Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 2.3 நீல ம் பொது Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 1.
நில வளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
பார்க்க: சிந்தனை வினாவுக்கான விடை – பக்கம் எண்: 46

Question 2.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்த படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது 1

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
செவ்விந்தியர்கள் நிலத்தைத் …………………. மதிக்கின்றனர்.
அ) தாயாக
ஆ) தந்தையாக
இ) தெய்வமாக
ஈ) தூய்மையாக
Answer:
அ) தாயாக

Question 2.
‘இன்னோசை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
அ) இன் + ஓசை
ஆ) இனி + ஓசை
இ) இனிமை + ஓசை
ஈ) இன் + னோசை
Answer:
இ) இனிமை+ஓசை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 3.
‘பால் + ஊறும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………..
அ) பால்ஊறும்
ஆ) பாலூறும்
இ) பால்லூறும்
ஈ) பாஊறும்
Answer:
ஆ) பாலூறும்

தொடரில் அமைத்து எழுதுக.

1. வேடிக்கை :
தெனாலிராமன் கதைகள் வேடிக்கையாக இருக்கும்.

2. உடன்பிறந்தார் :
வள்ளலார், அனைத்து உயிரினங்களையும் தன் உடன்பிறந்தார் போல் எண்ணினார்.

குறுவினா

Question 1.
விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?
Answer:

  • இந்தப் பூமிக்கு அணுக்கமாக உள்ள வானம், காற்றின் தூய்மை, நீரின் உயர்வு யாருக்கும் சொந்தமானவை அல்ல.
  • அப்படி இருக்கையில், அவற்றை எவ்வாறு விலைகொடுத்து வாங்க முடியும் என்று சியாட்டல் கூறுகின்றார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 2.
நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?
Answer:

  • இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் செவ்விந்தியர்களுக்குப் புனிதமாகும்.
  • இந்தப் பூமியை எப்பொழுதும் செவ்விந்தியர்கள் மறப்பதேயில்லை. ஏனெனில் பூமியே அவர்களுக்குத் தாயாகும்.
  • அவர்கள் அந்த மண்ணுக்கு உரியவர்கள்; அந்த மண்ணும் அவர்களுக்குரியதாகும்.

Question 3.
எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?
Answer:

  • செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும்,
  • எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும்,
  • தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும்

தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.
Answer:

  • ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை.
  • இந்த நீரின் முணுமுணுப்புகள் எம்பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.
  • இந்த ஆறுகள் யாவும் எம் உடன் பிறந்தவர்கள். இவர்கள் தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.
  • எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர் குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.
  • இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும் என நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 2.
எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?
Answer:

  • இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.
  • மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.
  • மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும
  • இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல் கூறுகிறார்.

நெடுவினா

Question 1.
தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும். எமது மக்கள், இந்தப் பூமியை எப்போதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே எமக்குத் தாயாகும்.

(ii) நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள் இந்த மண்ணும் எமக்குரியதாகும். இந்நிலமானது எங்களுக்கு மிகவும் புனிதமானது என்பதால் இந்நிலத்தை விற்க சம்மதிப்பது என்பது மிகவும் இயலாத ஒன்றாகும்.

(iii) நாங்கள் பூமியைத் தாயாகவும், வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள். எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும்.

(iv) நீங்கள் இதனை உங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாகச் சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.

(v) இந்நிலமே எங்கள் தாயாகும்; எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுங்கள்.

(vi) இப்பூமியின் மீது வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீது வந்து விழுவனவே யாகும். மேலும், இப்பூமியின் மீது மக்கள் துப்பக் கூடுமானால் அது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும்.

(vii) இந்நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே, இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த இறைவனை அவமதிக்கும் செயலாகிவிடும்.

(viii) நீங்கள் மற்றப் பழங்குடியினரைக் காட்டிலும் முன்கூட்டியே இந்நிலத்தை விட்டுச் செல்லக்கூடும்.

(ix) நீங்கள் படுத்துறங்கிய இடத்தை நீங்களே அசுத்தப்படுத்தினால் ஒருநாள் இரவு நீங்கள் உங்கள் குப்பைகளுக்குள்ளேயே மூச்சு முட்டி இறந்து போகக்கூடும்.

(x) நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக இருந்தால் எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள்.

(xi) நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள். முழுமையான விருப்பத்தோடு உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள்.

(xii) நிலத்தை நேசியுங்கள். இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பது போல என்று சியாட்டல் கூறுகின்றார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

சிந்தனை வினா

Question 1.
நில வளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
(i) துணிகள், நெகிழி, மரத்துண்டுகள், கண்ணாடி, பேப்பர், போன்ற வீடு மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் நேரடியாக நிலத்தில் கொட்டப்படுகின்றன. இவற்றில் சில மக்கும் தன்மை உடையவை; பல மக்காத தன்மை உடையவை.

