் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து ஆட்சியை நடத்தினார்.
  • ஆனால் தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்த போராடும் குணமிக்க ஒரு பிரிவினர் ஹெர்சாக் என்பவரின் தலைமையின் கீழ் தேசியக் கட்சி எனும் கட்சியைத் தொடங்கினர்.
  • 1920ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசியக் கட்சி நாற்பத்து நான்கு இடங்களைக் கைப்பற்றியது.
  • தென்னாப்பிரிக்கக் கட்சி ஸ்மட்ஸ் என்பாரின் தலைமையில் நாற்பத்தொன்று இடங்களில் வெற்றி பெற்றது.
  • இதனால் போர்க்குணம் கொண்ட ஆப்பிரிக்கநேர்களின் கட்டுப்பாட்டிலிருந்த தேசியக் கட்சியைக் காட்டிலும் ஸ்மட்ஸ் பெரும்பான்மை பெற்றார்.

10th Social Science Guide இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
………………. என்பது தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்டது.
அ) நாசிசம்
ஆ) பாசிசம்
இ) தாவோயிசம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) பாசிசம்

Question 2.
கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றவர் ………………….
அ) போர்
ஆ) ஹிட்லர்
இ) முசோலினி
ஈ) பிராங்கோ
விடை:
இ முசோலினி

Question 3.
ரோமாபுரி நோக்கி அணிவகுப்பை ………………… முசோலினி மேற்கொண்டார்.
அ) 1928
ஆ) 1944
இ) 1921
ஈ) 1922
விடை:
ஈ) 1922

Question 4.
…………………. தடை செய்யப்பட்ட கட்சி சமூக ஜனநாயக கட்சி ஆகும்.
அ) வில்சன்
ஆ) வெய்மர்
இ) பிஸ்மார்க்
ஈ) எதுவுமில்லை
விடை:
பிஸ்மார்க்கால்

Question 5.
ஹிண்டென்பர்க் …………….. இல் இறந்தார்.
அ) 1934
ஆ) 1943
இ) 1439
ஈ) 1997
விடை:
அ) 1934

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 6.
ஹோசிமின் ……………….. பிறந்தார்.
அ) மாஸ்கோ
ஆ) ரஷ்யா
இ) இத்தாலி
ஈ) டோங்கிங்
விடை:
ஈ) டோங்கிங்

Question 7.
இன ஒதுக்கல் என்பதன் பொருள் ……………… ஆகும்.
அ) ஒதுக்கல்
ஆ) அழித்தல்
இ) தனிமைப்படுத்துல்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ தனிமைப்படுத்துதல்

Question 8.
ஸ்மட்ஸ் தலைமையில் ……………… இடங்கள் தென்னாப்பிரிக்க கட்சி வெற்றி பெற்றது.
அ) 44
ஆ) 34
இ) 43
ஈ) 41
விடை:
ஈ) 41

Question 9.
போயர்கள் …………………. போரைக் கைக்கொண்டனர்.
அ) வெர்டர்
ஆ) கொரில்லா
இ) மார்ன்
ஈ) எதுவுமில்லை
விடை:
கொரில்லா

Question 10.
ஜெர்மனி பாசிசத்தின் தோற்றம் …………….. ஆண்டு ஆகும்.
அ) 1991
ஆ) 1919
இ) 1909
ஈ) 1999
விடை:
ஆ) 1919

Question 11.
ஹிட்லரின் சுயசரிதை நூல் ………………… ஆகும்.
அ) இண்டிகா
ஆ) அர்த்தசாஸ்திரம்
இ) மெயின் காம்ப்
ஈ) எதுவுமில்லை
விடை:
மெயின் காம்ப்

Question 12.
ஹிட்லரின் சின்னம் ………………….
அ) டைமண்ட்
ஆ) ஸ்வஸ்திக்
இ) மீன்
ஈ) வில்
விடை:
ஸ்வஸ்திக்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 13.
ஹிட்லரின் இராணுவத்தினர் அணிந்த சட்டை நிறம் ……………… ஆகும்.
அ) பழுப்பு
ஆ) கருப்பு
இ) சிவப்பு
ஈ) மஞ்சள்
விடை:
அ) பழுப்பு

Question 14.
……………….. வியட்நாம் கட்சியை தோற்றுவித்தார்.
அ) வில்சன்
ஆ) சர்ச்சில்
இ) ஹிட்லர்
ஈ) ஹோசிமின்
விடை:
ஈ) ஹோசிமின்

Question 15.
வெள்ளை பயங்கரவாதத்திற்கு பின் ஹோசிமின் ………………… சென்றார்.
அ) ரஷ்யா
ஆ) மாஸ்கோ
இ) டோங்கிங்
ஈ) இத்தாலி
விடை:
ஆ) மாஸ்கோ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அமெரிக்காவில் முதல் பெரும் வீழ்ச்சி அரங்கேறியது.
விடை:
1929 அக்டோபர் 24

Question 2.
மேற்கு ஐரோப்பாவில் பழைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக திரும்பிய முதல் நாடு ……………….. ஆகும்.
விடை:
இத்தாலி

Question 3.
லேட்டரன் உடன்படிக்கை …………….. போப்புடன் கையெழுத்தானது.
விடை:
1929

Question 4.
முசோலினி ………………….. மீது படையெடுத்தார்.
விடை:
எத்தியோப்பியாவின்

Question 5.
ஹிட்லரின் மெய்க்காப்பாளர் …………………… ஆவார்.
விடை:
ஹைட்ரிச் ஹிம்லர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 6.
ஹிட்லரின் இனப்படுகொலை நாஜிக்களால் ………………. எனப்பட்டது.
விடை:
“இறுதித் தீர்வு”

Question 7.
ஹோ சி மின் லண்டன் உணவு விடுதியில் ………………… பணியாற்றினார்.
விடை:
சமையல் கலைஞராகப்

Question 8.
……………. மாபெரும் மக்கள் இயக்கமாய் மாறியது.
விடை:
இந்திய தேசிய காங்கிரஸ்

Question 9.
போயர் போர் ……………… ஆண்டுகள் நீடித்தது.
விடை:
3

Question 10.
ஆப்பிரிக்க நேர்களின் மொழி ………………. ஆகும்.
விடை:
ஆப்பிரிக்கான்ஸ்

Question 11.
தென்னாப்பிரிக்க ஒன்றியம் ……………….. உதயமானது.
விடை:
1910

Question 12.
11ஆம் நூற்றாண்டில் பெரிய நகரங்களில் இணைந்து ……………………. அமைப்பாக உருவானது.
விடை:
மாயாபன்

Question 13.
அஸ்டெக்குகள் மாயா நாட்டைக் கைப்பற்றி ………………….. எனும் தலைநகரை நிறுவினர்.
விடை:
டெனோச்டிட்லான்

Question 14.
ஸ்டபரானியர்கள் ……………… தங்கள் பகுதிகளில் ஒன்றாக ஆக்கினார்கள்.
விடை:
பெருவை

Question 15.
……………… தளை தகர்ப்பாளர் என்றறியப்பட்டார்.
விடை:
சைமன் பொலிவர்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) 1830ல் ஒட்டுமொத்த அமெரிக்காவும் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
ii) நாசிசம் தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட தேசியவாதத்தின் ஒரு வடிவமாகும்.
iii) பாசிசம் 1919ல் தொடங்கப்பட்டது.
iv) ஹிட்லர் 1922ல் ரோமாபுரி நோக்கி அணிவகுப்பை நடத்தினார்.

அ) i, iii சரி
ஆ) ii, iv சரி
இ) 1 சரி
ஈ) iv சரி
விடை:
அ) i, iii சரி

Question 2.
கூற்று : லத்தீன் அமெரிக்கா டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை.
காரணம் : அமெரிக்காவிற்கு பொருளாதார தொழில்நுட்ப உதவிகளை செய்ய ஒத்துக் கொள்ளவில்லை.

அ) கூற்று, காரணம் சரி
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) இரண்டும் தவறு
விடை:
ஆ) கூற்று சரி, காரணம் தவறு

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

IV. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
பாசிசம் என்பது யாது?
விடை:

  • பாசிஸம் என்பது தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட அதிதீவிர தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும்.
  • சர்வாதிகார வல்லமையும் எதிர்ப்பை வன்முறை கொண்டு அடக்குவதும் சமூகத்தையும், பொருளாதாரத்தையும் வலுவான மத்திய அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பதும் இதன் பண்புகளாகும்.

Question 2.
ஜனநாயகக்கட்சி பற்றி எழுதுக.
விடை:

  • சமூக ஜனநாயகக் கட்சியானது ஜெர்மன் பொதுத்தொழிலாளர் கழகம் என்ற பெயரில் 1863 மே 23 இல் லிப்சிக் நகரத்தில் நிறுவப்பட்டது.
  • அதனை நிறுவியவர் பெர்டினன்ட் லாஸ்ஸல்லி என்பவராவார்.
  • 1945இல் ஹிட்லரின் மூன்றாவது ரெய்க்கின் (குடியரசின்) வீழ்ச்சியைத் தொடர்ந்து இக்கட்சி புத்தெழுச்சி பெற்றது.
  • ஹிட்லரை எதிர்த்த கட்சி என்ற பெயருடன் வெய்மர் காலத்திலிருந்து செயல்படும் ஒரேகட்சி இதுவேயாகும்.

Question 3.
காலனிய நீக்கம் – வரையறு.
விடை:
காலனிய நீக்கம் என்பது காலனியாதிக்க சக்திகள் காலனிகள் மீது கொண்டுள்ள நிறுவனம் மற்றும் சட்டம் சார்ந்த கட்டுப்பாடுகளைச் சொந்த தேசிய அரசுகளிடம் வழங்குவதாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 4.
ஹோ சி மின் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:

  • ஹோ சி மின் 1890இல் டோங்கிங்கில் பிறந்தார்.
  • பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார்.
  • 1921இல் ஹோ சி மின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தார்.
  • 1925இல் புரட்சிகர இளைஞர் இயக்கம் எனும் அமைப்பை நிறுவினார்.

