Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 6 இடைக்காலம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 6 இடைக்காலம்

9th Social Science Guide இடைக்காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
_______ ஜப்பானின் பூர்வீக மதம் ஆகும்.
அ) ஷின்டோ
ஆ) கன்பியூசியானிசம்
இ தாவோயிசம்
ஈ) அனிமிசம்
விடை:
அ) ஷின்டோ

Question 2.
_______ என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.
அ) டய்ம்யாஸ்
ஆ) சோகன்
இ பியுஜிவாரா
ஈ) தொகுகவா
விடை:
அ) டய்ம்யாஸ்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி ______
அ) தாரிக்
ஆ) அலாரிக்
இ சலாடின்
ஈ) முகமது என்னும் வெற்றியாளர்
விடை:
அ) தாரிக்

Question 4.
ஹருன்-அல் ரஷித் என்பவர் _____ ன் திறமையான அரசர்
அ) அப்பாசித்து வம்சம்
ஆ) உமையது வம்சம்
இ சசானிய வம்சம்
இ மங்கோலிய வம்சம்
விடை:
அ) அப்பாசித்து வம்சம்

Question 5.
நிலப்பிரபுத்துவம் _____ மையமாகக் கொண்டது.
அ) அண்டியிருத்தலை
ஆ) அடிமைத்தனத்தை
இ வேளாண் கொத்தடிமையை
ஈ) நிலத்தை
விடை:
அ) அண்டியிருத்தலை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1
_____ என்பவர்கள் ஜப்பானின் பூர்வ குடிகள் ஆவார்.
விடை:
அய்னஸ்

Question 2.
_____ என்பது ஜப்பானின் முந்தையப் பெயர் ஆகும்.
விடை:
யமட்டோ

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
______ என்பது மெதினாவின் முந்தையப் பெயர் ஆகும்.
விடை:
மதினாட்-உன்-நபி

Question 4.
வடக்குப் பகுதியில் இருந்த சீனர்களுக்கு பண்பாட்டில் பின் தங்கிய ____ மக்கள் அச்சுறுத்தலைக் கொடுத்தனர்.
விடை:
நாடோடிப் பழங்குடியினர்

Question 5.
உதுமானியர் மேலாண்மையை பால்கன் பகுதியில் நிறுவியவர் _____ ஆவார்.
விடை:
இரண்டாம் முகமது.

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

Question 1.
i) செங்கிஸ்கான் ஒரு மத சகிப்புத்தன்மை இல்லாதவர்.
ii) மங்கோலியர் ஜெருசலேமை அழித்தனர்
iii) உதுமானியப் பேரரசை, சிலுவைப் போர்கள் வலுவிழக்கச் செய்தன
iv) போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும்
(iii) சரியானவை
ஈ) (iv) சரி
விடை:
ஈ) (iv) சரி

Question 2.
i) மங்குகான் என்பவர் சீனாவின் ஆளுநர்.
ii) சீனாவில் இருந்த மங்கோலிய அரச சபை மார்க்கோபோலோவின் நன்மதிப்பைப் பெற்றது.
iii) ‘சிகப்புத் தலைப்பாகை’ என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர் ஹங் சாவோ
iv) மங்கோலியர்கள் சீனாவில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினார்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும்
(iv) சரியானவை
ஈ) (iv) சரி
விடை:
இ) (ii) மற்றும்
(iv) சரியானவை

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
i) போயங் மற்றும் சங்-ஆன் ஆகியவை சுங் வம்சத்தால் கட்டப்பட்டது.
ii) விவசாயிகளின் எழுச்சி, சாங் வம்சம் அழிய வழிகோலியது.
iii) செல்ஜுக் துருக்கியர் என்பவர் தார்த்தாரியர் என்னும் பழங்குடியினர் ஆவர்.
iv) மங்கோலியர்கள், ஜப்பானில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (iii) சரி
ஈ) (iv) சரி
விடை:
ஈ) (iv) சரி