(ii) மட்காதப் பொருட்கள் குழிதோண்டி நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இந்நிகழ்வு நிலச் சீர்க்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுத்து நிறுத்தல்.

(iii) நாளும் பெருகி வரும் தொழிற்சாலைகளால் அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் வேதியியல் கழிவுகள், உலோகக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை எளிதில் மக்காதவை. இவை நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. அதனால் அவைகளை நிலத்தில் கலக்காதவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(iv) கழிவுநீரினைச் சுத்திகரிக்கும் போது திடக்கழிவுகள் அதிகளவு ஏற்படுகின்றன. இவை நிலத்தில் புதைக்கப்படுகின்றன. அல்லது எரிக்கப்படுகின்றன. புதைக்கப்படும்போது அவை நிலமாசுபாட்டினை ஏற்படுத்துகின்றன. அவைகளை முறையாகச் செயல்படுத்தினால் நிலவளத்தைக் காப்பாற்றலாம்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அமெரிக்காவில் ‘பூஜேசவுண்ட்’ என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் …………………….. பழங்குடியினர்.
அ) மக்காய்ஸ்
ஆ) சுகுவாமிய்
இ) மங்கோலிய
ஈ) செனட்டில்
Answer:
ஆ) சுகுவாமிய்

Question 2.
சுகுவாமிய் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் ………………………….
அ) சிடாட்டல்
ஆ) சியாட்டஸ்
இ) சியாட்டல்
ஈ) செங்கிஸ்கான்
Answer:
இ) சியாட்டல்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 3.
……………………….. பெருந்தலைவர் செவ்விந்தியர்களின் நிலங்களை வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.
அ) நியூயார்கின்
ஆ) சிகாகோவின்
இ) வாஷிங்டனின்
ஈ) சிட்னியின்
Answer:
இ) வாஷிங்டனின்

Question 4.
………………………….. களில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள்.
அ) ஆறு
ஆ) ஏரி
இ) குளம்
ஈ) ஊற்று
Answer:
ஆ) ஏரி

Question 5.
நீங்கள் …………………….. நிலத்திலிருந்து தேவையானவற்றை எடுத்துச் செல்லவே இங்கு வருகின்றீர்கள்.
அ) நண்பர்கள்
ஆ) உறவினர்கள்
இ) அயலவர்கள்
ஈ) பொறுப்பாளர்
Answer:
இ) அயலவர்கள்

Question 6.
உங்களுடைய கோரப்பசியானது இப்பூமியைக் கொன்றழித்துப் பாழாக்கி அதனைப் ……………………… ஆக்கிவிடும்.
அ) சோலைவனம்
ஆ) பாலைவனம்
இ) நந்தவனம்
ஈ) பூங்காவனம்
Answer:
ஆ) பாலைவனம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 7.
இக்கட்டுரை ………………………… எழுதிய தமிழகப் பழங்குடிகள் எனும் நூலில் இருந்து எடுத்துத்தரப்பட்டுள்ளது.
அ) தாராபாரதி
ஆ) சுப்பிரமணிய பாரதி
இ) பக்தவச்சல பாரதி
ஈ) கவிப்பாரதி
Answer:
இ) பக்தவத்சல பாரதி

Question 8.
‘ஊசியிலை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) ஊ + இலை
ஆ) ஊசி + யிலை
இ) ஊசி + இலை
ஈ) ஊசி + சிலை
Answer:
இ) ஊசி + இலை

Question 9.
‘மறப்பதேயில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மறப்பதே + யில்லை
ஆ) மறப்பதே + இல்லை
இ) மறப்பது + இல்லை
Answer:
ஆ) மறப்பதே + இல்லை

Question 10.
‘உணவளிக்கின்றனர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………
அ) உணவு + அளிக்கின்றனர்
ஆ) உண + வளிக்கின்றனர்
இ) உணவளி + கின்றனர்
Answer:
அ) உணவு + அளிக்கின்றனர்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 11.
‘நீரானது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) நீ + ரானது
ஆ) நீர் + அனது
இ) நீர் + ஆனது
ஈ) நீரா + னது
Answer:
இ) நீர் + ஆனது

Question 12.
‘நிலத்திலிருந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) நில + இருந்து
ஆ) நிலத்தில் + இருந்து
இ) நிலத்தில் + யிருந்து
ஈ) நிலத்தி + லிருந்து
Answer:
ஆ) நிலத்தில் + இருந்து

