Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

9th Social Science Guide மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
அ) கொரில்லா
ஆ) சிம்பன்ஸி
இ) உராங் உட்டான்
ஈ) பெருங்குரங்கு
விடை:
ஆ) சிம்பன்ஸி

Question 2.
வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்
அ) பழைய கற்காலம்
ஆ) இடைக்கற்காலம்
இ) புதிய கற்காலம்
ஈ) பெருங்கற்காலம்
விடை:
இ) புதிய கற்காலம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ____ ஆவர்.
அ) ஹோமோ ஹேபிலிஸ்
ஆ) ஹோமோ எரக்டஸ்
இ) ஹோமோ சேபியன்ஸ்
ஈ) நியாண்டர்தால் மனிதன்
விடை:
இ) ஹோமோ சேபியன்ஸ்

Question 4.
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ______ எனப்படுகிறது
அ) கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
ஆ) பிறைநிலப் பகுதி
இ) ஸோலோ ஆறு
ஈ) நியாண்டர் பள்ளத்தாக்கு
விடை:
ஆ) பிறைநிலப்பகுதி

Question 5.
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _________ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.
அ) நுண்கற்காலம்
ஆ) பழங்கற்காலம்
இ) இடைக் கற்காலம்
ஈ) புதிய கற்காலம்
விடை:
ஆ) பழங்கற்காலம்

Question 6.
i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.
ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள்.
iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன,
iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.
அ) i) சரி
ஆ) i) மற்றும்
ii) சரி
இ) i) மற்றும்
iv) சரி
ஈ) ii) மற்றும்
iii) சரி
விடை
இ) i) மற்றும்
iv) சரி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 7.
i) செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்
ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.
iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற் காலம் எனப்படுகிறது.
iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.
அ) i) சரி
ஆ) ii) சரி
இ) ii) மற்றும்
iii) சரி
ஈ) iv) சரி
விடை:
அ) i) சரி

Question 8.
கூற்று : தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம் : நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது.
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு,
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
கைகோடரிகளும் வெட்டுக்கருவிகளும் _____ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவிவகைகளாகும்.
விடை:
கீழ் பழங்கற்கால

Question 2.
கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும் ______ தொழில் நுட்பம் என அழைக்கப்படுகின்றன.
விடை:
கற்கருவி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் _____ எனப்படும்.
விடை:
இடைக்காலம்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க

Question 1.
அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.
ஆ) ‘உயிர்களின் தோற்றம் குறித்து’ என்ற நூலை ஹெர்பர்ட் ஸ்பென்சர் பதிப்பித்தார்.
இ) உயிரியல் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் கோட்பாடு இயற்கைத்தேர்வு என்ற வழிமுறையுடன் தொடர்பு உடையது.
ஈ) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவியல் ஆகும்
விடை:
அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
அ) குரங்கினங்களில் உராங் உட்டான் மனித மரபுக்கு மிக நெருக்கமான குரங்கினமாகும்.
ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.
இ) செதிலை கருவிகள் செய்ய பயன்படுத்த முடியாது.
ஈ) சிறு செதில்கள் தயாரிக்கப் பயன்படும் மூலக்கல் அச்சூலியன் எனப்படும்.
விடை:
ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

IV. பொருத்துக.
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் 1

V. சுருக்கமான விடை தருக

Question 1.
ஊகக் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் , அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?
விடை:

  • பரிணாம வளர்ச்சிப் போக்கில் மனிதர்கள் இயற்கை, தம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் மற்றும் உலகம் குறித்துச் சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும் தொடங்கினர்.
  • இதன் மூலம் மனிதர்கள் உணர்தல் நிலையையும் அறிவாற்றலையும் கொண்டவர்களாக மாறினார்கள்.

Question 2.
வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக.
விடை:

  • இரும்புக்கால மக்கள் வேளாண்மை மேற்கொண்டு, ஆடு, மாடுகளையும் வளர்த்தார்கள்.
  • சில குழுக்கள் வேட்டையாடிக்கொண்டும், உணவு சேகரித்துக் கொண்டும் இருந்தநிலையில், இவர்கள் பாசன நிர்வாகத்தை மேம்படுத்தினர். திணையும், நெல்லும் பயிரிட்டனர்.
  • பானைகள் செய்தார்கள். நிரந்தரமான இடங்களில் வசித்தார்கள். கலைகள் பல வளர்ந்தனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு
விடை:

  • டோல்மென் எனப்படும் கற்திட்டை.
  • சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்
  • மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல், தாழி, பாறைக் குடைவு குகைகள்.
  • சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள்.

Question 4.
கருவி செய்வதில் கீழ்ப் பழைய கற்கால மக்களிடமிருந்த தொழில்நுட்பத்தைத் திறனாய்வு செய்க.
விடை:

  • கீழ்ப் பழைய கற்கால மக்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக இருமுகக் கருவிகளான கைக்கோடாரி, வெட்டுக்கத்தி போன்ற பல கருவிகளைக் செய்தார்கள்.
  • இவை சமபங்கு உருவ அமைப்பை (Symmetry) பெற்றுள்ளன. மனித மூதாதையரின் அறிவுணர் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
  • பெரிய கற்களை செதில்களாகக் சீவி பல கருவிகளை வடிவமைத்தார்கள்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
விவசாயம், பானை செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.
விவசாயம்:

  • பெருங்கற்கால (இரும்புகால) மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டபொழுது திணையும் நெல்லும் பயிரிடப்பட்டன.
  • நதிகள், குளங்களுக்கு அருகே பெருங்கற்கால இடங்கள் அமைந்ததால் பாசன நிர்வாகம் மேம்பட்டது. பாசன தொழில் நுட்பம் வளர்ந்தது.
  • ஈமச் சின்னங்களுக்குள நெல்லை வைத்துப் புதைத்தார்கள்.
    சான்றுகள்: ஆதிச்சநல்லூர், பொருந்தல்.
    பானை செய்தல்:
  • கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. உள்ளே கறுப்பாகவும், வெளியே சிவப்பாகவும், பளபளப்பாகவும் இம் மண்பாண்டங்கள் காணப்பட்டன.
  • இப்பாண்டங்கள் சமையல், பொருள்கள் சேமிப்பு மற்றும் சாப்பிடுவதற்கு பயன்பட்டன. உலோகக்கருவிகள்
  • பெருங்கற்கால இரும்புக் கருவிகள் வேளாண்மை, வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் மற்றும் போர்களில் பயன்படுத்தப்பட்டன. வாள், குறுவாள், கோடவரி, உளி, விளக்கு, மக்காலி ஆகியவை கிடைத்துள்ளன.
  • வெண்கலக் கிண்ணங்கள், கலங்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
  • இக்கால கல்லறைகளில் ஈமப்பொருட்களாக இரும்புப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

Question 2.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக
விடை:
புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் கால கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக மனித மூதாதையரின் எலும்பு புதை படிவங்கள் புதைந்துள்ளன.

  • மண் மற்றும் பாறை அடுக்குகள், தொல்மானுடவியல் அறிஞர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்களால் அகழ்ந்து, சான்றுகள் சேகரிக்கப்படுகின்றன.
  • அறிவியல் பூர்வமாக கணிக்கப்படும் புதை படிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் மனிதர்களின் பரிணாமம், தொல் பழங்காலம் பற்றி அறிய உதவுகிறது.
  • நிலவியல் ஆய்வாளர்களால் புவியின் நீண்ட நெடிய வரலாறு நெடுங்காலம் (Era), காலம் (Period), ஊழி (Epoch), என பிரிக்கப்படுகிறது.
  • முந்தைய தொல்லுயிரூழி – பல செல் உயிரினங்கள்
    பழந்தொல்லுயிரூழி – மீன்கள், ஊர்வன, தாவரங்கள்
    இடைத் தொல்லுயிரூழி – டைனோஸர்
    பாலூட்டிகள் காலம் – ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் (குரங்கினம்)
    (இக் குரங்கினத்திலிருந்துதான் நவீன மனித இனம் தோன்றியது)

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உலக வரைபடத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பகுதிகளைக் குறிக்கவும்

2. வரலாற்றுக்கு முந்தைய காலம் தமிழ்நாட்டில் நிலவிய இடங்கள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை அமைக்கவும்

9th Social Science Guide மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராய்வது பற்றிகுறிப்பிடப்படும் இயல் எது?
அ) தொல்மானுடவியல்
ஆ) வரலாறு
இ) புவியியல்
ஈ) தொல்லியல்
விடை:
ஈ) தொல்லியல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ளும் இயல். அ) மண்ண டுக்கியல்
ஆ) தொல்மானுடவியல்
இ) தொல்லியல்
ஈ) புவியியல்
விடை:
ஆ) தொல்மானுடவியல்

Question 3.
ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் தோன்றிய காலம் எது?
அ) தொல்லுயிரூழி காலம்
ஆ) இடைத் தொல்லுயிரூழி காலம்
இ) பாலூட்டிகள் காலம்
ஈ) பழந்தொல்லுயிரூழி காலம்
விடை:
இ) பாலூட்டிகள் காலம்

Question 4.
மறுமலர்ச்சி எங்கு தோன்றியது?
அ) ஆசியா
ஆ) ஆப்பிரிக்கா
இ) அமெரிக்கா
ஈ) ஐரோப்பா
விடை:
ஈ) ஐரோப்பா

Question 5.
இயற்கை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவான பாறை மற்றும் மண் அடுக்குகளின் தோற்றம், தன்மை குறித்து ஆராய்தல்
அ) தொல்லியல்
ஆ) மண்ணியல்
இ) புவியியல்
ஈ) மண்ண டுக்கியல்
விடை:
ஈ) மண்ண டுக்கியல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 6.
உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம்
அ) ஆஷ்மோலியன்
ஆ) என்னிகால்டி-நன்னா
இ) கேபி டோலைன்
ஈ) கேம்பிரிட்ஜ் –
விடை:
அ) ஆஷ்மோலியன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
புவி எத்தனை ஆண்டுகளுக்கு முன் உருவானது ________
விடை:
454 பில்லியன்

Question 2.
ஆஸ்ட்ரோலாபித்திஸைன் என்பதன் பொருள் _____
விடை:
தெற்கத்திய மனிதக் குரங்கு

Question 3.
வரலாறு எழுதுவது யாருடைய காலத்தில் தொடங்கியது _____
விடை:
கிரேக்கர்கள்

Question 4.
மறுமலர்ச்சியின் காலம் எந்த நூற்றாண்டு ______
விடை:
15-16

Question 5.
உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் _____ அது எங்குள்ளது ________
விடை:
என்னிகால்டி-நன்னா

Question 6.
சார்லஸ் டார்வின் _______, _______ என்ற நூற்களை எழுதினார்.
விடை:
உயிரினங்களின் தோற்றம், மனிதனின் தோற்றம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 7.
மனிதர்களின் மூதாதையர்கள் ______ என்று அழைக்கப்படுகின்றனர்.
விடை:
ஹோமினின்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் 3

IV. சுருக்கமான விடை தருக

Question 1.
புவி எப்பொழுது உருவானது? நிலவியல் ஆய்வாளர்கள் புவி வரலாற்றை எவ்வாறு பிரிக்கிறார்கள்?
விடை:

  • புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது.
  • புவியின் நீண்ட நெடிய வரலாற்றை நிலவியல் ஆய்வாளர்கள் நெடுங்காலம், காலம், ஊழி என்று பிரிக்கிறார்கள்.

Question 2.
ஊகக்காலம் பற்றி சுருக்கமாக எழுதுகு.
விடை:
ஊகக் காலம்:

  • பரிணைாம வளர்ச்சிப் போக்கில் உணர்தல் நிலை மற்றும் அறிவாற்றல் கொண்ட மனிதர்கள், இயற்கை, சுற்றியுள்ள உயிரினங்கள், உலகம் குறித்து சிந்திக்கவும் கேள்வி எழுப்பவும் தொடங்கினார்.
  • சூரியன், சந்திரன் முதலான பல இயற்கை ஆற்றல்கள் குறித்து தமது சுய புரிதல்களை உருவாக்கினர். இப்புரிதல்களில் சில அறிவியல் பூர்வமானவை அல்ல.
  • உலகின் தோற்றம் குறித்த அவர்களின் அறிவியலறிவின் போதாமை வெளிப்படும் இக்காலம் “ஊகக் காலம்” ஆகும்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
கருக்கல் மற்றும் செதில் என்றால் என்ன?
விடை:

  • கருக்கல் (core) என்பது ஒரு கல்லின் முதன்மைப் பாளம் ஆகும். கற்சுத்தியலால் இதிலிருந்து செதில்கள் உடைத்து எடுக்கப்படுகின்றன.
  • செதில் (flakes) – பெரிய கற்பாளத்திலிருந்து அல்லது கருங்கல்லில் இருந்து உடைத்து எடுக்கப்பட்ட ஒரு சிறு கற்துண்டு.

Question 4.
சர் இராபர்ட் புரூஸ் என்ன கண்டுடித்தார்?
விடை:

  • பொ.ஆ.1863 இல் சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளை முதன் முறையாகக் கண்டுபிடித்தார்.
  • இங்கு கண்டெடுக்கப்பட்ட கைக்கோடரிகள் சென்னை கற்கருவித்தொழிலகம் என்று அழைக்கப்படுகின்றன. அவர் கண்டெடுத்த கருவிகள், சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.

V. தலைப்பு வினாக்கள்

ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளி .

Question 1.
மேல் பழங்கற்காலப் பண்பாடு
(i) பியூரின் என்பது என்ன ?
விடை:
பியூரின் என்பது கூரிய வெட்டுமுனை உள்ள கல்லாலான உளி.

(ii) வீனஸ் என்று அழைக்கப்படுவது எது?
கல்லிலும், எலும்பிலும் செதுக்கப்பட்ட பெண் தெய்வச் சிற்பங்கள்.

(iii) மேல் பழங்கற்காலப் பண்பாடு எப்போது தோன்றியது?
விடை:
சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்.

(iv) பனிக்காலம் என்றால் என்ன?
விடை:
உலகின் பல பாகங்கள் பனியாலும் பனிப்பாளங்களாலும் மூடப்பட்டிருந்த காலம் (8000 ஆண்டுகளுக்கு முன்).