Question 4.
கூற்று : பௌத்த மதம் இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் சென்றது.
காரணம் : சீனாவில் தொடக்கக் காலத்தில் குடியேறிய இந்தியர்கள் பௌத்த மதத்தை பின்பற்றியவர்கள்.
அ) கூற்று சரி ; காரணம் தவறு
ஆ) கூற்றும் காரணமும் தவறு
இ கூற்றும் காரணமும் சரியானவை
ஈ) கூற்று தவறு ; காரணம் கூற்றுக்கு தொடர்பற்றது
விடை:
அ) கூற்று சரி ; காரணம் தவறு

Question 5.
கூற்று : ஜெருசலேமை துருக்கியர் கைப்பற்றிக் கொண்டது சிலுவைப் போருக்குக் காரணமானது
காரணம் : ஜெருசலேமிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய கிறித்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அ) கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல
ஆ) கூற்றும் காரணமும் சரி
இ) கூற்றும் காரணமும் தவறு
ஈ) கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
விடை:
ஈ) கூற்று சரி ; காரணம் சரியான விளக்கம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம் 56

V. சுருக்கமான விடையளி

Question 1.
சீனப் பெருஞ்சுவர்
விடை:
சீனப் பெருஞ்சுவர்:

  • தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த சீன அரசுகள், வடக்கேயிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, கி.மு. 8 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளில் இடைப்பட்ட காலத்தில் சுவர்களை எழுப்பிக் கொண்டன.
  • கிழக்கிலிருந்து மேற்காக, சின் அரசவம்சத்தின்காலத்தில் தனித்தனியாக இருந்த சுவர்கள் இணைக்கப்பட்டு சுமார் 5000 கி.மீ. நீளமுடைய உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் பெருஞ்சுவர் உருவானது. வலுவூட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம் 6700 கிலோ மீட்டர் ஆகும்.

Question 2.
சிலுவைப் போர்களின் தாக்கம்.
விடை:
சிலுவைப்போர்களின் தாக்கம் :

  • நிலப்பிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்கு முடிவு கட்டியது. பண்ணை அடிமைகள் பலர் நிலத்தோடு தங்களை கட்டிப் போட்டிருந்த அடிமைக்கட்டுகளை உடைத்து வெளியேறினர்.
  • கீழை நாட்டுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததால் வியாபாரம் பெருகியது. வெனிஸ், ஜெனோவா, பைசா ஆகிய நகரங்கள் முக்கிய வணிக மையங்களாக உருவெடுத்தன. கிழக்கும் மேற்குமான கான்ஸ்டாண்டி நோபிளின் இடைத்தரகர் பாத்திரம் முடிவுக்கு வந்தது.
  • இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முடியாட்சி வலுப்பெற்றது. போப்பின் ஆட்சிமுறை செல்வாக்கையும் மரியாதையையும் இழந்தது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
இடைக்காலத்தில் நிலப்பிரபுத்துவம் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது? நிலப்பிரபுத்துவ முறை அண்டியிருத்தலை மையமாகக் கொண்டது.
விடை:

  • அரசர் – கவுளின் பிரதிநிதி. நிலப்பிரபுத்துவத்தின் தலைவராகக் கருதப்பட்டார். நிலங்களைப் பிரித்து நிலப்பிரபுகளுக்கு கொடுத்தார்.
  • நிலப்பிரபுக்கள் – கோமகன்களாகக் கருதப்பட்ட டியூக்குகள் ‘கவுண்ட்டுகள், ‘யேல்’கள், அரசரிடம் இருந்து நிலம் பெற்றுக்கொண்டு அவருக்காக போரிட்டவர்கள். இவர்கள் தாங்கள் பெற்ற நிலங்களைப் பிப் (Fief) துண்டுகளாகப் பிரித்து வைஸ் கவுண்ட் என்போருக்கு விநியோகம் செய்தனர். அரசவை அண்டியிருந்தோர்.
  • வைஸ் கவுண்ட் – நிலப்பிரபுக்களிடம் பிப் துண்டு நிலங்களைப் பெற்று அவர்களை அண்டியிருந்தோர். நைட் (சிறப்புப்பணி வீரர்கள்) – தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறு எவருக்கும் பிரித்து தர முடியாது. பிரபுக்களை அண்டியிருந்தோர்.
  • பண்ணை அடிமைகள் – அனைவருக்கும் கீழ் அடி மட்டத்தில் இருந்தவர்கள். இவர்கள் வில்லொயன் அல்லது செர்ப் என அறியப்பட்டனர்.