Question 5.
போயர்கள் பற்றி எழுதுக.
விடை:

  • தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேற்றங்களின் வம்சாவளியினரே ஆப்பிரிக்கநேர்கள் என்றும் அழைக்கப்பட்ட போயர்கள் ஆவர்.
  • இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ் ஆகும்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
முதல் உலகப்போருக்குப் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சிப்போக்குகள் பற்றி விவரி.
விடை:

  • முதல் உலகப்போரானது போர்க்காலப் பெரும்வளர்ச்சி முடிவற்றுத் தொடரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட தொழில்களின் விரிவாக்கத்திற்கு வலிகோலியது.
  • இருந்த போதிலும் போர் ஒரு முடிவுக்கு வந்தபோது,  போர்த்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாகி வளார்ந்த சில தொழில்கள் கைவிடப்பட்ட வேண்டியவைகளாக அல்லது மாற்றி அமைக்கப்பட வேண்டியவைகளாயின.
  • வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல்சிக்கல்கள், நிலைமையை மேலும் மோசமாக்கியது.
  • பொருளாதார தேசியவாதம் எனும் புதிய அலை ‘பாதுகாப்பு’ அல்லது ‘சுங்கத் தடைகள்’, இறக்குமதியாகும் பொருள்களின் மீது வரிசுமத்துவது எனும் பெயர்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, உலகவர்த்தகத்தைப் பாதித்தது.
  • போர் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் மீதும் பெரும் கடன்சுமையை ஏற்றியது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 2.
கறுப்பின மக்களுக்கு எதிரான இனக்கொள்கை பற்றி விவரி.
விடை:

  • ஆப்பிரிக்கநேர்கள் கறுப்பின மக்களுக்கும், சிறுபான்மை இந்தியர்களுக்கும் எதிராக கடுமையான இனக்கொள்கையைப் பின்பற்றினர்.
  • கறுப்பின மக்களின் குடியிருப்புகளை நகரங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குள்ளாக கட்டுப்படுத்துவதற்காக 1923இல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
  • ஏற்கனவே 1913இல் இயற்றப்பட்ட சட்டம் வெள்ளை மற்றும் கறுப்பின் விவசாயிகளைப் பிரித்து வைத்தது.
  • இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கறுப்பின மக்களால் நிலங்களை வாங்குவது முடியாமலேயே போனது.
  • 1924இல் இயற்றப்பட்ட சட்டம் கறுப்பின மக்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதிலிருந்தும் தொழிற்சங்கத்தில் சேருவதில் இருந்தும் தடுத்தது.
  • மாநிலத்தில் கறுப்பின மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
  • இவ்வாறு மண்ணின் மைந்தர்களான கறுப்பினமக்கள் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு அவர்கள் அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் துன்புற்றனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

9th Social Science Guide மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
அ) கொரில்லா
ஆ) சிம்பன்ஸி
இ) உராங் உட்டான்
ஈ) பெருங்குரங்கு
விடை:
ஆ) சிம்பன்ஸி

Question 2.
வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்
அ) பழைய கற்காலம்
ஆ) இடைக்கற்காலம்
இ) புதிய கற்காலம்
ஈ) பெருங்கற்காலம்
விடை:
இ) புதிய கற்காலம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ____ ஆவர்.
அ) ஹோமோ ஹேபிலிஸ்
ஆ) ஹோமோ எரக்டஸ்
இ) ஹோமோ சேபியன்ஸ்
ஈ) நியாண்டர்தால் மனிதன்
விடை:
இ) ஹோமோ சேபியன்ஸ்

Question 4.
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ______ எனப்படுகிறது
அ) கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
ஆ) பிறைநிலப் பகுதி
இ) ஸோலோ ஆறு
ஈ) நியாண்டர் பள்ளத்தாக்கு
விடை:
ஆ) பிறைநிலப்பகுதி

Question 5.
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _________ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.
அ) நுண்கற்காலம்
ஆ) பழங்கற்காலம்
இ) இடைக் கற்காலம்
ஈ) புதிய கற்காலம்
விடை:
ஆ) பழங்கற்காலம்

Question 6.
i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.
ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள்.
iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன,
iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.
அ) i) சரி
ஆ) i) மற்றும்
ii) சரி
இ) i) மற்றும்
iv) சரி
ஈ) ii) மற்றும்
iii) சரி
விடை
இ) i) மற்றும்
iv) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 7.
i) செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்
ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.
iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற் காலம் எனப்படுகிறது.
iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.
அ) i) சரி
ஆ) ii) சரி
இ) ii) மற்றும்
iii) சரி
ஈ) iv) சரி
விடை:
அ) i) சரி

Question 8.
கூற்று : தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம் : நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது.
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு,
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கைகோடரிகளும் வெட்டுக்கருவிகளும் _____ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவிவகைகளாகும்.
விடை:
கீழ் பழங்கற்கால

Question 2.
கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும் ______ தொழில் நுட்பம் என அழைக்கப்படுகின்றன.
விடை:
கற்கருவி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் _____ எனப்படும்.
விடை:
இடைக்காலம்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க

Question 1.
அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.
ஆ) ‘உயிர்களின் தோற்றம் குறித்து’ என்ற நூலை ஹெர்பர்ட் ஸ்பென்சர் பதிப்பித்தார்.
இ) உயிரியல் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் கோட்பாடு இயற்கைத்தேர்வு என்ற வழிமுறையுடன் தொடர்பு உடையது.
ஈ) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவியல் ஆகும்
விடை:
அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
அ) குரங்கினங்களில் உராங் உட்டான் மனித மரபுக்கு மிக நெருக்கமான குரங்கினமாகும்.
ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.
இ) செதிலை கருவிகள் செய்ய பயன்படுத்த முடியாது.
ஈ) சிறு செதில்கள் தயாரிக்கப் பயன்படும் மூலக்கல் அச்சூலியன் எனப்படும்.
விடை:
ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

IV. பொருத்துக.
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் 1

V. சுருக்கமான விடை தருக

Question 1.
ஊகக் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் , அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?
விடை:

  • பரிணாம வளர்ச்சிப் போக்கில் மனிதர்கள் இயற்கை, தம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் மற்றும் உலகம் குறித்துச் சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும் தொடங்கினர்.
  • இதன் மூலம் மனிதர்கள் உணர்தல் நிலையையும் அறிவாற்றலையும் கொண்டவர்களாக மாறினார்கள்.

Question 2.
வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக.
விடை:

  • இரும்புக்கால மக்கள் வேளாண்மை மேற்கொண்டு, ஆடு, மாடுகளையும் வளர்த்தார்கள்.
  • சில குழுக்கள் வேட்டையாடிக்கொண்டும், உணவு சேகரித்துக் கொண்டும் இருந்தநிலையில், இவர்கள் பாசன நிர்வாகத்தை மேம்படுத்தினர். திணையும், நெல்லும் பயிரிட்டனர்.
  • பானைகள் செய்தார்கள். நிரந்தரமான இடங்களில் வசித்தார்கள். கலைகள் பல வளர்ந்தனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு
விடை:

  • டோல்மென் எனப்படும் கற்திட்டை.
  • சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்
  • மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல், தாழி, பாறைக் குடைவு குகைகள்.
  • சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள்.

Question 4.
கருவி செய்வதில் கீழ்ப் பழைய கற்கால மக்களிடமிருந்த தொழில்நுட்பத்தைத் திறனாய்வு செய்க.
விடை:

  • கீழ்ப் பழைய கற்கால மக்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக இருமுகக் கருவிகளான கைக்கோடாரி, வெட்டுக்கத்தி போன்ற பல கருவிகளைக் செய்தார்கள்.
  • இவை சமபங்கு உருவ அமைப்பை (Symmetry) பெற்றுள்ளன. மனித மூதாதையரின் அறிவுணர் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
  • பெரிய கற்களை செதில்களாகக் சீவி பல கருவிகளை வடிவமைத்தார்கள்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
விவசாயம், பானை செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.
விவசாயம்:

  • பெருங்கற்கால (இரும்புகால) மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டபொழுது திணையும் நெல்லும் பயிரிடப்பட்டன.
  • நதிகள், குளங்களுக்கு அருகே பெருங்கற்கால இடங்கள் அமைந்ததால் பாசன நிர்வாகம் மேம்பட்டது. பாசன தொழில் நுட்பம் வளர்ந்தது.
  • ஈமச் சின்னங்களுக்குள நெல்லை வைத்துப் புதைத்தார்கள்.
    சான்றுகள்: ஆதிச்சநல்லூர், பொருந்தல்.
    பானை செய்தல்:
  • கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. உள்ளே கறுப்பாகவும், வெளியே சிவப்பாகவும், பளபளப்பாகவும் இம் மண்பாண்டங்கள் காணப்பட்டன.
  • இப்பாண்டங்கள் சமையல், பொருள்கள் சேமிப்பு மற்றும் சாப்பிடுவதற்கு பயன்பட்டன. உலோகக்கருவிகள்
  • பெருங்கற்கால இரும்புக் கருவிகள் வேளாண்மை, வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் மற்றும் போர்களில் பயன்படுத்தப்பட்டன. வாள், குறுவாள், கோடவரி, உளி, விளக்கு, மக்காலி ஆகியவை கிடைத்துள்ளன.
  • வெண்கலக் கிண்ணங்கள், கலங்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
  • இக்கால கல்லறைகளில் ஈமப்பொருட்களாக இரும்புப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

Question 2.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக
விடை:
புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் கால கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக மனித மூதாதையரின் எலும்பு புதை படிவங்கள் புதைந்துள்ளன.

