Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

7th Social  Science Guide வரியும் அதன் முக்கியத்துவம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வரிகள் என்பவை ……………… செலுத்தப்பட வேண்டும்.
அ) விருப்பத்துடன்
ஆ) கட்டாயமாக
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) கட்டாயமாக

Question 2.
வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது …………………..
அ) சமத்துவ விதி
ஆ) உறுதிப்பாட்டு விதி
இ) சிக்கன விதி
ஈ) வசதி விதி
விடை:
இ) சிக்கன விதி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 3.
வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ……………….
அ) விகிதச்சாரா வரி
ஆ) தேய்வுவீத வரி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஆ) தேய்வுவீத வரி

Question 4.
வருமான வரி என்பது ……………………
அ) நேர்முக வரி
ஆ) மறைமுக வரி
இ) அ மற்றும் ஆ
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) நேர்முக வரி

Question 5.
சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ……………..
அ) செல்வ வரி
ஆ) நிறுவன வரி
இ) விற்பனை வரி
ஈ) சேவை வரி
விடை:
ஈ) சேவை வரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வழக்கமாக, அரசால் விதிக்கப்படும் வரியையே ……………….. என்னும் சொல்லால் குறிக்கிறோம்.
விடை:
வரிவிதிப்பு

Question 2.
வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது ………………..
விடை:
விகிதாச்சார வரி

Question 3.
……………………. வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொருத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.
விடை:
அன்பளிப்பு

Question 4.
…………………… வரிச்சுமையை வரி செலுத்துவோர் மாற்ற முடியாது.
விடை:
நேர்முக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 5.
மறைமுக வரி என்பது ……………….. நெகிழ்ச்சி உடையது.
விடை:
அதிக

III. பின்வருவனவற்றைப் பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 2

IV. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல?
அ) சேவை வரி
ஆ) மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT)
இ) சொத்துவரி
ஈ) சுங்கவரி
விடை:
இ) சொத்துவரி

V. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
பின்வரும் வரியில் எது நேர்முக வரி?
அ) சேவை வரி
ஆ) செல்வ வரி
இ) விற்பனை வரி
ஈ) வளர் விகித வரி
விடை:
ஆ) செல்வ வரி

VI. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
வரியை வரையறுக்கவும்.
விடை:
வரி செலுத்துவோர், எவ்வித நேரடியான பலனையும் எதிர்பார்க்காமல் அரசுக்கு கட்டாயமாகச் செலுத்துபவையே வரிகள் ஆகும்.

Question 2.
வரி ஏன் விதிக்கப்படுகிறது?
விடை:

  • ஒவ்வொருவரும் சட்டத்திற்கு உட்பட்டு வரி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள்.
  • வரியாகச் செலுத்தப்படும் மொத்தத் தொகையும் அரசுக் கருவூலத்தில் இருப்பு வைக்கப்படுகிறது.
  • அவ்வாறு பெறப்பட்ட வரிப்பணத்தை எவ்வாறு செலவிடுவது என்பதையும் வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதையும் அரசே தீர்மானிக்கிறது.
  • அதிகமாகப் பெறப்படும் வரிகள், மேன்மேலும் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்த அரசுக்கு உதவுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 3.
வரிவிதிப்பு வகைகளின் பெயரை எழுதி அதன் வரைபடத்தை வரையவும்.
விடை:
வரி விதிப்பில் மூவகை உள்ளன. அவை யாவன:

  • விகிதாச்சார வரி
  • வளர் வீத வரி
  • தேய்வு வீத வரி
    Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 3

Question 4.
வரிகளின் முக்கியத்துவம் ஏதேனும் மூன்றினைக் கூறுக.
விடை:

  • வரிகள் இல்லையெனில், சமுதாய நலத்திற்குத் தேவையானவற்றைச் செய்ய அரசால் இயலாது.
  • அரசுக்கு வரிகள் மிகவும் இன்றியமையாத வளங்களாக உள்ளன. ஏனெனில், வசூலிக்கப்பட்ட வரிப்பணம் பின்வரும் சமுதாய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
    1. நலவாழ்வு
    2. கல்வி
    3. ஆட்சி நிர்வாகம்

Question 5.
வரியின் வகைகள் யாவை? மற்றும் அதனைப் பற்றி விளக்குக.
விடை:
இன்றைய காலக்கட்டத்திற்கேற்ப, வரிகள் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

  1. நேர்முக வரி
  2. மறைமுக வரி

நேர்முக வரி:
நேர்முக வரி என்பது தனியாளோ. நிறுவனமோ நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதைக் குறிக்கும். வரி செலுத்துபவர். பல்வேறு காரணங்களுக்காக அரசுக்கு நேர்முக வரியைச் செலுத்துகிறார். (எ.கா) சொத்து வரி, வருமான வரி

மறைமுக வரி:
ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவர் மீது மாற்ற இயலும் முறையையே மறைமுக வரி என்கிறோம் (எ.கா) சேவை வரி, விற்பனை வரி

Question 6.
நன்கொடை அல்லது அன்பளிப்பு வரி மற்றும் சேவை வரி பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
விடை:
அன்பளிப்பு வரி:
ஒருவர் வெகுமதியாக அல்லது அன்பளிப்பாக பெறும் பொருள்களின் மதிப்புக்கேற்ப விதிக்கப்படும் வரி அன்பளிப்பு வரியாகும்.

சேவை வரி:
சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது சேவை வரியாகும். சேவையை பெறுபவர்களிடமிருந்து வரி வசூலிக்கப்பட்டு மத்திய அரசுக்குச் செலுத்தப்படுகிறது.

Question 7.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்றால் என்ன?
விடை:

  • பொருள்களின் விற்பனை, உற்பத்தி, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விதிக்கப்படுவது பொருள் மற்றும் சேவை வரியாகும்.
  • தேசிய அளவில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.

Question 8.
நேர்முக மற்றும் மறைமுக வரிக்கு இடையிலான வேறுபாடுகள் யாவை?
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 4

VII. விரிவான விடையளிக்கவும்

Question 1.
வரி விதிப்பு கொள்கை பற்றிச் சுருக்கமாகக் கூறுக.
விடை:
வரி விதிப்பு கோட்பாடுகள், இன்றைய காலக்கட்டத்திலும் வரிகட்டமைப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றன.

சமத்துவ விதி:

  • மக்கள் தத்தமது வசதிக்கேற்ப வகையில் செலுத்துவதற்கு அரசு வரி விதிக்கும் முறைகளுள் ஒன்று சமத்துவ விதியாகும்.
  • இதனால் அனைவரும் சமமாக வரி செலுத்த வேண்டும் என்பது பொருளன்று, மாறாக மக்கள் மீது சுமத்தப்படும் வரியானது, எளிமையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பதையே இவ்விதி விளக்குகிறது.

உறுதிப்பாட்டு விதி:

  • வசூலிக்கப்படும் வரியின் மூலம் வரி செலுத்துவோர்க்கு ஓர் உறுதிப்பாட்டுத் தன்மையை, இவ்விதி உருவாக்குகிறது. பொருளாதார வளத்தை மேம்படுத்துகிறது.
  • ஏனெனில் இவ்விதியின் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் அனைத்து வீண் செலவுகளும் தவிர்க்கப்படுகின்றன.

வசதி விதி :
வரி செலுத்துவோர்க்கு அதிகபட்ச வசதிகளை வழங்கும் வகையில் வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவோர் தாம் செலுத்தும் வரியின் மூலம் குறைந்தபட்ச அளவிலேயே துன்பப்படுவர்.

சிக்கன விதி:

  • வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்பட வேண்டும்.
  • வசூலிக்கப்பட்ட தொகை முழுவதும் அரசுக் கருவூலத்தின் இருப்பில் வைக்கப்பட வேண்டும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 2.
வரி விதிப்பின் வகைகளாக விளக்குக.
விடை:
வரி விதிப்பில் மூவகை உள்ளன. அவையாவன:

  1. விகிதாச்சார வரி (Propotional tax)
  2. வளர் வீத வரி (Progressive tax)
  3. தேய்வு வீத வரி (Regressive tax)

விகிதாச்சார வரி:

  • வருமான அளவைப் பொருட்படுத்தாமல், ஒரே மாதிரியாக வரி விதிப்பது, விகிதாச்சார வரி ஆகும்.
  • வருமான விகிதத்திற்கேற்ப, வரி விகிதமும் மாறுபடும்.

வளர்வீத வரி :

  • ஒருவரின் வருமானம் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப வரி விகிதிமும் அதிகரிப்பது, வளர்வீத வரி ஆகும். (எ.கா) ஒருவரின் ஆண்டு வருமானம் ரூபாய் 1000 எனில் அதற்கான வரி விகிதம் 10% ஆகவே அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 100 ஆகும்.
  • மற்றொருவரின் வருமானம் ரூபாய் 10,000 எனில், அவருக்கு விதிக்கப்படும் வரி விகிதம் 25% அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 2500/-.
  • வேறொருவர் ரூபாய் 1,00,000 வருமானம் பெற்றால், வரி விகிதம் 50% எனில் அவர் செலுத்த வேண்டிய வரி ரூபாய் 50,000/.

தேய்வு வீத வரி:

  • அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி, தேய்வு வீத வரியாகும்.
  • இதனால், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

Question 3.
வரியின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குக.
விடை:
அரசுக்கு வரிகள் மிகவும் இன்றியமையாத வளங்களாக உள்ளன. ஏனெனில், வசூலிக்கப்பட்ட வரிப்பணம் சமுதாய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

  1. நலவாழ்வு
  2. கல்வி
  3. ஆட்சி நிர்வாகம்
  4. உள் கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து வீட்டு வசதி போன்ற பிற பிரிவுகள்.

1. நலவாழ்வு

  • வரிகள் இல்லையெனில், இத்தகைய செயல்கள் நடைபெறுவது கடினம். சமூக நலவாழ்வு, மருத்துவ ஆய்வு,
  • சமூக நலப் பாதுகாப்பு போன்றவற்றிற்காக வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்கப்படுகிறது.

2. கல்வி

  • அரசுக்குச் செலுத்தப்படும் வரிப்பணத்திலிருந்து அதிக அளவிலான தொகை, கல்விக்காகச் செலவிடப்படுகிறது.
  • மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் கல்வியை மையப்படுத்துவதற்கும் அரசு அதிக முதன்மை அளிக்கிறது.

3. ஆட்சி நிர்வாகம்

  • அரசின் நிர்வாக அமைப்புகள் நன்முறையில் இயங்கினால்தான், ஆட்சியும் நன்முறையில் இயங்கும்.
  • நன்முறையில் நிர்வகிக்கும் ஓர் அரசு, தான் வசூலிக்கும் வரிப்பணத்தை, நாட்டின் நலனுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.

4. உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து, வீட்டு வசதி போன்ற பிற பிரிவுகள் :

  • அரசு வசூலிக்கும் வரிப்பணத்தைச் சமூக நலத்திட்டங்களுக்காகச் செலவு செய்கிறது.
  • மக்கள் நலன் காக்கும் வகையில் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிரிவுகளுக்கும் நிதி ஒதுக்குகிறது.

Question 4.
நேர்முக மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக
விடை:
இன்றைய காலக்கட்டத்திற்கேற்ப, வரிகள் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

  1. நேர்முக வரி
  2. மறைமுக வரி

நேர்முக வரி:
நேர்முகவரி என்பது தனியாகவோ, நிறுவனமோ நேரடியாக அரசுக்கு வரி செலுத்துவதைக் குறிக்கும். வரி செலுத்துபவர், பல்வேறு காரணங்களுக்காக அரசுக்கு நேர்முக வரியைச் செலுத்துகிறார்.
எ.கா:

  • சொத்து வரி
  • தனியாள் சொத்து வரி
  • வருமான வரி
  • நிறுவன வரி
  • அன்பளிப்பு வரி

மறைமுக வரி:
தொடக்கத்தில் ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவர் மீது மாற்ற இயலும்.

  • சேவை வரி
  • விற்பனை வரி
  • கலால் வரி
  • பொழுதுபோக்கு வரி
  • சரக்கு மற்றும் சேவை வரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 5.
மக்கள் நலனுக்கு வரி ஏன் அவசியம் என்பதை பற்றி விளக்குக.
விடை:
நிதி நிர்வாகத்திற்கு வருவாயை உயர்த்துவதே, வரி விதிப்பதன் நோக்கமாகும். நிதிப் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளைச் சமன் செய்ய, விலை மாற்றத்திற்கு உதவுகிறது.

நிதி நிர்வாக வரி விதிப்பின் மூலமாக பல செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

போக்குவரத்து, சுகாதாரம், பொதுமக்களின் பாதுகாப்பு, கல்வி, நலவாழ்வுத் திட்டங்கள், அறிவியல் ஆராய்ச்சி கலையும், பண்பாடும், பொதுப்பணி, பொதுக் காப்பீடு மேலும் பல உள்கட்டமைப்புகளுக்காகவும் வரிப்பணம் செலவழிக்கப்படுகிறது.

ஓர் அரசின் திறனுக்கேற்ப, வரிகளை உயர்த்துவது, நிதித்திறன் என்றழைக்கப்படுகிறது.

செலவுகள், வரி வருவாயை விட அதிகமாகும் போது, அரசு கடன்களைத் திரட்டுகிறது.

நாணய மதிப்பைத் தக்கவைத்தல், சொத்துப் பங்கீடு தொடர்பான பொதுக் கொள்கை வெளியிடுதல், குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் அல்லது குழுக்கள் அல்லது நெடுஞ்சாலைகள் போன்ற தனிப்பட்ட வகையில் நன்மை தருவன ஆகியவற்றிற்கு மானியம் அளித்தல் போன்றவை வரி விதிப்பின் நோக்கங்களாகும்.

VIII. செயல்பாடு மற்றும் செயல் திட்டம் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்கள் அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்று சரக்கு மற்றும் சேவை வரி (GST) குறித்து கேட்டறிந்து அதைப் பற்றி கலந்துரையாடுக.

Question 2.
வரி என்றால் என்ன? நாம் ஏன் வரி செலுத்துகிறோம்? இந்த வரியை மக்கள் நலனுக்காக அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை குறித்து கட்டுரை எழுதுக.

IX. வாழ்க்கைத் திறன்கள்

Question 1.
ஆசிரியரும் மாணவர்களும் சேர்ந்து நாட்டின் வளர்ச்சியில் வரியின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தல்.

7th Social  Science Guide வரியும் அதன் முக்கியத்துவம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அரசுக்கு செலுத்தப்படும் வரிப்பணத்திலிருந்து அதிக தொகை ……………………… க்காக செலவிடப்படுகிறது.
அ) கல்வி
ஆ) பாதுகாப்பு
இ) சுற்றுச்சூழல் பாதுகாப்பு
ஈ) ஓய்வூதியம்
விடை:
அ) கல்வி

Question 2.
முன்னோர்கள் சொத்துகளின் மீது விதிக்கப்படும் வரி …………………
அ) சொத்து வரி
ஆ) அன்பளிப்பு வரி
இ) நலவாழ்வு வரி
ஈ) சேவை வரி
விடை:
அ) சொத்து வரி

Question 3.
கண்காட்சிக்கு விதிக்கப்படும் வரி என்பது ……………….
அ) சரக்கு மற்றும் சேவை வரி
ஆ) கலால் வரி
இ) சேவை வரி
ஈ) பொழுதுபோக்கு வரி
விடை:
ஈ) பொழுதுபோக்கு வரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 4.
ஒரு வரி, ஒரு சந்தை மற்றும் ஒரு தேசத்துடன் உள்ள வரி ………………..
அ) மதிப்பு கூட்டு வரி
ஆ) வருமான வரி
இ) சரக்கு மற்றும் சேவை வரி
ஈ) நிறுவன வரி
விடை:
இ) சரக்கு மற்றும் சேவை வரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
………………………. அமைப்பு நன்முறையில் இயங்கினால் தான் ஆட்சியும் நன்முறையில் இயங்கும்.
விடை:
ஆட்சி நிர்வாகம்

Question 2.
………………….. ன் வரிவிதிப்புக் கோட்பாடுகள், இன்றைய காலக்கட்டத்திலும் வரிக்கட்டமைப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றன.
விடை:
ஆடம் ஸ்மித்

Question 3.
வரியாகச் செலுத்தப்படும் மொத்த தொகை ………………. ல் இருப்பு வைக்கப்படுகிறது.
விடை:
அரசு கருவூலம்

Question 4.
அதிகமாகப் பெறப்படும் வரிகள், மேன்மேலும் பல ………………… செயல்படுத்த அரசுக்கு உதவுகின்றன.
விடை:
நலத்திட்டம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 5.
பொதுவாக, வரிகள் நாட்டின் ………………. க்கு தம் பங்களிப்பை வழங்குகின்றன.
விடை:
மொத்த உள்நாட்டு உற்பத்தி

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 5

IV. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றில் வரிவிதிப்பு வகைகளில் இல்லாதது எது?
அ) விகிதாச்சார வரி
ஆ) வளர்வீத வரி
இ) மதிப்பு கூட்டு வரி
ஈ) தேய்வு வீத வரி
விடை:
இ) மதிப்பு கூட்டு வரி

V. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கீழ்க்கண்டவற்றில் வரி விதிப்பு கோட்பாட்டைச் சேர்ந்தது எது?
அ) சிக்கன விதி
அ) விகிதாச்சார வரி
இ) கல்வி
ஈ) நலவாழ்வு
விடை:
அ) சிக்கன விதி

VI. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
சேலிக்மனின் கூற்றுப்படி வரி வரையறு.
விடை:

  • சேலிக்மனின் கூற்றுப்படி வரிகள் என்பவை, ஒருவர் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயப் பங்களிப்பாகும்.
  • இதில், பெறப்பட்ட சிறப்புச் சலுகைகள் குறிப்பிடப்படுவதில்லை . இப்பங்களிப்பின் மூலம், பொது நலத்திற்காக அரசு மேற்கொள்ளும் செலவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

Question 2.
நிறுவன வரி என்றால் என்ன?
விடை:

  • நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவை ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்படும் வரியே நிறுவன வரியாகும்.
  • காப்புரிமை, வட்டி இந்தியாவிலுள்ள மூலதனச் சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் பெறும் இலாபம், தொழில்நுட்பப் பணிகளுக்காகவும் பங்கீடுக்காகவும் பெறப்படும் கட்டணங்கள் ஆகியவற்றின் மீது வரி விதிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம்

Question 3.
பொழுதுபோக்கு வரி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
விடை:

  • மாநில அரசுகளால் பொழுதுபோக்கிற்காக ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் வரி, பொழுதுபோக்கு வரியாகும்.
  • (எ.கா) திரைப்படங்களுக்கான கட்டணங்கள், மேடை அரங்கேற்ற நிகழ்ச்சிகள், கண்காட்சிகள்

VII. விரிவான விடையளிக்கவும்

Question 1.
சுங்க வரி, சாலை வரி மற்றும் தூய்மை பாரத வரி விளக்குக.
விடை:
சுங்க வரியும், சாலை வரியும்:

  • அரசால் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதற்காக விதிக்கப்படும் வரி, சுங்கம் மற்றும் சாலை வரிகளாகும்.
  • சாலை / பாலம் வசதிகளின் பராமரிப்புப் பணிக்காகவும், குறிப்பிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவும் இவ்வரிகள் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகின்றன.

