Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 2 Chapter 2 நீர் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 2 Chapter 2 நீர்

4th Science Guide நீர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பூமியில் நீர் மிகவும் __________ வளமாகும்.
அ) விலை மதிப்புள்ள
ஆ) திட
இ) வாயு
விடை:
அ) விலை மதிப்புள்ள

Question 2.
நீரானது. ______________ நிலைகளில் காணப்படுகிறது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
விடை:
ஆ) மூன்று

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 3.
நீரானது _____________ வெப்பநிலைக்குக் கீழ் உறைந்து பனிக்கட்டியாக மாறுகிறது.
அ) 10°C
ஆ) 100°C
இ) 0°C
விடை:
இ) 0°C

Question 4.
நீரானது நீராவியாக மாறும் முறை____________ ஆகும்.
அ) சுருங்குதல்
ஆ) ஆவியாதல்
இ) உறைதல்
விடை:
ஆ) ஆவியாதல்

Question 5.
சுற்றுப்புறத்திலுள்ள உயிரினங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது எது?
அ) மிதிவண்டி
ஆ) நீர் சுழற்சி
இ) நீரின் மறுசுழற்சி
விடை:
ஆ) நீர் சுழற்சி

II. கோடிட்ட இடங்களைச் சரியான விடைகளால் நிரப்புக.

Question 1.
நீரானது வெப்பப்படுத்தப்படும் போது _______________ ஆக மாறுகிறது. (பனிக்கட்டி / நீராவி)
விடை:
நீராவி

Question 2.
நீரானது _______________ பனிக்கட்டியாக மாறுகிறது (வெப்பப்படுத்துவதால் / உறைவதால்).
விடை:
உறைவதால்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 3.
நீர்த்துளிகள் இணைவதால் _____________ உருவாகும் (மழை மேகம்).
விடை:
மேகம்

Question 4.
நீர் சுழற்சியானது ____________ கிடைப்பதை அதிகரிக்கிறது (நீர்த்தொட்டி / நிலத்தடிநீர்).
விடை:
நிலத்தடி நீர்

Question 5.
______________ மழைநீர் சேகரிப்பு முறைகளுள் ஒன்றாகும் (மேற்கூரை நீர் சேகரிப்பு நீர் சுழற்சி).
விடை:
மேற்கூரை நீர் சேகரிப்பு

III. சரியா அல்லது தவறா என எழுதுக.

Question 1.
பொருள்களின் அனைத்து நிலைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது நீர் ஆகும்.
விடை:
சரி

Question 2.
பூமியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது நீர் சுழற்சி ஆகும்.
விடை:
சரி

Question 3.
வெப்பபடுத்துவதால் நீர் நீராவியாக மாறுவது ஆவியாதல் எனப்படும்.
விடை:
சரி

Question 4.
நமது மூளை தனது நிறையில் 37% நீரைக் கொண்டுள்ளது.
விடை:
தவறு

Question 5.
மேற்கூரை நீர் சேகரிப்புமுறை வேளாண்மையில் பயன்படுத்தப்படுகிறது.
விடை:
தவறு

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
நீரின் நிலைகளை எழுதுக.
விடை:
பனிக்கட்டி (திண்மம்), நீர் (திரவம்), நீராவி (வாயு)

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 2.
உறைதல் என்றால் என்ன?
விடை:
ஒரு திரவப் பொருள் குளிர்ச்சியினால் திண்மப் பொருளாக மாறுவது உறைதல் எனப்படுகிறது.

Question 3.
நீர் சுழற்சியில் உள்ள முறைகளை எழுதுக.
விடை:

  1. ஆவியாதல்
  2. சுருங்குதல்
  3. வீழ்படிவாதல்
  4. மீண்டும் கடலை அடைதல்

Question 4.
2001ஆம் ஆண்டில் மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய மாநிலம் எது?
விடை:
தமிழ்நாடு

Question 5.
மழைநீர் சேகரிப்புக் குழி அமைக்கத் தேவையானவை எவை?
விடை:
சிறிய கற்கள், பெருமணல்.

V. விரிவாக விடையளி.

Question 1.
நீர் சுழற்சி என்றால் என்ன? நீர் சுழற்சியின் முக்கியத்துவங்களுள் எவையேனும் மூன்றினை எழுதுக.
விடை:
“ஆவியாதல், சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் போன்ற முறைகளினால் நீரில் ஏற்படும் தொடர்ச்சியான சுழற்சியே நீர் சுழற்சி எனப்படுகிறது.” நீர் சுழற்சியின் முக்கியத்துவம்

  • நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கிறது.
  • பூமியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது.
  • தாவரங்கள் மற்றும் விலங்குகள் முக்கியமாக மனிதர்களுக்கு நீர் கிடைக்கச் செய்கிறது.
  • பூமியில் தொடர்ந்து நீர் காணப்படுவதை உறுதிசெய்ய நீர் சுழற்சி அவசியமாகிறது.

Question 2.
மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன? மழைநீர் சேகரிப்பின் நன்மைகளை எழுதுக.
விடை:
எதிர்காலப் பயன்பாட்டிற்காக மழைநீரைச் சேகரித்து, சேமித்து வைக்கும் முறைக்கு மழைநீர் சேகரிப்பு என்று பெயர். இயற்கையான நீர்நிலைகள் அல்லது செயற்கையான தொட்டியில் மழை நீரானது சேகரிக்கப்படு கிறது. கட்டடங்களின் மேற்கூரையிலிருந்து மழைநீரைச் சேகரிப்பதும் ஒரு வகையான மழைநீர் சேகரிப்பாகும்.

மேற்கூரையிலிருந்து மழைநீரானது குழாய்களின் வழியாகப் பூமிக்குள் செலுத்தப்படுகிறது. நீரானது குழாய்களின் வழியாக கற்களாலும், பெருமணலாலும் நிரப்பப்பட்டுள்ள குழிகளுக்குள் செல்கிறது. இவ்வாறு செல்லும்போது அதிலுள்ள அசுத்தங்கள் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீராக சேகரிக்கப்படுகிறது.

மழைநீர் சேகரிப்பின் பயன்கள்

  • நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.
  • வேளாண்மைக்குப் பயன்படுகிறது.
  • வாழும் உயிரினங்களுக்கு நீர் கிடைக்க வழிவகுக்கிறது.

VI. கீழேயுள்ள படத்திற்கு வண்ணம் தீட்டி தேவையான இடத்தில் கீழ்க்காணும் பெயர்களை எழுதுக.

(சுருங்குதல், ஆவியாதல், நீர் நிலைகள், வீழ்படிவாதல்)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 2

4th Science Guide நீர் InText Questions and Answers

பக்கம் 69 செய்து கற்போம்

கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து அப்பொருள்களின் நிலையை எழுதுக. (திண்மம், திரவம், வாயு)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 4

செய்து கற்போம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களைச் சரியான விடையைக் கொண்டு நிரப்புக.
(திரவம், திண்மம், உருகுதல், உறைதல், குளிர்தல், வெப்பப்படுத்துதல், வாயு)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர் 6
உனது ஊரிலுள்ள ஏதேனும் இரண்டு நீர்நிலைகளை எழுது. ஆறு, கண்மாய்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

விடையளிப்போம்

Question 1.
பொருள்களின் மூன்று நிலைகளுக்கும் நீர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது ஏன்?
விடை:
இது பூமியில் திண்ம நிலையில் பனிக்கட்டியாகவும், திரவநிலையில் நீராகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது.

பூமியில் பனிக்கட்டி ஆர்ட்டிக் பகுதிகளிலும், நீர் அனைத்து நீர் நிலைகளிலும், நீராவி மேகங்களிலும் உள்ளது. இதனால் நீர் பூமியில் மூன்று நிலைகளிலும் உள்ளது என்பது தெளிவாகிறது.

Question 2.
கீழ்க்காண்பனவற்றுள் எது நீர்மநிலையில் உள்ளது?
மழை / பனிக்கட்டி / பனித்துளி
விடை:
மழை

செய்து கற்போம்

Question 1.
ஒரு தட்டில் நீரை ஊற்றி, அதை உறையவைப்பானில் (freezer) வைக்கவும். சில மணி நேரத்திற்குப் பின் வெளியே எடுக்கவும். நீரில் என்ன மாற்றம் நடைபெற்றிருக்கும்?
விடை:
நீர் பனிக்கட்டி எனும் திண்மமாக உறைந்திருக்கும்.

Question 2.
இப்பொழுது அந்த பனிக்கட்டியை அப்படியே மேசையின் மீது சிறிதுநேரம் வைக்கவும். பனிக்கட்டிக்கு என்ன நிகழ்கிறது?
விடை:
பனிக்கட்டி உருகி நீர் எனப்படும் திரவமாக மாறிவிடுகிறது.

Question 3.
அந்தத் தட்டிலுள்ள நீரை ஒரு கொதிகலனில் ஊற்றவும். வீட்டிலுள்ள பெரியவர்களின் உதவியுடன் அந்த கொதிகலனை வெப்பப்படுத்தவும். நீர் கொதிக்கும்போது கொதிகலனின் வாய்ப்பகுதியை உற்றுநோக்கவும். நீங்கள் பார்ப்பது என்ன?
விடை:
நீர் வெப்பத்தால் நீராவியாக மாறி வாயுவாக வெளி வருகிறது.

பக்கம் 72 சிந்தித்து விடையளி

Question 1.
ஈரமான துணியில் இருக்கும் நீருக்கு என்ன நிகழ்கிறது?
விடை:
இது வெளியில் உள்ள வெப்பத்தால் ஆவியாகி வெளியேறுகிறது.