  • மண் மற்றும் பாறை அடுக்குகள், தொல்மானுடவியல் அறிஞர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்களால் அகழ்ந்து, சான்றுகள் சேகரிக்கப்படுகின்றன.
  • அறிவியல் பூர்வமாக கணிக்கப்படும் புதை படிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் மனிதர்களின் பரிணாமம், தொல் பழங்காலம் பற்றி அறிய உதவுகிறது.
  • நிலவியல் ஆய்வாளர்களால் புவியின் நீண்ட நெடிய வரலாறு நெடுங்காலம் (Era), காலம் (Period), ஊழி (Epoch), என பிரிக்கப்படுகிறது.
  • முந்தைய தொல்லுயிரூழி – பல செல் உயிரினங்கள்
    பழந்தொல்லுயிரூழி – மீன்கள், ஊர்வன, தாவரங்கள்
    இடைத் தொல்லுயிரூழி – டைனோஸர்
    பாலூட்டிகள் காலம் – ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் (குரங்கினம்)
    (இக் குரங்கினத்திலிருந்துதான் நவீன மனித இனம் தோன்றியது)

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உலக வரைபடத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பகுதிகளைக் குறிக்கவும்

2. வரலாற்றுக்கு முந்தைய காலம் தமிழ்நாட்டில் நிலவிய இடங்கள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை அமைக்கவும்

9th Social Science Guide மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராய்வது பற்றிகுறிப்பிடப்படும் இயல் எது?
அ) தொல்மானுடவியல்
ஆ) வரலாறு
இ) புவியியல்
ஈ) தொல்லியல்
விடை:
ஈ) தொல்லியல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ளும் இயல். அ) மண்ண டுக்கியல்
ஆ) தொல்மானுடவியல்
இ) தொல்லியல்
ஈ) புவியியல்
விடை:
ஆ) தொல்மானுடவியல்

Question 3.
ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் தோன்றிய காலம் எது?
அ) தொல்லுயிரூழி காலம்
ஆ) இடைத் தொல்லுயிரூழி காலம்
இ) பாலூட்டிகள் காலம்
ஈ) பழந்தொல்லுயிரூழி காலம்
விடை:
இ) பாலூட்டிகள் காலம்

Question 4.
மறுமலர்ச்சி எங்கு தோன்றியது?
அ) ஆசியா
ஆ) ஆப்பிரிக்கா
இ) அமெரிக்கா
ஈ) ஐரோப்பா
விடை:
ஈ) ஐரோப்பா

Question 5.
இயற்கை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவான பாறை மற்றும் மண் அடுக்குகளின் தோற்றம், தன்மை குறித்து ஆராய்தல்
அ) தொல்லியல்
ஆ) மண்ணியல்
இ) புவியியல்
ஈ) மண்ண டுக்கியல்
விடை:
ஈ) மண்ண டுக்கியல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 6.
உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம்
அ) ஆஷ்மோலியன்
ஆ) என்னிகால்டி-நன்னா
இ) கேபி டோலைன்
ஈ) கேம்பிரிட்ஜ் –
விடை:
அ) ஆஷ்மோலியன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
புவி எத்தனை ஆண்டுகளுக்கு முன் உருவானது ________
விடை:
454 பில்லியன்

Question 2.
ஆஸ்ட்ரோலாபித்திஸைன் என்பதன் பொருள் _____
விடை:
தெற்கத்திய மனிதக் குரங்கு

Question 3.
வரலாறு எழுதுவது யாருடைய காலத்தில் தொடங்கியது _____
விடை:
கிரேக்கர்கள்

Question 4.
மறுமலர்ச்சியின் காலம் எந்த நூற்றாண்டு ______
விடை:
15-16

Question 5.
உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் _____ அது எங்குள்ளது ________
விடை:
என்னிகால்டி-நன்னா

Question 6.
சார்லஸ் டார்வின் _______, _______ என்ற நூற்களை எழுதினார்.
விடை:
உயிரினங்களின் தோற்றம், மனிதனின் தோற்றம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 7.
மனிதர்களின் மூதாதையர்கள் ______ என்று அழைக்கப்படுகின்றனர்.
விடை:
ஹோமினின்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் 3

IV. சுருக்கமான விடை தருக

Question 1.
புவி எப்பொழுது உருவானது? நிலவியல் ஆய்வாளர்கள் புவி வரலாற்றை எவ்வாறு பிரிக்கிறார்கள்?
விடை:

  • புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது.
  • புவியின் நீண்ட நெடிய வரலாற்றை நிலவியல் ஆய்வாளர்கள் நெடுங்காலம், காலம், ஊழி என்று பிரிக்கிறார்கள்.

Question 2.
ஊகக்காலம் பற்றி சுருக்கமாக எழுதுகு.
விடை:
ஊகக் காலம்:

  • பரிணைாம வளர்ச்சிப் போக்கில் உணர்தல் நிலை மற்றும் அறிவாற்றல் கொண்ட மனிதர்கள், இயற்கை, சுற்றியுள்ள உயிரினங்கள், உலகம் குறித்து சிந்திக்கவும் கேள்வி எழுப்பவும் தொடங்கினார்.
  • சூரியன், சந்திரன் முதலான பல இயற்கை ஆற்றல்கள் குறித்து தமது சுய புரிதல்களை உருவாக்கினர். இப்புரிதல்களில் சில அறிவியல் பூர்வமானவை அல்ல.
  • உலகின் தோற்றம் குறித்த அவர்களின் அறிவியலறிவின் போதாமை வெளிப்படும் இக்காலம் “ஊகக் காலம்” ஆகும்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
கருக்கல் மற்றும் செதில் என்றால் என்ன?
விடை:

  • கருக்கல் (core) என்பது ஒரு கல்லின் முதன்மைப் பாளம் ஆகும். கற்சுத்தியலால் இதிலிருந்து செதில்கள் உடைத்து எடுக்கப்படுகின்றன.
  • செதில் (flakes) – பெரிய கற்பாளத்திலிருந்து அல்லது கருங்கல்லில் இருந்து உடைத்து எடுக்கப்பட்ட ஒரு சிறு கற்துண்டு.

Question 4.
சர் இராபர்ட் புரூஸ் என்ன கண்டுடித்தார்?
விடை:

  • பொ.ஆ.1863 இல் சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளை முதன் முறையாகக் கண்டுபிடித்தார்.
  • இங்கு கண்டெடுக்கப்பட்ட கைக்கோடரிகள் சென்னை கற்கருவித்தொழிலகம் என்று அழைக்கப்படுகின்றன. அவர் கண்டெடுத்த கருவிகள், சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.

V. தலைப்பு வினாக்கள்

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி .

Question 1.
மேல் பழங்கற்காலப் பண்பாடு
(i) பியூரின் என்பது என்ன ?
விடை:
பியூரின் என்பது கூரிய வெட்டுமுனை உள்ள கல்லாலான உளி.

(ii) வீனஸ் என்று அழைக்கப்படுவது எது?
கல்லிலும், எலும்பிலும் செதுக்கப்பட்ட பெண் தெய்வச் சிற்பங்கள்.

(iii) மேல் பழங்கற்காலப் பண்பாடு எப்போது தோன்றியது?
விடை:
சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்.

(iv) பனிக்காலம் என்றால் என்ன?
விடை:
உலகின் பல பாகங்கள் பனியாலும் பனிப்பாளங்களாலும் மூடப்பட்டிருந்த காலம் (8000 ஆண்டுகளுக்கு முன்).

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
ஹோமினிட் மற்றும் ஹோமின்ஸ்
(i) ஹோமினிட் என்போர் யார்?
விடை:
மனிதர்களை உள்ளடக்கிய நவீன மற்றும் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இனங்கள் ஹோமினிட் ஆகும்.

(ii) ஆப்பிரிக்காவில் கருவிகளை உருவாக்கிய முதல் மனித இனம் எது?
விடை:
ஹோமோ ஹெபிலிஸ்

(iii) நவீன கால மனிதர்கள் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்?
விடை:
ஹோமோ சேப்பியன்

(iv) இந்த இனத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வகையைக் கூறு.
விடை:
ஹோமோ ஹெபிலிஸ் / நியாண்டர்தாலென்சிஸ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
மனித முன்னோர்களின் தொடக்க காலக் கற்கருவிகளின் தொகுப்பு

(i) அச்சூலியக் கருவிகள் கர்நாடகத்திலும் மத்திய பிரதேசத்திலும் எங்கு கண்டெக்கப்பட்டுள்ளன.
விடை:
அ) * கர்நாடகா – இசாம்பூர் , மத்திய பிரதேசம் – பிம்பெத்கா

(ii) பியூரின் என்றால் என்ன?
விடை:
பியூரின் என்பது கூரிய வெட்டுமுனை உள்ள கல்லாலான உளி.

(iii) இருமுகக் கருவிகள் என்றால் என்ன?
விடை:
இருபுறமும் செதுக்கப்பட்டதால் இக்கருவிகள் இருமுகக் கருவிகள் ஆகும்.

(iv) மனித இன முன்னோடிகள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதங்கள் சிலவற்றைக் கூறுக.
விடை:
கைக்கோடரி, வெட்டுக்கத்தி

VI. விரிவான விடையளிக்கவும்

Question 1.
மேல் பழங்கற்காலப் பண்பாடு குறித்து விவரிக்கவும்.
விடை:
அறிமுகம்:
(i) இடைப் பழங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து வந்த மேல் பழங்கற்காலப் பண்பாட்டில் ஏற்பட்ட கற்குருவி தொழிலில் புதிய நுட்பங்கள் சிறப்பான கூறாகும். இந்த மேல் பழங்கற்காலப் பண்பாடு சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்தோன்றியது பனிக்காலம் முற்றுப் பெற்ற சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஹேலோசின் காலம் வரை நீடித்தது. (பனிக்காலம் – தற்காலத்திற்கு 8000 ஆண்டுகளுக்கு முன்)

இக்காலத்தில் கற்களாலான நீண்ட கத்திகளும், பியூரின் எனப்படும் உளிகளும் உருவாக்கப்பட்டன. சிலிகா அதிகமுள்ள பல்வேறு கல் வகைகள் கருவிகள் செய்யப் பயன்பட்டன.

திறன்க ள்:
பல்வேறு ஓவியங்களும், கலைப்பொருட்களும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன. பல்வேறுசெய்பொருட்கள் இவர்களது படைப்பாற்றல் திறனில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் தொழிகள் உருவானதைக் காட்டுகின்றன.

மனித பரிணாம வளர்ச்சி:
முதல் நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவின் சஹாராவிற்குத் தெற்குப் பகுதியில் (சப்-சஹாரா) தோன்றினர். இந்த இனம் மேல் பழங் கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவினார்கள். ஒருவேளை இவர்கள் அங்கிருந்தவர்களை விரட்டியிருக்கலாம். ஐரோப்பாவில் குரோமாக்னன் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

கருவிகள் மற்றும் கலைகள்:

  • கொம்புகளும், தந்தங்களும் கருவிகள் மற்றும் கலைப்பொருட்கள் செய்யப் பயன்பட்டன. எலும்பாலான பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. பதக்கம் மற்றும் வேலைப்பாடு மிக்க கருவிகள் பயன்பாட்டில் இருந்தன.
  • ஆடைகளை அணிந்தனர், சமைத்த உணவை உண்டனர், இறந்தவர்கள் மார்பில் கைவைத்த நிலையில் புதைக்கப்பட்டார்கள். கல்லிலும், எலும்பிலும் செதுக்கப்பட்ட வீனஸ் பெண் தெய்வச் சிற்பங்கள் ஐரோப்பாவிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும் உருவாக்கப்பட்டன.