தூய்மை பாரத வரி:

  • இந்திய அரசால் இவ்வரி விதிக்கப்படுகிறது.
  • இது 2015-ம் ஆண்டு , நவம்பர் 15-ம் நாள் தொடங்கப்பட்டது.
  • இஃது அனைத்து வகையான வரிச் சேவைகளுக்கும் பொருந்தும். இதன் வரி விகிதம் 0.5% ஆகும்.
  • தற்போது, 14% க்கும் மேற்பட்ட சேவை வரி நடைமுறையில் உள்ளது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Economics Chapter 1 வரியும் அதன் முக்கியத்துவம் 6

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

7th Social  Science Guide சாலைப் பாதுகாப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சாலைப்பாதுகாப்பு என்பது இவர்களுக்கானது.
அ) வழிப்போக்கர்கள்
ஆ) ஓட்டுநர்கள்
இ) பொதுமக்கள்
ஈ) சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்
விடை:
ஈ) சாலையைப் பயன்படுத்தவோர் அனைவருக்கும்

Question 2.
சாலை விபத்துகள் ஒரு நாட்டின் …………….. பாதிக்கின்றன.
அ) முன்னேற்றத்தை படிக்க
ஆ) வாழ்வை – பக்கம்
இ) பொருளாதாரத்தை பாது
ஈ) மேற்கூறிய அனைத்தையும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தையும்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
அனுமதி என்பது
அ) இயக்குவதற்கு அனுமதி
ஆ) பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி
இ) ஓட்டுநருக்கு சான்றிதழ்
ஈ) வாகனத்தை பதிவு செய்ய சான்றிதல்
விடை:
அ) இயக்குவதற்கு அனுமதி

Question 4.
ரக்ஷா பாதுகாப்பு
அ) பாதசாரிகள்
ஆ) மோட்டார் வாகன ஓட்டிகள் பாகம் தனது
இ) கார் இயக்குபவர்கள்
ஈ) பயணிகள்
விடை:
இ) கார் இயக்குபவர்கள்

Question 5.
இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட வருடம்
அ) 1947
ஆ) 1990
இ) 1989
ஈ) 2019
விடை:
இ) 1989

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
போக்குவரத்தில் மனிதனின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பு …………………. ஆகும்.
விடை:
சக்கரம்

Question 2.
நமது வாழ்க்கைப் பயணத்தில் ………………யைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.
விடை:
சாலை

Question 3.
சாலைகளில் அதிகமான வாகனங்களால் ……………. மற்றும் ……………. மாசுபாடும் ஏற்படுகின்றன.
விடை:
போக்குவரத்து நெரிசலும், அதிகமான

Question 4.
…………………… குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்.
விடை:
வருவாய் ஆதரவாளர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 5.
மருத்துவ உதவியின் அவசர தேவைக்கு ………………….. எண்ணை அழைக்கலாம்.
விடை:
108

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 2

IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
கூற்று : கார் பூலிங் என்பது ஒரே தடத்திலிருந்து பலர் ஒன்றுகூடி ஒரே வாகனத்தைப் பயன்படுத்துவது.
காரணம் : அது எரிபொருள், நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணமும் சரி
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
ஆ) கூற்று சரி, காரணமும் சரி

V. பொருத்தமில்லாத ஒன்றைக் கண்டுபிடி

Question 1.
அ) கார்
ஆ) டிரக்
இ) டெம்போ
ஈ) ஏரோப்ளேன்
விடை:
ஈ) ஏரோப்ளேன்

VI. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை என்பதைக் கண்டுபிடி

அ) பள்ளிப் பாடத்திட்டத்தில், சாலைப் பாதுகாப்புக் கல்வியை இணைப்பது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதே ஆகும்.
ஆ) சாலைகளில் மண் குவிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
இ) குழந்தைப் பருவத்திலிருந்தே சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல், பிற்காலத்தில் அவர்களது பழக்க வழக்கமாகிவிடும்.
விடை:
சரியானவை : ஆ, இ

VII. ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
வாகனம் இயக்கும் போது ஏற்படக்கூடிய கவனச்சிதறல்கள் எவை?
விடை:
கைப்பேசியில் பேசுவதோ, அதில் குறுஞ்செய்தி அனுப்புவதோ மற்ற பல செயல்களில் ஈடுபடுவதோ கவனத்சிதறலுக்கு வழிவகுக்கிறது.

Question 2.
பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவதற்கு இரண்டு பாதுகாப்பு முறைகளைக் கூறு.
விடை:

  1. இருசக்கர வாகனங்கள் இயக்கும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.
  2. நான்கு சக்கர வாகனம் இயக்கும் போது இருக்கைப்பட்டை அணிவது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
இரவு நேரங்களில் வாகனம் இயக்குவது பாதுகாப்பற்றது ஏன்?
விடை:

  • இரவு நேரங்களில் வாகனம் இயக்குவது பாதுகாப்பற்றது ஏனெனில்
  • கட்டுப்படுத்த முடியாத தூக்கம், அதிக தூரம் தொடர்ந்து வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் சோர்வு.
  • சாலையில் குறைந்த வெளிச்சம் ஆகியவை ஆகும்.

Question 4.
ஒரு வாகனத்தை இயக்குவதற்குரிய உரிமம் எப்போது ஒருவருக்குக் கிடைக்கும் ?
விடை:

  • இந்திய சட்டப்படி ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் வயது 18 ஆகும்.
  • ஒரு வாகனத்தை இயக்கும் ஒருவர் தனக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான பயிற்சியும் அதற்கான தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

Question 5.
பொதுமக்களிடையே சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட ஊடகம் என்ன செய்ய வேண்டும்.
விடை:
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் போன்ற ஊடகங்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு உள்ளது.

VIII. விரிவான விடையளி

Question 1.
ஓர் இந்தியன் வாகனம் ஓட்டுவதற்குத் தேவையான ஆவணங்கள் எவை?
விடை:
வாகனம் இயக்குபவர்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் :

  1. ஓட்டுநர் உரிமம்
  2. வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்
  3. காப்பீட்டுச் சான்றிதழ்
  4. வாகன வரி கட்டியதற்கான சான்றிதழ்
  5. அனுமதி மற்றும் தகுதிச்சான்றிதழ்

Question 2.
பள்ளிப்பாடத்திட்டத்தில் சாலைப்பாதுகாப்புக் கல்வியை இணைத்திடும் தேவை என்ன?
விடை:

  1. குழந்தை பருவத்திலிருந்தே போக்குவரத்துக் கல்வியை கற்று தருவதால் விபத்துகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  2. மாணவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் பற்றிய அறிவும் பெறுகின்றனர்.
  3. இது மாணவர்களை வழிநடத்தவும், சாலைகளை பாதுகாப்பாக கடக்கவும், தேவையான கல்வியறிவு கிடைக்கச்செய்கிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் சாலைப்பாதுகாப்பு விதிகளை எவ்வாறு கற்றுக் கொடுக்கலாம்?
விடை:

  • இளம் வயதினருக்கு சாலைப்பாதுகாப்புக் கல்வியைத் தருவதில் பெற்றோரும் ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
  • போக்குவரத்து குறியீடுகள் மற்றும் போக்குவரத்து விதிகளை குழந்தைகள் அறிந்திட உதவுங்கள்.
  • சரியான குறியீட்டிற்காக காத்திருந்து பாதசாரிகளுக்கான வரிக்குதிரை பாதையின் வழியாகச் சாலையை கடந்திட அறிவுறுத்துங்கள்.
  • சாலைகளில் அங்கும் இங்குமாகவோ, குறுக்காகவோ ஓடுதல் கூடாது என்பதை எச்சரிக்கை செய்யுங்கள்.
  • சாலைகளில் நடந்து செல்லும் போது நடைபாதையை பயன்படுத்தவேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
சாலைப்பாதுகாப்பு விதிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட நீங்கள், உங்கள் பெற்றோர்கள், உறவினர்கள் இடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள்.
விடை:

  1. நான் போக்குவரத்து குறியீடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
  2. சாலை விதிகள் பின்பற்றுவதன் தேவையை புரிந்துக்கொள்ளச் செய்வேன்.
  3. வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் மற்றும் இருக்கை பட்டைகள் அணிதல், கைப்பேசியில் பேசுவதை தவிர்த்தல் போன்றவைகளை அறிந்திடச் செய்வேன்.

Question 2.
சக்கரம் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் நமது போக்குவரத்து எவ்விதமாக இருந்திருக்கும்?
விடை:
சக்கரம் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் நமது போக்குவரத்தக்கு கழுதைகளையும், ஒட்டகங்களையும், குதிரைகளையும் நாம் பயணிப்பதற்கும், பொருட்களை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தி இருப்போம்.

X. செயல்பாடுகள்

Question 1.
போக்குவரத்துக் குறியீடுகள் பற்றிய ஆல்பம் தயாரித்தல்

Question 2.
பொது மக்களிடையே சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தேவையான வாசகங்களைத் தொகுத்து எழுதுக.

Question 3.
சாலைப்பாதுகாப்பு பற்றிய போட்டிகளை நடத்துக.

7th Social  Science Guide சாலைப் பாதுகாப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உலகத்திலேயே அதிகமான சாலை விபத்துகள் ……………….. தான் ஏற்படுகின்றன.
அ) இந்தியா
ஆ) இங்கிலாந்து
இ) சீனா
ஈ) ஜப்பான்
விடை:
அ) இந்தியா

Question 2.
வாகன இயக்குநர் ஒருவர் ………………….. பெறுவதற்கு தேவையான பயிற்சியும், தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும.
அ) ஆதார் அட்டை
ஆ) வாக்காளர் அட்டை
இ) ஓட்டுநர் உரிமம்
ஈ) குடும்ப அட்டை
விடை:
இ) ஓட்டுநர் உரிமம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
இந்திய சட்டப்படி ஒரு வாகன ஓட்டுநர், ஓட்டுநர் உரிமம் பெறும் வயது …………
அ) 21
ஆ) 18
இ) 24
ஈ) 19
விடை:
ஆ) 18

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வாகனங்கள் ஓட்டும் போது ……………………. பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது
விடை:
கைப்பேசி

Question 2.
நாம் சாலை பாதுகாப்பிற்கான ………………. மற்றும் ………….. தீவிரமாக கடைபிடித்து நாட்டை பாதுகாப்போம்.
விடை:
விதிமுறைகள், ஒழுங்குமுறைகள்

Question 3.
……………….. அல்லது …………………… அருகில் வாகனங்கள் ஒலியெழுப்ப தடை செய்யப்பட்டுள்ளது.
விடை:
மருத்துவமனை, பள்ளி வளாகம்

Question 4.
வாகனத்தின் ……………. திடீரென பழுதாவதால் பயங்கரமான விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன.
விடை:
பிரேக்

Question 5.
இளம் வயதினருக்கு …………………… தருவதில் பெற்றோரும், ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
விடை:
சாலை பாதுகாப்பு

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 3

IV. சரியான கூற்றை தேர்ந்தெடு

Question 1.
கூற்று : குழந்தைகள் காணொலி மற்றும் கணினியில் வாகனத்தை வேகமாக இயக்குவது போன்ற படக்காட்சிகள், விளையாட்டுகளை அரசு தடை செய்யவேண்டும்.
காரணம் : அது பிற்காலத்தில் வாகனங்களை வேகமாக இயக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்திவிடும்.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணமும் சரி
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணமும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 2.
கூற்று : இளம் வயதிலேயே சாலை பாதுகாப்புக் கல்வியைத் தரவேண்டும்.
காரணம் : பெற்றோர் போக்குவரத்து விதிகளை மீறும்போது அந்தக்குழந்தையும் பிற்காலத்தில் தன் பெற்றோரைப் போலவே போக்குவரத்து விதிகளை மீறும்.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணமும் சரி
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணமும் சரி

V. கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை என்பதை கண்டுபிடி

அ) கார்பூலிங் செய்வதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆ) வாகனத்தின் பிரேக் திடீரெனப் பழுதாவதால் பயங்கரமான விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன.
இ) மிதிவண்டியில் செல்வது ஆரோக்கியமான பழக்கமாகவும் காற்று மாசுபாட்டை தடுப்பதாகவும் உள்ளது.
ஈ) போக்குவரத்துக் குறியீடுகள் சாலைகளில் போக்குவரத்தை நடத்தும் சத்தமில்லா நடத்துநராகவே செய்யப்படுகின்றன.
விடை:
சரியான விடை : ஆ, இ, ஈ

VI. பொருந்தாததை கண்டுபிடிக்க

Question 1.
அ) தகுதிச்சான்றிதழ்
ஆ) அனுமதி
இ) காப்பீட்டுச் சான்றிதழ்
ஈ) நிரந்தர கணக்கு எண் அட்டை
விடை:
ஈ) நிரந்தர கணக்கு எண் அட்டை

Question 2.
அ) கட்டாயக் குறியீடுகள்
ஆ) எச்சரிக்கை குறியீடுகள்
இ) வழக்கமான குறியீடுகள்
ஈ) தகவல் குறியீடுகள்
விடை:
இ) வழக்கமான குறியீடுகள்

VII. சுருக்கமான விடையளி

Question 1.
கார்பூலிங் என்றால் என்ன?
விடை:

  • கார்பூலிங் செய்வதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறையும்.
  • பலர் ஒரே வாகனத்தை பயன்படுத்துவதால் எரிபொருள், பணம் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது காற்று மாசுபாடும் குறைகிறது.

Question 2.
ரக்ஷா – வரையறு.
விடை:

  • ரக்ஷா ஒரு தானியங்கி கருவி.
  • இது வாகனத்தில் பொருத்தப்பட்டு வாகனம் தற்போது எங்குள்ளது என்பதையும், வாகனத்தின் இயந்திரத்தின் செயல்பாட்டினை கண்காணிக்கவும், வாகனத்தின் பதட்ட நிலையையும் உடனடியாக வெளிப்படுத்துகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
போக்குவரத்து குறியீடுகளில் மூன்று வகைகளை யாவை?
விடை:

  1. கட்டாயக் குறியீடுகள்
  2. எச்சரிக்கை குறியீடுகள்
  3. தகவல் குறியீடுகள்

VIII. விரிவான விடையளி.

Question 1.
சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை விவரி.
விடை:

  • அதிகமான விபத்து பகுதிகளில் சாலைகளை சீர்செய்தல் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்துதல்.
  • போக்குவரத்து குறியீடுகள் மற்றும் சாலைச் சைகைகள் முதலியன போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் நன்றாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்கின்றன.
  • நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சாலைகளை நல்ல முறையில் அமைத்தல்
  • அதி வேகமாக இயக்குபவர்களைக் கண்காணித்திட கண்காணிப்பு கேமிராக்களை பொருத்துதல்.
  • சாலைகளில் குழிதோண்டுதல் மற்றும் மணல்களை குவிப்பதை தடை செய்தல்.
  • சாலை ஆக்கிரமிப்புகளை நீக்கி பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பெதுமக்கள் சாலை விதிகளை மதிக்காமல் சென்றால் அரசு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தி அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

6th Social Science Guide உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ….. அமைக்கப்படுகிறது.
அ) ஊராட்சி ஒன்றியம்
ஆ) மாவட்ட ஊராட்சி
இ) வட்டம் ஈ) வருவாய் கிராமம்
விடை:
அ) ஊராட்சி ஒன்றியம்

Question 2.
தேசிய ஊராட்சி தினம் ……. ஆகும்.
அ) ஜனவரி 24
ஆ) ஜீலை 24
இ) நவம்பர் 24
ஈ) ஏப்ரல் 24
விடை:
ஈ) ஏப்ரல் 24

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 3.
இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் …
அ) டெல்லி
ஆ) சென்னை
இ) கொல்கத்தா
ஈ) மும்பாய்
விடை:
ஆ) சென்னை

Question 4.
அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் ……….
அ) வேலூர்
ஆ) திருவள்ளூர்
இ) விழுப்புரம்
ஈ) காஞ்சிபுரம்
விடை:
இ) விழுப்புரம்

Question 5.
மாநகராட்சியின் தலைவர் …… என அழைக்கப்படுகிறார்
அ) மேயர்
ஆ) கமிஷ்னர்
இ) பெருந்தலைவர்
ஈ) தலைவர்
விடை:
அ) மேயர்

II. நிரப்புக

Question 1.
இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் …….. ஆகும்.
விடை:
தமிழ்நாடு

Question 2.
பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு …………..
விடை:
1992

Question 3.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் …………. ஆண்டுகள்.
விடை:
5

Question 4.
தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ……. ஆகும்.
விடை:
வாலாஜாபேட்டை நகராட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் 80
விடை:
1. நிரந்தர அமைப்பு
2. வட்டார வளர்ச்சி அலுவலர்
3. செயல் அலுவலர்
4. மாநிலத் தேர்தல் ஆணையம்

IV. விடையளிக்கவும்.

Question 1.
உன் மாவட்டத்தில் மாநகராட்சி இருப்பின், அதன் பெயரைக் எழுதவும்?
விடை:
ஆம். திருநெல்வேலி மாநகராட்சி

Question 2.
உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யாது?
விடை:
உள்ளாட்சி அமைப்புகள் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் உள்ளூர் அமைப்புகளின் திறமையான செயல்பாட்டிற்கும் மக்களை நேரடியாக ஈடுபடுவதற்கு அவசியமாகும்.

Question 3.
ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:
ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 4.
நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
விடை:
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி.

Question 5.
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் யாவர்?
விடை:
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்

  • ஊராட்சி மன்றத் தலைவர்.
  • பகுதி உறுப்பினர்கள்
  • ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)
  • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்.

Question 6.
மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைப் பட்டியலிடுக.
விடை:

  • குடிநீர் வசதி
  • தெரு விளக்கு அமைத்தல்
  • தூய்மைப் பணி
  • மருத்துவச் சேவை
  • மாநகராட்சிப் பள்ளிகள்
  • பிறப்பு, இறப்பு பதிவு இன்னும் பிற

Question 7.
கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக.
விடை:
வீட்டு வரி, தொழில் வரி, கடைகள் மீதான வரி, குடிநீர் இணைப்புக்கான கட்டணம், நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு, மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு இன்னும் பிற

Question 8.
கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாள்கள் யாவை? அந்நாள்களின் சிறப்புகள் யாவை?
விடை:

  • கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2, ஆகிய நாட்களில் நடைபெறும்.
  • தேசிய விழா தினமாக இந்த நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

Question 9.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
விடை:
கிராம சபை அமைத்தல், மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு, இட ஒதுக்கீடு, தேர்தல், பதவிக்காலம், நிதி க்குழு, கணக்கு மற்றும் தணிக்கை, இன்னும் பிற

Question 10.
கிராம சபையின் முக்கியத்துவம் யாது?
விடை:

  • கிராமத்து பஞ்சாயத்துகளின் திறமையான செயல்பாட்டுக்கு கிராமப்புற சபா மிகவும் அவசியமானதாகும்.
  • இது சமூக நலனுக்கான திட்டங்களை தீட்டுதல் மற்றும் செயல்படுத்துவதில் பொது மக்கள் பங்கேற்பைப் மேம்படுத்துகிறது.

V. உயர் சிந்தனை வினா

Question 1.
கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?
விடை:

  • இந்திய நாடு ஒரு அகன்ற நாடாகும். ஒரே ஒரு அரசாங்கத்தால், நாட்டின் முழு நிர்வாகத்தையும், கவனிக்க இயலாது.
  • நமது இந்திய அரசமைப்புச்சட்டம் மூன்று நிலைகளில் நிர்வாகத்தை பிரித்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்.
  • உள்ளாட்சி அமைப்புகள் கிராமம் மற்றும் நகரங்களின் உள்ளூர் நிர்வாகத்தை கவனித்துக்
    கொள்ளும்.
  • உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணிகள் :
    • தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்,
    • சாலைகள் மற்றும் பள்ளிகள் கட்டுதல்,
    • குடிநீர் மற்றும் மின்வசதி அமைத்தல்

VI. செயல்பாடுகள்

Question 1.
உள்ளாட்சி பிரதிநிதியை நேர்காணல் செய்வதற்காக வினா நிரல் தயாரிக்கவும்.
விடை:

  • நம் பகுதியில் சிறந்த வடிகால் அமைப்பதற்கு தங்களின் திட்டம் என்ன?
  • மகாராஜ நகர், மற்றும் தியாகராஜ நகரை இணைக்கும் பாலக் கட்டுமானம் எப்போது நிறைவடையும்?
  • நம் பகுதியில் தெரு விளக்கு அமைக்கும் பணி எத்தனை மாதங்களில் முடிவடையும்?