விடையளிப்போம்

சரியான விடையைத் தேர்வு செய்க.
Question 1.
நீர் சுழற்சியில் ______________
அ) ஆவியாதல் மட்டும் நிகழ்கிறது
ஆ) உறைதல் மட்டும் நிகழ்கிறது
இ) ஆவியாதல் மற்றும் உறைதல் நிகழ்கின்றன
விடை:
இ) ஆவியாதல் மற்றும் உறைதல் நிகழ்கின்றன

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

பக்கம் 73 விடையளிப்போம்

Question 1.
சொற்களிலுள்ள எழுத்துகளைச் சரியாக முறைப்படுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக. (தருங்கல்கு, ஆல்வியாத, டிவீபழ்ல்தவா) ___________, _____________, ________________
விடை:
சுருங்குதல், ஆவியாதல், வீழ்படிவாதல்

Question 2.
வேளாண்மைக்கு நீர் சுழற்சி அவசியமானதா? ____________
விடை:
ஆம்

Question 3.
மனிதர்களுக்கு நீர் சுழற்சி ஏன் அவசியமாகிறது? _______________
விடை:
நீர் சுழற்சியால் மனிதர்கள் உயிர் வாழத் தேவையான நீர் கிடைக்கிறது.

Question 4.
குளிர்பானமுள்ள குவளைகளின் வெளிப்பரப்பில் நீர்த்திவலைகள் தோன்றும் நிகழ்வின் பெயர் என்ன? _____________
விடை:
சுருங்குதல்

பக்கம் 74 விடையளிப்போம்

Question 1.
மழைநீர் சேகரிப்பின் இதர பயன்களைப் பட்டியலிடுக.
விடை:

  1. கோடை காலங்களில் நமக்கு நீர் கிடைக்கிறது.
  2. தாவரங்கள், பிற உயிரினங்கள் வாழத் தேவையான நீர் தொடர்ந்து கிடைக்கிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 2 நீர்

Question 2.
உமது பள்ளியில் மழை நீரைச் சேமிக்க சில வழிமுறைகளைக் கூறுக..
விடை:

  1. மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்.
  2. பள்ளிக் கூரையிலிருந்து விழுகின்ற மழை நீரை வீணாக்காமல் தொட்டிக்குள் செலுத்த வேண்டும்.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 2 Chapter 1 உணவு and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 2 Chapter 1 உணவு

4th Science Guide உணவு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இவற்றுள் எந்த உணவை சமைக்காமல் உண்ணலாம்?
அ) இறைச்சி
ஆ) கேரட்
இ) மீன்
ஈ) உருளைக்கிழங்கு
விடை:
ஆ) கேரட்

Question 2.
சமைக்காத உணவு என்பது _____________
அ) துரித உணவு
இ) பச்சையான உணவு
ஆ) ஆரோக்கியமான உணவு
ஈ) சமைத்த உணவு
விடை:
இ) பச்சையான உணவு

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 3.
சூரிய அடுப்பு ___________ மாசுபாட்டைக் குறைக்கிறது.
அ) காற்று
ஆ) நீர்
இ) நிலம்
ஈ) ஒளி
விடை:
அ) காற்று

Question 4.
இவற்றுள் எந்த ஒன்றை ‘உலரவைத்தல்’ முறையில் பாதுகாக்க முடியாது?
அ) நெல்
ஆ) பயறு வகைகள்
இ)மீன்
ஈ) வாழைப்பழம்
விடை:
ஈ) வாழைப்பழம்

Question 5.
நாம் ____________ மூலம் உணவு வீணாவதைத் தவிர்க்கலாம்.
அ) தேவைப்படுவோருக்கு அளிப்பதன்
ஆ) நம் தேவைக்கு மேல் உண்பதன்
இ) அதிகமான உணவை வாங்குவதன்
ஈ) குப்பைத்தொட்டியில் வீசுவதன்
விடை:
அ) தேவைப்படுவோருக்கு அளிப்பதன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_______________ நமக்கு வேலை செய்யவும், விளையாடவும் ஆற்றலைத் தருகிறது. (பச்சையான உணவு / துரித உணவு)
விடை:
பச்சையான உணவு

Question 2.
சமைத்த உணவு எளிதாக _____________ (செரிக்கும் / செரிக்காது).
விடை:
செரிக்கும்

Question 3.
அழுத்த சமையற்கலன் ஒரு ______________ சமையல் பாத்திரமாகும் (நவீன / பழங்கால).
விடை:
நவீன

Question 4.
நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையானது சுத்தமான காற்று, பாதுகாக்கப்பட்ட நீர் மற்றும் _____________ உணவு ஆகும் (துரித / சுகாதாரமான).
விடை:
சுகாதாரமான

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 5.
நாம் இடியாப்பத்தை _______________ முறையில் தயாரிக்கிறோம் (வேக வைத்தல் / நீராவியில் வேக வைத்தல்).
விடை:
நீராவியில் வேக வைத்தல்

III. பொருத்துக.

1. திராட்சை – நவீன பாத்திரம்
2. காய்கறிக்கலவை – உடல்நலமில்லாத போது எடுத்துக்கொள்ளும் உணவு
3. மின் அழுத்த சமையற்கலன் – பழங்கால பாத்திரம்
4. மண்பானை – பச்சை உணவு
5. குறைந்த கொழுப்புள்ள உணவு – சாலட்
விடை:
1. திராட்சை – பச்சை உணவு
2. காய்கறிக்கலவை – சாலட்
3. மின் அழுத்த சமையற்கலன் – நவீன பாத்திரம்
4. மண்பானை – பழங்கால பாத்திரம்
5. குறைந்த கொழுப்புள்ள உணவு – உடல்நலமில்லாத போது எடுத்துக்கொள்ளும் உணவு

IV. சரியா அல்லது தவறா என எழுதுக.

Question 1.
பிரியாணி ஒரு பச்சை உணவு.
விடை:
தவறு

Question 2.
வறுத்தல் என்பது சமையலின் ஒருவகையாகும்.
விடை:
சரி

Question 3.
நம்மால் தோசைக்கல்லில் சோறு சமைக்க முடியும்.
விடை:
தவறு

Question 4.
சூரிய அடுப்பில் சமைப்பதற்கு, சூரிய ஒளி தேவை.
விடை:
சரி

Question 5.
அதிகமான எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வது நம் உடல்நலத்திற்குக் கேடு தரும்.
விடை:
சரி

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
எவையேனும் மூன்று சமைக்கும் முறைகளின் பெயர்களை எழுதுக.
விடை:
வேகவைத்தல், பொரித்தல், வறுத்தல்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
உடல் நலமில்லாதபோது நீங்கள் உண்ணக்கூடிய எவையேனும் இரண்டு உணவுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
தானியக் கஞ்சி, இட்லி

Question 3.
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பச்சை உணவை வரைந்து வண்ணமிடுக.
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 1

Question 4.
உணவுப் பாதுகாப்பு முறைகள் எவையேனும் இரண்டு பற்றி எழுதுக.
விடை:

  1. உப்பில் ஊறவைத்தல்
  2. உலர வைத்தல்

Question 5.
உங்கள் வீட்டில் உணவு வீணாவதை நீங்கள் எவ்விதம் குறைப்பாய்?
விடை:
தேவைப்படும் உணவை மட்டும் எடுத்துக் கொள்வேன். அதிகமாக இருந்தால் பிறருடன் பகிர்ந்து கொள்வேன்.

VI. விரிவாக விடையளி.

Question 1.
எவையேனும் நான்கு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.
விடை:
1. உப்பில் ஊறவைத்தல் : பழங்கள் மற்றும் காய்கறிகள் – போன்றவற்றை எண்ணெய் மற்றும் உப்பில் ஊறவைத்து பயன்படுத்தும் முறைக்கு உப்பில் ஊறவைத்தல் என்று பெயர். எ.கா. ஊறுகாய்.

2. குளிரூட்டுதல் : உணவைப் பாதுகாக்க குறுகிய காலத்திற்கு அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் முறைக்கு குளிரூட்டுதல் என்று பெயர். எ.கா. பழங்கள், காய்கறிகள்.

3. உலர வைத்தல் : உலர்த்துதல் மூலம் உணவில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும் முறைக்கு உலரவைத்தல் என்று பெயர். எ.கா. காய்ந்த மிளகாய்

4. புட்டியில் அடைத்தல் : காற்றுப்புகாத இறுக்கமான புட்டிகளில் உணவினைச் சேமிக்கும் முறைக்கு புட்டியில் அடைத்தல் என்று பெயர். எ.கா.ஜாம்.

Question 2.
எவையேனும் நான்கு சமைக்கும் முறைகளை விவரி.
விடை:
வேக்வைத்தல் : இம்முறையில் உணவுப்பொருளானது கொதிக்கும் நீரில் மூழ்க வைத்து சமைக்கப்படுகிறது. இதனால் உணவுப்பொருளானது மிருதுவாகிறது. எ.கா. அரிசி, முட்டை .

ஆவியில் வேகவைத்தல் : இது பாத்திரத்தில் உணவை வைத்து அதை கொதிக்கும் நீரின்மேல் எழும்பி வரும் நீராவியில் வைத்து சமைக்கும் முறையாகும். எ.கா. இட்லி, இடியாப்பம்.

வறுத்தல் : இம்முறையில் உணவானது ஒரு வறுக்கும் பாத்திரத்தில் வைக்கப்பட்டு மூடிவைக்காமல் சூடாக்கிச் சமைக்கப்படுகிறது. எ.கா. நிலக்கடலை. பொரித்தல் : இது சூடான எண்ணெய்யில் உணவினைச் சமைக்கும் முறையாகும். எ.கா. சிப்ஸ், பூரி.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 3.
சுகாதாரமாகச் சமைக்கும் வழிமுறைகள் எவையெவை?
விடை:

  • சமைக்கும் முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவவேண்டும்.
  • நறுக்குவதற்கு முன்பு காய்கறி மற்றும் பழங்களைக் கழுவவேண்டும்.
  • சமையல் பாத்திரங்கள் மற்றும் கத்திகளைக் கழுவவேண்டும்.
  • அதிக நேரத்திற்கு உணவினைச் சமைக்க வேண்டாம். ஏனெனில் உண வில் உள்ள சத்துகள் அழிக்கப்பட்டுவிடும்.
  • உணவினைச் சமைப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்த வேண்டாம். உணவுப் பொருள்களை அவற்றின் காலாவதி தேதிக்குப்பிறகு பயன்படுத்துவது உடல்நலத்திற்கு நல்லதன்று.