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 2.
ஹோமினிட் மற்றும் ஹோமின்ஸ்
(i) ஹோமினிட் என்போர் யார்?
விடை:
மனிதர்களை உள்ளடக்கிய நவீன மற்றும் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இனங்கள் ஹோமினிட் ஆகும்.

(ii) ஆப்பிரிக்காவில் கருவிகளை உருவாக்கிய முதல் மனித இனம் எது?
விடை:
ஹோமோ ஹெபிலிஸ்

(iii) நவீன கால மனிதர்கள் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்?
விடை:
ஹோமோ சேப்பியன்

(iv) இந்த இனத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வகையைக் கூறு.
விடை:
ஹோமோ ஹெபிலிஸ் / நியாண்டர்தாலென்சிஸ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Question 3.
மனித முன்னோர்களின் தொடக்க காலக் கற்கருவிகளின் தொகுப்பு

(i) அச்சூலியக் கருவிகள் கர்நாடகத்திலும் மத்திய பிரதேசத்திலும் எங்கு கண்டெக்கப்பட்டுள்ளன.
விடை:
அ) * கர்நாடகா – இசாம்பூர் , மத்திய பிரதேசம் – பிம்பெத்கா

(ii) பியூரின் என்றால் என்ன?
விடை:
பியூரின் என்பது கூரிய வெட்டுமுனை உள்ள கல்லாலான உளி.

(iii) இருமுகக் கருவிகள் என்றால் என்ன?
விடை:
இருபுறமும் செதுக்கப்பட்டதால் இக்கருவிகள் இருமுகக் கருவிகள் ஆகும்.

(iv) மனித இன முன்னோடிகள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதங்கள் சிலவற்றைக் கூறுக.
விடை:
கைக்கோடரி, வெட்டுக்கத்தி

VI. விரிவான விடையளிக்கவும்

Question 1.
மேல் பழங்கற்காலப் பண்பாடு குறித்து விவரிக்கவும்.
விடை:
அறிமுகம்:
(i) இடைப் பழங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து வந்த மேல் பழங்கற்காலப் பண்பாட்டில் ஏற்பட்ட கற்குருவி தொழிலில் புதிய நுட்பங்கள் சிறப்பான கூறாகும். இந்த மேல் பழங்கற்காலப் பண்பாடு சுமார் 60000 ஆண்டுகளுக்கு முன்தோன்றியது பனிக்காலம் முற்றுப் பெற்ற சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஹேலோசின் காலம் வரை நீடித்தது. (பனிக்காலம் – தற்காலத்திற்கு 8000 ஆண்டுகளுக்கு முன்)

இக்காலத்தில் கற்களாலான நீண்ட கத்திகளும், பியூரின் எனப்படும் உளிகளும் உருவாக்கப்பட்டன. சிலிகா அதிகமுள்ள பல்வேறு கல் வகைகள் கருவிகள் செய்யப் பயன்பட்டன.

திறன்க ள்:
பல்வேறு ஓவியங்களும், கலைப்பொருட்களும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டன. பல்வேறுசெய்பொருட்கள் இவர்களது படைப்பாற்றல் திறனில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் தொழிகள் உருவானதைக் காட்டுகின்றன.

மனித பரிணாம வளர்ச்சி:
முதல் நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவின் சஹாராவிற்குத் தெற்குப் பகுதியில் (சப்-சஹாரா) தோன்றினர். இந்த இனம் மேல் பழங் கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவினார்கள். ஒருவேளை இவர்கள் அங்கிருந்தவர்களை விரட்டியிருக்கலாம். ஐரோப்பாவில் குரோமாக்னன் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

கருவிகள் மற்றும் கலைகள்:

  • கொம்புகளும், தந்தங்களும் கருவிகள் மற்றும் கலைப்பொருட்கள் செய்யப் பயன்பட்டன. எலும்பாலான பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. பதக்கம் மற்றும் வேலைப்பாடு மிக்க கருவிகள் பயன்பாட்டில் இருந்தன.
  • ஆடைகளை அணிந்தனர், சமைத்த உணவை உண்டனர், இறந்தவர்கள் மார்பில் கைவைத்த நிலையில் புதைக்கப்பட்டார்கள். கல்லிலும், எலும்பிலும் செதுக்கப்பட்ட வீனஸ் பெண் தெய்வச் சிற்பங்கள் ஐரோப்பாவிலும், ஆசியாவின் சில பகுதிகளிலும் உருவாக்கப்பட்டன.

மனவரைபடம்

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் – வரலாற்றுக்கு முந்தைய காலம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் வரலாற்றுக்கு முந்தைய காலம் 5

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

10th Social Science Guide முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் Text Book Back Questions and Answers

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்
ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, ரஷ்யா
இ) ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி
ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, இத்தாலி
விடை:
அ) ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, உதுமானியர்

Question 2.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?
அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) கொரியா
ஈ) மங்கோலியா
விடை:
ஆ) ஜப்பான்

Question 3.
“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?
அ) லெனின்
ஆ) மார்க்ஸ்
இ) சன் யாட் சென்
ஈ) மா சே தூங்
விடை:
அ) லெனின்

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 4.
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
அ) ஆகாயப் போர்முறை
ஆ) பதுங்குக் குழிபோர்முறை
இ) நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
ஈ) கடற்படைப் போர்முறை
விடை:
ஆ) பதுங்குக் குழிபோர்முறை

Question 5.
பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) பிரிட்டன்
ஆ) பிரான்ஸ்
இ) டச்சு
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
விடை:
அ) பிரிட்டன்

Question 6.
பின்லாந்தைத் தாக்கியதற்காக சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) இத்தாலி
ஈ) பிரான்ஸ்
விடை:
ஆ) ரஷ்யா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………………..ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.
விடை:
1894

Question 2.
1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட ………………… உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.
விடை:
லண்டன்

Question 3.
……………… ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.
விடை: 1902

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 4.
பால்கனில் ………………… நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
விடை:
மாசிடோனியா

Question 5.
டானென்பர்க் போரில் …………………. பேரிழப்புகளுக்கு உள்ளானது.
விடை:
ரஷ்யா

Question 6.
பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ……………… ஆவார்.
விடை:
கிளமென்சோ

Question 7.
…………………ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
விடை:
1925

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றியது.
iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

அ) i), ii) ஆகியன சரி
ஆ) i), iii) ஆகியன சரி
இ) iv) சரி
ஈ) i), ii), iv) ஆகியன சரி
விடை:
ஈ) i), ii), iv) ஆகியன சரி

Question 2.
கூற்று : ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருட்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின.
காரணம் : இருநாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்தன.

அ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு.
ஈ) காரணம் சரி, ஆனால் கூற்று தவறு.
விடை:
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 3.
கூற்று : ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.
கராணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.

அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.
விடை:
அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 2

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

Question 1.
சீன – ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
விடை:

  • 1894இல் ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக ஒரு போரை மேற்கொண்டது.
  • இச்சீன-ஜப்பானியப் போரில் (1894 – 1895) சீனாவை சிறிய நாடான ஜப்பான் தோற்கடித்தது உலகை வியக்கவைத்தது.
  • ஜப்பான் லியோடஸ் தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் இணைத்துக்கொண்டது.

Question 2.
மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
மூவர் கூட்டு நாடுகள் :
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா.

Question 3.
ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?
விடை:

  • இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று,
  • பிரான்சின் அதி தீவிரப்பற்று,
  • ஜெர்மனியின் வெறிக்கொண்ட நாட்டுப்பற்று

ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர்வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 4.
பதுங்குக் குழிபோர்முறை குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • போர்வீரர்களால் தோண்டப்படும் பதுங்குக் குழிகள் எதிரிகளின் சுடுதலில் இருந்து தங்களைக் காத்துக்கொண்டு பாதுகாப்பாக நிற்க உதவின.
  • பிரதானப் பதுங்குக் குழிகள் ஒன்றோடொன்றும் பின்புறமுள்ள குழிகளோடும் இணைக்கப்பட்டிருக்கும்.

அவற்றின் வழியாக உணவு, ஆயுதங்கள், கடிதங்கள், ஆணைகள் ஆகியவை வந்துசேரும். புதிய வீரர்களும் வந்து சேர்வர்.

Question 5.
முஸ்தபா கமால் பாட்சா வகித்த பாத்திரமென்ன?
விடை:

  • துருக்கி ஒரு நாடாக மறுபிறவி எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சா முக்கிய பங்கு வகித்தார்.
  • அவர் துருக்கியை நவீன மயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத்திலிருந்து மாற்றியமைத்தார்.

Question 6.
பன்னாட்டு சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • சங்கத்திற்கென்று இராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை .
  • ‘கூட்டுப்பாதுகாப்பு’ எனும் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்தவே முடியவில்லை.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

Question 1.
முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி.
விடை:
முதல் உலகப் போருக்கான காரணங்கள்:

  • 1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள் இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.
  • ஒரு முகாம் மைய நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய – ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
  • பிஸ்மார்க்கின் வழிகாட்டுதலில் அவை 1882இல் மூவர் உடன்படிக்கையை மேற்கொண்டன.
  • மற்றொரு முகாமில் பிரான்சு, ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்தன.
  • இந்த நாடுகளுக்கு இடையே 1902இல் இணைப்பு உருவாக்கப்பட்டது.
  • இந்த இணைப்பு மூவர் கூட்டு எனப்பட்டது.

வன்முறை சார்ந்த தேசியம் :
இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று, பிரான்சின் அதி தீவிரப்பற்று, ஜெர்மனியின் வெறிக்கொண்ட நாட்டுப்பற்று, ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.

ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு :
ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை :

  • பிரான்சும், ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர்.
  • ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு அல்சேஸ், லொரைன் பகுதிகளை பிரான்ஸ் ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது குறித்த கசப்பான நினைவுகளை பிரெஞ்சு மக்கள் ஜெர்மனியின் மீது கொண்டிருந்தனர்.

பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான வாய்ப்பு:

  • 1908ஆம் ஆண்டில் துருக்கியல் ஒரு வலுவான, நவீன அரசை உருவாக்கும் முயற்சியாக இளம்துருக்கியர் புரட்சி நடைபெற்றது.
  • அதன்படி பாஸ்னியா, ஹெர்சகோவினா ஆகிய இரண்டையும் ஆஸ்திரியா இணைத்துக்கொண்டது.
  • இதன் தொடர்பில் ஜெர்மனி ஆஸ்திரியாவிற்கு உறுதியான ஆதரவை நல்கியது.
  • ஆஸ்திரியாவிற்கும் செர்பியாவிற்குமான இப்பகை 1914 இல் போர் வெடிக்கக் காரணமாயிற்று.

பால்கன் போர்கள் :

  • பதினெட்டாம் நூற்றாண்டின் முதல்பாதியில் தென்மேற்கு ஐரோப்பாவில் துருக்கி வலிமை வாய்ந்த நாடாகத் திகழ்ந்தது.
  • ஆர்மீனிய இனப்படுகொலைகள் இதற்கு ஒரு பயங்கரமான எடுத்துக்காட்டு ஆகும். 1912ஆம் ஆண்டு மார்ச் திங்களில் அவை பால்கன் கழகம் எனும் அமைப்பை உருவாக்கின.
  • இக்கழகம் முதல் பால்கன் போரில் (1912-1913) துருக்கியப் படைகளைத் தாக்கித் தோற்கடித்தன.
  • 1913 மே திங்களில் கையெழுத்தான இலண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
  • 1913 ஆகஸ்டு திங்களில் கையெழுத்திடப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையோடு இரண்டாம் பால்கன் போர் முடிவடைந்தது.

உடனடிக் காரணம்:

  • பால்கனில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் உச்சகட்டம் பாஸ்னியாவிலுள்ள செராஜிவோ என்னுமிடத்தில் அரங்கேறியது.
  • 1914 ஜூன் 28ஆம் நாள் ஆஸ்திரியப் பேரரசரின் மகனும் வாரிசுமான பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
  • ஆஸ்திரியா இதனை செர்பியாவைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது.
  • பெல்ஜியத்தின் நடுநிலைமையை மதியாது அதனை ஜெர்மனி தாக்கவே இப்போரில் இங்கிலாந்து பங்கேற்பது கட்டாயமாயிற்று

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 2.
ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டுக் காட்டுக.
விடை:

  • போரைத் தொடங்கிய குற்றத்தைச் செய்தது ஜெர்மனி என்பதால் போர் இழப்புகளுக்கு ஜெர்மனி இழப்பீடு வழங்கவேண்டும்.
  • ஜெர்மன் படை 1,00,000 வீரர்களை மட்டுமே கொண்டதாக அளவில் சுருக்கப்பட்டது.
  • சிறிய கப்பற்படையொன்றை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
  • ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு தடை செய்யப்ட்டது.
  • ஜெர்மனியின் அனைத்துக் காலனிகளும் பன்னாட்டுச் சங்கத்தின் பாதுகாப்பு நாடுகளாக ஆக்கப்பட்டன.
  • ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கையையும் பல்கேரியாவுடன் மேற்கொள்ளப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது.
  • அல்சேஸ் லொரைன் பகுதிகள் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன.
  • முன்னர் ரஷ்யாவின் பகுதிகளாக இருந்த பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, விதுவேனியா ஆகியன சுதந்திரநாடுகளாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
  • வடக்கு ஷ்லெஸ்விக் டென்மார்க்கிற்கும் சிறிய மாவட்டங்கள் பெல்ஜியத்திற்கும் வழங்கப்பட்டன.
  • போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது.
  • நேசநாடுகளின் ஆக்கிரமிப்பின் கீழ்ரைன்லாந்து இருக்கும் என்றும், ரைன்நதியின் கிழக்குக்கரைப் பகுதி படை நீக்கம் செய்யப்பட்டப் பகுதியாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Question 3.
லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.
விடை:

  • லெனின் 1870-இல் மத்திய வோல்கா பகுதி அருகே பிறந்தார்.
  • அவர் கார்ல்மார்க்ஸின் சிந்தனைகளால் கவரப்பட்டார்.