மனவரைபடம்

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் – வரலாற்றுக்கு முந்தைய காலம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் 5

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

10th Social Science Guide முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்
ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, ரஷ்யா
இ) ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி
ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, இத்தாலி
விடை:
அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்

Question 2.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) கொரியா
ஈ) மங்கோலியா
விடை:
ஆ) ஜப்பான்

Question 3.
“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?
அ) லெனின்
ஆ) மார்க்ஸ்
இ) சன் யாட் சென்
ஈ) மா சே தூங்
விடை:
அ) லெனின்

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 4.
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
அ) ஆகாயப் போர்முறை
ஆ) பதுங்குக் குழிபோர்முறை
இ) நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
ஈ) கடற்படைப் போர்முறை
விடை:
ஆ) பதுங்குக் குழிபோர்முறை

Question 5.
பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) பிரிட்டன்
ஆ) பிரான்ஸ்
இ) டச்சு
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
விடை:
அ) பிரிட்டன்

Question 6.
பின்லாந்தைத் தாக்கியதற்காக சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) இத்தாலி
ஈ) பிரான்ஸ்
விடை:
ஆ) ரஷ்யா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………………..ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.
விடை:
1894

Question 2.
1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட ………………… உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.
விடை:
லண்டன்

Question 3.
……………… ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.
விடை: 1902

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 4.
பால்கனில் ………………… நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
விடை:
மாசிடோனியா

Question 5.
டானென்பர்க் போரில் …………………. பேரிழப்புகளுக்கு உள்ளானது.
விடை:
ரஷ்யா

Question 6.
பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ……………… ஆவார்.
விடை:
கிளமென்சோ

Question 7.
…………………ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
விடை:
1925

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றியது.
iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

அ) i), ii) ஆகியன சரி
ஆ) i), iii) ஆகியன சரி
இ) iv) சரி
ஈ) i), ii), iv) ஆகியன சரி
விடை:
ஈ) i), ii), iv) ஆகியன சரி

Question 2.
கூற்று : ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருட்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின.
காரணம் : இருநாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்தன.

அ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு.
ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று தவறு.
விடை:
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 3.
கூற்று : ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.
கராணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.

அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
விடை:
அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
சீன – ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
விடை:

  • 1894இல் ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக ஒரு போரை மேற்கொண்டது.
  • இச்சீன-ஜப்பானியப் போரில் (1894 – 1895) சீனாவை சிறிய நாடான ஜப்பான் தோற்கடித்தது உலகை வியக்கவைத்தது.
  • ஜப்பான் லியோடஸ் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் இணைத்துக்கொண்டது.

Question 2.
மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
மூவர் கூட்டு நாடுகள் :
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா.

Question 3.
ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?
விடை:

  • இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று,
  • பிரான்சின் அதி தீவிரப்பற்று,
  • ஜெர்மனியின் வெறிக்கொண்ட நாட்டுப்பற்று

ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர்வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 4.
பதுங்குக் குழிபோர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • போர்வீரர்களால் தோண்டப்படும் பதுங்குக் குழிகள் எதிரிகளின் சுடுதலில் இருந்து தங்களைக் காத்துக்கொண்டு பாதுகாப்பாக நிற்க உதவின.
  • பிரதானப் பதுங்குக் குழிகள் ஒன்றோடொன்றும் பின்புறமுள்ள குழிகளோடும் இணைக்கப்பட்டிருக்கும்.

அவற்றின் வழியாக உணவு, ஆயுதங்கள், கடிதங்கள், ஆணைகள் ஆகியவை வந்துசேரும். புதிய வீரர்களும் வந்து சேர்வர்.

Question 5.
முஸ்தபா கமால் பாட்சா வகித்த பாத்திரமென்ன?
விடை:

  • துருக்கி ஒரு நாடாக மறுபிறவி எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சா முக்கிய பங்கு வகித்தார்.
  • அவர் துருக்கியை நவீன மயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத்திலிருந்து மாற்றியமைத்தார்.

Question 6.
பன்னாட்டு சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • சங்கத்திற்கென்று இராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை .
  • ‘கூட்டுப்பாதுகாப்பு’ எனும் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்தவே முடியவில்லை.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

Question 1.
முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி.
விடை:
முதல் உலகப் போருக்கான காரணங்கள்:

  • 1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள் இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.
  • ஒரு முகாம் மைய நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
  • பிஸ்மார்க்கின் வழிகாட்டுதலில் அவை 1882இல் மூவர் உடன்படிக்கையை மேற்கொண்டன.
  • மற்றொரு முகாமில் பிரான்சு, ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்தன.
  • இந்த நாடுகளுக்கு இடையே 1902இல் இணைப்பு உருவாக்கப்பட்டது.
  • இந்த இணைப்பு மூவர் கூட்டு எனப்பட்டது.

வன்முறை சார்ந்த தேசியம் :
இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று, பிரான்சின் அதி தீவிரப்பற்று, ஜெர்மனியின் வெறிக்கொண்ட நாட்டுப்பற்று, ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.

ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு :
ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை :

  • பிரான்சும், ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர்.
  • ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு அல்சேஸ், லொரைன் பகுதிகளை பிரான்ஸ் ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது குறித்த கசப்பான நினைவுகளை பிரெஞ்சு மக்கள் ஜெர்மனியின் மீது கொண்டிருந்தனர்.

பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான வாய்ப்பு:

  • 1908ஆம் ஆண்டில் துருக்கியல் ஒரு வலுவான, நவீன அரசை உருவாக்கும் முயற்சியாக இளம்துருக்கியர் புரட்சி நடைபெற்றது.
  • அதன்படி பாஸ்னியா, ஹெர்சகோவினா ஆகிய இரண்டையும் ஆஸ்திரியா இணைத்துக்கொண்டது.
  • இதன் தொடர்பில் ஜெர்மனி ஆஸ்திரியாவிற்கு உறுதியான ஆதரவை நல்கியது.
  • ஆஸ்திரியாவிற்கும் செர்பியாவிற்குமான இப்பகை 1914 இல் போர் வெடிக்கக் காரணமாயிற்று.

பால்கன் போர்கள் :

  • பதினெட்டாம் நூற்றாண்டின் முதல்பாதியில் தென்மேற்கு ஐரோப்பாவில் துருக்கி வலிமை வாய்ந்த நாடாகத் திகழ்ந்தது.
  • ஆர்மீனிய இனப்படுகொலைகள் இதற்கு ஒரு பயங்கரமான எடுத்துக்காட்டு ஆகும். 1912ஆம் ஆண்டு மார்ச் திங்களில் அவை பால்கன் கழகம் எனும் அமைப்பை உருவாக்கின.
  • இக்கழகம் முதல் பால்கன் போரில் (1912-1913) துருக்கியப் படைகளைத் தாக்கித் தோற்கடித்தன.
  • 1913 மே திங்களில் கையெழுத்தான இலண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
  • 1913 ஆகஸ்டு திங்களில் கையெழுத்திடப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையோடு இரண்டாம் பால்கன் போர் முடிவடைந்தது.

உடனடிக் காரணம்:

  • பால்கனில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் உச்சகட்டம் பாஸ்னியாவிலுள்ள செராஜிவோ என்னுமிடத்தில் அரங்கேறியது.
  • 1914 ஜூன் 28ஆம் நாள் ஆஸ்திரியப் பேரரசரின் மகனும் வாரிசுமான பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
  • ஆஸ்திரியா இதனை செர்பியாவைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது.
  • பெல்ஜியத்தின் நடுநிலைமையை மதியாது அதனை ஜெர்மனி தாக்கவே இப்போரில் இங்கிலாந்து பங்கேற்பது கட்டாயமாயிற்று

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 2.
ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டுக் காட்டுக.
விடை:

  • போரைத் தொடங்கிய குற்றத்தைச் செய்தது ஜெர்மனி என்பதால் போர் இழப்புகளுக்கு ஜெர்மனி இழப்பீடு வழங்கவேண்டும்.
  • ஜெர்மன் படை 1,00,000 வீரர்களை மட்டுமே கொண்டதாக அளவில் சுருக்கப்பட்டது.
  • சிறிய கப்பற்படையொன்றை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
  • ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு தடை செய்யப்ட்டது.
  • ஜெர்மனியின் அனைத்துக் காலனிகளும் பன்னாட்டுச் சங்கத்தின் பாதுகாப்பு நாடுகளாக ஆக்கப்பட்டன.
  • ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கையையும் பல்கேரியாவுடன் மேற்கொள்ளப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது.
  • அல்சேஸ் லொரைன் பகுதிகள் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன.
  • முன்னர் ரஷ்யாவின் பகுதிகளாக இருந்த பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, விதுவேனியா ஆகியன சுதந்திரநாடுகளாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
  • வடக்கு ஷ்லெஸ்விக் டென்மார்க்கிற்கும் சிறிய மாவட்டங்கள் பெல்ஜியத்திற்கும் வழங்கப்பட்டன.
  • போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது.
  • நேசநாடுகளின் ஆக்கிரமிப்பின் கீழ்ரைன்லாந்து இருக்கும் என்றும், ரைன்நதியின் கிழக்குக்கரைப் பகுதி படை நீக்கம் செய்யப்பட்டப் பகுதியாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Question 3.
லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.
விடை:

  • லெனின் 1870-இல் மத்திய வோல்கா பகுதி அருகே பிறந்தார்.
  • அவர் கார்ல்மார்க்ஸின் சிந்தனைகளால் கவரப்பட்டார்.

புரட்சியின் விளைவுகள் :

  • புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார்.
  • புரட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமென அவர் விரும்பினார்.
  • அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கவர்ந்தது.
  • போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த பற்றாக்குறைகளால் பெருந்துயரங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் ரொட்டி, அமைதி, நிலம் எனும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.
  • ஆனால் தற்காலிக அரசு இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்தது.
  • ஒன்று நிலங்களின் விநியோகம் குறித்த கோரிக்கையின் மீது எடுக்கப்பட வேண்டிய முடிவைத் தள்ளிவைத்தது.
  • மற்றொன்று போரைத் தொடர்வதென எடுக்கப்பட்ட முடிவு.

லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுதல்:

  • அக்டோபர் திங்களில், லெனின் போல்ஷ்விக் கட்சியின் மத்தியக்குழுவை உடனடிப் புரட்சி குறித்து முடிவுசெய்யக் கேட்டுக்கொண்டார்.
  • டிராட்ஸ்கி ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்தார்.
  • நவம்பர் 7இல் முக்கியமான அரசுக் கட்டடங்கள், குளிர்கால அரண்மனை, பிரதமமந்திரியின் தலைமை அலுவலகங்கள் ஆகியவை அனைத்தும் ஆயுதமேந்திய ஆலைத் தொழிலாளர்களாலும், புரட்சிப்படையினராலும் கைப்பற்றப்பட்டன.
  • 1917 நவம்பர் 8இல் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது.
  • போல்ஷ்விக் கட்சிக்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி எனப் புதுப் பெயரிடப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 4.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
விடை:
சங்கத்தின் செயல்பாடுகள்:

  • 1920-25ஆகிய ஆண்டுகளுக்கிடையே பன்னாட்டுச் சங்கம் சிக்கல்களைத் தீர்த்துவைக்க அழைக்கப்பட்டது.
  • மூன்று பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதில் சங்கம் வெற்றிபெற்றது.
  • 1920இல் பின்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக் கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டு தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது.
  • பன்னாட்டுச் சங்கம் அத்தீவுகள் பின்லாந்திற்கே உரியது எனத் தீர்ப்பளித்தது.
  • அடுத்த ஆண்டில் போலந்திற்கும் ஜெர்மனிக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டு, பிரச்சனையைத் தீர்த்துவைக்கச் சங்கம் அழைக்கப்பட்டபோது அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது.
  • 1925இல் மூன்றவாது பிரச்சனை கிரீஸ், பல்கேரியா நாடுகளுக்கிடையே ஏற்பட்டதாகும்.
  • ஆகவே 1925இல் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை சர்வதேச சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
  • இதன் பின்னர் ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது.
  • பாதுகாப்புக்குழுவிலும் நிரந்தர இடமளிக்கப்பட்டது.

10th Social Science Guide முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
முதல் உலகப் போரின் மிகப்பெரும் விளைவு ………………….. புரட்சி ஆகும்.
அ) சீனப்
ஆ) ரஷ்யப்
இ) பிரெஞ்சு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) ரஷ்யப்

Question 2.
……………… ஆனது தகவல் பரிமாற்றம், போக்குவரத்து என்றறியப்பட்டது.
அ) காலனித்துவமயமின்மை
ஆ) புரட்சி
இ) காடழிப்பு
ஈ) அ) மற்றும் ஆ)
விடை:
ஆ) புரட்சி

Question 3.
………………… கூட்டு நிறுவனங்களும், ஜெர்மனியில் வணிக கூட்டிணைப்பும் உருவானது.
அ) ஜப்பான்
ஆ) அமெரிக்கா
இ) ரஷ்யா
ஈ) பிரெஞ்சு
விடை:
ஆ) அமெரிக்கா

Question 4.
……………….. காலத்தில் ஆசிய நாடுகள் காலனிமயமாக்கப்பட்டன.
அ) 1912
ஆ) 1882
இ) 1880
ஈ) 1885
விடை:
இ 1880

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 5.
“எனது நாடு சரியோ, தவறோ நான் அதை ஆதரிப்பேன்” என்பது ………………. ஆகும்.
அ) ஆக்கிரமிப்பு மனப்பாங்கு
ஆ) பகை
இ) வன்முறை சார்ந்த தேசியம்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ வன்முறை சார்ந்த தேசியம்

Question 6.
………………… போர் பதுங்கு குழிப் போரின் தொடக்கம் ஆகும்.
அ) வெர்டன்
ஆ) கொரில்லா
இ) மார்ன்
ஈ) உலகப்
விடை:
இ மார்ன்

Question 7.
எதிரிகளின் சுடுதலில் இருந்து பாதுகாத்து கொண்டு நிற்க உதவுவது ……………… ஆகும்
அ) வெர்டன் போர்
ஆ) மார்ன் போர்
இ) ரஷ்யப் போர்
ஈ) பதுங்கு குழிப் போர்
விடை:
ஈ) பதுங்கு குழிப் போர்

Question 8.
ஜெர்மனியோடு 1918 மார்ச் 3ம் நாள் பிரெஸ்ட் லிட்டோவஸ்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது …………….. ஆகும்.
அ) பிரான்ஸ்
ஆ) இத்தாலி
இ) ரஷ்யா
ஈ) ஜப்பான்
விடை:
இ ரஷ்யா

Question 9.
மைய நாடுகளுடன் சேர்ந்து ………………….. போரிட்டது.
அ) ஜெர்மனி
ஆ) ஜப்பான்
இ) சீனா
ஈ) துருக்கி
விடை:
துருக்கி

Question 10.
அமெரிக்க குடியரசுத் தலைவர் ………………….. ஆவார்.
அ) சேம்பர்லின்
ஆ) வில்லியம்
இ) உட்ரோ வில்சன்
ஈ) கிளமென்சோ
விடை:
இ உட்ரோ வில்சன்

Question 11.
ஜெர்மனி ……………….. தொடங்கிய குற்றத்தைச் செய்தது.
அ) முதல் உலகப் போர்
ஆ) இரண்டாம் உலகப்போர்
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை
விடை:
உலகப் போர்

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 12.
அமெரிக்காவிற்கு சொந்தமான கப்பல் ………………. ஆகும்.
அ) எம்டன்
ஆ) லூசிடானியோ
இ) சுதேசி
-ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) லூசிடானியோ

Question 13.
முதல் உலகப் போர் வெடித்த ஆண்டு ………………. ஆகும்.
அ) 1915
ஆ) 1916
இ) 1914
ஈ) 1918
விடை:
இ 1914

Question 14.
………………….. ஜெர்மனியோடும், அமெரிக்காவோடும் போட்டியிட வேண்டியிருந்தது.
அ) பிரான்ஸ்
ஆ) இத்தாலி
இ) ஆஸ்திரேலியா
ஈ) இங்கிலாந்து
விடை:
ஈ) இங்கிலாந்து

Question 15.
…………………. ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக போரிட்டது.
அ) 1984
ஆ) 1894
இ) 1948
ஈ) 1888
விடை:
ஆ) 1894

Question 16.
கிழக்கு ஆசியாவில் வலிமை மிகுந்த நாடு ………………….
அ) பிரான்ஸ்
ஆ) ரஷ்யா
இ) ஜப்பான்
ஈ) ஐரோப்பா
விடை:
இ ஜப்பான்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………….. என்பது ரஷ்ய மொழிச் சொல் ஆகும்.
விடை:
“பிராவ்தா”

Question 2.
“பிராவ்தா” என்றால் ………………….. எனப் பொருள் ஆகும்.
விடை:
“உண்மை ”

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 3.
நிலம் சமுதாயத்தின் ……………….. அறிவிக்கப்பட்டது.
விடை:
சொத்தாக

Question 4.
பன்னாட்டு சங்கம் …………………. உறுப்புகளைக் கொண்டது.
விடை:
5

Question 5.
பன்னாட்டு சங்கத்தின் முதல் பொருட் செயலாளர் ………………..
விடை:
சர் ஏரிக் ட்ரம்மாண்ட்

Question 6.
ரஷ்ய புரட்சி ……………….. தொடங்கியது.
விடை:
1917

Question 7.
ரஷ்ய புரட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். ………………… ஆவார்.
விடை:
லெனின்

Question 8.
……………… நேசநாடோடு சேர்ந்து போரிட்டது.
விடை:
சீனா

Question 9.
ஜெர்மனியின் போரின் போக்கை கண்காணித்தது ஆகும்.
விடை:
ருமேனியா

Question 10.
……………. இலக்காக கொண்டு குண்டு வீசப்பட்டன.
விடை:
பொதுமக்களை

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 11.
………………. நாட்டில் 2 அமைதி மாநாடுகள் கூட்டப்பட்டன.
விடை:
ஹாலந்து

Question 12.
ஆர்மீனிய இனப்படுகொலைகள் …………….. க்கு எ.கா. ஆகும்.
விடை:
பால்கன் போர்

Question 13.
பன்னாட்டு சங்கம் ………………. கலைக்கப்பட்டது.
விடை:
1946

Question 14.
பன்னாட்டு சங்கத்தால் ……………… எனும் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முடியவில்லை .
விடை:
கூட்டுப் பாதுகாப்பு

Question 15.
பெரும்பாலான ஆதரவைப் பெற்ற ஆதரவாளர்கள் ………………. எனப்பட்டனர்.
விடை:
போல்ஷின்ஸ்ட்லோ

Question 16.
பன்னாட்டு சங்கத்தில் உறுப்பினராகாத நாடு ……………… ஆகும்.
விடை:
அமெரிக்கா

Question 17.
……………… ஜப்பான் மஞ்சூரியாவைத் தாக்கியது.
விடை:
1931

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) மஞ்சு வம்சத்தை சேர்ந்தவர் சார் இரண்டாம் நிக்கோலஸ் நிர்வாகத்தில் குறைவான அனுபவம் கொண்டிருந்தார்.
ii) இரண்டாம் அலெக்சாண்டர் பண்ணை அடிமை முறையை ஒழித்தார்.
iii) கபான் தலைமையில் நடைபெற்ற புரட்சி ” குருதி ஞாயிறு” எனப்பட்டது.
iv) ரஷ்ய புரட்சி 1914ல் தோன்றியது.

அ) i, ii சரி
ஆ) i, iii சரி
இ) ii, iii சரி
ஈ) ii சரி
விடை:
அ) i, ii சரி

Question 2.
கூற்று : பன்னாட்டு சங்கம் 5 உறுப்புகளைக் கொண்டது.
காரணம் : பொதுச்சபை, பாதுகாப்பு சபை, நிர்வாகம் பன்னாட்டு நீதிமன்றம், தொழிலாளர் அமைப்பு என்பவையாகும்.

அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று, காரணம் சரி, காரணம் கூற்றுக்கான விளக்கவில்லை .
இ) கூற்று, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் சரி
விடை:
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 4

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
கூட்டு நிறுவனம் என்பது யாது?
விடை:

  • பொருள்களை உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழில்சார் நிறுவனமாகும்.
  • தனக்கு நன்மை பயக்கும் விதத்தில் பொருள்களின் விநியோகம், விலை ஆகியவற்றின் மீது அந்நிறுவனம் அதிகக் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கும்

Question 2.
மேற்கு அல்லது பிரெஞ்சு முனைப்போர் பற்றிக் கூறு.
விடை:
மேற்கு அல்லது பிரெஞ்சு முனைப் போர்:

  • பெல்ஜியம் மக்களின் எதிர்ப்பை ஜெர்மனி தகர்த்தெறிந்தது.
  • நேசநாடுகளின் அணியில் போர் செய்யவேண்டிய சுமை பிரெஞ்சுப்படைகளின் தோள்களின்மேல் விழுந்தது.
  • ஒரு மாதத்திற்குள் ஏறத்தாழ பாரீஸ்நகர் வீழ்ந்துவிடும் நிலை ஏற்பட்டது.

