Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

7th Social  Science Guide சாலைப் பாதுகாப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சாலைப்பாதுகாப்பு என்பது இவர்களுக்கானது.
அ) வழிப்போக்கர்கள்
ஆ) ஓட்டுநர்கள்
இ) பொதுமக்கள்
ஈ) சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்
விடை:
ஈ) சாலையைப் பயன்படுத்தவோர் அனைவருக்கும்

Question 2.
சாலை விபத்துகள் ஒரு நாட்டின் …………….. பாதிக்கின்றன.
அ) முன்னேற்றத்தை படிக்க
ஆ) வாழ்வை – பக்கம்
இ) பொருளாதாரத்தை பாது
ஈ) மேற்கூறிய அனைத்தையும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தையும்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
அனுமதி என்பது
அ) இயக்குவதற்கு அனுமதி
ஆ) பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி
இ) ஓட்டுநருக்கு சான்றிதழ்
ஈ) வாகனத்தை பதிவு செய்ய சான்றிதல்
விடை:
அ) இயக்குவதற்கு அனுமதி

Question 4.
ரக்ஷா பாதுகாப்பு
அ) பாதசாரிகள்
ஆ) மோட்டார் வாகன ஓட்டிகள் பாகம் தனது
இ) கார் இயக்குபவர்கள்
ஈ) பயணிகள்
விடை:
இ) கார் இயக்குபவர்கள்

Question 5.
இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட வருடம்
அ) 1947
ஆ) 1990
இ) 1989
ஈ) 2019
விடை:
இ) 1989

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
போக்குவரத்தில் மனிதனின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பு …………………. ஆகும்.
விடை:
சக்கரம்

Question 2.
நமது வாழ்க்கைப் பயணத்தில் ………………யைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.
விடை:
சாலை

Question 3.
சாலைகளில் அதிகமான வாகனங்களால் ……………. மற்றும் ……………. மாசுபாடும் ஏற்படுகின்றன.
விடை:
போக்குவரத்து நெரிசலும், அதிகமான

Question 4.
…………………… குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்.
விடை:
வருவாய் ஆதரவாளர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 5.
மருத்துவ உதவியின் அவசர தேவைக்கு ………………….. எண்ணை அழைக்கலாம்.
விடை:
108

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 2

IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
கூற்று : கார் பூலிங் என்பது ஒரே தடத்திலிருந்து பலர் ஒன்றுகூடி ஒரே வாகனத்தைப் பயன்படுத்துவது.
காரணம் : அது எரிபொருள், நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணமும் சரி
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
ஆ) கூற்று சரி, காரணமும் சரி

V. பொருத்தமில்லாத ஒன்றைக் கண்டுபிடி

Question 1.
அ) கார்
ஆ) டிரக்
இ) டெம்போ
ஈ) ஏரோப்ளேன்
விடை:
ஈ) ஏரோப்ளேன்

VI. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை என்பதைக் கண்டுபிடி

அ) பள்ளிப் பாடத்திட்டத்தில், சாலைப் பாதுகாப்புக் கல்வியை இணைப்பது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதே ஆகும்.
ஆ) சாலைகளில் மண் குவிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
இ) குழந்தைப் பருவத்திலிருந்தே சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல், பிற்காலத்தில் அவர்களது பழக்க வழக்கமாகிவிடும்.
விடை:
சரியானவை : ஆ, இ

VII. ஒரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
வாகனம் இயக்கும் போது ஏற்படக்கூடிய கவனச்சிதறல்கள் எவை?
விடை:
கைப்பேசியில் பேசுவதோ, அதில் குறுஞ்செய்தி அனுப்புவதோ மற்ற பல செயல்களில் ஈடுபடுவதோ கவனத்சிதறலுக்கு வழிவகுக்கிறது.

Question 2.
பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவதற்கு இரண்டு பாதுகாப்பு முறைகளைக் கூறு.
விடை:

  1. இருசக்கர வாகனங்கள் இயக்கும் போது தலைக்கவசம் அணிய வேண்டும்.
  2. நான்கு சக்கர வாகனம் இயக்கும் போது இருக்கைப்பட்டை அணிவது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
இரவு நேரங்களில் வாகனம் இயக்குவது பாதுகாப்பற்றது ஏன்?
விடை:

  • இரவு நேரங்களில் வாகனம் இயக்குவது பாதுகாப்பற்றது ஏனெனில்
  • கட்டுப்படுத்த முடியாத தூக்கம், அதிக தூரம் தொடர்ந்து வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் சோர்வு.
  • சாலையில் குறைந்த வெளிச்சம் ஆகியவை ஆகும்.

Question 4.
ஒரு வாகனத்தை இயக்குவதற்குரிய உரிமம் எப்போது ஒருவருக்குக் கிடைக்கும் ?
விடை:

  • இந்திய சட்டப்படி ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் வயது 18 ஆகும்.
  • ஒரு வாகனத்தை இயக்கும் ஒருவர் தனக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான பயிற்சியும் அதற்கான தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

Question 5.
பொதுமக்களிடையே சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட ஊடகம் என்ன செய்ய வேண்டும்.
விடை:
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் போன்ற ஊடகங்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு உள்ளது.