4th Science Guide உணவு InText Questions and Answers

பக்கம் 73 செய்து கற்போம்

கீழ்க்காணும் உணவுப்பொருள்களை வகைப்படுத்துக.
(கேரட், முட்டை, தேங்காய் எண்ணெய், பால், முள்ளங்கி, இறைச்சி, உருளைக்கிழங்கு, தயிர், கத்தரி, வெண்டைக்காய், மீன், முருங்கைக்காய், வெண்ணெய், வெங்காயம், மோர், வெள்ளரிக்காய், நெய்)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 2
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 3

பக்கம் 74 சிந்தித்து விடையளி

எந்தெந்த உணவுப்பொருள்களை சமைக்காமல் சாப்பிடுகிறீர்கள்?
விடை:
காரட், வெள்ளரி, பழங்கள்

பக்கம் 75 விடையளிப்போம்

எவையேனும் ஐந்து பச்சையான மற்றும் சமைத்த உணவுகளை எழுதவும்.
விடை:
அ. பச்சையான உணவு : _____________, _____________, _____________, _____________, _____________
விடை:
காரட், வெள்ளரி, ஆப்பிள், பப்பாளி, மாதுளை

ஆ. சமைத்த உணவு : _____________, _____________, _____________, _____________, _____________
விடை:
சோறு, மீன், இறைச்சி, முட்டை, கீரைகள்

பக்கம் 77 விடையளிப்போம்

Question 1.
உன் வீட்டில் பின்பற்றும் இரண்டு சமையல் முறைகளை – எழுதுக : ___________, ____________
விடை:
வேகவைத்தல், பொரித்தல்

Question 2.
சரியா அல்லது தவறா என எழுதுக.
அ. சமைக்கும் முன் கைகளைக் கழுவ வேண்டும். __________
விடை:
சரி

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

ஆ. காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்கியபின் கழுவ வேண்டும். ________________
விடை:
தவறு

பக்கம் 78 செய்து கற்போம்

கொடுக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படும் சமையல் பாத்திரங்களை எழுதுக.
(கடாய், பானை, அழுத்த சமையற்கலன், தவா, இட்லி குக்கர்)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 4
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 5

விடையளிப்போம்

சரியா அல்லது தவறா என எழுதுக.
Question 1.
முன்பு மக்கள் தங்கள் உணவை அழுத்தச் சமையற்கலனில் சமைத்தனர்.
விடை:
தவறு

Question 2.
சூரிய அடுப்பு எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கிறது.
விடை:
சரி

Question 3.
அழுத்த சமையற்கலன் என்பது சமையல் பாத்திரம் இல்லை.
விடை:
தவறு

பக்கம் 80

பொருத்தமான ஒன்றினைக் குறியீடு (✓) செய்யவும்.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 7

விடையளிப்போம்

ஆம் அல்லது இல்லை என்று எழுதவும்
Question 1.
துரித உணவு உடல்நலத்திற்கு நல்லது. இல்லை
விடை:
இல்லை

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவ வேண்டும்.
விடை:
ஆம்

விவாதிப்போம்

இங்கு நந்தினியின் மதிய உணவுப்பெட்டி உள்ளது.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 8

அ. இதிலுள்ளவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுப்பொருள்களா?
விடை:
இல்லை .

ஆ. ஓர் ஆரோக்கியமற்ற உணவினை நீக்கிவிட்டு, உன் விருப்பப்படி ஆரோக்கியமான ஓர் உணவினைச் சேர்க்க பரிந்துரைக்கவும். மாறுதலுக்கான காரணத்தையும் தருக.
விடை:
இதில் உள்ள சிப்ஸ்’ ஆரோக்கியமற்ற உணவாகும். இதை நீக்கிவிட்டு காய்கறிக் கலவையை (சாலட்) சேர்த்துக் கொள்ளலாம்.

காரணம் : சிப்ஸ் என்பது எண்ணெய்யில் வறுக்கப்பட்ட ஆரோக்கிமற்ற உணவாகும். எனவே இதை நீக்கி விட்டு சத்துக்கள் நிறைந்த காய்கறிக் கலவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சிந்தித்து விடையளி

நீங்கள் நோயுற்றிருக்கும் போது, உங்களுக்கு என்ன வகையான உணவினை உண்ணத் தருவார்கள்?
விடை:
அரிசி அல்லது தானியக் கஞ்சி, இட்லி, பழச்சாறு ஆகியவற்றைத் தருவார்கள்.

பக்கம் 81 விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
_____________ எளிதில் செரிக்கக் கூடிய உணவாகும். (இட்லி / பிரியாணி)
விடை:
இட்லி

Question 2.
நாம் _____________ உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். (துரித / புதிய)
விடை:
துரித

சிந்தித்து விடையளி

Question 1.
வழக்கமாக நீங்கள் உங்களுடைய மதிய உணவை வீணாக்காமல் சாப்பிடுகிறீர்களா? இல்லை எனில், ஏன்?
விடை:
ஆம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
உமது பள்ளியிலும் வீட்டிலும் உணவு வீணாவதைக் குறைக்க, சில வழிகளைப் பரிந்துரைக்கலாமா?
விடை:

  • உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்கான எளிய – வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • உன்னால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அதை மட்டும் எடுத்துக் கொள். மேலும், எடுத்ததைச் சாப்பிட்டுவிடு.
  • அதிகமுள்ள உணவைப் பகிர்ந்து உண்ணலாம்.
  • அதிகமுள்ள உணவை, பசியுடன் இருக்கும் விலங்குகளுக்கு அளிக்கலாம்.

பக்கம் 83 விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
உலகப் பட்டினியால் வாடுவோர் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் ______________
விடை:
மே 28

Question 2.
ஊறுகாய் _______________________ முறையில் பாதுகாக்கப்படுகிறது.
விடை:
உப்பில் ஊற வைத்தல்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

4th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் Text Book Back Questions and Answers

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சில விலங்குகளின் இளம் உயிரிகளுக்கான முதன்மை ஆற்றல் ஆதாரம்.
அ) நீர்
ஆ) கனிகள்
இ) பால்
விடை:
இ) பால்

Question 2.
பாலில் உள்ள எந்த உயிர்ச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது?
அ) உயிர்ச்சத்து ஈ
ஆ) உயிர்ச்சத்து சி
இ) உயிர்ச்சத்து டி
விடை:
இ) உயிர்ச்சத்து டி

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 3.
மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பழங்கால உணவு வகைகளுள் ஒன்று
அ) நூடுல்ஸ்
ஆ) கேக்
இ) ரொட்டி
விடை:
இ) ரொட்டி

Question 4.
_____________ பச்சையாக உண்ணக்கூடிய ஓர் உணவாகும்.
அ) வெள்ளரி
ஆ) சப்பாத்தி
இ) ரொட்டி
விடை:
அ) வெள்ளரி

Question 5.
பாடல்களைக் கேட்க உதவும் சிறு பொறி கருவி
அ) பென் டிரைவ்
ஆ) புகைப்படக்கருவி
இ) கையடக்க இசைக்கருவி
விடை:
இ) கையடக்க இசைக்கருவி

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பாலாடைக் கட்டி மற்றும் பனீர் ____________ லிருந்து தயாரிக்கப்படுகிறது.
விடை:
பாலி

Question 2.
_____________ மூலம் ஊட்டச்சத்துக்கள் செரிமானத்திற்குத் தயாராகின்றன.
விடை:
சமைத்தல்

இ. பொருத்துக.

1. கையடக்க இசைக்கருவி ‘- உலகத்துடன் தொடர்புகொள்ளல்
2. திறன்பேசி – தகவல் சேமித்தல்
3. கை மின் விளக்கு – விளையாடுதல்
4. விரலி – வெளிச்சம் தருதல்
5. கையடக்கக் கணினி – இசையை ஒலித்தல்
விடை:
1. கையடக்க இசைக்கருவி – இசையை ஒலித்தல்
2. திறன்பேசி – உலகத்துடன் தொடர்புகொள்ளல்
3. கை மின் விளக்கு – வெளிச்சம் தருதல்
4. விரலி – தகவல் சேமித்தல்
5. கையடக்கக் கணினி – விளையாடுதல்

ஈ. ஓரிரு தொடர்களில் விடையளிக்க.

Question 1.
பாலிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்கள் யாவை?
விடை:
தயிர், வெண்ணெய், மோர், நெய், பாலாடைக்கட்டி, பன்னீர் மற்றும் இனிப்புகள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 2.
அடுதல் மூலம் தயாரிக்கப்படும் மூன்று உணவுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
ரொட்டி, பிஸ்கட், கேக்.

Question 3.
திறன்பேசி எந்தெந்த வழிகளில் நமக்கு உதவுகிறது?
விடை:
தகவல் தொடர்பு தவிர, இணைய அணுகல் மற்றும் கோப்புகளைச் சேமித்தல், புகைப்படங்கள் எடுத்தல், இடங்களை அறிதல் போன்ற பல சேவைகளில் திறன்பேசிகள் பயன்படுகின்றன.

Question 5.
உணவு என்றால் என்ன?
விடை:
உணவு என்பது நமது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உணவு நமக்கு ஆற்றல் அளிக்கிறது. பொதுவாக உணவை நாம் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறுகிறோம். நமது உடலை நலமாக – வைத்துக் கொள்ளத் தேவையான ஊட்டச்சத்துகள் உணவில் அடங்கியுள்ளன.