Question 3.
பாரிஸ் அமைதி மாநாடு பற்றி எழுதுக.
விடை:

  • பாரிஸ் அமைதி மாநாடு, போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1919 ஜனவரி திங்களில் தொடங்கியது.
  • உட்ரோ வில்சன் (அமெரிக்க அதிபர்), லாயிட் ஜார்ஜ் (இங்கிலாந்துப் பிரதமர்), கிளமென்சோ (பிரான்சின் பிரதமர்) ஆகிய மூவரும் கலந்தாய்வில் முக்கியப் பங்குவகித்தனர்.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 4.
லெனின் – பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
விடை:

  • 1870இல் மத்திய வோல்கா பகுதி அருகே கற்றறிந்த பெற்றோர்க்கு லெனின் பிறந்தார்.
  • கார்ல்மார்க்ஸின் சிந்தனைகளால் கவரப்பட்ட அவர், விடுதலைக்கான வழி, பெருந்திரளான மக்களின் போராட்டமே என நம்பினார்.
  • பெரும்பாலோனோரின் (போல்ஷின்ஸ்ட்வோ ) ஆதரவைப் பெற்ற லெனினும் அவரது ஆதரவாளர்களும் போல்ஷ்விக் கட்சி என்று அறியப்பட்டனர்.
  • இவருக்கு எதிரான சிறுபான்மையினர் (மென்ஷின்ஸ்ட்வோ ) மென்ஷ்விக்குகள் என்றும் அழைக்கப்பட்டனர்.

Question 5.
பன்னாட்டு சங்கத்தின் குறிக்கோள்கள் யாவை?
விடை:

  • பன்னாட்டுச் சங்கத்தின் இரண்டு குறிக்கோள்களில் ஒன்று போர்களைத்தவிர்த்து உலகில் அமைதியை நிலைநாட்டுவது.
  • மற்றொன்று சமூகப் பொருளாதார விசயங்களில் பன்னாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்பனவாகும்.

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

Question 1.
முதல் உலகப்போரில் இந்தியாவின் மீதான தாக்கத்தை விவரி.
விடை:
இந்தியாவின் மீதான தாக்கம்:

  • முதல் உலகப்போர் இந்தியாவின்மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் போர்ப்பணி செய்வதற்காக ஆங்கிலேயர் இந்தியர்களைக் கொண்ட பெரும்படையைத் திரட்டினர்.
  • போர் முடிந்த பின்னர் இவ்வீரர்கள் புதிய சிந்தனைகளோடு தாயகம் திரும்பினர். அச்சிந்தனைகள் இந்திய சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.
  • போர் செலவுக்காக இந்தியா 230 மில்லியன் பவுண்டுகளை ரொக்கமாகவும், 125 மில்லியன் பவுண்டுகளைக் கடனாகவும் வழங்கியது.
  • இதன் விளைவாக இந்தியாவில் பெருமளவிலான பொருளாதார இன்னல்கள் ஏற்பட்டன.
  • போர் முடிவடையுந் தருவாயில் உலகம் முழுதும் பரவிய விஷக்காய்ச்சலால் இந்தியாவும் பெருந்துயருக்குள்ளானது.
  • இவ்வாறு முதல் உலகப்போர் இந்தியச் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றின்மேல் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.

Question 2.
தற்காலிக அரசின் தோல்வியை விவரி.
விடை:
தற்காலிக அரசு:

  • அரசு நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள ஒன்றுக்கொன்று இணையான இரண்டு அமைப்புகள் இருந்தன.
    1. ஒன்று பழைய டூமா அமைப்பு, உடைமை வர்க்கத்தைச் சேர்ந்த பூர்ஷ்வா அரசியல்வாதிகளைக் கொண்ட அமைப்பு.
    2. மற்றொன்று தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அங்கம்வகித்தக் குழு அல்லது சோவியத்.

தற்காலிக அரசின் தோல்வி:

  • புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். புரட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமென அவர் விரும்பினார்.
  • “அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே” என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கவர்ந்தது.
  • போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த பற்றாக்குறைகளால் பெருந்துயரங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் “ரொட்டி, அமைதி, நிலம்” எனும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.
  • ஆனால் தற்காலிக அரசு இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்தது.
  • ஒன்று நிலங்களின் மறுவிநியோகம் குறித்த கோரிக்கையின் மீது எடுக்கப்பட வேண்டிய முடிவைத் தள்ளிவைத்தது. மற்றொன்று போரைத்தொடர்வதென எடுக்கப்பட்ட முடிவு.
  • ஏமாற்றமடைந்த விவசாய இராணுவவீரர்கள் தங்கள் பொறுப்புகளைக் கைவிட்டு நில அபகரிப்பில் ஈடுபடலாயினர்.
  • இந்நிகழ்வு பெட்ரோகிரேடில் போல்ஷ்விக்குகளின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை மேலும் தீவிரப்படுத்தியது.

VII. செயல்பாடுகள்

முதல் உலகப்போரில் ஈடுபட்ட நாடுகளை உலக வரைபடத்தில் குறிக்கவும்.
1. கிரேட் பிரிட்டன்,
2. ஜெர்மனி
3. பிரான்ஸ்
4. இத்தாலி
5. மொராக்கோ
6. துருக்கி
7. செர்பியா
8. பாஸ்னியா
9. கிரீஸ்
10. ஆஸ்திரியா – ஹங்கேரி
11. பல்கேரியா
12. ருமேனியா.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 5

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 17 விலங்குலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 17 விலங்குலகம்

9th Science Guide விலங்குலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக

அ) மெல்லுடலிகள்
ஆ) துளையுடலிகள்
இ) குழியுடலிகள்
ஈ) முட்தோலிகள்
விடை:
ஈ) முட்தோலிகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 2.
மீசோகிளியா காணப்படுவது

அ) துளையுடலிகள்
ஆ) குழியுடலிகள்
இ) வளைதசையுடலிகள்
ஈ) கணுக்காலிகள்
விடை:
ஆ) குழியுடலிகள்

Question 3.
பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப்பிராணி அல்ல?

அ) மீன்கள் மற்றும்
இ) ரு வாழ்விகள்
ஆ) இருவாழ்விகள் மற்றும் பறவைகள்
இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்
ஈ) ஊர்வன மற்றும் பாலூட்டிகள்
விடை:
இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

Question 4.
நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட லிலங்கினை கண்டறிக.

அ) பல்லி
ஆ) பாம்பு
இ) முதலை
ஈ) ஓணான்
விடை:
இ) முதலை

Question 5.
மண்டையோடற்ற உயிரி எது?

அ) ஏகாரினியா
ஆ) ஏசெபாலியா
இ) ஏப்டீரியா
ஈ) ஏசீலோமேட்டா
விடை:
அ) ஏகாரினியா

Question 6.
இரு பாலின (Hermaphrodite) உயிரிகள் எவை?

அ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, ஆம்பியாக்சஸ்
ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்
இ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, பலனோகிளாசஸ்
ஈ) ஹைடிரா, நாடாப்புழு, அஸ்காரிஸ், மண்புழு
விடை:
ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்

Question 7.
குளிர் இரத்தப் பிராணிகள் எவை?

அ) மீன், தவளை, பல்லி, மனிதன்
ஆ) மீன், தவளை, பல்லி,மாடு
இ) மீன், தவளை, பல்லி, பாம்பு
ஈ) மீன், தவளை, பல்லி, காகம்
விடை:
இ) மீன் , தவளை, பல்லி, பாம்பு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 8.
காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில்?

அ) மீன்
ஆ) தவளை
இ) பறவை
ஈ) வௌவால்
விடை:
இ) பறவை

Question 9.
நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?

அ) சுடர் செல்கள்
ஆ) நெஃப்ரீடியா
இ) உடற்பரப்பு
ஈ) சொலினோசைட்டுகள்
விடை:
அ) சுடர் செல்கள்

Question 10.
குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது?

அ) ஹைடிரா
ஆ) மண்புழு
இ) நட்சத்திர மீன்
ஈ) அஸ்காரிஸ் (உருளைப்புழு )
விடை:
ஈ) அஸ்காரிஸ் (உருளைப் புழு)

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
துளையுடலிகளின் கழிவுநீக்க துளை ………………………………….
விடை:
ஆஸ்டியா

Question 2.
டினிடியா என்ற சுவாச உறுப்புகள் …………………………………. ல் காணப்படும்.
விடை:
மெல்லுடலிகள்

Question 3.
ஸ்கேட்ஸ் என்பது …………………………………. மீன்களாகும்
விடை:
குருத்தெலும்பு

Question 4.
…………………………………. இரு வாழ்விகளின் லார்வா ஆகும்.
விடை:
தலைபிரட்டை

Question 5.
…………………………………. என்பது தாடையற்ற முதுகெலும்பிகள் ஆகும்.
விடை:
வட்டவாயுடையவை) லாம்பிரே

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 6.
…………………………………. ஆனது பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்.
விடை:
தாய் சேய் இணைப்பு சிசு

Question 7.
முட்கள் கொண்ட எறும்பு உண்ணியானது …………………………………. பாலூட்டிக்கு உதாரணமாகும்
விடை:
முட்டையிடும்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுகிறது. கால்வாய் மண்டலம் முட்தோலிகளில் காணப்படுகிறது.
விடை:
தவறு

Question 2.
இருபால் உயிரிகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன.
விடை:
சரி

Question 3.
வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு டிரக்கியா ஆகும் வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு உடற்சுவராகும்.
விடை:
தவறு

Question 4.
மெல்லுடலிகளின் லார்வா பின்னேரியா ஆகும் மெல்லுடலிகளின் லார்வா ட்ரோக்கோபோர் ஆகும்.
விடை:
தவறு

Question 5.
பலனோகிளாசஸ் குறுயிழை இயக்க உணவூட்ட முறையை பெற்றுள்ளன.
விடை:
சரி

Question 6.
மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது.
விடை:
சரி

Question 7.
மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளன. மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை இரு வாழ்விகள் கொண்டுள்ளன.
விடை:
தவறு

Question 8.
முன்னங்கால்களின் மாறுபாடுகளே பறவைகளின் இறக்கைகளாகும்.
விடை:
சரி

Question 9.
பாலூட்டிகளில் பால் சுரப்பிகள் பெண் இனங்களில் காணப்படுகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 1

V. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
வகைப்பாட்டியல் வரையறு.
விடை:
அடிப்படைக்கொள்கைகள் முறைகள் மற்றும் விதிகளை உள்ளடக்கிய பிரிவு ஆகும்.