Question 2.
பள்ளியின் மேம்பாட்டிற்கு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு இருப்பின் கலந்துரையாடுக.
விடை:

  • உள்ளாட்சி பிரதிநிதிகள் எங்கள் பள்ளியின் மேம்பாட்டிற்காக அபரிமிதமான உதவிகள் செய்துள்ளனர்.
  • பள்ளியின் வளர்ச்சிக்காக அவர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மற்றும் பள்ளியின் பழைய மாணவர்களை நாடி உதவி பெற்றனர்.
  • அவர்கள் திரட்டிய நிதியில் இருந்து பள்ளிக்கு தேவையான கணினி, ஆய்வக உபகரணங்கள் மற்றும் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கினர்.

Question 3.
நான் உள்ளாட்சி பிரதிநிதியானால்…?
விடை:

  • சிறந்த வடிகால் திட்டம் அமைக்கப் பாடுபடுவேன்.
  • டெங்கு போன்ற தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வழிகளை ஆராய்ந்து செயல் படுத்துவேன்.
  • நன்கு திட்டமிட்ட சாலை வசதிகளையும், நன்கு ஒளியூட்டும் விளக்குகளையும் ஏற்பாடு செய்து மக்கள் நலமுடன் வாழ வழி வகுப்பேன்.

Question 4.
உன் மாவட்டத்தில் உள்ள பல வகையான உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையைக் கேட்டறிந்து பதிவிடவும்.
விடை:
மாவட்டத்தின் பெயர் : திருநெல்வேலி
கிராம ஊராட்சி : இராஜகோபாலபுரம்
ஊராட்சி ஒன்றியம் : முத்தூர்
மாவட்ட ஊராட்சி பேரூராட்சி : குலவணிகர்புரம்
நகராட்சி மாநகராட்சி : திருநெல்வேலி மாநகராட்சி

6th Social Science Guide உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
தமிழ்நாட்டில் ………. மாநகராட்சிகள் இருக்கின்றன.
விடை:
12

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 2.
சென்னை மாநகராட்சி ……….. உருவாக்கப்பட்டது.
விடை:
1688

Question 3.
நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் ……….. மாவட்டம்
விடை:
காஞ்சிபுரம்

Question 4.
நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடைப்பட்ட ஊர் ………….
விடை:
பேரூராட்சி

Question 5.
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு ………. ஊராட்சி ஆகும்.
விடை:
கிராமம்

Question 6.
……. மற்றும் …….. மாவட்டங்களில் மிக குறைந்த அளவு ஊராட்சி ஒன்றியங்களே உள்ளன.
விடை:
நிலகீரி மற்றும் பெரம்பலூர்

Question 7.
தொகுதிகள் …….. எனவும் அழைக்கப்படுகின்றன.
விடை:
பகுதிகள்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவின் அரசியல் அமைப்பின் அடித்தளமாக பஞ்சாயத்து ராஜை பரிந்துரைத்தவர் ….
அ) ஜவஹர்லால் நேரு
ஆ) மகாத்மா காந்தி
இ) இராஜேந்திர பிரசாத்
விடை:
ஆ) மகாத்மா காந்தி

Question 2.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில் …. இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அ) 30%
ஆ) 25%
இ) 33%
விடை:
இ) 33%

Question 3.
2011ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் … இடங்களில் வெற்றி பெற்றனர்.
அ) 38%
ஆ) 28%
இ) 48%
விடை:
அ) 38%

Question 4.
தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு பெண்களுக்கு உள்ளாட்சியில் ………… இட ஒதுக்கீடு வழங்க சட்டத்திருத்தம் செய்துள்ளது.
அ) 40%
ஆ) 50%
இ) 60%
விடை:
ஆ) 50%

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்

Question 5.
தமிழகத்தின் தேர்தல் ஆணையம் … மாவட்டத்தில் உள்ளது.
அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருச்சி
விடை:
அ) சென்னை

III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

Question 1.
மாநகராட்சியின் அதிகாரிகள் குறிப்பு வரைக.
விடை:

  • மாநகராட்சிக்கு இந்திய ஆட்சிப்பணி (இ.ஆ.ப) அதிகாரி ஒருவர் ஆணையராக இருப்பார்.
  • நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள்.
  • பேரூராட்சியின் நிர்வாக அலுவலர் செயல் அலுவலர் ஆவார்.

Question 2.
ஊராட்சி ஒன்றியம் பற்றி விளக்குக.
விடை:

  • பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
  • கவுன்சிலர்கள் தங்களில் ஒருவரை ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர்.
  • துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • வட்டார வளர்ச்சி அலுவலர் இதன் நிர்வாக அலுவலர் ஆவார்.
  • ஊராட்சி ஒன்றிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

IV. விரிவான விடையளி.

Question 1.
மாவட்ட ஊராட்சி குறிப்பு வரைக.
விடை:

  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது.
  • 50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது.
  • பகுதி உறுப்பினர்களாக கிராம ஊராட்சி மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் தங்களின் ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் செய்கின்றனர்.

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 2 உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும் 99

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 1 மக்களாட்சி Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

6th Social Science Guide மக்களாட்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆதிமனிதன் …….. பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.
(அ) சமவெளி
(ஆ) ஆற்றோரம்
(இ) மலை
(ஈ) குன்று
விடை:
(ஆ) ஆற்றோரம்

Question 2.
மக்களாட்சியின் பிறப்பிடம் ……….
(அ) சீனா
(ஆ) அமெரிக்கா
(இ) கிரேக்கம்
(ஈ) ரோம்
விடை:
(இ) கிரேக்கம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 3.
உலக மக்களாட்சி தினம் ………. ஆகும்.
(அ) செப்டம்பர் 15
(ஆ) அக்டோபர் 15
(இ) நவம்பர் 15
(ஈ) டிசம்பர் 15
விடை:
(அ) செப்டம்பர் 15

Question 4.
நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ……
(அ) ஆண்கள்
(ஆ) பெண்கள்
(இ) பிரதிநிதிகள்
(ஈ) வாக்காளர்கள்
விடை:
(ஈ) வாக்காளர்கள்

II. நிரப்புக.

Question 1.
நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு ……………
விடை:
சுவிட்சர்லாந்து

Question 2.
மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் …….
விடை:
ஆப்ரகாம் லிங்கன்

Question 3.
மக்கள் …………… அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
விடை:
வாக்கு

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 4.
நம் நாட்டில் …… மக்களாட்சி செயல்படுகிறது.
விடை:
நாடாளுமன்ற

III. விடையளிக்கவும்

Question 1.
மக்களாட்சி என்றால் என்ன?
விடை:
“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி”

Question 2.
மக்களாட்சியின் வகைகள் யாவை?
விடை:
நேரடி மக்களாட்சி மற்றும் பிரதிநிதித்துவ மக்களாட்சி

Question 3.
நேரடி மக்களாட்சி – வரையறு.
விடை:
“நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை உருவாக்குகின்றனர். அனைத்து சட்டத் திருத்தங்களையும் மக்கள் தான் அங்கீகரிப்பர். அரசியல் வாதிகள் நாடாளுமன்ற செயல் முறைகளின்படி ஆட்சி செய்வர்”.

Question 4.
பிரதிநிதித்துவ மக்களாட்சி – வரையறு.
விடை:
“சுதந்திரமான தேர்தல் முறைப்படி உயர் அதிகாரம் பெற்ற மக்கள் தெரிந்தெடுக்கும் அரசாங்கம். இதில் மக்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் ஆட்சியதிகாரம் பெற்றிருப்பார்கள்.

Question 5.
நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை?
விடை:
நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகள்

  • அரசியல் கொள்கைகளை வரையறுத்துள்ளது.
  • அரசு நிறுவனங்களின் வடிவமைப்பு. அவை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
  • அரசு நிறுவனங்களின் அதிகாரம் மற்றும் கடமைகளையும் விளக்குகிறது.
  • குடிமக்களுக்கான உரிமைகள், கடமைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் நிர்ணயம் செய்துள்ளது.

IV. உயர்சிந்தனை வினா

Question 1.
நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி 80

V. செயல்பாடுகள்

Question 1.
உங்கள் தொகுதி பிரதிநிதிகளின் பெயர்களைக் கேட்டறிந்து எழுதவும்.
விடை:
(அ) நாடளுமன்ற உறுப்பினர் – K.R.P. பிரபாகரன்
(ஆ) சட்டமன்ற உறுப்பினர் – TP. மொஹிதின்கான்
(இ) உள்ளாட்சி உறுப்பினர் – A. ராதாகிருஷ்ணன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 2.
மக்களாட்சி முறையின் நிறை, குறைகளை விவாதிக்கவும்.
விடை:
நிறைகள் :

  • மக்களாட்சி முறை மக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை பெற்று தருகின்ற ஒரு சிறந்த அரசாட்சியாகும்.
  • இவ்வாட்சி ஜனநாயக ரீதியாக முடிவெடிக்கும் தன்மையை செம்மைப்படுத்துகிறது.
  • குடிமக்களின் சுயமரியாதையை பாதுகாக்கிறது.
  • மக்களாட்சி மக்களின் தவறுகளை திருத்தி கொள்ள வழி வகை செய்கிறது.

குறைகள் :

  • மக்களாட்சியில் தலைமை மாறிக் கொண்டே இருப்பதால் நிலையற்ற தன்மை உருவாகிறது.
  • நன்னடைத்தைக்கு வாய்ப்பு குறைகிறது
  • முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
  • ஊழலுக்கு வழி வகை செய்கிறது.

6th Social Science Guide பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஐ.நா.சபை செப்டம்பர் 15ம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்த ஆண்டு ……….
விடை:
2004

Question 2.
……… அரசமைப்புச் சட்டம் தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலே மிகப் பெரியது
விடை:
இந்திய

Question 3.
அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு …………. தலைமையில் உருவானது.
விடை:
டாக்டர் பி.ஆர்.
அம்பேத்கார்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

Question 4.
இந்தியாவில் ………. வயது நிரம்பிய எந்த ஒருகுடிமகனும் வாக்களிக்கலாம்
விடை:
18

Question 5.
உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தைக் கொண்டது ……..
விடை:
ஐஸ்லாந்து

II. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

Question 1.
…….. நமது அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுகிறார்”
(அ) டாக்டர் இராஜேந்திரபிரசாத்
(ஆ) பி.ஆர். அம்பேத்கர்
(இ) டாக்டர் S. ராதாகிருஷ்ணன்
விடை:
(ஆ) பி.ஆர்.அம்பேத்கர்

Question 2.
பழமையான அரசியலைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது.
(அ) கிரேக்கம்
(ஆ) சன்மரினோஸ்
(இ) ரோமானியப்பேரரசு
விடை:
(ஆ) சன்மரினோஸ்

Question 3.
அதிபர் மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாடு(கள்)
(அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(ஆ) கனடா
(இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றம் கனடா
விடை:
(இ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றம் கனடா

Question 4.
நேரடி மக்களாட்சி முறையில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பவர்கள் ……….
(அ) ஜனாதிபதி
ஆ) பிரதமர்
இ) மக்கள்
விடை:
(இ) மக்கள்

Question 5.
இந்திய அரசமைப்புச் சட்டம் தன் மக்களுக்கு ……… அடிப்படை உரிமைகளை வழங்கி உள்ளது.
அ) 6
ஆ) 9
இ) 8
விடை:
அ) 6

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி 80

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
அரசு என்றால் என்ன?
விடை:
மக்களை ஆளும் அரசு என்பது நிதி – நிர்வாகம், சட்டம் ஒழுங்கு என்று எப்போதும் மாறாமல் நிரந்தரமாய் தேங்கிவிட்ட உறுப்புகளை கொண்டது.

Question 2.
தேர்தல் என்றால் என்ன ?
விடை:
மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் முறையே தேர்தல் எனப்படும்.

Question 3.
“ஜனநாயக ரீதியாக முடிவெடிப்பது என்றால் என்ன?
விடை:

  • மக்களாட்சி அவ்வதிகாரம் ஒரு குழுவிடம் தான் இருக்கும்.
  • மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்காது.
  • மாறாக அவ்வதிகாரம் ஒரு குழுவிடம் தான் இருக்கும்.
  • அக்குழு, தொடர்புடையோர் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான உரையாடல்களை முன்னெடுக்கும்.
  • பின்னர் அவர்களிடையே ஒருமித்த கருத்தொருமை ஏற்பட்டதும் இறுதி முடிவினை எடுக்கும்.
  • இதை தான் ஜனநாயக ரீதியாக முடிவெடித்தல் என்கிறோம்.

V. விரிவான விடையளி

Question 1.
மக்களாட்சியின் நோக்கங்களை – விளக்கு
விடை:

  • மக்களின் சுயமரியாதை மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும், உயர்த்தவும்.
  • சமூக நீதி மற்றும் சமுதாய வளர்ச்சியை அடையவும்
  • சட்டத்தின் விதி முறைகளை செயல்படுத்தவும்
  • மக்கள் தங்கள் பிரதிநிதிகளை’ – தாங்களே தேர்ந்தெடுக்கவும்.
  • நாட்டின் உயர்வுக்கு மக்களின் பங்களிப்புடன் பாடுபடுவதே மக்களாட்சியின் நோக்கமாகும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Civics Chapter 1 மக்களாட்சி 99

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

7th Social  Science Guide சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஒரு நுகர்வோர் குறைபாடுள்ள தயாரிப்புக்காக உற்பத்தியாளருக்கு எதிராக புகார் செய்ய முடியாது?
அ) காலாவதியாகும் தரவு குறிப்பிடப்படாதது
ஆ) பொருட்களின் விலை
இ) பொருட்களின் தொகுதி எண்
ஈ) உற்பத்தியாளரின் முகவரி
விடை:
இ) பொருட்களின் தொகுதி எண்

Question 2.
உற்பத்தியாளரின் முடிவில் இருந்து நுகர்வோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றன. காதில்
அ) நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்
ஆ) பரந்த அளவிலான பொருட்கள்
இ) நிலையான தரமான பொருட்கள்
ஈ) உற்பத்தியின் அளவு கம்
விடை:
அ) நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 3.
நுகர்வோருக்கு ஒரு பொருட்கள் தயாரிப்பு பற்றிய போதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.
அ) உற்பத்தியின் முதலீடு லீடு
ஆ) பொருட்கள் விற்பனையில் முடிவு
இ) கடனில் பொருட்கள் வாங்குதல்
ஈ) பொருட்கள் வாங்குவதில் முடிவு
விடை:
ஈ) பொருட்கள் வாங்குவதில் முடிவு

Question 4.
தேசிய, மாநில மற்றும் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பு, வணிகர்களின் நியாயமானதை வர்த்தக நடைமுறைகளுக்கு எதிரான நுகர்வோர் குறைகளை ஆராய்வது என அழைக்கப்படுகிறது
அ) மூன்று அடுக்கு அமைப்பு
ஆ) ஒரு அடுக்கு அமைப்பு
இ) இரு அடுக்கு அமைப்பு
ஈ) நான்கு அடுக்கு அமைப்பு
விடை:
அ) மூன்று அடுக்கு அமைப்பு

Question 5.
தரம் குறைவான பிற வெளிப்புற பொருள்களை ஒரு உயர்ந்த தரமான பொருளுடன் கலப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) தூய்மையாக்கல்
ஆ) கலப்படம்
இ) சுத்திகரிப்பு
ஈ) மாற்றம்
விடை:
ஆ) கலப்படம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ………………………. பொருட்கள் சேவைகள் மற்றும் தகவல்களின் ஈடுபடும் சந்தை என்று கொள்ளும் அழைக்கப்படுகிறது.
விடை:
பரிமாறிக்

Question 2.
ஒழங்குப்படுத்தப்பட்ட சந்தைகளில், பொருத்தமான ……………… அதிகாரிகளால் சில மேற்பார்வை உள்ளது.
விடை:
அரசாங்க

Question 3.
……………………….. என்பது ஒரு சந்தை கட்டமைப்பைக் குறிக்கிறது, அதில் முழு உற்பத்தியிலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு ஒற்றை தயாரிப்பு அல்லது விற்பனையாளராக இருக்கிறார்.
விடை:
முற்றுரிமை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 4.
……………………….. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சரிபார்க்க நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மகா சாசனம் என்று கருதப்படுகிறது.
விடை:
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

III. பின்வருவனவற்றைப் பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 2

IV. பின்வரும் கூற்றுகளை ஆய்க

Question 1.
பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க.
கூற்று : உள்ளூர் சந்தைகளில் வாங்குபவர்களும் விற்பவர்களும் உள்ளூர் பகுதி பகுதியை சேர்ந்தோர் அல்லது மட்டுமே
காரணம் : ஒரு சந்தை இயற்க்கை இடம் அல்லது புவியியல் இருப்பிடத்திற்கு கட்டுப்படுத்தப்படவில்லை.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. அனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
சந்தை என்றால் என்ன?
விடை:

  • ஒரு சந்தை என்பது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அமைப்புகள் வாங்குவதிலும், விற்பதிலும் ஈடுபடுகின்ற இடமாக அமைகின்றது.
  • பொருள்கள், சேவைகள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்பு சந்தை என அழைக்கப்படும்.

Question 2.
‘நுகர்வோர் பாதுகாப்பு ‘ விவரிக்கவும்.
விடை:
நுகர்வோர் பாதுகாப்பு என்பது நுகர்வோரின் உரிமைகள் நியாயமான வர்த்தகப் போட்டி மற்றும் துல்லியமான தகவல்கள் சந்தையில் இருக்க வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்களின் குழு ஆகும்.

Question 3.
நுகர்வோரின் உரிமைகளைப் பட்டியலிடுக.
விடை:
எட்டு அடிப்படையான நுகர்வோர் உரிமைகள்:

  1. அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை
  2. பாதுகாப்புக்கான உரிமை
  3. தகவல் அறியும் உரிமை
  4. தேர்ந்தெடுக்கும் உரிமை
  5. பிரதிநிதித்துவ உரிமை
  6. குறை தீர்க்கும் உரிமை
  7. நுகர்வோர் கல்வி மற்றும் உரிமை
  8. தூய்மையான சுற்றுப்புறச் சூழலை பெறுவதற்கான உரிமை

Question 4.
நுகர்வோர் நீதிமன்றங்களின் பங்கு பற்றி விவாதிக்கவும்.
விடை:
ஒரு தேசிய அளவிலான நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் குறைதீர் ஆணையமாக செயல்படுகிறது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மிக உயர்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 5.
சந்தைகளின் வகைகள் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றி எழுதுக.
விடை:
1) புவியில் இருப்பிடத்தின் அடிப்படையில்.
உள்ளூர் சந்தைகள் :
உள்ளூர் சந்தையில் வாங்குபவர்களும், விற்பவர்களும் உள்ளூர் பகுதியைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.

பிராந்திய சந்தைகள்:
பிராந்திய சந்தைகளானது உள்ளூர் சந்தையைவிட பரந்த அளவிலானவை, அல்லது சில சிறிய மாநிலங்கள் இணைந்த பகுதியாக இருக்கும்.

தேசிய சந்தைகள்:
தேசிய சந்தையில் பொருள்களின் தேவை ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் தேவையாக இருக்கலாம். சர்வதேச சந்தை: தயாரிப்புகளுக்கான தேவை சர்வதேச அளவிலானது

2) நேரத்தின் அடிப்படையில்.
மிகக் குறுகிய கால சந்தை:
பொருள்களின் அளிப்பு நிலையானது

குறுகிய கால சந்தை:
முந்தைய சந்தையை விட சற்று கூடுதல் நேரம் உடையது. நீண்ட கால சந்தை: உற்பத்தியை கணக்கிடுவதன் மூலம் விநியோகத்தை மாற்றி அமைக்கலாம். இத்தகையை சந்தையை தேவைகேற்ப மாற்றலாம்.

3) பரிவர்த்தனையின் அடிப்படையில் உடனடி சந்தை:
பரிவர்த்தனைகள் நிகழும் இடத்திலேயே பணம் உடனடியாக செலுத்தப்படுகிறது. கடன் முறை இல்லை .