உ. விரிவாக விடையளிக்க.

Question 1.
சமைப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நீக்கப்படுகின்றன. சமையலின் பிற நன்மைகளை எழுதுக.
விடை:
உணவில் பின்வரும் பயனுள்ள மாற்றங்களைச் சமையல் ஏற்படுத்துகிறது.

  1. ஊட்டச்சத்துகள் உடடினயாகச் செரிமான மடைய உதவுகிறது.
  2. உணவை விரும்பும் தன்மை, மணம், சுவையுடன் தயாரிக்க உதவுகிறது.
  3. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை இது அழிக்கிறது.

Question 2.
நாம் ஏன் பாலைப் பருக வேண்டும்?
விடை:
பாலைப் பருகுவதன் நன்மைகள் :

  1. எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்துகிறது.
  2. இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கிறது.
  3. இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
  4. இது ஓர் ஆற்றல் மூலமாகும்.

4th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் InText Questions and Answers

பக்கம் 115 பதிலளிப்போமா!

Question 1.
பாலில் அதிகம் உள்ள சத்து ____________. (கால்சியம் / இரும்புச்சத்து)
விடை:
கால்சியம்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 2.
பாலில் ______________, _____________ மற்றும் _____________ ஆகியவை உள்ளன.
விடை:
சர்க்கரை, புரதம், கொழுப்பு

பக்கம் 117 பதிலளிப்போமா!

Question 1.
பச்சையாக உண்ணக் கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள் ____________, _____________
விடை:
பழங்கள், காரட்டு

Question 2.
சமைத்து உண்ணக்கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள் ___________, _____________.
விடை:
சோறு, ரொட்டி

பக்கம் 119 பதிலளிப்போமா!

Question 1.
ரொட்டி என்பது ___________ (குறைந்த / அதிக) கொழுப்பு கொண்ட உணவு ஆகும்.
விடை:
குறைந்த

Question 2.
பிஸ்கட்டுகள் ______________ (கோதுமை மாவு / அரிசி மாவு) – கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
விடை:
கோதுமை மாவு

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

Question 3.
பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் தொடர்புடையது _____________. (கேக் / பிஸ்கட்)
விடை:
கேக்

பக்கம் 121 பதிலளிப்போமா!

கொடுக்கப்பட்டுள்ள மின்னணு சாதனங்களின் பெயர்களை எழுதுக.
(இணைய ஒளிப்படக் கருவி, ரிமோட், ஒலி பெருக்கி, புகைப்படக்கருவி, தலையணி ஒலிக்கருவி)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் 2

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் பொருள்கள் and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

4th Science Guide வேலை மற்றும் ஆற்றல் Text Book Back Questions and Answers

அ. சரியான சொல்லைப் பயன்படுத்திக் கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஒரு விசை செயல்படும்போது செய்யப்பட வேண்டியது
_______________ ஆகும்.
விடை:
வேலை

Question 2.
வேலை செய்யத் தேவைப்படும் திறன் என்பது _______________.
விடை:
ஆற்றல்

Question 3.
_______________ இயந்திரம் சக்கரம் மற்றும் கயிற்றால் ஆனது.
விடை:
கப்பி
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

Question 4.
______________ வேலையை எளிதாக்க உதவுகிறது.
விடை:
எளிய எந்திரம்

Question 5.
சாய்தளத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு _______________
விடை:
சரிவுப் பாதை

ஆ. எழுத்துகளை மாற்றியமைத்து, கருவிகளின் பெயர்களைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 2

இ. பொருத்துக.

1. இரண்டாம் வகை நெம்புகோல் – நீர் இறைத்தல்
2. கப்பி – மிதிவண்டி
3. முதல் வகை நெம்புகோல் – கொட்டை உடைப்பான் .
4. சக்கரம் மற்றும் அச்சு – காற்று
5. புதுப்பிக்க இயலும் வளம் – சாய்ந்தாடி
விடை:
1. இரண்டாம் வகை நெம்புகோல் – கொட்டை உடைப்பான்
2. கப்பி – நீர் இறைத்தல்
3. முதல் வகை நெம்புகோல் – சாய்ந்தாடி
4. சக்கரம் மற்றும் அச்சு – மிதிவண்டி
5. புதுப்பிக்க இயலும் வளம் – காற்று

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

ஈ. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வகைப்படுத்துக.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 4

உ. வினாக்களுக்கு விடையளி.

Question 1.
ஆற்றலின் அலகு யாது?
விடை:
ஆற்றலின் அலகு ஜுல் ஆகும்.

Question 2.
எளிய இயந்திரங்கள் சிலவற்றைக் கூறு.
விடை:
கப்பி, ஆப்பு, சாய்தளம், திருகு, நெம்புகோல், சக்கரம் மற்றும் அச்சு ஆகியவை எளிய இயந்திரங்கள் ஆகும்.

Question 3.
முதல் வகை நெம்புகோல் என்றால் என்ன?
விடை:
ஆதராப் புள்ளி திறனுக்கும் பளுவுக்கும் இடையில் உள்ளது. முதல் வகை நெம்புகோல் ஆகும்.

Question 4.
எலுமிச்சை சாறு பிழியும் கருவி எந்த வகை நெம்புகோலைச் சார்ந்தத? ஏன்?
விடை:
எலுமிச்சை சாறுபிழியும் கருவி இரண்டாம் வகை நெம்புகோல் ஆகும். இங்கு பளு (எலுமிச்சை), திறனுக்கும் ஆதாரப் புள்ளிக்கும் இடையில் உள்ளது.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

Question 5.
வேலை – வரையறு.
விடை:
ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு அப்பொருள் நகரும் செயல் வேலை எனப்படும்.

Question 6.
எவையேனும் மூன்று வகையான ஆற்றலை எழுதுக.
விடை:
மின் ஆற்றல், வெப்ப ஆற்றல், வேதி ஆற்றல்

4th Science Guide வேலை மற்றும் ஆற்றல் InText Questions and Answers

பக்கம் 104 சிந்தித்துக் கூறுவோமா!

ஆசிரியர் : நேற்று நான் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது சாலை அமைக்கும் பணியை செய்யும் மேற்கொண்டிருந்த கண்டேன். அந்த இடத்தில் சில பொருள்கள் இருப்பதையும் கண்டேன். அந்த இடத்தில் என்னென்ன பொருள்கள், இயந்திரங்கள் இருந்திருக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா? வேலை செய்யப்பட்டுள்ளதா அல்லது செய்யப்படவில்லையா என்று எப்போது நம்மால் கூறமுடியும்? வேலை செய்வதற்கு இரண்டு முக்கிய நிபந்தனைகள் தேவை.
1. ஒரு விசை பொருளின் மீது செயல்பட வேண்டும்.
2. பொருள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தப்பட வேண்டும்.

ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு அந்தப் பொருள் நகர்ந்தால் வேலை செய்யப்பட்டது எனலாம்.
விடை:
சாலை போடும் இயந்திரம், கடப்பாரை, மண்வெட்டிகள், இரும்புக் கோடரிகள், மண் அள்ளும் கருவிகள் போன்ற கருவிகள் அங்கு பயன்படுத்தப்பட்டன. விசை செலுத்தப்பட்டு சாலையின் பரப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இங்கு வேலை செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிகிறோம்.

பதிலளிப்போமா!

படத்தை உற்றுநோக்கி, வேலை செய்யப்பட்டிருந்தால் ✓ குறியும் வேலை செய்யப்படவில்லை என்றால் ✗ குறியும் இடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 6
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 7

பதிலளிப்போமா!

கீழ்க்கண்ட செயல்பாடுகளில் வேலை செய்யப்பட்டதா அல்லது செய்யப்படவில்லையா என்பதைக் குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 9

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

பக்கம் 107 1. கப்பி

கீழே உள்ள படத்தை உற்றுநோக்கவும். ஒரு சுமையை கப்பியின் உதவியால் தூக்குவது அல்லது கப்பியைப் பயன்படுத்தாமல் தூக்குவது – இவற்றில் எது எளிமையானது?
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 10
விடை:
கப்பியின் உதவியால் சுமையைத் தூக்குவது எளிதானது.

கப்பி என்பது ஒரு வகை இயந்திரம். இது அச்சைப்பற்றி சுழலும் வகையில் அமைந்த சக்கரம் ஆகும். கயிறு அல்லது சங்கிலி கப்பியின் மீது அதிக விசையுடன் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமையைத் தூக்குவது எளிதானது.

2. சாய்தளம்
ஒரு பெட்டியைத் தூக்குவது, ஒரு சரிவுப்பாதையின் மீது அப்பெட்டியை இழுத்து செல்வதைவிட எளிதானதா? படத்தை உற்றுநோக்கி விவாதிக்கவும்.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 11
விடை:
பெட்டியைத் தூக்குவதைக் காட்டிலும் அதை ஒரு சரிவுப் பாதையின் மீது இழுத்துச் செல்வது எளிதானது.

சாய்தளம் என்பது ஒரு விளிம்பு உயரமானதாகவும் மறு விளிம்பு தாழ்வானதாகவும் சரிவாக அமையப்பெற்ற ஒரு தளமாகும். இதன் வழியே பெட்டியை நகர்த்திச் செல்வது எளிதானது.

பக்கம் 109 பதிலளிப்போமா!

எளிய இயந்திரங்களின் வகைகளைக் கண்டறிந்து குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 12
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 13

பக்கம் 110 பதிலளிப்போமா!

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 14
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 15

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல்

பக்கம் 111 பதிலளிப்போமா!

