Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
வாங்க பேசலாம்:
கேள்வி 1.
மரங்கள் விலங்குகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் பயன் தருகின்றன. எப்படி? உம் கருத்தை வெளிப்படுத்துக.
விடை :
- மரங்கள் நமக்கு காய், கனிகளைத் தருகின்றன.
- மரங்கள் நமக்கு நிழல் கொடுக்கின்றன.
- காய்ந்த மரக்கிளைகள் விறகாகப் பயன்படுகின்றன.
- பற்பல மரங்களின் இலைகள், வேர்கள், விதைகள், பட்டைகள் நமக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.
- மரங்களின் வேர்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன.
(படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!)
பக்கம் 7:
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
ஒத்துக்கொள்கிறோம் – இச்சொல்லின் பொருள் ____________
அ) விலகிக் கொள்கிறோம்
ஆ) ஏற்றுக் கொள்கிறோம்
இ) காத்துக் கொள்கிறோம்
ஈ) நடந்து கொள்கிறோம்,
விடை:
ஆ) ஏற்றுக் கொள்கிறோம்
கேள்வி 2.
வேட்டை + – ஆட – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) வேட்டையட
ஆ) வேட்டையாட
இ) வேட்டை ஆடு
ஈ) வெட்டையாட
விடை:
ஆ) வேட்டையாட
கேள்வி 3.
மரங்களிடையே – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மரம் + இடையே
ஆ) மரங்கள் + இடையே
இ) மரங்கள் + கிடையே
ஈ) மரங்கல் + இடையே
விடை:
ஆ) மரங்கள் + இடையே
கேள்வி 4.
அங்குமிங்கும் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அங்கு + மிங்கும்
ஆ) அங்கும் + இங்கும்
இ) அங்கு + இங்கும்
ஈ) அங்கும் + இங்கு
விடை:
ஆ) அங்கும் + இங்கும்
கேள்வி 5.
‘மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம்’ என்று கூறியது
அ) சிங்கம்
ஆ) புலி
இ) முயல்
ஈ) மான்
விடை:
(ஈ) மான்
வினாக்களுக்கு விடையளி :
கேள்வி 1.
மரங்கள் எவற்றுடன் சண்டையிட்டன?
விடை:
மரங்கள் விலங்குகளுடன் சண்டையிட்டன.
கேள்வி 2.
காட்டைவிட்டு எவை வெளியேறின?
விடை:
காட்டைவிட்டு விலங்குகள் வெளியேறின.
கேள்வி 3.
விலங்குகளுக்கும், மரங்களுக்கும் போட்டிவரக் காரணம் யாது?
விடை:
தங்களில் உயர்ந்தவர் யார் என்பதே போட்டி வரக் காரணம் ஆகும்.
கேள்வி 4.
கதையின் மூலம் நீ அறிந்து கொண்டதை எழுதுக.
விடை:
உலகில் அனைவரும் சமம் யாரும் உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் கிடையாது. அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் நமக்கு வலிமை கிடைக்கும்.
புதிர்களைப் படித்து, விடையைக் கண்டறிக.
கேள்வி 1.
காட்டின் அரசன் ஆவான்; நெருப்பு போன்ற கண்கள் உடையவன்; முழக்கமிடுவான் – அவன் யார்?
விடை:
சிங்கம்
கேள்வி 2.
என் உடலில் புள்ளிகள் உண்டு. நான் துள்ளித் துள்ளி ஓடுவேன் – நான் யார்?
விடை:
மான்
கேள்வி 3.
வேர்பிடித்து வளர்ந்திடுவேன்; தண்ணீரை உறிஞ்சிடுவேன்; மழைபெற உதவிடுவேன். – நான் யார்?
விடை:
மரம்
பக்கம் 9:
எந்த மரத்திலி ருந்து என்ன பொருள்? – பொருத்துவோமா?
விடை:
குழுவில் சேராததை வட்டமிடுக.
கேள்வி 1.
மயில், கிளி, புறா, புலி, கோழி
விடை:
புலி
கேள்வி 2.
ஆறு, ஏரி, குளம், மலை, குட்டை
விடை:
மலை
கேள்வி 3.
தாயம், பல்லாங்குழி, ஐந்தாங்கல், சதுரங்கம், மட்டைப்பந்து
விடை:
மட்டைப்பந்து
கேள்வி 4.
வெண்மை, கருமை, மென்மை, பசுமை, செம்மை
விடை:
மென்மை
கேள்வி 5.
கத்தரி, வெண்டை, தக்காளி, தென்னை, மிளகாய்
விடை:
பாசம்
சொல் விளையாட்டு:
விடை:
- பாலம்
- பாரம்
- பாடம்
- பாதம்
- பாசம்
பக்கம் 10:
சிந்திக்கலாமா?
கேள்வி 1.
விலங்குகளின் இருப்பிடம் காடுகள். காடுகளை அழித்து, அடுக்குமாடிகளும், தொழிற்சாலைகளும் கட்டினால், விலங்குகள் எங்குச் செல்லும்? உணவுக்கு என்ன செய்யும்? இதற்கென்ன தீர்வு?
விடை:
காடுகளை அழித்தால் பற்பல உயிரினங்கள் அழிந்துவிடும். காட்டு விலங்குகள் நீரையும், உணவையும் தேடி ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும். இதனைத் தடுக்க மரக் கன்றுகளை ஊன்றிப் பாதுகாக்க வேண்டும். பூமியைப் பசுமை நிறைந்ததாக மாற்ற வேண்டும்.