Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 7.1 படை வேழம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Question 1.
உங்களுக்குத் தெரிந்த சிற்றிலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • பரணி
  • கலம்பகம்
  • அந்தாதி
  • பள்ளு
  • கோவை
  • பிள்ளைத்தமிழ்
  • சதகம்
  • குறவஞ்சி
  • தூது

Question 2.
போர்க் கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம் 1

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சிங்கம் …………………….. யில் வாழும்.
அ) மாயை
ஆ) ஊழி
இ) முழை
ஈ) அலை
Answer:
இ) முழை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Question 2.
கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு ………………………
அ) வீரம்
ஆ) அச்சம்
இ) நாணம்
ஈ) மகிழ்ச்சி
Answer:
ஆ) அச்சம்

Question 3.
‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
அ) வெம் + கரி
ஆ) வெம்மை + கரி
இ) வெண் + கரி
ஈ) வெங் + கரி
Answer:
ஆ) வெம்மை + கரி

Question 4.
‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) என் + இருள்
ஆ) எட்டு + இருள்
இ) என்ற + இருள்
ஈ) என்று + இருள்
Answer:
ஈ) என்று + இருள்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Question 5.
‘போல் + உடன்றன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) போன்றன
ஆ) போலன்றன
இ) போலுடன்றன
ஈ) போல்உடன்றன
Answer:
இ) போலுடன்றன

குறுவினா

Question 1.
சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்?
Answer:
தங்கள் உயிரைப் பறிக்க வந்த எமனோ என்று சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் நடுங்கினர்.

Question 2.
கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?
Answer:
கலிங்க வீரர்கள் தம்மை அழிக்க வந்த தீயோ என்று அஞ்சி ஓடினர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Question 3.
சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை?
Answer:

  • படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர்.
  • கடலில் தாவிக் குதித்துத் தப்பினர்.
  • யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர்.
  • எந்தத் திசையில் செல்வது என்று தெரியாமல் மலைக் குகை மற்றும் புதருக்குள் தப்பி ஒளிந்து கொண்டனர்.

சிறுவினா

Question 1.
சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப் படைவீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?
Answer:

  • கலிங்க வீரர்கள் “இது என்ன மாய வித்தையா” என்று வியந்தனர். தம்மை அழிக்க வந்த தீயோ? உயிரைப் பறிக்க வந்த எமனோ? என்று அஞ்சினர்.
  • படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். யானைகள் பின்னே மறைந்து கொண்டனர்.
  • எந்தத் திசையில் செல்வது எனத் தெரியாமல், மலைக் குகை மற்றும் புதர்களில் ஓடி ஒளிந்தனர்.
  • ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தன்னுடைய நிழலைக் கூட எதிரிகள் துரத்தி வருவதாக எண்ணிப் பயந்தனர்.
  • யானை பிளிறியதைக்கேட்டு பயந்த வீரர்கள் குகைக்குள் சென்று மறைந்தனர். புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

சிந்தனை வினா

Question 1.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை எவை எனக் கருதுகிறீர்கள்?
Answer:

  • ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இயற்கையாக அமைந்த அரண்களும்,
  • நான்கு திசைகளின் எல்லைகளில் பாதுகாப்புப் படை வீரர்களும்,
  • வேறுபட்ட சிந்தனை கொண்ட படைத் தலைவர்களும்,
  • திறமையான படை வீரர்களும் தேவை எனக் கருதுகிறேன்.

கூடுதல் வினாக்கள்இயல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
செயங்கொண்டார் பிறந்த ஊர் ……………………..
அ) ஆலங்குடி
ஆ) தீபங்குடி
இ) மால்குடி
ஈ) லால்குடி
Answer:
ஆ) தீபங்குடி

Question 2.
கலிங்கத்து பரணி ………………………. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
அ) 96
ஆ) 24
இ) 95
ஈ) 18
Answer:
அ) 96

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Question 3.
தமிழில் முதன் முதலில் தோன்றிய பரணி நூல் ……………………
அ) தக்கயாகப்பரணி
ஆ) கலிங்கத்துப் பரணி
இ) இரணிய வதைப் பரணி
ஈ) பாசவதைப் பரணி
Answer:
ஆ) கலிங்கத்துப் பரணி

Question 4.
‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ – என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் ………………………..
அ) புகழேந்திப் புலவர்
ஆ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்
Answer:
இ) ஒட்டக்கூத்தர்

Question 5.
கலிங்கத்துப் பரணியில் அமைந்துள்ள தாழிசைகளின் எண்ணிக்கை …………………
அ) 599
ஆ) 598
இ) 590
ஈ) 595
Answer:
அ) 599

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

குறுவினா

Question 1.
பரணி இலக்கியம் எதனைப் பற்றியது?
Answer:
போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கண்ட வீரரைப் புகழ்ந்து பாடுவது பரணி இலக்கியமாகும்.

Question 2.
செயங்கொண்டார் – குறிப்பு வரைக.
Answer:

  • முதல் குலோத்துங்கச் சோழனின் அவைக்களப் புலவர்.
  • பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் “பரணிக்கோர் செயங்கொண்டார்” என்று புகழ்ந்துள்ளார்.
  • செயங்கொண்டார் “தீபங்குடி” என்னும் ஊரைச் சார்ந்தவர்.
  • கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் இவர்.

Question 3.
இஃது என்ன மாய வித்தையோ என கலிங்கத்துப் படை வியக்கக் காரணம் யாது?
Answer:
சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்க வீரர்கள் இஃது என்ன மாய வித்தையோ என்று வியந்தனர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

Question 4.
சோழப் படையின் யானைகள் எவ்வாறு பிளிறின?
Answer:

  • சோழப் படையின் யானைகள் சினமுற்று இடியைப் போல பிளிறின.
  • இதனைக் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாகக் கலிங்க வீரர்கள் அஞ்சினர்.
  • கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடும்போது தங்களுடைய நிழலையும் மற்றவர் நிழலையும் பார்த்து தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி ஓடினர்.

சிறுவினா

Question 1.
கலிங்கத்துப்பரணி – குறிப்பு வரைக.
Answer:

  • கலிங்கத்துப்பரணி 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.
  • பரணி இலக்கிய வகையைச் சார்ந்தது.
  • தமிழில் பாடப்பட்ட முதல் பரணி நூல் இதுவே ஆகும்.
  • கலிங்கத்துப் போர் வெற்றியை இந்நூல் பேசுகிறது.
  • இந்நூலை இயற்றியவர் செயங்கொண்டார்.
  • கலித்தாழிசையால் பாடப்பட்ட நூல் இது.
  • 599 தாழிசைகள் கொண்டது.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

சொல்லும் பொருளும்

  • மறலி – காலன்
  • கரி – யானை
  • தூறு – புதர்
  • அருவர் – தமிழர்
  • உடன்றன – சினந்து எழுந்தன
  • வழிவர் – நழுவி ஓடுவர்
  • பிலம் – மலைக்குகை
  • மண்டுதல் – நெருங்குதல்
  • இறைஞ்சினர் – வணங்கினர்
  • முழை – மலைக்குகை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 6.4 காலம் உடன் வரும் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும்

Question 1.
காலம் உடன் வரும் – கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக்காட்டுக.
Answer:
மாணவர் செயல்பாடு.

Question 2.
காலம் உடன் வரும் கதையில் இடம்பெற்றுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும் 3 Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும் 4

பாடநூல் வினாக்கள்

Question 1.
‘காலம் உடன் வரும்’ – கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
காலம் உடன் வரும் எனும் சிறுகதையை எழுதியவர் கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் ஆவார். நெசவுத் தொழிலில் ஏற்படும் இன்னல்களையும் நெசவாளர்களின் ஏழ்மை நிலையினையும் காட்டுவதாக இக்கதை அமைகிறது.

சுப்ரமணியத்தின் கவலை :
அனந்திகா நிறுவனத்திற்கு வழக்கமாக வெள்ளக்கோயில் தினேஷ் துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத் துணிகளை அனுப்பி வைப்பார்கள். ஒருநாள் துணி அனுப்புவது தாமதமாகிறது. தறி நெய்ய ஆள் கிடைப்பதில்லை. அதனால் துணி நெய்ய தாமதமாகிறது என்று எவ்வளவு சொல்லியும் அனந்திகா நிறுவனம் நாளைக்குள் கட்டாயம் துணிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்கிறது.

