Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 5.6 திருக்குறள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

பாடநூல் வினாக்கள்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அரசரை அவரது …………………… காப்பாற்றும்.
அ) செங்கோல்
ஆ) வெண்கொற்றக்குடை
இ) குற்றமற்ற ஆட்சி
ஈ) படை வலிமை
Answer:
இ) குற்றமற்ற ஆட்சி

Question 2.
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் …………………………. தகுதி அறிந்து பேசவேண்டும்.
அ) சொல்லின்
ஆ) அவையின்
இ) பொருளின்
ஈ) பாடலின்
Answer:
ஆ) அவையின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Question 3.
‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
அ) கண் + ஓடாது
ஆ) கண் + ணோடாது
இ) க + ஓடாது
இ) கண்ணோ + ஆடாது
Answer:
அ) கண் + ஓடாது

Question 4.
‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) கச + டற
ஆ) கசட + அற
இ) கசடு + உற
ஈ) கசடு + அற
Answer:
ஈ) கசடு + அற

Question 5.
‘என்று + ஆய்ந்து’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
அ) என்றாய்ந்து
ஆ) என்று ஆய்ந்து
இ) என்றய்ந்து
ஈ) என் ஆய்ந்து
Answer:
அ) என்றாய்ந்து

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

குறுவினா

Question 1.
நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?
Answer:
ஒரு செயலை இந்த வகையால், இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து, அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Question 2.
சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?
Answer:
எதையும் நன்கு ஆராய்ந்து, ஒருபக்கம் சாயாது நடுவு நிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சி ஆகும்.

Question 3.
அரசன் தண்டிக்கும் முறை யாது?
Answer:
ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து, அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது, அரசன் தண்டிக்கும் முறையாகும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Question 4.
சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?
Answer:
கேட்பவரைத் தன் வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பு ஆகும்.

பின்வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

பள்ளி ஆண்டு விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைக்குழுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனைப் பரிந்துரைத்தனர். தலைமை ஆசிரியர் – ‘செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான்.

ஆனால், இது கலைக்குழுவிற்கான தலைவர், பதவி, நடனம், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுள்ள ஒருவரே இதற்குத் தகுதியானவர். எனவே என்னுடைய தேர்வு கலையரசன்’ என்று நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள் அனைவரும் ‘சிறந்த தேர்வு’ என்று மகிழ்ந்தனர்.

அ) அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மை யவர்.

ஆ) இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

இ) ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
Answer:
ஆ) இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
……………………… நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.
அ) காலம்
ஆ) நடுவுநிலைமை
இ) முறையாக ஆராய்தல்
ஈ) உயிர்கள் காப்பாற்று
Answer:
ஆ) நடுவுநிலைமை

Question 2.
வையகம் என்பதன் பொருள் ………………….
அ) கடல்
ஆ) அரசன்
இ) நடுவுநிலைமை
ஈ) உலகம்
Answer:
ஈ) உலகம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Question 3.
‘இறை’ என்னும் சொல்லின் பொருள் ………………..
அ) அரசர்
ஆ) குடிமக்கள்
இ) உலகம்
ஈ) விரைந்து
Answer:
அ) அரசர்

குறுவினா

Question 1.
செயலை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்?
Answer:
செயலாற்றும் திறனுடையவரையும், செய்ய வேண்டிய செயலையும், செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து, அச்செயலை நிறைவேற்ற வேண்டும்.

Question 2.
உலகத்து உயிர்களையெல்லாம் காப்பாற்றுபவர் யார்?
Answer:
உலகத்து உயிர்களையெல்லாம் காப்பாற்றுபவர் அரசர் ஆவார்..

Question 3.
அரசரைக் காப்பாற்றுவது எது?
Answer:
குற்றமற்ற ஆட்சியே அரசனைக் காப்பாற்றும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Question 4.
அவையின் தகுதி அறிந்து பேசவேண்டுபவர் யாவர்?
Answer:
சொல் வளமும், நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதியறிந்து பேசுதல் வேண்டும்.

Question 5.
கற்றவரின் கல்வி எப்போது பெருமை அடையும்?
Answer:
சொற்களை ஆராயும் அறிஞர் நிறைந்த அவையில் பேசும்போதுதான் பல நூல்களைக் கற்றவரின் கல்வி பெருமை அடையும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

சொல்லும் பொருளும்

நாடி – நாடுதல்
ஆய்ந்து – ஆராய்ந்து
இறை – அரசர்
வினையாடல் – செயல் செய்தல்
ஒறுப்பது – தண்டிப்பது
கடியன் – கடுமையானவர்
வேந்தன் – அரசன்
கடுகி – விரைந்து