Question 4.
இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை?
விடை:

  • திருச்சபையிலிருந்து விலக்கம்: தகுதியான கிறிஸ்தவனுக்குறிய உரிமைகள் மறுக்கப்படுதல். திருச்சபைக்குள் புனித சடங்குகளை நிறைவேற்ற முடியாது. இறந்தபின் உடலை திருச்சபைக் கல்லறையில் புதைக்க முடியாது.
  • மத விலக்கம்: ஓர் அரச குடிமகனுக்கு தகுதியான சமயம் சார்ந்த பயன்களை மறுத்தல். அரசனுக்கு எதிராக வெறுப்பு கொள்ளத் தூண்டுவது.

VI. விரிவான விடையளி

Question 1.
சோகுனேட்களின் கீழ் ஜப்பானின் எழுச்சி பற்றி விரிவாகக் கூறுக.
விடை:

  • தாரா, மினமோட்டா எனும் குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற போரில் யோரிடோமோ வெற்றி பெற்றார்.
  • கி.பி.(பொ.ஆ) 1192 இல் பேரரசர் இவருக்கு செ-ய்-தாய் சோகன் என்ற பட்டம் சூட்டினார்.
  • காலப்போக்கில் சோகன் உண்மையான ஆட்சியாளரான போது சோகுனேட்டுகளின் ஆட்சி உருவானது.
  • யோரிடோமோ தனது ராணுவத் தலைமையகத்தை காமகுராவில் நிறுவினார். இது, முதல் சோகுனேட் காமகுரா சோகுனேட் என அழைக்கப்பட்டது.
  • வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஜப்பான் தனக்கேயுரிய வழிகளில் சீனத்தைப் பின்பற்றியது.
  • நிலப்பிரபுத்துவ ராணுவத் தன்மை கொண்ட அரசு சாமுராய் எனப்பட்ட இராணுவ வீரர்களால் நிர்வகிக்கப் பட்டது.
  • ஐரோப்பாவை பயமுறுத்திய மங்கோலியரை சோகுனேட்டுகளின் தலைமையில் ஜப்பான் வெற்றி கொண்டது.
  • கி.பி.(பொ.ஆ) 1338-ல் காமகுரா சோகுனேட் வீழ்ச்சியடைந்தது. அதன்பின், அஷிக்காகா சோகுனேட்க் ஆட்சியைக் கைப்பற்றினர்.
  • இக்காலக்கட்டம் அரசியல் குழப்பங்களும் அதிகாரப் போட்டிகளும் நிறைந்ததாய் இருந்தது.
  • இறுதியில் போர்புநகா என்ற பிரபு, டய்ம்யாஸ் மற்றும் தொகுகவா இய்யாசு ஆகியோர் ஜப்பானை உள்நாட்டுப் போர்களிலிருந்து மீட்டனர்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 2.
மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை எவ்வாறு ஆட்சி செய்தனர்?
விடை:
மங்கோலியர் ஆட்சி :

  • வெளிநாட்டவர் படையெடுப்புகள் சீனாவில் சுங் அரச வம்ச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததைத் தொடர்ந்து யுவான் அரச வம்சம் என்ற பெயரில் மங்கோலியர்கள் ஆட்சியை நிறுவினர். பாரசீகத்தையும், ஒட்டு மொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றிய மங்கோலியர்கள் சீனாவையும் கைப்பற்றி கி,பி, 1252-இல் மங்குகான் குப்ளேகானை சீனாவின் ஆளுநராகப் பணியமர்த்தினார்.
  • யூரேசியாவில் பரவியிருந்த மங்கோலிய ஆதிக்கம், சீனாவின் தொழில் நுட்ப முன்னேற்றங்களை வளர்ச்சி குன்றிய மேற்கு சமூகங்களிடையே பரப்ப உதவியது. பெய்ஜிங் அரச சபை மார்க்கோ போலோ போன்ற வெளிநாட்டவர்களிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
  • விவசாயிகள் வறுமையில் வாடினர். மதம் சார்ந்த அமைப்புகளம், ரகசிய அமைப்புகளும் புரட்சியில் இறங்கின.
  • சிகப்பு தலைப்பாகைகள் (Red Turbans) அமைப்பின் தலைவர் சூ யுவான் சங் கி.பி. 1369-ல் தன்னை பேரரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