புரட்சியின் விளைவுகள் :

  • புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார்.
  • புரட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமென அவர் விரும்பினார்.
  • அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கவர்ந்தது.
  • போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த பற்றாக்குறைகளால் பெருந்துயரங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் ரொட்டி, அமைதி, நிலம் எனும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.
  • ஆனால் தற்காலிக அரசு இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்தது.
  • ஒன்று நிலங்களின் விநியோகம் குறித்த கோரிக்கையின் மீது எடுக்கப்பட வேண்டிய முடிவைத் தள்ளிவைத்தது.
  • மற்றொன்று போரைத் தொடர்வதென எடுக்கப்பட்ட முடிவு.

லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுதல்:

  • அக்டோபர் திங்களில், லெனின் போல்ஷ்விக் கட்சியின் மத்தியக்குழுவை உடனடிப் புரட்சி குறித்து முடிவுசெய்யக் கேட்டுக்கொண்டார்.
  • டிராட்ஸ்கி ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்தார்.
  • நவம்பர் 7இல் முக்கியமான அரசுக் கட்டடங்கள், குளிர்கால அரண்மனை, பிரதமமந்திரியின் தலைமை அலுவலகங்கள் ஆகியவை அனைத்தும் ஆயுதமேந்திய ஆலைத் தொழிலாளர்களாலும், புரட்சிப்படையினராலும் கைப்பற்றப்பட்டன.
  • 1917 நவம்பர் 8இல் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது.
  • போல்ஷ்விக் கட்சிக்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி எனப் புதுப் பெயரிடப்பட்டது.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 4.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
விடை:
சங்கத்தின் செயல்பாடுகள்:

  • 1920-25ஆகிய ஆண்டுகளுக்கிடையே பன்னாட்டுச் சங்கம் சிக்கல்களைத் தீர்த்துவைக்க அழைக்கப்பட்டது.
  • மூன்று பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதில் சங்கம் வெற்றிபெற்றது.
  • 1920இல் பின்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக் கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டு தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது.
  • பன்னாட்டுச் சங்கம் அத்தீவுகள் பின்லாந்திற்கே உரியது எனத் தீர்ப்பளித்தது.
  • அடுத்த ஆண்டில் போலந்திற்கும் ஜெர்மனிக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டு, பிரச்சனையைத் தீர்த்துவைக்கச் சங்கம் அழைக்கப்பட்டபோது அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது.
  • 1925இல் மூன்றவாது பிரச்சனை கிரீஸ், பல்கேரியா நாடுகளுக்கிடையே ஏற்பட்டதாகும்.
  • ஆகவே 1925இல் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை சர்வதேச சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
  • இதன் பின்னர் ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது.
  • பாதுகாப்புக்குழுவிலும் நிரந்தர இடமளிக்கப்பட்டது.

10th Social Science Guide முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
முதல் உலகப் போரின் மிகப்பெரும் விளைவு ………………….. புரட்சி ஆகும்.
அ) சீனப்
ஆ) ரஷ்யப்
இ) பிரெஞ்சு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) ரஷ்யப்

Question 2.
……………… ஆனது தகவல் பரிமாற்றம், போக்குவரத்து என்றறியப்பட்டது.
அ) காலனித்துவமயமின்மை
ஆ) புரட்சி
இ) காடழிப்பு
ஈ) அ) மற்றும் ஆ)
விடை:
ஆ) புரட்சி

Question 3.
………………… கூட்டு நிறுவனங்களும், ஜெர்மனியில் வணிக கூட்டிணைப்பும் உருவானது.
அ) ஜப்பான்
ஆ) அமெரிக்கா
இ) ரஷ்யா
ஈ) பிரெஞ்சு
விடை:
ஆ) அமெரிக்கா

Question 4.
……………….. காலத்தில் ஆசிய நாடுகள் காலனிமயமாக்கப்பட்டன.
அ) 1912
ஆ) 1882
இ) 1880
ஈ) 1885
விடை:
இ 1880

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 5.
“எனது நாடு சரியோ, தவறோ நான் அதை ஆதரிப்பேன்” என்பது ………………. ஆகும்.
அ) ஆக்கிரமிப்பு மனப்பாங்கு
ஆ) பகை
இ) வன்முறை சார்ந்த தேசியம்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ வன்முறை சார்ந்த தேசியம்

Question 6.
………………… போர் பதுங்கு குழிப் போரின் தொடக்கம் ஆகும்.
அ) வெர்டன்
ஆ) கொரில்லா
இ) மார்ன்
ஈ) உலகப்
விடை:
இ மார்ன்

Question 7.
எதிரிகளின் சுடுதலில் இருந்து பாதுகாத்து கொண்டு நிற்க உதவுவது ……………… ஆகும்
அ) வெர்டன் போர்
ஆ) மார்ன் போர்
இ) ரஷ்யப் போர்
ஈ) பதுங்கு குழிப் போர்
விடை:
ஈ) பதுங்கு குழிப் போர்

Question 8.
ஜெர்மனியோடு 1918 மார்ச் 3ம் நாள் பிரெஸ்ட் லிட்டோவஸ்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது …………….. ஆகும்.
அ) பிரான்ஸ்
ஆ) இத்தாலி
இ) ரஷ்யா
ஈ) ஜப்பான்
விடை:
இ ரஷ்யா

Question 9.
மைய நாடுகளுடன் சேர்ந்து ………………….. போரிட்டது.
அ) ஜெர்மனி
ஆ) ஜப்பான்
இ) சீனா
ஈ) துருக்கி
விடை:
துருக்கி

Question 10.
அமெரிக்க குடியரசுத் தலைவர் ………………….. ஆவார்.
அ) சேம்பர்லின்
ஆ) வில்லியம்
இ) உட்ரோ வில்சன்
ஈ) கிளமென்சோ
விடை:
இ உட்ரோ வில்சன்

Question 11.
ஜெர்மனி ……………….. தொடங்கிய குற்றத்தைச் செய்தது.
அ) முதல் உலகப் போர்
ஆ) இரண்டாம் உலகப்போர்
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை
விடை:
உலகப் போர்

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 12.
அமெரிக்காவிற்கு சொந்தமான கப்பல் ………………. ஆகும்.
அ) எம்டன்
ஆ) லூசிடானியோ
இ) சுதேசி
-ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) லூசிடானியோ

Question 13.
முதல் உலகப் போர் வெடித்த ஆண்டு ………………. ஆகும்.
அ) 1915
ஆ) 1916
இ) 1914
ஈ) 1918
விடை:
இ 1914

Question 14.
………………….. ஜெர்மனியோடும், அமெரிக்காவோடும் போட்டியிட வேண்டியிருந்தது.
அ) பிரான்ஸ்
ஆ) இத்தாலி
இ) ஆஸ்திரேலியா
ஈ) இங்கிலாந்து
விடை:
ஈ) இங்கிலாந்து

Question 15.
…………………. ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக போரிட்டது.
அ) 1984
ஆ) 1894
இ) 1948
ஈ) 1888
விடை:
ஆ) 1894

Question 16.
கிழக்கு ஆசியாவில் வலிமை மிகுந்த நாடு ………………….
அ) பிரான்ஸ்
ஆ) ரஷ்யா
இ) ஜப்பான்
ஈ) ஐரோப்பா
விடை:
இ ஜப்பான்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
………….. என்பது ரஷ்ய மொழிச் சொல் ஆகும்.
விடை:
“பிராவ்தா”

Question 2.
“பிராவ்தா” என்றால் ………………….. எனப் பொருள் ஆகும்.
விடை:
“உண்மை ”

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 3.
நிலம் சமுதாயத்தின் ……………….. அறிவிக்கப்பட்டது.
விடை:
சொத்தாக

Question 4.
பன்னாட்டு சங்கம் …………………. உறுப்புகளைக் கொண்டது.
விடை:
5

Question 5.
பன்னாட்டு சங்கத்தின் முதல் பொருட் செயலாளர் ………………..
விடை:
சர் ஏரிக் ட்ரம்மாண்ட்

Question 6.
ரஷ்ய புரட்சி ……………….. தொடங்கியது.
விடை:
1917

Question 7.
ரஷ்ய புரட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். ………………… ஆவார்.
விடை:
லெனின்

Question 8.
……………… நேசநாடோடு சேர்ந்து போரிட்டது.
விடை:
சீனா

Question 9.
ஜெர்மனியின் போரின் போக்கை கண்காணித்தது ஆகும்.
விடை:
ருமேனியா

Question 10.
……………. இலக்காக கொண்டு குண்டு வீசப்பட்டன.
விடை:
பொதுமக்களை

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 11.
………………. நாட்டில் 2 அமைதி மாநாடுகள் கூட்டப்பட்டன.
விடை:
ஹாலந்து

Question 12.
ஆர்மீனிய இனப்படுகொலைகள் …………….. க்கு எ.கா. ஆகும்.
விடை:
பால்கன் போர்

Question 13.
பன்னாட்டு சங்கம் ………………. கலைக்கப்பட்டது.
விடை:
1946

Question 14.
பன்னாட்டு சங்கத்தால் ……………… எனும் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முடியவில்லை .
விடை:
கூட்டுப் பாதுகாப்பு

Question 15.
பெரும்பாலான ஆதரவைப் பெற்ற ஆதரவாளர்கள் ………………. எனப்பட்டனர்.
விடை:
போல்ஷின்ஸ்ட்லோ

Question 16.
பன்னாட்டு சங்கத்தில் உறுப்பினராகாத நாடு ……………… ஆகும்.
விடை:
அமெரிக்கா

Question 17.
……………… ஜப்பான் மஞ்சூரியாவைத் தாக்கியது.
விடை:
1931

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) மஞ்சு வம்சத்தை சேர்ந்தவர் சார் இரண்டாம் நிக்கோலஸ் நிர்வாகத்தில் குறைவான அனுபவம் கொண்டிருந்தார்.
ii) இரண்டாம் அலெக்சாண்டர் பண்ணை அடிமை முறையை ஒழித்தார்.
iii) கபான் தலைமையில் நடைபெற்ற புரட்சி ” குருதி ஞாயிறு” எனப்பட்டது.
iv) ரஷ்ய புரட்சி 1914ல் தோன்றியது.

அ) i, ii சரி
ஆ) i, iii சரி
இ) ii, iii சரி
ஈ) ii சரி
விடை:
அ) i, ii சரி

Question 2.
கூற்று : பன்னாட்டு சங்கம் 5 உறுப்புகளைக் கொண்டது.
காரணம் : பொதுச்சபை, பாதுகாப்பு சபை, நிர்வாகம் பன்னாட்டு நீதிமன்றம், தொழிலாளர் அமைப்பு என்பவையாகும்.

அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று, காரணம் சரி, காரணம் கூற்றுக்கான விளக்கவில்லை .
இ) கூற்று, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் சரி
விடை:
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 4

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
கூட்டு நிறுவனம் என்பது யாது?
விடை:

  • பொருள்களை உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழில்சார் நிறுவனமாகும்.
  • தனக்கு நன்மை பயக்கும் விதத்தில் பொருள்களின் விநியோகம், விலை ஆகியவற்றின் மீது அந்நிறுவனம் அதிகக் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கும்

Question 2.
மேற்கு அல்லது பிரெஞ்சு முனைப்போர் பற்றிக் கூறு.
விடை:
மேற்கு அல்லது பிரெஞ்சு முனைப் போர்:

  • பெல்ஜியம் மக்களின் எதிர்ப்பை ஜெர்மனி தகர்த்தெறிந்தது.
  • நேசநாடுகளின் அணியில் போர் செய்யவேண்டிய சுமை பிரெஞ்சுப்படைகளின் தோள்களின்மேல் விழுந்தது.
  • ஒரு மாதத்திற்குள் ஏறத்தாழ பாரீஸ்நகர் வீழ்ந்துவிடும் நிலை ஏற்பட்டது.

Question 3.
பாரிஸ் அமைதி மாநாடு பற்றி எழுதுக.
விடை:

  • பாரிஸ் அமைதி மாநாடு, போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1919 ஜனவரி திங்களில் தொடங்கியது.
  • உட்ரோ வில்சன் (அமெரிக்க அதிபர்), லாயிட் ஜார்ஜ் (இங்கிலாந்துப் பிரதமர்), கிளமென்சோ (பிரான்சின் பிரதமர்) ஆகிய மூவரும் கலந்தாய்வில் முக்கியப் பங்குவகித்தனர்.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Question 4.
லெனின் – பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
விடை:

  • 1870இல் மத்திய வோல்கா பகுதி அருகே கற்றறிந்த பெற்றோர்க்கு லெனின் பிறந்தார்.
  • கார்ல்மார்க்ஸின் சிந்தனைகளால் கவரப்பட்ட அவர், விடுதலைக்கான வழி, பெருந்திரளான மக்களின் போராட்டமே என நம்பினார்.
  • பெரும்பாலோனோரின் (போல்ஷின்ஸ்ட்வோ ) ஆதரவைப் பெற்ற லெனினும் அவரது ஆதரவாளர்களும் போல்ஷ்விக் கட்சி என்று அறியப்பட்டனர்.
  • இவருக்கு எதிரான சிறுபான்மையினர் (மென்ஷின்ஸ்ட்வோ ) மென்ஷ்விக்குகள் என்றும் அழைக்கப்பட்டனர்.

Question 5.
பன்னாட்டு சங்கத்தின் குறிக்கோள்கள் யாவை?
விடை:

  • பன்னாட்டுச் சங்கத்தின் இரண்டு குறிக்கோள்களில் ஒன்று போர்களைத்தவிர்த்து உலகில் அமைதியை நிலைநாட்டுவது.
  • மற்றொன்று சமூகப் பொருளாதார விசயங்களில் பன்னாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்பனவாகும்.

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.