பளு, திறன் மற்றும் ஆதாரப்புள்ளியைக் குறிப்பிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 16
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 17
1. பளு – பந்து ஆதாரப்
2. திறன் – எடை
3. ஆதாரப்புள்ளி – மையம்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 18
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 19
1. பளு – பந்து
2. திறன் – மட்டை நுனி
3. ஆதாரப்புள்ளி – கை

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 20
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 3 வேலை மற்றும் ஆற்றல் 21
1. பளு – கொட்டை
2. திறன் – கை
3. ஆதராப்புள்ளி – கைப்பிடிகள் இணையுமிடம்

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

4th Social Science Guide குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
____________ இந்திய சட்டத்திற்கு எதிரானது.
அ) பள்ளியில் குழந்தைகள் படித்தல்.
ஆ) தொழில்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.
இ பள்ளி செயல்காடுகளில் குழந்தைகள் பங்கேற்றல்.
ஈ) குழந்தைகள் தரமான உணவைப் பெறுதல்.
விடை:
ஆ) தொழில்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.

Question 2.
போலியோ சொட்டு மருந்து _____________ களுக்கு வழங்கப்படுகின்றன.
அ) ஆண்
ஆ) பெண்
இ குழந்தை
ஈ) மூத்த குடிமக்கள்
விடை:
இ குழந்தை

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Question 3.
ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பை ___________ என்பர்.
அ) கதைப் புத்தகம்
ஆ) விதிமுறைப் புத்தகம்
இ அரசியலமைப்பு
ஈ) பாடநூல்
விடை:
இ அரசியலமைப்பு

Question 4.
பின்வருவனவற்றில் எது குழந்தைகளின் உரிமை இல்லை ?
அ) ஓட்டுநர் உரிமம் பெறுதல்
ஆ) கல்வி பெறுதல்
இ போதுமான உணவைப் பெறுதல்
ஈ) ஆரோக்கியமாக வாழ்தல்
விடை:
அ) ஓட்டுநர் உரிமம் பெறுதல்

II. சரியா, தவறா என எழுதுக.

Question 1.
போலியோ சொட்டு மருந்தைப் பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை ஆகும்.
விடை:
சரி

Question 2.
அனைத்து வயது குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான . உரிமைகள் உள்ளன.
விடை:
தவறு

Question 3.
6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வேலை செய்ய வேண்டும்.
விடை:
தவறு

Question 4.
குழந்தைகளைத் துன்புறுத்துவது தவறானது.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Question 5.
குழந்தைகள் தவறான தொடுதலை அறிந்திருக்க வேண்டும்.
விடை:
சரி

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. சிறார் உதவி மைய எண் – ஒரு நாட்டின் உறுப்பினர்
2. தடுப்பூசிகள் – சுகாதாரம்
3. வாஷ் (Wash) – சட்டவிரோதமானது
4. குடிமகன் – நோய்களிலிருந்து பாதுகாப்பு
5. குழந்தைத் தொழிலாளர் – 1098
விடை:
1. சிறார் உதவி மைய எண் – 1098
2. தடுப்பூசிகள் – நோய்களிலிருந்து பாதுகாப்பு
3. வாஷ் (Wash) – சுகாதாரம்
4. குடிமகன் – ஒரு நாட்டின் உறுப்பினர்
5. குழந்தைத் தொழிலாளர் – சட்டவிரோதமானது

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
உங்கள் உடலில் யாரும் தொடக்கூடாத மூன்று பகுதிகள் யாவை?
விடை:
உடலில் யாரும் தொடக்கூடாத மூன்று பகுதிகள் உதடுகள், மார்பு மற்றும் கால்களுக்கு இடையில் ஆகிய பகுதிகள் ஆகும்.

Question 2.
குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ள பல்வேறு உரிமைகள் யாவை?
விடை:

  1. உயிர்வாழ்வதற்கான உரிமை.
  2. வளர்ச்சிக்கான உரிமை
  3. பாதுகாப்பு உரிமை
  4. பங்கேற்பதற்கான உரிமை

Question 3.
உயிர்வாழ்வதற்கான உரிமை – குறிப்பு வரைக.
விடை:
இது ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதாகும். வாஷ் (Wash) திட்டமும் இதன் ஒரு பகுதியாகும்.

Question 4.
பங்கேற்பதற்கான உங்கள் உரிமையை எப்போதாவது நீங்கள் பயன்படுத்திருக்கறீர்களா? விவரிக்க.
விடை:
ஆம். எங்கள் வீட்டை புதுபிக்கும் பொழுது எவ்வாறெல்லாம் வண்ணம் பூச வேண்டும் என்று என் தந்தையுடன் விவாதித்து உள்ளேன்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Question 5.
உரிமைகள் முக்கியமானவை. ஏன்?
விடை:
நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காவும் உருவாக்கப்பட்டதே உரிமைகள் ஆகும். எனவே உரிமைகள் முக்கியமானவை ஆகும்.

V. கூடுதல் வினா :

Question 1.
குடிமகன் என்பது யார்?
விடை:
குடிமகன் என்பது ஒரு நாட்டின் உறுப்பினராக இருக்கும் ஒரு நபர் ஆவார்.

Question 2.
அரசியலமைப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பு அரசியலமைப்பு எனப்படும்.

Question 3.
வாஷ் (Wash) பற்றி எழுதுக.
விடை:
வாஷ் (Wash) என்பது நீர், சுகாதாரம், மற்றும் தூய்மையைக் குறிக்கும்.

Question 4.
இலவசக் கல்வியை வழங்குவது யாருடைய கடமையாகும்?
விடை:
இலவசக் கல்வியை வழங்குவது அரசின் கடமையாகும்.

4th Social Science Guide குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் InText Questions and Answers

பக்கம்-132 செயல்பாடு

சிந்தித்து எழுதுக.
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கண்டால், நீ என்ன செய்வாய்?
1. ___________________
2. ___________________
3. ___________________
விடை:
1. கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி கூறுவேன்.
2. அரசின் இலவச கல்வியைப் பற்றி கூறுவேன்.
3. கற்றலின் இனிமையை கூறுவேன்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

பக்கம்-134 செயல்பாடு

உங்கள் வீட்டின் அருகில், பள்ளிக்குச் செல்லாத ஒரு குழந்தையை அடையாளம் காணவும். இக்கேள்வித்தாளைப் பூர்த்தி செய்யவும்.
1. குழந்தையின் பெயர் : ________________
2. குழந்தையின் வயது : ________________
3. இந்நாள்வரை அக்குழந்தை பள்ளிக்குச் சென்றுள்ளதா? ஆம்/இல்லை
4. பள்ளிக்குச் செல்லாதற்கான காரணம்: ________________
5. அவள் / அவனை நீங்கள் எவ்வாறு வழிநடத்துவீர்கள்? : _________________
விடை:
1. குழந்தையின் பெயர் : மாலா
2. குழந்தையின் வயது : 7
3. இந்நாள்வரை அக்குழந்தை பள்ளிக்குச் சென்றுள்ளதா? ஆம்/இல்லை
4. பள்ளிக்குச் செல்லாதற்கான காரணம்: வறுமை
5. அவள் / அவனை நீங்கள் எவ்வாறு வழிநடத்துவீர்கள்?
அரசின் இலவச கல்வி திட்டத்தை பற்றி கூறி பள்ளிக்குச் செல்லுமாறு கூறுவேன்.

குறிப்பு :
இந்தக் கணக்கெடுப்பு பெற்றோர்களுக்கும் அக்குழந்தைக்குமானது. : அந்த வகுப்பு குழந்தைகள் இருவர் கொண்ட குழுக்களாக, ஒரு குடும்பம் அல்லது குழந்தையைப் பேட்டி காணவும்.. ஒவ்வொரு நிலைபாட்டிற்கும் தீர்வுகள் குறித்து ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடலாம்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

4th Social Science Guide சென்னை மாகாணத்தின் வரலாறு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மதராஸ் மாகாணம் ___________ இல் உருவாக்கப்பட்டது.
அ) 1800
ஆ) 1801
இ 1802
ஈ) 1803
விடை:
ஆ) 1801

Question 2.
மதராஸ் மாநிலம் அதிகாரப்பூர்வமாக ___________ இல் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
அ) 1947
ஆ) 1953
இ 1956
ஈ) 1969
விடை:
ஈ) 1969

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Question 3.
மாமல்லபுரம் _____________ வம்சத்தினரால் உருவாக்கப்பட்டது.
அ) நாயக்கர்
ஆ) பல்லவ
இ சோழ
ஈ) ஆங்கிலேய
விடை:
ஆ) பல்லவ

Question 4.
“தென்னிந்தியாவின் ஸ்பா” என்று அழைக்கப்படுவது எது?
அ) போடிநாயக்கனூர்
ஆ) ஒகேனக்கல்
இ குற்றாலம்
ஈ) செஞ்சிக் கோட்டை
விடை:
இ குற்றாலம்

Question 5.
எட்டு அடுக்கிலான மிகச் சிறிய அளவிலுள்ள மனோரா கோட்டையைக் கட்டியவர் ___________ ஆவார்.
அ) சரபோஜி மன்னர்
ஆ) சின்ன பொம்மி நாயக்கர்
இ திம்மா ரெட்டி நாயக்கர்
ஈ) திருமலை நாயக்கர்
விடை:
அ) சரபோஜி மன்னர்

II. சரியா, தவறா என எழுதுக.

Question 1.
மதராஸ் மாகாணத்தின் தலைநகரம் மதராஸ் நகரம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர், பழங்கால சோழர்களின் கிராமமாகும்.
விடை:
தவறு

Question 3.
திருமலை நாயக்கர் அரண்மனை திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Question 4.
கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது.
விடை:
சரி

Question 5.
கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரிய கோயில் எனவும் அறியப்படுகிறது.
விடை:
தவறு

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. காவலூர் – கிழக்கின் டிராய்
2. செஞ்சிக் கோட்டை – ஊட்டி
3. போடிநாயக்கனூர் – வைணு பாப்பு ஆய்வகம்
4. முத்து நகரம் – ஏலக்காய் நகரம்
5. ஜான் சல்லிவன் – தூத்துக்குடி
விடை:
1. காவலூர் – வைணு பாப்பு ஆய்வகம்
2. செஞ்சிக் கோட்டை – கிழக்கின் டிராய்
3. போடிநாயக்கனூர் – ஏலக்காய் நகரம்.
4. முத்து நகரம் – தூத்துக்குடி
5. ஜான் சல்லிவன் – ஊட்டி

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
செஞ்சிக் கோட்டையின் முக்கியத்துவத்தைக் கூறுக.
விடை:
செஞ்சிக் கோட்டையானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று குன்றுகள் சூழ்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

Question 2.
திருமலை நாயக்கர் அரண்மனையின் முக்கிய அம்சங்கள் யாவை?
விடை:
திருமலை நாயக்கர் அரண்மனை திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டடக்கலைகளின் ஒருமித்த கலவையாக இருப்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

Question 3.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
மேட்டூர் அணை, ஒகேனக்கல் அருவி, ஏர்காடு:

Question 4.
கல்லணை – குறிப்பு வரைக.
விடை:
கல்லணை தென்னிந்தியாவில் காவிரியாற்றின் குறுக்கே கி.பி. பொ.ஆ.) 2 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர் கரிகாலனால் கட்டப்பட்டது.