வழக்கமாகப் பாவு இணைக்கும் ரங்கன் ஊருக்குச் சென்று விட்டதால், அங்கு யாரும் இல்லை. மாணிக்கம் – ஓட்டும் ஒரே ஒரு தறியில்தான் பாவு இருக்கிறது. அந்தப் பாவும் சற்று நேரத்தில் தீர்ந்து விடும். என்ன செய்வது என்று தெரியாமல் சுப்ரமணியம் மிகவும் கலங்கிப் போனார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும்

நண்பன் ரகுவின் உதவி :
நண்பர் ரகு துணியகத்தில் கட்டாயமாகப் பாவு இணைப்பவர் யாராவது இருப்பார்கள். அங்கே போய் பார்க்கலாம் என்று ரகுவினுடைய தறிப்பட்டறைக்குச் செல்கிறார். பதற்றத்துடன் வந்த சுப்பிரமணியத்தை ரகு நெருங்கினார். அதற்குள் சுப்பிரமணியன் பாவு இணைக்க ஆள் வேண்டும். உடனடியாக யாரையாவது அனுப்பி உதவுங்கள் என்றார்.

அதற்கு ரகு மாயழகுவின் மனைவி ஒச்சம்மா பாவு இணைக்கும் 5 வேலையை நன்கு செய்வாள். ஆனால் இந்த இரவில் அவன் எப்படி அனுப்புவான் என்கிறார். இரட்டைச் சம்பளம் தருகிறேன் என்றார். ரகு தான் சொன்னதாகச் சொல்லி ஒச்சம்மாவை அழைத்துச் செல் என்கிறார். சுப்பிரமணி மாயழகு வீட்டிற்குச் செல்கிறார்.

மாயழகும் ஒச்சம்மாவும் :
ஒச்சம்மா உசிலம்பட்டி பக்கம் கிருஷ்ணாபுரம் மாயழகு வெள்ளி மலை அடிவாரத்தில் கோம்பைத் தொழுவு. திருமணமான பிறகு நிலையாக ஓரிடத்தில் வாழ வேண்டும் என்பதற்காக வெள்ளகோவில் வந்தனர். தன் குழந்தைகளைப் படிக்க வைக்க,தறி ஓட்டுவதைத் தவிர பிற தறி வேலைகள் அனைத்தையும் கற்றாள்.

பாவு பிணைத்தல் :
ரகு அனுப்பியதாகவும் தன் பிரச்சனையையும் சுப்பிரமணியம் எடுத்துரைக்கிறார். மாயழகு தன் மனைவி ஒச்சம்மாவை அவருடன் அனுப்புகிறார். தூங்கிக்கொண்டு இருக்கும் தன் கைக்குழந்தையுடன் செல்கிறாள். ஒச்சம்மா வர மாணிக்கத்தின் பாவு தீர்ந்து விடுகிறது. அங்கிருந்த பாவினைச் சரிசெய்து இருக்கும் வேளையில் குழந்தை விழித்துக் கொள்கிறது. குழந்தையைத் தூங்க வைத்தபடியே பாவை இணைக்கிறாள். வேலை முடிந்ததும் இரட்டைச் சம்பளத்தோடு சுப்பிரமணியம் அவளின் வீட்டிற்குக் கொண்டுபோய் சேர்க்கிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும்

முடிவுரை :
இரவு பகல் பார்க்காமல் தன் வறுமையின் காரணமாகத் தறி பட்டறையில் வேலை செய்பவர்கள் வேலை செய்கின்றனர் என்பதை கதை மூலம் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

Question 1.
இசைக்கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் 1

Question 2.
இக்கால இசைக்கருவிகள் குறித்து கலைக்களஞ்சிய வடிவில் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
வயலின் :
வில் போட்டு வாசிக்கப்படும் மரத்திலான தந்திக் கருவி ஆகும். இது பழங்காலத்தில் பிடில் எனப்பட்டது. இதுமேலைத் தேயம், கீழைத் தேயம் என இருவகைப் பிராந்திய இசைகளால் இசைக்கப்படும் கருவி. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது.

தம்புரா :
கம்பி கட்டப்பட்ட இசைக்கருவி தம்புரா. இது ராகம் இசைக்கும் நேரம் முழுவதும் நிலையான தொனியில் இசைக்கப்படுகின்றது.

நாதசுவரம் :
நாகஸ்வரம், நாகசு, நாயனம் ஆகிய வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. தென்னிந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பெருமளவு இசைக்கப்படும் வாத்தியம் இவை. வட்ட வடிவமாக விரிந்து காணப்படும் உள் நீண்ட மரக்குழலால் ஆன உடல், உடல் மேல் பகுதியில் செப்புத் தகடு பொருத்தப்பட்டு இருக்கும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

தவில் :
நாதஸ்வரத்திற்குத் துணையாக இசைக்கப்படும் கருவி ஆகும். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்பட்டு இருக்கும்.

பாடநூல் வினாக்கள்

Question 1.
காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
மக்களின் மனதிற்கு எழுச்சியைத் தருபவை இசைக்கருவிகள். கருவிகளில் தோல், நரம்பு, காற்று, கஞ்சக் கருவிகள் என பல வகை உள்ளன. அவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம்.

காற்றுக் கருவிகள் :
காற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுபவை காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொம்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும்.

குழல் :
குழல் என்றால் புல்லாங்குழல் ஆகும். காடுகளில் மூங்கில் மரங்களை வண்டுகள் துளை இட்டதால் காற்று வழியாக இசை பிறந்தன. இதனைக் கேட்டும் பார்த்தும் முன்னோர்கள் புல்லாங்குழலை வடிவமைத்தனர்.

மூங்கில், சந்தனம் செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் புல்லாங்குழல் செய்யப்படுகின்றன. கொன்றைக் குழல், முல்லைக் குழல், ஆம்பல் குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. திருவள்ளுவரும், ‘குழல் இனிது’ என்கின்றார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

கொம்பு :
கொம்பு இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே, பின்னால் ‘கொம்பு என்னும் இசைக்கருவி தோன்றக் காரணமாயிற்று. பித்தளை மற்றும் வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்பட்டன. வேட்டையாடும்போது வேடர்கள் இதனை ஊதுவார்கள்.

கள்வர்களை விரட்டவும், விலங்குகளிடமிருந்து எச்சரிக்கை செய்யவும் இக்கொம்பினை ஊதுவார்கள். திருவிழாக் காலங்களில் – கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி ஆகிய கொம்புகள் இக்காலத் திருவிழாக்களில் இசைக்கப்படுகின்றது.

சங்கு :
சங்கு ஓர் இயற்கைக் கருவி. கடலிலிருந்து எடுக்கப்படும் வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை, “வலம்புரிச்சங்கு என்று கூறுவர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்கள் இதனைப் ‘பணிலம்’ என்கிறது. திருவிழாக்களிலும், சடங்குகளிலும் சங்கினை முழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.

முடிவுரை :
அழிந்து வரும் இவ்வகைக் காற்று இசைக்கருவிகளைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் காற்றுக்கருவிகள் ஏதேனும் ஒன்றினைக் கற்று, அதனைப் பயன்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 5.6 திருக்குறள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

பாடநூல் வினாக்கள்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அரசரை அவரது …………………… காப்பாற்றும்.
அ) செங்கோல்
ஆ) வெண்கொற்றக்குடை
இ) குற்றமற்ற ஆட்சி
ஈ) படை வலிமை
Answer:
இ) குற்றமற்ற ஆட்சி

Question 2.
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் …………………………. தகுதி அறிந்து பேசவேண்டும்.
அ) சொல்லின்
ஆ) அவையின்
இ) பொருளின்
ஈ) பாடலின்
Answer:
ஆ) அவையின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Question 3.
‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
அ) கண் + ஓடாது
ஆ) கண் + ணோடாது
இ) க + ஓடாது
இ) கண்ணோ + ஆடாது
Answer:
அ) கண் + ஓடாது

Question 4.
‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) கச + டற
ஆ) கசட + அற
இ) கசடு + உற
ஈ) கசடு + அற
Answer:
ஈ) கசடு + அற

Question 5.
‘என்று + ஆய்ந்து’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
அ) என்றாய்ந்து
ஆ) என்று ஆய்ந்து
இ) என்றய்ந்து
ஈ) என் ஆய்ந்து
Answer:
அ) என்றாய்ந்து

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

குறுவினா

Question 1.
நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?
Answer:
ஒரு செயலை இந்த வகையால், இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து, அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Question 2.
சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?
Answer:
எதையும் நன்கு ஆராய்ந்து, ஒருபக்கம் சாயாது நடுவு நிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சி ஆகும்.

Question 3.
அரசன் தண்டிக்கும் முறை யாது?
Answer:
ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து, அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது, அரசன் தண்டிக்கும் முறையாகும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Question 4.
சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?
Answer:
கேட்பவரைத் தன் வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பு ஆகும்.

பின்வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

பள்ளி ஆண்டு விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைக்குழுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனைப் பரிந்துரைத்தனர். தலைமை ஆசிரியர் – ‘செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான்.

ஆனால், இது கலைக்குழுவிற்கான தலைவர், பதவி, நடனம், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுள்ள ஒருவரே இதற்குத் தகுதியானவர். எனவே என்னுடைய தேர்வு கலையரசன்’ என்று நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள் அனைவரும் ‘சிறந்த தேர்வு’ என்று மகிழ்ந்தனர்.