VII. மாணவர்களுக்கான செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உலக வரைபடத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பகுதிகளைக் குறிக்கவும்
2. வரலாற்றுக்கு முந்தைய காலம் தமிழ்நாட்டில் நிலவிய இடங்கள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை அமைக்கவும்

9th Social Science Guide இடைக்காலம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சீனா _____ அரச வம்சத்தால் கிபி. 589ல் ஒன்றிணைக்கப்பட்டது.
அ) அப்பாசித்து
ஆ) உமையது
இ மங்கோலிய
ஈ) சூயி
விடை:
ஈ) சூயி

Question 2.
சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம் ____ கிலோ மீட்டர் ஆகும்.
அ) 6100
ஆ) 6200
இ) 6700
ஈ) 7600
விடை:
இ) 6700

Question 3.
வெடி மருந்து _____ ஆண்டிலேயே பயன்பாட்டில் இருந்தது.
அ) 1014
ஆ) 1044
இ 1440
ஈ) 1404
விடை:
ஆ) 1044

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 4.
கி.பி. _____ ல் நபிகள் இயற்கை எய்தினார்.
தன்
அ) 618
ஆ) 624
இ 632
ஈ) 652
விடை:
இ) 632

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
பௌத்த மதம் ______ மூலம் ஜப்பானில் அறிமுகமாகியது.
விடை:
கொரியா

Question 2.
தாய்-நியா-புங்-காக் என்பதன் பொருள் ______
விடை:
மாபெரும் சூரியன் உதிக்கும் நாடு

Question 3.
சோகா குடும்பத்தின் தலைவர் ______
விடை:
சோடுகு தாய்சி

Question 4.
உமையது வம்சத்தின் தலைநகர் ______
விடை:
டமாஸ்கஸ்

Question 5.
நில பிரபுத்துவத்தில் இறுதி வரிசையில் இடம் பெற்றவர்கள் _____
விடை:
நைட்

III. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
தாங் அரச வம்சத்தின் இரு தலைநகரங்கள் யாவை?
விடை:
போயாங், சாங்-ஆன்.

Question 2.
ஹிஜிரா – வருவி
விடை:
நபிகளும் அவரைப் பின்பற்றுவோரும் இடர்பாடுகளின் காரணமாய் மெக்காவை விட்டு எத்ரிப் நகருக்கு இடம் பெயர்ந்த நிகழ்வு அராபிய மொழியில் ஹிஜிரா’ என அழைக்கப்படுகிறது எத்ரிப் நகர் மெரினா

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

Question 3.
சன்னி, ஷியா பிரிவினர் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
சன்னி பிரிவினர் :
“இஸ்லாமிய நாடுகளின் தலைமையும், நபிகளுக்குப் பின் அப்பொறுப்புக்கு வருவோரும் இஸ்லாத்தில் நம்பிக்கையுடைய மக்களின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள்.

ஷியா பிரிவினர் :
“அரசியல், மத தலைமைப் பொறுப்புகளை ஏற்போர் நபிகள் நாயகத்துடன் ரத்த உறவு கொண்டவர்களாக அல்லது மண உறவு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்”. என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள்.