Question 2.
கொட்டும் செல்கள் என்றால் என்ன?
விடை:
குழியுடலிகளில் புறப்படையில் காணப்படும் பாதுகாப்புச் செல்கள் கொட்டும் செல்கள் அல்லது நிமெட்டோசிஸ்ட்கள் எனப்படும்.

Question 3.
குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவது ஏன்?
விடை:
உடற்சுவரில் புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரு அடுக்குகள் உண்டு. எனவே இது ஈரடுக்கு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

Question 4.
இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்) சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.
விடை:

  • செவுள்கள்,
  • நுரையீரல்,
  • தொண்டை
  • தோல்

Question 5.
நட்சத்திர மீனில் எவ்வாறு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது?
விடை:
நட்சத்திர மீன்கள் குழல் கால்கள் உதவியால் கிடைமட்ட மற்றும் செங்குத்தான முறைகளில் இடப்பெயர்ச்சி செய்கிறது.

Question 6.
ஜெல்லிமீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீனை ஒத்துள்ளனவா? காரணம் கூறு.
விடை:
இல்லை

  • ஜெல்லி மீன் குழியுடலிகள்
  • நட்சத்திர மீன் முட்தோலிகள்
  • இவை இரண்டும் முதுகெலும்பு அற்ற உயிரிகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 7.
தவளைகள் இருவாழ்விகள் என்று அழைக்கப்படுவது ஏன்?
விடை:
இவை நீர் மற்றும் நிலச் சூழ்நிலையில் வாழ்வதற்கான தகவமைப்பினைப் பெற்றுள்ளது.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
தொகுதி அன்னலிடா பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • உண்மையான உடற்குழி உண்டு
  • சீட்டாக்கள் எனும் நுண்ணிய நீட்சிகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
  • உடலானது கியூட்டிக்கிள் எனும் ஈரப்பசை மிக்க உறையினால் ஆனது.
  • கழிவு நீக்கம் நெஃப்ரிடியாவால் நடக்கிறது.
  • மூளையாகக்கொண்ட நரம்பு மண்டலம் காணப்படுகின்றது.
  • டீராக்கோபோர் லார்வா இவற்றின் பொதுலார்வா ஆகும். (எ.கா)மண்புழு , அட்டை

Question 2.
தட்டைப்புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்கள் இடையேயான வேறுபாட்டினைக் கூறுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 2

Question 3.
தொகுதி முதுகு நாணிகளின் (கார்டேட்டா) வழிமுறைப்படத்தினை தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 3

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 4.
மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும் ஐந்தினைப் பட்டியலிடுக.
விடை:

  • மீன்கள் நீரில் வாழ்பவை மற்றும் குளிர்ரத்தப்பிராணிகள்
  • உடல் படகு போன்று அமைந்துள்ளது
  • இணைத்துடுப்புகளாலும் நடுமையத் துடுப்புகளாலும் நீந்துகின்றன.
  • உடல் செதில்களால் மூடப்பட்டுள்ளன.
  • தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது.

Question 5.
இருவாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ் பண்புகள் குறித்து விளக்குக.
விடை:
நீர் வாழ் பண்புகள்:

  • தோல் ஈரப்பதமான சுரப்பிகளைப் பெற்றுள்ளது.
  • பின்னங்காலில் விரலிடைச்சவ்வு உள்ளது.
  • சுவாசம் செவுள் மூலம் நடைபெறுகிறது.

நிலவாழ் பண்புகள்:

  • இரண்டு ஜோடி கால்களைப் பெற்றுள்ளது.
  • நுரையீரல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது.

Question 6.
பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளன?
விடை:

  • பறவைகளில் ஈரினைக்கால்கள் உண்டு. இதில் முன்னங்கால்கள் பறப்பதற்கு ஏற்றவாறு இறக்கைகளாக மாறுபாடடைந்துள்ளன.
  • பின்னங்கால்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் உதவுகின்றன.

VII. விரிவாக விடையளி
Question 1.
முன்முதுகு நாணிகளின் பண்புகளை விவரிக்க.
விடை:

  1. முன் முதுகு நாணிகள் முதுகெலும்பிகளின் முன்னோடிகள்.
  2. இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் எகிரேனியா என்றழைக்கப்படுகின்றன.
  3. முகுகு நாண் அமைப்பின் அடிப்படையில் இவை மூன்று துணைத் தொகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • அரை முதுகு நாணிகள்
    • தலை முதுகு நாணிகள்
    • வால் முதுகு நாணிகள்

I. அரைமுதுகு நாணிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 4

  • கடல் வாழ் உயிரிகள்
  • இவை புழுவடிவமுடையது
  • உடல் மென்மையானது (உடற்கண்டமற்றவை) இருபக்க சமச்சீர் உடையவை.
  • இவைகள் மூவடுக்கு உயிரிகள்
  • முதுகு நாணானது தொண்டைப் பகுதிகள் மேல்புறத்திலிருந்து முன்னோக்கிய சிறிய நீட்சியாக உள்ளது. எ.கா – பலனோகிளாஸஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

II. தலை முதுகு நாணிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 5

  • இவை மீன்வடிவ கடல்வாழ் முதுகு நாணிகள்
  • இவற்றில் முதுகுப்புறத்தில் இணையற்ற துடுப்பு உள்ளது.
  • முதுகு நாண் தலை முதல் நுனி வரை நீண்ட நிலையான அமைப்பாகும் எ.கா – ஆம்பியாகஸிஸ்

III. வால் முதுகு நாணிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 6

  • முதுகு நாண் லார்வா நிலையில் வால் பகுதியில் மட்டும் காணப்படுகிறது.
  • முதிர் உயிரிகள் இயல்பான அமைப்பை இழந்து தரையில் ஒட்டி வாழ்பவை.
  • ஊடலைச் சுற்றி டியுனிக் எனும் உரை உண்டு எ.கா — அசிடியன்

Question 2.
தொகுதி – கணுக்காலிகளைப் பற்றி எழுதுக
விடை:

  • அதிக சிற்றினங்களைக் கொண்ட மிகப்பெரிய தொகுதி.
  • ஆர்த்ரோபோடு என்பதன் பொருள் இணைப்புக்கால்கள் என்பதாகும்.
  • இதன் உடல், தலை, மார்பு, வயிறு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • உடலின் மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது.
  • உடற்குழி ஹீமோலிம்ப் என்ற திரவத்தினால் நிரப்பப்பட்டுள்ளது.
  • நன்கு வரையறுக்கப்பட்ட இரத்தக்குழல்கள் இல்லை.
  • தோலுரித்தல் மூலம் புறச் சட்டகத்தை களைகிறது.
  • சுவாசம் டிரக்கியா மற்றும் புத்தக நுரையீரல் மூலம் நடைபெறுகிறது.
  • பூச்சிகளில் மால்பிஜியன் குழல்கள் மூலமும் இறால்களில் பச்சைச் சுரப்பிகள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது. எ.கா- எட்டுக்கால்பூச்சி, நண்டு, வண்ணத்துப்பூச்சி, தேள்

9th Science Guide விலங்குலகம் Additional Important Questions and Answers

Question 1.
ஒரு மதிப்பெண் வினாக்கள் முதன் முதலில் வகைப்பாட்டியல் முறையை உருவாக்கியவர் ……………………………..
விடை:
கரோலஸ் லின்னேயஸ்

Question 2.
கரப்பான் பூச்சியின் உடற்குழி திரவம் ……………………………..
விடை:
ஹீமோலிம்

Question 3.
…………………………….. வகை எலும்புகள் பறவைகளில் காணப்படுகிறது.
விடை:
நீமோட்டிக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 4.
பல்லியின் இதய அறைகளின் எண்ணிக்கை
விடை:
3

Question 5.
பால் சுரப்பிகள் …………………………….. மாறுபாடுகள் ஆகும்.
விடை:
தோலின்

Question 6.
புத்தக நுரையீரல்கள் …………………………….. சுவாச உறுப்பாகும்.
விடை:
தேள்

Question 7.
மேன்டில் எனும் அமைப்பு …………………………….. ல் காணப்படுகிறது.
விடை:
மொலஸ்கா

Question 8.
எக்கினோடெர்மேட்டாவின் இளம் உயிரி ……………………………..
விடை:
பைப்பின்னேரியா

Question 9.
பாக்டீரியா செல்களில் …………………………….. இல்லை
விடை:
உட்கரு

Question 10.
அமீபிக் சீதபேதியை உண்டாக்கும் நுண்ணுயிரி ……………………………..
விடை:
என்டமீபா ஹிஸ்டாலிகா

Question 11.
மலேரியா நோயை பரப்பும் கொசு ……………………………..
விடை:
பெண் அனாபிலஸ்

Question 12.
மலேரியா நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரி ……………………………..
விடை:
பிளாஸ்மோடியம்

Question 13.
துளையுடலிகள் …………………………….. எனப்படுகின்றன.
விடை:
கடற்பஞ்சுகள்

Question 14.
துளையுடலிகளின் உடலில் காணப்படும் நுண்முட்கள் ……………………………..
விடை:
ஸ்பிக்யூல்ஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 15.
புரோட்டோசோவாக்கள் …………………………….. உயிரிகள்
விடை:
ஒரு செல்

Question 16.
மீசோகிளியா என்பதன் பொருள் ……………………………..
விடை:
செல்களால் ஆக்கப்படாத

Question 17.
குழியுடலிகளில் காணப்படும் கொட்டும் செல்கள் ……………………………..
விடை:
நிமெட்டோசிஸ்ட்கள்

Question 18.
நிடோசில் கொடுக்கு காணப்படும் உயிரிகள் ……………………………..
விடை:
குழியுடலிகள்

Question 19.
பாலிப் உருவ அமைப்பு கொண்ட உயிரி ……………………………..
விடை:
ஹைடிரா

Question 20.
தட்டைப்புழுக்களில் கழிவு நீக்கம் …………………………….. மூலம் நடைபெறும்.
விடை:
சுடர் செல்கள்

Question 21.
தட்டைப் புழுக்களுக்கு எடுத்துக்காட்டு ……………………………..
விடை:
நாடாப்புழு