அ) அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மை யவர்.

ஆ) இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

இ) ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
Answer:
ஆ) இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
……………………… நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.
அ) காலம்
ஆ) நடுவுநிலைமை
இ) முறையாக ஆராய்தல்
ஈ) உயிர்கள் காப்பாற்று
Answer:
ஆ) நடுவுநிலைமை

Question 2.
வையகம் என்பதன் பொருள் ………………….
அ) கடல்
ஆ) அரசன்
இ) நடுவுநிலைமை
ஈ) உலகம்
Answer:
ஈ) உலகம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Question 3.
‘இறை’ என்னும் சொல்லின் பொருள் ………………..
அ) அரசர்
ஆ) குடிமக்கள்
இ) உலகம்
ஈ) விரைந்து
Answer:
அ) அரசர்

குறுவினா

Question 1.
செயலை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்?
Answer:
செயலாற்றும் திறனுடையவரையும், செய்ய வேண்டிய செயலையும், செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து, அச்செயலை நிறைவேற்ற வேண்டும்.

Question 2.
உலகத்து உயிர்களையெல்லாம் காப்பாற்றுபவர் யார்?
Answer:
உலகத்து உயிர்களையெல்லாம் காப்பாற்றுபவர் அரசர் ஆவார்..

Question 3.
அரசரைக் காப்பாற்றுவது எது?
Answer:
குற்றமற்ற ஆட்சியே அரசனைக் காப்பாற்றும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

Question 4.
அவையின் தகுதி அறிந்து பேசவேண்டுபவர் யாவர்?
Answer:
சொல் வளமும், நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதியறிந்து பேசுதல் வேண்டும்.

Question 5.
கற்றவரின் கல்வி எப்போது பெருமை அடையும்?
Answer:
சொற்களை ஆராயும் அறிஞர் நிறைந்த அவையில் பேசும்போதுதான் பல நூல்களைக் கற்றவரின் கல்வி பெருமை அடையும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

சொல்லும் பொருளும்

நாடி – நாடுதல்
ஆய்ந்து – ஆராய்ந்து
இறை – அரசர்
வினையாடல் – செயல் செய்தல்
ஒறுப்பது – தண்டிப்பது
கடியன் – கடுமையானவர்
வேந்தன் – அரசன்
கடுகி – விரைந்து

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

Question 1.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
காட்சி : 1

கதைமாந்தர்கள்: வெட்டுக்கிளி, சருகுமான் என்னும் கூரன், சிறுத்தை (பித்தக்கண்ணு). மலையின் காட்சி, அருவி விழும் ஓசை, நீரோடையின் சலசல சத்தம்.

வெட்டுக்கிளி : என்ன கூரன் பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாக பதற்றத்துடன் வேகமாக ஓடுகிறாய்?

கூரன் (பெண் சருகுமான்) : காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்போதைக்குஉன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு சிறுத்தை என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. நான் எங்காவது ஒளிய வேண்டும். பல மணி நேரமாக ஓடிட்டே இருக்கேன். சோர்வாக இருக்கிறது.

வெட்டுக்கிளி : ம்,ம்,ம்…. மஞ்சள் கண்ணுடைய சிறுத்தை தானே… ம்ம்ம்ம் ..

கூரன் : இதோ விழுந்து கிடக்கும் மரத்தின் அடியில் ஒளியலாம்.

வெட்டுக்கிளி : சரியான முடிவு தான்….

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

கூரன் : வெட்டுக்கிளியே! நீ வளவளவென்று பேசிக்கொண்டிருக்காதே! நான் ஒளிந்து கொள்கிறேன். பித்தக்கண்ணு சிறுத்தை உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லி விடாதே! அது என்னைப் பார்த்துவிட்டால் பிடித்து ஒரே வாயில் விழுங்கி விடும்.

வெட்டுக்கிளி : சரி! சரி! ஒளிந்து கொள்.

பித்தக்கண்ணு சிறுத்தை : (உறுமியவாறே…. அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு நிற்றல் வெட்டுக்கிளியைப் பார்த்தல்)
கூரன் இங்கு வந்தாளா? அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?
(வெட்டுக்கிளி மகிழ்ச்சியுடன் குதித்தல். கூரன் இருக்கும் மரத்தடிப் பக்கம் செல்லுதல்)
(சிறுத்தை முகர்தல்… பூனையின் துர்நாற்றம் மட்டும் அடித்தல். அந்த இடத்தை விட்டு அகலுதல்)

காட்சி 2:

கதைமாந்தர்கள்: வெட்டுக்கிளி, சருகுமான் என்னும் கூரன்.

சருகுமான் : முட்டாள் வெட்டுக்கிளியே! பித்தக்கண்ணு முன் அப்படிக்
குதியாட்டம் போடாவிட்டால் என்ன? நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். அது என்னைத் தன் பெரிய வாய்க்குள் திங்காமல் விட்டது அதிசயம் தான்.

வெட்டுக்கிளி : மன்னிச்சுக்கோ! மன்னிச்சுக்கோ!

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

கூரன் : இனி இப்படிச் செய்தால் திரும்ப வந்து உன்னை என் தங்கக் கால்களால் மிதித்து நசுக்கி விடுவேன்.
(தன் கூர்மையான பாதங்களை கூரன் மண்மீது அழுத்துதல்)
(வெட்டுக்கிளி கிளையில் இருந்து கீழே விழப் போதல்)

வெட்டுக்கிளி : கூரனின் கூர்ப்பாதங்கள் பட்டுவிடுமோ?
ஐயோ! ஐயோ!
சரி. சரி… குதித்துக் கொண்டே இருப்போம்.

பாடநூல் வினாக்கள்

Question 1.
‘வெட்டுக்கிளியும் சருகுமானும்’ கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை:
காடர்கள், பழங்குடியின மக்கள், காடுகள், செடிகொடிகள், விலங்குகள் தொடர்பான கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் சொல்லி வந்தனர். அத்தகைய கதைகளுள் ஒன்று தான் வெட்டுக்கிளியும் சருகுமானும்’ ஆகும். வெட்டுக்கிளியும்

சருகுமானும் :
குறிஞ்சிப் புதரின் தாழப் படர்ந்திருந்த கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி.

ஒரு மாலை நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. ‘என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாட்கள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்?’ அதற்கு சருகுமான், ‘காட்டின் அந்தக் கோடியில் இருந்தேன். இப்பொழுது உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக்கொண்டு வருகிறது.’

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

விழுந்து கிடந்த மரத்தைப் பார்த்ததும் அதன் அடியில் கூரன் ஒளிந்து கொண்டது. தலையை மட்டும் தூக்கி வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது.

வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும் :
கூரனைத் தேடிக் கொண்டு பித்தக்கண்ணும் ஓடைப் பக்கம் வந்தது. வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. ‘கூரன் இங்கு வந்தாளா?’ என்றது. வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதான் முதல்முறை. பித்தக்கண்ணுவைப் பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது.

அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன் பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின் துர்நாற்றமே எட்டியது. அதனால் உறுமிக் கொண்டே அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேறு பக்கம் சென்றது.

உயிர்பிழைத்த கூரன் :
கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக் கொடுத்ததற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம். அதற்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. ‘இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்’ என்று கூறிக் காட்டுக்குள் ஓடியது.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.4 வே ட்டுக்கிளியும் கருகுமானும்

முடிவுரை :
அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தான் இன்றும்கூட வெட்டுக் கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 2.3 நீல ம் பொது Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 1.
நில வளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
பார்க்க: சிந்தனை வினாவுக்கான விடை – பக்கம் எண்: 46

Question 2.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்த படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது 1

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
செவ்விந்தியர்கள் நிலத்தைத் …………………. மதிக்கின்றனர்.
அ) தாயாக
ஆ) தந்தையாக
இ) தெய்வமாக
ஈ) தூய்மையாக
Answer:
அ) தாயாக

Question 2.
‘இன்னோசை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
அ) இன் + ஓசை
ஆ) இனி + ஓசை
இ) இனிமை + ஓசை
ஈ) இன் + னோசை
Answer:
இ) இனிமை+ஓசை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 3.
‘பால் + ஊறும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………..
அ) பால்ஊறும்
ஆ) பாலூறும்
இ) பால்லூறும்
ஈ) பாஊறும்
Answer:
ஆ) பாலூறும்

தொடரில் அமைத்து எழுதுக.

1. வேடிக்கை :
தெனாலிராமன் கதைகள் வேடிக்கையாக இருக்கும்.

2. உடன்பிறந்தார் :
வள்ளலார், அனைத்து உயிரினங்களையும் தன் உடன்பிறந்தார் போல் எண்ணினார்.