எதிர்கால சந்தை:
இது கடன் அடிப்படையிலான பரிவர்த்னைகள் ஆகும்.

4) ஒழுங்குமுறையின் அடிப்படையில்,
ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை:
பொருத்தமான அரசாங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகின்றன.

‘கட்டுப்பாடற்ற சந்தை:
முற்றிலும் கட்டுப்பாடு எதுவுமற்ற சந்தை, கண்காணிப்போ, ஒழுங்குமுறையோ கிடையாது.

5) போட்டியின் தன்மை அடிப்படையில்.
முற்றுரிமை:
இது சந்தை கட்டமைப்பை குறிக்கிறது. ஒரு விற்பனையாளார் அல்லது உற்பத்தியாளர் முழு சந்தையில் கட்டுப்பாட்டை கொண்டு உள்ளார்.

ஏகபோக போட்டி:
ஏராளமான வாங்குபவர்கள் விற்பவர்கள் உள்ளனர். ஒவ்வொரு விற்பனையாளரின் தயாரிப்பும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டுள்ளது.

ஒலிகோபோலி:
இது சந்தை வடிவத்தைக் குறிக்கிறது. ஒரே மாதிரியான அல்லது வேறுபட்ட தயாரிப்புகளில் சில விற்பனையாளர்கள் உள்ளதைக் குறிக்கிறது.

VI. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
இன்றைய நாளில் நம் வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பத்து அத்தியாவசிய பொருட்களின் பெயர் மற்றும் அதன் விலையைப் பட்டியலிடுக.

7th Social  Science Guide சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
முற்றிலும் கட்டுப்பாடு எதுவுமற்ற சந்தை
அ) ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை
ஆ) கட்டுப்பாடற்ற சந்தை
இ) நீண்டகால சந்தை
ஈ) குறுகிய கால சந்தை
விடை:
ஆ) கட்டுப்பாடற்ற சந்தை

Question 2.
கடன் முறை இல்லாத சந்தை ……………………..
அ) உள்ளூர் சந்தை
ஆ) சர்வதேச சச்தை
இ) உடனடிச் சந்தை
ஈ) பிராந்திய சந்தை
விடை:
இ) உடனடிச் சந்தை

Question 3.
பொருள்களின் விலையானது தேவையைப் பொறுத்து அமையும்
அ) மிகக் குறுகிய காலசந்தை
ஆ) குறுகிய கால சந்தை
இ) நீண்ட கால சந்தை
ஈ) மேற்கண்டவற்றில் எதுவுமில்லை
விடை:
அ) மிகக் குறுகிய காலசந்தை

Question 4.
எது நுகர்வோரின் அடிப்படை உரிமைகளில் இல்லாதது?
அ) பாதுகாப்புக்கான உரிமை
ஆ) தேர்ந்தெடுக்கும் உரிமை
இ) குறை தீர்க்கும் உரிமை
ஈ) சமத்துவ உரிமை
விடை:
ஈ) சமத்துவ உரிமை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
விற்பனையாளம் …………. மற்றும் பரிமாற்றங்களை வாங்குபவருக்கு விற்கிறார்
விடை:
பணம்

Question 2.
ஒலிகோபோலி என்ற சொல் இரண்டு…………………… சொற்களிலிருந்து பெறப்பட்டது.
விடை:
கிரேக்க

Question 3.
ஒலிகோய் என்றால் …………… மற்றும் பாலி என்றால் ………….
விடை:
சில, கட்டுக்காடு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 4.
ஏகபோக போட்டி என்ற சொல்லை …………… என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
விடை:
பேராசிரியர் எட்வர்ட். எச். சேம்பர்லின்

Question 5.
…………….. மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையாக உள்ளது.
விடை:
பங்குச்சந்தை

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 3

IV. பின்வரும் கூற்றுகளை ஆய்க

Question 1.
கூற்று : ஒழுங்குமுறை அடிப்படை சந்தையில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் இல்லை.
காரணம் : ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையானது பொருத்தமான அரசாங்க அதிகாரிகளின் கீழ் நடைபெறுகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரி.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

V. சுருக்கமான விடையளி.

Question 1.
நுகர்வோர் என்பவர் யார்?
விடை:
நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை வாங்குதல் அல்லது ஒரு சேவையைப் பெறுவதற்காக அது அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது சுய வேலை வாய்ப்பு மூலம் தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்பவர் ஆவார்.

Question 2.
நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்றால் என்ன?
விடை:
நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்பது ஒரு வர்த்தக நடைமுறை அல்லது எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின் விற்பனை, பயன்பாடு அல்லது விநியோகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக நியாயமற்ற துறையை அல்லது நியாயமற்ற அல்லது ஏமாற்றும் நடைமுற பின்பற்றப்படுவது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

Question 3.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-2019 பற்றி எழுதுக.
விடை:
இந்திய பாராளுமன்றத்தில் ஆகஸ்ட், 2019ஆம் ஆண்டு ஒரு மைல்கல் என்று அழைக்கப்படும் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, 2019-ல் நிறைவேற்றப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் நுகர்வோர்களின் குறைகளை குறித்த நேரத்திலும் பயனுள்ள நிர்வாகத்தையும் நியாயமான தீர்வையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மத்திய அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் முப்பது வருடங்களுக்கு மேலான சட்டமாகும்

பழைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ல் மாற்றங்களை ஏற்படுத்த முற்படுகிறது.

Question 4.
நுகர்வோர் இல்லாதவர் யார்?
விடை:

  • ஒரு நபர் எப்போது நுகர்வோராய் இருக்க இயலாது.
  • எந்தவொரு பொருளையோ வாங்குகிறது அல்லது எந்தவொரு சேவையையோ இலவசமாக பெறுகின்ற போது.
  • வணிக நோக்கத்திற்காக ஒரு சேவையை அமர்த்துவது அல்லது பொருளை வாங்குவது.
  • ஒப்பந்த அடிப்படையில் ஒரு சேவையைப் பெறுவது.

VI. விரிவான விடையளி.

Question 1.
இந்தியாவிலுள்ள நுகர்வோர் நீதிமன்றங்கள் குறித்து விளக்குக.
விடை:
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் :

  • ஒரு தேசிய அளவிலான நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் குறைதீர் ஆணையமாக செயல்படுகிறது.
  • இவ்வகை நுகர்வோர் நீதிமன்றங்கள் மிக உயர்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.
  • இது 1986ஆம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1988ல் அமைக்கப்பட்டது.
  • இதன் தலைமை அலுவலகம் புது டெல்லியில் உள்ளது. இந்த ஆணையம் இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் செயல்படுகிறது.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் :

  • மாநில அளவில் ஒரு நீதிமன்றம் செயல்படுகிறது.
  • இழப்பீடு கோரப்பட்ட வழக்குகள் 20 லட்சத்திற்கும் மேல் இருந்தால் இவ்வாணையம் ஏற்கிறது.
  • மாவட்ட ஆணையத்தின் மேல் முறையீட்டு அதிகார வரம்பை மாநில ஆணையம் கொண்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் :

  • மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் இழப்பீடு 20 லட்சம் வரை விசாரிக்க அனுமதிக்கிறது.
  • மாவட்ட அளவிலான நீதிமன்றம் மாவட்ட அளவில் செயல்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 2 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 4

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

7th Social  Science Guide பெண்கள் மேம்பாடு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல?
அ) மோசமான பேறுகால ஆரோக்கியம்
ஆ) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை
இ) எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவுதல்
ஈ) பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்
விடை:
ஆ) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை

Question 2.
பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை
அ) பெண் குழந்தைகள்; பெண்களின் பிரச்சனை
ஆ) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்
இ) மூன்றாம் உலக நாடுகள் மட்டும்
ஈ) வளர்ந்த நாடுகள் மட்டும்
விடை:
ஆ) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 3.
பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?
அ) பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
ஆ) பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்
இ) மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை
ஈ) மேலே உள்ள அனைத்தும்
விடை:
ஈ) மேலே உள்ள அனைத்தும்

Question 4.
வளரும் நாடுகளில் சிறுவர்களை விட பெண் குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவறவிடுவது ஏன்?
அ) பள்ளிக் கல்வி கட்டணம் உயர்வு காரணமாக, சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்
ஆ) பெண் குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது
இ) குழந்தைத் திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது
ஈ) மேலே உள்ள அனைத்தும்
விடை:
ஈ) மேலே உள்ள அனைத்தும்

II . கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இந்தியாவில் பெண்கள் கல்வியை செயல்வடிவாக்கிய ஜோதிராவ் புலே நினைவில் வைக்கப்படுகிறார் அவர், தனது மனைவியுடன் ………………….. 1848 இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்
விடை:
சாவித்ரிபாய் புலே

Question 2.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண்
விடை:
சுஷ்மா ஸ்வராஜ்

Question 3.
முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) ……….. ஆவார்.
விடை:
காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 4.
புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் ……………
விடை:
அருந்ததி ராய்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 2

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க

Question 1.
பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க
கூற்று (கூ) : இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள்.
காரணம் (கா) : சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.

Question 2.
கூற்று (கூ) : பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது.
காரணம் (கா) : வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண் சிசுக் கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும் .
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பல்வேறு பாத்திரங்களை பற்றி விவாதிக்கவும்.
விடை:

  • சமுதாயத்தில் பெண்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து பல்வேறு உறவுமுறைகளில் தன்னையே ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
  • பெண்கள் தங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை மகளாக, சகோதரியாக மனைவியாக, தாயாக இன்னும் பலவாறாக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
  • எவ்வாறாயினும் அவர்கள் முக்கிய பங்கு வகிப்பது மனைவி மற்றும் தாய் என்பதாகும்.

Question 2.
பாலின சமத்துவம் என்றால் என்ன?
விடை:
பாலின சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரது நடத்தைகளும், தேவைகளும் வேறுபட்டு காணப்பட்டாலும் அவர்கள் சமத்துவமிக்கவர்களாகவே கருதப்படுகின்றனர். அதாவது ஆண், பெண் இருவரும் சமம் என்பதல்ல. ஆனால் அவர்களின் உரிமைகள் பொறுப்புகள், வாய்ப்புகள் இவை அனைத்தும் அவர்கள் ஆண், பெண் என்பதைப் பொறுத்து அமைவதில்லை.

Question 3.
பெண்கள் உரிமையை விளக்குக.
விடை:
பெண்கள் உரிமைகள் அரசியலமைப்பு சட்டத்தின்படி முக்கியமாக சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா பெண்களுக்கு என்று பல உரிமைகளை வகுத்துள்ளது. ஆண், பெண் இருவருக்கும் இடையில் காணப்படும் மணவிலக்கு, சொத்துரிமை, வேலைவாய்ப்பு மற்றும் பல செயல்களில் சட்ட உறுதி வழங்கியுள்ளது.

Question 4.
பெண்களின் மேம்பாட்டிற்கான அத்தியாவசிய காரணிகளை பட்டியலிடுக
விடை:
கல்வி :
ஒருவருக்கு அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் தனித்தன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.

பாலினப்பாகுபாடு:
பாலினப்பாகுபாடு பார்க்கும் சமூகம் எக்காலத்திலும் முன்னுேறுவதற்கான வாய்ப்பு அரிது. சாதி, இன, சமய பாகுபாடுகளை அடிப்படையாக கொண்ட சமூகம், முன்னேற்றம் அடையாது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 5.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதுக.
விடை:

  • 40 ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் அனைவருக்கும் கல்வி என்ற உரிமையை வலியுறுத்தி உள்ளது.
  • கல்வி பெறும் பெண் குழந்தை தாயான பின்பு பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் அரவணைப்பை வழங்குவதன் மூலம் சமுதாயத்திற்குச் சிறப்புச் சேர்க்கிறார்.
  • பெண் குழந்தைகளின் அவசியத் தேவையான கல்வி அறிவினைப் பெறவும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் அதனால் சமூகத்தில் அவர்களின் தகுதிநலை உயரவும், அவர்களின் சுயமுன்னேற்றத்திற்கும் உறுதுணையாய் இருக்கின்றது.

VI. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த ஏதேனும் பத்து பெண்மணிகளைப் பற்றிய படத்தொகுப்பை தயார் செய்க.
விடை:

7th Social  Science Guide பெண்கள் மேம்பாடு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைய காரணமாக அமையாதது எது?
அ) பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை
ஆ) பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை குறைவு
இ) பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது
ஈ) காலம் தாழ்த்திய திருமணம்
விடை:
ஈ) காலம் தாழ்த்திய திருமணம்

Question 2.
இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் …………………….
அ) திருமதி. நிர்மலா சீத்தாராமன்
ஆ) கிரண் பேடி
இ) அருந்ததி ராய்
ஈ) சுஷ்மா சுவராஜ்
விடை:
அ) திருமதி. நிர்மலா சீத்தாராமன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………………. என்பது பெண்களை வலிமையாக்குவது மட்டும் அன்று.
விடை:
பெண்ணியம்

Question 2.
…………………. பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது.
விடை:
கல்வி

Question 3.
………………… பாரம்பரியத்தை உடைத்த முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர்
விடை:
சாவித்ரிபாய் புலே

Question 4.
நீடித்த நிலையான வளர்ச்சிக்கு …………………. மற்றும் …………………… ஆகியன அவசியக் காரணிகள் ஆகும்.
விடை:
பெண்கள் மேம்பாடு பாலின சமத்துவம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 5.
உலகின் மொத்த மக்கள் தொகையில் ………………….. பெண்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விடை:
50%

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 3

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க

Question 1.
பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க
கூற்று (கூ) : உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பெண்களுக்கு அதிகாரமளித்தல் இலக்கை அடைய உண்மையிலேயே செயல்படுகின்றன.
காரணம் (கா) : உலகில் பெண்களை மேம்பாடு அடையச் செய்யாமல் உலக அமைதியையும், செழிப்பையும் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைய காரணம் என்ன?
விடை:
1. பாலின அடிப்படையிலான சமத்துவமின்மை 2. சமூகப்பாகுபாடு மற்றும் பொருளாதார சீரழிவு 3. பெண் குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது 4. பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை குறைவு 5. பள்ளிகளில் குறைந்த தக்கவைப்பு வீதம் மற்றும் அதிக இடைநிற்றல் விகிதம்

Question 2.
பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு என்ன?
விடை:

  • பெண்களின் பொருளாதார வளர்ச்சி அல்லது முன்னேற்றம் சமூகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று.
  • மனித உரிமைகளை முன்னெடுக்கும் போதும் அதன் வளர்ச்சியின் போதும் பெண்கள் மேம்பாடு அவசியமான நடைமுறைகளில் ஒன்றாகும்.
  • நீடித்த நிலையான வளர்ச்சிக்கு பெண்கள் முன்னேற்றம், மேம்பாடு மற்றும் பாலின சமத்துவம் அடைவது ஆகியன அவசியக்காரணிகள் ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு

Question 3.
பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை:

  1. பெண்களின் பொருளாதார மேம்பாடானது, பெண்கள் பாலியல் சமத்துவம் பெறுவதற்கும் உரிமைகளை அடைவதற்கும் வழிவகுக்கிறது.
  2. பெண்களைப் பொருளாதார முன்னேற்றமடைய செய்வதும், உலகில் பாலின இடைவெளிகளை குறைப்பதும் நிலைத்த நீடித்த இலக்கை அடைய உதவுகிறது.
  3. பொருளாதாரம் மேம்பாடு அடைகின்றது.

VI. விரிவான விடையளி

Question 1.
பெண் கல்வியின் இணையற்ற முக்கியத்துவங்கள் யாவை? ஏதேனும் இரண்டை விளக்குக.
விடை:

  1. அதிகரித்த கல்வியறிவு
  2. ஆள் கடத்தல்
  3. அரசியல் பிரதிநிதித்துவம்
  4. வளரும் குழந்தைகள்
  5. காலம் தாழ்த்திய திருமணம்
  6. வருமான சாத்தியம்
  7. மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல்
  8. வறுமை குறைப்பு

கல்வியறிவு:

  • உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோரில் கிட்டத்தட்ட 63 சதவிகிதம் பேர் பெண்கள்.
  • எனவே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும்.
  • அப்போதுதான் பின்தங்கிய நாடுகளும் முன்னேற்றம் அடையும்.

வருமான சாத்தியம்:
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் கூற்றுப்படி கல்வி ஒரு பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது.

ஒரு பெண் ஆரம்பக் கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகின்றது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 1 பெண்கள் மேம்பாடு 4

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

6th Social Science Guide பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடைளி.

Question 1.
பேரிடர் – விளக்குக.
விடை:
ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது.

Question 2.
பேரிடரின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.
விடை:
இயற்கை பேரிடர் மற்றும் மனிதனால் உண்டாகும் பேரிடர்கள் என இருபெரும் பிரிவுகளாகப் பேரிடரைப் பிரிக்கலாம். எ.கா.
இயற்கை பேரிடர் :

  • நிலநடுக்கம்
  • எரிமலை
  • சுனாமி
  • சுறாவளி

மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்

  • நெருப்பு
  • கட்டிடங்கள் இடிந்துபோதல்
  • தீவிரவாதம்
  • கூட்ட நெரிசல்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Question 3.
இடி மின்னல் – குறிப்பு வரைக.
விடை:

  • வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும்.
  • இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒலி அலைகளும் ஏற்படுகிறது.
  • இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிறது.

Question 4.
சென்னை , கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப் படுகின்றன. காரணம் கூறு.
விடை:

  • சென்னை , கடலூர் மற்றும் காவிரி வடி நிலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவக் காற்று மற்றும் வெப்பமண்டல புயல் கடுமையான சூறாவளி மழையை எற்படுத்துகிறது.
  • இந்த மிக கனமழையால் சென்னை , கடலூர் மற்றும் காவிரி வடிநிலப்பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.

Question 5.
நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுப்படுத்துக.
விடை:
நிலச்சரிவு :
பாறைகள், பாறைச் சிதைவுகள், மண் போன்ற பொருட்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது.
பனிச் சரிவு :
பெரும் அளவிலான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு ஆகும்.

II. ஒரு பத்தியில் விடயளி

Question 1.
வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை? செய்யக்கூடாதவை எவை?
விடை:
அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம்.
மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினைத் துண்டிக்க வேண்டும். – கழிப்பிடத்துளை மீதும், கழிவு நீர் வெளியேறும் துளை

  • மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் உடனடியாக வெளியேற வேண்டும்.
  • குடிநீரைக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும்.
  • பிளிச்சிங் பவுடர் கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
  • வயிற்றுப்போக்கு இருந்தால் அதிக அளவில் உணவு உண்ணக் கூடாது.
  • வெள்ளத்தில் மிதந்து வரும் எந்த பொருளையும் எடுப்பதை தவிர்க்கவும்.

III. செயல்பாடு

ஒரு காகிதத்தில் உனது கிராமம்/ நகரம் படம் வரைந்து அதில் உனது பள்ளி, வீடு, விளையாட்டுத்திடல் ஆகியவற்றைக் குறி. பிறகு ஆறுகள் /ஓடைகள்/ஏரி/சாலை போன்றவற்றைக் குறி. இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி.

Question 1.
எந்த இடம் மற்றும் சாலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
விடை:
பள்ளி மற்றும் விளையாட்டு மைதானம்

Question 2.
உன்னால் மீட்பு வழியைக் காணமுடியுமா?
விடை:
முடியும்

Question 3.
நீங்கள் வெள்ளப்பாதிப்பு பகுதியில் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
விடை:

  1. குடியிருப்புப் பகுதி வெள்ளப் பாதிப்பிற்கு உட்படும் தன்மையானதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
  2. முதலுதவிப் பெட்டி, மற்றும் பொருட்களைக் கட்டுவதற்குத் திடமான கயிறு ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Question 4.
நெருக்கடியான காலங்களில் அவசியமான பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பைகளில் உன்னிடம் ஒரு பை உள்ளது என்றால் அதில் என்னென்ன பொருள்கள் எடுத்துச் செல்வாய்?
விடை:
அடையாள அட்டை, பணம், குடிநீர், முதலுதவிப் பெட்டி, துணிகள், மின்னுட்டி

Question 5.
முக்கியமான அவசரக்காலத் தொடர்பு எண்களைக் பட்டியலிடுக.
விடை:

  1. காவல் – 100
  2. மருத்துவ ஊர்தி – 108
  3. தீ – 101
  4. அவசரநிலை – 112

6th Social Science Guide பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உலகில் அதிகமாகப் பேரிடர்கள் நிகழக் கூடிய நாடுகளில் …… ஒன்று
விடை:
இந்தியாவும்

Question 2.
எந்தப் புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ இப்புள்ளி நிலநடுக்கம் …… மையம்
விடை:
எனப்படுகிறது.