Question 4.
சாராசென்ஸ் விவரி.
விடை:
சாராசென்ஸ் என்பவர்கள் பலைவனங்களில் நாடோடிகளாக வாழ்ந்து, வலிமை மிகுந்த ஒரு பேரரசின் ஆட்சியாளர்களாக ஆன அராபியர்கள்.
(சகாரா + நஸின் = சாரா சென்ஸ்)

Question 5.
பிப் – குறிப்பு வரைக.
விடை:
பிப் (Fief) என்பது ஒருவருக்கு அவரை விட மேல் நிலையில் இருக்கும் கோமகனால் வழங்கப்படும் நிலம். நிலத்தைப் பெற்றவர் நிலம் கொடுத்தவருக்கு கைமாறாக சில சேவைகளைச் செய்வது கடமையாகும்.

IV. கீழ்க்கண்ட தலைப்புகளில் உள்ள எல்லா வினாக்களுக்கும் விடையளி

Question 1.
ஜப்பானின் சோகுனேட்கள்
அ) ஜப்பானில் பதவிக்காக சண்டையிட்டுக் கொண்ட டய்ம்யாஸ் குடும்பங்கள் இரண்டைக் குறிப்பிடுக.
விடை:
தாரா, மினமோட்டா

ஆ) இப்போரில் வெற்றி பெற்றவர் யார்?
விடை:
யோரிடோமோ

இ பேரரசர் வெற்றி பெற்றவருக்கு கொடுத்த பட்டம் என்ன?
விடை:
செ-ய்-தாய்-சோகன் (பண்பாடற்றவர்களை அடக்கிய மாபெரும் தளபதி)

ஈ) முதல் சோகுனேட்டின் தலைநகர் எங்கே நிறுவப்பட்டது?
விடை:
காமகுரா

Question 2.
அப்பாசித்துகளின் ஆட்சி
அ) அப்பாசித்துகள் என்போர் யார்?
விடை:
நபிகள் நாயகத்தின் மாமன் அப்பாஸ் என்பவரின் வழிவந்தவர்கள் அப்பாசித்துகள் என்றழைக்கப்பட்டனர்

ஆ) அப்பாசித்து காலிஃபா சூட்டிக்கொண்ட பட்டம் என்ன?
விடை:
நம்பிக்கையாளர்களின் தளபதி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம்

இ அவர்களின் புதிய தலைநகரம் எங்குள்ளது?
விடை:
பாக்தாத்

ஈ) யாருடைய ஆட்சியில், அப்பாசித்து பேரரசு புகழின் உச்சத்தை எட்டியது?
விடை:
ஹருன்-அல்-ரசீத்

V. விரிவான விடையளி.

Question 1.
திருச்சபை பற்றி விவரி?
விடை:
திருச்சபை :

  • பின் இடைக்காலத்தில் கிறிஸ்தவமதம் கோட்பாடுகள் மற்றும் மத நடைமுறைகள் சார்ந்தவற்றில்
    முக்கியமான வளர்ச்சி பெற்றிருந்தது.
  • கிறிஸ்தவ இறையியலில் சமயகுருமார் கோட்பாடு, புனிதச் சடங்குகள் பற்றிய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இவை சமய குருமார்களின் அதிகாரத்தை அதிகரிக்கச் செய்தன. இதனால் திருச்சபை படிப்பறிவில்லா தனது உறுப்பினர்கள் மீது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது.
  • திருச்சபை தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராக திருச்சபை விலக்கம், மதவிலக்கம் எனும் இரண்டு கருவிகளைப் பயன்படுத்தியது.
  • சமயம் சார்ந்த அதிகாரம் கொண்டவர்கள், சமயம் சாரா அதிகாரம் கொண்டவர்கள் வளர்ச்சியும் எழுச்சியும் அவர்களிடையே மோதல்களை ஏற்படுத்தியது. போப்பாண்டவர் ஏழாம் கிரிகோரிக்கும் ‘மதவிலக்கம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி பேரரசரை பதிவிவிலகச் செய்தார்.
  • போப்பாண்டவர் ஏழாம் கிரிகோரியின் நடைமுறையைப் பின்பற்றி போப் மூன்றாம் இன்னோசன் இங்கிலாந்தும் அயர்லாந்தும் திருச்சபைக்குச் சொந்தமானவை என அரசர் ஜானை அங்கீகரிக்க வைத்தார்.

மனவரைபடம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம் 60
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம் 61
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 இடைக்காலம் 62