குறுவினா

Question 1.
விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?
Answer:

  • இந்தப் பூமிக்கு அணுக்கமாக உள்ள வானம், காற்றின் தூய்மை, நீரின் உயர்வு யாருக்கும் சொந்தமானவை அல்ல.
  • அப்படி இருக்கையில், அவற்றை எவ்வாறு விலைகொடுத்து வாங்க முடியும் என்று சியாட்டல் கூறுகின்றார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 2.
நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?
Answer:

  • இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் செவ்விந்தியர்களுக்குப் புனிதமாகும்.
  • இந்தப் பூமியை எப்பொழுதும் செவ்விந்தியர்கள் மறப்பதேயில்லை. ஏனெனில் பூமியே அவர்களுக்குத் தாயாகும்.
  • அவர்கள் அந்த மண்ணுக்கு உரியவர்கள்; அந்த மண்ணும் அவர்களுக்குரியதாகும்.

Question 3.
எதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?
Answer:

  • செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும்,
  • எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும்,
  • தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும்

தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்.

சிறுவினா

Question 1.
நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.
Answer:

  • ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை.
  • இந்த நீரின் முணுமுணுப்புகள் எம்பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.
  • இந்த ஆறுகள் யாவும் எம் உடன் பிறந்தவர்கள். இவர்கள் தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.
  • எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர் குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.
  • இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும் என நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 2.
எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல் கூறுகிறார்?
Answer:

  • இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.
  • மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.
  • மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும
  • இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல் கூறுகிறார்.

நெடுவினா

Question 1.
தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும். எமது மக்கள், இந்தப் பூமியை எப்போதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே எமக்குத் தாயாகும்.

(ii) நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள் இந்த மண்ணும் எமக்குரியதாகும். இந்நிலமானது எங்களுக்கு மிகவும் புனிதமானது என்பதால் இந்நிலத்தை விற்க சம்மதிப்பது என்பது மிகவும் இயலாத ஒன்றாகும்.

(iii) நாங்கள் பூமியைத் தாயாகவும், வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள். எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும்.

(iv) நீங்கள் இதனை உங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாகச் சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.

(v) இந்நிலமே எங்கள் தாயாகும்; எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுங்கள்.

(vi) இப்பூமியின் மீது வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீது வந்து விழுவனவே யாகும். மேலும், இப்பூமியின் மீது மக்கள் துப்பக் கூடுமானால் அது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும்.

(vii) இந்நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே, இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த இறைவனை அவமதிக்கும் செயலாகிவிடும்.

(viii) நீங்கள் மற்றப் பழங்குடியினரைக் காட்டிலும் முன்கூட்டியே இந்நிலத்தை விட்டுச் செல்லக்கூடும்.

(ix) நீங்கள் படுத்துறங்கிய இடத்தை நீங்களே அசுத்தப்படுத்தினால் ஒருநாள் இரவு நீங்கள் உங்கள் குப்பைகளுக்குள்ளேயே மூச்சு முட்டி இறந்து போகக்கூடும்.

(x) நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக இருந்தால் எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள்.

(xi) நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள். முழுமையான விருப்பத்தோடு உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள்.

(xii) நிலத்தை நேசியுங்கள். இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பது போல என்று சியாட்டல் கூறுகின்றார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

சிந்தனை வினா

Question 1.
நில வளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
(i) துணிகள், நெகிழி, மரத்துண்டுகள், கண்ணாடி, பேப்பர், போன்ற வீடு மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் நேரடியாக நிலத்தில் கொட்டப்படுகின்றன. இவற்றில் சில மக்கும் தன்மை உடையவை; பல மக்காத தன்மை உடையவை.

(ii) மட்காதப் பொருட்கள் குழிதோண்டி நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இந்நிகழ்வு நிலச் சீர்க்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுத்து நிறுத்தல்.

(iii) நாளும் பெருகி வரும் தொழிற்சாலைகளால் அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் வேதியியல் கழிவுகள், உலோகக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை எளிதில் மக்காதவை. இவை நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. அதனால் அவைகளை நிலத்தில் கலக்காதவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(iv) கழிவுநீரினைச் சுத்திகரிக்கும் போது திடக்கழிவுகள் அதிகளவு ஏற்படுகின்றன. இவை நிலத்தில் புதைக்கப்படுகின்றன. அல்லது எரிக்கப்படுகின்றன. புதைக்கப்படும்போது அவை நிலமாசுபாட்டினை ஏற்படுத்துகின்றன. அவைகளை முறையாகச் செயல்படுத்தினால் நிலவளத்தைக் காப்பாற்றலாம்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அமெரிக்காவில் ‘பூஜேசவுண்ட்’ என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் …………………….. பழங்குடியினர்.
அ) மக்காய்ஸ்
ஆ) சுகுவாமிய்
இ) மங்கோலிய
ஈ) செனட்டில்
Answer:
ஆ) சுகுவாமிய்

Question 2.
சுகுவாமிய் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் ………………………….
அ) சிடாட்டல்
ஆ) சியாட்டஸ்
இ) சியாட்டல்
ஈ) செங்கிஸ்கான்
Answer:
இ) சியாட்டல்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 3.
……………………….. பெருந்தலைவர் செவ்விந்தியர்களின் நிலங்களை வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.
அ) நியூயார்கின்
ஆ) சிகாகோவின்
இ) வாஷிங்டனின்
ஈ) சிட்னியின்
Answer:
இ) வாஷிங்டனின்

Question 4.
………………………….. களில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள்.
அ) ஆறு
ஆ) ஏரி
இ) குளம்
ஈ) ஊற்று
Answer:
ஆ) ஏரி

Question 5.
நீங்கள் …………………….. நிலத்திலிருந்து தேவையானவற்றை எடுத்துச் செல்லவே இங்கு வருகின்றீர்கள்.
அ) நண்பர்கள்
ஆ) உறவினர்கள்
இ) அயலவர்கள்
ஈ) பொறுப்பாளர்
Answer:
இ) அயலவர்கள்

Question 6.
உங்களுடைய கோரப்பசியானது இப்பூமியைக் கொன்றழித்துப் பாழாக்கி அதனைப் ……………………… ஆக்கிவிடும்.
அ) சோலைவனம்
ஆ) பாலைவனம்
இ) நந்தவனம்
ஈ) பூங்காவனம்
Answer:
ஆ) பாலைவனம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 7.
இக்கட்டுரை ………………………… எழுதிய தமிழகப் பழங்குடிகள் எனும் நூலில் இருந்து எடுத்துத்தரப்பட்டுள்ளது.
அ) தாராபாரதி
ஆ) சுப்பிரமணிய பாரதி
இ) பக்தவச்சல பாரதி
ஈ) கவிப்பாரதி
Answer:
இ) பக்தவத்சல பாரதி

Question 8.
‘ஊசியிலை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) ஊ + இலை
ஆ) ஊசி + யிலை
இ) ஊசி + இலை
ஈ) ஊசி + சிலை
Answer:
இ) ஊசி + இலை

Question 9.
‘மறப்பதேயில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மறப்பதே + யில்லை
ஆ) மறப்பதே + இல்லை
இ) மறப்பது + இல்லை
Answer:
ஆ) மறப்பதே + இல்லை

Question 10.
‘உணவளிக்கின்றனர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………
அ) உணவு + அளிக்கின்றனர்
ஆ) உண + வளிக்கின்றனர்
இ) உணவளி + கின்றனர்
Answer:
அ) உணவு + அளிக்கின்றனர்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 11.
‘நீரானது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) நீ + ரானது
ஆ) நீர் + அனது
இ) நீர் + ஆனது
ஈ) நீரா + னது
Answer:
இ) நீர் + ஆனது

Question 12.
‘நிலத்திலிருந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) நில + இருந்து
ஆ) நிலத்தில் + இருந்து
இ) நிலத்தில் + யிருந்து
ஈ) நிலத்தி + லிருந்து
Answer:
ஆ) நிலத்தில் + இருந்து

Question 13.
‘உங்கள் + உடைய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………..
அ) உங்களுடைய
ஆ) உங்களுடைய
இ) உன்னுடைய
ஈ) தங்களுடைய
Answer:
அ) உங்களுடைய

Question 14.
‘பாழ் + ஆக்கி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
அ) பாலாக்கி
ஆ) பாழ்ஆக்கி
இ) பாழாக்கி
இ) பாழ்ஊக்கி
Answer:
இ) பாழாக்கி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 15.
‘முறையில் + இருந்து’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
அ) முறையிருந்து
ஆ) முறையிலிருந்து
இ) முறையாய் இருந்து
ஈ) முறையில் இருந்து
Answer:
ஆ) முறையிலிருந்து

Question 16.
‘காட்சிகள் + எல்லாம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
அ) காட்சிகள் எல்லாம்
ஆ) காட்சிகளெல்லாம்
இ) காட்சியெலாம்
ஈ) காட்சியெல்லாம்
Answer:
ஆ) காட்சிகளெல்லாம்

Question 17.
‘ஒன்று + ஆகும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) ஒன்று ஆகும்
ஆ) ஒன்றேயாகும்
இ) ஒன்றாகும்
ஈ) ஒவ்வொன்றாகும்
Answer:
இ) ஒன்றாகும்

குறுவினா

Question 1.
‘சுகுவாமிய்’ பழங்குடியினர் எங்கு வாழ்ந்தனர்?
Answer:
அமெரிக்காவில் பூஜேசவுண்ட்’ என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் ‘சுகுவாமிய்’ பழங்குடியினர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 2.
சுகுவாமிய் பழங்குடியினரின் தலைவர் யார்?
Answer:
சுகுவாமிய பழங்குடியினரின் தலைவர் சியாட்டல் ஆவார்.