Question 3.
நிலநடுக்க மையத்திலிருந்து செங்குத்தாகப் புவிப்பரப்பில் காணப்படும் பகுதி …….. ஆகும்
விடை:
மையப்புள்ளி

Question 4.
….சாலை விதிகளை மீறுவதாலும் கவனக்குறைவாலும் ஏற்படுகின்றன.
விடை:
சாலை விபத்து

Question 5.
…….. நிகழ்ந்த சுனாமி உலகம் இதுவரை கண்டறியாத சுனாமியாக அமைந்தது.
விடை:
சுமித்தரா
தீவுக்:கருகில்

II. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
நிலநடுக்கம் என்றால் என்ன?
விடை:
சிறிய கால அளவில் திடீரென்று பூமியில் ஏற்படக்கூடிய அதிர்வு நிலநடுக்கம் ஆகும்.

Question 2.
சுனாமி என்றால் என்ன?
விடை:
நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் கடலடி நிலச்சரிவுகளால் தோற்றுவிக்கப்படும் பேரலையே சுனாமி.

Question 3.
சூறாவளி எவ்வாறு உருவாகிறது.
விடை:
அதிக அழுத்தம் உள்ள காற்றால் சூழப்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதியில் இருந்து சூறாவளி உருவாகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்

Question 4.
காட்டுத் தீ எவ்வாறு ஏற்படுகிறது?
விடை:
மனிதர்களின் கவனக்குறைவாலும், மின்னல் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தாலும் மேலும் பிற நடைமுறை காரணிகளாலும் காட்டுத் தீ உண்டாகிறது.

Question 5.
கூட்ட நெரிசல் என்றால் என்ன?
விடை:
ஓரிடத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால் ஏற்படும் நெரிசலை கூட்ட நெரிசல் என்கிறோம். இதனால் ஏற்படும் மிதிபடுதல் மற்றம் மூச்சுத்திணறல் காரணமாக காயமடைதலும் மரணமும் ஏற்படுகிறன்றது

III. ஒரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் அல்லது புள்ளியில் மதிப்பீடுகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட எதிர்காலத்தில் நடக்கப்போகும் பேரிடர்களைப் பற்றி கூறுவதாகும்.
விடை:
முன்னறிவிப்பு

Question 2.
நீர் கேரிப்பது குறிப்பாக தேசிய அளவில் மழைநீர் சேகரிக்கப்படும் பகுதி
விடை:
நீர்பிடிப்பு

Question 3.
நேரிடையான அல்லது மறைமுகமான தொடர்பால் ஏற்படும் நோய்
விடை:
தொற்று

Question 4.
பேரிடரின் போது ஏற்படும் இடர்களையும் அவற்றின் அளவையும் குறைத்தல் (அ) தணித்தல் என்பதாகும்
விடை:
தணித்தல்

Question 5.
புவி அதிர்வின் போது அளக்கப்படும் அளவு
விடை:
புவி அதிர்வு
அளவு

V. விரிவான விடையளி

Question 1.
சுனாமியின்போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை விவரி.
விடை:

  • உனது தெரு கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதை அறிய வேண்டும்.
  • மீட்பு வழிகளைத் திட்டமிடுதல் மற்றம் மீட்பு முறைகளைப் பயிற்சி செய்து பார்த்தல்
  • கடல்நீர் உங்களை நோக்கி முன்னேறி வரும்போது உடனடியாகக் கடற்கரை பகுதியிலிருந்து வெளியேறி உயரமான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
  • சுனாமியை வேடிக்கை பார்க்கவோ அல்லது உலாவுவதற்கோ கடலோரப் பகுதிகளுக்குச் செல்லச் கூடாது.
  • சுனாமி பற்றிய உண்மைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 3 பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் 20

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

7th Social  Science Guide இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பொருட்சேதம், உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு இயற்கைக் காரணி ………………….
அ) இடர்
ஆ) பேரிடர்
இ) மீட்பு
ஈ) மட்டுப்படுத்தல்
விடை:
ஆ) பேரிடர்

Question 2.
பேரிடரின் விளைவைக் குறைக்கும் செயல்பாடுகள்.
அ) தயார் நிலை
ஆ) பதில்
இ) மட்டுப்படுத்தல்
ஈ) மீட்பு நிலை
விடை:
இ) மட்டுப்படுத்தல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 3.
ஒரு திடீர் நகர்வு அல்லது புவிமேலோட்டின் திடீர் நடுக்கம் …………………… என அழைக்கப்படுகிறது.
அ) சுனாமி
ஆ) புவி அதிர்ச்சி
இ) நெருப்பு
ஈ) சூறாவளி
விடை:
ஆ) புவி அதிர்ச்சி

Question 4.
கனமழையினால் திடீரென அதிக நீர் வெளியேறுதல் …………………….. என அழைக்கப்படுகிறது.
அ) வெள்ளம்
ஆ) சூறாவளி
இ) வறட்சி
ஈ) பருவ காலங்கள் 15
விடை:
அ) வெள்ளம்

Question 5.
…………………… வைத்துள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சாலை விபத்தினைத் தவிர்க்கலாம்.
அ) ரேஷன் அட்டை
ஆ) ஓட்டுநர் உரிமம்
இ) அனுமதி
ஈ) ஆவணங்கள்
விடை:
ஆ) ஓட்டுநர் உரிமம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மனிதனுக்கும், அவனுடைய உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு ……………
விடை:
பேரழிவுகள்

Question 2.
பேரிடரின் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் …………… என அழைக்கப்படுகிறது.
விடை:
பேரிடர் மேலாண்மை

Question 3.
மிகப்பெரிய அழிவு ஏற்படுத்தும் அலைகளை ஏற்படுத்தும் நீரின் இடப்பெயர்வு ………….. எனப்படும்.
விடை:
சுனாமி

Question 4.
தீ விபத்து ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண் …………..
விடை:
101

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 5.
இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கக்கூடிய பேரிடரின் போது மனித வாழ்க்கை மற்றும் உடைமைகளை ………….. பேரிடர் மேலாண்மை எனப்படுகிறது.
விடை:
பாதுகாப்பது

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 2

IV. பின்வரும் வாக்கியங்களை கருத்திற்கொண்டு சரியான விடையை செய்க

Question 1.
கூற்று (A) : நவீன உலகத்தில் அனுதினமும் மகிழ்ச்சியாக வாழ முடியாது
காரணம் (R) : மாசடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் காரணமாக இயற்கை இடர் மற்றும் பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை

Question 2.
கூற்று (A) : திடீர் நுகர்வு அல்லது பூமியின் மேலேட்டில் ஏற்படும் நடுக்கம் புவி அதிர்ச்சி ஆகும்.
காரணம் (R) : டெக்டானிக் தட்டுகளின் நகர்வு, ஜனநெருக்கடி, பிளவு போன்றவை புவி அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன

அ) கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி மற்றும் கூற்று காரணத்தை விளக்குகிறது.

V. சுருக்கமாக விடையளிக்க

Question 1.
இடர் வரையறு.
விடை:
பொதுவாக இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு, மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும் நிலை, காயம், பொருட்சேதம், சொத்துக்கள் சேதமடைதல், வேலையிழப்பு, சுகாதார பாதிப்புகள், வாழ்வாதார இழப்பு, சமூக, பொருளாதார இடையூறு மற்றும் சுற்றுச்சூழல் சேதம் போன்றவையாகும்.

Question 2.
பேரிடர் என்றால் என்ன?
விடை:
ஒரு பேரிடர் என்பது பொதுவாக “சமூகத்தில் ஒரு கடுமையான இடையூறு, பரவலான பொருள், பொருளாதார, சமூக அல்லது சுற்றுச்சூழல் இழப்புகளை ஏற்படுத்துகிறது. இது பாதிக்கப்பட்ட சமூகத்தின் சொந்த வளங்களைப் பயன்படுத்தி சமாளிக்கும் திறனை மீறுகிறது”.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 3.
பேரிடர் மேலாண்மை சுழற்சியின் ஆறு நிலைகள் யவை?
விடை:

  • தயார் நிலை
  • மட்டுப்படுத்துதல்
  • கட்டுப்படுத்துதல்
  • துலங்கல்
  • மீட்டல்
  • முன்னேற்றம்

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள எச்சரிக்கை அமைப்பு சார்ந்த இரண்டு நிறுவனங்கள் எவை?
விடை:

  • தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை (SDRF)
  • மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA)

Question 5.
வெள்ளத்தினால் ஏற்படும் மூன்று விளைவுகள் பற்றி எழுதுக.
விடை:

  1. சொத்து மற்றும் உயிரிழப்பு
  2. மக்கள் இடப்பெயர்வு
  3. காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதல்.

Question 6.
இரயில் நிலையத்தில் பின்பற்றப்படவேண்டிய நான்கு நடவடிக்கைகள் குறித்து எழுதுக.
விடை:

  • இரயில் பாதுகாப்பு ஆலோசனைகளை தெரிந்து கொண்டு அதன்படி பின்பற்ற வேண்டும். இரயில் எந்த நேரமும், எந்த திசையிலும் வரக்கூடும்.
  • இரயில் நிலைய மேடையின் ஓரங்களில் அமரக்கூடாது.
  • தண்டவாளங்களைக் கடந்து செல்லக்கூடாது.
  • நடைமேடையை பயன்படுத்த வேண்டும்.

Question 7.
தொழிற்சாலை விபத்து அடிக்கடி நிகழக்கூடிய நான்கு வேறுபட்ட தொழிற்சாலைகளைப் பட்டியலிடுக.
விடை:

  • சுரங்கத் தொழிற்சாலை
  • வேதியியல் தொழிற்சாலை
  • அணுமின் தொழிற்சாலை
  • சிமெண்ட் தொழிற்சாலை

VI. வேறுபடுத்துக

Question 1.
புவி அதிர்ச்சி மற்றும் ஆழி பேரலை (சுனாமி).
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 3

Question 2.
வெள்ளம் மற்றும் சூறாவளி.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 4

Question 3.
இடர் மற்றும் பேரிடர்.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 5

VII. விரிவான விடையளி

Question 1.
பேரிடர் மேலாண்மை சுழற்சி பற்றி விளக்குக.
விடை:
பேரிடர் மேலாண்மை நிலைகள் ஆறு படிநிலைகளாகக் கொண்டு பேரிடர் சுழற்சியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பேரிடருக்கு முந்தைய நிலை :
கட்டுப்படுத்துதல் மற்றும் மட்டுப்படுத்துதல் :
எதிர்கால பேரழிவு அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தலின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். பேரழிவைக் குறைத்தல் என்பது தாக்கத்தின் அளவைக் குறைப்பதாகும். மட்டுப்படுத்துதல் என்பது ஆபத்தைக் குறைப்பது மற்றும் பாதிக்கக் கூடிய நிலைமைகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகும்.

தயார்நிலை:
இந்த படிநிலையானது அரசாங்கம், சமூகங்கள் மற்றும் தனி ஒரு மனிதன் பேரிடர் சூழ்நிலைகளை திறம்பட சமாளிக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் உள்ளடக்கியதாகும். உதாரணமாக, அரசின் அவசரநிலை திட்டங்கள், எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துதல், சரக்குகளின் பராமரிப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு, கல்வி மற்றும் தனிநபர் பயிற்சி போன்றவை அடங்கும்.

ஆரம்பகால எச்சரிக்கை :
பேரிடர் ஆரம்பிக்கும் நிலையில் பாதிக்கப்படக் கூடியதாக உள்ள பகுதிகளைப் பார்வை இடுவது மற்றும் பேரிடர் தொடங்க உள்ளது என்ற செய்தியினை மக்களுக்கு பாதிப்பில்லாத வழியில் தெரிவிப்பது போன்றவை ஆரம்ப கால எச்சரிக்கையாகும். பயனுள்ளதாக அமைய, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அளிக்கப்படும் எச்சரிக்கை நிகழ்வுகள் மக்கள் கல்வி மற்றும் பயிற்சியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

பேரிடரின் தாக்கம் :
பேரிடரின் தாக்கம் என்பது பேரிடர் நிகழும் கால அளவு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் குறிக்கும். பேரிடர் நிகழும் கால அளவு என்பது அச்சுறுத்தலின் வகையைப் பொறுத்து அமையும். புவி அதிர்ச்சியின்போது நில நடுக்கமானது சில நொடிகள் நிகழும். அதுவே, ஆழிப்பேரலை ஏற்பட காரணமாகிறது.

பேரிடரின் போது:
துலங்கல்:
கட்டுப்பாட்டு அறைகளை அமைத்தல், தற்செயல் திட்டத்தை செயல்படுத்துதல், எச்சரிக்கை விடுதல், வெளியேற்றுவதற்கான நடவடிக்கை, மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது, தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குதல். ஒரே நேரத்தில் நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட எந்தவொரு பேரிடருக்கும் இது முதல் கட்ட பதிலைக் குறிக்கிறது.

பேரிடருக்குப் பின் மீட்பு நிலை:
மீட்புநிலை என்பது அவசரகால நிவாரணம் வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு போன்ற 3 நிலைகளை உள்ளடக்கியது.

வளர்ச்சி:
வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் என்பது தற்போதைய செயல்பாடு ஆகும். நீண்ட காலத் தடுப்பு மற்றும் பேரிடரைக் குறைத்தல் என்பது வெள்ளப்பெருக்கினைத் தடுக்கும் வகையில் ஏரிக்கரை கட்டுதல், வறட்சியை ஈடுகட்ட நீர்ப்பாசன வசதிகள் செய்தல், நிலச்சரிவினைச் சரிசெய்ய மரம் நடுதல், சூறாவளி காற்று மற்றும் நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் வீடுகள் கட்டுதல் ஆகியவை அடங்கும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 2.
வெள்ளம் மற்றும் அதன் விளைவுகளையும் அதனை மட்டுப்படுத்துதல் பற்றியும் விளக்குக.
விடை:
வெள்ளப்பெருக்கு:
கனமழை, புயல், பனி உருகுதல், ஆழிப்பேரலை (சுனாமி) அல்லது அணைக்கட்டு உடைதல் போன்றவற்றால் திடீரென ஏற்படும் அதிக அளவிலான நீர் வெளியேறுதலே வெள்ளப்பெருக்கு என்கிறோம்.

பாதிப்புகள்:

  1. சொத்து மற்றும் உயிரிழப்பு
  2. மக்கள் இடப்பெயர்வு
  3. காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுதல்.

மட்டுப்படுத்துதல் :

  • வெள்ளநீர் வடிய ஏற்பாடு செய்தல், வெள்ளப்பெருக்கினை தடுக்கும் வகையில் ஏரிக்கரை கட்டுதல்.
  • மக்களையும் அவர்கள் உடைமைகளையும் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்புதல்

Question 3.
ஏதேனும் 5 பொதுவான வாழும் நுட்பங்கள் பற்றி எழுதுக.
விடை:
புவி அதிர்ச்சியின் போது மேஜையின் கீழ் செல். தரையில் மண்டியிடு மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உறுதியான சுவற்றின் அருகில் செல், தரையில் அமர் மற்றும் தரையை இறுகப் பிடித்துக்கொள் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். டார்ச் விளக்கினை மட்டும் பயன்படுத்தவும்.

தீ விபத்து எனில் அவசர சேவைக்கு 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஒருவருக்கு ஆடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், அவரை ஓடாமல் தரையில் படுத்து உருள செய்ய வேண்டும்.

சாலை விபத்தினைத் தவிர்க்க வேண்டுமெனில், ஓட்டுநர் உரிமம் பெற்றவரை மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போதும், வாகனத்தை இயக்கும் போதும் பின்பற்றபட வேண்டிய சாலைவிதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இரயில் நிலைய மேடையின் ஓரங்களில் அமரக்கூடாது.

Question 4.
புவி அதிர்ச்சி, அதன் பாதிப்புகள் மற்றும் மட்டுப்படுத்துதல் படிநிலைகள் பற்றி எழுதுக.
விடை:
புவி அதிர்ச்சி:
ஒரு திடீர் நகர்வு (அல்லது) புவி மேலோட்டில் ஏற்படும் நடுக்கத்தை நிலநடுக்கம் என அழைக்கின்றோம். புவித்தட்டுகளின் நகர்வு, நிலச்சரிவு, மற்றும் மேற்பரப்பு பிளவு போன்றவை நிலநடுக்கத்திற்கு காரணமாகின்றன.

பாதிப்புகள்:
அதிகப்படியான நில நடுக்கத்தால் கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் அணைக்கட்டுகள் இடிந்து சேதமடைகிறது. நிலநடுக்கத்தால், வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு, தீ, மின்சாரம் துண்டிக்கப்படுதல் மற்றும் நீர் குழாய்கள் உடைதல் போன்றவை நிகழ்கின்றன. இது ஆற்றின் பாதையைக்கூட மாற்றியமைக்கிறது.

பேரிடருக்கு முந்தைய நிலை:

  • அவசரநிலை திட்டங்கள்
  • எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்துதல்
  • சரக்குகளின் பராமரிப்பு
  • பொது மக்கள் விழிப்புணர்வு

பேரிடரின் போது:

  • செயல்படுத்துதல், எச்சரிக்கைவிடுதல், வெளியேற்றுவதற்கான நடவடிக்கை
  • பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வது

பேரிடருக்குப்பின் மீட்பு நிலை:
மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு

VIII. உயர்சிந்தனை வினாக்கள்

Question 1.
நான் ஏன் இயற்கை பேரிடர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?
விடை:
பேரிடருக்குப்பின் மீட்டெடுத்தல் என்பதை விட இயற்கைப் பேரிடரை மட்டுப்படுத்துதல் என்பது குறைந்த செலவுடையதாகும். இடரை மட்டுப்படுத்துதல் என்பது எதிர்கால பேரிடர் விளைவுகளைக் குறைப்பதற்கான செயல்திட்டம் ஆகும்.

நிறுவன மற்றும் செயல்பாட்டு திறன்கள் வளர்த்தல், சமாளிக்கும் திறனை அதிகப்படுத்துதல் போன்றவை பேரிடர் மேலாண்மை எனப்படும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 2.
இந்தியாவில் நிலச்சரிவு அடிக்கடி நிகழும் 4 இடங்களைப் பட்டியலிடுக.
விடை:

  • மேற்கு கடற்கரைப் பகுதி மற்றும் கொங்கண மலைப்பகுதி
  • கிழக்கு கடற்கரைப் பகுதி
  • வடகிழக்கு மலைப்பகுதிகள்
  • வடமேற்கு மலைப்பகுதிகள்

7th Social  Science Guide இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Additional important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
2004 சுனாமிக்குப் பிறகு, தமிழகத்தைத் தாக்கிய மிக மோசமான புயல் ………………..
அ) கஜா
ஆ) தானே
இ) மகா
ஈ) ஒக்கி
விடை:
அ) கஜா

Question 2.
…………………… மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைக்கு பொறுப்பு ஆகும்.
அ) தமிழ் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்
ஆ) மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்
இ) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஈ) விண்வெளித்துறை
விடை:
ஆ) மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம்

Question 3.
………………….. என்பது மக்கள் கூட்டத்தில் திடீரென ஏற்படும் பாதிப்பை குறிக்கும்.
அ) சுனாமி
ஆ) வெள்ளப்பெருக்கு
இ) சூறாவளி
ஈ) நெரிசல்
விடை:
ஈ) நெரிசல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
……….. ஓரங்களில் அமரக்கூடாது.
விடை:
இரயில் நிலைய மேடையின்

Question 2.
சுனாமி என்ற சொல் …………………… சொல்லிலிருந்து பெறப்பட்டது.
விடை:
ஜப்பானிய

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 3.
………… மற்றும் ……….. இரண்டுமே பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
விடை:
இடர், பேரிடர்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 6

IV. பின்வரும் வாக்கியங்களை கருத்திற்கொண்டு சரியான விடையை செய்க

Question 1.
கூற்று (A) : இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும்.
காரணம் (R) : ஹரிக்கேன் என்பது ஒரு இயற்கை இடர். இந்த சூறாவளி நிலத்தை அடையும் பொழுது கட்டடங்களையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்துகிறது.