VIII. விரிவான விடையளி

Question 1.
ஓர் இந்தியன் வாகனம் ஓட்டுவதற்குத் தேவையான ஆவணங்கள் எவை?
விடை:
வாகனம் இயக்குபவர்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் :

  1. ஓட்டுநர் உரிமம்
  2. வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்
  3. காப்பீட்டுச் சான்றிதழ்
  4. வாகன வரி கட்டியதற்கான சான்றிதழ்
  5. அனுமதி மற்றும் தகுதிச்சான்றிதழ்

Question 2.
பள்ளிப்பாடத்திட்டத்தில் சாலைப்பாதுகாப்புக் கல்வியை இணைத்திடும் தேவை என்ன?
விடை:

  1. குழந்தை பருவத்திலிருந்தே போக்குவரத்துக் கல்வியை கற்று தருவதால் விபத்துகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  2. மாணவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் பற்றிய அறிவும் பெறுகின்றனர்.
  3. இது மாணவர்களை வழிநடத்தவும், சாலைகளை பாதுகாப்பாக கடக்கவும், தேவையான கல்வியறிவு கிடைக்கச்செய்கிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குச் சாலைப்பாதுகாப்பு விதிகளை எவ்வாறு கற்றுக் கொடுக்கலாம்?
விடை:

  • இளம் வயதினருக்கு சாலைப்பாதுகாப்புக் கல்வியைத் தருவதில் பெற்றோரும் ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
  • போக்குவரத்து குறியீடுகள் மற்றும் போக்குவரத்து விதிகளை குழந்தைகள் அறிந்திட உதவுங்கள்.
  • சரியான குறியீட்டிற்காக காத்திருந்து பாதசாரிகளுக்கான வரிக்குதிரை பாதையின் வழியாகச் சாலையை கடந்திட அறிவுறுத்துங்கள்.
  • சாலைகளில் அங்கும் இங்குமாகவோ, குறுக்காகவோ ஓடுதல் கூடாது என்பதை எச்சரிக்கை செய்யுங்கள்.
  • சாலைகளில் நடந்து செல்லும் போது நடைபாதையை பயன்படுத்தவேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
சாலைப்பாதுகாப்பு விதிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட நீங்கள், உங்கள் பெற்றோர்கள், உறவினர்கள் இடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள்.
விடை:

  1. நான் போக்குவரத்து குறியீடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
  2. சாலை விதிகள் பின்பற்றுவதன் தேவையை புரிந்துக்கொள்ளச் செய்வேன்.
  3. வாகனங்கள் ஓட்டும் போது தலைக்கவசம் மற்றும் இருக்கை பட்டைகள் அணிதல், கைப்பேசியில் பேசுவதை தவிர்த்தல் போன்றவைகளை அறிந்திடச் செய்வேன்.

Question 2.
சக்கரம் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் நமது போக்குவரத்து எவ்விதமாக இருந்திருக்கும்?
விடை:
சக்கரம் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்தால் நமது போக்குவரத்தக்கு கழுதைகளையும், ஒட்டகங்களையும், குதிரைகளையும் நாம் பயணிப்பதற்கும், பொருட்களை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தி இருப்போம்.

X. செயல்பாடுகள்

Question 1.
போக்குவரத்துக் குறியீடுகள் பற்றிய ஆல்பம் தயாரித்தல்

Question 2.
பொது மக்களிடையே சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தேவையான வாசகங்களைத் தொகுத்து எழுதுக.

Question 3.
சாலைப்பாதுகாப்பு பற்றிய போட்டிகளை நடத்துக.

7th Social  Science Guide சாலைப் பாதுகாப்பு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உலகத்திலேயே அதிகமான சாலை விபத்துகள் ……………….. தான் ஏற்படுகின்றன.
அ) இந்தியா
ஆ) இங்கிலாந்து
இ) சீனா
ஈ) ஜப்பான்
விடை:
அ) இந்தியா

Question 2.
வாகன இயக்குநர் ஒருவர் ………………….. பெறுவதற்கு தேவையான பயிற்சியும், தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும.
அ) ஆதார் அட்டை
ஆ) வாக்காளர் அட்டை
இ) ஓட்டுநர் உரிமம்
ஈ) குடும்ப அட்டை
விடை:
இ) ஓட்டுநர் உரிமம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
இந்திய சட்டப்படி ஒரு வாகன ஓட்டுநர், ஓட்டுநர் உரிமம் பெறும் வயது …………
அ) 21
ஆ) 18
இ) 24
ஈ) 19
விடை:
ஆ) 18

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
வாகனங்கள் ஓட்டும் போது ……………………. பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது
விடை:
கைப்பேசி

Question 2.
நாம் சாலை பாதுகாப்பிற்கான ………………. மற்றும் ………….. தீவிரமாக கடைபிடித்து நாட்டை பாதுகாப்போம்.
விடை:
விதிமுறைகள், ஒழுங்குமுறைகள்