Question 3.
சியாட்டல் யாருக்கு, எதற்காகக் கடிதம் எழுதினார்?
Answer:
சுகுவாமிய பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சியாட்டல், அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதினார்.

Question 4.
நிலத்தை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்று சியாட்டல் அமெரிக்கர்களுக்குக் கூறுகிறார்?
Answer:
நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக இருந்தால், எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள். நிலத்தை நேசியுங்கள்; இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பது போல என்று கூறுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

சிறுவினா

Question 1.
அமெரிக்கர்களின் வாழ்வையும், செவ்விந்தியர்களின் வாழ்வையும் ஒப்பிட்டுச் சியாட்டல் கூறுவது யாவை?
Answer:
(i) உங்கள் நகரங்களில் அமைதியான இடம் எதுவுமில்லை . நீங்கள் வாழும் எந்த ஓர் இடத்திலும் அசைந்தாடும் இலைகளின் ஓசைகளையோ பூச்சி இனங்களின் ரீங்காரங்களையோ கேட்க முடிவதில்லை. மாறாக, சடசடவொலிகள் காதைப் பிளக்கின்றன.

(ii) மகிழ்வூட்டும் இராக்கூவற் பறவைகளின் ஒலிகளையோ, குளத்தைச் சுற்றிக் கேட்கும் தவளையின் கூச்சல்களையோ கேட்காத வாழ்வென்ன வாழ்வு?

(iii) நான் ஒரு செவ்விந்தியன் என்பதால் இதனை எவ்வாறு புரிந்து கொள்வதெனத் தெரியவில்லை .

(iv) எம் மக்கள் யாவரும் அமைதியான குளத்தின் முகத்தை முகந்து வரும் தென்றலின் இன்னோசையையும், நடுப்பகலில் பெய்யும் மழையால் எழும்மண்வாசனையையும், தேவதாரு மரத்திலிருந்து பறக்கும் இலைகளின் மணத்தையும் நுகர்வதை விரும்புபவர்கள்.

(v) நாங்கள் காற்றை மிகவும் மதித்துப் போற்றுபவர்கள். நீங்கள் சுவாசிக்கும் காற்றைப் பற்றிச் சிந்தித்ததில்லை என்று சியாட்டல் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.3 நீல ம் பொது

Question 2.
காற்று குறித்து சியாட்டல் கூறுவன யாவை?
Answer:

  • நாங்கள் காற்றை மிகவும் மதித்துப் போற்றுபவர்கள். விலங்குகள், மரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது.
  • பொதுவான ஒரு காற்றையே இவையாவும் சுவாசிக்கின்றன. நீங்கள் சுவாசிக்கும் காற்றைப் பற்றிச் சிந்தித்ததில்லை. இந்தக் காற்றானது அனைத்துப் புது உயிர்களையும் காக்கிறது.
  • இவ்வுணர்வுகளைச் சுமந்து நிற்கும் காற்றின் இன்றியமையாமையை, நாங்கள் நிலத்தை விற்றுவிட நேர்ந்த பின்னரும் நீங்கள் மறக்கவே கூடாது என்கிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

Question 1.
மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி எழுதுக.
Answer:
நில நடுக்கங்கள் :
நில நடுக்கங்கள் ஏற்படும் பொழுது மக்களையோ அல்லது விலங்குகளையோ அது பாதிப்பதில்லை. நில நடுக்கத்தின் காரணமாக, இரண்டாம் பட்ச நிகழ்வுகளான கட்டிடங்கள் பாழடைந்து சரிதல், சுனாமி உருவாகுதல், எரிமலை வெடித்தல் போன்ற நிகழ்வுகளின் பின்னணியில் மக்களுக்குப் பேரழிவுகளுடன் பேரிழப்பும் ஏற்படுகிறது.

எரிமலை வெடித்துச் சிதறுதல் :
ஒரு எரிமலை, வெடித்துப் பேரழிவாக சிதறும் போது ‘லார்வா’ தீக்குழம்பு வெளிப்படும். அதில் மிகையான வெப்பத்துடன் கூடிய உள்ளிருக்கும் பாறைகள் இருக்கும். அதனுள் பல்வேறு வேறுபட்ட வடிவங்கள் மென்மைத் துகளாகவும், பிசு பிசுப்பாகவும் இருக்கும். இது எரிமலையில் இருந்து சிதறும் போது எதிரில் காணும் கட்டடங்கள் மற்றும் தாவரங்கள் எல்லாவற்றையும் பொசுக்கி அழித்துவிடும்.

வெள்ளப் பெருக்கு :
நீரோட்டத்தின் வலிமையானது மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது ஆற்றின் பாதையைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடி கரையோரம் ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குச் சேதம் உண்டாக்குகிறது.

சுனாமி :
சுனாமி என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் மிகுதியாகப் பெருமளவு நீர் இடம் பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம், மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூல காரணிகளாகும். இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகும்.

சூறாவளி, புயல் :
இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சூறாவளியின் போது உருவாகும் மழை மேகங்கள் குறுகிய காலகட்டத்தில் அதிக அளவு மழையையும் பலத்த காற்றையும் கொண்டு வரும். இதனால் பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் அதிகமாக ஏற்படும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

காட்டுத் தீ:
காட்டுத் தீ என்பது, எரியக் கூடிய தாவரங்களைக் கொண்ட காட்டுப் பகுதிகளில் அல்லது நாட்டுப்புறப் பகுதிகளில் கட்டுக்கு அடங்காமல் எரியும் தீயைக் குறிக்கும். இதன் பெரிய அளவு தொடங்கிய இடத்திலிருந்து பரவிச் செல்லும் வேகம் எதிர்பாராமல் திசை மாறக்கூடிய தன்மை; சாலைகள், ஆறுகள் போன்ற இடைவெளிகளைக் கடந்து செல்லும் திறன் என்பவை காட்டுத்தீயைப் பிற தீ வகைகளில் இருந்து வேறுபடுத்துகின்றன. இதனால் பல உயிர்கள் எரிந்து சாம்பலாகின்றன. கடந்த ஆண்டு குரங்கனி காட்டுத்தீ பாதிப்பு நாம் அறிந்ததே.

Question 2.
இயற்கைச் சீற்றங்கள் பற்றிய புகைப்படங்களை நாளேடுகளிலிருந்து திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு 1

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வானில் கரு …………………. தோன்றினால் மழை பொழியும் என்பர்.
அ) முகில்
ஆ) துகில்
இ) வெயில்
ஈ) கயல்
Answer:
அ) முகில்

Question 2.
முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் …………….. யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை
ஆ) காலனை
இ) ஆற்றலை
ஈ) நலத்தை
Answer:
ஆ) காலனை

Question 3.
‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) விழுந்த + அங்கே
ஆ) விழுந்த + ஆங்கே
இ) விழுந்தது + அங்கே
ஈ) விழுந்தது + ஆங்கே
Answer:
இ) விழுந்தது + அங்கே

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

Question 4.
‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) செ + திறந்த
ஆ) செத்து + திறந்த
இ) செ + இறந்த
ஈ) செத்து + இறந்த
Answer:
ஈ) செத்து + இறந்த

Question 5.
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
அ) பருத்தி எல்லாம்
ஆ) பருத்தியெல்லாம்
இ) பருத்தெல்லாம்
ஈ) பருத்திதெல்லாம்
Answer:
ஆ) பருத்தியெல்லாம்

குறுவினா

Question 1.
கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
Answer:
எமனைப் போல வந்த பெருமழையும், சூழல் காற்றும் கப்பல் கவிழ்ந்ததன் காரணமாகும்.