Question 1.
முதல் உலகப்போரில் இந்தியாவின் மீதான தாக்கத்தை விவரி.
விடை:
இந்தியாவின் மீதான தாக்கம்:

  • முதல் உலகப்போர் இந்தியாவின்மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் போர்ப்பணி செய்வதற்காக ஆங்கிலேயர் இந்தியர்களைக் கொண்ட பெரும்படையைத் திரட்டினர்.
  • போர் முடிந்த பின்னர் இவ்வீரர்கள் புதிய சிந்தனைகளோடு தாயகம் திரும்பினர். அச்சிந்தனைகள் இந்திய சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.
  • போர் செலவுக்காக இந்தியா 230 மில்லியன் பவுண்டுகளை ரொக்கமாகவும், 125 மில்லியன் பவுண்டுகளைக் கடனாகவும் வழங்கியது.
  • இதன் விளைவாக இந்தியாவில் பெருமளவிலான பொருளாதார இன்னல்கள் ஏற்பட்டன.
  • போர் முடிவடையுந் தருவாயில் உலகம் முழுதும் பரவிய விஷக்காய்ச்சலால் இந்தியாவும் பெருந்துயருக்குள்ளானது.
  • இவ்வாறு முதல் உலகப்போர் இந்தியச் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றின்மேல் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.

Question 2.
தற்காலிக அரசின் தோல்வியை விவரி.
விடை:
தற்காலிக அரசு:

  • அரசு நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள ஒன்றுக்கொன்று இணையான இரண்டு அமைப்புகள் இருந்தன.
    1. ஒன்று பழைய டூமா அமைப்பு, உடைமை வர்க்கத்தைச் சேர்ந்த பூர்ஷ்வா அரசியல்வாதிகளைக் கொண்ட அமைப்பு.
    2. மற்றொன்று தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அங்கம்வகித்தக் குழு அல்லது சோவியத்.

தற்காலிக அரசின் தோல்வி:

  • புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். புரட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமென அவர் விரும்பினார்.
  • “அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே” என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கவர்ந்தது.
  • போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த பற்றாக்குறைகளால் பெருந்துயரங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் “ரொட்டி, அமைதி, நிலம்” எனும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.
  • ஆனால் தற்காலிக அரசு இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்தது.
  • ஒன்று நிலங்களின் மறுவிநியோகம் குறித்த கோரிக்கையின் மீது எடுக்கப்பட வேண்டிய முடிவைத் தள்ளிவைத்தது. மற்றொன்று போரைத்தொடர்வதென எடுக்கப்பட்ட முடிவு.
  • ஏமாற்றமடைந்த விவசாய இராணுவவீரர்கள் தங்கள் பொறுப்புகளைக் கைவிட்டு நில அபகரிப்பில் ஈடுபடலாயினர்.
  • இந்நிகழ்வு பெட்ரோகிரேடில் போல்ஷ்விக்குகளின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை மேலும் தீவிரப்படுத்தியது.

VII. செயல்பாடுகள்

முதல் உலகப்போரில் ஈடுபட்ட நாடுகளை உலக வரைபடத்தில் குறிக்கவும்.
1. கிரேட் பிரிட்டன்,
2. ஜெர்மனி
3. பிரான்ஸ்
4. இத்தாலி
5. மொராக்கோ
6. துருக்கி
7. செர்பியா
8. பாஸ்னியா
9. கிரீஸ்
10. ஆஸ்திரியா – ஹங்கேரி
11. பல்கேரியா
12. ருமேனியா.

Samacheer Kalvi 10th Social Science History Solutions Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் 5

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 17 விலங்குலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 17 விலங்குலகம்

9th Science Guide விலங்குலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக

அ) மெல்லுடலிகள்
ஆ) துளையுடலிகள்
இ) குழியுடலிகள்
ஈ) முட்தோலிகள்
விடை:
ஈ) முட்தோலிகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 2.
மீசோகிளியா காணப்படுவது

அ) துளையுடலிகள்
ஆ) குழியுடலிகள்
இ) வளைதசையுடலிகள்
ஈ) கணுக்காலிகள்
விடை:
ஆ) குழியுடலிகள்

Question 3.
பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப்பிராணி அல்ல?

அ) மீன்கள் மற்றும்
இ) ரு வாழ்விகள்
ஆ) இருவாழ்விகள் மற்றும் பறவைகள்
இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்
ஈ) ஊர்வன மற்றும் பாலூட்டிகள்
விடை:
இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

Question 4.
நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட லிலங்கினை கண்டறிக.

அ) பல்லி
ஆ) பாம்பு
இ) முதலை
ஈ) ஓணான்
விடை:
இ) முதலை

Question 5.
மண்டையோடற்ற உயிரி எது?

அ) ஏகாரினியா
ஆ) ஏசெபாலியா
இ) ஏப்டீரியா
ஈ) ஏசீலோமேட்டா
விடை:
அ) ஏகாரினியா

Question 6.
இரு பாலின (Hermaphrodite) உயிரிகள் எவை?

அ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, ஆம்பியாக்சஸ்
ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்
இ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, பலனோகிளாசஸ்
ஈ) ஹைடிரா, நாடாப்புழு, அஸ்காரிஸ், மண்புழு
விடை:
ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்

Question 7.
குளிர் இரத்தப் பிராணிகள் எவை?

அ) மீன், தவளை, பல்லி, மனிதன்
ஆ) மீன், தவளை, பல்லி,மாடு
இ) மீன், தவளை, பல்லி, பாம்பு
ஈ) மீன், தவளை, பல்லி, காகம்
விடை:
இ) மீன் , தவளை, பல்லி, பாம்பு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 8.
காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில்?

அ) மீன்
ஆ) தவளை
இ) பறவை
ஈ) வௌவால்
விடை:
இ) பறவை

Question 9.
நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?

அ) சுடர் செல்கள்
ஆ) நெஃப்ரீடியா
இ) உடற்பரப்பு
ஈ) சொலினோசைட்டுகள்
விடை:
அ) சுடர் செல்கள்

Question 10.
குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது?

அ) ஹைடிரா
ஆ) மண்புழு
இ) நட்சத்திர மீன்
ஈ) அஸ்காரிஸ் (உருளைப்புழு )
விடை:
ஈ) அஸ்காரிஸ் (உருளைப் புழு)

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
துளையுடலிகளின் கழிவுநீக்க துளை ………………………………….
விடை:
ஆஸ்டியா

Question 2.
டினிடியா என்ற சுவாச உறுப்புகள் …………………………………. ல் காணப்படும்.
விடை:
மெல்லுடலிகள்

Question 3.
ஸ்கேட்ஸ் என்பது …………………………………. மீன்களாகும்
விடை:
குருத்தெலும்பு

Question 4.
…………………………………. இரு வாழ்விகளின் லார்வா ஆகும்.
விடை:
தலைபிரட்டை

Question 5.
…………………………………. என்பது தாடையற்ற முதுகெலும்பிகள் ஆகும்.
விடை:
வட்டவாயுடையவை) லாம்பிரே

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 6.
…………………………………. ஆனது பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்.
விடை:
தாய் சேய் இணைப்பு சிசு

Question 7.
முட்கள் கொண்ட எறும்பு உண்ணியானது …………………………………. பாலூட்டிக்கு உதாரணமாகும்
விடை:
முட்டையிடும்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுகிறது. கால்வாய் மண்டலம் முட்தோலிகளில் காணப்படுகிறது.
விடை:
தவறு

Question 2.
இருபால் உயிரிகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன.
விடை:
சரி

Question 3.
வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு டிரக்கியா ஆகும் வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு உடற்சுவராகும்.
விடை:
தவறு

Question 4.
மெல்லுடலிகளின் லார்வா பின்னேரியா ஆகும் மெல்லுடலிகளின் லார்வா ட்ரோக்கோபோர் ஆகும்.
விடை:
தவறு

Question 5.
பலனோகிளாசஸ் குறுயிழை இயக்க உணவூட்ட முறையை பெற்றுள்ளன.
விடை:
சரி

Question 6.
மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது.
விடை:
சரி

Question 7.
மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளன. மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை இரு வாழ்விகள் கொண்டுள்ளன.
விடை:
தவறு

Question 8.
முன்னங்கால்களின் மாறுபாடுகளே பறவைகளின் இறக்கைகளாகும்.
விடை:
சரி

Question 9.
பாலூட்டிகளில் பால் சுரப்பிகள் பெண் இனங்களில் காணப்படுகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 1

V. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
வகைப்பாட்டியல் வரையறு.
விடை:
அடிப்படைக்கொள்கைகள் முறைகள் மற்றும் விதிகளை உள்ளடக்கிய பிரிவு ஆகும்.

Question 2.
கொட்டும் செல்கள் என்றால் என்ன?
விடை:
குழியுடலிகளில் புறப்படையில் காணப்படும் பாதுகாப்புச் செல்கள் கொட்டும் செல்கள் அல்லது நிமெட்டோசிஸ்ட்கள் எனப்படும்.

Question 3.
குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவது ஏன்?
விடை:
உடற்சுவரில் புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரு அடுக்குகள் உண்டு. எனவே இது ஈரடுக்கு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

Question 4.
இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்) சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.
விடை:

  • செவுள்கள்,
  • நுரையீரல்,
  • தொண்டை
  • தோல்

Question 5.
நட்சத்திர மீனில் எவ்வாறு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது?
விடை:
நட்சத்திர மீன்கள் குழல் கால்கள் உதவியால் கிடைமட்ட மற்றும் செங்குத்தான முறைகளில் இடப்பெயர்ச்சி செய்கிறது.

Question 6.
ஜெல்லிமீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீனை ஒத்துள்ளனவா? காரணம் கூறு.
விடை:
இல்லை

  • ஜெல்லி மீன் குழியுடலிகள்
  • நட்சத்திர மீன் முட்தோலிகள்
  • இவை இரண்டும் முதுகெலும்பு அற்ற உயிரிகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 7.
தவளைகள் இருவாழ்விகள் என்று அழைக்கப்படுவது ஏன்?
விடை:
இவை நீர் மற்றும் நிலச் சூழ்நிலையில் வாழ்வதற்கான தகவமைப்பினைப் பெற்றுள்ளது.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
தொகுதி அன்னலிடா பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • உண்மையான உடற்குழி உண்டு
  • சீட்டாக்கள் எனும் நுண்ணிய நீட்சிகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
  • உடலானது கியூட்டிக்கிள் எனும் ஈரப்பசை மிக்க உறையினால் ஆனது.
  • கழிவு நீக்கம் நெஃப்ரிடியாவால் நடக்கிறது.
  • மூளையாகக்கொண்ட நரம்பு மண்டலம் காணப்படுகின்றது.
  • டீராக்கோபோர் லார்வா இவற்றின் பொதுலார்வா ஆகும். (எ.கா)மண்புழு , அட்டை

Question 2.
தட்டைப்புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்கள் இடையேயான வேறுபாட்டினைக் கூறுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 2

Question 3.
தொகுதி முதுகு நாணிகளின் (கார்டேட்டா) வழிமுறைப்படத்தினை தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 3

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 4.
மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும் ஐந்தினைப் பட்டியலிடுக.
விடை:

  • மீன்கள் நீரில் வாழ்பவை மற்றும் குளிர்ரத்தப்பிராணிகள்
  • உடல் படகு போன்று அமைந்துள்ளது
  • இணைத்துடுப்புகளாலும் நடுமையத் துடுப்புகளாலும் நீந்துகின்றன.
  • உடல் செதில்களால் மூடப்பட்டுள்ளன.
  • தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது.

Question 5.
இருவாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ் பண்புகள் குறித்து விளக்குக.
விடை:
நீர் வாழ் பண்புகள்:

  • தோல் ஈரப்பதமான சுரப்பிகளைப் பெற்றுள்ளது.
  • பின்னங்காலில் விரலிடைச்சவ்வு உள்ளது.
  • சுவாசம் செவுள் மூலம் நடைபெறுகிறது.

நிலவாழ் பண்புகள்:

  • இரண்டு ஜோடி கால்களைப் பெற்றுள்ளது.
  • நுரையீரல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது.

Question 6.
பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளன?
விடை:

  • பறவைகளில் ஈரினைக்கால்கள் உண்டு. இதில் முன்னங்கால்கள் பறப்பதற்கு ஏற்றவாறு இறக்கைகளாக மாறுபாடடைந்துள்ளன.
  • பின்னங்கால்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் உதவுகின்றன.

VII. விரிவாக விடையளி
Question 1.
முன்முதுகு நாணிகளின் பண்புகளை விவரிக்க.
விடை:

  1. முன் முதுகு நாணிகள் முதுகெலும்பிகளின் முன்னோடிகள்.
  2. இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் எகிரேனியா என்றழைக்கப்படுகின்றன.
  3. முகுகு நாண் அமைப்பின் அடிப்படையில் இவை மூன்று துணைத் தொகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • அரை முதுகு நாணிகள்
    • தலை முதுகு நாணிகள்
    • வால் முதுகு நாணிகள்

I. அரைமுதுகு நாணிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 4

  • கடல் வாழ் உயிரிகள்
  • இவை புழுவடிவமுடையது
  • உடல் மென்மையானது (உடற்கண்டமற்றவை) இருபக்க சமச்சீர் உடையவை.
  • இவைகள் மூவடுக்கு உயிரிகள்
  • முதுகு நாணானது தொண்டைப் பகுதிகள் மேல்புறத்திலிருந்து முன்னோக்கிய சிறிய நீட்சியாக உள்ளது. எ.கா – பலனோகிளாஸஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

II. தலை முதுகு நாணிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 5

  • இவை மீன்வடிவ கடல்வாழ் முதுகு நாணிகள்
  • இவற்றில் முதுகுப்புறத்தில் இணையற்ற துடுப்பு உள்ளது.
  • முதுகு நாண் தலை முதல் நுனி வரை நீண்ட நிலையான அமைப்பாகும் எ.கா – ஆம்பியாகஸிஸ்

III. வால் முதுகு நாணிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 6

  • முதுகு நாண் லார்வா நிலையில் வால் பகுதியில் மட்டும் காணப்படுகிறது.
  • முதிர் உயிரிகள் இயல்பான அமைப்பை இழந்து தரையில் ஒட்டி வாழ்பவை.
  • ஊடலைச் சுற்றி டியுனிக் எனும் உரை உண்டு எ.கா — அசிடியன்

Question 2.
தொகுதி – கணுக்காலிகளைப் பற்றி எழுதுக
விடை:

  • அதிக சிற்றினங்களைக் கொண்ட மிகப்பெரிய தொகுதி.
  • ஆர்த்ரோபோடு என்பதன் பொருள் இணைப்புக்கால்கள் என்பதாகும்.
  • இதன் உடல், தலை, மார்பு, வயிறு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • உடலின் மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது.
  • உடற்குழி ஹீமோலிம்ப் என்ற திரவத்தினால் நிரப்பப்பட்டுள்ளது.
  • நன்கு வரையறுக்கப்பட்ட இரத்தக்குழல்கள் இல்லை.
  • தோலுரித்தல் மூலம் புறச் சட்டகத்தை களைகிறது.
  • சுவாசம் டிரக்கியா மற்றும் புத்தக நுரையீரல் மூலம் நடைபெறுகிறது.
  • பூச்சிகளில் மால்பிஜியன் குழல்கள் மூலமும் இறால்களில் பச்சைச் சுரப்பிகள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது. எ.கா- எட்டுக்கால்பூச்சி, நண்டு, வண்ணத்துப்பூச்சி, தேள்

9th Science Guide விலங்குலகம் Additional Important Questions and Answers

Question 1.
ஒரு மதிப்பெண் வினாக்கள் முதன் முதலில் வகைப்பாட்டியல் முறையை உருவாக்கியவர் ……………………………..
விடை:
கரோலஸ் லின்னேயஸ்

Question 2.
கரப்பான் பூச்சியின் உடற்குழி திரவம் ……………………………..
விடை:
ஹீமோலிம்

Question 3.
…………………………….. வகை எலும்புகள் பறவைகளில் காணப்படுகிறது.
விடை:
நீமோட்டிக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 4.
பல்லியின் இதய அறைகளின் எண்ணிக்கை
விடை:
3

Question 5.
பால் சுரப்பிகள் …………………………….. மாறுபாடுகள் ஆகும்.
விடை:
தோலின்

Question 6.
புத்தக நுரையீரல்கள் …………………………….. சுவாச உறுப்பாகும்.
விடை:
தேள்

Question 7.
மேன்டில் எனும் அமைப்பு …………………………….. ல் காணப்படுகிறது.
விடை:
மொலஸ்கா

Question 8.
எக்கினோடெர்மேட்டாவின் இளம் உயிரி ……………………………..
விடை:
பைப்பின்னேரியா

Question 9.
பாக்டீரியா செல்களில் …………………………….. இல்லை
விடை:
உட்கரு

Question 10.
அமீபிக் சீதபேதியை உண்டாக்கும் நுண்ணுயிரி ……………………………..
விடை:
என்டமீபா ஹிஸ்டாலிகா

Question 11.
மலேரியா நோயை பரப்பும் கொசு ……………………………..
விடை:
பெண் அனாபிலஸ்

Question 12.
மலேரியா நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரி ……………………………..
விடை:
பிளாஸ்மோடியம்

Question 13.
துளையுடலிகள் …………………………….. எனப்படுகின்றன.
விடை:
கடற்பஞ்சுகள்

Question 14.
துளையுடலிகளின் உடலில் காணப்படும் நுண்முட்கள் ……………………………..
விடை:
ஸ்பிக்யூல்ஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 15.
புரோட்டோசோவாக்கள் …………………………….. உயிரிகள்
விடை:
ஒரு செல்

Question 16.
மீசோகிளியா என்பதன் பொருள் ……………………………..
விடை:
செல்களால் ஆக்கப்படாத

Question 17.
குழியுடலிகளில் காணப்படும் கொட்டும் செல்கள் ……………………………..
விடை:
நிமெட்டோசிஸ்ட்கள்

Question 18.
நிடோசில் கொடுக்கு காணப்படும் உயிரிகள் ……………………………..
விடை:
குழியுடலிகள்

Question 19.
பாலிப் உருவ அமைப்பு கொண்ட உயிரி ……………………………..
விடை:
ஹைடிரா

Question 20.
தட்டைப்புழுக்களில் கழிவு நீக்கம் …………………………….. மூலம் நடைபெறும்.
விடை:
சுடர் செல்கள்

Question 21.
தட்டைப் புழுக்களுக்கு எடுத்துக்காட்டு ……………………………..
விடை:
நாடாப்புழு

Question 22.
உருளைப்புழுக்கள் …………………………….. எனப்படுகின்றன.
விடை:
நிமட்டோடா

Question 23.
இந்தியாவில் குடற் புழு நீக்க விழிப்புணர்வு நாள் ……………………………..
விடை:
பிப்ரவரி 10

Question 24.
உச்சேரிரியா பான்கிராஃப்டி புழுக்களால் ஏற்படும் நோய் ……………………………..
விடை:
யானைக்கால் நோய்

Question 25.
வளைத்தசைப்புழுக்கள் …………………………….. மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
விடை:
சீட்டாக்கள்

Question 26.
வளைத்தசை புழுக்களின் கழிவுநீக்க உறுப்பு ……………………………..
விடை:
நெஃப்ரீடியங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 27.
மண்புழுக்கள் …………………………….. என்றழைக்கப்படுகின்றன.
விடை:
உழவனின் நண்பன்

Question 28.
கணுக்காலிகளின் கழிவு நீக்க உறுப்பு ……………………………..
விடை:
மால்பீஜியன் குழல்கள்

Question 29.
ஒரே ஒரு கண் உடைய உயிரினம் ……………………………..
விடை:
மால்பீஜியன் குழல்கள்

Question 30.
சென்டிபீட் என்பதன் பொருள் ……………………………..
விடை:
நூறு காலிகள்

Question 31.
மெல்லுடலிகளின் உடலைச்சுற்றி காணப்படும் மென்போர்வை ……………………………..
விடை:
மேன்டில்

Question 32.
முத்துச்சிப்பிகள் …………………………….. ஐ உருவாக்குகின்றன.
விடை:
முத்து

Question 33.
நீர் இரத்த ஓட்ட மண்டலம் காணப்படும் உயிரி ……………………………..
விடை:
முட்தோலிகள்

Question 34.
எகிரேனியா என்பதன் பொருள் ……………………………..
விடை:
மண்டையோடற்றவை

Question 35.
மீன்கள் …………………………….. இரத்தப் பிராணிகள்
விடை:
குளிர்

Question 36.
முதுகெலும்பிகளின் இடப்பெயர்ச்சி உறுப்பு ……………………………..
விடை:
கால்கள்

Question 37.
மீன்களின் இதயம் …………………………….. அறைகள் உடையது.
விடை:
இரு

Question 38.
சிறுத்தையை விட வேகமாக நீந்தக்கூடிய மீன் ……………………………..
விடை:
செயில் மீன்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 39.
முதுகெலும்புடைய விலங்குகளில் மிகப்பெரிய விலங்கு ……………………………..
விடை:
நீலத் திமிங்கலம்

Question 40.
நீலப்புரட்சி என்பது …………………………….. உற்பத்தி
விடை:

Question 41.
நீர், நில வாழ்வன …………………………….. எனப்படும்
விடை:

Question 42.
தமிழ்நாட்டின் மாநில பறவை ……………………………..
விடை:
மரகதப் புறா

Question 43.
பறவைகள் …………………………….. உயிரிகள்
விடை:
வெப்ப இரத்த

Question 44.
பற்கள் காணப்படும் பறவை ……………………………..
விடை:
ஆர்கியோப்டெரிக்ஸ்

Question 45.
மிகச்சிறிய இருவாழ்வி ……………………………..
விடை:
கியுபாவின் அம்பு நச்சுத்தவளை

Question 46.
ஊர்வனவற்றின் சுவாச உறுப்பு ……………………………..
விடை:
நுரையீரல்

Question 47.
பறவைகளின் முட்டை ஓடு …………………………….. ஆல் ஆனவை
விடை:
கால்சியம்

Question 48.
பாலூட்டிகளின் இதயம் …………………………….. அறைகளை உடையது.
விடை:
நான்கு

Question 49.
விந்துச் சுரப்பிகள் …………………………….. பையினுள் அமைந்துள்ளது.
விடை:
ஸ்குரோட்டல்

Question 50.
மீன்களின் சுவாசம் …………………………….. மூலம் நடைபெறுகிறது.
விடை:
செவுள்கள்

II. கூற்று மற்றும் காரண வகை

Question 1.
கூற்று – கடற்பஞ்சுகளில் திசுக்கள் இல்லை
காரணம் – அவைகள் செல்நிலை எய்திய உயிரினம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

அ) கூற்று தவறு – காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி – காரணமும் சரி.
விடை:
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை

Question 2.
கூற்று – நாடாப்புழுவில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்பு ஒரே உயிரியில் காணப்படுகின்றன.
காரணம் – நாடாப்புழு பாலில்லா முறையில் இனப்பெருக்கம் செய்கிறது.

அ) கூற்றும் – காரணம் சரி
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்றும் காரணமும் தவறு
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை.
விடை:
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை.

Question 3.
கூற்று – கரப்பான் பூச்சியில் மிகத் தெளிவான இரத்தக் குழாய்கள் காணப்படுகின்றன.
காரணம் – உயிரியின் உடலானது இரத்தத்தினால் நிரப்பப்பட்டுள்ளது.

அ) கூற்றும் – காரணம் சரி
ஆ) காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்றும் தவறு காரணம் கூற்றை விளக்கவில்லை.
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
விடை:
இ) கூற்றும் தவறு காரணம் கூற்றை விளக்கவில்லை .

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 7

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
அன்னலிடா என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
விடை:
அன்னலிடா என்ற வார்த்தை அன்னுலேசன்ஸ் என்ற கிரேக்க மொழியிலிருந்து உருவாக்கப்பட்டது. வளையங்கள் போன்று ஒன்றோடொன்று இணைந்தவை என்று அர்த்தம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 2.
தொகுதி அன்னலிடாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு யாது?
விடை:
சீட்டாக்கள் எனும் நுண்ணிய நீட்சிகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.

Question 3.
ஆர்த்ரோபோடு என்பதன் பொருள் யாது?
விடை:
ஆர்த்ரோபோடு என்பதன் பொருள் இணைப்புக்கால்கள் என்பதாகும்.

Question 4.
வெப்ப இரத்த பிராணிகள் என்றால் என்ன? உதாரணம் தருக.
விடை:
தான் வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு உடலின் வெப்பநிலையை மாற்றி அமைத்துக் கொள்ளாத உயிர்கள் எ.கா பறவை, பாலூட்டி.

Question 5.
மூவருக்கு உயிரினம் என்றால் என்ன?
விடை:
புற அடுக்கு, நடு அடுக்கு, அக அடுக்கு என மூன்று கருப்படலங்களைக் கொண்ட உயிரிகள் மூவடுக்கு உயிரிகள் எனப்படும். எ.கா – மனிதன்

Question 6.
உடற்குழி அற்றவை என்றால் என்ன?
விடை:
உடற்குழி அல்லது சீலோன் அற்ற உயிரிகள் உடற்குழி அற்றவை எனப்படும். எ.கா – நாடாப்புழு

Question 7.
பெட்டா மெரிசம் என்றால் என்ன?
விடை:
அனைத்து உடற்கண்டங்களும் ஒத்த அமைப்புடையவை. எ.கா – மண்புழு

Question 8.
ஆரச்சமச்சீர் என்றால் என்ன?
விடை:
விலங்குகளில் உடல் உறுப்புகள் ஒரு மைய அச்சினைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும். உயிரியின் உடலை எந்த ஒரு கோணத்தில் இருந்து பிரித்தாலும் ஒத்த சமமானப் பாகமாக பிரிக்க முடிந்தால் அந்த உயிரி ஆரச்சமச்சீர் கொண்டவை. உ.ம் – ஹைடிரா – நட்சத்திர மீன்

Question 9.
இருபக்க சமச்சீர் உடையவை என்றால் என்ன?
விடை:
உயிரியின் உடல் உறுப்புகள் மைய அச்சின் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும். மைய அச்சின் வழியாக உடலைப் பிரித்தால் இரு சமமான பாகங்களாக பிரிக்க இயலும். எ.கா – தவளை

Question 10.
பல்லுருவ அமைப்புடையவை என்றால் என்ன?
விடை:
உயிரிகளில் இரு உருவ அமைப்புடையவை பல்லுருவ அமைப்புடையவை எனப்படும். குழியுடலிகள் பாலிப் மற்றும் மெடுசா எனும் இரு உருவ அமைப்புடையவை. எ.கா – ஹைடிரா

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
பறவைகளின் சிறப்புப்பண்புகளை விவரி
விடை:

  • பறவைகள் வெப்ப இரத்த உயிரிகள் ஆகும்
  • உடல் தலை கழுத்து மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது.
  • உடல் கதிர் வடிவமுடையது.
  • முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறுபாடடைந்துள்ளது.
  • பின்னங்கால்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்ப தகவமைக்கப்பட்டுள்ளன.
  • பாதம செதில்களால் மூடப்பட்டுள்ளது.
  • உடலானது இறகுகளால் மூடப்பட்டுள்ளது.
  • கடின அலகு உண்டு
  • உணவுக்குழலில் தீனீப்பை மற்றும் அரைவைப்பை உள்ளது.
  • சுவாசம் நுரையீரல் மூலம் நடைபெறுகிறது.
  • எலும்புகளினுள் காற்றறைகள் உண்டு.
  • இது உடல் எடையைக் குறைக்க உதவும்  முட்டைகளில் கருவுணவு உண்டு.
  • முட்டைகள் கடினமான கால்சியம் மிகுந்த ஓடுடையவை.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 2.
பாலூட்டிகள் சிறப்பு பண்புகளை பற்றி விளக்குக.
விடை:

  • உடல் ரோமங்களால் போர்த்தப்பட்டுள்ளது. உடல் தோலில் வியர்வைச் சுரப்பிகள் உண்டு
  • பாலூட்டும் சுரப்பி மற்றும் வாசனைச் சுரப்பிகளும் தோலின் மாறுபாடுகளாகும்.
  • வெளிக்காது மடல் உண்டு 4. இதயம் நான்கு அறைகளுடையது.
  • விந்துச் சுரப்பிகள் உடலுக்கு வெளியே ஸ்குரோட்டல் பையினுள் சூழப்பட்டிருக்கும்.
  • முட்டைகள் சிறியவை. கரு உணவு இல்லை.
  • உட் கருவுறுதல் நடைபெறுகிறது.
  • இவைகள் குட்டி ஈனுபவை மற்றும் குட்டிகளுக்குப் பால் கொடுப்பவை.
  • தாய்- சேய் இணைப்புத்திசு உள்ளது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 16 பயன்பாட்டு வேதியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 16 பயன்பாட்டு வேதியியல்

9th Science Guide பயன்பாட்டு வேதியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஒரு நானோ மீட்டர் என்பது

அ) 10 மீட்டர்
ஆ) 10 மீட்டர்
இ) 10 மீட்டர்
ஈ) 10 மீட்டர்
விடை:
ஈ) 10 மீட்டர்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 2.
பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி …………………………………. லிருந்து பெறப்படுகிறது.