அ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்கவில்லை
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி; கூற்று காரணத்தை விளக்குகிறது.

V. சுருக்கமாக விடையளி

Question 1.
நெரிசல் – வரையறு.
விடை:
நெரிசல் என்பது மக்கள் கூட்டத்தில் திடீரென ஏற்படும் பாதிப்பை குறிக்கும். காயங்கள், மூச்சுத்திணறல் மற்றும் மிதித்தலினால் ஏற்படும் காயம், போன்றவை இதன் விளைவாக அமையும். பெரிய அளவிலான மக்கள் நெரிசலினால் ஏற்படும் பேரிடர் எளிமையான கூட்ட மேலாண்மை உத்திகளால் தடுக்க முடியுமென நம்பப்படுகிறது.

Question 2.
தீ விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?
விடை:
தீ என்பது ஒரு பேரிடர். அது குறுகிய மின்சுற்று, வேதியியல் தொழிற்சாலை. தீப்பெட்டி மற்றும் வெடி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தினைக் குறிக்கும்.

Question 3.
தீயின் மூன்று அம்சங்கள் யாவை?
விடை:

  • கண்டறிதல்
  • தடுத்தல்
  • அணைத்தல்

Question 4.
தொழிற்சாலை பேரிடர் என்றால் என்ன?
விடை:
தொழிற்சாலையானது அதன் உற்பத்தி, மற்றும் எஞ்சிய கழிவுகளை அகற்றுதல், அணுமின் மற்றும் வேதியியல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களால் பல ஆபத்துக்களை எதிர் கொள்கின்றன. உதாரணம்: போபால் விஷவாயு கசிவு.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்

Question 5.
இடரை மட்டுப்படுத்துதல் முக்கியமானது ஏன்?
விடை:
பேரிடருக்குப்பின் மீட்டெடுத்தல் என்பதை விட இயற்கைப் பேரிடரை மட்டுப்படுத்துதல் என்பது குறைந்த செலவுடையதாகும். இடரை மட்டுப்படுத்துதல் என்பது எதிர்கால பேரிடர் விளைவுகளைக் குறைப்பதற்கான செயல்திட்டம் ஆகும்.

VI. விரிவான விடையளி

Question 1.
புயல் என்றால் என்ன? அதன் பாதிப்புகள் யாவை?
விடை:
புயல் :
உயர் அழுத்தத்தால் சூழப்பட்ட குறைவழுத்தப் பகுதியில் உருவாகும் காற்று “புயல்” என அழைக்கப்படுகிறது.

பாதிப்புகள்:
வெப்ப மண்டல சூறாவளியால் உருவாகும் முக்கிய பாதிப்புகளில் கனமழை, பலத்த காற்று, கரையின் அருகில் பெரிய புயல் மற்றும் சுழல்காற்று உள்ளடங்கும்.

Question 2.
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அண்மையில் ஏற்பட்ட இடர்கள் பற்றி எழுதுக.
விடை:
2018மே2மற்றும் 3 தேதியில் அதிகதிசைவேகத்துடன்வீசிய புழுதிப்புயல் வட இந்தியாவின் ஒரு பகுதியைத் தாக்கியது. அதில் உத்திரபிரதேசத்தில் 43 பேர், இராஜஸ்தானில் 35 பேர் மற்றும் பிற மாநிலத்திலும் பலர் இறந்தனர். 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த காற்றானது 8000 மின்கம்பங்களை கீழே சாய்த்தது. நூற்றாண்டுகளாக வாழ்ந்த மரங்களையே வேரோடு சாய்த்தது.

2004 சுனாமிக்குப் பிறகு, தமிழகத்தைத் தாக்கிய மிக மோசமான புயல் கஜா. இது கடலோர மாவட்டங்களில் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியது, குறிப்பாக வேளாண்மையை சீர்குலைத்தது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 3 இயற்கை இடர்கள் - பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் 7

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

7th Social  Science Guide நிலவரைபடத்தை கற்றறிதல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நிலவரைபடம் உருவாக்குதலின் அறிவியல் பிரிவு என அழைக்கப்படுகிறது …………………….
அ) புவியியல் (ஜியோகிராஃபி)
ஆ) கார்டோகிராஃப்ட்
இ) பிஸியோகிராபி
ஈ) பௌதீக புவியியல்
விடை:
ஆ) கார்டோகிராஃப்ட்

Question 2.
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கும் …………………. திசைகள் ஆகும்.
அ) முக்கியமான
ஆ) புவியியல்
இ) அட்சரேகை
ஈ) கோணங்கள்
விடை:
அ) முக்கியமான

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 3.
கலாச்சார நிலவரை படங்கள் என்பன ……………………. அமைப்புகளைக் காட்டுகின்றன.
அ) இயற்கையான
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட
இ) செயற்கையான
ஈ) சுற்றுச்சூழல்
விடை:
ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக …………………. அமைகிறது.
விடை:
நிலவரைபடம்

Question 2.
முதன்மை திசைகளுக்கு இடையே உள்ள திசைகள் இடைநிலை ………………… எனப்படும்.
விடை:
திசைகள்

Question 3.
நிலவரைபடத்தில் உள்ள …………………. வரைபடத்தில்பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் மற்றும் சின்னங்களை விளக்குகிறது.
விடை:
குறிப்பு

Question 4.
காடாஸ்ட்ரல் நிலவரைபடங்கள் …………………… என அழைக்கப்படுகின்றன
விடை:
கிராமம் (அல்லது) நகர்ப்புற நிலவரைபடம்

Question 5.
சிறிய அளவை நிலவரைபடங்கள் ……… மற்றும் ………. போன்ற அதிக பரப்பளவு இடங்களைக் காட்ட உதவுகின்றன.
விடை:
கண்டங்கள், நாடுகள்

III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக

Question 1.
வடகிழக்கு, அளவை, வடமேற்கு மற்றும் கிழக்கு.
விடை:
அளவை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 2.
வெண்மை , பனி, உயர்நிலம் மற்றும் சமவெளி.
விடை:
வெண்மை

Question 3.
நில அமைப்பு நிலவரைபடம், மண் நிலவரைபடம், இயற்கை அமைப்பு நிலவரைபடம் மற்றும் நிலவரைபட நூல்.
விடை:
நிலவரைபட நூல்

Question 4.
வானிலை முன்னறிவிப்பு, காலநிலை, மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை.
விடை:
காலநிலை

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 2

V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க

Question 1.
i. நிலவரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நிலவரைபடங்கள் கட்டமைக்கப்பட்ட நகர் தொகுதி ஆகும்.
ii. நிலவரைபட நூலின் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன.
iii. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

அ) 1 மற்றும் iii சரி
ஆ) ii மற்றும் iii சரி
இ) i மற்றும் ii சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iii சரி

Question 2.
கூற்று 1 : உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமாண மாதிரி.
கூற்று 2 : இதனை இது கையாள்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும் எளிது. சுருட்டியோ அல்லது மடித்தோ கையில் எடுத்துச் செல்வதற்கும் எளிது.

அ) கூற்று 1 சரி, 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று 1 சரி, 2 தவறு

VI. பின்வருவனவற்றிற்கு பெயரிடுக

Question 1.
தட்டையான பரப்பில் பூமியைக் குறிப்பது.
விடை:
நிலவரைபடம்

Question 2.
நிலவரைபடத்தில் உள்ள தூரத்திற்கும் நிலத்தில் உள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம்.
விடை:
அளவை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 3.
தரைவழி மற்றும் சாலைவழி போக்குவரத்தினைக் காட்ட உதவும் குறியீடு.
விடை:
போக்குவரத்து நிலவரைபடம்

Question 4.
வேறுபட்ட நிலவரைபடங்களை உள்ளடங்கிய புத்தகம்.
விடை:
நிலவரைபட நூல்

Question 5.
நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலவரைப்படம்.
விடை:
அரசியல் நிலவரைபடம்

VII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க

Question 1.
நிலவரைப்படம் என்றால் என்ன?
விடை:
நிலவரைபடம் :
நிலவரைபடம் என்பது புவியின் முழு பகுதி அல்லது ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவையில் வரையப்படுவதாகும்.

நிலவரைபடமானது கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள், மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் விவரங்களைக் காட்டுவதாக வரையப்படுகிறது.

Question 2.
கார்டோகிராஃபி என்றால் என்ன?
விடை:
கார்டோகிராஃபி:
நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல் என்பது கார்டோகிராஃபி என – அழைக்கப்படுகிறது. (கார்டே – நிலவரைபடம் ; கிராபிக் – வரைதல்)

Question 3.
முதன்மை திசைகள் யாவை?
விடை:
முதன்மை திசைகள்: –

  • வடக்கு
  • கிழக்கு
  • மேற்கு
  • தெற்கு

Question 4.
நிலவரைபட நூல் என்பது என்ன?
விடை:
நிலவரைபட நூல்:

  1. நிலவரைபட நூல் என்பது பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம் ஆகும்.
  2. நிலவரைபட நூல் படங்கள் அதிக பரப்பளவிலான கண்டங்கள் மற்றும் நாடுகளைக் காட்டும் சிறிய அளவை வரைபடங்களைக் கொண்டது.

Question 5.
நிலவரைபட நூலின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:
நிலவரைபட நூலின் வகைகள்:

  • பள்ளி நிலவரைபட நூல்
  • மேம்படுத்தப்பட்ட நிலவரைபட நூல்
  • பிராந்திய நிலவரைபட நூல்
  • தேசிய நிலவரைபட நூல்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 6.
நிலவரைபடத்தின் பயன்கள் யாவை?
விடை:
நிலவரைபடத்தின் பயன்கள்:

  • ஓர் இடத்தினை நேரில் சென்று பார்க்காமல் நிலத்தோற்றம் மற்றும் நில அமைப்புகளின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.
  • நிலவரைபடங்கள் இராணுவத்தின் திட்டமிடல் பணியில் மகத்தான செயல்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
  • விமானங்கள் குறிப்பிட்ட இடத்தை சேரவும், கப்பல் கடலில் பாதுகாப்பாக செல்லவும் உதவுகின்றது.
  • நிலவரைபடங்கள் வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.

VIII. விரிவான விடையளிக்க

Question 1.
நில வரைபடத்தின் முக்கிய கூறுகள் யாவை? அவற்றைப் பற்றி எழுதுக?
விடை:
நில வரைபடத்தின் முக்கிய கூறுகள்:

  • தலைப்பு
  • திசை
  • அளவை
  • குறிப்பு (அல்லது) சின்னங்களின் விளக்கங்கள் போன்றவை நிலவரைபடத்தின் அடிப்படைக்கூறுகள் ஆகும்.

தலைப்பு:

  • ஒவ்வொரு நிலவரைபடமும் அப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விவரிக்கும் தலைப்பினை கொண்டிருக்கும்.
  • இந்திய நதிகள் என்ற தலைப்பு கொண்ட நிலவரைபடம் இந்திய நதிகளைப் பற்றி விளக்குவதாகும்.

திசைகள் :
வரைபடங்கள் பொதுவாக வடக்கு நோக்கிய நிலையில் வரையப்படுகிறது. வடக்கு என்பது ‘எனும் எழுத்தால் அம்புக்குறியீட்டுடன் குறிக்கப்படுகிறது. அது நிலவரைபடத்தில் மற்ற திசைகளை (கிழக்கு, மேற்கு, தெற்கு) கண்டறிய உதவுகிறது.

அட்சரேகைகள் மற்றும் தீர்க்கரேகைகள் விளிம்புகளில் வரையப்படுகிறது.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 3

அளவை:

  • நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரத்திற்கும் நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையேயுள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம் நிலவரைபடத்தின் அளவை எனப்படும்.
  • 1 செ.மீ. = 10 கி.மீ நிலவரைபடத்தில் 1 செ.மீ. = நிலத்தில் 10 கி.மீ.)

குறிப்பு:

  • நிலவரைபடத்தில் வேறுபட்ட இயற்கை மற்றும் கலாச்சார அம்சங்களைக் காட்ட பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் மற்றும் குறியீடுகளைக் குறித்து விளக்குவது.
  • தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சின்னம் மற்றும் குறியீடுகள் மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன.

Question 2.
நில வரைபடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வழிகள் யாவை?
விடை:
நில வரைபடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வழிகள் :

  • நிலவரைப்படம் என்பது புவியின் முழு பகுதி (அல்லது) ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவையில் வரையப்படுவதாகும்.
  • அவை கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள், மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் உட்பட சில குறிப்பிட்ட விவரங்களைக் காட்டுவதாக வரையப்படுகிறது.
  • நிலவரைபடங்கள் அமைப்புகள் குறித்து புரிந்து கொள்ள வழி வகுக்கின்றது.
  • இயற்கை அமைப்புகள் (மலைகள், பீடபூமிகள், சமவெளிகள்)
  • நீர்நிலை அமைப்புகள் (ஆறு, ஏரி, கடல்)
  • கலாச்சார அமைப்புகள் (சாலைகள், குடியிருப்புகள்)

Question 3.
கருத்தின் அடிப்படையில் வரைபடத்தை வகைப்படுத்தவும்?
விடை:

  • நிலவரைபடம் புவியின் முழு பகுதி (அல்லது) ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் வரையப்பட்டதாகும்.
  • ஒவ்வொரு நிலவரைபடமும் அதன் வடிவமைப்பு, பொருளடக்கம் மற்றும் கட்டமைப்பில் தனித்துவமுடையது.
  • பொதுவான சில அமைப்புகளின் அடிப்படையில் நிலவரைபடங்கள் பலவகைப்படும். (அளவை, கருத்து)

கருத்தின் அடிப்படையிலான நிலவரைபடங்கள் :

  • நிலத்தோற்ற வரைபடம்
  • புவியியல் வரைபடம்
  • காலநிலை வரைபடம்
  • மண் நிலவரைபடம்
  • கலாச்சார நிலவரைபடம்
  • அரசியல் நிலவரைபடம்
  • மக்கள் தொகை நிலவரைபடம்
  • பொருளாதார நிலவரைபடம்
  • போக்குவரத்து நிலவரைபடம்
  • கருத்து நிலவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 4.
நில வரைபடம் மற்றும் புவி மாதிரிகளை வேறுபடுத்தி எழுதுக?
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 4

Question 5.
அளவையின் அடிப்படையில் நில வரைப்படத்தின் வகைகளை விரிவாக எழுது?
விடை:
நிலவரைபடத்தின் அளவை = நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரம் : நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரம்.

அளவையின் அடிப்படையில் நிலவரைபடங்கள் :

  • பெரிய அளவை நிலவரைபடம்
  • நிலஅளவைப் படங்கள்
  • தலவரைபடம்
  • சிறிய அளவை வரைபடங்கள்
  • சுவர் வரைபடங்கள்
  • நிலவரைபட நூல்

பெரிய அளவை நில வரைபடம் :

  • குறைந்த பரப்பு இடங்கள் குறித்த அதிக விவரங்கள்.
  • ஒப்பீட்டளவில் பெரிய பகுதிகளில் வரையப்படுகிறது.

நிலஅளவைப் படங்கள் :
கிராமம் மற்றும் நகர்ப்புற நிலம் மற்றும் வீடு இருப்பிடம் குறித்து விளக்கம்.

தல வரைபடம்:
சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்கள் தருவன. இந்திய நில ஆய்வு மையத்தால் (சர்வே ஆப் இந்தியா) தயாரிக்கப்படுகிறது. (அமைப்புகள் – குன்றுகள், பள்ளத்தாக்குகள், கட்டடங்கள், சாலைகள், கால்வாய்கள்).

சிறிய அளவை வரைபடங்கள்:

  • பெரிய அளவிலான பகுதிகள் (கண்டங்கள் அல்லது நாடுகள்)
  • அளவை : 1 செ.மீ = 1000 கி.மீ.

சுவர் வரைப்படங்கள் :
வகுப்பறைகளிலும், அலுவலகங்களிலும் பயன்படுகிறது. குறைந்த அளவு விவரங்களுடன் அதிக பரப்பளவு இடங்கள்.

நிலவரைபட நூல்:
பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம்.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
பயணிகளின் முதன்மை கருவி நிலவரைபடம் ஏன்?
விடை:
பயணிகள் முதன்மை கருவி நிலவரைபடம்
ஏனெனில்
நிலவரைபடத்தினை வாசித்தல் என்பது புவியியல் ரீதியான இருப்பிடம், இயற்கை அமைப்புகள், நீர்நிலை அமைப்புகள் மற்றும் கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள வழிவகுக்கின்றது. வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை காட்டுகின்றன.

நிலவரைபடம் கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள் மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் பற்றிய விவரங்களைக் காட்டுகிறது.

போக்குவரத்து நிலவரைபடங்கள் சாலைகள், இருப்புப்பாதை, இரயில்வே நிலையம், விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றைக் காட்டுகின்றன.

மின்னணு வரைபடங்கள் உலகம் முழுவதும் அமைந்துள்ள புவியியல் பகுதிகள் மற்றும் தலங்களைக் குறித்து அதிகப்படியான தகவல்களை வழங்குகிறது.

X. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
இந்திய நிலவரைபடத்தில் பின்வரும் அமைப்புகளை உரிய சின்னங்கள் மற்றும் வண்ணங்களைக் கொண்டு குறித்துக் காட்டுக.
அ) ஏதேனும் இரண்டு மாவட்டத் தலைநகரங்களைக் குறித்துக்காட்டுக.
ஆ) ஏதேனும் ஒரு ஆற்று வழிப்பாதையை வரைந்திடுக.
இ) ஏதேனும் ஒரு மலையைக் குறித்துக்காட்டு. – (வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 2.
கொடுக்கப்பட்டவற்றிற்கு மரபுச் சின்னங்கள் மற்றும் குறியீடுகளை வரைந்திடுக.
அ) பாலம்
ஆ) கால்வாய்
இ) அணைக்கட்டு
ஈ) கோவில்
உ) காடு
ஊ) இரயில்வே நிலையம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 5

7th Social  Science Guide நிலவரைபடத்தை கற்றறிதல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நிலவரைபடம் ……………….. ஒரு முக்கிய கருவியாக அமைகிறது.
அ) புவியியலாளர்
ஆ) மண்ணியலாளர்
இ) சுற்றுலா பயணி
ஈ) பயணி
விடை:
அ) புவியியலாளர்

Question 2.
நிலவரைபடத்தை வரைந்து உருவாக்குபவர் ……………………
அ) கார்டோகிராஃபர்
ஆ) கார்டியாலஜிஸ்ட்
இ) ஆர்க்கிடெக்ட்
ஈ) ஆர்ட்டிஸ்ட்
விடை:
அ) கார்டோகிராஃபர்

Question 3.
நிலவரைபடத்தின் தேவையான அடிப்படைக்கூறு …………………
அ) திசை
ஆ) வண்ண ம்
இ) குறியீடு
ஈ) எழுத்துக்கள்
விடை:
அ) திசை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
ஒவ்வொரு நிலவரைபடமும் அதன் வடிவமைப்பு, பொருளடக்கம் மற்றும் கட்டமைப்பில் …………………….
விடை:
தனித்துவமுடையது

Question 2.
மின்ன ணு வரைபடங்கள் என்பது …………………… சேவைப்பகுதி .
விடை:
வலைதள

Question 3.
…………………… என்பது புவியின் முப்பரிமாண அமைப்பு.
விடை:
புவிமாதிரி

Question 4.
……………………. நிலவரைபடத்தில் பயன்படுத்த வேண்டிய முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளின் தொகுப்பினைத் தயாரித்துள்ளது.
விடை:
இந்திய நிலஅளவைத்துறை .