Question 2.
புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
Answer:
தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாகப் புயல்காற்றால் ஒடிந்து விழுந்தன.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

Question 3.
கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
Answer:
சித்தர்கள் வாழும் மலை கொல்லிமலை. அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

சிறுவினா

Question 1.
புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
Answer:
வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

Question 2.
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
Answer:
திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

சிந்தனை வினா

Question 1.
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
Answer:

  • வெள்ளப் பெருக்குக் காலங்களில் ஆற்றோரமோ, நீர்நிலைகள் அருகிலோ வசிப்போர்கள் மேட்டுப் பகுதிக்குச் சென்று தங்குதல் வேண்டும்.
  • எரிமலை வெடிக்கும் சூழலில், மலைக்கு அருகில் வசிப்போர், பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்குதல் வேண்டும்.
  • காட்டுத் தீ ஏற்படும் சூழலில், காட்டிற்கு அருகில் வசிப்போர் நகர்ப்புறத்தில் வந்து தங்குதல் வேண்டும்.
  • சுனாமி ஏற்படும் போது கடற்கரையில் வசிப்போர், கடலை விட்டு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று தங்குதல் வேண்டும்.
  • நிலநடுக்கம் ஏற்படும் சூழலில், கட்டடத்தை விட்டு வெளியேறி வெட்ட வெளியில் தங்குதல் வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இயற்கை ………………………. கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்.
அ) ஆசை
ஆ) அன்பு
இ) சீற்றம்
ஈ) நாற்றம்
Answer:
இ) சீற்றம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

Question 2.
……………………. அடிக்கடி புயலால் பாதிக்கப்படும் பகுதி ஆகும்.
அ) டெல்லி
ஆ) பஞ்சாப்
இ) அஸ்ஸாம்
ஈ) தமிழ்நாடு
Answer:
ஈ) தமிழ்நாடு

Question 3.
திரண்டு எழுந்த …………………….. ஆல் உருவான காற்று வேகமாக அடித்தது.
அ) மேகங்கள்
ஆ) காற்றுகள்
இ) கூட்டங்கள்
ஈ) ஓசைகள்
Answer:
அ) மேகங்கள்

Question 4.
……………………. என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
அ) தொண்டை நாட்டில்
ஆ) ஆர்க்காடு
இ) மைசூர்
ஈ) வாங்கல்
Answer:
ஈ) வாங்கல்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

Question 5.
பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்த நாடு ……………………
அ) தொண்டைமான் நாடு
ஆ) ஆர்க்காடு
இ) காங்கேய நாடு
ஈ) தெத்துக்காடு
Answer:
இ) காங்கேய நாடு

Question 6.
கோணக்காத்துப் பாட்டு பாடலில் கவிஞர் வேண்டும் தெய்வம் …………………….
அ) சிவன்
ஆ) திருமால்
இ) முருகன்
ஈ) பெருமாள்
Answer:
இ) முருகன்

Question 7.
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ……………………….. பாடல்களாகப் பாடினர்.
அ) ஒப்பாரி
ஆ) கும்மி
இ) வள்ளை
ஈ) சடங்கு
Answer:
ஆ) கும்மி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

Question 8.
புலவர் ……………………… தொகுத்தது பஞ்சக் கும்மிகள் என்னும் நூல்.
அ) மீரா
ஆ) வீரா
இ) முரசு
ஈ) செ. இராசு
Answer:
ஈ) செ. இராசு

Question 9.
…………………… இயற்றிய காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் பாடமாக அமைந்துள்ளது.
அ) அரங்கநாதன்
ஆ) வெங்கம்பூர் சாமிநாதன்
இ) கோதை நாயகி
ஈ) சி.சு. செல்லப்பா
Answer:
ஆ) வெங்கம்பூர் சாமிநாதன்

Question 10.
‘மார்க்கம் + ஆன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………..
அ) மார்க்கம் ஆன
ஆ) மார்க்கமென
இ) மார்க்கமான
ஈ) மார்க்கம்மேன
Answer:
இ) மார்க்கமான

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

Question 11.
‘வேகம் + உடன்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) வேகவுடன்
ஆ) வேகம்உடன்
இ) வேகம்வூடன்
ஈ) வேகமுடன்
Answer:
ஈ) வேகமுடன்

குறுவினா

Question 1.
இயற்கை எவ்வாறு அழிவை ஏற்படுத்தும்?
Answer:
இயற்கைச் சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்.

Question 2.
புயலால் அடிக்கடி தாக்கப்படும் பகுதி எது?
Answer:
தமிழ்நாடு புயலால் அடிக்கடி தாக்கப்படும் பகுதியாகும்.

Question 3.
வீடுகளின் கூரைகள் ஏன் சரிந்தன?
Answer:
திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

Question 4.
எந்த ஊரில் தென்னை மரங்கள் வீணாயின?
Answer:
வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.

Question 5.
எந்த நாட்டில் பருத்திச் செடிகள் சிதைந்தன?
Answer:
அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.

Question 6.
மாடி வீடுகள் எப்படி விழுந்தன?
Answer:
அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.

Question 7.
யாரெல்லாம் எப்படி அலறியபடி ஓடினர்?
Answer:
ஆடவர்கள் மனைவி பிள்ளைகளுடன் கூ கூ’ என்று அலறியபடி ஓடினர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

Question 8.
எப்பகுதிகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர்?
Answer:
ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர்.

Question 9.
எந்தெந்த பகுதிகளில் ஆடுமாடுகள் இறந்தன?
Answer:
தெத்துக்காடு, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடுமாடுகள் இறந்தன.

Question 10.
கவிஞர் தெய்வத்திடம் எவ்வாறு வேண்டினார்?
Answer:
முருகப் பெருமானே! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம்? எங்களுக்கு வருகின்ற இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக் காப்பாயாக! என்று வேண்டினார்.

Question 11.
பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் புலவர்கள் எத்தகையப் பாடல்களைப் பாடினர்?
Answer:

  • நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப்பாடல்களாகப் பாடினர்.
  • பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக் கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

சிறு வினா

Question 1.
புயலால், உயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
Answer:

  • வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
  • அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.
  • ஆடவர்கள் மனைவி, பிள்ளைகளுடன் கூ கூ’ என்று அலறியபடி ஓடினர்.
  • தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.
  • ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர்.
  • தெத்துக்காடு, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடுமாடுகள் இறந்தன.
  • சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.2 கோணக்காதிப்பு பாட்டு

சொல்லும் பொருளும்

1. முகில் – மேகம்
2. கெடிகலங்கி – மிக வருந்தி
3. சம்பிரமுடன் – முறையாக
4. சேகரம் – கூட்டம்
5. காங்கேய நாடு – கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
6. வின்னம் – சேதம்
7. வாகு – சரியாக
8. காலன் – எமன்
9. மெத்த – மிகவும்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

Question 1.
மூளையின் செயல்கள் குறித்துப் பிற நூல்களிலிருந்து தகவல்களைத் திரட்டி எழுதுக.
Answer:
மூளை நாம் பார்க்கும், கேட்கும், உணரும் செயல்களைச் சேமித்து கொள்கிறது.

பதிய வைத்தல் :
இதுவே நிகழ்வுகளை நமது நினைவகத்தில் சேமிக்கும் தலம் ஆகும். அதாவது, நமது புலங்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகியவை நமது சுற்றுப் புறத்திலிருந்து தகவல்களை சேகரித்து மூளைக்கு அனுப்புகின்றன. உதாரணம் : நமது கண் ஒரு நபரை முதல் முறையாக காணும் பொழுது அவரின் நிறம், உருவம், உயரம் போன்ற தகவல்களை மூளைக்கு அனுப்பும்.

இந்தத் தகவல்கள் நமது மூளையில் நியூரோன்கள் எனும் நரம்பு செல்கள் வழியாகக் கடத்தப்படும். இந்தத் தகவல்கள் ஒரு நரம்பு செல்லில் இருந்து மற்றொரு நரம்பு செல் வழியாக பாயும். அதாவது இரு செல்களின் இடைவெளியைக் கடக்கும் பொழுது ஒரு வகை வேதியியல் மூலக்கூறு வெளிப்பட்டு இரு நரம்பு செல்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தும். இந்த இணைப்பிற்கு சினப்சே என்று பெயர்.

இந்த இணைப்பு உறுதியாகும் பொழுது அந்த நபரைப் பற்றிய நினைவு உங்கள் மூளையிலிருந்து அகலாது. இந்த இணைப்பு உறுதியாவது ஒரு முறை பார்த்தவுடன் நிகழ்ந்துவிடாது. ஒரு நபரை மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவரைப் பற்றிய தகவல் நம் நரம்பு செல்களில் உறுதியான இணைப்பாக பதிய வைக்கப்படும். இந்த இணைப்பு எந்த அளவுக்கு உறுதி ஆகிறதோ அந்த அளவுக்கு அந்த நபரைப் பற்றிய நினைவையும் நாம் மறக்காமல் இருப்போம்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

இது அனைத்து விதமான நினைவுகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு நினைவுகளுக்கும் ஓர் தனி இணைப்பு நம் மூளையில் உருவாகும். இவ்வாறு தான் நாம் படிக்கும் பாடம், கேட்கும் விஷயம், பார்க்கும் படம் அனைத்துமே நம் மூளையில் பதிய வைக்கப்படும். மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலம் நாம் படித்த பாடமானது ஒரு உறுதியான நரம்பு செல் இணைப்பாக மாறி மறக்காமல் இருக்கிறது.