Question 22.
உருளைப்புழுக்கள் …………………………….. எனப்படுகின்றன.
விடை:
நிமட்டோடா

Question 23.
இந்தியாவில் குடற் புழு நீக்க விழிப்புணர்வு நாள் ……………………………..
விடை:
பிப்ரவரி 10

Question 24.
உச்சேரிரியா பான்கிராஃப்டி புழுக்களால் ஏற்படும் நோய் ……………………………..
விடை:
யானைக்கால் நோய்

Question 25.
வளைத்தசைப்புழுக்கள் …………………………….. மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
விடை:
சீட்டாக்கள்

Question 26.
வளைத்தசை புழுக்களின் கழிவுநீக்க உறுப்பு ……………………………..
விடை:
நெஃப்ரீடியங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 27.
மண்புழுக்கள் …………………………….. என்றழைக்கப்படுகின்றன.
விடை:
உழவனின் நண்பன்

Question 28.
கணுக்காலிகளின் கழிவு நீக்க உறுப்பு ……………………………..
விடை:
மால்பீஜியன் குழல்கள்

Question 29.
ஒரே ஒரு கண் உடைய உயிரினம் ……………………………..
விடை:
மால்பீஜியன் குழல்கள்

Question 30.
சென்டிபீட் என்பதன் பொருள் ……………………………..
விடை:
நூறு காலிகள்

Question 31.
மெல்லுடலிகளின் உடலைச்சுற்றி காணப்படும் மென்போர்வை ……………………………..
விடை:
மேன்டில்

Question 32.
முத்துச்சிப்பிகள் …………………………….. ஐ உருவாக்குகின்றன.
விடை:
முத்து

Question 33.
நீர் இரத்த ஓட்ட மண்டலம் காணப்படும் உயிரி ……………………………..
விடை:
முட்தோலிகள்

Question 34.
எகிரேனியா என்பதன் பொருள் ……………………………..
விடை:
மண்டையோடற்றவை

Question 35.
மீன்கள் …………………………….. இரத்தப் பிராணிகள்
விடை:
குளிர்

Question 36.
முதுகெலும்பிகளின் இடப்பெயர்ச்சி உறுப்பு ……………………………..
விடை:
கால்கள்

Question 37.
மீன்களின் இதயம் …………………………….. அறைகள் உடையது.
விடை:
இரு

Question 38.
சிறுத்தையை விட வேகமாக நீந்தக்கூடிய மீன் ……………………………..
விடை:
செயில் மீன்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 39.
முதுகெலும்புடைய விலங்குகளில் மிகப்பெரிய விலங்கு ……………………………..
விடை:
நீலத் திமிங்கலம்

Question 40.
நீலப்புரட்சி என்பது …………………………….. உற்பத்தி
விடை:

Question 41.
நீர், நில வாழ்வன …………………………….. எனப்படும்
விடை:

Question 42.
தமிழ்நாட்டின் மாநில பறவை ……………………………..
விடை:
மரகதப் புறா

Question 43.
பறவைகள் …………………………….. உயிரிகள்
விடை:
வெப்ப இரத்த

Question 44.
பற்கள் காணப்படும் பறவை ……………………………..
விடை:
ஆர்கியோப்டெரிக்ஸ்

Question 45.
மிகச்சிறிய இருவாழ்வி ……………………………..
விடை:
கியுபாவின் அம்பு நச்சுத்தவளை

Question 46.
ஊர்வனவற்றின் சுவாச உறுப்பு ……………………………..
விடை:
நுரையீரல்

Question 47.
பறவைகளின் முட்டை ஓடு …………………………….. ஆல் ஆனவை
விடை:
கால்சியம்

Question 48.
பாலூட்டிகளின் இதயம் …………………………….. அறைகளை உடையது.
விடை:
நான்கு

Question 49.
விந்துச் சுரப்பிகள் …………………………….. பையினுள் அமைந்துள்ளது.
விடை:
ஸ்குரோட்டல்

Question 50.
மீன்களின் சுவாசம் …………………………….. மூலம் நடைபெறுகிறது.
விடை:
செவுள்கள்

II. கூற்று மற்றும் காரண வகை

Question 1.
கூற்று – கடற்பஞ்சுகளில் திசுக்கள் இல்லை
காரணம் – அவைகள் செல்நிலை எய்திய உயிரினம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

அ) கூற்று தவறு – காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி – காரணமும் சரி.
விடை:
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை

Question 2.
கூற்று – நாடாப்புழுவில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்பு ஒரே உயிரியில் காணப்படுகின்றன.
காரணம் – நாடாப்புழு பாலில்லா முறையில் இனப்பெருக்கம் செய்கிறது.

அ) கூற்றும் – காரணம் சரி
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்றும் காரணமும் தவறு
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை.
விடை:
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை.

Question 3.
கூற்று – கரப்பான் பூச்சியில் மிகத் தெளிவான இரத்தக் குழாய்கள் காணப்படுகின்றன.
காரணம் – உயிரியின் உடலானது இரத்தத்தினால் நிரப்பப்பட்டுள்ளது.

அ) கூற்றும் – காரணம் சரி
ஆ) காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்றும் தவறு காரணம் கூற்றை விளக்கவில்லை.
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
விடை:
இ) கூற்றும் தவறு காரணம் கூற்றை விளக்கவில்லை .

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 7

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
அன்னலிடா என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
விடை:
அன்னலிடா என்ற வார்த்தை அன்னுலேசன்ஸ் என்ற கிரேக்க மொழியிலிருந்து உருவாக்கப்பட்டது. வளையங்கள் போன்று ஒன்றோடொன்று இணைந்தவை என்று அர்த்தம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 2.
தொகுதி அன்னலிடாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு யாது?
விடை:
சீட்டாக்கள் எனும் நுண்ணிய நீட்சிகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.

Question 3.
ஆர்த்ரோபோடு என்பதன் பொருள் யாது?
விடை:
ஆர்த்ரோபோடு என்பதன் பொருள் இணைப்புக்கால்கள் என்பதாகும்.

Question 4.
வெப்ப இரத்த பிராணிகள் என்றால் என்ன? உதாரணம் தருக.
விடை:
தான் வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு உடலின் வெப்பநிலையை மாற்றி அமைத்துக் கொள்ளாத உயிர்கள் எ.கா பறவை, பாலூட்டி.

Question 5.
மூவருக்கு உயிரினம் என்றால் என்ன?
விடை:
புற அடுக்கு, நடு அடுக்கு, அக அடுக்கு என மூன்று கருப்படலங்களைக் கொண்ட உயிரிகள் மூவடுக்கு உயிரிகள் எனப்படும். எ.கா – மனிதன்

Question 6.
உடற்குழி அற்றவை என்றால் என்ன?
விடை:
உடற்குழி அல்லது சீலோன் அற்ற உயிரிகள் உடற்குழி அற்றவை எனப்படும். எ.கா – நாடாப்புழு

Question 7.
பெட்டா மெரிசம் என்றால் என்ன?
விடை:
அனைத்து உடற்கண்டங்களும் ஒத்த அமைப்புடையவை. எ.கா – மண்புழு

Question 8.
ஆரச்சமச்சீர் என்றால் என்ன?
விடை:
விலங்குகளில் உடல் உறுப்புகள் ஒரு மைய அச்சினைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும். உயிரியின் உடலை எந்த ஒரு கோணத்தில் இருந்து பிரித்தாலும் ஒத்த சமமானப் பாகமாக பிரிக்க முடிந்தால் அந்த உயிரி ஆரச்சமச்சீர் கொண்டவை. உ.ம் – ஹைடிரா – நட்சத்திர மீன்

Question 9.
இருபக்க சமச்சீர் உடையவை என்றால் என்ன?
விடை:
உயிரியின் உடல் உறுப்புகள் மைய அச்சின் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும். மைய அச்சின் வழியாக உடலைப் பிரித்தால் இரு சமமான பாகங்களாக பிரிக்க இயலும். எ.கா – தவளை

Question 10.
பல்லுருவ அமைப்புடையவை என்றால் என்ன?
விடை:
உயிரிகளில் இரு உருவ அமைப்புடையவை பல்லுருவ அமைப்புடையவை எனப்படும். குழியுடலிகள் பாலிப் மற்றும் மெடுசா எனும் இரு உருவ அமைப்புடையவை. எ.கா – ஹைடிரா

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
பறவைகளின் சிறப்புப்பண்புகளை விவரி
விடை:

  • பறவைகள் வெப்ப இரத்த உயிரிகள் ஆகும்
  • உடல் தலை கழுத்து மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது.
  • உடல் கதிர் வடிவமுடையது.
  • முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறுபாடடைந்துள்ளது.
  • பின்னங்கால்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்ப தகவமைக்கப்பட்டுள்ளன.
  • பாதம செதில்களால் மூடப்பட்டுள்ளது.
  • உடலானது இறகுகளால் மூடப்பட்டுள்ளது.
  • கடின அலகு உண்டு
  • உணவுக்குழலில் தீனீப்பை மற்றும் அரைவைப்பை உள்ளது.
  • சுவாசம் நுரையீரல் மூலம் நடைபெறுகிறது.
  • எலும்புகளினுள் காற்றறைகள் உண்டு.
  • இது உடல் எடையைக் குறைக்க உதவும்  முட்டைகளில் கருவுணவு உண்டு.
  • முட்டைகள் கடினமான கால்சியம் மிகுந்த ஓடுடையவை.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 2.
பாலூட்டிகள் சிறப்பு பண்புகளை பற்றி விளக்குக.
விடை:

  • உடல் ரோமங்களால் போர்த்தப்பட்டுள்ளது. உடல் தோலில் வியர்வைச் சுரப்பிகள் உண்டு
  • பாலூட்டும் சுரப்பி மற்றும் வாசனைச் சுரப்பிகளும் தோலின் மாறுபாடுகளாகும்.
  • வெளிக்காது மடல் உண்டு 4. இதயம் நான்கு அறைகளுடையது.
  • விந்துச் சுரப்பிகள் உடலுக்கு வெளியே ஸ்குரோட்டல் பையினுள் சூழப்பட்டிருக்கும்.
  • முட்டைகள் சிறியவை. கரு உணவு இல்லை.
  • உட் கருவுறுதல் நடைபெறுகிறது.
  • இவைகள் குட்டி ஈனுபவை மற்றும் குட்டிகளுக்குப் பால் கொடுப்பவை.
  • தாய்- சேய் இணைப்புத்திசு உள்ளது.