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 5.
…………………… என்பது புவியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் வரைவதாகும்.
விடை:
நிலவரைபடம்

III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக

Question 1.
விலங்குகளின் தோல், மின்னணு, ஈரநிலம், களிமண் பலகைகள்.
விடை:
மின்னணு

Question 2.
பள்ளத்தாக்குகள், சமவெளிகள், பீடபூமிகள், தொழிற்சாலைகள்.
விடை:
தொழிற்சாலைகள்

Question 3.
ஆறு, ஏரி, கடல், மலை .
விடை:
மலை

Question 4.
கட்டடங்கள், பயிர் வகைகள், சாலைகள், கால்வாய்கள்.
விடை:
பயிர்வகைகள்

IV. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 6

V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க

Question 1.
i) நிலவரைபடங்கள் நமக்கு அதிக விவரங்களைக் கொடுக்கக்கூடியது.
ii) ஒவ்வொரு நிலவரைபடத்திற்கும் குறிப்பு உண்டு.
iii) நிலவரைபடங்கள் வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.

அ) i மற்றும் iii சரி
ஆ) ii மற்றும் iii சரி
இ) i மற்றும் ii சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iii சரி

Question 2.
கூற்று 1: நிலவரைபடங்கள் வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை படங்களாகக் காட்டுகின்றன.
கூற்று 2 : நிலவரைபடங்கள் இராணுவத்தினருக்கு முக்கியமல்ல

அ) கூற்று 1 சரி, 2 தவறு
ஆ) கூற்று 1 தவறு, 2 சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று 1 சரி, 2 தவறு

VI. பின்வருவனவற்றிற்கு பெயரிடுக

Question 1.
நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல்.
விடை:
கார்டோகிராஃபி

Question 2.
1 செ.மீ = 1000 கி.மீ. வகை வரைபடம்.
விடை:
சிறிய அளவை வரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 3.
தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான சின்னம் மற்றும் குறியீடுகள்.
விடை:
மரபுக்குறியீடுகளின் சின்னங்கள்

Question 4.
நிலம் மற்றும் வீட்டின் இருப்பிடம் குறித்து விளக்கும் நிலவரைபடம்.
விடை:
நிலஅளவைப் படங்கள்

Question 5.
வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படும் நிலவரைபடங்கள்
விடை:
சுவர் வரைபடங்கள்

VII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க

Question 1.
ஆரம்பகாலங்களில் நிலவரைபடம் தயாரிக்க பயன்பட்ட பொருட்கள் யாவை?
விடை:
நிலவரைபடம் தயாரிக்க பயன்பட்ட பொருட்கள் :

  • காகிதத்தோல் – விலங்குகளின் தோல்
  • பாப்பிரஸ் துணிகள்
  • ஈரநிலம்
  • களிமண் பலகைகள்

Question 2.
இயற்கையமைப்பு நிலவரைபடங்களில் காணப்படும் இயற்கைக் கூறுகள் யாவை?
விடை:
இயற்கையமைப்பு நிலவரைபடங்களில் காணப்படும் இயற்கைக் கூறுகள்:

  • நிலத்தோற்றம் (மலை)
  • பாறையியல்
  • மண்
  • மண்
  • வடிகால்
  • வானிலை கூறுகள்
  • தாவரங்கள்

Question 3.
தலவரைபடம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
தலவரைபடம்:
தலவரைபடம் சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்களைத் தருவன. இவை இந்தியாவின் நில ஆய்வு மையத்தால் (சர்வே ஆப் இந்தியா) தயாரிக்கப்படுகிறது.

இவை பெரிய அளவை நிலவரைபடங்கள். இவை இயற்கை அமைப்புகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றை விளக்குகின்றன.

Question 4.
நிலவரைபடத்திற்குத் தேவையான அடிப்படைக் கூறுகள் யாவை?
விடை:
தேவையான அடிப்படைக் கூறுகள்:

  • தலைப்பு
  • திசைகள்
  • அளவை
  • குறிப்பு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல்

Question 5.
நிலவரைபடத்தில் உண்மையான வடிவத்தைக் காண்பிப்பது ஏன் கடினம்?
விடை:
நிலவரைபடத்தில் உண்மையான வடிவத்தைக் காண்பிப்பது கடினம், ஏனெனில்
உண்மையான அளவில் அவற்றை வரைய போதுமான இடமில்லை.

உண்மை வடிவங்கள்:

  • குடியிருப்புகள்
  • பாலங்கள்
  • தபால் நிலையங்கள்
  • இரயில்வே பாதைகள்
  • காடுகள்

Question 6.
நிலவரைபடத்தில் பயன்படும் ஏதேனும் நான்கு நிறங்களையும் அவை குறிக்கும் அமைப்புகளையும் எழுது?
விடை:
நிறங்கள் – அமைப்புகள்

  • வெள்ளை – பனி
  • பச்சை – காடுகள்
  • நீலம் – நீர்நிலைகள்
  • பழுப்பு – மலை, குன்று

VIII. விரிவான விடையளி

Question 1.
மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் (அல்லது) முறைக்குறிகளும் குறியீடுகளும் – விளக்குக.
விடை:
மரபுக்குறியீடுகளின் சின்னங்கள்:
தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான சின்னம் மற்றும் குறியீடுகள் மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

நிலவரைபடத்தின் புவிக்கூறுகள், முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளாக காட்டப்படுகின்றன. இவை கோட்டுக்குறியீடுகள் (அல்லது) நிறங்கள் போன்றவற்றால் காட்டப்படுகின்றன.
வெள்ளை → பனி
மஞ்சள் → விவசாயம்
பச்சை → காடுகள்
நீலம் → நீர்நிலைகள்
பழுப்பு → மலை, குன்று
சிவப்பு → குடியிருப்பு, சாலை
கருப்பு → இரயில்பாதை

இந்திய நில அளவைத் துறையானது (சர்வே ஆப் இந்தியா) நிலவரைபடத்தில் பயன்படுத்த வேண்டிய முறைக்குறிகள் மற்றும் குறியீடுகளின் தொகுப்பினைத் தயாரித்துள்ளது.
எ.கா:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 7

Question 2.
சிறு குறிப்பு வரைக.
அ) காலநிலை வரைபடங்கள்
ஆ) அரசியல் நிலவரைபடங்கள்
இ) பொருளாதார நிலவரைபடங்கள்
விடை:
அ) காலநிலை வரைபடங்கள்:
வெப்பநிலை பரவல், மழையளவு, மேகமூட்டம், ஒப்பு ஈரப்பதம், காற்று வீசும் திசை, வேகம் மற்றும் சில வானிலை கூறுகளைக் குறித்து காட்டுகின்றன.

ஆ) அரசியல் நிலவரைபடங்கள்:

  • ஒரு நாட்டின், மாநிலத்தின் அல்லது மாவட்டத்தின் நிர்வாக பிரிவுகளைக் காட்டுவதாகும்.
  • தொடர்புடைய நிர்வாகப் பிரிவுகளில் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தை எளிதாக்க இந்த வரைபடம் உதவுகிறது.

இ) பொருளாதார நிலவரைபடங்கள் :

  • வெவ்வேறு வகைப்பட்ட பயிர்வகைகள்
  • தாதுக்கள்
  • தொழிற்சாலை அமைவிடங்கள்
  • வாணிப வழிகள்
  • பொருள்களை எடுத்துச் செல்லும் வழிகள் குறித்து விளக்கும் படங்கள்

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Geography Chapter 2 நிலவரைபடத்தை கற்றறிதல் 8

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

6th Social Science Guide ஆசியா மற்றும் ஐரோப்பா Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?
அ) கருங்கடல்
ஆ) மத்திய தரைக்கடல்
இ) செங்கடல்
ஈ) அரபிக்கடல்
விடை:
ஈ) அரபிக்கடல்

Question 2.
எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் இடையில் அமைந்துள்ள மலையிடைப் பீடபூமி
அ) தீபெத்
ஆ) ஈரான்
இ) தக்காணம்
ஈ) யுனான்
விடை:
ஆ) ஈரான்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 3.
நிலநடுக்கோட்டுக் காலநிலை என்பது –
i) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்
ii) சராசரி மழையளவு 200 மி.மீ ஆகும்.
iii) சராசரி வெப்பநிலை10°C ஆகும். மேற்கண்ட கூற்றுகளில்
அ) i மட்டும் சரி
ஆ) ii மட்டும் iii சரி
இ) i மற்றும் iii சரி
ஈ) மற்றும் ii சரி
விடை:
அ) 1 மட்டும் சரி

Question 4.
பட்டியல் I ஐ பட்டியல் | உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 1
விடை:
அ) 2, 3, 4, 1

Question 5.
இந்தியா ……. உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.
அ) துத்தநாகம்
ஆ) மைக்கா
இ) மாங்கனீசு
ஈ) நிலக்கரி
விடை:
ஆ) மைக்கா

Question 6.
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடையில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை
அ) ஆல்ப்ஸ்
ஆ) பைரனீஸ்
இ) கார்பேதியன்
ஈ) காகஸஸ்
விடை:
ஆ) பைரனீஸ்

Question 7.
‘ஐரோப்பாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது. சரியான தெரிவினைத் தேர்வு செய்க.
அ) இந்தப் பகுதிகள் நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது.
ஆ) இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்படுகின்றன.
இ) இப்பகுதிகளைச் சுற்றி மலைகள் காணப்படுகின்றன.
ஈ) மேற்கண்ட அனைத்தும் சரி
விடை:
ஆ) இப்பகுதிகள் வட அட்லாண்டிக் வெப்ப நீரோட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

Question 8.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
அ) ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.
ஆ) ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன.
இ) ஐரோப்பாவின் பெரும்பாலான ஆறுகள் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.
ஈ) ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்.
விடை:
ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன.

Question 9.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) மெஸ்டா – ஸ்பெயின்
ஆ) ஜூரா – பிரான்ஸ்
இ) பென்னின்ஸ் – இத்தாலி
ஈ) கருங்காடுகள் – ஜெர்மனி
விடை:
இ) பென்னின்ஸ் – இத்தாலி

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 10.
ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?
அ) ஐஸ்லாந்து
ஆ) நெதர்லாந்து
இ) போலந்து
ஈ) சுவிட்சர்லாந்து
விடை:
அ) ஐஸ்லாந்து

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தாரஸ் மற்றும் போன்டைன் மலைத்தொடர்கள் ……… முடிச்சிலிருந்து பிரிகின்றது.
விடை:
ஆர்மினியன்

Question 2.
உலகின் மிக ஈரப்பதமான இடம் ……….
விடை:
மௌசின்ராம்

Question 3.
உலகிலேயே ………… உற்பத்தியில் ஈரான் முன்னிலையில் உள்ளது.
விடை:
பேரீச்சம் பழங்கள்

Question 4.
ஐரோப்பாவையும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் கடல்வழி …..
விடை:
சூயஸ் கால்வாய்

Question 5.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய நடனம் ……..
விடை:
டினிக்லிங்

Question 6.
ஐரோப்பாவின் இரண்டாம் இரண்டாவது உயரமான சிகரம் ……..
விடை:
மாண்ட் பிளாங்

Question 7.
ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் நிலவும் காலநிலை ………
விடை:
கண்ட காலநிலை

Question 8.
வட கடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம் ………..
விடை:
டாகர் பாங்க்ஸ் (Dogger Banks)

Question 9.
ஐரோப்பாவின் மக்களடர்த்தி …….
விடை:
சதுர கிலோமீட்டருக்கு 34 நபர்கள்

Question 10.
…………. ஆறு ஐரோப்பாவில் உள்ள ஒன்பது நாடுகளைக் கடந்து செல்கின்றது.
விடை:
டான்யூப்

III. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 80
விடை:
1. யூப்ரடீஸ் சடைக்ரிஸ்
2. அதிக மழை
3. தாய்லாந்து
4. நார்வே
5. ஸ்பெயின்

IV. மேலும் கற்கலாம்

Question 1.
கூற்று (A) : இத்தாலி, வறண்ட கோடை காலத்தையும், குளிர்கால மழையையும் பெற்றுள்ளது.
காரணம் (R) : இது மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது.
அ. (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் ஆகும்.
ஆ. (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
இ. (A) சரி. ஆனால் (R) தவறு.
ஈ. (A) தவறு. ஆனால் (R) சரி
விடை:
ஈ. (A) தவறு. ஆனால் (R) சரி

Question 2.
கொடுக்கப்பட்ட ஆசியா வரைபடத்தில் குறி குறியீடுகள் : க்கப்பட்டுள்ள 1, 2, 3 மற்றும் 4 என்பன கீழ் கண்ட சமவெளிகளைக் குறிக்கின்றன.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 85
A. சிந்து – கங்கை சமவெளி
B. மஞ்சூரியன் சமவெளி
C. மெசபடோமியா சமவெளி
D. சீனச் சமவெளி

வரைபடத்தில் உள்ள எண்ணுடன் சமவெளிகளைப் பொருத்தி, பின் கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 86
விடை :
ஆ) 2 1 3 4

Question 3.
கொடுக்கப்பட்டுள்ள ஆசியா வரைபடத்தில் நிழலிடப்பட்ட பகுதியில் விளையும் பயிர்வகை
அ) கரும்பு
ஆ) பேரிச்சம்பழம்
இ) ரப்பர்
ஈ) சணல்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 87
விடை:
ஆ) பேரிச்சம்பழம்

V. சுருக்கமான விடையளி

Question 1.
ஆசியாவில் உள்ள முக்கிய மலையிடைப் பீடபூமிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • அனடோலிய பீடபூமி
  • ஈரான் பீடபூமி
  • திபெத்திய பீடபூமி

Question 2.
‘மான்சூன் காலநிலை பற்றி சுருக்கமாக எழுதுக.
விடை:

  • தெற்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப்பகுதிகள் பருவக்காற்றுகளின் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும்.
  • கோடை காலம் அதிக வெப்பமும் ஈரப்பதத்துடனும், குளிர்காலம் வறண்டும் காணப்படும்.
  • கோடை காலப் பருவமழைக் காற்றுகள் இந்தியா, வங்காள தேசம், இந்தோ – சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீனா ஆகிய இடங்களுக்கு அதிக மழைப்பொழிவைத் தருகின்றன..

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 3.
நிலத்தோற்றங்கள் ஆசியாவின் மக்கள் தொகை பரவலை எவ்வாறு பாதிக்கின்றது?
விடை:

  • உலக மக்கள் தொகையில் பத்தில் ஆறுபங்கு ஆசியாவில் காணப்படுகிறது. பல்வேறுபட்ட – இயற்கைக் கூறுகளினால் ஆசியாவின் மக்கட்பரவல் சீரற்றுக் காணப்படுகிறது.
  • ஆற்றுச் சமவெளிகள் மற்றும் தொழிற்பகுதிகள் அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. உட்பகுதிகளில் மக்கள் அடர்த்தி மிகக் குறைந்து காணப்படுகிறது. (சதுர கிலோமிட்டருக்கு 143நபர்கள்)

Question 4.
ஆசியாவில் காணப்படும் முக்கிய துறைமுகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • டோக்கியோ
  • ஷங்காய்
  • சிங்கப்பூர்
  • ஹாங்காங்
  • சென்னை
  • மும்பை
  • கராச்சி
  • துபாய்

Question 5.
‘வேறுபாடுகளின் நிலம்’ ஆசியா நிரூபி.
விடை:
உலகின் மிகப்பெரிய கண்டமான ஆசியா வேற்றுமையின் இருப்பிடம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில்

  • ஆசியா பல்வேறுபட்ட நிலத்தோற்றங்களைக் கொண்டது (மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், விரிகுடாக்கள், தீவுகள்)
  • அது பல்வேறு காலநிலைகளைக் கொண்டது (நிலநடுக்கோட்டிலிருந்து துருவப்பகுதி வரை)
  • பல இனங்கள், மொழிகள், சமயங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆசிய மக்களால் பின்பற்றப் படுகின்றன.

Question 6.
ஆல்பைன் மலைத்தொடரில் உள்ள முக்கிய மலைகள் யாவை?
விடை:

  • சியாரா நெவேடா பைரினீஸ்
  • ஆல்ப்ஸ்
  • அப்னின்ஸ்
  • டினாரிக் ஆல்ப்ஸ்
  • காகசஸ்
  • கார்பேதியன்

Question 7.
ஐரோப்பாவின் முக்கிய ஆறுகள் யாவை?
விடை:

  • வோல்கா
  • டான்யூப்
  • நீப்பர் ரைன்
  • ரோன்
  • போ
  • தேம்ஸ்

Question 8.
ஐரோப்பாவில் மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்ட நாடுகளின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.
விடை:

  • பிரான்ஸ்
  • ஸ்பெயின்
  • இத்தாலி
  • சிசிலி

Question 9.
ஐரோப்பாவின் மக்கள் தொகையைப் பற்றிச் சிறு குறிப்புத் தருக.
விடை:

  • ஐரோப்பா கண்டம் ஆசியா, ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டது.
  • 2018ல் ஐரோப்பாவின் மக்கள்தொகை 742 மில்லியன் (உலக மக்கள் தொகையில் 9.73 சதவீதம்) ஐரோப்பிய மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 34 நபர்கள்

Question 10.
ஐரோப்பாவில் கொண்டாடப்படும் விழாக்கள் சிலவற்றின் பெயர்களைக் குறிப்பிடு.
விடை:

  • கிறிஸ்துமஸ்
  • ஈஸ்டர்
  • புனித வெள்ளி
  • புனிதர்கள் நாள்
  • ரெடன்டோர்
  • டோமாட்டினா
  • கார்னிவல்

VI. வேறுபடுத்துக்

Question 1.
மலையிடைப் பீடபூமி மற்றும் தென்பீடபூமி
விடை:
மலையிடைப் பீடபூமி

  • அனடோலிய பீடபூமி
    (போன்டைனிலிருந்து டாரஸ்மலை வரை)
  • ஈரான் பீடபூமி
    (எல்பர்ஸிருந்து ஜாக்ரோஸ் வரை)
  • திபெத்திய பீடபூமி
    (குன்லுனிலிருந்து இமயமலை வரை)

தெற்கு பீடபூமிகள்

  • அரேபிய பீடபூமி (சௌதி அரேபியா)
  • தக்காண பீடபூமி (இந்தியா)
  • ஷான் பீடபூமி (மியான்மர்)
  • யுனான் பீடபூமி (சீனா)
    இப்பீடபூமிகள் வடக்கு பீடபூமிகளைக்
    காட்டிலும் உயரம் குறைந்து காணப்படுகின்றன.

Question 2.
வெப்பப் பாலைவனம் மற்றும் குளிர்பாலைவனம்
விடை:
வெப்பப் பாலைவனம்

  • அரேபிய பாலைவனம் (சௌதி அரேபியா)
  • தார் பாலைவனம்
    (இந்தியா மற்றும் பாகிஸ்தான்)

குளிர்பாலைவனம்

  • கோபி பாலைவனம்
  • தக்லாமக்கன் பாலைவனம்
    ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம்
    அரேபிய பாலைவனமாகும்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 3.
தூந்திரா மற்றும் டைகா
விடை:
தூந்திரப்பிரதேசம்

  • ஆர்டிக் மற்றும் வட ஸ்காண்டினேவிய உயர்நிலங்கள் தூந்திர வகை இயற்கைத் தாவரங்களைக் கொண்டுள்ளன.
  • இங்கு லிச்சன்ஸ் மற்றும் பாசி வகைகள் காணப்படுகின்றன.
    டைகா (ஊசியிலைக்காடுகள்)
  • தூந்திரப்பிரதேசத்தின் தெற்கில் அமைந்துள்ள நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் டைகா (ஊசியிலை) காடுகள் காணப்படுகின்றன.
  • இக்காடுகளில் பைன், ஃபிர், ஸ்புரூஸ் மற்றும் லார்ச் போன்ற முக்கிய மரவகைகள் காணப் படுகின்றன.