பாடநூல் வினாக்கள்

Question 1.
மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளைதான். அதன் செயல்பாடுகள் விந்தையானவை; புதிரானவை. அவற்றைப் பற்றிக் காண்போம்.

இடப்பாகக் செயல்:
மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பகுதியின் அதிகப்படியான பாதிப்பினால்தான் என்று கூறுவார்கள்.

இடது பாதிதான் பேச, எழுத, கணக்கிட தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சினைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெல்லாம் இடதுபகுதி பார்த்துக் கொள்கிறது. நம் மொழி அறிவும் இடது பகுதியைச் சார்ந்ததே.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

வலப்பாகச் செயல்:
இடது பாதி அண்ணன் என்றால் வலதுபாதி தம்பி போன்றது. இந்தப் பாதியால்தான் நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் வலது பாதியில்தான். வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம். வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்களாக, பாடகர்களாக, நடனக் கலைஞர்களாக, இசைக்கருவிகளைக் கையாளுபவர்களாக, கலைத் திறன்கள் பெற்றவர்களாகத் திகழ்வர். இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்களாக, கணக்கு ஆசிரியர்களாக, இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்களாகத் திகழ்வர்.

முடிவுரை:
இடதும் வலதும் கலந்து இருப்பவர்களும் உண்டு. நன்முறையில் கல்வி கற்றால் உடலியக்கம் மற்றும் மன இயக்கத்திற்குக் காரணமான மூளை, நம் செயல்பாடுகளைத் தூண்டி நம்மை உயர்வடையச் செய்யும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 2.1 ஓடை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

Question 1.
மலை, அருவி, ஓடை, மரங்கள், வயல்கள் ஆகியன இடம்பெறுமாறு ஓர் இயற்கைக் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை 1

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பள்ளிக்குச் சென்று கல்வி ……………………. சிறப்பு.
அ) பயிலுதல்
ஆ) பார்த்தல்
இ) கேட்டல்
ஈ) பாடுதல்
Answer:
அ) பயிலுதல்

Question 2.
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது …………………….
அ) கடல்
ஆ) ஓடை
இ) குளம்
ஈ) கிணறு
Answer:
ஆ) ஓடை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

Question 3.
‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) நன் + செய்
ஆ) நன்று + செய்
இ) நன்மை + செய்
ஈ) நல் + செய்
Answer:
இ) நன்மை + செய்

Question 4.
‘நீளுழைப்பு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) நீளு + உழைப்பு
ஆ) நீண் + உழைப்பு
இ) நீள் + அழைப்பு
ஈ) நீள் + உழைப்பு
Answer:
ஈ) நீள் + உழைப்பு

Question 5.
‘சீருக்கு + ஏற்ப’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) சீருக்கு ஏற்ப
ஆ) சீருக்கேற்ப
இ) சீர்க்கேற்ப
ஈ) சீருகேற்ப
Answer:
ஆ) சீருக்கேற்ப

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

Question 6.
‘ஓடை + ஆட’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) ஓடைஆட
ஆ) ஓடையாட
இ) ஓடையோட
ஈ) ஓடைவாட
Answer:
ஆ) ஓடையாட

குறுவினா

Question 1.
ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
Answer:
ஓடை கற்களில் உருண்டும், தவழ்ந்தும், நெளிந்தும், சலசல என்று ஒலியெழுப்பியும் அலைகளால் கரையை மோதியும், இடையறாது ஓடுகிறது.

Question 2.
ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?
Answer:
ஓடை எழுப்பும் ஒலி, பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவதற்கு உவமையாக வாணிதாசன் கூறுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

சிறு வினா

Question 1.
ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
Answer:
(i) நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.

(ii) விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.

(iii) நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

சிந்தனை வினா

Question 1.
வள்ளைப்பாட்டு என்பது நெல் குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை 2
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை 3

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மனிதர் வாழ்வு …………………. யோடு இயைந்தது.
அ) செயற்கை
ஆ) இயற்கை
இ) அறிவியல்
ஈ) விளையாட்டு
Answer:
ஆ) இயற்கை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

Question 2.
நெல் குத்தும்போது பாடப்படும் பாட்டு ……………………
அ) வள்ளை
ஆ) கும்மி
இ) ஒயில்
ஈ) தெம்மாங்கு
Answer:
அ) வள்ளை

Question 3.
நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் …………………..
அ) புன்செய்
ஆ) நன்செய்
இ) செம்மண் நிலம்
ஈ) பாலைநிலம்
Answer:
ஆ) நன்செய்

Question 4.
குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம் ………………….
அ) புன்செய்
ஆ) வண்ட ல் நிலம்
இ) நன்செய்
ஈ) செழிந்த நிலம்
Answer:
அ) புன்செய்

Question 5.
‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் …………………..
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) வண்ணதாசன்
Answer:
இ) வாணிதாசன்

Question 6.
அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது யாருடைய இயற்பெயர் ……………………..
அ) கண்ண தாசன்
ஆ) வண்ண தாசன்
இ) செல்லிதாசன்
ஈ) வாணிதாசன்
Answer:
அ) வாணிதாசன்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

Question 7.
பாவலர்மணி என்று அழைக்கப்படுபவர் …………………
அ) வாணிதாசன்
ஆ) சுரதா
இ) கண்ண தாசன்
ஈ) பாரதியார்
Answer:
ஈ) வாணிதாசன்

Question 8.
வாணிதாசனுக்குச் செவாலியர் விருது வழங்கிய அரசு …………………
அ) இந்தியா
ஆ) சீனா
இ) பிரெஞ்சு
ஈ) தமிழ்நாடு
Answer:
இ) பிரெஞ்சு

Question 9.
தமிழச்சி என்னும் நூலை எழுதியவர் …………………
அ) பாரதியார்
ஆ) வாணிதாசன்
இ) பாரதிதாசன்
ஈ) கவிமணி
Answer:
ஆ) வாணிதாசன்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

Question 10.
தொடுவானம் என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) கம்பன்
ஆ) மீரா
இ) வைரமுத்து
ஈ) வாணிதாசன்
Answer:
ஈ) வாணிதாசன்

குறுவினா

Question 1.
வாணிதாசன் அறிந்த மொழிகள் யாவை?
Answer:
வாணிதாசன் அறிந்த மொழிகள் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகும்.

Question 2.
வாணிதாசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
வாணிதாசன் இயற்றிய நூல்கள் தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பனவாகும்.

Question 3.
வள்ளைப் பாட்டு என்றால் என்ன?
Answer:
பெண்கள் நெல்குத்தும்போது பாடும் பாட்டு வள்ளைப் பாட்டு ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

Question 4.
நன்செய், புன்செய் நிலம் குறித்து எழுதுக.
Answer:

  • நன்செய்: நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்.
  • புன்செய் : குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்.

சிறுவினா

Question 1.
வாணிதாசன் குறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : வாணிதாசன்
இயற்பெயர் : அரங்கசாமி என்ற எத்திராசலு
ஊர் : புதுவையை அடுத்த வில்லியனூர்
பெற்றோர் : அரங்க. திருக்காமு – துளசியம்மாள்

சிறப்பு : ‘கவிஞரேறு’, ‘பாவலர்மணி’ என்னும் பட்டங்கள் பெற்றுள்ளார். தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ என இவரைத் தமிழுலகம் புகழ்கிறது. உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர்தம் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

நூல்கள் : தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் முதலியன.
காலம் : 22.07.1915 – 07.08.1974

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

சொல்லும் பொருளும்

1. தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
2. ஈரம் – இரக்கம்
3. முழவு – இசைக்கருவி
4. நன்செய் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
5. புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
6. வள்ளைப்பாட்டு – நெல் குத்தும்போது பாடப்படும் பாடல்
7. பயிலுதல் – படித்தல்
8. நாணம் – வெட்கம்
9. செஞ்சொல் – திருந்திய சொல்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 3.2 வருமுன் காப்போம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 1.
‘தன் சுத்தம்’ என்னும் தலைப்பில் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம் 1

Question 2.
சுகாதாரம் பற்றிய பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
எ.கா: சுத்தம் சோறு போடும்.
Answer:

  • நோய்க்கிடங் கொடேல்.
  • கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • காற்றுக்கு எதிரே துப்பினால் முகத்தில் விழும்.
  • காயம்படுமுன் கதறி அழாதே.
  • சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டான்.
  • ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனம் இருக்கும்.
  • ஆள்பாதி ஆடை பாதி.
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  • தீங்குகளின் உறைவிடம் சோம்பல்.
  • வருமுன் காப்பதே நலம்.
  • கூழானாலும் குளித்துக் குடி.
  • வீட்டின் சுத்தமே! நாட்டின் சுத்தம்!
  • சுத்தமிருந்தால் சுகம் உண்டு.
  • சுத்தமான காற்று சுகாதாரமான காற்று.