Question 3.
……………….. அல்லது …………………… அருகில் வாகனங்கள் ஒலியெழுப்ப தடை செய்யப்பட்டுள்ளது.
விடை:
மருத்துவமனை, பள்ளி வளாகம்

Question 4.
வாகனத்தின் ……………. திடீரென பழுதாவதால் பயங்கரமான விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன.
விடை:
பிரேக்

Question 5.
இளம் வயதினருக்கு …………………… தருவதில் பெற்றோரும், ஆசிரியர்களும் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
விடை:
சாலை பாதுகாப்பு

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 3

IV. சரியான கூற்றை தேர்ந்தெடு

Question 1.
கூற்று : குழந்தைகள் காணொலி மற்றும் கணினியில் வாகனத்தை வேகமாக இயக்குவது போன்ற படக்காட்சிகள், விளையாட்டுகளை அரசு தடை செய்யவேண்டும்.
காரணம் : அது பிற்காலத்தில் வாகனங்களை வேகமாக இயக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்திவிடும்.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணமும் சரி
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணமும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 2.
கூற்று : இளம் வயதிலேயே சாலை பாதுகாப்புக் கல்வியைத் தரவேண்டும்.
காரணம் : பெற்றோர் போக்குவரத்து விதிகளை மீறும்போது அந்தக்குழந்தையும் பிற்காலத்தில் தன் பெற்றோரைப் போலவே போக்குவரத்து விதிகளை மீறும்.

அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணமும் சரி
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) இரண்டுமே தவறு
விடை:
ஆ) கூற்று சரி காரணமும் சரி

V. கீழ்காணும் கூற்றுகளில் சரியானவை எவை என்பதை கண்டுபிடி

அ) கார்பூலிங் செய்வதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆ) வாகனத்தின் பிரேக் திடீரெனப் பழுதாவதால் பயங்கரமான விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன.
இ) மிதிவண்டியில் செல்வது ஆரோக்கியமான பழக்கமாகவும் காற்று மாசுபாட்டை தடுப்பதாகவும் உள்ளது.
ஈ) போக்குவரத்துக் குறியீடுகள் சாலைகளில் போக்குவரத்தை நடத்தும் சத்தமில்லா நடத்துநராகவே செய்யப்படுகின்றன.
விடை:
சரியான விடை : ஆ, இ, ஈ

VI. பொருந்தாததை கண்டுபிடிக்க

Question 1.
அ) தகுதிச்சான்றிதழ்
ஆ) அனுமதி
இ) காப்பீட்டுச் சான்றிதழ்
ஈ) நிரந்தர கணக்கு எண் அட்டை
விடை:
ஈ) நிரந்தர கணக்கு எண் அட்டை

Question 2.
அ) கட்டாயக் குறியீடுகள்
ஆ) எச்சரிக்கை குறியீடுகள்
இ) வழக்கமான குறியீடுகள்
ஈ) தகவல் குறியீடுகள்
விடை:
இ) வழக்கமான குறியீடுகள்

VII. சுருக்கமான விடையளி

Question 1.
கார்பூலிங் என்றால் என்ன?
விடை:

  • கார்பூலிங் செய்வதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறையும்.
  • பலர் ஒரே வாகனத்தை பயன்படுத்துவதால் எரிபொருள், பணம் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது காற்று மாசுபாடும் குறைகிறது.

Question 2.
ரக்ஷா – வரையறு.
விடை:

  • ரக்ஷா ஒரு தானியங்கி கருவி.
  • இது வாகனத்தில் பொருத்தப்பட்டு வாகனம் தற்போது எங்குள்ளது என்பதையும், வாகனத்தின் இயந்திரத்தின் செயல்பாட்டினை கண்காணிக்கவும், வாகனத்தின் பதட்ட நிலையையும் உடனடியாக வெளிப்படுத்துகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு

Question 3.
போக்குவரத்து குறியீடுகளில் மூன்று வகைகளை யாவை?
விடை:

  1. கட்டாயக் குறியீடுகள்
  2. எச்சரிக்கை குறியீடுகள்
  3. தகவல் குறியீடுகள்

VIII. விரிவான விடையளி.

Question 1.
சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை விவரி.
விடை:

  • அதிகமான விபத்து பகுதிகளில் சாலைகளை சீர்செய்தல் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்துதல்.
  • போக்குவரத்து குறியீடுகள் மற்றும் சாலைச் சைகைகள் முதலியன போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் நன்றாகச் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்கின்றன.
  • நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சாலைகளை நல்ல முறையில் அமைத்தல்
  • அதி வேகமாக இயக்குபவர்களைக் கண்காணித்திட கண்காணிப்பு கேமிராக்களை பொருத்துதல்.
  • சாலைகளில் குழிதோண்டுதல் மற்றும் மணல்களை குவிப்பதை தடை செய்தல்.
  • சாலை ஆக்கிரமிப்புகளை நீக்கி பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பெதுமக்கள் சாலை விதிகளை மதிக்காமல் சென்றால் அரசு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தி அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 3 Civics Chapter 3 சாலைப் பாதுகாப்பு 4