Question 13.
‘உங்கள் + உடைய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………..
அ) உங்களுடைய
ஆ) உங்களுடைய
இ) உன்னுடைய
ஈ) தங்களுடைய
Answer:
அ) உங்களுடைய

Question 14.
‘பாழ் + ஆக்கி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
அ) பாலாக்கி
ஆ) பாழ்ஆக்கி
இ) பாழாக்கி
இ) பாழ்ஊக்கி
Answer:
இ) பாழாக்கி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 15.
‘முறையில் + இருந்து’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
அ) முறையிருந்து
ஆ) முறையிலிருந்து
இ) முறையாய் இருந்து
ஈ) முறையில் இருந்து
Answer:
ஆ) முறையிலிருந்து

Question 16.
‘காட்சிகள் + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
அ) காட்சிகள் எல்லாம்
ஆ) காட்சிகளெல்லாம்
இ) காட்சியெலாம்
ஈ) காட்சியெல்லாம்
Answer:
ஆ) காட்சிகளெல்லாம்

Question 17.
‘ஒன்று + ஆகும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) ஒன்று ஆகும்
ஆ) ஒன்றேயாகும்
இ) ஒன்றாகும்
ஈ) ஒவ்வொன்றாகும்
Answer:
இ) ஒன்றாகும்

குறுவினா

Question 1.
‘சுகுவாமிய்’ பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்?
Answer:
அமெரிக்காவில் பூஜேசவுண்ட்’ என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் ‘சுகுவாமிய்’ பழங்குடியினர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 2.
சுகுவாமிய் பழங்குடியினரின் தலைவர் யார்?
Answer:
சுகுவாமிய பழங்குடியினரின் தலைவர் சியாட்டல் ஆவார்.

Question 3.
சியாட்டல் யாருக்கு, எதற்காகக் கடிதம் எழுதினார்?
Answer:
சுகுவாமிய பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சியாட்டல், அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதினார்.

Question 4.
நிலத்தை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்று சியாட்டல் அமெரிக்கர்களுக்குக் கூறுகிறார்?
Answer:
நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக இருந்தால், எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள். நிலத்தை நேசியுங்கள்; இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பது போல என்று கூறுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

சிறுவினா

Question 1.
அமெரிக்கர்களின் வாழ்வையும், செவ்விந்தியர்களின் வாழ்வையும் ஒப்பிட்டுச் சியாட்டல் கூறுவது யாவை?
Answer:
(i) உங்கள் நகரங்களில் அமைதியான இடம் எதுவுமில்லை . நீங்கள் வாழும் எந்த ஓர் இடத்திலும் அசைந்தாடும் இலைகளின் ஓசைகளையோ பூச்சி இனங்களின் ரீங்காரங்களையோ கேட்க முடிவதில்லை. மாறாக, சடசடவொலிகள் காதைப் பிளக்கின்றன.

(ii) மகிழ்வூட்டும் இராக்கூவற் பறவைகளின் ஒலிகளையோ, குளத்தைச் சுற்றிக் கேட்கும் தவளையின் கூச்சல்களையோ கேட்காத வாழ்வென்ன வாழ்வு?

(iii) நான் ஒரு செவ்விந்தியன் என்பதால் இதனை எவ்வாறு புரிந்து கொள்வதெனத் தெரியவில்லை .

(iv) எம் மக்கள் யாவரும் அமைதியான குளத்தின் முகத்தை முகந்து வரும் தென்றலின் இன்னோசையையும், நடுப்பகலில் பெய்யும் மழையால் எழும்மண்வாசனையையும், தேவதாரு மரத்திலிருந்து பறக்கும் இலைகளின் மணத்தையும் நுகர்வதை விரும்புபவர்கள்.

(v) நாங்கள் காற்றை மிகவும் மதித்துப் போற்றுபவர்கள். நீங்கள் சுவாசிக்கும் காற்றைப் பற்றிச் சிந்தித்ததில்லை என்று சியாட்டல் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 2.
காற்று குறித்து சியாட்டல் கூறுவன யாவை?
Answer:

  • நாங்கள் காற்றை மிகவும் மதித்துப் போற்றுபவர்கள். விலங்குகள், மரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது.
  • பொதுவான ஒரு காற்றையே இவையாவும் சுவாசிக்கின்றன. நீங்கள் சுவாசிக்கும் காற்றைப் பற்றிச் சிந்தித்ததில்லை. இந்தக் காற்றானது அனைத்துப் புது உயிர்களையும் காக்கிறது.
  • இவ்வுணர்வுகளைச் சுமந்து நிற்கும் காற்றின் இன்றியமையாமையை, நாங்கள் நிலத்தை விற்றுவிட நேர்ந்த பின்னரும் நீங்கள் மறக்கவே கூடாது என்கிறார்.