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காந்தியடிகள் …………………… போற்ற வாழ்ந்தார்.
அ) நிலம்
ஆ) வையம்
இ) கனம்
ஈ) வானம்
Answer:
ஆ) வையம்

Question 2.
‘நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) நலம் + எல்லாம்
ஆ) நலன் + எல்லாம்
இ) நலம் + எலாம்
ஈ) நலன் + எலாம்
Answer:
அ) நலம் + எல்லாம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 3.
இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) இடவெங்கும்
ஆ) இடம் எங்கும்
இ) இடமெங்கும்
ஈ) இடம்மெங்கும்
Answer:
இ) இடமெங்கும்

வருமுன்காப்போம் – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம் 2
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம் 3

குறுவினா

Question 1.
நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?
Answer:
நடைப்பயிற்சியும், நல்ல காற்றும் நம்மை நோய் அணுகாமல் காப்பவை ஆகும்.

Question 2.
அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?
Answer:
அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள் என கவிமணி குறிப்பிடுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

சிறுவினா

Question 1.
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது. சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம்.

(ii) காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. அவர் உயிரைக் கவர எமனும் அணுகமாட்டான். எனவே, நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்தபிறகே குடித்தல் வேண்டும்! நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும்.

(iii) அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுவீர்கள். தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழவைக்கும். அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வருமுன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!

சிந்தனை வினா

Question 1.
நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
(i) உடலின் வலிமைக்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் உடற்பயிற்சி அவசியமானது. உடற்பயிற்சியால் இரத்தவோட்டம் சீராகும்.

(ii) உடலின் கழிவுப் பொருள்கள் வெளியேறும். துணிவும், தெம்பும், சுறுசுறுப்பும் ஏற்படும், அதனால் விளையாட்டு, தண்டால், நீச்சல், உலாவுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.

(iii) நாம் வாழும் வீடும், சுற்றுப்புறமும் தூய்மையாய் இருக்க வேண்டும். காற்றும் கதிரொளியும் தாராளமாக உள்ளே புகும் வகையில் வீடும், உறங்கும் இடமும் அமைய வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

(iv) உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே, அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது ……………………….
அ) புதுமொழி
ஆ) பழமொழி
இ) சிறுமொழி
ஈ) அறிவுமொழி
Answer:
ஆ) பழமொழி

Question 2.
நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே ……………………..
அ) பொதுவுடைமை
ஆ) தன்னுடைமை
இ) அறிவுடைமை
ஈ) அன்புடைமை
Answer:
இ) அறிவுடைமை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 3.
நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே ………………………. நலத்திற்கு அடிப்படை.
அ) நல்ல உடல்
ஆ) அறிவு உடல்
இ) அன்புடல்
ஈ) துன்ப உடல்
Answer:
அ) நல்ல உடல்

Question 3.
‘வருமுன் காப்போம்’ பாடலைப் பாடியவர் ………………….
அ) பாரதியார்
ஆ) திருமூலர்
இ) ஔவையார்
ஈ) கவிமணி
Answer:
ஈ) கவிமணி

Question 5.
உடலில் உறுதி கொண்டவரே, உலகில் …………………… உடையவராவார்.
அ) அன்பு
ஆ) வீரம்
இ) பரிவு
ஈ) மகிழ்ச்சி
Answer:
ஈ) மகிழ்ச்சி

Question 6.
நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோர் உயிரைக் கவர …………………….. அணுகமாட்டான்.
அ) வீரன்
ஆ) எமன்
இ) கள்வன்
ஈ) வேலன்
Answer:
ஆ) எமன்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 7.
கவிமணி எனப் போற்றப்படுபவர் ………………….
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) தேசிக விநாயகனார்
ஈ) கம்பர்
Answer:
இ) தேசிக விநாயகனார்

Question 8.
கவிமணி பிறந்த ஊர் …………………
அ) நெல்லை
ஆ) செங்கை
இ) திருவாரூர்
ஈ) தேரூர்
Answer:
ஈ) தேரூர்

Question 9.
கவிமணி ……………………. ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அ) 36
ஆ) 35
இ) 34
ஈ) 26
Answer:
அ) 36

Question 10.
ஆசியஜோதி நூலின் ஆசிரியர் ………………..
அ) கம்பர்
ஆ) பாரதியார்
இ) அறிவழகன்
ஈ) கவிமணி
Answer:
ஈ) கவிமணி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 11.
கதர் பிறந்த கதையின் ஆசிரியர் ………………………
அ) கவிமணி
ஆ) காந்தி
இ) நேரு
ஈ) பகத்சிங்
Answer:
அ) கவிமணி

Question 12.
கவிமணி மொழிபெயர்ப்பு செய்த நூல் …………………….
அ) ஆசியஜோதி
ஆ) மலரும் மாலையும்
இ) உமர்கய்யாம் பாடல்கள்
ஈ) கதர் பிறந்த கதை
Answer:
இ) உமர்கய்யாம் பாடல்கள்

Question 13.
மலரும் மாலையும் நூலின் ஆசிரியர் ………………………
அ) சுரதா
ஆ) கவிமணி
இ) வாணிதாசன்
ஈ) பாரதியார்
Answer:
ஆ) கவிமணி

Question 14.
‘உடையவராம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
அ) உடை + யவராம்
ஆ) உடையவர் + ராம்
இ) உடையவர் + யாம்
ஈ) உடையவர் + ஆம்
Answer:
ஈ) உடையவர் + ஆம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 15.
‘சுத்தமுள்ள’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
அ) சுத்தம் + உள்ள
ஆ) சத்தம் + அள்ள
இ) சுத்த + முள்ள
ஈ) சுத்தம் + இள்ள
Answer:
அ) சுத்தம் + உள்ள

Question 16.
‘குடியப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) குடி + யப்பா
ஆ) குடி + அப்பா
இ) குடி + உப்பா
ஈ) குடிய + ப்பா
Answer:
ஆ) குடி + அப்பா

Question 17.
‘உறங்கப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) உறங் + கப்பா
ஆ) உற + அப்பா
இ) உறங்கு + அப்பா
ஈ) உ + அறங்கப்பா
Answer:
இ) உறங்கு + அப்பா

Question 18.
‘நன்மை + நீர்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………………
அ) நன்மைநீர்
ஆ) நல்ல நீர்
இ) நன்நீர்
ஈ) நன்னீர்
Answer:
ஈ) நன்னீர்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 19.
‘தினம் + உம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
அ) தினம் உம்
ஆ) தின்ன ம்
இ) தினமும்
ஈ) தின்ன மும்
Answer:
இ) தினமும்

குறுவினா

Question 1.
எது அறிவுடைமை?
Answer:
நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை.

Question 2.
நல்ல உடல் நலத்திற்கு அடிப்படைகள் யாவை?
Answer:
நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படைகள்.

Question 3.
உலகில் மகிழ்ச்சி உடையவர் யார்?
Answer:
உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 4.
எவை இனிய வாழ்வு தராது?
Answer:
உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.

Question 5.
நீடித்த வாழ்நாளை எவ்வாறு பெறலாம்?
Answer:
நாள்தோறும் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம்.

Question 6.
எமன் யாரை அணுக மாட்டான்?
Answer:
காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை எமனும் அணுகமாட்டான்.

Question 7.
கூழை எவ்வாறு குடித்தல் வேண்டும்?
Answer:
கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்.

Question 8.
எப்பொழுது நன்றாக உறங்குதல் வேண்டும்?
Answer:
வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 9.
கவிமணி இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும் மாலையும், மொழிபெயர்ப்பு நூலான உமர்கய்யாம் பாடல்கள் போன்றவை கவிமணி இயற்றிய நூல்கள் ஆகும்.

சிறுவினா

Question 1.
கவிமணி குறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : தேசிக விநாயகம்
ஊர் : குமரிமாவட்டம் தேரூர்
பெற்றோர் : சிவதாணு பிள்ளை – ஆதிலட்சுமி
பிறப்பு : 27.08.1876
பணி : பள்ளி ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர், எழுத்துப்பணி.
இயற்றியவை : மலரும் மாலையும், ஆசிய ஜோதி, மருமக்கள் வழி மான்மியம், காந்தளூர் சாலை, தேவியின் கீர்த்தனைகள், உமர்கய்யாம் பாடல்கள், கதர் பிறந்த கதை.
சிறப்பு : 1940இல் ‘கவிமணி’ பட்டம் பெற்றார்.
இறப்பு : 26.09.1954 (78 வயது)

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

சொல்லும் பொருளும் 

நித்தம் நித்தம் – நாள்தோறும்
மட்டு – அளவு
சுண்ட – நன்கு
வையம் – உலகம்
பேணுவையேல் – பாதுகாத்தால்
திட்டுமுட்டு – தடுமாற்றம்