அ) தாவரங்கள்
ஆ) நுண்ணுயிரிகள்
இ) விலங்குகள்
ஈ) சூரிய ஒளி
விடை:
ஆ) நுண்ணுயிரிகள்

Question 3.
1% அயோடோபார்ம் …………………………………. ஆக பயன்படுத்தப்படுகிறது

அ) எதிர் நுண்ணுயிரி
ஆ) மலேரியா
இ) புரைத்தடுப்பான்
ஈ) அமில நீக்கி
விடை:
இ) புரைத்தடுப்பான்

Question 4.
ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் …………………………………. நிகழும்.

அ) ஆக்ஸிஜனேற்றம்
ஆ) ஒடுக்கம்
இ) நடுநிலையாக்கல்
ஈ) சங்கிலி இணைப்பு
விடை:
ஆ) ஒடுக்கம்

Question 5.
இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.

அ) கார்பன்
ஆ) அயோடின்
இ) பாஸ்பரஸ்
ஈ) ஆக்ஸிஜன்
விடை:
அ) கார்பன்

Question 6.
பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?

அ) உருளைக்கிழங்கு
ஆ) பீட்ரூட்
இ) கேரட்
ஈ) மஞ்சள்
விடை:
அ) உருளைக்கிழங்கு

Question 7.
…………………………………. வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

அ) கார்போஹைட்ரேட்
அ) வைட்டமின்கள்
இ) புரதங்க ள்
ஈ) கொழுப்புகள்
விடை:
ஆ) வைட்டமின்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 8.
கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?

அ) ஆக்ஸிஜனேற்றம்
ஆ) மின்கலங்கள்
இ) ஐசோடோப்புகள்
ஈ) நானோதுகள்கள்
விடை:
இ) ஐசோடோப்புகள்

Question 9.
ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் …………………………………. என அழைக்கப்படுகின்றன.

அ) ஐசோடோப்புகள்
ஆ) நிற உயர்த்தி
இ) நிற ஜனனிகள்
ஈ) நிறத் தாங்கி
விடை:
ஈ) நிறத் தாங்கி

Question 10.
குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோகார்பன்கள் …………………………………. ஆக பயன்படுத்தப்படுகின்றன.

அ) உரங்கள்
ஆ) பூச்சிக்கொல்லிகள்
இ) உணவு நிறமிகள்
ஈ) உணவு பதப்படுத்திகள்
விடை:
ஆ) பூச்சிக்கொல்லிகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதிமின்கலம் …………………………………. ஆகும்.
விடை:
மின்பகுப்புக்கலம்

Question 2.
வலிமருந்துகள் …………………………………. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
வலி நிவாரணிகள்

Question 3.
இண்டிகோ ஒரு …………………………………. சாயம் மற்றும்
விடை:
தொட்டி

Question 4.
…………………………………., …………………………………. ஆகியவை தாவர வளர்ச்சிக்குத் தேவையான பெரும நுண் ஊட்டத் தனிமங்கள் ஆகும்.
விடை:
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 5.
கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் …………………………………. ஆகும்.
விடை:
நின்ஹைட்ரின்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல் 1

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
கார்பன் தேதியிடல் என்றால் என்ன?
விடை:

  • இது C-14 ஐசோடாப்பை பயன்படுத்தி புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க உதவும் முறையாகும்.

Question 2.
மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
விடை:

  • உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் மயக்க மூட்டிகள் எனப்படும்.
  • இவை இருவகைப்படும்.
  • பொது மயக்கமூட்டிகள்
  • குறிப்பிட்ட மயக்கமூட்டிகள்

Question 3.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
விடை:

  • தாவர வளர்ச்சிக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை வழங்குவதற்கு இரசாயன உரங்கள் தேவைப்படுகிறது.

Question 4.
தடயவியல் வேதியியலின் தொடர்புகள் யாவை?
விடை:

  • குற்றம் பற்றிய விசாரணைக்கு அறிவியல் கொள்கைகள், மற்றும் நுட்பங்களை தடயவியல் வேதியியல் பயன்படுத்துகிறது.
  • 1- கைரேகை பதிவு,
  • 2 – ஆல்கஹால் பரிசோதனை,
  • 3 – தடய நச்சுவியல்

V. விரிவாக விடையளி.

Question 1.
பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.
விடை:
1. அமிலச் சாயங்கள் :

  • அமிலத் தன்மை கொண்டவை.
  • விலங்குத் தோல், செயற்கை இழை மற்றும் கம்பளி, பட்டு போன்ற புரத நூலிழைகளை சாயமேற்ற பயன்படுகிறது.
  • எ.கா : பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தால்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

2. காரச் சாயங்கள் :

  • காரத்தொகுதிகளைக் கொண்டுள்ளன.
  • தாவர மற்றும் விலங்கு நூலிழைகளைச் சாயமேற்ற பயன்படுகின்றன.

மறைமுக சாயம் :

  • பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின் மீது படிவதில்லை.
  • எனவே இவை முதலில் நிறமூன்றிகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • நிறமூன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் லேக் எனும் கரையாத கூட்டுப்பொருள் உருவாதலால் இணைக்கப்படக்கூடிய பொருளாகும்.
  • அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புகள் நிறமூன்றிகளாக பயன்படுகின்றன.
  • எ.கா. அலிசரின்.

4. நேரடி சாயங்கள் :

  • பருத்தி, ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் அதிக கவர்ச்சி உடையன.
  • துணிகளுடன் உறுதியாக ஒட்டிக்கொள்வதால் நேரடியாக பயன்படுத்தப்படுகின்றன.
  • எ.கா : காங்கோ சிவப்பு

5. தொட்டிச்சாயம் :

  • பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியது.
  • பட்டு மற்றும் கம்பளி இழைகளுக்கு பயன்படாது.
  • இந்த சாயமிடுதல் தொடர்ச்சியான செயல்பாடாகும்.
  • இவற்றை செயல்படுத்த தொட்டி எனும் பெரிய கலன் தேவைப்படுவதால் இவை தொட்டிச் சாயம் எனப்படுகிறது. எ.கா : இண்டிகோ.

Question 2.
பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக.
விடை:

  • ஒரு சில சிறப்பான செயல்பாடுகளுக்காக உணவில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் உணவுச் சேர்க்கைகள் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல் 2 Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல் 3

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கைபேசியில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.
விடை:

  • கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்ய முடியாது.
  • ஏனெனில் அவை மறு ஊட்டம் செய்ய இயலா மின்கலங்கள்.
  • அவற்றை மறு ஊட்டம் செய்ய முயற்சி செய்தால் மின்கலங்கள் வெப்பமாகி கசிவு ஏற்படலாம் அல்லது வெடிக்க நேரிடலாம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 2.
சுதாவுக்கு தீ விபத்து ஏற்பட்டது. அவள் எந்தவித மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்?
விடை:

  • நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றை நீக்குவதற்கு புரைதடுப்பான்களை பயன்படுத்த வேண்டும்.
  • எ.கா : அயோடோபார்ம் எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டும்.
  • எ.கா : ஆஸ்பிரின் காய்ச்சலைக் குறைக்கும் காய்ச்சல் நிவாரணிகளை பயன்படுத்தவேண்டும். எ.கா. ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால்
  • நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கும் நுண்ணுயிர் எதிரிகளை பயன்படுத்த வேண்டும். எ.கா : பென்சிலின்

Question 3.
ஓர் பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?
விடை:

  • பயிர் நிலங்களுக்கேற்ற மண்ணின் pH மதிப்பு பயிர்களைப் பொறுத்தது.
  • இது பொதுவாக 6 முதல் 7 ஆகும். இம்மதிப்பு சிறிதளவு அமிலத்தன்மையுடைய மண்ணைக் குறிக்கும்.
  • ஆனால் பயிர் நிலத்தின் மண்ணின் pH மதிப்பு 5 எனில் அது அதிக அமிலத்தன்மை உடையது.
  • எனவே அமிலத்தன்மையை குறைப்பதற்கு காரத்தன்மையுடைய உரங்களை பயன்படுத்த வேண்டும். எ.கா : கால்சியம் பாஸ்பேட், அம்மோனியம் நைட்ரேட்.

9th Science Guide பயன்பாட்டு வேதியியல் Additional Important Questions and Answers

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி என்பதை குறிக்கும் கிரேக்க வார்த்தை ………………………………….
விடை:
நானோஸ்

Question 2.
ஒரு வினாடியில் நமது நகம் …………………………………. மீட்டர் வளர்கிறது.
விடை:
ஒரு நானோ

Question 3.
நமக்கு சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் சுமார் …………………………………. மீட்டர் விட்டம் கொண்டது.
விடை:
30 சுமார்

Question 4.
நம்முடைய தலையில் இருக்கும் ஒரு தலை முடியின் விட்டம் ………………………………….
விடை:
25,000 நானோ மீட்டர்

Question 5.
ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் ………………………………….
விடை:
o.2 நானோமீட்டர்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 6.
நானோ பொருள்கள் …………………………………. அமைப்புப் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கும்.
விடை:
அணுக்கள் மற்றும் பெரிய பொருள்களின்

Question 7.
நானோ ரோபோட்களின் அளவு ………………………………….
விடை:
0.1 – 10 மைக்ரோமீட்டர்

Question 8.
டிரக்யூ என்ற பிரெஞ்சு வார்த்தையின் பொருள் ………………………………….
விடை:
காய்ந்த மூலிகை

Question 9.
மயக்க மருந்துகளுள் மிகவும் பாதுகாப்பானது ………………………………….
விடை:
நைட்ரஸ் ஆக்சைடு

Question 10.
டை எத்தில் ஈதர் மயக்க மருந்தாக பயன்படும் போது அதில் …………………………………. நிலைப்படுத்தியாக பயன்படுகிறது.
விடை:
0.002% புரோப்பைல் ஹாலைடு

Question 11.
வலிநிவாரணி மற்றும் காய்ச்சல் நிவாரணியாக பயன்படுவது ………………………………….

Question 12.
வெளிக்காயங்களை சுத்தம் செய்வதற்கு பயன்படும் புரைத் தடுப்பான் ………………………………….
விடை:
ஹைட்ரஜன் பெராக்சைடு

Question 13.
1% ஃபீனால்கரைசல் …………………………………. ஆக பயன்படுகிறது.
விடை:
கிருமி நாசினி

Question 14.
சின்கோனா மரப்பட்டையிலிருந்து இயற்கையாக பெறப்படும் மலேரியா நிவாரணி ………………………………….
விடை:
குயினைன்

Question 15.
அலெக்சாண்டர் ஃபிளெமிங் கண்டறிந்த முதல் நுண்ணுயிர் எதிரி ………………………………….
விடை:
பென்சிலின்

Question 16.
பென்சிலின் என்ற நுண்ணுயிர் …………………………………. எதிரி பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
விடை:
பென்சிலியம் நொடேட்டம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 17.
அதிசய மருந்து என்று பெயரிடப்பட்டது ………………………………….
விடை:
பென்சிலின்

Question 18.
தேன், பூண்டு, இஞ்சி, லவங்கம், வேம்பு மற்றும் மஞ்சள் ஆகியன …………………………………. தன்மையைப் பெற்றுள்ளன.
விடை:
நுண்ணுயிர் எதிர்ப்புத்

Question 19.
எரிபொருள் மின்கலன்கள் …………………………………. ஆற்றலை …………………………………. ஆற்றலாக மாற்ற பயன்படுகின்றன.
விடை:
வேதி, மின்

Question 20.
ஒரு மின் வேதிக்கலனில் …………………………………. மின் முனையில் ஆக்சிஜனேற்றம் நிகழ்கிறது.
விடை:
நேர்

Question 21.
ஆக்சிஜனேற்றம் என்பது …………………………………. நிகழ்வு.
விடை:
எலக்ட்ரானை இழக்கும்

Question 22.
ஒரு மின்வேதிக் கலனில் …………………………………. மின் முனையில் ஒடுக்கம் நிகழ்கிறது.
விடை:
எதிர்

Question 23.
ஒடுக்கம் என்பது – நிகழ்வு.
விடை:
எலக்ட்ரானை ஏற்கும்

Question 24.
ஒரு கால்வனிக் மின்கலத்தில் …………………………………. மூலம் இரண்டு அணு மின்கலன்களும் இணைக்கப்பட்டுள்ளன.
விடை:
உப்புப்பாலம்

Question 25.
டேனியல் மின்கலத்தில் …………………………………. உப்பு பாலமாக செயல்படுகிறது.
விடை:
தெவிட்டிய பொட்டாசியம் குளோரைடு கரைசல்

Question 26.
டேனியல் மின்கலம் ஒருவகை …………………………………. மின்கலம் ஆகும்.
விடை:
கால்வனிக்

Question 27.
துருப்பிடித்தலிலிருந்து இரும்பு போன்ற உலோகங்களை பாதுகாக்க …………………………………. கொண்டு மின் முலாம் பூசப்படுகிறது.
விடை:
தகரம், நிக்கல் அல்லது குரோமியம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 28.
நிறம் தாங்கி மற்றும் நிறம் பெருக்கி கொள்கையை வழங்கியவர் ………………………………….
விடை:
ஓட்டோவிட்

Question 29.
தொட்டிச் சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:
இண்டிகோ

Question 30.
மறைமுக சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:
அலிசரின்

Question 31.
அமிலச் சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:
பிக்ரிக் அமிலம்

Question 32.
நேரடிச் சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:
காங்கோ சிவப்பு

Question 33.
சாக்கரீன் மற்றும் சைக்லமேட் ஆகியன …………………………………. ஆக பயன்படுகின்றன.
விடை:
செயற்கை இனிப்பூட்டிகள்