Question 5.
மலைக் கோட்டை – குறிப்பு வரைக.
விடை:
83 மீட்டர் உயரமுள்ள பழமையான ஒரு பாறையின் மீது மலைக்கோட்டை கோயில் கட்டப்பட்டுள்ளது. அக்கோட்டையின் உள்ளே இரண்டு இந்து கோயில்கள் உள்ளன.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Question 6.
தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
மெரினா கடற்கரை, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் மற்றும் மகாபலிபுரம்.

V. கூடுதல் வினா.

Question 1.
மதராஸ் மாகாணத்தின் தலைநகரம் எது?
விடை:
தற்போது சென்னை என்று அழைக்கப்படும் மதராஸ் நகரம், அன்றைய மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாகும்.

Question 2.
உத்திரமேரூர் எங்கு அமைந்துள்ளது?
விடை:
உத்திரமேரூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Question 3.
அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தின் பகுதிகள் யாவை?
விடை:
இன்றைய விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தின் பகுதிகள் ஆகும்.

Question 4.
“சைலம்” என்றால் என்ன?
விடை:
“சைலம்” என்றால் மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும்.

Question 5.
தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மலைவாழிடம் எது?
விடை:
தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மலை வாழிடம் ஊட்டி ஆகும்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

4th Social Science Guide உலகெலாம் தமிழர்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
இலங்கையின் அலுவலக மொழிகளில் ஒன்று _____________ ஆகும்.
(அ) மாண்டரின்
(ஆ) இந்தி
(இ தமிழ்
(ஈ) சமஸ்கிருதம்
விடை:
(இ தமிழ்

Question 2.
நவீன சிங்கப்பூர் _____________ இல் நிறுவப்பட்டது.
(அ) 1819
(ஆ) 1820
(இ. 1947
(ஈ) 1835
விடை:
(அ) 1819

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Question 3.
பண்டைய காலங்களில், மலேசியாவில் உள்ள கெடா மாநிலம் கடல் வழியாக தமிழ்நாட்டின் ___________ உடன் இணைக்கப்பட்டிருந்தது.
(அ) விசாகப்பட்டினம்
(ஆ) நாகப்பட்டினம்
(இ மதுரை
(ஈ) சென்னை
விடை:
(ஆ) நாகப்பட்டினம்

Question 4.
மியான்மரின் முதன்மையான சமயம் _____________ ஆகும்.
(அ) இந்து சமயம்
(ஆ) சமண சமயம்
(இ) புத்த சமயம்
(ஈ) சீக்கிய சமயம்
விடை:
(இ) புத்த சமயம்

Question 5.
ஆங்கிலேயர்கள் மொரீஷியஸைக் கைப்பற்றிய ஆண்டு ___________ ஆகும்.
(அ) 1810
(ஆ) 1820
(இ) 1910
(ஈ) 1920
விடை:
(அ) 1810

II. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மலேசியாவில் பல்லவர்களும் சோழர்களும் செல்வாக்கு பெற்றிருந்தனர்.
விடை:
சரி

Question 2.
தென் பசிபிக் பகுதியில் உள்ள எரிமலை தீவுகளின் கூட்டம் பிஜி ஆகும்.
விடை:
சரி

Question 3.
மன்னர் அனவர்தா மின்சாவின் மகன் கியான்சித்தா ஆவார்.
விடை:
சரி

Question 4.
ரீயூனியன் தீவு என்பது, பிரெஞ்சு வெளியுறவுத் துறையின் ஒரு பகுதியாகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Question 5.
தமிழ்நாட்டில் மட்டுமே தமிழர்கள் வாழ்கின்றனர்.
விடை:
தவறு

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. ஆனந்தா கோயில் – சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ்
2. துணைநிலை ஆளுநர்- ரத்து ஜோனி
3. திருக்குறளி – நாகப்பட்டினம்
4. அஞ்சல் அருங்காட்சியகம் மியான்மர்
5. பண்டைய துறைமுகம் – மொரீஷியஸ்
விடை:
1. ஆனந்தா கோயில் – மியான்மர்
2. துணைநிலை ஆளுநர் – சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ்
3. திருக்குறளி – ரத்து ஜோனி
4. அஞ்சல் அருங்காட்சியகம் – மொரீஷியஸ்
5. பண்டைய துறைமுகம் – நாகப்பட்டினம்

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான கடந்தகால உறவுகளை விவரிக்கவும்.
விடை:
தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவுகள் 2000! ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். நாகப்பட்டினத்திலிருந்து கெடாவுக்கு வழக்கமான போக்குவரத்து இருந்தது.

Question 2.
ரீயூனியன் தீவு – குறிப்பு வரைக.
விடை:
மொரீஷியஸ் அருகிலுள்ள ரீயூனியன் என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இது பிரெஞ்சு : வெளியுறவுத் துறையின் ஓர் அங்கமாகும்.

Question 3.
அலுவலக மொழிகளுள் ஒன்றாக தமிழ்மொழியினைக் கொண்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக.
விடை:
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்.

Question 4.
மொரீஷியஸ் நாட்டைக் கட்டமைத்ததில் தமிழர்களின் பங்களிப்பினைக் கூறுக.
விடை:
தமிழர்கள், இத்தீவை வாழ்வதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும், பல கட்டடங்களைக் கட்டுவதற்கும் உதவினர்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Question 5.
அ. மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகை எது?
விடை:
தைப்பூசம்

ஆ. மியான்மர் நாட்டின் தேசத் தந்தை யார்?
விடை:
அனவர்தா மின்சா

V. கூடுதல் வினா.

Question 1.
இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் இரண்டு குழுக்கள் யாவை?
விடை:

  1. இலங்கை தமிழர்கள்.
  2. இந்தியத் தமிழர்கள்.

Question 2
எத்தனை முறை உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் நடத்தப்பட்டன.
விடை:
மூன்று முறைகள்.

Question 3.
சிங்கப்பூரில் உள்ள தமிழர்களின் கடின உழைப்பின் அடையாளங்கள் யாவை?
விடை:
ஜொகூர் பாலம், செம்பவாங் கப்பல் கட்டும் தளம், கல்லாங் விமான ! நிலையம் மற்றும் புனித ஆண்ட்ரு கதீட்ரல் ஆகியன தமிழர்களின் கடின உழைப்பின் அடையாளங்கள் ஆகும்.

Question 4.
பிஜியில் உருவாக்கப்பட்ட மகளிர் சங்கம் எது?
விடை:
இந்திய சன்மார்க்க மகளிர் சங்கம்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 1 உலகெலாம் தமிழர்கள்

Question 5.
மியான்மரில் (பர்மா) உள்ள இந்துக்களின் கோயில்கள் சிலவற்றை கூறு.
விடை:
மாரியம்மன் கோயில், முருகன் கோயில், திருமால் கோயில்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 2 Chapter 3 போக்குவரத்து Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 2 Chapter 3 போக்குவரத்து

4th Social Science Guide போக்குவரத்து Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
பின்வருவனவற்றில் நிலவழிப்போக்குவரத்திற்கு எது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அ) மகிழுந்து
ஆ) கப்பல்
இ) சிறுவிமானம்
ஈ) விமானம்
விடை:
அ) மகிழுந்து

Question 2.
முதல் இரும்புப்பாதை போடப்பட்ட ஆண்டு _____________
அ) 2019
ஆ) 1853
இ) 1947
ஈ) 1950
விடை:
ஆ) 1853

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Question 3.
தங்க நாற்கரச் சாலையை இணைக்கும் முக்கிய நகரங்களில் ஒன்று ____________
அ) சென்னை
ஆ) கன்னியாகுமரி
இ) மதுரை
ஈ) திருச்சி
விடை:
அ) சென்னை

Question 4.
____________ பழமையான போக்குவரத்து முறையாகும்.
அ) கப்பல்
ஆ) மிதிவண்டி
இ) நடைப்பயணம்
ஈ) மாட்டுவண்டி
விடை:
ஈ) மாட்டுவண்டி

Question 5.
போக்குவரத்து முறைகள் ____________ வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அ) 3
ஆ) 4
இ) 5
ஈ) 6
விடை:
ஆ) 4

II. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமானநிலையம் – பேருந்து
2. முக்கியமான மக்கள் போக்குவரத்து – சென்னை
3. கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு வரை செல்லும் இரயில் – திருச்சிராப்பள்ளி
4. தமிழ்நாட்டில் உள்ள பிரதான கப்பல் துறைமுகம் – 2015
5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு – ஹிம்சாகர் விரைவு இரயில்
விடை:
1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமானநிலையம் – திருச்சிராப்பள்ளி
2. முக்கியமான மக்கள் போக்குவரத்து – பேருந்து
3. கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு வரை செல்லும் இரயில் – ஹிம்சாகர் விரைவு இரயில்
4. தமிழ்நாட்டில் உள்ள பிரதான கப்பல் துறைமுகம் – சென்னை
5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு – 2015

III. சரியா? தவறா ? 

Question 1.
மக்களுக்கு போக்குவரத்து தேவையானது அல்ல.
விடை:
தவறு

Question 2.
துறைமுகங்கள் வர்த்தகத்திற்கு முக்கிய மையங்களாக உள்ளன.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Question 3.
நாட்டின் பல பகுதிகளை சாலைவழிப் போக்குவரத்து இணைக்கவில்லை.
விடை:
தவறு

Question 4.
சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகச் சிறியதாகும்.
விடை:
தவறு

Question 5.
தமிழ்நாட்டில் ஐந்து பெரிய துறைமுகங்கள் உள்ளன.
விடை:
தவறு

IV. குறுகிய விடையளி.

Question 1.
போக்குவரத்து – வரையறு.
விடை:
போக்குவரத்து என்பது மனிதர்கள், விலங்குகள் மற்றும் பொருட்கள் முதலியன ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு இடம்பெயர்தல் ஆகும்.

