Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 1 பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
6th Social Science Guide பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Text Book Back Questions and Answers
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
Question 1.
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ……
அ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஆ) சேரன் செங்குட்டுவன்
இ) இளங்கோ அடிகள்
ஈ) முடத்திருமாறன்
விடை:
ஆ) சேரன் செங்குட்டுவன்
Question 2.
கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
அ) பாண்டியர்
ஆ) சோழர்
இ) பல்லவர்
ஈ) சேரர்
விடை:
இ) பல்லவர்
Question 3.
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ……. ஆவர்.
அ) சாத வாகனர்கள்
ஆ) சோழர்கள்
இ) களப்பிரர்கள்
ஈ) பல்லவர்கள்
விடை:
இ) களப்பிரர்கள்
Question 4.
சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு ………
அ) மண்ட லம்
ஆ) நாடு
இ) ஊர்
ஈ) பட்டினம்
விடை:
இ) வர்
Question 5.
குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
அ) கொள்ளையடித்தல்
ஆ) ஆநிரை மேய்த்தல்
இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
ஈ) வேளாண்மை
விடை:
இ) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
II. கூற்றை வாசிக்கவும், சரியான விடையை (✓) செய்யவும்
Question 1.
கூற்று : புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.
காரணம் : சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; காரணம் தவறு
ஈ. கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
Question 2.
கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?
விடை:
1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்
2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.
அ. 1 மட்டும்
ஆ. 1 மற்றும் 3 மட்டும்
இ. 2 மட்டும்
விடை:
ஆ. 1 மற்றும் 3 மட்டும்
Question 3.
பண்டைக்காலத்தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது.
அ. ஊர்<நாடு < கூற்றம் < மண்டலம்
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
இ. ஊர் < மண்டலம் < கூற்றம் < நாடு
ஈ. நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்
விடை:
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
Question 4.
அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
விடை:
அ) 3, 2, 1
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
வெண்ணி போரில் வெற்றி பெற்றது …………
விடை:
கரிகால் வளவன்
Question 2.
சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ……….
விடை:
தொல் காப்பியம்
Question 3.
காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ……… கட்டினார்
விடை:
கரிகாலன்
Question 4.
படைத்தலைவர் ………… என அழைக்கப்பட்டார்
விடை: தானைத்தலைவன் Question 5. நில வரி ……. என அழைக்கப்பட்டது விடை:
இறை
IV. சரியா /தவறா
Question 1.
சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர் விடை:
தவறு
Question 2.
சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.
விடை:
தவறு
Question 3.
கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர் ஆவார்
விடை:
சரி
Question 4. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்.
விடை:
தவறு
Question 5.
கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டன.
விடை:
தவறு
V. பொருத்துக
விடை:
அ. பாண்டியர்
ஆ. சேரர்
இ. சோழர்
ஈ) வேளிர்
VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்
Question 1.
பண்டைக்காலத் தமிழகத்தின் வரலாற்றை மறு கட்டுமானம் செய்ய உதவும் இரு இலக்கிய சான்றுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- தொல்காப்பியம்
- எட்டுத் தொகை
- பத்துப்பாட்டு
Question 2.
நடுகல் அல்லது வீரக்கல் என்றால் என்ன?
விடை:
பண்டைத் தமிழகத்தில் போரில் மரணமடைந்த வீரர்களின் நினைவைப் போற்ற நடப்பட்டவை நடுகற்கள் (வீரக்கற்கள்)
Question 3.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து திணைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- குறிஞ்சி – முல்லை மருதம்
- நெய்தல் – பாலை
Question 4.
சங்க காலத்தோடு தொடர்புடைய இரு தொல்லியல் ஆய்விடங்களைக் குறிப்பிடுக.
விடை:
- அரிக்கமேடு
- ஆதிச்ச நல்லூர்
Question 5.
கடையெழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- பாரி
- காரி
- ஓரி
- பேகன்
- ஆய்
- அதியமான்
- நள்ளி
Question 6.
களப்பிரர் காலத்தைச் சேர்ந்த ஏதேனும் மூன்று தமிழ் இலக்கியங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- தமிழ் நாவலர் சரிதை
- யாப்பெருங்கலம்
- பெரியபுராணம்
VII. கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்
Question 1.
சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
விடை:
- சங்ககாலப் பெண்கள் கற்றறிந்தவர்கள், அறிவுக் கூர்மையுடையவர்கள்
- அரிய நூல்களைக் கொடுத்துச் சென்றுள்ள நாற்பது பெண் புலவர்கள் வாழ்ந்தனர்.
- சொந்த விருப்பத்தைச் சார்ந்து திருமணம் அமைந்தது. கற்பு மிகச் சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது.
- பெற்றோரின் சொத்துக்களில் மகனுக்கும், மகளுக்கும் சமமான பங்கு உண்டு.
VIII. உயர் சிந்தனை வினாக்கள்
Question 1.
கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்படுகிறான். நிறுவுக.
விடை:
- கரிகாலன் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் பதினொரு வேளிர் தலைவர்களின் கூட்டுப்படைகளை வெண்ணி போரில் தோற்கடித்தார். காடுகளை விளைநிலங்களாக மாற்றினார்.
- வேளாண்மை மேம்பாட்டிற்காக காவிரியில் கல்லணை கட்டினார்.
- புகார் துறைமுகம் மூலம் நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பட்டினப்பாலை நூல் மூலம் தெரிகிறது. எனவே கரிகாலன் சோழர்களின் மிகச்சிறந்த அரசனாகக் கருதப்படுகிறான்.
Question 2.
களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக.
விடை:
- தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரிய புராணம் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கியச் சான்றுகள் களப்பிரர்கள் ஆட்சி குறித்தவை.
- சீவகசிந்தாமணி, குண்டலகேசி, இரண்டும் களப்பிரர்கள் காலத்தவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பல இயற்றப்பட்டன. .
- இக்காலத்தில்தான் சமணமும், பௌத்தமும் முக்கியத்துவம் பெற்றன.
- சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து முறை உருவானது.
- வணிகமும் வர்த்தகமும் செழித்தோங்கின. எனவே களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் அல்ல.
X. வாழ்க்கைத்திறன் (மாணவர்களுக்கானது)
1. பல்வகை நிலப்பரப்புக் காட்சிப் படங்களைச் சேகரித்து, ஒட்டி, அவை எந்தத் திணைப் பகுதியைச் சேர்ந்தவை என்பதைக் கண்டுபிடிக்கவும். அங்கு விளையும் முக்கியப் பயிர்கள், வாழும் மக்களின் தொழில் ஆகியவை பற்றி எழுதவும்.
XI. கட்டக வினாக்கள்
விடை:
6th Social Science Guide பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் Additional Important Questions and Answers
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
Question 1.
பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் கூற்றுப்படி தமிழ்மொழி …….. மொழியின் அளவிற்குப் பழமையானது
அ) சீன
ஆ) கிரேக்க
இ) இலத்தீன்
ஈ) ஆங்கிலம்
விடை:
இ) இலத்தீன்
Question 2.
சிலப்பதிகார காவியப் பாத்திரம்
அ) கண்ண கி
ஆ) மணிமேகலை
இ) சீதை
ஈ) பாஞ்சாலி
விடை:
அ) கண்ண கி
Question 3.
பாண்டியர் துறைமுகம்
அ) புகார்
ஆ) கொற்கை
இ) முசிறி
ஈ) தொண்டி
விடை:
ஆ) கொற்கை
Question 4.
இந்தியாவின் முதல் பேரங்காடி எனக் குறிப்பிடப்படுவது
அ) முசிறி
ஆ) மதுரை
இ) வஞ்சி
ஈ) புகார்
விடை:
அ) முசிறி
II. கூற்றை வாசிக்கவும். சரியான விடையை (✓) செய்யவும்
கூற்று : களப்பிரர் காலம் இருண்ட காலம் அல்ல.
காரணம் : இலக்கியச் சான்றுகள், புதிய எழுத்துமுறை, வணிகம் வர்த்தகம் செழிப்பு பற்றி தெரிகிறது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை அல்ல?
1. பாண்டியர் அத்திப்பூ மாலை சூடினர்
2. குறிஞ்சி மக்களின் வழிபடு தெய்வம் இந்திரன்
3. இயற்கை வரலாறு நூலின் ஆசிரியர் இளைய பிளினி
அ) 1, 2 மற்றும் 3
ஆ) 2 மற்றும் 3
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 3
விடை:
அ) 1, 2 மற்றும் 3
III. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்
Question 1.
‘மென்புலம்’ – ‘வன்புலம்’ குறிப்பு தருக.
விடை:
மென்புலம் :
- மருத நிலம் ‘மென்புலம்’ (நன்செய்) என அழைக்கப்பட்டது. நெல்லும் கரும்பும் விளைந்தன.
வன்புலம் : - நெய்தல் தவிர மற்றவை ‘வன்புலம் ‘ (புன்செய்) என அழைக்கப்பட்டன. தானியங்களும் பருப்புவடை ககளும் விளைந்தன.
Question 2.
அணிகலன்கள் செய்யப் பயன்பட்டவை யாவை?
விடை:
- தங்கம்
- வெள்ளி
- முத்துக்கள்
- நவரத்தினக் கற்கள்
- சங்கு
- பாசிமணிகள்
Question 3.
முக்கிய இறக்குமதிப் பொருட்கள் யாவை?
விடை:
- புஷ்பராகம்
- ஈயம்
- திராட்சை மது
- கண்ணாடி
- குதிரைகள்
Question 4.
இந்தியப் பட்டு குறித்து நீ அறிவன யாவை?
விடை:
- இந்திய வணிகர்கள் ரோமப் பேரரசுக்கு விநியோகம் செய்த பட்டு மிக முக்கியமானது.
- ரோமப் பேரரசர் ஆரிலியன் இந்தப் பட்டானது எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது என்றார்.
Question 5.
அரசுரிமைச் சின்னங்கள் யாவை?
விடை:
- செங்கோல்
- முரசு
- வெண்கொற்றக் குடை
IV. கீழ்க்காண்பதற்கு விடையளிக்கவும்
Question 1.
சங்ககால மத நம்பிக்கைகள், சமூக பிரிவுகள் பற்றி விவரி.
விடை:
- மக்களின் முதன்மைக் கடவுள் சேயோன் அல்லது முருகன்.
- வழிபடப்பட்ட ஏனைய கடவுளர் சிவன், மாயோன் (விஷ்ணு, இந்திரன். வருணன், கொற்றவை ஆ கியோராவர்.
- நடுகல் வழிபாடும் வழக்கத்தில் இருந்தது.
- பௌத்தமும் சமணமும் கூட உடனிருந்தன.
- வடக்கே வளர்ந்திருந்ததைப் போன்று தமிழகத்தில் சாதிமுறை வளர்ந்திருக்கவில்லை.
- ஒப்பீட்டளவில் வர்ணாசிரம முறை திராவிடத் தென்னாட்டில் பின்னர் வந்ததே.
மனவரைபடம்