Question 4.
வடமேற்கு மேட்டு நிலம் மற்றும் ஆல்பைன் மலைத்தொடர்
விடை:
வடமேற்கு உயர்நிலங்கள்

  • இப்பிரதேசம், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மலைகள் ற்றும் பீடபூமிகளை உள்ளடக்கியது.
  • இது பிளவுபட்ட கடற்கரையினைக் கொண்டது. இக்கடற்கரைகள் பனியாறுகளால் உருவானவை.
  • இங்குள்ள அதிகமான ஏரிகள் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களாக செயல்படுகின்றன.
  • ஆல்பைன் மலைத்தொடர் ஆல்பைன் மலைத்தொடர் தெற்கு ஐரோப்பிய பகுதியில் காணப்படும் தொடர்ச்சியான இளம் மடிப்பு மலைகள் ஆகும்.
  • சியாரா நெவேடா, பைரினீஸ், ஆல்ப்ஸ், அப்னின்ஸ், டினாரிக் ஆல்ப்ஸ், காகசஸ் மற்றும் கார்பேதியன் ஆகியவை முக்கிய மலைத்தொடர்கள்.
  • பைரனீஸ் மலைகள் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் இயற்கை எல்லையாக விளங்குகின்றன.

VII. காரணம் தருக

Question 1.
ஆசியா, அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
விடை:
ஆசியா அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது ஏனெனில்

  • ஆசியாவின் முக்கிய உணவுப் பயிர்களில் நெல் (அரிசி) ஒன்றாகும். உலகிலேயே மிக அதிகமாக நெல் உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் இந்தியா
  • மியான்மர், ஜப்பான், வங்காளதேசம், தாய்லாந்து ஆகியவை பிற நெல்விளைவிக்கும் நாடுகள்.
  • அதிக மழைப்பொழிவு, செழுமை வாய்ந்த சமவெளிகள் மற்றும் மனிதவளம் அகியவற்றை
    பெற்றிருப்பதால் பருவமழை பெய்யும் ஆசியப்பகுதிகள் நெல்விளைய ஏற்ற பகுதிகளாகத் திகழ்கின்றன.
  • தென்கிழக்கு ஆசியாவின் ‘அரிசிக்கிண்ணம்’ என தாய்லாந்து அழைக்கப்படுகிறது.

Question 2.
ஆசியா உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். ஆசியா உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். ஏனெனில்
விடை:

  • வட அரைக்கோளத்தில் பரவியுள்ள ஆசியாவின் பெரும்பாலான நிலப்பரப்பு பல வகையான நிலத்தோற்றம் மற்றும் கலாச்சாரக் கூறுகளைக் கொண்டுள்ளது.
  • உயர்ந்த மலைகள், பீடபூமிகள், பரந்த சமவெளிகள், தீவுகள் மற்றும் தீபகற்பங்கள் ஆகியவை – மக்கிய இயற்கை நிலத் தோற்றங்களாகும்.
  • வற்றாத ஆறுகள் பல்வேறு நிலப்பரப்புகளில் பாய்கின்றன. இந்த ஆற்றுப் பள்ளத்தாக்குகள் பழமையான நாகரிகங்களின் தொட்டிலாகும்.
  • ஆற்றுச் சமவெளிகள் மற்றும் தொழிற்பகுதிகள் அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. உட்பகுதிகளில் மக்கள் அடர்த்தி குறைந்து காணப்படுகிறது. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 143 நபர்கள்.
  • ஆசியா உலகின் பரப்பளவில் 30 சதவீதத்தையும் மக்கள் தொகையில் 60 சதவீதத்தையும், உள்ளடக்கியது.

Question 3.
ஐரோப்பா மிகப்பெரிய தீபகற்பம் என அழைக்கப்படுகின்றது.
விடை:
ஐரோப்பா மிகப்பெரிய தீபகற்பம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில்

  • ஐரோப்பா வட அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.
  • அது 10.5 மில்லியன் ச.கிமீ பரப்பளவைக் கொண்டது.
  • அது வடக்கே ஆர்டிக் பெருங்கடல், தெற்கே கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் கிழக்கே யூரல் மலைகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

Question 4.
மேற்கு ஐரோப்பாவானது உயர் அட்சப் பகுதியில் அமைந்திருந்தாலும் மிதமான கால நிலையைப் பெற்றுள்ளது.
விடை:
மேற்கு ஐரோப்பா உயர் அட்சப் பகுதியில் அமைந்திருந்தாலும் மிதமான காலநிலையைப் பெற்றுள்ளது ஏனெனில்

  • வட அட்லாண்டிக் நீரோட்டத்தினால் மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிகள் பொதுவாக லேசான ஈரப்பதமான காலநிலையைக் கொண்டிருக்கும்.
  • வட அட்லாண்டிக் வெப்பக்கடல் நீரோட்டம் ஐரோப்பாவின் மேற்கு பகுதிக்கு மிதமான வெப்பத்தை அளிக்கிறது.

VIII. ஒரு பத்தியில் விடையளி

Question 1.
ஆசியாவின் வடிகால் அமைப்பைப் பற்றி விவரி?
விடை:

  • ஆசியாவின் பெரும்பான்மையான ஆறுகள் மத்திய உயர் நிலங்களில் தோன்றுகின்றன.
  • ஓப், எனிசி, லேனா ஆகிய முக்கிய ஆறுகள் வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. இவை குளிர்காலத்தில் உறைந்துவிடுகின்றன.
  • வற்றாத ஆறுகளான பிரம்மபுத்திரா, சிந்து, கங்கை, ஐராவதி போன்றவை உயர்ந்த மலைகளில் தோன்றுகின்றன. இவை குளிர் காலத்தில் உறைவதில்லை.
  • யூப்ரடிஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் மேற்கு ஆசியாவில் பாய்கின்றன.
  • அமூர், ஹோவாங்கோ, யாங்சி மற்றும் மீகாங் போன்றவை தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் பாய்கின்றன. யாங்சி ஆசியாவின் மிக நீளமான ஆறு.

Question 2.
ஆசியாவில் காணப்படும் முக்கிய தாதுக்களைப் பற்றி விவரி?
விடை:
ஆசியாவில் காணப்படும் முக்கிய தாதுக்கள்:
இரும்புத்தாது : ஆசியா உலகிலேயே மிக அதிகமான இரும்புத்தாது வளத்தைக் கொண்டுள்ளது. சீனா, இந்தியா, துருக்கி, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இரும்புத்தாது இருப்புள்ள நாடுகளாகும்.

நிலக்கரி : நிலக்கரி படிம எரிபொருள். உலகிலேயே அதிக நிலக்கரி இருப்பு ஆசியாவில்தான் உள்ளது. ஆசியாவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகள் சீனா மற்றும் இந்தியா.

பெட்ரோலியம் : பெட்ரோலியம் கனிம எண்ணெய் வளம். பெட்ரோலிய இருப்புகள் தென் மேற்கு ஆசியாவில்தான் அதிகமாக காணப்படுகின்றன. சௌதி அரேபியா, குவைத், ஈரான், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரேபிய குடியரசு ஆகியன பெட்ரோலிய உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள். தெற்கு சீனா, மலேசியா, புரூனே, இந்தோனேசியா, இந்தியா, ரஷ்யா போன்றவை பெட்ரோலிய உற்பத்தி செய்யும் பிற நாடுகள்.

  • பாக்ஸைட் இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் காணப்படுகிறது.
  • மைக்கா அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு இந்தியா.
  • தகரம் மியான்மர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

Question 3.
பிளவுபட்ட கடற்கரை என்றால் என்ன? துறைமுகங்களை எவ்வாறு அது மோசமான காலநிலையில் இருந்து பாதுகாக்கின்றது?
விடை:

  • செங்குத்தான பாறைகளுக்கிடையே உள்ள குறுகிய, ஆழமான கடற்கரை பிளவுபட்ட கடற்கரை ஆகும்.
  • இவை காற்று எத்திசையிலிருந்து வீசினாலும் அதன் வேகத்தைக் குறைக்கின்றன.
  • கடல் அலைகளின் வேகத்தையும் இவை கட்டுக்குள் வைக்கின்றன.
  • கடந்த காலங்களில் நடைபெற்ற பனியாறுகளினால் உருவானவை பிளவுபட்ட கடற்கரைகள்
  • பிளவுபட்ட கடற்கரையானது இயற்கை துறைமுகங்கள் அமைவதற்கு ஏற்றதாக உள்ளது. எ.கா. நார்வே.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 4.
ஐரோப்பாவின் காலநிலைப் பிரிவுகளைப் பற்றி விவரி?
விடை:

  • ஐரோப்பிய காலநிலை மித வெப்ப மண்டல காலநிலை முதல் துருவ காலநிலை வரை வேறுபட்டுக் காணப்படுகிறது…
  • தென்பகுதியில் காணப்படும் மத்திய தரைக்கடல் பகுதி காலநிலை மிதமான கோடைகாலமும் குளிர்கால மழையும் கொண்டது.
  • மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் வட அட்லாண்டிக் நீரோட்டத்தினால் பொதுவாக லேசான. ஈரப்பதம் வாய்ந்த காலநிலையைக் கொண்டிருக்கும்.
  • மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் காலநிலை ஈரப்பதம் வாய்ந்த கண்ட காலநிலை
  • வடகிழக்கில் துணை துருவ மற்றும் தூந்திரக் காலநிலை காணப்படுகிறது.
  • ஐரோப்பா முழுவதும் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து வீசுகின்ற மேற்கத்திய காற்றுகளின் மிதமான தாக்கத்திற்கு உட்படுகின்றது.

X. செயல்பாடு

Question 1.
கீழ்க்கண்டவற்றைப் பூர்த்தி செய்க.
என்னுடைய மாவட்டம் ……… என் மாவட்டம் 1………. 2 ……… 3 ……….. க்குப் புகழ் பெற்றது. என் மாவட்டத்தின் எல்லைகள், வடக்கே … … கிழக்கே ……….. தெற்கு ……… மற்றும் மேற்கே ……. ஆகும். இது ……. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது …… வட்டங்களையும், …………. கிராமங்களையும் கொண்டுள்ளது……………………… ஆகியன முக்கிய மலைகள் / சமவெளிகள் /பீடபூமிகள் ஆகும். (அனைத்தும் இருந்தாலும் எழுதவும்) ………… ஆறுகள் என் மாவட்டத்தில் பாய்கின்றன. ……….. . ஆகிய மரங்களும் ………………….. ஆகிய வனவிலங்குகளும் உள்ள ன…………. …………… போன்ற முக்கிய தனிமங்கள் இங்குக் கிடைக்கின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு ……………… தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன. இங்கு விளையும் முக்கிய பயிர்கள் …
………… ஆகும். (கடலோர மாவட்டம் என்றால் மீன் வகைகள்) மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை …………. நாங்கள் ……….. விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.
விடை:
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், குற்றாலம், அல்வா, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலை, 16 வட்டங்கள், 559 கிராமங்கள், பொதிகை மலை, தாமிரபரணி சமவெளி, தக்காணப் பீடபூமி விளிம்பு, தாமிரபரணி, சிற்றாறு, மணிமுத்தாறு, பனை, வேம்பு, தென்னை , குரங்குகள், புலிகள், யானைகள், கருங்கல், சுண்ணாம்புக்கல், தோரியம், சிமெண்ட், பருத்தி ஆலை, பாத்திரங்கள், நெல், பருத்தி, கரும்பு, 3322644, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ்,

2. ஐரோப்பாவை இருப்பிடமாகக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நீ எந்த நாட்டை தேர்வு செய்வாய்? காரணங்களைப் பட்டியலிடுக.

3. ஆசியாவின் ஏதாவது ஒரு பிரதேசத்தைத் தேர்வு செய்க. ஆசியா வரைபடத்தில் இயற்கை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரவலைக் குறிக்கவும். அது தொடர்பான படங்களை ஒட்டி வரவும்.

6th Social Science Guide ஆசியா மற்றும் ஐரோப்பா Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஆசியாவை ஆப்பிரிக்காவிடம் இருந்து பிரிப்பது
அ) சூயஸ் கால்வாய்
ஆ) பேரிங் நீர்ச்சந்தி
இ) மத்திய தரைக்கடல்
ஈ) பாக் நீர்ச்சந்தி
விடை:
அ) சூயஸ் கால்வாய்

Question 2.
உலகின் தாழ்வான பகுதி
அ) கருங்கடல்
ஆ) செங்கடல்
இ) சாக்கடல்
ஈ) மஞ்சள் கடல்
விடை:
இ) சாக்கடல்

Question 3.
தெற்காசியாவில் பாயும் ஆறுகள்
i) குளிர்காலத்தில் உறையும்
ii) வடக்கு நோக்கிப் பாயும்
iii) வற்றாத ஆறுகள்
அ) i மட்டும் சரி
ஆ) iii மட்டும் சரி
இ) மூன்றும் சரி
ஈ) மூன்றும் தவறு
விடை:
ஆ) iii மட்டும் சரி

Question 4.
ஆசிய மொத்தப்பரப்பில் வேளாண்மைக்கு ஏற்ற நிலப்பரப்பு
அ) 18%
ஆ) 28%
இ) 40%
ஈ) 48%
விடை:
அ) 18%

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 5.
யாங்சி ஆறு பாயும் நாடு
அ) இந்தியா
ஆ) ஜப்பான்
இ) மியான்மர்
ஈ) சீனா
விடை:
ஈ) சீனா

Question 6.
வங்காளவிரிகுடாவில் அமைந்துள்ள தீவு
அ) மாலத்தீவு
ஆ) பஹ்ரைன்
இ) இலங்கை
ஈ) ஜப்பான்
விடை:
இ) இலங்கை

Question 7.
பொருந்தாத இணையைக் கண்டறி
அ) சைபீரிய சமவெளி – ஓப், எனிசி
ஆ) மஞ்சூரியன் சமவெளி – அமூர்
இ) சீன பெருஞ்சமவெளி – யாங்சி, சிகியாங்
ஈ) மெசபடோமிய சமவெளி – ஐராவதி
விடை:
ஈ) மெசபடோமிய சமவெளி – ஐராவதி

II. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 90
விடை:
1. கால்வாய்
2. நீர்ச்சந்தி
3. முடிச்சு
4. கணவாய்
5. பாலைவனம்

III. சரியா தவறா

Question 1.
ஆசியாவில் இரு மலை முடிச்சுகள் காணப்படுகின்றன.
விடை:
சரி

Question 2.
ஓப், எனிசி, லேனா ஆகியவை குளிர்காலத்தில் உறைந்து விடுகின்றன.
விடை:
சரி

Question 3.
தேக்கு, சந்தனம் ஊசியிலைக்காட்டு மரங்கள்
விடை:
தவறு

Question 4.
பிளவுபட்ட கடற்கரைப் பகுதியில் ஏரிகள் அதிகமாக உள்ளன.
விடை:
சரி

Question 5.
ஐரோப்பா முழுவதும் காணப்படும் முதன்மையான பயிர் கோதுமை
விடை:
சரி

IV. சுருக்கமான விடையளி

Question 1.
நாகரிகங்களின் தொட்டில் எது? ஏன்?
விடை:

  • ஆற்றுப் பள்ளத்தாக்குகள் நாகரிகங்களின் தொட்டிலாகும்.
  • ஏனெனில் பழமையான மெசபடோமியா நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் மற்றும் சீன நாகரிகம் ஆகி யன ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் தோன்றின.

Question 2.
தீவுக்கூட்டம் பற்றி நீ அறிந்ததென்ன?
விடை:

  • ஒன்றிணைக்கப்பட்ட பல தீவுகள், தீவுக்கூட்டம் என அழைக்கப் படுகிறது.
  • இந்தோனேசியா மிகப்பெரிய தீவுக்கூட்டம்

Question 3.
ஆசியாவில் காணப்படும் அரியவகை விலங்கினங்கள் எவை?
விடை:

  • உராங்குடான்
  • கோமோடோ டிராகன்
  • பெரிய பாண்டாக் கரடி

Question 4.
மத்திய தரைக்கடல் பகுதி மரங்கள் யாவை?
விடை:

  • சைப்ரஸ்
  • கார்க்
  • ஓக்
  • ஆலிவ்
  • செடார்

Question 5.
மீன் பிடித்தல் மிகப்பெரிய தொழிலாக நடைபெறும் நாடுகள் யாவை?
விடை:

  • நார்வே
  • ஐஸ்லாந்து
  • ரஷ்யா
  • டென்மார்க்
  • ஐக்கிய பேரரசு
  • நெதர்லாந்து

V. காரணம் கூறுக

Question 1.
ஐரோப்பா புதுமை வாய்ந்த பொருளாதார முன்னேற்றமடைந்த கண்டம்
விடை:
ஐரோப்பா புதுமை வாய்ந்த பொருளாதார முன்னேற்றமடைந்த கண்டம்
ஏனெனில்
கிடைக்கப்பெறும் வளங்கள், ஆற்றலுடைய படித்த வேலையாட்கள், ஆராயும் தன்மை, மற்ற நாடுகளுடனான தொடர்பு, புதுமையை நாடுதல் ஆகிய காரணிகள் அவ்வாறு மாற்றியுள்ளது.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா

Question 2.
ஐரோப்பாவில் பல்வேறு வகையான வேளாண்முறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
விடை:
ஐரோப்பாவில் பல்வேறு வகையான வேளாண் முறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
ஏனெனில்

  • ஐரோப்பா தொழில் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஐரோப்பா நில அமைப்பு, காலநிலை, மண் ஆகியவற்றில் வேறுபட்டு காணப்படுகிறது.
  • இவை ஒன்றுடன் ஒன்று இடைவினை ஆற்றுவதால் பல்வேறு வேளாண் முறைகள் பயன் பாட்டில் இருக்கின்றன.
    (பயன்பாட்டில் உள்ள வேளாண் முறைகள் : மத்திய தரைப்பகுதி வேளாண்மை, பால் பண்ணை , கலப்புக் கால்நடை வளர்ப்பு, பயிர் வளர்ப்பு)

Question 3.
நிலநடுக்கோட்டுப் பகுதியில் குளிர்காலம் இல்லை.
விடை:
நிலநடுக்கோட்டுப் பகுதியில் குளிர்காலம் இல்லை.
ஏனெனில்
நிலநடுக்கோட்டிலும் அதனைச் சுற்றிலும் காணப்படுகின்ற ஆசியப் பகுதியிலும் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான காலநிலை உள்ளது. குளிர்காலம் இல்லை . சராசரி வெப்பம் 27°C. சராசரி மழைப்பொழிவு 1270மி.மீ.

VII. ஒரு பத்தியில் விடையளி

Question 1.
ஐரோப்பாவில் காணப்படும் தொழில்கள் குறித்து விவரி.
விடை:

  • பெருந்தொழில்கள் : எஃகு மற்றும் இரும்புத்தாது உற்பத்தி, கப்பல் கட்டுதல், மோட்டார் வாகனங்கள், விமானம் தயாரித்தல், மருந்து வகைகள்.
  • நிலைத்த தன்மையற்ற பொருட்களைத் தயாரிக்கும் சிறு தொழிலகங்கள் ஐரோப்பா முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.
  • சில நாடுகள் தங்கள் நாட்டுக்கென சிறப்பம்சம் பொருந்திய பொருட்களைத் தயாரிக்கின்றன.
    மிதிவண்டிகள் – இங்கிலாந்து, இத்தாலி, டச்சு
    கண்ணாடிகள் – சுவிடன், பின்லாந்து
    வாசனை திரவியங்கள்
    மற்றும் அழகு சாதனப்
    பொருட்கள் – பாரிஸ்
    துல்லியமான கருவிகள் – சுவிஸ்

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 Geography Chapter 1 ஆசியா மற்றும் ஐரோப்பா 99