Question 2.
பல்வேறு போக்குவரத்து முறைகளைப் பட்டியலிடுக.
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து 1

Question 3.
இரயில் போக்குவரத்து – விவரி. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மிக முக்கியமான இரண்டு இரயில் இணைப்புகளைக் கூறுக.
விடை:
இந்தியாவின் பல மாநிலங்களை இணைக்கும் போக்குவரத்து முறையில் இரயில் போக்குவரத்து முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் மிகப் பழமையான இரயில் நிலையங்களில் ஒன்று 1856 இல் இராயபுரத்தில் கட்டப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து செல்லும் முக்கிய இரயில் இணைப்புகள் :
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து 2

Question 4.
வான்வழிப் போக்குவரத்து என்றால் என்ன? வான்வழிப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் யாவை?
விடை:
வான்வழிப் போக்குவரத்து என்பது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு மிக விரைவாகப் பயணம் செய்ய உதவும் போக்குவரத்து முறையாகும்.

ஆகாய விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப் படுகின்றன.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Question 5.
போக்குவரத்தின் ஏதேனும் மூன்று நன்மைகளை எழுதுக.
விடை:

  1.  ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நாம் விரைந்து செல்ல, போக்குவரத்து உதவுகிறது.
  2. ஓரிடத்தில் விளையும் பொருள்களை வேறிடத்திற்கு கொண்டு சேர்க்க இது உதவுகிறது.
  3. அவசர காலங்களில் மருந்துகள், உணவுகள், மீட்புக் குழுக்களை அனுப்பி வைக்க போக்குவரத்து உதவுகிறது.

4th Social Science Guide போக்குவரத்து InText Questions and Answers

பக்கம் 119 செயல்பாடு

Question 1.
இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலம் இரண்டுக்கும் மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்டுள்ளது?
விடை:
தமிழ்நாடு.

Question 2.
தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் பெயர்களைக் கூறுக.
விடை:
எண்ணூர், சென்னை, தூத்துக்குடி.

Question 3.
கடல் போக்குவரத்து தொடர்பான உள்கட்டமைப்பைக் கையாளும் அரசு நிறுவனத்தின் பெயரைக் கூறுக.
விடை:
கப்பல் போக்குவரத்துக் கழகம்.

பக்கம் 120 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
விமானப் போக்குவரத்தில் எந்த வாகனம் குறுகிய தூரப் போக்குவரத்திற்கு உதவுகிறது?
விடை:
ஹெலிகாப்டர்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 3 போக்குவரத்து

Question 2.
தமிழ்நாட்டில் எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?
விடை:
நான்கு (சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி).

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

4th Social Science Guide தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
எந்த வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ளது.
அ) முதுமலை வனவிலங்கு சரணாலயம்
ஆ) கார்பெட் தேசிய பூங்கா
இ) சுந்தரவன தேசிய பூங்கா
ஈ) ரத்தம்பூர் தேசிய பூங்கா
விடை:
அ) முதுமலை வனவிலங்கு சரணாலயம்

Question 2.
மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் ____________
அ) ஆரவல்லி மலைத்தொடர்
ஆ) நீலகிரி மலைகள்
இ) இமயமலை மலைத்தொடர்
ஈ) விந்திய மலைகள்
விடை:
ஆ) நீலகிரி மலைகள்

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 3.
மரங்களின் உச்சிக் கிளைகள் இணைந்து சங்கிலித் தொடர் போல உருவாவதற்கு பெயர் ____________
அ) சூரிய ஒளி
ஆ) விதானம்
இ) காடுகள்
ஈ) சதுப்புநிலம்
விடை:
ஆ) விதானம்

Question 4.
தமிழ்நாட்டில் _____________ நிலவுகிறது.
அ) அதிகபட்ச குளிர்
ஆ) அதிகமான மழைப்பொழிவு
இ) வெப்பமண்டல வானிலை
ஈ) பனிப்பொழிவு
விடை:
இ) வெப்பமண்டல வானிலை

Question 5.
___________ அதிக மழைப்பொழிவுள்ள இடங்களில் காணப்படும்.
அ) இலையுதிர்க் காடுகள்
ஆ) சதுப்புநிலக் காடுகள்
இ) பசுமை மாறாக் காடுகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஈ) இவற்றில் எதுவுமில்லை

II. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. தமிழ்நாட்டின் மலைத்தொடர்கள் – பாம்பன் பாலம்
2. சுருளி நீர்வீழ்ச்சி – மேற்குத்தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
3. இந்தியாவின் முதல் கடல்பாலம் – தேனி
4. பிச்சாவரம் – இந்தியாவிலேயே மூன்றாவது நீளமானது
5. தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதி – சதுப்புநிலக்காடுகள்
விடை:
1. தமிழ்நாட்டின் மலைத்தொடர்கள் – மேற்குத்தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
2. சுருளி நீர்வீழ்ச்சி – தேனி
3. இந்தியாவின் முதல் கடல்பாலம் – பாம்பன் பாலம்
4. பிச்சாவரம் – சதுப்புநிலக்காடுகள்
5. தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதி – இந்தியாவிலேயே மூன்றாவது நீளமானது

III. சரியா? தவறா?

Question 1.
தமிழ்நாடு இந்தியாவில் பதினோறாவது மிகப்பெரிய மாநிலம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
தமிழ்நாடு இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
விடை:
தவறு

Question 3.
குறிஞ்சி மலர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 4.
தமிழ்நாடு ஆண்டு முழுவதும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலையைக் கொண்டுள்ளது.
விடை:
சரி

Question 5.
இலையுதிர் காடுகள் இலைகளை உதிர்ப்பதில்லை.
விடை:
தவறு

IV. குறுகிய விடையளி.

Question 1.
தமிழ்நாட்டுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களை பட்டியலிடுக.
விடை:
கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்.

Question 2.
தமிழ்நாட்டின் நில அமைப்பு வகைகள் யாவை?
விடை:
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. மலைகள்
  2. பீடபூமிகள்
  3. சமவெளிகள்
  4. கடற்கரை.

Question 3.
தமிழ்நாட்டின் பல்வேறு வகையான சமவெளிகள் யாவை?
விடை:

  1. ஆற்றுச் சமவெளி
  2. கடற்கரைச் சமவெளி.

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் பெயர்களைக் கூறுக.
விடை:

  1. குற்றாலம் நீர்வீழ்ச்சி
  2. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
  3. சுருளி நீர்வீழ்ச்சி
  4. வட்டப்பாறை நீர்வீழ்ச்சி

Question 5.
தமிழ்நாட்டின் காலநிலை பற்றி விவரி.
விடை:
தமிழ்நாடு வெப்ப மண்டலக் கால நிலையைக் கொண்டிருப்பதால், இங்கு கோடைகாலத்திற்கும், குளிர்காலத்திற்கும் மிகவும் குறைந்த அளவிலேயே வேறுபாடு காணப்படுகிறது. தமிழ்நாடு அதன் இட அமைவைப் பொறுத்து ஆண்டு முழுவதும் மிதமான குளிருடன் வெப்ப மற்றும் ஈரப்பதமான வானிலையையும் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பருவமழையைச் சார்ந்துள்ளது என்பதால் பருவமழை பொய்க்கும் காலங்களில் வறட்சியை எதிர்கொள்கிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 6.
வேறுபடுத்துக – பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர்க் காடுகள்.
விடை:
அ) பசுமை மாறாக் காடுகள் (Evergreen Forests)
“Evergreen” என்ற வார்த்தையின் பொருள் ever / / எப்பொழுதும் / green / பசுமை = always green / எப்பொழுதும் பசுமையானது என்பதாகும்.

இந்தக் காடுகளில் உள்ள மரங்களில் இலைகள் எப்பொழுதும் பசுமையாகவே இருக்கும். தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இவ்வகைக் காடுகளை நாம் காணலாம்.

ஆ) இலையுதிர்க் காடுகள் (Deciduous Forests)
இந்த காடுகளிலுள்ள மரங்களின் இலைகள் வறட்சிக் காலங்களில் உதிர்ந்துவிடும். இவ்வகைக் காடுகள் பொதுவாக பசுமைமாறாக் காடுகளின் அருகில் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் மலைகளின் கீழ்ப்பகுதிகளில் வளர்கின்றன.

4th Social Science Guide தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு InText Questions and Answers

பக்கம் 107 செயல்பாடு
Question 1.
இந்திய அரசியல் வரைபடத்தில் தமிழ்நாட்டின் ஏதாவது 2 அண்டை மாநிலங்களைக் குறிக்கவும்.