Question 34.
ஊறுகாயில் பயன்படும் உணவு பதப்படுத்தி ………………………………….
விடை:
வினிகர் அல்லது சோடியம் குளோரைடு

Question 35.
…………………………………. நம்மை இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
விடை:
எதிர் ஆக்சிஜனேற்றிகள்

Question 36.
வைட்டமின் C, வைட்டமின் E ஆகியன …………………………………. ஆக செயல்படுகின்றன.
விடை:
எதிர் ஆக்சிஜனேற்றிகள்

Question 37.
எதிர் ஆக்சிஜனேற்றிகள் …………………………………. தடுத்து உணவின் தன்மையைக் கெடாமல் பாதுகாக்கின்றன.
விடை:
ஆக்சிஜனேற்றத்தைத்

Question 38.
மறைக்கப்பட்ட கைரேகைகளை சிலநேரங்களில் …………………………………. காண முடிகிறது.
விடை:
நின் ஹைட்ரின்

Question 39.
எந்த இரு மனிதர்களின் கைரேகை, கருவிழி அச்சு மற்றும் நாக்கு அச்சு ஆகியன ………………………………….
விடை:
தனித்துவமானவை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 40.
…………………………………., …………………………………. ஆகியவை விளையாட்டுப் பொருட்கள், மிதிவண்டி ஊர்திப் போன்றவைகளை உருவாக்கப் பயன்படுகின்றன.
விடை:
நானோ மேற்பூச்சு, நானோ கலப்பு பருப்பொருள்

Question 41.
சூரிய கதிர்வீச்சின் தாக்கத்தை குறைக்கும் களிம்புகளில் பயன்படும் நானோ சூரியக்கதிர் தடுப்புப் பொருள் …………………………………. மற்றும் ………………………………….
விடை:
சிங்க் ஆக்ஸைடு டைட்டானியம் ஆக்ஸைடு

Question 42.
நானோ துகள்கள் …………………………………. உடன் தொடர்பு கொள்ளும் போது உறுதியற்ற தன்மையை அடைகின்றன.
விடை:
ஆக்சிஜன்

Question 43.
ஆக்சிஜனுடன் வினைபுரியும் போது நச்சுத் தன்மையுள்ள …………………………………. உருவாவதால் தற்போது குளோரோஃபார்ம் பயன்படுத்தப்படுவதில்லை
விடை:
கார்போனைல் குளோரைடு

Question 44.
உடலின் அதிக வெப்பநிலையை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வந்து காய்ச்சலை குறைக்க பயன்படும் மருந்துகள் …………………………………. எனப்படும்.
விடை:
காய்ச்சல் நிவாரணிகள்

Question 45.
வயிற்றினுள் போதுமான அளவுக்கு மேல் அமிலம் சுரப்பதை சரி செய்யும் மருந்துப் பொருள்கள் …………………………………. எனப்படும்.
விடை:
அமில நீக்கிகள்

Question 46.
டேனியல் மின்கலத்தில் – நேர்மின் முனையாகவும், …………………………………. எதிர்மின் முனையாகவும் செயல்படுகின்றன.
விடை:
துத்தநாக உலோகம், தாமிர உலோகம்

Question 47.
நிலையற்ற ஐசோடோப்புகள் …………………………………. வடிவில் தங்கள் ஆற்றலை இழப்பதன் மூலம் சிதைவுகளுக்கு உட்படுகின்றன.
விடை:
கதிரியக்க

Question 48.
நம் அன்றாட உணவில் பயன்படும் புரைத்தடுப்பான் பண்புடைய இயற்கை நிறமி.
விடை:
மஞ்சள்

Question 49.
ஆல்கஹால் சோதனையில், ஆல்கஹால் ஆக்சிஜனேற்றம் அடைந்து டைகுரோமேட்டை …………………………………. ஆக ஒடுக்குகிறது.
விடை:
குரோமிக் அயனி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 50.
ஆல்கஹால் சோதனையில் ஏற்படும் நிறமாற்றம் ………………………………….
விடை:
ஆரஞ்சு நிறத்திலிருந்து பச்சை |நிறம்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல் 4

III. கூற்று மற்றும் காரண வகை

கூற்று (A) மற்றும் காரணங்களை (R) படித்து பின்வரும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்
ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

Question 1.
கூற்று (A) : நானோ பரிமாணத்தில் இருக்கும் பொருள் ஒன்றின் பண்பானது, அது அணு அல்லது பெரிய பொருளாக இருக்கும் போது உள்ள பண்பிலிருந்து மாறுபட்டிருக்கும்.

காரணம் (R) : நானோ பொருள்கள், அணுக்கள் மற்றும் பெரிய பொருள்களின் அமைப்புப் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கும்.
விடை :
அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்

Question 2.
கூற்று (A) : அனைத்து வேதிப்பொருட்களையும் நாம் மருந்துகளாக பயன்படுத்தலாம்.
காரணம் (R) : மருந்துப் பொருள்கள் நச்சுத்தன்மை உள்ளதாக இருக்கக்கூடாது.
விடை :
ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

Question 3.
கூற்று (A) : மறைக்கப்பட்ட கைரேகைகளை சில நேரங்களில் நின்ஹைட்ரின் பயன்பாட்டினால் காணமுடிகிறது.

காரணம் (R) : நின் ஹைட்ரின் வியர்வையில் உள்ள அமினோ அமிலங்களுடன் வினையாற்றுவதன் மூலம் ஊதா நிறமாக மாறும்.
விடை :
அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
நானோ வேதியியல் என்றால் என்ன?
விடை:

  • அணு மற்றும் மூலக்கூறு அளவில் இருக்கும் பொருள்களை உருவாக்கி அல்லது மாற்றியமைத்து அவைகளின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆய்வு செய்யும் நானோ அறிவியலின் பிரிவு நானோ வேதியியல் எனப்படும்.

Question 2.
நானோ பொருள்கள் பெரிய பொருள்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது?
விடை:
நானோ பொருள்கள் பெரிய பொருள்களிலிருந்து பின்வரும் பண்புகளில் வேறுபடுகின்றன.

  • அதிக புறப்பரப்பளவு
  • அதிக புறப்பரப்பளவு ஆற்றல்
  • நெருக்கமான இடப்பொதிவு
  • குறைவான திண்மநிலை குறைபாடுகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 3.
மருந்துப் பொருள் என்றால் என்ன?
விடை:

  • நோய்களைக் குணப்படுத்தப் பயன்படும் வேதிப் பொருள்களே “மருந்துகள்” என்று அழைக்கப்படுகின்றன.

Question 4.
கதிரியக்க கார்பன் தேதியிடல் என்றால் என்ன?
விடை:

  • இது C- 14 ஐசோடோப்பைப் பயன்படுத்தி புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க உதவும் முறையாகும்.

Question 5.
கதிரியக்க சுவடறிவான் என்றால் என்ன?
விடை:
வேதி வினைகளின் தன்மையை அறிய பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகள் கதிரியக்க சுவடறிவான் எனப்படும்.

Question 6.
சாயங்கள் என்றால் என்ன?
விடை:
துணிகள் மற்றும் பிற பொருட்களுக்கு நிறங்களை வழங்கும் கரிமச் சேர்மங்கள் சாயங்கள் எனப்படும்.

Question 7.
சரிவிகித உணவு என்றால் என்ன?
விடை:

  • உடல் வளர்ச்சி – உணவுகள், ஆற்றல் அளிக்கும் உணவுகள் மற்றும் பாதுகாப்பளிக்கும் உணவுகள் ஆகிய மூன்றினையும் சரியான விகிதத்தில் கொண்டுள்ள உணவே சரிவிகித உணவு எனப்படும்.

Question 8.
உயிரியல் அளவீட்டியல் என்றால் என்ன?
விடை:

  • மனித உடல் பதிவுகளை ஆராய்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதை உள்ளடக்கிய அறிவியலே உயிரியல் அளவீட்டியல் எனப்படும்.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
நானோ வேதியியலின் பயன்பாடுகள் யாவை?
விடை:

  • உலோக நானோ துகள்கள் செயல்திறன் மிக்க வினையூக்கிகளாக பயன்படுகின்றன.
  • நானோ துகள் மற்றும் நானோ கம்பிகளைப் பயன்படுத்தி செய்யப்படும். வேதியியல் உணரிகள் உணர்கருவிகளின் திறனை மேம்படுத்துகின்றன.
  • நானோ மேற்பூச்சு, நானோ கலப்பு பருப்பொருள் ஆகியன விளையாட்டுப் பொருள்கள், மிதிவண்டி, ஊர்திகள் போன்றவற்றை உருவாக்கப்பயன்படுகின்றன.
  • நானோ துகள் பூச்சுகள் பூசப்பட்ட குப்பிகள் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பானங்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுகின்றன.
  • அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படும் செயற்கைத் தோல்களை உருவாக்க நானோ தொழில்நுட்பம் பயன்ப டுகிறது.
  • நானோ துகள்கள் மின்னணுவியல் துறையில் நுண் சில்லுகளாக பயன்படுகின்றன.
  • ஒப்பனை பொருள்கள், வாசனைத் திரவியங்கள், தோல் மீது பூசப்படும் களிம்பு, தோலின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் களிம்பு தயாரிக்கப் பயன்படுகின்றன.
  • பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஆடைகளுடன் சேர்க்கப்படுகின்றன.
  • நுண் ஊசிகள், மருந்து செலுத்தும் குழாய்கள், குளுக்கோமீட்டர் போன்ற உயிர்மருத்துவக் கருவிகள் தயாரிக்க நானோ துகள்கள் பயன்படுகின்றன.
  • ராணுவம், வானூர்திகள், விண்வெளித் துறை சாதனங்கள் தயாரிக்க நானோ பொருட்கள் பயன்படுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 2.
குறிப்பு வரைக :
(i) வலி நிவாரணிகள்
(ii) காய்ச்சல் நிவாரணிகள்
(iii) புரை தடுப்பான்கள்
(iv) மலேரியா நிவாரணிகள்
(v) நுண்ணுயிர் எதிரிகள்.
விடை:
(i) வலி நிவாரணிகள் :

  • உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல், எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் சேர்மங்களே வலி நிவாரணிகள் ஆகும். எ.கா. : ஆஸ்பிரின், நோவால்ஜீன்

(ii) காய்ச்ச ல் நிவாரணிகள் :

  • உடலின் அதிக வெப்பநிலையை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வருவதன் மூலம் காய்ச்சலைக் குறைக்க பயன்படும் சேர்மங்களே காய்ச்சல் நிவாரணிகள் ஆகும். எ,கா, : பாராசிட்டமால்

(iii) புரைத் தடுப்பான்கள் :

  • நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழித்து அல்லது கட்டுப்படுத்தி அவற்றால் ஏற்படும் தொற்றை நீக்குவதற்கு பயன்படும் சேர்மங்களே புரைத்தடுப்பான்கள் எனப்படும். எ.கா. : அயோடோபார்ம், 0.2% ஃபீனால் கரைசல்

(iv) மலேரியா நிவாரணிகள் :

  • உடல் வெப்பநிலையை 103 – 106°F க்கு அதிகரிக்கும் வைரஸால் பரவும் குளிர்காய்ச்சலான மலேரியா காய்ச்சலை குணப்படுத்த பயன்படும் வேதிப்பொருட்கள் மலேரியா நிவாரணிகள் ஆகும். எ.கா. : சின்கோனா மரப்பட்டையிலிருந்து பெறப்படும் குயினைன்

(v) நுண்ணுயிர் எதிரிகள் :

  • பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் வெளிப்படுத்தும் சில வேதிப் பொருட்கள் மற்ற நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை தடுக்கின்றன.
  • இவையே நுண்ணுயிர் எதிரிகள் எனப்படும்.
  • எ.கா. : பென்சிலியம் நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து அலெக்ஸாண்டர் ஃபிளமிங் கண்டறிந்த பென்சிலின்.

Question 3.
மின்வேதியியலின் முக்கியத்துவத்தை விளக்கு.
விடை:

  • இரும்பு அல்லாத உலோகங்களை உற்பத்தி செய்ய மற்றும் தூய்மைப்படுத்த தேவையான தொழில்நுட்ப செயல்முறைகளை கண்டறிய பயன்படுகிறது.
  • கரிமச்சேர்மங்களை உருவாக்குவதற்கு பயன்படுகிறது.
  • ஒரு குறிப்பிட்ட வேதிவினை நிகழுமா, நிகழாதா என கணிக்கப் பயன்படுகிறது.
  • வாகன ஓட்டிகள் குடிபோதையில் உள்ளதை எத்தனாலின் ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை மூலம் கண்டறிய பயன்படுகிறது.
  • அலுமினியம், டைட்டானியம் போன்ற உலோகங்களை அவற்றின் தாதுவிலிருந்து உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
  • நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவினை குளுக்கோஸ் கண்டறியும் கருவிகளில் நடைபெறும் ஆக்சிஜனேற்ற ஒடுக்கத்தின் மூலம் அளவிட பயன்படுகிறது. Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
  • லெட் அமில மின்கலன்கள், லித்தியம் அயனி மின்கலங்கள், எரிபொருள் மின்கலன்கள் ஆகியன தயாரிக்கப் பயன்படுகின்றன.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
i) ₹35.50 + ₹4.50 = _________
விடை‌:
₹40

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

ii) ₹7500 + ₹3000 = _________
விடை‌:
₹10,500

iii) ₹1000 – ₹230 = _________
விடை‌:
₹770

iv) ₹75.50 – ₹30.25 = _________
விடை‌:
₹45.25

கேள்வி 2.
பின்வருவனவற்றைப் பொருத்துக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 1
விடை‌:
(iv)
(iii)
(i)
(ii)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 3.
பின்வருவனவற்றை கூட்டுக.
(i) ₹ 8987.75 + ₹ 9565.50 + ₹ 7693.50
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 2
விடை:
₹ 26,246.75

(ii) ₹ 29763.50 + ₹ 95675.50 + ₹ 4973.50
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 3
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 4
விடை:
₹ 1,30,412.50

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

(iii) ₹ 9978.75 + ₹ 7695.50 + ₹ 635.00
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 5
விடை:
₹ 18,309.25