Question 2.
கீழே குறிப்பிட்டுள்ளவற்றை வரைபடத்தில் குறிக்கவும்.
அ. இந்தியப் பெருங்கடல்
ஆ. அரபிக்கடல்
இ. வங்காளவிரிகுடா
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு 1

பக்கம் 108 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் – சந்திக்கும் இடம் எது?
விடை:
நீலகிரி மலைத்தொடர்.

Question 2.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஏதேனும் இரண்டு வன விலங்கு சரணாலயங்களின் பெயர்களைக் கூறு.
விடை:

  1. முதுமலை வனவிலங்குச் சரணாலயம்.
  2. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம்.

பக்கம்111 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஆறுகள் சிலவற்றின் பெயர்களைக் கூறு.
விடை:
பாலாறு, செய்யாறு, பெண்ணை , வெள்ளாறு.

Question 2.
குற்றாலம் நீர் வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
விடை:
குற்றாலம் நீர்வீழ்ச்சி தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

பக்கம் 111 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
தமிழ்நாடு எந்தெந்த மாதங்களில் தென் மேற்கு பருவமழையைப் பெறுகிறது?
விடை:
ஜுன் – செப்டம்பர்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 2.
தமிழ்நாட்டின் வானிலை பற்றி ஒரு வரியில் விடை கூறு.
விடை:
தமிழ் நாடு வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டிருப்பதால் இங்கு கோடை காலத்திற்கும், குளிர் காலத்திற்கும் குறைந்த அளவிலேயே வேறுபாடு காணப்படுகிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

4th Social Science Guide சங்க கால வள்ளல்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மூவேந்தர்களுள் ஒருவர் ___________ ஆவார்.
அ) ஆய்
ஆ) பாரி
இ) சேரன்
ஈ) நள்ளி
விடை:
இ) சேரன்

Question 2.
கடையெழு வள்ளல்கள் ____________ களை ஆட்சி செய்தனர்.
அ) சமவெளி
ஆ) பாலைவனம்
இ) ஆறு
ஈ) மலைப்பகுதி
விடை:
ஈ) மலைப்பகுதி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 3.
___________ மாவட்டத்தில் பறம்பு நாடு அமைந்துள்ளது.
அ) தருமபுரி
ஆ) திண்டுக்கல்
இ) சிவகங்கை
ஈ) நாமக்கல்
விடை:
இ) சிவகங்கை

Question 4.
பேகன் _____________ மலையிலுள்ள ஒரு மலைப்பாங்கான பகுதியை ஆட்சி செய்தார்.
அ) பழநி
ஆ) கொடைக்கானல்
இ) பொதிகை
ஈ) கொல்லி
விடை:
அ) பழநி

Question 5.
அதியமான் ஒரு ______________ யை ஔவையாருக்குக் கொடுத்தார்.
அ) போர்வை
ஆ) நெல்லிக்கனி
இ) பரிசு
ஈ) தேர்
விடை:
ஆ)நெல்லிக்கனி

II. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. ஆய் – தருமபுரி மாவட்டம்
2. அதியமான் – பொதிகை மலை
3. வல்வில் ஓரி – சிவகங்கை மாவட்டம்
4. பாரி – கொல்லிமலை
விடை:
1. ஆய் – பொதிகை மலை
2. அதியமான் – தருமபுரி மாவட்டம்
3. வல்வில் ஓரி – கொல்லிமலை
4. பாரி – சிவகங்கை மாவட்டம்

III. சரியா? தவறா ?

Question 1.
பாரி இயற்கையைப் பாதுகாக்கவில்லை.
விடை:
தவறு

Question 2.
சங்க காலத்தில் ஏழு புகழ் பெற்ற வள்ளல்கள் இருந்தனர்.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 3.
நாம் மக்களுக்கும், விலங்குகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
விடை:
சரி

Question 4.
நெடுமுடிக்காரி தோட்டிமலைப் பகுதியை ஆட்சி செய்தார்.
விடை:
தவறு

IV. பின்வரும் கேள்விகளுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
சங்க இலக்கியத்தைப் பற்றி எழுதுக.
விடை:
சங்க இலக்கியம் என்பது பல்வேறு இலக்கிய நயம் வாய்ந்த செவ்வியல் பாடல்கள் கொண்டதாகும்.

Question 2.
பாரியை எதிர்த்து வெற்றி அடைய இயலாத போது மூவேந்தர்கள் என்ன செய்தனர்?
விடை:
மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து பாரியின் பறம்பு நாட்டைத் தாக்கினர். உணவும் நீரும் பறம்பு மலைக்குச் செல்லாதபடி தடை செய்தனர்.

Question 3.
அதியமான் ஏன் ஔவையாருக்கு நெல்லிக்கனியைக் கொடுத்தார்?
விடை:
வாழ்க்கையை எப்படி சிறப்பாக வாழ வேண்டும் என்று கற்பிக்கக் கூடிய புலவர் ஔவையார். எனவே அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று அதியமான் ஔவையாருக்கு நெல்லிக் கனியைக் கொடுத்தார்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 4.
வல்வில் ஓரி எதனால் புகழடைந்தால்?
விடை:
வல்வில் ஓரி கைவினைக் கலைஞர்களின் திறமைக்கு வெகுமதி அளித்தார். எனவே அவர் புகழ் அடைந்தார்.

4th Social Science Guide சங்க கால வள்ளல்கள் InText Questions and Answers

பக்கம் 95 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
எவையேனும் மூன்று வள்ளல்களின்
விடை:
பெயர்களைக் கூறுக. பேகன், பாரி, அதியமான்.

Question 2.
கடையெழு வள்ளல்கள் எந்தக் காலகட்டத்தில் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர்?
விடை:
கடையெழு வள்ளல்கள் சங்க காலத்தில் மலைப்பகுதிகளை ஆட்சி செய்தனர்.

பக்கம் 97 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
பேகன் ஆட்சி செய்த மலைப்பகுதி எது?
விடை:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள – பழநி மலைப்பகுதி.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 2.
பேகன், தமது நடைப்பயணத்தின் போது என்ன பார்த்தார்?
விடை:
மயில் ஒன்று நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

Question 3.
நடுங்கிக் கொண்டிருந்த மயிலைக் கண்டு, பேகன் என்ன செய்தார்?
விடை:
மயில் குளிரால் நடுங்குவதாகக் கருதிய பேகன் அதன் மீது போர்வையைக் கொண்டு போர்த்தினார்.

பக்கம் 99 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
பாரி ஆட்சி செய்த பகுதி எது?
விடை:
பறம்பு மலையில் உள்ள பறம்பு நாட்டை பாரி ஆட்சி செய்தார்.

Question 2.
மலையடிவாரங்களிலிருந்து பறம்பு நாட்டிற்குச் செல்ல விடாமல் நிறுத்தப்பட்டவை எவை?
விடை:
தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் பறம்பு நாட்டிற்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டன.

Question 3.
முல்லைக் கொடிக்கு ஆதரவாக பாரி எதைக் கொடுத்தார்?
விடை:
முல்லைக் கொடிக்கு ஆதரவாக பாரி தன்னுடைய தேரைக் கொடுத்தார்.

பக்கம் 100 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
அதியமானுக்கு பரிசாக என்ன கிடைத்தது?
விடை:
அதியமானுக்குப் பரிசாக அரியவகை நெல்லிக் கனி கிடைத்தது.

Question 2.
ஔவையார் என்பவர் யார்?
விடை:
ஔவையார் என்பவர் பழம் பெரும் புலவர். இது

Question 3.
ஒளவையாருக்கு நெல்லிக்கனியை அதியமான் எதற்காகக் கொடுத்தார்?
விடை:
புலமைமிக்க ஒளவையாரைப் போல, வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக வாழ வேண்டும் என்று மக்களுக்குக் கற்பிக்கக்கூடிய புலவர்கள் பலர் இருக்கமாட்டார்கள். எனவே ஒளவையார் நீண்ட காலம் வாழ வேண்டுமென்று அவருக்கு அதியமான் நெல்லிக் கனியைக் கொடுத்தார்.

செயல்பாடு வள்ளல்கள்

கொடுத்த பொருள்களைப் பட்டியலிடுக.
1. பாரி – தேர்
2. பேகன் – போர்வை
3. அதியமான் – நெல்லிக்கனி

பக்கம் 103 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
வல்வில் ஓரி எந்த மலைப்பாங்கான பகுதியை ஆட்சிசெய்தார்?
விடை:
வல்வில் ஓரி கொல்லிமலையின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள்

Question 2.
சங்ககால வள்ளல்கள் எதன் அடிப்படையில் மக்களால் அறியப்பட்டனர்?
விடை:
சங்ககால வள்ளல்கள் அவர்களது பண்புகளின் அடிப்படையில் மக்களால் அறியப்பட்டனர்.

பக்கம் 102 செயல்பாடு

பின்வருவனவற்றைப் பொருத்துக.
1. பாரி – விலங்குகளிடம் அன்பு காட்டுதல்
2. பேகன் – ஓரி கைவினைக்கலைஞர்களைக் கௌரவித்தல்
3. அதியமான் – இயற்கையிடம் அன்பு காட்டுதல்
4. வல்வில் – மக்களை மதித்தல்
விடை:
1. பாரி – இயற்கையிடம் அன்பு காட்டுதல்
2. பேகன் – விலங்குகளிடம் அன்பு காட்டுதல்
3. அதியமான் – மக்களை மதித்தல்
4. வல்வில் – ஓரி கைவினைக்கலைஞர்களைக் கௌரவித்தல்

பக்கம் 103 செயல்பாடு

கடையெழு வள்ளல்களையும், அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளையும் பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள் 1
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 1 சங்க கால வள்ளல்கள் 2