கேள்வி 4.
பின்வருவனவற்றைக் கழிக்க.
(i) ₹ 1985 – ₹ 798.25
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 6
விடை:
₹ 1186.75

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

(ii) ₹ 688 – ₹ 215
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 7
விடை:
₹ 473.00

(iii) ₹ 49689 – ₹ 33462.50
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 8
விடை:
₹ 16,226.50

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 5.
அருண் என்பவர் ஒரு நகைக் கடையில் வெவ்வேறு எடைகளில் தங்க நாணயங்களை வாங்கினார். அந்த தங்க நாணயங்களின் விலை முறையே ₹18965.75, ₹26998.00 மற்றும் ₹3589.50 எனில், தங்க நாணயங்களின் மொத்த விலையைக் காண்க.
தீர்வ:
முதல் தங்க நாணயத்தின் விலை 1 = ₹ 18965.75
இரண்டாவது தங்க நாணயத்தின் விலை 2 = ₹ 26998.00
மூன்றாவது தங்க நாணயத்தின் விலை 3 = ₹ 3589.50
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 9
விடை: தங்க நாணயத்தின் மொத்தவிலை = ₹ 49553.25

கேள்வி 6.
ஒரு ஆடையகத்தில், தந்தை , தாய், மகன் மற்றும் மகள் என அனைவரும் ஆடைகளை வாங்குகின்றனர். அவர்களின் ஆடைகளின் விலை முறையே 18950, ₹14875, ₹ 7895 மற்றும் ₹9780எனில், அவர்களின் ஆடைகளின் மொத்த விலையைக் காண்க.
தீர்வ:
தந்தை வாங்கிய ஆடைகளின் விலை = ₹ 98950.00
தாய் வாங்கிய ஆடைகளின் விலை = ₹ 14875.00
மகன் வாங்கிய ஆடைகளின் விலை = ₹ 7895.00
மகள் வாங்கிய ஆடைகளின் விலை = ₹ 9780.00
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 10
ஆடைகளின் மொத்த விலை = 41500.00
விடை: ஆடைகளின் மொத்த விலை = ₹ 41,500

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 7.
ஒரு விவசாயி ஓர் இழுவை இயந்திரத்தை வாங்க விரும்பினார். அந்த இழுவை இயந்திரத்தின் விலையானது ₹6,72,598 ஆகும். ஆனால் அவரிடம் ₹2,86,760 மட்டுமே இருந்தது எனில் இழுவை இயந்திரத்தை வாங்க அவருக்கு எவ்வளவு தொகைக் கூடுதலாகத் தேவைப்பட்டது.
தீர்வ:
இழுவை இயந்திரத்தின் விலை = ₹6,72,598
அவரிடம் இருந்த இருப்புத் தொகை = ₹2,86,760
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 11
தேவையான தொகை = ₹3,85,838
விடை: இழுவை இயந்திரம் வாங்க தேவையான தொகை = ₹3,85,838.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 8.
ஒரு நபரின் சேமிப்புக் கணக்கில் 17,246 இருந்தது. அதிலிருந்து அவர் வீட்டு வாடகைக்காக 8,891 எடுத்தார் எனில், அவரது சேமிப்புக் கணக்கில் எவ்வளவு தொகை மீதமிருந்தது?
தீர்வ:
சேமிப்பில் இருந்த தொகை = ₹17,256
அவர் எடுத்த தொகை = ₹ 8,891
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 12
மீதமுள்ள தொகை = ₹8,355
விடை: மீதமுள்ள தொகை = ₹8,355

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 5 பணம் InText Questions

பக்க. எண்: 34

இவற்றை முயல்க:

கேள்வி 1.
₹ 1 = 100 பைசாக்கள் / காககள்

கேள்வி 2.
₹ 5 = ____ பைசாக்கள்
விடை :
500

கேள்வி 3.
775 பைசா = ₹ 7.75

கேள்வி 4.
425 பைசா = _______
விடை :
₹ 4.25

பக்க. எண்: 37

செயல்பாடு:

கேள்வி 1.
பெரிய பையினை சிறிய பைகளோடு பொருத்துக. பெரிய பை

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 1

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 2

பக்க. எண்: 41

நாம் சிந்திப்போம் :

கேள்வி 1.
1000 காசுகளை 5 மாணவர்களுக்கு சமமாக பங்கிட ஒவ்வொரு மாணவனும் எவ்வளவு ரூபாயினை பெறுவான்?
விடை :
1000 பைசா = ₹ 10,
10 ÷ 5 = ₹ 2

பக்க. எண் : 41

செயல்பாடு :

கேள்வி 1.
₹ 10,000 இல் உள்ள 71, 72, 75, 710, 720, ₹ 50, ₹ 100, ₹ 200, ₹ 500 மற்றும் ₹ 2,000 என்ற மதிப்பு வகைப்பாடுகளின் எண்ணிக்கை எத்தனை எனக் காண்க.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 3

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) ₹ 75 × 5 =
விடை :
₹ 375

ii) ₹ 200.25 ÷ 25 =
விடை :
₹ 8.01

iii) ₹ 3500 ÷ 500 =
விடை :
₹ 7

iv) ₹ 15.50 × 100 =
விடை :
₹ 1550

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 2.
பின்வருவனவற்றுக்கு விடையளி.

i) ₹ 98725 × 5
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 1

ii) ₹ 679.68 × 7
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 2

iii) 362.37 × 12
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 3

iv) 324.52 ÷ 28
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 4

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 3.
ஒரு கிலோ தக்காளியின் விலை ₹ 15 எனில், ₹ 5 கிலோ தக்காளியின் விலையைக் காண்க.
விடை :
ஒரு கிலோ தக்காளியின் விலை = ₹ 15
5கிலோ தக்காளியின் விலை = ₹ 15 × 5

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 5

விடை:
5 கிலோ தக்காளியின் விலை = ₹ 75

கேள்வி 4.
ஒரு முட்டையின் விலை ₹ 4.50 எனில், 20 முட்டைகளின் விலையைக் காண்க.
விடை:
ஒரு முட்டையின் விலை = ₹ 4.50
20 முட்டையின் விலை = ₹ 4.50 × 20

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 6

விடை:
20 முட்டையின் விலை = ₹ 90

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 5.
குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் தலா ஓர் எழுதுகோலை வழங்க பள்ளி மேலாண்மைக் குழு முடிவெடுக்கிறது. ஓர் எழுதுகோலின் விலை ₹18 எனில், 256 குழந்தைகளுக்கு எழுதுகோல்கள் வாங்க அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?
விடை:
எழுதுகோலின் எண்ணிக்கை = 256
ஒரு எழுதுகோலின் விலை = ₹ 18 256
எழுதுகோலின் விலை = 256 × ₹ 18

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 7

விடை:
256 எழுதுகோலின் விலை = ₹ 4,608

கேள்வி 6.
ஒரு பழ வியாபாரி, 8 திராட்சைப் பெட்டிகளை ₹2,000 இக்கு வாங்குகிறார் எனில், ஒரு பெட்டியின் விலை என்ன?
விடை:
8 பெட்டிகளின் விலை = ₹ 2000
1 பெட்டியின் விலை = ₹ 2000 ÷ 8

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 8

விடை:
ஒரு பெட்டியின் விலை = ₹ 250

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 7.
ஒரு இனிப்புக் கடையில், 18 கிலோ இனிப்புகளின் விலை ₹ 2520 ஆக இருக்கிறது எனில், 1 கிலோ இனிப்பின் விலை என்ன? விடை:
18 கிலோ இனிப்புகளின் விலை = ₹ 2520
1 கிலோ இனிப்புகளின் விலை = ₹ 2520 ÷ 18

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 9

விடை:
ஒரு கிலோ இனிப்புகளின் விலை = ₹ 140

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2

கேள்வி 1.
சரியா, தவறா எனக் கூறுக.

i) (23 + 4 ) = (4 + 23 )
விடை :
சரி

ii) (9 + 4 ) > 12
விடை :
சரி

iii) (9 + 4 ) < 12
விடை :
தவறு

iv) 121 > 121
விடை :
தவறு

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2

v) 142 < 142
விடை :
தவறு

vi) 112 = 112
விடை :
சரி

vii) (6 × 5) = (32 – 2)
விடை :
சரி

viii) 49 > 7
விடை :
தவறு

ix) (4 × 3) = (3 × 4)
விடை :
சரி

x) (21 + 0) = 21
விடை :
சரி

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2

கேள்வி 2.
(>, < or =) இலிருந்து சரியானக் குறீயீட்டைப் பெட்டியில் நிரப்பவும்:

i) (54 ÷ 9) Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1 (8 – 3)
விடை :
>

ii) (6 + 2) Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1 (4 × 2)
விடை :
=

iii) (10 × 2) Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1 (15 + 20)
விடை :
<

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.2

கேள்வி 3.
விடப்பட்ட கோவைகளுக்கேற்ற எண்களை நிரப்புக.

i) (1 × 9) = (Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1 × 1)
விடை :
9

ii) (6 × 3) > (8 × Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1)
விடை :
2

iii) (36 ÷ 6 ) < (Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1 × 7)
விடை :
9

iv) ( 0 + 2) > (7 × Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1)
விடை :
0

v) (42 ÷ 7 ) = (4 + Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1)
விடை :
2

vi) (6 – Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் 4.2 1) < (1 + 2 )
விடை :
4

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.1

கேள்வி 1.
அடைப்புகுறிப்புகளைப் பயன்படுத்தி, மூன்று சோடி எண்களின் கூடுதல் 12 வருமாறு எழுதுக. அவற்றைப் பயன்படுத்தி மூன்று சமத்தன்மைகளில் எழுதுக.
விடை :
(6 + 6 ) = ( 8 + 4 ) = (9 + 3)

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 4 இயற்கணிதம் Ex 4.1

கேள்வி 2.
நான்கு சோடி எண்களைக் காண்க. ஒவ்வொரு சோடியிலும் 16 என்ற எண் கிடைக்கக் கூட்டல், கழித்தல், பெருக்கள் – மற்றும் வகுத்தல் செயல்களைச் செய்க. அவை ஒவ்வொன்றிற்கும் சமத்தன்மையை எழுதுக.
விடை :
(8 + 8 ) = (18 – 2 ) = ( 8 × 2 ) = (32 ÷ 2)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 3 அளவைகள் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

பக்க. எண் :23

செயல்பாடு 1:

கேள்வி 1.
குடுவையில் ஒரு பொருளை இடுவதன்மூலம் அதிகரிக்கும் நீரின் அளவை அளத்தல்.

ஒரு கண்ணாடிக் குடுவையில் சென்டிமீட்டர் மற்றும் மில்லி மீட்டரை அளவுகோலைப் பயன்படுத்திக் குறிக்க 20 செ.மீ மதிப்பு அளவில் தண்ணீ ர் நிரப்புக.

ஒரு கோலிக்குண்டைக் குடுவையினுள் இடுக. நீர் அதிகரிக்கும் அளவைக் குறித்துக் கொள்க.

அதேபோல், அட்டவணயில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைக் குடுவையினுள் இட்டு,நீர் அதிகரிக்கும் அளவைக் குறித்துக் காட்டுக.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 2

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 3

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

பக்க. எண்: 24

செயல்பாடு 2 :

→ ஒரு குடுவையில் சிறிது தண்ணீர் எடுத்துக்கொண்டு அளவைக் குறித்துக் கொள்க. *

→ திண்மப் பொருளை எடுக்க. அதாவது, உருளைக்கிழங்கை தண்ணீர் உள்ள குடுவையில் மூழ்கும்படி இடுக.

கேள்வி 1.
நீங்கள் என்ன உணர்ந்து கொண்டீர்கள்?

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 4

விடை :
தண்ணீரின் அளவு கூடும்.

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

செயல்பாடு 3:

1. ஒரே அளவுள்ள இரண்டு தாள்களை எடுத்துக்கொள்க. (பழையத் தாளாகக் கூட இருக்கலாம்)
2. கத்திரிக்கோல், பசையைப் பயன்படுத்தி உருளை மற்றும் கனச்சதுர வடிவ பெட்டிகளை உருவாக்குக.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 5

3. இரண்டையும் மண் கொண்டு நிரப்பி மூடவும்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 6

4. ஒரு வாளியை எடுத்துக்கொள்ளவும். பகுதியளவு நீரால் நிரப்பவும், அதனை குறித்துக்கொள்ளவும்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 7

5. இப்பொது, நாம் மண்ணால் நிரப்பப்பட்ட கனச்சதுரப் பெட்டியை வாளியினுள் மூழ்க வைத்தால், நீர் மட்ட அளவில் ஏதேனும் மாற்றம் வருமா? வரும் எனில், நீரின் மட்டம் அதிகரிக்குமா? குறையுமா?

ஆம். நீர் மட்ட அளவு கூடும்

6. மண்ணால் நிரப்பப்பட்ட கனசதுரப் பெட்டியை நீரில் மூழ்கவிட்ட பின், நீரின் மட்டத்தை ‘A’ என குறிக்க.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 8

அதிகரிக்கும் நீரின் அளவைக் குழந்தைகளைக் கவனிக்க கூறிவிட்டு கீழ்க்காணுமாறு அவர்களிடம் கேட்கலாம்:

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

நீங்கள் என்ன உற்றுநோக்கினீர்கள்? நீரின் மட்டத்தில் ஏதேனும் மாற்றம் இருந்ததா?
விடை :
ஆம் நீர் மட்டம் கூடும்

நீரின் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் என்ன?
விடை :
மண்ணால் நிரப்பப்பட்ட கனச்சதுரப் பெட்டியை வாளியினுள் மூழ்க வைத்தது.

உருளை வடிவ பெட்டி நீரினுள் அடைத்துக் கொள்ளும் இடத்தை உங்களால் காண முடியுமா?
விடை :
ஆம். காண முடியும்

பக்க. எண் : 26

செயல்பாடு 4:

அலகுக் கனச்சதுரம் என்ற முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் கனஅளவுகளைக் கணக்கிட முடியும். பொருள்களின் பக்க அளவுகள் கொடுக்கப்பட்டுகள்ளன.

கேள்வி 1.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 9

விடை :
10 × 6 × 1 = 60 க.செ.மீ

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

கேள்வி 2.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 10

விடை :
6 × 1 × 2 = 12 கன.செ.மீ